ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள்–குறை ஒன்றும் இல்லை கோவிந்தா –

“பாதேயம் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்” என்கிறது கருடபுராணம்

பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள் “நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே”

“வேத மூல ப்ரமாணாத்

பகவான் கட்டிப் பொன் போலே.. அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே”

“வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம் ”

அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும்”

“திரௌபதிக்கு ஆபத்திலே ஆடை சுரந்தது கோவிந்தா நாமமிறே”

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

“பத்மநாபோ, மரப்பிரபு ”.
“பத்மநாபோ, அமரப்பிரபு”
ஜ்யோதீம்ஷி விஷ்ணு:, புவனானி விஷ்ணு:, வநாணி விஷ்ணு: என்று பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா?
(ஜ்யோதீம்ஷி = ஒளி, புவனானி = உலகங்கள், வனானி = காடுகள்)

ஸ்ரீ க்ருஷ்ணாய நம: என்பதற்கு பதில் ஸ்ரீ திருஷ்ணாய நம:
ஸ்ரீ த்ருஷ்ணாய என்றால் ஸ்ரீயினிடத்திலே திருஷ்ணை உடையவன் என்று அர்த்தம்.
ஸ்ரீ (மகாலட்சுமி) திருஷ்ணை (அன்பு) அவர் சொல்வதும் பகவானையே குறிக்கும் என்றார்.

துயிலெழும்போது “ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி” என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.
“கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன”
“கேசவனைப் பாடவும், நீ கேட்டே கிடத்தியோ, தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

அவன் சொன்னது கீதை – கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
1. மகாபாரத சாரம்:
2. மகரிஷிகளாலே நன்கு, பலமுறை கானம் பண்ணப்பட்டது:
3. பகவானாலே அடையாளம் காட்டப்பட்டது:
வியாசரை வேத வியாசர் என்று சொல்கிறோம். வேதத்தை விபஜிக்கிறவர் என்று பொருள்.
4. பீஷ்மரால் உயர்ந்ததாகக் கொண்டாடப்பட்டது:
5. நோய் தீர்க்க வல்லது:நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சகஸ்ர நாமம் பாராயணம் பண்ற வழக்கம்
வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் கிடையாது. சர்வ சம்பத்தும் வந்து சேரும்.
அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.
6. கீதைக்குத் துல்லியமாய் அர்த்தத்தை உடையதனாலே:

திருஷ்ட பலம்
அதிருஷ்ட பலம்
திருஷ்டாதிருஷ்ட பலம்

ஜாமி என்றால் நல்ல ஸ்த்ரீ என்று அர்த்தம். அஜாமி என்றால் அதற்கு நேர் எதிரானவர்!
அத்தகைய ஸ்த்ரீயின் சேர்க்கையுடையவனாக இருந்தான் அஜாமிளன்.
“நாராயணா”என்று அவன் தன் குழந்தையைத் தான் கூப்பிட்டான்
அஜாமிளன் சரித்திரத்தைச் சொன்னது திருஷ்ட பலம் பற்றித் தெரிஞ்சுக்கறதுக்காக.

அதிருஷ்ட பலம். திரௌபதி சரணாகதி அடைந்த பொது அவளுக்குப் புடவை சுரந்தது அதிருஷ்ட பலத்துக்கு உதாரணம்.

திருஷ்டா திருஷ்டா பலனுக்கு உதாரணம் கஜேந்திர மோக்ஷம்.

காயத்ரி மந்திரம் எல்ல மந்திரங்களுக்கும் தாய்.
கருணை வடிவான காயத்ரியின் முதல் எட்டு அக்ஷரத்தை விளக்க வந்தது
விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முதல் சுலோகத்தின் முதல் பாதம்.
அடுத்த எட்டு காயத்ரி அக்ஷரங்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தின் இரண்டாவது சுலோகத்திலே விளக்கம் பெறுகின்றன.
மூன்றாவது எட்டை விளக்க வந்தது சகஸ்ர நாமத்தின் மூன்றாவது சுலோகம்.
இந்த மூன்று சுலோகங்களுக்கு சர்வ மந்திரங்களுக்கும் சாரமான காயத்ரியை எடுத்துச் சொல்லுவதால் அவற்றுக்குச் சிறப்பு அதிகம்.
இந்த முதல் மூன்று சுலோகங்களுக்குள்ளே ஓர் அவதாரம் பேசப்படுகிறது.

அந்த காயத்ரியை தேவர்கள் எப்படித் துதித்தார்கள் என்றால், “விச்வமஸி, விச்வாயு” என்று ஆரம்பித்துத் துதித்தார்கள்.
அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் நாமமாக இருக்கிறது.
விச்வம் என்கிற சப்தத்துக்குப் பூரணத்துவம் என்றும் ஒரு பொருள் உண்டு.
பகவான் எதிலும் குறைவில்லாதவன் என்று அர்த்தம். அதனால்தான் பூரணன், கொள்ளக் குறைவிலன்
கொள்ளக் கொள்ளக் குறைவிலன். கொள்ளமாளா இன்பவெள்ளம் அவன்

பிரஹலாதனுக்கும் ஹிரண்ய கசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம்,
நரசிம்ஹ அவதாரத்தை மின்சக்தி என்கிறது. பிரஹலாதன் அஸ்தி (உண்டு) என்று சொல்கிறான்.
ஹிரண்ய கசிபு நேதி (இல்லை) என்கிறான் அஸ்தி என்கிற பாஸிட்டிவ் தத்துவனும் நேதி என்கிற நெகடிவ்வும்
மோதிக் கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம். ஒளிமயமாய் நரசிம்மன் தோன்றினானாம்

நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு.
ஒளியாய் இருக்கக் கூடியவன் நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும்
சஹஸ்ர நாம தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ராமா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், ர வர்க்கத்திலே ரா என்பது இரண்டாவது எழுத்து.
ம என்பது ஐந்தாவது எழுத்து (வடமொழியின் ப ப ப ப ப ம வரிசை)
இரண்டை ஐந்தால் பெருக்கினால் கிடைப்பது பத்து.
ஆக ராம என்ற ஒரு சொல்லுக்குரிய எண் 10,
ராம, ராம, ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண் 10 x 10x 10 அதாவது ஆயிரம்.
ஆக, ராம, ராம, ராம என்று மும்முறை சொல்வது ஆயிரம் திருநாமங்களுக்கு துல்யமானதுதானே.

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் எண்ணும்
செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

பரமாத்மாதான் பரமார்த்தம்.

அவன் அந்தர்யாமியாய் இருந்து, பூரணனாய் இருந்து, பூரணமாய் ஆனந்தம் கொடுப்பதினாலேதான்
புவன சுந்தர என்று ருக்மிணீ அவனை அழைத்தாள்.
தத்வம் அஸி என்கிற மகா வாக்யத்தை ஒரே பதத்தில் சொல்லணும் என்றால் விச்வம் என்று சொல்லணும்

ஆடு மாடு மாதிரி மனிதர்களை ஓட்டுவதில்லை பகவான்.
ஜீவாத்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான இடத்திலே சுதந்தரத்தைக் கொடுக்கிறான்.
நல்லது இது – கெட்டது இதுன்னு காட்டிக் கொடுத்து அது எதைப் பிடிச்சுக்கறதுன்னு கவனிக்கிறான்.
“மனிதன் நல்லதைப் பற்றுகிறானா? தீயதைப் பற்றுகிறானா? என்று சோதித்துப் பார்ப்பது அவனுடைய லீலை.

விச்வம் என்கிற சப்தத்துக்குப் பொருள் கேட்டால், ‘ஜகத்காரண வஸ்துவாக பரமாத்மா இருக்கிறான்.
அவனே காரியமாய் இப்படிப் பரிணமிக்கிறான். விச்வத்துக்குக் காரிய காரணம் அவனே,
ஆனதனாலே விச்வம் என்கிற சப்தத்தினால் பரமாத்மா அழைக்கப்படுகிறான்’.
இதுக்கு மேலே இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.
சுவாபாவிகமாக – அதாவது இயற்கையிலேயே எண்ணிறந்த திருக்கல்யாண குணங்கள் இருப்பதாலே
பகவான் என்று அழைக்கப்படுகிறான் அவன்.

விஷ்ணுதான் யக்ஜன் – யக்ஜ சாதனன், யக்ஜரூபி, யக்ஜபுருஷன்

இல்லை என்கிற சொல்லுக்கு நான்கு விதமான விளக்கம் உண்டு
பிராக பாவம்-பிரத்வம்ஸாபாவம் -அன்யோந்ய பாவம்-அத்யந்தா பாவம்-

நமக்குள்ளே எம்பெருமான் இருக்கிறான் – புரி சயநாத் புருஷ:-புருஷ சப்தத்துக்கு நான்கு பொருள்
விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே பூதாத்மான்னு ஒரு நாமம பவித்ரமான ஆத்மா, பாவனமான ஆத்மா–
பஹு தானத் புருஷ: கேட்கும் வரமெல்லாம் கொடுப்பான்.
புராணாத்வாத் புருஷ: புராணாம் என்றால் ரொம்ப பழமையானவன்
பூர்ணாத்வாத் புருஷ:

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.
அவற்றில் முதல் பத்து, “அவன் திருநாமத்தைச் சொல்லு” என்று உணர்த்துகின்றன.
இரண்டாவது பத்து, “உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு” என்கிற பாசுரங்கள்.
மூன்றாவது பத்தோ “அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு” என்று சொல்கின்றன

திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது.
வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம்.
ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.
வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான
எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா?
ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள்

ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.
“அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த” என்றும்
“அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று மறுபடியும்

ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா” என்று ஆச்ரயித்து,
அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.

காஞ்சிபுரம் அருகே திருவேளுக்கை என்கிற ஷேத்ரம்
பகவான் தானாகவே, இஷ்டமாய் அமர்ந்திருக்கும் ஷேத்ரம். அதனால் அதற்கு காமாளிகை என்றொரு பெயர்
தபன இந்து அக்னி நயன: தாபனீய ரஹஸ்யானாம் சார:
தாபனீய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சமஸ்த ரகசியங்களின் சாரமாய் இருக்கக் கூடியவன் காமாஸிகா ஹரி:
பகவானுக்கு ஒரு பக்கம் வலது திருநேத்திரம் – சூரியனே (தபன) வலது திருநேத்ரமாக அமைந்துள்ளது.
இடது திருநேத்திரம் சந்திரன் (இந்து). இடையிலே ஒரு நேத்திரம் – அது அக்னி.
எல்லோருக்கும் நேத்திரமாய் இருக்கக் கூடிய பரமாத்மாவுக்கு, இந்த மூன்று தேவதைகள் நேத்திரமாய் இருக்கிறார்கள்.

கிருஷ்ண-யஜுர்வேத தைத்ரீய சம்ஹிதை என்று அந்த சம்ஹிதைக்குப் பெயர்.
(தித்திரா-என்கிற புறாவின் பெயரிலிருந்து வந்தது தைத்ரீய).
சூரியன் உபதேசம் பண்ணியதுதான் “சுக்ல யஜூர்வேதம்”.
சூரியன் ஆரோக்கியத்தை மாத்திரம் கொடுப்பவன் அல்ல-சிறந்த ஞானத்தையும் கொடுப்பவன்.
வேதத்தையே கொடுக்கக் கூடியவன்.
சத்யபாமாவினுடைய தந்தை சத்ராஜித். சூரியனை அவன் உபாசனை பண்ணி-ச்யமந்தக மணி பெற்றான்
பஞ்ச பாண்டவர்களுக்கு சூரியன் அஷ்ய பாத்திரம் கொடுக்க-
திருநேத்திரத்தினால் நம்மைக் கடாஷிக்கும்போது ஞானமும், ஐச்வர்யமும், ஆரோக்யமும், அன்னமும் நமக்கு சங்கல்பிக்கின்றன.
எனவேதான் நரசிம்ஹ தியானத்துக்குள்ளே சூரியனும் அடங்கிவிடுகிறான்.

ம்ருத்யு ம்ருத்யவே ஸ்வாஹா என்றும் நரசிம்ஹனை ஆராதிக்கிறோம்.
விச்வயோனி: விச்வாத்மா: என்றும் அவனை அழைக்கிறோம்.
நரசிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் என்று ஒன்று உண்டு. முப்பத்திரண்டு அஷ்ரங்கள்.
ஒவ்வொரு அஷ்ரமும் ஒரு பிரும்ம வித்தையை நமக்கு உபதேசம் பண்ணக்கூடியது.
ஆகவே 32 பிரும்ம வித்தைகளாலும் ஆராதிக்கப்படுகிறவர் நரசிம்ஹர் என்று கொள்ளலாம்.
நரசிம்ஹனைப் பார்த்து ஸ்ரீநரசிம்ஹாய நம: என்று ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ணிவிட்டால்
எல்லா பிரும்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும்.

“அடித்த கை – பிடித்த பெருமாள்” என்று பெயர் அவனுக்கு! “எங்கடா”? என்று அடித்துக் கூப்பிட்டால்,
“இதோ” என்று வந்து நம் கையைப் பிடித்துக் கொள்வான். வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா!
ஹிரண்ய சம்ஹாரத்துக்காக ஏற்பட்டது அல்ல இந்த அவதாரம்.
பிரஹலாதனை காப்பதற்காக எற்பட்டதா இந்த அவதாரம் என்றால் அதுவும் இல்லை.
அக்கினியில் தூக்கிப்போடும்போதும், மலையில் இருந்து உருட்டும் போதும், சமுத்திரத்தில் எறிந்த போதும்,
யானையைக் கொண்டு இடறச் செய்த போதும், விஷப் பாம்புகளிடையே விடப்பட்ட போதும் பிரஹலாதனை யார் காப்பாற்றினார்கள்?
அப்போதெல்லாம் அவதரிக்காத நரசிம்ஹன், பிரஹலாதனின் வார்த்தையைக் காப்பாற்றத்தான் அவதரிக்கிறான்!
“எங்குமுளன் கண்ணன், அவன் இல்லாத இடம் கிடையாது” என்று பிரஹலாதன் சொன்னபோது
அதை உண்மையாக்க பரமாத்மா அவசரத் திருக்கோலம் பூண்டு சர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்தான்!
பிரஹலாதனின் வாக்கை மட்டுமின்றி பிரும்மாவின் வாக்கைக் காப்பதற்காகவும் எடுக்கப்பட்டது நரசிம்ஹ அவதாரம்.
யோசித்து எடுத்த ராமாவதாரம் போல் அன்றி, தேவதைகளின் பிரார்த்தனைகளுக்கிரங்கி தோன்றிய கிருஷ்ணாவதாரம் போல் அன்றி,
நினைத்த மாத்திரத்தில் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
அவசரத் திருக்கோலம் என்றாலும் அதுதான் மிகவும் அழகான அவதாரமாக அமைந்திருக்கிறது!

கிருஷ்ணாவதாரத்துக்காகவே எழுந்த பாகவத புராணத்திலே, “அற்புதமான அவதாரம்” என்று
கிருஷ்ணரைச் சொல்கிறார் வியாசர்.
ஆனால் அவரே நரசிம்ஹனைச் சொல்கிறபோது “அதியத்புத அவதாரம்” என்று விளக்குகிறார்!

ருக்மிணி பிராட்டி, கண்ணனுக்கு ஓலை எழுதுகிறாள். அதிலே ஏழு இடங்களில் பகவானை அழைக்கிறாள்.
ஓரிடத்திலே கூட “கிருஷ்ணா” என்று அவனைக் கூப்பிடவில்லை.
பொய்யில்லாத பெருமான் யாரென்றால் நரசிம்ஹன்தான்! அழைத்தவுடனே வந்து ரக்ஷிக்கக் கூடியவன்.
எனவே ருக்மிணியின் இதயம் கவர்ந்த அவதாரமாகிறது இந்த அவதாரம்

ராமாவதாரத்திலேயும் மாரீசன் ராமனை “நரசிம்ஹா” என்று அழைக்கிறான்.
ஆஞ்சநேயரும் இலங்கையிலே சீதா தேவியிடம் “அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என் முதுகிலே ராமன் வருவான்.
நரசிம்ஹனைப் போல வருவான்” என்கிறார்.
ராமாவதாரத்திலே எங்கு தொட்டாலும் இப்படி நரசிம்ஹ பலம் தெரிகிறது.

பத்மாவதி கல்யாணத்திலே ஒரு காட்சி. தாயார் மணவறையிலே மணக்கோலத்திலே அமர்ந்திருக்கிறார்.
எல்லா உணவு வகைகளும் தயாராகி நிரம்பியிருக்கிறது. ரிஷிகள், உணவு கொள்ளக் காத்திருக்கிறார்கள்.
உணவை யாருக்கு நிவேதனம் செய்துவிட்டுப் பரிமாறுவது எழுகிறது.
பகவானிடமே கேட்கிறார்கள். “அஹோபில ஷேத்திரத்திலே உள்ள நரசிம்ஹனுக்கு நிவேதனம் செய்து
உணவு விநியோகிக்கப்படட்டும்” என்று சொல்கிறார் ஸ்ரீநிவாஸபெருமாள்.
அதனால்தான் ஸ்ரீநிவாஸர் நரசிம்ஹருக்குக் கைகூப்பி வணங்குவதை இன்னமும் அஹோபில ஷேத்திரத்திலே பார்க்கலாம்
ஸ்ரீ ராமனாலும், ஸ்ரீநிவாஸபெருமாளினாலும் வணங்கப்பட்டவர் என்பதாலே
நரசிம்ஹனை பெரிய பெரிய பெருமாள் என்று அழைக்கிறோம்.

“அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவன்” என்கிறார்.
நினைத்த இடத்தில் நினைத்த கணத்தில் தோன்றியவனின் காருண்யத்தைச் சொல்கிறார்.
“என் சிங்கப் பிரான்” என்று அவனை அழைக்கிறார். அந்தப் பாசுரத்தை பிறர் சொல்லும்போது,
அனைவருமே அவரவர் நரசிம்ஹனை அபிமானிக்கும்படியாகச் செய்து விட்டார் நம்மாழ்வார்.

தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா”? என்று கேட்டார் பராசர பட்டர்.
தூக்கம் என்பதை நமக்கு விதித்ததே இந்தப் பேருண்மையை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.
அவன் சர்வாந்தர்யாமி என்பதை உணர்த்துவதற்குத்தான்!

————-

நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்
ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.
மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?அதனால் தான்..
ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்து இருக்கிறாள்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில்
அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.
மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.
1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட
எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது.
இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது .
இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று
நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்

ஸ்ரீ முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்டது திவ்ய சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகம்.

1.மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2.ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3.வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4.ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5.இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6.யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7.ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்
8.தஸ்மான் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே!

தமிழாக்கம்:
1.நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2.சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே;
3.அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே;
4.எஜமானும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே;
5.இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே;
6.எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே;
7.நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை;
8.அதனால், நரசிம்மனே! உம்மைச் சரணடைகின்றேன்!

———

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீட்சணதம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருஸிம்மம் பீக்ஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப சமுத்பவம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!

லஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ஆந்த்ரமாலாதரம் சங்கசக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ஸ்மரணாத் சர்வபாபக்ணம் கத்ரூஜவிஷநாசனம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
சிம்ஹநாதேநமஹதா திக் தந்தி பயநாசனம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீ சம் தைத்தேச்வரவிதாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
க்ரூரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் அபயப்ரதம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
வேத வேதாந்த யஞ்ஞேசம் ப்ரம்மருத்ராதி வந்திதம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ய இதம் படதேந்நித்யம் ருணவிமோசன சங்கீதம் அந்ருநோஜாயதே சத்யோ தனம் சீக்ரமவாப்னுயாத்!

(ருண விமோசன ந்ருஸிம்ம ஸ்துதி பாராயணம் செய்வோருக்கு சகல கஷ்டம் நிவர்த்தியாகி வாழ்வில் வளம் சேரும்.)

———-

ஸ்ரீமத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் !–ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரம்

திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர
அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே,
கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா!
வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் லக்ஷ்மி நரசிம்மனே,
என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.

——–

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.

———

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிய ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்

1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
பாதக தவானல பதத்ரிவர கேதோ
பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
பங்க நவகுங்கும விபங்கில மஹோர
பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ மஹாத்மன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading