மனத்து உள்ளானை பற்றிய சில அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகள் —

மனத்து உள்ளானை பற்றிய சில அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகள்

மன (12)
மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ – நாலாயி:471/2
தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி – நாலாயி:655/1
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/2
மன சுடரை தூண்டும் மலை – நாலாயி:2107/4
மன மாசு தீரும் அருவினையும் சாரா – நாலாயி:2124/1
மன போர் முடிக்கும் வகை – நாலாயி:2405/4
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை – நாலாயி:2442/1
மன துயரை மாய்க்கும் வகை – நாலாயி:2627/4
மன கவலை தீர்ப்பார் வரவு – நாலாயி:2639/4
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/2
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து – நாலாயி:3490/1

மனக்கருத்தே (1)
கள்ள மாய மனக்கருத்தே – நாலாயி:3026/4

மனக்கு (2)
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – நாலாயி:3995/2

மனக்கே (1)
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/2

மனக்கொள் (2)
வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் – நாலாயி:1464/1
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் – நாலாயி:3709/3

மனங்கள் (1)
தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு – நாலாயி:1889/1

மனங்களே (1)
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4

மனத்தகத்தே (1)
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/1,2

மனத்ததுவாய் (1)
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய்
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/3,4

மனத்தர் (1)
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம் – நாலாயி:911/2

மனத்தராய் (4)
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய்
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் – நாலாயி:829/1,2
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன் – நாலாயி:2187/2
ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து – நாலாயி:2360/1
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4

மனத்தலை (1)
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் – நாலாயி:2609/3

மனத்தவர்-தம் (1)
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3

மனத்தவரை (1)
தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1105/4

மனத்தனர் (1)
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4

மனத்தனளாய் (1)
கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட – நாலாயி:320/1

மனத்தனன் (1)
தீர்த்த மனத்தனன் ஆகி செழும் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3670/2

மனத்தனனாய் (2)
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய – நாலாயி:320/2
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை – நாலாயி:3082/3

மனத்தனாம் (1)
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி_கோன் குலசேகரன் – நாலாயி:667/2,3

மனத்தாயோ (1)
தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே – நாலாயி:1634/4

மனத்தார் (2)
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4

மனத்தால் (9)
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு – நாலாயி:1244/3
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/1,2
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து – நாலாயி:2672/26
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே – நாலாயி:2870/4
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே – நாலாயி:3555/3

மனத்தான் (1)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான் – நாலாயி:1244/1

மனத்தானை (1)
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/2,3

மனத்தில் (3)
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை – நாலாயி:901/1
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி – நாலாயி:1883/2
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ – நாலாயி:2856/2,3

மனத்தின் (1)
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2

மனத்தினளாய் (1)
மல்கு நீர் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/1,2

மனத்தினால் (3)
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – நாலாயி:478/6
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4
வாக்கினால் கருமம்-தன்னால் மனத்தினால் சிரத்தை-தன்னால் – நாலாயி:2035/3

மனத்தினில் (1)
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் – நாலாயி:1977/1

மனத்தினுள் (2)
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/2
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி – நாலாயி:3174/3

மனத்தினை (1)
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ – நாலாயி:3136/1

மனத்தினொடு (1)
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/2

மனத்து (45)
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி – நாலாயி:541/1
காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் – நாலாயி:950/3
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் – நாலாயி:1189/2
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/2
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் – நாலாயி:1400/2
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து – நாலாயி:1406/1
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி – நாலாயி:1458/3
வானே மாநிலமே வந்துவந்து என் மனத்து இருந்த – நாலாயி:1460/3
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த – நாலாயி:1466/3
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே – நாலாயி:1469/3
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து – நாலாயி:1472/1
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் – நாலாயி:1573/1
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/3
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் – நாலாயி:1838/2
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/4
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும் – நாலாயி:1965/2
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – நாலாயி:1976/4
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த – நாலாயி:2032/3
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3
மாயவனையே மனத்து வை – நாலாயி:2181/4
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/2
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் – நாலாயி:2209/1
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் – நாலாயி:2284/1
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் – நாலாயி:2460/2
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ – நாலாயி:2627/3
கொன்றானையே மனத்து கொண்டு – நாலாயி:2632/4
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை – நாலாயி:2774/3
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/3
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
மறவியை இன்றி மனத்து வைப்பாரே – நாலாயி:2965/4
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை – நாலாயி:3036/2
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – நாலாயி:3179/1
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற – நாலாயி:3663/1
தெளி விசும்பு திருநாடா தீவினையேன் மனத்து உறையும் – நாலாயி:3851/3
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு – நாலாயி:3858/2
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4

மனத்துக்கு (2)
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் – நாலாயி:249/4
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய் – நாலாயி:485/6

மனத்தும் (1)
கற்றவன் காமரு சீர் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலா – நாலாயி:1797/3

மனத்துள் (2)
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே – நாலாயி:1728/3,4
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/3

மனத்துள்ளும் (1)
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே – நாலாயி:3151/4

மனத்துள்ளே (3)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மாணி குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே
பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி – நாலாயி:447/1,2
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் – நாலாயி:1978/1

மனத்துளானை (1)
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் – நாலாயி:893/3

மனத்தே (17)
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில்_வண்ணனை – நாலாயி:473/1,2
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே – நாலாயி:593/4
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள் – நாலாயி:646/3
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1193/2
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை – நாலாயி:1732/1
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/4
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் – நாலாயி:2606/2
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை – நாலாயி:2968/1
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் – நாலாயி:3348/2
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே – நாலாயி:3478/4
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ – நாலாயி:3872/1

மனத்தை (3)
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் – நாலாயி:955/1,2
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/1,2
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து – நாலாயி:3344/2

மனத்தொடு (1)
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4

மனத்தோடு (1)
இரக்க மனத்தோடு எரி அணை – நாலாயி:3044/1

மனத்தோர் (1)
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4

மனப்பட்டது (1)
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சு-மின் மனப்பட்டது ஒன்றே – நாலாயி:2926/4

மனம் (86)
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/4
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/4
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும் – நாலாயி:623/1
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/2
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:720/3
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று – நாலாயி:733/3
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே – நாலாயி:1044/4
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் – நாலாயி:1046/1
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா – நாலாயி:1192/1,2
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ – நாலாயி:1194/1
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா – நாலாயி:1217/1
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு – நாலாயி:1242/1
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை – நாலாயி:1444/1
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா – நாலாயி:1559/2
யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த – நாலாயி:1566/2
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/4
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1591/1
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர் – நாலாயி:1628/1
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு – நாலாயி:1635/1
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/4
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் – நாலாயி:1821/2
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப – நாலாயி:1865/1
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து – நாலாயி:1974/3
காற்றத்து இடைப்பட்ட கலவர் மனம் போல் – நாலாயி:2023/3
மால் ஓத_வண்ணர் மனம் – நாலாயி:2123/4
மால் தேடி ஓடும் மனம் – நாலாயி:2208/4
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மருக்கண்டுகொண்டு என் மனம் – நாலாயி:2283/4
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – நாலாயி:2295/1
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2
மனம் தன் அணை கிடக்கும் வந்து – நாலாயி:2296/4
மனம் துழாய் மாலாய் வரும் – நாலாயி:2304/4
விரும்புவதே விள்ளேன் மனம் – நாலாயி:2441/4
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் – நாலாயி:2458/3
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் – நாலாயி:2462/1
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு – நாலாயி:2465/1
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் – நாலாயி:2512/3
மா வாய் பிளந்தார் மனம் – நாலாயி:2634/4
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர்-தம்மை – நாலாயி:2635/1
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/4
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி – நாலாயி:2769/2
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர்-தம் – நாலாயி:2780/3
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும் – நாலாயி:2807/2
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் – நாலாயி:2817/2
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும் – நாலாயி:2836/3
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி – நாலாயி:2879/3
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம் – நாலாயி:2892/1
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே – நாலாயி:2944/4
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/2
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/2
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே – நாலாயி:3124/4
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
கள்ள மனம் தவிர்ந்தே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3343/3
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:3358/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/3
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் – நாலாயி:3577/1
ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/4
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே – நாலாயி:3808/3,4
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே – நாலாயி:3809/3,4
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் – நாலாயி:3860/2
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ – நாலாயி:3873/2
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1
நண்ணும் மனம் உடையீர் – நாலாயி:3935/2
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க – நாலாயி:3967/1

மனம்-தன் (1)
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான் – நாலாயி:470/2

மனம்-தனை (2)
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/3,4
காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/1,2

மனம்-அது (1)
பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு – நாலாயி:892/1

மனமாய் (1)
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/3,4

மனமுடையீர்கள் (1)
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ – நாலாயி:4/2

மனமும் (6)
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் – நாலாயி:2313/3
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே – நாலாயி:3828/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3

மனமுருகி (1)
வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப – நாலாயி:277/3

மனமுள் (1)
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2

மனமே (19)
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1438/4
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1439/4
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1440/4
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1441/4
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1442/4
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1443/4
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1444/4
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1445/4
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1446/4
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு – நாலாயி:1770/1
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/1,2
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே – நாலாயி:2888/4
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
தரும் தேவனை சோரேல் கண்டாய் மனமே – நாலாயி:3806/4
மனமே உன்னை வல்வினையேன் இரந்து – நாலாயி:3807/1
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே – நாலாயி:3964/3
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே – நாலாயி:3965/4

மனமோ (1)
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/2

மனன் (3)
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் – நாலாயி:2900/1
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் – நாலாயி:2900/2
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி – நாலாயி:2928/2

மனனே (13)
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை வாழ தலைப்பெய்திட்டேன் – நாலாயி:457/3
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
மாடு விடாது என் மனனே பாடும் என் நா அவன் பாடல் – நாலாயி:2956/2,3

————–

உள் (59)
சீத கடல் உள் அமுது அன்ன தேவகி – நாலாயி:23/1
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் – நாலாயி:275/3
மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி – நாலாயி:374/1
மூலம் ஆகிய ஒற்றை_எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி – நாலாயி:374/3
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை – நாலாயி:582/3
மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற – நாலாயி:604/2
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத_நீர்_வண்ணன் என்பான் ஒருவன் – நாலாயி:623/2
தருதலும் உன்தன் தாதையை போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர – நாலாயி:712/2
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று – நாலாயி:756/2
உலகு-தன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு – நாலாயி:763/1
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர் – நாலாயி:800/2
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர் – நாலாயி:827/3
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் – நாலாயி:931/2
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர – நாலாயி:952/3
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு – நாலாயி:1085/3
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/2,3
செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து – நாலாயி:1610/2
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
கவள மா கதத்த கரி உய்ய பொய்கை கராம் கொள கலங்கி உள் நினைந்து – நாலாயி:1749/1
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக – நாலாயி:1959/2
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே – நாலாயி:2074/1
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி – நாலாயி:2166/3
கடை கழியா உள் புகா காமர் பூம் கோவல் – நாலாயி:2167/3
ஊன குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி – நாலாயி:2172/1
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2187/1
தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின் – நாலாயி:2202/1
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு – நாலாயி:2279/2
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே – நாலாயி:2303/3
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு – நாலாயி:2374/2
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே – நாலாயி:2598/1
சீர் கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-தன்னை – நாலாயி:2653/3
உள் நாட்டு தேசு அன்றே ஊழ்வினையை அஞ்சுமே – நாலாயி:2663/1
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி – நாலாயி:2685/11
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே – நாலாயி:2884/4
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே – நாலாயி:2885/1
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – நாலாயி:2934/4
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் – நாலாயி:2944/1
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே – நாலாயி:2958/4
நொந்து ஆரா காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – நாலாயி:3017/1
வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த – நாலாயி:3018/1
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் – நாலாயி:3026/3
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் – நாலாயி:3026/3
உக உருகி நின்று உள் உளே – நாலாயி:3047/4
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே – நாலாயி:3195/3,4
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த – நாலாயி:3206/3
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/3
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே – நாலாயி:3443/4
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின் – நாலாயி:3470/1
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே – நாலாயி:3498/4
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்-கொல் இன்றே – நாலாயி:3521/4
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் – நாலாயி:3561/1
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் – நாலாயி:3574/2
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள்
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் – நாலாயி:3739/1,2
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான் – நாலாயி:3740/3
புகழும் புகழ் தான் அது காட்டி தந்து என் உள்
திகழும் மணி குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் – நாலாயி:3741/2,3
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ – நாலாயி:3914/3
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3

உள்கலந்து (1)
கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கைகழியேல் – நாலாயி:3920/2

உள்கொண்ட (1)
உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல் – நாலாயி:3635/2

உள்புக்கு (2)
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த – நாலாயி:1160/1
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/3,4

உள்புகுந்து (2)
காம_தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடை கங்குல் – நாலாயி:578/3
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் – நாலாயி:2652/3

உள்மடுத்தலும் (1)
வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை – நாலாயி:3984/1

உள்மடுத்தே (1)
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே – நாலாயி:3983/4

உள்மெலிந்தாள் (1)
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்-கொலோ – நாலாயி:1660/4

உள்வாங்கி (1)
ஒரு நான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே – நாலாயி:2386/3

உள்ள (20)
கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை – நாலாயி:294/1
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் – நாலாயி:465/3
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் – நாலாயி:481/2
இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் – நாலாயி:553/4
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/4
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/4
நல் தவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர் – நாலாயி:838/2
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் – நாலாயி:839/3
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் – நாலாயி:1250/1
நா-தன்னால் உள்ள நலம் – நாலாயி:2354/4
கதை பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதை பொருள் தான் – நாலாயி:2413/1,2
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்-கொல் – நாலாயி:2660/2,3
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் – நாலாயி:2793/2
உள்ள இ மூன்றையும் – நாலாயி:2917/2
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே – நாலாயி:3067/4
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து – நாலாயி:3304/2
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/4

உள்ளகிற்கும் (1)
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு – நாலாயி:3788/2

உள்ளடி (1)
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த – நாலாயி:91/1

உள்ளத்தர் (1)
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/4

உள்ளத்தவர் (1)
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் – நாலாயி:1167/2

உள்ளத்தனாய் (1)
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற – நாலாயி:928/1

உள்ளத்தாய் (1)
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் – நாலாயி:2059/2

உள்ளத்தின் (7)
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி – நாலாயி:218/2
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே – நாலாயி:2001/4
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் – நாலாயி:2180/4
உள்ளத்தின் உள்ளே உளன் – நாலாயி:2320/4
உள்ளத்தின் உள்ளே உளன் – நாலாயி:2364/4
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே – நாலாயி:3667/4
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால் – நாலாயி:3668/1

உள்ளத்து (27)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும் – நாலாயி:479/6
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே – நாலாயி:929/4
உள்ளத்து உள்ளும் கண் உள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1591/2
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் – நாலாயி:1742/3
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் – நாலாயி:1973/1
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல் உலகு அளந்த உம்பர் கோமான் – நாலாயி:2006/2,3
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/3,4
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/1,2
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2180/2
அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் பணிந்ததுவும் – நாலாயி:2214/2
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2321/2
உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாக தேர்ந்து உணர்வரேலும் உளனாய – நாலாயி:2365/1,2
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே – நாலாயி:2411/3
உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு – நாலாயி:2431/4
கலந்தான் என் உள்ளத்து காமவேள் தாதை – நாலாயி:2463/1
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2467/2
அடியேனது உள்ளத்து அகம் – நாலாயி:2652/4
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் – நாலாயி:2805/3
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் – நாலாயி:3192/3
நிறுத்தி நும் உள்ளத்து கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள் – நாலாயி:3358/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் – நாலாயி:3732/1
செ வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த – நாலாயி:3743/3
வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே – நாலாயி:3746/1
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே – நாலாயி:3802/4
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்-பால் – நாலாயி:3820/1

உள்ளத்துள் (2)
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே – நாலாயி:930/4
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை – நாலாயி:1276/2

உள்ளத்துள்ளும் (1)
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று – நாலாயி:3668/2

உள்ளத்துள்ளே (1)
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/2

உள்ளத்துளும் (1)
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே – நாலாயி:1628/4

உள்ளத்தே (4)
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா – நாலாயி:905/1
ஊண் ஆக பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை – நாலாயி:1094/3
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து – நாலாயி:2374/4

உள்ளத்தை (4)
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே – நாலாயி:2017/4
தெளிது ஆக உள்ளத்தை செந்நிறீஇ ஞானத்து – நாலாயி:2111/1
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் – நாலாயி:2462/3
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4

உள்ளது (3)
ஓர் அகலத்து உள்ளது உலகு – நாலாயி:2324/4
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே – நாலாயி:3786/1
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே – நாலாயி:3810/3,4

உள்ளதும் (2)
இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு – நாலாயி:2913/1,2
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3641/2

உள்ளதோ (1)
வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ – நாலாயி:2150/3

உள்ளப்பெற்றேற்கு (1)
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/3,4

உள்ளப்பெற்றேன் (1)
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே – நாலாயி:3276/3,4

உள்ளம் (60)
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4
சங்கை ஆகி என் உள்ளம் நாள்-தொறும் தட்டுளுப்பாகின்றதே – நாலாயி:288/4
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் – நாலாயி:439/3
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:479/8
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் – நாலாயி:518/3
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டு காணும் – நாலாயி:546/2
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
தருதலும் உன்தன் தாதையை போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர – நாலாயி:712/2
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3
நின்றுநின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய் – நாலாயி:826/2
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே – நாலாயி:869/4
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை – நாலாயி:936/2
உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி – நாலாயி:970/1
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் – நாலாயி:975/1,2
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி – நாலாயி:976/1
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள் – நாலாயி:1324/1
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர் போல் – நாலாயி:1360/2
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருக புகுந்த ஒருவர் ஊர் போல் – நாலாயி:1366/1,2
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா – நாலாயி:1551/2
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட – நாலாயி:1558/1
கனியை காதல்செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே – நாலாயி:1575/4
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே – நாலாயி:1582/4
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் – நாலாயி:1769/3
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு – நாலாயி:1772/1
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன் – நாலாயி:1791/2
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண் – நாலாயி:1852/3
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற – நாலாயி:1883/3
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரை_கண்ணா – நாலாயி:2024/4
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா – நாலாயி:2025/4
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா – நாலாயி:2026/4
கூற்றினை குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே – நாலாயி:2033/4
கொள்ளி மேல் எறும்பு போல குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட – நாலாயி:2040/2,3
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் – நாலாயி:2106/1
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
தெளிய தெளிந்து ஒழியும் செவ்வே களியில் – நாலாயி:2132/1,2
தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின் – நாலாயி:2202/1
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து – நாலாயி:2235/3
தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால் – நாலாயி:2251/1
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும் – நாலாயி:2253/2
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து – நாலாயி:2363/1
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய் – நாலாயி:2422/3
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே – நாலாயி:2614/2
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினை படலம் – நாலாயி:2660/1
கடி கொண்ட மா மலர் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் – நாலாயி:2827/3
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே – நாலாயி:2862/2,3
கற்றார் பரவும் இராமாநுசனை கருதும் உள்ளம்
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/3,4
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால் – நாலாயி:2878/2
உள்ளம் உரை செயல் – நாலாயி:2917/1
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிக – நாலாயி:3045/2,3
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகி நின்று உள் உளே – நாலாயி:3047/3,4
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி – நாலாயி:3071/1
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி – நாலாயி:3174/3
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும் – நாலாயி:3443/2
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே – நாலாயி:3443/4
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே – நாலாயி:3636/4
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள்நாளும் – நாலாயி:3722/1
ஒத்தே சென்று அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் நல் உறைப்பே – நாலாயி:3755/4
குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும் – நாலாயி:3816/2
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே – நாலாயி:3819/4

உள்ளம்-தன்னை (1)
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/4

உள்ளமா (1)
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே – நாலாயி:2017/4

உள்ளமும் (1)
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே – நாலாயி:1690/4

உள்ளமே (1)
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய் – நாலாயி:895/3

உள்ளமோ (1)
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் – நாலாயி:2040/1

உள்ளவர்-தம் (1)
பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு – நாலாயி:3191/1

உள்ளவா (2)
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – நாலாயி:328/4
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் – நாலாயி:3719/2,3

———–

ஸ்வாமி நம்மாழ்வார் – திருவாய்மொழி
(10.8.2) பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து, பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் ,
(10.8.6) திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
(10-8-9) “இன்று என்னை பொருளாக்கி, தன்னை என்னுள் வைத்தான் ”
(1.7.6) “என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ ”
(1.8.5) “வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான், பொய் கலவாது, என் – மெய்கலந்தானே”
(1.9.5) “ஈசன் மாயன் என் நெஞ்சில் உளானே”
(2.6.7) “உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி”
(2.9.4) என் மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி“
(2.9.8) “எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில்”
(5.5.9) “கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே”
(8.4.7) திருச்செங்குன்றூர் எம்பெருமான் “என்றும் என் சிந்தை உளான்”
(8.6.2) “திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான் கண்டீர்”
(8.6.4) “நேயத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்“
(8.6.8) “என் நெஞ்சும் திருக்கடித்தான நகரும், தனதாயப் பதியே”
(10.4.4) “என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே”

8.7 (எல்லா பாடல்களிலும் வருவது ஒரு சிறப்பு)
‘இருந்தும் வியந்து” என்ற பதிகத்தில், (8.7) – (எல்லா பாசுரங்களிலும் இது பற்றி வருவது ஒரு சிறப்பு)
முதல் பாடலில், “பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து” என்றும்,
இரண்டாம் பாடலில், ‘எனது ஏழை நெஞ்சு ஆளும்: என்றும்,
மூன்றாம் பாடலில் ‘அவன் என் உள் இருள் தான் அற வீற்று இருந்தான்‘ என்றும்,
நான்காம் பாடலில் “எனது அம்மான், தூய சுடர்ச்சோதி தனது என்னுள் வைத்தான்,’ என்றும்
ஐந்தாம் பாடலில் “என்னுள் திகழும் மணி குன்றம்” என்றும்,
ஏழாம் பாடலில் ‘செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்திருந்த‘,
எட்டாம் பாடலில் ” சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும்,தம் நெறியா வயிற்றிற் கொண்டு நின்று ஒழிந்தாரே‘ என்றும்
ஒன்பதாம் பாடலில் “வயிற்றிற்கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே” என்றும்
பத்தாம் பாடலில் “வைத்தேன் மதியால் என் உள்ளத்து அகத்தே‘ என்றும் கூறுகிறார்.

மற்ற எல்லா பாசுரங்களில் நேரடியாக சொன்ன ஆழ்வார், ஆறாவது பாசுரத்தில்,
கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல், திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே (8.7.6) என்று சொல்வது,
எம்பெருமானுடைய இயற்கையான அழகை கூறுவன அல்ல, தம்மோடு சேர்ந்த பின்,
அதாவது, எம்பெருமான் நம்மாழ்வாருடன் கலந்த பின், அவனுடைய திவ்ய அவயங்களில் பிறந்த புது அழகாகும்.
ஆக ஆறாவது பாசுரத்தில் நெஞ்சுள் புகுந்த பெருமானின் பெருமையை ஆழ்வார் கூறுகிறார்

ஸ்வாமி நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி
22 “மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே“,
35 “நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றான் என் நெஞ்சு அகலான்,,
75 “நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்”

பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி
99 வெள்ளத்திலுள்ளானும் வேங்கடத்து மேயானும்உள்ளத்திலுள்ளான் என்றோர்’

பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி
54 வெற்பு என்று திருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும், நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல்,
நிற்பு என்று இளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன், வெள்ளத் திளங்கோயில் கைவிடேல் என்று.
95 என் நெஞ்சம் மேயான் என் சென்னியான், …….. உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்.

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
26 “சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும்”
81 நெஞ்சால் நினைப்பு அரியன் எலும் நிலைபெற்றேன், நெஞ்சமே பேசாய், நினைக்குங்கால்,
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, ஓராது நிற்பது உணர்வு.
82 உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பு அரியன் உண்மை,
83 விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தின் உள்ளே யுளன்
84 உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வர் ஏலும்,
உளனாய வண் தாமரை நெடுங்கண் மாயவனை யாவரே, கண்டார் உகப்பர் கவி.

திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம்
65 நிற்பதும் ஓர் வெற்பு அகத்து, இருப்பும் விண், கிடப்பதும் நற்பெருந்திரைக் கடலுள், நானிலாத முன்னெலாம்,
அற்புதன் அனந்த சயன ஆதி பூதன் மாதவன், நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
64 நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது
என் இலாத முன்னெலாம், அன்று நான் பிறந்திலேன், பிறந்த பின் மறந்திலேன், நின்றதும், இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
30 “அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் “
86 உளன் கண்டாய் நன் நெஞ்சே. உத்தமன் என்றும் உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து, உளன்கண்டாய்
தன் ஓப்பான் தானா உளன் காண் தமியேற்கும், என்னொப்பார்க்கு ஈசன் இமை”

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
2.3.2 நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா,
5.2.5 “மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே, பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண்டேன்பிறிதின்றி”
5.2.10 அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
5.4.8 “அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்‘
5.4.9 பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ
5.4.10 வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே
5.4.11 வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே, கோயில்கொண்ட கோவலனைக்

ஆண்டாள் – திருப்பாவை
5 வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் (5) –
மற்ற ஆழ்வார்கள் தங்கள் மனதில் உள்ள பரமாத்மாவை கூறினார்கள்.
ஆண்டாள், முனிவர்கள் யோகிகள் உள்ளத்தில் உள்ள பரமாத்மாவை குறிப்பிடும் சிறப்பினை இங்கு காணாலாம்.

திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான்
5 “என்னை தன் வாரமாக்கி வைத்தான், என்னுள் புகுந்தான்”
9 “முடிவு இல்லது ஓர் எழில் நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே”

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி
1.1.3 திருமங்கையாழ்வார் தன்னுடைய முதல் ப்ரபந்தத்தின் முதல் பத்தின் முதல் பதிகத்திலேயே மூன்றாவது பாசுரத்தில்,
எம்பெருமான் தன் பக்தர்களின் மனதினில் இருப்பார் என்பதை,
“தம் அடைந்தார் மனத்திருப்பார், நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்கிறார்
1.10.6 அதே முதல் பிரபந்தத்தில் முதல் பத்தின் இறுதியில் பத்தாவது பதிகத்தில் ஆறாவது பாசுரத்தில்,
“மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே!” என்று மீண்டும் உறுதிசெய்கிறார்.
1.10.7 திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே
11.5.10 வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை
16 “மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை, போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து”
34 உள்ளத்தே உறையும் மாலை

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading