Archive for the ‘Vishnu Sahasranama Stotrams’ Category

பல சதுர் விதமான அர்த்த விசேஷங்கள் —

May 30, 2023

சதுர்-விதா பஜந்தே மாம்mஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானி ச பரதர்ஷப

பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.

————

அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த

——–

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-16-

இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்
அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து
அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து
அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால்
அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி
ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி
எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும்
அந்த திருமந்திரத்தின் பெருமையையும்
அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும்
அருளிச் செய்கிறார் இதில் –

சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
பெரிய தீவினில்
ஒன்பதாம் கூறும்
மானிட பிறவியும்
ஆக்கை நிலையும்
ஈரிண்டில் ஒன்றும்
இளைமையும்
இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
விக்னமற
நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே

வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-

சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது

அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16- -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
(சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்தா லோகம் தன்னை அகற்றுவித்து -கந்தர் கலி வெண்பா )
7-கர்ம ஞான பக்தி பிர பத்திகள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும் சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
நாலு வகைப் பட்ட வியூக ஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே
ஆக இப்படி -பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-

பாட்டுப் பரப்புக்கு
அதாவது-
பாட்டும் முறையும் படுகதையும் பல பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும்
மாயன் தன் மாயையில் பட்டதற்பு–நான்முகன் -76- -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

பெரிய தீவினில் –
அதாவது –
நாவலம்பெரிய தீவு -பெரியாழ்வார் -3-6-1-என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில்-

ஒன்பதாம் கூறும்
அதாவது
நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
வர்ஷாந்தரங்களை போலே-மற்ற கண்டங்களைப் போலே -இவ்வுலகோடு சம்பந்தப்பட்டு இருக்கிற –
ப்வ்மமான -ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமியாய் இராதே
ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
காயந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே
ஸ்வர்க்க அபவர்க்க ஆஸ்பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் ஸூரத்வாத்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-3-24-
என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
பாரத கண்டத்தில் பிறக்கும் பிறப்பும்-

மானிட பிறவியும்
அதாவது
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
என்றும் சொல்லுகிற படியே
மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-

ஆக்கை நிலையும்-
அதாவது –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -திருவாய் -1-2-2- -என்று அஸ்திரமாக சொன்ன
சரீரத்தின் உடைய ஸ்தர்யமும் –

ஈரிண்டில் ஒன்றும்-
அதாவது –
நிலையுள்ள சரீரத்தைப் பெறினும்
சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று–திருச்சந்த -90- என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-

இளைமையும்
அதாவது
அந்தணர் குலத்திலே பிறப்பினும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-75- -என்கிற படியே
புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை-திருவாய் -2-10-1- -என்கிற பால்யமும்-

இசைவும் உண்டாய்
அதாவது –
இளமைப்பருவத்தோடு இருப்பினும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- என்கிறபடியே
எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-

புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
அதாவது –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும்–திருமாலை -3- என்று
சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே –

விக்னமற
அதாவது
அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று-

நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
அதாவது
நின்றவா நில்லா நெஞ்சு–பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
மனசை கொண்டு அறக் கற்கை
-கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் பஜேத் சார தாமம் சாஸ்திரம் ரத்நாகார இவாம்ருதம் –
ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் -என்கிறபடியே என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை -தான் மேலே அருளிச் செய்யப் புகும்
திரு மந்திரத்தின் சீர்மையை -தர்சிப்பிக்கிறார் மேல்-

(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை –
சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு
நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
-சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார்)

வேத சார உபநிஷத் என்றது
பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்

அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-

சார தர அநுவாகம்
அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-

சார தம காயத்ரியில்
அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-

முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை – இப்படி உள்ள காயத்ரியிலே
வியப்யாத்யா ஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில்-விஷ்ணு வாஸூ தேவன் – வ்யாவிருத்தம் ஆகையாலே –
(எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
நாராயணாய வித்மஹே–புருஷ ஸூக்தம்- என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -இரண்டாம் -39-என்கிற படியே
வேதாந்த தாத்பர்யமாய் –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா அதர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தஸ்தம்–பாஞ்சராத்ரம் –என்கிற படியே
சகல வேத ஸங்க்ரஹமுமான திரு மந்த்ரத்தை-

வேதங்களின் சாரமாய் —
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-பெரிய திருமொழி -6-10-6-
என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார் மேல் –

தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமாக வெடுத்து –
பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-என்பதை
1-தெய்வ வண்டானவன் சாகைகளிலே தேனாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது -என்றும்
2-அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
3-அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
பிரித்து நிரல் நிறையாக பொருள் கொள்ள வேண்டும் –

தெய்வ வண்டாய் சாகைகளிலே தேனாக எடுத்து –
அதாவது
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-ஆகையாலே -ஷட் பதமானது
சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
சார பூத சமஸ்தார்த்த போதக தயா-எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்ற காரணத்தால்
எல்லா சாஸ்திரங்களின் ரசமாய் – சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் –

அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து
அதாவது –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி -5-7-3-என்கிற படி
ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -பெரிய திருமொழி -6-10-6-என்னும் படி இருக்கையாலே-
(ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
இன்னார் இனியார் என்னாது எல்லாரும் உட் கொள்ளும்படி -சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10-பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து
அதாவது –
அமுதம் கொண்ட பிரான்-பெரிய திருமொழி -6-10-3-என்கிற படியே
அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
நால் வேத கடலிலே அமிர்தத்தை—பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது -எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தான்
அதாவது –
ஆக
இப்படி வேத சாராமான இத்தை
ஸ்வயமேவ எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரி யாஸ்ரமத்து உள்ளானே- பெரிய திருமொழி -1-4-4–என்கிற படியே
நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
சங்குசிதம் ஆகாமல்-சிங்காமை -சுருங்கி விடாமல்- உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-

அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-

சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
இவர்கள் தன்னை அறிந்து கரைமரம் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக –
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜிதம் போலே
திருமந்த்ரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –முமுஷுப்படி

——————————————-

ஸ்ரீ சதுர் வேத விளக்கம் –

ஸ்ரீ ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] .
ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது.
அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது.
வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.
அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால்,
அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.
அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான்.

‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன.
‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான
வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது.
இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில்
பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம்
முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது.
காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே
நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர்.
‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு.
சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு.
“வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை
உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை.
தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும்,
பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.
அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன.
உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான்.

ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை.
இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.

தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில்
முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில்
உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.

‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம்.
ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக்
கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு
அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி?
ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது.
ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா?
இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக
ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான்.
ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க
ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.
பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள்.
யக்ஞங்களில் ஆஹூதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே
தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது .

ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹூதி கொடுத்துப் பண்ணுகிற
யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்:
“வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார்.

அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார்.
அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம்.
அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன.
ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு.
ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும்
மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன.
மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன.
லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை.
இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய்
தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள்,
‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது.
அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது.
மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது.
இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்)
பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.
பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர்.
அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும்.
அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது,
அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு
அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும்.
மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால்,
இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.

நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.

ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும்,
‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.

———————-

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-

ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-

சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14

லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

———————————————————-

இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது

கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன

இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –

அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்

பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த -தத்ர பரம் நாம அகார்யம் கார்யாந வச்சிந்ந பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவோ த் கலிகை காதபத் ரீக்ருத
நிஸ் ஸீம நித்ய போக விபூதிகம் முக்தோபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
வ்யூஹஸ் ச
முமுஷு ஸிஸ்ருஷயா ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
ஸாஸ்த்ர ததர்த்த தத் பலாநி
த்யாந ஆராதநே லீலா சேதீத் ருஸ
கார்ய உப பக்த விபக்த பர குண ரூப வ்யாபார ஸீகர வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
முக்தி ஸாதகம் சதுர் கா அவஸ்தா நாம்

விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க

ததா ச ஸ்ரீ ஸாத்வதே

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா க்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் – சாத்துவத சம்ஹிதை
ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதிவி ஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா

நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் தத பேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநா ஸ்வ பரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்
ப்ராதுர் பாவ விசேஷாதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் சைதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதீதரஸ்ய

யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

அத்ராந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்

ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வதா காராந்தர மாக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக் யைஸ்து கௌண முக்யை ஸூ ரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

ததா முமுஷு பிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நஷேதஸ் ச

ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸா கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போம் கோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீ நம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந்தி யந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீ முதாச்சா அகிலா நாமா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ரார்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி பண்டிதந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

———–

இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

———-

139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் –

இத்தம் சதுராத்மா
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -இதி –வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுராத்மா நம

——————-

140-சதுர்வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்

கதமேகஸ்ய சாதுராத்ம்யம் –தத்ராஹ
சதுர்வ்யூஹ
யத் யுக்த ப்ரயோஜன -ஏப்யோத்யே -ஆராத்யா -வ்யக்தயே –
ச ஸமஸ்தவ் யஸ்தேந குண ஷட்கந -தத் வ்யஞ்ஜகவ்ய அவஸ்தித
அவயவ- வர்ண-பூஷண- ப்ரஹரண -வாஹந -த்வஜாதி பிர்ஜா
கரா க்ரதாத்ய வஸ்தா சதுஷ்டய விஸிஷ்ட அபி மூர்த்திபிஸ்
சதுர்த்தா வ்யூஹத இதி

த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் ஸூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் வ்யூஹயா நம

———————

141-சதுர்த்தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே

வ்யூஹ மூலேந பரேண ரூபேண
சதுர் தம்ஷ்ட்ர
சதுர் தம்ஷ்ட்ரத்வம் மஹா புருஷ லக்ஷணம்
யதா

சதுர்தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்

வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –

நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம

—————–

142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்

ததா சதுர்புஜ-ததா ஹி பரம் ரூபம் ஆஹ 

சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நான்கு திருத்தோள்களோடே கம்பீரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன்
திருச் சக்ரம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்தவன்

தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
அப்பால் உள்ள பரமபதத்தில் சங்கு சக்ரம் கதை போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியபடியே உள்ளவன்

புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்-நான்கு புஜங்களுடன் கூடியவன்

ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் புஜாய நம
தாமரை -பரம புருஷார்த்தம்
நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு

————

139 வது திருநாமம் சதுராத்மா – பெருமான் தன்னையே வாஸீ தேவன் ப்ரத்யும்னன், ஸங்காஷணன் அநிருத்தன் என நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ராமாயணத்தில் பகவான் ஒருவர் தான் தன்னை ராம லஷ்மணர் பரத சத்ருக்கன் என பிரித்துக் கொண்டார் என்கிறது . பிதரம் ரோஜயா மாஸ்ய எனது வங்கும் ப்ரமாணத்தின் படி பகவான் தசரதனை தனக்கு தந்தையாக வரித்தார். ராமன் என்பது ஒரு நாமம் தானே என்றால் அவரவர் செய்வதை பொறுத்து நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றார். லக்ஷமணன் செய்வது ஒன்று. பரதனின் அவதார நோக்கமே வேற . அது போல் சத்ருக்கன் அவதார நோக்கமே வேற. அது போல் இப்போது பார்க்கும் நான்கு பேரும் தன்னை வெவ்வேறு தொழிலுக்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைத்தும் ஒருவரே பண்ணலாம் என்றாலும் நாம் அனுபவிக்க ஹேதுவாய் 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு படைப்பது பிடிக்கும், மற்றெருவருக்கு அழிப்பு தொழில் பிடிக்கும். ஆக ஆஸ்திரிகர்களின் விருப்பப்படி சேவை சாதிக்க தகுந்தார் போல் அந்தந்த ரூபத்தில் வணங்கத்தக்கவராய் தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டார்கள் என சாதித்தார். ராமனின் அவதார நோக்கமே லோகத்தில் தர்மம் சீர்குலைந்து போயிற்று. பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்பதில்லை என ஆயிற்று இது போல க்ருத த்ரேதா யுகத்தில் தாய் சொல்வதை மகள் கேட்பது கிடையாது . ஆச்சராயன் சொன்னால் சிஷ்யன் கேட்பது கிடையாது. இந்த மாறுபட்ட கருத்தை சரி பண்ணத்தான் இராமன் அவதரித்தார் என்றார். தந்தை சொல்மிக்க மந்தரமில்லை என தந்தை சொன்னார் என்பதற்காக காட்டிற்கு ராமன் சென்றனர். ஆதிசேஷன் அவதாரமான லக்ஷ்மணன் பகவானுக்கு கைங்கரியம் சேஷத்துவம் புரியவே இருந்தார். ஸ்வயம்புது. எனது வங்கும் ப்ரமாணப்படி நீ ஆணையிடு ராமா அதை நான்பின் தொடர்ந்து கைங்கரியம் புரிவேன். ஆக ஜீவாத்மாக்கள் அனைவரும் பரமாத்வாவின் சேஷர்கள். ஆக கைங்கர்யம் புரிவதல் லக்ஷ்மணன் நோக்காக கொண்டுள்ளார். பரதனின் அவதார நோக்கம் நிறைய கைங்கரியம் செய்வார். ஆனால் ராமனுடன் கூட செல்லவில்லை. ஆனால் ஆச்சார்யர்கள் பரதனையே லக்ஷ்மணனை விட உயர்நதவன் என கொண்டாடுகிறார்கள் . லக்ஷ்மணன புரிந்த கைங்கர்யத்திற்கு சேஷத்துவம். என்று பெயர் பரதன் ராமன் இட்ட வழக்காய் கைஙகர்யம் புரிந்ததற்கு பாரதந்திரியம் என்று பெயர். சேஷத்துவத்தை விட பாரதந்திரிய மே போற்றத் தகுந்தது . பரதனுக்கு மட்டும் நாட்டில் இருக்க விருப்பமா? ராமன் கூறினான் என்பதற்காக நாட்டில் இருந்தார். நாமும் பகவானுக்கு கைங்கரியம் பண்ணும் போது அவர் திருவுள்ளம் கோணாதபடி நடக்க வேண்டும் என அறுதியிட்டார். பகவானுக்கு கைங்கர்யம் புரிவதைவிட அவர் அடியார்களான பாகவதோத்தமர்களுக்கு அத்யந்த பார தந்திரியனாய் கைங்கர்யம் புரிவதை வெளிக்காட்டவே சத்ருக்கன் அவதாரம். ராமனின்றி இருந்த பரதன். பரதன் அன்றியிருந்த சத்குக்கனன். இதைத்தான் அடியார்க்கு அடியார்- தம் அடியார்க்கு அடியார் – தமக்கு அடியார்க்கு அடியர் – தமக்கு அடியோங்களே ஆக அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியன் என்பதையை சத்ருக்கன் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். சதுராத்மா – 4 ஆக பிரிந்தார் போல் வாஸுதேவன் முழுவதுமாய் இருந்து பின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என நான்காக இருக்கிறார்

140 வது திருநாமம் – சதுர்வியூ ஹ : வியூகம் என்றால் பிரித்தல் வகுக்கிறது என அர்த்தம். துவாபரயுகம் வரை மொத்த வேதமும் ஒன்றாக இருந்தது. வேதவியாசர் பிறந்த பின் தான் மொத்த வேதத்தையும் பிரித்தார். வேதங்கள் 4 ராம லக்ஷணாதிகள் – 4 ஆக எதிலும் 4. இங்கு வாஸுதேவன் ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன், அநிருத்தன் என 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ததம் ஏகஸ்ய ….என பட்டர் சாதித்தபடி எதற்காக ஒருவரே தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். த்யேய ஆராத்ய … குணஷட் கேண..6 குணங்களாய் தன்னைப் பிரித்துக் கொண்டு ஞான பலம் – சங்கர்ஷணன் ஐஸ்வர்யம் வீர்யம் – ப்ரத்யும்னன் சக்தி தேஜஸ் – அநிருத்தன் என்றும் தலா ஒவ்வொருவரும் 2 குணங்களை கொண்டுள்ளார். அப்போது அநிருத்தனுக்கு ஞானம் கிடையாதா என கேள்வி எழ எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. ஆனால் அந்தந்த 2 குணங்கள் ப்ரதானமாய் மேலோங்கி இருக்கும் என சாதித்தார். திருவேங்கடமுடையான் எளிமையின் நீர்மையின் ஸ்வரூபமாய் திகழ்கிறார் என்றால் ஸ்ரீரங்கநாதனுக்கு எளிமை கிடையாது என்று அர்த்தமில்லை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கேற்ப முக்கியமான 2 குணங்களை எடுத்துக் கொள்கிறார். தத்வியஞ்ச விவஸ்தித… எனது வங்கும் ப்ரமாணத்தின் படி அவரவர் கையில் வைத்திருக்கும் ஆயுதம், அவரவர்கள் திருமேனி வர்ணம், அவரவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வாகனங்கள் எல்லாம் வேறாக இருக்கும். இதற்கு சான்றாய் நிறைய ஹோம குண்டங்கள் கொண்டுள்ள யாகசாலையில் நிறைய படங்கள் இருக்கும். அந்த ஒவ்வொரு படங்களிலும் இந்த 3 பேர்களின் படம் தான் வரையப்பட்டிருக்கும். சங்கம், கதை சக்கரம் என ஒவ்வொருவரும் தரித்துக் கொண்டு இருப்பர். இதை பாஞ்சராத்ர ஆகமத்தில் விவரித்து கூறப்பட்டு இருக்கிறது. முன் குறிப்பட்டது போல் கையில் பிடித்திருக்கும் ஆபரணம், திருமேனி வர்ணம் ஒவ்வொன்றும் மாறி இருக்கும். விசாக வியூக ஸ்தம்பம் என்று ஒன்று உள்ளது. இதே போல் ஸ்ரீரங்கத்திலும் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் நீளமாய் தூணை கட்டி வைத்துள்ளார்கள். அந்த தூணில் கீழே 4 கிளை. நடுவில் 4 கிளை மேலே 4 கிளை – 4.4-4-4 என 16 கிளைகள் இருக்கும். இதை ஒவ்வொரு கிளையாக பிரித்திருப்பதின் நோக்கம் – கீழ் களையிலிருந்து அடுத்த களைக்கு போகும் போது ஒரு தெளிவு பிறக்கும். இப்போது எல்லாம் முழித்துக் கொண்டு இருக்கோம். இந்த தசைக்கு பெயர் ஜாக்ரதா தசை. (விழித்திருக்கும் தசை) மனசு வேலை பார்க்கிறது. கண் காது போன்ற இந்த்ரியங்கள் வேலை பார்க்கிறது. இதற்கு அடுத்த தசை தூங்குவது. தூங்கி விட்டோம் என்றால் ஸ்வப்னம் காணும் நிலை . இதை யே ஸ்வப்னதசை என்கிறார்கள். மனது மட்டும் வேலை பார்க்கும். கண்காது எல்லாம் மூடிக்கொண்டு விடும். ஆனால் உள்ளே இருக்கும் உலகம் தெரிகிறது. மனது வேலை செய்கிறது. இது ௨வது தசை. ஸ்வாபதசை . 3வது தசைக்கு ஸீஸுக்தி என்று பெயர். நல்ல ஆழ் நிலை உறக்கம். மனசு, கண் காது எல்லாம் தூங்கிவிட்டது நன்றாக தூங்கின தசை .3வது .அடுத்து 4வது தசை துரியதசா. துரிய தசா என்பது மயக்க தலை இப்போது மயக்கநிலை அந்த தூரத்தில் ஒன்று உள்ளே வரப்போவது தெரியும். சுமாராகத் தெரியும். இன்னும் அருகில் வந்தால் நேற்று பார்த்தது போல் தோன்றும். அதன் பின் சற்று அருகாமையில் மேலும் வரும் போது இவர் தான் என ஊர்ஜிதமாகிறது. வந்து உட்கார்ந்தவுடன் அங்க அடையாளங்கள் தெரிந்து விட்டது. தள்ளி இருக்கும் போது சுமாராக காட்சி அளித்தது எல்லாம் கிட்டக்க அருகாமையில் வர வர தெளிவாய் தெரியும். அது போல் ப்ரஹ்மத்தை நோக்கி போக போக தெளிவு பிறக்கும். ஆக படிப்படியான எல்லா தசைகளையும் அடைந்து முடிவில் நன்றாக தூங்கிவிட்டால் நன்றாக பெருமானை ஒன்றி அனுபவிக்கிறோம். அதாவது பெருமானுடன் ஒன்றிவிடுகிறோம். இதைத்தான் விசாக வியூக ஸ்தம்பம் என அழைப்பர்

———

தசரதனின் நான்கு பிள்ளைகளை மணந்த நாலு பெண்கள்
ராமர்-சீதை
லெட்சுமணர்-ஊர்மிளை
பரதர் – மாண்டவி
சத்ருக்னன் -ஸ்ருதகீர்த்தி

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் நாலு
ரிஷிக்களிடம் அவைகளைப் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்
ருக் – பைலர்
யஜூர் – ஜைமினி
சாம – வைசம்பாயன
அதர்வண – சுமந்து

மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள்
பிரம்மசர்யம் (மாணவன்)
கிருஹஸ்தன் (இல்லறத்தான்)
வானப்ரஸ்தம் (கடவுளை வணங்க கானக வாழ்வு)
சந்யாசம் (துறவு)

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
வெண்பா (4 வரிகள் உடையது),
இரண்டு வரிகளை உடையது குறள்.

பிரம்மாவின் நாலு மானச
புத்திரர்கள் யாவர்?
சநகர்
சநாதனர்
சநந்தனர்
சனத் குமாரர்

நான்கு வகைப் பூக்கள் யாவை
கோட்டுப் பூ, கொடிப் பூ,
நிலப் பூ, நீர்ப் பூ

க’ வர்க்கத்தில் துவங்கும் நாலு புண்ய சொற்களைத் தியானிப்போற்கு புனர் ஜன்மம் இல்லை
கங்கை
கோவிந்தன்
கீதா
காயத்ரி

கும்பமேளா நடைபெறும் நாலு இடங்கள்
ஹரித்வார்
அலகாபாத் (பிரயாகை திரிவேணி
த்ரிவேணி
சங்கமம்)
நாசிக்
உஜ்ஜையினி.

ரத, கஜ, துரக, பதாதி
(தேர், யானை, குதிரை,
காலாட் படைகள்)

உபநிஷத்தில் கூறப்படும் நாலு
மஹா வாக்யங்கள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி
தத்வம் அஸி
ப்ரஹ்ஞானம் ப்ரஹ்ம,
அயமாத்ம ப்ரஹ்ம

———————–———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–பல ஸ்ருதிகள் -ஸ்ரீ பட்டர் பாஷ்யம் —

April 27, 2023

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”
என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

—————–

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம மஹிமையை அறிவிக்க திரு உள்ளம் பற்றி
சாந்தனுவின் புத்திரரான பீஷ்மர்
குந்தியின் புத்திரனான தர்மருக்கு உரைக்கிறார்

————

யதிதம் கீர்த்த நஸ்ய கேஸ வஸ்ய மஹாத்மந
நாம் நாம் ஸஹஸ்ரம் திவ்யா நாம் அசேஷேண ப்ரகீர்த்திதம்

நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்
மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

———

அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் கூறப்படுகின்றன

யதிதம் ஸ்ருணு யாந்நித்யம் யச்சாபி பரி கீர்த்த யேத்
நாஸூபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோமுத்ரேஹ ச மாநவ

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

———

வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன ஸம்ருத்தஸ் ஸ்யாச் ஸூத்ர ஸூகம் அவாப்நுயாத்

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

——

தர்மார்த்தீ ப்ராப் நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ ச அர்த்தம் ஆப் நுயாத்
காமாந் அவாப் நுயாத் காமி ப்ரஜார்த்தீ ச ஆப் நுயாத் ப்ரஜா

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

——-

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் யஸ் ஸதோத்தாய ஸூஸிஸ் தத்கத மநஸ
ஸஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்

யஸஸ் ப்ராப்நோதி விபுலாம் ஜ்ஞாதி ப்ரதான்ய மேவ ச
அஸலாம் ஸ்ரியம் ஆப் நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத்ய நுத்தமம்

ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதி மான் பல ரூப குணான்வித

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்த நாத்
பயான் முச்யதே பீதஸ்து முச்யேதாபன்ன ஆபத

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

———

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது

துர்க்காணி அதி தரத்யாசு புருஷஸ் புருஷோத்தமன்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

—-

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவ பராயண
ஸர்வ பாப விஸூத் தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநா தநம்

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்

——–

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

ந வாஸூ தேவ பக்தாநாம் அஸூபம் வித்யதே க்வசித்
ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே

இதம் ஸ்தவம் அதீயாந ஸ்ரத்தா பக்தி ஸமந்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

———–

பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந ஸூபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தா நாம் புருஷோத்தமே

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

———-

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அயற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோ ததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

——–

அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –

ஸ ஸூர அஸூர கந்தர்வம் ஸ யஷோ ரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்த தேதம் கிருஷ்ணஸ்ய ஸ சராசரம்

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

——-

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்திரியாணி மநோ புத்தி ஸத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகாநி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞ ஏவ ஸ

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன

————

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்

அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

ஸர்வ ஆகமா நாம் ஆசார ப்ரதமம் பரி கல்பித
ஆசார ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு அச்யுத

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

————

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷய பிதரோ தேவ மஹா பூதாநி தாதவ
ஜங்கமா ஜங்கம் சேதம் ஜகந் நாராயண உத்பவம்

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

———

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது

யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞாந மேதத் ஸர்வம் ஜநார்த்தநாத்

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

————

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான்ய நேகஸ
த்ரீன்ல் லோகான் வியாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

————–

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேந கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷ ஸ்ரேய பிராப்தம் ஸூகாநி ச

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

——

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத பிறப்பும் அவ்யயம்
பஜந்தி யே புஷ் கராஷம் ந தே யாந்தி பராபவம்
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச ஸர்வ துக்கம்
உன் மூல்ய ஸம் பதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேந ஸதா க்ரியாஸ்தாம்

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

——–

இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்ய வியாக்யானம் ஸம் பூர்ணம்

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 7-திருநாமங்கள்–426– -605- வரை –

January 20, 2023
  1. விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம் |

அர்த்தோSனர்த்தோ மஹாகோஶோ மஹாபோகோ மஹாதன: ||

இந்த நாற்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விஸ்தார:, 427. ஸ்தாவரஸ்தாணு:, 428. ப்ரமாணம், 429. பீஜமவ்யயம் |
  2. அர்த்த:, 431. அனர்த்த:, 432. மஹாகோஶ:, 433. மஹாபோக:, 434. மஹாதன: ||

———–

  1. அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |

நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||

இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |
  2. நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: ||

—–

  1. யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி:|

ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||

இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி:|
  2. ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம்||

—-

  1. ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஶ: ஸுகத: ஸுஹ்ருத்|

மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: ||

இந்தநாற்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுவ்ரத:, 456. ஸுமுக:, 457. ஸூக்ஷ்ம:, 458. ஸுகோஶ:, 459. ஸுகத:, 460. ஸுஹ்ருத்|
  2. மனோஹர:, 462. ஜிதக்ரோத:, 463. வீரபாஹு:, 464. விதாரண:||

———

  1. ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்|

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||

இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |
  2. வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||

—-

  1. தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம்|

அவிக்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர் விதாதா க்ருதலக்ஷண: ||

இந்த ஐம்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. தர்மகுப், 476. தர்மக்ருத், 477. தர்மீ, 478. ஸத், 479. அஸத், 480. க்ஷரம், 481. அக்ஷரம்|
  2. அவிக்ஞாதா, 483. ஸஹஸ்ராம்ஶு:, 484. விதாதா, 485. க்ருதலக்ஷண:||

——

  1. கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர:|

ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||

இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |
  2. ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||

—–

  1. உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |

ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||

இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |
  2. ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: ||

——-

  1. ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |

வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||

இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |
  2. வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||

—–

  1. ஜீவோ வினயிதாஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம:|

அம்போநிதிரனந்தாத்மா மஹோததிஶயோSந்தக: ||

இந்த ஐம்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஜீவ, 514. வினயிதாஸாக்ஷீ, 515. முகுந்த:, 516. அமிதவிக்ரம:|
  2. அம்போநிதி:, 518. அனந்தாத்மா, 519. மஹோததிஶய:, 520. அந்தக: ||

  1. அஜோ மஹார்ஹ: ஸ்வபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |

ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||

இந்த ஐம்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஜ:, 522. மஹார்ஹ:, 523. ஸ்வாபாவ்ய:, 524. ஜிதாமித்ர:, 525. ப்ரமோதன: |
  2. ஆனந்த:, 527. நந்தன:, 528. நந்த:, 529. ஸத்யதர்மா, 530. த்ரிவிக்ரம: ||

—–

57. மஹர்ஶி: கபிலாச்சார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: 

த்ரிபதஸ்த்ரிதஶாத்யக்ஷோ மஹாஶ்ருங்க: க்ருதாந்தக்ருத் ||

இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

531. மஹர்ஶி: கபிலாசார்ய:, 532. க்ருதக்ஞ:, 533. மேதினீபதி: |

534. த்ரிபத:, 535. த்ரிதஶாத்யக்ஷ:, 536. மஹாஶ்ருங்க:, 537. க்ருதாந்தக்ருத் ||

—-

  1. மஹாவராஹோ கோவிந்த: ஸுஶேண கனகாங்கதீ

குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ரகதாதர:  ||

இந்த ஐம்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹாவராஹ:, 539. கோவிந்த:, 540. ஸுஶேண:, 541. கனகாங்கதீ |
  2. குஹ்ய:, 543. கபீர:, 544. கஹன:, 545. குப்த:, 546. சக்ரகதாதர: ||

———

  1. வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஶ்ணோ த்ருட: ஸங்கர்ஶணோச்யுத:

வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஶ்கராக்ஷோ மஹாமனா: ||

இந்த ஐம்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வேதா, 548. ஸ்வாங்க:, 549. அஜித:, 550. க்ருஶ்ண:, 551. த்ருட:, 552. ஸங்கர்ஶணோச்யுத: |
  2. வருண:, 554. வாருண:, 555. வ்ருக்ஷ:, 556. புஶ்கராக்ஷ:, 557. மஹாமனா: ||

  1. பகவான் பகஹானந்தி வனமாலீ ஹலாயுத:

ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஶ்ணுர் கதிஸத்தம: ||

இந்த அறுபதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பகவான், 559. பகஹா, 560. ஆனந்தீ, 561. வனமாலீ, 562. ஹலாயுத: |
  2. ஆதித்ய:, 564. ஜ்யோதிராதித்ய:, 565. ஸஹிஶ்ணு:, 566. கதிஸத்தம: ||

——

61. ஸுதன்வா கண்டபரஶுர்தாருணோ த்ரவிணப்ரத: |

திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||

இந்த அறுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

567. ஸுதன்வா, 568. கண்டபரஶு: (அகண்டபரஶு:), 569. தாருண:, 570. த்ரவிணப்ரத: |

571. திவ:ஸ்ப்ருக், 572. ஸர்வத்ருக்வ்யாஸ:, 573. வாசஸ்பதிரயோநிஜ: ||  

  1. த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக்|

ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||

இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578.  பேஶஜம், 579. பிஶக்|
  2. ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||

  1. ஶுபாங்க: ஶாந்தித: ஸ்ரஶ்டா குமுத: குவலேசய:|

கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||

இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |
  2. கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய:||

  1. அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |

ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 

இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ:|
  2. ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||

————-

  1. ஓம்விஸ்தாராயநம:

விஸ்தீர்யந்தே விரிவடைகின்றன

ஸமஸ்தானி அனைத்து

ஜகந்த்யஸ்மின்னிதி உலகங்களும் எவருக்குள்ளே

விஸ்தார: அவர் (பகவான்) ‘விஸ்தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உலகங்களும் பகவானுக்குள்ளே விரிவடைகின்றன.  எனவே, பகவான் ‘விஸ்தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்ஸ்தாவரஸ்தாணவேநம:

ஸ்திதிஶீலத்வாத் என்றும் நிலையாக இருப்பதை தனது தன்மையாகக் கொண்டிருப்பதால்

ஸ்தாவர: பகவான் ‘ஸ்தாவர:’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்திதிஶீலானி என்றும் நிலையாக இருக்கும்

ப்ருதிவ்யாதீனி பூமி முதலியனவும்

திஶ்டந்த்யஸ்மின்னிதி (தாம்) எவருக்குள் நிலைபெற்றிருக்கின்றனவோ, எவரால் தாங்கப்படுகின்றனவோ

ஸ்தாணு: (அந்த) பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்தாவரஸ்சாஸௌ ஸ்தாவரமாகவும்

ஸ்தாணுஸ்ச ஸ்தாணுவாகவும் இருப்பதால்

ஸ்தாவரஸ்தாணு: பகவான் ‘ஸ்தாவரஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் நிலையாக இருப்பதை தனது இயற்கையாக (தன்மையாக) கொண்டிருப்பதால் ‘ஸ்தாவர:’ என்று அழைக்கப்படுகிறார். என்றும் நிலையாக இருக்கும் பூமி முதலியனவும் (தாமே) பகவானிடம்  நிலைபெற்றிருக்கின்றன. எனவே,  அவர் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார். தான் நிலையானவராகவும், பூமி முதலான மற்ற நிலையானவற்றிற்கும் தான் ஆதாரமாய் (அவற்றை) தாங்கி இருப்பதாலும் பகவான் ‘ஸ்தாவரஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ப்ரமாணாயநம:

ஸம்விதாத்மனா நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால்

ப்ரமாணம் பகவான் ‘ப்ரமாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நெறிமுறைகளின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘ப்ரமாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்பீஜயாவ்யயாயநம:

அன்யதா வேறேதும்

பாவ பற்றுதல்கள்

வ்யதிரேகேன இன்றி

காரணமிதி (இந்தப் ப்ரபஞ்சத்திற்கும், பிறவிகளுக்கும்) காரணமாய் இருத்தலால்

பீஜமவ்யயம் பகவான் ‘பீஜமவ்யயம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸவிஶேஶேணமேகம் இது பகவானை குறிக்கும் தனித்துவமான (பீஜம், அவ்யயம் என்று பிரிக்காது)

நாம ஒரே திருநாமமாகும்.

பகவான் பற்றுதல்களோ, தூண்டுதலோ இல்லாது இந்தப் ப்ரபஞ்சத்திற்கு (பிறவிகளுக்கு) ஒரே காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் ‘பீஜமவ்யயம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஒரே திருநாமமான இது  பகவானை தனியாகக் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு திருநாமமாகும்.

————

  1. ஓம்அர்த்தாயநம:

ஸுகரூபத்வாத் பேரின்பமே வடிவானவராய் இருத்தலால்

ஸர்வைரர்த்யத இதி அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார்

அர்த்த: எனவே, பகவான் ‘அர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்பமே வடிவானவராய் இருத்தலால் பகவான் அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார். எனவே, பகவான் ‘அர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வைரர்த்யத = ஸர்வை: + அர்த்த்யத

உன்னை அருத்தித்து வந்தோம் (திருப்பாவை 25 – ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்று தொடங்கும் பாசுரம்)

———–

  1. ஓம்அனர்த்தாயநம:

ந வித்யதே இல்லை

ப்ரயோஜனம் பலன்கள்

ஆப்தகாமத்வாத் அஸ்யேதி தன்னிறைவு பெற்றவரானபடியால்

அனர்த்த: பகவான் ‘அனர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அடையப்படவேண்டிய பலன்கள் என்று ஒன்றும் இல்லை. அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே அவர் ‘அனர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரிடமிருந்து பலன்களை பெறுவதற்காக நாம் அவரை அருத்திக்கிறோம். தன்னிறைவு பெற்றபடியால் அவருக்கு யாரையும் அருத்திக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அடையவேண்டிய அர்த்தங்களும் (அதாவது பொருள் முதலானவைகள்) எதுவுமில்லை.

————

  1. ஓம்மஹாகோஶாயநம:

மஹாந்த: மிகப்பெரியதான (எளிதில் கடக்க இயலாத)

கோஶா உறைகளான

அன்னமாதய: அன்னம் (உணவு) முதலான

ஆச்சாதகா நாம் அறியவொட்டாமல் நம்மிடமிருந்து பகவானை மறைக்கின்றன

அஸ்யேதி எனவே

மஹாகோஶ: பகவான் ‘மஹாகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அன்னம், ப்ராணம் முதலான உறைகள் (திரைகள் என்றும் கொள்ளலாம்) நாம் அறியவொட்டாமல் பகவானை நம்மிடமிருந்து மறைக்கின்றன. இவ்வாறு மிகப் பெரிய கோஶங்களால் (திரைகளால்) மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் பகவான் ‘மஹாகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்மஹாபோகாயநம:

மஹான் மிகச்சிறந்த

போக: ஸுகரூப ‘போகம்’ அதாவது இன்பமே வடிவாய்

அஸ்யேதி இருப்பதால்

மஹாபோக: பகவான் ‘மஹாபோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப (போக) வடிவாய் இருப்பதால் பகவான் ‘மஹாபோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்மஹாதனாயநம:

மஹத் மிகச்சிறந்த

போகஸாதனலக்ஷணம் இன்பத்தைக் குறிப்பதாக

தனமஸ்யேதி செல்வத்தை  உடையவராதலால்

மஹாதன: பகவான் ‘மஹாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் பேரின்பமே அவரது மிகப்பெரிய செல்வமாகும். அத்தகைய இன்பத்தை செல்வமாக உடையவராதலால் பகவான் ‘மஹாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |

நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||

இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |
  2. நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: ||

—————-

  1. ஓம்அநிர்விண்ணாயநம:

ஆப்தகாமத்வாத் தன்னிறைவு பெற்றவரானபடியால்

நிர்வேதோஸ்ய வெறுப்புக்கள் (த்வேஶங்கள்)

ந வித்யத இதி அவரிடம் காணப்படுவதில்லை

அநிர்விண்ண: எனவே பகவான் ‘அநிர்விண்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்பெறுபவர். மேலும், இதனால், தன்னிறைவு பெற்றவரானபடியால் அவரிடம் வெறுப்புக்களோ, உதாசீனமோ காணப்படுவதில்லை. எனவே அவர் ‘அநிர்விண்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ஸ்தவிஶ்டாயநம:

வைராஜரூபேண விராட் வடிவத்தில்

ஸ்தித: இருப்பதால்

ஸ்தவிஶ்ட: பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரபஞ்சம் முழுவதையும் வ்யாபிக்கும்) விராட் வடிவத்தில் இருப்பதால் பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்னிர்மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ (முண்டக உபநிஶத் 2.1.4)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த விராட்டினுடைய (விராட் புருஷனாக பரந்து விரிந்துள்ள பரப்ரஹ்மத்தின்) தலை ஸ்வர்கலோகமாகும். கதிரவனும், முழுமதியும் அதன் கண்கள்.

அக்னிர்மூர்தா என்ற இடத்தில், அக்னியை ஸ்வர்கலோகம் என்றே பொருளுரைத்திருக்கின்றனர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம்அபுவே நம:

அஜன்மா பிறப்பற்றவராதலால்

அபூ: பகவான் ‘அபூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பற்றவராதலால் பகவான் ‘அபூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை “அபூ:” என்றோ அல்லது “பூ:” என்றோ பதம் பிரிக்கலாம். ஆச்சார்யாள் இரண்டு பதங்களுக்கும் உரை அளித்துள்ளார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் “அபூ:” என்று அர்ச்சிப்பதே வழக்கத்தில் உள்ளது.

ஓம் புவே நம:

அதவா அல்லது

பவதீதி அனைத்துமாய் இருப்பதால்

பூ: பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (அனைத்துமாய்) இருப்பதால் பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூ ஸத்தாயாம்’ பூ என்ற வேர்ச்சொல்லிற்கு ‘ஸத்’ அதாவது இருப்பது என்று பொருள் (அந்த பொருளில் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்) இத்யஸ்ய ஸம்பதாதித்வாத் க்விப் இது ஸம்பதாதி கணத்தில் ‘க்விப்’ என்ற விகுதி சேர்ந்துள்ளது.

மஹீ வா பூமியை (பூ என்று அழைப்பர்)

பூ: எனவே, பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமியை ‘பூ’ என்று அழைப்பார்கள். எனவே, பகவான் ‘பூ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்தர்மயூபாயநம:

யூபே வேள்வியின் யூபஸ்தம்பத்தில்

பஶுவத் அந்த வேள்வியில் பலி கொடுக்கப்படும் மிருகத்தை (எவ்வாறு கட்டி வைத்துள்ளனரோ அவ்வாறே)

தத்ஸமாராதன ஆத்மகா பகவானுக்கு திருப்தியளிக்கும்

தர்மாஸ்தத்ர தர்மமானது

பத்யந்த இதி பகவானிடம் கட்டிவைக்கப்பட்டுள்ளது

தர்மயூப: எனவே, பகவான் ‘தர்மயூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வாறு வேள்வியில் பலியிடப்படவுள்ள மிருகம் அந்த வேள்வியின் யூபஸ்தம்பத்தில் கட்டிவைக்கப்படுமோ, அவ்வாறே பகவானை திருப்திப்படுத்தும் தர்மமானது அவரிடம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பகவான் ‘தர்மயூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்மஹாமகாயநம:

யஸ்மின் அர்ப்பிதா எவருக்கு அர்ப்பணித்து

மகா யஞா ‘மகா’ அதாவது வேள்வியானது

நிர்வாண லக்ஷண ஃபலம் நிர்வாணமாகிய முக்தியை

ப்ரயச்சந்தோ அளிக்கின்றன

மஹாந்தோ ஜாயந்தே எனவே அவை சிறப்பானதாக அறியப்படுகின்றன

ஸ மஹாமக: எனவே பகவான் ‘மஹாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அர்ப்பணித்து செய்யப்படும் வேள்வியானது (மகா) மிகச்சிறந்த (மஹா) பலனாகிய முக்தியை அளிக்கின்றன. எனவே பகவான் மஹாமக: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹா (மிகச்சிறந்த) + மகா (வேள்வி) = மஹாமக:

———-

  1. ஓம்நக்ஷத்ரநேமயேநம:

நக்ஷத்ரதாரகை: ஸார்த்தம் சந்த்ரஸூர்யாதயோ க்ரஹா: |

வாயுபாஶமயைர்பந்தைர் நிர்பத்தா த்ருவஸம்ஞிதே ||

அனைத்து விண்மீன்கள், கோள்களுடன் கூட கதிரவன், வெண்மதி ஆகிய அனைத்தும் காற்றென்னும் கயிற்றால் துருவ நட்சத்திரத்துடன் கட்டப்பட்டுள்ளன.

ஸ ஜ்யோதிஶாம் சக்ரம் (மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும்

ப்ராமயம்ஸ் தாராமயஸ்ய நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும்

ஶிஶுமாரஸ்ய ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின்

புச்சதேஶே வால்பகுதியில்

வ்யவஸ்திதோ த்ருவ: துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது.

தஸ்ய ஶிஶுமாரஸ்ய அந்த ஶிஶுமார மண்டலத்தின்

ஹ்ருதயே இதயப் பகுதியில்

ஜ்யோதிஸ்சக்ரஸ்ய விண்கோள்களின் வட்டத்தின்

நேமிவத் விளிம்பில்

ப்ரவர்த்தக: அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய்

ஸ்திதோ நிலைபெற்றிருக்கும்

விஶ்ணுரிதி பகவான் விஶ்ணு

நக்ஷத்ரநேமி: ‘நக்ஷத்ரநேமி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும் நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும் ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின் வால்பகுதியில் துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது. அந்த ஶிஶுமார மண்டலத்தின் இதயப் பகுதியில் விண்கோள்களின் வட்டத்தின் விளிம்பில் அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய் நிலைபெற்றிருக்கும் பகவான் விஶ்ணு ‘நக்ஷத்ரநேமி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶுமாரவர்ணனே ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் ‘விஶ்ணுர்ஹ்ருதயம்’ பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம்

இதி ஸ்வாத்யாயப்ராஹ்மணே ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில்

ஶ்ரூயதே கூறப்பட்டுள்ளது.

ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில் ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம் என்று கூறப்பட்டுள்ளது.

———-

  1. ஓம்நக்ஷத்ரிணேநம:

சந்த்ரரூபேண முழுமதியின் வடிவினராய் இருப்பதால்

நக்ஷத்ரீ பகவான் ‘நக்ஷத்ரீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முழுமதியின் வடிவினராய் இருப்பதால் பகவான் ‘நக்ஷத்ரீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நக்ஷத்ராணாம் அஹம் ஶஶி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்நக்ஷத்திரங்களில் (நான்) சந்திரன்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————–

  1. ஓம்க்ஷமாயநம:

ஸமஸ்தகார்யேஶு அனைத்துவித செயல்களிலும்

ஸமர்த்த: திறமை மிக்கவராதலால்

க்ஷம: பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துவித செயல்களிலும் திறமை மிக்கவராதலால் பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ஷமத இதி வா பொறுமை மிக்கவராதலால்

க்ஷம: பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொறுமை மிக்கவராதலால் பகவான் ‘க்ஷம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ஷமயா ப்ருதிவீ ஸம:’ (வால்மீகி இராமாயணம் 1.1.18)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் இராமர்) பொறுமையில் பூமிக்கு இணையானவர்.

இதி வால்மீகிவசனாத் | இவ்வாறு வால்மீகி முனிவர் இராமாயணத்தில் கூறியுள்ளார்.

————-

  1. ஓம்க்ஷாமாயநம:

ஸர்வவிகாரேஶு அனைத்து விகாரங்களும்

க்ஷபிதேஶு அழியும் பொழுது

ஸ்வாத்மநாவஸ்தி இதி தனது இயற்கையான தன்மையோடு நிலைபெற்றிருப்பதால்

க்ஷாம: பகவான் ‘க்ஷாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் இங்கு படைக்கப்பட்ட அனைத்து விகாரங்களும் அழியும் பொழுது தனது இயற்கையான தன்மையோடு பகவான் நிலைபெற்றிருப்பதால் அவர் ‘க்ஷாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ஷாயோ ம:’ (பாணினி சூத்ரம் 8.2.53)

இதி நிஶ்டாதகாரஸ்ய மகாராதேஶ:  | மேற்கண்ட பாணினி ஸூத்ரத்தின் படி முடிவிலுள்ள ‘த’காரம் ‘ம’ காரமாய் திரிந்துள்ளது.

————

  1. ஓம்ஸமீஹனாயநம:

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் படைப்பு முதலிய காரியங்களுக்காக

ஸம்யக் நல்ல (மங்களகரமான)

ஈஹத இதி ஆசை (அல்லது விருப்பம்) கொள்வதால்

ஸமீஹன: பகவான் ‘ஸமீஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய நற்காரியங்களுக்காக (‘நான் பலவாறாக படைப்பேன்’ என்பது போன்ற) மங்களகரமான ஆசை (விருப்பம்) கொள்கிறார். எனவே அவர் ‘ஸமீஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் = ஸ்ருஶ்டி + ஆதி + அர்த்தம். ஸம்யக் (நல்ல, மங்களகரமான) + ஈஹத (ஆசை) = ஸமீஹன

—————

  1. யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி:|

ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||

இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி:|
  2. ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம்||

—————-

  1. ஓம்யக்ஞாயநம:

ஸர்வயக்ஞ அனைத்து வேள்விகளின்

ஸ்வரூபத்வாத் வடிவாக திகழ்வதால்

யக்ஞ: பகவான் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து வேள்விகளின் வடிவாக இருக்கிறார். எனவே அவர் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துஶ்டிகாரகோ (அனைத்து தேவர்களுக்கும்) திருப்தியை (இன்பத்தை)

யக்ஞாகாரேண வேள்விகளின் வடிவாய் இருந்து

ப்ரவர்த்தத வளர்க்கிறார்

இதி வா யக்ஞ: எனவே, பகவான் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் வேள்விகளின் வடிவில் அனைத்து தேவர்களுக்கும் மகிழ்ச்சியை வளர்க்கிறார். எனவே அவர் ‘யக்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு:’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளதுவிஶ்ணுவே வேள்வியாவார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம்இஜ்யாயநம:

யஶ்டவ்யோப்யயம் ஏவ இதி (அந்த யக்ஞங்களின் மூலம்) வழிபடப்படுபவரும் பகவான் ஒருவரே

இஜ்ய: எனவே, அவர் ‘இஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யக்ஞங்களின் வடிவாக உள்ளது மட்டுமன்றி, அந்த யக்ஞங்களால் வழிபடப்படுபவராகவும் உள்ளார். எனவே அவர் ‘இஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஏவ என்ற சொல் யக்ஞங்களால் பகவான் ஒருவர் மட்டுமே வழிபடப்படுகிறார், மற்றோர் யவரும் அல்லர் என்பதை குறிக்கிறது.

யே யஜந்தி மகை: புண்யைர்தேவதாதீன்பித்ருனபி |

ஆத்மானமாத்மனா நித்யம் விஶ்ணுமேவ யஜந்தி தே || || (ஸ்ரீ ஹரி வம்சம்)

ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் புண்ணியமான வேள்விகளால் தேவர்களையும், முன்னோர்களையும் (பித்ருக்கள்) வழிபடுகின்றனரோ, அவர்கள் அனைத்திற்கும் (தமது, அந்த தேவர்கள் மற்றும் பித்ருக்களின்) உள்ளுறை ஆத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணுவையே (அந்த வேள்விகளின் மூலம்) வழிபடுகின்றனர்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

———-

  1. ஓம்மஹேஜ்யாயநம:

ஸர்வாஸு அனைத்து

தேவதாஸு தேவர்களை

யஶ்டவ்யாஸு வழிபடப்படும்

ப்ரகர்ஶேண மிகவும் சிறப்பாக (மிக உயர்வாக)

யஶ்டவ்யோ வழிபடப்படுகிறார்

மோக்ஷஃபலதாத்ருத்வாத் முக்தியை பலனாக அளிக்கவல்லவராகையால்

இதி மஹேஜ்ய: எனவே, பகவான் ‘மஹேஜ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குறிப்பிட்ட பலனை வேண்டி வேள்விகளால் பற்பல தேவர்கள் வழிபடப்படுகின்றனர். ஆயினும், எவராலும் முக்தியை பலனாக அளிக்க இயலாது. அதை அளிக்கவல்ல பகவானை அனைவரும் மிகவும் சிறப்பாக வழிபடுகின்றனர். எனவே, பகவான் ‘மஹேஜ்ய:’ (அனைவரைக் காட்டிலும் சிறப்பாக வழிபடப்படுகிறார்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை அளிக்க வல்லவராதலால் வழிபடப்படும் அனைத்து தேவர்களைக் காட்டிலும் பகவானே உயர்ந்தவர். எனவே அவர் மஹா (உயர்ந்த) + இஜ்ய: (வழிபடப்படுபவர்) = மஹேஜ்ய:

———-

  1. ஓம்க்ரதவேநம:

யூபஸஹிதோ யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும்

யக்ஞ: வேள்விக்கு

க்ரது: ‘க்ரது’ என்று பெயர். அந்த ‘க்ரது’ வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘க்ரது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும் வேள்விக்கு ‘க்ரது’ என்று பெயர். அந்த ‘க்ரது’ வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘க்ரது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ஸத்ராயநம:

ஆஸத்யுபைதி சோதனாலக்ஷணம் விதிவடிவான தர்மத்தை அடைபவர்களை

ஸத்ரம் ‘ஸத்ரம்’ என்று அழைப்பர். அவர்களின் உள்ளுறை ஆன்மாவான பகவானும் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விதிவடிவான தர்மத்தை அடைபவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸதஸ் ஸத்புருஶர்களான யோகிகளை அல்லது ‘ஸத்’ என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தை

த்ராயத காப்பதால்

இதி வா ஸத்ரம் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத்புருஶர்களான யோகிகளையும், ‘ஸத்’ என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தையும் காப்பதால் பகவான் ‘ஸத்ரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஸதாம்கதயேநம:

ஸதாம் முமுகஷூணாம் ‘ஸத்’ அதாவது முக்தியை விழைவோருக்கு

நான்யா கதிரிதி ஒரே புகலிடமாக இருப்பதால்

ஸதாம் கதி: பகவான் ‘ஸதாம் கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு ஒரே புகலிடமாக இருப்பதால் பகவான் ‘ஸதாம் கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்யா = ந + அன்யா

—————

  1. ஓம்ஸர்வதர்ஶினேநம:

ஸர்வேஶாம் அனைத்து

ப்ராணினாம் உயிரினங்களின்

க்ருதாக்ருதம் செய்யும் (அல்லது செய்யாது விடும்) செயல்கள் ஸர்வம் அனைத்தையும்

பஶ்யதி அறிகிறார் (காண்கிறார்)

ஸ்வாபாவிகேன போதேனேதி தனது இயற்கையான தன்மையால் (வேறொன்றின் உதவியின்றி)

ஸர்வதர்ஶீ எனவே பகவான் ‘ஸர்வதர்ஶீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து உயிரினங்களின் செயல்களையும் அறிகிறார் (காண்கிறார்). எனவே அவர் ‘ஸர்வதர்ஶீ’ என்ற திருநாமத்தால்  அழைக்கப்படுகிறார்.

க்ருதாக்ருதம் = செய்யத்தகுந்ததை செய்தல், செய்யவேண்டியதை செய்யாமலிருத்தல், செய்யத் தகாத செயல்களை செய்யாதிருத்தல் மற்றும் செய்யத் தகாத செயல்களை செய்தல் ஆகிய அனைத்தையும் பகவான் அறிகிறார்.

————-

  1. ஓம்விமுக்தாத்மனேநம:

ஸ்வபாவேன இயற்கையாகவே

விமுக்த ஆத்மா அவருடைய ஆத்மா பற்றற்று இருப்பதால்

யஸ்யேதி விமுக்தாத்மா பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இயற்கையாகவே பற்றற்ற ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விமுக்தஸ்சாஸாவாத்மா பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால்

சேதி வா விமுக்தாத்மா பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால் பகவான் ‘விமுக்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள் 350)

————

  1. ஓம்ஸர்வஜ்ஞாயநம:

ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார்

ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார்

ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை

————

  1. ஓம்ஞானமுத்தமாயநம:

ஞானமுத்தமம் ‘ஞானம் உத்தமம்’ என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.

ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த

அஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாத

ஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியது

ஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததான

ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.

ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————

  1. ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஶ: ஸுகத: ஸுஹ்ருத்|

மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: ||

இந்தநாற்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுவ்ரத:, 456. ஸுமுக:, 457. ஸூக்ஷ்ம:, 458. ஸுகோஶ:, 459. ஸுகத:, 460. ஸுஹ்ருத்|
  2. மனோஹர:, 462. ஜிதக்ரோத:, 463. வீரபாஹு:, 464. விதாரண:||

————-

  1. ஓம்ஸுவ்ரதாயநம:

ஶோபனம் மங்களகரமான

வ்ரதமஸ்யேதி விரதத்தை உடையவராதலால்

ஸுவ்ரத: பகவான் ‘ஸுவ்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அடியவர்களைக் காப்பதான) மங்களகரமான விரதத்தை உடையவராதலால் பகவான் ‘ஸுவ்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மிதி ச யாசதே |

அபயம் ஸர்வபூதேப்யோ தாதாம்யேதத் வ்ரதம் மம’ || (வால்மீகி இராமாயணம் 6.18.33)

வால்மீகி இராமாயணம் யுத்த காண்டத்தில், விபீஶண சரணாகதியின் பொழுது பகவான் ஸ்ரீராமர் கூறியது: ஒருமுறை ‘நான் உன்னுடையவன்’ என்று எவரொருவர் என்னை சரணடைகின்றனரோ அவர்களை நான் அனைவரிடமிருந்தும் (அனைத்து துன்பங்களிலிருந்தும்) காப்பேன். இதுவே எனது நோன்பாகும் (விரதமாகும்).

————-

  1. ஓம்ஸுமுகாயநம:

ஶோபனம் மிக அழகியதான

முகமஸ்யேதி திருமுகத்தை உடையவராதலால்

ஸுமுக: பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் அழகிய திருமுகத்தை உடையவராதலால் பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரஸன்னவதனம் சாருபத்மபத்ராயதேக்ஷணம்’ (ஸ்ரீவிஷ்ணு புராணம் 6.7.80)

ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான்) மலர்ந்த முகமும், அழகிய தாமரை இதழ்களைப் போன்ற திருக்கண்களும் (உடையவர்).

வனவாஸஸுமுகத்வாத் வா வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்ததால்

தாஶரதீ ராம: தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர்

ஸுமுக: ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்த தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்வபிதுர்வசனம் ஸ்ரீமானபிஶேகாத் பரம் ப்ரியம் |

மனஸா பூர்வமாஸாத்ய வாசா ப்ரதிக்ருஹீதவான் ||’  (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீராமர் தன்னுடைய தந்தையின் (வனவாசத்திற்கு செல்லும்படியான) கட்டளையை, தன்னுடைய பட்டாபிஷேக செய்தியைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு மனதில் ஏற்றுக்கொண்டார். பின்னர் வாக்கிலும் அவ்வாறே கூறினார்.

‘இமானி து மஹாரண்யே விஹ்ருத்ய நவ பஞ்ச ச |

வர்ஶாணி பரமப்ரீத: ஸ்தாஸ்யாமி வசனே தவ ||’ (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.24.17)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமர் கூறுகிறார்: இந்த பதினான்கு ஆண்டுகளை நான் மகிழ்ச்சியுடன் வனத்தில் கழித்துவிட்டு தங்களின் கட்டளையை நிறைவேற்றுவேன்.

‘ந வனம் கந்துகாமஸ்ய த்யஜதஸ்ச வஸுந்தராம் |

ஸர்வலோகாதிகஸ்யேவ மனோ ராமஸ்ய விவ்யதே || (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.19.33)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: வனத்திற்கு செல்வதோ, இராஜ்யத்தை இழப்பதோ பகவான் ஸ்ரீராமரின் மனதை சற்றும் சலனப்படுத்தவில்லை. அவர், இந்த உலகின் இன்ப, துன்பங்களை கடந்த ஒரு மஹாஞானியின் நிலையில் இருந்தார்.

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே! யாரும்

செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு; பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (கம்பராமாயணம்)

இதி ராமாயணே | இவ்வாறு ஸ்ரீமத் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வ அனைத்து

வித்யோபதேஶேன வா (வேதம் முதலான) வித்யைகளையும் உபதேசிப்பவராதலால்

ஸுமுக: பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைவருக்கும் பரம குருவாவார். வேதம் முதலான அனைத்து  வித்தைகளையும் உபதேசிப்பவராதலால் பகவான் ‘ஸுமுக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |

ஹ தேவமாத்மபுத்திப்ரகாஶம்

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான் சரணடைகிறேன்.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———-

  1. ஓம்ஸூக்ஷ்மாயநம:

ஶப்தாதி ‘ஒலி’ முதலிய

ஸ்தூலகாரண ஸ்தூல (பருப்பொருள் உருவாவதற்கான) காரணங்கள்

ரஹிதத்வாத் அற்றவராக இருப்பதால்(லும்)

ஶப்தாதயோ ஒலி முதலான மூல தத்துவங்களே

ஹ்யாகாஶாதீனாம் ஆகாயம் தொடங்கி

உத்தரோத்தர ஒன்றின்பின் ஒன்றாக (காற்று, தீ, நீர், பூமி)

ஸ்தூலத்வ காரணானி பஞ்சபூதங்களாகிய பருப்பொருட்கள் உருவாக காரணமாக இருப்பதால்,

தத்பாவாத் அவற்றின் தாக்கங்கள் அற்றவராக இருப்பதால்

ஸூக்ஷ்ம: பகவான் ‘ஸூக்ஷ்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒலியிலிருந்தே ஆகாயம் பிறக்கிறது. ஆகாயத்திலிருந்து பஞ்சபூதங்களும் (அவற்றிலிருந்து அனைத்து) பருப்பொருட்களும் உருவாகின்றன. ஒலியே அனைத்து பருப்பொருட்களும் உருவாகக் காரணமாகும். அந்த ஒலி முதலான மூல தத்துவங்களின் தாக்கம் இல்லாதவராதலால் பகவான் ‘ஸூக்ஷ்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பருப்பொருட்கள் (ஸ்தூலம்) உருவாவதற்கான காரணங்களின் தாக்கம் அற்றவர் பகவான். எனவே அவர் என்றுமே ஸூக்ஷ்மமானவர்.

‘ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்’ (முண்டக உபநிஶத் 1.1.6)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மம்) அனைத்தையும் வ்யாபிப்பது, மிகவும் நுண்ணியமானது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————-

  1. ஓம்ஸுகோஶாயநம:

ஶோபனோ மங்களகரமான

கோஶோ ஒலி (அல்லது முழக்கத்தை) உடையவராதலால்

வேதாத்மகோSஸ்யேதி நான்மறைகளின் வடிவான

ஸுகோஶ: பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்மறைகளின் வடிவான மங்களகரமான ஒலியை (முழக்கத்தை) உடையவராதலால் பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேககம்பீர இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான

கோஶத்வாத் குரலை உடையவராதலால்

ஸுகோஶ: பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான குரலை உடையவராதலால் பகவான் ‘ஸுகோஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸுகதாயநம:

ஸத்வ்ருத்தானாம் நன்னெறியை வழுவாது நடப்போருக்கு

ஸுகம் ததாதி இன்பத்தை அளிப்பதனால்

ஸுகத: பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நன்னெறியை வழுவாது நடப்போருக்கு இன்பத்தை அளிப்பதனால் பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸத்வ்ருத்தானாம் நன்னெறியை மீறுவோருக்கு (அதை பிழைப்போருக்கு)

ஸுகம் இன்பத்தை

த்யதி கண்டயதீதி ‘த்யதி’ அதாவது அழிக்கிறார்

ஸுகத: எனவே, பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நன்னெறியை மீறுவோரின் (அதை பிழைப்போருக்கு) இன்பத்தை அழிக்கிறார். எனவே, பகவான் ‘ஸுகத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்லாதன், விபீஶணன் ஆகியோருக்கு இன்பத்தை அளிக்கிறார். ஹிரண்யகசிபு, இராவணன் ஆகியோரின் இன்பத்தை அழிக்கிறார்.

————

  1. ஓம்ஸுஹ்ருதாயநம:

ப்ரத்யுபகார கைமாறு

நிரபேக்ஷதய எதிர்பாராது

உபகாரித்வாத் தான் அனைவருக்கும் உதவி புரிகிறார்

ஸுஹ்ருத் எனவே, பகவான் ‘ஸுஹ்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கைமாறு எதிர்பாராது அனைவருக்கும் உதவி புரிகிறார். எனவே, பகவான் ‘ஸுஹ்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்மனோஹராயநம:

நிரதிஶய முழுமையான (அளவிடமுடியாத)

ஆனந்தரூபத்வாத் இன்பமே வடிவானவராய்

மனோ ஹரதீதி காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால்

மனோஹர: பகவான் ‘மனோஹர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முழுமையான, அளவிடமுடியாத ஆனந்த வடிவினராய் காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால் பகவான் ‘மனோஹர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யோ வை பூமா தத் ஸுகம், நால்பே ஸுகமஸ்தி’ (சாந்தோக்ய உபநிஶத் 3.23.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (என்றும் உள்ளதான அந்த) பரப்ரஹ்மத்திடம் காணப்படும் இன்பமே இன்பமாகும். மற்ற (அழியக்கூடிய, மாறக்கூடிய) இன்பங்கள் அனைத்தும் கீழானதாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம்ஜிதக்ரோதாயநம:

ஜித: வெற்றி கொண்டுள்ளார்

க்ரோதோ கோபத்தை

யேன எவரொருவர்

ஸ ஜிதக்ரோத: அவர் (பகவான்) ‘ஜிதக்ரோத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்;

வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை

ஸ்தாபனார்த்தம் நிலைநிறுத்துவதற்காகவே

ஸுராரீன் ஹந்தி (தேவர்களின் பகைவர்களான) அஸுரர்களை அழிக்கிறார்

ந து கோபவஶாதிதி கோபத்தின் வசப்பட்டு அல்ல.

பகவான் கோபத்தை வென்றவர். தேவர்களின் பகைவர்களான அஸுரர்களைக் கூட அவர் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வரைமுறைகளை நிலைநிறுத்துவதற்காகவே அழிக்கிறாரே ஒழிய கோபாவேசப்பட்டு அல்ல. எனவே, பகவான் ‘ஜிதக்ரோத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்வீரபாஹவேநம:

த்ரிதஶ முப்பத்து முக்கோடி தேவர்களின்

ஶத்ரூன் பகைவர்களை (அஸுரர்களை) நிக்னன் அழித்து

வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை

ஸ்தாபயன் நிலைநிறுத்தவல்ல

விக்ரமஶாலி  சக்திபடைத்த (பலம்பொருந்திய)

பாஹுரஸ்யேதி திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால்

வீரபாஹு: பகவான் ‘வீரபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முப்பத்து முக்கோடி தேவர்களின் பகைவர்களை (அஸுரர்களை) அழித்து வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை நிலைநிறுத்தவல்ல சக்திபடைத்த (பலம்பொருந்திய) திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால் பகவான் ‘வீரபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்விதாரணாயநம:

அதார்மிகான் அறத்திற்கு புறம்பாக செல்வோரை

விதாரயாதி வெட்டித் துண்டாடுவதால்

இதி விதாரண: பகவான் ‘விதாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்திற்கு புறம்பாக செல்வோரை வெட்டித் துண்டாடுவதால் பகவான் ‘விதாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த மூன்று திருநாமங்களையும் ஒரு கோர்வையாக நாம் புரிந்து கொள்ளலாம். பகவான் அறத்திற்குப் புறம்பானோரை (அஸுரர்களை) அழிக்கிறார் (விதாரண:). அவரது புஜபலத்தைக் கொண்டு அழிக்கிறார் (வீரபாஹு:). அதையும் அவர் கோபம் மேலிடச் செய்வதில்லை. வேதங்களின் விதிமுறைகளை நிலைநிறுத்தவே செய்கிறார் (ஜிதக்ரோத:).

————–

  1. ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்|

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||

இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |
  2. வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||

—————

  1. ஓம்ஸ்வாபனாயநம:

ப்ராணின: அனைத்து உயிரினங்களையும்

ஸ்வாபயன் கனவில் உழல வைக்கிறார்

ஆத்மஸம்போதி ஆத்மாவைப் பற்றிய அறிவிலிருந்து (ஆத்மஞானத்திலிருந்து) அவைகளை

விதுரான் விலக்கி வைக்கிறார்

மாயயா குர்வன் மாயையின் மூலமாக

ஸ்வாபன: எனவே பகவான் ‘ஸ்வாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மாயையின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் ஆத்மஞானத்திலிருந்து விலக்கி வைத்து கனவினில் (கனவைப் போன்ற இந்த பிறவிப்பெருங்கடலில்) உழலவைக்கிறார். எனவே அவர் ‘ஸ்வாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸ்வவஶாயநம:

ஸ்வதந்த்ர: இந்த சுதந்திரமாக இருக்கிறார்

ஸ்வவஶ: பகவான் ‘ஸ்வவஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்து

ஸ்திதி காத்து

லயஹேதுத்வாத் அழித்தல் ஆகியவற்றிற்கு காரணமாய் இருப்பதால்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பதற்குக் காரணமாய் இருக்கிறார். எனவே அவர் சுதந்திரமானவர் (அவருக்கு எவரது உதவியும் தேவையில்லை). எனவே அவர் ‘ஸ்வவஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வவஶ: என்றால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று பொருள். அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் பகவான் சுதந்திரமானவர். தனக்கு ஒரு காரணமற்றவர். எனவே, அவர் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் (ஸ்வவஶ:).

————-

  1. ஓம்வ்யாபினேநம:

ஆகாஶவத் ஆகாயத்தைப் போன்று

ஸர்வகதத்வாத் அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிப்பதால்

வ்யாபீ பகவான் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆகாயம் எவ்வாறு இந்த உலகத்தை சூழ்ந்து வ்யாபிக்கிறதோ, அவ்வாறே பகவான் (அந்த ஆகாயம் உட்பட) அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிக்கிறார். எனவே, அவர் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆகாஶவத்ஸர்வகதஸ்ச நித்ய:’

(அந்தப் பரப்ரஹ்மமானது) ஆகாயத்தைப் போன்று வ்யாபிக்கிறது, என்றும் உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதால்

ஸர்வகார்யனாம் அனைத்து காரியங்களையும்

வ்யாபனாத்வா வ்யாபிப்பதால்

வ்யாபீ பகவான் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மூலகாரணமாய் இருப்பதன் மூலம் பகவான் (காரியங்களாக) அனைத்தையும் வ்யாபிக்கிறார். எனவே அவர் ‘வ்யாபீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்நைகாத்மனேநம:

ஜகதுத்பத்யாதிஶு இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான செயல்களை ஆற்றும்பொழுது

ஆவீர்பூத தோன்றி

நிமித்தஶக்திபிர் குறிப்பிட்ட சக்திகளுடன்

விபூதிபிர் தனது அதிசய சக்தியால் உருவங்களை தரித்து

அநேகதா பற்பல

திஶ்டன் விளங்குவதால்

நைகாத்மா பகவான் ‘நைகாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் ஆகிய செயல்களை ஆற்றும்பொழுது, அந்தந்த காரியங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சக்திகளுடன் பற்பல உருவங்களை தமது அதிசய சக்தியால் தரிக்கிறார். எனவே, அவர் ‘நைகாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகாத்மா என்றால் ந+ஏக+ஆத்மா, அதாவது பற்பல ஆத்மாக்கள் என்று பொருள்படும். பகவானே இவ்வாறு பற்பல ஆத்மாக்களாக உருவம் தரிக்கிறார்.

————-

  1. ஓம்நைககர்மக்ருதேநம:

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல்

ஸம்பத்தி பாதுகாத்து வளர்த்தல்

விபத்தி ஸம்ஹாரம் செய்தல்

ப்ரப்ருதே முதலான பற்பல

கர்மாணி செயல்களை

கரோதீதி செய்வதால்

நைககர்மக்ருத் பகவான் ‘நைககர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்து வளர்த்தல், (தகுந்த சமயத்தில்) அழித்தல் ஆகிய பற்பல செயல்களை செய்கிறார். எனவே அவர் ‘நைககர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைககர்மக்ருத் என்ற சொல் ந+ஏக+கர்ம+க்ருத் என்று பிரிந்து, பற்பல செயல்களை செய்பவர் என்று பொருள் தரும்.

————

  1. ஓம்வத்ஸராயநம:

வஸதி வசிக்கின்றன (இருக்கின்றன)

அத்ர இங்கு (காணப்படும்)

அகிலமிதி அனைத்து உலகங்களும் (ப்ரபஞ்சம்)

வத்ஸர: எனவே பகவான் ‘வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு காணப்படும் ப்ரபஞ்சம் அனைத்தும் அவருக்குள்ளே வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே பகவான் ‘வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்வத்ஸலாயநம:

பக்த தனது அடியவர்களிடம்

ஸ்னேஹித்வாத் அளவுகடந்த அன்போடு இருக்கிறார்

வத்ஸல: எனவே பகவான் ‘வத்ஸல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஒரு தாய்ப் பசு எவ்வாறு தன் கன்றிடம் அன்பு காட்டுமோ அவ்வாறே) பகவான் தனது அடியவர்களிடம் அளவுகடந்த அன்போடு இருக்கிறார். எனவே அவர் ‘வத்ஸல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாய்ப் பசுவின் அன்பு: பசுவானது தூய்மையை விரும்பும் பிராணியாகும். புல்லில் அசுத்தம் இருப்பின் பசியிருந்தாலும் அந்த புல்லை பசுவானது உண்ணாது. ஆனால், அதே பசுவானது தனது கன்றுக்குட்டி ஒரு அசுத்தத்தில் வீழ்ந்தால் தனது நாவால் நக்கி அதை தூய்மையாக்கும். அவ்வாறே, பகவானும் சுயநலமின்றி, இந்த அசுத்தமான ஸம்ஸாரத்தில் மீண்டும் மீண்டும் அவதரித்து நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.

‘வத்ஸாம்ஸாப்யாம் காமபலே’ (பாணினி ஸூத்ரம் 5.2.98)

இதி லச்ப்ரத்யய: | இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ‘வத்ஸ’ என்ற சொல்லிற்கு ‘ல’ எனும் விகுதி சேர்ந்து ‘வத்ஸல’ என்ற வார்த்தை உண்டாகிறது.

————-

  1. ஓம்வத்ஸினேநம:

வத்ஸானாம் கன்றுகளை

பாலனாத் மேய்ப்பவராதலால்

வத்ஸீ பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கன்றுகளை மேய்த்துப் பாதுகாப்பவராதலால் பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜகத்பிதுஸ்தஸ்ய இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையானபடியால்

வத்ஸபூதா: ப்ரஜா அனைத்து உயிரினங்களும் அவரின் பிள்ளைகளாவோம்

இதி வா வத்ஸீ பகவான் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையாவார். அனைத்து உயிரினங்களும் அவரது பிள்ளைகள். எனவே அவர் ‘வத்ஸீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வத்ஸ என்ற சொல்லிற்கு கன்றுகள், குழந்தைகள் ஆகிய பொருள்கள் உண்டு. இவை இரண்டைக் கொண்டும் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

—————

  1. ஓம்ரத்னகர்ப்பாயநம:

ரத்னானி வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும்

கர்பபூதாநி அஸ்யேதி தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள

ஸமுத்ரோ கடல் (கடலின் வடிவாக இருப்பதால்)

ரத்னகர்ப்ப: பகவான் ‘ரத்னகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும் தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள கடலின் வடிவாக இருப்பதால் பகவான் ‘ரத்னகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்தனேஶ்வராயநம:

தனானாம் அனைத்து செல்வங்களுக்கும்

ஈஶ்வர: உரிமையாளராக (ஸ்வாமியாக) இருப்பதால்

தனேஶ்வர: பகவான் ‘தனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து செல்வங்களுக்கும் உரிமையாளர் பகவானே. எனவே அவர் ‘தனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலில் காணப்படும் வைரம் முதலானவை மட்டுமல்ல. அனைத்து செல்வங்களும் பகவானுடையதுதான்.

—————-

  1. தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம்|

அவிக்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர் விதாதா க்ருதலக்ஷண: ||

இந்த ஐம்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. தர்மகுப், 476. தர்மக்ருத், 477. தர்மீ, 478. ஸத், 479. அஸத், 480. க்ஷரம், 481. அக்ஷரம்|
  2. அவிக்ஞாதா, 483. ஸஹஸ்ராம்ஶு:, 484. விதாதா, 485. க்ருதலக்ஷண:||

————-

  1. ஓம்தர்மகுபேநம:

தர்ம அறத்தை

கோபயதீதி பரிபாலிக்கிறார் (காக்கிறார்)

தர்மகுப் எனவே பகவான் ‘தர்மகுப்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை பரிபாலித்துக் காப்பவராதலால் பகவான் ‘தர்மகுப்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்த நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————

  1. ஓம்தர்மக்ருதேநம:

தர்மா(அ)தர்ம விஹீனோபி அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும்

தர்மமர்யாதாஸ்தாபநார்த்தம் அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு

தர்மமேவ அறச்செயல்களை மட்டுமே

கரோதீதி (தான்) செய்கிறார்

தர்மக்ருத் எனவே, பகவான் ‘தர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும், அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு, அறச்செயல்களை மட்டுமே புரிகிறார் (தான் செய்கிறார்). எனவே, பகவான் ‘தர்மக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்தர்மினேநம:

தர்மான் அறத்தை

தாராயதீதி தாங்குவதால்

தர்மீ பகவான் ‘தர்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தை தாங்குகிறார். எனவே அவர் ‘தர்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உதாரணமாக: அறத்தை நிலைநிறுத்துதல், அறவழியில் நடத்தல், அறச்செயல்களையே புரிதல்.

——–

  1. ஓம்ஸதேநம:

அவிததம் (என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான

பரம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான

ஸத் பகவான் ‘ஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான, பரப்ரஹ்மமான பகவான் ‘ஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸதேவ ஸோம்யேதம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ ஸௌம்யா!!! இதுவே (பரப்ரஹ்மமே அனைத்திற்கும்) முதலில் இருந்தது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

  1. ஓம்அஸதேநம:

அபரம் ப்ரஹ்ம (காரியத்தின் விளைவாக) இங்கு எல்லாமாய் தோற்றமளிக்கும் ‘அபர’ ப்ரஹ்மமான பகவான்

அஸத் ‘அஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சமாய் தோற்றமளிக்கும் காரிய ப்ரஹ்மமே (பகவானே) ‘அஸத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.4)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த பேதங்கள் (வேற்றுமைகள்) எல்லாம் (ஒரே பொருளைக் குறிக்கும்) வெவ்வேறு பெயர்களே. எனவே, அவை பெயரளவிலேயே என்று உணர்க.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

  1. ஓம்க்ஷராயநம:

ஸர்வானி பூதாநி இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும்

க்ஷரம் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் ‘க்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் ‘க்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்அக்ஷராயநம:

கூடஸ்த: என்றும் மாறாத பரம்பொருளே

அக்ஷரம் ‘அக்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

என்றும் மாறாத பரம்பொருளே ‘அக்ஷரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ஷர ஸர்வானி பூதாநி கூடஸ்தோSக்ஷர உச்யதே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.16)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: க்ஷர புருஶன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே (பரம்பொருளான பகவானே) அக்ஷர (மாற்றமில்லாத, அழிவில்லாத) புருஶன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

ஆச்சார்யாள் ‘க்ஷர’, ‘அக்ஷர’ ஆகிய இந்த இரண்டு திருநாமங்களையும் ஒரே வாக்கியமாக பொருளுரைத்திருக்கிறார். இரண்டு திருநாமங்களுக்கும் சேர்த்து இந்த ஸ்ரீமத்பகவத் கீதை வாக்கியத்தை மேற்கோள் காட்டியுள்ளார். இங்கு நான் இதை இரண்டு நாமங்களாகப் பிரித்து அளித்திருக்கிறேன்.

———–

  1. ஓம்அவிஞ்ஞாத்ரேநம:

ஆத்மனி ஆத்மாவிற்கு

கர்த்ருத்வாதி செயல் புரிகிறது போன்ற

விகல்பவிஞ்ஞானம் அறியாமை

கல்பிதமிதி கற்பனையாகும்

தத்வாஸனா (இந்த அறியாமையால்) விளையும் முன்வினையால் ஏற்படும் மனப்பதிவுகள்

அவகுண்டிதோ திரையிட்டிருக்கும்

ஜீவோ ஜீவாத்மாவை

விஞ்ஞாதா என்று அழைக்கின்றனர்.

தத்விலக்ஷணோ (அந்த ஜீவாத்மாவிலிருந்து) வேறுபட்டவரான

விஶ்ணு: பகவான் ஸ்ரீ மஹாவிஶ்ணு

அவிஞ்ஞாதா ‘அவிஞ்ஞாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆத்மாவிற்கு செயல்புரிதல் என்றுமே இல்லை. அறியாமையால் அவ்வாறு தமக்கு செயல் (மற்றும் செயல்வினை) இருப்பதாக ஒரு ஜீவாத்மா தவறாக கற்பனை செய்துகொள்கிறார். இதனால் கர்மவினையும், முற்பிறவி கர்மங்களின் வாசனை (மனப்பதிவும்) அந்த ஜீவாத்மாவை (அதன் உண்மையான தன்மையை அறியவொட்டாது) திரையிட்டு மறைக்கிறது. எனவே ஜீவாத்மாவை ‘விஞ்ஞாதா’ என்று அழைக்கின்றனர். இவ்வாறு அறியாமையோ, கர்மா வாசனையோ இல்லாது, அந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணு ‘அவிஞ்ஞாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஸஹஸ்ராம்ஶவேநம:

ஆதித்யாதிகதா கதிரவன் முதலான (ஒளிவீசும் கோள்களின்)

அம்ஶவோSஸ்யேத்யயமேவ கிரணங்கள் (அம்ஶ) அனைத்தும் பகவானுடையதே

முக்ய: ஸஹஸ்ராம்ஶு: எனவே பகவான் அவற்றின்  முதன்மையானதான ‘ஸஹஸ்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலிய (ஆயிரக்கணக்கான) ஒளிவீசும் கோள்கள் உண்மையில் பகவானின் ஒளியையே பிரதிபலிக்கின்றன. அவற்றின் கிரணங்கள் அனைத்தும் பகவானின் சக்தியேயாகும். எனவே பகவான் ‘ஸஹஸ்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸ்ராம்ஶு என்றால் ஆயிரக்கணக்கான கதிர்கள் என்று பொருள். நாம் புறக்கண்களால் காணும் கதிரவன் போன்ற ஒளியை உமிழும் கோள்கள் அனைத்தும் பகவனிடத்திலிருந்தே தமது ஒளியைப் பெறுகின்றன. எனவே, இவற்றின் மூலமான பகவான் ஆயிரக்கணக்கான கதிர்கள் (ஸஹஸ்ராம்ஶு) உடையவராகிறார்.

‘யேன ஸூர்யஸ்தபதி தேஜஸேத்த:’ (தைத்ரீய ப்ராஹ்மணம் 3.12.79.7)

தைத்ரீய ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது: எவருடைய ஒளியினால் தான் ஒளியூட்டப்பட்டு கதிரவன் சுடர்விடுகிறானோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜ:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலகமுழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்று உணர்).

இதி ஸ்ம்ருதேஶ்ச ஸ்ரீமத் பகவத்கீதை போன்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் இது விளங்குகிறது.

————

  1. ஓம்விதாத்ரேநம:

விஶேஶேண தனது தனிப்பட்ட சக்தியால்

ஶேஶ ஆதிசேடன்

திக்கஜ இந்தப் ப்ரபஞ்சத்தை எட்டு திக்கிலிருந்தும் தாங்கும் எட்டு யானைகள்

பூதரான் இந்த பூமியை தாங்கும் மலைகள்

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்

தாத்ருண் தாங்கும் (இவற்றை)

ததாதீதி தாங்குவதால்

விதாதா பகவான் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தையும், பூமியையும் அதிலுள்ள உயிரினங்களையும் சேர்த்து தாங்கும் ஆதிசேடன், எட்டு யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்), மலைகள் ஆகியவற்றை பகவான் தனது தனிப்பட்ட சக்தியால் தாங்குகிறார். எனவே, அவர் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்க்ருதலக்ஷணாயநம:

நித்ய என்றுமுள்ள

நிஶ்பன்ன முழுமையான

சைதன்ய அறிவுமயமான ஆன்மா (பரமாத்மா)

ரூபத்வாத் வடிவினராய் இருப்பதால்

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றுமுள்ள, முழுமையான, அறிவுமயமான ஆன்மாவின் வடிவினராய் (பரமாத்மாவாக) இருப்பதால் அவர் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ருதானி இயற்றினார் (உருவாக்கினார்)

லக்ஷணானி ஶாஸ்த்ராணி ‘லக்ஷணம்’ அதாவது சாத்திரங்களை

அனேன இதி வா குற்றம் குறைகள் அற்றவையான

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, குற்றம், குறைகள் அற்றதான (லக்ஷணங்கள் என்றழைக்கப்படும்) பற்பல சாத்திரங்களை உருவாக்கியதால் (இயற்றியதால்) பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வேதா ஶாஸ்த்ரானி விஞ்ஞானம் ஏதத் ஸர்வம் ஜனார்தனாத்’ (ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமம் 139)

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது: வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் விஞ்ஞானம் அனைத்தும் பகவான் ஜனார்தனரே (ஜனார்தனராலேயே உருவாக்கப்பட்டவை).

இத்யத்ரைவ வக்ஷ்யதி | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது.

ஸஜாதீய தம்மை போன்றவற்றிலிருந்தும்

விஜாதீய தம்மை அல்லாத மற்ற பொருட்களிடமிருந்தும்

வ்யவச்சேதகம் லக்ஷணம் ‘லக்ஷணங்கள்’ அதாவது (அந்தந்த பொருட்களை) தனித்துக் காட்டும் வேறுபாடுகளை

ஸர்வபாவானாம் அனைத்து பொருட்களிலும்

க்ருதமனேனேதி வா உருவாக்கியதால்

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பொருட்களும் தத்தம் வகுப்பிலிருந்தும், மற்ற வகுப்பிலிருந்தும் வேறுபட்டு தோன்றுகின்றன. இந்த லக்ஷணங்களை (வேறுபாடுகளை) உருவாக்கியதால் பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஜாதீய வேறுபாடுகள்: தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்ற வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவை தோற்றம் முதலியவற்றில் வேறுபட்டு உள்ளன.

ஸஜாதீய வேறுபாடுகள் – பூக்கள் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்திருந்தாலும் மல்லிகையும், செம்பருத்தியும் உருவம், மணம் போன்ற வெவ்வேறு தன்மைகளை கொண்டுள்ளன. மனிதர்களுக்குள்ளேயும் உருவம் முதலிய வேறுபாடுகள் உள்ளன.

ஸ்ரீவத்ஸலக்ஷணம் ‘ஸ்ரீவத்ஸம்’ என்னும் மருவை

வக்ஷஸி தனது திருமார்பில்

தேன க்ருதமிதி வா கொண்டுள்ள காரணத்தினால்

க்ருதலக்ஷண: பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, ‘ஸ்ரீவத்ஸம்’ என்னும் மருவை தனது திருமார்பில் கொண்டுள்ளபடியால் பகவான் ‘க்ருதலக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர:|

ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||

இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |
  2. ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||

—————

  1. ஓம்கபஸ்திநேமயேநம:

கபஸ்திசக்ரஸ்ய மத்யே ‘கபஸ்தி’ என்றழைக்கப்படும் சூரியமண்டலத்தின் நடுவே

ஸூர்யாத்மனா கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக (அந்த கதிரவனே உருவாக)

ஸ்தித இதி வீற்றிருப்பதால்

கபஸ்திநேமி: பகவான் ‘கபஸ்திநேமி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரியமண்டலத்தின் நடுவே அந்த கதிரவனாக (கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக) வீற்றிருப்பதால் பகவான் ‘கபஸ்திநேமி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சூரியனை சூரியநாராயணராக வழிபடுவது நம் வழக்கத்தில் உள்ளது.

—————–

  1. ஓம்ஸத்வஸ்தாயநம:

ஸத்வம் குணம் சத்வ குணம்

ப்ரகாஶகம் ஒளிமயமான

ப்ராதான்யேன மேலோங்க

அதிதிஶ்டதி விளங்குவதால்

ஸத்வஸ்த: பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒளிமயமான சத்வ குணம் மேலோங்க விளங்குவதால் பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வப்ராணிஶு அனைத்து உயிரினங்களுக்குள்ளும்

திஶ்டதீதி வா (உள்ளுறைந்து) வசிப்பதால்

ஸத்வஸ்த: பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் (உள்ளுறைந்து) வசிப்பதால் பகவான் ‘ஸத்வஸ்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்ஸிம்ஹாயநம:

விக்ரமஶாலித்வாத் வீரம் பொருந்தியவராதலால்

ஸிம்ஹவத் (காட்டுக்கு அரசனான) சிங்கத்தைப் போன்று

ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காட்டிற்கு அரசனான சிங்கத்தைப் போன்று வீரம் பொருந்தியவராதலால் பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ந்ருஶப்தலோபேன ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயரில் ‘ந்ரு’ என்ற சொல் மறைந்து

‘ஸத்யபாமா பாமா’ இதிவத்வா சத்யபாமாவை (சத்ய என்பதை விடுத்து) பொதுவாக பாமா என்றழைப்பது போல

ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சத்யபாமா என்ற பெயரை, ‘சத்ய’ என்ற சப்தத்தை மறைத்து பொதுவாக பாமா என்று அழைப்பதைப் போல, ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயருடைய பகவான் ‘ந்ரு’ என்ற சப்தம் மறைந்து ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்பூதமஹேஶ்வராயநம:

பூதானாம் அனைத்து உயிரினங்களின்

மஹான் ஒப்புயர்வற்ற

ஈஶ்வர: இறைவன் (ஆள்பவர்) ஆனபடியால்

பூதமஹேஶ்வர: பகவான் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே அனைவரின் (அனைத்து உயிரினங்களின்) ஒப்புயர்வற்ற இறைவனாவார். எனவே, அவர் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூதேன ஸத்யேன ‘பூ’ என்றால் ஸத்யம் அதாவது என்றும் உள்ளவர்

ஸ ஏவ பரமோ அவர் ஒருவரே மேலான

மஹான் ஒப்புயர்வற்ற

ஈஶ்வர தனிப்பெரும் தெய்வம்

இதி வா பூதமஹேஶ்வர: எனவே, பகவான் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உண்மையே உருவானவர், என்றும் உள்ளவர். ஒப்புயர்வற்ற தனிப்பெரும் தெய்வம் பகவான் ஒருவரே. எனவே, அவர் ‘பூதமஹேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூ ஸத்தாயாம்’. ‘பூ’ என்ற தாதுவிற்கு (வேர்ச்சொல்லிற்கு) ‘ஸத்’ என்று ஒரு பொருள் உள்ளது. ஸத் என்றால் இருப்பது. எனவேதான் என்றும் மாறாத உண்மையை ‘ஸத்யம்’ என்று கூறுகிறோம். இதன் அடிப்படையில், என்றும் இருப்பவரான பகவான் ஒருவரே மேலான பரம்பொருள். எனவே, அவரே ‘பூதமஹேஶ்வரன்’ என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

————

  1. ஓம்ஆதிதேவாயநம:

ஸர்வபூதானி அனைத்து உயிரினங்களுக்கும்

ஆதீயந்தேனேன மூல காரணமாய் இருப்பதால்

இதி ஆதி: பகவான் ‘ஆதி’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிஸ்சாஸௌ இவ்வாறு ‘ஆதியாகவும்’

தேவஸ்ச இதி ‘தேவனாகவும்’ இருப்பதால்

ஆதிதேவ: பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மூல காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் ‘ஆதியாவார்’. இவ்வாறு ஆதியாகவும் தேவனாகவும் இருப்பதால் பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்மஹாதேவாயநம:

ஸர்வான் அனைத்து

பாவான் பற்றுதல்களையும்

பரித்யஜ்ய விடுத்து

ஆத்மஞானயோக தனது ஆத்மஞான யோகமென்னும்

ஐஶ்வர்யே செல்வத்தால்

மஹதி தனது பெருமை

மஹியதே மென்மேலும் வளரப் பெற்றவராதலால்

தஸ்மாத் உச்யதே அவரை (பகவானை) அழைக்கின்றனர்

மஹாதேவ: ‘மஹாதேவ’ என்ற திருநாமத்தால்.

பகவான் அனைத்து பற்றுதல்களையும் விடுத்து தன்னைப் பற்றிய ஆத்மஞானயோகமென்னும் செல்வத்தால் தனது பெருமை மென்மேலும் வளரப் பெற்றவர். எனவே அவரை ‘மஹாதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

————

  1. ஓம்தேவேஶாயநம:

ப்ராதான்யேன அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய நிலையில் இருப்பதால்

தேவானாம் பகவான் அனைத்து தேவர்களுக்கும்

ஈஶோ தலைவராவார்

தேவேஶ: எனவே அவர் ‘தேவேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய (உயர்ந்த) நிலையில் இருப்பதால் பகவான் அனைத்து தேவர்களுக்கும் தலைவராவார். எனவே அவர் ‘தேவேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம்தேவப்ருத்குரவேநம:

தேவான் அனைத்து தேவர்களையும்

பிபர்தீதி பாதுகாப்பதால்

தேவப்ருத் ஶக்ர: ‘ஶக்ரனான’ இந்திரன் ‘தேவப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.

தஸ்யாபி அந்த இந்திரனையும்

ஶாஸிதேதி கட்டளையிட்டு வழிநடுத்தவதால்

தேவப்ருத்குரு: பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களைப் பாதுகாக்கும் இந்திரன் ‘தேவப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். அந்த இந்திரனையும் ஒரு குருவைப்போல கட்டளையிட்டு, வழிநடுத்துவதால் பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே தேவகுரு ப்ருஹஸ்பதியின் வடிவில் இந்திரனை வழிநடத்துகிறார் என்றும் கொள்ளலாம்

தேவானாம் தேவர்களைக் பரனாத் தாங்குகிறார் (காக்கிறார்)

ஸர்வவித்யானாம்  அனைத்து வித்தைகளையும்

நிகரணாத்வா அறிந்துள்ளார் ஆதலால்

தேவப்ருத்குரு: பகவான் ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் தேவர்களைக் காக்கிறார் (தேவப்ருத்) . மற்றும் அனைத்து வித்தைகளையும் அறிந்துள்ளார் (குரு). எனவே அவர்  ‘தேவப்ருத்குரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிகரணாத் என்றால் விழுங்குதல் குடித்தல் என்று பொருள். இங்கு அனைத்து வித்தைகளையும் கரைத்துக் குடித்தவர் என்று பொருள் கொள்ளலாம்.

—————-

  1. உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |

ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||

இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |
  2. ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: ||

—————–

  1. ஓம்உத்தராயநம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்

பந்தனாத் தளைகளிலிருந்து

உத்தரதி (நம்மை) விடுவிக்கிறார்

இதி உத்தர: எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் தளைகளிலிருந்து (நம்மை) விடுவிக்கிறார். எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வ அனைவரைக் காட்டிலும்

உத்க்ருஶ்ட மேலானவராதலால்

இதி வா உத்தர: பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக்காட்டிலும் மேலானவராதலால், பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வஸ்மாதிந்த்ர உத்தர:’

அனைவரைக் காட்டிலும் பரம்பொருள் (இந்த்ர) உயர்ந்தவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

இங்கு இந்த்ர என்ற பதம் பரம்பொருளான பரமாத்மாவையே குறிக்கிறது. தேவர்களின் தலைவரான இந்திரனை அல்ல.

————–

  1. ஓம்கோபதயேநம:

கவாம் ஆவினங்களை

பாலனாத் காப்பவராக (பசுக்களை மேய்ப்பவராக)

கோபவேஶதரோ இடையனாக (ஆயர்குலத்தவராக) தோன்றியதால்

கோபதி: பகவான் (கிருஷ்ணர்) ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது கிருஷ்ணாவதாரத்தில் ஆவினங்களை காப்பவராக, இடையனாக தோன்றியதால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கௌர்மஹீ: பூமாதேவியே ‘கௌ’ என்றும் அழைப்பர்

தஸ்யா: பதித்வாத்வா அவரின் (பூமாதேவியின்) கணவரானபடியால்

கோபதி: பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, ‘கௌ’ என்று அழைக்கப்படும் பூமாதேவியின் கணவரானபடியால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்கோப்த்ரேநம:

ஸமஸ்தபூதாநி அனைத்து உயிரினங்களையும்

பாலயன் காக்கிறார்

ரக்ஷகோ ஜகத: இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் காக்கிறார்

இதி கோப்தா எனவே, பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் காக்கிறார். எனவே பகவான் ‘கோப்தா’ என்று திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஞானகம்யாயநம:

ந கர்மணா வெறுமனே கடமைகளை ஆற்றுவதால் அல்ல

ந ஞானகர்மப்யாம் ஞானமும், செயலும் கலந்து செயல்படுவதால் அல்ல

வா கம்யதே அவரை (பகவானை) அடைவது

கிந்து ஆயினும்

ஞானேன (வேதங்கள், உபநிடதங்கள், அற நூல்களின் மூலம் பெறப்படும்) அறிவினால்

கம்யதே அவர் அடையப்படுகிறார்

இதி வா ஞானகம்ய: எனவே, பகவான் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடமைகளை ஆற்றுவதாலோ, ஞானமும், கர்மமும் கலந்து செயல்படுவதாலோ அடையமுடியாதவர் (அறியப்பட முடியாதவர்) பகவான். ஆயினும், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் அறநூல்கள் மூலம் பெறப்படும் தூய அறிவால் பகவானை அறியவும், அடையவும் முடியும். எனவே, அவர் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்புராதனாயநம:

காலேன காலத்தால்

அபரிச்சின்னத்வாத் வரையறுக்கப்படாதவர், ஆதலால்

புராபி (அனைவருக்கும்) மிகவும் முற்பட்ட காலத்திலிருந்தே

பவதீதி இருப்பவர்

புராதன: பகவான் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காலம் என்னும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டவர். காலத்தால் வரையறுக்கப்படாதவர். எனவே, அவர் அனைவருக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே (எவரும் தோன்றும் முன்னரே) இருப்பவர். எனவே அவர் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஶரீரபூதப்ருதேநம:

ஶரீர (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) உடலை

ஆரம்பக தோற்றுவிக்கும்

பூதானம் (நீர், நிலம், நெருப்பு போன்ற) பூதங்களை

பரணாத் தாங்குகிறார்

ப்ராணரூபதர: (அவற்றின்) உயிராக இருந்து

ஶரீரபூதப்ருத் எனவே, பகவான் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு உயிரினத்தின் உடலும் பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களால் ஆனது. அந்த பஞ்சபூதம் முதலிய தத்துவங்களையும் அவற்றின் உயிராக இருந்து பகவான் தாங்குகிறார். எனவே அவர் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்போக்த்ரேநம:

பாலகத்வாத் (அனைவரையும்) காப்பாற்றுவதால்

போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் காக்கும் கடவுளாவார். அனைவரையும் காப்பாற்றுவதால் அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமானந்த உயரிய ஆனந்தத்தை

ஸந்தோஹ அளவிடமுடியாத

ஸம்போகாத்வா அனுபவிப்பவராதலால்

போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் எப்பொழுதும் உயர்ந்த, அளவிடமுடியாத ஆனந்தத்தை இடைவிடாது அனுபவிக்கிறார். எனவே அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் பஞ்சமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (போக்தா என்னும் இந்த திருநாமம் வரையில்) ஐநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

———-

  1. ஓம்கபீந்த்ராயநம:

கபிஸ்சாஸா(வ்) கபி அதாவது பன்றியின் உருவத்துடன் இருப்பதோடு

இந்த்ரஸ்சேதி இந்திரனாகவும் (அதாவது சிறந்தவராகவும்) இருப்பதால்

கபிர்வராஹ: ‘கபி’ என்றால் வராஹம் அதாவது பன்றி

வாராஹம் அந்த பன்றியின்

வபுராஸ்தித: (ஹிரண்யாக்ஷனைக் கொல்ல வராஹ அவதாரம் எடுத்த பொழுது) உடலைத் தாங்கியவராதலால்

கபீந்த்ர: பகவான் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொல்ல பன்றியின் உருவத்தில் (கபி) அவதரித்தார். இவ்வாறு கபியாகவும் (பன்றியின் வடிவோடு அவதரித்தவரும்) இந்த்ரனாகவும் (அனைவரைக் காட்டிலும் சிறந்தவராகவும்) இருப்பதால் பகவான் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கபீனாம் ‘கபி’ அதாவது வாநரானாம் குரங்குகளின்

இந்த்ர: (சேனைக்குத்) தலைவராக இருந்ததால்

கபீந்த்ர: ராகவோ வா பகவான் ஸ்ரீராமர் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இராமாவதாரத்தின் பொழுது ‘கபி’ அதாவது குரங்குகளின் சேனைக்குத் தலைவராக இருந்தபடியால் ‘கபீந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்பூரிதக்ஷிணாயநம:

பூரய: பஹ்வய: ‘பூரய:’ என்றால் நிறைய

யக்ஞதக்ஷிணா: வேள்வியின் காணிக்கைகள்

தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு

தர்ஶயதோ அளிக்கின்றனர்

யக்ஞம் குர்வதோ வேள்விகளை புரியும் பொழுது

வித்யந்த இதி முடிவில்

பூரிதக்ஷிண: எனவே பகவான் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு புரியப்படும் வேள்விகளின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை பகவானுக்கு (அவரின் ப்ரதியான வேள்வியை புரியும் அந்தணர்களுக்கு) அளிக்கின்றனர். எனவே, பகவான் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்திற்கு மாற்று உரையாக “பகவான் தாமே அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு பற்பல வேள்விகளை புரிந்து, அவற்றின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை மற்றவருக்கு வழங்கினார். எனவே, அவர் ‘பூரிதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.

————-

  1. ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |

வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||

இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |
  2. வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||

——————

  1. ஓம்ஸோமபாயநம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்

பந்தனாத் ஸோமம் பிபதி ‘ஸோமரஸத்தை’ பருகுகிறார்

ஸர்வயக்ஞேஶு அனைத்து வேள்விகளிலும்

யஶ்டவ்ய (அந்தந்த வேள்விகளால்) வழிபடப்படும்

தேவதாரூபேணேதி தெய்வங்களின் வடிவாக

ஸோமப: எனவே பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளிலும், அந்த வேள்விகளால் வழிபடப்படும் தெய்வங்கள் (தேவதைகளின்) வடிவில் பகவானே ஸோமரஸத்தைப் பருகுகிறார். எனவே, அவர் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு

தர்ஶயன் (வேள்விகளில்) தோன்றும்

யஜமானரூபேண வா (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால்

ஸோமப: பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால், பகவான் ‘ஸோமப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்அம்ருதபாயநம:

ஸ்வாத்மாம்ருதரஸம் தனது ஆத்மானந்தமாகிய அமுதத்தை

பிபன் (எப்பொழுதும்) பருகுபவராகையால்

அம்ருதப: பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது ஆத்ம ஆனந்தத்திலேயே பகவான் எப்பொழுதும் திளைக்கிறார். அந்த ஆத்மானந்தமாகிய அமுதத்தை எப்பொழுதும் பருகுகிறார். எனவே அவர் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸுரை: அஸுரர்களால்

ஹ்ரியமானம் கவரப்பட்ட

அம்ருதம் அமுதத்தை

ரக்ஷித்வா (அந்த அஸுரர்கள் அதை பருகிவிடாது) காத்து

தேவான் தேவர்களுக்கு

பாயயித்வா அந்த அமுதத்தை வழங்கி

ஸ்வயமப்ய பின்னர் தானும்

பிபதிதி வா பருகியதால்

அம்ருதப: பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (பாற்கடலை கடையும் பொழுது) அஸுரர்களால் கவரப்பட்ட அமுதத்தைக் காத்து, அதை தேவர்களுக்கு அளித்து, பின்பு தானும் அந்த அமுதத்தைப் பருகியதால் பகவான் ‘அம்ருதப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மோஹினி அவதார சரித்திரம்: துர்வாஸர் தான் அளித்த மஹாலக்ஷ்மியின் மாலையை அவமதித்த இந்திரனுக்கும் (தேவர்களுக்கும்) நரை மற்றும் மூப்பு உண்டாகுமாறு சாபம் அளிக்கிறார். இதனால் அஸுரர்கள், தேவர்களைத் தோற்கடித்து ஸ்வர்கத்தை கைப்பற்றினர். பகவானின் ஆணையின் படி அஸுரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வந்தவுடன் அஸுரர்கள் அதைத் அபகரித்துச் சென்றனர். நரை, மூப்புடன் கூடிய தேவர்களால் அவர்களை எதிர்க்க இயலவில்லை. அவர்களின் நிலையை உணர்ந்த பகவான் ஒரு அழகிய பெண்ணின் வடிவைத் தாங்கி அஸுரர்களிடம் சென்று தானே அமுதத்தை பகிர்ந்து அளிப்பதாய் கூறுகிறார். அவரது அழகில் மயங்கிய அஸுரர்கள் அவரிடமே அந்த அமுதத்தை அளித்து அதைப் பகிர்ந்தளிக்கும் படி வேண்டினர். அஸுரர்கள் தம் அழகில் மயங்கி இருக்கும் வேளையில், பகவான் அனைத்து அழுத்தத்தையும் தேவர்களுக்கே பகிர்ந்து அளித்து, தானும் உண்டார்.

மேலும், தேவர்களைப் போல உருவம் தாங்கி தேவர்களின் வரிசையில் வந்த ஸ்வர்பானு என்ற அஸுரனை, சந்திரனும், சூரியனும் கைகாட்ட, தமது அகப்பையால் அவனது தலையைக் கிள்ளி அவனை ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்களாக மாற்றினார்.

————-

  1. ஓம்ஸோமாயநம:

ஸோம ரூபேண திங்களின் வடிவில்

ஒளஶதி செடி, கொடி மற்றும் மூலிகைகளை

போஶயன் அவற்றை வளர்த்துப் பாதுகாப்பதால்

ஸோம: பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் திங்களின் (வெண்மதியின்) வடிவில் செடி, கொடிகள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பாதுகாக்கிறார். எனவே அவர் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உமயா பார்வதியோடு

ஸஹித கூடிய

ஶிவோ வா பகவான் பரமசிவனாய் (பரமசிவனின் வடிவினராய்) இருப்பதால்

ஸோம: பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பார்வதியோடு கூடிய பரமசிவனின் வடிவினராய் இருப்பதால் பகவான் ‘ஸோம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ+உமா = ஸோம

‘ஓம் நம: ஸோமாய ச ருத்ராய ச…’ (ஶத ருத்ரீயம் எட்டாம் அனுவாகம்)

————

  1. ஓம்புருஜிதேநம:

புரூன் பஹூன் ‘புரு’ அதாவது பற்பலரை

ஜயதீதி வெற்றி கொண்டவராகையால்

புருஜித் பகவான் ‘புருஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்பலரை (‘புரு’) வெற்றி கொண்டவராகையால் பகவான் ‘புருஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம்புருஸத்தமாயநம:

விஶ்வரூபத்வாத் புரு: இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘புரு’ என்றழைக்கப்படுகிறார்.

உத்க்ருஶ்டத்வாத் ஸத்தம: அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் அவர் ‘ஸத்தம:’ என்றும் அழைக்கப்படுகிறார்.

புருஶ்ஸ்வாஸௌ ‘புரு’ வாகவும்

ஸத்தமஸ்சேதி ‘ஸத்தம’ மானவராயும் இருப்பதால்

புருஸத்தம: பகவான் ‘புருஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘புரு’ என்றழைக்கப்படுகிறார். அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் ‘ஸத்தம:’ என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ப்ரபஞ்ச வடிவில் புருவாகவும், அனைவரைக் காட்டிலும் சிறந்தவரான ‘ஸத்தம:’ மானவராயும் இருப்பதால் பகவான் ‘புருஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம்விநயாயநம:

விநயம் தண்டம் ‘விநயம்’ என்றால் தண்டனையைக் குறிக்கும்

கரோதி அளிக்கிறார் (செய்விக்கிறார்)

துஶ்டாநாமிதி தீயோருக்கு

வினய: எனவே பகவான் ‘வினய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தினின்று பிழறும் தீயோருக்கு தண்டனை (விநயம்) அளிக்கிறார். எனவே அவர் ‘வினய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினய என்ற சொல்லிற்கு திருத்துவது என்று ஒரு பொருள். இங்கு ஆச்சார்யாள் அந்தப் பொருளில் உரை அளித்துள்ளார். தண்டனை அளிப்பதன் மூலம் பகவான் தீயோரையும் திருத்துகிறார்.

—————-

  1. ஓம்ஜயாயநம:

ஸமஸ்தானி அனைத்து

பூதாநி ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்)

ஜயதீதி வெற்றி கொள்கிறார்

ஜய: எனவே பகவான் ‘ஜய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) வெற்றி கொள்கிறார். எனவே பகவான் ‘ஜய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஸத்யஸந்தாயநம:

ஸத்யா உண்மையானது (என்றும் தவறுவதில்லை)

ஸந்தா ஸங்கல்ப: ‘ஸந்தா’ அதாவது அவரின் எண்ணங்கள் (அல்லது விருப்பங்கள்)

அஸ்யேதி ஸத்யஸந்த: எனவே பகவான் ‘ஸத்யஸந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் என்றும் உண்மையானவை (அவை என்றும் தவறுவதில்லை). எனவே அவர் ‘ஸத்யஸந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யஸங்கல்ப:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.1.5)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவானின்) எண்ணங்கள் என்றும் ஈடேறப்பெறுபவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம்தாஶார்ஹாயநம:

தாஶோ தானம் ‘தாஶ’ என்ற சொல்லிற்கு தானம் என்று பொருள்

தமர்ஹதீதி அதற்குத் (தானங்களை ஏற்பதற்கு) தகுதி உடையவராதலால்

தாஶார்ஹ: பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தானத்தை ‘தாஶ’ என்றழைப்பர். அனைத்து தானங்களையும் ஏற்கும் தகுதி (அருகதை) உடையவராதலால் பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தஶார்ஹகுல ‘தஶார்ஹ’ குலத்தில்

உத்பவத்வாத்வா உதித்தவராகையால்

தாஶார்ஹ: பகவான் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தமது கிருஷ்ணாவதாரத்தில் ‘தஶார்ஹ’ குலத்தில் உதித்தார். எனவே அவர் ‘தாஶார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸாத்வதாம்பதயேநம:

ஸாத்வதம் நாம தந்த்ரம் ‘ஸாத்வத’ என்று ஒரு தந்திரம் உள்ளது ‘தத்கரோதி ததாசஶ்டே’ (அந்த ஸாத்வத தந்திரத்தை) படைத்தவர்கள் அல்லது அதற்கு உரை (வ்யாக்யானம்) எழுதியவர்கள் என்ற பொருளில்

இதி ணிசி க்ருதே ‘ஸாத்வதம்’ என்ற வார்த்தையோடு ‘ணிசி’ யும்

க்விப்ப்ரத்யயே ‘க்விப்’ விகுதியும் சேர்ந்து

ணிலோபே ச ‘ணி’ என்ற விகுதியை விடுக்கும் பொழுது

க்ருதே பதம் ஸாத்வத் ‘ஸாத்வத்’ என்ற பதம் பிறக்கிறது.

தேஶாம் பதி: அத்தகைய (ஸாத்வத தந்திரத்தை உருவாக்கிய, அதற்கு உரை எழுதிய) ஸாத்வதர்களின் தலைவராக

யோகக்ஷேமகர இதி அவர்களுக்கு யோகத்தையும் (இல்லாததை அளித்தும்), க்ஷேமத்தையும் (உள்ளவற்றைக் காத்தும்) அளித்து அவர்களை காத்து வழிநடத்துவதால்

ஸாத்வதாம் பதி: பகவான் ‘ஸாத்வதாம் பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாத்வதம் என்ற பெயருடைய ஒரு தந்திரம் உள்ளது (தந்திரம் என்பது ஆகமம், ஸாஸ்த்ரம் போன்ற ஒரு வழிமுறையாகும். பொதுவாக, உருவ வழிபாடு மற்றும் திருக்கோயில்களை நிர்மாணித்தல் போன்றவை இவற்றில் விளக்கப்பட்டுள்ளது). அவற்றை உருவாக்கியவர்கள் மற்றும் அவற்றின் உரை ஆசிரியர்கள் ‘ஸாத்வதர்கள்’ என்று அழைக்கப்படுவர். அத்தகைய ஸாத்வதர்களின் பதியாக (தலைவராக) அவர்களுக்கு இல்லாதவற்றை அளித்தும் (யோகம்), இருப்பவற்றைக் காத்தும் (க்ஷேமம்) அவர்களை காத்து வழிநடத்துவதால் பகவான் ‘ஸாத்வதாம் பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலும் ஆச்சார்யாள் ‘ஸாத்வத’ என்ற பதத்திலிருந்து ‘ஸாத்வத்’ என்ற பதம் எவ்வாறு பிறக்கிறது என்பதற்கு இலக்கண விதிமுறைகளையும் விளக்கியுள்ளார்.

————

  1. ஜீவோ வினயிதாஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம:|

அம்போநிதிரனந்தாத்மா மஹோததிஶயோSந்தக: ||

இந்த ஐம்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஜீவ, 514. வினயிதாஸாக்ஷீ, 515. முகுந்த:, 516. அமிதவிக்ரம:|
  2. அம்போநிதி:, 518. அனந்தாத்மா, 519. மஹோததிஶய:, 520. அந்தக: ||

—————

  1. ஜீவாயநம:

ப்ராணான் ‘ப்ராணனை’ (உயிரை, உயிர்மூச்சை)

க்ஷேத்ரஞ்ஞ ரூபேண அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் ‘க்ஷேத்ரஞ்ஞராய்’

தாரயன் தாங்குவதால்

ஜீவ உச்யதே பகவான் ‘ஜீவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் ‘க்ஷேத்ரஞ்ஞராய்’  அவற்றின் (அந்த ஜீவராசிகளின்) ‘ப்ராணனை’ (உயிரை, உயிர்மூச்சை) தாங்குவதால் பகவான் ‘ஜீவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. வினயிதாஸாக்ஷிணேநம:

வினயித்வம் வினயிதா ‘வினயிதா’ என்றால் பணிவு என்று பொருள்

தாம்  ஸாக்ஷாத் தானே நேரடியாக

பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்)

ப்ரஜானாமிதி அனைத்து உயிரினங்களிடமும்

வினயிதாஸாக்ஷி எனவே பகவான் ‘வினயிதாஸாக்ஷி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் (அவற்றுக்கு தம்மிடம்) உள்ள பணிவை தானே நேரடியாக அறிகிறார். எனவே அவர் ‘வினயிதாஸாக்ஷி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதவா அல்லது

நயதேர்கதிவாசினோ ‘கதி’ அதாவது நடையை (செல்லும் வழியை) குறிக்கும் “நீ” என்ற வேர்ச்சொல்லிற்கு

ரூபம் வினயிதா வினயிதா என்று ஒரு வடிவம் உண்டு,

அஸாக்ஷி அஸாக்ஷாத்த்ருஶ்டா ‘அஸாக்ஷி’ அதாவது எதையும் பார்க்காதவர்

ஆத்மாதிரிக்தம் ஆத்மாவைத் தவிர மற்றொரு

வஸ்து ந பஶ்யதீத்யர்த்த: பொருளைக் காணாதவர் என்று பொருள். இவ்வாறு வழிநடத்துபவர் (வினயிதா), மற்றும் ஆத்மாவைத் தவிர்த்து மற்றொரு பொருளைக் காண்பதவர் (அஸாக்ஷி) என்று இரு திருநாமங்களாகக் கொள்ளலாம்.

அல்லது, ‘கதி’ அதாவது வழி என்ற பொருளில் ‘வினயிதா’ என்ற திருநாமத்தாலும், ஆத்மாவைத்தவிர மற்றொருப் பொருளைப் பார்க்காதவர் என்ற பொருளில் ‘அஸாக்ஷி’ என்ற திருநாமத்தாலும் பகவான் அழைக்கப்படுகிறார் (என்றும் பொருள் கொள்ளலாம்).

இங்கு, இரண்டு திருநாமங்களாக ஆச்சார்யாள் உரை அளித்திருந்தாலும், தனது ஸஹஸ்ரநாம கணக்கில் இதை ஒரே திருநாமமாகத் தான் கணக்கிட்டுள்ளார். ஆகவே, முதல் உரையையே பிரதானமாகக் கொள்ளவேண்டும்.

————

  1. முகுந்தாயநம:

முக்திம் மோக்ஷத்தை

ததாதி இதி அளிப்பதால்

முகுந்த: பகவான் ‘முகுந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் ‘ப்ருஶோதரா’ வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும்.

அக்ஷரஸாம்யான்நிருக்திவசனாத் எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும்

நைருக்தானாம் நிருக்திகாரர்கள் பகவானை

முகுந்த இதி நிருக்த: முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.

முக்தியை அளிப்பதால் பகவான் ‘முகுந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஸோதரா வர்க்கத்தில் இந்த திருநாமம் சேரும். எழுத்துக்களின் சேர்க்கையினாலும், நிருக்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாலும் நிருக்திகாரர்கள் பகவானை முகுந்தன் என்ற திருநாமத்தால் விளக்கியுள்ளனர்.

நிருக்தி: வேதாங்கங்கள் ஆறினுள் ஒன்று. இந்த வேதாங்கம், வெவ்வேறு வார்த்தைகளின் சேர்க்கைகளையும், அவை உருவான விதத்தையும் விளக்குவதாகும்.

————–

  1. அமிதவிக்ரமாயநம:

அமிதா அபரிச்சின்னா ‘அமித’ அதாவது அளவிடமுடியாத

விக்ரமாஸ்வய: பாதவிக்ஷேபா விக்ரம அதாவது மூன்றடிகளைக் கொண்டவர்

அஸ்ய அமிதவிக்ரம: எனவே, பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மூன்றடிகள் அளவிடமுடியாதவை. எனவே, அவர் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமிதம் அளவிடமுடியாத

விக்ரமணம் ஶௌர்யமஸ்யேதி வா பராக்ரமம் (பலம், சூரத்தனம்) உடையவராதலால்

அமிதவிக்ரம: எனவே, பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அளவிடமுடியாத பராக்ரமம் உடையவராதலால் பகவான் ‘அமிதவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முதல் பொருளில் விக்ரம என்பதை ‘நடை’ அல்லது ‘அடிகள்’ என்றும், இரண்டாவது பொருளில் விக்ரம என்றால் பராக்ரமம் என்றும் பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யாள்.

————-

  1. அம்போநிதயேநம:

அம்பாம்ஸி ‘அம்ப’ அதாவது

தேவாதயோSஸ்மின்னிதீயந்த தேவர்களும், மற்றோரும் பகவானுக்குள் வசிப்பதால்

இதி அம்போநிதி: பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்குள் ‘அம்ப’ என்றழைக்கப்படும் தேவர்களும், மற்றவர்களும் வசிக்கின்றனர். எனவே, அவர் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தானி வா ஏதானி சத்வார்யம்பாஸி | தேவா மனுஶ்யா பிதரோSஸுரா:’

இங்கு நால்வகைப்பட்டோர் ‘அம்பர்கள்’ என்றழைக்கப்படுகின்றன. தேவர்கள், மானிடர்கள், பித்ருக்கள் மற்றும் அஸுரர்கள்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸாகரோ வா கடலின் வடிவாக இருப்பதால்

அம்போநிதி: பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, கடலின் வடிவாக இருப்பதால் பகவான் ‘அம்போநிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸரஸாஸ்மி ஸாகர:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.24)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: நீர்நிலைகளில் நான் கடல்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————-

  1. அனந்தாத்மனேநம:

தேஶத: இடம்

காலதோ காலம்

வஸ்துஸ்ச பொருள் (உருவம் முதலியன) போன்ற

அபரிச்சின்னத்வாத் எல்லைகள் அற்றவராதலால்

அனந்தாத்மா பகவான் ‘அனந்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இடம், காலம், பொருள் போன்ற எல்லைகள் அற்றவராதலால் (இவற்றால் கட்டுப்படுத்த இயலாதவர் ஆதலால்) பகவான் ‘அனந்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எந்த ஒரு ஜீவனும் இந்த மூன்றினால் கட்டுப்பட்டுள்ளவர். ஒரு இடத்தில் இருப்போர் மற்றொரு இடத்தில் இருப்பதில்லை. ஒரு காலகட்டத்தில் இருப்பவர் என்றும், எக்காலத்திலும் இருப்பதில்லை (இது ப்ரஹமா முதலான தேவர்களுக்கும் பொருந்தும்). ஒரு உருவில், ஒரு பொருளாய் இருப்பவர் மற்றொரு பொருளாய், மற்றொரு உருவத்தில் இருப்பதில்லை. பகவானுக்கு இத்தகைய எல்லைகள் இல்லை. அவர் எல்லாவிடத்திலும், எக்காலத்திலும், எல்லாமுமாய் இருப்பவர் என்பதையே இந்த திருநாமம் குறிக்கிறது.

————–

  1. மஹோததிஶயாயநம:

ஸம்ஹ்ருத்ய (ப்ரளய காலத்தில்) அழித்து

ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும்

ஏகார்ணவம் ஜகத்க்ருத்வா இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் நீர்மயமாகும்படி செய்து

அதிஶேதே அதன் மீது பள்ளிகொண்டுள்ளார்

மஹோததி மிகப் பெரியதானதொரு கடலில்

மஹோததிஶய: எனவே பகவான் ‘மஹோததிஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களையும் அழித்து இந்தப் ப்ரபஞ்சத்தை நீர்மயமாகும்படி செய்கிறார். அந்த மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடலில் பள்ளிகொண்டு அருள்கிறார். எனவே அவர் ‘மஹோததிஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹோததி = மிகப்பெரிய (ப்ரளய நீராலான) கடல் + ஶயதி – பள்ளி கொள்ளுதல் = மஹோததிஶய:

————-

  1. அந்தகாயநம:

அந்தம் கரோதி முடிப்பதனால் (அழிப்பதனால்)

பூதாநாமிதி அனைத்து உயிரினங்களையும்

அந்தக: பகவான் ‘அந்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தத்கரோதி ததாசஶ்டே’ (சுராதிகணவார்த்திகம்) இதி ணிசி இந்த வார்த்திக ஸூத்ரத்தின் படி ‘ணி’ விகுதி (அந்த என்ற பதத்தோடு) சேர்கிறது.

‘ண்வுல்த்ருசௌ’ (பாணினி ஸூத்ரம் 3.1.133) இதி

யுவாரநாகௌ’ (பாணினி ஸூத்ரம் 7.1.1) இதி அகாதேஶ: இந்த பாணினி ஸூத்ர விதிகளின்படி ‘அந்த’ என்ற பதத்தோடு ‘அக’ என்ற விகுதி சேர்ந்து ‘அந்தக:’ என்ற சொல் உருவாகிறது.

(அவரவரது கால முடிவிலும், ப்ரளயத்தின் பொழுதும்) அனைத்து உயிரினங்களையும் முடிப்பதால் (அழிப்பதால்) பகவான் ‘அந்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யாள் வார்த்திகம் மற்றும் பாணினி ஸூத்ரங்களின் படி ‘அந்தக:’ என்ற சொல் எவ்வாறு உருவாகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.

—————-

  1. அஜோ மஹார்ஹ: ஸ்வபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |

ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||

இந்த ஐம்பத்தாறாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஜ:, 522. மஹார்ஹ:, 523. ஸ்வாபாவ்ய:, 524. ஜிதாமித்ர:, 525. ப்ரமோதன: |
  2. ஆனந்த:, 527. நந்தன:, 528. நந்த:, 529. ஸத்யதர்மா, 530. த்ரிவிக்ரம: ||

—————

  1. ஓம் அஜாய நம:

ஆத் அகரத்தினால் (அ என்னும் எழுத்தால்) குறிக்கப்படும்

விஶ்ணோரஜாயத பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால்

காம: மன்மதன்

அஜ: ‘அஜ’ என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அகரத்தினால் குறிக்கப்படும் பகவான் விஶ்ணுவிடமிருந்து பிறந்ததால் மன்மதன் ‘அஜ’ என்று அழைக்கப்படுகிறான். அவனது அந்தர்யாமியான பகவானும் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமசிவனாரின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் தன் உடலை இழக்கிறான். பின்னர் பகவான் கண்ணனாக அவதரித்தபொழுது பகவானுக்கும் ருக்மிணி பிராட்டியருக்கும் மகனாக ப்ரத்யும்னன் என்ற பெயரோடு பிறந்தான். பின்னர் மயாசுரனை அழித்து ரதியை மணந்தான். எனவே, மன்மதன் பகவானின் பிள்ளையாவான்.

“காமனைப் பயந்த காளை” (திருவாய்மொழி 10.2.8)

————–

  1. ஓம் மஹார்ஹாய நம:

மஹ: பூஜா ‘மஹ’ என்றால் பூஜை (வழிபாடு) என்று பொருள்

தத் அர்ஹத்வாத் அதற்குத் தகுதியுடையவராதலால்

மஹார்ஹ: பகவான் ‘மஹார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹ என்றால் பூஜை (வழிபாடு). அர்ஹ என்றால் அருகதை உள்ளவர். பகவான் எவ்விதமான பூஜையையும் (வழிபாட்டையும்) ஏற்பதற்குத் தகுதி (அருகதை) படைத்தவர். எனவே, அவர் ‘மஹார்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒரு யானை எளிய தாமரையை ஏந்தி ‘ஆதிமூலமே’ என்று அலறிய பொழுது பகவான் ஓடி வந்து அதை ஏற்றுக்கொண்டார். ஒரு யானையின் எளிய பூவை ஏற்ற அவரே, யுதிஷ்டிரனின் ராஜஸூய யாகத்தில் ‘அக்ர’ பூஜையையும் ஏற்றார். இராமாவதாரத்தில் குகனின் அன்புக்கும், சபரியின் பக்திக்கும், அனுமனின் தொண்டிற்கும் கட்டுப்பட்டார். கிருஷ்ணாவதாரத்தில் ஒரே நேரத்தில் ஒரு அரசனின் ராஜபோக உபசரிப்பையும், ஒரு ஏழை அந்தணன் அன்று இரந்து பெற்ற பழங்களையும் ஏற்று, இருவருக்கும் அருள் புரிந்தார். வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளின் அளிக்கும் சிறந்த பூஜையை ஏற்கும் அவரே, ஆய்ச்சிகளின் எளிய அன்பிற்கும் வெண்ணைக்கும் கட்டுப்படுகிறார். எனவே, பகவான் எத்தகைய பூஜையையும் ஏற்கத் தகுதி படைத்தவராவார். பகவத்கீதையில் பகவான் கூறியபடி “ஒரு இலையோ (துளசி), பூவோ, பழமோ அல்லது தண்ணீரோ பக்தியோடு அளித்தால் அதை மிகச்சிறந்த பூஜையாக பகவான் ஏற்கிறார்”.

———–

  1. ஓம் ஸ்வாபாவ்யாய நம:

ஸ்வபாவேந ஏவ இயற்கையாகவே

அபாவ்யோ உருவாவதில்லை (பிறப்பதில்லை)

நித்யநிஶ்பன்னரூபத்வாத் என்றும் நிறைவுடையவராக இருப்பதால்

இதி ஸ்வாபாவ்ய: எனவே பகவான் ‘ஸ்வாபாவ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றுமே இயற்கையாகவே நிறைவுடையவர் (நிறைவானவர்). எனவே அவர் என்றும் உருவாவதில்லை (பிறப்பதில்லை). எனவே பகவான் ‘ஸ்வாபாவ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அபாவ்ய: என்றால் மாறுபாடற்றவர் என்றும் ஒரு பொருள் உள்ளது.

———-

  1. ஓம் ஜிதாமித்ராய நம:

ஜிதா வெல்கிறார்

அமித்ரா பகைவர்களை

அந்தர்வர்தினோ உட்பகைவர்களையும்

ராகத்வேஶாதயோ விருப்பு வெறுப்புக்கள் போன்ற

பாஹ்யாஸ்ச புறப்பகைவர்களையும்

ராவணகும்பகர்ணஶிஶுபாலாதயோ இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்ற

யேனாஸௌ ஜிதாமித்ர: எனவே பகவான் ‘ஜிதாமித்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உட்பகைவர்களான விருப்பு, வெறுப்புகளையும், புறப்பகைவர்களான இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் போன்றோரையும் (எளிதில்) வெல்கிறார். எனவே அவர் ‘ஜிதாமித்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் ப்ரமோதனாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸா தனது இயற்கை ஸ்வரூபமான அம்ருதத்தை

ஸ்வாதான்னித்யம் தினமும் சுவைத்து

ப்ரமோததே இன்புறுகிறார்

ப்ரமோதன: எனவே, பகவான் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான ஸ்வரூப அம்ருதத்தை தினமும் சுவைத்து இன்புறுகிறார். எனவே அவர் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்யாயினாம் தன்னை த்யானிப்பவர்களை

த்யானமாத்ரேன (தன்னை) த்யானித்த அக்கணமே

ப்ரமோதம் கரோதீதிவா மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்)

ப்ரமோதன: பகவான் ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னை த்யானிப்பவர்களை அவர்கள் (தன்னை) த்யானித்த அக்கணமே மகிழ்ச்சி அடையச் செய்வதால் (அவர்களை மகிழ்விப்பதால்), ‘ப்ரமோதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஆனந்தாய நம:

ஆனந்த: இன்பத்தை

ஸ்வரூபமஸ்யேதி தனது இயற்கையாக உடையவர்

ஆனந்த: பகவான் ‘ஆனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இன்பமே தனது இயற்கை வடிவாக உடையவர். எனவே அவர் ‘ஆனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதானி மாத்ராமுபஜீவந்தி’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.32)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்தின்) ஆனந்தத்தின் ஒரு துளி அளவிலேயே ஏனைய ஜீவன்கள் உயிர்வாழ்கின்றன.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம் நந்தனாய நம:

நந்தயதீதி (அனைவரையும்) மகிழ்விப்பதால்

நந்தன: பகவான் ‘நந்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் மகிழ்விப்பதால் பகவான் ‘நந்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் நந்தாய (அனந்தாய) நம:

ஸர்வாபிருபபத்திபி: அனைத்தும் அடையபெற்றிருக்கிறார்

ஸம்ருத்தோ முழுமையாக

நந்த: எனவே பகவான் ‘நந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தும் (அனைத்து சித்திகளும்) முழுமையாக அடையப்பெற்றிருக்கிறார். எனவே அவர் ‘நந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியில் பிறந்தோரும் சித்திகள் அடையப்பெற்றிருக்கலாம். ஆனால் பகவான் அனைத்தையும் பூரணமாக அடையப்பெற்றுள்ளார்; அவற்றை இயற்கையாகவே அடையப்பெற்றுள்ளார்.

ஸுகம் வைஶயிகம் விஷய சுகங்கள் (புலனின்பங்கள்)

நாஸ்ய வித்யத இதி அவருக்கு இல்லை

அனந்த: எனவே பகவான் ‘அனந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம்மை போன்று விஷய சுகத்தை அனுபவிப்பதில்லை. எனவே அவர் ‘அனந்த:’ (இன்பமில்லாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யோ வை பூமா தத் ஸுகம் நால்பே ஸுகமஸ்தி’ (சாந்தோக்ய உபநிஶத் 23.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எது முழுமையானதோ அதுவே சிறந்த இன்பமாகும். மற்ற (விஷயசுகங்கள் போன்ற) தாழ்ந்த இன்பங்கள் இன்பங்களாகா.

ஆச்சார்யாள் இந்த திருநாமத்தை ‘நந்த:’ (இன்பத்தை அனுபவிப்பவர்) மற்றும் ‘அனந்த:’ (இன்பத்தை அனுபவிக்காதவர்) என்று இரண்டு வகையாகப் பிரித்துப் பொருளுரைத்திருக்கிறார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் ‘நந்த:’ என்ற திருநாமமே ப்ரதானமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

———–

  1. ஓம் ஸத்யதர்மணே நம:

ஸத்யா உண்மையான தர்ம அறத்தை (உடையவர் ஆதலால்)

ஞானாதயோSஸ்யேதி ஞானம் முதலான

ஸத்யதர்மா பகவான் ‘ஸத்யதர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஞானம் முதலான அறத்தை உண்மையாக (என்றும் நிலையாக) உடையவர் ஆதலால் அவர் ‘ஸத்யதர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் த்ரிவிக்ரமாய நம:

த்ரயோ மூன்று

விக்ரமாஸ் அடிகளால்

த்ரிஶுலோகேஶு மூன்று உலகங்களையும்

க்ராந்தா பரவினார்

யஸ்ய ஸ த்ரிவிக்ரம: எனவே பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது மூன்று அடிகளால் மூவுலகங்களையும் பரவி இருந்ததால் அவர் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘த்ரீணி பதா விசக்ரமே’  அவர் மூன்றடிகள் நடந்தார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

இங்கு மூன்று உலகங்கள் என்பது ‘ஜாக்ரத’ (விழிப்பு நிலை), ‘ஸ்வாபன’ (கனவு நிலை) மற்றும் ‘ஶுஶுப்தி’ (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான ‘துரீய’ நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார்.

த்ரயோ லோகா: மூவுலகங்களையும்

க்ராந்தா அளந்தார்

யேனேதி வா த்ரிவிக்ரம: எனவே பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வாமன அவதாரத்தில்) மூவுலகங்களையும் அளந்ததால் பகவான் ‘த்ரிவிக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ரிரித்யேவ த்ரயோ லோகா: கீர்த்திதா முனிஸத்தமை: |

க்ரமதே தாம்ஸ்த்ரிதா ஸர்வாஸ்த்ரிவிக்ரம இதி ஶ்ருத: || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.52)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் கூறப்பட்டுள்ளது: தவசீலர்கள் ‘த்ரி’ (மூன்று) என்ற பதத்தினால் மூவுலகையும் குறிப்பர். அம்மூன்று உலகங்களையும் தாங்கள் தாண்டுவதால் தாங்கள் ‘த்ரிவிக்ரமன்’ என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

———-

57. மஹர்ஶி: கபிலாச்சார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: 

த்ரிபதஸ்த்ரிதஶாத்யக்ஷோ மஹாஶ்ருங்க: க்ருதாந்தக்ருத் ||

இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

531. மஹர்ஶி: கபிலாசார்ய:, 532. க்ருதக்ஞ:, 533. மேதினீபதி: |

534. த்ரிபத:, 535. த்ரிதஶாத்யக்ஷ:, 536. மஹாஶ்ருங்க:, 537. க்ருதாந்தக்ருத் ||

———-

531. ஓம் மஹர்ஶயே கபிலாச்சார்யாய நம:

‘மஹர்ஶி கபிலாச்சார்ய:’ என்ற இந்த பதம்

ஸவிஶேஶணம் பகவானை (பகவானின் ஸ்ரீகபிலாவதாரத்தை) தனித்துக் குறிப்பதான

ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.

மஹாம்ஸ்சாஸாவ்ருஶிஸ்சேதி எவரொருவர் மிகச்சிறந்தவராகவும் (மஹான்) முனிவராகவும் (ரிஷி) உள்ளாரோ

மஹர்ஶி: அவரை ‘மஹரிஷி’ என்று அழைப்பர்.

க்ருத்ஸனஸ்ய முழுமையாக (பூரணமாக)

வேதஸ்ய தர்ஶனாத் வேதத்தை உணர்ந்ததால் (உணர்ந்ததாலும் அவர்கள் மஹரிஷிகள் என்று அழைக்கப்படுவர்).

அன்யே து வேதைகதேஶ (அவ்வாறு முழுமையாக வேதங்களை அறியாது) வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் அறிந்தோரை

ரிஶய: ரிஷிகள் என்று மட்டும் அழைப்பர்.

கபிலஸ்சாஸௌ ‘கபிலர்’ என்ற பெயருடனும்

ஸாங்க்யஸ்ய ஶுத்ததத்வ ‘ஸாங்க்யம்’ எனும் தூய்மையான தத்துவத்தை

விஞ்ஞானஸ்ய அறிந்தவரும்

ஆச்சார்யஸ்சேதி (அதனால்) ஆசார்யருமான

கபிலாசார்ய: பகவான் ‘கபிலாசார்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘கபிலர்’ என்ற பெயருடன் ஸாங்க்ய தத்துவ ஆச்சார்யராக விளங்கினார். வேதத்தை, ஒரு பகுதியை மட்டும் பயிலாது, முழுமையாக உணர்ந்ததனாலும், மிகச்சிறந்தவரானதாலும் ‘மஹர்ஶி’ என்ற அடைமொழியுடன் பகவான் ‘மஹர்ஶி கபிலச்சார்யர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இது பகவானை தனித்துக் குறிப்பதான திருநாமமாகும்.

‘ஶுத்தாத்மதத்வவிஞ்ஞானம் ஸாங்க்யமித்யபிதீயதே |’

தூய்மையான ஆத்ம தத்துவத்தை விளக்கும் அறிவிற்கு ஸாங்க்யம் என்று பெயர்.

இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.

‘ரிஶி ப்ரஸூதம் கபிலம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 5.2)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ரிஷியாகப் பிறந்த கபிலர்…

இதி ஶ்ருதேஸ்ச | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘ஸித்தானாம் கபில முனி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.26)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சித்தர்களில் (நான்) கபில முனி

இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை) போன்ற ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.

கபிலாவதார சுருக்கம்: பகவான் கர்த்தம ப்ரஜாபதிக்கும், ஸ்வயம்புவ மனுவின் மகளான தேவஹூதிக்கும் மகனாக ‘கபிலர்’ என்ற பெயருடன் தோன்றினார். தனது தாயாரான தேவஹூதிக்கு ‘ஸாங்க்ய’ யோகத்தை விளக்கினார். பகவான் கபிலாவதாரமும், அவரது போதனைகளும், அவர் பரப்பிய ஸாங்க்ய யோகமும் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் அத்யாயம் 21ல் இருந்து, அத்யாயம் 33 வரை விவரிக்கப்பட்டுள்ளது.

——–

532. ஓம் க்ருதஜ்ஞாய நம:

க்ருதம் கார்யம் ஜகத் ‘க்ருத’ அதாவது காரியமான (விளைவான) இந்தப் ப்ரபஞ்சத்தை

ஞ ஆத்மா ‘ஞ’ ஆத்மாவை குறிக்கும்

க்ருதம் ச காரியமான இந்தப் ப்ரபஞ்சமாகவும்

தஜ் ஞஸ்சேதி ஆத்மாவாகவும் இருப்பதனால்

க்ருதஜ்ஞ: பகவான் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காரிய வடிவான இந்தப் ப்ரபஞ்சமாகவும் (க்ருத), அந்தப் ப்ரபஞ்சத்தை அறியும் ஆத்மாவாகவும் (ஞ) இருப்பதனால் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

533. ஓம் மேதினீபதயே நம:

மேதின்யா பூம்யா: ‘மேதினி’ என்றால் பூமியைக் குறிக்கும்

பதி: பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால்

மேதினீபதி: பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேதினி என்றழைக்கப்படும் பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால் பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

534. ஓம் த்ரிபதாய நம:

த்ரீணி மூன்று

பதான்யஸ்யேதி அடிகளை உடையவராதலால்

த்ரிபத: பகவான் ‘த்ரிபத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூன்று அடிகளை உடையவராதலால் பகவான் ‘த்ரிபத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘த்ரீணி பதா விசக்ரமே’ – அவர் மூன்றடிகள் நடந்தார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முன்பே கூறியிருந்தபடி, மூன்று அடிகள் என்பது ‘ஜாக்ரத’ (விழிப்பு நிலை), ‘ஸ்வாபன’ (கனவு நிலை) மற்றும் ‘ஶுஶுப்தி’ (ஆழ்ந்த உறக்கம்) ஆகிய நிலைகளைக் குறிப்பதாகக் கூறுவார். நான்காவது நிலையான ‘துரீய’ நிலையில்தான் ஒருவர் தனது ஆத்மாவை உணர்கிறார். அடுத்த திருநாமத்தில் இது ஸ்பஶ்டமாக விளக்கப்பட்டுள்ளது.

———–

535. ஓம் த்ரிதஶாத்யக்ஷாய நம:

குணாவேஶேன குணங்களின் மேலீட்டால்

ஸஞ்ஜாதாஸ் பிறப்பதான

திஸ்ரோ தஶா அவஸ்தா மூன்று நிலைகளை

ஜாக்ரதாதய: ஜாக்ரத் முதலான

தாஸாம் அத்யக்ஷ அவற்றை மேற்பார்வையிடுகிறார்

இதி த்ரிதஶாத்யக்ஷ: எனவே, பகவான் ‘த்ரிதஶாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குணங்களின் மேலீட்டால் உருவாகும் ஜாக்ரத் (விழிப்பு நிலை) முதலான மூன்று நிலைகளையும் பகவான் மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் ‘த்ரிதஶாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

536. ஓம் மஹாஶ்ருங்காய நம:

மத்ஸ்யரூபி பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் (மீனாக அவதரித்த காலத்தில்)

மஹதி ஶ்ரிங்கே தனது மிகப்பெரிய கொம்பில்

ப்ரளயாம்போதௌ நாவம் ப்ரளய நீரில் (ஸத்யவ்ரதனின்) படகை

பத்வா கட்டிக்கொண்டு

சிக்ரீட இதி விளையாடியவராதலால்

மஹாஶருங்க: பகவான் ‘மஹாஶருங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது மத்ஸ்யாவதாரத்தில் ஸத்யவ்ரதனின் படகை தனது மிகப்பெரிய கொம்பில் (ஶ்ரிங்கத்தில்) கட்டிக்கொண்டு ப்ரளய நீரில் விளையாடியவராதலால் அவர் ‘மஹாஶருங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

537. ஓம் க்ருதாந்தக்ருதே நம:

க்ருதஸ்ய க்ருத, அதாவது காரிய வடிவான இந்த ப்ரபஞ்சத்தை

அந்தம் ஸம்ஹாரம் கரோதீதி அந்தம் அதாவது (ப்ரளய காலத்தில்) அழிக்கிறார்

க்ருதாந்தக்ருத் எனவே பகவான் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காரிய வடிவான ப்ரபஞ்சத்தை (‘க்ருத’) ப்ரளய காலத்தில் அழிக்கிறார் (‘அந்த க்ருத்’). எனவே அவர் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ருதாந்தம் ம்ருத்யும் ‘க்ருதாந்தம்’ என்று அழைக்கப்படும் மரணத்தை

க்ருந்ததீதி வா வெட்டுகிறார் (அழிக்கிறார்)

க்ருதாந்தக்ருத் எனவே பகவான் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் ‘க்ருதாந்தம்’ என்று அழைக்கப்படும் மரணத்தை வெட்டுகிறார் (அழிக்கிறார்). எனவே, அவர் ‘க்ருதாந்தக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த விளக்கத்தை இரண்டு விதமாக புரிந்து கொள்ளலாம். தனது அடியவர்களுக்கு மரணம் இல்லாத நிலையை அளிக்கிறார் (அவர்களது மரணத்தை வெட்டுகிறார்). அல்லது, ம்ருத்யு தேவதையையே மஹாப்ரளயத்தில் அழிக்கிறார்.  

————-

  1. மஹாவராஹோ கோவிந்த: ஸுஶேண கனகாங்கதீ

குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ரகதாதர:  ||

இந்த ஐம்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹாவராஹ:, 539. கோவிந்த:, 540. ஸுஶேண:, 541. கனகாங்கதீ |
  2. குஹ்ய:, 543. கபீர:, 544. கஹன:, 545. குப்த:, 546. சக்ரகதாதர: ||

——————

  1. ஓம் மஹாவராஹாய நம:

மஹாம்ஸ்சாஸௌ மிகப்பெரியவரும்

வராஹஸ்சேதி பன்றி வடிவெடுத்தவருமாதலால்

மஹாவராஹ: பகவான் ‘மஹாவராஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகப்பெரியவர் (மிகவும் மஹிமை பொருந்தியவர் என்றும் கொள்ளலாம்). பன்றி வடிவெடுத்தவர். எனவே அவர் ‘மஹாவராஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகப்பெரிய வராஹ உருவம் எடுத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

—————

  1. ஓம் கோவிந்தாய நம:

கோபிர்வாணீபிர் ‘கோ’ என்றால் வாக்கு (அதாவது வேதங்கள்) என்று பொருள்

விந்ததே அடையப்படுவர்

கோவிந்த: எனவே பகவான் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘கோ’ ஶப்தத்தால் குறிக்கப்படும் வேதங்களால் (மட்டுமே) அடையப்படுபவர். எனவே அவர் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேத்தி அறியப்படுபவர்

வேதாந்தவாக்யைரிதி வா வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே)

கோவிந்த: எனவே பகவான் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் வேதாந்த வாக்கியங்களால் (மட்டுமே) அறியப்படுகிறார். எனவே அவர் ‘கோவிந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கோ’ என்றால் வேதங்களைக் குறிக்கும் என்பது இந்த இரண்டு விளக்கங்களும் பொது. முதல் விளக்கத்தில் ‘கோ’ + ‘விந்ததி’ = கோவிந்த:. இரண்டாவது விளக்கத்தில் ‘கோ’ + ‘வேத்தி’ = கோவிந்த:.

‘கோபிரேவ யதோ வேத்யோ கோவிந்த: ஸமுதாஹ்ருத:’

ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது: வேதங்களைக் கொண்டே (வேத, வேதாந்த வாக்யங்களைக் கொண்டே) அவரை அறிந்துகொள்ள முடியும். எனவே அவர் ‘கோவிந்த:’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஸ்ரீவிஶ்ணுதிலகே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுதிலகத்தில் கூறப்பட்டுள்ளது.

——–

  1. ஓம் ஸுஶேணாய நம:

ஶோபனா அழகான

ஸேனா கணாத்மிகா படைக்கூட்டங்களை (சேனைகளை) யஸ்யேதி

ஸுஶேண: உடையவராதலால் பகவான் ‘ஸுஶேண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகான படைக்கூட்டங்களை (சேனைகளை) உடையவராதலால் பகவான் ‘ஸுஶேண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் கனகாங்கதினே நம:

கனகமயானி பொன்மயமான

அங்கதானி அஸ்யேதி தோள்வளைகளை உடையவராதலால் (அணிந்திருப்பவர்)

கனகாங்கதி பகவான் ‘கனகாங்கதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பொன்மயமான தோள்வளைகளை அணிந்திருப்பவர். எனவே அவர் ‘கனகாங்கதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் குஹ்யாய நம:

ரஹஸ்யோபநிஶத் ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே

வேத்யத்வாத் அறியப்படுபவராதலால்

குஹ்ய: பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரகசியமான உபநிடதங்களைக் கொண்டே அறியப்படுபவராதலால் பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குஹாயாம் ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில்

நிஹித வீற்றிருக்கிறார்

இதி வா குஹ்ய: எனவே பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் அனைவரது இதய ஆகாயத்துள் இருக்கும் இடைவெளியில் வீற்றிருக்கிறார் (மறைந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்). எனவே பகவான் ‘குஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் கபீராய நம:

ஞானைஶ்வர்ய அறிவு, செல்வம்

பலவீர்யாதிபிர் பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும்

கம்பீரோ மேன்மையுடையவர் ஆதலால்

கபீர: எனவே பகவான் ‘கபீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறிவு, செல்வம், பலம் மற்றும் பராக்ரமம் ஆகிய அனைத்திலும் மேன்மையுடையவர் ஆதலால் பகவான் ‘கபீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் கஹனாய நம:

துஶ்ப்ரவேஶத்வாத் அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால்

கஹன: பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை அடைவது (அவருக்குள் நுழைவது) கடினமாகையால் பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ரய மூன்று நிலைகளிலும் (ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி) உள்ள

பாவ அபாவ விருப்பங்கள் மற்றும் விருப்பமற்ற தன்மைகளை

ஸாக்ஷித்வாத் ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால்

கஹனோ வா பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஜாக்ரத், ஸ்வப்ன, ஶுஶுப்தி ஆகிய மூன்று நிலைகளில் உள்ள நமது விருப்பு மற்றும் விருப்பமற்ற தன்மைகளை ஒரு ஒரு சாட்சியாய் இருந்து கவனிப்பதால் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் குப்தாய நம:

வாங் வாக்கிற்கும்

மனஸா மனதிற்கும்

அகோசரத்வாத் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால்

குப்த: பகவான் ‘குப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாக்கிற்கும், மனதிற்கும் எட்டாது (அவற்றிற்கு) அப்பால் இருக்கிறபடியால் பகவான் ‘குப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏஶ ஸர்வேஶு பூதேஶு கூடோத்மா ந ப்ரகாஶதே’ (கடோபநிஶத் 1.3.12)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம் சக்ரகதாதராய நம:

‘மனஸ்தத்வாத்மகம் சக்ர புத்திதத்வாத்மிகாம் கதாம் |

தாரயன் லோகரக்ஷார்த்தமுக்த: சக்ரகதாதர: ||’

மனத்தை குறிக்கும் சக்ரத்தையும், புத்தியை குறிக்கும் கதையையும் உலகத்தின் (உலகத்தோரின்) நலனுக்காக தனது திருக்கைகளில் ஏந்தியுள்ளார். எனவே, அவர் (பகவான்) ‘சக்ரகதாதர:’ என்று அழைக்கப்படுகிறார்.

 இதி சக்ரகதாதர:

இந்த ஸ்லோகத்தின் படி பகவான் ‘சக்ரகதாதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஶ்ணோ த்ருட: ஸங்கர்ஶணோச்யுத:

வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஶ்கராக்ஷோ மஹாமனா: ||

இந்த ஐம்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வேதா, 548. ஸ்வாங்க:, 549. அஜித:, 550. க்ருஶ்ண:, 551. த்ருட:, 552. ஸங்கர்ஶணோச்யுத: |
  2. வருண:, 554. வாருண:, 555. வ்ருக்ஷ:, 556. புஶ்கராக்ஷ:, 557. மஹாமனா: ||

————-

  1. ஓம் வேதஸே நம:

விதாதா அனைத்தையும் படைப்பவராதலால்

வேத பகவான் ‘வேத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத் ‘ப்ருஶோதரா’ கணத்தை சேர்ந்த சொல்லாதலால்

ஸாதுத்வம் ‘வேத’ என்ற இந்த சொல் தூய்மையானதாகக் கருதப்படுகிறது.

அனைத்தையும் படைப்பவராதலால் பகவான் ‘வேத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ‘வேத’ என்ற திருநாமம் நான்காவது ‘த’ வை உடையது. மறைகளைக் குறிக்கும் ‘வேதம்’ மூன்றாவது ‘த’ வை உடையது.

————

  1. ஓம் ஸ்வாங்காய நம:

ஸ்வயமேவ (பகவான்) தானே

கார்யகரணே செயல்களைச் செய்கையில் உதவிபுரியும்

அங்க அங்கமாகிய

ஸஹகாரீதி ‘ஸஹகாரி’ அதாவது உபகரணங்களாய் இருப்பதால்

ஸ்வாங்க: பகவான் ‘ஸ்வாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு செயலைப் புரிவதற்கும் மூன்று காரணங்கள் தேவை. முதலாவது மூல காரணம் (உபாதான காரணம் – ஆங்கிலத்தில் Raw Material). இரண்டாவது அந்த செயலைப் புரிபவர் (நிமித்த காரணம் – Doer). மூன்றாவது அந்த செயலைப் புரிவதற்கு துணை புரியும் கருவிகள் (ஸஹகாரி காரணம்). பகவான் தானே (ஸ்வயம்) ஒரு காரியத்தின் அங்கமாக, அதன் ஸஹகாரி காரணமாக இருப்பதால் அவர் ‘ஸ்வாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு காரியம் எனப்படுவது பரப்ரஹ்மத்தின் படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.

————-

  1. ஓம் அஜிதாய நம:

ந கேனாபி அவதாரேஶு ஜித எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர்

இதி அஜித: ஆகையால், அவர் ‘அஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எந்த ஒரு அவதாரத்திலும் பகவான் (மற்றொருவரால்) வெல்லப்படாதவர், ஆகையால், அவர் ‘அஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ஓம் க்ருஶ்ணாய நம:

க்ருஶ்ண: க்ருஶ்ணத்வைபாயன: ‘க்ருஶ்ணத்வைபாயனர்’ என்றழைக்கப்படும் வ்யாஸ பகவானே ‘க்ருஶ்ணர்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘க்ருஶ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் |

கோ ஹ்யன்ய: புண்டரீகாக்ஷான்மஹாபாரதக்ருத்பவேத் ||’

(ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.4.5)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் வேத வ்யாஸரை ப்ரபு ஸ்ரீமந்நாராயணனாகவே அறிவாயாக. தாமரைக் கண்ணனான பகவானைத் தவிர வேறு யாரால் மஹாபாரதம் என்னும் இதிஹாஸத்தை இயற்றி இருக்க முடியும்?

இதி விஶ்ணு புராண வசனாத் | இந்த ஸ்ரீவிஶ்ணு புராண வாக்கியத்தின் படி (பகவான் வேத வ்யாஸரே க்ருஶ்ணர், க்ருஶ்ணரே வ்யாஸர்).

————-

  1. ஓம் த்ருடாய நம:

ஸ்வரூபஸாமர்த்யாதே: அவரது இயற்கையான தனித்தன்மை (ஸ்வரூபம்) மற்றும் ஸாமர்த்தியம் முதலிய குணங்களுக்கு

ப்ரத்யுச்யபாவாத் (ப்ரத்யுச்ய அபாவாத்) குறைவு என்பதே இல்லை

த்ருட: எனவே பகவான் ‘த்ருட:’  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இயற்கையான தனித்தன்மையும், அவரது ஸாமர்த்யம் முதலிய குணங்களுக்கும் என்றுமே குறைவு உண்டாவதில்லை. எனவே அவர் ‘த்ருட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் ஸங்கர்ஶணோச்யுதாய நம:

ஸம்ஹார ஸமயே இந்தப் ப்ரபஞ்சத்தின் முடிவில் அதை அழிக்கும் ஸம்ஹார காலத்தில்

யுகபத்ப்ரஜா: அனைத்து உயிரினங்களையும் ஒருசேர

ஸங்கர்ஶதீதி அவற்றின் அழிவை நோக்கி இழுப்பதால்

ஸங்கர்ஶண: பகவான் ‘ஸங்கர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ந ச்யோததி என்றும் அழிவதில்லை

ஸ்வரூபாதி அவரது இயற்கையான தன்மை முதலியவை

இதி அச்யுத: எனவே பகவான் ‘அச்யுத:’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸங்கர்ஶணோச்யுத: இதி நாமைகம் ஸ விஶேஶணம் இவ்வாறு ‘ஸங்கர்ஶணராகவும்’ ‘அச்யுதராகவும்’ இருப்பதால் ‘ஸங்கர்ஶணோச்யுத:’ என்ற இந்த இரண்டு பதங்களும் சேர்ந்த இந்த திருநாமம் பகவானை விசேஷமாக குறிப்பதாகும்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சம் முடியும் தறுவாயில், ப்ரளய காலத்தில், அனைத்து உயிரினங்களையும் அவற்றின் முடிவை நோக்கி இழுக்கிறார். எனவே அவர் ஸங்கர்ஶணர் என்று அழைக்கப்படுகிறார். அவரது இயற்கையான தன்மை முதலியவை என்றுமே குறைவுபடாது இருப்பதால் ‘அச்யுதர்’ என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ‘ஸங்கர்ஶணராகவும்’ ‘அச்யுதராகவும்’ இருப்பதால் பகவான் ‘ஸங்கர்ஶணோச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ஸம்ஹார காலத்திலும் (ஸங்கர்ஶணராய் இருக்கும் பொழுதும்) தனது மேன்மை குறையாமல் அச்யுதராய் இருக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

————–

  1. ஓம் வருணாய நம:

ஸ்வரஶ்மீனாம் தனது கிரணங்களை

ஸம்வரணாத் மூடிக்கொள்வதால்

ஸாயங்கத: ஸூர்யோ மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் இருக்கும் பகவான்

வருண: ‘வருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாலை நேரத்துக் கதிரவனின் வடிவில் பகவான் தனது கிரணங்களை மூடிக்கொள்கிறார் (ஸம்வரணம் செய்கிறார்). எனவே அவர் ‘வருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘இமம் மே வருணம் ஶ்ருதீ ஹவம்’

இதி மந்த்ரவர்ணாத் | இந்த மந்திரத்தில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.

————-

  1. ஓம் வாருணாய நம:

வருணஸ்யாபத்யம் வருணனின் புதல்வர்களான

வசிஶ்டோ(S)கஸ்த்யோ வா வசிஶ்டரும், அகஸ்தியரும் (அவர்களின் அந்தராத்மாவான பகவான்)

வாருண: ‘வாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வசிஶ்டர் மற்றும் அகஸ்தியரின் வடிவில் வருணனின் புதல்வர்களாக இருப்பதால் அவர் ‘வாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் வ்ருக்ஷாய நம:

வ்ருக்ஷ இவ மரங்களைப் போன்று

அசலதயா ஸ்தித இதி அசையாது நிலைபெற்று இருப்பதால்

வ்ருக்ஷ: பகவான்  ‘வ்ருக்ஷ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மரங்களைப் போன்று அசையாது நிலைபெற்று இருப்பதால் பகவான்  ‘வ்ருக்ஷ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஶ்டத்யேக:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒரு மரத்தைப் போன்று அசையாது (மரம் எவ்வாறு அசையாது ஓரிடத்தில் நிலைபெற்று இருக்கிறதோ, அவ்வாறே) தன்னுடைய இயற்கையான மேன்மையில் (அந்த பரப்ரஹ்மம்) நிலைபெற்று இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம் புஶ்கராக்ஷாய நம:

ஹ்ருதய புண்டரீகே அனைவரின் உள்ளத்தாமரைகளிலும்

சிந்தித: த்யானிக்கப்படுவதால்

புஶ்கராக்ஷ: பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் (குறிப்பாக யோகிகளின்) உள்ளத்தாமரைகளிலும் த்யானிக்கப்படுவதால் பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வரூபேண தனது இயற்கையான வடிவில்

ப்ரகாஶத இதி வா ஒளிவீசுவதால் (ஒளியுடன் திகழ்வதால்)

புஶ்கராக்ஷ: பகவான் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான வடிவில் மிகுந்த ஒளியுடன் பிரகாசிப்பதால் அவர் ‘புஶ்கராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் மஹாமனஸே நம:

ஸ்ருஶ்டிஸ்தித்யந்தகர்மாணி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை

மனஸைவ கரோதீதி (வேறு கரணங்கள் இன்றி) தனது மனதாலேயே புரிவதால்

மஹாமனா: பகவான் ‘மஹாமனா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை வேறு கரணங்கள் இன்றி தனது மனதாலேயே புரிகிறார். எனவே அவர் ‘மஹாமனா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மனஸைவ ஜகத்ஸ்ருஶ்டிம் ஸம்ஹாரம் ச கரோதி ய: |’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் தனது மனதாலேயே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைப் புரிகிறாரோ (செய்கிறாரோ)…

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

—————-

  1. பகவான் பகஹானந்தி வனமாலீ ஹலாயுத:

ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஶ்ணுர் கதிஸத்தம: ||

இந்த அறுபதாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பகவான், 559. பகஹா, 560. ஆனந்தீ, 561. வனமாலீ, 562. ஹலாயுத: |
  2. ஆதித்ய:, 564. ஜ்யோதிராதித்ய:, 565. ஸஹிஶ்ணு:, 566. கதிஸத்தம: ||

—————-

  1. ஓம் பகவதே நம:

‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |

ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் “பக” என்ற சொல்லினால் குறிக்கப்படும்.

ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால்

பகவான் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|

வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. ஓம் பகக்னே நம:

ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை

ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில்

ஹந்தீதி அழிப்பதால்

பகஹா பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைவரின் “பக”த்தையும் “ஹ” – அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார்.

————-

  1. ஓம் ஆனந்தினே நம:

ஸுகஸ்வரூபத்வாத் ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால்

ஆனந்தீ பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆனந்தமே அவரது இயற்கையான தன்மையாய் இருப்பதால் பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸம்பத்ஸம்ருதத்வாத் அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால்

ஆனந்தீ வா பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது,  அனைத்து வளங்களும் அளவிடமுடியாது முழுமையாக நிறைந்திருப்பவராதலால் பகவான் ‘ஆனந்தீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் வனமாலினே நம:

பூததன்மாத்ரரூபாம் ஐம்பூதங்களின் நுண்வடிவான  தன்மாத்திரைகளின் பிரதிநிதியான

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ எனும் பெயர் கொண்ட

வனமாலாம் வஹன் வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால்

வனமாலீ பகவான் ‘வனமாலீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஐம்பூதங்களின் ஸூக்ஷ்ம வடிவான  தன்மாத்திரைகளின் பிரதிநிதியான ‘வைஜயந்தி’ எனும் பெயர் கொண்ட வனமாலையை தனது திருமார்பில் அணிந்துள்ள படியால் பகவான் ‘வனமாலீ’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ஹலாயுதாய நம:

ஹலமாயுதம் கலப்பையை ஆயுதமாக (தரித்திருந்ததால்)

அஸ்யேதி ஹலாயுத: பகவான் ‘ஹலாயுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

பலபத்ராக்ருதி: பலராமனின் வடிவாக

பலராம அவதாரத்தின் பொழுது பகவான் கலப்பையை ஆயுதமாகத் தரித்திருந்ததால் அவர் ‘ஹலாயுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் ஆதித்யாய நம:

அதித்யாம் அதிதி தேவியின் புதல்வராக

கஶ்யபாத் காஶ்யப மஹரிஶி மூலமாக

வாமனரூபேண வாமனரின் வடிவில்

ஜாத பிறந்தபடியால்

ஆதித்ய: பகவான் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வாமன அவதாரத்தில் காஶ்யப மஹரிஶி மூலமாக அதிதி தேவியின் புதல்வராக தோன்றினார். எனவே அவர் ‘ஆதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ஜ்யோதிராதித்யாய நம:

ஜ்யோதிஶி ஒளி வடிவாய்

ஸவித்ருமண்டலே சூரிய மண்டலத்தினுள்

ஸ்திதோ வீற்றிருப்பதால்

ஜ்யோதிராதித்ய: பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரிய மண்டலத்தினுள் ஒளி வடிவாக வீற்றிருப்பதால் பகவான் ‘ஜ்யோதிராதித்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஸஹிஶ்ணவே நம:

த்வந்த்வானி இருமைகளை

ஶீதோஶ்ணாதீனி குளிர், வெப்பம் போன்ற

ஸஹத பொறுத்துக் கொள்வதால்

இதி ஸஹிஶ்ணு: பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

குளிர், வெப்பம் போன்ற இருமைகளை பொறுத்துக் கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 144வது திருநாமத்தில் ‘ஸஹிஶ்ணு:’ என்ற பதத்திற்கு ஆசார்யாள் “ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று பொருளுரைத்திருந்தார்..

———–

  1. ஓம் கதிஸத்தமாய நம:

கதிஸ்சாஸௌ அனைவருக்கும் புகலிடமாகவும் ஸத்தமஸ்சேதி

அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால்

கதிஸத்தம: பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் புகலிடமாகவும், அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவராகவும் இருப்பதால் பகவான் ‘கதிஸத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்திலும் உயர்ந்த புகலிடம் பகவானே என்றும் பொருள் கொள்ளலாம்

————-

61. ஸுதன்வா கண்டபரஶுர்தாருணோ த்ரவிணப்ரத: |

திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||

இந்த அறுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

567. ஸுதன்வா, 568. கண்டபரஶு: (அகண்டபரஶு:), 569. தாருண:, 570. த்ரவிணப்ரத: |

571. திவ:ஸ்ப்ருக், 572. ஸர்வத்ருக்வ்யாஸ:, 573. வாசஸ்பதிரயோநிஜ: ||  

———

567. ஸுதன்வனே நம:

ஶோபனமிந்த்ரியாதிமயம் அழகானதும், இந்த்ரியங்களின் (உட்புலன், வெளிப்புலன் ஆகியவற்றின்) வடிவானதுமான

ஶார்ங்கம் ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய

தனுரஸ்யாஸ்தீதி வில்லை ஏந்தியிருப்பதால்

ஸுதன்வா பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகானதும், (கண், காது, செவி, மனம் போன்ற) இந்த்ரியங்களின் வடிவானதுமான ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய வில்லை (தனது கைகளில்) ஏந்தியிருப்பதால் பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

568. கண்டபரஶுவே நம: (அகண்டபரஶுவே நம:

ஶத்ரூணாம் எதிரிகளை

கண்டனாத் (வெட்டி) அழிப்பதால்

கண்ட: ‘கண்ட:’ என்று அழைக்கின்றனர்

பரஶுரஸ்ய கோடரியை

ஜாமத்க்ன்யா பகவான் பரசுராமரின் கையிலுள்ள

க்ருதேரிதி அந்தக் கோடரியை ஏந்தியிருப்பதால்

கண்டபரஶு: பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது பரசுராம அவதாரத்தில், எதிரிகளை வெட்டி அழிப்பதால் ‘கண்ட:’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் கோடரியை ஏந்தியிருப்பதால் பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அகண்ட: எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத

பரஶுரஸ்யேதி வா கோடரியை கையில் ஏந்திருப்பதால்

அகண்டபரஶு: பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத கோடரியை கையில் ஏந்திருப்பதால் பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

569. தாருணாய நம:

ஸன்மார்க நல்வழியின் (அறவழியின்)

விரோதீனாம் எதிரிகளுக்கு

தாருணத்வாத் அச்சமூட்டுபவராக இருப்பதால்

தாருண: பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியின் (அறவழியில் நடப்போருக்கு) எதிரிகளுக்கு தாம் அச்சமூட்டுபவராக இருப்பதால் பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

570. த்ரவிணப்ரதாய நம:

த்ரவிணம் செல்வத்தை

வாஞ்சிதம் விழையும்

பக்தேப்ய: அடியவர்களுக்கு

ப்ரததாதீதி (அவர்கள் வேண்டும்) செல்வத்தை அளிப்பதால்

த்ரவிணப்ரத: பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செல்வத்தை விழையும் அடியவர்களுக்கு, அவர்கள் விழையும் செல்வத்தை அளிப்பதால் பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

———-

571. திவஸ்ப்ருஶே நம:

திவ: ஆகாயத்தை (அல்லது ஸ்வர்க்கத்தை)

ஸ்பர்ஶனாத் தீண்டுவதால் (தொடுவதால்)

திவ:ஸ்ப்ருக் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

ஆகாயத்தை (ஸ்வர்க்கத்தை) தொடுவதால் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

————-

572. ஸர்வத்ருக்வ்யாஸாய நம:

ஸர்வத்ருஶாம் ஸர்வஞானானாம் ‘ஸர்வத்ருக்’ அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்)

விஸ்தாரக்ருத் விரிவாக எடுத்துரைத்த

வ்யாஸ: ஸர்வத்ருக்வ்யாஸ: பகவான் வேத வ்யாஸரே ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

‘ஸர்வத்ருக்’ அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்) விரிவாக எடுத்துரைத்த பகவான் வேத வ்யாஸரே ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பகவானே வ்யாஸராக அவதரித்தார் என்பதை நாம் முன்பே ‘க்ருஷ்ண:’ என்ற (55௦ வது) திருநாமத்தில் பார்த்தோம்.

அதவா அல்லது

ஸர்வா ச ஸா அனைத்துமாய் இருப்பதாலும்

த்ருக் சேதி அனைத்தையும் அறிவதாலும்

ஸர்வத்ருக் ஸர்வாகாரம் ஞானம் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். ஸர்வஸ்ய அனைவரின்

த்ருஶ்டித்வாத் வா பார்வையாகவும் இருப்பதால்

ஸர்வத்ருக் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்துமாய் இருப்பதாலும் அனைத்தையும் அறிவதாலும் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். அனைவரின் பார்வையாகவும் (அனைத்தையும் பார்ப்பவராக) இருப்பதாலும் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார்.

ரிக்வேதாதி ரிக் வேதம் முதலாய்

விபாகேன சதுர்த்தா வேதா வ்யஸ்தா: க்ருதா: வேதங்களை நான்காக வகுத்தார்

ஆத்யோ வேத முதலாம் வேதமான ரிக் வேதத்தை

ஏகவிம்ஶதிதா க்ருத: 21 பிரிவுகளாகவும்

த்விதீய இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை

ஏகோத்தரஶததா க்ருத: 101 பிரிவுகளாகவும்

ஸாமவேத: ஸாமவேதத்தை

ஸஹஸ்ரதா க்ருத: 1000 பிரிவுகளாகவும்

அதர்வவேதோ அதர்வவேதத்தை

நவதா ஶாகாபேதென க்ருத: ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார்.

ஏவம் அன்யானி ச இவ்வாறு மற்ற

புராணானி புராணங்களையும்

வ்யஸ்தான்யனேனேதி பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால்

வ்யாஸ: ப்ரஹ்மா நான்முகக் கடவுளான ப்ரஹ்மா ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார்).

ரிக் வேதம் முதலாய் வேதங்களை நான்காக வகுத்தார். முதலாம் வேதமான ரிக் வேதத்தை 21 பிரிவுகளாகவும், இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை 101 பிரிவுகளாகவும், ஸாமவேதத்தை 1000 பிரிவுகளாகவும், அதர்வவேதத்தை ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார். இவ்வாறு மேலும் மற்ற (பதினெண்) புராணங்களையும் பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் ‘வ்யாஸ:’ என்று அழைக்கப்படுகிறார்).

இவ்வாறு ‘ஸர்வத்ருக்’, ‘வ்யாஸ:’ ஆகிய பதங்களுக்கு வேறு பொருள்களையும் ஆச்சார்யாள் அளிக்கிறார். ஆயினும், இந்த இரண்டு பதங்களும் ஒன்று சேர்ந்த ‘ஸர்வத்ருக்வ்யாஸ:’ என்ற ஒரே திருநாமமாகவே இதை கணக்கில் கொள்ள வேண்டும்.

———–

573. வாசஸ்பதயே(அ)யோனிஜாய நம:

வாசஸ்பதிரயோனிஜ: பகவான் ‘வாசஸ்பதிரயோனிஜ:’ என்று அழைக்கப்படுகிறார்.

வாசோ வித்யாயா: ‘வாச:’ என்றால் வித்தை அல்லது கல்வி என்று பொருள் பதி: அதன் அதிபதியாக இருப்பதால்

வாசஸ்பதி: ‘வாசஸ்பதி:’ என்றும்

ஜனன்யாம் ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து

ந ஜாயத இதி பிறவாதபடியால்

அயோனிஜ: ‘அயோனிஜ:’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இதி இது

ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான

ஏகம் நாம ஒரே திருநாமமாகும்.

வாக்கிற்கு (கல்விக்கு) அதிபதியாக இருப்பதால் ‘வாசஸ்பதி:’ என்றும், ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறவாத படியால் ‘அயோனிஜ:’ என்றும் பகவான் அழைக்கப்படுகிறார். இந்த இரண்டு பதங்களும் சேர்ந்து ஒரே திருநாமமாக ‘வாசஸ்பதிரயோனிஜ:’ என்று பகவான் அழைக்கப்படுகிறார்.

———–

  1. த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக்|

ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||

இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578.  பேஶஜம், 579. பிஶக்|
  2. ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||

—————-

  1. ஓம் த்ரிஸாம்னே நம:

தேவவ்ரத தேவவ்ரதம் என்னும்

ஸமாக்யாதைஸ் பெயருடைய

த்ரிபி: மூன்று

ஸாமபி ஸாமங்களால்

ஸாமகை: ஸாமகானம் செய்பவர்களால்

ஸ்துத இதி போற்றித் துதிக்கப்படுவதால்

த்ரிஸாமா பகவான் ‘த்ரிஸாமா’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவவ்ரதம் என்னும் பெயருடைய மூன்று ஸாமங்களால் ஸாமகானம் செய்பவர்களால் போற்றித் துதிக்கப்படுவதால் பகவான் ‘த்ரிஸாமா’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் ஸாமகாய நம:

ஸாம ஸாமவேதத்தை

காயதீதி பாடுவதால்

ஸாமக: பகவான் ‘ஸாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாமவேதத்தை பாடுவதால் பகவான் ‘ஸாமக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஸாம்னே நம:

‘வேதானாம் ஸாமவேதோஸ்மி’ (ஸ்ரீமத்பகவத் கீதை 10.22)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதங்களில் யான் ஸாமவேதம்.

இதி பகவத்வசனாத் பகவானின் இந்த பகவத்கீதையின் கூற்றின்படி

ஸாமவேத: ஸாம ஸாமவேத வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் ‘வேதங்களில் யான் ஸாமவேதம்’  என்று கூறியுள்ளார். எனவே ஸாமவேத வடிவினாரான பகவான் ‘ஸாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் நிர்வாணாய நம:

ஸர்வது:க அனைத்துவித துன்பங்களும்

உபஶம லக்ஷணம் அற்று இருப்பதன் அடையாளமாக

பரமானந்தரூபம் உயரிய ஆனந்தமே வடிவினராய் இருப்பதால்

நிர்வாணம் பகவான் ‘நிர்வாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வித துன்பங்களும் (துக்கங்களும்) அற்று இருப்பதன் அடையாளமாக உயரிய ஆனந்தமே வடிவானவராதலால் பகவான் ‘நிர்வாணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் பேஶஜாய நம:

ஸம்ஸார இந்தப் பிறவியென்னும்

ரோகஸ்ய பிணிக்கு (நோய்க்கு)

ஒளஶதம் அருமருந்தாய் இருப்பதால்

பேஶஜம் பகவான் ‘பேஶஜம்’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவியென்னும் பிணிக்கு (நோய்க்கு) அருமருந்தாய் இருப்பதால் பகவான் ‘பேஶஜம்’ எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் பிஶஜே நம:

ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பிணியை

நிர்மோக்ஷகாரிணீம் போக்கவல்ல அருமருந்தாகிற

பராம் வித்யாம் மேலான வித்தையை (அறிவை)

உபதிதேஶ அனைவருக்கும் உபதேசித்தார்

கீதாஸ்விதி ‘ஸ்ரீமத் பகவத்கீதை’ என்னும்

பிஶக் எனவே பகவான் ‘பிஶக்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியை போக்கவல்ல அருமந்தாகிற ‘ஸ்ரீமத் பகவத்கீதை’ என்னும் உயரிய வித்தையை (அறிவை) அனைவருக்கும் போத்தித்தபடியால் (உபதேசித்த படியால்) பகவான் ‘பிஶக்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பிஶக்தம் த்வா பிஶஜா ஶ்ருணோமி’

அனைவரைக் காட்டிலும் சிறந்த மருத்துவரைப் பற்றி கேட்பாயாக

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம் ஸந்யாஸக்ருதே நம:

மோக்ஷார்த்தம் முக்தியை அடையும் பொருட்டு (அதை விழைவோருக்கு)

சதுர்த்தம் ஆஶ்ரமம் நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸ ஆஸ்ரமத்தை (அதாவது வாழும் வழிமுறையை)

க்ருதவானிதி உருவாக்கியவராதலால்

ஸந்யாஸக்ருத் பகவான் ‘ஸந்யாஸக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு, அதை அடையும் வழிமுறையாக நான்காவது ஆஸ்ரமமான ‘ஸந்யாஸ ஆஸ்ரமத்தை’ உருவாக்கியவராதலால் பகவான் ‘ஸந்யாஸக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் ஶமாய நம:

ஸந்யாஸினாம் துறவறம் பூண்டவர்களுக்கு (ஸன்யாஸிகளுக்கு)

ப்ராதான்யேன முதன்மையான (முக்கியமான)

ஞானஸாதனம் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக

ஶமம் (மன) அமைதியை

ஆசஶ்ட உபதேசித்ததால்

இதி ஶம: பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்தியை விழைவோருக்கு ஸன்யாஸ ஆஸ்ரமத்தை (துறவறத்தை) ஏற்படுத்தினார் (ஸந்யாஸக்ருத்). அவ்வாறு துறவறம் பூண்டோரின் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக மன அமைதியை (ஶம) உபதேசித்ததால் அவர் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“யதீநாம் ப்ரஶமோ தர்மோ நியமோ வனவாஸினாம் |

தானமேவ க்ருஹஸ்தானாம் ஶுஶ்ரூபா ப்ரஹ்மசாரிணாம் ||”

துறவிகளுக்கு மன அமைதியும், வனவாசிகளுக்கு கட்டுப்பாடும் (நியமம்), இல்லறத்தோருக்கு தானமும் மற்றும் ப்ரஹ்மச்சாரிகளுக்கு (குரு) சேவையும் தர்மமாகும்.

இதி ஸ்ம்ருதே: இவ்வாறு ஸ்ம்ருதிகளில் (வேதங்களில்) கூறப்பட்டுள்ளது.

‘தத்கரோதி ததாசஶ்டே’ (சுராதிகணவார்த்திகம்)

இதி ணிசி பசாத்யசி க்ருதே ரூபம் ஶம இதி |

இந்த இலக்கண விதியின் படி “ஶம”என்ற சொல் உருவாகிறது.

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்

ஶமயிதேதி வா அழிப்பதால்

ஶம: பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களையும் (ப்ரளய காலத்திலும், அந்தந்த ஜீவனின் கால முடிவிலும்) அழிப்பதாலும் பகவான் ‘ஶம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் ஶாந்தாய நம:

விஶயஸுகேஶ்வ(அ)ஸங்கதயா விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) சேராது இருப்பதால்

ஶாந்த: பகவான் ‘ஶாந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) நாட்டமில்லாமல் அவற்றோடு சேராது  இருப்பதால் பகவான் ‘ஶாந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் நிஶ்டாய நம:

ப்ரளயே ப்ரளய காலத்தில்

நிதராம் முழுமையாக

தத்ரைவ அவரிடமே

திஶ்டந்தி உறைவதால்

பூதாநிதி உயிரினங்கள் (ஜீவராசிகள்)

நிஶ்டா பகவான் ‘நிஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) முழுமையாக பகவானிடம் (லாயமடைந்து) உறைவதால் பகவான் ‘நிஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் ஶாந்தயே நம:

ஸமஸ்தாவித்யா (ஸமஸ்த அவித்யா) அனைத்து வகை அறியாமைகளும்

நிவ்ருத்தி: விலகி இருப்பதே

ஶாந்தி: ‘ஶாந்தி:’ என்று அழைக்கப்படுகிறது.

ஸா ப்ரஹ்மைவ (அந்த அறியாமைகளற்ற நிலையானது) பரப்ரஹ்மத்தின் இயற்கையான தன்மையாகும். எனவே, பரப்ரஹ்மமான பகவான் ‘ஶாந்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகை அறியாமைகளும் அற்ற தன்மையே ‘ஶாந்தி:’ என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு, அறியாமை அற்ற நிலையானது பரப்ரஹ்மமான பகவானின் இயற்கையான தன்மையாகும். எனவே அவர் ‘ஶாந்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் பராயணாய நம:

பரமுத்க்ருஶ்டமயனம் ஸ்தானம் (பரம் உத்க்ருஶ்டம் அயனம்) அயனம் என்றால் அடையப்படும் இடம் (ஸ்தானம்) என்று பொருள். மிக உயரிய அடையப்படக்கூடிய இடமாக

புனராவ்ருத்தி மீண்டு வருதல்

ஶங்காரஹிதம் இதி என்ற ஐயமின்றி இருப்பதால்

பராயணம் பகவான் ‘பராயணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மீண்டு வருதல் என்ற ஐயத்திற்கு இடமின்றி, மிக உயரிய ஸ்தானமாக (அடையக்கூடிய இடமாக) இருப்பதால் பகவான் ‘பராயணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புல்லிங்கபக்ஷே பஹுவ்ரீஹி: இந்தத் திருநாமத்தை ஆண்பாலாகக் கருத்துமிடத்தில் எவர் உயரிய ஸ்தானமாக இருப்பவரோ என்று பொருள் கொள்ள வேண்டும்.

————

  1. ஶுபாங்க: ஶாந்தித: ஸ்ரஶ்டா குமுத: குவலேசய:|

கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஶபாக்ஷோ வ்ருஶப்ரிய: ||

இந்த அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஶுபாங்க:, 587. ஶாந்தித:, 588. ஸ்ரஶ்டா, 589. குமுத:, 590. குவலேசய: |
  2. கோஹித:, 592. கோபதி:, 593. கோப்தா, 594. வ்ருஶபாக்ஷ:, 595. வ்ருஶப்ரிய:||

————

  1. ஶுபாங்காய நம:

ஸுந்தராம் அழகியதான

தனும் உடலை

தாராயன் தரித்திருப்பவராதலால்

ஶுபாங்க: பகவான் ‘ஶுபாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகவும் அழகிய உடலைத் தாங்கியவர் (உடையவர்) ஆதலால் பகவான் ‘ஶுபாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஶாந்திதாய நம:

ராக விருப்பு

த்வேஶாதி வெறுப்புகள்

நிர்மோக்ஷலக்ஷணம் விலகிய தன்மைக்கு அடையாளமான

ஶாந்திம் (மன)அமைதியை (பொறுமையை)

ததாதீதி அளிப்பவர் ஆதலால்

ஶாந்தித: பகவான் ‘ஶாந்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விருப்பு, வெறுப்புக்கள் அற்ற தன்மையின் அடையாளமான மன அமைதியையும், பொறுமையையும் அளிப்பவர் ஆதலால் பகவான் ‘ஶாந்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஸ்ரஶ்ட்ரே நம:

ஸர்காதௌ படைப்பின் தொடக்கத்தில்

ஸர்வபூதாநி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்)

ஸஸர்ஜேதி படைப்பதால்

ஸ்ரஶ்டா பகவான் ‘ஸ்ரஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைப்பின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்) படைப்பதால் பகவான் ‘ஸ்ரஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. குமுதாய நம:

கௌ பூம்யாம் ‘கு’ என்றால் பூமியில் (பூமாதேவியிடம்)

மோதத இதி வா மகிழ்கிறார்

குமுத: பகவான் ‘குமுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘கு’ என்று அழைக்கப்படும் பூமியிடம் (பூமாதேவியிடம்) மகிழ்கிறார். எனவே பகவான் ‘குமுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. குவலேஶாய நம:

கோ: க்ஷிதேர் ‘கு’ என்று அழைக்கப்படும் பூமியை

வலனாத் ஸம்ஸரணாத் ‘வல’ அதாவது சூழ்ந்திருப்பதால்

குவலம் ஜலம் நீரிற்கு ‘குவலம்’ என்று பெயர்

தஸ்மின் அதில் (நீரில்)

ஶேத இதி சயனித்து இருப்பதால்

குவலேஶய: பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கு’ என்று அழைக்கப்படும் பூமியை அதாவது சூழ்ந்திருப்பதால் நீரிற்கு ‘குவலம்’ என்று பெயர். அதில் (நீரில்) சயனித்து இருப்பதால் பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶயவாஸவாஸிஶ்வகாலாத்’ (பாணினி ஸூத்ரம் 6.3.18)

இதி அலுக் ஸப்தம்யா: |

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இந்த சொல் உருவாயுள்ளது.

குவலஸ்ய பதரி ஃபலஸ்ய ‘குவல’ என்றால் இலந்தைப் பழம்

மத்யே அதன் நடுவில்

ஶேதே சயனித்து இருக்கிறான்

தக்ஷக: ‘தக்ஷகன்’

ஸோபி தஸ்ய அந்த தக்ஷகனும்

விபூதிரிதி வா ஹரி: பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும்.

குவலேஶய: எனவே, பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘குவல’ என்றழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் நடுவில் தக்ஷகன் சயனித்து இருக்கிறான். தக்ஷகனும் பகவான் ஹரியின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும். எனவே பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உரையின் படி தக்ஷகனுக்கு ‘குவலேஶய:’ என்று பெயர். அவன் பகவானின் ஒரு வெளிப்பாடு ஆதலால் பகவானுக்கே அந்த திருநாமம் பொருந்தும்.

கௌ பூம்யாம் ‘கு’ என்றால் பூமி

வலதே ஸம்ஸ்ரயதே இதி அந்த பூமியில் (ஊர்ந்து) செல்வதால்

ஸர்ப்பாணாம் பாம்புகளின்

உதரம் குவலம் வயிற்றுப் பகுதி குவலம் என்று அழைக்கப்படுகிறது,

தஸ்மிந் ஶேஶோதரே ஆதிசேடனது மடியில் (வயிற்றில்)

ஶேத இதி சயனித்து இருப்பதால்

குவலேஶய: பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கு’ என்றழைக்கப்படும் பூமியில் ஊர்ந்து செல்வதால் பாம்புகளின் வயிற்றுப்பகுதியை ‘குவலம்’ என்று  அழைப்பார்கள். அத்தகைய பாம்பான ஆதிசேடனின் வயிற்றில் (குவலயத்தில்) சயனித்து இருப்பதால் பகவான் ‘குவலேஶய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. கோஹிதாய நம:

கவாம் ஆவினங்களை

வ்ருத்யர்த்தம் வளர்ப்பதற்காக (அவற்றை காப்பதற்காக)

கோவர்தனம் கோவர்தன மலையை

த்ருதவானிதி (கையில்) ஏந்தினார்

கோப்யோ ஹிதோ அந்த ஆநிரைகளின் நலத்தை பேணி

கோஹித: எனவே  பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (இந்திரன் வ்ருந்தாவனத்தின் மீது கல்மாரி பொழிந்த பொது) ஆநிரைகளின் நலத்தை பேணி, அவற்றைக் காக்க கோவர்தன மலையை கையில் ஏந்தினார். எனவே அவர் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோர்பூமே: ‘கோ’ என்றழைக்கப்படும் பூமியின்

பாராவதரணேச்சயா (பார அவதரண இச்சயா) பாரத்தைக் குறைக்கும் பொருட்டு தனது இச்சையால்

ஶரீரக்ரஹணம் குர்வன்வா உடலை ஏற்றுக் கொள்வதால்

கோஹித: பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கோ’ என்றழைக்கப்படும் இந்த பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு (ஒவ்வொரு அவதாரத்தின் பொழுதும்) தனது இச்சையால் ஒரு உடலை ஏற்றுக் கொள்வதால் பகவான் ‘கோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. கோபதயே நம:

கோர்பூம்யா: ‘கோ’ என்றழைக்கப்படும் பூமிக்கு

பதி: கணவரானபடியால்

கோபதி: பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கோ’ என்றழைக்கப்படும் பூமிக்கு கணவரானபடியால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பதி என்றால் தலைவன் அல்லது அரசன் என்றும் பொருள். அவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது பூமிக்குத் தலைவன் அல்லது பூமியின் அரசன் என்றும் இந்த உரையை கொள்ளலாம்.

————–

  1. கோப்த்ரே நம:

ரக்ஷகோ காப்பாற்றுகிறார்

ஜகத இதி பூமியை (பூமியில் உள்ளோரை)

கோப்தா எனவே பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியை (அதில் உள்ளோரைக்) காப்பதால் பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வமாயயா தனது மாயையால்

ஸ்வமாத்மானம் தனது ஆத்மாவை, அதாவது தனது உண்மையான தன்மையை

ஸம்வ்ருணோதீதி வா மறைத்துக் கொள்கிறார்

கோப்தா எனவே பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது மாயையால் தன் இயற்கையான தன்மையை (ஆத்மாவை) அனைவரிடமிருந்தும் மறைத்துக் கொள்வதால் பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. வ்ருஶபாக்ஷாய நம:

ஸகலான் காமான் அனைத்து ஆசைகளையும்

வர்ஶுகே பொழியும்

அக்ஷிணீ அஸ்யேதி திருக்கண்களை உடையவராதலால்

வ்ருஶபாக்ஷ: பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் அனைத்து ஆசைகளையும் (விருப்பங்களையும்) மழையைப்போல பொழியும் திருக்கண்களை உடையவராதலால் பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶபோ தர்ம: ‘வ்ருஶ’ என்றால் தர்மம் (அறம்)

ஸ ஏவ வா த்ருஶ்டிர் அஸ்யேதி தனது பார்வையாக கொண்டிருப்பதால்

வ்ருஶபாக்ஷ: பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் அறத்தை தனது பார்வையாக கொண்டிருப்பதால் பகவான் ‘வ்ருஶபாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறமே கண்ணாக – அறத்தின் வழியிலேயே நடக்கிறார் என்று பொருள்.

————

  1. வ்ருஶப்ரியாய நம:

வ்ருஶோ தர்ம: ‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை)

ப்ரியோ யஸ்ய  எவருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ

வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வ்ருஶ’ என்று அழைக்கப்படும் தர்மத்தை (அறத்தை) விரும்புபவராதலால் பகவான் ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வா ப்ரியஸ்ய’ (வார்த்திகம்) இதி பூர்வநிபாதவிகல்பவிதானாத் பரநிபாத:

இங்கு ஆசார்யாள் இந்த சொல்லிற்கு உரித்தான இலக்கணக் குறிப்பை அளிக்கிறார்.

வ்ருஶஸ்சாஸௌ ‘வ்ருஶ’ அதாவது அறமே வடிவானவராகவும்

ப்ரியஸ்சேதி வா ப்ரியமானவராகவும் (அனைவராலும் விரும்பப்படுபவராகவும்) இருப்பதால்

வ்ருஶப்ரிய: அவர் (பகவான்) ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அறமே வடிவானவராகவும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும் இருப்பதால் பகவான் ‘வ்ருஶப்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |

ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 

இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ:|
  2. ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||

————-

  1. அநிவர்த்தினே நம:

தேவாஸுரஸங்க்ரமான் தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில்

ந நிவர்த்தத இதி எப்பொழுதும் பின்வாங்காதவர் ஆதலால்

அநிவர்த்தீ பகவான் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் (தேவர்களின் சார்பாக போராடும் பொழுது) பகவான் எப்பொழுதும் பின்வாங்குவதில்லை  ஆதலால், அவர் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶபரியத்வாத் அறவழியை விரும்புபவர் ஆதலால்

தர்மான் ந நிவர்த்தத இதி வா அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை)

அநிவர்த்தீ எனவே, பகவான் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியை விரும்புபவர் (வ்ருஶபரிய:) ஆதலால் பகவான் அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை). எனவே, அவர் ‘அநிவர்த்தீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. நிவ்ருத்தாத்மனே நம:

ஸ்வபாவதோ இயற்கையாகவே

விஶயேப்யோ விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்)

நிவ்ருத்த நாட்டமின்றி திரும்பும்

ஆத்மா மனோSஸ்யேதி ஆத்மா அதாவது மனதை உடையவராதலால்

நிவ்ருத்தாத்மா பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மனது (ஆத்மா) இயற்கையாகவே விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) நாட்டமின்றி அவற்றை விட்டு விலகித் திரும்புகிறது. எனவே அவர் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஸங்க்ஷேப்த்ரே நம:

விஸ்த்ருதம் பரந்து, விரிந்துள்ள

ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை

ஸம்ஹாரஸமயே ப்ரளய காலத்தில்

ஸூக்ஷ்மரூபேண அதன் நுண்வடிவாய்

ஸங்க்ஷிபன் சுருக்குவதால்

ஸங்க்ஷேப்தா பகவான் ‘ஸங்க்ஷேப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரந்து, விரிந்துள்ள இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் அதன் நுண்வடிவாய் சுருக்குவதால் பகவான் ‘ஸங்க்ஷேப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. க்ஷேமக்ருதே நம:

உபாத்தஸ்ய படைக்கப்பட்ட பொருட்களை

பரிரக்ஷணம் கரோதீதி காப்பதால்

க்ஷேமக்ருத் பகவான் ‘க்ஷேமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைக்கப்பட்ட பொருட்களை காப்பதால் பகவான் ‘க்ஷேமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஶிவாய நம:

ஸ்வநாம தன்னுடைய திருநாமத்தை

ஸ்ம்ருதிமாத்ரேண நினைத்த மாத்திரத்திலேயே

பாவயன் புனிதப்படுத்துவதால்

ஶிவ: பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய திருநாமத்தை நினைத்த மாத்திரத்திலேயே (நினைப்போரின் பாவங்களை அழித்து அவர்களை) புனிதப்படுத்துவதால் பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் ஶஶ்டம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஶிவ: என்னும் இந்த திருநாமம் வரையில்) அறுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

————

  1. ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:

ஸ்ரீவத்ஸ ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும்

சிஹ்னமஸ்ய சின்னம் (குறி)

வக்ஷஸி திருமார்பில்

ஸ்திதமிதி இருப்பதால்

ஸ்ரீவத்ஸவக்ஷா: பகவான் ‘ஸ்ரீவத்ஸவக்ஷா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் சின்னம் (மறு) அவரது திருமார்பில் இருப்பதால் பகவான் ‘ஸ்ரீவத்ஸவக்ஷா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

  1. ஸ்ரீவாஸாய நம:

அஸ்ய அவரது

வக்ஷஸி திருமார்பில்

ஸ்ரீரனபாயினி அவரை விட்டு என்றும் பிரியாத திருமகளானவள்

வஸதீதி வசிப்பதால்

ஸ்ரீவாஸ: பகவான் ‘ஸ்ரீவாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் திருமார்பில், அவரை விட்டு என்றும் நீங்காத திருமகள் நித்ய வாசம் செய்கிறாள். எனவே, பகவான் ‘ஸ்ரீவாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஸ்ரீபதயே நம:

அம்ருதமதனே அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது

ஸர்வான் அனைத்து

ஸுரா(அ)ஸுராதீன் தேவர்கள் மற்றும் அஸுரர்களை

விஹாய விடுத்து

ஸ்ரீரேனம் பதித்வேன திருமகளால் தனது பதியாக (கணவனாக)

வரயாமாஸேதி வரிக்கப்பட்டதால்

ஸ்ரீபதி: பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது திருமகள் அனைத்து தேவர்கள் மற்றும் அஸுரர்களை விடுத்து பகவானேயே தனது பதியாக (கணவனாக) வரித்தாள். எனவே, பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ: பராஶக்தி: ‘ஸ்ரீ’ என்றால் பராசக்தியைக் குறிக்கும்

தஸ்யா: பதிரிதி வா அந்த பராசக்தியின் (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால்

ஸ்ரீபதி: பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்ரீ’ என்றால் பராசக்தியைக் குறிக்கும் அந்த பராசக்தியை (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் பகவான் ‘ஸ்ரீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பராஸ்ய ஶக்திர் விவிதைவ ஶ்ரூயதே’ (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 6.8)

ஸ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது உயர்ந்த சக்தியானது (வேதங்களில்) பலவாறாக கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஸ்ரீமதாம்வராய நம:

ரிக்யஜு: ஸாமலக்ஷணா ரிக், யஜுர் மற்றும் ஸாமவேதங்கள்

ஸ்ரீர்யேஶாம் அவரது ஸ்ரீ, அதாவது செல்வங்களாகும்

தேஶாம் அவர்களை (விட)

ஸர்வேஶாம் அனைவரின்

ஸ்ரீமதாம் ஸ்ரீமான்களாகிய

விரிஞ்ச்யாதீனம் ப்ரஹ்மா முதலான

ப்ரதானபூத: மேலானது

ஸ்ரீமதாம்வர: எனவே பகவான் ‘ஸ்ரீமதாம்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே பகவானின் செல்வங்களாகும். (இவ்வாறு வேதங்களை அறிந்த) ஸ்ரீமான்களாகிய ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் (அவர்களை விட) பகவானின் செல்வம் (வேத ஞானம்) மேலானது. எனவே அவர் ‘ஸ்ரீமதாம்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ரிச: ஸாமானி யஜூஶி | ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்’

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே ஸத்புருஷர்களின் (நல்லோரின்) அழியாத செல்வங்களாகும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———————

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 6-திருநாமங்கள்–307– -425- வரை –

January 20, 2023
  1. இஶ்டோSவிஶிஶ்ட: ஶிஶ்டேஶ்ட: ஶிகண்டீ நஹுஶோ வ்ருஶ:|

க்ரோதஹா க்ரோதக்ருத்கர்த்தா விஶ்வபாஹுர் மஹீதர: ||

இந்த முப்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. 308.இஶ்ட:, 309.அவிஶிஶ்ட:, 31௦. ஶிஶ்டேஶ்ட:, 311. ஶிகண்டீ, 312. நஹுஶ:, 313. வ்ருஶ:|
  2. 31க்ரோதஹா,315. க்ரோதக்ருத்கர்த்தா, 316. விஶ்வபாஹு:, 317. மஹீதர: ||

————

  1. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ:|

அபாம்நிதிரதிஶ்டானமப்ரமத்த: ப்ரதிஶ்டித: ||

இந்த முப்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அச்யுத:, 319. ப்ரதித:, 320. ப்ராண:, 321. ப்ராணத:, 322. வாஸவானுஜ: |
  2. அபாம்நிதி:, 324. அதிஶ்டான:, 325. அப்ரமத்த:, 326. ப்ரதிஶ்டித: ||

————–

  1. ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |

வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: ||

இந்த முப்பத்து ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்கந்த:, 328. ஸ்கந்ததர:, 329. துர்ய:, 330. வரத:, 331. வாயுவாஹன: |
  2. வாஸுதேவ:, 333. ப்ருஹத்பானு:, 334. ஆதிதேவ:, 335. புரந்தர: ||

————

  1. அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர:|

அனுகூல: ஶதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||

இந்த முப்பத்து ஏழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஶோக:, 337. தாரண:, 338. தார:, 339. ஶூர:, 340. ஶௌரி:, 341. ஜனேஶ்வர: |
  2. அனுகூல:, 343. ஶதாவர்த்த:, 344. பத்மீ, 345. பத்மநிபேக்ஷண: ||

———–

  1. பத்மனாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: ஶரீரப்ருத்|

மஹர்த்திருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

இந்த முப்பத்து எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பத்மநாப:, 347. அரவிந்தாக்ஷ:, 348. பத்மகர்ப:, 349. ஶரீரப்ருத்|
  2. மஹர்த்தி:, 351. ருத்த:, 352. வ்ருத்தாத்மா, 353. மஹாக்ஷ:, 354. கருடத்வஜ:||

——-

  1. அதுல: ஶரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:|

ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ||

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அதுல:, 356. ஶரப:, 357. பீம: (அபீம:), 358. ஸமயஜ்ஞய:, 359. ஹவிர்ஹரி: |
  2. ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 361. லக்ஷ்மீவான், 362. ஸமிதிஞ்ஜய:||

—–

40-விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |

மஹீதரோ மஹாபாஹோ வேகவானமிதாஶன: ||

இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விக்ஷர:, 364. ரோஹித:, 365. மார்க்க:, 366. ஹேது:, 367. தாமோதர:, 368. ஸஹ: |
  2. மஹீதர:, 370. மஹாபாக:, 371. வேகவான், 372. அமிதாஶன: ||

——

  1. உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேஶ்வர: |

கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||

இந்த நாற்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்பவ:, 374. ஷோபண:, 375. தேவ:, 376. ஸ்ரீகர்ப்ப:, 377. பரமேஶ்வர: |
  2. கரணம், 379. காரணம், 380. கர்த்தா, 381. விகர்த்தா, 382. கஹன:, 383. குஹா: ||

————-

  1. வ்யவஸாயோ வயவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ:|

பரர்த்தி: பரமஸ்பஶ்டஸ்துஶ்ட: புஶ்ட: ஸுபேக்ஷண: ||

இந்த நாற்பத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்யவஸாய:, 385. வ்யவஸ்தான:, 386. ஸம்ஸ்தான:, 387. ஸ்தானத:, 388. த்ருவ:|
  2. பரர்த்தி:, 390. பரமேஸ்பஶ்ட:, 391. துஶ்ட:, 392. புஶ்ட:, 393. ஸுபேக்ஷண: ||

—————

  1. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய:|

வீர: ஶக்திமதாம் ஶ்ரேஶ்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||

இந்த நாற்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ராம:, 395. விராம:, 396. விரத:, 397. மார்க:, 398. நேய:, 399. நய:, 400. அனய:|
  2.             வீர:, 402. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 403. தர்ம:, 404. தர்மவிதுத்தம: ||

————-

  1. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:|

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

——-

  1. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ:|

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |
  2. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

—-

  1. இஶ்டோSவிஶிஶ்ட: ஶிஶ்டேஶ்ட: ஶிகண்டீ நஹுஶோ வ்ருஶ:|

க்ரோதஹா க்ரோதக்ருத்கர்த்தா விஶ்வபாஹுர் மஹீதர: ||

இந்த முப்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. 308.இஶ்ட:, 309.அவிஶிஶ்ட:, 31௦. ஶிஶ்டேஶ்ட:, 311. ஶிகண்டீ, 312. நஹுஶ:, 313. வ்ருஶ:|
  2. 31க்ரோதஹா,315. க்ரோதக்ருத்கர்த்தா, 316. விஶ்வபாஹு:, 317. மஹீதர: ||

————–

  1. ஓம் இஶ்டாய நம:

பரமானந்தாத்மகத்வேன ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால்

ப்ரிய அனைவராலும் விரும்பப்படுகிறார்

இஶ்ட: எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஞ்யேன வேள்விகளின் மூலம்

பூஜித இதி வா வழிபடப்படுகிறார்

இஶ்ட: எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்விகளுக்கு ‘இஶ்ட:’ என்று பெயர். அனைத்து வேள்விகளாலும் பகவான் ஒருவரே வழிபடப்படுகிறார். எனவே, அவர் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் அவிஶிஶ்டாய நம:

ஸர்வேஶாமந்தர்யாமித்வேன அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

அவிஶிஶ்ட: பகவான் ‘அவிஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘அவிஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் ஶிஶ்டேஶ்டாய நம:

ஶிஶ்டானாம் விதுஶாம் ‘ஶிஶ்டர்கள்’ அதாவது கற்றரிந்தோரால்

இஶ்ட: விரும்பப்படுகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றரிந்தோரால் (ஶிஶ்டர்களால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶ்டா கற்றறிந்தோரை (ஞானிகளை)

இஶ்டா அஸ்யேதி வா விரும்புகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றறிந்த ஞானிகளை பகவான் மிகவும் விரும்புகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரியோ ஹி ஞானினோSத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.17)

பகவானும் கீதையில் கூறுகிறார்: ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியவன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஶிஶ்டை: அடியவர்களால் (ஶிஶ்டர்களால்)

இஶ்ட: பூஜித இதி வா (இஶ்டி என்றால் வழிபாடு) வழிபடப்படுகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களால் (ஶிஶ்ட:) வழிபடப்படுகிறார் (இஶ்ட:). எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஶிகண்டினே நம:

ஶிகண்ட: கலாபோSலங்காரோSஸ்யேதி மயில் தோகையால் (தனது திருமுடியை) அலங்கரித்துக் கொண்டவராதலால்

ஶிகண்டீ: பகவான் ‘ஶிகண்டீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

யதோ கோபவேஶதர: ஏனெனில், (கண்ணனாக அவதரித்த பொழுது) அவர் இடையனின் வேடம் பூண்டிருந்தார்.

பகவான் கண்ணனாக அவதரித்த பொழுது, இடையனின் வேடம் பூண்டிருந்தார். அப்பொழுது தனது திருமுடியில் மயில் தோகை அணிந்து அலங்கரித்துக் கொண்டார். எனவே, அவர் ‘ஶிகண்டீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிகண்ட என்றால் மயில் தோகை. அதை அணிந்துள்ளவர் ஶிகண்டீ.

—————–

  1. ஓம்நஹுஶாயநம:

நஹ்யதி கட்டிவைக்கிறார்

பூதானி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்)

மாயயாSதோ மாயையினால்

நஹுஶ: பகவான் ‘நஹுஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) மாயையினால் கட்டிவைத்துள்ளார். எனவே, அவர் ‘நஹுஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நஹ பந்தனே ‘நஹ’ என்ற வேர்ச்சொல் ‘கட்டுதல்’ அல்லது ‘கட்டி வைத்தல்’ என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

————–

  1. ஓம்வ்ருஶாயநம:

காமானாம் (நியாயமான) ஆசைகளை

வர்ஶணாத் மழைபோல பொழிவிப்பதால்

வ்ருஶ: தர்ம: அறத்திற்கு ‘வ்ருஶ:’ என்று பெயர். அறமே வடிவினராய் இருப்பதால் பகவான் ‘வ்ருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் நியாயமான ஆசைகளையும் மழைபோல பொழிவிப்பதால் (நிறைவேற்றுவதால்) அறத்தை ‘வ்ருஶ:’ என்று அழைக்கிறோம். பகவானே அறம். அறமே பகவான். எனவே, அவர் ‘வ்ருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶோ ஹி பகவான்தர்ம: ஸ்ம்ருதோ லோகேஶு பாரத |

நைகுண்டகபதாயானைர்வித்தி மாம் வ்ருஶமுத்தமம் || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.88)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ பரதகுலத்தோனே!!! அனைவருக்கும் நன்மை தரக்கூடிய புனிதமான தர்மத்தை ‘வ்ருஶ’ என்று அழைப்பார்கள். எனவே, வேதத்தின் ‘நிகண்டுகளில்’ (அந்த அறமே உருவான) என்னை உத்தமமான ‘வ்ருஶ’ என்று .அழைக்கின்றனர்.

நிகண்டு = அகராதி

 ————

  1. ஓம்க்ரோதக்னேநம:

ஸாதூனாம் தனது அடியவர்களின்

க்ரோதம் சினத்தை

ஹந்தீதி அழிப்பதால்

க்ரோதஹா பகவான் ‘க்ரோதஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் சினத்தை அழிப்பதால் பகவான் ‘க்ரோதஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதன் விஷயங்களைக் (புலனின்பங்களைக்) கருதும்பொழுது அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தினால் சினம். (ஸ்ரீமத் பகவத்கீதை 2.62).

பகவான் சினத்தை அழிக்கிறார் என்றால், அதன் வித்தான பற்றுதலையும் சேர்த்தே அழிக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

———————-

  1. ஓம்க்ரோதக்ருத்கர்த்ரேநம:

அஸாதுஶு அறமற்ற தீயோரின்

க்ரோதம் சினத்தை

கரோதீதி தூண்டிவிடுகிறார் (வளர்க்கிறார்)

க்ரோதக்ருத் எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை பின்பற்றாத தீயோரின் சினத்தைத் (அவர்கள் மென்மேலும் தவறிழைத்து துன்பப்படும்படி) தூண்டி வளர்க்கிறார். எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி கர்ம செயப்படுவது ‘செயல்’ என்று அழைக்கப்படுகிறது

ஜகத்தஸ்ய (அவ்வாறு செயப்பட்டதான) இந்த உலகத்தின்

கர்த்தா காரணமானதால் (அதை உருவாக்கியவராதலால்) பகவான் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்யப்படுவது ‘செயல்’ என்றும் அதை செய்பவர் ‘கர்த்தா’ என்றும் அழைப்பர். இந்த உலகத்தை உருவாக்கியதால் பகவான் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யோ வை பாலாக ஏதைஶா புருஶாணா கர்த்தா யஸ்ய வை தத்கர்ம ஸ வேதிதவ்ய (உபநிஶத் வாக்கியம்)

வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: ஓ பாலகனே!!! யார் இந்த புருஷர்களை (அனைத்து உயிரினங்களையும்) உருவாக்குகிறாரோ, யாரால் இங்கு அனைத்து செயல்களும் செய்யப்படுகிறதோ அவரை (அந்த பரப்ரஹ்மத்தை) அறிந்து கொள்ள வேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

க்ரோதக்ருதாம் மிகுந்த சினத்தோடு (தன்னை எதிர்க்கும்)

தைத்யாதீனாம் அசுரர் முதலானோரை

கர்த்தா சேதக வெட்டி அழிக்கிறார்

க்ரோதக்ருத்கர்த்தா எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

இத்யேகம் வா நாம இது (க்ரோதக்ருத்கர்த்தா) ஒரே திருநாமமாகும்.

மிகுந்த சினத்தோடு தன்னை எதிர்க்கும் அசுரர் முதலானோரை வெட்டி அழிக்கிறார். எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு கர்த்தா என்னும் சொல் வெட்டுதல் என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் இரண்டு திருநாமங்களாக பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும் ஆதிசங்கரர் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்று ஒரே திருநாமமாகத்தான் கணக்கிட்டுள்ளார்.

—————

  1. ஓம்விஶ்வபாஹவேநம:

விஶ்வேஶாமாலம்பனத்வேன இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக விளங்குவதால்

விஶ்வபாஹு: பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக (கீழே விழுவோரைத் தாங்கும் கைகளைப் போல) தாங்குகிறார். எனவே, அவர் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வே இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும்

பாஹவோSஸ்யேதி அவருக்கு கரங்களாய் இருப்பதால்

விஶ்வபாஹு: பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும் அவரது (அவரிட்ட கடமைகளை நிறைவேற்றும்) கரங்களாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வதோ இந்த ப்ரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும்

பாஹவோSஸ்யேதி வா அவரது கரங்கள் உள்ளன

விஶ்வபாஹு: எனவே, பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும் பகவானின் கரங்கள் உள்ளன. எனவே, அவர் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வதோபாஹு:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.3)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து கரங்களின் உரிமையாளராவார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

——————

  1. ஓம்மஹீதராயநம:

மஹீம் பூஜாம் தரணீம் வா ‘மஹீ’ என்றால் பூஜை அல்லது பூமி என்று பொருள்

தரதீதி இந்த இரண்டையும் தாங்குகிறார் (நமது பூஜைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் தாங்குகிறார்; பூமியை அதன் ஆதாரமாய் இருந்து தாங்குகிறார்)

மஹீதர: எனவே பகவான் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘மஹீ’ என்றழைக்கப்படும் பூஜைகளையும் (அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலமும்), பூமியையும் (அதன் ஆதாரமாய் இருப்பதன் மூலமும்) தாங்குகிறார். எனவே அவர் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ:|

அபாம்நிதிரதிஶ்டானமப்ரமத்த: ப்ரதிஶ்டித: ||

இந்த முப்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அச்யுத:, 319. ப்ரதித:, 320. ப்ராண:, 321. ப்ராணத:, 322. வாஸவானுஜ: |
  2. அபாம்நிதி:, 324. அதிஶ்டான:, 325. அப்ரமத்த:, 326. ப்ரதிஶ்டித: ||

———

  1. ஓம்அச்யுதாயநம:

ஶட்பாவவிகாரரஹிதத்வாத் பகவான் ஆறு வகையான மாறுதல்களற்றவர்

அச்யுத: எனவே, அவர் ‘அச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறுவகையான மாறுதல்களற்றவர் (அஸ்தி – உண்டாதல், ஜாயதே – பிறத்தல், வர்த்ததே – வளர்தல், பரிணமதே – வளர்தலின் முடிவை அடைதல், அபக்ஷீயதே – தேய்தல், நஶ்யதி – அழிதல்). எனவே அவர் ‘அச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முன்பு 100-வது திருநாமத்தில் (அச்யுத:) ஆசார்யாள் “பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை” என்று உரை அளித்திருந்தார்.

————

  1. ஓம்ப்ரதிதாயநம:

ஜகதுத்பத்யாதிகர்மபி: இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் முதலிய செயல்களால்

ப்ரக்யாத: புகழ்பெற்று விளங்குபவர்

ப்ரதித: எனவே, அவர் ‘ப்ரதித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் (காத்தல் மற்றும் அழித்தல்) முதலிய செயல்களால் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார். எனவே, அவர் ‘ப்ரதித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ப்ராணாயநம:

ஸூத்ராத்மனா இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக (மாலைகளில் மணியைக் கோர்க்கும் ஸூத்ரம் போல)

ப்ரஜா: உயிரினங்களுக்கு

ப்ராணயதீதி உயிரை (ப்ராணனை) அளிப்பதால்

ப்ராண: பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக, அனைத்து ஜீவராசிகளுக்கும் (உயிரினங்களுக்கும்) உயிர் அளிப்பவராக உள்ளார். எனவே, அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ராணோ வா அஹமஸ்மி’

நானே ப்ராணனாக இருக்கிறேன்.

இதி பஹ்வ்ருசா | இது பஹ்வ்ருச ஶ்ருதியின் கூற்றாகும்.

முன்பு, 66-வது திருநாமத்தில் ஆச்சார்யாள் “பகவான் அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்கிறார்” என்று விளக்கமளித்திருந்தார்.

————

  1. ஓம்ப்ராணதாயநம:

ஸுராணாமஸுராணாம்  தேவர்கள் (ஸுரர்கள்) மற்றும் அசுரர்களின்

ப்ராணம் பலம் ‘ப்ராணன்’ அதாவது பலத்தை

ததாதி தருகிறார் (தேவர்களுக்கு)

த்யதி வேதி குறைக்கிறார் (அசுரர்களுக்கு)

ப்ராணத: எனவே, பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களுக்கு ப்ராணனை (பலத்தை) அளிக்கிறார், அசுரர்களுக்கு ப்ராணனை (பலத்தை) கெடுக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 65-வது திருநாமத்தில் ஆசார்யாள் “அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று விளக்கியிருந்தார்.

த: என்ற சொல்லிற்கு ததாதி – தருதல், த்யதி – வெட்டுதல் முதலிய பல பொருட்கள் உள்ளன. இங்கு ஆசார்யாள் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றிணைத்து இங்கு உரை அளித்துள்ளார். தேவர்களுக்கு பலத்தை அளிக்கும் அவரே, அசுரர்களின் பலத்தை குறைக்கிறார். பாற்கடலைக் கடையும் பொழுது அசுரர்களை வாசுகியின் தலைப்பாகத்தை இழுக்கச் செய்து அவர்களின் பலத்தை குறைத்தார். தேவர்களின் பக்கலில் மழையைப் பொழியச்செய்து அவர்களின் சோர்வை நீக்கி பலத்தைப் பெருகச்செய்தார்.

————-

  1. ஓம்வாஸவானுஜாயநம:

அதித்யாம் கஶ்யபாத் அதிதிக்கும் காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக

வாஸவஸ்யானுஜோ வாஸவனான இந்திரனின் தம்பியாக (வாமனனாக)

ஜாத இதி பிறந்தததனால்

வாஸவானுஜ: பகவான் ‘வாஸவானுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அதிதிக்கும், காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக இந்திரனின் தம்பியாக (வாமனனாக) அவதரித்தார். எனவே, அவர் ‘வாஸவானுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம்அபாம்நிதயேநம:

ஆபோ தண்ணீரானது

யத்ர எங்கு

நிதீயந்தே ஸ: நிறைந்திருக்குமோ

அபாம்நிதி: அந்த சமுத்திரத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘அபாம்நிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தண்ணீரால் நிறைந்திருப்பதால் கடலானது ‘அபாம்நிதி:’ என்று அழைக்கப்படுகிறது. அந்த கடலும் பரப்ரஹ்மத்தின் ஒரு வடிவேயாகும். எனவே, பகவான் ‘அபாம்நிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸரஸாமஸ்மி ஸாகர:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 10.24)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: நீர்நிலைகளில் நான் கடல்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

—————-

  1. ஓம்அதிஶ்டானாயநம:

அதிதிஶ்டந்தி நிலைபெற்றிருக்கின்றன

பூதானி அனைத்து உயிரினங்களும்

உபாதான காரணத்வேன மூலப்பொருளாய் இருப்பதால்

ப்ரஹ்மேதி பரப்ரஹ்மமான பகவானிடத்தில்

அதிஶ்டானம் எனவே, பகவான் ‘அதிஶ்டானம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மூலப்பொருளாய் இருப்பதால், அனைத்துமே பகவானிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. எனவே அவர் ‘அதிஶ்டானம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மத்ஸ்தானி ஸர்வபூதானி’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.4)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைப்பெற்றன

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

அதிஶ்டானம் என்றால் ஆதாரம் அல்லது வசிக்கும் இடம் என்று பொருள். பகவானிடமிருந்தே நாம் அனைவரும் தோன்றுகிறோம். அவரே நமது மூலப்பொருளாவார். எனவே, அவர் அனைத்திற்கும் அதிஶ்டானமாய் இருக்கிறார்.

—————

  1. ஓம்அப்ரமத்தாயநம:

அதிகாரிப்ய: அந்தந்த அதிகாரிகளை (செயல் புரிபவர்களை)

கர்மானுரூபம் அவரவரது வினைகளுக்கேற்ப

ஃபலம் ப்ரயச்சன் உரிய பலன்களை வழங்குகிறார்

ந ப்ரமாத்யதீதி அதனின்று (உரிய பலன்களை வழங்குவதிலிருந்து) ஒரு பொழுதும் தவறுவதில்லை

அப்ரமத்த: எனவே பகவான் ‘அப்ரமத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொரு அதிகாரிக்கும் (செயல் புரிபவருக்கும்) அவரவரது வினைகளுக்கேற்ப உரிய பலன்களை வழங்குவதிலிருந்து ஒரு பொழுதும் தவறுவதில்லை. எனவே, அவர் ‘அப்ரமத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அப்ரமத்த என்றால் கவனத்துடன் இருப்பவர் (அல்லது கவனக்குறை ஏதுமில்லாதவர்) என்று பொருள். பகவான் வினைகளுக்கேற்ப பலன்களை வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்று பொருள்.

—————-

  1. ஓம்ப்ரதிஶ்டிதாயநம:

ஸ்வே தன்னுடைய

மஹிம்னி மகிமையிலேயே

ஸ்தித: நிலைபெற்றுள்ளார் (தன்னுடைய மகிமையினாலேயே புகழ் பெற்றுள்ளார்)

ப்ரதிஶ்டித: எனவே அவர் ‘ப்ரதிஶ்டித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய மஹிமையிலேயே நிலைபெற்றுள்ளார் (அனைத்திற்கும் ஆதாரமான அவருக்கு வேறு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் தேவையில்லை. தானே தனக்கு ஆதாரமாய் இருக்கிறார்). எனவே, அவர் ‘ப்ரதிஶ்டித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ பகவ: கஸ்மின் ப்ரதிஶ்டித: இதி ஸ்வே மஹிம்னி’ (சாந்தோக்ய உபநிஶத் 7.28.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) எதில் நிலைபெற்றுள்ளார். தன்னுடைய புகழில் (மஹிமையில்)

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

  1. ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |

வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: ||

இந்த முப்பத்து ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்கந்த:, 328. ஸ்கந்ததர:, 329. துர்ய:, 330. வரத:, 331. வாயுவாஹன: |
  2. வாஸுதேவ:, 333. ப்ருஹத்பானு:, 334. ஆதிதேவ:, 335. புரந்தர: ||

————

  1. ஓம்ஸ்கந்தாயநம:

ஸ்கந்ததி ‘ஸ்கந்தனம்’ செய்கிறார்

அம்ருதரூபேண கச்சதி அமுதமாக பொங்கி பிரவகிக்கிறார்

வாயுரூபேண ஶோஶயதீதி காற்றின் வடிவில் உலர்த்துகிறார்

வா ஸ்கந்த: எனவே, பகவான் ‘ஸ்கந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமுதமாய் பொங்கி பிரவகிக்கிறார். காற்றின் வடிவில் உலர்த்துகிறார். எனவே, பகவான் ‘ஸ்கந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்கந்த என்ற சொல்லிற்கு ப்ரவாஹம் மற்றும் உலர்த்துதல் ஆகிய பொருள்கள் உண்டு.

————

  1. ஓம்ஸ்கந்ததராயநம:

ஸ்கந்தம் தர்மபதம் ‘ஸ்கந்தம்’ என்றால் அறவழி என்று பொருள்

தாரயதீதி (அந்த அறவழியை) ஏற்கிறார், தாங்குகிறார்

ஸ்கந்ததர: எனவே பகவான் ‘ஸ்கந்ததர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்கந்தம்’ எனும் அறவழியைத் தாங்குகிறார் (அறவழியையே ஏற்கிறார்). எனவே, பகவான் ‘ஸ்கந்ததர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்துர்யாயநம:

துரம் வஹதி பாரத்தை சுமக்கிறார்

ஸமஸ்தபூதஜன்மாதி லக்ஷணாமிதி அனைத்து உயிரினங்களின்  பிறப்பிறப்பென்னும்

துர்ய: எனவே, பகவான் ‘துர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (அனைத்து உயிரினங்களின் உள்ளுறை ஆன்மாவாக இருந்து) அனைத்து உயிரினங்களின் பிறப்பிறப்பென்னும் பாரத்தை சுமக்கிறார். எனவே, அவர் ‘துர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்வரதாயநம:

அபிமதான் விரும்பிய

வரான் வரங்களை

ததாதீதி வாரி வழங்குவதால்

வரத: பகவான் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை வாரி வழங்குகிறார். எனவே, அவர் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வரம் காம் வரம் என்றால் பசுக்கள்

தக்ஷிணாம் ததாதீதி அவற்றை தானமாக அளிக்கிறார்

யஜமானரூபேணேதி வா வேள்விகள் மற்றும் நற்காரியங்களில் தலைவராய் (யஜமானராய்)

வரத: எனவே, பகவான் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேள்விகள் மற்றும் நற்காரியங்களின் தலைவராய் இருந்து பசுக்களை (வரங்களை) தானம் அளிக்கிறார். எனவே, அவர் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கௌர்வை வர:’ வர என்றால் பசுக்கள்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம்வாயுவாஹனாயநம:

மருத: ஸப்த ஏழு வகையான காற்றுகளை

ஆவஹாதீன் ‘ஆவஹ’ முதலிய

வாஹயதீதி செலுத்துவதனால் (அல்லது அந்த காற்றுகளில் பயணிக்கிறார்)

வாயுவாஹன: எனவே, பகவான் ‘வாயுவாஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆவஹ முதலிய ஏழு வகையான காற்றுகளை செலுத்துகிறார் (அல்லது அந்த ஏழு காற்றுகளின் மூலம் பயணிக்கிறார்). எனவே, அவர் ‘வாயுவாஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏழு வகையான காற்றுகள் – பூமிக்கும், மேகங்களுக்கும் இடையில் உள்ள காற்று ஆவஹ, மேகங்களுக்கு, சூரியனுக்கும் இடையில் உள்ளது ப்ரவஹ, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அனுவஹ, சந்திரனுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் இடையில் ஸம்வஹ, நக்ஷத்திரங்களுக்கும் மற்ற கிரஹங்களுக்கும் இடையில் விவஹ, கிரஹங்களுக்கும் ஸப்தரிஶி மண்டலத்திற்கும் இடையில் பராவஹ மற்றும் ஸப்தரிஶி மண்டலம் மற்றும் த்ருவ நக்ஷத்திரத்திற்கு இடையில் உள்ளது பரிவஹ எனப்படும்.

————–

  1. ஓம்வாஸுதேவாயநம:

வஸதி வசிக்கிறார்

வாஸயதி ஆச்சாதயதி மறைத்து  வைக்கிறார்

ஸர்வமிதி வா அனைத்து உயிரினங்களுக்குள்ளும்

வாஸு: இவை ‘வாஸு:’ என்ற சொல்லிற்குப் பொருளாகும்.

தீவ்யதி ‘திவ்’ எனும் வேர்ச்சொல்லிற்கு க்ரீடயதி விளையாடுதல்,

விஜிகீஶதே வெற்றிகொள்ளுதல்,

வ்யவஹரதி இந்தப் ப்ரபஞ்சத்தின் அனைத்து காரியங்களையும் நடத்துதல்,

த்யௌததே ஒளிவீசுதல்,

ஸ்தூயதே துதிக்கப்பெறுதல்,

கச்சதீதி எங்கும் செல்வது என்று பொருள்.

வாஸுச்சாஸௌ ‘வாஸு’ வாகவும்

தேவஸ்சேதி ‘தேவனாகவும்’ இருப்பதனால்

வாஸுதேவ: பகவான் ‘வாஸுதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாஸு’ என்ற சொல்லிற்கு அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உறைதல் (வசித்தல்) மற்றும் அனைத்தையும் (தன் மாயையினால்) மறைத்து வைத்தல் என்று பொருள். ‘தேவன்’ என்றால் விளையாடுதல், வெற்றிபெறுதல், அனைத்து காரியங்களையும் நடத்துதல், ஒளிவீசுதல், துதிக்கப்பெறுதல் மற்றும் எங்கும் செல்லுதல் என்று பொருள். பகவான் ‘வாஸு’ வாகவும் தேவனாகவும் (இந்த இரண்டாலும் குறிக்கப்படும் அனைத்துப் பண்புகளையும் உடையவராக) இருப்பதால் ‘வாஸுதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சாதயாமி ஜகத் ஸர்வம் பூத்வா ஸூர்ய இவாம்ஶுபி: |

ஸர்வபூதாதிவாசஸ்ச்ச வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 341.41)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனின் வடிவில் எனது கிரணங்களால் இந்த உலகனைத்தையும் மூடுகிறேன் மற்றும் அனைத்து உயிரினங்களும் உறையும் இடமாக இருக்கிறேன். எனவே, நான் ‘வாஸுதேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறேன்.

வாஸனாத் ஸர்வபூதானாம் வஸுத்வாத் தேவயோனித: |

வாஸுதேவஸ்ததோ வேத்ய:… || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.3)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: தனது மாயத்திரையினால் அனைத்து உயிரினங்களையும் மறைப்பதனாலும், தனது மகிமைமிக்க ப்ரகாசத்தினாலும் (ஒளியினாலும்), தேவர்களின் பிறப்பிடமாக இருப்பதனாலும் (அவர்களை தோற்றுவிப்பதாலும்) பகவான் ‘வாஸுதேவன்’ என்று அறியப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வஸத்யத்ரேதி வை யத: |

தத: ஸ வாஸுதேவேதி வித்வித்பி: பரிபட்யதே || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.12)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரமாத்மா அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்துப் பொருட்களிலும் வசிக்கிறார் (உறைகிறார்). எனவே, கற்றறிந்தோர் அவரை வாஸுதேவன் என்று அழைக்கின்றனர்.

ஸர்வாணி தத்ர பூதானி வஸந்தி பரமாத்மனி |

பூதேஶு ச ஸ ஸர்வாத்மா வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.80)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உயிரினங்களும் அந்த பரம்பொருளுக்குள் வசிக்கின்றன. அந்த பரமாத்மாவும் அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கிறார். எனவே, அவர் வாஸுதேவன் என்று அழைக்கப்படுகிறார்.

இதி ச விஶ்ணு புராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

————

  1. ஓம்ப்ருஹத்பானவேநம:

ப்ருஹந்தோ பானவோ யஸ்ய சந்த்ரஸூர்யாதிகாமின: |

தைர்விஶ்வம் பாஸயதி ய: ஸ ப்ருஹத்பானுருச்யதே ||

எவருக்கு கதிரவன் மற்றும் திங்களுக்குள் செல்லக்கூடியதான மிகச்சிறந்த (மிகத் தீவிரமான) கிரணங்கள் உள்ளனவோ (எவர் அந்த கதிரவனுக்கும், திங்களுக்கும் கூட ஒளி வழங்குகிறாரோ), எவர் அந்த கிரணங்களால் அனைத்துப் ப்ரபஞ்சத்திற்கும் ஒளி வழங்குகிறாரோ அந்த பரமாத்மா ‘ப்ருஹத்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஆதிதேவாயநம:

ஆதி: காரணம் அனைத்திற்கும் ‘ஆதியாக’ அதாவது அனைத்திற்கும் காரணமாக இருப்பதனாலும்

ச சாஸௌ மற்றும்

தேவஸ்ச்சேதி தேவனாக இருப்பதனாலும்

ஆதிதேவ: பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

த்யௌதனாதி குணவான் தேவ: (முன்பு வாஸுதேவ: என்ற திருநாமத்தில் கூறப்பட்ட) ஒளிமிக்கவர் போன்ற குணங்களால் நிறைந்தவர் ‘தேவனாவார்’..

அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பதனாலும் (ஆதி) தேவனாக இருப்பதாலும் பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு தேவன் என்ற சொல்லிற்கு முன்திருநாமமான வாஸுதேவ: என்பதில் கூறப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

————-

  1. ஓம்புரந்தராயநம:

ஸுரஶத்ரூணாம் தேவர்களின் எதிரிகளின் (அதாவது அஸுரர்களின்)

புராணாம் இருப்பிடங்களை (நகரங்களை)

தாரணாத் அழிப்பதனால்

புரந்தர: பகவான் ‘புரந்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களின் எதிரிகளான அஸுரர்களின் நகரங்களை (இருப்பிடங்களை) அழிக்கிறார். எனவே, அவர் ‘புரந்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாசம்யம புரந்தரௌ ச’ (பாணினி ஸூத்ரம் 6.3.69)

இதி பாணினினா நிபாதநாத் | இந்த பாணினியின் ஸூத்திரத்தின் படி ‘தார’ என்ற விகுதி ‘தர’ என்று குறுகியுள்ளது.

————-

  1. அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர:|

அனுகூல: ஶதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||

இந்த முப்பத்து ஏழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஶோக:, 337. தாரண:, 338. தார:, 339. ஶூர:, 340. ஶௌரி:, 341. ஜனேஶ்வர: |
  2. அனுகூல:, 343. ஶதாவர்த்த:, 344. பத்மீ, 345. பத்மநிபேக்ஷண: ||

————

  1. ஓம்அஶோகாயநம:

ஶோகாதிஶட்பிர்வர்ஜித: சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர் ஆதலால்

அஶோக: பகவான் ‘அஶோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர். எனவே அவர் ‘அஶோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்தாரணாயநம:

ஸம்ஸாரஸாகராத் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று

தாரயதீதி (நம்மைத்) தாண்டுவிப்பதால்

தாரண: பகவான் ‘தாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம்மை இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று தாண்டுவிக்கிறார். எனவே, அவர் ‘தாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் தாண்டுவித்தல் என்ற பொருளில் வருகிறது.

———-

  1. ஓம்தாராயநம:

கர்ப (ஒரு தாயின் கர்ப்பத்தில்) உருவாதல்

ஜன்ம பிறத்தல்

ஜரா மூப்பு

ம்ருத்யு இறத்தல்

லக்ஷணாத் பயாத் (இவற்றால் நமக்கு ஏற்படும்) அச்சங்களைப்

தாரயதீதி போக்குகிறார்

தார: எனவே பகவான் ‘தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது கர்ப்பவாசம், பிறத்தல், மூப்படைதல் மற்றும் இறப்பு ஆகிய (அதாவது பிறப்பு இறப்பென்னும் இந்தப் பிறவி சுழற்சிகளால் உருவாகும்) அச்சங்களைப் போக்குகிறார். எனவே, அவர் ‘தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் காத்தல் என்ற பொருளில் வருகிறது.

—————-

  1. ஓம்ஶூராயநம:

விக்ரமணாத் மிகுந்த வீரமும், துணிவும் உடையவராதலால்

ஶூர: பகவான் ‘ஶூர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகுந்த வீரமும், துணிவும் உடையவர். எனவே, அவர் ‘ஶுர: ‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஶௌரயேநம:

ஶூரஸ்யாபத்யம் ஸூரரின் மகனான

வஸுதேவஸ்ய வஸுதேவரின்

ஸுத: மகனாகப் பிறந்ததால்

ஶௌரி: பகவான் ‘ஶௌரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஸூரரின் மகனான வஸுதேவருக்கு மகனாக (ஸூர வம்ஸத்தில்) பிறந்ததால் ‘ஶௌரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுதேவரின் தந்தையின் பெயர் ‘ஸூரர்’. அவரது பேரனாதலால் பகவான் ‘ஶௌரி:’ என்று அழைக்கபடுகிறார்.

————

  1. ஓம்ஜனேஶ்வராயநம:

ஜனானாம் ஜந்தூனாம் ‘ஜனங்கள்’ அதாவது அனைத்து உயிரினங்கள்

ஈஶ்வரோ அவை அனைத்தையும் ஆட்சி செய்பவராக இருப்பதால்

ஜனேஶ்வர: பகவான் ‘ஜனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

அனைத்து உயிரினங்களையும் ஆளும் ஈஶ்வரராய் இருப்பதால் பகவான் ‘ஜனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்அனுகூலாயநம:

ஆத்மாவேன ஹி உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார்

ஸர்வேஶாம் அனைவரின்

அனுகூல: எனவே, பகவான் ‘அனுகூல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்,

ந ஹி ஸ்வஸ்மின் ப்ராதிகூல்யம் தனக்குக் கெடுதலை விளைவிக்கும் செயல்களை

ஸ்வயமாசரதி தானே எவரும் புரிவதில்லை.

பகவான் அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார். எவரும் தனக்கு தானே கெடுதல் தரும் செயல்களைப் புரிவதில்லை. எனவே, பகவானும் நமக்கு உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் நமக்கு நன்மைகளையே செய்கிறார் (கெடுதல்களை அல்ல). எனவே, அவர் ‘அனுகூல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஶதாவர்த்தாயநம:

தர்மத்ராணாய அறத்தைக் காக்கும் பொருட்டு (அல்லது அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு)

ஶதம் நூற்றுக்கணக்கான

ஆவர்த்தனானி ப்ராதுர்பாவா அஸ்யேதி ‘ஆவர்த்தனங்கள்’ அதாவது அவதாரங்களை எடுக்கிறார்

ஶதாவர்த்த: எனவே பகவான் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தைக் காத்து, நிலைநிறுத்தும் பொருட்டு நூற்றுக்கணக்கான அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. இங்கு ஆவர்த்தனம் என்ற சொல் ‘அவதாரம்’ என்ற பொருளில் விவரிக்கப்பட்டுள்ளது
  2. ஆதிசங்கர பகவத்பாதாள் பகவானுக்கு தசாவதாரம் என்றில்லை; நூற்றுக்கணக்கான அவதாரங்கள் உள்ளன என்று சூசகமாகத் தெரிவிக்கிறார்.
  3. நாமெல்லாம் நன்கறிந்த ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்லோகம் இது: “பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஶ்க்ருதாம்தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

நாடிஶதே நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில்

ப்ராணரூபேண ப்ராணவாயுவின் வடிவில்

வர்தத இதி வா வசிக்கிறார்

ஶதாவர்த்த: எனவே, பகவான் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில் ப்ராணவாயுவின் வடிவில் வசிக்கிறார். எனவே, அவர் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது உடலில் 72000 நாடிகள் இருப்பதாக கூறுகின்றனர். மரண காலத்தில் நமது ஆத்மா இவற்றுள் எந்த நாடியின் வழியாகவும் வெளியேறலாம். ஆனால், முக்தி அடைவோரின் ஆத்மா ஸுஶும்னா எனும் நாடியின் வழியே நமது உச்சந்தலையிலுள்ள ப்ரஹ்மரந்தரத்தின் வழியே புறப்பட்டு செல்லும்.

————

  1. ஓம்பத்மினேநம:

பத்மம் தாமரையை

ஹஸ்தே கைகளில்

வித்யத இதி ஏந்தியுள்ளார்

பத்மீ எனவே பகவான் ‘பத்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது கையில் தாமரையை ஏந்தியுள்ளார். எனவே அவர் ‘பத்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்பத்மநிபேக்ஷணாயநம:

பத்மநிபே தாமரையை ஒத்த

ஈக்ஷணே த்ருஶாவஸ்யேதி ‘ஈக்ஷணை’ அதாவது இரண்டு கண்களை உடையவராதலால்

பத்மநிபேக்ஷண: எனவே பகவான் ‘பத்மநிபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை (தாமரை இதழ்களை) ஒத்த இரு கண்களை உடையவராதலால் அவர் ‘பத்மநிபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. பத்மனாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: ஶரீரப்ருத்|

மஹர்த்திருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

இந்த முப்பத்து எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பத்மநாப:, 347. அரவிந்தாக்ஷ:, 348. பத்மகர்ப:, 349. ஶரீரப்ருத்|
  2. மஹர்த்தி:, 351. ருத்த:, 352. வ்ருத்தாத்மா, 353. மஹாக்ஷ:, 354. கருடத்வஜ:||

————–

  1. ஓம்பத்மநாபாயநம:

பத்மஸ்ய (இதயத்) தாமரையின்

நாபௌ மத்யே கர்ணிகாயாம் நாபிக்குள் அதாவது அதன் நடுவில் உள்ள கர்ணிகையில்

ஸ்தித இதி வீற்றிருக்கிறார்

பத்மநாப:  எனவே பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது இதயத்தாமரையின் நடுவில் அதன் கர்ணிகையில் வீற்றிருக்கிறார் (தியானத்தின் உயர் நிலையில் அங்கு நமக்கு அவர் காட்சி தருகிறார்). எனவே, அவர் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

48வது திருநாமத்தில் தனது நாபியில் ஜகத் காரணமான தாமரையை உடையவர் என்று ஆச்சார்யர் உரை அளித்திருந்தார்

196வது திருநாமத்தில் தாமரையைப் போன்ற அழகிய நாபியை (தொப்புட்குழியை) உடையவர் என்று உரை அளித்திருந்தார் .

இங்கு, இதயத்தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார் என்று பகவத்பாதாள் உரை அளித்துள்ளார்

———–

  1. ஓம்அரவிந்தாஷாயநம:

அரவிந்த தாமரையை

ஸத்ருஶே ஒத்த

அக்ஷிணீ அஸ்யேதி அழகிய இரு திருக்கண்களை உடையவர்

அரவிந்தாக்ஷ: எனவே பகவான் ‘அரவிந்தாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை ஒத்த அழகிய இரு திருக்கண்களை உடையவராதலால் அவர் ‘அரவிந்தாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பத்மநிபேக்ஷண:” என்ற 345-வது திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால்  புனர் யுக்தி தோஷம்  இல்லை.

————-

  1. ஓம்பத்மகர்பாயநம:

பத்மஸ்ய ஹ்ருதயாக்யஸ்ய உள்ளத் தாமரையின்

மத்யே நடுவில்

உபாஸ்யத்வாத் (ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால்) வணங்கப்படுகிறார்

பத்மகர்ப: எனவே பகவான் ‘பத்மகர்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால் தத்தம்) இதயத் தாமரையின் நடுவில் வழிபடப்படுகிறார். எனவே, பகவான் ‘பத்மகர்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைவரின் இதய கமலத்திலும் பகவான் வீற்றிருந்தாலும், த்யானத்தில் தேர்ச்சி பெற்றோரால் மட்டுமே அவரை காண இயலும்.

———–

  1. ஓம்ஶரீரப்ருதேநம:

போஶயன் ஊட்டமளித்து வளர்க்கிறார்

அன்னரூபேண அன்னத்தின் (உணவின்) வடிவிலும்

ப்ராணரூபேண வா மூச்சுக்காற்றின் (ப்ரணவாயுவின்) வடிவிலும்

ஶரீரிணாம் ஶரீராணி உடல்படைத்த ஆத்மாக்களின் (உயிரினங்களின்) உடல்களை

தாரயதீதி தாங்குகிறார்

ஶரீரப்ருத் எனவே பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உணவாகவும், ப்ரணவாயுவாகவும் அனைத்து உயிரினங்களின் உடல்களையும் ஊட்டமளித்து, வளர்த்துத் தாங்குகிறார். எனவே அவர் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வமாயையா தனது ஆச்சர்யமான மாயையினால்

ஶரீராணி பற்பல உடல்களை (சரீரங்களை)

பிபர்தீதி வா ஏற்றுக் கொள்கிறார் (தரிக்கிறார்)

ஶரீரப்ருத் எனவே பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, தனது மாயையினால் பற்பல சரீரங்களை (உடல்களை) ஏற்கிறார் (தரிக்கிறார்). எனவே, பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்மஹர்த்தயேநம:

மஹதீ மிகச்சிறந்த

ருத்திர் விபூதிர் அஸ்யேதி ‘ருத்தி’ அதாவது செல்வச் செழிப்பு உடையவர்

மஹர்த்தி: எனவே பகவான் ‘மஹர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் செல்வச் செழிப்பு அளவிடமுடியாதது, மிகச்சிறந்தது.  எனவே, அவர் ‘மஹர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ருத்தாயநம:

ப்ரபஞ்சரூபேண இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில்

வர்த்தமானத்வாத் இருப்பதனால்

ருத்த: பகவான் ‘ருத்த:’ என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில் இருப்பதனால் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்வ்ருத்தாத்மனேநம:

வ்ருத்த: புராதன ‘வ்ருத்த:’ அதாவது மிகப் பழமையான

ஆத்மா யஸ்யேதி ஆத்மாவாக இருப்பதால்

வ்ருத்தாத்மா பகவான் ‘வ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே ஆதியானவர். அனைவருக்கும் முன்பே இருக்கும் அவரே மிகப் பழமையான ஆத்மாவாவார். எனவே அவர் ‘வ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்மஹாக்ஷாயநம:

மஹதீ அக்ஷிணீ மிகச்சிறந்த திருக்கண்களை உடையவர்

மஹாந்த்யக்ஷீணி வா அஸ்யேதி  மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர்

மஹாக்ஷ: எனவே பகவான் ‘மஹாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்த, மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர். எனவே, அவர் ‘மஹாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்கருடத்வஜாயநம:

கருடாங்கோ கருடனின் உருவம் பொரித்த

த்வஜோ யஸ்யேதி கொடியை உடையவர் ஆதலால்

கருடத்வஜ: பகவான் ‘கருடத்வஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருடனின் உருவம் பொரித்த கொடியை கொண்டுள்ளார். எனவே, அவர் ‘கருடத்வஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருடக் கொடி என்பது (ஸ்ரீவத்ஸம், மார்பில் திருமகள் போன்றே) பகவான் நாராயணருக்கே உரித்த அடையாளமாகும். பழமையான சங்க இலக்கிய நூலான பரிபாடலில் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது (உதாரணமாக பாடல் எண். 1 – “சேவல் அம் கொடியோய்!”)

—————-

  1. அதுல: ஶரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:|

ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ||

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அதுல:, 356. ஶரப:, 357. பீம: (அபீம:), 358. ஸமயஜ்ஞய:, 359. ஹவிர்ஹரி: |
  2. ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 361. லக்ஷ்மீவான், 362. ஸமிதிஞ்ஜய:||

———

  1. ஓம்அதுலாயநம:

துலோபமானமஸ்ய  அவருக்கு ஈடிணையானவர் எவரும்

வித்யத இதி இல்லை

அதுல: எனவே, பகவான் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு ஈடிணையானவர் எவருமில்லை. எனவே அவர் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந தஸ்ய ப்ரதிமாஸ்தி யஸ்ய நாம மஹத்யஶ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

புகழ்பெற்ற திருநாமங்களை உடைய அந்த பரப்ரஹ்மத்திற்கு ஈடானவர் எவரும் இல்லை.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோSன்ய:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பார்த்தன் பகவானைப் பார்த்துக் கூறுகிறான்: உனக்கு நிகர் யாருமில்லை. எனில், உனக்கு மேல் வேறுயாவர்?

——————

  1. ஓம்ஶரபாயநம:

ஶரா: ஶரீராணி உடலை “ஶரா” என்று அழைக்கின்றனர்

ஶீர்யமாணத்வாத்தேஶு அழியக்கூடியதால்

ப்ரத்யகாத்மதயா (அனைவரையும் காக்க வேண்டும் என்ற) தன்னலத்தோடு

பாதீதி அதனுட்புகுந்து (அனைத்து உடல்களுக்குள்ளும் புகுந்து) உறைவதால்

ஶரப: பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களுமே அழியக்கூடியவை. எனவே அவற்றை ‘ஶர’ என்று அழைக்கின்றனர். அந்த ‘ஶரங்களுக்குள்’ புகுந்து ஆன்மாவாக உறைவதால் பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்பீமாயநம:

பிபேத்யஸ்மாத்ஸர்வமிதி அனைவரும் பகவானிடம் அச்சம் கொண்டுள்ளனர்

பீம: எனவே பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரும் பகவானிடம் (அவரது பராக்ரமம் மற்றும் மேன்மையினால்) அச்சம் கொண்டுள்ளனர். எனவே, பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பீமாதயோSபாதானே’ (பாணினி ஸூத்ரம் 3.4.74)

இதி பாணினிஸ்ம்ருதே: இந்த பாணினி ஸூத்ரத்தை நினைவில் கொள்ளவேண்டும் (பீம என்ற பெயர் காரணத்தை விளக்க)

ஸன்மார்கவர்த்தினாம் நன்னெறியில் நடப்போர்

அபீம: அவரிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்னெறியில் நடப்போருக்கு அவர் அச்சம் அளிப்பதில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு இருவகையாய் பொருளுரைத்திருந்தாலும், ‘பீம:’ என்பதே ஆன்றோரால் திருநாம வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

———-

  1. ஓம்ஸமயஜ்ஞாயநம:

ஸ்ருஶ்டிஸ்திதிஸம்ஹாரஸமயவித் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிவதற்கான சரியான சமயத்தை (நேரத்தை) அறிந்துள்ளார்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முத்தொழில்களான படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை புரிவதற்கான சரியான நேரத்தை அறிந்துள்ளபடியால் பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶட்ஸமயாஜ்ஜானாதீதி வா ஆறு காலங்களையும் (இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம் மற்றும் பின்பனிக்காலம்) சரிவர அறிந்துள்ளபடியால்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறு ருதுக்களை (ஆறு காலங்களை) சரிவர அறிந்துள்ள படியால் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆறு காலங்களை அறிதல் மட்டுமே பொருளன்று. ஆச்சார்யாள் நேரடியாய் குறிப்பிடாவிடினும் அந்த ஆறு காலங்களை தக்க நேரத்தில் வரும்படி செய்பவரும் பகவான்தான் என்ற உட்பொருளிலேயே இந்த விளக்கம் அளித்திருப்பார் என்று எண்ணுகிறேன்..

ஸர்வபூதேஶு அனைத்து உயிர்களிடத்தும்

ஸமத்வம் ஏற்றத்தாழ்வின்றி ஒரு நோக்கில் இருப்பது

யஜனம் பகவானின் வழிபாடு

ஸாத்வஸ்யேதி வா மிகச்சிறந்த

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடுகளில் மிகச்சிறந்தது எதுவெனில், அனைத்து உயிர்களிடத்தும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது ஒரு நோக்கில் அவை அனைத்தையும் சமமாக நடுத்துவதேயாகும். எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தையும் ‘ஸமமாக’ நடத்துவதே அவருக்கு செய்யப்படும் ‘யஜ்ஞம்’.

‘ஸமத்வமாராதனமச்யுதம்’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: சமத்துவமே (அனைத்து உயிரினங்களையும், மனிதர்களையும் ஒன்றாக நடத்துவதே) பகவான் அச்சுதருக்கு செய்யப்படும் சிறந்த வழிபாடாகும்.

இதி ப்ரஹலாதவசனாத் | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பக்த ப்ரஹ்லாதனின் கூற்றாகும்.

——–

  1. ஓம்ஹவிர்ஹரயேநம:

யஜ்ஞேஶு வேள்விகளில்

ஹவிர்பாகம் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஹரதீதி ஏற்றுக்கொள்வதால்

ஹவிர்ஹரி: பகவான் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளும் பகவானைக் குறித்தே செய்யப்படுகின்றன. அவர் அனைத்து வேள்விகளிலும் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.24)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே (வேள்விகளின்) தலைவன்.

ஹர என்ற சொல்லிற்கு கவர்தல், பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல பொருட்கள் உண்டு. இங்கு, கவர்கிறார் என்பதை விட வேள்வியின் நாயகனாய் இருந்து ஆகுதிகளைப் பெறுகிறார் என்பதே சிறந்த பொருளாக இருக்கும்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும் 

இனி ஆச்சார்யாள், இந்த இரண்டு சொற்களையும் (ஹவி:, ஹரி:) தனித்தனியே பிரித்தும் பொருளுரைக்கிறார். இவ்வாறு, விளக்கியிருந்தாலும் திருநாமக் கணக்கில் ‘ஹவிர்ஹரி:’ என்று ஒரு திருநாமமாகவே ஆச்சார்யாள் கணக்கிட்டுள்ளார்.

அதவா அல்லது

ஹூயதே ஹவிஶேதி வேள்விகளில் ஆகுதி கொடுக்கப்படுவது

ஹவி: ‘ஹவிஸ்’ எனப்படும்.

அல்லது, பகவானே ஆகுதிப் பொருளாக இருப்பதால் அவர் ‘ஹவி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அபத்னன் புருஶம் பஶும்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:

(வேள்வியில்) புருஶ ரூபமான பசுவை (ஆகுதிப் பொருளை) கட்டி வைத்தனர்

இதி ஹவிஶ்டம் ஶ்ரூயதே இந்த புருஶ ஸூக்தத்தில் பரமபுருஶனே ஆகுதிப் பொருளாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ம்ருதி மாத்ரேண அவரை நினைத்த அளவிலேயே

பும்ஸாம் மனிதர்களின் பாபம் பாவங்களையும்

ஸம்ஸாரம் வா பிறவிச்சுழல்களையும்

ஹரதீதி அழிப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை நினைத்த அளவிலேயே மனிதர்களின் பாவங்களையும், பிறவிச்சுழல்களையும் நீக்குகிறார். எனவே பகவான் ‘ஹரி’ என்று அழைக்கப்படுகிறார்.

ஹரித்வர்ணத்வாத் வா பச்சை நிற மேனியனாய் இருப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பச்சை நிற மேனியனாய் இருப்பதால் பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹராம்யகம் ச ஸ்மர்த்ருணாம் ஹவிர்பாகம் க்ரதுஶ்வஹம் |

வர்ணஸ்ச மே ஹரி: ஶ்ரேஶ்டஸ்தஸ்மாத் ஹரிர் அஹம் ஸ்ம்ருத: ||

என்னையே எண்ணுவோரின் பாபங்களை அழைக்கிறேன், வேள்விகளில் வழங்கப்படும் ஆகுதிகளை ஏற்கிறேன்,  மிகச்சிறந்த பச்சை வண்ணனாக இருக்கிறேன். எனவே, என்னை அனைவரும் ‘ஹரி’ என்று அழைக்கின்றனர்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு பகவான் கூறியுள்ளார் (இந்த ஸ்லோகம் மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் இருப்பதாக கூறுகின்றனர்).

பச்சை மா மலைபோல் மேனி….(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

ஹரிர் ஹரதி பாபானி (ப்ரஹலாதன் அருளிய ஹர்யஶ்டகம்)

————

  1. ஓம்ஸர்வலக்ஷணலக்ஷண்யாயநம:

ஸர்வைர்லக்ஷணை: அனைத்து குறியீடுகளிலும் (விளக்கங்கள்)

ப்ரமாணைர்லக்ஷணம் ஞானம் ஜாயதே மிகச்சிறந்தது ப்ரமாணங்களை (வேதங்கள் மற்றும் வேதாந்தங்கள்) அறிவதனால் பிறக்கும் உண்மையறிவாகும்

யத்தத்வினிர்திஶ்டம் அந்த அறிவால் விளக்கப்படும்

ஸர்வலக்ஷணலக்ஷணம் தத்ர ஸாது:  மேன்மையான பரம்பொருளே (பரமாத்மாவே) ‘ஸர்வலக்ஷணலக்ஷணம்’ ஆகும்

ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எனவே பகவான் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தஸ்யைவ பரமார்த்தத்வாத் ஏனெனில், பகவான் ஒருவரே அறியப்படுபொருளாவர்.

இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து இலக்கணைகள் மற்றும் குறியீடுகளில், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்று அதன் விளைவான அறிவால் விளங்கும் பொருளே மிகச்சிறந்ததாகும். அவ்வாறு, நமது உண்மையறிவால் அறியப்படும் பொருட்களிலேயும் பரம்பொருளான பகவானே மிகச்சிறந்தவராவார். எனவே, அவர் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்லக்ஷ்மீவதேநம:

லக்ஷ்மீரஸ்ய திருமகள்

வக்ஷஸி அவரது திருமார்பில்

நித்யம் வஸதீதி என்றும் இணைபிரியாது வசிப்பதால்

லக்ஷ்மீவான் பகவான் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

திருமகள் பகவானது திருமார்பில் என்றும் இணைபிரியாது வசிப்பதால் அவர் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸமிதிஞ்ஜயாயநம:

ஸமிதிம் யுத்தம் ‘ஸமிதி’ அதாவது போரில் (போர்களில்​)

ஜயதீதி என்றும் வெற்றி பெருவதால்

ஸமிதிஞ்ஜய: பகவான் ‘ஸமிதிஞ்ஜய:’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து போர்களிலும் வெல்கிறார். எனவே அவர் ‘ஸமிதிஞ்ஜய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |

மஹீதரோ மஹாபாஹோ வேகவானமிதாஶன: ||

இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விக்ஷர:, 364. ரோஹித:, 365. மார்க்க:, 366. ஹேது:, 367. தாமோதர:, 368. ஸஹ: |
  2. மஹீதர:, 370. மஹாபாக:, 371. வேகவான், 372. அமிதாஶன: ||

————

  1. ஓம்விக்ஷராயநம:

விகத: இல்லை

க்ஷரோ நாஶோ ‘க்ஷரம்’ அதாவது அழிவு (அல்லது தேய்வு)

யஸ்யாஸௌ எவருக்கு

விக்ஷர: (அந்த) பகவான் ‘விக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அழிவோ, தேய்வோ கிடையாதோ. எனவே அவர் ‘விக்ஷர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ரோஹிதாயநம:

ஸ்வச்சந்ததயா தன்னிச்சையால்

ரோஹிதாம் மூர்த்தி: சிவந்த வடிவானவராய்

மத்ஸ்யவிஶேஶமூர்த்தி: வா வஹன் ரோஹிதம் எனப்படும் ஒருவகை மீனாக அவதரித்ததால்

ரோஹித: பகவான் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னிச்சையால் சிவந்த வடிவினராய் ரோஹிதம் என்ற ஒரு வகை மீனாக (தனது மச்சாவதாரத்தில்) தோன்றியமையால் அவர் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோஹிதம் என்றால் சிவப்பு என்றும் பொருள், ஒரு வகை மீன் என்றும் பொருள். இதை இரண்டு அர்த்தங்களாகவும் கொள்ளலாம் (சிவந்த வடிவினர் மற்றும் மீனாய்த் தோன்றியவர்). அல்லது இரண்டையும் ஒன்றிணைத்து சிவந்த வடிவான மீனாய்த் தோன்றியவர் என்றும் கொள்ளலாம்.

————-

  1. ஓம்மார்க்காயநம:

முமுக்ஷவஸ்தம் முக்தியை விழைவோர்

தேவம் பரமாத்மாவை (பகவானை)

மார்கயந்தி இதி தேடுகின்றனர்

மார்க்க: எனவே, பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமாத்மாவான பகவான் முக்தியை விழைவோரால் தேடப்படுகிறார். எனவே, அவர் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமானந்தோ மிக உயர்ந்ததான இன்பத்தை

யேன ப்ராப்யதே தரவல்லதான

ஸ மார்க்க இதி வா மார்க்கமாய் (வழியாக) இருப்பதால்

மார்க்க: பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த இன்பத்தை (முக்தியை) தரவல்ல மார்க்கமாய் தானே இருப்பதால் பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஹேதவேநம:

உபாதானம் (இந்த ப்ரபஞ்சத்தின்) மூலப்பொருளாகவும்

நிமித்தம் ச காரணம் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும்

ஸ ஏவேதி அவரே இருப்பதால்

ஹேது: பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்கும் மூலப்பொருளாயும், உருவாக்குபவராயும் தானே இருப்பதால் பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூலப்பொருள் உபாதான காரணமென்றும், அதை உருவாக்குபவர் நிமித்த காரணம் என்றும் அழைக்கப்படுவர். உதாரணமாக, மண், தங்கம், நூல், இரும்பு ஆகியவை உபாதான காரணங்கள். அதைக் கொண்டு பானை, சங்கிலி, சேலை, சுத்தியல் ஆகியவற்றை உருவாக்கவேண்டும் என்று எண்ணி (உழைக்கும்) குயவர், பொற்கொல்லர், நெசவாளி, கருமார் ஆகியோர் நிமித்த காரணங்கள். இந்தப் ப்ரபஞ்சத்திற்கு இரண்டுமே பகவான் தான்.

————-

  1. ஓம்தாமோதராயநம:

தமாதிஸாதனேனோதாரோத்க்ருஶ்டா புலனடக்கம் முதலிய முயற்சிகளால் ‘உதாரமாகும்’ அதாவது நமக்குள் தோன்றும்

மதிர்யா தயா அறிவால்

கம்யத இதி அறியப்படுவதால்

தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தமம்’ என்ற புலனடக்கம் முதலிய முயற்சிகளால் நம்முள்ளே தோன்றும் அறிவால் (ஞானத்தால்) அறியப்படுவதால் பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தாம’ – தமத்தால் முதலான முயற்சிகள் + உதர – அவற்றால் மேலெழும் அறிவு. இதனால் அறியப்படுபவர் தாமோதரன்.

‘தமாத்தாமோதரோ விபு:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.8)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:

புலனடக்கமும், பெரும் ஒளியும் கொண்டிருப்பதால் பகவான் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

யஶோதயா யசோதையால்

தாம்னோதரே கயிற்றால் வயிற்றுப் பகுதியில்

பத்த இதி வா கட்டப்பட்டதால்

தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


‘ததர்ஶ சால்பதந்தாஸ்யம் ஸ்மிதஹாஸம் சா பாலகம் |
(வெண்ணையைக் களவாடி பிடிபட்ட பொழுது, அவரது தாய்) யசோதை பகவானின் வயிற்றை சுற்றி கயிறால் கட்டி வைத்தாள். எனவே, பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தயோர்மத்யகதம் பத்தம் தாம்னா காடம் ததோதரே |

ததஸ்ச தாமோதரதாம் ஸ யயௌ தாமபந்தனாத் ||’ (ப்ரஹ்ம புராணம் 13-14)

ப்ரஹ்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ஆயர்குல மக்கள், தனது தெற்றுப்பல் தெரியும் புன்சிரிப்புடனும், இடையில் உரலுடன் கட்டிய கயிற்றுடனும் அந்த பாலகன் (பாலகிருஷ்ணன்) இரு மருத மரங்களுக்கிடையில் தவழ்ந்து செல்வதைக் கண்டனர். இடையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்…

‘தாமானி லோகநாமானி தானி யஸ்யோதராந்தரே |

தேன தாமோதரோ தேவ: ஸ்ரீதர: ஸ்ரீஸமாஶ்ரரித: ||’

அனைத்தும் உலகங்களையும் ‘தாமம்’ என்று அழைப்பர். அவை பகவானின் திருவயிற்றில் (உதரத்தில், ப்ரளய காலத்தில்) இருக்கின்றது. எனவே, ஸ்ரீதரன், திருமாமகள் கேள்வனான பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸவசனாத்வா தாமோதர: |

ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்ஸஹாயநம:

ஸர்வானபிபவதி அனைவரையும் அடக்கி, தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார்

க்ஷமத இதி வா  அனைவரையும் (அவர்களின் செய்கைகளை) பொறுத்துக் கொள்கிறார்

ஸஹ: எனவே, பகவான் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரையும் அடக்கி தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார். அனைவரின் (தவறான) செய்கைகளைப் பொறுத்துக் கொள்கிறார். எனவே அவர் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்மஹீதராயநம:

மஹீம் இந்த பூமியை

கிரிரூபேண மலைகளின் வடிவில்

தரதீதி தாங்குவதால்

மஹீதர: பகவான் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த பூமியை மலைகளின் வடிவில் தாங்குகிறார். எனவே, அவர் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யர், முன்பு மஹீதரா என்ற 317வது திருநாமத்தில் பூமிக்கும், பூஜைக்கும் ஆதாரமாக இருந்து தாங்குகிறார் என்று பொருளுரைத்திருந்தார்.

‘வனானி விஶ்ணுர்கிரயோ திஸஸ்ச’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: காடுகள், மலைகள் மற்றும் திசைகளெல்லாம் பகவான் விஶ்ணுவே.

இதி பராஶரோக்தே | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பராசர மஹரிஷியின் கூற்றாகும்.

———–

  1. ஓம்மஹாபாகாயநம:

ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி

தாரயன் தேஹம் பல்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு

மஹாந்தி உத்க்ருஶ்டானி ‘மஹா’ அதாவது மிகச்சிறந்ததான

போஜனானி பாகஜன்யானி உணவுவகைகளை

புங்க்தே இதி உண்கிறார்

மஹாபாக: எனவே, பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னிச்சைப்படி வெவ்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு (அவருக்குப் படைக்கப்படும்) பல்வேறு சிறந்த உணவுகளை உட்கொள்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹான் மிகவும்

பாக: பாக்யம் ‘பாக’ அதாவது சிறந்ததான

அஸ்ய அவதாரேஶு அவரது அவதாரங்கள்

இதி வா மஹாபாக: எனவே பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்த (பெரும் பாக்கியம் படைத்த) அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்வேகவதேநம:

வேகோ ‘வேக’ என்றால்

ஜவ்ஸதத்வான் விரைவாகச்  செல்பவர்

வேகவான் எனவே, பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிக விரைவாகச் செல்பவராதலால் பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அனேஜதேகம் மனஸோ ஜவீய:’ (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)

ஈசாவாஸ்ய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ஆத்மாவானது சலனமற்றது. எனினும், மனதைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியது.

————

  1. ஓம்அமிதாஶணாய நம:

ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில்

விஶ்வமஶ்னாதீதி இந்தப் ப்ரபஞ்சத்தை  உண்கிறார்

அமிதாஶன: எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரளயத்தின் பொழுது) அழிக்கும் காலத்தில் இந்தப் ப்ரபஞ்சத்தை  உண்கிறார். எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேஶ்வர: |

கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||

இந்த நாற்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்பவ:, 374. ஷோபண:, 375. தேவ:, 376. ஸ்ரீகர்ப்ப:, 377. பரமேஶ்வர: |
  2. கரணம், 379. காரணம், 380. கர்த்தா, 381. விகர்த்தா, 382. கஹன:, 383. குஹா: ||

—————-

373-ஓம்உத்பவாய நம:

ப்ரபஞ்சோத்பத்தி இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு

உபாதான காரணத்வாத் மூலப்பொருளாய் இருப்பதால்

உத்பவ: பகவான் ‘உத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(குடத்திற்கு மண் போல) இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு மூலப்பொருளாய் (உபாதான காரணம்) இருப்பதால் பகவான் ‘உத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஷோபணாயநம:

ஸர்ககாலே ப்ரபஞ்சத்தின் தோற்றத்தில்

ப்ரக்ருதிம் புருஶம்  ப்ரக்ருதி மற்றும் புருஷனுக்குள்

ப்ரவிஶ்ய உட்புகுந்து

ஷோபயாமாஸேதி அந்த ப்ரக்ருதி, புருஷர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார்

ஷோபண: எனவே பகவான் ‘ஷோபண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ப்ரக்ருதியினுள்ளும் (மாறக்கூடிய இயற்கை), புருஷனுக்குள்ளும் (மாற்றமில்லாத ஜீவாத்மா) புகுந்து அவர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார். எனவே அவர் ‘ஷோபண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாங்கிய யோகத்தின்படி இந்தப் ப்ரபஞ்சமானது ப்ரக்ருதி (மூலப்பொருள்) மற்றும் புருஷனின் இணைப்பால் உண்டாகிறது. இவை தனித்திருந்தால் பிரளயம், ஒன்றிணையும் பொழுது படைப்பு.

ப்ரக்ருதிம் புருஶம் சைவ ப்ரவிஶ்யாத்மேச்சயா ஹரி: |

ப்ரவிஶ்ய ஷோபயாமாஸ ஸர்க்ககாலே வ்யயாவ்யயௌ || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.29)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அழிவற்றவரான பரமாத்மா ஹரி இந்தப் ப்ரபஞ்சத்தை படைக்கும் காலத்தில் தனது சுய விருப்பாலே மாறுதலை அடையக்கூடியதான ப்ரக்ருதிக்குள்ளும், மாறுதலற்ற ஆத்மாவிற்குள்ளும் (புருஷனுக்குள்ளும்) உட்புகுந்து அவர்களை (படைப்புத் தொழிலில் இயங்கும்படி) தூண்டினார்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. ஓம்தேவாயநம:

யதோ தீவ்யதி க்ரீடயதி ஸர்காதிபி: எவர் படைத்தல் முதலான தொழில்களை விளையாட்டாய் (லீலையாக) செய்கின்றாரோ

தேவ: அந்த பகவான் (ஸ்ரீ ஹரி) ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய செயல்களை விளையாட்டாக (லீலையாக) புரிகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘அலகிலா விளையாட்டுடையார்…’ – கம்ப இராமாயணம் கடவுள் வாழ்த்துப் பாயிரம்

தேவ: என்ற சொல் ‘திவ்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. ‘திவ்’ என்பதற்கு வடமொழியில் க்ரீடா (விளையாட்டு), விஜிகீஶ (வெற்றியை விழைதல்), வ்யவஹார (செயல்  புரிதல், இயக்குதல்), த்யுதி (ஒளி விடுதல்), ஸ்தூய (துதிக்கப்பெறுதல்) மற்றும் கச்சதி (செல்லுதல்) ஆகிய பல பொருள்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் வைத்து ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு உரை எழுதியுள்ளார்.

விஜிகீஶதேS(அ)ஸுராதீன் அசுரர்களை வெற்றி கொள்கிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அசுரர்களை வெல்கிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

வ்யவஹரதி ஸர்வபூதேஶு அனைத்துயிர்களையும் இயக்குகிறார் (செயல் புரியத் தூண்டுகிறார்)

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்துயிர்களையும் இயக்குகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆத்மதயா த்யோததே அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்தூயதே ஸ்துத்யை: பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸர்வத்ர கச்சதி தஸ்மாத் எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘ஏகோ தேவ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் ஒருவரே தேவனாவார்

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘ தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

———-

  1. ஓம்ஸ்ரீகர்ப்பாயநம:

ஸ்ரீர்விபூதிர் ‘ஸ்ரீ’ என்றால் செல்வம்

யஸ்யோதராந்தரே அவருடைய திருவயிற்றில்

ஜகத்ரூபா இந்தப் ப்ரபஞ்சமாகிய

யஸ்ய கர்ப்பே ஸ்திதா  கர்ப்பத்தினுள் இருக்கிறது

ஸ்ரீகர்ப்ப: எனவே பகவான் ‘ஸ்ரீகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்ரீ’ எனப்படும் ப்ரபஞ்சமாகிய செல்வம் பகவானது திருவயிற்றில் கர்ப்பமாய் இருக்கிறது (ப்ரளய காலத்தில்). எனவே, பகவான் ‘ஸ்ரீகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்பரமேஶ்வராயநம:

பரமஸ்சாஸா மிகவும் மேலானவர்

ஈஶானஶீலஸ்சேதி ஆளுமையுடையவர்

பரமேஶ்வர: எனவே பகவான் ‘பரமேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் மேலானவர் மற்றும் ஆளுமையுடையவராதலால் பகவான் ‘பரமேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸமம் ஸர்வேஶு பூதேஶு திஶ்டந்தம் பரமேஶ்வரம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 13.27)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரமேஸ்வரன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———-

  1. ஓம்கரணாயநம:

ஜகதுத்பத்தௌ இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு

ஸாதகதமம் மிகச்சிறந்த சாதனமாய் (கருவியாய்) இருப்பதால்

கரணம் பகவான் ‘கரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்குக் மிகச்சிறந்த கருவியாய் இருப்பதால் பகவான் ‘கரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாதகம் என்றால் கருவி. ஸாதக தமம் என்றால் மேலான (மிகச்சிறந்த) கருவி என்று பொருள்

———-

  1. ஓம்காரணாயநம:

உபாதானம் (இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும்

நிமித்தம்  (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால்

காரணம் பகவான் ‘காரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால் பகவான் ‘காரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்ற திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், திருநாமம் வெவ்வேறாயிருப்பதால் புனர் யுக்தி தோஷம் இல்லை.

———–

  1. ஓம்கர்த்ரேநம:

கர்த்தா பகவான் ‘கர்த்தா’ என்று அழைக்கப்படுகிறார்

ஸ்வதந்த்ர: ஏனெனில், அவர் (ப்ரபஞ்சத்தின் படைப்பு முதலான செயல்களை) தன்னிச்சையால் சுதந்திரமாய் புரிகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலிய செயல்களை தன்னிச்சையாய், சுதந்திரமாய் புரிகிறார். எனவே அவர் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்விகர்த்ரேநம:

விசித்ரம் பலவிதமான (ஆச்சர்யமான) புவனம் உலகங்களைப்

க்ரியதே இதி படைப்பதனால்

விகர்த்தா ‘விகர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸ ஏவ பகவான் விஶ்ணு: அந்த பகவான் விஶ்ணு ஒருவரே.

பற்பல ஆச்சர்யமான உலகங்களைப் படைப்பதனால் பகவான் விஶ்ணுவே ‘விகர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்கஹனாயநம:

ஸ்வரூபம் அவருடைய தன்மை

ஸாமர்த்யம் திறமை

சேஶ்டிதம் வா செயல்கள் ஆகியவற்றை

தஸ்ய ஞாதும் ந ஶக்யத இதி ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது

கஹன: எனவே பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுடைய தன்மை, திறமை மற்றும் செயல்களை ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது. எனவே அவர் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்குஹாயநம:

கூஹதே ஸம்வ்ருணோதி ‘குஹ’ அதாவது மறைக்கிறார்

ஸ்வரூபாதி தன்னுடைய தன்மை முதலானவற்றை

நிஜமாயயேதி தன்னுடைய மாயையினால்

குஹ: எனவே பகவான் ‘குஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய தன்மை முதலானவற்றை தன் மாயையினால் மறைத்து வைக்கிறார். எனவே அவர் ‘குஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நாஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: யோகமாயையால் மறைக்கப்பட்டு நான் எல்லோருக்கும் காட்சி அளிப்பதில்லை.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———–

  1. வ்யவஸாயோ வயவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ:|

பரர்த்தி: பரமஸ்பஶ்டஸ்துஶ்ட: புஶ்ட: ஸுபேக்ஷண: ||

இந்த நாற்பத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்யவஸாய:, 385. வ்யவஸ்தான:, 386. ஸம்ஸ்தான:, 387. ஸ்தானத:, 388. த்ருவ:|
  2. பரர்த்தி:, 390. பரமேஸ்பஶ்ட:, 391. துஶ்ட:, 392. புஶ்ட:, 393. ஸுபேக்ஷண: ||

————-

  1. ஓம்வ்யவஸாயாயநம:

ஸம்வின்மாத்ர ஞானமே ஸ்வரூபத்வாத் வடிவானவராய் இருப்பதால்

வ்யவஸாய: பகவான் ‘வ்யவஸாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானமே வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘வ்யவஸாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்வ்யவஸ்தானாயநம:

யஸ்மின் வ்யவஸ்திதி: எவர் ஒழுங்கு செய்பவரோ

ஸர்வஸ்யேதி அனைவரையும்

வ்யவஸ்தான: அந்த பகவான் ‘வ்யவஸ்தான:’ என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரையும் (அனைத்தையும்) அவரவரது தகுதிக்கேற்ப ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்துகிறார்?

லோகபாலாத்யதிகார அனைத்து லோக பாலகர்களையும் (இந்த ப்ரபஞ்சத்தைக் காக்க பகவானால் நியமிக்கப்பட்டவர்கள்) அவரவரது அதிகாரங்களை வரையறுப்பதன் மூலம், (அனைத்து உயிரினங்களையும்)

ஜராயுஜ அதன் முழு உருவிலேயே பிறப்பவை (ஆங்கிலத்தில் இவற்றை Mammals என்கிறோம்),

அண்டஜ முட்டையிலிருந்து பிறப்பவை

உத்பிஜ்ஜ விதையிலிருந்து பிறப்பவை (என்று வரையறுக்கிறார்) (மனிதர்களை)

ப்ராஹ்மண அந்தணர்கள்

க்ஷத்ரிய மறவர்

வைஶ்ய வணிகர்

ஸூத்ர தொழிலாளிகள்

அவாந்தர வர்ண இவையனைத்திலும் சேராதவர் (என்று வரையறுக்கிறார்)

ப்ரஹ்மசாரி (வேதம் பயிலும்) மாணவன்

க்ருஹஸ்த இல்லறத்தோர்

வானப்ரஸ்த உலக வாழ்க்கையின் கடமைகளை முடித்து வனம் சென்றோர்

ஸந்யாஸ லக்ஷணாஶ்ரம துறவு பூண்டோர்

தத்தர்மாதிகான் (இத்தகைய நால்வகை வாழ்வு முறையினோரையும்) அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தினாலும்

விபஜ்ய கரோதி இதி வா பிரித்து வைப்பதனால்

வ்யவஸ்தான: பகவான் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த உலகத்தைக் காக்க அவரால் நியமிக்கப்பட்ட லோக பாலகர்களை அவரவரது அதிகாரங்களின் மூலமும், உயிரினங்களை கருப்பையிலிருந்து தோன்றுவது, முட்டையிலிருந்து தோன்றுவது மற்றும் விதையிலிருந்து தோன்றுவது என்று மூவகையாகவும், மனிதர்களை அந்தணர், மறவர், வணிகர், தொழிலாளி மற்றும் இவையெதிலும் சேராத ஐந்தாவது வகையினர் என்று அவரவரின் தொழில் மூலமும், மாணவர், இல்லறத்தோர், வனவாழ்வை மேற்கொண்டோர் மற்றும் துறவி ஆகியோரை அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தாலும் ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ருத்யல்யுடோ பஹுலம்’ (பாணினி ஸூத்ரம் 3.3.223)

இதி பஹுலக்ரஹணாத் கர்த்தரி ல்யுட் ப்ரத்யய:

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ‘வ்யவஸ்தான:’ என்ற இந்த திருநாமம் உருவாகிறது.

————-

  1. ஓம்ஸம்ஸ்தானாயநம:

அத்ர பூதானாம் அனைத்து உயிரினங்களும்

ஸம்ஸ்திதி: ப்ரளயாத்மிகா ப்ரளய (அழியும்) காலத்தில் அவரிடம் சென்று ஒன்றுகின்றன

ஸம்ஸ்தான: எனவே, பகவான் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழியும் காலமான ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் பகவானிடம் சென்று ஒன்றுகின்றன. எனவே , அவர் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸமீசீனம் மிகவும் சிறந்த

ஸ்தானமஸ்யேதி வா இருப்பிடமாதலால்

ஸம்ஸ்தான: பகவான் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்திலும் மிகச் சிறந்த இருப்பிடமாவார். எனவே, அவர் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸ்தானதாயநம:

த்ருவாதீனாம் ‘துருவ’ பதம் முதலான

கர்மானுரூபம் அவரவரது செயல்களுக்கேற்ப

ஸ்தானம் பதவிகளை

ததாதீதி அளிக்கிறார்

ஸ்தானத: எனவே பகவான் ‘ஸ்தானத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரவரது செயல்களுக்கேற்ப துருவ பதம் முதலிய பதவிகளை வழங்குகிறார். எனவே, பகவான் ‘ஸ்தானத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்த்ருவாயநம:

அவினாஶித்வாத் அழிவற்றவராதலால்

த்ருவ: பகவான் ‘த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழிவற்றவராதலால் (நிலையானவராதலால்) பகவான் ‘த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

  1. ஓம்பரர்த்தயேநம:

பரா மேலான

ருத்திர்விபூதிர் ‘ருத்தி’ அதாவது செல்வம்

அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலான செல்வம் உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்பரமஸ்பஶ்டாயநம:

பரா மேலான

மா ஶோபா ‘மா’ அதாவது அழகு

அஸ்யேதி பரம: பகவான் ‘பரம:’

ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர்

அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர்

ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும்

ஸ்பஶ்ட: பகவான் ‘ஸ்பஶ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்

பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்துஶ்டாயநம:

பரமானந்தைக பேரின்பமே

ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால்

துஶ்ட: பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தின் ‘த’காரத்தை  ‘து’ (அதாவது வடமொழியில் உள்ள முதல் ‘த’) என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

—————

  1. ஓம்புஶ்டாயநம:

ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும்

ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால்

புஶ்ட: பகவான் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸுபேக்ஷணாயநம:

ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் ‘ஈக்ஷணை’ அதாவது அருட்பார்வையானது

ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது

முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும்

போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது

ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது

பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது

ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது

ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது

அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது

ஸ ஸுபேக்ஷண: எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”

இத்யாதி ஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய:|

வீர: ஶக்திமதாம் ஶ்ரேஶ்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||

இந்த நாற்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ராம:, 395. விராம:, 396. விரத:, 397. மார்க:, 398. நேய:, 399. நய:, 400. அனய:|
  2.             வீர:, 402. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 403. தர்ம:, 404. தர்மவிதுத்தம: ||

————–

  1. ஓம்ராமாயநம:

நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்

யோகினோ யோகிகளை

ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்

ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்தமில் பேரின்ப வடிவினராய், யோகிகளை மனமகிழச் செய்பவராதலால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |

இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே  || (பத்ம புராணம்)

எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் ‘ராம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி பத்மபுராணே | இவ்வாறு பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி

ரமணீயம் மிக அழகிய

வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்

தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்

ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, தன்னிச்சையால் தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே ‘ராமநாமத்தை’ உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் – கம்ப ராமாயணம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

புற்பா முதலா புல்லெறும்பாதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே (திருவாய்மொழி 7.5.1)

ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் (ஸ்ரீ ராம ராம ராமேதி…

———-

  1. ஓம்விராமாயநம:

விராமோ அவஸானம் ‘விராம’ என்றால் முடிவாக தங்கும் இடம்

ப்ராணினாம் அஸ்மின் இதி அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்

விராம: பகவான் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம்விரதாயநம:

விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்

ரதமஸ்ய விஶயசேவாயாமிதி ‘ரதம்’ அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)

விரத: எனவே பகவான் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.

ஒரு சில பதிப்புகளில் இந்த திருநாமம் ‘விரஜ:’ என்று வழங்கப்பட்டுள்ளது. பதம் வேறாயினும் பொருள் ஒன்றே.

———–

  1. ஓம்மார்காயநம:

யம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்

அம்ருதத்வாய கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ

யோகினோ முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்

ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்

மார்க: எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அறிவதாலேயே யோகிகள் முக்தியை அடைகின்றனர். முக்தி அடைவதற்கு பகவான் ஒருவரே வழி. எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நான்ய: பந்தா வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)

ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

  1. ஓம்நேயாயநம:

மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக

ஜீவ: ஜீவாத்மா

பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு

நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்

நேய: எனவே பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரறிவான ஞானத்தின் வழியே ஒரு ஜீவாத்மா பரமாத்ம தன்மையை அடைகிறான் (பகவானே அவனை அவ்வாறு அழைத்துச் செல்கிறார்). எனவே, பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே ஜீவனை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார் என்பது அடுத்த திருநாமத்தால் விளங்கும். இந்த திருநாமம் ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பரமாத்மாவின் செயல்பாடுகளை விளக்குவதே ஆகும். எனவே இந்த திருநாமம் மேலாக ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பகவானையே குறிக்கிறது.

—————

  1. ஓம்நயாயநம:

நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்

நய: பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

நேதா தலைவராய் இருந்து.

(முன்திருநாமத்தில் குறிப்பிட்டவாறு) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை பரமாத்ம தன்மை (தன்னிடம்) வந்தடையுமாறு தலைவராய் இருந்து வழி நடத்திச் செல்வதால் பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மார்கோ வழியாகவும்

நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்

நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்

இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்

பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.

பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்அநயாயநம:

நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை

இதி அனய: எனவே பகவான் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானுக்கு (அவருக்கு) மேலான தலைவர் வேறொருவரும் இல்லை. எனவே அவர் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு ஞானம் முதிர்ந்தால் பரமாத்ம தன்மையை அளிக்கிறார் பகவான். ஆனால், அவருடைய பரமாத்ம தன்மையை வேறெவரும் அவருக்கு அளித்தனரா என்ற கேள்வி நமக்குள் பிறக்கலாம். அதை போக்குவதற்காக, அவருக்கு வேறொரு தலைவர் இல்லை என்று விளக்குகிறது இந்த திருநாமம். பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.

இதி நாம்னாம் சதுர்த்தம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (அனய: என்னும் இந்த திருநாமம் வரையில்) நானூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

———

  1. ஓம்வீராயநம:

விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்

வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால் பகவான் ‘வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாயநம:

விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்

வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்

ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்

ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பலம்பொருந்தியோரான நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் மிகுந்த பலமுடையவராதலால் பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்தர்மாயநம:

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்

தாரணாத் தாங்குவதால்

தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களையும் தாங்குவதால் பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அணுரேவ தர்ம:’

வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: (அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன

தர்மைர் தர்மத்தாலே

ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)

தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அல்லது) தர்மத்தாலே வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்) பகவான் ‘தர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்தர்ம விதுத்தமாயநம:

ஶ்ருதய: ‘ஶ்ருதிகளான’ வேதங்களும்

ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்

யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ

ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே

ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள்

உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்

இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ருதிகளான வேதங்களும் ஸ்ம்ருதிகளும் பகவானின் ஆணைகளே. அவரே, அதில் குறிப்பிட்டுள்ள அறங்களை முழுமையாக அறிந்தவர்களுள் சிறந்தவராவார். எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:|

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்துநான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

————–

  1. ஓம்வைகுண்டாயநம:

விவிதா வெவ்வேறு

குண்டா கதே: ‘குண்டா’ என்றால் போக்கு

ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது

விகுண்டா ‘விகுண்டா’ எனப்படும்

விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால்

வைகுண்ட: பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவானபொழுது (அதன் தொடக்கத்தில்)

விஶ்லிஶ்டானி (ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த

பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை

பரஸ்பரம் ஒன்றோடொன்று

ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து

தேஶாம் கதிம் அவற்றின் போக்கை

ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் ‘வைகுண்ட:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மயா ஸம்ஸலேஶிதா பூமிரத்பிர்வ்யோம ச வாயுனா |

வாயுஸ்ச தேஜஸா ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 342.80)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் ‘வைகுண்டத்வம்’ இருக்கிறது.

இதி ஶாந்தி பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஓம்புருஶாயநம:

ஸர்வஸ்மாத்புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால்

ஸர்வபாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும்

புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ யத்பூர்வோஸ்மாத்ஸர்வஸ்மாத்ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் ‘புருஶ’ என்றறியப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

புரி ‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள்

ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்)

புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம்ப்ராணாயநம:

ப்ராணிதி உயிர்வாழ்கிறார்

க்ஷேத்ரக்ஞரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்)

ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில்

சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார்

ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஓம்ப்ராணதாயநம:

கண்டயதி அழிக்கிறார்

ப்ராணினாம் உயிரினங்களின்

ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை)

ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில்

ப்ராணத: எனவே பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ப்ரணவாயநம:

ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால்

ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஓம்’ என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ’

‘ஓம்’ என்று கூறி வணங்கவேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ரணம்யதே வணங்கப்படுவதால்

இதி வா ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே’  

அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ஸனத்குமாரவசனான் | இது ஸனத்குமாரரின் கூற்றாகும்.

————

  1. ஓம்ப்ருதவேநம:

ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்

விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால்

ப்ருது: பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் விரிவடைந்து இருப்பதால் பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

———–

  1. ஓம்ஹிரண்யகர்ப்பாயநம:

ஹிரண்யகர்ப்பஸம்பூதிகாரணம் ஹிரண்யகர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான

ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது

யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ

ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார்

ஹிரண்யகர்ப்ப: எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவும் பகவானின் கர்ப்பத்திலிருந்து அவரது சக்தியால் உருவான பொன்மயமான முட்டையிலிருந்தே தோன்றுகிறார். எனவே, பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ஶத்ருக்னாயநம:

த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின்

ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை

ஹந்தீதி கொல்வதால்

ஶத்ருக்ன: பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(முப்பத்து முக்கோடி) தேவர்களின் எதிரிகளான அஸுரர்களை கொல்வதால் பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்வ்யாப்தாயநம:

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம்

ஸர்வகார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்)

வ்யாபனாத் பரவி இருப்பதால்

வ்யாப்த: பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யாப்த என்றால் எங்கும் பரவி இருத்தல். இந்த ப்ரபஞ்சத்தில் நாம் காணும், கேட்கும், உணரும் அனைத்துமே காரியங்கள் (அதாவது செயல் விளைவுகள்). பகவானே அனைத்திற்கும் (இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கும்) மூல காரணம். காரணமானது காரியத்தை முழுவதுமாய் பரவி இருக்கும். எனவே, பகவானும் அனைத்தையும் (அனைத்திலும்) பரவி இருக்கிறார் என்பது ஆச்சார்யாளின் உரையாகும்.

————–

  1. ஓம்வாயவேநம:

வாதி கந்தம் கரோதீதி ‘வாதி’ அதாவது மணத்தை உண்டாக்குகிறார்

வாயு: எனவே பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மணத்தை உண்டாக்குவதால் பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்மண்ணில் தூய நாற்றம் நான்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————–

  1. ஓம்அதோக்ஷஜாயநம:

அதோ ந க்ஷீயதே ஜாது யஸ்மாத்தஸ்மாத் அதோக்ஷஜ: (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.10)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் ‘அதோக்ஷஜ:’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

த்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது

ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது

தயோர்யஸ்மாத் அஜாயத மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால்

வைராஜரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில்

அதோக்ஷஜ: பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்ஷம் என்றழைக்கப்படும் ஆகாயத்திற்கும், அத என்றழைக்கப்படும் பூமிக்கும் இடையே தனது விராட் ரூபத்தில் தோன்றுவதால் பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (பூமி) + அக்ஷ (ஆகாயம்) + ஜ (பிறத்தல்) = அதோக்ஷஜ

அதோப்ருதே உள்முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது

ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில்

அக்ஷகணே இந்திரியங்களை

ஜாயத இதி வா தோன்றுகிறார்

அதோக்ஷஜ: எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவரொருவர் தமது இந்திரியங்களை (புலன்களை) நுகர்ச்சியை நோக்கி அவை ஓடுவதை தவிர்த்து, அதன் எதிர்திசையான உள்முகமாய் உயர்ந்ததை நோக்கி திருப்புகிறாரோ, அவருக்கு பகவான் (அவர் உள்ளத்தில்) தோன்றுகிறார். எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜ

————–

  1. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ:|

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |
  2. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

—————

  1. ஓம்ருதவேநம:

காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்

ருதுஶப்தேன ‘ருது’ என்ற

லக்ஷ்யத இதி குறிக்கிறது

ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ருது’ என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸுதர்ஶனாயநம:

ஶோபனம் மங்களமான

நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்கவல்லது

தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம்

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶுபே மங்களகரமான

தர்ஶனே ஈக்ஷணே ‘தர்ஶனம்’ அதாவது திருக்கண்களை உடையவராதலால்

பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய்

த்ருஶ்யதே காட்சி அளிக்கிறார் பக்தைரிதி வா தனது அடியவர்களுக்கு

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை என்றும் கொள்ளலாம்.

—————–

  1. ஓம்காலாயநம:

கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்)

ஸர்வமிதி வா அனைத்தையும்

கால: எனவே, பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்இயங்குனவற்றில் காலம் நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார்.

————

  1. ஓம்பரமேஶ்டினேநம:

பரமே ப்ரக்ருஶ்டே ‘பரம’ அதாவது உயர்ந்ததான

ஸ்வே மஹிம்னி தன்னுடைய (இயற்கையான) மகிமையால்

ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள்

ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும்

ஶீலமஸ்யேதி தன்மையுடையவராதலால்

பரமேஶ்டி பகவான் ‘பரமேஶ்டி’ என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் ஒரு சிறிய வெற்றிடம் இருக்கும். அதை இதய ஆகாயம் என்று கூறுவர். பகவான் அந்த இதய ஆகாயத்துள் தன்னுடைய இயற்கையான, மிகச்சிறந்த மகிமையால் என்றும் நிலைபெற்றிருக்கிறார். எனவே அவர் ‘பரமேஶ்டி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவர் அங்கே தனது இயற்கையான பெருமையினால் (மஹிமையினால்) வீற்றிருக்கிறார். அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).

‘பரமேஶ்டி விப்ராஜதே’ – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘பரமேஶ்டி’ என்று அழைக்கப்படுகிறார்).

———–

  1. ஓம்பரிக்ரஹாயநம:

ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால்

பரிதோ எல்லாவிடங்களிலும்

க்ருஹ்யதே  அடையப்படுகிறார்

ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிதோ எங்கும்

ஞாயதே இதி வா அறியப்படுகிறார்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் அறியப்படுகிறார் . எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ

பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும்

பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்உக்ராயநம:

ஸூர்யாதீனாமபி கதிரவன் முதலானோருக்கும் கூட

பயஹேதுத்வாத் அச்சத்தை தருபவராக இருப்பதால்

உக்ர: பகவான் ‘உக்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலானோருக்கும் கூட அச்சத்தை தருபவராக இருப்பதால் பகவான் ‘உக்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பீஶாதேதி ஸூர்ய:’ (தைத்ரீய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (இந்த பரப்ரஹ்மனிடத்திருந்து உருவான அச்சத்தினால்) கதிரவன் உதிக்கின்றான்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———-

  1. ஓம்ஸம்வத்ஸராயநம:

ஸம்வஸந்தி வசிக்கின்றனர்

பூதாநி அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்)

யஸ்மின் இதி எவருக்குள்

ஸம்வத்ஸர: அந்த பகவான் ‘ஸம்வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) பகவானுக்குள் வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே அவர் ‘ஸம்வத்ஸர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்தக்ஷாயநம:

ஜகத்ரூபேண இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில்

வர்த்தமானத்வாத் பரந்து, விரிந்து வளர்வதால்

தக்ஷ: பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்து வளர்வதால் பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வகர்மாணி அனைத்து செயல்களையும்

க்ஷிப்ரம் கரோதி இதி வா விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால்

தக்ஷ: பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து செயல்களையும் விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால் பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தக்ஷ என்ற சொல்லிற்கு உள்ள பல பொருள்களில் விரைவாக செயல்படுதல், வளர்தல் (தக்ஷதே) ஆகியவையும் உள்ளன. ஆச்சார்யாள் இந்த இரு பொருள்களிலும் உரை அளித்துள்ளார்.

————

  1. ஓம்விஶ்ராமாயநம:

ஸம்ஸாரஸாகரே இந்தப் பிறவிப்பெருங்கடலில்

க்ஷுத்பிபாஸாதி பசி, தாகம் முதலிய

ஶடூர்மிபிஸ் ஆறு வகையான துன்பங்களால்

தரங்கிதே அலைக்கழிக்கப்பட்டும்

அவித்யாத்யைர்மஹாக்லேஶைர் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும்

மதாதிபிருபக்லேஶைஸ்ச (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும்

வஶீக்ருதானாம் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற (ஆத்மாவானது)

விஶ்ராந்திம் (இவற்றலிருந்து விடுபடுவதான) அமைதியை

காங்க்ஷமானானாம் விரும்பும்பொழுது

விஶ்ராமம் மோக்ஷம் முக்தி என்னும் பேரின்பத்தை

கரோதீதி அளிப்பவராதலால்

விஶ்ராம: பகவான் ‘விஶ்ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவிப்பெருங்கடலில் பசி, தாகம் முதலிய ஆறு வகையான துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டும் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும் (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற ஆத்மாவானது அமைதியை விரும்பும்பொழுது முக்தி என்னும் பேரின்பத்தை அளிப்பவராதலால் பகவான் ‘விஶ்ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்விஶ்வதக்ஷிணாயநம:

விஶ்வஸ்மாத் இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும்

தக்ஷிண: ஶக்த: ‘தக்ஷிண’ அதாவது (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர்

விஶ்வதக்ஷிண: ஆதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர் ஆதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வேஶு இவ்வுலகிலுள்ள

கர்மஸு அனைத்துக் செயல்களையும்

தாக்ஷிண்யாத்வா விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால்

விஶ்வதக்ஷிண: பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைத்துக் செயல்களையும் விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 5-திருநாமங்கள்–201– -307- வரை –

January 20, 2023

22-அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா||

——————-

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. குரு:, 210.குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
  2. நிமிஶ:, 215.அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||

————–

  1. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண:|

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண:|
  2. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

—————–

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

————–

  1. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு:|

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
  2. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

————–

  1. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |

ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || 

இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி:|
  2. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன:  |

—————

28. வ்ருஶாஹீ வ்ருஶபோ விஶ்ணுர் வ்ருஶபர்வா வ்ருஶோதர: 

வர்த்தனோ வர்த்தமானஸ்ச விவிக்த: ஶ்ருதிஸாகர: || 

இந்த இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

256. வ்ருஶாஹீ, 257. வ்ருஶப:, 258. விஶ்ணு:, 259. வ்ருஶபர்வா, 260. வ்ருஶோதர:  |

261. வர்த்தன:, 262. வர்த்தமான:, 263. விவிக்த:, 264. ஶ்ருதிஸாகர:  ||

————–

  1. ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு:

நைகரூபோ ப்ருஹத்ரூப: ஶிபிவிஶ்ட: ப்ரகாஶன: ||

இந்த இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுபுஜ:, 266.துர்த்தர:, 267. வாக்மீ, 268. மஹேந்த்ர:, 269. வஸுத:, 270. வஸு: |
  2. நைகரூப:, 272.ப்ருஹத்ரூப:, 273. ஶிபிவிஶ்ட:, 274. ப்ரகாஶன: ||

———————

30-ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன:

ருத்த: ஸ்பஶ்டாக்ஷரோ மந்த்ரஸ்சந்த்ராம்ஶுர்பாஸ்கரத்யுதி: ||

இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 276. ப்ரகாஶாத்மா, 277. ப்ரதாபன: |
  2. ருத்த:, 279. ஸ்பஶ்டாக்ஷர:, 280. மந்த்ர:, 281. சந்த்ராம்ஶு:, 282. பாஸ்கரத்யுதி: ||

——-

  1. அம்ருதாமஸூத்பவோ பானு: ஶஶபிந்து: ஸுரேஶ்வர:|

ஔஶதம் ஜகதஸ் ஸேது: ஸத்யதர்மபராக்ரம: ||

இந்தமுப்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அம்ருதாம்ஸூத்பவ:, 284. பானு:, 285. ஶஶபிந்து:, 286. ஸுரேஶ்வர:|
  2. ஔஶதம், 288. ஜகதஸ்ஸேது:, 289. ஸத்யதர்மபராக்ரம:||

————

  1. பூதபவ்யபவன்னாத: பவன: பாவனோSனல: |

காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: ||

இந்த முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதபவ்யபவன்னாத:, 291.பவன:, 292. பாவன:, 293. அனல: |
  2. காமஹா, 295.காமக்ருத், 296. காந்த:, 297. காம:, 298. காமப்ரத:, 299. ப்ரபு: ||

———–

  1. யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஶன:|

அத்ருஶ்யோSவ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||

இந்த முப்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யுகாதிக்ருத், 301. யுகாவர்த்த:, 302. நைகமாய:, 303. மஹாஶன:|
  2. அத்ருஶ்ய, 305. வ்யக்தரூப:, ச, 306. ஸஹஸ்ரஜித், 307. அனந்தஜித் ||

22-அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா||

—-

201.ஓம் ஸந்தாத்ரே நம:

கர்மஃபலைஅவரவரது வினைப்பயன்களை

புருஶான் அவரவரோடு

ஸந்தத்த இணைக்கிறார் (கூட்டுவிக்கிறார்)

இதி எனவே

ஸந்தாதா பகவான் ‘ஸந்தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொருவரது வினைப்பயனையும் அவர்களோடு இணைக்கிறார் (அதற்கு தக்க பலனை அளிக்கிறார்). எனவே, அவர் ‘ஸந்தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எத்தனை பிறவி எடுத்தாலும் தத்தம் வினைப்பயனை அவரவர்களே தான் அனுபவிக்க வேண்டும். ஒருவரது வினைப்பயனை மற்றவர் அனுபவித்தல் இயலாது.

————-

202.ஓம் ஸந்திமதே நம:

ஃபலபோக்தா அந்தந்த பலனை அனுபவிப்பவரும்

ச ஸ ஏவேதி அவரேயாதலால்

ஸந்திமான் பகவான் ‘ஸந்திமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு அந்த பரப்ரஹ்மத்தை தவிர்த்து வேறொன்றுமில்லை. பற்பல ஜீவராசிகளின் வடிவில் அதனதன் வினைப்பயனை அனுபவிப்பவரும் அவரே. எனவே, பகவான் ‘ஸந்திமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

203.ஓம் ஸ்திராய நம:

ஸதைகரூபத்வாத் (ஸதா ஏக ரூபத்வாத்) எப்பொழுதும் மாறாத உருவத்துடன் இருப்பவராதலால்

ஸ்திர: பகவான் ‘ஸ்திர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் மாறாத உருவத்துடன் இருப்பதால் ‘ஸ்திர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

204.ஓம் அஜாய நம:

அஜதி ‘அஜ’ என்றால்

கச்சதி செல்வது மற்றும்

க்ஷிபதி அழித்தல் என்று பொருள்

இதி வா பகவான் இவ்விரண்டும் செய்வதால் (நல்லோரிடம் செல்கிறார், தீயோரை அழிக்கிறார்)

அஜ: அவர் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரிடம் செல்கிறார்; தீயோரை அழிக்கிறார். எனவே, அவர் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

205.ஓம் துர்மர்ஶணாய நம:

மர்ஶிதும் ஸோடும் ‘மர்ஶண’ என்றால் ஸஹித்துக் கொள்ளுதல் என்று பொருள்

தானவாதிபிர் ந ஶக்யதே அஸுரர்களால் (பகவானை ஸஹித்துக் கொள்ள) இயலாது

இதி எனவே

துர்மர்ஶண: பகவான் ‘துர்மர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துர்மர்ஶண: என்றால் ஸஹிக்க முடியாதவர் என்று பொருள். அஸுரர்களாலும், தீய எண்ணம் கொண்டவர்களாலும் பகவானை ஸஹித்துக் கொள்ள இயலாது. எனவே, அவர் ‘துர்மர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

206.ஓம் ஶாஸ்த்ரே நம:

ஶ்ருதி  ஸ்ம்ருத்யாதிபிஶ்ருதிகளைக் (வேதங்களைக்) கொண்டும், (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளைக் கொண்டும்

ஸர்வே ஶாமனுஶிஶ்டிம் கரோதீதி அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால்

ஶாஸ்தா பகவான் ‘ஶாஸ்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶ்ருதிகளையும் (வேதங்கள்), (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளையும் கொண்டு அனைவரையும் கட்டளை யிட்டு, வழி நடத்தி ஆள்வதால் பகவான் ‘ஶாஸ்தா’ என்ற திரு நாமத்தால் அழைக்க ப்படுகிறார்.

—————

207.ஓம் விஶ்ருதாத்மனே நம:

விஶேஶேண சிறப்பாக

ஶ்ருதோ அறிகிறார்

யேன ஸத்ய ஞானாதி லக்ஷணதன்னுடைய ஸத்யம் (மெய்), அறிவு முதலிய குணங்களால்

ஆத்மாதோ ஆத்மாவின் தன்மையை

விஶ்ருதாத்மா எனவே, பகவான் ‘விஶ்ருதாத்மா’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

பகவான் தன்னுடைய ஸத்யம், ஞானம் முதலிய குணங்களால், ஆத்மாவின் தன்மையை (மற்றெல்லோரையும் காட்டிலும்) சிறப்பாக அறிகிறார். எனவே, அவர் ‘விஶ்ருதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————

208.ஓம் ஸுராரிக்னே நம:

ஸுராரிணாம் (ஸுர + அரிணாம்) தேவர்களின் எதிரிகளை (அஸுரர்களை)

நிஹந்த்ருத்வாத் அழிக்கிறார்

ஸுராரிஹா எனவே, பகவான் ‘ஸுராரிஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் எதிரிகளை அழிப்பதால் அவர் ‘ஸுராரிஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. குரு:, 210.குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
  2. நிமிஶ:, 215.அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||

 

209.ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்

ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)

ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்

குரு: பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————-

210.ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்

ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்

குருதம: பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

தம என்றால் ‘உயர்ந்த’ அல்லது ‘சிறந்த’ என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.

‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன் முதலில் நான்முகனைப் படைத்தாரோ…

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———————-

211.ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதிதாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்

நாராயண பரோ ஜ்யோதி:’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்

இதி மந்த்ர வர்ணாத் இந்த மந்திரத்தின் படி

தாம: பகவான் ‘ தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 தாம என்றால் ஒளி மிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளி வடிவினராக இருப்பதால் பகவான் ‘தாம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால்

தாம: பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரம் ப்ரஹ்ம பரம் தாம‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

212.ஓம் ஸத்யாய நம:

ஸத்ய வசன உண்மைக் கூற்றுக்களாகவும்

தர்ம ரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப் படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு மெய்யம் என்னும் திருத் தலத்தில், பகவான் ‘ஸத்ய மூர்த்தி’, ‘மெய்யன்’ என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.

தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி

வேதங்களிலும்உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும்

ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

213.ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத

பராக்ரமோ யஸ்ய ஸ

வீரத்தை உடையவராதலால்

ஸத்ய பராக்ரம: பகவான் ‘ஸத்யபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் ‘ஸத்யபராக்ரம:’ (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

214.ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள்

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது

அதோ நிமிஶ: எனவே, பகவான் ‘நிமிஶ:’ (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் ‘நிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

215.ஓம் அநிமிஶாய நம:

நித்ய எப்பொழுதும்

ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் ‘அநிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் ‘விழிப்புடன் இருத்தல்’, ‘அறிவொளியோடு இருத்தல்’ என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும்

ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யாவதார வரலாறு:

முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் ‘வைகை’ என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார்.

பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.

அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். ‘அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்’ கூறிவிட்டு மறைந்தார்.

அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார்.

முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார்.

இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.

———-

216.ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை)

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ என்ற பெயருடைய

ஸ்ரஜம் மாலையை

நித்யம் என்றும் (எக்காலத்திலும்)

பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்)

ஸ்ரக்வீ பகவான் ‘ஸ்ரக்வீ” (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான ‘வைஜயந்தி’ என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் ‘ஸ்ரக்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்மாத்திரைகள்  இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).

நித்யம்  எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.

———

217.ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா ‘வாச’ என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும்

பதிஅவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்)

வாசஸ்பதி‘வாசஸ்பதி:’ என்று அழைக்கப்படுகிறார்

ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும்

புத்திரஸ்யேத்யுதாரதீஅறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார்

வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாச’ என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் ‘அறிவின் தலைவர்’ என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் ‘வாசஸ்பதி’, ‘உதாரதீ’ ஆகியவை இணைந்து ‘வாசஸ்பதிருதாரதீ’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

—————

  1. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண:|

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண:|
  2. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

———-

218.ஓம் அக்ரண்யே நம:

அக்ரம் ப்ரக்ருஶ்டம் ‘அக்ரம்’ என்றால் மிகச்சிறந்த என்று பொருள்

பதம் இருப்பிடம்

நயதி வழிநடத்திச் செல்கிறார்

முமுக்ஷூனிதி முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை)

அக்ரணீ: பகவான் ‘அக்ரணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை), அந்த முக்திக்கான மிகச்சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்கிறார். எனவே, அவர் ‘அக்ரணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரணீ – ‘க்’ என்ற சொல் வடமொழியில் வரும் மூன்றாவது ‘க’ வாகும்.

———-

219.ஓம் க்ராமண்யே நம:

பூதக்ராமஸ்ய (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய) ஐம்பூதங்களை

நேத்ருத்வாத் நியமித்து ஆள்வதால்

க்ராமணீ: பகவான் ‘க்ராமணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நியமித்து ஆள்வதால் பகவான் ‘க்ராமணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஐம்பூதங்களுக்குள், அவற்றின் கலவையால் உருவாக்கப்படும் அனைத்து ‘அசித்’ பொருட்களும் அடக்கம்.

———–

220.ஓம் ஸ்ரீமதே நம:

ஸ்ரீகாந்தி‘ஸ்ரீ’ என்றால் ஒளி என்று பொருள்

ஸர்வாதிஶாயின்யஸ்யேதி அனைவரைக் காட்டிலும் மேலான ஒளியை உடையவராதலால்

ஸ்ரீமான் பகவான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்) மேலான ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமான பொருளாகக் கொண்டு ‘ஸ்ரீமான்’ என்று விளக்கியிருந்தார் .

பின்னர் 178வது திருநாமத்தில், அனைத்து செல்வங்களுடன் திருமகள் உறைதலைப் பிரதானமாய்க் கொண்டு ‘ஸ்ரீமான்’ என்று உரை தந்திருந்தார்.

இங்கோ, அவரது மேனி ஒளியைக் கொண்டு உரை அளித்துள்ளார்.

————

221.ஓம் ந்யாயாய நம:

ப்ரமாண உண்மையான அறிவை விளக்கும் சான்றுகளை

அனுக்ராஹக சார்ந்து

அபேதகாரகஸ் தர்கோ அத்வைதமென்னும் ‘அபேத’ தத்துவத்தை விளக்கும் தர்க்கமாய் இருப்பதால் (தர்க்கம் = வாதம், எதிர்வாதம் மூலம் உண்மையை அறியும் அறிவி)

ந்யாய: பகவான் ‘ந்யாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரமா’ என்றால் அறியப்படவேண்டிய உண்மைப் என்று பொருள். அதை நமக்கு அறிவிப்பவை ‘ப்ரமாணங்கள்’ எனப்படும். அத்தகைய ப்ரமாணங்களைச் சார்ந்து, வாத-எதிர்வாதம் மூலம் தர்க்க ரீதியாக அபேத (அத்வைத) தத்துவத்தை விளக்கும் முறைக்கு ‘ந்யாயம்’ என்று பெயர். பகவானே இந்த ‘ந்யாய’ வடிவினராய் இருப்பதால் அவர் ‘ந்யாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது ஸனாதன தர்மத்தில் ஆறு வகைப் ப்ரமாணங்கள் உள்ளன. அவையாவன,

1.ப்ரத்யக்ஷம் (நேரடியாய் நம் புலன்களின் மூலம் அறிவது)

  1. அனுமானம்(நம் முன்னனுபவத்தைக் கொண்டு அறிவது. உதாரணமாக, புகையுள்ள இடத்தில் நெருப்பும் இருக்கும். முன்பு நாம் நெருப்பையும், புகையையும் ஒன்று சேரப் பார்த்திருப்பதால் இவ்வாறு அறிகிறோம்)
  2. உபமானம்(நாம் அறிந்த ஒன்றைக் கொண்டு, அறியாத ஒன்றை அறிய முயல்வது)
  3. அர்த்தாபத்தி(யூகித்து அறிவது; ஒருவர் மாட்டு வண்டியில் காலைப் பயணித்தார். அடுத்த ஊரை அடைவதற்கு அரை நாள் ஆகும். எனவே, அவர் அடுத்த ஊரை அடைந்திருக்க வேண்டும்)
  4. அனுபலப்தி(எதிர்மறை வாதங்களைக் கொண்டு ஒன்றை அறிவது. உதாரணமாக, “இங்கு தங்கத் தட்டு இல்லை” என்று ஒருவர் கூறினால், அவர் ‘தங்கம்’ என்ற பொருளையும், ‘தட்டு’ என்ற பொருளையும் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள் கொள்ளலாம்)
  5. ஶப்தம்(சொல் அல்லது கூற்று: ஒருவர் அல்லது ஒரு நூல் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்வது. வேதங்கள், உபநிடதங்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்ததாகும்)
  6. ————

222.ஓம் நேத்ரே நம:

ஜகத்யந்த்ர இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை

நிர்வாஹகோ வழிநடத்துபவராக இருப்பதால்

நேதா பகவான் ‘நேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை வழி நடத்துபவராக இருப்பதால் பகவான் ‘நேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

223.ஓம் ஸமீரணாய நம:

ஶ்வஸனரூபேண மூச்சுக்காற்றின் வடிவில்

பூதானி அனைத்து உயிரினங்களையும்

சேஶ்ட்யதீதி நடமாடச் செய்வதால்

ஸமீரண: பகவான் ‘ஸமீரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூச்சுக்காற்றின் (ப்ராண வாயுவின்) வடிவில் அனைத்து உயிரினங்களையும் நடமாடச் செய்வதால் பகவான் ‘ஸமீரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————————-

224.ஓம் ஸஹஸ்ர மூர்த்னே நம:

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

மூர்த்தானோSஸ்யேதி தலைகள் உடையவராக இருப்பதால்

ஸஹஸ்ர மூர்த்தா பகவான் ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராக இருப்பதால் பகவான் ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

225.ஓம் விஶ்வாத்மனே நம:

விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

விஶ்வாத்மா பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

226.ஓம் ஸஹஸ்ராஷாய நம:

ஸஹஸ்ராண்யக்ஷீண்யக்ஷாணி (ஸஹஸ்ராணி அக்ஷீணி அக்ஷாணி) ஆயிரக்கணக்கான கண்களும் (அக்ஷீணி), புலனுறுப்புக்களும் (அக்ஷாணி)

வா யஸ்ய ஸ எவரிடம் உள்ளனவோ அவர் (அந்த பகவான்)

ஸஹஸ்ராக்ஷ: ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலனுறுப்புக்களும் உள்ளதால் அவர் ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

227.ஓம் ஸஹஸ்ரபதே நம:

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

பாதா அஸ்யேதி திருப்பாதங்களை உடையவராதலால்

ஸஹஸ்ரபாத் பகவான் ‘ஸஹஸ்ரபாத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆயிரக்கணக்கான திருப்பாதங்கள் உடையவராக இருப்பதால் பகவான் ‘ஸஹஸ்ரபாத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸஹஸ்ரசீர்ஶா புருஶ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த (பரம)புருஶன் ஆயிரக்கணக்கான தலைகளை உடையவர்; அவருக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலன்களும், பாதங்களும் உள்ளன.

இங்கு ஆயிரம் என்றால் எண்ணிலடங்கா என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

————-

228.ஓம் ஆவர்த்தனாய நம:

ஆவர்த்தயிதும் சுழற்றுவது (சுழற்றுவதை)

ஸம்ஸார சக்ரம் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை

ஶீலமஸ்யேதி இயற்கையான குணமாக (கொண்டுள்ளபடியால்)

ஆவர்த்தன: பகவான் ‘ஆவர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால், பகவான் ‘ஆவர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

229.ஓம் நிவ்ருத்தாத்மனே நம:

ஸம்ஸாரபந்தான் ஸம்ஸாரத் தளைகளில்

நிவ்ருத்த ஆத்மா கட்டுப்படாத ஆத்மா (ஆத்மாவை உடையவராக இருப்பதால்)

ஸ்வரூபமஸ்யேதி இயற்கையாகவே

நிவ்ருத்தாத்மா பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும், இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லை. எனவே, பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னி ரனிலோ தரணீ தர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீ தர: ||

————–

230.ஓம் ஸம்வருதாய நம:

ஆச்சாதிகயா (பரம் பொருளை நம்மிடமிருந்து) மறைக்கும் தன்மையுடைய

அவித்யயா அறியாமையால்

ஸம்வ்ருதத்வாத் மூடப்பட்டுள்ளார்

ஸம்வ்ருத: எனவே, பகவான் ‘ஸம்வ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு, அறியாமையால் (அஞ்ஞானத்தால்) மூடியுள்ள படியால் அவர் ‘ஸம்வ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி, அஞ்ஞானத்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா தளைப்பட்டிருக்கிறான். ஞானத்தால் பரப்ரஹ்மத்தை உணர்ந்து மோக்ஷமடைகிறான். இங்கு, பரம்பொருளை அஞ்ஞானம் சூழ்ந்தது என்று பொருளல்ல (பகவானை அஞ்ஞானம் தீண்டாது). நமது அஞ்ஞானமானது (அறியாமையானது) பகவானை நம்மிடமிருந்து மூடி மறைத்துள்ளது என்று பொருள் கொள்ளவேண்டும்.

————

231.ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:

ஸம்யக் எல்லோரையும், எல்லாவிடங்களிலிருந்தும்

ப்ரமர்த்தயதீதி அழிக்கிறார்

ருத்ரகாலாத்யாபிர் ருத்ரன், காலன் (காலம்)

விபூதிபிர் இதி ஆகிய உருவங்களை தரித்து

ஸம்ப்ரமர்த்தன: பகவான் ‘ஸம்ப்ரமர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ருத்ரன், காலன் (காலம்) ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும், அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில் ருத்ரனாகவும், அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்) அழிக்கிறார். எனவே, அவர் ‘ஸம்ப்ரமர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

232.ஓம் அஹ:ஸம்வர்த்தகாய நம:

ஸம்யகஹ்னாம் சரியாக ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்)

ப்ரவர்த்தநாத் உருவாக்குகின்ற

ஸூர்யகதிரவனின் வடிவானவராய் இருப்பதால்

அஹ: ஸம்வர்த்தக: பகவான் ‘அஹ: ஸம்வர்த்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்) சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் ‘அஹ: ஸம்வர்த்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

233.ஓம் வஹ்னயே நம:

ஹவிர் யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் – தேவர்களின் உணவு)

வஹநாத் தேவர்களுக்குக் கொண்டு செல்லும்

வஹ்னி: அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஹ்னி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் – தேவர்களின் உணவு) தேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஹ்னி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

234.ஓம் அனிலாய நம:

அனிலய(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதித்வாத் தொடக்கமும், முடிவும் இல்லாமையால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். காற்றிற்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. எனவே, காற்றின் வடிவில் இருக்கும் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதானாத்வா அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது

அனில: எனவே பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது. எனவே, பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநநாத்வா (மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனில: என்றால் ஓரிடத்தில் நிலையில்லாதது (காற்று) என்று பொருள். இந்த திருநாமத்தையும் அவ்வாறே ஆச்சார்யர் விளக்கியுள்ளார். இதிலுள்ள வெவ்வேறு அர்த்தங்களால், வாயுவின் வெவ்வேறு குணங்களைக் கொண்டு பகவானை வர்ணித்துள்ளார் ஆதிசங்கரர்.

——-

235.ஓம் தரணீதராய நம:

சேஶதிக்கஜாதி ரூபேண ஆதிசேடன், எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) ஆகிய வடிவிலும்

வராஹரூபேண ச வராஹ அவதாரத்தின் பொழுதும்

தரணீம் பூமியை

தத்த இதி தாங்குவதால்

தரணீதர: பகவான் ‘தரணீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) வடிவில் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார். மேலும், பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார். எனவே, பகவான் ‘தரணீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு:|

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
  2. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

236.ஓம் ஸுப்ரஸாதாய நம:

ஶோபனமிக மங்களமான

ப்ரஸாதோ அவரது கருணை

யஸ்ய அபகாரவதாமபி தன்னை (பகவானை) அவமதித்து, தவறிழைத்த

ஶிஶுபாலாதீனாம் சிசுபாலன் முதலானோருக்கும்

மோக்ஷப்ரதாத்ருத்வாத் இதி முக்தியை அளிப்பதால்

ஸுப்ரஸாத: பகவான் ‘ஸுப்ரஸாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருணை மிகவும் மங்களகரமானது. அவரை அவமதித்து, தவறிழைத்த சிசுபாலன் முதலானோருக்கும் முக்தியை அளிக்கக்கூடியது. எனவே, அவர் ‘ஸுப்ரஸாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

237.ஓம் ப்ரஸன்னாத்மனே நம:

ரஜஸ்தமோப்யாம் ரஜோ மற்றும் தமோ குணங்களால்

அகலுஶித மாசடையாதது (தீண்டப்படாதது)

ஆத்மா ஆன்மாவையும்

அந்த:கரணமஸ்யேதி மனதையும் உடையவராதலால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆன்மாவும், மனதும், உருவமும் சுத்தஸத்வ வடிவானது. ரஜோ, தமோ குணங்களால் மாசடையாதது. எனவே அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த:கரணம் என்றால் உள்ளுறுப்புகள் என்று பொருள். இவ்விடத்தில் இதற்கு மனம் என்று பொருள் கொள்வதே ஏற்புடையதாகும். 

கருணார்த்ர ஸ்வபாவத்வா கருணையே வடிவானவராக இருப்பதால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருணையே வடிவானவராக இருப்பதால் பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது

ப்ரஸன்னஸ்வபாவத்வா மகிழ்ச்சியான இயல்புடையவராதலால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

காருணிக இத்யர்த்தமிகவும் கருணையுள்ளவர் என்று இதற்குப் பொருள்.

மிகவும் கருணையுள்ளவரானதால் பகவான் இயல்பாகவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எனவே, அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யாள் இங்கு ‘மகிழ்ச்சியான ஸ்வபாவமுடையவர்’ என்று உரை தந்துள்ளார். மேலும், இதற்கு ‘பரம காருணிகர்’ என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும் பொழுது, தனது கருணையால் தன் அடியவர்கள் மகிழ்வதைக் கண்டு தான் மகிழ்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

அவாப்தஸர்வகாமத்வாத்வா தனது அனைத்து ஆசைகளும் ஈடேறப்பெற்றவர்

ப்ரஸன்னாத்மா (ஆதலால்) பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அனைத்து ஆசைகளும் (எண்ணங்களும்) ஈடேறப்பெற்றவர். அதனால் அவரது மனம் என்றுமே மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் (ப்ரஸன்னமாக) இருக்கும். எனவே, அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————-

238.ஓம் விஶ்வத்ருஶே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை

த்ருஶ்ணோதீதி காக்கிறார்

விஶ்வத்ருக் (எனவே) பகவான் ‘விஶ்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞித்ருஶா ப்ராகல்பே பலமானவர், துணிச்சல் மிக்கவர் என்ற பொருள்படும் ‘ஞித்ருஶா’ என்ற தாதுவிலிருந்து ‘த்ருக்’ என்ற விகுதி உருவாகியுள்ளது.

இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கிக் காப்பதால் பகவான் ‘விஶ்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

239.ஓம் விஶ்வபுஜே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை

புங்க்தே புனக்தி (ப்ரளய காலத்தில்) உண்கிறார்

பாலயதீதி வா (மற்றெல்லா நேரங்களிலும்) காத்தருள்கிறார் 

விஶ்வபுக் எனவே, பகவான் ‘விஶ்வபுக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் உண்கிறார். மற்றெல்லா காலங்களிலும் அதை காக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வபுக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புங்க்தே மற்றும் புனக்தி (வடமொழியில் நான்காவது ‘ப’) என்ற சொல்லிற்கு உண்பது, அனுபவிப்பது என்று பல பொருள்கள் உண்டு. பெரும்பாலும் இந்த சொல் உண்பதைக் குறிப்பதால்  இந்தப் ப்ரபஞ்சமே பரம்பொருளின் அனுபவத்திற்காகவே ஏற்பட்டதாகும். எனவே, ப்ரபஞ்சத்தை அனுபவிப்பவர் என்ற பொருள் கொண்டாலும் தகும்.

———————

240.ஓம் விபவே நம:

ஹிரண்யகர்ப்பாதிரூபேண ‘ஹிரண்யகர்ப்பர்’ முதலான

விவிதம் பல்வேறு

பவதீதி உருவங்களை ஏற்பதால்

விபு: பகவான் ‘விபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஹிரண்யகர்ப்பர்’ முதலான பல்வேறு உருவங்களை ஏற்பதால் பகவான் ‘விபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நித்யம் விபும்’ (முண்டக உபநிஶத் 1.6)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) எப்பொழுதும் உள்ளது, அனைத்துமாகத் தோற்றமளிப்பது.

இதி மந்த்ரவர்ணாத் | இந்த (உபநிடத) மந்திரத்தின் படி (பகவான் ‘விபு’ என்று அழைக்கப்படுகிறார்).

————

241.ஓம் ஸத்கர்த்ரே நம:

ஸத்கரோதி நற்காரியம் புரிகின்றார்

பூஜயதீதி (நல்லோரை) வணங்குகிறார்

ஸத்கர்த்தா (எனவே) பகவான் ‘ஸத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரை வணங்குகிறார். எனவே, அவர் ‘ஸத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

242.ஓம் ஸத்க்ருதாய நம:

பூஜிதைரபி (அனைவராலும்) வணங்கத்தக்கவர்களாலும்

பூஜிதவணங்கப்படுகிறார்

ஸத்க்ருத: (எனவே) பகவான் ‘ஸத்க்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் வணங்கப்படும் தேவர்கள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களும் பகவானை வணங்கி, வழிபடுகின்றனர். எனவே, பகவான் ‘ஸத்க்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

243.ஓம் ஸாதவே நம:

ந்யாய ப்ரவ்ருத்ததயா அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால்

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாதயதீதி வா உருவாக்குகிறார்

ஸாத்யபேதான் (இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறாகக் காட்சியளிக்கும்) பொருட்களுக்குள் பேதங்களை

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மம் எனும் ஒரே வஸ்துவால் (பொருளால்) ஆன இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறு பேதங்களை உருவாக்குவதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உபதானாத் மூலப் பொருளாய் (மூல காரணமாய்) இருக்கிறார்

ஸாத்யமாத்ரஸாதகோ வா (இங்கு பலவாகத் தெரியும்) அனைத்துப் பொருட்களையும் உருவாகும்

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்தப் ப்ரபஞ்சத்தில் பலவாகத் தெரியும் அனைத்துப் பொருட்களுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

244.ஓம் ஜான்ஹவே நம:

ஜனான் அனைத்து ஜீவராசிகளையும்

ஸம்ஹாரஸமயே அழியும் காலத்தில்

அபஹ்னுதே அபனயதீதி தன்னுள் லயமடையச் செய்வதால்

ஜஹ்னு: பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ப்ரளய காலத்தில் (இந்தப் ப்ரபஞ்சம் அழியும் காலத்தில்) அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள்ளே லயமடையச் செய்கிறார்.  எனவே, அவர் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனான் + அபஹ்னுதே = ஜஹ்னு:

ஜஹாத்யவிதுஶோ (ஜஹாதி அவிதுஶோ) ஞானமற்றோரை விடுத்து

பக்தான் நயதீதி பக்தர்களை வழிநடத்திச் செல்கிறார்

பரம்பதமிதி வா (தன்னுடைய) பரமபதத்திற்கு (வைகுண்டத்திற்கு)

ஜஹ்னு: பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னிடம் பக்தியில்லாத, ஞானமற்றோரை விடுத்து, தனது பக்தர்களை தன்னுடைய மேலான பரமபதத்திற்கு வழிநடத்திச் செல்வதால் பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

245.ஓம்நாராயணாய நம:

நர ஆத்மா ‘நர’ என்றால் ஆத்மா என்று பொருள்

ததோ ஜாதான்யாகாஶாதீனி அந்த ஆத்மாவின் பிறப்பிடமான ஆகாயம் முதலியவை

நாராணி ‘நாரம்’ என்று அழைக்கப்படும்

கார்யாணி தானி அயம் காரணாத்மனா வ்யாப்னோதி (அந்த ஆகாயம் என்னும்) காரியத்தை (அதன் காரணமாய் இருந்து) பரவி இருப்பதால்

அதஸ்ச தான்யயனமஸ்யேதி அதற்கு (நாரங்களுக்கு) இருப்பிடமாக (அயனமாக) இருப்பதால்

நாராயண: பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஜாமிளனுக்கு முக்தியளித்த திருநாமம். திருமங்கையாழ்வாரை ஆட்கொண்ட திருநாமம். நாராயண நாமத்தின் பெருமையை விவரிக்க இயலாது.

நரம் என்னும் ஆத்மாக்களின் பிறப்பிடமாக இருப்பதால் ஆகாயம் முதலானவை ‘நாரங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த நாரங்களை, அவற்றின் காரணமாக இருப்பதால், பகவான் பரவியிருக்கிறார் (வ்யாபித்திருக்கிறார்). எனவே, அவர் அவற்றின் இருப்பிடமாகிறார் (அயனம்). எனவே, பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஶ்யதே ஶ்ரூயதேபி வா |

அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்த நாராயண: ஸ்தித:’ || (நாராயண உபநிஶத் 13.1-2)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாம் பார்த்தும், கேட்டும் அறிந்து கொள்ளும் (எல்லையற்ற) இந்தப் ப்ரபஞ்சத்தை உள்ளும், புறமுமாக பகவான் நாராயணர் பரவியுள்ளார் (வ்யாபித்துள்ளார்).

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

நரஜ்ஜாதானி தத்வானி நாராணீதி ததோ விது: |

தான்யேவ சாயன தஸ்ய தேன நாராயண: ஸ்ம்ருத: || (மஹாபாரதம்)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: நரனிலிருந்தே அனைத்து தத்துவங்களும் உருவாகின்றன. எனவே, அவை ‘நாரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாரங்களைத் தனது முதல் இருப்பிடமாகக் (அயனமாகக்) கொண்டுள்ளதால், பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இந்த மஹாபாரத ஸ்லோகத்தின் படி (பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

நாராணாம் ஜீவானாம் அனைத்து ஜீவராசிகளும் ‘நாரங்கள்’ ஆகும்

அயனத்வாத் ப்ரளய இதி வா ப்ரளய காலத்தில் (இந்த நாரங்களாகிய ஜீவராசிகள் அனைத்தும்) சென்றடையும் இடமாக இருப்பதால்

நாராயண: பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாரங்கள் என்றழைக்கப்படும் ஜீவராசிகள் அனைத்தும் ப்ரளய காலத்தில் பகவானுக்குள்ளே சென்று ஒடுங்குகின்றன. இவ்வாறு, நாரங்களின் இலக்காக (அயனமாக) இருப்பதால், பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நாராணாமயன யஸ்மாத்தஸ்மான் நாராயண: ஸ்ம்ருத:’ (ப்ரஹ்மவைவர்த்த புராணம்)

ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: நாரங்களின் இருப்பிடமாதலால் பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ப்ரஹ்மவைவர்த்தாத் | இவ்வாறு ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூனவ: |

தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத: || (மனு ஸ்ம்ருதி 1.10)

மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டு