Archive for the ‘Uncategorized’ Category

ஸ்ரீ அருளிச் செயல்களில் இசை –பண் –

April 28, 2023

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -50-

திரு வாய் மொழி ஒன்றுக்கும் அன்றே வேதத்வம் சாதித்தது .
இவருடைய பிரபந்தங்கள் நாலுக்கும் ஒக்கும் இறே –ஆகை இறே
வேத சதுஷ்டய -சூரணை 43–இத்யாதி வாக்யத்தில் இவர் பிரபந்தங்கள் நாலையும்
நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக அருளிச் செய்தது –
அதில் எந்த பிரபந்தம் எந்த வேதத்தின் உடைய ஸ்தானத்திலே என்ன அருளிச் செய்கிறார் .

இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே
பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே-

(புண்புரை வேதம் போலே என்றும்
இசைகொள் வேதம் போலே என்றும்
தனித்தனியே ஆக்கவுமாம் -ஒரே வாக்யமாகக் கோடலுமாம்
பண் இராகம் /ஸ்வரங்கள் அமைப்பு -இசை அதன் சுவை கான ஆனந்தம் )

அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய ,திரு அந்தாதி
என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள்
ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..

பண்புரை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-

பண்ணார் பாடல்-திருவாய்-10-7-5–என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –
பண்புரை வேதம்—திருவாய்-6-6-5-என்றும் –இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்
பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..

திருவாய் மொழியின் வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய -பண்புரை வேதம்-என்ற பாடமும் ,
இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் ,
ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..
அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது .
மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .

பண்புரை வேதம் என்றது -பண்ணை புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் என்ற படி ..
இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி
பண்ணார் பாடல் என்று -திரு வாய் மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் -ஆகையாலே
சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க ,இவற்றை இவர் இப்போது எடுத்தது-

சாமவேதம் உள்ள அருளிச் செயல்களை எடுக்காமல் இயல் பாவுக்கு அப்புறம்
இசைப்பா -பண்ணும் இசையும் சேர்ந்த சாம வேதம் போலே திருவாய் மொழி வைலக்ஷண்யம்
அருளிச் செய்கிறார் -இத்தால்

——————————————————————————————————————————

சூரணை-51-

ஆனால் அந்த சதுஷ்டயத்தில் ருக்கு சாம ரூபேண விஸ்த்ருதமாம் ஆகாரம் இங்கும் ஒக்குமோ என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் ..

ருக்கு சாமத்தாலே சரசமமாய்
ஸ்தோபத்தாலே பரம்புமா போலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று-

(ச ரசம் -ரசத்தோடு கூடியது / ஸ்தோபம் -இசை நிறைச் சொற்கள் /
மந்த்ரம் – ரிக் இசை சேர்க்க சாமம் ஆகும் – / திரு விருத்த பாசுரம் திருவாய்மொழியாக விஸ்திருதம் ஆகும் )

அதாவது-
சாம ஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வ விவரணமாய்-
ருசஸ் சாம ரச -சாந்தோக்யம் -ருக்குக்கு சாமம் ரசமாகும் —-என்கிற படியே தனக்கு
ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ,
ரச சகிதமாய் ,-ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விச்த்ருதமாமா போலே
ருக் வேத ஸ்தாநேயாய் இருக்கிற சொல்லார் தொடையலான-(தொடையல் -சப்த சந்தர்ப்பம் )திருவிருத்தம்-100-
திரு விருத்தம் நூறு பாட்டும்-
இசை கூட்டி-திருவாய்-2-4-11- என்கிற படியே -இசையிலே கூட்டினவாறே
சாம வேத ஸ்தாநேயாய் –அமர் சுவை ஆயிரம்-திருவாய்-1-3-11–என்கிற படியே
சரசமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாய் பரம்பின என்கை ..

—————–

கொண்டாட்டம் -நம் பெருமாளுக்கு -முதலில் மணவாள மா முனிவரைப் பற்றியே -இன்றும் சேவிப்பார்கள் –
பாவின் இன்னிசைப் பாடித் திரிவனே –
நறையூர் நின்ற நம்பி -நான்கு வேதம் ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை எழும் அறிந்த அந்தணர்கள் –
காழிச் சீராம விண்ணகரம் –பதிகத்திலும் இப்படி உண்டே –
திரு நெடும் தாண்டகம் –நெடு வீணை முலை மேல் தாங்கி –திரு மங்கை ஆழ்வார் வீணை வித்வான் –

வர வர முனி சதகம் -எறும்பி அப்பா -பிரதிவாதி பயங்கர அண்ணாவும் அருளி -மா முநிகலையே பர தெய்வம் ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -காட்டி அருளினவர்கள் –
40 ஸ்லோகம் -எறும்பி அப்பா அருளிச் செய்த சதகம் -தேவரீர் திரு நாமத்தையே சந்கீர்த்தனமாக படும் படி அனுக்ரஹம் செய்ய மா முநிகலையே பிரார்த்திக்கிறார் -பிரகிருதி தடைகளை நீக்கி அருள வேணும் –
44- ஸ்லோகம் -நித்யம் -திருப்பள்ளி எழுச்சி -அடியவர்கள் சங்கீர்த்தனம் -சுருதி உடன் சேர்த்து பாடும் அடியவர் திருவடி களிலோ திளைத்து இருக்க வேண்டும் –
ஸ்லோகம் -47-கமல நயனம் ஆலோக்யம் -நம்பெருமாளை மங்கள சாசனம் செய்ய எழுந்து அருளும் பொழுது தேவரீர் திரு நாம சங்கீர்த்தனம் செய்து நாட்டியம் ஆட வேண்டும் –
81 ஸ்லோகம் -சக்ரவர்த்தி திருமகன் வார்த்தை -மா முனிகளை பற்றி -தனது கோயில் ஆழ்வாரை திறக்க முடியாமல் இருக்க –
இளைய பெருமாள் -போலேவே நினைத்து இருப்பதாக -அருளிச் செய்து உள்ளார் -மா முனிகள் திரு நாம சங்கீர்த்தனம் எவ்வளவு ஏற்றம் என்பதை காட்ட –
பிரதிவாத பயங்கர அண்ணா அருளிச் செய்கிறார் திரு மூல வைபவம்
மூலம் –அவதார மூலம் சேதனர் முக்திக்கு மூலம் -நம் ஆழ்வார் திருவாய் மொழிக்கு சாம்ராஜ்ய மூலம் –கலி தோஷம் களையும் மூலம் -தாப தரைய சம்சாரிகளுக்கு சகல புருஷார்த்தங்களுக்கும் மூலம் –

தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் நாத முனிகளை பற்றி தேசிகன் –
50 சூரணை ஆசார்ய ஹிருதயம் பண்ணார் பாடல் -புண்புரை இசை கொள் வேதம் போலே -சாம வேதம் என்று சொல்லாமல்
வேதம் சாம்யம் திருவாய்மொழிக்கு சாதித்து -மேம்பட்டது -நம் ஆழ்வார் நாயனார் மா முனிகள் ஹிருதயத்தில் உள்ளவற்றை காட்டும் கிரந்தம் –
இசை கொள் வேதம் -இசை பற்றி அறிய செய்து மா முனிகள் காட்டி அருளுகிறார் –
ருக் யஜூர் அதர்வணம் –
பண்புரை புண்புடை வேதம் –அருளிச் செயல் -ஸ்ரீ ஸூ க்திகள்
நீர்மையை உடைய வேதம் -இசையுடன் சேர்ந்த வேதம்
நாயனார் மட்டும் பண்புரை வேதம் காட்டி அருளுகிறார் –
மா முனிகள் வியாக்யானம் கொண்டே இத்தை அறிய முடியும் –
பண்ணை புரைந்து உள்ள வேதம் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் பண் -ராகம் –
பண்ணியும் இசையும் கொண்டதே திருவாய் மொழி -சாம வேதத்துக்கு இசை ராகம் சுரம் உண்டே –
சாந்தோக்யம் -ராகமும் காட்டி அருளுகிறார்
செம் சொல் கவிகாள் –பண்ணார் பாடல் கவிகள் -பண்ணுடன் சேர்ந்து புஷ்பம் பரிமளம் சேர்ந்து இருக்குமா போலே திருவாய் மொழியும் இசையையும் பிரிக்க முடியாது
பண் என்பதும் இசை என்பதும் தனி தனி -காட்டி அருளுகிறார் –
நாயனார் 6-6-5- பண்புடை வேதம் -என்பதை பண்புரை வேதம் -பொய்யில்லாத மா முனி -ஐந்து வியாக்யானங்களும் பண்புடை சொல்ல நாயனார் மட்டுமே பண்புரை வேதம் –வேதத்திலே ராகம் உண்டு -காட்டி –
இசை கொள் வேதம் -நாதம் -என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்ய -தாள பேதம் -நாயனார்
பண் -இசை ஏழு ஸ்வரங்கள் நரம்பு -குதிரை கால் -பல அர்த்தங்கள் -மின்னிடை மடவார் -பண் -அலங்காரம் பொருளில் –
பெயர்க்காரணம் -சிலப்பதிகாரம் -அடியார்க்கு நல்லார் -பண் -ஒலிகள் கிளம்பி -நெஞ்சு நாக்கு உதடு பல் -8 இடங்களில் ஒலி கிளம்பி -பாடி -பண்ணப்படுவதால் –
673 இதிகாரம் -தாமரைக் கண்ணன் -உடம்பு ஒலிகள் தொண்டை ஒலிகள் 8 பண்ணப் பட்டு
இசை -இசைந்த பாடல் -பொருந்தி சேர்ந்து -லஷணம்
வைகுந்தா -இசையோடும் பண்ணோடும் பாட வல்லார் பண் -கானம் -நம்பிள்ளை இசை குருத்வ லகுத்வாதிகள் -தாளம் 6 அங்கங்கள் -லகு குறு தாளத்தின் அங்கங்கள்
கானம் -பாட்டு -ராகம் -அர்த்தம் – வாய் கானம் புல்லாம் குழல் கானம் இசை -வார்த்தை இல்லை சுரங்கள் –
நாயனார் -69 சூரணை –வியாக்யானம் -பண் இசை தாளம் இதுக்கும் உண்டு
பண் ஆவது -முதிர்த குறிஞ்சி -நட்டபாரை நாட்டை நட்ட ராகம் -பந்துவராளி இந்தளம் -6 ராகம் முதலானவை –
இசை யாவது -காந்தார பங்கஜம் -ஏழு இசைகள்
தாளம் -கஜ கர்ண -பல தாளங்கள் –
யோஜனை வாசி பெண்ணுக்கும் பேதைக்கும் தெரியும்படி -கற்றோர்கள் தாம் உகப்பார் -ஆசை உள்ளோர் –பின் உகப்பார் மற்றோர் ஆசார்யத்தால் இகழந்து வந்தால் என்ன —
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -கல்வி மேல் ஆசை தெரியும் –
கானம் என்பதற்கு ராகம் காட்டி -அருளுகிறார்
இசை -சப்த ஸ்வரங்கள் காட்டி அருளுகிறார்
தாளம் அங்கங்கள் பிரித்து காட்டி அருளுகிறார் –
சப்தம் குரல் ரிஷபம் சுத்தம் -மாறி உள்ளது என்பர் தப்பாக –
ஸ்லோகம் -அமர கோசம் -கொண்டு அருளிச் செய்கிறார் மா முனிகள் -சுவரத்துக்கு -குரல் போன்றவற்றையும் எடுத்துக் காட்டி -ச ரி க -போன்ற ஏழு ஸ்வரங்களும் –
விசத வாக் சிகாமணி மா முனிகள் –
தாளம் பற்றியும் ஸ்லோகம் காட்டி அருளுகிறார் -இது எங்கே என்றே இன்றும் அறியவில்லை -பிரசீதம் -10 தாளங்கள் காட்டி
52-சூரணை -சந்தோக்யம் -வேத கீத -உத்கீத –மாற்றி -சாந்தோக்ய சமம் –
காண ச்வரூபியாகி விசேஷிக்கையாலே
-வேதமும் கீதமும் –
யாழ் கருவி -அதோ அந்த பறைவை போலே -முதிர் சுவை –
முதிர் சுவை -அவனே ப்ரஹ்மம்-காண சாமான்யம் இல்லை யாழ் நரம்பின் பாலை என்ற ராகம்
தொல்காப்பியம் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை -பஞ்ச மரபு -அரிவனார் -சங்க காலத்து புலவர் -யாழ் விஷய சாஸ்திரம் இது -முதல் ஆழ்வார் பாசுரங்கள் இதில் காட்டி உள்ளார் –
பாலை -பஞ்ச மரபு நூலை மா முனிகள் அறிந்து வியாக்யானம் –
அஞ்சு யாழ் -காட்டி பாலை யாழ் ஒரு வகை -சாம வேத கீதனே -சாந்தோக்யம் -முக்கியம் போலே -பாலை யாழ் அனுசரித்து -இதில் அமைக்கப் பட்டு ஹரி காம்போதி -இப்பொழுது பெயர் –
வேதங்களில் ராகம் இருக்கு என்றும் சொல்லி சாந்தோக்யம் ஹரி காம்போதியில் உள்ளது என்றும் இதுவே முக்கியம்
புல்லாம் குழல் இதில் முக்கியம் இயற்க்கை -ஹரி காம்பு ஓதி -அத்தனை பண்களும் இதை அடிப்படையாக கொண்டே –
மங்களகரமான பண் -மா முனிகள் அபிமானிக்கப் பட்ட இயற்கையான மங்களகரமான பண் உருவாக்கப் பட்ட ராகம் இல்லை
கௌசிக புராணம் –பைரவி ராகம் –
இன்னும் பல ராகங்கள் மா முனிகள் காட்டி அருளுகிறார்
ஹரி காம்போதி திருப்பால்லாண்டு –
நாட்டிய குறிப்பு இசைக் கருவிகள் குறிப்பு பல உண்டு மா முனிகள் வியாக்யானங்களில் -இசை ஞானம் நம் போல்வாரால் அறிய முடியாதே -சாஷாத் ஆதிசேஷன் அம்சம் அன்றோ –
அந்தர காந்தாரம் படை போர் முக்கு முழங்கும் -சேராமல் பலர் பாடுவார்கள்
மா முனிகள் -ஏற்படுத்தி உள்ளவை -ஆற்றில் கரைத்த புளி அல்லவோ செந்தமிழ் ஆரணமே
த்யாகராஜர் -ஹரி காம்போதி -கீர்த்தனைகள்
புரந்தர தாசர் மாயா மௌலி மாற்றி -பாடுவதற்கு எளிமை என்று
சங்கீதமும் பகவானே –

———————

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் (http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

இசை (60)
கூத்து உவந்து ஆடி குழலால் இசை பாடி – நாலாயி:115/2

கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு – நாலாயி:260/3

யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4

கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3

எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/4

நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே – நாலாயி:718/4
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2

ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/3
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் – நாலாயி:1197/3
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/4
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/4
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1339/4
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
இருக்கினில் இன் இசை ஆனவனே – நாலாயி:1454/4
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/4
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் – நாலாயி:1514/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் – நாலாயி:1737/3
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/3,4
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் – நாலாயி:2734/1
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் – நாலாயி:2810/2
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் – நாலாயி:3042/1,2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை – நாலாயி:3052/1,2
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் – நாலாயி:3276/3
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/3
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/3
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு – நாலாயி:3280/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் – நாலாயி:3357/3
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே – நாலாயி:3425/4
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ – நாலாயி:3869/1

இசை-மின்கள் (1)
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

இசை-மின்களே (1)
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4

இசைக்கிற்றிராகில் (1)
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4

இசைக்கும் (1)
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/2

இசைகள் (2)
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி – நாலாயி:3877/2

இசைகாரர் (1)
பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் – நாலாயி:2953/3

இசைத்தனர் (2)
எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்-மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று – நாலாயி:3984/2,3

இசைத்தால் (1)
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

இசைத்து (1)
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே – நாலாயி:3626/4

இசைந்த (3)
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை – நாலாயி:793/1
சூதனாய் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம் – நாலாயி:887/1
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் – நாலாயி:2345/1

இசைந்து (4)
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் – நாலாயி:1841/1
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/4
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை – நாலாயி:2610/1

இசைப்ப (4)
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/2,3
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/1,2
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு – நாலாயி:2371/1

இசைப்பாரே (1)
சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே – நாலாயி:499/6,7

இசைப்பு (1)
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2

இசைபாடும் (2)
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:722/3
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4

இசைய (2)
இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற – நாலாயி:2568/3
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் – நாலாயி:2796/1

இசையகில்லா (1)
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/1,2

இசையாய் (1)
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே – நாலாயி:1476/4

இசையால் (2)
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3

இசையிலம் (1)
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

இசையின் (2)
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை – நாலாயி:1269/2
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/2

இசையினொடு (1)
கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே – நாலாயி:1717/3,4

இசையும் (5)
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் – நாலாயி:2088/2
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் – நாலாயி:2808/3

இசையும்-கொல் (2)
இசையும்-கொல் ஊழி-தோறு ஊழி ஓவாதே – நாலாயி:2580/9
என்று யாம் தொழ இசையும்-கொல்
யாவகை உலகமும் யாவரும் இல்லா – நாலாயி:2581/2,3

இசையே (1)
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4

இசையொடும் (3)
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/3,4
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
நா-தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:3472/3,4
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் – நாலாயி:3692/3

இசையோர் (1)
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/3,4

பண் (32)
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே – நாலாயி:191/4
பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன் – நாலாயி:252/2
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:574/4
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/3
பண் கடந்த தேசம் மேவு பாவ நாச நாதனே – நாலாயி:778/2
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1713/3,4
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று – நாலாயி:1811/1
பண் புரிந்த நான்மறையோன் சென்னி பலி ஏற்ற – நாலாயி:2127/1
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/3
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் – நாலாயி:2854/1
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார் – நாலாயி:3098/3
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல் – நாலாயி:3186/3
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து – நாலாயி:3202/3
கவிகளே கால பண் தேன் உறைப்ப துற்று – நாலாயி:3203/2
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு – நாலாயி:3461/3
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின் – நாலாயி:3833/1
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் – நாலாயி:3868/3
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி – நாலாயி:3961/3

பண்கள் (5)
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:970/4
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/3
பண்கள் தலைக்கொள்ள பாடி பறந்தும் குனித்தும் உழலாதார் – நாலாயி:3166/3

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Exclusive blog for Indian history ebooks-

February 25, 2023

Click to access 99999990041605-south-indian-inscriptions-vol-24-srinivasan-p-r-654p-tribes-india-english-1982.pdf

 

https://indianhistorybooks4.wordpress.com/

http://indianhistorybooks.wordpress.com/

http://indianhistorybooks2.wordpress.com/

https://indianhistorybooks3.wordpress.com

https://indianhistorybooks4.wordpress.com

https://indianhistorybooks5.wordpress.com

https://indianhistorybooks7.wordpress.com

https://asiaticsocietybooks.wordpress.com/

https://asiaticsocietybooks2.wordpress.com/

ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் —ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

ப்ரஹ்ம புராணம்
– ஆதி புராணம்
– 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும் கொண்டது
– 12 ஆண்டுகள் நைமிசாரண்யத்தில் நடந்த யாகத்தில் ரோம ஹர்ஷணர் கூறியது.
– புராண லக்ஷணங்கள்: அண்டங்கள், படைப்பும் ஒடுக்கமும், மன்வந்த்ரங்கள், ஸூர்ய சந்த்ர வம்ச வர்ணனை, அரச பரம்பரைகள்
– ப்ரஹ்மா தக்ஷனுக்குக் கூறியது

குறிப்புகள்:
– தக்ஷன் ப்ரஹ்மாவின் புத்ரன் அல்ல !!
– பல்லுயிர்கள், தேவர், அசுரர் படைப்பு விதம்
– குமரன் தோற்றம்
– படைப்புகளின் அதிபதிகள்

இக்ஷ்வாஹு பரம்பரை பெயர்க் காரணங்கள்

தமிழ் மன்னர் பரம்பரை குறிப்புகள்

கோனார்க் கோவிலும், பன்னிரெண்டு ஆதித்யர்களும், அஷ்டோத்ரமும்

பூரி ஜகன்னாதர், புவனேஶ்வர் வரலாறு
– கௌதம கங்கை பிறப்பும், சிறப்பும்

ததீசி முனிவரும், வஜ்ராயுதமும்
– மணிகுண்டலனும், விபீஷணனும்

யோகம், காயத்ரீ மஹிமை
எங்கும் நீர் சூழ்ந்திருந்த உலகில் நாராயணன் சயனித்திருக்க, அந்த நீரிலிருந்து வெளியே வந்த
பொன்னிற முட்டையின் இரு பகுதிகளாக ஆகாயம், பூமியையும், அவைகளில் திசைகள், மொழிகள்,
உணர்வுகள், காலங்களை ஸ்வயம்புவான நான் உண்டாக்கினேன்.
மனதால் ஸப்த ரிஷிகளையும், ருத்ரன், சனகாதியர்களையும் படைத்தேன், ஸ்வாயம்புவ மனு-ஶதரூபையிடம் வீரன்,
ப்ரியவ்ரதன், உத்தானபாதனை உண்டாக்கினேன்.
உத்தானபாதன் மகன் த்ருவன், அவன் பரம்பரையில் வந்த ப்ராசீனபர்ஹிக்கு ப்ரசேதனர்கள் எனும் பத்து பேர் பிறந்தனர்.
அவர்கள் தவத்தில் நாட்டம் கொண்டு ராஜ்யத்தை விட்டதால் எங்கும் காடாய் பெருகியது.
அவர்கள் கோபம் கொண்டு வாயு, அக்னியை தோற்றுவித்து காட்டை அழிக்கலாயினர்.
இதைத் தடுத்து சந்த்ரன் மரீஷை என்ற பெண்ணை அவர்களுக்கு மணம் முடித்து, அவள் மூலம் அரசாள
ஒருவனை உண்டாக்குமாறு கூற, அப்படியே அவர்கள் தக்ஷனை உண்டு பண்ணினர்.
(தக்ஷ ப்ரஜாபதி ப்ரஹ்மன் கால் கட்டை விரலிலிருந்து தோன்றினான் என்பது வேறொரு சதுர்யுகத்தில்).

தக்ஷன் ஆட்சியில் தான் உண்டுபண்ணின ஆயிரக்கணக்கானவர்களையும் ஒவ்வொரு முறையும்
நாரதர் தவம் செய்ய அனுப்பி விட, தக்ஷன் 60 பெண்களை படைத்து, 27 பெண்களை சோமனுக்கும்,
பத்துப் பெண்களை தர்ம தேவதைக்கும், 13 பேர்களை கஶ்யபருக்கும், எஞ்சிய பெண்களை அரிஷ்டநேமி,
ஆங்கீரசா முதலிய முனிவர்களுக்கும் , ப்ரியா என்பவளை பிரம்மனுக்கும் மணம் முடித்தான்.
தர்ம தேவதையை மணந்த பத்துப் பெண்களுள் அருந்ததிக்கு ‘உலகத்திலுள்ள பொருள்கள்’எனும் குழந்தைகளும்,
வசுவிற்கு அஷ்டவசுக்களும் பிறந்தன. அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய அனலன் என்பவனுக்குக் குமரன் பிறந்தான்.

கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையின் அவன் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றான்.
அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய பிரபசாவுக்கு விஸ்வகர்மா பிள்ளையாகப் பிறந்தான்.
சாத்யாவின் மக்கள் சாத்ய தேவர்கள், விஶ்வாவின் மக்கள் விஶ்வேதேவர்கள்,
அதிதிக்கு 12 ஆதித்தர்களும், திதிக்கு ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் முதலிய அரக்கர்களும்,
அவர்கள் சகோதரியாகிய சிம்ஹிகாவிற்கு வாதாபி, வில்வலன், மாரீசன் முதலிய அரக்கர்களும் தோன்றினர்.
தானவர் வம்சத்தில் பௌலமர், காலகேயர்கள் தோன்றினர்,
அரிஷ்டாவிற்கு(அர்ஷிதா) கந்தர்வர்களும், காசாவிற்கு யக்ஷர்களும், சுரபிக்கு பசுக்களும், எருமைகளும்,
வினதைக்கு அருணனும், கருடனும், தாம்ராவின் ஆறு பெண்களிடம் ஆந்தை, கழுகு, ராஜாளி, காக்கை,
நீர்ப்பறவைகள், குதிரை, ஒட்டகங்கள், கழுதைகளும், க்ரோதவசைக்கு நாகர்களும், இளையிடம் கொடி, புதர், மரங்களும்,
கத்ருவுக்கு அனந்தன், வாசுகி, தக்ஷன், நஹுஷன் போன்ற நாகர்களும், முனிக்கு அப்ஸரஸ்ஸுகளும் தோன்றினர்.

திதி தேவர்களை வெல்ல ஒரு பிள்ளை வேண்டி வ்ரதமிருக்கையில் விரதபங்கமான சமயத்தில்
இந்த்ரன் அணுவாய் நுழைந்து அந்த கருவை 7 துண்டுகளாகவும், மீண்டும் 49 துண்டுகளாகவும் சேதித்து விட
அவர்கள் ஸப்த மருத்துக்களாக அவனுக்கு நண்பனாகவே பிறந்து போனார்கள்.

துருவன் பரம்பரையில் வந்து நேர்மையாக அரசாண்டவன் அங்கன். அவன் மனைவியாகிய சுனிதா மிருத்யுவின் மகளாவாள்.
அவள் மகனான வேனன் மிருத்யுவுடன் சேர்ந்து கொண்டு எல்லையற்ற அகங்காரம் கொண்டவனாக திரிந்தான்.
அத்ரி முனிவர் வேனன் வலக்காலைக் கடைந்து. மிகக் குரூரமானதும், கொடியதும், பயங்கர மானதும்,
கரியதுமான குள்ளன் ஒருவனை வெளிக்கொணர்ந்தார்.
நிஷிதர்(உட்கார்) என்று அவனை அத்ரி கூறினார்.
துஷாரர்கள், துண்டுரர்கள், நிஷாதர்கள் இவன் வழி வந்தவர்கள்.
மீண்டும் வேனன் கையை கடைந்தபோது ஒளி வடிவுடன் சிறந்த கவசம் பூண்டு ப்ருது வெளிப்பட்டான்.

வேனன் இறந்து விட்டான். அவனை பூமிக்கு அரசனாக்கிய ப்ரஹ்மா, அவனுக்கு உதவி புரிய மரம், செடி, கொடிகள், விண்மீன்கள், கோள்கள்,
யாகங்கள், தியானம், வேதியர்களுக்கு சோமனையும், வருணனை கடலுக்கும், குபேரனை செல்வத்திற்கும்
அரக்கர்களுக்கும். பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கும் விஷ்ணுவையும், அஷ்ட வசுக்களுக்கு அக்னியையும்,
பிரஜாபதிகளுக்கு தக்ஷனையும், 49 மருத்துக்களுக்கும் இந்திரனையும், தைத்திரியர்கள், தானவர்கள்களுக்கு பிரஹலாதனையும், பிதுர்க்களுக்கு யமனையும், யட்சர்கள், ராட்சதர்கள்,
பிசாசுகளுக்கு ருத்ரனையும், மலைகளுக்கு இமவானையும், நதிகளுக்குக் கடலையும்,
பாம்புகளுக்கு வாசுகியையும், கந்தர்வர்களுக்கு சித்ரரதனையும், பறவைகளுக்குக் கருடனையும்,
யானைகளுக்கு ஐராவதத்தையும் தலைவர்களாக நியமித்தார். நான்கு திசைகளுக்கும் நான்கு தலைவர்களை நியமித்தார்.

ப்ருதுவின் ஆட்சியை புகழ்ந்து பாட முனிவர்கள் யாக வேள்வியில் சூதர், மாகதர்களை தோற்றுவித்தனர்.
அவர்களால் ப்ருதுவின் புகழை அறிந்து வறட்சியில் இருந்த மக்கள் அவனிடம் முறையிட அவன் கோபம் கொண்டு பூமி தேவியை மிரட்ட,
பசுவின் உருவில் இருந்த அவள் மிரண்டு மலைகளை சமவெளிகளாக்கி நீரைப் பாய்ச்சி வளம் கொழிக்க
செய்து கொள்ளும் முறையை அவனுக்குக் கூற அவனும் அப்படியே செய்து நல்லாட்சி புரிந்தான்.

மன்வந்த்ரங்கள்: இதுவரை சுவயம்புமனு முதல் ஆறு மனுக்கள் தோன்றி மறைந்துள்ளனர்.
இப்பொழுது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்திற்குத் தலைவன் ‘வைவஸ்வத மனு.
நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு மகாயுகம். எழுபத்தோரு மகாயுகங்கள் ஒரு மன்வந்த்ரம்.
ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் என்பவர்கள் மாறுவார்கள்.
இந்தக் கலியுகத்தில் அத்ரி, வசிஷ்டர், காசியபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் மற்றும் ஜமதக்கினி
ஸப்த ரிஷிகள். 12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள், 2 அஶ்வினி தேவர்களே
இந்த மன்வந்த்ரத்திற்கு தேவர்கள்.
பதினான்கு மன்வந்த்ரங்கள் கொண்டது ஒரு கல்பம்.

ஸூர்ய வம்சம்: ஆதித்யனுக்கு ஸம்ஞா, சாயா என்று இரு மனைவிகள்.
சம்ஞாவிற்கு வைவஸ்வத மனு, யமன், யமுனையும், சாயாவிற்கு சாவர்ணி மனுவும் தோன்றினார்கள்.
வைவஸ்வத மனு யாகப்பயனாக இக்ஷ்வாஹு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன்,
கரூஷன், வ்ருஷத்ரன் என்ற ஒன்பது மைந்தர்களையும், இளை எனும் பெண்ணையும் பெற்றான்.
இளைக்கும் சந்த்ரன் மகனான புதனுக்கும் புரூரவஸ் பிறந்தா, இளை ஸுத்யும்னன் எனும் ஆணாக மாறி விட்டான்,
அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா எனும் புத்ரர்கள் பிறந்தனர்.
உத்கலன் கிழக்கையும், கயையை கயாவும், வினதஷ்வா மேற்கையும், இளையின் பூமியை புரூரவஸ்ஸும் ஆண்டனர்,

இக்ஷ்வாஹுவின் நூறு மகன்கள் மூத்தவன் விகுக்ஷி(சசகன்) யாக வேள்விக்கு கொண்டு வரவேண்டிய இறைச்சியை பசியால் உண்டுவிட,
வஸிஷ்டர் ஆணைப்படி நாடு கடத்தப்பட்டு, இக்ஷ்வாஹுவுக்கு பின் வந்து அயோத்தியை ஆண்டான்.
(சசக – முயல் இறைச்சி). விகுக்ஷியின் மகன் காகுஸ்தன். அந்த வம்சத்தில் வ்ரிஹதஷ்யன் மகன் குபலாஶ்வன்,
இவன் உதங்க முனிவன் வேண்டுதலில் தன் நூறு புத்ரர்களுடன் சென்று கடற்கரையில் தன் மூச்சுக்காற்றால்
மணல் மேடுகளை உண்டாக்கி எல்லாரையும் ஹிம்சித்துக்கொண்டிருந்த துந்துபி எனும் அரக்கனை அழித்தான்,

த்ரிதஸ்வன், சந்த்ரஶ்வன், கபிலஶ்வன் என்ற புத்ரர்கள் தப்பினர்.
இதனால் இவன் துந்துமாறன் எனும் பெயரும் பெற்றான். துந்துமாறனுக்குப் பின் த்ரிதஸ்வனும் அவன் வழியில் த்ரையாருணியும் ஆண்டனர்.
த்ரையாருணி மகன் சத்யவ்ரதன் துஷ்டனானபடியால் வஸிஷ்டரால் காட்டுக்கு விரட்டப்பட்டான்.
த்ரையாருணி தவம் செய்ய வனம் புகுந்ததும் அரசனின்றி பஞ்சம் படர்ந்தது பன்னிரண்டு ஆண்டுகள்.
அப்போது விஶ்வாமித்ரர் காட்டில் தவத்தில் இருந்தார். நாட்டில் இருந்த அவர் மனைவி தன் மகனை கழுத்தில் கயிறு கட்டி (காலவன்)
விற்க முற்பட்டபோது சத்யவ்ரதன் அவர்களை காத்து, பசித்த அவர்களுக்கு வஸிஷ்டரின் பசுவை கொன்று, தானும் உண்டு அவர்களுக்கும் தந்து காத்தான்.
வஸிஷ்டர் அவன் மீது தந்தை சொல் கேளாதது, பசு கடத்தல், பசு வதை என்று மூன்று குற்றங்களை சாட்டினார்.
அன்றிலிருந்து அவன் த்ரிசங்கு எனப்பட்டான். விஶ்வாமித்ரர் காட்டிலிருந்து வந்து அவனையே அரசனாக்கி ஆளச்செய்தார்.
அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் படைத்தார்.

திரிசங்குவின் மகன் அரிச்சந்திரன். அவன் பரம்பரையில் வந்தவன் பாஹு, பகைவர்கள் படையெடுத்தபோது
கர்ப்பிணி மனைவியோடு வனம் புகுந்த அவன் அங்கேயே இறந்தான்.
அவன் மனைவியைக் காத்து அவுர முனிவர் வளர்த்துவந்தார்.
அவள் சக்களத்தி கொடுத்த விஷத்தோடே பிறந்த குழந்தை சகரன்.
அவனை வளர்த்த முனிவர் அனுக்ரஹத்தாலும், உபதேசித்த ஆக்னேய அஸ்த்ரத்தாலும் அவன்
கோனசர்ப்பர், மஹிஷகர், தார்வர், சோழ, கேரளர்களை வென்றான், வஸிஷ்டர் உத்தரவால் அவர்களை கொல்லாமல் விட்டான்.
சகரனுக்கு கேசினி, சுமதி என்று இரு மகன்கள். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு பஞ்ச ஜனனும், சுமதிக்கு
நெய்க்குண்டத்தில் அறுபதினாயிரம் பிள்ளைகளும் பிறந்தனர்.
இவர்களில் வர்ஹிகேது, ஸுகேது, பஞ்சஜனன் ஆகியோர் தவிர ஏனையோர் தென் கடற்கரையில் கபிலர் பார்வையால் சாம்பலாயினர்,
பஞ்சஜனன் மகன் அம்ஶுமான், அவன் மகன் திலீபன். அவன் மகனாகிய பகீரதன்.

இவர்கள் வழியில் தோன்றியவன் ரகு.
இவனுடைய பேரனே பிரசித்தி பெற்ற இராமனின் தந்தையாகிய தசரதன், அஜனின் மகன்.

சந்த்ர வம்ஶம்:
ப்ரஹ்மாவின் மானஸீக புத்ரர்களில் ஒருவரான அத்ரியின் தவப்பலனாக சோமன் பிறந்தான்.
அவன் பல்லாண்டுகள் தவமிருந்து செடி, கொடி, மரங்கள், பிராமணர்கள், சமுத்திரங்களின் தலைமைப் பதவியை ப்ரஹ்மனால் கொடுக்கப்பட்டான்.
ராஜசூய யாகமும் செய்த அவன் அகந்தையால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் மனைவியைக் கடத்திச் சென்று அவளிடம் புதனை மகனாகப் பெற்றான்.
அவளை மீட்க ப்ருஹஸ்பதியின் பக்கம் தேவர்களும், சிவபெருமானும் சோமனின் பக்கம் சுக்ராச்சார்யாருடன் அசுரர்களும் போரிட்டனர்.
ப்ரஹ்மா இதை நிறுத்தி தாரையை ப்ருஹஸ்பதிக்கு மீட்டுக்கொடுத்தார். தேவகுரு புதனை ஏற்கவில்லை.

புதனுக்கும் இளைக்கும் தோன்றியவன் புரூரவஸ். அந்த வம்சத்தில் வந்தவன் நகுஷன்,
அவனுக்கும் விரஜாவுக்கும் பிறந்தவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்ற அறுவர்.
யயாதி, சுக்ரரின் மகள் தேவயானியையும், தானவர் மகளான ஶ்ரமிஷ்டையையும் மணந்து கொண்டான்.
தேவயானிக்கு யது, துர்வஸு என்ற புதல்வர்களும், த்ருஹ்யு, அனு, புரு மூவர் ஷ்ரமிஷ்டாவிற்கும் பிறந்தனர்.

புருவிடம் இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி, நீண்ட காலம் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவன் இளமையைத் தந்தான்.
புருவின் பரம்பரையில் வந்தவன் பரதகண்டம் என்று பெயர் வரக் காரணமான பரதனாவான்.
பரதனின் பரம்பரையில் வந்த ‘குரு’ என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்களே கெளரவர்கள்.

யயாதி மன்னனின் மகனாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்களே பாண்டியர்கள், கேரளர்கள், சோழர்கள்.

த்ருஹ்யு பரம்பரையில் வந்தவர்களே காந்தார மன்னனாகிய சகுனி முதலிய காந்தார தேசத்தவர்,
யயாதியின் பேரனாகிய சஹஸ்ரதனின் வழியில் வந்தவனே இராவணனை வென்ற கார்த்தவீர்யார்ஜுனன், இவர்கள் ஹைதயர்கள் எனப்படுவர்.
யதுவிற்கு ஸஹஸ்ரதன், பயோதன், க்ரோஷ்டு, நீலன், அஞ்சிகன் புதல்வர்கள். குரோஷ்டுவின் வழியில் வந்தவர்கள் வ்ருஷ்ணிகள், அந்தகர்கள்.

பூமண்டல வர்ணனை: விஷ்ணு புராணத்தில் விரிவாக. கல்பங்கள் முடியும் போது பூ, புவ:, ஸுவ: லோகங்கள் மட்டுமே அழியும்.
உத்கல (ஒரிஸ்ஸா) தேசத்தில் கோனார்க் அல்லது கோனாதித்யனுக்குக் கோவில் உள்ளது (அர்க்கன், ஆதித்யன் சூர்யனின் பேர்கள்).
இக் கோயிலின் எதிரே கிழக்கு முகமாக நின்று கொண்டு எதிரே உள்ள மணலில், எட்டு இதழ்களை உடைய ஒரு தாமரையை
சந்தனக் கட்டையால் வரைய வேண்டும். அத்தாமரையின் நடுவே ஒரு தாமிரப் பாத்திரத்தில் நெய், எள், தண்ணிர், சிவந்த சந்தனக் கட்டை,
சிவப்புப் பூக்கள், தர்ப்பை ஆகியவற்றைப் போட்டு, தாமரையின் நடுவே அப்பாத்திரத்தை வைத்து
சூரியன் புறப்படுகின்ற நேரத்தில் வழிபட்டால் முன் ஏழு ஜென்மங் களில் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

ஒரே ஆதித்தன் பன்னிரண்டு வகையான பணிகளைச் செய்கிறான்.
இந்திரன் அசுரர்களை அழிக்கிறான். தத்தன் உயிர்களைப் படைக்கிறான். பர்ஜன்யன் மழை பொழிவிக்கிறான்.
த்வஷ்டா தாவரங்களிலும், பூஷ்ணன் தான்யங்களை உற்பத்தி செய்கிறான், அர்யமாவாக காற்றை வீசுகிறான்,
பகலனாக எல்லா உயிர்களிலும் இருக்கிறான். விவஸ்வான் நெருப்பிலும், விஷ்ணு பகைவர்களையும் அழிக்கிறான்.
அம்சுமான் காற்றிலும், வருணன் நீரில், மித்ரன் சந்த்ரனிலும், சமுத்ரத்திலும் இருக்கிறான்.

இப்படி ஒரே சூர்யன் 12 மாதங்களில் 12 அணுக்களில் ஒளிர்கிறான். 12 சிறப்புப் பெயர்களும் அவனுக்குத் தரப்பட்டுள்ளன.
அவை ஆதித்யா, சவிதா, சூர்யன், மித்ரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, திவாகரன்,
சித்ரபானு, ரவி. தவிர நான்முகனே சூரியனுக்கு 108 பெயர்களைக் கூறுகிறார் பிரம்ம புராணத்தில்.

பூரி ஜகன்னாதர்: சத்தியயுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு
இந்திரத்யும்னன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.
ஷிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரத்தில், அந்நதிக் கரையில் மகாகாளர் கோயிலும், கோவிந்தஸ்வாமி,
விக்ரம ஸ்வாமி என்ற இரண்டு விஷ்ணு ஆலயங்களும் ஏற்கெனவே இருந்தன.
மஹாகாளரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு,
இதெல்லாம் தாண்டி ஒரு புது ஆலயம் விஷ்ணுவுக்கு எழுப்ப இடம் தேடி புருஷோத்தம க்ஷேத்ரம் அடைந்தான்.
பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது.
யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங்களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று.
எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான்.
அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார்.

அந்த க்ஷேத்ரத்திலே தான் இப்போது கோயில் நிர்மாணம் தொடங்கு வதற்கு முன் ஒர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென
அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது.
பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர்.
எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு
விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார்.
மறுநாள் அந்த மரத்தை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக
பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் விநாடி நேரத்தில் செய்து முடித்தனர்.

12 வருட பிரளய நெருப்பை அணைக்கும் மாமழை பன்னிரண்டு வருடங்கள் விடாது பெய்தது.
இப்பொழுது நெருப்புக்குப் பதிலாக எங்கும் நீர் மயம். நீரில் மிதந்த ஆலமரத்தின் கிளை ஒன்றில் ஒரு பொன் படுக்கையில்
பாலகன் ஒருவன் படுத்திருக்கக் கண்டார் மார்க்கண்டேயர்.
அப்பாலகனின் ஆணையின்படி அவன் வாயினுள் சென்றார் மார்க்கண்டேயர். பாலகன் வயிற்றினுள்
அண்டங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பது கண்ட மார்க்கண்டேயர் வெளியே வந்து விஷ்ணுவை துதித்துக் கொண்டு பல்லாண்டுகள் அவருடனேயே இருந்தார்.
அவர் தவத்தை மெச்சிய விஷ்ணு, அவர் வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூறினார்.
உடனே மார்க்கண்டேயர் புருஷோத்தம க்ஷேத்திரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும்.
மக்கள் மனத்தில் அரியும் சிவனும் ஒன்று என்ற எண்ணம் நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
விஷ்ணுவும் அதற்கிசையவே சிவபெருமானுக்கு “புவனேஷ்வர்” ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
ஸ்வேதா என்ற நேர்மையுள்ள அரசன் ஜகந்நாதர் ஆலயத்திற்கு அருகில் ஸ்வேத மாதவன் என்ற பெயருடைய விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார்.

மஹாபலி கதை: மற்ற புராணங்களில் விரிவாக.
கங்கை கௌதமியான கதை:
விக்ரம அவதாரத்தில் ப்ரஹ்மன் கமண்டல நீரால் விஷ்ணுவின் பாதத்தைக் கழுவ, அது நாற்புறங்களில் பிரிந்து ஓடியது.
ஒரு பகுதி சிவனார் தலையில் கங்கையானது. பார்வதியின் கவலையைப் போக்க கங்கையை
சிவன் தலையிலிருந்து கீழே இறக்க விக்னேசர் விரும்பினார்.
எங்கும் பஞ்சம் படர்ந்திருந்த போது கௌதமர் ஆஶ்ரமம் மட்டும் செழிப்பாயிருக்கக்கண்டு தேவர்கள் அங்கிருந்தனர்.
பார்வதியின் தோழி ஜயாவை ஒரு பசுவாக அவர் ஆஶ்ரமத்தில் அங்குமிங்கும் ஓடச்சொன்னார்.
கௌதமர் ஒரு தர்ப்பையால் அதை விரட்ட முயன்ற போது அது இறந்து விட்டது.
பசுவைக் கொன்ற காரணத்தால் அங்கிருந்த புறப்பட்ட தேவர்கள் இருக்க, விக்னேசர் கங்கையை வரவழைத்து அப்பசுவை எழுப்பச்சொன்னார்.
அப்படியே கௌதமர் தவம் செய்து சாதித்தார்.

கபோத தீர்த்தம்: (கபோத – புறா) கங்கையின் ஒரு படித்துறை. ஜோடிகளில் ஒரு புறாவை வேடன் பிடித்து,
இரவு உறங்கும்போது மற்றொரு புறா அவன் குளிரைப் போக்க நெருப்பை மூட்டி அதில் விழுந்து உயிரை விட்டது,
இதைக் கண்டு இரங்கிய வேடன் மற்றொரு புறாவை விடுவித்ததும் என்னை உணவாக்கிக்கொள் என்று அதுவும் அந்த தீயில் விழுந்து உயிரை விட்டது.
விருந்தோம்பலில் சிறந்த இரண்டையும் தேவலோக தேர் வந்து அழைத்துச்சென்றது கண்ட வேடன் அன்றிலிருந்து தன் தொழிலை விட்டான்.

கருட தீர்த்தம்: நாகர்களில் ஒருவனான அனந்தன் மகன் மணிநாகன் பரமேஶ்வரனைத் தவம் புரிந்து கருடனால் அழிக்க முடியாத வரம் பெற்றான்.
ஆனால் அவனை கருடன் பிடித்து சிறை வைத்து விட்டான், நந்திதேவர் மூலம் இதையறிந்த மஹாவிஷ்ணு அவனை விடுவிக்கச் சொன்னார்.
நீங்கள் என் பலத்தாலேயே பறந்து பகைவர்களை வென்றீர்கள், உங்களை விட பலவான் நான் என்று அவரிடமே கூறினான் கருடன்.
அவனைத் தன் சுண்டு விரலால் நசுக்கி விட்டார். வருந்தி விமோசனமாக ஈஶ்வரனைத் துதித்து அவர் சொற்படி 15 நாட்கள் மூழ்கி விடுதலை பெற்ற படித்துறை.

விஶ்வாமித்ர தீர்த்தம்: உலகெங்கும் பஞ்சம் படர்ந்த போது, வழியில்லாமல் இறந்து கிடந்த நாயின் உடலைத் தீயிலிட்டு
தேவர்கள், பித்ருக்களுக்கு படைத்து சீடர்களோடு உண்ண முற்பட்டார்.
இந்த்ரன் அதற்கு பதில் அம்ருதம் தந்த போது உலகம் பஞ்சத்தில் இருக்க எனக்கு மட்டும் அம்ருதம் வேண்டாம்.
இந்த சூழலில் நாயிறைச்சியே போதும் என முற்பட்டபோது, வேறு வழியின்றி தேவேந்த்ரன் மழையைப் பொழிந்து வளத்தை உண்டாக்கினான். அந்த துறையே இது.

ஶ்வேதா என்ற வேதியன் பெரும் சிவபக்தன், அவன் இறந்த போது, உயிரை எடுத்துச்செல்ல வந்த யமபடர்களையும்,
யமனையும் கார்த்திகேயன் நந்தி, விக்னேசரோடு சேர்ந்து கொன்று விட்டார்.
கௌதமி தீர்த்தத்தை மீண்டும் கொண்டு வந்து தெளித்த போது அவர்கள் உயிர்த்தெழுந்தனர்.
சிவபக்தர்களை இனி அணுகுவதில்லை என்று சென்றனர்.

குபேரனோடு நட்புடன் இருந்த ராவணாதியர்கள் தாய் சொற்படி அவனை விரட்டி விட அவன் தாத்தா புலஸ்த்யர் சொற்படி
சிவனைக் குறித்து கௌதமி நதிக்கரையிலேயே தவமிருந்து அழியாத செல்வத்திற்கு அரசனானான்.

ஹரிச்சந்த்ரன் மகப்பேறின்றி வருந்தியபோது பர்வதர், நாரதர் சொற்படி வருணனை வேண்டி ரோஹிதனைப் பெற்றான்.
ஆனால் அவனைத் தனக்கே பலியாகக் கேட்டான் வருணன்.
ஒப்புக்கொண்ட ஹரிச்சந்த்ரன் தீட்டு கழியவில்லை, பல் முளைக்கவில்லை, இது பால் பற்கள்,
இன்னும் க்ஷத்ரிய கலைகளைக் கற்கவில்லை என்று தள்ளிக்கொண்டிருந்தான்.
அடுத்த முறை வருணன் வந்த போது ரோஹிதன் தான் விஷ்ணுவைக் குறித்து ஒரு யாகம் செய்து விட்டு பலியாகிறேன் என்று கூறினான்.
காட்டிற்குச் சென்றிருந்த போது அஜிகர்த்தா எனும் முனிவரிடம் பெரும் தானங்களைக் கொடுத்து அவர் மூன்று
பிள்ளைகளை நடுவுள்ள ஸுனக்ஷேபனை யாகப்பசுவாகப் பெற்று வந்தான்.
ப்ராஹ்மண ஹத்திக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஹரிச்சந்த்ரன் மறுத்த போது, கௌதமி நதிக்கரையில் செய்யும் யாகங்களில் பலி தேவையில்லை,
அங்கே செய்யுங்கள் என அசரீரி ஒலிக்க அனைவரும் அப்படியே செய்தனர். சுனக்ஷேபனை விஶ்வாமித்ரர் தத்தெடுத்துக்கொண்டார்.

ததீசியின் தவபலத்தால் அவர் ஆஶ்ரமத்திற்கு அசுரர்கள் பயம் இல்லை.
இதையறிந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை அவரிடம் ஒப்படைத்திருந்தனர்.
பூஜை, உபயோகம் இன்றி ஒளி குறைந்து மறையத்தொடங்கிய ஆயுதங்களை, உலகப் பற்றை விட்டவர் இவைகளை வைத்திருத்தல் ந்யாயமில்லை,
இதனால் அசுரர்களோடு விரோதம் வரும் என்று மனைவி லோபாமுத்ரை சொற்படி கங்கையில் கழுவி அதன் நீரை குடித்ததும்
அவர் உடல் மேலும் பலமடங்கு ஒளி பெற்றது. மீண்டும் தேவைப்பட்டபோது தேவர்கள் வந்து ஆயுதங்களைக் கேட்க
அவர் யோக வழியில் தன் உடலை விட்டு தன் எலும்பில் ஆயுதங்களை உண்டாக்கிக்கொள்ள சொன்னார்.
அப்படியே விஶ்வகர்மா வஜ்ராயுதம் செய்து தந்தான், கர்ப்பவதியான முனிவர் மனைவி பின்னர் இதை அறிந்து குழந்தை பிறந்ததும்
அதை ஒரு அத்தி (பிப்பலம்) மரத்தின் காப்பில் விட்டு, தீயில் உயிரை மாய்த்துக்கொண்டாள்.
பிப்பலன் வளர்ந்து தவத்தால் பலம் பெற்று சிவனைக்குறித்து தேவர்கள் அழிவிற்கு வேண்டினான்.
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பூதம் முதலில் அவனும் தேவர்கள் படைப்பில் வந்தவனே என்று துரத்தியது.
சிவனிடம் பணிந்த அவனுக்கு தேவ விமானத்தில் அவன் பெற்றோர்களை காட்டியருளினார். பூதமும் ஒரு நதியாகி கங்கையோடு கலந்து விட்டது.

விருத்த ஸங்கமம்: கௌதமரின் மகன் விருத்த கௌதமன் ஒரு மூக்கரையன், படிப்பில்லாதவன், இளவயதடைந்த அவன் ஒரு சமயம் காட்டில்
ஒரு குகையைக் கண்டு அதில் இருந்த வயதான ஒரு மூதாட்டியை வணங்க முற்பட்டான்.
அவள் அவனை தனக்கு குரு என்று கூறி தடுத்து விட்டாள். நான் உன் குழந்தையல்லவா, நான் எப்படி உனக்கு குருவாவேன் என்று அவன் கேட்க,
ரிஷத்வஜன் எனும் அரசனுக்கும் சுஷ்யமை எனும் அப்ஸர ஸ்த்ரீக்கும் தான் பிறந்ததாகவும், நான் முதலில் காணும்
ஆடவனே எனக்குக் கணவன் என்று அவர்கள அங்கேயே விட்டுச்சென்று விட்டதாகவும், பல ஆண்டுகள் கழிந்த தான்
இப்போது முதல் முதலாக ஒரு ஆடவனை, உன்னை காண்கிறேன், மணக்காவிட்டால் இறந்து விடுவேன் என்றாள்.
இவன் ஒரு வழியாக தான் அழகாகவும், கல்விமானாகவும் ஆனதும் உன்னை மணப்பேன் என்றான்.
அவள் தனது வருண, ஸரஸ்வதி உபாஸனையால் அவனை அங்கனமே செய்து மணந்து கொண்டாள்.
இந்த ஜோடியை மற்ற முனிசீடர்கள் கேலி செய்யவே, அகஸ்த்யர் சொற்படி கௌதம கங்கையில் நீராடி
இருவருமே இளைய, அழகிய வடிவினரானார்கள். அந்த துறையே விருத்த ஸங்கமம்

நாக தீர்த்தம்: சூரசேன ராஜனுக்கு வெகு காலம் கழித்து ஒரு குழந்தை அதுவும் நாகமாக பிறந்தது.
ஆனால் காலம் கழிந்து அது மனித மொழியில் பேசி, வேத சாஸ்த்ரங்களையும் முடித்தது.
ஸ்வர்க்கம் கிட்ட தனக்கு மணம் முடித்து வைக்கவேண்டும் இல்லாவிட்டால் இறந்து விடுவேன் என்றது.
ஒருவருக்கும் தெரியாமல் வளர்ந்த இதன் விபரம் தெரியாத அவர் அமைச்சர் விஜயராஜனின் மகள் போகவதியை தேர்ந்தெடுத்தார்.
இளவரசன் சார்பில் அவன் வாளுக்கு மாலையிட்டு புகுந்த வீட்டுக்கு வந்த அவள் விஷயம் தெரிந்ததும்,
மானுடப்பிறவியான தனக்கு நாகராஜன் கிடைத்தது பாக்யமே என்று விட்டாள்.
சிவ கிங்கரர்களில் ஒருவனாயிருந்து சிவ-பார்வதி பேச்சின்போது சிரித்து விட்ட காரணத்தால் சபிக்கப்பட்ட
அவனுக்கு முன் ஜென்ம நினைவுகளும் வந்தன. கௌதம கங்கையில் நீராடி இருவரும் விமோசனம் பெற்றனர்.

நான்முகனும், மாத்ரி தீர்த்தம்: முன்பொரு சமயம் ஹரி, ப்ரஹ்மாதிகளாலும் வெல்ல முடியாத தேவர்களுக்கு ஆதரவாக
பரமேஶ்வரன் இருந்து அசுரர்களை பாதாளத்திற்கு விரட்டியடித்தபோது, அவரின் வியர்வைத் துளிகளிலிருந்து
மாத்ரி கணங்கள் புறப்பட்டு அவைகளும் அசுரர்களை கொன்று குவித்தன.
அந்த இடமே மாத்ரி தீர்த்தம். அப்போது ப்ரஹ்மனின் ஐந்தாவது தலை கழுதை உருவிலிருந்து கொண்டு பயந்தோடிய
அசுரர்களை மீண்டும் போரிடச்சொல்லி ஆதரவாயிருப்பதாக பேசியது.
மற்ற தலைகள் தங்களுக்கு சார்பாக இருக்க இது மட்டும் அசுரர்களுக்கு சாதகமாயிருக்கக்கண்டு பயந்த தேவர்களை
சிவபெருமானையே மீண்டும் சரணடையச்சொன்னார் மஹாவிஷ்ணு.
கீழே விழுந்தால் பூமி சிதறிவிடும் என்றிருந்த அந்த ஐந்தாவது தலையை கிள்ளி தன் கையிலேயே வைத்துக்கொண்டார் பரமேஶ்வரன்.
அந்த இடமே ப்ரஹ்ம தீர்த்தம்

யம தீர்த்தம், அக்னி தீர்த்தம்: அனுஹ்ரதன்-ஹேதி என்ற புறா ஜோடிகளும், உலூகன்-உலூகி என்ற
ஆந்தை ஜோடியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அனுஹ்ரதன் யமனின் பேரன், உலூகன் அக்னி குலத்தைச் சேர்ந்தது.
தங்களிடமிருந்து ஆயுதங்களையெடுத்து இவைகள் போரிட்டுக்கொண்டிருந்ததில் அழிவைக் கண்ட அவர்கள் இவர்களை சமாதானப்படுத்தினர்.
இவைகள் வசித்த இடமே இந்த தீர்த்தங்கள்.

பில்லா தீர்த்தம்: பில்லா என்ற வேடனும், வேதா என்ற ப்ராஹ்மணனும் மாறி, மாறி ஒருவரை ஒருவர் அறியாமல்
காட்டிலிருந்து ஒரு சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தனர்.
இவனுடைய இறைச்சி படையல்களை அகற்றி அவர் பூஜிப்பதும், அவர் பூக்களை அகற்றி இவனும் பூஜித்து இருந்தனர்.
ஒரு நாள் அவனுக்கு இறைவன் காட்சி தந்ததை கண்ட ப்ராஹ்மணர் உங்களை உடைப்பேன் என கோபித்தார்.
மறுநாள் வரை அவரை பொறுமை காக்கச் சொன்ன இறைவன் மறுநாள் ரத்தத்துளிகள் தென்பட இருந்தார்.
இந்த ப்ராஹ்மணர் அவைகளை துடைத்து விட்டு நீரால் கழுவி பூஜித்து முடித்தார்.
பின்னர் வேடன் வரும்போது மீண்டும் அவனையும் சோதித்தார்.
இறைவன் உடலில் ரத்தத்துளிகளை கண்ட அவன் தன் பாவங்களும் காரணமாயிருக்கும் என்று தன்னையும் உடல் முழுதும் கீறிக்கொண்டான்.
உண்மை பக்தியை உணர்ந்தார் ப்ராஹ்மணர்.

கௌதமன் என்ற அதர்ம வழியில் வளர்ந்த அந்தணனும், மணிகுண்டலனெனும் தர்ம வழி வளர்ந்த வைஶ்யனும் நண்பர்கள்.
அயல் நாடு சென்று திரவியம் ஈட்டலாம் என்று கௌதமன் மணிகுண்டலனை வற்புறுத்தி பெரும் பொருளோடு வரச்செய்தான்.
வழியில் தர்மவழி தான் உயர்ந்தது, அதர்ம வழியே உயர்ந்தது என்றும் வாதிட்டுக்கொண்டே வந்தனர் இருவரும்.
யாரையாவது கேட்டு முடிவெடுக்கலாம் என்று கேட்டபோது அனைவரும் அதர்ம வழியில் வாழ்பவனே செழிக்கிறான் என்றே சொன்னார்கள்.
பணயத்தின் படி மணிகுண்டலன் செல்வமனைத்தையும் பிடுங்கிக்கொண்டான் கௌதமன்.
அப்போதும் தர்ம வழியையே பாராட்டிப் பேசினான் மணி குண்டலன்.
அடுத்தடுத்த பணயத்தில் கரங்களையும், கண்களையும் இழந்தான் மணிகுண்டலன்.
எனினும் தர்மத்தையே உயர்த்தி பேசிய அவனை காட்டில் விட்டுச்சென்று விட்டான் கௌதமன்.

அந்த இடம் கௌதமி நதிக்கரை. அங்கிருந்த விஷ்ணு விக்ரஹத்திற்கு இரவில் விபீஷணனின் மகன் தினமும் வந்து பூஜை செய்வது வழக்கம்.
அன்றிரவு கீழே கிடந்த இவனைக் கண்ட அவன் விஷயங்களை அறிந்து தன் தந்தையிடம் சொன்னான்.
விபீஷணன் அப்போது மரமாய் வளர்ந்திருந்த விஶல்யகரணி மூலிகையைக் கொண்டு மணிகுண்டலனை குணப்படுத்தி அழைத்துச்சென்றான்.
வழியில் தன் குருட்டுப் பெண்ணை குணப்படுத்துபவனுக்கே அவளை மணம் முடித்து, ராஜ்யத்தை ஒப்படைப்பது என்ற முடிவில் இருந்த ஒரு
அரசனின் பெண்ணை விஶல்யகரணியைக் கொண்டு குணப்படுத்திய மணிகுண்டலன் அந்நாட்டுக்கு அரசனாக்கப்பட்டான்.
பிற்காலத்தில் பொருள்களை இழந்து இழிவான நிலையில் கொண்டு வரப்பட்ட கௌதமனுக்கும் நிதிகளைத் தந்து தேற்றினான் மணிகுண்டலன்.

கண்டு முனிவரின் உக்ரமான தவத்தைக் கெடுக்க ப்ரேமலோசனை எனும் அப்ஸரஸை அனுப்பினான் இந்த்ரன்.
அவளும் அவரை மயக்கி மனைவியானாள். அவளோடு திளைத்திருந்த கண்டு முனிவர் பலகாலங்கள் அனுஷ்டானங்கள் இன்றி
அதில் கழிந்து விட்டதை உணர்ந்து மனைவியானதால் அவளை சபிக்காமல் திருப்பி அனுப்பி விட்டு,
புருஷோத்தம க்ஷேத்ரத்தில் விஷ்ணுவால் தவம் செய்ய ஆசிர்வதிக்கப்பட்டார். இவர்கள் பெண்ணே மரீஷை.

சண்டாளன் ஒருவன் ஒரு சமயம் ப்ரஹ்மராக்ஷஸனிடம் அகப்பட்டுக்கொண்டான்.
20 வருடங்களாக ஏகாதஸி கொண்டாடி வருவதாகவும், அன்றைய ஏகாதஸி முடிந்ததும் நான் உனக்கு உணவாகிறேன் என்று கூறி
அதன்படியே வந்த அவனிடமிருந்து 2 மணி நேர ஏகாதஸி புண்ணியத்தை யாசித்துப் பெற்று அதனால் சாப விமோசனம் பெற்ற
அந்த ப்ரஹ்ம ராக்ஷஸன் உபநயனத்திற்கு முன்பே யாகங்களில் கலந்து கொண்ட பாவத்தால் ப்ராஹ்மணனான தான் இந்த சாபம் பெற்றதைச்சொல்லி,
சொல் தவறாது திரும்ப வந்த நீயும் சண்டாளனாக இருக்க முடியாது என்று கூறிச்சென்றான்.
பின் தவம் செய்த இந்த சண்டாளன் முற்பிறவியில் வேத பண்டிதனாயிருந்த போது, யாசித்துப் பெற்ற உணவில்
பசுவின் தூளி சிறிது விழுந்து விட்டதால் அதை வீசியெறிந்து விட்டதற்காக சண்டாளனானது குறித்து நினைவு கொண்டான்.
தவத்தால் விமோசனம் பெற்றான்.

ஸ்வயம்புவான ப்ரஹ்மாவின் தவத்தின் பலனாக ப்ரணவ ஒலி கேட்கப்பெற்றார்.
அதன் பிறகு அவரது முகங்களிலிருந்து 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரியும், பின்னர் வேதங்களும் தோன்றின. வேதங்களுக்கு காயத்ரியே மாதா.

யோகம் என்பது ஆத்மாவை பரப்ரஹ்மத்துடன் சேர்ப்பது. எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மா ஒன்றே என நிலைப்படுவது.
வேத, புராணங்களை பயின்று முறையாக யோகப்பயிற்சி, புலனடக்கம், சாத்வீக உணவு, இனிய ப்ரதேசத்தில் வாசத்தை மேற்கொண்டால் இந்நிலையை அடையலாம்.

ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் முற்றிற்று.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்கள் —ஸ்ரீ திவ்ய நாமங்கள்–

February 23, 2023

அம்மான் ..
அமுதம் உண்டாய் ….
அரி முகன் ..
அரும் கலம்
அநங்க தேவன் ..
அச்சுதன் ..
அழக பிரான் .

ஆலின் இலையாய் ..
ஆரா அமுதம் ..
ஆழி மழை கண்ணா .
ஆயர் கொழந்து ..
ஆயர்பாடி அணி விளக்கு
ஆயன்–
ஆழியம் செல்வன் ..
ஆற்றல் அனந்தல் உடையாய் ..

இறைவா ..
இருடிகேசன் .
இலங்கை அழித்தாய் .
இலங்கை அழ்த்த பிரான் .

ஈசன் .

எம்பெருமான் ..
எம் ஆதியாய் .
எங்கள் அமுது

உம்பர் கோமான் –
உலகம் அளந்தாய் –
உதரம் யுடையாய் –

ஊழி முதல்வன் –
ஊழியான்

ஓங்கி உலகளந்த உத்தமன் –

கா மகான் ..
காயா வண்ணன் ..
கடல் வண்ணன் ..
கடல் பள்ளியாய் ..
கள்ள மாதவன் — ..
கமல வாணன் ..
கண் அழகர் .
கன்று குணிலா எறிந்தாய் –.
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்
கப்பம் தவிர்க்கும் கலி ..
கரிய பிரான் .
கரு மாணிக்கம் ..
கரு மா முகில்
கருடக் கொடி உடையான் .
கேசவன் –.
கேசவ நம்பி –.
கொடிய கடிய திருமால்
கோ –மகான் ..
கோளரி மாதவன் — ..
கோலால் நிரை மேய்த்தவன் ..
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் –
கூத்தனார் .
கொழந்து– .
குடமாடு கூத்தன் –..
குடந்தை கிடந்தான் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் -..
குல விளக்கு –.
குன்று குடையாய் எடுத்தாய் –.
குறும்பன் ..
குழல் அழகர்
கோவிந்தா..
கோவர்தனன் .

சகடம் உதைத்தாய் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் –
செங்கண் மால் –
செம்மை யுடைய திருமால் –
செப்பம் யுடையாய் –
ஸ்ரீ தரன் –
சுடர் –
சுந்தரன் –
சுந்தர தோளுடையான்

தாமோதரன்..
தேவாதி தேவன் ..
தேச முன் அளந்தவன் ..
தேசுடைய தேவர் ..
தேவனார் வள்ளல்
த்வராபதி எம்பெருமான் .
த்வாராபதி காவலன் .

தாமரைக் கண்ணன் –
தத்துவன்–
தென் இலங்கைக் கோமான் –
தென் இலங்கை செற்றாய் –
திறல் யுடையாய் –
திரு –
திரு மால் இரும் சோலை நம்பி –
திருவரங்கச் செல்வனார் –
திரி விக்ரமன் –
துழாய் முடி மால் –
துவரைப் பிரான்

பாம்பணையான் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
பத்ம நாபன் –
பாலகன் –
பங்கயக் கண்ணன் –
பெரியாய் –
பக்த விலோசனன் –
பச்சை பசும் தேவர் –
பிள்ளாய் –
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –
பூ மகன் –
பூவைப் பூ வண்ணன் –
புள் அரையன் –
புள்ளின் வாய் கீண்டான் –
புள் வாய் பிளந்தான் –
புனிதன் –
புண்ணியன் –
புராணன்

மால் –
மாயன் –
மா மாயன் –
மா வாயைப் பிளந்தான் –
மா மஹன்-
மா மத யானை யுதைத்தவன் –
மாதவன் –
மதிள் அரங்கர்-
மது ஸூதனன் –
மலர் மார்பன் –
மணவாளர் –
மணி வண்ணன் –
மருதம் முறிய நடை கற்றவன் –
மருப்பினை ஒசித்தவன்–
மல்லரை மாட்டியவன்-
மால் இரும் சோலை மணாளனார் –
மனத்துக்கு இனியான் –
முகில் வண்ணன்

நாராயணன் –
நாராயணன் மூர்த்தி –
நாகணையான் –
நாரண நம்பி –
நந்த கோபன் குமரன் –
நந்த கோபன் மகன் –
நரேன் –
நெடுமால் –
நீர் வண்ணன் .

யமுனைத் துறைவன் –
யசோதை இளம் சிங்கம்

வாய் அழகர் –

வட மதுரை மைந்தன் –
வட மதுரையார் மன்னன் –
வாஸூ தேவன் –
வேங்கடவன் –
வேங்கட வாணன் –
வைகுந்தன் –
வல்லான் –
வாமனன் –
வேட்டை ஆடி வருவான் –
விமலன் –
வித்தகன்

—————————-

1. கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
2. ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
3.கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
4.நாராயணன்
5.பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்
6.ஓங்கி உலகளந்த உத்தமன்
7.ஆழிமழைக்கண்ணன்
8.ஊழி முதல்வன்
9.பாழியந்தோளுடைப் பற்பநாபன்
10.மாயன்
11.வடமதுரை மைந்தன்
12.தூய பெருநீர் யமுனைத் துறைவன்
13.ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு
14.தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
15.பேய்முலை நஞ்சுண்ட வித்து
16.கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிய வித்து
17.வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து
18 ஹரி
19.நாராயணன் மூர்த்தி கேசவன் (நாராயணனின் அவதாரமான கேசவன் )
20.மாவாய் பிளந்தான்
21.மல்லரை மாட்டிய தேவாதி தேவன்
22.மாமாயன்
23.மாதவன்
24.வைகுந்தன்
25.நாற்றத்துழாய் முடி நாராயணன்
26.நம்மால் (நமது திருமால் )
27.போற்றப் பறைதரும் புண்ணியன்
28.முகில்வண்ணன்
29.சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்
30.புள்ளின்வாய் கீண்டியவன்
31.பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
32.சங்கொடுசக்ரம் ஏந்தும் தடக் கையன்
33.பங்கயக் கண்ணன்
34.வல்லானைக் (வலிமை மிகுந்த யானையை ) கொன்றவன்
35.மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
36.மாயன்,(வல்லானை மாயனை )
37. மாயன் (மணிவண்ணன் மாயன் )
38.மணிவண்ணன்
39.அம்பரு மூடறுத்தோங்கி உலகளந்த உம்பர்கோமான்
40.பந்தார்விரலியின் மைத்துனன் (நப்பின்னையின் மைத்துனன்—-யசோதையின் உடன்பிறந்த கும்பனின் பெண் நப்பின்னை—நீளாதேவி அம்சம் )
41.மலர்மார்பன்
42.முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் (நடுக்கம் ) தவிர்க்கும் கலி (மிடுக்கு உடையவன் )
43.செப்பம் உடையவன்
44.திறல் உடையவன்
45.செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
46.ஆற்றப் படைத்தான் மகன்
47.ஊற்றம் உடையவன்
48.பெரியவன்
49.உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்
50.கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண்
51.திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண்
52.பூவைப் பூவண்ணன்
53.அன்று இவ்வுலகம் அளந்தவன்
54.சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றவன்
55.பொன்றச் சகடம் உதைத்தவன்
56.கன்று குணிலா எறிந்தவன்
57.குன்று குடையாய் எடுத்தவன்
58.வென்று பகை கெடுக்கும் வேலைப் பற்றியவன்
59.ஒருத்தி மகனாய்ப்பிறந்தவன்
60.ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்
61.(தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்) நெருப்பென்ன நின்ற நெடுமால்
62.மால்
63.மணிவண்ணன்
64.ஆலின் இலையாய்
65.கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்
66.குறைவொன்றுமில்லாத கோவிந்தன்
67.இறைவன்
68.பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்தவன்
69.கோவிந்தன்
70.வங்கக் கடல் கடைந்த மாதவன்
71.வங்கக் கடல் கடைந்த கேசவன்
72. ஈரிரண்டு மால் வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்

இவை, நமது சங்கீதத்தில் —72—மேளகர்த்தாக்களை ——மிக நுட்பமாகச் சொல்வதாகக் கொள்ளலாம் ,

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரோஹிணி திரு நக்ஷத்ரம் —

January 16, 2023
ஸ்ரீ ஆவணி ரோஹிணி திரு நக்ஷத்ரம் —  ஸ்ரீ கிருஷ்ணன் எம்பெருமான் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..
“அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே”
என்று அர்ஜுனனை பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.
வேதை: ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய: |
வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம் || – பகவத்கீதை:-அத்யாயம் 15: ஸ்லோகம் 15
வேதம், “நாராயணனை” பற்றி மட்டுமா சொல்கிறது?
வேதம், ‘இந்திரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம் ‘ருத்ரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம், ‘சகல தேவதைகளை’ பற்றியும் சொல்கிறதே?
இப்படி இருக்க,-‘வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது’ என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?
வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம்.
“வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு,
சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு,
சொர்க்க லோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு,
இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை”
என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் ‘கேட்கவே இல்லை’ என்று நாம் பார்க்கிறோம்.
வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.
நாராயணனே ‘பரமாத்மா’ (பரம்பொருள்)-என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது…
பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, “புருஷன்” என்ற பெயரை கொண்டு “ஸ ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)” என்கிறது வேதம்.
வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், ‘நாராயணனே அந்த புருஷன்’ என்று விளக்கி, அந்த ‘புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்’ என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..
நாராயணனே ‘பரமாத்மா’ (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக “நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||” என்று பல முறை சொல்கிறது வேதம்.
இப்படி ‘பர’ என்ற சொல்லாலும், ‘பர ப்ரஹ்ம’ என்ற சொல்லாலும், ‘புருஷ’ என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,
அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம்.
அதாவது, ‘அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்’ என்ற ரகசியத்தை சொல்கிறது.
ஒரு இடத்தில் வேதம், “பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!” (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..
இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, “பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்” என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.
“அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)”-என்று வேதமே தெளிவாக சொல்கிறது.
மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது,
கிருஷ்ண பரமாத்மா “அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே” என்று சொன்னதன் ரகசியம் புரியும்.
—————-
கிருஷ்ண நாமத்தால் ”
சோறு கிடைக்குமா?
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான்.
அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள்.
“கிருஷ்ணா’ என்ற இந்த வார்த்தையில் என்ன தான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான்.
விடை தெரியவில்லை.
அங்கிருந்த பெரியவரிடம்,
“கிருஷ்ணா! கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்து விடும்?
உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்.
பெரியவர் அந்த இளைஞனிடம், “கிருஷ்ண” நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல,
நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்,” என்றார்.
இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,
அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
ஊருக்கு அடுத்தாற் போல் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான்.
அவன் வாயில் “கிருஷ்ணா’ என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.
ஒரு வழிப்போக்கன் மர நிழலில் அமர்ந்து, அவன் கொண்டு வந்த கட்டுச் சோற்றை சாப்பிட்டான்.
அசதியில் அங்கேயே தூங்கி விட்டான்.
இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே “கிருஷ்ண ”-நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்து விட்டு வழிப்போக்கன் சென்று விட்டான்.
கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான்.
எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதில் அவனுக்கு உடன் பாடில்லை.
இந்தச் சாப்பாட்டை சாப்பிடும் படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.
அப்போது காட்டுப் பாதையில்
சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மர நிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர்.
கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.
தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.
அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்.
ஆனால், கள்வர் தலைவன், “இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது.
நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான்.
அந்தச் சோற்றை அவனுக்கே கொடுப்போம்!” என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான்.
இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள்,
உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர்.
இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடு இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான்.
“நம்பிக்கையில்லாமல்” “கிருஷ்ண நாமம்” சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே’ என்று எண்ணியவன்,
“அழியாத செல்வம் – கிருஷ்ண நாமம் தான்”
என்ற முடிவுக்கு வந்தான். காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்தப் பணத்தை உண்டியலில் போட்டான்.
“இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,”
என்று கிருஷ்ணனிட்டம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான் ஆகவே, “அழியாத செல்வம் ஆன கிருஷ்ண நாமத்தை” சொல்லி பயனடையுங்கள்
—————
சித்திரை ரோஹிணி ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் திருஅவதார திருநக்ஷத்திரமாகும்
ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலை நிறுத்த வரதராஜப் பெருமாள் உதவி புரிந்த போது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார்.
மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதி கேசவப் பெருமாள், கஜேந்திர வரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார்.
வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.
இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சந்நதியின் அருகே கருங்காளியம்மன் கோயில் ஒன்றுள்ளது.
கோயில் திருக்குளத்தில் யானை ஒன்று தாமரை மலர் பறித்து பெருமாளை ஆராதித்து வரும் வேளையில் ஒருநாள் குளத்தில் இருந்த முதலை யானையை பிடித்துக் கொள்ள, பெருமாள் தமது சக்ராயுதத்தால் முதலையைக் கொண்டு யானையை காத்து அருளிய ஸ்தலம்.
ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
————–
கார்த்திகை ரோகிணி ஸ்ரீ திருப் பணாழ்வாரின் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஸ்ரீவத்ஸாம்சராய் கலியுகம் 343-வதான துன்மதி வருஷம் கார்த்திகை மாசம் க்ருஷ்ண பக்ஷம் த்விதீயை புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் உறையூரின் புறத்தில் செந்நெல் பயிரில் அயோநிஜராய் அவதரித்து ஓர் பாணனால் கண்டெடுக்கப்பட்டு வளர்ந்து வந்தார். காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றின்றி கண்ணனையே கண்டுரைத்த கடிய காதலாய் அருளிச் செய்தார்.
பாணர் அமலனாதிபிரான் என்னும் பத்து பாசுரங்களைப் பாடி நம் பெருமானின் திருவடியில் இரண்டறக் கலந்தார்.
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் ஶயாநம்
மத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மனவை முநிவாஹநம் தம்–திருப்பாணாழ்வார் தனியன்:
உம்பர் தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையிலுதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்த பிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே–திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்:
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே – உம்பர்கள் என்னும் வார்த்தை நித்யஸுரிகள் / தேவர்களைக் குறிப்பதாகும். அந்த நித்யஸுரிகளே திருப்பாணாழ்வாரைத் தொழுவார்களாம். அப்படிப்பட்ட வைபவத்தை உடையவர் திருப்பாணாழ்வார். உறையூரில் அவதரித்த உண்மையான ஞானத்தை உடைய திருப்பாணாழ்வார் வாழ்க என்பது இவ்வரியின் விளக்கம்.
உண்மையான ஞானம் என்பது பரமபதத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் தான் அர்ச்சாவதாரத்தில் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிவதாகும். “நாம் பரமபதம் தான் உயர்வு; அர்ச்சாவதாரம் அதை விடக் குறைந்தது” என்று எண்ணலாம். பரமபதத்தில் எம்பெருமானின் பரத்வம் தான் வெளிப்படும். ஆனால் ஸௌலப்யம் என்பது பகலிலே எரித்த விளக்கு போல இருக்கும். அவனுடைய ஸௌலப்யத்தை பரமபதத்தில் காட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. தவறு செய்பவர்கள் இருந்தால் தான் எம்பெருமானின் ஸௌலப்யம் வெளிப்படும். ஆகவே தவறு செய்பவர்கள் நிறைந்துள்ள பூலோகத்தில் அர்ச்சாவதார எம்பெருமானுக்குதான் ஏற்றம் எனலாம். அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் அர்ச்சகருக்கு பரதந்த்ரன் ஆக இருப்பான். அவர் எப்போது திருமஞ்சனம் செய்கிறாரோ அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அர்ச்சகர் எப்போது உணவு கண்டருளச் செய்தாலும் அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அவர் அணிவிக்கும் ஆடைகளையே உகந்து அணிந்து கொள்கிறான். அவ்வாறு தன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி தன்னை எளியவனாக அர்ச்சாவதாரத்தில் காட்டுகிறான். எம்பெருமானின் அர்ச்சாவதார மேன்மையை நன்கு உணர்ந்தவர் திருப்பாணாழ்வார். எனவேதான் அமலனாதிபிரான் பத்து பாசுரங்களிலும் எம்பெருமானின் வடிவழகை மட்டுமே பாடியிருக்கிறார். அவ்வாறு சிறப்புடைய திருப்பாணாழ்வார் வாழ்க.
உரோகிணிநாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே – கார்த்திகை மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார். இப்பூவுலகத்தாருக்கு அர்ச்சாவதார பெருமையை எடுத்துக் காட்டிய வள்ளல் திருப்பாணாழ்வார். அவர் பல்லாண்டு வாழ்க.
வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே – பிரான் என்றால் நமக்கு நன்மை செய்பவர் என்று பொருள். நமக்கு நன்மை செய்யக்கூடியவரான திருப்பாணாழ்வார் வாசனை மிருந்த மாலையை அணிந்த லோக சாரங்க முனிவர் தோளிலே ஏறி திருவரங்கம் வந்தார். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே – மலர் போன்று இருக்கக் கூடிய கண்களில் பெரிய பெருமாளைத் தவிர வேறு ஒரு காட்சியும் அறியாதவர் திருப்பாணாழ்வார. அப்படிப்பட்ட திருப்பாணாழ்வார் வாழ்க.
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே – அழகியதான இப்பூவுலகில் ஸப்த ப்ரகாரம் என்று சொல்லக்கூடிய ஏழு மதிள்களால் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் மனத்தில் புகுந்தவரான திருப்பாணாழ்வார் பல்லாண்டு வாழ்க.
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே – திருப்பாணாழ்வார் அருளிய ப்ரபந்தம் பத்து பாசுரங்கள் கொண்ட அமலனாதி பிரான். அவர் வாழ்க பல்லாண்டு.
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே – திருவரங்கம் பெரிய பெருமாளின் சிவந்த பொன் போன்ற திருவடி தொடங்கி திருமுடி வரையிலும் அமலனாதி பிரான் ப்ரபந்தத்தில் திருப்பாணாழ்வார் வர்ணித்திருப்பார். அவ்வாறு திருவரங்கப் பெருமாளின் அவயவங்களை சேவிக்கும் திருப்பாணாழ்வார் வாழ்க என்ற இந்த வரியில் காட்டப்படுகிறது,
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே – பொன்னை ஒத்து இருக்கும் திருப்பாணாழ்வாரின் திருவடிகள் இப்பூவுலகில் பல்லாண்டு வாழ வேண்டும்.
ஆண்டாள் மாசம் இன்று அழைக்கபடும் மார்க்கழியில் ஸ்ரீ ரங்கநாதனுடன் ஐக்கியமானவர்கள் இவர்கள் இருவரே.
அரங்கனை நினைத்து 9 பாசுரங்கள் பாடிய பாணர். ‘என் அமுதினை கண்ட கண்கள், மற்றொன்றினை காணாவே; நான் பிறவி எடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை. அவைகள் எனக்கு தேவையில்லை என்ற பொருளில் 10வது பாடலை பாடினார். இதை கேட்ட, அரங்கன், திருப்பாணரை, தன்னருகே அழைத்தான், தன் சோதியில் சேர்த்துக் கொண்டான்
கோயில் என்றாலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்’ என்று போற்றிச் சொல்லப்படும் பெருமை கொண்டது திருவரங்கத் திருத்தலம்
குடதிசைமுடியை வைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.”
எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பரவசமடைந்த இந்த ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதர்,
இந்த ஆலயத்தின் ஏழு சுற்றுகளையும் ஏழு லோகங்களாகச் சொல்வார்கள்.
அவற்றில், திருமாடங்கள் சூழ்ந்த சுற்று `பூலோகம்’ என்றும்,
திரிவிக்ரம சோழன் சுற்று `புவர்லோகம்’ என்றும்,
அகளங்கன் சுற்று எனும் கிளிச்சோழன் சுற்று `ஸுவர்லோகம்’ என்றும்,
திருமங்கை ஆழ்வார் சுற்று `மஹர்லோகம்’ என்றும்,
குலசேகர ஆழ்வார் சுற்று `ஜநோலோகம்’ என்றும்,
ராஜமகேந்திரச் சோழன் சுற்று `தபோலோகம்’ என்றும்,
ஆதிதர்மவர்ம சோழர் சுற்று `சத்யலோகம்’ என்றும் போற்றப்படுகிறது.
மேலும், இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களும் இந்தியாவின் புனிதமான ஒன்பது நதிகளின் அம்சமாக அடங்கியுள்ளன என்கிறார்கள்.
சந்திர புஷ்கரணி கங்கையாகவும்,
வில்வ தீர்த்தம் யமுனையாகவும்,
சம்பு தீர்த்தம் சரஸ்வதியாகவும்,
பகுள தீர்த்தம் கோதாவரியாகவும்,
பலாச தீர்த்தம் கிருஷ்ணாவாகவும்,
அசுவ தீர்த்தம் நர்மதாவாகவும்,
ஆம்ர தீர்த்தம் துங்கபத்ராவாகவும்,
கதம்ப தீர்த்தம் கண்டகி நதியாகவும்,
புன்னாக தீர்த்தம் காவிரியின் வடிவாகவும் இங்கு போற்றப்படுகின்றன.
விண்ணகத்து லோகங்களும், மண்ணகத்து நதிகளும் ஒருசேர அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருவரங்கம்.
‘இந்திரப்பதவி தரினும் வேண்டேன், இந்த அரங்கமாநகரத்து ஆலயம் போதும்’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பெருமைக்குரிய ஆலயம்.
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்.
நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி பெருவிழா
இராப்பத்து மூன்றாம் திருநாள்
ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில்  நம்பெருமாள், சௌரி சாயக் கொண்டை, அதில் புஜ கீர்த்தி, சிறு சிகப்பு கல் பதக்கம்,
பிராட்டி பதக்கம், முத்து பட்டை, மார்பில் விமான பதக்கம், வைர அபய ஹஸ்தம், ரத்தின கடி அஸ்தம்,
அடுக்கு பதக்கங்கள், 2 வட முத்து சரம், ஹஸ்த தொங்கல் கைகளில் சாற்றி,
பின் சேவையில்- காசு மாலை, வெள்ளை கல் ரங்கோன் அட்டிகை, வெள்ளை அரசிலை பதக்கம் சாற்றி சேவை சாதிக்கிறார்.
—————

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

பெரியவாச்சான் பிள்ளையின் “இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ணபாதர்.
தந்தை யாமுனதேசிகர், தாய் நாச்சியராமளுக்கும் ,
சேங்கநல்லூர் எனும் தலத்தில் கலி 4329 சர்வஜித்து வருடம் ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் அவரித்தார்.
அதாவது, கி.பி. 1228-ல் பிறந்தார். “ஆச்சான் என்பது வைணவ பரிபாஷையில் ஆசாரியன். பலர் ஆச்சான் என்ற பெயரோடிருந்தமையால்,
இவரை வேறு பிரித்துக் காட்டப் பெரிய ஆச்சான் பிள்ளை என
இருந்த பெயர் உடம்படு மெய் பட்டு பெரியவாச்சான் பிள்ளை என அழைப்பதை அறிய முடிகின்றது.
வைணவ மரபில் ஆச்சான் என்று மட்டும் சொன்னால் இவரே. கிருஷ்ணசூரி என்றும்
இவர் வழங்கப் பெற்றார்.
ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள்.
இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும்.
பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் பெரியவாச்சான் பிள்ளை என்கிறோம்.
ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். கிருஷ்ணர் என்னும் திருநாமத்தையும் பெற்றார்.
பெரியவாச்சான் பிள்ளையை வியாக்கியான சக்ரவர்த்தி என்றும், உரைமன்னன் என்றும்,
உரைவித்தகர் என்றும் பரம காருணிகர் என்றும் பற்பல அறிஞர்கள் போற்றுகின்றனர்.
ஒரு சமயம் திருவரங்கத்திலே தங்கி வாழ்ந்து வந்த இவர் நஞ்சீயரிடத்தும் நம்பிள்ளையிடத்தும்
எல்லா வகையான சாத்திர உண்மைகளையும், திருவாய்மொழி வியாக்கியானங்களையும் நன்கு கேட்டுணர்ந்தார்.
நம்பிள்ளையை அவர் தம்முடைய ஆசாரியராகக் கொண்டிருந்தார்.
அவர்தம் புலமையை நன்குணர்ந்த நம்பிள்ளை, திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதுமாறு கட்டளையிட்டார்.
அவருடைய கட்டளையின்படி அவரும் திருவாய்மொழிக்கு உரை வகுத்தார்.
இராமயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு.
அதன் விளைவால் அவர் தம்முடைய உரை விளக்கத்தில் பல இடங்களில் இராமாயணப் பாடல்களைச் சான்று காட்டுவார்.
தம் குருவின் கட்டளைக்கு ஏற்ப அவர், இராமாயணப் பாடல்களின் எண்ணிக்கையுடையதாக 24000 கிரந்தத்தில் திருவாய்மொழிக்கு உரை வழங்கியுள்ளார்
————-

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

ஆவணி ரோகிணி ஸ்ரீ நயினாராச்சன் பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நமஹ
என்ற ஸ்லோகத்தை அருளினார் நாயினாராசார்யர்.
இதன் பொருள் : கவிகள் வாதம் செய்பவர்கள் ஆகியவர்களுக்குச் சிங்கம் போன்றவரும் மங்களக் குணங்கள் பொருந்தியவரும்
உபய வேதாந்தங்களுக்கும் ஆசாரியரும் ஸ்ரீமான் வேங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டவருமான ஸ்வாமி தேசிகனை வணங்குகிறேன்.
தேசிகன் விஷயமாக பிள்ளை அந்தாதி அருளினார். அதில் ஸ்ரீதேசிகனுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் பொருந்துமாறு சில பாசுரங்களை அமைத்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இவரே ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி ஸ்ரீரங்கத்தில் வேதாந்த தேசிகனின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து ஆராதித்துக்கொண்டு வந்தார்.
———–
ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.
திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார்.
கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர்.
இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.
,அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர், தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு
தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர்.
நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில்
அவரைப் போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே–அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:
திருநக்ஷத்ர தனியன்கள்
அக்ஷயாப்தே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் கலிதோதயம் |
ராமாநுஜ பதச்சாயாம் வந்தே வேங்கட லக்ஷ்மணம் ||
அக்ஷயாத்ரே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் ஜாதமாச்ரயே |
ஸ்ரீ ப்ரவாள குரோர் சிஷ்யம் முநிம் வேங்கட லக்ஷ்மணம் ||
வாழித்திருநாமம்
சீர் பெரும்பூதூரைச் செழுப்பித்தோன் வாழியே
திருப்பாவை சீயர் உளம் தேர்ந்து உணர்ந்தோன் வாழியே
பார்மேவும் பரசமயப் பற்று அறுத்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
காரிசுதன் தமிழ்மறைக்குக் கருத்து உரைப்போன் வாழியே
கருணையினால் அடியேற்குக் கழல் அளித்தோன் வாழியே
ஏராரு முனிதிலகம் என வந்தோன் வாழியே
எங்கள் எம்பார் சீயர் தமது இணையடிகள் வாழியே
—————–
வைகாசி ரோகிணி நக்ஷத்திரம்.
திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் திருகோஷ்டியூரில் வைகாசி ரோகிணியில் அவதரித்தார்.
ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர்.
ஸ்ரீ ஆளவந்தார் என்னும் மஹாசார்யர் அவதரித்துப் பதினொரு வருடங்கள் கழிந்தபின் (கி.பி.987) ஸர்வஜித் வருஷத்தில்
வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில், காஸ்யப கோத்ரத்தில் ருக்ஸாகையில் பெரியாழ்வாருக்குப் பரம ஆப்தரான (ப்ரீதியுடையவரான)
செல்வநம்பியின் வம்சத்திலே, ஸ்ரீபுண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்சமாய்,
பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தவர் ஆவார் திருக்கோட்டியூர் நம்பி.
இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார்.
இவருக்கு கோஷ்டி பூர்ணர், கோஷ்டி புரீஶர் என்ற திருநாமங்களும் உண்டு.
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம் ருதஸாகரம் |
ஸ்ரீமத கோஷ்டீபரிபூர்ணம தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||
ஸ்ரீயப்பதியின் திருவடித்தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும்,
திருக்கோட்டியூர் நம்பி என்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆச்ரயிக்கிறோம்.
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “பெரிய திருமொழி” என்னும் பிரபந்தத்திற்கு
“கலயாமி கவித்வம்ஸம் கவிம்லோக திவாகாரம் |
யஸ்ய கோபி: ப்ரகாஸாபிராவித்யம் நிஹதம் தம: ||”
என்னும் தனியனை அருளிச்செய்தவர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஆவார்.
திருநக்ஷத்ர தனியன்:
வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டிபூர்ணம் ஸமாஸ்ரயே |
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோஸ்வதத் ||
வாழி திருநாமங்கள் :
மன்னியசீர் ஆளவந்தார் மலர்பதத்தோன் வாழியே
வைகாசி ரோகிணிநாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்துதித்தோன் வாழியே
திருக்குருகைப்பிரான் என்னும் பேர் திகழவந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்குரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில் வாழியே.
காசிபன் தன்கோத்திரத்தைக் கருநிலத்தோன் வாழியே
கலையனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருளே திக்குவழங்குமவன் வாழியே
வைய்யகமுன் தரிசனத்தால் வாழுமென்றான் வாழியே
ஏசறவே உகந்தெதியை எடுத்துரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ் செல்வன்மொழி தேர்ந்துரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
ஈரேழு மூன்றொன்றில் இதமுரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈரேழுலகுக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடிவந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கொட்டிநம்பி நற்பதங்கள் வாழியே.
அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதினியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள்மந்திரம் எதிராசர்க்கு ஒளித்துரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைந்தான் வாழியே
செல்வநம்பிகுலம் தழைக்கச் செகத்துதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
————–
ஹம்பியிலுள்ள புனித ஸ்தலங்களில் ஒன்று யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும்.
இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும்.
நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும்
எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இது தவிர தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது.
இது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே
தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை.
இக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா ஹிந்து கோயில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம்
————–
நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார்.
இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும்,
ஆன்மாவிலும், ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்ற படியையும்,
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்கிறார்.
பத்தாம் பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.
இவற்றுள்,
 முதற்பத்தாலே ‘உயர்வற உயர்நலமுடையவன் யவன் அவன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் – துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’ என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாகவுடையவனாய்
வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து, கூறிய பொருளுக்கும்,
இனிக்கூறப் புகும் பொருளுக்கும் பிரமாணம்,
‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும்,
‘இத்தன்மைகளையுடையவன் யார்?’ என்ன, ‘வண்புகழ் நாரணன்’ என்றும் ‘திருவுடை அடிகள்’ என்றும் ‘
செல்வ நாரணன் என்றும் சிறப்புற ஓதி,
‘தொழுது எழு என் மனனே!’ என்று தொடங்கி, ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ என்றதனால்
முக்கரணங்களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே ‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்,’ என்று அறுதியிட்டார்.
மூன்றாம் பத்தால், இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன்,
கைங்கரியத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று பாரித்து, பாரித்தபடியே,
பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக. அடிமை செய்து தலைக்கட்டுகிறார்.
ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
இனி,
• நான்காம் பத்தால், இப்புருஷார்த்தத்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ என்றும்,
விரோதி ‘குடிமன்னும் இன்சுவர்க்கம்,’ ‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ என்பனவற்றால்,
ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து,
‘ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ என்று தாமும் சொல்லிப் போந்தார்.
ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும்
‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.
ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
‘அலர்மேல்மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற தனால் ஏற்றுக்கொண்டார்.
ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4 – 6) துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
ஏழாம்பத்தால், இப்படிச் சித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க்
‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ என்று இவர் ஆசைப்பட்டபடியே,
‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ வந்து காட்சியளித்தான்;
அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே பிரிந்தபடியை அருளிச் செய்தார்.
எட்டாம் பத்தால், மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார்,
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிறபடியே, அடியார்கட்கு அதீனப்பட்ட
சொரூபம் ஸ்திதி முதலான வைகளையுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம்,
ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு,
அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்.
ஒன்பதாம் பத்தால், ‘நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி.,
‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்; உம்முடைய விருப்பமனைத்தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய,.
‘சீலம் எல்லை இலான்’ என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.
பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு, ‘திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி,
இவர்க்கு அர்ச்சிராதிகதியையுங் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே
‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
——————
கார்த்திகை கார்த்திகை நக்ஷத்திரம்.
கார்த்திகை கார்த்திகை ஸ்ரீ நம்பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த “வரதர்” பிற்காலத்தில்,
“நம்பிள்ளை” என்று தனது ஆசார்யராயன் மூலம் திருநாமம் சூட்ட பெற்றார்.
நஞ்ஜீயர் தனது திருவாய்மொழி வ்யாக்யானத்தை எழுத தகுந்த ஒருவர் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அனைவரும் வரதராஜன் அதற்கு ஏற்றவர் என கூற அந்த பணியை செய்ய நஞ்ஜீயர் வரதராஜனிடம் ஒப்படைத்தார்.
தனது மூல குறிப்புகளை கொடுத்து அதனை கொண்டு 9000 படி வ்யாக்யானத்தை எழுத பணித்தார்.
வரதனும் அந்த ஒலைகளை எடுத்துக்கொண்டு நம்பூர் சென்றார்.
பெருமாளின் விசித்ர சங்கல்பத்தால் அந்த ஓலைகள் காவிரியை கடக்கும் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட,
ஸ்வாமி வரதராஜன் தனது ஆசாரியனை வேண்டி மீண்டும் முழுவதுமாக எழுதி முடித்தார்.
இவர் தமிழிலும் வடமொழியிலும் நல்ல ஞானம் இருந்தமையால் சில இடங்களில் சில கூடுதல் அர்த்தங்களைச் சேர்த்து எழுதினார்.
நஞ்ஜீயர் அந்த வ்யாக்யானத்தைப் படித்துவிட்டு, தாம் எழுதிய வியாக்யானத்தை விட சற்று மாறுதல்கள் இருப்பதைக் கண்டு,
என்ன மாற்றம்? என்ன நடந்தது என்று கேட்டார்.
வரதரும் நடந்த விஷயத்தைக் கூறினார், அதைக் கேட்டவுடன் நஞ்ஜீயர் மிகவும் மகிழ்ந்தார்.
வரதராஜருடைய உண்மையான பெருமையை உணர்ந்து, நஞ்ஜீயர் அவருக்கு “நம்பிள்ளை” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
பலருக்கு பெருமாள் என்னும் திருநாமம் இருக்க நம்பெருமாள் என்னும் திருநாமம் அழகியமணவாளனுக்கு ஒருவருக்கே
அதேபோல் பலருக்கு பிள்ளை என்னும் திருநாமம் இருக்க நம்பிள்ளை என்னும் திருநாமம் ஸ்வாமி நம்பூர் வரதராஜன் ஒருவருக்கே.
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்–நம்பிள்ளையின் தனியன்:
நம்பிள்ளையின் வாழி திருநாமம்:
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே
காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே
———————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீமத் வானமா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–சிற்றம் சிறுகாலே வந்து–

January 13, 2023

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை –

கீழ்ப் பாட்டிலே –
உபாய ஸ்வரூபத்தை சொல்லி
தங்கள் உத்தேச்யம் கைங்கர்யம் என்று பிரபந்த தாத்பர்யத்தைச் சொல்லி
முடிக்கிறார்கள் –

இதில் –
பிராப்ய ருசியையும்
பிராப்யம் தான் இன்னது என்னும் இடத்தையும் –
அத்தை அவனே தர வேணும் என்னும் இடத்தையும் –
தங்கள் பிராப்ய த்வரையையும்
அறிவிக்கிறார்கள் –

திருவாய் மொழியில்
எம்மா வீட்டிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷித்து
அதில் சரம தசையான அர்த்தத்தை
நெடுமாற்கு அடிமையிலே -அனுபவித்து முடித்தது –

இதில் முந்துற -சரம தசையான -நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை அனுபவித்து
அது நிலை நிற்கைகாகவும்
அத்தை காத்தூட்டுகைக்காகவும்
எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது –

(திருப்பாவை ஆகிறது இப்பாட்டு
பாகவத வைபவம் எல்லே
பகவத் வைபவம் இதில்
த்வயார்த்தம் -சரணாகதி கீழ் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில்
பிரபல தம விரோதி -களை அற்ற கைங்கர்யம் -ஸூய போக்த்ருத்வ புத்தி தவிர வேண்டுமே )

நமக்கே பறை தருவான் என்று சங்க்ரஹேண முதல் சொன்ன ப்ராப்ய பிராபகங்கள்
இரண்டையும் இந்த இரண்டு பட்டாலும் விவரிக்கிறார்களாய் –
பலம் தருகிற பிராபகத்தை நிர்ணயித்து ஸ்வீகரித்தார்கள் கீழில் பட்டாலே –

அதில் பறை என்று சொன்ன
ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து பிரார்த்திக்கிறார்கள் -இப்பாட்டில் –

பறை என்று ப்ராப்யத்தை முற்படச் சொல்லி
தருவான் என்று கொண்டு சாதன ரூபத்தை அனந்தரம் சொல்லிற்று
ப்ராப்ய ருசி அடியாக
ப்ராபக அன்வேஷணம் பண்ண (தேட ) வேண்டுகையாலே –
அவ் விடத்தில் ப்ராப்ய சித்தியில் ப்ராபக ஸ்வீகார சாபேஷத்தை யுண்டாகையாலே
உபய ஸ்வீகாரம் பண்ணி பல பிரார்த்தனம் பண்ணுகிறது –

இங்கே நமக்கே என்கிற அதிகார ஸ்வரூபம் இரண்டு பட்டாலும் விசதமாகிறது
அநந்ய போக்யத்வமும் –
அநந்ய உபாயத்வமும் –
அநந்யார்ஹத்வமும் -இறே ஸ்வரூபம்-
(நாராயணாயா -கைங்கர்யமே பிரதானம் என்பதால் அத்தை முதல் காட்டி அருளுகிறார் )

செல்வச் சிறுமீர்காள் –
வையத்து வாழ்வீர்காள் நாமும் –
நாங்கள் நம் பாவைக்கு –
நாங்களும் மார்கழி நீராட –
எம்மை நீராட்டு –
யாம் வந்தோம் –
யாம் பெறு ஸம்மானம்
புண்ணியம் நாமுடையோம் –
நாங்கள் என்பது
எங்களுடையது என்பதாய்
பாட்டுத் தோறும் தங்களை உறைத்து காட்டிற்று

ஸ்வரூபத்திலும்
உபாயத்திலும்
பலத்திலும்
தாங்கள் இருக்கும் இருப்பை வெளியிடா நின்று கொண்டு
நமக்கே என்ற பதத்தை விவரித்த படி இறே –

தூயோமாய் வந்து நாம் என்றும் (5)
தூயோமாய் வந்தோம் என்றும் (16_
இரண்டு சுத்தி உண்டு இறே கீழ்ச் சொல்லிற்று –

(இரண்டிலும் இரண்டு வகை வெளிப் பகை உள் பகை இரண்டும் உண்டே
அவற்றை விவரிக்கிறார்
பற்றின பற்றும் உபாயம் இல்லை
நமது ப்ரயோஜனத்துக்காகக் கைங்கர்யம் என்பதும் கூடாதே
இவையே உள் பகைகள் )

அதில் சித்த உபாய பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
சாத்திய உபாயத்தில் ருசி வாசனை யாதல் –
ஸ்வீகாரத்தில் உபாய புத்தி யாதல் –
ஸ்பர்சிக்கில் சவ ஸ்ப்ருஷ்டம் போலேயும்
நீச ஸ்பர்சம் போலேயும் இருப்பது ஓன்று இறே –

அவை இரண்டு அசுத்தியும் இல்லை என்னும் இடம்
கீழ்ப் பாட்டாலே வெளியிட்டார்கள் –

சாத்யத்திலும் வந்தால்
ப்ரயோஜனாந்தர சங்கம் நடப்புதல்-
அக வாயிலே போக்த்ருத்வ புத்தி நடப்புதல் செய்தால்-
விஜ போஜனம் போலேயும்
உச்சிஷ்ட அசனம் போலேயும் வருவதொரு அசத்தி உண்டு இறே –

அந்த எச்சில் அறுத்து போக சுத்தி பண்ணுகிறார்கள்
இப் பாட்டில் –

ஆசற்றார் மாசற்றார் (திருமாலை22) என்கிறது
இரண்டு தோஷமும் அற்றவர்களை இறே –

சர்வ தர்மான் –
சர்வ காமான்ச்ச-
தொழுமின் தூய மனத்தராய் -(திருவாய் 3-6 )

(கீழே ஆறு பகுதியாகப் பார்த்தோம்
இதிலும் ஆறு யாரையும் அறிந்தால் ஆறி இருக்கலாம் )

1-உபாய பரிக்ரஹத்தினுடைய அநந்தரத்திலே ருசி காரியமாய் வருவதொரு பேற்றிலே த்வரையும்-
(சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து)

2-சாத்தியத்திலே சாதனா புத்தி நடக்கும் படியான கலக்கமும் –
(உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்)

3-ஆர்த்தியை ஆவிஷ்கரித்து வளைக்கையும்–
(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)

4-ப்ராப்யாந்தர ஸ்ரத்தை குலைகையும்
(இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா)

5-புருஷார்த்தத்தில் அவிச்சின்னமான பாரிப்பும் –
(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)

6-ப்ராப்யம் சபலமாம் படியான அபேக்ஷையும் –
(மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்)

இவை ஆறும் பரிக்ரஹித்த உபாய பலமாய் விளையும் இறே

(த்வரா கலக்கம் ஆர்த்தி உபேஷா அபேக்ஷை வைராக்யம் இந்த ஆறும் )

1-காலமே கண்ணுறங்காதே வந்து துவளும் படியான த்வரையும் –
2-போற்றுதற்குப் பொருள் தேடும்படியான கவக்கமும் –
3-தங்கள் வடிவைக் காட்டி வளைக்கும் படியான ஆர்த்தியும் –
4-நோன்பை வியாஜ்ஜியமாக்கி வேண்டினவற்றில் அபேக்ஷை அற்ற படியையும்-
5-பரிபூர்ணமாக கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிற படியையும் –
6-அதில் களை யறுத்துத் தர வேணும் என்று சொல்லும்படி பிரார்த்திக்கிற படியையும்
காட்டி
நாமுடையோம் என்கிற புண்ணியத்தினுடைய பலன்களை வெளியிடுகிறார்கள் –

கீழ்ச் சொன்ன உபாயத்துக்கு
வேறு ஒன்றை பலமாக்குகை யாவது
மாணிக்கத்தை இட்டு தவிடு கொள்ளுவரைப் போலே இறே –

அந்த உபாயத்துக்கு உபாயாந்தர நிவ்ருத்தி போலே
சகல பல சாதாரணம் என்று விரோதியான பலத்தை
அபேக்ஷிக்கலாகாது இறே –

ஸ்வரூப அனுரூபமான பலத்தில் தங்களுடைய அபிநிவேசத்தை அறிவிக்க வேணும் என்று
ஸ்ருதி சத சிரஸ் ஸித்தமாய் –
கருத்தறியும் மூதுவர் கைப் பட்டு கிடக்குமதாய்-
கரும் தறையில் வாசனையால் அவர்கள் பிறந்த இடத்தில் அபேக்ஷிக்குமதாய்
(எம்பெருமான் பொன் மலையிலே ஏதேனும் ஆவேனே )

அவர்களோடு ஒத்த பிராப்தியை யுணர்ந்தவர்கள் பாரிக்குமதாய்-
பகவத் அநந்யார்ஹ சேஷமான வேஷத்துக்கு அத்யந்தம் அனுரூபமாய்
ஈஸ்வரனுடைய முக விகாசத்துக்கு ஹேதுவாய் இருந்துள்ள பரம ப்ராப்யத்தை
பிரபந்த நிகமனம் பண்ணுகையாலே
எல்லாருக்கும் தெரியும்படி வெளியிட வேண்டுகையாலே

நாட்டார் இசைகைக்கு நோன்பு என்ற ஒன்றை வியாஜி கரித்துப் புகுந்தோம் அத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் என்று
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்கள் –
எம்மா வீட்டில் அர்த்தத்தோடு (2-9 )தலைக் கட்டுகிறது –

எம்மா வீட்டில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து (2-9 )-
ஒழிவில் காலத்திலே பிரார்த்தித்து (3-3 )
அது தன்னுடைய எல்லை நிலமான பாகவத அனுபவத்தை
நாளும் வாய்க்க நங்கட்கே-என்று
நெடுமாற்கு அடிமையிலே பிரார்த்தித்தார் -ஆழ்வார்-(8-10 )

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

அவரைக் காட்டில் இவர்களுக்கு உள்ள வாசி –
நீராடப் போதுவீர் –
(இவள் எடுத்த எடுப்பிலே நீராடப் போதுவீர் )
எல்லாரும் போந்தாரோ என்று புருஷார்த்தத்தில் சரம அவதியில் முதலடியிலே நின்று
அது நிலை நிற்கைக்காக
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அர்த்திக்கிறார்கள்-
(பாகவத கைங்கர்யம் நிலை நிற்க பகவத் கைங்கர்யம் வேண்டுமே )

ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
எம்மேல் விழியாவோ -என்று பெண்கள் அக்ரூரன் மநோ ரதித்தால் போலே
மநோ ரதித்துக் கொண்டு வந்த படியே நாமும் பெரிய ஆதரத்தோடு புறப்பட்டு இருந்து
வந்த கார்யங்களை சொல்லுங்கோள் என்று கேட்டு
வேண்டுவனவும் கொடுக்க இசைந்து
பறை கொண்ட காலத்துக்கு பெறும் ஸம்மானம் பண்ணுவதாக இசைந்து
வந்த கார்யம் தலைக் கட்டி விட்டோம் –

திரிய
பறை தாராய் -என்று நின்றார்கள் –
பாடிப் பறை கொண்டு என்றதும் மேலேயும் ஒரு பறை யுண்டாய் இருந்தது –
நாமது அறிந்திலோம் –
நமக்கு இதுவே தெரிந்தது இல்லை –
மேல் விளையும் படி காண்கிறோம் என்று பேசாதே இருந்தான் –

எங்கள் த்வரையையும்-
தலை தடுமாறான பரிமாற்றத்தையும் கண்டு வைத்து
இதுக்கு ஹிருதயம் கேட்டில்லையீ –
எங்கள் நினைவைக் கேளாய் -என்று தொடை தட்டுகிறார்கள் –

கீழ்ப் பண்ணின ப்ராபக ஸ்வீகாரம் அசத் சமமாம் படியான ப்ராப்ய ருசியையும்
உன்னாலே பேறு -என்று அறுதி இட்டால்
நீ வரக் கண்டு இருக்க ஒண்ணாத படி இருக்கிற த்வரையையும்
எங்கள் ஆற்றாமையின் ஸ்வ பாவத்தையும்
கேளாய் என்கிறார்கள் –

உனக்கே நாம் ஆட்செய்வோம்–கைங்கர்யம் செய்யும் பொழுது ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து -ப்ரபல தர விரோதி -மற்றை நம் காமங்கள் மாற்று –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்
ப்ராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே –
எனக்கும் பிறருக்கும் அல்ல எனக்கும் உனக்கும் அல்ல -உனக்கே –
மாம் -ஏகம் -என்னையே -ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்வது
இதே போல் ப்ராப்யத்தில் -அவன் ஆனந்தத்துக்காகவே -மேல் படி
போக்தாவாகவே இருக்க வேண்டும்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ரங்கள் போக்யங்கள்
அஹம் அன்னம் நாமே போக்ய பதார்த்தம்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –

உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–ஸ்வீகாரம் செய்தல் -போற்றுதல் -அதுக்குப் பொருள் பிரயோஜனம் -மூன்று நிலைகள்
இங்கு தான் பறை -கைங்கர்யம் -23 பாசுரம் தொடங்கி -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் பீடிகை வைத்து -விளக்கம்
ப்ராப்யத்தில் ஆறு பகுதிகள் இங்கு
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து -த்வரை வெளியிட்டு அருளி
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-உபாயத்தில் ப்ராப்யம் -ப்ராப்யத்தில் ப்ராபகம் கலக்கம் தொனிக்கும்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே-தடுத்தும் வளைத்தும்
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-ப்ராப்யாந்தர நிவ்ருத்தி தெரிவித்து
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்–கைங்கர்யத்தில் அளவிறந்த பாரிப்பு
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-ஸூவ ப்ரயோஜன நிவ்ருத்தி -ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து-களை அற்ற கைங்கர்யம்

எம்மா வீட்டில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறது –
திருவாய் மொழியிலே இப்பிரபந்தத்துக்கு வாசி –
முந்துற நெடுமாற்கு அடிமையை அர்த்தத்தை அனுபவித்துக் கொண்டு
அது நிலை நிற்கைக்காகவும்
அத்தைக் காத்தூட்டுகைக்காகவும்
பிற்பட எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது-

(பகவத் விஷய கைங்கர்யம் எம்மா வீட்டில் 2-9
நெடுமாற்கு அடிமை -பாகவத கைங்கர்யம் -8-10-
பாகவத கைங்கரியமே வேண்டுவது -அத்தை நிலை நிற்க -காத்தூட்டவே -இங்கு அவன் இடம்
பாகவதர் குழாம் இழந்து -ஆடி ஆடி -நரசிங்கப்பெருமாள் இடம் பிரார்த்தித்தார் அன்றோ ஆழ்வார்)

ஏவம் ஸ்வீ க்ருத சித்த உபாயனுக்கு
தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும் தத் விரோதி நிவ்ருத்தியும்
யா காஸ்சந க்ருதய-இத்யாதிப் படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –

இப் பாட்டில்
உபேய ஸ்வரூபத்தை
விவரிக்கிறார்கள் –

———–

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –

சிற்றம் சிறுகாலே –
சிறு பெண்கள் எழுந்திருக்க ஒண்ணாத குளிர் போதிலே –
சத்வம் தலை எடுத்த காலத்திலே-
அநாதி அஞ்ஞான அந்தகாரம் நீங்கி
பகவத் விஷயம் வெளிச்செறித்த காலத்தில் -என்றுமாம் –

நாரணனைக் கண்டேன் –பகல் கண்டேன் -என்னக் கடவது இறே –

சிற்றம் சிறுகாலே -என்று ஜாதி பேச்சு
வெட்ட விடியாலே-என்னுமா போலே –

வந்து –
சேதனருக்கு பகவத் லாபம் அவன் வரவாலே இருக்க
வந்து -என்றது ஆதர அதிசயத்தாலே –
இது தான் அங்குத்தைக்கும் மிகையாக இருப்பது –

எங்கனே என்னில் –
பெருமாள் ரிஷிகள் இடம் அருளிய வார்த்தை –
நீ இருந்த இடத்தே வந்து
ராகம் க்ரம பிராப்தி சஹியாது இறே –

சிற்றம் சிறுகாலே வந்து
சிறு பெண்கள் ஆகையால் குளிர் காலத்தில் புறப்பட மாட்டாத நாங்கள்
அறப் போதோடே புறப்பட்டு வரும் படி அன்றோ எங்கள் த்வரை இருந்த படி –
இவர்களுக்கு ஆபிமுக்யம் பிறந்த காலம் ஆத்ம ஹித சிந்தனத்துக்கு சத்வோத்தர காலமாக இருக்கும்
ப்ரஹ்ம முஹூர்த்தமாக வந்து விழுந்தது

மாசம் மார்கழி மாசமாய் –
பக்ஷம் பூர்வ பஷமாய்-
அதிலே பவுர்ணமியாய்-
அப்படியே ஒரு நன்னாள் வந்து பலித்தால் போலே
அத் திவசத்தில் முஹூர்த்தமும் ப்ரஹ்ம முஹூர்த்தமாய் வந்து விழுந்தது

(சுக்ல பக்ஷம் கிருஷ்ண பக்ஷம் இரண்டும் உண்டே –
பவுர்ணமி தொடங்கி பவுர்ணமியில் முடியும் படி அமைந்தது
முதல் பாட்டில் நேரம் இல்லை )

காலை –
சிறு காலை –
சிற்றம் சிறு காலை-

செங்கல் பொடிக் கூறை என்று தாமஸரும் உணரும் படி யான அளவு காலை யாவது

ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்று இடைச்சிகள் உணர்ந்து
ஸ்வ க்ருத்யத்திலே அதிகரிக்கும் படியான அளவு சிறு காலை யாவது

ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்றது தான் விடிவுக்கு அடையாளமாகச் சொல்லும் படி –
அதற்கு முன்னே உணர்ந்தார்கள் இறே தாங்கள் –

இவர்களுக்கு ராத்திரி கழிந்து
பகல் வருவதற்கு முன்புத்தை
நடுவில் போதை இறே நினைக்கிறது

அஞ்ஞான தசை குலைந்து
பிராப்தி தசை புகுவதற்கு முன்புத்தை
ஞான தசையைச் சொன்ன படி
முனிவர்களும் யோகிகளும் உணரும் காலம்

சிற்றம் சிறு காலை யாவது –
சம்சாரியான நிலை குலைந்து
முக்தனாவதுக்கு முன்பு
முமுஷூத்வம் அங்குரித்த தசை இறே –

இருள் அகன்ற அளவாய்
வெளிச் செறிப்பு உள்ள அளவு எல்லாம் பிரகாசியாத அளவாய்த்து –

இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அறிவு கேடு இன்றிக்கே
பகவத் விஷயத்தில் ஞானம் கொண்டு
நேரான பரிமாற்றமும் இன்றிக்கே இருக்கிற அளவைப் பிடித்த படி –

காலை நல் ஞானத் துறை படிந்தாடி (திரு விருத்தம் -93)-என்று
ஞான தீர்த்த அவகாஹனத்துக்கு யோக்கியமான காலம் பெற்ற படி –

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஸ்ரீ யபதியை விஷயீ கரிக்குமது இறே நல் ஞானமாவது –

துறை படுகையாவது-
சதாசார்ய உபதேச மூலமாக
பிராட்டி புருஷகாரமாக –
பாகவதர்கள் உஸாத் துணையாக
எம்பெருமானைப் பற்றுமது-

உன் மணாளனை எம்மை நீராட்டு (20) என்று
துறை தப்பாமல் இழிந்தவர்கள் இறே இவர்கள்-

ஓயும் பொழுதின்றி -(திருவாய் -5-4 )
விடிவு காணாத படி நீண்ட சம்சார காள ராத்திரி கழிந்து –
பகல் கண்டேன் -என்று ஒரு பகல் முகம் செய்கிற சமயம் இறே

அந்தம் தம இவ ஞானம் இத்யாதி –
காலை மாலை (திருவாய் )என்று ஒரு நியதி இல்லை இறே –
அவன் தோற்றும் காலம் விடிவாம் அத்தனை இறே –

திருவாய்ப் பாடிக்கு நாட்டார் விடிவு அஸ்தமயமாய் –
சர்வ பூதங்களினுடைய அஸ்தமநம் விடிவாய் இறே நடப்பது –

ஆவிர்ப் பூதம் மஹாத்மனா -என்று
அபர ராத்ரம் விடிவாய் வந்து விழுந்தது இறே –

விரியும் கதிரே போல்வான் இறே(நாச்சியார் )

சிற்றம் சிறு காலே
சிறு காலே வரில் உன்னைக் காண ஒண்ணாது என்று சிற்றம் சிறு காலே வந்தோம் –
சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன் -என்று
மாத்ரு பரதந்த்ரனாய்
இளம் கன்று மேய்க்க வேணும் –

விடிந்த வாறே –
காலிப் பின்னே போம் –
எல்லியம் போதாக வரும் –
நீராட்ட அமைத்து வைக்கையாலே-ஆடி அமுது செய்யும் –
அல்லலுற்றான் வந்த பின்னை என்கிறபடியே
இருளிலே ஆள் பார்த்து ஊரிலே திரியும் –

அபிமதைகளை வேண்டின இடங்களிலே புணர்ந்து
இரா நாழிகை மூ வேழு சென்றவாறு இங்கே கிடை காட்ட வரும்
அக் காலம் அறிந்து வந்து கைக் கொண்டார்கள் –

நாள் தோறும் ஒரு விடிவு யுண்டாய் நடக்கிறது இறே –
ஸூப்ரபாதமாய்த்து இத் திவசம் ஒன்றுமாய்த்து –

அதுக்கடி என் என்றால்
வந்து
வந்த வருத்தத்தை –
வந்து தலைப் பெய்தோம் -என்று கீழே சொன்னார்கள் இறே

வந்து
சம்சார பதவியில் ஓடினவர்கள் மீண்டு வருவதிலும் வருத்தமுண்டு எங்கள் வரத்துக்கு –
தேஹாத்ம அபிமானம் பண்ணினாரை –
எதிர் சூழல் புக்குத் திரிகிறவனுடைய யத்தனத்தாலே வருவிக்கலாம் –
நிவ்ருத்தி சாத்தியம் என்று ஸ்வ ஸ்வரூபத்தை யுணர்ந்து வாராதாரை வருவிக்க அரிது இறே

உபாய ஸ்வீகாரத்தில் உபாய பிரதிபத்தி பண்ணாத படியான
நிலையிலே நிற்கிறவர்களை
க்ரியா ரூபமானத்தை ஏறிட்டுக் கொண்டு வரும் படி பண்ணுகை அரிது இறே

உவாச ச என்று
பெருமாள் திரு உள்ளத்தைப் புண் படுத்தினால் போலே சொல்லுகிறார்கள் —
வரவுக்கு நோவு படுகிறவனை வார்த்தையால் புண் படுத்தினான் –
தான் சரண்யராகப் பற்றி வந்தாரை யுண்டாக்கிக்
கார்யம் கொள்ள மாட்டிற்று இலன் என்றது இறே விபீஷணனை

அப்படியே நாலடி இட்ட நாங்களே வந்தோம் என்கிறார்கள் –
பத்ப்யாம் அபிகமாத்-என்று
தாம் வந்த தூரம் பாராதே வாசல் அளவும் புறப்பட்டது பொறுத்திலரே
(குகன் வந்ததை பெருமாள் வார்த்தை )

வந்து
இவ் வீதி போதுமாகில் (பெரியாழ்வார் – 3-4 )என்று வந்தால்
கார்யம் கொள்ள இருக்கும் நாங்கள் வரும்படி யன்றோ த்வரை இருந்தபடி

வந்து
பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து
மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து –
நம் தெருவின் நடுவே வந்து –
கதவின் புறமே வந்து –
முற்றம் புகுந்து –
நம் இல்லம் புகுந்து –
நீ மலர் அணை மேல் வைகி –
மாலை புகுர ப்ராப்தமாய் இருக்க –

படுக்கையை விட்டுப் படி கடந்து
காவலும் கடந்து –
உன் தோரண வாசலிலே வந்து –
உட் கட்டிலிலே புகுந்து –
பள்ளிக் கட்டில் கீழே –
சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ –

கறவைகள் பின் சென்று என்று அந்த போக்கு நிகர்ஷமாக சொன்னால் போலே –
இவ் வார்த்தையும் தப்பு என்று இருக்கிறார்கள் –

ஸ்வரூபத்தை யுணராத போது அது ப்ராப்தமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உணர்ந்தால் இது ப்ராப்தமாய் இருக்கும்

உபாயாந்தரத்துக்கு நிவ்ருத்தி தோஷம் –
இவ் வதிகாரிக்கு பிரவ்ருத்தி குற்றம் –
ப்ராப்ய ப்ராவண்யம் ஸ்வரூபத்தை மறப்பித்தது –
பூமருவு கோல நம் பெண்மை சிந்தித்திராது போய் (பெரிய திருமொழி -11-2 )-என்னப் பண்ணும் இறே

சிற்றம் சிறுகாலே
ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய சிந்தயேதாத்மநோ ஹிதம் (ஹரி வியாகரேத் -பராசரர் )என்றும்
காலை நல் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நன்நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே (திரு விருத்தம் )-என்றும் சொல்லுகிறபடியே இவர்கள் அனுஷ்டிக்கிறார்கள் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – திரு விருத்த– -93 –

காலையாவது-
ஆத்மாவுக்கு வெளிச் செறிக்கும் காலம் -என்றுமாம்
இக்கண்ணுக்கு இவ்வாதித்யன் வெளிச் செறிப்பு பண்ணுமா போலே
அகவாயில் கண்ணுக்கும் வெளிச் செறிப்புப் பண்ணக் கடவ ஆதித்யன் ஸ்ரீ யபதி-
பாஸ்கரேண ப்ரபா யதா –
ஞானம் ஆகிறது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல்திருவந்தாதி )என்கிறபடியே
ஸ்ரீ யபதியே தனக்கு விஷயமாக யுடைய ஞானம்
நல் ஞானம் ஆகிறது
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் -சஹா யாந்த்ர நிரபேஷமாக-அம் மிதுனமே நமக்குப் பலம் தரக் கடவது என்று அத்யவசாயம்-
துறை படிந்து ஆடுகை யாவது
குரு பரம்பரையில் சொல்லுகிற க்ரமத்தாலே எம்பெருமானைப் பற்றுகை –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –(முதல்திருவந்தாதி-67-)

பகல் பரஹிம்ஸை பண்ணி இரவு எல்லாம் மறந்து கிடந்து உறங்கி விடிந்தால் பர ஹிம்ஸையிலே புகும்
நடுவே அல்பகாலம் சத்வம் தலை எடுத்து வெளிச் செறிப்புள்ள காலம்
மனஸ்ஸூ ஸ்திரமாம் காலம் –
முன்பு தான் தனக்குக் கடவனாய் இருக்கும் -பின்பு எம்பெருமானுக்கு பரமாய் இருக்கும் –
நடுவில் உணர்ச்சி இறே இக்காலம்

(பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-)

மாறனேர் நம்பி சரம தசையில் கலக்கம் கண்டு பயப்பட்ட பெரிய நம்பிக்கு எம்பெருமானார் பயம் தீர
அருளிச் செய்த ஸ்லோகங்கள் இவை
ஸ்திதே மநசி -இத்யாதி -இவை எங்கனே என்னில் –
ஸ்ரீ வராஹ எம்பெருமான் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அருளிச் செய்தார் என்றார்
ஸ்ரீ வராஹ எம்பெருமான் உம்மைப் போலே ஆஸ்ரித பஷபாதி –
அவன் வார்த்தை ஒழிய என் போல்வார் மத்தியஸ்தர் வார்த்தை யுண்டாகில் சொல்லும் என்ன
நமே பக்த ப்ரணஸ் யதி(ஸ்ரீ கீதை -9-31) -இத்யாதிகள் அடைய உம்மைப் போல்வார் வார்த்தையாய் இரா நின்றது என்ன
இந்த ஞானம் உடையவனுக்கு புநர் ஜென்மம் இல்லை என்னும் இடத்துக்கு பிரமாணம் உண்டோ என்ன
த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மாமேதி ஸோர் ஜூந -என்று உண்டு என்று அருளிச் செய்தார்
இவற்றைக் கொண்டு பெரிய நம்பி ப்ரீதரானார் –

(ஸ்திதே மனஸி ஸூஸ் வதே சரீரே சதி யோ நர தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா
விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதி-தேசிகன் -ரஹஸ்ய சிகாமணி இதன் விளக்கம்)

(பெண் பித்தன் வராஹ நாயனார் -எக்குற்றம் இத்யாதி உம்மைப்போலே)

(க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –)

அந்திம ஸ்ம்ருதி இல்லை என்று அஞ்ச வேண்டா –
புநர் ஜென்மம் உண்டு என்று அஞ்ச வேண்டா –இந்த ஞானம் உடையவனுக்கு-
ஆளவந்தார் கோஷ்டியிலே-சம்சாரிக்கு எம்பெருமான் சந்நிதியில் விண்ணப்பம் செய்ய அடுப்பது என் என்ன –
சில முதலிகள்
முடோயம் அல்ப மதி இத்யாதி -க்ஷத்ர பந்துவின் ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்கை அழகிது என்ன
ஆளவந்தார் -அதிலே பெரும் தேவை யுண்டு –
நமக்காவது ஸோஹம்தே-என்கிற காளியன் ஸ்லோகமே -என்று அருளிச் செய்தார்

(ப்ரணத -பதம் உண்டே அதில் -சரணாகதன் சொல்லவும் சக்தன் அல்லன்
அர்ச்சனை ஸ்தோத்ரம் பண்ண வராதே -தேவர் கிருபை மாத்திரமே
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இருப்பார்க்கும் இரங்கும் அவன் அன்றோ)

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னுடைய ஆதித்யன் உதித்தான் -அஸ்தமியாத ஆதித்யனையும் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன்
முன்பு ஒரு போகியாக உறக்கம் -பின்பு ஒரு போகியாக உணர்ச்சி –
நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது
பெண்களாகையாலே சிற்றம் சிறு காலம் என்றபடி -வெட்ட வெடியலே என்னுமா போலே –
யோகிகளும் உணர்வதற்கு முன்னே சிறு பெண்களான நாங்கள் உறங்கக் கடவ போதிலே –
உணரக் கடவ – இத்தர்ம ஹானியைப் பாராய்
என்னில் முன்னம் பாரித்து -என்று நீ உணரும் காலத்திலே நாங்கள் உணர்ந்து வந்தோம் -என்கை –

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-)

வந்து –
இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல
இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை

————

உன்னைச் சேவித்து –
பலம் வேண்டாதே -சாதனா காலத்திலே ரசிக்கும் உன்னைச் சேவித்து –
பலமுந்து சீர் என்று இறே இருப்பது –
அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத

உன்னைச் சேவித்து –
தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து –
சேவ்யரான நாங்கள் சேவகராம்படி அத்தலை இத்தலை யாவதே –

நீங்கள் வந்து செய்த தப்பு என் என்ன

உன்னைச் சேவித்து
இது இறே நாங்கள் செய்த தப்பு என்கிறார்கள் –

எங்கள் ஸ்வரூபத்தை அறியா விட்டால்
உன் ஸ்வரூபத்தை தான் உணர்ந்தோமோ –

இத் தலையில் மித்ர பாவநையாய் இருக்கை –
இவனை விடில் தான் உளனாகாத படி இருக்குமவன் இறே –
வரவு தானே மிகையாய் இருக்கும் படி இருக்கிற யுன்னை –

அதுக்கு மேலே
துராராதர் பக்கல் செய்வது எல்லாம் செய்தோம்
பஞ்சாக்கினி வித்யையில் சொல்லுகிற பரிவ்ருத்தியை கரை ஏறி –
துஸ்ஸாதமாய் கை புகுந்தாலும் நிஸ்ஸாரமான விஷயங்களில் துவண்டு
அது தனக்கு உறுப்பாக இதர சேவையில் இழிந்து
அவர்கள் முகத்தில் விழித்து –
அவர்கள் முகத்தில் வெம்மை பொறுத்து
நீச பாஷணங்களைப் பண்ணித் திரிகை யாகிற ஸ்வ விருத்தியை அநாதி காலம் பண்ணிற்று

அத்தை தவிர்ந்து —
விஷயம் வகுத்ததாய்
ஸூசீலனாய்
ஸ்வாராதனாய்-
புலன் கொள் வடிவு படைத்தவனாய் (திருவாய் -8 )
தானே தன்னைத் தருவானாய்
தந்தால் பின்னை ஒரு காலமும் கை விடாதவனாய் இருந்தவனை
உசித தாஸ்யம் பண்ணுகை ப்ராப்தமாகச் சொல்லா நிற்க –

எதிரே இட்ட நாலடிக்கும் பொறாதே உபசாரம் சொல்லுமவன் கருத்து அறிகையால்
பின்னே தொடர்ந்து சேவித்ததை குற்றமாகச் சொல்லுகிறார்கள்

உன்னைச் சேவித்து
சோப்ய கச்சன்-என்று அபிகந்தாவான யுன்னை
அபிகமனம் பண்ணி
குசல பிரஸ்னத்திலே திருப்தனாம் உன்னை
நாங்கள் சேவிக்கை மிகை அன்றோ

சென்று
நாம் சேவித்தால் என்கிற
இரண்டும் மிகையுமாய் செய்தோம் இறே

பின்னே சென்று –
சூழவே நின்று -என்று
எங்களை தொடர்ந்து சேவிக்கிற யுன்னை

பேஜூர் முகுந்த பதவீம் -என்கிறபடியே
சுவடு பார்த்து திரிந்து
நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் (பெரியாழ்வார் -3-7 )-என்னக் கடவது இறே –

வந்து உன்னைச் சேவித்து –
உன்னை (ப்ராப்யமாக )வேண்டாதே சாதன காலத்திலே ரசிக்கிற உன்னைச் சேவித்து
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -அதுக்கு மேலே ஒரு அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத உன்னைச் சேவித்து

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-)

உன்னைச் சேவித்து –
அத்தலை இத்தலை யாயிற்று -ஸேவ்யரான நாங்கள் சேவகரான படி –
லோக நாதம் புரா பூத்வா -ஸூக்ரீவம் நாதம் இச்சதி -தாமே இறே காலம் பார்த்து இருப்பார் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை முடி சூட்டுக்கைக்காக லங்கைக்கு நடந்து காலம் பார்த்து இருந்தவன் அன்றோ –

————–

உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்
போக்யமுமாய்
பிராப்தமுமாய்
இருந்த திருவடிகளிலே –

அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து –
வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை

போற்றும்-
போற்றுகை யாவது
ஸ்வாமிக்கு மங்களா சாசனம் பண்ணுகை –

பொருள் கேளாய் –
முன்பே இருக்கிறவனை -கேளாய் -என்பான் என் என்னில் –
இவர்களுடைய ஸ்தநாத்ய அவயவங்களிலே
அந்ய பரனாய் இருக்கையாலே
உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் -என்கிறார்கள் –

சேவித்த அளவியோ -அதுக்கு மேலேயும் சில செய்திலோமோ-

உன்-பொற்றாமரை அடியே போற்றும்
சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே
கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து
வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்

சேவித்து –போற்றவும்
தொடர்ந்து ஏத்தவும் (பெரிய திருமொழி -1-9 )என்கிற படியே

உன் அடி போற்றும்
ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்

அடியே –போற்றும்
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி –
தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே
தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை

புத்ர சிஷ்ய தாசாதிகள் தாங்களும் உண்டு உடுத்து
பித்ராதிகளுக்கும் சேஷமாய் இருக்குமா போல் அன்றிக்கே
அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை

உன்னடியே போற்றும்
அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி –
அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே
(திருமார்பை ஆசைப்படும் அத்திரு
திருவடியை ஆசைப்படும் இத்திரு )

உன் –பொன்–அடி
உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ –
காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்
அவை –
உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் —
வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –

இது
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே
இப் பொன்னடி இருப்பது –

உன் –பொன்னடி –
எல்லாருக்கும் பொதுவாய் இருக்கையும் -(பொது நின்ற பொன் அம் கழல் )
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கையும் –
கண்டால் விட ஒண்ணாது இருக்கையும் –
விட்டால் பிழைக்க ஒண்ணாது இருக்கையும் –
வெறும் பொன்னடியாய் இருக்கிறதோ –

பொற்றாமரை அடி அன்றோ –
சாதனத்வமும்
சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –

பாவனத்வமும் போக்யத்வமும்
ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்
பொன்னும் தாமரையும்

தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3)
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )

உன் பொற்றாமரை அடியே
எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –

உன் பொற்றாமரை அடி
பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால்
கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே
அழித்தாய் உன் திருவடியால் –

கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று
ஆசிரயணீயமும் இதுவே –

அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று
ஆசைப்படுவதும் இதுவே

ஆசானுகுணமாக
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 )
இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –

போற்றும்
பரமன் அடி பாடி –
அடி போற்றி –
கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே

கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி )
ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –

இதுக்கு மேல் ஓன்று நினைக்கும் படி இறே
ருசி காரியமாய் வந்த ஆற்றாமை இருந்த படி –

போற்றும் பொருள்
போற்றுகிற பிரயோஜனம் –
இவர்கள் போற்றும் பொருள் என்று பாரித்துக் கொண்டு
சொல்லத் தொடங்கினவாறே –

சிற்றம் சிறு காலை யுணர்ந்து வந்த அநந்தலாலே சிவந்த போதரிக் கண்களையும் –
இவர்கள் கோவை கனிவாயில் பழுப்பிலும்
பேச்சில் இனிமையிலும் –
வடிவு அழகிலும்
பாடகமும் சிலம்பும் த்வனிக்கிற இவர்கள் பொற்றாமரை அடியிலும் கண்ணை வைத்து
நாம் சொல்லுகிற இது இவன் பிரதிபத்தி பண்ணுகிறீலன் என்று தோற்றும் படி
அந்நிய பரனாய் இருந்தான் –

முன்பு இருக்கிறவனை
கேளாய்
என்கிறார்கள் –
இவர்கள் தாம் தங்களை அறிந்தால்
பின்னே நின்று வார்த்தை சொல்ல வேண்டாவோ –
வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே

கேளாய் –
என்னும் போது நடுவே அந்நிய பரனாக வேணும் இறே
(கேட்டியேல் மாலே பாசுரம் போல் )

கேளாய்
எங்கள் ப்ராப்யத்தை அழித்தோ நீ உன் ப்ராப்யம் பெறப் பார்ப்பது -என்று
அடியை விட்டுத் தொடையைத் தட்டுகிறார்கள் –

கேளாய்
அத்யா பயந்தி என்று ஓதுவிக்க இழிந்தவள் ஆகையால்
ஸ்ரூயதாம் என்று கேட்ப்பிக்க வேணும் இறே
இவன் தனக்கு சிஷ்யன் வாய்த்தால் போலே ஆக ஒண்ணாதே இவர்களுக்கு

கேளீரோ (2 )-என்று
பெண்களுக்கு முதலில் க்ருத்யாம்சம் சொன்னார்கள் –
இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று

அழகிது -எனக்குத் தான் ஏதானால் நல்லது –
உங்கள் பேச்சே அமையாதா-
இது ஒரு பொருள் கேள்வியாய் இருந்தது
விடிவோறே வந்து கைக் கொண்டி கோள்-
நமக்கு உசித தர்மங்களையும் விட்டு –
புறம்பு உள்ள அந்நிய பரதைகளையும் தவிர்த்து
இற்றைக்கு இதுவே கேள்வியாக இருக்கிறோம் -சொல்லலாகாதோ என்றான் –

நீ கேளாய்
சீரிய சிங்கா சனத்திலே அன்றோ நீ இருக்கிறது –
தர்ம சாசனத்தில் இருப்பார்க்கு கேட்க வேண்டாவோ

நீ போற்றும் பொருள் கேளாய்
உனக்கு க்ரமத்திலே இவர்கள் கார்யம் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
த்வரிக்க வேணும் காண் என்கிறார்கள் –

பேறு உங்களதாய் நீங்கள் த்வரியா நின்றி கோளே என்றான் –

பிறந்த நீ
இவ்வளவாய் த்வரித்தோம் நாங்கள் ஆகில் அன்றோ நாங்கள் மேலும் த்வரிப்பது-
எதிர் சூழல் புக்கு –
இவ்வளவாய் கிருஷி பண்ணின நீ
பல வேளையில் ஆறி இருக்கலாகாது காண் –
எங்கள் ருசி கார்யமான த்வரைக்கு முற்பாடனான நீயே பேற்றுக்கு முற்பாடானாக வேணும்
எத்தனை காரியத்தை இட்டு பிறப்போம் என்று தெரியாது –

இது என் –
என்பிது இது என்

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-
ஆற்றாமையும் ஸ்வரூபம் ஆகையாலே அடைவு கெட மேலே விழுந்த படி –

(பாவானத்வம் பொன்னடி போக்யத்வம் தாமரை அடி)

அடியே போற்றும் பொருள் –
சூட வந்த பூவுக்கு விலையிடுவாரைப் போலே -உனது பால் என்றுமாம்(அடி -ஸ்வாமி உன்னையே என்றவாறு )
உபாய உபேயங்கள் இரண்டும் தானே
ஸ்வீகார மாத்ரத்திலே நிற்கப் போகாமையாலே போற்றுகிற படி
ருசிக்கு அவ்வருகு பட்டால்
பலத்திலே மூளும் அத்தனை
கவிழ்ந்து நிற்கச் செய்தே விண்ணப்பம் செய்கிறது -(முகத்தின் அழகைப்பார்த்தால் கைங்கர்யத்துக்குப் போக ஓட்டாதே )

(வந்து உன்னைச் சேவித்து ஸ் வீகாரம் -மேல் உன் பொற்றாமரை அடியே போற்றி -அதுக்குப் பிரயோஜனம் பொருள் இவ்வாறு மூன்றும்)

கேளாய்-
இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் என்கை
நாங்களும் முன்னே நிற்கில் வார்த்தை கேட்க ஒண்ணாதோ -என்கை

(இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் என்கை
அவன் இவர்கள் திருவடிகளை பார்க்க –இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே –
பஞ்ச லக்ஷம் பெண்களை கண்டு மயங்கி இருக்க தொடை தட்டி கேளாய் என்கிறார்கள் )

———-

அவனும் இவர்கள் பேச்சு அன்றோ –
என்று கேட்டான் –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ
பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான
இடைச் சாதியிலே வந்து பிறந்த எங்களை அடிமை
கொள்ளாது ஒழிய ஒண்ணாது –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் –
ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது
தாங்கள் உண்ணாத குலம் –

உன் பிறப்பாலும்
எங்கள் கார்யம் தலைக் கட்ட வேணும் -என்று கருத்து –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
இங்கு வந்து பிறந்தது ஏதுக்காக-ஆர்க்காகா -என்று விசாரிக்கலாகாதோ

பெற்றம் மேய்த்து உண்ணும்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் (நித்யர்( நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு (முக்தர்) முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமோ –
பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால் காட்டுவார் உள்ள இடத்திலே வந்தோமோ –
பிறவா நிற்கச் செய்தே ஆஸார ப்ரதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியிலே வந்தோமோ –
வாலால் உழக்குக்கு பசு மேய்க்க வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ –

பெற்றம் மேய்த்து
தாழ்ந்தவர்களை ரக்ஷணம் பண்ணும் இக் குலத்திலே பிறக்கச் சொன்னார் யார் –
பர ரக்ஷணமும் பண்ணாமல்
ஸ்வ ரக்ஷணமும் பண்ணாதார் குலத்தில் உன்னை பிறக்கச் சொன்னார் ஆர் –

பிறந்த நீ
நீ ஆசைப்பட்டு பிறந்த பிறவி யன்றோ இது –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த
எங்கள் பெற்றத்து ஆயன் வட மதுரைப் பிறந்தான் (திருவாய் -9)-என்று
அல்ல இவர்கள் நினைத்து இருப்பது –

குலத்தில் பிறந்த
குலத்துக்கு தலைவரானவர் வயிற்றிலே பிறந்த படியால்
எல்லார்க்கும் சாதாரணம் இறே இப்பிறவி

நாம் உங்களில் வந்து பிறந்தோம் ஆகில்
நம்மைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன

அந்தரங்க வ்ருத்தி கொள்ளச் சொல்லுகிறோம் என்கிறார்கள் –

ஆரைத் தான் என்றான் –

எங்களை –
குலத்தில் பிறந்த நீ –
குலங்கெழு கோவியரான(பெரிய திருமொழி -3-3 ) -எங்களைக் கொள்ள வேண்டாவோ

நீளா குலேந ஸத்ருசீ –
எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டு அன்றோ நீ இங்குப் பிறந்தது –

எங்களை
திரு மா மகள் மண் மகள்-என்கிற பிரதான மஹிஷிகள் உன்னைத் தேடி நிற்க
நீ ஆசைப்பட்டு மேல் விழும்படி உகைக்கைப் பாடி யான எங்களை
ஓசி செய் நுண்ணிடை இள யாய்ச்சியார் நீ உகக்கும் நல்லவர் (திருவாய் – 10-3-8 )என்று
நாங்கள் ஆதார விஷயம் என்று பிரசித்தம் அன்றோ –

பிறந்த நீ எங்களை
பிறவாதாரைப் பிறவாதார் ஏவிக் கொள்ளவும்
பிறந்தாரை பிறந்தார் ஏவிக் கொள்ளுகையும் பிராப்தம் அன்றோ

(அஜாயமானோ பஹு தா விஜாயதே இரண்டுமே நீயே தானே
அங்கு அவர்களை ஏவிக் கொள்ளவும்
இங்கு எங்களை ஏவிக் கொள்ளவும் பிராப்தம்)

இவ் வாய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த எங்களை விரும்பி அன்றோ -நீ ஆயனாய் பிறந்தது –
ஆயனாகி ஆயர் மங்கை வெய்ய தோள் விரும்பினாய்-(திருச்சந்த 41 )

எங்களை
பசுக்களுக்கு வேறு ரக்ஷகர் உண்டாகிலும் உன்னை ஒழிய வேறு ரஷிப்பார் இல்லாத எங்களை –
பசுக்கள் தானும் பறித்துத் தின்னும் –
பிறரும் ஐயோ என்னும் படி இருக்கும் –
இரண்டு ஆகாரமும் இல்லாத எங்களை

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
கேட்கப் புகா நின்றதோ என்ன
நீ யன்றோ முற்றீமை செய்தாய் (வலி வழக்கு உறவு மூன்று தீமைகள் )-என்ன
எங்கனே -என்ன
என்றும் கேட்டே போகக் கடவதாய் இருக்கிற நீ –
வந்து –
இக்குலத்தே பிறந்து இட்டீடு கொண்டு எளியனானாய்-என்கை(ஆகதோ மதுராம் புரிம் )
நாங்கள் நீ இருந்த இடத்தே வந்து பிறந்தோமோ –
வசிஷ்டாதிகள் வில்க்கும் இடத்தே வந்தோமோ –

(மூன்று தப்புக்கள் அவனுக்கு -1-அஹம் வோ பாந்தவோ ஜாதா –
2- உன் இடத்துக்கு நாங்கள் வரவில்லை
3-அயோத்தியை விட்டு துரத்தின வசிஷ்டாதிகள் இடம் வரவில்லையே
காடு பூ முடி சூடிற்று -அதே போல் மதுரையும் ஆனதே –தண்டகாரண்யமும் ப்ருந்தாவனமும் )

————-

குற்றேவல் –
அந்தரங்க வ்ருத்தி –
அன்றிக்கே –
உசிதமான அடிமை -என்றுமாம் –

எங்களைக் –
பசுக்களுக்கு வேறு ரஷகர் உண்டானாலும்
உன்னை ஒழிய ரஷகர் இல்லாத எங்களை –

கொள்ளாமல் போகாதே
உனக்கு விஹிதம் –
சப்தாதி விஷயங்களே தாரகமாய் இருக்கிறது எங்களை
உன் வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்னும்படி பண்ணி
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம்
தாராதே போகை-உனக்குப் போருமோ -என்கை –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்கிறார்கள் –

குற்றேவல்
அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுமது –
முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் இறே -8-5
விடுத்த திசைக்கு கருமமும் இல்லை
கருதும் இடத்தில் வியாபாரமும் இல்லை –
அணுகின விருத்தியும் –
ஏவின விருத்தியாக வேணும்

திருத் திரைக்குள்ளில் விருத்தி –
உடை வாளும் அடுக்குருவும் எடுத்தல் –
கலசப் பானை பிடித்தல் –
படிக்கம் வைத்தல்
உமிழும் பொன் வட்டில் எடுத்தல் –
திருவடிகளை விளக்குதல்-
ஒலியன் (ஆலவட்டம் )பணி மாறுதல் –
சாமரம் இரட்டுதல் –
அடைக்காய் திருத்துதல் –
அடி வருடுதல்
முலைகள் இடர் தீர அணைத்தல்
இவை தொடக்கமானவை கோவிந்தர்க்குப் பண்ணும் குற்றேவல் ஆகிறது -(நாச்சியார் )

இவை எல்லாம் க்ரமத்திலே கொள்ளுகிறேன் என்றான்

எங்களைக்
தாஸ்யத்தில் சுவடு அறிந்து –
அதில் ருசியும் த்வரையும் விளைந்து
க்ரம பிராப்தி பொறுக்க மாட்டாத படி வந்து மேல் விழுகிற எங்களை

அனந்தர க்ஷணத்துக்கு நாங்கள் இருப்புத்தோம் என்று தோற்றி இருந்ததோ என்று
தங்கள் ஆற்றாமையை அணித்துக் காட்டுகிறார்கள்

சிறிது விட்டுப் பிடிக்க அறியாத எங்களை
ஒரு படுக்கையிலே ஓக்க இருக்க பிரிவதற்கு இரங்கும் எங்களை

குற்றேவல் கொள்ளாமல் போகாதே
உனக்கு விஹிதம்
பிறந்த நீ கொள்ளாமல் போகாது –

முன் தீம்பு செய்தார்க்கு வீண் போமோ –
புறம்புள்ள ஜீவனத்தை மாற்றினால் நீயும் இடது ஒழியவோ-
அன்ன பானாதிகள் தாரகமான நிலையைத் தவிர்ந்து
உன் வடிவு அழகைக் காட்டி –
எல்லாம் கண்ணன் -என்று
தாரகாதிகள் நீயேயாம் படி பண்ணினால்
ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளாதே போகப் போமோ –

ஒருவனுக்கு இடுகின்ற சோற்றை விலக்கி பின்னை தானும் பொகட்டுப் போகவோ
நாங்கள் இசையாத அன்று தப்பினத்தைச் செய்யலாவது இல்லையே –
ஸ்வரூப ஞானம் யுண்டாய்
இசைவும் யுண்டான இன்று நழுவ விடுவுதோமோ

உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-
ஆசையை விளைத்த யுனக்கு அதின் கார்யம் செய்ய வேண்டாவோ

கொள்ளாமல் போகாது
நாங்கள் விட நினைத்தால் நீ தான் விட வில்லையோ –
திரு வாணை நின்னாணை கண்டாய் (திருவாய் -10-10 )-என்று ஆணை இட மாட்டார்கள் இறே
அபிப்ராயம் தோற்றச் சொல்லும் அத்தனை இறே –

வளைத்து வைத்தேன் இனி போகல் ஓட்டேன்-(பெரியாழ்வார் -5-3 )
தடுக்கையும் வளைக்கையும் ஆணை இடுகையும் பரிசு இறே –
கொள்ளாமல் போகாது என்று அடுகுவளம் (யானைக்கு கொடுக்கும் சோறு ) தடையான பின்பு
கேட்க என்று விடுகை இறே

கொள்ளாமல் போகாது -என்று மீள ஒண்ணாத படி நிர்பந்தித்தவாறே –
நாம் அந்தரங்கமாக வேண்டுமவை ஏவிக் கொள்ளுகிறோம் –

உங்களுக்கு நம் பக்கலிலும் சில கொள்ளாமல் போகாதே –
நீங்கள் நோன்புக்கு அங்கமாகச் சொன்னவற்றை
இப்போது கொண்டு போம் அத்தனை இறே –
நீங்கள் அனைவரும் அறிய வேண்டி வந்தத்தைக் கொண்டு போக வேணும் –

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
பெரும் பசியராய் இருப்பார் -உண்ணப் புக்கு கலத்திலே கேச லேஸம் கண்டால்
பின்னை உண்ணாதே பொகட்டுப் போமா போலே
சப்தாதிகள் போக்யாதிகளாய் இருக்கிற எங்களை வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு -முதலானவைகளை எல்லாம் நீ என்னப் பண்ணி-
ஸ்வரூப அனுரூபமான அடிமை தாராதே போகைக்கு உன் தரமோ- என்கை
உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-
நீர் விளாவி வைத்தோ போகப் பார்த்தது
நிவேத யத மாம் க்ஷிப்ரம் -(சீக்கிரம் போய் சொல்லுங்கோள் )
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –

(எனக்கு ஆரா அமுதாய் எனதாவியை இன் உயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செம் கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா ! என் அன்பேயோ ! –10-10-6)

எங்களை
வை தர்ம்யம் நேஹ வித்யதே(குருஷமோ மாம் அநு சரம் -ஏவிப்பணி கொள்ள வேண்டும் இதில் விதர்மம் இல்லை )

போகாது
உன் தரமோ நாங்கள் -நீ தான் உனக்கு உரியையோ
என்னை நெகிழக்கிலும் -இத்யாதி
நப்பின்னை பிராட்டி பரிகரம் –
ஆணை இட்டவர்கள் பெண் பிள்ளை அன்றோ –

—————-

இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே
நீங்கள் நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது
வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று
பறையைக் கொடுக்கப் புக –

இற்றைப் பறை கொள்வான் அன்று -காண் –
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –

இப்போது –
பறை தருவான் -என்றும் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
போற்றப் பறை தரும் என்றும் –
அறை பறை என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும்
பறை தருதியாகில் -என்றும் –
சாலப் பெறும் பறை -என்றும் –
உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும் –
நீ தாராய் பறை -என்றும் –
ஒருக்கால் சொன்னால் போலே ஒன்பதில் கால் சொன்ன பறையை
இற்றைக்கு கொள்ளுங்கோள் என்று
பெண்களுக்கு கொடுக்கும் படி -பறையை எடுத்துக் கொண்டு வாருங்கோள் என்றான்

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –
உன்னை அங்கனே விடுவுதுமோ-

கெடுவாய்
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –
தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –
அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ
லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –
சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –
நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –

கொள்வான் அன்று காண்
எங்களை நீ கொள்ளுவான் அத்தனை ஒழிய
நாங்கள் உன் பக்கலிலே உன்னையும் ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ –

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் –
இவர்கள் சொல்லிற்று கேட்டு -இவர்கள் நம்மை விடார்களாய் இருந்தார்கள் –
நம்மைத் தடுத்தும் வளைத்தும் கொள்வர்கள்-என்று –
பறையை எடுத்துக் கொள்ளுங்கோள்-என்ன
தேஹி மே ததாமி தே -என்று
ஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –

————

கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-

அபிதா வ்ருத்தியைப் போக்கி
தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே –
ஆனால் நீங்கள் சொல்லுகிறது என் என்ன –

கோவிந்தா –
பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே –
பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –
நாலு நாள் எங்களை விட்டுக் கெட்ட கேடு என் தான் –
நீ பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்தால் இதுவோ பலம்

(பெருமாள் ஆண்களுக்கு நடுவில் சீதாப்பிராட்டியை சொன்னதுக்கு
இங்கு இவர்கள் பதிலுக்கு அவனுக்கு இந்த வார்த்தை )

கோவிந்தா
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்று
ஞான பூர்வகமான உபாய ஸ்வீகாரம் பண்ணுகிற இடமாகையாலே
குண பூர்த்தி சொல்லக் குறை இல்லை அவ்விடத்திலே

ப்ராப்ய ருசியாலே
கண்ணாஞ்சுழலை இடுகையாலும்
பலாந்தரத்தைக் காட்டி நழுவத் தேடுகையாலும் யுண்டான ரோஷத்தாலும்
இவ்வளவும் சொல்ல வேணும் இறே இங்கு

கோவிந்தா
எங்களையும்
எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே
உன்னையும்
உன் பிறவியையும் மறந்தாயீ

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தா –
பூமியை எடுத்து நோக்கின மஹா வராஹமாக நினைக்கிறாயோ –
பூமியை நீர் ஏற்ற வாமனாக நினைக்கிறாயோ –
சப்த ராசியைப் பிரித்து எடுத்த ஹம்ஸ ரூபியாக நினைக்கிறாயோ –
அத்தைப் பிரகாசிப்பித்த ஹயக்ரீவ விஷமாக நினைக்கிறாயோ –
ஆதித்ய அந்தரவர்த்தியாக நினைக்கிறாயோ –

அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகானாய் வந்து பிறந்து
ஆயர் சிறுமியருக்கு உதவிற்று இல்லை என்றால்
பர வ்யூஹாதிகளையும்
யாதவ வம்சத்தையும் விட்டு
இடைச் சேரியில் ஸூலபனான யுன்னுடைய கிருஷியும் விபலமாகாதோ –

நீங்கள் சொன்ன வார்த்தைக்கு பலரும் அறியக் கருத்தாய் இருக்குமத்தை
நாமும் அறிந்து சொன்னோம் ஆகில்
நமக்குத் தாத்பர்ய ஞானம் இல்லை என்கிறது என் –
நீங்கள் குற்றேவல் என்கிறதிலே இரண்டு வகை அறிந்து சொல்லுங்கோள்
இற்றைப் பொழுதை உங்களோடு போக்குகிறோம் அங்கனேயாகில் என்றான்

கோவிந்தா
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –
கெடுவாய் நாங்கள் இற்றைப் பறை கொள்வான் அன்று காண்-என்று பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
இடையனாகையாலே அபிதாந வ்ருத்தி போமித்தனை -தாத்பர்ய வ்ருத்தி போகாது என்கை
போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை
பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )

(யதார்த்த தாத்பர்யம் அறியாத -கோ வாக்கு பசு -அம்மா பசு மட்டுமே கேட்டு பழகினவனே தானே
யதா ஸ்ருதம் கிரஹணம் -பெருமாள் சீதாபிராட்டி -சகல அலங்கார சம்பன்னையாய் வர –
ஸ்நானம் ரோஷ ஜனகம் –
த்ரேதா யுகம் முதல் காத்து இருந்து பதிலுக்கு இங்கு -இவர்கள் )

—————–

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்
ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை
காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை
செய்தாப் போலே யாக வேணும் –

உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –
நீ ஸ்வாமியாகவும்
நாங்கள் ஸ்வம் ஆகவும்
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்

ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது
எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
இற்றை அளவிலே போகாது கண் –
இப் பிறவி அளவிலே போகாது காண்

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
அகால கால்யமான-நலமந்த மில்லதோர் நாட்டிலே இருக்கவுமாம் –
ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய்
சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்-
அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –

உன் தன்னோடு-
நீ பிறவாது இருக்கும் இடத்திலும்
பிறந்து திரியும் இடத்திலும்
கூடத் திரியும் அத்தனை

எற்றைக்கும்
தேவத்வே தேவே தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே
நாங்களும் ஒக்கப் பிறந்து விடாதே திரிய வேணும் –
இளைய பெருமாள் படை வீட்டிலும் காட்டிலும் ஓக்கத் திரிந்தால் போலே

உன் தன்னோடு
நீ சங்கு சக்ர கதா தரனாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் இடத்திலும்
எங்களோடு கண் கலந்த உன்னோடும் ஓக்கத் திரிய வேணும்

உன் தன்னோடு
அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் –
இத்தை நினைத்து இறே
கச்சொடு பொற் சுரிகை அடியிலே இவர்கள் தான் அவனுக்கு வர விட்டது

(அவனியாள் -பூமா தேவி -இவளே தானே அப்போது கொடுத்து வைத்தாள்
நாங்கள் இப்பொழுது கொண்டு வர )

கோவிந்தா எற்றைக்கும் –
கோயில் கோள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்டு -(திருவாய் 8-6-
நீ இருக்கும் இடத்திலும்

பின்னும் எம்மாண்பும் ஆனான் (திருவாய் -1-8 )-என்னும் படி
நீ பிறந்து திரியும் இடத்திலும் உன்னோடே திரிய வேணும் –

தேவும் தன்னையும் என்கிற (திருவாய் -2-7-4 )
இரண்டு அவஸ்தையும்
கோவிந்தனுக்கு இறே

உற்றோமே யாவோம்
சர்வ வித பாந்தவமும் உன்னோடே யாக வேணும் –
(பண்டை நாள் திருவாய் -எல்லா உறவின் காரியமும் நீயே )
ஒரு உறவைக் குறித்து -அது உண்டாக வேணும் என்னாது ஒழிந்தது
ஒன்றை விசேஷிக்கில் அல்லாதவை இல்லையாம் என்று
எல்லா உறவும் நீயேயாக வேணும்

உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )
நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று
வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்
(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்
எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )

கோவிந்தா உன்தன்னோடு
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண என்கிறபடி
அவரே இனி யாவார் என்று இருக்க ஒண்ணாது

பிராதா பர்த்தா ச பந்துச்சு பிதா ச மம ராகவா -என்கிறபடியே
அவர் உயிர் செகுத்த எம்மண்ணல் -என்று இருக்க ஒண்ணாது

(எம்பிரான் எந்தை இது போன்ற எல்லாம் சொல்ல மாட்டாளே
முதலிலே எல்லாம் )

அவை எல்லாம் உன்னோடே யாக வேணும் –
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றை யாவாரும் நீ என்று இருக்க வேணும் –

உற்றோமே
சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே
பத்து மாசம் பிரிந்து இருத்தல் -(சீதாபிராட்டி )
பதினாலாண்டு பிரிந்து இருத்தல் -(பரதன்)
பதினாறு ஆண்டு பிரிந்து இருத்தல் செய்ய ஒண்ணாது (நம்மாழ்வார்)
அத்தனையோ வேண்டுவது என்றான்

ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
எற்றைக்கும்
ந காலஸ் தத்ரவை -என்கிற பரமபதத்திலே யானாலும்

(அங்கும் பர பக்தி பர ஞானம் பரம பக்தி நித்தியமாக வேண்டும் என்று கத்யத்தில் பிரார்த்தித்தார் -ஸ்வயம் பிரயோஜனம்)

ஏழு ஏழு பிறவிக்கும்
இங்கே பிறந்தாலும் ஓக்கப் பிறக்க வேணும்
கிருஷ்ணனும் பெண்களுமாய் புறப்படில் அமையும்
அவனும் எதிர் சூழல் என்று இவர்களைப் பெற வேணும் என்று முற்கோலிப் பிறவா நிற்கும் என்றுமாம்
இளைய பெருமாள் காட்டிலும் படை வீட்டிலும் அடிமை செய்தால் போலே
தேவத்வே தேவ தே ஹேயம் -மனுஷ்யத்வே ச மாநுஷீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-ஆக வேணும் என்கிறார்கள்-

உன் தன்னோடு-உற்றோமே யாவோம்
ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது எல்லா உறவு முறையும் நீயே யாக வேணும் என்கை
மாதா பிதா ப்ராதா-நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
கிருஷ்ண ஆஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாஸ் ச பாண்டவா-என்றும்
சேலேய் கண்ணியரும்-இத்யாதிப் படியே –

(எல்லா உறவின் காரியமும்-ஸகல கைங்கர்யமும் -பண்டை நாளில்
பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா யுறவின் காரியமும் -தண்டற நீ
செய்து அருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையே
உய் துணை என்று உள்ளமே ஓர் –திருவாய் மொழி நூற்று அந்தாதி –82- )

உற்றோமே யாவோம்-
உதிரத் தெறிப்பு யுண்டாக வேணும் –
நாராயண ஸ்தவம் –
பக்தாநாத்ம சரீரவத் –
இளைய பெருமாள் வேலேற்ற போது நீ பட்டால் போலே உனக்கு ஓன்று வந்தால்
நாங்கள் முடியும் பிரக்ருதிகளாக வேணும்

—————-

மற்றும் வேண்டுவது என் என்ன –

உனக்கே நாம் ஆட்செய்வோம் –
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே
இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –

உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து
நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே
நீ உகந்த அடிமை யாக வேணும் –
அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

ஆட் செய்வோம்
அரசுக்குப் பட்டம் கட்டி அருகு இருக்க ஒண்ணாது –

ஆகிறது மற்று என் என்றான்

உனக்கு ஆட் செய்வோம்
ஆட் செய்யும் இடத்தில்
எங்களுக்கு உறவை அறிவித்து
அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்

உனக்கு -ஆட் செய் வோம்
ஆட் கொள்ளத் தோன்றிய (ஆயர் தம் கோ -பெரியாழ்வார்-1-6)யுனக்குச் செய்ய வேண்டாவோ –
அத்தனையோ என்றான்

உனக்கே
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து –
தனக்கே யாக -என்னுமா போலே கொள்ள வேணும் –

எங்கள் அபிநிவேசத்தாலே உன் அபிமதம் செய்ய ஒண்ணாது –
நீ உகந்ததாக வேணும் –

தேச கால அவஸ்தா பிரகார நியம சூன்யமாக அபிநிவேசத்தாலே பாரியா நிற்கச் செய்தேயும்
ருசிகரமான தேசத்தில் நியோகித்துக் கொள்ள வேணும் என்று
அவன் உகந்து ஏவினதைச் செய்யக் கடவராய் இறே இருப்பது
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் (திருவாய் -10-3 -காலைப் பூசல் )-என்னக் கடவது இறே
(பிரபல தர விரோதி அன்றோ )

நாம்
உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய
நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது

ஆட் செய்வோம்
உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்( திருவாய் -1-7)-என்கிறபடியே
உத்துங்க விஷயம் ஆகையால் –
ஆயர் சிறுமியரான தாங்கள் தாழ்ந்த மனிச்சராகையாலும்-
செய்வோம் என்று பிரார்த்திக்கிறார்கள்

கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே (திருவாய் – 4-10-10-)என்றபடி
உனக்கு ஆட் செய்யுமது அன்றோ ப்ராப்தமாய் இருக்கிறது –

உனக்கே நாம் ஆட்செய்வோம்
உனக்கும் எங்களுக்கும் பொதுவான அடிமை அன்றிக்கே உனக்கே யாகக் கொள்ள வேணும் –
எனக்கே ஆட்செய் என்னுமா போலே ஆள் செய்ய வேணும்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போல் கிட என்ற இடத்திலே கிடக்குமவர்கள் அன்று —
இளைய பெருமாளைப் போலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று
அடிமை செய்து உஜ்ஜீவிக்க வேணும் -என்கை –

(எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-)

—————

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –
நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்
நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும்
இவை இரண்டும் விரோதி யாகையாலே
அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –

அப்படி யாகிறது –
இனி என் என்றான்

காமம் மாற்று
வேறு ஒரு காமம் உண்டாய்ச் சொல்லுகிறது அல்ல விறே –
தேறேல் என்னை (திருவாய் -2-9 ) -என்று இருக்குமவர்கள் ஆகையால்
அடிமை செய்வாரையும் செறுமவை-
ப்ரக்ருதி வாசனையாலும்-
மனஸ்ஸூ அஸ்திரமாய் இருப்பது ஒன்றாகையாலும்
சம்பாவிதமாக சங்கித்து
சூடகமே என்று தொடங்கி நாட்டாருக்குச் சொன்னவை தொடருகிறதோ என்று
அது நடையாடாத படி வேணும் என்கிறது –

அத்தனையோ என்றான் –

அவ்வளவு போராது
மற்றை -காமம் -மாற்று
நீ ஸ்ரீ வைகுண்டத்தில் ஸூரிகளுக்கு முகம் கொடுத்து இருக்கும் இருப்பில்
க்ரமத்திலே பெறும் படி இருக்க ஒண்ணாது

நீயும் -பெண்காள் -என்று அழைக்க –
நாங்களும் கிருஷ்ணன் -என்று சொன்ன பரிமாற்றமே நடக்க வேணும்

ந காம கலுஷம் சித்தம் –
(சித்தம் திருவடிகளில் ஸ்ரீ விஷ்ணு பக்தியே வேண்டும் )

அவனுடைய ப்ராப்யத்தையும்
ப்ராபகத்வத்தையும்
சரண்யத்தையும்
இந்நிலத்தின் தண்மையையும்
அந்நிலம் உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
மநோ ரதம் தான் அமையும் என்னும் இடத்தையும்
சொன்ன வாறே

ஒரு அபேக்ஷை இன்றிக்கே
பலவற்றில் நெஞ்சு தாழா நின்றதே என்ன –

தேபாத் யோஸ்திதம் –மம சித்தம் –நகாம கலுஷம்
ப்ராப்யத்வம் ப்ராபகத்வம் சரண்யத்வம் -இவை எல்லாம் சொல்லிற்று நீ யாகையாலே –

இவ்விடம் த்யாஜ்யம் என்றது –
உன்னுடைய அனுபவத்துக்கு விரோதி யாகையாலே –
அவ்விடத்தில் உத்தேச்யதா புத்தி நடந்தது -அனுபவத்துக்கு ஏகாந்த ஸ்தலம் என்று –
அல்லாதவை உத்தேச்யம் அன்று என்று சொன்னது அல்லவே

உன் திருவடிகளில்
நிலை நின்றவர்கள் நெஞ்சு ஸ்ரீ வைகுண்டாதிகளாலே கலங்காது காண் என்றது இறே –
அப்படியே இவர்களும்
மற்றை –காமம் –
என்கிறார்கள் –

மாற்று -என்றது –
சிந்தை மற்று ஒன்றில் திறத்தில் அல்லா -(7-10- திருவாறன் விளை )
மற்று ஒன்றைக் காணா -(அமலனாதி பிரான் )
மற்று ஒன்றில் என்கிற இடங்களில் சொல்லுகிறத்தை

கோவிந்தா -மற்றை -காமம் -மாற்று –
கண்ணன் வைகுந்தனோடான நிலையைக் குலைக்க வேணும் -(திரு விருத்தம் -30)
(கண்ணன் கோவிந்தன் என்ற நிலையே நாங்கள் வேண்டுவது)
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -என்னுமவர்கள் இறே
நாங்கள் சிந்தையந்தி பட்டது படாமல் கிடாய் –
(பராங்குச நாயகி -தீர்க்க சிந்தையந்தி நிலை வேண்டுமே )

அத்தனையோ வேண்டுவது என்றான்

நங்காமம் –மாற்று
ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் –
(நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்
அப்பாஞ்ச ஜன்யம் )

அத்தனையோ என்றான்

காமங்கள்
என்கிறார்கள் -இருவர் கூடப் பரிமாறா நின்றால்
அத்தால் பிறக்கும் இனிமை இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே

விஷய வைலக்ஷண்யத்தாலும்
ஆஸ்ரயத்தின் இனிமையாலும்
மிகவும் ப்ரீதி ரூபமாய் இறே பரிமாற்றம் இருப்பது –

(ரமதே -எங்கு நீ ஆனந்திப்பாயோ அங்கு பர்ணசாலை -சொன்னதும்
அழுதாரே இளைய பெருமாள் )

அதில் ஸ்வரூபத்துக்கு விரோதியான அஹங்கார கர்ப்பமான அடிமையும்
அபுருஷார்த்தம் இறே

நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்-
அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய
போக்த்ருத்வ பிரதிபத்தியும்
மதீயத்வ பிரதிபத்தியும்
போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது –
அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –

(சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் ஏற்றம்
போக்த்ருதம் விட போக்ய புத்தி ஏற்றம் -ஆச்சார்ய ஹ்ருதயம் )

1-ஸ்வரூப விரோதியும் -(அஹங்காரம் )
2-சாதன விரோதியும் -(உபயாந்தரம் )
3-பிராப்தி விரோதியும் -(அநாதி கால பாபங்கள் )
4-ப்ராப்ய விரோதியும் -(ஸூவ போக்த்ருத்வ புத்தி )
என்று நாலு வகையாய் இறே விரோதிகள் இருப்பது-

அதில் சாதன விரோதியும்
பிராப்தி விரோதியும் கீழில் பாட்டிலே கழிந்தமை சொல்லிற்று –

மற்றை இரண்டையும் இப் பாட்டில் கழிகிறது

கறைவைகள் பின் சென்று –
உபாயாந்தரத்தில் அநந்வயம் சொல்லுகையாலும் –
பிராப்தி பிரதிபந்தகத்துக்கு அபராத ஷாபணம் பண்ணுகையாலும் இரண்டும் குலைந்தது இறே

ப்ராப்ய ருசியும் த்வரையும் ஆர்த்தியும் விளைந்து
பாஹ்யங்களிலே சங்கம் குலைந்த படி சொல்லுகையாலே
(இற்றைப் பற்றி கொள்வான் அன்று )
ஸ்வரூப விரோதி குலைந்த படி சொல்லிற்று –

இப் பாட்டில் முற்கூற்றாலே –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –

கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று

நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது
ஸ்வரூப
உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே

ப்ராப்ய ருசி கார்யமான த்வரையும்
அதின் பலமான கலக்கமும் –
விளைந்த ஆர்த்தியும் –
இது எல்லாவற்றுக்கும் அடியான ப்ராப்யாந்த்ர சங்க நிவ்ருத்தியும் –
பேற்றில் அளவிறந்த பாரிப்பும்
அதில் ஸ்வ பிரயோஜனத்வ நிவ்ருத்தியும் சொல்லா நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யத்தையும் நிகமிக்கிறார்கள் –

1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ )
கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –

இவை எல்லாம் நிழல் எழும்படி
கிருஷ்ணன் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள் –

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-
கையும் திருவாழியுமாய் நாங்கள் தொழ-மேன்மை காட்டி இருக்க ஒண்ணாது –
நீ -பெண்காள்-என்ன -நாங்கள் -கிருஷ்ணனே -என்று ஊடினார் சிறு முற்றத்திலே உன்னை ஒரு பாச்சல் பாய வேணும்
பாவோ நான்யத்ர கச்சதி -என்றவனை இசைவித்தார் யுண்டோ
எங்கள் வாசனையாலும் உன் தோள் தடிப்பாலும் ஆக வேண்டா-
உன் தரம் ஆகாமல் இருக்கிற இருப்பைத் தவிர்க்க வேணும்

(விஷயாந்தர அனுபவம் -ப்ராப்யாந்தர நிவ்ருத்தி -ஸ்ரீ வைகுண்ட அனுபவமும் வேண்டாம் -உன் தரம் -போக்த்ருத்வம் தவிர்த்து அருள வேண்டும்)

——————————————

முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்-
சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது –

நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம்

உன் பொற்றாமரை அடி -என்றும் –சரண -சப்தார்த்தமும் –

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மாதவனே என்றும் –
மாதவனை என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –

செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –

இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே
பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –

ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –

ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-

————-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து –
சத்வோத்தரமான காலத்திலே
ஆற்றாமை யாலே வந்து
வருகை மிகை என்று இருக்கும்
உன்னைச் சேவித்து –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-
பிராப்தமாய்
ஸ்ப்ருஹணீயமாய்
சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்யங்களாலே
பரம போக்யமான
உன் திருவடிகளையே
மங்களா சாசனம் பண்ணுகைக்கு
பிரயோஜனத்தைக் கேளாய் –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே-
ஸ்வ ரஷ்ய ரஷணம் பண்ணி தான் ஜீவிக்கிற குலத்திலே பிறந்த நீ
ரஷகனான நீ ரஷ்யரான எங்களை கைங்கர்யம் கொள்ளாமல் இருக்க ஒண்ணாது –
ரஷண் ரூப கார்யம் இல்லாத போது ரஷ்ய ரஷ்க பாவம் ஜீவியாது இ றே –
இப்படி அபேஷிக்க –
கைங்கர்யம் ஆவது என் –
நீங்கள் முதலில் சொன்ன படி பறையை கொள்ளுங்கோள்
என்று பறையைக் கொடுக்க –

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-
இந்த பறையை கொள்ளுகின்ற பேர்கள் அன்று நாங்கள்
நீ தாத்பர்ய க்ராஹி அன்றியே
யதாஸ்ருத க்ராஹியாய் இருந்தாய்
ஆனால் அத்தால் உங்களுக்கு ஏது என்ன –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு-
சர்வ தேச
சர்வ கால
சர்வ அவச்தைகளிலும்
உன்னோடு ஏக தர்மி என்னலாம் படி சம்பந்தித்து இருக்கக் கடவோம்

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்-
சம்பந்தித்து இருந்து
எங்கள் ரசத்துக்கு உறுப்பாகையும் அன்றிக்கே
உனக்கும் எங்களுக்கும் பிறர்க்கும் உறுப்பாகையும் அன்றிக்கே
உன்னுடைய ரசத்துக்கே உறுப்பாக
அனன்யார்ஹ சேஷ பூதரான நாம்
தாச வ்ருத்தியைப் பண்ணக் கடவோம் –

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-
இதுக்கு புறம்பான
நம்முடைய அபிமான க்ரச்தமான
பிரயோஜனங்களைப் போக்கு-

கீழ்
பறை என்று மறைத்து சொன்ன அர்த்தத்தை
இப்பாட்டில்
அவனுக்கு உகப்புக்காக புகராகப் பண்ணும் அடிமை என்று
விசதீகரித்துச் சொல்லுகிறார்கள் –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் -என்று
ஜ்ஞான ஜன்மத்தைச் சொல்லுகிறது
ஜ்ஞாதாக்கள் ஆன்ரு சம்சய பிரதானராய்
பரர் அநர்த்தம் பொறுக்க மாட்டாதே
பிறர் உஜ்ஜீவிக்கும்படி
ஹித பிரவர்த்தனம் பண்ணுகையைப் பற்ற –

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –
என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று
கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே
கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே
மங்களா சாசனத்துக்கு பலமாக
அவன் கொடுக்க வேண்டியதும்
இவர்கள் கொள்ள வேண்டியதும்
மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –

சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே
ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி
தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள்
அபேஷித்தாலும்
ஹித பரனான நீ
கேள்வி கொள்ளவும் கடவை அல்லை
கொடுக்கக் கடவையும் அல்லை –
என்றது ஆய்த்து –

————————-

மற்றை நம் காமங்கள் மாற்று :

அடிமைக் கண் அன்பு செய் ஆர்வத் தறிவு
உடைமைக் கண் தேடும் மகிழ்ச்சித் — தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால் நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.

சிற்றம் சிறுகாலை வந்துன்னை சேவித்து – பிராபியத்தில் த்வரை
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – அதில் கலக்கம்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாதே போகாது – ஆர்த்தியை ஆவிஷ்கரித்தல்.
இற்றைப்பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா – உபேக்ஷையைச் சொன்னது.
எற்றைக்கும் ஏழழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் – கைங்கர்ய அபேக்ஷை.
மற்றைநம் காமங்கள் மாற்று – கைங்கர்யத்தில் காளையாகிற வைராக்கியத்தை – ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குகிறாள்.

நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.
உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம். இத்தால்
நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.
நாம் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
எப்படிப்பட்ட நாம் என்று விசாரித்தால் – சுவாமி பிள்ளைலோகாசார்யர் காட்டுவது
அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானந்தங்கள் தடஸ்தமானால் தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம் – என்பதாக.
ஜ்ஞானம் உடையவன் என்பதால் கர்த்ருத்வ- போக்த்ருத்வங்கள் முன் நிற்கும். ஆனால்
கர்த்ருத்வத்துக்கு தடைக்கல் பாரதந்திரியம்.
போக்த்ருத்வத்துக்கு தடைக்கல் சேஷத்வம்.
சேஷத்வம் பர-அதிசயத்துக்கே இருப்பது
பாரதந்த்ரியம் பர-வசப்பட்டு செயல் படுவது.
ஆக ஜ்ஞாத்ருத்வத்தால் வந்த கர்த்ருத்வம் பரனான பகவத் ஆதீனப்பட்டுதானே இருக்க வேண்டும்.
அதாவது ஸ்வபிரயர்த்தன நிவிர்த்தி பாரதந்த்ரியத்துக்குப் பலம். பிரவிருத்தியே கூடாதோ என்னில் அன்று.
பாரதந்த்ரியத்துக்கு குந்தகமில்லாத கர்த்ருத்வமும்
அதேபோல சேஷத்வத்துக்கு விரோதமில்லாத போக்த்ருத்வமும் நோக்கிக் கொள்ள வேண்டும்.

ஜ்ஞான காரியமான பிரயத்னமும் பலமும்
ஸ்வரூப தர்மமான பாரதந்த்ரியமும், சேஷத்வத்வத்தையும் அனுசரித்தே ஆற்றக்கடவது.
பகவான் ஸ்வதந்திரன். நாம் பரதந்திரர். எனவே பகவத் பிரயோஜனமாக செய்கிற கர்த்ருத்வம் பாரதந்திரியம் – உனக்கே நாமாட் செய்வோம்.
எனக்கு, எனக்கும் உனக்கும் என்றல்லாமல் உனக்கே என்பதான வழுவிலா அடிமை.
பகவான் சேஷி. நாம் சேஷப்பட்டவர்கள். எனவே தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம். பிரகர்ஷயிஷ்யாமி என்பதாக
பகவத் ஆனந்த அநுயாக போக்த்ருத்வம் சேஷத்வம் – மற்றை நம் காமங்கள் மாற்று .

ம – என்பது தாயம் என்றால்
நம – என்பது இலக்கம் 2.
பரமபத சோபனா படத்தில் (அஹம்) – ம என்கிற 1 போட்டு விளையாட ஆரம்பித்து , கடைசீ பாம்பு வாயில் விழாமல்
தப்பிக்க, நம – என்று 2 போட்டு பரமபதம் சேருவர். ம – என்கிற 1 போட்டால் பெரிய பாம்பு வாயில் விழுவர்.
அதேபோல பிரணவத்தில் உள்ள மகாரம் அவுக்கு சேஷப்பட்டவன் என்று சொல்வதோடு , இடையில் உள்ள நம பதத்தால்
பாரதந்த்ரியத்தைச் சொல்கிறது. அந்த நம பதத்தின் அர்த்தமான ”பாரார்த்யம் ஸ்வம் ” என்பதை சொல்ல
வந்ததுதான் திருப்பாவை என்கிற பட்டர் திருவாக்கு பிறந்ததும் இது கொண்டு.

காமங்கள் மாற்று மாலை – சாற்றி அருளுகிறாள்
மற்றை நம் காமங்கள் மாற்று–மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா
ஸ்வரூப விரோதி -கழிகை -யானே நீ என்னுடைமையும் நீயே -என்று இருக்கை
உபாய விரோதி -கழிகை-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் –
ப்ராப்ய விரோதி -கழிகை-யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை
கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -களை யாவது தனக்கு என்னப் பண்ணுமது-போக்த்ருத்வ பிரதிபத்தியும் -மதீயம் என்னும் பிரதிபத்தியும் –
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியும் யாவதாமபாவி -நித்யமாக கைங்கர்யம் போலே –பிராப்ய பூமியிலும் –
மருந்தே நம் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் பிதற்றும் பாசுரம்-பசிக்கு மருந்து -பசியைஉண்டாக்க -பிணிக்கு மருந்து பிணியை போக்க –

———————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்–

January 10, 2023

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——

அவதாரிகை –

உங்களுக்கு அபேஷிதம் என் -என்ன
நோன்புக்கு வேண்டும் உப கரணங்களையும் அபேஷிக்கிறார்கள் –

கிருஷ்ண சம்ஸ்லேஷ ரச உத்சாகரான இவர்கள்
இவற்றை அபேஷிக்கைக்கு அடி -என் என்னில்

அந்த சம்ஸ்லேஷத்துக்கு ஏகாந்தமான நோன்பை பிரஸ்தாவிக்கையாலும்
கிருஷ்ணன் முகத்தை வெளியிலே காண்கைக்கு ஹேதுவாகையாலும் –
அவனுடைய திரு நாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாகையாலும்
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலும்
நோன்புக்கு அங்கங்களை வேண்டிக் கொள்கிறார்கள்-

(சாம்யா பத்தி இதில் -அஷ்ட குணங்களில் ஸாம்யம் –
அபஹத பாப்மாதிகள் -தடங்கல் இல்லாமல் முழுமையாக நாம் பெறுவோம் அங்கே –
சாயுஜ்யம் அடுத்து -கைங்கர்யம் கொண்டு அவன் ஆனந்தம் -செய்து நாம் ஆனந்தம் –
சரணாகதியும் கைங்கர்ய பிரார்த்தனையும் மேல் இரண்டாலும்
நீராட்டம் உத்சவம் -உபகரணங்களைப் பெற்று ஏழு நாள்கள்
தை முதல் நாள் ஜீயர் படி உத்சவம்
பரத்வம்-ஆலின் சிலையாய்
சவுந்தர்யம் -மணி வண்ணன்
ஸுலப்யம் -மாலே
மூன்றும் விழிச் சொற்கள்)

பெண்காள்-உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்று சொன்னி கோள்-
நம்முடைய சம்ஸ்லேஷ ரஸ உத்ஸாகம் உடையவர்கள்
வேறு ஒன்றை அபேக்ஷிக்கக் கூடாமையாலே அது என் சொன்னி கோள் என்று
அதிலே ஒரு சம்சயம் வர்த்தியா நின்றது –

(பறை)அதாகிறது ஏது-
அதுக்கு மூலம் ஏது –
அதுக்கு வேண்டுவன எவை –
அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை -அவற்றைச் சொல்லுங்கோள் என்ன –

உன் முகத்தை வெளியிலே கண்டு
உன் திரு நாமங்களை வாயாலே சொல்லுகைக்கு ஹேதுவாய் இருபத்தொரு நோன்பை
இடையர் பிரஸ்தாபிக்கையாலே
உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமாய் இருக்கிற படியைக் கண்டு
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே அந்நோன்பிலே இழிந்தோம்

அதுக்கு முன்பு உள்ளார் செய்து போருவது ஓன்று உண்டு –
அது தனக்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை
அவற்றையும் தந்து அருள வேணும் என்று வேண்டிக் கொண்டு
அவனை ஆசைப் பட்டவர்களாகச் சொல்லிக் கொண்டார்கள் –

இதுக்கு முன்பு எல்லாம் தங்கள் பட்ட வியசனங்களைச் சொல்லி வந்தார்கள்

இப்போது அவனைக் கண்டவாறே
அவனுடைய வ்யாமோஹம் கடல் போலே எட்ட முடியாதபடி இருந்ததே
தங்களுடைய வ்யாமோஹம் குளப்படியாய்-
அத்வேஷ கோடியிலேயாய் என்னலாய் இருந்தது –
அவனுடைய பிச்சு வடிவு கொண்டால் போலே இருந்தது –

இது கொண்டு இத்தனை நாளும்
நாங்கள் வரும் தனையும் பாடு ஆற்றின படி தான் எங்கனே என்று
மாலே என்கிறார்கள் –

(முக்தன் -சாம்யா பத்தி -புண்ய பாப விதூய பரமம் ஸாம்யம் உபைதி -அபஹத பாபமத்வாதிகள் -ஸ்வரூப ஆவிர்பாவம்-ஸ்வேன ரூபம் –
சாந்தோக்யம் -8-1-1-2-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-
சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப
ஸாம்ய ஸ்ருதி -ஸஹ ஸ்ருதி -சாதர்ம்ய ஸ்ருதி
கூடிற்றாகில் நல்லுறைப்பு  கூடாமையைக் கூடினால்– அது அதுவே -ஸ்வாமி சேஷபூதன் தன்மை மாறாதே
சாம்யா பத்தி பிரார்த்தனை இதில் -நோன்புக்கு உப கரணங்கள் இதில-
இதுவே தினப்படி ஸ்ரீ வில்லிபுத்தூரில் நாள் பாட்டு
தை மாத உத்சவம் 8 நாள் உத்சவம் -மா முனிகளுக்காக – கூடவே எழுந்து அருளி இவருக்கு முன் நீராட்டு உத்சவம் நடக்கும்
மூடு பல்லக்கில் வட பெருமாள் சந்நிதியில் நின்று நாள் பாட்டு மாலே மணி வண்ணா அனுசந்தேயம் ஆகும்-அன்றைக்கு பாசுரம் அல்ல -)

(ஸ்ரீ வில்லி புத்தூரில் காலை 9.30 மணிக்கு மேல் தங்கப் பல்லக்கில் ஆண்டாள் கோயிலில் இருந்து எழுந்து அருளி மாட வீதிகள் வழியாக
ராஜ கோபுரம் முன் எழுந்து அருளி அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம் அரையர் சேவை நடந்து
பின்பு மண்டபங்கள் எழுந்து அருளி ரத வீதி சுற்றி மதியம் 1 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு மண்டபத்துக்கு எழுந்து அருளினார்
மதியம் 3 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு சேவை பக்தி உலாத்துதல் நடைபெறும்
இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் ரத வீதி புறப்பாடு -மூல ஸ்தானம் வந்து அடைதல் நடைபெறும்
தை முதல் தேதி மணவாள மா முனிகள் மங்களா சாசனம்-(1371-1443)
அடுத்த கனு அன்று பெரியாழ்வார் சந்நிதியில் கனு வைபவம் நடைபெறும்)

(நாராயண பரமாத்மா பரஞ்சோதி பரம தத்வம் பராயணம்-ஆனந்த மயன் -சாம்யாபத்தி பிரார்த்தனை இதில்
சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மம் -புண்ய பாப விதூய -நிரஞ்சன் பரம சாம்யம் உபைதி –
கண்ணனையே கையில் கொண்ட இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் -)

(மாலே -ஆஸ்ரித பவ்யன் -ஸுலப்யம்
மணி வண்ணா -ஸுந்தர்யம்
ஆலினிலையாய்-மேன்மை -பரத்வம்

அச்யுதா -அமரர் ஏறே -ஆயர் தம் கொழுந்தே
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை போல் இங்கும்
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -ஆகார த்ரயம் அவளுக்கு -அநந்ய சரண்யத்வம் அநந்யார்ஹத்வம் அநந்ய போக்யத்வம்
இற் பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன்

1-ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பூமியே நடுங்கும் படி
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-அவனது நம்மிடம் வர வேண்டுமே
அப் பாஞ்ச ஜன்யம் -பெரியாழ்வார்-அங்கு மங்களாசாசனம் இங்கு சாம்யா பத்தி பிரார்த்தனை
போல்வன சங்கங்கள் –பல வேண்டும் -மத்த பரதரம் கிஞ்சித் நாஸ்தி –

2-போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே -இடமுடைத்தான-பேரி வாத்யம் -மேலே பறை கொள்வான் அன்று –
அறிந்து அறிந்து தேறி தேறி உணர வேண்டாமோ -கைங்கர்ய பிரார்த்தனை என்று உணர வேண்டாமோ –
3-பல்லாண்டிசைப்பாரே-
4-கோல விளக்கே -அழகிய மங்களமான விளக்கு
5-கொடியே-த்வஜம்
6-விதானமே-மேல் கட்டி
ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள் )

(நோன்புக்கு ஸம்மானம் நாளைக்கு பாசுரம்-

பெண்காள்-உங்களுக்கு அபேக்ஷிதம் என் என்று கிருஷ்ணன் கேட்க
நோன்புக்கு வேண்டும் உபகரணத்தைச் சொல்லி
அவற்றைத் தர வேணும் என்கிறார்கள் –

(பத்துடை அடியவர்க்கு எளியவன் -முதலில் -அத்வேஷம் மாத்திரமே போதும் –
பிறருக்கு அறிய வித்தகன் -சொல்லி எத்திறம் உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே -மோஹித்து -ஆறு மாதங்கள் –
தப்பைச் செய்தேன் தப்பைச் சொன்னேன் -அனுபவத்துக்கு போகாமல் உபதேசிக்க வேண்டும் -எளிமையே ஸ்வபாவம் –
மாலே மணி வண்ணா ஆலினிலையாய் -பரத்வம் வந்தேறி என்னும்படி
ஸுவ்லப்யம் -ஆஸ்ரித வ்யாமோஹம் நீரோட்டம் தெரிகிறதே கீழே உள்ளபடி அறியாமல் சொன்னது )

இப்பாட்டில்
பகவத் சம்ஸ்லேஷத்துக்கு வேண்டும்
உபகரணங்களை வேண்டிக் கொள்கிறார்கள் –

போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது

நோன்பே நோற்காமல் சிம்மாசனம் அடுத்த பாசுரம் –
மேல் பறை வேண்டி சரணாகதி -பறை என்பதன் விளக்கம் -இரண்டு பாசுரங்களில்)

———

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

மாலே-

முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்
மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –
மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —

மாலே –
நாங்கள் தெளிந்து
நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –

நோற்கவும் ஷமன் அன்றிக்கே
நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே
வ்யாமோஹம் இருந்த படி என் –

மாலே
நாராயணன் —
பையத் துயின்ற பரமன் –
தேவாதி தேவன் -என்று முன்பு அபரிச்சேதயமான மேன்மை
யுனக்கு உள்ளது என்று இருந்தோம் –

இப்போது மேன்மை இடு சிவப்பு –
வாத்சல்யமே உனக்கு பிரகிருதி என்று நிலையிட்டோம் காண் –
உன்னைக் கண்ட வாறே –

பெருமாளுக்கு பிரதானமான குணத்தை –
சரணாகதர் வத்சலர் -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடாக நிலையிட்டாள் பிராட்டி –

அப்படியே
கிருஷ்ணனுக்கு பிரதான குணமாய்
மஹா பாரதத்துக்கு உள்ளீடான ஆஸ்ரித வியாமோஹத்தை
மாலே என்கிற சம்புத்தியாலே
வெளியிடுகிறார்கள் இடைப் பெண்கள்

ராவணன் பின்னே பிறந்த நம்மை
ரகு குலத்தில் பிறந்தார் கைக் கொள்ளுவார்களோ -என்று இருந்தான் விபீஷணன் –

ராவணன் பின்னே பிறந்தவனை ராவணனை ஆசைப்படுகிற நமக்கு
சித்திக்கப் புகுகிறதோ என்று இருந்தார் பெருமாள் –

இது இறே இரண்டு தலைக்கும் வாசி

இத் தலை ஒரு மாசம் ஜீவியேன் என்னில்
ஒரு க்ஷணம் ஜீவியேன் என்று இறே அத் தலை

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –
என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )

(கோதண்ட ராமர் சந்நிதியில் பராங்குச பரகால யதிராஜர் முன்னே வர
நம்பெருமாள் பாய்ந்து முன்னே வர அவர்கள் பின்னே எழுந்து அருளி வியந்து இருக்க
இன்றும் இத்தை மணல் வெளியில் சேவிக்கிறோமே )

எனைத்தோர் பல நாள்,அழைத்தேன் இறே -இவர்களது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் இறே -அவனது –

அதனில் பெரிய என்னவா இறே -இவர்களது –
அவா அறச் சூழ்ந்தாயே இறே அவனது –

நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு
யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு

ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இறே –
ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே –
பெண்களை பிரியாமைக்கு இறே

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–(நாச்சியார் -3-9 )
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த –

மாலே
இவர்கள் பக்கல் பிச்சு இறே ஒரு பிறவியிலே இரு பிறவி யாய்த்து –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை –
பிச்சாய்ப் பிறந்து பெண்களையும் பிச்சேற்றித் தன்னோடு ஒரு கோவையாக்கும் –
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் -(நாச்சியார் -11-2)
(அங்கு அஷ்ட குண ஸாம்யம்
இங்கு மாலாவதற்கு ஸாம்யம் )

தெளிவுடையார் பெண்களை சந்தியில் வைப்பார்களா-

நம்முடைய வியாமோஹம் நீங்கள் அறிந்த படி என் என்ன –

அகவாயில் வியாமோஹம் வடிவிலே நிழல் இட்டுக் காட்டுகையாலே தெரிந்தது என்கிறார்கள்
(ரத்ன கர்ப்ப ஸாளக்ராமம் உண்டே )
மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம் இருக்கிறபடி

மாலே-
தங்கள் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் இருக்கிற படி –
இவர்கள் பேச்சைக் கேட்ட பின்பு பண்டையிலும் பிச்சின் மேல் பிச்சாயிற்று –
பண்டு -சர்வேஸ்வரன் -நிர்வாஹகன் -சர்வஞ்ஞன்- சர்வசக்தன் -என்று இருப்பார்கள்
இப்போது இத் தத்துவத்தை அழகிதாக நிலையிட்டாள்
வாத்சல்யமே ஸ்வரூபம் என்றபடி

(ஆத்மாவுக்கு பாகவத  சேஷத்வமே யாதாத்ம்ய ஸ்வரூபம்- அடியேன் உள்ளான்-நெடுமாற்க்கு அடிமை -உற்றதும் உன் அடியாருக்கு அடிமை )

பிராட்டி சக்ரவர்த்தி திருமகனை -விஹிதஸ்ய தர்மஞ்ஞய சரணாகத வத்ஸல-என்று ஸ்வரூபத்தை நிலையிட்டாள் –
அதுவே ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணம் –
இங்கு இவள் சரணாகத பக்ஷபாதி -என்று நிலையிட்டார்கள்
இதுவே மஹா பார்த்ததுக்கு உள்ளீடான பிரதான குணம்(மம ப்ராண பாண்டவர் என்று இருப்பவன் )

(குடப் பாம்பில் கை இட்டவன் -நடுநிலை அல்லவே ராஜா வான குலசேகரப்பெருமாள்
சுப்ரமண்ய பட்டர் ஐதிகம் -மத்யஸ்தராக இருக்க மாட்டேன் என்றாரே -பாகவதர் ஏற்றம் அறிந்து)

மாலே -மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் இவர்–ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து –தான் என்னை முற்ற பருகினான்
இவர் விழுங்க திட–பருகினான் -த்ரவ்ய–வ்யாமோஹம் கண்டு ஆழ்வார் உருக அத்தை பருகினான் –
எனைத்தோர் பல நாள் அழைதேற்க்கு–எந்தன் கருத்தோடு வீற்று இருந்தான்
அதனில் பெரிய அவா–தத்வ த்ரயம் விட பெரிய என் அவா -விளாக்கொலை கொண்ட ஆழ்வார் ஆசை–அவா அற என்னை சூழ்ந்தாரே -அவனது
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளன்-மன்றில் குரவை மால் செய்தான்-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் – உன் கரிய திருமேனி –வேதாஹமேதம் -ஒத்தார் மிக்கார் இல்லா பெரியவன் –
இத்தனை -அரங்கனாய பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே -திருமாலை -4-
சதுர்விஜா ஆர்த்தா விஞ்ஞாசு அர்த்தாதி ஞானி – அல்பதுக்கும் தன்னிடம் வருகிறாள்
ஞானி து ஆத்மைவ மே மதம் -என் மதம் இது நிச்சயம் அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் -ஆளவந்தார்
அறிவார் ஞானிகளுக்கு உயிர் ஆனவனே ஆளவந்தார் கேட்டு – அன்மொழித் தொகை அறிவாரை உயிர் ஆக உடையவனை
உன்னை அர்த்திது வந்தோம் -நீயே வேணும் என்பாரை நவகோடி நாராயணன் வேண்டாம் நீ தான் வேணும் என்ற அர்ஜுனன் போலே
என்னையே விரும்பி – சேவை சாதிக்க அவயவ பூதிகள் இவைகள் பறை கரங்க மன்றில் கூத்தாடினான் காணேடி என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே —

மால் பெரியோன்-கருமை- பெருமை -மையலுமாம்

—————-

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந் நீர்மை இன்றிக்கே
காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவு -என்னவுமாம் –
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே-
நீங்கள் வந்தது என் -என்ன
வந்த கார்யத்தைச் சொல்லுகிறார்கள் –

மணி வண்ணா
தாமரையில் இருக்கிறவள் அத்தை விட்டு வருவது இவ் வடிவைக் கண்டு இறே –
பனி மலராள் வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன் (பெரிய திருமொழி-2-2)

மணி வண்ணா
வியாமோஹன் அன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

மாலே மணி வண்ணா
இப்படி வடிவு படைத்தாரும் பிறரத்தை ஆசைப் படுவார்களோ
பிச்சர் கையில் மாணிக்கமாய் -உன்னுடம்பு உன்னதாமோ
(ந தே ரூபம் –பக்தாநாம் அன்றோ )

அன்றிக்கே –
மால் -என்று
பெரியோன் -என்றபடியாய்
சூட்டு நன் மாலைகள் எடுத்து ஸூரிகள் சேவிக்க இருக்கும் ஈஸ்வரத்வம் சொல்கிறது

மணி வண்ணா -என்று
வெண்ணெய் தொடு உண்ணப் போந்து -அபரிச் சேதியனாய் இருக்கச் செய்தே-
முந்தானையில் முடிந்து
பெண்களுக்கு அடக்கி ஆளலாம் படி இருக்கிற ஸுலப்யத்தை சொல்லுகிறது ஆகவுமாம்-

மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை என்று
நம்மை ஆச்சி பல காலம் சொல்லும் –
தாய்க்கு மணி வண்ணன் அத்தனை அன்றோ
மணி மாமை குறைவில்லாதே -(4-8 )
அழகியார் இவ் வுலகம் மூன்றுக்கும் (6-2 )-என்கிற உங்களுக்கு ஏற யுடம்பு படைக்கப் போமோ
இத்தனை மிகை நம்மை சொல்லுகிறது என் –
போந்த காரியத்தை சொல்லுங்கோள் என்ன

மணி வண்ணா
அபரிச்சேதனாய் இருக்கச் செய்தே-முந்தானையில் முடியலாம் படி இருக்கை

மணி வண்ணா
பிச்சு வடிவில் தெரிந்து இருக்கும் என்றுமாம்

மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம்(கண்ணன் என்னும் கரும் தெய்வம் அன்றோ )
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
நீர்மை இன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு என்று

(மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை –
மயலை ஊட்டி விட்டு சமன் கொள் தரும் தடம் குன்றம் போல்
இவனும் தனது பிச்சை அருளி-இதிலும் -பித்திலும் – சாம்யா பத்தி அளிப்பானே)

(மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே)

மாலே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-விபீஷணோ மஹா ப்ராஜ்ஜோ பூமிம் சமவ லோகயன் -என்று
பெருமாளைக் கிட்டின பின்பு
நம்மைக் கைக் கொண்டு நம்மை உளோமாகப் பண்ண வல்லரே என்று
தான் இருந்த இருப்பைப் பெருமாள் நினைந்து இருந்தமை முகத்திலே தோற்றி இருந்தது
முற்பட்ட நினைவுக்கு ருஷி உவாச ச மஹா ப்ராஜ்ஞ- என்றான்-
பிற்பட்ட பெருமாள் பிரக்ருதியை அறிந்தபடிக்கு
விபீஷணோ மஹா ப்ராஜ்ஜோ பூமிம் சமவ லோகயன் -என்றபடியே நிலையிட்டார்கள் இவர்களும் –

(ராகவேண அபயம் தத்தே ஸன்னதோ – ராவணன் அனுஜனுக்கு தம்பிக்கு சரணாகதி தந்த பின்பே அவதார பிரயோஜனம் பெற்றான்
கிட்டாவிடில் பரமாத்ம ஸ்வரூப நாஸம் ஆகி இருக்குமே-விஜ்வர கிருதக்ருத்யன் ஆனான்
அந்தாம அன்பு –ஆரம் உள -ஆழ்வாரைப் பெற்ற பின்பே எல்லாம் சத்தை பெற்றதே)

(ருக்மிணி ஸந்தேஸம் –கல் நெஞ்சமோ -எனக்கோ எழுத்தாணி எடுத்து எழுதி உம்மையே அனுப்பி –
நானோ உருகி அன்றோ இருக்கிறேன்
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் -போல் இவர்கள் போக –
என்னில் முற்றம் பாரித்து என்னை முற்றம் பருகினான் போல் இவன் மாலாகி நிற்கிறான்)

(மணல் கொட்டகையில் இன்றும் பராங்குச பரகால யதிராஜர் நாலடி முன்னே வர நம்பெருமாள் விரைந்து வந்து விழுங்குவதை
நித்யம் மாலையில் உத்சவத்தில் காண்கிறோமே-)
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இவர்கள் இருக்க
பெண்கள் நம்மை கடாக்ஷிப்பது காண் என்று பகவான் இருந்து இருப்பைக் கண்டு தலை சீய்க்கிறார்கள்

வந்த காரியம் இருவரும் மறந்தார்கள்
இருவர் நெஞ்சும் கல்லால் பண்ணினது போல் திகைத்து போய் அசைவில்லாமல்  இருந்தார்கள்
ஆகிலும் இவர்கள் விடார்களே(ருக்மிணி பிராட்டியைப் போல்)

இவர்கள் அவனுக்கு வரிசை கொடுக்கிறார்கள் -செய்ய வேண்டிய கையோலை இட்டுக் கொடுக்கிறார்கள்
வைதேஹிக்கு பெருமாள்  சொன்னது போல்-

(ரமதே கச்சித் பஸ்யத் சித்ர கூடே மயா ஸஹ -இவைற்றைப் பார் என்று பெருமாள் சீதைக்கு காட்டினால் போல் )

செம்படவன் -மாணிக்கம் -வியாபாரி -அரசன் -கதை–பெருமை அறியாதார் அல்ப பலம் பெற்று போவார் -ஐஸ்வர்யம்
ரிஷிகள் போல்வார் தபஸ் துருவ பதம் பரும ரிஷி மோஷம் வியாபாரி போலே -கைவல்யம் -சாதனாந்தர நிஷ்டர்
பிரபன்னர் -சாதனம் ஆக்காமல் ஸ்வயம் போக்கியம் ஞானி வாசுதேவம் சர்வம் இதி –
வண்ணம் ஸ்வ பாவம்

——————

மார்கழி நீராடுவான் –
மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்-
ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –
அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –
மார்கழி நீராட்டமாவது என் -என்ன –
இது பிரசித்தம் அன்றோ -என்ன –

மார்கழி நீராடுவான்
மகிழ்ந்து -மார்கழி நீராட -என்று ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –

சாத்தியம் கைப் பட்டு இருக்கச் செய்தே
ஆன்ரு சம்சயத்தாலும்
ஆஸ்திக்ய அதிசயத்தாலும்
க்ருத்யாம்சம் விடார்கள் இறே
மார்கழி நீராடுகைக்கு உபகரணங்கள் வேண்டி வந்தோம்

இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து
இது எங்கே உள்ளது என்று தான் என்றான்

இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –

காமநாதிகாரிகளுடைய ஜ்யோஷ்டோமாதி விதி போலே ப்ரசித்தமோ என்ன –

அனன்ய பிரயோஜனைகளான எங்கள் முன்னே
பிரயோஜனாந்தர பரருடைய விதியைக் காட்டினாயே என்று இவர்கள் சொல்ல

முமுஷுக்களுடைய த்யான விதி போலே பிரசித்தமாய் இருந்ததோ என்று அவன் சொல்ல

நாஸ்திகரைப் போலே நீ சொல்லுகிறது என் –
ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய அனுஷ்டானம்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறவை போலே அல்ல காண் –
பிரபல பிரமாண சித்தம் காண் என்கிறார்கள் –

(ஸ்ருதி ஸ்ம்ருதி உணர்ந்த வைதிகர் அனுஷ்டானம் தான் பிரபல பிரமாணம்
வேதங்களும் பிரமாணம் மேலையார் செய்வனகள் )

மார்கழி நீராடுவான்-
மார்கழி நீராடுகைக்கு உபகரணம் தேடி வந்தோம் -என்ன –
அங்கி கைப் பட்ட இடத்திலும் அங்கம் கைப் படாது ஒழிவதே –
நாஸ்திகரைப் போலே -மார்கழி நீராட்டாவது என் என்ன
இது அறியாயோ என்ன

ஜ்யோதிஷ்டோ மேந ஸ்வர்க்க காமோ யஜேத -என்கிறபடியே ஸித்தமாய் இருந்ததோ -என்ன
எங்களுக்கு ஸ்வர்க்காதிகளில் ஸ்ரத்தை யுண்டோ என்ன

நிதித்யாசிதவ்ய-என்கிறால் போலே தான் உண்டோ என்ன
பிரமாணங்களை விஸ்வசித்தால் பலிக்கிலும் பலிக்கும் -தவிரிலும் தவிரும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட-என்று பூர்வர்கள் அனுஷ்டித்தது ஆகையால் பலத்துக்கு இழவில்லை –
அது தானே அமையும் -நீ – இறை இறை -அறிவது ஓன்று அன்று(நீ தேவாதி தேவன் -நாங்கள் அடியாருக்கு அடியார் -விஜாதீயன் )

(திரிபுரா தேவி -உடையவர் கை காட்டும் இடம் வியக்தியே பர தேவதை)

மார்கழி நீராடுவான்-
மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை —இந்நோன்பு தான்–காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்–பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்
ஆகையாலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்–சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய
கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து

—————

மேலையார் செய்வனகள் –
பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –
ஆகில் வேண்டுவது சொல்லுங்கோள் என்ன –

மேலையார் செய்வனகள்
விதி ப்ரவ்ருத்தமானால் பல வ்யாப்தமாந்தனையும் சம்சயத்துக்கு விஷயம் உண்டு –
அனுஷ்ட்டித்து பல சித்தி உண்டானதுக்கு சம்சயம் இல்லையே –

விச்வாமித்ரன் சொன்னான்
கண்டு சொன்னான் என்றால் போலேயோ
கபோதம் அனுஷ்டித்தது -(புறா கதை )

மேலையார் செய்வனகள்
நிர்தோஷ பிராமண சாஸ்திரம் தானும்
வியாசன் சொன்னான்
மனு சொன்னான்
ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள்
யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று –
ஞானவான்களுடைய வசனத்தையும்
அனுஷ்டானத்தையும்
அன்றோ பிரமாணமாகச் சொல்கிறது –

வேதங்களுக்கு முன்னே அன்றோ
தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது

மேலையார் செய்வனகள் –
என்ன தப்பைச் சொன்னோம் -நம்மைக் கோபியாதே வேண்டுவன சொல்லலாகாதோ என்றான்

பட்டர் வேடர்-வணங்கி தேன் தினை மா கொடுத்து-காட்டில் விசேஷம்-முயல் -ஓட -குட்டி முயல் கிடைக்க-தாய் முயல் முன்னே சுற்றி வர
எழுந்து நிற்க-பரிதாபம்- பட்டு குட்டி விட்டேன்-நஞ்சீயர்-சரணாகதி சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தவர் இல்லை-பலம் உண்டு முயலுக்கு யார் உபதேசித்தார் –
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்-யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ

—————

வேண்டுவன கேட்டியேல் –
கேட்புதியாகில் -என்கிறது
அந்ய பரதையாலே –
அந்ய பரதை என் -என்னில்
பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே
இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும்
துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே
தட்டி எழுப்புகிறார்கள் –

இத்தால் -ஸ்வாபதேசத்தில்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது –
கார்ச்யத்தாலே இடை என்று வைராக்யத்தைச் சொல்லுகிறது –

கார்ச்யத்தாலே -வைராக்கியம் தோற்றுமோ -என்னில்
கர்ச்யத்தாலே விரக்தியைச் சொல்லிற்றாய்
அத்தால்
விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை சொல்லுகிறது –

உங்கள் வடிவு கண்ணுக்கு போக்யமோபாதி
உங்கள் வார்த்தை செவிக்கு போக்கியம் அன்றோ
சொல்லுங்கோள் என்ன -சொல்லுகிறார்கள்

வேண்டுவன கேட்டியேல்
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள் –
யாதொரு அளவு செய்தார்கள் -அவ்வளவு லோகம் அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று
தேர்த் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ –

சாஸ்திரம் விதித்ததே யாகிலும்
சிரேஷ்டர் அனுஷ்டானம் இல்லாத இடத்தில் தவிரக் கண்டு அறியாயோ –

அஷ்டகையில் -பசு விசசநம் கர்த்தவ்யம் என்னும் இடம் பசு மேய்ப்பார்க்குத் தெரியாதே –

உன்னை பர தேவதை என்றும்
உனக்கு வாசக சப்தம் நாராயணன் என்றும்
நாங்கள் ஆதரிக்கிறது வேத சாஸ்த்ர சித்தம் என்று அன்று இறே
விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்றும்
விட்டு சித்தன் விரும்பிய சொல் -என்றும் அன்றோ –

வைதிக விதிகள் எல்லாம்
உன்னுடையாருடையான கம்பீரமான மனசை அனுவர்த்தித்து இறே பிரமாணம் ஆகிறது

ஒத்த ஓதா நிற்கச் செய்தே ஒரு மந்த்ரத்தை ஸ்வீகரித்து
இதர மந்த்ரங்களைக் கை விட்டது
சிஷ்ட அசிஷ்ட பரிக்ரஹங்கள் ஆகையால் இறே –

அப்படி பரிக்ரஹித்த மந்த்ரம் தன்னில்
மந்த்ர ரத்னத்துக்கு உத்கர்ஷம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்று இறே –
திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின்-என்னக் கடவது இறே

வேண்டுவன
லோக ஸங்க்ரஹத்தயா அனபேஷிதங்களும் செய்யா நிற்பர்கள் –
அவர்கள் செய்யுமா போலே அவை எல்லாம் செய்யப் போகாதே என்ன

வேண்டுவன
அவர்கள் செய்து போருமவற்றில் இப்போது அதிகரித்த காரியத்துக்கு அபேக்ஷிதமுமாய்
ஸ்வரூப விரோதமும் பிறவாதே இருக்குமவை-

இவர்கள்
மணி வண்ணா என்று அவன் வடிவிலே கண் வைத்துக் கொண்டு இருக்கிற மாத்ரம்-
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே அவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் துவக்குண்டு அந்நிய பரனாய் இருந்தான் –
தட்டி யுணர்த்தி
கேட்டி
என்கிறார்கள் –

இவர்களாலும் புறம்புள்ள அந்நிய பரதை இறே தவிர்க்கலாவது-
தங்கள் பக்கல் அந்நிய பரதை தவிர்க்கப் போகாது இறே
ஊரார் இசையாத போது இறே -ஓடி அகம் புக வேண்டுவது –
இப்போது வைத்த கண் வாங்காதே அனுபவிக்கலாமே-
ஆகையால் பார்த்துக் கொண்டு இருந்தான் –

சிலர் பட்டினி கிடக்க சிலர் உண்டு ஸூகிக்குமா போலே
கெடுவாய் நீ என் செய்கிறாய்
கேட்க்கிறாயீ -என்கிறார்கள் –

உங்களுடைய ஞான பக்தி வைராக்யங்களினுடைய நிழலீடு ஆகையால்
கண்ணும் முலையும் இடையும் போக்யமாகையாலே
உங்கள் வடிவைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் –
உங்களுடைய மழறு தேன் மொழிகள் (6-2 )செவிக்கு போக்யமாம் படி கேட்க்கிறோம்-
திரு உள்ளமாகல் ஆகாதோ –
வேண்டுவது எல்லாம் -என்றான்

வேண்டுவன கேட்டியேல்
உன் அந்நிய பரதையாய் கெட்டால் சொல்ல வேணுமோ என்ன
அந்நிய பரதை என் என்னில்
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் முன்னே வந்து நிற்கையாலே
ஆனைக்குப்பாடுவாரைப் போலே (சதுரங்கம் -chess)எங்கள் வார்த்தை கேளாதே இவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் வடிவு அழகில் மண்டினான் என்கை
இவர்கள் உன் காரியத்துக்கு வந்தோமோ என்ன
உங்கள் வடிவு அழகு கண்ணுக்கு இலக்கானவோபாதி
உங்கள் வார்த்தை என் செவிக்கு இலக்கு அன்றோ –
அதுவும் என் கார்யம் அன்றோ -சொல்லுங்கோள்-என்ன

(ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே-God proposes God disposes Man poses-)

———————————–

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஜகத்தை எல்லாம் வாழும்படிக்கு
த்வநிக்கைக்கு இடமுடைத்தானவை –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி இறே தாரகம் –
அப்படியே நாடெல்லாம் இந்த-த்வனி கேட்டு வாழ வேணும் –
இவர்கள் தாங்களும் -வலம்புரி போல் நின்று அதிர வேணும் -என்று இறே சொல்லிற்று –

பாலன்ன –
பாலைத் திரட்டினாப் போலே இருக்கை —இப்படி இருப்பன பல சங்கு வேணும் –

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன–பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
என்கிறார்கள் –

ஜகத்து எல்லாம் அதிரும் படியான த்வனியை யுடைத்துமாய் –
இடைமுடைத்தாய் –
பாலைத் திரட்டினால் போலே அழகிய நிறத்தை யுடைத்தாய் –
பல சொல்லுகிறது என்
உன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் அநேக சங்கங்கள் வேணும்

ஞாலத்தை எல்லாம் நடுங்க
பாரத சமரத்தில் முழக்கம் துர்யோத நாதிகளை நடுங்கப் பண்ணின அளவிலே
இச் சேர்த்திக்கு பிரதிகூலராய் இருப்பர் யாவர் சிலர் –
அவர்கள் எல்லாம் நடுங்க வேணும் –

பற்றார் நடுங்க -(பெரிய திருமொழி 3-3)
பூங்கொள் திரு முகத்து
சிலரை வாழ்விக்கும் –
சிலரைக் கெடுக்கும் –

வர்ஷார்த்தமாக பெண்கள் புறப்படும் போதை சங்க த்வனி கேட்டு
வலம் புரி போல் நின்று அதிர்ந்து -என்னும் படி
மேகங்களும் உட்பட முழங்கும் படி சப்திக்க வேணும்

பாலன்ன வண்ணம்
மணி வண்ணா என்று இவன் நிறம் உத்தேசியமானால்
இவனோடு ஸ்பர்சம் யுடையார் நிறமும் உத்தேச்யமாகச் சொல்ல வேணுமோ –

உன் பாஞ்ச சைன்யம்
தாமோதரன் கையில்(நாச்சியார்-7-5 ) என்கிறபடியே

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் –
இடமுடைத்தாய் உன் திரு மேனிக்குப் பகைத் தொடையாம்படி
பாலைத் திரட்டினால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய்
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -என்கிறபடி அன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய்
பல சொல்லி என் -உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன
பல சங்கங்கள் வேணும் என்கிறார்கள் –

இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது –சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே
ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே-லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –

————-

போய்ப்பாடு –
பேரிடமாய் இருக்கை –
இடம் உண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
புகழ் என்றுமாம் –
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினான் என்கிற புகழ் –

பின்னையோ வென்ன –
சாலப் பெரும் பறையே –
ஒரு மன்றில் த்வநிக்கை அன்றிக்கே
எங்கும் ஒக்க த்வநிப்பது ஒரு பறை வேணும் –

போய்ப்பாடுடையன
பேரிடமாய் இருக்கை-இடமுண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
போய்ப்பாடு -என்று புகழுடைமை யாகவுமாம் –
அதாவது
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினது அன்றிக்கே-
சங்கரய்யா யுன் செல்வம் -என்றும் –
பொதுவாக உண்பதனை -என்றும் –
நாய்ச்சிமாரும் கூட ஊடும் படியான வேண்டற்பாட்டை யுடையவன் ஆகையால் வந்த புகழ் –

அல்லாதவை வேண்டுவதுக்கு முன்னே பிரதானம் மங்கள சப்தம் ஆகையால் வேண்டுகிறார்கள்
உன் பாஞ்ச சன்னியம் என்கிறார்கள் –

இயல் அறிபவன் ஒருவன் ஆகையால் தானே அறியும் என்று –
தன்னுடைய பாஞ்ச சன்னியம் போலே இருக்கும் சங்கு இல்லையே
உன்னோடு உடனே (நாச்சியார் 7-5 )
அதுக்கு ஈடாக தான் உகக்கும் ஆகையால் (நாச்சியார் )
அது கூடாமைக்கு தானே கூட வருவான் என்று நினைத்து –

ஓன்று கண்டோம் –
பின்னையோ என்றான்

சாலப் பெரும் பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ –
பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம்
முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –

பின்னையோ என்றான் –

போய்ப் பாடுடையனவே
இடமுடைமை- பெருமை -புகழ் என்றுமாம் –
ருக்மிணிப் பிராட்டி மற்றையார்க்கு உதவியது என்கிற புகழ்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-இத்யாதி

(கோங்கலரும் பொழில் மா லிருஞ்சோலயில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்க வில்
நாணொலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ)

இது ஓன்று – இனியோ என்ன

சாலப் பெரும் பறையே
ஒரு மன்று அளவில் த்வநிக்கை அன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறது ஒரு பறை வேணும் –
யயவ் தூர்ய ப்ரணாதே ந பேரீணாம் ச மஹா ஸ்வநை
இதுவாய்த்து பின்னையோ என்ன

மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில்
ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய்
மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

————————

பின்னையோ வென்ன
பல்லாண்டு இசைப்பாரே –
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் –

பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –

பல்லாண்டிசைப்பாரே
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போவார் வேணும் என்கை -பின்னையோ என்ன

—————

பின்னையோ வென்ன –
கோல விளக்கே
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் –

பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி
தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –

பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு
அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

கோல விளக்கே
மங்கள தீபம் வேணும் என்ன -பின்னையோ என்ன

———–

கொடி
திருக் கொடியாட வேண்டும் –

கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது –
எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-

கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான-கைங்கர்யமும் வேணும் –

கொடியே
திருக் கொடி யாட வேணும் -பின்னையோ என்ன

—————–

விதானம் –
மேல் கட்டி வேணும் –
என்று இவற்றை அபேஷிகக –

விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –

குளிக்கப் போம் போதைக்கு வேண்டும் அளவு இது என்கிறார்கள் –

அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-

விதானமே
திரு மேல் கட்டு
இவை வேணும் என்ன

—————-

சங்கும் பல கிடையாது–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை கொள்ளுங்கோள்-என்றான்
தன்னைப் போலே இருப்பார் சில உண்டாகில் இறே
புறம்பு–ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் சங்கு உண்டாவது –

பறைக்கு பாரோர்கள் எல்லாம் மகிழ–
பறை கறங்க கூத்தாடின போது
திரு வரையில் கட்டின பறையையும்
திருப் பல்லாண்டு பாடுகைக்கு -பெரியாழ்வாரையும்
விளக்குக்கு -நப்பின்னைப் பிராட்டியையும் –
கொடிக்கு -பெரிய திருவடியையும்
மேல் கட்டிக்கு -அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள் என்றான் –

விதானத்துக்கு திருவவதரித்த அன்று
பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த-திரு வநந்த வாழ்வானைக் கொடாது ஒழிவான் என் என்னில்
எல்லாரையும் போகச் சொன்னாலும் தன்னை ஒழிய-ஓரடி இட மாட்டாதவன் ஆகையாலே –
அத்த வாளத்தைக் கொடுத்தான் –
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு இறே வாட்டம் தணிய சொல்லிற்று –

ஓர் ஓன்று போராது –
இப்படி இருப்பன பல வேண்டும் -என்ன

இல்லாததை தேடப் போமோ -என்ன
உனக்கு அரியது உண்டோ -என்ன–எனக்கு எளியதாய் இருந்ததோ -என்ன

ஆலினிலையாய் –
சிறியதொரு வடிவைக் கொண்டு–சர்வ லோகத்தையும் திரு வயிற்றிலே வைத்து–
பவனாய் இருந்ததொரு ஆலம் தளிரிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ —
லோகத்தில் இல்லாததும் எங்களுக்காக உண்டாக்க வல்லை என்று கருத்து –

பெண்காள் இப்படி இருப்பன தேடப் போமோ
துர்க்கடன்களை சொன்னி கோளே என்ன –

உனக்கு அரியது உண்டோ என்றார்கள் –

எனக்கு எளிதாய் இருந்ததோ என்றான்

ஆலினிலையாய்
உன்னுடைய சிறிய வயிற்றில் பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து
ஒரு பவனான ஆலிலையில் கிடந்து அகடிதங்களை
செய்ய வல்ல உனக்கு அரியது யுண்டோ –
லோகத்தில் இல்லாதது எல்லாம் எங்களுக்காக யுண்டாக்க வல்லவன் அன்றோ –

ஆலினிலையாய
பாலன் தனதுருவாய்-(முதல் திருவந்தாதி -69 )
வட தள சாயியுடைய விருத்தாந்தம் கிருஷ்ணன் பக்கலிலே இறே காண்பது –
(சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -அப்பாசுரம் )
பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் -(1-4 )
வையம் ஏழும் கண்டாள்-
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இல்லையே –
(all in ilaiyaay )

வஸ்துக்களை உள்ள தாங்கி ஆலின் இலையை வெளியில் தாங்கி அவனுக்கும் ஒரு ஆதாரம் உண்டோ -பட்டர் –
ஆலின் நிலையாய் -ஆதாரமாக இருந்தவன்–வடதல சாயி ஆலிலை கண்ணன் -சந்தான கோபாலன்

மாலே மணி வண்ணா -என்கிற இடத்தில் ஸுலப்யம் சொல்லுகிறது –
ஆலினிலையாய் -என்ற இடத்தில் சர்வ சக்தி யோகத்தவம் சொல்லுகிறது –

அது மாமின் அர்த்தம் –
இது அஹம் -என்கிறத்தின் அர்த்தம் –
மாலாய் ஆலிலையில் வளர்ந்து(பெரிய திருமொழி – 5-7) -என்னக் கடவது இறே –

மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று
ஆலினிலையாய் -அஹம் -என்கிற இடத்தில்-சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று –சுருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது-

ஆலின் நிலையாய்-
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன்
அபரிமிதமான சாகைகள் உள்ள ஆல மரம் போல் சிஷ்ய கோடிகள் நிறைந்து
சங்கம் -ஸ்பர்சத்தால் துருவனுக்கு
ஸ்வாமி ஸ்பர்சத்தால் ஆண்டான் ஆழ்வான் எம்பார் அனந்தாழ்வான் பிள்ளான் போல்வார்
கோல விளக்கு -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்
கொடி -சித்தாந்த விஜய த்வஜம்
விதானம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை-

———-

அருள்–
வேண்டாது ஒழியில்-செய்யலாவது இல்லை —
சக்தி இல்லாமை இல்லை
இத் தலையில் பேற்றுக்கு எல்லாம் ஹேது அவன் பிரசாதம் என்கை –

மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று
ஆலினிலையாய் -அஹம் -என்கிற இடத்தில்–சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது-

அருளேலோ ரெம்பாவாய்
சக்தி இராமை இல்லை –
வேண்டி இராது ஒழியில் செய்யலாவது இல்லை –
தரில் அரியது இல்லை –
தராது ஒழியில் வளைப்பிட ஒண்ணாது –

ஆலினிலையாய் அருள்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது-(நாச்சியார் -2-2 )என்னக் கடவது இறே –
இப்போது அகடிதம் இறே என்று கண் அழியாதே கிருபை பண்ண வேணும் –

ஆலினிலையாய் அருள்
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் (மூன்றாம் திருவந்தாதி -19) என்று
வட தள சாயி யருள் இறே பிரசித்தமாய் இருப்பது –

பெண்காள் இவை நம்மால் செய்யலாய் இருந்தது இல்லை -என்ன
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-
சர்வ லோகத்தையும் உன் திரு வயிற்றிலே வைத்து ஓர் பவனான ஆலிலையிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ
பெண்காள் -தந்தோம் என்னும் அத்தனை அன்றோ(அஸ்து தே என்னவே வேண்டும்-ஏன கேந பிரகாரம் த்வயம் அனுசந்தானமே போதும் என்றானே )-என்ன

அப்படி யாகிறது -என்று புறம்பு தன்னைப் போலே ஒரு தத்வம் உண்டாகில் இறே
தன் கையில் சங்கு போலே இருக்கும் சங்கு உண்டாவது

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -என்று இவர்கள் உகந்த சங்கு தன்னைக் கொடுத்தான்

(தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே)

பாரோர் எல்லாம் மகிழப் பறை கறங்க-என்றும்
கன்றப் பறை கறங்க -என்று மரக்கால் கூத்தாடுகிற போது அறையில் கட்டின பறையையும்
பறை அடிக்கைக்கு ஸ்ரீ ஜாம்பவான் மஹா ராஜரையும் கொடுத்தான்

(பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே -சிறிய திருமடல்)

(கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே -11-5-6-)

திருப் பல்லாண்டு பாடுகைக்கு-
அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்
பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்

மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்
கொடிக்கு பெரிய திருவடியையும்
விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த
திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்

ஆலினிலையாய்
எல்லாம் கொடுத்தாலும் தன்னைக் கொடுத்தது ஆகாமையாலே அத்தவாளத்தையும் கொடுத்தான்
எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னை ஒழிய ஓர் அடி இடாத பெண்கள் ஆகையாலே-
நயாமி பரமாம் கதிம்-(ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் )என்கிறபடியே அத்தவாளத்தலையைக் கவித்துக் கொண்டு போனான் என்றும்
கள்வன் கொல் -லில் -பிராட்டியை போலே ஒளித்துக் கொண்டு போக வேண்டாவோ
அது வேண்டாவே -ஊர் இசைந்ததே

கள்வன் கொல் யானறியேன் கரியானொரு காளை வந்து,
வள்ளி மருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று,
வெள்ளி வளைக் கைப்பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி யணி யாலி புகுவர் கொலோ.-3-7-1

அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே ஒருவனே எல்லா அடிமையும் செய்வானை யுடையனாய் நின்றால்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
எல்லா அடிமையும் செய்ய வல்ல ஒருவனையும் கொடுத்து விடாதே
நித்ய விபூதியில் உள்ளார் அனைவரையும் கொடுக்கிறது என் என்னில்
எல்லாரும் ஸ்வரூப லாபம் பெறுகைக்காக-

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –முதல் திருவந்தாதி -53-)

(ஆதி சேஷன் விட்டுப்பிரியானே -படுக்கை விட்டு தூங்க முடியாதே -அக்குளத்தில் மீன் அன்றோ –
உத்தரீயம் விதானமாகக் கொடுத்தான் -ந ச தே விநா நித்ராம் –
முனிவன் வேண்ட திறல் விலங்கு இலக்குமனைப் பிரிந்தான் அன்றோ )

கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட என் கார் முகில் வண்ணா-(ஸ்ரீ திருவாய் மொழி -5-7-3-)

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்-( பெருமாள் திருமொழி -1-2 )

———————————

மாலே மணி வண்ணா –
சர்வாதிகனாய்
சர்வ சுலபன் ஆனவனே -என்னுதல் –
ஆஸ்ரித வ்யாமோஹமே ஸ்வரூபமாய்
அதி மநோஹரமான விக்ரஹத்தை
உடையவனே -என்னுதல் –
இப்படி சம்போதிதவாறே –

நீங்கள் வந்த கார்யம் என் -என்ன –
மார்கழி நீராடுவான்-
மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை –
இந்நோன்பு தான்
காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்
பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்
ஆகையாலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்
சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய
கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து

அதில் பிரமாணம் என் என்ன –
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
பிரமாணங்களில் தலையான
சிஷ்டாசார்யம் -என்ன
அதுக்கு வேண்டுவது என் என்ன
பராக்கில்லாமல் கேட்டாயாகில் சொல்லுகிறோம் -என்ன
ஆகில் -இதுவும் உங்கள் பேச்சு அன்றோ -கேட்கிறேன் -சொல்லுங்கோள் என்ன
சொல்லுகிறார்கள் –

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து-பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
பூமிப் பரப்பில் உள்ள அஹங்கார சேதனரடைய நடுங்கும்படி த்வநிக்குமதாய் –
அதுக்குத் தக்க குடைகையை உடைத்தாய் –
அதி போக்யமாய்
அதி பரிசுத்தமாய்
உன் திருக் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற
பல சங்கங்கள் வேணும்

இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது –
சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே
ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே
லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –

சாலப் பெரும்பறையே –
மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான
ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்
சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ
போக்த்ருத்வங்களையும்
நிவர்ப்பிக்குமதாய்
மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்
உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

பல்லாண்டிசைப்பாரே-
சத் சஹாவாசம் வேணும் –

கோல விளக்கே –
பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு
அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற
பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

கொடியே –
கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான
கைங்கர்யமும் வேணும் –

விதானமே-
அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்

இல்லாததை உண்டாக்கவோ -என்ன
ஆலினிலையாய் –
முன்பு இல்லாததை உண்டாக்கினவன் இல்லையோ –

அருள்
கிருபை உண்டாகில்
செய்யத் தட்டில்லை –

————————————————————-

ஆலினிலையான் மாலை –
ஆலினையாய் அருள் –
அம்புலியை அழைக்கும் இடத்து -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்
செங்கீரை யாட -உய்ய உலகு படைத்ததுண்ட –ஆலினை அதன் மேல் பையவு யோகு துயில் கொண்ட பரம்பரனே –
அக்காக்காய் கோல் கொண்டு வா -என்னும் போதும் ஆலத்திலையான் அரவின் அணை மேலான் –
பூச்சூட அழைக்கும் பொழுதும் உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில் கொண்டே
நளி மதிச் சடையனும் –ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெருமான் மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையோமொயாமே -திருவாசிரியம் –
ஆலினிலையானுடைய இதிகாசம் இதர தெய்வங்களின் அவரத்வத்தையும்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரதத்வத்தையும் கையிலங்கு நெல்லிக் கனியாக தெரிவிக்க அவதரித்தது ஆயிற்று
பாலனதனதுருவாய் ஏழ் உலகுண்டு–ஆலினிலை மேல் அன்று நீ வளர்ந்த மெய்யன்பர்
ஆலன்று நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு —அகடிதகட நா சாமர்த்தியம்
க்ருத்சன பிரசக்திர் நிரவயவத்ய சப்த கோபோ வா -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-1-26-பூர்வபஷ ஸூ த்ரம்
ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் -2-1-27-சித்தாந்த ஸூ த்ரம் -து சப்தம் பூர்வபஷத்தை வ்யாவர்த்திக்கும்
ப்ரஹ்மம் நிரவவயம் –நிவிகாரம் -என்றால் ஜகத் காரணமாக ஒண்ணாது பூர்வ பஷம்
பிரமத்தின் உடைய அநீர்வசநீயமான சக்தி சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்
பச்யத்ய சஷூ ஸ்ருணோத்யகரண அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா
சப்தைக பிரமாண கத்வேன சகல இதர வஸ்து விசஜாதீயத்வாத்
அச்யார்த்தச்ய விசித்திர சக்தி யோகோ ந விருத்யதே -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
அப்பு அசக்தி அத்புத சக்திமான் -தேசிகன்
ஆலின் நிலையாய் -என்று பிரித்து
எம்பெருமான் திருவடியில் ஒதுங்குதல் பனை நிழலில் ஒதுங்கினால் போலே
எம்பெருமானார் திருவடிகளிலே ஒதுங்குதல் ஆலமரத்தின் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே -அம்மங்கி அம்மாள் வார்த்தை –

———————

26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :

சரணமானால் வைகுந்தம் சேர் வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் — ஆரணமால்
ஊழ் வினை நம் போக்க மற்ற பற்று அற்றராய்
சூழ் வினை அவனடியார் காத்து.

ஆலின் இல்லையாய் – பரத்வம்.
மாலே – சௌலப்யம்.
மணிவண்ணா – சௌந்தர்யம்.
ஸ்ரீ ராமாயணத்தில் எப்படி சரணாகத வத்சலத்வம் ராமனுடைய பிரதான குணமோ, அதுபோல
மஹா பாரதத்தில் கிருஷ்ணனுக்கு பிரதான குணம் ஆஸ்ருத வியாமோகம் என்பது .
நாராயணன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
தேவாதி தேவன்
என்று கீழே பரத்வத்தை பிரஸ்தாபித்த ஆண்டாள், 25 வது பாசுரம் வந்த வாறே
வந்து தலைப் பெய்த்தோம் ;
வந்து நின்றோம்;
இன்று யாம் வந்தோம்;
யாம் வந்த காரியம் – என்று இவர்கள் தாங்கள் வந்தமைக்கு இரங்கு என்று சஹேதுகமாய் சொல்லி வந்தவர்கள்,

அத்தை மாறி
ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து –என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து
திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க
நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வ யத்ன ராஹித்யம் சொன்னவர்கள்
தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று
அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம்
பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட ,
மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.

இதம் ஸ்ரீரங்கம் தியஜதாம் இஹாங்கம்
புனர்நசாங்கம் யதிஸாங்கமேதி
பானொவ் ரதாங்கம் சரணேச காங்கம்
யாநேச விஹங்கம் ஸயநேச புஜங்கம் — ஆதி சங்கரர்.

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.

ததா வித்வான் -; தியானம், வேதனம், நிதித்யாசனம் இவை ஒருபொருள் பன் மொழியாய்,
ஜ்ஞான யோக அதிகாரி தம் முயற்சியால் பக்தி செய்து புண்யபாபங்களைத் தொலைத்து
சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான். அதேபோல
ததா வித்வான் -; சரணாகதனான ஒருவன் – பகவான் அவனே உபாயம் என்று பிரபத்தி பண்ணின அதிகாரி –
தன் முயற்சி ஏதும் இன்றி பகவத் சங்கல்பத்தாலே புண்ய பாபங்களை உதரி சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
வித்யாசம் என்னவென்றால் இருவருடைய சஞ்சித கர்மங்களையம் பகவான் போக்கிக் கொடுத்தாலும் , உபாசகனான
பக்தி யோக நிஷ்டன் தன்னுடைய பிராரப்த கர்மங்களை
(இந்த ஜன்மத்தில் கழிக்க வேண்டியுள்ள புண்ய+பாபங்களின் கூட்டறவு) தானே போக்கிக் கொள்ள வேண்டும்.
யாவந்ன விமோக்ஷே அசஸம்பத்ச்யே தஸ்ய தாவதேவ சிரம் – என்பதாக இவர்களுக்கு ஜன்மாந்தரத்திலே மோக்ஷம்.

ஆனால் பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே –
அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான்.
என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்
மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் – அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று
தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .

———————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–அன்று இவ் வுலகம்  அளந்தாய் யடி போற்றி-

January 8, 2023

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——

அவதாரிகை –

தங்கள் அபேஷித்த படியே செய்தருளக் கண்டு
வந்த கார்யத்தை மறந்து
அத் திருப்பள்ளி யறையில் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்தளவும் நடக்கிற போதை
நடை அழகுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –

காணும் அளவு இறே -அது வேணும் இது வேணும் -என்பது
கண்டால் அவனுக்கு பரியும் இத்தனை இறே-

ஒரு நாள் அர்ஜுனன் உபய சேனைக்கும் நடுவே தேரை நிறுத்து என்று சொல்ல –
அப்படியே செய்தவன் –
இத்தனை பெண்களும் திரண்டு
இங்கனே போந்து அருள் என்றால்
அது செய்யாது இருக்க மாட்டான் இறே –

தாங்கள் அபேக்ஷித்தபடியே
திருப் பள்ளி அறையின் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்து அளவும் நடந்து போரத் தொடங்கினான் –

பிராட்டி கட்டு வாசல் அளவும் தொடர்ந்து மங்களா சாசனம் பண்ணினால் போலே
நப்பின்னைப் பிராட்டியும் தொடர்ந்து ஏத்தும் இறே –

அவனைக் காணும் அளவும் இறே
இங்கனே போர வேணும்
எழுந்து அருளி இருக்க வேணும் –
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும்
அது வேணும்
இது வேணும் என்று பல தேவைகளை சொல்லி அலைக்கலாவது

தண்ட காரண்யத்தில் ரிஷிகள் கண்டவாறே
ராக்ஷஸ பரிபவங்களை மறந்து
மங்களா சாசனத்தில் மண்டினார்கள் இறே

அப்படியே
இவர்களும் பெரியாழ்வார் படியாய் யாய்த்து –

இங்கனே போந்து அருளுகிற போது
பின்னே நின்று
நடந்த நடை அழகைக் கண்டு
மாறி இட்ட அடி தோறும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு
வந்து திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த
அனந்தரம்

பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
இங்குத்தை மங்களங்களை ஆஸாஸித்து மங்களா சாசனம் பரம பிரயோஜனமாக
வந்தவர்கள் அன்றோ நாங்கள் -என்கிறார்கள் –

இங்கனே போந்து அருளி என்று தாங்கள் சொல்ல
தங்களுக்காக நப்பின்னை பிராட்டியோடே சீரிய சிங்காசனத்தில்
இருந்த அளவிலே

ஆல வட்டக் காற்றிலே அத்தவாளந்தலை மேல் பறக்க
பாத பீடத்தில் நீட்டி அருளின திருவடிகளையும்
மடித்து இட்ட திருவடிகளையும் கண்டு
திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
தங்கள் கர ஸ்பர்சம் பொறாதே கன்றும்படியான மார்த்தவத்தைக் கண்டு
இப்படி ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு இங்கனே நடக்கச் சொல்லுவோமே

திருவடிகளை வாங்கி இடுகிற போது
திரு யுலகு அளந்து அருளின படிக்கு ஸ்மாரகமாய் இருந்தது
அன்று அளக்கப் பண்ணினவர்களோடு ஓத்தோம் இறே இன்று நடக்கப் பண்ணின நாங்களும்

நடந்த கால்கள் நொந்தவோ (திருச்சந்த )-என்று பிடித்து
நாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு உலாவி அருளின படி
திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தோ பாதி போருமே என்று
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-என்கிறார்கள் –

(பஞ்சுத்திருவடியால் நடக்க வைத்தோமோ -என்று பல்லாண்டு –
திருக்கால் ஆண்ட பல அபதானங்களை அனுசந்தித்து பொங்கும் பிரிவால் மங்களா சாசனம் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ –
பாரதந்த்ர நிஷ்டை -பரதாழ்வான் போல் –
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன்-விஞ்சி நிற்கும் தன்மையாள் -அன்றோ இவள்
ஒரே பாசுரத்தால் ஆறு முறை பல்லாண்டு -ஷட் ரஸம் -ஆத்ம லாபத்துக்கு –
தேனும் பாலும் கன்னலும் அமுதமும் ஓத்தே எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் –
அன்று -முன் காலம் -ஆங்குமுன் தேசம் -இழந்தே போனோம் –
இரக்கமே உபாயம் -இனிமையே புருஷார்த்தம் ப்ராப்யம் –இச்சையே அதிகாரம்
மூன்று அவதாரங்கள் – அன்று –அக்காலம் பல்லாண்டு பாடாத குறைக்கு இன்று பாடுகிறம்
நாம் நமக்கே பிறர் நன் பொருளை அபஹரித்த அன்று-இருந்த இடத்தில் இருந்தே அளந்து -அடி போற்றி
நடந்து போன பெருமாள் -திறல் போற்றி
பிறந்து ஏழே மாதத்தில் பால் வரவு தாமதம் திருக் கால் உதைக்க சகடாசுரனை புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி இவனுக்கு)

அவனைக் காணும் அளவு தானே அது வேண்டும் இது வேண்டும் என்பது
கண்ட பின்பு பரிவதே இவர்கள் கர்தவ்

நப்பின்னைப் பிராட்டியோடே கூடி திவ்ய ஸிம்ஹாஸனத்திலே இருந்த இருப்பிலே
சாத்தி அருளின அத்தவாளந்தலை மேலே பறக்க-சடகோபனைக் கோத்துக் கொண்டு –(சமாக்ய பத்ததியில் சடகோபர் ஸ்ரீ பாதுகா தேவி )
(திருவடிகளைக் கொண்டு) அத் திருவடிகளைத் திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு –
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறார்கள் -(நப்பின்னை கூட வருகிறாள் அன்றோ இங்கும் )

இங்கனே போர வேணும் என்ன நடந்த திருவடிகளுக்குப் பல்லாண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் என்றுமாம்

(நடக்க பிரார்த்தனை கீழ் – இதில் போற்றி -நடுவில் நடந்த வ்ருத்தாந்தம் ஆச்சார்யர்கள் காட்ட நாம் அனுபவிக்கிறோம்)

தங்கள் மநோ ரதங்களை மறந்து தண்ட காரண்ய வாசிகள் போலே-அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்-ஸ்ரீ கௌ சல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்–வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட-மங்களா சாசனம்

மங்களா சாசனத்தின் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்

ஆதலால் அபயம் என்று -பொழுததத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு கம்பர் பட்டர் சிஷ்யர்
இயம்பினார் என் மேல் வைத்த காதலால் —பிரேமத்தால் ஆஷேபித்தீர்கள் –
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு –அழல் உமிழும் பூம் கார அரவணையான் -ஹாவு ஹாவு ஹாவு -சாம கானம் கேட்டு-

——————-

அன்று இவ் வுலகம்  அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்

வியாக்யானம்  –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி —
அன்று –
தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-
தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –
நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-
அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்

இவ் வுலகம் அளந்தாய்-
பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –

யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு
சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி –
திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம்
பண்ணுகிறார்கள்

திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –

திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர
திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –

அடி போற்றி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-

அன்று இவ்வுலகம் அளந்தாய் –இன்று யாம் வந்தோம்
அன்றும் இன்றும் காணும் இவர்களுக்கு வயிறு எரிச்சல் –
இவர்களுக்கு இரண்டு காலமும் ஒரே காலமாய் தோற்றுகையாலே-
அன்று -இன்று -என்கிறார்கள்

அன்று
ஆர் நோன்பு நோற்கத் தான் இச் செயல் செய்தது –
நோற்றுக் கூடுவாரையும் விலக்குமவர்கள் தலையிலே இறே திருவடிகளை வைக்கிறது

அன்று
தன்னதான விபூதியை அஸூரனான மஹாபலி நெருக்கி தன்னைத் தாக்க
(இந்திரன்)நோவு பட்ட அன்று
அவன் அபிமானத்தில் நின்றும் மீட்டு
தன் கால் கீழ் இட்டுக் கொண்ட அன்று –

எங்கள் பந்துக்களும் எங்களை உன்னோடே சேர்க்க ஒட்டாதே –
நாங்களும் ஆர்த்தைகளாய்
அபிமானம் கால் கட்டி வாராது இருக்க
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பஃனமாக்கி உன் கால் கீழ் இட்டு கொண்டு
உன் வடிவு அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளி தானம் பண்ணின அன்று

இவ் வுலகம்
திருவடிகளின் மார்த்வத்தையும்
காடு மோடையுமான பூமியினுடைய காடின்யத்தையும்
இங்கு வர்த்திக்கிறவர்களுடைய வன்மையையும் அனுசந்தித்து இவ்வுலகம் என்கிறார்கள் –

சீல வயோ வ்ருத்தாதிகளால் துல்யர் என்று கவி பாட்டுண்டார் கடக்க நிற்க வேண்டும் படி
வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும்
எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் பிடுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே

அளந்தாய்
பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே
யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே

அடி போற்றி
அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் –
சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் –
அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்

அடி போற்றி
திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –
போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள்
அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்

அடி போற்றி
மன்னன் தேவிமார் கூத்து கண்டு மகிழ்ந்து போனார்கள் -(பெரியாழ்வார் -2-5-9-)
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் அன்றோ
(மாயக்கூத்து என்று மகிழ்ந்து போனார்கள் 8-5 )
செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-
இவ் வழகிய திருவடிகளைக் கொண்டே காடும் மலையும் அளந்து கொண்டது

பிராட்டிமார்களும் பூ தொடுமாறு போல் கூசிப் பிடிக்கும் படி
இவ் உலகம் -காடும் மேடும்
மலர்மகள் பிடிக்கும் மெல்லடி (9-2-10)இறே

(வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–ஈஸ்வரோஹம் -இதுவே வன்மை )

(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

அடி போற்றி
உன் சேவடி செவ்வி திருக் காப்பு

(திருப்பல்லாண்டில் -திருவடிகளுக்கே பிரதம மங்களா சாசனம் –
அடி -2- பாசுரம் தொடங்கி பலகாலாலும் -இங்கும் -29-இறுதியிலும் )

கொண்ட கோல குறள் உருவாய் –பண்டு கொண்ட முன் -மூன்று சப்தங்கள்-கொண்ட கோலம் –
இவனே நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம் யாசிக்க நினைத்த பொழுதே திருமேனி சுருங்கி-கொள்ள வேணும் என்று
அவனே நினைத்தாலும் அப்படி கொள்ள முடியாத அழகு–

திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இ றே இட்டது —இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –
திரு உலகு அளந்து அருளின அன்று–இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்–தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர–திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –

பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம்
ஜகத்தை ஆக்ரமித்த அன்று –
அஹங்கார க்ரச்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு
தன் திருவடிகளாலே அளந்து
தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –

—————–

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்கு ஆகாதாரை
அம்புக்கு இலக்கு ஆக்கின படி –

சென்றங்கு –
புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே
பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –

சென்று –
வழிப் போக்கிலே -கர கபந்த விராதாதிகளை
அழியச் செய்தபடி -என்றுமாம் –

அங்கு –
நின்ற விடத்தே நின்று
பூ அலர்ந்தாப் போலே அனாயாசேன அளந்த
அளவன்றிக்கே
கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே
கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை
எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை
இவர்களுக்கு குடிப் பிறப்பு –

தென்னிலங்கை
அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய்
குழவிக் கூடு கொண்டாப் போலே

ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –

செற்றாய் –
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை

திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே
மிடுக்கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும்
அவர்கள் ஆகையாலே
குடிப் பிறப்பாலே வந்தது –
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
திரு வுலகு அளந்து அருளின இடத்தில் சிவந்த தன் கை அனைத்துமார
சென்னி மேல் ஏறக் கழுவினான் என்று ப்ரஹ்ம ருத்ராதிகள்
அனுவர்த்திக்கும் படி ஐஸ்வர்யமான செயல்களை செய்த அவதாரம் ஆகையாலும்

அங்கே நின்று (திருவாய் -5-10-9 )-
(ஒரு கால் நிற்ப -திருநெடும் தாண்டகம் )என்னும் படி
நின்று இரண்டாம் அடியிலே தாவடி இட்டு
வருத்தம் அற செய்ததாகையாலும்
அத்தனை வயிறு எரிதல் இல்லை இறே –

ராமாவதாரத்தில் தேவத்வம் கலசாத படி
ப்ரஹ்ம ருத்ரர்கள் நாராயணன் என்றாலும் மனிச்சுக்கு இசையும் இடம் ஆகையாலும் –
(கீழே தேவனாகவே அவதாரம் )
கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்
ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்

சென்று
இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற -என்று ஒரு செல்லுகை உண்டு இறே –
அவ்விடம் அழகால் நெஞ்சு உருக்கலாம் இறே
அழகுக்கு இலக்காகாத தீ மனத்து அரக்கரை
அம்புக்கு இலக்காக்கின பராபிபவன சாமர்த்யத்துக்கு பரிகிறார்கள்

சென்று அங்குத்
அங்கே சென்று –
நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –
கொடிய காட்டிலே
பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள்
எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )

சென்று அங்கு
புலி கிடந்த தூற்றிலே சென்று தட்டி எழுப்பிக் கொல்லுவாரைப் போலே
லங்கைக்கு அரணாக வைத்த கர தூஷண கபந்த விரரதாதிகள்
ஜல துர்க்கமாக வைத்த கடல் காடுகள் மலைகள் தொடக்கமானவை எல்லாம்
நடவா நிற்கச் செய்தே
மணல் கொட்டகம் போலே
கால் கீழே அழித்துக் கொண்டு நடந்த படியை நினைத்து –
அங்கு சென்று -என்கிறார்கள்

தென்னிலங்கை செற்றாய்
எல்லாவற்றிலும் ஊர் அரண் விஞ்சின படியால்
இலங்கை செற்றவனே-என்கிறது –

திறல்
அரண்கள் ஒன்றும் வேண்டாத படி எத்தனையேனும் தரமுடைய தேவ ஜாதி
தம்தாமுடைய வருத்தங்களாலே சாதித்த அஸ்திரங்களை எல்லாம்
ஒரு மிடறாக நின்று ஒருக்காலே ஓர் இலக்காக விட்டால்
அவர்களுக்கு தப்ப ஒண்ணாது என்று விட
நாலடி பிற்காலித்து விடாதே
நெஞ்சு கலங்காதே
நிலையும் பேராதே
மஹிஷிகளும் தானும் கூட ஜலக்ரீடை பண்ணும் போது
அவர்கள் பூவை இட்டு தன் மேல் எறிந்தால் பிறக்கும் விகாரம் பிறவாதபடி இருக்குமவன்
நான் கடவேன் என்று நோக்குமவனூராய்-
அழகிதான அரணை யுடைத்தாய் குளவிக் கூடு கொண்டால் போலே
ஹிம்ஸிகர் அடையத் திரண்ட நிலமாய் இருந்த லங்கையை

அரண் சிதற அடை மதிள் படுத்தி
சதுரங்க பலத்தையும் துவள வென்று –
சேனைத் தொகையைச் சாடி (பெரிய திருமொழி -6-5)
ப்ராத்ரு புத்ராதிகளை தலை அழித்து
தான் சிலரை ஆஸ்ரயித்து கதிர் பெறுக்கி (பொருக்கி) கூடினவை அல்லாத அம்புகளைக் கொண்டு
இடி ஏறு உண்டிடச் சுற்றும் வேமா போலே
பையலைப் பக்க வேர் அறுத்து
நெஞ்சு அழிந்து
நிலை தள்ளும்படி பண்ணி
சத்தை அழிந்து
பட்டு விழும் போதும்
வில் பிடித்த பிடி நெகிழாதே விழக் கடவ அவனை

எதிரி வீரம் அறியாதே கோழையாய்ப பட்டான் என்று தரக் கேடான் ஆகாதே
வீரன் என்று விருது பிடிக்கும் படி வில்லைப் பொகடுவித்து
(சசால சாபஞ்ச விமோச வீர -வில்லை க்கைவிட்ட வீரன் )
ஸ்த்ரீ பிராயனாக்கிக் கொன்று வென்றி கொண்ட
பராபி பவன சாமர்த்தியத்தை எல்லாம் நினைத்து –
திறல் -என்கிறார்கள் –

திறல் போற்றி
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே -என்று
இம் மிடுக்கு தங்கள் துக்க நிவ்ருத்திக்கு உடல் இன்றிக்கே
அரணுக்கு அரண் இடுவாரைப் போலே திறலுக்குப் பரிகிறார்கள் –
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு-என்று பரியுமது ஜென்ம சித்தம் இறே –

உலகு அளந்த பொன்னடிக்கு காப்பிட்டவோபாதி
காடுறைந்த பொன்னடிக்கு காப்பிடத் தேடுகிறவர்களுக்கு
அஞ்சாமைக்கு திறலைக் காட்டினான்

அத் திறல் தனக்கு
அஞ்சத் தொடங்கினார்கள் –
தோளில் அழகுக்கு காப்பிடப் புக
மல்லடர்த்த திண்மையைக் காட்ட
அது தனக்கு வயிறு எரிந்தால் போலே
(மல்லாண்ட திண் தோள் காட்ட அதுக்கும் பல்லாண்டு பாடினார் அன்றோ )

திறல் போற்றி
கல்லாதவர் இலங்கை கட்டழித்த–(நான்முகன் )
தேவனே தேவன் ஆவான் (திருமாலை )-என்று
மண்டோதரி உள்ளிட்டாரைப் போலே தத்வ நிர்ணயம் பண்ணுதல் –

தன் வில் அங்கை வைத்தான் -(முதல் -59)
என் தன் தனிச் சரண் -3-10-
கூர் அம்பன் அல்லால் –(நான்முகன் )
மற்றிலேன் தஞ்சமாகவே (2-6 )-என்று ரக்ஷகத்வ புத்தி நடத்தல் –

தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு –(11-3)
என்னையும் உளள் என்மின்களே– -என்று
போக்யதா புத்தி நடையாடி இழவு சொல்லி விடுதல் செய்யாதே
தங்கள் ரக்ஷகராக பரிவார்கள்

சக்கரவர்த்தி திருமகன் தசரதனிலும் விஞ்சும் படி
பால்ய அவஸ்தையில் ஆயுத சிரமம் பண்ணி –
விச்வாமித்திராதிகளோடே சஸ்த்ர அஸ்திர மந்த்ரங்கள் சிஷித்து
சமைய வளர்ந்த பின்பு செய்த செயல் இறே
லங்கையை அழியச் செய்த செயல் –

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்காகாதவரை அன்புக்கு இலக்கு ஆக்கின படி
கீழ் நமுசி பிரக்ருதிகள் இறே இருந்தது -பிராட்டியைப் பிரித்த ராவணன் இருந்த இடத்தே நடந்து கொல்லுவதே-

கொடுமையில் கடு விசை அரக்கன் –
கால் நடை நடப்பித்த கைகேயியை நோக்கினார்கள்
புலி இருந்த தூற்றிலே சென்று கொல்லுமா போலே
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்று-திருநெடும் தாண்டகம் -28-
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு -என்றவர் மகள் இறே

சென்று
வழிப் போக்கில் கர கபந்தம் விராதன் அடைய மணல் கொட்டகம் இடருமா போல் இடறிக்கொண்டு போய்
தேர் ஒழிந்து மா ஒழிந்து களிறு ஒழிந்து –
ராவணனை கால் நடையாக நின்று பொருவதே

திறல் போற்றி
என்ன குடிப்பிறப்பு -மங்களா ஸாஸன -பொங்கும் பரிவு -நித்யம் -காதாசித்கம் அல்லவே
இன்றும் அரையர் கைத்தலைச்சேவை நித்யம் பல்லாண்டு
அஸ்தானே பய சங்கை -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுகை –
மதிளுக்கு மதிள் இடுகிறார்கள்
திறல் -இதுக்கும் போற்றி –

ஐந்து குடிக்கு ஒரு சந்ததி அன்றோ
இலங்கை ஆள் பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு என்றவர் மக்கள் இறே-தென் இலங்கை -ஆரியர் இகழ்ந்த தேசம்

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான
அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

————-

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
ராவணனைப் போலே -விரோதி என்று –இறாய்க்க ஒண்ணாத அபாயம்-

பொன்ற
மாரீசனைப் போலே குற்று உயிர் ஆக்கி மேல்
அநர்த்தம் விளைக்க வையாதே -முடிக்கப் பெற்ற படி –

புகழ் போற்றி –
தாயும் கூட உதவாத தசையிலே
அனாயாசேன திருவடிகளாலே சகடாசுரனை அழித்த புகழ் –

போற்றி –
ராமாவதாரத்தில் காட்டில் மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை –
ராமாவதாரத்துக்கு
பிதா -சம்பராந்தகன் –
ஊர் -திரு அயோத்யை
புரோஹிதர் -மந்த்ரவாதிகளான வசிஷ்டாதிகள் –
பிள்ளைகள் -ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள் –
குணவான்களும் பிள்ளைகள் –

பிறந்த ஏழு திங்களில் என்கிறபடியே
பிறந்து
மறு பத்துக் கழிந்த அளவிலே
எதிரிகள் உண்டு என்று அறிகைக்கு உடலான ஞானமும் இன்றிக்கே
ஆயுதமும் பிடிக்கவும் அறியாத தொட்டில் பருவத்திலே செய்த செயல் இறே
சகட பங்கம் –

ராவணன் நேரே சத்ருவாய் தோற்றான் இறே
அப்படி அன்றிக்கே
பிரசன்ன (மறைந்த) சத்ரு வாகையாலே –
கள்ளச் சகடம் என்றத்தை
அறிந்து முற்பட்ட படிக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள்

பொன்றச் சகடம் உதைத்தாய்
சகடம் பொன்ற –
முடிய –
சூர்ப்பணகையும் மாரீசனையும் போலே குற்றுயிரோடே விட்ட பின்பு
அனர்த்தம் விளையும் படி இளிம்பு படாதே
தோற்ற அரவிலே சகடாசூரனை முடித்து விட்ட படி

உதைத்தாய்-
முலை வரவு தாழ்த்து தொட்டிலை உதைத்த திருவடிகளுக்கு
இலக்காய் முடியும் படி பண்ணின அனாயாசம்

உதைத்தாய்-
பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே
கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு –
தழும்பு இருந்த -இத்யாதி-

தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள் சகடம் சாடி, – தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.

புகழ்-
பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை
கால் கூறாக்கி விட்ட படி –
திருக் காலாண்ட பெருமானே -என்கிறபடியே

புகழ் போற்றி-
நின் சிறுச் சேவகமும் (திருவாய் 5-10 )-என்று
காரை மூரிருகிக் (மூரி திருகினக்) கன்னிப் போருக்கு காப்பிட வேணும் இறே –

அருளின் பெரு நசையால் -என்று ஆண் பிள்ளை என்று ஆசைப்படுவர்
என்னை நிறை கொண்டான் (திருவாய் 5-3 )-என்று அடக்கம் கெட்டு மடல் எடுக்கத் தேடுவர் –
உறக்கில் நிமிர்த்தீர் (பெரிய திருமொழி 10-8 )-என்று ஊடுதலாய்ப் போனார்கள் பெண்கள்
இவர்கள் செயலுக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள் –

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
ஒருத்தரோடும் விசாரியாதே முடித்த படி-ராவணனைப் போல் -நினையாமல்
அங்கு பருவம் மிக்கு -38 திரு நக்ஷத்ரம் லீலா ரசம் -விளையாட்டாக
இங்கு கண்ணன் விளையாட -சண்டையாகி விட்டது –
லீலையில் நுழையும் பருவம் அன்றே
மாரீசனைப் போலே குற்றுயிராக்கி மேலே அனர்த்தத்தை விளைக்க வையாதே முடித்த படி

(பங்குனி ரோகிணி -பிறந்த ஏழு திங்களில் -மாச திரு நக்ஷத்ரம் -உதைத்ததும் மொத்தமாக முடித்த படி )

புகழ் போற்றி(தாய் ரஷிக்காத திசையிலும் திருவடி அவனை ரக்ஷித்ததே புகழ்)
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்த பூண்டு அகப்பட ராக்ஷஸராகை

(எழும் புல் பூண்டு எல்லாம் அசுராவேசம் அன்றோ இங்கு
செடி கொடிகள் ராமனை பிரிந்து அழும் -கண்டு அகால காலத்திலும் பூக்குமே அங்கு
மங்களா சாஸனம் காவல் -கதே ஜலம் சேது பந்தனம் )

புகழ் போற்றி
ராமாவதாரத்தில் பிதா தசரதன் -சம்பராந்தகன் -அயோத்தி ஊர்-அபராஜிதா வெல்ல முடியாதது – -தம்பிமார் கல் மதிள்
மந்திரவாதிகள் வசிஷ்டாதிகள் -அஷ்ட -மந்திரவாதிகள் த்ரஷ்டா ரிஷி -கண்டு கொண்டு கொடுத்தவர்கள்
சுமந்த்ராதிகள் மந்திரிகள் -நாடு அடைய காவல் -இச்சா மஹா என்னும் படி கிழவன் ஓடு -குணம் உடையவன் அஞ்ச வேண்டாம்
இங்கு -மாதா பிதாக்கள் இடையர்கள் -சாது -இடைச்சேரி ஊர் -புத்தி சொல்லும் மந்திரிகளும் இடையர் -சம்சாரிகள்
கறவை மாடு வழி காட்டப் போகுமவர்கள் –
கம்சாதிகள் எதிரிகள் -பிருந்தாவனத்தில் எழுந்த பூண்டுகள் அனைத்தும் அஸூரா வேஷ ராக்ஷசர்கள்
நம்பி மூத்த பிரான் -தமையன் தீர்த்த யாத்திரை போனார்
ஒரு க்ஷணம் கூட இல்லா அன்று பாம்பின் வாயில் விழுவான் -காளிய -வாயில் விழும் தீம்பால்
பூதநாதிகள் -வந்த அபாயம் இருக்க மங்களா சாசனம் ஒன்றே காவல்
தாயும் உதவாத தசையில் திருவடி உதவினதே புகழ் ஆவது

செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் -பிறந்தவாறும் பதிகம்
காலை நிமிர்த்த கன்னிப் போர் என்பதால் பல்லாண்டு பாடுகிறார்-கன்னி சேஷ்டித்ததுக்கு பல்லாண்டு பாடுகிறார்கள் –

பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்டபிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின்சிறுச் சேவகமும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –
உன்னுடைய யசஸ் ஸுக்கு பல்லாண்டு –

——————

இங்கு
மாதாபிதாக்கள் -சாது இடையர்
ஊர் இடைச்சேரி
கம்சாதிகள் எதிரிகள்
ஸ்ரீ பிருந்தாவனத்திலே முளைத்து எழும் பூண்டுகள் அடைய ராஷசர்கள்
தமையன் ஒரு ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன் –
பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஒரு அவதி இல்லை
ஆன பின்பு இனி மங்களா சாசனம் ஒழிய காவல் இல்லை –

கன்று -இத்யாதி –
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால்
சங்கேதித்து வந்து இருவரும் இருவரும் ஒக்க மேல் விழுந்தார்கள் ஆகில் என் செய்யக் கடவோம்-
என்று வயிறு பிடிக்கிறார்கள் –
குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
கன்று குணிலா –
கன்றை எறிதடியாக
குணில் -எறிதடி
கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே கழல் போற்றி என்கிறார்கள் –

பசலைத் தனத்தில் செய்த செயல் என்று விடலாம் அது –
பருவம் நிரம்பி செய்த செயலோ தான்
கணக்கு வழக்கு பட்டு இருக்கிறது என்று அதுக்கு வயிறு எரிகிறார்கள்
கன்று குணிலா வெறிந்தாய் –
சகடாசூர நிராசனம் பண்ணின வயிறு எரிதல் அல்ல கிடாய் –
கன்றாய் நின்ற அசுரனை கொன்ற தீம்பு பூமி எல்லாம்
பிரகாசிக்கும் படி செய்தாய் என்று வயிறு எறியும் செயல் இறே

வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி

மார்பில் இருக்கிறவர்களோடு (திருமாலே விளங்க)
மண்ணில் கிடக்கிறவர்களோடு (பார் விளங்க)
வாசியற
பழி கேடன் என்று சொல்லும் படி இறே

செய்த தீம்பும் (பெரிய திருமொழி 8-6 )-சகடாசூர பங்கம் பண்ணிச் செய்த தீம்பு –
திரி கால் சகடம் சினம் அழித்து கன்றால் விளங்காய் எறிந்தான் –

ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க
மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்

என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்கள் -என்று
தாயார் உட்பட வயிறு பிடிக்குமது இறே

குணில் -எறி கருவி
குணிலா எறிந்தாய்-
எதிரிகளை இட்டு எதிரிகளை முடித்த படி

கழல் போற்றி
விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக்
குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்

கழல் போற்றி
கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் –
காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல்
கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

அடி போற்றி -கழல் போற்றி
நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்

கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
சத்ருவை இட்டு சத்ருவை நிரசித்தால் அவர்கள் இருவரும் சங்கேதித்தால் என் செய்வோம்
தெய்வாதீனம் -எந்த தெய்வம் –

அடி போற்றி -கீழ்-மேல் உள்ள கறுத்த கழல் போற்றி -குஞ்சித பாதம் -உள் சிவந்த திருவடி
குணிலா –எறி தடி

கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-
லோபத்தை எறிதடியாக எறிந்து நசிப்பித்தவனே –
உன்னுடைய குஞ்சிதமான திருவடிகளுக்கு பல்லாண்டு –
இவ்வளவில் பிரதிகூலர் விஷயத்தில் செய்யும் அம்சத்தைச் சொல்லிற்று –
இனி அனுகூலர் பிரதி கூலித்தால் செய்யும் அம்சத்தைச் சொல்லுகிறது –

————

குன்று இத்யாதி –
இதுக்கு முன்பு இந்தரனுக்காக செய்த செயல் –
இப்போது அவன் தான் பகையானபடி –
மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தைப் போக்கின்படி –
அனுகூலன் பிரதி கூலித்தால் செய்யலாவது இல்லை இ றே-

குணம் போற்றி –

பசிக்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க
மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

விரோதி நிரசனம் பண்ணித் தன்னை நோக்குகைக்கு அடைவு கெட்டு இருந்தால்
அனுகூலர் விரோதிகளாக ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுமதோ சால அடைவுண்டாய் இருக்கிறது
என்று அதுக்குப் பரிகிறார்கள்
(விஷ்ணு பக்தி உள்ளார் தேவர் -அனுகூலர் )

குன்று குடையா வெடுத்தாய்
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று
மா மழை நின்று காத்து உகந்தான் (பெரிய திருமொழி -9-10-)-என்னக் கடவது இறே

கீழ் எல்லாம் இந்திரனுக்கு சத்ருவானவர்கள் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிந்தார்கள்-
இப்போது அவன் தான் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிகிறார்கள் –

அசூரர்களோடு தேவர்களோடு வாசி இல்லை இறே
பகவத் சேஷமான வஸ்துவை தங்களதாக நினைத்து இருக்கைக்கு –

சர்வ யஞ்ஞ போக்தாவாக தன்னை அருளிச் செய்தானே
(சர்வ யஞ்ஞ போக்தா ச பிரபுரேவ ச கீதை )
தனக்கு இட்ட சோற்றை அமுது செய்தால் ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி பண்டு புஜித்த இடம் உள்பட
ஆத்ம அபஹாரத்தோடு ஒவ்வா நிற்க
ததீய புத்தி பண்ணாதே ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி நலியத் தேட
மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை பரிஹரித்த படி

குணம்
அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ –
அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் –

பெரும் பசியால் வந்த கோபத்தால் வர்ஷித்தான் ஆகில்
கை நொந்தவாறே விடுகிறான் –

பெரும் பசியாலே இவனை நலிந்தால்
நாமே யுண்பது கொண்டார் உயிர் கொண்டு தலையை அறுக்கவோ

அவன் கை சலிக்கும் தனையும் கடக்கிட்டுக் காப்போம் என்று
அவனை தலை அழியாதே
மலையை எடுத்து ரஷித்தது ஆன்ரு சம்சயத்தாலே –
அந்த குணத்துக்குப் போற்றி –

(கடக்கிட்டுக் காப்போம்-கையாலே குடை பிடித்து
நமது கை கொண்டு கார்யம் செய்யும் தனையும் ரக்ஷிக்காமல்
அஞ்சலி செய்யவே ரக்ஷிப்பானே )

பாயும் பனி மறுத்த பண்பாளா –
சீர் கற்பன் வைகல் -என்று
அறிவுடையார் நாள் தோறும் கற்பதொரு குணம் இறே
(பண்பு சீர் அங்கு குணம் இங்கு )

குணம் போற்றி
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலம் அழிந்ததோ வாடிற்றோ(3-5 ) என்று பார்த்துப்
பரியத் தேட
அவ்வளவு போக ஒட்டிற்று இல்லை மழை எடுத்த குணம் தான்

(அடி போற்றி கழல் போற்றி அங்கு பரிந்தது போல்
விரல் போற்றி இல்லையே –
குணம் தடுத்து பாடப் பண்ணிற்று )

குணம் போற்றி
என் தனக்கொரு துணையாளான் ஆகாயே-என்று
நொய்ய தொரு மலையைப் பொகடுவித்து (தூக்காமல் இருந்தாய் ஆகில் )
கனவிது இரண்டு மலையைக் கையிலே கொடாதே (பொன் முலைகள் பொன் அரும்ப )
மலையை எடுத்த ஷமா குணத்துக்குக் காப்பிடுகிறார்கள் –

(வாளாய கண் பணிப்ப–பொன் முலைகள் பொன் அரும்ப –நின் நினைந்து நைவேற்கு –
ஓ மண் அளந்த எடுத்த தாளாளா -வரை எடுத்த தோளாளா
அளந்து எடுத்து காட்ட வேண்டா -தாள் தோள் காற்றா அமையும் தோடு இட்ட காது எடுத்தாலும் தெரியுமே
என் தனக்கு ஓர் துணையாளன் ஆகாதே
துணையாளன் ஆனமை காட்டிய குணம் )

வர்ஷம் விட்டவாறே மலையைப் பொகட்டு வேலை பிடிக்கும் அத்தனை இறே –
கிருஷ்ணன் பசுக்களின் பின்னே திரியா நின்றால்
ஸிம்ஹம் வந்தாலும் வேலாலே குத்தி எடுத்துப் போக்கும் அத்தனை இறே –
அதுக்கு எடுத்த வேலுக்கு பரிகிறார்கள்

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
கீழ் நாலும் வியக்த விரோதிகள்-(இந்திரனுக்கு விரோதிகள்-மகாபலி இடம் மீட்டதும் ராவணன் இந்திரஜித் அழித்ததும் )
இங்கு அனுகூலம் –
இப்போது இந்திரனும் பகையானபடி
அனுகூலர் பிரதிகூலமானால் தலை அறுக்க ஒண்ணாதே
ஆன்ரு சம்சயத்தால் மலை எடுத்தது –
ஆந்ரு சம்சய குணத்துக்குப் பல்லாண்டு

பெரும் பசியால் அவனை நலிந்தோம்- கை நொந்து போகும் வரையில் வர்ஷிக்கிறான் –
ஆன்ரு சம்சய குணத்துக்கு மங்களா ஸாஸனம்
சபலைக் குழந்தை தன்னைக் கிள்ளப் புக்கால்-கை நொந்தால் விடும் என்று உடம்பைக் கொடுத்து இருக்கும் தாய் போல்

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது
பர்வதத்தை குடையாக கொண்டு
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்–இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு-பிரதி கிரியையாக வைதிகமாய் கைங்கர்ய ரூபமான–விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி–ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே–உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –
அனுகூலர்-அனந்தரம் கோவிந்த அபிஷேகம்-பெரும் பசியால்-உண்பது கொண்டால் உயிர் கொண்டு தலை அறுக்கவோ
கை சலிக்கும் வரையில் தடுப்போம்-தலை அழிக்காதே புகழ்-சபலை குழந்தைக்கு முதுகைக் கொடுக்கும் மாதா போலே
இன்று வந்த ஆயர் –மது சூதனன் எடுத்த-கருணை குணம் போற்றி –பனி மறுத்த பண்பாளா
கோலம் அழியாமல் வாடாமல்-கைக்கு மங்களா சாசனம்-நின்ற திருவடிக்கு-என்தனக்கு குன்று எடுத்த மலையாளா –ஷமை குணம்

—————-

வென்று பகை கெடுக்கும் இத்யாதி –
இவன் பக்கல் பரிவாலே -இவன் மிடுக்கைக் கண்டு கண் எச்சில் படுவார் என்று பயப்பட்டு
அத்தை விட்டு -இவ் வேல் அன்றோ இவ் வியாபாரம் எல்லாம் பண்ணிற்று -என்கிறார்கள் –
மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் -என்று இறே இவர்கள் படி –
சக்கரவர்த்தி வில் பிடிக்க பெருமாளும் வில் பிடித்தால் போலே
கூர் வேல் கொடும் தொழிலன் -என்னுமவர் மகன் ஆகையாலே
வேலே ஆயுதம் –

வென்று பகை கெடுக்கும் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை அறச் செய்து மாயக்கை –

நின் கையில் வேல் போற்றி –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க
அதுக்கு மேலே வேலைப் பிடிப்பதே -என்று
திரு வேல் பிடித்த திருக் கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இறே தமப்பனாரும்-
தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –
என்று சீயர் அருளிச் செய்வர் –

எல்லா குணங்களையும் ஒரு வியக்தியில் சொன்னால் கண் ஏறாம் என்று
வேலிலே அசலிட்டுச் சொல்கிறார்கள் வெற்றியை –

வென்று பகை கெடுக்கும்
சத்ருக்களை வென்று ஓட்டக் கடவதாய் இருக்கும்

நின் கையில் வேல் போற்றி
சக்கரவர்த்தியும் வில் பிடித்து
பரிகரமும் வில் பிடித்து
பிள்ளைகளும் வில் பிடித்தால் போலே
ஸ்ரீ நந்த கோபரும்
இடையரும்
பிள்ளைகளும் வேல் பிடித்தாய்த்து திரிவது –
கூர் வேல் கொடும் தொழிலன் –
வேலைப் பிடித்து என்னைமார்கள் (நாச்சியார் )

நின் கையில் வேல்
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க
அவ் வழகுக்கு மேலே வேலைப் பிடித்த அழகு

கையில் வேல்
எதிரிகள் மேல் பட வேண்டா —
பிடித்த பிடியில் யுகவாதாரை முடிக்கும்

நின் கையில் வேல்
தன்னை உணராதே அசத்திய ப்ரதிஞ்ஞனாய் சீறின போது காணும்
ஜன்மாந்தரம் மேல் இட்டு திரு வாழியை எடுப்பது –

(வேல் எப்போதும் கையில் உண்டு –
திருவாழி எப்போதாவாது எடுப்பார் -இந்த அவதாரத்தில் )

வேல் போற்றி
ஈஸ்வரனைக் காணில் இறே ஆழியும் பல்லாண்டு என்பது
பெருமாளைக் காணில் இறே சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை பல்லாண்டு என்பது

நின் கையில் வேல் போற்றி
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலாக வென்றவன் கையில் வேல் இறே -(திரு நெடும் தாண்டகம் -7)
ஆகையால் பரிகிறார்கள்

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
ஒரு வியக்தியிலே எல்லா அபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே கூர் வேல் கொடும் தொழிலன் மகன் இறே –
பசுக்களின் பின் பேச திரியா நின்றால் ஸிம்ஹம் வாரா நின்றாலும் வேலாலே குத்திப் பொகட்டுப் போம் அத்தனை

(வேள் முதலா வென்றானூர் -திரு நெடும் தாண்டகம்)

நின் கையில் வேல் போற்றி
வெறும் புறமே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்க அவ்வழகுக்கு மேல் வில்லைப் பிடித்த அழகு

வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இ றே தமப்பனாரும்—தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –
என்று சீயர் அருளிச் செய்வர் –
அஹங்காரத்தை ஜெயித்து–தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்–நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –

———–

என்று என்று –
இது தானே பிரயோஜனம் என்கை –
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளுவார்கள் –
இவர்கள் புறம்பும் கொள்ளார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளார்கள்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று
அவனுக்கும் தான் கொடுத்து
ஆந்தனையும் கை காட்டி -என்று புறம்பும் தானே கொடுக்கும் என்கை –

என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேணுமோ -என்று
இது தானே பலமாக இருக்குமவர்கள் இறே –

என்று என்று
பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இறே –
போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இறே
இச் சொல்லு மாறுவது –

அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இறே –
வெம்மா பிளந்தான் தன்னை போற்றி (திருவாய் 4-5-வீற்று இருந்து ) என்னக் கடவது இறே –

அடி போற்றி –
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி –
குணம் போற்றி –
வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –

என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை
தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று -இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவர்கள் -அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள்
இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் —
ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை-
(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ )

(அம்பரீஷன் இடம் பெருமாளே இந்திர வேஷம் கொண்டு வந்த வ்ருத்தாந்தம்)

என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய
வீர சரிதத்தையே ஏத்தி
புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று
உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்
வந்தோம்
நீ கிருபை செய்து அருள வேணும் –

ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்
யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்
யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –

—————

உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –
உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
என்னுமவர்கள் இறே –

உன் சேவகமே
வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது –
பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இறே பல ஹேது

என்று என்றும் உன் சேவகமே
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே

உன் சேவகமே ஏத்திப்
வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-
திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று
அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் –
இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்

சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் –
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று
தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இறே

இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -(திருவோணத்தான் உலகு ஆளும் என்பர்களே )
எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் –
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றாள்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-

இவர்கள் ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -(திருப்பாவை -3)
சார்ங்கம் உதைத்த (திருப்பாவை -4)என்கிறார்கள் –
அனந்தரம்
ஆயர் குலத்தினில் தோன்றும் (திருப்பாவை 5 ) என்றார்கள் –
போற்றப் பறை தரும் புண்ணியன் (திருப்பாவை )என்றார்கள்
எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே (திருப்பாவை )-என்றார்கள் –

அவன் தான் பிறந்த போதே மூன்று பிறவி யுண்டே –
உங்களுக்கு பிறக்கிறது என் என்றான்
வில் பிடித்தாரில் சக்கரவர்த்தி பிள்ளை நான் என்றான் -(கீதை -10 )
ஆகையால் அவதாராந்தரம் என்று இருப்பார் ஒருவரும் இல்லை

ஏத்திப் பறை கொள்வான்
எங்கள் பலம் முன்னாக –(ஏத்துதலே எங்கள் பலம் )
நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-
பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி –
உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்

உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்
வழி எழுதிக் கொண்டேன் -என்னுமவர் மகள் இறே(போகத்தில் வழுவாத புதுவையர் கோன் )

————-

இன்று –
இசைவு பிறந்த இன்று -என்னுதல்-
நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்
நென்நேற்று வந்தோமோ –
ஊராக இசைந்த இன்று -என்றுமாம் –

யாம் –
பந்துக்களாலே நெடும் காலம் நலிவு பட்ட நாங்கள் –

வந்தோம் –
வ்ருத்தைகள் உறங்க -நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம்
எங்கள் இழவுகள் எல்லாம் உன்னாலே தீரும் –

யாம் வந்தோம் –
எங்கள் வரவு உனக்கு புண்ணாய் இருக்க
நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம் –

இரங்கு –
எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை –
அத்தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் –
அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத்தலைக்கு ஸ்வரூபம்
தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-

இன்று
இசைவு பிறந்த இன்று –
நென்னேற்று வந்தோமோ –
நாளைக்கு இங்கே நிற்க ஓட்டுவார்களோ –

யாம்
பெரு மிடுக்கரான வ்ருத்தைகள் எல்லாம் கிடந்து உறங்க
குளிர் பொறாத பாலைகளான நாங்கள்

வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க
விரஹ துர்பலயத்தாலே ஆற்றாமை இழுக்க வந்தோம்

யாம் வந்தோம்
நாங்களும் எங்களை அறியாமல் செய்தோம் –
நீயும் உன்னை அறியாமல் செய்வது உண்டாய்த்து இறே

இரங்கேலோ ரெம்பாவாய்
எல்லா வியசனங்களையும் பட்டாலும் கீழ் பிரவர்தித்தித்தது எல்லாம் பேற்றுக்கு உடல் அன்று –
அவன் இரக்கமே கார்ய கரமாவது
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்கி மங்களா சாசனம் பண்ணுகை இவர்களுக்கு ஸ்வரூபம் –
இத் தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்

வந்தோம் இரங்கு
இரங்காமைக்கு வேண்டுவது செய்தோமே யாகிலும் இரங்க வேணும் –
இத் தலையில் பர பக்தியும் பேற்றுக்கு உடல் அன்று
அவனுடைய இரக்கமே அவ்யவஹித உபாயம் என்று இருக்கிறார்கள் –

அன்று இவ்வுலகம் அளந்தாய் -இன்று யாம் வந்தோம்
நீ எங்களைத் தேடி எல்லா உலகும் தட வந்தாய் -அன்று –
இன்று உன்னைத் தேடி நாங்கள் வந்தோம் –

யாம் வந்தோம் –
வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து நீ நிற்க நாங்கள் பெற்றோம் -(திருவாய் 8-5 )

அளந்தாய் –
தென்னிலங்கை செற்றாய் –
சகடம் உதைத்தாய்-
யாம் வந்தோம்

மண் அளந்த கண் பெரிய செவ்வாய் என் கார் ஏறு வாரானால் -(திருவாய் -5-4 )
காகுத்தன் வாரானால் -கண்ணனும் வாரானால் -என்று
இருந்த உன்னுடைய பிரதான மஹிஷிகளில் (பராங்குச நாயகி )
எங்களுக்கு உண்டான வாசி பாராய்

அன்று இவ்வுலகம் அளந்தாய் இரங்கு
உவந்த உள்ளத்தனாய் எங்களோடு அணைந்திலை யாகிலும்
சத்தா ப்ரயுக்தமான கிருபையை யாகிலும் பண்ணு

அளந்தாய் -இரங்கு
நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே என்று அன்றோ நாங்கள் இருப்பது

தென்னிலங்கை செற்றாய் –இரங்கு
சிறிது தாழ்க்கில் இரக்கம் எழீர்-என்று உன்னை வசை பாடுவார்கள் கிடாய் என்று
தாய்கள் சொல்லும் அளவேயோ (ஆழி எழ தாயார் பதிகம் )
இரக்கம் ஒன்றும் இலாதாய் (நாச்சியார் )-என்று நாங்கள் தான் சொல்லோமோ

சகடமுதைத்தாய் -இரங்கு
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் அன்றோ நாங்கள் வந்தது -(திருவாய் 2-1 )

குன்று குடையாய் எடுத்தாய் –இரங்கு
குன்று குடையாக ஆ காத்த கோவலனார் ஒன்றும் இரங்கார் என்னாம் இரங்கு -(பெரிய திருவந்தாதி )

இன்று
இசைவு பிறந்த இன்று
நீ உறங்க நாங்கள் உறங்காதே இருந்த இன்று
வ்ருத்தைகள் உறங்க நாங்கள் வந்தோம்
நென்னேற்று வந்தோமோ -ஊரார் இசைந்த இன்று வந்தோம் -என்றுமாம் –

யாம்
பந்துக்களாலே நெடும் காலம் நலிவு பட்ட நாங்கள்

யாம் வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க எங்கள் ஆற்றாமையால் வந்தோம் என்றுமாம்

வந்தோம்
எங்கள் ஆற்றாமையால் வந்த இழவு எல்லாம் தீர வந்தோம்

இரங்கேலோ ரெம்பாவாய்-
எல்லாம் பட்டு வந்தாலும் அவன் இரங்கி அல்லது கார்யமாகாது
வ்யபிசாரம் இல்லாத உபாயம் இதுவே என்கை

இரங்கு
இது ஒன்றே பேறு கொடுக்கும்–என் வருகிறதோ மங்களா சாசனம் செய்தது ஸ்வரூபம்
இத்தலைக்கு இரங்குகை அவன் ஸ்வரூபம்-இரங்காமைக்கு பல செய்தாலும் நீ இரங்க வேண்டும்
போற்றி என்றோம்–வந்தோம்–சு பிரவ்ருத்தி பகவத் பிரவ்ருத்தி க்கு விரோதி–பர பக்தி யாதிகள் பேற்றுக்கு உபாயம் இல்லை
அன்று நீ தேடி–வையம் தாவி நீ–காரேறு வாரானால்–கண்ணானு ம் வாரானால்–பிரதான மகிஷி போலே இல்லை
நாங்கள் வந்தோம் வேறுபாடு பாராய்–சத்தா பிரயுக்தமான கிருபை யாவது  செய்து அருள்
அளந்தாய் இரங்கு–நீரேற்ற பிரான் அருளாது போமோ–வசை பாடுவார் படி–இலங்கை அழித்த பிரான் —
இரங்கு ஓன்று ஒன்றுக்கும் அன்வயித்து வியாக்யானம்
குன்று கொடையாக -ஒன்றும் இரங்காதார் உருக்காட்டார் -பாசுரங்கள் கொண்டே வியாக்யானம் –

இத் தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்குகை இத் தலைக்கு ஸ்வரூபம் –

நீ கிருபை செய்து அருள வேணும் –ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்-யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்-யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –இரங்கு -என்று-கிருபையே சாதனம் என்கையாலே-வந்தோம் -என்றுm ருசி காரித்தைச் சொல்லுகிறது –

யாம் வந்தோம் இரங்கு–பரகத ச்வீகாரமே ஸ்வரூபம்–ஸ்வகத ச்வீகாரம் ஸ்வரூப விருத்தம்-என்று துணிந்து இருக்கும் நாங்கள்
ஆற்றாமை மிக்கு வந்தோம்–பொறுத்து அருள்

————————————————————

சரணாகதிக்கு ஐந்து அங்கங்கள் -ஓரு அங்கி – கார்ப்பண்ய அனுசந்தானம் – கை முதல் இல்லாமை பிராதி கூல்ய வர்ஜனம் – அனுகூல்ய சங்கல்பம் – மஹாவிஸ்வாசம் – கோப்த்ருத்வ வரணம்- அங்கி சரணாகதி தானே ஆகும்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் என்கிற ஆறு குணங்களும் ஆகவுமாம் —
பாஞ்ச ராத்ரம் -லஷ்மி தந்திரம் -அஹிர்புத்ய சம்ஹிதை திரு வாராதனம் -ஆறு ஆசனங்கள் சொல்லும்
இதனாலேயே ஆறு போற்றி -என்றும் சொல்வர்-

இரக்க மாலை–சாற்றி அருளுகிறாள்
இன்று யாம் வந்தோம் இரங்கு
நாப்படைத்த பிரயோஜனம் பிரார்த்தனை
நிர்ஹேதுக கிருபை
அடியேன் இடரைக் களையாயே
நெடியாய் அடியேன் இடரை நீக்கி
அடியேற்கு ஒரு நாள் இரங்காயே
தாமரைக் கண்களால் நோக்காய்
இவன் அர்த்திக்க வேண்டுமோ -சர்வஞ்ஞன்இவன் நினைவு அறியானோ என்னில் இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் -முமுஷூப்படி -163-
அதுவும் அவனது இன்னருளே
ஆச்சார்யா பரமாக உபதேசித்து அருள வேணும் -என்றதாயிற்று
பரம போக்யமான பள்ளி கோளைப் பங்கப் படுத்தினோம் -இக்குற்றத்தை ஷமித்து அருள வேணும்
பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு நடக்கப் பண்ணினோமே -ஷமிக்க வேண்டும்
ரஷய்த்வ ஸ்வரூபத்துக்கு மாறாக பல்லாண்டு பாடினோமே ஷமிக்க வேண்டும்
இன்று யாம் வந்தோம்
இன்றி யாம் வந்தோம் கைம்முதல் இல்லாமல் வந்தோம் -என்றுமாம்
இரக்கத்துக்கு தண்ணீர் துரும்பாக ஒன்றும் இல்லை –

வேல் போற்றி திரிதண்டம்
சப்ததி-விஷ்வக் சேனோ எதிபதிர் ஆபூத் வேத்ரசாரஸ் த்ரிதண்ட -திருப்பிரம்பே த்ரிதண்டம் -உபய விபூதி நிர்வாக நிபுணம்
முக்கோலுக்கு மங்களா சாசனம்–தாடி பஞ்சகம் –

—————-

24. அஞ்சும் குடி :

அன்புடை ஆழ்வார்கள் போற்றி என ஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் — இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமை ஆண்டாளுக்கும் உண்டு.

பிறர் நன்பொருளான ஆத்மபகரம் திருட்டு. பொருள் சரீம். நன்பொருள் ஆத்மா. பிறர் நன் பொருள் பகவானுடைய சொத்தான ஆத்மா.
இந்திரனுடைய சொத்தான மூன்று லோகங்களை மஹாபலி தன் சொந்தமாக்கினான். அதை மீட்க அன்று
திருவிக்கிரமனாய் மூன்றடி மண் கேட்டு, இரண்டடியால் அளந்து கொண்டதோடு, மூன்றாவது அடியால்
துரபிமானகள் தலையில் கால் வைத்து அவர்களையும் தனதாக்கிக் கொண்டு
தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே என்று அபிமானம் களைந்தான்.

அடிபாடி என்று தொடங்கி, அடிபோற்றி என்று இடையில் இந்த பாசுரமும்,
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் என்று முடிவிலுமாய் ஆண்டாள் மங்களாசாசனம்.
அளந்து தன்னதாக்கிக் கொண்டதால் ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது. ஸ்வம் = சொத்து.
தளிர் புரையும் திருவடி தலை மேலவே என்றதால் சேஷித்வம் பிரகாசிக்கிறது.
உலகமளத்த பொன்னடியே அடந்துய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே என்றதால் சரண்யத்வம் பிரகாசிக்கிறது.
உழலை இன்ப பேய்ச்சி முலையூடவள் உயிருண்டவன் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட என்றும்
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாகி என்றும்
தன்னைத் தவிர்ந்த வேறு ஒன்றையும் சகியாத நிரபேட்சோபாயத்வம் சொல்லிற்று.
தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்று ஆர்த்தித்தவம் பிரகாசிக்கிறது.
தடந்தாமரை தாள் என்று சொல்லாமல் தடந்தாமரைகட்கே என்று உபமானத்தை சொல்லி
உபமேயத்தை சொல்லாமல் விட்டது முற்றுவமை என்கிற ஸ்வாரஸ்யம் இங்கு நோக்கத் தக்கது.

சதுமுகன் கையில் சதுப்புஜன் தாளில் சங்கரன் சாடையினில் தங்கி வருகிற – விஷ்ணு பாதோதகமாகிற
கங்கை கங்கை என்ற வாசகம் கொண்டு கடுவினை காளையலாமே –
கண்டமென்னும் கடிநகர்-தேவபிரயாகை பாசுரம் இதில் பாவனத்வம் பிரகாசிக்கிறது.
உன்வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து முகப்பே கூவிப் பணிகொள்ளாய் என்று பரிச்சர்யம் பிரார்த்திக்கிறது .
தாளால் அளந்த அசைவேகொல் ? பின்னும் தன்வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை – என்று சிரமிஸித திருவடிகளை ஆஸ்வாஸ படுத்த அலை அடிப்பதாக ஆழ்வார்.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூதாமம் சேர்த்து அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்ததொழிந்த பைந்துழாயான் பெருமை – என்று பரத்வ சூசகம் .

மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண்முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப்போது ஒன்று
விண்செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரை காடு
மலர்க்கண்னொடு மலர்க் கனிவாய் உடையது போல் இரு ஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பக காவு பற்பல வன்ன முடிதோள் ஆயிரம் தழைத்த நெடியோர்க்கல்லதும் அடியதோ உலகே? – என்கிற மாதுர்யம், அழகு பேசப்பட்டது.

இப்படியான உன் விக்கிரமங்களுக்கு அன்று பல்லாண்டு பாடாத குறை தீர, இன்று யாம் வந்தோம்.
அறுசுவை அபதானங்களுக்கு ஆறு முறை போற்றி சொல்லி வந்த எங்களுக்கு நீ இரங்க வேண்டும் என்கிறார்கள்.
அதவா
அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது–இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள்,

————————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–குத்து விளக்கு எரிய–

January 3, 2023

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——

அவதாரிகை –

இவள் திறக்கப் புக
நம்முடையாருக்கு இவள் திறக்க முற்பட்டாளாக ஒண்ணாது என்று இவளைத்
திறக்க ஒட்டாதே கட்டிக் கொடு கிடக்கிற
கிருஷ்ணனை எழுப்பி –

அங்கு மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும்-
அவளை உணர்த்துகைக்காக
அவளை எழுப்பு கிறார்கள் –

இத்தால்
ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி பரிகைக்கு-
என் அடியார் அது செய்யார் -என்னுமவனும்
ந கச்சின் ந அபராதி -என்னுமவலும்
இருவரும் உண்டு என்கை-

ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி –
சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -என்றவாறே எழுந்து இருந்து கதவைத் திறக்கப் புக்காள் –

நம்மை ஆஸ்ரயித்தவர்களை இவள் தன்னுடையார் என்று இருக்குமோபாதி –
இவளைப் பற்றினார் நம்முடையார் என்று அன்றோ இவனும் இருப்பது –

நம்முடையார்க்கு இவள் முற்பட்டவளாக ஒண்ணாது –
இவளைத் திற என்றார்க்கு
நாம் முற்பாடராக கார்யம் செய்தோம் என்னும் தரம் பெற வேணும் என்று –
இவளைத் திறக்க ஒட்டாதே பின்னிட்டு வந்து
மல்கட்டாக கட்டிக் கொண்டு போய் படுக்கையிலே விழ விட்டு

இவளுடைய ஸ்பர்சத்தாலே தானும் மயங்கி
இவர்கள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க

அவனை எழுப்பின அளவிலே அவன் எழுந்து இருந்து
இவர்களுக்கு பிரதி வசனம் பண்ணாத படி அவனுக்கு முற்பட்டு கொடாதே
கட்டிக் கொண்டு கிடந்து உறங்குகிறவள் தன்னையே
திரியட்டும் எழுப்புகிறார்கள் மீளவும் அவனை உணர்த்துகைக்காக

இத்தால்
ஆஸ்ரிதற்கு மாறி மாறி ஒருவர்க்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே
நமக்குத் தஞ்சமாய் இருபத்தொரு மிதுனம் உண்டு என்கிறது –

இப்படிக்கு ஒத்த மிதுனத்தையே
தனித் தனியே பற்றுமவர்கள் ராவண சூர்பண கைகளோடு ஒப்பர்

பெருமாளைப் பற்றி திருவடி
பிராட்டி திருவடிகளில் செல்ல அவனைக் கடாக்ஷித்து
இளைய பெருமாள் அறியாத காக வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்தாள்

பிராட்டியைப் பற்றி வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை –
விபீஷணர்க்கு வேறாக நல்லான்(பெரிய திருமொழி-6-8-5 ) -என்னும் படி
விசேஷ ஸ்நேஹம் பண்ணி அருளினார் பெருமாள்

ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவளையும் –
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்னுமவனையும் காண்
நாம் தஞ்சமாக பற்றி இருக்கிறது-

நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து(திருவாய் 9-2-1 ) -என்றார் இறே ஆழ்வார்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறையுடையோம் வாள் கெண்டை ஒண் கண் –(திருவாய் 10-4 )
கூர் அம்பன் (நான்முகன் )என்று
பகவத் பிரபன்னர் அம்பின் கூர்மையையும் புகரையும் நினைத்து இருப்பார்கள்-

த்வய நிஷ்டர்
இவள் கண்ணின் கூர்மையையும்
புகரையையும் நினைத்து இருப்பார்கள்-

(அஹம் -யசோதை இளம் சிங்கம் –
மாம் -நந்த கோபன் குமரன் –
கார் மேனி செங்கண் -கதிர் மதியம் போல் முகத்தான் -அகாரம் பொதுவான –
நாராயணனே -அகாரம் விளக்கம் –
நாராயணன் மூர்த்தி கேசவன் -நாற்றத் துழாய் நாராயணன் -விவரணம்
மா மாயன் -மாதவன் -மணி வண்ணன் -விளக்கம் -லஷ்மி நாதன் சுருக்கமாக
இத்தை தெளிவாக ஒன்றாம் பாசுரம் ஒன்பதாம் பாசுரம் சேர்த்து 19 பாசுரம் -ஸ்ரீ யபதி –

இப்பாசுரம் தத்வம்-ஸ்வரூபம்-புருஷார்த்தம் -தகவு -கிருபா குணம் -)

இவள் திறக்கப் புக –
நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
மல் கட்டாக்காகக் கட்டிக் கொடு கிடக்க
மறு மாற்றம் கேளாமையாலே பின்னையும் கிருஷ்ணனை உணர்த்துகைக்காக
நீ திறக்க வேணும் என்கிறார்கள்

இத்தால் ஆஸ்ரிதற்கு மாறி மாறிப் பரிகைக்கு இருவரும் உண்டு-என்கை
என்னடியார் அது செய்யார் (4-9)என்னும் அவன் –
இவள் ந கச்சின் ந அபராத்யதி -என்னும்
அவர்கள் உள்ளு பிறந்த வியாபாரம் அறிந்தபடி எங்கனே -என்னில்
ச கோத்ரிகள் ஆகையால் அறிவார்கள் இறே

இப்பாட்டில்
புருஷகார பூதையான பிராட்டி கதவைத் திறக்கப் புக்க
நம்முடையாருக்கு இவள் முற்படுவதே -என்று அவளை
எழுந்து இருக்க ஒட்டாமல் கட்டிக் கொண்டு கிடக்கிற ஈஸ்வரனை எழுப்பி
அங்கு மறு மாற்றம் பிறவாமையாலே-மீளவும் அவள் தன்னையே எழுப்புகிறார்கள் –

பிராட்டியை புருஷகாரமாக வரித்தால்-
அவனும் அவளும் இசலி இசலிப் பரியும் பரிவையும் சொல்லுகிறது –

————

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
அர்த்திகள் வாசலிலே நிற்க ஒரு அனுபவம் உண்டோ -என்கிறார்கள் –
எங்களைப் போலே ஊர் இசைவும் வேண்டாதே
கீழ் வானம் வெள்ளென்றது என்ற பயமும் இன்றிக்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் -என்று இருட்டு தேடவும் வேண்டாதே
பகலை இரவாக்கிக் கொண்டு
விளக்கிலே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்துக்கொண்டு
படுக்கையிலே கிடக்கப் பெறுவதே
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள் –
இவள் அவனுக்கும் பிரகாசமான விளக்காய் இருக்க-ஓர் நிலை விளக்கு உண்டாவதே –

குத்து விளக்கு எரிய
நம்மைப் போல் வூரார் இசைவும் வேண்டாதே-
விடிகிறது என்கிற பயமும் இன்றிக்கே-
இருள் தேடவும் வேண்டாதே –
பகலை இரவாக்கவும் வேண்டாதே
விளக்கில் கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து படுக்கை படுத்துக் கொண்டு
கிடக்கப் பெறுவதே இவள் ஒருத்தி –
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள்

காணில் ஒட்டார்-(நாச்சியார் )என்னும் படி தங்களுக்கு ஊரார் இசைவும் தேட்டமாய்-
கீழ் வானம் வெள்ளென்றது என்கிற பயமும் நடந்து
நள்ளிருட்கண் (நாச்சியார் 12 )-என்று இருளும் தேட்டமாய் –
இரா பகலாம் படி விஸ்லேஷத்தோடே கிருஷ்ணன் முகத்தில் விழிக்கவும் பெறாதே
தறைக் கிடை கிடப்பதாய் இறே நாங்கள் படுகிற பாடு –
சோரார்க்கு (திருடருக்கு )விளக்கும் நிலவும் பகை இறே

இவளுக்கு பிரசித்தமான முறை யுண்டாகையாலே விளக்கில் படுக்கை படுக்க தட்டில்லையே –

கிருஷ்ணனைப் பற்றினவர்கள் அவனோடே சாதர்ம்யம் பெறுமோ பாதி –
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய என்று
உன்னுடைய மாளிகையோடு சாதர்ம்யம் பெற்று
எங்களுடைய மாளிகைகளில்
உன்னைப் பற்றின நாங்களும் உன்னோடு சாதர்ம்யம் பெற்று
கிருஷ்ணனும் நாங்களும் எங்கள் அகங்களும் இப்படி விளக்கும் படுக்கையும் ஆனால் அன்றோ
உன்னுடைய அனுபவத்துக்கு பிரயோஜனம் உள்ளதும் –
இது உனக்குப் பொறுப்பதும்-

(கடி மா மலர் பாவையுடன் சாம்யம் ஆறும் உண்டே
அவன் உடன் சாதர்ம்யம் எட்டு உண்டே
ந பின்னை பிரியாமல் இருப்பதே நம்மை சேர்ப்பதற்காகவே
போக மயக்குகளால் மயங்கப்பண்ணி இருக்க வேண்டாமோ )

இரா உண்ணாதார்க்கு உண்டார் அடியர் அன்றோ

குத்து விளக்கு
வேண்டின இடத்திலே பேர்த்து வைக்கலாம் விளக்கு —
நீயும் அவனும் கண் வளரும் போது வேண்டும் இடங்களிலே
எடுத்து வைத்து அடிமை செய்கைக்கு நாங்களும் வேண்டாவோ –
ரம மாணா வநே த்ராய -என்னும் படியே –
(தண்டகாரண்யத்தில் மூவருக்கும் – சமமான ஆனந்தம் )

எரிய
புறம்பே ஒரு கொடி விளக்கு புகர் அழிந்து கிடக்க-
ஒரு நிலை விளக்கு உள்ளே நின்று பிரகாசியா நின்றது –

எரிய
அப்ரகாசகமுமாய்-
அந்நிய அதீன பிரகாசமுமாய் இருபத்தொரு விளக்கு யுண்டாம் படி
ஸ்வயம் பிரகாசமுமாய்
பர பிரகாசமுமாய் நின்று எரிகிற தொரு விளக்கு
(முதலில் சொன்னது கண்ணன் -அடுத்து சொன்னது இவள்
நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்து )

தன்னையும் காட்டாதே –
தன்னைக் கொண்டு காணக் கடவ அவனையும் காட்டாதே இருப்பதே இவள்

பாஸ்கரேண பிரபா யதா-
பிரபை தன்னையும் காட்டி ஆதித்யனையும் காட்ட வற்றாய் இறே இருப்பது

ஆயர் பாடிக்கு அணி விளக்கு
பிரகாசிகைக்கு இட்ட நிலை விளக்கு இறே இவை (இவள் )தான்

ஓன்று ஸ்வயம் பிரகாசமுமாய் பர பிரகாசமுமாய் இருக்கும் –
ஓன்று அப்ரகாசமுமாய்-அந்நிய அதீன பிரகாசமுமாய் இருக்கும் –

தன்னைத் தான் காட்டாமையால் அப்ரகாசம் என்கிறது –
கிருஷ்ணன் பார தந்தர்யத்தாலே அந்நிய அதீன பிரகாசம் என்கிறது –

இவள் தன்னைக் காட்டுகையாலே ஸ்வயம் பிரகாசம் என்கிறது –
ஸ்வ ஆஸ்ரயத்தை விளக்குகையாலே பர பிரகாசம் என்கிறது-

அவனுக்கு விளக்கு ஆனவள் இறே இவள் –
அதீவ ராமஸ் ச சுசுபே -என்கிறவனுக்கு
பிரகாசகையாய்
ஓஜ்ஜ்வல் யாவஹையாய் இறே இவள் இருப்பது –
திகழ்கின்ற திரு மார்வில் திருமங்கை தன்னோடும் –

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திரு மாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

குத்து விளக்கு எரிய –
நாம் புறம்பே பனியில் தரையிலே நிற்க –
ஊரார் இசைவும் வேண்டாதே –
கீழ் வானம் வெள்ளென்றது -என்கிற பயமும் இன்றிக்கே
நமக்குப் போலே இருட்டும் தேட வேண்டாதே
பகலையும் இரவாக்கிக் கொண்டு விளக்கு எரியக் கிடக்கப் பெறுவதே இவள் -என்கை
இவள் தன்னை கை விளக்காகக் கொண்டு பிரகாசிப்பதொரு நிலை விளக்கு உண்டாவது -என்றுமாம்
அப்போது எம்பெருமானுக்குக் கூட அவள் விளக்காய் இருக்கிற படி
அதீவ ராம்ஸ ஸூ ஸூ பே-(சீதை யுடன் சேர்ந்த பெருமாள் அதிகமாக பிரகாசித்தார் – )

(அவனை அடைய இவள் புருஷகாரமாக வேண்டும் -வெந்நீரை தண்ணீர் கொண்டு ஆற்றுமா போல்
இவளுக்கு வேறே ஒன்றுமே வேண்டாமே -தண்மை ஸ்வ பாவிகம் அன்றோ -)

குத்து விளக்கு எரிய –
ஞானம் பிரகாசிக்க

————-

கோட்டுக் கால் கட்டின் மேல் –
குவலையா பீடத்தின் கொம்பைப் பறித்து கொண்டு வந்து செய்த கட்டில் இறே –
வீர பத்னி ஆகையாலே-இவளுக்கு இது அல்லது கண் உறங்காது –
எங்களைப் போலே ஸ்ரீ கிருஷ்ணனைத் தேடித் போக வேண்டாதே
உள்ளத்துக்குள் கூசாமல் கிடக்கப் பெறுவதே -இது என்ன பாக்கியம் –

கோட்டுக் கால் கட்டில் மேல்
இருள் தேட்டம் இன்றிக்கே பிரகாசம் பொறுத்து நிலை விளக்கு எரிகிறதுக்கு மேலே –
எங்களைப் போலே
ஸ்ரீ ப்ருந்தாவனமும் மணல் குன்றும் தேடித் போக வேண்டாதே
உள்ளகத்துக்கு உள்ளே படுக்கை படுத்து கூச்சம் அற கிடக்கப் பெறுவதே
இது என்ன பாக்ய பலன் –

கோட்டுக்கால்
ஆனைகளை உயிர்ப் பிடியே பிடித்து –
அவற்றின் கொம்புகளைப் பறித்து –
அவற்றை ஆதாரமாகக் கடைந்து மடுத்துச் செய்த கட்டில்

வீர பத்னி யாகையாலே இப்படி சமைந்த கட்டில் ஒழிய
மற்றையவற்றில் கண் உறங்குவது ஆகாதே

கஜம் வா விஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா அபி வரா நநா-நாஹாரயதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய –
பிராட்டிக்கு காட்டிலே ஆனை உள்ளிட்டன கண்டால்
அபூர்வ தர்சனத்தாலே வந்த முக விகாசம் போக்கி –
ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான அச்சம் குடி போய்த்து
அதுக்கு அடி என் என்னில் –

பாஹு ராமஸ்ய சம்ஸ்ரிதா –
தனக்கு என்ன தோள் படைக்கையாலே –
உயிரோடு பிடித்த கொம்பை வாங்க வல்ல வீரருடைய பத்னிக்கு அஞ்ச வேண்டாவே –

வீர பத்னிக்கு நாயகனோடு அணையும் போது கையிலே நாண் தழும்பால் வந்த சரசரப்பு கண்டதில்லை யாகில்
தங்களோட்டை பெண்களை அணைத்தால் போலே இருக்கும் –

பர்த்தாரம் பரிஷஸ் வஜே -என்று
பிராட்டி பெருமாளுடைய வீரக் கோலம் கண்ட பின்பு இறே ஆண்-என்று அணைந்தது –
மற்ற போது ஸ்த்ரீயம் புருஷ விக்ரஹம் -என்று இறே இருப்பாள் –
ஜ்யாகிண கர்க்கசமான தோளால் அணைக்க வேணும்

மாதங்க இவ ஸிம்ஹயேண –
ராவணன் ஆகிற யானையை உயிர்ப் பிடி பிடித்த ஸிம்ஹம் இறே பெருமாள் –
உபதாய புஜம் தஸ்ய லோக நாதஸ்ய-என்னும்படியான தோள்கள் யாயத்து –

லோக நாதஸ்ய -என்கிறது
பதிம் விஸ்வஸ்ய-என்கிறபடியே அவனுக்கும் தங்களுக்கும் உண்டான முறையை உணர்ந்து
இருப்பார்க்குப் பயப்பட வேண்டாம் -என்கிறது

ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் -வீர பத்னிகள் படி பிரபன்னர் படி போலே –

தம்தாமுக்கு என்ன மிடுக்கு அற்றவர்களுக்கு அவனுடைய பலமே பலமாக வேண்டாவோ –

ஆனு கூல்யத்தில் தாரதம்யம் கொண்டு தியாக ஸ்வீகாரம் பண்ணுவது அவன் அபரி பூர்ணன் ஆகில் இறே
பரி பூர்ணன் மானவனுக்கு இவன் விலக்காமையே இறே வேண்டுவது
(ஆத்ம ஞானமும் அப்ரதிஷே தமுமே பேற்றுக்கு வேண்டுவது )

இவன் பண்ணின பிராதி கூல்யத்துக்கு அபுத்தி பூர்வகமான பிரபத்தி பிராய்ச சித்தமாம் போது
சரண்யன் நீர்மையே இறே பலிக்கிறது அத்தனை –
பலத்தோடு சந்திப்பிக்குமதே இறே உபாயம் ஆவது –

சர்வ ஸ்வதானம் பண்ணின வெறுவியனுக்கு நன்மை யுண்டாம் போது
வேறே ஒருவன் அனுக்ரஹத்தால் பலமாக வேண்டாவோ –

இரண்டு கிரியையாலும் அன்றிக்கே இருந்தது இறே பலம்
(நிர்ஹேதுக அனுக்ரஹம்
வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிதானதே )

அத்தாலே இறே ஆர்த்தோவா யதிவா த்ரூப்த-என்கிறது –

அங்கனே யாகில் பிரபத்தி தான் என் என்னில் –
சைதன்ய கார்யம் வேண்டுகையாலே –

இவனுடைய சத்தை உபாயமாம் அன்று இறே ஸ்வீகாரமும் உபாயத்தில் புகுவது –

ரஷித்வய க்ருதாத்மா -அவன் க்ருதாத்மா வாகையாலே
இவன் பக்கல் பெற்றது கொண்டு தன நீர்மையாலே ரஷித்து விடும் அத்தனை –

கோட்டுக் கால் காட்டில்
குவலயா பீடத்தின் கொம்பை பறித்துக் கொண்டு போந்து சமைந்த காட்டில் –

ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய -என்று பார்த்து கொண்டு நின்ற பெண்கள் எல்லாம் கிடக்க
கோடுகள் கொண்டு கட்டில் சமைப்பது
ஒக்கப் பட்டம் கட்டின பிரதான மஹிஷியான இவளுக்கு இறே –
கோட்டிடை யாடிற்றும் இவளுக்கு –
கொடுத்ததும் இவளுக்கு –
வேழமும் யேழ் விடையும் (பெரியாழ்வார் -1-5 )

கோட்டுக்கால்
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு(திருவாய் -10-4 ) -என்று மிதுனத்தின் காலிலும் –
அம் மிதுனத்தை சுமக்கிற காலிலே தலையை மடுக்கிறார்கள்

கிருஷ்ணன் படுக்கையின் காலைப் பற்றினவர்கள் இறே

பர்யங்க வித்தையில் சொல்லுகிற படுக்கையில் கால் இட்டு ஏறுவார்கள் –
ஆசனத்தின் காலைக் கட்டின சர்ப்பம் ஆசனத்தின் ஆகத்திலே ஏறினால் போலே

கட்டில் –
பெரு விலையனான பொன்னாலும் ரத்னத்தாலும் சமைத்தாலும்
இடையர் ஆகையால் கட்டில் என்று ஜாதிப் பேச்சு

கட்டில் மேல்
ப்ரஹ்மாதிகள் வர விட்ட சிறு தொட்டில்கள் ஆகில் இறே கிழிய உதைத்து பொகட்டுவது
படுக்கை பற்றில் படுக்கையாகையாலே ஆதாரத்தோடு பேணிக் கொண்டு போரும்

கோட்டுக் கால் கட்டில் மேல்-
சதுர தந்தியான குவலயா பீடத்தின் உடைய தந்தங்களாலே-செய்யப் பட்ட கால்களை உடைய கட்டில் மேல்
இத்தால் –
சதுர்வித கர்த்ருத்வ மூலமான
அஹங்கார கார்யமான
சேஷத்வே கர்த்ருத்வம்
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வம்
கர்த்ருத்வே கர்த்ருத்வம்
போக்த்ருத்வே கர்த்ருத்வம்
ஆகிற கால்களை உடைத்தாய்

கோட்டுக் கால் கட்டில் மேல்
குவலயா பீடத்தைக் கொன்று அதன் கொம்பால் செய்த கால்களையுடைய கட்டில்
வீர பத்னீ ஆகையால் மற்றையவற்றில் கண் உறங்காது –
மாணிக்கத்தாலே செய்யிலும் பள்ளிக் கட்டில் என்னும் அத்தனை இறே
நாஹாரயதி சந்த்ராஸம் பாஹு -(பெருமாள் உடன் கூடச் சென்ற சீதை -தோள்களுக்கு கீழ் அடங்கி பயம் இல்லாமல் இருந்தாள்_
ஆனையுள்ளிட்டின காட்டைக்  கண்டால் முக விகாசம் பிறக்கும் அத்தனை
ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான அச்சம் இல்லை –
இதுக்கடி தனக்கு என்னத் தோள் படைக்கையாலே –

இத்தால் பதிம் விஸ்வஸ்ய -இத்யாதியில் ஓதிக் கிடக்கிறபடியே
அவனுக்கும் தங்களுக்கும் உண்டான முறையை உணர்ந்து இருப்பார்க்கு
ஸ்வரூப ப்ரயுக்தமான பயமில்லை என்கை -(விஸ்வ பதி -லோக பர்த்தா -)

(ஸர்வ ரக்ஷகன் -அடங்குக உள்ளே -ஆழ்வார் -சம்பந்தம் ஒத்துக் கொண்டாலே ஸம்ஸார பயம் இருக்காதே)

வீர பத்னிகளுக்கு தோளில் சரசரப்புக்கு காணா விடில் தங்களோட்டை பெண்களைத் தழுவினத்தோடே ஒக்கும்
ஜ்யா கிண கர்க்கஸை(ஸ்தோத்ர ரத்னம் )
உபதாய புஜம் தஸ்ய லோக நாதஸ்ய ஸதக்ருதம்(சீதா பிராட்டி )
பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா
உயிரோடே பிடித்துக் கொம்பை வாங்கும் வீரனுடைய பத்னி இறே
வீர பத்னிகள் ப்ரபன்னர் படி

ஆர்த்தோ வா யதிவா த்ருப்த -(விபீஷண அபய ப்ரதானம்-பிராணனை விட்டே யாகிலும் சரணாகதரை ரக்ஷிக்க வேண்டும் )என்னும் போது அவன் பலமே உபாயமாக வேண்டாவோ
புத்தி பூர்வகமாகப் பண்ணின பிராதி கூல்யத்துக்கு அபுத்தி பூர்வகமாகப் பண்ணின பிரபத்தி
(வாய் வார்த்தையாக புரிதலே இல்லாமல் செய்த சரணாகதி )ப்ராயச்சித்தமாம் போது சரண்யன் நீர்மையே பலிக்கிறது அத்தனை –
பலத்தோடு சந்திப்பிக்குமது அன்றோ உபாயமாவது
அங்கண் என்றே யாகில் பிரபத்தி வேண்டுவான் என் என்னில்-
சைதன்ய கார்யம் வேண்டுகையாலே

பிரபன்னனுக்கு தத் ஸ்வீகாராதிகள் அடைய உபாயமாக வேணுமோ
அங்கண் அன்றே யாகில் இவன் தன்னுடைய சத்தை உபாயமாக வேணுமோ
சர்வ ஸ்வதானமும் (உலகு அளந்து அனைவருக்கும் )தூற்றிலே நெருப்பிடுகையும் ஓத்தாப் போலே இங்கும்
ஆர்த்தோ வா யதிவா த்ருப்தா -என்கிறது

கட்டில்
ஜாதி பேச்சு –

அந்த கர்த்ருத்வ விஷயமான
தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற
பட்டங்களை உடைத்தாய்
தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற
கட்டில் மேல் என்கிறது –

——————

மெத்தென்ற –
மதத்தை ஆகிலும்-கட்டில் -ஜாதி பேச்சு-
கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து
படுக்கையின் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே –
கண் உறங்குவதே

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
பஞ்ச விதமான படுக்கையின் மேல் ஏறி -அதாவது
அழகு -குளிர்ச்சி -மார்த்த்வம் -பரிமளம் -தாவள்யம் -ஆக இவை
இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாய் இறே இருப்பது –
அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் –
பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –

மேலேறி -நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ-நீ படுக்கையிலே ஏறுவது என்கை –

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
மெத்தன்ற பஞ்சாலே செய்த படுக்கை

மெத்தென்ற
நாங்கள் ஆர்த்தைகளாய் வந்து கிடக்க
படுக்கையின் உள் மானம் புற மானம் கொண்டாடி கண் உறங்குவதே

மெத்தென்ற
நாங்கள் புறம்பே நின்றால் படுக்கை கடினமாக வேண்டாவோ –
அவனோடு கிலாய்த்த போது சீறுவது அவன் படுக்கையை இறே

தம் பாம்பு போலே (நாச்சியார் -10-3 )–
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்று
திருவனந்த ஆழ்வானை
பெரிய ஆழ்வாரோ பாதி நினைத்து இருப்பது

பஞ்ச சயனம்
பஞ்ச வித சயனம் –
1-சீத பரிஹாரமுமாய் -உஷ்ண பரிஹாரமுமாய் –
2-தர்ச நீயமாய் –
3-பரிமளத்துவமாய்-
4-விஸ்தார
5-பாண்டரோ பேதமுமாய் இருக்கை-

சயனத்தில் மேல் ஏறி –
நாங்கள் உள்ளுப் புகுரப் பெறாதே புறம்பே நின்றால்
படுக்கை காலிட்டு ஒண்ணாத படி உறுத்த வேண்டாவோ –

புத்ராதிகள் துகையாத படுக்கை பித்ராதிகளுக்கு அஸஹ்யமாம் போலே நாங்கள் துகையாத படுக்கை
வெம்பள்ளி (திருவாய்-9-9 )ஆகாமல் தண் பள்ளி யாவதே –

அவர்களுக்கு நெருப்பு நீராம் ஒளஷதம் உன் கையில் உண்டே

மேல் ஏறி
நாங்களும் மிதித்து ஏறினால் அன்றோ நீ ஏறுவது –

பாதே நா த்யாரோஹாதி-என்று ஸ்ரீ யபதியினுடைய
பர்யங்க வித்யையில் சொல்லுகிற படியே குறைவற்ற படுக்கையிலே சென்று ஏறக் கடவன் -இந்த முக்தாத்மா

அவன் கோசி என்னக் கடவன் –
இவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்னக் கடவன் –

யஸ்யாஸ்மி என்கிறவன் ப்ரஹ்மாஸ்மி என்கிறது
ப்ரஹ்ம பிரகார பூதன் நான் என்றபடி –
இவர்களும் அத்தை இறே கணிசிக்க்கிறது-

(யாருடைய சொத்தோ நான் அவனைத் தாண்ட மாட்டேன் என்பவன்
நானே ப்ரஹ்மம் என்றது
அவனுக்கு பிரகாரம் -விட்டுப்பிரியாமல் சார்ந்து இருப்பதால்
இரண்டும் சொல்லலாம் என்றபடி )

ஏறி
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து உறங்குகிறவன்
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய -இங்கே ஏற வர –
விட்ட படுக்கை –
இங்கே தனக்கும் முற்பட அந்த விஸ்மயத்தைக் கண்டு
ஆச்சர்யத்தாலே ஸ்திமிதனாய்-
அதிலே ஏறின வருத்தத்தைச் சொல்கிறது –

இப்படிக்கொத்த படுக்கையிலே துகைக்கைக்கு நிதானம் சொல்லுகிறார்கள்

மெத்தென்ற
நாங்கள் ஆர்த்தராய் அலைந்து கிடக்க
படுக்கையில் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கண் உறங்குவதே –
இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி (9-9)இறே
அவளுக்கு நெருப்பு நீராம் ஒளஷதம் உண்டு இறே

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
பஞ்ச விதமான சயனத்தில் மேல் ஏறி -அதாவது உஷ்ண பரீஹாரமும் -ஸீத பரிஹாரமும் –
தர்ச நீயகை யாகையும்-மெத்தென்று இருக்கையும் -பரம்பி இருக்கையும் –
அஞ்சுருவிவிட்டுப் பண்ணின படுக்கை என்றுமாம்
அழகு குளிர்த்தி மார்த்த்வம் பரிமளம் தாவள்யம்-(வெண்மை )என்றுமாம்
பாஞ்சாலே செய்தது என்றுமாம்

மேல் ஏறி –
பாதேந அத்ய ஆரோஹதி-(பர்யங்க வித்யை )என்று நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ நீ படுக்கையில் ஏறுவது என்கை
அங்கு ஏறில் அவன் -கோஸி-என்ன –
இவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்னும்
ப்ரஹ்மம் நான் என்னப் போமோ என்னில் –
பரவா நாஸ்மி என்னுமா போலே பிரகாரமான ப்ரஹ்மம் -என்கை -(பரன் திறம் அன்றி மற்ற யாரும் இல்லையே -உமக்கு சார்ந்தவனாகவே இருக்கிறேன் )
ரமமாணா வநே த்ரய (ஆனந்தத்தில் சாம்யம்-காட்டில் மூவர் -இங்கு கட்டிலே மூவர் வேண்டாமோ )-என்று ஆசைப்படுகிறார்கள் –
யஸ்ய ஸ்ரீ ருபபர்ஹணம் -என்று பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே குறையற்றது
இனி மிதித்து ஏறுவார் குறை –

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்-
சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே-மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற
படுக்கையின் மேலேறி –

—————–

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை –
திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக-அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்-
காலம் அலர்த்துமா போலே-அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை -வாசம் செய் பூம் குழலாள் இறே –

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை-
திருக் குழல் ஸ்பர்சத்தால் கொத்துக் கொத்தாக அலரா நின்றுள்ள
பூவை யுடைத்தான குழலை யுடைய நப்பின்னை

கொத்தாக பறித்து குழலிலே சூட்டினால் தன்னிலத்திலே போலே குழலிலே இருந்து
செவ்வி மாறாமல் அலருமாய்த்து-

கொம்பினின்றும் போந்து குழலிலே இறே அலருகிறது –

இவள் மயிரில் பூ அலருகைக்கு
காலத்தோ பாதி யாகாதே –
கால கலயதாமஹம் -என்றவனுடைய ஸ்பர்சம் –

கொத்தலர்
ஒரு பிரளய கலகத்திலே எடுப்பும் சாய்ப்புமாக மஹா பாரதம் நடவா நின்றால்
பூ அலராது ஒழியும் படி எங்கனம்

பூங்குழல்
மலரிட்டு நாம் முடியோம் -என்று
எங்கள் குழல் பூவும் மாறி செவ்வித் பூவை வாக்கிலும் தொங்காதே-
தொங்கின பூ விரஹ அக்னியால் சரு காம் படி இருக்க
நீ முடிப்பது எங்கள் தலையில் பூ பொறுத்தால் அன்றோ

இவளை இழவு சொல்லும் போது தங்களோடு கூட்டுவார்கள் –
பேறு சொல்லும் போது அவனோடு கூட்டுவார்கள்
அவளுக்கு இரண்டு தலையும் விட ஒண்ணாது

கொத்தலர் பூம் குழல்
இவ்ளோட்டை ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக அலருகிற பூவையும்
குழலையும் யுடைய நப்பின்னை பிராட்டி

கொத்தலர் பூங்குழல்
பெரிய திரு நாளாய்ச் செல்லா நிற்க குறி அழியாது இராது இறே
ஒரு மஹா பாரதத்தாலே அலருகை-
காலம் அலர்த்துமா போலே அவனுடைய ஸ்பர்சத்தாலே அலருகை என்னவுமாம்
இங்குத்தைக்குத் திருப் பூ மண்டபம் செய்வானும் தானே இறே
மலரிட்டு நாம் முடியோம் -என்றது மறந்தாயோ
இழவு சொல்லும் போது தங்களோடு கூட்டுவர்கள் –
பேறு சொல்லும் போது அவனோடு கூட்டுவர்கள் –
அவளுக்கு இரண்டு தலையையும் விட ஒண்ணாது

கொத்தலர் பூங்குழல்
வாசம் செய் பூங்குழலாள்-(10-10)என்னுமா போலே –

————

கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா –
கொங்கையைத் தன் மேலே வைத்துக் கிடக்கை –
கொங்கை மேல் தன்னை வைத்து கிடந்த என்னவுமாம் –
பிரணயம் இருக்குமாறு –
மலையை அண்டை கொண்டு ஜீவிப்பாரைப் போலே –
மலராள் தனத் துள்ளான் -என்னக் கடவது இறே —

நப்பின்னை கொங்கை மேல்-வைத்துக் கிடந்த
பூங்குழல் நப்பின்னை விலக்ஷணமான நிரதிசயமான குழலை யுடையவள்
கேசவனையும் பிச்சேற்ற வல்ல குழலை யுடையவள் –
இவள் குழல் வாருகைக்கு அக் காக்கை வருவது
பின்னை மணாளனை என்று இவளோட்டை சம்பந்தம் சொன்னாலாய்த்து

கொங்கை மேல் வைத்துக் கிடந்த
நப்பின்னை பிராட்டியினுடைய திரு முலைத் தடத்தை தன் மேலே வைத்துக் கிடந்த என்னுதல்-
கொங்கை மேல் தன்னை வைத்துக் கிடந்த என்னுதல் –

ந சாஸ்த்ரம் நசைவ க்ரம-என்று இறே ப்ரணயம் இருப்பது
பர்யாயேண ப்ரஸூப்த்த-என்னக் கடவது இறே

மலராள் தனத்து உள்ளான் -(மூன்றாம் 3 )
பர்வத பார்ஸ்வத்தை ஜீவிப்பாரைப் போலே

கிடந்த
திறக்க கணிசித்தவன் நஞ்சுண்டாரைப் போலே பரவசனாய் மயங்கிக் கிடக்கிறபடி

நப்பின்னை கொங்கை மேல்-வைத்துக் கிடந்த –
கொங்கையைத் தன மேலே வைத்துக் கிடத்தல் –
கொங்கையின் மேலே தன்னை வைத்துக் கிடத்தல் –
ந சாஸ்திரம் நைவ ச க்ரம-
பர்யா யேண ப்ரஸூப் தாஸ்ச-(மந்தாகினி நதிக்கரையில் மடியில் மாற்றி மாற்றி சயனம் )
மலராள் தனத்துள்ளான் –மலைப் பார்ஸ்வத்தைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே

————–

மலர்மார்பா –
திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே
அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால்
சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ
என்னில் விரோதியாது
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –

மலர் மார்பா
அவன் அண்டை கொண்ட அரணும்-
இவள் ஜீவனமும் –

முலையைப் பற்றி அவன் கிடைக்கும் –
மார்பைப் பற்றி இவள் கிடக்கும் –

இவள் முலைப் பரப்பு எல்லாம் ஒரு முலைக்குப் போராத படி அகன்ற மார்பை யுடையவன்
பெரிய வரை மார்பு இறே அது –

முற்றாரா வன – முலையாள் அகலத்துள் இருப்பாள் (திருநெடும் -19 )-என்னக் கடவது இறே

மலர் மார்பா
திரு முலைத் தடங்கல் உறுத்தும் படி அணைத்த ஸ்பர்ச ஸூ கத்தாலே
பூ அலருமா போலே விகசிதமான மார்பை யுடையவன்

சதைக ரூப ரூபாய -என்னச் செய்தே
மலர் மார்பா -என்கிறது இறே

இவ்விகாரத்தோடு விரோதியாமையாலே
கர்ம நிபந்தனாய் வரும் வ்ருத்தி ஹ்ராசங்கள் தோஷாவஹங்கள் ஆகையால்
அவை இல்லை என்கிறது அத்தனை –

நித்ய அநபாயினியாய் இருக்கிறவர்களுடைய சம்ஸ்லேஷத்தால் வரும் விகாரம் இல்லை என்கிறது அன்றே –
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்தவம் அவத்யம் அத்தனை இறே
இவ்விகாரம் உண்டானால் கல்யாண குணங்களே யாம் அத்தனை –
மலராது குவியாது என்றது ஸ்வரூபம் இறே –

யசோதை பிராட்டி காட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தனபந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
புடைக்கலந்தானை —
வரை நெடும் தோள் -மூர்த்தி கண்டீர் -(பெரிய திருமொழி 4-4)
(தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் அன்றோ அடிக்கவும் அணைக்கவும் அலர்வானே )
இவளோடு அணைந்த பின்பு இவ் விகாசம் பிறவாதாகில் இவர்களுக்குத் தான் என் செய்ய –

அவனுக்கு விகாசத்தைப் பண்ணி ஸ்வரூபம் பெற இருக்கிறவர்கள் இறே இவர்கள்
நித்ய கிங்கர –
கோவிந்தர்க்கு ஒரு குற்றேவல் –
அவனை விகசிப்பிக்கை இவர்களுக்கு ஸ்வரூபமாய் இறே இருப்பது

சேஷியை விகசிப்பிக்கும் போது சேஷ வஸ்து வேணும்-
இல்லையாகில் ஸ்வதந்திரமாய் இருபத்தொரு வஸ்து யுண்டாய் விகசிப்பிக்கிறது அன்றே
இச்சானுகுணமாக விளையுமது சைதன்ய ப்ரயுக்தம் இறே

மலர் மார்பா
அவளுக்கு ஜீவனம் த்வந்த்வம் பரஸ்பர ஆஸ்ரயம்(மலர்ந்த மார்பால் அணைந்த என்றும் இவள் அணைப்பால் மலர்ந்த )

மலர் மார்பா
திரு முலைத் தடங்கல் உறுத்துகையாலே அகன்று இருந்துள்ள மார்பு
அப்போது சதைக ரூப ரூபாயா -என்பதுக்கு குற்றம் அன்றோ என்னில் –
ஹேய குணங்கள் இல்லையே -இது கல்யாண குணங்களில் புகும்

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர் மார்பா –
வர்க்கம் வர்க்கம் ஆகிற
விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய
பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற-அளகபாரத்தை உடைய நப்பின்னை பிராட்டி உடைய-
போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு
அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –

—————–

வாய் திறவாய் –
உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே
ஒரு வார்த்தை சொல்லாய்
தன்னால் அல்லது செல்லாதே
உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதோ –
அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது
மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –

வாய் திறவாய்
அவன் ஊமத்தங்காய் தின்று கிடக்க இவர்கள் தான் ஆரை எழுப்புகிறது –

வாய் திறவாய்
கிடந்த இடத்தே கிடந்து உன் கம்பீரமான மிடற்று ஓசை கேட்க்கும் படி ஒரு வார்த்தை சொல்லாய்
அனன்யா -என்கிறபடியே

ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே
ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்

வாய் திறவாய்
ஆர்த்தோவா யதிவா த்ருப்தா-
(ஆர்த்தனோ திருப்தனோ பிராணனை விட்டாவது விரோதியைக் கூட ரஷிப்பேன் )
என்று சொல்லி வைத்து
உன்னால் அல்லது செல்லாது இருக்கிற எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என் –

திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே
நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்
கிடந்த இடத்தே கிடந்து மாஸூச என்று சொல்லுமதும் அரிதோ

மலர் மார்பா வாய் திறவாய்
மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ –

கொங்கை மேல் இத்யாதி -(நாச்சியார் 8-7)
மார்பது முலையானால் வாயது முத்தோ

வாய் திறவாய் என்றத்தைக் கேட்டு போர நொந்தார்கள் ஆகாதே என்று
அவன் மறு மாற்றம் சொல்லப் புக
ஆர்த்த விஷயத்தில் நம்மில் முற்பாடானாக ஒண்ணாது என்று
கண்ணாலே வாய் வாய் என்று கழுத்தைக் கட்டி அமுக்கிக் கொண்டு கிடந்தாள்

வாய் திறவாய்-
நீ வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்றவாறே
அவன் வாய் திறக்கப் புக –
அவனை நீ க்ரமம் தப்பி நடப்பதே -என்று கண்ணாலே அதட்ட
அவனை எழுப்புகைக்காக
மீளவும் அவளை எழுப்புகிறார்கள் –

வாய் திறவாய்
ஆர்த்தோ வா யதி வா த்ருப்த-என்று சொல்லி வைத்துப் பேசாதே கிடக்கும் இத்தனையோ
அவன் ஊமத்தங்காய் தின்று கிடக்க இவர்கள் ஆரை எழுப்புகிறது –
இருவரும் கூடின பின்பு த்வயத்தில் உத்தரார்த்தம் போலே (கைங்கர்யம் பெறுவீர்கள் )அனுபவிக்கப் புகுருங்கோள்-என்னும் அத்தனை
நம்மைப் புறப்பாடாய் என்னில் ராவணனைப் போலே ஆவீர்கள் -(முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றாரே ஆழ்வார் )
அலர்மேல் மங்கை யுறை மார்பா -(வைத்துக் கிடந்த மலர் மார்பும் இதுவும் அன்யோன்யம் )

—————

மைத் தடங்கண்ணினாய் –
இவன் மறுமாற்றம் சொல்லப் புக –
நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று
கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –
அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன்
அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-

மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும்
மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது –
உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும்
எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது இழவுக்கு உடலாவதே –

மைத் தடங்கண்ணினாய் –
என்கிறார்கள் –
நாம் ஆரேனையும் இன்னாது ஆகிறது என் –
நம் பரிகரம் நமக்கு உதவாதே கண்ணாலே வாயை நெரியா நிற்க

நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்-
உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது இழவுக்கு உடலாவதே

மைத்தடம் கண்ணினாய்
மையிட்டு எழுதோம் என்று இருக்கிற எங்களையும் மையிடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மையிடுவது –
இரண்டு கண்ணுக்கும் ஒரு மை இறே இடுவது –
மைப்படி மேனி இறே
(அஞ்சன வண்ணனே மை -பக்தி ஸித்தாஞ்சனம் )

மைத்தடங்கண்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னப் பண்ணும் கண் இறே

தடங்கண்
இக் கடலைக் கரை கண்டால் இறே அவன் நம்மைப் பார்ப்பது –

அங்கு ஒன்றும் காணாமை யாலே
மைத் தடங்கண்ணினாய் –
என்கிறார்கள் –
இவன் வாய் திறக்கப் போக -இவர்கள் நம்மை ஒழிய இவனை எழுப்புவதே என்று
அவனைக் கண்ணாலே வாய் வாய் என்ன பேசாதே கிடந்தான்
ஆக் யாதி ஹ்ருதயம் ஹ்ருதா(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளுமே )-நாம் ஆரோனையும் இன்னாதாகிறது என் –
நம் பரிகரம் நமக்கு உதவுகிறது இல்லை -என்கிறார்கள் –
இவள் விலக்க வேணுமோ -இக் கண் உண்டாக அமையாதோ –

தடம் கண்ணி
இக் கடலைக் கரை கண்டால் இறே நம் அநீதியை அவன் பார்ப்பது
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -(3-10-8)
மண நோக்கம் உண்டான்(பெரிய திருமொழி -8-10)
ந ஜீவேயம் க்ஷணம் அபி –என்னப் பண்ணுமவை இறே
மையிட்டு எழுதோம் என்றவர்களையும் உன்படி ஆக்க வேண்டாவோ
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

மைத் தடங்கண்ணினாய் –
சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே-விஸ்ருங்கலமான
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –

————-

நீ –
அவனைப் பெறுகைக்கு அடியான நீ-அவனை விலக்கக் கடவையோ –

நீ-
ஸ்வரூப யாதாம்ய தர்சியான நீ –

உன் மணாளனை –
சர்வ ஸ்வாமி-என்கிற பொதுவே ஒழிய-உனக்கே ஸ்வம்மாய்
நீ புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனாய் இருக்கும் இருப்பு
எங்களுக்கு உடல் என்று இருந்தோம்
அங்கன் இன்றிக்கே
இது உனக்கே சேஷம் என்று இருக்கிறோம் -என்கிறார்கள் –

நீ யுன் மணாளனை
அவன் நினைவே நினையாய் இருக்கும் நீ –
உன் நினைவே நினைவாய் இருக்கும் அவன் –

அவனை பெறுகைக்கு அடியான நீ –
உன் புருவம் நெறித்த இடத்தில் குட நீர் வார்க்கும் படி பவ்யனாய் இருக்கிறவனை விலக்கக் கடவையோ –

உன்னுடைய யோக்யதையிலே அவன் துவக்குண்கிறது
உனக்கு இஷ்ட விநியோக அர்ஹனாய் எங்களுக்கு பெறுகைக்கு உடல் என்று இருந்தோம்
இனி உனக்கே சேஷம் என்றே இருக்கிறோம்

பண்டு இருவரும் கூட தங்களுக்கு ஸ்வம் என்று இருக்கையாலே கூடச் சொல்லிப் போந்தார்கள்-
இப்போது அந்யத்வம் தோற்ற பிரணய ரோஷத்தாலே வேறு இடுகிறார்கள் –
பேறு அவளாலே யானால்
இழவும் அவளாலே யாகத் தட்டில்லை இறே

உன் மணாளனை
லோக பர்த்தாரம் -என்கிற நாட்டுப் பொதுவைத் தனித்து -புஜிக்கக் கடவையோ-
(ஏக தாரா விரதனை லோக பார்த்தா -சர்வ ஸ்வாமி -உலக மணாளன் )
கோபீ ஜன வல்லபன் -என்று விருது பிடிக்கிற ஊர் பொதுவை உன்னாலே உண்டு அறுக்கலாமோ

உன் மணாளனை
இவளை இட்டு இறே அவனை இவர்கள் அறிவது –
என் திருமகள் சேர் மார்பனே -(7-2 )
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய
அவனும் அவ்வழியாலே இறே உகப்பது

யுன் மணாளனை-
உனக்கு வல்லபனான கிருஷ்ணனை –

நீ யுன் மணாளனை(வெட்டிப் பேசுகிறாள் )
கோபீ ஜன வல்லபன் -என்கை -லோக பார்த்தாராம் என்கை தவிர்ந்து -உனக்கு விலையும் ஒத்தியும் செல்லும்படி இருக்கிற இருப்பு
எல்லாம் எங்களுக்கு உடல் என்று இருந்தோம்(கௌசல்யை அவரை லோகத்துக்கே பார்த்தா என்று பெற்றாளே -என்னை கை விட்டால் அந்தப் பெயர் கிட்டாதே )-இனி உனக்கே சேஷம் என்று இருக்கிறோம்
பண்டு இருவரையும் தங்கள் ஸ்வம் என்று இருக்கையாலே
அவனுடைய நீயும் உன்னுடைய அவனும் என்று இருந்தோம்
இனி உன்னுடைய மணாளன் என்று கிலாய்க்கிறார்கள் –

————–

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
ஒரு க்ஷணமும் அவனை எழுந்திருக்க ஒட்டுகிறிலை
சம்போக வர்த்தமாக கட்டின கை நெகிழ்க்கிலும் உடம்பு வெளுப்புதி-
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய் –
புணர்ச்சிக்காக பிரிவிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி –
இவர்கள் புகுந்தாலும் போகத்துக்கு வர்த்தகர் என்று அறிகிறிலை –
இவர்கள் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரிக்க ஆசைப்பட்டு இறே வருகிறது
இருவருக்கு ஒருவர் அடிமை செய்தாக இறே உத்தார்த்தத்தில் சொல்லுகிறது –

கொண்டு புறப்பட்டாள் ஆகில் உத்தரார்த்தில் படியே அடிமை செய்கைக்கு உடலாகிறது –
உள்ளே கிடந்து தாழ்த்தால் ஆகில் பூர்வார்த்தில் படியே புருஷகாரத்துக்கு உடலாகிறது –

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்-
அத்யல்ப காலமும்
நித்ராப்ரதமான படுக்கையின் நின்றும்
எழுந்திருக்க ஒட்டுகிறது இல்லை
ஒட்டுதல் -சம்மதித்தல்
ஏன் என்னில் –

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
கட்டின கை நெகிழில் பிழைக்க மாட்டாய் –
புணர்ச்சிக்காகப் பிரியவும் பயப்படுவுதி –

———–

எத்தனை போதும் பிரிவாற்றாயாகில் –
அது உன் குறையோ -அவனை ஷண காலமும் பிரிய மாட்டாத
உன்னுடைய பல ஹானியின் குறை அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று ஷண கால விஸ்லேஷமும்
பொறுக்க மாட்டாமையாலே
அவனோட்டை நித்ய சம்யோகம் எங்களுடைய லாபத்துக்கு
உடலாகை ஒழிகை விபரீத பலம் ஆவதே –

எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
ஒரு க்ஷணம் பிரியில் புறம்பு நிற்கிற நாங்கள் பட்டது படா நின்றாய் –
நாங்கள் அகல நின்று படுகிறது எல்லாம் கூடி இருந்து படா நின்றாயீ –
நெகிழ்த்து அணைக்கில் பத்து மாசம் பிரிந்தவள் பட்டது படா நின்றாய் –
இவ்விடத்தில் இவள் வைலக்ஷண்யம் சொல்லுகிறது –

ஆற்ற கில்லாயால்
உனக்காக அன்றோ அவன் புறப்பட மாட்டாது ஒழி கிறது –
பிரியில் நீ பிழையாய்-உன்னை இழக்கில் ஒன்றாக முடியும்
உன்னை இழவாமைக்கு எங்களையும் (உள்ளே )விட்டு
உன்னோடே பணி (கைங்கர்யம்)போரும்படி யாக்குவதே

எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
சம்ஸ்லேஷ அர்த்தமான விஸ்லேஷமும் நீ
பொறுக்குகிறிலை
அது உன் குற்றமோ
உன் பல ஹானியின் குறை

எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
அகலகில்லேன் இறையும் என்று நீ நில்லா நின்றாய் –
உனக்காக அன்றோ அவன் புறப்படாது ஒழிகிறது –
பிரியில் நீ பிழையாய்-உன்னை இழக்க ஒண்ணாது என்று –

———–

தத்வம் அன்று தகவு –
தத்வம் -சத்யம்
தகவன்று -தர்மம் அன்று
எங்கள் அறியாமையில் சொல்லுகிறோம் அல்லோம் –
மெய்யே தர்மம் அன்று –

தகவு -தத்துவம் அன்று –
உனக்கு அவனில் வாசி இல்லை என்று இருக்கிறோம்

அதவா
தத்வமன்று
தத்வம் -ஸ்வரூபம் –
உன் ஸ்வரூபத்துக்கும் போராது –

தகவன்று –
உன்னுடைய ஸ்வ பாவத்துக்கும் போராது
உன்னுடைய புருஷகார பாவத்துக்கும் போராது
கிருபைக்கும் போராது –

தத்துவம்
இது உண்மை சொல்லுகிறோம் –
எங்கள் ஆற்றாமையால் கண்ணும் சுழலை இட்டுச் சொல்லுகிறோம் அல்லோம்

தகவன்று
இது மெய்யே -நீர்மைக்கு உடல் அல்ல தர்மமன்று

தத்துவம் தகவன்று
சத்யமே கிருபை அன்று –
மெய்யே உனக்கு கிருபை இல்லை என்னுதல் –
தகவு தத்துவம் அன்று என்னுதல்
உனக்கு நீர்மை யுண்டு என்று சொல்கிறது பரமார்த்தம் அன்று
ந கச்சின் நபராத்யதி -என்னாலாவது அவன் பரிகரம் நலிகிற போதோ –
உன் பரிகரம் அவனாலே நோவு படப் பார்த்து இருக்கும் எத்தனையோ

ஷிபாமி என்றவனோடு
ந கச்சின் நபராத்யதி
தகவேலோ ரெம்பாவாய் என்ற உன்னோடு வாசி இல்லை –

அஹத்வா ராவணம் சங்க்யே-என்று
கொன்று அல்லது படைவீட்டில் புகோம் என்றவனோடு
அவன் தனக்கே மித்ர மௌ பயிகம் -என்ற
உன்னோடு வாசி இல்லை என்று இருக்கிறோம் –

பதிம் விசுவஸ்ய-என்று அவன் நினைத்து இருக்குமோபாதி –
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -என்கிற முதன்மையே உள்ளது என்று நினைத்து இருக்கிறோம் –

இவளுக்கு குறை சொல்லுகையாவது
அவனோடு ஒக்கும் என்னும் இத்தனை இறே

நீர்மையால் விஞ்சினாரை –
நீர்மையால் குறைந்தவர்களோடு ஒப்பர்கள் -என்னும் இத்தனை இறே குற்றம் –
(லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி அன்றோ
ஈஸ்வரீம் பதிம் விஸ்வஸ்ய-ஸ்வ தந்திரம் உள்ளவனோடே ஓக்க பேசுவது இழுக்கு அன்றோ)

த்விதா பஜ்யேயம் -என்று இருக்குமவனோடு
சரணம் கத -என்று இருந்தவனோடு வாசி அறக் கைக் கொள்வன் என்றவனை
கபோத ஸ்தாநீயனாக்கினால்
கபோதியில் கெட்ட பிராட்டி இல்லை இறே –
அரை க்ஷணம் தாழ்த்தது பொறுக்க மாட்டாமல் சொல்லுகிறவை இறே இவை –

(ராவணனையும் விபீஷணனையும் ஏற்றுக் கொள்வேன் என்றானே –
புறா கதை அறிவோம்)

அன்றிக்கே
தத்துவம் அன்று தகவும் அன்று
உன்னுடைய ஸ்வரூபத்துக்கும் போருமது அன்று –
ஸ்வ பாவத்துக்கு போருமது அன்று
புருஷகாரமாய் நின்று சேர்ப்பாருடைய ஸ்வரூபத்துக்கும் ஸ்வபாவத்துக்கும் சேருமதோ இது

அகில ஜெகன் மாதரம் -என்கிறதுக்கும் சேராது —
அசரண்ய சரண்யாம் -என்கிறதுக்கும் சேராது –
தேவ தேவ திவ்ய மஹிஷீம்-என்று கட்டின பட்டத்துக்கு சேரும் அத்தனை –

ஆல்-ஆச்சர்யம்
தத்துவமன்று தகவு –
ஆகிலும் புருஷகார பூதையான உனக்கு-எம்பெருமானை நம்மோடு சேர ஒட்டாமல்
பண்ணுகை ஸ்வரூபம் அன்று-

தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-
தத்துவம் -சத்யம் அன்று -தகவு -தகவன்று என்று எங்கள் ஆற்றாமையால் சொல்லுகிறோம் அன்று
மெய்யே தர்மம் அன்று –
தத்துவம் அன்று -ஸ்வரூபம் அன்று –
உன் ஸ்வரூபம் நீர்மை அன்று இனி அவனில் உனக்கு வாசி இல்லை என்று இருக்கிறோம்

உன்னை அவனை விட உயர்ந்த நிலையில் கருதினோம் -இப்பொழுது இவன் உடன் சாம்யம் என்று மட்டம் தட்டுகிறார்கள்

பாபா நாம் என்ற இடம் (லுகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி )பொய் என்கிறார்கள் –
த்விதா பஜ்யேயம் -என்றத்தோடு சரணம் கத என்றத்தோடு (ராவணன் வார்த்தையும் விபீஷணன் வார்த்தையும் ) வாசி இல்லை
இவள் சந்நிதி யுண்டானால் பெறுகைக்கு கபோதியில் கெட்ட பிராட்டி யுண்டோ என்று இருந்தார்கள்

(புறா கதை -பேடையைப் பிரித்து இத்யாதி -வேடனுக்கு தன்னையே கொடுத்ததே)

(ஆண் புறா ராமன் -இங்கு சீதையைக் கொள்ள வில்லை –
அங்கு வேடன் வந்தான் -இங்கு தம்பி தானே வந்தான்
அங்கு சரணம் சொல்லவில்லை
இங்கு விபீஷணன் சரணம் கத என்றும் சொன்னான்
இவனைக் கைக் கொண்டாலும் -உயிர் கொடுத்த புறாவுக்கு கீழ் தானே  ஆகும்)

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை
வேடனுக் குதவிசெய்வான் விறகிடை வெந்தீ மூட்டி
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம்புள்
வீடுபெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிதன்றோ  (கம்ப ராமாயணம்) -இந்தக் கதை ஸ்ரீராமர் சொன்னது.

(அப்யஹம் ஜீவிதம் -ரிஷிகளைக் காத்தே தீருவேன் -நம் ஆச்சார்யர்கள் இந்த வசனம் இன்றும் நமக்கு ஸமாச்ரயணம் பண்ணி அருளி சாதிக்கிறார்கள்)

———————

ஸ்ரீ மத் பாகவதம் -10 அத்யாயம் -28 ராச பஞ்சகம் ஐந்து அத்யாயம் -ராஸக்ரீடை தியானிக்க காமம் அற்று தீரும் காஞ்சி பெரியவர்
கண்ணனுக்கே அற்ற காமம் வளரும் -ஆகவே நீளா துங்க தனியனில் பட்டர் வைத்து அருளினார்
சார்ங்க பாணி திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் -நப்பின்னை கொங்கை மேல் கண்ணனும் -இவன் மேல் அவளும் – -முன் புறம் முதல் தளம்
கீழ்ப்படி வைத்து நம்மை ஈர்த்து மேல் கோபுரம் போல் உள்ளம் உயர வைக்கிறார்கள் –

மாற்று சேவை -அம்மான் சேவை -இங்கு மட்டும் தானே -ஆராவமுதன் இவன் மட்டுமே தானே -அத்தையும் ஆசைப்பட்டு தாயார் அவன் திருக்கோலம் இங்கு மட்டுமே

blossaming heart -மலர் மார்பன்-மலர்ந்த -மலர்கின்ற மலரப்போகிற –
நப்பின்னை புருஷகாரத்தால் பஞ்ச லக்ஷம் கோபிகளும் சேர மேலும் மலர்வானே

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்–கண்டனன் சீதையை –கண்களால் -அவள் காட்டக் கண்டேன் -திருவடி –
ரதி மதி –அப்படிப்பட்ட காடாஷம்
x ray கண்கள் அவனது குறைகளை பார்க்கும் cooling glaas கண்
துணியை வெட்ட எது -கத்திரிக்கோல் பத்தி கத்திரிக்காய் சொன்னாலும் -பாதி சரி என்று மதிப்பெண் கொடுப்பது போல்

சீதா அசோக வனம் கேஹெ -ராமன் சோக வனம் அடைந்து -வால்மீகி கவனம் எழுத –
நாம் வனம் அழுது கொண்டே அனுபவிக்க அன்றோ பிரிந்தாள்

—————

முக்த ப்ராப்ய ஆகாரம் -2-8 –கௌஷீக உபநிஷத் -பரியங்க வித்யை -அரவணை மேல் அணைவது பூம் பாவை ஆகம் புணர்வது
பஞ்ச சயனம் மேல் ஏறி நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா-பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் தேசிகன்

சாஸ்திரம் குத்து விளக்கு -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிஹாச புராணங்கள் -அருளிச் செயல்கள் ஐந்து வித முக விளக்கு

சதுர்வித உபாயம் புருஷார்த்தம்-ஞானம் அஞ்ஞானம் வைராக்யம் அவைராக்யம் நான்கும் —கோட்டுக்கால் கட்டில்-பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம்

உடன் அமர் காதல் மகள் -சேஷீ தம்பதி -தத்வம் மிதுனமே தத்வம்-ஸ்வரூபம் -அன்று -சம்சாரிகள் அபேக்ஷித்த காலத்தில் -தகவு -குணங்கள் –

(ஆச்சார்யர் தானே குத்து விளக்கு –
சாயைப் போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -எம்பார் -பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்கள் ஆவார்
பாதுகையே ஞானமும் அளித்ததே
அர்த்த பஞ்சகம் -பஞ்ச சயனம் –
கொங்கை மேல் திருமலைகளில் -மலர் மார்பா பரந்த திரு உள்ளம் -எம்பெருமானார் பட்டம்
பக்தி அஞ்சனம் மை
பிரிந்து இருப்பார் யார் -பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை -பெரும் திவத்திலும் அன்பு அற்று
தத்வம் ஸ்வரூப ஞானத்தால் அன்று தகவு -கருணையால் முக்தர்)

குத்து விளக்கு எரியக் கோட்டுக்கு கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –

நப்பின்னை நங்காய் திருவே -என்கையாலே -ஸ்ரீ சப்தார்த்தமும் –

உன் மணாளனை என்கையாலே -ஸ்ரிங் சேவாயாம் -என்கிற தாத்வர்த்தமும்-

நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா -என்றும் –

நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் -என்கையால் –
வாத்சல்யாதி குண பிரகாசகமான நாராயண பதத்தில் அர்த்தமும் –

——————

குத்து விளக்கு -நப்பின்னையே கொண்டு வியாக்யானம்

பாஸ்கரன் பிரபை போலே சீதை பிராட்டி -தன்னையும் காட்டி ஆதித்யனையும் காட்டிக் கொடுக்கும் படி –
ஆயர் பாடிக்கு அணி விளக்கு பிரகாசிக்க இட்ட நிலை விளக்கு இ றே இவள் தான் –

தன்னை தான் காட்டாமையாலே அபிரகாசகம்–பாரதந்த்ர்யத்தால் அந்ய அதீன பிரகாசம் ஆனதே
இவள் தன்னை காட்டுகையாலே சுயம் பிரகாசம் ஆகிறாள் —ஸுய ஆஸ்ரயம் விலக்குகையாலே பர பிரகாசகம் ஆகிறாள் –

பிராட்டி பற்ற புருஷகாரம் வேண்டாமே ஸுய பிரகாசகம்–கண்ணனை காட்டி தருவதால் பர பிரகாசகம்
அவனுக்கு விளக்கு இ றே இவள்–ஔ ஜ்ஜ்வல்யம் பிரபை
திகழ்கின்ற தன்னோடும் திகழ்கின்ற திருமால் —வைஷ்ணவ சாத்தம் இல்லை அவனாலே இவளுக்கு ஏற்றம்
பூவுக்கு மணம் போலேயும் ரத்னத்துக்கு ஒளியை போலேயும்–மணம் வஸ்து இல்லை விசேஷணம் இத்தால் தான் வஸ்துவுக்கு ஏற்றம்
அடங்கி கீழ்பட்டு அவனுக்கு ஏற்றம் கொடுக்கிறாள்–கபோதம் -ஒப்பு சொல்லி -கபோதி பெண் பறவை -பிராணனை விட்டு ரஷித்தது-
அரை ஷணம் தாழ்த்தது பொறுக்க மாட்டாமல்–பஷி பெருமாள் திரு உள்ளம் புண் படுத்திற்றே -அமுதனார்
தகவு மாலை -சாற்றி அருளுகிறாள்
தத்துவம் அன்று தகவன்று –தத்வமஸி வாக்யார்த்தம் பிறர் சொல்வது தகவு அன்று
தத் -பிரமம் தவம் ஜீவாத்மா ஒன்றே என்னும் தத்வம் தகவன்று
தத்வமஸ் யேவமாத்யா வ்யாக்யாதா ரங்கதாம ப்ரவண விஜயபிர் வைதிகை சார்வ பௌமை -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -24-
மைத்தடம் கண்ணினாய் –சித்தாஞ்சனம்-ஞான விகாசம்பெற்ற
எத்தனையேலும் பிரிவு ஆற்ற கில்லாத -ஆச்சார்யனை பிரிந்து இருக்க மாட்டாத சிஷ்யன்

தோரண விளக்கு -ஸ்தாவரமாய் இருக்கும-குத்து விளக்கு -ஜங்கமம் இருக்கும்
குத்து விளக்கு எரிய -நம்பி பக்கலில் அர்த்த விசேஷம் கேட்டு அறிய
கோட்டு -கோட்டி
கால் கட்டு -திருவடி தொட்டு சபதம் செய்து கொடுத்த பின் அர்த்த விசேஷம் அருளியது ஸூ சகம்
மேல் ஏறி -சன்னதியின் மேல் ஏறி
ஆச்சார்யர் திவ்ய ஆஞ்ஞையைக் கடந்து–இத்தாலே மலர்மார்பா ஹிருதய வைசால்யம்

நாத முனிகள் தனியன் திருவாய்மொழி -1000 -கேட்டவர் கொண்ட வார்த்தை -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –
பக்தாம்ருதம் —-திராவிட வேத சாகரம் -திருத்திலனேல் நிலத்தேவர் தம் தாம் விழாவும் அழகும் என்னாகும் -சடகோபர் அந்தாதி
பட்டர் -குத்து விளக்கு பாசுரம் கொண்டே -கொங்கை மெல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -நீளாதுங்க ஸ்தன -தனியன் –
அத்யாபனம் ப்ரஹ்மாவுக்கு வேதம்–இங்கே ஆண்டாள் தூங்கு மூச்சி கண்ணனுக்கு கேளாய் -வைத்து கிடந்த மலர் மார்பா –
அத்யாபயந்தி -ஸ்ருதி சிரஸ் சத-
தோரண விளக்கு திருக் கோஷ்டியூர் நம்பி
திருமாலை ஆண்டான் -கிடாம்பி ஆச்சான் 2/3 இடங்களில் தான் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி –
அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால்-எம்பெருமானார் நிர்வாகம்
குத்து விளக்கு எம்பெருமானார் -எங்கும் கொண்டு போகலாம்
கீதா பாஷ்யம் -த்யானம் செய்து வஸ்து பதாம் போஜம் அசேஷ கல்மிஷம் போக பெற்று
த்ரோணாசார்யர் ஏகலைவன் -இவ அஹம் யாமுனாசார்யா -தேசிகன் –
நேரான சிஷ்யர் பண்ணின தனியன் நம் இடம் இல்லை–உடையவர் செய்து அருளிய தனியனை அனுசந்தித்து வருகிறோம்
த்யானம் சப்தம் -சரம திருமேனி சேவிக்கப் பெற்றாலும் -அத்தை சொல்ல வில்லை —ஸ்மர்த்வயம் த்வயமும் குரு பரம்பரையும் –

கோட்டுக்கால் கட்டில் கால் நான்கு–13 விஷயங்கள் -நான்கு வித ஆசார்ய ஹிருதயம்–தேக -ஆஸ்ரய இத்யாதி
சாஸ்திரம்
மெத்தன்ன சயனம் ஐஞ்சு லஷனங்கள் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதற்க்கு உள்ளே உண்டு அர்த்த பஞ்சகம்
மேல் ஏறி
கட்டில் மேல்
மேல்
மறுபடியும் மேல் ஏறி
திரு கோஷ்டியூர் நம்பி அர்த்தம் கேட்க மேல் ஏறி
பலம் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட செய்வோம் –
மலர்ந்த மார்பு -ஆசை உடையோர்க்கு எல்லாம் என்று –
மைத்தடம் கண்ணினாய் —தோஷம் போனால் தான் கண்–பக்தி சித்தாஞ்சனம் –
வந்து திறவாய் மணக்கால் நம்பி பச்சை இட்டு–கொள்ள வந்தேன் அல்லேன் கொடுக்க வந்தேன் –
குருகை காவல் அப்பன் -சன்னதி காட்டு மன்னார் கோயில் 10 மைல் தூரம் –
தை மாசம் குரு புஷ்யம் 12 மணிக்கு வரச் சொல்லி —சொட்டை குலத்தார் யாரேனும் வந்தார் உண்டோ
நாதமுனிகள் -ஆழ்வாரை சாஷாத் கரிதததால் வந்த ஸ்ரேஷ்டம்
நடமினோ நமர்கள் உள்ளீர் -ஆழ்வார் சம்பந்தம் வேண்டுமானால்
நாமும் உமக்கு அறிய சொன்னோம் ஆளவந்தார் இடம் அரையர் -அத்யயன உத்சவம் சேவித்து கொண்டு இருக்கும் பொழுது
புஷ்பக விமானம் பெற்றிலோமே —எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத் தவம் அஸி -தத்துவம் அன்று -தகவேலோ –
சர்வம் கல்மிதம் ப்ரஹ்மா
ஐகதாத்மாம்யம் இதம் சர்வம்
தத் தவம் அஸி
நீர்மையினால் அருள் செய்தான் கலைகளும் –
காருணிகனான சர்வேஸ்வரன்–நந்தா வேதா விளக்கை கண்டு–மறையாய் -சாஸ்திர பிரதானம் –
சரீர லஷணம் –தார்யம் நியாம்யம் சேஷத்வம் ஸ்வரூபம்–யஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் ஏகோ நாராயணா
தத் தவம் அன்று –
பிரிவு நமக்கு எம்பெருமான் இடம் உண்டா
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் இன்றாகா நாளையாக –நான் உன்னை அன்றி லேன் நீ என்னை அன்றி இலேன் -கண்டாய் நாரணனே –

சீரிய சிங்காசனம் -ஆசனம் சிங்காசனம் சீரிய மூன்று
மூன்றும் உண்டே பேத அபேத கடக ஸ்ருதி
சீரார் வளை ஒலிப்ப மூன்றும்
செந்தாமரைக் கை மூன்றும் இத்தையே குறிக்கும் –

————————

19. குத்து விளக்கு :

தன்னையும் காட்டிபுறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல் விளக்கு போல் ஆசான் — துன்னிருள்
நம்மின் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழி நடத்தும் மால்.

உன்னுடைய மைத்துனனை எங்கள் மணாளன் ஆக வேண்டும் படியாய் விசிறி கண்ணாடி அத்தோடு தந்து
எம்மை நீராட்ட வேண்டும் என்று நப்பின்னை பிராட்டியை பிரார்த்திப்பதாக அமைந்த பாசுரம்.
மாஸுச : என்றிருக்கிற பவனுடைய அபய ஹஸ்தம் தாமரைக் கை என்றால்
அவன் ஸ்வாதந்திரனாய் வந்தாய்ப் போல் வாராதான் ஆனபடியால் அதற்கு அஞ்ச வேண்டா என்கிற
பிராட்டியினுடைய கை செந்தாமரைக் கை ஆனபடி.
கேசவன் தமர் பதிகத்தில் ஆழ்வார் – மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றவா – என்றதும்
ஸ்வ பிரயத்னத்தால் பகவானைக் கிட்டுவது இளிம்பு.
பாகவதேக உபாய நிஷ்டராய் அவனுடைய கிருபாதிசயத்தாலே அவனைக் கிட்டுவது சதிர்.
மா – பிராட்டி. அவள் கொடுக்கப் பெறுவது மா சதிர்
என்று காட்டினபடி உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனையம் தந்து இப்போதே எம்மை நீராட்டு என்று
பிராட்டி பரிகாரமாய் நின்று பேசுகிறாள் ஆண்டாள்.

கோதா கீதையான திருப்பாவையும் – ஸ்ரீ கிருஷ்ண கீதையாம் பகவத் கீதையைப் போன்ற
அமைப்பைக் கொண்டு இருப்பது அதற்கான சிறப்பு. அதுதான் எங்கனே என்னில்?
குத்துவிளக்கு எரிய – ஞானம் பிரஜ்வலிக்கிறது என்ற பொருளில் ஒளி இருந்தால் இருட்டு போய்விடும்.
இங்கு சொல்லப்பட்ட இருட்டுதான் – அகவிருளும், புறவிருளும் . இத்தை போக்க
பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கு – வருத்தும் புறவிருள் மாற்ற
பூதத்தாழ்வார் – இறைவனைக் காணும் இதயத்திருள் கெட
பேயாழ்வார் – கோவலூள் மாமலராள் கண்டமை காட்டும்
மூவர் ஏற்றிய ஜ்ஞான விளக்கு.

கீதாசார்யன் காட்டும் சோபான படிக்கட்டில்
படிக்கட்டு – 1
பகவத் ஸாட்சாத்காரத்துக்கு பிரதிபந்தகமாக உள்ள இதயத்திருள் கெட
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : – கீதை 3.8.
அப்படி கர்மாநுஷ்டானங்களை விடாது செய்யச்செய்ய கர்ம யோகத்தில் வருவதற்கான –
தேஹ அதிரிக்த ஆத்ம ஞானம் மாகிற ஓடம் அநாதிகால பாபமாகிற கடலை தாண்டுவிக்கும்.
ஜ்ஞான ப்லவேநைவ வ்ரிஜினம் ஸந்தர்ஷயஸி – கீதை 4.36.
ஓடம் மறுகரைக்கு மீண்டுவிடுமோ என்று பயந்தாயே ஆகில்
ஞாநாக்னி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத் குருதே ததா – கீதை 4.37.
இல்லை அர்ஜுனா – அதே ஜ்ஞானம், அக்கினியைப்போலே பாபா கூட்டத்தைப் பஸ்மமாக்கிவிடும்.
எல்லா பாபங்களையும் என்றால், பக்தியை ஆரம்பிக்க தடையாய் யாயா பாபங்கள் உள்ளனவோ
அவை அனைத்தும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
படிக்கட்டு – 2
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந : – கீதை 6.19.
எப்படி காற்று வீசாத இடத்தில் தீபமானது அசையாது நின்று ஒளிவிடுமோ அதுபோல
விஷயாந்தர சுகத்தில் மனது லயிக்காத படிக்கு ஆத்ம விஷயத்தில் மனதை உறுதிபடுத்த வேண்டும்.
படிக்கட்டு – 3
ஜ்ஞாநாஞ்சன சலாகையா ஸக்ஷுர் உன்மீலனம் – ஆசார்ய உபதேசம்.
அதற்கு ஆத்ம சிந்தனம் மட்டும் போதாது. ஆத்ம ஜ்ஞானம் பகவத் ஜ்ஞானமளவாக வளர
ஆசார்ய உபதேசங்களாகிற திறவுகோல் கொண்டு ஜ்ஞானக்கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஆச்சார்ய ஸந்நிதி அவசியம்.
அடுத்து பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மேன்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
தத்வித்தி பிரணி பாதேந பரி பிரச்நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிந : தத்வ தர்ஸிந : – கீதை – 4.34.

என்கிற கீதையின் வழியிலேயே ஆண்டாளும்
செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று
நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
என்பதாக கீதையில் சொல்லப்பட்ட நியதம் குரு கர்மத்வம் என்பதை பேசினாள்.
அதை ஆத்ம வித்தையோடு செய்ய வேண்டும் என்பதையும்
நாராயணனே நமக்கே பறை – என்கிற உபாய-உபேய அத்யாவசாயம் சொன்னபடி.
கர்மாநுஷ்டானங்களால் அநாதிகால கர்ம வாசனா ரூபமான பாபங்கள் கழியும் என்பதை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றாள்.
இனி ஜ்ஞானம் பகவத் விஷயமளாவாக வளர
அஜ்ஞானம் குறைந்து ஜ்ஞானம் வளர வேண்டும் என்பதை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்றும் ,
பாபம் குறைந்து புண்யம் வளர வேண்டும் என்பதை செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
என்று பேசினாள் ஆண்டாள் .
தவிரவும், பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மென்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
பாசுரம் 16-17-18 களில் கடக கிருத்யரான நந்தகோபரைப் பற்றி பிரஸ்தாபித்தாள்.
பாசுரம் 18-19-20 களில்
நப்பின்னையை புருஷகாரமாக பற்றி கண்ணனோடு சேர்ப்பிக்க பிரார்திக்கிறாள். இங்கு உள்ள சுவாரஸ்யம் என்ன வென்றால்,
பாசுரம் 18-ல் ஆசார்ய சம்பந்தமும், புருஷகார பிரபத்தியும் சேர்த்து சொன்னதுக்கு தாத்பர்யம்
ஆசார்யன் ஆஸ்ருதரான நமக்கு ஆத்ம-பரமாத்மா விஷயமான ஜ்ஞானத்தை கிளப்பி விடுவதை போலே,
புருஷகார பூதையான பிராட்டி பகவன் நிக்ரகத்தை அனாஸ்ருந்தார்கள் விஷயத்தில் மடை மாற்றி,
ஆஸ்ருதர்கள் விஷயத்தில் ஸ்வாதந்திரியம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை கிளப்பி விடுகிறாள் –
என்பதான கிருபை இருவருக்கும் பொதுவானதாய்க் கொண்டு.

மேலும்
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத – அந்த நாராயணனையே சரணமாக பற்று என்று கண்ணன் சொல்ல ,
அர்ஜுணன் – கண்ணன் இவன் தானே நாராயணன், அந்த நாராயணனை பற்று என்கிறானே – என்று குழம்ப அதை விலக்கவே பின்பகுதியில்
மாமேகம் சரணம் விரஜ – என்று பேசினான்.

ஆனால் ஆண்டாளோ – நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும்
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – உனக்கே நாமாட் செய்வோம் என்றும் ஸு ஸ்பஷ்டமாக பேசினாள்.

இங்கு சாந்தோக்யம் 4வது பிரபாடகத்தில் உள்ள உபகோஸல விதை பிரகரணத்தில் சொல்லப் பட்ட
ஜாபால – உபகோஸல விருத்தாந்தம் ஸ்மரிக்கத்தக்கது .
ஆசாரியரான ஜாபாலர் சிஷ்யனான உபகோஸலனுக்கு பிரஹ்ம வித்யை பூர்ணமாக உபதேசிக்காமல் காலம் தாழ்த்த ,
பிள்ளைக்கு ஆசார்யானுகிரகம் ஏற்படவேயில்லையே என்று ஏக்கம் பிறந்து தவிக்க, இடையில் ஆசாரியன் காரியாந்தரமாக
வெளியூர் சொல்ல வேண்டி வந்தது. எனவே சிஷ்யனிடத்தில் அக்நி சந்தானத்தை ஆராதித்துக் கொண்டு காத்திரு என்று சொல்லி
பயணத்தில் உத்தியுக்தரானார். சிஷ்யப்பிள்ளைக்கு சோறு தண்ணீர் செல்லாமல் , ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தை நடத்திப் போர ,
ஆச்சார்ய பத்நி விசாரித்தும் நிலைமை சீர்படாது போக, நித்ய ஆராத்ய அக்நி தேவதை மூவரும்,
பிள்ளைக்கு இரங்கி தாங்கள் சில அர்த்தங்களை உபதேசித்தனர்.
பிராணன் தான் பிரஹ்மம்.
அந்த பிரஹ்மத்துக்கான ஸ்தானம், அதை அடைய உண்டான கதி இது விஷயமாக அக்நி தேவதைகள்
க(1)ம் பிரஹ்ம – சுகம் = பிரஹ்ம ஸ்வரூபம் ஆனந்தம்.
க(2)ம் பிரஹ்ம – ஆகாசம் = பிரஹ்மம் அபரிச்சின்னம் .
யதேவஹ க(1)ம் ததேவ க(2)ம்.
யதேவ க(2)ம் ததேஹ க(1)ம்
என்று பிரஹ்ம ஸ்வரூபத்தைச் அக்நி தேவதைகள் சொல்லி நிற்க,
அந்த பிரஹ்மத்தை அடைய அவன் ஸ்தானத்தை உபாஸிக்க உபயுக்தமான அவன் குணத்தை அவனை அடைவிக்கும் கதி
இவை பற்றி சொல்ல வேண்டும் என்று பிள்ளை கேட்க
ஸம்யக் வாமநத்தவம்
வாமநீத்தவம்
பாமநீத்வம்
அக்ஷி புருஷன் பிரஹ்மம் என்பதாக முதல் இரண்டுக்கு விளக்கம் ஓரளவு சொல்லி
ஆச்சார்ய ஸ்துதே கதிம் வக்தா – என்று மார்க்கத்தை ஆச்சர்யனிடம் உபதேசமாய் பெற்றுக்கொள் என்று சொல்லி நிறுத்தினர்.
திரும்பி வந்த ஆச்சர்யனிடம் நடந்தத்தைக் கூறி, மார்க்கமான அர்ச்சிராதி கதியை உபதேசமாகப் பெற்றான் உபகோஸலன் என்பது சாந்தோக்யம்.

கீதை 1-6 அத்யாயம் ஆத்மோபாசனம்
7- 12 அத்யாயம் கர்மத்தால் வளர்ந்த ஜ்ஞானத்தால் வந்த பக்தி உபாசனம்.
அந்த பக்தி வளர்வதற்கான பகவத் ரூப, குண, ஒளதார்யங்களைப் பற்றி
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி பக்தி யோகம் யேந மாம் உபயாந்தி தே – கீதை 10.10.
தேஷாமேவ அநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞான ஜந்தமஹ
நாசயாமி ஆத்ம பாவஸ்த : ஜ்ஞான தீபேன பாஸ்வதா – கீதை 10.11.
என்னுடைய அழகான திருமேனியை அவர்கள் உள்ளத்துக்கு விஷயமாக்கி குணாநுபவத்தை வர்த்திப்பித்து, கர்ம வினை பாசம் கழற்றுகிறேன்.

ஸ்தானம், குணம், கதி என்று மூன்று விஷயங்கள் போலே ஆண்டாளும்
அம்பரம், தண்ணீர், சோறு என்பதாக சொல்லி உபகோசலனுக்கு அருளிய மூன்று அக்நி போலே இவர்களுக்கு அருள
நந்தகோபனை மூன்று முறை பிரஸ்தாபித்து, கீழே சொன்ன விளக்குகளைக் காட்டிலும் பிரஜ்வலமான விளக்கு,
பகவத் ஸ்வாதந்திரியமாகிற இருட்டு களைய , நப்பின்னை பிராட்டியாகிற விளக்கு என்பதாக இந்த பாசுர ஸ்வாபதேசம்.

——————————————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கேனோ உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

December 25, 2022

கேனோ உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

முகவுரை
கர்ம காண்டம்
கர்ம தத்துவம் என்பது என்ன? கர்ம காண்டத்தில் பேசப்படும் கருத்துக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.  உடலை பிரதானமாக கொண்டு செய்யும் செயல், சொல்லை பிரதானமாக கொண்டு செய்யும் செயல் (பேசுதல், வேதம் ஓதுதல் ) மனதிலிருந்து செய்யும் செயல் ( சிந்தித்தல் – மானஸம்) என்று மூன்று நிலையிலிருந்து கர்மம் உற்பத்தியாகின்றது.  இந்த செயல்களினால் விளையும் பலன்கள் இரண்டாக பிரிக்கப்படுகின்றது. ஒன்று கண்ணுக்கு தெரியும் பலன்கள், மற்றொன்று நமக்கே தெரியாத பலன்கள்(அதிருஷ்ட பலன்) ஆகும்.  நமக்கு தெரியாத பலன்களே பாவ-புண்ணியங்கள் என்று கூறுவர்.  இந்த அதிருஷ்ட பலன்களான பாவம் துயரத்தையும், புண்ணியம் சுகத்தையும் கொடுத்து நீங்குகின்றது. இவையிரண்டும் உபாதியாக இருக்கின்ற நமது உடல் மூலமாக நமக்கு சுக-துக்கங்களை கொடுத்து அனுபவிக்க வைக்கின்றது. மேலும் உலகத்தில் படைக்கப்பட்ட அனுபவிக்கப்படும் பொருட்கள் மூலமாகவும், உபாதியும், விஷயமும் சேர்ந்திருக்கின்ற இடத்தின் மூலமாகவும், சூழ்நிலைகள் மூலமாகவும் இந்த அதிருஷ்ட பலன்கள் அனுபவிக்கப்படுகின்றது.  சுக-துக்கங்கள் கொடுக்கக்கூடிய பொருட்கள் தனித்தனியாக கிடையாது.  ஒரே பொருள் சுகமும் கொடுக்கலாம், துக்கத்தையும் கொடுக்கலாம்.

எப்படிபட்ட கர்மமானது இவையிரண்டையும் கொடுக்கிறது?
சுகத்தை தருவது புண்ணியத்தை தரக்கூடிய செயல்கள், துன்பத்தை தருவது பாவத்தை தரக்கூடிய செயல்கள். இதிலிருந்து புண்ணியத்தை தருகின்ற செயல்களையும், பாவத்தை தரக்கூடிய செயல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். தர்மத்திற்குட்பட்ட செயல்கள் புண்ணியத்தையும், அதர்மத்திற்குட்பட்ட செயல்கள் பாவத்தையும் கொடுக்கின்றது..

கர்மங்கள் மூன்று வகையாக சாஸ்திரம் பிரித்திருக்கின்றது. அவைகள்

  1. நியத கர்மங்கள்   – செய்ய வேண்டிய கர்மங்கள்
  2. நிஷித்த கர்மங்கள் –  செய்யக்கூடாத கர்மங்கள், தவிர்க்க வேண்டிய கர்மங்கள். இவைகள் நம்மையறியாமலே செய்ய வைத்துவிடும் சக்தியுடையது
  3. பிராயசித்த கர்மங்கள் – செய்த பாவ கர்மத்தின் பலனிலிருந்து விடுபட செய்பவைகள்.

தாய், தந்தை மற்றும் குரு இவர்களை தெய்வமாக மதிக்க வேண்டும்.  நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சாஸ்திரம் ஏன் சொல்கின்றது என்று பார்க்கும் போது பாவச் செயல்களை தவிர்ப்பதன் மூலம் கஷ்டத்திலிருந்து விடுபடவும், புண்ணிய செயல்களை செய்வதன் மூலம் சுகத்தை அனுபவிக்கவும், அல்லது பலனை அனுபவிக்காவிட்டால் மனத்தூய்மையையும் கொடுக்கும் என்ற கருத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.   மனத்தூய்மையே ஒருவனை ஞான காண்டத்திற்கு செல்லும் தகுதியை கொடுக்கின்றது

ஞான காண்டம்

இதில் ஞானமே பிரதானம். அழியாததும், என்றும் இருப்பதும், பூரணமானதும் போன்ற லட்சணங்களை உடைய ஒன்றை பற்றிய அறிவை கொடுக்கின்றது.  இந்த அறிவை அடைந்தவுடனே அதன் பலனை அடைந்து விடுவோம். உதாரணமாக பத்தாவது மனிதனை அறிவதும், துயரம் நீங்குவதும் ஒரே சமயத்தில் நடக்கின்றது. கர்ம ஞானம் அடைந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்தினால்தான் பலனை அடைய முடியும்.  உதாரணமாக சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய யாகத்தை செய்யும் முறையை அறிந்தால் மட்டும் போதாது, அந்த யாகத்தை செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

இந்த நித்ய வஸ்துவிற்கு பிரம்மன் என்று பெயர்.  இதனால் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் சம்சாரம் நீங்கி விடும்.  நான் என்பதற்கும், பிரம்மத்திற்கும் உள்ள சம்பந்தத்தை வேதம் சொல்கின்றது.

  1.      பிரம்மன் படைப்பவர்,நான் படைக்கப்பட்டவன்.  இந்த உடல் நாம் அல்ல, நமக்குள்ளே அறிவு ஸ்வரூபமாகவும், சாட்சி ஸ்வரூபமாகவும் ஆத்மா இருக்கின்றது.  இந்த ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றேதான் என்ற அறிவு.  இதுவே ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்.  இந்த ஞானத்தின் பலன் மோட்சமாகும்
  2.     ஜகத்தை பற்றிய விசாரம்,அதன் இருப்புத்தன்மை, அதன் உண்மையான நிலை என்ன என்பதையும் விவரிக்கின்றது.  இந்த ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த மித்யா அறிவானது பல படிகளாக சென்றுதான் புரிந்து கொள்ள முடியும்

2.1.   இது அநித்யம்- நிலையற்றது

2.2.   அஸாரம் – இதில் எந்த ஒன்றும் சாரமாக இல்லை.  எதற்கும் ஆதாரமாக இல்லை

2.3.   துக்க ஸ்வரூபம் – துயரத்தைக் கொடுக்க கூடியது. உலகத்திலுள்ள அனைத்தும் துயரத்தைக் கொடுக்க கூடியது என்ற அறிவினால் அதை விட்டு விலகி செல்லும் அறிவை அடைவோம்.

2.4.   உதாசீனம் – இந்த உலகமும் எனது லட்சியம் அல்ல என்று அறிந்து அதை நாடி செல்லமாட்டோம், விலகியே இருப்போம்.  அப்போதுதான் அது மித்யா என்று புரியத்தொடங்கும்.  உபநிஷத் இதையே ஜகத் மித்யா என்று உரைக்கிறது. பிறகு பிரம்மன் மட்டும்தான் ஸத்யம் என்ற அறிவையும் புகட்டுகின்றது.

உபநிஷத் என்பதை உப + நி + ஷத் என்று பொருள் கொள்ளலாம்.
உப = ஆத்மா ( நமக்கு மிக அருகில் இருப்பதுஆத்மா) நாமாக இருப்பது.  ஆத்மா மீதுதான் அகங்காரம் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது.
நி – நிச்சய ஞானம்.  இறுதியான, உறுதியான அறிவு, ஆத்மாவைப் பற்றிய உறுதியான அறிவு
ஷத் – நாசத்தை செய்வது.  உறுதியான ஆத்ம ஞானத்தின் மூலமாக சம்சாரத்தை அது கொடுக்கின்ற துயரங்களை நாசம் செய்தல்

இந்த உபநிஷத் கேன என்று ஆரம்பிப்பதால் இதை கேனோபநிஷத் என்று அழைக்கப்படுகின்றது.  இது சாம வேதத்தைச் சேர்ந்தது.  இது 35 மந்திரங்களைக் கொண்டது.  நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் இரண்டு பகுதியில் ஆத்ம வித்யாவும், அடுத்த இரண்டு பகுதியில் சில உபாஸனைகள், பண்புகள் கூறப்படுகின்றன.

சாந்தி பாடம்

ஆப்யாந்து மமாங்க3னி வாக்ப்ராணஶ்சக்ஷு: 

ஶ்ரோத்ரமதோ2 ப3லமிந்த்3ரியாணி ச ஸர்வாணி 

ஸர்வ ப்3ரஹ்மைபானிஷத3ம் மாஹம் ப்3ரஹ்மநிராகுர்யாம் 

மா மா ப்3ரஹ்ம நிரகரோத3னிரதரனமஸ்த்வனியகரணம் 

மேஸ்து ததா3த்மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மஸ்தே 

மயி ஸந்து  தே மனி ஸந்து ||

இதில் சரீர இந்திரியங்களின் சக்தியும், ஆரோக்கியமும் வேண்டப்படுகின்றது, சிரத்தையை வேண்டப்படுகின்றது, இறைவனுடைய அருள் வேண்டப்படுகின்றது, ஆத்ம ஞானத்திற்கு தகுதிகள் வேண்டப்படுகின்றது.

மம அங்காணி – என்னுடைய உடலுறுப்புக்கள்
ஆப்யாயந்து – ஆற்றலை அடையட்டும், சக்தியை அடையட்டும்
வாக், பிராணஹ, சக்ஷு, ஸ்ரோத்ரம் – எல்லா கர்ம இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதோ2 ப3லம் இந்திரியாணி, ஸர்வாணி  – எல்லா இந்திரியங்களும் பலமாக இருக்கட்டும்.  பிரம்ம ஞானம் வளர்வதற்காக இவைகளின் சக்தி இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்றது.
ஸர்வம் பிரம்மவோபநிஷதம் – இந்த உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் உபநிஷத்தினால் அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றது.
மா அஹம் பிரஹ்மம் நிராகுர்யாம் – நான் அந்த பிரம்மத்தை நீக்காமல் இருப்பேனாக. இது சிரத்தையை காட்டுகின்றது
மா மா பிரஹ்ம நிரகரோத் – பிரம்மன் என்னை நீக்காமல் இருக்கட்டும்.

அனிரா கரணமஸ்த் – என்னால் பிரம்மன் நிராகரிக்காமல் இருக்கட்டும்

அனிரா கரணம் மே அஸ்து – பிரம்மன் என்னை நிராகரிக்காமல் இருக்கட்டும்

  • இந்த பிரம்மனிடத்தில் எனக்கு இருக்கும் நம்பிக்கை சிரத்தை என்னை விட்டு போகாமல் இருக்க வேண்டும்.
  • என்னுடைய லட்சியம் பிரம்மத்தை அடைவது என்ற குறிக்கோள் என்னை விட்டு நீங்காது இருக்கட்டும்
  • என்னுடைய முமுக்‌ஷுத்துவம் என்னை விட்டு போக வேண்டாம்
  • உதாசீன புத்தி என்னிடத்தில் வரக்கூடாது.  மோட்ச மார்க்கத்தில் எனக்கு அவநம்பிக்கை வந்து விடக்கூடாது.

மா பிரஹ்ம மா நிராகரோதி: நான் எப்பொழுதும் ஈஸ்வரனுடய கருணைக்கு தகுதியானவனாக இருக்க வேண்டும்.  ஈஸ்வரனுடைய அனுக்கிரஹம் என்றென்றும் எனக்கு கிடைக்க வேண்டும்.  மோட்சத்தை அடையும் லட்சியத்தில் மாறாமல் இருக்க வேண்டும்.
ததா3மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து:
அந்த பிரம்மத்தை அறிகின்ற மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ள என்னிடத்தில் உபநிஷத்தில் என்னென்ன தகுதிகள் சொல்லியிருக்கின்றதோ அவைகள் இருக்கட்டும்
உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள தர்மங்கள், சாதன-சதுஷ்டய-சம்பத்தி என்ற தகுதிகள் என்னிடத்தில் நிலை பெறட்டும்.

  1. விவேகம் – உலகத்திலுள்ள அனைத்தும் நிலையற்றவை அவைகள் என்னுடைய லட்சியமல்ல என்று அறிந்து கொள்ளுதல்
  2. வைராக்கியம்   – இந்த லட்சியத்தில் நிலையாக இருக்க உதவுகிறது
  3. முமுக்ஷுத்வம்  – அந்த லட்சியத்தை நாடி செல்ல உதவுகிறது
  4. சம                            – மன அமைதியாக வைத்திருத்தல், கட்டுபாட்டுடன் வைத்திருத்தல்
  5. 3ம                         –  இந்திரியங்களை அமைதியாக வைத்திருத்தல்
  6. உபரதி                    –  இந்த சம, தமத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க உதவுவது
  7. திதிக்ஷா                –  இருமைகளை சகித்து கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல்
  8. சமாதானம்          –  நாம் அடைய நினைக்கும் லட்சியத்தில் ஈடுபாட்டுடன் இருத்தல்

———————————————————————————————————————————————-

காண்டம் – 1

மந்திரம்1

கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன: கேன ப்ராண: ப்ரத2ம: ப்ரௌதி யுக்த: |

கேஷிதாம் வாசமிமாம் வத3ந்தி சக்ஷு: ஶ்ரோத்ரம் க உ தே3வோ யுனக்தி ||

கேன இஷிதம்                            யாரால் ஆசைப்பட்டு,

ப்ரேஷிதம் மனஹ பததி       பலவந்தபடுத்தப்பட்டதாக மனது செயல்படுகிறது

கேன யுக்த                                    யாரால் பொருந்தியவனாக

ப்ரதம ப்ராணஹ ப்ரைதி      நம்முடைய மூச்சுக்காற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றது

கேன இஷிதாம்                         யாருடைய ஆணையால்

இமாம் வாசம் வதந்தி           இந்த வாக்கானது பேசப்படுகின்றது

தேவோ யுனக்தி                       எந்த தேவனின் ஆணையினால்

சக்ஷு ஸ்ரோத்ரம்                   கண்ணும், காதும் செயல்படுகிறது

இந்த ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறான ஒரு சேதன சக்தி இருக்க வேண்டும் என்று தெரிகின்றது.  இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றது.  அதனுடைய ஸ்வரூபம் என்ன என்பதை அறிந்து கொள்ள சிஷ்யன் நினைக்கின்றான்

  •       ஸ்தூல சரீரமானது மரணத்திலும்,முக்தி நிலையிலும், ஆழ்ந்த உறக்கத்திலும் ஜடமாகி விடுகின்றது.  எனவே வேறு ஏதோ ஒன்று சேதனமாக இருந்து கொண்டு இந்த ஸ்தூல சரீரத்தை இயக்குகிறது
  • சூட்சும சரீரமும் ஜடமாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற அறிவுடன் இருக்கின்றான்
  • மனம் ஜடம் என்று அறிந்து கொள்வது கடினம். சூட்சும சரீரமானது சூட்சும பூதத்திலிருந்து உருவானது.  சூட்சும சரீரம் அந்தக்கரணமாக இருக்கின்றது.  எந்தவொரு கரணத்திற்கும் அதை இயக்க ஒரு கர்த்தா இருந்தாக வேண்டும், அது தானாக இயங்க முடியாது.  எனவே இந்திரியங்களை, அந்தக்கரணத்தை இயக்குவதற்கு ஒரு கர்த்தா நிச்சயமாக இருந்தாக வேண்டும்,
  • தேரானது பலவிதமான பொருட்களை கொண்டு உருவாக்குகிறார்கள். ஆனால் அதில் கடவுளை வைத்து இழுத்து வீதி உலா வருகிறார்கள்.
  • இந்த கர்த்தாவானது உடலுக்கு வேறுபட்டதா அல்லது உடலோடு ஒட்டியிருக்கிறதா?இதனுடைய உண்மையான ஸ்வரூபமென்ன ?
  •       நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று மனதை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது.
  •       ஏதோவொரு தத்துவத்தின் இருப்பினால்தான் நம் மனமானது செயல்படுகிறது?நமது புலன்களையும் வேறொரு சக்தியானது இயக்குகின்றது.
  •       நாம் உணர்வுமயமாக இருப்பதற்கு எது காரணமாக இருக்கிறது?.

இந்த வினாக்களுக்கெல்லாம் அடுத்த மந்திரத்தில் விளக்கம் தரப்படுகின்றது.

மந்திரம்2

ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மனஸோ மனோ

யத்3வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண: |

சக்ஷுஷஶ்சக்ஷுரஹிமுச்ய தீரா:

ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ||

 

ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்         காதுக்கு காதாக இருப்பது எதுவோ

மனஸஹ மனோ யத்3                  மனதிற்கும் மனதாக இருப்பது எதுவோ

வாசோ ஹ வாசம்                           சொல்லுக்கும் சொல்லாக இருப்பது எதுவோ

ஸஹ ப்ராணஸ்ய ப்ராண          பிராணனுக்கு பிராணனாக இருப்பது எதுவோ

சக்‌ஷுஷ்2ச சக்‌ஷூஹு               கண்ணுக்கு கண்ணாக இருப்பது எதுவோ

தீரா                                                         அதுவே ஆத்மா என்று புரிந்து கொண்டிருக்கும் புருஷர்கள்

அஸ்மாத் லோகாத்3 அதிமுச்ய    இந்த உலகினின்றும் விடுபட்டு

ப்ரேத்ய                                                 உடலை கடந்து சென்று

அம்ருதா ப4வந்தி                          அழிவற்றவர்களாகிறார்கள்.


அதுதான் இவைகள் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது.  இதை அறிந்த தீரர்கள் இந்த உடலின் நான் என்ற புத்தியையும், அபிமானத்தையும் விட்டுவிடுகிறார்கள். உணர்வற்ற ஜடமான இந்த உடலின் மீது நான் என்ற புத்தியை விட்டுவிடுகிறார்கள்..  இந்த மூன்று சரீரத்திற்கும் வேறான சேதன தத்துவமான ஆத்மாதான் முதல் மந்திரத்தில் கேட்ட கேள்விக்கு பதிலாகும்.

விசாரம்:
சைதன்யத்தை சார்ந்துதான் நமது உடலிருக்கிறது. ஆனால்  இது நமது அனுபவத்திற்கு முரணாக இருக்கிறது. ஒன்றுமே தெரியாத விஷயத்தை நேரிடையாக தெரிய வைத்து விடலாம்.  ஆனால் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது இரண்டு நிலைகளில் அதை புரிய வைக்க வேண்டும். உதாரணமாக கயிற்றை பார்த்து பாம்பு என்று சொல்லும்போது இதில் கயிற்றை பற்றிய அறிவும் இருக்கிறது, பாம்பும் தெரிகிறது.  இந்த விஷயத்தில் முதலில் பாம்பை அவன் எண்ணத்திலிருந்து நீக்க வேண்டும், பிறகு அது கயிறுதான் அது என்று சொல்ல வேண்டும்.

ஆத்ம தத்துவம்:
நாம் நம் உடல் உணர்வுடையதாக இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். இதை முதலில் மனதிலிருந்து நீக்க வேண்டும். பிறகு ஆத்மாவைப் பற்றி புரிய வைக்க வேண்டும். இந்த முறையையே அத்யாஸ-அபவாதம் என்று அழைக்கப்படுகின்றது.  ஆத்மாவின் ஸ்வரூபம் சேதனம், அனாத்மாவின் ஸ்வரூபம் ஜடம். நாம் ஆத்மாவின் உணர்வு ஸ்வரூபத்தை ஜடமான உடலில் ஏற்றி வைத்து இந்த உடல் சேதனமானது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  உடலின் தர்மத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.

நம் உடலின் தர்மம் மாற்றம் அடைந்து கொண்டிருப்பது. மேலும் உடலின் எந்த பகுதி அறிவுடன் செயல்படுகின்றதோ அதற்கு பின்னே சேதனத்வம் இருக்கின்றது. காதால் கேட்கப்படும் சக்தியானது அதற்கு பின்னே இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவினால்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. காதுக்கு காதாக இருப்பது ஆத்ம தத்துவம். கண்ணுக்கு கண்ணாக இருப்பதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறாக உள்ள ஒரு சேதன தத்துவம் அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.  இவைகள் நமக்கு அனுபவமாக இருந்தாலும் உண்மையான அந்த ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆகாசம் நீல வர்ணமாக அனுபவத்தில் தெரிகின்றது, ஆனால் ஆராய்ந்து பார்த்து அடையும் அறிவைக் கொண்டு அனுபவம் தவறு என்று புரிந்து கொள்கிறோம்.

காதுக்கு கேட்கக்கூடிய குணத்தையும், கண்ணுக்கு பார்க்க கூடிய குணத்தையும் கொடுப்பது சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாதான்.  ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் என்ற வாக்கியத்தில் ஸ்ரோத்ரஸ்ய என்பது ஆபாஸ சைதன்யத்தையும், ஸ்ரோத்ரம் என்பது ஸ்வரூப சைதன்யத்தையும் குறிக்கின்றது.  கண்ணாடியில் தெரியும் சூரியபிம்பத்தை வைத்து சூரியனை குறிப்பிட, சூரியனுக்கு சூரியன் என்று சொல்வது போல புலன்கள் வெளிபடுத்தும் சக்தியை ஆத்மாவினுடையது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 

  • ஆத்மா கரணங்களிலிருந்து வேறுபட்டிருப்பதை இதை வைத்து புரிந்து கொள்ளலாம்.
  • கரணங்களை வியாபித்துள்ளது தனியாக வேறெங்கும் இல்லை
  • கரணங்களுடைய செயல்களுக்கு காரணமாகவும் இருக்கிறது
  • கரணத்திலிருக்கும் சேதனத்வம் ஆத்மாவைச் சேர்ந்தது.

மந்திரம்3

ந தத்ர சக்ஷுர்கா3ச்ச2தி ந வாக்3க3ச்ச2தி நோ மனோ ந வித்3மோ நவிஜானேமோ யதை2தத3னுஶிஷ்யாத3ன்யதே3வத்தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4 |

இதி2 ஶுஶ்ரமபூர்வேஷாம் யே நஸ்தத்3வ்யாசக்ஷிரே ||

ஆத்மாவுக்கு அப்பிரமேயம் என்ற லக்‌ஷணம் கொடுக்கப்படுகின்றது. அப்பிரமேயம் என்றால் எந்த பிரமாணத்தினாலும் அறிய முடியாது.

ந தத்ர                        இந்த ஆத்மாவிடத்தில்

சக்ஷு ந கச்சதி       கண்களால் இதைப் பார்க்க முடியாது. இந்த இடத்தில் அனைத்து ஞான இந்திரியங்களாலும் ஆத்மாவை கிரகிக்க முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ந வாக்3 க3ச்சதி –    சொற்களாலும் கிரகிக்க முடியாது.  இப்படி சொல்லும் போது அனைத்து கர்மேந்திரியங்களாலும் கிரகிக்க முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்,  வேத பிரமாணம் ஆத்மாவாக இல்லாததையெல்லாம் நீக்கி விடுகிறது எனவே அது தானாகவே விளங்கி விடுகின்றது, நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

ந மனஹ                     மனதாலும் கிரகிக்க முடியாது இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது ஆத்மா தானாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறது.  அதை விளக்க எதுவும் தேவையில்லை

ந வித்3மஹ              நான் ஆத்மாவை அறியவில்லை

ந விஜானீமஹ       எங்களுக்கு தெரியவில்லை, பார்க்கவில்லை

யதா2 தத்3 அனுஸி2ஷ்யாத் – இதை எப்படி விளக்குவது என்றும் தெரியாது.

 

ஆத்மாவை அனுபவிக்கப்படும் பொருளாக சிஷ்யன் நினைத்துக் கொண்டிருப்பது இந்த ஸ்லோகத்தில் தெரிகிறது.  எனவே அது அனுபவிக்கப்படும் பொருளல்ல, விஷயமல்ல அதை காட்டிக்கொடுக்கவும் முடியாது என்று குரு ஆத்மாவின் லக்ஷணத்தை தெளிவாக்குகிறார்.

 

ஆத்மா அனுபவிக்க கூடிய விஷயமுமல்ல, பொருளுமல்ல என்று புரிந்து கொள்வதே இறுதியான ஞானம்.  அனாத்மாக்களான ஸ்தூல, சூக்ஷும பஞ்ச பூதங்கள், காரண, காரிய வெளித்தோற்றத்திற்கு வந்தது, வராதது, அறிந்தது, அறியப்படாதது.

 

விதி3த3ம்:         எவையெல்லாம் அறியக்கூடியதோ, அனுபவித்து அறியபட்டதோ, பொதுவாக மனிதர்களால் அறியமுடிவது, அறிந்து கொண்டு இருப்பது.

அவிதிதம்:        யாராலும் அறிய முடியாதது, சூன்யம்.  எவையெல்லாம் விதித தத்துவமாக இருக்கிறதோ அவற்றிற்கு வேறானது.  அறியாததைக் காட்டிலும் வேறானது.

விதிதத்திற்கும், அவிதிதத்திற்கும் வேறானது ஆத்மதத்துவம்.

அன்யதேவ தத் விதிதாத்      இந்த ஆத்மா அறிந்ததைக் காட்டிலும் வேறானது.

அதோ2 அவிதிதாத் அதி4       அறியாததைக் காட்டிலும் வேறானது ஆத்மா.

 

நான் என்று அறியாமலில்லை எனவே அவிதத்தில் சேர்க்க முடியாது.  நான் என்னை அறிந்துள்ளேன் என்றால் எதன் மூலம் அறிந்தேன், எதை அறிந்தேன் என்று கேள்வி எழுகின்றது.  எனவே நான் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறானவன்.  இந்த நான் ஆத்மாவை குறிக்கின்றது.

இதி ஷுஸ்ரும பூர்வேஷாம்:      இந்த தத்துவமானது இவ்விதம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது; ( எங்களுடைய குருவின் மூலமாக கூறப்பட்டது)

யே ந தத் வ்யாச சக்ஷிரே              எந்த குருமார்கள் இந்த தத்துவத்தை அறிந்திருந்தார்களோ அவர்களிடமிருந்து எங்களுக்கு உபதேசிக்கபட்ட்து.


வெளிச்சம் இருந்தால்தான் கண்ணுக்கு பார்க்கும் சக்தி உண்டு.  அது போல சிஷ்யர்களுக்கு உபநிஷத்தின் மந்திர உபதேசம் பெறுவதற்கு குரு என்கின்ற வெளிச்சம் தேவை. தண்ணீர் கொண்டு வர உதவும் பாத்திரம் போல குரு விளங்குகின்றார். எனவே குருவின் துணை மிகவும் அவசியம். குருவானவர் மந்திரத்தினுடைய சரியான பொருளை சொல்லக்கூடியவர், பரம்பரையாக சொல்லபட்டதை சொல்லக்கூடியவர்

மந்திரம்4

யத்3வாசாÅனப்யுதி3தம் யேன வாக3ப்யூத்3யதே   |

ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||

யத்3 வாசா அனப்யுதிதம்       –    எந்தவொரு தத்துவமானது நம்முடைய சொற்களால் விளக்கப்படாதது. ஆனால்

யேன வாக்3 அப்யூத்3யதே             –  எதனால் வாக்கு விளக்கப்படுகின்றதோ

ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்3தி4  –  அதுவே பிரம்ம தத்துவம் என்று அறிவாயாக.

ந இதம் யத்3 இத3ம் உபாஸதே  –  தேவதைகளை வழிபட்டுக் கொண்டிருந்தாலும் அதுவே பிரம்மனல்ல.


எந்தவொரு அறிவு ஸ்வரூபம் நம் உடலுக்குள் இருந்து கொண்டு ஐம்புலன்களையும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது ஆனால் புலன்களால் விளக்க முடியாததாக இருக்கின்றது அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.  அதாவது ஜீவனும் பிரம்மனும் ஒன்றே என்று புரிந்து கொள்வாயாக என்று இது உணர்த்துகின்றது.  ஜீவனை பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவும், உலகத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மனும் ஒன்றே என்று அறிந்து கொள்ள வேண்டும்.  இதுவே உபநிஷத்தின் மையக் கருத்து.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பேசுகின்ற மந்திரமாக இருக்கின்றது.

மாயையுடன் கூடிய நிர்குண பிரம்மன்தான் சகுண பிரம்மன்.  ஈஸ்வரன் அனைத்து படைப்புக்கும் காரணமானவர், பிரம்மன் மாயையின் துணையற்ற ஈஸ்வரன்.
நிர்குணபிரம்மன் à சகுண பிரம்மன் (மாயை + ஈஸ்வரன்) à இஷ்ட தேவதை ( நமக்கு பிடித்தமான தெய்வ ரூபம் ) à அதிஷ்டான தேவதை ( ஒவ்வொரு ஐஸ்வர்யத்திற்கும் அதிஷ்டானமாக ஒரு சாஸ்திரம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது )  அதிஷ்டான தேவதையை வழிபடுவதால் அடையும் பலனாக நாம் சிரத்தைய வளர்க்க வேண்டும். இதிலிருந்து ஈஸ்வரனை தியானிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். பிறகு இவைகளை எல்லாம் கடந்து நிர்குண பிரம்மனை தியானித்து அடைய வேண்டும்,

மந்திரம்5
யன்மனஸா ந மனுதே யேனாÅÅஹுர்மனோ மதம் |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
பிரம்மத்தை ஒரு பொருளாக, விஷயமாக மனதால் கிரகிக்க முடியாது,  ஆனால் மனதை எது அறிகின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

மந்திரம்6

யச்சக்ஷுஷா ந பஶ்யதி யேன சக்ஷூம்ஷி பஶ்யதி |

ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||

கண்களால் பார்க்க முடியாது, ஆனால் எது கண்களை பார்க்கின்றதோ, அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.


மந்திரம்7
யச்சோ2த்ரேண ஶ்ருணோதி யேன ஶ்ரோத்ரமித3ம்ஶ்ருதம் |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
காதால் கேட்க முடியாதது, ஆனால் எது காதை வியாபித்து இருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

மந்திரம்8
யத்ப்ரணேன ந ப்ராணிதி யேன ப்ராண: ப்ரணீயதே |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
எதை நுகர்ந்து பார்த்து அறிய முடியாததாக இருக்கின்றதோ ஆனால் அந்த சக்தியை விளக்கி கொண்டிருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

———————————————————————————————————————————————-

காண்டம் – 2

மந்திரம்1

யதி3 மன்யஸே ஸுவேதேதி த3ப்4ரமேவாபி
  நூனம் த்வம் வேத்த2 ப்3ரஹ்மணோ ரூபம் |
யத3ஸ்ய த்வம் யத3ஸ்ய தே3வேஷ்வத2 நு
  மீமாம்ஸ்யமேவ தே மன்யே விதி3தம் ||

யதி3 மன்யஸே – ஒருவேளை இவ்விதம் நினைத்தால்

ஸுவேதே இதி – நான் பிரம்மனை நன்கு அறிகிறேன்.

நான் பிரம்மனை நன்கு அறிகிறேன் என்று ஒருவேளை இவ்விதம் நினைத்தால் இப்படி நினைப்பது பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்திருப்பது போல் இருக்கிறது. இது தவறான அறிவு. பிரம்மத்தை உன் ஸ்வரூபமாக நினைத்திருக்க வேண்டும்.

3ப்4ரம் ஏவ நுனம்  –  தவறாக, முழுமையற்ற ஸ்வரூபத்தைத்தான்

த்வம் வேத்த2             – நீ அறிந்திருக்கிறாய்

ப்ரஹ்ம ரூபம்            – பிரம்மத்தின் ஸ்வரூபத்தை

யத்3 அஸ்ய                 –  எந்த பிரம்மத்தின் ரூபத்தை

த்வம் தேவேத்4வத2  – மனிதரிடத்திலும், விலங்கிலும் தேவர்களிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மத்தை நீ பூரணமாக அறிந்திருக்கமாட்டாய்.

அதனு தே                    – ஆகவே உன்னுடைய அறிவானது

மீமாம்ஸாமேவ      – விசாரத்திற்குட்பட்டது.

மன்யே விதி3தம்     –  நான் பிரம்மனை அறிகின்றேன்.  பிரம்மன் என்னால் நன்கு அறியப்பட்டதாக  கருதுகின்றேன்.

மந்திரம்2
நாஹம்  மன்யே ஸுவேதே3தி நோ ந வேதே3தி வேத3 ச |
யோ நஸ்த3வேத3 த3த்3வேத நோ ந வேத3 ச ||
நான் பிரம்மத்தை அறிகின்றேன் என்று நினைக்கவில்லை, அதேசமயம் பிரம்மத்தை அறியவில்லை என்றும் நினைக்கவில்லை.

ந அஹம் ஸு வேத3 இதி.  நான் பிரம்மத்தை நன்கு அறிகின்றேன்

ந மன்யே –                 என்று கருதவில்லை

ந வேத3 இதி நோ வேத3   அறியவில்லை என்றும் கருதவில்லை என்று இவ்விதம் அறிகிறேன்.

யோ நஹ த்த3 வேத3      சிஷ்யர்களான எங்களுக்குள் எவனொருவன் முதலில் கூறியவாறு அறிந்துள்ளானோ அவனே பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டு இருக்கின்றான்.

நோ ந வேதேதி வேத3 ச   நான் அறிகின்றேன் என்றும் கருதவில்லை, அறியவில்லை என்றும் கருதவில்லை என்று புரிந்து கொண்டுள்ளான்.

மந்திரம்3

யஸ்யாமதம் தஸ்ய மதம் மத2ம் யஸ்ய ந வே3த3 ஸ: |

அவக்ஞாதம் விஜானதாம் விக்ஞானதமவிஜானதாம் ||

யஸ்ய அமதம் தஸ்ய மதம்         யாருக்கு பிரம்மன் பொருளாக அறியப்படவில்லையோ அவருக்கு அறியப்பட்டது..

மதம் யஸ்ய ந வேத ஸஹ          யாருக்கு அறியப்பட்டதாக இருக்கின்றதோ, அவர்களுக்கு அறியப்படவில்லை.

அவக்3ஞானதாம் விஜாதம்        அக்ஞானிகளுக்கு அறியப்பட்டதாகவும்

விக்ஞானதம் அவிஜானதாம்    ஞானிகளுக்கு அறியப்படாததாகவும் இருக்கிறது

மந்திரம்4
ப்ரதிபோ3த4விதி3தம் மயம்ம்ருதத்வம் ஹி விந்த3தே |
ஆத்மனா விந்த3தே வீர்யம் வித்3யா விந்த3தேÅம்ருதம் ||

  • பிரம்மத்தை எந்த மாதிரியான விசாரத்தினால் அறிந்து கொள்ள முடியும்.
  • அது எங்கு இருக்கின்றது என்று அறிதல்.
  • எந்த மாதிரியான ஸ்வரூபத்தை உடையதாக இருக்கின்றது.
  • நம்முடைய எண்ணங்களுக்குள் ஆத்மாவை கண்டு கொள்ள வேண்டும்.
  • நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களையும் சாட்சி ஸ்வரூபமாக பார்க்க வேண்டும்.

எண்ணங்களின் மூலமாகத்தான் ஒன்றைப்பற்றிய அறிவை அடைகின்றோம்.  மனமும் அதற்குப்பின்னே உள்ள சைதன்யம்தான் அறிபவன். அறிய உதவும் கருவியை பயன்படுத்தி, அறியப்படும் பொருளை வியாபித்து அந்த பொருளாக எண்ணங்கள் உருவாகின்றது.  அந்த எண்ணத்தைத்தான் மனம் பார்க்கின்றது. அப்போது அந்த பொருளைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது. எண்ணத்தில் தோன்றிய அறிவும், பார்த்த பொருளும் ஒன்றாக இருந்தால் அது சரியான அறிவு.  பொருளை பார்த்த பிறகு ஏற்படும் எண்ணங்களின் மூலமாக அறிவை அடைகிறோம்.  அந்த எண்ணங்களில் தவறிருந்தால் அதுதான் அறிவாக இருக்குமேயொழிய பார்த்த பொருள் இருக்காது. (உ-ம்) கயிற்றை சில சமயம் பாம்பாக பார்த்தல்

இந்த எண்ணத்திற்கு அறிவை கொடுக்கும் சக்தி எப்படி வந்தது?

மனமும் ஜடம், அதில் எழும் எண்ணங்களும் ஜடம்.  ஜடமான எண்ணங்களினால் எப்படி அறிவை அடைகிறோம். மனம் உடலின் மீது அபிமானம் வைத்திருக்கும் உணர்வுடையதாக இருக்கிறது.  ஜடமான மனதிலிருந்து எண்ணங்களை பிரகாசப்படுத்தும் அறிவு ஸ்வரூபம் ஒன்று இருக்க வேண்டும். அதனால்தான் அறிவை அடைய முடியும்.  பானைப் பற்றிய எண்ணத்தை அறிவாக மாற்றுவதற்கு ஒரு அறிவு ஸ்வரூபம் இருந்து கொண்டு அதை அறிவாக மாற்ற வேண்டும்.

எண்ணங்களின் ஸ்வரூபம்: எத்தனை பொருட்களை பார்க்கிறோமோ அத்தனை எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. ஒவ்வொன்றும் வேறு வேறு தன்மையுடையதாக இருக்கும். எனவே தோன்றும் எண்ணங்கள் எல்லாம் தனித்தன்மையுடையதாக இருக்கும்.  இதற்கு சவிசேஷம் என்று சாஸ்திரம் விருத்தியின் ஸ்வரூபமாக கூறுகின்றது.

ஞானத்தின் ஸ்வரூபம்: சவிசேஷ எண்ணங்களை விளக்குவதற்கு, அறிவாக மாற்றுவதற்கு ஒரே ஒரு ஞானம்தான் இருக்கும்.  (உ-ம்) அறையில் இருக்கும் வெளிச்சம் வெவ்வேறு பொருட்களை காட்டிக் கொடுப்பது போல இந்த ஞானம் இருக்கின்றது.  எனவே ஞானமானது நிர்விசேஷ தன்மையுடையது.

சவிசேஷ ஞானம் = சவிசேஷ விருத்தி + நிர்விசேஷ ஞானம்.

வேற்றுமைகளான எண்ணங்களும் வேற்றுமையற்ற ஞானமும் சேர்ந்து வேற்றுமையான அறிவைக் கொடுக்கின்றது.  எண்ணங்களின் தன்மையான வேற்றுமையை ஞானத்தில் போட்டு விட்டு விதவிதமாக அறிவை அடைந்து விட்டோம் என்று நினைக்கின்றோம்.  நாம் ஒருவரை பார்க்கும் போது கோபம் வந்தால் க்ரோதம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இன்னொருவரைப் பார்க்கும் போது அன்பு கொண்டால் கருணை என்கின்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. நான் கோபமடைந்துள்ளேன், அன்பு கொண்டுள்ளேன் என்று எண்ணங்களின் தன்மையை நம் மீது ஏற்றிவைத்திருக்கிறோம்.  சாஸ்திரம் நிர்விசேஷமான அறிவு என்று உபதேசிக்கிறது.  இதை உணர்ந்து விட்டால் அதுவே மோட்ச நிலை.

  எண்ணங்கள் ஞானம்
1 ஜடமானது அறிவு ஸ்வரூபமானது
2 தோன்றி மறைவது (அநித்யம்) நித்யமானது-தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை
3 மாற்றத்திற்குட்பட்டது (விகாரம்) நிர்விகாரம் – மாற்றத்திற்குட்படாதது
4 பல எண்ணங்கள் ஒன்றே ஒன்றுதான்
5 சுத்த-அசுத்த குணங்களையுடையது குணங்களற்றது
6 எண்ணங்கள் மூலமாக சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம் அசம்சாரியான ஸ்வரூபம்

இதன் மூலம் அறிவது எண்ணங்களின் தன்மைகளை நான் என்று எண்ணிக்கொண்டு சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.  நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  இதை உணர்ந்து கொண்டு எண்ணங்களின் தன்மைகளை நானல்ல என்றும் நான் அறிவு ஸ்வரூபம், நானே ஆத்மா என்ற நிலையை அடைந்திட வேண்டும்.  நான் மனதையே பிரகாசிக்கும் சாட்சி, ஆத்மா என்ற உறுதியான நிலையை அடைய வேண்டும்.

மந்திர விளக்கம்:

பிரதி போ4தம்            ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும் வெளிப்பட்ட சைதன்யத்தை

விதிதம்                         அறிவதன் மூலம் ( அது நான் என்ற அறிவதன் மூலம்)

மதம்                               ஆத்மா அறியப்பட்டதாகிறது.

அம்ருதத்வம் ஹி விந்ததே   – இந்த ஞானத்தினால் அடையும் பலன் மரணமற்ற நிலையை அடைதலாகும்

ஆத்மனா                     ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான மனதினால்

வீர்யம்                           உண்மையை கிரகிக்கும் சக்தியை, அதை காப்பாற்றி வைத்து இருக்கும் சக்தியை, புரிந்தது நிலை பெற்றிடும் சக்தியை.

விந்ததே                      அடைகின்றான்

வித்யயா                     ஞான பலத்தால், அறியாமையை நீக்குகின்ற பலம்

அம்ருதம் விந்ததே       மரணமற்ற நிலையை அடைகின்றான்.

சக்தியை தரும் பொருட்கள் – பணம், மந்திரம், ஔஷதம், ஆள்பலம் ( தன்னைச் சுற்றியிருப்பவர்களின் எண்ணிக்கை) இவற்றை துறக்கும் சக்தியைத்தான் பெரும் சக்தி என்று சங்கரர்  கூறுகின்றார்.

மந்திரம்5
இத3ம் சேத3வேதீ3த3த2 மத்யமஸ்தி ந சேதி3ஹாவேதீ3ன்மஹதீ விஅனஷ்டி |
பூ4தேஷு பூ4தேஷு விசித்ய தீ4ரா: ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ||
ஒருவேளை இந்தப்பிறவியில் ஆத்ம தத்துவத்தை புரிந்து கொண்டால், இந்தப் பிறவியை நன்கு பயன்படுத்திக் கொண்டவனாகின்றான்.  இவ்வாறு அறியவில்லை என்றால் பெரும் நஷ்டத்தை  அடைந்தவனாகின்றான்.

இஹ அவேதி3த் சேத் – இந்த பிறவியிலே இந்த பிரம்மத்தை அறிந்து கொண்டால்
அதஸத்யம் அஸ்தி – பிறவியெடுத்ததற்கு அர்த்தம் உண்டாகின்றது, பிறந்ததற்கு உண்மையான பலனாக இருக்கும்.
இஹ  சேத் அவேதி  – ஒருவேளை இந்த பிரம்மத்தை அறியவில்லை என்றால்
மஹத் வினஷ்டி           – அவன் மிகப்பெரிய இழப்பை அடைகிறான்.

எனவே நமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உண்மைப்பொருளை அடைந்து இந்த பிறவி சக்கரத்திலிருந்து விடுபட்டு விட வேண்டும்.  இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததற்கு சமமாகும்.  சந்தனக்கட்டையை விறகு கட்டையாக பயன்படுத்துவது போல நம் சரீரத்தை பயன்படுத்தக் கூடாது. என்ற் கூறுகிறார்கள் பிரம்மத்தை அறிந்த தீரர்கள், பண்டிதர்கள், சான்றோர்கள்

பூதேஷு பூதேஷு – எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒரே ஒரு தத்துவம்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்று அறிந்துக் கொண்டவர்கள் பிறப்பு, இறப்பற்றவர்களாகின்றார்கள்.

 

———————————————————————————————————————————————-

காண்டம்3

முகவுரை

  • கர்வத்தை நீக்க வேண்டும், எதைக் குறித்தும் நமக்கு கர்வம் வந்து விடக்கூடாது
  • நாம் அடையும் எதுவும் நிலையானதல்ல என்றுணர்ந்து கொண்டால் நமக்கு கர்வம் வராது
  • நாம் வாழ்க்கையில் அடையும் பெருமைகள் அனைத்தும் இறைவனுடைய பிரசாதமாகவும் அவருடைய கருணையால் அடைந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஸ்ரத்தா, சாதன சதுஷ்டய சம்பத்தி ஆகிய தகுதிகளை அடைந்திட வேண்டும்.
  • தன்னை அறிவதற்கு அதை உபதேசம் செய்வதற்கு தனக்கு வேறாக உள்ள குரு தேவை,
  • பரமாத்மாவினுடைய இருப்பு எடுத்துக் காட்டப்படுகிறது. பிரமாணங்களால் அறியப்படாததாக இருக்கிறது. எனவே இது அபிரமேயம்
  • இந்த பிரம்மத்தை அறிந்து கொள்வது மிக மிகக் கடினம்.
  • இந்த பிரம்மமானது மிகவும் சூட்சுமமாக இருக்கிறது.  இதற்கு அவயவங்கள் இல்லை, குணங்களில்லாதது, அதைக் காட்டிக் கொடுக்கக் கூடிய எதுவும் இல்லாதிருப்பதால் இதன் பெருமை பேசப்படுகின்றது.
  • சொர்க்கத்தை அடைவதோ, தேவதையாக மாறுவதோ மோட்சமல்ல, அவைகள் நம்முடைய லட்சியமுமல்ல.
  • சிலவகையான தியானங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

மந்திரம்1

ப்3ரஹ்ம ஹ தே3வேப்4யோ விஜிக்3யே தஸ்ய ஹ
  ப்3ரஹ்மணோ விஜயே தே3வா அமஹீயந்த |
த ஐக்க்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜய: அஸ்மாகமேவாயம் மஹிமேதி ||
பிரம்மனே ( ஈஸ்வரனே ) தேவர்கள் வெற்றி அடைவதற்கு சக்தியை கொடுத்திருக்கிறது. அந்த பிரம்மத்தின் வெற்றியால் தேவர்கள் பெருமை அடைந்தனர்.  ஆனால் தேவர்கள் இந்த பெருமை எங்களைத்தான் சார்ந்தது என்று நினைத்தார்கள்

மந்திரம்2
தத்3தை4ஷாம் விஜக்3ஞோ தேப்4யோ ஹப்ராது3ர்ப3பூ4வ |
தத்ர வ்யஜானத் கிமித3ம் யக்ஷமதி ||
தேவர்கள் அடைந்த கர்வத்தை பிரம்மன் தெரிந்து கொண்டார்.  அவர்களுடைய கர்வத்தை அடக்கி உண்மையை உணர்த்துவதற்கு யட்சனாக (தெரிந்தும் தெரியாமலும் தோற்றமளிக்கும் யக்ஷ ரூபம் ) அவர்கள் முன் தோன்றியது. அந்த உருவத்தை அவர்களால் அறிய முடியவில்லை.  யார் இந்த யக்ஷன் என்று வியந்தனர்.

மந்திரம்3
தேÅக்3னிமப்3ருவன் ஜாதவேத3 ஏஜத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமதி ததே2தி ||
தேவர்கள் அக்னிதேவரிடம் எல்லாம் அறிந்தவரே நம்முன் காட்சியளிக்கும் இந்த யக்ஷன் யாரென்று அறிந்து வாரும் என்று கூறினார்கள்.  அவரும் அப்படியே ஆகட்டும் என்று புறப்பட்டார்.

மந்திரம்4
தத3ப்4யத்3ரவத்தமப்4யவத3த் கோÅஸீதி அக்3னிர்வா
   அஹமஸ்மீத்யப்3ரவீத்3 ஜாதவேதா3 வா அஹமஸ்மீதி ||
அக்னிதேவர் யக்ஷன் அருகில் சென்றார்.  யக்ஷன் அவரை பார்த்து, நீ யார் என்று கேட்டது.  என்னை அக்னிதேவன் என்று அழைப்பார்கள். நான் எல்லாம் அறிந்தவன் என்ற புகழை உடையவனாக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

மந்திரம்5
தஸ்மிம்ஸ்த்வயி கிம் வீர்யமிதி அபீத3ம்ஸர்வம்
  த3ஹேயம் யதி3தம் ப்ருதி2வ்யாமிதி ||
உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கின்றது என்று யக்ஷன் கேட்டது. அதற்கு அக்னிதேவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் எரித்து விடும் சக்தியுடையவன் என்று கூறியது.

மந்திரம்6
தஸ்மை த்ருணம் நித3தா4வேதத்3த3ஹேதி  தது3பப்ரேயாய
  ஸர்வஜவேன தத்ர ஶ்ஶாக் த3க்3து4ம் ஸ தத ஏவ
  நிவவ்ருதே நைததஶகம் விக்3ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ||
அக்னிதேவன் முன்னே காய்ந்த புல்லை யக்ஷன் வைத்துவிட்டு இதை எரித்துவிடு பார்க்கலாம் என்று கூறினார்.  தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி அதை எரிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் புல்லை எரிக்க முடியவில்லை.  அந்த இடத்திலிருந்து உடனே திரும்பி விட்டார். என்னால் அந்த யக்ஷனை அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார்.

மந்திரம்7
அத2 வாயுமப்3ருவன் வாயவேதாத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமதி ததே2தி ||

பிறகு வாயுதேவர் அந்த யக்ஷனை அறிந்து கொண்டு வா என்று அனுப்பினார்கள். அவரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

மந்திரம்8
தத3ப்4யத்3ரவத்தமப்4யவத3த் கோÅஸீதி வாயுர்வா
   அஹமஸ்மீத்யப்3ரவீத்3 மாதரிஶ்வா வா அஹமஸ்மீதி ||
யக்ஷனருகில் சென்றதும் அது வாயுதேவனை நீ யார் என்று கேட்டது.  நான் வாயுதேவன், ஆகாசத்தில் தடையின்றி சஞ்சரிப்பவன் என்ற பெயர் பெற்றவனாக இருக்கின்றேன்.

மந்திரம்9
தஸ்மிம்ஸ்த்வயி கிம் வீர்யமிதி அபீத3ம்ஸர்வமாத3தீ3ய
  யதி3தம் ப்ருதி2வ்யாமிதி ||
அப்படிபட்ட உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கிறது? அதற்கு அவர் இந்த பூமியில் உள்ள எதையும் தூக்கிவிட முடியும் என்று கூறினார்.

மந்திரம்10
தஸ்மை த்ருணம் நித3தா4வேதத்3த3ஹேதி  தது3பப்ரேயாய
  ஸர்வஜவேன தத்ர ஶ்ஶாகாதா3தும் ஸ தத ஏவ
  நிவவ்ருதே நைதத3ஶாமம் விக்3ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ||

அவர் முன் புல்லை வைத்து, இதை தூக்கு பார்க்கலாம் என்று யக்ஷன் கூறினார்.  தன்னுடைய முழுசக்தியையும் பயன்படுத்தியும் அவரால் தூக்க முடியவில்லை. அவரும் அங்கிருந்து திரும்பிவிட்டார். யார் இது என்று அறிய முடியாதவனாக இருக்கிறேன்.

மந்திரம்11
அதே2ந்த்3ரமப்3ருவன் மக4வன்னேதத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமிதி
  ததே2தி தத3ப்4யத்3ரவத்தஸ்மாத் திரோத3தே4 ||
தேவர்கள் இந்திரனை பார்த்து, “சக்தி பொருந்தியவரே நீங்களே சென்று அறிந்து வர வேண்டும். என்று வேண்டினார்கள்.  அவரும் அப்படியே ஆகட்டும் என்று கர்வத்துடன் யக்ஷனை அணுகினார். அதை நெருங்கியதும் யக்ஷன் மறைந்து விட்டான்.

மந்திரம்12
ஸ தஸ்மின்னேவாகாஶே ஸ்த்ரியாமாஜகா3ம்
  பஹுஶோப4மானாமுமாம்ஹைமவர்திம் தாம்
  ஹோவாச கிமேதத்3யக்ஷமிதி ||
இந்திரன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.  யக்ஷன் மறைந்து விட்டான் என்று திரும்பி விடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்  அந்த நேரத்தில் ஒரு பெண் வடிவத்தில் பிரகாசமான தோற்றத்துடன் உமாதேவி காட்சியளித்தாள். அவளிடம் அந்த யக்ஷன் யார் என்று கேட்டார்.

———————————————————————————————————————————————-

காண்டம்– 4

மந்திரம்1
ஸஹ ப்3ரஹ்மேதி ஹோவாச ப்3ரஹ்மணோ வா
 ஏதாத்3விஜயே மஹீயத்4வமிதி ததோ ஹேவ
 விதாஞ்சகார ப்3ரஹ்மேதி ||
அவள் அந்த யக்ஷன் பிரம்மன் என்று கூறினாள்.  நீங்களடைந்த வெற்றி பிரம்மனுடைய பெருமையினால்தான் என்று கூறினாள்.  உமாதேவியின் உபதேசத்தின் மூலம் இந்திரன் புரிந்து கொண்டான்.

மந்திரம்2
தஸ்மாத்3வா ஏதே தே3வா அதி3தராமிவான்யான் தே3வான்
  யத3க்3னிர்வாயுரிந்த்ரஸ்தே ஹ்யேனன்னேதி3ஷ்டம் பஸ்பர்ஶு:
  தே ஹ்யேனத் ப்ரத2மோ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ||
யக்ஷனுடன் தொடர்பு கொண்ட காரணத்தால்தான் இந்த தேவர்கள் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். அக்னி, வாயு, இந்திரன் இவர்கள் மட்டும்தான் யக்ஷனோடு மிக அருகில் தொடர்பு கொண்டார்கள். இதுவே பிரம்மன் என்று அறிந்து கொண்டார்கள்.

மந்திரம்3
தஸ்மாத்3வா இந்த்3ரோÅதிதராமிவன்யான் தே3வான் ஸ ஸ்யேனன்னேதி3ஷ்டம் யஸ்பர்ஶ ஸ ஹ்யேனத் விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ||
யக்ஷ ஸ்வரூபத்தை அறிந்ததால்தான், இந்திரன் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர் என்று கூறப்படுகிறது.  ஏனென்றால் அவர்தான் முதலில் யக்ஷனை பிரம்மனாக அறிந்து கொண்டார்.

மந்திரம்4
தஸ்யைஷ ஆத்ஶ: யதே3தத்3வித்3யுதோ வ்யத்3யுததா3 3
  இதின்ன்யமிமிஷதா3 3 இத்யதி4தை3வதம் ||
ஆதேஶ – உபதேசம்;
ஏஷ – பின்வருமாறு
உபாஸனம் – உப + ஆஸனம் = அருகில் இருத்தல்
யாரை நாம் தியானிக்கின்றோமோ அவரருகில். இருத்தல், மனதில் நினைத்து கொண்டு இருத்தல். ஒரே எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருப்பதை கவனித்தல்.

உபே + ஆதானம் – எடுத்துக் கொள்ளுதல் – ஆலம்பன ஆதானம்
இஷ்ட தேவதையை தியானிப்பதற்கு லிங்கமாக ஒன்றை தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் தியானம் செய்தல்
எதுவுமே சாதனமாக இருக்கும்போது துயரமடைவதில்லை, அதையே சாத்தியமாக கொண்டால் துயரத்தை அடைகின்றோம்.

முதல் தியானம்
ஒப்புமையற்ற பிரம்மத்திற்கு கற்பனையாக உவமை ஒன்று கொடுக்கப்-படுகிறது.  உபதேசமாக சொல்லப்படுகிறது.  மின்னலினுடைய பிரகாசத்தை ஈஸ்வரனுக்கு ஒப்பிடப்படுகிறது.  மின்னலானது தனது வெளிச்சத்தால் பொருட்களை காட்டிக் கொடுக்கின்றது.  அது மறைந்ததும் மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டு பொருட்கள் மறைந்து விடுகின்றது.  அதேபோல ஈஸ்வரன் ஒரு க்ஷணத்தில் ஸ்ருஷ்டியை தோற்றுவித்து பிறகு மீண்டும் தனக்குள் இழுத்துக் கொள்கிறார்.  இப்படி தியானித்தால் ஈஸ்வரனை அறியும் தகுதியை அடைவோம்.  இந்த உலகத்தில் காட்சியளிக்கும் எல்லாமே நிலையற்றவை, எனவே அதன் மீதுள்ள விவகாரத்தை விலக்கிவிட வேண்டும்.

இரண்டாவது தியானம்

இந்த உலகத்தை இருட்டாக்க வேண்டுமென்றால் நம் கண்ணை மூடிவிட்டால் போதும், கண் திறந்து விட்டால் இந்த உலகம் ஸ்ருஷ்டியாகின்றது, கண் மூடி விட்டால் அதுவே லயம் அடைந்து விடுகின்றது. எனவே கண் இமைத்தலை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனை தியானிக்க வேண்டும்.

மந்திரம்5

அதா2த்4யாத்மம் யதே3தத்3 க3ச்ச2தீவ ச மனோÅனேன 

  சைத்து3யஸ்மரத்யபீ4க்ஷணம் ஸங்கல்ப: ||

அத்யாத்ம – ஜீவன் சம்பந்தப்பட்ட உபாஸனை.
நம்முடைய எண்ணங்களே ஆலம்பனம்.  நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும் பிரம்மத்தை விளக்குகின்றது என்று தியானிக்க வேண்டும்.  ஜடமான எண்ணங்களை உணர்வுடன் இருப்பதாக எண்ணுவதற்கு காரணமாக பிரம்மன் இருப்பதை உணர வேண்டும்.  இதனால் நமது மனப்பக்குவம் அடைந்து பிரம்மத்தை அறிந்து கொள்ள உதவும்.  மனமானது எண்ணங்கள் மூலமாக சைதன்ய ஸ்வரூபத்தை அறிய உதவுகிறது.  புகையானது நெருப்பின் இருப்பைக் காட்டிக் கொடுப்பது போல மனதானது பிரம்ம ஞானத்தை அறிய உதவுகிறது.

மந்திரம்6
தத்3த4 தத்3வனம் நாம தத்3வின்மித்யுபாஸிதவ்யம்
  ஸ ய ஏததேவம் வேதா3பி4ஹைனம் ஸர்வாணி
  பூ4தானி ஸம்வாஞ்ச2ந்தி ||
பரஹ்மனை எல்லோராலும் அறியத்தக்கவர் என்று தியானிக்க வேண்டும்.  இதனால் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசை நம்மிடத்தில் உருவாகும்.  அதுவே நம்மை பிரஹ்மனை அடையும் செயலில் ஈடுபடுத்தும்.  இப்படியாக ஈஸ்வரனை பூஜிக்க.வேண்டும் என்று தியானித்தால் அவாந்திர-அமுக்ய பலனாக எல்லோராலும் வணங்கக்கூடியவராக இருப்போம்.
வனம் – போற்றதலுக்குரியவர்
நாம – பெயர் பெற்றவர்
உபாஸிதவ்யம் – தியானிக்கப்பட வேண்டும்.
யஹ ஏவம் ஏதத் வேத3 – யார் இவ்வாறு இதை தியானிக்கிறானோ
ஏனம் ஹ ஸ்ர்வாணி பூதானி – அவனை எல்லா ஜீவராசிகளும்
அபிஸம்வாச்சந்தி – பூஜிக்கும்

மந்திரம்7
உபநிஶத3ம் போ4 ப்3ரூஹித்யுக்தா த உபநிஷத்3
  ப்3ராஹ்மீம் வவ த உபநிஷத்3மப்3ரூமேதி ||
போ4 – குருவே!
உபநிஷத3ம் ப்ரூஹி இதி – உபநிஷத்தை எனக்கு கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்டான்.
தே உபநிஷத் உக்தா – உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டது.
தே ப்ராஹ்மீம் வாவ – இதுவரை உனக்கு ப்ரஹ்மணை விளக்குகின்ற
உபநிஷதம் அப்ரூம இதி – உபநிஷத்தைத்தான் கூறினேன் என்று குரு முடித்தார்.

மந்திரம்8
தஸ்யை தபோ த3ம: கர்மேதி ப்ரதிஷ்டா:
  வேதா3: ஸர்வாங்கா3னி ஸ்த்யமாயதனம் ||
உபநிஷத்தை குருவின் மூலம் கேட்பதுதான் சரியான முறையில் அறிவை அடைய முடியும்.

தப:- தவம் –    நம்முடைய மனதை சத்துவ குணத்திற்கு உயர்த்த எடுக்கும் முயற்சி. இதை அடைவதால் ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ளும் மனதை அடைவோம்.  இப்படிபட்ட மனதினால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.  இதனால் சம்சாரத்தில் இருந்து விடுதலை அடைகிறோம்.

கர்ம           கர்ம யோகமாக செயல்களை செய்தல்

ப்ரதிஷ்டா     ஆதாரங்கள் – உபநிஷத்தை உபதேசமாக குருமுகமாக கேட்டல்

 

அந்த ப்ரஹ்ம ஞானத்திற்கு தவம், புலனடக்கம், கடமையை ஆற்றுதல் ஆகியவைகள் ஆதாரங்கள். வேதங்கள் அதனுடைய எல்லா உறுப்புக்கள்.  வாய்மை அதனுதைய இருப்பிடம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

மந்திரம்9

யோ வை ஏதாமேவம் வேதா3பஹத்ய பாப்மானமனந்தே

  ஸ்வர்கே3 லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்டதி ப்ரதிதிஷ்டதி ||

யஹ வா ஏவம் ஏதாம் வேத3 – யார் இவ்வாறு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ

பாப்மான அபஹத்ய – அவன் பாவங்களை நீக்கி

அனந்தே ஜ்யேயே – எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய

ஸ்வர்கே லோகே – மோக்ஷத்தில்

ப்ரதிதிஷ்டதி – நிலைபெறுகிறான்.

 

யார் இவ்வாரு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ அவர் பாவங்கள் எல்லாம் நீங்கப்பெற்று எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய மோட்சத்தை அடைகிறான்.

 

ஓம் தத் ஸத்

ooo000ooo–

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.