ஸ்ரீ நவதிருப்பதி / ஸ்ரீ திவ்ய தேசங்களில் ஊர் வகைகள் —

ஸ்ரீ ஆழ்வார் திருநகரி

உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே
எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-சூரணை -161-

அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று
திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,
திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்-

(உயர் திண் அணை ஓன்று -நான்குமே பரத்வத்பரம் –
பரத்வே பரம் -விபவாயாம் பரம் -மோக்ஷ ப்ரத பரம்–அர்ச்சாயாம் பரத்வம் -)

——-

ஸ்ரீ திரு தொலை வில்லி மங்கலம் -இரட்டை திருப்பதி

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னால் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

———

திருக்கோளூர்

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை

————

திரு தென் திருப்பேரை

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-

மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

———–

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-

நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

—————————–

திருக்குளந்தை மாயக்கூத்தன்

சாதரரை பரிசு அழிக்கும் சேஷ்ட்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் –சூரணை -172-
அதாவது-
பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி
ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்
மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –
மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று
கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

————

திருப் புளிங்குடி திரு வரகுண மங்கை ஸ்ரீ வைகுண்டம் பாக த்வரை

போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் — சூரணை -177-
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன
புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று-9-2-4–என்று
கிடப்பது இருப்பது நிற்பதான –
திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை –

——————–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-சூரணை -165-
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-
மகா நகரான தென் திரு பேரையில் –

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-
நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்-சூரணை -176-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை

தென்னகரிலே–திரு வல்ல வாழ்
நன்னகரிலே–திரு விண்ணகரம்
அவ்வூர் -தொலைவில்லி மங்கலம் -இரட்டைத் திருப்பதி
புகுமூரிலே–திருக்கோளூர்
மகா நகர் – தென் திரு பேரையில் –
நீண் நகரிலே-திரு வாறன் விளை –
புகழுமூர் -குட்ட நாட்டுத் திருப்புலியூர்

————————————

புண்டரீகம் -செந்தாமரையா வெண் தாமரையா சங்கை வருமே
புண்டரீக மலர் அதன் மேல் புவனா எல்லாம் படைத்தவனே -பெருமாள் -8-2-

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் -திருவாய் -5-10-8-
செந்தாமரையே என்பது தெளிவு

தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ்
புண்டரீகம் சிதாம் போஜம் இறே –
ஸம் ரக்த நயநா கோரா போல் எரி விழியாய் இருக்கை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன தவளமான கண்கள் இருந்தபடி என் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்பதால்
வெண் தாமரை திருக் கண்களில் செவ்வரி இருப்பதை அறியலாம்

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷீணீ
புண்டரீக தளம் அமலாய தேஷண

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading