மனமே தனம் —

May 17, 2023

செல்வ நாராயணன் -திரு நாராயணன் -திருவுக்கும் திருவாகிய செல்வா
தானம் மதீயம் தவ பாத பங்கஜம்
அவனும் அவளும் விட்டாலும் விடாத திண் கழல்கள் தனம்

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.–மூன்றாம் திருவந்தாதி –4-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -பசிக்கு விருந்தும் நோய்க்கு மருந்தும் இதுவே

வெங்கடாஜலா பாதி– காலோபதி வைத்தியம் —

அடி உதவுமாறு அண்ணன் தம்பியும் உதவ மாட்டானே -நம்பி மூத்த பிரானும் கிருஷ்ணனையும் விட திருவடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்தியும் அளிக்க வல்லது

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாதமாநம் அவசாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ஆத்மைவ ரிபு ராத்மந –ஸ்ரீ கீதை
பற்றற்ற மனமாகிய செல்வத்தைப் பாதுகாக்க வேண்டுமே

உள்ளம் நெஞ்சம் அகம் மனம் சித்தம் சேதஸ் ஹ்ருதயம் ஸ்வாந்தம் ஹ்ருத் மாநஸம் மநஸ் பர்யாய சொற்கள்
ஆத்மா இதயம் உயிர் மூச்சு இவற்றை விட வேறுபட்டது
மந்யதே அநேந இதி மந –மனனம் நினைக்க உதவும் உபகரணம் கருவியே மனஸ்
அறிவுப்பதிவுகளைக் காட்டும் திரையே மனஸ்

மாயவனையே மனத்து வை -பொய்கையார்

மனஸா து விஸூத் தேந -பராக்கைப் பார்க்காமல் ப்ரத்யக்க்கை நோக்கித் திருப்பா எம்பெருமான் அருள் புரியட்டும்

———-

மனம் புத்தி ஆத்மா -சித்தம்-கடஉபநிஷத் தேர்
தேர் ஒட்டி பார்த்தசாரதி –

அந்தக் கரணம் இருப்பிடம் ஹ்ருதயம் ஆத்மா பரமாத்மாவைப் போலவே

பஞ்ச பிராணன் போல் மனத்தின் வெளிப்பாடு 10 வகை ராமானுஜர்
காமம் –ஆசை -விருப்பம் -தூண்டும் கருவி
சங்கல்பம் -செய்ய வேணும் என்னும் உறுதியைத் தூண்டும் கருவி
விஜிகித்சா –ஐயத்தை அறிய ஆவலைத் தூண்டும் கருவி
ஸ்ரத்தா -முனைப்பு ஆர்வம்
அஸ்ரத்தா -ஆர்வம் இன்மை
த்ருதி -உறுதி
அத்ருதி –உறுதி இன்மை
ஹ்ரீஹீ –வெட்கம்
தீ -புத்தி
பீ -பயம் நாளை வரும் பிரதிகூலம் பற்றிய எண்ணம் -முன்பு நடந்தது போல் நடக்குமோ என்ற எண்ணமே பயம்

நல்ல சங்கல்பம் எடுத்து
ஸ்ரத்தையுடன் தொடங்கி
உறுதியுடன் இறைவனை அடைய
நம் மனம் துணை நிற்க அவன் அருளட்டும்

தேவ ஹூதி -ஒன்பது பெண்கள் -ரிஷிகளுக்கு கல்யாணம் பிள்ளையான கபிலர் இடம் ஸாஸ்த்ர அர்த்தம் கேட்க ஆசை
மோக்ஷம் அறிய ஆர்வம் -ஸ்ரத்தை -த்ருதி -கடைப்பிடித்து பேறு பெற்றாள்

ஸூஷ்மம் -பஞ்ச பூதங்களால் செய்யப் பட்ட சரீரம்
இயற்க்கை யெய்தல் காரியப் பொருள்கள் காரணத்தில் லயம் அடைதல்
இந்திரியங்கள் -பாஹ்ய- அந்தக் கரண -ஜீவன் உடனே சென்று மீண்டும் சேரும்

பிராகிருதம் -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள் உருவானவை-த்ரிகுண மயம் -ஜடப்பொருள் –

ஹ்ருதயம் வேறே மனஸ் வேறே

அறிவு நித்யம் அப்ராக்ருதம் -முக்குணங்கள் பீடிக்காததே ஞானத்துக்கு -உருவாக்கப்படாதது -புத்தி

மனம் மொழி வாக்கு -பிரதானம் மூன்றுமே –
காரண கார்ய பாவம் -சங்கிலி தங்கம் போல் -காரணம் பிரதானம் -நினைத்தால் தானே பேசவும் செய்யவும் முடியும்

ஆத்மா கர்மா- வாசனா- மனசில் பதிக்கும்-மோக்ஷ பந்த ஏக ஹேது -மனமே -முந்துற்ற நெஞ்சே -நெஞ்சமே நல்லை நல்லை –

கர்த்தா -பிரதம வேற்றுமை -ஆத்மா
காரணம் -ஆசையால் செய்கிறான்
காரியம் -நடை
கரணம் -ஆல் -இத்தால் -கருவி -கால்
நான்கும் அறிய வேண்டும்
மனம் நினைவுக்கு கருவி -காரணமாக ஆகுமோ -மனமே பந்த மோக்ஷ காரணம் சொல்லலாமோ

கர்த்தா தனது தலையில் ஏற்றுக் கொள்ளாமல் இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்

காமம் க்ரோதம் லோபம்  மோகம் மதம்  மாத்சர்யம்-அஸூயை-பொறாமை -மனதின் நிலைமைகள்

மயக்கம் ஸம்மோஹ-அஞ்ஞானத்தால் மனம் மயக்கம்
மனம் குழப்பம் -இதுவோ அதுவோ சந்தேகம்
தப்பானதை இது தான் முடிவு மன மயக்கம்
மயர்வு –
ஞானத்தால் மனத் தெளிவு —
மன அழுத்தம்-

மஹா கல்பம் தொடங்கி –இன்று வரை நம் மனம் அழியாமல் –
அடுத்தடுத்த பிறவியில் தொடர்கிறது
ஆனால் முன் பிறவிகளின் நினைவுகள் தொடராது
இறுதியில் அவன் அருளால் ஸ்ரீ வைகுந்தம் அடையும் போது தான் அப்ராக்ருதமான வேறு மனம் கிடைக்கும்
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து அருளுவான் –

இந்த்ரியங்களுக்குத் தலைவன் -மனம்
மனத்துக்குத் தலைவன் ஆத்மா
ஆத்மாவுக்குத் தலைவன் பரமாத்மா
அவன் அருளால் உட் புலனும் வெளிப்புலன்களும் சரியாக இயங்கட்டும்

மனஸ் த்ரவ்யம்-கண்ணுக்குத் தெரியாத ஓன்று -இருந்தாலும் நம்ப வேண்டும்
த்ரவ்யம் என்பது -அவஸ்தாச்ரயம் -வெவ்வேறே அவஸ்தைகளுக்கு இருப்பிடம்
விதை காய் பழம் போல் அவஸ்தைகள் மாறலாம்
விருப்பம் கோபம் பேராசை மயக்கம் ஆணவம் பொறாமை போன்ற தீட்ட அவஸ்தைகளையும்
அஹிம்ஸை ஸமத்வம் திருப்தி புலன் அடக்கம் போன்ற நல்ல அவஸ்தைகளையும் அடையும்

மனம் ப்ராக்ருதம் -அறிவற்ற ஓன்று
எனது மனம் சிந்திக்கிறது -விரும்புகிறது என்பது பொருந்தாது
ஆத்மாவின் செயல்களை இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
அறிவுக்கு இருப்பிடம் -ஆத்மா வாக்கிய வீட்டிலே தான்
மனஸ் வீட்டின் வாசல் தான்
கர்மத்தால் பாதிக்கப்பட்ட அறிவுப் -காமம் கோபம் போன்ற அழுக்குகளால் பாதிக்கப்பட்ட மனம்
நோயால் பாதிக்கப்பட்ட கண் போன்ற புலன்கள்
இவை ஒவ்வொன்றும் பொருளை பற்றிய உண்மை அறிவை ஏற்படுத்தாதே

ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட மத்தஸ் ஸ்ம்ருதி அபோஹநம் ச
நினைப்பதும் மறப்பதும்-அவனாலே தானே ஒழிய மனஸால் அல்லவே
மனம் வலிமையோடு இறைவனிடம் ஈடுபட்டு இருந்தால் அறிவும் நினைவும் வரும் -மறதி விலகும் –

யத் ஹி மனஸா த்யாயதி -தத் வாஸா வசதி
யத் வாஸா வததி -தத் கர்மணா கரோதி

மனஸ் ஏகம் வசஸ் ஏகம் கர்மண் ஏக்கம் மஹாத்மா நாம்
மனஸ் அந்யத் வசஸ் அந்யத் கர்மண் யன்யத் துராத்ம நாம்
முதலில் சிறிது சிந்தித்து -எதைச் செய்ய இயலுமோ அதை மட்டும் பேசி
எதைப் பேசினோமோ அதைப்பற்றி மட்டுமே தொடர்ந்து சிந்திக்க வேண்டும்
செய்ய இயலாததை பற்றித் தொடர்ந்து சிந்திக்கவோ பேசவோ கூடாது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுவோம்
இம்முறையை கடைப்பிடித்தால் பெருமானைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் நமக்கு நிறைய நேரம் கிட்டும்

கீழே மனசால் உயர்த்திக் கொள் -இங்கு மனசை வெல்வாய் -விஷயாந்தரங்களில் போகாமல் தடுப்பாய் என்கிறான்-அநாத்மா வெல்லப்படாத மனஸ் கொண்டவன் -புலன்கள் ஐந்தையும் வென்றிலேன் –அளப்பில் ஐம் புலன் அடக்கி -என் மனஸ் என்று கொள்ளாமல் பகவத் விஷயத்தைக் காட்டிக்கொடுக்கும் உபகரணம் என்று கொள்ள வேண்டுமே -ராமம் மே அனு கச்சதி-சக்ரவர்த்தி -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாவ

பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷

யேந –எந்த மனத்தினால்
ஆத்மா -தன் மனம்
ஆத்மநா ஏவ -தன்னாலேயே
ஜித -விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ
தஸ்ய ஆத்ம ந -அம் மனிதனுக்கு
ஆத்மா பந்துர் -அம் மனம் உறவினன் ஆகும்
ராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்மநஸ் து -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ என்னில்
ஆத்மா ஏவ -தன் மனமே
ஸத்ருவத்-தனது எதிரியைப் போலே
ஸத்ருத்வே -நன்மைக்குத் தடையாய் இருப்பதில்
வர்த்தேத —ஈடுபடும்

எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு
அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில்
தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்

பற்று அற்ற மனசே ஒருவனை உயர்த்தும் –மனசே மோக்ஷ பந்து ஏக காரணம் -பந்துவும் விரோதியும் -மனசே –
நெஞ்சை வென்றவன் -ஆத்ம சப்தம் ஜீவாத்மாவுக்கும் நெஞ்சுக்கும் -இந்த்ரியங்களில் பட்டி மேயாமல் –
ஒரே மனசே மித்ரனாகவும் விரோதியாகவும்
சங்கம் பற்று தானே காமம் க்ரோதம் -சுகம் துக்கம் காரணங்கள் ஆகும்

மனம் மொழி காயம் மூன்றிலும் முதலான மனமே ஏக பந்த மோக்ஷ ஹேது வாகும்

நமது அறிவுக்கு முக்குண பாதிப்பு கிடையாது
ஆனால் அறிவு மனம் வழியாகவே பயணிக்கிற படியால்
மனத்தில் உயர்ந்து இருக்கும் குணம் அறிவையும் பாதிக்கும் –

உடலும் மனமும் முக்குண வசப்பட்டு இருக்கும்
தேவனாகப் பிறந்த உடலில் சத்வகுணம் அதிகமாயும்
அசுரனுக்கு ரஜோ குணமும்
அரக்கனுக்கு தமோ குணமும்
மனிதர்க்கு மூன்றும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும்
மேலும்
க்ருத யுகத்தில் சத்வ குணமும்
த்ரேதா யுகத்தில் ரஜோ குணமும்
த்வாபர யுகத்தில் ரஜோ குண தமோ குணம் கலந்தும்
கலியுகத்தில் தமோ குணம் அதிகமாகவும் இருக்கும்
இவை பொது விதி
விதி விளக்குகள் -ப்ரஹ்லாதன் -ஜெயத்ரன் விபீஷணன் பாக்களில் பார்க்கிறோம்
மனத்தில் ஸத்வ குணத்தை வளர்க்க பெருமானைத் தியானித்தல் உதவும்
உடல் அளவில் இன்ன பிறவி எடுத்ததற்காக

பக்தியோ முக்தியோ கிடைக்காது என்று எந்த சாஸ்திரங்களும் சொல்ல வில்லை
மனத்தில் ஸத்வ குணம் வளர்ந்து பக்தி முற்றினால் யாருக்கும் முக்தி கிட்டும்

செய்யப்பட கர்மங்கள்
அதன் பதிவுகளாக வாஸனை
அதனால் மீண்டும் செய்யத் தூண்டும் ருசி
இவை தான் நாம் தொடர்ந்து பிறந்து கர்மங்களை செய்யக் காரணங்கள்

ஈஸ்வரன் ஆத்மாவுக்குள் கிடைக்கும் கர்ம வாஸனை ருசி ஆகியவற்றை மேல் எழுப்பி மனம் என்கிற திரையில் அதே ஆத்மாவுக்கு காட்டுகிறார்
ஆத்மச அவற்றைப் பார்த்து அதற்கு வசப்பட்டு நடக்கிறார்
அல்லது தனக்குள்ள புத்தியைப் பயன்படுத்தி அந்தக் காட்சிகளுக்கு வசப்படாமல்
அதைத் தாண்டி சாஸ்திரங்கள் காட்டும் நல்ல வழியில் நடக்கிறார்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணவே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்

இதனால் சிந்திக்கிறோம் -மனஸ்
இதனால் அறிகிறோம் -புத்தி -கட ஞானம் பட ஞானம் -போன்ற பலவற்றை அறிகிறோம்
ஒரே புத்தி பலவற்றை அறிகிறது –
ஞானம் வேறே ஸ்ம்ருதி வேறே -அறிந்தவற்றை ஸ்மரணம் பண்ணுகிறோம்

மன ஏவ ஹி மனுஷ்யா ணாம் காரணம் பந்த மோக்ஷயோ பந்தாய விஷயாங்கி முக்தியை நிர்விஷயம் மன –ஸ்ரீ விஷ்ணு புராணம்

நெஞ்சமே நல்லை நல்லை
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய்

மனத்தைக் காட்டிலும் வலியது நம் புத்தி
ஆத்மா தனது புத்தியால் மனத்தைத் திருத்த வேண்டும்
அல்லது
பகவான் இடம் சரணாகதி செய்து வேண்டினால் தான் வசிக்கும் இடமாகிய மனத்தை பகவானே தூய்மை ஆக்குவார்

அறிவில்லாத மனம் பந்த மோக்ஷ ஹேது வாகாதது-
உண்மையில் அறிவுள்ள ஆத்மாவே தான் காரணமாக இருந்தாலும் அதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
அநாதி காலம் ஆர்ஜித்த கர்மம் வாஸனை ருசி ஆகியவையே
காமம்
கோபம்
லோபம் என்னும் பேராசை
மோகம் -தர்ம அதர்ம விபாகம் அறியாமை
மதம் -கர்வம்
மாத்சர்யம் -பொறாமை
டம்பம் –
தர்ப்பம் -கர்த்தவ்ய -அகர்தவ்ய விபாகம் பண்ண முடியாமல் ஆக்கும் சிற்றின்ப ஸூகம்
பாருஷம் -சாதுக்களையும் வருத்தும் நம் காடின்யம்
இவை தான் மனத்தின் அழுக்குகள்
நாம் மெது மெதுவே மனத்தை பகவான் இடம் ஈடுபடுத்தி தியானித்தால்
அழுக்குகள் நீங்கி
புடம் போட்ட தங்கம் போல் மனம் தூய்மையாகும்
விடா முயற்சியால் அநாதிகாலம் தொடர்ந்து செய்யவே இந்த நிலையை அடைவோம்

தானம்
யாகம்
தூ மலர் தூவித்தொழும் அர்ச்சனை
சமம்
தமம்
அஹிம்சை
த்ருதி -நிச்சய புத்தி
தேஜஸ் -உறுதியான நிஷ்டை
இவற்றை நாம் படிப்படியாகக் கடைப்பிடித்து -பகவத் பிரீதி கார்யங்கள் செய்வதே
இந்த அழுக்குகள் நீக்கும் வழிகளாகும்

பேதை மனமே பேசு
முந்துற்ற நெஞ்சே
மட நெஞ்சே
நெஞ்சே நீயும் நானும் நேற் நிற்கில்
பகவத் ப்ரஸாதத்தாலேயே ஆத்மாவின் ஆணைக்கு உட்பட்டு நெஞ்சம் நல்ல காட்சிகளையே காட்டும்
ஸத்வ குணத்தாலேயே மனத்திரையைத் துடைத்து சுத்தமாக வைத்துக் கொண்டு
நல்ல காட்சிகளையே காட்டும்படி செய்வோம்

மன மயக்கம் -அறிவுக் கோளாறு -தீருவதற்கு
உண்மை அறிவும்
மனத்தின் ஸத்வ குணமும் தேவை
ஆன்றோர்கள் அறிவுரைகளைக் கேட்டுத் தெளிவு படுத்திக்க கொள்ள வேண்டும்

மன அழுத்தம் அறிவின்மையாலே வரும்
உண்மை அரிவாள் விலகும்

ஆதி -மன நோய்
வியாதி -உடல் நோய்
லங்கநம் பரம ஒவ்ஷதம் –inter mittent fasting
கீழா நெல்லி கரிசலாங்கண்ணி ஏலக்காய் தேன் மிளகு வேப்பிலை மணத்தக்காளி சுண்டைக்காய் துளசி
போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து ஆரோக்யம் கொடுக்கும்
ருஷ்ட்டிக்கல் காற்றையும் நீரையும் மட்டும் புஜித்து -அதன் மூலம் சக்தி பெற்று நீண்ட காலம் நல் வாழ்வு வாழ்ந்தார்கள்

வயதாக உடல் உறுப்புக்கள் வலிமை இழக்கும்
மனமோ அனுபவத்தால் பக்குவம் அடைந்து வலுவடையும் –
மன வலிமையால் உடல் நோயை எதிர்த்து நீக்கலாம்

சோக ஸ்தாநே ஸஹஸ்ராணி பய ஸ்தாந ஸதாநி ச
திவஸே திவஸே மூடம் ஆவிசந்தி ந பண்டிதம் –மஹா பாரத ஸ்லோகம்
விவேக ஞானமும் பக்தியும் மனத்தெளிவை உண்டாக்கும்
ஸ்ரீ மத் பாகவதத்தில் -புரஞ்சந உபாக்யானத்தில்
ஜரா என்னும் பெண் ம்ருத்யு என்னும் ஆணை மணம் புரிய வேண்டுகிறாள்
அதை ஏற்காமல் ம்ருத்யு தன் தம்பியான ப்ரஜ்வாரனையும் தன் ஸேனையையும்
ஜாராவுக்குத் துணையாக மனிதற்குத் துன்பம் விளைவிக்க அனுப்புகிறார்
மூப்பைத் தடுக்க முடியாவிட்டாலும் மூப்புக்குத் துணையான உடல் நோயைக் கட்டுப்படுத்தி
மன நோயை நீக்கி ஆரோக்யமாக வாழ வேண்டும் என்பதையே இது காட்டும்

மானஸ ஸ்நாநம்
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கருவினை களைந்தடுகிற்கும்
த்ரிவிக்ரம பாதாரவிந்த தீர்த்தம் மம பஹிரந்தச் ஸூத்தி கரம்

யஜ தேவ பூஜாயாம்
ராத்ரு ப்ரீணன -தாதுப்படி திரு வாராதனமே பகவத் ப்ரீதி யர்த்தம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்துக் கைகளால் தூ மலர் தூவித் தொழுது –
இவ்வாறு மனம் மொழி மெய் ஆகிய முக்கரணங்களாலும் ஈடுபட்டு திருவாராதனம் செய்ய வேண்டும்
108 திவ்ய தேசப்பெருமாள்களையும் மானஸீகமாக எழுந்து அருளப் பண்ணி முக்கரணங்களாலும் ஈடுபட்டு
திருவாராதனம் செய்ய வேண்டும்

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
பரமாபதம் ஆ பன்ன மனஸா சிந்த யேத் ஹரிம் –
கத்யர்த்த புத்த்யர்த்தம்
மானஸ சரணாகதி கண்டிப்பாகப் பலிக்கும்
பகவானையே நம்பும் அறிவும்
அவனையே நினைக்கும் மனமுமே
சரணாகதிக்குத் தேவை

ஜீவ காருண்யம் ஸத்யம் நேர்மை புலன் அடக்கம் -போன்ற உள் அடையாளங்கள் தான் முக்கியம்
வெளி அடையாளங்களும் வேண்டும்
கல்வியும் செயல்பாடும் வேண்டுமே
குதிரையும் வேண்டும் -கடிவாளம் சோணம் -ஆகியவையும் வேண்டுமே
கற்கக் கசடற –கற்றபின் நிற்க அதற்குத் தக

 

(கைங்கர்யம் பண்ணப் பண்ண
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
சுமந்து –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
பெரும் பலன்களைப் பட்டியல் இடுகிறார்
மனம் மாசு அஞ்ஞானம் -காம க்ரிதாதிகள் போகும்
தீரா வினைகள் கிட்டாவே
பக்திச் செல்வம் தானாகவே வந்து சேரும்
கைங்கர்ய ரூபம் -சாதனமாக அல்ல )

பிராட்டிமார் அடியாக அவனைப் பற்றினார்க்கு போகத்தில் பிரதிபந்தகங்கள் போக வேணும் என்றும்
பக்த்யாதிகள் உண்டாக வேணும் என்றும் இவர்களுக்கு கரைய வேண்டா -என்கிறது –

திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –
பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

மனமாசு  தீரும் –மனஸ்ஸூ க்கு மாசாகிறது -ருசி வாசனைகள் -(வாசனை விட ருசி பிரபலம் )
அரு வினையும் சாரா–அவித்யாதி கர்மங்கள் (பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் )அணையா
தனமாய தானே கை கூடும் -இப்படியான அதிகாரிக்கு தனமான கைங்கர்ய பூர்வ பாவியான பக்த்யாதிகள் தானே யுண்டாம்

(குலம் தரும் செல்வம் தந்திடும் -கைங்கர்யம் பண்ண ருசி பக்தி வேண்டுமே -அது தானே உண்டாகும்)
புனமேய-பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி-
தாம் தொழா நிற்பார் தமர் —தமரானவர்கள் சர்வேஸ்வரன் திருவடிகளிலே தாங்களே தொழா நிற்பர்கள் –
இவர்களுக்கு அவனுடைய திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு தொழுவது அவனை அனுபவிக்கையிலே அந்வயம் –

(இவை சாதனம் அல்லவே
சூட்டு நன் மாலைகள் -அங்கு போல் இங்கும்
சாதனம் ஆக்குவது உபாயாந்தர பரர்கள் )

திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் -அவித்யாதிகள் போனார்க்கு வரும் தனம்-(பரபக்த்யாதிகள் -போஜனத்துக்கு சுத்தி போல் இவை )
அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –பூந்துழாயான் அடிக்கே–குடிக்கிற வேப்பங்குடி நீர் -போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் –இவன் வகுத்தது செய்ய அவன் வகுத்தது செய்யாது ஒழியுமோ –

(செல்வச் சிறுமீர்காள் -அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –நாகவர ஸ்ரீ மான் -ஈஸ்வரனே ரக்ஷகன் என்ற நினைவே -லஷ்மணோ லஷ்மீ சம்பந்தம்)

(நீ செய்ய வேண்டியத்தைச் செய்தால் -ஸ்வ தந்த்ரனாக நினைத்த்தால் சாதனம் ஆகுமே
நீ -அத்யந்த பரதந்த்ரனாக அறிந்து -ப்ராப்யத்தில் அன்வயித்து கைங்கர்யம்
ஸ்வாமி தனது கார்யம் உடைமைக்குச் செய்ய சொல்ல வேண்டுமோ)

(சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திரு விருத்தம் -20-
அதை இங்கேயே இவ்வு டம்புடனே இக்காலத்திலேயே
செய்யுமவர்கள் -விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -70-
ஸ்வரூப அனுரூபமான தனமாவது பரபக்தி பரஞானம் பரமபக்திகள் –
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் யுத்த -16-17-
ச து நாக வர ஸ்ரீ மான்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால-18-20-)

இதில் மன மாசு -அவித்யாதிகள் தொலைந்தாலும் -இவற்றுக்குக் காரணமான கர்மங்கள் இருக்கும் வரை மீண்டும் மேலைக்குமே
ஆகவே அரு வினையும் சாரா -கர்மங்கள் வாஸனை ருசி -போன்றவையும்
பகவத் ப்ரஸாதத்தாலேயே தொலைய வேண்டும்
தடங்கலான கர்மங்களும் -அதனால் வந்த மன மாசும் தீர்த்ந்தால் தானே தனமாயவை கைகூடும்
தனமாய் -ஆத்ம ஞானம் பக்தி போன்றவையும் அவற்றுக்குக் காரணமான புலன் அடக்கம் சாந்தி போன்ற நற் குணங்களும்
இவை தானே கைகூடும் என்பதால் நமது முயற்சி இல்லாமல் பகவத் ப்ரஸாதத்தாலேயே கிட்டும்
பகவத் ஆராதனம்
ஸாது சங்கம்
வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள்
இவற்றை விடாமல் அனுஷ்ட்டிக்க மனமாசு தீரும்
மற்றனைத்துத் தோஷங்களும் நீங்கும்

இந்திரியாணி மநோ புத்தி அஸ்ய அதிஷ்டானம் உச்யதே
ஏதை விமோஹ யத் யேஷ ஞானமும் ஆவ்ருத்ய தேஹினம்

கர்மங்கள் முக்குணங்களைக் கூட்டும்
ரஜோ குணம் காமத்தைக் கூட்டும்
காமம் புலன்கள் மனம் புத்தி ஆகியவற்றைப் பீடித்து அறிவை மறைக்கும்
இவற்றுக்கு மாற்று பகவத் காமமே
இதற்காகவே கோயில்களில் நம்மைச் சூழ்ந்து அழகைக் காட்டி ஈர்க்கிறான்

யத் அக்நி உத்தத சிகஸ் கஷம் தஹதி ஸாநில ததா சித்தஸ்திதோ விஷ்ணு யோகிநாம் ஸர்வ கில்பிஷம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-7-4

ப்ரஹதாரண்யமும் -ஸ்ரவணம் மனனம் -த்யானம் -மூலம் சாஷாத்காரம் பெறலாம்
என்பவற்றைச் சொன்னாலும் எளிதாக

ஞான அக்னி தத்த கர்மாணாம் தமாஹ
எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹமே ஸூ பாஸ்ரயம்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் —
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்

ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம்
தன் பால் ஆதாரம் பெறுக வைப்பதும் அவனது அழகே

ஜாக்ரத்–விழித்து இருக்கும் முதல் நிலை –வெளிப்புலன்களும் மனமும் இயங்கும்
ஸ்வப்னம்
ஸூ ஷுப்தி -கனவைத் தாண்டி ஆழ்ந்த உறக்கம்
துரீயம்

பாலஸ் தாவத் க்ரீடா ஸக்த தருண ஸ்தாவத் தருணீ சக்த
வ்ருத்தஸ் தாவத் சிந்தா சக்த பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த
சிறுவன் விளையாட்டிலும் இளைய நிலையில் பெண்கள் இடமும்
கிழவனாய் வீணான கவலைகளிலும் ஈடுபட்டு பர ப்ரஹ்மத்திடம் ஈடுபடாமல் உள்ளார்கள்

ஆனாது மாயயா ஸூஅஸ்வப்னம் அத்வைதம் புத்யதே ததா –மாண்டூக்ய காரிகை
ஆத்மா உறங்காமல் அறிவு மலர்ந்தே இருந்து மனமும் உறங்காமல்
விழிப்போடு பெருமான் நினைவாகவே இருக்கும்

நமது கர்மங்களின் படியே கனவுக்காட்சிகளும்
புண்ணியத்தின் பலனாக இன்பக்காட்சிகளையும்
பாவத்தின் பலனாக துன்பக்காட்சிகையும்
கண்பாவில் எம்பெருமான் காட்டு அருளுகிறார்
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து தொடங்கி
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் -பத்துப்பாசுரங்களையும் பாடி அருளுகிறார் நாச்சியார்
கனவுகளைக் காணும் போதும் நமது கர்மங்களைத் தொலைக்கும் கருணை -இவை தான் பெருமானின் பெருமை –
ஸூ ஷுப்தி நிலையில் வெளிப்புலன்களும் மனமும் செயல் அற்று உறங்கி விடும்
மனம் ஜீவனின் வசத்தில் இருக்காது
ஆத்மா ப்ரஹ்மத்துடன் கூடி அனுபவிப்பார்
உத்ஸாஹம் மற்றும் சக்தியின் இருப்பிடம் பகவான்
அவனுடன் கூடுகிற படியால் ஜீவனும் சக்தியைப் பெறுகிறான்

துரீய தசை -மரண தசை –
ஆத்மா அநாதி கால கர்மாக்கள் பூத ஸூஷ்மங்கள் -மனம் ஆகியவை அவருடன் அடுத்த பிறவி அடையும்
கர்ப்ப கதி
யாம்ய கதி
தூமாதி கதி
அர்ச்சிராதி கதி

மாளும் ஒர் இடத்திலும் வணக்கொடு மாள்வது நலமே
அஹம் ஸ்மராமி மத் பக்தன் நயாமி பரமாம் கதிம்

ஆஹார நித்ரா பய மைதூ நாதி துல்யானி கல்வத்ர ஸமஸ்த ஐந்தோ
ஞானாத் விஸிஷ்டோ ஹி நர பரேப்ய ஞாநேந ஹீந பசுபி ஸமாந -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்
கஜேந்திரன் ஜடாயு திருவடி -பிறவி எப்படி இருந்தாலும் முன் பிறவியில் செய்த புண்ய பலத்தால் ஸ்ரேஷ்டர்கள் ஆனார்கள்

உன்னுடைய விக்கிரமன் ஓன்று ஒழியாமல் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

சாளக்கிராமம் அடை நெஞ்சே

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான்

நல்ல நெஞ்சே நாம் தொழுதும்

இன்புருகு சிந்தை இது திரியா

முந்துற்ற நெஞ்சே

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே

ஆகிலும் கொடிய என் நெஞ்சு அவன் என்றே கிடைக்கும் எல்லே

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என்ன செய்யோம் இனி என் குறைவினம்

இத்தகைய அருளிச் செயல்களை நினைந்து இருந்தே நம்முடைய நெஞ்சமும் நல் வழிப்பட்டு பெருமான் பின்னேயே செல்லட்டும்

ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்த –வீட்டில் இருந்த போதே ஸந்நியாசியாகலாமே

ரமணீயம் ப்ரஸன்னாம்பு ஸந் மனுஷ்ய மநோ யதா –
தமஸா ஆற்று நீர்
அஹிம்சை இரக்கம் அடக்கம் சாந்தி ஆகியவை நிரம்பி உள்ள
மஹான்களின் உள்ளம் போல் தெளிந்து உள்ளது –

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

கேவலம் ஸ்வ இச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன

நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து

ஸுஹார்த்தம் -சோபனம் ஹ்ருதயம்

ஸுஹார்த்தம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திக்கு ருச்சதி –5-29-

உதாரண ஸர்வ ஏவைதே ஞானீத்வாத் மைவ மே மதம் –7-18-

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா பிரயச்சதி–9-26-

ஆத்மாநம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மநஸ் ப்ரக்ரஹ வான் நர –கட உபநிஷத்
உடல் ஒரு தேர்
ஆத்மா தேருக்கு உடையவன்
புலன்கள் குதிரைகள்
புத்தி உறுதி தேரோட்டி
மனம் கடிவாளம்
ஆத்மாவின் விருப்பட்டியே உடலும் புலன்களும் செயல்பட வேண்டும்
அதற்கு ஒரே வழி பார்த்த சாரதி எம்பெருமான் இடத்திலே தேரை ஒப்படைப்பது தானே –

சஞ்சலம் ஹி மநஸ் கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம்

அப்யாஸமும் வைராக்கியமும் தேவை
காந்தம் இரும்பை இழுப்பது போல் ஸ்ரீ காந்தன் இரும்பு போல் வலிய நெஞ்சை தன் பால் ஈர்த்து அருளுவார்

திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் –உறையும் பிரான் –8-6-2-

அரவத்தமளியினோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்தான்

என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேடன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் ஏன் நெஞ்சுளே

இளம் கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டி இருக்கும்

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி
ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்தத்திற் பின் வணங்கும் சிந்தனைக்கு இனியாய்

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற என் மனதுக்கு இனியான்

நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே

என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்

சேஷியாய் இருந்துள்ள உன்னை உணர பிரதிபந்தகம் எல்லாம் போம் என்கிறது –

இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

பதவுரை

திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு-உன்னிப்பதுக்கு மேல் த்யானம்
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.

அநிஷ்டம் தொலையப் பெற்று இஷ்ட பிராப்தியும் பெறுவார்கள்

காப்புன்னைக்  யுன்னக் கழியும் –உன்னை உணர -காப்பு -காவல் -தேவதைகள் -கழியும் -( ஆதித்ய சந்திரன் பகல் இரவு அபிமான தெய்வங்கள் தர்மம் –14 தேவதைகள் )
காப்பு என்கிறது -ஈஸ்வரனுக்குப் புரவர் போலே இவ் வாத்மாக்கள் செய்த கர்மங்களை ஆராயக் கடவரான
சந்த்ராதித்யர்கள் தொடக்கமான பதினாலு பேருடைய சிறைகள் -கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி -(பெருமானுக்கு வஸ்யமானால் -யம தர்மராஜன் மது ஸூதன ப்ரப்ருதிகளை ப்ரபு என்றே கொள்வான் -இது உப லக்ஷணம் மற்ற தெய்வங்களுக்கு )
அரு வினைகள்-ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் –அக் காப்புக்கு அடியான அவித்யாதிகளால் யுண்டான பந்தம் உன்னை நினைக்க நெகிழும் –
மூப்புன்னைச்-சிந்திப்பார்க்கு இல்லை –காப்பும் அருவினைகளும் போன அதிகாரிகளுக்கு –மூப்பாவது -கைவல்யம் –
அன்றியே -ஷட்பாவ விகாரங்களுக்கும் உப லக்ஷணம் ஆகவுமாம்
திரு மாலே –ஈஸ்வரன் ஸ்வ தந்தர்யத்தாலே ஆராயப் புக்காலும் பிராயச்சித்த சாத்தியம் அல்லாத பாபம்
நாம் பொறுக்கும் அத்தனை அன்றோ என்று உணர்த்துவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது
தாசீ நாம் ராவண ஸ்யாஹம் மர்ஷய மீஹ துர்பலா —-ராஜ சம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞ்ஞயா –என்கிறபடியே
நின்னடியை-வந்திப்பார் காண்பர் வழி  ——–உன் திருவடிகளிலே விழுவார்கள் நல்ல வழி காண்பர் –
வழி -என்று அர்ச்சிராதி கதி என்றுமாம் -பரமபதம் போலே பரமபதத்துக்கு போம் வழி –நரகம் போலே பொல்லாதாய் இருக்கும் நரகத்துக்கு போம் வழி —
பிரபு –அந்யந்ருணாம் நவைஷ்ணவாணாம் தே வர்ஷி –இத்யாதி –(நாராயணனுக்கு அடிமைப் பட்டவன் தேவ ரிஷி பித்ரு கடன்களில் இருந்து மீட்கப்படுகிறான் )
அருவினை -அவித்யாதிகளால் பிறக்கும் புண்ய பாபங்கள் -சாரீரமான மூப்பு –
திருமாலே -யுவா குமாரா -யுவ திஸ்ஸ குமாரிணீ-(ருக் வேதம் )என்கிற உங்களை ஆஸ்ரயித்ததால் உங்களைப் போலே
பரமம் சாம்யம் உபைதி இறே -(திரு மாலைப் போலவே யுவா குமாரராயே இருப்பார் அன்றோ )–வந்தியாதார்க்கு முள்ளும் முடுக்குமான வழி —

(ஆதித்ய சந்த்ர அவநிலோ அநலஸ் ச த்யவ்ர் பூமிர் ஆபோ ஹ்ருதயம் யமஸ் ச
அஹஸ் ச ராத்ரிஸ் ச உபே ச ஸந்த்யே தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம் –14 தேவதைகளும் சாக்ஷி-

ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-

கமல நயன வாஸூ தேவ விஷ்ணோ தரணி தர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரண மிதீர யந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான் –3-7-33-

தேவர் ரிஷி பூதாப்த்த ந்ரூணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மநா யஸ் சரணம் சரண்யம்
நாராயணம் லோக குரும் ப்ரபந்ந -பாகவதம் –11-5-41-)

மூப்பு -ஷட் விகாரங்களுக்கும் உப லக்ஷணம்
அஸ்தி -உளனாவது -ஜாயதே -பிறக்கிறான் -பரிணமதே-மாறுதல் அடைகிறான் -விவர்த்ததே -வளர்ச்சி அடைகிறான் -அபஷீயதே -கிழவன் ஆகிறான் -விநஸ்யதி -மரணம் அடைகிறான்

யுவா குமாரா –யுவதிஸ் ச குமாரிணீ -தங்களை ஓக்க அருள் செய்யும் மிதுனம் –
வழி காண்பர் -இவ்வுலகில் நல் வழி நடத்தை செய்வார் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் சென்று
பரம புருஷார்த்த ரூபமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் பெறுவர்

மன மாசு தீர்வதோடு அல்லாமல் மூப்பு கொடிய வினைகள் ஆகியவையும்
பகவானை மனத்தினால் நினைத்து இருத்தினால் கழியுமே

போதில் கமலா வன்னெஞ்சம் புகுந்து என்னுள்ளே ஏதங்கள் ஆயின வெல்லாம் இறங்க விடுவித்து

எப்பொழுதும் எதிராசர் வடிவு அழகு என் இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர்

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வந்து உனது அடிப்போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி –

ஆத்மா குத்து விளக்கு
தர்மபூத ஞானம் அதன் வெளிச்சம்
மனம் இதய வாசல் -திரையும் அதுவே
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து

ஆச்சார்யர்கள் காட்டிய வழியில் மனத்தை உள்ளே இருக்கும் திருமாலை நோக்கித் திருப்பி
தியானித்து அச்சம் கவலை முதலிய அழுக்கு நீக்கி
தூய மனதில் அவரை ஆனந்தமாக எழுந்து அருளி இருக்கச் செய்வதே மனமன் படைத்த பயன்

முக்தி மோஷோ மஹா ஆனந்த -இன்பமே உருவான பரமபுருஷார்த்தம் பெற மனதார பகவானைப் பிராத்திப்போம்

——————————————————-—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒப்பிலியப்பன் – திருவோண விரதம்–நல் வாழ்வருளும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ திருத் தலங்கள்

May 16, 2023

ஸ்ரீ  மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.

துளசி, ஸ்ரீ மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள் தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போது தான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்த வாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.

தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பது தான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற் கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.

அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்து கொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக் கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.

மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற் கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.

எல்லாம் கூடி வந்ததை, இதை யெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக் குடந்தை மலர்க் காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மண முடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளி வீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.

துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்து விட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.

பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார் முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப் பருவம் எய்திய போது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!

மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’

அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.

‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக் கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.

‘‘நீ உன் பெண்ணை எனக்கு மண முடித்துக் கொடுக்க வில்லை யானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!

இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹா விஷ்ணு தோன்றினார். பூமி தேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போது தான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.

உப்பிடப் படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவை தான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன் தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத் தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டு வரக் கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!

நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே– என்கிறார்

அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவ சர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்து கொள்ள முயன்ற போது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.

அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும் வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வ லவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீ ப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.

மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் எம்பெருமானாருக்கு உரிய திருவாதிரை மற்றும் எம்பெருமானுக்கு உரிய  திருவோணம் இவ் விரண்டு நட்சத்திரங்கள் தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.

—————–

நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்

திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக் கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள் பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில் தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.

திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்

திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.

‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.

வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.

தேவர் மலை அழகிய சிங்கர்

கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத் தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.

கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் இத்திருத் தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.

வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றி மலை கோயில்களை சேவித்து விட்டு தேவர்மலை கதிர் நரசிங்கப் பெருமாளைச் சேவித்து விடலாம்.

சிந்தலவாடி

திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.

வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.

தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.

வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.

வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)

ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.

இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.

வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.

கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்

அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.

வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப் பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.

கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்

மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்று விடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.

விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸ ராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண் முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.

வழி: கும்பகோணம் நகரில் காவிரிக் கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப் பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.

அரியலூர்

அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.

வழி: அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

திருக்குறையலூர்
உக்கிர நரசிம்மப் பெருமாள்

வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்ட மதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.

வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.

திருவாலி லட்சுமி நரசிம்மர்

தூவிரிய மலருழக்கிக் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே (பெரிய திருமொழி 3-6-1)

திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட பாசுரத்தைப் பேசித் துதிக்கும் போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத் தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத் துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.

வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.

வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.

மங்கை மடம் அழகிய சிங்கர்

திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும் போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கடலங்குடி

திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.

வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.

முகாசாபரூர்

திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.

இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.

வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.

வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி- ரயில்- பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயண–ஸ்ரீ அச்யுதன் -ஸ்ரீ அநந்தன் -ஸ்ரீ கோவிந்தன் -திரு நாம வைபவங்கள் —

May 11, 2023

“நாராயண பரா வேதா தேவா நாராயணாங்கஜா: |
நாராயண பரா லோகா நாராயண பரா யாகா : |!”

[வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை; தேவர்கள்‌ 
நாராயணனுடைய அங்கத்திலிருந்து உண்டானவர்கள்‌; 
உலகங்களும்‌ நாராயணனையே பற்றியிருப்பவை; யாகங்களும்‌ 
நாராயணனையே ஆராதீப்பவை.] என்னும்‌, 

நாபிர்‌ போக்‌ நிர்‌ முகமம்பு, ரேதோத்‌,யெள: ஸீர்ஷமாமமா: ம்ருதிரங்க்‌,ரிருர்வீ | 
சந்த்‌ரோ மகோ யஸ்ய த்ருகள்க்க ஆத்மா ஹ்யஹம்‌ ஸமுத்‌,ரோ ஜடம்‌ பு,ஜேந்த்பா: ॥ 
ரோமாணி யஸ்யெளவத,யோம்பு,வாஹா: கேமரா விரிஞ்சோ தி,ஷணா விஸர்க்க;: | 
ப்ரஜாபதிர்‌ ஹ்ருதயம்‌ யஸ்ய தர்ம: ஸ வை பவார்‌ புருஷோ லோககல்ப: ||
 
[நாபியே ஆகாசம்‌; அக்நி முகம்‌; ஜலம்‌ ரேதஸ்‌, ஸ்வர்க்கம்‌ 
தலை: திக்குகளே செவிகள்‌; திருவடிகள்‌ பூமி; சந்த்ரன்‌ 
மனஸ்‌. ஸூர்யன்‌ கண்‌; அஹங்காரம்‌ சிவனாகிய நானே; 
சமுத்திரம்‌ வயிறு; இந்திரன்‌ புஜங்கள்‌; ` ஓஷதிகள்‌ 
ரோமங்கள்‌; மேகங்கள்‌ தலைமயிர்‌; பிரமனே புத்தி; பிரஜா 
பதியே ஆண்குறி; தர்மமே ஹ்ருதயம்‌; (இப்படிப்பட்ட) 
நீரே உலகத்தை சரீரமாகக்கொண்ட விராட் புருஷனாக நீர்‌. ] 
என்றும்‌ ஸ்ரீபாகவதத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. 

“ஜ்யோதிம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணு: விஷ்ணுர்‌ கிரயோ திலுமச | 
நத்‌,யஸ்‌ ஸமுத்‌,ராமச௪ச ஸ ஏவ ஸர்பம்‌ யத,ஸ்தி யந்நாஸ்தி ௪ விப்ரவர்ய |!” 
[விப்ர ஸ்ரேஷ்டரே! சந்திரன் முகலிய சோதிகளும்‌ 
விஷ்ணுவே; உலகங்களும்‌ விஷ்ணுவே; வனங்களும்‌, மலை 
களும்‌. திசைகளும்‌ விஷ்ணுவே. நதிகளும்‌, சமுக்திரங்களும்‌. 
விகாரமடைபவையும்‌,  விகாரமடையாதவையும்‌ ஆகிய எல்லாம்‌ ௮வனே.] என்றும்‌. 

“ஸர்வ ரத்ன மயோ மேரு: ஸர்வாங்சர்யமயம்‌ நப: | 
ஸர்வதீர்த்தமமி க,ங்கள ஸர்வ தேவ மயோ ஹரி: |." 
[மேருமலை ஸர்வ ரத்னங்களையும்‌ கொண்டது; ஆகாசம்‌ எல்லா 
ஆச்சரியங்களையும்‌ உடையது; கங்கை ஸர்வதிர்த்தமய 
மானது; ஹரி எல்லா கேவதைகளையும்‌ சரிரமாகக்‌ 
கொண்டவர்‌.  என்றும்‌ பராசர செளனகாதி ரிஷிகள்‌  சொல்லியிருக்கிறார்கள்‌. 

“ஸு ஆத்மா அங்கங்ளந் யந்யர தேவதா: `` [அந்தப்‌ பரம 
புருஷன்‌ ( எல்லாருக்கும்‌ ) ஆத்மாவாயிருக்கிறான்‌; மற்ற 
தெய்வங்கள்‌ அங்கங்களாகின்‌றனர்‌.] என்று வேதமும்‌  விளம்பிற்று. 

ஸ்ரீமந் நாராயணனே பரமாத்மாவென்றும்‌, 
மற்றவர்களெல்லாராம்‌ அவனுக்கு சரீரபூதர்களான ஜீவர்‌ 
களே என்றும்‌ ஸகல ஸாஸ்த்ரங்களும்‌ கோஷிக்கின்‌றன. 

இதையே பாரரரீரக மீமாம்ஸாமாஸ்த்ரமும்‌ உத்கோஷிக்கறது. 

தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர சரிரங்களிலிருக்கும்‌ ஆத்மாக்களை 
யெல்லாம்‌ தரிப்பவன்‌ தாமோதரனே; நியமிப்பவன்‌ 
நாராயணனே; ஸ்வாமியாயிருப்பவன்‌ ஸ்ரீதரனே. இப்படி 
ஜீவ பரர்கள்‌ ஒருவரை யொருவர்‌ பிரித்துப்‌ பார்க்கமுடி 
யாத படி ஒன்று சேர்ந்திருப்பதினால்‌ ஜீவாத்‌மாக்களைச்‌ 
சொல்லும்‌ பதங்களெல்லாம்‌ அபர்யவஸாய வ்ருத்‌தி யினால்‌ 
அந்தர்யாமி பகவான்‌ வரையிலும்‌ குறிக்கும்‌. 
இவ்விஷயங்களை 
“ய ஆத்மநி திஷ்ட்டந் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத, 
யஸ்ய மாத்மா சரீரம்‌ ய ஆத்மா ந வேத அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத்‌: |!"
[எவன்‌ ஆத்மாவிலிருந்து கொண்டு , எவனை ஆத்மா அறிய 
வில்லையோ. எவனுக்கு ஆத்மா சரீரமோ , எவன்‌ ஆத்மாவை 
உள்ளிருந்துகொண்டு நியமிக்கிறானோ. அழிவற்றவனான 
அவனே உனக்கும்‌ ஆத்மாவாகவும்‌. உள்ளிருந்து நியமிப்ப 
வனாகவுமிருக்கிறான்‌.] என்றும்‌. 
ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகே நாராயண:'' [பரம 
பதத்திலிருக்கும்‌ இந்த நாராயணன்‌ ஒருவனே, தோஷ 
மற்றவனாகவும்‌ எல்லா ஜீவராசிகளுக்கும்‌ அந்தராத்மாவாக 
வும்‌ விளங்குகிறான்‌. ] என்றும்‌. 
“யஸ்ய ப்ருதிீவீ மமரீரம்‌ ய: ப்ருதி,வீமந்தரே ஸஞ்சரர்‌ யம்‌ ப்ருதி,வீ ' வேத,--எவனுக்கு 
பூமி இத்யாதிகள் சரீரமோ , எவன்‌ பூமியினுள்‌ ஸஞ்சரித்துக்கொண்டி 
ருக்கிறானோ. . எவனை பூமியானது ௮றியவில்லையோ--என்றும்‌. -
அந்த: ப்ரவிஷ்ட: மராஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா'' 
[ஸர்வாந்தர்யாமியான நாராயணன்‌ ஜனங்களை உள்‌ 
நுழைந்து நியமிக்கிறான்‌.] என்றும்‌, 
“ அந்தர்‌ பஹிஸ்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: " [நாராயணன்‌ 
அவையெல்லா வற்றையும்‌ உள்ளும்‌, புறமும்‌ வியாபித்து 
நிற்கிறான்‌.] என்றும்‌. 
ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்‌,ர:  ஸோஃக்ஷர: பரம: ஸவராட்‌ "` --அவனே பிரமனுக்கும்‌. சிவ 
னுக்கும்‌, இந்திரனுக்கும்‌. அழிவற்றவனும்‌. கர்மவசப்படாத 
வனும்‌, மேலானவனுமான முக்காத்மாவுக்கும்‌ அந்தர்யாமி,--என்றும்‌. 
பல பல வாக்யங்களில்‌ வேதம்‌ விளக்கிற்று. 

எல்லாப்‌ பொருள்களுக்கும்‌  அந்தர்யாமியாயிருப்பதால்‌ 
ஸ்ரீமந் நாராயணன்‌ ஸர்வ ஸப்த வாஸயனாயிருக்கறான்‌ என்று 
ஆசார்யர்களும்‌ நிர்வஹித்திருக்கிறார்கள்‌. 

இப்படிப்பட்ட ஸ்ரீமந் நாராயணனை அடைவதற்கு பக்தி 
ரூபமான ஜ்ஞாநமே ஸாதநமென்பதை “'தமேவம்‌ வித்‌வான்‌ 
அம்ருத இஹ ப,வதி'' [அவனை இம்மாதிரி அறிபவன்‌ இந்த 
ஜன்‌மத்திலேயே மோக்ஷம்‌ அடைகிறான்‌.] என்றும்‌. 
“யோ வேத, நிஹிதம்‌ கு,ஹாயாம்‌ பரமே வ்யேரமந்‌। ஸோூஸ்நுதே 
ஸர்வாந்‌ காமாக்‌ ஸஹ ப்‌,ரஹ்மணா விபம்சிநேதி |” [ஹ்ருதய 
குலையிலிருக்கும்‌ பரமாத்மாவை எவன்‌ அறிகி றானோ, 
அவன்‌ பரமபதத்தில்‌ ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ அவ 
னுடைய கல்யாண குணங்கள்‌ எல்லாவற்றையும்‌ அநுபவிக்‌ 
கிறான்‌.] என்றும்‌ வேத வாக்யங்கள்‌ விளக்குகின்‌றன. 
ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களிலும்‌. இந்த விஷயமே பிரஸித்தப்படுத்தப்பட்டிருக்கிறது. 
“அநந்யாம்‌ சிந்தயந்தோ மாம்‌ யே ஜரா: பர்யுபாஸதே | 
தேஷாம்‌ நித்யாபி,யுக்தாநாம்‌ யோக,க்ஷேம்‌ வஹாம்யஹம்‌।।”' 
[மற்ற எதையும்‌ நினையாதவர்களாய்‌. என்னையே எந்த 
ஜனங்கள்‌ உபாஸிக்கிறார்களோ , எப்போதும்‌ என்னுடன்‌ 
சேர்ந்திருக்கையை விரும்பும்‌ அவர்களுடைய யோக 
ஷேமத்தை நான்‌ வஹிக்கறேன்‌.] என்றும்‌, 

“விசார்ய ச புராணார்த்த,ாம்‌ ஸவேதரநாத்மடி ஸ்திதம்‌ । 
விஷ்ணும்‌ ஸத,ா ஹ்ருதி, த்‌,யாயேத்‌ ஸம்ஸாராக,விமுக்தயே।/”' 
[வேதங்களுடன்‌ கூடிய புராணங்களின்‌ பொருள்களை 
விசாரித்து. ஆத்மாவினாள்ளிருக்கும்‌ விஷ்ணுவை. ஸம்ஸார 
பாபங்கள்‌ நீங்குவதற்காக எப்போதும்‌ ஹ்ருதயத்தினுள்‌ தியானிக்கவேண்டும்‌.] என்றும்‌, 

“ஆலோட்‌,ம ஸர்வமாஸ்த்ராணி விசார்ய ௪| 
இத,மேகம்‌ ஸுநிஷ்பந்நம்‌ த்‌,யேயோ நாராயணஸ் ஸதா ॥!”' 
[எல்லா சாஸ்திரங்களையும்‌ பார்த்து, மறுபடியும்‌ மறுபடி 
யும்‌ விசாரம்‌ செய்தால்‌ நாராயணனே எப்போதும்‌ 
தியானிக்கத் தக்கவன்‌ '' என்னுமிது ஒன்றே நன்றாகத்‌ தேறி  நிற்கும்‌.] என்றும்‌, 

“யஸ்ய த்வாபரோ மர்த்யோ ப்ரஹ்மஹத்த்யாதி,தோஷஜம்‌। 
ஈாமாயேத்‌ பாதகம்‌ ஸத்‌,ய: இம்‌ புக: கத்‌,யதே பரம்‌ |” 
[எவனை தியானிப்பதில்‌ ஈடுபட்டிருக்கும்‌ மனிதன்‌ ப்ரஹ்ம 
ஹத்தி முதலிய தோஷங்களாலேற்படும்‌ பாபத்தை உடனே 
போக்கடிக்கிறானோ, (அவன்‌ விஜயத்தில்‌) மற்ற பாபங்களைப்‌ 
பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?] என்றும்‌, 

“ஹரிர்‌ ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: | 
அரிச்ச,யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: ॥” 
[கெட்ட மனமுடையவர்களாலும்‌ நினைக்கப்பட்ட ஹரி 
பாபங்களைப்‌ போக்கடிக்கிறான்‌. இஷ்டப்படாமல்‌ தொடப்‌ 
பட்டபோதிலும்‌ நெருப்பு தஹித்தே தீருமன்‌றே. ] என்றும்‌, 

“ருக் யஜூம்ஷி ஸாமாதி யோ தீ,தே ஸக்ருத;ஞ்ஜஸா | 
ஸக்ருந் நாராயணம்‌ ஸ்ம்ருத்வா பலம்‌ தஸ்ய ஸமந் நுதே |” 
[ எவனொருவன்‌. ருக்‌. யஜுஸ்‌ ஸாம வேதங்களைப்‌ பலதடவை 
நன்றாக அத்யயனம்‌ செய்கிறானோ. அவனுடைய டலனை ஒரு 
தடவை நாராயணனை நினைப்பதினால்‌ அடைகிறான் ] என்றும்‌, 

“வ்ரஜந்த்யகந்ய மநஸோ ஜ்ஞாத்வா பூ,தாதிமவ்யயம்‌ | 
யே பஹந்தி து மாம்‌ ப,க்த்யா மயி தே தேஷு சரப்யஹம்‌ |॥'” 
[வேறொன்‌றிலும்‌ செல்லாத மனமுடையவர்களரய்‌. என்னை 
பூதங்களுக்குக்‌ காரண பூதனாகவும்‌. அழிவறவனாயும்‌ அறிந்து 
எவர்கள்‌ பக்தியுடன்‌ ஆராதிக்கிறார்களோ. அவர்கள்‌ 
என்னிடத்திலிருக்கிறார்கள்‌; நனும்‌ அவர்களிடத்திலிருக்‌ 
கிறேன்‌.] என்றும்‌ சொல்லப்பட்ட தன்றோ. 
இந்த விதி  வாக்கியங்களிலிருந்து நாராயணனையே நாம்‌ பஜனம்‌
செய்யவேண்டுமென்றும்‌. தியானம்‌, மனனம்‌. பஜனம்‌. 
ஸ்மரணம்‌ முதலிய பதங்களினால்‌ சொல்லப்படும்‌ பக்தி 
அவனை அடைவதற்கு உபாயமென்றும்‌ ஏற்படுகிறது. 

இப்படிப்பட்ட இந்த பக்திக்கு அங்கம்‌ கர்மமே என்று 
ஸகல சாஸ்த்ரங்களிலும்‌ ப்ரஸித்தம்‌. மநோ வாக்‌ காய 
கர்மங்களால்‌ அந்த பகவானுக்கு ஆராதனம்‌ செய்ய வேண்டுமென்பது 
“தஸ்மாத் அநந்ய ப௱வஸ்த்வம்‌ தே,வதே,வம்‌ | 
ஆராதயாந்‌ ஹ்ருஷீகேஸ மாம்‌ மநோ வாக் காய கர்மபி,:॥  
[ ஆகையால்‌. நீ வேறொன்றிலும்‌ நினைவில்ல: கவனாய்‌ தேவ 
தேவனும்‌.இந்திரியங்களை நியமிப்பவனுமானஜநார்த்தனனை.. 
 வாக்‌ காய கர்மங்களால்‌ ஆராதித்துக் கொண்‌டிருப்பாயாக.] என்றும்‌. 

“ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச்சித்தம்‌ யத்‌ ததர்ப்பிதம்‌| 
தாவேவ = கரெள ங்லாக்‌,யெள யெள தத்பூஜநதத்பரெள |!” 
. [எது ஹரியைத்‌ துதிக்கிறகோ அதுவே நாக்கு; அவனிடம்‌ 
எது செலுத்தப்பட்டிருக்கிற கோ அதுவே மனம்‌; எக்கை 
கள்‌ அந்தப்‌ பரமாத்மாவைப்‌ பூஜிப்பதில்‌ ஈடுபட்டிரறாக்‌ 
கின்‌றனவோ, அக்கைகளே சிறந்தவை] என்றும்‌. 
“ஸ்ருதி ஸ்ம்ருத்யுதி,தம்‌ ஸம்யக்‌ நித்யமாசாரமாசரேத்‌ |” 
[ஸ்ருதி ஸ்ம்ருதிகளிற்‌ சொல்லப்பட்ட ஆசாரங்களை நன்றாக 
எப்போதும்‌ அநுஷ்டிக்க வேண்டியது.] என்றும்‌. 
“ஆசாரப்ரப,வோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: |!" 
[ஆசாரத்தைக்‌ காரணமாகக் கொண்டது தர்மம்‌; தர்மத்திற்கு 
அச்யுதனே ஸ்வாமி.] என்றும்‌ சொல்லப்பட்ட து.
நாராயண பரம்‌ ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | 
நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: |!” என்று வேதம்‌ 
நாராயணனையே- ப ப்ரஹ்மமாகவும்‌. பர் தத்வமாகவும்‌. 
பரஞ்சோதி யாகவும்‌ பரமாத்மாவாகவும்‌ ஸந்தேஹத்‌திகு இடமில்லாமல்‌ நிர்ணயித்தது.

ப்ரஹ்மமாகிற நாராயணனைப்‌ பற்றிய உபதேசத்தைப்‌’ பெறுவதற்குத்‌ தகுந்த யோக்பதையையும்‌
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ உண்டாக்குகின்றன.
பாஹ்ய ( வெளி ) ` சத்தியை மட்டுமல்லாமல்‌
மநோ வாக் காயங்களாகிற
த்ரிகரணங்களின்‌’ சித்தியையும்‌
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ கொடுக்கின்‌ றன.
மேலும்‌ அவைகள்‌ படிப்படியாக ஜீவாத்மாவை நாராயணனுக்கு தாஸனாக ஆக்குகின்‌றன.
“* லரநபஷி இவாண்டஹ: ” என்கிறபடி
சிறகொடிந்த பக்ஷி போல்‌ சரீரம் யில்லாமல்‌
திண்டாடித்‌ திரியும்‌ ஜீவனுக்கு சரீரத்தைக்‌ கொடுப்பது
கர்ப்ப ஆதரத்தின்‌ நோக்கமாகும்‌.
° சரிரமாத்யம்‌ கலு தர்ம ஸாதநம்‌ ” [சரீர
மன்றோ முதலாவதான தர்ம ஸாதனம்‌.] என்கிறபடியே
சரீரமில்லாமல்‌ மோக்ஷோபாயங்களை அநுஷ்டிக்கமுடியா து.
வைஷ்ணவத்வம் உண்டாகவேண்டுமென்று பகவான்‌
விஷ்ணுவிடம்‌ விஜ்ஞாபனம்‌ செய்வதே
கர்ப்பதாந மந்த்ரங்களிலிருந்து தேறி நிற்கும்‌ பொருளாகும்‌.

அப்படி: உண்டான கர்ப்பம்‌ புருஷ ப்ரஜையாக வேண்டு
மென்பதற்காக, புருஷா ஸூக்த உத்தரா நுவாகத்தின்‌ முதல்‌ ருக்கும்‌.
“ ஸாபர்ணோ அஸி கருத்மாக்‌ ‘ என்று தொடங்கும்‌
வேதமந்திரங்களும்‌ பும்ஸவநத்தன் போது அநுஸந்திக்கப்‌
படுகின்றன.
வேத ஸ்வரூபனான கருடனையும்‌. கருட (வேத ) வாஹனனான நாராயணனையும்‌
வேதாந்த வித்தான வைஷணவ புருஷ ப்ரஜை உண்டாக வேண்டு மென்று பிரார்த்திப்பதே இதன்‌ ரஹஸ்யார்த்தம்‌.
விஷ்ணு பலியாகிற பாயஸ ப்ரதானத்தினாலும்‌. ஸீமந்த மந்த்ரங்களாலும்‌. `
கர்ப்பத்தைக்‌ கடாக்ஷித்துக்‌ காப்பாற்ற வேண்டு
மென்று எம்பெருமானும்‌,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியும் ஸ்துதிக்கப் படுகிறார்கள்‌.
இந்த ஸமயத்திலிருந்து ஜனனம்‌ வரையில்‌ ஸாத்விகனான வைஷ்ணவ ப்ரஜைக்கு
எம்பெருமான்‌ ஸேவை ஸாதிப்பதை
“கருக்‌ கோட்டியுள்‌ கிடந்தது கை தொழுதேன்‌ கண்டேன்‌
திருக்கோட்டி யெந்தை நிறம்‌ என்று பூதத்தாழ்வார்‌ பாடினார்‌.

ஜாயமாநந்து புருஷம்‌ யம்‌ மது,ஸூதந ; |
ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த, சிந்தக:।|
பிறக்கும்போது எந்த ஜீவனை மதுஸூதனன்‌ கடாக்ஷிக்‌
கிறானோ அவன்‌ ஸத்வ குணத்தை யுடையவனென்று அறியத்‌ தக்கவன்‌.
மோக்ஷத்தை அடைய வேண்டுமென்ற சிந்தனை
யுடையவன்‌ அவனே. ] என்றும்‌ சொல்லப்பட்டது.
குழந்தை பிறந்தவுடன்‌
“விஸ்வஸ்ய கேதுர்‌ பு,வநஸ்ய நாத ஆப்ருணாத்‌ ஜாயமாந ;”’ முதலிய மந்திரங்களாலும்‌.
“ஓம்‌ ஸத,ஸஸ்பதிமத்‌,பு,தம்‌ ப்ரியமிர்த்‌,ஸ்ய காம்யம்‌
ஸநிம்‌ மேதாமயாஸிஷம்‌ ஸ்வாஹா”‘ என்னும்‌ மந்திரத்தாலும்‌
ஞான மயனும்‌. ஜ்யோதிஸ்‌ ஸ்வ ரூபனுமான ஜீவாத்மா உலகத்திற்குக்‌ கொடி போன்‌றவனாகவும்‌,
மால்‌ சமயத்திற்கோர்‌ மாலையிட்ட தீபமாகவுமாகி, பரம
புருஷனுடைய அன்புக்குப்‌ பாத்ரமாகி
நித்யஸுரிகளின்‌ கோஷ்டியில்‌ சேரக் கடவனென்று பிரார்த்திக்கப்படுகிறது.
ரூபமற்றவனாயிருந்‌து. சரீரத்தைப்‌ பெற்று ரூபமடைக்த
ஜீவனை அடையாளம்‌ கண்டு பிடிப்பதற்காக நாம கரணம்‌
செய்யப்படுகிறது.

“ஏகாந்த வயபதே,ஷ்டவ்யோ நைவ க்,ராமகுலாதி,பி,: |
விஷ்ணுநா வ்யபதே;ஷ்டவ்யச தஸ்ய ஸர்வம்‌ ஸ ஏவஹி ||”

பரமை காந்தியானவன்‌. க்ராமம்‌. குலம்‌ முதலியவைகளால்‌
பெயரிடத்தக்கவனல்லன்‌ ;
விஷ்ணுவின்‌ பெயரினாலேயே
சொல்லத்தக்சுவன்‌;
வனுக்கு (உண்ணும்‌ சோறு பருகு
நீர்‌ தின்னும்‌ வெற்றிலை முதலிய) எல்லாம்‌ அப்பெருமானே யன்றோ.] என்று
பகவானுடைய பெயர்களை வைஷ்ணவனுக்கு வைக்க வேண்டுமென்று சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இப்படிப்‌ பெயர்‌ வைப்பது பாபம்‌ போவதற்கும்‌,
வைஷ்ணவத்வ ஸித்திக்குமேயாகும்‌.
“நாம மே தேஹி பாப்மகோ அபஹத்யை ”
எம்பெருமானுடைய ) பெயர்களை
என்னுடைய பாபங்கள்‌ போவதற்காகக்‌ கொடுப்பீராக. ]
என்று ருக்ரன்‌ பிரமனைக்‌ கேட்டதாகவும்‌,
அவன்‌ நாராயணனுடைய எட்டு பெயர்களைக்‌ கொடுத்ததாகவும்‌
வேதத்தில்‌ உத்கோஷிக்கப்பட்டது.
இப்படி நாம கரணம்‌ செய்வது தானும்‌ தன்னை அழைக்கும்‌ மாதா பிதாக்களும்‌, மற்றவர்களும்‌ உஜ்ஜீவிக்க ஹேதுவாகிறது .
நாராயண நாம ஸ்மரணம்‌, உச்சாரணம்‌. கேட்பது முதலியவையும்‌ உய்வதற்கு உபாயமாகின்றனவன்றோ.
மாதவன்‌ மாதா கொடு உலகம்‌ புகாள்‌; நாரணன்‌ தமப்பன்‌ நரகம்‌ புகான்‌ என்று
நாம கரணத்தின்‌ மற்ற விசேக்ஷங்கள்‌ பெரியாழ்வார்‌
ப்ரபாவத்தில்‌ விஸ்தாரமாகக்‌ காணலாம்‌.
“அந்நம் ப்‌ரஹ்மேதி . வ்யஜாநாத்‌” எனப்பட்ட அந்நத்தை ஊட்டுவதாகிற அந்ந ப்ராணனமும்‌ பகவானை அடைவதற்கு ஒரு படியாகும்‌.
செளளம்‌ எனப்படும்‌ ஸம்ஸ்காரம்‌ மூன்றாவது வருஷத்தில்‌
செய்யப்படுகிறது;
ப்ரஹ்மம்‌ ப்ரவேசிப்பதும்‌. ஜீவன்‌ முக்தியடையும்‌ காலத்தில்‌ சிரஸ்ஸை பேதித்துக் கொண்டு
போவதுமான இடம்‌ ப்ரஹ்மரந்த்ரமெனப்படுகிறது,
ஊர்த்‌வ க,திக்கு அடையாளமான ஊர்த்வ புண்ட்‌,ரத்தைப்‌
போன்ற ஊர்த்‌வ சிகை ப்ரஹ்மரந்த்த்தில்‌ வைக்கப்பட
வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது.
மற்ற சிகை களுக்கும்‌ ஸ்லோகங்கள் விதிக்கப்பட்டிருக்கின்‌றன.

------------

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

—————

அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/3,4
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/1,2

அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2

அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4

அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/3,4

அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2

அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2

—————-

அச்யுதன்‌, அநந்தன்‌ முதலிய திருநாமங்களின்‌ சப்தத்தின்‌ சீர்மையும்‌. 
அர்த்தத்தின்‌ பெருமையும்‌ விவரிக்கப்படுகின்‌ றன.

அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாக அபிரமேயாத்மா சர்வ யோக விநிஸ் ஸ்ருத –11-

101-அச்யுத
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –

தேப்ய ப்ரபன்நேப்யோ நாபகத
அச்யுத

யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
நான் எப்போதும் என் பக்தர்களைக் கை விடுவது இல்லை
இதனால் அச்யுதன் எனப்படுகிறேன்

தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
யார் என்னை எங்கும் காண்கிறானோ அவன் பார்வையில் இருந்து நான் மறைவது இல்லை

நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-நண்பன் என்று வந்தவனை நான் கை விட மாட்டேன்

தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –தோஷமே இருந்தாலும் மித்ர வேஷம் பூண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்

ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம்
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-

தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்

தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் —மீண்டும் -320-/-557-நாமாவளி வரும்

————–

“அச்யுதா அநந்தா கோவிந்தா , நாம உச்சாரண பேஜாத்‌ | 
நமங்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம்‌ ஸத்யம்‌ வதாம்யஹம்‌ |!" 
அச்சுதன்‌. அநந்தன்‌. கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களை உச்சரிப்பதாகிற மருந்தினால்‌. 
எல்லா வியாதிகளும்‌ நாசமடைகின்‌றன. 
உண்மை உண்மை' என்று இரு கால்‌ ஸத்யம்‌ செய்து சொல்லுகிறேன்‌ நான்‌.என்று 
அச்யுதன்‌. அனந்தன்‌ , கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களின்‌ பெருமை 
ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில்‌ உத்கோஷிக்கப்படுகிறது .

ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸங்கீர்த்தன பல ஸ்ருதி

ஆத்யாத்மிகம்‌, ஆதி பவ்திகம்‌, ஆதிதைவிகம்‌ என்னும்‌ தாபங்களினால்‌ தபிக்குமவர்களும்‌.
பயந்தவர்களும்‌. கோரமான வியாதிகளினால்‌ துன்பமடைபவர்களும்‌
நாராயணன்‌ என்னும்‌ சப்தத்தை மட்டும்‌ கீர்த்தனம்‌ செய்வதாலேயே
எல்லா துக்கங்களும்‌ நீங்கப் பெற்று, மோக்ஷ ஸுகத்தையும்‌ அடைகிறார்கள்‌
என்று பாரதத்தில்‌ பேசப்பட்டது.

 “நாராயணேதி ஸாப்‌தம் அஸ்தி வாக் அஸ்தி வமவர்த்திநீ | 
ததராபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்‌ ॥'' 
நாராயணன்‌ என்னும்‌ சப்தமிருக்கிறது; 
வாயும்‌ வசத்திலிருக்கிறது. 
அப்படியும்‌ கோரமான நரகத்தில்‌ பலர்‌ விழுகின்றனர்‌ என்பது என்ன ஆச்சரியம்‌!
என்று புராணங்‌களில்‌ பேசப்பட்டது.

பொய்கையாழ்வாரும்‌ இதையே ` 
“நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று 
ஓவா துரைக்கும்‌ உரை யுண்டே-— மூவாத 
மாக் கதிக் கண்‌, செல்லும்‌ வகை யுண்டே என்னொருவர்‌ 
தீக் கதிக் கண்‌ செல்லும் திறம்‌.”' —என்று அருளிச்செய்தார்‌.

*“அவமேநாபி யந் நாம ஸங்கீர்த்திதே ஸர்வ பாதகை: | 
புமாந்‌ விமுச்யதே ஸத்‌ய: ஸிம்ஹத்ரஸ்தைர்‌ ம்ருகை,ரிவ |) 
யந் நாம கீர்த்தநம்‌ ப,க்த்யா விலாயநமநுத்தமம்‌ | 
மைத்ரேயாபமோஷபாபாநாம்‌ த, தூ௩காமிவ பாவக: |" (ஸ்ரீ விஷ்ணு பு. (6-8)] 
அந்த பகவானுடைய திருநாமம்‌ யதேச்சையாக கீர்த்‌திக்கப்பட்ட போதிலும்‌. 
ஒரு மனிதனுடைய பாபங்கள்‌ ஸிம்ஹத்தினால்‌ பயமுறுத்தப்பட்ட ம்ருகங்கள்‌ 
விலகிப்‌ போவது போல்‌, விட்டோடிப் போகின்‌றன. 
மைத்ரேயரே! ஸுவர்ணம்‌ முதலிய தாதுக்களுடைய அழுக்கை நெருப்பு போக்குவது போல்‌, 
பக்தியுடன்‌ அப் பெருமானுடைய திரு நாம ஸங்கீர்த்தனம்‌ செய்வது 
எல்லாப் பாபங்களையும்‌ போக்கடிக்கும்‌ ஒப்பற்ற ஸாதனமாகும்‌.என்றும்‌.

“த்‌யாயாந்‌ க்ருதே யஜந்‌ யஜ்ஞைஸ் : த்ரேதாயாம்‌ த்‌,வாபரே அர்ச்சயந்‌ |
யத் ஆப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம் ॥ [ஸ்ரீ வி. பு. (6-2-17)] 
பகவானை தியானிப்பதால்‌ க்ருத யுகத்திலும்‌, 
யஜ்ஞங்களைக்‌ கொண்டு ஆராதிப்பதால்‌ த்ரேதா யுகத்திலும்‌. 
அர்ச்சனை செய்வதால்‌ த்வாபர யுகத்திலும்‌ 
எதை அடைகிறானோ அதைக்‌ கலியுகத்தில்‌ 
கேசவனை ஸங்கீர்த்தனம்‌ செய்வதாலேயே அடையலாம்‌.] என்றும்‌

“கிம்‌. சித்ரம்‌ தத,க,ம்‌ ப்ரயாதி விலயம்‌ தத்ர அச்யுதே கீர்த்திதே'' 
அச்யுதனுடைய நாமம்‌ கீர்த்திக்கப்பட்டவுடன்‌ அவ்‌ விடத்திலேயே பாபங்கள்‌ நாசமடைகின்‌றன 
என்னுமிவ்‌ விஷயத்தில்‌ ஆச்சரியம்‌ என்ன? என்றும்‌ 
ஸ்ரீ விஷ்ணு புராணத்‌தில்‌ உரைக்கப்பட்டது

“அஜ்ஞாநதோ ஜ்ஞாநதோ வா வாஸுதே,வஸ்ய கீர்த்தநாத்‌ | 
தத் ஸர்வம்‌ விலயம்‌ யாதி தோயஸ்த,ம்‌ லவணம்‌ யத |” 
அறிந்தோ, அறியாமலோ வாஸுதேவனுடைய திரு நாமத்தைச்‌ சொன்னானாகில்‌ 
அவனுடைய பாபமெல்லாம்‌ 'தண்ணீரினுள்ளிருக்கும்‌ உப்பைப் போல்‌ 
கரைந்துவிடுகின்றன.] என்றும்‌,


“முமாயாலம்‌ ஜலம்‌ வந்ஹேஸ்‌ தமஸோ பாஸ்கரோதவ: | ` 
ஸாந்தி: கலேரகெ,ளக,ஸ்ய நாம ஸங்கீர்த்தகம்‌ ஹரே: ॥” 
நெருப்பை அணைப்பதற்கு நீரும்‌. இருட்டைப்‌ போக்கடிக்க ஸூர்யோதயமும்‌ போதுமானவை. 
(௮து போலவே ) கலி கோலாஹலத்தினால் உண்டாகும்‌ அஞ்ஞானங்களைப் போக்கடிப்பது 
ஹரியின்‌ திரு நாம ஸங்கீர்த்தனமே,] என்றும்‌.

“ஸங்கீர்த்தநதோ விமுச்யதே”
[எவனுடைய திரு நாம ஸங்கீர்‌த்தனத்தினால்‌ மோக்ஷம் அடையப் பெருகிறது ] என்றும்‌.

‘யந் நாம ஸங்கீர்த்த கதோ மஹாபயாத்‌,; விமோக்ஷமாப்நோதி ந ஸம்மாயம்‌ நர: ‘
எவனுடைய திருநாம ஸங்கீர்த்தனத்தால்‌ மனிதன்‌ மஹா பயத்தினின்‌றும்‌ ஸந்தேஹயில்லாமல்‌
விடுதலை யடைகிறானோ — என்‌றும்‌,

“ஹக்ருது,ச்சரிதம்‌ யே ஹரிரித்யக்ர த்‌வயம்‌ | பத்த, பரிகரஸ்தேர மோஷ தாயகமம்‌ ப்ரதி” 
ஹரி என்னும் இவ்விரண்டெழுத்‌தும்‌ எவனால்‌ ஒருதடவை உச்சரிக்கப்பட்டதோ. 
அவன்‌ மோஷத்துக்குப்‌ போவதற்‌காகச்‌ செய்ய வேண்டியவைகளைச்‌ செய்து விட்டான்‌ ]என்றும்‌,

“யஸ்ய நாம்நி ஸ்ம்ருதே மர்த்யஸ்‌ ஸமுத்க்ராங்தேரந்தரம்‌ ! 
ப்ராப்நோதி வைஷ்ணவம்‌ ஸ்தாநம்‌ புநராவ்ருத்தி வர்ஜிதம்‌ |!” 
எவனுடைய திருநாமத்தை நினைத்த மனிதன்‌ இறந்த பின்பு: திரும்பி வருகை யற்றதான 
விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறானோ-
என்றும்‌ விஷ்ணு தர்மத்தில்‌ பலவிடங்களில்‌ பேசப்பட்டதன்றோ

“ஸர்வாந்‌ காமாந்‌ ப்ராப்நுவந்தே வியாலாந் த்ரைலோக்யே அஸ்மிந்‌ க்ருஷ்ண நாம அபிதாநாத்‌ ” [
இம்மூவுலகிலுமுள்ள மிகப்பெரிய இஷ்ட வஸ்‌து க்கள் எல்லாவற்றையும்‌ கிருஷ்ணனென்னும்‌
திருநாமத்தைச்‌ சொல்லு வதன்‌ மூலமாகவே அடைகிறார்கள்‌] என்று கோஷிக்கப்‌ பட்டது.

“ஸங்கீர்த்தயேஜ் ஜகந்நாதம்‌ வேதம்‌ வாபி ஸமீரயேத்‌”
ஜகந் நாதனான பெருமானை ஸங்கீர்த்தனம்‌ செய்ய்க் கடவன்‌;
அல்லது வேதத்தையாவது ஒதக் கடவன்‌ என்று
நாராயண நாம ஸங்கீர்த்தனம்‌ வேதாத்யனத்தைக் காட்டிலும்‌ மேல் என்று உணர்த்தப்பட்டது,

இவையெல்லாவற்றிற்கும்‌ மூலமான வேதத்திலும்‌ – த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ: ”
இவனைக்‌ கீர்த்திக்கும்‌ ஜனங்கள்‌ நிலையான மோஷஸ்தாநத்தை அடைகிறார்கள்‌
என்‌று உத் கோஷிக்‌ கப்பட்டது.

“கெடுமிடராயவெல்லாம்‌ கேசவாவென்ன நாளும்‌ 
கொடுவினை செய்யும்‌ கூற்றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌ 
என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌. 

“காவலிற்‌ புலனை வைத்துக்‌ கலி தன்னைக்‌ கடக்கப் பாய்ந்து 
நாவலிட்டுழிதருகின்றோம்‌ ஈமன்தமர்‌ தலைகள்‌ மீதே 
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்‌ நாமங்கற்ற 
ஆவலிப்புடைமை கண்டாய அரங்கமா நகருளானே! | என்றும்‌,

“பச்சை மா மலை போல்‌ மேனிப் பவளவாய்க்‌ கமலச் செங்கண்‌ 
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்‌ கொழுந்தே! என்னும்‌ 
இச் சுவை தவிர மான்‌ போய்‌ இந்திரலோகமாளும்‌ 
அச் சுவை பெறினும்‌, வேண்டேன்‌ அரங்கமா நகருளானே!'' _என்றும்‌, 

“மொய்த்த வல்‌ வினையுள்‌ நின்று மூன்றெழுத்துடைய பேரால்‌ 
கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான்‌ "என்றும்‌, 

“நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள்‌ கேட்க 
நரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்களுடைய நம்பி'” 
என்றும்‌ தொண்டரடிப்பொடியாழ்வார்‌ திரு நாம ஸங்கீர்த்‌தன 
ப்ரபவத்தைப்‌ பலகால்‌ அருளிச் செய்தருளினார்‌. 

திருமங்கையாழ்வாரும்‌ முதல்‌ திருமொழியில்‌ நரராயண 
திரு நாமப்ரபாவத்தைப்‌ பலபடியாகப்‌ பேசியருளினார்‌. 

” இத் திரு நாமந்தான்‌ ப்ரயோஜநாந்தர பரர்க்கு ப்ரயோஜனத்தைக்‌ கொடுக்கும்‌;
உபாயார்தர நிஷ்டர்க்குப்‌ பாவநமாயிருக்கும்‌;
ப்ரபந்நர்க்கு தேஹ யாத்ர சேஷேமாயிருக்கும்‌;
முத்துப்படும்‌ துறையில்‌ முழுகுவார்‌ முத்தைக்‌ கொடுத்துப்‌ பலங்கொள்ளுவர்கள்‌;
செழு முத்து வெண்ணெற் கெனச்‌ சென்று’ மாறுவர்களிறே.
விலையறியும்‌ செட்டிகள்‌ பக்கல்‌ புகுவார்களிறே
பெரு விலையனாம்‌ செருக்கரானார்‌ இத்தைப் பூண்டு அதுபவிப்பார்கள்‌;
அப்படியே ப்ர யோஜநார்‌தர பரர்க்கும்‌ உறுப் பாய்‌, ஸாதநாந்தர நிஷடரர்க்‌கும்‌ உறுப்பாய்‌,
ப்ரபநர்க்கு ஸ்வயம் ப்ரயோஜாமுமாயாய்த்து இத் திருநாமமிருப்பது ‘” என்றும்‌.
“ இப்படிச்‌ சேதனன்‌ தான்‌ மூலையடியே திரிந்தாலும்‌,
அவன்‌ தோஷங்களைப்‌ போக்கி,
மேல்‌ செல்லுகிற நன்மைகளைக்‌ கொடுக்கும்படி யாய்த்‌து
திரு நாமத்தினுடைய ப்ரபாவமிருப்பது ” என்றும்‌, “

பக்தியினுடைய துஷ்கரதையோபாதி ப்ரபத்தி நிஷ்டா ஹேதுவான மஹா விஸ்வாஸமும்‌
சிலர்க்குக்‌ கிட்டுகை அரிதாகையாலே இதில்‌ இழியக்‌ கூசினவர்களுக்கு
ஸர்வாதிகாரமான யாத்ருச்சிக பகவந் நாம ஸங்கீர்த்தனமே
சேதநருடைய பாபத்தைப்‌ போக்கி
ஸா க்ருத அனுகூலமாகக்‌ கர்ம யோகாதிகளிலே கூட்டுதல்‌.
ப்ரபத்தியிலே மூட்டுதல்‌, விரோதியைப்‌ போக்கி ப்ராப்யத்தைக்‌ கொடுக்கைக்குத்‌
தானே நிர்வாஹக மாதலாம்படியான வைபவத்தை உடைத்‌ தாயாய்த்து இருநாமத்தினுடைய வைபவயிருப்பது”
என்‌றும்‌ பரம காருணிகரான பெரியவாச்சான்பிள்ளை அருளிச்‌ செய்தார்‌.

இவையெல்லாவற்றையும்‌ வேதாந்தாசார்யரர்ன பட்டரும்‌ ஸ்ரீ ஸஹஸ்ர நாமபாஷ்யத்திலே
பர பக்ஷ நிரசன பூர்வகமாகப்‌ பரக்க அருளிச் செய்தார்‌.

அபியுக்த அக்‌ரேஸரரான பிள்ளைலோகாசார்யரும்‌,
“ வாச்ய ப்ரபாவம்‌ போலன்று வாசக ப்ரபாவம்‌.
அவன்‌ தூரஸ்த்தனானாலும்‌ இது கிட்டி நின்று உதவும்‌.
த்‌ரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே.
சொல்லும்‌ க்ரமமொழியச்‌ சொன்னாலும்‌ தன்‌ ஸ்வரூபம்‌ கெட நில்லாது.
இதுதான்‌ “குலந்தரும்‌’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்‌ கொடுக்கும்‌.
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களை ஆசைப்‌ பட்டவர்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கும்‌.
கர்ம ஜ்ஞாந பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப்‌ போக்கி,
அவற்றைத்‌ தலைக் கட்டிக்‌ கொடுக்கும்‌.
ப்ரபத்தியிலே இழிந்‌தவர்களுக்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தைப்‌ பிறப்பித்துக்‌ கால ஷேபத்துக்கும்‌
போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கும்‌” என்று
முமுஷுப்படியில்‌ அருளிச் செய்தார்‌.

இனி. அமுதிலும்‌ இனியவையான அச்யுதாதி நாமங்களின்‌ அரும் பொருள்கள்‌ அறிவிக்கப்படுகின்‌ றன.

(அச்யுதன்‌) ** யஸ்மாத்‌ ப்ராப்தா ந ச்யவந்தே '' என்கிற படியே 
அடியவர்களை நழுவவிடாதவன்‌; 
எல்லாரையும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ரக்ஷிக்குமவன்‌ °

“யஸ்மாந் அச்யுத பூர்வோ அஹம் அச்யுதஸ்தேந கர்மணா”
அடியவர்களிடமிருந்து நழுவாமல் இருக்கறேனாகையால்‌ நான்‌ அச்சுதனெனப் படுகிறேன்‌
என்று சாஸ்திரம்‌ சொல்லிற்று.

( அச்யுதன்‌ )
ப்ரளய காலத்தில்‌ இவர்கள்‌ படும்‌ நோவு பொறுக்க மாட்டாமல்‌. தன்‌ வயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமவன்‌;
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அசித் ஸமராய்க்‌ கிடக்குமிவர்‌களைக்‌ கண்டு இரங்கிக்‌
கரண களேபரங்களைக்‌ (சரீர இந்தரியங்களைக்‌) கொடுக்குமவன்‌.

“ஆதுமில்‌ காலத்தெந்தை அச்சுதன்‌ ” என்று இவ் வர்த்தத்தை ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தார்‌.
(அச்யுதன்‌ )
தமர்கள்‌ நெருப்பிலே விழுந்தாலும்‌. அவர்களைத்‌ தீங்கு வாராதபடி காப்பாற்றுமவன்‌.
“அறியும்‌ செந்தீயைத்‌ தழுவி அச்சுதன்‌ என்னும்‌ மெய்‌ வேவாள்‌” என்றார்‌ ஆழ்வார்‌.
(அச்யுதன்‌)
தன்னடியார்களை நமன்‌ தமர்‌ கையிலே காட்டிக்‌ கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌;

“அயர வாங்கும்‌ நமன்‌ தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்‌ தன்னை '' என்றார்‌ ஆழ்வார்‌. 
( அச்யுதன்‌ ) 
சேதனர்களைத்‌ தங்கள்‌ கையில்‌ காட்டிக் கொடாமல்‌ ரஷிப்பதற்காக அவர்‌களோடு ஓருவனாகத்‌ தோன்‌றுமவன்‌. 
“தேவகி தன்‌ வயிற்றில்‌ அத்தத்தின்‌ பத்தாம்‌ நாள்‌ தோன்றிய அச்சுதன்‌'' என்று பெரியாழ்வாரும்‌,

“'அச்யுத பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம் ஆவிர்ப்பூதம்‌ 
அச்சுதனாகிற ஸூர்யன்‌ தேவகியாகிற ப்ராத:ஸந்த்‌,யா காலத்தில்‌ தோன்றினான்‌. “ 
என்று அருளிச் செய்தனர்‌. 
(அச்யுதன்‌ ) 
தன்னிடம்‌ அன்புள்ளவரைக்‌ கை நழுவ விடாதவன்‌. 
“'அரிமுகன்‌ அச்சுதன்‌ கை மேல்‌ என்‌ கை வைத்து” என்று ஆண்டாள்‌ அருளிச் செய்தாள்‌. 
( ௮ச்யுதன்‌ ) 
“சங்கு ,சக்ர க,தாபாணே! த்‌வாரகா நிலய அச்யுத!'” 
சங்க சக்ர கதைகளைக்‌ கையில்‌ கொண்டவனே! 
த்வாரகா வாஸியே! 
அடியாரை நழுவ விடாத அச்சுதனே! என்றழைத்த த்ரெளபதிக்குத்
துகிலளித்ததும்‌ இத் திரு நாமமேயன்றோ. 
(அச்யுதன்‌) 
“மித்ர பாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந''
நண்பனென்‌ற வேஷத்துடன்‌ என்னை ,அடைந்தவனையும்‌ நான்‌ 
ஒரு போதும்‌ விடமாட்டேன்‌-- என்றும்‌,
“ஆநயைநம்‌ ஹரி ஸ்ரேஷ்ட, தத்தமஸ்யாப,யம்‌ மயா | 
விபீஷணோ வா -- யதி, வா ராவண: ஸ்வயம்‌ |'' 
வாநரத் தலைவனான ஸாக்ரீவனே! இவன்‌ வீபீஷணனாயிருந்‌தாலும்‌, 
ராவணன்‌ தானேயாயிருந்தாலும்‌ இவனுக்கு நான்‌ அபயமளித்து விட்டேன்‌. 
நீ இவனை அழைத்து வா | என்றும்‌, 
“ஸக்ருதேவ ப்ரபந்நாய த்வாஸ்மீதி ௪ யாசதே | 
அபயம்‌ ஸர்வ பூ,தேப்‌யோ யேதத்‌, வ்ரதம்‌ மம।॥'' 
ஓரு தடவை சரணமடைந்தவனுக்கும்‌ 'உன்னடியேன்‌ நான்‌' என்று யாசிப்பவனுக்கும்‌ 
எல்லா பூதங்களினின்‌ றும்‌ அபய மளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய விரதம்‌.என்று
அடைந்தவர்களை அளிப்பதையே விரதமாகக்கொண்ட சக்கரவர்த்தித் திருமகனாய்‌ 
அவதரித்தவன்‌, 
'' அச்சுதன்‌ தன்னைத்‌ தயரதற்கு மகன்‌ தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்ச மாகவே '' 
என்‌று சடகோபன்‌ அருளினாரல்லவா.
(அச்யுதன்‌ ) 
பாநுநா ஆவிர்ப்பூதம்‌ '' 
"தேவகி தன்‌ வயிற்றில்‌ தோன்‌றிய அச்சுதன்‌” என்‌கிறபடியே 
சேதனர்களை நழுவ விடவொண்ணாமையாலே கிருஷ்ணனாய்‌ அவதரித்து, 
“ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ மரணம்‌ வ்ரஜ । 
அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:।?' 
எல்லா மோக் ஷஸாதனங்களையும்‌ வாஸனையுடன்‌ விட்டு என்னையே சரணமடை. 
நான்‌ உன்னை எல்லாப்‌ பாபங்‌களினின்றும்‌ விடுவிக்கறேன்‌; வருந்தாதே.] என்று அருளிச்செய்தவன்‌. 
(அச்யுதன்‌ ) 
ஸ்வாங்ரிதர்களை அஜ்ஞாந அந்யதா அஜ்ஞாந விபரித அஜ்ஞாநங்களின்‌ 
கையில்‌ காட்டிக்‌ கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌. 
“நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌தா த்வத் ப்ரஸாதராந்‌ மயா 
அச்சுதனே! 
வீபரித ஜ்ஞானமாகிய மோஹம்‌ நசித்தது;
உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்பட்டது என்பதல்லவோ அர்ஜுனன்‌ வார்த்தை.
(அச்யுதன்‌) 
இவ்‌ வுலகிலிரு்து மோக்ஷமடைந்த முக்தரையும்‌. நித்ய ஸுரிகளையும்‌ -
'புணை கொடுக்கிலும்‌ போக வொட்டார்‌?' என்கிற படியே 
அங்கிருந்து நழுவ விடாதவன்‌. 
௮ச்சுதனை........ அநந்தன்‌ தன் மேல்‌ நண்ணி நன்குறைகின்றானை '' என்று 
நம்மாழ்வாரும்‌, 
“அச்சம்‌ நோயோடல்லல்‌ பல்‌ பிறப்பவாய மூப்பிவை 
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானி லேற்றுவான்‌ 
அச்சுதன்‌ அநந்த கீர்த்தி ஆதியந்தமில்லவன்‌ 
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌'' என்று திருமழிசையாழ்வாரும்‌ 
“ அச்சுதா அமரரேறே ' ' என்று தொண்டரடிப்பொடிகளும்‌ 
இவ் வர்‌த்தத்தை அநுஸந்தித்‌த்ருளினார்கள்‌. 
(அச்யுதன்‌) 
இத்தால்‌ அடைந்தவர்களுக்கு அல்லல்‌ வந்தபோது அவர்‌ களை விட்டகலும்‌ 
ருத்ராதிகளைக்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி ( வேறுபாடு ) சொல்லப்படுகிறது. 
இதனாலேயே யன்றோே “ஸிவம்‌ '' என்று சொன்ன நாராயணானுவாகமும்‌. 
இது ருத்ரனைக்‌ குறிக்கும்‌ பதமல்ல என்று தெளிவிப்பதற்காக “அச்யுதம்‌ என்று படித்தது. 
“பரிவின்றி வாணனைக்‌ காத்துமென்றன்று படையொடும்‌ வந்தெதிர்ந்த 
திரிபுரம்‌ செற்றவனும்‌ மகனும்‌ பின்னும்‌ அங்கியும்‌ போர் தொலைய 
பொரு சிறைப்‌ புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப்‌ 
பொற் சக்கரத்‌ தரியினை அச்சுதனைப்‌ பற்றி யான்‌ இறையேனும்‌ இடரிலனே,”' என்று 
வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ இவ்விஷயத்தை உணர்த்தினார்‌. 
(அச்யுதன்‌ ) 
அடியவர்களை நழுவ விடாதவன்‌” என்னுமிந்த மஹா குணத்தைத்‌ தெரிவிக்கும்‌ 
திருநாம மாகையாலே, 
இதை வேதமும்‌. 
வைதிகர்களும்‌, 
பக்தர்களும்‌ மிகவும்‌ ஆதரிப்பர்கள்‌. 
ஆழ்வார்கள்‌ இத்திருநாமத்தை அதரித்த ப்ரகாரத்தை மேலே விவரித்தோம்‌.

“யந்நாயம்‌ ப,க,வாம்‌ ப்ரஹ்மா ஜாநாதி பரமம்‌ | 
தந்ததா: ஸ்ம தவ ஸர்வ கதாச்யுத ॥" 
௮ச்சுதனே! ஸர்வ வ்யாபியே! மேலான ப்ராப்யமான எதை பகவானான பிரமனும்‌ அறியானோ. 
உலகிற்கெல்லாம்‌ இருப்‌பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌. 
என்று ப்ரயோஜனாந்தர பரரான தேவர்களும்‌,
“ ஸர்வேஸ்வர ஸர்வ பூ,தாத்மந்‌ ஸர்வ ஸர்வஆஸ்ரய யச்யுத ”' என்று 
அவர்களுக்குத்‌ தலைவனான பிரமனும்‌,

“அவலோகந ததாநேக ப,யோ மாம்‌ பாலயாச்யுத'' என்று 
அநந்ய ப்ரயோ ஜனனான ப்ரஹ்லாதாழ்வானும்‌. `
" த்வாரகா நிலயாச்யுத” என்‌று க்ருஷ்ணையும்‌. 
த்வத் ப்ரஸாதநமயாச்‌யுத” என்று நரனாகிய அர்ஜுனனும்‌.
“ஹத வீர்யோ ஹத விஷோஹம்‌ த்வயாச்யுத "" என்று காளியனும்‌ 
இத் திரு நாமத்தை அநுஸந்தித்தார்‌களன்‌றோ . 
இது வரையில்‌ அச்யுத சப்தத்துக்கு அடியவர்களை நழுவ விடாதவன்‌' என்னும்‌ பொருள்‌ விவரிக்கப்பட்டது. 
இனி நழுவாத ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவன்‌ என்னும்‌ அர்த்தம்‌ விளக்கப்படுகிறது,

(அச்யுதன்‌)
” ச்யவதே இத்‌ யச்யுத:’ என்றபடியே, ப்ரஹ்ம ருத்ராதிகளைப்‌ போலின்‌றியே ஒருபடியாலும்‌ அழிவில்லாதவனாயிருப்பவன்‌ .
“ச்யவநோத்பத்தியுக்தேஷு ப்‌,ரஹ்மேந்த்‌,ரவருணாதிஷு |
யஸ்மாந்ந ச்யவஸே ஸ்தரநாத்‌ தஸ்மாத்‌ ஸங்கீர்த்யஸே அச்யுத; ॥”
நழுவுதலென்னும்‌ மரணம்‌, பிறப்பு ஆகிய இவற்றுடன்‌ கூடிய பிரமன்‌ . இந்திரன்‌, வருணன்‌ முதலிய தேவர்கள்‌,
போல் இன்றிக்கே தன்னுடைய ஸ்தானத்திலிருந்து நழுவாதவனாகையால்‌ நீ அச்யுதனெனப்படுகிறாய்‌–
என்று ஸாஸ்த்ரம்‌ சொல்லிற்று.
“ஜாயதே அஸ்தி வர்த்‌,த,தே பரிணமதே அபக்ஷீயதே விநங்யதி இதி ஷட்‌,பாவ விகார ரஹிதத்வாத,ச்யுத: ”
பிறக்கிறான்‌. உயிர் வாழ்கிறான்‌, வளருகிறான்‌. பரிணாமமடைகிறான்‌, குறைவடைகிறான்‌ ,
நாசமடைகிறான்‌ என்னும்‌ ஆறு விகாரங்‌ களும் அற்றவனாகையாலே அச்யுதனெனப்படுகிறான்‌-
என்று சங்கரர்‌ பாஷ்யம்‌ செய்தபடியே இங்கு விநாசத்தைச்‌ சொன்னது ஷட்‌பாவவிகாரங்களுக்கும்‌ உபலக்ஷணம்‌.

ஆழ்வார்களும்‌ இவ்வர்த்தத்தைப்‌ பலவிடங்களில்‌ அநுஸந்தித்‌ தருளினார்கள்‌.
“பச்சை மா மலை போல்‌ மேனி பவள வாய்‌ கமலச் செங் கண்‌ அச்சுதா” என்று தொண்டரடிப் பொடியாழ்‌வார்‌
அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனென்‌ பதை உணர்த்தினார்‌.
“` அச்சுதன்‌ அநந்த மூர்த்தி” என்று திருமழிசையாழ்வாரும்‌. “ ஆர்ந்த புகழச்சுதன்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
அழியாத புகழுடையவன்‌ என்று அச்யுத சப்தத்துக்கு வியாக்யானம் செய்தார்கள்‌.
சங்க,சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத” என்ற துரெளடதியும்‌
ஸர்வேங்வரன்‌ நித்யவிபூ,தியோடும்‌ லீலாவீபூ,தியோடும்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்புக்கு
என்‌றும்‌ அழிவில்லை என்று உணர்த்தினாள்‌.
(௮ச்யுதன்‌ )
ஸகல சேதநாசேதனங்களையும்‌ விடாமல்‌ வியாபித்தும்‌ தரித்தும்‌ நிற்பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
இத்தால்‌
ஸர்வ வ்யாபகத்வமும்‌,
ஸர்வ தராரகத்வமும்‌
சொல்லப்பட்டதாகிறது.
‘ அடியவர்‌ களை நழுவ விடாதவன்‌ ” என்னும்‌ பொருளைத்‌: தெரிவிக்கை யாலும்‌,
மற்றும்‌ பல அரும்பொருள்களையும்‌ உடைத்தாயிருக்‌ கையாலும்‌,
வேதத்தாலும்‌,
இதிஹாஸபுராணாதிகளாலும்‌,
ஆம்வார்களாலும்‌
மிகவும்‌ ஆதரிக்கப்படுகையாலும்‌ இக்திரு நாமம்‌ ஆசமனத்தின்‌ ஆரம்பத்தில்‌ அநுஸந்திக்கப்படுகிறது.

நிற்க; ஆழ்வார்களுடைய ஸ்ரீ ஸூக்திகளுக்கு ஸ்ரீ பெரிய வாச்சான்பிள்ளை முதலிய மஹாசார்யர்களால்‌
விவரிக்கப்‌ படாத சில அர்த்தங்கள்‌ இங்கு கொள்ளப் பட்டிருக்கின்‌றனவே;
அவை எப்படிப்‌ பொருந்தும்‌ என்று சிலர்‌ சங்கிக்கக்‌ கூடும்‌. அவர்களுக்குச்‌ சொல்லுகிறோம்‌:
ஆழ்வார்களின்‌ ஆழ்கடல் போன்‌ற அருளிச் செயல்களின்‌ அர்த்தங்களாகிய ரத்னங்களையெல்லாம்‌
நமக்கு ஆக்குவது முடியாத காரிய மாகையாலே, நம்மாசார்யர்கள்‌ அவைகளின்‌ ஸாரமான பொருளை
ஏடுபடுத்தியருளினார்கள்‌.
ஆகையால்‌ அவ்வாழ்வாராசாரியர்களுடைய ஸ்ரீஸூக்திசளுக்கு அவிருத்தமாயும்‌,
ப்ரகரணந்திற்குப்‌ பொருந்தியவையாயுமுள்ள பொருள்களையும்‌ கொள்வதில்‌ தவறில்லை.
ஆழ்வார்களின்‌ அமுதினுமினிய அருளிச் செயல்களின்‌ ஆழ்பொருன்களையெல்லாம்‌ ஆரே அள விட்டு அறியவல்லார்‌? –

————————————

இனி அநந்தன்‌” என்னும்‌ நாமத்தின்‌ அரும் பொருள்‌ அறிவிக்கப்படுகிறது. 
இத் திரு நாமமும்‌ அச்யுத நாமத்தைப்‌ போல்‌ அரு மறையால்‌ ஆதரிக்கப்பட்டது. 
அச்சுதன்‌ அநந்த கீர்த்தி” என்று அச்யுத நாமத்திற்கு அர்த்த மருளிய திருமழிசை யாழ்வார்‌ 
* ஆதியந்தமில்லவன்‌ ” என்று அநந்த நாமத்தை அடுத்த படியாக விவரித்தருளினார்‌. 
நம்மாழ்வரும்‌ “அண்ணலை அச்சுதனை அநந்தனை" என்று
இத் திருநாமங்‌கனைச்‌ சேர்த்துப்‌ படித்தார்‌. 
'அச்யுதன்‌” என்னும்‌ திருநாமம்‌ " அடியவர்களை நழுவ விடாதவன்‌ ' என்று உரைக்கிறது, 
தமர்களைக்‌ கைவிடாமைக்காக அநேக அவதாரங்களை எடுத்‌தும்‌,
அளவற்ற குணங்களை வெளிப்படுத்தியும்‌ 
எல்லாவற்றையும்‌ வியாபித்‌தும்‌ விளங்குமவன்‌ என்பதை அநந்த நாமம்‌ அறிவிக்கின்‌றது. 
“கந்தர்வ அப்ஸரஸஸ்‌ ஸித்‌தாஸ் : கிங்கரோரக,சாரணா: | 
நரந்தம்‌ குணாநாம்‌ க,ச்ச;ந்தித அநந்தோயம் அவ்யய: |!” (2-6-24) 
கந்தர்வர்கள்‌, அப்ஸரஸ்ஸூகள்‌, ஸித்தர்கள்‌. கின்னரர்கள்‌, நாகர்கள்‌, சாரணர்கள்‌
ஆக எல்லாரும்‌ இவனுடைய குணங்களை முடிவு காண்பதில்லை. 
ஆகையால்‌ இவன்‌ அநந்தனெனப்படுகிறான்‌ என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌
அநந்த சப்தார்த்மும்‌ சொல்லப்பட்டது. 
இத்தால்‌ குணங்‌களாலும்‌. சரீரங்களாலும்‌, ஐஸ்வர்யத்தாலும்‌ அளவற்றவன்‌
அநந்தன்‌ எனப்பட்டதாகிறது.

“நமோ$ஸ்த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே ஸஹஸ்ர பாத;அக்ஷி மிரோருபாஹவே | 
ஸஹஸ்ரநாம்கே புருஷாய மராங்வதே ஸஹஸ்ர கோமீயுக,தாரிணே நம: |!" 
கணக்கற்ற சரீரங்களை உடையவனும்‌. அளவற்ற பாதங்‌ களையும்‌. கண்களையும்‌.
தலைகளையும்‌. தொடைகளையும்‌.கைகளையும்‌ உடையவனும்‌,
கணக்கற்ற திரு நாமங்களை உடையவனும்‌ நித்ய புருஷனும்‌. அளவு கடந்த யுகங்களை தரிப்பவனுமான 
அநந்தனுக்கு நமஸ்காரம்‌--என்று பிரமனால்‌ அநந்தனென்‌னும்‌ திருநாமத்தின்‌ அர்த்கம்‌ அநு ஸந்திக்கப்பட்ட து, 
( அநந்தன்‌ ) காலத்தாலும்‌. தேசத்தாலும்‌, வஸ்துவாலும்‌ அளவு பட்டிராத ஸ்வரூபத்தை உடையவன்‌. 
ஸத்யம்‌ ஜ்ஞாநம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம "` 
ப்ரஹ்மம்‌ விகாரமற்றதாகவும்‌, ஞான ஸ்வரூபமாகவும்‌. -
கால தேச வஸ்து ஆகிய மூன்று விதமான அளவுமற்றதாக வும்‌ உள்ளது] 
' அதைதஸ்யைவாந்தோ நாஸ்தி யத்‌, ப்‌,ரஹ்ம'' 
ப்ரஹ்மமென்று யாதொன்றுள்ளதோ அதற்கு முடிவில்லை ' 
அநந்தம்‌....ஸமுத்‌,ரேந்தம்‌ 
'' பாற்கடலில்‌ தயிலும்‌ அநந்தன்‌ |. என்று வேதங்களிலும்‌. “ 
நாஸ்த்‌- யந்தேச விஸ்தரஸ்ய மே'' என்னுடைய ஐஸ்வர்யத்துக்கு அளவில்லை.-என்று கீதையிலும்‌, 
“ஆதியந்த மில்லவன்‌'' 
“அச்சுதனை அநந்தனை'' என்று ஆழ்வார்களாலும்‌ சொல்லப்‌ பட்டவை 
இவ் விஷயத்தில்‌ ப்ரமாணங்கள்‌.
----------

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

———-

அனந்த (2)
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
அனந்தம் (1)
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் – நாலாயி:663/1
அனந்தன் (5)
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் – நாலாயி:670/3
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் – நாலாயி:2296/3
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3
அனந்தன்-தன் (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
அனந்தன்-பாலும் (1)
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1
அனந்தனை (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2

——————–

அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்தம்‌ விவரிக்கப்படுகிறது. 
“அநந்தன்‌' என்று புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது. 
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக. 
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ 
ஒரு நீராகக் கலந்து  பரிமாறுமவன்‌' என்னும்‌ பொருளை யுடைய 
கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது. 
“அச்சுதா! அமரரேறே!' என்று அச்யுத அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த 
தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌. 
“ஆயர்தம்‌ கொழுந்கதே!'' என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை 
அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ ) 
“ காவ: விந்த,தி '' [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே, 
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான 
பசுக்களை அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,
“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:। 
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||." 
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌. 
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌. 
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌--
என்று ஹரிவம்‌சத்தில்‌ கோவர்த்தனதாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ. 
கோவிந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌ 
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ " என்றும்‌ 
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி. 
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌. 
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே 
தனக்கு ப்ராண பரமாகக்‌ கொண்டிருந்தாள்‌. 
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌ 
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ''-என்றும்‌, 
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே 
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌'' என்‌றும்‌, 
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா'' என்றும்‌. 
சொல்லும்படி யன்‌றோ 
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌. 
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போதும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ '' என்று 
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது. 
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று 
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

“கேளவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ | 
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥'* 
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌று த்ரெளபதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த 
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று-- அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌ 
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே. 
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னி யுரைக்குங்கால்‌ பாரதமாம்‌. 
(கோவிந்தன்‌ ) 
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌ 
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
'மஹா வராஹோ கோவிந்த,: "என்று ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது . 
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ | 
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ' 
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ 
தேடி யடைந்கதேனாகையால்‌.  தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது. 
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து. 
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! 
நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌ 
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌ 
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌ 
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ 
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே' 
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌ 
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!'' —என்‌றும்‌, 
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌ 
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌றியாம்‌ 
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌ 
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌ 
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“'கெளரேவைஷா ததா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ | 
கோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌ 
கோ சப்தமான து :'கெள:' என்று சொல்லப்படுகிறது. 
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ 
சொல்லப்படுகிறீர்‌.  என்கிற நிர்வசன த்தின்‌ படியே 
ஸர்வ சப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌. 
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ'' என்று 
திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அனுஸந்தித்தார்‌. 
(கோவிந்தன்‌ ) 
கோ சப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு 
வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. 
அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌ நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ '' என்று 
அச்சுதன்‌. அநந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -'
வேத கதனே ”' என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌. 
(கோவிந்தன்‌ ) 
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌ 
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌ 
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌
(கோவிந்தன்‌) 
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
நம்மாழ்வாரும்‌
“பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌ 
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற 
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌ 
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே '' என்று இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌. 
“நாராயண பரோ ஜ்யோதி:'' என்றும்‌. 
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய '' என்றும்‌. 
ˆ" ஆதித்ய வர்ணம்‌ '' என்றும்‌, 
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: | 
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமிதம்‌ ॥” 
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை; 
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை. 
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ? 
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌றன. 
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌ 
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா | 
யதி, ஸத்‌ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥” 
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. 
அவ்வொளி அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று 
கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ. 

-------------------

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் 
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

-----------

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் - நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

நாளை என்பது ஸ்ரீ நரசிம்மனிடம் இல்லை–முத்துக்கள் முப்பது–எஸ்.கோகுலாச்சாரி

May 6, 2023

பகவான் ஸ்ரீமந் நாராயணன் பிறப்பில்லாத பெருமான். ஆயினும் அவன் பிறவிகளை எடுக்கின்றான். அதை அவதாரங்கள் என்று சொல்வார்கள். அவதாரங்கள் என்றால், மேலிருந்து கீழே இறங்கி வருதல் என்று பொருள். வேதம், பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது.

இப்படி எடுத்த அவதாரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல; பற்பல அவதாரங்கள். அவற்றை ஆவேச அவதாரங்கள் என்றும், அம்ச அவதாரங்கள் என்றும், பூரண அவதாரங்கள் என்றும் பலபடியாகப் பிரிக்கிறார்கள். ஸ்ரீவிஷ்ணு புராணமும் பாகவதமும் இன்னும் பல நூல்களும் பகவான் நாராயணனின் அவதாரங்களைப் பேசுகின்றன. அந்த அவதாரங்கள் பலவாக இருந்தாலும் தசாவதாரங்களை மிகச் சிறப்பாகச் சொல்லுகின்றனர்.

1. ஏன் அவதாரம் எடுக்கிறான்?

பொதுவாக பகவான் அவதாரம் ஏன் எடுக்கின்றான் என்பதற்கான காரணத்தை ஸ்ரீ கீதையிலே சொல்லுகின்றான். தர்மத்தை அழியாது காப்பாற்றுவதற்காகவும் சாதுக்கள் நலியும்போது அவர்களைக் காக்கவும் துஷ்டர்களுடைய செயல் எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் பகவான் நேரடியாக யுகங்கள் தோறும் அவதாரம் செய்கின்றான் என்பதை ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ பகவத்கீதையிலே அருளுகின்றார். இந்த அவதார வரிசையை ஆழ்வார்களும் பலவாறு கொண்டாடுகிறார்கள். வைகுந்தத்திலே தன்னுடைய இருப்பை வைத்துவிட்டு இந்த உலகத்தின் இருள் நீக்க ஒரு ஒளியாக தோன்றுகின்றான் என்று நம்மாழ்வார் அவதார விசேஷத்தைக் கொண்டாடுகின்றார்.

2. சிறந்த அவதாரம் நரசிம்ம அவதாரம்

இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதில் மிகச்சிறந்த அவதாரம் சித்திரை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவான் எடுத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரம். ஒரு கண நேரத்தில் அவதாரம் எடுத்து, அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய சோதிக்கு எழுந்தருளியவன். பொதுவாக தன்னுடைய பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக நரசிம்ம அவதாரத்தை பகவான் எடுத்தார் என்று கூறுவர். அதற்காக மட்டுமே பகவான் அவதாரம் எடுக்கவில்லை. பிரகலாதனை மறைவாக நின்று காப்பாற்றி அருளிய இறைவன், நிறைவு நிலையிலும்கூட அவனைக் காப்பாற்றி இருக்கலாம். அவனுக்கு மிகவும் தொல்லையைத் தந்த இரணியனைக் கூட சங்கல்பத்தினால் அழித்து தர்மத்தை நிலைநாட்டி இருக்கலாம். ஆனால், பிரகலாதனுடைய வாக்கைக் காப்பாற்றுவதற்காக பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தான்.

3. திட்டமிடாத அவதாரம்

பொதுவாக பகவான் அவதாரம் எடுக்கின்றபொழுது பாற்கடலில் யோகநிலையில் யோசிப்பான். ஒரு அவதாரத்தை எப்படி எடுத்து, எப்படி நிறைவு செய்வது என்பதைக் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வான். நரசிம்ம அவதாரம் தவிர மற்ற அவதாரங்கள் அப்படி எடுக்கப்பட்ட அவதாரங்கள். உதாரணமாக, மச்ச அவதாரம் எடுத்த பொழுது சத்திய விரதன் என்கிற அரசனிடத்திலே ஊழிக்கால முடிவிலே உலகமெல்லாம் நீரில் மூழ்கி இருக்கின்ற பொழுது, தான் ஒரு பெரிய மீனாக வருவேன்; அதிலே நீ ஏறிக்கொள்ள வேண்டும்; என்றெல்லாம் அவதார ரகசியத்தைக் குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகின்றான். கூர்ம அவதாரத்தில், தான் ஒரு ஆமையாக வடிவம் எடுத்து பாற்கடலை கடைவதற்கு உதவுவேன் என்கின்றான்.

4. தீர்மானித்தது யார்? இரணியனா? பிரகலாதனா?

எல்லா அவதாரங்களும் ஏதோ ஒரு மனிதரின் பிரார்த்தனையாலோ, ஒரு பக்தனின் பிரார்த்தனையாலோ எடுக்கப்பட்ட அவதாரங்கள். நரசிம்ம அவதாரத்தில் இப் படிப்பட்ட முன் திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்கு பிள்ளையாக, எந்த இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பதைக் குறித்து பகவான் திட்டமிடவில்லை. எங்கே பிறக்கப் போகிறோம், எதில் பிறக்கப் போகிறோம், எத்தனை நாழிகை தன்னுடைய அவதாரம் இருக்கப்போகிறது என்பதைக் குறித்தும் பகவான் சிந்திக்கவில்லை. உண்மையில் நரசிம்ம அவதாரத்தைக் குறித்து தீர்மானித்தவன் பிரகலாதன் அல்ல.

இரணியன்தான். அவன்தான், “உன்னுடைய பகவான் ஹரி இந்த தூணில் இருக்கிறானா?” என்று, எந்த இடத்தில் இருந்து பகவான் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிறான்.” ஆம்; இருக்கிறான்” என்று பிரகலாதன் சொல்ல, அவனுடைய சத்திய வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தூணையே தன்னுடைய தாயாகக் கொண்டு, பகவான் அவதரிக்கிறான். எனவே மற்ற அவதாரங்களைவிட நரசிம்ம அவதாரம் சிறப்புடையது.

5. மனிதனும் மிருகமும்

பொதுவாகவே தசாவதாரங்களின் சிறப்பு பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்து உண்டு. பகவான் முதலில் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம். முதலில் உலக உயிர்கள் நீரில் இருந்துதான் தோன்றின என்பது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படை. தண்ணீரில் வாழுகின்ற மீனாக அவதாரம் செய்த பகவான், அடுத்த அவதாரத்தில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற ஆமையாக அவதரித்தான்.

அதற்குப் பிறகு, நிலத்தில் வாழ்கின்ற வராகமாக அவதாரம் செய்தான். இந்த மூன்று அவதாரங்களும், விலங்கின் நிலையிலேயே செய்யப்பட்ட அவதாரங்கள். அடுத்த பரிணாமமான மனித வடிவம் எடுப்பதற்கு முன், மனிதனும் விலங்கும் கொண்ட ஒரு அவதாரமாக எடுத்த அவதாரம்தான் நரசிங்க அவதாரம். நரன் என்றால் மனிதன். சிங்கம் என்றால் விலங்குகளின் அரசன். இந்த இரண்டும் கலந்த கலவையாக எடுக்கப்பட்ட அவதாரம்தான் நரசிம்ம அவதார்.

6. ஆண்டாள் வர்ணித்த நரசிம்ம மூர்த்தி

ஆண்டாள் நாச்சியார், கண்ணனை, நரசிம்ம அவதாரம் போல வரவேண்டும் என்று ஒரு பாசுரத்திலே அருளிச் செய்கின்றாள். மலைக்குகையிலே தூங்குகின்ற சிம்மம், எழுந்து, தீவிழி விழித்து, பிடரி மயிர்களை எல்லாம் சிலிர்த்துக்கொண்டு, உடம்பை முறுக்கிக் கொண்டு, கர்ஜனை செய்து, வருவது போல கம்பீரமாக நடந்து வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றாள். நரசிம்ம அவதாரத்தை முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு ஆண்டாள் இந்தப் பாசுரத்தை அருளிச் செய்திருக்கிறாள்.

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்.

7. எங்கும் இருப்பவன்

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் நாமம் பகவான் ஹரியைக் குறிப்பிடுகிறது. அந்த ஹரி நரஹரி என்று ஆச்சாரியார்கள் விளக்கம் அளிக்கின்றார்கள். காரணம் விஷ்ணு என்றால் எங்கும் பரந்து இருக்கின்றவன். எல்லா இடங்களிலும் கரந்து உறைபவன். அவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்; வானிலும் இருப்பான்; மண்ணிலும் இருப்பான். இந்த நிலை தான் ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற தொடருக்கு பொருளாக அமையும். அதைத்தான் தினசரி சங்கல்பத்திலே நாம் சொல்லுகின்றோம். அப்பொழுதே நரசிம்மனை பிரார்த்தித்து விடுகின்றோம். இதை நம்மாழ்வார்,

கரவிசும் பெருவளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும்
உடல்மிசை உயிரென கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே–என்று பாடினார்.

8. வேத வாக்கியம் சொல்லும் நரசிம்மன்

‘‘அஜோபி ஸந்நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்’’ என்கிறது வேதம். அவன் பிறந்து விட்டதால் உண்டானவன் இல்லை. அதைப் போலவே அவன் மறைந்து விட்டதால் இல்லாதவன் இல்லை. ஈஸ்வரன் ஒருக்காலும் ஜீவனாகிவிட முடியாது. ஈஸ் வரன் அவதரித்தாலும் ஈஸ்வரன்தான். மச்ச, கூர்ம, வராக முதலிய எந்த அவதாரமும் ஒரு தாய் வயிற்றில் தோன்றியதல்ல, நரசிம்மாவதாரமும் அப்படி தோன்றியது அல்ல. அதனாலேயே `பஹுதா விஜாயதே’ என்று வேதம் கூறியது. அவன் தன்னுடைய கருணையினாலே திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுத்துக்கொள்ளுகின்றான்.

சாந்தோக்கியம் ‘‘ஆத்மா தேவானாம் ஜனிதா பிரஜானாம் ஹிரண்ய தம்ஷ்ட்ரோ பபசோ அனசூரி:’’ என்று அவரை வர்ணிக்கிறது. படைத்தவரும் தேவர்களுக்கு ஆத்மாவாகவும் உள்ள அந்த சர்வேஸ்வரன் பளபளப்பான கோரைப்பற்கள் உள்ளவராகவும் எல்லாவற்றையும் உண்பவராகவும் காணப்பட்டார் என்று நரசிம்ம அவதாரத்தை விளக்குகிறது. நரசிம்ம காயத்ரி மந்திரம் அவருடைய கூர்மையான நகங்களையும் வஜ்ரம் போன்ற கோரைப் பற்களையும் மிகச் சிறப்பாக சொல்லுகின்றது.

வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நரசிம்ம பிரஜோதயாத் என்று தைத்திரிய நாராயண வல்லி நரசிம்மரை விவரிக்கிறது. அதர்வ வேதத்தைச் சேர்ந்த ந்ருஸிம்ம பூர்வ தாபனீய உபநிஷத் மனித வடிவும் சிங்க வடிவும் கொண்ட நரசிம்மனை சத்தியமாகவும் பரப்பிரம்மமாகவும் விவரிக்கிறது.

9. ஏன் இரண்யன் பெருமாளிடம் கோபம் கொண்டான்?

இரண்யாட்ஷன், இரண்யகசிபு என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்களுள் இரண்யாட்ஷன் வராக மூர்த்தியால் வதம் செய்யப்பட்டான். அதனால் விஷ்ணுவிடம் துவேஷம் அடைந்த இரண்யகசிபு பிரம்ம தேவனைக் குறித்து கடுமையான தவம் செய்து, தனக்கு எந்த விதத்திலும் மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கினான். தனக்கு கீழே மரணம் நேரக்கூடாது. மேலே மரணம் நேரக்கூடாது. பகலிலும் மரணம் நேரக் கூடாது. இரவிலும் மரணம் வரக்கூடாது. உள்ளும் மரணம் கூடாது. வெளியிலும் மரணம் கூடாது. உயிருள்ள பொருளாலும் மரணம் கூடாது.

உயிரற்ற பொருளாலும் மரணம் கூடாது. மனிதர்களால் மரணம் கூடாது. விலங்குகளால் மரணம் கூடாது. தேவர்களால் மனிதர்களால் மரணம் கூடாது. நோயால் மரணம் கூடாது. என்று ஒரு மரணம் எப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படி எந்த வகையிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்பதோடு, தன்னுடைய சக்தியையும் ஆயுளையும் அதிகப்படுத்திக் கொள்ளும் வரங்களைப் பெற்றான்.

ஆனால் எத்தனை புத்திசாலித்தனமாக வரம் வாங்கினாலும்கூட, அந்த புத்திசாலித்தனம் யாரால் கொடுக்கப்பட்டதோ, அவர் அதைவிட புத்தி சாலித்தனமாக அதை கையாளுவார் என்பதைக் காட்டுவதுதான் நரசிம்ம அவதாரத்தின் செய்தி. இரண்யகசிபுவின் மனைவியின் பெயர் கயாது. பிள்ளையின் பெயர் பிரகலாதன். விஷ்ணுவிடம் திடமான சிந்தனையோடு பக்தி செலுத்தினான் என்பதை யஜூர் வேத அஷ்டகம், பிரஹலாதோ ஹவை காயாயவ: என்று சொல்லுகின்றது.

10. திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கம்

இரண்யகசிபுவுக்கு பிரகலாதனைத் தவிர, கிலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதிலே பிள்ளை என்று போற்றப்படுவதாக இருந்தவன் பிரகலாதன். பள்ளியில் படித்து வந்தவுடன், “நீ படித்தது என்ன?” என்று தந்தையான இரண்யன் கேட்கின்ற பொழுது, ‘‘எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ, அதைத் தெரிந்து கொண்டேன்’’ என்று பிரகலாதன் பதில் சொல்கிறான். ‘‘என்னுடைய பெயரைத் தெரிந்து கொண்டாயா?’’ என்று கேட்கிறான்.

“இன்று இருந்து நாளை சாகும் உன்னுடைய பெயரைத் தெரிந்து, இந்த ஆத்மாவுக்கு என்ன லாபம் கிடைக்கும்? நான் சொல்வது சர்வ உலகத்தையும் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனைத் தெரிந்து கொண்டேன்” என்று சொன்னவுடன் கோபம் ஏற்படுகின்றது. தன்னுடைய பிள்ளை என்றும் கருதாமல் அழிக்க நினைக்கின்றான். அழிக்க நினைத்த அவனே அழிந்து போனான் என்பதை திருவல்லிக்கேணி பாசுரத்திலே திருமங்கையாழ்வார் மிக அற்புதமாக விளக்குகின்றார்.

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே

இன்றைக்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே தெள்ளிய சிங்கம் என்கிற திருநாமத்தோடு நாம் பெருமாளை தரிசனம் செய்யலாம். தெள்ளிய சிங்கம் என்பது தெளிசிங்கமாகி அவருடைய பெயரிலேயே தெளிசிங்கர் வீதி திருவல்லிக்கேணியில் இருக்கிறது.

11. ஆயுஷ் ஹோம மந்திரத்தில் நரசிம்மன்

ஆயுஷ் ஹோமம், ஆயுள் அபிவிருத்தி அடையச் செய்யப்படுகின்ற ஹோமம் ஆகும். இதற்காக ஆயுஷ் சூக்தம் ஓதப்படுகிறது. ஆயுஷ் ஹோம மந்திரம் பல மந்திரங்களைக் கொண்டது. அதிலே பகவான் “நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும், மிருத்யுவின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனைகள் வருகிறது.

அதிலே பகவானைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, ஸுவர்ண ரம்பக் கிருஹம் அர்சயம் என்கிற வாக்கியம் வருகிறது. அதாவது தங்கத்தினாலான வாழைமரம் போல உள்ள தூண் யாருக்கு பிறந்த வீடாக மாறியதோ, அங்கே தோன்றியவன் என்று கூறுகிறது. இப்படி தங்கத் தூணில் இருந்து பிறந்தவன் நரசிம்மன் என்பதால் இந்த மந்திரத்தினுடைய அதிதேவதையாக நரசிம்மன் இருக்கிறார் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

12. பக்தர்களுக்குப் பிரியமான உருவம்

நரசிம்மன் பயங்கரமான ரூபத்தை எடுத்து இரண்யனை வதம் செய்தார். ஆனால், இந்த ரூபம் பக்தர்களுக்கு பிரியமானதாக இருக்கிறது. அழகானதாக இருக்கிறது. அதனால்தான் ஆழ்வார்கள் இந்த ரூபத்தைவர்ணிக்கின்றபொழுது அழகியான்தானே அரிவுருவம் தானே என்று வர்ணிக்கிறார்கள். தீயவர்களுக்கு பயங்கரமானதாகத் தெரிகின்ற ரூபம், பக்தர்களுக்கும், சரணாகதர்களுக்கும் ஆச்சரியமான, ஆனந்தமான உருவமாக இருக்கிறது.

ஒருமுறை பட்டர், நரசிம்ம அவதாரத்தைப் பற்றி விளக்கம் சொல்லுகின்ற பொழுது, பயங்கரமான ரூபம் பார்த்து குழந்தை பிரகலாதன் பயப்படவில்லையா? நரசிம்மரின் கோபம் பிரகலாதன் முதலியவர்களை தாக்கவில்லையா என்கின்ற கேள்வி எழுந்த பொழுது பட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக்கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார்.

13. யாருக்கு முதல் பூஜை?

பொதுவாக நாம் பெருமாளுக்குப் பூஜை செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொள்வதாக இருந்தாலும், பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு உட்கொள்ள வேண்டும். சமர்ப்பணம் செய்துவிட்டால் சாதாரண சாதம்கூட பிரசாதமாக மாறிவிடும். நாம் பெருமாளுக்கு படைக்கிறோம், பெருமாளே அவதாரம் எடுத்து வந்தால் அவரும் பூஜை செய்ய வேண்டுமே, அவர் யாருக்கு படைப்பார்? ராம அவதாரத்திலே ராமன் தினசரி பூஜை செய்வார். அவர் பெருமாள். ஆனால் அவர் பூஜை செய்த பெருமாள் என்பதால் பெரிய பெருமாள் என்று வழங்கப்படுகிறார்.

திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளுக்கு பெரிய பெருமாள் என்று திருநாமம். அந்த பள்ளிகொண்ட பெருமாளே திருமலையில் ஸ்ரீனிவாச பெருமாளாக அவதாரம் செய்தார். அவருக்கு பத்மாவதி தாயாரோடு திருமண வைபவம் நடக்கிறது. வந்த தேவர்களுக்காக திருமண விருந்து தயாராகிறது. இந்த பிரசாதத்தை யாருக்கு படைப்பது என்கின்ற கேள்வி எழுகிறது.

சாட்சாத் பெரிய பெருமாளாகிய ஸ்ரீனிவாச பெருமாளுக்கு படைக்கலாமா? ஸ்ரீனிவாசப் பெருமாள் இதை நரசிம்மப் பெருமாளுக்கு படைத்துவிட்டு மற்றவர்களுக்கு பரிமாற வேண்டும் என்று சொல்லுகின்றார். பெரிய பெருமாளே தன்னுடைய ஆராதனை பெருமாளாகக் கருதிய பெருமாள் நரசிம்மன் என்பதால் வைணவத்தில் அவரை பெரிய பெரிய பெருமாள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.

14. முதல் பக்தன் பிரஹலாதன்

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

சிறந்த பக்தர்கள் வரிசையிலே பிரகலாதனுக்கு முதல் இடம் உண்டு. “முதலில் பாகவதனை நினை; பிறகு பகவானே நினை” என்கிற மரபு உண்டு. நரசிம்மப் பெருமாள் ‘‘நீ என்ன வரத்தைக் கேட்கிறாய். கேள் தருகிறேன்’’ என்று, மடியில் குழந்தை பிரகலாதனை அமர்த்திக்கொண்டு கேட்க, வைராக்கியமிக்க சின்னஞ் சிறுவனான பிரகலாதன், ‘‘எனக்கு வேறு என்ன வேண்டும்? எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை ஒரு கணமும் மறவாத வரத்தை நீ அருள வேண்டும்’’ என்றான். இந்த வரத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. பிரகிருதி மாயையால், இறைவனுடைய அருள் வெள்ளம் பாய்ந்தால் ஒழிய, இறைவனை நினைப்பது கூட சிரமம் தான். இதைத்தான் “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று சொன்னார்கள்.

15. தந்தைக்கு நல்ல கதி வேண்டும்

பிரகலாதன் இறைவனை மறக்காத வரத்தைக் கேட்டவுடன், நரசிம்ம பெருமாள் அவனை உச்சி முகர்ந்து, ‘‘உனக்கு சர்வ மங்கலங்களும் உண்டாகட்டும். ஒரு மன்வந்திர காலம் இந்த பூவுலகில் ஆட்சிசெய்து பிறகு என்னை வந்து அடைவாயாக’’ என்றார். அதோடு அவன் இரண்டாவதாக ஒருவரத்தைக் கேட்டான். “தன்னைப் படைத்த பெருமானிடமே மோதி, பகவத் அபச்சாரமும், பாகவத அபச்சாரமும் ஒருங்கே செய்த தன்னுடைய தந்தை ஹிரண்யன் நல்ல கதி அடைய வேண்டும். அவரை மன்னிக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான். அதையும் நரசிம்ம பெருமாள் கனிவோடு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.

16. லட்சுமி நரசிம்ம கராவலம்பம்

ஆதிசங்கரர் நரசிம்மரைக் குறித்து இயற்றிய “லட்சுமி நரசிம்ம கராவலம்பம்’’ என்னும் ஸ்தோத்ரம் புகழ்பெற்றது.

ஸ்ரீ மத் பயோநித நிகேதன சக்ரபாணே,
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே,
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத,
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.

இந்த முதல் நான்கு வரி ஸ்லோகத்தைச் சொன்னால் போதும். எந்த வியாதிகளும், துர் மரணங்களும், தரித்திரமும் ஒருவரை அடையவே அடையாது. மனதில் எந்த கவலையும், அச்சமும் வராது. எந்த கொடிய விஷங்களும், கிரக தோஷங்களும் அவனை அணுகாது.

17. போட்டியில் ஜெயித்த நரசிம்மர்

திருமாலின் அவதாரங்களுக்குள் போட்டி நடந்ததாம் 1). மத்ஸ்ய, 2). கூர்ம, 3). வராஹ, 4). நரசிம்ம, 5). வாமன, 6). பரசுராம, 7). ஸ்ரீராம, 8) பலராம, 9). கிருஷ்ண, 10). கல்கி அவதாரங்களை, வரவழைத்தார்! முதல் சுற்றில். மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களும் முறையே. மீன், ஆமை, பன்றி ஆகிய மிருகங்களின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது! எனக் கூறி நிராகரித்து விட்டாராம் ஆழ்வார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால் அவரை நிராகரிக்கவில்லை! “மகாபலியிடம் சிறிய பாதத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர்!’’ என்ற குறை வாமன மூர்த்தியிடம் இருந்ததாம். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அதுவும் குறையாயிற்று.

18. நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

பலராமன், கண்ணன் இருவரும் “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்தான் பங்கேற்கலாம் என்று சொல்ல’’ தம்பிக்காகப் பல ராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், “நீங்கள் அவதரித்தபின் போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிரா கரித்துவிட்டார்! திருமழிசையாழ்வார். இறுதியாக, நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் கலந்து கொண்டார்கள். மூவரையும் பரீட்சித்து நரசிம்மர்தான் அழகு! என்று தீர்ப்பளித்தாராம் ஆழ்வார்.

ராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார். கண்ணன் அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை! ஆனாலும் ஆபத்தில் ஓடோடி வந்து காப்பாற்றி யதுதானே அழகு. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து காத்த பெருமாள் நரசிம்மர்; எனவே அவரே அழகு!” என்று தீர்ப்பளித்தார் திருமழிசையாழ்வார்.

‘‘அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து’’

19. பரிபாடலில் நரசிம்ம அவதாரம்

சங்க இலக்கியங்களில் ஸ்ரீநரசிம்ம அவதாரத்தைக் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. நான்காம் பரிபாடலில், கடுவன் இளவயினார், நரசிம்ம அவதாரத்தின் தோற்றத்தைக் குறித்து விவரிக்கிறார். ‘‘சிவந்த கண்ணையுடையோனே! பிரகலாதன் நின்னைப் புகழ, அது பொறாத இரணியனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினை உடையை.’’ என்று நரசிம்மரின் நகத்தைப் புகழ்கிறார். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் “மடங்கலாய் மாறட்டாய்” என்று பாடுகிறார் இளங்கோவடிகள்.

மடங்கல் என்பது சிங்கம். மாறு என்பது பகைவனாகிய இரணியனைக் குறிக்கும். அட்டாய் என்பது அவரை அழித்ததைக் குறிக்கும். சிங்க உருவம் எடுத்து, தன்னிடத்திலே மாறுபட்ட இரணியனை வென்றான் என்பது இப்பாடலின் கருத்து. ஒரே வரியிலேயே நரசிம்ம அவதாரத்தின் பெருமையை இளங் கோவடிகள் இப்பாடலில் சொல்லி இருக்கின்றார்.

20. கம்பன் இராமாயணத்தை அங்கீகரித்த அழகிய சிங்கர்

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு நரசிம்மப் பெருமாளின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் தன்னுடைய கம்பராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கடைசியில் அவர் திருவரங்கத்தில் தாயார் சந்நதி முன் உள்ள மண்டபத்தில் புலவர்களைக் கூட்டி கம்பராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த நாற்கால் மண்டபத்துக்கு இடது புறம் நரசிம்மருடைய சந்நதி இருக்கிறது. அது சற்று மேடான பகுதியில் இருப்பதால் அவருக்கு மேட்டு அழகிய சிங்கர் என்கிற திருநாமம். கம்பராமாயணத்தில் இரணியன் வதைப் படலத்தில் நரசிம்மரின் தோற்றத்தை கம்பர் உணர்ச்சிகரமாக வர்ணித்த பொழுது, மேட்டழகிய சிங்கர் சிரக்கம்பம் செய்து அங்கீகரித்தார் என்பது வரலாறு.

21. இரணிய வதைப் படலம்

நரசிம்ம அவதாரத்தைக் குறித்து வேதங் களில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனை மிக அற்புதமாகப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பர் இராமனின் கதையைப் பாடுகின்ற பொழுது, இடையில் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையைக் கூறுவதற்கான மிகச் சரியான இடம் கிடைக்காமல், விபீஷணனின் மூலம், நரசிம்ம அவதாரத்தின் பெருமையைக் கூறினார். அதற்கென்றே இரணியன் வதை படலம் என்கின்ற பகுதியை இயற்றினார். அதை படித்தால் போதும். நரசிம்ம அவதார மகிமையை பூரணமாகத் தெரிந்து கொள்ளலாம்.

22. வைணவத் தத்துவப் பெட்டகமே நரசிம்ம அவதாரம்

ஸ்ரீமன் நாராயணனின் திருநாமங்களின் பெருமையைக் குறித்தும், பிரகலாதாழ்வானின் வைராக்கியமான பக்தியைக் குறித்தும் கம்பர் இரணிய வதைப்படலத்தில் மிகப் பரவசமாகப் பாடியிருப்பார். கிட்டத்தட்ட 175 பாடல்களிலே நரசிம்ம வைபவத்தை அவர் பாடி இருக்கிறார். பிரஹலாதன் வாய்மொழி மூலமாக எம்பெருமானின் பெருமைகளைப் பேசும் ஒவ்வொரு பாடலும் பாராயணம் செய்யும் தகுதி படைத்த தோத்திரப் பாடல்களாகும்.

எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும், தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும், விளக்கேற்றி வைத்து, இந்த இரணியன் வதைப்படலத்தை ஈடுபாட்டோடு படித்தால் நிச்சயமாக நரசிம்மப் பெருமாளுடைய பூரண அருள் கிடைத்து, அந்த சிக்கல்கள் விலகும். காரணம் வேதத்துக்கு நிகரான மந்திரச் சொற்கள் எல்லாம் பெய்து கம்பன் பாடி இருக்கிறார்.

23. அவனைத் தவிர வேறு யார் நாமமும் சொல்லமாட்டேன்

பிரஹலாதன் சொல்கின்றான்.‘‘நான் நாராயணனின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தையும் சொல்ல மாட்டேன். காரணம், அதுவே வேதத்தின் முடிவான இறைவனுடைய திருநாமம்.

வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த
போதத்தானும், அப் புறத்துள எப் பொருளானும்,
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன்;
ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ?
நான் சொல்லுகின்ற நாமத்தைவிட சிறந்த நாமம் ஒன்று இல்லை என்கின்றான்.
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்
மனக்கு வந்தனன்; வந்தன, யாவையும்; மறையோய்!

உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்’’ என உரைத்தான். தன் தந்தையிடம் “வேதம் படித்த தந்தையே, இந்த நாமம் உனக்கும் உரியது” என்று சொல்லும் நயம் கவனிக்க வேண்டும்.

24. நாராயண மந்த்ரம்

நரசிம்ம அவதாரத்தின் பெருமையைச் சொல்லுகின்ற பொழுது எட்டெழுத்து மந்திரத்தின் பெருமையை கம்பன் பிரகலாதன் வாய் வார்த்தையாக காட்டுகின்ற நயம் அற்புதமானது.

காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!

25. அதிர்ஷ்ட பலமாக நின்று காத்தவன் நரசிம்மன்

இரணியன் பிரகலாதன்மீது கோபம் கொண்டு பற்பல இடையூறுகளைச் செய்கின்றான். அத்தனை இடையூறுகளில் இருந்தும் பிரகலாதன் தப்பிக்கின்றான். இரணியன் செய்த அத்தனை கொடுமையிலிருந்தும் அதிர்ஷ்ட பலமாக நின்று (மறைமுகமாக) காத்தவன் நரசிம்மன். கடைசியில் இரணியன் சினம் எல்லை மீறிப் போகிறது. தன் பிள்ளை உயிரை எடுக்க முடியாத கவலை பெற்ற தந்தைக்கு வருகிறது. இரணியன் சொல்கின்றான். ‘‘எத்தனையோ செய்தும் உன் உயிரை என்னுடைய படைகளால் பறிக்க முடியவில்லை. தப்பிக்கும் விதத்தை தெரிந்திருக்கிறாய். இனி நானே உன்னுடைய உயிரைப் பறிக்கப் போகிறேன்” என்று சொன்னவுடன், பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அற்புதமானது.

வந்தானை வணங்கி, ‘‘என் மன் உயிர்தான்
எந்தாய்! கொள எண்ணினையேல், இதுதான்
உம் தாரியது அன்று; உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான்’’ எனலும்,

“தந்தையே என்னுடைய உயிர் உன்னுடைய வசத்தில் உள்ளதன்று. அது எம்பெருமானுடைய வசத்தில் உள்ளது. அவன் நினைத்தால் அன்றி, உன்னாலோ உன்னைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொல்ல முடியாது. என்ற அற்புதமான தத்துவத்தை அந்த இடத்திலே காட்டுகின்றான்.

26. எங்கும் நிறைந்தவன்

நிறைவாக அவன் ஒரு கேள்வி கேட்கின்றான். “நீ சொல்லுகின்ற கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா?” பிரகலாதன் பதில் சொல்லுகின்றான். அந்தப் பதில் அற்புதமானது. வேத கருத்துக்களின் சாரமானது. “இந்த தூணில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் அவன் நிறைந்திருக்கிறான். அதனால்தான் அவனை விஷ்ணு என்று சொல்லுகின்றோம்”

‘‘சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்’’ என்றான்; ‘‘நன்று’’ எனக் கனகன் நக்கான்.

27. காட்டவில்லையானால் உன்னைக் கொல்வேன்

“அப்படியானால் இந்தத் தூணில் நீ காட்டுகின்ற இறைவன் இல்லை என்று சொன்னால் உன்னுடைய உயிரை எடுப்பேன். உன் உடம்பிலிருந்து வரும் குருதியைக் குடிப்பேன். உன் உடலையும் தின்பேன்” ஆணவம் அதிகமாகின்ற பொழுது பேசும் பேச்சு எத்தனை விபரீதமாகும் என்பதை கம்பன் காட்டும் இடம் இது.

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென,நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்’’–என்றான்.

28. கடவுள் நம்பிக்கையின் ஆழம்

அப்பொழுது பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அதிஅற்புதமானது. “என்னுடைய உயிர் உன்னால் கொல்லப்படும் அளவிற்கு அத்தனை எளிமையானதா? உன்னையும் என்னையும் படைத்த பரம்பொருளான திருமால், நீ தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் இருப்பான். அப்படி அவன் தோன்றவில்லை எனில், என்னுடைய நம்பிக்கை போய் விட்டது. நீ என்ன என் உயிரை எடுப்பது? என் உயிரை நானே மாய்த்துக் கொள்வேன்.

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான்
முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்’’ என்றனன், அறிவின் மிக்கான்

29. ஆஹா என்று சிரித்தது செங்கட் சீயம்

இரணியன் இகழ்ச்சியாக சிரித்து தன்னுடைய முறம் போன்ற கைகளினாலே தானே கட்டிய பொற்றூணை ஓங்கி அறைந்தான்.

அளந்திட்ட தூணைஅவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டுவாளுகிர்ச் சிங்க உருவாய்
உளந்தொட்டுஇரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி

இரணியன் சந்தேகத்தைத் தீர்க்கும் படியாக அவனே கட்டிய தூணில் ஆவிர்பவித்தான். தூணில் எப்படி தோன்றினார் என்பதை கம்பன் வர்ணிப்பது போல வேறு எங்கும் நாம் பார்க்க முடியாது.

நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘‘நன்று, நன்று!” என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

30. பிரஹலாதன் மகிழ்ச்சி

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.

நரசிம்மரைப் பார்த்ததும் பிரகலாதனுடைய மகிழ்ச்சி எப்படி இருந்தது என்பதை கம்பனைத் தவிர வேறு யாரும் காட்டவில்லை. நரசிம்மபெருமாளின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினான். பொலபொலவென்று கண்ணீர் விட்டு அழுதான். இறைவனின் பல்வேறு விதமான நாமங்களைப் பாடி ஆரவாரம் செய்தான். தன்னுடைய சிவந்த கைகளை தலையில் வைத்து தொழுதான். ஆடினான். பாடினான். கீழே விழுந்து வணங்கினான். துள்ளிக் குதித்து ஓடினான். என்று கம்பன் பிரகலாதனுடைய அந்த உற்சாகத்தை அற்புதமாக காட்டுகின்றார்.

இந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் நமக்கும் வரவேண்டும். வரும். பிரகலாதனை நினைத்து நாமும் அவனை சரணாகதி செய்வோம். நரசிம்ம ஜெயந்தி (4.5.2023) அன்று காலையில் அவனைப்பற்றிய பல்வேறு நாமங்களைக் கூறி, துளசி மாலையால் அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து, பானகமோ பாலோ இருந்தாலும்கூட போதும், நிவேதனம் செய்து, அவனுடைய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவோம்.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்டோம் ஸ்ரீ அழகர்.. கண்டோம் மகிழ்வு.. கொண்டோம் மதுரை வாழியவே’ பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்!

May 5, 2023

கண்டோம் ஸ்ரீ  அழகர்.. கண்டோம் மகிழ்வு.. கொண்டோம் மதுரை வாழியவே’ பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்!

விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

பச்சை பட்டுத்தி ஜொலித்த ஸ்ரீ கள்ளழகர் ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு கிடையே வைகை ஆற்றில் இறங்கினார்.

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் ஸ்ரீ அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதையடுத்து அங்கு திரட்டிருந்த மக்கள் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

சர்க்கரை தீபம் ஏந்தி ஸ்ரீ கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்த-ஸோபக்ருத் ஆண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.

வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.

அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண் அதிரும் வகையில் பக்தி கோசங்களின் மத்தியில் காலை 5.45 மணிக்கு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்..

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறிநிலையத்துறை மற்றும் வீர ராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையோடு பக்திகோஷம் எழுப்பினர்

இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.

முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரம் காவல்துறையினர் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

மேம்பாலங்களிலும், கட்டிடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

வைகையாற்றில் பக்தர்கள் இறங்குவதற்காக வைகை ஆறு ஒட்டிய தடுப்பு சுவர்களின் அருகே 4 இடங்களில் தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத் துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து பல்லாயிரக்கணக்காணோர் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.

கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.

பச்சை பட்டு

கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கியது விவசாயம் பெருகும், நாடு செழிக்கும் என்பதை கோடிட்டு காட்டுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 6-ம் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். 7-ம் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது. வரும் 8-ம் தேதி காலை அதே பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு புறப்பாடாகிறார். அன்று இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறவுள்ளது.

9ம் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோயிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.

ஏன் கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் என்று தெரியுமா? அதற்கு புராணக்கதைகள் உள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண்பதற்காக சீதனத்தோடு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு வருகிறார். ஆனால், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

இத்தகவல் கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது அவருக்கு தெரியவருகிறது. இதனால் கோபமடைந்த கள்ளழகர் மதுரை மாநகருக்கு வராமல் வண்டியூர் வழியாக மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிச் சென்று விடுகிறார்.

ஆனால், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு இன்னொரு கதையும் உள்ளது. புகழ்பெற்ற நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் முனிவர் தண்ணீரில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வருகை வந்தார். ஆனால், இவர் வருவதை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த துர்வாச முனிவர் இன்றிலிருந்து நீ தவளையாக மாறுவாய் என்று சுதபஸ் முனிவருக்கு சாபமிடுகிறார். தன் தவறை உணர்ந்த சுதபஸ் முனிவர் மன்னிப்பு கேட்டார்.

அப்போது, மனமிறங்கிய துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ் முனியவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருக்கிறார்.

சுதபஸ் முனியவர் செய்த தவத்தால், மனம் மகிழ்ந்த சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் என்று புராணக் கதை சொல்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் என்று தனித்தனியாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார்.

இவையே அன்று முதல் இன்று வரை சித்திரை திருவிழாவாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா தினத்தன்று, மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோன்று, அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையில் திரண்டு நின்றுக்கொண்டிருப்பார்கள். அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என பல வர்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டியை திறந்து கைவிட்டு ஒரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த புடவை சிக்குகிறதோ அந்தப் புடவையைத்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அணிவிப்பார்கள்.

கள்ளழகர் பச்சை திறத்தில் புடவை கட்டி வந்தால் அந்த வருடத்தில் நாடு செழிப்பாக இருக்குமாம். சிவப்பு புடவை கட்டி வந்தால் அந்த வருடம் நாட்டில் அமைதி குலைந்து, பேரழிவு ஏற்படுமாம். வெள்ளை நிறத்தில் புடவை கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்குமாம். மஞ்சள் திறத்தில் புடவை கட்டி வந்தால் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் அந்த வருடம் நடக்கும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சித்ரா பவுர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோவிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோவிலை விட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கி வைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்கார நல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப் போனதாகச் சொல்கிறார் கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டி யூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கி அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்று மாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி களை கட்டுகிறது. நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.

இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா…என பல வண்ணங் களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோவிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ எனப்பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஐந்தாம் நாள் பவுர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப் போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோவிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவானகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்த ராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலை நோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோவிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை. இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது

மதுரை, மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி மதுரை வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று விடிய விடிய நடந்தது. அதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்வர்.

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 1-ம் தேதி மாலையில் அழகர்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து  திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகராக கோலம் கொண்டு பெருமாள் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

அப்போது 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வழி நெடுகிலும் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார்.  தொடர்ந்து நேற்று காலையில் மூன்று மாவடி பகுதியில் காலை 6 மணிக்கு சுவாமி அதே பல்லக்கில் எழுந்தருளினார்.  அப்போது பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து இரவு  தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து இன்று(5-ம் தேதி) அதிகாலையில் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் எழுந்தருளல் நடைபெற்றது.

அதை தொடர்ந்து இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.  நாளை 6-ம் தேதி தேனூர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருள்வது நடைபெறுகிறது. அதை தொடர்ந்து  அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறுகிறது.  இந்த வருடம் 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

விழாவையொட்டி மதுரை புறநகர் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முத்துக்கள் முப்பது-வாராரு வாராரு… அழகர் வாராரு…

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும், கோயில்களும் முக்கியமானவை. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானவை. அவற்றில்,  மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா”. ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்  முக்கிய நிகழ்வான கள்ளழகர்  ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்” நிகழ்வினை  பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது. இந்த சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு தகவல்களை “முப்பது
முத்துக்களாகக்” காண்போம்.

1. மதுரையின் சிறப்பு

மதுரை என்றாலே தமிழ். தமிழ் என்றாலே மதுரை. தமிழ் நாடு என்று நினைத்தால், முதலில் நினைவுக்கு வருவது மதுரை தான். சங்கம் வளர்த்த மதுரை சுமார் 2,500  ஆண்டுகள் பழமையானது. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால்  `கடம்பவனம்’ என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால் `மருதை’ என்றும், அனைவரும் கூடி இலக்கியக் கலந்துரையாடல் செய்தமையால் கூடல் மாநகர் என்றும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்தமையால் ஆலவாய் என்றும், கோட்டையின்  நான்கு வாயில்கள் சங்கமிப்பதால் நான்மாடக் கூடல் என்றும், அழைக்கப்படும் பெருமைகளைக் கொண்டது.

2. வீதிகளில் தமிழ் மணம்

மதுரைக்குத்  தான் எத்தனை பெயர்கள்? 1.மல்லிகை மாநகர், 2.கூடல் நகர், 3.மதுரையம்பதி,  4.கிழக்கின் ஏதென்ஸ், 5.நான் மாடக்கூடல், 6.மீனாட்சி பட்டணம், 7.ஆலவாய்,  8.கடம்பவனம், 9.அங்கண் மூதூர், 10.தூங்கா நகரம், 11.கோவில் நகரம் 12. பூலோக  கயிலாயம் என பல பெயர்கள் உண்டு. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் சிறப்பு  மதுரைக்கே உரியது. மாடக்குளம், ஆத்திகுளம், கரிசல்குளம் என நீர் நிலைகளின்  பெயராலேயே கிராமங்களுக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்யும் வழக்கமும் அதிகம்.

3. அன்னை மீனாட்சி அருளாட்சி செய்யும் இடம்

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய  மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. அன்னை மீனாட்சி அவதரித்து,  வளர்ந்து, ஆட்சி செய்யும் தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் வரலாறு, கலாச்சாரம், மொழி, கலைகள் என தொடர்புடையது. மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சியம்மன்  தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. மேலும்  இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

4. ஆற்றைப் பார்த்தாயா? எம் அழகரைப் பார்த்தாயா?

மதுரை  என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக  முக்கியமான விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா மற்றும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா. அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா” என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை  எடுத்துரைக்கும்.

5. பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி, ஆணைப் பார்த்தால் அழகர்

மதுரை  என்றாலே மீனாட்சி பெயரும், அழகர் பெயரும் பிரசித்தம். மேலூர் அழகர் கோயில் பக்கம், வீட்டில் ஒரு அழகர் இருப்பார். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள  ஊர்களில் இருந்து குடும்பத்துடன் சித்திரை திருவிழாவுக்கு புறப்பட்டு வந்து  சேருவார்கள். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில், அழகருக்கு ஆயிரம்  பாட்டு இருந்தாலும் “வாராரு வாராரு அழகர் வாராரு” பாட்டு தான் ஊரில் எந்த  பக்கம் திரும்பினாலும் கேட்கும்.

6. வைகை நதியின் சிறப்பு

சித்திரை  விழாவில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று மதுரை. இரண்டாவது அழகர் மலை. மூன்றாவது வைகை நதி. வைகை நதிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? மீனாட்சி  அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை  வேண்டினான். அப்போது சிவபெருமான், `வை…கை’ என்று குண்டோதரனுக்கு  உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன.

7. சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு பெயர்

ஸ்வாரஸ்யமாக இன்னொருசெய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் `வை’யும்  சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் `கை’யும் இணைந்து  சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக `வைகை’ அமைந்திருக்கிறது.  வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு.

8. சமயம், தமிழ் சேர்ந்ததால்…

மதுரையில்,  சமயமும் தமிழும் சேர்ந்து நிலை பெறச் செய்வதால் வைகை என்று பெயர். “அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்” என்பார்கள் சான்றோர்கள். வைகைக்கு வேகவதி என்று பெயரும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது. ‘‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி”, ‘‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்  நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை” என்பன போன்ற தொடர்கள்  வைகை நதியின் பெருமையைச் சொல்லும். சிவ பெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறுவர். வடமொழி நூல்கள் வைகையை ‘‘க்ருதமாலா”  நதி என்று குறிக்கின்றன.

9. வைகை ஏன் கடலை அடையவில்லை?

பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும். ஆனால், வைகை  கடலை அடையாத ஆறு. அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான  காரணத்தைப் பாட்டாகக் கூறினார். பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள  அப்பாடல், ‘நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி’ என்று வாரி இடம் போகாத வையையே நதி  பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலை கடைந்தார்கள்.

அப்போது ஆலகால நஞ்சு  வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். வைகை  நினைத்ததாம். “ஏ கடலே..எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு  கொடுத்த உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.”  மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை  கடலை அடையவில்லை!

10. அற்புதமான ஆறு வைகை

தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது.

சுருளியாறு, தேனியாறு,  வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு  முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி  கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர் முல்லையாறாக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு  இதனுடன் கலக்கிறது. பின்னர், வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது.

11. அழகர் மலை

மதுரையின்  சிறப்பையும், வைகையின் சிறப்பையும் பார்த்த நாம், மதுரைக்கு வந்து சித்திரை முழு நிலா நாளில் ஆற்றில் இறங்கும் அழகரின் சிறப்பையும், அவர் நின்று அருள் புரியும் அழகர் மலையின் சிறப்பையும் அறிய வேண்டும். அழகர் கோயில் 108  வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
இதற்கு வைணவத்தில் திருமாலிருஞ்சோலை  என்கின்ற திருநாமம் உண்டு. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், சோலைமலை, குலமலை குளிர்மலை, தென்திருப்பதி, உத்யான சைலம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகிரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது  கிழக்கு மேற்காக, 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன.

12. ஆழ்வார்களால் பாடப்பெற்ற அழகர் மலை

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்புறம்  அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. பலவகை  மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து  பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்சி தரும் இப்பகுதியில் இயற்கையாகவே சோலைகள் பல அமைந்திருகின்றன. சோலைகளில் பூக்களும் காய்களும்,  கனிகளும் மிகுதியாக உண்டாகி கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டும் இம்  மலையைப் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுதியாக உண்டு.

13. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர் கோயிலின் சிறப்பு

‘‘அவ்வழி  படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு  தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து  செல்குவிர் ஆயின் ”என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோயிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

14. இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமை

சிலப்பதிகார ஆசிரியர் ‘விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணியோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு’ என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும்  கூறுகிறார். ஆனால், நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு  பொய்கை. இதன், மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோயில் அமைக்கப்பட்டது என தெரிய வருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும்  கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

15. சொக்கத் தங்கத் திருமேனி

அழகரின்  திருமேனி பொன்மயமானது. அபரஞ்சி தங்கம் என்கின்ற சுத்தமான தங்கத்தால் ஆன திருமேனி. இங்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர் ஆலயத்திலும் மட்டுமே அபரஞ்சி தங்க உற்சவ மூர்த்திகள் உள்ளனர். திருமாலிருஞ்சோலையில் மூலவரும் உற்சவரும் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி தருகின்றார்கள் என்பது ஒரு சிறப்பு. இங்குள்ள பெருமாள் கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். தாயார் சுந்தரவல்லி  என்ற திருநாமத்தோடு காட்சி தருகின்றார். தேவி என்ற பெயரும் இவருக்கு  உண்டு.

16. மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள்

மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ் சோலை அழகர். இன்னொன்று  திருமோகூர் அழகர். மூன்றாவது மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர்.  திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். கருவறையில் பெருமாள் பரமசுவாமி எனப்படுகிறார். ஆண்டாள்,

‘‘எழில் உடைய அம்மனைமீர்! என்
அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார்
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
என்று வர்ணிக்கும் அழகு இவர்க்கு அப்படியே பொருந்தும்.

17. நூபுரகங்கை நீரூற்று

அழகர்மலை  அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது. எம்பெருமான் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தான். அவருடைய ஒரு பாதம் உலகத்தை அளந்து கொண்டே அப்பாலுள்ள உலகங்களுக்குச் சென்றது.
இந்திரலோகம் கடந்து சத்தியலோகம் சென்ற பொழுது இறைவனுடைய திருவடிகளுக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்த  நான்முகன், தன்னுடைய கமண்டல நீரால் எம்பெருமானின் திருவடிகளை அபிஷேகம் செய்தான். அந்த கமண்டல நீரானது எம்பெருமானின் திருவடியில் அணிந்திருந்த  பொற்சிலம்பு மீது பட்டு சிதறி பெருகி ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

18. பாவங்கள் தீர்க்கும் பவ நாசினி

எல்லா  நீர் நிலைகளுக்கும் ஒரு உற்பத்தி இடம் உண்டு. ஆனால், சிலம்பாறு எங்கே  உற்பத்தி ஆகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமாலிருஞ்சோலையில்  ஆயிரக்கணக்கான தீர்த்தங்கள் இருந்தாலும் அழகர் நீராட்டம் காண நூபுர கங்கை தீர்த்தம் தான் வேண்டும்.
கற்கண்டு போன்ற சுவையுடன் இருக்கக்கூடிய இந்த  தீர்த்தம் தவிர வேறு தீர்த்தத்தால் அழகருக்கு திருமஞ்சனம் செய்தால்,  அவருடைய மேனி கறுத்து விடுகிறது. சகல நோய்களையும் தீர்க்கக்கூடிய அற்புதமான  மூலிகை தீர்த்தம் இது. பகவானுடைய திருவடியில் இருந்து தோன்றி நம்முடைய உடல் அழுக்கை மட்டும் அல்லாது மன அழுக்கையும் அகற்றுவதால் “புண்ணிய சுருதி” என்றும் “பாவ நாசினி” என்றும் சொல்வார்கள். ஐப்பசி துவாதசியில் இங்கு  நீராடி அழகரை தரிசிப்பது பெரும் புண்ணியம். பாதகங்கள் தீர்த்து பரமனடி  காட்டும்.

19. ஆலயத்தில் எங்கும் அழகு, கலை நயம்

இங்கு  பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு, மண்டபங்கள் அழகு, சிலை அழகு, சோலைகள்  அழகு. கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை  ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா”  என்று வர்ணிப்பார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம்  வட்ட வடிவமானது. ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சந்நதியும் கலைநயத்துடன் உள்ளது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த  நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.

20. எத்தனை மண்டபங்கள்? எத்தனை சிற்பங்கள்?

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், லட்சுமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட  கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும். வசந்த  மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும்  அழகிய ஒவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

இந்தச்  சந்நதியும் இங்கு ஒரு சிறப்புதான். மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு  முன் நிற்கிறார்கள். பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. அதில் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியன பூசி  மாலையும் மலர்களும் சாத்தி கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள்.
தலையில்  உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை,  கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி,  காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி. சித்திரைத்  திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நதிக்குதான் அழகர் வருகிறார்.

அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல்  வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும்  முன்பு, கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு  வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம்  செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம்  காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

21. அழியா அழகுடையான்

ஆழ்வார்கள்  பலர், பெருமானை அழகர் என்றே மங்களாசாசனம் செய்கின்றனர். அழகன் என்ற சொல் வைணவத்தில் பிரசித்திபெற்ற சொல். இராமனை அழியா அழகுடையான் என்று கம்பன் வர்ணிக்கின்றார்.

வெய்யோனொளி தன்மேனியி (ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.
திருமங்கையாழ்வார் திருநாகைப் பெருமானை ‘‘அச்சோ ஒருவர் அழகியவா”
என்று வர்ணிக்கின்றார்.

22. கள்ளழகர் என்ற திருநாமம் ஏன்?

இந்த  அழகு எவரையும் வசப்படுத்தும். எல்லோர் உள்ளத்தையும் அவர் அறியாமலேயே எடுத்துக் கொள்ளும் என்பதால் கள்ளழகர் என்று பெயர். ‘‘கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லாது ஓரெழில், நீல மேனி ஐயோ. நிறை கொண்டது என் நெஞ்சினையே.” என்றும், “வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை”  என்றும் திருப்பாணாழ்வார் பாடுகிறார். இந்த அழகைக் காணத்தானே சித்திரை  விழாவில், 20 லட்சம் பேர் மதுரையில் கூடுகிறார்கள். அவ்வளவு பேரும்  கூடுவதால் மதுரைக்கு கூடல் என்று பெயர்.

23. இன்னொரு காரணம்

கள்ளர்  கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார்  கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என  மாறியது.

24. அடைந்தால் இவனையே அடைய வேண்டும்

சித்திரை  விழாவில் தங்கக் குதிரையில் அழகர் கம்பீரமாக வைகையில் இறங்கும் போது காண ஆயிரம் கண் வேண்டும். இந்த அழகுக்கு ஒரு வர்ணனை. கண்ணன் நடந்து செல்கிறான்.  ஆயர் பெண்கள் பார்க்கிறார்கள். “ஆஹா அடைந்தால் இவனை அல்லவா அடைய வேண்டும்” என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் வாய்விட்டும் சொல்கிறார்கள்.  கண்ணன் காலத்தில் அவன் அழகு சரி, இப்போது அர்ச்சசையில் எந்த பெருமானின்  அழகை, கண்ணனின் அக்கால அழகுக்கு இணையாகப் பாடுவது என்று ஆழ்வார்  நினைக்கிறார். அவருக்கு இந்த திருஅழகர் உருவம் தான் நினைவுக்கு வருகிறது.

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்  சுருள்
பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
பாடவும் ஆடக் கண்டேன்  அன்றிப் பின்-
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.

‘‘மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்” என்ற வரியைப் பாருங்கள். பெரியாழ்வாருக்கு கள்ளழகர் அழகின் மீது உள்ள ஈடுபாடு புரியும். அந்த அழகைக் காணத்தான் கடைசிக் காலத்தில் இங்கேயே தங்கி விட்டார் பெரியாழ்வார். அவர் திருவரசு அழகர் மலை அடிவாரத்தில் கோயிலை ஒட்டி  உள்ளது.

25. ஸுந்தர பாஹு

அழகன் என்பதற்கு வடமொழியில்
சுந்தரராஜன் என்று பெயர். “சுந்தரத் தோளுடையான்”(ஸுந்தர பாஹு)  என்று அவரை
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்கின்றனர்.

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ்
சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.

கூரத்தாழ்வான் 132 ஸ்லோகங்களால் இவர் மீது ஸுந்தர பாஹுஸ்தவம் என்ற அருமையான நூலை இயற்றியுள்ளார். அதில் இப்பெருமானை “வன கிரீஸ்வர” என்றும், “சத்ய ரூபா” என்றும், “காருண்ய ருத வாரிதே” என்றும், “உத்சார் சத் வத்சலா” என்றும் பல  படியாக அழைக்கிறார்.

26. திருமலை மன்னர் செய்த ஏற்பாடு

16ஆம் நுாற்றாண்டு வரை, அழகரின் சித்திரை உற்சவம் (சைத்ரோத் சவம்) சித்திரை மாதத்திலும், மீனாட்சி அம்மனின் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது.  மீனாட்சி அம்மன் உற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வு திருத்தேர், மாசி  மாதத்தில் நடைபெற்றது. இந்த திருத்தேர் ஓடும் வீதிகளுக்கு மாசி வீதி என்றே பெயர். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனூர் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், வெவ்வேறு மாதங்களில் நடைபெறும் இந்த விழா ஒரே மாதத்தில் நடைபெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று, கள்ளழகரை “மதுரை வைகையாற்றில்” எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தினார்.

27. வைணவ தல புராணம் கூறும் கதை

சைவத்தில்  தங்கை மீனாட்சி திருமணம் காண, மதுரை வரும் அழகர், திருமணம் முடிந்ததால், வைகை ஆற்றுக்கு வந்து திருப்புவதாக சொல்கிறார்கள். ஆனால், வைணவ தலபுராணம்  கூறும் கதை வேறு. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும்  சிலம்பாற்றில் நீராடும்போது துர்வாச முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர், சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் தவமியற்றி திருமாலால் சாபம்  நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று  வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.

28. ஆரம்ப நாள் நிறைவு நாள்

சித்திரைத் திருவிழா 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை திருமஞ்சனத்தோடு திருவிழா  நிறைவு பெறுகிறது. சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, அழகர் ஆற்றில் இறங்குவதை காணும் பாக்கியம் பெற முடியாமல் செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று குறைந்த பின் இவ்விழா  நடைபெறுவதால், மக்கள்  ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். ஏப்ரல் 14 ஆம் தேதி அழகர் மலையில்  இருந்து, ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி  மதுரைக்கு பல்லக்கில் புறப்படுகிறார். அதிர்வேட்டு முழங்க அழகர்  கிளம்புவார். ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை  நடைபெறும்.

29. பக்தர்களின் ஆரவாரம்

16 ஆம் தேதி  சனிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை  வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  வந்திருக்கும் ஆண்டாளின் மாலையைச் சூடிக்கொள்வார்.
 ஸ்ரீஅழகர், ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். தல்லா குளத்தை விட்டு தங்கக்குதிரை கள்ளழகர்  கிளம்பியதுமே வைகை ஆற்றில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது  “கோவிந்தா…கோவிந்தா…” என்ற சரணகோஷமும், வேட்டுச்சத்தமும் விண்ணைப் பிளக்கும்.

மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம்  ஏற்றி எதிர் கொண்டு அழைப்பார்கள். ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார். கூடவே பக்தர்களும் அழகருடன் செல்வார்கள். வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக் கொள்ளும் கள்ளழகர், அங்குள்ள பெருமாள் கோயிலை வலம் வந்து, அதன் பிறகு  சர்ப்பவாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.

பிறகு, தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவில் வந்து சேருகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லா  குளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். வழியெங்கும் மக்கள் சுக்கும் வெல்லமும், தந்து அழகரின் வருகையை பக்தியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள்.

18 ஆம் தேதி திங்கட்கிழமை மோகனாவதாரத்திலும், இரவில் கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார். 19 ஆம் தேதி அதிகாலையில், பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தவாரே அழகர் கோயிலைச் சென்றடைவார். மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து  மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ, அதேபோல அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையான புதூர், மூன்றுமாவடி பகுதிகளில் திரண்டிருப்பார்கள்.

30. அழகர் என்ன பட்டு உடுத்தப் போகிறார்?

அழகர்  ஆற்றில் இறங்கும் போது என்ன வண்ணத்தில் பட்டு உடுத்துவார் என்ற  எதிர்பார்ப்பு மக்களிடம் உண்டு. முதல் நாள் அர்ச்சகர் கனவில் இன்ன வண்ண பட்டு என்று சொல்லி, அர்ச்சகர் அந்த வண்ணம் சாற்றுவார் என்று சொல்கிறார்கள். இன்னொரு விதமாகவும், அழகரின் பட்டு  தேர்ந்தெடுக்கப்படுகிறது. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள்  அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை வருகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.

அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி  ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக  இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி  வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால்,  அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன நிறத்தில் பட்டுடுத்தி வரப் போறாரோ? எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா  காண்பது போலவே, மானா மதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால், சித்திரை விழா கோலாகலமாக நடைபெறும் என்று மக்கள்  உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸூந்தர வல்லி ஸமேத ஸூ ந்தர ராஜ பரம ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸித்தி த்ரயம் -ஸ்ரீ ஸம்வித் ஸித்தி –ஸ்ரீ ஆத்ம ஸித்தி –ஸ்ரீ ஈஸ்வர ஸித்தி —

May 4, 2023

ஸ்ரீ வைஷணவ மரபில் ( சம்பிரதாயம் ); ஸ்ரீ நாதமுனி (Ca.823-951?), ஸ்ரீ யமுனாச்சார்யா (917-1042), மற்றும் ஸ்ரீ ராமானுஜர் (1017 முதல் 1137) ஆகியோர் முனித்ரயம் – என்று மிகவும் மதிக்கப்படுகிறார்கள் .

ஸ்ரீ நாதமுனிகளால் பிரவர்த்தனம் -ஸ்ரீ ஆளவந்தாரால் போஷணம் -ஸ்ரீ ராமானுஜரால் வர்த்திக்கப்பட்ட விசிஷ்டாத்வைதம்

ஸ்ரீ லக்ஷ்மி நாத சம ஆரம்பம்
நாத-யமுனா மத்யம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தம்
வந்தே குரு-பரம் பரம்

ஸ்ரீ யமுனாச்சார்யார் ஸ்ரீ நாதமுனியின் பேரன் என்று வர்ணிக்கப்படுகிறார்;
மற்றும், ஈஸ்வர பட்டா ஆழ்வான் மற்றும் ரங்கநாயகியின் மகனாக . அதில் கூறப்பட்டுள்ளது;
பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபோதும், யமுனாச்சார்யார் கற்றறிந்தவனாகவும், புலமை வாய்ந்தவனாகவும், மிகுந்த பேச்சாற்றல் மிக்கவனாகவும் இருந்தார் .
அவரது காலத்தில் ஒரு மதிப்புமிக்க மற்றும் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட விவாதத்தில்,
பிரகாசமான இளம் யமுனாச்சார்யார் , பாண்டிய அரச சபையின் அகங்காரமான ஆக்கியாழ்வானை தோற்கடித்தார்,
அனைத்து விவாதக்காரர்களுக்கும் ( பிரதி-வாதி-பயங்கரா ) பயங்கரமாக பயந்தார் .

மேலும், மிகவும் அஞ்சப்படும் எதிரியை வென்றதற்காக, நன்றியுள்ள சோழ ராணி (ஒருவேளை பராந்தக I 907 – 955 கிபி ராணியா?)
ஸ்ரீ யமுனாச்சார்யார்க்கு ஆளவந்தார் என்ற பட்டத்தை வழங்கினார் (மீட்பவர் அல்லது மீட்புக்கு வந்தவர்);
மேலும், மன்னரின் எல்லைக்குள் கணிசமான நிலத்தின் மீது அவருக்கு உரிமையும் வழங்கப்பட்டது.
இவ்வாறு, இளமைப் பருவத்தில் இருந்தபோதே, ஸ்ரீ யமுனா, ஐசுவரியத்தைத் தவிர, பெரும் சிறப்பை அடைந்தார்;
மற்றும், அவரது அறிவுத்திறன் மற்றும் விவாதத் திறமைக்கு புகழ்.
அதன்பிறகு, ஆரம்பத்தில், இளம் யமுனா, ஒரு குறுகிய காலத்திற்கு, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தினார் ;

அவர் பரம்பரையாக பெற்ற ஞானத்தின் மரபை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்.
மணக்கால்-நம்பி என்றும் அழைக்கப்படும் ராம மிஸ்ரரின் செல்வாக்கு, அறிஞரான புண்டரிகாக்ஷாவின்
(அவரே ஸ்ரீ நாதமுனியின் சீடர்களில் முதன்மையானவர்) தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர், இளம் யமுனாச்சார்யாரை எழுப்பியது;
அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த வழிகெட்ட வாழ்க்கையின் பயனற்ற தன்மையை அவருக்கு உணர்த்தியது.
அந்த இளைஞனிடம் புத்திசாலித்தனமாகப் பேசியவர் ராம மிஸ்ரர்; அவரது முதன்மையான பரம்பரை பற்றிய விழிப்புணர்வை அவருக்குள் தூண்டியது;
அவரது ஆன்மீக கடமைகளை அங்கீகரிக்க அவரைத் தூண்டியது;
மேலும், இறுதியில் அவரை நல்லொழுக்கத்தின் பாதையில் செல்ல வழி வகுத்தது .
ராம மிஸ்ரர் இளம் யமுனாச்சார்யாரின் ஆசிரியரானார்;
மேலும், வேத நூல்கள், மீமாம்சம் மற்றும் திவ்ய பிரபந்தம் போன்ற பிற நூல்களையும் கற்பித்தார் .

அதன்பிறகு; ராம மிஸ்ரர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது தாத்தாவின் வழிபாட்டுத் தலத்தை ஸ்ரீ யமுனாச்சார்யார் இடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகு, ஸ்ரீ யமுனாச்சார்யார் சன்யாசியாகி , புனித நகரமான ஸ்ரீரங்கத்தில் குடியேறினார்;
மேலும், தனது வாழ்நாள் முழுவதையும் வைணவ நம்பிக்கையின் பிரச்சாரத்திற்காக அர்ப்பணித்தார்;
மேலும், அவர் தனது ஆசிரியர் ராம மிஸ்ரர் மற்றும் அவரது பரம குரு ஸ்ரீ நாதமுனி ஆகியோரிடமிருந்து பெற்ற ஆன்மீக ஞானத்தைப் பரப்பினார் .

விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–8-

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

அவரது தாத்தா ஸ்ரீ நாதமுனி மற்றும் அவரது புகழ்பெற்ற வாரிசு ஸ்ரீ ராமானுஜரைப் போலவே,
ஸ்ரீ யமுனாச்சார்யாரும் சுமார் 120 ஆண்டுகள் மிகவும் பழுத்த முதுமை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ யமுனாச்சார்யார் எட்டு மதிப்பு மிக்க படைப்புகளை எழுதியதாகக் கூறப்படுகிறது:
ஆத்மா-சித்தி ;
ஈஸ்வர-சித்தி ;
சம்வித்-சித்தி;
கீதார்த்த-ஸங்க்ரஹம் ;
புருஷ -நிர்ணய;
ஸ்தோத்ர-ரத்னம் ;
சதுஸ்-ஸ்லோகி;
மற்றும், ஆகம-பிரமாண்யம் .

—————-

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் –உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –

————

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்

பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்

வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –

———-

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப் படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்த மயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்ன மய, ப்ராண மய மனோ மயங்களுக்கு அவ் வருகே சரீரம், ப்ராணன், மனம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாந மயன் என்று காட்டியது.

ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரும்
“சென்று சென்று பரம் பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே
என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மை நிலை பகவத் குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

————

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் இறைவனுக்கு உட்பட்டதே
என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்ய ஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலை நாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேத வேத்யனான பரமபுருஷனை ஒத்துக் கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது. ஆகையால் உலகிற்குக் காரணமாய்,
கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும் கர்ம மீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து,
ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில் மறுபடியும் படைத்து காத்தருளும்
ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலை நாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாத போது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்), ஸர்வ கர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பல ப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின்
ஸகல வித்யா சர்வஸ்வம் என்று போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

————–

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது;
அறியப்படும் பொருளும், அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.
இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.

மேலும் பரம் பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை.
“பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது. உண்மையாக உள்ள பரம்பொருளையும்,
இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள்
ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய்
சம்சாரியாய் துக்கப்படுபவனான ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது
ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

——

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது
வேதார்த்தம் ஸ்தாபிக்க -சத் சித்தாந்தம் -வைதிக தர்மம் –
சித்தி -ஞானம் -1-ஆத்ம 2-சம்வித் -3-ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
பிரமாணம் -பிரமாதா -பிரமேயம் -மூன்றும்
அசேதனம் பற்றியும் ஞானி பற்றியும் சர்வஞ்ஞான் பற்றியும்-இப்படி மூன்றும்
மாதா -பிரமாதா -ஆத்மா
மேயம் பிரமேயம் ஈஸ்வரன்
ஏற்படும் ஞானம் பிரமேதி -தர்ம பூத ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் உக்திகளைக் கொண்டு -பரமார்த்தம் ஸ்தாபிக்க முடியாதே –
சாஸ்த்ர யுத்தம் எளிமை –4-ஸ்தோத்ர ரத்னம் –5-சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ த்வயார்த்தம் -ஸ்ரீ பெருமை தனியாக
6-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்
7-மஹா புருஷ நிர்ணயம்
8-ஆகம பிராமண்யம்
ஆக எட்டு நூல்கள் அருளிச் செய்துள்ளார் – முதலில் அருளிச் செய்த கிரந்தங்கள் இவை

கை விளக்காகக் கொண்டே ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீ ஸூ க்திகள்–
உத்தமூர் வீர ராகவாச்சார்யர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
திரு நாங்கூர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
கத்யமும் ஸ்லோகமும் இவற்றில் உண்டே –
ஸ்ரீ உடையவர் ஒன்பது கிரந்தங்கள்
ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் -அஹம் -ஆத்மதத்வம் –
ஆத்ம சித்தி சம்வித் சித்தி கொண்டு நிர்ணயம்
சித்தி -ஞானம் -ஆத்ம சம்வித் -ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
சம்வித் என்றாலும் ஞானம்
சம்வித் -தர்மபூத ஞானத்தை குறிக்கும் -உத்பத்தி நாசம் கூடி இருக்கும் –
ஆத்மாவே ஞானம் -உத்பத்தி விநாசம் இல்லையே

ஞானம் ஏற்படும் சாதனம் -ஞான த்ரயம்
பிரஸ்தாபனம் -ஸ்ரீ பெரும்புதூர் ஆஸூரி ராமானுஜாச்சார்யார் -பல முகேன உபாய-
ஆயுள் நெய் -தலையிலே ப்ராப்யம் ஏற்றிச் சொல்வது –
சித்தி த்ரயம் நூலே ஞான த்ரயம் வருவது நிச்சயம் -சடக்கென தடங்கல் இல்லாமல் கிடைப்பதால் -உபச்சாரமாக சொல்வது
சாதனத்தில் பல விபதேசம்-
பல அபேதம் முகேன -சாதனத்தை சாத்தியம் -விளம்பம் இல்லாமல் -விட்டுப் போகாமல் -நிச்சயமாக ஏற்படுத்தும்
ஆத்மதத்வம் இவை கொண்டே நிர்ணயம் மஹா சித்தாந்தத்தில்
ஈஸ்வர சித்தி கொண்டே -சாஸ்த்ர யோனித்வ அதிகரணம் –
ஆகம ப்ராமாண்யம் -அடி ஒற்றி ப்ரஹ்ம மீமாம்ச அந்தக்கதை -பாஞ்சராத்ர ஆகமம் பரம பிராமணியம்
கீதார்த்த ஸங்க்ரஹம் கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
வேதார்த்த ஸங்க்ரஹம் தீபம் சாரம் இவை -மஹா புருஷ நிர்ணயம் கொண்டே-சாதித்தார்
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ் ஸ்லோகி கொண்டே கத்ய த்ரயம்
ஆ முதல்வன் -நிர்ஹேதுக கடாக்ஷம்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் -திரு அவதாரம் -74-ரூபங்கள் ஸ்ரீ நரசிம்மர் -மதகுகளை -74-வைதிக சம்ப்ரதாயம் காட்டிக் கொடுத்த கோயில் –

823-ஸ்ரீ மந் நாதமுனிகள் திரு அவதாரம்/ யமுனைத்துறைவன் பெயர் சாத்த -ஈஸ்வர முனிகள் திருத்தந்தை
ஆக்கி ஆழ்வான்-மஹா பாஷ்ய பட்டர் இடம் சிஷ்யர் -பிரதிவாதி வாரணம் பிரகட ஆடோபம் – விபாசனம் ஷம-
ஆ சைலாத் ஹிமாசலம் தொடங்கி -உப கண்டாதி மலை தாழ்வாரை வரை -அத்ரி கன்யா சரண கீதாலயா
கொழுந்து போன்ற திருவடி ஸ்பரிசத்தால் -பாக்யம் பெற்ற தாழ்வாரை –
ஆ ரஷோணீதா சீதா முக கமலம் சமுல்லாசாத ஹேது -சேது வரை –மாத்ருஸ அ ந்யா -என்னை ப் போலே கிடையாது தேடலாம்
அவதாம்சம் -ராக்குடி -கிழக்கு பர்வதம் சூர்யன் -அஸ்தமாத்ரிக்கு சந்திரன் -தேடினாலும் மீமாம்ச சாஸ்த்ரா யுக்ம –
அவற்றிலே புத்தி செலுத்தி நம்மைப் போலே -ஆளவந்தார் பேர் பெற்றார்
மணக்கால் நம்பி -தூது வளைக்கீரை கொடுத்து –கா பிஷா -போட வந்தேன் -கீதா பிரமாணம் பிரமேயம் காட்டி –
பெரிய பெருமாளை காட்டச் சொல்லி
ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்த பிரகாசம் -விமானம் பிராணாவாகாரம் —
சேவித்து மற்றவை விட்டார் -சந்யாச ஆஸ்ரமம் -கஜேந்திர தாசர் காட்டிக் கொடுக்க ஆ முதல்வன் கடாக்ஷித்து -விட்டு
தேவப்பெருமாள் -சரணாகதி –
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் கொண்டே ராமானுஜர் -பெரிய நம்பி உடன் வர -சரம திருமேனி சேவித்து திரும்ப
மதுராந்தகம் மகிழமரம் அடியில் சமாஸ்ரயணம்
நாஸ்திகர் –
அநாதி நிதன அவிச்சின்ன -பாட சம்ப்ரதாயம்-ஸூத பிராமண பூதம்- -வேத ஸாஸ்த்ர யுக்த அர்த்தேஷு நாஸ்தி என்பவன்

வேறே வேறே வித நாஸ்திகர்களை ஒரே சப்தத்தால் விளக்கி
சரீரம் தாண்டி வேறே பிறவி என்பது இல்லை -இஹ லோகம் பர லோகம் -கர்மங்களால் கட்டுப்படுத்தலாம் –
சாரு வாகர் -கண்ணாலே பார்ப்பதே உண்மை -அயம் லோக -நாஸ்தி பர /
புத்தன் -க்ஷணிகம் -ஸூந்யா -க்ஷணிக விஞ்ஞான சைதன்யம் பிரவாஹா ரூபேண அனுவர்த்திக்கும் -சைதன்யம் –
ஞானம் ஞாதா ஜே யம் மூன்றும் ஒன்றே அறிவு அறியப்படும் பொருள் அறியுமாவான் சேர்ந்தே -மூன்று இல்லை
நையாயிகன்-வேதம் பிரமாணம் ஒத்துக் கொண்டு -பாஷாண கல்பம் ஆத்மா அடைந்தாள் மோக்ஷம் -அசேஷ விசேஷ குண இல்லாமல் –
சைதன்யம் மாத்திரம் ஞானமே ஆத்மா -அடுத்து -யுக்தியால் வாதங்கள் –
அநிஷ்டம் போனது கல் இஷ்ட பிராப்தி ஆனந்தம் இல்லையே -புருஷார்த்தம் இல்லையே
சங்கர பாஸ்கர யாதவர் மூன்று குத்ருஷ்டிகள் –
பர ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் -வேதார்த்த ஸங்க்ரஹம் மங்கள ஸ்லோகம் இரண்டாவது -விஜயதே யமுனா முனி
தமஸா ஹார்த்தும் -சத் அசத் விவேகம் அறிய காருணிகோ ஈஸா ப்ரதீவம் ததாதி பட்டர் -ரெங்கராஜா ஸ்தவம்
சரபம் சலபமாகி வீட்டில் பூச்சி போலே கூரத்தாழ்வான்
ஆத்ம பரமாத்மா சம்வித் பிரமாணம் கொண்டு ப்ரதிஷ்டிதம் யுக்தி கொண்டே பாஹ்ய நிரசனம் -பிரதானம் -பரமாச்சாரியார் கையாண்டார்
உன் ஸ்திதி என் ஆதீனம் -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் -திரை விலக்கி சேவை சாதித்தான் திருவேங்கடமுடையான்
-நியாய சாஸ்திரம் -சத்காரியவாதிகள் –
பிரதிபக்ஷ -நிரசன பூர்வக ஆத்மதத்வ நிர்ணயம் -வேத ஸாஸ்த்ர அனுகூல தர்க்கங்கள் கொண்டே –
தேகாதி விலக்ஷணம் -அஜடம் -நித்யம் ஞானானந்த குணகம் -பர ப்ரஹ்ம குண அனுபவ தாஸ்யைக ரசம்
பர ப்ரஹ்ம சேஷ பூதர் -முக்தி பிரசாதத்தால் பெற்ற ஆத்மதத்வம் –
ஆத்மசித்தி கடைசியில் -இது -நாம் அறிந்தவை –
த்வைதம் -சரீராத்மா பாவம் இல்லாமல் சேஷ சேஷி கைங்கர்யம் எல்லாம் உண்டே என்பர்
ஈஸ்வர சித்தி -நிரீஸ்வர வாதி -நிரசித்து -த்ரையந்த வேத பிரமாணம் கொண்டே ஸ்தாபித்தார்
சம்வித் சித்தி -மாத்ரு-பிரமாத மேய -ப்ரமேயம் -பிரமித்தி ஞானம் -பிரமிதி ரூபம் -ப்ரமேயத்தை தத்வம் ஸ்தாபிக்க
பரமார்த்ததக ஸ்வரூப பேதம் இம்மூன்றுக்கும் -தர்மபூத ஞானம் -சங்கோச விகாசம் அடையும் -அர்ஹமாய் இருக்கும் –
இவை இல்லாமல் பரமாத்மா -உபநிஷத்தால் -சச்சிதானந்த ரூபம் ஸ்ரீ மான் புருஷோத்தமன் -உபநிஷத்தால் சொல்லப்படுபவர்
மாயாவதி இத்யாதிகளுடைய கற்பனைகளை தகர்த்து –
யத் பத த்யானம் அசேஷ கல்மஷன்கள் அழிக்கப் பட்டு அஹம் அவஸ்துவாய் இருக்க -பொருளாக்கின யாமுனாச்சார்யரை வணங்குவேன்

ஸ்ரீ மங்களா சரண வஸ்து நிர்தேசங்கள் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்த
பிரகிருதி அவ்யக்தம் -மாறி வ்யக்தம்
புருஷ சப்தம் தனியாக -பத்த ஜீவர்கள் —
யத் இச்சாம் அனுவிததி நித்யம் -சங்கல்பத்தை பின் தொடர்ந்து
நித்தியமாக பின் தொடர்ந்து செல்லும்
இது வரை லீலா விபூதி
நித்யம் நித்ய சித்தர் அநேகர்- எப்போதும் தொடரப்பட்டு
ஸூ பரிசரண போகை-கைங்கர்ய ரசம் யாத்திரை
ஸ்ரீ மதி-ஸ்ரீ யபதி இடத்தில் பிரியமான பிரியம் காட்டப்படுபவர் -பூருஷ பரம புருஷன் பரஸ்மின் -ஒரே வேற்றுமை –
மம பக்தி பூமா -பவது
அகில ப்ரஹ்மணி –ஸ்ரீ நிவாஸே-பரஸ்மின் -பக்தி ரூபா அங்கும் இப்படியே

பிரகிருதி -மாயாந்து பிரகிருதி வித்தி -அவ்யக்தம் -தத் கார்யாணி-வ்யக்தம் -காரியம் –
ப்ரக்ருதி பிராகிருத பரிணாமம் -ஹேது- காலம் தூண்ட -நடக்கும்
தத் பத்த-புருஷ -மூன்றையும் வசப்படுத்தி வைக்கும் காலம் -காலத்தாலும் வ்யக்த்ததாலும் பந்தம் -சரீரத்தாலும் காலத்தாலும்
முக்த -பகவத் உபாசனை பிரபாவாத் -பாவ பந்தனாத் -கர்மா -முக்தா -நிர்முக்தா விநிர்முக்தா -திரும்பி வராத அளவுக்கு –
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் சங்கல்பம் பின் தொடர்ந்து
சைதன்யம் இல்லாமல் பிரக்ருதியும் வ்யக்தியும் எப்படி -என்றால்
ஞானம் இருந்தால் தடுப்போம் -அவை கேட்க்காதே-லீலா ரசம் -அலகிலா விளையாட்டுடையார் -லீலே-ஏவம் லீலா விபூதி யோகம்
நித்ய விபூதி யோகம் -கூடி இருத்தல் யோகம் -நித்யம் மத்திய மணி நியாயம் –
ஸ்ரீ யபதி ஸ்ரீ வைகுண்டம் -நித்ய கைங்கர்யம் ரசம் -அனுபவ ஜெனீத ப்ரீதி காரித்த அசேஷ சேஷ வ்ருத்தி –
அகாத போகம் அநந்தம் -அனந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் -நிரதிசய ப்ரீதி –
ஸ்ரீ வல்லபன் புருஷோத்தமன் -பர ப்ரஹ்மணி -பக்தி -கடல் ஏற்படுத்த வேண்டும்
ஸ்ரேயஸ்-ஸ்ரீயப்பதியிடம் பக்தி ரேவ -பக்தியை பிரார்த்திதுப் பெற்றால் தானே வைகுந்தம் தரும் – பாரம்யம்-இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அன்பை உள்ளடக்கிக் கொண்ட உபாசனம் பக்தி -அவிச்சின்ன பூர்ண பகவத் அனுபவ கர்ப்ப சேவா கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ஸூவ அபிமதம் பிரகாரணார்த்தம்-முதல் ஸ்லோகமே ஸங்க்ரஹம் –
அசேதன சேதன பரமாத்மா பேதங்கள் உண்மை -தத்வத்ரயம் -பாரம்யம் ஸ்ரீ மந் நாராயணனே –
சர்வ சேதன அசேதனங்கள் விபூதியாய் இருக்கும் -சார்ந்தே விட்டுப் பிரியாமல் -உபாசனமே அபவர்க்க ஹேது –
திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்

விருத்த மதம் அநந்தம்
ஆத்ம சித்தி விரித்து இவற்றை நிரசித்து–ஆத்ம பரமாத்மா விஷயங்களில் முரண்பாடுகள் -பரிசோதனம் பண்ணி –
நாநா விப்ரபுத்தி -முமுஷுக்கு தானே இவற்றின் யாதாம்ய ஞானம் வேண்டும் –
தோஷ நிரசனம்-சாஸ்திரமும் உக்திகளையும் கொண்டு -தர்க்கம் -கவி தார்க்கிக–ஸ்ரீ தேசிகர்-
நியாய மீமாம்ச வ்யாக்ரண சாஸ்திரங்களில் அவகாஹித்து தத்வ நிர்ணயம் –
பர அவர ஆத்மா -இரண்டையும் யாதாவாக ஸ்தாபித்து -பர பாஷ ப்ரதிஷேப பூர்வகமாக -நிர்ணயம் சாஷாத் நோக்கம் –
ஆத்மாவை பற்றியே சொல்ல வந்தது -பரமாத்வாவுக்கு சேஷி என்று சொல்ல வேண்டுமே –
தர்ம பூத ஞானம் -ஈஸ்வர -இரண்டையும் அடுத்து அருளிச் செய்து –
ஞானத்தால் அறிந்து அவனையே பற்றி அவன் இடமே கைங்கர்யம்- ஸ்ரேயஸ் அடைய

285-வருஷம் கழித்து பஞ்சாங்கம் மாறும் –அயனாம்சம் -2160-ராசி மாறும் —
பங்குனி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு ஆகும் -2545-வருஷங்கள் கழித்து

அனுபந்தி சதுஷ்ட்யம் -விஷயம் -ஆத்மாவைப்பற்றி –பிரயோஜனம் -ஆத்ம விஷய யாதாம்யா ஞானம் —
சம்பந்தம் பிரதிபாத்ய பிரதிபாதக — அதிகாரி விஞ்ஞாஸூ இந்த நாலும்
முக்கிய க்ருத்யம் -தர்க்கம் சொல்வது -சாஸ்திரங்களை அனுகூலமான தர்க்கம் -சுருதி நியாயம் இரண்டுக்கும் விருத்தமாக இருப்பதை போக்கி –
ஸ்தாபனம் -அனுமானம் கொண்டு –
இரண்டாவது ஸ்லோகம்

மேலே கத்யம் –
வேதாந்த வாக்ய கூட்டங்கள் பர அபர ஞானமே -அபவர்க்கத்துக்கு மோக்ஷத்துக்கு சாதனம் –
சர்வ சமயேஷு இத்தை ஒத்துக் கொள்ளப்பட்டது -நின் கண் வேட்க்கை எழுவிக்கவே-
ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாநாம் -மத்வ – அம்ருதத்வம் -அறிந்தவன் மோக்ஷம்
சோகமான சம்சார சாகரம் தாண்ட -ஆத்ம ஞானம் வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -நன்கு அறிந்தவன் அவனை அடைகிறான் –
சோகம் சரீரகதம் -வேறே அறிந்தால் சோகம் போகுமே
வேதாந்த வாக்ய கூட்டங்கள் இப்படி சொல்லி இருக்க
சங்கை இருந்தால் தானே யுக்தி -நியாயம் பிரவ்ருத்தம் ஆகும் –
வேற தரிசனங்கள் -அவைதிக தரிசனங்கள் -வேதம் ஒத்துக் கொண்டாலும் ப்ரஹ்மம் ஒத்துக்கொள்ளாதவர் மீமாம்சகர் போல்வார் -அபூர்வம் கல்பித்து –
ஆந்திர அஞ்ஞானம் மலத்தை ஒழித்து -தத்வ ஞானம் சுத்தமாக தெளிவாக கொடுக்க -தர்சனம்
சாங்க்யர் வைசேஷிக -இத்யாதி –
சாருவாக்கர் புத்தர் ஜைனர் மூவரும் அவைதீகர்
மீமாம்ஸகர் -பூர்வ உத்தர -பட்ட பிரபாகர் -வைசேஷிகன் -மூவரும் வைதிகர் –
தேகமே ஆத்மா -கண்டதே கோலம் -சாருவாகர்-முதல் -சாரு வாக் -அழகாகப் பேசுவார் -ப்ரத்யக்ஷமே எல்லாம்
இந்த்ரியங்களே ஆத்மா -மனமே ஆத்மா -பிராணனே ஆத்மா –
போத மாத்திரம் -ஸுகத்தர்கள் -ஜீவாத்மா ஞானமாக தான் ஞாதாவாக இல்லை -ஞானம் உடையவர் இல்லை
ஞாதா பாவம் ஏறிடப்பட்டு-ஞாத்ருத்வம் அத்யர்த்தம் -ஞானம் ஒன்றே உண்மை
அநஹங்காரம்-அஹம் சொல்லுக்கு கோசாரமாக மாட்டார் -இத்தையே சொல்லுகிறது -அஹம் புத்தி சப்த அவிஷயம்
அஹம் -அந்தக்கரணம் இவர்கள் மதம்
ஞானத்தை ஞாதா என்று வாசனையால் சொல்லுகிறார் என்பர்

அடுத்தவர் -அஹம் -ஆத்மா என்பர் -ஆகந்துகம் -வரும் போகும் -பாஷாண கல்பம் மோக்ஷம் –
தேக இந்திரிய மந ஞானம் விலக்ஷணன் -அசாதாரணமான குணாகாரம் -என்பர் -சாஸ்திரம் அறிந்தவர் இவர் –
ஆகாசாத்வதி அசித் தானே பிரகாசிக்காது என்பர் -ஸ்வஸ்மை-ஸ்வயம் பிரகாசிக்கும் இரண்டும் உண்டே நம் சம்ப்ரதாயம்
இவர்கள் ஜடப்பொருள் போலே என்பர் -தார்க்கிகள் இவர்கள் -கணாத-கௌதம மதம் –

சாங்க்யர் -செம்பருத்தி பூ படிக்கல் -இயற்க்கை இல்லாமல் சன்னிதானம் ஏறிட்டு -பிரகிருதி ஆத்மா -வெளுப்பு –
சோக துக்கங்கள் இவர் மேலே ஏறிட்டு -மனஸ் பாலம் – வேறே வேறே ஞானம் வந்தால் இவை வாராது என்பர் –
இதுவே மோக்ஷம் -கபிலர் மதம்
உபாதி சன்னிதானம் உபாதானம் உபாதான விசேஷ ஆபாதக-தன்மை ஏறிடப்பட்டு பாதிக்கப்பட்டும் -செம்பருத்தி பூ ஸ்படிக மணி த்ருஷ்டாந்தம்
பிரகிருதி கார்ய சரீரம் -மனம் அந்தக்கரணம் உபாதி -ஆத்மாவில் ஏறிடப்பட்டு -நிர்பாதம் தோற்றும் -ராக த்வேஷ சோக துக்காதிகள்-
தோற்றம் மறைவு இல்லாத ஸ்வரூப பிரகாசம் -ஸ்வஸ்மை பிரகாசம் ஸ்வயம் பிரகாசம் – இரண்டும் -உண்டே –
மனம் வேலை இழந்த நேரம் இருந்தாலும் தான் அவருக்குத் தோற்றும் -தர்மி ஞானம் தனக்கு பிரகாசம் ஸ்வஸ்மை பிரகாசம்-
ஸ்ரீ வைகுண்டம் -அசித் -இருந்தாலும் ஸ்வயம் பிரகாசம் –

மீமாம்சகர் -ஞான ஆனந்த ஸ்வ பாவம் -வடிவம் -சித்தாந்தி போலே -போத விசேஷம் -ஆஸ்ரய ஆனுகூல்ய ஞானமே ஆனந்தமும் ஸூ கமும் –
பிரதிகூல்ய ஞானம் துக்கம் -பேரிடப்பட்டு உள்ளது –
சம்சாரித்வ ஸூகம் துக்கம் -கர்மா உபாதி

பிரமாணங்கள் -அனுமானம் -சமாதிகம்யம் -தார்க்கிக்கரும் -ஸுத்ராந்திக புத்த பக்ஷம் –
மாத்யத்மீகன்-சர்வம் சூன்யம் -உண்மையான புத்த மதம் -யோகாச்சாரன் அடுத்து -ஞானம் உண்டு –
ஞானத்துக்கு விஷயம் இல்லை -அடுத்து
ஸுத்ராநதிக்க பக்ஷம் -ஞானம் உள்ளது -விஷயமும் உண்டு -அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் –
அடுத்து வைபாஷிகன் -ஞானம் உள்ளது விஷயம் உண்டு பிரத்யக்ஷம் பிரமாணம்-இப்படி நால்வரும்
தார்கிகர் -நீல பீத-வர்ணம் -ஞானம் -அஹம் விஞ்ஞானம் சாலம்பனம் விஞ்ஞானத்வாத் -நான் என்கிற அறிவுக்கு பற்றுக்கொம்பு –
ஆகவே ஆத்மா இருக்க வேண்டும் -அனுமானித்து
இதம் -இது சொல்ல ஆலம்பனம் வேண்டாமே –
விலக்ஷண ஆத்மா பரமாத்மா அனுமானித்து தெரிந்து கொள்ளலாம் -என்பர்
ஆகமத்தால் -அறியலாம் -வேதத்தால் -சாஸ்திரீய கம்யம் -பூத சங்காதம் ஏற்பட்டாலே பரார்த்தம் -பரன் ஆத்மாவுக்காக –
பட்டார்-தார்க்கிகர் பக்ஷம் -மானஸ ப்ரத்யக்ஷம் -நான் -எனக்கு என்னைப் பற்றி தெரியும் -நான் பிரகாசிக்கிறது எனக்கு –
அஹம் சப்த கோசாரம் அந்த அந்த ஆத்மாவுக்கு -மானஸ ப்ரத்யக்ஷ வேதம் –
பிரபாகர் -பக்ஷம் -குடம் -அறிவது -அயம் கட-இது குடம் -பிரமேயம் குடம் -பிரமாணம் -பிரமாதா இல்லை -மானம் மேயம் தான் ஒளி விடும்
கடம் அஹம் ஜானாமி -அறிகிறேன் -பிரமிதி உண்டே இதில் –
பாட்டர் அஹம் கடம் முதலில் அப்புறம் அஹம் கடம் ஜானாமி இப்படி இரண்டு படிக்கட்டுக்கள் என்பர்

சகல விஷய வித்தி -க்ராஹதயா ஏவ -கிரகிக்கும் இருந்தால் தானே கிரகிக்கப்படும் –
அடுத்து சாங்க்யர் -ஞான ஸ்வரூபம் -பிறப்பு இறப்பு இல்லாமல் ஸ்வயம் ஜோதி
ஸ்வம் பாவம்- சோ பாவ- தன் பாவம் ஸ்வபாவம் -தானே ஒளி -இதர அநதீனம்-
வேதாந்தி -ஆகமம் -அனுமானம் -மானஸ ப்ரத்யக்ஷம் மூன்றுக்கும் இடம் உண்டு
ஆத்மா வார்த்தை வியவகாரம்-நான் கையால் எடுத்தேன்-சங்கை -நான் எடுத்தேன் -நான் வேறே அஹம் வேற –
கீதா படித்து அறிந்து -ஸ்திரப்பட -என்ன அளவு -தெரியாதே -ப்ரத்யக்ஷம் இல்லை -அணு சாஸ்திரம் சொல்ல -நம்பி –
அடுத்து நித்யம் என்று அறிந்து –
தனக்கு தோன்றி -சாஸ்திரம் மூலம் உறுதி -தர்க்கம் யுக்தி மூலம் ஸ்திரப்படுத்தி -மனம் புத்தி ஆத்மாவை –
விளக்கினை விதியினால் காண -ப்ரத்யக் விஷயம் -த்யானம் -யோகஜம் –
வ்யவகாரிகம் ஆகம வேத்யம் யுக்தி யோகஜம் நான்கும் –
ப்ரத்யக்ஷமாக மட்டும் இல்லை -இப்போது இல்லை இங்கே இல்லை -அப்போது அங்கே -அறிந்து செய்ய வேண்டியது
சேஷபூதன் என்று அறிந்த பயன் பகவத் ஏக சரண்யம் -பகவத் ஏக போக்யம் என்று அறிந்து -சரணம்
ச சொன்ன உடன் கூட்டிக் கொண்டு பிரத்யக்ஷம்
சாம்யாபத்தி-அடைந்து -இப்படி ஐந்து நிலைகள் -தோன்றியதை தகவல் உடன் அறிந்து ஸ்திரப்படுத்தி –
ஸ்வ இதர விலக்ஷணன் -விசத-ஆகமம் விசததரம்-அனுமானத்தால் – விசததமம் -உபாசனம் மூலம்
அபரோஷம்-நித்யம் அணு ஞாத்ருத்வம் ஆகமத்தால் -அறிந்து -க்ருஹீதோயம் முக்த –
சங்கை இல்லாமல் நேராக அனுபவம் அங்கே

தார்க்கிகர் ஆத்மா விபு -பரம மஹான் என்பர் -இவரைப் போலே ஸ்வரூபத்தால் வியாப்தி -நையாயிகன்
வேதாந்தி அணு பரிமாணம் -வாலாக்ரா சத பாகம் சததா –வியாப்தி தர்மபூத ஞானம் –
உடம்பில் எல்லா அவயவ வலியும் உணரலாம் -சைதன்ய மாத்திரம் வியாப்தி
ஜைனர் -தேகம் அளவு-சரீர பரிமாணம் -நிர்விகாரத்வம் பாதிக்கும்
சாங்க்யர் மனஸ் அளவு-அந்தகாரணத்தால் அளவுபடுத்துகிறது உபாதியால்

ஞானத்து அளவு வியாபகத்வம் -ஸுவ்பரி -50 -சரீரத்து அளவும் வியாப்தி -ஒரே ஆத்மாதான் -அங்கும் –
யோகத்தால் பல சரீரங்களுக்கும் வியாப்தி -ஸ்வ பாவத்தால் வியாப்தி -தர்ம பூத ஞானத்தால் வியாப்தி
ஸ்வரூபத்தால் வியாப்தி நையாயிகர்
ததா ஷணிக-புத்தன் -க்ஷணிக விஞ்ஞானம் -ஞானம் உண்டு என்றாலும் க்ஷணம் தோறும் மாறும்
சாருவாகர் சரீரத்தில் சூடு இருக்கும்வரை இருக்கும் ஆத்மா -யாவது சரீரத் உஷமா
பிராகிருத பிரளயம்–மொத்தமும் அழிந்து – -ப்ரஹ்மதேவர் ப்ரஹ்ம தத்த-வரை
ஆ மோக்ஷம் -வரை ஆத்மாவுக்கு காலம் ஓவ்டுலோமி-சொல்வார்
கூடஸ்த்தர் -நிர்விகாரம் -கொல்லம்பட்டறை இருப்பது த்ருஷ்டாந்தம் -ஆத்மா நிர்விகாரம் நித்யம் -சித்தாந்தி நையாயிகர்
எல்லா சரீரத்தில் ஒன்றே என்பர் சிலர் -ப்ரீத்தி க்ஷேத்ரம் நாநா பூத சித்தாந்தி -சரீரம் தோறும் உண்டே
ஏக ஜீவ வாதம் -மாயாவாதியில் ஒரு சாரார் –
ச -அணுகாத சமுச்சயம் -இன்னும் பல மதி விகற்ப்புக்கள் உண்டே

இதே போலே பரமாத்மா -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -ஆதி காரணம் ஒருவனை
சாருவாகர் புத்தர் ஜைனர் -இல்லை -என்பார்
பூர்வ பக்ஷிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவமதியாமல் கேசித் அந்யா என்று சப்த பிரயோகம்
ஒத்துக்கொள்பவர்களும் –
அத்வைதி ஒரு சாரார் -அஸ்தமனம் இல்லாமல்-வேறுபாடு இல்லாமல் -மிதி -பிரமித்தி மேயம் மானம் மாதா இவற்றுள்ளும்
ஈஸ்வர ஈஸித்வய -மான -பேத விகற்பம் -கற்பனை என்பர் –
ஞான மாத்ர ரசமாக இருப்பர்-ஆகாசாதிகளும் கற்பனை -அவனும் கற்பனை -அநாதி அவித்யா -உபாதியால் -தோற்றப்பட்ட
உப தர்சித-வியாதி பேதம் -ஆகாசாதிகள் வேறுபாடு போலே -ஞான ஐஸ்வர்யாதி மஹிமை விகல்பயாதி –
ஆத்மா என்பதை உண்மை -ஆத்மா ஜீவாத்மா என்றால் பரமாத்மா சொல்ல வேண்டி இருக்குமே
இரண்டும் ஏறிடப்படுகிறது-என்பர் –
முத்துச்சிப்பி வெள்ளி பிரமித்து போலே -அவித்யையின் ஆதிக்யத்தால் -ஈசன் ஈஸித்வய
ஏதோக்த ஸ்வரூபம் -அவித்யா -மூலம் காம க்ரோதம் தோன்ற ஜீவன் -செல்லப்படுகிறார் -மாயை தொடர்பால் பரன் –
தத் குணசாரதயா-ப்ரஹ்மாதி ஸ்தாவரம் -வேறுபாடு இல்லாத ஒன்றுக்கு -ப்ரகல்பிதம் விவித ஜீவ பேதம்-
ஸ்வா தீந விவித விசித்திர -விவர்த்த ஸ்வபாவம் மாயையால் -பரன்
ஹிரண்யகர்ப்ப ப்ரவர்த்தகன் யோகமதம்-மரபு அணுக்கள் கூட்டம் -அறிவின் பேதம் –
மரம் ஜங்கமம்-மகரந்த சேர்க்கை குரங்கு சிங்கம் யானை மனுஷ்யன் பிரம்மன் -விஞ்ஞானிகள் கொள்கை
ப்ரக்ருதி பிராகிருதம் -அசேதன அம்சமே அறிவு -என்பர் -தனித்து மனம் ஒத்துக்க கொள்ள மாட்டார்கள்
பிராகிருத ப்ரக்ருஷ்ட சத்வம் -அதிகமான சத்வம் உள்ள பகுதி ஆத்மா என்பர் -உபாதான நிமித்த ஸ்வ தந்த்ர பிரகிருதி என்பர்
நாம் ஸ்வ தந்த்ர ஈஸ்வரன் பிரகிருதி கொண்டு
பரிணாம விஷய மாத்திரமே ஈஸ்வரன் என்று பெயர் என்பர் -ஸ்வ தந்த்ர இல்லையானால் ஆட்டிப் படைக்க பரமாத்மா இருக்க வேண்டுமே –
நித்ய உத்ரிக்த்த சத்வ பகுதி -ப்ரக்ருஷ்ட சத்வ -அதனால் சம்பாதிக்கப்பட்ட ஈஸ்வர பெயர் -என்பர் –

நியாய வைசேஷியர் –
சாங்க்ய யோக கபிலர் ஹிரண்யகர்ப்பர்
பூர்வ உத்தர மீமாம்சை
ஸ்வ தந்த்ர பிரகிருதி -பிரதானம் -சத்வ குணம் உயர்ந்த பகுதி ஆத்மாவாகி -என்பர் ஆத்மா பேரில் ஏறிட படுகிறான்
ஈஸ்வரன் உள்ளார் இல்லார் -ஆத்மாவை தவிர்ந்த இல்லையா -அஞ்ஞானம் -உபாதி -பல வாதங்கள்
பரிணாம வாதி -யாதவ பிரகாசர் பக்ஷம் -கடல் -நுரை -நீர் குமிழி அலைகள் -பேதங்கள் -எதனுடன் சேராமல் –
கடலில் வேறுபட்டவை இல்லை -பரிணாமம் போலே ஆத்மாவே பரிணாமம் -ஜடம் ஜீவ ஈஸ்வர ரூபமாய் -ஆகும் என்பர்
ஞானம் உள்ள ஆத்மா -கடல் -நுரையா அலையா நீர் குமிழியா நீரா -பிரித்து பார்க்க முடியாதது போலே –
பரிணாம வாதம் யாதவ பிரகாசர் வாதம் -ஜடம் ஆத்மா பரமாத்மா மூன்றும் உண்டு என்பவர் இடரும்

அடுத்து -அ பரிணாம வாதி
பிரதி பிம்பம் -வாதிகள் -ஆத்மாவே உள்ளது -மாயையால் பிரதிபலிக்கிறது -ஈஸ்வரன் என்று தோற்றி –
அந்தக்கரணத்தில் பிரதிபலித்து ஆத்மா -ஆத்மா உள்ளது -பரமாத்மா ஜீவாத்மா பேதம் இல்லை என்பர் –
இரண்டு பிரதிபம்பங்களே இவை
ஸூ மாயா -விசித்திர அந்தக்கரணம் -இரண்டிலும் பிரதிபலித்து
விசித்திரம் -வேறே வேரேகா காட்டும் -ஒரு சமயம் அனுகூலமாகவும் ஒரு சமயம் பிரதிகூலமாயும் இருக்குமே
ஆகவே விசித்திரம் என்கிறார் –

சித்தாந்தி -அன்யே து -இதற்கும் இந்த சப்தம் -ஸ்வ ஆதீன த்ரிவித-சேதன –
பத்த முக்த நித்ய -மூன்றும் -அசேதன -சுத்த சத்வ மிஸ்ர தத்வ காலம் -அபிமானி தேவதைகளுக்கு
குண சம்சர்கம் உண்டு என்பதால் நல்ல காலம் இத்யாதி
ஞாத்ருத்வம் இல்லாமையான நித்ய விபூதி பிரகிருதி காலம் மூன்றும் அசேதன த்ரயம்
ஞாத்துருத்வம் உள்ள பத்த முக்த நித்ய மூன்றும் சேதன த்ரயம்
ஞானம் உடைமையால் வேறுபாடு -ஞான ஸ்வரூபத்தால் வேறு பாடு இல்லை
புஸ்தகம் -ஞானமும் ஞானம் உடைமையும் இல்லை
நித்ய விபூதி -ஞான மாத்திரம் ஞானம் உடைமை இல்லை
ஆத்மா ஞானமும் ஞானம் உடைமையும் உண்டே
இவற்றின் ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஈஸ்வர அதீனம்
ஸ்வா பாவிக-இயற்கையான -நிரவதிக எல்லை அற்ற -அதிசய மேன்மை -ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் –
சகல கல்யாண குண ஆர்ணவம் -புருஷ விசேஷம் -சர்வேஸ்வரன் -இத்தகையவர் என்று சொல்லி –

ஸ்வரூப ஸ்வாபாவ சங்கைகளை கீழே பார்த்தோம் -இனி யார் -மத பேதங்கள்
ஹரி ஹர விரிஞ்சு பாஸ்கராதி -தத் தத் மூர்த்தி பரித்யாக -த்ரி மூர்த்தி வாதிகளும் உண்டு -த்ரய தேவா துல்யா-
மூர்த்தி விசேஷ விஷயம் -திருமேனி -பற்றியும் வாதங்கள் –
நித்யத்வ -அநித்ய -ரூபம் -இங்கு -ஸ்வரூபம் ஏற்றுக் கொண்டாலும் -பாதிக்கத்தவ பஞ்ச பூதங்களால் என்றும்
பிராகிருத அப்ராக்ருத -ஸ்வாரத்த பரார்த்தம் என்றும் -பக்தானாம் ப்ரகாஸதே-இப்படி விசாரங்கள்

பரிஜன பத்னிகள்-விசாரம் -ஸ்தான விசேஷ விசாரம் -இப்படி பலவும் உண்டே

பிரமாணம் -வேதம் மட்டுமே -/ ஆகம -அனுமானம் இரண்டையும் என்பாரும் உண்ட –
வேதம் கொண்டு அறிந்து அனுமானம் கொண்டு உறுதிப்படுத்தி த்யானம் -மானஸ சாஷாத்காரம்-
பிரேம பூர்வக -விசிஷ்ட ப்ரத்யக்ஷ சமானா காரம் –
ஆத்மா பரமாத்மா சம்பந்தத்திலும் பல வாதங்கள்
அநாதி அவித்யா உபாதியால் பேதமாக தோற்றம் -சங்கரர் -ஈசன் ஈஸித்வய தொடர்பு -கயிறு பாம்பு –
ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவும் மாற்றி தோற்றும் தன்மை -அவித்யை -பேதத்துக்கு இடம் கொடுக்கும் –
அபேதம் உண்மை -ஏக தத்துவமே பரமார்த்தம் –
பரமார்த்தம் -ஜகாத் பத்தி இரண்டையும் நாம் சொல்வதால் -ஒருவனே ஜகாத்தும் உண்மை –
சரீரமாக உண்மை -பிரகாரமாக உண்மை –
ஒருவன் -நிகர் அற்றவன் -ஏக சப்தம் -நம் சம்ப்ரதாயம் -..

இரண்டு தத்வ வாதிகள் –
நான் பிம்பம் இரண்டும் தெரியும் -தத்வம் ஓன்று -இரண்டாவது இல்லை – –
வ்யதிரேகம் உண்டு -பிரதிபிம்பம் இருப்பதால் –நேராகவும் சேவித்து கண்ணாடி சேவையும் சேவிக்கிறோமே –
ப்ரதிபிம்ப வாதிகள் -இரண்டு என்று சொல்ல இடம் கொடுக்கிறதே –

பாஸ்கர பக்ஷம் -ஸ்வஸ்தி ஐக்கியம் -உபாதியால் பேதம் பேத அபேத வாதம் -இயற்க்கை அபேதம் –
உபாதியால் பேதம் -ஸ்வரூபத்தால் அபேதம் என்றவாறு

நாநாதவம் யாதவ பிரகாசர்-வேறே வேறே தத்வங்கள் -அபேதமும் உண்டு -வேறு படாமையும் உண்டு –
அம்சம் அம்சி பாவம் -உடல் -கை கால் பல உண்டே -அதே போலே –
சித்தாந்தி -பரதந்த்ரா லக்ஷணை-நாநா சம்பந்த -ஜீவ பர சம்பந்தம் -பிதா -சேஷி -ஸ்வாமி -சேவக சேவகி இத்யாதி நவவித சம்பந்தம்
அப்ருதக் சித்த விசேஷணம் -சமவாயம் -வைசேஷிகர் சொல்வது இல்லை –
பரகத அதிசய ஆதேயன இச்சையா -சேஷத்வ லக்ஷணம்

ப்ராப்தியிலும் வாதங்கள் உண்டே -மரணம் -இயற்க்கை எய்தினார் பாஞ்ச பவ்திகம் -பரமபதித்தார் -ஸ்தானம் –
இறைவன் அடி சேர்ந்தார் -கைங்கர்ய -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -ஆசார்யர் திருவடி அத்ரபரத்ர
சாருவாகர் -சர்வ சூன்யம் -ஆத்ம ஸ்வரூப அழிந்து மோக்ஷம் –
அவித்யா அஸ்மயத்தி லக்ஷணம் யோகாசாரம் அத்வைதிகள் -ஐக்கியம் –
நியாய வைசேஷகர் -ஞானம் ப்ரதயத்னம் போன்ற குணங்கள் போனால் மோக்ஷம்
சாங்க்யம் கைவல்யம் மோக்ஷம் –
சத் பாவ ப்ரஹ்ம பாவ சா தர்ம லக்ஷணம்-அத்வைதிகள் -ஒரு சிறு பகுதி நமக்கு அஷ்ட குண சாதரம்யம்
சாந்தி தேஜஸ் இவனுக்கும் வருமே
முகில் வண்ணனுக்கு நிழல் – பாட வல்லார்-சாயை போலே அணுக்கர்களே -இது வேறே
மீமாம்சகர் -ஸ்வரூப ஆவிர்பாவம் -நம் போலே -ஸ்வேந ரூபேண -இவர்கள் ஈஸ்வரனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
ஸ்வரூப ஆவிர்பாவமே மோக்ஷம்
சத் குண அனுபவ ஜனித–நிரதிசய ஸூக சம் உன்மேஷ -தூண்டப்பட்ட ஏகாந்திக ஆத்யந்திக-ப்ரஹ்மமே விஷயம்
இடைவிடாமல் -அவிச்சின்னத்வம் – -கிங்கரத்வ லக்ஷணம் -மோக்ஷம் -மேலைத்தொண்டு உகந்து –

சாதனம் -இதிலும் பல வகை
கர்ம யோகம் -ஞான யோகம் லப்யத -அன்யதர அநுக்ரஹீத அன்யதர -அங்கம் அங்கி மாறுபடும் -தரம் இரண்டில் ஓன்று –
கர்ம ஞான யோகங்களில் ஓன்று அங்கி ஓன்று அங்கம்
உபய லப்யம் -ஞான கர்ம சமுச்சயம் -அவித்யா வித்யாஞ்ச -அவித்யா ம்ருத்யம் -கர்மத்தால் சம்சாரம் தாண்டி வித்யையால் மோக்ஷம்
பக்தி யோகமே -ஞான கர்ம அங்கங்கள் -உபய பரிகர்மித்த ஸ்வாந்தம் மனஸ் -சம்ஸ்காரம் இவற்றால் –

பக்ஷங்களில் பலாபலன்கள் அறியாமல் சங்கை -குழம்பி இருக்க –
யாவது- ஆத்மா பரமாத்மா ஸ்வரூபம் சம்பந்தம் பிராப்தி சாதனம் -நிர்ணயத்துக்கு பிரமாணம் கொண்டு –
இவற்றைத் தெளிவு படுத்தவே இந்த பிரபந்தம் –

ப்ரஹ்ம மீமாம்ஸா இவற்றை விளக்க வந்தவை -இந்த கிரந்தம் மூலம் இவற்றை விளக்கி பரியாப்தி பிறவாமல்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய மநோ ரதித்து பின்பு ஸ்ரீ பாஷ்யகாரர் அத்தை நிறைவேற்றி அருளினார்

பகவத் பாதராயணர் -ப்ரஹ்ம ஸூத்ர காரர்
விவரணம் -வாக்ய காரர் த்ரவிடாச்சார்யார் -விருத்தி காரர்
போதாயனர் குறிப்பு உரை
பரிமித கம்பீர பாஷாணம் –
ஸ்ரீ வத் சாங்க மிஸ்ரர் -இன்னும் விரித்து -இவர் கூரத்தாழ்வான் இல்லை
பார்த்திரு ப்ரபஞ்சர் -பார்த்திரு மிஸ்ர சங்கரர் போன்றவர் எழுதி -ஸ்புடமாகவும் அஸ்புடமாகவும்
தெளிந்து தெளிவு இல்லாமலும் -அந்யதா ப்ரதிபாதகமாய் -மதாந்தரம்-
பிரகரண கிரந்தம் -இது -ஆத்ம சித்தி -யதாவத்தாக காட்டி அருள -ப்ரதிஜ்ஜை –
ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு -ஒரு பகுதி சாரம் பிரகரண கிரந்தம்-என்றபடி

ஸாஸ்த்ர ஏக தேச அர்த்தம் –ஒரு பகுதி மட்டுமே -ப்ரதிபாதனம் -சாஸ்த்ரார்த்த முழுவதும் அரிய உபயோகப்படும் –
பிரதமம் -ஆத்ம தத்வம் இப்படிப்பட்டது -என்று -சித்தாந்தம் -வேதாந்த தாத்பர்யம்
ஸ்வரூபம் –1-தேக இந்திரிய மன பிராணன் தீ -புத்தி -ஐந்தையும் விட அந்நிய
புத்தி ஞானம் -விஷய பிரகாசனம் -தர்ம பூத ஞானம் வேறே தர்மி வேறே -ஆத்மாவே ஞானம் -ஞான ஸ்வரூபம்
2-அநந்ய சாதனா —ஸ்வயம் பிரகாசம் -3-உத்பத்தி விநாசம் இல்லாதது -4-வியாபி -தேகங்கள் தோறும் புகுர சக்தி உண்டே –
அணு மாத்ரம் -அவன் சர்வ வியாபகம் –
5-பிரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னம்-வேறே வேறே -6-ஸ்வ தஸ் ஸூகி –எப்போதும் அனுகூல புத்தி இயற்க்கை –
ஸ்வா பாவிக ஆனந்தத்வம் –துக்கித்தவம் உபாதி அடியாகவே
கர்மத்தால் ஜென்மத்தால் முக்குண சேர்க்கையால் துக்கம் -இப்படி ஆறு பெருமைகள்

நான் என்கிற உணர்வுக்கு உடலே விஷயம் என்பர் -அதிகரணம் ஸ்தானம் இருப்பிடம் -ஸமான -அதிகரணம்
நான் என்றால் அறிவாளி அன்றோ உடம்பில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பு ஆகும்- அவயவ சேர்க்கையால் வந்த ஞானம்
அது போனால் முக்தி என்பர் –
உபசார வார்த்தை -போரில் புலி -புலி போன்ற வீரம் மட்டும் அந்வயம் -சாஷாத் –
நாம் அஹம் தேக விஷயத்தில் உபசாரம் -ஆத்மாவில் பர்யவாசிக்கும் சொல்ல
சாஷாத்தாகவே சொல்லலாம் முக்கிய வ்ருத்தி முடியாவிட்டால் தானே பர்யவசான வ்ருத்தி என்பர் -ப்ரத்யக்ஷமாக தேகம் குறிக்கும்
நான் -தேக அவயவங்களை குறிக்க வில்லையே -நான் பேசுகிறேன் -ஏக தேசம் தானே –
கிரியைக்கு உள்ள அவயவத்தையே தானே குறிக்கும்-அவயவி யான தேகத்தை குறிக்காதே -என்று ஆக்ஷேபிக்க –
உடலைப் பற்றிய அறிவு அம்சங்களைப் பற்றி இருக்க வேண்டாமே -நான் அறிகிறேன் மனசால் தானே என்னும் போது
அவயவங்களை கிரஹிக்க வேண்டாமே என்பான் -இந்திரியங்களுக்கு புலப்படாத பரம அணுக்கள் சேர்ந்து –
சேர்ந்த பின்பு -அவயவி பிரத்யஷிக்கிறோம்-
வாயு ஸ்பரிசத்தால் -வந்ததை அறிகிறோம் -ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
நான் ஆத்மாவை குறிப்பதாக சொன்னால் ததீய குணங்களை க்ரஹிப்பது இல்லையே
ரூபம் கந்தம் ரசம் விசேஷ குணம் –காரணங்கள் சேர்ந்து கார்யம் -காரண பூர்வகமாக இருக்கும் நியாயம்
ஞானம் சரீரத்துக்கு விசேஷ குணம் என்பர் -காரணத்தில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க -அனுமானத்தை ப்ரத்யக்ஷம் வெல்லும் என்பர் –
பரம அணு தோறும் ஞானம் உண்டு என்பார் ஆகில் சரீரத்தில் பல சேதனர்கள் உண்டாக வேணுமே -என்றும் ஆக்ஷேபிக்க -ப்ரத்யக்ஷ பாதிதம்-
விருப்பம் -தேகம் பண்பு -இந்திரியங்களுக்கு உண்டு -அசைதன்யம் கடாதிகள்-இவற்றுக்கு இல்லையே –
புடவை வேறே உடம்பு வேற -இடுப்பு உறுத்த வேறே நூல் புடவை உடுத்தி கொள்கிறோம் –
அத்யந்த வ்யாவர்த்தம் சரீரத்துக்கு சைத்தன்யம் பொருந்தும் என்பர்
தேகத்துக்கு ஞானம் அழகாக பொருந்தும் -என்பர் –
தேகம் ஏவ ஆத்மா -ப்ரத்யக்ஷமாக தெரிகிறதே -சாருவாக வாதம் -நான் அறிகிறேன் -அஹம் ஜானாமி -எத்தை அறிகிறீர் –
பருத்தவன் என்று -உயரம் சிகப்பு எங்கே இருக்கு -கண்ணுக்கு உடம்பு தானே படுகிறது -தேகத்தின் பண்புகள் –
ஆகவே நான் சொல்வது சரீரத்தை குறிக்கும் என்பர்
அஹம் சப்த கோசாரம் ஆத்மா வேதாந்தம் -அஹங்கார கோசாரம் தேகம் -ஸ்தூலோஹம் இதி தர்சநாத் –
வேறே சொல்வீர்கள் ஆகில் பிரத்யக்ஷ விரோதம் என்பர்
சேர்க்கை விசேஷத்தால் தேகத்தில் சைதன்யம் தோன்றும் -வெத்தலை பாக்கு -சிகப்பு உதாரணம்
சம்யோகம் -மட்டும் இல்லை -வாயில் மெல்லுதல் – உஷ்ணம் வர சிகப்பாக என்று ஆக்ஷேபிக்க –

துணி சித்ரம் வர்ணம் -த்ருஷ்டாந்தம் -நூலில் இல்லாத ஹம்சம் சித்திரத்தில் பார்க்கிறோம் –
மயில் கண் நூலில் இல்லா விட்டாலும் பார்க்கிறோம் –
ஆகவே காரண பூர்வகம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை -விசேஷ குணம் சேர்க்கையில் பார்க்கிறோம் –
அதே போலே தேகத்துக்கு ஞானம் இருக்கலாம் என்பர் –
விசேஷ குண காடின்யம் -பனிக்கட்டியில் -ஜல பிந்துவில் இல்லையே -காரண பூர்வகம் இல்லையே –
அடர்த்தியாக சேர்ந்ததால் வந்த தண்மை -சம்யோக விசேஷம் என்று சொல்ல
அறிவுக்கு இலக்காக உள்ள தேகம் அறிவுக்கு இருப்பிடமாக எப்படி -தேகம் அறிகிறது -தேகத்தை அறிகிறோம் -விரோதி வருமே என்றால்
கர்மாவாகவும் கர்த்தாவாகவும் –
ஆத்மா பக்ஷத்தில் இதே ஆஷேபம் வருமே என்பர்
ஞாத்ருத்வம் -மனம் கர்த்தா -தர்மி ஞானம் நான் -தன்னை உணர்ந்து –
பிருத்வி வாயு தேஜஸ் நீர் -ஆகாசம் இல்லா நான்கும் சேர்ந்து ஞானம் வரும் -கள்ளுக்கு மயக்கம் –
அதன் காரண பொருள்களில் இல்லையே -என்பர் சாருவாகர்
தேகம் விழுந்தால் மோக்ஷம் -தனித்து இல்லை

நான்கு -ஆகாசம் தவிர -மற்ற கூட்டரவே சரீரம் -சைதன்யம் ஞானம் வரலாம்–பிருத்வி அப்பு தேஜஸ் வாயு –
இவற்றில் ஞானம் இல்லா விட்டாலும் –
பனை கள்ளில் மயக்கும் சக்தி இருப்பது போலே -பூர்வ பக்ஷம் -சாருவாக லோகாயுத மதம்

மேலே சித்தாந்தம்
பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு விரோதம் –
அஹம் இதன்காரவ் -நான் இது சொல்லுகிறோம் -தேகம் ஆத்மா அல்லவே -அஹம் வேறே இதம் வேறே –
ஒரு பொருளில் இரண்டுக்கும் இருக்காதே -நான் உயரமானவர் -அஹம் தத்வம் வேறே இதம் வேறே அன்றோ
பிரத்யக் அர்த்தம் அஹம் -பராக் அர்த்தம் இதம் அன்றோ
என்னுடைய கை சொல்கிறோம்
இதம் -என்னும் சொல்லால் கிரஹிப்பத்து கை வீடு போலே -சரீரத்தை ஆத்மா இடம் பிரித்தே அறிய வேண்டும் –
ஸ்வ ஆத்ம கோஸரா -தானாகிய ஆத்மாவை பொருளாகக் கொண்டது அஹம் சொல்
ஸ்வ அந்யா கோசரத்வம் இதம் –
ஒரே விஷயத்தில் அஹம் இதம் இரண்டும் பொருந்தாதே –
இதம் சரீரம் கௌந்தேய -கிருஷ்ணன் மட்டும் இல்லை -நாமும் இதே பிரயோகம் செய்கிறோம்
இத்தை மேலும் விளக்குகிறார் –

நான் அறிகிறேன் -அஹம் ஞானாமி -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –
இது குடம் என்னும் அறிவுக்கு இருப்பிடம் ஆத்மா -விஷயம் குடம் –
ஞானத்துக்கு ஆஸ்ரயம் வேறே விஷயம் வேறே -ஆத்மா சரீரம் வேறே தானே இதே போலே
ப்ரத்யக் விருத்தி தன்னைப்பற்றிய அறிவு -இதங்கார கோசாரம் சரீரம் –பராக் —
அகங்கார கோசாரம் ஆத்மா -நிஷ்க்ருஷ்டமேவ -பிரித்தே அறிய வேண்டும்
சேமுஷி -ஞானம் -அறிவு வேறே அறிபவன் வேறே –

ஒரே விஷயத்தில் தன்மை மாறினால் -பிதாவே புத்திரனாக –அகார பேதம் ரூப பேதம் போலே
அஹம் இதம் ஒரே வ்யக்தியிலே -சொன்னால் என்ன என்றால் இது ப்ரத்யக்ஷ விரோதம் ஆகுமே –
சாருவாகன் இடம் வாதம் ஸாஸ்த்ரம் கொண்டு சொல்லமுடியாதே -அவன் அத்தை ஒத்து கொள்வது இல்லையே –
ப்ரத்யக்ஷம் கொண்டே சாதிக்கிறார்
தேவதத்தன் -தண்டம் -அஹம் தண்டி -தண்டம் பிடித்து கொண்டு இருப்பவன் -நான் கோலைக் கொண்டவர்

மனசைக் கொண்டே ஆத்மாவை அறிகிறோம் -கண்களுக்கு விஷயம் இல்லை –
நியமித பஹிர் இந்திரிய வ்ருத்தி -வெளிப்புலன்களையும் அடக்கி மனசையும் அடக்கி –
ஆத்மாவை அறியும் பொழுதே -உடம்பு தெரியாதே -அவயவ கிரஹணம் இல்லையே -ஸ்தூலமாக இருந்தாலும் –
நீ சொல்வது போலே ஒன்றாக இருந்தால் இது தெரியுமே

இதுக்கு ஆஷேபம் -நையாயிகர் பரம அணு -த்வய அணு–இப்படி மூன்று -த்ரய அணுகம் -இத்தையே ஜகத் காரணம் என்பர் –
த்ரய அணுகம் கிரஹிக்கிறோம் -அவயவம் த்வ அணுகமோ பரம அணுவோ கண்ணில் படவில்லையே –
அசேதனங்களுக்குள் சின்னதாக த்ரய அணுகம்
ஜன்னலை திறக்க -சூர்ய கிரணங்கள் -மூலம் கண்ணுக்கு தெரியும் த்ரய அணுகம் -ப்ரத்யக்ஷ யோக்ய அவயவம் -இதுவே

வெளி இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படும் அவயவி -அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹிக்கப் படும்
மனசால் நான் என்னும் சரீரத்தை அறியும் பொழுது அவயவங்கள் உடன் அறிய வேண்டும் -என்பர் பூர்வ பஷி
வ்யாப்தியை குறைக்க பிரமாணம் இல்லையே –
மனசால் கிரஹிக்கப்படும் வஸ்து வெளிப்புலன்களால் கிரஹிக்கப்படும் வஸ்து இரண்டும் இருக்க வேண்டுமே –
மனசுக்கு வெளி இந்திரியங்கள் உதவியால் மட்டுமே கிரகிக்க முடியும் -எல்லாமே அது தான் –
விசேஷணம் வேண்டாமே -நீ சொல்வதும் அங்கே போய் முடியுமே –
ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு -ஸ்பர்சத்தால் மட்டுமே அறிகிறோம் -வாயுவுக்கு அவயம் இல்லையே –
கடம் படம் -இவற்றில் அவயவங்கள் உண்டே

ஸ்தூலோஹம் -நான் பருத்தவன்–சரீரத்தின் குணத்தை ஆத்மாவிடம் சொல்லுகிறோம் –
ஸ்தூலமான சரீரத்தை ஏற்றுக் கொண்ட நான் என்று சொல்ல வில்லையே
இப்படி சொல்லும் பொழுதும் சரீரத்துக்குள்ளே அஹம் ஆகாரம் -வஸ்து தானே அஹம் கோசாரம் –
தேகத்தை அஹம் என்ற சொல் சொல்லாதே –
ஸ்தூலம் பால்யம் இவை ஆத்மா பர்யந்தம் பர்யவசிக்கும் -எனவே தேகமும் ஆத்மாவும் ஓன்று என்பார்
ஓன்று இல்லை -இரண்டு தத்துவங்களே அப்ருதக் சித்தம் என்பதால் –விட்டுப்பிரியாமல் -பர்யவசான வ்ருத்தி -அன்றோ இது –
உபசாரத்துக்காகவா முக்கியமாகவா –அதுக்குள்ளும் பரமாத்மா -இது தனி விசாரம் –

மமேதம் க்ருஹம் -பேத ப்ரதிபாதம் உண்டே -வ்யவஹாரத்திலும் காணப்படுகிறதே
என்னுடைய ஆத்மா சொல்லக்கூடாதே -சொன்னால் -நானாகிய ஆத்மா என்பதையே சொல்கிறோம் –
நடு மதியத்தில் இருக்கிறோம் சொல்வது போலே -அப்ரதானம் -உபசார வார்த்தை என்றபடி
என்னுடைய தேகம் -வ்யவஹாரம் -நானே தேகம் சாருவாகர் பக்ஷம் -உபசாரமாக சொல்வதாக கொண்டால் என்ன என்று ஆஷேபம் –
ப்ரத்யக்ஷ விரோதி ஆகுமே சிலா புத்ரேக சரீரம் அதாவது -பொம்மையின் சரீரம் –சொல்லும் பொழுது
பொம்மை ஒரு வஸ்து சரீரம் வஸ்து இரண்டு இல்லையே -இதம் அர்த்தமே பொம்மையும் சரிரமும்
மம அயம் ஆத்மா -என்னுடைய இந்த ஆத்மா –உபசார வார்த்தை -உபய பஷத்திலும் உபசார பிரயோக சம்மதம்
என்னுடைய ஆத்மா -அஹம் சப்தம் என் -மம -வந்த பின்பு மீண்டும் ஆத்மா -உபசார
என்னுடைய தேகம் -என் -என்றால் தேகம் -அஹம் சப்த கோசாரம் தேகம் ஆகுமே –
நீ இதம் சப்தம் தானே தேகம் என்றாய் -இது வரை -ஆகவே நீ உபசாரமாகக் கொள்ள முடியாதே -என்று சமாதானம் –
நான் உயரமானவர் -தேகம் உயரம் -லக்ஷணையால் தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மாவையே நான் குறிக்கும் என்றவாறு

இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது அவி விவேகிகள் -ஒன்றாக பார்ப்பது -எதற்க்காக என்றால் –
அபேத பிரமம் -பிராந்தி -வேறுபாட்டை கிரஹிக்க முடியாமல் –
பாஹ்ய விஷயம் -பரஸ்பர வ்ருத்தம் ரூபம் -பரிமாணம் -சங்க்யா எண்ணிக்கை-சந்நிவேசம் ஆகாரம் –
வேறுபாடு -கிரஹிக்கிறோம் -வ்யதிரேகம் புற விஷயங்களில்
ஆனால் ஆத்மாவில் -ஆத்மாக்களுக்குள் வாசி இல்லை –
சாத்ருசம்-வெள்ளி முத்துச் சிப்பி -பாம்பு கயிறு -பிரமிக்க சில ஒற்றுமைகள் இருக்க வேண்டுமே
ஆத்மா -தேகம் இரண்டுக்கும் பொது தன்மைகள் ஒன்றுமே இல்லையே –
இரண்டும் வேறே வேறே இல்லை வஸ்து ஒன்றே என்பான் பூர்வ பஷி
இதுக்கு சமாதானம்

இச்சைக்கு தகுந்த வியாபாரம் -நான் அங்கே போக நினைக்க -தேகம் -முயன்று -இச்சா சங்கல்பம் —
இரண்டும் ஆத்மா இடம் -பிரயத்தனம் -தேகத்திடம் –
இச்சா அனுவியாதி-அதன் வழி செல்லும் தொடர்பு உண்டே -பொதுத்தன்மை -சாத்ருசம் உண்டே –
இதுவே அபேத பிரமத்துக்கு காரணம் –

பிரனீஹித மனஸ்- யோகிகள் வாசியை நன்றாக அறிகிறார்கள் -அஹம் -அவயவம் இல்லாததாக -ஆத்மாவையையும்
இதம் -அவயவம் கூடி -ஸ்தூலம் தேகம் -வேறு பட்டதாக ப்ரத்யக்ஷத்தாலே காண்கிறார்கள் –

அனுமானம் -மேல் -நான் அறிகிறேன் -அறிவுக்கு -உடம்புக்கு இல்லை -வேறு பட்ட ஒன்றுக்கே -விஷயம்
அப்ரகாசமான தத் அவயவ ப்ரதிபாத்யத்வாத் –
எந்த அறிவு சரீரத்தை கிரஹிக்கறதோ அது அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹித்து அறியும்
நான் அறிகிறேன் -வேறு பட்ட ஆத்மாவை இலக்காக கொண்டதே ஆகும் –
அறிவுக்கு அவயவங்கள் பிரகாசிக்காதே –
யாது ஒரு அறிவு சரீரத்தின் அவயவங்களை இலக்காகாமல் உருவாகிறது அது ஆத்மாவுக்கே -இது முதல் அனுமானம்

சரீரம் அஹம் -என்பதுக்கு இலக்காகாது -இது என்று கிரஹிக்கிறபடியால் -இது கடம் -இது சரீரம் –
அஹம் சொல்லுக்கு பொருளை ஆகாதே -இரண்டாவது அனுமானம்

மூன்றாவது அனுமானம் -பாஹ்ய இந்திரியங்களுக்கு புலப்பட்டால் -சரீரம் -அவயவங்கள் உடன் கூடி இருப்பதால்
சப்தத்துக்கு சப்த ஸ்வரம் -இத்யாதிகள் உண்டே –
கடம் முதலானவை கண்ணால் கிரஹிக்கிறோம் -அவயவம் அற்ற ஆத்மா -கண்ணால் கிரஹிக்கப்படாதது –

எம்மா வீட்டில் எம்மா வீடு –
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
தேஹே கதம் ஆத்ம -பரார்த்தம் தேஹே

அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்–பிறருக்காக இருப்பதே இல்லை -ஸ்வ தந்த்ரன் -தனக்காகவே இருக்கும் -எல்லா பொருள்களும்
சரீரம் பிறருக்காகவே இருக்கும் -ஆத்மா மொத்தம் தனக்காகவே இருக்கும் –
அவயவங்கள் உடன் கூடி இருந்தால் பிறருக்காக இருக்கும்

ஸர்வஸ்ய பாஹ்ய ஆத்யந்த்ர போக்யம்-சப்த ஸூக -இரண்டும் ஆத்மாவின் பொருட்டே –
ஆத்மா அநன்யார்த்தம் -ஸர்வஸ்ய சேஷி -தனக்காகவே –
சரீரம் பிறர்க்காகவே ஏன் என்றால் கூட்டரவாக இருப்பதால் –
படுக்கை -ரத்தம் -நாற்காலி -அவயவங்கள் உடன் -பிறர்க்காகவே -பிறர் யார் -ஆத்மா
அவன் சரீரம் தானே ரதத்தில் -இருக்குமே -பிறர் சரீரமாக அவயவத்துடன் இருந்தாலும் என்பான் பூர்வ பஷி –
யாது ஓன்று மற்ற ஒன்றை தன் உபயோகத்துக்காக கொள்ளுமோ அதுவும் சேர்த்தி பொருள்
ஆத்மா சேர்த்தி பொருளை உபயோகமாக கொள்ளுவதால் அதுவும் சேர்த்தி பொருள் -அவயவங்கள் உடன் கூடியது என்பான் பூர்வ பஷி
அப்பொழுது ஆத்மாவும் பிறருக்காக இருக்கும் -பிரத்யக்ஷ விரோதம் பிறக்கும்
இது அறிந்து தானே சேஷி -அஹம் போகி- நானே எல்லாம் யானே என் தனதே என்று இருக்குமே —
ஆழ்வார் அத்தை சொன்னது பூர்வ பக்ஷம்
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
ஆத்மாநாம் அந்யத்-மேலே ஈஸ்வர சித்தியில் விளக்கம் கிட்டும் –

ஆத்மா கார்ய பொருளே இல்லையே -உருவாவதே இல்லை -அவயவமே இல்லை
கார்ய குண பூர்வகமாக இல்லையே -தேகத்துக்கு ஞானம் வாதம் எடுபடாதே –
கல்லில் மத சக்தி -காரண பொருள்களில் இல்லாவிட்டாலும் காரண பொருளில் இருக்கலாமே
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்னால் சிகப்பு வருகிறதே –
கூட்டுறவு-சங்காதம்- -தனக்கே -தேகம் பிறருக்கே யாக இருக்கும் –
ரதம் கட்டில்-சரீரத்துக்காக உள்ளதை பார்க்கிறோம் -பிறரும் குற்றவாகவே இருக்க வேண்டும் – இது வரை பார்த்தோம் –

பரார்த்தம் –சங்காதம் -அநவஸ்தா நிலை வரும்
போக்தா வேறே போக உபகரணம் வேறே பிரித்து சமாதானம் -அனுபவிப்பவர் அன்றோ
ஆத்மா பிறருக்காகவே இல்லை சங்காதமும் இல்லையே
சங்காதம் என்று கொண்டால் வேறு ஒருவருக்காக இருக்க வேண்டும் –அதற்கும் அந்த சட்டம் வருமே –
த்ருஷ்டாந்தகத்தில் உள்ள எல்லாம் தார்ஷ்டாந்தகத்தில் வர வேண்டாமே -பக்ஷம் ஹேது ஸாத்யம்
மலை புகை நெருப்பு போலே-அனுமானம்
த்ருஷ்டாந்த த்ருஷ்ட தர்மம் மாத்திரமே கொள்ள வேண்டும் -இல்லா விட்டால் அனுமானம் வராதே

ப்ரத்யக்ஷத்தால் பேதம் -சரீர ஆத்மா -தெளிவாக இல்லா விட்டாலும் அனுமானத்தால் அறியலாம் என்பான்
தத் அசம்பாவித -ஞான அசம்பாவித சரீரே
சரீரே அபுஷ்டஸ்வேதே பேதஸ்ய-தஸ்ய அசம்பவாத் –
தஸ்மிந் அசம்பவாத்-சரீரத்தில் ஞானம் ஏற்படாதே எதனால் என்றால் —
தத் குணாந்தர -சரீர குணாந்தர வைதர்மயாதபி –பருமன் இளமை போன்றவை ஞானம் போல இல்லவே –
ஞானம் சரீரத்துக்கு குணம் ஆகாதே –
ஞானம் இருந்தால் சுகம் துக்கம் -இந்த சத்தர்மம் ஆத்மாவுக்குத்தானே
தேகம் தவிர்ந்த சங்காதம் பரார்த்தம்
தேகம் ஆகிற சங்காதம் பரார்த்தமாக இருக்காது தனக்காக இருக்கும் -பூர்வ பக்ஷி-
இப்படி இருந்தால் ஞானம் தேகத்துக்கு சொல்லலாமே என்பர்
ஆனால் தேகத்தின் மற்ற குணங்களுடன் பொருந்தாதே -என்று சித்தாந்தம்
சரீரத்தில் ஞானம் உதிக்கவே அவகாசம் இல்லையே -யோக்யதையே இல்லையே
இத்தை காரிகை -ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

காரண குண பூர்வகம் விசேஷ குணம் –அவயவத்தில் இருப்பது அவயவியில் ஏற்படும்- நூலில் உள்ள நிறம் புடவையில் –
விசேஷ குணம் -16-சாமான்ய குணம் -8-ஆக மொத்தம் -24-
கார்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் இருந்தால் காரண குண பூர்வகத்வம்
சாமான்ய குணத்துக்கு வேண்டாம்
சரீரத்துக்கு ஞானம் சொன்னாய் ஆனால் -காரண குண பூர்வகம் இல்லையே –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி –ஹேதுக
தந்து -நூல் -படம் -சமவாயி காரணம் -உபாதான காரணம் நாம் சொல்வது போலே

சமவேத குணம் சேர்ந்து இருக்கும் குணம் நூலில் -இதுவே துணியில் இருக்கும் ரூபத்துக்கு காரணம் அசமவேத குணம் ஆகும் –
சமவாயி -அசமவாயி -நூலில் சேர்க்கை -சமவாயி காரணம் –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி சமவேத குண அசமவாயிக ஹேதுவாக கொண்டு – -நூலில் வாசனை -துணியில் ரூபம் –
ரூபத்துக்கு வாசனை காரணம் இல்லையே -இத்தையே சஜாதீயம் -வி சஜாதீயம் -என்கிறது
இதே போலே சரீரம் -ஞானம் -சரீரத்தில் உள்ள குணங்கள் ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே –
சிகப்பு கருப்பு நீளம் இவை ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே
சாமான்ய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் -கொண்டே சாதிக்கிறார்

சாருவாகர் -ஆகாசம் ஒத்து கொள்ளவில்லை -நாம் அதுவும் த்ரவ்யம் -சூர்ய சந்த்ரராதிகள் இங்கே இருப்பதால்
கள்-த்ருஷ்டாந்தம் -சொல்வது பொருந்தாது –
சக்தி விசேஷ குணமே அல்லவே
சாமான்ய குணம் -தானே
ரூபம் கந்த ஸ்பர்ச ரசம் சிநேகம் சம்பசிதிகோ த்ரவ்யம் புத்தி -சுகம் துக்கம் இச்சா ப்ரயத்னம் -பாவனா -16-விசேஷ குணங்கள்
சங்க்யா பரிமாணம் பரத்வம் அபரத்வம் குருத்வம் -8-குணங்கள்
மீமாம்சகர் சக்தி -சர்வ த்ரயேஷு–கார்யம் செய்வதை கொண்டு ஊகிக்க படும் —
கார்யதவே உண்டாகும் ஒரு புலனால் அறியப்படும் ஞானம் விசேஷ குணம்
சக்தியை விசேஷ குணம் சொன்னால் என்ன என்பன்–காரண குண பூர்வகம் ஆகும் –
த்ரவ்யங்களை கலந்து த்ரவ்யத்திலே மத சக்தி உண்டாகும் என்று சொல்லலாம் என்று சமாதானம்
அணுவில் மத சக்தி வரும் என்றவாறு –
வெத்தலை பாக்குக்கும் இதே கதை -தாம்பூல ராகத்துக்கும் சிகப்புக்கும் இதே வாதம் –
இதே போலே தனித்தனி அவயவங்களுக்கும் ஞானம் இருக்கு -என்றால் பொருந்தாது –
ஒரே சரீரத்தில் பல ஞானவான்கள் சேர்ந்து ஒரு கார்யம் செய்ய முடியாதே –
அங்கி அங்க பாவமே போகுமே –
சித்ர ரூபம் பல வண்ணங்களின் சேர்க்கை -நூலில் பல வண்ணங்களின் சேர்க்கை இருந்தால் தானே முடியும் –
நாநா வண்ணம் –அந்த துணியானது பல வண்ணங்களாலான நூல்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால்
என்ன பொருந்தாமை வரும் –
அகாரண குண பூர்வகம் -ஒவ் வொரு நூலிலும் பலவண்ணங்கள் காணா விட்டாலும் –

சரீர குணங்கள் பிரத்யக்ஷமாக அறியும்படி இருக்கும் -ஆனால் ஞானம் அளவை அறிய முடியாதே —
ஞானம் சரீரத்தின் குணமாக இருக்க முடியாது என்றவாறு -ஸாத்யம் -இதுவே –
கிஞ்ச
தேகம் ஆத்மா அல்ல -குடம் போல்வன போலே
உத்பத்தி -உருவாகிறதே -இது போலே ஆத்மா இல்லையே
பிறர் பயனுக்காக –வேதாந்தத்தில் ஆத்மா தனக்காக
அவயவ சேர்க்கை –
ரூபமாதி குணம் உண்டே –
பூதத்வாத் பஞ்ச பூதங்கள் சேர்க்கை

ஸச் சித்ரத்வாத் -ஓட்டை நவ த்வார பட்டணம் -ஆத்மாவில் இல்லை
அதேகித்வாத் -இவர் தேகம் -தேஹி இல்லையே -சாருவாகரும் தேகம் என்றே சொல்லுவான்
தேகமாக
ம்ருத தேகத்வாத் -இறந்து போன உடல் போலே ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே
தேக ஆத்மா வாத நிரசன பிரகரணம் -முடிந்து இந்திரியம்

இந்திரியம் -ஸ்தூலம் இல்லை -அவயவங்கள் உடன் கூடியது இல்லையே -இத்தையே ஆத்மா
இதம் -சப்தம் அர்த்தம் –பாஹ்ய இந்திரிய க்ராஹ்யம் -வெளி புலன்களுக்கு விஷயம் -வேறே அஹம் சப்த அர்த்தம் –
உள் புலன் மனஸ்ஸூ க்கு தானே விஷயம்
அதீந்த்ரியம் -இந்திரியங்கள் -அதிஷ்டான தேசம் இந்திரியங்களால் கிரகிக்க முடியும் -மாம்ச பிண்டம் சஷுர் கோளகம் –
குணங்கள் -ரூபம் ரசம் இத்யாதிகளை இல்லையே -உத்பூத குணங்களாக இருக்காது -பிருத்வியில் காந்தம் நன்றாக தெரியும்
சப்தம் ரூபம் -ஸூ ஷ்மங்களில் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
இந்திரிய ஸூஷ்மம் தானே –மூக்கு நுனியில் தான் இருக்கு –
ஒன்றின் வியாபாரம் -பலன் -முயன்றவர் இடம் -அத்யயனம் பண்ணினவன் இடமே -யத் வியாபார பலம் யதி தத் தன்னிஷ்டம் –
அர்த்த சன்னிகர்ஷம் -நேர் ஆதி தொடர்பு ஞானத்தின் மூலமாக -ஞானம் த்ரவ்யம் குணம் இரண்டு ஆகாரம் -நம் சம்பிரதாயத்தில்
தண்டம் -சக்கரம் -உண்டான குடம் தண்டத்திடம் இல்லையே -த்ரவ்யத்துக்கு இந்த சட்டம் இல்லை
குளித்தால் சரீர சுத்தி புக்கியம் -த்ரவ்யம் இல்லை –
ஞானம் -சாருவாகனுக்கு த்ரவ்யம் இல்லையே
தண்டம் வைத்து குடத்தை உடைத்தால் -அபாயம் தண்டத்தில் இல்லையே -சூரணமாக இருப்பதில் குடத்தில் இல்லாமை இருக்குமே –
பிறப்பது என்றாலே போகுமே -ஸ்ரீ கீதை –
குடம் -அபாயம் -சூர்ணத்தின் அவஸ்தையில் தொடக்கம் -கட்டத்தில் சூர்ணத்தின் அழிவு -இப்படித்தானே
த்ரவ்யத்தில் அபாவத்திலும் பொருந்தாதே –
ஞானம் அபாயம் இல்லை -த்ரவ்ய பின்னம் தானே ஆகவே பொருந்தும் என்பான்
த்ரஷ்டா சஷூஸ் பார்ப்பவர் கண் -கர்த்தா -ஞாதா -ஞானம் குணம் ஆகும் -ஆப்த வாக்கியம் சத்யதபா முனிவர் வார்த்தை
மேலே சமாதானம் -தது ந –சொல்லி மேலே விளக்குகிறார்

விகல்பம்–ஒவ் ஒரு இந்திரியம் தனி தனி ஆத்மாவா -ஐந்தும் சேர்ந்து ஒரே ஆத்மாவா –
ப்ரத்யேகம் -என்றால் -ப்ரதிஸந்தானம் -ஒவ் ஒன்றும் ஆத்மா -கண்ணால் பார்த்த நான்
பழம் கொடுத்தேன் சொல்ல முடியாதே -அவர் வேறே இவர் வேறே -பொருந்தாதே –
எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன் சொல்ல முடியாதே
சேர்ந்தே ஆத்மா என்றாலும் -பொருந்தாதே -ஒரு இந்திரியம் இல்லாமல் வாழ முடியாதே -பிரத்யக்ஷ விரோதம் வரும் –
கண் போனால் முன்பு பார்த்தவர் நினைவு வரக் கூடாதே கண்ணுக்கு ஞானம் என்றால் –
வியாபார பலன் வாதமும் தப்பு -சாஸ்த்ரத்தால் வெட்டினால் பாபம்–த்ரவ்யம் இல்லை -அபாயமும் இல்லை –
உன் சட்டம் செல்லுபடி ஆகுமே – கத்திக்கு போகாமல் ஆத்மாவுக்கு அன்றோ
ஆப்த வசனம் -அவர் சொன்னது -இந்திரனும் ஸ்ரீ மந் நாராயணன் பேச உபநிஷத் கதை –
வராஹம் வேடன் வேஷன் -போட்டு வர -ரிஷிகள் -இருக்கு இல்லை சொல்ல முடியாமல் -யா பச்யதி ந ப்ரூயதே
-கண் பார்த்தது அது பேசாதே -பேசுவது பார்க்க வில்லை -வேடனே கண்ணு பேசுமா வாக்கு காணுமோ –
த்ரஷ்டா கண் தானே -என்ற இடம் -அனிதா வேறு பயனுக்காக சொன்னது -சரணாகாத பரித்ராயணத்துக்காக சொன்னது –
இந்திரியங்கள் ஆத்மா அல்ல -என்று நிரூபணம் –

மனமே ஆத்மா -அடுத்து
முன்பு சொன்ன தோஷங்கள் வராதே -உத்ப்பூதம் ஸ்தூலம் –
பலவா ஒன்றா வம்பு இங்கு இல்லையே –
வெறும் கருவி தானே -ஆத்மா தானே கர்த்தா -ஆத்மாவின் தர்மா தானே கர்த்ருத்வம் –
இந்திரியங்களின் தலைவர் மனஸ் -தெரிகிறது லோகத்தில் -பிரதி சந்தானம் குறை வராதே –
ஞானம் பதிவது மனசில் -ஞான ஆஸ்ரயம் -தரிசன அனுசந்தான ஆதாரம் -பார்ப்பதும் நினைவும் -இங்கே தானே –
ஒரு இந்திரியம் போனாலும் வாழலாம் -அந்த குறையும் இங்கு இல்லையே –

தத் அபி ந -முதல் ந -அப்புறம் தத் ந
மனம் கர்த்தா அல்ல -கரணமான படியால் -கண்ணைப் போலே சிந்திக்கும் கருவி
எனவே ஞானம் இல்லை -ஞானத்துக்கு இருப்பிடம் வேறே கருவி வேறே அன்றோ
பாஹ்ய ஆந்திர சகல விஷய சம்வேதன ஞானம் அறிவிக்கும் கருவி தானே மனஸ்ஸூ
பாஹ்ய இந்திரிய அதன் அதன் விஷயம் -தொடர்பு -யுகபத் ஒரே காலத்தில் -அனைத்து ஸ்ருஷ்ட்டி போலே –
யுகபாத் ஏவ சர்வ விஷயமும் தோன்றாதே -எதனுடைய உதவி இல்லாத போது வஸ்து பிரகாசிக்காதோ –மனஸ் தானே க்ரஹிக்க வேண்டும் –
ஸூகம் போன்றவை -இவற்றுக்கும் கருவி வேணும் -கிரியை -என்றாலே கரணமும் கர்த்தாவும் வேணுமே -ஆத்மாவும் மனசும் வேண்டுமே –
ஞான கருவியே மனஸ்ஸூ -கர்த்தா அல்ல என்றதாயிற்று -ஞான ஆஸ்ரயம் ஆகாதே
கர்த்தா என்றாலே ஸ்வதந்த்ரர் -கருவி மற்றவர் விருப்பம் படிதானே

மேலே ஸ்வா தந்தர்யம் விளக்கம் –விருப்பம் தகுந்த-கார்யம் செய்யும் கருவி கொண்டு -அடைய
தன இடத்தில் உள்ள இச்சையால் செயல்படுவது ஸ்வ தந்தர்யம் –
பர அதிஷ்டானம் பிறர் நியமனத்தால் -செய்யும் மனஸ் -ஆத்மாவாகாதே -பரஸ்பர விருத்தம்-
மனம் ஆத்மா அவருக்கு கரணம் என்றால் -கர்த்தா கரணம் வேறே வேறே ஒத்துகே கொண்டாலே –
உன் சித்தாந்தம் பலிக்காதே -பேரிலே தான் வாதம் —
ஏவ கண்களால் ரூபம் -சுகாதிகளை மனசாலே க்ரஹிக்கிறார் ஆத்மா
லோக வியாபாரத்துக்கு ஒத்து போகாதே -மனம் கரணமே பரதந்த்ரமே ஞானம் இல்லை ஆத்மா இல்லை
அஹம் சப்த கோசாரம் ஆகாதே –
மன ஆத்மவாத கண்டன பிரகாரணம் முற்றிற்று

மேலே மனஸ் என்ன என்று விவரிக்கிறார்
சம்பிரதாயம் பகவான் இடம் மட்டுமே ஸ்வா தந்தர்யமும் தானே ஏறிட்டுகே கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
வேறு ஒரு வியக்தியில் இரண்டும் இல்லையே –

அதிஷ்டானம் -நியமனம் என்றபடி இருக்கிறது மட்டும் இல்லை —ஒரே ஆத்மா தான் நியமிப்பான் -சரீரத்துக்குள் பல உண்டே —
தேகம் மனம் இந்திரியம் -மூன்றும் கர்மத்துக்கு அனுஷ்டானம் -கர்ம சாபேஷத்தால் ஈஸ்வரன் நியமிக்கிறார் –
மன வைத்தியர் -கண் வைத்தியர் போலே -அனைவரும் மனோ வியாதிக்கு ஆள்பட்டு இருப்பதால் –
கண்ணுக்கு உபகரணம் கண்ணாடி –கண்ணே கரணம் தானே -மனசுக்கு என்ன பண்ணலாம் –
மற்ற கரணங்களுக்கு மனஸ் சஹகாரி வேண்டும் —

விஷயங்களை இந்திரியங்களை கிரகிக்க -மனஸ் இந்திரியம் விட வலிமை –
புத்தி விவேக ஞானம் அத்தை விட வலிமை -அதிருஷ்ட ரூபமான அனுக்ரஹம் -த்யான ரூபமான கர்மம் –
சத்வம் வளர்ப்பதே மனசுக்கு உப கரணம் –
சத்வ குணம் –கர்மம் பண்ண -ஞான யோகம் -பகவத் பிரீதி வந்து -மனஸ் வியாதி போகும் –
மனஸ் சமாதானம் கோயில் சேவை -வளர்க்க வளர்க்க -ஆகார சுத்தி -சத்வ சுத்தி -துர்குணங்கள் போக்க –
காமம் போக்க வைராக்யம் கோபம் போக்க பணிவிடை செய்து -இதுவே மாற்று மருந்து –
மனசுக்கு பிரகரணம் கண் காது இத்யாதி -மன நோய் மருத்துவர் தூங்க வைப்பர் இதன் அடிப்படையில் –
நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் -நோய் முதல் நாடி தீர்ப்பது -அதுவே அத்தை அறிவது கஷ்டம் தானே குழம்புகிறோம்
ஆந்திர ஞான கரணம் –உள் இந்திரியம் -உள் அறிவு புலன் -த்ரவ்யம் –
யுகபத் ஞான-ஒரே காலத்தில் ஏற்படாதே -கண் காது -சுவைப்பதும் கேட்பதும் பார்ப்பதும் ஒரே அளவிலே பதிவாகாதே –
புலன் உடன் தொடர்பு கொண்டு மனஸ் கிரகிக்கிறது -அதுவே மனசுக்கு லிங்கம் அடையாளம் –
ஞானம் -அறிவு -ஸ்மரணம் -நினைவு -சம்ஸ்காரம் -மனப்பதிவு -விஷய சுகம் ஏக காலத்தில் –
பதித்தது அனைத்தும் ஏக காலத்தில் நினைவுக்கு வர வில்லையே –
யுகபத் ஞானம் -வேறே
யுகபத் ஸ்மரணம் –பண்பு பதிவுகள் –நினைவும் மனசும் ஒன்றா வேறே வேறாயா -அவன் கேள்வி –
கொஞ்சம் கொஞ்சம் எப்போதோ எப்போதோ நினைவுக்கு வருகிறதே –
பதிக்கப்பட்ட வரிசையில் நினைவு வருகிறதா -இல்லையா –
மனசை ஒருமைப்படுத்தினாலும் நினைவு வரிசைகளை மாற்ற முடியாதே –
அனுபவித்த சகல விஷய நினைவுகளும் ஒரே காலத்திலேயே வராதே –
சுக துக்க ரூப கர்மங்கள் –அதிருஷ்டம் –வாயிலாக என்று கொள்ளலாமா -என்றால் –
ஆத்ம ஸ்வ பாவமே க்ரமமாகவே ஞானம் கொடுக்கும் -இப்படி இரண்டு விகல்பம்
இரண்டும் ஒத்து வராது –

துணி -சமவாயி தந்து -அசமவாயி நூலுக்கும் நூலுக்கும் சேர்க்கை -நிமித்தம் -உண்டை பாவி -நையாயிகர் இந்த மூன்று காரணங்கள்
சுக துக்கம் ஏற்படும் -சுக ஞானம் துக்க ஞானம் -இதுக்கு -சமவாயி காரணம் -ஆத்மா -நிமித்தம் –
வெளி விஷயங்கள் -அதிருஷ்டம் -அசமவாயி -சமவாயி உடன் தொடர்பு-சம்யோகத்துக்கு ஓன்று வேண்டுமே அது மனஸ்
மனம் த்ரவ்யம் சித்திக்கும் என்பான் –அது பொருந்தாது -தார்க்கீகன் -மனஸ் ஒன்பதாவது தத்வம்
சுக -துக்க -பூர்வ கால ஜென்ம ஞானம் இருக்க வேண்டுமே அபிமத அநபிமத விஷய தொடர்பு ஞானம்-நெருப்பு -உஷ்ணம் அறிந்து தொட்டால் சுடும் –
இந்த ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மாவில் -இதனால் சம்யோகம் -இதுவே அசமவாயி காரணம் -மனஸ் வேண்டாமே –
விஷய ஞானத்துக்கு அசமவாயி -அதுக்கு அசமவாயி -இப்படி மேலே மேலே எவ்வளவு கேட்டாலும் மனஸ் வேண்டாம் என்பான் –
விஷயத்துடன் தொடர்பு உள்ள வெளிப்புலன் அதன் உடன் தொடர்பு கொண்ட -ஆத்மா–அது தான் அசமவாயி –
வெளிப்புலன் தொடர்பு -சப்தாதிகள் இந்திரிய தொடர்பு –
மனசை ஒத்து கொள்ளாதவன் அன்றோ –
இந்திய பொருள் சம்பந்தத்துக்கு அசமவாயி இந்திரிய கிரியா செயல்பாடு
அதுக்கு இந்திரிய ஆத்ம சம்பந்தம் –
அதுக்கு அதிருஷ்டம் கர்மமும்
அதுக்கு பிரயத்னம் அசமவாயி
அதுக்கு கர்தவ்யதா ஞானம் –

சுக துக்கம் அனுபவிக்க த்ரவ்யாந்தரம் -மனசை கல்பிக்க வேண்டாமே -என்பன் பூர்வ பக்ஷி –
நித்ய த்ரவ்யம் -விசேஷ குணம் –த்ரவ்யாந்தர சம்யோகம் தேவை –
மாங்காய் -நாலு நாள் கழித்து மாம்பழம் -பார்த்திப -பிருதிவியின் -பரம அணு –
தேஜஸ் சம்பந்தம் பட்டு கட்டியாக இருந்தது மெலிதாக -சுவையும் மாறி-பச்சை மஞ்சள் – –
அனுமானித்து சம்பந்தம் -தேஜஸ் சம்பந்தம் உணர்கிறோம்
ஆத்மா -சுக துக்கம் -விசேஷ குணம் -இதுக்கு மனஸ் -என்று சொல்லப் போனால் இதுக்கும் வேண்டாமே என்பான்
இஷ்டம் கிடைத்தது தெரிந்தால் சுகம் -அநிஷ்டம் கிடைத்தது தெரிந்தால் துக்கம் -பிராப்தியும் அறிவும் வேணுமே–
இத்தை அசமவாயியாக கொள்ளலாமே என்பான் -மாங்காய் மாம்பழம் நேராக பார்த்து அறிகிறோம் –
பிரத்யக்ஷமாக சம்பந்தம் தெரியாமல் அனுமானிக்கிறோம்
இங்கு அது வேண்டாமே என்பான்
துணி -தந்து -சமவாயி காரணம் -நூலுக்குள் சம்பந்தம் அசமவாயி -தறி உண்டை பாவு நிமித்தம் –
இங்கு காரணம் கிடைப்பதால் அனுமானிக்க வேண்டாமே என்பான் -பூர்வ பக்ஷி

வ்யாப்தியில் தப்பு இல்லையே -நித்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் கிடைக்க த்ரவ்யாந்தர சம்பந்தம் வேணும் –
என்கிற வ்யாப்தியில் குற்றம் இல்லையே –
த்ரவ்யாந்தரம் இருக்க ஒத்துக் கொண்டால் மனசை கல்பிக்கலாமே –
த்ரவ்யாந்தம் ஒத்துக் கொண்டு –அக்னி -சரீரம் தொடர்பால் -மாறுதல் -ஸ்பர்சத்துடன் கூடிய த்ரவ்யந்தரம் -பவ்திகமாகவும் இருக்க வேண்டும் –
மனசை தொட முடியாதே –
ஸ்பர்ச வைத்த த்ரவ்யாந்தரம் -ஆத்மா தேகம் சொல்லலாமே -மனஸ் கண்ணுக்கு தெரியாதே -தேகம் காணலாம்
தேகத்துக்கு தானே சுகம் துக்கம் -அவயவங்களுடன் இருப்பதால் –
கண்ணுக்கு ஸூஷ்மமும் பாஹ்ய குழகமும் உண்டே -மனசுக்கு வலிக்காதே
மனஸ் பவ்திக்கமா இல்லையா விசாரம்
பஞ்ச பூதங்களை விட வேறுபட்டதா இல்லையா –
அனுமானத்தால் வேறுபட்டது என்று சாதிக்கலாம் -மனஸ் சேர்ந்தால் தானே-சப்தம் -ஆகாச குணம் -கிரஹிக்கும்–
ஆகாசம் பிரதானமாக கொண்ட காது -மற்ற ஒன்றை கிரகிக்காதே
ஆகாசாத் வாயு -கண் அக்னி -ஜாலம் -நாக்கு -பிருத்வி மூக்கு -கிரஹித்து அவ் இந்திரியம் அதில் இருந்து உருவானது –
பவ்திக்க இந்திரியம் தனக்கு உள்ளதை தான் கிரகிக்க வேண்டும் வேறே ஒன்றை கிரகிக்கக் கூடாதே
பூதாந்த்ர குணம் கிரகிக்கக் கூடாதே -ஆகவே மனஸ் அபவ்திகம்
நாக்கை போலே இருக்க கண் இல்லை -இது போன்று ஐந்தும் இல்லை -மனம் -ஐந்தையும் கிரகிப்பதால் –
சரீரம் போலே பாஞ்ச பவ்திகம்-என்னலாமே-எண்ணில் —
காது -ஆகாசம் மட்டும் இல்லை பஞ்சீ கரணம் -மற்ற நான்கும் தொட்டு கொண்டு இருக்குமே
மனம் அன்ன மயம் சோம்ய–வேதம் -உபாதானமாக கொண்டது என்று சொல்ல வில்லை -தத் ஆதீன வ்ருத்தி -என்றவாறு –
அன்னத்தால் போஷிக்கப்பட்டுள்ளது என்றவாறு –
ஆபோ மயப்பிராணன் -பிராணன் தண்ணீர் மயம் சொல்வது போஷிப்பதால் -அதனால் ஆக்கப்பட்டது இல்லை
மோக்ஷ தசையில் மனஸ் உண்டு
மனசான் யேதான் காமான் காம ரூபியான் சஞ்சரன் –சாந்தோக்யம் –அபவர்க்க தசையில் மன அநுவிருத்தி –
அப்ராக்ருத மண்டலம் அன்றோ -ஆகவே பிராகிருதம் இல்லை –
மனமே திவ்யமான கண் -சுருதி -அது போலே இங்கும் என்பான்
பரமாத்மாவுக்கு மனசால் சங்கல்பித்தது என்கிறதே எனவே பவ்திகமாக இருக்க முடியாதே என்பான்
நீ சொன்னதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன் –
த்ரவ்யாந்தரம் கல்பிக்காமல் -பவ்திகமே
புத்தியே மனஸ் -நல்ல புத்தி உடையவன் மனசே
புத்தி -ஞானம் -மனஸ் கரணம் -என்று வாதிப்பான்
நிலை வேறுபாடு -கலக்கமான மனஸ் -தெளிந்த மனஸ் -சந்தோஷிக்கும் மனஸ் சொல்கிறோம் –
புத்தி அகங்காரத்தை சொல்கிறது என்பான் -பூர்வ பஷி
உச்யதே –ஆத்மா மனமா இல்லையா என்று தானே பேச வந்தோம் –
புத்தியே மனமாக இருந்தாலும் -சேதனத்வம் ஞாத்ருத்வம் இல்லையே -புத்தி என்றாலும் ஞாத்ருத்வம் வராதே –
ஆத்மா மனஸ் இல்லை என்று நிகமித்தார்

அடுத்து -பிராணன் -தான் ஆத்மா என்பான் -ஜீவன் பிராணன் கூடிய சரீரத்தை சொல்கிறோம்
உத்க்ரந்தி -லோகாந்த்ர கமனம் -நகர ஸ்பர்சம் வேணுமே புது சட்டம் -வாயுவுக்கு ஸ்பர்சம் உண்டே –
ஆத்மா கிலாபத்தை சுருதி சொல்லுமே –
பிராணன் உடன் இருந்தால் தானே ஜீவதி-என்றும் -இல்லா விட்டால் ஆத்மா இல்லை என்றும் சொல்கிறோமே –
இது சரி இல்லை
வாயுவான படியால் பொருந்தாது -சைதன்யம் இல்லையே வாயுவுக்கு -வெளியில் உள்ள வாயு போலவே உள்ளே இருக்கும் பிராணனும்
நிர் வியாபாரம் -தூங்கும் பொழுதும் – ஆத்மா தூங்கும் பொழுதும் பிராணன் வேலை பார்த்து -வ்ருத்தி உண்டே
உண்டது ஜெரிப்பதும் பிராணன் -சப்த தாதுக்கள் -ரத்தம் இத்யாதி -இதனாலே -வைவரானாக்னி ஜடாராக்கினி —
நாலு வித அன்னம் தளிகை பண்ணுகிறேன் – முழுங்குவது போன்றவை -பிராணாயாமம் முக்கியம் –
வாதம் பித்தம் கபம் மூன்றும் சமமாக ஆக்குவதே ஆயுர்வேத வைத்தியம்
உண்டதும் பருகினதும் பரிமாணம் –பிராணன் வேலை செய்வதால் –
சுவாசம் -வெளி மூச்சு நடப்பது ப்ரத்யக்ஷம் அன்றோ தூங்கும் பொழுதும்
கோஷ்ட்ய மாருதம் -பிராணன் -அபான சமாயுக்த –
தண்ணீராலே நன்றாக எறியும் வாயு வயிற்றுக்குள்ளே –
கடலுள் பாடவாகினி உண்டே -அதே போலே –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -வேலைக்கு தக்க பெயர் -ஒரே வாயு -கண்டம் முகம் மூக்கு -உள்ளே சென்று –
வெளியில் வந்து பூரகம் ரேசகம் கும்பகம் நிறுத்துவது –
தோலால் தொட்டுப்பார்க்கலாம் -ரேஸிகத்தை வெளியில் வரும் காற்றை தொடலாமே -கடத்தை போலே -ஆகையால் -ஆத்மா இல்லையே –
தேக ஆத்ம ஒன்றே நிரசன வாதமே இதுக்கும் உண்டே தனியாக நிரசிக்க வேண்டாமே
பிரயாணம் -ஸ்பர்சம் -சொன்னாயே -கதி ஆகதி-ஆத்மா அணு வாக இருக்கும் -ஸ்பர்சம் இல்லாமலும் இருக்கும்
பிரயத்தனம் -கர்ம-இவற்றால் தூண்டப்பட்ட -மனசை போலே உதக்ராந்தி-மனஸ் ஸூஷ்மம் இருந்தாலும்
ஸ்பர்சம் இல்லாமல் இருந்தாலும் மனசு செல்வதை பார்க்கிறோமே
ஸ்தூலமாக இருந்தால் தாள் கதி க்கு ஸ்பர்சம் வேண்டும் –
ஆத்மாவுடைய பரிமாணம் மேலே விரிவாக சொல்லுவேன் –
இதி பிராண ஆத்மா ஒன்றே வாத நிரசனம்

அடுத்து சம்பவித்தே ஞானம் -புத்த மதம் நிராசனம் -அயம் கட-உத்பத்தி விநாசத்துடன் கூடிய ஞானத்தை சொல்கிறான் –
தர்ம ஞானத்தை சொல்கிறான் -தர்மி ஞானத்தை இல்லை
பாட்டன் மீமாம்சகர் அனுமானித்தே ஞானம் இருப்பதை அறியலாம்
அஜடத்வாத்–ஸ்வயம் பிரகாசம் -தானே விளங்கும் –மற்று ஒன்றினால் பிரகாசம் ஜடம் –
விளக்கும் ஜடம் -ஞானத்தை பயன்படுத்தியே விளக்கு என்று அறிகிறோம் -தேஜஸ்ஸை சொல்லவில்லை –
வ்யவஹார ஹேதுவை பிரகாசம் என்கிறோம் இங்கு
ஆத்ம ஞானம் தானே பிரகாசிக்கும் -பரமாத்மா -ஸ்ரீ வைகுண்டம் ஞானம் இவையும் ஸ்வயம் பிரகாசம்
புத்தர் ஞானமே ஆத்மா அது க்ஷணிகம்
அத்வைதி ஞானமே ஆத்மா நித்யம்
ஆத்மா அஜாதம் ஸ்வயம் பிரகாசம் சுருதி சொல்லும் -சம்வித்தும் அப்படியே -ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஒன்றே
மடப்பள்ளி போலே புகை இருந்தால் நெருப்பு -அன்வயம்
ஆத்மா போலே வேறு அஜாதம் இருந்தால் தானே சொல்ல முடியும்
அன்வய வ்யாப்தி சொல்ல முடியாதே
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை
யத்ர யத்ர அநாத்மத்வம் தத்ர தத்ர ஜடத்வம்
யத்ர யத்ர அஜடத்வம் அங்கு அங்கு ஆத்மத்வம் -சொல்ல முடியாதே
இதுக்கு த்ருஷ்டாந்தம் -கடத்தைப் போலே-
ஞானம் ஸ்வயம் பிரகாசம் -அசித் ஸ்ரீ வைகுண்டம் போலே
ஜீவனும் பரமாத்மாவும் ஸ்வயம் பிரகாசமும் சித்தும் –
ஞானத்துக்கு அஜடத்வம் சத்தையாலே பிரகாசிக்கும் -பிரத்யக்ஷம் –
சம்வித் இருக்கும் பொழுது விளங்க வில்லை என்பது இல்லையே -சதி சம்வித் –

அதுக்கு -பட்டார் மீமாம்சகர் -ஆபேஷம் -அனுமானம் -ஞானமே அனுமானித்தே அறிவோம் என்போம் –
நீலக் குடத்தை பார்த்து –நீலம் என்றும் குடம் என்றும் விஷய மாத்திரம் -அநீதம் அதீத ரூபம் –
அறிகிறோம் ஞானம் என்று ஓன்று தனியாக இல்லையே
அனுமானித்தே ஞானம் என்று அறிகிறோம்
இது குடம் -குடம் அறியப்பட்டது -குடத்தில் ஒரு தன்மை அறியப்பட்டது தன்மை வைத்து அறிவு வந்ததாக அனுமானம் –
ஸ்வரூப சத்தையால் இல்லை -இந்திரியம் -அர்த்த சன்னிகர்ஷம் வந்தாலே கிட்டும்
கண் குடத்தை -பார்த்தது என்ற ஞானம் வரவில்லை —
ப்ரத்யக்ஷம் — இந்த்ரியமும் பொருளை தொடர்பு வந்ததும் ஞானம்
அனுமானத்தின் அப்படி இல்லை -எங்கு எங்கு புகை அங்கு நெருப்பு -ஞானமும் வேணும் த்ருஷ்டாந்தமும் வேணும்
இருந்தால் தானே நெருப்பை அனுமானிக்கலாம்
எங்கு எங்கு எல்லாம் அறியப்பட்ட தன்மை உள்ளதோ -என்று பார்த்த குடத்தில் தன்மை ஏறிட்டு –
அதனால் ஞானம் அனுமானித்து அறிகிறோம்
குடத்தில் அதிசயம் -இந்த அறியப்பட்ட தன்மை -ஞாததா – ஆகந்துக பிரகாசத்தால் தரிசனத்தால் -பிரத்யக்ஷம் –
சம்வித் ஆத்மா இல்லை -இவரும் நம்மைப்போல் –
இரண்டு பக்ஷமும் தப்பு –பிரத்யக்ஷத்தாலே -ஸ்தாபித்து -ஞானம் உடையவன் தான் ஆத்மா ஞானம் ஆத்மா இல்லை –
இது தர்ம ஞானத்தை பற்றி -தர்மியும் தர்மமும் வேறே வேறே தானே
நன்றாக பார்க்கிறவர் -ஞானத்தை தவிர்ந்து ஞதாதா பார்ப்பவர் யாரும் இல்லையே -அர்த்த தர்மம் -ஞதாதா
ரூபம் தான் பார்க்கிறோம் -ஞதாதா உடன் இருந்ததை யாரும் பிரத்யக்ஷமாக காண முடியாதே
ஞானத்தைக் கொண்டே சகல வியாபாரமும் பொருந்தும் ஞத்தாவை கற்பிக்க வேண்டாமே
இது குடம் -ஆத்மாவுக்கு ஞானம் -ஞாதா ஞானம் ஜேயம் மூன்றும்
வித்தி -விதித்திரு ஞாதா பிரதிபாத சூன்யம் -இது குடம் -என்பதில் ஞானமும் இல்லை ஞாதாவும் இல்லையே –
இது குடம் என்றாலே நான் குடம் இருப்பதை பார்க்கிறேன் என்பதே தான்
வேறே வேறே பிரயோகம்
இது குடம் எனக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை யாரும் சொல்ல மாட்டார்
தசரதன் ராமன் தந்தை -தசரதன் இடம் ஞாததா ஏற்பட்டு அறியவில்லை
கல்கி இது போலே -விஷய கிரஹணம் -அனுமானிக்க முடியாதே –
ஞானத்தால் வியவகாரம்- வாக்கால் பேசுவோம் -மாற்றி சொல்ல முடியாதே
என்னால் நினைக்கப்பட்டது வாக் வியாபாரம் -பூர்வகம் -ஞானம் -இருக்க வேண்டும் –
முன்பு வேடு பறி உத்சவம் பார்த்ததை-ஸ்ம்ருதி -அப்புறம் வாக்கால் சொல்லுகிறோம் –
அன்யோன்ய ஆஸ்ரம தப்பு வரும் -வெட்கம் இல்லாதவன் தான் நான் வியவஹாரம் செய்வதால் ஞானம் அனுமானிப்பான் –

பிரகட புத்தர் -அனைத்தும் சூன்யம் –
அத்வைதி மறைந்த புத்தர் –
ஞானம் அனுமானித்து அறிகிறோம் என்கிற மீமாம்சகர் பக்ஷம் –
இதில் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும் என்பதை பார்த்தோம்
மீமாம்ச பக்ஷம் நிரசித்த பின்பு மாற்று இருவரையும் நிரசிக்க வேண்டும் ஞானமே ஆத்மா -ஞாதா ஜேயமும் பொய் என்பர் –
இது குடம் -விஷயம் மட்டும் -அறிவாளியை பற்றும் அறிவையும் பற்றியும் இல்லை
நான் குடத்தை அறிகிறேன் -மூன்றும் உண்டே
பேதம் பிராந்தி மயக்கம் -என்பர் –

புத்தன் சொன்ன ஹேதுவை அத்வைதி -முன் முன் க்ஷணிக ஞானம் —
தண்டம் -தண்டி -தண்டி பிள்ளை -க்ஷணிக விஞ்ஞானம் -ஒரு வினாடி ஞானம் அப்புறம் இருக்காது –
ஆத்மாவே ஞானம் என்றால் ஆத்மா வேறே வேறேயா -நேற்று மண்டபத்தை பார்த்த நான்
இன்று அங்கு இருந்து உண்கிறேன் –நேற்று மண்டபம் எல்லாம் பொய்
இத்தை அத்வைதி கண்டனம் –

ஸ்வயம் பிரகாசம் -ஞானம் -அஜடம்-வேறு ஒன்றின் உதவி வேண்டாம் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் –
எந்த வஸ்துவின் தொடர்பால் -அர்த்தாந்தரே வேறு பொருளில் வியாவஹாரமோ தர்மம் வேறுபாடு ஏற்பட்டால்
அது அந்த பொருளில் ஸ்வரூபமாகவே இருக்கும் –
வெள்ளைப்பசு -பார்க்க -கண்ணால் வெள்ளையை கிரகிக்க வெள்ளையே காரணம் -பசுவை கிரகிக்க வெள்ளை வேணும் –
வெண்மைக்கு -வேறு ஒன்றின் உதவி இல்லாமல் பிரகாசிப்பதால் ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லலாமே என்பர் –
அஸ்தி -சொல்ல சத்தா இருப்பே காரணம் -இது தான் வியவஹாரம்
சத்தா அஸ்தி இருப்பு இருக்கு -அந்த இருப்பு எப்படி சத்தத்தையே காரணம் -அது தான் ஸ்வரூபம்

பூமி இருக்கு -சொல்ல இருப்பு காரணம் -இருப்புக்கு அதுவே காரணம் -நிறத்தினால் -இத்தையே ரூபத்தினால் -என்பர் –
தொடர்பால் கண்ணால் பார்க்கிறோம்
குடம் பிரகாசிக்க -அறிவு வர -அதற்கு வேறு ஒன்றின் தேவை இல்லை –
ஆகவே அறிவு ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஆத்மா என்பர்
ஞானம் இருந்து ஞாதா -தனியாக கல்பிக்காமல் –ஞானமே இல்லை என்றால் ஞானம் ஞாதா இரண்டையும் சொல்ல வேண்டாமே –
ப்ரத்யக்ஷ விரோதம் வரும் -நான் அறிகிறேன் சொல்லுகிறோம்-அறிவு வேறே நான் வேறே அன்றோ -ஞானத்துக்கு ஆஸ்ரயம் தானே ஆத்மா
சத்யம் -உண்மை -/ பிரத்யக்ஷம் -விகல்பம் உடன் உள்ள -ப்ரத்யக்ஷம் -நிர்விகல்பிக்க பிரத்யம் -இரண்டு வகை –
பேதத்துடன் பார்ப்பது பிரமத்துக்கு மூலம் –
வஸ்து மாத்திரம் -வஸ்து இருந்தால் தான் கண்ணாடி நீலம் இத்யாதி உண்டே -ஏற்றி சொல்கிறோம்
வஸ்துவை கிரஹித்து மற்றவற்றை அதிலே ஏத்தி –
நான் அறிகிறேன் சொல்வதே பொய் -ச விகல்பிக்க ரத்யக்ஷம்
நான் அறிவு என்பதே நிர்விகல்பிக்க ப்ரத்யக்ஷம் என்பன்

ஞாதாவே ஞானம் -ஒன்றாகவே கிரகிக்கப்படும் -ஸஹ-/ ஒன்றை விட்டுப் பிரியாமல் இருக்கும் -ஸஹ உபலம்பம் –
ஞாதா சொல்லும் பொழுது ஞானத்துடன் தானே –
குடம் அறிவு இருந்தால் தான் குடம் அறிபவர் சொல்ல முடியும் -எனவே ஒன்றே தான் என்பன் -ஸஹ உபலம்ப நியாயம்
அப்ரகாச ஆத்மா என்று ஓன்று இல்லையே -அடுத்த காரணம் –பேத ஞானத்தை பிரமாணமாக கொண்டாலும் –
தெரிய வருவதால் ஞானமே தானே –
இரண்டாலும் ஞானமே ஆத்மா என்பான் –
ஜடமாக உள்ள அஹம் அர்த்தம் சித்திக்காதே -ஸம்வித்தை விட வேறு பட்ட ஆத்மாவை அறியவே முடியாதே

க்ராஹ விகல்பம் இல்லை
க்ராஹ்ய விகல்பம் -விஷயத்தை தனியாக சொல்லாமல் -கட ஞானம் -ஞானத்துடன் சேர்ந்தே விஷயம்
பிரகாச யோகமே ஞானம் –
வாசனையால் -புத்த வாதம் -முன் முன் தப்பாக அறிந்த அறிவு –
சமானந்தர ஞானம் முன் அடுத்து மாறி மாறி வருமே -தண்டம் -தண்டி இத்யாதி –
பொய் நின்ற ஞானம் -சதத பரிணாமம் ஆழ்வார்-விகாரத்தைப் பற்றி -இவனோ க்ஷணிகம் –
அநாதி அவித்யாதி வசப்பட்டு பேதம் -அத்வைதி பக்ஷம்
அந்த அவித்யாவும் பொய்யான -என்பர் அத்வைதி -வேறே ஒன்றையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரமத்துடன் பார்ப்பார்வர்கள் தான் க்ராஹ்ய க்ராஹக ஞான வாசி அறிவார்கள்
மூன்றிலும் வேறுபாடு இல்லை -தோற்றமே –
ஜகத் ஜநநீ-அவித்யை -அதனாலே தோற்றும் -சுத்தமான ஞானம் சின் மாத்திரமே ப்ரஹ்மம் -பிரபஞ்சம் மித்யை –
சுத்தம் நித்யம் பரமார்த்தம் -பிரபஞ்சத்துக்கு உபாதானமாக சொன்னால் சம்சாரத்தில் இருந்து மோக்ஷம் எப்படி –
ஒரே ஆத்மா தானே அவர்கள் பக்ஷம் -மாயா ஏவ ஜநநீ -என்பர்
பிரகட பிரசன்ன புத்தர்கள் இருவர் வாதங்கள் இவை

அத்வைதி -மற்ற பிரகட புத்த வாத கண்டனம் அடுத்து -க்ஷணிகம் -பிரதி விஷயம் வேறே வேறே ஞானம் –
படம் கடம் -முன் பார்த்தவர் இன்று பார்க்கிறவர் எப்படி வரும் -அவரே இவர் -அதுவே இது சொல்ல முடியாதே

அதே நான் அதே பொருளை இன்று வேறு ஒரு நாளில் பார்க்கிறேன் -பொருந்தாதே என்னில் –
நிராலம்பன –ஞானத்துக்கு ஆலம்பனம் விஷயமே இல்லை – நேற்று நன்றான பசுவைப் பார்த்தேன் –
இன்று சோர்ந்த பசுவைப் பார்க்கிறேன்
நேற்று ஞானத்துக்கு விஷயம் இல்லை
நேற்று இன்று கிடையாது
ஞானம் மட்டுமே -மற்ற அனைத்தும் மித்யா
கற்பனையே என்பான்

ப்ரத்யக்ஷம் விரோதம் வரும் -நிராலம்பனம்-எல்லா ஞானமும் விஷயம் அற்றவை என்றால் –
இந்த வார்த்தை யாலே வரும் ஞானத்துக்கு விஷயம் உண்டா இல்லையா
கேள்வியால் ஸ்ரீ ஆளவந்தார் நிரசனம் எளிதாக செய்தார்
பூர்வ மீமாம்சை –1-1- உத்தர மீமாம்சை -2-2-
தர்க்க பாதத்திலும் நியாய தத்வம் நாத முனிகள் இவற்றை காட்டி உள்ளார் -அங்கு கண்டு கொள்க

க்ஷணிக ஞானமே ஆத்மா -பிரகட புத்தன்
அநித்யமான ஞானம் உடையவன் ஆத்மா -இரண்டாம் பக்ஷம் -அனுபவம் ஸ்மரணம் இருப்பதால் –
நித்தியமான ஞானமே ஆத்மா -அத்வைதி
தர்ம பூத ஞானம் அழியும் அநித்தியம் -ஞானம் வேறே ஆத்மா வேறே -சித்தாந்தம்
ஞான சந்தானம் -வினாடிக்கு வினாடி ஏற்படும் ஞான புள்ளி -பல புள்ளிகள் -வரிசையே ஆத்மா –
தொடர் சங்கிலி ஞானமே ஆத்மா -ஞானம் உடையவர் இல்லை -இது புத்தவாதம் –
பிரவாகமாக நித்யம் -அதனால் ஸ்மரணம்-என்பன்–தீப த்ருஷ்டாந்தம்
இப்படி சாதிப்பாய் ஆகில் -அது முடியாது -ஏன் என்றால் – தீபம் -பார்ப்பவன் ஒருவன் -ஒன்றாக தெரிவது சாத்ருசம்-அதுவே இது –
இங்கு பார்க்கிற ஆத்மாவே மாறினால் எப்படி -போன நிமிஷ ஞானம் வேறே ஆத்மா வேறே உனது பக்ஷம் படி –
க்ஷண விஞ்ஞானம் -சந்தானம் -சந்தானி புள்ளி -கோக்க வேண்டும் -அவயவம் சமுதாயம் –இரண்டா ஒன்றா -கேள்வி –
சந்தானி சந்தானம் -ஞானம் ஞானத்து ஆஸ்ரயம் இரண்டு வருமே -ஞானமே ஆத்மா பக்ஷம் பழிக்காதே
ஒன்றானால் -ஸ்மரணம் வராதே –
நிலையாக நின்றால் தானே நினைக்க முடியும் -அனுசந்தாயி நிலைக்கவராக இருக்க வேண்டுமே –
அனுபவிதா-அனுசந்தாதா -வேறே வேறே வ்யக்தி -உன் மதத்தில் –தெரியவே வாய்ப்பு இல்லை –
சாத்ருசம் வந்தால் தானே பிரமம் வரும் -வந்து போகும் சந்தான ஆஸ்ரயம் -ஞான தொடர்ச்சி இருப்பிடம்
என்றால் ஞானம் வேறே ஆத்மா வேறே -என்றதாகுமே -க்ஷணிக வாத நிரசனம்

அடுத்து -ஞானம் நித்யம் -அத்வைதி -அதுவே ஆத்மா -பரமாத்மா -ஞானம் -ப்ராக் அபாவம் –
முன்னால் இருக்கும் நிலை இல்லாதபடியால் –
ப்ரத்வம்சா அபாவம் -இருந்தது இப்பொழுது இல்லை -பானை துவம்சம்
அத்யந்த அபாயம் -ஆகாச தாமரை -முயல் கொம்பு போல்வன
ஞானம் அநித்தியம் என்பது சித்திக்காது -தானே பிரகாசிக்கிறபடியால் -தானே தோன்றுகிறபடியால்
ஞானத்துக்கு ப்ராபக பாவம் இல்லை -இன்மை பாவம் -தன்னால பிறராலோ கிரகிக்க முடியாதே –
இன்மை கிரகிக்க இன்மை இருக்க வேண்டுமே -இருப்பதால் இன்மை அபாயம் இல்லையே -க்ராஹ்யம் இல்லை ஆகுமே
நான் இல்லாத போது கிரகிக்கலாமா என்றால் யார் கிரகிப்பார் -க்ராஹகம் இல்லை –
இன்னும் ஒருவர் கிரகிக்கிறார் என்றால் ஜடமாகுமே -தனது அபாவம் வேறு ஒருவரால் கிரகிக்க முடியாதே-
இன்னொருவர் ஞானம் நமது பாஷையில் -அத்வைதி இன்னும் ஒரு ஞானத்துக்கு விஷயம் என்பார் –

ப்ராபக பாவம் இல்லை உத்பத்தி இல்லை ஆகவே நித்யம்
மேலே -உத்பத்தி இல்லை என்றாலே மற்ற ஐந்து விகாரங்களை இல்லையே –
ஜென்மம் இல்லா விட்டால் அஸ்தி பரிணமதே இத்யாதிகளும் வராவே –
நாநாத்வமும் தள்ளப்பட்டது -கட ஞானம் வெள்ளை ஞானம் —
யத்ர அஸ்தித்வம் முதலான பாவ விகாரங்கள் உண்டோ அங்கு தானே உத்பத்தி உண்டு
எங்கு உத்பத்தி இல்லையோ அங்கு இவை இல்லையே
பலவாக உள்ள தன்மை இருந்தால் உத்பத்தி இருக்க வேண்டுமே

ஞானத்து விஷயம் ஆனால் -ரூபம் நிறம் -அது ஞானத்தின் தர்மம் ஆகாதே –
யத்ர யத்ர ஞான விஷயத்வம் -தத்ர தத்ர சமவித்து தர்மம் ஆகாதே
அதே போலே -விகாரம் -பேதங்கள் -இவை ஞானத்துக்கு விஷயம் தானே -ஞானத்துக்கு தர்மம் ஆகாதே –
ஞானத்துக்கு பேதமோ விகாரமோ இல்லை -சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் இல்லை
சஜாதீயம் -வேறே வேறே மரங்கள் -ஒரே ஜாதி
விஜாதீயம் -மலை -மரம் –
ஸூ கத பேதம் -மரத்தில் உள்ள கிளை இலை பழம்
மூன்று பேதங்களும் உண்டு சம்ப்ரதாயம்
ஞானம் உடைமை -ஆத்மா பரமாத்மா -பேதம் உண்டே
விஜாதீயம் -ப்ரக்ருதி -பரமாத்மா
ஸூகத -திருமேனியும் குணங்களும் உண்டே
நலம் உடையவன் –ஸூகத
அயர்வரும் அமரர்கள் அதிபதி -சஜாதீய
மயர்வற மதி நலம் -விஜாதீய –
மூன்றுமே முதலிலே காட்டி அருளினார்
அத்வைதி -மூன்று பேதங்களும் இல்லை -தவிர்ந்து வேறே இல்லை நிர்விசேஷ சின் மாத்திரம் ப்ரஹ்மம்
உத்பத்திமத்வம் நிவ்ருத்தி யானால் வியாப்தமான நாநாத்வமும் சித்திக்கும்
விபாகம் இருந்தால் பிறப்பிலியாக இருக்க முடியாதே
யாருமே கிரகிக்கா விடில் வஸ்துவே இல்லையாகும்

ஞானம் உண்டு -ஞானத்துக்கு தர்மம் இல்லை -என்பர் அத்வைதி –
நிகில பேத விகல்ப–நீர் தர்ம -பிரகாச மாத்ரமாய் இருப்பதாய் -பிரகாசத்தை உடையது இல்லை –
தத்தாக இருக்கும் தத்வமாக இருக்காது
கூடஸ்த-விகாரம் அற்ற – நித்தியமான – சம்வித் ஞானமே ஆத்மா -அதுவே பரமாத்மா -அத்வைதி –
வேதாந்தத்தின் கருத்து என்கிறார் -வேதாந்த சப்தம் சொல்லாது -தாத்பர்யம் என்பர் –
ஞானாந்த கோசாரம் -அறியப்படுவதாக இருக்க முடியாதே -வேறு ஒரு ஞானத்துக்கு விஷயம் ஆகாதே –
வேதாந்தம் நினைக்கும் பேதம் -புரிந்தால் அத்வைதி ஞானம் -ப்ரஹ்மம் சத்யம் -ஜகத் மித்யா -என்பர்

எந்த சம்பவித்தானது -உண்டாகாதோ -அஜத்வம் -வேறு ஒரு ஞானத்தால் அறியப்படாத அமய -அநந்தம் -அழியாததாய் -விநாச ரஹித்யம் –

சம்வித் -அஜா-பிறக்காதது அமேயர் வேறு ஒன்றால் அறிய முடியாதது -ஆத்மா இதி -வேதாந்த வாக்ய தாத்பர்யம் இதுவே –
ஞானம் மாத்திரம் -நிர் விசேஷம் –
வேறு ஒன்றைக் கல்பிக்க வேண்டாம் –
ஞானம் -கொண்டே பிரமாணம் அறிகிறோம் -கடம் படம் பிரமேயம் -லௌகிகத்தில்-
இந்திரிய ஜன்ய ஞானம் பலம் -கட ஞானம் பலம் -பராக் அர்த்தம் –
வேதாந்தத்தில் இதுவே-ஞானமே – ப்ரமேயம் என்பர் – வேதாந்தம் பிரமாணம் –
அமேயா-என்பது -கருத்தால் -சப்தம் சொன்னதாக சொன்னால் பிரமாணம் ப்ரமேயம் இரண்டையும் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
நிர்விசேஷ -நித்ய விஞ்ஞானமே ஆத்மா -அத்வைதிகள் -புத்தன் க்ஷணிக விஞ்ஞானமே ஆத்மா என்பான் –

ஞாதா இல்லை ஜேயம் இல்லை ஞானம் மாத்திரமே – கடம் அஹம் பார்க்கிறேன் -சொல்ல மாட்டார்கள் -மூன்றையும் சொல்லாமல்
ஞானம் மாத்திரம் உண்மை -மற்ற இரண்டும் மீதியை -ஞானமே ஆத்மா -நிர்விசேஷ சீன மாத்திரமே ஞானம்
அஹம் -ஞானம் உடையவன்
அஹம் -அந்தக்கரண -ஞானத்துக்கு கோசாரம் -அவித்யையால் கடம் இத்யாதி பிரதிபலிக்கிறது –
அந்தக்கரணமும் கடம் இவை எல்லாம் மித்யை பொய்–அவித்யை பட்ட சிதறல் மறைந்து -அதுவே முக்தி -பலவாக தோற்றம் சம்சாரம் –
ப்ரத்யக்ஷத்துக்கு தேவையான இந்திரியம் -இவற்றுக்கு அதீனப்பட்டு மனஸ் -கண்ணுக்கு ஆட்பட்டு காண்கிறது உண்மை இல்லை –
பிரதிபலிப்பது போலே -இவை -அவித்யை காரணம் -மனம் -உபாதி -கண்ணாடி போலே -அனைத்தும் மித்யை

ஆத்மாவை அறிந்தவர் -அலௌகீகம் அவைதிக தர்சனம் -என்பர் உனது அத்வைதத்தை
சம்வித் -தர்மம் பிரசித்தம் -தர்மி இல்லையே –
எப்படி இருக்கும் -ஆச்ரயித்து இருக்கும் ஆத்மாவுக்கு -தானாகவே பிரகாசிக்கிப்பித்துக் கொண்டே இருக்கும் –
ஞான -அவனது -அனுபூதி பர்யாய சொற்கள் -கர்மா -படம் கடம்-பலத்தை நறுக்கினேன் -படத்தை பார்த்தேன்
இரண்டாம் வேற்றுமை உள்ளது கர்மா -முதல் வேற்றுமை கர்த்தா
தர்மம் வேறே தர்மி வேறே –
சர்வ பிராண -உயிர் உள்ள அனைவரும் இப்படியே சொல்வர் -சர்வ பூத ராசியும் -அனுபவம் இப்படியே இருக்கும் –
நான் இதை அறிகிறேன் -ஞானம் ஏற்படும் இருக்கும் அழியும் -நித்யம் இல்லை நீ சொன்னபடி
உத்பத்தி கண்ணுக்கு தெரியுமே -சுகம் துக்கம் வரும் போகும் அதே போலே ஞானமும் -ப்ரத்யக்ஷ சித்தம் –
தூங்கும் பொழுது ஞானம் இல்லை -பின்பு ஸ்மரிக்கிறோமே -அநித்தியம் வரும் போகும் -ஆத்மா நித்யம் -எப்படி இரண்டும் ஒன்றாகும்

மரணம் -நரக வேதனை -கர்ப்ப விசனம் -மூன்றாலும் மறக்கலாம் -பழைய ஜென்ம வாசனை இல்லையே –
யாவது அனுபூதி எல்லாம் ஸ்மரிக்க–சம்ஸ்காரம் -மனப்பதிவு -இந்த மூன்றாலும் விச்சேதம் -ஆகும் –
அத்வைதி தூங்கும் பொழுதும் ஞானம் உண்டு ஆனால் மறக்கிறோம் என்பான் -இது சரி இல்லை –
முன் சொன்ன மூன்றாலும் தான் மறக்கிறோம் -ஆகவே தூங்கும் பொழுது ஞானம் இல்லை -அனுபவம் இல்லை –

ஞானம் -விஷயம் -அந்தக்கரணம் தொடர்பு வந்தால் தான் சம்ஸ்காரம் ஏற்படும் –
தூங்கும் பொழுது விஷயமும் அந்தக்கரணமும் இல்லை அதனால் சம்ஸ்காரம் இல்லை –
ஞானம் இருந்தாலும் ஸ்மரிக்க முடியவில்லை என்பான் –
விஷயம் இல்லை -அந்தக்கரணம் நாசம் அதனால் நினைவு வரவில்லை என்பான்
இது பொருந்தாது –
ஞானம் இருந்தாலே பிரகாசமாக தானே இருக்கும் -ஸ்வயம் பிரகாசம் தானே
நீ சொல்வது சரி இல்லை -ஸ்வயம் பிரகாசம் வேறு ஒன்றை எதிர்பார்க்காதே –
மூன்று சேர்க்கை -தனி தனி ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்தும் -ஞானம் ஜேயம் ஞாதா –
கடம் அஹம் அறிகிறேன் த்ரிதயம் -பார்த்த பார்த்த அம்சம் தனித்தனியே சம்ஸ்காரம் -ஏற்படுத்து ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
அஹம் சொல்லுக்கு மனம் என்று சொல்லி அது இல்லை என்கிறாயே
நான் தூங்கும் பொழுது வைத்த மாத்திரை தூங்கி எழுந்த பின் இல்லை என்றால்
நான் -முன்பும் தூங்கும் பொழுதும் அப்புறமும் இருப்பதால் -நான் நித்யம் -இதுவே அஹம் அர்த்தம்

கட பட ஞானம் அநித்யமாகவே இருக்கட்டும் -வேறு ஒரு ஞானம் நித்யம் அதை ஆத்மா என்கிறேன் என்பான் –
நிர் விஷய நிராசரயமாய் -விஷயம் இல்லாமல் -கர்மா கர்த்தா இரண்டும் இல்லாமல் -சம்வித் -ஞானம் என்பதே இல்லையே –
ப்ரத்யக்ஷத்தில் இல்லை என்றால் அனுமானிக்கலாம் என்றால் -முடியாது –
சப்தார்த்தம்–பிதா என்றாலே புத்ரன் இருக்கும் சம்பந்தி எதிர்பார்க்கும்
ஞானம் சொன்னால் -கர்மா கர்த்தா தேடும் எத்தை பற்றி யாருடையது வருமே
இல்லாமல் பிரயோகம் இல்லையே –
ஞா தாது பிரயோகப்படுத்தினால் இரண்டும் கூடவே இருக்க வேண்டுமே –
சம்வித் ஞானம் பிரகாசம் அனுபூதி சப்தங்கள் சம்பந்தத்தை எதிர்பார்த்தே இருக்கும்
சதம்வந்தி சப்தம் தானே இது –

தர்மி ஞானம் -தர்ம ஞானம் -தானே விளங்கும் தனக்கு விளங்கும் -ஸ்வரூப ஞானம் -எல்லாத்தையும் விளக்கும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா வராது -கர்மா மட்டும் இருக்கலாம் -ஞானத்துக்கு விஷயம் உண்டு –
ஆஸ்ரயம் இல்லை -ஆனால் விஷயம் ஆத்மா -நான் நான் என்று ஆத்மா தானே விஷயம்
நான் சொல்லும் பொழுதே ஏகத்துவம் -நாங்கள் இல்லை நான் ஒருவன் தோன்றும் –
அடுத்து நான் எனக்கு அனுகூலமானவன் என்றும் தோன்றும் -வேண்டியவன்
அடுத்து நான் வெளியில் இல்லை உள்ளே -பாராக்த்வம் இல்லை -இப்படி மூன்றும் உண்டே

ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தாலும் விஷயம் இருக்குமே -இரண்டும் ஞானம் -ஒன்றுக்கு ஆஸ்ரயம் இல்லை -இரண்டா
கோ சப்தம் மாடு பூமி வாக்கு மூன்றையும் குறிக்கும் -வாக்கு சொல்லும்பொழுது நான்கு கால்கள் இருக்க வேண்டாமே
அதே போலே ஞானம் இரண்டு பிரயோகத்தில் இந்த இரண்டும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா இல்லை கர்மா உண்டு
தர்ம ஞானத்துக்கு இரண்டும் உண்டு என்பதில் விருத்தம் இல்லையே -சம்பந்தி –அசம்பந்தி -இரண்டும் இந்த தர்ம தர்மி ஞானங்கள் –
ஞானம் நித்தியமாக இருந்தால் அதுக்கு சம்ஸ்காரம் ஏற்படுத்தி ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆக வேண்டுமே

நான் குடத்தை பார்த்தேன் -கர்த்தா நான் ஆத்மா -ச கர்ம -சேர்ந்தே ஞானம் இருக்கும் –

——————-

ஈஸ்வர ஸித்தி
வேதைக சமைதி கம்யன்
அனுமானத்தால் மட்டும் சாதிக்க முடியாதே -ஸாஸ்த்ர யோநித்வாத் -1-1-3-

அநு மானிகி மாப்யாத்மா சித்திம் அஸ்ரத்தா தான ஸ்ரவ்தி மேவதம் ஸ்ரோத் ரியா சங்கிரந்தே

நனு ச கேவல தர்க பல தயம் யதி சிக்ஷ தயிஷ பதம் ஈஸ்வர
பவேது நம தத சதி துஷநம் ஸ்ருதி ஸிரஸ் ப்ரமிதோ ஹி மஹேஸ்வர –ஆகம ப்ரமாண்யம்

வேர் முதல் வித்து -இவனே த்ரிவித ஸர்வ காரணம்

————-

ஸம் வித் ஸித்தி

சதேவ சவும்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மன்
தத் ஸத்யம் ஸ ஆத்மா தத் த்வம் ஆஸீ ஸ்வேத கேதோ

நிர் விசேஷ நிர் தர்மக ஸம் வித் மாயா அவித்யா ஏக ஜீவ வாதம்
பேத ஸ்ருதிகள்
அபேத ஸ்ருதிகள்
கடக ஸ்ருதிகள்

ஸமான அதிக ராஹித்யன்
அகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை ஏக ஸ்தானம்
உபய லிங்க உபய விபூதி விஸிஷ்டன்

ஐத தாத்மியம் இதம் ஸர்வம் தத் ஸத்யம்
பிரகார பிரகாரீ பாவம்
சரீராத்ம பாவம்

ஸப்த வித அனுபபத்தி

ஸ்ரீ பாஷ்யம்—சப்த வித அனுபபத்தி -மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்

அவித்யா -வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -நாம்
6 வித அர்த்தம் negative உண்டே
அப்ராஹ்மானம் கூட்ட வா
விதித்வா -ஞானம்
தமேவ -மிருதயம் தாண்டி மோஷம் அடைகிறான்
தமேவ வித்வான் அம்ருத ஏக பவதி நானன்ய பவதி
பக்தி ரூபானன்னா ஞானம்
ஞானம் யோகம் ஒன்றாலே மோஷம் அத்வைதிகள்
ஞான யோகம் நிராகாரமான
உபாசனம் இல்லையே அத்வைதிக்கு
ஒன்றே தான் உண்டு
ஏது அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவியக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்தியம் கூடஸ்தம் அசரம் துருவம்
ஸநியம்ய இந்திரிய கிராமம் ஸர்வத்ர சமபுத்தேர்
தே பிராபனுவந்தி மாமேவ ஸர்வபூத ஹிதே ரதா :கீதை 12 யோகம் -ஞான யோகம்
அவயகதம் உபாசனம் கிலேசம் சரமம் உண்டாகும்
துக்கத்தில் போய் முடியும்
பக்தி மார்க்கம் சொல்லி அருளுகிறான்

மர்கட கிசோர நியாயம்-குரங்கு குட்டி தானே அம்மாவைக் கட்டி கொண்டு தன ரஷணம் தனக்கு
மார்ஜுவர கிசோர நியாயம் -தானே கவ்வி கொண்டு போகும் பூனை
ஞானம் பக்தி மார்க்கம்
குழந்தை தாய் கை பிடிப்பதற்கும் தாய் குழந்தை பிடித்து போவதற்கும்
அவதாரணம்
பக்தி ரேவா முக்தி உபாயம் –
அவித்யா வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -கர்மம் தானே
ஞான கர்ம சமுச்சய வாதம் -நான்குவித பசங்கள் உண்டு
அங்க அங்கி பாவம் நம் சித்தாந்தம்
ஞானம் அங்கி
கர்மம் அங்கம் –

அத்வைதிகள் –
அவித்யை எனபது-கொண்டே சம்ப்ரதாயம்
அடித்தளம்
சாதகம் செய்ய -சாத்தியம் இல்லையே
ஆத்மா யாதாம்ய வித்யை அநாதாரிகம்
ஏழு அனுபபத்தி காட்டி -அருளி
அனுர்வசநீயம் -நிர்வசனம் நிர்வசநீயம் அவித்யை எப்படி பட்டது சொல்ல முடியாது
பர ப்ரஹ்மா அவித்யையால் ஜீவாத்மாவாக என்பதால்
அபூர்வமான பர ப்ரஹ்மம்
நாம ரூபம்
அநேன ஜீவனே – ஜீவாத்மா மூலமாக -சாதுர்முகன் மூலம் நாம ரூபம் வாயகரவாணி
காலம் –
எல்லா வஸ்துவும் வசநீயம் நீயமானம்

1-ஆஸ்ரய அனுபபத்தி முதல் அனுபபத்தி
நேதி நேதி மார்க்கம் நிராகாரா உபாசனம்-ஆழந்த சிந்தனை-கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் அறிய
உபநிஷத் சொல்வது எல்லாம் சகுண வித்யை தான்
உபாசனம் சொன்னாலே குணம் ஆகாரம் வேண்டுமே –

ஈசா வாச உபநிஷத் வித்யா அவித்யா
கர்மம் அர்த்தம் அங்கும்
ஈஸ்வர சர்வ பூதானம் ஈசான சீலன் நாராயண சங்கரர் அருளி –
நாராயண சப்தம் கொண்டே

ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-19-41-முக்கிய ஸ்லோகம்
ககனமான அர்த்தம்
கீதை ஷணம் தோறும்வேலை செய்து கொண்டே
சூஷ்ப்ப்தி அவஸ்தையிலும் அஹம் அர்த்தம் உண்டே
ஜாக்ரதை சொபன துரியா அவஸ்தை
கர்மம் -ஆகர்ஷக ரூபமான கர்மம்
பந்தத்துக்கு காரணமாக இல்லாமல் காயிக வாசக மானச –
மோஷத்துக்கு காரணமாக இருக்க வேண்டும்
வித்யை அது போலே
வித்யை விகாசம் -சிந்தம் –
உப லஷணம்-
ஆயாசாகா -கர்மம் -சரமம் தாபம் பந்தம்
வித்யை பேர் லௌகிக அறிவு
சரியான கர்மம் வித்யை ததேவ கர்மா
ச ஏவ வித்யா முக்திக்கு காரணமானது தான் –

பந்தங்கள் மோஷங்கள்
அவித்யை காரணத்தால் சம்சாரதுக்குள் படும் ப்ரஹ்மம்
அநாதி அவித்யை
நிர்விசேஷ சுயம் பிராகசம் ப்ரஹ்மம் இரண்டும் பிரதான அம்சம்
தீபம் போலே தன்னையே காட்டிக் கொடுக்கும் போலே
ஈச ஈச்தவ்யாது அநேக வித
ஈசிதவ்யம் -நம்முடையது
ஈசித -சுவாமி
ஸும் ஸ்வாமி பாவம்
தோஷத்தால் விகல்பங்கள் உண்டாகிறது
தோஷச்த ஸ்வரூப திரோதான -பிரகாசிக்க முடியாமல் பண்ண -அவித்யா தோஷம்
அது மட்டும் இல்லை –
விவித விச்சேத்ரா விச்சேபம் -கடம் படம் போலே காட்ட –
அநாதி
பிரதம பிரவ்ருத்தி -ஸ்வா தந்த்ர்யம்
கரமண அநாதித்வா
ந வித்யதே –ஆதி என்றுமாம் -ஆரம்பம் தெரியாததுஎன்றும் ஆதி இல்லாதது –
சத் அசத் அநிர்வசனீய
ஹிரன்ய நிதி -அமிர்தேன
நித்ரா –
பரமாத்மா சம்யோகம் தான் நித்ரா
நாடி புரீதம் நாடிக்குள் மனஸ்
சைதன்யமயம் பரமாத்மா
பிராணிகள் எல்லாம் இப்படி
யதா ஹிரன்ய நிதிம் அஷர-ப்ரஞ்ஞாகா -தெரியாமல்
புதையல் கீழே -இருப்பது அறியாமல் -வீட்டை விற்று
உபரி உபரி சஞ்சரி ன் விந்தைதான் நிறை நிறை
அது போலே அஹர் அஹர் ப்ரஹ்ம கச்சந்தி ன் வின்தடி
எதானால் தோஷம் -ஏவமேவ
அமிர்தம் ன் பிரத்யஊடக வார்த்தை எடுத்து தோஷம்
சுஷ்ப்தி அவஸ்தை சொல்ல வந்த பிரகரணம்
சதச் அநிர்வசநீயா அநாதி அவதியை

சத் -இருக்கும் வஸ்து
அசத் வஸ்து -சச ஸ்ருங்கம் முயல் கொம்பு ஆகாச தாமரை சிங்க தும்பிக்கை போல்வன -சம்பூரணமான அசத் வஸ்து
பிரபஞ்சம் எல்லாம் சத் அசத் வஸ்துக்களாக இருக்கும்
இரண்டும் உள்ள வஸ்துவோ
இரண்டுமாக இல்லாத வஸ்து உண்டோ
அத்வைதிகள்
இருக்கலாம் -illution
கயிறு பார்த்து பாம்பு சொல்வது
புல் குச்சி -கரடி
சர்வதா அசத்தாக இருந்தால் சரபம் போலே எப்படி தோன்றும்
கரடி போலே நினைக்க வில்லை
சத் தானே சர்ப்பம் –
சர்வதா அசத்தாக இருந்து இருந்தால் தோன்றி இருக்காதே
பாம்பு தான் என்று நினைத்து பயந்து இருக்க
கயிறு தான் காட்டிய பின்பு
புரிந்து
முன்னாள் பாம்பு புரிதது பொய்
பாதக -பெயர் கொடுத்து
பூர்வ ஞானம் பாதிகம்
சர்ப்பம் அசத்
சர்ப்பம் இத்தால் சத் அசத் இரண்டு ஆகாரமும் வந்ததே
சதித் ந பாத்யேதே
அசத்த்யேத தோன்றியே இருக்காதே
சதசதே அதனால் அநீவசநீயம் -define பண்ண முடியாதது
1/o =infinity அநிர்வசனீயம்
infinity /infinity -infinity அநிர்வசனீயம் போலே
அவித்யை அது போலே
அசத் -சொல்ல முடியாது
ஜீவாத்மாவாகவும் மற்ற அசித் வஸ்துகளாகவும் பார்ப்பதால்
சத் சொல்லலாமோ -உண்மையால் இல்லை
சதேவ சமய ஏக மேவ அத்விதீயம் ப்ரஹ்மா
ஒரே வஸ்து
ஒற்றே இருந்தது
இரண்டாவது இல்லை சொல்லி
விதி முகென நிஷேத முகென

சதசத அநிர்வசநீயத்வம் அநாதி
நிர்வசன யோக்யதை இல்லையாமையால்
பிராந்த பாதம் இரண்டும் இருப்பதால் சத்
ஸ்ருதி விரோதம் வருவதால் அசதி சொல்ல முடியாதே
இரண்டு கோடியிலும் இருப்பதால்
இரண்டு கோடியிலும் சேராமல் இருப்பதால்
ஏழு வித அனுபபத்தி காட்டி
ஆஸ்ரய அநுபவத்தி பிரதம
அவித்யை எங்கு இருக்கு -முதல் கேள்வி –
அப்யுகம -இருந்து என்று வைத்து கொண்டால்
கௌதம மக ரிஷி காட்டி
வாத க்ரம-படி
ப்ரஹ்ம வசத்துக்கு ஆஸ்ரயம் எங்கே அவர்கள் கேட்டால் ஸ்ரீ பாஷ்யம் அர்த்தம் உண்டே
அவித்யை ஜீவாத்வாவிலீ பரமாத்வாவிலா
விகந்தி பூஷணம்
ஜீவாத்மாவே இல்லையே உங்கள் பஷத்தில் இருக்க முடியாதே
பரமாத்மாவில்
சூரியன் இடம் அந்தகாரம் இருக்குமா
சுயம் பிரகாச வஸ்து நீங்களே சொல்லி
அங்கும் இருக்கும் முடியாதே
தத் அயுத்தம்-
தத்ச்ய சுயம் பிரகாச ஞான ஸ்வரூபம் என்று சொல்வதால்
நித்யத்வம்
அநித்யத்வம் ஆகாசம் காலம்
புஸ்தகம் உத்பத்தி வினாசகம்
ஒரே வஸ்துவில் இரண்டும் சேர முடியாதே
ஏகத்வம் பகுத்வம் இருக்க
பரஸ்பர விருத்தம்
அவித்யை உபாதியால் எனபது முடியாது
ஆஸ்ரய அனுபபத்தி உண்டே

கவிதார்த்த சக்கரவர்த்தி -ஸ்ரீ பாஷ்யம் கண்டனம்
கவிதார்த்த சிம்ஹம் தேசிகன்
தூஷணி அருளி பதில் கொடுக்க
சத பூஷணி எழுத வைத்தார் காஞ்சிபெரிய ஸ்வாமி
பரமார்த்த பூஷணி உத்தமர் ஸ்வாமி
பாஸ்கரர் உபாதி சத்யம் சொல்லி த்விதீயம் ஸ்ருதி வசனம் தப்பாகுமே

பாமதி பிரஸ்தானம்
விவரண பிரஸ்தானம் அத்வைதி இரண்டு பஷம்
பரகால ஸ்வாமி ஆராய்ந்து இத்தைக் காட்டி அருளி –
திரோதான உபபத்தி -இரண்டாவது
மறைவது –
அந்தர்தானம் -ஒரு சப்தம் உண்டு -அது வேற
பிரகாச ஏக ரூபம் ப்ரஹ்மன்-முதலில்
யாருக்கு
பார்க்கிறவன் பார்க்கப் படுபவன் இரண்டு இல்லையே அவர்கள் பஷம்

2-அடுத்து அவித்யை ஏற்பட்டு -அநிர்வசனீயம்
மறைத்து –
பூர்ண அந்தகாரமா -தோராயமாக காட்டி
அடுத்து -இதனால் -திரோதானம்
அந்த திரோதானம் போன பின்பு
பந்தமும் மோஷமும் ப்ரஹ்மத்துக்கு
பந்தத்துக்கு காரணம் அவித்யை
மோஷத்துக்கு காரணம் வித்யை –
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மிதியை
மறைத்தது
ஹிரன்ய மயமான பாத்ரத்தால் ஆவிர்வதம் சத்யம் அபிஹிதம் ஈசானா உபநிஷத்
ஜீவாத்மா -அந்தர்ஹிதம் பரமாத்மா சொல்ல வந்தது
எள்ளுக்குள் யென்னெய் போலே
கரந்தநெய் தயிரில் போலே
சர்வம் வியாபி
ஷீரே-
பாலில் நெய் -காய்ச்சி கொஞ்சம் ஆரி -உறை குத்தி -ஏடு எடுத்து கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்
த்யானம் -கடைவது போலே
தேவம் பச்யேது
அல்லோக்கம் அகாரத்துக்கு லோபம்
விஹிதம் -ஒரே அர்த்தம்
நிகூடவது -as if hidden
திரோதானம் என்ன –
மூடி வைத்தா -முதல்
தீபம் விநாசம் -பிரகாச உத்பத்தி பிரதிபந்தம்
தீபத்தையே அழித்து
இரண்டும் சரிப்படாதே
வித்யமானச விநாசகம் இருக்க முடியாதே
நித்ய சுத்த பிரகாச்த்வ ஸ்வரூபம் சொன்ன பின்பு –
மறைக்க -முடியாதே பிரகாசம் எப்பொழுதும் உண்டே
பிரகாசம் குணமா –
தீபம் திருஷ்டாந்தம் சொன்னால் தேப்பம் வேற பிரகாசம் வேற
பத்ரம் வைத்து மூடி
தீபமே அணைந்து
தீபம் வேற பிரகாசம் வேற குணா குணி பாவம் வருமே
இரண்டு இல்லையே உங்கள் பஷத்தில்
அபசித்தாந்தம் -self goal போலே

கிஞ்ச –
ந்னு-
அத –
major objection
தூஷநாந்தரம் -ஓன்று சொல்லி பின்பு அடுத்து சொல்ல
இதி வததா-இப்படி சொல்லிய உன்னால்
பிரகாச ஏக ஸ்வரூபம் அவித்யய்யால் திரோதிகம்
ஸ்வரூப நாசம் ஆனது போலே ஆகுமே
பிரகாச திரோதானம்
உத்பத்தி பிரதிபந்தி
விநாசன
ஞான ஏக ஸ்வரூபம் ப்ரஹ்மம் அவித்யையால் மறைய முடியாதே

பூஷணம் போலே அத்வைதிகள் சப்த அனுபபத்தி சொல்வார்கள்
பூஷணம் ஏவ தூஷணம் இல்லை
ராமாயணம் -சீதை ராவணனுக்கு உபதேசம் சுந்தர காண்டம்
உனது மனைவி தொக்கி போனால்
சு தர்ம ரஷணம் -இது எங்கள் தர்மம் என்பான்
நீ தோஷம் சொன்னது எல்லாம் குணம் தான் என்பான்
துர்கடத்வம் எல்லாம் பூஷணம் தான் என்பார்கள் –
கண்டன கண்ட காவியம்
சதா தூஷணி 68 வாதம் தேசிகன்
வாத ஜல்ப விகண்டா வாதம் -தத்வம் அறிய
ஜல்பம் உளறுவது

விதண்டா -சுய பஷ ஸ்தாபனம் உத்தேச்யம் இல்லை
ப்ரஹ்மம் சத்யம் நிராகரணம் செய்தால் ப்ரஹ்மம் மிதியை வருமே
கதையாம் அதிகாராம் நாஸ்தி
வாதம் பண்ண மாட்டேன் -சொன்னால் insult
அவமானம் –

சங்கராச்சாரியாருக்குப் பிறகு வந்த பாஸ்கர, யாதவபிரகாசர் பக்ஷங்கள் தவிற ,
மிஸ்ரருடைய பாமதி பிரஸ்தானம் , பிரகாஸாத்மா வினுடைய பஞ்சபாதிகா விவிரண பிரஸ்தானம் முறையே
ஜீவாக்ஞான வாதம், பிரஹ்மக்ஞான வாதம் என அனுபபத்திப் பரிகாரம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்களும், பகவத் ராமானுஜருடைய இந்த சப்தவித அனுப்பபத்திகளுக்கு யுக்தா யுக்தமாக பதில் சொல்ல வில்லை.
அவர்களுக்குப் பிறகு வந்த ஸ்ரீஹர்ஷா என்கிற கவி ”கண்டன கண்ட காவியம் ” என்கிற தன்னுடைய கிரந்தத்தில்
பகவத் ராமானுஜருடைய யுக்திகளை விதண்டா வாத முறையில் எதிர்க்க, அவைகளுக்கு ஸ்வாமி தேசிகன்,
”ஸததூஷணி” என்கிற கிரந்த முகேண தக்க பதில் அளித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை புனருத்தரித்தார்.

2. திரோதான அனுப்பபத்தி :
ஸ்வயம் பிரகாசமான பிரஹ்மம் அவித்யையின் பரிணாமத்தால் திரோதானத்தை அடைகிறது .
பரம் பிரஹ்மைவ அக்ஞம் பிரம பரிகதம் ஸம்ஸர்கி என்று பந்த மோக்ஷம் இரண்டும் பிஹ்மத்துக்காய் –
அகண்டைஸ்ச நித்ய முக்த ஸ்வரூபம் நித்ய பிரகாசமான பிரஹ்மத்துக்கு வித்யமானஸ்ய விநாசம் என்பது ஏற்புடைத்தல்லவே?
தீபம் போலே பிரஹ்மம் , திரையிட்டாப் போலே அதன் ஒளி மழுங்கிவிடுகிறது என்றால்,
பிரஹ்மத்துக்கு பிரகாசம் அப்படியே இருக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் ஒளி குன்றித் தோற்றம்
அளிப்பது போல வைத்துக் கொண்டால் பிரஹ்மம் வேறு, பார்க்கிறவர் வேறு
அதாவது விளக்கு வேறு ஒளி வேறு என்றாகி அத்வைதம் நிற்காது.
திரோதானத்தால் பிரஹ்மத்தினுடைய ஸ்வப்பிரகாச தர்மம் மறைகிறது என்று வைத்துக் கொண்டால் , பிரஹ்ம ஸ்வரூபம் நாசமடைகிறது என்றாகும்.
சூரியனில் இருட்டு சேராதாகையாலே, தாங்கள் சொன்னதை தாங்களே பொய்ததாகிற, அப -சித்தாந்த தோஷம் வரும் ?

அகடித கடனா படீயத்வா: அவித்யாயேவ துர்கடத்வம் பூஷ்ணமேவா நது தூஷணம். – என்று அத்வைதிகள்
இந்த சப்தவித அனுப்பபத்திகளை குறை எனக்கொள்ளாமல் தங்கள் ஸித்தாந்தத்தின் பெருமையாக,
”அவித்யா ” அப்படியானதொரு அநிர்வசனீய ”பிரஹ்மைவ அக்ஞம் ” என்று ஆமோதிக்கின்றனர்.

அசோக வனத்தில் சிறை இருந்தவளான சீதை, ராவணனுக்கு தன்னை ராமனிடத்தில் சமர்ப்பித்துவிடு என்று உபதேசிக்கிற வேளையில்,
‘ஹே! ராவணா உன்னுடைய மனைவியை வேறு யாரேனும் கவர்ந்து சென்று விட்டால் உன்மனம் எப்படி பாடுபடும்,
அதை நினைத்து , என்னை ராமனிடத்தில் சமர்பிப்பாய் ‘ என்று சொல்ல அதற்கு
இராவணன் பிறர் மனைவியை பெண்டாடுவது ராக்ஷச தர்மமாய் குணமாகும் அன்றி குற்றமாகாது என
தன் தூஷணத்தை பூஷணமாக கொண்டாடினாப்போல உள்ளது அத்வைதிகளுடைய இந்த விமர்சன ஸ்வீகாரம்.

3-ஸ்வரூப அனுப பத்தி மூன்றாவது – ஸ்வரூபம் –இயற்க்கை தன்மை-ரூபம் –நிறம் -ரூப்யம்
அவயவ அர்த்தம் இல்லை –இருந்தால் நித்யமா அநித்தியமா விகல்பம் செய்து வாதம்
சத்யமான யதார்த்தமான வஸ்துவா-அசத்தியமான அயார்த்தமான வஸ்துவா
சத்யம் என்றால் இரண்டாவது வஸ்து வருமே-அசத்தியம் என்றால் அத்தால் பிரமை ஏற்படுமா
அசத்தியம் என்றால் ப்ரஹ்மமும் அசத்தியம் ஆகுமே
பாவ ரூபம் அவித்யை -அனுமானம் பிரமாணம் வைத்து
கயிறு பாம்பு -இருட்டில் -வளைந்த ரூபம் இந்த காரணங்கள் நிஜமா பொய்யா –
கயிறு சத்யம் தானே -வளைவு சத்யம் -நேராக இருந்தால் பிரமை ஏற்பட்டு இருக்காதே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி வாக்கியம்
சிரோ வாக்கியம்-நிர்விஷய நிராசாயா சு பிரகாச anu பூதயா ஞானமே பிரம்ஹம்
அனந்தாச்ரயம்-அனந்த விஷயம் ஆத்மாநாம் -சம்சாரம் அனுபவிக்க தன்னை தானே
பரமார்த்த -சத்யம் -அபரமார்த்தாமா -அசாத்தியமா
பிரமாதாவா -த்ரஷ்டா -பார்க்கக் கூடியவன்
தர்ஷ்யம் -பிரமேயம்
த்ரீஷியம் -பிரமாணம்
அத்வைதம் – -பிரமை -இரண்டு அம்சம் –
ஜகத் சர்ப்பம் ஸ்தானம் -கயிறு ப்ரஹ்மம் ஸ்தானம்
சாதிஷ்டான ப்ரஹ்மம் அத்வைதி
-அதிஷ்டானமான ப்ரஹ்மம் மிதியை சூன்ய வாதம் -மாத்யமிக பாஷம் -புத்தர் போலே
வைதிக சித்தாந்தம் ஆகாதே
சத் அசத் சதசத் ந அசதசத விலஷணம்-சூன்யம் மாத்மிகர்

அவித்யையினுடைய ஸ்வரூபம் என்ன என்பது கேள்வி? ஸ்வரூபம் என்றால் = nature. ரூபம் என்றால் colour or form.
abstract ஆன விஷயத்துக்கு ஸ்வரூபம் உண்டா என்றால் கிடையாது. இங்கு அவித்யைக்கு ரூடி அர்த்தம் என்ன?
அப்படியான ஒரு வஸ்து உண்டா? இல்லையா? என்பதே கேள்வி?

அப்படியொரு வஸ்து இருக்கிறது என்று வைத்துக் கொண்டு , அது உண்மையா? பொய்யா? என்று வாதிப்பது விகல்பம்.
இருக்கிறது என்றால், கூடாத விஷயங்கள் (அனுப்பபத்தி) இவை.
இல்லை என்றால் கூடாத விஷயங்கள் இவை என்று இரண்டுமே சித்திதால், அப்படியொரு நித்யாநித்ய வஸ்துயில்லை என்பதே உண்மை.
அவித்யா யதார்த்தம் என்றால் துவைதம் சித்திக்கும். அயதார்த்தம் என்றால் அது எப்படி பிராஹ்மத்தைப் பீடிக்கும் ? என்பது அடுத்த கேள்வி?
அது ஊகத்தால் பெறப்படுகிறது என்கின்றனர். ஊகமாவது அனுமானம் .
உ.ம்.-பர்வதோ வந்நிமான் , தூமத்வாத் என்பது ஒரு அனுமான நிர்தேசம்.
இங்கு
பர்வதம் – பக்ஷம்.
வந்நி – சாத்தியம் .
தூமம் – ஹேது .
பர்வத: வந்நி அபாவவான் , பாஷாணத்வாத் – என்று பிரதிவாதி.
வாதம் என்றால் வாதி, பிரதிவாதி இடையில் மத்யஸ்தன் என்ற நடுவர் உண்டு.
முதலில் ”சமய பந்தம்” என்று சில Axioms பொதுவாக நிர்ணயிக்கப் படும் .
அதற்கு உடன்பட்டு இருவரும் வாதத்தைச் செய்ய வேண்டும். இதற்கு ஸத் பிரதிவாதம் என்று பெயர்.
அப்படி ஒப்புக்கொள்ள வில்லையானால் அவர்கள் மேலும் வாதம் செய்ய முடியாமல் கதா-அநதிகாரி என்று வாதத்தில் இருந்து விலக்கப் படுவர்.

4-நான்காவது அநிர்வசனீயதவ அனுபபத்தி
5-ஐந்தாவது பிரமாண அனுபபத்தி -அனுமானம் -ஸ்ருதி வாக்யங்கள்
பிரமாண அனுபபத்தி பெரிய அனுபபத்தி
க்யாதி வாதம் -பல விஷயங்கள் theory of ஏற்றோர்
இப்படி பட்ட வஸ்து ஸ்பஷ்டமாக காட்ட முடியாது -அநீர்வசநீயத்வம்

அநிர்வசனீயம் அவித்யா என்பதை
a . யுக்தியைக் கொண்டும்,
b . அனுமானத்தாலும்,
c . ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாச வசனங்களாலும்-அத்வைதிகள் நிரூபிக்க பார்க்க, அதன் அனுப்பபத்தியை மேலும் பார்ப்போம்.

பிற மதத்தவர் காட்டும் பிரமாணங்களின் எண்ணிக்கை 8. அவை :

a. பிரத்யக்ஷம். – புலனறிவு. மானஸம் சேர 6 வகை.
b. அனுமானம் – ஊகம் . தெரிந்தலிருந்து தெரியாததை அறிவது- inference.
c. உபமானம் – உவமை. ஒரு சம்பவத்தில் இருந்து இன்னொரு சம்பவத்தை d. ஒப்புவமிப்பது.
d. ஸப்த – உபதேச ./ யதா திருஷ்ட, யதார்த்த ஆப்த வசனம்.
e. அர்த்தாபத்தி – பீனோ தேவதத்தா திவா நபுங்க்தே – ராத்திரி போகி. இரவில் பூஜிப்பான் என்று ஊகித்தறிவது – deduction.
f. அநுபலபத்தி – இருந்ததில்லை
g. ஸம்பவம் – Possibility
h. ஐதிஹ்யம் – சதே பஞ்சாசம் நியாயம் / அக்ஞாத வக்திருகம் – செவி வழி.

நமக்கு 3 பிரமாணங்களே சம்மதம்.

ஸதஸத் அநிர்வசனீயம் அநாத் யவித்யா., என்பதற்கு,
பகவத் ராமானுஜர் பல அனுப்பபத்திகளை காட்டின பிறகு , அநிர்வசனீயம் என்றில்லாமல் ”பாவ” ஸப்தத்தாலே காட்ட முயன்றனர்.

பதார்த்தா : த்விதா : பாவ: அபாவ: சேத்.
பாவ: என்றால் அஸ்தித்வ வஸ்து (+ve entity ).
அபாவ : என்றால் நாஸ்தி வஸ்து ( -ve entity ).

அவித்யா என்பது பாவ: Positive entity .
பிராஹ்மத்துக்கு அவித்யையால் ஜீவ பாவத்தை அடைந்து ஸம்ஸரிக்கிறது .
தன்னுடையதேயான வித்தையால் மோக்ஷ பிராப்தி அடைகிறது. அதாவது பிரஹ்மத்துக்கே பந்தம். பிரஹ்மத்துக்கே மோக்ஷம்.
ஜீவ பாவம் கல்பிதம் என்பது அத்வைதிகள் சொல்வது.

ஸுத்த புத்த முக்த ஸ்வரூபம் பிரஹ்ம என்ற போது புத்த என்ற வித்யைக்கு எதிர்த்தட்டான
அவித்யா (ந+வித்யா) எப்படி பிரஹ்மத்தோடு சேர்ந்திருக்கும்?

ஆலோக: = வெளிச்சம்.–ந ஆலோக: = இருட்டு.-என்பது போல் அல்ல .

அவித்யா வித்யா விரோதி அல்ல . வித்யா பின்னம் . வித்யா சதுர்சம். நவித்யா- அன்யது கிஞ்சிது வித்யையைப் போன்றது. வேறுபட்டது.
உ.ம். அபிராஹ்மண: அதுவும் ஒரு பாவ வஸ்து. வித்யைப்போலே இன்னொரு positive entity.
ஆகையால் இரண்டும் பிரஹ்மத்திடத்தில் ஒருசேர இருக்க தட்டில்லை.
விஷயம் – விஷயீ.
ஒரு புத்தகத்தைப் பார்த்து, ”இது புத்தகம்” என்று தெரிந்து கொள்கிறபோது, ”புத்தகம்” விஷயம்.
இது புத்தகம் என்று ஏற்பட்ட ”அறிவு” விஷயீ என்றாகும்.
உறங்கி விழித்தவன் ”நான் சுகமாக தூங்கினேன், (என்ன நடந்தது என்று) ஒன்றுமே தெரிய வில்லை ” என்று சொன்னானேயாகில் ”
ஞான அபாவம்” இருந்ததாக உணர்த்துகிறான்.

ஞான அபாவத்துக்கு பிரதியோகி = ஞானம்

உ.ம். கஜாபாவத்துக்கு பிரதியோகி = கஜம்.
அஸ்வாபாவத்துக்கு பிரதியோகி = அஸ்வம். .

கஜாபாவத்தை குறிப்பிட வேண்டுமாயின், கஜத்தை ஒருமுறையேனும் பார்த்தவனாக இருக்க வேண்டும் .
கஜாபாவ பிரதி கஜ காரணம். அது இல்லாதவனுக்கு அபாவ க்ஞானமே ஏற்படாது. இதை ஒரு Thumb rule ஆக சொல்லப் போனால்
அபாவ க்ஞானம் பிரதி பிரதியோகி காரணம் – என்ற இத்தை
மேல்சொன்ன தூங்கி விழித்தவனுடைய உதாரணத்தில் பொருத்தி பார்க்கையில் ,
ஞானா-க்ஞானம் ” இல்லாமல் ”க்ஞான-அபாவம்” உண்டாகாது என்று தேறுகிறது.
தூங்கி விழித்தவன் ”ஒன்றும் தெரியவில்லை ” என்று நினைவு கூறுவது (பிரத்யபிக்ஞா) அஞானமாக வைத்துக்கொண்டால் ,
அது ஞான விரோதியான ஞான-அபாவம் இல்லை . அதுவும் ஞானத்தைப் போன்ற இன்னொரு வஸ்து .

அந்த வகையில், எப்படி தூங்கிவிழித்தவனிடத்தில் ”ஞானம் ” , ”அஞானம் ” இரண்டும் ஒருசேர இருந்ததாக
ஒப்புக்கொள்கிறோமோ அதுபோல , ”வித்யா ” , ”அவித்யா ” இரண்டும் ”ஸகபாவி” யாக இருட்டு,
வெளிச்சம் போல் அல்லாமல். புத்தகம், பேனா – லேகனி, அலேகனி போலே பிரஹ்மத்திடத்தில் இருக்க அமையும்.
எந்த தோஷமும் இல்லை..

அவித்யா என்பது ஸதஸத் அநிர்வசனீயம் தான். பாவ ரூபமான வஸ்து வானபடியாலே பிரஹ்மத்திலே இருக்கலாம் என்று
பிரத்யக்ஷ பிரமாண த்தைக் கொண்டு அத்வைதிகள் சமர்த்திக் கின்றனர்.

அவித்யா தோஷமா? இல்லையா ?
தோஷமானால், அது பிரஹ்மத்திட்டத்தில் இருக்க வழி இல்லை. காரணம்,
பிரஹ்மம் நிரவத்யம், நிரஞ்சனம் என்று சுருதிகள் கோஷிக்கின்றன அத்வைதிகள் படி அந்த பிரஹ்மம் ஸுத்த புத்த நித்ய தத்வம்.

தோஷமில்லையாகில், அது எப்படி பிரஹ்மத்தை வஸ்து ஜாதங்களாக பிரமிக்கச் செய்யும்? ஸம்சரிக்கச் செய்யும்?
அத்துவால் வியாகாத தோஷம் (Self contradition) வாராதோ?

ஸுஷுப்தி (sub-Conscious state) அல்லது உறக்கம் மற்றும் மூர்ச்சா அவஸ்தையில் (un-Conscious state)
பாஹ்ய வஸ்து க்ஞான உணர்த்தி இல்லையே ஒழிய ( Dharma bhootha Jnanam goes dormant and not absent),
”அஹமர்த்த” (நான் என்கிற உணர்வு) ஞானம் ஸ்வ பிரகாசமாதலால் தூக்கம், மூர்ச்சை வேளையிலும் நிலைத்தே இருக்கும்.
This ” I ” is not Ego – அஹங்காரம். இல்லை.

அத்வைதிகள் தர்மிபூத ஞானத்தை ஒப்புக் கொள்கின்றனர். தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்வ தில்லை.
தார்க்கிகளாகிற நையாயிகன் தர்மிப்பூத ஞானத்தை ஒப்புக் கொளவதில்லை. தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.
விசிஷ்டாத்வைத்த சித்தாந்தத்தில் இரண்டுமே ஒப்புக் கொள்ளப் படுகின்றன.
மற்ற சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட இந்த நிலைப்பாட்டால், ஸர்வ தந்திர ஸ்வதந்திர சித்தாந்தமாகிறது.

அவித்யா – ஞான அபாவமா? (absence of Jnana) ஞான விகல்பமா? (different from Jnana) ஞான விரோதியா? (or opposed to jnana).
எப்படியானாலும் அவித்யா பாவ ரூபா: என்பது மேலே பலபடியாக நிராகாரணம் செய்யப் பட்டது.

கியாதி வாதம் :

அக்கியாதி – மீமாம்சகன்.
அன்யதா கியாதி – தார்கிகன் .
(அக்கியாதி ஸம்ஹரித ) யாதார்த்த கியாதி – பகவத் ராமானுஜர்.
அஸத் கியாதி – பௌத்தன்.
அநிர்வசனீய கியாதி – சங்கரர்./ ஜைனர்.

பாம்பை பழுதென்று நினைகை அயதார்த்த கியாதி.
இல்லாததை இருப்பதாக புரிகை (அ ) இருப்பதை இல்லாதாக புரிகை அயதார்த்த ஞானம்.

வசிஷ்ட புத்திம் பிரதி விசேஷண ஞானம் காரணம்..
உ.ம்.
குண்டலி தேவதத்த :
குண்டலத்தை அணிந்தவன் குண்டலி.
தேவதத்தன் குண்டலத்தை அணிந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டுமானால்,
குண்டலத்தைப் பற்றிய ஞானம் நமக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
குண்டலம் விசேஷணம்.
கோ என்றால் கௌ-த்வ விசிஷ்ட: கோ: அதுபோல
ரஜ்ஜுத்வ க்ஞானம் இல்லாமல் ரஜ்ஜு தோற்றது.
ஸர்பத்துவ க்ஞானம் இல்லாமல் சர்ப்பம் தோற்றது.
ரஜ்ஜுவில் ஸர்பத்துவ க்ஞானம் ஏற்பட்ட வேண்டுமானால் , அதற்கு காரணம் அங்குள்ள ரஜ்ஜுத்வம் தோற்றாதது ஒன்று. அது அக்கியாதி.
ஸர்பத்துவம் தோற்றினது அன்யதா கியாதி .-அந்யதாகியாதிக்கு காரணம் அக்கியாதி.

ப்ரமா ஸத்கியாதி. ப்ரமா அக்கியாதி ( அயதார்த்தம்) ஸம்ஹரித யாதார்த்த கியாதி (க்ஞானம்). உ.ம். கானல் நீர்.
”யதார்த்தம் ஸர்வ விஜ்ஞானம் இதி வேதவிதாம் மதம்” – என்கிற வேதாந்த அனுமதியும் இதற்கு உண்டு
என்பதை பகவத் ராமானுஜர் இவ்விடத்தில் காட்டுகிறார்.
இனி அனுமான பிரமாண முகேண உத்பாதனம் .

எல்லாம் மிதியை சொல்லுகிற வார்த்தை மித்யையா சத்தியமா
நான் சொல்லுகிற வார்த்தை பொய் என்பதும் பொய்யாம்னால் –
வாய் திறந்தால் அத்வைதம் போகும் சொல்லும் சொல்பவனும் உண்டே

சந்தாயவதன வேளையில்
சிகை பூணல் தாகம் அத்வைதிகள்
சஞாசா ஆஸ்ரமம் பண்ணக் கூடாது சாஸ்திரம்
புதர்
சங்கரர் ஆச்சார்யர் கோவிந்த பாதர் -அவர் குரு
குட பாதர் பௌத்தர் அவர்
அவதூத சன்யாச கிராமம்
நான்கு ஆஸ்ரமம் தாண்டினது
சிகை பூணல் விதிக்க தர்மம்
ஏக தண்டமும் அப்படி
சாஸ்திர விருத்தம்
ராவணன் -த்ரி தண்ட தாரி தான்

வர்ண ஆஸ்ரமம் உள் பட்ட சன்யாசம் -சிகை -பூணல் உண்டு நமக்கு
மோஷம் கிடைத்தாயிற்று -அதனால் வேண்டாம் என்று அவர்கள்
கடாகாசம் -கடம் உடைந்து கடாகாசம் மகாசம் லயம் ஆனபின்பு
உதாரணம் காட்ட
சரீரம் போகத்தான் காத்து இருக்க –
அவித்யா பாவ ரூபம் பிரமாணம்
பிரத்யஷம்
அனுமானம் -காட்டி சொல்ல
அத்தை நிரசனம் செய்து அருளுகிறார் –
தமஸ் -பாவ ரூபமான வஸ்து நாம் சொல்கிறோம்
அவித்யை பாவ ரூபம் இதுக்கும் நிறைய வாசி உண்டு நல்குரவும் -புண்ணியம் பாபம்-விருத்த ஸ்வபாவம் –
அவித்யா எனபது -வித்யா பின்னம் சத்ருசம் அதனால் – கர்மம் நாம் சொல்கிறோம்

5- அநிர்வசனானுப்பபத்தி :
அவித்யா அநிர்வசனீயா – அது இன்ன தன்மை என்று காட்ட முடியாது என்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. காரணம்
உலகில் பெயர், உருவம் இல்லாத பொருள் என்று எதுவும் கிடையாது. இவையே பதார்த்தம் எனப்படுவது.
பதம் + அர்த்தம். யானை என்று சொன்னால், தந்தம், தும்பிக்கையுடைய விலங்கைப் பற்றி நம் மனதில் ஒரு சித்திரம் அல்லது பிம்பம் ஏற்படுகிறது.
அந்த பிம்பத்துக்கு ”பிரதீதி ” என்று பெயர். இந்த பிரதீதியைக் குறிக்கும் சப்தம் வார்த்தை ஆகிறது.

ஸர்வாஹி பிரதீதிஹி ஸதஸகாரா – யதார்த்தமாய் வரும் ஞானம் யாவுமே சத்தியம். – பகவத் ராமானுஜர்.

பிரத்யய ஸர்வா மித்யா, பிரத்யது ஸ்வாப்பந பிரத்யயாது – ஸ்வப்பனத்தில் ஏற்படும் ஞானம் பொய் போலே எல்லா ஞானமும் அசத்தியம்.
காரணம் ஸ்வப்னத்தில் வஸ்து இல்லாமல், வரும் ஞானம் அயதார்த்தம் . கட : பட: குட்யம் , குசூலம் (அத்யஸ்தம் ) என்று ஏற்படுகிற (அத்யாஸ) ஞானமும் பொய், பிரஹ்மத்துக்கு பிரமத்தால் ஏற்படும் க்ஞானம் அதுவாகையாலே. பிரஹ்ம (அதிஷ்டான) க்ஞானம் பிறந்தவாறே ,
கட : பட: என்பது மறைந்து , பிரஹ்மம் ஒன்றே புலப்படும்.- சங்கர பகவத் பாதர்.

த்வனி சப்தம் — கடலோசை, பக்ஷி கூவல் இவைகளுக்கு பொருள் இல்லை.
வர்ண சப்தம் – ஏதாவது ஒரு பொருளை குறித்தே வரும். புத்தகம், பேனா நாஸ்தி (இல்லை) என்றால்,
இப்போது, இங்கு இல்லை என்பது பொருள். அப்படிப்பட்ட பொருள்களே உலகத்தில் இல்லை என்பது கிடையாது. அப்படியான பொருள் அனைத்தும் ”சது” .

முயல்கொப்பு, ஆகாசத் தாமரை, சிம்ஹசுண்டம் (சிங்கத்தின் துதிக்கை) என்பான எக்காலத்திலும், எங்கேயும் இல்லை என்பதுதான் பொருள்.
அவை ”அசது ”. இவை இரண்டைத் தவிற ”சதசது ” என்கிற மூன்றாவது பொருள் ”அவித்யா ” என்று அத்வைதிகள் சொல்லக் காரணம் . உ.ம். பாம்பு-கயிறு.

கயிறு , வேறு எதுவுமாகத் தோற்றால், பாம்பு என்று தோற்ற வேண்டுமானால், பாம்பு ”ஸது ” ஆகிறது
”அஸத் ”சேத் ந பாஸயதி. நாயம் சர்ப்ப இதி , கிந்து ரஜ்ஜு எவ ” – பாம்பு இல்லை, கயிறுதான் என்று புரியும் போது அது ”அசது ” ஆகிறது.
”ஸத் ” சேத் ந பாத்யதா ” . அதனால் ”அவித்யா ” ஸத் போல தோற்றி, அஸத் என மறைகிறது .
இதுவா அதுவா என்று சொல்ல முடியவில்லை ஆகையாலே அநிர்வசனீயம் என்பது அத்வைதிகள் வாதம்.

சதசத் என்றோ சதசத் விலக்ஷணம் என்றோ ஒன்று இருப்பதாக சாஸ்திர பிரமாணம் கிடையாது.
அப்படி இருப்பதாக ஒத்துக்க கொண்டால் எது எதுவாக வானாலும் ஆகலாம்- என்றாகி சாஸ்திர வரம்பற்றுப் போகும்.
2 + 2 = 4 என்பது கணிதம். ஏன் 5 ஆகாது? என் 3 ஆகக்கூடாது என்றால், அந்த வாதம் அர்த்தமற்றது அன்றோ?

சூத்ரம்-வார்திக்யம்-பாஷ்யம் இவை 3ம் சாஸ்த்திர பிரக்கிரியை .
நியாய சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – கௌதம மஹரிஷி.
வார்திக்யம் – உத்தியோகர மஹரிஷி .
பாஷ்யம் – வாத்ஸாயனர் .
மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – ஜைமினி.
வார்திக்யம் – குமாரித பட்டர். (சிஷ்யர்-பிரபாகர குரு)
பாஷ்யம் – ஷபர ஸ்வாமி

பிரபாகரர் ஞானம் சு பிரகாசம்
குமாரின பட்டர் -பாட்டர் மதம் –
குரு துரோகம் பௌத்தர்
உமி -அக்னியில் உட்கார்ந்து
வேதனையால் பாபம் போக்கிக் கொண்டார்
சங்கரர் வாதம் -செய்ய சொல்ல –
சிஷ்யர் வாதம் பண்ணுவார்
தோற்று சிஷ்யர் ஆனார் சங்கரர் இடம் என்பர்
பஜ கோவிந்தம் போன்றவை சங்கரர் பண்ணவே இல்லை
நாராயண சப்தம் கீதா பாஷ்யம்
ஈஸ்வர சீலன் நாரார்யணன்
பிரமை உண்டு
எல்லா ஞானமும் யதார்த்தம் இல்லை
எல்லா ஞானமும் பிரமாணம் இல்லை
சர்வ பிரமாணமும் அபிரமாணமும் இல்லை
மாணா அமாண வ்யவஸ்தை வேண்டும்

பிரபாகரர்
குமார பட்டர் -பிரபாகர் குரு
இங்கும் சொல்ல வில்லை அங்கும் சொல்ல வில்லை -அதனால் அனுக்தம் புனர யுக்தம் எப்படி தெரிய வில்லை
கதைகள்
ராஜா -சரஸ் -தண்ணீர் இறைக்க
மோதகம் கொண்டு வா
மா உதகைகி தா தண்ணீரை அடிக்காதே சொன்னேன்
சமஸ்க்ருதம் கற்று வா
பிரகரணம் அறிந்து அர்த்தம்
அத்ரா புனர யுக்தம் து சப்தம் தாத்ரா அபி நா யுக்தம் அதனால் புநரா உக்தம்
அபி சப்தத்தாலும் து சப்தத்தாலு
பிரபாகர் வேத வித் –பிராபாகர மதம்
க்யாதி வாதம் –
கௌரவ பூர்வகமாக ராமானுஜர் –
தர்சன பிரஸ்தானம் –
ஸூ தரம் -வாக்கியம் -பாஷ்யம் -மூன்றும் இருக்க வேண்டும்
கௌதம உத்தியோகத வாத்சாயனர் பாஷ்யம் நியாய சாஸ்திரம்
ஜைமினி சபராசா
குமாரயா பட்டெர்
யதார்த்தம் சர்வ விஞ்ஞானம் -முக்கியமான விஷயம் –

விபுத்வம் ஆகாரத்வம் மட்டும் இல்லை
நிராகாரத்வமும் உண்டு
சாகாரம் எனபது நிராகாரத்வ நிஷேதம் இல்லை
உருவமும் அருவமும் ஆனான் –

ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் –
அறிந்த பின் ஆசை வந்து அடைய பிரயத்னம் செய்கிறோம் –
சர்வம் ஞானம்
பிரத்யக -சப்தம் அத்வைதிகள் -இது பேனா போன்ற ஞானம்
சர்வோ மித்யா
சொபன ஞானம் போலே -நல்லதும் கேட்டதும் விசித்ரமாகவும் இருக்குமே –மித்யை தானே இது
ராமானுஜர் -இதுவும் சத்யம்
அதிகரணம் -தனியாக
ஜீவாத்மா கர்த்தா இல்லை
நமக்கு வேண்டிய சொபனம் காண வில்லை
பரமாத்மா தான் கர்த்தா
ஸூ சகமாக காட்ட -நடக்கப் போவதை
நான்கு அவாந்தர அவஸ்தை உண்டு நான்கிலும்
சொபனம் துரிய சுஷூப்தி ஜாக்ரதை

புஷ்பக விஷயம் ஞானம்
ஞானம் ப்ரஹ்ம ஞானமே
சமுத்ரம் நீர் பாத்ரம் கொண்டு வந்தது போலே
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானம்
விருத்தி ஞானம்
இந்த ரூபமாக இருக்கக் கூடிய ஞானம் அத்வைதிகள்-

அனுமானம் பிரயோகம் -பர்வதம் -பஷம்- சாத்தியம் -புகை -ஏக சம்பந்த ஞானம் -ஹேது -வாக்கியம் -உதாரண வாக்கியம் –
பஷ்யம் -சாத்தியம் -ஹேது -மூன்றும் உண்டே
சப்த பிரமாணம் வேதம் -முன்னோர் மொழிந்த முறைகளே பிரமாணம்
-சாஸ்திர ப்ரத்யஷ விரோதி -வேதமே பிரதானம் –
அஹம் ஸ்தூல -நான் -ஆத்மா தான் -ஆத்மா ச்தூலத்வம் இல்லை -வேதம் மூலம் அறிகிறோம் –
ஜ்வாலை-விளக்கு ஏற்றி பின் வேலை செய்து -அதே ஜ்வாலை இல்லை சாயம் காலம்
திரி எண்ணெய் குறையும் -ஜ்வாலைக்கு பிரத்யஷ பேதம் -என்னுடைய சரீரம் -ஆத்மா வேற சரீரம் வேற
ராமன் உடைய புத்தகம் போலே
ஸ்வம் ஸ்வாமி சம்பந்தம் –
அத்வைதி சங்கரர் பின் ஜீவாத்மா பரமாத்மா வாதம் -இரண்டாக பிரிந்து –
ஸ்வ அவலோக கல்பிதம் இல்லை -பஞ்ச பாதிகா விவரணம் கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் –
பரமாத்மாவிடம் அவித்யை -சொல்லி
மாயை வேற அவித்யை வேற என்பர்
பிரமாண அனுபபத்தி பார்த்தோம் முன்பு

ஆறாவது அனுபபத்தி –
நிவர்த்தகார அனுபபத்தி
சரீரம் -போன பின்பு -ஒன்றாகி
அவஸ்தை மூன்று
பிரதிபாதிகம் total  illusion முதல்
வ்யவாரிக்க -இப்பொழுது இருப்பது போலே  -அடுத்து
பாரமார்த்திக -அவஸ்தை
சத்தா -existing
சத்யம் reality  –
வாக்யார்த்த ஞானம் அஹம் பிரம்மாஸ்மி -நிவர்த்தாக ஞானம் -சத்வமசி இத்யாதி வாக்கியம்
போக்கக் கூடிய ஞானம் கடபடாதி விஷயமான ஞானம்
நிவர்த்தக ஞானம் சத்தியமா மித்யையா-தோஷம் –

அனவஸ்தா தோஷம் -நிவர்த்தக ஞானம் போக்க ஞானம் –
கடக பீஜம் -நீரை சுத்தியாக்கி தானும் கரைந்து போகும் –
காட்டு தீ காட்டியும் அழித்து தானும் அழிந்து போவது போலே தானும் நிவர்த்தகம் ஆகும் -என்பர் அத்வைதிகள்
நிர்விசேஷ   சின் மாத்ர பிரமஸ்-பரமாத்மா என்பர்
ஸ்ருதி உபநிஷத் வாக்கியம் கொண்டும் -வேதாகமேதம்
மஹதோ   மஹதா
ஆதித்ய வர்ணம்
தமசஸ் பரஸ்தாத்
ப்ரஹ்ம ஏவம்
பல ஸ்ருதி வாக்யங்கள் –
logic கொண்டும் சுவாமி நிராகரிக்கிறார்

பட்டர் கோஷ்டியில் சாதாரண ஞானம் கொண்டவரை வித்வான் விட கொண்டாடி பேசி -சிஷ்
மீமாம்ஸா -விசாரம் பண்ணி -புரியும் அதிகாரிகளுக்கு -ஸ்ரீ பாஷ்யம் -அதிகாரி –
சின்மாத்திர -ராமோ விக்ரஹவான் தர்ம -நிர்விசேஷம்-ப்ரஹ்மம்-
அவாந்தர ஆஷேபம் -அனவஸ்தா தோஷம் -பார்த்தோம்
வாக்யார்த்த ஞானம் –
வேதாஹமேதம் -அவன் ஒருவனே புருஷன் -நாம் ஸ்திரீ ப்ராயர்-

சோதக வாக்கியம்
சத்யம் ஞானம் அநந்தம்
அசத் வ்யாவர்த்தம் -நாம் அசத் –
ஞான ஆஸ்ரய
ஸ்வரூப நிரூபக தர்மம் -unique -அசாதாராணமான-
நிரூபித ஸ்வரூப விசேஷணம்-
தேகம் -சரீரம் –
வளருவது -தேகம்
தேய்வது சரீரம் –
புண்ய பாபம் அனுபவிக்க தேவ மனுஷ்யாதி –
சரீர அவசானே மோஷம் -நம் சம்ப்ரதாயம் -அம்ருத இஹ பவதி -மோஷம் போன்ற நிலை
ஜீவன் முக்தி -அத்வைதிகள் –

பந்தம் -போக மோஷம்
பந்தம் மித்யை-நிவ்ருத்தி ஆவது எப்படி
யோனி எடுக்கும் சில ஆத்மாக்கள்
பிறந்தவன் இறப்பான் ஜாதஸ்ய …மிருத்யு –
தவன் ஜன்ம -மிருதச்ய-இறந்தவன் பிறப்பான் –
ஞானி அம்ருதத்வா –
நித்யா நித்யானாம் சேதன அசேதனனாம் ஏகோ  பகுனாம்  யோ விததாயி  காம -அநேக ஜீவாத்மா -மித்யை இல்லை

நிவ்ருத்தி அனுபபத்தி சாரம்  ஸ்வ நாச -மரக்கிளையில் இருந்து கொண்டே வெட்டுமா போலே அத்வைதிகள் வாதம்
நான் பொய் அஹம் ப்ரஹ்மாசி-
காளிதாசர் -கதை -ராஜ குமாரி -அத்வைதி  மடாதிபதிகளும் பூஜா செய்து –
ஆத்மயாத்ம்ய ஞானம் பெற்று -ஆஸ்ரம வர்ண கர்ம யோகம் செய்து -ப்ரஹ்ம ஞானம் பெற்று -மோஷம் அடைவோம்

பீடிகா -அவதாரிகை –
அதா தோ  ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –
லகு -பூர்வ பஷம் -சித்தாந்தம் -சாதான ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
மகா-பூர்வ  பஷம் – சித்தாந்தம் -பல ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
தஸ்மாத் -அநாத கர்ம பிரவாக ரூப -அஞ்ஞான ஞான மூலத்வாத் -பந்தம் ஏற்பட்டது அஞ்ஞானத்தால் –
அது நிவர்த்தகம் ஆக கர்ம வர்ண அனுகுணமான ஆத்ம யாதாம்ய புத்தி விசேஷம் சம்ஸ்க்ருதம் -கார்யாந்தர யோக்யதா கர்த்தும்
சம்ஸ்காரம் -க்ரமப்படி செய்து –
ஜீவா பரமாத்மா யாதாம்ய ஞானம் பூர்வகமாக -ஆராதானம் ரூபம் –
ஆன்மிகம் -பகவத் கைங்கர்ய ரூபம்
அஹரஹராக அனுஷ்டானம் விடாமல் நித்யம் -பரம புருஷாராதனம் என்கிற நினைவுடன் –
சுருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞை -ப்ரீதி கோபம் புண்யம் பாபம்
கேவல கர்மம் அல்ப அஸ்திரம் பலம்
அநந்தம் ஸ்திரம் பலம் கிடைக்க பரம புருஷாராதனம் வேதம்
உபாசான ஆத்மக ஞானம் த்வாரேன கிட்டும்
கர்ம ஸ்வரூப ஞானம் முதல் படி

பூர்வ பூர்வ பதார்த்தானாம் –உத்தர உத்தர -பிச்சைக்காரன் கனவு -மாவு உதைத்து
கேவல ஆகார -ஞானம் இல்லாமல்-கர்மா
சந்த்யாவந்தனம் அத்வைதிகள் சன்யாசிகள் விட –
ஆபாத பிரதிபத்தி
அத -கர்ம விசாரம் பின்பு
அதோ -ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் –
அதிகரண க்ரமம் முன்பே பார்த்தோம்

————-

ஸம் வித் ஸித்தியில் மறைந்த சில பகுதிகள் ஸ்ருத ப்ரகாசிகாவில் உள்ளவற்றை
வேதாந்த தேசிகன் ஸ்வாமிகளும் காட்டி அருளுகிறார்

1- யாதவ ப்ரகாஸ மன தீ கதாசித வதித்ஸ்ததே
கடதவிவ தத்ரபி கல்பனியம் ப்ரகாசகம் |–

ஸ்வயம் ப்ரகாஸம் இல்லாமல் வேறே ஒன்றை அண்டி இருந்தால் அதுவும் வேறே ஒன்றை அண்டி இருக்க வேண்டி வரும்

2-கதோ யமிதி விஜ்ஞநே கட மாத்ரம் ப்ரகாஸதே
ந விட்டிரிதி யுஷ்மகம் கோஷ்திஷு நனு குஷ்யதே |–

பொருள்களைப் பார்த்து அறியும் ஞானத்தில் -பொருட்கள் மட்டும் முதலில் தங்களைக் காட்டும் பின்பு அறிவு வருகிறது -அத்வைதிகள்

3-அதித நகதே கர்தே கதம் ப்ரகத்ய ஸம்பவ
ந ஹி தர்மின் வஸத் யேவ தர்ம ஸம்பவம் ருச்சதே |–

4-ததேவ பஸ்யதம் ஸர்வ ஸூந்யத் வத் பிப்யதம் சதம்
கதிஸ் ஸ்வயம் ப்ரகாஸத் வத்ர்தே நந்யோ பலப்யதே |–

தத்வ ஹித புருஷார்த்தங்களை விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் படியே நிர்வஹித்து அருளுகிறார்

பிரகார பிரகாரீ பாவமும் சரீர ஆத்ம பாவமும் நம் ஸித்தாந்த பிரதிதந்தர -அசாதாரண -கொள்கை

ப்ரக்ருதி புருஷ கால வ்யக்த முக்த யதச்ச
மநுவிதிதா தாதி நித்யம் நித்ய சித்தைர் அநேகை

ஸ்வாதீந த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் புருஷ விசேஷ மிஸ்வர

ஆத்ம பரமாத்மநோ சம்பந்தேபி —-நநத்வே ஸத்யேவ
அபேதோ நாம அந்வய அம்ச அம்சி பாவ லல்ர்ஷணா ஸமவய
சேஷ சேஷித்வ ஸ்வரூப பரதந்த்ர லக்ஷண ஸ்வ ஸ்வாமி பாவ
ப்ருத்ய ஸ்வாமி லக்ஷண இதி

தத ததாத்ம்ய சம்பந்தே ஸ்ருதி ப்ரத்யக்ஷ மூலகே
நிர் தோஷ பவ்ருஷேய ச ஸ்ருதி யர்த்தம் ஆதராத் –ஸம் வித் ஸித்தி-இத்தையே ஸ்தோத்ர ரத்னத்திலும் அருளிச் செய்கிறார் –

எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம்–60-

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

இதிஸ்தி வேதவாக் அந தன் முலக்தகமை ரபி ப்ரஹ்ம ஆத்மநத்ம லபோ ஸ்யாம் ப்ரபஞ்சஸ் அசித் சின் மய –ஸம் வித் ஸித்தி

உபய பரிகர்மித ஸ்வந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய –ஹிதம் -தத் சாதனோபி

பரம புருஷார்த்த பூதே ப்ரஹ்ம ப்ரபத்தி லக்ஷண மோஷே
தத் குணஸ் அனுபவ ஜெனித நிரதிசய ஸூக சமுன்மேஷ

ப்ரஹ்மிநந்த ஹ்ருதந்தஸ்தோ முக்தாத்மா ஸூக மேததே -ஸம் வித் ஸித்தி

நாதோபஜ்நம் ப்ரவ்ருத்தம் பஹுபிர் உபசிதம் யாமுநேய பிரபந்த்தை –ஸ்த்ரேதும் ஸம் யக் யதீந்த்ர –தத்வ முக்த கலாபம்

—————-

Analytical, Outline of the Three Siddhis Page

ATMA-SIDDHI
Mangala sloka _
Conflicting .views concerning the finite self
Conflicting views regarding the pramanasby’which the finite self is established

Conflicting views ;regarding the Supreme Self

Diversity of views regarding the manifestations of the Supreme Self
Conflicting views concerning how‘ the Supreme Self is known“
Varying views regarding the nature of moksa
Conflicting views regarding the means to moksa
The special features of this treatise
Determination of the nature of the individual self
The pfirvapaksa or prima facie view that body is the soul on the
evidence of perception. The case for the identity of- soul and body
The purvapaksin’s criticism of the position that the body- is not the self
The attempt to show that the body could at- once be the subject and, the object of knowledge –

Summing up of dehatma vada position with reasons.
The refutation of the doctrine of the identitv of body and soul
Ahampratyaya (the c0gnition “I” or self-consciousness) does not
involve knowledge of bodily organs; hence the self is distinctfrom the body
Even cognitions like ‘I am stout’ establish a self distinct from the body

Identity of body with soul illusory
Yogic perception vouches for the separateness of soul and body
Arguments in support of the view that body and soul are distinct entities

The Sankhya arguments against the claim that perception establishes identity of body and soul
Refutation of the Carvaka critic’psim’of arguments that the body and soul are different
The illustration that intoxicating quality arises from the mixture of non-intoxicants not apposite

Example of redness produced by chewing not apposite
The illustration of parti-coloured cloth unhelpful to the Carvaka 15
Being distinct from the other qualities of the body, consciousness is not an attribute of the body
Additional reasons in support of the view that the body is not the soul [7

Argument based on negative concomitance indefensible
,, The view that the senses are the soul
,, The refutation of this view 13
The doctrine that manas is the soul 19
The refutation of this doctrine H
Refutation of the Naiyayika proof for the existence of manas 20
Refutation of the argument that manas is the non—inherent cause of pleasure, pain and the like 21
Untenability of the view that atma gunas such as pleasure arise only
in conjunction with some substance other than itself and that

it is manas ,,
Even if conjunction with such a substance were necessary it does not follow that it must be with manas 22
Manas is no other than buddhi 24
Manas is not the soul

..
The theory that prana is the soul 25
Refutation of this theory ”
The theory that consciousness is the soul ’

26–The Bhatta view that consciousness is insentient

There is no such thing as jnatata: hence consciousness is self-luminous

27–Additional arguments to show that consciousness is self-luminous

28 The contention that consciousness is itself the soul as there is economy of thought
The contention that the cognition ‘I know’ will not prove the existence of a soul distinct from knowledge ,,
The contention that like the knower. the known also is unreal

29-The refutation of the Buddhistic doctrine that consciousness is the soul

30–Impossibility of explaining recognition even on the admission that the self is a stream of consciousness

30–To obviate this difficulty the veiled Buddhist contends that
consciousness is unborn, changeless and devoid of distinctions

31 Refutation of the Advaitic view

33–This is opposed to experience
It cannot be maintained that consciousness does not grasp its own prior non-existence

34–The contention that there are no pramanas to establish antecedent non-existence is refuted

35–Consciousnees is not eternal

36–The contention that consciousness cannot be proved by anything other than consciousness is disproved
The contention that if consciousness becomes the object of another consciousness it would cease to be consciousness is met

37–The assertion that if consciousness is without an origin it could have no changes is refuted

39–The contention that if consciousness is unborn it cannot have differentiation is refuted

The contention that consciousness is quality-less stands self-refuted 40
Even on the view of the veiled Buddhists recognition would be
inexplicable 42
Refutation of the view that jnatrtva is the result of super-imposition 43
The contention that jnatrtva resides in ahamkara 44
This is opposed to every-day experience
Indefensibility of the position that pratyaktva belongs to ahamkara 45
The untenablility of the view that akamkara appears as knower
either on account of reflection or contact with consciousness
The contention that ahamkara appears as knower because it
manifests consciousness as residing in itself 45
The refutation of the preceding view
None of the three alternative ways in which ahamkara could be said
to manifest consciousnessis tenable 47
None of these possible modes of the third alternative is tenable

It cannot be maintained that the manifesting entity should
manifest the object as residing within itself.
Refutation of the’contention of Suresvara that in deep sleep there
is no consCiousness of 1′
Analysis of your statement establishes just the opposite of what
you intend to prove
The reflection “I was not even aware of my self” does not mean
the absence of .l’ but- something else.
The statement in question‘undoubtedly points to the existence of
the “I” and its manifestation

The “I” (ahamartha) persists in the state of release
On the’strength of the sacred text relating to liberation and
endeavour of souls for securing moksa the existence of “I”
(aham’ariha) is proved
Refutation of the view that the I is an objective element

(i. e. it is jada)
Even in the state of release the self shines to itself as I’
The consciousness of “I” is natural and not due to occasional factors
Ahamkarawhich refers to the body and which is a product of
matter—is the result of delusion and has to be diSpelled
It1s only where the self appears as “I “— I am deva—-‘I am
‘rnan’ the possibility of ajnana arises
The unsoundness of the argument that consciousness itself18 the
soul as it is insentient
The argument that on account of the invariable concomitance of
the knowledge of ‘l’ and consciousness they are identical is unsound
Even the contention that since one and the same consciousness
presents the invariable concomitance ofknown. knower and
knowledge they are identical is refuted.
;The contention that knower and known are one on the ground of ”
invariable concomitance even as different flames are considered
‘one on account of similarity
The example of different terms appearing as identical is not helpful
Refutation of the contention that there is no object that does not manifest itself.

Scriptural support for the existence of a soul distinct from consciousness
The Pramana by which the existence of the jiva is established
(a) The Nyaya view
After proving in general terms that consciousness being a guna
must have a substrate it is shown by a process of elimination
that it must be a spec:fic entity namely, atma
Refutation of the Nyaya view
Argument from pure negative concomitance fares no better
(b) The Sankhya view
The Sankhya mode of proof stands discredited for the same reasons
Refutation of the Sankhya arguments

The impossibility of a conscious and changeless entity being the
victim of illusions ‘
The refutation of the argument that the vrttis of the antahkarana
are superposed on the purusa
The existence of the soul established by iruti and srutyarthapatti
(c) The Mimamsa view
Refutation of this view
The Bhatta view
Refutation of the view .
Untenability of the suggestion that jnana is the objects of mental perception

Enquiry into the nature of sukha, duhkha etc
The Bhatta view again
The Prabhakara reply thereto
The Bhatta rejoinder
The Prabhakara position clarified while refuting the Bhatta view
The Prabhakara view that in deep sleep and moksa there is no
self—consciousness
Refutation of the prabhakara view and proof that the soul
is self—luminous
The Prabhakara centention that jnana is not self-luminous
Even if prana is self-luminous, the soul does not depend on prana for its apprehension
The soul is self-luminous
The proof that the soul has consciousness as its eternal and. essential nature

The pfirvapaksa.that consciousness isnoneternal and that there areno grounds to prove that it is eternal 89
The Opponentcalling’.1111 questionthe siddhantin’s position ‘90
Refutation of the view that the atma (dharmin) and consciousness
(dharma)are one ’91
Refutationcef view; that. consciousness is all—pervasive 92
Untenability of the view thatthe soulhas a twofold knowledge

(i) eternal and (ii) non-eternal 93

The illustration of the remembrance that there was noelephant
at the tank—bund in the morning cited to prove the existence of consciousness in deep sleep is unhelpful
Nor13 the remembrance on waking, ‘I slept well’ helpful in proving that there is zself-awareness in deep sleep 95
§Ihe contention that the self depends on jnana for its manifestation
and that jnana is non-eternal ’96

(The proof that dharma bhuta-jnana is eternal

though magmas.eternal ithas atma for its support 97
Refutation of the view that the conjunction of consciousness with object is prana
In respect of the self the analogy ofthe relation of cause and effect does not hold 93
The contention that since dharma bhuta jnana is dependent on occasional factors it cannot be eternal 99

The reply to the foregoing
Refutation of the view that as cognitions are limited by time they are non-eternal 101

fictivities of consciousness altoether of a different nature from

activities such as locomotion and cooking 102

The illustration of the body not apposite
In deep sleep there are no.:activitics of consciousness(dharma bhuta jnana) 104
The experiences of the soul in deep sleep need not all be remembered
Refutationof thecontention that if dharma-bhuta-jnana is eternal, it would do away with the distinction between bound
and released asouls 105

Refutation of the view that nidra is a mode of action accounting
for the experience of pleasure or pain on waking
The conclusion that nidra is no vrtti will not contradict the yoga sutra _
Granting nidra is a vrtti, from that reason itself it follows that
consciousness is an essential nature of the self

The self-luminoussoul-the substrate of prana-is eternal
The soul being the substrate of prana is svayamprakasa
Determination of the significance of the term prakasa and of the
nature of its relation to the soul
The contention that the self18 the object of knowledge and not
svayam prakasa
The contention that atma is the seat of prakasa inferred from prakatya

Refutation of that view
Nyaya refutation of the Prabhakara and Bhatta views and the

contention that relation ofjnana and its visaya is through sense contact 113
The Nyaya argument that with the disappearance of jnana,
prakatya disappears is untenable because with the disappearance
of the efficient cause. the eflect need not disappear

That the disappearance of the nimitta karana need not
necessarily lead to the disappearance of the effect is illustrated
with the instance of two-ness and the like
Untenability of the argument that numbers commencing from 2
do not last as long as objects last
Cognition of duality and the like is not constant, since it
depends on desire to enumerate
Consciousness illumines objects thrOugh contact with them by means of sense contact

Jnana is of limited nature
Fallacious to consider what is devoid of touch unlimited
Objects. past and future could come into contact ,with,
consciousness as what existed or what is yet to be

The non-apprehension of intervening space explained 119
The objection that consciousness as a quality cannot leave its

substrate and proceed elsewhere answered 120

The prabhakara view of sabda refuted
The Prabhakara view that object is manifested without the

relation of consciousness 122

The prabhakara view refuted

The objections to the concept of adiiratva answered 124
Deciding on the nature of the knowledge relation as samyoga 125
The examples of sukha etc adduced by the purvapaksin not apposite 126
Definition of Sarira (body) according to the siddhantin 127
The significance of dhih occurring in the sruti texts cited above 128
References to origination of knowledge, its loss. doubt, certainty
and the like explained 130

Though the soul is self—luminous, there is need of scripture to

make its nature clearly known 132

Inquiry into the duration of the soul : The soul is eternal
Pfirvapaksa: The Buddhist view that the soul is momentary

ISWARA SIDDHI

The Mimamsaka view
Laukikapratyaksa cannot prove the existence of God
Nor could yoga pratyaksa prove the existence of God
Impossible even for the senses that have acquired supernomal
powers through drugs, charms, austerities and yogic concentration
to establish the existence of God 137
The Nyaya arguments for the existence of God ,,
Yogic concentration even of the end stage incapable of proving God 138
No pramana other than perception is competent either to prove

the existence of God ,,
The Mimfimsaka critcism of the Naiyayika view 140
The argument proves what is already proven 141
The Mimamsaka objection that since the earth, the ocean etc,,

cannot be made, they can not be said to have a cause.
Your argument would only establish the reverse of what you seek
to prove i.e it would not prove an omniscient Lord but only a
finite indiVidual
The possibility of the precisely opposite conclusion i.e. that the
world is not created
The argument that the nimitta karana need not know the
upadana karana and hence one who is not omniscient could be cause
The Mimamsaka concludes his argument
The Naiyayika reply to the Mimamsaka contention
Meeting the charge that there is no vyapti
The nature of adhisthana defined
The jiva cannot be the nimittakarana of the world
The untenability of the contention that the argument only
establishes attributes opposed to omniscience etc.
What is needed for creation is controlling activity and not the body

Activity can be initiated without the instrument
of the body i.e. mere sankalpa suffices
No need to entertain any doubt on the ground that in the case in
point many of the characteristics differ from those found in the
illustrative example
Adducing special illustrations to strengthen the conclusion that
the divine creator is vastly different from the human agent
Other arguments to establish the existence of Isvara
SAMVIT SIDDHI
Enquiry into the significance of the text
“Brahman exists, one only without a second”
‘Advitiya’ cannot be taken as a tatpurusa compound
Nor can it be taken as a bahuvrihi compound
The significance of the expression Advitiya (the view of the Visistadvaitin)

Other sruti texts in support of the siddhantin’s view
Refutation of the view that the world is illusory
The untenability of the view that the world is at once sat and asat
Inquiry into the significance of the text tat tvam asi

The view that consciousness is the cause of the world is untenable
The pfirvapaksin trying to justify the above contention with
examples

The contention that consciousness is eternal
The contention that consciousness is devoid of attributes

Detailed examination of the advaitic‘ position-consciousessis manifold ,,
Consciousness cannot be eternal, all—pervasive and unitary
Untenability of the contention that there is nothing apart from
consciousness
The contention that avidya is the cause of the world and that it
is difficult to define it as different and non-different
What is the significance of the negative particle in avidya ?
What does the term vidya occurring in vidya mean 2
Ksrayanupapatti-avidya cannot dwell in jiva
Nor is Brahman the substrate of avidya

There is no escape from anyonyasraya dfisana by stating that
vidya is an avastu (unreality)

Avidya cannot be avastu (unreal)
Is avidya single or manifold; is the bound soul which is its
substrate unitary or manifold ?

Avidya cannot be single
The contention that Suka and others attained mukti is not true
Refutation of the above contention
The contention that moksa is an eternally existent state; it has only
to be rendered manifest through dhyana etc.
The unintelligility of the notion abhivyakti (manifestation)
Avidya cannot be an obstacle to Brahma jnana
Refutation of the view that there is only a single soul
The untenability of the view that there is a plurality‘of jivas,
each having its own avidya
Being endowed with qualities like self-luminosity and unity.
consciousness cannot be said to be without a second (advitiya)
The untenability of the contention that these are not qualities
but refer to the absence of certain features
It cannot be contended that the world is distinct from sat and asat

The refutation of th: view that pratyaksa cann)t perceive difference 177
Is the mithyatva of the world real or unreal? Either alternative goes
against the advaitic position.In the very act of denying dharmas, the ground on which the denial
is made shows Brahman to be endowed with dharma. 180
Refutation of the contention that the invariable concomitanoe of
knowledge and the known eetablishes their – identity. 180

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூந்தர காண்ட மஹிமை -ஸ்ரீ திருவடி ஏற்றம் –ஸ்ரீ அர்த்த பஞ்சக மஹிமை– 

May 3, 2023

பஞ்ச பூதங்கள்
பஞ்ச பிராணன்
பஞ்ச ஞான இந்திரியங்கள்
பஞ்ச கர்ம இந்திரியங்கள்
பஞ்ச பூதம்
பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள்
பஞ்ச வேதங்கள் பாரதம் பஞ்சமோ வேதம்
பஞ்ச நிலைகள் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சா
பஞ்ச ஆயுதங்கள்
பஞ்ச -பாஞ்ச ராத்ர ஆகமம்
பஞ்ச ஸம்ஸ்காரம்
பஞ்ச கவ்யம் கோ மயம் பசும் சாணம் கோ மூத்திரம் பால் தயிர் நெய் -ஆநில் மேய ஐந்து

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

விக்ராந்தஸ் த்வம் ஸமர்த்தஸ் த்வம் ப்ராஞ்ஞஸ் த்வம் வாநரோத்தம
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம் –36-7-

விக்ராந்தஸ் த்வம் து -கருடனைப் போல் வீர்யம்
ஸமர்த்தஸ் நரசிம்மன் போல் ஸமர்த்தன்
ப்ராஞ்ஞஸ்தம் ஹயக்ரீவர் போல் ஞானவான் –
வாநரோத்தம–வானர தலைவன் -நடுவில்
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம்–৷வலிமை வராகன் போல்

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

—————-

அஞ்சைக் கேட்டால் அஞ்ச வேண்டாம்–அர்த்த பஞ்சகம்
ஐந்தாம் காண்டம் ஸூந்த்ர காண்டம் -ஐந்து விஷயம்
ஐந்திலே ஓன்று பெற்றான் -பாசுரத்தில் ஐந்து ஐந்துகள்
மேல் ஓட்டமாக ஐந்து பூதங்கள்
வாயு புத்ரன் -கடலைத்தாண்டி -ஆகாச மார்க்கம் ஆறு -பூமி பெற்ற பிராட்டி -நெருப்பை வைத்தவன் நம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்–பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி…

– இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும்,
ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது.
(ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் – இலங்கைக்கு
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

ராம பக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து – அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப் பாடலின் பொருள்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம்.
ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.
அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

ஆச்சார்ய பரமான அர்த்தம்
ஸம்ஸார சிறையில்
அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச ஸம்ஸ்காரம் -மந்த்ர உபதேசம் பெற்று -திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்திலேயே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராக இருந்து
அன்று நான்  பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி -அர்த்த பஞ்சகத்தில் ஒன்றை -விரோதி -நீர் நுமது என்றவற்றை அகற்றி

அஞ்சிலே ஓன்று ஆறாக -கர்ம ஞான பக்தி யோகம் சரணாகதி மார்க்கம்தாண்டி -ஆச்சார்ய அபிமானம்
காலைப் பிடித்து திண்ணிய கழல்

ஆர் உயிர் காக்க -ஜீவாத்மாவை

அஞ்சிலே ஓன்று அணங்கை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
மண்டினார் உய்யல் அல்லால் வேறே யார் உய்யலாகும்

அவனுக்கு பிராட்டி ஸ்தானம் ஜீவர்கள் எல்லாம்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பித்ரு லோகம் -ஸ்வர்க்க லோகம் நரக லோகம் -கைவல்யம் தாண்டி ஸ்ரீ வைகுண்டம் அடைந்து

அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்

ப- நெருப்பு –புண்டர பூமி –மந்த்ரம் காற்று திருவாராதனம் நீர் -பஞ்ச பூதங்களும் இவற்றிலே உண்டே

ஐந்து முகம் நம்மாழ்வார் –
தானான -தலைவி தாய் தோழி ஆச்சார்யர்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் 
வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்

ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த
வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான்
ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும்,
நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும்,
ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும்,
அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும்,
வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]

அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும்
எம்மா வொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (ஆச்சார்ய ஹ்ருதயம் –211)

————–

கூஜந்தம்  ராம  ராம  இதி மதுரம்  மதுராக்ஷரம் |

ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் ||
(குயில் ஒன்று கூவும்
மதுவாய்ச்  சொல்  மிழற்றிக்
கற்கண்டு  போல்  இனிதாய்
ராம  ராம  என  நித்தம்
கவிதையின்  கிளைமீது  வீற்ற
புவிபுகழ் முனி வால்மீகிப்
பதமலர்  பணிவதென் பேறே.)
வால்மீகேர்  முனி  ஸிம்ஹஸ்ய  கவிதா  வன  சாரிண: |
ச்ருண்வந்  ராமகதா  நாதம்  கோ  ந  யாதி  பராங் கதிம் ||  )
(கவிதையாம்  கானில்  திரியும்
தவமுனி  வால்மீகிச்  சீயம்
எழுப்பிடும்  ராம   நாதம்
கேட்டவர்   எவர்தான்  செல்லார்
கேடிலா  உயர்ந்த  மார்க்கம் )
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்–
அழகான ஸூந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு;
அன்னை சீதா அழகு;
ஸூந்தர காண்டம் கதை அழகு;
அசோக வனம் அழகு;
வானரர்கள் அழகு;
ஸூந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு;
நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு;
காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு.
ஸூந்தர காண்டத்தில் எல்லாமே அழகு தான்
இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம்.
அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது.
ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்;
மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன்.
ஸூந்தரன் -அஞ்சனா தேவி சூட்டிய இயல் பெயர்
அஞ்சனை மைந்தன் வாயு புத்ரன் ஹனுமான் காரணப் பெயர்கள்
இவன் பெருமையை முழுவதுமாக சொல்லி –
திருவடி நடந்தவையும் திரிசடை கனவு வரப் போவதையும் சொல்லி மொத்த ஸ்ரீ ராமாயணமும் இதில் அடங்கும்
ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும்.
மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட
நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன்.
அனுமனுக்கு ஸூந்தரன் என்ற பெயரும் உண்டு
ஆகவே ஸூந்தரகாண்டம் .
அனுமனின் மகிமையை நன்கு விளக்கும் அழகு கொண்டதால் ஸூந்தர காண்டம் .
சீதையும் ராமனும்  ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அறிந்து கொள்ளும் மகிழ்ச்சியான பகுதி என்பதால் ஸூந்தரகாண்டம்.
அழகே உருவான அன்னை சீதையின் மனம் அனுமனைக் கண்டு மகிழ்ச்சி யடைவதால் ஸூந்தர காண்டம்
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்  .
அழகென்பதே மகிழ்ச்சி தானே?
கடல் தாவுப் படலம் .  காப்புச் செய்யுளுடன் தொடங்கியது
இலங்கை நகரை  தனது விஸ்வரூப வடிவில் கண்ட அனுமன் கால்கள் ஊன்றி யெழுந்ததால்  மகேந்திரமலையில் ஏற்படும் அதிர்வுகளை,’
வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.’–என்று  வார்த்தைகளிலேயே
வீரம் தெறிக்க  கம்பன் அழகுற விளக்குவதை ரசிக்கும்பொழுதில்  …
மைநாக மலை  அனுமனிடம்  வேண்டிக் கொண்டது
‘என்னிடத்தில் தங்கி யான் செய்யும் விருந்தினை அங்கீகரிப்பாயாக’ என்று  .
அனுமன் அதற்கு  மந்தகாசசிரிப்பை உதிர்த்து விட்டு  சொல்கிறானாம் ….

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்த போதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன் மேல் இனி ஈவது என்னோ?

(வருந்தேன்,அருந்தேன்,பெருந்தேன்,இருந்தேன்! நுகர்ந்தேன்….சஹானா ராகத்தில் அமைந்த பழைய பிரபல திரைப் பாடல்  )

அன்பின்  வலிமையை அதே நேரம் தன பணியின் நோக்கத்தை  அழகாக சொல்கிறார் சொல்லின் செல்வன் அனுமன் .

 என் துணைவனான ராமன்  என் மீது   வைத்துள்ள அன்பு  என்னைக் களைப்படையச் செய்யாது
 என் ஆசை நிரப்பின் அல்லால் ..என் மனோ ரதம் நிறைவேற்றலல்லாமல்  இனி இப்பொழுது யான் யாதும் அருந்தேன் .
பெருந்தேன் பொழி சார நின் அன்பு  மிகுதியான தேனைச் சொரிகின்ற  சாரல்=பக்கங்களை (தாழ்வரைகளை)  உடைய உன் பிரியமானது என் மீது உண்டான போதே
இருந்தேன் நுகர்ந்தேன் மலையான உன் மீது தங்கி விருந்துண்டவனானேன்)

இதின் ஊங்கு –இந்த அன்பினைக் காட்டிலும்
இனி=இன்னமும் ,
ஈவது==நீ எனக்குக் கொடுக்கக் கூடியது  –
உண்டே —உண்டோ ?(இல்லை யென்கிறபடியாக)

‘ராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும், ,
அந்த  வேலை தீர்ந்தால்தான் என்னுடைய வயிறு நிறையும்.
அதற்காக  சென்றுகொண்டிருக்கும் என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது.
பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?
அந்த அன்பை ஏற்றுக்கொண்ட அந்தக் கணத்திலேயே நான் இங்கே தங்கி சாப்பிட்டு விட்டேன்  என்றாகிறதே ?”என்பதை
கம்பன் ,அனுமன் வாயிலாக சுந்தரத் தமிழில் பாடலாய்க்கொடுத்துள்ளது பாகாய் இனிக்கிறது அல்லவா?

அனுமான் ‘இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?’ என்று கூறுவது போலவே ராமரும் குகனுக்கு கூறுகிறார். ..

அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான்.

‘’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
மந்திர  சக்திமிகு  மாருதியே, -எந்திர,
சம்சார  தன்னிலே, சந்தோஷம் காண ருத்ர,
அம்சாவ  தாரா அருள்’’….

‘’அனுமந்த ராயா, அசகாய சூரா,
தினமுந்தன் பாதம் தொழுவேன், -எனையிந்த,
பாழும் மனமென்ற, ஆழியைத் தாண்டிடத்,
தோழா கொடுத்திடு தோள்’’….கிரேசி மோகன்….

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து – பத்தாம் திருமொழி –
‘நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்’ என்று ஆரம்பிக்கும் பத்து பாசுரங்களும்
சுந்தர காண்டத்தில் அனுமன் பிராட்டியினிடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு
இராமாயணம் முழுவதையும் சொல்லும் பாசுரங்கள்.
இந்தப் பத்துப் பாசுரங்களையும் எங்கள் அகத்தில் தினமும் சேவிப்போம்.
தேனான தமிழில் தித்திக்கும் பாசுரங்கள்.

—————–

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ.

இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷

ஸம்ஸார சிறையில் மீட்க்கப்புறப்படும் ஆச்சார்யர் போல்
கணையாழி பகவத் பிரசாதம்
இதில் தான் ஸூஷ்ம அர்த்தங்கள்

காலால் அளந்தவனைப் போல் வாலை உயர்த்திப் பறந்தான்

ராவணன்   காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார்.
அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.
முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின்,
அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது,
அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.

அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க,
அதற்கு சீதாபிராட்டி, ‘மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான்,
எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.
ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.
அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே,
அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.
அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும்
என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம்.
அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.

ஸிம்ஹிகா ராகுவின் அம்மா குடல் மாலை சாத்தி -proteen மிக்கு -ஆகவே வடை மாலை தெற்கும் -ஜாங்கிரி மலை வடக்கே யும்
ஆகவே ஹனுமான் ஸ்திதியால் ராகு கேது பீடைகளுக்கு பயப்பட வேண்டாம்
அன்பால் வந்த தடையை அன்பால் வென்று
அமரர்கள் அனுப்பிய தடையை அறிவால்
உண்மையாக வந்த தடையை உறுதியால் வென்று -மூன்றையும் கடைந்து

———————–

ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே

——–

ஸூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்”  என்ற பாடல் வரிகளில் அறியலாம் .

அனுமன் பிறந்த பொழுதே இளம் ஸூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –

பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.

இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.

எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.

கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர்  -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .

மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி

தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்

அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –

பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –

தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்

ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்

சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –

தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

———————
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்த பின் அவனிடம்
~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான்.
இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;.
ஸூரியனின் இளங்கதிர்; போன்று இராம பிரானின் கால் விரல்கள் ஒளி பெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது.
இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞான நூல்கள் உரைக்கின்றன.
அவன் நில உலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும்.
ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்.
இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்;
இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள்.
அக் கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திரு வுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மகிழம்பூவை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திரு மார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம்.
இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத் தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள்
ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப் புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல.
திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது.
இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திரு மிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திரு முகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
எனவே அது பொருந்தாது.
அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண் நகை புரியாது.
இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா?
அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது.
அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள்.
இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு
ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில்
பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது.
இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான்.
இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.
மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன்
அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும்.
பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர்.
ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார்.
இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.
ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராம பக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட
இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.
சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபது பாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை.
ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன்.
அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான்.
அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.
இப் பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடி தோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப் பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது.
வானவர் குலத்தையும் வாழ வைத்தாள்.
இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
———————

“பஞ்சியொளிர் விஞ்சு  குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு

  • வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
    உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
    மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
    செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்–
  • இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
            • “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
              பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’
            • அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
        • ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
      • ———————–
      • விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
        நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
        இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
        கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
      • “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
          • பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
          அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
      • ———————
    • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
      சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
      பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:
    • வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
      பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன்
    • ————–
    • இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
    • நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
      மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
      வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
      ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான்.
    • ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
    • —————–

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்

——–

‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’

மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.

——–

அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….

சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.

———–

என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்

தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.

———

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.

என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’

முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’

மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:

‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!

இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.

சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )

உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.

இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.

மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …

நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’

அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.

இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!

அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?

——————–

நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)

‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’

————-

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.

நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?

‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.

இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,

காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’

வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.

சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.

ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்

(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.

எப்படி அழைத்துச் சென்றான்?

பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.

தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.

கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)

என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?

விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)

பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.

யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.

‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.

தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)

காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.

யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.

மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.

அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.

சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.

அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.

காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு

மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.

இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.

பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)

தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.

ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)

என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.

யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …

‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.

முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’

விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.

விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.

இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’

மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்

இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.

இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?

கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.

ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.

வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)

‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,

உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)

‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.

பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.

எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.

‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.

மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)

துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.

கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)

தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?

சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)

இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)

ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)

என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.

ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)

சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.

என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’

‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.

தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்

அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.

தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’

என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.

‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்

பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.

நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!

என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.

ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51

ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52

தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54

தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55

ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)

என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:

தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்

(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)

தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.

உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)

நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ

ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ

என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )

எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம் கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

 ————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களின் மஹிமை —

April 29, 2023

ஸ்ரீ பன்னிரு திருநாமப் பாடல்கள்

 ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13

 ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

———–

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 2-3 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(பன்னிரு திரு நாமப் பதிகம் இது
இதே போல் கேசவன் தமர் –2-7-திருவாய் மொழியும்
கலியனும் )

அவதாரிகை –
கீழில் திருமொழியில் –
இவனுடைய பால்ய அனுகுணமாக முலை உண்கையை மறந்து கிடந்து
உறங்குகிறவனை எழுப்பி -முலை உண்ண வேண்டும்  என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே -பஹுமுகமாக நிர்பந்தித்து –
யசோதை பிராட்டி முலை ஊட்டின பிரகாரத்தை –
அவளுடைய ப்ராப்தியையும் ( மாத்ரு பாவநா ) சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி அனுபவித்து இனியரானார் –

அவள் அவனுக்கு
1-காது குத்தி –
2-காது பெருக்கி –
3-காது பணிகளும் இட்டு அனுபவிக்க ஆசைப்பட்டு –
காது குத்துகையாகிற உத்சவத்துக்கு -ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க

அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
(இது நோவு அறிகிற பருவம்
கீழே முலை உண்ணாமல் உறங்கினான் )
அவன் அஞ்சாதபடியான வசனங்களைச் சொல்லியும் –
அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்திக் கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை –
தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –
தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து
அப் பாசுரங்களைப் பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –

——————————–

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- –

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

போய் இத்யாதி –
பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –
இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –

அன்றிக்கே –
போய் -என்ற இது –
மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் )
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –
கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

பொரு திறல் கஞ்சன் கடியன் –
பொருகையில்  மிடுக்கை உடையனான கம்சன் -உன்னளவில் மிகவும்
க்ரூரன்-உன்னை நலிகைக்கு இடம் பார்த்து திரிகிறவன் ஆகையால் –
ஆரை வரவிடும் -எது செய்விக்கும் -என்று தெரியாது –

காப்பாரும் இல்லை –
அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –
ரஷகரான அவர் வந்திலர் –
நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்

கடல் வண்ணா உன்னை –
தன்னேராயிரம் பிள்ளைகள்-என்கிறபடியே -இவ்வூரிலே திரிகிற அநேகம்
பிள்ளைகளுக்கு உள்ளே நானும் ஒருவனாய் திரியா நின்றால்
என்னை  அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்றால்-
என்னை அவர்கள் அறியப் புகா நின்றார்களோ என்று – நீ நினைக்க வேண்டா –
கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற உன் வடிவழகே உன்னை காட்டிக் கொடாதோ –
இப்படி இருக்கிற உன்னை உணர்ந்து ரஷிப்பாரும் இல்லை -என்னுதல்-

ஒரு விரோதிகளே இல்லை ஆயினும் -அஸ்த்தானே பய சங்கை  பண்ணி
மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான அழகு உடைய உன்னை –
விரோதி பூயிஷ்டமான இவ்விடத்தில் பரிவராய் ரஷிப்பார் யாருமில்லை என்னுதல் –

தனியே போய் எங்கும் திரிதி –
பிள்ளைகள் தன்னோடு திரிகிறாய் என்னவும் ஒண்ணாதபடி –
அவர்களையும் விட்டு தனியே போய் எங்கும் சஞ்சரியா நின்றாய்
அவர்கள் தன்னோடு கூடப் போனால் தான் பிரயோஜனம் என்-

பேய்ப் பால் முலை உண்ட பித்தனே –
பேயானவள் தாய் வடிவை கொண்டு வர -அவளைத் தாயாகவே நினைத்து –
அவள் முலைப்பாலை இருந்துண்ட  பிராந்தன் நீ அல்லையோ –
ஆகையால் -மாயா ரூபிகளான அசுரர்கள் ஒக்க வடிவுடைய
பிள்ளைகளோடு ஒத்த வடிவைக் கொடு வந்து கலசி நின்றாலும் -அவர்களை பிள்ளைகளோ பாதி
தோழன் மாறாக நினைப்பான் ஒருவன் இறே நீ என்கை

கேசவ நம்பீ –
இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

நானே அன்று காண்-
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்கள்-
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான அடைக்காய் முதலானவையும் நான் திருத்தி வைத்தேன் –
ஆன பின்பு நீ காது குத்தும்படி வர வேணும் -என்கிறாள் –

——————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர் பாத கிண் கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே -திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகு உடைய கனகக் கடிப்பும் இவையா -2 3-2 – –

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியை யிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகை யுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணம் இத்யாதி –
ஆகரத்தில் பிறக்கையாலே நிறம் உடைத்தாய் இருந்துள்ள -பவளத்தினுடைய வடத்தை –
அது தனக்கும் அழகு கொடுக்க வற்றான திரு வரையில் சாத்தி –

மலர் இத்யாதி –
தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளில் சதங்கைகளானவை த்வநிக்க-

திரு வரையும் பவள வடமுமான சேர்த்தி அழகு தோற்றும்படியாகவும் –
திருவடிகளில் சாத்தின சதங்கை த்வநிக்கும் படியாகவும்
வர வேண்டும் என்று கருத்து –

நண்ணி இத்யாதி –
அஹங்காராதிகளாலே உன்னை அகன்று திரிகை அன்றிக்கே –
தத் ராஹித்யத்தாலே உன்னைக் கிட்டி –
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக தொழுகையே யாத்ரையாக இருக்கும் அவர்களுடைய நெஞ்சை –
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் (பெரிய திருவந்தாதி )-என்கிறபடியே
இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாகக் கை கொண்டு
ஷண காலமும் விட்டுப் பிரியாதே வர்த்திக்கும் –
நாராயணனே நான் அழைக்கிற இவ் விடத்தே வராய் –

எண்ணற்கு அரிய பிரானே –
உன் பக்கல் சிநேகம் இல்லாதவர்க்கு -நினைக்கைகும்  கூட அரியனாய்
இருக்கும் உபகாரனானவனே-

1-ஆஸ்ரிதருக்கு சுலபனாய் இருக்கையும் –
2-அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் இருக்கையும் –
3-மங்களா சாசன பரராய் இருப்பார்க்கு தம் பேறாய் இறே இருப்பது –

நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய இடுக்கைக்கு அன்றோ என்ன –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
திரியை உன் காதுகளுக்கு எரிச்சல் வாராதபடி
அனுகூலமாக இடுவன் –

கண்ணுக்கு இத்யாதி –
திரி ஏற்றி காது பெருக்கினால் -உனக்கு இடுதலாக சமைத்த –
கண்ணுக்கு மிகவும் அழகை உடைத்தாய் இருக்கிற -பொற் கடிப்புகளான இவையும்
இருக்கிறபடி பாராய் –
அழகும் என்ற இடத்தில் -ச சப்தம் அவ்யயம் –

நன்றும் அழகும் உடைய என்றும் –
கனகப் கடிப்பு என்றும் -சொன்ன இவை இரண்டாலும் –
பணித் திருத்தமும்
உபாதான வைலக்ஷண்யமும் சொல்லுகிறது –

———————————————————–

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர்  குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் 2- 3-3 –

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக் குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீ யபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸிலே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்து கொண்டு
இங்கே வாராய்:-.

வையம் இத்யாதி –
பொற் கடிப்பு அளவே அல்ல -காது பெருக்கினால் இடும்படியாக பூமி எல்லாம்
பெறும்  பெரு விலையனான-நீண்ட கடலிலே வர்த்திக்கும் பெரிய மகரம் போலே இருக்கிற காதுப்
பணி கொண்டு வைத்தேன்  -என்ன –

நீ இது சொல்லுகிறது -இப்போது என் காதுக்கு திரி இடுகைகாக
அன்றோ -திரி இட்ட போதே காது தினவு தின்று வரும் -எனக்கு வேண்டா என்ன –

வெய்யவே காதில் திரியை இடுவன் –
தினவு-கண்டூதி சமிக்கும்படி –
வெச்சாப்போடே-அல்பமான உஷ்ணத்தை யோடு -காதுகளில் திரியை இடுவன் என்ற
இடத்திலும் -அவன் இசையாமையாலே -இசைகைக்காக –

நீ வேண்டியது எல்லாம் தருவன் –
நீ விரும்பி இருக்கும் அபூப  பலாதிகள் எல்லாம் தருவேன் என்ன-
அவ் வளவிலும் அவன் வாராமையாலே –

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
இருந்ததே குடியாக குடி (இருந்ததே ஹேதுவாக )உஜ்ஜீவிக்கும்படி இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து –
அது தானே உனக்கு மிகவும் தேஜஸ்சாம்படி இருப்பானாய்-
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே
ஒரு பருவத்தின் இடைப் பெண்களை உன்னுடைய ஸுந்த்ர்யாதிகளாலே மதி மயங்கும்படி பண்ணி –
அவர்களுடைய நெஞ்சுக்கு சர்வ காலமும் -விஷயமாம்படி இருப்பானாய் –

மாதவனே
உன்னுடைய நெஞ்சத்து இறை (அபஹரித்து )கொள்ளும் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே –

இங்கு வாராய் என்று
ஸ்துதி பூர்வகமாக அழைக்கிறாள் –

——————————————————–

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

வணம் இத்யாதி –
இப்படி ஸ்துத்திக் கொண்டு அழைத்த இடத்திலும் வாராமையாலே -இது தன்னை
சொன்னாகிலும் வருமோ என்று –
இந்த இடை பிள்ளைகள் ஆனவர்கள் -நல்ல நிறத்தை உடைத்தான வயிரக் கடிப்பிட்டு –
ஒழுகு நீண்ட காதானது தோள் அழவும் தாழும் படி பெருக்கி –
தாய்மார் முதலானோர் சொல்லிற்று செய்து மிகவும் குணம் உடையராய் இருக்கிற படி பாராய் –
நீயும் இப்படி இருக்க வேண்டாவோ

கோவிந்தா -நீ சொல்லுக் கேளாய் –
ஸுலப்யதுக்கு  கோவிந்தன் என்று பேர் இட்டு கொண்டு இருக்கிற நீ –
என் சொல்லு  கைக் கொள்ளுகிறாய் இல்லை என்ன –

உன் சொல்லு கேட்டு நான் கடிப்பு இடுவித்துக் கொண்டால் எனக்கு என்ன தருவாய் என்ன –

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் -மிகவும்
அழகியதாய் இருக்கிற இந்த கடிப்பை இட்டால்-

இனிய பலாப் பழம் தந்து –
உனக்கு இனிதான பலாப் பழம் தந்து –

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் –
நான்-சுணங்கை உடைத்தாய் –
நன்றாய் அழகியதான -முலையை நீ அமுது செய்யும்படி தருவன் நான் என்ன –
சுணங்கு -முலை போல் தோன்றும் நிறம்
நன்றாகை-மிருதுவாக இருக்கை
(சன்னிவேச வை லக்ஷண்யம் )

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
இப்படி சொன்ன அளவிலும் வாராமையாலே
பிரானே உன்னைக் கும்பிடுகிறேன் -இங்கே வாராய் என்று இரந்து அழைக்கிறாள்

சோத்தம் -என்கிற இது –
அஞ்சலி பண்ணும் அவர்கள் அதுக்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற
சொல்லுவதொரு சப்த விசேஷம் –

————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே