ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–முதல் பத்து விவரணம்–

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை நூலை இயற்றியவர் ஒரு வைணவப் பெண்மணி.
இவரது பெயர் ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை. காலம் 13 ஆம் நூற்றாண்டு.
ஸ்ரீ திருவாய்மொழிப் பாடல்கள் சிலவற்றிற்கு எழுதப்பட்டுள்ள விவரண சதகம்.

பொதுவாகச் சைவ, வைணவ மரபுகளில் சமய ஆசாரியருடைய நூல்களே செல்வாக்குப் பெறுவது வழக்கம்.
அல்லாதார் நூல்கள் மக்களிடம் அவ்வளவாகப் பரவுவது இல்லை. அவ்வாறு பரவாமல் போன நூல்களில் இதுவும் ஒன்று.

நம்மாழ்வார் திருவாய்மொழி 1102 பாடல்களைக் கொண்டது. அதில் 164 பாடல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு
அவற்றிற்கான விரிவுரை கூறுவது இந்த நூல்.
திருவாய்மொழியில் 10 அல்லது 11 பாடல்களைக் கொண்ட பகுதி ஒரு பதிகம். 10 பதிகங்களைக் கொண்டது ஒரு பத்து.
இவ்வாறு 10 பத்துக்கள் சேர்ந்ததே திருவாய்மொழி.
இவ்வாறு அமைந்துள்ள திருவாய்மொழி நூலிலிருந்து ஒவ்வொரு பதிகத்திலிருந்தும் முதல்-பாடல் அல்லது முதல்-இரண்டு-பாடல்
விரிவுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்களே 146.
இந்தப் பாடல்களுக்கு விவரண சதகம் பாடும்போது அந்தந்த பதிகத்தில் அடங்கியுள்ள பாடல்கள்
அனைத்துக்குமான தொகுப்புப் பொருளையும் இந்த நூல் குறிப்பிட்டு மணிப்பிரவாள நடையில் கூறுகிறது.

———-

பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து -பாண்டிய நாட்டின் ஒரு பகுதி -வழுதி நாடு -தலைநகர் -திருக்குருகூர்
கோவிந்தன் தனக்கே குடி அடியாரான வேளாள குல மன்னர் -திருவழுதி வள நாடர்
இவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் -செந்நெறிச் செல்வர்
இவர் திருக்குமாரர் சக்ரபாணியார்
இவர் திருக்குமாரர் -அச்சுதர்
இவருக்கு செந்தாமரைக் கண்ணர் என்றும் பொற் காரியர்
இருவரும் திருக்குமாரர்கள்
பொற் காரியாரது திருக்குமாரர் காரியார்
இவரே நம்மாழ்வாரைத் தோற்றுவித்து உலகை உய்வித்த புண்ணிய புருஷர் –

திரு வண் பரிசாரம் திருப்பதியில் -திருவாழ் மார்பணிந் செல்வப்புதல்வியார் -உடைய நங்கையார் -ஆழ்வாரது திருத்தாயார்

திருக்குறுங்குடி நம்பி நாமே உங்களுக்கு புதல்வராவோம் என்று அருளிச் செய்து ஆழ்வார் திரு அவதாரம்

ஆதி சேஷன் முன்னமே திருப்புளிய மரமாக திரு அவதரித்தார்
கலியுகம் –43 நாள் -வைகாசி -விசாகம் -இவர் திரு அவதாரம் -சேனை முதலியார் அம்சம் –
உலகு இயல்புக்கு மாறாக இருக்க மாறன் என்று திரு நாமம் சாத்தினார்கள்

மதுரகவி ஆழ்வார் -செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் -கேள்வி
அத்தைத் தின்று அங்கே கிடைக்கும் -பதில்

அசேதனத்தில் ஆத்மா புகுந்து மாறி மாறி பிறவி சூழலில் உழன்று இருக்கும் என்றும்
அஞ்ஞானத்தில் உழன்று தேகம் போன்ற ஆத்மாவுக்கு கொஞ்சம் ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற
இதுக்கும் -அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்

திவ்ய தேச எம்பெருமான்கள் தங்கள் பரிவாரங்களுடன் திருப்புளிய மரத்தில் காட்சி கொடுத்து பாடல்கள் பெற்று மகிழ்ந்தனர் –

———

அர்த்தபஞ்சகம் -ஒவ்வொன்றுக்கும் இரண்டு பதிகங்கள் திருவாய் மொழி என்றும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -முதல் இரண்டு பத்துக்கள்
உணர் முழு நலம் -முழு உணர் முழு நலம் -ஞான ஆனந்த ஸ்வரூபம்
ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந -அடுத்த இரண்டு பத்தும் –
ப்ராப்த் யுபாயம் -அடுத்த இரண்டு பத்தும்
பிராப்தி விரோதி அடுத்த இரண்டு பத்தும்
பலம் ப்ராப்தோ -கடைசி இரண்டு பத்தும் –

த்வயார்த்தமே திருவாய் மொழி -தீர்க்க சரணாகதி -சார ஸங்க்ரஹம்

தோன்றா உபநிஷத் பொருள் தோன்றலுற்றார் தமக்கும் சான்றாம் இவை –

ஆயிர மா மறைக்கும் அலங்காரம் யாரும் தமிழுக்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்க்கு எல்லாம்
தாய் இரு நால் திசைக்கும் தனித்தீபம் தண்ணம் குருகூர்ச்
சேய் இரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே

ஆரா வமுதம் கவி யாயிரம்
என்று எல்லாம் கம்ப நாட்டாழ்வார் சடகோபர் அந்தாதி

—————

தேசிகரும் –
தமிழ் வாதம் அறிந்த பகவர்களே
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே
சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு
ஸூர்யனால் மலரப் பெற்ற தாமரைக்காடுகள் -அவன் திருக்கண்கள் -ரகுவீர கத்யத்தில் -ஆழ்வார் பாசுரங்கள் கொண்டே –
புண்டரீகத்து அங்கேழ் வனமோர் அனைய கண்ணான் -23–திரு விருத்தப் பாசுரம்

முதல் -23-பாசுரங்கள் கொண்டே ஸ்ரீ பாஷ்யார்த்தம் –

——-

வேதம் தமிழ் செய்த மாறன் –

ஸ்வரூப பரமான அருளிச் செயல்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -1-1-1–ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஆனந்தோ ப்ரஹ்ம -தைத்ரியம்
இனன் உணர் முழு நலம் -1-1-2-விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ப்ருஹதாரண்யம்
மிகுநர் இலனே -1-1-2- ந தத் ஸமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஸ்வேதா
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -3-7-1-நாராயண பரஞ்சோதி -தைத்ரியம்
பரஞ்சோதீ –3-1-2-பரம் ஜோதி ரூப ஸம்பத்ய –சாந்தோக்யம்

பங்கயக்கண்ணனை -3-7-1-யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம்
செம் பொன் திரு உடம்பே -2-5-1-ஆ ப்ராணதாத் ஸர்வ ஏவ ஸூ வர்ண -சாந்தோக்யம்
எண்ணின் மீதியன் எம்பெருமான் –2-2-1-அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம்
சொல் அளவன்று -8-2-6- யதோ வாஸோ நிவர்த்தந்தே
இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் -8-2-6-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத
ஸ அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாதம் அவிஜா நதாம் -கேனோ
என் வல் வினை மாய்ந்தறச் செய்குந்தன் –7-9-7-ஸர்வே பாப்மாந பர தூயந்தே -சாந்தோக்யம்
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1- யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ச பூமா -சாந்தோக்யம்

காரண பரமான அருளிச் செயல்கள்

முதல் தனி வித்தேயோ -10-10-8–ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -மஹா உபநிஷத்
தானோர் உருவே தனி வித்தாய் –1-5-4-ப்ரஹ்ம வா இதம் ஏக மேவ அக்ர ஆஸீத் -ப்ருஹதாரண்யம்
மூவாத் தனி முதலாய் –2-8-5—ஆத்மா வா இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -ப்ருஹதாரண்யம்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –1-5-2–ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -சாந்தோக்யம் –

ஸ்ருஷ்டி வாக்யங்கள்

பாமரு மூ வுலகும் படைத்த –7-6-1- தத் ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி –சாந்தோக்யம்
தானே உலகு எல்லாம் தானே படைத்து –10-5-3-இதம் ஸர்வம் ஸ்ருஜத -தைத்ரியம்
எல்லா உலகும் உயிரும் தானேயாய் –10-7-2-ஸத் ச த்யச்சா பவத் -தைத்ரியம்
யாவையும் எவையும் தானாய் –3-4-10-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் –

காரண கார்ய நிபந்தன சாமாநாதி கரண்யம்

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-நாராயணாத் பிரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே

ஆத்ம சரீரபாவ நிபந்த சாமா நாதி கரண்யம்

ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –8-1-5—அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் —1-1-10-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மிந்
த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ரியம் –
தானேயாகி நிறைந்து –10-7-2–தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -தைத்ரியம்
முதலில் சிதையாமே –1-5-2-பூர்ணம் ஏவா வஸிஷ்யதே –ஸ்வேதாஸ்வரம்
பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து –8-1-5–ஆபோ வா இதம் அக்ரே சலிலம் ஆஸீத் தஸ்மிந் ப்ரஜாபதிர் வாயுர் பூத்வா சரத் –தைத்ரியம்

ஏனமாய் நிலம் கீண்ட –5-7-6-தாம் வராஹோ பூத்வா ஹரத்
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3-3-2-விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் -புருஷ ஸூக்தம்
எல்லையில் சீர் -2-5-9-விபூதீ நாம் நாஸ்த்யந்தோ விஸ்தரஸ் யமே -கீதை
தானே யாள்வானே –10-5-3-அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம்
அயனாம் சிவநாம திருமாலால் -8-8-11
அரியை அயனை அரனை அலற்றி -10-10-11-

அவனே அவனும் அவனும் அவனும் -9-3-2—ச ப்ரம்மா ச சிவ சேந்த்ர -தைத்ரியம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –5-6-1—தத் ஹைதத் பஸ்யன் ருஷி வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்யச்ச
தன்மை பெறுத்தி -3-7-7–ஸ்வேந ரூபேணே அபி நிஷ்பத்யதே -சாந்தோக்யம் –
நல்ல வமுதம் –2-5-9-இதம் அம்ருதம் -ப்ருஹதாரண்யம்
இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து –8-8-8—ஞாதய பர்யுபாஸதே ஜாநா ஸிமாம் ஜாநாஸி மாமிதி –சாந்தோக்யம்

இனிப்பிறவி யான் வேண்டேன் –10-6-1—லிந்து மாபிகாம் –சாந்தோக்யம்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –5-10-11- தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-தைத்ரியம் –
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ –8-1-5–தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்
ஆர் உயிரேயோ –8-1-5–பிராணஸ்ய ப்ராணா –கேந உபநிஷத்
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் –9-1-1–ததேதத் ப்ரேயஸ் புத்ராத் பிரேயோ மித்ராத் ப்ரேயோ வித்தாத் –ப்ருஹதாரண்யம்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11-நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி -முண்டகம் –

சந்தங்கள் ஆயிரத்து –10-9-11-தத் சந்தஸாம் சந்தஸ்த்வம் ப்ரஹ்மவை சந்தாம்ஸி -தைத்ரியம்
பொறி யுணர்வு அவை இலன் –1-1-2-யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் –முண்டகம்
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் –3-4-10-ஏகஸ் ததா ஸர்வ பூத அந்தராத்மா ந லிப்யதே லோக துக்கேந பாஹ்ய -கட
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –4-1-1–ஸ்வோபாவா மர்த்யஸ்ய யதந்த கைதத் –கட
தோற்றங்கள் ஆயிரத்துள் –6-8-11–வாசா விரூப நித்யயா -தைத்ரியம்

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-2-ப்ரஹ்ம தம் பராதாத் –ப்ருஹதாரண்யம்
இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –10-7-5–ஏதஸ் யை வைதாநி ஸர்வாணி நிச்வஸிதாநி –ப்ருஹதாரண்யம் –
பல பிறப்பாய் –1-3-2—பஹுதா விஜாயதே -புருஷ ஸூக்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1–வாஸூ தேவம் ஸர்வம் இதி –கீதை –

————–

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் –

நிர்ஹேதுகமாக ஸ்வரூப ரூப குணங்களையும் நித்ய ஸூரிகள் அதிபதியாயும்-நிர்வாஹகானாயும் –
இருக்கும் இருப்பையும் காட்டிக் கொடுக்க –
ப்ரத்யக்ஷமாக அனுபவித்த ஆழ்வார் -அனுபவ ஜெனித ப்ரீதி உந்த -இன்ப வெள்ளத்தை
வாயினால் பாடி அல்லது தரிக்க மாட்டாமல் பேசுகிறார் –

உயர்வு அற -வருத்தம் இல்லாமல்
மற்றவர்கள் உயர்வு அறும் படி -இல்லாமல் போகும்படி –
ஸூர்யன் ப்ரகாஸத்தால் நக்ஷத்திரங்கள் இருந்தும் இல்லாதவை போல் இருக்குமா போல் –

உயர் –
அளவிடமுடியாத -எல்லை காண முடியாமல் உயர்ந்து கொண்டே இருக்குமே
தொல்லை யஞ்சோதி நினைக்குங்கால் என் சொல் அளவு அன்று -இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் –
நலம் -ஆனந்த குணம் -எண்ணற்ற கல்யாண குணங்கள் –
ஸமஸ்த சேதன அசேதன விஸிஷ்ட விபூதிகள் -மூன்று அர்த்தங்களும் உண்டு –

யவன் -அவன் என்பதால்
இந்த கல்யாண குணங்கள் அவனை அடைந்து நிறம் பெறுகின்றன

ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்தோ -(தைத்ரியம் )
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ஸ்வேதாஸ்வரம் )
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணா (ஸ்ரீ விஷ்ணு புராணம் )

கோந் வஸ்மின் ஸாம் பிரதம் லோகே குணவான் (ஸ்ரீ மத் ராமாயணம் )
குணவான் என்றதே இங்கு நலமுடையவன்

த மேவம் குண ஸம் பன்ன மகா மயதமேதி நீ
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்திதே
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத (ஸ்ரீ மத் ராமாயணம் )

கேவல அனுபவ ஆனந்த ஸ்வரூப பரம ஸ்வராட் (ஸ்ரீ மத் பாகவதம் )

ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முர மதந குணஸ் தோம கர்ப்பம் முனீந்திர -தேசிகன்

மனுஷ்ய- -கந்தர்வ -சிரலோக பித்ருக்கள் -ஆஜானஜ தேவர் -கர்மதேவர் -தேவர் –
இந்திரன் -ப்ருஹஸ்பதி -பிரஜாபதி -ப்ரஹ்மானந்தம் -சொல்லி
மீண்டும் கீழே வந்து -இப்படி பல மடங்குகள்

உபர் யுபர் யப்ஜபுவோபி பூரு ஷாந் பிரகல்ப்ய தேயே சதம் இத் யனு க்ரமாத் க்ரஸ்த்வ
தேகைக குணாவ தீப்ஸயா ஸதாஸ்திதா நோத்யமதோதி சேரதே

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ

சுடரடி -திவ்ய மங்கள விக்ரஹம் உப லக்ஷணம்
சுடர் ஒளி மூர்த்தியை
மாசூணாச் சுடர் உடம்பாய்

அர்த்த பஞ்சகமும் இதில் உண்டே
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பர ஸ்வரூபம்
என் மனனே -அதிகாரி ஸ்வரூபம்
மயர்வு -விரோதி ஸ்வரூபம்
அருளினன் -உபாய ஸ்வரூபம்
தொழுது எழு -ப்ராப்ய ஸ்வரூபம்
உபதேச கர்ப்ப அனுபவம் -அனுபவ கர்ப்ப உபதேசம் –

——–

எம்பெருமானார் -அடுத்தபடி
சந்திரிகிரி ஐயன்
ஸ்ரீ மன் நாராயண ஐயர்
திருக்கோஷ்டியூர் ஜீயர்
என்று மூவரையும் குறிப்பிட்டு பின்பு
வடக்குத் திருவீதிப்பிள்ளை பற்றியும் – குறிப்பிடுகிறார்

எனவே
இப்பிரபந்த கர்த்தா -பெண்பிள்ளை -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஸ்வாமிகளுடைய சிஷ்யை-
ஸர்வஜித் வருஷம் இவர் திரு அவதாரம்
அதுக்கு அடுத்த ஆங்கீ ரஸ வருஷம் இவரது
கலி யுகாதி -சக வருஷங்கள் எண் குறிப்பிட வில்லை
ஆங்கீர வருஷம் -மார்கழி -26-தேதி இப்பிரபந்தம் வெளியிட்டதாகக் குறிப்பிடுகிறார் –

நிர்ப்பரோ நிர்பயோஸ்மி -ந்யாஸ விம்சதி கடைசி ஸ்லோகத்தை இவர் காட்டி உள்ளதால்
தேசிகருக்குப் பிற்பாடாராக இருக்க வேண்டும் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாமம் இந்த நூலில் இல்லை
ஆகவே அவருக்கு முன் திரு அவதரித்தவராக இருக்க வேண்டும்
ஆகவே 1270-1370-காலத்துக்குள் இவர் அவதாரம்

ஈட்டில் உள்ள ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு வந்துள்ளது இப்பிரபந்தம் –
இவ் வுரை நூறு பாட்டுக்களுக்கே உள்ளது
தஞ்சை ஸரஸ்வதி மஹாலில் உள்ள ஒரே சுவடு -ஆசிரியர் தமது கையாலேயே எழுதப்பட்டது –

ஸரஸ்வதி மஹால் ஓலைச்சுவடிகள் 700 வருஷங்கள் பழைமை என்பதால்
இது இவரே எழுதின ஓலைச் சுவடியாக இருக்க முடியாது –

இணைவனாம் எப்பொருட்க்கும் -என்கிறபடி -முதல் பாசுரம் மற்ற எல்லா பாசுரங்களுடன் இணைக்கப் பட்டு
அவற்றுடன் பொருள் ஒன்றி இருப்பதை நன்கு விளக்குகிறது இந்நூல்
வருந்தி நான் வாசகமாலை கொண்டு -என்ற ஆழ்வார் அருளிச் செயலுக்கு ஏற்ப
திருவாய் மொழிச் செய்யுள்களையே வசன நடையில் தொகுத்தால் போலே அமைந்துள்ள இந்நூலுக்கு
திருவாய் மொழி வாசக மாலை என்று பெயர் இடப்பட்டுள்ளது –

உயர்வற உயர் நலம் உடையவன் கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்று சேர்த்து
உயர்வற -உயர்த்தி அற்ற லீலா விபூதியை -ஈர் ஏழு லோகங்களை –
உயர் நலம் உடையவன் -அவ்வெம்பெருமான் இருப்பிடமாகிய நித்ய விபூதியைச் சொல்லும்
கங்குல் -இரவு -பகல் -இருள் தரும் மா ஞாலம் -நித்ய விபூதி -பகல் -இவற்றை உடையவன் உயர் நலம் உடையவன் –
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
இப்படி ஸ்வா பதேச அர்த்தங்களையே இவ்வாறு இணைத்து அருளிச் செய்கிறார் –

இதே போல் ஆழி எழ பாதிக்கத்துக்கு உயர்வற உயர் நலம் உடையவனே வாமனன் என்று
கொண்டு பொருத்திப் பொருள் விளக்குகிறார் –

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———

இந்த ஏட்டில் மூன்று சித்ரங்கள் வரையப்பட்டுள்ளன
தமிழ் மறை தந்து அருளிய -ஆராவமுதாழ்வார் -பாம்பணையில் பள்ளி கொண்டு அருள
நடுவில் பராங்குச நாயகி -ஞான முத்ரையுடனும்
வலப்புறம் கண்ணன் யசோதா பிராட்டியால் உரலினோடு இணைத்துக் கட்டப்பட்டு -இரண்டு மருத மரங்களும்
இவ்வாறு ஒலை யிலே சித்திரம் வரைவதும் சகஜம் போல் அன்று இருந்தது போலும்

——–

அவதாரிகை
ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்
இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஓடி ஓடிப் பல பிறவிகளிலும் தோன்றித் தோன்றி
எல்லையற்ற துன்பங்களை அனுபவித்துத் தன் உண்மையான ஸ்வரூபத்தை மறந்து தவிக்கும்
எண்ணற்ற ஜீவாத்மாக்களை உய்வித்து நற்கதியை அடைவிப்பதற்காகத் தோற்றுவித்த
தத்துவ உபதேச திவ்ய பிரந்தங்களுக்குள்
திருவாய் மொழி எனப்படும் செஞ்சொல் கவிகள் ஆயிரமும் ஒன்றாகும் –

இது மதிநலம் அருளப்பெற்ற -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம் பெருமான்
என்று இருந்த நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட அந்தாதித் தொடையில் அமைந்த சரம பிரபந்தம்

ஆழ்வார் அவனுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டித விபூதியை யாதாத்ம்யமாக காட்டப்பட்டு அறிந்து
அருளிச் செய்த -பொய்யில் பாடல்கள் -தேனினும் இனிய தமிழ் பாசுரங்கள்
ஆழ்வாரை வியாஜமாக எம்பெருமானே -தானே தன்னைப் பாடிய வாய் முதல் அப்பன் –

இவற்றில் நூறு பாடல்களுக்கே இந்த உரை -விவரண சதகம் என்று தாமே திருநாமம் சூட்டி அருளுகிறார்
இதில் முதல் 13 ஏடுகளும் -15-16- ஏடுகளும் லுப்தம்
இப்பொழுது கிடைத்த ஏடுகளில் 1-6 -தொடங்கி உள்ளது –

————-

பரிவதில் யீசனைப் பாடி விரிவதில் மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகைப் பூவே –1-6-1-

தத் ஆஸ்ரயணீயன் யார் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அத்தாலே
தேவதாந்தர பஜனம் அற்று
அருளின பக்தியால்
ஸூகரமாக
பகவத் சமாஸ்ரயணம் பண்ணப் பெற்றேன்

நீங்களும்
விரிவது மேவலுறுவீர்
அயர்வரும் அமரர்கள் அதிபதியானவனை ஆஸ்ரயித்து
விஸ்த்ருதராக-விரிந்த -மழுங்காத ஞானம் உடையராய் – வேண்டி இருப்பீர்

பிரிவகை யின்றி நன்னீர் தூவி
சற்றும் அசராமல் ஆஸ்ரயிக்கிற
நித்யருக்கு அதிபதியாய்
நியாந்தா வானவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது

பிரிவகை யின்றி -அயோக்யன் என்று அகலாதே
நன்னீர் தூய்ப் -ஏலாதி ஸம்ஸ்காரங்கள் வேண்டா
துயர் அறு சுடர் அடிகள் ஆகையாலே
புரிவதுவும் புகைப் பூவே -ஏதேனும் புகையும் பூவும் அமையும்
கள்ளார் துழாயும் -இத்யாதி

சுடர் அடி தொழுது எழு என் மனனே
இப்படி
ஸூலபமுமாய் –
ஸூ கரமான திருவடிகளைத் தொழுது வர்த்தி -என்கிறார் –

———–

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயரில்
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் –
இப்படி போக்யனானவனை விட்டுப் ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு அகலுவதே -என்று
கேவலரை நிந்திக்கிறார்

உயர்வற என்கிற பாட்டைப் பிறவித் துயர் என்கிற பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
காம்ய பலன்களையும்
அதுக்கும் அவ்வருகான கைவல்யத்தையும் பெறுவதே என்று கேவலரை நிந்திக்கிறார் –

உயர்வு அற
பிறவித துயர் அற
ஸ்வர்க்காதிகளில் கைவல்யத்தில் உயர்த்தி யுண்டோ என்ன
அவற்றுக்கு ஒரு வகையாலும் உயர்வு இல்லை என்கிறது -பரமானந்தத்தைப் பற்றச் சொல்கிறது –

அற ஞானத்துள் நின்ற
உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஞான ஆனந்தாதி ஸ்வரூபம் ஆனவன்
மயர்வற மதிநலம் அருளினன்
பரமானந்த ஸ்வரூபத்தைப் பற்றி
ஜரா மரண மோஷாயா -என்றதை அறிந்து
ஆத்ம அனுபவ ஞானத்தில் ஞானம் முற்றி இருக்கை –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்குகிற மதி நலம் அருள பெற்று அவனாலே

துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
பிரகிருதி விநிர் முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன்
அவன் ஆழிப்படை அந்தணனை
அசர்வற்று
அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரான நித்ய ஸூரி சேவ்யனை அகன்று
ஆத்ம அனுபவத்திலே மூளத் தேடுவதே
ஏதேனும் ஒன்றைத் தேடிப் பெறும் போது அவனை ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்படி இருக்கிற
இது -என்ன தார்மிகனோ -என்கிறார் –

ஆழிப் படை அந்தணனை
துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்கிக் கொள்வதே -சுத்தி குண விசிஷ்டன் என்றதாயிற்று
அவர்கள் பற்றுற்றும் என் மனனே
சுடர் அடி தொழுது எழப் பெற்றோமே

ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –
அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் பழைய ஸம்ஸாரமே ஸித்திக்கும் என்கிறார் –

———–

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
பூர்ணனுமாய் இருக்கிறவன் -யாவன் ஒருவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அமரர்கள் ஆதி முதல்வனானவன் –
அக்குணங்களை நித்ய ஸூரிகள் அனுபவிப்பிக்க –அவர்கள் தம் அதீனமாம் படி இருக்கிறவன் –

மயர்வற மதிநலம் அருளினன்
அஞ்ஞான கந்த ரஹிதமான -பக்தி ரூபா பன்ன ஞானத்தை
தன் நிர்ஹேதுக கடாக்ஷத்தினாலேயே பூரித்தவன் யாவன் ஒருவன்
தன்னோடு ஏக ரஸம் அனுபவிக்கும் படி பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் –

கருகிய நீல நன்மேனி வண்ணன்
தம்மோடு உண்டான அவயவ அனுபவம் பண்ணினவற்றால் வந்த திருமேனியில் புகர்
கருத்து நெய்த்துப் பேசுகைக்க விஷயமாம் படி யாயிற்று –

செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்குப் பிரகாசகமான திருக்கண்களை யுடையவன்
எனக்கு மயர்வான அவித்யாதிகளைப் போக்கி
ஞான பக்தியாதிகளாலே தன்னோடு ஐக ரஸ்யம் பிறந்து அனுபவிக்கும் படி
பண்ணினவற்றால் வந்த என்னவா
தன்னதாம் படி
திருமேனியும் திருக்கண்களும் செவ்வி பெற்று விகஸிதமாய் யுகக்கிறவன்
யாவன் ஒருவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
சற்றும் அசராதே ஏக ரஸ அனுபவ மக்நரானவர்களும் ரசிக்கிற ஸ்வாமி யானவன் –

பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஸர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற் கொள்ளுவதாகக் கடாக்ஷித்தால்
அவனுடைய அங்கீ காரம் பெற்றால்
அந்த ஹர்ஷத்தால் பெருக்காறு சுழித்தால் போல்
தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையவனாய்க் கொண்டு யாயிற்று த் தோற்றுவது –

இன்னம் -அவனை மேற்கொள்ளப் பெற்றோம் இறே -என்று திரு உள்ளத்திலே ப்ரீதியோடே யாயிற்று மேற் கொள்ளுவது –

பூ மகளார் தனிக்கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய்
போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால்
இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதவனாய் யாவன் ஒருவன் இருக்கிறான்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

அவன் பண்ணின மஹா உபகாரம் மட்டில்லை என்ன
அது ஏது என்ன
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்
திருவனந்த ஆழ்வானுக்குப் படுக்கையால் வந்த முறை
திருவடிக்கு வாகனமான முறை
பிராட்டிமாருக்கு மஹிஷியான முறை
ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வானுக்கு செங்கோல் செலுத்தின முறை
இப்படித் தனித்தனியே முக்தர் நித்யருக்கு முறை முறையால் வரும் கைங்கர்யங்கள் எல்லாம்
அவர் அவர்களோடே பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவருக்கு ஒரு வழியால் வந்தது அன்றிக்கே
சர்வ வித ரஸத்தையும் தந்து விடுகிறிலன்
என் அளவில் நித்ய முக்தர்கள் எல்லார் அளவிலும் பண்ணும் ஆதரத்தை
என் பக்கலிலே பண்ணா நின்றான் –

ஒழிவிலன் என்னோடு உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறான் –
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கேயே இருந்து கேட்க்கும் அத்தனை

தண் தாமம் செய்தது என்று நித்ய விபூதியில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணினார் என்றார்
கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளார் உடன் பரிமாறும் படியை என் ஒருவன் இடம் பரிமாறா நின்றான் என்கிறார் –

பூசும் சாந்திலே -இவர் அவயவங்களை சந்தன புஷ்ப்பமாகக் கொண்டான்
இதில் போக வஸ்துக்களாயும் போக ஸ்தானங்களாயும் கொண்டான்

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
நீயும் ஓர் அனுபவம் குறையாமல் துயர் அறு சுடர் அடி தொழுது அனுபவித்து எழு
என் மனனே -என்கிறார் உபகார ஸ்ம்ருதியாலே –

—————

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படையில்
இப்படிப்பட்ட பேற்றுக்கு இத்தலையில் ஒன்றும் செய்ய வேண்டாத படி
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி தொடக்கமாக -பரமபக்தி பர்யந்தமாகத் தானே பிறப்பித்து
நித்ய ஸூரிகள் பேற்றையும் தந்தான் என்கிறார் –

கீழில் திருமொழியில் பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அநுஸந்தித்து உச்சி யுள்ளே நிற்கும் என்று இறே கீழ் நின்றது
பேற்றில் இனி இதுக்கு அவ்வருகே ஏற்றமாகச் செய்து கொடுக்களாவது இல்லை என்று நிர் வ்ருத்தராகிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி –
நிர் வ்ருத்தி என்று ஸூ கமாக ஸூ கிக்கிறார் என்றபடி

கீழே பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அனுசந்தித்துச் சொல்லுவது ஓர் ஏற்றம் உண்டு
உச்சியுள்ளே நிற்கும் என்று இறே -கீழ் இதுக்கும் மேல் ஏற்றமாக –பண்ணிக் கொடுக்கிறான் என்று பட்டர் அருளிச் செய்தார்

நீர் தாம் இங்கனே கிடந்தது படுகிறது என்
மறந்து பிழைக்கலாகாதோ என்ன
எத்தைச் சொல்லி மறப்பேன் என்கிறார் –

———–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக லீலா விபூதி யோகம் சொல்லுகிறது
உயர் நலம் உடையவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
யவன் அவன் என்று –
உபய விபூதியிலும் அதிசயிதமான த்ருதீய விபூதிக்கும் நிர்வாஹகனான நம்பியை
பூர்ணமானவனை
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி-என்கிறது –

இப்படிப் பரிபூர்ணமானவன் எனக்கு மயர்வற மதி நலம் அருளித் தன் ஸ்லாக்யமான
பரத்வாதிகளில் காட்டில்
அர்ச்சக பராதீனமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டிப் பரத்வாதிகளிலே
மனஸூ போகிற மயக்கத்தை அறுத்து

அர்ச்சாவதாரத்திலும் திருக்குறுங்குடி நம்பியை ஒழியப் போகாமல்
மனன் அக மலம் அறும் படி பண்ணி
இப்படி மயர்வற மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -என்றும்

உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
இப்படி நித்ய ஸூரி ஸேவ்யனாய்
ஆதி காரணமான பரஞ்சோதியை மறப்பது என்
அஞ்ஞான கந்த ரஹிதரான மேலாத் தேவர்களுக்கும் நிலத் தேவர்களுக்கும்
காரணமானவனை மறக்க விரகு உண்டோ –
இப்படி உபகாரகனானவனை மறக்க விரகு உண்டோ –

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மறக்க ஒட்டாத் திருவடிகள்
உன் மறப்பாகிற துயர் அறுக்கும்
அஞ்ஞான அந்தகாரம் நீக்கி -ஞானப் ப்ரகாஸம் ஆகிற பரஞ்ஜோதிஸ்ஸூ
உனக்கு விளக்காகக் காட்டும் திருவடிகளைத் தொழுது எழப் பண்ணின
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ

அபூர்ணன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
எனக்கு உபகாரன் அல்லன் என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பேன் -என்கிறார் –

முதல் பத்து விவரணம் முற்றிற்று –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading