ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -21-30–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

அவதாரிகை

இப்படி அவசன்னரான இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக
(வேலன் வந்ததால் சிதிலம் ஆன ஆழ்வாரை )
ஒரு விபூதியாக நம்மை ஆதரியா நிற்கச் செய்தே
(நீதி வானவர் அன்றோ-இங்கு அநீதி மன்னவர் )
நீர் இருந்த தேசத்திலே வந்து -(லீலா விபூதியில் )
நீர் அபிமானித்த வஸ்துக்களை ஆதரித்து விரும்புகைக்காகவும்-
ஸர்வஞ்ஞன்-ஆழ்வாருக்குப் பிடித்த ஈட்டிய வெண்ணெய் உண்ண
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி உம்மை அனுபவிப்பைக்காகவும் அன்றோ இங்கு வந்தது

(ஏழு ரிஷபங்கள் அடக்கி
நப்பின்னையைச் சொன்னது ஆழ்வாரையும் நம்மையும் சொன்னதற்காகவே
பரித்ராணாய ஸாதூ நாம் -ஆழ்வாரை அணைத்தல்
துஷ்க்ருதாம் வி நாஸநம் -ஏழு ரிஷபங்கள் அடக்கி
தர்ம சமஸ்தானம் -வெண்ணெய் உண்டது -அஹம் ஹி போக்தா -யஜ்ஜமாகவும் -பிரபு எவச –
செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-கர்த்தாவாகவும் போக்தாவாகவும் )

என்ற சர்வேஸ்வரன் திரு உள்ளத்தைக் கருத்தை ஆவிஷ்கரிக்க
ஒக்கும் இறே என்று ஸந்துஷ்டாராய்
ஆசன்னரான கிருஷ்ண -(பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே )
மானஸ அனுபவ ஸந்நிஹிதனான -(முன்னால் நிற்கும் கிருஷ்ணனை -ஆடினை கூத்து முன்னிலை பிரயோகம் )
(ஆழ்வார் காலத்தில் இல்லையே யாயினும் அக்காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டி அருளினான் அன்றோ )
அவன் இடம் விண்ணப்பம் செய்கிறார் –

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி -எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
முதல் பாசுரம் இதுவும் இறுதி பாசுரமும் தாமான தன்மை —
அகத்துறை சொல்ல வேண்டாம் என்றும் சொல்வர் சிலர் –

பதவுரை

அங்கு–பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள்–நித்ய ஸூரிகள்
நல் நீர் ஆட்டி–நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க–அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க,
(அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால்–(உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து–(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள் தோறும் கடைந்து)
சேர்ந்த வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி–பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு–வலிமையை யுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்ற மகளான
நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில்-முசுப்பையுடைய
ஏறு–(ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை–வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை–கூத்தாடி யருளினாய்.

சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்
(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )

மாலைக்கு நன்மை யாவது
அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை
அனுரூபமாய்
புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )

சூட்டு -திருமுடி சாத்தாய்
மாலை -தோளுக்கு விடுவதாகவும்
(மூன்று முடிக்கு உரிய அரசு
பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே
வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்
அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்

தூயன
புஷ்பத்துக்குத் தூய்மையாவது
த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்
(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் (

ஏந்தி
பாரதந்தர்யத்தால்
யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை
(கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )

விண்ணோர்கள்
பரம வ்யோம வாசிகளான அப்ராக்ருத புருஷர்கள்

நன்னீர் ஆட்டி
அன்பினானால் ஞான நீர் கொண்டு
அன்பும் ஞானமும் கலந்து -பரிசுத்த பக்தி ரூபா பன்ன ஞானதாலே திருமஞ்சனம் ஆட்டி
(திருக்குறும் தாண்டகம் -இதுவும் ஸ்நாநாசனம் போது அனுசந்திக்கிறோமே )

அம் தூபம் தரா நிற்கவே
அலங்கார அந்தர பாவியாய்
சர்வ கந்த வஸ்துவுக்கும் அதி வாசனை கரமாகையாலே ஊட்ட-அழகிய தூபம் தாரா நிற்கவே
(வகையால் மனம் ஒன்றி மாதவனை -நாளும் புகையால் விளக்கால் நீரால்
சுமந்து மா மலர் –நீர் சுடர் தூபம் கொண்டு -இத்யாதி
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வேங்கடத்து வந்தாலும் அவர்களும் வந்து ஆராதிப்பார்களே )

அங்கு
அந்த நித்ய விபூதியில்

விண்ணோர்கள் -நன்னீராட்டி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நிற்கவே -என்று அன்வயம்
ஸ்நாநாசனமும் அலங்காரசனமும் ஆன பின்பு
அங்கே சென்ற பின்பு
போஜ்யாசனத்துக்குப் போந்த படி
(காலத்துக்கு வேலை இல்லை அங்கு என்றாலும் அடுத்து அடுத்து இவை உண்டே )

ஓர் மாயையினால்
அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே
அத்விதீயமான
தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே
மாயா வாயுனம் ஞானம்

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து
திருவாய்ப்பாடியில் நாள் தோறும் கடைந்து ஈட்டிய வெண்ணெயை அபஹரித்து

இமிலேற்று வன் கூன் கூட்டிடை ஆடின கூத்து
ககுத்துக்களை யுடைய எருதுகளின்
வலித்தாய்
வளைந்த கொம்புகளின் நடுவே
வல்லார் ஆடினால் போலே வியாபாரித்தாய்

அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –
பிரபலரான கோப குலத்தில் பிறந்த
நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது

ஆகையால்
அந்த விபூதியில் ஆராதனம் செய்து கொண்டே இருக்கும் போது
(சம்சாரி -முமுஷு முக்தன் -தசை மாறி வர வேண்டுமே
தயிர் பால் சம்சாரி
வெண்ணெய் முமுஷு
நெய் முக்தன் )
இந்த விபூதியில் சம்பந்த ஞானம் உடையார் -மதி மந்தானம் -புத்தியான மத்து
முமுஷுக்கள் உடன் கலந்து பரிமாறி
ஸம்ஸாரம் பிடிக்காமல் உபேக்ஷித்து –
ருசி விளைத்து மேலே மேலே கூட்டிப் போக

உபநிஷத் கடலைக் கடைந்து -மஹாபாரதம் சந்திரன் –
அதே போல் பக்தாம்ருதம் திருவாய் மொழி
நாள் தோறும் இடது வலது -மனன மதனம் பண்ணி ஈட்டுகை
பால் மாறி -நெய் வராமல்-அந்தரேவ- நடுவே நிற்கும் வெண்ணெய் போல்

சம்சாரம் கழித்து –
உண்டியே உடையே உகந்து திரியாமல்
அவஸ்தையைக் கழித்து
ஆகதோ பரமபதம் புகப் பெறாமல்
ஆந்தராளிகர் இடைப்பட்ட முமுஷுக்களை அனுபவிக்க
இவர்கள் எதிர்பாராமல் -ஈட்டிய வெண்ணெய் –
எப்போது திருவடி சேர்ப்பார் எதிர்பார்த்தே இருக்க வேண்டுமே

அபிநிவேசத்தால் -பேராசை கொண்டு போந்து
கோட்டிடை இத்யாதி-
ரஜோ தமோ குண பிரதிபந்தங்களைப் போக்கி
செருக்கை யுடைய சரீரம்
அவஸ்தா சப்தகம் போக்கி
கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வனம் விருத்தம் -மரணம் -ஏழு தசைகளிலும் இரண்டு கொம்புகள்
பிரபலமாய் -கர்மங்கள் -குத்திப் போக்கும்

அநாயாசன போக்கி ஆட்டம் பார்த்தாலே தெரியுமே
நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே போகும்

பாரதந்தர்ய ஏவ ஸ்வரூபம் நிரூபணம்
ஸ்வ ரக்ஷணம் ஸ்வ அந்வயம் இல்லாத நப்பின்னை -அடலாயர் கொம்பு
அநந்ய ரஷ்யம் – அநந்ய போக்யம் -கொம்புக்கு இரண்டும் உண்டே
இதே தான் முமுஷுக்குவுக்கும் இருக்க வேண்டும்
என் நான் செய்கேன் -யாரே களை கண் -இத்யாதி
இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவை நீ புஜிக்க குறை யுண்டோ என்று விண்ணப்பம் செய்தார் ஆயிற்று

————–

அவதாரிகை

இப்படி ஈஸ்வரனுக்கு அபிமத விஷயராய் இருக்கிற இவர் பக்கலிலே
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த வித்வத் அபிமானி ஜனங்களைக் குறித்து
உங்கள் படிகள் பரஸ்பர அசங்கதங்களாய் இருந்தன வென்று
பார்ஸ்வத்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
மதி யுடன்படுவதற்குக் களிறு வினவி வந்து
குறையுற்ற தலைமகனை
தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் -தோழி தலைவனைக் கேலி செய்தல் –
நல்குரவும் செல்வமும் -6-3-

பதவுரை

ஐயர்–இப்பெயரிவருடைய
கை–கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை–மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம்–(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்)
தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு–(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை–வேட்டையாம்;
வினவுவது–(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு–(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;
(இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன–கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினது
உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென–தமக்குள் ஒன்றொடொன்று பொருத்த மில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ–புதுமை மிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை–நம்மை
இவ் வான்புனத்தே வைத்தது–இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைத்தது?

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை
கைக்குப் பரிகரம் ஆயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே
சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை
நாட்டுக்கு வார்த்தை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே யானை போந்ததோ
என்று வினவா நிற்பது

ஐயர் ,
ஐயர் -இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது

புள் ளூரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன
பெரிய திருவடியை மேற்கொண்டு
எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற
ஈஸ்வரனுடைய விபூதியிலே
எக் காலத்திலும் நடை யாடாததான

தம்மிற் கூடாதன
தன்னில் தான் சேர்த்தி அற்றன

வம்பார் வினாச் சொல்லவோ
நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ

வம்பார் வினா -என்று
புதுமையால் மிக்க வினா என்னலுமாம்

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களைப் பெரிய புனத்திலே உடையவர்கள் வைத்தது –

(இந்திரியங்கள் -தந்தியான யானை
ஞானம் என்ற அம்பு கொண்டு அடக்கப் பார்த்தோம் –
கையிலே இருக்கும் தழையை வில்லாகக் கொண்டு அடக்கவோ )

இத்தால்
கொம்பார் தழை கை -என்கையாலே
விஷய ப்ரவாஹங்கள்
கை விட்டதில்லை -என்றபடி

சிறு நாண் எறிவிலம் -என்கையாலே
ப்ரணவ தநுர் விஷ்பாரித ஸ்வர
மாத்ரமும் இல்லை என்றபடி –

(பிரணவம் தனுஷ் -ப்ரஹ்மம் லஷ்யம் -ஞானம் கொண்டு விட வேண்டுமே
ஆத்மா அம்பு -மூன்று மாத்திரை உள் அட வாங்கி விட வேண்டுமே
மூன்றரை மாத்திரை ஸ்வரமும் இல்லையே
ஸ்வரூப ஞானத்துக்கு பிரணவ தனுஸ் வேணுமே )

வேட்டை கொண்டாடு-என்கையாலே
ஸம்ஸார அந்தகாரத்திலே -பாலைவனத்தில் –
துஷ்ட ஸத்வமான
ராக த்வேஷ
லோப மோஹாதிகளுடைய
நிரஸனத்திலே ஒருப்பட்டோம் நாங்கள் என்கிற கொண்டாட்டமே உள்ளது என்றபடி

அம்பார் களிறு வினவுவது -என்கையாலே
ஞான சர வித்தமாய் இருக்கச் செய்தே
இந்த்ரிய தந்தியானது விஷய அடாவீ வித்ருதமாயிற்று
என்று தத் அநுயானம் பண்ணிற்று என்கிறது

(தத் அநுயானம் பண்ணிற்று -இந்திரியங்கள் போன வழியிலே போகிறோமே
சதுர் தந்து -நான்கு கொம்பு உள்ள மிருகங்கள் -ராமாயணம் சொல்லுமே
சம்சாரம் மரம் தலை கீழ் -படைக்கும் பிரம்மா மேல் இருப்பதால்
இத்தை வெட்டிச் சாய்க்க
அஸங்கம்-பற்றின்மை வைத்தே வெட்ட வேண்டும் -திடமான வைராக்யம் வேணும் )

ஐயர் ,-என்று
ஞாத்ருத்வ உத்கர்ஷத்தாலே வந்த கௌரவ்யதை இருந்தபடி என்கிறது

புள் ளூரும் கள்வர் –
வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே
ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய்
(வேதம் நான்காய் -வேதம் தந்தவனும்
வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே )
யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே
கள்வர்-
முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய

தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன –
ஸ்வாதந்த்ர கடினையான பூமியிலே ஒரு காலத்திலும் நடையாடாதே
பரஸ்பர சங்கதி அற்று ப்ரயோஜன பர்யவசாயி அன்றியிலே

வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
அபி நவமான ப்ரஸ்னத்துக்கு பிரதி வசனம் பண்ணுகைக்காகவோ
ஈஸ்வரன் தனக்கு போக சக்திக்கு உறுப்பாகத் திருத்தி நோக்குகின்ற
இத் தேசத்திலே
(புனம் காத்து -நம்மைத் திருத்தி – இசைவித்து நின் கண் வேட்க்கை எழுவிக்க )
தனக்கு நிர்தேச காரிகளாய் இருக்கிற எங்களை நியமித்து வைத்தது என்று
ஞாத்ருத்வ ஆபாஸத்தாலே துர் அபிமானிகளான புருஷர்களைத் திருத்துக்கைக்காக
பார்ஸ்வத்தரான ஸூஹ்ருத்துக்கள் சொன்ன ஹித வசனத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –
அவதாரிகை
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ண விஷயத்திலே ஈடு பட்டு இருக்கிற படியைக் கண்ட பாகவதர்கள்
தடுமாறுகிற படியைச் சொல்லுகிறது
கலந்து பிரிந்த தலைமகள் தோழிமாருடனே புனம் நோக்கி இருந்த இடத்தே
கையிலே தழையைக் கொண்டு சென்று
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்க அவனை நிஷேதிப்பாரைப் போலே
இடம் கொடுத்து வார்த்தை சொல்லுகிறாள் –

வியாக்யானம்
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் சுண்ணாம்பு என்பாரைப் போலே
தழையை முறித்துப் பிடித்துக் கொண்டு இவர்கள் இருந்த புனத்தே சென்று
இங்கனே ஓர் ஆனை அம்போடே போந்ததோ என்று கேட்டான்
கொம்பார் தழை கை
கையிலே தழையைக் கொண்டு சென்றான் தன் ஆற்றாமையை அறிவிக்கைக்காக –
நீர் ஒன்றை நினைத்து இருந்தீர்
அது விபரீத பலத்தைப் பலியா நின்றது
ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே உங்களைப் பிரிந்து நான் உறாவினேன் -என்கைக்காகக் கொடு நின்றான் இவன் –
அது உன் கையிலே ஸ்பர்சத்தாலே தளிரும் முறியுமாய் சத சாகமாகா நின்றது
பாவியேன் உம்முடைய ஆற்றாமை காட்டுகைக்காகக் கொடு வந்தீராகில் கொம்பிலே காட்ட மாட்டு கிறீலிரே –
பிறர் இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் உள்ளது
உம்முடைய கைப்பட்டாருக்கு வாட்டம் யுண்டோ
கொம்பாய் உம்முடைய கையிலே இருந்தோம் அல்லோம்
கொடியாய் உம்முடைய தோளில் அணைந்தோம் அல்லோம்
நாங்கள் என்ன இருப்பு இருக்கிறோம் தான் –

வேட்டை கொண்டாடு
வேட்டைக்குப் போந்தானாக வாயிற்றுச் சொல்லுகிறது
வில்லோ என்றவாறே தழையைக் காட்டா நின்றான்
கையைப் பார்த்தவாறே நாண் தோய்ந்த தழும்பும் கூட இன்றியே இரா நின்றது

சிறு நாண் எறிவிலம்
இப்போது கையிலே வில் இல்லாமையே அன்றிக்கே முன்பு விற் பிடித்த தழும்பு கூடக் கண்டிலோமீ
இவர்கள் தான் வீர பத்னிகள் யாகையாலே கையைக் கண்டபோதே அறிவார்கள் ஆயிற்று
அன்றியே
சிறு நாண் எய்யப்படுவதான வில்லை யுடையீர் அல்லீர் என்று

ஒரு கதிர் போகில் ஜகத் உப ஸம்ஹாரமாம் படி யன்றோ எங்கள் நிலை

இவ்வான் புனம்
அவனுடைய உபய விபூதியோ பாதியும் பரப்புப் போராதோ எங்கள் புனம்
எங்களுக்குக் கிட்டாருக்குத் தான் உத்தரம் சொல்லுகைக்கு அவசரம் யுண்டோ
எங்கள் கார்யமே போரும் காணும் என்கிறார்கள்

இத்தால்
ஸம்ஸார ஜன்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது
பகவத் பிரவணர் படியைக் காண்கையே இறே –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி கண்ணனுக்கு அபிமத விஷயமாய் இருக்கிற இவரில்
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த ஆபாஸ வித்வஜ் ஜனங்களைக் குறித்து
உங்கள் படி பரஸ்பர அசங்க தங்களாய் இருந்தன என்று ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
உடன் படுத்தக்
களிறு வினவ வந்து குறையுற்ற தலைவனைத் தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வியாக்யானம்
ஒரு வியாஜத்தால் அபிமத விஷயத்தைக் கிட்டுவாரைப் போலே தளிருள்ள தழையை முறித்துப் பிடித்து
இங்கு ஓர் ஆனை போந்ததோ என்று வினவிக் கொண்டு நின்றான்
அவனைப் பரிஹஸித்துக் கொண்டு சொல்லுகிறாள் –

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரமாயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே சிறு நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே ஓர் யானை வந்ததோ
என்று வினவப் பாரித்தது

ஐயர்
இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இரா நின்றது

புள்ளூரும் கள்வர் தம் பாரகத்து என்றும் ஆடாதனர்
புள்ளூர்ந்து வஞ்சித்துத் திரிகிற ஈசுவரனுடைய விபூதியில் நடையாடுமது அல்ல

தம்மில் கூடாதன
தம்மில் தான் சேர்ந்தன அல்ல

வம்பார் வினாச் சொல்லவோ
ஆரோ கேட்ட உடனே நிஷ் பிரயோஜனமாக மறு மாற்றம் சொல்லவோ

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களை இந்தப் பெரிய புனத்திலே வைத்தது
நமக்குள்ள சேஷிகள் –

————-

அவதாரிகை
இப்படி ஹித வசனம் கேட்டுத் திருந்தின ஞாதாக்கள்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சம் துவக்குண்டு சொல்லுகிற பாசுரத்தை
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைமகன் குறைவற உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-

பாசுரம் -23-புனமோ புனத்து அயலே -தலைவன் குறை யுற உரைத்தல் –
கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

பதவுரை

மகளிர்–பெண்களே!
நும் காவல்–உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ–இந்தத் தினைப்புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ–இப் புனத்தினருகிலே வழிச்
செல்லுகிற பாவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர்–சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்–செந்தாமரை மலரின் அழகிய ஒளியை யுடைய காட்டை
ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன்–கண்ணபிரானது
வான் காடு–பரமபதத்திலே
அமரும்–வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம்–நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய்–ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள்–நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ–அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?

புனமோ
உங்கள் வேலிக்குள்ளே அகப்பட்டுத் திருத்துண்டு
விளைந்து கிடக்கிற புனமோ

புனத் தயலே வழி போகும்
அப்புனத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
அகப்பட்டால் தப்ப மாட்டாத பாபத்தைப் பண்ணின என்னுடைய நெஞ்சமோ

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நீளமான பிறவி அழகை யுடைய
உங்கள் காவலுக்கு விஷயம் சொல்ல வேணும்
புனம் விட்டு அகலாதவோ பாதி
என் நெஞ்சம் விட்டு அகலுகிறிலீர் என்று கருத்து

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை
சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

(கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –73-)

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக விபூதியான நாட்டிலே நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத் தினம் ஓர் அனையீர் களாய்,
திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீராய் இருக்கை

இவையோ நும் இயல்வுகளே
பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று
தன் குறையற யுரைத்தானாயிற்று

இத்தால்
புனமோ என்று
உம்முடைய அநந்ய சாதனத்வாதி மர்யாதைக்கு உட்பட்டு போக
உன்முகமாம் படி திருத்துண்ட இவ்விபூதி ப்ரதேசமோ என்றபடி

புனத்தயலே என்று தொடங்கி
இதனுடைய பரிசர வர்த்தியான சாதன சரணியாலே நடக்கும்
எங்கள் நெஞ்சோ என்றபடி –

(மனசால் தியானித்து -உபாயாந்தரங்கள் ஆகிய வழியிலே
புனம் -சிந்தை அற்று -நெஞ்சு -சிந்தனை அன்றோ
அஜடமாய் இருந்தால் தானே கார்யகரம் ஆகும் )

இவ்விடத்தில் அருவினை -என்றது
விடமாட்டாத பாவ பந்தத்தை

மகளிர் என்று தொடங்கி
பாரதந்த்ர ஏக நிரூ பணீயமான ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடைய
உங்களுக்கு நியாம்யம் ஏது என்று அருளிச் செய்ய வேணும் என்றபடி

புண்டரீகம் இத்யாதி
ஸ்வாமித்வ
வாத்ஸல்ய
ஸூ சகமான கண் அழகை யுடையவனாய்
(செவ்வரியோடும் அந்த நீண்ட பெரியவாய கண்கள் இவற்றைக்காட்டுமே )
உத்துங்க லளிதனான கிருஷ்ணனுடைய அப்ராக்ருத பரம வ்யோம வாசிகளான
ஸாத்ய தேவர்களுடைய சங்கத்தோடே சாத்ருஸ்யம் சொல்லலாம்படி
விண்ணுளாரிலும் சீரியராய் வைத்து
மார்க்க அந்தர காமிகளையும் வர வலித்துக் கொள்ளும்படியான
வியாபார வை லக்ஷண்யம் இருந்தபடி என் என்று
திருந்தின விலக்ஷணர் பண்ணின நிந்தா ஸ்துதியை அருளிச் செய்தாராயிற்று –

(நிந்தா ஸ்துதி -நேராக ஸ்தோத்ரம் பண்ணவில்லையே –
கிளைவித் தலைமகன் ஆழ்வாரைப் புகழ்ந்த படி )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இவனை நோக்கி இவர்கள் சில வக்ர யுக்திகளைச் சொல்ல
இவன் தானும் இவர்களைச் சில வக்ர உக்திகளைச் சொன்னான்
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான் புனத்தே -என்றார்கள்
அழகிது -இது சொல்ல ஒண்ணாதாகில் நீங்கள் பூனம் நோக்கி இருக்கிறி கோளோ
வழி போவார் மனம் நோக்கி இருக்கிறி கோளோ -என்கிறான் –

வியாக்யானம்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79-என்னக் கடவது இறே இவர்களை

இவையோ நும் இயல்வுகளே
நான் உங்களை இங்கன் அன்று நினைத்து இருந்த படி
நாநா பவநம் பெற்று அநேக சரீர பரிக்ரஹத்தைப் பண்ணி அனுபவிக்கக் கோலி வர
உள்ள நெஞ்சையும் கூடக் கைக்கொண்டு வாய் திறவாதே இருப்பதே
அழகிதாக போதயந்த பரஸ்பரம் -கீதை -10-9- பண்ண வந்தேன்

இதுக்கு ஸ்வாபதேசம்
ஆழ்வார் பகவத் அலாபத்தாலே வந்த ஆற்றாமையுடனே
நல்லார் நவில் குருகூர் நகரான் –திரு விருத்தம் -100- என்கிற படியே
ஸத்வ நிஷ்டர்கள் அடங்கலும் திரண்டு படுகாடு கிடைக்கும் படி இருக்கிற இருப்பைக் கண்ட
அவர்களுடைய சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமாகிற படியைச் சொல்கிறது –

தென் ஆனாய்
நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்
பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்
சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்
வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததுக்கு

நம்பிள்ளை ஈட்டில்
ஆப்பான் திருவழுந்தூர் அரையர்
மச்சிலே
பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க
ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க
திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
சீலாதி குணம் அளவு இல்லையே
குண வித்தர் படி

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்டியுள்ள ஹித வசனத்தைக் கேட்டுத் திருத்தப்பட்ட பரம ஏகாந்தி பண்ணும் நிந்தா ஸ்துதியைப்
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைவன் குறை யுரைத்த பாசுரத்தாலே
காட்டுகிறார் இதில்

வியாக்யானம்
புனமோ
இது உங்கள் வேலிக்குள் அகப்பட்ட புனமோ என்பது ஹர்ஷ யுக்தி இங்கு

புனத் தயலே வழி போகும்
உங்கள் புனத்திலே புகுந்தோம் அல்லோமே
புணத்துக்கு அருகே அல்லது வழி இல்லை இறே நமக்கு
புணத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
ஈஷத் அநு ரக்தரிலும் அநு ரக்திக்க்கும் படியான பாபத்தைப் பண்ணின என் மனம் தான்

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நிலமான பிறவியையுடைய
உங்கள் காவலுக்கு உட்பட்ட புனம் தானோ சொல்லுங்கோள்

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்தினுடைய அழகிய ஸ்ரீ யை யுடைத்தான வனத்தோடே ஒரு போலியே சொல்லும்படியான
கண்களை யுடைய

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக பூமியான நாட்டிலே
நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,
நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீர் களாய் இருக்கிறீகோளே

இவையோ நும் இயல்வுகளே
ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய்
ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே
உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த
ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்

புனம் -இவர்கள் இருக்கும் தேசம்
யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று –

———-

அவதாரிகை
இப்படி பாகவதர் ஈடுபடும்படியான இவருடைய வை லக்ஷண்யம்
பகவத் ப்ராவண்ய அதிசயம் ஆகையால்
அந்த ப்ராவண்ய அனுரூபமாக பிராப்தி சித்தி யாகையாலே
தமக்குப் பிறந்த ஸைதில்யத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரத்தைத்
தலைமகன் பிரிவு ஆற்றாளாய் தலைவி ஈடுபாடு கண்ட தோழி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(நாட்டைத் திருத்தவும்
நச்சுப் பொய்கை யாகாமைக்கும்
ஆர்த்தி அதிகார பூர்த்திக்காகவே ஆழ்வாரை இங்கே வைத்து இருந்தார் )

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–

பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும் -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –
கரு மாணிக்க மலை -8-9-

பதவுரை

இயல்பு ஆயின–இயற்கையானதும்
வஞ்சம்–பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்–காதல் நோயை
கொண்டு–உடையவையாய்
உலாவும்-(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்–ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்
கயல்மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய்–(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்–கோவர்ததன மலையினால்
இனம் நிரைகாத்த–பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி–கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்–தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல்–பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு–மனத்தோடும்
எம் கோல் வளைக்கு–அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல் = (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்
ஸ்வா பாவிகமாய் பிறர் அறியாத படியான காதல் நோயைக் கொண்டு
ஆர்த்தி அதிசயத்தாலே யாதாயாதம் பண்ணா நிற்பனவாய்
(யாதாயாதம் பண்ணா நிற்பனவாய் -உலாவி-கண்கள் உலவுவதாக இங்கு –
ஆழ்வார் உலவுவதாக மேலே சொல்வார் )

ஒரோ குடங்கைக் கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,
ஒரோ சிறாங்கை போலே பெருத்து நீண்ட கயலானது நிரம்பின கயத்திலே பாயுமா போலே
கண்ணீர் வெள்ளத்திலே அலமருகிற கண்களோடும்

கண்கள் தன்னோடும் என்றும் சொல்வர்

குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி
கண்டதொரு மலையாலே
பெரு மழையில் ஈடுபடாமல்
கோகுலங்களைக் காப்பானுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய

கள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு
மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட –

என் னான்கொல் எம் கோல வளைக்கே
கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ

கோல் வளை -என்று
மழுக்கான வளை என்றபடி
(அழகிய வளை என்றும் வளைந்த வளை என்றும் )

என்னாம் கொல் என்று
கண் கலக்கமும்
நெஞ்சு அழிவுமான
அளவன்றியிலே இனி ஏதாய் முடியுமோ என்று
வளைக்கும் அஞ்சி உரைத்தாள் யாயிற்று

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் எம் கோல் வளை -என்று
அந்வயமாகவுமாம்
(உலாவும் இங்கு ஆழ்வாருக்கு )

இத்தால்
ஸ்வாபாவிக ஆகாரமாய் –
ஸ்வ ஸம் வேத்யமான பக்தி யோகத்தை யுடைத்தாய்க் கொண்டு –
ஒரு நிலை நில்லாமல் வியாபரிப்பதாய்-
சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி தர்சநீய ஸம் ஸ்தானத்தை உடைத்தாய்
ஆர்த்தி ஜெனிதமான அஸ்ரு வெள்ளத்திலே அலமருகிற பாஹ்ய கரணத்தோடும்

ஆர்த்த விஷயத்தில் யரும் தொழில் செய்து நோக்க வல்லனாய்
த்வராயை நம -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-57-என்னும்படி
அதி த்வரித காமியானவனுடைய
அதிசயித போக்யமான மாலை அழகை அனுபவிக்கையிலே
அபி நிவிஷ்டமான அந்தக் கரணத்தோடும்

ஈடுபடுகிற இவர் கையிலே
நமக்குத் தஞ்சமான
(ஆழ்வார் இடம் உள்ள பாரதந்தர்யமே நமக்குத் தஞ்சம் )
பாரதந்தர்ய லக்ஷணம் பிரியப்படுகிறதோ என்று நொந்த
ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை அருளிச் செய்தார் யாயிற்று

(சீதாபிராட்டி இளைய பெருமாள் இடம் -என்னை நான் அழித்துக் கொள்ள முடியாது
என்று பாரதந்தர்யம் காட்டி அருளினாள் அன்றோ )

இங்கும் வஞ்ச நோய் கொண்டு உலாவும் என்று ஆழ்வாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
வியாக்யானம்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு

கண்டதோர் மாலையாலே மஹா மேக வர்ஷத்திலே அகப்படுவனவான கோ ஸமூஹங்களைக் காத்தவனுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனுமானவனுடைய
மது ஸ்யந்தியான திருத்துழாயின் கொய்தல் வாய்ந்த மலர் மேல் அபி நிவிஷ்டமான மனத்தோடும்
நோய் கொண்டு உலாவும் என்று அந்வயம்

என் னான்கொல் எம் கோல வளைக்கே –
அழகிய கையும் வளையுமான
என் மக்களுக்கு ஏதாய் முடியுமோ –

—————–

இப்படி ஸூஹ்ருத்துக்களும் ஈடுபடும்படி ஈஸ்வரனுடைய போக்யதையிலே ஈடுபட்டவர்
அந்த போக்யதையினுடைய அதி ப்ரவ்ருத்தியை
அவன் உகந்த திருத்துழாயிலே ஈடுபட்ட தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

பாசுரம் -25-எம் கோல் வளை முதலா -தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
மாயக் கூத்தா வாமனா -8-5-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும்
பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
எங்கள் கையிலே
கோல் வளை படியாக

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன்
லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
பிரபலரான லோக பாலாதி தேவர்களுக்கும் நிர்வாஹகனான ப்ரஹ்மாவுக்கும்
அசாதாரண ஸ்வாமி யானவன்

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும்
நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இந்த மேன்மையாலே நம்மை அடிமை கொண்ட ஸர்வேஸ்வரன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7- என்கிறபடியே
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைத்தான திருத்துழாயானது

என் செய்யாது இனி நால் நிலத்தே –
குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்று நாலு வகைப்பட்ட பூமியிலே
இனி எது செய்யாது என்றதாயிற்று
(பாலை -ஐந்தாவது -மக்கள் வாழ மாட்டார்கள் அன்றோ )

எம் கோல் வளை -என்று
தலைமகளைச் சொல்லிற்று ஆயிற்று

தலைமகள் ஈடுபாட்டுக்கு
தோழி ஆற்றாது உரைத்தலாகவுமாம்

இத்தால்
எம் கோல் வளை இத்யாதி
நம் கையிலே மினுங்கித் தோற்றுகிற பாரதந்தர்ய லக்ஷணம் அடியாக
உபய விபூதியையும் நிர்வஹிக்கிற
பகவத் சங்கல்பத்தை அநு விதானம் பண்ணி
ஆறி இருக்க ஒட்டாதபடி த்வரையை விளைக்கையாலே
பகவத் ஆஜ்ஜா பங்கத்தைப் பண்ணுவதாய் இரா நின்றது

நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
அகில ஜகத் ஸ்வாமியாய்
அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே
அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய
அதி பிரவிருத்தி யானது
இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே
பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று

(பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான-
ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி -புருஷ -ஸ்தூல ரூப -காலம் -இப்படி நான்கும் –
அந்திம ஷட்கம் ஸங்க்ரஹ ஸ்லோகம்-இப்பத பிரயோகங்கள் உண்டே
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.)

அன்றியே
எம் கோல் வளை -என்று
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஆழ்வாருடைய ஸ்வரூபத்தை உத்தேசித்து பார்ஸ்வத்சரான
ஸூஹ்ருத்துக்கள் சொன்ன வார்த்தை யாகவுமாம்

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ஸர்வேஸ்வரன் அபலையானவள் நிமித்தமாகத் தன்னுடைய ஆஜ்ஜையை நெகிழப் பண்ணா நின்றான்
அவன் நினைவு அறிந்து கார்யம் செய்யும் திருத்துழாய் எத்தைச் செய்யாது என்னுதல்
அன்றிக்கே
உபக்ரமத்தில் அவனுடைய ஆஜ்ஜையையும் கூட அழிக்கிற இது
இனி எல்லாம் செய்தது அன்றோ என்று
இத் திரு துழாய் தன்னையே சொல்லிற்றாதால்
திருத் தாயார் வார்த்தை யாகவுமாம்

வியாக்யானம்
எங்கோல் வளை முதலா
எனக்கு எல்லா வழியாலும் உஜ்ஜீவன ஹேதுவான இவள் நிமித்தமாக
பகவத் ஸ்பர்சம்
க்லேசமாகப் புக்கது
இவளைத் தொடங்கிக் கிடீர்

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-மூன்றாம் திரு அந்தாதி -27-என்னக் கடவது இறே

அவஸ்யம் அநு போக்த்வயம் -என்கிறபடியே
அனுபவ விநாஸ்யமான பாபத்தைப் பண்ணின
பகவத் ப்ரத்யாஸன்னரில் அப் பாப பலம் அனுபவித்தார் யார்

அவன் தானும்
ந மே பக்த ப்ரணஸ்யதி-ஸ்ரீ கீதை -9-31-என்றான் இறே

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

க்ஷிப்ரம் = வெகு விரைவில்
ப⁴வதி = அடைகிறார்கள்
த⁴ர்மாத்மா = தர்மத்தின் வழியில்
ஸ²ஸ்²வச்சா²ந்திம் = நிரந்தர அமைதி
நிக³ச்ச²தி = அடைகிறார்கள்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரதி ஜாநீஹி = நான் உறுதி அளிக்கிறேன்
ந = இல்லை
மே = என்னை
ப⁴க்த: = பக்தன்
ப்ரணஸ்²யதி = அழிவது

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –
இப்படிப் பட்ட அநந்ய பக்தனுக்கு ரஜஸ் தமஸூக்கள் வாசனை ருசி உடன் கழன்று போகும் –
என்னையே நினைந்து பிரதி பந்தகங்கள் போக்கப் பெற்று என்னை அடைகிறான் –
ரஜஸ் தமஸ் ஒழித்து துராசாரம் போகும் -என்னை பற்றி நினைத்தவனுக்கு -கிரமத்தால் பக்தன் ஆவான்
இதை நீயே ப்ரதிஞ்ஜை பண்ணப் போகிறாய் –
நான் ஏலா பொய்கள் உரைப்பான் என்பர் -நீ சொன்னால் நம்புவார்கள் -ஷத்ரியன் ராஜா அன்றோ –
அஷ்ட வித பக்தி -எனக்கு சமமாக நினைக்கத் தக்கவன் –
மிலேச்சனாக இருந்தாலும் -கருட புராணம்- நின்னொடு ஓக்க -திருமாலை
மத் பக்த ஜன வாத்சல்யம் -பூஜா ஆமோதித்து ஆனந்தம் ஸ்வயம் பூஜா பண்ணி
மத் கதா ஸ்ரவணா ப்ரீதி -கொள்மின் கொடுமின் ஞானம் கொடுத்து பெறலாம் –

ந வாஸூ தேவ பக்தா நாம சுபம் வித்யதே க்வசித் -ஸ்ரீ ஸஹஸ்ரநாம அத்யாயம்
ஸர்வேஸ்வரன் பக்கலிலே ப்ரேமத்தைப் பண்ணி இருக்கையும்
பொல்லாங்குகள் உண்டாகுகையும்
அக்னி நாஸிஞ்சேத் -போலே கூடாதது ஓன்று இறே

இவன்
தான் போக்கிக் கொள்ளப் பார்த்தல்
அவனுக்கு அசத்தி உண்டாதல் செய்யில் இறே
இது உண்டாவது

ந வாஸூ தேவம் ப்ரணிபத்ய ஸீததி –என்றும்
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந-என்றும் -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-இத்யாதியாலே கண்டோம்

சர்வ பிரகாரங்களாலும் தோஷமே யாகிலும் ஞானத்துக்கு மேல் அவ்வருக்கு நன்மை இல்லையாகிலும்
பக்தி நெருப்பு இவன் இடம் இல்லை யாகிலும்
இனி இவனை நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ண வேண்டுகிறது என்ன ஹேது கொண்டு என் என்னில்
ப்ரபாவாத் பரமாத்மந -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-
இத் தோஷங்களோடே பகவத் விஷயத்திலேயும் கை வைக்கும்
பின்னை இத்தையே-தோஷத்தையே- பார்த்து இருக்கும் அத்தனை போக்கி இவனைக் குறைய நினைத்ததாகில்
பகவத் ப்ரபாவத்தைக் குறைய நினைத்தானாம் இத்தனை –
எலி எலும்பனான இவனைப் பார்த்து குறைய நினைக்கிறது
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்து இவனை நிர்தோஷனாகப் பிரதிபத்தி பண்ணுகிறது –
புரா -பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு இறே தோஷம் இருப்பது

பின்பு அவன் பக்கலில் நெஞ்சு வைக்கவும் பொல்லாங்கு உண்டாகையும் கூடாது
அவன் தானும் ஷிப்ரம் பவதி என்றான் இறே
பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்
சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை
நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்
இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க

தாசரும் தனது தன்மை அறிந்தவர்
எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்க்களே என்ன

என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்
பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல

என் கோல் வளை
எனது ஜீவனம் அழித்தோ தனது ஸ்வாதந்த்ரம் நடத்தப் பார்ப்பது
இளைத்து கை வளை இழந்த ஆழ்வார் அழகு -மிக்கு இருக்குமே
ஆகிலும் இக் குறையும் வராதே இவர் இருக்க வேண்டும்
அம்ருத சாகரத்தில் ஆழ்ந்து அங்கு -சம்சாரம் அப்படி இல்லையே

உண்ணும் சோறு –கண்கள் நீர் மல்கி இருப்பவரையே நமக்குப் பிடிக்கும் -இப்படி இருந்தாலும்
அவனை அன்றி வேறே ஒன்றை நினையாத -ஏங்குதலே அழகு
கண் எச்சில் படாமைக்கு இவை வேண்டாம் -த்ருஷ்ட்டி தோஷம் வரக் கூடாது
தாயார் ஆகையால் இப்படித்தானே நினைப்பாள்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு பார்ப்பது அழகு தான் இருந்தாலும்

தன்னை அழிய மாறி ஆஸ்ரித வத்ஸலனான கண்ணன் கூட இப்படி பண்ணுவானோ
தனது ஆணையை அழித்து
அகர்மவஸ்யனாய்
தேவகி வயிற்றில் பிறந்து வந்து சொல்கிறான்
ஜாதோசி தேவ தேவ
ஜாதோஹம் -அவன் சொன்னதைத் திரும்பி ரிஷிகள்

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
ஈரக்கையால் தடவி ரக்ஷிக்கும் செங்கோல்
அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற திருவரங்கச் செல்வனார்
ஆணை -அதுக்கு வளைவு -உண்டாக்கலாமோ
திருத் துழாய் ஆணையை வளைத்து விடடாதே
ரஷ்ய வர்க்கத்தில் ஒருத்தி விட்டாலும் ஸர்வ ரக்ஷகத்வம் கொத்தை ஆகுமே –
அதுதானே ராம ராஜ்ஜியம்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவரை இழந்தால் -இனிக் கிடையாது என்னில்
உபய விபூதியும் இழந்தது ஆகுமே அவனுக்கு

பக்தி பிரியர் என்பார் ஒருவர்
இவர் விரகம் அனுசந்தித்து
ஆழ்வீர் என் பட்டீர் என்று திரிவாராம்
வியாசர் -சம்சார வாசனை கனத்து புத்ர வியோகத்தில் மலையில் இருந்து விழுந்து சாயா சுகரை வைத்து தரித்தார்
பகவத் விஷயத்தில் இழிவாருக்கு-இவர் திருவாய் மொழி கொண்டே
கதிர் பொருக்கி தர்ம வீர்ய ஞானம் பெற்றவர்கள் போல் இல்லாமல்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
அத்தால் கூட தானே செங்கோல் -கூட வளைவிப்பானோ

திறல் சேர் அமரர்
சம்சாரிகள் ஸூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டார்கள்
நித்ய ஸூரிகள் அவனை அனுபவித்து -மேலும் அனுபவிக்க நிரந்தரமாக திறமை கொண்டவர்கள்
சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்க போக்த்ருத்வ சக்தி உடையவர்கள்
விஷ்வக்சேனருக்கும் கோன்
தேவர்கள் கோன் ப்ரஹ்மாதிகளுக்கும் கோன்
உகக்கும் துழாய்
ராஜ குலா மஹாத்ம்யம்

இவன் தான் செங்கோல் வளைத்தாவது ஆழ்வாரை துன்பம் கொடுக்க சங்கல்பிக்க
திருத்துழாயும் சஹகரித்து
ஒரு பிரபு ஆயிரம் காசு கொண்டு வரச் சொல்ல இவன் மூன்று மடங்கு பண்ணி அவன் ப்ரீதிக்கு விஷயம் ஆக்குமே
அழியாத விபூதியையும் அளிக்கப் பார்க்கும் இது லீலா விபூதியை அளிக்க சொல்ல வேணுமோ

சீதா பிராட்டி துக்கம் கண்டு-தெப்பம் முழுகினால் போல் துன்பம்
புருஷகாரம் செய்து நம்மை சேர்ப்பிக்க இவளும் துக்கம் பட்டால்
காலத்தின் கொடுமை என்ன சொல்வது திருவடி வார்த்தை சுந்தர காண்டம்
காலம் என்பது -கால சக்கரத்தாய் -அழிக்கிற வஸ்துவில் நான் காலம் என்றானே கீதாச்சார்யன்
அகால தேசத்திலும் துன்பம் கொடுக்கும் காலம் அவன் தானே
நீர்மைக்கு அவ்வருக்காய் இருப்பார் இப்பாட்டு படா நின்றால் என் செய்யாது

இவளோ முடியா நின்றாள்
இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்
திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை
காய்ந்து சருகாய் போக வேண்டுமே
ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது

இத்தால் சொல்லிற்று
நான்கு நிலமும் -வாசி இல்லாமல் ஏக ரூபமாய் துன்பம்
நெடியானே என்று கிடைக்கும் நெஞ்சமே
காணக் கருதும் கண்ணும்
பாஹ்ய அந்தக்கரணம் அனைத்தும் ஈடுபட்டதுக்கு பிரமாணம்

ஆற்றாமை கைவிஞ்சி இருப்பு கண்ட பாகவதர்கள்
இவர் ஸம்ஸாரிகளுடைய அன்ன பானாதிகளால் தரிக்குமவர் அல்லராய் இரா நின்றார்
தம்முடைய உத்தேச்யம் கைப் புக்கு இருக்கிறது இல்லை
இனி இவ் விருப்பு அவருக்கு எவ்வளவாகக் கடவதோ
இவர் ஜீவிப்பாரோ ஜீவியாரோ என்று சம்ஸயம் பண்ண வேண்டும்படியான தசை
விளைந்த படியைச் சொல்லிற்று கீழ்

இதில் இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை
ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான
தசை பிறந்த படியைச் சொல்கிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி எனக்கு அதி போக்யமும்
எங்கோன் உகக்குமதுமான இத்திருத்துழாய்
ஸர்வ ரக்ஷகனும் ஸர்வாதிகாரி நிர்வாஹகனுமானவனதான
பெண்ணீர்மை ஈடழிக்க வல்ல திவ்ய ஆஜ்ஜையினுடைய ஸர்வ தேசா க்ரமணத்தை விஜ் ரும்பியா நின்றதே
இனி இந்நான்னிலத்து இது எத்தைச் செய்யாதது என்று
அதின் கொடுமைகளிலும்
போக்யதையிலும் தலைமகள் ஈடுபடுகிறாள்

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
என்னுடைய கையில் வளை முதல் கொண்டு

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனுடைய லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
ஆஜ்ஜையினுடைய தேச சதுஷ்டய வ்யாபனத்தை சத சாகமாக விளைவியா நின்றதே

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
சமர்த்தகளான லோக பாலாதி தேவர்களுக்கு நிர்வாஹகானான ப்ரஹ்மாவுக்கும் அசாதாரண ஸ்வாமி யான

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூ ரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும் நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இம்மாலை போலே எங்களை அடிமை கொண்டவன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7-என்னும்படி
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைய திருத்துழாயானது

என் செய்யாது இனி
என்னை எந்தப்பாடு படுத்தாது –
உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ

நால் நிலத்தே –
பாலை மருதம் நெய்தல் குறிஞ்சி என்றுள்ள நாலு வகையான நிலத்திலுள்ள
தன்னை ஆசைப்பட்டாரையும் கழல் வளை ஆக்காமல் விடுமோ –
அவளவள் தோழிமார்களையும் தாய்மார்களையும் அங்கனே புலம்பப் பண்ணாமல் விடுமோ
என்று தலைமகள் அவசன்னை யாகிறாள் –

————–

அவதாரிகை
இப்படி ஈடுபட்ட இவரைக் கண்ட அபிமதரான பாகவதர்
இவர் ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த பிரகாரத்தையும்
அர்ச்சாவதாரத்தின் அதிசயித போக்யதையையும் இவருக்குப் பிரகாசிப்பித்து
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை உணர்ந்து
உடன் போன தலைமகன்
நடந்து இளைத்த தலைவியைக் குறித்து
இடம் தலைப்பெய்தமை சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்
திரு வெக்கா -பெருமாள் கோயில் )

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-

பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -நகர் காட்டல் –
மாலை நண்ணி -9-10-

பதவுரை

நால்நிலம்–(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு–(தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று–ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட–அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்–வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்–உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை–பாலை நிலத்தை
கடந்த-தாண்டி வந்த
பொன்னே–பொன் போன்றவளே!.
விண்ணோர்–மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்–(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி
இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா–கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது–அடுத்துள்ளது.
அம் பூ தேன்–அழகிய பூவையும் தேனையுமுடைய
இள–இளமை மாறாத
சோலை–சோலையானது
அப்பாலது–அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது–(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.

வியாக்யானம்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
முல்லை முதலான நாலு நிலத்தையும் தன் கிரண முகத்தாலே க்ரஸித்து
சார அம்சமான நீர்ப்பசை அற ஆராய்ந்து புஜித்துக் கோதான அம்சம் இது என்று அறிந்து

வேனிலம் செல்வன்
கோடைக்காலத்தில் ப்ரபவ ஐஸ்வர்யத்தை யுடைய ஆதித்யன்

சுவைத் துமிழ் பாலை
பசை யறுதி கண்ட வழற்றியாலே உமிழ்ந்த பாலை நிலத்தை

கடந்த பொன்னே
நெருப்பிலே நடப்பாரைப் போலே
இந்நிலத்திலே நடக்கச் செய்தே ஓட வைத்த பொன்னே போலே
ஒளி விடுகிறவனே

கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்
இப்படிக் கால் பொருந்தாது இருக்கை அன்றிக்கே
பரம வ்யோம வாசிகளும் இங்கே வந்து
கால் பொருந்தி அனுபவிக்கும் படியான

கண்ணன் வெக்காவுதம்
ஆஸ்ரித ஸுலப்யத்தாலே
சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான
கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது
அடுத்து அணித்தாயிற்று

பூம்தேன் அலம் சோலை அப்பாலது
அழகிய பூவையும் தேனையும் யுடைத்தாய் நித்ய வஸந்தமாய் இளகித் தோற்றுகிற
சோலை அவ்விடத்தது –

எப் பாலைக்கும் சேமத்ததே —
இது நமக்கு எல்லா அவஸ்தை களுக்கும் ஷேம கரமாய் இருப்பதோர் இடம்

இத்தால்
நானிலம் என்று தொடங்கி
சேதனருடைய ஸ்வரூப ரூப குண விபவங்கள் ஆகிற நாலு வகைப்பட்ட போக ஸ்தலத்தையும்
தன் ஸங்கல்ப முகத்தாலே அந்தர் பவிப்பித்து சார அம்சத்தை மிகவும் புஜித்து
நிஸ் சாரமான அம்சம் இது என்று திரு உள்ளம் பற்றி

கர்ம தாரதம்ய அனுரூப பல பிரதானத்தால் உண்டான ஸ்வா தந்தர்யத்தாலே
பிரதாபோஷ் மளனான ஸ்ரீ யபதியானவன்

(செல்வன் ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி செல்வ நாரணன்
கிரணம் -சங்கல்பம்
ஆத்மாவின் ஸ்வரூபம் சேஷத்வம்
ரூபம் வணக்கம்
குணம் -அடியேன்
வைபவம் -கைங்கர்யம்
சார அம்சம் புஜித்து )

பகவத் ஞானப் ப்ரஸங்கம் இல்லாப் பசை அறுதி கண்டு
அஹங்காராதி ரூபமான அழல் விஞ்சி இருக்கையாலே
ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19- என்று கை விட்ட
ஸம்ஸார ஸ்தலத்தைக் கடந்து

அத்யுஜ்வலமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடையரான உமக்கு
நித்ய ஸூரிகள் பொருந்தி வர்த்திக்கும் படி
நிரதிசய ஸுலப்ய விஸிஷ்டனான
ஸர்வேஸ்வரனுடைய அர்ச்சாவதார ஸ்தலம்
அதூர வர்த்தியாய்
அதிசயித போக்ய போக உபகரணாதி ஸம்ருத்தமாய் இரா நின்றது

இது வன்றோ நமக்கு உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற
ஷேம கரமான புகலிடம் என்கிற
அபிமத பாகவத வசனத்தை வெளியிட்டு அருளினார் யாயிற்று –

————-

அவதாரிகை
இப்படி தமக்குப் பிறந்த ஆஸ்வாசத்தாலே முன்பு பாதகமான லௌகிக பதார்த்தங்களும்
அனுகூலித்த படியை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கையாலே
முன்பு நலிந்து போந்த வாடை தணிந்த படியை நாயகி உட் கொண்டு
உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –
தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்–8-6-

பதவுரை

செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நி ஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மை மொழியின் படியே,
அ வாடை–அந்தக்காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய
குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோ வந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

வியாக்யானம்

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ரக்ஷகமானது

செருவாரும் நட்பாகுவர் என்று
அப்போது பாதகராவாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம் பெற
தஞ்சமாக விஸ்வசிக்கலாம் படி

வையம் சொல்லும் ,மெய்யே
நாடு மெய்யாகச் சொல்லா நிற்கும்

எங்கனே என்னில்
பண்டு எல்லாம் மறை கூய்
முன்பு எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
ஜாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –
அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று
தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன்
இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

இத்தால்
சேமம் என்று தொடங்கி
நிருபாதிக சேஷியான ஈசுவரனுடைய கிருபையே ரக்ஷகமானால்
தத் விபூதி பூதரும் அனுகூலிப்பார்கள் என்று ஷேம உத்தரமாம் படி லோகம் ஸத்யம் சொல்லா நிற்கும்
எங்கே கண்டோம் என்னில்

முன்பு ஸ்மா ரகமாய்க் கொண்டு காலம் தோறும் தாப ஹேது வானது
ஸர்வ ஸூலபனான சர்வேஸ்வரனுடைய விஷயீ காரம் யுண்டான அளவிலே
அந்தப் பதார்த்தம் தானே அனுகூலித்து ஆஸ்வாஸகரமாயிற்று என்று
அபரோஷித்து அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பகவத் அலாபத்தாலும் சம்சாரத்தில் யுண்டான தாபத் த்ரயத்திலுமாக இவர் நொந்து இருக்கச் செய்தே
நெடுநாள் பாதகமாய்ப் போந்த வாடையானது இப்போது ஒரு ஸம்ஸ்லேஷ விசேஷத்தாலே
வந்து அனுகூலமான படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

ஸ்ரீ கீதை -8-12- உண்டானவாறே பூர்வ அனுபவ ஸ்ம்ருதி இன்றிக்கே ஒழிவது –
அங்கன் அன்றிக்கே
ஸம்ஸாரத்திலே இருந்து ஞான லாபம் பிறந்தது இரண்டு ஆகாரமும் தோற்றும் இறே
இது போக்யமாய்த்தோ இல்லையாகில் ஆகையாலே ஞானம் பிறந்தது இல்லையாம்
இது பிரதிகூலமாய்த் தோற்றிற்று இல்லையே யாகில் அப்ராப்தியே யாம் –
இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை இறே இது –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
அபிமத அன்வயத்தால் ஆஸ்வஸ்தையான தலைவி முன் பிரதிகூலித்தது எல்லாம்
இப்போது அனுகூலமாயிற்று என்று தலைவனோடு சொல்லுமதாய் அருளிச் செய்கிறார்
முக்தனுக்கு இந்தப் ப்ரக்ருதியும் அனுகூலமேயாம் என்பதை ஸூசபிக்கைக்காக –

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ஸூக கரமானது –

செருவாரும் நட்பாகுவர் என்று
முன்பு பாதிப்பாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம்பெற
பழகினும்

வையம் சொல்லும் ,மெய்யே
லௌகிகமான பழம் சொல்லும் மெய்யே
எங்கனே என்னில்

பண்டு எல்லாம் மறை கூய்
முற் காலம் எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
யாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து
அவ்வாடையே இப்போதாக வந்ததாய்

தண் என்றதே
ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

—————-

அவதாரிகை
இப்படி பாவநா ஸித்தமான
பகவத் அங்கீ காரமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே ஆர்த்திக்கு உறுப்பாகையாலே

பாதக ஸந்நிதியில் ஈடுபட்டு
ரக்ஷக அபேக்ஷை பிறந்து ப்ரலாப வசனத்தை
வாடையாலே நோவு பட்டு நாயகனான எம்பெருமானை நோக்கி
நாயகி தன்னில் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள்வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-

பதவுரை

வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக் கோர்த்தாதபடி-ஹிம்ஸியாதபடி
பொரு–அலை மோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன் பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படி யிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) மாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக் கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?

வியாக்யானம்

தண் அம் துழாய் வளை கொள்வது
அத்தலையில் ஆஸக்தியால் உண்டான ராஜ குலத்தாலே
குளிர்த்தியும்
அழகும் யுடைத்தான
திருத் துழாய் வளைவைக் கொள்ளப் பிராப்தம் –

நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
இதில் ஒரு துவக்கற்று
பீஷாஸ் மாத் வாத பவதே -தைத்ரியம்
உமக்கு அஞ்சி நாட்டிலே திரிகிற ஒரு வாடையானது
நிறத்தைத் தடவி எடுப்பதாக உலாவா நின்றது

வள்வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த வாய் அலகாலே வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைத் தகராத படி பொருகிற நீரை யுடைத்தான
கோயிலுக்கு நிர்வாஹகன் ஆனவனே

அருளாய்
நீ அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நஞ்சம் தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டும் செய்தன யுளவோ என்று
இரங்கி உரைத்தார் யாயிற்று

இத்தால்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
சீதள ஸ்வ பாவராய்
தர்ச நீயரான
பகவத் ப்ரத்யா ஸன்னர் எங்கள் கையில் மினுக்கும் கொள்ளவுமாம்
தங்கள் இழக்கவுமாம்
ஆசன்னன் அன்றியே ஆஜ்ஜா அநு வர்த்தகம் பண்ணித் திரிகிற
லௌகிக பதார்த்தம் ரூப விபர்யாஸ கரமாகா நிற்கும்

வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
கர்ம முகத்தாலே வஞ்சகையான ப்ரக்ருதியானது
ஸூப்ர ஸ்வ பாவனான ஆத்மாவை நோவுபடுத்தாமல்
(உன்) உள் -நீர்மையாலே நோக்குமவனே
என்கையை ஸூ சிப்பிக்கிறது

அருளாய்-என்று
ஏவம் வித ஸ்வ பாவமான தேசத்திலே வர்த்திக்கிற
நீ இரங்கக் காண்கிறிலோம் –

எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
ஆர்த்தியாலே நெஞ்சு தடுமாறுகிற அவஸ்தையிலும்
இரங்காது இருந்த விஷயங்கள்
முற் காலத்திலும் யுளவோ
இல்லை என்றபடி

ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்
திரௌபதி
ஸ்ரீ கஜேந்திரன்
தொடக்கமானர் அளவிலே கண்டிலோமே
இது எனக்கே கூறு பட்டது அத்தனை இறே என்று வெறுக்கிறார்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
மானஸ அனுபவ மாத்ரத்திலே வந்த களிப்பு இறே கீழ் –
அந்வயத்தில் போன்றது இறே வ்யதிரேகத்தில் இழவாவது
தண்ணம் துழாய்த் தாமம் புனைய -என்று அந்வயத்திலே போக்யமானது
இப்போது வியதிரேகத்திலே பாதகம் ஆக்கிரப்படியைச் சொல்கிறது –
லாபத்தில் தன்னுடைய ப்ராப்யதை எவ்வளவு யுண்டு அவ்வளவு பாதகத்வம் யுண்டு இறே
அலாபத்தில் ஸம்ஸாரிகளுக்கு பாஹ்ய விஷயத்தில் பேறு இழவுகள் இரண்டும் ஒத்து இருக்கையாலே
அவை பெறவும் இழக்கவுமாய் இருக்கும்
அவ்வளவு அல்ல இறே இது
ஸ்வா பாவிகமான ஸ்வ பாவமும் சங்குசிதமாய்
ஆத்ம ஸ்வரூபமும் திரோஹிதமாய் இருக்கிற இருப்பு இவருக்கு இழவாகச் சொல்லுகிறது
ஸம்ஸார தசையிலும் அநு வார்த்தைக்கும் இறே அயோக்யதை
ஆக
ஞான லாபத்தைப் பேறு என்கிறது
ப்ராப்தியை இழவு என்கிறது –

வியாக்யானம்
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்
இதுக்கும் இவருக்கு இங்கனே இருபத்தொரு சம்பந்தம் உண்டு
ஸம்ஸாரிகளுக்குப் பேறு இழவு புறம்பாய்

இதுவான பின்பு
பரம சேதனனுமாய்
ரக்ஷகனுமாய்
அண்ணியனுமாய்
இருக்கிற உனக்கு என் செய்ய வேணும்
ஏதத் விரதம் மம -யுத்த -18-33-என்று
இருக்குமது இல்லை இறே நீருக்கு

திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
முதன்மைக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கும் இடமோ
இவ்விடம் இவ்வருகு வர நின்ற அம்சத்துக்கு பிரயோஜனம் அருளுகை அன்றோ
எங்களுக்கு எங்கள் அநு பாவ்யங்கள் அனுபவிக்க வேணுமாகில் நீ உன் அருளுக்கு விஷயம் தேடி எங்கு ஏறப் போவாய்
மயர்வற மதிநலம் அருளின பின்பு
தொழுது எழு -திருவாய் -1-1-1-என்னும்படி
த்வரை விளைவதுக்கும் ஒரு கால் அருள வேண்டிற்று இறே
அப்படியேயோ
அருளாலே இறே இவ்வாடை தான் பிரதிகூலமாயிற்று —

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
இப்படி பாவநா ஸித்த பகவல் லாபமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே
ஆர்த்திக்கு உறுப்பாய்
அரங்கா அருளாய் -முன்போல் இன்னம் பாதிப்பது உண்டோ -என்று கூப்பிடுகிறார் –
இப்பாசுரத்தில்

வியாக்யானம்
தண் அம் துழாய் வளை கொள்வது
அத் தலையில் நலிகையாலே உன் அழகிய குளிர்ந்த திருத்துழாய் தாரானது
என் வளையைக் கொள்வது பிராப்தம்
நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
உன் பீத்யா ஸஞ்சரிக்கும் காற்றானது நிறத்தைத் தடாவிடக் கொண்டு
எடுப்பதாகா உலவா நின்றது –

வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த சஞ்சூ புடத்தை யுள்ள வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைக் குத்தாத படி திரையால் பொருகிற நீரை யுடைத்தான
ஸ்தலத்துக்கு நிர்வாஹகனானவனே

அருளாய்
அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நெஞ்சு தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டு செய்தன இன்னம் உளவே –

————

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தன்னுடைய ஆர்த்தியை கடக முகத்தாலே அறிவிக்க என்று நினைத்து
தான் அபேக்ஷித்த (உபேக்ஷித்த) இடத்திலும் கடகராய் இருப்பார் ஒருவரைப் பெறாமையாலே
ஸ்வ கார்ய பரராய் ப்ரவர்த்திக்கச் செய்தேயும்
நம் கார்யம் செய்யலாகாது இருக்கிற படியோ என்று சங்கித்து
வெறுக்கிற பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே தூதாக அபேக்ஷிக்கச் செய்தேயும்
அது செய்யாதன சில அன்னங்களைக் குறித்து வெறுத்துச் சொல்லுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர் குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வன்னப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய் வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்த கதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன–மின்னல்போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?

வியாக்யானம்
இன்னன்ன தூது
இப்படிப்பட்ட தூது
நம்மைப் போக விடுகிறது ஸர்வ உத்க்ருஷ்டமான
பகவத் விஷயத்துக்குத் தூதாக வன்றோ

எம்மை
கார்ய உபயுக்தமான கரண பாடவத்தை யுடைய
நம்மை அன்றோ
(வீசும் சிறகால் பரப்பீர் )

ஆள் அற்ற பட்டு
வேறு தனக்கு ஆள் இல்லாமை யன்றோ
அபேக்ஷிக்கிறது

இரந்தாள்
அமோகமான அப்யர்த்தனத்தை அன்றோ பண்ணிற்று

இவள்
தன் வை லஷண்யம் எல்லாம் கிடக்க அன்றோ
அபேக்ஷித்தது

என்று
1-விஷயம் உத்க்ருஷ்டம் ஆகையாலும்
2-நமக்கு யோக்யதை யுண்டாகையாலும்
3-தன் ஆள் அறுதியாலும்
4-தன் பெண்மை பாராதே
நம்மை இரந்தாள் என்று நினைத்து

அன்னன்ன சொல்லாப்
அப்படிப்பட்ட கார்யத்தைப் பற்ற ஒரு வார்த்தை சொல்லாது

பெடையொடும் போய் வரும்
ஸ்வ அபிமத விஷயத்தோடே கூட கத்யாகதி பண்ணித் திரியா நின்ற

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில்
நீல தோயதத்தை விழுங்கின வித்யுத்லேகை போலே
ஸ்யா மளத்வ
ஹிரண்மயத்வங்கள்
கலசின வடிவை யுடைய ஸர்வேஸ்வரனுடைய லோகத்தில்

பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?
பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்கிற
ஸ்வ பாவத்தை யுடையனவாய் இருக்கின்றனவோ
முன்பு பெண் தூது போனார் இல்லை இறே என்று
ராகவ பாண்டவ தூத வ்ருத்தாந்தத்தைத் தனக்கு ஸ்வ பாவமாக நினைத்து இருக்கின்றனவோ

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிப் பிறப்பால் வந்த சீர்மை

அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி
குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி

இத்தால்
இன்னன்ன தூது -என்று தொடங்கி
1-ப்ராப்ய விஷயம் நிரதிசய உத்க்ருஷ்டமாகையாலும்
2-தனக்கு ஞான பிரேமாதிகள் ஆகிற கடகத்வ உத்பத்தி உண்டு என்று இருக்கையாலும்
3-தன்னுடைய அநந்ய கதித்வத்தாலும் இறே
4-தத் ஏக ரஷ்யத்வ பாரதந்தர்யத்தையும் பாராதே
நம் பக்கலிலேயும் பிரார்த்தனா ரூபமான ப்ரவ்ருத்தியைப் பண்ணிற்று என்று
தங்கள் அபிசந்தி தோன்ற ஒரு வார்த்தை சொல்லாதே

ஸ்வ அநு வர்த்திகளான அபிமத விஷயத்தோடே அனுபவ பரராய்க் கொண்டு
யாதாயாதம் பண்ணா நின்றார்கள்

உபாஸ்யத்வ
போக்யத்வ
ப்ரகாஸகத்வமாம் படி
வேதாந்த வேத்யமான பர விக்ரஹத்தை யுடைய ஸர்வேஸ்வர விபூதியில்
பரதந்த்ரராய் இருப்பாரைச் சேர விடலாகாது என்கிற இது ஸ்வ பாவமாய் இருக்கிறதோ –
இவர்கள் ஆபி ஜாத் யத்தால் வந்த சீர்மையும் கண்டிலோம்

(நீலம் உண்ட மின்னன்ன மேனி
உபாஸ்யத்வம்
போக்யத்வம்
ப்ரகாஸகத்வம்
மூன்றுமே உண்டே )

ஸ்வ பாவ ஸுத்தியும்
ஸ்ரைஷ்ட்யமும்
அகிஞ்சித் கரமாய் இருந்ததீ என்று சடக்கென பிரவர்த்தியாமையாலே
அதி சங்கை பண்ணி வெறுத்து அருளினார் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
அருளாய் என்ற அநந்தரம்
அருளக் கண்டது இல்லை
அருளாய் என்று வடிம்பு இட வேண்டாத படி எல்லாருக்கும் ஓக்க
ஓலக்கம் கொடுத்து இருக்கிற இடத்திலே

(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )

வியாக்யானம்
பெறாமையாலே பரவஸையாய் இருந்த அளவானாள் என்று

அன்னன்ன சொல்லாப்
அந்த அன்னமானது சொல்லுமது அல்ல

பெடையொடும் போய் வரும்
தங்கள் பிரிவால் வரும் வியஸனம் இல்லாமையாலும்
போய்வருமது யுண்டாயும்
என் தசையை இவை சொல்லா
என்று அந்வயம்

சொல்லாது என்பதில் ஹேதுவை உத் ப்ரேஷிக்கிறாள்
நீலம் –இத்யாதியாலே

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான்
நீல மேகம் உள் கொண்ட மின்னல் போன்றவளாய்
குளிர்ந்த திரு மேனி யுள்ள பெருமை யுடையவரில்

உலகில் பெண் தூது செல்லா
பெண் பிரிவால் வியஸனம் உள்ளவரில் பெண் தூது
அது இல்லாதவரில் லோகத்தில் பெண் தூது கார்யகரம் அல்ல

அன்னன்ன நீர்மை கொலோ?
என்பதான பரமம் உள்ளவையே ஸ்வ பாவத்தால் இவை

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிச் சீர்மையாவது
அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை
அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ
அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு
என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே
என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

————–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பண்ணினவர்களுடைய கார்ய அபி முக்யத்தைத் கண்டு
சொல்லி விடுகிற வார்த்தையை -அன்னம் தொடக்கமான வற்றை
நாயகன் பின் சென்று தன்னை அகன்ற நெஞ்சை நோக்கித் தூது விடுகிற நாயகி
வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய மட நாராய் -1-4-

பதவுரை

அன்னம் செல்வீரும்–(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப் பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்–(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்–யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்
(என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ–உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு–கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்–(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி–(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ–அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ–இது தகுதியோ?
என்று இசைமின்கள்–என்று சொல்லுங்கள்-

வியாக்யானம் –

அன்னம் செல்வீரும்
பிரதானமாய்ப் போகிற அன்னங்களும்

வண்டானம் செல்வீரும்
அவை போன வழியிலே கூடப் போகிற வண்டான குருகுகளும்

அன்னம்
வண்டானம்
என்கிற ஒருமை
சொல்லீர் என்கிற பன்மையாலே
ஜாதி பரம் –

தொழுது இரந்தேன்
பத்தாஞ்சலி புடம் -யுத்த -18-27-என்கிறபடி
ஷிப்ர ப்ரஸாதமான அஞ்சலி பந்தத்தையும் பண்ண
யாசந்தம் -யுத்த -18-27- என்கிறபடியே
வாசகமான பிரார்த்தனையும் பண்ணினேன்

யத்தி மனஸா த்யாய -என்கிற நியாயத்தாலே
வாசிக காயிகங்களுக்கு மானஸம் அர்த்தாத் ஸித்தமாய்க் கொண்டு
பூர்வ பாவியாம் இறே

ஆக
கரண த்ரய யுக்தமான பூர்ண பிரபதனத்தைப் பண்ணினேன் என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
உங்களில் குண பிரதான பாவம் இல்லை
முற்பட்டாரில் கார்யம் மறவாது ஒழிவதே வேண்டுவது

ஏது என்ன
கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் நீர்மையைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்த
சேணுயர் வானத்து இருக்கிற -திருவாய் -5-3-9-
ஸ்ரீ வைகுண்ட நாதனோடே எனக்குக் கரணமாகையாலே பரதந்த்ரமாய்ப் போன நெஞ்சைக் கண்டால்

நெஞ்சினாரை
அத் தலையில் ஆஸக்தியால் யுண்டான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்கிறாள்

ஸதா தர்சன விஷயமானவரைக் காணலாம்
ஆஸ்ரித பலத்தால் யுண்டான செருக்காலே அந்தரங்க பரிகாரமாக நெஞ்சைக் காண்கையும்
அரிது என்றபடி

என்னைச் சொல்லி
என்னோடு யுண்டான
சம்பந்தத்தையும்
பூர்த்தியையும்
தனிமையும் தோன்றச் சொல்லி

அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
நீர் போருகிற போதை யாபத்திலே விஞ்சி இருக்கிறவர் பக்கலிலே
அவருக்குக் கரண பூதரான எங்களையும் அகப்பட வரவிடும்படி
இன்னமும் போகாது ஒழிவதே

அவர் என்று
உத்க்ருஷ்ட நாயக சம்பந்தம் அடியாக கடகர் தங்கள் சொல்லும் பாசுரத்தாலே சொல்லுகிறாள்
தன்னோபாதி நெஞ்சை உபசரிக்கும்படி சொல்லுகிறாள்

இதுவோ தகவு
ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஸ்வ பாவம்
இருக்கும்படி இதுவோ

என்று இசைமின்களே –
இப்படிப் பலருமாகச் சொல்லுங்கோள்
சிஷ்டர் பலரும் கர்ஹித்துச் சொல்லுகை மீளுகைக்கு உறுப்பாம் இறே –

இத்தால்
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும்
கடகத்வத்தில் உன்முகராய்த் தோன்றினவர்களைக் குறித்து
நடையாலும்
பேச்சாலும்
புத்தி யோகத்தால்
ஸ்ரேஷ்டராய்க் கொண்டு ப்ராப்ய தேச அபி முகரான நீரும்
பிரதான
புருஷ
அநு ஸாதகராய் தத் ஸமான தேச உன்முகரானவருமான
உங்களைக் குறித்து என்றபடி –

தொழுது இரந்தேன்-என்கையாலே
த்வர அதிசயத்தாலே கடக விஷயத்தில் அநு விருத்தியும்
ஓர் அளவில் நில்லாது என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,–என்று
ஆர்த்தியினுடைய அதிசயத்தாலே
முற்பட அறிவிக்கையை வேண்டுவது
பிரதான நியமமும் இல்லை -என்றபடி

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
சீலத்தாலே அபஹ்ருதமாய்
திவ்ய போகத்திலே மூண்ட நெஞ்சைக் கண்டால்
என் அவஸ்தையை அறிவித்து

இதுவோ தகவு என்று இசைமின்களே –
இப்படி அசஹாயாரானவர் பக்கல் இன்னம் போகாது ஒழிவதே
இதுவோ ஸ்வாமி கார்யம் செய்து தலைக் கட்டின படி என்று சொல்லுங்கோள் என்கையாலே
நெஞ்சை மீட்டு வரக் காட்ட வேணும் என்கையில் தாத்பர்யம்

அதாவது
அநு ஸ்மரணம் நடக்கச் செய்தே
அனுபவம் பெறாமையால் யுண்டான ஆர்த்தியைக் காட்டில்
விஸ்மரணமே அமையும் என்கிற வெறுப்பு இருந்தபடி

கடகரானவர்கள் நெஞ்சை மீட்க்குமோ பாதி
மீண்டும் வரக் காட்டவும் வல்லவர்கள் என்று இருக்கிறார் –

(சாம்சாரிக விஷயத்தில் இருந்து மீளச் செல்ல வல்ல ஆச்சார்யர்களால்
ஏது செய்ய முடியாது என்றவாறு )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சிலரைப் போக விட்டோமாகில் அவர்கள் க்ரமத்தாலே கார்யம் தலைக் கட்டிக் கொண்டு
வருகிறார்கள் என்று க்ரம பிராப்தி பார்த்து
அவ்வளவும் சூது சதுரங்களாலே போது போக்கி ஆறி இருக்கலாம் விஷயம் அன்று ஆகையாலே
யாம் கபீ நாம் ஸஹஸ்ராணி ஸூப ஹுந்ய யுதாநி ச
திஷு ஸர்வாஸூ மார்க்கந்தே –

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
ஷணமும் அவன் பிரிவைப் பொறாதவள் ஆகையாலே கண்ணால் கண்டாரை எல்லாம்
தூது விடவும்
இரக்கவும் செய்து
தம் தூதாக முன்பு போன நெஞ்சுக்கு என் தசையை ஸ்மரிப்பித்து
இவனோடு அவன் ஸ்தானத்தில் நின்ற உமக்கு இன்னம் அத்ருப்தியோ என்று
அப்பெருமையுள்ள என் நெஞ்சுக்கு அவர் முன்னே சொல்லி
உம்முடைய அருளும் இத்தோடு ரமிப்பதாயிற்றோ என்று அவர் இசையும் படி
விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

வியாக்யானம்
அன்னம் செல்வீரும்
அன்னமாய்ப் போமவர்களும்

வண்டானம் செல்வீரும்
குருகாய் போமவர்களும்

தொழுது இரந்தேன்
கேளுங்கோள் என் யாசனத்தை
காணுங்கோள் நான் உங்களைத் தொழுது இரந்தத்தை என்று

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
முன்னாகச் சென்றவர்கள் என்னை மறவாதே கொள்ளுங்கோள்
முன்னாகத் தூது விட்ட என் நெஞ்சு என்னை மறந்ததே
நீங்களும் அப்படி செய்யாதே கொள்ளுங்கோள்

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் ஸுலப்யத்தால் என் நெஞ்சை அபஹரித்து
சேணுயர் வானத்து இருந்த ஸ்ரீ வைகுண்ட நாதனோடு
ரமண சீலமானவராய்
எனக்கும் காரண பூதரானவராய்
அவருக்குப் பூசும் சாந்தானவரைக் கண்டால்

அவரை நீங்கள் வேறுபாட்டுக் காண்பதே துர்லபம்
காணப்பெற்றால்

என்னை சொல்லி
எனது இவ்வாற்றாமையை
அவருக்கு அறிவித்து

அவர் இடை
என்னோடு கலந்து என்னைப் பிரிந்த
என் நாதரான என் நெஞ்சினாரோடே ரமிக்கும்
புருஷ ரிஷபரிடை

நீர் இன்னும் செல்லீரோ
இன்னம் அவகாஹியா நின்றீரோ

இதுவோ தகவு என்று
அவனுடைய அருளும் இவ்வளவேயோ
என் நெஞ்சினாருக்கு உள்ள தாகவும் இவ்வளவேயோ
என்னா நின்றாள்

என்று இசைமின்களே –
என்றுமாகச் சொல்லி
என் நெஞ்சுக்கும்
அவருக்கும்
நாம் அயுக்தம் செய்தோம் என்று இசையப் பண்ணுங்கோள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading