ஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரம் –இயற்ப்பாவில் பத்தாவது திவ்ய பிரபந்தம் –
சிறிய அஸ்திரம் விட்டதில் கார்யம் கை கூட வில்லை என்று பெரிய ப்ரஹ்மாஸ்திரம் விடுகிறாள் பரகால நாயகி இதில் –
இதிலும் மடலூர்வேன் என்று பகட்டின அளவே அன்றி -மெய்யே மடலூர்ந்தமை இல்லை -கீழே வாசவத்தையை எடுத்துக் காட்டினால் போலே இதில் -சீதை -வேகவதி -உலூபிகை -உஷை- பார்வதி -போன்றோர்-
பேறு பெற ஸ்வ பிரவ்ருத்தி கூடாது என்று இல்லாமல் பேற்றுக்கு த்வரித்து இருந்த இந்த பெண்ணரிசிகளை எடுத்துக் காட்டி அருளிச் செய்கிறார் –
——————————————-
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன்
பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செயும்
நன்னுதலீர் நம்பி நறையூரர் -மன்னுலகில்
என்நிலைமை கண்டும் இரங்காரே யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து –
ஆழ்வார் தியானம் முற்றி பாவனா பிரகரக்ஷத்தாலே தன்மயத்வம் -ஆழ்வார் திவ்ய பிரபந்த பாவனையில் அமைந்த தனியன் –
நன்னுதலீர் -தோழிகளை நோக்கி அருளிச் செய்தார் –
பூ மகனும் -பாட பேதம் / வந்து மன்னு மடலூர்வேன்–திருப்பதிகள் தோறும் வந்து -நித்யம் மடலூர்ந்தே கொண்டு இருப்பேன் -என்றபடி-
———————————————
பிரபந்தாரம்பத்தில் மன்னிய என்றவிது – மங்களாசாஸநமாய்த் தனியே நிற்பதொரு வியங்கோள் வினைமுற்று, வாழிய என்னுமாபோலே மன்னிய – வாழ்கவென்றபடி நாடுவாழ்க, எம்பெருமான் வாழ்க இத் திருமடல் வாழ்க. வடநூலார் ஸ்ரீரஸ்து என்னும் ஸ்வஸ்தி என்னும் முகப்பில் எழுதுவதொக்கும் இது.
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்———-1
மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்————-2
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் -இரு சுடரை————-3
மன்னும் விளக்காக வேற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நில மங்கை———————4
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்———-5
என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8
பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்
மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள்-
பதவுரை
மன்னிய |
–
|
வாழ்ந்திடுக (மங்களாஸாசநம்) |
தான் |
–
|
எம்பெருமான்றான் |
பல்பொறி சேர் ஆயிரம் வாய் வாள் அரவின் |
–
|
பல புள்ளிகளையும் ஆயிரம் வாய்களையும் ஒளியையுமுடையனான திருவனந்தாழ்வானுடைய |
சென்னி மணி குடுமி |
–
|
படங்களில் விளங்குகின்ற மாணிக்கங்களின் நுனிகளில் நின்றும் பரவுகின்ற |
தெய்வம் சுடர் நடுவுள் மன்னி |
–
|
திவ்யமான தேஜஸ் ஸமூ ஹத்தினிடையே பொருந்தி |
அ நாகத்து அணை (மேல்) |
–
|
அந்தத் திருவனந்தாழ்வானாகிற சயநத்தின்மேலே |
துன்னிய தாரகையின் பேர் ஒளிசேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் |
–
|
நெருங்கிய நக்ஷத்ரங்கள் நன்கு விளங்கப்பெற்ற ஆகாசமாகிற மேற்கட்டியின் கீழே |
மின்னு மணி மகர குண்டலங்களவில் வீச |
–
|
ரத்நங்கள் விளங்குகின்ற மகர குண்டலங்கள் பள பள வென்று ஜ்வலிக்கப் பெற்றும் |
இரு சுடரை மன்னும் விளக்கு ஆக ஏற்றி |
–
|
திருவாழி திருச்சங்குகளாகிற இரண்டு தேஜஸ்ஸுகளை என்று மணையாத திரு விளக்காகப் பெற்றும் |
மறி கடலும் முனம் நாள் நிலம் மங்கை தன்னை அளவிட்ட தாமரைப்போல் மன்னிய சே அடியை பன்னு திரை கவிர வீச |
–
|
அலையெறிகிற ஸமுத்ர ராஜன், முன்னொருகால் பூமிப்பிராட்டியை அளந்த திருவடித் தாமரையை நோக்கி பரம்பின அலைகளாகிற சாமரங்களை வீசப்பெற்றும், |
1. வான் இயங்கு தாரகை மீன் என்னும் மலர் பிணையல் எய்ந்த |
–
|
ஆகாசத்திலே யுள்ள நக்ஷத்ரங்களாகிற புஷ்ப புஞ்சங்களை அணிந்துள்ளவளாய், |
2. மழை கூந்தல் |
–
|
மேகங்களாகிற கூந்தலை யுடையளாய் |
3. தென்னை உயர் பொருப்பும் தெய்வம் வடமலையும் என்னும் இவையே முலை ஆ |
–
|
திருமாலிருஞ் சோலை மலையையும் திருவேங்கட மலையையும் முலையாகவுடையளாய், |
4. வடிவு அமைந்த |
–
|
பொருத்தமான ரூபத்தை யுடையளாய் |
5. அன்னம் நடைய |
–
|
அன்னத்தின் நடைபோன்ற நடையை யுடையளாய் |
6. அணங்குதான் |
–
|
தெய்வப்பெண்ணாகிய பூமிப்பிராட்டி |
7. தன்னுடைய அம்கைகளால் அடி இணையை தடவ |
–
|
தனது அழகிய கைகளாலே திருவடிகளைப் பிடிக்கப்பெற்றும், (ஆகிய இத்தனை விபவங்களுடனே) |
ஓர் மா மலை போல் கிடந்து |
–
|
விலக்ஷணமான வொருகருமலை சாய்ந்தாற் போலே பள்ளிக்கொண்டு |
ஓர் உன்னிய்யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை |
–
|
விலக்ஷணமாய் ஜகத்ரக்ஷணத்தைச் சிந்திக்கிறயோக நித்திரையை மேற்கொண்ட பின்பு |
தன் நாபி வலயத்து |
–
|
தனது நாபீ மண்டலத்தில் |
பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து |
–
|
சிறந்த ஒளி பொருந்தியதும் என்று மழியாததுமான தாமரைப்பூவைப் புஷ்பிக்கச் செய்து |
அ மலர் மேல் |
–
|
அந்தத் தாமரைப் பூவிலே |
முன்னம் திசை முகதனை தான் படைக்க |
–
|
முதல் முதலாக நான் முகக்கடவுளை ஸ்ருஷ்டிக்க |
மற்றவனும் |
–
|
அந்தப் பிரமன் |
முன்னம் நால் மறைகள் படைத்தணன் |
–
|
முதலில் நான்கு வேதங்களைவெளிப்படுத்தினான் |
‘காமபுருஷார்த்தத்தையே நான் முக்கியமாகக் கைப்பற்றினேன்‘ என்று சொல்ல விரும்பிய ஆழ்வார், அதற்கு உறுப்பாகப் ‘புருஷார்த்தங்கள் நான்கு‘ என்றும், ‘அப்புருஷார்த்தங்களை வெளியிட்டது வேதம்‘ என்றும், ‘அந்தவேதம் நான்முகனால் வெளியிடப்பட்டது‘ என்றும், ‘அந்த நான்முகன் எம்பெருமானது உந்திக் கமலத்தில் தோன்றினவன்‘ என்றும், ‘அக்கமலம் எம்பெருமான் ஜகத்ரக்ஷணார்த்தமாக உறங்குவான்போல் யோகு செய்தருளினகாலத்து மலர்ந்தது‘ என்றும் அருளிச்செய்யவேண்டி அந்த யோக நித்ராத்தமான சயனத்தின் வைபவத்தை வருணிக்கிறார் – பல்பொறிசேர் என்று தொடங்கிதான் கிடந்து என்னுமளவால்.
உலகில் சாமான்யரான அரசர்கள் பள்ளி கொண்டால், கீழே மெத்தென்ற பஞ்சசயன்மும், மேலே முத்துப்பந்தலும், பக்கங்களில் சிறந்த திருவிளக்குகளும், கால்மாட்டில் சாமரம் வீசும் பரிஜநங்களும் கால்பிடிக்கும் கிங்கரர்களும் – ஆக இத்தனை விபவங்கள் அமையக் காண்கிறோம், ஸாக்ஷாத் பரமபுருஷன் பள்ளி கொண்டருளினால் அக்காலத்திய விபவங்கள் வருணிக்க முடியுமோ! ஆயினும் சுருக்கமாக ஒருவாறு வருணிக்கிறார் ஆழ்வார்.
(பல்பொறிசேர் இத்யாதி) திருமேனி நிறையப் புள்ளிகளை யுடையவனும் ஆயிரம் பைந்தலைகளை யுடையனும் மஹாதேஜஸ்வியுமான திருவனந்தாழ்வானுடைய படங்களிலேயுள்ள மாணிக்கமணிகளின் சிகைகளிலிருந்து கிளம்பி எங்கும் பரவியிராநின்ற ஆச்சரியமான தேஜோராசிகளால் முட்டாக்கிடப்பெற்ற அந்த சேஷசயனத்திலே, திருமகரக்குழைகள் பளபளவென்று ஜவலிக்க, கரிய மால்வரை போலே துயில்கின்றதாம் நாராயண பரஞ்ஜோதி. முத்துக்க ளென்னத்தக்க நக்ஷத்ரங்கள் நிறைந்த ஆகாசமண்டலம் மேற்கட்டியாக அமைந்தது, நிகரின்றி ஜ்வலிக்கின்ற திருவாழி திருச்சங்குகள் திருவிளக்குகளாயின அன்றிவ்வுலகமளந்த திருவடியின் விடாய் தீரப் பாற்கடல் தனது அலைகளையே சாமரமாக வீசிற்று, பூமிப்பிராட்டி, திருவடி வருடாநின்றான். ஆக இப்படிப்பட்ட விபவத்துடனே சேஷசயனத்திலு அமர்ந்து * உறங்குவான்போல் யோகு செய்யும் எம்பெருமான் தனது திருநாபியில் திவ்யமான தொரு தாமரைப்பூவைத் தோன்றுவித்து “உய்ய வுலகுபடைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை“ என்கிறபடியே அக்கொப்பூழ்ச் செந்தாமரைமேல் நான்முகனைத் தோற்றுவிக்க, அந்தப் பிரமன் நான்கு வேதங்களையும் வெளியிட்டனன் – என்றாராயிற்று.
ஜகத்ஸ்ருஷ்டிக்காக எம்பெருமான் பாற்படலில் அரவணைமேற் பள்ளிக்கொண்டு யோகநித்திரை செய்து தனது திருநாபியில் ஒரு கமலத்தையும் அதில் பிரமனையும் தோற்றுவித்து அப்பிரமனுக்கு நான்கு வேதங்களையும் ஓதுவிக்க அவ்வேதங்கள் காட்டியபடியே அப்பிரமன் முன்னிருந்த வண்ணமாகவே உலகங்களைப் படைக்கிறானென்பத நூற்கொள்கை.
சென்னி – தலை, படமென்க, “சென்னி மணிக்குடுமித் தெய்வக் சுடர்நடுவுள்“ என்கிற விதனையே ஆளவந்தார்“ **************** ஸ்தோத்ர ரத்நத்தில் மொழி பெயர்த்தா ரென்னலாம்.
“மன்னிய நாகத்து“ என்றவிடத்து, மன்னி என்று வினையெச்சமாகப் பிரித்து, அந்நாகத்து என்பது அநாகத்து எனத் தொக்கியிருப்பதாகக் கொண்டு உரைக்கப்பட்டது. இதுவே நன்கு பொருந்தும்.
மன்னிய என்றே பிரித்துப் பெயரெச்சமாகக் கொண்டு நாகத்தணைக்கு விசேஷணமாக்கி உரைத்தலுமான், மன்னிய –படுக்கும்போது விரித்து மற்றபோது சுருட்டிவைக்க வேண்டாதே எப்போதும் படுக்கையாகவே பொருந்தியிருக்கிற நாகமென்கை. இவ்வகைப் பொருளில், அசுரச் சுட்டு வருவித்துக்கொள்ள வேண்டியது அவசியமாம்.
மாமலை போல் – மா என்று கருமைக்கும் பெருமைக்கும் வாசகம். “நாகத்தணைமேல் ஓர் மாமலை போல் தான் கிடந்து“ என்று அந்வயம்.
மகர குண்டலம், தாரகா, ஆகாசம், லிதாநம் – வடசொற்கள் (லில்வீச) லில் –ஒளி. இருசுடரை என்று ஸூர்ய சந்திரர்களை சொல்லவுமாம்.
இந்த வர்ணனையில் ஒரு சங்கை உதிக்கக்கூடும் அதாவது – இங்கு எம்பெருமானுடைய திருக்கண் வளர்த்தியைச் சொல்லுகிற விது ஜகத் ஸ்ருஷ்டிக்கு முன்னேயுள்ள படியைச் சொல்வதாகையாலே அக்காலத்தில், “ஒன்றுந்தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லாவன்று“ என்றும் “பன்மைப்படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங்காலத்து“ என்றும் ஆழ்வாரருளிச் செய்தபடி ஸூர்ய சந்த்ர நக்ஷத்ராதிகள் ஒன்றும் இல்லையாதலால் இல்லாத அவற்றையிட்டு வருணிக்கிற விது எங்ஙனே பொருந்தும்? என்று, நம் ஸித்தாந்தத்தில் முன்பு இல்லாத வஸ்துவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டி யென்பதில்லை, ஸூக்ஷ்ம ரூபமாயிருந்த இருக்குமவையே யாதலால் அவற்றை ஆழ்வார் தமது சமத்கார சக்தியால் பெருக்கடித்து வருணிக்கிறாரென்க. வேறுவகையான ஸமாதாநங்களுமுண்டு.
கவரி – கவரியெனத் திரிந்தது. “நிலமங்கை தன்னை முனநாளன விட்ட தாமரை போல் மன்னிய சேவடியை (நோக்கி) மறிகடலும் பன்னுதிரைக் கவரிலீச“ என்று அந்வயம். சேவடிக்கு “நிலமங்கை தன்னை அளவிட்ட“ என்று அடைமொழி கொடுத்ததனால் உலகளந்த ச்ரமந்தீர ஸமுத்ர ராஜன் திரைக்கவரிகளை வீசின்னென்பதாகக் கொள்க.
“வானியங்கு தாரகைமீன்“ என்று தொடங்கி “அன்ன நடையவணங்கே“ என்னுமளவும் –எம்பெருமானுடைய திருவடிகளைப் பிடிக்கின்ற பூமிப்பிராட்டியை வருணிப்பது. அவள் ஸ்த்ரீகளுக்கு உரிய லக்ஷணங்களோடு பொருந்தி யிருக்கின்றாளென்கிறது.
ஆகாசமானது பூமிக்கு உச்சியின் ஸ்தாநத்திலே நிற்கிறப்படியால் அவ்வாகசத்திலுள்ள நக்ஷத்ரங்களைச் சிரமீதணிந்த புஷ்பங்களாகக் கூறினர். தாரகா என்னும் வடசொல்லும் மீன் என்னும் தமிழ்ச் சொல்லும் நக்ஷத்ரங்களுக்குப் பெயராயிருக்க அவ்விரண்டு பதங்களையும் இங்குச் சேர்த்துப் பிரயோகித்தது எங்ஙனே யெனில்,
அச்விநீ, பரணீ கிருத்திகை என்று வ்யவஹரிக்கப்படுகிற நக்ஷத்ரங்களும், இந்த இருபத்தேழு நக்ஷத்ரங்கள் தவிர மற்றும் பல ஆயிரக்கணக்கான நக்ஷத்ரங்களுமாக இரண்டு வகுப்பு ஆகாசத்தில் உள்ளமையால் அதனைத் திருவுள்ளம்பற்றித் தாரகை மீன் என இரண்டு சொற்களைச் சேர்த்து அருளிச் செய்தாரென்க.
“நக்ஷத்ர தாரா கணங்கள்“ என்று ஆரியர்கள் கூறுவதும் இக்கருத்து கொண்டேயாம்.
தென்ன்னுயர் பொருப்பும் –“தென்ன்ன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே“ என்ற பெரியாழ்வார் திருமொழியை நோக்குக.
அகஸ்திய முனிவர் வாஸஞ செய்கிற மலயமலையிலே சென்று அம்முனிவர் முன்னிலையில் ‘தருமமே நடத்தக்கடவேன்‘ என்று மலய மலையை யெழுதிக் கொடியெடுத்து அதனால் மலயத்வஜனென்று பேற்பெற்ற பாண்டியராஜனொருவன் தன் தவவலிமையால் நாள்தோறுஞ் டிசன்று கங்காநதியில் நீராடி வருகையில் ஒரு நாள் தேர்மேலேறிப் புறப்பட்டுக் கங்கையில் நீராடுதற்குச் செல்லும் போது வழியில் திருமாலிருஞ் சோலைமலை ஸமீபித்த வளவில் தேர் அப்பால் வடக்கே போகமாட்டாமல் நின்றுவிட,
அப்பாண்டியன் இங்கே ஒரு தீர்த்தவிசேஷமும் தேவதா ஸந்தியும் இருக்கவேணும், என்றெண்ணி அத்தேரினின்று இறங்கி ஆராய்ந்து பார்த்தவளவில், அவ்விடத்திலே அப்பாண்டியனுக்கு அழகர் ப்ரத்யக்ஷமாக ஸேவை ஸாதித்து ‘முன்பு பிரமன் நம்மைக் காலைக்கழுவுகிற காலத்திலே நமது காற்சிலம்பினின்று தோன்றிச் சிலம்பாறு என்று பேர்பெற்ற இவ்வாற்றிலே (நூபுர கங்கையிலே) ‘நாநஞ் செய்‘ என்ன,
அவ்வரசன் அன்று முதல் கங்கா ஸ்நாநஞ் செய்வதை விட்டிட்டு அங்கே ஸநானஞ் செய்துகொண்டு அழகர்க்குப் பலவகையடிமைகளுஞ் செய்து வரலாயினான் என்கிற இதிஹாஸமும் அறியத்தக்கது. அப்பாண்டிய ராஜன் தென் திசைக்குப் பிரதாநனானமைபற்றித் தென்னன் எனப்பட்டான் அவனுடையதான உயர்ந்த மலை என்று திருமாலிருஞ் சோலையைச் சொல்லுகிறது.
தென் நன் என்று பிரித்து, தென் திசையிலே உள்ளதும் விலக்ஷணமுமான என்று உரைத்தலுமாம. பொருப்பு – மலை. தெய்வ வடமலை தெய்வத்தன்மை பொருந்திய (திவ்யமான) திருவேங்கடலை ஆகிய இத்திருமலைகளிரண்டும் பூமிப்பிராட்டிக்குத் திருமுலைகளாக அருளிச் செய்யப்பட்டது.
“காரார்வரைக் கொங்கை“ என்றாரே சிறிய திருமடலிலும். சிறந்த மேரு முதலிய மலைகளை நிலமங்கைக்குக் கொங்கையாகச் சொல்லலாமயிருக்க அவற்றை விட்டுத் தென் வடமலைகளைச் சொன்னது – நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்குமிடமே முலையாகத் தகுதலால்.
உன்னிய யோகத் துறக்கம் –உன்னுதல் – ஆராய்தல். ‘எவ்விதமாக ஸ்ருஷ்டிக்கலாம்‘ என்று ஆராய்ந்துகொண்டு தூங்குபவன் போல யோகுபுணர்வானிறே
எம்பெருமான் நாபிவலயம் –வடசொல் பூத்து –பூக்க எச்சத்திரிபு.
“மற்றவனும் முன்னம் படைத்தன்ன் நான்மறைகள்“ என்றால் பிரமனே வேதங்களை ஸ்ருஷ்டித்தவனென்று பொருளாகிறதே, இது சேருமோ? வேதம் ஸ்வயம் வ்யக்தமென்றும் நித்யமென்றும் எம்பெருமான் கூட வேதகர்த்தா அல்லனென்றும் ஸித்தாந்தமாயிருக்க, இப்படி சொல்லலாமோ? என்னில்,
************** ஸ்ம்ருதியில் கூறியுள்ளபடி சொல்லியிருக்கிற வித்தால் வேதங்களின் நித்யத்வமும் அபௌருஷேயத்வமும் குறையுறாது. பிரமனது வாக்கில் நின்றும் ஆலிர்ப்பவித்த மாத்திரமே கொண்ட படைத்தன்ன் என்றது. ருக்கு, யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன நான்மறைகளாம்.
ஆக இவ்வளவும் – இவ்வாழ்வார் அருளிச்செய்ய உத்தேசித்த புருஷார்த்தங்களுக்கு மூலப்ரமாணமான வேதங்களின் வரலாற்றைச் சொன்னாராயிற்று. அரவணைமேற் பள்ளிக்கொண்டு யோகத் துயில்புரிந்த எம்பெருமான் தனது நாபிக்கமலத்திலே பிரமனைப் படைத்து அவனுக்கு நான்கு வேதங்களையும் சந்தை சொல்லி வைத்தானென்றதாயிற்று.
—————
அம்மறை தான் –10
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11
பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்
இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் —-15
என்னவும் கேட்டு அறிவதில்லை-
பதவுரை
அம்மறை தான் |
–
|
அந்த வேதங்களானவை |
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று |
–
|
நிலை நின்ற தருமம் அர்தம் காமம் மோக்ஷம் என்று |
உலகில் நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே |
–
|
இவ்வுலகில் நல்வழியாலே சிறப்பித்துக் கூறப்படுகின்ற நான்கு புருஷார்த்தங்கள் நிறைந்திருக்கப்பெற்றவையாம். |
நான்கினிலும் |
–
|
அந்த நால்வகைப் புருஷார்த்தங்களிலும் |
பின்னையது |
–
|
கடைசியில் சொல்லப்பட்ட மோக்ஷமானது |
பின்னை பெயர்தரும் என்பது |
–
|
இந்த சரீரம் தொலைந்த பிறகு உண்டாகுமென்று (சாஸ்த்ரங்களில்) சொல்லப்படுகிறது, |
ஓர் தொல் நெறியை |
–
|
விலக்ஷணமாயும் அநாதியாயு முள்ள அந்தப் பரமபதத்தை (அல்லது, அரச்சிராதி மார்கத்தை) |
வேண்டுவார் தாம் |
–
|
அடைய விரும்புமவர்கள் |
வீழ் கனியும் ஊழி இலையும் என்னும் இவையே நுகர்ந்து |
–
|
தானே பழுத்து விழுந்த பழங்களையும் சருகான இலைகளையுமே தின்று |
உடலம் வருந்தி |
–
|
காயக்லேசங்கள் பட்டு |
துன்னும் இலைக்குரம்பை துஞ்சியும் |
–
|
நெருக்கமான பர்ணசாலை களிற்கிடந்தும் |
வெம் சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும் |
–
|
ஸூர்யனோடு பொருந்திய வெய்யிலே பக்ஷித்தும் |
வண் தடத்தினுள் கிடந்தும் |
–
|
அழகிய தடாகங்களிலே மூழ்கிக் கிடந்தும் |
இன்னது ஓர் தன்மையர் ஆய் |
–
|
ஆக இப்படிப்பட்ட ஸ்வபாவங்களையுடையராய்க் கொண்டு |
ஈங்கு உடலம் விட்டு எழுந்து |
–
|
இவ்வுலகில் சரீரத்தைவிட்டொழிந்து மேலே கிளம்பி |
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் |
–
|
திரும்பி வருதலில்லாத வொருஸ்தானத்திலே போய்சேர்ந்தார்கள் என்று சொல்வதைத் தவிர, |
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவது இல்லை |
–
|
இன்ன தினத்தில் இன்ன மநுஷ்யன் இந்த மோக்ஷத்தில் போய்ச் சேர்ந்தான் என்று விளங்கச் சொல்லக் கேட்டதே யில்லை. |
அந்த வேதங்களில், தர்மம் அர்த்தம் காமம் மேக்ஷம் என நான்கு புருஷர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நான்கு புருஷார்த்தங்கள் தவிர இன்னுஞ் சில விஷயங்களும் வேதங்களிற் கூறப்பட்டிருக்குமோவென்று ஒருவர்க்கும் சங்கைபிறக்க வழியில்லாதபடி இங்கு ஆழ்வார் அருளிச்செய்கிறபடி பாருங்கள். “வேதங்களில் நான்கு புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டன“ என்று வ்யதிகரண ப்ரயோகம் பண்ணாமல் “அம்மறை அறம்பொருளின்பம் வீடென்று நான்கன்றே“ என்று ஸமாநாதிகரண ப்ரயோகம் பண்ணியிருப்பதனால், வேதம் முழுமையும் இந்த நான்கு புருஷார்த்த ஸ்வரூபம், வேறில்லை என்றதாகிறது.
நன்னெறி மேம்பட்டன் –‘மேம்பட்டன நன்னெறி‘ என்று மாற்றி இயைத்து ச்லாக்யமான புருஷார்த்தங்கள் என்று உரைக்கவுமாம். இங்கே ஒன்று சங்கிக்கலாம். சிறிய திருமடலில் “இப்பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே“ என்று மூன்றே புருஷார்த்தங்கள் உள்ளனவாகச் சொல்லி, “சிக்கனமற்றாரானுமுண்டென்பாரென்பது தானதுவும் ஓராமையன்றே உலகத்தார் சொல்லுஞ சொல்“ என்று நான்காவது புருஷார்த்தமுண்டென்பவர்கள் அவிவேகிகளென்று தூஷித்தும் அருளிச்செய்த ஆழ்தார் தாமே இங்கு நான்கன்றே என்று நான்கு புருஷார்த்தங்களுண்டாகச் சொல்வது ஸ்வோக்திவிருத்தமாமே என்று –இதுவிருத்தமன்று
சிறிய திருமடலில் தமது ஹித்தாந்தத்தை முதல் முதலிலே நிஷ்கர்ஷித்துக் கூறிவிட்டுப் பிறகு மோக்ஷ புருஷார்த்த முண்டென்பாருடைய பக்ஷத்தை அநுவதித்து மறுத்தார்,
இதில், புருஷார்த்தங்கள் நான்கு என்கிற பக்ஷத்தை முதலில் அநுவதித்து விட்டு, அடுத்த படியாகவே மோக்ஷபுருஷார்த்த முண்டென்கிற பக்ஷத்தைக் கண்டித்து மூன்றே புருஷார்த்தங்களென்கிற ஸ்வஸித்தாந்தத்தையே தலைக்கட்டுகிறார்.
ஆகையால் இரண்டு திருமடல்களிலும் இவருடைய கொள்கை ஒன்றேயாம். பரமவைதிகரான ஆழ்வார் ‘நான்கு புருஷார்த்தங்கள் வேத்ப்ரதிபாத்யங்கள்‘ என்று முதலில் சொல்லிவிட்டு உடனே, நான்காவது புருஷார்த்தமே இல்லையென்றும் மூன்றே யென்றும் சொல்வது அபசாரமன்றோ? அவைதிகராக மாட்டாரோ? என்று கேட்பார்க்குச் சிறிய திருமடலுரையிலே விரிவாக ஸமாதாநம் சொன்னோம். கண்டுகொள்க.
மோக்ஷத்தை இல்லை செய்தல் இவருடைய திருவுள்ளமன்று, வேறொரு தேஹத்தைப் பூண்டு வேறொரு காலத்தில் வேறொரு ஸ்தானத்தில் எம்பெருமானை அநுபவித்திற்காட்டிலும் இவ்வுலுகத்திலேயே இப்போதே இவ்வுடம்போடே எம்பெருமானை அணைந்து மகிழ்வதே இவர்க்குப் பரமோத்தேச்யமாகத் தோன்றினமையால் “கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல், இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யுந் தவந்தானென்?“ என்ற ஆண்டாளைப்போலே மோக்ஷத்தில் வெறுப்பைக் காட்டுகின்றாரே யன்றி, உண்மையில் மோக்ஷ மென்பதொன்றை அஸத்யம் என்று ஸாதிப்பது இவர்க்கு விவக்ஷிதமன்றென்க.
அந்த மோக்ஷத்தைப் பெறுகிறவர்கள் இந்த சரீரம் கழிந்த பிறகே பெறுகிறார்களென்பது “மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்“ இத்யாதிகளால் ஸித்தமாதலால் அதனையருளிச்செய்கிறார் நான்கினிலும் என்று தொடங்கி மோக்ஷத்தைப் பெறுவதற்காக இங்கேயிருந்து படுகிறபாடுகளைப் பேசுகிறார்.
ஓர் தொன்னெறியை வேண்டுவார் என்று தொடங்கி “ஊன்வாடவுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற்பியாப் புலனைந்தும் நொந்து, தான்வாட வாடத் தவஞ்செய்ய வேண்டா“ என்றும்
“காயோடு நீடு கனியுண்டு வீசுகடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று தவஞ்செய்ய வேண்டா“ என்றும் இவ்வாழ்வாத்தாமே அருளிச் செய்த்து காண்க.
“பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா“ என்றார் பேயாழ்வாரும்.
“காயிலைதின்றுங் கானிலுறைந்துங்கதிதேடித் தீயிடை நின்றும் பூவலம் வந்துந் திரிவீர்காள், தாயிலுமன்பன் பூமகள் நண்பன் தடநாகப்பாயன் முகுந்தன் கோயிலரங்கம்பணிவீரே“ என்று உபதேசித்தார் பிள்ளைப் பெருமாளும் கலம்பகத்தில்.
பொல்லா வொழுக்கும் அழுக்குடம்புமற்று எம்பெருமானைப் பெற்றுநுபவிக்க நினைப்பவர்கள், மனம் பொறிவழிபோகாது நிற்றற்பொருட்டு நீர்பருகியும் காற்று நுகர்ந்தும் காய் கனி கிழங்கு சருகு வருங்கங்களை உண்டும் விரதங்களால் உண்டி சுருக்கலும், கோடை காலத்தில் வெயில் நிலையிலும் பஞ்சாக் நிமத்தியிலும் நிற்றலும், மாரிக்காலத்தும் பனிக்காலத்தும் நீர்நிலையில் பாசியேற நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் வருந்துன்பங்களைப் பொறுத்து இவ்வாறு சரீரத்தை யொறுத்து நல்வீடு செல்வர்களென்பது அறியத்தக்கது.
எம்பெருமானை அர்ச்சாவதாரத்தில் நாம் எளிதாக அநுபவித்து ஆநந்திக்கலாமான பின்பு இப்படிப்பட்ட வீணான காயக்லேசங்கள் படவேண்டா என்று உபதேசிப்பர்கள் ஆழ்வாராகிகள்.
தொன்னெறி என்று பரமபதத்தைச் சொல்லவுமாம், பரமபதத்திற்குச் செல்லும்வழியாகிய அர்ச்சிராதி மார்க்கத்தைச் சொல்லவுமாம். நெறி –கோவிலும் மார்க்கமும்.
ஊழிலை –பழகிப்போன இலை –சருகு இலைக்குரம்பை – இலைகளாற் சமைக்கப்பட்ட குடிசை – பர்ணசாலை.
ஈங்குடலம் வீட்டெழுந்து – ************ அருமையாகச் சொல்லப்பட்ட இந்த மநுஷ்ய தேஹத்தைப் பெற்றுவைத்து இது கொண்டே எம்பெருமானை இஷ்டப்படி அநுபவித்து ஆநந்திக்க விரும்பாமல் அநியாயமாக இவ்வுடலைப் பாழாக்க நினைக்கிறார்களே பாவிகள்! என்று வருந்துகின்றார் போலும்.
அருமந்த தேஹத்தைத்தான் இழக்கிறார்களே, அங்குச் சென்றாகிலும் ஏதாவது நல்ல பேற்றைப்பெறுகிறார்களோ, அது ஒன்றுமில்லை, ‘அவன் மோக்ஷம் போனான், இவன் மோக்ஷம் போனான்‘ என்று வாய் நோவச் சொல்வதைக் கேட்கிறோமேயன்றி ‘இன்ன தினத்தில் இன்ன மநுஷ்யன் இன்னஸுகத்தைப் பெற்றான்‘ என்று சொல்லக் கேட்டதே யில்லை.
————–
உளது என்னில்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் —16
அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்
தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —-17
அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18-
பதவுரை
உனது என்னில் |
–
|
(அடியோடு இல்லை யென்று நான் சொல்லுகிற அந்த மோக்ஷம்) உண்டு என்கிற பக்ஷத்தில், |
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் |
–
|
நிபிடமாயும் திக்ஷ்ணமாயுமுள்ள கிரணங்களை யுடையனான ஸூர்யனுடைய மண்டலத் தின் நட்ட நடுவே |
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் |
–
|
வாய்கொண்டு சொல்ல முடியாத அப்படிப்பட்ட ஸூக்ஷ்மமான ரந்த்ரத்தின் வழியே சென்று |
வீடு என்னும் தொல்நெறி கண் சென்றாரை சொல்லுமின்கள் |
–
|
மோக்ஷ மென்று நீங்கள் சொல்லுகிற ஒரு ஸ்தாநத்திற்குப் போய்த் திரும்பி வந்தவர்களைக் காட்டுங்கள். |
சொல்லாதே |
–
|
அப்படிப்பட்டவர்களைக் காட்டமாட்டாமல் |
அன்னதே பேசும் |
–
|
(மோக்ஷமுண்டென்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறதென்று) பழம்பாட்டையே பாடிகக்கொண்டிருக்கிற |
அறிவு இல் சிறுமனத்து அன்னவரை |
–
|
விவேகமற்றவர்களும் சிறிய மனமுடையவர்களுமான அவர்களுக்கு |
கற்பிப்போம் யாமே |
–
|
நாமோ தெளிவைப் பிறப்பிக்க வல்லோம், (அந்த அவிவேகிகளுக்கு நம்மால் தெளிவு பிறப்பிக்க வொண்ணாது) |
அது நிற்க |
–
|
அந்த மோக்ஷ வார்த்தை அப்படி கிடக்கட்டும். |
***- ஏன் கேட்டதில்லை? ************* வாமதேவோ முக்த என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றனவே, சுகன் வாமதேவன் முதலானோர் மோக்ஷமடைந்தார்களென்று சொல்லக் கேட்கவில்லையோ என்ன,
அப்படி சொல்லியிருப்பது போராது, ஒரு மனிதன் என் கண்ணெதிரே வந்து நின்று நான் ஸூர்ய மண்டலத்தைப் பிளந்துகொண் அதன் வழியே சென்று மோக்ஷம் போய்ச்சேர்ந்து கண்டு வந்தேன்“ என்று அங்குப் போய்வந்தார் சொல்லக் கேட்க வேணும், அப்படி ஒரு வருஞ் சொல்லக் கேட்டதில்லையே என்கிறார்.
“வீடென்னுந் தொன்னெறிக்கண் சென்றாரை“ என்றவிடத்து சென்றாரை என்பதற்கு ‘சென்று என்பதற்கு ‘சென்று திரும்பி வந்தவர்களை‘ என்று பொருள் கொள்ளல் வேண்டும். அறிவு இல் சிறுமனத்து மோக்ஷமுண்டென்று சொல்லுகிறவர்களுக்கு விவேகமில்லை, இனி விவேகமுண்டாகலாமென்னவுங் கூடாதபடி நெஞ்சுங்குறுகியது என்கிறார்.
கற்பிப்போம் யாமே –இல்லாத்தொன்றை உண்டென்று சில அவிவேகிகள் சொன்னால் அவர்களோடு வாக்யார்த்தம் சொல்வதுதானா எனக்குக் காரியம், நான் பிடித்த புருஷார்த்தத்தை இனிதாகப்பேசுவது தவிர்த்து அந்த அறிவிலிகளோடு வாதப்பதிவாதம் பண்ணுவது எனக்கு வேலையன்று. அவர்கள் மனம் போனபடி ஏதேனும் சொல்லிக்கொண்டிருக்கட்டும் என்று கையொழிகிறார்.
“ஆரானுமாதானுஞ் செய்ய, அகலிடந்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே“ எனற நம்மாழ்வாரை ஒரு புடை ஒப்பர் இவர்.
————
***- இனி, தாம் பற்றின புருஷார்த்தம் காமம் என்று சொல்லவேண்டி, மற்ற தருமம் அர்த்தம் என்ற இரண்டு புருஷார்த்தங்களால் பெறக்கூடிய பேறு இன்னது, இப்படிப்பட்டது –என்று நிரூபிக்கத் திருவுள்ளம்பற்றி, தருமத்தை அநுஷ்டிப்பவர்கள் பெறும்பேறு இன்னதென்கிறார்.
முன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்——–19
பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——–20
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்
கன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு——-21
இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் —-22
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப
அன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் ——-23
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்
மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை —————–24
இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25
மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் ———-26
மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த
மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் ——27
அன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த
இன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் ——28
மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்
மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் ——-29
மன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் ———30
துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப
அன்ன முழக்க நெரிந்துக்க வாணீலச்——31
சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் ——32
மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல் ——33
நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்
மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் ——-34
பொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு
இன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் ——-35
அன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே ——36
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37
மன்னும் வழி முறையே நிற்று நாம் –…………..
பதவுரை
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம் |
–
|
(புருஷார்த்தங்களில்) முதலதாக நான் எடுத்துச் சொன்ன தருமத்தின் வழியிலே அநுஷ்டானஞ் செய்தவர்கள் |
ஆயிரம் கண் வானவர் கோன் பொன் நகரம் புக்கு |
–
|
ஆயிரங் கண்ணுடையனான இந்திரனுடைய அழகிய லோகத்திற்சென்று சேர்ந்து |
அமரர் போற்றி செய்ய |
–
|
தேவர்கள் வாழ்த்தப்பெற்று, |
பொங்கு ஒளி சேர்கொல் நவிலும் கோள் அரிமாதான் சுமந்த கோலம் சேர் மன்னிய சிங்க ஆசனத்தின் மேல் |
–
|
மேன்மேலும் வளர்கின்ற ஒளியை யுடையதும், கொல்லுந் தொழிலிற் பழகின் வலிய சிங்கத்தால் சுமக்கப்பட்டதும், அழகியதும், பொருத்தமுடையதுமான சிங்காசனத்தின் மேலே (இருந்துகொண்டு) |
வாள் நெடு கண் கன்னி யரால் இட்ட |
–
|
வாள் போற்கூரிய நீண்ட கண்களையுடைய கன்னிகைகளாலே வீசப்பட்ட கவரிபொதி அவிழ்ந்து |
சாமரத்திரள்கள் (தம்மேல்வந்து) மலரப்பெற்று)
|
இன் இள பூ தென்றல் இயங்க |
–
|
இனிதாயும் மந்தமாயும் பரிமள முடையதாயுமிருக்கிற தென்றல் வந்து வீசப்பெற்று |
மருங்கு இருந்த மின் அனையை நுண் மருங்குல் மெல் இயலார் |
–
|
அருகே யிருக்கிற மின்போல் ஸூக்ஷமமான இடையையுடைய மாதர்கள் |
வெண் முறுவல் |
–
|
(தங்களுடைய) வெளுத்த பற்களாலே |
முன்னம் முகிழ்த்த |
–
|
அபிப்பிராயத்தை ஸூசிப்பிக்கின்ற |
முகிழ் நிலா வந்து அரும்ப |
–
|
இளநிலாவந்து மேலே ப்ரஸிக்க |
அன்னவர் தம் |
–
|
அப்படிப்பட்ட மாதர்களுடைய |
மான் நோக்கம் உண்டு |
–
|
மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து |
ஆங்கு |
–
|
அவ்வளவிலே |
அணி மலர சேர் |
–
|
அழகிய பூக்கள் நிறைந்துள்ள |
பொன் இயல் கற்பகத் தின் காடு உடுத்தமாடு எல்லாம் |
–
|
பொன்மயமான கற்பகக்காடுகள் நிறைந்த ப்ரதேசங்க ளெல்லாவற்றிலும் |
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை |
–
|
நிலைபெற்றிருக்கிற பாரிஜாத வ்ருக்ஷங்களின் பூக்களிலுள்ள மகரந்த பிந்துக்களில் |
இன் இசை வண்டு அமரும் சோலை வாய் |
–
|
இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே, |
மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் |
–
|
புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும் |
மழை தட கண் |
–
|
குளிர்ந்து விசாலமான கண்களை யுடையவர்களாயும் |
மின் இடையாரோடும் |
–
|
மின்போல் நுண்ணிய இடையை யுடையவ்ர்களாயு மிருக்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீகளோடே |
வேண்டிடத்து விளையாடி |
–
|
யதேஷ்டமான இடங்களில் ரமித்து |
மன்னும் மணி தலத்து |
–
|
சிறந்த ரத்னங்களழுத்தின ஸ்தலங்களிலே (கட்டப்பட்டு) |
மாணிக்கம்மஞ்சரியின் |
–
|
மாணிக்க மயமான பூங்கொத்துக்களை யுடையதும் |
மின்னின் ஒளி சேர்பளிங்கு விளிம்பு அடுத்த |
–
|
மின்னல்போலே பளபள வென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே குறடு (கொடுங்கை) கட்டப்பெற்றதும் |
மன்னும் பவளக்கால் |
–
|
சிறந்த பவழ ஸ்தம்பங்களை யுடையதும் |
செம்பொன் செய் |
–
|
செம்பொன்னால் செய்யப்பட்டதுமான |
அன்னம் நடைய அரம்பையர் தம் கை வளர்த்த |
–
|
அன்ன நடையுடைய அப்ஸரஸ்ஸுக்களின் கை வழியாக வுண்டான |
இன் இசை யாழ் பாடல் |
–
|
இனிய இசையை யுடையவீணையின் பாட்டை |
கேட்டு இன்புற்று |
–
|
கேட்டு ஆனந்தித்தும், |
இரு விசும்பில் மன்னு மழை தவழும் |
–
|
பரந்த ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றதும் |
வாள் நிலா நீள் மதி தோய் |
–
|
அழகிய நிலவையுடைய பெரிய சந்திரன் வந்து படியப் பெற்றதும் |
மின்னின் ஒளி சேர் |
–
|
மின்னலின் ஒளி போன்ற ஒளியை யுடையதும் |
விசும்பு ஊரும் |
–
|
ஆகாசத்தில் ஸஞ்சரிப்பதுமான |
மாளிகை மேல் |
–
|
விமாநத்திலே |
மழை கண்ணார் |
–
|
குளிர்ந்த கண்களையுடையரான மாதர்கள் |
மன்னு மணி விளக்கை மாட்டி |
–
|
என்று மணையாத மணி விளக்குகளைத் தொங்கவிட்டு |
விசித்திரமா பாப்படுத்த |
–
|
ஆச்சரியமாக விஸ்தாரமாய்ப் பரப்பின் |
பன்னு பள்ளிமேல் |
–
|
கொண்டாடத்தக்க சயனத்தின் மீது |
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தான் திறப்ப |
–
|
நெருங்கிய சன்னல்களைச் சுற்றியுள்ள கதவுகள் திறந்துகொள்ள, |
இன் இள பூ தென்றல் |
–
|
பரமபோக்யான மந்த மாருதமானது |
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலம் நறு சின்னதாது சூடி |
–
|
அன்னப்பறவைகள் மிதிப்பதனாலே நெரிந்து துகளாய்ப்போன அழகிய நீலோத்பலத்தின் மணம் மிக்க சிறிய தாதுகளைச் சூடிக்கொண்டும் |
ஓர் மந்தாரம் துன்னு நறு மலரால் தோள் கொட்டி |
–
|
சிறந்த மந்தார வ்ருக்ஷத்திலே நெருங்கியுள்ளதும் மணம் மிக்கதுமான புஷ்பங்களாலே தோள்களை அலங்காரித்துக்கொண்டும் |
கற்பகத்தில் மன்னுமலர் வாய் மணி வண்டு பின் தொடர |
–
|
கல்ப வ்ருக்ஷத்திலே பொருந்திய பூக்களிலே படிந்த அழகிய வண்டுகள் பின் தொடரப் பெற்றும் |
ஈங்கு புகுந்து |
–
|
இவர்கள் ரமிக்கு மிடங்களிலே வந்து சேர்ந்து |
இள முலை மேல் நல் நறு சந்தனம் சேறு உள் புலர்ந்த |
–
|
இளமுலைகள் மேல் பூசப்பட்ட நல்ல மணமுடைய சநதனச் சேற்றை நன்கு உலர்த்த |
தாங்க அரு சீர் மின் இடை மேல் கை வைத்து இருந்து |
–
|
தரிக்க முடியாத (ஸூக்ஷ்மமான) அழகிய மின் போன்ற இடுப்பின் மீது கையை வைத்துக்கொண்டிருந்து |
எந்து இள முலை மேல் பொன் அரும்பு ஆரம் புலம்ப |
–
|
உந்நதமான இள முலை மேலே காசுமாலைகள் ஒலிக்கும்படி நிற்க |
ஆங்கு |
–
|
அவ்விருப்பைக் கண்டு |
அகம் குழைந்து |
–
|
மனமுருகி |
இன்ன உருவின் இமையா தடங்கண்ணார் அன்னவர் தம் |
–
|
இப்படிப்பட்ட விலக்ஷணமான வடிவுபடைத்த தேவ மாதர்களுடைய |
மான் நோக்கம் உண்டு |
–
|
மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து |
ஆங்கு |
–
|
அதனோடு கூட |
அணி முறுவல் இன்அமுதம் மாந்தி இருப்பர் |
–
|
அழகிய புன்சிரிப்பாகிற இனிய அம்ருதத்தையும் புஜித்திருப்பர்கள் |
அன்ன அறத்தின் பயன் ஆவது இது அன்றே |
–
|
அப்படிப்பட்ட (முன்னே நான் சொன்ன) தர்ம புருஷார்த்தத்திற்குப் பலனாகப் பெறும்பேறு இதுவே யாம். |
ஒண் பொருளும் அன்ன திறதத்தே |
–
|
சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கொதத்தேயாம் |
ஆதலால் |
–
|
இப்படி தர்ம அர்த்தங்களாகிய இரண்டு புருஷார்த்தங்களுக்கும் காமமே பயனாகத் தேறுவதனால் |
காமத்தின் |
–
|
அக்காம புருஷார்த்தத்தினுடைய |
மன்னும் வழிமுறையே |
–
|
நிலை நின்றவழியாகிய பகவத் காமமார்க்கத்திலே |
நாம் நிற்றும் |
–
|
நாம் ஊற்றமுடையரா யிருப்போம். |
“ஆயிரக்கண் வானவர்கோன்“ என்று தொடங்கி “இன்னமுதம் மாந்தியிருப்பர்“ என்னுமளவும் தாம் புருஷார்த்தத்தினால் ஸவர்க்க லோகத்தில் கிடைக்கும் விஷய போகங்களை விரிவாகச் சொல்லுகிறது.
“அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்றுலகில், நன்னெறி மேம்பட்டன் நான் கன்றே“ என்று கீழே சொல்லுமிடத்துப் புருஷார்தங்களில் முதன்மையாகச் சொல்லப்பட்ட யாதொரு தர்மமுண்டு,
அதனை அடைவுபட அநுஷ்டித்த மஹான்கள் இவ்வுடலைவிட்டு இவ்வுலகையும் விட்டொழிந்த பின்பு, புண்ய பலன்களை அநுபவிப்பதற்கென்று ஏற்பட்ட இடமாகிய தேவேந்திர நகரத்திற்கு (ஸ்வர்க்க லோகத்திற்கு)ச் செல்லுங்கள்,
சென்றவாறே அங்குள்ள அமரர்கள் “ஜய விஜயீபவ“ இத்யாதி சப்த கோஷங்களாலே தோத்திரஞ் செய்து, விலையுயர்ந்து அழகுமிக்க சிங்காசனத்தின் மீது வீற்றிருக்கச்செய்வர்கள், கண்ணழகிற் சிறந்த கன்னிகைகள் அருகேவந்து சாமரம் வீசுவார்கள்,
இனிதான தென்றற் காற்றும் தன்னடையே வந்து மேலேபடும், மற்றுஞ் சிலமாதர்கள் அருகே வந்து நின்று தங்களுடைய உட்கருத்தை வெளிக்காட்டுகின்ற மந்தஸ்மிதத்தை (புன்சிரிப்பை)ச் செய்வர்கள், அவர்களது நோக்கிலே ஈடுபட்டிருப்பவர்கள் இவர்கள்.
(ஆங்கணி மலர் சேர் தொடங்கி விளையாடி வேண்டிடத்து என்னுமளவும் ஒரு வாக்கியார்த்தமாகக் கொள்க) சிங்காசனத்தின்மீது வீற்றிருந்து போகங்கள் பெறும்படியைச் சொல்லிற்று கீழ்வாக்கியத்தில், கற்பகவ்ருக்ஷங்கள் நிறைந்த அழகிய பூஞ்சோலைகளிலிருந்து கொண்டு போகங்கள் அநுபவிக்கிறபடியைச் சொல்லுகிறது இவ்வாக்கியம்.
சிங்காசனத்திலிருக்கும்போது சில மாதர்கள் வந்து ஸாபிப்ராயமாகப் புன்சிரிப்புச் சிரித்தவாறே, ‘பூக்கொய்கையிலே நோக்காகச் சிரிக்கிறார்களிவர்கள் என்று உணர்ந்து உடனே எழுந்துபோய்ச் சோலைகளிலே விளையாடித்திரிவர்களாம்.
அந்த நந்தவனங்கள் எப்படியிருக்கின்றவென்றால், எங்கே பார்த்தாலும் பொன்மயமான கல்ப வ்ருக்ஷங்கள் நிறைந்தும், அந்தக் கல்பவ்ருக்ஷங்கள் மலர்களில் மதுவைப்பருகுவதற்காக வண்டுகள் வந்து படிந்து இனிதாக ரீங்காரம் பண்ணப்பெற்றும் இருக்கின்றனவாம்.
அப்படிப்பட்ட சோலைகளிலே, கூந்தலழகும் கண்ணழகும் இடையழகும் அமைந்த மங்கையர்களுடனே கூடி யதேச்சமாக விளையாடுவர்களாம்.
(மன்னு மணித்தலத்து என்று தொடங்கி இன்னிசையாழ் பாடல் கேட்டின்புற்று என்னுமளவும் ஒரு வாக்கியர்த்தமாகக் கொள்க) நந்தவனங்களில் விளையாடிக் களைத்துப்போய் ஒரு திவ்ய மண்டபத்திற் சென்று வீற்றிருந்து அங்கு அப்ஸாஸ் ஸ்த்ரீகள் செவிக்கினியாக வீணாகானம் பண்ண அதனைக் கேட்டுக் களைதீர்ந்து ஆநந்திக்கும்படி சொல்லுகிறது.
அந்த மண்டபங்கள் எப்படியிருக்கின்றன. வென்றால், கீழ்த்தரையெல்லாம் ரத்னங்களழுத்தப்பட்டு அந்த ரத்நமய ஸ்தலத்திலே கட்டப்பட்டும், மாணிக்கமயமான பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டும், மின்னல்போலே பளபளவென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே கொடுங்கைகள் கட்டப்பெற்றும், பவழ ஸ்தம்பங்கள் நாட்டப்பெற்றும் செம்பொன்னாற் செய்யப்பட்டு மிருக்கின்றனவாம், அப்படிப்பட்ட மண்டபத்துள் தேவமார்கள் வீணை வாசிக்க, மதுரமான அப்பாடலைக் கேட்டு இன்புறுகின்றனராம்.
(இரு விசும்பில் மன்னு மழை தவழும் என்று தொடங்கி அணிமுறுவ லின்னமுதம் மாந்திருயிருப்பர் என்னுமளவும் ஒரு வாக்கியார்த்தமாகக் கொள்க) வீணாகானங் கேட்டுக் களைதீர்ந்து களித்த பின்பு அத்தேவ மாதர் விரித்த படுக்கைகளிலே கிடந்து போகங்களின் எல்லையான பரம போகங்களை அநுபவித்துத் தீருகிறபடி சொல்லுகிறது.
ஸ்வர்க்கலோகத்து அநுபவங்களின் சரமாவதியைச் சொல்லு கிறதாகையாலே இந்த வாக்கியத்தைச் சிறிது விரிவாகச் சொல்லி முடிக்கிறார். இத தார்மிகர்கட்காகப் படுக்கை விரிக்கும் மாளிகை மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றிருத்தலால் இருட்சியும் குளிர்ச்சியும் பொருந்தியும், சந்திரன் வந்து உறைந்தருப்பதனால் ப்ரகாசம் பொருந்தியுமிருக்கும். ஸம்போக ருசியுடையார்க்கு இருளும் வெளிச்சமும் இரண்டும் வேண்டியிருக்குமே.
அப்படிக்குப் பாங்கான மாளிகையின் மேல் ரத்தன தீபங்களைத் தொங்கவிட்டு அப்ஸரஸ்ஸுக்கள் ஆச்சரியமான படுக்கையை விரிப்பார்கள். உலகில் இப்படியும் ஒரு படுக்கையுண்டோ? என்று கொண்டாடிக் கொண்டாடி நாத்தழும் பேறும்படி யிருக்குமாம் அப்படுக்கை. அதன்மேல் சயனிக்கும்போது சன்னல்கள் கதவு திறந்துகொள்ள அவ்வழியாலே இனிய தென்றற்காற்று வந்து உள்ளே வீசும்.
காற்றுக்கு உருவமில்லையாயினும் ஆழ்வார் தமது சமத்காரந் தோற்ற அதனை ஒரு மஹா புருஷன் போலத் தோற்றுவித்து வருணிக்கிறபடி பாருங்கள், – மஹா புருஷன் வரும்போது நல்ல பூக்களைத் தலையிற் சூடிக்கொண்டும் நல்ல மாலையைத் தோளிலணிந்து கொண்டு பின்னே சிவ சேவகர்கள் தொடரவும் வருவனே, அப்படியே வருகிறதாம் அந்தத் தென்றலும்,
அதாவது – நீலோற்பல மலர்களின் தாதுக்களைச் சூடிக்கொண்டும் பாரிஜாத மலர் மாலையைத் தோளிலணிந்து கொண்டும் அம்மலரிலுள்ள மதுவில் நசையாலே பின் தொடர்ந்து வருகின்ற வண்டுகளாலே பின் செல்லப்பெற்றும் வருகின்ற தென்கிறார். தென்றலானது நல்ல பொய்கைகளில் வியாபித்து அங்குள்ள மலர்களின் மணத்தை என்று வீசிக்கொண்டே வருகின்ற தென்றவாறு.
அப்படிப்பட்ட தென்றவானது முன் சொன்ன கதவு திறந்த சன்னல் வழியே உள்ளே புகுந்து மாதர்களின் முலைமேற் பூசியுள்ள சந்தனச்சேற்றை யுலர்த்துகின்றதாம். அத்தகைய தென்றற்காற்று இனிதாக் வீசப்படுக்கையிற் படுகிறப்படி சொல்லிற்றாகிறது. இது உடலுக்கு நேரும் ஸுகம்.
இனி, செவிப்புலனுக்கு சேரும் ஸுகஞ் சொல்லுகிறது –சில தேவமாதர் உல்லாஸமாக இடுப்பின்மீது கையை வைத்துக்கொண்டு முன்னே வந்து நிற்க அவர்களது முலைகளின்மேல் அணியப்பட்டிருக்கின்ற காசுமாலை முதலிய ஆபரணங்கள் ஒன்றோடொன்று உறைந்து கலகலவென்று சப்திக்க, அந்த சப்தத்தாலே செவிக்கு ஆநந்தம் பெறுகிறபடி.
உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் அவர்கட்கு வேறில்லை, அத்தேவமாதர்களின் கடாக்ஷ வீக்ஷணத்தை ஓவாத ஊணாக உண்பர். அவர்களது புன்முறுவலோடு கூடின அதராம்ருதத்தைப் பானம் பண்ணுவர்.
ஆக இவ்வளவுஞ் சொல்லப்பட்ட இன்ப நுகர்ச்சியே தரும புருஷார்த்தத்திற்குப் பயனாகப் பெறுவதாம். இரண்டாவதான அர்த்தம் (பொருள்) என்னும் புருஷார்த்தத்தின் பயனும் இதுவே யொழிய வேறில்லை, பொருள் படைத்தவர்கள் தருமம் செய்வர்கள் ஆதலால் அறத்தின் பயனே பொருட்கும் பயனாக முடியக்கடவதாம்.
(ஆதலால் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும் நாம்) நான்கு புருஷார்த்தங்களில் மோக்ஷமென்பது முதலிலேயே தள்ளுண்டது, தருமமும் அர்த்தமும் காமஸித்தியையே பயனாகக் கொண்டன, ஆகவே, காமபுருஷார்த்த மொன்றே முக்கியம், மற்ற அறம் பொருள்கள் இதற்குச் சேஷபூதம் – என்று இதுவரையில் நிரூபிக்கப்பட்டதாதலால் நாம் காமபுருஷார்த்தத்தையே கைக்கொள்வோமானோம்,
அது தன்னிலும் ஹேயமான விஷயாந்தர காமமன்றிக்கே வேதாந்த விஹிதமாய் உத்தேச்யமாய் சாச்வதபலமான பகவத்விஷய காமத்தைக் கைக்கொண்டோம் என்று ஆழ்வார் தமது உறுதியைக் கூறித்தலைக்கட்டினாராயிற்று.
“சேமநல்வீடும் பொருளுந் தரும்முஞ் சீரிய மற்காம்மும் என்றிவை நான்கென்பர் – நான்கினுஞ் கண்ணுக்கேயாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான், வாமநன் சீலன் இராமாநுசனிந்த மண்மிசையே“ என்ற நூற்றந்தாதிப் பாசுரம் இங்கே நினைக்கத்தகும்.
———————-
சிறந்த காம புருஷார்த்தத்தையே நாம் கடைப்பிடிப்போம் என்றார் கீழ்.
தாம்பற்றின பகவத் காமம் தமக்குக் கைகூடாமையாலே அதற்காக மடலூர்வதே கதி என்பதைத் திருவுள்ளத்தில் அறுதியிட்டு, “புருஷனை நோக்கி ஸ்த்ரீகள் மடலூர்வது கூடாது“ என்று தமிழர் ஒரு வரம்பு கட்டி வைத்திருக்க, ஸ்த்ரீயாகிய நீர் எங்ஙனே மடலூரப்புகுவீர்? என்று சிலர் ஆக்ஷேபித்ததாகக் கொண்டு அவ்வாக்ஷேபத்தை அநுவதித்து அதற்கு ஸமாதாநமும் அருளிச்செய்கிறார்.
மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39
மன்னும் வட நெறியே வேண்டினோம் –
பதவுரை
மான் நோக்கின் அன்னம் நடையார் |
–
|
‘மான் போன்ற நோக்கையும் அன்னம் போன்ற நடையையுமுடைய மாதர்கள் |
அவர் ஏச |
–
|
(உலகத்தார்) பழிதூற்றும் படி |
ஆடவர் மேல் |
–
|
புருஷர்களின் மேலே (ஆண்களை நோக்கி) |
மன்னும் மடல் ஊரார் என்பது ஒர் வாசகமும் |
–
|
மடலூரக் கூடாது“ என்று சொல்லுகிற ஒரு வாக்கியத்தை |
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு |
–
|
தமிழ்ப் பாஷையில் கேட்டு அறிந்திருக்கிறோம். |
யாம் அதனை தெளியோம் |
–
|
அந்த வாக்கியத்தைத் தெளிவுடையதாக நாம் நினைக்க மாட்டோம் (அது அஸங்கதம்) |
மன்னும் வடநெறியே வேண்டினோம் |
–
|
(இவ்விஷயத்தில்) சிறந்த ஸம்ஸ்க்குத நூல்ளிற் கூறிய வழியையே கைப்பற்றுவோம். |
மடலூர்வதென்பது நாணத்தை அறவே யொழித்துக் காதலை வெளிப்படையாக்கித் தெருவேற்ப்புறப்பட்டுச் செய்யுங் காரியமாதலால், நாணத்தையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மாதர்கட்கு இக்காரியம் கூடவே கூடாதென்று தமிழர் மறுத்தனர்.
அந்த ஸித்தாந்தத்தையே “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார்மேல்“ இத்யாதிகளால் பின்புள்ளார் வெளியிட்டனர்.
காதல் கடல்போல் வளர்ந்து கிடந்தாலும் அபவாதத்துக் ஆஸ்பதமான மடலூர்தல் பெண்டுகளுக்கு கூடாதென்பது தமிழர்களின் கொள்கையாயிருந்தாலும் அதனை நான் உசிதமாகக் கொள்ளேனென்கிறார் ஆழ்வார்.
மடலூர்வதற்குக் காமத்தின் மிகையே அதிகாரமாதலால் அப்படிப்பட்ட காம்முள்ளவர்கள் ஆணாயிருந்தாலென்? பெண்ணாயிருந்தாலென்? யாரேனும் மடலூரலாம், ஆசையை வரம்பிட்டுக்காக்க ஆராலும் முடியாது, அரசராணைக்குக் கட்டுப்படுமோ ஆசை, வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை,
அளவு கடந்த வேட்கையின் காரியமாக விளையக்கடவதான் மடலூருகையை ஆண்கள் தாம் செய்யலாம், பெண்கள் செய்யலாகாதென ஒரு வரம்பு கட்டுவதானது ப்ரேமத்தின் போக்கை அறியாதவர்களுடைய செயலாமத்தனை யென்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்.
மன்னும் வடெநெறியே வேண்டினோம் –ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹாபாரதம் முதலிய வடநூல்களில் –ஸீதை, உஷை முதலிய பெண்ணரசிகள் நாணந்தவிர்ந்து தத்தம் காமத்தை நன்கு வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்பட்டிருத்தலால் என்னுடைய ஸித்தாந்தம் வடமொழி நூல் நெறிக்கு ஒக்குமென்றாராயிற்று.
கம்பராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய தமிழ் நூல்களில் இவ்வர்த்தம் இருந்தாலும் அவை வழிநூலேயன்றி முதனூல்லலாமை அறிக.
ஆழ்வார் புருஷர்தானே, ஸ்த்ரீ அல்லரே, இவர் மடலூர்வது தென்னுரைக்கு இணங்கியதேயன்றி விருத்தமன்றே என்று சிலர் நினைக்கக்கூடும். இவர் பிற்பகல் புருஷரேயாயினும் புருஷோத்தமனை அநுபவிக்குந் திறந்தில் ஸ்த்ரீபாவத்தை யடைந்தனராதலாலும், மேலே “என்னுடைய பெண்மையும் என்னலனும் என்முலையும்“ என்று அந்த ஸ்த்ரீபாவத்தையே விளங்கக் காட்டுகின்றனராதலாலும் இப்போது இவர்க்கு ஸ்த்ரீத்வமே உள்ளதென்க.
அப்படியே யிருந்தாலும், மடலூர்தல் ஆடவர்க்கே உரியதென்றும் மடலூர்வேனென்று சொல்லுதல் இருபாலர்க்கும் உரியதென்றும் தமிழர் கூறுகினறாராதலின் இப்போது ஆழ்வார் மடலூர்வேனென்று சொல்வது மாத்திரமேயன்றி மடலூர்தலைச்செய்து முடித்தல் இல்லாமையாலே தென்னுரையோடு விரோதம் ஒன்றுமில்லையே யென்னில்,
இஃது உண்மையாயினும், மடலூர்வேனென்று சொல்லுகிற வார்த்தைதானே ஆழ்வார் திருவுள்ளத்தால் மடலூர்வதாதலாலும், மடலூர்ந்தே தீர்வே னென்று இவர் சொல்வதைக்கேட்டு “மாதராகிய நீர் எப்படி மடலூரலாம்?” என்று கேட்பார்க்கு ஸமாதாநம் சொல்வேண்டியிருப்பதாலும் “தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனை யாந்தெளியோம்“ என்று இங்கு அருளிச்செய்யவேண்டியது அவசியமாயிற்றென்க.
——————
***- எல்லை கடந்த காமமுடையவர்கள் லஜ்ஜையை விட்டுக் கதறியாகிலும் அபிமதத்தைப் பெற்றுத் தீரவேண்டும் என்கிற என் கொள்கையைப் பின் செல்லாமல், ஸ்த்ரீயாக பிறந்து வைத்து நாணத்தை விடுவதென்பது எங்காவது உண்டா‘ என்று நினைத்து வாயடைத்துக் கிடக்கப் பார்க்கிறவர்கள் அரஸிகர்களில் கடைகெட்ட அரஸிகர்களென்கிறார்.
வேண்டாதார்
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் ——–40
அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்
இன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் —–41
மன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்
பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு —–42
உன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத்
துன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் ———43
தம்முடலம் வேவத் தளராதார் காம வேள்
மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் ——-44
பொன்னேடு வீதி புகாதார்-
பதவுரை
வேண்டாதார் |
–
|
(அப்படி ஸம்ஸ்க்ருத நூல்களில் சொல்லப்பட்டுள்ளபடி காமத்தின் அதிப்ரவ்ருத்தியை) விரும்பாதவர்கள் (எப்படிப்பட்டவர்களென்றால்) |
தென்னன் பொதியில் செழு சந்தனம் குழம்பின் அன்னது ஓர் தன்மை அறியாதார் |
–
|
பாண்டிய ராஜனது நாட்டிலுள்ள விளைகிற சந்தனத்தினாலாகிய குழம்பின் அப்படிப்பட்ட தன்மையை அறியாதவர்கள் (விரஹத்தில் ‘சந்தனம் நெருப்பு‘ என்றறியாதே அதைப் பூசிக் கொண்டு குளிர்ச்சியாயிருக்கும் ஸாஹஸிகர்களென்கிறபடி) |
ஆயன் வேய் இன் இசை ஓசைக்கு இரங்காதார் |
–
|
இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் இனிய கானத்வனியைக் கேட்டுத் தளராதே யிருப்பவர்கள், |
மால் விடையின் மன்னு மணி புலம்பவாடாதார் |
–
|
(பசுவின் மேலே) வ்யாமோஹித்து வருகிற காளையின் சிறந்த (கழுத்தின்) மணியானது ஒலி செய்ய அதனைக் கேட்டு இரங்காதே யிருப்பவர்கள், |
பெண்ணை மேல் பின்னும் |
–
|
பனைமரத்தின் மீது ஆணோடே வாயலகு கோத்துக்கொண்டிருக்கிற |
அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு |
–
|
அன்றிற் பறவையின்பேடையினது வாயில்நின்றுமுண்டாகிற அப்படிப்பட்ட சிறு குரலைக் கேட்டு |
உன்னி |
–
|
தமது நாயக விரஹத்தை நினைத்து |
உம்பர் வாய் |
–
|
ஆகாசத்திலே |
துன்னுமதி உகுந்த |
–
|
நெருங்கிய (கிரணங்களை யுடைய) சந்திரன சொரித்த |
தூநிலா நீள் நெருப்பில் |
–
|
நிர்மலமான நிலாவகிற பெரு நெருப்பில் |
தம் உடலம் வேவதளராதார் |
–
|
தங்களுடைய சரீரம் வெந்து போம்படி சிதிலராகாதவர்கள், (இப்படிப்பட்ட அரஸிகர்கள் யாரென்னில்) |
காமவேள் சிலை வாய் மன்னும் மலர் வாளி கோத்து எய்ய பொன் நெடுவீதி புகாதார் |
–
|
மன்மதன் தனது வில்லிலே பொருந்திய புஷ்ப்பாணங்களைத் தொடுத்துப் பிரயோகிக்கச் செய்தே (இனி மடலூர்வதே புருஷார்த்தமென்று கொண்டு) அழகிய பெரிய வீதிகளிலே புறப்படாதவர்கள் எவரோ, அவர்கள். |
(தென்ன்ன் போதியில் இத்யாதி) தென்ன்னாகிறான் – தெற்குத் திசைக்குத் தலைவனாய் மலயத்வஜனென்று பெயரையுடையனான பாண்டியன், அவனுடையதான யாதொரு பொதியமலையுண்டு –மலயபர்வதம் அதில் விளைகிற சந்தனத்தினாலாகிய குழம்பின் தன்மையை அறியாதவர்கள் என்கை.
நாயகனைப் பிரிந்து தனியிருக்கும் ஸமயத்திலே சந்தனக்குழம்பை உடம்பிலே பூசிக்கொள்ளும் மாதர் நெருப்பை யணைந்தாற்போலே தபிக்கப்பட்டு வருந்தவேண்டியது முறைமை, அங்ஙனம் வருந்தாதே ஹா, ஹா சந்தனச்சேறு என்ன குளிர்த்தியாயிருக்கிறது அதிபோக்யம் பரமபோக்யம் என்று உகந்து பேசும்படியான அரஸிகர்கள் என்றதாயிற்று.
ஆகவே, சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மையாவது –விரஹத்தில் சந்தனத்துக்குண்டான தாஹகத்வம், அதனை யறியாதவர்கள் ‘சந்தனம் சைத்யோபசாரத்திற்கு ஏற்றவஸ்து என்று கொள்ளும் அறிவிலிகள், அவர்கள் அரஸிகர்களேயிறே.
பொதியில் –பொதி என்றும், பொதியில் என்றும் மலயமலைக்குப்பெயர், இங்கு இல் என்பது சொல்ல வடிவமாகவுமாம், ஏழாம் வேற்றுமையுருபாகவுமாம்.
ஆயன்வே யின்னிசை யோசைக் கிரங்காதார் –விரஹ காலத்தில் வேய்குழலோசை (வேணுநாதம்) காதிற்பட்டால் உள்ளமுருகிச் சுருண்டு விழுவது முறைமை, அப்படி தளராமல் ‘குழலோசை செவிக்கு இனிதாயிருக்கிறது நல்ல ராகத்தில் வாசிக்கப்படுகிறது.
லக்ஷணத்தில் வழுவில்லாமல் ஸல்லக்ஷணமாயிருக்கிறது‘ என்று சொல்லித் தரித்திருப்பவர்கள் அரஸிர்களேயாவர். குழலூதுவது இடையர்க்குச் சாதியியல் வாகையால் ஆயன்வேண் எனப்பட்டது.
மால்லிடையின் மன்னு மணிபுலம்ப வாடாதார் –ஊராமாட்டுக்களின் கழுத்திலே தொங்க விடப்பட்டுள்ளமணிகளின் ஒலியானது விரஹிஸ்த்ரீகளுக்கு உத்தீபகம், மாடுகள் காடுகளிலே மேய்த்துவிட்டு ஸூர்யாஸ்தமன மையத்திலே ஊரினுள்ளே புகும்போது ஆனந்தமாகத் துள்ளிக்கொண்டு வருகையாலே உண்டாகின்ற அந்த மணியோசையானது கல்விக்கு ஏகாந்தமான இராக்காலத்தை நினைப்பூட்டி வருந்தச்செய்யும்,
“களையா ரிடிகுரலுங் கார்மணியின் நாலாடல், தினையேனும் நில்லாது தீயிற்கொடிதாலோ“ என்று பெரிய திருமொழியிலும்,
“மாலைவாத் தன்னுடைய நாவொழியாதாடுந் தனிமணியின், இன்னிசை யோசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலுமெஃகில் கொடிதாய்நெடிதாகும்“ என்று இத்திருமடலிலும் இவர்தாமே அருளிச்செய்த்து காண்க.
மால்விடையின் மணிபுலம்ப அதனைக் கேட்டு வாடாதவர்கள் எப்படி அரஸிகர்களோ அப்படியே இவர்களும் அரஸிகர்கள் என்றதாயிற்று.
பெண்ணைமேல் பின்னு மவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு உன்னியுடலுருகி நையாதார்) அன்றில் என்பது ஒரு பறவை, அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும், அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணை பிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பெறாமல் ஒனறை ஒன்று இரண்டு மூன்று தரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன் துணையைக் கூடாவிடின உடனே இறந்துவிடும்.
இப்பறவையை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணை பிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக் கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கதிலே வாயலகு தன்னில் நெகிழ்ந்த வளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் காமோத் தீபகமாய்ப் பிரிவாற்றாமைத்துயரை வளர்த்து விரஹிகளை மிகவருத்தும் அதற்கு வருந்தாதவர்கள் அரஸிகர்களேயாவர்.
(உம்பர்வாய்த் துன்னுமதியுகுத்த தூநிலா நிணெருப்பில், தம்முடலம் வேவத் தளராதார்) “மேவுதண்மதியம் வெம்மதியமாலோ“ (திருவாய்மொழி) என்றபடி விரஹிகளுக்குச் சந்திர கிரணங்கள் நெருப்பைவாரி எறிந்தாற்போலே யிருக்கவேண்டும், நிலா, மேலே பட்டவாறே தீக்கதுவினாற்போலே நொந்து கூக்குரலிட வேண்டும். அப்படியன்றி, குளிர்ந்த நிலா கிடைத்ததென்று மகிழ்ந்து அதிலே படுக்கையை விரித்துப் படுக்கவில்லார் அரஸிகர்களேயாவர்.
முதலிலே, வேண்டாதார் என்றாரே, அதற்குப்பொருள் விவரிக்கிறார் – காமவேள் வீதி புகாதார் என்பதனால் மன்மதன் தனது வில்லிலே புஷ்ப பாணங்களைத் தொடுத்துப் பிரயோகித்த வளவிலும் “நவ யௌவந்ந ஸ்த்ரீகளாயிருந்து வைத்து நாணங்காக்க வேணுமேயன்றி லஜ்ஜையை விட்டுத் தெருவிலே புறப்படலாமோ“ என்று தத்துவம் பேசியிருப்பவர்கள் – சந்தனக் குழம்பின் தன்மை யறியாதார், ஆயன்வேய் இன்னிசை யோசைக்கிரங்காதார், விடையின் மணிபுலம்ப வாடாதார், அன்றில் பெடை வாய்ச்சிறுகுரலுக்கு உருகி நையாதார், மதியுகுத்த தூநிலா நீணெருப்பில தளராதார், -இப்படிப்பட்ட அரஸிக சிகாமணிகளாவர் – என்றதாயிற்று.
———–
தம் பூவணை மேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——-45
இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்
பொன்னனையார் பின்னும் திரு வுறுக
பதவுரை
தம் பூ அணைமேல் |
–
|
தங்களுடைய புஷ்பசயனத்தின் மீது |
சின்னம் மலர் குழலும் |
–
|
துகள்களையுடைய புஷ்பங்களையணிந்த கூந்தலையும் |
அல்குலும் |
–
|
நிதம்பத்தையும் |
மெல் முலையும் |
–
|
மெல்லிய முலையையும் |
இன் இள வாடை தடவ |
–
|
இனிதாய் இளையதாயுள்ள வாடைக் காற்றானது வந்து தடவ |
கண் துயிலும் |
–
|
(ஆநந்தமாகத்) தூங்குகின்ற |
பொன் அளையார்தாம் |
–
|
ஸ்த்ரீகளானவர்கள் |
பின்னும் திரு உறுக |
–
|
மேன்மேலும் மேனியழகு மேலிட்டு விளங்கட்டும். |
***- பல மாதர்கள் நாயகனைப் பிரிந்த காலத்தும் சிறிதும் வாடாமல் வருந்தாமல் புஷ்பங்களினால் படுக்கை அமைத்துக்கொண்டு அதன்மேலே ஸுகமாகப் படுத்துக்கொண்டு தமது கூந்தலையும் அல்குலையும் மூலையையும் வாடைகாற்று வந்துவீசி இனிமைப்படுத்த இனியராய்க் கிடப்பார்கள், அவர்கள் நெருப்பிலே கிடந்து நிறம்பெறுவர்கள், காட்டுத்தீ கதுவினாலும் லக்ஷியம் பண்ணாமல் உறங்க வல்லவர்கள்,
அவர்கள் (பின்னும திரு உறுக) நாயகனைப் பிரிந்து நிறமழியவேண்டியிருக்க, விரஹமே விளைநீராக மேன்மேலும் அழகுஞ் செல்வமும் அதிகமாகப் பெறுவார்களாகில் அப்படியே பெற்றிடுக, அப்படிப்பட்ட கல் நெஞ்சு எனக்கில்லை,
தலைவனை ஒரு நொடிப்பொழுது பிரிந்தாலும் “மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலா“ என்று கதறிக்கொண்டு நாண் மடமச்சங்களை விட்டு நெடுந்தெருவே புறப்பட்டு நான் மடலூர் வனேயன்றி ‘ஒழிந்த பாவி அப்படியே ஒழியானா‘ என்று சிந்தித்துக்கொண்டு ஸுகமாக வாழ்பவர்களைப் போலே வாழமாட்டேன் என்றதாயிற்று.
சின்னமலர்க்குழலும் – சின்ன மலர் – விரிந்த புஷ்பங்களையுடைய என்றுமாம். “சின்னம் –விரிகை“ என்று வியாக்கியானம்.
பொன்ன்னையார் –பொன் போன்ற மேனியையுடையவர்கள் மாதர்கள், பொன்னானது நெருப்பிலே இடப்பட்டு உருவழியாம அழுக்கற்று நிறமும் ஒளி பெறுமாபோலே விரஹாகநியில் வீழ்ந்தகாலத்தும் உருவழியாமல் மேன்மேலும் ஒளிபெற்று விளங்கும் பாக்கியவதிகள் என்பார் பொன்னையார் என்றார்.
திருஉறுக – உறுதலாவது அதிகப்படுதல், அதிகமான சோபையை அடைந்திடட்டும் என்றபடி. இது க்ஷேபித்துச் சொல்லும் வார்த்தை.
—————-
ஆசையின் மிகுதியாலே நாணந்தவிர்ந்து நாயகன் பின்னே போவதும், நாயகனை பலாத்காரத்தாலே தனக்காக்கிக் கொள்வதும் நாயகளைப் பெறுதற்கு அரிய பெரிய ஸாதநங்களை அநுஷ்டிப்பதும் இவையெல்லாம் மடலூர்வதற்குப் பர்யாயமேயாம் என்பது ஆழ்வார்திருவுள்ளம்.
தமிழர்கள் ஏதோ எழுதி வைத்திருக்கிறபடி மடன்மாவேறினால்தான் மடலூர்ந்த்தாக இவருடைய அபிப்பிராயமில்லை,
ஸ்த்ரீகளுக்கு இன்றியமையாத ஸ்வரூபமாகிய நாணத்தைக்காத்து மரியாதை வழுவாமல் நிற்கிறநிலை குலைந்து நாணம் நீங்கினபடியை வெளியிடுகின்ற செய்தி எதுவாயிருந்தாலும் அது மடலூர்வதொக்குமென்றாயிற்று ஆழ்வார் திருவுள்ளம்பற்றியிருப்பது.
அப்படி நாணந்துறந்து அதிப்ரவருத்தி பண்ணின பெண்ணரசிகளின் சரித்திரம் வடமொழியில் இதிஹாஸ புராணங்களில் எராளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றதில் நாலைநது பெண்களுடைய செய்தியை எடுத்துச்செல்ல உத்தேசிக்க ஆழ்வார், முதலில் ஸீதாபிராட்டியின் நடத்தையை எடுத்துக்காட்டுகின்றார்.
போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——
பதவுரை
போர் வேந்தன் |
–
|
ரணாசூரனாகிய இராமன் |
தன்னுடைய தாதைபணியால் |
–
|
தன் தகப்பனான சதரதனுடைய சொற்படி. |
அரசு ஒழிந்து |
–
|
ராஜ்யமாள்வதைத்தவிர்ந்து (காட்டுக்குப் புறப்பட்டபோது) |
பொன் நகரம் |
–
|
அழகிய அயோத்யாபுரியிலுள்ளாரடங்கலும். |
பின்னே புலம்ப |
–
|
(நீ காட்டுக்குப்போகேல் என்று) பின்னா லழுது கொண்டே வந்தபோதிலும் |
வெண்டர் |
–
|
என்னவேணும் |
வலம் கொண்டு |
–
|
தான்கொண்ட உறுதியை விடாமுற்கொண்டு |
வளம் மன்னும் நாடு கை விட்டு |
–
|
செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு |
மாதிரங்கள் மின் உருவின் வெண்தேர் திரிந்து |
–
|
திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும். |
வெளிப்பட்டு |
–
|
எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும் |
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று |
–
|
கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப்
பெற்றதும் |
பின்னும் அதற்குமேலும் |
–
|
|
திரை வயிறு பேயேதிரிந்து உலவா |
–
|
(ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்துகொண்டிருக்கப்பெற்றதும் |
கொல் நவிலும் கொலையைப் பற்றின சப்தமே கிளம்பிக்கொண்டிருக்கப்பெற்றதுமான
|
வெம்காணத்தூடு |
–
|
வெவ்விய காட்டினுள்ளே |
கொடு கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பால் மேல் |
–
|
உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்வியபருக்கைக் கற்களின்மேலே (எழுந்தருளின வளவிலே) |
வைதேவி என்று உரைக்கும் |
–
|
வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய் |
மன்ன்ன் இராமன் பின் |
–
|
அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே |
பஞ்சு அடியால் |
–
|
பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே |
நடந்திலளே |
–
|
தானும் நடந்து செல்லவில்லையா? |
|
|
|
|
கைகேயியின் சொற்படி நடக்கவேண்டியவனான தசரத சக்ரவர்த்தி இராமபிரானை அழைத்து வாஸஞ் செல்லுமாறு நியமிக்க அந்த நியமனத்தைச் சிரமேற்கொண்ட இராமபிரான் வனத்திற்குப் புறப்படுங்காலத்தில் ஸிதாதேவியிடஞ் சென்று இச்செய்தியைத் தெரிவித்து ‘நான் போய் வருகிறேன், வருமளவும் நீ மாமனார்க்கும் மாமியார்க்கும் ஒரு குறைவுமின்றிப் பணிவிடை செய்துகொண்டிரு என்று சொல்லுங்கால் தன்னை நிறுத்திப் போவதாகச் சொன்ன வார்த்தையைக் கேட்ட
பிராட்டி மிகவும் கோபித்து ‘என்தகப்பனால் உம்மை ஒரு ஆண்பிள்ளையாக எண்ணி என்னை உமக்குக் கொடுத்தார் ஒரு பெண்டாட்டியை கூட கூட்டிக்கொண்டுபோய்க் காப்பாற்றி ஆளத்தக்க வல்லமையற்றவர் நிர் என்பதை அப்போது அவர் அறிந்திலர் இப்போது அவர்இச்செய்தியை கேட்டால் உம்மை நன்றாக வெகுமானிப்பார் ஒரு பெண்பிள்ளை ஆணுடை யுடுத்துவந்து நம் பெண்ணைக் கைக்கொண்டு போய்ந்துக்காண் என்று நினைப்பர் என்று ரோக்ஷந்தாற்ற வார்த்தை சொல்லி
தன்னையுங் கூட்டிக்கொண்டு போகவேணுமென்று நிர்பந்தித்து காட்டு வழிகளின் கொடுமையையுங் கணிசியாமல் காமஸித்தயையே தலையாகக்கொண்டு போகவில்லையா? இது மடலூர்தல்லவா? என்கிறார்.
தாத என்ற வடசொல் தாதையெனத் திரிந்தது. வலங்கொண்டு – (பலம்) என்ற வடசொல் வலமெனத்திரிந்தது. மனவலிவைச் சொல்லுகிறது. கொண்ட காரியத்தைக் குறையறத் தலைக்கட்டியே விடும்படியான அத்யவஸாயம்.
மன்னும் வளகாடு –மன்னும் –குலக்ரம்மாகத் தனக்கு ப்ராப்தமான என்றுமாம். மாதிரங்கள் –மாதிரம் என்று ஆகாயத்துக்கும் திசைக்கும் பூமிக்கும் மற்றும் பலவற்றுக்கும் வாசகம் “விண்டேர் திரிந்து“ என்று பாடம் வழங்கிவந்தாலும் வெண்டேர் என்றே உள்ளது பிரயோகங்களும் அப்படியே. வடமொழியில் ம்ருகத்ருஷ்ணா என்று சொல்லப்படுகிற கானல் தமிழில் வெண்டேர் என்றும் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.
வெளிப்பட்டு –செடி மரம் முதலியவை இருந்தால் வெய்யிலுக்கு அவற்றின் நிழலில் ஒதுங்கலாமே, அப்படி ஒன்றுமில்லாமல் பார்த்த பார்த்த விடமெல்லாம் வெளி நிலமாயிருக்கை.
கல்நிறைந்து – வழிமுழுவதும் க்றகள் நிரம்பியிருக்கும். தீய்ந்து எனினும் தீந்து எனினும் ஒக்கும். மருகாந்தாரங்களிற் கண்ட விடமெங்கும் தீப்பற்றி எரிந்துகிடக்குமாய்த்து.
கழை –மூங்கில். வெய்யிலின் மிகுதியினால் மூங்கில்கள் வெடித்துக்கிடக்கும் கால்சுழன்று எங்கும் சூறாவளியாய்க்கிடக்கும்.
சூறாவளி – சுழல் காற்று, மனிதரைத்தூக்கி யெறியுங்காற்று.
திரைவயிற்றுப்பேய் –ஜநஸஞ்சாரமுள்ள காடாயிருந்தால் அங்குள்ள பேய்களுக்கு எதாவது உணவு கிடைக்கும் வயிறும் நிரம்பியிருக்கும் நிர்ஜநமான காடாகையாலே பேய்கள் உணவின்றிச் சுருங்கி மடிந்த வயிற்றையுடைடயனவாயிருக்கும்.
திரிந்துலவா – உலவுதலாவதும் ஒழிதலும், திரிந்துலவா என்றது திரிந்து மாளாத என்றபடியாய் எப்போதும் பேய்களே திரிந்துகொண்டிருக்கிறகாடு என்னவுமாம்.
வைதேவி – ஸீதைக்கு வடமொழியில் வைதேஹீ என்று பெயர். விதேஹராஜனான ஜநகனது மகள் என்றபடி. அணங்கு – தெய்வப்பெண் “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்பது நிகண்டு.
—————
பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –
பதவுரை
பின்னும் |
–
|
அது தவிரவும் |
கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல் |
–
|
கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய் |
வேகவதி என்று உரைக்கும் கன்னி |
–
|
வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை |
தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது |
–
|
தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல் |
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக |
–
|
தனது தமையன்(தடுத்துத்) தன்னைக் கொண்டுபோக |
அங்கு |
–
|
அவ்வவஸ்தையிலே |
அன்னவனை |
–
|
அந்தத் தமையனை |
நோக்காது |
–
|
லக்ஷியம் பண்ணாமல் |
தான் சென்று |
–
|
தான் பலாத்காரமாகப் புறப்பட்டுப்போய் |
வாள் அமருள் |
–
|
பெரிய போர்க்களத்திலே |
கல் நவில் தோள் காளையை |
–
|
மலைபோல் திண்ணிய தேர்களையுடையவனும் காளை போல் செருக்குற்றிருப்பவனுமான தனது காதலனை |
அழித்து உரப்பி |
–
|
இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி |
கை பிடித்து |
–
|
பாணிக்ரஹணம் செய்து கொண்டு |
மீண்டும் போய் |
–
|
அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து |
பொன் நவிலும் ஆகம் |
–
|
(அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே |
புணர்ந்திலளே |
–
|
அணையப்பெற்றாளில்லையோ? |
வேகவதி என்பாளொரு தெய்வமாதின் சரிதையை எடுத்துக் காட்டுகிறார்.
இதில் சிறிய திருடலிற் சொல்லப்பட்ட வாஸவதத்தையின் சரித்திரத்துக்கு மூலமாகிய புராணம் இன்னதென்றுதெரியாதுபோலவே இவ்வேகதியின் சரிதைக்கு மூலமான புராணமும் இன்னதென்று தெரியவில்லை.
தமிழ்நாடுகளில் ப்ரஸித்தமான பெருங்கதை என்ற தொகுதியில் உதயணன் சரித்திரப் பகுதியில் இத்தெய்வமாதுகளின் வரலாறு ஒருவிதமாக எழுதப்பட்டுள்ளது.
வடமொழியிலும் கதாஸரித்ஸாகரம் என்ற கதைப்புத்தகத்தில் இவர்களின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது.
பிற்காலத்தவர்கள் எழுதிய அப்புத்தகங்களை ஆழ்வார் –ஸ்ரீஸூக்திகட்கு மூலமாகச் சொல்ல வொண்ணாது. கதைப்போக்கிலும் வேறுபாடு உள்ளதுபோலும். ஆகையாலே இக்கதையை இங்கு விரித்துறைக்க விரும்புகின்றிலோம்.
அழகிற் சிறந்த வேகவதி என்னுமோர் தேவகன்னிகை தனது கணவன் முகத்திலே விழிக்க வொண்ணாதபடி தன்னைத் தனது தமையன் தடைசெய்து இழுத்துக்கொண்டுபோக அவள் அவனை லக்ஷியம் பண்ணாமல் திரஸ்கரித்து உதறித் தள்ளிவிட்டுத் தனது காதலன் ஒரு போர்க்களத்திலே யுத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிந்து அங்கே போய் இப்படிதானா என்னை நீ கைவிட்டுத் திரிவது என்று தார்க்காணித்து அந்தப் போர்க்களத்திலே பலருமறிய அவன் கையைப் பிடித்திழுத்துத் தன்னூர்க்குக் கொண்டு சென்று இஷ்டமான போகங்களை அநுபவித்து வாழ்ந்தாள் – என்பதாக இவ்விடத்தில் கதை ஏற்படுகிறது.
இதன் விரிவை வல்லார் வாய்க்கேட்டுணர்க. முன் தோன்றல் முன்னே பிறந்தவன்.
———–
பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும்
கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் —-56
பன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் ———57
தன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்
பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது ——58
நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே –
பதவுரை
பூ கங்கை புனல் முன்னம் பரக்கும் நல் நாடன் |
–
|
அழகிய கங்காநதியின் தீர்த்தம் முன்னே ப்ரவஹிக்கப்பெற்ற சிறந்த நாட்டுக்குத் தலைவனும் |
மின் ஆடும் கொல்நவிலும் நீள்வேல் |
–
|
ஒளியையுடையதும் கொலைத் தொழிலைக் கற்றதும் நீண்டதுமான வேலாயுத்த்தைக் கையிலே உடையவனும் |
குருக்கள் குலம் மிதலை |
–
|
குருராஜ வம்சத்தில் தோன்றினவனும் |
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி |
–
|
ஒப்பற்ற வெற்றி பொருந்தி |
தனஞ்சயனை |
–
|
அர்ஜுநனை |
பன்னாகராயன் மடம் பாவை |
–
|
கௌரவ்ய்னென்னும் ஸர்ப்ப ராஜனுடைய |
மடமைபொருந்திய பெண்ணான உலூபி யென்பவள்
|
பாவை தன் மன்னிய நாண் அச்சம் |
–
|
ஸ்த்ரீத்வத்திற்குப் பொருந்தின நாண் மடமச்சம் முதலிய குணங்கள் நீங்கப்பெற்று |
தன்னுடைய கொங்கை முகம் நெரி |
–
|
தனது கொங்கையின் முகம் நெறிக்கப்பெற்று |
தான் |
–
|
(வெட்கத்தை விட்டுத்) தானாகவே |
நயந்து |
–
|
ஆசைப்பட்டு |
அவன் தன் |
–
|
அவ்வர்ஜுநனுடைய |
பொன்வரை ஆகம் |
–
|
அழகிய மலைபோன்ற மார்பை |
தமீஇக் கொண்டு |
–
|
ஆலிங்கனஞ் செய்துகொண்டு |
தனது நல் நகரம் போய் புக்கு |
–
|
தன்னுடைய தழகான ஸ்தாநத்திலே (நாகலோகத்திலே) போய்ச் சேர்ந்து |
இனிது வாழ்ந்ததுவும் |
–
|
ஆனந்தமாக வாழ்ந்தாளென்பதையும் |
முன் உரையில கேட்டு அறிவது இல்லையே |
–
|
மஹாபாரத்தில் நீங்கள் கேட்டறிந்த்தில்லையா? |
***- அர்ஜுநன் தீர்த்தயாத்திரையாகச் செல்லுபோது ஸ்நாநஞ் செய்ய கங்கையில் இறங்கி நீராடிக் கரையேறப் புகும்போது உலூபி யென்னும் நாக கன்னிகை இவனைக்கண்டு காம மோஹமடைந்து ரமிக்க விரும்பி இவனைத் தண்ணீரினுள்ளே இழுத்துக்கொண்டு செல்ல இவனும் உள்ளே சென்று நீ யார்? என்னை எதுக்காக இங்கே கொணர்ந்தாய்? என்று கேட்க,
அவ்வுலூபி ஐராவத குலத்திற் பிறந்த கௌரவ்யனென்னும் ஸர்ப்பராஜனுடைய பெண் நான், உன்னைக் கண்வாறே மன்மத பாணங்களுக்கு இலக்கானேன், எப்படியாவது நீ என்னை புணர்ந்து மகிழ்விக்கவேணும் என்று வேண்ட
அதற்கு அர்ஜுநன் அம்மா நான் இப்போது ஸம்வத்ஸர ப்ரஹ்மாசர்ய வ்ரத்த்தில் நிஷ்டனா யிருக்கின்றேன், ஆகையால் எங்ஙனே புணர்ச்சி செய்வேன்? உனது விருப்பை நிறைவேற்ற வேணுமென்கிற ஆசையும எனக்கு உளது. என்செய்வேன்? என்விரதமும் கெடாமல் உன் விருப்பமும பழுதுபடாமல் காரியமாகும்படியான உபாயத்தை நீயே சொல் என்ன
அதற்கு அவ்வுலூபிகை உன் விரத்த்தின் வரலாறு எனக்குத் தெரியும், நான் காம நோயைத் தாங்க முடியாது உன்னைச் சரணமடைகின்றேன், அடைக்கலம் புகுந்தவர்களை கைவிடுதல் அதர்ம்மன்றோ என்னை ரக்ஷிப்பதற்காக நீ புணர்ச்சி செய்வாயாகில் இது உன் விரத்த்தை கெடுக்க மாட்டாது, என்னை கைவிடுவாயாகில் இப்போதே என் உயிர் அற்றொழியும்படிபராய் என்ற மிக்க ஆர்த்தியுடன் சொல்ல
அர்ஜுநன் அதற்கிணங்கி அன்றிரவு அவளோடே கலந்திருந்து இராவாந் என்கிற அழகிய ஒரு புத்தரனையும் அவளிடத்திற் பிறப்பித்து மீண்டு சென்றான் என்கிற கதை மஹாபாரத்தில் ஆதிபர்வத்தில் இருநூற்று முப்பத்தினான்காமத்தியாயத்திற் கூறப்பட்டுள்ளது.
குருக்கள் குலமதலை – பரத வம்சத்திற் பிறந்த குரு என்னும் அரசனது மரபில் தோன்றினவர்கள் பாண்டவர்களும் துரியோதநாதியரும். தனஞ்சயன் – அர்ஜுநனுடைய நாமங்கள் பலவற்றுள் ஒன்று.
பந்நகம் என்ற வடசொல் பாம்பு என்று பொருள்படும் பத்-காவாலே ந க –நடவாத்து உரகமாதலால் மார்பாலே ஊர்ந்து செல்வது என்று பொருள் – அச்சொல் இங்குப் பன்னாகமென நீண்டு கிடக்கிறது. ‘பன்னகராயன்‘ என்றே பாடமிருந்தாலும் தளை பிறழாது ஆயினும் பன்னாக ராயனென்றே பாடமாம்.
பாவை –சித்திரப்பதுமை உவமையாகுபெயரால் ஸ்த்ரீயைக் குறிக்கும். இங்கு பிரநரணம் நோக்கிப் புத்திரியைக் குறித்த்து. பாவைதன் மன்னிய என்றவிடத்துள்ள பாவை என்னுஞ் சொல் ஸ்த்ரீத்வத்தைக் குறிக்கும்.
நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்று ஸ்த்ரீகளுக்கு உரியகுணங்கள் நான்கு, இவற்றுள் நாணமாவது – தகாத காரியத்தில் மனமொடுங்கி நிற்பது, கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையுமாம். மடமாவது எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல் அச்சமாவது – மிகச்சிறிய காரணத்தினாலும் மனம் நடுங்குதல். பயிர்ப்பாவது – பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக்கொள்வது.
———–
சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் –
பதவுரை
சூழ் கடலுள் |
–
|
பரந்த கடலினுள்ளே |
பொன் நகரம் செற்ற |
–
|
ஹிரண்யாஸுரனுடைய நகரங்களை அழித்தவனான |
புரந்தரனோடு ஏர் ஒக்கும் |
–
|
தேவேந்திரனோடு ஒத்த செல்வ முடையனான |
மன்னவன் |
–
|
ராஜாதி ராஜனாயும் |
அவுணர்க்கு வாள் வேந்தன் |
–
|
அசுரர்களுக்குள் பிரஸித்தனான தலைவனாயு மிருந்த |
வாணன் தன்னுடைய பாவை பாணாஸுரனுடையமகளாய்
|
உலகத்து தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள் |
–
|
எவ்வுலகத்திலும் தன்னோடு டொத்தமாதர்கள் இல்லையென்னும்படி அழகிற சிறந்தவளான உஷை யென்பவள் |
தன்னுடைய இன் உயிர் தோழியால் |
–
|
தனது ப்ராண ஸகியான சித்திரலேகை யென்பவளைக் கொண்டு |
ஈன் துழாய் மன்னுமணிவரை தோள் மாயவன் |
–
|
போத்தியமான திருத்துழாய் மாலையணிந்த ரத்ன பர்வதம் போன்ற திருத்தோள்களையுடைய ஆச்சரிய பூதனும் |
பாவியேன் என்னை இது விளைத்த ஈர் இரண்டுமால் வரைதோள் மன்னவன் |
–
|
பாவியான என்னை இப்பாடு படுத்துகின்ற பெரியமலைபோன்ற நான்கு புஜங்களையுடைய ராஜாதி ராஜனுமான |
எம்பெருமான் தன் |
–
|
கண்ணபிரானுடைய |
காதலனை |
–
|
அன்புக்கு உரியவனான (பௌத்திரனான) அநிருத் தாழ்வானை |
மாயத்தால் கொண்டுபோய் கன்னிதன்பால் வைக்க |
–
|
(யோக வித்தைக்கு உரிய மாயத்தினால் எடுத்துக் கொண்டுவந்து தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று |
மற்றவனோடு |
–
|
அந்த அநிருத்தனோடே |
எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள் |
–
|
பலவிதமாய் ஒப்பற்ற அமர்ந்த பெரிய ஸுகத்தை அநுபவித்தாள். |
பலிச்சக்கரவர்த்தியின் ஸந்தியிற்பிறந்தவனான பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாக கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்ரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து,
அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருநத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்று உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியை வேண்ட,
அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்த புரத்திலேவிட உஷை அவனோடு போகங்களை அநுபவித்து வந்தாள் என்கிற கதை அறியத்தக்கது (இதற்குமேல் நடந்த வரலாறு வாணனை தோள் துணிந்த வரலாற்றில் காணத்தக்கது).
பொன்னகரம் செற்ற –ஹிரண்யாஸுரனுக்குத் தமிழில் பொன் என்று பெயர் வழங்குதலால் பொன்னகரம் என்று அவ்வஸுரனுடைய பட்டணங்களைச் சொல்லுகிறது. புரந்தர என்ற வடசொல் (பகைவருடைய) பட்டணங்களை அழிப்படவன என்று பொருள்பட்டு இந்திரனுக்குப் பெயராயிற்று.
உஷையின் வரலாறு சொல்லப்புகுந்து அவ்வரலாற்றில் அநிருத்தனைப்பற்றி கண்ணபிரானுடைய ப்ரஸ்தாவம் வருதலால் தனது வயிற்றெரிச்சல் தோன்ற விசேஷணமிடுகிறாள் பரகாலநாயகி.
அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துக் கொண்டிருந்தும் என்னை அநுபவிக்க வொட்டாமல் இப்படி மடலெடுக்கும்படி பண்ணின மஹாநுபாவன் என்கிறாளாயிற்று.
கன்னிதன்பால் – தெய்வப் பெண்ணாகிய தன்னிடத்திலே என்கை.
மன்னிய பேரின்ப மெய்தினாள் – உஷை அநுபவித்து சிற்றின்பமேயாயினும் அதனில் மேற்பட்ட ஆநந்தமில்லை யென்று அவள் நினைத்திருந்தது கொண்டு மன்னியபேரின்ப மென்றார்.
—————
மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-
பதவுரை
ஏழைகள் |
–
|
அவிவேகிகளை! |
மற்று இவை தான் என்னாலே கேட்டீரே |
–
|
இன்னும் இப்படிப்பட்ட உதாஹரணங்களை கேட்க விருக்கிறீர்களோ? |
என் உரைக்கேன் |
–
|
(உங்களுக்கு) எவ்வளவு சொல்லுவேன்? (இன்னும் ஒரு உதாஹரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்) |
மன்னு மலை அரையன் பொன்பாவை |
–
|
(சலிப்பிக்க வொண்ணாமல்) நிலைநின்ற பர்வதராஜனான ஹிமவானுடைய சிறந்த பெண்ணாய் |
வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய் |
–
|
ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய் |
உமை என்னும் |
–
|
உமா என்னும் பெயரையுடையளாய் |
அன்னம் நடையை அணங்கு |
–
|
அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள் |
தன்னுடையகூழை |
–
|
தனது மயிர் முடியை |
சடாபாரம் தான் தரித்து |
–
|
தானே ஜடா மண்டலமாக்கித் தரித்துக்கொண்டு |
நுடங்கு இடைசேர்பொன் உடம்பு வாட |
–
|
துவண்ட இடையோடு சேர்ந்த அழகிய உடம்பு வாடவும் |
புலன் ஐந்தும் நொந்து அகல |
–
|
இந்திரியங்கள் ஐந்தும் வருந்தி நீங்கவும் |
அன்ன அரு தவத்தின் ஊடு போய் (என்னபேறு பெற்றாளென்றால்)
|
ஆயிரம் தோள் மன்னுகாதலங்கள் மட்டித்து |
–
|
(சிவன் தனது) ஆயிரம் புஜங்கள் பொருந்திய கைகளை (த்திசைகளிலே) வியாபிக்கச் செய்து, |
மாதிரங்கள் மின்னி எரி வீச |
–
|
திக்குகள் மின்னி நெருப்புப் பொறி கிளம்பும்படியாக |
மேல் எடுத்த |
–
|
மேற்புறமாகத் தூக்கின |
கழல் சூழ் கால் |
–
|
வீரக்கழலணிந்த ஒரு பாதமானது |
பொன் உலகம் ஏழும் கடந்து |
–
|
மேலுலகங்களை யெல்லாம் அதிக்கிரமித்து |
உம்பர் மேல் சிலும்ப |
–
|
மேலே மேலே ப்ரஸரிக்கும் படியாக (ஒற்றைக்காலை உயரத்தூக்கி) |
மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல |
–
|
ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர |
சுழன்று ஆடும் |
–
|
தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும் |
கொல் நவிலும் மூ இலை வேல் |
–
|
கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும் |
கூத்தன் |
–
|
கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான |
அன்னவன் தன் |
–
|
அப்படிப்பட்ட சிவபிரானுடைய |
பொன் அகலம் சென்று அணைந்திலளே |
–
|
அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா? |
பன்னி உரைக்குங் கால் |
–
|
(இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில் |
பாரதம் ஆம் |
–
|
ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும். |
நாண்மட மச்சங்களைத் தவிர்த்து அதிப்ரவ்ருத்திபண்ணி நாயகனைப் புணர்ந்தவர்கள் ஒருவரிருவரல்லர், பல்லாயிரம் பேர்களுண்டு, இங்கே சில மாதர்களை எடுத்துக் காட்டினேன். இன்னும் எத்தனை பேர்களை நான் காட்டுவது. இவ்வளவு உதாஹரணங்கள் போராதா? ஆயினும் இன்னும் ஒரு பெரியாள் மடலூர்ந்தபடியைச் சொல்லி முடிக்கிறேன். கேளுங்கள் – என்று பரமசிவனைப் பெறுதற்குப் பார்வதி தவம் புரிந்தபடியைப் பேசுகிறாள்.
தக்ஷப்ரஜாபதி யென்பவர்க்குப் பெண்ணாகப் பிறந்து, ஸதீ என்ற பெயரோடிருந்தாள் பார்வதி. அந்த தக்ஷப்ரஜாபதயானவர் ஒரு கால் ஓரிடத்தில் வேள்விக்குச் செல்ல அப்போது அங்கேயிருந்த தேவர்களும் மஹர்ஷிகளுமெல்லாரும் சடக்கென எழுந்து கௌரவிக்க, பிரமனும் சிவனும் எழுந்திராமல் இருந்தபடியே யிருக்க தக்ஷன் பிரமனை லோக்குருவென்று நமஸ்கரித்துவிட்டுத் தனது கௌரவம் தோற்றச் சிவன் எழுந்திருந்து வணங்கவில்லை யென்று சீற்றங்கொண்டு
“இந்த ருத்ரன் எனக்கு மாப்பிள்ளையானபோதே எனக்கு சிஷ்யனாயிருந்து வைத்து என்னை கண்டவாறே ஆசாரியனைக் கண்டாற்போல் கௌரவித்து வழிபடவேண்டியிருக்க இப்படி எழுந்திராதே இருக்கிறான்ன்றோ, இவனில்மிக்க கொடும்பாவி உலகிலுண்டோ? இப்படிப்பட்ட மூடனுக்கு அநியாயமாய் அருமந்த பெண்ணைக் கொடுத்து கெட்டேனே“ என்று பலவாறாக நிந்தித்து
‘தேயஜ்ஞத்தில் இப்பாவிக்கு ஹவிர்ப்பாகம் கிடைக்காமற் போகக்கடவது‘ என்று சாபமும் – கூறிவிட்டு மஹா கோபத்துடனே எழுந்து தன்னிருப்பிடம் போய்ச்சேர்ந்து, பிறகு நேடுநாளைக்கப்பால் அந்த தக்ஷன் ப்ருஹஷ்பதிஸவமென்றொரு யாகம் பண்ணத் தொடங்கின செய்தியை மகளாகிய ஸதி (பார்வதி) கேள்விப்பட்டுத்
தந்தையின் வேள்வி வைபவங்களை நாமுங்கண்டுவருவோம் என்று ஆவல்கொண்டு புறப்பட சிவபிரான் பழைய பகையை நினைத்து அங்கே நீ போகக்கூடாது என்று தடுத்தும் குதூஹலாதிசயத்தாலே அவள் விரைந்து புறப்பட்டுத் தந்தையினது இல்லம்செல்ல
அங்கே இவளைக்கண்டு தந்தை நல்வரவு கூறுதல் யோக்க்ஷேமம் வினவுதல் ஒன்றுஞ்செய்யாமல் பாங்முகமா யிருக்க மிருப்பையும் ருத்ரபாகமில்லாமல் வேள்வி நடைபெறுவதையுங்கண்டு வருத்தமும் சீற்றமுங்கொண்டு ‘இந்த மஹாபாபியான தக்ஷனிடத்தில் நின்று முண்டான இந்த என் சரீரம் இனி முடிநது போவதே நன்று என்று அறுதியிட்டுத்
தனது யோகபலத்தாலே அக்நியை உண்டாக்கி அதுதன்னிலே சரீரத்தைவிட்டொழிந்தாள். பிறகு மலையரசனாகிய ஹிமவானுக்குப் பெண்ணாய்ப் பிறந்து (பர்வத புத்ரீ என்னுங் காரணத்தால்) பார்வதி யென்று யெர் பெற்று அப்பிறப்பிலும் அந்தப் பரமசிவனையே கணவனாகப் பெறவேணுமென்று ஆசைகொண்டு கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பயனாக அங்ஙனமே மனோரதம் நிறைவேறி மகிழ்ந்தாளென்பது இங்கே அறியத்தக்கது.
மற்றொரு மையத்திலும் பார்வதி தவம் புரிந்ததுண்டு முன்னொரு காலத்திற் கைலாஸ மலையிலே சிவபிரானும் தானும் ஏகாஸநத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது ப்ருங்கி யென்னும் மாமுனி சிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யவிரும்பி ஒரு வண்டு வடிவமெடுத்து அந்த ஆஸனத்தை இடையிலே துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்து சென்று அம்பிகையை விட்டுச் சிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்ய,
அது கண்ட பார்வதீதேவி தன் பதியைநோக்கி முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு காரணம் என்ன? என்று கேட்க
அதற்குச் சிவன் இம்மை மறுமைகளில் இஷ்டஸித்தி பெற விரும்புமவர்கள் உன்னை வழிபடுவார்கள், முத்திபெற விரும்புமவர்கள் என்னை வழிபடுவார்கள் இது நூல் துணிபு என்று சொல்ல
அதுகேட்ட பார்வதி இறைவன் வடிவத்தப் பிரிந்து தனியே யிருந்த்தனாலன்றோ எனக்கு இவ்விழிவு நேர்ந்தது என்று வருந்தி தான் சிவ்பிரானைவிட்டுப் பிரியாதிருக்குமாறு கருதி புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம் புரிந்து வரம் பெற்று அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனது இடமாக அடைந்து அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றனள் என்று சைவபுராணங்களிற் சொல்லிப்போரும் கதையுமுண்டு.
முன்னே கூறிய தவமே இங்கு விவக்ஷிதம்.
மலையரையன் – அரையன் என்றது அரசனென்றபடி. பர்வதராஜன் என்கை. (உமை யென்னும்) பார்வதிக்கு உமா என்றும் ஒரு வடமொழிப் பெயருண்டு. அவள் தவம் புரிந்த காலத்து ஆஹாரமே யில்லாமையாலே பொன்னுடம்பு வாடப்பெற்றாள், அந்தந்த இந்திரியங்களுக்கு வேண்டிய விஷயங்களில் அவை பட்டிமேய வொண்ணாதபடி. காவலிற் புலனை வைத்துத் தவம் புரிந்தபடியாலே அந்த இந்திரியங்கள் ‘எத்தனை நாளைக்கு நாம் இவள்பால் பட்டினி கிடப்பது என வருந்தி அகனறனவாம்.
கூழை – கூந்தலுக்குப் பெயர் “முள்ளெயிறேய்ந்தில் கூழை முடிகொடா“ என்ற பெரிய திருமொழியுங் காண்க. தவநிலைக்கு தகுதியாகக் கூந்தலைச் சடையக்கின ளென்க.
(அன்ன அருந்தவத்தினூடு போய்) அவள் அநுஷ்டித்த தபஸ்ஸு ஸாமாந்யமல்ல. கோரமான தவஞ் செய்தன்ன் என்கிறது. ஊடுபோய் என்றது அந்த்த் தவத்தை முற்றமுடிய நடத்தி என்றபடி. “அருந்தவத்தினூடு போய் அன்னவன்றன் பொன்னகலஞ் சென்றாங் கணந்திலளே“ என்று அந்வயிப்பது.
ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ என்று தொடங்கித்“ தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்“ என்னுமளவும் சிவபிரானது நடனத்தின் சிறப்பு வர்ணிக்கப்படுகிறது. அப்படி அற்புதமான நாட்டியஞ் செய்ய வல்ல சிவபிரானது ஸம் ச்லேக்ஷத்தைப் பெற்றாளன்றோ என்கிறது. சிவன் கூத்தாடும் வகைகள் பல பலவுள்ளன. திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களில் அவற்றைக் கண்டுகொள்க.
இங்கே சொல்லப்படுகிற நாட்டியவகை – ஆயிரங் திசைகளில் வியாபிக்கச் செய்து ஒற்றைக்காலால் நின்றுகொண்டு மற்றொருகாலை மேலேதூக்கி, பம்பரம்போல் சுழற்றி ஆடினவகையாம்.
“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய், தாள் களாயிரத்தாய் பேர்களாயிராத்தாய்“ என்று எம்பெருமானைச் சொல்வதுபோல சைவபுராணங்களில் சிவனைப்பற்றியும் சொல்லியிந்தலால் “ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ எனப்பட்டது.
தெய்வத் தன்மைக்குரிய சக்தி விசேஷத்தினால், வேண்டியபோது வேண்டியபடி வடிவுகொள்ள வல்லமைப் யுள்ளமைபற்றி ஒருநர்த்தன விசேஷத்தில் இங்ஙனே ஆயிரந்தோள் மன்னுகதலங்கள் கொண்டு ஆடினனாகவுங்கொள்க.
ஒருகால் தன்னுடைய நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தனது இரண்டு கைகளால் மத்தளங் கொட்டின பாணாஸுரனுக்கு உவந்து ஆயிரங்கைகள் உண்டாம்படி வரமளித்தன்னாகச் சொல்லப்பட்ட சிவபிரானுக்கு இஃது அருமையன்றென்ப. மட்டித்து –மட்டித்தலாவது மண்டலாகாரமாக வியாபிக்கச் செய்தல்.
மாதிரங்கள் மின்னி எரிவீச –“ஒருருவம் பொன்னுருவ மொன்று செந்தீ ஒன்றுமாகடலுருவம்“ என்றபடி சிவனது உருவம் செந்தீ யுருவமாதலால் அன்னவன் தனது காலை மேலே தூக்கிச் சுழன்று ஆடும்போது திசைகளெல்லாம் நெருப்புப்பற்றி யெரிவன்னபோல் காணப்படுமென்க. சூழ்கழற்கால் கழல் சூழ்ந்த கால் வீரத்தண்டை அணிந்த கால் என்றபடி.
பொன்னுலக மேழுங்கடந்து என்றது –கூத்தாடும்போது சிவனுடைய கால் நெடுந்தூரம் வளர்ந்து சென்றமையைச் சொன்னவாறு. உம்பர் மேல் மேன் மேலும்
(மன்னு குலவரையும் இத்யாதி) நாமெல்லாம் தட்டாமாலையோடும்போது அருகிலுள்ள செடிகொடி முதலியனவும் கூடவே சுழல்வதாகக் காணப்படுமன்றோ. சிவபிரான் பெரியவுருக்கொண்டு சூழன்றாடும்போது பெருப்பெருத்த பாதார்த்தங்களெல்லாம் உடன் சுழல்வனபோற் காணப்படுமாற்றிக.
இப்படியாக கூத்தாடின சூலபாணியும் பஸ்மதாரியுமான சிவனது மார்போடே அணையப்பெறுதற்காகப் பார்வதி தவம்புரிந்தபடியை மஹாபாரத்தில் பரக்கக் காண்மின் என்று தலைக்கட்டிற்றாயிற்று.
————
பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82
பதவுரை
பாவியேற்கு என்று உறு நோய் |
–
|
பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை |
யான் உரைப்ப கேண்மின் |
–
|
நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்) |
இரு பொழில் சூழ் |
–
|
விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும் |
மறையோர் மன்னும் |
–
|
வைதிகர்கள் வாழப்பெற்றதுமான |
திரு நறையூர் |
–
|
திருநறையூரில் |
மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு |
–
|
பெரிய மலைபோன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று |
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் |
–
|
எனது கண்கள் களிக்கும்படி உற்றுப்பார்த்தேன் |
நோக்குதலும் |
–
|
பார்த்தவளவில் |
மன்ன்ன் |
–
|
(அங்குள்ள) எம்பெருமானுடைய |
திரு மார்பும் |
–
|
பிராட்டியுறையும் மார்வும் |
வாயும் |
–
|
(புன் முறுவல் நிறைந்த) அதரமும் |
அடி இணையும் |
–
|
உபய பாதங்களும் |
பன்னு கரதலமும் |
–
|
கொண்டாடத் தக்க திருக்கைகளும் |
கண்களும் |
–
|
திருக்கண்களும் |
ஓர் மணிவரைமேல் பொன் இயல் பங்கயத்தின் காடுபூத்த்துபோல் மின்னி ஒளிபடைப்ப |
–
|
ஒரு நீலரத்ந பர்வத்த்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற்போல் பளபளத்த ஒளியை வீச, |
வீழ்நாணும் |
–
|
விரும்பத்தக்க திருவரை நாணும் |
தோள் வளையும் |
–
|
தோள் வளைகளும் |
மன்னிண குண்டலமும் |
–
|
பொருத்தமான திருக்குண்டலங்களும் |
ஆரமும் |
–
|
திருமார்பில் ஹாரமும் |
நீள் முடியும் |
–
|
பெரிய திருவபிஷேகமும் |
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப |
–
|
மிக்க தேஜஸ்ஸை வெளிவிடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க |
மன்னு மாதகக்குன்றின் மருங்கே |
–
|
எல்லார்க்கும் ஆச்ரயமான மரகதமலை யென்னும்படியான எம்பெருமான் பக்கத்திலே |
ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது |
–
|
விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக்கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள். |
அன்னம் ஆய் |
–
|
(நடையில்) ஹம்ஸத்தை யொத்தும் |
மான் ஆய் |
–
|
(நோக்கில்) மானையொத்தும் |
அணி மயில் ஆய் |
–
|
(கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும் |
இடை மின் ஆய் |
–
|
இடையழகில மின்னலை யொத்தும் |
இள இரண்டு வேய் ஆய் |
–
|
(தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களையொத்தும் |
இணை செப்பு ஆய் |
–
|
(ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும் |
முன் ஆய் தொண்டை ஆய் |
–
|
முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும். |
குலம் கொண்டை இரண்டு ஆய் |
–
|
(கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும் |
அன்ன |
–
|
அப்படிப்பட்டிருந்த |
திரு உருவம் |
–
|
திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி) |
நின்றது அறியாது |
–
|
(பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த) |
என்னுடைய நெஞ்சும் |
–
|
எனது நெஞ்சும் |
அறிவும் |
–
|
(அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும் |
இனம் வளையும் |
–
|
சிறந்த கைவளையும் |
பொன் இயலும் மேகலையும் |
–
|
ஸ்வர்ண மயமான மேகலையும் |
ஒழிய போந்தேற்கு |
–
|
(எல்லாம்) விட்டு நீங்கப்பெற்ற எனக்கு (இதற்குமேலும் ஹிம்ஸையாம்படி) |
மன்னு மறி கடலும் ஆர்க்கும் |
–
|
சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது |
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும் |
–
|
சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும் |
என் தனக்கே |
–
|
எனக்கு மாத்திரம் |
வெய்து ஆகும் |
–
|
தீக்ஷ்ணமாயிரா நின்றது, |
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல் |
–
|
நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ. |
இங்ஙனே ஊரிலுள்ள பெண்களின் சரித்திரங்களை எடுத்துரைப்பதனால் எனக்கு என்ன பயனாம்? அந்த வம்புக் கதைகளையெல்லாம் விரித்துரைப்பதற்கோ நான் பெண் பிறந்தது. அது கிடக்கட்டும், நான் பட்டபாடு நாடறியச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திருநறையூ ரெம்பெருமான் ஸ்ந்நிதியிலே ஸேவிக்கப்புகுந்த தான் பட்டப்பாட்டைப் பேசத் தொடங்குகின்றாள் பரகால நாயகி.
பாவியேற் கென்னுறு நோய் என்று இங்ஙனே அந்வயித்துப் பொருள் கொள்வதிற் காட்டிலு ம் ‘பன்னியுரைக்குங்காற் பாரதமாம் பாவியேற்கு“ என்று கீழோடே அந்வயிப்பது பூருவர்களின் வியாக்கியானங்களுக்கு நன்கு பொருந்தும்.
************ (நெஞ்சினுள்ளே துக்கம் அதிகரித்தால் வாய் விட்டுக் கதறினால்தான் தீரும்.) என்று சொல்லியுள்ளபடி – தனது வருத்த்தை ஒருவாறு தணித்துக்கொள்ள வேண்டி வாய்விட்டுக் கதறுகின்றாளென்க.
யானுற்ற நோயை யான் சொல்லுகிறேன் கேளுங்கள் நான் திருநறையூரெம்பெருமானை ஸேவிக்கச்சென்று ஸந்நிதியுள்ளே புகுந்து பார்த்தேன், பார்த்தவுடனே அவ்வெம்பெருமானுடைய திருமார்வு திருவதரம் திருவடி திருக்கை திருக்கண் ஆகிய இவ்வவயவங்கள் நீலகிரிமேல் தாமரைக்காடு பூத்தாற்போல் பொலிந்தன.
திருவரைநாண் திருத்தோள்வளை திருமகர குண்டலம் ஹாரம் திருவபிஷேகம் அதனுச்சியிற்பதித்த மணி ஆகிய இவை பளபளவென்று ப்ரகாசித்தன, அவ்வெம்பெருமான் பக்கத்திலே அன்னம்போன்ற நடையழகும் மான்போன்ற நோக்கழகும் மயில்போன்ற கூந்தலகும் மின்போல் நுண்ணிய இடையழகும் வேய்ப்போன்ற தோளழகும் செப்புப்போன்ற முலையழகும் கோவைபோன்ற வாயழகும் கெண்டைபோன்ற கண்ணழகுமுடையளான பெரிய பிராட்டியார் இளவஞ்சிக்கொடி போலே நின்றதையுங் கண்டேன்.
கண்டதும் அறிவு போயிற்று பலவிகாரங்களுண்டாயின. இப்படி வருத்தபடாநின்ற எனக்குக் கடலோசை தானும் வந்து மேன்மேலும் ஹிம்ஸையைப்பண்ணா நின்றது. எல்லார்க்கும் இனிதான நிலா எனக்குத் தீ வீசுகின்றது குளிர்ச்சியையே இயல்வாகவுடைய நிலாவும் இப்படி கடும்படியான காரணம் என்னோ, அறியேன் – என்றாளாயிற்று.
திருநறையூர்ப் பொன்னியலுமாடம் – நாச்சியார் கோவிலுக்குத் திருநறையூர் மணிமாடம் என்று ப்ரஸித்தியுள்ளது. “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே“ என்றார் பெரிய திருமொழியில், “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணளனை“ என்பர் இத்திருமடலிலும். கவாடம் – கதவு, வடசொல்.
பன்னு கரதலம் – ‘இப்படிமொரு கரதலமுண்டோ‘ என்று வாய்வெருவப்பண்ணும் கை காரதலம் – வடசொல். ஓர் மணிவரைமேல் பொன்னியல் பங்கயத்தின் காடு பூத்த்துபோல் – எம்பெருமானது திருமேனி நீலரத்ந பர்வதமாகவும் திருக்கண் முதலியன தாமரைக் காடாகவும் ரூபிக்கப்பட்டன.
அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனாதலால் திருமார்பும் தாமரை யாக விளங்கக் குறையில்லை. பங்கயம் – பங்கஜம். ஒளிப்படைப்ப – ஒளியை யுண்டாக்க. வீணாணும் – வீழ் – நாண் – வீணான், வீரசோழிய மென்னும் இலக்கண நூலில் (சந்திப்படலம் – 18) “நவ்வரின் முன்னழிந்து பின் மிக்க ணவ்வாம் என்றது காண்க. வீழ்தல் –விரும்பப்படுதல். ஆரம் – ஹாரம்.
(“துன்னுவெயில்விரித்த சூடாமணி இமைப்ப“) சூடாமணியிமைப்ப என்றவிடத்து உம்மைத் தொகையாகவும் உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம், உம்மைத் தொகையாகக் கொள்ளும்போது, சூடாமணியாவது திருவபிஷேகத்தின் நுனியிற்பதித்த ரத்னம், அதுவும் விளங்க – என்றதாகிறது. உவமத்தொகையாகக் கொள்ளும்போது,சூடாமணியாவது தேவலோகத்துச் சிறந்த்தொரு மாணிக்கம், அதுபோலே விணாணும். நீண்முடியும் விளங்க – என்றதாகிறது. சூடாமணி எனினும் சூளாமணி யெனினும் ஒக்கும். இமைத்தல் – ஒளிசெய்தல்.
மன்னுமரதகக் குன்றின் மருங்கே – எம்பெருமான்றன்னையெ ஸாக்ஷாத் மரகத பர்வதமாகக் கூறினது முற்றுவமை. அப்படியே, பிராட்டியை இளவஞ்சிக் கொடியாகக் கூறினதும் முற்றுவமை. இதனை வடநூலார் ரூபகாதிசயோக்தி யென்பர். ஒரு மலையினருகே ஒரு பொற்கொடி நிற்கக்கண்டேனென்று சமத்காரமாக அருளிச்செய்தபடி. மாதர்க்கு இளவஞ்சிக்கொடி ஒப்புச்சொல்லுதல் கவிமரபு.
அன்னமாய் மானாய். என்றவிடங்களிலும் உபமேயங்களான நடை நோக்கு முதலியன மறைக்கப்பட்டன. மயில் கூந்தற்செறிவுக்கும் சாயலுக்கும் உவமையாம். பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோள்களுக்கு உபமானமாக்குவது. செப்பு பொற்கலசம். தொண்டை – கோவைக்கனி.
அன்ன திருவுருவம் நின்றதறியாதே – “ப்ரஹ்மசாரி நாராயணன் மாத்திரமே யுள்ளான், கண்டு வந்தவிடுவோம் என்று கருதிச் சென்றேன். பக்கத்தில் ஒரு பிராட்டி யெழுந்தருளியிருப்பது தெரியாமற் போயிற்று. தெரிந்திருந்தால் உட்புகுந்தே யிருக்கமாட்டேன், அந்தோ! தெரியாமற்சென்று பட்டபாடு இது! என்கிறாள்போலும்.
நெஞ்சு போயிற்று, அறிவு போயிற்று, வளை கழன்றொழிந்தது, மேகலை நெகிழ்ந்தொழிந்தது. இபப்டிப்பட்ட பரிதாப நிலைமையில் கடல்தானும் தனது கோஷத்தைச் செய்து கொலை செய்யா நின்றது.
(தன்னுடைய தன்மை தவிரத்தா னென்கொலோ?) “சீதோபவ ஹநூமதா“ என்ன நெருப்புக் குளிருமாபோலே “நிலாச்சுடுக“ என்று நினைப்பிட்டதோ? இதுக்குக் காரணம் என்? என்கிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்க. சந்திரனுக்குத் தன்னுடைய தன்மையாகிய குளிர்த்தி மாறி வெப்பமுண்டாவதற்கு என்ன காரணம்?
—————-
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85
பதவுரை
தென்னன் பொதியில் |
–
|
தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள |
செமு சந்திரன் தா துஅளைந்து |
–
|
அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு |
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் |
–
|
நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற |
இன் இள பூ தென்றலும் |
–
|
போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும் |
எனக்கே எரி வீசும் |
–
|
எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது |
முன்னிய பெண்ணை மேல் |
–
|
முன்னே காணப்படுகிற பனை மரத்தில் |
முள் முளரி கூடு அகத்து |
–
|
முள்ளையுடைய தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட கூட்டிலே |
பின்னும்அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலும் |
–
|
வாயலகு கோத்துக் கொண்டிருக்கிற அன்றிற் பேடையின் வாயிலுண்டான சிறிய குரலும் |
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாள் ஆம் |
–
|
எனது நெஞ்சை அறுக்கின்ற வொரு வாளாக இராநின்றது. |
என் செய்கேன் |
–
|
(தப்பிப் பிழைக்க) என்ன உபாயஞ் செய்வேன்? |
எனக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணுவன கடலோசையும் நிலாவுமேயல்ல, தென்றல் முதலிய மற்றும் பல பொருள்களும் ஹிம்ஸிக்கின்றன என்கிறாள்.
தெற்குத்திசைக்குத் தலைவனாய் மலயத் வஜனென்று பெயருடையவனான பாண்டியராஜனது பொதிய மலையிலுள்ள திவ்யமான சந்தனமரத்தற் பூத்தாதுகளிற் படிந்து அவற்றின் பரிமளத்தைக் கொய்து கொண்டு நாடெங்கும் வந்து வீசி அனைவரையும் மகிழ்விக்கின்ற தென்றற் காற்று எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது,
இந்நிலைமையிலே அன்றிற் பேடையின் இன்குரலும் செவிப்பட்டுப் பரமஹிம்ஸையாகின்றது என்கிறாள்.
(என் செய்கேன்) –கீழே “தென்ன்ன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார்“ என்று தொடங்கி“ இன்னிளவாடை தடவத் தாங் கண்துயிலும் பொன்ன்னையார் பின்னும் திருவுறுக.“ என்று சொல்லியுள்ளபடி –
விரஹ காலத்தில் ஹிம்ஸகங்களான இந்த வஸ்துக்களை லக்ஷியம் பண்ணாமல் இவற்றைப் பரமபோக்யமாகக் கொள்ளுகிற சில பெண்களாகப் பிறவா தொழிந்தேனே! இவற்றுக்கு நலிவுபடும் பெண்ணாக பிறந்தேனே! என்செய்வேன் என்கிறாள்.
————
கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-
பதவுரை
கல் நவில் தோள் காமன் |
–
|
மலைபோல் (திண்ணிய) தோள்களை யுடையனான மன்மதன் |
கரும்பு சிலை வளைய |
–
|
(தனது) கருப்பு வில்லை வளைத்து |
கொல் நவிலும் பூ கணைகள் கோத்து |
–
|
(அந்த வில்லில்) கொலை செய்ய வல்ல புஷ்ப பாணங்களைத் தொடுத்து |
பொத அணைந்து |
–
|
(அந்த வில்லை மார்பிலே) அழுந்த அணைத்துக்கொண்டு) |
தன்னுடைய தோள் கழிய வாங்கி |
–
|
தனது தோள் வரையில் நீள இழுத்து |
என்னுடைய நெஞ்சே இலக்கு ஆக தமியேன் மேல் எயகின்றான் |
–
|
எனது நெஞ்சையே குறியாகக் கொண்டு துணையற்ற என்மீது (அந்த அம்புகளைப் பிரயோகிக்கின்றான். |
பின் இதனை காப்பீர்தான் இல்லையே |
–
|
இப்போது இந்த ஆபத்தில் நின்றும் என்னைத் தப்புவிக்க வல்லீரில்லையே! |
***- கீழ்ச் சொன்ன கடலோசை முதலியவற்றுக்கு ஒருவாறு தப்பிப் பிழைத்தாலும் பிழைக்கலாம், இனி ஜீவிக்க வழியில்லை யென்னும்படியாக மன்மதன் தனது பாணங்களைச் செலுத்தி வருத்துந்திறம் வாசாமகோசரம் என்கிறாள். மஹாபலசாலியான மன்மதனும் தனது கருப்புவில்லை வளைத்து என்னை இலக்காகக் கொண்டு புஷ்ப பாணங்களைப் பிரயோகிக்கின்றானே, நான் இதற்குத் தப்பிப் பிழைக்கும்படி செய்வாராருமில்லையே. என்கிறாள்.
கன்னவில் தோள் காமன் – ஒருகால் பரமசிவனுடைய கோபாக்கிநிக்கு இலக்காகி நெற்றிக் கண்ணால் தஹிக்கப்பட்டு உடலிழந்து அநங்கன் என்று பேர்பெற்றவனான மன்மதனுக்கு உடம்பு இல்லை யாயிருக்க, “கன்னவில் தோள் காமன்“ என்றும் “தன்னுடைய தோள் கழியவாங்கி“ என்றும் அருளிச் செய்வது சேருமோ எனின்,
அநங்கன் செய்கிற காரியத்தைப் பார்த்தால், திண்ணிய உடம்புடையானும் இவ்வளவு காரியம் செய்ய வல்லவனல்லன்“ என்னும்படியாகப் பெரிய கொலைத் தொழிலாயிருப்பதனால் அவனுக்கு வலிதான வுடம்பு இருந்தே தீரவேணுமென்று காமிகள் கருதுவதுண்டாதலால் இப்பரகால நாயகியும் அந்த ஸமாதியாலே சொல்லுகின்றாளென்க.
மன்மதனுக்குக் கரும்பை வில்லாகவும் ஐவகைப் புஷ்பங்களை அம்பாகவும் அந்த அம்புகளை வில்லிலே தொடுத்துப் பிரயோகிக்கின்றானாகவும் நூல்கள் கூறுகின்றமை காண்க.
கரும்பு –சிலை, கரும்புச்சிலை, பூங்கணைகள் – முல்லை, அசோகம், நீலம், மா, முளரி என்ற ஐந்து மலர்கள் மன்மத பஞ்ச பாணங்களெனப்படும். மத்தம், தீரம், சந்தாபம் வசீகரணம், மோகனம் என்கிற ஐவகைச் செயல்களைப் பஞ்ச பாணமாகச் சொல்லுவர் ஒரு சாரார்.
———
பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
பதவுரை
கல் நவிலும் காடு அகத்து |
–
|
கல் மயமான காட்டினுள்ளே |
ஓர் வல்லி |
–
|
ஒரு கொடியில் (புஷ்பித்த) |
கடி மலரின் |
–
|
புதுமலரினுடைய |
நல் நறு வாசம் |
–
|
நல்ல பரிமளம் |
மற்று ஆரானும் எய்தாமே |
–
|
யார்க்கும் உபயோகப் படாமல் |
மன்னும் வறு நிலத்து ஆங்குவாளா உகுத்த்து போல் |
–
|
அந்தசூன்ய ஸ்தலத்திலே வீணாகக் கழிவது போல் |
பேதையேன் என்னுடைய பெண்மையும் |
–
|
அறிவற்றவளான என்னுடைய ஸ்த்ரீத்வமும் |
என் நலனும் |
–
|
எது குணங்களும் |
என் முலையும் |
–
|
எனது முலைகளும் |
மலர் மங்கை மன்னும் மைந்தன் |
–
|
பூவிற் பிறந்த பெரிய பிராட்டியோடு சேர்ந்த பிரமபுருஷனாயும் |
கணபுரத்து பொன்மலை போல் நின்றவன் தன் |
–
|
திருகண்ணபுரத்தில் பொன் மலைபோல் நிற்பவனாயுமுள்ள எம்பெருமானுடைய |
பொன் அகலம் தோயா எல் |
–
|
அழகிய திருமார்பிலே சேர்வதற்கு உறுப்பாகாவிடில் |
வாளா இவை என் |
–
|
வயாத்தமான இந்த வஸ்துக்கள் எதுக்கு? |
(இவை) |
–
|
இம்முலைகளானவை |
எனக்கே பொறை ஆகி |
–
|
எனக்கு ஒருத்திக்கே வீண்பாரமாகி |
முன் இருந்து |
–
|
கண்ணெதிரே இருந்து கொண்டு |
மூக்கின்று |
–
|
மேன்மேலும் வீங்கும்போது |
மூவாமை காப்பது |
–
|
அப்படி வீங்காமல் தடுக்க வல்ல |
ஓர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே |
–
|
ஒரு சிறந்த மருந்து கண்டறிவாராருமில்லையே. |
காமன் செய்கிற ஹிம்ஸை ஒருபுறமிருக்கட்டும், என்னோடு கூடவே பிறந்து என்னை ஹிம்ஸிக்கின்ற இம்முலைகளைத் தண்டிப்பாராருமில்லையேயென்கிறாள்.
ஒருவரும்புகக்கூடாத காட்டிலே சிறந்ததொரு கொடி தன்னிலே பரிமளோத்தரமான புஷ்பம் புஷ்பித்துக் கமழநின்றால் ஆர்க்கு என்ன பயன்?
“கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடுடனாய் நின்று தூங்குகின்றேன்“ (நாச்சியார் திருமொழி) என்றாற் போல, அங்கே புஷ்பித்து அங்கே உதிர்ந்து அங்கே உருமாய்ந்து போகவேண்டியதே அம்மலர்களின் கதி.
அதுபோல, எனது தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் திருக்கண்ணபுரத்தெம்பெருமானுடைய ஸம்ச்லேஷத்துக்கு உறுப்பாகாவிடில் இவற்றால் என்ன பயன், மேற்சொன்ன மலர்கள் போல இவையும் நிஷ்பலங்கயெ யன்றோ.
எம்பெருமானோடு அணையப்பெறாதே வீணாக வளர்ந்து கிடக்கின்ற இம்முலைகள் எப்போதும் கண்ணெதிரே தோன்றி நின்று மார்புக்கும் பாரமாகி வருத்துகின்றனவே! எதுக்கு இவை விம்மி வீங்கு கின்றன? இம்முலைகள் தொலைந்தொழிய மருந்து தருவாருமில்லையே! என வருந்துகின்றாள்.
பேதையன் – இப்படி ஹிம்ஸை பொறுக்கமுடியாமல் வருத்தமுறுகிற இந்நிலைமையில் முடிந்து பிழைக்கலாமாயினும் “என்றேனு மொருநாள் நமது மநோரதம் ஸித்திக்குமோ“ என்னும் நசையாலே பிராணனைப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கிற சாபல்யம் தோற்றுகிறது.
வல்லி – வடசொல். வாசம் – வாஸலை வறுநிலம் – புல்பூண்டு தண்ணீர் ஒன்று மில்லாத மரு காந்தாரம்.
“எனக்கே பொறையாகி“ என்றவிடத்து. “இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி நோக்கத்தக்கது.
முன்னிருந்து – பெண்மைக்கு உறுப்பாக முலையிருக்க வேண்டியது அவசியமாகில் முதுகிலே முளைத்தாலாகாதோ? கண்ணெதிரே முளைத்து வீங்கவும் வேணுமோ?
“கொள்ளும்பய னென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்விலெறிந்து என்னழலைத் தீர்வனே“ என்றாள் ஆண்டாள்“
அவள் மெய்யே பெண்ணாய்ப் பிறந்தவளாகையாலே முலைபடைத்துப் படுகிற வருத்தமெல்லாம் தோற்ற அப்படி சொன்னாள்,
அங்ஙன்ன்றிக்கே திருமங்கையாழ்வார் பாவநாப்ரகர்ஷத்தால் மாத்திரம் பெண்மையை ஏறிட்டுக் கொண்டவராதலால் அவ்வளவு ரோஷங்கொண்டு சொல்லமாட்டாமல் இந்த முலைகள் உள்ளே அடங்கிப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ? என்கிறார்.
—————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Like this:
Like Loading...
Related
This entry was posted on December 6, 2022 at 2:15 pm and is filed under பெரிய திரு மடல், பெரியவாச்சான் பிள்ளை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply