- விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம் |
அர்த்தோSனர்த்தோ மஹாகோஶோ மஹாபோகோ மஹாதன: ||
இந்த நாற்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- விஸ்தார:, 427. ஸ்தாவரஸ்தாணு:, 428. ப்ரமாணம், 429. பீஜமவ்யயம் |
- அர்த்த:, 431. அனர்த்த:, 432. மஹாகோஶ:, 433. மஹாபோக:, 434. மஹாதன: ||
———–
- அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||
இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |
- நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: ||
—–
- யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி:|
ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||
இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி:|
- ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம்||
—-
- ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஶ: ஸுகத: ஸுஹ்ருத்|
மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: ||
இந்தநாற்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஸுவ்ரத:, 456. ஸுமுக:, 457. ஸூக்ஷ்ம:, 458. ஸுகோஶ:, 459. ஸுகத:, 460. ஸுஹ்ருத்|
- மனோஹர:, 462. ஜிதக்ரோத:, 463. வீரபாஹு:, 464. விதாரண:||
———
- ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||
இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |
- வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||
—-
- தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம்|
அவிக்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர் விதாதா க்ருதலக்ஷண: ||
இந்த ஐம்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- தர்மகுப், 476. தர்மக்ருத், 477. தர்மீ, 478. ஸத், 479. அஸத், 480. க்ஷரம், 481. அக்ஷரம்|
- அவிக்ஞாதா, 483. ஸஹஸ்ராம்ஶு:, 484. விதாதா, 485. க்ருதலக்ஷண:||
——
- கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர:|
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||
இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |
- ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||
—–
- உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |
ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||
இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |
- ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: ||
——-
- ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |
வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||
இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |
- வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||
—–
- ஜீவோ வினயிதாஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம:|
அம்போநிதிரனந்தாத்மா மஹோததிஶயோSந்தக: ||
இந்த ஐம்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஜீவ, 514. வினயிதாஸாக்ஷீ, 515. முகுந்த:, 516. அமிதவிக்ரம:|
- அம்போநிதி:, 518. அனந்தாத்மா, 519. மஹோததிஶய:, 520. அந்தக: ||
—
- அஜோ மஹார்ஹ: ஸ்வபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |
ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||
இந்த ஐம்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- அஜ:, 522. மஹார்ஹ:, 523. ஸ்வாபாவ்ய:, 524. ஜிதாமித்ர:, 525. ப்ரமோதன: |
- ஆனந்த:, 527. நந்தன:, 528. நந்த:, 529. ஸத்யதர்மா, 530. த்ரிவிக்ரம: ||
—–
57. மஹர்ஶி: கபிலாச்சார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்த்ரிதஶாத்யக்ஷோ மஹாஶ்ருங்க: க்ருதாந்தக்ருத் ||
இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
531. மஹர்ஶி: கபிலாசார்ய:, 532. க்ருதக்ஞ:, 533. மேதினீபதி: |
534. த்ரிபத:, 535. த்ரிதஶாத்யக்ஷ:, 536. மஹாஶ்ருங்க:, 537. க்ருதாந்தக்ருத் ||
—-
- மஹாவராஹோ கோவிந்த: ஸுஶேண கனகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ரகதாதர: ||
இந்த ஐம்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- மஹாவராஹ:, 539. கோவிந்த:, 540. ஸுஶேண:, 541. கனகாங்கதீ |
- குஹ்ய:, 543. கபீர:, 544. கஹன:, 545. குப்த:, 546. சக்ரகதாதர: ||
———
- வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஶ்ணோ த்ருட: ஸங்கர்ஶணோச்யுத:|
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஶ்கராக்ஷோ மஹாமனா: ||
இந்த ஐம்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- வேதா, 548. ஸ்வாங்க:, 549. அஜித:, 550. க்ருஶ்ண:, 551. த்ருட:, 552. ஸங்கர்ஶணோச்யுத: |
- வருண:, 554. வாருண:, 555. வ்ருக்ஷ:, 556. புஶ்கராக்ஷ:, 557. மஹாமனா: ||
—
- பகவான் பகஹானந்தி வனமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஶ்ணுர் கதிஸத்தம: ||
இந்த அறுபதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- பகவான், 559. பகஹா, 560. ஆனந்தீ, 561. வனமாலீ, 562. ஹலாயுத: |
- ஆதித்ய:, 564. ஜ்யோதிராதித்ய:, 565. ஸஹிஶ்ணு:, 566. கதிஸத்தம: ||
——
61. ஸுதன்வா கண்டபரஶுர்தாருணோ த்ரவிணப்ரத: |
திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||
இந்த அறுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
567. ஸுதன்வா, 568. கண்டபரஶு: (அகண்டபரஶு:), 569. தாருண:, 570. த்ரவிணப்ரத: |
571. திவ:ஸ்ப்ருக், 572. ஸர்வத்ருக்வ்யாஸ:, 573. வாசஸ்பதிரயோநிஜ: ||
—
- த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக்|
ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||
இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578. பேஶஜம், 579. பிஶக்|
- ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||
—
- ஶுபாங்க: ஶாந்தித: ஸ்ரஶ்டா குமுத: குவலேசய:|
கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||
இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |
- கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய:||
—
- அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: ||
இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ:|
- ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||
————-
- ஓம்விஸ்தாராயநம:
விஸ்தீர்யந்தே விரிவடைகின்றன
ஸமஸ்தானி அனைத்து
ஜகந்த்யஸ்மின்னிதி உலகங்களும் எவருக்குள்ளே
விஸ்தார: அவர் (பகவான்) ‘விஸ்தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து உலகங்களும் பகவானுக்குள்ளே விரிவடைகின்றன. எனவே, பகவான் ‘விஸ்தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம்ஸ்தாவரஸ்தாணவேநம:
ஸ்திதிஶீலத்வாத் என்றும் நிலையாக இருப்பதை தனது தன்மையாகக் கொண்டிருப்பதால்
ஸ்தாவர: பகவான் ‘ஸ்தாவர:’ என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்திதிஶீலானி என்றும் நிலையாக இருக்கும்
ப்ருதிவ்யாதீனி பூமி முதலியனவும்
திஶ்டந்த்யஸ்மின்னிதி (தாம்) எவருக்குள் நிலைபெற்றிருக்கின்றனவோ, எவரால் தாங்கப்படுகின்றனவோ
ஸ்தாணு: (அந்த) பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்தாவரஸ்சாஸௌ ஸ்தாவரமாகவும்
ஸ்தாணுஸ்ச ஸ்தாணுவாகவும் இருப்பதால்
ஸ்தாவரஸ்தாணு: பகவான் ‘ஸ்தாவரஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றும் நிலையாக இருப்பதை தனது இயற்கையாக (தன்மையாக) கொண்டிருப்பதால் ‘ஸ்தாவர:’ என்று அழைக்கப்படுகிறார். என்றும் நிலையாக இருக்கும் பூமி முதலியனவும் (தாமே) பகவானிடம் நிலைபெற்றிருக்கின்றன. எனவே, அவர் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார். தான் நிலையானவராகவும், பூமி முதலான மற்ற நிலையானவற்றிற்கும் தான் ஆதாரமாய் (அவற்றை) தாங்கி இருப்பதாலும் பகவான் ‘ஸ்தாவரஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம்ப்ரமாணாயநம:
ஸம்விதாத்மனா நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால்
ப்ரமாணம் பகவான் ‘ப்ரமாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘ப்ரமாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம்பீஜயாவ்யயாயநம:
அன்யதா வேறேதும்
பாவ பற்றுதல்கள்
வ்யதிரேகேன இன்றி
காரணமிதி (இந்தப் ப்ரபஞ்சத்திற்கும், பிறவிகளுக்கும்) காரணமாய் இருத்தலால்
பீஜமவ்யயம் பகவான் ‘பீஜமவ்யயம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸவிஶேஶேணமேகம் இது பகவானை குறிக்கும் தனித்துவமான (பீஜம், அவ்யயம் என்று பிரிக்காது)
நாம ஒரே திருநாமமாகும்.
பகவான் பற்றுதல்களோ, தூண்டுதலோ இல்லாது இந்தப் ப்ரபஞ்சத்திற்கு (பிறவிகளுக்கு) ஒரே காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் ‘பீஜமவ்யயம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஒரே திருநாமமான இது பகவானை தனியாகக் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு திருநாமமாகும்.
————
- ஓம்அர்த்தாயநம:
ஸுகரூபத்வாத் பேரின்பமே வடிவானவராய் இருத்தலால்
ஸர்வைரர்த்யத இதி அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார்
அர்த்த: எனவே, பகவான் ‘அர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பேரின்பமே வடிவானவராய் இருத்தலால் பகவான் அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார். எனவே, பகவான் ‘அர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வைரர்த்யத = ஸர்வை: + அர்த்த்யத
உன்னை அருத்தித்து வந்தோம் (திருப்பாவை 25 – ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்று தொடங்கும் பாசுரம்)
———–
- ஓம்அனர்த்தாயநம:
ந வித்யதே இல்லை
ப்ரயோஜனம் பலன்கள்
ஆப்தகாமத்வாத் அஸ்யேதி தன்னிறைவு பெற்றவரானபடியால்
அனர்த்த: பகவான் ‘அனர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு அடையப்படவேண்டிய பலன்கள் என்று ஒன்றும் இல்லை. அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே அவர் ‘அனர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவரிடமிருந்து பலன்களை பெறுவதற்காக நாம் அவரை அருத்திக்கிறோம். தன்னிறைவு பெற்றபடியால் அவருக்கு யாரையும் அருத்திக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அடையவேண்டிய அர்த்தங்களும் (அதாவது பொருள் முதலானவைகள்) எதுவுமில்லை.
————
- ஓம்மஹாகோஶாயநம:
மஹாந்த: மிகப்பெரியதான (எளிதில் கடக்க இயலாத)
கோஶா உறைகளான
அன்னமாதய: அன்னம் (உணவு) முதலான
ஆச்சாதகா நாம் அறியவொட்டாமல் நம்மிடமிருந்து பகவானை மறைக்கின்றன
அஸ்யேதி எனவே
மஹாகோஶ: பகவான் ‘மஹாகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அன்னம், ப்ராணம் முதலான உறைகள் (திரைகள் என்றும் கொள்ளலாம்) நாம் அறியவொட்டாமல் பகவானை நம்மிடமிருந்து மறைக்கின்றன. இவ்வாறு மிகப் பெரிய கோஶங்களால் (திரைகளால்) மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் பகவான் ‘மஹாகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம்மஹாபோகாயநம:
மஹான் மிகச்சிறந்த
போக: ஸுகரூப ‘போகம்’ அதாவது இன்பமே வடிவாய்
அஸ்யேதி இருப்பதால்
மஹாபோக: பகவான் ‘மஹாபோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பேரின்ப (போக) வடிவாய் இருப்பதால் பகவான் ‘மஹாபோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம்மஹாதனாயநம:
மஹத் மிகச்சிறந்த
போகஸாதனலக்ஷணம் இன்பத்தைக் குறிப்பதாக
தனமஸ்யேதி செல்வத்தை உடையவராதலால்
மஹாதன: பகவான் ‘மஹாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் பேரின்பமே அவரது மிகப்பெரிய செல்வமாகும். அத்தகைய இன்பத்தை செல்வமாக உடையவராதலால் பகவான் ‘மஹாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||
இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |
- நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: ||
—————-
- ஓம்அநிர்விண்ணாயநம:
ஆப்தகாமத்வாத் தன்னிறைவு பெற்றவரானபடியால்
நிர்வேதோஸ்ய வெறுப்புக்கள் (த்வேஶங்கள்)
ந வித்யத இதி அவரிடம் காணப்படுவதில்லை
அநிர்விண்ண: எனவே பகவான் ‘அநிர்விண்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்பெறுபவர். மேலும், இதனால், தன்னிறைவு பெற்றவரானபடியால் அவரிடம் வெறுப்புக்களோ, உதாசீனமோ காணப்படுவதில்லை. எனவே அவர் ‘அநிர்விண்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம்ஸ்தவிஶ்டாயநம:
வைராஜரூபேண விராட் வடிவத்தில்
ஸ்தித: இருப்பதால்
ஸ்தவிஶ்ட: பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ப்ரபஞ்சம் முழுவதையும் வ்யாபிக்கும்) விராட் வடிவத்தில் இருப்பதால் பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அக்னிர்மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ (முண்டக உபநிஶத் 2.1.4)
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த விராட்டினுடைய (விராட் புருஷனாக பரந்து விரிந்துள்ள பரப்ரஹ்மத்தின்) தலை ஸ்வர்கலோகமாகும். கதிரவனும், முழுமதியும் அதன் கண்கள்.
அக்னிர்மூர்தா என்ற இடத்தில், அக்னியை ஸ்வர்கலோகம் என்றே பொருளுரைத்திருக்கின்றனர்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————-
- ஓம்அபுவே நம:
அஜன்மா பிறப்பற்றவராதலால்
அபூ: பகவான் ‘அபூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பற்றவராதலால் பகவான் ‘அபூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த திருநாமத்தை “அபூ:” என்றோ அல்லது “பூ:” என்றோ பதம் பிரிக்கலாம். ஆச்சார்யாள் இரண்டு பதங்களுக்கும் உரை அளித்துள்ளார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் “அபூ:” என்று அர்ச்சிப்பதே வழக்கத்தில் உள்ளது.
ஓம் புவே நம:
அதவா அல்லது
பவதீதி அனைத்துமாய் இருப்பதால்
பூ: பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, (அனைத்துமாய்) இருப்பதால் பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘பூ ஸத்தாயாம்’ பூ என்ற வேர்ச்சொல்லிற்கு ‘ஸத்’ அதாவது இருப்பது என்று பொருள் (அந்த பொருளில் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்) இத்யஸ்ய ஸம்பதாதித்வாத் க்விப் இது ஸம்பதாதி கணத்தில் ‘க்விப்’ என்ற விகுதி சேர்ந்துள்ளது.
மஹீ வா பூமியை (பூ என்று அழைப்பர்)
பூ: எனவே, பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பூமியை ‘பூ’ என்று அழைப்பார்கள். எனவே, பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம்தர்மயூபாயநம:
யூபே வேள்வியின் யூபஸ்தம்பத்தில்
பஶுவத் அந்த வேள்வியில் பலி கொடுக்கப்படும் மிருகத்தை (எவ்வாறு கட்டி வைத்துள்ளனரோ அவ்வாறே)
தத்ஸமாராதன ஆத்மகா பகவானுக்கு திருப்தியளிக்கும்
தர்மாஸ்தத்ர தர்மமானது
பத்யந்த இதி பகவானிடம் கட்டிவைக்கப்பட்டுள்ளது
தர்மயூப: எனவே, பகவான் ‘தர்மயூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எவ்வாறு வேள்வியில் பலியிடப்படவுள்ள மிருகம் அந்த வேள்வியின் யூபஸ்தம்பத்தில் கட்டிவைக்கப்படுமோ, அவ்வாறே பகவானை திருப்திப்படுத்தும் தர்மமானது அவரிடம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பகவான் ‘தர்மயூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்மஹாமகாயநம:
யஸ்மின் அர்ப்பிதா எவருக்கு அர்ப்பணித்து
மகா யஞா ‘மகா’ அதாவது வேள்வியானது
நிர்வாண லக்ஷண ஃபலம் நிர்வாணமாகிய முக்தியை
ப்ரயச்சந்தோ அளிக்கின்றன
மஹாந்தோ ஜாயந்தே எனவே அவை சிறப்பானதாக அறியப்படுகின்றன
ஸ மஹாமக: எனவே பகவான் ‘மஹாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு அர்ப்பணித்து செய்யப்படும் வேள்வியானது (மகா) மிகச்சிறந்த (மஹா) பலனாகிய முக்தியை அளிக்கின்றன. எனவே பகவான் மஹாமக: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹா (மிகச்சிறந்த) + மகா (வேள்வி) = மஹாமக:
———-
- ஓம்நக்ஷத்ரநேமயேநம:
நக்ஷத்ரதாரகை: ஸார்த்தம் சந்த்ரஸூர்யாதயோ க்ரஹா: |
வாயுபாஶமயைர்பந்தைர் நிர்பத்தா த்ருவஸம்ஞிதே ||
அனைத்து விண்மீன்கள், கோள்களுடன் கூட கதிரவன், வெண்மதி ஆகிய அனைத்தும் காற்றென்னும் கயிற்றால் துருவ நட்சத்திரத்துடன் கட்டப்பட்டுள்ளன.
ஸ ஜ்யோதிஶாம் சக்ரம் (மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும்
ப்ராமயம்ஸ் தாராமயஸ்ய நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும்
ஶிஶுமாரஸ்ய ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின்
புச்சதேஶே வால்பகுதியில்
வ்யவஸ்திதோ த்ருவ: துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது.
தஸ்ய ஶிஶுமாரஸ்ய அந்த ஶிஶுமார மண்டலத்தின்
ஹ்ருதயே இதயப் பகுதியில்
ஜ்யோதிஸ்சக்ரஸ்ய விண்கோள்களின் வட்டத்தின்
நேமிவத் விளிம்பில்
ப்ரவர்த்தக: அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய்
ஸ்திதோ நிலைபெற்றிருக்கும்
விஶ்ணுரிதி பகவான் விஶ்ணு
நக்ஷத்ரநேமி: ‘நக்ஷத்ரநேமி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும் நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும் ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின் வால்பகுதியில் துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது. அந்த ஶிஶுமார மண்டலத்தின் இதயப் பகுதியில் விண்கோள்களின் வட்டத்தின் விளிம்பில் அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய் நிலைபெற்றிருக்கும் பகவான் விஶ்ணு ‘நக்ஷத்ரநேமி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶிஶுமாரவர்ணனே ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் ‘விஶ்ணுர்ஹ்ருதயம்’ பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம்
இதி ஸ்வாத்யாயப்ராஹ்மணே ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில்
ஶ்ரூயதே கூறப்பட்டுள்ளது.
ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில் ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம் என்று கூறப்பட்டுள்ளது.
———-
- ஓம்நக்ஷத்ரிணேநம:
சந்த்ரரூபேண முழுமதியின் வடிவினராய் இருப்பதால்
நக்ஷத்ரீ பகவான் ‘நக்ஷத்ரீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முழுமதியின் வடிவினராய் இருப்பதால் பகவான் ‘நக்ஷத்ரீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘நக்ஷத்ராணாம் அஹம் ஶஶி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: நக்ஷத்திரங்களில் (நான்) சந்திரன்
இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.
————–
- ஓம்க்ஷமாயநம:
ஸமஸ்தகார்யேஶு அனைத்துவித செயல்களிலும்
ஸமர்த்த: திறமை மிக்கவராதலால்
க்ஷம: பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்துவித செயல்களிலும் திறமை மிக்கவராதலால் பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ஷமத இதி வா பொறுமை மிக்கவராதலால்
க்ஷம: பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பொறுமை மிக்கவராதலால் பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘க்ஷமயா ப்ருதிவீ ஸம:’ (வால்மீகி இராமாயணம் 1.1.18)
வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் இராமர்) பொறுமையில் பூமிக்கு இணையானவர்.
இதி வால்மீகிவசனாத் | இவ்வாறு வால்மீகி முனிவர் இராமாயணத்தில் கூறியுள்ளார்.
————-
- ஓம்க்ஷாமாயநம:
ஸர்வவிகாரேஶு அனைத்து விகாரங்களும்
க்ஷபிதேஶு அழியும் பொழுது
ஸ்வாத்மநாவஸ்தி இதி தனது இயற்கையான தன்மையோடு நிலைபெற்றிருப்பதால்
க்ஷாம: பகவான் ‘க்ஷாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரளய காலத்தில் இங்கு படைக்கப்பட்ட அனைத்து விகாரங்களும் அழியும் பொழுது தனது இயற்கையான தன்மையோடு பகவான் நிலைபெற்றிருப்பதால் அவர் ‘க்ஷாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘க்ஷாயோ ம:’ (பாணினி சூத்ரம் 8.2.53)
இதி நிஶ்டாதகாரஸ்ய மகாராதேஶ: | மேற்கண்ட பாணினி ஸூத்ரத்தின் படி முடிவிலுள்ள ‘த’காரம் ‘ம’ காரமாய் திரிந்துள்ளது.
————
- ஓம்ஸமீஹனாயநம:
ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் படைப்பு முதலிய காரியங்களுக்காக
ஸம்யக் நல்ல (மங்களகரமான)
ஈஹத இதி ஆசை (அல்லது விருப்பம்) கொள்வதால்
ஸமீஹன: பகவான் ‘ஸமீஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் படைத்தல் முதலிய நற்காரியங்களுக்காக (‘நான் பலவாறாக படைப்பேன்’ என்பது போன்ற) மங்களகரமான ஆசை (விருப்பம்) கொள்கிறார். எனவே அவர் ‘ஸமீஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் = ஸ்ருஶ்டி + ஆதி + அர்த்தம். ஸம்யக் (நல்ல, மங்களகரமான) + ஈஹத (ஆசை) = ஸமீஹன
—————
- யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி:|
ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||
இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி:|
- ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம்||
—————-
- ஓம்யக்ஞாயநம:
ஸர்வயக்ஞ அனைத்து வேள்விகளின்
ஸ்வரூபத்வாத் வடிவாக திகழ்வதால்
யக்ஞ: பகவான் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே அனைத்து வேள்விகளின் வடிவாக இருக்கிறார். எனவே அவர் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
துஶ்டிகாரகோ (அனைத்து தேவர்களுக்கும்) திருப்தியை (இன்பத்தை)
யக்ஞாகாரேண வேள்விகளின் வடிவாய் இருந்து
ப்ரவர்த்தத வளர்க்கிறார்
இதி வா யக்ஞ: எனவே, பகவான் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் வேள்விகளின் வடிவில் அனைத்து தேவர்களுக்கும் மகிழ்ச்சியை வளர்க்கிறார். எனவே அவர் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘யக்ஞோ வை விஶ்ணு:’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)
தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவே வேள்வியாவார்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
- ஓம்இஜ்யாயநம:
யஶ்டவ்யோப்யயம் ஏவ இதி (அந்த யக்ஞங்களின் மூலம்) வழிபடப்படுபவரும் பகவான் ஒருவரே
இஜ்ய: எனவே, அவர் ‘இஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் யக்ஞங்களின் வடிவாக உள்ளது மட்டுமன்றி, அந்த யக்ஞங்களால் வழிபடப்படுபவராகவும் உள்ளார். எனவே அவர் ‘இஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு ஏவ என்ற சொல் யக்ஞங்களால் பகவான் ஒருவர் மட்டுமே வழிபடப்படுகிறார், மற்றோர் யவரும் அல்லர் என்பதை குறிக்கிறது.
யே யஜந்தி மகை: புண்யைர்தேவதாதீன்பித்ருனபி |
ஆத்மானமாத்மனா நித்யம் விஶ்ணுமேவ யஜந்தி தே || || (ஸ்ரீ ஹரி வம்சம்)
ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் புண்ணியமான வேள்விகளால் தேவர்களையும், முன்னோர்களையும் (பித்ருக்கள்) வழிபடுகின்றனரோ, அவர்கள் அனைத்திற்கும் (தமது, அந்த தேவர்கள் மற்றும் பித்ருக்களின்) உள்ளுறை ஆத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணுவையே (அந்த வேள்விகளின் மூலம்) வழிபடுகின்றனர்.
இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.
———-
- ஓம்மஹேஜ்யாயநம:
ஸர்வாஸு அனைத்து
தேவதாஸு தேவர்களை
யஶ்டவ்யாஸு வழிபடப்படும்
ப்ரகர்ஶேண மிகவும் சிறப்பாக (மிக உயர்வாக)
யஶ்டவ்யோ வழிபடப்படுகிறார்
மோக்ஷஃபலதாத்ருத்வாத் முக்தியை பலனாக அளிக்கவல்லவராகையால்
இதி மஹேஜ்ய: எனவே, பகவான் ‘மஹேஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
குறிப்பிட்ட பலனை வேண்டி வேள்விகளால் பற்பல தேவர்கள் வழிபடப்படுகின்றனர். ஆயினும், எவராலும் முக்தியை பலனாக அளிக்க இயலாது. அதை அளிக்கவல்ல பகவானை அனைவரும் மிகவும் சிறப்பாக வழிபடுகின்றனர். எனவே, பகவான் ‘மஹேஜ்ய:’ (அனைவரைக் காட்டிலும் சிறப்பாக வழிபடப்படுகிறார்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முக்தியை அளிக்க வல்லவராதலால் வழிபடப்படும் அனைத்து தேவர்களைக் காட்டிலும் பகவானே உயர்ந்தவர். எனவே அவர் மஹா (உயர்ந்த) + இஜ்ய: (வழிபடப்படுபவர்) = மஹேஜ்ய:
———-
- ஓம்க்ரதவேநம:
யூபஸஹிதோ யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும்
யக்ஞ: வேள்விக்கு
க்ரது: ‘க்ரது’ என்று பெயர். அந்த ‘க்ரது’ வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘க்ரது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும் வேள்விக்கு ‘க்ரது’ என்று பெயர். அந்த ‘க்ரது’ வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘க்ரது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம்ஸத்ராயநம:
ஆஸத்யுபைதி சோதனாலக்ஷணம் விதிவடிவான தர்மத்தை அடைபவர்களை
ஸத்ரம் ‘ஸத்ரம்’ என்று அழைப்பர். அவர்களின் உள்ளுறை ஆன்மாவான பகவானும் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
விதிவடிவான தர்மத்தை அடைபவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸதஸ் ஸத்புருஶர்களான யோகிகளை அல்லது ‘ஸத்’ என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தை
த்ராயத காப்பதால்
இதி வா ஸத்ரம் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸத்புருஶர்களான யோகிகளையும், ‘ஸத்’ என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தையும் காப்பதால் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்ஸதாம்கதயேநம:
ஸதாம் முமுகஷூணாம் ‘ஸத்’ அதாவது முக்தியை விழைவோருக்கு
நான்யா கதிரிதி ஒரே புகலிடமாக இருப்பதால்
ஸதாம் கதி: பகவான் ‘ஸதாம் கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முக்தியை விழைவோருக்கு ஒரே புகலிடமாக இருப்பதால் பகவான் ‘ஸதாம் கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நான்யா = ந + அன்யா
—————
- ஓம்ஸர்வதர்ஶினேநம:
ஸர்வேஶாம் அனைத்து
ப்ராணினாம் உயிரினங்களின்
க்ருதாக்ருதம் செய்யும் (அல்லது செய்யாது விடும்) செயல்கள் ஸர்வம் அனைத்தையும்
பஶ்யதி அறிகிறார் (காண்கிறார்)
ஸ்வாபாவிகேன போதேனேதி தனது இயற்கையான தன்மையால் (வேறொன்றின் உதவியின்றி)
ஸர்வதர்ஶீ எனவே பகவான் ‘ஸர்வதர்ஶீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து உயிரினங்களின் செயல்களையும் அறிகிறார் (காண்கிறார்). எனவே அவர் ‘ஸர்வதர்ஶீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருதாக்ருதம் = செய்யத்தகுந்ததை செய்தல், செய்யவேண்டியதை செய்யாமலிருத்தல், செய்யத் தகாத செயல்களை செய்யாதிருத்தல் மற்றும் செய்யத் தகாத செயல்களை செய்தல் ஆகிய அனைத்தையும் பகவான் அறிகிறார்.
————-
- ஓம்விமுக்தாத்மனேநம:
ஸ்வபாவேன இயற்கையாகவே
விமுக்த ஆத்மா அவருடைய ஆத்மா பற்றற்று இருப்பதால்
யஸ்யேதி விமுக்தாத்மா பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இயற்கையாகவே பற்றற்ற ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
விமுக்தஸ்சாஸாவாத்மா பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால்
சேதி வா விமுக்தாத்மா பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால் பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு (திருக்குறள் 350)
————
- ஓம்ஸர்வஜ்ஞாயநம:
ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார்
ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார்
ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை
————
- ஓம்ஞானமுத்தமாயநம:
ஞானமுத்தமம் ‘ஞானம் உத்தமம்’ என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.
ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த
அஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாத
ஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியது
ஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததான
ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.
ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
—————
- ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஶ: ஸுகத: ஸுஹ்ருத்|
மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: ||
இந்தநாற்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஸுவ்ரத:, 456. ஸுமுக:, 457. ஸூக்ஷ்ம:, 458. ஸுகோஶ:, 459. ஸுகத:, 460. ஸுஹ்ருத்|
- மனோஹர:, 462. ஜிதக்ரோத:, 463. வீரபாஹு:, 464. விதாரண:||
————-
- ஓம்ஸுவ்ரதாயநம:
ஶோபனம் மங்களகரமான
வ்ரதமஸ்யேதி விரதத்தை உடையவராதலால்
ஸுவ்ரத: பகவான் ‘ஸுவ்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(அடியவர்களைக் காப்பதான) மங்களகரமான விரதத்தை உடையவராதலால் பகவான் ‘ஸுவ்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மிதி ச யாசதே |
அபயம் ஸர்வபூதேப்யோ தாதாம்யேதத் வ்ரதம் மம’ || (வால்மீகி இராமாயணம் 6.18.33)
வால்மீகி இராமாயணம் யுத்த காண்டத்தில், விபீஶண சரணாகதியின் பொழுது பகவான் ஸ்ரீராமர் கூறியது: ஒருமுறை ‘நான் உன்னுடையவன்’ என்று எவரொருவர் என்னை சரணடைகின்றனரோ அவர்களை நான் அனைவரிடமிருந்தும் (அனைத்து துன்பங்களிலிருந்தும்) காப்பேன். இதுவே எனது நோன்பாகும் (விரதமாகும்).
————-
- ஓம்ஸுமுகாயநம:
ஶோபனம் மிக அழகியதான
முகமஸ்யேதி திருமுகத்தை உடையவராதலால்
ஸுமுக: பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகவும் அழகிய திருமுகத்தை உடையவராதலால் பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ப்ரஸன்னவதனம் சாருபத்மபத்ராயதேக்ஷணம்’ (ஸ்ரீவிஷ்ணு புராணம் 6.7.80)
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான்) மலர்ந்த முகமும், அழகிய தாமரை இதழ்களைப் போன்ற திருக்கண்களும் (உடையவர்).
வனவாஸஸுமுகத்வாத் வா வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்ததால்
தாஶரதீ ராம: தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர்
ஸுமுக: ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்த தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸ்வபிதுர்வசனம் ஸ்ரீமானபிஶேகாத் பரம் ப்ரியம் |
மனஸா பூர்வமாஸாத்ய வாசா ப்ரதிக்ருஹீதவான் ||’ (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்)
ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீராமர் தன்னுடைய தந்தையின் (வனவாசத்திற்கு செல்லும்படியான) கட்டளையை, தன்னுடைய பட்டாபிஷேக செய்தியைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு மனதில் ஏற்றுக்கொண்டார். பின்னர் வாக்கிலும் அவ்வாறே கூறினார்.
‘இமானி து மஹாரண்யே விஹ்ருத்ய நவ பஞ்ச ச |
வர்ஶாணி பரமப்ரீத: ஸ்தாஸ்யாமி வசனே தவ ||’ (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.24.17)
ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமர் கூறுகிறார்: இந்த பதினான்கு ஆண்டுகளை நான் மகிழ்ச்சியுடன் வனத்தில் கழித்துவிட்டு தங்களின் கட்டளையை நிறைவேற்றுவேன்.
‘ந வனம் கந்துகாமஸ்ய த்யஜதஸ்ச வஸுந்தராம் |
ஸர்வலோகாதிகஸ்யேவ மனோ ராமஸ்ய விவ்யதே || (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.19.33)
ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: வனத்திற்கு செல்வதோ, இராஜ்யத்தை இழப்பதோ பகவான் ஸ்ரீராமரின் மனதை சற்றும் சலனப்படுத்தவில்லை. அவர், இந்த உலகின் இன்ப, துன்பங்களை கடந்த ஒரு மஹாஞானியின் நிலையில் இருந்தார்.
இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே! யாரும்
செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (கம்பராமாயணம்)
இதி ராமாயணே | இவ்வாறு ஸ்ரீமத் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸர்வ அனைத்து
வித்யோபதேஶேன வா (வேதம் முதலான) வித்யைகளையும் உபதேசிப்பவராதலால்
ஸுமுக: பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே அனைவருக்கும் பரம குருவாவார். வேதம் முதலான அனைத்து வித்தைகளையும் உபதேசிப்பவராதலால் பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |
தꣲஹ தேவமாத்மபுத்திப்ரகாஶம்
முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான் சரணடைகிறேன்.
இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———-
- ஓம்ஸூக்ஷ்மாயநம:
ஶப்தாதி ‘ஒலி’ முதலிய
ஸ்தூலகாரண ஸ்தூல (பருப்பொருள் உருவாவதற்கான) காரணங்கள்
ரஹிதத்வாத் அற்றவராக இருப்பதால்(லும்)
ஶப்தாதயோ ஒலி முதலான மூல தத்துவங்களே
ஹ்யாகாஶாதீனாம் ஆகாயம் தொடங்கி
உத்தரோத்தர ஒன்றின்பின் ஒன்றாக (காற்று, தீ, நீர், பூமி)
ஸ்தூலத்வ காரணானி பஞ்சபூதங்களாகிய பருப்பொருட்கள் உருவாக காரணமாக இருப்பதால்,
தத்பாவாத் அவற்றின் தாக்கங்கள் அற்றவராக இருப்பதால்
ஸூக்ஷ்ம: பகவான் ‘ஸூக்ஷ்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒலியிலிருந்தே ஆகாயம் பிறக்கிறது. ஆகாயத்திலிருந்து பஞ்சபூதங்களும் (அவற்றிலிருந்து அனைத்து) பருப்பொருட்களும் உருவாகின்றன. ஒலியே அனைத்து பருப்பொருட்களும் உருவாகக் காரணமாகும். அந்த ஒலி முதலான மூல தத்துவங்களின் தாக்கம் இல்லாதவராதலால் பகவான் ‘ஸூக்ஷ்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பருப்பொருட்கள் (ஸ்தூலம்) உருவாவதற்கான காரணங்களின் தாக்கம் அற்றவர் பகவான். எனவே அவர் என்றுமே ஸூக்ஷ்மமானவர்.
‘ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்’ (முண்டக உபநிஶத் 1.1.6)
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மம்) அனைத்தையும் வ்யாபிப்பது, மிகவும் நுண்ணியமானது.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
—————-
- ஓம்ஸுகோஶாயநம:
ஶோபனோ மங்களகரமான
கோஶோ ஒலி (அல்லது முழக்கத்தை) உடையவராதலால்
வேதாத்மகோSஸ்யேதி நான்மறைகளின் வடிவான
ஸுகோஶ: பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நான்மறைகளின் வடிவான மங்களகரமான ஒலியை (முழக்கத்தை) உடையவராதலால் பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மேககம்பீர இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான
கோஶத்வாத் குரலை உடையவராதலால்
ஸுகோஶ: பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான குரலை உடையவராதலால் பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்ஸுகதாயநம:
ஸத்வ்ருத்தானாம் நன்னெறியை வழுவாது நடப்போருக்கு
ஸுகம் ததாதி இன்பத்தை அளிப்பதனால்
ஸுகத: பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நன்னெறியை வழுவாது நடப்போருக்கு இன்பத்தை அளிப்பதனால் பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அஸத்வ்ருத்தானாம் நன்னெறியை மீறுவோருக்கு (அதை பிழைப்போருக்கு)
ஸுகம் இன்பத்தை
த்யதி கண்டயதீதி ‘த்யதி’ அதாவது அழிக்கிறார்
ஸுகத: எனவே, பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நன்னெறியை மீறுவோரின் (அதை பிழைப்போருக்கு) இன்பத்தை அழிக்கிறார். எனவே, பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரஹ்லாதன், விபீஶணன் ஆகியோருக்கு இன்பத்தை அளிக்கிறார். ஹிரண்யகசிபு, இராவணன் ஆகியோரின் இன்பத்தை அழிக்கிறார்.
————
- ஓம்ஸுஹ்ருதாயநம:
ப்ரத்யுபகார கைமாறு
நிரபேக்ஷதய எதிர்பாராது
உபகாரித்வாத் தான் அனைவருக்கும் உதவி புரிகிறார்
ஸுஹ்ருத் எனவே, பகவான் ‘ஸுஹ்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கைமாறு எதிர்பாராது அனைவருக்கும் உதவி புரிகிறார். எனவே, பகவான் ‘ஸுஹ்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————
- ஓம்மனோஹராயநம:
நிரதிஶய முழுமையான (அளவிடமுடியாத)
ஆனந்தரூபத்வாத் இன்பமே வடிவானவராய்
மனோ ஹரதீதி காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால்
மனோஹர: பகவான் ‘மனோஹர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முழுமையான, அளவிடமுடியாத ஆனந்த வடிவினராய் காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால் பகவான் ‘மனோஹர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘யோ வை பூமா தத் ஸுகம், நால்பே ஸுகமஸ்தி’ (சாந்தோக்ய உபநிஶத் 3.23.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (என்றும் உள்ளதான அந்த) பரப்ரஹ்மத்திடம் காணப்படும் இன்பமே இன்பமாகும். மற்ற (அழியக்கூடிய, மாறக்கூடிய) இன்பங்கள் அனைத்தும் கீழானதாகும்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
- ஓம்ஜிதக்ரோதாயநம:
ஜித: வெற்றி கொண்டுள்ளார்
க்ரோதோ கோபத்தை
யேன எவரொருவர்
ஸ ஜிதக்ரோத: அவர் (பகவான்) ‘ஜிதக்ரோத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்;
வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை
ஸ்தாபனார்த்தம் நிலைநிறுத்துவதற்காகவே
ஸுராரீன் ஹந்தி (தேவர்களின் பகைவர்களான) அஸுரர்களை அழிக்கிறார்
ந து கோபவஶாதிதி கோபத்தின் வசப்பட்டு அல்ல.
பகவான் கோபத்தை வென்றவர். தேவர்களின் பகைவர்களான அஸுரர்களைக் கூட அவர் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வரைமுறைகளை நிலைநிறுத்துவதற்காகவே அழிக்கிறாரே ஒழிய கோபாவேசப்பட்டு அல்ல. எனவே, பகவான் ‘ஜிதக்ரோத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம்வீரபாஹவேநம:
த்ரிதஶ முப்பத்து முக்கோடி தேவர்களின்
ஶத்ரூன் பகைவர்களை (அஸுரர்களை) நிக்னன் அழித்து
வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை
ஸ்தாபயன் நிலைநிறுத்தவல்ல
விக்ரமஶாலி சக்திபடைத்த (பலம்பொருந்திய)
பாஹுரஸ்யேதி திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால்
வீரபாஹு: பகவான் ‘வீரபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முப்பத்து முக்கோடி தேவர்களின் பகைவர்களை (அஸுரர்களை) அழித்து வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை நிலைநிறுத்தவல்ல சக்திபடைத்த (பலம்பொருந்திய) திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால் பகவான் ‘வீரபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்விதாரணாயநம:
அதார்மிகான் அறத்திற்கு புறம்பாக செல்வோரை
விதாரயாதி வெட்டித் துண்டாடுவதால்
இதி விதாரண: பகவான் ‘விதாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறத்திற்கு புறம்பாக செல்வோரை வெட்டித் துண்டாடுவதால் பகவான் ‘விதாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த மூன்று திருநாமங்களையும் ஒரு கோர்வையாக நாம் புரிந்து கொள்ளலாம். பகவான் அறத்திற்குப் புறம்பானோரை (அஸுரர்களை) அழிக்கிறார் (விதாரண:). அவரது புஜபலத்தைக் கொண்டு அழிக்கிறார் (வீரபாஹு:). அதையும் அவர் கோபம் மேலிடச் செய்வதில்லை. வேதங்களின் விதிமுறைகளை நிலைநிறுத்தவே செய்கிறார் (ஜிதக்ரோத:).
————–
- ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||
இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |
- வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||
—————
- ஓம்ஸ்வாபனாயநம:
ப்ராணின: அனைத்து உயிரினங்களையும்
ஸ்வாபயன் கனவில் உழல வைக்கிறார்
ஆத்மஸம்போதி ஆத்மாவைப் பற்றிய அறிவிலிருந்து (ஆத்மஞானத்திலிருந்து) அவைகளை
விதுரான் விலக்கி வைக்கிறார்
மாயயா குர்வன் மாயையின் மூலமாக
ஸ்வாபன: எனவே பகவான் ‘ஸ்வாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மாயையின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் ஆத்மஞானத்திலிருந்து விலக்கி வைத்து கனவினில் (கனவைப் போன்ற இந்த பிறவிப்பெருங்கடலில்) உழலவைக்கிறார். எனவே அவர் ‘ஸ்வாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம்ஸ்வவஶாயநம:
ஸ்வதந்த்ர: இந்த சுதந்திரமாக இருக்கிறார்
ஸ்வவஶ: பகவான் ‘ஸ்வவஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்து
ஸ்திதி காத்து
லயஹேதுத்வாத் அழித்தல் ஆகியவற்றிற்கு காரணமாய் இருப்பதால்.
பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பதற்குக் காரணமாய் இருக்கிறார். எனவே அவர் சுதந்திரமானவர் (அவருக்கு எவரது உதவியும் தேவையில்லை). எனவே அவர் ‘ஸ்வவஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வவஶ: என்றால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று பொருள். அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் பகவான் சுதந்திரமானவர். தனக்கு ஒரு காரணமற்றவர். எனவே, அவர் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் (ஸ்வவஶ:).
————-
- ஓம்வ்யாபினேநம:
ஆகாஶவத் ஆகாயத்தைப் போன்று
ஸர்வகதத்வாத் அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிப்பதால்
வ்யாபீ பகவான் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆகாயம் எவ்வாறு இந்த உலகத்தை சூழ்ந்து வ்யாபிக்கிறதோ, அவ்வாறே பகவான் (அந்த ஆகாயம் உட்பட) அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிக்கிறார். எனவே, அவர் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஆகாஶவத்ஸர்வகதஸ்ச நித்ய:’
(அந்தப் பரப்ரஹ்மமானது) ஆகாயத்தைப் போன்று வ்யாபிக்கிறது, என்றும் உள்ளது.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதால்
ஸர்வகார்யனாம் அனைத்து காரியங்களையும்
வ்யாபனாத்வா வ்யாபிப்பதால்
வ்யாபீ பகவான் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, மூலகாரணமாய் இருப்பதன் மூலம் பகவான் (காரியங்களாக) அனைத்தையும் வ்யாபிக்கிறார். எனவே அவர் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம்நைகாத்மனேநம:
ஜகதுத்பத்யாதிஶு இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான செயல்களை ஆற்றும்பொழுது
ஆவீர்பூத தோன்றி
நிமித்தஶக்திபிர் குறிப்பிட்ட சக்திகளுடன்
விபூதிபிர் தனது அதிசய சக்தியால் உருவங்களை தரித்து
அநேகதா பற்பல
திஶ்டன் விளங்குவதால்
நைகாத்மா பகவான் ‘நைகாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் ஆகிய செயல்களை ஆற்றும்பொழுது, அந்தந்த காரியங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சக்திகளுடன் பற்பல உருவங்களை தமது அதிசய சக்தியால் தரிக்கிறார். எனவே, அவர் ‘நைகாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நைகாத்மா என்றால் ந+ஏக+ஆத்மா, அதாவது பற்பல ஆத்மாக்கள் என்று பொருள்படும். பகவானே இவ்வாறு பற்பல ஆத்மாக்களாக உருவம் தரிக்கிறார்.
————-
- ஓம்நைககர்மக்ருதேநம:
ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல்
ஸம்பத்தி பாதுகாத்து வளர்த்தல்
விபத்தி ஸம்ஹாரம் செய்தல்
ப்ரப்ருதே முதலான பற்பல
கர்மாணி செயல்களை
கரோதீதி செய்வதால்
நைககர்மக்ருத் பகவான் ‘நைககர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்து வளர்த்தல், (தகுந்த சமயத்தில்) அழித்தல் ஆகிய பற்பல செயல்களை செய்கிறார். எனவே அவர் ‘நைககர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நைககர்மக்ருத் என்ற சொல் ந+ஏக+கர்ம+க்ருத் என்று பிரிந்து, பற்பல செயல்களை செய்பவர் என்று பொருள் தரும்.
————
- ஓம்வத்ஸராயநம:
வஸதி வசிக்கின்றன (இருக்கின்றன)
அத்ர இங்கு (காணப்படும்)
அகிலமிதி அனைத்து உலகங்களும் (ப்ரபஞ்சம்)
வத்ஸர: எனவே பகவான் ‘வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு காணப்படும் ப்ரபஞ்சம் அனைத்தும் அவருக்குள்ளே வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே பகவான் ‘வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்வத்ஸலாயநம:
பக்த தனது அடியவர்களிடம்
ஸ்னேஹித்வாத் அளவுகடந்த அன்போடு இருக்கிறார்
வத்ஸல: எனவே பகவான் ‘வத்ஸல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ஒரு தாய்ப் பசு எவ்வாறு தன் கன்றிடம் அன்பு காட்டுமோ அவ்வாறே) பகவான் தனது அடியவர்களிடம் அளவுகடந்த அன்போடு இருக்கிறார். எனவே அவர் ‘வத்ஸல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தாய்ப் பசுவின் அன்பு: பசுவானது தூய்மையை விரும்பும் பிராணியாகும். புல்லில் அசுத்தம் இருப்பின் பசியிருந்தாலும் அந்த புல்லை பசுவானது உண்ணாது. ஆனால், அதே பசுவானது தனது கன்றுக்குட்டி ஒரு அசுத்தத்தில் வீழ்ந்தால் தனது நாவால் நக்கி அதை தூய்மையாக்கும். அவ்வாறே, பகவானும் சுயநலமின்றி, இந்த அசுத்தமான ஸம்ஸாரத்தில் மீண்டும் மீண்டும் அவதரித்து நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.
‘வத்ஸாம்ஸாப்யாம் காமபலே’ (பாணினி ஸூத்ரம் 5.2.98)
இதி லச்ப்ரத்யய: | இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ‘வத்ஸ’ என்ற சொல்லிற்கு ‘ல’ எனும் விகுதி சேர்ந்து ‘வத்ஸல’ என்ற வார்த்தை உண்டாகிறது.
————-
- ஓம்வத்ஸினேநம:
வத்ஸானாம் கன்றுகளை
பாலனாத் மேய்ப்பவராதலால்
வத்ஸீ பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கன்றுகளை மேய்த்துப் பாதுகாப்பவராதலால் பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஜகத்பிதுஸ்தஸ்ய இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையானபடியால்
வத்ஸபூதா: ப்ரஜா அனைத்து உயிரினங்களும் அவரின் பிள்ளைகளாவோம்
இதி வா வத்ஸீ பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவானே இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையாவார். அனைத்து உயிரினங்களும் அவரது பிள்ளைகள். எனவே அவர் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வத்ஸ என்ற சொல்லிற்கு கன்றுகள், குழந்தைகள் ஆகிய பொருள்கள் உண்டு. இவை இரண்டைக் கொண்டும் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.
—————
- ஓம்ரத்னகர்ப்பாயநம:
ரத்னானி வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும்
கர்பபூதாநி அஸ்யேதி தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள
ஸமுத்ரோ கடல் (கடலின் வடிவாக இருப்பதால்)
ரத்னகர்ப்ப: பகவான் ‘ரத்னகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும் தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள கடலின் வடிவாக இருப்பதால் பகவான் ‘ரத்னகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்தனேஶ்வராயநம:
தனானாம் அனைத்து செல்வங்களுக்கும்
ஈஶ்வர: உரிமையாளராக (ஸ்வாமியாக) இருப்பதால்
தனேஶ்வர: பகவான் ‘தனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து செல்வங்களுக்கும் உரிமையாளர் பகவானே. எனவே அவர் ‘தனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கடலில் காணப்படும் வைரம் முதலானவை மட்டுமல்ல. அனைத்து செல்வங்களும் பகவானுடையதுதான்.
—————-
- தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம்|
அவிக்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர் விதாதா க்ருதலக்ஷண: ||
இந்த ஐம்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- தர்மகுப், 476. தர்மக்ருத், 477. தர்மீ, 478. ஸத், 479. அஸத், 480. க்ஷரம், 481. அக்ஷரம்|
- அவிக்ஞாதா, 483. ஸஹஸ்ராம்ஶு:, 484. விதாதா, 485. க்ருதலக்ஷண:||
————-
- ஓம்தர்மகுபேநம:
தர்ம அறத்தை
கோபயதீதி பரிபாலிக்கிறார் (காக்கிறார்)
தர்மகுப் எனவே பகவான் ‘தர்மகுப்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறத்தை பரிபாலித்துக் காப்பவராதலால் பகவான் ‘தர்மகுப்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்த நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.
————
- ஓம்தர்மக்ருதேநம:
தர்மா(அ)தர்ம விஹீனோபி அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும்
தர்மமர்யாதாஸ்தாபநார்த்தம் அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு
தர்மமேவ அறச்செயல்களை மட்டுமே
கரோதீதி (தான்) செய்கிறார்
தர்மக்ருத் எனவே, பகவான் ‘தர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும், அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு, அறச்செயல்களை மட்டுமே புரிகிறார் (தான் செய்கிறார்). எனவே, பகவான் ‘தர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம்தர்மினேநம:
தர்மான் அறத்தை
தாராயதீதி தாங்குவதால்
தர்மீ பகவான் ‘தர்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அறத்தை தாங்குகிறார். எனவே அவர் ‘தர்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உதாரணமாக: அறத்தை நிலைநிறுத்துதல், அறவழியில் நடத்தல், அறச்செயல்களையே புரிதல்.
——–
- ஓம்ஸதேநம:
அவிததம் (என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான
பரம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான
ஸத் பகவான் ‘ஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான, பரப்ரஹ்மமான பகவான் ‘ஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸதேவ ஸோம்யேதம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ ஸௌம்யா!!! இதுவே (பரப்ரஹ்மமே அனைத்திற்கும்) முதலில் இருந்தது.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————
- ஓம்அஸதேநம:
அபரம் ப்ரஹ்ம (காரியத்தின் விளைவாக) இங்கு எல்லாமாய் தோற்றமளிக்கும் ‘அபர’ ப்ரஹ்மமான பகவான்
அஸத் ‘அஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சமாய் தோற்றமளிக்கும் காரிய ப்ரஹ்மமே (பகவானே) ‘அஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.4)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த பேதங்கள் (வேற்றுமைகள்) எல்லாம் (ஒரே பொருளைக் குறிக்கும்) வெவ்வேறு பெயர்களே. எனவே, அவை பெயரளவிலேயே என்று உணர்க.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————
- ஓம்க்ஷராயநம:
ஸர்வானி பூதாநி இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும்
க்ஷரம் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் ‘க்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் ‘க்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்அக்ஷராயநம:
கூடஸ்த: என்றும் மாறாத பரம்பொருளே
அக்ஷரம் ‘அக்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
என்றும் மாறாத பரம்பொருளே ‘அக்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘க்ஷர ஸர்வானி பூதாநி கூடஸ்தோSக்ஷர உச்யதே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.16)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: க்ஷர புருஶன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே (பரம்பொருளான பகவானே) அக்ஷர (மாற்றமில்லாத, அழிவில்லாத) புருஶன்.
இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.
ஆச்சார்யாள் ‘க்ஷர’, ‘அக்ஷர’ ஆகிய இந்த இரண்டு திருநாமங்களையும் ஒரே வாக்கியமாக பொருளுரைத்திருக்கிறார். இரண்டு திருநாமங்களுக்கும் சேர்த்து இந்த ஸ்ரீமத்பகவத் கீதை வாக்கியத்தை மேற்கோள் காட்டியுள்ளார். இங்கு நான் இதை இரண்டு நாமங்களாகப் பிரித்து அளித்திருக்கிறேன்.
———–
- ஓம்அவிஞ்ஞாத்ரேநம:
ஆத்மனி ஆத்மாவிற்கு
கர்த்ருத்வாதி செயல் புரிகிறது போன்ற
விகல்பவிஞ்ஞானம் அறியாமை
கல்பிதமிதி கற்பனையாகும்
தத்வாஸனா (இந்த அறியாமையால்) விளையும் முன்வினையால் ஏற்படும் மனப்பதிவுகள்
அவகுண்டிதோ திரையிட்டிருக்கும்
ஜீவோ ஜீவாத்மாவை
விஞ்ஞாதா என்று அழைக்கின்றனர்.
தத்விலக்ஷணோ (அந்த ஜீவாத்மாவிலிருந்து) வேறுபட்டவரான
விஶ்ணு: பகவான் ஸ்ரீ மஹாவிஶ்ணு
அவிஞ்ஞாதா ‘அவிஞ்ஞாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆத்மாவிற்கு செயல்புரிதல் என்றுமே இல்லை. அறியாமையால் அவ்வாறு தமக்கு செயல் (மற்றும் செயல்வினை) இருப்பதாக ஒரு ஜீவாத்மா தவறாக கற்பனை செய்துகொள்கிறார். இதனால் கர்மவினையும், முற்பிறவி கர்மங்களின் வாசனை (மனப்பதிவும்) அந்த ஜீவாத்மாவை (அதன் உண்மையான தன்மையை அறியவொட்டாது) திரையிட்டு மறைக்கிறது. எனவே ஜீவாத்மாவை ‘விஞ்ஞாதா’ என்று அழைக்கின்றனர். இவ்வாறு அறியாமையோ, கர்மா வாசனையோ இல்லாது, அந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணு ‘அவிஞ்ஞாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்ஸஹஸ்ராம்ஶவேநம:
ஆதித்யாதிகதா கதிரவன் முதலான (ஒளிவீசும் கோள்களின்)
அம்ஶவோSஸ்யேத்யயமேவ கிரணங்கள் (அம்ஶ) அனைத்தும் பகவானுடையதே
முக்ய: ஸஹஸ்ராம்ஶு: எனவே பகவான் அவற்றின் முதன்மையானதான ‘ஸஹஸ்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கதிரவன் முதலிய (ஆயிரக்கணக்கான) ஒளிவீசும் கோள்கள் உண்மையில் பகவானின் ஒளியையே பிரதிபலிக்கின்றன. அவற்றின் கிரணங்கள் அனைத்தும் பகவானின் சக்தியேயாகும். எனவே பகவான் ‘ஸஹஸ்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸஹஸ்ராம்ஶு என்றால் ஆயிரக்கணக்கான கதிர்கள் என்று பொருள். நாம் புறக்கண்களால் காணும் கதிரவன் போன்ற ஒளியை உமிழும் கோள்கள் அனைத்தும் பகவனிடத்திலிருந்தே தமது ஒளியைப் பெறுகின்றன. எனவே, இவற்றின் மூலமான பகவான் ஆயிரக்கணக்கான கதிர்கள் (ஸஹஸ்ராம்ஶு) உடையவராகிறார்.
‘யேன ஸூர்யஸ்தபதி தேஜஸேத்த:’ (தைத்ரீய ப்ராஹ்மணம் 3.12.79.7)
தைத்ரீய ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது: எவருடைய ஒளியினால் தான் ஒளியூட்டப்பட்டு கதிரவன் சுடர்விடுகிறானோ…
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
‘யதாதித்யகதம் தேஜ:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)
ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலகமுழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்று உணர்).
இதி ஸ்ம்ருதேஶ்ச ஸ்ரீமத் பகவத்கீதை போன்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் இது விளங்குகிறது.
————
- ஓம்விதாத்ரேநம:
விஶேஶேண தனது தனிப்பட்ட சக்தியால்
ஶேஶ ஆதிசேடன்
திக்கஜ இந்தப் ப்ரபஞ்சத்தை எட்டு திக்கிலிருந்தும் தாங்கும் எட்டு யானைகள்
பூதரான் இந்த பூமியை தாங்கும் மலைகள்
ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்
தாத்ருண் தாங்கும் (இவற்றை)
ததாதீதி தாங்குவதால்
விதாதா பகவான் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தையும், பூமியையும் அதிலுள்ள உயிரினங்களையும் சேர்த்து தாங்கும் ஆதிசேடன், எட்டு யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்), மலைகள் ஆகியவற்றை பகவான் தனது தனிப்பட்ட சக்தியால் தாங்குகிறார். எனவே, அவர் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்க்ருதலக்ஷணாயநம:
நித்ய என்றுமுள்ள
நிஶ்பன்ன முழுமையான
சைதன்ய அறிவுமயமான ஆன்மா (பரமாத்மா)
ரூபத்வாத் வடிவினராய் இருப்பதால்
க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றுமுள்ள, முழுமையான, அறிவுமயமான ஆன்மாவின் வடிவினராய் (பரமாத்மாவாக) இருப்பதால் அவர் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருதானி இயற்றினார் (உருவாக்கினார்)
லக்ஷணானி ஶாஸ்த்ராணி ‘லக்ஷணம்’ அதாவது சாத்திரங்களை
அனேன இதி வா குற்றம் குறைகள் அற்றவையான
க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, குற்றம், குறைகள் அற்றதான (லக்ஷணங்கள் என்றழைக்கப்படும்) பற்பல சாத்திரங்களை உருவாக்கியதால் (இயற்றியதால்) பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘வேதா ஶாஸ்த்ரானி விஞ்ஞானம் ஏதத் ஸர்வம் ஜனார்தனாத்’ (ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமம் 139)
ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது: வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் விஞ்ஞானம் அனைத்தும் பகவான் ஜனார்தனரே (ஜனார்தனராலேயே உருவாக்கப்பட்டவை).
இத்யத்ரைவ வக்ஷ்யதி | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது.
ஸஜாதீய தம்மை போன்றவற்றிலிருந்தும்
விஜாதீய தம்மை அல்லாத மற்ற பொருட்களிடமிருந்தும்
வ்யவச்சேதகம் லக்ஷணம் ‘லக்ஷணங்கள்’ அதாவது (அந்தந்த பொருட்களை) தனித்துக் காட்டும் வேறுபாடுகளை
ஸர்வபாவானாம் அனைத்து பொருட்களிலும்
க்ருதமனேனேதி வா உருவாக்கியதால்
க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து பொருட்களும் தத்தம் வகுப்பிலிருந்தும், மற்ற வகுப்பிலிருந்தும் வேறுபட்டு தோன்றுகின்றன. இந்த லக்ஷணங்களை (வேறுபாடுகளை) உருவாக்கியதால் பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
விஜாதீய வேறுபாடுகள்: தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்ற வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவை தோற்றம் முதலியவற்றில் வேறுபட்டு உள்ளன.
ஸஜாதீய வேறுபாடுகள் – பூக்கள் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்திருந்தாலும் மல்லிகையும், செம்பருத்தியும் உருவம், மணம் போன்ற வெவ்வேறு தன்மைகளை கொண்டுள்ளன. மனிதர்களுக்குள்ளேயும் உருவம் முதலிய வேறுபாடுகள் உள்ளன.
ஸ்ரீவத்ஸலக்ஷணம் ‘ஸ்ரீவத்ஸம்’ என்னும் மருவை
வக்ஷஸி தனது திருமார்பில்
தேன க்ருதமிதி வா கொண்டுள்ள காரணத்தினால்
க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, ‘ஸ்ரீவத்ஸம்’ என்னும் மருவை தனது திருமார்பில் கொண்டுள்ளபடியால் பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர:|
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||
இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |
- ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||
—————
- ஓம்கபஸ்திநேமயேநம:
கபஸ்திசக்ரஸ்ய மத்யே ‘கபஸ்தி’ என்றழைக்கப்படும் சூரியமண்டலத்தின் நடுவே
ஸூர்யாத்மனா கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக (அந்த கதிரவனே உருவாக)
ஸ்தித இதி வீற்றிருப்பதால்
கபஸ்திநேமி: பகவான் ‘கபஸ்திநேமி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சூரியமண்டலத்தின் நடுவே அந்த கதிரவனாக (கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக) வீற்றிருப்பதால் பகவான் ‘கபஸ்திநேமி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பொதுவாக சூரியனை சூரியநாராயணராக வழிபடுவது நம் வழக்கத்தில் உள்ளது.
—————–
- ஓம்ஸத்வஸ்தாயநம:
ஸத்வம் குணம் சத்வ குணம்
ப்ரகாஶகம் ஒளிமயமான
ப்ராதான்யேன மேலோங்க
அதிதிஶ்டதி விளங்குவதால்
ஸத்வஸ்த: பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒளிமயமான சத்வ குணம் மேலோங்க விளங்குவதால் பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வப்ராணிஶு அனைத்து உயிரினங்களுக்குள்ளும்
திஶ்டதீதி வா (உள்ளுறைந்து) வசிப்பதால்
ஸத்வஸ்த: பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் (உள்ளுறைந்து) வசிப்பதால் பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————
- ஓம்ஸிம்ஹாயநம:
விக்ரமஶாலித்வாத் வீரம் பொருந்தியவராதலால்
ஸிம்ஹவத் (காட்டுக்கு அரசனான) சிங்கத்தைப் போன்று
ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
காட்டிற்கு அரசனான சிங்கத்தைப் போன்று வீரம் பொருந்தியவராதலால் பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ந்ருஶப்தலோபேன ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயரில் ‘ந்ரு’ என்ற சொல் மறைந்து
‘ஸத்யபாமா பாமா’ இதிவத்வா சத்யபாமாவை (சத்ய என்பதை விடுத்து) பொதுவாக பாமா என்றழைப்பது போல
ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சத்யபாமா என்ற பெயரை, ‘சத்ய’ என்ற சப்தத்தை மறைத்து பொதுவாக பாமா என்று அழைப்பதைப் போல, ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயருடைய பகவான் ‘ந்ரு’ என்ற சப்தம் மறைந்து ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம்பூதமஹேஶ்வராயநம:
பூதானாம் அனைத்து உயிரினங்களின்
மஹான் ஒப்புயர்வற்ற
ஈஶ்வர: இறைவன் (ஆள்பவர்) ஆனபடியால்
பூதமஹேஶ்வர: பகவான் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஒருவரே அனைவரின் (அனைத்து உயிரினங்களின்) ஒப்புயர்வற்ற இறைவனாவார். எனவே, அவர் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பூதேன ஸத்யேன ‘பூ’ என்றால் ஸத்யம் அதாவது என்றும் உள்ளவர்
ஸ ஏவ பரமோ அவர் ஒருவரே மேலான
மஹான் ஒப்புயர்வற்ற
ஈஶ்வர தனிப்பெரும் தெய்வம்
இதி வா பூதமஹேஶ்வர: எனவே, பகவான் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் உண்மையே உருவானவர், என்றும் உள்ளவர். ஒப்புயர்வற்ற தனிப்பெரும் தெய்வம் பகவான் ஒருவரே. எனவே, அவர் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘பூ ஸத்தாயாம்’. ‘பூ’ என்ற தாதுவிற்கு (வேர்ச்சொல்லிற்கு) ‘ஸத்’ என்று ஒரு பொருள் உள்ளது. ஸத் என்றால் இருப்பது. எனவேதான் என்றும் மாறாத உண்மையை ‘ஸத்யம்’ என்று கூறுகிறோம். இதன் அடிப்படையில், என்றும் இருப்பவரான பகவான் ஒருவரே மேலான பரம்பொருள். எனவே, அவரே ‘பூதமஹேஶ்வரன்’ என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.
————
- ஓம்ஆதிதேவாயநம:
ஸர்வபூதானி அனைத்து உயிரினங்களுக்கும்
ஆதீயந்தேனேன மூல காரணமாய் இருப்பதால்
இதி ஆதி: பகவான் ‘ஆதி’ என்று அழைக்கப்படுகிறார்.
ஆதிஸ்சாஸௌ இவ்வாறு ‘ஆதியாகவும்’
தேவஸ்ச இதி ‘தேவனாகவும்’ இருப்பதால்
ஆதிதேவ: பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மூல காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் ‘ஆதியாவார்’. இவ்வாறு ஆதியாகவும் தேவனாகவும் இருப்பதால் பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம்மஹாதேவாயநம:
ஸர்வான் அனைத்து
பாவான் பற்றுதல்களையும்
பரித்யஜ்ய விடுத்து
ஆத்மஞானயோக தனது ஆத்மஞான யோகமென்னும்
ஐஶ்வர்யே செல்வத்தால்
மஹதி தனது பெருமை
மஹியதே மென்மேலும் வளரப் பெற்றவராதலால்
தஸ்மாத் உச்யதே அவரை (பகவானை) அழைக்கின்றனர்
மஹாதேவ: ‘மஹாதேவ’ என்ற திருநாமத்தால்.
பகவான் அனைத்து பற்றுதல்களையும் விடுத்து தன்னைப் பற்றிய ஆத்மஞானயோகமென்னும் செல்வத்தால் தனது பெருமை மென்மேலும் வளரப் பெற்றவர். எனவே அவரை ‘மஹாதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.
————
- ஓம்தேவேஶாயநம:
ப்ராதான்யேன அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய நிலையில் இருப்பதால்
தேவானாம் பகவான் அனைத்து தேவர்களுக்கும்
ஈஶோ தலைவராவார்
தேவேஶ: எனவே அவர் ‘தேவேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய (உயர்ந்த) நிலையில் இருப்பதால் பகவான் அனைத்து தேவர்களுக்கும் தலைவராவார். எனவே அவர் ‘தேவேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————–
- ஓம்தேவப்ருத்குரவேநம:
தேவான் அனைத்து தேவர்களையும்
பிபர்தீதி பாதுகாப்பதால்
தேவப்ருத் ஶக்ர: ‘ஶக்ரனான’ இந்திரன் ‘தேவப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.
தஸ்யாபி அந்த இந்திரனையும்
ஶாஸிதேதி கட்டளையிட்டு வழிநடுத்தவதால்
தேவப்ருத்குரு: பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தேவர்களைப் பாதுகாக்கும் இந்திரன் ‘தேவப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். அந்த இந்திரனையும் ஒரு குருவைப்போல கட்டளையிட்டு, வழிநடுத்துவதால் பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவானே தேவகுரு ப்ருஹஸ்பதியின் வடிவில் இந்திரனை வழிநடத்துகிறார் என்றும் கொள்ளலாம்
தேவானாம் தேவர்களைக் பரனாத் தாங்குகிறார் (காக்கிறார்)
ஸர்வவித்யானாம் ச அனைத்து வித்தைகளையும்
நிகரணாத்வா அறிந்துள்ளார் ஆதலால்
தேவப்ருத்குரு: பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் தேவர்களைக் காக்கிறார் (தேவப்ருத்) . மற்றும் அனைத்து வித்தைகளையும் அறிந்துள்ளார் (குரு). எனவே அவர் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நிகரணாத் என்றால் விழுங்குதல் குடித்தல் என்று பொருள். இங்கு அனைத்து வித்தைகளையும் கரைத்துக் குடித்தவர் என்று பொருள் கொள்ளலாம்.
—————-
- உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |
ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||
இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |
- ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: ||
—————–
- ஓம்உத்தராயநம:
ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்
பந்தனாத் தளைகளிலிருந்து
உத்தரதி (நம்மை) விடுவிக்கிறார்
இதி உத்தர: எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் தளைகளிலிருந்து (நம்மை) விடுவிக்கிறார். எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வ அனைவரைக் காட்டிலும்
உத்க்ருஶ்ட மேலானவராதலால்
இதி வா உத்தர: பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரைக்காட்டிலும் மேலானவராதலால், பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘விஶ்வஸ்மாதிந்த்ர உத்தர:’
அனைவரைக் காட்டிலும் பரம்பொருள் (இந்த்ர) உயர்ந்தவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
இங்கு இந்த்ர என்ற பதம் பரம்பொருளான பரமாத்மாவையே குறிக்கிறது. தேவர்களின் தலைவரான இந்திரனை அல்ல.
————–
- ஓம்கோபதயேநம:
கவாம் ஆவினங்களை
பாலனாத் காப்பவராக (பசுக்களை மேய்ப்பவராக)
கோபவேஶதரோ இடையனாக (ஆயர்குலத்தவராக) தோன்றியதால்
கோபதி: பகவான் (கிருஷ்ணர்) ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது கிருஷ்ணாவதாரத்தில் ஆவினங்களை காப்பவராக, இடையனாக தோன்றியதால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கௌர்மஹீ: பூமாதேவியே ‘கௌ’ என்றும் அழைப்பர்
தஸ்யா: பதித்வாத்வா அவரின் (பூமாதேவியின்) கணவரானபடியால்
கோபதி: பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, ‘கௌ’ என்று அழைக்கப்படும் பூமாதேவியின் கணவரானபடியால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்கோப்த்ரேநம:
ஸமஸ்தபூதாநி அனைத்து உயிரினங்களையும்
பாலயன் காக்கிறார்
ரக்ஷகோ ஜகத: இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் காக்கிறார்
இதி கோப்தா எனவே, பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் காக்கிறார். எனவே பகவான் ‘கோப்தா’ என்று திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம்ஞானகம்யாயநம:
ந கர்மணா வெறுமனே கடமைகளை ஆற்றுவதால் அல்ல
ந ஞானகர்மப்யாம் ஞானமும், செயலும் கலந்து செயல்படுவதால் அல்ல
வா கம்யதே அவரை (பகவானை) அடைவது
கிந்து ஆயினும்
ஞானேன (வேதங்கள், உபநிடதங்கள், அற நூல்களின் மூலம் பெறப்படும்) அறிவினால்
கம்யதே அவர் அடையப்படுகிறார்
இதி வா ஞானகம்ய: எனவே, பகவான் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கடமைகளை ஆற்றுவதாலோ, ஞானமும், கர்மமும் கலந்து செயல்படுவதாலோ அடையமுடியாதவர் (அறியப்பட முடியாதவர்) பகவான். ஆயினும், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் அறநூல்கள் மூலம் பெறப்படும் தூய அறிவால் பகவானை அறியவும், அடையவும் முடியும். எனவே, அவர் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்புராதனாயநம:
காலேன காலத்தால்
அபரிச்சின்னத்வாத் வரையறுக்கப்படாதவர், ஆதலால்
புராபி (அனைவருக்கும்) மிகவும் முற்பட்ட காலத்திலிருந்தே
பவதீதி இருப்பவர்
புராதன: பகவான் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் காலம் என்னும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டவர். காலத்தால் வரையறுக்கப்படாதவர். எனவே, அவர் அனைவருக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே (எவரும் தோன்றும் முன்னரே) இருப்பவர். எனவே அவர் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்ஶரீரபூதப்ருதேநம:
ஶரீர (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) உடலை
ஆரம்பக தோற்றுவிக்கும்
பூதானம் (நீர், நிலம், நெருப்பு போன்ற) பூதங்களை
பரணாத் தாங்குகிறார்
ப்ராணரூபதர: (அவற்றின்) உயிராக இருந்து
ஶரீரபூதப்ருத் எனவே, பகவான் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு உயிரினத்தின் உடலும் பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களால் ஆனது. அந்த பஞ்சபூதம் முதலிய தத்துவங்களையும் அவற்றின் உயிராக இருந்து பகவான் தாங்குகிறார். எனவே அவர் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்போக்த்ரேநம:
பாலகத்வாத் (அனைவரையும்) காப்பாற்றுவதால்
போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஸ்ரீமன் நாராயணன் காக்கும் கடவுளாவார். அனைவரையும் காப்பாற்றுவதால் அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரமானந்த உயரிய ஆனந்தத்தை
ஸந்தோஹ அளவிடமுடியாத
ஸம்போகாத்வா அனுபவிப்பவராதலால்
போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் எப்பொழுதும் உயர்ந்த, அளவிடமுடியாத ஆனந்தத்தை இடைவிடாது அனுபவிக்கிறார். எனவே அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி நாம்னாம் பஞ்சமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (போக்தா என்னும் இந்த திருநாமம் வரையில்) ஐநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
———-
- ஓம்கபீந்த்ராயநம:
கபிஸ்சாஸா(வ்) கபி அதாவது பன்றியின் உருவத்துடன் இருப்பதோடு
இந்த்ரஸ்சேதி இந்திரனாகவும் (அதாவது சிறந்தவராகவும்) இருப்பதால்
கபிர்வராஹ: ‘கபி’ என்றால் வராஹம் அதாவது பன்றி
வாராஹம் அந்த பன்றியின்
வபுராஸ்தித: (ஹிரண்யாக்ஷனைக் கொல்ல வராஹ அவதாரம் எடுத்த பொழுது) உடலைத் தாங்கியவராதலால்
கபீந்த்ர: பகவான் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொல்ல பன்றியின் உருவத்தில் (கபி) அவதரித்தார். இவ்வாறு கபியாகவும் (பன்றியின் வடிவோடு அவதரித்தவரும்) இந்த்ரனாகவும் (அனைவரைக் காட்டிலும் சிறந்தவராகவும்) இருப்பதால் பகவான் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கபீனாம் ‘கபி’ அதாவது வாநரானாம் குரங்குகளின்
இந்த்ர: (சேனைக்குத்) தலைவராக இருந்ததால்
கபீந்த்ர: ராகவோ வா பகவான் ஸ்ரீராமர் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது இராமாவதாரத்தின் பொழுது ‘கபி’ அதாவது குரங்குகளின் சேனைக்குத் தலைவராக இருந்தபடியால் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம்பூரிதக்ஷிணாயநம:
பூரய: பஹ்வய: ‘பூரய:’ என்றால் நிறைய
யக்ஞதக்ஷிணா: வேள்வியின் காணிக்கைகள்
தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு
தர்ஶயதோ அளிக்கின்றனர்
யக்ஞம் குர்வதோ வேள்விகளை புரியும் பொழுது
வித்யந்த இதி முடிவில்
பூரிதக்ஷிண: எனவே பகவான் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு புரியப்படும் வேள்விகளின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை பகவானுக்கு (அவரின் ப்ரதியான வேள்வியை புரியும் அந்தணர்களுக்கு) அளிக்கின்றனர். எனவே, பகவான் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த திருநாமத்திற்கு மாற்று உரையாக “பகவான் தாமே அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு பற்பல வேள்விகளை புரிந்து, அவற்றின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை மற்றவருக்கு வழங்கினார். எனவே, அவர் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.
————-
- ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |
வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||
இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |
- வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||
——————
- ஓம்ஸோமபாயநம:
ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்
பந்தனாத் ஸோமம் பிபதி ‘ஸோமரஸத்தை’ பருகுகிறார்
ஸர்வயக்ஞேஶு அனைத்து வேள்விகளிலும்
யஶ்டவ்ய (அந்தந்த வேள்விகளால்) வழிபடப்படும்
தேவதாரூபேணேதி தெய்வங்களின் வடிவாக
ஸோமப: எனவே பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து வேள்விகளிலும், அந்த வேள்விகளால் வழிபடப்படும் தெய்வங்கள் (தேவதைகளின்) வடிவில் பகவானே ஸோமரஸத்தைப் பருகுகிறார். எனவே, அவர் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு
தர்ஶயன் (வேள்விகளில்) தோன்றும்
யஜமானரூபேண வா (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால்
ஸோமப: பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால், பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்அம்ருதபாயநம:
ஸ்வாத்மாம்ருதரஸம் தனது ஆத்மானந்தமாகிய அமுதத்தை
பிபன் (எப்பொழுதும்) பருகுபவராகையால்
அம்ருதப: பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது ஆத்ம ஆனந்தத்திலேயே பகவான் எப்பொழுதும் திளைக்கிறார். அந்த ஆத்மானந்தமாகிய அமுதத்தை எப்பொழுதும் பருகுகிறார். எனவே அவர் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அஸுரை: அஸுரர்களால்
ஹ்ரியமானம் கவரப்பட்ட
அம்ருதம் அமுதத்தை
ரக்ஷித்வா (அந்த அஸுரர்கள் அதை பருகிவிடாது) காத்து
தேவான் தேவர்களுக்கு
பாயயித்வா அந்த அமுதத்தை வழங்கி
ஸ்வயமப்ய பின்னர் தானும்
பிபதிதி வா பருகியதால்
அம்ருதப: பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, (பாற்கடலை கடையும் பொழுது) அஸுரர்களால் கவரப்பட்ட அமுதத்தைக் காத்து, அதை தேவர்களுக்கு அளித்து, பின்பு தானும் அந்த அமுதத்தைப் பருகியதால் பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மோஹினி அவதார சரித்திரம்: துர்வாஸர் தான் அளித்த மஹாலக்ஷ்மியின் மாலையை அவமதித்த இந்திரனுக்கும் (தேவர்களுக்கும்) நரை மற்றும் மூப்பு உண்டாகுமாறு சாபம் அளிக்கிறார். இதனால் அஸுரர்கள், தேவர்களைத் தோற்கடித்து ஸ்வர்கத்தை கைப்பற்றினர். பகவானின் ஆணையின் படி அஸுரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வந்தவுடன் அஸுரர்கள் அதைத் அபகரித்துச் சென்றனர். நரை, மூப்புடன் கூடிய தேவர்களால் அவர்களை எதிர்க்க இயலவில்லை. அவர்களின் நிலையை உணர்ந்த பகவான் ஒரு அழகிய பெண்ணின் வடிவைத் தாங்கி அஸுரர்களிடம் சென்று தானே அமுதத்தை பகிர்ந்து அளிப்பதாய் கூறுகிறார். அவரது அழகில் மயங்கிய அஸுரர்கள் அவரிடமே அந்த அமுதத்தை அளித்து அதைப் பகிர்ந்தளிக்கும் படி வேண்டினர். அஸுரர்கள் தம் அழகில் மயங்கி இருக்கும் வேளையில், பகவான் அனைத்து அழுத்தத்தையும் தேவர்களுக்கே பகிர்ந்து அளித்து, தானும் உண்டார்.
மேலும், தேவர்களைப் போல உருவம் தாங்கி தேவர்களின் வரிசையில் வந்த ஸ்வர்பானு என்ற அஸுரனை, சந்திரனும், சூரியனும் கைகாட்ட, தமது அகப்பையால் அவனது தலையைக் கிள்ளி அவனை ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்களாக மாற்றினார்.
————-
- ஓம்ஸோமாயநம:
ஸோம ரூபேண திங்களின் வடிவில்
ஒளஶதி செடி, கொடி மற்றும் மூலிகைகளை
போஶயன் அவற்றை வளர்த்துப் பாதுகாப்பதால்
ஸோம: பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் திங்களின் (வெண்மதியின்) வடிவில் செடி, கொடிகள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பாதுகாக்கிறார். எனவே அவர் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உமயா பார்வதியோடு
ஸஹித கூடிய
ஶிவோ வா பகவான் பரமசிவனாய் (பரமசிவனின் வடிவினராய்) இருப்பதால்
ஸோம: பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பார்வதியோடு கூடிய பரமசிவனின் வடிவினராய் இருப்பதால் பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ+உமா = ஸோம
‘ஓம் நம: ஸோமாய ச ருத்ராய ச…’ (ஶத ருத்ரீயம் எட்டாம் அனுவாகம்)
————
- ஓம்புருஜிதேநம:
புரூன் பஹூன் ‘புரு’ அதாவது பற்பலரை
ஜயதீதி வெற்றி கொண்டவராகையால்
புருஜித் பகவான் ‘புருஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பற்பலரை (‘புரு’) வெற்றி கொண்டவராகையால் பகவான் ‘புருஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————-
- ஓம்புருஸத்தமாயநம:
விஶ்வரூபத்வாத் புரு: இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘புரு’ என்றழைக்கப்படுகிறார்.
உத்க்ருஶ்டத்வாத் ஸத்தம: அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் அவர் ‘ஸத்தம:’ என்றும் அழைக்கப்படுகிறார்.
புருஶ்ஸ்வாஸௌ ‘புரு’ வாகவும்
ஸத்தமஸ்சேதி ‘ஸத்தம’ மானவராயும் இருப்பதால்
புருஸத்தம: பகவான் ‘புருஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘புரு’ என்றழைக்கப்படுகிறார். அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் ‘ஸத்தம:’ என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ப்ரபஞ்ச வடிவில் புருவாகவும், அனைவரைக் காட்டிலும் சிறந்தவரான ‘ஸத்தம:’ மானவராயும் இருப்பதால் பகவான் ‘புருஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————-
- ஓம்விநயாயநம:
விநயம் தண்டம் ‘விநயம்’ என்றால் தண்டனையைக் குறிக்கும்
கரோதி அளிக்கிறார் (செய்விக்கிறார்)
துஶ்டாநாமிதி தீயோருக்கு
வினய: எனவே பகவான் ‘வினய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அறத்தினின்று பிழறும் தீயோருக்கு தண்டனை (விநயம்) அளிக்கிறார். எனவே அவர் ‘வினய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வினய என்ற சொல்லிற்கு திருத்துவது என்று ஒரு பொருள். இங்கு ஆச்சார்யாள் அந்தப் பொருளில் உரை அளித்துள்ளார். தண்டனை அளிப்பதன் மூலம் பகவான் தீயோரையும் திருத்துகிறார்.
—————-
- ஓம்ஜயாயநம:
ஸமஸ்தானி அனைத்து
பூதாநி ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்)
ஜயதீதி வெற்றி கொள்கிறார்
ஜய: எனவே பகவான் ‘ஜய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) வெற்றி கொள்கிறார். எனவே பகவான் ‘ஜய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம்ஸத்யஸந்தாயநம:
ஸத்யா உண்மையானது (என்றும் தவறுவதில்லை)
ஸந்தா ஸங்கல்ப: ‘ஸந்தா’ அதாவது அவரின் எண்ணங்கள் (அல்லது விருப்பங்கள்)
அஸ்யேதி ஸத்யஸந்த: எனவே பகவான் ‘ஸத்யஸந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் என்றும் உண்மையானவை (அவை என்றும் தவறுவதில்லை). எனவே அவர் ‘ஸத்யஸந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸத்யஸங்கல்ப:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.1.5)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவானின்) எண்ணங்கள் என்றும் ஈடேறப்பெறுபவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————-
- ஓம்தாஶார்ஹாயநம:
தாஶோ தானம் ‘தாஶ’ என்ற சொல்லிற்கு தானம் என்று பொருள்
தமர்ஹதீதி அதற்குத் (தானங்களை ஏற்பதற்கு) தகுதி உடையவராதலால்
தாஶார்ஹ: பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தானத்தை ‘தாஶ’ என்றழைப்பர். அனைத்து தானங்களையும் ஏற்கும் தகுதி (அருகதை) உடையவராதலால் பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தஶார்ஹகுல ‘தஶார்ஹ’ குலத்தில்
உத்பவத்வாத்வா உதித்தவராகையால்
தாஶார்ஹ: பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தமது கிருஷ்ணாவதாரத்தில் ‘தஶார்ஹ’ குலத்தில் உதித்தார். எனவே அவர் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம்ஸாத்வதாம்பதயேநம:
ஸாத்வதம் நாம தந்த்ரம் ‘ஸாத்வத’ என்று ஒரு தந்திரம் உள்ளது ‘தத்கரோதி ததாசஶ்டே’ (அந்த ஸாத்வத தந்திரத்தை) படைத்தவர்கள் அல்லது அதற்கு உரை (வ்யாக்யானம்) எழுதியவர்கள் என்ற பொருளில்
இதி ணிசி க்ருதே ‘ஸாத்வதம்’ என்ற வார்த்தையோடு ‘ணிசி’ யும்
க்விப்ப்ரத்யயே ‘க்விப்’ விகுதியும் சேர்ந்து
ணிலோபே ச ‘ணி’ என்ற விகுதியை விடுக்கும் பொழுது
க்ருதே பதம் ஸாத்வத் ‘ஸாத்வத்’ என்ற பதம் பிறக்கிறது.
தேஶாம் பதி: அத்தகைய (ஸாத்வத தந்திரத்தை உருவாக்கிய, அதற்கு உரை எழுதிய) ஸாத்வதர்களின் தலைவராக
யோகக்ஷேமகர இதி அவர்களுக்கு யோகத்தையும் (இல்லாததை அளித்தும்), க்ஷேமத்தையும் (உள்ளவற்றைக் காத்தும்) அளித்து அவர்களை காத்து வழிநடத்துவதால்
ஸாத்வதாம் பதி: பகவான் ‘ஸாத்வதாம் பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸாத்வதம் என்ற பெயருடைய ஒரு தந்திரம் உள்ளது (தந்திரம் என்பது ஆகமம், ஸாஸ்த்ரம் போன்ற ஒரு வழிமுறையாகும். பொதுவாக, உருவ வழிபாடு மற்றும் திருக்கோயில்களை நிர்மாணித்தல் போன்றவை இவற்றில் விளக்கப்பட்டுள்ளது). அவற்றை உருவாக்கியவர்கள் மற்றும் அவற்றின் உரை ஆசிரியர்கள் ‘ஸாத்வதர்கள்’ என்று அழைக்கப்படுவர். அத்தகைய ஸாத்வதர்களின் பதியாக (தலைவராக) அவர்களுக்கு இல்லாதவற்றை அளித்தும் (யோகம்), இருப்பவற்றைக் காத்தும் (க்ஷேமம்) அவர்களை காத்து வழிநடத்துவதால் பகவான் ‘ஸாத்வதாம் பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மேலும் ஆச்சார்யாள் ‘ஸாத்வத’ என்ற பதத்திலிருந்து ‘ஸாத்வத்’ என்ற பதம் எவ்வாறு பிறக்கிறது என்பதற்கு இலக்கண விதிமுறைகளையும் விளக்கியுள்ளார்.
————
- ஜீவோ வினயிதாஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம:|
அம்போநிதிரனந்தாத்மா மஹோததிஶயோSந்தக: ||
இந்த ஐம்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஜீவ, 514. வினயிதாஸாக்ஷீ, 515. முகுந்த:, 516. அமிதவிக்ரம:|
- அம்போநிதி:, 518. அனந்தாத்மா, 519. மஹோததிஶய:, 520. அந்தக: ||
—————
- ஜீவாயநம:
ப்ராணான் ‘ப்ராணனை’ (உயிரை, உயிர்மூச்சை)
க்ஷேத்ரஞ்ஞ ரூபேண அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் ‘க்ஷேத்ரஞ்ஞராய்’
தாரயன் தாங்குவதால்
ஜீவ உச்யதே பகவான் ‘ஜீவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் ‘க்ஷேத்ரஞ்ஞராய்’ அவற்றின் (அந்த ஜீவராசிகளின்) ‘ப்ராணனை’ (உயிரை, உயிர்மூச்சை) தாங்குவதால் பகவான் ‘ஜீவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- வினயிதாஸாக்ஷிணேநம:
வினயித்வம் வினயிதா ‘வினயிதா’ என்றால் பணிவு என்று பொருள்
தாம் ச ஸாக்ஷாத் தானே நேரடியாக
பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்)
ப்ரஜானாமிதி அனைத்து உயிரினங்களிடமும்
வினயிதாஸாக்ஷி எனவே பகவான் ‘வினயிதாஸாக்ஷி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் (அவற்றுக்கு தம்மிடம்) உள்ள பணிவை தானே நேரடியாக அறிகிறார். எனவே அவர் ‘வினயிதாஸாக்ஷி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அதவா அல்லது
நயதேர்கதிவாசினோ ‘கதி’ அதாவது நடையை (செல்லும் வழியை) குறிக்கும் “நீ” என்ற வேர்ச்சொல்லிற்கு
ரூபம் வினயிதா வினயிதா என்று ஒரு வடிவம் உண்டு,
அஸாக்ஷி அஸாக்ஷாத்த்ருஶ்டா ‘அஸாக்ஷி’ அதாவது எதையும் பார்க்காதவர்
ஆத்மாதிரிக்தம் ஆத்மாவைத் தவிர மற்றொரு
வஸ்து ந பஶ்யதீத்யர்த்த: பொருளைக் காணாதவர் என்று பொருள். இவ்வாறு வழிநடத்துபவர் (வினயிதா), மற்றும் ஆத்மாவைத் தவிர்த்து மற்றொரு பொருளைக் காண்பதவர் (அஸாக்ஷி) என்று இரு திருநாமங்களாகக் கொள்ளலாம்.
அல்லது, ‘கதி’ அதாவது வழி என்ற பொருளில் ‘வினயிதா’ என்ற திருநாமத்தாலும், ஆத்மாவைத்தவிர மற்றொருப் பொருளைப் பார்க்காதவர் என்ற பொருளில் ‘அஸாக்ஷி’ என்ற திருநாமத்தாலும் பகவான் அழைக்கப்படுகிறார் (என்றும் பொருள் கொள்ளலாம்).
இங்கு, இரண்டு திருநாமங்களாக ஆச்சார்யாள் உரை அளித்திருந்தாலும், தனது ஸஹஸ்ரநாம கணக்கில் இதை ஒரே திருநாமமாகத் தான் கணக்கிட்டுள்ளார். ஆகவே, முதல் உரையையே பிரதானமாகக் கொள்ளவேண்டும்.
————
- முகுந்தாயநம:
முக்திம் மோக்ஷத்தை
ததாதி இதி அளிப்பதால்
முகுந்த: பகவான் ‘முகுந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் ‘ப்ருஶோதரா’ வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும்.
அக்ஷரஸாம்யான்நிருக்திவசனாத் எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும்
நைருக்தானாம் நிருக்திகாரர்கள் பகவானை
முகுந்த இதி நிருக்த: முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.
முக்தியை அளிப்பதால் பகவான் ‘முகுந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ருஸோதரா வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும். எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும் நிருக்திகாரர்கள் பகவானை முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.
நிருக்தி: வேதாங்கங்கள் ஆறினுள் ஒன்று. இந்த வேதாங்கம், வெவ்வேறு வார்த்தைகளின் சேர்க்கைகளையும், அவை உருவான விதத்தையும் விளக்குவதாகும்.
————–
- அமிதவிக்ரமாயநம:
அமிதா அபரிச்சின்னா ‘அமித’ அதாவது அளவிடமுடியாத
விக்ரமாஸ்வய: பாதவிக்ஷேபா விக்ரம அதாவது மூன்றடிகளைக் கொண்டவர்
அஸ்ய அமிதவிக்ரம: எனவே, பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் மூன்றடிகள் அளவிடமுடியாதவை. எனவே, அவர் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமிதம் அளவிடமுடியாத
விக்ரமணம் ஶௌர்யமஸ்யேதி வா பராக்ரமம் (பலம், சூரத்தனம்) உடையவராதலால்
அமிதவிக்ரம: எனவே, பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அளவிடமுடியாத பராக்ரமம் உடையவராதலால் பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முதல் பொருளில் விக்ரம என்பதை ‘நடை’ அல்லது ‘அடிகள்’ என்றும், இரண்டாவது பொருளில் விக்ரம என்றால் பராக்ரமம் என்றும் பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யாள்.
————-
- அம்போநிதயேநம:
அம்பாம்ஸி ‘அம்ப’ அதாவது
தேவாதயோSஸ்மின்னிதீயந்த தேவர்களும், மற்றோரும் பகவானுக்குள் வசிப்பதால்
இதி அம்போநிதி: பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்குள் ‘அம்ப’ என்றழைக்கப்படும் தேவர்களும், மற்றவர்களும் வசிக்கின்றனர். எனவே, அவர் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘தானி வா ஏதானி சத்வார்யம்பாஸி | தேவா மனுஶ்யா பிதரோSஸுரா:’
இங்கு நால்வகைப்பட்டோர் ‘அம்பர்கள்’ என்றழைக்கப்படுகின்றன. தேவர்கள், மானிடர்கள், பித்ருக்கள் மற்றும் அஸுரர்கள்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ஸாகரோ வா கடலின் வடிவாக இருப்பதால்
அம்போநிதி: பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, கடலின் வடிவாக இருப்பதால் பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸரஸாஸ்மி ஸாகர:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.24)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: நீர்நிலைகளில் நான் கடல்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
————-
- அனந்தாத்மனேநம:
தேஶத: இடம்
காலதோ காலம்
வஸ்துஸ்ச பொருள் (உருவம் முதலியன) போன்ற
அபரிச்சின்னத்வாத் எல்லைகள் அற்றவராதலால்
அனந்தாத்மா பகவான் ‘அனந்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இடம், காலம், பொருள் போன்ற எல்லைகள் அற்றவராதலால் (இவற்றால் கட்டுப்படுத்த இயலாதவர் ஆதலால்) பகவான் ‘அனந்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எந்த ஒரு ஜீவனும் இந்த மூன்றினால் கட்டுப்பட்டுள்ளவர். ஒரு இடத்தில் இருப்போர் மற்றொரு இடத்தில் இருப்பதில்லை. ஒரு காலகட்டத்தில் இருப்பவர் என்றும், எக்காலத்திலும் இருப்பதில்லை (இது ப்ரஹமா முதலான தேவர்களுக்கும் பொருந்தும்). ஒரு உருவில், ஒரு பொருளாய் இருப்பவர் மற்றொரு பொருளாய், மற்றொரு உருவத்தில் இருப்பதில்லை. பகவானுக்கு இத்தகைய எல்லைகள் இல்லை. அவர் எல்லாவிடத்திலும், எக்காலத்திலும், எல்லாமுமாய் இருப்பவர் என்பதையே இந்த திருநாமம் குறிக்கிறது.
————–
- மஹோததிஶயாயநம:
ஸம்ஹ்ருத்ய (ப்ரளய காலத்தில்) அழித்து
ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும்
ஏகார்ணவம் ஜகத்க்ருத்வா இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் நீர்மயமாகும்படி செய்து
அதிஶேதே அதன் மீது பள்ளிகொண்டுள்ளார்
மஹோததி மிகப் பெரியதானதொரு கடலில்
மஹோததிஶய: எனவே பகவான் ‘மஹோததிஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களையும் அழித்து இந்தப் ப்ரபஞ்சத்தை நீர்மயமாகும்படி செய்கிறார். அந்த மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடலில் பள்ளிகொண்டு அருள்கிறார். எனவே அவர் ‘மஹோததிஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹோததி = மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடல் + ஶயதி – பள்ளி கொள்ளுதல் = மஹோததிஶய:
————-
- அந்தகாயநம:
அந்தம் கரோதி முடிப்பதனால் (அழிப்பதனால்)
பூதாநாமிதி அனைத்து உயிரினங்களையும்
அந்தக: பகவான் ‘அந்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘தத்கரோதி ததாசஶ்டே’ (சுராதிகணவார்த்திகம்) இதி ணிசி இந்த வார்த்திக ஸூத்ரத்தின் படி ‘ணி’ விகுதி (அந்த என்ற பதத்தோடு) சேர்கிறது.
‘ண்வுல்த்ருசௌ’ (பாணினி ஸூத்ரம் 3.1.133) இதி
‘யுவாரநாகௌ’ (பாணினி ஸூத்ரம் 7.1.1) இதி அகாதேஶ: இந்த பாணினி ஸூத்ர விதிகளின்படி ‘அந்த’ என்ற பதத்தோடு ‘அக’ என்ற விகுதி சேர்ந்து ‘அந்தக:’ என்ற சொல் உருவாகிறது.
(அவரவரது கால முடிவிலும், ப்ரளயத்தின் பொழுதும்) அனைத்து உயிரினங்களையும் முடிப்பதால் (அழிப்பதால்) பகவான் ‘அந்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆச்சார்யாள் வார்த்திகம் மற்றும் பாணினி ஸூத்ரங்களின் படி ‘அந்தக:’ என்ற சொல் எவ்வாறு உருவாகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.
—————-
- அஜோ மஹார்ஹ: ஸ்வபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |
ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||
இந்த ஐம்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- அஜ:, 522. மஹார்ஹ:, 523. ஸ்வாபாவ்ய:, 524. ஜிதாமித்ர:, 525. ப்ரமோதன: |
- ஆனந்த:, 527. நந்தன:, 528. நந்த:, 529. ஸத்யதர்மா, 530. த்ரிவிக்ரம: ||
—————
- ஓம் அஜாய நம:
ஆத் அகரத்தினால் (அ என்னும் எழுத்தால்) குறிக்கப்படும்
விஶ்ணோரஜாயத பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால்
காம: மன்மதன்
அஜ: ‘அஜ’ என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அகரத்தினால் குறிக்கப்படும் பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால் மன்மதன் ‘அஜ’ என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரமசிவனாரின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் தன் உடலை இழக்கிறான். பின்னர் பகவான் கண்ணனாக அவதரித்தபொழுது பகவானுக்கும் ருக்மிணி பிராட்டியருக்கும் மகனாக ப்ரத்யும்னன் என்ற பெயரோடு பிறந்தான். பின்னர் மயாசுரனை அழித்து ரதியை மணந்தான். எனவே, மன்மதன் பகவானின் பிள்ளையாவான்.
“காமனைப் பயந்த காளை” (திருவாய்மொழி 10.2.8)
————–
- ஓம் மஹார்ஹாய நம:
மஹ: பூஜா ‘மஹ’ என்றால் பூஜை (வழிபாடு) என்று பொருள்
தத் அர்ஹத்வாத் அதற்குத் தகுதியுடையவராதலால்
மஹார்ஹ: பகவான் ‘மஹார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹ என்றால் பூஜை (வழிபாடு). அர்ஹ என்றால் அருகதை உள்ளவர். பகவான் எவ்விதமான பூஜையையும் (வழிபாட்டையும்) ஏற்பதற்குத் தகுதி (அருகதை) படைத்தவர். எனவே, அவர் ‘மஹார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒரு யானை எளிய தாமரையை ஏந்தி ‘ஆதிமூலமே’ என்று அலறிய பொழுது பகவான் ஓடி வந்து அதை ஏற்றுக்கொண்டார். ஒரு யானையின் எளிய பூவை ஏற்ற அவரே, யுதிஷ்டிரனின் ராஜஸூய யாகத்தில் ‘அக்ர’ பூஜையையும் ஏற்றார். இராமாவதாரத்தில் குகனின் அன்புக்கும், சபரியின் பக்திக்கும், அனுமனின் தொண்டிற்கும் கட்டுப்பட்டார். கிருஷ்ணாவதாரத்தில் ஒரே நேரத்தில் ஒரு அரசனின் ராஜபோக உபசரிப்பையும், ஒரு ஏழை அந்தணன் அன்று இரந்து பெற்ற பழங்களையும் ஏற்று, இருவருக்கும் அருள் புரிந்தார். வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளின் அளிக்கும் சிறந்த பூஜையை ஏற்கும் அவரே, ஆய்ச்சிகளின் எளிய அன்பிற்கும் வெண்ணைக்கும் கட்டுப்படுகிறார். எனவே, பகவான் எத்தகைய பூஜையையும் ஏற்கத் தகுதி படைத்தவராவார். பகவத்கீதையில் பகவான் கூறியபடி “ஒரு இலையோ (துளசி), பூவோ, பழமோ அல்லது தண்ணீரோ பக்தியோடு அளித்தால் அதை மிகச்சிறந்த பூஜையாக பகவான் ஏற்கிறார்”.
———–
- ஓம் ஸ்வாபாவ்யாய நம:
ஸ்வபாவேந ஏவ இயற்கையாகவே
அபாவ்யோ உருவாவதில்லை (பிறப்பதில்லை)
நித்யநிஶ்பன்னரூபத்வாத் என்றும் நிறைவுடையவராக இருப்பதால்
இதி ஸ்வாபாவ்ய: எனவே பகவான் ‘ஸ்வாபாவ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றுமே இயற்கையாகவே நிறைவுடையவர் (நிறைவானவர்). எனவே அவர் என்றும் உருவாவதில்லை (பிறப்பதில்லை). எனவே பகவான் ‘ஸ்வாபாவ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அபாவ்ய: என்றால் மாறுபாடற்றவர் என்றும் ஒரு பொருள் உள்ளது.
———-
- ஓம் ஜிதாமித்ராய நம:
ஜிதா வெல்கிறார்
அமித்ரா பகைவர்களை
அந்தர்வர்தினோ உட்பகைவர்களையும்
ராகத்வேஶாதயோ விருப்பு வெறுப்புக்கள் போன்ற
பாஹ்யாஸ்ச புறப்பகைவர்களையும்
ராவணகும்பகர்ணஶிஶுபாலாதயோ இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்ற
யேனாஸௌ ஜிதாமித்ர: எனவே பகவான் ‘ஜிதாமித்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் உட்பகைவர்களான விருப்பு, வெறுப்புகளையும், புறப்பகைவர்களான இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்றோரையும் (எளிதில்) வெல்கிறார். எனவே அவர் ‘ஜிதாமித்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம் ப்ரமோதனாய நம:
ஸ்வாத்மாம்ருதரஸா தனது இயற்கை ஸ்வரூபமான அம்ருதத்தை
ஸ்வாதான்னித்யம் தினமும் சுவைத்து
ப்ரமோததே இன்புறுகிறார்
ப்ரமோதன: எனவே, பகவான் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது இயற்கையான ஸ்வரூப அம்ருதத்தை தினமும் சுவைத்து இன்புறுகிறார். எனவே அவர் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்யாயினாம் தன்னை த்யானிப்பவர்களை
த்யானமாத்ரேன (தன்னை) த்யானித்த அக்கணமே
ப்ரமோதம் கரோதீதிவா மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்)
ப்ரமோதன: பகவான் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னை த்யானிப்பவர்களை அவர்கள் (தன்னை) த்யானித்த அக்கணமே மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்), ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம் ஆனந்தாய நம:
ஆனந்த: இன்பத்தை
ஸ்வரூபமஸ்யேதி தனது இயற்கையாக உடையவர்
ஆனந்த: பகவான் ‘ஆனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் இன்பமே தனது இயற்கை வடிவாக உடையவர். எனவே அவர் ‘ஆனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதானி மாத்ராமுபஜீவந்தி’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.32)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்தின்) ஆனந்தத்தின் ஒரு துளி அளவிலேயே ஏனைய ஜீவன்கள் உயிர்வாழ்கின்றன.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
- ஓம் நந்தனாய நம:
நந்தயதீதி (அனைவரையும்) மகிழ்விப்பதால்
நந்தன: பகவான் ‘நந்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரையும் மகிழ்விப்பதால் பகவான் ‘நந்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம் நந்தாய (அனந்தாய) நம:
ஸர்வாபிருபபத்திபி: அனைத்தும் அடையபெற்றிருக்கிறார்
ஸம்ருத்தோ முழுமையாக
நந்த: எனவே பகவான் ‘நந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்தும் (அனைத்து சித்திகளும்) முழுமையாக அடையப்பெற்றிருக்கிறார். எனவே அவர் ‘நந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த பூமியில் பிறந்தோரும் சித்திகள் அடையப்பெற்றிருக்கலாம். ஆனால் பகவான் அனைத்தையும் பூரணமாக அடையப்பெற்றுள்ளார்; அவற்றை இயற்கையாகவே அடையப்பெற்றுள்ளார்.
ஸுகம் வைஶயிகம் விஷய சுகங்கள் (புலனின்பங்கள்)
நாஸ்ய வித்யத இதி அவருக்கு இல்லை
அனந்த: எனவே பகவான் ‘அனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் நம்மை போன்று விஷய சுகத்தை அனுபவிப்பதில்லை. எனவே அவர் ‘அனந்த:’ (இன்பமில்லாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘யோ வை பூமா தத் ஸுகம் நால்பே ஸுகமஸ்தி’ (சாந்தோக்ய உபநிஶத் 23.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எது முழுமையானதோ அதுவே சிறந்த இன்பமாகும். மற்ற (விஷயசுகங்கள் போன்ற) தாழ்ந்த இன்பங்கள் இன்பங்களாகா.
ஆச்சார்யாள் இந்த திருநாமத்தை ‘நந்த:’ (இன்பத்தை அனுபவிப்பவர்) மற்றும் ‘அனந்த:’ (இன்பத்தை அனுபவிக்காதவர்) என்று இரண்டு வகையாகப் பிரித்துப் பொருளுரைத்திருக்கிறார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் ‘நந்த:’ என்ற திருநாமமே ப்ரதானமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.
———–
- ஓம் ஸத்யதர்மணே நம:
ஸத்யா உண்மையான தர்ம அறத்தை (உடையவர் ஆதலால்)
ஞானாதயோSஸ்யேதி ஞானம் முதலான
ஸத்யதர்மா பகவான் ‘ஸத்யதர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஞானம் முதலான அறத்தை உண்மையாக (என்றும் நிலையாக) உடையவர் ஆதலால் அவர் ‘ஸத்யதர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம் த்ரிவிக்ரமாய நம:
த்ரயோ மூன்று
விக்ரமாஸ் அடிகளால்
த்ரிஶுலோகேஶு மூன்று உலகங்களையும்
க்ராந்தா பரவினார்
யஸ்ய ஸ த்ரிவிக்ரம: எனவே பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது மூன்று அடிகளால் மூவுலகங்களையும் பரவி இருந்ததால் அவர் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘த்ரீணி பதா விசக்ரமே’ – அவர் மூன்றடிகள் நடந்தார்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
இங்கு மூன்று உலகங்கள் என்பது ‘ஜாக்ரத’ (விழிப்பு நிலை), ‘ஸ்வாபன’ (கனவு நிலை) மற்றும் ‘ஶுஶுப்தி’ (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான ‘துரீய’ நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார்.
த்ரயோ லோகா: மூவுலகங்களையும்
க்ராந்தா அளந்தார்
யேனேதி வா த்ரிவிக்ரம: எனவே பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, (வாமன அவதாரத்தில்) மூவுலகங்களையும் அளந்ததால் பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்ரிரித்யேவ த்ரயோ லோகா: கீர்த்திதா முனிஸத்தமை: |
க்ரமதே தாம்ஸ்த்ரிதா ஸர்வாஸ்த்ரிவிக்ரம இதி ஶ்ருத: || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.52)
ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் கூறப்பட்டுள்ளது: தவசீலர்கள் ‘த்ரி’ (மூன்று) என்ற பதத்தினால் மூவுலகையும் குறிப்பர். அம்மூன்று உலகங்களையும் தாங்கள் தாண்டுவதால் தாங்கள் ‘த்ரிவிக்ரமன்’ என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குகிறீர்கள்.
இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.
———-
57. மஹர்ஶி: கபிலாச்சார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்த்ரிதஶாத்யக்ஷோ மஹாஶ்ருங்க: க்ருதாந்தக்ருத் ||
இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
531. மஹர்ஶி: கபிலாசார்ய:, 532. க்ருதக்ஞ:, 533. மேதினீபதி: |
534. த்ரிபத:, 535. த்ரிதஶாத்யக்ஷ:, 536. மஹாஶ்ருங்க:, 537. க்ருதாந்தக்ருத் ||
———-
531. ஓம் மஹர்ஶயே கபிலாச்சார்யாய நம:
‘மஹர்ஶி கபிலாச்சார்ய:’ என்ற இந்த பதம்
ஸவிஶேஶணம் பகவானை (பகவானின் ஸ்ரீகபிலாவதாரத்தை) தனித்துக் குறிப்பதான
ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.
மஹாம்ஸ்சாஸாவ்ருஶிஸ்சேதி எவரொருவர் மிகச்சிறந்தவராகவும் (மஹான்) முனிவராகவும் (ரிஷி) உள்ளாரோ
மஹர்ஶி: அவரை ‘மஹரிஷி’ என்று அழைப்பர்.
க்ருத்ஸனஸ்ய முழுமையாக (பூரணமாக)
வேதஸ்ய தர்ஶனாத் வேதத்தை உணர்ந்ததால் (உணர்ந்ததாலும் அவர்கள் மஹரிஷிகள் என்று அழைக்கப்படுவர்).
அன்யே து வேதைகதேஶ (அவ்வாறு முழுமையாக வேதங்களை அறியாது) வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் அறிந்தோரை
ரிஶய: ரிஷிகள் என்று மட்டும் அழைப்பர்.
கபிலஸ்சாஸௌ ‘கபிலர்’ என்ற பெயருடனும்
ஸாங்க்யஸ்ய ஶுத்ததத்வ ‘ஸாங்க்யம்’ எனும் தூய்மையான தத்துவத்தை
விஞ்ஞானஸ்ய அறிந்தவரும்
ஆச்சார்யஸ்சேதி (அதனால்) ஆசார்யருமான
கபிலாசார்ய: பகவான் ‘கபிலாசார்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ‘கபிலர்’ என்ற பெயருடன் ஸாங்க்ய தத்துவ ஆச்சார்யராக விளங்கினார். வேதத்தை, ஒரு பகுதியை மட்டும் பயிலாது, முழுமையாக உணர்ந்ததனாலும், மிகச்சிறந்தவரானதாலும் ‘மஹர்ஶி’ என்ற அடைமொழியுடன் பகவான் ‘மஹர்ஶி கபிலச்சார்யர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இது பகவானை தனித்துக் குறிப்பதான திருநாமமாகும்.
‘ஶுத்தாத்மதத்வவிஞ்ஞானம் ஸாங்க்யமித்யபிதீயதே |’
தூய்மையான ஆத்ம தத்துவத்தை விளக்கும் அறிவிற்கு ஸாங்க்யம் என்று பெயர்.
இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
‘ரிஶி ப்ரஸூதம் கபிலம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 5.2)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ரிஷியாகப் பிறந்த கபிலர்…
இதி ஶ்ருதேஸ்ச | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
‘ஸித்தானாம் கபில முனி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.26)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சித்தர்களில் (நான்) கபில முனி
இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை) போன்ற ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
கபிலாவதார சுருக்கம்: பகவான் கர்த்தம ப்ரஜாபதிக்கும், ஸ்வயம்புவ மனுவின் மகளான தேவஹூதிக்கும் மகனாக ‘கபிலர்’ என்ற பெயருடன் தோன்றினார். தனது தாயாரான தேவஹூதிக்கு ‘ஸாங்க்ய’ யோகத்தை விளக்கினார். பகவான் கபிலாவதாரமும், அவரது போதனைகளும், அவர் பரப்பிய ஸாங்க்ய யோகமும் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் அத்யாயம் 21ல் இருந்து, அத்யாயம் 33 வரை விவரிக்கப்பட்டுள்ளது.
——–
532. ஓம் க்ருதஜ்ஞாய நம:
க்ருதம் கார்யம் ஜகத் ‘க்ருத’ அதாவது காரியமான (விளைவான) இந்தப் ப்ரபஞ்சத்தை
ஞ ஆத்மா ‘ஞ’ ஆத்மாவை குறிக்கும்
க்ருதம் ச காரியமான இந்தப் ப்ரபஞ்சமாகவும்
தஜ் ஞஸ்சேதி ஆத்மாவாகவும் இருப்பதனால்
க்ருதஜ்ஞ: பகவான் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் காரிய வடிவான இந்தப் ப்ரபஞ்சமாகவும் (க்ருத), அந்தப் ப்ரபஞ்சத்தை அறியும் ஆத்மாவாகவும் (ஞ) இருப்பதனால் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
533. ஓம் மேதினீபதயே நம:
மேதின்யா பூம்யா: ‘மேதினி’ என்றால் பூமியைக் குறிக்கும்
பதி: பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால்
மேதினீபதி: பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மேதினி என்றழைக்கப்படும் பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால் பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
534. ஓம் த்ரிபதாய நம:
த்ரீணி மூன்று
பதான்யஸ்யேதி அடிகளை உடையவராதலால்
த்ரிபத: பகவான் ‘த்ரிபத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மூன்று அடிகளை உடையவராதலால் பகவான் ‘த்ரிபத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘த்ரீணி பதா விசக்ரமே’ – அவர் மூன்றடிகள் நடந்தார்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
முன்பே கூறியிருந்தபடி, மூன்று அடிகள் என்பது ‘ஜாக்ரத’ (விழிப்பு நிலை), ‘ஸ்வாபன’ (கனவு நிலை) மற்றும் ‘ஶுஶுப்தி’ (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான ‘துரீய’ நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார். அடுத்த திருநாமத்தில் இது ஸ்பஶ்டமாக விளக்கப்பட்டுள்ளது.
———–
535. ஓம் த்ரிதஶாத்யக்ஷாய நம:
குணாவேஶேன குணங்களின் மேலீட்டால்
ஸஞ்ஜாதாஸ் பிறப்பதான
திஸ்ரோ தஶா அவஸ்தா மூன்று நிலைகளை
ஜாக்ரதாதய: ஜாக்ரத் முதலான
தாஸாம் அத்யக்ஷ அவற்றை மேற்பார்வையிடுகிறார்
இதி த்ரிதஶாத்யக்ஷ: எனவே, பகவான் ‘த்ரிதஶாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
குணங்களின் மேலீட்டால் உருவாகும் ஜாக்ரத் (விழிப்பு நிலை) முதலான மூன்று நிலைகளையும் பகவான் மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் ‘த்ரிதஶாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
536. ஓம் மஹாஶ்ருங்காய நம:
மத்ஸ்யரூபி பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் (மீனாக அவதரித்த காலத்தில்)
மஹதி ஶ்ரிங்கே தனது மிகப்பெரிய கொம்பில்
ப்ரளயாம்போதௌ நாவம் ப்ரளய நீரில் (ஸத்யவ்ரதனின்) படகை
பத்வா கட்டிக்கொண்டு
சிக்ரீட இதி விளையாடியவராதலால்
மஹாஶருங்க: பகவான் ‘மஹாஶருங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் ஸத்யவ்ரதனின் படகை தனது மிகப்பெரிய கொம்பில் (ஶ்ரிங்கத்தில்) கட்டிக்கொண்டு ப்ரளய நீரில் விளையாடியவராதலால் அவர் ‘மஹாஶருங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————–
537. ஓம் க்ருதாந்தக்ருதே நம:
க்ருதஸ்ய க்ருத, அதாவது காரிய வடிவான இந்த ப்ரபஞ்சத்தை
அந்தம் ஸம்ஹாரம் கரோதீதி அந்தம் அதாவது (ப்ரளய காலத்தில்) அழிக்கிறார்
க்ருதாந்தக்ருத் எனவே பகவான் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் காரிய வடிவான ப்ரபஞ்சத்தை (‘க்ருத’) ப்ரளய காலத்தில் அழிக்கிறார் (‘அந்த க்ருத்’). எனவே அவர் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருதாந்தம் ம்ருத்யும் ‘க்ருதாந்தம்’ என்று அழைக்கப்படும் மரணத்தை
க்ருந்ததீதி வா வெட்டுகிறார் (அழிக்கிறார்)
க்ருதாந்தக்ருத் எனவே பகவான் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் ‘க்ருதாந்தம்’ என்று அழைக்கப்படும் மரணத்தை வெட்டுகிறார் (அழிக்கிறார்). எனவே, அவர் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த விளக்கத்தை இரண்டு விதமாக புரிந்து கொள்ளலாம். தனது அடியவர்களுக்கு மரணம் இல்லாத நிலையை அளிக்கிறார் (அவர்களது மரணத்தை வெட்டுகிறார்). அல்லது, ம்ருத்யு தேவதையையே மஹாப்ரளயத்தில் அழிக்கிறார்.
————-
- மஹாவராஹோ கோவிந்த: ஸுஶேண கனகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ரகதாதர: ||
இந்த ஐம்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- மஹாவராஹ:, 539. கோவிந்த:, 540. ஸுஶேண:, 541. கனகாங்கதீ |
- குஹ்ய:, 543. கபீர:, 544. கஹன:, 545. குப்த:, 546. சக்ரகதாதர: ||
——————
- ஓம் மஹாவராஹாய நம:
மஹாம்ஸ்சாஸௌ மிகப்பெரியவரும்
வராஹஸ்சேதி பன்றி வடிவெடுத்தவருமாதலால்
மஹாவராஹ: பகவான் ‘மஹாவராஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மிகப்பெரியவர் (மிகவும் மஹிமை பொருந்தியவர் என்றும் கொள்ளலாம்). பன்றி வடிவெடுத்தவர். எனவே அவர் ‘மஹாவராஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகப்பெரிய வராஹ உருவம் எடுத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
—————
- ஓம் கோவிந்தாய நம:
கோபிர்வாணீபிர் ‘கோ’ என்றால் வாக்கு (அதாவது வேதங்கள்) என்று பொருள்
விந்ததே அடையப்படுவர்
கோவிந்த: எனவே பகவான் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ‘கோ’ ஶப்தத்தால் குறிக்கப்படும் வேதங்களால் (மட்டுமே) அடையப்படுபவர். எனவே அவர் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வேத்தி அறியப்படுபவர்
வேதாந்தவாக்யைரிதி வா வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே)
கோவிந்த: எனவே பகவான் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே) அறியப்படுகிறார். எனவே அவர் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘கோ’ என்றால் வேதங்களைக் குறிக்கும் என்பது இந்த இரண்டு விளக்கங்களும் பொது. முதல் விளக்கத்தில் ‘கோ’ + ‘விந்ததி’ = கோவிந்த:. இரண்டாவது விளக்கத்தில் ‘கோ’ + ‘வேத்தி’ = கோவிந்த:.
‘கோபிரேவ யதோ வேத்யோ கோவிந்த: ஸமுதாஹ்ருத:’
ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது: வேதங்களைக் கொண்டே (வேத, வேதாந்த வாக்யங்களைக் கொண்டே) அவரை அறிந்துகொள்ள முடியும். எனவே அவர் ‘கோவிந்த:’ என்று அழைக்கப்படுகிறார்.
இதி ஸ்ரீவிஶ்ணுதிலகே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது.
——–
- ஓம் ஸுஶேணாய நம:
ஶோபனா அழகான
ஸேனா கணாத்மிகா படைக்கூட்டங்களை (சேனைகளை) யஸ்யேதி
ஸுஶேண: உடையவராதலால் பகவான் ‘ஸுஶேண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அழகான படைக்கூட்டங்களை (சேனைகளை) உடையவராதலால் பகவான் ‘ஸுஶேண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம் கனகாங்கதினே நம:
கனகமயானி பொன்மயமான
அங்கதானி அஸ்யேதி தோள்வளைகளை உடையவராதலால் (அணிந்திருப்பவர்)
கனகாங்கதி பகவான் ‘கனகாங்கதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் பொன்மயமான தோள்வளைகளை அணிந்திருப்பவர். எனவே அவர் ‘கனகாங்கதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
- ஓம் குஹ்யாய நம:
ரஹஸ்யோபநிஶத் ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே
வேத்யத்வாத் அறியப்படுபவராதலால்
குஹ்ய: பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே அறியப்படுபவராதலால் பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
குஹாயாம் ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில்
நிஹித வீற்றிருக்கிறார்
இதி வா குஹ்ய: எனவே பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் அனைவரது இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில் வீற்றிருக்கிறார் (மறைந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்). எனவே பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம் கபீராய நம:
ஞானைஶ்வர்ய அறிவு, செல்வம்
பலவீர்யாதிபிர் பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும்
கம்பீரோ மேன்மையுடையவர் ஆதலால்
கபீர: எனவே பகவான் ‘கபீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறிவு, செல்வம், பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும் மேன்மையுடையவர் ஆதலால் பகவான் ‘கபீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
- ஓம் கஹனாய நம:
துஶ்ப்ரவேஶத்வாத் அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால்
கஹன: பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால் பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்ரய மூன்று நிலைகளிலும் (ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி) உள்ள
பாவ அபாவ விருப்பங்கள் மற்றும் விருப்பமற்ற தன்மைகளை
ஸாக்ஷித்வாத் ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால்
கஹனோ வா பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி ஆகிய மூன்று நிலைகளில் உள்ள நமது விருப்பு மற்றும் விருப்பமற்ற தன்மைகளை ஒரு ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம் குப்தாய நம:
வாங் வாக்கிற்கும்
மனஸா மனதிற்கும்
அகோசரத்வாத் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால்
குப்த: பகவான் ‘குப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாக்கிற்கும், மனதிற்கும் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால் பகவான் ‘குப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஏஶ ஸர்வேஶு பூதேஶு கூடோத்மா ந ப்ரகாஶதே’ (கடோபநிஶத் 1.3.12)
கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————-
- ஓம் சக்ரகதாதராய நம:
‘மனஸ்தத்வாத்மகம் சக்ர புத்திதத்வாத்மிகாம் கதாம் |
தாரயன் லோகரக்ஷார்த்தமுக்த: சக்ரகதாதர: ||’
மனத்தை குறிக்கும் சக்ரத்தையும், புத்தியை குறிக்கும் கதையையும் உலகத்தின் (உலகத்தோரின்) நலனுக்காக தனது திருக்கைகளில் ஏந்தியுள்ளார். எனவே, அவர் (பகவான்) ‘சக்ரகதாதர:’ என்று அழைக்கப்படுகிறார்.
இதி சக்ரகதாதர:
இந்த ஸ்லோகத்தின் படி பகவான் ‘சக்ரகதாதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————-
- வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஶ்ணோ த்ருட: ஸங்கர்ஶணோச்யுத:|
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஶ்கராக்ஷோ மஹாமனா: ||
இந்த ஐம்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- வேதா, 548. ஸ்வாங்க:, 549. அஜித:, 550. க்ருஶ்ண:, 551. த்ருட:, 552. ஸங்கர்ஶணோச்யுத: |
- வருண:, 554. வாருண:, 555. வ்ருக்ஷ:, 556. புஶ்கராக்ஷ:, 557. மஹாமனா: ||
————-
- ஓம் வேதஸே நம:
விதாதா அனைத்தையும் படைப்பவராதலால்
வேத பகவான் ‘வேத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ருஶோதராதித்வாத் ‘ப்ருஶோதரா’ கணத்தை சேர்ந்த சொல்லாதலால்
ஸாதுத்வம் ‘வேத’ என்ற இந்த சொல் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.
அனைத்தையும் படைப்பவராதலால் பகவான் ‘வேத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த ‘வேத’ என்ற திருநாமம் நான்காவது ‘த’ வை உடையது. மறைகளைக் குறிக்கும் ‘வேதம்’ மூன்றாவது ‘த’ வை உடையது.
————
- ஓம் ஸ்வாங்காய நம:
ஸ்வயமேவ (பகவான்) தானே
கார்யகரணே செயல்களைச் செய்கையில் உதவிபுரியும்
அங்க அங்கமாகிய
ஸஹகாரீதி ‘ஸஹகாரி’ அதாவது உபகரணங்களாய் இருப்பதால்
ஸ்வாங்க: பகவான் ‘ஸ்வாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு செயலைப் புரிவதற்கும் மூன்று காரணங்கள் தேவை. முதலாவது மூல காரணம் (உபாதான காரணம் – ஆங்கிலத்தில் Raw Material). இரண்டாவது அந்த செயலைப் புரிபவர் (நிமித்த காரணம் – Doer). மூன்றாவது அந்த செயலைப் புரிவதற்கு துணை புரியும் கருவிகள் (ஸஹகாரி காரணம்). பகவான் தானே (ஸ்வயம்) ஒரு காரியத்தின் அங்கமாக, அதன் ஸஹகாரி காரணமாக இருப்பதால் அவர் ‘ஸ்வாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு காரியம் எனப்படுவது பரப்ரஹ்மத்தின் படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.
————-
- ஓம் அஜிதாய நம:
ந கேனாபி அவதாரேஶு ஜித எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர்
இதி அஜித: ஆகையால், அவர் ‘அஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர், ஆகையால், அவர் ‘அஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- ஓம் க்ருஶ்ணாய நம:
க்ருஶ்ண: க்ருஶ்ணத்வைபாயன: ‘க்ருஶ்ணத்வைபாயனர்’ என்றழைக்கப்படும் வ்யாஸ பகவானே ‘க்ருஶ்ணர்’ என்று அழைக்கப்படுகிறார்.
‘க்ருஶ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் |
கோ ஹ்யன்ய: புண்டரீகாக்ஷான்மஹாபாரதக்ருத்பவேத் ||’
(ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.4.5)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் வேத வ்யாஸரை ப்ரபு ஸ்ரீமந்நாராயணனாகவே அறிவாயாக. தாமரைக் கண்ணனான பகவானைத் தவிர வேறு யாரால் மஹாபாரதம் என்னும் இதிஹாஸத்தை இயற்றி இருக்க முடியும்?
இதி விஶ்ணு புராண வசனாத் | இந்த ஸ்ரீவிஶ்ணு புராண வாக்கியத்தின் படி (பகவான் வேத வ்யாஸரே க்ருஶ்ணர், க்ருஶ்ணரே வ்யாஸர்).
————-
- ஓம் த்ருடாய நம:
ஸ்வரூபஸாமர்த்யாதே: அவரது இயற்கையான தனித்தன்மை (ஸ்வரூபம்) மற்றும் ஸாமர்த்தியம் முதலிய குணங்களுக்கு
ப்ரத்யுச்யபாவாத் (ப்ரத்யுச்ய அபாவாத்) குறைவு என்பதே இல்லை
த்ருட: எனவே பகவான் ‘த்ருட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் இயற்கையான தனித்தன்மையும், அவரது ஸாமர்த்யம் முதலிய குணங்களுக்கும் என்றுமே குறைவு உண்டாவதில்லை. எனவே அவர் ‘த்ருட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம் ஸங்கர்ஶணோச்யுதாய நம:
ஸம்ஹார ஸமயே இந்தப் ப்ரபஞ்சத்தின் முடிவில் அதை அழிக்கும் ஸம்ஹார காலத்தில்
யுகபத்ப்ரஜா: அனைத்து உயிரினங்களையும் ஒருசேர
ஸங்கர்ஶதீதி அவற்றின் அழிவை நோக்கி இழுப்பதால்
ஸங்கர்ஶண: பகவான் ‘ஸங்கர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ந ச்யோததி என்றும் அழிவதில்லை
ஸ்வரூபாதி அவரது இயற்கையான தன்மை முதலியவை
இதி அச்யுத: எனவே பகவான் ‘அச்யுத:’ என்று அழைக்கப்படுகிறார்.
ஸங்கர்ஶணோச்யுத: இதி நாமைகம் ஸ விஶேஶணம் இவ்வாறு ‘ஸங்கர்ஶணராகவும்’ ‘அச்யுதராகவும்’ இருப்பதால் ‘ஸங்கர்ஶணோச்யுத:’ என்ற இந்த இரண்டு பதங்களும் சேர்ந்த இந்த திருநாமம் பகவானை விசேஷமாக குறிப்பதாகும்.
பகவான் இந்தப் ப்ரபஞ்சம் முடியும் தறுவாயில், ப்ரளய காலத்தில், அனைத்து உயிரினங்களையும் அவற்றின் முடிவை நோக்கி இழுக்கிறார். எனவே அவர் ஸங்கர்ஶணர் என்று அழைக்கப்படுகிறார். அவரது இயற்கையான தன்மை முதலியவை என்றுமே குறைவுபடாது இருப்பதால் ‘அச்யுதர்’ என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ‘ஸங்கர்ஶணராகவும்’ ‘அச்யுதராகவும்’ இருப்பதால் பகவான் ‘ஸங்கர்ஶணோச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு, ஸம்ஹார காலத்திலும் (ஸங்கர்ஶணராய் இருக்கும் பொழுதும்) தனது மேன்மை குறையாமல் அச்யுதராய் இருக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.
————–
- ஓம் வருணாய நம:
ஸ்வரஶ்மீனாம் தனது கிரணங்களை
ஸம்வரணாத் மூடிக்கொள்வதால்
ஸாயங்கத: ஸூர்யோ மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் இருக்கும் பகவான்
வருண: ‘வருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் பகவான் தனது கிரணங்களை மூடிக்கொள்கிறார் (ஸம்வரணம் செய்கிறார்). எனவே அவர் ‘வருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘இமம் மே வருணம் ஶ்ருதீ ஹவம்’
இதி மந்த்ரவர்ணாத் | இந்த மந்திரத்தில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
————-
- ஓம் வாருணாய நம:
வருணஸ்யாபத்யம் வருணனின் புதல்வர்களான
வசிஶ்டோ(S)கஸ்த்யோ வா வசிஶ்டரும், அகஸ்தியரும் (அவர்களின் அந்தராத்மாவான பகவான்)
வாருண: ‘வாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் வசிஶ்டர் மற்றும் அகஸ்தியரின் வடிவில் வருணனின் புதல்வர்களாக இருப்பதால் அவர் ‘வாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம் வ்ருக்ஷாய நம:
வ்ருக்ஷ இவ மரங்களைப் போன்று
அசலதயா ஸ்தித இதி அசையாது நிலைபெற்று இருப்பதால்
வ்ருக்ஷ: பகவான் ‘வ்ருக்ஷ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மரங்களைப் போன்று அசையாது நிலைபெற்று இருப்பதால் பகவான் ‘வ்ருக்ஷ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஶ்டத்யேக:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒரு மரத்தைப் போன்று அசையாது (மரம் எவ்வாறு அசையாது ஓரிடத்தில் நிலைபெற்று இருக்கிறதோ, அவ்வாறே) தன்னுடைய இயற்கையான மேன்மையில் (அந்த பரப்ரஹ்மம்) நிலைபெற்று இருக்கிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————-
- ஓம் புஶ்கராக்ஷாய நம:
ஹ்ருதய புண்டரீகே அனைவரின் உள்ளத்தாமரைகளிலும்
சிந்தித: த்யானிக்கப்படுவதால்
புஶ்கராக்ஷ: பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரின் (குறிப்பாக யோகிகளின்) உள்ளத்தாமரைகளிலும் த்யானிக்கப்படுவதால் பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வரூபேண தனது இயற்கையான வடிவில்
ப்ரகாஶத இதி வா ஒளிவீசுவதால் (ஒளியுடன் திகழ்வதால்)
புஶ்கராக்ஷ: பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது இயற்கையான வடிவில் மிகுந்த ஒளியுடன் பிரகாசிப்பதால் அவர் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம் மஹாமனஸே நம:
ஸ்ருஶ்டிஸ்தித்யந்தகர்மாணி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை
மனஸைவ கரோதீதி (வேறு கரணங்கள் இன்றி) தனது மனதாலேயே புரிவதால்
மஹாமனா: பகவான் ‘மஹாமனா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை வேறு கரணங்கள் இன்றி தனது மனதாலேயே புரிகிறார். எனவே அவர் ‘மஹாமனா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘மனஸைவ ஜகத்ஸ்ருஶ்டிம் ஸம்ஹாரம் ச கரோதி ய: |’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் தனது மனதாலேயே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைப் புரிகிறாரோ (செய்கிறாரோ)…
இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
—————-
- பகவான் பகஹானந்தி வனமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஶ்ணுர் கதிஸத்தம: ||
இந்த அறுபதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- பகவான், 559. பகஹா, 560. ஆனந்தீ, 561. வனமாலீ, 562. ஹலாயுத: |
- ஆதித்ய:, 564. ஜ்யோதிராதித்ய:, 565. ஸஹிஶ்ணு:, 566. கதிஸத்தம: ||
—————-
- ஓம் பகவதே நம:
‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |
ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் “பக” என்ற சொல்லினால் குறிக்கப்படும்.
ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால்
பகவான் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|
வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.
இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
———–
- ஓம் பகக்னே நம:
ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை
ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில்
ஹந்தீதி அழிப்பதால்
பகஹா பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரளய காலத்தில் அனைவரின் “பக”த்தையும் “ஹ” – அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார்.
————-
- ஓம் ஆனந்தினே நம:
ஸுகஸ்வரூபத்வாத் ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால்
ஆனந்தீ பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால் பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸம்பத்ஸம்ருதத்வாத் அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால்
ஆனந்தீ வா பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால் பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம் வனமாலினே நம:
பூததன்மாத்ரரூபாம் ஐம்பூதங்களின் நுண்வடிவான தன்மாத்திரைகளின் பிரதிநிதியான
வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ எனும் பெயர் கொண்ட
வனமாலாம் வஹன் வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால்
வனமாலீ பகவான் ‘வனமாலீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஐம்பூதங்களின் ஸூக்ஷ்ம வடிவான தன்மாத்திரைகளின் பிரதிநிதியான ‘வைஜயந்தி’ எனும் பெயர் கொண்ட வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால் பகவான் ‘வனமாலீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம் ஹலாயுதாய நம:
ஹலமாயுதம் கலப்பையை ஆயுதமாக (தரித்திருந்ததால்)
அஸ்யேதி ஹலாயுத: பகவான் ‘ஹலாயுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
பலபத்ராக்ருதி: பலராமனின் வடிவாக
பலராம அவதாரத்தின் பொழுது பகவான் கலப்பையை ஆயுதமாகத் தரித்திருந்ததால் அவர் ‘ஹலாயுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம் ஆதித்யாய நம:
அதித்யாம் அதிதி தேவியின் புதல்வராக
கஶ்யபாத் காஶ்யப மஹரிஶி மூலமாக
வாமனரூபேண வாமனரின் வடிவில்
ஜாத பிறந்தபடியால்
ஆதித்ய: பகவான் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது வாமன அவதாரத்தில் காஶ்யப மஹரிஶி மூலமாக அதிதி தேவியின் புதல்வராக தோன்றினார். எனவே அவர் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஜ்யோதிஶி ஒளி வடிவாய்
ஸவித்ருமண்டலே சூரிய மண்டலத்தினுள்
ஸ்திதோ வீற்றிருப்பதால்
ஜ்யோதிராதித்ய: பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சூரிய மண்டலத்தினுள் ஒளி வடிவாக வீற்றிருப்பதால் பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம் ஸஹிஶ்ணவே நம:
த்வந்த்வானி இருமைகளை
ஶீதோஶ்ணாதீனி குளிர், வெப்பம் போன்ற
ஸஹத பொறுத்துக் கொள்வதால்
இதி ஸஹிஶ்ணு: பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
குளிர், வெப்பம் போன்ற இருமைகளை பொறுத்துக் கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 144வது திருநாமத்தில் ‘ஸஹிஶ்ணு:’ என்ற பதத்திற்கு ஆசார்யாள் “ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று பொருளுரைத்திருந்தார்..
———–
- ஓம் கதிஸத்தமாய நம:
கதிஸ்சாஸௌ அனைவருக்கும் புகலிடமாகவும் ஸத்தமஸ்சேதி
அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால்
கதிஸத்தம: பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவருக்கும் புகலிடமாகவும், அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால் பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்திலும் உயர்ந்த புகலிடம் பகவானே என்றும் பொருள் கொள்ளலாம்
————-
61. ஸுதன்வா கண்டபரஶுர்தாருணோ த்ரவிணப்ரத: |
திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||
இந்த அறுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
567. ஸுதன்வா, 568. கண்டபரஶு: (அகண்டபரஶு:), 569. தாருண:, 570. த்ரவிணப்ரத: |
571. திவ:ஸ்ப்ருக், 572. ஸர்வத்ருக்வ்யாஸ:, 573. வாசஸ்பதிரயோநிஜ: ||
———
567. ஸுதன்வனே நம:
ஶோபனமிந்த்ரியாதிமயம் அழகானதும், இந்த்ரியங்களின் (உட்புலன், வெளிப்புலன் ஆகியவற்றின்) வடிவானதுமான
ஶார்ங்கம் ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய
தனுரஸ்யாஸ்தீதி வில்லை ஏந்தியிருப்பதால்
ஸுதன்வா பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அழகானதும், (கண், காது, செவி, மனம் போன்ற) இந்த்ரியங்களின் வடிவானதுமான ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய வில்லை (தனது கைகளில்) ஏந்தியிருப்பதால் பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
568. கண்டபரஶுவே நம: (அகண்டபரஶுவே நம:
ஶத்ரூணாம் எதிரிகளை
கண்டனாத் (வெட்டி) அழிப்பதால்
கண்ட: ‘கண்ட:’ என்று அழைக்கின்றனர்
பரஶுரஸ்ய கோடரியை
ஜாமத்க்ன்யா பகவான் பரசுராமரின் கையிலுள்ள
க்ருதேரிதி அந்தக் கோடரியை ஏந்தியிருப்பதால்
கண்டபரஶு: பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது பரசுராம அவதாரத்தில், எதிரிகளை வெட்டி அழிப்பதால் ‘கண்ட:’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் கோடரியை ஏந்தியிருப்பதால் பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அகண்ட: எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத
பரஶுரஸ்யேதி வா கோடரியை கையில் ஏந்திருப்பதால்
அகண்டபரஶு: பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத கோடரியை கையில் ஏந்திருப்பதால் பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
569. தாருணாய நம:
ஸன்மார்க நல்வழியின் (அறவழியின்)
விரோதீனாம் எதிரிகளுக்கு
தாருணத்வாத் அச்சமூட்டுபவராக இருப்பதால்
தாருண: பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறவழியின் (அறவழியில் நடப்போருக்கு) எதிரிகளுக்கு தாம் அச்சமூட்டுபவராக இருப்பதால் பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
570. த்ரவிணப்ரதாய நம:
த்ரவிணம் செல்வத்தை
வாஞ்சிதம் விழையும்
பக்தேப்ய: அடியவர்களுக்கு
ப்ரததாதீதி (அவர்கள் வேண்டும்) செல்வத்தை அளிப்பதால்
த்ரவிணப்ரத: பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
செல்வத்தை விழையும் அடியவர்களுக்கு, அவர்கள் விழையும் செல்வத்தை அளிப்பதால் பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.
———-
571. திவஸ்ப்ருஶே நம:
திவ: ஆகாயத்தை (அல்லது ஸ்வர்க்கத்தை)
ஸ்பர்ஶனாத் தீண்டுவதால் (தொடுவதால்)
திவ:ஸ்ப்ருக் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.
ஆகாயத்தை (ஸ்வர்க்கத்தை) தொடுவதால் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.
————-
572. ஸர்வத்ருக்வ்யாஸாய நம:
ஸர்வத்ருஶாம் ஸர்வஞானானாம் ‘ஸர்வத்ருக்’ அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்)
விஸ்தாரக்ருத் விரிவாக எடுத்துரைத்த
வ்யாஸ: ஸர்வத்ருக்வ்யாஸ: பகவான் வேத வ்யாஸரே ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.
‘ஸர்வத்ருக்’ அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்) விரிவாக எடுத்துரைத்த பகவான் வேத வ்யாஸரே ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.
பகவானே வ்யாஸராக அவதரித்தார் என்பதை நாம் முன்பே ‘க்ருஷ்ண:’ என்ற (55௦ வது) திருநாமத்தில் பார்த்தோம்.
அதவா அல்லது
ஸர்வா ச ஸா அனைத்துமாய் இருப்பதாலும்
த்ருக் சேதி அனைத்தையும் அறிவதாலும்
ஸர்வத்ருக் ஸர்வாகாரம் ஞானம் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். ஸர்வஸ்ய அனைவரின்
த்ருஶ்டித்வாத் வா பார்வையாகவும் இருப்பதால்
ஸர்வத்ருக் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார்.
அல்லது, அனைத்துமாய் இருப்பதாலும் அனைத்தையும் அறிவதாலும் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். அனைவரின் பார்வையாகவும் (அனைத்தையும் பார்ப்பவராக) இருப்பதாலும் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார்.
ரிக்வேதாதி ரிக் வேதம் முதலாய்
விபாகேன சதுர்த்தா வேதா வ்யஸ்தா: க்ருதா: வேதங்களை நான்காக வகுத்தார்
ஆத்யோ வேத முதலாம் வேதமான ரிக் வேதத்தை
ஏகவிம்ஶதிதா க்ருத: 21 பிரிவுகளாகவும்
த்விதீய இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை
ஏகோத்தரஶததா க்ருத: 101 பிரிவுகளாகவும்
ஸாமவேத: ஸாமவேதத்தை
ஸஹஸ்ரதா க்ருத: 1000 பிரிவுகளாகவும்
அதர்வவேதோ அதர்வவேதத்தை
நவதா ஶாகாபேதென க்ருத: ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார்.
ஏவம் அன்யானி ச இவ்வாறு மற்ற
புராணானி புராணங்களையும்
வ்யஸ்தான்யனேனேதி பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால்
வ்யாஸ: ப்ரஹ்மா நான்முகக் கடவுளான ப்ரஹ்மா ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார்).
ரிக் வேதம் முதலாய் வேதங்களை நான்காக வகுத்தார். முதலாம் வேதமான ரிக் வேதத்தை 21 பிரிவுகளாகவும், இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை 101 பிரிவுகளாகவும், ஸாமவேதத்தை 1000 பிரிவுகளாகவும், அதர்வவேதத்தை ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார். இவ்வாறு மேலும் மற்ற (பதினெண்) புராணங்களையும் பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார்).
இவ்வாறு ‘ஸர்வத்ருக்’, ‘வ்யாஸ:’ ஆகிய பதங்களுக்கு வேறு பொருள்களையும் ஆச்சார்யாள் அளிக்கிறார். ஆயினும், இந்த இரண்டு பதங்களும் ஒன்று சேர்ந்த ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற ஒரே திருநாமமாகவே இதை கணக்கில் கொள்ள வேண்டும்.
———–
573. வாசஸ்பதயே(அ)யோனிஜாய நம:
வாசஸ்பதிரயோனிஜ: பகவான் ‘வாசஸ்பதிரயோனிஜ:’ என்று அழைக்கப்படுகிறார்.
வாசோ வித்யாயா: ‘வாச:’ என்றால் வித்தை அல்லது கல்வி என்று பொருள் பதி: அதன் அதிபதியாக இருப்பதால்
வாசஸ்பதி: ‘வாசஸ்பதி:’ என்றும்
ஜனன்யாம் ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து
ந ஜாயத இதி பிறவாதபடியால்
அயோனிஜ: ‘அயோனிஜ:’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இதி இது
ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான
ஏகம் நாம ஒரே திருநாமமாகும்.
வாக்கிற்கு (கல்விக்கு) அதிபதியாக இருப்பதால் ‘வாசஸ்பதி:’ என்றும், ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறவாத படியால் ‘அயோனிஜ:’ என்றும் பகவான் அழைக்கப்படுகிறார். இந்த இரண்டு பதங்களும் சேர்ந்து ஒரே திருநாமமாக ‘வாசஸ்பதிரயோனிஜ:’ என்று பகவான் அழைக்கப்படுகிறார்.
———–
- த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக்|
ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||
இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578. பேஶஜம், 579. பிஶக்|
- ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||
—————-
- ஓம் த்ரிஸாம்னே நம:
தேவவ்ரத தேவவ்ரதம் என்னும்
ஸமாக்யாதைஸ் பெயருடைய
த்ரிபி: மூன்று
ஸாமபி ஸாமங்களால்
ஸாமகை: ஸாமகானம் செய்பவர்களால்
ஸ்துத இதி போற்றித் துதிக்கப்படுவதால்
த்ரிஸாமா பகவான் ‘த்ரிஸாமா’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தேவவ்ரதம் என்னும் பெயருடைய மூன்று ஸாமங்களால் ஸாமகானம் செய்பவர்களால் போற்றித் துதிக்கப்படுவதால் பகவான் ‘த்ரிஸாமா’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- ஓம் ஸாமகாய நம:
ஸாம ஸாமவேதத்தை
காயதீதி பாடுவதால்
ஸாமக: பகவான் ‘ஸாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸாமவேதத்தை பாடுவதால் பகவான் ‘ஸாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம் ஸாம்னே நம:
‘வேதானாம் ஸாமவேதோஸ்மி’ (ஸ்ரீமத்பகவத் கீதை 10.22)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதங்களில் யான் ஸாமவேதம்.
இதி பகவத்வசனாத் பகவானின் இந்த பகவத்கீதையின் கூற்றின்படி
ஸாமவேத: ஸாம ஸாமவேத வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் ‘வேதங்களில் யான் ஸாமவேதம்’ என்று கூறியுள்ளார். எனவே ஸாமவேத வடிவினாரான பகவான் ‘ஸாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம் நிர்வாணாய நம:
ஸர்வது:க அனைத்துவித துன்பங்களும்
உபஶம லக்ஷணம் அற்று இருப்பதன் அடையாளமாக
பரமானந்தரூபம் உயரிய ஆனந்தமே வடிவினராய் இருப்பதால்
நிர்வாணம் பகவான் ‘நிர்வாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எவ்வித துன்பங்களும் (துக்கங்களும்) அற்று இருப்பதன் அடையாளமாக உயரிய ஆனந்தமே வடிவானவராதலால் பகவான் ‘நிர்வாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————-
- ஓம் பேஶஜாய நம:
ஸம்ஸார இந்தப் பிறவியென்னும்
ரோகஸ்ய பிணிக்கு (நோய்க்கு)
ஒளஶதம் அருமருந்தாய் இருப்பதால்
பேஶஜம் பகவான் ‘பேஶஜம்’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் பிறவியென்னும் பிணிக்கு (நோய்க்கு) அருமருந்தாய் இருப்பதால் பகவான் ‘பேஶஜம்’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஓம் பிஶஜே நம:
ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பிணியை
நிர்மோக்ஷகாரிணீம் போக்கவல்ல அருமருந்தாகிற
பராம் வித்யாம் மேலான வித்தையை (அறிவை)
உபதிதேஶ அனைவருக்கும் உபதேசித்தார்
கீதாஸ்விதி ‘ஸ்ரீமத் பகவத்கீதை’ என்னும்
பிஶக் எனவே பகவான் ‘பிஶக்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியை போக்கவல்ல அருமந்தாகிற ‘ஸ்ரீமத் பகவத்கீதை’ என்னும் உயரிய வித்தையை (அறிவை) அனைவருக்கும் போத்தித்தபடியால் (உபதேசித்த படியால்) பகவான் ‘பிஶக்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘பிஶக்தம் த்வா பிஶஜா ஶ்ருணோமி’
அனைவரைக் காட்டிலும் சிறந்த மருத்துவரைப் பற்றி கேட்பாயாக
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
- ஓம் ஸந்யாஸக்ருதே நம:
மோக்ஷார்த்தம் முக்தியை அடையும் பொருட்டு (அதை விழைவோருக்கு)
சதுர்த்தம் ஆஶ்ரமம் நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸ ஆஸ்ரமத்தை (அதாவது வாழும் வழிமுறையை)
க்ருதவானிதி உருவாக்கியவராதலால்
ஸந்யாஸக்ருத் பகவான் ‘ஸந்யாஸக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முக்தியை விழைவோருக்கு, அதை அடையும் வழிமுறையாக நான்காவது ஆஸ்ரமமான ‘ஸந்யாஸ ஆஸ்ரமத்தை’ உருவாக்கியவராதலால் பகவான் ‘ஸந்யாஸக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம் ஶமாய நம:
ஸந்யாஸினாம் துறவறம் பூண்டவர்களுக்கு (ஸன்யாஸிகளுக்கு)
ப்ராதான்யேன முதன்மையான (முக்கியமான)
ஞானஸாதனம் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக
ஶமம் (மன) அமைதியை
ஆசஶ்ட உபதேசித்ததால்
இதி ஶம: பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் முக்தியை விழைவோருக்கு ஸன்யாஸ ஆஸ்ரமத்தை (துறவறத்தை) ஏற்படுத்தினார் (ஸந்யாஸக்ருத்). அவ்வாறு துறவறம் பூண்டோரின் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக மன அமைதியை (ஶம) உபதேசித்ததால் அவர் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
“யதீநாம் ப்ரஶமோ தர்மோ நியமோ வனவாஸினாம் |
தானமேவ க்ருஹஸ்தானாம் ஶுஶ்ரூபா ப்ரஹ்மசாரிணாம் ||”
துறவிகளுக்கு மன அமைதியும், வனவாசிகளுக்கு கட்டுப்பாடும் (நியமம்), இல்லறத்தோருக்கு தானமும் மற்றும் ப்ரஹ்மச்சாரிகளுக்கு (குரு) சேவையும் தர்மமாகும்.
இதி ஸ்ம்ருதே: இவ்வாறு ஸ்ம்ருதிகளில் (வேதங்களில்) கூறப்பட்டுள்ளது.
‘தத்கரோதி ததாசஶ்டே’ (சுராதிகணவார்த்திகம்)
இதி ணிசி பசாத்யசி க்ருதே ரூபம் ஶம இதி |
இந்த இலக்கண விதியின் படி “ஶம”என்ற சொல் உருவாகிறது.
ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்
ஶமயிதேதி வா அழிப்பதால்
ஶம: பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அனைத்து உயிரினங்களையும் (ப்ரளய காலத்திலும், அந்தந்த ஜீவனின் கால முடிவிலும்) அழிப்பதாலும் பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- ஓம் ஶாந்தாய நம:
விஶயஸுகேஶ்வ(அ)ஸங்கதயா விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) சேராது இருப்பதால்
ஶாந்த: பகவான் ‘ஶாந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) நாட்டமில்லாமல் அவற்றோடு சேராது இருப்பதால் பகவான் ‘ஶாந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
- ஓம் நிஶ்டாய நம:
ப்ரளயே ப்ரளய காலத்தில்
நிதராம் முழுமையாக
தத்ரைவ அவரிடமே
திஶ்டந்தி உறைவதால்
பூதாநிதி உயிரினங்கள் (ஜீவராசிகள்)
நிஶ்டா பகவான் ‘நிஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) முழுமையாக பகவானிடம் (லாயமடைந்து) உறைவதால் பகவான் ‘நிஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஓம் ஶாந்தயே நம:
ஸமஸ்தாவித்யா (ஸமஸ்த அவித்யா) அனைத்து வகை அறியாமைகளும்
நிவ்ருத்தி: விலகி இருப்பதே
ஶாந்தி: ‘ஶாந்தி:’ என்று அழைக்கப்படுகிறது.
ஸா ப்ரஹ்மைவ (அந்த அறியாமைகளற்ற நிலையானது) பரப்ரஹ்மத்தின் இயற்கையான தன்மையாகும். எனவே, பரப்ரஹ்மமான பகவான் ‘ஶாந்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து வகை அறியாமைகளும் அற்ற தன்மையே ‘ஶாந்தி:’ என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு, அறியாமை அற்ற நிலையானது பரப்ரஹ்மமான பகவானின் இயற்கையான தன்மையாகும். எனவே அவர் ‘ஶாந்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஓம் பராயணாய நம:
பரமுத்க்ருஶ்டமயனம் ஸ்தானம் (பரம் உத்க்ருஶ்டம் அயனம்) அயனம் என்றால் அடையப்படும் இடம் (ஸ்தானம்) என்று பொருள். மிக உயரிய அடையப்படக்கூடிய இடமாக
புனராவ்ருத்தி மீண்டு வருதல்
ஶங்காரஹிதம் இதி என்ற ஐயமின்றி இருப்பதால்
பராயணம் பகவான் ‘பராயணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மீண்டு வருதல் என்ற ஐயத்திற்கு இடமின்றி, மிக உயரிய ஸ்தானமாக (அடையக்கூடிய இடமாக) இருப்பதால் பகவான் ‘பராயணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புல்லிங்கபக்ஷே பஹுவ்ரீஹி: இந்தத் திருநாமத்தை ஆண்பாலாகக் கருத்துமிடத்தில் எவர் உயரிய ஸ்தானமாக இருப்பவரோ என்று பொருள் கொள்ள வேண்டும்.
————
- ஶுபாங்க: ஶாந்தித: ஸ்ரஶ்டா குமுத: குவலேசய:|
கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||
இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |
- கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய:||
————
- ஶுபாங்காய நம:
ஸுந்தராம் அழகியதான
தனும் உடலை
தாராயன் தரித்திருப்பவராதலால்
ஶுபாங்க: பகவான் ‘ஶுபாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மிகவும் அழகிய உடலைத் தாங்கியவர் (உடையவர்) ஆதலால் பகவான் ‘ஶுபாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
- ஶாந்திதாய நம:
ராக விருப்பு
த்வேஶாதி வெறுப்புகள்
நிர்மோக்ஷலக்ஷணம் விலகிய தன்மைக்கு அடையாளமான
ஶாந்திம் (மன)அமைதியை (பொறுமையை)
ததாதீதி அளிப்பவர் ஆதலால்
ஶாந்தித: பகவான் ‘ஶாந்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
விருப்பு, வெறுப்புக்கள் அற்ற தன்மையின் அடையாளமான மன அமைதியையும், பொறுமையையும் அளிப்பவர் ஆதலால் பகவான் ‘ஶாந்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————
- ஸ்ரஶ்ட்ரே நம:
ஸர்காதௌ படைப்பின் தொடக்கத்தில்
ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்)
ஸஸர்ஜேதி படைப்பதால்
ஸ்ரஶ்டா பகவான் ‘ஸ்ரஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
படைப்பின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்) படைப்பதால் பகவான் ‘ஸ்ரஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- குமுதாய நம:
கௌ பூம்யாம் ‘கு’ என்றால் பூமியில் (பூமாதேவியிடம்)
மோதத இதி வா மகிழ்கிறார்
குமுத: பகவான் ‘குமுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ‘கு’ என்று அழைக்கப்படும் பூமியிடம் (பூமாதேவியிடம்) மகிழ்கிறார். எனவே பகவான் ‘குமுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- குவலேஶாய நம:
கோ: க்ஷிதேர் ‘கு’ என்று அழைக்கப்படும் பூமியை
வலனாத் ஸம்ஸரணாத் ‘வல’ அதாவது சூழ்ந்திருப்பதால்
குவலம் ஜலம் நீரிற்கு ‘குவலம்’ என்று பெயர்
தஸ்மின் அதில் (நீரில்)
ஶேத இதி சயனித்து இருப்பதால்
குவலேஶய: பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கு’ என்று அழைக்கப்படும் பூமியை அதாவது சூழ்ந்திருப்பதால் நீரிற்கு ‘குவலம்’ என்று பெயர். அதில் (நீரில்) சயனித்து இருப்பதால் பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஶயவாஸவாஸிஶ்வகாலாத்’ (பாணினி ஸூத்ரம் 6.3.18)
இதி அலுக் ஸப்தம்யா: |
இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இந்த சொல் உருவாயுள்ளது.
குவலஸ்ய பதரி ஃபலஸ்ய ‘குவல’ என்றால் இலந்தைப் பழம்
மத்யே அதன் நடுவில்
ஶேதே சயனித்து இருக்கிறான்
தக்ஷக: ‘தக்ஷகன்’
ஸோபி தஸ்ய அந்த தக்ஷகனும்
விபூதிரிதி வா ஹரி: பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும்.
குவலேஶய: எனவே, பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘குவல’ என்றழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் நடுவில் தக்ஷகன் சயனித்து இருக்கிறான். தக்ஷகனும் பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும். எனவே பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த உரையின் படி தக்ஷகனுக்கு ‘குவலேஶய:’ என்று பெயர். அவன் பகவானின் ஒரு வெளிப்பாடு ஆதலால் பகவானுக்கே அந்த திருநாமம் பொருந்தும்.
கௌ பூம்யாம் ‘கு’ என்றால் பூமி
வலதே ஸம்ஸ்ரயதே இதி அந்த பூமியில் (ஊர்ந்து) செல்வதால்
ஸர்ப்பாணாம் பாம்புகளின்
உதரம் குவலம் வயிற்றுப் பகுதி குவலம் என்று அழைக்கப்படுகிறது,
தஸ்மிந் ஶேஶோதரே ஆதிசேடனது மடியில் (வயிற்றில்)
ஶேத இதி சயனித்து இருப்பதால்
குவலேஶய: பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘கு’ என்றழைக்கப்படும் பூமியில் ஊர்ந்து செல்வதால் பாம்புகளின் வயிற்றுப்பகுதியை ‘குவலம்’ என்று அழைப்பார்கள். அத்தகைய பாம்பான ஆதிசேடனின் வயிற்றில் (குவலயத்தில்) சயனித்து இருப்பதால் பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- கோஹிதாய நம:
கவாம் ஆவினங்களை
வ்ருத்யர்த்தம் வளர்ப்பதற்காக (அவற்றை காப்பதற்காக)
கோவர்தனம் கோவர்தன மலையை
த்ருதவானிதி (கையில்) ஏந்தினார்
கோப்யோ ஹிதோ அந்த ஆநிரைகளின் நலத்தை பேணி
கோஹித: எனவே பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் (இந்திரன் வ்ருந்தாவனத்தின் மீது கல்மாரி பொழிந்த பொது) ஆநிரைகளின் நலத்தை பேணி, அவற்றைக் காக்க கோவர்தன மலையை கையில் ஏந்தினார். எனவே அவர் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கோர்பூமே: ‘கோ’ என்றழைக்கப்படும் பூமியின்
பாராவதரணேச்சயா (பார அவதரண இச்சயா) பாரத்தைக் குறைக்கும் பொருட்டு தனது இச்சையால்
ஶரீரக்ரஹணம் குர்வன்வா உடலை ஏற்றுக் கொள்வதால்
கோஹித: பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘கோ’ என்றழைக்கப்படும் இந்த பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு (ஒவ்வொரு அவதாரத்தின் பொழுதும்) தனது இச்சையால் ஒரு உடலை ஏற்றுக் கொள்வதால் பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- கோபதயே நம:
கோர்பூம்யா: ‘கோ’ என்றழைக்கப்படும் பூமிக்கு
பதி: கணவரானபடியால்
கோபதி: பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘கோ’ என்றழைக்கப்படும் பூமிக்கு கணவரானபடியால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பதி என்றால் தலைவன் அல்லது அரசன் என்றும் பொருள். அவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது பூமிக்குத் தலைவன் அல்லது பூமியின் அரசன் என்றும் இந்த உரையை கொள்ளலாம்.
————–
- கோப்த்ரே நம:
ரக்ஷகோ காப்பாற்றுகிறார்
ஜகத இதி பூமியை (பூமியில் உள்ளோரை)
கோப்தா எனவே பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த பூமியை (அதில் உள்ளோரைக்) காப்பதால் பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வமாயயா தனது மாயையால்
ஸ்வமாத்மானம் தனது ஆத்மாவை, அதாவது தனது உண்மையான தன்மையை
ஸம்வ்ருணோதீதி வா மறைத்துக் கொள்கிறார்
கோப்தா எனவே பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது மாயையால் தன் இயற்கையான தன்மையை (ஆத்மாவை) அனைவரிடமிருந்தும் மறைத்துக் கொள்வதால் பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- வ்ருஶபாக்ஷாய நம:
ஸகலான் காமான் அனைத்து ஆசைகளையும்
வர்ஶுகே பொழியும்
அக்ஷிணீ அஸ்யேதி திருக்கண்களை உடையவராதலால்
வ்ருஶபாக்ஷ: பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனது அடியவர்களின் அனைத்து ஆசைகளையும் (விருப்பங்களையும்) மழையைப்போல பொழியும் திருக்கண்களை உடையவராதலால் பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶபோ தர்ம: ‘வ்ருஶ’ என்றால் தர்மம் (அறம்)
ஸ ஏவ வா த்ருஶ்டிர் அஸ்யேதி தனது பார்வையாக கொண்டிருப்பதால்
வ்ருஶபாக்ஷ: பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் அறத்தை தனது பார்வையாக கொண்டிருப்பதால் பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறமே கண்ணாக – அறத்தின் வழியிலேயே நடக்கிறார் என்று பொருள்.
————
- வ்ருஶப்ரியாய நம:
வ்ருஶோ தர்ம: ‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை)
ப்ரியோ யஸ்ய ஸ எவருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ
வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை) விரும்புபவராதலால் பகவான் ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘வா ப்ரியஸ்ய’ (வார்த்திகம்) இதி பூர்வநிபாதவிகல்பவிதானாத் பரநிபாத:
இங்கு ஆசார்யாள் இந்த சொல்லிற்கு உரித்தான இலக்கணக் குறிப்பை அளிக்கிறார்.
வ்ருஶஸ்சாஸௌ ‘வ்ருஶ’ அதாவது அறமே வடிவானவராகவும்
ப்ரியஸ்சேதி வா ப்ரியமானவராகவும் (அனைவராலும் விரும்பப்படுபவராகவும்) இருப்பதால்
வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அறமே வடிவானவராகவும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும் இருப்பதால் பகவான் ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————
- அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: ||
இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ:|
- ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||
————-
- அநிவர்த்தினே நம:
தேவாஸுரஸங்க்ரமான் தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில்
ந நிவர்த்தத இதி எப்பொழுதும் பின்வாங்காதவர் ஆதலால்
அநிவர்த்தீ பகவான் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் (தேவர்களின் சார்பாக போராடும் பொழுது) பகவான் எப்பொழுதும் பின்வாங்குவதில்லை ஆதலால், அவர் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ருஶபரியத்வாத் அறவழியை விரும்புபவர் ஆதலால்
தர்மான் ந நிவர்த்தத இதி வா அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை)
அநிவர்த்தீ எனவே, பகவான் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறவழியை விரும்புபவர் (வ்ருஶபரிய:) ஆதலால் பகவான் அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை). எனவே, அவர் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
- நிவ்ருத்தாத்மனே நம:
ஸ்வபாவதோ இயற்கையாகவே
விஶயேப்யோ விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்)
நிவ்ருத்த நாட்டமின்றி திரும்பும்
ஆத்மா மனோSஸ்யேதி ஆத்மா அதாவது மனதை உடையவராதலால்
நிவ்ருத்தாத்மா பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் மனது (ஆத்மா) இயற்கையாகவே விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) நாட்டமின்றி அவற்றை விட்டு விலகித் திரும்புகிறது. எனவே அவர் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஸங்க்ஷேப்த்ரே நம:
விஸ்த்ருதம் பரந்து, விரிந்துள்ள
ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை
ஸம்ஹாரஸமயே ப்ரளய காலத்தில்
ஸூக்ஷ்மரூபேண அதன் நுண்வடிவாய்
ஸங்க்ஷிபன் சுருக்குவதால்
ஸங்க்ஷேப்தா பகவான் ‘ஸங்க்ஷேப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரந்து, விரிந்துள்ள இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் அதன் நுண்வடிவாய் சுருக்குவதால் பகவான் ‘ஸங்க்ஷேப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- க்ஷேமக்ருதே நம:
உபாத்தஸ்ய படைக்கப்பட்ட பொருட்களை
பரிரக்ஷணம் கரோதீதி காப்பதால்
க்ஷேமக்ருத் பகவான் ‘க்ஷேமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
படைக்கப்பட்ட பொருட்களை காப்பதால் பகவான் ‘க்ஷேமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- ஶிவாய நம:
ஸ்வநாம தன்னுடைய திருநாமத்தை
ஸ்ம்ருதிமாத்ரேண நினைத்த மாத்திரத்திலேயே
பாவயன் புனிதப்படுத்துவதால்
ஶிவ: பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தன்னுடைய திருநாமத்தை நினைத்த மாத்திரத்திலேயே (நினைப்போரின் பாவங்களை அழித்து அவர்களை) புனிதப்படுத்துவதால் பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி நாம்னாம் ஶஶ்டம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஶிவ: என்னும் இந்த திருநாமம் வரையில்) அறுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
————
- ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:
ஸ்ரீவத்ஸ ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும்
சிஹ்னமஸ்ய சின்னம் (குறி)
வக்ஷஸி திருமார்பில்
ஸ்திதமிதி இருப்பதால்
ஸ்ரீவத்ஸவக்ஷா: பகவான் ‘ஸ்ரீவத்ஸவக்ஷா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் சின்னம் (மறு) அவரது திருமார்பில் இருப்பதால் பகவான் ‘ஸ்ரீவத்ஸவக்ஷா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——–
- ஸ்ரீவாஸாய நம:
அஸ்ய அவரது
வக்ஷஸி திருமார்பில்
ஸ்ரீரனபாயினி அவரை விட்டு என்றும் பிரியாத திருமகளானவள்
வஸதீதி வசிப்பதால்
ஸ்ரீவாஸ: பகவான் ‘ஸ்ரீவாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் திருமார்பில், அவரை விட்டு என்றும் நீங்காத திருமகள் நித்ய வாசம் செய்கிறாள். எனவே, பகவான் ‘ஸ்ரீவாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- ஸ்ரீபதயே நம:
அம்ருதமதனே அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது
ஸர்வான் அனைத்து
ஸுரா(அ)ஸுராதீன் தேவர்கள் மற்றும் அஸுரர்களை
விஹாய விடுத்து
ஸ்ரீரேனம் பதித்வேன திருமகளால் தனது பதியாக (கணவனாக)
வரயாமாஸேதி வரிக்கப்பட்டதால்
ஸ்ரீபதி: பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது திருமகள் அனைத்து தேவர்கள் மற்றும் அஸுரர்களை விடுத்து பகவானேயே தனது பதியாக (கணவனாக) வரித்தாள். எனவே, பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ: பராஶக்தி: ‘ஸ்ரீ’ என்றால் பராசக்தியைக் குறிக்கும்
தஸ்யா: பதிரிதி வா அந்த பராசக்தியின் (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால்
ஸ்ரீபதி: பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸ்ரீ’ என்றால் பராசக்தியைக் குறிக்கும் அந்த பராசக்தியை (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘பராஸ்ய ஶக்திர் விவிதைவ ஶ்ரூயதே’ (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 6.8)
ஸ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது உயர்ந்த சக்தியானது (வேதங்களில்) பலவாறாக கூறப்பட்டுள்ளது.
————-
- ஸ்ரீமதாம்வராய நம:
ரிக்யஜு: ஸாமலக்ஷணா ரிக், யஜுர் மற்றும் ஸாமவேதங்கள்
ஸ்ரீர்யேஶாம் அவரது ஸ்ரீ, அதாவது செல்வங்களாகும்
தேஶாம் அவர்களை (விட)
ஸர்வேஶாம் அனைவரின்
ஸ்ரீமதாம் ஸ்ரீமான்களாகிய
விரிஞ்ச்யாதீனம் ப்ரஹ்மா முதலான
ப்ரதானபூத: மேலானது
ஸ்ரீமதாம்வர: எனவே பகவான் ‘ஸ்ரீமதாம்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே பகவானின் செல்வங்களாகும். (இவ்வாறு வேதங்களை அறிந்த) ஸ்ரீமான்களாகிய ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் (அவர்களை விட) பகவானின் செல்வம் (வேத ஞானம்) மேலானது. எனவே அவர் ‘ஸ்ரீமதாம்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ரிச: ஸாமானி யஜூꣲஶி | ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்’
ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே ஸத்புருஷர்களின் (நல்லோரின்) அழியாத செல்வங்களாகும்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———————