திருப்பாவையில் – நீராட்டம்–6-பிரயோகங்கள்
மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்-
நாச்சியார் திரு மொழி –
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் –3–1 –
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் —3-4-
அஞ்ச யுரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -3-9-
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் –6–10-
செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம் புரியே – -7–6-
——————–
பெரியாழ்வார்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட யுறுதியேல்-மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – 1–4–2-
ஆடுக செங்கீரை ஆடுக ஆடுகவே -1–5 –
நீராட்டு பதிகம் -2-
பேடை மயில் சாயல் பிணை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் —3-3-3-
அரும் தவ முனிவர் அவபிரதம் அங்கு குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே –4-7-6-
பொங்கு ஒலி கங்கைக் கறை மலி கண்டத்து உரை புருடோத்தமன் அடி மேல்
வெம் கலி நலியா வில்லி புத்தூர்க் கோன் விட்டு சித்தன் விருப்புற்று தங்கி அவன் பால் செய் தமிழ் மாலை
தங்கிய நாவுடையார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே –4-7-11-
—————————–
பெருமாள் திருமொழி
ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே -2-2-
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கரு மணியே -8-3-
————————————————–
பெரிய திரு மொழி –
ஆயர் மட மக்களை பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு -10-7–11-
——————————
திரு நெடும் தாண்டகம்
அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் -12-
அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் பெற்றேன் வாய்ச சொல் இறையும் பேசக் கேளாள் -19-
———————————————————-
திருவாய்மொழி
நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல்யாயிரத்து ஓர்தல் இவையே -1-8-11-
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே-2-6-4 –
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒருநாள் காண வாராயே -8-5-1-
அவன் கையதே எனதாருயிர் அன்றில் பேடைகாள் எவம் சொல்லி நீர் குடைந்தாடுதிர் புடை சூழவே -9-5-3-
பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தினையே -10-1-8-
—————————————————
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –மூன்றாம் திருவந்தாதி -76-
மால் தான் புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வேனோ பேதைகாள்
நீராடி தான் காண மாட்டாத தாரகல சேவடியை யான் காண வல்லேற்கிது –நான்முகன் -27-
சூட்டு நன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அந்தூபம் தாரா நிற்கவே –திருவிருத்தம் –21 —
அழைத்துப் புலம்பி முலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைகே கண்ணநீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே -52-
ஓ ஓ உலகின் இயல்வே ஈன்றோள் இருக்க மணை நீராட்டி –திருவாசிரியம் -6-
———————————————-
பெருமாள் வீர கல்யாண குணத்தில் ஆழ்ந்தார் திருவடி –பாவோ நான்யத்ர கச்சதி வீர –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -நம்மாழ்வார் -ஸுலப்ய ஸுசீல்ய குணங்களில் ஆழ்ந்தார் நம்மாழ்வார் –
குணவான் –என்றாலே சீல குணத்தை சொல்லுமே –
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply