ப்ருஹதாரண்யஹ உபநிஷத்-பகுதி-1
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்
அத்தியாயம்-1 – உபதேச காண்டம்
முகவுரை
ஸத்தா திரய விசாரம்:
மூன்று விதமான இருப்பு இருக்கிறது. பிராதிபாஸிக ஸத்யம், வியாவஹாரிக ஸத்யம், பாரமார்த்திக ஸத்யம் ஆகியவைகளாகும்..
கயிற்றில் தெரியும் பாம்பு – பிராதிபாஸிக ஸத்யம்.
கயிறானது – வியாவஹாரிக ஸத்யம்,
பிரம்ம தத்துவம் – பாரமார்த்திக ஸத்யம்.
- பிராதிபாஸிக ஸத்யம்:
- பிரமாதாஸ்தி யத் பாத்யதே தத் பிராதிபாஸிக ஸத்யம். பிரமாதா-ஒரு பொருளை அறிபவன், பாத்யதே – நீக்குதல், அறிபவன் இருக்கும் போதே அறியப்படுவது நீக்கப்படுகிறது. அறிபவனும், அறியப்படும் பொருளும் நீக்கப்படுவது வியாவஹாரிகம்). அந்த அறியப்படும் பொருளுக்கு பிராதிபாஸிக ஸத்யம் என்று பெயர். (உ-ம்) கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்யம்.
- அர்த்தகிரிய நாஸ்தி- பிரயோஜனம் கிடையாது, கானல் நீர்- நீர் போல தெரிந்தாலும் பயனற்றது.
- துஷ்ட பிரமான ஜன்மம் – பிரமானத்தை தவறாக பயன்படுத்தும்போது தோற்றமளிப்பது,பிராதிபாஸிகம்
- தவறாக புரிந்து கொள்வது
- வியாவஹாரிக ஸத்யம்:
பிரமாத்ரா ஸ: யத் பத்யதே
- அறிபடுபவனோடு சேர்ந்து நீக்கப்படுவது வியாவஹாரிக ஸத்யம்.இந்த உலகத்தை நீக்க வேண்டுமானால் நம்மை நீக்க வேண்டும். கனவுக்குள் போகும்போது இரண்டும் நீக்கப்படுகிறது
- விவகார காலே அபாத்யமானம் – விவகாரம் செய்யும்போது அதை நீக்க முடியாது.
- அர்த்தகிரியா அஸ்தி- இதனால் பயன் இருக்கிறது.
- இது எதிலிருந்து தோன்றுகிறது?பிரத்யக்ஷ பிரமாணத்திலிருந்து தோன்றுகிறது.
- சரியாக புரிந்து கொள்வது
- பாரமார்த்திக ஸத்யம்:
இந்த ஞானம் வந்த உடனே வியாவகாரத்தில் உள்ள ஸத்யம் போய் விடும். விஸ்வனாக இருக்கும்போதே ஆத்ம ஞான நிலைக்கு செல்லும்போது இந்த வியாவஹார ஸத்யம் இல்லாமல் போகும். ஞானம் வந்த பிறகு நாம் பார்ப்பதெல்லாம் காட்சிதான், விவகாரத்திற்கு பயன்படாது என்ற அறிவு ஏற்படும்.
வியாவஹாரிகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஞ்யாத ஸத்தா, (தெரிந்த ஸத்தா), அக்ஞாத ஸத்தா (தெரியாத ஸத்தா).
ஞ்யாத ஸத்தா: இது பிரத்யக்ஷ பிரமானம்; உ-ம் சென்னை எனக்கு தெரிகிறது. இது நாம் விவகாரத்தில் அறியப்படும் பொருள் தெரிந்துக் கொண்டிருக்கும்.
அக்ஞாத ஸத்தா (உ-ம் காசி இருக்கிறது ஆனால் எனக்கு தெரியவில்லை, அனுமானம் மூலமாக ஒன்றை தெரிந்து கொள்வது. நம்மால் அறியப்பட்டிருக்கிறது ஆனால் இப்போது இல்லை.
முதலிலுள்ள இரண்டு ஸத்யங்களும் இதை சார்ந்திருக்கிறது. இது எதையும் சார்ந்திருக்கவில்லை. எது ஒன்றை சார்ந்திருக்கிறதோ அது மித்யா, தனிப்பட்ட இருப்புடையது ஸத்யம்.
ஆத்மாவின் லக்ஷணம்:
காலத்ரைய அபாத்யத்வம், முக்கலத்திலும் நீக்கப்படாதது, பாதிக்கப்படாதது அதுதான் பாரமார்த்திக ஸத்யம். அபாத்யமாக விளங்கிக்கொண்டிருப்பது அஹம் என்கின்ற சுத்த சைதன்யம். இது ஸத்-சித் ஸ்வரூபம். இந்த பிரம்மம் தான் பாரமார்த்திக ஸத்யம். இது அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கிறது. துர்ரம்-அஸ்தி-இல்லாதது. (உ-ம்) முயற்கொம்பு, ஆகாயத்தாமரை. ஒரு பொருள் காண்பதும் இல்லை; அனுபவிப்பதும் இல்லை.
நம்முடைய அனைத்து சம்சாரத்திற்கு மூலக்காரணம், எந்தப் பொருளுக்கு எந்த அளவு இருப்பு இருக்கிறது என்று தெரியாததுதான். எப்படிப்பட்ட ஸத்யம் இருக்கிறது என்று தெரியாத காரணத்தினால் ஒன்று ஸத்யத்தில் இருக்கும் போது இது இப்படிப்பட்ட ஸத் என்ற ஞானம் இல்லையென்றால் அந்த அறியாமை இயற்கையாக பாரமார்த்திக ஸத்யத்தைக் கொடுத்து விடும். ஒருவர் நம்மை திட்டினால், அதற்கு எந்த ஸத்யத்தைக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு துயரப்படுவோம். அந்த வார்த்தையை ப்ராதிபாஸிகம் என்று நினைத்தோமானால் அதற்கு துயரம் கொடுக்கும் சக்தியை இழந்து விடுகிறது. காலத்ரய விவேகம்தான் துயரத்தை கொடுக்கிறது.
ஒரு பொருளுக்கு அதற்குரிய இருப்பைவிட அதிகமான அளவு இருப்பைக் கொடுத்தால் அதற்கு மோகம் என்று பெயர் அதை தொடர்ந்து வருவது சோகம்.
அஸங்கம்-ஒட்டாமல் இருப்பது. உதாரணமாக துணியொரு ஸத்தா, அழுக்கு ஒரு ஸத்தா எனவே இரண்டிற்குமிடையே ஸங்கம் ஏற்படுகிறது. நம் நிழல் சாக்கடை தண்ணீரில் விழுந்தால் அதனால் நிழலுக்கு ஒன்றும் ஏற்படுவதில்லை. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு ஸத்தாகும்.
பிராதிபாஸிகம் – பிரமையில் தோன்றுவது – பிரத்யக்ஷம் பிரமாணம் தவறாக பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. பாரமார்த்திக ஞானத்தை அடைவதற்கு உபநிஷத் பிரமாணமாக இருக்கிறது.
உபநிஷத்: (ஸப்த விசாரம்)- பிரம்ம வித்யா, ஸப்தரூப வாக்கியம். உப+நி+ஷத்
உப : அறிவை அடைய நிபந்தனை
நி : பலனை அடைவதற்கான நிபந்தனையை குறிக்கும்
ஷத் : பிரம்ம வித்யாவை அடைந்த பலன், அவஸாதனம், கதி, விசரணம்
அவஸாதனம் முழுமையாக அழித்தல், சம்சாரத்தை முழுமையாக அழித்து விடுகிறது. துயரத்தை முழுமையாக நீக்குகிறது. அக்ஞானத்தால் துயரமே ஏற்படுகிறது. எனவே அறியாமையை அழித்தால் அதன் துயரம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
கதி அடைய வைத்தல், பிரம்மத்தை அடைய வைக்கிறது. பிரம்மத்தை அடைவதால் பரமானந்தம் ஏற்படுகிறது.
விசரணம் தளர்த்தப்படுத்துதல், தளரச்செய்தல், பிரம்ம வித்யா சஞ்சித கர்மத்தையும், ஆகாமி கர்மத்தையும் அழித்து விடும். பிராரப்த கர்மத்தை மட்டும் விட்டு விடுகிறது. ஆனால் அதன் விளைவை தளர செய்கிறது, பலவீனமாக்கி விடுகிறது. அதனால் வரும் துயரத்தை அனுபவிப்பதில்லை.
நி பிரம்ம வித்யாவினால் அடையும் பலனை அடைய விதிக்கும் நிபந்தனைகள் – நிச்சய ஞானம் – த்ருட பிரக்ஞா, உறுதியான அறிவு, ஸ்திர பிரக்ஞா
உப அறிவை ஞானத்தை அடைய நிபந்தனை. குருவிடமும், சாஸ்திரத்தையும் அடைதல், குருமுகமாக சாஸ்திரத்தை கேட்டறிதல்
பிருஹத் பெரியது; அதிகமான மந்திரங்களை உடையது. மந்திரங்களின் அர்த்தமும் பெரியதாக இருக்கிறது.
ஆரண்யகம் வனத்தில் இதை படிப்பதனால், மனத்தூய்மை அடைந்தவர்களால் படிக்கப்படுவது.
இது ஆறு அத்தியாயங்களை உடையது. மூன்று காண்டமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுக்காண்டம் என்றும், அடுத்த இரண்டு அத்தியாயங்கள் முனிக்காண்டம் என்றும் கடைசி இரண்டு அத்தியாயங்கள் கிளக்காண்டம் என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது.
மதுக்காண்டம் முதல் இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது. இது உபதேசக் காண்டம். இதில்தான் மஹாவாக்கியத்தின் உபதேசம் இடம் பெற்றிருக்கிறது. பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா. இதுதான் உபநிஷத்தின் சாரம்- அஹம் பிரம்ம அஸ்மி, ஜகத் மித்யா என்பது விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது. மது என்றால் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், அனைத்து தத்துவங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது என்பதை எடுத்து உரைக்கிறது. சம்சார வர்ணனை மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. எது ஒன்றை சார்ந்திருக்கிறதோ அது மித்யாவாக இருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்களும் சிரவண பிரதானமாக இருக்கிறது.
முனிக்காண்டம் இது 3வது 4வது அத்தியாயங்கள் அடங்கியது. உபபத்திக் காண்டம், யுக்திப்பிரதானம், மனனப்பிரதானம். பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா என்பது நன்றாக விளக்கப்பட்டு இருக்கிறது.
கிளக்காண்டம் கடைசி இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது. உபாஸனைகளும், கர்ம காண்டங்களும் வருகிறது.
குறிப்புக்கள்:-
பாஷ்யம் – உபநிஷத்திலுள்ள மந்திரத்தின் விளக்க உரை. மூலபத வியாக்யானம், ஸ்வ வியாக்யானம்
வார்த்திகம் – ஸ்லோகத்தின் மூலமாக சங்கரருடைய விளக்கத்தை விளக்குதல்
உத்தம் – சங்கராச்சாரியர் சொல்லியிருப்பதை விளக்குதல்
அநுத்த – சங்கராச்சாரியர் விட்டுவிட்டதை எடுத்து விளக்குவது
துருக்தம் – சங்கராச்சாரியர் சுருக்கமாக சொல்லியிருப்பதை விரிவாக விளக்குதல்
சாந்தி பாட விசாரம்
பூரணம் முழுமையானது, வரையறுக்கப்படாதது, (infinite)
அதஹ அது; ஈஸ்வரனை குறிக்கிறது. உபாதியுடன் கூடிய பிரம்மம்
பூரணம் வரையறுக்கப்படாதது
இதம் இது – ஜீவாத்மா
பூர்ணாத் பூரணத்திலிருந்து,பூரணமான ஈஸ்வரனிடமிருந்து,
பூர்ணம் பூரணமான ஜீவன்
உதச்யதே தோன்றியுள்ளான்
பூர்ணஸ்ய பூரணத்தினுடைய – ஜீவனுடைய
பூர்ணம் பூரண ஸ்வரூபத்தை
ஆதாய எடுத்து விட்டால், நீக்கிவிட்டால்
பூர்ணம் வரையறுக்கப்படாதது
ஏவ மட்டும்
அவசிஸ்யதே எஞ்சியிருக்கிறது.
விரிவுரை:-
பூரணம் என்பது ஸர்வதா ஏகம், வரையறுக்கப்படாதது, தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)
ஒரு பொருள் எப்படி இருக்கிறதோ அப்படி தெரியாமல் வேறு மாதிரியாக தோன்றுவது நம்முடைய அறியாமயால்தான் நிகழும். அதுமாதிரி ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபம் பிரம்மம், ஆனால் ஜீவன் அப்படி தெரியவில்லை, சகுணமாக தெரிகிறான். உபாதியாக உள்ள சிவப்பு நிற மலரானது அதற்கு முன்னே உள்ள ஸ்படிகத்தின் உண்மை நிறத்தை மறைத்து தன் நிறத்தை காட்டுவது போல ஜீவனுடைய உபாதி ஆத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை மறைத்து தன்னுடைய தர்மத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கிறது. ஈஸ்வரனுடைய உபாதி மாயை, ஜீவனுடைய உபாதி மாயையின் காரிய சரீரம். ஈஸ்வரனிடத்தில் உள்ள மாயையையும், ஜீவனிடத்தில் உள்ள உபாதியான மூன்று சரீரங்களையும் நீக்கிவிட்டால் இரண்டு பேரிடத்திலும் எஞ்சியிருப்பது பிரம்மம் மட்டும்தான் என்று அறிந்து கொள்ள முடீகிறது.
ஒரு பூரணம் இரண்டு உபாதிகளுடன் வெளிப்படுகிறது.
அதஹ பூர்ணம் ; காரண உபாதியுடைய பூரணம் – ஈஸ்வரன்,
இதம் பூர்ணம் காரிய உபாதியுடைய பூரணம் – ஜீவன்
பூர்ணாத் ஈஸ்வரனிடமிருந்து;
பூர்ணமுதச்யதே; ஈஸ்வரனிடமிருந்து ஜீவ பூர்ணம் வெளிப்படுதல் (அத்யாரோபம்)
பூர்ணஸ்ய பூரணத்தினுடைய – ஜீவனுடைய
பூர்ணமாதாய – பூர்ணமான ஜீவனை எடுத்து விட்டால்
பூர்ணமேவ – பூர்ணம் மட்டும்தான்
அவசிஸ்யதே – எஞ்சியிருக்கிறது. அதாவது ஜீவர்கள் இல்லையென்று உணர்த்துகிறது.
சங்கரரின் சம்பந்த பாஷ்யம்: (உபநிஷத் அறிமுகம், பாஷ்ய விசாரம்)
ஈஸ்வரனுக்கும், மற்ற தேவதைகளுக்கும் நமஸ்காரம்!!!
மரபு வழியாக இந்த பிரம்ம வித்யாவை உபதேசித ஆச்சாரியர்களுக்கும் நமஸ்காரம்!!
குருவுக்கு நமஸ்காரம்!!!
உடலால், பணிவான சொல்லால் மனதால் வணக்கம் சொல்லுதல்.
பிரதிக்ஞா பாஷ்யம்: எளிமையான விளக்கமானது ஆரம்பிக்கப்படுகிறது.
அதிகாரி பாஷ்யம்: யார் அதிகாரி, யாருக்காக இந்த விளக்கம்.
இலட்சியம் இருந்தாலும் கர்ம காண்டத்திலுள்ளவர்கள் அனாத்மாவைத்தான் அடைவார்கள்., ஞானயோகத்திலுள்ளவர்கள் லட்சியமான நித்தியமான வஸ்து அடைய முயற்சி செய்பவர்கள். அதற்கு பெயர் முமுக்ஷுத்வம், அவர்கள்தான் இந்த விளக்கத்துக்கு அதிகாரி, தகுதியானவர்கள். இதனால் வைராக்கியம் நிச்சயம் ஏற்படும்,
பலன்:
சம்சார ஹேது நிவிருத்தி ஸாதனம் – சம்சாரத்தை நீக்குவதற்கு காரணமான சாதனமான, பிரம்ம-ஜீவன் ஐக்கியத்தை அடைவதற்காக, இந்த விளக்கவுரை.
பிரதிபத்யே – அடைவதற்கு
நாம பாஷ்யம்: இந்த உபநிஷத்திற்கு இந்த பெயர் வரக் காரணம்
சம்பந்த பாஷ்யம் – மூன்று விதமான கருத்துக்களையுடையது.
- கர்ம காண்டமும், ஞான காண்டமும் பிரமானம்
- இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம்
- கர்ம காண்டத்தினாலேயே மோட்சத்தை அடைய முடியாது.
பிரமாணம்: பிரத்யக்ஷ பிரமாணம், அனுமானம் இவற்றின் மூலமாக அடைய முடியாததை அடைவதற்கு வேதாந்தம் உதவியாக இருக்கிறது. உபாயத்தை காட்டிக் கொடுக்கிறது. வேதாந்தத்தை மட்டும்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு கருவியாக உபயோகபடுத்த முடியும் என்பதால் அதைப் பிரமாணம் என்றழைக்கப்படுகிறது.
கர்ம காண்டம்தான் பிரமாணம், எந்த வாக்கியம் கர்மத்தை போதிக்கிறதோ அதைத்தான் பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதில்தான் பிரயோஜனம் இருக்கிறது. வேதாந்தம் எந்த கர்மத்தை போதிக்காமல் அதை நீக்கச்சொல்வதால் அதைப்பிரமானமாக எடுத்துக் கொள்ள முடியாது.
கர்ம போதக வாக்கியம்: இது செயலை செய்ய தூண்டுவது
ஸித்த போதக வாக்கியம்: இது இருப்பதை தெளிவாக உரைப்பது, செயலில் ஈடுபடுத்தாது.
வேதாந்தத்தில் உள்ள வாக்கியங்கள் ஸித்த போதக வாக்கியமாக இருக்கிறது. கர்ம காண்டத்திலும் ஸித்த போதக வாக்கியங்கள் இருக்கிறது. அதை பிரமாணமாக ஏற்றுக்கொண்டிருப்பதால், வேதாந்தத்தில் உள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ஜீவன் இறந்த பிறகும் உயிரோடு இருக்கிறான் அவனது ஸ்தூல உடம்பு அழிந்தாலும் சூட்சும உடலோடு மறுபிறப்பு அடைகிறான். இது ஸித்தபோக வாக்கியமாக இருக்கிறது. அதை நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய்.
பூர்வபக்ஷி நான் ப்ரத்யக்ஷ பிரமாணமாக அறிந்து கொண்டேன்.
சங்கரர் அப்படி ப்ரத்யக்ஷ பிரமாணமாக இருந்தால் அதில் மக்களிடையே குழப்பம் வராது, ஆனால் அதைப்பற்றி இன்னும் குழப்பம் இருப்பதால் அது சரியல்ல.
பூர்வபக்ஷி கம்பத்தைப்பார்த்தால் திருடன் மாதிரி தோன்றுவது பிரதயக்ஷ விஷயத்தில் சந்தேகம் வருகிறதல்லவா.
சங்கரர் இந்த சந்தேகமானது அறிவு வந்தால் தெளிவடைந்து விடுகிறது. ஆனால் இந்த புனர்ஜென்மம் விஷயத்தில் தெளிவு வரவில்லை. எனவே இரண்டு காண்டமும் பிரமாணம்தான்.
கர்ம காண்டத்தின் பலன்கள்:
- சம்சரத்தைக் கொடுக்கிறது, இதில் தொடர வைத்திருக்கிறது.
- சம்சாரத்தை பலவீனப்படுத்தி ஞானகாண்டத்திற்கு தகுதியாக்குகிறது.
கர்மகாண்டத்தில் யாகங்கள், வேள்விகள் மூலமாக சொல்லியிருப்பதை நாம் செய்தால் இகலோக, பரலோக சுகத்தையடையலாம். பரலோக பலனையும் அடையலாம். ஸம்ஸ்காரத்தினால் ஆசைகளால் தூண்டப்பட்டு தீய காரியங்களை செய்து கொண்டே இருப்பவர்கள் கீழான லோகத்தை அடைவார்கள். மற்றும் சிலர் தார்மீக செயல்களில் ஈடுபட்டு சொர்க்க-லோகத்தை அடைவார்கள். மூன்றாவதாக உள்ளவர்கள் உபாஸனைகளை கவனமாக செய்து பிரம்மலோகத்தை அடைவார்கள். இந்த பரலோக இன்பங்கள் அனைத்தும் சம்சாரத்துக்குள்ளே அடங்குகிறது. இப்படி இகலோக பரலோக சுக துக்கங்களைக் கொடுத்து பிறவிச் சூழலிலே வைத்திருக்கும்.
வேதம் சொன்ன கருத்துக்களை சித்த ஸுத்திக்காக செய்பவர்கள் ஞான காண்டத்திற்கு நுழைவார்கள். இதற்குள் நுழைந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டு விட வேண்டும்.
கர்ம காண்டம் இரண்டு விதமான பலன்களை கொடுக்கும்.
- நமக்குள்ளே இரண்டு விதமான பலன்களை கொடுக்கிறது, ஒன்று முமுக்-ஷுத்வம் மற்றொன்று வைராக்கியம் (தர்மப்படி வாழ்தல்)
- வெளியிலிருந்து வரும் பலன்கள்
- மோட்சத்தை அடைவதற்கான சாதனைகளை தொடர்ந்து செய்வதற்கு நல்ல சூழ்நிலையை கொடுக்கிறது.b. மனதையும் நன்றாக வைத்திருக்கும்.
ஞான காண்டத்திற்குள் வந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அதை பயன்படுத்தி கொண்டேயிருந்தால் அதுவே ஞானமடைய தடையாக இருக்கும். கர்ம காண்டம் நேரிடையாக மோட்சத்தை கொடுக்காது. இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
- வேதத்தில் எங்கும் கர்ம காண்டத்தின் பலனாக மோட்சத்தை அடையலாம் என்று சொல்லவில்லை. அந்தந்த கர்மத்தின் பலனை மட்டும்தான் கூறுகிறது. பலன் எதுவும் சொல்லாத போது, இதே மாதிரி செய்யும் வேறொரு கர்மத்தின் பலனை எடுத்துக் கொள்ளலாமே தவிர மோட்சத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
- யுக்தி பிரமானத்தினால் இதை தெரிந்து கொள்ளலாம். எது செய்யப்பட்டதோ அது நிலையற்றது. உருவாக்கப்படுவதெல்லாம் அநித்யம். கர்ம காண்டத்தில் செய்யப்படும் கர்மங்களின் விளையெல்லாம் அநித்யமானது. எனவே மோட்சத்தையடைய முடியாது. ஏனெனில் மோட்சமானது நித்யமானது.
- ஒரு செயல் உருவாகுவதற்கு பல பொருட்கள், கருவிகள் துணை புரிய வேண்டும். முதலில் கர்த்தா, பிறகு பொருட்கள், கருவிகள் தேவை போன்ற பல காரகங்கள் இருக்கின்றன. கர்த்தா, போக்தா இருவரும் காரகத்துக்குள் இருப்பதால், இவர்கள் சம்சாரத்துக்குள் வந்து விடுகிறார்கள். எனவே கர்மம் சம்சாரியை சார்ந்திருப்பதால், அதனால் மோட்சத்தைக் கொடுக்க முடியாது. கர்மத்தின் ஸ்வரூபமே சம்சாரம்தான்.
- கர்மம் பந்தத்திற்கு சாதனமாகத்தான் இருக்கிறது. பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதால் இது பந்த சாதனம்
மேற்கூறிய கருத்துக்கள் நமக்கு மூன்று விஷயங்களை தெளிவாக உரைக்கிறது. அவைகள்
- கர்மத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
- கர்மத்தை யோகமாக பயன்படுத்த வேண்டும்
- கர்மத்தை ஒரு நிலையில் விட்டுவிட வேண்டும்.
நம்மிடத்திலிருந்து உருவாகும் செயல் ஞானத்தைத் தவிர வேறெதாவது இருந்தால், அது கர்மத்தில் சேர்ந்து விடும். ஞானத்தை அடைய செய்யும் செயல்கள் யாவும் கர்மம் என்று சொல்லக் கூடாது.
—-0000—-
அத்தியாயம்-1
உபதேச காண்டம்
அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா) – வெளித்தோற்றத்திற்கு வராத உலகம்
வியாக்ருத பிரபஞ்சம் – நாம் அனுபவிக்கும் உலகம். இது இருவகையாக இருக்கிறது. 1. சாதனா பிரபஞ்சம், 2. சாத்திய பிரபஞ்சம்
இவையிரண்டுமே அத்யாரோபம் என்று அழைக்கப்படுகிறது. சாதனைகள் லௌகீக சாதனை, வைதீக சாதனை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. லௌகீக சாதனை என்பது வேதத்தின் உதவியில்லாமல் பயன்படுத்துவது, வைதீக சாதனை என்பது வேதத்தின் உதவியுடன் செய்யப்படுவது. இதில் காயிகமாக, வாக்காக செய்யும் அனைத்தும் கர்மம் என்றழைக்கப்படுகிறது, மௌனமாக செய்யப்படுவது அனைத்தும் உபாஸனை என்றழைக்கப்படுகிறது
பகுதி-01 (அஸ்வ பிராமனம்)
இந்த மந்திரம் அஸ்வ பிராமனம் என்று அழைக்கப்படுகிறது. இதில் அஸ்வமேத தியானத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இது சத்திரியர்களை தவிர்த்து மற்ற வர்ணத்தார்கள் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். சத்திரியர்கள் இதை யாகமாக செய்தால்தான் அதன் பயனை அடைய முடியும். இந்த தியானத்திற்குரிய ஆலம்பனம் குதிரை; விராட் (ஸ்தூல பிரபஞ்சத்தை உடலாக உடைய ஈஸ்வரன்) எனவே குதிரையை தியானம் கீழ்கண்டவாறு தியானம் செய்ய வேண்டும். குதிரையின் ஒவ்வொரு அங்கங்களையும் இந்த உலகத்தின் பகுதிகளாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். இதனால் மனம் விரிவடையும், உலகமே என்னுடையது என்று நினைக்க வேண்டும்.
குதிரையின் முழு உடலை உலகமாகவும், தலையை அதிகாலையாகவும், கண்ணை சூரியனாகவும், பிராணனை வாயுவாகவும், நடு உடலை காலமாகவும், வயிற்றை ஆகாசமாகவும், கால்குளம்பை பிருத்வியாகவும், எலும்புகளை நட்சத்திரங்களாகவும், ரோமத்தை தாவரங்களாகவும், யோனியை சமுத்திரமாகவும் தியானிக்க வேண்டும்..
பகுதி-02 (அக்னி பிராமனம்)
இது ஏழு மந்திரங்களை கொண்டது. இதுவும் மனதை விரிவடைய செய்கிறது. இதில் ஆலம்பனம் அக்னி; உபாஸ்யம் விராட். அக்னியை புகழ்ந்து தியானித்தால், சுகமும் ஏற்படும், துர்மரணம் ஏற்படாது.
சங்கரரின் விளக்கம்:
ந ஏவ இஹ கிஞ்சின அக்ரே ஆஸித் : சிருஷ்டியெல்லாம் தோன்றுவதற்கு முன் ஒன்றுமேயில்லை.
ஸத்காரியவாதம்– காரணம் என்ற ஒன்று இருக்கிறது. காரண ஸத்தானது நிரூபிக்கப்படுகிறது. அனைத்து மித்யாவும் ஒன்றைதான் ஆதாரமாக கொண்டிருக்கிறது.
இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு சங்கராச்சாரியார் பதிலளிக்கிறார்.
- சிருஷ்டிக்கு முன் காரணம் இருந்ததா அல்லது இல்லையா?
- சிருஷ்டிக்கு முன் காரியம் இருந்ததா அல்லது இல்லையா?
இரண்டும் இருந்தது என்பதுதான் அவருடைய பதில்.
பூர்வபக்ஷி: ஷணிகவிக்ஞான விதி –
தோன்றியவையெல்லாம் நமது எண்ணங்களே அது எதிலிருந்தும் உற்பத்தியாகவில்லை. எப்படி கனவில் காணும் பொருட்கள் நாம் அனுபவிக்கிறோம், அவைகளெல்லாம் எண்ணங்களே. அதே போன்று நதியின் நீரோட்ட்த்தில் ஒரே நீர் தோன்றுவது மாதிரி உண்மையில் ஒவ்வொரு க்ஷணமும் அந்த நீர் சென்றுவிடுகிறது. அதேபோல பொருள் தோன்றி பின் அழிந்து இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் தொடர்ச்சியாக ஒரு பொருளை பார்க்க முடிகிறது.
பதில்:
நம் அனுபவம் மூன்று விதமாக இருக்கிறது. அவைகள்
- பிரத்யக்ஷம்– ஐந்து இந்திரியங்களை கொண்டு முதல்முறையாக அறிதல்.
- ஸ்மிருதி– நினைத்துப்பார்த்தல்
- பிரத்யபிக்ஞா– ஏற்கனவே அறிமுகமானவர் என்று பார்ப்போம். பிரத்யபிக்ஞா அனுபவத்தால் என்னுடைய தொடர்ச்சி இருக்க வேண்டும், நான் பார்க்கப்படும் பொருளும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
இவ்வாறாக இந்த மூன்று விதமான அனுபவங்களையும் வைத்து பார்த்தால் ஷணத்தில் தோன்றி மறையும் பொருளுக்கு ஆதாரம் இல்லை.
பூர்வபக்ஷி: தோன்றி மறையும் பொருள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்குத் தொடர்ச்சியாக இருக்கிறது.
பதில்: ஒரு பொருள் தொடர்ச்சியாக தெரிய வேண்டுமென்றால், பிரத்யபிக்ஞாதான் காரணம் என்று இவ்வகையில் காரண ஸத்தாவானது நிருபிக்கப்படுகிறது.
காரிய ஸத்தா நிரூபனம்:
பூர்வபக்ஷி: காரியம் காரணத்தில் இருந்து வந்ததா? இல்லையா?
களிமண்ணுக்குள் இல்லாத பானைதான் பின் உருவாகிறது. பானையானது களிமண்ணுக்குள் அவ்யக்தமாக இருந்தது அதை வெளித்தோற்றத்திற்கு கொண்டு வருவதுதான் ஸ்ருஷ்டி என்று கூறப்படுகிறது.
அபிவியக்திலிங்காத்: அபிவியக்தி (வெளிப்படுதல்) காரணத்தினால்தான் இருக்கின்ற பொருள்தான் வெளித்தோற்றதிற்கு வரமுடியும். இருட்டினால் மறைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மட்டும்தான் வெளிச்சத்தினால் தெரிய வரும். களிமண்ணின் உருவமே பானை வெளிவருவதற்கு தடையாக இருக்கிறது. அதை நீக்கினால் பானை வெளிவந்து விடும். அதாவது ஒரு தோற்றமே மற்றொரு தோற்றத்திற்கு தடையாக இருக்கிறது.
அவர் நாளை வருகின்றார், அவர் என்பவர் இருக்கிறார?, இல்லையா? என்று கேள்வியே கேட்க முடியாது. இத்தொடர் இருப்பவரைத்தான் குறிக்கிறது. எனவே இருக்கின்ற பொருளைத்தான் எதிர்காலத்தில் பேசமுடியும்.
சர்வக்ஞன் ஈஸ்வரன் எல்லாவற்றையும் அறிபவர். மூன்று காலத்திலும் உள்ளதையும், அறிந்தவர். இது உண்மையாக வேண்டுமென்றால், வெளிவரப்போகும் பானையைப்பற்றித் தெரியும். இருக்கிறதைத்தான் பகவானுக்கு தெரியும். இல்லாததை பகவானுக்கு தெரியும் என்று சொல்ல முடியாது. எனவே ஈஸ்வரன் சர்வக்ஞன் என்று உண்மையானால் இருப்பதுதான் வெளித்தோற்றத்துக்கு வரும் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
அபாவம் நான்கு வகையாக இருக்கிறது. அபாவம் – இல்லை; பாவம்- இருத்தல்.
- பிராக் அபாவம் – முன்பு இல்லாதது; எந்தப்பொருளும் தோன்றுவதற்கு முன் அது இல்லாத நிலை.
- ப்ரத்வம்ஸ அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத நிலை
- அத்யக்த அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத நிலை. (உ.ம்) முயல் கொம்பு, ஆகாயத்தாமரை.
- அன்யோன்ய அபாவம் – பேதம் – வேற்றுமை. இருபொருள்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை பானையில் உள்ள குணம் துணியில் இருக்காது அதே போன்று துணியில் உள்ள குணம் பானையில் இருக்காது.
பதில்: பிராக் அபாவமும் – தோன்றாத பொருளின் இருப்பைப் பார்க்கிறோம் எப்படி அன்யோன்ய அபாவத்தில் இருப்பை பார்க்கிறாயோ அப்படி காரியமும் தோன்றுவதற்கு முன் இருந்தது.
காரியத்தின் லட்சணம்– காரியம் காரணத்தோடு சம்மந்தம் வைத்து இருப்பை அடைவது (உ.ம்) பானை உருவாகுவதற்கு களிமண்ணோடு சம்மந்தத்தை வைத்த பிறகுதான் தோன்றியது.
நிஷேத வாக்கியம் – இதை செய்யாதே என்று சொல்கின்ற வாக்கியம்
விதி வாக்கியம் – இதை செய் என்று சொல்லும் வாக்கியம்.
பகுதி-03 (உத்கீத பிராமனம்)
இது 28 மந்திரங்களைக் கொண்டது. இதில் வருவது பிராண உபாஸனை. ஹிர்ண்யகர்ப்பன் உபாஸனை. பிராண தத்துவத்திற்கு 6 குணங்கள் கொடுக்கப்பட்டு அதில் தியானம் செய்ய வேண்டும்.
பாஷ்ய விசாரம்:
பூர்வமீமாம்ஸிகள் என்பவர்கள் வேதத்தை பிரமாணமாக கொண்டவர்கள், ஆனால் அனைத்து வேதத்தையும் கர்ம காண்டமாக எடுத்துக் கொள்பவர்கள். இவர்கள் அனுபந்தம் சதுஷ்டயம் என்ற கருத்தை உடையவர்கள்.
- முழு வேதமும் கர்மபரம் – கர்மத்தையே லட்சியமாக கொண்டது. கர்மத்தை போதிப்பதற்குத்தான் வேதம் உருவாக்கப்பட்டது.
- விதிவாக்கியமும், நிஷேத வாக்கியமும் பிரமாணம், மற்றதெல்லாம் பிரமாணமல்ல. விதி வாக்கியம் இதை செய் என்று சொல்லும் வாக்கியம்; நிஷேத வாக்கியம் இதை செய்யாதே என்று சொல்லும் வாக்கியங்கள். மற்றதெல்லாம் அர்த்தவாதம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அர்த்தவாதம் என்பது பிரமாணல்லாத வாக்கியங்கள், அந்த வாக்கியங்களுக்கென்று எந்த பயனும் இல்லை. ஆனால் அதை விதி வாக்கியத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
- கர்மமே பலனைத்தரக்கூடியது,ஈஸ்வரன், தேவதைகள் இவர்களெல்லாம் கிடையாது.
- வேதம் பிரமாணமாக இருக்கிறது. ஞானம் அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கிறது
- பதம் பிரமாணமல்ல; வாக்கியம்தான் பிரமாணம்
- வேத வாக்கியத்திலுள்ள வினைச்சொல்தான் அறிவைக் கொடுக்கிறது.
சங்கரரின் பதில்
ஸித்த போக்ய வாக்கியம்: இருக்கிற உண்மையை சொல்லும் வாக்கியம் பிரமாணம். வினைச்சொல் செயலைத்தூண்டுவது மற்றும் இருக்கிறது என்று சொல்லும் சொல்லாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.
ஒரு வாக்கியம் அறிவைக் கொடுக்கிறதா இல்லையா என்பதே பிரமாணம். அறிவோடு பயனயும் கொடுக்கத்தேவையில்லை. கர்மத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும், பிரம்ம ஞானத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும் பிரமாணமாகும். மற்ற வாக்கியங்கள் எல்லாம் அர்த்தவாதம். இந்த அர்த்தவாதம் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
- அனுவாதம்: மற்ற பிரமாணங்களின் மூலமாக அறிந்ததைக் கூறினால் அதற்கு அனுவாதம் என்று பெயர்
2. குணவாதம்: நம்முடைய அனுபவத்திற்கு வேறாக கூறுவது.
3. பூதார்த்தவாதம்: நமக்கு தெரியாத விஷயம் அதே சமயம் அந்த விஷயமானது அனுபவத்திற்கு வேறாகவும் இல்லாதிருப்பது. (உ-ம்). வஜ்ர ஆயுதமுடைய இந்திரன். இதில் இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறதா, இல்லையா என்று நிரூபிக்க முடியாது. எனவே இந்த பூதார்த்தவாத வாக்கியங்களை பிரமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முதல் இரண்டு அர்த்தவாதங்களும் அப்பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரமாணம் என்பது வேறெந்த வகையிலும் அறிய முடியாத நிலையில் இது மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றால் அதைத்தான் பிரமாணம் என்று சொல்ல முடியும்.
அனாதிகதம் – வேறொன்றினால் அறிய முடியாதது.
அபாதிதம் – வேறொன்றினால் நீக்க முடியாதது
செயலைத் தூண்டும் வாக்கியங்கள்தான் பிரமாணம் என்றால், நிஷேத வாக்கியங்கள் செயலை தூண்டவில்லை அதை மட்டும் ஏன் பிரமாணமாக ஏற்றுக்கொள்கிறீர்கள். அதுபோல ஞான காண்ட வாக்கியங்களும் செயலை தூண்டாவிட்டாலும் அதை பிரமாணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.. வேதத்தில் உள்ள வாக்கியங்கள் நான்காக பிரிக்கப்படுகிறது, அவையாவன
- விதி வாக்கியங்கள் – செயலைத் தூண்டும்
- நிஷேத வாக்கியங்கள் – செயலொன்றும் கிடையாது
- பூதார்த்த வாக்கியங்கள் – செயலொன்றும் கிடையாது
- வேதாந்த வாக்கியங்கள் – செயலொன்றும் கிடையாது
இவை நான்கும் பிரமாணம்தான். இவைகளுக்குள் வராத வாக்கியங்கள் அனுவாதம், குணவாதம் இவைகளில் சேர்க்கப்படும். இவைகள் பிரமாண வாக்கியங்களுக்கு உதவி செய்யும்.
உபநிஷத் விளக்கம்:
ஆறு விதமான குணங்களுடன் பிராணனை உபாஸிக்க வேண்டும்.
- சுத்தத்வம் – தூய்மையாக இருத்தல்.
சாஸ்திரின ஞான கர்ம ஸம்ஸ்காரத் யுக்தம்– சாஸ்திரத்தில் கூறிய ஞான, கர்ம ஸம்ஸ்காரங்களுடன் கூடிய இந்திரியங்களை தேவர்கள் என்றும் இயற்கையாக உள்ள குணங்களுடன் கூடிய இந்திரியங்களை அசுரர்கள் என்று கூறப்படுகிறது.
உலக போகங்களை பார்க்கும்போது, அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அந்த நேரத்தில் உள்ள நல்ல ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் நமது இந்திரியங்களை நற்காரியங்களில் அல்லது தீய காரியங்களில் ஈடுபடுத்தும். அதே போன்று இயற்கையிலே அமைந்துள்ள குணங்களுடன் உள்ள ஸம்ஸ்காரங்கள் இந்திரியங்களை செயல்படுத்தும். ஆனால் பிராணனை எந்த சக்தியும் அசுத்தப்படுத்த முடியாது அதனால் அது எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும். எனவே இது தூய்மையாக இருக்கிறது என்று தியானிக்க வேண்டும்.
- தூர்நாமத்வம்
பிராணனானது தீய, சுயநலமான எண்ணங்களை விலக்கி வைக்கும். இது தம்மை குறித்து தியானம் செய்யும் இந்திரியங்களை அசுரர்கள் தாக்கும் போது அதிலிருந்து காப்பாற்ற சமஷ்டியாக மாற்றிவிடுவதால் அசுரர்கள் செயலிழந்து தோல்வியடைகிறார்கள். கண்கள் சூரியனாகவும், மனதை சந்திரனாகவும் இதே போன்று மற்ற இந்திரியங்களை தேவதைகளாக மாற்றி விடுகிறது.
- பர்த்ருத்வம்: தாங்குவது (Supporting)
பிராணனுக்கு பசியெடுக்கும்போது கிடைக்கும் உணவை உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கும்.
- ஆங்கிரஸ்த்வம் : உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் சாரமாக பிராணன் இருக்கிறது
- வேதாத்கமத்வம்: வேத ஸ்வரூபமாகவும் இருக்கிறது. வேதம் சப்தரூபமாகவும் இருப்பதால், இது சப்த ரூபமாகவும் இருக்கிறது. எல்லா ஜீவர்களிடம் சமமாக இருக்கிறது.
- உத்கீதத்வம்– ஓம்கார ஸ்வரூபம்.
இந்த ஆறு குணங்களை தியானித்தால் ஹிரண்யகர்ப்பனை அடையலாம்.
சாம வேதத்தை நன்றாக உச்சரிப்பதற்கு மூன்று விதமான குணங்கள் தேவை. அவைகள்
1.நல்ல குரல்வளம்
- சரியாக உச்சரித்தல்
- சரியான ஸ்தானத்திலிருந்து சொற்கள் வர வேண்டும்(பிரதிஷ்டா)
ஜபத்தில் போது சொல்ல வேண்டிய மூன்று வரி மந்திரம்:
அத2: பிராண உபாஸனை எப்படி செய்ய வேண்டும் என்று கூறிய பிறகு
அத: இந்த ஜபத்தினால், நாம் யாரை தியானிக்கிறோமோ அவர் ஸ்வரூபமாக மாறிவிடுவோம்.
பவமானம் – தூய்மைப்படுத்துதல்
அப்யாரோகஹ- ஹிரண்யகர்ப்பனுடன் ஒன்றாகி விடுதல், நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுதல்
அதிகாரி- யாகத்தின் எஜமானன் இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
அஸதோ – இல்லாமையிலிருந்து; மா – என்னை
ஸத்- இருத்தலுக்கு, கமய – அழைத்துச் செல்
தமஸோ – இருட்டிலிருந்து, மா – என்னை
ஜ்யோதிர் – வெளிச்சத்திற்கு, கமய – அழைத்துச் செல்
ம்ருத்யோ – மரணத்திலிருந்து, மா – என்னை
அம்ருதம் – மரணமற்ற நிலைக்கு, கமய – அழைத்துச் செல்
உபநிஷத் விளக்கம்: அஸத்தையும், இருட்டையும் மரணத்திற்கு ஒப்பிட்டு; ஸத்தையும், வெளிச்சத்தையும் மரணமற்ற நிலைக்கு ஒப்பிடப்படுகிறது.
சங்கரரின் விளக்கம்:-
- சாஸ்திரத்திற்கு முரண்பட்ட செயல், சிந்தனை இவ்வாறு இருக்கின்ற என்னை, சாஸ்திரம் உரைக்கும் செயலையும் சிந்தனையை உடையவனாக மாற்றுவாயாக. அஸத் – அதர்மம்; ஸத்-தர்மம், அதர்மத்திலிருந்து தர்ம வழிக்கு என்னை எடுத்துச் செல். இங்கே சக்தியை கேட்கிறோம்.
- தமஸோமா ஜ்யோதிர்கமய – தமஸ்-அறியாமை, அக்ஞானம், இருள்; ஜ்யோதி- ஞானம், உண்மை அறிவு, வெளிச்சம். சாஸ்திரம் உரைக்கும் சரியான செயல், சிந்தனை இவைகள் இல்லாதிருக்கும் அறியாமை. இந்த அறியாமையிலிருந்து என்னை சாஸ்திரம் உரைக்கும் செயலையும், சிந்தனையும் உடையவனாக மாற்றுவாயாக. அறிவும் உடல்நலமும் மிகவும் அத்தியாவசியமானது.
- ம்ருத்யு- மரணம்; அம்ருதம் – மரணமற்ற நிலை. ம்ருத்யு=அஸத் + தமஸ், அம்ருதம்- ஹிரண்யகர்ப்பன். அறியாமையிலிருந்தும், அதர்ம செயல்களை செய்யாமல் ஹிரண்யகர்ப்பனை அடைய வேண்டும், ஐக்கியமாகி விட வேண்டும்.
வேதாந்த விசாரம்:
- அஸத்-மித்யா; ஸத்-ஸத்யம். மித்யாவிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல். பொய் தோற்றத்தை உண்மையென்று நம்பி அதைப் பற்றிக் கொண்டிருக்கும் என்னை உண்மையை பற்றிக் கொள்ள அழைத்துச் செல்.
- அறியாமையிலிருந்து விடுவித்து அறிவை அடைவதற்கு அழைத்துச் செல்.
- துயரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்.
பகுதி-04 (புருஷவித பிராமனம்)
உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் சாதனமாகவும், சாத்தியமாகவும் இருக்கிறது. (உ-ம்) பஞ்சு – நூல்; நூல்-துணி, துணி-ஆடைகள்
ஒரு ஜீவன் கர்ம உபாஸனைகள் செய்து அடுத்த ஸ்ருஷ்டியில் ஹிரண்யகர்ப்பனாக பிறக்கிறான்.
1.
ஹிரண்யகர்ப்பன் பெருமை: சாத்திய பிரபஞ்சத்தின் பெருமை. அஹம், புருஷ, ஸ்ருஷ்டி இந்த மூன்றும் ஹிரண்யகர்ப்பனுடைய மறு பெயர்கள். இவர் சுற்றி முற்றும் பார்த்து விட்டு, தனக்கு வேறாக எதையுமே பார்க்கவில்லை என்று உணர்ந்தவுடன் அவர் வாயிலிருந்து வந்த முதல் சொல் ”நான்” மட்டும் தான் இருக்கிறேன் என்பதாகும். ஆகவே விராட் ஸ்வருபத்துக்கு நான் என்ற பெயர் வந்தது. அதனால் அவருக்கு பிறகு வந்த எல்லா ஜீவர்களும் யார் அவர்களை அழைத்தாலும், நான் என்றுதான் முதலில் சொல்கிறார்கள். இந்த விராட் தான் செய்த பாவங்களையெல்லாம் எரித்து விட்டதால் அவனுக்கு “புருஷன்” என்று பெயர் வந்துள்ளது.. ஔஷத் – எரித்துவிடுதல், ஹிரண்யகர்ப்பனாக இருந்தாலும் அவரும் சம்சாரிதான்.
2.
இந்த மந்திரம் சம்சார ஸ்வரூபம், சம்சார ஹேது, பந்தம், பந்த நிவிருத்தி உபாயம் ஆகியவைகளைப் பற்றி விளக்குகிறது.
பயம்தான் சம்சாரம் என்று சொல்லப்படுகிறது. பயம் என்பது துக்க அனுபவம். அரதி-சுகமின்மை (சுக அபிராப்தி). ஹிரண்யகர்ப்பனும் பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறான். சுகமில்லாமலும் இருக்கிறான். பயம் என்பது சம்சார ஸ்வரூபமாக இருக்கிறது. பயத்திற்கு காரணமென்ன? அதை நீக்குவதற்கு என்ன வழி என்பதை இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது. அபிபேத்-பயப்பட்டார்; ஏகாகி-தனிமை – நாம் மட்டும் இருந்தால் பயமும் வந்து விடும்.
ஹிரண்யகர்ப்பன் தனியாக இருக்கும்போது பயப்பட்டார். எனவே அவரது அனைத்து ஜீவர்களும், அனைத்து படைப்புகளும் தனிமையில் பயத்தை அனுபவிக்கின்றார்கள். பயம் வந்தவுடன் அதைப் போக்குவதற்கான வழியை விசாரம் செய்கிறார். அதிலிருந்து ஒரு அறிவை அடைந்தார். ( ஈக்ஷா-சிந்தனை, சக்ரே-செய்தார்.) எனக்கு வேறாக இரண்டாவதாக ஒன்றும் இல்லை என்று உணர்ந்தார். எதனிடமிருந்து நான் பயப்பட வேண்டும் என்று விசாரம் செய்தார். இப்படி நினைத்ததும் அவரிடமிருந்து பயம் சென்று விட்டது. எதைக் கண்டு ஒருவன் பயப்பட வேண்டும் என்று வினவினால் எதனிடத்திலும் நாம் பயப்பட தேவையில்லை என்ற அறிவு வந்து விடும். ஆனால் இருமையிலிருந்தும் பயம் ஏற்படுகிறது.
இருமையிலிருந்து எப்படி பயம் வருகிறது?
இருமை என்னை அழித்து விடும் என்ற நினைப்பதால்தான் பயம் வருகிறது. சரீரத்திற்கு வருகின்ற அழிவைக் கண்டு பயப்படுகிறோம், அல்லது புகழுக்கு ஏற்படும் அழிவைக் கண்டு பயப்படுகிறோம். இப்படி சூட்சும சரீர அழிவைக் கண்டும் பயப்படுகிறோம். நான் சரீரம் என்று நினைப்பது தவறான எண்ணமாகும், நான் என்பதை ஆத்மாவாக நினைக்காததால்தான் சரீரத்தை நானாக நினைத்து அதன் அழிவை எண்ணி பயம் கொள்கிறோம்.
சம்சார நிவிருத்தி உபாய விசாரம்:
விசாரம் ஆத்மாவைப்பற்றியதாக இருக்க வேண்டும் அல்லது நான் யார்? என்பதைப் பற்றி இருக்க வேண்டும். இதன் பலனாக நாம் அடைவது ஆத்ம ஞானம். எனக்கு வேறாக ஒன்றும் இல்லை அன்ற ஞானத்தை அடைய வேண்டும். எந்த அறிவில் இருமை இல்லையோ அதில் சம்சாரம் என்பது கிடையாது. தன்னைத் தவிர வேறெதுவும் இல்லை என்று அறியும்போது பயம் நீங்கி விடும்.
ஹிரண்யகர்ப்பன் தனியொரு ஆளாக எந்த உதவியும் இல்லாமல் எப்படி ஆத்ம ஞானத்தை அடைந்தார்?
முக்ய ஹேது, சஹகார் ஹேது என்று இரண்டு வகையான ஹேதுக்கள் உள்ளன. இதில் முக்ய ஹேது என்பது ஒரு பொருளின் வர்ணத்தை அறிய உதவுகின்ற கண்ணாகும்.. சஹகாரி ஹேது என்பது ஒரு பொருள் நன்றாக தெரிவதற்கு உதவும் மற்ற விஷயங்கள், போதிய வெளிச்சம், அருகில் இருப்பது, போன்றவையாகும்.
அதேபோல ஆத்ம ஞானம் அடைவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முக்கிய காரணம் ஆத்ம விசாரம் – குரு-சாஸ்திர உதவியுடன் செய்யப்படுவது. சஹகாரி விசாரம்: ஞானமடைய அவர்கள் செய்ய வேண்டிய மற்ற தவங்கள். இது ஆளுக்காள் வேறுபடும். எனவே நமக்கு எது உகந்ததாக இருக்கிறதோ அதைக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும். இங்கு ஹிரண்யகர்ப்பன் முற்பிறவியில் செய்த ஆத்ம விசாரத்தின் ஸம்ஸ்காரமும், சித்தஸுத்தி இருந்ததாலும் அவரால் எந்த உதவியில்லாமல் ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டார்.
ஹிரண்யகர்ப்பன் தனியாக இருந்ததால் மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். ஆகவே ஜீவர்களும் தனிமையில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையானது அவர் ஞானம் அடைவதற்கு முன் இருந்த நிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சஹ: ஹிரண்யகர்ப்பான்; நைவ ரேமே– மகிழ்ச்சியற்று இருந்தார்.
ரதி– விரும்பியப்பொருளோடு இணையும்போது ஏற்படும் மானஸ உல்லாசம்.
தனிமையில் ஏன் துயரம் வருகிறது? சம்சாரம் என்பது கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருப்பது. அனுபவிப்பவனுக்கு அனுபவிக்கும் பொருள் இல்லையென்றால் துயரப்படுவான். இது தனிமையில் இருக்கும்போது ஏற்படும் நிலை. ஆனால் போக்தா சாட்சியாக இருந்தால் அவனுக்கு தனிமை துயரத்தை தராது.
- மனுஷ்ய ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
- விலங்குகள் ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
- ஹிரண்யகர்ப்பனுக்கு ஸ்ருஷ்டி என்று பெயரிடப்பட்டது
- தேவர்கள்,உணவு ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
- இதில்5கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கிறது. அவைகள் பிரம்மத்தில் மாயை ஏற்றி வைக்கப்படுவது, பிரவேச ஸ்ருதி, ஜீவ-பிரம்ம ஐக்கியம், சம்சார வர்ணனை, வித்யா சூத்திரம், பிரம்ம வித்யாவினால் கிடைக்கும் பலன்.
- அவ்யாக்ருத பிரபஞ்ச அத்யாரோபம்(மாயை ஏற்றி வைக்கப்படுவது)
சாத்திய, சாதனா பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான காரண பிரபஞ்சம் ஏற்றி வைக்கப்படுகிறது. நாம் அடையக்கூடிய சாத்தியங்கள் பல உள்ளதால் சாதனங்களும் பலவாக உள்ளன. ஆனால் மோட்சம் என்கின்ற சாத்தியத்திற்கு ஒரு சாதனம்தான் இருக்க முடியும். மோட்சம் அடைவதற்கு பல நிலைகளை கடந்து வர வேண்டும். எனவே ஒவ்வொரு நிலையும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஸோபான ரூபம் – படிப்படியாக எடுத்துச் செல்வது;
சுதந்திர ரூபம் – தனிப்பட்ட ஒன்று.
சம்சாரத்தில் வரும் துயரத்தை மறப்பதற்கு சுகமானது நாடப்படுகிறது. ஆனால் துயரத்தின் மூலம் மாயைதான், அதை நீக்கினால்தான் சம்சாரக் கடலை கடக்க முடியும். நம்மிடம் உள்ள அவித்யாவும் சம்சாரத்தின் மூலக் காரணம். சில இடத்தில் பிரம்மமே மூலம் என்று கூறப்படுகிறது. நாம் அனுபவிக்கின்ற இந்த உலகம் தோன்றுவதற்கு முன் அவ்யாக்ருதமாக (மாயையாக) இருந்தது பின் அதிலிருந்துதான் உலகம் தோன்றியது.
தத் இதம் அவ்யாக்ருதம் ஆஸீத் – இந்த உலகம் தோன்றுவதற்கு முன் வெளித் தோற்றத்திற்கு வராததாக (மாயையாக) இருந்தது.
தத் நாமரூபாத்யம் ஏவ வ்யாக்ரியத் – அது நாமரூபங்களாக வெளிப்படுத்தப்பட்டது.
அசௌனாம் அயம் இதம் ரூபம் இதி – இதுதான் ரூபம், இதுதான் நாமம்
தத் இதம் அபி தார்த் – அதுவே இது என்பது போல
நாமரூபாத்யாமேவ வ்யாக்ரியதே – நாம ரூபங்களாக வெளிப்பட்டது
ஜகத்திற்கு இரண்டு அவஸ்தைகள் இருக்கிறது. பரோக்ஷ அவஸ்தா (கண்ணுக்கு தெரியாதது, அனுபவத்திற்கு வராத நிலை), பிரதிபக்ஷம் அவஸ்தா – இந்த நாம ரூபங்கள் ஸத் ஆதாரமாகக் கொண்டுதான் வெளிப்பட்டது.
7.2 பிரவேச ஸ்ருதி:
ஈஸ்வரனே எல்லா சரீரத்துக்குள்ளேயும் நுழைந்திருக்கிறார்.
ஸஹ ஏஷ இஹ ப்ரவிஷ்டஹ– ஜீவாத்மா, பரமாத்மா (பிரம்மம்), எல்லா சரீரங்களிலும், நுழைந்தார். பரமாத்மாவை ஒவ்வொரு ஜீவனிலும் காணலாம். அந்த ஜீவ சரீரத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறார். உறைக்குள் இருக்கும் கத்திப்போலவும், நெருப்புப் உண்டாக்க உபயோகிக்கும் இரு மரத்துண்டுகளில் இருக்கும் நெருப்பைப் போலவும் பரமாத்மா நுழைந்திருக்கிறார்.
கனவு, விழிப்பு நிலையில் நாம் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும், போக்தாவாகவும் இருப்பதால் இது விசேஷமாக இருக்கிறது, ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் முழுவதும் வியாபித்திருக்கிறது. சாமான்ய அறிவுடனும் இருக்கிறது, எப்படி நெருப்பானது அரணிகட்டையில் இருக்கிறதோ. அதுபோல பிரம்மமானது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.
சங்கரரின் விளக்கம்:
பூர்வ பக்ஷி கேள்வி-1
ஸஹ என்ற சொல் மாயையே குறிக்கிறது. இது பரமாத்வாவை குறிக்கவில்லை என்று பூர்வ பக்ஷி கேள்வி எழுப்பினான். அவன் இரண்டு காரணங்களை கூறி இவ்வாறு கேட்டான்.
முதல் காரணம்: அது நாமரூபங்களாக வெளிப்பட்டது என்று முன்னால் உள்ள வாக்கியத்தில் நாமரூபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது காரணம்: அது, அவர் என்ற சொல் முன்னால் பேசப்பட்ட விஷயத்தைத்தான் குறிக்கும் அதுபோல மாயை பற்றித்தான் பேசப்பட்டது எனவே ஸஹ என்பது மாயைத்தான் குறிக்கும்.
முதல் பதில்: ஒரு செயல் செய்யப்படுகின்றதென்றால் அது அறிவுள்ள ஒருவனால்தான் செய்ய முடியும், வெறும் ஜடமாக இருப்பதெல்லாம் செயலுக்கு காரணமாக இருக்காது. எனவே இந்த இடத்தில் மாயை நாமரூபங்களாக வெளிப்பட பரமாத்மா தேவை.
இரண்டாவது பதில்: முதலில் மாயைத்தான் கருத வேண்டும், ஆனால் அது தொடரின் பொருந்தி வருகிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கலாம் எந்த அர்த்தம் அந்த வாக்கியத்திற்கு பொருந்தி வருகிறதோ அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, கிராமம் சுத்தமாக இருக்கிறது என்ற சொல்லில் கிராமம் என்ற இடத்தை பொருட்படுத்துகிறது, விழாவிற்கு கிராமமே வந்தது என்ற வாக்கியத்தில் கிராமம் என்ற சொல்லுக்கு அங்கு வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது, அந்த கிராமத்திற்கு செல்லாதே என்ற வாக்கியம், இடத்தையும், மனிதர்களையும் குறிக்கிறது. அதுபோல அவ்யாக்ருதம் என்ற சொல்லானது “மாயை மட்டும்”, அல்லது “பிரம்மன் மட்டும்”, அல்லது “மாயையும் பிரம்மத்தையும் சேர்த்தும் குறிக்கின்றது. எனவே இந்த இடத்தில் அவ்யாக்ருதம் என்ற சொல்லுக்கு இரண்டாவது அர்த்தமான பிரம்மத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூர்வ பக்ஷி கேள்வி-2
பரமாத்மா வீட்டைக்கட்டி உள்ளே நுழைவது போல ஜீவாத்மாவினுள் நுழைந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்–2: வரையறுக்கப்படாத பிரம்மன் எப்படி வரையறுக்கப்பட்ட உடலுக்குள் நுழைய முடியும். பரமாத்மா எங்கும் நிறைந்திருப்பதால் இப்படியெல்லாம் நுழைய முடியாது.
பூர்வ பக்ஷி கேள்வி-3
வீட்டைக்கட்டி முடித்த பிறகு அதற்குள்ளே நுழைவது அதன் எஜமானன்தான் அந்த வீட்டை கட்டியவர்கள் அல்ல அதேபோல பரமாத்மா இந்த உடலை ஸ்ருஷ்டி செய்தார், ஜீவாத்மா எஜமானன் போல உள்ளே நுழைந்தார்.
பதில்–3: வேதம் பரமாத்மா உடலை ஸ்ருஷ்டி செய்துவிட்டு தானே நுழைந்தார் என்று தெளிவாக சொல்கிறது. எனவே இந்த கருத்தும் ஏற்க முடியாது.
பூர்வ பக்ஷி கேள்வி-4
ஒரு பொருள் தோன்றியவுடன் எந்த குணமும் இல்லாமல் இருக்கிறது. பிறகுதான் குணங்களும் வந்து சேர்கின்றது. அதைப்போல சரீரத்திற்குள் பரமாத்மா நுழைந்து விட்டார்.
பதில்–4: அது மாதிரி முடியாது. ஏனெனில் திரவியத்தை சைதன்யம் சார்ந்திருக்கிறது அது மித்யாவாகி விடும். ஆனால் பரமாத்மா நித்யமாக ஏற்றுக்கொண்டால் இந்த மாதிரி நுழைவதை ஏற்றுக் கொள்ள முடியாது
பூர்வ பக்ஷி கேள்வி-5
பழத்திற்குள் விதையிருக்கிறது அதுபோல இந்த சரீரத்திற்குள் பரமாத்மா நுழைந்துள்ளார்.
பதில்–5: சாஸ்திரம் பரமாத்மாவை நிர்விகாரம், மாற்றத்திற்குட்படாதது என்று கூறியிருக்கிறது.
பூர்வ பக்ஷி கேள்வி-6
சத்தியமான உடலுக்குள் பரமாத்மா பிரதிபலிப்பாக இருக்கிறார்
பதில்–6: சத்தியமான மனதில் பரமாத்மா பிரதிபலிக்க முடியாது.
வேதாந்த விளக்கம்:
நுழைதல் என்பது செயலாக எடுத்துக் கொண்டால் அர்த்தவாதமாகி விடுகிறது. இந்த உடலுக்குள் பரமாத்மாவை அறியமுடியும். சரீரத்திற்குள் உள்ள மனம் அந்தகரணம்.
சங்கரரின் விளக்கம்:
ஜீவாத்மா பலவாக இருக்கிறது, பிறகு எப்படி இவையெல்லாம் ஒரு பரமாத்மாவாக முடியும்?
பல ஜீவாத்மா என்று நீ சொல்வது, பல மனங்களைத்தான் குறிப்பிடுகிறாய், ஆனால் சைதன்யம் ஒன்றுதான்.
ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறவன், சம்சாரியில்லாத பரமாத்மாவோடு ஐக்கியப்படுத்தினால் ஈஸ்வரனும் சம்சாரியாகி விடுவான் அல்லவா?
நித்திய, சுத்தமான பரமாத்மாவோடு அசுத்தமான ஜீவாத்மாவை சேர்த்தால் ஜீவாத்மா சுத்தமாகி விடும். எந்த கருத்து பலன் தருகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். இங்கு பரமாத்மாவோடு சேர்வதால் நான் சுத்தமாகி விடுவேன் என்ற பலன் உண்டு. வேதாந்தம் எப்பொழுதும் நமக்கு தெரியாததை விளக்கி சொல்கிறது. நாம் சுத்தமானவன் என்பது தெரியாததால் அதை எடுத்துச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜீவாத்மா சம்சாரி என்பது பிரத்யக்ஷ பிரமான சித்தம். இது இப்படி இருக்கும்போது அவன் அசம்சாரி என்றால் பிரதியக்ஷ பிரமானத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது? அனுபவத்திற்கு விரோதமாக எப்படி சொல்கிறது?
ஆனந்தஸ்வரூபமாக் இருக்கின்ற ஆத்மா எப்பொழுதுமே நம் அனுபவத்திற்கு விஷயமாக வந்ததில்லை, வரவும் வராது. உன்னுடைய துக்க அனுபவத்திற்கு காரணம் என்ன? நீ மனதிலுள்ள அனுபவத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாய் அதிலுள்ள துக்கத்தை உணர்கிறாய். மனதில் உள்ள சுக துக்கத்தை உன்னுடைய ஸ்வரூபமாக நினைத்து விட்டாய். குழந்தைகள் துக்கப்பட்டால் பெற்றோர்களும் துக்கப்படுவதை போல உன்னிடமிருந்து வேறான ஒன்றிலிருந்து துக்கத்தை உன்னுடையது என்று நினைத்து விட்டாய். உன்னுடைய பிரதிபக்ஷ பிரமாண அனுபவமானது மனதில் ஏற்படுவது அதை நீ உன்னுடையது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறாய். நீ மட்டும் மனதிலிருந்து பிரிந்து நின்று சாட்சியாக இருந்தால், அறிவு ஸ்வரூபமாக இருந்தால் நீ ஆனந்த ஸ்வரூபமானவன் என்று உணர்ந்து கொள்வாய்.. மனதினுடைய அனுபவம் ஆத்மா அனுபவிக்கும் விஷயம் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவை ஒரு பொருளாக அனுபவிக்க வேண்டாம், ஆனால் ஆத்மா ஆத்மாவை அனுபவிக்கட்டுமே.
அனுபவிப்பனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது. உதாரணமாக நானும், நான் சாப்பிடும் இட்லியும் ஒன்றாக முடியாது.
ஒரு பகுதியான ஆத்மா அனுபவிப்பவன், இன்னொரு பகுதியான ஆத்மாவை அனுபவிக்கலாமே?
ஆத்மாவனது நிர்விகல்பம் (பிளவுபடுத்த முடியாதது) எனவே இது சாத்தியமல்ல. எதற்கு அவயவங்கள் இருக்கிறதொ அவையெல்லாம் அழியக்கூடியவை ஆனல் ஆத்மா அழிவற்றது, அவயவங்கள் இல்லாதது. ஆத்ம ஞானம், ஆத்மாவை அனுபவிக்க முடியாது, ஆத்மாவை அறிந்தால் மனதிற்குள் வரும் மனநிறைவை அனுபவிக்கலாம்.
ஆத்மாவுக்கு சுக-துக்கம், இச்சா, துவேஷம் போன்ற குணங்களை உடையது. இதை அனுமான பிரமாணத்தால்தான் அறிய முடியும். ஆத்மா ஜடம், மனமும் ஜடம், இவையிரண்டும் சேர்ந்து சைதன்யம் தோன்றுகிறது.
நித்யமான ஆத்மாவில் அநித்யமான குணங்கள் எப்படி வந்து போகும். குணத்தையும் அதை கூடியிருப்பவனையும் பிரக்க முடியாது என்று தர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ஆத்மா நித்யம், குணங்கள் அநித்தியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. மோட்சத்தையே அடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும். நித்யமான ஒரு பொருள் அநித்யமான பொருளோடு தொடர்ந்து இணைந்து இருக்க முடியாது.
ஒரு பொருளை கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் அதன் குணங்களை பார்க்க முடியும். குணங்களை பிரத்யக்ஷ பிரமானத்தால் பார்க்கலாம். ஆனால் ஆத்மாவை அனுமானத்தினால் அறிய முடியும். என்பது தவறு.
சம்யோகம்-சேர்க்கை- இரண்டு பொருட்கள் ஒன்று சேர வேண்டுமானால் இரண்டும் உருவத்துடன் இருக்க வேண்டும் என்ற தர்க்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஆத்மாவும், மனதும் உருவமற்றவை எனவே இரண்டும் ஒன்று சேர முடியாது.
ஆத்மாவானது மிகச்சிறிய அணு, மிகப்பெரியது விபு இவையிரண்டுக்கும் இடைப்பட்டது என்றும், ஆத்மாவின் அளவு ஸ்தூல உடம்பின் அளவைப்பொறுத்திருக்கும் என்றும் ஜைனர்கள் கூறுகிறார்கள். எதற்கெல்லாம் உருவமிருக்கிறதோ அவையெல்லாம் அநித்யம் எனவே ஆத்மாவிற்கு இது பொருந்தாது.
7.3 சம்சார வர்ணனை:
மனதில் இருக்கும் நிறைவின்மை சம்சாரம். அதற்கு காரணம் அறியாமை.
மந்திர விளக்கம்:
தே-பிரம்மத்தை; ந பஷ்யந்தி- (மனிதர்கள்) அறிவதில்லை.
அறியாமையின் விளைவாக இந்த ஜீவன் சம்சாரியாக இருக்கிறான். பிரம்மமாக இருப்பவன் தான் பிரம்மன் என்று அறியாதவனாக இருக்கிறான். எப்படி இவன் நிறைவின்மையற்றவனாக இருக்கிறான்? எனக்கு தெரிந்து கொண்டிருக்கிற இந்த ஸ்தூல, சூட்சும சரீரங்களில்தான் என்னால் அபிமானம் வைக்க முடிகிறது. அதுவும் ஒரே சமயத்தில் முழுவதையும் உபயோகித்து விஷயங்களை அறிவதோ, இன்ப துன்பங்களை அனுபவிப்பதோ கிடையாது. கண்ணால் பார்க்கும் விஷயங்களில் கண் மட்டும் அபிமானமாக இருக்கிறது. பிராணனை அபிமானிக்கும் போது பிராணனாக இருக்கிறான், பேசும்போது பேசுபவனாக இருக்கிறான், பார்க்கும் போது கண்ணாக மட்டும் இருக்கிறான், கேட்கும்போது காதாக இருக்கிறான். நினைக்கும் போது மனதாக இருக்கிறான். இவைகளெல்லாம் செயல்களினால் வந்த தனிமைகள், எந்த ஒருவன் தன்னை இவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறானோ அவன் உண்மையை புரிந்தவனில்லை. அவன் முழுமையற்றவன், நிறைவற்றவன். அதனால் ஒவ்வொன்றாக பிளவுபட்டவனாக இருக்கின்றான். உலகம் எப்பொழுதும் ஒருவனை நிறைவற்றவனாகவே வைத்திருக்கும் இப்படி நிறைவற்றவனாக இருப்பவன் எப்படி நிறைவுள்ளவனாக இருக்க முடியும்?
உபாதி என்பது எந்த ஒன்று தன்னுடைய தர்மத்தை தன்னருகில் உள்ள வேறொன்றின் மீது ஏற்றி வைக்கின்றவொன்றை குறிக்கிறது. உதாரணமாக மலர் தன்னுடைய நிறத்தை ஸ்படிகத்தில் தோன்றி அதன் நிறத்தை பிரதிபலிக்கிறது. இதனால் மலரானது ஸ்படிகத்தின் உபாதி என்று கூறலாம்.
நாம் மூன்று விதமான சரீரங்களை உபாதிகளாக உடையவர்களாக இருக்கிறோம். பரமாத்மா உபஹிதமாக இருக்கிறார். ஸ்தூல சரீரம் உபாதி என்பதாலே அதனுடைய குணத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. ஆறு விகாரங்களான பிறத்தல், வளர்தல், இருத்தல், வயாதாகிறது, முதுமை, மரணம் ஆகியவைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. சூட்சும சரீர தர்மங்களான மூன்று அவஸ்தைகள் சத்வ, ராஜஸ, தாமஸ ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. காரண சரீரத்தில் இரண்டு நிலை அக்ஞானம், அறிவில் நிறைவின்மை (அனாத்மா விஷயத்தில் இந்த நிலை) இதுதான் அக்ஞான அவஸ்தை, இன்பத்தை தேடி அலைதல் இவைகள் எல்லாம் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.
7.4 வித்யா சூத்திரம்:
ஆத்மா இத்யேவ உபாசீதஹ (முண்டக உநி) என்கின்ற இந்த உபநிஷத் வாக்கியமே வித்யா சூத்திரம். முழுமையில்லாதவனை முழுமையானவனாக மாற்றும் சூத்திரமே வித்யா சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. நிறைவு செய்ய முடியாத மனதை நிறைவு செய்வது பிரம்மன். அதுவே ஆத்மா என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக பார்க்கும் விஷயத்தில் பார்க்கும் கருவியான கண்ணை விட்டுவிட்டு அறிவை மட்டும் எடுத்துக்கொண்டு அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற பிரம்மமும், இந்த உலகில் பிரகாசிக்கின்ற ஆத்மாவும் ஒன்றுதான். இப்படி புரிந்து கொண்டால் தனக்குள் இருக்கின்ற அனைத்தும் ஒன்றாகி பூரணமாகி விடுவான். தன்னகத்தே உள்ளவைகளை வேற்றுமைகளாக நினைப்பதெல்லாம் ஒன்றாகி விடுகின்றது.
சங்கரரின் விளக்கம்:
முழு வேதமே விதி, நமக்கு ஆணையிட்டு சிலவற்றை சொல்வதன் மூலம் நம்மை கர்மத்தில் ஈடுபடுத்தும். உபாஸனம் என்பது தியானத்தைக் குறிப்பதால் இதை வைத்துக்கொண்டு சொல்லப்படும் கருத்துக்கள் சில கீழே கூறப்படுகிறது.
பூர்வமிமாம்ஸகர்களின் கருத்து: ஈஸ்வரன் என்ற தத்துவமே தேவையில்லை, வேதத்தில் உள்ள கருத்துக்களே நம்மை ஆணையிட்டு செய்ய வைக்கிற சக்தி உடையவை. இதை பாவனா – உற்பத்தியாகும் சக்தி என்று அழைப்பர். இந்த பாவனா இருவகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள்,
1. சாப்தி பாவனா – சப்தத்திலே இருக்கிற சக்தி, அந்த வினைச்சொல்லில் இருக்கிற சக்தி. இது நம்முடைய மனதுக்குள் சொல்லப்பட்ட கர்மத்தை செய்ய வேண்டும் என்ற உந்துதலை, எண்ணத்தை (கர்தவ்ய புத்தி) உற்பத்தி செய்கிறது.
2. ஆர்த்தி பாவனா – மனதுக்குள் இதை செய்ய வேண்டும் என்ற சக்தி உருவாகும் பாவனையை இவ்வாறு அழைக்கின்றனர்.
இந்த உபாஸனைகளும் மூன்று அம்சங்களாக பிரிக்கப்படுகிறது. ஒரு செயலை செய்யும் போது 1. எதைச் செய்வது, 2. எதனால் செய்வது, 3. எப்படி செய்வது என்ற மூன்று கேள்விகள் பிறக்கும். உதாரணமாக கொண்டு வா என்ற வினைச்சொல்லானது, எதைக் கொண்டு வருவது? எதில் வைத்துக் கொண்டு வர வேண்டும்? எப்படி கொண்டு வரவேண்டும்? என்ற மூன்று கேள்விகளைக் கேட்க வைக்கும். இதுவே 1. சாத்தியம், 2. சாதனா, 3. செய்முறை என்று பிரயோகிக்கப்படுகிறது.
(உ-ம்) யஜேத : யாகம் செய்ய வேண்டும்.
- எதற்காக செய்ய வேண்டும்? – சுவர்க்கத்தில் ஆசையிருப்பதால்
- என்ன சாதனத்தை பயன்படுத்தி செய்ய வேண்டும்? – ஜோதிஷ்டம் என்ற யாகத்தை செய்ய வேண்டும்.
- அதை எப்படி செய்ய வேண்டும்? – வேதம் இதையும் விளக்கமாக சொல்லியிருக்கிறது
ஒரு வாக்கியத்தைப் படித்ததும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்.
சாப்தி பாவனா:- கிம், கேன, கதம் (தூண்டுதல், கட்டளை, முக்கியத்துவம்)
ஆர்த்தி பாவனா– மனதுக்குள் இந்த செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல்.
சொல்லில் உள்ள கட்டளை – சாதனம்
கட்டளையை முக்கியமாக எடுத்துக்கொள்ளுதல் – செய்முறை.
இதை அர்த்தவாதம் என்றும் கூறப்படுகிறது. சாத்தியம், சாதனம் இவைகளின் பெருமைகளை உரைத்தல்.
கிம் – சாத்தியம் – ஆத்மா ஹிரண்யகர்ப்பனாக மாறுதல், ஹிரண்யகர்ப்பனுடன் ஐக்கியமாதல்
கேன – சாதனம் – மனதின் மூலமாக
கதம் – சம, தம, உபரதி, த்திக்ஷா,
ஆகவே இது விதி வாக்கியம் – செயலைத் தூண்டும் வாக்கியம்.
ஒரு வாக்கியத்தைக் கேட்டவுடன் நம் உள்ளத்தில் எதிர்ப்பார்ப்பு இருந்தால்தான் இந்த பாவனைகள் செயல்படும், இல்லையென்றால் செயல்படாது.. உதாரணமாக சும்மா இருப்பவனிடம் சென்று சமையலறையில் நீர் இருக்கிறது என்று சொன்னால், அந்த வாக்கியம், “அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்ற எதிர்ப்பார்ப்பு வருகிறது. ஆனால் தாகத்தை தீர்ப்பதற்காக நீரைத்தேடி கொண்டிருப்பவனுக்கு இந்த வாக்கியம் எந்த எதிர்ப்பார்ப்பும் ஏற்படுத்தாது, அதை தேடியது கிடைத்துவிட்ட திருப்தியில் இருப்பான். அதேபோல ஆத்மாவைத் தேடிக்கொண்டிருப்பவன், நான் யார் என்று கேள்வியுடன் இருப்பவனுக்கு ஆத்மா இத்யதே உபாஸீதஹ என்ற வாக்கியம் தான் தேடியதை அடைந்ததில் திருப்தியடைவான். மனநிறைவுடன் இருப்பான். அதைத் தவிர்த்து வேறெந்த செயலையும் செய்யத்தூண்டாது.
சங்கரரின் விளக்கம்:
ஆத்மாவைப்பற்றிய விளக்கத்தை படிக்க வேண்டும் என்ற அறிவை வேதத்தில் இருந்து அடைவதில்லை, சம்பிரதாயத்திலிருந்து சொல்லப்பட்டு, அதைக்கேட்டு நாம் வேதத்தின் உதவியை நாட வேண்டும்.
ஆத்மாவை அறிந்துக்கொண்டு அதையே எல்லா நேரத்திலும் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இந்த வாக்கியம் உரைக்கிறது.
ஒரு அறிவை அடைந்ததும் அது தேவைப்படும்போது வரவேண்டும். எல்லா நேரத்திலும்
இது நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- ஞானம் அடைந்து விட்டால், அது எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, நினைவானது தானாக வரவேண்டும், கட்டளையிட வேண்டிய அவசியமில்லை.
- தவறான அறிவை நீக்கி, சரியான அறிவை புதியதாக அடைந்தது விட வேண்டும். அதற்குப் பிறகு இந்தப்புதிய அறிவு தேவைப்படும் போது தானே வரும். அதுபோல நான் ஆத்மாஸ்வருபன், பூரணமானவன் என்ற ஞான நிஷ்டையடைந்தவனுக்கு இது எந்த நேரத்திலும் தானாக தேவைப்படும் போது வெளியே வரும்.
எனவே இதை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
யோக சூத்திரத்தில் வருகின்ற ஒரு சூத்திரம் “சித்த விருத்தி நிரோதஹ”, இதற்கு எல்லா எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாமே?
யோகிகள் நிரோதஹ என்று சொல்வதற்கு நாசம் செய்தல் என்று பொருள் சொல்வார்கள். சிலர் அடக்க வேண்டுமென்றும், வேறு சிலர் ஒடுக்க வேண்டுமென்றும் பொருள் சொல்லுவார்கள். ஆனால் வேதாந்தத்தில் இருப்பதை இல்லாததாக சொல்ல முடியாது. எண்ணங்களை நாசம் செய்தால் மனமும் நாசமடைந்து விடும், இது முடியாத நிலை. சித்தத்தில் இருக்கின்ற எண்ணங்களை முறைப்படுத்துதல், சாத்வீக எண்ணங்களாக மாற்றுதல் என்று வேதாந்தம் பொருள் சொல்லுகிறது. இப்படி செய்வதினால் ஞானம் அடைதல், பிறகு குணாதீதனாக மாறுதல் போன்றவை நிகழும். யோக சூத்திரத்தில் கூறிய கருத்துக்கள் மோட்சத்திற்கு நேரிடையான காரணம் அல்ல. ஆனால் அது நம்மை தகுதிப்படுத்த உதவும்.
செயலினால்தான் பலன் வருமே தவிர, வெறும் அறிவினால் எப்படி பலன் கிடைக்கும்?
தவறான அறிவினால் துயரப்பட்டிருக்கும்போது சரியான அறிவை அடைந்தால் துயரம் நீங்கி விடுகின்றதே அதுபோலத்தான். உதாரணமாக கயிற்றில் தோன்றும் பாம்பானது தவறான அறிவினால் பயத்தைக் கொடுக்கும், சரியான அறிவு வந்ததும் பயம் நீங்குகிறது. இங்கே பலன் அடைந்த அறிவினால் மட்டுமே கிடைக்கிறது. நான் ஆத்மா என்ற அறிவு வரும்போது, என்னை அனாத்மா என்று நினைத்துக்கொண்டு பட்ட துயரங்களெல்லாம் நீங்கி விடும். சம்சாரத்தின் மூலக்காரணம் அவித்யா (அறியாமை) இதை நீக்கினால் சம்சாரம் நீங்கிவிடும்.
இலக்கணப்படி உபாஸீதே என்ற சொல் கட்டளையைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது.
உப + ஆஸ் = தியானத்திற்கு பயன்படுத்துகின்ற இலக்கணம்
ஆத்மா+இதி – இங்கு இதி என்ற சொல் பொதுவாக மனம், பிரம்மன் என்று வேதாந்தம் கூறுகிறது. இப்படி கட்டளையாக எடுத்துக்கொண்டால், மனம், பிரம்மன் இவைகள் இல்லாததாக இருக்கிறது.
- ஒரு வினைச்சொல் எந்த இடத்தில் வருகிறதோ அதற்கேற்றபடிதான் பொருள் கொள்ள வேண்டும். இது ஞான பிரக்ரணம், இங்கு புரிந்துக்கொள்ள வேண்டிய அறிவானது உபதேசிக்கப்படுகிறது. எனவே இங்கே புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
- எப்படி நீங்கள் நிகழ்காலத்தைக் குறிக்கும் சொல்லை கட்டளை சொல்லாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாற்றி சொல்கிறீர்களோ அதுபோல இங்கே கட்டளை சொல்லை உபதேச சொல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆத்மா+இதி – இங்கே “இதி” என்ற சொல் ஆத்மாவை அறிவுக்கு விஷயமாக, அறிவு ஸ்வரூபமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஞானப்பலன்:
பதநீயம்: எந்தவொன்று எல்லோருக்குள் இருக்கிறதோ அதுவே ஆத்மா. இந்தவொன்றை (ஆத்மாவை) அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகின்றது.
யதா ஹவை பதேன அனுவிந்தேத் – பசுவை கண்டுபிடிப்பதற்கு அதனுடைய கால் தடத்தின் மூலமாக அறிகின்றோமோ, அதுபோல
கீதி ஸ்லோகம் விந்ததே – நாம் விரும்பிய உலகத்தின் (உலகத்தில் உள்ள பொருட்கள்) சம்பந்தத்தை அடைகின்றோம். ஆனால் துயரப்படுவதில்லை.
கீர்தா – ஜீவ-பிரம்ம ஐக்கிய ஞானத்தையுடையவன்.
ஸ்லோகம் – மோக்ஷம்.
யார் இவ்வாறு புரிந்து கொள்கிறார்களெ அவர்கள் ஜீவ-பிரம்ம ஐக்கியத்துடன் மோக்ஷத்தை அடைகிறான்
உலகில் எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஏன் ஆத்மாவை அறிய வேண்டும்?
ஆத்மாவை நாம் மிகவும் நேசிக்கின்றோம், அது நம்மையறியாமலே நாம் மிகவும் விரும்புகின்ற விஷயம். நம்முடைய குழந்தைகளை விட அதிகமாகவே நேசிக்கிறோம். நாம் எல்லோரும் சுகத்தைத்தான் மிகவும் விரும்புகின்றோம். எவையெல்லாம் சுகத்தைக் கொடுக்கிறதோ அந்த சுகசாதனம் அடுத்ததாக நேசிக்கிறோம். அந்த சுகசாதனம் நமக்கு சுகத்தை கொடுக்கும்போது அதை விரும்புகிறோம், எப்பொழுது அது துக்க சாதனமாக மாறுகிறதோ அப்போதே அது நமக்கு விரும்பத்தகாததாக மாறி விடுகிறது. சுகத்தில் பிரியமிருக்கிறது; சுக சாதனத்தின் மீதும் பிரியமிருக்கிறது. ஆனால் எதில் நிபந்தனையில்லாத பிரியமிருக்கிறது என்றால் அனுபவிக்கும் சுகத்தின் மீதுதான், சுகத்தை கொடுக்கும் சாதனையில் இல்லை. சுகத்தின் மீது இருக்கும் அன்புதான் சுகசாதனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. என்மீது கொண்டிருக்கும் அன்பு நிபந்தனையற்றதா அல்லது நிபந்தனையுடன் கூடியதா என்று யோசித்தால், நாம் நம்மை நிபந்தனையின்றி நேசிக்கிறோம். இதிலிருந்து அறிவது என்னையும், சுகத்தையும் நிபந்தனையின்றி நேசிக்கிறோம். இங்கே நான் என்பது ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
மந்திர விளக்கம்:-
ததே3தத்ப்ரேயஹ புத்ராத் – தனது மகனைக் காட்டிலும் அதிகமாக ஆத்மாவைத்தான் (தன்னைத்தான்) அதிகமாக நேசிக்க வேண்டும்
ப்ரேயஹ வித்தாத் – பணத்தைக் காட்டிலும் மிகவும் பிரியமானது
ப்ரேயஹ அன்யசஸ்மாத் ஸர்வஸ்மாத் – மற்ற அனைத்தைக் காட்டிலும் அதிகமாக நேசிப்பது ஆத்மாதான்.
அந்தரதரம் – நமக்கு மிகவும் அருகில் இருப்பது
யத்3 அயம் ஆத்மா – அது நம்முடைய ஆதமா.
நான் என்பது உடல் என்று நினைப்பவன் அந்த உடலுக்காக எதையும் தியாகம் செய்வான். நான் என்பது ஆத்மாதான் என்று தான் கொண்ட லட்சியத்தின் மீது பற்று வைத்திருக்கும் போது உடல் மீது இருக்கின்ற அபிமானம் சென்று விட்டதால், உடலழிந்தாலும் கவலைபடமாட்டார்கள். ராணுவ வீரர்கள், தேசத்தின் விடுதலைக்காக் போராடுபவர்கள் அவர்களது தேகத்தின் மீதுள்ள பற்றை தேசத்தின் மீது வைத்து விடுவதால், அவர்கள் உடலின் அழிவை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். நான் என்பதில் உள்ள பிரியத்தை யாராலும் நீக்க முடியாது, அந்த நான் எதில் இருக்கிறதோ அதைத் தவிர மற்ற அனைத்தையும் தியாகம் செய்து விடுவோம்.
ஸஹ யஹ அன்யம் ஆத்மனஹ ப்ரிய – எனக்கு வேறாக உள்ள பொருளிடத்தில் பிரியம் இருக்கிறது என்று கூறிய அக்ஞானியிடம்,
ப்ரியம் ரோத்ஸ்யதி ஷ்வி – உன்னுடைய இந்த பிரியமும் அழிந்து விடும், பிரியமானப் பொருட்களும் அழியக்கூடியவை.
ஈஷ்வரஹ – ஞானி இப்படி சொல்வதற்கு தகுதியானவன்.
தஸைவ ஸ்யாத் – அவர் சொற்படித்தான் நடக்கும்.
ஆத்மானம் ஏவ ப்ரியம் உபாஸீத – ஒருவன் ஆத்மாவை (தன்னையே) ஆனந்த ஸ்வரூபமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
ப்ரியம் ந ப்ரமாயுகம் ப4வதி – ஆத்ம சுகம் அவனை விட்டு விலகிச் செல்லாது.
—-0000—-
ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-2
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்
திருத்தம் செய்யப்பட்டது – 05-03-2022
ஸ்லோகம்–9
————————————————————————————————————————————————————
சிஷ்யர்களுக்கிடையே உள்ள உரையாடல். பிரம்ம ஞானத்தை அடைந்தவன் அனைத்துமாகி விடுகிறான்.
ப்3ரஹ்மவித்3யா ஸர்வ ப4விஷ்யந்தஹ – பிரம்மமே எல்லாவாகவும் இருக்கின்றது.
அப்படியென்றால் இந்த பிரம்மம் எதையறிந்து எல்லாவாக ஆகிறது? பிரம்மம் தன்னையே அறிந்ததனால் எல்லாவாக இருக்கிறது.
மனுஷ்யா மன்யந்தே – இப்படி மனிதர்கள் கருதுகிறார்கள்.
கிமு தத்3 ப்3ரஹ்ம ஆவேத்3 – அதை இந்த பிரம்மம் அறிந்து
யஸ்யாத் – எதனால்
தத் ஸர்வம் ப3வத்3 இதி – அனைத்துமாக ஆனது.
கிம் ப்3ரஹ்ம? – அந்த பிரம்மம் வரையறைக்குட்பட்டதா இல்லையா? அது எதை அறிந்தது
- பிரம்மம் எதையாவது அறிந்து அனைத்துமாக ஆனதா அல்லது எதையும் அறியாமல் எப்படி இருக்கிறது?
- பின்னர் பிரம்மம் தன்னை அறிந்து அனைத்துமாக ஆனது, அல்லது எதையாவது அறிந்து அப்படியானதா?
பிரம்மம் தன்னை அறிந்தே அனைத்துமானது.
கேள்வி : கர்மாவும், கர்த்தாவும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? அது அதையையே எப்படி அறிய முடியும்?
ஸ்லோகம்–10
————————————————————————————————————————————————————
பகுதி-1 – மஹாவாக்கிய பகுதி
ப்3ரஹ்ம வா இத3ம் அக்3ரே ஆஸீத் – பிரம்மன் ஞானத்தை அடைவதற்கு முன்பு ஜீவாத்மாவாக இருந்தது.
தத்3 – அந்த பிரம்மன்;
ஆத்மானமேவம் ஆஸீத் – தன்னையே அறிந்தது;
அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பரம்பொருளாக இருக்கிறேன் என்று தன்னை அறிந்தது
தஸ்மாத் – ஆகவே;
தத்3 – அந்த பிரம்மன்;
ஸர்வம் அப4வத் – அனைத்துமாக ஆனது.
விசாரம்:-
கேள்வி: பிரம்மன் ஞானத்திற்கு முன் ஜீவனாக தன்னை அறிகின்றது. இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியே அக்ஞானம். இந்த இடைவெளியை ஞானத்தைக் கொண்டுதான் நீக்க முடியும்.
பதில்: அஹம்–நான்; ப்3ரஹ்ம- பிரம்மனாக; அஸ்மி-இருக்கின்றேன்.
நான் என்ற சொல்லுக்கு “உணர்வு” இருக்கிறது. அது மூன்று உடலோடும் கலந்திருக்கிறது. (உணர்வு + உடல்) இதற்குள்தான் வியாபிக்க முடியும். இந்த மூன்று உடல்களுக்கும் “நான்” என்ற சொல்லுக்கு உணர்த்துகிறதா இல்லையா? இதுதான் ஜீவ விசாரம் – த்ருக், த்ருஷ்ய விவேகம், அவஸ்தாத்ரய விவேகம், பஞ்சகோச விவேகம், மூன்று சரீர விசாரம். நான் என்ற சொல் மூன்று உடலையும் குறிக்காது. அது உணர்வையும், சைதன்யத்தையும் மட்டும் குறிக்கிறது.
அஹம் – நான் – அறிவு ஸ்வரூபம்தான் சரியான பொருள்
ப்3ரஹ்ம – பரம்பொருள் – தெரிகின்ற உலகத்துக்கே ஆதாரம் என்று காரிய-காரண விசாரத்தை செய்து, காரணம்தான் ஸ்த், காரியம் மித்யா என்ற கருத்தை அடைவதுதான் முடிவானது.
அஸ்மி – இருக்கின்றேன். (எல்லா காலத்திலும்)
நான் பிரம்மன் என்று அறிந்து கொள்ளும்போது அனைத்துமாக இருக்கிறேன் என்று உணர்கின்றேன்.
சங்கர பாஷ்ய விசாரம்:
கேள்வி-1: ஜீவாத்மா ஞானம் அடைவதற்கு முன்னும் ஜீவாத்மாவாகத்தான் இருந்தது. அந்த ஜீவாத்மா தன்னையறிந்து நான் பரமாத்மா என்று அறிந்தது, பரமாத்வாகவே மாறியது. ஜீவன் உபாஸனை செய்து பிரம்மனாக மாறுகிறான். உபாஸனை என்ற சாதனம் மூலம் பிரம்மனின் அங்கமாக மாறிவிடுவான். ஜீவன் பிரம்மனாகப் போகிறான் எனவே அதற்கு முன்பே பிரம்மன் என்று உபநிஷத் சொல்லியிருக்கிறது.
பதில்-1: ஒன்று ஏதோ ஒரு நிமித்தத்தினால் வேறொன்றாக மாறுகிறது. ஆனால் அந்த நிமித்தம் நீங்கினால் அது மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடும். தண்ணீர் வெப்பத்தினால் ஆவியாகிறது. பிறகு வெப்பம் நீங்கினால் மறுபடியும் நீராக மாறி விடுவதை உதாரணமாகக் கொள்ளலாம். இந்த வகையான மாற்றம் நிலையானதல்ல. ஜீவன் உபாஸனையால் பிரம்மனாக மாறியிருந்தால், அந்த உபாஸனை நீங்கினால் மீண்டும் ஜீவனாகி விடுவான். எது உருவாக்கப்பட்டதோ அது அழியக் கூடியது என்பது நியதி. ஜீவன் உபாஸனை மூலம் பிரம்மனாக உருவாகினால், அது அழியக்கூடியதாகி விடும். இந்த நிலை பிரம்ம நிலை கிடையாது.
ஸ்ருதஹானம் அங்குத கல்பனா – கேட்டதை விட்டு விட்டு கேட்காததை கற்பனை செய்வதை போல இருக்கிறது. பிரம்ம என்ற சப்தத்தை விட்டுவிட்டு ஜீவன் என்று நீயாக கற்பனை செய்கிறாய். ஜீவனாக இருக்கும் நிலை அறியாமையினால் வந்த விளைவு. ஞானத்தினால் பிரம்மன் அறிந்து கொள்ளும் நிலை.
கேள்வி-2 – பிரம்மனிட்த்தில் எப்படி அறியாமை வரும்? சூரியனிட்த்தில் எப்படி இருள் வரும்?
- நித்தியமான பிரம்மன் எப்படி அறியாமைக்குரிய விஷயமானது?
- அறியாமைக்குரிய ஆஸ்ரயமாக எப்படி வரும்?
பதில்-2 – உபநிஷத் பிரம்மத்தைப்பற்றி விளக்குவதால் அதைப்பற்றிய அறியாமைத்தான் நம்மிடம் இருக்கிறது என்று அறிய வேண்டும். எந்தப்பொருள் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருந்தாலும் அத்யாஸம் காரணமாக மறைக்கப்பட்டிருந்தால் அதை விளக்க வேண்டியதாக இருக்கிறது. அறியாமை அறிவுள்ள வஸ்துவிடம்தான் இருக்கும். எனவே இதுதான் அறிவுக்கும், அறியாமைக்கும் ஆஸ்ரயமாக இருக்கும். சேதன வஸ்துவாக பிரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. பிரம்மனுக்கு வேறாக ஒரு அறிவு ஸ்வரூபம் இல்லை, ஆஸ்ரயம் பிரம்மத்துக்குத்தான் போய் சேரும்.
கேள்வி-3 – பிரம்மனே அனைத்துமாக இருப்பதால் எதற்காக சாஸ்திரத்தை நாம் படிக்க வேண்டும்?
பதில்-3 – பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு, புரிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை, அதை உணராதவனுக்கு அதை புரிந்து கொள்ள சாஸ்திரம் கட்டாயம் தேவை.
கேள்வி-4 – நான் எப்பொழுதும் பிரம்மனாகவே இருக்கிறேன், பிறகு எதற்கு அதை புரிந்து கொள்ள வேண்டும்?
பதில்-4 – பிரம்மத்தை புரிந்ததற்கு முன் உள்ள அனுபவங்கள், புரிந்தவுடன் அனுபவிக்கும் அனுபவங்கள் பார்த்தோமேயானால் நமக்கு ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிய வரும். புரிந்தவனுடைய மனநிலையையும், புரியாதவனுடைய மனநிலையும் ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் அதன் அவசியம் தெரிய வரும். எனவே சாஸ்திரத்தின் உதவியை பயன்படுத்திக் கொண்டால்தான் பிரம்ம ஞானத்தை அடைய முடியும்.
கேள்வி-5 – சாஸ்திரம் பிரம்மன், ஜீவன் என்ற தத்துவத்தை தனித்தனியாக பேசியிருக்கிறது. அதை நான் எடுத்துக் கொள்ளலாமா? ஜீவன் இறந்தாலும் கர்ம பலன்களை எடுத்துக் கொண்டு செல்கிறான். பிரம்மனுக்கு வேறாக ஜீவன் இருக்கிறான் என்று விளக்கப்படுகிறது. இந்த ஜீவன் ஈஸ்வரனை அடைய வேண்டும்.என்றும் உபதேசிக்கிறது. இதை வைத்துப்பார்க்கும் போது ஜீவன் வேறு, பிரம்மன் வேறு என்று நன்றாக தெரிகிறதல்லவா? மற்ற சாஸ்திரங்களும் ஜீவன், பிரம்மன் என்று தனித்தனியாக உபதேசிக்கிறது.
பதில்-5 – இங்கு பிரம்மனைப் பற்றி தெரிந்தால்தான் அனைத்துமாக முடியும் என்று சொல்வதால், உபநிஷத் பிரம்மனைத்தான் தாத்பர்யமாக சொல்கிறது. ஜீவனைப் பற்றி சொல்வதெல்லாம் அனுவாதம் வாக்கியம் (தெரிந்ததைச் சொல்வது). ஆனால் பிரம்மத்தைத்தான் முக்கிய நோக்கமாக, அறியப்பட வேண்டியதாக உள்ளது என்று உபதேசிக்கிறது.
கேள்வி-6 – யார் பிரம்மத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் பிரம்மம் தானே? அறிவை அடையும்போது மனதில் விகாரம் (மாற்றம்) ஏற்படும். பிரம்மன் மாற்றத்துக்குட்பட்டதா?
பதில்-6 – நீ அறிபவனை பிரம்மன் என்று சொன்னவுடன், அறிபவன் என்றொருவன் இருப்பது போலாகிறது. இதனால் இரண்டு விதமான அறிபவர்கள் இருக்கிறார்கள் என்றாகிவிடுகிறது.. பிரமாதா அந்தக்கரணங்களின் மூலமாக அறிபவன் விகாரத்தையுடையவன். இன்னொரு அறிபவன் எப்பொழுதும் அறிந்துக் கொண்டேயிருக்கின்றான். இவன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை.
கேள்வி-7 – “அந்த பிரம்மன் தன்னையே அறிந்து, தான் பிரம்மனாக இருக்கிறேன்” என்ற வாக்கியத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. பிரம்மன் தன்னையே அறிவதன் பலன் அறிபவன் அறியப்படும் என்ற தோஷம் வருகிறது. அறிபவன் அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடுகிறான். அதன்படி பிரம்மன் எப்படி பிரம்மனாகவே அறியும்?
பதில்-7 – பிரம்மத்தை ஒரு விஷயமாகவோ, பொருளாகவோ அறியவில்லை. அது ஏற்கனவே விளங்கிக்கொண்டிருக்கிறது, ஏற்கனவே பிரம்மன் என்னிடத்திலே விளங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் பிரம்மன் என்று விளங்கவில்லை, எனவே சாஸ்திரத்தின் துணைக்கொண்டு அதன் ஸ்வரூபத்தை மட்டும் தெரிந்துக் கொண்டேன். எனக்கு அல்லாததை நீக்கியவுடன் நான் அறிந்து கொண்டேன். அனாத்மா நிஷேதனம் – பிரம்மம் அறிதல்; என்னையேதான் அறிந்து கொள்ளுதல் – கண்ணாடியில் நம்மை பார்ப்பது போல.
ஸ்லோகம்-10 : பகுதி-2 – அதிகாரியைப்பற்றிய விஷயம்
————————————————————————————————————————————————————
தேவர்களுக்கெல்லாம் யார் யார் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள். அதுபோல ரிஷிகளுக்குள் யாரெல்லாம் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள். அதுபோலவே மனிதர்களுக்குள் யார் யார் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள்..
ப்ரத்யபு3த்4யத் – அறிகிறார்களோ, பர்யுதஸ்த்வம் – விலக்குதல்;
நியமங்கள் – கர்மகாண்டம்
அர்த்தி – செய்யப்போகும் கர்மத்தின் பலனை விரும்புவனாக இருக்க வேண்டும்.
தக்ஷ – ஆசைப்பட்டதை அடைவதற்கான சக்தியிருக்க வேண்டும். கர்மம் செய்வதற்கான சக்திக்கிடையாது.
அபர்யுதஸ்த்வம் – சாஸ்திரத்தால் நிஷேதம் செய்யாததாக இருக்க வேண்டும். ஸ்வதர்மமாக இருக்க வேண்டும்.
நியமங்கள் – ஞானகாண்டம்
முமுக்ஷுத்வம் – பிரம்மனை அடைய வேண்டும் என்பதே லட்சியமாக இருத்தல்.
சாதன சதுஷ்டயம் – விவேக, வைராக்யம், சமாதானம் (சம, தம, உபரதி, திதிக்ஷா, சமாதானம்) என்ற தகுதியை அடைந்தவர்கள்.
மனுஷ்யானாம் – தகுதியுடையவர்கள்
ஸ்லோகம்-10 : பகுதி-3 – வாமதேவர் விளக்கம்
————————————————————————————————————————————————————
சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை அடைந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று அறியும் போதுதான் நமக்கு இன்னும் சிரத்தை அதிகமாகிறது. இந்த உபதேசத்தில் மிகுந்த விசுவாசம் ஏற்படும்.
தத் ஏத3த் பஷ்யன் – அதை ஆத்மாவாகவே அறிந்த காரணத்தினால்;
ரிஷி வாமதேவர் – ரிஷியான வாமதேவர்
ப்ரதிபேதே3 – இவ்வாறு சொல்கிறார்.
அஹம் மனு அப4வம் – நான் மனிதனாக இருக்கின்றேன்.
சூர்ய – சூரியனாக இருக்கிறேன்., என்று கூறுகிறார்.
இப்படி அவர் கூறுவது, நானே அனைத்துமாக இருக்கிறேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்–10 : பகுதி-4 – விக்ன அபாவஹ – தடையில்லை
————————————————————————————————————————————————————
இந்த ஞானத்தை அடைந்து நிஷ்டை அடைந்து விட்டால் இதை யாரும் பறிக்க முடியாது. அல்லது யாரும் தடையாக இருக்க மாட்டார்கள், எதுவும் தடையாக இருக்காது. பலனை அனுபவிப்பதில் தடையெதுவும் இருக்காது. இப்படிபட்ட ஞானத்தை சிறப்பான மனிதர்களால்தான் அடைய முடியும். தேவர்களும் பெரும் தடையாக இருக்கிறார்கள். கலிகாலத்தில் இதை அடைவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் என்ற முகவுரையுடன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார்.
மந்திர விளக்கம்:-
தத்3 இத3ம் அபே த3ர்ஹி – இப்பொழுதும் கூட
ய ஏவம் வேத3 – யார் இப்படி அறிகிறார்களோ
அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பிரம்மனாக இருக்கிறேன்.
ஸ இத3ம் ஸர்வம் ப4வதி – அவர் அனைத்துமாக மாறி விடுகிறார்.
தஸ்ய ஹ ந தே3வாஷ்ச ந – இவருடைய ஞானத்தால் அடைந்த பலனை (ஸ்ர்வாத்மபாவம்) தேவர்களுக்கும்
அபூ4த்யா ஈஷதே –தடை செய்ய சக்தியிருக்காது.
ஆத்ம ஏஷம் ப4வதி – அந்த ஞானி அவர்களாகவே மாறி விடுவதால், இந்த தடை நேராது.
எப்பொழுது, யார் நான் பிரம்மன், அனைத்துமாக இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களுக்கு தேவர்களாலும் துன்பத்தை கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்த ஞானியே தேவர்களின் ஆத்மாவாகவே இருக்கின்றான்.
சங்கர பாஷ்ய விசாரம்:
கேள்வி-1: சாதாரண மனிதர்களால் இதை அடைய முடியுமா?
பதில்-1: முடியும்.
கேள்வி-2: தேவர்களால் இதை அடைய தடை செய்யப்படுமா?
பதில்-2: ஞானம் அடையும் வரை தடையாக இருக்கலாம். ஞானம் அடைந்த பின்னர் அதன் பலனை அனுபவிக்க எதுவும் தடையாக இருக்காது. தடையாக இருந்தவைகள் எல்லாம் இப்பொழுது நீங்கி விடும்.
கேள்வி-3: பிறந்தவுடன் மூன்று பேருக்கு கடன்பட்டவனாக இருக்கிறோம். நம் ஆயுள் முழுவதற்கும் அதை தீர்க்கவே சரியாக இருக்கும். பின் எப்படி ஞானம் அடைவதற்கு நேரம் கிடைக்கும். கடன் கொடுத்தவர்கள் நம்மை அடிமைப்படுத்தி கொண்டிருப்பார்கள்.
- ரிஷிகளிடம் கடன்பட்டுள்ளோம், இதை அவர்கள் வகுத்துக் கொடுத்த சாஸ்திரங்களை படிப்பது மூலம் தீர்த்து விடலாம்.
- தேவர்களுக்கு கடன்பட்டுள்ளோம் – இதை யாகங்கள், பூஜைகள் முதலியவைகளால் அடைத்து விடலாம்..
- பித்ருகளுக்கு கடன்பட்டுள்ளோம். – இதை குழந்தைகள் பெறுவதன் மூலம் அடைக்கப்படுகிறது.
தேவர்களின் கடனும், பெற்றோர்களின் கடனும் அடைப்பதிலே வாழ்நாள் செலவாகி விடும்.
தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை விட மேலான
ஆனந்தத்தை அடைவதை விரும்பாமல், அவர்கள தடை செய்து கொண்டிருப்பார்கள்.
பதில்-3: யார் வைராக்கியத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்கள் இந்த கடனிலிருந்து விடுபடுவார்கள். அவர்கள் எந்த ஆசிரமத்தை சேர்ந்தவர்களாயினும் இது பொருந்தும்.
ஞானம் அடைவதற்கு முன் தேவர்களால் தடை ஏற்படுத்த முடியும். ஆனால் ஞான நிஷ்டை அடைந்து அதன் மூலம் அடையும் பலனை அனுபவிக்க யாராலும் எந்த தடையையும் செய்ய முடியாது.
நமக்கும் பிரம்மத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அவித்யாதான், எனவே வித்யாவை, ஞானத்தை அடைந்ததும் பிரம்மனாகி விடுவோம். அதற்குப்பிறகு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள், இருக்கவும் முடியாது.
செய்த செயலின் விளைவு எதன் அடிப்படையில் வருகிறது? எப்படிபட்ட பலன் வரும் என்று எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
- ஜோதிஷ்விதக– ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள். இவர்கள் சொல்வது காலத்தின் அடிப்படையில்தான் பலன் வரும்.
- வஸ்து– இது சார்வார்க்கர்களின் மதம், பொருளினுடைய தன்மை- நாம் பயன்படுத்துகின்ற பொருள்தான் பலனை நிர்ணயிக்கிறது.
- கர்ம– நீ எப்படிப்பட்ட செயல் செய்கிறாயோ அதன் அடிப்படையில்தான் பலன் நிர்ணயிக்கப்படுகிறது.
- தேவர்கள்– உபாஸகர்களுடைய நம்பிக்கை – நாம் அடைகின்ற கர்ம பலன்களுக்கு காரணம் தேவர்கள்தான்.
யாருமே நமக்கு தடையாக இருக்க முடியாது. அந்தத் தடைகள் எல்லாம் நாம் உருவாக்கிக் கொள்வதுதான். நாம் எப்படிப்பட்ட செயல் செய்கிறோமோ இவற்றின் பலன்களை காலம், வஸ்து, கர்மம், தேவர்களின் மூலமாக பலன்களை அனுபவிக்கிறோம். நமக்கு வரும் தடைகள் எல்லாம் நம்முடைய கர்மபலனின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது நாம் மோக்ஷம் அடைவதற்கு யாருமே தடையாக இருக்க மாட்டார்கள். எனவே நற்காரியங்களை செய்து, புண்ணியங்களைச் சேர்த்து தடையை நீக்கி கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்-10 : பகுதி-5 – அவித்யா சூத்திரம்
————————————————————————————————————————————————————
அத2 யஹ அன்யாம் தேவாதம் உபஸ்தே – யாரொருவன் வேறொரு தேவதையை உபாஸிக்கிறானோ;
அன்ய அஹம் – நான் வேறு
அன்ய அஸாவ – நான் உபாஸிக்கும் தேவதை வேறு
ந ஸ வேத3 – அவன் உண்மையை அறிந்தவனில்லை.
தன்னை பிரம்மத்தினின்று வேறுபட்டு இருக்கின்றேன் என்று அறிந்து கொண்டிருப்பதுதான், நினைத்துக் கொண்டிருப்பதுதான் அவித்யா.
ஸ்லோகம்-10 : பகுதி-6 – அவித்யா சூத்திர விளக்கம்
———————————————————————————————————————————————————-
யதா2 பஶு: – எப்படி விலங்குகள் மனிதனுக்கு உதவி செய்கின்றதோ
ஏவம் ஸஹ – அதுபோல அக்ஞானிகள்
தேவானாம் – தேவர்களுக்கு அடிமைபட்டு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்
யதா2 ஹ வை ப3ஹவ: பஶவோ மனுஷ்ய பு4ஞ்ஜ்யு – எப்படி விலங்குகள் மனிதர்களுக்கு சேவை செய்கிறதோ அதுபோல
ஏவமேகைகே புருஷோ தேவான் பு4னக்தி – மனிதர்களும் தேவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஏகஸ்மின்னேவ பஶவாதீ3யமானே அப்ரியம் ப4வதி, கிம் ப3ஹுஷு?
ஒரு விலங்கு குறைந்துப்போனாலே மனிதன் வருத்தப்படுவான், இன்னும் பல விலங்குகள் குறைந்தால் என்ன சொல்வது?
தஸ்மாத் தேஷாம் தன் அப்ரியம் யதேத் மனுஷ்யா விது4:
அது போல, தேவர்களுக்கு ஒரு மனிதன் ஞானியாகி விட்டால், நமக்கு சேவை செய்ய ஒருவர் குறைந்து போய் விடுமே என்று வருத்தப்படுவார்கள். இங்கே தேவர்கள் என்பதை, இந்திரியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
சங்கரரின் விசாரம்:
கேள்வி-1: ஞானம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது மோட்சமாகும். அது தடைப்பட்டு வேறெதாவது எண்ணம் வந்துவிட்டால் நாம் திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடுவோம். அறிவு மட்டும் வந்தால் போதாது. ஜீவன் முக்தன் என்பவன் இருக்கவே மாட்டான். உயிரை விடும் போது அஹம் ப்ரஹ்ம அஸ்மி என்று நினைத்தால்தான் மோட்சத்தை அடைவான்.
பதில்-1: எப்பொழுது சரியான ஞானம் வந்து நிலைபெற்றுவிட்டதோ அப்பொழுதே அக்ஞானம் நீங்கி முக்தியடைகிறோம். எனவே அந்திம காலத்தில் கடைசியாக தோன்றினால்தான் மோக்ஷம் கிடைக்கும் என்பது தவறு. தொடர்ந்து இருந்தால்தான் மோட்சத்தில் இருப்போம் என்பதும் தவறு. ஞானம் அடைந்த பிறகு வரும் எண்ணங்கள் எல்லாம் மித்யா என்ற உணர்வுடன் இருக்கின்ற நிலையில் எப்படி சம்சாரத்திற்கு திரும்ப முடியும். இந்த ஞானம் உலகிலுள்ள விவகாரங்களில் உள்ள மித்யா தன்மையுடன் இருப்பதால் இவனால் திரும்ப சம்சாரியாக முடியாது.
ஸ்லோகம்–11,12,13
————————————————————————————————————————————————————
தேவர்களின் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றிய கருத்துக்கள் இந்த ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளன
ஸ்லோகம்–14
————————————————————————————————————————————————————
க்ஷத்ரஸ்ய க்ஷத்ரம் – சத்திரியனுக்கு சத்திரியனாக இருப்பதுதான் தர்மம்
த4ர்மாத்பரேம் நாஸ்தி – தர்மத்திற்கு மேலானது எதுவும் இல்லை;
அப3லீயான் – பலமற்றவன் ;
பலீயான் – பலமுள்ளவன்
அஶம்ஸதே – வெற்றிக்கொள்வான்
தர்மம்தான் ஒருவனுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கிறது. தர்மத்தை கடைப்பிடித்தால் நாம் எல்லா காரியத்திலும் வெற்றியை அடையலாம். தர்மத்துடன் வாழ்ந்தால் யாருக்கும், எதைக்கண்டும் பயப்படத்தேவயில்லை. சத்தியம்தான் தர்மம், சத்தியத்தைப் பேசுகிறவன் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாகிறான்.
சத்தியத்தின் லட்சணங்கள்:
- சாஸ்திரத்தில் உள்ள கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளுதல்
- புரிந்ததை வாக்கின் வழியே வெளிப்பட வேண்டும்.
- உடலளவில் செயல்படுத்துவது. இதற்கு கர்மம் அல்லது தர்மம் என்று பெயர்.
உண்மையை பேசுகின்றவனை தர்மத்தைக் கடைபிடிப்பவன் என்று உலகம் சொல்கிறது. யார் தர்மம் பேசுகிறார்களோ அவர்களை சத்யம் பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே சத்தியப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் தர்மப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் ஒன்றுதான் என்று வேதம் உரைக்கிறது.
ஸ்லோகம்–15 – மனித வர்ண ஸ்ருஷ்டி, மனித ஜென்மத்தின் மேன்மை
————————————————————————————————————————————————————
பிராமண மனிதன் முதலில் தோற்றுவிக்கப்படுகிறான், அவனிடமிருந்து சத்திரியனும், சத்திரியனிடமிருந்து வைசியனும், வைசியனிடமிருந்து சூத்திரனும் தோன்றினார்கள். இது குணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆத்மாவை புரிந்து கொண்டால் அது நம்மை எல்லாவிதத்திலும் காப்பற்றுகிறது. புரிந்து கொள்ளாவிட்டால் அதுவும் நம்மை காப்பாற்றாது. ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இறந்து போகிறவன் பரிதாபத்திற்குரியவன்.
வர்ணாசிரம தர்மப்படி நடந்து கொண்டால் மேலான உலகத்தை அடைந்து இன்பத்தை அனுபவிக்கலாம். கர்மத்தை யோகமாக செய்தால் சித்தஸுத்தி அடைந்து ஞானயோகத்திற்கு தகுதியடைவான். தர்மப்படி நடக்காவிட்டால் நரகத்தைத்தான் அடைவான். நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால், ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மனித ஜென்மம்தான் தேவை.
நாம் உண்மையில் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கின்றோம். ஆனால் அதை உணராமல் இருப்பதால் எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டிருக்கின்றோம். எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மா இருக்கிறது, ஆனால் மனிதனால் மட்டும்தான் முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆத்மாவை அறிந்துகொண்டால் எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றபடுவோம்.
நம்மால் ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் எப்படி நம்மை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை இரண்டு உதாரணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- வேதத்தை ஓதாமல் இருந்தால் அதனால் நமக்கு எந்த பலனும் கிடையாது. உச்சரிக்காத வேதம் பலனற்றதாக இருக்கும்.
- ஆரம்பிக்காத கர்மம் நமக்கு எந்த பலனும் கொடுக்காது.
ஆத்மானமேவ லோகமுபாஸீத:-
- ஆத்மாவை பிரகாச ஸ்வரூபமாக அறிய வேண்டும்.
- ஆத்மா அனைத்தையும் வியாபித்து எல்லா பொருட்களையும் பிரகாசிக்கிறது.ஆனால் அந்த பொருட்களில் உள்ள தோஷம் இதை பாதிக்காது.
(உ-ம்) சூரிய ஒளியானது சாக்கடையிலும் விழுகிறது, கங்கையிலும் விழுகிறது, ஆனாலும் எந்த தோஷங்களாலும் சூரியன் பாதிக்கப்படுவதில்லை.
ஸ்லோகம்–16 – ஆத்மாவை அறியாதவனின் நிலை
————————————————————————————————————————————————————
அக்ஞானி தேவர்களுக்கும் அடிமையாக இருக்கிறான், விலங்குகளுக்கும், அடிமையாக இருக்கிறான். அதாவது இவன் மற்றவர்களுக்கு போக்யமாக இருக்கிறான்.
ஆத்மா ஸர்வேஷாம் பூ4தானாம் லோக:– இந்த உலகமே பயன்படுத்தி கொள்ளும். உதாரணமாக,
- தியாகம் செய்யும் போது– தேவர்களுக்கு போக்யமாகி விடுகிறோம்.
- வேத சாஸ்திரம் படிக்கும்போது ரிஷிகள் நம்மை அனுபவிக்கின்றார்கள்
- விருந்தினர்களை உபசரிக்கும்போது அவர்கள் நம்மை நன்றாக அனுபவிப்பார்கள்.
- பறவை, விலங்கு, புழுபூச்சிகளும் நம்மை அனுபவிக்கின்றது.
யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறோம்.
ஸ்லோகம்–17 – அக்ஞானியின் ஸ்வரூபத்தை விளக்குகிறது
————————————————————————————————————————————————————
ஏன் எல்லோரும் ஆத்ம ஞானத்தை அறிய விரும்புவதில்லை? ஏனென்றால் ஆசையின் வசப்பட்டு ஏதேதோ அனாத்மாவை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சங்கரர் கூறுகிறார்.
ஜாயா மே ஸ்யாத் – எனக்கு ஒரு மனைவி வேண்டும்.
அத2 ப்ரஜாயேய – எனக்கு குழந்தை வேண்டும்
அத2 வித்தம் மே ஸ்யாத் – எனக்கு நிறைய செல்வம் வேண்டும்
அத2 கர்ம குர்வீயேதி – கர்மத்தை செய்ய வேண்டும்.
கர்மம் செய்ய மனைவி, எஜமானன்(கணவன்), புத்திரன், மானுஷம், வித்தம் என்ற ஐந்து பொருட்களும் தேவை. வித்தம் என்று குறிப்பிடுவது திரவியங்கள், பணம், பொருட்கள், உடலாரோக்கியம், அங்கஹீனமற்றவனாக இருத்தல் ஆகியவைகளும், தெய்வ வித்தம் என்று கூறப்படுகின்ற உபாஸனம், ஜபம், அறிவு ஆகியவைகளும் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஐந்தும் உடையவன் யாகம் செய்வதற்கு தகுதியானவனாக இருக்கிறான்.
இல்லறத்திலிருப்பவர்களால்தான் இந்த மாதிரி யாகங்களை செய்து சித்தஸுத்தியடைய முடியும்.. இந்த வாய்ப்பை இழந்தவர்கள் சேவையில் ஈடுபட்டு சித்தஸுத்தியடைவார்கள். அல்லது எஜமானனை தன்னுடைய மனதாகவும், வாக் இந்திரியத்தை மனைவியாக, பிராணனை புத்திரனாகவும், கண்களை மானுஷ வித்தமாகவும், காதுகளை தெய்வ வித்தமாகவும் உபாஸனை செய்தாலும் சித்தஸுத்தியடைவார்கள். இவ்விதம் கர்மத்தில் ஈடுபட்டு விடுவதால், ஆத்ம ஞானத்தை அடைய வருவதில்லை.
பகுதி–5 : ஸப்தான்னம் ப்4ராமனம் ( ஏழு விதமான அனுபவிக்கப்படும் பொருட்கள்)
————————————————————————————————————————————————————
இந்த உலகத்தை ஏழு விதமான போக்ய பொருட்களாக பிரிக்கப்பட்டு அதை எப்படி ஜீவன் அனுபவிக்கிறான் என்பதை விளக்கப்படுகிறது. நாம் ஒரு பொருளை அனுபவிக்கும்போது வேறொன்று நம்மை அனுபவிக்கிறது.
த்வைதம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. அவைகள்
- ஈஸ்வர ஸ்ருஷ்டி– நாம் அனுபவிக்கும் பஞ்சபூதங்களாலான எல்லா பொருட்களும்
- ஜீவ ஸ்ருஷ்டி– ஏற்கனவே ஈஸ்வரனால் படைக்கப்பட்ட பொருட்களின் மீது ஜீவன் ஏற்றி வைக்கும் சில மாற்றங்கள், சில பாவனைகள். (உ-ம்) பெண்ணே தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும் இருக்கிறாள், இது ஜீவ ஸ்ருஷ்டி. ஈஸ்வர ஸ்ருஷ்டியை போக்யமாக மாற்றினால் அதுவே ஜீவஸ்ருஷ்டி.
ஜீவ ஸ்ருஷ்டியே சம்சாரத்திற்கு காரணம். ஒரு பொருளை சுக சாதனமாக அல்லது துக்க சாதனமாக நினைத்தால் அதுவே ஜீவ ஸ்ருஷ்டி. சாஸ்திர ஜீவஸ்ருஷ்டி, அசாஸ்திர ஜீவஸ்ருஷ்டி என்று இருவகையாக இருக்கிறது. சாஸ்திர ஜீவ ஸ்ருஷ்டி சாதனமாக எடுத்துக்கொண்டு மோட்சத்தை அடைய வேண்டும். பிறகு அதையும் விட்டுவிட வேண்டும். கடைசியில் எப்பொழுதும் சாட்சியாக இருக்க வேண்டும். யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியை கொடுத்திருக்கிறோம்.
ஸ்லோகம்–1 – சப்தான்னத்தின் அறிமுகம்
————————————————————————————————————————————————————
இந்த சப்த அன்னத்தை படைக்கிறவன் ஜீவன். இவன் எதைக் கொண்டு, எதன் அடிப்படையில் ஸ்ருஷ்டியை படைக்கிறான் என்றால், அவன் மேற்கொண்ட கர்மத்தின் அடிப்படையிலும், அவன் செய்கின்ற தியானத்தின் அடிப்படையிலும் ஸ்ருஷ்டியை உருவாக்குகிறான். நாம் எவ்வளவு தர்மத்துடன் வாழ்கிறோமோ, தர்மத்துடன் கர்மத்தை செய்கிறோமோ அதன் அடிப்படையிலேதான் நம்முடைய ஸ்ருஷ்டி உருவாகிறது. எனவே மற்றவர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்பது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்து அமைகிறது.
ஈஸ்வர ஸ்ருஷ்டியில் சுக-துக்கங்கள் உண்டாவதில்லை. நம்முடைய ஸ்ருஷ்டியில்தான் இவைகள் உண்டாகின்றன.
நான்கு வகையான அன்னங்கள் உள்ளன, அவைகள்:-
- சாதாரண அன்னம் – எதையெல்லாம் நாம் சாதாரணமாக இயற்கையிலிருந்து வருபவைகளை உட்கொள்கிறோமோ அவையெல்லாம் சாதாரண அன்னம்.
- தேவர்களுக்கு கொடுக்கும் அன்னம்
- தேவதைகளிடமிருந்து நமக்கு தேவையான அல்லது நம் ஆசைகளை நிறைவேறுவதற்காக அளிக்கப்படும் பொருட்கள்
- பால்
சாதனங்கள் மூலம் இந்த நான்கு அன்னமும் நமக்கும், மற்றவர்களுக்கு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்பவைகள்
- மனம்
- வாக்கு
- பிராணன்
இந்த மூன்றும் ஆத்மார்த்தமாக நமக்காக, நம்மிடத்திலே உள்ள அன்னம், இவைகள் சாத்யமாகவும் உள்ளது. உடலே போக்யமாக உள்ளது, அதை அனுபவிப்பவன் சிதாபாஸன்.
ஸ்லோகம்–2 – ஏழு அன்னங்களுக்கு காரணம் எது?
————————————————————————————————————————————————————
உபாஸனையும், கர்மமும்தான் ஏழு அன்னங்களும் கிடைப்பதற்கு காரணமாக இருக்கிறது. அதாவது தியான, கர்மத்தின் பலனாகத்தான் இந்த அன்னங்கள் கிடைக்கின்றன.
- உணவையே லட்சியமாக கொண்டு வாழக்கூடாது, அதை உயிர் வாழ மட்டும் கருவியாக உபயோகிக்க வேண்டும், மற்றவர்களுக்கு பகிர்ந்துண்ண வேண்டும்.
- காம்ய கர்மமாக உபயோகிக்க கூடாது
- சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், கர்ம யோகமாக செய்ய வேண்டும்.
- பால்: எல்லா ஜீவராசிகளுக்கும் பிறந்தவுடன் உணவாக கிடைக்கிறது. தேவர்களுக்கு கொடுக்கும் ஆஹுதியில் பாலும், நெய்யும் முக்கியமாக கருதப்படுகிறது.
- மனதில் ஆத்மாவை அடைந்தேன் என்ற அறிவு ஏற்படுதல்
- குருவினிடத்தில் சென்று நம்முடைய வாக்கினால் மட்டும் ஆத்மாவை அடையும் வழியை அறிந்துக் கொள்ள வேண்டும்.
- பிராணன் நன்றாக இருந்தால்தான் வாக்கு நன்றாக செயல்படும்.
ஸ்லோகம்–3 – மனமானது ஸம்ஸ்காரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதா?
————————————————————————————————————————————————————
மனம் ஒரு சூட்சுமமான அங்கம். இதிலிருந்து உற்பத்தியாவதுதான் எண்ணங்கள். இதில் விதவிதமான உணர்வுகள் எழுகின்றது. ஒவ்வொரு உணர்வும் எண்ணங்கள்தான். மனமானது உணர்வுமயமானது. சிரத்தை, கோபம், பயம், துணிவு, இன்பம், துன்பம், பொறாமை போன்ற உணர்வுகள் அடங்கியது. மனத்தின் குணங்கள் ஆத்மாவின் குணங்களாகும்.
மனம் இருக்கிறது என்பதற்கு என்ன பிரமானம்?
நம்முடைய கண் திறந்து பார்த்துக் கொண்டிருந்த போதிலும் சில விஷயங்கள் நம் கவனத்திற்கு வருவதில்லை, இதற்கு காரணம் மனமானது கண் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் இல்லை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, மனம்தான் நாம் எந்த ஒரு அறிவையும் அடைவதற்கு காரணமாக இருக்கிறது.
வாக்கு: இது பிரகாச ஸ்வரூபம் – இது நம்முடைய மனதிலிருக்கிற அறிவையும், வெளியிலிருக்கிற பொருட்களையும் பிரகாசிக்கிறது. இதனால்தான் நாம் இன்ப-துன்பத்தை அடைகிறோம், அனுபவிக்கிறோம்.
பிராணன்: இதுதான் ஸ்தூல உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரமாக இருக்கிறது. அக்ஞானியாக இருப்பவன் தன்னுடைய ஆத்மாவானது, மனம், வாக்கு, பிராணன் இதில் ஏதாவது ஒன்றாகத்தான் கருதுகிறான். அதாவது மனதையோ, வாக்கையோ, பிராணனையோ நான் என்ற நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும் ஏனென்றால் இவைகள்தான் மோக்ஷத்தை அடைவதற்கு சாதனையாக உள்ளது.
ஸ்லோகம்–4-10
————————————————————————————————————————————————————
ஒரு ஜீவன் ஆத்மான்னத்தை மூன்று விதமாக அனுபவிக்கிறான்.
- அத்யாத்மம்: ஜீவனிடமிருக்கின்ற மனம், வாக்கு, பிராணன்
- அதிபூதம்: இந்த ஜகத் – ஹிரண்யகர்ப்பனாகவும், விராட்டாகவும் இருக்கும்
- அதிதெய்வம்: பிரஜாபதி – தேவதைகளின் சேர்க்கையாக இருக்கின்ற பொருட்களை அனுபவிக்கிறோம்.
இந்த உலகம் நாம் அனுபவிக்கும் போக்யமாக இருக்கிறது, இது வாக்கு, மனம், பிராணன் என்று பிரிக்கப்படுகிறது. பூலோகம் வாக்காகவும், புவர் லோகம் – மனமாகவும், ஸ்வலோகம் பிராணனனாகவும் உள்ளது.
வேதம் – ரிக், யஜூர், சாம இவைகளெல்லாம் பிராணனனாக கருதப்படுகிறது
மாதா, பிதா, மக்கள் இவர்களும் பிராணனனாக கருதப்படுகிறது
அறிந்ததெல்லாம் – வாக்கு,
அறியப்போவது – மனம்
அறியாதது – பிராணன்
ஸ்லோகம்–11-13
————————————————————————————————————————————————————
அதிதெய்வமும், மூன்றுவிதம் அன்னங்களும்:
தேவதைகளின் ஸ்வரூபம் பிரஜாபதி. ஜீவர்களின் கர்ம பலனாக தோன்றியவர்.
பூமி – கோளகம் – அக்னி – இந்திரியம் – வாக்கு வெளிப்படுவதற்கு;
சுவர்க்கம் – கோளகம் – ஆதித்யன் – இந்த்ரியம் – மனது;
ஜலம் – கோளகம் – சந்திரன் – இந்திரியம் – பிராணன்;
ஸ்லோகம்–14
————————————————————————————————————————————————————
பிரஜாபதியை கால தத்துவமாக சொல்லப்படுகிறது. இவரை நாம் நம்முடைய கர்மபலனால் அனுபவிக்கிறோம். இவரை வாக்கு, மனது, பிராண தத்துவமாக தியானிக்க வேண்டும்.
ஸ்லோகம்–15
————————————————————————————————————————————————————
அகங்கிரஹ உபாஸனை – பிரஜாபதியே தானென்று தியானிக்க வேண்டும்.
ஸ்லோகம்–16
————————————————————————————————————————————————————
சம்சார உலகத்தில் அடையக்கூடிய சாத்தியமும், உதவியாக இருக்கின்ற சாதனங்களும் விளக்கப்படுகிறது. இந்த சம்சார வாழ்வில் அடையக்கூடிய சாத்தியம் – மனுஷ்யலோகம், பித்ருலோகம், பிரம்மலோகம். புத்திரனால் மனுஷ்யலோகத்தையும், காயிக, வாக் கர்மங்களினால் பித்ரு லோகத்தையும், மானஸீக உபாஸனைகளால் தேவலோகத்தையும், பிரம்மலோகத்தையும் அடையலாம்.
இந்த மூன்று சாதனங்களில் உபாஸனை மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மூன்று சாதனங்களால் மோட்சத்தை அடையமுடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம்–17
————————————————————————————————————————————————————
கர்மத்தால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது என்று இந்த ஸ்லோகம் உணர்த்துகிறது.
புத்திரன் எப்படி மனுஷ்யலோகத்தை அடைவதற்கு உதவி செய்வான். பொதுவாக அவரவர் கர்ம வினையை அவர்களேதான் அனுபவிக்க வேண்டும்.
சம்பத்தி கர்ம à அப்பா பையனுக்கு தான் செய்து கொண்டிருந்த கர்மத்தை கொடுத்துவிட வேண்டும். இறந்து போன தந்தைக்கு சிரார்த்தம் போன்ற கர்மத்தை செய்து, தந்தை மனிதலோகத்துக்கு பிறக்க உதவி செய்கின்றான். தந்தைக்கு புண்ணியம் குறைந்திருந்தால் மகன் செய்கின்ற கர்மத்தால் வரும் புண்ணியங்களால் அவர் மீண்டும் மனித லோகத்துக்கு வந்து பிறக்க உதவி செய்யும். ஒரு சமயம் தந்தைக்கு தேவையில்லாமலிருந்தால் வேறொரு தந்தைக்கு செல்லலாம். மகனிடமிருந்து புண்ணிய தானம் பெறுவதும் அவரது கர்மவினைப்படிதான் நடக்கும்.
ஸ்லோகம்–18-20
————————————————————————————————————————————————————
உபாஸனையின் மூலம் பிரம்மலோகத்தை அடைகிறான். ஹிரண்யகர்ப்பனாக இருந்து அந்த லோகத்தை அனுபவிக்கிறான். அவனுடைய மூன்று இந்திரியங்கள் மனம், வாக்கு, பிராணன் தேவதைகளாக மாற்றப்படுகிறது.
தெய்வீக வாக்கு – அவன் சொல்வது நடக்கும். மிகச்சிறப்பாக எல்லா நியமங்களையும் கடைப்பிடித்து செய்த உபாஸனை மூலம் இந்த நிலையை அடையலாம்.
தெய்வமனது – திவ்யமான மனம். மனமானது சில சமயம் இன்பமாக இருக்கிறது. சில சமயம் துயரத்தையோ, பயத்தையோ கொடுக்கிறது. ஆனால் இந்த உபாஸனுக்கு இன்பத்தை கொடுக்கும் கருவியாக மட்டும் இருக்கிறது.
தெய்வபிராணன் – உறுதியான பிராணன், உடல் நல்ல ஆரோக்யமாக இருக்கும். நோய், நொடி, வலி உபாதைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்.
உபாஸனை மூலம் வாக்கு, மனம், பிராணன் இவைகளெல்லாம் கட்டுப்படுத்தப்படும், நெறிப்படுத்தப்படும், ஒழுங்குபடுத்தப்படும்.
ஸ்லோகம்–21-23
————————————————————————————————————————————————————
பிராண ஸ்துதி, பிராண உபாஸனை : தேவலோக ப்ராப்தி. கண், காது, வாக்கு போன்ற இந்திரியங்கள் தத்தம் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்ற உறுதியுடன் செயல்பட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் இவைகள் சோர்ந்து போய் செயலை நிறுத்தி ஓய்வெடுக்க ஆரம்பித்தது. ஆனால் பிராணன் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. எனவே இந்தப் பிராணனை தியானிப்பவர்கள் ஹிரண்யகர்ப்பனை அடைவார்கள்.
பகுதி–6 : உத்த ப்4ராமனம் (3 மந்திரங்கள்)
————————————————————————————————————————————————————
ஜகத் மித்யா என்று விளக்கப்படுகிறது.
படைக்கப்பட்ட அனைத்தும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. 1. நாமம், 2.ரூபம், 3.கர்மம். இவை மூன்றும் ஒன்றாக இணைக்கப்படுகிறது,, அதுவே நமது உடல். இந்த உடல் மித்யா என்று உணர்ந்து விட்டால், நாம, ரூப, கர்மங்கள் மித்யாவாகி, இந்த ஜகத்தும் மித்யாவாகிறது. உதாரணமாக களிமண்ணில் நாம, ரூப, கர்மங்களை ஏற்றி வைத்திருப்பதை போன்றது.
ஜகத்திற்கு ஆறு பெயர்களை சங்கரர் குறிப்பிடுகிறார்.
- அவித்யா விஷயம்,
- வியாக்ருத-அவ்யாக்ருத ஆத்மஹம்
- சாதனா-சாத்தியம்
- கிரியா-காரக பலம்– செயல், செயல்புரிவதற்கு காரணம், செயலினால் விளைந்த பலன்
- நாம-ரூப-கர்மாத்மகம்
- ஸரீர ஸ்வரூபம்.
நாமம் என்பது சப்தம் அது சாமானியம், விசேஷம் என இருவகையாக உள்ளன. சாமான்ய உபாதானம், விசேஷ உபாதானம். “அ” என்கின்ற சாமான்ய சப்தமானது விசேஷ சப்தத்திற்கு உபாதான காரணமாக இருக்கிறது. எனவே விசேஷ சப்தங்கள் எல்லாம் மித்யா என்று உணர வேண்டும். சாமான்ய ரூபம் – சத்தியம், விசேஷ சப்தம் – மித்யா.
ஒருவருடைய செயல் நம்மை கோபத்தையோ, துன்பத்தையோ கொடுக்கும்போது நாம் அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அவர் ஏதோ கையை அசைத்தார், சப்தம் எழுப்பினார், காலை ஆட்டினார் என்று எடுத்துக் கொண்டால், அது நம்மைப்பாதிக்காது. ஒருவர் நம்மைப்பார்த்து திட்டினால், பாராட்டினால் அவர் ஏதோ சப்தம் போட்டுவிட்டு செல்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல் அத்தியாயத்தின் முடிவுரை
எட்டு விதங்களில் இந்த உலகம் அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.
- சாதன பிரபஞ்சம் – விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள், சப்தான்னத்தில் முதல் நான்கு சாதனங்களாகின்றது.
- சாத்ய பிரபஞ்சம் – ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட கர்மப்பலன்கள். சப்தான்னத்தில் கூறபட்ட மனம்-மனிதலோகம், வாக்கு-பித்ருலோகம், பிராணன்-தேவலோகம்.
- அவ்யாக்ருதம் பிரபஞ்சம் – மாயா
- ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவனை கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல். ஒவ்வொரு ஜீவனும் தனக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொள்கிறான்.
- ஜீவனுடைய போக்த்ருத்வம் – ஜீவன் போக்தாவாகவுமிருக்கிறான். செய்த செயல்களின் விளைவை அனுபவிக்கின்றான்.
- நாம-ரூப-கர்ம – ஸ்ருஷ்டியை இவ்விதமாக ஏற்றுக்கொள்ளுதல்
- ஸரீரம் – ஸரீரம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுதல் ஆனால் உண்மையில் இதுவும் மித்யாதான்
- சம்சாரம் – ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கும் நிலை.
கர்ம காண்டமும், ஞான காண்டமும் அறிவை அடைவதற்கான பிரமானம். இதில் கர்மகாண்டமானது சாதனையாகவும், ஞான காண்டமாவது சாத்திய்மாகவும் புரிந்து கொள்ள வேண்டும். கர்ம காண்டத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை, மோட்சத்தை அடைய முடியாது.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவைகள் : ஸ்லோகங்கள் – 1.4.7 to 1.4.10
ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-03
அத்தியாயம்–02
அபவாத பிரதானம்
சங்கரரின் முகவுரை
ஆத்மாவை தேடுதல், அறிதல், அடைதல் எல்லாமே ஒன்றேதான். உண்மையிலேயே நாம் நாடிக் கொண்டிருப்பது ஆத்மாவைத்தான். ஆனால் அதை அறியாமல் இருக்கிறோம். எதை நான் நிபந்தனையின்றி விரும்புகின்றேனோ அதுதான் ஆத்மா. ஆத்மாதான் அடைய வேண்டிய லட்சியம், அதை எப்படி அடைவது என்பதைப்பற்றியும், சம்சாரமும் விளக்கப்பட வேண்டியது, சம்சாரத்திலிருந்து விடுபட என்ன வழி என்பதைப் பற்றியும் விளக்குகிறது இந்த அத்தியாயம்.
——————————————————————————————————————————————–
பகுதி-1 : அஜாதசத்ரு ப்4ராமனம்
——————————————————————————————————————————————–
ஸ்லோகம்–1
அஜாத சத்ரு – பகைவனே இல்லாதவன். யாரையுமே பகைவனாக நினைக்காதவன்.
த்ருப்தஹ – கர்வம்;
அனுசான – வேதங்களை பயின்றவர்.
காஷ்யம் – காசியை ஆள்பவர்;
ப்ரவாணி – உபதேசிக்கிறேன்.
தத்ம – நாங்கள் கொடுக்கிறோம்.
வாசி – சொல்லுக்கே,
தாவந்தீதி – சொல்கிறார்கள்.
கர்கா குடும்பத்தைச் சேர்ந்த கர்வமுடைய பாலாகி என்ற பெயருடைய வேதங்களை பயின்ற ஒருவர் இருந்தார். அவர் காசியை ஆண்டுக்கொண்டிருந்த மன்னன் அஜாதசத்ருவிடம், ‘நான் பிரம்மனைப் பற்றி உங்களுக்கு உபதேசிக்கிறேன்” என்று கூறினார்.. அரசன் அஜாதசத்ரு சொன்னார், “இந்தப் உபதேசத்திற்காக நான் உனக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன்”, என்று கூறினார். மக்கள் உண்மையில் “ஜனகா, ஜனகா” என்று சொல்கிறார்கள்.
ஸ்லோகம்–2-13
பாலாகியின் உபதேசம்:
ஒரு தேவதையை அறிமுகப்படுத்தி அதன் மீது ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய உபதேசிக்கிறார். ஆதித்யதேவனை ஆலம்பனமாக அறிமுகப்படுத்தி சில குணங்களைக் கூறி தியானம் செய்ய சொல்கிறார். ராஜா அஜாதசத்ரு இதற்கும் மேலே சில குணங்கள் எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.
ஸ்லோகம்–14
ஏதாவன் – இவ்வளவுதானா,
ஏதாவத் இதி – இவ்வளவுதான்
ந விதி3தேம் – அறிந்து கொள்ளவில்லை ,
த்வா – உங்களை ,
உபயானீ – அணுகுகிறேன்
அஜாதசத்ரு பாலாகியிடம் இவ்வளவுதானா? என்று கேட்க அவரும் இவ்வளவுதான் என் உபதேசம் என்ற கூறினார். இவ்வளவுதான் அறிந்து கொண்டேன் என்றால் நீ பிரம்மத்தை பூரணமாக அறியவில்லை என்று ராஜா அஜாதசத்ரு கூறினார். பாலாகி தலை குனிந்து தான் சிஷ்யனாக உங்களை அணுகுகிறேன். எனக்கு நிர்குண பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று வேண்டினார்.
ஸ்லோகம்–15
அஜாதசத்ரு இவ்விதம் கூறுகின்றார், இது தலைகீழாக இருக்கிறது, பிராமணன் சத்திரியனிடம் பிரம்ம உபதேசம் செய்யுங்கள் என்று அணுகுவது. இருந்தாலும் உனக்கு தெளிவாக உபதேசிக்கிறேன் என்ற ராஜா உறுதி கூறினார். ராஜா, பாலாகியின் தோளில் கை போட்டு எழுந்தார். இருவரும் உறங்கிக்கொண்டிருந்த மனிதனிடம் சென்று அடைந்தார்கள். அவனை பிராணனுடைய பல பெயர்களை கூறி அழைத்தார்கள். அப்பொழுதும் அவன் எழுந்திருக்கவில்லை. ஆகையால் அவனை உலுக்கி எழுப்பினார்கள். அவன் எழுந்து விட்டான். இதிலிருந்து ஸ்தூல சரீரமும், பிராணனும் அறிவு ஸ்வரூபம் இல்லை என்று தெரிகின்றது.
சங்கரரின் விளக்கவுரை
சேதன (அறிவு) தத்துவம் எப்பொழுதுமே அறிபவனாக இருக்கின்றது. அசேதன (ஜடம்) தத்துவம் எப்பொழுதுமே அறியப்படுவதாக இருக்கிறது. ஆனால் இவையிரண்டும் ஒன்றோடொன்று கலந்திருக்கிறது. இதைப் பிரித்துப் பார்த்து அறியத்தான் இந்த விசாரம்.
அறிவு ஸ்வரூபமாக இருப்பது அறிபவன், ஜடமாக இருப்பது அறியப்படும் பொருளாக இருக்கிறது.
கேள்வி-1: குருவானவர் நிர்குண பிரம்மத்தை உபதேசிப்பதற்கு தூங்கி கொண்டிருப்பவனை உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி உபதேசிக்க முடியும்.
பதில்-1: ஆழ்ந்த உறக்கம் ஞானத்தை கொடுக்காது, அதை ஆராய்ந்து பார்த்தால்தான் ஞானம் அடைய முடியும். எனவே இங்கே அனுபவத்தை ஆராய்வதற்காகத்தான் தூங்கும் மனிதனை உதாரணமாக எடுத்துக் கொண்டார். அக்னிக்கு விஷயமான பெட்ரோல், நெய் இவைகளை ஊற்றினால் அது அனுபவிக்க ஆரம்பித்து விடும். அப்படி போக்தாவாக இல்லாவிட்டால் அது அக்னி இல்லை என்று உறுதியடையலாம். அதுபோல சப்தம் கேட்டவுடன் பிராணன் சேதனமாக இருந்தால் பதிலளித்திருக்கும். ஆனால் அமைதியாக இருப்பதால் அது அசேதனம் என்று உறுதியாகிறது.
கேள்வி-2: நாம் அழைத்த போதிலும் அது பிராணனை அடையவில்லையென்றால் அது எப்படி பதிலளிக்கும்?
பதில்-2: பிராணன் தேவதை என்று கர்மகாண்டத்தில் ஏற்றுக்கொண்டு, யாகத்தின் போது சத்தமாகவோ அல்லது மனத்துக்குள்ளே சொன்னாலே அது பிராணனை அடையும் என்று நம்பி செய்வதைப் போல இங்கே எப்படி கூப்பிட்டிருந்தாலும் அது பிராணனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.
கேள்வி-3: சரி இவ்வாறு அழைத்தும் பிராணன் பதிலளிக்காததால் ஜீவனில் சேதனம் என்று எதுவுமே இல்லையென்றுதானே தோன்றுகிறது.
பதில்-3: உடலிலுள்ள சேதனம் எல்லா அங்கங்களிலும் வியாபித்திருக்கிறது, அபிமானம் வைத்திருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவன் காரணத்தில் லயம் அடைந்து விட்டதால் அது பதிலளிக்காது.
Ø பல பொருட்களை சேர்த்து உருவாக்கிய வண்டியை அதை உருவாக்கியவர்கள் அனுபவிப்பதில்லை, அதை வாங்கியவர்தான் அனுபவிக்கிறார். அதுபோல பல அங்கங்கள் சேர்ந்து உருவாகியிருக்கும் இந்த ஜீவனில் ஒரு அங்கமான பிராணன் போக்தாவாக இருக்க முடியாது.
Ø இங்கு பிராணனுக்கு மேலான ஒன்றை உபதேசிக்க இருப்பதால் பிராணனை ஆத்மா என்று உபதேசிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
Ø இப்பொழுது ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறான். அவனுடைய ஸ்வரூபம் பற்றி உபதேசம் செய்வதற்காக இப்பொழுது ஆரம்பித்திருக்கிறார்.
ஸ்லோகம்–16
ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம் என்ன?
இந்த மாதிரி தூங்கிக்கொண்டிருக்கின்ற விக்ஞானமய புருஷன்; புத்தியுடைய மனிதன்,
எங்கு இவன் அந்த நேரத்தில் இருக்கின்றான்? அதாவது தூங்கும்போது ஒருவன் எங்கிருக்கிறான்? எங்கு இருந்து இவன் திரும்பி வருகிறான்? என்று அஜாதசத்ரு கேட்டார்.
சிஷ்யர், பாலாகிக்கு தெரியவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஆத்ம ஸ்வரூபத்திற்கு சென்றிருந்தான். பிரம்ம ஸ்வரூபத்திலிருந்து வருகிறான்.
கேள்வி-1: ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா தன் ஸ்வரூபத்திலிருந்து வேறெங்காவது சென்று திரும்பி வந்ததா?
பதில்-1: ஒருவேளை ஆத்மா வேறெங்காவது சென்று வந்தால், இது உண்மையாகி விடும். ஆத்மா வேறெங்கும் செல்லவில்லையென்றால் சென்று வருதல் என்ற விவகாரம் உண்மையற்றதாக இருக்கும். கற்பனையாகத்தான் இருக்க முடியும். ஆத்மா வேறெங்கும் செல்வதில்லை, வருவதுமில்லை. ஆகவே ஆத்மா எப்பொழுதும் தன் ஸ்வரூபத்திலேயே இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் தன் ஸ்வரூபத்தில் இருந்தால் அதன் தன்மை என்ன?
அதிகரணம் – இருக்குமிடம், அபாதனம் – இடத்திலிருந்து வரும் இடம்.
விக்ஞானமய புருஷஹ – விக்ஞானமயகோசம்.
சைதன்யமய – சைதன்யத்தினுடைய விகாரம் – சைதன்யத்துக்கு விகாரம் கிடையாது. சைதன்யமய என்பதற்கு பிரம்மத்தின் உறுப்பாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. சரியான பொருள் புத்தியையுடைய ஜீவன்.
ஸ்லோகம்–17
விழிப்பு நிலையில் நாம் கர்த்தாவாக, போக்தாவாகவும் இருக்கிறோம். ஆனால் அது நம்முடைய ஸ்வரூபமல்ல. ஏனென்றால் கனவில் நாம் இரண்டுமில்லாத நிலையில் இருப்பதால் அதுதான் சுபாவ ஸ்வரூப நிலை. எந்த வித குணமுமில்லாத சைதன்யத்துடன் ஒடுங்கியிருக்கிறான். மோட்சத்திற்கு ஒரு உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அந்த நிலையில் சம்சாரம் இல்லை. ஆனால் அக்ஞானம் இருக்கிறது. எனவே அது மோட்சம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மா-சிதாபாஸனாக நாம், நான் என்று எடுத்துக் கொள்கிறோம்.
ஸ்வம் அபி இதி3 – நாம் நம்மிடத்திலேயே இருத்தல்; க்ருஹீதம் – ஒடுங்குதல்
ததா3 – அப்பொழுது ,
தேஷாம் ப்ராணானம் – எல்லா இந்திரியங்களின்
விக்ஞானேன – சிதாபாஸத்துடன்
அந்தஹம்– மனதில்,
ஆகாஶா – பரமாத்மா,
தஸ்மின் சே2த் – அந்த இடத்தில் ஒடுங்குகிறான்.
எப்பொழுது ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்திரியங்களிலிருந்து விலகி, சிதாபாஸத்துடன் நிர்குண சைதன்யத்துடன் லயமாகி விடுகின்றானோ, அப்பொழுது இந்த ஜீவனின் மூக்கினுடைய செயல்பாடுகள், நாக்கினுடைய செயல்பாடுகள், வாயினுடைய செயல்பாடுகள் ஆகிய எல்லா இந்திரியங்களின் செயல்பாடுகளும் ஆத்மாவில் ஒடுங்கி விடுவதால் எந்த விவகாரமும் நடக்காமல் இருக்கிறது. எல்லா இந்திரியங்களும் சிதாபாஸத்தில் ஒடுங்கி பிறகு இதயத்தில் உள்ள பரமாத்வாவுடன் லயம் அடைகிறது.
ஸ்லோகம்–18
நிக3ச்ச2தி – அடைகின்றான்
உச்ச2வயம் – மேலான, கீழான,
ஜானபதா3ன் – வேலையாட்கள்
ஜன்பதே3 – நாட்டில்,
பரிவதத் – உலாவருகின்றான்
நாம் அனுபவிக்கும் சம்சாரம் வந்து போகிற விஷயம், இந்திரியங்களோடு அபிமானமில்லாத போது சம்சாரம் இல்லை. எனவே சம்சாரத்திற்கு ஸ்வரூப சம்பந்தம் இல்லை. விழிப்பு நிலையில்தான் சம்சாரத்தை அனுபவிக்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் இந்த சம்சாரத்தை அனுபவிப்பதில்லை. காரணம் இந்திரியங்களோடு சம்பந்தமில்லை.
கேள்வி-1: கனவு நிலையிலும் இந்திரியங்களுடன் தொடர்பில்லை ஆனாலும் ஸ்வப்ன பிரபஞ்சத்தை உருவாக்கி சம்சாரத்தை அனுபவிக்கிறான். எனவே சம்சரத்திற்கு காரணம் இந்திரியங்களோடு உள்ள சம்பந்தம் என்பதில்லை அது உனது ஸ்வரூபம்தான்.
பதில்-1: விழிப்பு ஸம்ஸ்காரங்கள்தான், கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணமாகிறது. ஆகவே கனவு என்பது விழிப்பு நிலையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் உருவாக்கிய உலகத்தைத்தான் நாம் அனுபவிக்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் இந்த ஸ்ம்ஸ்காரங்களில் இருந்து விடுதலையடைகிறோம்.
கனவு எப்படி வருகிறது? (சாஸ்திர விளக்கம்)
மனம் நாடிகளின் வழியாகத்தான் கனவுலகில் சஞ்சரிக்கிறது. மனதின் இருப்பிடம் இதயம், இதிலிருந்துதான் பல நாடிகள் செல்கிறது. மனமானது நாடிகள் வழியே கண், காது போன்ற இந்திரியங்களை அடைகிறது. பிறகு இந்த உலகத்தை அனுபவிக்கிறது. கனவு நேரத்தில் அந்தக்கரணம் நாடிகள் வழியே சென்று கோளகத்தை அடைகின்றது. நம்முடைய ஸம்ஸ்காரத்திற்கேற்ப கர்ம வசத்தினால் எதோ ஒரு வாசனையுடன் தொடர்பு கொண்டு நாடிகளுக்குள்ளே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அந்த பிரபஞ்சத்தை ஜீவன் அனுபவிக்கிறான். அவனுக்கு தைஜஸன் என்று பெயர். கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணம் கர்ம வினை காரணமாக ஏதாவது ஒரு ஸம்ஸ்காரத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மந்திர விளக்கம்:
ஒருவன் எப்பொழுது கனவு நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் அவன் தன்னுடைய கர்ம பலனைத்தான் அனுபவிக்கிறான். கனவை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் கர்ம பலனை அனுபவிக்கிறோம். கனவுப் பிரபஞ்சமும் மித்யா என்று இந்த மந்திரம் உணர்த்துகிறது. கனவில் மகாராஜாவாக இருப்பது போல, பெரிய பண்டிதனாக இருப்பது போல, மேலான, கீழான பிறவியை அடைந்து, மகாராஜா நகர்வலம் வரும்போது எந்தவித தடையும் இல்லாமல் படைகளுடன் அனுபவிக்கிறாரோ அதுமாதிரி ஜீவனும் தன்னுடைய வாஸனையால் ஒரு தனி உலகத்தை படைத்துக் கொண்டு தன் விருப்பப்படி தன்னுடைய உடலில் உலா வருகின்றான். ஆகவே சம்சாரம் என்பது அனாத்மாவை அபிமானிக்கும் போதுதான் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
ஸ்லோகம்–19
அத2 – அதுவே
யதா3 ஸுஷுப்தோ ப4வதி – எப்பொழுது உறங்கிக்கோண்டு இருக்கின்றானோ,
ந கஸ்யசன வேத3 – எதையும் அறியவில்லை.
தபி4 – அதே நாடி வழியே திரும்பி,
புரீததி – இதய ஆகாசத்துக்குள் உறங்குகின்றான்.
நம் உடலில் 101 பிரதான நாடிகளும், 72,000 நாடிகளும் இருக்கின்றன. இதற்கு ஹிதர என்று பெயர். இவைகளனைத்தும் இதயத்திலிருந்து உடல் முழுவதும் வியாபித்து செல்கின்றது. இந்த நாடிகள் வழியே சென்று இதயத்திற்குள் ஒடுங்கி விடுகின்றான் ஜீவன். அதே நாடி வழியே திரும்பி இதய ஆகசத்துக்குள் உறங்குகின்றான். குழந்தையாக இருந்தாலும், மகாராஜாவாக இருந்தாலும், பெரிய பண்டிதனாக இருந்தாலும், எல்லோருமே ஆனந்தத்தின் எல்லையை அடைந்து உறங்குகின்றார்கள். இதுதான் உறக்கத்தைப்பற்றிய விசாரம். ஜீவனில் ஏற்படும் சம்பந்தத்தால் சம்சாரம் ஏற்படுகிறது. முதலிரண்டு அவஸ்தைகளிலும் சம்பந்தம் இருக்கிறது. எனவே சம்பந்தம் நித்யமாக இருப்பதால் சம்சாரமும் நித்யமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஆழ்நிலை உறக்கத்தில் எந்தவித சம்பந்தம் இல்லை.
ஸ்லோகம்–20
இந்த மந்திரத்தில் பிரம்ம லட்சணம் விளக்கப்படுகிறது. உபநிஷத் இதை முக்கியமானது, ரகசியமானது என்று கூறுகிறது.
- பிரம்மன் ஜகத்துக்கும், ஜீவனுக்கும் உபாதான காரணமாக இருக்கிறது.
- எந்தவொரு சைதன்யம் நம்முடைய ஒரு சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதோ அதுவே இந்த உலகத்துக்கே ஆதாரமாக இருக்கிறது.
- பிரம்ம – ஆத்ம ஐக்கியத்தை குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
- பிரம்மத்தின் புதிய லட்சணம் – (ஜகத் மித்யா, பிரம்ம சத்யம், பிரம்ம அத்வைதம்)
- ஜீவன் எங்கிருந்து வருகின்றான்
மந்திர விளக்கம்:
சிலந்தி பூச்சி அதன் வலையை அதுவே பின்னிக்கொண்டு அதன் மீது ஊர்ந்து சென்று, வந்து கொண்டிருக்கின்றது. நெருப்பிலிருந்து சிறிய சிறிய தீப்பொறிகள் தோன்றுகின்றனவோ. சேதனமான சிலந்தி ஜடமான வலைக்கு உபாதான காரணமாக இருக்கிறது, அதாவது யாருடைய உதவியுமில்லாமல் தன் வலையை தானே உருவாக்கிக் கொள்கிறது. அதுபோல பிரம்மன் யாருடைய உதவியுமில்லாமல் ஜகத் உருவாகுவதற்கு உபாதான காரணமாக இருக்கின்றது. அதுவே நிமித்த காரணமுமாகவும் இருக்கின்றது. பிரம்மன் ஜீவன் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறது. நெருப்பிலிருந்து தோன்றும் தீப்பொறி ஸ்வரூபத்தில் ஒன்றாக இருக்கிறது ஆனால் உருவத்தில் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. பிரம்மத்திலிருந்து தோன்றும் ஜீவனும் ஒரே ஸ்வரூபத்தை உடையது. இதனால் எந்தவித மாற்றமுடையாமல் பிரம்மன் இருந்துக் கொண்டு ஜீவனை தோற்றுவிக்கிறது.
ஏவம் ஏவ – இவ்விதமாகவே, உதாரணத்தைப் போல
அஸ்மாத் ஆத்மனஹ – இந்த உடலுக்கு ஆதாரமாக உள்ள ஆத்மாவிடம் இருந்தே
ஸர்வே பிராணாஹ – எல்லா பிராணன்களும், ஜீவராசிகளுடைய எல்லா இந்திரியங்களும்
ஸர்வே லோகாஹ – எல்லா லோகங்களும்,- அனுபவிக்கப்படுகின்ற உலகங்கள் அவரவர் கர்ம பலனுக்கேற்ற உலகத்தை
ஸர்வே தேவாஹ – எல்லா தேவர்களூம் – இந்த உலகத்தினுடைய நியதியை கண்காணிப்பவர்கள்.
ஸர்வானி பூதானி – எல்லாய் உயிரினங்களும் தோன்றியுள்ளன.
இதனால் பிரம்மன் என்று சொல்ல வேண்டிய இடங்களில் ஆத்மா என்ற சொல்லை உபயோகித்திருப்பதால் இரண்டும் ஒன்றே என்று குறிப்பால் உணர்த்துகிறது.
தஸ்ய – பிரம்மத்தினுடைய,
உபநிஷத் – ரகசியமான பெயர்.
ஸத்யஸ்ய ஸத்யம் – சத்தியத்தினுடைய சத்யம்
இது மிகவும் சூட்சுமமாக இருப்பதால் இதை ரகசியம் என்று கூறுவதற்கு காரணமாகிறது. இதை புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினம். இது புனிதமான பெயர் என்றும் கூறலாம். இந்தப் பெயரை தகுதியானவருக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும். ”ஸ்த்யஸ்ய” என்ற சொல்லில் உள்ள சத்யமானது பிராணனை குறிக்கும்.
பிராண ஏவ ஸத்யம் – பிராணனுடைய சத்யம், உலகத்தினுடைய சத்யம் என்று இதை பொருள் கொள்ள வேண்டும்.
தேஷாம் ஏவ ஸத்யம் – பிராணன்களுக்கு பிரம்மன் ஸத்யம்.
உலகத்தை எப்படி சத்தியம் என்றூ கூறமுடியும் என்றால் சத்தியம் என்ற சொல்லை இரண்டாக பிரித்தால் உருவத்துடன் கூடியது, உருவமில்லாதது அல்லது வியாவகாரிக ஸத்யம் என்றும் இதைக் கூறலாம்.
<<வியாவஹாரிக சத்தியத்திற்கு பாரமார்த்திக சத்யமாக இருப்பது>>
சங்கரரின் விளக்கவுரை (ஸத்யஸ்ய ஸத்யம்)
கேள்வி-1: இரண்டு கேள்விகளையும் ஒரு கேள்வியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்? எங்கிருக்கிறானோ அங்கிருந்துதான் வரவேண்டும். எனவே இரண்டாவது கேள்விக்கு அவசியமில்லை.
பதில்-1: குதஹ: எங்கிருந்து, எதனால் என்று இரண்டு பொருள் உள்ளது. அபாதானத்தை நீக்கி நிமித்தத்தை எடுத்துக்கொண்டால் நீ கேட்ட கேள்வி சரி. எனவே எதன் காரணமாக திரும்பி வருகிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி-2: பதிலைப் பார்க்கும் போது நிமித்தக்காரண அடிப்படையில் இல்லை. உபாதான அடிப்படையில்தான் இருக்கிறது.
பதில்-2: முதல் கேள்வியில் ஆதாரம், ஆதேயம் என்ற சந்தேகம் வந்து விடும். இந்த சந்தேகத்தை நீக்கி அத்வைதத்தை நிலைநாட்ட இந்த இரண்டாவது பதிலும் தேவை.
சங்கரரின் விளக்கம்
விளக்கம் ஏன் தேவை? எங்கு சந்தேகம் இருக்கிறதோ அங்கே விசாரம் செய்யலாம். பிரயோஜனம் இருக்க வேண்டிய இடத்தில் விசாரம் செய்யலாம். இந்த இரண்டுமே இல்லை. பிறகு ஏன் விளக்கம் தேவை என்று சங்கரர் விளக்குகிறார்.
தஸ்ய உபநிஷத் – அவனுடைய ரகசியம் என்பது ஜீவனுடையதா, பிரம்மத்தினுடையதா? என்ற சந்தேகம் வரலாம். தஸ்ய – ஜீவனுடைய லட்ச்ணமாக இருந்தால் சம்சாரத்தைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். தஸ்ய – பிரம்மத்தின் லட்சணமாக இருந்தால் அதன் ஞானத்தைத்தான் அடைவோம்.
ஜீவன் வேறு, பிரம்மன் வேறு என்றால் மகாவாக்கியமே தவறாகி விடுகிறது. ஜீவன் அசம்சாரியென்றால் சாஸ்திர உபதேசம் அனர்த்தமாகி விடும். ஜீவனும், பிரம்மனும் ஒன்றென்றால் பிறகு சாஸ்திர உபதேசம் தேவையற்றதாகி விடும்.
கேள்வி: குருவானவர் உறங்கிக்கொண்டிருந்தவனிடம் சென்று பிரம்மத்தை உபதேசிக்க அணுகினார். ஆகவே ஜீவாத்மாவைத்தான் குறிக்கிறது. இங்கு ஜீவனைப்பற்றித்தான் விசாரிக்கின்றோம். “தஸ்ய” என்பது ஜீவனைத்தான் குறிக்கிறது. நம்மால் அறியப்பட வேண்டியது ஜீவனைத்தான். ஆத்மாவை இத்யவே உபாஸீதே என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி பல இடங்களில் ஆத்மாவைத்தான் அறிய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. ஈஸ்வரன் ஒருவர் இருந்தால்தானே அவரை தஸ்ய என்ற சொல்லால் குறிக்க முடியும்.
பதில்: ஜீவாத்மாதான் என்று நீ சொல்கிறாய், இதை சம்சாரி என்று ஓரிடத்திலும், அசம்சாரி என்று வேறிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவனில் இரண்டு அவஸ்தைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அசம்சாரியாக இருக்கிறது ஜீவனிலிருந்துதான் ஜகத் வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமே.
கேள்வி: இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. இரண்டு விபரீதமான தர்மத்துடன் ஒரு பொருள் இருக்க முடியாது. தடஸ்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்வேன், ஜீவனிடமிருந்து வேறான தடஸ்த ஈஸ்வரன் மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது. இந்த பிரகரணம் பிரம்மத்தைப்பற்றித்தான் விளக்கப்படுகிறது. 15வது ஸ்லோகத்தில் “பிரம்மத்தே வர்ஷியதே இதி” என்பதிலிருந்து பிரம்மத்தை உபதேசிக்கிறேன் என்ற குருவின் பதிலிலிருந்து, பிரம்மம்தான் விசாரம் செய்யப்படுகிறது.
ஜீவன் வேறு, ஈஸ்வரன் வேறு, ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈஸ்வரனிடம் தங்குகிறான். எனவே அவன் அந்த நிலையிலே ஈஸ்வரனிடத்தில் தங்குவதாலேயே, நாம் ஜீவனை அறிவது ஈஸ்வரனை விசாரிப்பதிலிருந்துதான். வேறு சில இடங்களில் ஈஸ்வரனைப்பற்றியும் பேசப்படுகிறது. அந்த ஈஸ்வரனும் அறியப்பட வேண்டியதுதான் என்று சாஸ்திரம் சொல்லியிருப்பதால், ஆத்மாவையும் அறிய வேண்டும், ஈஸ்வரனையும் அறிய வேண்டும். எல்லா இடத்திலும் ஜீவ-ஈஸ்வரனை வேறுபடுத்தி பேசியிருக்கிறது. “அஹம் பிரஹ்மஸ்மி” என்பதெல்லாம் உபாஸனைக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
பதில்: பிரவேச ஸ்ருதிவசாத் – பிரவேச ஸ்ருதியின் அடிப்படையில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம்தான் உண்மை. ஜீவனிடமிருந்து வேறுபடாத ஈஸ்வரனைதான் “தஸ்ய” என்ற சொல் குறிக்கிறது. இந்த உலகத்துக்கே ஆதாரமாக உள்ள ஈஸ்வரன்தான் ஜீவனுக்குள் சென்றிருக்கிறார். ஆத்மா என்ற சொல் பிரம்மனிடமிருந்து வேறுபடாத ஒன்று. ஈஸ்வரனாக இருக்கும்போது ஜீவன் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்குகிறான் என்பது தவறு.
கேள்வி– ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் என்று சொன்னால் அதில் இரண்டு தோஷம் உள்ளது. ஜீவன் சம்சாரி, ஈஸ்வரன் அசம்சாரி. எனவே இந்த ஐக்கியம் இருவரும் சம்சாரியாக இருப்பார்கள். முதல் கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கும். இரண்டாவது கருத்தை ஏற்றுக்கொண்டால் சாஸ்திரமும் தேவையில்லை என்றாகி விடும்.
பேதாபதிவாதி à விருத்திகார மதம் – உருவாக்கியவர் பர்த்துரு பிரவஞ்சம்.
விசிஷ்டாவைதம் à பேதமும், அபேதமும் சேர்ந்திருப்பதால் இந்தப் பெயர். ஈஸ்வரன் ஒருவர்தான்.
ஜீவனை சம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஈஸ்வரன் அசம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் சொல்லியிருக்கிறது. ஈஸ்வரன் ஜீவனுக்குள் செல்லும்போது விகாரமடைந்து சென்றிருக்கிறார். இப்படி புரிந்து கொண்டால் ஜீவனை ஈஸ்வரனிடமிருந்து வேறாக இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடலாம். இந்த பேத, அபேத லட்சணத்தால் எல்லா வேத வாக்கியங்களும் சரியாக பொருந்தி வரும்.
கேள்வி-1: பல பரமாத்மாக்கள் இருக்கிறார்கள் அதில் சில பரமாத்மா ஜீவாத்மாவாக இருக்கிறது. மற்றவைகள் பரமாத்மாவாகவே இருக்கிறது. உதாரணமாக பல விதைகளில் சில விதைகள் விதைகளாகவே இருக்கிறது, மற்றவைகள் விதைக்கப்பட்டு மரமாகி விடுகிறது.
பதில்: உபநிஷத் பல பரமாத்வாக்களை பற்றி பேசவில்லை. ஜீவர்களை பலவாக சொல்லியிருக்கிறது. ஆகவே இது தவறு.
கேள்வி-2: ஒரு பரமாத்மா முழுமையாக ஜீவனாக மாறியிருக்கிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பாலையும் தயிராக மாற்றுவது போல.
பதில்-2: பரமாத்மா ஜீவாத்மாவாக மாறிவிட்டால், பரமாத்வே கிடையாது. எனவே பரமாத்வை அடைய முடியாது. ஈஸ்வரன் இல்லாத நிலையில் மோட்சம் என்பது கிடையாது.
கேள்வி-3: ஏகதேச விகாரஹ- ஒரு பகுதியில் மட்டும் விகாரம் நடந்திருக்கிறது. பரமாத்மவுடன் ஒரு பகுதி ஜீவாத்மாவாக மாறியிருக்கிறது. உதாரணமாக பூமியில் சில பகுதிகள் பாலைவனம், மலைகள், விளை நிலங்கள், விதவிதமாக இருப்பது போல ஈஸ்வரன் ஜீவாத்மாவாக விதவிதமான மாற்றங்களுடன் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.
பதில்-3: அங்கங்கள் என்று சொன்னால், அதற்கு வரும் நாசமெல்லாம் அது எதனோடு சேர்ந்திருக்கிறதோ அதற்கும் நாசமேற்படும். ஜீவர்கள் ஈஸ்வரனின் அவயவங்கள் என்று கூறினால், ஜீவர்களில் சம்சார குணம், ஈஸ்வரனையும் சம்சாரியாக்கி விடும். எனவே சம்சாரியை நாம் ஏன் அடைய வேண்டும் அது நம்முடைய லட்சியமல்ல. ஏற்கனவே நாம்தான் சம்சாரியாக இருக்கிறோம்.
எந்த வாக்கியத்திற்கு பலன் கிடைக்கிறதோ, புருஷார்த்தமாக வைக்க முடியுமோ அதைத்தான் மகாவாக்கியம் என்று கூறமுடியும். ஈஸ்வரனை முக்தனாக வைத்து அசம்சாரியாக வைத்திருந்தால்தான் ஜீவர்களும் அந்த நிலையை அடைவதற்கு லட்சியமாக வைத்து கொள்ள முடியும். பிரம்மத்தை புரிந்து கொள்வதற்கு எந்த உபமானமும் கிடையாது. அப்படி கூறப்பட்டிருந்தால் அதை பிரமாணமாக எடுத்துக்கொள்ளாமல் அதைப்புரிந்து கொள்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். உபநிஷத்தில் த்வைதத்தை, பேதத்தை நிந்தித்திருப்பதாலும் ஏற்கனவே ஜீவன் நான் சம்சாரி என்று நன்றாக தெரியும். எனவே அசம்சாரியைப்பற்றித்தான் சொல்ல வேண்டும். பேதம்-அபேதம் என்றூ வாதம் சரியாக இல்லை. ஜீவனும் பிரம்மனும் பக்கத்திலே இருக்கிறதென்றால் அது ஒன்றையொன்று ஒட்டாததாக இருக்க வேண்டும், ஜீவன் மித்யாவாக இருப்பதால் அவனால் பிரம்மத்தை தொடமுடியாது.
பூர்வபக்ஷம்:
ஜீவ-பிரம்மத்திற்கிடையே நான்கு தோஷங்கள் இருக்கின்றன.
1) ஸ்வார்த்த விரோதம் – உபநிஷத் முரண்பாடாக பேசுகிறது
2) கர்மகாண்ட அபிரமாணம் – கர்ம காண்டம் பிரமாணம் என்ற தகுதியை இழந்து விடும்.
3) பிரத்யக்ஷ விரோதம் – அனுபவத்திலே விரோதம்
4) அனுமான விரோதம் – அனுமானத்திலேயே விரோதம்.
கேள்வி: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக நன்கு வர்ணித்திருக்கிறது. ஜீவனுக்கு பல சாதனைகளை சொல்லியிருக்கிறது. சில இடங்களில் ஜீவன் முக்தன், பிரம்மன் என்று ஐக்கியப்படுத்துகிறது.
பதில்: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக சொல்கிறது அது உபதேசமல்ல அனுவாதம். ஆனால் எதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமோ அதுதான் உபதேசம் (பிரமாணம்).
கேள்வி: ஞான காண்டத்தில் உபநிஷத் எல்லாவற்றையும் நிஷேதம் செய்கிறது. பிரமாணத்தால் அறிய முடியாதது பிரம்மம். கர்ம காண்டம் ஜகத்தைத்தான் விஷயமாக வைத்திருக்கிறது. அதை நீக்கி விட்டால் கர்ம காண்டம் அபிரமாணமாக் கருதப்படும்; காரணம் கர்மகாண்டம் நிர்விஷயமாகிவிடுகிறது. ஜீவனை அகர்த்தா, அபோக்தா என்று சொல்கிறாய், கர்ம காண்டம் கர்மத்தை செய் என்று சொல்கிறது, இப்படி செய் என்று கர்த்தாவிடம்தான் சொல்ல முடியும். ஆனால் அகர்த்தாவிடம் கர்மத்தை கொடுத்து விடுகிறது. இரண்டாவது காரணம் பிரமாஜனகத்வாத் – கர்ம காண்டமே நமக்கு மோகத்தை கொடுத்து விடுகிறது. எனவே கர்ம காண்டம் பிரமாணமல்ல என்ற நிலை உருவாகி விடும்.
பதில்: கர்ம காண்டம் நிர்விஷயமல்ல, விஷயமிருக்கிறது. இந்த ஜகத்தான் விஷயம். இது சாதனை, இது சாத்தியம் என்ற ஞானத்தைக் கொடுக்கிறது. இந்த சாத்தியத்திற்கு இந்த சாதனம் என்று கூறுகிறது. இஷ்ட பிராப்தி, அனிஷ்ட நிவிருத்தி (இஷ்டமில்லாததை நீக்குவது). இதற்கு கர்ம காண்டம் சாதனங்களைக் கொடுக்கிறது அதன் பலனையும் சொல்கிறது.
கேள்வி: சாதனை, சாத்தியம் மித்யா என்று தெரிந்து விட்டால், கர்ம காண்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள், அப்பொழுது இது பிரயோஜனமில்லாததாகி விடும்.
பதில்: கர்ம காண்டம் சாதனா, சாத்தியம், அஸத்வம், ஸத்யத்வம் இரண்டுமே பேசவில்லை. கர்ம காண்டம் விஷயம் வேறு, ஞான காண்டம் விஷயம் வேறு. அதனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கக்கூடாது. கர்ம காண்டம் அக்ஞானிக்கு பிரமாணம்; ஞானிக்கு பிரமாணமல்ல. கர்ம காண்டம் ஞானிக்கு பிரயோஜனமில்லை. அதனால் அபிரமாணமாக இருக்கிறது.. பிரமாணமாக இருந்தால் பிரயோஜனத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கர்மகாண்டம் எல்லோருக்கும் பிரமாணம்தான்.
கேள்வி: நம்மை செயலில் ஈடுபடுத்துவது யார்? தூண்டுவது யார்?
பதில்: நம்மிடத்தேயுள்ள ராக, துவேஷம்தான் நம்மை செயலை செய்யத் தூண்டுகிறது. வெளி விஷயங்களில் பற்றுடையவனை சாஸ்திரத்திற்கும் கூட அதை நீக்கும் சக்தி கிடையாது. சாஸ்திரத்தில் பற்றில்லாத ஒருவனை மீண்டும் பற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ள முடியாது. அது இருப்பதைக் காட்டி கொடுக்கும், ஆனால் தூண்டி விட்டு செயலில் ஈடுபடுத்தாது. அவரவர் புத்திக்கேற்றவாறு சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுகிறான். அது கர்மகாண்டமாக இருக்கலாம், அல்லது ஞான காண்டமாக இருக்கலாம்,
நம்முடைய அனுபவத்தினால் பேதத்தை நிலை நாட்ட முடியாது. அனுபவத்தில் ஆகாசம் பலவாக இருக்கிறது. ஆனால் ஆகாசம் ஒன்றுதான் என்ற அறிவுடன் இருக்கிறோம்.
கேள்வி: பொருட்கள் விதவிதமான குணங்களுடன் இருக்கிறது. எனவே விதவிதமான ஆதாரம் இருக்க முடியும் அல்லவா?
பதில்: வித விதமான சப்தங்களுக்கு ஆகாசம் ஒன்றுதான் ஆதாரமாக இருக்கிறது. அதே போல விதவிதமான தர்மங்களுக்கு பிரம்மன் ஒன்றுதான் ஆதாரம். ஆத்மா பிரத்யக்ஷத்துக்கு அப்பால் உள்ளதால், ஆத்மா அப்ரத்யக்ஷம். அனுபவத்திற்கு விஷயமாகாது. எனவே ஆத்மாவை பிரத்யக்ஷத்துடன் சேர்க்கவேக்கூடாது.
கேள்வி: ஆத்மா பிளவுபட்டதாக இருக்கிறது. ஆத்மா ஒன்றுதான் என்றால் எல்லோரும் ஒரே அனுபவம்தான் வரவேண்டும். ஆனால் அப்படியில்லையே.
பதில்: பிரத்யக்ஷ பிரமாணம் இருந்தால்தான் அனுமானம் பயன்படுத்த வேண்டும். உன்னுடைய ஸ்தூல சரீரம் அனுமானத்தை சொல்கிறதா? ஆத்மா அனுமானம் செய்கிறதா? யாரும் இந்த அனுமானத்தை செய்ய முடியாது
——————————————————————————————————————————————–
பகுதி-2 : பிராண ப்4ராமனம் (சிஷு ப்4ராமனம்)
——————————————————————————————————————————————–
இந்தப் பகுதியில் சத்தியத்தினுடைய சத்யம் என்பது மேலும் விளக்கப்பட்டுள்ளது. பஞ்ச பிராண தத்துவத்தின் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெளியிலிருக்கும் காற்றுக்கு வாயு என்று பெயர், உடலுக்குள் சென்று வரும் போது அதையே பிராணன்கள் என்று ஐந்து விதமாக அழைக்கப்படுகிறது.
v இந்திரியங்களையும் பிராணன் என்றும் அழைக்கப்படுகிறது
v சில இடங்களில் ஸ்தூல உடலும், உலகமும் பிராணன் என்று அழைக்கப்படுகிறது.
v சூட்சும சரீரமாக பிராணன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்கூறியபடி பிராணனின் உண்மையான பொருளைத் தவிர வேறு விதமாகவும் பிராணன் அழைக்கப்படுகிறது.
v பிராணனுடைய பெருமையைப் பற்றி பேசப்படுகிறது. இவ்வாறு பெருமையாக கூறினாலும் இது மித்யாதான்.
v நம்முடைய மனம் ஸத்தியத்தின் ஸத்யம் என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், இதற்கு தடையாக இருப்பது நம்முடைய இந்திரியங்கள், ஏனென்றால் இந்திரியங்கள் ராக துவேஷங்களால் பலமாக ஆட்கொள்ளப்பட்டு இவ்வாறு தடையாக இருக்கிறது. மனதை சஞ்சலபட வைத்து அதை சக்தியற்றதாக மாற்றி விடுகிறது. எனவே இங்கு ஒரு விதமான உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திரியத்தை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த கருத்துக்களெல்லாம் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
சங்கரரின் முகவுரை
பிராணன் வியாவஹாரிக சத்யமாக இருக்கிறது. இப்படி சொல்வது இது தனக்கு வேறாக உள்ள பாரமார்த்திக சத்யத்திலிருந்து சத்யத்தை எடுத்துக் கொண்டு சத்யமாக தோன்றுகிறது. இங்கு பிராணனை இந்த ஜகத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தானாக இருத்தல் என்ற சக்தியற்று வேறொன்றின் மூலம் இருத்தலை பெற்றுக் கொண்டு காட்சியளிக்கிறது. இந்த ஜகத் எதனிடமிருந்து தோன்றி, எது இருப்பதால் தானும் இருந்து கொண்டு பிறகு அதனிடமே ஒடுங்குவதால் அந்த பிரம்மம்தான் சத்யம். சத்யம் என்ற சொல்லுக்கு யோக்யதையான பிரம்மத்தை விட்டு ஏன் பிராண தத்துவத்தை சத்யம் என்று கூறுகின்றது என்பதை இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.
இந்த உலகம் மூர்த்தம், அமூர்த்தம் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
ஸத்யம்=ஸத் + த்யத் = உருவம் + உருவமற்றது.
பிராணனும் மூர்த்த-அமூர்த்தமாக இருக்கிறது. எனவே பிராணன் சத்யம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
மந்திர விளக்கம்
பிராணனுக்கு ரகசியமான பெயர் – சிஷூ – கன்றுக்குட்டியை உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவையிரண்டும் ராக-துவேஷமற்றது, வெளி விஷயங்களில் பற்றில்லாதது, தூய்மையானது. இதைத் தியானம் பண்ணுவதால் மனமும் சுத்தமாகிறது. இந்திரிய ஜித் என்ற பெயருடைய இந்த உபாஸனை:.
- ஆதானம் – இளைப்பாற தங்குமிடம் – பிராணனுக்கு இது சரீரமாக இருக்கிறது.
- பிரத்யாதானம் – வசிக்குமிடம் – பிராணனுக்கு நம்முடைய தலை
- ஸ்தான் – கம்பம் – பிராணனுக்கு கம்பம் – சக்தி
- தாம் – கயிறு – பிராணனுக்கு கயிறு – உணவு
இவ்வாறு பிராணனை தியானித்தால் எல்லோரையும் பிராணனாக நினைக்கும் மனப்பான்மை வந்து விடும்.
ஸ்லோகம்:2
எல்லா தேவதைகளும் பிராணனை தியானிக்கிறார்கள், கண்ணை ஆலம்பனமாக வைத்துக் கொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானிக்கிறார்கள். ருத்ரதேவன் கண்ணிலுள்ள சிவப்பு நிற கோட்டை ஆலம்பமனமாக எடுத்துக் கொள்கிறார்கள், வருணபகவான் கண்ணீரை எடுத்துக் கொள்கிறார். சூரியபகவான் கருமையத்தை தியானிக்கிறார்கள்.
ஸ்லோகம்:3
இந்திரியமாக பிராணனை வைத்து தியானிக்கிப்படுகிறது. இப்படி செய்வதால் இந்திரியங்களும் தூய்மையடைகிறது. இதனால் இந்திரியங்கள் நம்முடைய மேன்மைக்கு காரணமாகிறது. இரண்டு கண்கள், இரண்டு மூக்குதுவாரங்கள், இரண்டு காது துவாரங்கள், வாய் ஒன்று இவை ஏழும் சப்த ரிஷிகள் என்று குறிக்கப்படுகிறது. எது அறிகின்றதோ அவைகள் ரிஷிகளாகும். எட்டாவதாக வாக்கானது எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஸ்லோகம்:4
ஏழு ரிஷிகளின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கிறது.
2 காதுகள் – கோதம, பரத்நாஜன்
2 கண்கள் – விஸ்வாமித்ரர், ஜமதர்னி
2 மூக்கு துவாரங்கள் – வசிஷ்டர், காஷ்யப்பர்
1 வாய் – அதமி
இவ்வாறு பிராணன தியானித்து இந்திரியங்களை சுத்தப்படுத்தி அதன் மூலம் சித்தசுத்தி அடையலாம்.
——————————————————————————————————————————————–
பகுதி-3 : மூர்த்த-அமூர்த்த ப்4ராமனம்
——————————————————————————————————————————————–
முகவுரை:
பிராண தத்துவத்தின் விளக்கம்: நிஷேதத்தின் மூலம் பிராண தத்துவம் மித்யா என்று சொல்லி, பிரம்மம் ஒன்றே என்று நிரூபிக்கப்படுகிறது.
பிரபஞ்சம்-மூர்த்தம் (உருவமுடையது), அமூர்த்தம் (உருவமற்றது) என்று பிரிக்கப்படுகிறது.
மூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி; அமூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி
அதிதெய்வம்: சமஷ்டி மூர்த்தம்- பிருத்வி, நீர், நெருப்பு; வியஷ்டி அமூர்த்தம்- வாயு, ஆகாசம்
அத்யாத்மம்: சமஷ்டி மூர்த்தம்- ஸ்தூல சரீரம்; வியஷ்டி அமூர்த்தம்- சூட்சும சரீரம்.
சங்கரரின் அறிமுகம்:-
சத்தியத்தினிடத்தில் உள்ள சத்யமான பிராணன்(ஜகத்) சேதனமா, அசேதனமா என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அது திருஷ்யமாக இருப்பதால் அசேதனம் என்று தீர்மானித்துவிடலாம். ஸ்வரூபம் காரணமா, காரியமா என்றால் இது காரண ஸ்வரூபமல்ல இதன் தோற்றம் பேசப்பட்டதால் இது காரியம் என்று தெரிகிறது. எது காரியமோ அது மித்யா. ஆகவே இங்கு ஸத்யஸ்ய என்ற சொல் மித்யாவை குறிக்கிறது. மித்யாவாக இருப்பதால் ஏன் ஸத்யம் என்று சொல்லப்படுகிறது. மித்யா என்பது புரிந்து கொள்ள வேண்டிய வாக்கியம். அதை புரிய வைக்க வேண்டுமென்றால் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. ஆகவே ஸத்தியஸ்ய ஸத்யம் என்பது சரியான வார்த்தைதான். பிரபஞ்சமற்ற, சம்சாரமற்ற ஒன்று அது பிரம்மம் என்று புரிய வைக்க வேண்டும்.
ஸ்லோகம்:1
பிரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள் இருக்கிறது. இது இரண்டு ரூபமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அது மூர்த்தமாகவும், அமூர்த்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளது. பிரம்மத்தை சுட்டிக் காட்டுவதற்கு இரண்டு விஷயங்களாக மூர்த்தா, அமூர்த்தா பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூர்த்தம் – மர்தியா – அழியக்கூடியது. (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம் – அம்ருதம் – அழியாதது அல்லது நீண்ட காலம் இருப்பது (சூட்சும சரீரம்)
மூர்த்தம் – ஸ்திதம் – வரையறுக்கபட்டது – (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம் – யத்த – வரையறுக்கபடாதது – (சூட்சும சரீரம்)
மூர்த்தம் – ஸத் – பிரத்யக்ஷ கோசரம் – இந்திரியங்களால் பார்க்க முடிவது
அமூர்த்தம் – த்யத – இந்திரியங்களால் பார்க்க முடியாதது
ஸ்லோகம்:2
அதிதெய்வமான மூர்த்தம் எது, வாயுவுக்கும் ஆகாசத்துக்கும் வேறாக உள்ளது எதுவோ (நீர், நிலம், நெருப்பு) அதுதான் மூர்த்தம். இது மர்த்தயம், இது ஸித்தம், இது சத் என்று குறிக்கப்படுகிறது. சூரியனுடைய சரீரம்தான் மூர்த்தமாக கூறப்படுகிறது.
ஸ்லோகம்:3
வாயுவும், ஆகாசமும் அமூர்த்தம், இது அம்ருதம், த்யத், யத். இதற்கு சாரமாக இருப்பது சூரிய மண்டல தேவதையின் சூட்சும சரீரம். இது அதிதெய்வதம்.
ஸ்லோகம்:4
அத்யாத்ம மூர்த்தம், அமூர்த்தம் – ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம். இந்த ஸ்தூல சரீரம்தான் மூர்த்தம், பிராணன், ஆகாசத்துக்கு வேறாக உள்ளவைகள் மூர்த்தம். இதை மர்த்யம், ஸித்தம், ஸத் என்ற சொல்லபடுகின்றது, இதற்கு நம் கண் சாரமாக இருக்கிறது.
ஸ்லோகம்:5
அமூர்த்தமானது ஆகாசம், பிராணன் போன்ற சூட்சும சரீரத்தைக் குறிக்கிறது. இது அம்ருதம், யத், த்யத் என்று குறிக்கப்படுகிறது. சூட்சும சரீரமே சாரமாக இருக்கிறது.
ஸ்லோகம்:6
நம்முடைய சூட்சும சரீரத்தில் ஸம்ஸ்காரங்களே வாசனைகளாக இருக்கிறது. அதையும் அமூர்த்தத்தில் சேர்க்கப்பட்டிகிறது. அதையும் நீக்க வேண்டும்.
நிஷேத வாக்கியம்– பிரம்மம் மூர்த்த-அமூர்த்தம் இல்லை என்று நீக்குதல்.
வாசனா க்ஷயம் – நமக்குள்ளிருக்கும் வாசனா சக்தியினால் நாம் பெற்ற அறிவு நமக்கு பயன்படாது. வாசனைகள் சாத்வீகம், ராஜஸ, தாமஸ குணங்களை உடையது. தவத்தினால் ராஜஸ, தாமஸ வாசனைகளை அடக்கி வைத்து சாத்வீக மனதையடைகிறோம். அப்பொழுதும் கூட சில வாசனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
எவ்வளவு பலமான வாசனை என்று எப்படி அறியமுடியும்?
நம் முயற்சியினாலே வாசனையை அடக்க முடிந்தால் அது பலவீனமான வாசனையாகும். எந்த வாசனைகள் செயலுக்கு தள்ளூகிறதோ அது பலமான வாசனை. இந்த பலமான வாசனைகளை அறிவு இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற வாசனைகளை நிதித்யாஸனம் மூலமாக அமைதிபடுத்த வேண்டும். இதன் மூலம் எல்லா வாசனைகளும் மித்யா என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மனதில் எந்த விருத்திகள் (எண்ணங்கள்) வந்தாலும் இவைகளுக்கெல்லாம் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகள் மனதை சார்ந்தது என்னைச் சார்ந்தது அல்ல என்ற நிலைக்கு வரவேண்டும். மனதில் வாசனைகள் இருக்கும் ஆனால் அவைகளை நிஷேதம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
புருஷஸ்ய – சூட்சும சரீரத்தினுடய விதவிதமான வாசனைகள் பிரம்மத்தை வெவ்வேறு விதமாக ஒப்பிடுகிறது. எப்படி மஞ்சள் வர்ணத்தில் நனைத்த துணியானது மஞ்சள் நிறமாக காணப்படும். இதில் துணியானது சூட்சும சரீரமாகவும், மஞ்சள் நிறமானது வாசனைகளை குறிக்கிறது. வெளிர் மஞ்சள் கம்பளியும், மிகச் சிவப்பான பூச்சியும், நெருப்பின் ஜூவாலையும், தாமரையின் நிறமும், மின்னலைப் போன்ற ஹிரண்யகர்ப்பனின் சூட்சும சரீரத்தில் உள்ள வாசனைகள் போல் கலந்து இருக்கின்றன. உபாஸகர்கள் ஞான நிஷ்டையை தொடராதவர்கள் இவர்களுக்கு எல்லாவித செல்வங்களும் ஒரு நொடியில் கிடைக்கும்.
பாஷ்ய விசாரம்:
புருஷஸ்ய ரூபம் – சூட்சும சரீரத்தில் உள்ள உபாஸனை.
சூட்சும சரீரத்தை நீக்கும் போது வாசனைகளும் சேர்ந்து நிஷேதம் செய்யப்படுகிறது. கானல் நீரை நிஷேதம் செய்தாலும் அது இருந்துக் கொண்டுதான் இருக்கும். அதுபோல் வாசனை நிஷேதம் செய்தாலும் அது இருந்து கொண்டிருக்கும்.
கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
வாசனைகள் எல்லாம் ஆத்மாவின் ஸ்வரூபங்கள் வெறும் வாசனா மயமான பிரபஞ்சமாக இருக்கிறது. அதுதான் ஆத்மாவின் ஸ்வரூபம். அது க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது. கனவில் தெரியும் விஷயங்கள் மனதில் இருப்பது போல், விழிப்பு நிலையிலும் தெரியும் விஷயமல்ல, மனதிலுள்ள எண்ணங்கள்தான். இல்லை, இல்லை என்பது வெளியே தெரியும் விஷயங்கள் இல்லையென்று சொல்லுகிறது.
பதில்: உன்னுடைய கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கிறது. ஸ்ருதி நிலையான சைதன்யத்தை சொல்லுகிறது, தோன்றி மறைவது ஆத்மாவென்றால் அது நம்முடைய லட்சியமாக இருக்காது. ஆத்மா க்ஷணிகம் என்றால் அது நாம் அடைய வேண்டிய புருஷார்த்தமாக இருக்காது. விஷயம் இல்லாமல் விருத்தி எழும்பாது. ஒவ்வொரு எண்ணத்துக்கும் பின்னால் ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்.
கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஆத்மாவினுடைய குணம். ஆத்மாவினுடைய குணமாக இருப்பது இந்த வாசனைகள்தான்.
பதில்: ஆத்மா நிர்குணம் என்று ஸ்ருதி சொல்வதற்கு எதிராக இருக்கிறது. குணம் அழிந்தால் அதைச்சார்ந்துள்ள பொருளும் அழிந்து விடும். வாசனைக்கு கெடுதி வந்தால் ஆத்மாவுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் ஆத்மா அப்படிப்பட்டதல்ல.
கேள்வி: வாசனைகள் மனதைச் சார்ந்தது ஆத்மாவை அல்ல. ஆனால் ஆத்மாவும், மனமும் சமமாக ஸத்தாவாக இருக்கிறது.
பதில்: அத்வைத தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. ஆத்மாவுக்கு இணையாக வேறொன்று இருந்தால், ஆத்மா எங்கும் வியாபித்திருக்கும் என்ற ஸ்ருதியின் வாக்கியத்துக்கு எதிராக இருக்கும்.
கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபம். பரமாத்மா என்பது வேறு.
பதில்: ஜீவாத்மாவுக்கும் பரம்மத்மாவுக்குள்ள வேற்றுமையில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? உடலின் ஒரு உறுப்பு என்ற சம்பந்தமா அல்லது இரண்டு வெவ்வேறாக இருந்து சம்பந்தம் இருக்கிறதா? இந்தக் கருத்து மகாவாக்கிரத்திற்கு விரோதமாக இருக்கிறது. எனவே ஏற்றுக் கொள்ள முடியாது.
தர்மத்தின் துணைக்கொண்டு ராஜஸ, தாமஸ வாசனைகளை நீக்க வேண்டும். பிறகு ஞானத்தின் துணைக்கொண்டு சாத்வீக வாஸனைகளை பலவீனப்படுத்த வேண்டும்.
அத2 – பிறகு – அத்ரோபத்திற்கு பிறகு (அனந்தரம்) முதல் சத்யத்தை விளக்கிய பிறகு,
அத3: – ஆகவே இரண்டாவது ஸத்யம் விளக்கப்பட வேண்டியதனால், பிரம்மத்தை அதன் ஸ்வரூபத்தை விளக்குவதற்காக;
ஆதே3ஶ – உபதேசம் செய்ய வேண்டும்.
நேதி நேதி – ந + இதி – பிரம்மத்தை உபதேசிக்கின்ற வாக்கியம். இந்த வாக்கியம்தான் பிரம்மத்தை நன்கு விளக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு மேலாக பிரம்மத்தை உபதேசிக்க முடியாது.
யே தஸ்மாத் – “நேதி” என்கின்ற சொல்லை காட்டிலும்,
அன்யபரம் நஹி அஸ்தி – வேறு நல்ல உபதேசம் கிடையாது.
அத – ஆகவே
நாமதேயம் – – “ஸத்யஸ்ய ஸத்யம்” என்பது பிரம்மத்தை குறிக்கின்ற உயர்வான சொல்லாகும். ஸத்யமாக உள்ள பிராணனுக்கும் ஸத்யமாக உள்ளது.
நேதி நேதி விளக்கம்:
ந – இல்லை,
இதி – ந என்ற வினைச்சொல்லோடு சேரும்போது அப்படியே இருக்கும். பெயர் சொல்லோடு சேரும்போது “இது” என்பது “இவ்விதம்” என்று மாறுகின்றது, இந்த மந்திரத்தில் “இது” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது
ந இதி – ந இத3ம் அஸ்தி – இது இல்லை.
விளக்கம்–1
இரண்டு न க்கும், இரண்டு इति க்கும் ஒரே அர்த்தம்
इति – த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) – சிதாபாசம் – சைதன்யத்துக்கு விஷயமாக இருக்கின்ற எல்லா ஜடமான அனாத்மாக்களாக இருப்பது. பார்க்கப்படும் பொருட்கள் எல்லாம் இல்லை என்று இரண்டு முறை சொல்லப்படுகிறது. இப்படி தெரிந்தே இரண்டு முறை பயன்படுத்தி இருப்பதனால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உதாரணமாக அவர் இந்த வட்டத்தில் உள்ள வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். இதற்கு அவர் எல்லா வீட்டிற்கும் சென்று ஓட்டுக் கேட்டார் என்று அர்த்தமாகிறது. அதேபோல இங்கே எல்லா அனாத்மாக்களையும் எடுத்துக்கொண்டு நிஷேதம் செய்ய வேண்டும்.
விளக்கம்–2
முதல் इति மூர்த்த பிரபஞ்சம், இரண்டாவது इति அமூர்த்த பிரபஞ்சத்தை குறிப்பதாக எடுத்துக் கொண்டால், இந்த வாக்கியம் மூர்த்தத்தையும், அமூர்த்தத்தையும் நிஷேதம் செய்வதாக பொருள் கொள்ளலாம்.
விளக்கம்-3
முதல் इति ஜீவனுடைய உபாதி, இரண்டாவது इति ஈஸ்வரனுடைய உபாதியாக எடுத்துக் கொண்டால், இந்த வாக்கியம் ஜீவனுடைய உபாதியையும், ஈஸ்வரனுடைய உபாதியையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.
விளக்கம்-4
முதல் इति காரிய பிரபஞ்சம், இரண்டாவது इति காரண பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டால், காரிய பிரபஞ்சமாக இருக்கின்ற இந்த உலகமானது காரண அவஸ்தையிலிருந்து (மாயையிலிருந்து) வெளித்தோற்றத்துக்கு வந்துள்ள நாம-ரூபங்களே. இதையையும், காரண பிரபஞ்சமான மாயையையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.
விளக்கம்-5 முதல் इति வியஷ்டி (அத்யாத்மம்), இரண்டாவது इति சமஷ்டி (அதிதெய்வம்)
விளக்கம்-6 முதல் इति சரீர நிஷேதம், இரண்டாவது इति ஜகத் நிஷேதம்
அனாத்மா à சேதனத்துடன் சம்பந்தபட்ட அனாத்மா, ஸ்தூல, சூட்சும சரீரம், ஜடமாக இருக்கும் இந்த ஜகத். இந்த இரண்டையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.
விசாரம்
நேதி, நேதி என்ற லட்சணமே சரியானது, மேலானது. இதைத்தவிர வேறெதுவும் பிரம்மத்தை விளக்க முடியாது.
கேள்வி: இந்த சொல் இல்லாமையை போதிக்கிறதா?
பதில்: இது இல்லாமையை சொல்லவில்லை. இல்லாமையிலிருந்து ஒரு பிரயோஜனமும் அடைய முடியாது (அபாவஸ்ய அக்ருத்யாவாத்). இது நீக்குதல் என்ற பொருளைத்தான் குறிக்கிறது. நாம் ஒன்றை நீக்குகிறோம் என்றால் வேறு ஏதோ ஒன்றை ஆதாரமாக கொண்டுதான் செய்ய முடியும். ஆதாரம் இல்லாமல் எந்த தவறும் நடக்காது. உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்ப்பதற்கு கயிறு ஆதாரமாக இருந்தால்தான் பாம்பானது தோன்ற முடியும். இது ஒரு நியதி. இதில் எது தவறாக பார்க்கப்படுகிறதோ அது நீக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து “நேதி” என்ற சொல் எதையோ நீக்குகிறது அதற்கு பிரம்மமே ஆதாரம் என்று புரிந்து கொள்ளலாம். அப்படி இந்த ஜகத்தானது பிரம்மத்தின் மீது இருந்துக் கொண்டு, தான் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சொல்லில் உள்ள இதி என்ற சொல் குறிக்கின்ற இந்த ஜகத்தை நீக்கினால் மீதி இருப்பது பிரம்மம்தான் என்று உணர்த்துகிறது. பூரணமான பிரம்மன் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இதற்கு வேறாக ஒன்று உண்டு என்று சொன்னால் பிரம்மம் பூரணமாக இருக்க முடியாது. எனவே ஜகத்தை இல்லை என்று புரிந்து கொண்டால் பிரம்மத்தை அறிந்து கொண்டது போலாகும்
கேள்வி: நேதி எப்படி மித்யாவை நிலை நாட்டுகிறது?
பதில்: இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது மாதிரி ஒரு நிலை ஏற்படாது. உதாரணமாக மேசை மீது புத்தகம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்று சொல்லும் நிலையே ஏற்படாது. மேசை மீது புத்தகம் இல்லை என்பதை நிரூபிக்க தேவையில்லை. மேசை மீது செயற்கை மலர் இருக்கிறது, அதை நாம் மலரில்லை என்று சொல்லலாம் அதை நிரூபிக்கவும் முடியும். அதற்கு இது இயற்கையான மலரை போன்று தோற்றமளிக்கிறது என்ற உண்மையை சொல்லி அடைந்த தவறான அறிவை நீக்கினால் போதும். மலர் பார்வைக்கு தெரிவதால் அதை நிஷேதம் செய்ய வேண்டியிருக்கிறது.
எது நீக்கப்படுகிறதோ அதற்கு இரண்டு நிலைகள் இருக்க வேண்டும்.
- ஸ்வரூபமாக இருக்க கூடாது,
- இருக்கிற மாதிரி தோன்ற வேண்டும்.
நம்முடைய அனுபவத்தில் உலகம் தோன்றி கொண்டிருக்கிறது. எனவே நாம் ஸ்ருதி பிரமாணத்தை எடுத்துக் கொண்டு இந்த உலகத்தை நீக்கி பிரம்மத்தை உணர வேண்டும். இதற்கு ஸ்ருதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
மித்யா விஷயத்தில்தான் நேதி என்ற சொல்லை பயன்படுத்த முடியும், மற்ற விஷயங்களில் பயன்படுத்தினால் இரண்டு விதமான குற்றம் வந்து விடும். இல்லாததை இல்லை என்று சொல்ல தேவையில்லை, இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.
நிஷேதம் மூலமாக உபதேசம் செய்வதுதான் சிறந்த வழியாகும். நேரிடையாகவும் உபதேசம் செய்யலாம். இதை விதிமுக உபதேசம் என்று கூறுவர். நிஷேதம் மூலமாகத்தான் ஜகத்தின் மித்யாத்வம் உணர்த்தப்படுகிறது. பிரம்மத்தை விதிமுகமாக விளக்க முடியாது. ஏனெனில் பிரம்மத்திற்கு குணமும் இல்லை, சப்தங்களாலும் விளக்க முடியாது. அதிஷ்டான-அத்யாஸ சம்பந்தம் மூலமாகத்தான் உபநிஷத் நேரிடையாக விளக்குகிறது. மற்றெல்லா இடங்களிலும் நிஷேத முறையில்தான் விளக்கப்பட்டிருக்கிறது.
——————————————————————————————————————————————–
பகுதி-4 : மைத்ரேயி ப்4ராமனம்
(பிரம்ம வித்யா, சந்நியாச விசாரம், பிரம்ம ஞானத்திற்கான சாதனங்கள்)
——————————————————————————————————————————————–
சங்கரருடைய பொது அறிமுக விசாரம்
ஆத்மாவை அறிதல் – அறிதல் என்றால் அறிவை அடைய வேண்டும். எதைப்பற்றிய அறிவு என்றால் ஆத்மாவை பற்றிய அறிவை அடைதல், அதன் பலன் மோட்சத்தை அடைதல்.
ஆத்மாவை ஏன் நாட வேண்டும் என்றால் நாம் உண்மையிலே விரும்புவது ஆத்மாவைத்தான் அதாவது நம்மைத்தான். நாம் விரும்புவதுதான் சாத்தியமாக இருக்கமுடியும். எனவே ஆத்மாவை அறிய வேண்டும். ஆத்மாவை அறிதல் என்பது ஆத்மாவை அடைதலாகும். இது அனைத்தையும் அடைவதை போன்றதாகும். இந்த ஆத்ம ஞானத்தை எப்படி அடைவது என்பதைப் பற்றி இந்த பகுதியில் கூறப்படுகிறது. இதில் வேறெதாவது நிபந்தனைகள் இருக்கிறதா என்றால் அது சந்நியாசம் எடுத்துக்கொண்டு சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். அந்த சந்நியாசத்தைப் பற்றிய விளக்கத்தையும் இந்தப்பகுதியில் பேசப்படுகிறது.
அவித்யா சூத்திரத்தில் விஷயமாக இருப்பது ஆத்மா அக்ஞானம், வேதம், ஞானம். வேற்றுமைகள் அறிவதே அவித்யாவின் விஷயம். இந்த உலகத்தைப் பற்றிய அறிவே அவித்யா. கர்மத்தினால் அடையப்படுவதுதான் இந்த உலகம், இதுவே சம்சாரம், அவித்யாவின் பலன் சம்சாரம். சம்சாரம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது அவைகள்,
- உத்க்ருஷ்ட சம்சாரம் – இன்பத்தை கொடுக்கும் உலகங்கள் காலத்தால் வரையறைக்கப்பட்டது, ஞான கர்மத்தால் இந்த சம்சாரத்தை அடைகிறார்கள்.
- நிகிருஷ்ட சம்சாரம்: நாம் இயற்கையாக செயல்பட்டால், சுபாவமாக செய்தால், அசாஸ்திரீய கர்மங்களினால் வரும் பலன்களை வேண்டாம் என்ற வைராக்கியம் வருகிறதோ அது அவரை பிரம்மவித்யாவிற்கு தகுதியை கொடுக்கிறது. ஆத்மாவைப்பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்க வேண்டும். அனாத்மாவைப் பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்கக்கூடாது. இந்த நிலைதான் வைராக்கியம் என்று அறிந்து கொள்ளலாம்.
சந்நியாச விசாரம்:
சந்நியாசம் சிரவணத்துக்கு ஒரு அங்கம் என்ற எந்த அடிப்படையில் சொல்கிறார். கிரகஸ்தாசிரமம்: வைதீக கர்மம். தர்ம-அதர்ம ஞானத்தை கடைப்பிடிக்க வேண்டிய ஆசிரமம். முழு நேர கர்மத்தில் ஈடுபடுவது, பணம் சம்பாதித்தல், குடும்பத்தை பராமரித்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்றவை. ஆசிரமத்தில் உள்ள கர்மங்கள் காலத்திற்கேற்றவாறு மாறி வருகின்றன. ஸ்தானமும், கடமையும் சேர்ந்து போக முடியாத நிலை இப்பொழுது இருக்கிறது.
சந்நியாசம் என்ற ஆசிரமத்திற்கு சென்று அங்கு கடைப்பிடிக்க வேண்டிய சாதனங்களைத்தான் மோட்சம் அடைய எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் பின்பற்ற வேண்டும். சந்நியாசத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சாதனங்களை இல்லறத்திலிருக்கின்றவர்கள் பின்பற்றினாலும் அதனுடைய பலன்களை அடையலாம். சந்நியாசத்தினால் மோட்சம் அடையலாம் என்று எங்கும் சொல்லப்படவில்லை. மோட்சத்திற்கு ஆத்மஞானம்தான் அவசியம். ஜீவன் முக்தன் நிலையை அடைந்ததும் அவன் எந்த ஆசிரமத்தையும் சேர்ந்தவனல்ல, அவன் பிரம்மமாகவே இருக்கிறான்.
யாக்ஞவல்கியர் இல்லறத்திலிருந்தே ஞானத்தை அடைந்தவர், ஞான நிஷ்டைக்காக சந்நியாசத்திற்கு செல்கிறார். ஜனக ராஜா ஞான நிஷ்டையை இல்லறத்திலிருந்தே அடைந்தவர்.
பிரம்மஞானத்திற்கு சரியான, நேரிடையான சாதனம் சிரவணம். சந்நியாசத்தின் ஒரு அங்கமாக சிரவணம் இருக்கிறது. நோய் குணமடைவதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து சரியாக செயல்பட உணவுக்கட்டுபாடு என்ற அங்கம் இருப்பதைப்போல இந்த சிரவணத்தை சாதன சதுஷ்டயத்துடன் பின்பற்றினால் மோட்சம் அடைய உதவியாக இருக்கும். ஞானம் மோட்சத்தைக் கொடுக்கும், அந்த ஞானத்துக்கு சாதனை சிரவணம். அந்த சிரவணத்துக்கு சம, தம, வைராக்கியம் போன்றவைகள் உதவியாக இருக்கும்.
கேள்வி: கர்மம் ஏன் சாதனையாக இருக்கக்கூடாது? ஞானம் மட்டும்தான் இருக்க வேண்டும்?
பதில்:
Ø கர்மத்துக்கு பலன் ஏற்கனவே உபநிஷத்தில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. மோட்சம் என்பது கர்மத்தின் சாத்தியமாக சொல்லப்படவில்லை. கர்மத்தின் பலன் அதிகபட்சமாக பிரம்மலோகம் வரை செல்லலாம். இவ்வாறாக கர்ம பலன் நிச்சயபட்டிருக்கும்போது எப்படி இந்த கேள்வி கேட்கிறாய்?
Ø கர்மம் எதிலிருந்து உற்பத்தியாகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், அது அவித்யாவில் இருந்துதான் ஆரம்பமாகும். எனவே அவித்யாவிலிருந்து தோன்றிய கர்மம் அதன் பலன் அவித்யாவை தாண்டிச் செல்லாது.
Ø கர்மம் ஒரு கட்டத்தில் தடையாகவே இருக்கும். விசாரத்தின் பலனாக அடையும் ஞானத்தை கர்மம் செய்து அடைவேன் என்று முயற்சிப்பது அதை அடைய விடாமல் தடுக்கிறது (பிரதிகூலம்) கர்மம் அனாத்மாவில் அபிமானத்தை வைக்கிறது. கர்மத்தின் மூலம் சித்தசத்தியடைந்து, விசாரம் என்கின்ற சாதனையை பின்பற்றுகிறோம். அப்போது கர்மத்தை விட்டுவிட வேண்டும். சந்நியாசம் என்பது கர்மத்திலும் அதன் பலனிலும் இருக்கும் பற்றை விடுவது
கேள்வி: ஏன் இரண்டையும் ( கர்மத்தையும், ஞானத்தையும் ) வைத்துக் கொள்ளக்கூடாது?
பதில்: அது முடியாது.
கேள்வி: யாராலும் ஆசையை விட முடியாது. வைராக்கியம் என்பது யாரிடமும் ஏற்படாது. எனவே உலக இன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு, அதே சமயத்தில் மோட்சத்தையும் அடையலாமே?
பதில்: பிருஹதாரண்ய உபநிஷத் படிக்காததினால் இவ்வாறு கேட்கிறாய். ஒருவனால் எல்லாவிதமான ஆசைகளையும் துறக்க முடியும் என்று உறுதி செய்கிறது.
Ø அனுபவத்தில் இந்த மாதிரி ஆசையை துறந்து வைராக்யத்துடன் இருப்பவர்களை காண்கின்றோம். சாத்வீக எண்ணங்களுடன் இந்த மாதிரி இருக்க முடியும்.
Ø ஸ்ருதி பிரமாணம் – இந்த ஸமுச்சயத்தை ஏற்றுக் கொள்வதில்லை. வைராக்கியம் வந்தவுடன் கர்மத்தை விட்டு விடலாம் என்று சொல்கிறது.
Ø ஸ்மிருதி பிரமாணம் – வியாசர் எழுதிய நூலில் வேதம் சொல்கின்ற கர்மத்தை, வைராக்கியம் வந்தவுடன் விட்டுவிடு என்று கூறப்பட்டிருக்கிறது
Ø யுக்தி பிரமாணம் – தர்க்க பிரமாணம் – அவித்யாவினால் கர்மத்தை செய்து கொண்டிருக்கிறோம். அத்யாஸமும், அக்ஞானமும் நீங்கிய நிலை ஞானம் அடைதல், அவித்யா நம்மை விட்டு சென்றால் கர்மத்தையும் விட்டுவிடலாம். கர்ம ஸ்வரூபம் வேறு, ஞான ஸ்வரூபம் வேறு.
Ø ஸ்ருதி லிங்காத் – ஸ்ருதியில் சொல்லப்பட்ட கதையிலிருந்து நாம் ஏதாவது ஒன்றை அனுமானம் செய்யலாம். இதற்கு ஸ்ருதி லிங்கம் என்று பெயர். இந்தக் கதையில் யாக்ஞவல்கியர் வீட்டை விட்டு போக எண்ணியவர், கர்மத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறார். இதனால் கர்மம் மோட்சத்திற்கு தேவையில்லை என்று தெரிகிறது. எல்லாமே நான் என்று நினைப்பவன் மோட்சத்தை அடைகிறான். எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் நடக்காது. கர்மம் வேண்டும் என்றால் அனாத்மாவில் அபிமானம் இருக்க வேண்டும். மனம் தூய்மையடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும்.இந்த ஸமுச்சயம் இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று சம ஸமுச்சயம் மற்றொன்று கிரம ஸமுச்சயம். சம ஸமுச்சயம் என்பது ஒரே நேரத்தில் இரண்டையும் செய்தல். கிரம ஸமுச்சயம் என்பது படிப்படியாக கர்மத்திலிருந்து விசாரத்திற்கு வருதல், அதாவது சித்தஸுத்தி அடையும் வரை கர்மம், அதற்கு பிறகு கர்மத்தை விட்டுவிட வேண்டும், விசாரத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்லோகம்:1
உத்யாஸ்யன்வா – உயர்ந்த நிலையான சந்நியாச ஆசிரமத்திற்கு செல்லப் போகிறேன்.
அரே அஹம் அஸ்மாத் ஸ்தானாத்3 – இந்த இல்லறத்திலிருந்து
தே அன்யா காத்யாயனி அந்தம் – உன்னிடத்திலிருந்தும், காத்யாயனியிட த்திலிருந்தும் இந்த கணவன் என்ற உறவை முடித்துக் கொள்ளப்போகிறேன். அதற்கு முன் என்னுடைய சொத்துக்களை இரண்டு பேருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கிறேன். என்று கூறினார்.
ஒருவன் சந்நியாசத்திற்கு செல்ல வேண்டுமென்றால் தாய், தந்தை, மனைவி மற்றும் புத்திரர்கள் இவர்களிடம் அனுமதி பெற வேண்டும். தம் சுயநலத்திற்காக அனுமதிக் கொடுக்கவில்லயென்றால் சொல்லாமல் சென்று விடலாம். இல்லறத்திலிருந்தும் ஞானத்தை அடையலாம். ஆனால் அதன் பலனை ஞான நிஷ்டையின் மூலம்தான் அடைய முடியம் அதற்காகத்தான் யாக்ஞவல்கியர் சந்நியாசத்திற்கு செல்கிறார்.
ஸ்லோகம்:2
மைத்ரேயி யாக்ஞவல்கியரை பார்த்து, “இந்த செல்வம் நிறைந்த உலகம் முழுவதும் எனக்கு கிடைப்பதாக இருந்தால், அதனால் எனக்கு மனநிறைவும், மரணமற்ற நிலையையும் அடைய முடியுமா?” என்று கேட்டாள். அதற்கு முடியாது என்று அவர் பதிலளித்தார். அதிக செல்வங்களையுடையவன் வாழ்க்கை எப்படி இருக்குமோ, அவ்வாறுதான் உன்னுடைய அந்த வாழ்க்கையும் இருக்கும். செல்வத்தில அம்ருதத்துவத்தை அடையலாம் என்ற நம்பிக்கையை வைத்திருக்காதே என்று மேலும் கூறினார். அதற்கான வாய்ப்பே கிடையாது என்று உறுதியாக கூறினார்.
விசாரம்: செல்வத்தால் மோட்சத்தை அடையும் வாய்ப்பு கிடையாது:
v செல்வத்தால் போக்யத்தை வாங்கலாம். இன்பம் தரும் பொருட்கள் வாங்கலாம். பொருட்கள் மட்டும் இருந்தால் போதாது, அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கக்கூடிய கரணமும் இருக்க வேண்டும்.
v செல்வம் செயலில் ஈடுபட வைக்கிறது. இந்த செயலின் பலந்தான் நம்மை போக்தாவாக மாற்றும். இந்த நிலையில் பாவ-புண்ணியத்தை செலவழித்து போகத்தை அனுபவிக்கலாம்.
v செல்வமானது நமது குணத்தையோ, ஸம்ஸ்காரத்தையோ மாற்றாது.
v செல்வமானது சம்சாரியாகத்தான் நம்மை வைத்திருக்கும்.
எவனொருவன் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று வேட்கையுடன் இருக்கிறானோ அவனே போக்தா. எந்த மனம் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அது நிறைவான மனதிலிருந்து உருவாகுவதில்லை, குறையுள்ள மனதிலிருந்துதான் வருகிறது. குறை இருக்கிற இட த்திலிருந்துதான் ஆசைகள் வளர்கின்றது. போக்தாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே சம்சாரியாகத்தான் வைத்திருக்கும். மனதில் இருக்கின்ற அடிப்படை குறைகளான பயம், நிறைவின்மை போன்றவைகள் பணத்தால் நீக்க முடியாது. நமது மனம் பூரணமான வஸ்துவிடம் அபிமானம் வைத்தால்தான் மனநிறைவை அடைவோம்.
ஸ்லோகம்:3
மைத்ரேயி, ‘எந்த செல்வத்தால் நான் மோட்சத்தை, அம்ருதத்தை அடைய முடியாதோ அதை நான் வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன். எனவே எந்த ஒன்றை அறிந்தால் அதனால் மோட்சத்தை அடைய முடியுமோ அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று யாக்ஞவல்கியரிடம் கேட்டாள்.
விசாரம்:
எந்த அறிவினால் இந்த செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறீர்களெ அதை உபதேசம் செய்யுங்கள். ஒன்றை வேண்டாம் என்று விலக்க முடிவதற்கு காரணம் அதை விட உயர்ந்த மேலான ஒன்றை அடையப்போவதால்தான். ஒன்றை விடும்போது, அதை விட மேலான வேறொன்றை அடையும் போதுதான் அதை விட முடியும். எந்த ஒரு அறிவினால் அனைத்தையும் துறந்து விட்டு செல்கிறீர்களோ அந்த அறிவை யாசிக்கிறாள் மைத்ரேயி. இந்த கேள்வியை பார்க்கும்போது அவள் வேதாந்த உபதேசத்திற்கு தகுதியானவள் என்று உறுதிபடுத்தப்படுகிறது. நம் லட்சியத்திற்கு எது சரியான சாதனம் என்று அறிந்து கொள்ள வேண்டும். அவளது விவேகமும், வைராக்கியமும் அவள் கேட்ட இந்த இரண்டு கேள்விகளில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதே சமயம் அறிவை அடைய வேண்டும் என்ற உறுதியும் அவளிடத்தில் இருப்பதும் தெரிகிறது. இது முமுக்ஷுத்வத்தை குறிக்கிறது.
ஸ்லோகம்:4
யாக்ஞவல்கியர் அவளைப் பார்த்து, “பிரயமானவளே! இதுவரை என்னிடம் பிரியமாகவே இருந்தாய், இப்போதும் எனக்கு பிரியமானதையே கேட்கிறாய். இங்கு வந்து அமர்ந்து கொள். உனக்கு அந்த தத்துவத்தை, உண்மையை விளக்கப் போகின்றேன். என்னுடைய உபதேசத்தை நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.
விசாரம்:
குருவானவர் சிஷ்யனை ஏற்றுக் கொள்ள வேண்டும். வேதாந்தத்தை கேட்கும் போது சிஷ்யன் சிரத்தையோடு கேட்க வேண்டும். குருவும் சிரத்தையோடு கற்றுக் கொடுக்க வேண்டும். இங்கே மைத்ரேயி சிரத்தையுடன் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்டாள். அவரும் அன்புடன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டாள்.
ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-4
பகுதி-4 : மைத்ரேயி ப்4ராமனம் தொடர்ச்சி
ஸ்லோகம்:5
இந்த மந்திரத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கிறது.
- ஆபாஸ சாத்திய தரிசனம் – வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியங்கள் என்று நாம் நினைப்பதெல்லாம் உண்மையில் லட்சியமல்ல என்று எடுத்துக் காட்டுவது
- சாத்திய தரிசனம்: எது நம்முடைய உண்மையான, பரம லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டியது.
- சாத்திய பிராப்தி உபாயம்: அந்த சாத்தியத்தை அடையும் வழியை கூறுதல்
- சாத்தியத்தின் தன்மை – மோட்ச ஸ்வரூபம், சாத்திய ஸ்வரூபம். அதனால் அடையும் பலன்.
ஆபாஸ சாத்திய தரிசனம்
நம்மையறியாமலே நாம் வேண்டாததைதான் உண்மையான லட்சியம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இது பொய்யான லட்சியம் என்று நீக்கி உண்மையான லட்சியமானது விளக்கப்படுகிறது.
நாம் ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்டு செயல்படுகிறோம். நாம் நிச்சயமாக அடைவோம் என்று கருதும் நினைப்பானது லட்சியமாக தோற்றமளிக்கிறது என்று இங்கு விளக்கப்படுகிறது. எல்லோரும் செல்வத்தைத்தான் லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.. பிறகு இன்பம் தரக் கூடியதும், வசதியை தரக்கூடியதுமான பொருளை அடைவதற்கும், செல்வத்தை அடைவதற்கும் செயல்படுகிறோம். இந்த பணத்தை அடைவது லட்சியமாக கொண்டிருப்பதற்கு காரணம், இது எனக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினால்தான். பணம் அதிகம் வந்ததும் உறவினர்களின் அன்பை இழந்து விடுவார்கள். தாம் சேர்த்து வைத்த பணத்தை இவர்களும் அனுபவிப்பார்களே என்ற பொறாமை வந்து விடும். அதனால் அவர்களின் உறவை துண்டித்துக் கொள்வார்கள்.
எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், நாம் எதிர்ப்பார்ப்பது அன்புதான். தன் மீது எப்போதும் அன்பு செலுத்துபவர்கள் இருக்க வேண்டும். தான் அன்பு செலுத்தக்கூடிய மற்றவர்கள் அருகில் இருக்க வேண்டும். பணத்தை சம்பாதிப்பதையே லட்சியமாக கொண்டிருப்பதே நாம் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறாகும். இதனால் எதிர்ப்பார்க்கும் அன்பை இழக்கிறார்கள். அன்பு செலுத்த ஆட்கள் இல்லாமல் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். அன்புதான் லட்சியமாக கொள்ள வேண்டும் ஆனால் பணத்தை லட்சியமாக கொண்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இன்பத்தை பணத்தால் அடையலாம் என்ற நினைப்பை ஒழித்து நம் மீது அன்பு செலுத்தி, நாம் அன்பு செலுத்தக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் வேண்டும் என்ற லட்சியத்தை உடையவர்களாக இருப்பவர்களுக்குத்தான் யாக்ஞவல்கியரின் உபதேசம் ஆரம்பமாகிறது. ஆனாலும் இது நம்மை ஒரு நிலைவரைதான் பக்குவப்படுத்தும்.
இந்த அன்பு என்ற உணர்விலும், ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இதுவும் லட்சியமாக கொள்ளக் கூடாது. நாம் நேசிக்கும் எந்த உயிரும் அநித்தியமானதுதான், நாமும் நித்தியமானவர்கள் இல்லை. நாம் செலுத்தும் அன்பும் சில நிபந்தனைகளோடுதான் இருக்கிறது. நல்ல குணம், நமக்கு நெருங்கியவர்கள் போன்ற நிபந்தனைகளோடுதான் நாம் அன்பு செலுத்திக் கொண்டிருப்போம். இந்த அன்பும் நிலையற்றது, முடிவுள்ளது இறுதியில் துயரத்தைக் கொடுக்கும், எனவே இதுவும் ஆபாஸ சாத்தியமாக இருக்கிறது, சாதனமாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் உண்மையான சாத்தியம் கிடையாது.
இந்த உண்மையை புரிந்து கொண்டால், அந்த அன்பில் நமக்கு வைராக்கியம் ஏற்படும். அதாவது அதைச் சார்ந்து இல்லாதவனாக இருப்போம். அன்புக்கு அடிமையாக மாட்டோம். ஆகவே நாம் கொடுக்கும் அன்பானாது, வாங்கும் அன்பானது முழுமையானதாக இருக்காது, அப்படி இருக்கவும் முடியாது. இந்த அறிவினுடைய பலனால் இந்த அன்பானது நமது சாத்தியமாக இருக்க முடியாது என்று அடையும் அறிவுதான்.
உண்மையில் யாரும் யாரையும், எதையும் முழுமையாக நேசிக்க முடியாது. நாம் யாரையாவது நேசிக்கிறோமென்றால் அவர்களிடமிருந்து நாம் அனுபவிக்கும் அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு போன்றவைகளால்தான். இவைகள் கிடைக்கவில்லை என்றால் நாம் அவரை நேசிக்க மாட்டோம். ஆகவே நாம் நமக்காகத்தான் பிறரை நேசிக்கிறோம். நம்முடைய நட்பில், உறவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவதால்தான் அவர்களும் நம்மை நேசிக்கிறார்கள். யாரும் யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது. இந்த அறிவினால்தான் நமக்கு வருவது வைராக்கியமல்ல. நான் யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது, அதே மாதிரி மற்றவர்களாலும் என்னை நிபந்தனையின்றி நேசிக்க முடியாது என்ற அறிவைத்தான் நாம் அடைய முடியும். இந்த வைராக்கியத்தின் விளைவு அனாத்மாவிலிருந்து நிவிருத்தியாகும். அனாத்மாவிலிருந்து கிடைக்கும் சிறிய இன்பங்களைத்தான் அடைகிறோம். முழுமையான இன்பத்தை அடைவதில்லை இதுவே நம்முடைய லட்சியமாக, சாத்தியமாக இருக்க வேண்டும். எனவே ஆத்மாதான் நாம் அடைய வேண்டிய முடிவான சாத்தியமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
விசாரம்: [யாரும் நம்மை நேசிக்க முடியாது; நாமும் யாரையும் நேசிக்க முடியாது.]
- எது என்னுடைய விருப்பத்திற்குப்பட்டதோ அதுதான் என் லட்சியமாக இருக்கும். உதாரணம்: உணவு.
- எதை நாம் உண்மையிலே விரும்புகிறோம்? நாம் விரும்புவது ஆனந்தம், சுகம். இதை இரண்டும் சேர்த்து பார்த்தால் ஆனந்தத்தை அடைவதுதான் நம் லட்சியமாக, சாத்தியமாகிறது.
- இந்த ஆனந்தம் எங்கேயிருக்கிறது? அது இருக்குமிடம் ஆத்மா. அதுதான் ஆனந்த ஸ்வரூபம், நாமே ஆனந்த ஸ்வரூபம்.
- இப்போது நான்தான் அதாவது ஆத்மாதான் சாத்தியமாகிறது.
நான் என்னைத்தான் நேசிக்கிறேன். இது எல்லோரிடத்திலும் இயற்கையாக இருக்கிறது மற்றதெல்லாம் காலத்தால் என்னால் நேசிக்கப்படுகிறது. எல்லா மனிதர்களும் விதிவிலக்கில்லாமல் தன்னைத்தான் நேசிக்கிறார்கள். இது சாமான்யமாக, இயற்கையாக, நிபந்தனையற்றதாக இருக்கிறது. நான் என்னைத்தான் விரும்புகிறேன் எனவே நானும் ஆனந்தமும் ஒன்றேதான். அதாவது நான் ஆனந்த ஸ்வரூபம் நான் என்பது என்னுள்ளே இருக்கும் ஆத்மாதான்.
சில சமயங்களில் தன் மீது வெறுப்பும் வருகிறது, சிலர் தாங்க முடியாத துயரத்தால் புத்தியின் தவறான முடிவால் துயரத்திலிருந்தோ, அவமானத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள். அதுபோல நம் மீதுள்ள வெறுப்பானது நம் மீதுள்ள பற்றைத்தான் நிலை நாட்டுகிறது. நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்வதும் நம் மீதுள்ள அதீத பற்றுதான் காரணம்.
நாம் உண்மையில் இன்பம் தரும் பொருட்களை விரும்புவதில்லை, அது கொடுக்கும் இன்பத்தைத்தான் விரும்புகிறோம், அதுவே நமது சாத்தியமாக இருக்கிறது.
மந்திர விளக்கம்:
பர்த்யூ காமாய: கணவனின் பொருட்டு, கணவனின் விருப்பத்திற்குரியவளாக இருப்பதில்லை. தனக்கு பயன் தருவதாக இருப்பதால் கணவன் விருப்பத்துக்குரியவனாகிறான். கணவன் மனைவிக்காக அவளை விரும்புவதில்லை. தனக்கு இன்பம் தருவதால் மனைவி விருப்பத்திற்குரியவளாக இருக்கிறாள். அதேபோல நம்முடைய குழந்தைகளையும், சொத்துக்களையும், நற்பண்புகளுடைய சான்றோர்களையும், நாட்டை ஆள்பவர்களையும், அழகிய இடங்களையும், நாட்டையும், வழிபடும் தேவர்களையும், மற்ற உயிர்களையும், மற்ற அனைத்தும் நாம் விரும்பும் நோக்கம், அவைகளிடத்திலிருந்து அடையும் இன்பத்திற்காகவும், பயனுக்காகவும்தான். பலன் இல்லையென்றால் அவைகளே நமக்கு துயரத்தைக் கொடுப்பதாக இருக்கும். இதிலிருந்து நமது சாத்தியம் அனாத்மா அல்ல என்று நன்கு விளங்குகிறது.
ஆத்மாதான் நாம் அடையத்தக்கது,
த்ருஷ்டவ்ய – பார்க்கபடவேண்டியது;
அபரோக்ஷா ஏதவ்யஹ – ஆத்மாவை அனுபவப்பூர்வமாக அறியப்பட வேண்டும்.
அதை ஒரு பொருளாக இல்லாமல் அறிய வேண்டும். நானே ஆத்மா என்று அறிய வேண்டும். ஆத்மாதான் நாம் அறிவதற்கு யோக்தையான ஒன்று. இதுதான் நாம் அடைய வேண்டிய உண்மையான சாத்தியம் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த சாத்தியத்தை அடைவதற்கு ஸ்ரோத்ரம் (கேட்டல்), மந்தம் (மனனம்), நிதித்யாஸனம் (சிந்தித்தல்) ஆகியவைகள் சாதனங்களாக சொல்லப்பட்டு இருக்கின்றது.
आत्मनस्य श्रोतव्यो– சிரவணம்
ஆத்மாவை கேட்க வேண்டும் என்றால் அதை அடையும் அறிவை உபதேசிக்கின்ற வேதாந்தத்தை குருமுகமாக கேட்டறிய வேண்டும். உன்னுடைய முகத்தைப் பார் என்றால், முகத்தை நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்பார். அவர் முகத்தை பார்ப்பதற்கு நிலைக்கண்ணாடி என்ற கருவி தேவைப்படுவதைப் போல ஆத்மாவை அறிய வேதாந்தத்தை குருமுகமாக கேட்டறிய வேண்டும். ஆத்மாவை அடைதல் பரமானந்தத்தை அடைந்ததைப் போன்றதாகும். இதுவே நம் லட்சியமாக இருக்க வேண்டும். மகாவாக்கியத்தை புரிந்துக் கொள்ளும் வரை வேதாந்தத்தை கேட்க வேண்டும். இதனால் அடையும் பலனான அபரோக்ஷ ஞானம் (தெளிவான ஞானம்) கிடைத்து விடும்.
आत्मनस्य मन्तव्यो – மனனம்
வேதாந்தத்தை கேட்ட பின்னர் அதை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கு இரண்டு தடைகள் (பிரதிபந்தம்) உண்டு. அவைகள் சந்தேகம் (சம்ஷயம்), தப்பாக புரிந்து கொள்ளுதல் (விபர்யயம்) என்று கூறுவர். அடைந்த அறிவில் சந்தேகம் வந்தால் அது அறிவுக்குரிய தகுதியை இழந்து விடும். இந்த சந்தேகத்தை யுக்தியை பயன்படுத்தி நம்முடைய அறிவை பிரதானமாக வைத்து உபநிஷத்தின் உதவியைக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். சந்தேகம் வரக் காரணம் நம்முடைய அனுபவமேயாகும். நாம் அனுபவிக்கும் இன்ப-துன்பங்கள் அனாத்மாவுக்குத்தானேயன்றி ஆத்மாவுக்கல்ல என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்ற மதத்தின் கருத்துக்களால் அடையும் சந்தேகங்களையும் நீக்கி நம்முடைய அறிவே சரியானது என்று உறுதியக இருக்க வேண்டும்.
आत्मनस्य निदिध्यासितव्यॊ – நிதித்யாஸனம்
நாம் அடைந்த அறிவில் நிலையாக நிற்க முடியாத நிலை ஏற்படும். இந்த அறிவே சுபாவமாக வேண்டும். இதற்கு நிதித்யாஸனம் செய்ய வேண்டும். அதாவது அடைந்த அறிவிலே நிலையாக நிற்க பழக வேண்டும். இந்த ஞானத்தின் பலனானது பயம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற தீய குணங்களெல்லாம் நீங்கி புதியதாக ஞானத்தை அடைந்ததைப் போல் உணர்வோம். அடைந்த ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு நம்மிடையே உள்ள தீய எண்ணங்களையெல்லாம் நீக்கிட வேண்டும்.
விசாரம்: तव्य – வேண்டும்
ஞான காண்டத்தில் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது. ஆனால் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருப்பதை சொல்லியபடி செய்ய வேண்டும். விதி வாக்கியங்கள் பொதுவாக கிடையாது. அப்படியிருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இது அறியப்பட வேண்டியதை அழுத்தம் கொடுத்து சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
आत्मा द्रुष्टव्य : இது விதி வாக்கியம் என்று சொல்ல முடியாது. இங்கு செயல்படு என்று ஆணையிடவில்லை. ஆத்மாதன் உனது லட்சியம், அறியப்படவேண்டியது என்று சொல்வது விதி வாக்கியமாகாது. கர்ம விவகாரம் என்பது வேறு, ஞான விவகாரம் என்பது வேறு. ஞான விவகாரத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே கிடையாது. கர்மம் என்று வந்துவிட்டால் கர்த்தாவுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புண்டு. விதி எங்கே பிரயோகிக்க முடியுமென்றால், எந்த இடத்தில் நமக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லையோ அந்த இடத்தில் பிரயோகிக்கலாம். எனவே ஞான காண்டத்தில் திருஷ்டவ்யா என்ற சொல் விதி வாக்கியம் இல்லை, விதி சாயா என்று கூறலாம். ஞானத்தால் அடையும் பலன் அறியாமை விலகல் (அவித்யா நிவிருத்தி). இந்த ஒரே ஒரு பலன்தான் அடைய முடியும். கர்ம காண்டத்தில் விளையும் பலனில் வேற்றுமைகள் (தாரதம்யம்) இருக்கலாம். அதை செய்பவனின் திறமையை பொறுத்து பலனின் அளவும் இருக்கும்.
கேள்வி : உபநிஷத் ஆத்மாவை அறிவதற்கு சில சாதனங்களை கூறுகின்றது அவைகள் விதி வாக்கியமாக தோன்றுகிறதே?
பதில்: பசியெடுக்கும் குழந்தை உணவு கேட்டால் அப்போது சாப்பிடு என்ற கட்டளையிட அவசியமில்லை. அது போல மோட்சமடைய வேண்டும் என்ற ஆவலுடன் வருபவர்களுக்கு சாதனங்களை சொல்வது கட்டளையாகாது.
பூர்வ மீமாம்ஸிகளின் மூன்று விதமான விதி வாக்கியங்கள்:-
அபூர்வ விதி: நமக்கு தெரியாத ஒன்றை கட்டளையிட்டு சொல்வது. வேறெதிலும் சொல்லாதது. இந்த வாக்கியங்களை வேறெந்த வழியாகவும் அறிந்து கொள்ள முடியாது உதாரணமாக யாகத்துக்கு பயன்படுத்தும் நெல்லை முதலில் சுத்திகரணம் (ப்ரோக்ஷனம்) செய்து, தூய்மைபடுத்தி உபயோகிப்பார்கள். இந்த கட்டளை வேறெங்கும் அறிய முடியாது.
நியம விதி: சூழ்நிலைக்கேற்ப ஒரு செயலை பலவிதமாக செய்யலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வாக்கியம் நியம விதி. (உ-ம்) யாகத்திற்கு வைத்திருக்கும் நெல்லிருந்து உமியை பிரித்து அரிசியை எடுக்க வேண்டும். அதை உலக்கைக் கொண்டு இடித்துத்தான் பிரித்தெடுக்க வேண்டும் வேறெந்த முறையிலும் பிரித்தெடுக்கக்கூடாது. இது நியும விதி வாக்கியம்.
பரிஸங்க்யா: ஏகாதசி அன்றைக்கு சாப்பிடக்கூடாது என்ற விதி இருக்கிறது. சில பேருக்கு முழுநாள் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. இந்த நேரத்தில் பழத்தை சாப்பிடலாம். பழத்தை தவிர வேறெதையும் உட்கொள்ளக்கூடாது என்று உரைப்பது இந்த விதி. உண்மை பேசு என்ற வாக்கியம் பொய் பேசாதே என்று உணர்த்துகிறது இதுதான் பரிஸங்க்யா விதி.
சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகள் என்ன விதி?
v இந்த சாதனங்களை பற்றி தெரியாதவர்களுக்கு இது அபூர்வ விதியாக எடுத்துக் கொள்ளலாம்.
v மோட்சத்தையடைய வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர்களுக்கு இந்த சாதனங்களை பற்றி தெரிந்திருக்கலாம். இதைத் தவிர வேறு முறையிலும் அடைய முயற்சி செய்வார்கள். அதனால் இவைகளை நியம விதிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
v பரிஸங்க்யா விதி இதற்கு பொருந்தாது.
आत्मा वा अरे द्र्ष्ट्व्यः श्रोतव्यो, मन्तव्यो, निदिध्यासितव्यो मैत्रेयि वा अरे दर्शनेन श्र्वणेन मत्या विग्ज्नानेनदम सर्वँ विदितम्.
பிரம்ம ஞானத்தின் பலன்:
ஆத்மனஹ தர்ஷணஹ: ஆத்மாவை லட்சியமாக கொண்டு சிரவணம் செய்து முடித்து பிறகு மனனத்தையும், நிதித்யாஸனத்தையும் முடித்து விட்டவுடன் அடையும் ஆத்ம ஞானத்தின் பலன் நம்மால் அனைத்தையும் அறியப்பட்டதாகிறது. இது ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எப்படி களிமண்ணை அறிந்தால் அதிலிருந்து உருவான அனைத்து பொருட்களையும் அறிவது போலாகுமோ அது போல ஆத்மாவே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால், அதை அறிவது அனைத்தையும் அறிந்ததற்கு சமமாகின்றது. ஆத்ம ஞானம் அடைவது என்பது ஆத்மாவை அடைந்ததற்கு சமமாகும். ஆத்ம ஞானம் என்பது ஏற்கனவே அடைந்த ஒன்றை பற்றிய அறிவுதான்.
ஸ்லோகம்:6
இது சிரவண பயிற்சியாக இருக்கிறது. சிரவணம் என்றால் உபநிஷத் எந்த கருத்தை நிச்சயப்படுத்தி சொல்கிறதோ அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். பேத த்ருஷ்டி நிந்தனை, அத்வைதத்தினுடைய ஸித்தி. இந்த மந்திரத்தின் சாரம் ஆத்மாதான் அனைத்துமாக இருத்தல். இந்த கருத்து எதிர்மறையாக இங்கு விளக்கப்படுகிறது.
எதை நாம் நமக்கு வேறாக பார்க்கிறோமோ அது நம்மை ஒதுக்கி விடுவதற்கு சமமாகிறது. பிராமணர்கள் எனக்கு வேறானவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள். சத்திரியர்கள் எனக்கு வேறானவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள். இதன் மூலம் அறிவது எதையும் எனக்கு வேறானது என்று நினைத்தால் அவைகளால் நாம் நீக்கப்படுவோம். இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது பார்க்கும் பொருட்கள் அனைத்தும் நானாக இருக்கிறேன் என்ற மனநிலைய அடைய வேண்டும். இதுவே மோட்சமாகும்.
மந்திர விளக்கம்:
யார் தனக்கு வேறாக பிராமணனை நினைக்கிறானோ அவனை பிராமணன் நீக்கி விடுகிறான். யார் தனக்கு வேறாக சத்திரியனை நினைக்கிறானோ அவனை சத்திரியன் நீக்கி விடுகிறான். இந்த உலகத்தை நீக்கினால், உலகம் நம்மை நீக்கி விடும். தேவர்களை வேறாக நினைத்தால் அவர்கள் நம்மை நீக்கி விடுகிறார்கள், மற்ற உயிர்களை வேறாக நினைத்தால் அவைகள் நம்மை நீக்கி விடும், மற்ற அனைத்தையும் நீக்கினால், நாம் அவைகளால் நீக்கப்படுவோம். இதிலிருந்து அறிவது பிராமணர்கள், சத்திரியர்கள், தேவர்கள், மற்ற அனைத்து உயிரினங்கள் இவையனைத்திலும் ஆத்மாவே இருக்கின்றது. ஆத்மாவே இவைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த உலகமே நான் என்ற விசாரம்
ஆத்மா-ஜகத் இவற்றின் ஐக்கியத்தைப் பற்றிய விசாரம்:
- விசேஷன-விசேஷ்ய பா4வம் – Adjective & Noun –
(உ-ம்) வீரனான ராமன், வெண்ணிற ஆடை
இந்த வாக்கியத்திலுள்ள இரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிக்கிறது. ஆனால் ராமன் எப்படிபட்டவன் என்று விவரிக்கிறது. இந்த உலகம் ஆத்மாவுக்கு அங்கமாக இருக்கலாம் என்ற கருத்து தவறானது. ஆத்மா சைதன்ய ஸ்வரூபம், அனாத்மா மித்யா. ஆகவே இரண்டும் ஒன்று சேர முடியாது. நமது லட்சியமான ஆத்மாவை அடைதல் என்பது தேவையில்லாததாகிவிடும். ஏனெனில் அதை அடைந்தாலும் உலகமும், சம்சாரமும் அங்கும் இருக்கும். த்வைதம் இருக்கும் வரை நிறைவின்மை இருக்கும், துயரமும் இருக்கும்.
- உபாஸனை ஸாமானதி கரண்யம்:
(உ-ம்) மனோ பிரம்மம் – மனதை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். சிவலிங்கத்தை கல் என்று தெரிந்தே ஈஸ்வரனை தியானித்து வணங்குகிறோம். இதையே உபாஸனம் என்று கூறுவர். அதே மாதிரி இந்த உலகத்தை ஆத்மாவென்று தியானிக்க வேண்டும் என்று கருத்துப்பற்றி விசாரம். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. இங்கு நாம் பேசிக் கொண்டிருப்பது ஆத்மாவை பற்றிய அறிவை அடைவது பற்றியதாகும். ஞான பிரகணமாக இருப்பதால் இது உபாஸனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உபாஸனை மூலம் மனம் ஒருமுகப்படும், சித்தஸுத்திதான் அடைய முடியுமே தவிர ஞானத்தை அடையமுடியாது.
- கௌனம்: மாணவனை சிங்கம் என்று ஆசிரியர் புகழ்கிறார். இதில் இரண்டு சொற்களையும் ஐக்கியபடுத்தப்பட்டிருக்கிறது. சிங்கத்தினுடைய கம்பீர குணம் இவனிடத்தில் இருக்கிறது என்று சொல்ல விரும்புகின்ற வாக்கியம் இது. ஆத்மாவுக்கும், அனாத்மாவுக்கும் உள்ள குணங்கள் வெவ்வேறானவை. எனவே இரண்டையும் ஐக்கியபடுத்த முடியாது.
- ஸ்துதௌ சாமானாதி கரணம்:
நீ இந்திரன் போன்று இருக்கிறாய் என்ற வாக்கியத்தில் உள்ளது போல ஒருவனை புகழ வேண்டுமென்பதற்காக அவனை வேறொரு உயர்ந்த ஒருவனோடு சேர்த்து சொல்லுவது போல ஆத்மாவோடு உலகத்தை சேர்த்து பேசுவது இவ்வகையில் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
இவ்வாறு பொருட்கொள்வது ஆத்மாவையே நிந்தனை செய்வது போன்றது. நித்யமான ஒரு வஸ்துவுடன் அநித்தியமான வஸ்துவை சேர்த்துப் பார்க்கக்கூடாது.
- உபசார ஸாமாதிகரண்யம்:
”நீ ராஜா” என்று ஒருவரை பார்த்து சொல்லுவது, அவர் நமக்கு நன்மை தரும்படி ஏதாவது உதவி செய்தால் அவ்வாறு கூறுவது மாதிரி இதை எடுத்துக் கொள்ளலாம?
ஆத்மா செய்வதெல்லாம் அனாத்மா செய்வதில்லை எனவே இதுவும் தவறு.
- ஐக்கிய படுத்துதல் – ஆத்மாவும், அனாத்மாவும் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லாமே/
அப்படியும் சொல்ல முடியாது, ஏனெனில் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடையது.
- பாதாய ஸாமானாதி கரண்யம்:
ஒருவன் பொழுது சாயும் நேரத்தில் வழிகாட்டி மரத்தை திருடன் நிற்பதாக நினைக்கிறான். இன்னொருவன் நீ பார்ப்பது திருடன் அல்ல, வழிகாட்டி மரம் என்று சொன்னதும், திருடன் நீக்கப்பட்டு வழிகாட்டி மரம் மட்டும் அப்படியே இருக்கிறது. அது போல உலகத்திலுள்ள அனைத்தும்(இதம் ஸர்வம்) நித்ய வஸ்து(அயம் ஆத்மா) என்று சொல்லும்போது திருடன் என்று நினைத்த எண்ணம் அகற்றப்படுவது போல இந்த உலகம் இருக்கிறது என்ற எண்ணமானது நீக்கப்படுகிறது. எது ஸத்தாவாகவும் இல்லை, அஸத்தாகவும் இல்லை என்றிருக்கிறதோ அதற்கு மித்யா என்று பெயர். இதைத்தான் நீக்க முடியும். நாம-ரூப ஸ்வரூபமாக இருப்பது உலகம். ஸத்தானது சித்தாக இருக்கின்ற ஆத்மா. இப்படி பிரித்துவிட வேண்டும். கம்பம் இல்லையென்றால் திருடன் தோன்ற மாட்டான். ஆத்மாவை சார்ந்துதான் இந்த உலகம் இருக்கிறது.
- ஆத்ம ஞானத்தால்தான் எல்லா உயிரினங்களையும் நேசிக்க முடியும். ஏனென்றால் நாம் நம்மைத்தான் நேசிக்கிறோம். நாம் என்பது அனைத்துமாகிவிட்டால் இது தெளிவாகும்.
- இந்த மந்திரத்தின் மூலமாக சம்சாரம் எது என்னவென்று மறைமுகமாக விளக்கப்படுகிறது. நம்மை எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரும் என்னை நிராகரிக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறோம். அனாத்மாவில் இது கிடைக்காது. ஆனால் ஆத்மாவில் இதை அடைய முடியும். இந்த நினைப்பை ஆத்மா ஞானத்தால் நீக்கப்படும்.
- இந்த ஜகத் மித்யா என்று நன்றாக விளக்கப்படுகிறது
- ஆத்ம ஞானத்தை அடைவதன் பலன் எல்லாமுமாக நானே இருக்கிறேன்என்பதாகும்.
- அத்வைதம் நிலை நாட்டப்படுகிறது
மனனத்தின் விளக்கம்
ஸ்லோகம்–7, 8, 9 – ஆத்மா ஸ்திதி காரணம்
ஆத்மாதான் உபாதான காரணம் என்று சில உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது. இதன் மூலம்தான் அனைத்தும் வெளிவந்திருக்கிறது. எனவே அனைத்துக்கும் உபாதான காரணமாக இருக்கிறது. ஸர்வாத்மா தரிசனம் அல்லது பாவம் – எல்லாவற்றிலும் நான் என்ற பாவம், ஆத்மா என்ற பாவம்.
எதை கிரகிக்காமல் இதை கிரகிக்க முடியாதோ அதுதான் ஆத்மா. தங்கத்தைப் பார்க்காமல் அதில் செய்யப்பட்ட ஆபரணங்களை பார்க்க முடியாது. எனவே ஆபரணங்களுக்கு தங்கம்தான் ஆத்மா அது போல எல்லா அனாத்மாக்களுக்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மாதான்.
சப்த சாமான்ய ஞானம்: இந்த சப்தம் எந்த இசைக்கருவியிலிருந்து வருகின்றது என்று கண்டு கொள்வது சாமான்ய ஞானம். பிறகு இது இப்படிபட்ட ராகம் என்று கண்டு பிடிப்பது விசேஷ ஞானம். ஒருவனால் வீணையினுடைய சாமான்ய சப்தத்தையே கிரகிக்க முடியாதபோது எப்படி விசேஷ சப்தத்தைப் பற்றி கூற முடியும். இங்கு சாமான்ய சப்தங்கள் எல்லாம் காரணம், விசேஷ சப்தங்களெல்லாம் காரியங்கள். இதன் மூலம் நாம் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருக்கும்போது அதற்கு காரணமாக இருக்கின்ற ஆத்மாவைதான் பார்த்து கொண்டிருக்கின்றோம் என்று விளக்கப்படுகிறது.
மந்திர விளக்கம்:
ஸ்லோகம்–7
அடித்துக் கொண்டிருக்கிற துந்துபியின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது. துந்துபிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.
ஸ்லோகம்–8
ஒலித்துக் கொண்டிருக்கிற சங்கின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது. சங்கிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.
ஸ்லோகம்–9
இசைக்கப்பட்டு கொண்டிருக்கிற வீணையின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது. வீணையிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும் போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.
மேலே கூறப்பட்ட உதாரணத்தின் மூலம் நமக்கு தெரிந்து கொள்வது, நாம் எல்லா நேரத்திலும் ஆத்மாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மாவின் ஸ்வரூபம் – ஸத் ஸ்வரூபம். எவையெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறோமோ அங்கேயெல்லாம் ஆத்மா இருக்கிறது என்று அர்த்தம். மனனம் என்பது சிரவணத்தில் கேட்டதை தர்க்க மூலம் சிந்தித்து தெளிவாக புரிந்து கொள்ளுதலாகும், சந்தேகமின்றி திடமாக புரிந்து கொள்ளுதலாகும்
ஆத்மா உபாதான காரணமென்றால் நாம் ஆத்மாவைத்தானே பார்க்க வேண்டும். அதன் ஸ்வரூபம் ஸத் ஸ்வரூபம், எல்லா பொருட்களும் இருத்தல் என்பதை அனுபவித்தாக வேண்டும். அது இருக்கிறது என்றுதான் எல்லாவற்றையும் அனுபவத்தில் உணர்கிறோம். இந்த இருத்தல்தான் ஆத்மா. இதை கிரகிக்க முடிந்தால்தான், விசேஷத்தை புரிந்து கொள்வோம். இருத்தலை உறுதி செய்தபின்தான் அதன் விசேஷ குணங்களை அறிய முடியும். இந்த இருத்தல்தான் ஆத்மா, இந்த இருத்தலை கவனிக்காமல் நாம-ரூபத்தில் கவனம் சென்று விடுகின்றது.
மரத்தாலான யானை பொம்மையில், மரத்தின் கவனத்தை விட்டுவிட்டு யானை என்ற உருவத்தைப் பார்க்கிறோம். நாம்-ரூபங்கள் இல்லாமல் இருக்கும் ஆத்மாவை அனுபவிக்க முடியாது, விளக்க முடியாது ஏனென்றால் நாம் அதுவாகத்தான் இருக்கிறோம்.
ஆனந்த ஸ்வரூபம் – இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எந்த பொருளை பார்க்கிறோமோ அதை பற்றிய ஞானம் நம்மிடத்தில் இருக்கிறது. விருத்தியில் (எண்ண அலைகள்) மாறாமல் இருந்துக் கொண்டேயிருக்கிறது. பத்து விருத்திகள் வந்து சென்றாலும், அதற்கு ஆதாரமாக ஞானம் இருப்பதால், வந்து சென்ற எண்ணங்களை திரும்பவும் நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது. சித் ஸ்வரூபத்தை பிரதிபிம்பிப்பது சூட்சும சரீரத்தால்தான் முடியும். ஆத்மா சைதன்ய ஸ்வரூபம் என்பது அந்தக்கரணத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டும். நித்தியமான ஸத்தையும், சித்தையும் அனுபவிக்க முடியாது, காரணம் நாம் அதுவாகவே இருப்பதால்தான். ஆழ்ந்த உறக்கத்தில் அந்தக்கரணம் பிரம்மத்தில் ஒடுங்கி விடுவதால் நித்தியமான ஸத்தையும் அனுபவிக்க முடியாது. ஞான நிஷ்டையில் உள்ள ஞானிகளின் அந்தக்கரணத்தில் பிரதிபிம்பத்தில் காணலாம். இதுவும் பூரணமாக இருக்கும். எப்பொழுதும் ஆத்மாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஞானம் வந்தவுடன் நமக்கு நன்றாக புரிந்து விடும். எல்லாமே ஆத்மாவாகத்தான் இருக்கிறது என்று உணர்ந்து கொள்வோம். அப்படித்தான் நாம் விவகாரம் செய்வோம்.
ஸ்லோகம்–10
எவையெல்லாம் தோன்றியுள்ளதோ அவைகளின் தோற்றத்திற்குக் காரணம் ஆத்மாதான். ஈஸ்வரன் எல்லா பூதங்களையும், பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தார். நாம் பதார்த்தங்களை சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும். வேதம் என்பது அனைத்து பத பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. எனவே வேதத்தின் ஸ்ருஷ்டி என்பது பத ஸ்ருஷ்டி என்று புரிந்து கொள்ளலாம். எப்படி நாம் மூச்சு விடுவதைப்போல் ஈஸ்வரனிடமிருந்து வெளிவந்ததுதான் வேதம். இதுவே சப்த பிரபஞ்சம், அர்த்த பிரபஞ்சம். இதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள். இந்த வேதமானது அநாயசமாக வெளிவந்தது. அவர் தன்னுடைய சங்கல்பத்தினாலே எல்லாவற்றையும் படைத்தார். எனவே இந்த உலகமும் மித்யா. எந்தவித உதவியும் இல்லாமல் இதைச் செய்தார். சுதந்திரமாக படைக்கிறார். நாம் சுவாசிக்கும் போது காற்றை உள்ளே இழுக்கிறோம், வெளியே விடுகிறோம், பிறகு உள்ளே இழுக்கிறோம் என்ற சுழற்சி போல இந்த ஸ்ருஷ்டியானது பகவானிடமிருந்து வருகிறது. பிறகு மீண்டும் அவரிடமே சென்று பிறகு மீண்டும் வெளிவரும். இந்த சுழற்சி இருந்துக் கொண்டேயிருக்கும். வேதம் அநாதியாக இருக்கிறது என்பதும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மந்திர விளக்கம்:
சாரம் – ஈஸ்வரனிடமிருந்து நான்கு வேதங்களும் தோன்றின.
ஆர்த்ர – நனைந்து,
ஏதம் – கட்டை
ஈரமான கட்டையை நெருப்பில் போட்டால் புகை வருவது போல ஈஸ்வரனின் மூச்சுக் காற்றிலிருந்து ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள் தோன்றின.
இதிகாசம் – வேதத்தில் வருகின்ற கதைப்பகுதி
புராணம் – வேதத்தில் உள்ள ஸ்ருஷ்டி விசாரம்
வித்யா – வேதத்தில் சொல்லப்பட்டுள்ள தேவர்களிட்த்தில் உள்ள கலை ஞானங்கள்
உபநிஷத் – ரகசியமான வார்த்தைகளில் உள்ள ஆத்ம விஷயங்கள்
ஸ்லோகம் – வேதத்தில் குறிக்கப்படும் வேறிடத்தில் உள்ள பகுதி
சூத்ராணி – மிக மிக சுருக்கமான விஷயம்
அனுவியாக்யானானி – சூத்ர வாக்கியத்தை விளக்குகின்ற வாக்கியங்கள்
வியாக்யானானி – விருத்தி வாக்கியத்தை விவரித்தல்
அவரிடமிருந்துதான் இவைகள் எல்லாமே மூச்சுக்காற்றுப் போல் வெளிவந்தன.
விசாரம்:
* இருக்கின்ற வேதம்தான் வெளி வந்தது.
* எனவே வேதத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் எல்லாம் ஸ்வ பிரமானம்
* வேதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை வேண்டும். இதன் உபதேசத்தை வேறெங்கும் சரிபார்க்க முடியாது.
* எனக்கு வேறொன்றாக பார்த்தால் அதையெல்லாம் என்னை நீக்கி விடும். வேதத்தை வேறாக நினைத்தால் அது என்னை என்னை நிராகரிக்கும். அப்படியென்றால் வேதமும் மித்யாதான் என்றால் மித்யாதான் என்று சங்கரர் கூறுகிறார். உதாரணமாக நிலைக் கண்ணாடியில் காட்டும் பிம்பம் பொய்யாக இருந்தாலும் அது நம்முடைய உண்மையான முகத்தைத்தான் காட்டுகிறது. அதுபோல் வேதம் மித்யாவாக இருந்து நமக்கு உண்மையை எடுத்துக் காட்டுகிறது.
ஈஸ்வரன் எவ்வாறு லய காரணமாக இருக்கிறார் என்று விளக்கப்படுகிறது.
ஸ்லோகம்–11
ஏகாயனம் – லய, ஸ்தானம் – ஒடுங்குகின்ற இடம்.
எவ்வாறு ஆறுகள் எல்லாம் கடலை நோக்கி சென்று அதில் கலந்து விடுகின்றனவோ அதுபோல ஆழ்ந்த உறக்கத்தில் எல்லா வேற்றுமைகளும் இழந்து ஒன்று சேருகின்றன. இந்த பிரபஞ்சமானது 12விதமாக பிரிக்கப்பட்டுள்ளது அவைகள் ஐந்து ஞானேந்திரிய விஷயங்கள், ஐந்து கர்மேந்திரிய விஷயங்கள், மனதினால் கிரகிக்கப்படும் விஷயங்கள், புத்தியினால் கிரகிக்கப்படும் விஷயங்கள். லயமானது கிரமமாகத்தான் நடைபெறும் ஆனால் இங்கு வேறுவிதமாக விளக்கப்படுகிறது. விசேஷங்கள் சாமான்யத்தில் ஒடுங்குதல், விதவிதமான சப்தங்கள் பொதுவான (சாமான்ய) சப்தத்தில் ஒடுங்குகின்றன. விசேஷமான நீர் சாமான்யமான நீரில் ஒடுங்கும். இந்த சாமான்யத்தை சங்கல்பத்தில் ஒடுக்குதல். ஒருவர் பேச்சை சாமான்யமாக மாற்றுதல், பிறகு சங்கல்பத்தில் ஒடுக்க வேண்டும். அதாவது மனதை அந்த பேச்சிலிருந்து எடுத்து விட வேண்டும். பிறகு சங்கல்பத்தை காரணத்தில் ஒடுக்க வேண்டும். மனித உடல் சாமான்யமாக பார்த்தால் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகும் பிறகு சூட்சும பூதங்களாக மாறுகிறது அதன் பிறகு காரண ஸ்வரூபத்திற்கு சென்று விடுகிறது.
இந்த மந்திரத்தில் சொல்லப்பட்ட கருத்து: விசேஷங்கள் சாமான்யத்திற்கு சென்று விடுகிறது.
மந்திர விளக்கம்:
விதவிதமான குணங்களை உடைய நீர் நிலைகளில் இருக்கும் நீர் கடலில் ஒன்று சேர்ந்து விசேஷ தன்மைகளை இழந்து ஒன்றாகி விடுகிறது. விதவிதமான வேற்றுமைகளுடன் வெளியே இருந்து வரும் விஷயங்கள் நமக்குள் வரும் போது ஒன்றாகி விடுகிறது என்று உணர வேண்டும். விதவிதமான உணர்ச்சிகளை தொடுவதன் மூலம் உணர்கிறோம். இந்த எல்லா உணர்ச்சிகளும் தொடுதல் என்ற சாமான்ய ஞானத்தில் ஒடுக்க வேண்டும். இதேப்போன்று மூக்கின் வழியே செல்லும் விசேஷ வாசனைகளும் சாமான்ய வாசனைக்கு ஒடுங்க வேண்டும். விசேஷமான காட்சிகள், சாமான்ய காட்சிகளாகவும் ஒடுங்க வேண்டும். இவ்வாறு ஞானேந்திரியங்களின் விசேஷமான விஷயங்கள் அதன் சாமான்யத்-துடனும், கர்மேந்திரியங்களின் விசேஷமான விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும். மனம், புத்தியால் கிரகிக்கப்படும் விசேஷ விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும்
ஸ்லோகம்–12
இந்த மந்திரத்தில் சிதாபாசம் என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கப்படுகிறது.
இங்கு விதேஹ முக்தியின் லயத்தைப் பற்றி பேசப்படுகிறது. நைமித்திக பிரளயம், ஸ்வாபாவிக பிரளயம், ஆத்யந்திக பிரளயம் என்று மூன்று விதமான பிரளயங்கள் உண்டு.
நைமித்திக பிரளயம்: ஈஸ்வரன் இந்த உலகத்தை படைத்து பிறகு அதை தன்னுள் ஒடுக்கிக் கொள்வது
ஸ்வாபாவிக பிரளயம்: இதை பிராக்ருதிக பிரளயம் என்றும் அழைக்கப்படும். கரணங்கள் எல்லாம் காரணத்தில் ஒடுங்குதல், நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தில் இந்திரியங்களெல்லாம் காரணத்தில் ஒடுங்கி இருத்தல்
ஆத்யந்திக பிரளயம்: முழுமையான பிரளயம். விதேஹ முக்தியடைந்தவர்களுக்கு வருகின்ற பிரளயம். இப்படி ஒடுங்கினால் திரும்பவும் வருவதில்லை. ஜீவன் அடையும் விதேஹ முக்தி இந்த வகையை சார்ந்தது.
ஆத்மா, சைதன்யம் உப்பு நீருக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டால், இந்த நீரானது சூடாக்கும் போது நீர் ஆவியாகி, உப்புகட்டி மட்டும் தங்கி விடும். உப்பானது நீரோடு கலந்து இருக்கும் போது வேற்றுமைகள் எதுவும் இன்றி இருக்கின்றது ஆனால் அதுவே தனியாக இருக்கும்போது வேற்றுமைகள் வந்து விடுகின்றது. இதில் வெப்பம்தான் உபாதி என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல வேற்றுமைகளற்ற ஆத்மாவில் சூட்சும சரீரம் வந்தவுடன் சைதன்யத்தின் பிரதிபிம்பம் வந்து விடுகிறது. இதுவே சிதாபாசம் என்று கூறப்படுகிறது. எப்படி உப்புகட்டியை மீண்டும் நீரில் போட்டால் அது கரைந்து வேற்றுமைகளெல்லாம் நீங்கி ஒரே தன்மையாகி விடுகின்றதோ அது போல இந்த சரீரம் அழிந்ததும் சிதாபாசமும் இல்லாமல் போய் விடுகிறது.
கடல்நீர் ஆத்மாவுக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. இந்த கடல் நீரை சூடுபடுத்தினால் உப்புகட்டி உருவாகும். அதுவே சிதாபாசமாகும். கடல் நீரில் உள்ள உப்பில் எந்த வேற்றுமையும் இல்லை ஆனால் உப்பானது வெவ்வேறு குணங்களைக் கொண்டுள்ளது. உப்பு கட்டியை திரும்பவும் கடல் நீரில் போட்டால் அது கரைந்து விடுகிறது நீரோடு ஐக்கியமாகி விடுகிறது. அது போல இந்த ஸ்தூல உடம்பு அழிந்து விட்டால் பிரம்மத்தில் கலந்து விடுகிறது. சரீரத்தின் உபாதியும் உஷ்ணம்தான், எப்படி உஷ்ணமானது கடல்நீரை உப்புக்கட்டியாக்கியதோ அது போல நமது உபாதியான உஷ்ணமும் உண்மையான சைதன்யத்தை பொய்யான சிதாபாசனாக தோற்றுவிக்கிறது. உபாதி நாசத்தை அடைந்ததும் ஜீவன் பிரம்மத்துடன் கலந்து விடுகிறது.
மந்திர விளக்கம்:
ஆத்ம சைதன்யம் உபாதியால் பிரதிபிம்பமாக இருப்பதால் அதற்கொன்றும் குறை கிடையாது. எனவே எவ்வளவு சிதாபாசங்கள் தோன்றி அழிந்தாலும் அதனால் சுத்த சைதன்யத்திற்கு எந்த குறையும் ஏற்படாது.
அனந்தம் – காரணமற்றது; அபாரம் – காரியமற்றது (ரஹிதம்)
நமது முகம் நிலை கண்ணாடியில் முழுவதுமாக பிரதிபலிக்கும், இதனிடமிருந்து எதுவும் வெளிவரவில்லை, இந்த பிரதிபிம்பம் அழிந்தாலும் நம் முகத்திற்கு எந்த குறையும் ஏற்படாது. சைதன்யத்திற்கு இணையாக ஒன்றும் வெளிவரவில்லை.
விக்ஞான கணம் – சுத்த சைதன்யம். கணம் – கலப்படமற்றது.
இந்த ஸ்தூல, சூட்சும காரணங்களினால் சிதாபாசம் தோன்றி பிறகு அந்தகரணங்களுடன் சேர்ந்து அழிவடைகிறது.
ந ப்ரேத்ய ஸம்ஞா அஸ்தி – ஞானியின் ஸ்தூல, சூட்சும சரீரம் அழிவடைந்ததும் சிதாபாசம் இருப்பதில்லை. ஸ்தூல சரீரம் பஞ்ச பூதங்களுடன் சேர்ந்து விடுகிறது. சூட்சும சரீரம் அந்தந்த தன்மாத்திரைகளுடன் கலந்து விடுகிறது. சிதாபாஸமும் மறைந்து விடுகிறது.
ஸ்லோகம்–13
மைத்ரேயின் சந்தேகம்: சைதன்யத்தின் நித்தியத்தையும், அதன் அழிவையும் சொல்கிறீர்கள்.
அத்ர ஏவ : இந்த விஷயத்தில் (சைதன்ய விஷயத்தில்)
மா அமுமுஹத் – நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்
ந பிரேத்ய சம்ஞா அஸ்தி – இறந்த பிறகும் சைதன்யம் இல்லை என்று கூறுகிறீர்களா?
ந மோஹம் பிரேவி – நான் உன்னை குழப்பவில்லை
அலம் வா அரே இதம் விக்ஞாதாய – நான் உபதேசித்ததை சரியாக புரிந்து கொண்டால் போதும்.
ஸ்லோகம்–14
இதில் இரண்டு அவஸ்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகள் அவித்யா அவஸ்தை, வித்யா அவஸ்தை.
அவித்யா அவஸ்தை – அறியாமையுடன் வாழ்ந்து வருதல்
வித்யா அவஸ்தை – அறிவுடன், ஆத்ம ஞானத்துடன் வாழ்ந்து வருதல்.
அவித்யா (அக்ஞான) அவஸ்தையில் நாம் அனுபவிப்பது த்வைதம். இந்நிலையில் எல்லாம் சத்யமாக தோன்றும். அதே மனதில் அத்வைத ஞானம் வந்தவுடன் அந்த நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு விளக்கப்படுகிறது. முதல் த்வைதம் கர்த்தா-கர்மம் ஆகும். அதாவது நான் கர்த்தா, எனக்கு ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும். அதை செய்வதற்கு கருவி தேவை. அதனை பயன்படுத்தி கர்மம் செய்து கொண்டிருக்கிறான் இந்த ஜீவன்.
அவித்யா அவஸ்தையில் சம்சாரியாக வாழ்கிறோம். நம்மை சரியாக அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பது. இந்த மந்திரத்தில் குறிக்கப்பட்ட த்வைதம் நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உலகமேதான். சிதாபாசம், சூட்சும சரீரம், அஹங்காரம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதுவே கர்த்தா என்று அழைக்கப்படுகிறது. கர்த்தா அனுபவிக்கிற விஷயம் இந்த உலகம்தான் அதுவே அனுபவிக்கப்படுகின்ற பொருளாக இருக்கிறது. இது உண்மையா என்று விசாரம் செய்ய வேண்டும். இந்த த்வைதமே உண்மையில்லை என்று அறிய வேண்டும். நான் கர்த்தாவாகி விஷயங்களை அனுபவிக்கும் போது நாமே அனுபவிக்கப்படும் பொருளாக மாறுகிறேன். இந்த த்வைதம் சத்யமாகவும் இருக்கிறது. நம்மிடத்தில் உள்ள கருவிகளை உபயோகித்து கிரியைகளை உற்பத்தி செய்கிறோம். இந்த கருவிகளை “காரகம்” என்ற அழைப்பர். கிரியையால் விளைவது பலன். அதை அனுபவித்துக் கொண்டிருப்பது சம்சாரம். நமக்கு அவித்யா இருப்பதால் இந்த உலகத்தில் த்வைதத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்களை செய்துக்கொண்டு சுக-துக்கங்களை அனுபவிக்கிறோம்.
மந்திர விளக்கம்:
அவித்யா அவஸ்தை:
அவித்யா அவஸ்தையில் இருமையானது வந்து விடுகிறது. அந்த சமயத்தில் கர்த்தா அறிபவன், செயல்படுபவன் என்ற எண்ணத்தோடு இருந்து கொண்டு இந்திரியங்களை கருவியாக பயன்படுத்தி வாசனையை நுகர்கின்றான்., பார்த்துக் கொண்டிருக்கின்றான், கேட்டுக் கொண்டிருக்கின்றான், பேசிக் கொண்டிருக்கின்றான், சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். இதுதான் அவித்யாவின் அவஸ்தை. இங்கு சிதாபாசம் என்ற ஒன்று இருப்பதனால் சம்சாரியாக இருந்து கொண்டிருக்கிறான்.
வித்யா அவஸ்தை:
அஸ்ய – இவனுக்கு (ஞானிக்கு)
ஸர்வம் – அனைத்தும்
ஆத்மா ஏவ அபு4த் – ஆத்மாவாகவே ஆகி விட்டாதோ
இந்த நிலையில் இவனிடத்தில் அனைத்தும் நான் என்று மாறும் போது சம்சாரம் என்பதே கிடையாது. இந்த நிலையில் நாம் அனுபவிக்கும் வேண்டியது ஒன்றுமேயில்லை. இந்த நிலையில் எல்லாமே நானாக மாறி விட்டதால். கர்த்தா, கரணம், கிரியை, பலன் எதுவுமே இருக்காது.
தத்ர யஸ்ய – எந்த அவஸ்தையில் எல்லாமே நானாக, ஆத்மாவாகி விட்டால்
தத3 கேன கம் பஶ்யத்2 – எந்த கருவியைக் கொண்டு எதை கேட்பான், எதை பார்ப்பான், நுகர்வான், பேசுவான், சிந்திப்பான் இவ்வாறு எதையுமே அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும்.
விசாரம்-1 (மைத்ரேயின் கேள்விக்கு பதில்:
வித்யா அவஸ்தையில், விதேஹ முக்தியின் போது சிதாபாசம் அழிந்து போகிறது. ஞானியின் மரணத்தின் போது ஸ்தூல, சூட்சும சரீரங்கள் சேர்ந்து அழிகிறது. சூட்சும சரீரத்தில் உள்ள சிதாபாசமும் இல்லாமல் போய் விடும். இந்த சிதாபாசனைத்தான் ஜீவன் என்று அழைக்கிறோம். த்வைத அவஸ்தையில் சிதாபாசத்துடன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். வித்யா அவஸ்தையில் சிதாபாசம் நாசமடைவதால் சம்சாரமும் நாசமடைந்து பூரணமாகி விடுவான்.
விசாரம்-2
எல்லாமும் ஆத்மாவாகி விட்டால் ஒருவன் எதைத்தான் பார்ப்பான், கேட்பான் என்ற கருத்தில். ஜீவன் முக்தனுக்கு இந்த நிலை எப்படி இருக்கும். ஒன்றை தவறாக இரு வகையில் பார்ப்போம். அவைகள் ஸோபாதிக பிரமா, நிருபாதிக பிரமா.
நிருபாதிக பிரமா – தோன்றிக் கொண்டிருக்கும் காட்சியானது அது பொய் என்ற அறிவு வந்ததும் மறைந்து விடும். கயிற்றில் தோன்றும் பாம்பு இதற்கு உதாரணம்.
ஸோபாதிக பிரமா – தோன்றுகின்ற காட்சி வெறும் தோற்றம் என்ற அறிவு வந்தாலும் அது தெரிந்து கொண்டேயிருக்கும். கானல் நீர் போல, இது பொய்யான தோற்றம் என்ற அறிவு இருக்கிறது ஆனால் காட்சியளித்துக் கொண்டிருக்கும்.
நமக்கு வரும் துயரங்கள் எல்லாம் நாம் உண்மையென்று ஒன்றை நினைக்கும் போதுதான் துயரத்தை அனுபவிப்போம். மித்யா என்ற அறிவில் இருக்கும்போது எதுவும் நமக்கு துயரத்தைக் கொடுக்காது, சம்சாரத்தைக் கொடுக்காது. வித்யா அவஸ்தையில் ஸோபாதிக பிரமையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நித்ய சைதன்யத்தை பற்றி விளக்கம்:
நித்ய சைதன்யத்தால் ஒருவன் அனைத்தையும் அறிந்துக் கொண்டிருக்கிறான் ஆனால் அதை எதன் மூலமும் அறிய முடியாது. எனவே இது அறியப்படாதது.
ஸர்வம் ஆத்மா ஏவ அபூ4தி – எல்லாமே ஆத்மாவாகி விடுகிறது. அதாவது அனாத்மாக்கள் எல்லாம் ஆத்மாவில் ஒடுங்கி விடுகிறது.
தம் கேன விஜானீயாத் – எல்லாவற்றையும் அறிந்துக் கொண்டிருக்கும் சைதன்யத்தை யாரறிவான் என்றால் யாரும் அறிய முடியாது என்பதுதான் பதில்.
விக்ஞானாதாரம் – சாட்சி சைதன்யம்
கேன விஜானீயாத் – யாரறிய முடியும்?
ஆத்மாவை குரு முகமாகத்தான் உபதேசம் பெற வேண்டும். அவ்வாறு கேட்டதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் கேட்டவற்றில் எழும் சந்தேகங்களை போக்கி சரியாக புரிந்து கொள்ள முடியும். அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயத்படுத்தி அதன் மூலம் ஞான நிஷ்டை அடைவதினால் அதன் பலனை அடைந்ததாகும் இந்த பலனானது நாம் அனைத்தையும் அடைந்து விட்டதாகி விடும் இனி அடைவதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிறைவை அடைவோம். இதுதான் ஜீவன் முக்தி நிலையாகும்.
————————————————————————————————————————————————————-
பகுதி-5 : மது ப்4ராமனம் – ( प्राप्तम – அடைவது)
————————————————————————————————————————————————————-
முகவுரை:
- ஜகத் மித்யா என்ற விளக்கம்
- ஸர்வாத்மா பாவம் – எல்லா உயிர்களிடத்திலும் நம்மையே பார்த்தல், அதாவது எல்லா உயிர்களிடத்திலும் நான் என்கின்ற அபிமானத்தோடு இருத்தல்
- சத்ய வஸ்துவாக இருக்கிற பிரம்மன் அத்வைதம் (இரண்டற்றது)
- மகாவாக்கியம் – அயம் ஆத்ம பிரம்ம
சங்கரருடைய பொது அறிமுக விசாரம்
கர்ம நிரபே4ஷம் – கர்மத்தை சாராத சாதனம்.
பிரம்மத்தை, மோட்சத்தை, அம்ருதத்துவத்தை அடைய உதவும் சாதனத்தைத்தான் மைத்ரேயி ப்4ராமனத்தில் (பகுதி-4) விளக்கப்பட்டது. முக்கியமாக சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் முக்கியத்வம் விளக்கப்படுகிறது. இந்த ஞானத்திற்கும் சந்நியாசத்திற்கும் சம்பந்தம் உண்டு. சந்நியாசம் வெறும் ஆசிரமத்தை மட்டும் குறிப்பிடவில்லை, காலத்தை நம் கையில் எடுத்துக் கொள்வதற்கும், ஆத்ம விசாரத்திற்கு பயன்படுத்துவதற்கும், ஞானத்தை அடைய உதவும் சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஆகியவற்றை நாம் மேற்கொள்வதற்கும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. கர்ம நிரபேக்ஷம்தான் ஆத்ம ஞானம் அதன் மூலம்தான் மோட்சத்தை நேரிடையாக அடைய முடியும்.
ஆத்மஞானம் ஏன் அடைய வேண்டும்?
உண்மையில் நாம் இதை அடையத்தான் ஆசைப்படுகிறோம். பார்க்கும் போது அனுபவத்தில் நாம் அடைய விரும்பும் சம்சார விஷயங்கள் எல்லாம் மாறக்கூடியது. ஆத்மா ஞானம் மூலம் ஆத்மாவை அடையலாம்(பிராப்தி). அதற்காக எந்த செயலின் துணை இல்லாமல் நேரிடையாக அடைந்திடலாம். ஆத்மாவை அடைதல் என்பதும் ஆத்மாவை அறிதல் என்பதும் ஒன்றுதான். இது அனைத்தையும் அடைதல் என்றும் குறிப்பிடலாம்.
மனனம்
- சுய அறிவை உபயோகித்து தர்க்க மூலம் கேட்டதை நன்றாக, உறுதியாக புரிந்து கொள்ளுதல். ஆத்மாவின் சத்யத்தையும், ஜகத் மித்யா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜகத் மித்யா என்பதை ஏதாவது ஒரு ஹேதுவை கொடுத்து நிரூபிக்க வேண்டும். இந்த பிராமனத்தில் புதிய ஹேதுவை (காரணத்தை) சொல்லி ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது. எனவே மது பிராமனத்தை மனனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்,
- முடிவுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம், மைத்ரேயி பிராமனத்தில் எல்லாம் புரிந்து விட்டால் நிகமனமாக எடுத்துக் கொள்ளலாம். பக்ஷம் என்பதற்கு பொருள் எந்த இடத்தில் ஒரு சாத்தியத்தை சொல்லி நிரூப்பது. இங்கே ஜகத் பக்ஷம்; இதில் மித்யா என்பது சாத்தியம். எல்லா அனுமானங்களின் மூலம் இந்த சாத்தியம் நீக்கப்படவில்லை என்று மீண்டும் கூறுதல்
- நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்
விசாரம் – ஜகத் மித்யா
ஜகத் மித்யா என்பதற்கு என்ன ஹேது உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் எது பரஸ்பர உபகாரிய உபகாரகமாக இருக்கிறதோ அது மித்யா என்பதாகும்.
பரஸ்பரம் – ஒன்றையொன்று;
உபகாரியம் – உதவியை வாங்குபவர்;
உபகாரகம்– உதவி செய்பவர்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது என்பது இருவரும் இரண்டு நிலைகளாக இருக்கிறார்கள். இந்நிலை வேறொன்றை சார்ந்திருக்க வேண்டும் அல்லது மித்யாவாக இருக்க வேண்டும்.
தைஜஸனை சார்ந்துதான் ஸ்வப்ன பதார்த்தங்கள் இருக்கின்றது அதே போன்று கனவில் வரும் பொருட்கள் இல்லையென்றால் தைஜஸனாக இருக்க மாட்டான். எனவே இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே மித்யா.
தைஜஸனும், கனவில் காணும் உலகமும் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது.
விழிப்பு நிலை பிரபஞ்சம் விஸ்வனை சார்ந்திருக்கிறது. விஸ்வன் ஜாக்ரத் பிரபஞ்சத்தை அனுபவிக்கும் பிரமாதாவாக இருக்கிறான். ஒரே மனிதனுக்கு விதவிதமான குணங்கள் இருக்கிறது. உதாரணமாக தந்தை, மகன், சகோதரன், என்ற பெயர்கள். தான் பிதாவாக இருக்க தனக்கு குழந்தை பிறந்திருக்க வேண்டும், அதேப்போன்று தந்தையாக தன் பிள்ளைக்கு உதவி செய்கிறார். இந்த உதாரணத்தில் பிதா, மகன் சம்பந்தம் உபகாரிய, உபகாரமாக இருப்பதால் இருவருமே மித்யாத்வத்தை அடைகிறார்கள். பிதாவாக இருந்து செய்ய வேண்டிய கர்மங்கள், மகனாக இருந்து செய்ய வேண்டிய கர்மங்கள் இவைகளிலிருந்து துயரங்கள் நம்மை வந்து அடைகிறது. நம்மைச் சார்ந்திருக்கும் உறவுகளை நீக்கிவிட்டு நம் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மனிதன் என்ற நிலையில் பார்த்தால், இந்த உறவுகளிலிருந்து வரும் துயரத்திலிருந்து விடுபட்டு விடுவோம். இப்படி எல்லா சம்பந்தத்தையும் நீக்கிவிட்டால் வெறும் அறிபவன் என்ற முடிவுக்குத்தான் வருவோம்.
பிரமாதா என்று சொல்வதற்கு விஷயமான பிரமேயமே காரணமாகும் ஒரு பொருளானது அறிபவனுக்கு விஷயமாக இருந்தால்தான் அது பிரமேயமாகும். என்னால்தான் அறியப்படும் பொருளுக்கு பிரமேயம் என்று சொல்வதற்கு தகுதியாகிறது. எனவே பிரமாதாவும் பிரமேயமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே மித்யா. நான் மற்றவர்களின் உடலையும் மனதையும் அனுபவிக்கிறென் அது போல மற்றவர்களும் என்னை அனுபவிப்பதால், நான் பிரமேயமாகவும் இருக்கிறேன். ஆனால் உண்மையில் நான் பிரமாதவும் அல்ல, பிரமேயமும் அல்ல. இதிலிருந்து அறிந்துக் கொள்வது அனுபவிப்பனும், அனுபவிக்கப்படும் பொருளும் மித்யாவாகிறது. இப்பொழுது நான் இந்த இரண்டுக்கும் ஆதாரமாக இருக்கிறேன். இப்படி புரிந்துக் கொண்டால் ஜகத் மித்யாவாகி விடும். பிரம்மனாகிய நான் ஸத்யமாகி விடுவேன், இந்த உலகமே உபகாரியமாக, உபகாரமாக இருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஜாக்ரத் பிரபஞ்சம் இவ்விதமாக நிஷேதம் செய்யப்படுகிறது
மது என்ற சொல் பல பொருளைக் குறிக்கும் அவைகள் காரியம், கர்மபலம், போக்யம் (அனுபவிக்கபடுவது) ஜீவர்கள் எல்லாம் அனுபவிப்பவர்கள், ஜகத்தானது அனுபவிக்கப்படுவது அதாவது போக்யமாக இருக்கிறது. இது ஜீவனுக்கு மதுவாகிறது. உதாரணமாக நான் கர்மம் செய்வதற்கு உதவி செய்கிறேன், கர்மம்தான் என்னுடைய பிறப்பு-இறப்புக்கு காரணமாகிறது. அனைத்து ஸ்ருஷ்டிகளும் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
- எல்லா ஜீவர்கள் ஸர்வ பூதானி
- அதிபூதம் ஜடப்பிரபஞ்சம் (சூரியன்)
- அதிதெய்வம் தேவதைகள் (ஆதித்ய தேவன்)
- அத்யாத்மம் வியஷ்டி கரணம் (கண் போன்ற இந்திரியங்கள்)
- உபகாரகம் உதவி செய்பவர்
- உபகாரியம் உதவியை பெறுபவர்
முதலில் ஜீவர்களையும், அதிபூதத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஜீவர்களையும், அதிதெய்வத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது. கடைசியில் ஜீவர்களையும் வியஷ்டி கரணத்தை எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது
மந்திர விசாரம்:
ப்ருத்வி – இது மது; இந்த உலமானது போக்யமாக இருக்கிறது. இது ஜீவர்களுக்கு அனுபவிக்கப்படும் பொருளாக, மதுவாக இருக்கிறது. ஜீவர்கள் – போக்தா, உலகம் –போக்யம் பூமியானது – போக்தா; உலகம் – போக்யம்
அதிதெய்வம் – தேவதைகள், மது; ஜீவர்கள் – போக்தா
ஜீவர்கள் – மது; தேவதைகள் – போக்தா
ஜீவர்கள் – போக்தா; வியஷ்டி கரணம் – அதியாத்மம் – மது
ஜீவர்கள் – மது; வியஷ்டி கரணம் – போக்தா
உதாரணம்: நான் கண்ணை அனுபவிக்கிறேன், காதை அனுபவிக்கிறேன். அதே மாதிரி கண்ணும், காதும் என்னை (ஜீவனை) அனுபவிக்கிறது, கண் காட்டும் பாதையில் நான் செல்கிறேன்.
விஸ்வன் + தைஜஸன் + பிராக்ஞன் = ஜீவன்
மேலேயுள்ள சம்பந்தத்திலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், இவை நான்கும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது ஆகவே இவை நான்கும் மித்யா. மேலும் இவை நான்கும் எதை சார்ந்திருக்கிறதோ அதுதான் பிரம்மம், ஆத்மா.
ஸ்லோகம்–1
இயம் ப்ருதி2வீ – இந்த பூமியானது
ஸர்வேஷாம் பூ4தானாம் மது4 – எல்லா உயிரினங்களுக்கும் மதுவாக இருக்கிறது
அஸ்யை ப்ருதி2வ்யை ஸர்வானி பூ4தானி மது4 – எல்லா உயிரினங்களும் ப்ருதிவிக்கு மதுவாக இருக்கிறது.
எந்த ஒரு தேவன் இந்த பூமிக்குள் சைதன்ய ஸ்வரூபமாக (தேஜோமய), நீண்ட நாள் வாழக்கூடியவனாக (அம்ருதமய) இருக்கிறானோ அவன் எல்லா ஜீவராசிகளுக்கும் மதுவாக இருக்கின்றான். அதே மாதிரி எல்லா ஜீவராசிகளும் இந்த தேவனுக்கு மதுவாக இருக்கின்றன. ஸ்தூல சரீரத்திலுள்ள பிருத்வியை மட்டும் அனுபவிப்பவன் ஜீவனுக்கு மதுவாக இருக்கின்றான், அதே மாதிரி ஜீவன் மதுவாக இருக்கின்றான் இந்த ஸ்தூல சரீரத்திற்கு. அத்யாத்மம் சரீரம் – வியஷ்டி சரீர தத்துவத்தை மட்டும் அனுபவிக்கின்றவன்.
அயம் ஏவ ஸ: – இந்த பிரபஞ்சமே ஆத்மா à இந்த உலகம் ஆத்மாவைத்தான் சார்ந்திருக்கிறது, அதனிடமிருந்து வெளிப்பட்டு காட்சியளிக்கிறது
ய: அயம் ஆத்மா – எந்த நிர்குணம் மைத்ரேயி பிராமனத்தில் கூறப்பட்டுள்ளதோ, அவைகளுக்கு அதிஷ்டானமாக, ஆதாரமாக இருப்பது ஆத்மா.
இத3ம் அம்ருதம் – ஆத்ம ஞானம் அம்ருதத்வ சாதனமாக இருக்கிறது. இந்த ஆத்ம ஞானம்தான் அம்ருதத்வ நிலையை அடைவதற்கு சாதனம்.
இதம் ப்3ரஹ்மம் – அதிஷ்டான தத்துவம் பிரம்மமாக இருக்கின்றது. இந்த ஸ்ருஷ்டிக்கு அதிஷ்டானமாக இருக்கின்றது.
இத3ம் ஸர்வம்– பிரம்ம ஞானம் அனைத்துமாக மாறுவதற்கு சாதனமாக இருக்கிறது.
ஸ்லோகம் ஒன்றிலிருந்து பதினான்கு வரை ஒரே கருத்தை வெவ்வேறு தத்துவங்களை உபயோகித்து விளக்கபட்டிருக்கிறது.
இதில் ஜீவன் அனைத்தும் (விராட்+ஹிரண்யகர்ப்பன்) அனுபவிக்கின்றான். அதே மாதிரி அனைத்தும் ஜீவனை அனுபவிக்கின்றன.
அயம் ஆத்மா ஸர்வேஷாம் ஆத்மானாம் மது4: – விராட்+ஹிரண்யகர்ப்பன் – ஸ்தூல, சூட்சும தத்துவங்கள் ஜீவர்களுக்கு மதுவாக இருக்கின்றது.
ஸ்லோகம்–15
ஸர்வாத்ம பா4வம் – எல்லாமும் நானாக இருக்கின்றேன் என்ற அறிவு.
அனாத்மாவில் அபிமானம் ஏற்பட்டால், நாம் அதுவாகவே மாறி விடுகிறோம். பார்க்கும் போது பார்ப்பவன் என்றும், கேட்கும்போது கேட்பவன் என்றும் இருக்கிறோம். ஞானியானவன் எதில் நான் என்ற அபிமானத்தை பிரம்மத்தில்தான் வைத்திருக்கிறான். எனவே அவனை பிரம்மன் என்றுதானே கூற வேண்டும். அஹம் பிரம்ம அஸ்மி என்ற ஞானத்துடன் இருக்கும் போது அவன் பிரம்மமாகவே இருக்கிறான். எனவே பிரம்மத்தினுடைய லட்சணங்கள் எல்லாம் ஞானியின் லட்சணமாகி விடுகிறது. இந்த மந்திரத்தில் இதுதான் விளக்கப்படுகிறது.
மந்திர விளக்கம்:
ஸஹ – அந்த ஞானி
அயம் ஆத்மா – நான் ஆத்மாவாக இருக்கிறேன்
ஸர்வேஷாம் பூ4தானாம் அதி4பதி – எல்லா ஜீவராசிகளுக்கும் அதிபதியாக இருக்கின்றேன்
ஸர்வேஷாம் பூ4தானாம் ராஜா– எல்லா ஜீவராசிகளுக்கும் ராஜாவாக இருக்கின்றேன்
தத்3யதா3 – எவ்விதம்
ரத2னாபா4ம் – ரதத்திலுள்ள சக்கரத்தின் மையப்பகுதியையும்
ரத2னேமௌ – அதன் வெளிசுற்றிலுள்ள வளையத்தையும்
ச ஆரா – வண்டி சக்கர கம்பிகளால் இந்த இணைக்கப்பட்டிருக்கிறதோ
ஸர்வே ஸ்மர்பிதா – எல்லாம் என்னைச் சுற்றி சார்ந்திருக்கிறது
ஏவம் ஏவ அஸ்மின் ஆத்மனி – இந்த ஞானியிடத்தில்
ஸர்வானி பூ4தானி – எல்லா உலகங்களும் ஞானியை சார்ந்திருக்கின்றன.
ஸ்லோகம்–16
மது வித்யாவின் ஸ்துதி கூறப்படுகிறது.
விசாரம்:
தத்யங்க் ஆதர்வன என்ற ரிஷியானவர் இந்த மது வித்யாவை உபதேசித்தவர் ஆவார். சிஷ்யர்களாக இருப்பவர்கள் அஸ்வினி குமாரர்கள் இவர்கள் சொர்க்கலோக வைத்தியர்கள். வேறொரு ரிஷி இந்த மது வித்யாவை நான் அறிவேன், அதை நான் மற்றவர்களுக்கு உபதேசிக்க போகிறேன் என்று கூறுகிறார்.
சங்கரரின் விளக்கம்:-
- இந்திரனால் காப்பாற்றப்பட்டது இந்த வித்யா. இதை தகுதியானவர்களுக்குத்தான் உபதேசிக்கப்பட வேண்டும் என்று ஆவலால்தான் இந்திரன் இதை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் தகுதியற்றவர்களால் இது விபரீதமாக புரிந்து கொண்டு மேலும் துயரத்திற்குள்ளாவார்கள்.
- மிக கஷ்டப்பட்டுத்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்.
- கர்ம நிரபேக்ஷா வித்யா– இந்த ஞானம் அடைவதற்கு பொருள் எதுவும் தேவையில்லை வைராக்யம், முமுக்ஷூத்வம் வைத்துத்தான் அடைய வேண்டும்.
- ஆத்ம ரதி ஹேது வித்யா– இது நம்மிடத்திலேயே நம்மை திருப்தியுடன் இருக்க வைக்கிறது. எவ்வளவு சுகமான சூழ்நிலையாலும் ஒருவன் திருப்தியடைய மாட்டான். தன்னிடத்திலே சுகம் காண்பதுதான் நம்மை திருப்தியுடன் இருக்க வைக்கும். இது ஞானத்தின் ஒன்றினால்தான் முடியும்.
மந்திர விளக்கம்:
இத3ம் வை தன்மது4 – இந்த மது வித்யா
த3த்4யங் ஆத2ர்வண: அஶ்வின்ப்4யாம் – தத்யங் அதர்வன ரிஷியானவர், அஸ்வின் குமாரர்களுக்கு உபதேசித்தார்
ததே3தத்3 ரிஷி பஶ்யன் அவோசத் – இதையறிந்த ஒரு ரிஷி, இந்த வித்யாவை மற்றவர்களுக்கு சொல்லப்போகிறேன் என்று கூறினார்.
எப்படி மழை மேகங்கள் மழை பெய்யப்போகிறது என்று உணர்த்துகிறதோ அதேபோல உங்களுக்கு சொல்லப்போகிறேன். தத்யங் அதர்வன ரிஷியானவர் மதுவித்யாவை குதிரையின் தலைமூலமாக உபதேசம் செய்தார். அதையும் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
ஸ்லோகம்–17
அஸ்வின் குமாரர்களே நீங்கள் குருவான தத்யங் ரிஷி அவர்களுக்கு குதிரையின் தலையை வைத்து அதன் மூலம் மதுவித்யா உபதேசம் பெற்றீர்கள். இரண்டுவித மதுவித்யாவை உபதேசம் செய்தார். சூரியனை மையமாக வைத்தும் ஒன்றும், ஜகத் சம்பந்தபட்ட மது வித்யா என்ற மற்றொன்றுமாகும்.
ஸ்லோகம்–18
ஈஸ்வரன் எல்லா சரீரங்களையும் தோற்றுவித்தார். இரண்டு கால்கள் உடைய சரீரங்கள், நான்கு கால்களையுடைய சரீரங்கள் படைத்தார். உடலில் நுழைவதற்கு முன்பு சூட்சும சரீரமாக மாறி ஸ்தூல சரீரத்திற்குள் நுழைந்தார். பரமாத்வான அந்த புருஷன் எல்லா சரீரத்திற்குள்ளும் இருப்பதால் அவரு புருஷன் என்று அழைக்கப்படுகிறார். இவரால் வியாபிக்கப்படாதது(அனாவிருதம்) எதுவும் இல்லை.
ஸ்லோகம்–19
இந்த பரமாத்மா எல்லா சரீரங்களுக்கும் நுழைந்து அந்த சரீரமாகவே காட்சியளிக்கிறார். சிதாபாசமாக ஈஸ்வரன் மனதில் பிரதிபிம்பிப்பதால் நம்மால் சைதன்யத்தை, சித்தை புரிந்து கொள்ள உதவுகிறது. ஆத்மாவை அறிவதற்கு சிதாபாஸம் துணை புரிகிறது. பரமாத்மா மாயையின் மூலமாக பலவிதமான ரூபங்களாக காட்சியளித்து கொண்டிருக்கிறார். அந்த பரமாத்விடம் நம்முடைய எண்ணிக்கையற்ற இந்திரியங்கள் எல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த பரமாத்வேதான் இந்திரியங்கள் à இந்திரியங்கள் என்பது கிடையாது அவையெல்லாம் நாம ரூபங்களேதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பிரம்மமானது அபூர்வம், அனந்தம், அனபரம், அபாஹயம் என்பதாக காட்சியளிக்கிறது
அபூர்வம்: காரண ரஹிதம் – காரணமற்றது
அனந்தம்: காரிய ரஹிதம் – இந்த பிரம்மத்திற்கு இணையான வேறொன்று இல்லை
அனபரம்: இதிலிருந்து எதுவும் வரவில்லை
அபாஹயம்: இதற்கு உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது.
அயம் ஆத்மா பிரம்மன் – இந்த ஆத்மாதான் இப்படி சொல்லப்பட்ட பிரம்மம்
ஸர்வானுபூஹி – அனைத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டு இருப்பது
இவையனைத்துமாகவும் இருந்து கொண்டு அனைத்தையும் சாட்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
————————————————————————————————————————————————————-
பகுதி-6: வம்ஸ பிராமனம்
————————————————————————————————————————————————————-
இதில் குரு-சிஷ்ய பரம்பரையினுடைய பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்தப்பெயர்களை பாராயணம் செய்யவும், ஜபம் செய்யவும்
வீத-ராக விஷயம் வா சித்தம் – நாம் பற்றற்று ஞானமடைந்தவர்களை மனதில் தியானித்தால் அவர்களது குணங்கள் நம்மை வந்தடையும். அதனால் சித்தஸுத்தி அடையலாம், மனத்தூய்மையடையலாம்.
வித்யா ஸ்துதியாந்தம் – இந்த வித்யாவின் பெருமையை எடுத்துச் சொல்வது
இவ்வளவு பெரிய மகான்கள் உபதேசித்த கருத்துக்கள் என்ற பெருமை. இந்த ஞான உபதேசக் கருத்துக்கள், வேதாந்த கருத்துக்கள், இறைவனிடமிருந்து பரம்பரையாக வந்தவைகள் என்ற அறிந்து கொள்ளலாம்.
—-0000—-
ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-05
அத்தியாயம்-03
இந்த அத்தியாயம் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. முதல் மூன்று பகுதிகள் உபாஸனையை பற்றி விவரிப்பதால் அதாவது கர்மகாண்டத்தில் உள்ள ஞானத்தை சோதிக்கின்ற மாதிரி இருக்கும். எனவே அதன் சாராம்சத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். இதனால் அடையும் பலன்களாவது:
v தானம் என்ற குணத்தில்தான் சித்தஸுத்தியை அடைய முடியும்
v வித்யா ப்ராப்தி சாதனம்தான் தானம். எதையுமே இலவசமாக பெறக் கூடாது. அறிவை தானம் மூலம்தான் பெற வேண்டும்.
v வித்வத் சம்யோகஹ பிரக்ஞா விருத்தி – கற்றறிந்தவர்கள், ஞானிகள் இவர்களுடன் சேர்ந்திருப்பது அறிவு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
v நம்மையே நாம் அங்கீகரித்தல் – நம் அறிவை நாமே அங்கீகரித்தல்
——————————————————————————————————————————————–
பகுதி-1 : அஸ்வல ப்4ராமனம்
——————————————————————————————————————————————–
ஸ்லோகம்–1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் மிகப்பெரிய யாகத்தை மேற்கொண்டார். இந்த யாகத்தில் குரு, பஞ்சால தேசத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் சாஸ்திரங்களை கற்று அறிந்த வேத விற்பன்னர்கள். ஜனகருடைய மனதில் ஒரு ஆசை எழுந்தது. இங்கு கூடியுள்ள இந்த பிராமணர்களுக்குள் யார் வேதாந்தத்தை நன்குணர்ந்தவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இந்த யாகத்திற்கு ஆயிரம் பசுக்களை கொண்டு வரச் செய்தார், ஒவ்வொரு பசுவின் கொம்பில் ஐந்து தங்க நாணயங்களை கட்டி வைத்திருந்தார்
ஸ்லோகம்–2
பிராமணர்களே உங்களுக்குள் யார் சாஸ்திரங்களை அதிகம் கற்றிருக்கிறீர்களோ, பிரம்ம ஞானத்தில் நிஷ்டையடைந்தவர்களோ அவர்கள் இந்த பசுக்களை அழைத்து செல்லலாம். யாரும் முன்வரவில்லை. பிறகு யாக்ஞவல்கியர் என்பவர் தன் சிஷ்யர்களைப் பார்த்து, “இந்த பசுக்களை ஓட்டிச் செல்லுங்கள்” என்று சத்தமாக கூறினார். அவர்கள் பசுக்களை அழைத்து செல்ல முற்பட்ட போது அங்குள்ள பிராமணர்களுக்கு கோபம் வந்து விட்டது. அவர்கள் யாக்ஞவல்கியரை பார்த்து, நாங்கள் இருக்கும்போது எப்படி நீங்கள்தான் பிரம்மஞான நிஷ்டையை அடைந்தவர்(பிரம்மிஷ்டன்) என்று நினைக்கிறீர்கள் என்று வினவினர். அப்பொழுது ஜனகரின் அரசவையில் அமர்ந்திருந்த அரசவை புரோகிதர் யாக்ஞவல்கியரிடம் வந்து, “நீதான் எங்களுக்குள் பிரமிஷ்டனாக இருக்கிறாயா?” என்று கேட்டார். அவர் அங்கு கூடியிருந்த பிராமணர்களை பார்த்து, “இங்கு அமர்ந்திருக்கும் எல்லா பிரமிஷ்டர்களுக்கு என் நமஸ்காரங்கள், எனக்கு பசுக்கள் தேவை அதனால்தான் நான் எடுத்துச் செல்கிறேன்.” என்று தெரிவித்தார். அப்பொழுது அஸ்வலர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வியைக் கேட்க துணிந்தார்.
ஸ்லோகம் 3 லிருந்து 6 வரை நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது.
கேள்வி: 1
யாகத்தை மேற்கொள்ளும் சாதாரண மனிதர்கள் மரணத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது?
ஸ்வாபாவிக கர்மம் – ராக-துவேஷத்தினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் இரண்டு விதமாக இருக்கும்.
- சாஸ்திரம் அனுமதிக்கும் கர்மங்கள் (சாஸ்திரீய கர்மம்)
- ஸ்வாபாவிக கர்மம் – நம்முடைய விருப்பு-வெறுப்புக்களின் தூண்டுதலால் செய்யப்படுவது.
ஒவ்வொருவரும் ராக-துவேஷத்தின் தூண்டுதலால் செய்கின்ற கர்மத்தின் பிடியில்தான் இருக்கிறோம்.
பதில்: நம் அபிமானம் சமஷ்டியோடு கலந்து விட்டால் இதிலிருந்து விடுபடுவோம். எல்லோருடைய நலமும் என் நலம் என்று நினைப்பதுதான் வியஷ்டியை சமஷ்டியோடு ஐக்கியப்படுத்துதலாகும்.
யாகத்தின்போது ரிக் வேதத்தை சொல்வோம், ஓதுவோர் ஹோதா என்று அழைக்கப்படுவார்.
அதியக்ஞம் – யாகத்தில் உள்ள வியஷ்டி தத்துவம்
அதியாத்மம்– நம்மிடத்தில் உள்ள (எஜமானனிடத்தில் உள்ள ) வியஷ்டி வாக்கு.
அதிதெய்வம் – அக்னி தேவதை – சமஷ்டி
இந்த வியஷ்டிகளை அதிதெய்வமான அக்னிதேவதையான சமஷ்டியுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது நம்முடைய வாக் என்னும் வியஷ்டியை அக்னி சமஷ்டியுடன் ஒன்று சேர்ந்து நம்மை ம்ருத்யுவின் பிடியிலிருந்து விடுவித்து விடும்.
ஸ்லோகம்–3
கேள்வி–2
கால பரிசேதம் ( காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்) இதிலிருந்து எப்படி விடுபடுவது?
- சூரியனால உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
- சந்திரனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
காலத்தினால் நமக்கு ஏற்படுகின்ற விளைவு கண்டு மனம் பாதிக்கப்படுகின்றது. காலத்தினால் வரும் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடுவது?
ஸ்லோகம்–4
அதியக்ஞம் – யஜுர் வேதத்தை உச்சரிக்கின்றவர், ஓதுபவர்
அதியாத்மம் – கண்
அதிதெய்வம் – சூரியன் – ஆதித்ய தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்
ஸ்லோகம்–5
அதியக்ஞம் – உத்கர்த்த, சாம வேதத்தை உச்சரிக்கின்றவர்
அதியாத்மம் – பிராணன்
அதிதெய்வம் – வாயு தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்
ஸ்லோகம்–6
சுவர்க்க லோகத்திற்கு செல்வதற்கு உபாஸனை ஏதாவது உண்டா?
அதியக்ஞம் – அதர்வன வேதத்தை உச்சரிக்கின்றவர், பிரம்மா
அதியாத்மம் – மனம்
இதையிரண்டையும் சந்திரன் தேவதையிடம் ஐக்கியப்படுத்துதல்
ஸ்லோகம்–7
சம்பத் உபாஸனை என்று ஒரு உபாஸனை இருக்கிறது அதை தியானிப்பதால் நிகிருஷ்ட கர்மணி உக்ருஷ்ட கர்ம தரிசனம் அதாவது எளிமையான சிறிய கர்மத்தில் பெரிய கர்மத்தின் பலனை அடைதல். உதாரணமாக சாதரண நீரை கங்கை நீராக நினைத்து குளிப்பது, சாதாரண கல்லில் மேலான தெய்வத்தை பார்த்தல். அதுபோல சாதாரண கர்மத்தை செய்து பெரிய கர்மத்தால் அடையும் பலனை அடைதல்.
யாகங்கள் செய்யும் போது மூன்று இடங்களில் ரிக் வேதம் ஓதப்படும்.
- ஆஹுதிகளை போடுவதற்கு முன் – புரோனுவாக்யா
- ஆஹுதிகளை போடும்போது யாஜ்யா
- ஆஹுதிகளை போட்ட பிறட்கு சஷ்யா
இந்த மூன்று கர்மத்தில் மூன்று விதமான உலகத்தை (பூர், புவ, ஸ்வ) தியானித்தல்.
மூன்று விதமான ஆஹுதிகள் (oblations) போடும்போது, மூன்று நிலைகளாக நெருப்பானது தோன்றும் 1. சுடர்விட்டு எரிவது 2. சப்தத்தை எழுப்புவது 3. கீழே சென்று விடும். இந்த மூன்று நிலைகளின் போது உலகத்தை தியானிக்க வேண்டும்.
சாம வேதத்தை ஓதுபவர் – மேலே கூறியபடி தியானிக்க வேண்டும். பிரம்மா என்கின்ற ரித்விக் – யாகம் சரியாக நடக்கின்றதா என்று மேற்பார்வையிடுபவர். இவர் மனதை அனந்தமான உலகமாக தியானித்தல். நம் மனதில் வரும் எண்ணங்களெல்லாம் ஒரு உலகமாக தியானித்தல்.
——————————————————————————————————————————————–
பகுதி-2 : ஆர்த்தபா4க (आर्तभाग) ப்4ராமனம்
——————————————————————————————————————————————–
கேள்வி–01
மனிதனை பிடித்து வைத்திருப்பது எது?
பதில்–01
இந்த பிரபஞ்சத்தில் எட்டு கிரகங்கள் (நம்மை பிடித்து வைத்திருப்பது), எட்டு அதிகிரகங்கள் (கிரகத்தையே பிடித்து வைத்திருப்பது) உள்ளன. இங்கு கிரகங்கள் என்று கூறுவது நம்முடைய இந்திரியங்களை குறிக்கிறது. அதிகிரகங்கள் என்பது இந்திரியங்களின் விஷயங்களை குறிக்கிறது. நாம் இந்திரியங்களின் வசத்தில் இருக்கிறோம். எனவே இவைகளை கிரகங்கள் என்று கூறுகிறோம். இந்திரியங்கள் அதனுடைய விஷயங்களின் வசத்தில் இருக்கின்றது எனவே இதை அதிகிரகம் என்று கூறுகிறோம். உதாரணமாக சுவையுணரும் நாக்குக்கு நாம் அடிமையாக இருக்கிறோம். ஆனால் நாக்கோ சுவைதரும் பொருட்களின் வசத்தில் இருக்கிறது. எனவேதான் நாம் இந்த அதிகிரகத்தால் சுவையான உணவு பண்டத்தை அதிகமாக உட்கொள்கிறோம். வெளி சூழ்நிலைகள்தான் இந்திரியங்களை தம் வசப்படுத்துகிறது. எனவே நாம் இந்த சூழ்நிலைகளை விட்டுவிலகி ஓடி விட வேண்டும். வெளிசூழ்நிலைகள் நம்முடைய இந்திரியங்களை பாதிக்காமல் இருக்க நல்ல சூழ்நிலைகளை நோக்கி சென்றுவிட வேண்டும்.
கிரகம் |
அதிகிரகம் |
பிராணன்(சுவாசிக்கின்ற பிராணன்) |
வாசனை |
வாக் (பேசுகின்ற சக்தி) |
நாமம், சொற்கள், விஷயங்கள், செய்திகள் |
நாக்கு (சுவையுணரும் சக்தி) |
ரஸஹ – சுவை |
கண்கள் (பார்க்கும் சக்தி) |
ரூபம், உருவம் |
காது (கேட்கும் சக்தி) |
சப்தம் (இனிமையான் சப்தங்கள்) |
மனது |
ஆசை, எண்ணங்கள், சங்கல்பத்தின் வசத்தி இருத்தல் |
கைகள் |
கர்ம, செயல் |
தோல் |
தொட்டு உணரும், இன்பத்தை கொடுக்கும் விஷயங்கள் |
கேள்வி–2
ம்ருத்யுவின் சுபாவம் அனைத்தையும் சாப்பிடுவது, அழிப்பது ஆனால் அந்த ம்ருத்யுவை சாப்பிடும் ம்ருத்யு எது? ம்ருத்யுவுடைய ம்ருத்யு எது?
பதில்-02
அக்னி என்ற ம்ருத்யுவிற்கு தண்ணீர்தான் ம்ருத்யு அதுபோல ஆத்ம ஞானம்தான் ம்ருத்யுவிற்கு ம்ருத்யுவாக இருக்கிறது. மரணம் என்பது ஸ்தூல சரீரத்தை அழித்து விடுகிறது. சூட்சும சரீரத்தை பாதிக்கிறது. நான் என்ற அபிமானம் ஆத்மாவின் வைக்கும்போது மரணம் நம்மை நெருங்குவதில்லை. மரண பயம் ஏற்படுவதில்லை. ஆத்மஞானம் என்ற நீரைக் கொண்டு சம்சாரம் என்ற தீயை அணைத்து விடலாம்.
கேள்வி–3
ஞானி மரணமடைந்தால் அவனது சூட்சும சரீரங்களின் நிலை என்ன?
பதில்–02
ஞானியின் மரணத்திற்கு பிறகு அவனது இந்திரிய சக்திகளெல்லாம் அந்தந்த தேவதைகளோடு கலந்து விடுகின்றது. சூட்சும சரீரமாக எங்கும் செல்வதில்லை. அது அந்தந்த சமஷ்டியுடன் ஐக்கியமாகி விடுகிறது எந்த பயணமும் மேற்கொள்வதில்லை. அவரது ஸ்தூல உடம்பு அழிந்து விடும். அக்ஞானிகளின் ஸ்தூல உடம்பு இவ்வாறுதான் அழியும்.
கேள்வி–04
ஞானி இறந்ததற்கு பிறகு ஏதாவது மீதி இருக்கிறதா?
பதில்–04
அவரது பெயரைத்தான் விட்டுவிட்டு போகமுடியும்.
கேள்வி–05
அக்ஞானிகளுடைய மரணத்திற்கு பிறகு நிலை என்ன?
பதில்–05
இந்திரியங்கள் எல்லாம் சூட்சும சரீரத்தில் ஒடுங்கி பயணம் மேற்கொள்கிறது. அவரவர்களுடைய கர்ம வினைப்படி அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.
——————————————————————————————————————————————–
பகுதி-3: பு4ஜ்ய(भुज्य) ப்4ராமனம்
——————————————————————————————————————————————–
பாரிக்ஷதர்கள் (நல்ல கர்மத்தை செய்தவர்கள்) இறந்த பிறகு எங்கு செல்கிறார்கள். இவர்கள் பிரம்மலோகத்திற்குத்தான் செல்வார்கள், ஹிரண்யகர்ப்பலோகத்திற்கு செல்வார்கள்.
சங்கரர் பாஷ்ய விசாரம் (கர்மபல விசாரம்)
சம்சாரத்தில் அடையும் அதிகபட்ச பலன் பிரம்மலோகத்தை அடைவதுதான். ஞானிகளுக்கு கர்மம் எதுவும் இல்லாததால் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆனால் அக்ஞானிகள் பாவகர்மங்களை செய்திருந்தால் கீழான பிறவியைதான் அடைவார்கள், அதிலிருந்துகொண்டு துயரத்தைத்தான் அனுபவிப்பார்கள். புண்ணிய கர்மங்களான தமம், யாகம், தவம் போன்ற நற்காரியங்களைச் செய்வதனால் வைராக்கியத்தை அடையலாம்.
தர்மத்தால் சுகமும், ஞானமும் கிடைக்கின்றன. புண்ணியத்தின் வழியேதான் மோட்சத்தை அடைய முடியும். புண்ணியத்தால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது அதிக பட்சமாக ஹிரண்யகர்ப்பலோகத்தைத்தான் அடைய முடியும்.
பிரம்மலக்ஷணம் – அவ்யாக்ருதம் (வெளித்தோற்றத்திற்கு வராத), அகாரியம்.
நித்தியமான பிரம்மத்தை கர்மத்தின் மூலமாக அடைய முடியாது. வெளித்தோற்றதிற்கு வந்த ஒன்றில் கர்மம் என்பதை செய்ய முடியும். விதைக்குள் உள்ள மரத்தை ஒன்றும் செய்ய முடியாது. விதையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அதனுடன் விவகாரம் செய்ய முடியும். கர்மமானது ஆத்ம விசாரத்திற்கு தகுதிபடுத்தும், தகுதியடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும். பிறகு அறிவையடைந்து ஞானமடைய வேண்டும் அதற்குப்பிறகு அதில் நிலை பெற்று நிற்க வேண்டும்.
கேள்வி: புண்ணிய கர்மத்தின் மூலமாக மோட்சத்தையடையலாம். பந்தம் என்றால் என்ன? அதற்குக் காரணம் என்ன?
பதில்: பந்தத்திற்கு காரணம் அறியாமைதான். ஒருவேளை அறியாமையில்லையென்றால் என்னவாகும். பூரணமான பிரம்மத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும் பிறகு அதை அடைய வேண்டும். இது சாத்தியமில்லை எனவே அவித்யா ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும் இதை நீக்க வித்யாவை தவிர வேறெந்த சாதனமும் இல்லை. உண்மையில் புருஷார்த்தம் என்பது அவித்யா நீங்கினால் மோட்சம். கயிற்றில் தோன்றிய பாம்பு அவித்யா நீங்கி விட்டால் மறைந்து விடும், அதனால் ஏற்பட்ட பயமும் போய் விடும். கர்மம் அறியாமையை நீக்கும் சாதனம் கிடையாது.
கர்மத்தால் அடையும் பலன்களில் மோட்சம் என்பது கிடையாது.
- கர்மத்தால் உற்பத்தி – ஒரு பொருளை உருவாக்கலாம், பிரம்மன் உருவாக்கப்படுவதில்லை எனவே இந்த முறையில் பிரம்மத்தை அடைய முடியாது.
- ஆப்தி – அடைதல், ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது (காலமும், தேசமும் ). காலத்தால் ஒன்றை அடைவது, பிரம்மம் இப்படி அடைய வேண்டிய விஷயமல்ல. இந்த பிரம்மன் ஆத்மாவாக இருப்பதால் அதை அடைய வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த முறையிலும் ஆத்மாவை அடைய முடியாது.
- விகாரியம் – மாற்றம் – கர்மத்தால் சில மாற்றங்களை கொண்டு வருதல்; பிரம்மத்தை ஒரு மாற்றத்தின் மூலம் அடையலாம் என்ற வழியிலும் அதை அடைய முடியாது. பிரம்மத்திற்கு அவயவங்கள் கிடையாது, அதனால் என்றும் மாறாதது(நிர்விகாரம்). எனவே இந்தப் பாதையிலும் பிரம்மத்தை அடைய முடியாது.
- தூய்மைபடுத்துதல் (ஸம்ஸ்காரியம்) – ஒரு பொருளை தூய்மைப்படுத்துதல் என்பது தீயகுணங்களை நீக்கி நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல். பிரம்மன் என்றும் சுத்தமாக இருப்பதால், எந்த குணங்களும் இல்லாததால் அஸங்கம். இந்த வகையினாலும் பிரம்மத்தை அடைய முடியாது.
இதனால் அறிவது கர்மத்தின் மூலம் மோட்சத்தை அடைய முடியாது. அறியாமையை நீக்குவதன் மூலம்தான் அதை அடைய முடியும்.
கேள்வி : கர்மத்தினுடன் உபாஸனையை சேர்த்துக்கொண்டு நிஷ்காம்யமாக செய்தால் இந்த நான்கு பலன்களை தவிர்த்து வேறு பலன் வரலாம் அல்லவா, அது ஏன் மோட்சமாக இருக்கக் கூடாது
பதில்: உன்னுடைய இந்த கருத்துக்கு எந்தவிதமான பிரமாணமும் இல்லை. இது உன் சொந்த கற்பனை. இது பிரமாண அபாவாத். இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.
பிரத்யக்ஷ பிரமாணம்: கர்மம் செய்தால் அதனுடைய பலன் சாஸ்திரத்தின் மூலம்தான் நாம் அறிகிறோம். நம் அனுபவத்தின் மூலம் இதை நிரூபிக்க முடியாது.
அனுமானம் பிரத்யக்ஷத்தால் நிரூபிக்க முடியாததை அனுமானத்தின் மூலமும் நிரூபிக்க முடியாது.
உன்னுடைய உதாரணத்தின் மூலம் தெரிவது என்னவென்றால் எதை செய்கிறாயோ அதற்குள்ளேயேதான் பலன் வரமுடியும், அதை விட்டு விட்டு வேறொன்று பலனாக வர முடியாது.
கேள்வி : நித்திய கர்மத்திற்கும், நிஷ்காம கர்மத்திற்கும் பலனாக மோட்சத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அர்த்தாபத்தி பிரமாணத்தை உபயோகிக்கலாம். விஷ்வஜித் நியாயமான பலன் சொல்லப்படாத கர்மத்திற்கு சுவர்க்கலோகம் பிராப்தி என்று எடுத்துக் கொள்வதை போல!!
அர்த்தாபத்தி பிரமாணம் – நித்திய கர்மங்களை பலன் சொல்லியிருந்தாலும், சொல்லவில்லையென்றாலும் காம்யமாக செய்யக்கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. இதை உயிரோடு இருக்கும் வரை எல்லோராலும் செய்ய வேண்டும். எனவே மோட்சம் என்பதை பலனாக இதற்கு சொல்லலாம்
பதில் இப்படி பலனை கற்பனை செய்வதால் விஷ்வஜித் நியாயத்தை உன்னை அறியாமல் நீ பயன்படுத்தி இருக்கிறாய்
கேள்வி மோட்சத்தை பலனாக சொல்லவில்லை, மோட்சம் தன்னிடத்திலே இருப்பதுதானே
பதில் முதலில் கர்மத்தின் பலன் என்று சொன்னாய், இப்பொழுது பலன் இல்லை என்று முரண்பட்டு பேசுகிறாய்.
கேள்வி மோட்சத்தை ஞானத்தின் பலன் என்று சொல்வது போல நானும் அதேமாதிரி சொல்கிறேன்.
பதில் ஞானத்தின் பலன் அறியாமை நீங்குதல் என்றுதான் பொருள். வெளிச்சம் இருளை நீக்கி பொருட்களை காட்டிக் கொடுப்பதை போல அறியாமை நீங்கி விட்டால் அதனால் அடைந்த விளைவுகளும் நீங்கி விடும். இதைத்தான் ஞானத்தின் பலன் மோட்சம் ஆனால் கர்மத்தின் பலன் அக்ஞான நிவிருத்தி அல்ல, அறியாமையை நீக்க முடியாது.
கேள்வி கர்மத்திற்கு இரண்டு பலன்கள் உண்டு அவைகள் திருஷ்ட பலன், அதிருஷ்ட பலன். இதில் அதிருஷ்ட பலன் ஏன் அறியாமையை நீக்கி மோட்சத்தை கொடுக்க முடியாது?
பதில் கர்மங்களில் சிலவற்றிற்கு திருஷ்ட பலனோடு முடிந்து விடுகிறது. சில இடங்களில் அதிருஷ்ட பலனை கற்பனை செய்தாக வேண்டும், அந்த இடங்களில் திருஷ்ட பலனை சொல்ல முடியாததாக இருக்கும். மோட்சம் என்பது திருஷ்ட பலன், ஜீவன் முக்தி. எனவே அதிருஷ்ட ப்லன் என்று கற்பனை செய்தது தவறு. நித்திய கர்மங்கள், நிஷ்காம கர்மங்கள் சித்தஸுத்தியைத்தான் தரும். இது நம்மை ஆத்ம விசாரத்திற்கு தகுதிப்படுத்துகிறது அதன் மூலம் ஞானத்தை அடைந்து மோட்சத்தை அடையலாம்.
——————————————————————————————————————————————–
பகுதி-4: உஷஸ்த (उषस्त) பிராமனம்
——————————————————————————————————————————————–
பொருட்கள் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் தூரத்தில் இருக்கின்ற பொருளை குறிப்பது
அபரோக்ஷ ஞானம் அருகில் இருக்கின்ற பொருளை குறிப்பது
பிரம்மன் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் பிரம்மன் ஒன்று இருக்கிறது என்ற அறிவு
அபரோக்ஷ ஞானம் பிரம்மன் நம்மிடத்திலே இருக்கிறது என்ற அறிவு அது ஸ்வயம் பிரகாசமாகவும், தானாக விளங்கி கொண்டிருப்பதாகவும் இருக்கிறது
எனவே ஒரு பொருள் தன் இருத்தலையும், பிரகாசிப்பதையும் பிரமாணத்தை சார்ந்திருக்கிறது. பிரம்மன் மட்டும்தான் பிரமாணம் இல்லாமல் விளங்கிக் கொண்டிருக்கின்றது (ஸ்வயம் பிரகாசம்) நான் அறிவு ஸ்வரூபமாக இருக்கிறேன் என்பதற்கு எந்த பிரமாணமும் வேண்டாம்.
சாக்ஷாத் அபரோக்ஷம்: இது இந்திரியத்திற்கு விஷயமாக வராத ஒரு வஸ்து என்பதை உறுதியிட்டு கூற இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரத்யக்ஷ பிரமாணத்தால் தெரிந்துக் கொண்டிருக்கும் பொருளை அபரோக்ஷம் என்றும் கூறுவர். இந்த அர்த்தத்தில் பிரம்மத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் சாக்ஷாத் அபரோக்ஷம் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது
உஷஸ்தர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வியை கேட்க ஆரம்பித்தார்.
கேள்வி: அனைத்துக்குள்ளும் இருக்கின்ற ஆத்மா அபரோக்ஷமாகவும், நேரிடையாகவும், சாக்ஷாத்காரமாகவும், மிகத்தெளிவாகவும் உள்ள ஸ்வரூபத்தை விளக்குங்கள்.
பதில்– ஏஷ ஆத்மா ஸர்வந்த்ர – இந்த ஆத்மாதான் எல்லா உயிர்களிடத்திலும் உள்ளது. உன்னிடத்திலும் உள்ளது.
கேள்வி – ஸர்வாந்தர ஆத்மாவை மேலும் விளக்குங்கள்?
பதில் – ஆத்மாவின் துணைக் கொண்டு ஜடமான இந்திரியங்கள் அறிவு பெற்று செயல்படுகின்றது. ஆத்மா செயல்படாதது, அறிவு பூர்வமானது. ஜடமான ஒன்று எதனால் சேதனத்தைப் போல செயல்படுகிறதோ அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒன்றினால் ஜடமான பிராணன் சேதனமாக செயல்படுகிறதோ அந்த ஒன்றுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவின் இருப்பால் அனாத்மாக்கள் அறிவை அடைந்து செயல்படுகிறது.
ய: ப்ரணேன ப்ரணித: – எந்த ஒரு ஆத்மா இருப்பதனால் சூட்சும சரீரத்தின் துணைக் கொண்டு பிராணன் செயல்படுகிறதோ அந்த ஒன்றுதான் எல்லோருடைய சரீரத்திற்குள்ளும் இருக்கிறது. இதேமாதிரி அபானன், வியானன், உதானன் இவைகளின் செயல் புரியம் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். உன்னிடத்தில் இருக்கும் இப்படிபட்ட ஆத்மாதான் எல்லோரிடத்தினுள்ளும் இருக்கிறது
ஸ்லோகம்–2
கேள்வி – இது பசு, இது குதிரை என்று எப்படி நேரிடையாக குறிப்பிடுகிறோமோ அப்படி ஆத்மாவைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டும்.
பதில் – द्रुष्दे द्र्ष्टारम – த்ருஷ்டா – மனதில் தோன்றும் எண்ணங்கள், மனோவிருத்தி
த்ருஷ்டே – மனதில் தோன்றும் எண்ணத்தை
த்ரஷ்டா – சாட்சி, த்ரஷ்டாரம் – சாட்சியை
மனதில் எழும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது. உலகத்தை பார்க்கும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது. சப்தத்தை கேட்கும் எண்ணத்தை கேட்கும் சாட்சியை பார்க்க முடியாது. சுவைக்கின்ற சுவையை உணரும் சாட்சியை பார்க்க முடியாது.
விசாரம் (த்ருஷ்டி, த்ரஷ்டா)
த்ருஷ்டி
- கரணம்:மனதிலுள்ள எண்ணம். ஒரு அறிவை அடைய வேண்டுமென்றால் அதை கொடுப்பதற்கு கரணம்(கருவி) தேவை, அதன் உதவியால்தான் நாம் அறிவை அடைய முடியும். இது மாற்றத்திற்குட்பட்டது.
சவிகார விருத்தி: மனதில் தோன்றும் மாற்றத்தை உடைய எண்ணங்கள்
- சைதன்யம்(அறிவு):இது மனதில் எழும் எண்ணங்களை விளக்குகிறது. மாற்றம் எண்ணத்தில்தான் இருக்கும் அறிவில் அல்ல. இது நிர்விகார சைதன்யம்- மாற்றமடையாத அறிவு ஸ்வரூபம்.
த்ரஷ்டா
- பார்ப்பவன்:கர்த்தா, பிரமாதா, போக்தா (பார்த்து, கேட்டு, சுவைத்து) அறிபவன். இந்த நிலையில் சவிகார த்ரஷ்டா, சவிகார பிரமாதா – மாற்றத்தை அடைகின்ற போக்தா
- நிர்விகாரசாக்ஷி – எந்த மாற்றத்தையும் அடையாத சாட்சி.
சாதாரணமாக நாம் மனதைதான் அறிபவன், அனுபவிக்கின்றவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதை அறிவதற்கு எண்ணங்கள்தான் கருவியாக பயன்படுத்துகிறோம். எண்ணங்கள் என்றும் மனதில் தோன்றி மறைவதாக இருக்கின்றது. மனதை எண்ணங்கள் சார்ந்திருக்கிறது. எண்ணங்களை பதிவு செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், எண்ணங்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது போன்ற எல்லாமே மனதை ஆதாரமாக வைத்துத்தான் நடக்கிறது.
த்ருஷ்யம் – உலகம்,
த்ருஷ்டி – எண்ணங்கள்,
த்ரஷ்டா – மனம்.
சாக்ஷி – எந்த மாற்றத்தையும் அடையாமல், மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும் விஷயங்களை பார்த்துக் கொண்டிருப்பவன். சாக்ஷியாக இருப்பவனுக்கும் ஒரு த்ருஷ்டி தேவை. இதற்கு கரணமாக இருப்பது நிர்விகார சைதன்யம், இது மனதையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
|
த்ருஷ்டி |
த்ரஷ்டா |
த்ருஷ்யம் |
அனாத்மா |
எண்ணம் |
மனம் |
ஜகத் |
சாட்சி |
மனம் |
சைதன்யம் |
மனம் |
ஜகத்தை மனம் அறிகிறது, மனதை சாட்சி அறிகிறது. சாட்சி உறங்குவதே கிடையாது. மனதை ஜடமாக அறியாததற்கு காரணம், சாட்சி எப்பொழுதும் மனதை விளக்கிக் கொண்டிருப்பதனால். ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை சாட்சி அறிந்து கொண்டிருப்பதால் நம்மால் விழித்தப்பின் அதை நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது.
சாஸ்திரம் இங்கே இந்த உபதேசத்தின் மூலம் சொல்வது நான் என்பதை சட்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனதை விட்டுவிட வேண்டும். இந்த உலகம் நமக்கு விஷயமாக இருக்காது. அதனால் உலக விஷயங்களில் வரும் துயரங்களும், மாற்றங்களும் நம்மை பாதிக்காது. இதன் மூலம் மனதை பார்க்கப்படும் பொருளாக மாறி விட்டால் துயரமே வராது. எப்படி சம்சார காலத்தில் துயரம் தானாக வருவது போல மோட்ச காலத்தின் மனநிறைவு தானாக வரும் என்றாகி விடும்.
உபதேசம் சாட்சியை யாராலும் விளக்க முடியாது
த்ருஷ்டி மனதில் உள்ள எண்ணங்கள்
த்ரஷ்டா சாட்சி
த்ருஷ்டே உலகத்தை பார்க்கும் எண்ணங்கள்
த்ரஷ்டா இதை பார்க்கும் சாட்சியை யாரும் பார்க்க முடியாது, விளக்க முடியாது
சப்தத்தை கேட்கும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது. சிந்திக்கின்றதால் வரும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது. ஆராய்ந்தறியும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது. அதுதான் உன்னுடைய ஆத்மா. அதைத்தான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளிலும் இதுவேதான் இருக்கிறது.
அத: அன்யத ஆர்தம் – சாட்சியிடமிருந்து, ஆத்மாவிடமிருந்து வேறாக இருக்கின்ற அனைத்தும் (அனாத்மக்களும்) மித்யா, துயரத்தைக் கொடுப்பவைகள்
ஆர்தம் – துயர ஸ்வரூபம், அழிவுக்குட்பட்டது, மித்யா
அன்யத – ஜகத், ஜகத்தை கிரகிக்கும் எண்ணங்கள், மனது
மனமும் அதில் எழும் எண்ணங்களும், எண்ணங்களுக்கு விஷயமாக இருக்கும் இந்த ஜகத் அனைத்தும் மித்யா.
ஸத் – அந்தகரணத்வம்,
அஸத் – மித்யாத்வம்
“புத்தகம் மேசை மேல் இருக்கிறது” என்ற சொல்லும்போது இதில் புத்தகம் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது. நாம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஸத் அதிகரணம். சில பொருட்கள் இல்லாமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. மேசை மீது மலர் இல்லை. அதில் மேசையானது மலரின் இல்லாமைக்கு ஆதாரமாக இருக்கிறது. எந்த ஒன்று ஸத்திற்கும் ( இருத்தலுக்கும்), அஸத்திற்கும் (இல்லாமைக்கும்) ஆதாரமாக இருக்கிறதோ அதுதான் மித்யா.
”கயிற்றில் தோன்றும் பாம்பு” என்ற் சொல்லும்போது இதில் பாம்பு ஸத்தின் ஆதாரமில்லை, ஏனெனில் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. இல்லாமைக்கும் அதிகரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது அனுபவித்திற்கு வருகிறது. இதில் பாம்பானது இருத்தலுக்கு அந்திகரணம் இல்லாமைகும் அந்திகரணம். இதுவேதான் மித்யா.
——————————————————————————————————————————————–
பகுதி-5: கஹோல (कहोल) பிராமனம்
——————————————————————————————————————————————–
இந்தப் பகுதியில் கீழ்கண்ட கருத்துக்கள் விளக்கப்படுகிறது.
- ஆத்மா ஸ்வரூபம் – சம்சாரமற்றது
- இரண்டு சாதனங்கள் – ஞானம், சந்நியாசம் (தியாகம்)
- அனாத்மாக்களில் இருக்கின்ற ஆசைகளின் வேற்றுமைகள்
- சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் விளக்கம்
- ஞானியின் லட்சணம்
- மித்யாத்வம்
சங்கரரின் முகவுரை:
கேள்வி: சென்ற ப்4ராமனத்தில் பேசப்பட்ட ஆத்மா வேறு, இந்த ப்4ராமனத்தில் பேசுகின்ற ஆத்மா வேறு போல தோன்றுகிறதே. இரண்டும் ஒன்று என்றால் மீண்டும் சொல்கிறாய் என்ற தோஷம் இருக்கிறதே. அதனால் இந்த ப்4ராமணத்தில் வேறொன்றுதான் விளக்கப்படுகிறது.
பதில்: சென்ற ப்4ராமனத்தில் விளக்கப்பட்ட ஆத்மாவைத்தான் இந்த ப்4ராமனத்தில் விளக்கப்படுகிறது. ஆத்மாவின் வேறு சில விசேஷங்கள் இங்கு பேசப்படுகின்றது. ஆத்மா சம்சாரமற்றது என்ற புதிய கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல சில சாதனைகள் விளக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி நான் என்ற சொல்தான் சம்சாரியாக இருக்கிறது. ஆனால் இங்கு எப்படி ஒரு வஸ்து சம்சாரியாகவும், அசம்சாரியாகவும் இருக்கும்?
பதில் வெறும் குழப்பத்தால் வந்தது. சம்சாரமே மித்யாதான். எங்கே மித்யா வருகிறதோ அங்கே இரண்டு விஷயங்கள் சம்பவிக்கும். எனவே நான் என்பதில் மித்யாவான சம்சாரமும், சத்யமான ஆத்மாவும் இருக்கலாம்.
மந்திர விளக்கம்: (ஆத்ம ஸ்வரூபம்)
கேள்வி – எந்த ஒன்று சாக்ஷாத் அபரோக்ஷமாக இருக்கின்றதோ, எந்த ஒன்று அனைவருக்குள்ளும் இருக்கின்றதோ அதை விளக்கி சொல்லுங்கள்.
பதில் – உன்னுடைய ஆத்ம ஸ்வரூபம்தான் அனைவரிடத்திலும் இருக்கின்றது.
கேள்வி – இதை மீண்டும் விளக்கி சொல்லுங்கள்.
பதில் – எந்த ஒன்று ஆறு தத்துவங்களான அஸனாய, பிபாஸே, சோகம், மோஹம், ஜராம், ம்ருத்யு என்கின்ற சம்சாரத்தை கடந்து இருக்கின்றதோ, அதுவே ஆத்மாவாக இருக்கின்றது.
அஸனாய – பசி; பிபாஸே-தாகம்; சோகம் – துயரம்; மோஹம் – ஆசை;
ஜரா – வயோதிகம்; ம்ருத்யு – மரணம்.
அஸனாய, பிபாஸ – பிராணமய கோசம் – இதில் உள்ள அபிமானத்தால்தான் துயரத்தை அனுபவிக்கின்றோம்.
சோகம் – மனோமய கோசம்
மோகம் – விக்ஞானமய கோசம்
ஜரா, ம்ருத்யு – அன்னமய கோசம்
ஆனந்தமய கோசமே சம்சாரத்தை மறந்த நிலை. ஆனால் துயரத்தினுடைய விதை இருந்து கொண்டிருக்கும். இவ்வாறு அடைந்த இன்பத்தை திரும்ப திரும்ப அனுபவிக்கும் முயற்சியில் சம்சாரத்தில் நம்மை வீழ்த்தி விடும். இதனால் கோபம், மோகம், என்பதை அனுபவிக்க நேரிடும்.
அஸனாய (பசி), பிபாஸ (தாகம்)
எதுவரை பிராணமய கோசத்தில் அபிமானம் இருக்கிறோமோ அதுவரை பசி தாகம் என்ற துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருப்போம்.
சோகம்: மனதில் இருக்கும் விகாரம். துயத்தைக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசைப்பட்ட பொருளை அடையாவிட்டால் சோகத்தை அடைவோம். சங்கரர் சோகத்தின் விளைவே ஆசை என்று கூறுகிறார்.
ஸித்த அநவஸ்திதி (அரதி) மன சஞ்சலத்தில் இருத்தல், சித்தம் நிறைவில்லாமல் இருத்தல், இதனுடைய விளைவுதான் ஆசை. இங்கு சோகம் என்பதற்கு மன நிறைவின்மையால் வரும் ஆசை என்ற பொருள் கொள்கிறார். மனநிறைவுடன் இருக்கும்போது மனமானது எதற்கும் ஆசைப்படாது.
மோகம்(விபரீதம்): விக்ஞானமய கோசத்தின் மீது உள்ள அபிமானத்தால் வருவது அநித்ய, தூய்மையற்ற, துயரத்தைக் கொடுக்கின்ற விஷயங்களில் அனாத்மாவில் நித்ய, தூய்மையான, சுகமானது என்கின்ற புத்தி மோகம். இது துக்கத்திற்கு காரணமாக இருப்பது.
ஜரா, ம்ருத்யு: ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற மாற்றம். இதிலிருந்து விடுதலை முடியாது. இதிலிருந்து அபிமானத்தை எடுத்து விட்டால் இதனால் பாதிக்கப்பட மாட்டோம்.
ஐந்து கோசத்தையும் தாண்டியது, மூன்று உடலினையும் தாண்டியது ஆத்மா. சம்சாரமானது ஆத்மாவையும் சார்ந்திருக்காது, ஜடமாக இருப்பதால் அனாத்மாவையும் சார்ந்திருக்காது. எனவே இது மித்யா. இப்படிபட்ட மித்யாவான சம்சாரத்தை கடந்து இருப்பது, ஆதாரமாக இருப்பது ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
பிரஸகதி – செய்யும் வாய்ப்பு உள்ள இடத்தில்தான்
பிரதிசேதம் – செய்யாதே என்று சொல்ல முடியும்.
அத்யாஸத்தினால் அனாத்மாவானது ஆத்மாவில் ஏற்றி வைத்து பார்க்கிறோம். எனவே ஆத்மா இவைகளை கடந்து நிற்கிறது என்று சொல்லப்படுகிறது.
ஸ்லோகம்–2 சாதனைகள் (ஞானம், சந்நியாஸம்)
ஏதம் தம் ஆத்மானம் விதி3த்வா ப்3ராஹ்மணா – இந்த ஆத்மாவை அறிந்த சாதகர்கள்
புத்ர ஏஷனாயா: – புத்திரன் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
விதை2ஷயாத் – சொத்தின் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
லோகேஷயாத் – உலகத்தின் மீது இருக்கும் ஆசையிலிருந்தும்
வியுத்தாய – விடுபட்டு,
பி4க்ஶாசர்யம் – சந்நியாசம்
ஸரந்தி – எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆத்மவிசாரம்–1
ஆத்மாவை அடைதல் என்பது தன்னையே அடைதலாகும். சம்சாரியான அஹம் அசம்சாரி அஹத்தை அடைய வேண்டும். இந்த நிலையை ஞானத்தினால்தான் அடையமுடியும். அடையும் வஸ்து ஏற்கனவே நம்மிடத்தேதான் இருக்கிறது. அக்ஞானமும் அதைத் தொடர்ந்து வருகின்ற அத்யாஸத்தினால், சம்சாரத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கிறோம் இந்த நிலையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
- ஆத்மாவை அறிந்த பிறகு சந்நியாசத்தை எடுத்துக் கொள்வது
- சந்நியாசத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஆத்மாவை அறிந்து கொள்வது
- ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பி எடுத்துக் கொண்ட சந்நியாசம்.
விவிதிக்ஷா சந்நியாசம் – புத்ர, வித்தம், லோகம் ஆகியவற்றை விட்டுவிட்டு வைராக்யம் அடைந்து, ஆத்ம ஞானம் அடைய உதவும் சாதனைகளை செய்து அடைதல்
வித்வத் சந்நியாசம் – வைரக்யமும், ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் எடுத்துகொள்ளும் சந்நியாஸம். இவர்களது லட்சியம் அடைந்த ஞானத்தில் நிலைபெறுவது.
இந்த இரண்டு சந்நியாசமும் சாதனை ரூபமாக இருக்கின்றது. எனவே இவையிரண்டும் சாதனை ரூப சந்நியாசம் என்று கூறுவர். இந்த சந்நியாஸத்தில் இருக்கும் சாதனைகளை சந்நியாச வாழ்க்கையில் இல்லாமல் இருப்பவர்களும் கடைப்பிடித்தால் அவர்களும் ஞானமும் ஞான நிஷ்டையும் அடையலாம். ஸம்யக் ஞானம் ( ஞான நிஷ்டை) உள்ளவர்களுக்கு சந்நியாசம் என்பது லட்சணையாக இருக்கிறது.
ஆத்மவிசாரம்–2
கேள்வி:– இதை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம். பூதார்த்த வாக்கியம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
- பூதார்த்த வாக்கியம் என்பது இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறது என்ற வாக்கியமானது நம்மால் ஒத்துக் கொள்ளவும் முடியாது மறுக்கவும் முடியாது. எனவே இதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இந்திரன் சக்தி வாய்ந்தவன் என்று சொல்வதற்காக இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் இருக்கிறது. இந்த வாக்கியத்தை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
- வேதம் சொல்வது போல் வாழாதவன் கீழான நிலைக்கு சென்று விடுவார்கள். சந்நியாசத்தில் எந்த விதிமுறையும் கிடையாது.
- சந்நியாசம் எடுத்துக் கொண்டால் வேதத்தை படிக்கக்கூடாது.
- இங்கு மூன்று மட்டும் துறக்கப்படும்,எல்லாவற்றையும் துறக்க தேவையில்லை.
பதில் வேதாந்தத்தில் உள்ள கர்மகாண்டம் முழுவதையும் சந்நியாசம் எடுத்துக் கொண்டவர்கள் துறந்து விட வேண்டும் என்று ஸ்ருதியே விதித்துள்ளது. எந்த அதிகாரிக்கு வேத வாக்கியம் கூறப்படுகிறது என்று பார்த்து பொருள் கொள்ள வேண்டும். இங்கே ஆசையுடையவனுக்கு சந்நியாசம் தேவையில்லை, அனாத்ம விஷயங்களில் பற்றில்லாதவன் சந்நியாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆசைகளை இரண்டு விதமாக நீக்கலாம். 1. தர்மப்படி அனுபவித்து நீக்கலாம், 2. ஞானத்தாலே நீக்க முடிவது. எல்லா உபநிஷத்தின் குறிக்கோள் ஆத்மஞானம்தான் அதை அடையும் நேரடி சாதனங்கள் சிரவணம், மனனம், நிதித்யாஸனம். இதில் வெற்றி அடைய சந்நியாஸம் உதவி புரிகிறது.
ஆத்மவிசாரம்–3
அனாத்மாவில் இருக்கும் ஆசைகளை ப்ரித்தறிதல். அனைவரும் மூன்று பெரிய ஆசைகளில் விழுந்திருக்கிறார்கள். அந்த ஆசைகளின் பிடியில் சிக்காமலிருக்க வேண்டும்.
புத்ர ஏஷணா– இது சாதனை இச்சாவாக கருதப்படுகிறது. தன் மகன் மீதுள்ள ஆசை. இங்கு புத்திரன் ஒரு சாதனமாகவும் அதைக் கொண்டு அடையும் சாத்தியமாக இகலோக, பரலோக சுக ப்ராப்தி. இங்கு புத்திரன் என்பதை உபலக்ஷணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே புத்திரன் மட்டுமல்ல மற்றவர்களின் உதவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளிடமிருந்து விடுபட வேண்டும். இந்த உறவுகளால் நமக்கு பாதுகாப்பை பெறுவோம். ஆனால் பாதுகாப்பை கடைசி வரையில் வைத்திருக்கக் கூடாது. அதை விட்டுவிட்டு வருவதற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இறந்ததற்கு பிறகு புத்திரன் செய்யும் சிரார்தத்தால் நற்பலன் கிடைக்க உதவும். சாத்தியத்தின் மீதுள்ள பற்றை தியாகம் செய்ய வேண்டும். பிறகுதான் சாதனங்களை விடவேண்டும், முதலில் நம்மிடத்திலுள்ள பாதுகாப்பற்ற நினைப்பை அகற்ற வேண்டும், தனிமையில் பயமின்றி இருந்து பழக வேண்டும். அப்புறம்தான் சாதனங்களை விடவேண்டும்.,
வித்த ஏஷணா– இதுவும் சாதனை இச்சாவாக கருதப்படுகிறது.
- அசையா சொத்து: இதன் மீதுள்ள ஆசையை துறக்க வேண்டும். இதுவும் சாத்தியத்தை துறந்த பிறகுதான், சாதனத்தை துறக்க வேண்டும்.
- வித்தத்தை பயன்படுத்துதல்: சொத்து இருந்தால் மட்டும் போதாது, அதை பயன்படுத்தி சுகத்தை அடைந்தால்தான் அதனால் பிரயோஜனம் உண்டு.
- உபாஸனம் (அ) வித்யா: நாம் அடையும் வித்யாவுக்கு பொருள் தேவைப்படுகிறது. நாம் அடையும் வித்யாதான் அதிக சுகத்தை அனுபவிக்கவும், மேலும் சொத்தை பெருக்கவும் உதவி செய்கிறது. உபாஸனமும் ஒருவிதமான வித்தம்தான் எனவே இதன் மூலம் அடையும் செல்வங்களையும், அஷ்டமா சித்திகளையும் துறக்க வேண்டும்.
லோக ஏஷணா– இது சாத்திய இச்சாவாக கருதப்படுகிறது.
லோகம் என்பது இன்பத்தை நேரிடையாக கொடுக்க கூடிய உலகங்கள். இன்பத்தை தரக்கூடிய சூழ்நிலையில் இருத்தல். இந்த சூழ்நிலையை உருவாகும் முயற்சியை துறக்க வேண்டும்.
இதைப்போன்ற இச்சாக்கள் அனைத்தையும் அனாத்மா இச்சா என்று கூறலாம். இந்த அனாத்மா இச்சா சாதன இச்சா, சாத்திய இச்சா என இருவகையாக பிரிக்கலாம். சாதன இச்சாவானது புத்ர இச்சா, வித்த இச்சா என இருவகையாக பிரிக்கலாம். சாத்திய இச்சாவானது இகலோக, பரலோக இன்பங்கள்.
மந்திர விளக்கம்:
புத்திரன் மீதுள்ள ஆசையானது வித்தத்தின் மீதிருக்கும் ஆசை, வித்தத்தின் மீதுள்ள ஆசையானது லோகத்தின் மீதிருக்கும் ஆசை. ஆகவே ஆசை என்பது ஒன்றுதான். இந்த ஆசையை இரண்டாக பிரிக்கலாம், அவைகள் சாதன ஆசை, சாத்ய ஆசை.
சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஸ்வரூப விளக்கம்:
ப்3ராஹ்மண: – சித்தஸுத்தி அடைந்தவர்கள், ஆசையிலிருந்து விடுதலையடைந்தவர்கள், வைராக்யத்தை அடைந்தவர்கள், சம, தமாதிகள் மூலம் வைராக்கியத்தில் நிலை பெற்றவர்கள்.
பாண்டித்யம் நிர்வித்3யா – பாண்டித்யத்தை முழுமையாக செய்து முடித்து
பால்யேன தி3ஸ்டாஸேத் – ஞானத்தில் உறுதியாக இருக்க ஆசைப்பட வேண்டும்.
பால்யம், பாண்டித்யம் இவையிரண்டையும் செய்து முடித்த பிறகு
முனி: ப4பே4த் – முனிவராக இருக்க வேண்டும்.
இவை மூன்றும் செய்து முடித்திருந்தால் அவன் பிராமணனாகி விடுகிறான், முக்தனாகி விடுகிறான், மோட்சத்தை அடைகிறான்.
சொல் விளக்கம்:
பாண்டித்யம்: ஆத்ம ஞானம்; உபநிஷத் சாஸ்திரத்திலிருந்து தோன்றியது பண்டா (पण्डा). இந்த பண்டாவை அடைந்தவன் பண்டிதன். பண்டாரம் என்ற சொல் ஆத்மஞானியை குறிக்கிறது. அந்த பண்டிதனாவதற்கு மேற்கொண்ட செயல்களை பாண்டித்யம் என்று கூறுவர். அந்த செயல்கள் வேதந்த வாக்ய விசாரம், குருவின் துணைக் கொண்டு செய்வதே சிரவணம். பாண்டித்ய நிர்வித்யா என்பது சிரவணத்தை பூர்த்தி செய்தல், முழுமையாக செய்தல் என்று பொருள். சிரவணம் எப்பொழுது முடிவடைகிறது என்று எப்படி அறிய முடியும் என்றால், உணவு உட்கொள்ளும்போது எப்படி வயிறு நிறைந்து விட்டது என்று உணர்கிறோமோ அதேமாதிரி எப்பொழுது சந்தேகமில்லாமல் நான் தெரிந்து கொண்டேன் என்ற உணர்வு வருகின்றதோ அப்போதுதான் சிரவணம் முடிவடைந்து விட்டது என்று உணரலாம். இந்த கேள்வியே நம் மனதில் எழும்பாது.
சுரேஷ்வராச்சாரியார் நான்கு நிலைகளில் (தத்வமஸி) என்ற ஞானத்தை அடைகிறோம் (சதுர்வித ஞானம்) என்று விவரிக்கிறார். (தத்+த்வம்+அஸி)
- பதார்த்த அவகதி பூர்வம்: மகாவாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுதல்
- ததஸ்ததி அவி சங்கதிஹி – இரண்டு சொற்களின் பொருள்களுக்கிடையே உள்ள சம்பந்தம் (தத் என்ர சொல்லுக்கும், த்வம் என்ற சொல்லுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை அறிந்து கொள்ளுதல்)
- விருத்தார்த்த துதி பஷ்சாத் – இந்த சம்பந்தத்தை கேட்ட உடனேயே வேறு விதமான எண்ணங்கள்தான் முதலில் தோன்றும்,. இப்படி தோன்றும் விருத்தமான அர்த்தத்தை விட்டுவிட வேண்டும்.
- ததோ வாக்யார்த்த போதனம் – இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு சொற்களுக்குமிடையே உள்ள ஐக்கியத்தைத்தான்.
பால்யத்துடன் இருக்க முயற்சி செய்.
ஞானத்தையே பலமாக கொண்டிரு. அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்க வேண்டும். பணமிருந்தால் நமக்கு மனபலம் கிடைக்கும். உறவுகள் நிறைய இருப்பதாலும் நமக்கு பலம் கிடைக்கும். இவ்வாறு அனாத்மா விஷயங்கள் நமக்கு பலத்தை கொடுப்பதாக உணர்கிறோம். இந்த பலத்தை நாம் தியாகம் செய்து விட வேண்டும். சிரவணத்தை முடித்தவுடன் அடைந்த ஞானமே எனக்கு பலம் என்று உறுதியாக இருக்க வேண்டும். அனாத்மாவிலிருக்கிற பலத்தை துறந்து விட்டு, ஞானத்திலிருந்து பலத்தை அடைய உறுதி கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். பணம், புகழ், பதவி, சொத்து இவைகளை வேண்டாம் என்று சொல்கின்ற மன உறுதியே பலம்.
பால்யேன பா4வ:– குழந்தையைப் போல் இருக்க வேண்டும்,
- விருப்பு-வெறுப்புக்களை, மற்ற தீய எண்ணங்களை துறந்த நிலை
- குழந்தைகளிடத்தில் அகங்காரம் இல்லாத காரணத்தால் தன்னை மற்றவர்கள் முன் பெருமைபடுத்திக் கொள்ளாமல் இருப்பது போன்ற நிலை
- நான் ஞானத்தை அடைந்தவன் என்று மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளாதிருத்தல், அதை நிரூபிக்க முயற்சி செய்யாதிருக்கும் நிலை
- ஞானத்தை அடைந்து விட்டேன் என்ற கர்வம் கொள்ளாதிருத்தல், எளிமையாக வாழ்தல்
அடைந்த ஞானத்தை உறுதிப்படுத்த வேண்டும். மனனம் என்ற சாதனை மூலம் இந்த சக்தியை அடைய வேண்டும். சந்தேகத்தை நீக்குவதன் மூலம் இந்த சக்தி வந்து விடும். ஞானம் உறுதியாக வேண்டுமென்றால் அடைந்த ஞானத்தில் சந்தேகமற்று இருக்க வேண்டும். பாண்டித்யம், பால்யம் இவை இரண்டையும் முழுமையாக கடைப்பிடித்து ஒரு முனிவராக இருக்க வேண்டும். மௌனமாக இருக்க விரும்ப வேண்டும். அடைந்த ஞானத்துடன் மௌனமாக இருப்பவர்கள், அதைக் கடைபிடிப்பவர்கள் முனிவர் என்று அழைக்கப்படுவர்.
அமௌனம் – சிரவணம், மனனம் இவற்றைக் குறிப்பது
மௌனம் – நிதித்யாஸனத்தைக் குறிக்கிறது, இந்த நேரத்தில் மௌனமாக இருக்க வேண்டும்.
மௌனம்: வாய் திறந்து பேசாதிருத்தல், ஞானத்தை அடையாமல் உபாஸனை காலத்தில் இருக்கும் மௌனம், ஞானத்தை அடைந்த பின் இருக்கும் மௌனம் என்று இருவகையாக இருக்கிறது. உபாஸகர்களின் மௌனம் இரண்டாக உள்ளது. அவைகள்,
- காஷ்ட மௌனம்: வாய் மட்டும் பேசாதிருத்தல்;
- ஆகாஷ்ட மௌனம்: கை, கால் இவைகளினால் எந்த செய்கைகளினாலும் பேசாதிருத்தல்.
இதனால் அடையும் பலன்களாவது, மனதில் இருக்கின்ற சஞ்சலங்கள் நீங்கும், மனமானது ஒரு இடத்தில் குவியும், ஜபம் நன்றாக சித்திக்கும். ஸ்வதோஷம் – நம்மிடம் உள்ள குறைகள் எல்லாம் நமக்கே தெரிய வரும். சில பதிவுகள் எல்லாம் ஞானம் வந்தவுடன் சென்று விடாது. இந்த ஞானத்தின் உதவிக் கொண்டு எல்லாவிதமான விபரீதபாவனைகளையும் நீக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இருமைகளையும், நான் கர்த்தா என்ற உணர்வையும் நிதித்யாஸனம் என்ற சாதனையின் மூலம் நீக்கிக் கொள்ள வேண்டும்.
நிதித்யாஸனம்: நாம் அடைந்த ஞானத்தில் நின்று பழகுதல். இந்த நேரத்தில் மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும். அனாத்மா விஷயமான பேச்சை மட்டும் விட்டுவிட வேண்டும். அனாத்ம விஷயத்தைப் பற்றி பேச பேச த்வைத புத்தி மேலும் பெருகும். நமக்கு தேவையில்லாத சங்கங்களை ஏற்படுத்தி விடும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு தனிமை கிடைத்து விடும். மனமானது ஒருமுகப்பட்டு விடும்.
அத2 முனி: – மௌனத்தில் ஈடுபட்டு நிதித்யாஸனத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக் என்கின்ற இந்திரியத்தின் துணைக்கொண்டுதான் சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அமௌனத்தையும்(சிரவணம், மனனம்), மௌனத்தையும்(நிதித்யாஸனம்) பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்தவன் பிரம்மத்தை அடைகின்றான், அவனே ஜீவன் முக்தனாகின்றான்.
ஸ: ப்3ராஹ்ம: கேன ஸ்யாத்? – இப்படிபட்ட ஜீவன் முக்தனை எப்படி அறியலாம்? எந்த நடவடிக்கையின் மூலமாக அவனை கண்டு கொள்வது?
யேன ஸ்யாத்தேன – அவன் எப்படி வேண்டுமானலும் இருப்பான். வெளித்தோற்றத்தைக் கொண்டும், அவன் செய்யும் செயல்களை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. எனவே அவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.
தொகுப்பு:
ஆத்மாவுக்கு சம்சாரம் இல்லை. இதை அடைதல் என்பது அறிவது என்பதாகும். புத்ரன், வித்தம், லோகம் இந்த மூன்று பேராசைகளிலிருந்து விடுபட வேண்டும். பாண்டித்யம், பால்யம், முனி என்ற சாதனங்களை கூறி இதன் மூலம்தான் ஞான பலத்தை அடைய வேண்டும். இப்படி சொல்லியபடி சாதனைகளை கடைபிடித்து ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றவன் பிரம்மத்தை அடைந்தவனாகிறான். அவனையே ஜீவன்முக்தன் என்று கூறுவர். இவனுக்கென்று தனி லட்சணம் என்று ஒன்றும் கிடையாது. அவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான் அவன் செய்யும் செயல்களிலிருந்து நாம் அவனை அறிய முடியாது.
——————————————————————————————————————————————–
பகுதி-6: கார்கி (गार्गी) பிராமனம்
——————————————————————————————————————————————–
ஸ்லோகம்–01
இந்தப் பகுதியில் ஸ்தூலமான பிருத்வியிலிருந்து மிக மிக சூட்சுமமான ஹிரண்யகர்ப்பன் வரையில் விசாரம் செய்யப்படுகிறது.
ஆந்தர: – மூலக்காரணமாக இருப்பது:
ஸர்வாந்தரஹ : எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கின்றது, ஆதாரமாக இருக்கின்றது.
ஆந்தர தத்துவ விளக்கம்:
ஆந்தரம்: காரணம்; அபரிச்சின்னம் (வரையறுக்கப்படாதது); சூட்சுமம், சத்யம்.
· எது காரியமாக இருக்கிறதோ அது காரணத்தால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது வரையறுக்கப்பட்டதோ அது வரையறுக்கப்படாத தத்துவத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது ஸ்தூலமாக இருக்கிறதோ அது சூட்சுமத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
· எது மித்யாவாக இருக்கிறதோ அது சத்யத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் ஆந்தரமாக இருப்பது எது?
மந்திர விளக்கம்:
பிருத்வியானது நீரினாலும், நீரானது வாயுவினாலும், வாயுவானது ஆகாசத்தினாலும், ஆகாசமானது கந்தர்வலோகத்தாலும், கந்தர்வலோகமானது பிரஜாபதி லோகத்தாலும், பிரஜாபதிலோகமானது பிரம்மலோகத்தினாலும் வியாபிக்கப்-பட்டிருக்கிறது, பிரம்மலோகமானது எதனால் வியாபிக்கபட்டிருக்கிறது என்ற கேள்விக்கு யாக்ஞவல்கியர் பதில் சொல்லவில்லை ஆனால் எச்சரிக்கை செய்கிறார் இதற்கு மேல் போனால் உன் தலை வெடித்து விடும். ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அனுமானம் மூலம் விளக்க முடியாது. தர்க்க பிரமாணத்திற்கப்பால் உள்ள விளக்கத்தை தர்க்கத்தில் பெற முயற்சி செய்யாதே என்று எச்சரிக்கிறார் யாக்ஞவல்கியர்.
அனாதிப்ரஶ்ன்யௌ – அனுமான பிரமானத்திற்குப்பாற்பட்ட விஷயத்தை, தர்க்க பிரமாணத்திற்குள் வராததை
அதிப்ருச்ச2ஸி – தர்க்கத்தால் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்;
மாதிப்ரக்ஷீரிதி – அந்த மாதிரி முயற்சிக்காதே.
பிரத்யக்ஷம் இல்லாமல் அனுமானம் பண்ண முடியாது. ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை ஆகாம பிரமாணத்தால்தான் அடைய முடியும்.
——————————————————————————————————————————————–
பகுதி–7: அந்தர்யாமி (अन्तर्यामि) ப்4ராமனம்
——————————————————————————————————————————————–
ஸ்லோகம்–1
உத்தலகா என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்பதற்கு முன் ஒரு கதை சொன்னார். மத்ரா என்ற ஊரில் பதஞ்சலகாப்யம் என்பவர் வீட்டில் யக்ஞங்களை தெரிந்து கொள்ள படித்துக் கொண்டிருந்தோம். பதஞ்சலகாப்யாவின் மனைவிக்குள் ஒரு கந்தர்வன் புகுந்து கொண்டான். அந்த கந்தர்வனிடம் “”நீ யார்?” என்று கேட்டோம். அந்த கந்தர்வன், ‘என் பெயர் கபந்தன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பிறகு அவன் எங்களை பார்த்து, “எந்தவொரு சூத்ர தத்துவம் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள எல்லா ஜீவராசிகளையும் சீராக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த சூத்ர தத்துவத்தை, ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அறிவீர்களா? என்று கேட்டான். பதஞ்சலகாப்யர், ‘ஏ பகவான் எனக்கு அந்த தத்துவம் தெரியாது” என்று பதிலளித்தார். ”அந்தர்யாமி தத்துவத்தைப்பற்றி தெரியுமா? இகலோக, பரலோக ஜீவராசிகளுக்குள்ளும் உள்ளே இருந்து கொண்டு அவைகளை தன் வசம் வைத்திருக்கும் ஈஸ்வர தத்துவத்தை அறிவீர்களா” என்று மேலும் கந்தர்வன் கேட்டான். அதுவும் எங்களுக்கு தெரியாது என்று பதிலளித்தார். யார் இந்த சூத்ரத்தையும் அந்தர்யாமி தத்துவத்தயும் அறிந்தவர்களோ அவர்களே பிரம்மத்தை அறிந்தவர்களாவர்கள். அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களாகிறார்கள்.” என்று கந்தர்வன் கூறினான். பிறகு அங்கிருந்தவர்களுக்கு அந்த தத்துவங்களை உபதேசித்தான்.
எனக்கு இப்போது அந்த தத்துவங்கள் தெரியும், அந்த தத்துவங்களை நீ அறியாமல் இந்த பசுக்களை எடுத்துச் சென்றால் உன்னுடைய தலை வெடித்து விடும்.
யாக்ஞவல்கியர், “எனக்கு அந்த இரண்டு தத்துவங்களும் தெரியும்” என்று பதிலளித்தார். உத்தலகா, ‘எல்லோரும் இப்படிதான் சொல்வார்கள், முதலில் உனக்கு எப்படி தெரியுமோ அப்படியே கூறுவாயாக” என்று கேட்டார்.
ஸ்லோகம்–2
யாக்ஞவல்கியர் பதிலளிக்க ஆரம்பித்தார். ”அந்த சூத்ரமானது வாயுவாகும். ஹிரண்யகர்ப்ப தத்துவமாக இருக்கின்ற இந்த சூத்ரத்தினால் நாம் அனுபவிக்கும் உடல், இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள ஜீவராசிகளும் சீராக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இங்கே வாயு என்பது உடலுக்கு வெளியே இருப்பது, உடலுக்கும் உள்ளே பிராணனாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பின் இந்த பிராணனானது வெளியே சென்று விடுகிறது, இதுவே சூட்சும சரீரம் என்றும் கூறுவர். இவைகளெல்லாம் சீராக இயங்குவதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகின்றது. சமஷ்டி, வியஷ்டி இரு அங்கங்களும் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு ஜீவன் தோன்றும், மாலையில் பூக்களை ஒன்றாக சேர்த்து கொண்டிருக்கும் நூல் போல அனைத்து ஜீவராசிகளையும் நன்றாக ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகிறது. ஸ்தூல உடலை விட்டு ஹிரண்யகர்ப்ப தத்துவம் சென்று விட்டால் அந்த உடலை பிரேதம் என்று கூறுவர். அந்த உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் அழுகி விடும். இந்த சூத்ர வாயு, ஹிரண்யகர்ப்பமானது அனைத்தும் சீராக இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது”. என்று முடித்தார். இந்த பதில் சரியென்று ஒத்துக் கொண்ட உத்தாலகா பின்பு அந்தர்யாமியை பற்றி இப்போது சொல்லுங்கள் என்று வினவினார்.
ஸ்லோகம்–3
ஹிரண்யகர்ப்பனுக்கு ஆதாரமாக இருப்பது எல்லா காரண ஸரீரத்தையும் அபிமானிக்கின்ற சேதனமான பிரம்மம் அந்தர்யாமி. மாயையில் பிரதிபிம்பிக்கின்ற ஆத்மா. சூட்சும சரீரத்திற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். இதுதான் இங்கே விளக்கப்படுகிறது. இதுவே ஈஸ்வரன், அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது.
இங்கே அந்தர்யாமி தத்துவத்தை எப்படி விளக்குகிறார் என்றால், இந்தப் படைப்பை மூன்றாக முதலில் பிரிக்கிறார். அவைகள் அதிதெய்வம் – தேவர்கள் போன்ற மேலான பிறவிகள், அதிபூதம் – இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும், அத்யாத்மா – மனிதனிடத்தில் உள்ள இந்திரியங்கள். இந்த மூன்று விதமான ஸ்ருஷ்டிகளுக்குள்ளும் அந்தர்யாமி ஊடுருவி இருக்கிறார். மாயையுடன் கூடிய பிரம்மத்தையே அந்தர்யாமி அல்லது ஈஸ்வரன் என்று அறிய வேண்டும்.
- அந்தர்யாமி எங்கு குடியிருக்கிறார் என்றால் ஹிரண்யகர்ப்பனுடைய வீடுதான் இவர் குடி
இருக்குமிடம்
· வெளித்தோற்றத்திற்கு வராமல் உள்ளேயிருப்பது
· அவிஷயஹ- விஷயமாக யாராலும் கிரகிக்க முடியாத ஒன்று.
· ஹிரண்யகர்ப்பனுடைய சரீரம்தான் இவருடைய சரீரமாக இருக்கிறது
· ஹிரண்யகர்ப்பனையும் தன் கட்டுக்கும் வைத்திருப்பவர்
· அந்தர்யாமியின் ஸ்வரூபமும் ஜீவனுடைய ஸ்வரூபமும் ஒன்றேதான்.
· அந்தர்யாமி சம்சாரமற்றது
ய: ப்ருதிவ்யாம் திஷ்டன் – அந்தர்யாகி ப்ருதிவியில் இருந்து கொண்டு
ப்ருதிவ்யா அந்தர: – ப்ருதிவிக்குள்ளே இருக்கிறார்
ப்ருதி2வி ந வேத3 – ப்ருதிவியே அறியாதவாறு
யஸ்ய ப்ருத்வி ஸரீரம் – ப்ருதிவியானது சரீரமாக இருக்கிறது.
ய: ப்ருதிவி அந்தர: யமயதி – ப்ருதிவிக்குள்ளே இருந்து கொண்டே அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது
ஏஷ த ஆத்மா – இப்படிபட்ட ஸ்வரூபம்தான் அந்தர்யாமி, இதுவே ஜீவனின் ஸ்வரூம்
அமுத: – இவர் சம்சாரமற்றவர், நித்தியாமானவராக இருக்கிறார்.
ஸ்லோகம்–4 லிருந்து – ஸ்லோகம்-23 வரை கீழே விளக்கப்பட்டிருக்கிறது
நீர், நெருப்பு, ஆகாயம், வாயு, சுவர்க்கலோகம், சூரியன், திசைகள், சந்திரன், நட்சத்திரங்கள், ஆகாசம், இருள், வெளிச்சம், எல்லாவற்றிலும், மூக்கு, வாக் இந்திரியம், கண், காது, மனது, தோல், புத்தி, பிறப்புறுப்புக்கள் போன்ற இவைகளில் முழுவதும் வியாபித்தும், உள்ளேயும் இருந்து கொண்டு அதேசமயம் அவைகள் அறியாதவாறும் இருந்து கொண்டு அவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. இப்படிப்பட்ட ஸ்வருபமாக என்றும் அழியாததாக சம்சாரமற்று இருப்பது அந்தர்யாமி.
அதிருஷ்ட – பார்க்கப்படாதது; திருஷ்ட – பார்க்கின்றவன்
எவையெல்லாம் பார்க்கப்படுகிறதோ அவையெல்லாம் வரையறுக்கப்பட்டது. இது அறியப்படாதது ஆனால் அறிபவனாக இருக்கின்றது. சிதாபாசனை ஆதாரமாக கொண்ட மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது. அதே சமயம் பார்க்கப்படுவதாகவும், கேட்கப்படுவதாகவும் இருக்கிறது. இந்த அறியப்படாதவன்தான் நிர்விகார த்ருஷ்டா.
ந அன்ய: அத2: அஸ்தி த்3ருஷ்ட – அந்தர்யாமியை தவிர வேறொரு அறிபவன் கிடையாது.
v சைதன்யமான அந்தர்யாமி ஒன்றுதான் இருக்கிறது; அதைத் தவிர வேறொன்றும் இல்லை
v மனதிற்கு அறியும் தன்மை கிடையாது ஏனென்றால் அது ஜடமான வஸ்து. ஆனால் அதில் பிரதிபலிக்கும் சைதன்யத்தின் (சிதாபாசத்தின்) துணைக் கொண்டு எல்லாவற்றையும் அறிகிறது. ஆனால் இதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிதாபாசனும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஜீவனும் மித்யா என்று அறிந்து கொள்ளலாம்.
v இப்படி கட்டுபடுத்துபவர் என்று புரிந்து கொண்டால், கட்டுபடுத்துபவர் என்ற வேறொன்று இருக்கிறது என்ற த்வைதம் வந்து விடுகிறது. ஆனால் இங்கு இரண்டுமே ஒன்றுதான் என்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மாயையினால்தான் த்வைதம் தெரிந்து கொண்டிருக்கிறது.
v ஜீவ சைதன்யம், ஈஸ்வர சைதன்யம், ஸ்வரூப சைதன்யம் இந்த மூன்றில் உள்ள ஸ்வரூப சைதன்யம் ஒன்றுதான். அதுவே மாயை, வியஷ்டி என்ற இரண்டு பெயர்களை கொண்டதாக இருக்கிறது
v இப்படிபட்ட அந்தர்யாமிதான் ஆத்மா, அதுவே உன் ஸ்வரூபம், நித்தியமானது.
—-0000—-
ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-6
அத்தியாயம்-03
திருத்தம் செய்யப்பட்டது – 10-03-2022
———————————————————————————————————————————————
பகுதி-8: அக்ஷரம் (अक्ष्रम्) பிராமனம்
———————————————————————————————————————————————
ஸ்லோகம்–1
வணக்கத்துக்குரிய பிரமாணர்களே யாக்ஞவல்கியரிடம் நான் இரண்டு கேள்வியை கேட்கப்-போகிறேன். அவர் பதில் சொல்லிவிட்டால், யாராலும் அவரை வெல்ல முடியாது. அந்த பிராமணர்கள் அனுமதி அளித்தார்கள்.
ஸ்லோகம்–2
கார்கி, யாக்ஞவல்கியரை பார்த்து, “நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். காசி, விதேஹ நாட்டை சேர்ந்த வீர்ர்கள் வில்லில் எடுத்து அதில் இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு வில்லை வைத்து பகைவர்களை பயந்தோட செய்வார்கள். அதேபோல இரண்டு கேள்விகளை உன்னிடம் கேட்கப் போகிறேன்” என்று கூறினாள். அவரும் நீ கேள் என்று கூறினார்.
ஸ்லோகம்–3
சுவர்க்கத்திற்கும் மேலாகவும், பூமிக்கும் கீழேயும் எது வியாபித்துள்ளதோ, இந்த இரண்டிற்கும் இடையேயும் வியாபித்துள்ளது (எல்லா உலகத்திலேயும் வியாபித்துள்ளதோ) முன்பும் இருந்து, இப்பொழுதும் இருந்து கொண்டு, என்றும் இருக்கப்போவதும் ரிஷிகள் அந்த சூத்ரத்தை இவ்வாறு சொல்கிறார்கள். இப்படிபட்ட தத்துவத்தை எது வியாபித்திருக்கிறது.
ஸ்லோகம்–4,5
ஆகாசம் (ஈஸ்வரன், அந்தர்யாமி) இந்த தத்துவத்தை வியாபித்திருக்கிறது. யாக்ஞவல்கியரின் சரியான பதிலுக்கு கார்கி நமஸ்கரித்து விட்டு என்னுடைய இரண்டாவது கேள்விக்கு தயாராக இருங்கள் என்று கூறினாள்.
ஸ்லோகம்–6, 7
எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கும் தத்துவம் ஆகாசம் என்று கூறினீர்கள் இந்த ஆகாசத்தை எது வியாபித்திருக்கிறது?
ஸ்லோகம்–8
ஹே கார்கி, “அக்ஷரம்தான் (நிர்குண பிரம்மந்தான்) என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பிறகு இந்த அக்ஷரத்தின் லக்ஷணத்தை நிஷேத முகமாக விளக்க ஆரம்பித்தார்.
ஞானத்தையடைந்த ரிஷிகள் அக்ஷரம்தான் ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது அஸ்தூலம்- மிகப்பெரியதுமில்லை; அநஹ – மிகச்சிறியதுமில்லை; அக்ரஸ்வம் – குட்டையுமல்ல; அதீர்கம் – உயரமானதுமில்லை. மேலும் இது ஒரு பொருளுமில்லை, இதற்கு அவயவங்களுமில்லை (நிர் அவயவம்), வர்ணமற்றது; எதனோடும் ஒட்டுவதுமில்லை (அஸ்தேகம்), குணமற்றது. இது நிழலுமல்ல, இருளுமல்ல, வாயு ஸ்வரூபமல்ல, பஞ்சபூதங்களின் ஸ்வரூபமுமல்ல, ஆகாச ஸ்வரூபமுமல்ல (அனாகாசம்), அஸங்கம் (எதனோடும் சம்பந்தமற்றது), இந்திரியங்களற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அரஸம் – சுவையற்றது, சுவைக்கும் இந்திரியங்களற்றது;
அகந்தம் – வாசணையற்றது, வாசணையை அறியும் இந்திரியங்களற்றது.
அசக்ஷும் – கண்களால் எதையும் கிரகிக்க முடியாது, கண்கள் இல்லாதது
கர்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும் இல்லாதது இவ்வாறாக இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதேஸம் – விருத்தி ரூப ஞான ரஹிதம் – எண்ண விருத்திக்கள் இல்லை
அவாத் அமனஹ – அந்தக்கரணமற்றது
அபிராணன் – பிராணன் இல்லாதது, சூட்சும சரீரமற்றது.
அமுகம் – நுழைவாயில் கிடையாது.
அமாத்திரம் – எதைக் கொண்டும் அளக்க முடியாது, எடையற்றது
அனந்தரம் – முடிவற்றது.
அபாக்யம் – உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது
இவ்வாறு எல்லவற்றையும் நீக்கியப்பிறகு எஞ்சியிருக்கிறதுதான் பிரம்மம்.
தத்– அந்த பிரம்மன்,
கிஞ்சன – எதையுமே,
ந அஸ்னாதே – சாப்பிடாது,
கஷ்சன – எதுவும்
தத் – அந்த பிரம்மத்தை
ந அஸ்னாதே – சாப்பிடாது.
இது அகர்த்தாவாகவும், அபோக்தாவாகவும் இருக்கிறது. இது எந்த செயலையும் செய்யாது, அதனால் எந்த பலனையும் அனுபவிக்காது. இது போக்யாவும் அல்ல. அனுபவிக்கப்படும் பொருளாகவும் இல்லை, அனுபவிப்பனாகவும் இல்லை. போக்தாவாக இருக்கும்வரை சம்சாரமும் இருக்கும்
அது கர்ம பலனை அனுபவிப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஜீவன் கர்த்தாவாக இருக்கும் போது எந்தச் செயலையும் செய்யும் சுதந்திரம் இருப்பதனால், பாவ புண்ணியத்தை உற்பத்தி செய்து, குழப்பத்துடன் இருக்கின்றான். சுக-துக்கங்களில் சிக்கிக் கொண்டு துயரமடைகிறான்.
ஸ்லோகம்–9
ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்குகிறது இந்த மந்திரம்; பிரம்மமானது ஜகத்துக்கு உபாதன காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது. நிமித்தக் காரணம் சைதன்யமுடையது, உபாதான காரணம் ஜடமாக இருப்பது. இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஈஸ்வரனால் சீராக இயங்குகிறது. அக்ஷரம் என்ற தத்துவத்திடம் காரணம் என்ற தன்மையை ஏற்றி வைத்ததால் அது ஈஸ்வரனாகிறது.
இந்த ஈஸ்வரனுடைய ஆணையினால் (प्रशासने) சூரியனும், சந்திரனும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பூமியும், அந்த சுவர்க்க லோகமும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கிழக்கிலிருந்து பாயும் நதிகள், மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கின்றன. எல்லா திசைகளிலிருந்து பாயும் நதிகள் அனைத்தும் அவனது ஆணையால் ஒடுகின்றன.
யார் தானம் செய்கிறார்களோ அவர்களை மற்றவர்கள் புகழ்வார்கள். தானத்திற்கு இரண்டு பலன் அவைகள் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, பிறகு அதனால் அடையும் புண்ணியப்பலன். இதையெல்லாம் ஈஸ்வரனால் கிடைக்கிறது. தேவர்களும் கூட யாகம் செய்கின்ற மனிதர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். பித்ருக்களும் நாம் செய்யும் சிரார்தத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.
ஸ்லோகம்–10
இதில் பிரம்ம ஞானத்தின் பெருமை, மனித ஜென்மத்தின் பெருமையும், காலத்தின் பெருமையும் விளக்கப்பட்டிருக்கிறது. பிரம்மஞானத்தை விட்டு விட்டு வேறெதுவும் செய்தாலும் அது வீணாக போய்விடும். “ஹே கார்கி, இங்கு விளக்கப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற அக்ஷரத்தை அறிந்து கொள்ளாமல் இந்த உலகத்தில் யாகங்கள் செய்கின்றனர், தவத்தை செய்கின்றனர் அதுவும் பல்லாயிரம் வருடங்களாக செய்கின்றார்கள் இதற்கு கிடைக்கின்ற பலன் ஒரு எல்லைக்குள்தான் இருக்கும். இது மோட்ச பலனைக் கொடுக்காது. தவத்தினால் பாவங்கள் நீங்கும், புண்ணியம் அதிகமாகலாம் அதனால் அதிக சுகத்தை அடையலாம் ஆனால் செய்த தவத்தின் பலன் முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்து விட வேண்டியதுதான். ஆத்மஞானம் அகங்காரத்தை நீக்கி விடுவதால் மனதால் ஏற்படும் தடைகளை நீக்கும், அடைந்த ஞானத்தை நிலைநிறுத்துவதற்கு உதவியாக இருக்கும், அதாவது ஞானநிஷ்டைக்கு உதவி புரியும். எல்லா செல்வங்களும் ஞானம் இல்லையென்றால் அகங்காரத்தைத்தான் அதிகரிக்கும், யாரொருவன் இந்த அக்ஷரத்தை அறிந்து கொள்ளாமல், இந்த உலகத்திலிருந்து, சரீரத்திலிருந்து வெளியேறுகிறானோ, அவன் பரிதாபத்துக்குரியவன், தோல்வியடைந்தவன் (க்ருபணன்) என்றும், அதை அறிந்து வெளியேறுபவன் பிராமணன் என்றும் அழைக்கப்படுவான். இவன் பிரம்மனாகவே மாறியவன், முக்தியை அடைந்தவன், தன்னை அடைந்தவன். இந்த மனித சரீரத்தால் அடைய வேண்டியது பிரம்ம ஞானம் இதைத்தான் லக்ஷியமாக கொள்ள வேண்டும். இந்த ஞானத்தை அடைவது மனிதனாக பிறந்ததின் சரியான பலனை அடைந்தது போன்றது.
ஸ்லோகம்–11 – அக்ஷரத்தின் லக்ஷணம்
இந்த அக்ஷரமானது கண்ணால் பார்க்க முடியாது அதனால்தான் கண்ணால் பார்க்க முடிகிறது. இதை கேட்க முடியாது, அதனால்தான் கேட்க முடிகிறது. இதை சிந்திக்க முடியாது ஆனால் அதனால்தான் சிந்திக்க முடிகிறது; இதை அறிய முடியாது ஆனால் அதனால்தான் எல்லாவற்றையும் அறிய முடிகிறது, இதற்கு வேறாக ஒன்றை பார்க்க முடியாது. இந்த அக்ஷரத்தில் ஆகாசமானது சேர்க்கப்படுகிறது, இந்த ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது அக்ஷரம்.
ஸ்லோகம்–12
கார்கி பிராமணர்களை பார்த்து, “மதிப்பிற்குரிய பிராமணர்களே யாக்ஞவல்கியர் சரியாக பதிலளித்து விட்டார், எனவே நமக்கு உகந்தது எதுவென்றால் அவர்க்கு நமஸ்காரம் செய்து விட்டு விலகிவிட வேண்டும். உங்களில் யாரும் இவரை வெற்றி கொள்ள முடியாது”, என்று கூறிவிட்டு அமைதியானாள்.
———————————————————————————————————————————————
பகுதி-9: அக்ஷரம் (अक्ष्रम्) பிராமனம்
———————————————————————————————————————————————
ஸ்லோகம்–1 லிருந்து 9 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்பனுடைய பெருமை:
இவரே விதவிதமான தேவதைகளாக வெளிப்பட்டிருக்கிறார். இதுதான் இவருடைய தன்மை.
நிவித் – வேதம் பேசுகின்ற தேவதைகள் எண்ணிக்கையை பற்றி பேசுவது
சத்ரம் – ரிக் வேதத்தில் ஸ்தோத்ரங்கள் உள்ள பகுதிக்கு இந்த பெயர்.
ஸ்லோகம்–10 லிருந்து 17 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள்:
இரண்டு விதமான உபாஸனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டவித ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்தல். நாம் பார்க்கும் காட்சிகள், நம் மனதை பாதிக்கிறது, உணர்வுகளை பாதிக்கிறது. நமக்கு எது உண்மையென்றால் பார்த்த சம்பவம் இல்லை அதனால் அடைந்த மன பாதிப்புதான். இதே மாதிரி உபாஸனையின் மூலம், நம் மனதை தூய்மைபடுத்தலாம், அமைதியடையலாம், விசாலமடையலாம். உபாஸனை கற்பனைதான் ஆனால் அடையும் பலன் நிச்சயம்.
- ஸாரீர புருஷ – ஹிரண்யகர்ப்பன் நம் சரீரத்தில் வெளிப்படுதல், நான்கு தத்துவங்களை சேர்த்து பார்த்தல்
- ஆயுதனம் – வெளிப்படுகின்ற இடம் – பிருத்வி
- லோகஹ – அவருடைய லோகம்; அதன் மூலம் பார்க்கிறார் – அக்னி
- ஜோதிஹி – எந்தக்கருவியின் மூலமாக சிந்திக்கின்றான் – மனம்
- தேவதா – வெளிப்படக் காரணம் – அன்னம்
ஸ்லோகம்–18 லிருந்து 24 வரை சாரம் மட்டும்
பஞ்சவித ஹிரண்யகர்ப்ப உபாஸனம்: நான்கு திசைகளிலும், மேலேயும் அவர் இருக்கின்றார் என்று உபாஸிக்க வேண்டும்.
ஸ்லோகம்–25
மனதிற்கு ஆதாரம் என்ன? அது இருக்கும் இடம் ஸ்தூல சரீரம். மனம், சரீரம், பிராணன் ஒன்றையொன்றை சார்ந்திருக்கிறது. மனம் உடலில் இல்லையென்றால் சரீரம் ஜடமாகி விடும், நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகிவிடும். மனதை இந்த உலகை அனுபவிக்க வேண்டுமானால், இந்த தேடல் தேவைப்படுகிறது. பிராணன் செயல்பட உடலிருக்க வேண்டும்.
ஸ்லோகம்–26
- இந்த உடல் எதனால் தாக்கப்படுகிறது? ஐந்து பிராணன்கள்தான் இந்த உடலை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
- நேதி, நேதி என்று ஆத்ம தத்துவத்தை விளக்கப்பட்டிருக்கிறது
- இந்த ஆத்மா அழிக்கப்படுவத்தில்ல, எதையும் அழிக்காது.
க்ருஹ்யம் – கிரகிக்கப்படுவது; அக்ருஹ்யதே – கிரகிக்கபடாதது,
அப்பிரமேயம்-எந்தப்பிரமானங்களாலும் விளக்க முடியாது.
அஷீர்ய-அழுகாமல் இருப்பது,
ஆத்மா அழுகிப்போகும் தன்மையில்லாததால் அது அழுகிப் போவதில்லை, நிர்குண, நிர் அவயவமாக இருப்பதால்; எத்னோடும் சம்பந்தம் இல்லாத சுபாவம் உடையது, அதனால் எதனோடும் ஒட்டுவதில்லை. எதுவும் அதை தாக்க முடியாததினால், அதை அழிக்க முடியாது.
பிரம்மனுடைய இருப்பை அறிவது எவ்வாறு?
இதை உபநிஷத் என்ற பிரமானத்தின் மூலமாக அடையக்கூடியது. இது அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். பிரம்மத்தை அறிதல் என்பது அடைதல் என்பதாகும். நம்முடைய அறியாமையால் நாம் பிரம்மத்திலிருந்து விலகி இருக்கிறோம்.
ஸ்லோகம்–27
யாக்ஞவல்கியர் அங்குள்ள பிராமணர்களை பார்த்து, “உங்களில் யாராவது கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேட்கலாம்” என்று அழைத்தார். யாரும் முன்வராததால், தானே ஒரு கேள்வியைக் கேட்கிறார்.
ஸ்லோகம்–28
மரத்தையும், ஜீவனையும் ஒப்பிட்டு விவரிக்கிறார்.
மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டால் அது மீண்டும் முளைக்காது. மரணத்திற்கு பிறகு இந்த ஜீவன் மீண்டும் பிறப்பதற்கு எது காரணமாக இருக்கிறது. அவன் பிறந்து பிறந்து இறக்கிறான் என்றால் அது தவறு. அவன் மீண்டும் பிறப்பதில்லை. இந்த சரீரம்தான் பிறக்கிறது பின் இறக்கிறது. பிரம்மத்தை யாரும் பிறப்பிக்கவில்லை அது எப்பொழுதும் ஞான ஸ்வரூபமாக இருக்கின்றது. இதுதான் ஜீவனின் மூலம். இது ஆனந்த ஸ்வரூபம், சாந்தம், சிவம், எதைக் கொண்டும் அளக்க முடியாது. இந்த நிர்குண பிரம்மமே சகுண பிரம்மமாகவும் தோன்றுகிறது. அனைத்துக்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது.
மனிதர்கள் அக்ஞானிகள், ஞானிகள் என்று இருவகையாக பிரித்தால் செல்வத்தை தானம் போன்ற கர்மத்தை செய்கின்றவர்களுக்கு பிரம்மன் பலன் தரும் இருப்பிடமாக இருக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கேற்ற பலன்களை இது வழங்குகிறது. செல்வத்தை தியாகம் செய்பவர்களுக்கு நிர்குண பிரம்மன் ஆதாரமாக இருக்கும். ஆசையை விடுபவர்களுக்கு இதுவ கதியாக, ஆதாரமாக இருக்கிறது.
சங்கரரின் விசாரம்:
ஆனந்தம் (Bliss) என்ற சொல்லப்படுகிற பிரம்மத்தைப் பற்றி விசாரம்:
ஆனந்தம் என்ற வார்த்தை இன்பத்தை அனுபவிக்கும் விஷயத்தைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்தில் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாக கூறப்படுகிறது. பிரம்மத்தின் லக்ஷணமாக இந்த ஆனந்தம் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரம்மானந்தமானது:
ஸம்வேத்ய சுகம் – அனுபவிக்கப்படும் இன்பமா?
அஸம்வேத்ய சுகம் – அனுபவிக்க முடியாத இன்பமா?
என்ற சந்தேகத்தை சங்கரரே எழுப்புகிறார்.
இங்கு எதனால் அனுபவிக்க முடியாத இன்பம் என்று சந்தேகம் வருகிறது என்றால் வேதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை வைத்தே இந்த சந்தேகம் எழுகிறது. பிரம்மத்தை யாரும் அனுபவிக்க முடியாததாக இருக்கிறது என்று வேதம் உரைக்கிறது
கேள்வி பிரம்மனிடம் இருக்கும் ஆனந்தம் அனுபவிக்க முடியும். ஞானி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.
பதில் பிரம்மத்தை அனுபவிக்க முடியும் என்று சொன்னால், பிரம்மம் அறியப்படுவதில்லை என்ற ஸ்ருதியின் வாக்கியத்திற்கு முரண்பாடாக இருக்கும். பிரம்மானந்தத்தை அனுபவிக்கும்போதே அது முடிந்து விடும் என்ற வருத்தத்துடன் இருப்பார்கள். பிரம்மம், ஞானி, அக்ஞானி இவர்களில் யார் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள்?
- கர்ம, கர்த்திரு விரோதம் – அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது. எனவே பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
- அக்ஞானியும் பிரம்மானந்தத்தை அனுபவிக்க முடியாது ஏனென்றால் அவன் பிரம்மத்தையே அறியவில்லை, அடையவில்லை
- ஞானி பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறான். முக்தன் பிரம்மத்திற்கு வேறுபடாதவன் என்றால் அவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது எனெனில் இவனே பிரம்மனாக இருத்தலால். அவன் வேறுபட்டவன் என்றால் பிரம்மத்தை அடையவில்லை, அறியவில்லை என்றாகி விடும்.
ஜீவன் முக்தனாக இருக்கும்போது வேண்டுமானால் பிரம்மானந்தத்தை அனுபவிக்கலாம், ஏனெனில் இந்த சரீரத்தை வைத்துக் கொண்டு வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இறந்த பிறகு விதேஹ முக்தியில் எந்த உபாதியும் இல்லாததால் இவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. பிரம்மானந்தத்தை அனுபவிப்பது தான் மோக்ஷம் என்றால். விதேஹ முக்தியில் அவனால் அனுபவிக்கவே முடியாது.
பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை நாம் அடைகின்றோம். பிரம்மம் நம்மிடத்திலே இருக்கிறது. எனவே இதை அடைந்தால் பிரம்மமாகவே ஆகிவிடுவோம். பிரம்மத்தை அறிவதால் நமக்கு மனநிறைவும், சுகமும், இன்பமும் கொடுக்கிறது. அது அனுபவத்திற்கு வருகிறது.
பிரம்ம ஸ்வரூவ சுகம் – அது அனுபவத்திற்கு உட்படாதது
பிரம்ம ஞான சுகம் – இது அனுபவத்திற்குட்பட்டது
ஞான நிஷ்டையின் போது இன்பமும், சுகமும், மனநிறைவும் இயல்பான விஷயமாகி விடுகிறது. விஷய சுக-துக்கத்தை அனுபவிப்பவன் அக்ஞானி, பிரம்மஞான ஆனந்தத்தை அனுபவிப்பவன் ஜீவன் முக்தன்.
தொகுப்புரை:
முதல் மூன்று பகுதிகள் உபாஸனையாகளையும், சில பண்புகளையும் விளக்குகிறது.
கடைசி ஆறு பகுதிகள் – வேதாந்த விசாரமும், பிரம்ம வித்யாவையும் விளக்குகிறது.
பகுதி–1
சில உபாஸனைகள், சில பண்புகள். ஜீவன் மரணத்தின் பிடியில் இருக்கிறான். இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயம். ஸ்வாபாவிக உபாஸனை, நம் விருப்பப்படி செய்யும் செயல்கள். நம்முடைய கரணங்களை அந்தந்த தேவதைகளோடு ஒப்பிட்டு தியானம் செய்வதால் அவைகள் தூய்மையடைகிறது அதன் மூலம் சித்தஸுத்தியை அடைகிறோம். சம்பத் உபாஸனை – சிறிய தியானத்தின் ஒன்றில் பெரிய தியானத்தின் பலனை அடையலாம்.
பகுதி–2
இரண்டு விதமான ம்ருத்யு அறிமுகப்படுத்தப்பட்டது. அவைகள் கிரகம், அதிகிரகம். கிரகம் என்பதற்கு நம்மை பிடித்துக் கொள்ளுதல் என்று பொருள், அதிகிரகம் என்பதற்கு கிரகத்தை தன் வசத்தின் வைத்துக் கொள்வது என்று பொருள். ஜீவன் இந்த இரண்டின் வசத்தில் இருக்கின்றான். நாம் இந்திரியத்தின் வசத்தில் இருக்கின்றோம். விஷயங்கள் இந்திரியங்களை தன் வசத்தில் வைத்திருக்கிறது
மிருத்யுவுக்கு ம்ருத்யு இருக்கிறதா என்றால் இருக்கிறது அதுதான் ஆத்மஞானம். நெருப்பு மிருத்யு என்றால் அதை அணைக்கும் நீர் அதனுடைய ம்ருத்யு. ஞானியின் இறப்பிற்கு பின் என்ன நிலையை அடைகின்றான். ஸ்தூல, சூட்சும சரீரங்கள் அந்தந்த ஸ்தூல,சூட்சும சரீரங்களுடன் கலந்து விடுகிறது. ஆனால் அவரது பெயர் மட்டும் பலகாலம் நிலைத்து இருக்கும். அக்ஞானி இறந்த பின் தேவதைகளுடன் ஒடுங்கி மீண்டும் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பு அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்படுகிறது.
பகுதி–3
ஹிரண்யகர்ப்பலோகம் வரை அனாத்மாதான், சம்சாரம்தான். கர்மபல விசாரம் செய்யப்பட்டது. புண்ணியத்தினால் மோட்சத்தை அடையமுடியாது. எனவே பாவத்தையும் விட்டுவிட வேண்டும், புண்ணியத்தையும் விட்டுவிட வேண்டும். அறியாமையால் அனுபவிக்கும் துயரங்களை போக்க அறிவைத்தான் அடைய வேண்டும். கர்மங்கள் சாதனமாக இருக்க முடியாது.
பகுதி–4
எது சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரம்மமோ அதை உபதேசம் செய்யுங்கள். அதுவே உன்னுடைய ஆத்மாதான். அது எந்தவித பிரமாணமில்லாமல் தானே பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இருக்கிறேன் இன்பதற்கு எந்த பிரமாணமும் தேவையில்லை. அதுபோல ஆத்மாவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. திருஷ்டி, திரஷ்டா என்ற சொற்களின் பொருள் விளக்கம் சொல்லப்பட்டது. திரஷ்டா – சவிகார உலகம், நிர்விகார ஆத்மா. மனம் இந்த உலகத்தை அனுபவிக்கிறது; ஆத்மாவுக்கு இது திரஷ்டாவாக இருக்கிறது ஆனால் இதை பார்க்க முடியாது
பகுதி–5
பாண்டித்யம்-பாலயம், மௌனம்-அமௌனம், ஆத்மஸ்வரூபம்-ஆத்மா ஆகியவைகள் துயரமற்ற ஸ்வரூபம் என்று விளக்கப்பட்டது.. பசி,தாகம், சோகம், மோகம், ஜரா, ம்ருத்யு, இப்படிபட்ட துயரங்களற்றது ஆத்மா. இரண்டு சாதனங்கள் கூறப்பட்டது அவைகள் ஞானம், சந்நியாசம். ஞானம் அடைவதுதான் உண்மையான லட்சியம். இந்த ஞானத்தை அடைய உதவி செய்வது சந்நியாசம். ஞான நிஷ்டைக்கு சந்நியாசம் உதவி செய்யும். சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளை பயன்படுத்தி ஞான நிஷ்டையடைய சந்நியாசம் உபயோகப்படுகிறது. அனாத்மா இச்சா, ஆத்மா இச்சா. புத்திரன், செல்வம், உலகம் இவைகளின் மீதுள்ள ஆசையை விட்டொழிய வேண்டும், சாத்திய இச்சையை விட வேண்டும், பிறகுதான் சாதன இச்சையை விட வேண்டும்.
பாண்டித்யம் – சிரவணத்தை முழுமையாக முடித்து விட்டு ஞான பலத்துடன் இருக்க வேண்டும். குழந்தையைப் போல் இருக்க வேண்டும். தன்னைப்பற்றிய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதிருக்க வேண்டும். ஆத்ம ஞானத்தை மனனம் என்ற சாதனத்தின் துணைக் கொண்டு அடைந்த ஞானத்தை நிலை நிறுத்த வேண்டும். பிறகு நிதித்யாஸத்தின் மூலம் ஞான நிஷ்டை அடைய வேண்டும், அப்போதுதான் பிரம்மனாகிறான். ஜீவன் முக்தன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது, அவன் எப்படியிருக்கிறானோ அதுதன் அவனுடைய லட்சணம். இது நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருக்கும்
பகுதி–6 :அனைத்துக்கும் சத்யமாக இருப்பது, அதி சூட்சுமமாக இருப்பது
பகுதி–7 : அந்தர்யாமி பிராமனத்தில் விராட்டுக்கு ஆந்தரமாக இருப்பது, ஹிரண்யகர்ப்ப தத்துவம். எல்லா தேவதைகளும், பூதங்களும் நம் உடலில் உள்ள சூட்சும சரீரத்தை குறிக்கிறது
பகுதி–8 அக்ஷர பிரமானம்: அந்தர்யாமிக்கும் ஆதாரமாக இருப்பது ஆகாசம்-ஈஸ்வரன். அக்ஷர ஸ்வரூபத்தை, அனாத்மாக்கள் அனைத்தையும் நீக்கி விளக்கப்படுகிறது
பகுதி–9 ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள், மகிமைகள் விளக்கப்பட்டது. மரத்தையும், மனிதனையும் ஒப்பிட்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டது. பிரம்மானந்தத்தின் பலனை அனுபவிக்கிறோம்; ஸ்வரூபானந்தம் அனுபவிக்க முடியாது காரணம் அதுவாக அவன் இருப்பதால்.
—-0000—-
ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-7
அத்யாயம்-4
இந்த அத்தியாயம் ஆறு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் உபாஸனையைப் பற்றியும், சில பண்புகளும் விளக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஐந்து பகுதிகளும் பிரம்ம வித்யாவை போதிக்கிறது.
இதில் ஜனகர் என்கின்ற பேரரசர் ஞானத்தை பெறுவதற்கு தகுதியை அடைந்துள்ளவர், யாக்ஞவல்கியரிடமிருந்து பிரம்ம ஞானத்தை பெறுவதாக அமைந்துள்ளது.
———————————————————————————————————————————————
பகுதி-1 : ஷடாச்சார்ய பிராமனம்
———————————————————————————————————————————————
ஸ்லோகம்–1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அப்போது யாக்ஞவல்கியர் அந்த அரசவைக்கு வந்தார். ஜனகர் அவரை வரவேற்று எது உங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது? பசுக்களை தானம் பெற வந்தீர்களா அல்லது சூட்சுமமான விஷயங்களை விசாரம் செய்வதற்கா!! என்று கேட்டார். அவர் அதற்கு இரண்டுக்குமேதான் என்று பதிலளித்தார்.
ஸ்லோகம்–2
எதை மற்ற ஆசிரியர்களிடமிருந்து உபதேசமாக பெற்றீர்களோ அதை எனக்கு கூறுவாயாக என்று யாக்ஞவல்கியர் கேட்டார். ஜனகர் கூறலானார். ஜித்வான் என்ற ஆசிரியரிடமிருந்து கற்றவை, எப்படி வாக் (அக்னி) தேவதையை உபாஸனை செய்ய வேண்டும். இதைக் கேட்ட யாக்ஞவல்கியர், “நம்மை சுத்தப்படுத்தும் மூன்று விதமான ஆதாரங்களான தாய், தந்தை, குரு உடையவர்களிடமிருந்து வரும் உபதேசங்கள் பிரமானத்திற்கு முரணாக இருக்காது, உண்மையானதாக இருக்கும்.
மாத்ருமான் (தாய்) – இவரிடமிருந்து பெற வேண்டிய அன்பை முழுமையாக பெற்றவர்கள்.
தாயிடத்தில் அடையும் தூய்மை – அபிநிவேஷம் – பிறந்த குழந்தைக்கு அன்பும், ஆதரவையும் கொடுத்து அரவணைத்து வளர்க்க வேண்டும். இதன் மூலம் உடல்பலத்தையும் மன பலத்தையும் பெறுவோம். இவ்வாறு வளர்ந்த குழந்தைகளால்தான் அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். குழந்தைகள் தாயை தெய்வமாக பாவிக்கும், அவள்தான் எல்லாமே என்று நினைக்கும்.
பித்ருமான் (தந்தை) – இவரிடமிருந்து பெற வேண்டிய பலனை அடைந்தவர்கள், இவர் குழந்தையை கல்வி கற்க ஆசிரியரிடம் அறிமுகப்படுத்துகிறார். நல்லொழுக்கமும், பண்பும் வளர்வதற்கு உதவி புரிபவர்.
ஆசார்யவான் (குரு) – ஆசாரியடமிருந்து பெற வேண்டிய அறிவையும், பண்பையும் முழுமையாக பெற்றவர்கள். இவர் விதவிதமான சாஸ்திரங்களை அறிந்தவர், நம்மை ஆசாரத்தில்(ஒழுக்கத்தில்) நிலை நிறுத்துபவர் தானும் அதுபோல் வாழ்ந்து வருபவர்.
இவ்வாறு இந்த மூன்று பேர்களிடமிருந்து அடைய வேண்டியதை முழுமையாக அடைய பெற்றவர்களின் உபதேசங்கள்தான் முழு பலனை தரும்.
* நாம் எதை அனுபவித்திருக்கிறோமோ அதைத்தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.
* நமக்கு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுக்கும் உரிமையிருக்கிறது
* ஈஸ்வரனிடமிருந்து இதுவரை நமக்கு கிடைக்காததையெல்லாம் பெறலாம்.
ஜனகர் மேலும் அவர் பெற்ற வாக் உபதேசத்தை விவரித்தார். வாக் என்ற தத்துவத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். அக்னியை பிரம்மமாக தியானிக்க வேண்டும் என்று அந்த குருவிடம் உபதேசம் பெற்றேன். யாக்ஞவல்கியர் இதை அங்கீகரித்தார். வாக்கைப் பற்றி இவ்வளவுதான் கூறினாரா? வாக் எங்கே தங்கியிருக்கிறது (ஆயதனம்), இதற்கு ஆதாரமாக இருப்பது எது? இவைகளையெல்லாம் பற்றி கூறினாரா? என்று கேட்க, ஜனகர் இல்லை என்று பதிலளித்தார். அப்படியென்றால் நீ வாக்கைப்பற்றி நாலில் ஒரு பங்குதான் அறிந்திருக்கிறாய் இப்படி உபாஸிப்பதனால் ஒரு பயனும் கிடைக்காது. எனவே நீ நான்கையும் சேர்த்து தியானிக்க வேண்டும் என்று யாக்ஞவல்கியர் கூறினார். ஜனகர் மீதி மூன்றையும் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டினார்.
வாக்கின் இருப்பிடம் வாக் என்ற இந்திரியம்தான், அதற்கு ஆதாரமாக இருப்பது ஆகாசம் இதை பிரக்ஞா (ஞானம், அறிவு) என்ற பெயரால் உபாஸிக்க வேண்டும். இந்த பெயர் வரக்காரணம் ஞானமானது வாக் இந்திரியத்தின் அடிப்படையில்தான் கிடைக்கிறது. நாம் யார், எவ்வளவு திறமையுடையவன் என்பது நம் பேச்சிலிருந்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். வாக்கினால் அடையும் பலன்கள்:
- எல்லா உறவுகளையும் அடைதல்
2. அனைத்து வேதங்களையும் அறிதல்
3. சாஸ்திர ஞானத்தை அடைதல்
4. இதிகாச, புராணங்களைப் பற்றிய அறிவை அடைதல்
இந்த வாக்கை பிரக்ஞா என்று தியானித்தால் நம்முடைய பேச்சுத் திறமை வளரும். எப்படி பேசுவது, எந்த நேரத்தில் எதை பேசுவது போன்ற நுணுக்கங்களையெல்லாம் அடையப் பெறலாம். இதனால் வாக்கானது நம்மை மீறி போகாது, நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். துயரத்தை கொண்டு வராது, பகைமையையும் ஏற்படுத்தாது. இகலோக, பரலோக பலன்களையும் அடையலாம், வாழும் போது தேவனாகவும், இறந்த பிறகு அந்த தேவதையுடன் ஒன்றாக கலந்து விடுவோம். எனவே இவன் எது சொன்னாலும் அது பலிக்கும். இதை கேட்ட ஜனகர் மகிழ்ந்து இந்த உபதேசத்தை பெற்றதற்காக உங்களுக்கு ஆயிரம் பசுக்களையும், காளைகளையும் உங்களுக்கு வழங்குகிறேன் என்று கூறினார். யாக்ஞவல்கியர் அதை வாங்க மறுத்து, “உபதேசத்தை முழுமையாக முடிக்காமல் எதையும் வாங்காதே என்று என் தந்தை கூறியிருக்கிறார், நானும் அதை பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார்.
ஸ்லோகம்–3 லிருந்து 12 வரை
ஆசிரியர் |
இருப்பிடம் |
தேவதை |
பெயர் |
பிரதிஷ்டா |
குறிப்பு |
உதங்கா |
பிராணன் |
வாயு |
பிரியம் |
ஆகாசம் |
பிரியமாக தியானிக்க வேண்டும் |
பர்கு |
கண்கள் |
சூரியன் |
சத்யம் |
ஆகாசம் |
பிரியமாக தியானிக்க வேண்டும் |
பரத்வாஜ |
காது |
திசைகள் |
அனந்தம் |
ஆகாசம் |
பிரியமாக தியானிக்க வேண்டும் |
சத்யகாம |
மனம் |
சந்திரன் |
ஆனந்தம் |
ஆகாசம் |
மனதை சந்திரனாக தியானித்தல் |
ஸாகல்ய |
இதயம் |
பிரஜாபதி |
ஸ்திதி |
ஆகாசம் |
இதயத்தை தியானித்தல் |
———————————————————————————————————————————————
பகுதி-2 : கூர்ச (कुर्च) பிராமனம்
———————————————————————————————————————————————
ஸ்லோகம்–1
ஜனகர் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று குருவை அணுகினார் பிறகு அவரை வணங்கி எனக்கு உபதேசம் (शाधी) செய்யுங்கள் என்று வேண்டினார். குருவானவர் “ஞானத்தையும், ஞான சாதனத்தையும் கொடுக்க வேண்டும்” என்ற சங்கரர் கூற்றுபடி யாக்ஞவல்கியர் தன்னை குருவாக அணுகிய ஜனகருக்கு உபதேசத்தை ஆரம்பித்தார்.
நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு தேவையான வாகனத்தை எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். அதேபோல மோக்ஷத்தை அடைய வேண்டுமானால் சில சாதனங்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். ஜனகரை உத்தம சிஷ்யனாக, ஞான சாதனத்தைக் கடைபிடிக்கிறார் என்று அங்கீகரித்ததுடன், அவர் ஞான உபதேசத்திற்கு தகுதியானவர் என்றும் சொல்கிறார். நீ உபாஸனைகளை மேற்கொண்டவனாகவும், அதன் பலனாய் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு அமைதியாக இருக்கிறாய். நல்லொழுக்கத்துடனும், சித்தஸுத்தியுடையவனாகவும் இருக்கிறாய், செல்வந்தனாக இருந்தபோதிலும் இவ்வாறாக இருக்கிறாய். வேத சாஸ்திரத்தை படித்தவனாகவும் தேவதைகளை சரியானபடி உபாஸனை செய்கின்றவனாக இருக்கிறாய். இவ்வாறாக ஜனகருடைய தகுதியை அங்கீகரித்தார். இப்படிபட்ட குணங்களை உடைய நீ மரணத்திற்குப்பிறகு எங்கு செல்வாய் என்று தெரியுமா?” என்று யாக்ஞவல்கியர் கேட்டார். ஜனகர் தனக்கு தெரியாது என்றும், தான் எப்படிபட்டவனாக மாறுவேன் என்றும் தெரியவில்லை என்று பதில் கூறினார். அதற்கு குருவானவர் “நான் அதைக் குறித்து உனக்கு உபதேசம் செய்யப்போகிறேன், நீ எங்கு செல்வாய் என்று கூறுகிறேன். நான் கொடுக்கும் ஞானத்தால் நீ எப்படிப்பட்ட நிலையை அடைவாய் என்றும் உபதேசிக்கிறேன் என்று மேலும் கூறினார். ஜனகரும் அதைச் உபதேசியுங்கள் பகவானே என்று பணிவுடன் வேண்டினார்.
ஸ்லோகம்–2
இந்த மந்திரத்தில் விஸ்வன் அறிமுகப்படுத்தப்படுகிறான். சமஷ்டி, வியஷ்டி ஐக்கியமும் விளக்கப்படுகிறது. விராட் என்றழைக்கப்படுகின்ற வைஷ்வானரனிடமிருந்து பிரியாத விஸ்வனுக்கு இந்தஹ (इन्धः) என்று பெயர். இந்த சொல்லுக்கு எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம். எந்தவொரு அறிவு தத்துவம் விராட் ஸ்தூல உலகங்களனைத்தும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அவனேதான் நம் வலது கண்ணில் அமர்ந்திருக்கின்றான். தேவர்களெல்லாம் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. இந்த உலகத்திலுள்ள சில நியதிகளையும் மறைத்து வைத்திருப்பார்கள். வைஸ்வானரன் தன்னை மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றான். இந்திரன் என்று பெயரை மாற்றி வெளிப்படுத்தி கொண்டு பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார். தேவர்களெல்லாம் தன்னை பரோக்ஷமாக இருப்பதையே விரும்புகிறார்கள். தன்னை நேரிடையாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.
ஸ்லோகம்–3
விஸ்வன் விராட்டை அனுபவிக்கின்றான், ஜீவன் இந்த உலகத்தை அனுபவிக்கிறான் என்றால் ஈஸ்வரனையே அனுபவிக்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாம். தைஜஸனும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றாக எடுத்துக் கொண்டு சில கருத்துக்கல் சொல்லப்பட்டிருக்கிறது.
- தைஜஸனுடைய இருப்பிடம் – இதயத்தினுள் இருக்கின்ற ஆகாசம்
2. தைஜஸனுடைய உணவு – நாம் உட்கொள்ளும் உணவினுடைய அதி சூட்சுமமான பகுதி
3. தைஜஸனை மூடியிருப்பது – நமது இதயம்
4. தைஜஸன் சஞசரிக்கின்ற இடம் – ஹிதா என்று அழைக்கப்படுகின்ற நாடி,
இந்த நாடியானது இதயத்தின் மேல் பகுதியிலிருந்து உடம்பின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இதன் விட்டம் நம் தலைமுடியின் விட்டத்தின் ஆயிரத்தில் ஒரு பங்காகும். ஜீவனை சுகமாக வைத்திருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கிறது. அவன் நாடிக்குள் செல்லும் போது அனுபவிக்கும் உலகம் ஸம்ஸ்காரங்களை பொறுத்து அமைகிறது. ஸ்தூல சரீரத்திற்கு வேறான ஒன்றை அனுபவிக்கின்றான், அதாவது தைஜஸன் ஹிரண்யகர்ப்பனை அனுபவிக்கின்றான்.
ஸ்லோகம்–4- பிராஞ்ச (प्राञ्च्) விசாரம் – பிராஞ்ச – காரண ஸ்வரூபம்
ஹிரண்யகர்ப்பனின் எல்லா அங்கங்களும் காரணத்தில் லயம் அடைந்துள்ளது. சூட்சும சரீர அங்கங்கள் காரணத்தில் ஒடுங்கி விடுகின்றது. ஒவ்வொரு அங்கங்களும் அந்தந்த இடங்களில் ஒடுங்கி விடுகின்றது. ஒவ்வொரு திசையிலும் உள்ள பிராணனாது தன்னுடைய காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது. கிழக்கிலுள்ள பிராணனாது கிழக்கிலுள்ள காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது. இவ்வாறு எல்லா திசைகளிலும் உள்ள பிராணனன்களானது அந்தந்த திசைகளின் காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது. இந்த மூன்று உபாதிகளும் நீக்கப்பட்டு ஸ்ருஷ்டிக்கு ஆதாரமாக இருப்பதைத்தான் நாம் ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும. யாருமேயில்லாத நிலையில் நான் மட்டும் எஞ்சியிருப்பதுதான் ஆத்மா. இது எந்தப் பிரமானத்தின் மூலமாகவும் கிரகிக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாதது, என்றும் அழியாதது எதனோடும் சேர்வதுமில்லை அதேபோல எதுவும் இதனோடு சேர முடியாதது. இது எந்தவிதமான மாற்றமுமடையாதது. இவ்வாறாக உபதேசித்த பின்னர் ஜனகரை பார்த்து, அரசே நீங்கள் இப்போது பயமற்றவராக உயர்ந்து விட்டீர்கள், என்னுடைய உபதேசத்தை நன்கு புரிந்து கொண்டீர்கள், அப்படி புரிந்து கொள்ளும் போதே அபயத்தை அடைந்து விட்டீர்கள். பிரம்மத்திற்கு இன்னொரு பெயர் அபயம். நம் மனதினுடைய தர்மம் பயந்து கொண்டிருத்தல், இந்த தர்மமுமற்ற பிரம்மத்தை அடைந்து விட்டாய். பிரம்ம ஞானத்தின் பலனாக மோக்ஷத்தையும் அடைந்துள்ளாய். பயம் என்பது சம்சாரத்தின் பெரிய விஷயம். ஜனகர் குருவை பார்த்து குருவான் அபயத்தை அடைந்தேன். பகவானே உங்கள் உபதேசம் என்னை அபயத்தை அடையச் செய்துவிட்டது. உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம், இதற்கு பரிசாக இந்த நாட்டையும், என்னையும் உங்களுக்கு தருகிறேன். என்று கூறினார். நாம் எதை அதிகமாக விரும்புகிறோமோ, எதை அதிகமாக மதிக்கிறோமோ அதைத்தான் பிறருக்கு பரிசாக கொடுக்க வேண்டும். குருவிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக இதைக் கூறலாம். நமக்கு பயன்படாத பொருளை பரிசாக கொடுக்க நினைப்பது நாம் பெற்ற உபதேசத்தின் பலனை அடையவில்லை என்பதை குறிக்கும்.
குறிப்புக்கள்:
- பிரம்மத்தை உபதேசிப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கருணையின் காரணமாக செய்ய வேண்டும்.
- ஞானத்தை அடைந்த பலனால் வரும் தியாகம், எந்தப் பொருள் மீதும் பற்றில்லாமல் இருப்பார்கள்.
- ஜனகர் தம் நாட்டை தானமாகக் கொடுப்பது அவரடைந்த ஞானப்பலனை காட்டுகிறது.
- தன்னையே கொடுத்தல் என்பது, தன் அகங்காரத்தை ஒழித்த நிலையைக் காட்டுகிறது.
———————————————————————————————————————————————
பகுதி-3 : ஸ்வயம் ஜோதி (स्वयँ ज्योति) ப்4ராமனம்
———————————————————————————————————————————————
முகவுரை
ஆத்மா ஸ்வயம் ஜோதி என்பதுதான் மையக் கருத்து. ஜோதி என்பது சுய பிரகாச சைதன்யம். எங்கிருந்தும், எதனிடமிருந்தும் ஆத்மாவுக்கு சைதன்யம் ஸ்வரூபம் வரவில்லை, தானே அறிவு ஸ்வருபமாக இருக்கிறது.
அவஸ்தா த்ரய விசாரத்தின் மூலம் தர்க்க ரீதியாக ஆத்மாவானது விளக்கப்படுகிறது. எட்டுவித ஸ்வரூபங்கள் மூலம் இது விளக்கப்படுகிறது.
- சரீர வியதிரிகம் – ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறானது
- சுத்தத்வம் – தூய்மையானது, உடலானது அசுத்தமடைவதற்கு வாய்ப்பிருக்கிறது
- ஸ்வயம்ஜோதி – தானே ஒளிர்வது
- அலுப்தசக்திமத்வம் – நிலையான சக்தி ஸ்வரூபம், வந்துபோகும் சக்தி, நிலையற்ற சக்தி
- அஸங்கத்வம் – எதனோடும் சம்பந்தப்படாதது
- நிரஸிதய ஆனந்த – அளவிட முடியாத ஆனந்த ஸ்வரூபம்
- அத்வைத்வம் – இரண்டற்றது
- த்ருஷ்டி அலோபம் – சைதன்யம் என்றும் தொடர்ந்து விழித்துக் கொண்டிருக்கும்
முதல் ஐந்து தத்துவங்களையும் கனவு நிலையில் நிரூபிக்கப்படுகிறது, கடைசி மூன்று தத்துவங்கள் ஆழ்ந்த உறக்கத்தை கொண்டு நிரூபிக்கப்படுகிறது.
ஸ்லோகம்–1
ஜனகரை யாக்ஞவல்கியர் மீண்டும் பார்க்க சென்றார் அப்போது நான் இன்றைக்கு ஒன்றும் பேசப்போவதில்லை என்று கூறினார். ஒரு சமயம் அவர் ஜனகரின் அக்னிஹோத்ர அறிவை வியந்து பாராட்டி ஒரு வரத்தை கொடுத்தார் அதை நினைவுப்படுத்திய ஜனகர் நான் சில கேள்விகளை கேட்க போகிறேன் அதை வரமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அவரும் அதை ஏற்றுக் கொண்டு அனுமதித்தார். ஜனகர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
ஸ்லோகம்–2
இந்த ஜீவாத்மா எந்த ஜோதியினால் செயல்படுகிறான்? ஜீவாத்மா செயல்படுவதற்கு ஜோதியாக இருப்பது எது? என்ற கேள்வியை ஜனகர் கேட்டார். அதற்கு சூரியனுடைய ஜோதியினால்தான் நாம் செயல்படுகிறோம்.
இந்த ஸரீரம் விவகாரத்திற்கு யோக்யதை அல்ல, ஆனால் தேகத்தின் விவகாரம் நடப்பதை பார்க்கிறோம். இதற்கு ஜோதியாக இருப்பது எது? இந்த கேள்வியானது மூன்று வகையில் விசாரம் செய்யப்படுகிறது. அவைகள்:
- எது நம்முடைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அதே சமயம் சரீரத்திற்கு வேறுபட்டும் இருக்கிறது
- சரீரத்திற்குள்ளே அந்த ஜோதி இருக்கின்றது
- சில சமயம் இந்த உடல் ஜோதியை பயன்படுத்துகிறது, அது சில சமயம் இல்லாமலும் செயல்படுகிறது.
மூன்றாவது விகல்பம் சரியாக இருக்காது ஏனென்றால் ஜோதி இப்படி இருந்தால் எந்த விவகாரமும் நிச்சயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது. ஜோதி இருக்கும்போதும், இல்லாத போதும் விவகாரம் நடக்கலாம்.
இரண்டாவது விகல்பமும் சரியாக இருக்காது ஏனென்றால் சரீரத்தின் ஒரு அங்கமாக இருந்தால் சரீரமே ஆத்மாவாக இருக்கும் அதனால் அழிவிருக்காது. ஆனால் இயற்கையில் இந்த சரீரம் அழியும் தன்மையுடையது
முதல் விகல்பம்தான் சரியானது. சரீரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றினால்தான் இது செயல்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
ஜனகரே இதை தர்க்க ரீதியாக சிந்தித்து அறியக்கூடிய தகுதியுடையவராக இருந்தாலும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறார் என்றால் இந்த தர்க்கம் வெகு சூட்சுமமாக இருக்கிறது இதை குருவின் துணைக் கொண்டுதான் அறிய முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.
எந்தவொரு உடலிலிருந்து விவகாரம் நடக்கிறதோ அந்த விவகாரமானது அதனிடமிருந்து வேறுபட்ட ஜோதியினால் சாத்தியமாகிறது. ஒரு ஜட வஸ்து நகர்வதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறான ஒன்றின் உதவியால்தான் முடியும். யாக்ஞவல்கியர் சூரியன்தான் ஜோதியாக இருக்கிறது என்று பதில் கூறினார். சூரியன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.
ஸ்லோகம்–3
சூரியன் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார். அதற்கு யாக்ஞவல்கியர் சந்திரன் ஜோதியாக இருக்கும். சந்திரன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.
ஸ்லோகம்–4
சூரியனும், சந்திரனும் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார். அதற்கு யாக்ஞவல்கியர் அக்னிதான் ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார்,
ஸ்லோகம்–5
சூரியனும், சந்திரனும், அக்னியும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார். அதற்கு யாக்ஞவல்கியர் வாக்கானது (சப்தம்) ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார், இதன் உதவியால்தான் ஜீவன் செயல்பட முடிகிறது. வாக் என்ற சொல்லுக்கு எல்லா இந்திரிய விஷயங்களையும் சேர்த்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்கள்தான் இந்திரியங்களை செயல்பட வைக்கிறது. ஒருவன் தன் கையையே பார்க்க முடியாத இருட்டாக இருந்தாலும் சப்தம் வரும் திசை நோக்கி போகிறோம், தடைகளை அறிந்து விலகி செல்கிறோம்.
ஸ்லோகம்–6
சூரியனும், சந்திரனும், அக்னியும், வாக்கும், இந்திரிய விஷயங்களும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார். அதற்கு யாக்ஞவல்கியர் ஆத்மாதான் ஜோதியாக இருக்கும் என்று சொன்னார். ஆத்மா என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார்.
விசாரம்-1:
இந்த நான்கும் இல்லாத போது எந்த விவகாரம் நடக்கிறது என்று கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் கனவில்தான் நடக்க முடியும். கனவில் இந்த நான்கும் இல்லை ஆனால் விவகாரம் நடந்து கொண்டிருக்கும். விழிப்பு நிலையில் யாருமே இல்லாத இடத்தில் இந்த நான்கும் இல்லாத நிலையில் கற்பனையான நிலையில் நடக்கும் விவகாரங்களுக்கு உதவும் ஜோதி எது? சமாதி, தியானத்தில் இருக்கும்போதும் விவகாரங்கள் நடப்பதற்கு ஜோதியாக இருப்பது எது?
சங்கரரின் விளக்கம்:
எந்தவொரு விவகாரமும் செய்வதற்கு உதவியாக இருப்பது இந்த உடல், இந்திரியங்களை தவிர்த்து வேறொன்றாக இருக்கிறது. கனவிலும் வேறொன்றினால்தான் விவகாரம் செய்ய முடியும். இங்கு ஐந்து விதமான ஸ்வரூபங்களை கூறுகின்றார்.
- காரிய-காரண வியதிரிக்தம்– காரிய காரண அவபாஸகம். காரியமானது இந்த ஸ்தூல உடல், காரணமாக இருப்பது சூட்சும உலகமும், மனமும் தான். அவபாஸகம் – ஒளிர்விப்பது; வியதிரிக்தம் – வேறானது. உடலுக்கும் மனதுக்கும் வேறானதாக இருந்து கொண்டு ஆனால் அவைகளை பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
- ஸ்வயம் ஜோதி– இந்த ஆத்மா வேறெதைக்கொண்டும் விளக்க முடியாது, தானே விளங்கிக் கொண்டிருப்பது
- அந்தஸ்தம்– உடலுக்கும் மனதிற்கும் வேறுபட்டதாக இருந்தாலும் அதற்குள்ளே இருப்பது. நமக்குள்ளே இருந்து கொண்டு உடலையும் மனதையும் பிரகாசப்படுத்தி கொண்டிருப்பது.
- அப்பிரமேயம் – எந்தக் கரணங்களாலும் கிரகிக்க முடியாதது
- அபௌதிகம்– எந்தப் பூதங்களினாலும் உருவாக்கப்பட்டதில்லை.
விசாரம்–2
கேள்வி: ஆத்மாவுக்கு சொன்ன ஸ்வரூபங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஜடமான ஸ்தூல சரீரத்தை இயக்குவதற்கு அறிவுள்ள ஏதோ ஒன்று இருக்க வேண்டும் இந்த அனுமானத்தை பயன்படுத்தி அறிவை அடைகிறோம். இந்த சரீரமே சேதனமாக இருக்கிறது என்று அனுபவம் சொல்கிறது. அதாவது என் பிரதியக்ஷ பிரமானத்தை வைத்து பார்த்தால் உங்களுடைய அனுமானங்களை வைத்து சொல்கின்ற உடலுக்கு வேறான ஒரு அறிவு ஸ்வரூபம் கிடையாது. உடலானது உணர்வு மயமாக இருப்பதால் வேறொன்று தேவையில்லை.
இரண்டாவது உதவி பெறுவது, உதவி செய்வது இந்த இரண்டும் ஒரே நிலையில்தான் இருக்க முடியும். எனவே சமான ஸத்தால்தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும். அப்படியிருக்கும்போது எப்படி இந்த உடலுக்கு வேறான ஆத்மா உதவி செய்ய முடியும்?
பதில் உன்னுடைய கருத்துப்படி ஸ்தூல உடம்புதான் ஆத்மா என்று வைத்துக்கொண்டால் மரணம் என்பது சம்பவிக்காது. இந்த உடலே சேதனம் என்றால் அதற்கு அழிவே கிடையாது. இது பிரதியக்ஷ பிரமானம்தான். ஏதோ ஒன்று உடலில் இருந்தால்தான் அது உயிர் வாழும், அது சென்றுவிட்டால் இந்த உடல் ஜடமாகி பின்பு அழிந்து விடுகிறது. மரணமடைந்தவுடன் அவன் உணர்வுடன் இருப்பான். இதிலிருந்து தெரிவது இயற்கையாகவே உணர்வு என்பதே கிடையாது. உடலே உணர்வு ரூபமாக இருந்தால் கனவு என்ற அனுபவமே இருக்காது. உண்மையில் கனவு நிலையில் உணர்வுடன் இருக்கிறான். ஸ்தூல உடம்பு ஜடமாக படுத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து உடலுக்கு வேறாக உள்ள ஒன்றுதான் விவகாரத்திற்கு உதவ முடியும்
இரண்டாவது காரணமான சமான ஸத்தில்தான் விவகாரம் நடக்க முடியும். இந்த ஹேது சில சமயங்களில் அது மாதிரி இருக்காது. உதாரணமாக தீயை வளர்ப்பதற்கு அதற்கு வேறான நெய், பெட்ரோல் போன்றவைகள்தான் பயன்படுகிறது. கண்ணாடியில் தெரியும் நம் முகம் பொய்யானது, ஆனால் நம் முகத்திலுள்ள குறைகளிருந்தால் அந்த உண்மையை காட்டும். இவைகள் வெவ்வேறு ஸத்தாவான இரண்டு வஸ்துக்கள். இதிலிருந்து இந்த உடல் உணர்வு ஸ்வரூபமுடையதல்ல என்பது நிரூபிக்கப்படுகிறது.
கேள்வி இந்தியங்களை ஆத்மா என்று எடுத்துக் கொள்ளலாமே?
பதில் கனவில் எந்த இந்திரியமும் பயன்படவில்லை ஆனாலும் கனவில் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்வுடன் இருக்கிறோம்.
கேள்வி ஜனகர் கேட்ட கேள்விக்கு நேரிடையாக ஆத்மா என்று சொல்லியிருக்கலாமே?
பதில் இந்த தேடல் செயல்பட ஒரு ஜோதி தேவை அது உடலுக்கு வேறான ஒன்று என்பதை சிஷ்யன் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து முதலில் சூரியனிலிருந்து ஆரம்பித்து பிறகு கடைசியில் ஆத்மாதான் என்று முடித்தார். எந்தவொரு தேக விவகாரமும் அதற்கு வேறான ஒன்றால் நடக்க முடியும். இந்த விஷயத்தை சிஷ்யன் முதலில் உணரவேண்டும். சரீர வியதிரிக்த அனுமானம் சூரியனிடமிருந்து ஆரம்பித்து ஆத்மாவில் வந்து முடிவடைகிறது.
ஸ்லோகம்–7
ஆத்மாவினுடைய ஸ்வரூபம் என்ன? அதன் தன்மை என்ன? என்பதை விளக்குகிறது. அது புருஷனாக இருக்கிறது. புருஷ: எந்த ஒன்று பூரணமாக இருந்து கொண்டு எதனாலும் விளக்கப்படாமல் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் ஆத்மா. மனதை ஜடமென்று யூகத்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.
யோSயம் ஜ்யோதி புருஷ: இந்த ஜோதி புருஷன்.
விக்ஞானமய: – இருக்கின்ற எண்ணங்களைக் கொண்டு தீர்மானிக்கும் கரணம் புத்தி.
புத்தியினால்தான் அறிவை அடைய முடியும். அதில் பிரதிபலிக்கும் ஆத்மாவினால்தான் இந்த புத்திக்கு அறிவைக் கொடுக்கும் சக்தியை அடைந்திருக்கிறது. அதுவே சிதாபாசன் என்று அழைக்கப்படுகிறது. சிதாபாசனை அடையாளமாகக் கொண்டு அறியப்படுவது ஆத்மா. இது ஆத்மாவை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த உபாதியை எடுத்துக் கொண்டு விசாரம் செய்து இதை உறுதி செய்ய வேண்டும். புத்தியாகவும் அதில் பிரதிபலித்து கொண்டிருக்கின்ற சிதாபாசனாகவும் ஆத்மா வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.
प्रानेष आत्मा स्थितः பிராணன்களுக்குள் ஆத்மா இருக்கின்றது. இங்கே பிராணன்கள் என்று குறிப்பிடுவது ஐந்து பிராணன்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்.
மரங்களுக்கிடையே உள்ள பாறை என்பது அவைகளுக்கு அருகில் உள்ள பாறை என்று எடுத்துக் கொள்ள வேண்டும், ஆத்மா பிராணன்களுக்குள் இந்திரியங்களுக்கு அருகில் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து ஆத்மா இவைகளுக்கு வேறானதாக இருப்பதை அறியலாம். அதுதான் இவைகள் செயல்படுவதற்கு ஆதாரமாக (ஜோதியாக) இருந்து கொண்டிருக்கிறது.
ஹ்ருதயந்த: – புத்தியில் இருக்கின்ற எண்ணங்களுக்கு அப்பாற்பட்டுள்ளது.
ஸ: ஸமான: ஸனுபௌ4 லோகாவனுஸம்சரதி: – இதே ஆத்மாதான் சம்சாரியாக செயல்படுகிறது. அன்யோன்ய அத்யாஸத்தினால் நமக்கு இவ்வாறாக நினைக்கத்தோன்றுகிறது.
ஸ: – அந்த ஆத்மா
ஸ: ஸமானஸன் – புத்தியுடன் அத்யாஸத்தால் ஒன்றாகியதற்குப்பிறகு
உபௌ4 லோகாவ் – இரண்டு லோகங்களுக்கிடையே (இகலோகம், பரலோகம்)
அனுஸம்சரதி: – புண்ணிய, பாவ பலன்களினால் சென்று வந்து கொண்டிருக்கின்றது.
த்4யாயதி இவ – தியானிக்கின்றான்; மனனம், நிதித்யாஸனம் செய்கின்றான்.
லேலாயதி இவ – அங்கும் இங்கும் அலைபவன்
இந்த இரண்டு சொற்களால் (த்யாயதி இவ, லேலாயதி இவ) ஆத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
” इव ” என்ற சொல் பயன்படுத்த வேண்டுமென்றால், அனுபவத்தில் இருக்க வேண்டும். ஆனால் ஆராயும் போது அது இருக்கக்கூடாது. “மித்யா” என்ற சொல் அனுபவத்தில் இருக்கிறது ஆனால் ஆராய்ந்து பார்க்கும் போது அதன் இல்லாமை தெரிய வரும். ஜீவனாகிய நாம் செய்யும் விவகாரங்களை இரண்டாக பிரிக்கிறோம் அவைகள் ஞான விவகாரம், கர்ம விவகாரம். ஞான விவகாரத்திற்கு காரணமாக இருப்பது மூன்று விஷயங்கள் அவைகள் பிரமாதா(அறிபவன்), பிரமானம் (அறிய உதவும் கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்) இந்த மூன்றும் இருந்தால்தான் ஞான விவகார நடைபெறும். இதை திரிபுடீ என்றும் அழைப்பர். த்ரிபுடீ என்பது மூன்று விஷயங்கள் ஒன்றையொன்று பிரிக்க முடியாததாக இருப்பது.
ஸ: த்4யாயதி – ஞான விவகாரத்துடன் கூடியவன், எல்லாவித அறிவு சம்பந்தமான விவகாரத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்.
ஸ: லேலாயதி – எல்லாவிதமான கர்ம விவகாரம்;
கரணம் – கர்மேந்திரியங்கள்,
கர்த்தா – இந்திரியங்கள்
கர்மம் – எதைச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள்.
ஜகத்தானது அதற்கேற்ற சூழ்நிலைகளை கொடுக்கிறது.
நான் ஞான விவகாரம் செய்வது போல் இருக்கிறது, கர்ம விவகாரம் செய்வது போல் இருக்கிறது ஆனால் உண்மையில் நான் ஒரு விவகாரமும் செய்வதில்லை சரீரம்தான் இதை செய்கிறது.
ஒருவன் ஸ்தூல சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டுவிட்டு சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவில் சஞ்சரிக்கின்றான். எனவே சரீரங்கள்தான் விவகாரங்களை செய்கிறது. ஆத்மா அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.
ம்ருத்யோ ரூபானி – ம்ருத்யோ என்பது அக்ஞானத்தை குறிக்கிறது, ரூபானி என்பது சுட்டிக்காட்டுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். நம்முடைய ஸ்தூல சரீரம் அக்ஞானத்தை காட்டிக் கொடுக்கிறது.. ஒருவருடைய பேச்சு, செயல்கள் அவருடைய அக்ஞானத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
சங்கரரின் விளக்கம்:
புத்தமதக் கொள்கை:
நாம் பார்க்கும் உலகம் சத்யம், இதை பிரத்யக்ஷ பிரமாணம் மூலம் அறியலாம். அனுமானத்தின் மூலமும் அறியலாம். ஷணிகவாதிகள் சூன்யவாத கொ:ள்கையுடையவர்கள், இவர்களது கொள்கை இந்த உலகம் அஸத், உண்மையல்ல என்பதுதான். இதில் மூன்று பிரிவுகள். நம்முடைய அறிவில் ஒவ்வொரு க்ஷணமும் எண்ணங்கள் தோன்றி மறையும் அதுவே ஆத்மா அதுவே சத்யம். ஒவ்வொரு எண்ணமும் நான் என்று நினைப்பதால்தான் அது கொடுக்கும் இன்ப-துன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது. அந்த எண்ணங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்தால் அதன் விளைவிலிருந்து பாதிக்காமல் இருக்கலாம்.
கேள்வி: புத்தமத கொள்கை: ஷணிக விக்ஞானம்தான் ஆத்மா, அதற்கு மேல் ஒன்றும் கிடைப்பது. அனுமானம் நம்முடைய புத்தி என்பது தன்னையும் மற்ற பொருட்களையும் விளக்குகின்றது. ஏனென்றால் அது என்றுமே பிரகாசமாக இருப்பதால்தான் உணர்வுடன் இருப்பதால்தான். புத்தி தீபத்தைப்போல. புத்தி பானைப் போல் ஜடம் என்றால் அதை எனக்கு காட்டு என்று கேட்கிறான்.
பதில் தீபம் தன்னையே விளக்கவில்லை. அதற்கு கர்ம-கர்த்ரு விரோதம் என்ற தோஷத்தின்படி அது அதையையே விளக்க முடியாது. அறிபவன், அறியப்படும் பொருள் இரண்டுமே ஒன்றாக இருக்க முடியாது.
எப்பொழுது ஒன்று செய்கிறது என்று சொல்ல முடியும் என்றால், அது எப்போதாவது அந்த செயலை செய்யாமல் இருந்திருக்க வேண்டும். எனவே தீபம் தன்னைத்தானே விளக்குகிறது என்று சொல்ல வேண்டுமானால் முன்பு அது தன்னையே விளக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். எனவே புத்தி தன்னைத்தானே விளக்கிக் கொள்ள முடியாது.
இந்த தீபம் கண்ணை சார்ந்திருக்கிறது. எனவே உன்னுடைய உதாரணம் தவறு. புத்தியை பிரகாசபடுத்துவது ஆத்மா, அதுதான் நித்ய ஜோதி. நாம் ஆத்மாவை விளக்க வேறொன்றும் தேவையில்லை. அது தன்னையே விளக்கவில்லை என்று சொல்லவில்லை.
கேள்வி நாங்கள் இதை எற்றுக்கொள்ளமாட்டோம். ஷணிக விக்ஞானம்தான் சரியானது. தோன்றி மறைந்து கொண்டிருக்கும் பிரவாகம்தான் பரம்பொருள், அறிவுதான் பிரவாக ஸ்வரூபம்.
பதில் இப்படி இருந்தால் எந்த விவகாரமும் ஒழுங்காக நடக்காது. சாதனம், சாத்தியம் என்பதே இருக்காது. காரண-காரியமே இருக்காது. உதாரணமாக கனவில் நடக்கும் விவகாரங்கள் எதுவுமே ஒழுங்காக இருக்காது, தொடர்ச்சியாக இருக்காது. எது எப்படி வேண்டுமானாலும் திடீரென்று மறையும், தோன்றும்,உருமாறும். ப்ரத்யபிக்ஞா அஸம்பவாத் – பிரத்யபிக்ஞாவே நடக்காது.
பிரத்யக்ஷம் – முதன் முறையாக பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம்
ஸ்மிருதி – வீட்டிற்கு சென்று நினைப்பது
பிரத்யபிக்ஞா – மீண்டும் பார்க்கும் அந்த அனுபவம், இவரை ஏற்கனவே எனக்கு தெரியும் என்று அடையாளம் கண்டு கொள்ளுதல் இவைகள் ஒரு பொருளினுடைய தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
விருத்தி ஞானம் ஸத்யமென்றால், வஸ்துவிடமும் ஸத்யமாக, தொடர்ந்து இருக்கின்றது. ஆகவே உன்னுடைய க்ஷணிக விக்ஞானப்படி மனதில் தோன்றும் எண்ணங்களும் மித்யாதான்.
கேள்வி பிரத்யபிக்ஞா என்பதே கிடையாது. ஏற்கனவே பார்த்தப் பொருளையே பார்க்கும் போது உனக்கு அப்படி தோன்றுகிறது. உண்மையில் நீ பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நீ பார்க்கும் போது நேரத்தில் தோன்றும் தோற்றம். ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்கு தொடர்ச்சியாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
பதில் ஸா த்3ருஷ்டம் என்பது உன்னுடைய இந்த கருத்து உன்னுடைய கொள்கைக்கே விரோதமாக இருப்பதால் இது நிராகரிக்கப்படுகிறது. உன்னுடைய கையில் வைத்திருக்கும் பொருள் யாருடையது? என்று ஒருவன் கேட்க அதற்கு அவன் என்னுடையது என்று சொல்கிறான். என்னுடையது என்கின்ற விவகாரம் நடக்காது. ஏனென்றால் உன்னுடைய கொள்கைப்படி ஒவ்வொரு க்ஷணத்தில் விஷயம் தோன்றி மறைகிறது. என்னுடையது என்பதில் உன்னுடைய விருத்தி வேறாக இருக்கிறது, பொருள் வேறாக இருக்கிறது. எனவே இதுவும் உன்னுடைய கொள்கைக்கு வேறாகிறது.
நீ எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்க முடியாது. க்ஷணத்தில் தோன்றி மறைவதால், பெயர் கொடுத்தாலும் அது மறைந்து விடுகிறது.
க்ருத நாசம் தோஷம்: கர்ம செய்தவன் அழிந்து விடுகிறான் அதன் பலனை வேறொருவன் அனுபவிக்கின்ற நிலை ஏற்படும்.
விக்ஞானம் சத்யமென்றால், விதவிதமான விஷயங்கள் இருக்கிறதே? அவன் சொல்கிறான், விஷயங்கள் எல்லாம் விக்ஞானத்திற்கு அடைமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் விருத்த அம்ச தோஷம் வந்துவிடும். இரண்டு விருத்தமான குணங்கள் ஒரே விஷயத்தில் இருக்க முடியாது. மென்மையான, கடினமான பாறை என்று சொல்ல முடியாது.
இந்த அடைமொழிகள் எல்லாம், விக்ஞானத்திற்கு அசுத்தியாக உள்ளது. க்ஷணிக விக்ஞானம் சத்யம். இப்படி சொல்வதால் உன்னை அறியாமல் அசுத்தி என்ற வேறொன்றை ஒத்துக் கொள்வது போல இருக்கிறது. இந்த அசுத்திதான் அதன் தன்மையாக இருக்கிறது என்று சொன்னால் மோக்ஷம் என்பதே அடையவே முடியாது. அசுத்தியை நீக்கவே முடியாது. எனவே உன்னுடைய கருத்துப்படி மோட்சம் என்பதை அடையவே முடியாது
ஸ்லோகம்–8
ஆத்மா வருகிறது, போகிறது என்பதெல்லாம் உண்மையில் கிடையாது. ஜென்ம லக்ஷணம், மரண லக்ஷணம், சரீரத்தின் ஸ்வரூபம் என்ன?
- காரிய-காரணாத்மகம் – சரீரம் காரிய ஸ்வரூபமாகவும், காரண ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஒரிடத்தில் இருந்து செயல்படுவதற்கு சரீரம் உதவுகிறது. செயல்படுவதற்கு உதவியாக இருப்பதும், செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் இருக்கும் இடமாகவும் சரீரம் இருக்கிறது.
- தர்ம-அதர்ம ஆஸ்ரயம் – பாவ-புண்ணியங்களுக்கு உறைவிடமாக இருக்கிறது
- தர்ம-அதர்ம ஜனகம் – பாவ-புண்ணியத்தை தோற்றுவிக்கிறது, உற்பத்தி செய்கிறது
- சரீரம்தான் இகலோக, பரலோகத்திற்கு சென்று வருகிறது
- எப்பொழுது ஒரு பொருள் மீது நாம் அபிமானம் வைக்கிறோமோ அப்பொழுதே அது பிறந்து விடுகிறது
- எந்த நேரத்தில் ஒரு பொருளின் மீது பற்றுவிட்டு போகிறதோ அது அப்போதே மரணத்தை அடைந்து விடுகிறது.
மந்திரவிளக்கம்:
ஸ: வை – அந்த
அயம் புருஷ: – இந்த புருஷன் செயலற்றவன், எதனோடும் ஒட்டாதவன்,
ஜாயமான: – பிறக்கின்றான்,
ஶரீரம் அபி4ஸம்பத்3யமான: – சரீரத்தில் அபிமானம் வைக்கிறான்
பாப்மபி4: – பாவ-புண்ணியங்களுடன், தர்ம-அதர்மங்களுடன்; பாவ-புண்ணியங்களை தாங்கிக் கொண்டிருக்கின்ற மனம், புத்தி, இந்திரியங்களுடன்
ஸம்ஸ்ருஜ்யதே – சம்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
ஸ: உத்க்ராமன் – சரீரத்திலிருந்து அபிமானத்தை விடுதல்.
ம்ரியமான – மரணமடைதல்,
பாப்மன: விஜஹாதி – பாவ-புண்ணியங்கள் விட்டு விலகுகிறது.
பிறத்தல், இறத்தல் என்ற நிலை இருப்பதால் தேகம், மனம் போன்றவைகள் ஆத்மாவின் சுபாவமல்ல. காரணம் சம்யோக, வியோக என்பதாக இருக்கிறத.
ஸ்லோகம்–9
இதில் ஸ்வப்ன அவஸ்தை விளக்கப்படுகிறது
- ஆத்மா ஸ்வயம் ஜோதி
- பரலோக அஸ்தித்வம் – நமக்கு மறுபிறவி இருப்பதை உறுதி செய்கிறது
- ஆத்மாவுக்கு சரீரத்தோடு சம்பந்தம் வைக்கும்போதுதான் சம்சாரம். ஆனால் உண்மையில் அதற்கு சம்சாரமில்லை.
- நாம் அனுபவிக்கக்கூடிய அவஸ்தைகளுடைய இருப்பிடம் மனதுதான். அவஸ்தைகளுடைய சாட்சியாக இருப்பது ஆத்மா.
மறுஜென்மம் உண்டு என்பதை கனவு நிலையை வைத்து உறுதி செய்யப்படுகிரது.
கனவு நிலை-1: நான் ஸ்தூல சரீரத்திலிருந்து வேறுபட்டவன்
கனவு நிலை-2: கனவில் காண்பதெல்லாம் மித்யா என்ற அறிதல், உறுதி செய்தல்
இங்கு ஜீவனுக்கு இரண்டு உலகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒன்று இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் இந்த லோகம் இரண்டாவது பரலோகம். இது முற்பிறவியில் இருந்த லோகம் அல்லது மறு பிறவியில் இருக்கப்போகும் லோகம். நாம் குழந்தையாக இருக்கும்போது முதல் மூன்று கண்ணுக்கு பார்க்கும் சக்தி கிடையாது. குழந்தை திடீரென்று அழும், சிரிக்கும், இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்மத்தின் அனுபவங்கள், வாசனைகள், விஷயங்கள் கனவில் வருவதால். குழந்தைக்கு இகலோக அனுபவம் கிடையாது. பிறகு மரணமடைவதற்கு முன் இந்த ஜென்மத்தில் தோன்றிய ஸம்ஸ்காரங்களைத்தான் கனவில் அனுபவிப்பான். மரண படுக்கையில் இருக்கும்போது இகலோக எல்லா இந்திரியங்களும் சக்திகளை இழந்து விட்டிருக்கும், இகலோக ஸம்ஸ்காரங்கள் செயல்படாது. அடுத்த ஜென்மம் பற்றிய விஷயம் ஆரம்பமாகி விடும். அவர்களுடைய கனவில் வரப்போகும் ஜென்மத்தின் ஸம்ஸ்காரங்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவான். ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் கனவு வராது குழந்தை பூர்வ ஜென்ம ஸம்ஸ்காரங்களையும், மரண நிலையில் வரப்போகும் ஜென்மத்தில் ஸம்ஸ்காரங்களையும் அனுபவிக்கிறோம். எனவே கனவு நிலை என்பது நம்முடைய மறு ஜென்மம் இருப்பதை நிரூபிக்கிறது.
மந்திரவிளக்கம்:
ஜீவனுக்கு இரண்டு இடங்கள் அனுபவிப்பதற்கு இருக்கிறது. அவைகள் இகலோகம்-இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் உலகம், பரலோகம்-முற்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் அனுபவிக்கப்போகும் உலகம்.
சந்த்யம் த்ருதீயம் ஸ்வப்ன ஸ்தானம் – இந்த கனவு நிலையில் இருந்து கொண்டு இரண்டு உலகங்களை அனுபவிக்கின்றான். குழந்தையாக இருக்கும்போது முற்பிறவி லோகத்தையும், மரணதறுவாயிலிருக்கும்போது பரலோகத்தையும் அனுபவிக்கின்றான்.
தஸ்மின் ஸந்த்யே ஸ்தானே– இந்த இடைவெளியில் கனவு நிலையில்
திஷ்டன் ஏதே உபே ஸ்தானே பஷ்யதி: – இந்த இடைவெளியில் ( முற்பிறவி உலக விஷயங்கள் அனுபவிக்கும் உலகம், அடுத்த பிறவி உலகத்தை அனுபவிக்கும்) இப்போது இருந்து கொண்டே இந்த் இரண்டு உலகங்களையும் அனுபவிக்கின்றான்.
எதன் அடிப்படையில் இந்த ஜீவனுக்கு அடுத்த ஜென்மம்.
அத4 யதா4 ஆக்3ரம அயம் – நம்மிடத்தே வெளிப்படுகின்ற பாவ-புண்ணியங்களை பொறுத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது. இது சஞ்சித கர்மத்திலிருந்து வெளிப்படுகிறது. அங்கிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அந்த பிராரப்தத்தை அனுபவிக்கின்றான்.
ஆக்கிரமஹ à தர்ம-அதர்ம அல்லது பாவ-புண்ணியங்கள்
இவன் எப்படிப்பட்ட பாவ-புண்ணியத்தை சஞ்சிதகர்மத்திலிருந்து எடுக்கிறானோ அதன் அடிப்படையில் சுக-துக்கங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்கிறான். இதிலிருந்து மறுபிறவி உறுதி செய்யப்படுகிறது.
ஆத்மா ஸ்வயம் ஜோதி விசாரம்:
விழிப்பு நிலையில் சாட்சி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது. அதனால் மனம் இந்திரியங்கள், உலகம் இவைகளை பிரகாசிக்கிறது. இந்த நிலையில் சைதன்யம், மனம் என்ற இரண்டு ஜோதிகள் இருக்கின்றன. நம்முடைய அனுபவத்தில்தான் எல்லாவற்றையும் அறிகிறோம். மனம் உறங்கியதும் உலகம் கிடையாது. இந்த நிலையில் சைதன்யம் என்பது ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை புரிந்து கொள்ள மனமே தடையாக இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றுமே இல்லை. அந்த நிலையில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றும் நமக்கு தெரியவில்லை, கனவு நிலையில் சாட்சி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது. ஆனால் மனம் அது பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது. விழிப்பு நிலையில் உடலையும், உலகையும் விளக்கிக் கொண்டிருக்கின்ற மனம் கனவு நிலையில் வெறும் அனுபவிக்கப்படும் பொருளாக மட்டும் இருக்கின்றது. இந்த நிலையில் வாசனாமயமாக மனமானது பரிணாமத்தை அடைந்து, அதுவே கரணமாக மாறியிருக்கிறது. பார்ப்பவனாகவும் பார்க்கப்படும் பொருளாகவும் மாறியிருக்கிறது. இதைப்பார்க்கும் பொருள் எது? அதை யார் விளக்குகிறது? மனதிற்கும் வேறாக அதை பிரகாசிக்கக்கூடிய ஒன்று இருக்க வேண்டும். எனவே கனவில் ஆத்மா தானாக ஒளிர்ந்து கொண்டு மனதையும் விளக்குகின்றது. இவ்விதம் ஆத்மா ஸ்வயம் ஜோதி என்று சந்தேகமில்லாமல் விளங்குகின்ரது. கனவு நிலை இதை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
கேள்வி மனமே ஸ்வயம் ஜோதியாக எண் இருக்கக்கூடாது?
பதில் இதை ஏற்றுக் கொண்டால் ஐந்து வகையான குறைகள் தெரிய வரும். மனதை ஜடமாக பார்க்கும் வாய்ப்பே நமக்கு கிடைக்கவில்லை அதனால்தான் மனதை ஜடமாக எற்றுக் கொள்ள முடியவில்லை.
- அநித்யத்துவ பிரசங்கம்: மனம் விகாரமடையும் (மாற்றம்) என்ற தன்மையுடன் இருக்கிறது. எது விகாரத்துடன் கூடியுள்ளதோ அதற்கு அழிவும் இருக்கிறது. இப்படி மனமானது அநித்யமாக இருப்பதால் சைதன்யமே இல்லாததாகி விடும் எனவே மனதை ஸ்வயம் ஜோதி என்று சொல்ல முடியாது. .
- மனஸஹ அஸம்பவாதி: மனதிற்கு லய அவஸ்தை சம்பவிக்கிறது
- மனம் என்ற சூட்சும ஸரீரம் எந்தவொரு அறிவை அடைய வேண்டுமென்றாலும் மனதில் எண்ணங்கள் வரவேண்டும். அந்த எண்ணங்களாக மனமே மாறி, அறிவை அடைகின்றோம் அப்படி எண்ணங்கள் வரவில்லையென்றால் அறிவு கிடைக்காது. மனதால் இதை அறிகிறேன் என்பதை அறிய செய்ய முடியாது வேறொன்றுதான் அதை செய்ய முடியும். ஒரே கணத்தில் மனம் உலகத்தை விளக்கும்போது அதை வேறொன்று விளக்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது அது என்றும் சாட்சியாக இருக்கும் ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.
- ஸ்ருதி விரோதாத்: ஸ்ருதி மனம் ஜடம் என்று கூறியிருக்கிறது. பஞ்ச சூட்சும பூதங்களிலிருந்து உருவாகியதுதான் மனம் என்பதால் அது ஜடம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
- அநிர்மோக்ஷம் பிரசங்கஹ: மோக்ஷம் என்ற ஒன்றே இருக்க முடியாது. சம்சாரியாக விகாரத்துடனிருக்கும் மனதை ஏற்கனவே அடைந்து விட்டோம். எனவே மோக்ஷம் என்பது சம்பவிக்காது
மேற்கூறிய கருத்துக்களிலிருந்து மனமானது ஸ்வயம் ஜோதியாக இருக்க முடியாது என்று நிரூபணமாகிறது.
மனமே சாட்சி சைதன்யத்துக்கு பார்க்கப்படும் விஷயமாகவும், கரணமாகவும், பார்ப்பவன் என்ற மூன்று நிலைகளாக மாறி நமக்கு கனவு அனுபவம் ஏற்படுகிறது.
ஸஹ யத்ர ப்ரச்வமிதி – ஜீவன் எப்பொழுது கனவை அனுபவிக்கின்றானோ;
அஸ்ய லோகஸ்ய ஸர்வாவதஹ – ஸ்தூல சரீர அபிமானியாக இருக்கிற விஸ்வனே அனைத்தும் உடையவனாக (ஸர்வாவதஹ) இருக்கிறான். ஐந்து தத்துவங்களை உடையவனாக இருக்கிறான். இந்த ஐந்தும் இருந்தால்தான் ஜாக்ரத் அவஸ்தையில் உலகத்தை அனுபவிக்க முடியும். அவைகள் ஸ்தூல சரீரம், கரணம், கரண தேவதா, விஷயம், வாஸனா (பார்த்த்து, செய்தது பதிவாகியிருக்கும் நினைவகம்)
மாத்ராம் அபாதாய – தைஜஸன் வாசனையை மட்டும் எடுத்துக் கொண்டு,
ஸ்வயம் விஹிதிய – ஸ்தூல சரீரத்தை தியாகம் செய்து விட்டு
ஸ்வயம் நிர்மாய – தானே ஒரு உலகத்தை உருவாக்கி
ஸ்வேன பாஸா – விருத்தி ரூபமாக அனைத்தும் உருவாகி
ஸ்வேன ஜோதிஷா– சாட்சி சைதன்யத்தின் ஜோதியினால்
ப்ரஸ்வமிதி – அவன் கனவை காண்கின்றான்.
அத்ர அயம் புருஷ இந்த ஸ்வப்ன அவஸ்தையில், இந்த சாட்சியானது
ஸ்வயம் ஜோதி பவதி – சுய ஜோதியாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
ஸ்லோகம்–10
ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யா என்று விளக்குதல்.
கயிற்றில் தோன்றும் பாம்பும் வாஸனையிலிருந்து வந்த விருத்தி கனவில் பிரபஞ்சமாக உருவாகிறது
கேள்வி: கனவு பிரபஞ்சம், விழிப்பு நிலையின் தொடர்ச்சிதான். எனவே ஜாக்ரத் அவஸ்தை எவ்வளவு சத்தியமோ அதே அளவு சத்தியம்தான் கனவும். காரணம் விழிப்பு நிலையில் எப்படி அனுபவிக்கிறோமோ அதே மாதிரிதான் கனவு நிலையிலும் கர்த்தா, கரணம், விஷயம் என்று இருக்கிறது. எனவே கனவு மித்யா என்று எப்படி சொல்வாய்?
பதில் கனவில் பார்ப்பதெல்லாம் வாசனையிலிருந்து உருவாக்கப்பட்டவை, பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதில்லை.
மந்திரவிளக்கம்:
தத்ர: அங்கு (கனவு நிலையில்)
ந ரதஹ – ரதங்கள் கிடையாது.
ந ரதயோஹ – ரதத்தை ஒட்டும் குதிரைகள் கிடையாது;
ந பந்தானஹ – பாதைகள் கிடையாது
நாம் பார்க்கும் இவைகள் உண்மையில் இல்லை எனவே மித்யா என்பது நிரூபணமாகிறது. ஆனால் இவைகளெல்லாம் வாசனையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ந தத்ர ஆனந்தாஹா, முதஹ, பிரமுதஹ – பிரியம், மோதம், பிரமோதம் என்ற மூன்று நிலைகளும் கனவில் இல்லை. இந்த விஷயத்தின் காரியமான ஆனந்தம் கிடையாது. விஷய நிமித்த சுகமும் கிடையாது. இவையும் வாசனையிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. கனவில் பார்க்கும் பொருட்களும் பொய்யானது அதிலிருந்து அனுபவிக்கும் சுகமும், துக்கமும் பொய்யானது. இவைகள் வாசனையிலிருந்துதான் தோன்றியுள்ளது. அதுபோல கனவில் பார்க்கும் குளம், குட்டை, ஆறு, ஏரி இவைகளெல்லாம் உண்மையில் தோற்றுவிக்கப்படவில்லை. இவைகளையெல்லாம் உருவாக்குபவன் கனவு காண்பவன்தான். இந்த ஜீவாத்மாதான் கர்த்தாவாக இருக்கின்றான். விழிப்பு நிலையிலுள்ள வஸ்துவிற்கு கர்த்தா ஈஸ்வரன்.
ஸ்லோகம்–11
இந்த விஷயத்தை விளக்கும் ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹிரண்யமயஹ; புருஷஹ; ஏக ஹம்ஸஹ – இவைகள் ஆத்மாவின் ஸ்வரூபங்கள்
ஹிரண்யமயஹ – சைதன்ய ஜோதி ஸ்வபாவஹ – சைதன்யத்தை ஜோதியாக, ஸ்வரூபமாக கொண்டது.
புருஷஹ: காரியம்-கரணாதி ஸர்வம் பூரயதி இதி புருஷஹ: ஆத்மா என்ற தத்துவம் நம்முடைய சரீரத்தை முழுவதுமாக வியாபித்திருக்கிறது.
ஏகஹம்ஷஹ: உண்மையில் நிலையாக இருந்து கொண்டு, சிதாபாஸ ரூபமாக தன்னை மாற்றிக் கொண்டு ஒரு லோகத்திலிருந்து இன்னொரு லோகத்திற்கும், சரீரத்திற்குள்ளே ஒரு அவஸ்தையிலிருந்து வேறொரு அவஸ்தைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறது
ஸ்வப்னே வாஸனா மாத்ர லோகேன பாவனயா – கனவு மயமான உலகத்தை உருவாக்கி அதில் அபிமானிக்கும் போது
ஸாரீரம் அபிப்ரஹதியா – ஸ்தூல சரீரத்தை, செயலற்றதாக, ஜடமாக மாற்றி
அஸுப்தஹ – நிர்குண ஆத்மா, சாட்சி சைதன்யம், எப்பொழுதும் உறங்காதவன்
அலுப்த த்ருக் – இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
ஸுப்தான் – வாஸனா பிரபஞ்சத்தை
அபிசாகஸீதி – சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பது; எந்தவித செயலும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
தைஜஸன் உருவான பின் விஸ்வன் உறங்கி விட்டான் அவனையும், அவன் உருவாக்கிய கனவு உலகத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பது ஆத்மா.
புனஹ: விழிப்பு நிலை வாசனை செயல்பட ஆரம்பிக்கும்போது சரீரம் தன்னுடைய இந்திரியங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வருகின்றான்.
ஸ்லோகம்–12
பிராணேன ரக்ஷன் அஹம் குலாயம் – ஐந்து பிராணன் மூலமாக இந்த ஸ்தூல சரீரமானது பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்தூல சரீரமானது பூமியோடு கலந்து உறங்கப்போகிறது.
பஹவுகுலாயாத்– இந்த சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டு வெளியே சென்று
சரித்வா – கனவுலகை அனுபவித்துக் கொண்டு
சஹ ஈயதே யத்ர காமம் – எப்படிப்பட்ட ஆசையானது மனதிற்குள் திடமாக இருக்கிறதோ, அதுவே எண்ணங்களாக வெளிபட்டு அதை கனவில் அடைகிறான்.
ஸ்லோகம்–13
இந்த மந்திரத்தில் கனவு வாசனையிலிருந்துதான் வெளிப்படுகிறது என்று கூறப்படுகிறது. எந்த வாசனை வெளிப்படும் என்றால் நமது கர்மவினை, திடமான ஆசை இவைகளின் அடிப்படையில்தான் கனவு நிலையிலும் நாம் பிராரப்த கர்மத்தை அனுபவித்து கழிக்கிறோம்.
ஸ்வனாந்த – கனவு அவஸ்தையில்;
உச்சா அவச்சாம் – மேலான, கீழான,
ஈயமான – அடைந்து,
தேஹ பஹுனி ரூபானி – நமக்குள் இருக்கும் சைதன்ய ஸ்வரூபம் பலவிதமான தோற்றங்களை, வாஸனைகளின் அடிப்படையில் உருவாக்குகிறது.
கனவுக்கு உபாதானகாரணம் கர்மவினை, நிமித்தக் காரணம் வாசனை அதிஷ்டான காரணமாக இருந்து கொண்டிருப்பது சைதன்ய ஸ்வரூபம். கனவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடையாது.
உத ஏவ – இவையெல்லாம் மித்யாவான பொருட்களை
சஹ மோதமானே– இவைகளையெல்லாம் அனுபவித்து இன்புறுகிறான்’
ஜக்வித் உதே ஏவ – மகிழ்ந்து கொண்டு
பயானி பஷ்யன் – பயத்தைக் கொடுக்கின்ற, துயரத்தைக் கொடுக்கின்ற காட்சிகளை உருவாக்குகிறான்
ஸ்லோகம்–14
அஸ்ய – இந்த ஜீவன்கள்;
ஆராமம் – கனவில் உருவாக்கிய பொய்யான உலகத்தை
பஷ்யந்தி – அதுதான் உண்மையென்று பார்த்து கொண்டிருப்பார்கள்
தம் ந பஷ்யதி கஷ்சன – யாரும் உண்மையை பார்ப்பதில்லை
தம் ஆயதம் ந போத்யேத் – ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களை அவசரமாக எழுப்பிடக் கூடாது.
இதி ஆஹுஹு – மருத்துவர்கள் இவ்வாறு எச்சரிப்பார்கள்
துர் விஷ்ஜம் – இவ்வாறு எழுப்பியவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் கடினம்.
யம் ஏஷ ந பிரதிபத்யதே – இந்திரியங்கள் தத்தம் நிலையிலிருந்து கனவுலகிற்கு சென்றிருக்கும். ஒடுங்கிய நிலக்கு சென்றிருக்கும், ஸம்ஸ்காரங்களும் செயல்பட்டு கொண்டிருக்கும். திடீரென்று எழுப்பினால் இந்திரியங்கள் அதனது கோளகத்திற்கு வந்து சேர வேண்டும், ஸம்ஸ்காரங்களும் ஒடுங்கிய நிலைக்கு செல்ல வேண்டும். இது நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
அதோகலு அஹுஹு – அய்யய்யோ இப்படி கூறுகிறார்கள் அக்ஞானிகள்
ஜாகரிட்தேஷ ஏவ அஸ்ய ஏஷ இதி – கனவும், ஜாக்ரத் அவஸ்தையின் ஒரு அங்கமாக இருக்கிறது.
யானி ஹ்யேவ ஜாக்ரத் பஷ்யதி – அதை இவன் விழிப்பு நிலையில் எதை பார்க்கிறானோ
தானி சுப்த இதி – அதைத் தான் கனவிலும் காண்கிறான். அதனால் கனவு விழிப்பு நிலையின் ஒரு அங்கமாக இருக்கிறது
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி – கனவு நிலையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருக்கின்றான்.
ஜனகர் இதுவரை பெற்ற உபதேசத்திற்காக மேலும் ஆயிரம் பசுக்களை குரு காணிக்கையாக தருகிறேன் என்று கூறி மோட்சத்தை பற்றி மேலும் விளக்குங்கள் என்று வேண்டினார். ஜனகருக்கு இன்னும் முழுமையாக நிர்குண பிரம்மத்தை புரிந்து கொள்ளாததால் மீண்டும் அதையே உபதேசிக்கமாறு கேட்கிறார்.
ஸ்லோகம்–15
ஆத்மா அஸங்கம்தான் என்று நிலை நாட்டப்படுகிறது. கர்மத்திலிருந்தும் அஸங்கம், அனாத்மாவிலுருந்தும் சம்பந்தமற்றவன்.
· கரணங்கள் இல்லையென்றால் கர்மம் பண்ண முடியாது
· கர்மம் செய்து விட்டால் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
கனவில் ஒருவன் ஏதோ ஒரு பாவ காரியம் பண்ணியிருக்கின்றான். அதன் பலனை அனுபவிக்க வேண்டும் ஆனால் விழித்தவுடன் அவன் அதற்கான பலனை அனுபவிக்கமாட்டான். கர்மம் பண்ணியது தைஜஸன் அவன் மறைந்த பிறகு விஸ்வன் அனுபவிக்க வேண்டியதில்லை. எனவே ஆத்மா மூன்று நிலையிலும் இருக்கிறான் ஆனால் எந்த கர்மத்திற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் ம்ருத்யூ ரூபங்களில் மட்டும் தாண்டி செல்லவில்லை, ம்ருத்யூவையும் கடந்து செல்கின்றான்.
மந்திரவிளக்கம்:
ஸ: வை ஏஷா – அவனே ஆத்மா. அவன் என்பது விஸ்வனாகவோ, தைஜஸனாகவோ, பிராக்ஞனாகவோ இருக்கலாம்.
எதஸ்மின் ஸம்ப்ரஸாத்3: – இந்த சூழ்நிலை உறக்கத்தில் தற்காலிகமாக சம்சாரத்தை கடந்து விடுகிறான்.
ப்ரஸாதம் : அமைதியாக இருத்தல்;
ஸ்ம்ப்ரஸாதம்: முழுமையாக மகிழ்ச்சியாக அமைதியாக இருத்தல்.
ரத்வ சரித்வா, த்3ருஷ்டவா ஏவ புண்யம் ச பாபம் ச – கனவு நிலையில் மகிழ்ச்சியாக அங்குமிங்குமாக அலைகிறான், புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிக்கின்றான். அதாவது சுக-துக்கத்தை அனுபவிக்கின்றான்.
புன: – மீண்டும்,
ப்ரதின்யாயம் – போன வழியில் கனவு-ஆழ்நிலை உறக்கத்திருந்து திரும்பி வருகின்றான்;
ப்ரதியோனி ஆத்3ரவதி – கனவு நிலைக்கு வந்து விடுகின்றான்
ஸ்வப்னாய ஏவ – கனவை அனுபவிப்பதற்கு
ஸ: தத்ர – எது இவ்வாறு இங்கும் அங்கும் சென்று வரும்போது
யத் கிம்சித் பஷ்யதி – எதையெல்லாம் பார்க்கின்றானே, அனுபவிக்கின்றானோ
அனன்வா கதஸ்தேன ப4வதி – அவன் பார்க்கப்படும் பொருட்களால் தாக்கப்படாதவன், பாதிக்கப்படாதவன்
அஸங்க3 ஹ அயம் புருஷ இதி – அவனுடைய ஸ்வப்னமே அஸங்கமாக இருக்கிறது
நான் யாரோடும் சம்பந்தமற்றவன் என்ற நிலையில் வந்து விட்டால், நாம் யாராலும் தாக்கப்படாமல் இருப்போம்.
ஏவம் ஏவ ஏதத்3 – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார். மேலும் எனக்கு மோட்சத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்லோகம்–16
சுக-துக்கங்களை ஸ்வப்னத்தில் அனுபவித்து விட்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து விடுகின்றான். இந்த விஸ்வன் விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்க்கின்றானோ அதனால் தாக்கப்படவில்லை ஏனென்றால் அவன் அஸங்கமாக இருக்கின்றான்.
ஏவம் ஏவ ஏதத்3 – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார். மேலும் எனக்கு மோக்ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்
ஸ்லோகம்–17
இவன் விழிப்பு நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு மீண்டும் கனவு நிலக்கு சென்று விடுகிறான். இதனால் அஸங்கத்வம் நிரூபிக்கப்படுகிறது. விழிப்பு நிலையில் அனுபவிக்கப்படும் எந்தப்பொருளும் எனக்கும் சம்பந்தமில்லை என்று புரிந்து கொண்டோமேயானால் இதனால் பாதிக்கப்படாமலிருப்போம். கனவு நிலைக்கு செல்லும்போது நாம் விழிப்பு நிலையில் அனுபவித்ததையெல்லாம் விட்டுவிட்டு செல்கின்றோம். எனவே நாம் எந்தப் பொருளின் காரணமாக பாதிக்கப்பட்டோமானால் அதனோடு சம்பந்தம் வைத்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்,
ஸ்லோகம்–18
எப்படி பெரிய மீனானது நதியின் இரண்டு கரைகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறதோ அதே போல இந்த ஜீவன் இந்த இரண்டு அவஸ்தைகளுகும் சென்று வந்து கொண்டிருக்கின்றான்.
அனுஸம்சரதி – சென்று வந்து கொண்டிருக்கின்றான் ;
அயம் புருஷ: – இந்த புருஷன்;
ஸ்வப்ன: அந்தம் – கனவு நிலை ;
பு3பா4ந்தம் – விழிப்பு நிலை
இந்த இரு அவஸ்தைகளிலும் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்
ஸ்லோகம்–19 – 30 முகவுரை
- சம்சார உபாதி நிமித்தஹ – உபாதியின் மூலம்தான் சம்சாரம். நீரானது உஷ்ணமாக அனுபவிக்கும்போது நெருப்பினால்தான் அது சூடாக இருக்கிறது. ஜாக்ரத், ஸ்வப்ன நிலையில் ஸ்தூல, சூட்சும சரீரம் என்ற உபாதி இருப்பதனால்தான் நாம் சம்சாரத்தை அனுபவிக்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் உபாதிகள் இல்லாததால் சம்சாரத்தை அனுபவிப்பதில்லை.
- சம்சாரம் சம்பந்தம் நிமித்தம்: சம்சாரம் என்பது வேறொன்றினிடத்தில் சம்பந்தம் வைக்கும் பொழுது ஏற்படுவது. சம்சாரம் அகங்கார நிமித்தத்தினால் வருவது. ஆழ்நிலை உறக்கத்தில் எந்த சம்பந்தமும் இல்லாததால் சம்சாரம் இல்லை
- ஆத்மனஹ அஹங்கத்வம்: ஆத்மா அஸங்க ஸ்வரூபம் என்பது இந்த ஆழ்நிலை உறக்கத்தில் அறிந்து கொள்ளலாம். பொருட்களின் மீது வைக்கும் சம்பந்தம் நமது சுபாவமல்ல.
- அனாத்மாவான ஸ்தூல, சூட்சும சரீரமும் ஆத்மாவின் ஸ்வரூபமல்ல. நான் என்ற ஸ்வரூபமல்ல. நம்முடைய அனுபவம் ஸ்தூல, சூட்சும சரீரங்களில் இருக்கிறது. இந்தக் கருத்து ஆழ்நிலை உறக்கத்தில் சரியாக இருக்கும். இவையிரண்டும் நமது சுபாவமாக இருந்தால் நமக்கு களைப்போ, சலிப்போ வரக்கூடாது. ஆனால் நாம் இந்த சரீரங்களால் களைப்பு, சலிப்பு ஏற்படுகிறது. நான் இவையிரண்டு சரீரங்கள் ஸ்வரூபமாக இருப்பதால் நமக்கு களைப்போ சலிப்போ இருக்கக்கூடாது. ஆனால் உண்மையில் அப்படியில்லை. அதனால் நாம் அடிக்கடி உறங்கச் செல்கின்றோம்.
- ஆழ்நிலை உறக்கத்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.
ஸ்லோகம்–19
தத்3யதா2 அஸ்மின் ஆகாஶே – எவ்விதம் இந்த ஆகாயத்தில்
ஶ்யேன – பெரிய உடல் கொண்ட கழுகு, வேகமாக பறக்கக்கூடிய கழுகு
ஸுபர்ணோ – சிறிய உடல், மெதுவாக பறக்கக்கூடிய பறவை
விபரிப்த்ய – விதவிதமான திசைகளில் பறந்து கொண்டு
ஶ்ராந்த: – களைப்பு ஏற்படுகிறது
ஸம்ஹத்ய: பக்ஷோ – இறகுகளை சுருக்கிக் கொண்டு
ஸம்லயாய த்4ரியதே – கூட்டை நோக்கி ஓய்வெடுக்க சென்றது
ஏவம் ஏவ – அது போல;
அயம் புருஷ: – ஜீவனாகிய நாம்
ஏதஸ்மா அந்தாய தா4வதி – ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.
நாம் ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளில் ஏற்பட்ட கஷ்ட-நஷ்டங்களால் அடைந்த களைப்பினால் நம்முடைய கூடாக வர்ணிக்கப்படும் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
யத்ர: ஸுப்தோ – எந்த நிலையில் ஆழ்நிலை உறக்கத்தில்
ந கஞ்சன காம் காமயதே – எந்தப் பொருளுக்கும் ஆசைப்படாத நிலை
ந ஸ்வப்னேம் ப்ஶ்யதி – எந்தக் கனவும் காண்பதில்லை.
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் கழுகுக்கு களைப்பு ஏற்பட்டால் அது ஓய்வெடுக்க தன் கூட்டிற்கு செல்வது போல, ஜீவனாகிய நாம் விழிப்பு நிலையிலும், கனவிலும் உடலாலும், மனதாலும், இந்திரியங்களாலும் செய்த செயல்களினால் ஏற்படுக் களைப்பை போக்க நமது கூடாகிய ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
ஸ்லோகம்–20
ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் நம்முடைய அவித்யா நமது சுபாவமா, இல்லையா? எந்தவிதமான சம்பந்தம்? என்று விளக்கப்படுகிறது.
அவித்யாவுக்கு எதிராக வித்யா இருப்பதால், அது வந்தவுடன் அவித்யா சென்று விடும். எனவே எது நம்மிடமிருந்து நீக்க முடியுமோ அது நம்முடைய சுபாவமல்ல. ஸ்தூல, சூட்சும சரீரத்தை நீக்கி ஆழ்நிலை உறக்கத்திற்கு போக முடிவது போல, அவித்யாவை நீக்கி ஆத்ம ஞானம் அடையலாம்.
ஒவ்வொரு ஜீவர்களிடம் ஹிதா என்ற பெயருடைய நாடி இருக்கிறது. இது தலைமுடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு விட்டமுடையது அதன் வழியாகத்தான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறான். இதனால் களைப்பு நீங்கி இதமாக இருக்கிறான். அந்த நாடிக்குள் விதவிதமான ரஸங்கள் இருக்கின்றது. நம்முடைய வாஸனைகள் அந்த நாடிக்குள்தான் இருக்கின்றது. அப்படி போகும்போது நாடிக்குள் இருக்கும் வாசனைகளிலிருந்து பிராரப்த கர்ம பலன்படி சிலவற்றை எடுத்துக் கொண்டு கனவுக்கு செல்கின்றான். இவன் பார்ப்பவைகளெல்லாம் வெறும் தோற்றமே அது இவனிடத்தில் இருக்கும் அவித்யாவினால்தான் இந்த கனவு தோற்றங்கள் உருவாகின்றன. இவனுக்கு அனைத்தும் நான் என்று உணரும் ஞானம் வரும்போது அவனிடத்திலிருந்து அவித்யா நீங்கி ஆனந்தமயமான மோட்சத்தை அடைகிறான். ஆகவே ஆத்மாவுக்கும் அவித்யாவுக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை.
மந்திரவிளக்கம்:
ஸ்தூல உடம்பில் ஹிதா என்ற நாடி செல்கிறது. வெண்மையான, நீலமான, சிவப்பான, பச்சையான இப்படிப்பட்ட வர்ணங்களையுடைய ரஸங்கள் நாடியில் இருக்கின்றது.
அத2 யத்ர: ஏனம் க்4னந்தி ஏவ – யாரோ கொல்ல வருகிறார்கள்
ஜினந்தி ஏவ, ஹஸ்தி ஏவ, விச்சா2ய ஏவ க3ர்தம் ஏவ பததி – அடிமையாக இருப்பது போல, யானை துரத்துவது போல, குழியில் விழுவது போல பாவ-கர்ம வசத்தினால் கனவில் அனுபவிக்கிறோம்.
யதே3வ ஜாக்3ரத்3 ப4யம் பஶ்யதி – ஜாக்ரத் அவஸ்தையில் எப்படி பயந்து கொண்டு சில விஷயங்களை அனுபவிக்கிறோமோ அதே போல கனவிலும் பயந்து கொண்டு சிலவற்றை அனுபவிக்கிறான். கனவில் தேவர்களைப் போலவும், ராஜாவை போலவும், கடவுளாகவும் நினத்துக் கொண்டு இதுதான் என் உலகம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றான்.
இவ்விதமான ஞானத்தினால் அவித்யாவானது நீக்கப்படுகிறது.
அஹம் அஸ்மி இதம் ஸர்வஹ – நானே பார்க்கப்படும் அனைத்துமாக இருக்கிறேன் என்று ஒருவன் எப்பொழுது அறிகின்றானோ அப்பொழுதே அவன் அவித்யா நீங்கப்பெற்று முக்தனாகிறான்.
ஸஹ அஸ்ய பரமோ லோகஹ – இந்த ஞானிக்கு அவன் அடைந்த இந்த நிலையானது மிகவும் மேலானது
—-0000—-
ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-8
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்
ஸ்லோகம்–21
ஆழ்நிலை உறக்கம் என்பது ஒரு காலவரையறைக்குட்பட்டது. மோட்சம் என்பது ஞான நிஷ்டைக்கு பிறகு காலவரையறைக்குட்பட்டு அனுபவிக்கும் விஷயம் இல்லை. இந்நிலையில் அக்ஞானம் உண்டு. மோட்சம் ஜாக்ரத் நிலையில் அனுபவிப்பது, அக்ஞான நீங்கி ஞானத்துடன் இருக்கும் நிலை. உறக்கம் என்பது ஞானிக்கும், அக்ஞானிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆழ்நிலை உறக்கத்தில் சம்சார விதை இருக்கும். மோட்சத்தில் சம்சாரமும் இல்லை அதன் விதையும் இல்லை.
இந்த மந்திரம் மோட்ச லக்ஷணத்திற்கு பொருந்தும். ஆழ்நிலை உறக்கத்தை மோட்சத்திற்கு உதாரணமாக கொடுக்கலாம் ஆனால் அதுவே மோட்சமாகாது. ஒன்பது லட்சணைகள் இந்த மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மோட்சத்தை அடைந்த பிறகு எப்படி இருப்போம் என்பதையும் விளக்குகிறது.
தத்3வா அஸ்ய – இந்த ஞான நிலையில் ஞானிக்கும், சுஷுப்தி நிலையில் பிராக்ஞனுக்கும் கீழே குறிப்பிட்ட லக்ஷணைகளுடன் இருப்பான்.
அதிச்ச2ந்த3: – காமத்தை கடந்தவன்; ஆசையிலிருந்து விடுபட்டவன்.
ஞானிக்கும் ஆசை வரும் ஆனால் அது ஒரு விளைவையும் ஏற்படுத்தாது. அதனால் இவன் பாதிக்கப்படுவதில்லை, துயரமோ, மகிழ்ச்சியோ ஏற்படுத்தாது.
இதை எப்படி நிதித்யாஸனம் செய்வது என்றால், நான் இப்போது இந்த லட்சணத்தில் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும். தியானத்தில் ஒவ்வொரு லட்சணமாக நான் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்,
அபஹதபாப்மா – பாவத்திலிருந்து விடுதலையடைந்தவன். பாவத்தின் விளைவு துயரம். ஆழ்நிலை உறக்கத்தில் ஒருவனுக்கு துயரம் இல்லை. எனவே பாவ-புண்ணியம் என்ற கர்ம பலனை அனுபவிக்காமல் இருக்கிறான். முக்தனும் என்றென்றும் மனநிறைவுடன் துயரம் எதுவும் இல்லாமல் இருக்கிறான். பாவ-புண்ணியங்கள் மொத்தமாக இவனை விட்டு சென்று விட்டது
தியானமுறை: நான் எல்லா பாவங்களிலிருந்து விடுபட்டவன் என்று தியானிக்க வேண்டும்
அப4யம் ரூபம் – நான் பயமற்ற ஸ்வரூபமாக இருக்கிறேன். நமக்கு வேறாக உள்ள ஒன்று என்னை தாக்கி விடும், அழித்து விடும் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும். ஞானி அனைத்துமே நானாக இருக்கிறேன் என்ற அறிவால் பயம் முற்றிலுமாக நீங்கியவனாக இருக்கிறான், அந்த உணர்வேயில்லாதவனாக இருக்கிறான்.
விசேஷ ஞான அபாவாத் – தனிப்பட்ட ஞானம் இல்லை, விதவிதமான ஞானங்களும் இல்லை. விழிப்பு நிலையில் ஒவ்வொரு க்ஷணம் விதவிதமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், கனவு நிலையிலும் இதே மாதிரித்தான். ஆழ்நிலை உறக்கத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியான அனுபவம். அவித்யாவின் ஒரே மாதிரியான விருத்தியைத்தான் அனுபவிக்கிறோம். விசேஷ ஞானம் இந்த நிலையில் இல்லை. ஜாக்ரத் நிலையில் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும்போது, அந்த காலத்தில் அதைத்தவிர வேறெதையும் நினைப்பதில்லை. உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லாவற்றையும் மறந்த நிலையி