Archive for the ‘Thondar -adi-podi Aazlvaar’ Category

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் அமுதம் —

September 24, 2022

ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர்  ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்த தமிழ் தனியன் —

ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்த சமஸ்க்ருத தனியன்

தமேவ மத்வா பரவா ஸூதேவம்
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே–

ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது
ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது
இத்தால் -குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-

ராஜாவத் பூஜ்யராய்-ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்கை-
ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –

தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்

ஈடே -ஆழ்வார் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்–பேராத சீர் அரங்கத்து ஐயன்-

காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பிராணவார்த்தம் பிரகாசா –

இதம் பூர்ணம் –ஸர்வம் பூர்ணம் சகோம்

ஓம் பூர்ணமத: – பசுவாகிய அது பூர்ணமானது; பூர்ண மிதம் – கன்றாகிய இதுவும் பூர்ணமானது. பூர்ணாத் பூர்ண முதச்யதே – பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ண மாகிய கன்று உதித்துள்ளது. பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஸ்யதே- பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ணமாகிய கன்றை எடுத்தும் பூர்ணமாகிய பசு எஞ்சியுள்ளது. ஓ! இது எத்தகைய புதையல்! ஈடு இணையற்ற – அறியாமை இருளை நீக்க, என் எளிய உள்ளத் துதித்த இளங்கதிரோனனைய அற்புத அறிவுப் புதையல்!

பூர்ணம் -தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி-ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் –முதல் அத்யாயம் ||

———————

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்
மா மறையோராக இருந்தால் தான் திரு மண்டங்குடி என்பர் என்றுமாம்–ததீய வைபவம் அறிந்து அதில் நிஷ்டரானவர்

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்-தொண்டர் அடிப் பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்–
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-

பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

பகவத் கைங்கர்யம் கொண்டே திவ்ய பிரபத்தத்தின் பெயரானது இதன் தனிச் சிறப்பு-

வனமாலை ஸ்ரீ வைஜயந்தி அம்சம் -மாலையே வந்து பிறந்து பூ மாலைகளையும் பா மாலைகளையும் சமர்ப்பித்து அருளிய ஏற்றம்-

——-

திருமாலைக்கும் திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் ஆழ்வாரை அவன் ப்ரீதிக்கு உகப்பாக கைங்கர்யம் செய்ய வேண்டி இவரது
ஸ்வரூபத்தை -உணர்த்தி அருளினார் திரு மாலையில்
இவர் அவனுக்கு அடியார்க்கு ஆட்படுத்தி கைங்கர்யம் கொண்டருள வேண்டி அவனுக்கு
அவனுடைய ஸ்வரூபத்தை உணர்த்துகிறார் இதில்
2- இளைய புன் கவிதை -வாசிக கைங்கர்யம் அதில் –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -காயிக கைங்கர்யம் இதில்
3-எம்பிராற்கு இனியவாறே -பகவத் கைங்கர்யம் அதில்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாயே –
4-பெரிய பெருமாள் கிருஷி அதில் -அதன் பலன் இதில் -அதில் பிறந்த பாகம் பக்குவம் ஆனப்படி இதில்
5-தனக்கு அருளை பிரார்த்தித்தார் அதில் -நாளொக்கம் அருள -பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கிறார் இதில்

பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் 

பிரஜைகளை காட்டி வேண்டுவாரைப்  ஜீவனம் போல தேவ ஜாதிகளைக் காட்டி ஸூய பிரயோஜனம் கேட்கிறார்-
ஆம் பரிசு-சிறப்பை தந்து அருளி கண் விளித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-என்கிறார் 

இருந்தாலும் நிகமத்தில்
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி-துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!-என்று
மர்மம் அறிந்து அருளிச் செய்கையாலே உணர்ந்தார்

உணர்ந்த அவனுக்கு இவரது சரம பர்வ நிஷ்டையைக் காட்டி

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை –என்று ததீய கைங்கர்யத்தில் இழிந்த துளஸீ தாஸரான அடியேனை
அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—என்று நிகமிக்கிறார்
கரிய கோலத் திரு உரு காண் என்று இவனே வலிய பின் தொடர்ந்து காட்டி அருளுவான்

—————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்–மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்கள்

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும் தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத்
தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே வந்து திரண்டு
“எம்பெருமான் திருப் பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்” என்னுமாசையாலே
திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

—————–

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

ஹம்ஸ அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –

நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது -நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,

கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை

உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –

துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுபவன் அன்றோ நீ

முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.-
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –

அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி–முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ-

————–

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
முளைத்து குண திசை
எழுந்த-சூழ் திசை எல்லாம்–
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம்
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக தேஜஸ் வளரும் என்றவாறு –
திரு கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –

“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி –
ஐய்யப்பாடு அறுக்கவும்
ஆதாரம் பெருக்கவும் –
விரோதி போக்கவும்
அனுபவிக்கவும் அழகே தான் –

கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை-

—————

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி-

வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!

அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-

பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியான -தாடகை தாடகாதிகள் –அருணோதயம் போலே இது அதுக்கு –

உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –

வாட்டிய-மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –

வரி  சிலை —ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –

மேட்டு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-

பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –

நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே–ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்-இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றுமாம்.

உகந்து அருளின தேசங்களில் எல்லாமே உத்தேஸ்யம் அன்றோ

எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8-போல் இங்கும் அடையாளம் காட்டி அருளுகிறார்

உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –

அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு

——————–

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

அரங்கத்தம்மான்-ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-

சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்-

சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே-பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த

பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் வண்டுகளுக்கும் இவற்றுக்கும் உள்ள வாசி

திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் -பெருமாள் காலை-திருவடிகளையே பார்த்து இருப்பார்கள்-
இங்கு அமரர்கள் தேவர்கள் -தங்கள் நாற்காலி பார்த்து இருப்பார்கள்

விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்-
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –

——————–

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை
நாட்டினான் தெய்வம் எங்கும் அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-

——————-

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
கீதை 13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

——————–

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க –
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

——————

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே ஒழிக்க ஒழியாத நிருபாதிக சம்பந்தம்
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

————-

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
இதில் தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்-என்று தனது ஸ்வரூபம் காட்டி அருளி மேல்
தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்

“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-

சட்டு என்று உணர –பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-

கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே

அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –புசிக்க எழுந்து அருளாய் –

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

 

 

 

 

 

ஸ்ரீ திரு மாலை-45–வள வெழும் தவள மாட–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

விசேஷ உணவுகளை யுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும்
கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே
தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து
பெரிய பெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் .

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே

பதவுரை

வளம் எழும் தவளம் மாடம் –அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய
மா மதுரைநகரம் தன்னுள் –பெருமை தங்கிய வடமதுரையில்
கவளம் மால் யானை கொன்ற–கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின
கண்ணனை-ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
அரங்கம் மாலை –கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து
துளபம் தொண்டு ஆய–திருத்துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
தொல் சீர்–இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
தொண்டரடிப் பொடி–தொண்டரடிப்பொடியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–திருமாலையாகிய இத்திருமொழி
இளைய புன் கவிதை ஏலும்–மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
எம்பிராற்கு–பெரிய பெருமாளுக்கு
இனிதே ஆறே–பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)

விளக்க உரை

கவளம் என்று யானையுணவுக்குப் பெர்.
“களவமால்யானை” என்றும் பாடமுண்டு.
அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம்
ஒரு பருவத்தில் பெருத்த யானை யென்றபடி.

இளைய புன் என்பவை -சப்தத்தில்
இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும்.

எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும்,
எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு
இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.

“இப் பிரபந்தம் கற்றார்க்குப் பலஞ்சொல்லா தொழிந்தது-
இவ்வுகப்புத்தானே அவர்களுக்குப் பலமாகையாலே” என்ற வ்யாக்யாந ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

அடிவரவு:-
காவல் பச்சை வேதம்
மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்பு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு மெய்
சூது விரும்பி இனிது குட பாய் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது
குரங்கு உம்பரால் ஊர் மனம் தவமார்த்து
மெய்யுள்ளம் தாவி மழை தெளி மேம்பொருள்
அடிமை திரு வான் பழுதில் அமரப் பெண் வளவெழும் கதிர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-44 –பெண்ணுலாம் சடையினானும்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக
ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்;
சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று நெடுங்காலம்
தவம் புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கி நிற்க்கும்படியாயிற்று;
கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.
அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது.
ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே

பதவுரை

பெண் உலாம் சடையினானும்–கங்காநதி உலாவுகின்ற சடையையுடையனான சிவனும்
பிரமனும்–நான் முகக்கடவுளும்
உன்னைக் காண்பான்–உன்னைக் காண்பதற்காக
எண் இலா ஊழி ஊழி–எண்ண முடியாத நெடுங்காலமாக
தவம் செய்தார்–தவம் புரிந்தவர்களாய் (அவ்வளவிலும் காணப் பெறாமையாலே)
வெள்கி நிற்ப–வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருக்க
அன்று–அக்காலத்திலே
ஆனைக்கு–(முதலைவாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
வந்து–(மடுவின் கரையில்) எழுந்தருளி
விண் உளார் வியப்ப அருளை ஈந்த –நித்யஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய
கண்ணறாய்–(என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே!
உன்னை–உன்னை
களை கணா–தஞ்சமாக
கருதும் ஆறு என்னோ–நினைக்கலாகுமோ?

விளக்க உரை

வெள்கிநிற்ப-
தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து
தரையைக்கீறி நிற்கையில் என்கை.
அன்றியே,
வெள்கிநிற்ப-
வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம்.
ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.

அவர்களுக்கு வெட்கமாவது-
ஐயோ! முதலையின் வாயிலே அகப்படாமல் தபஸ்ஸிலே இழிந்து என்ன காரியஞ்செய்தோம்! என்றுபடும் லஜ்ஜை.
அப்படி அவர்கள் லஜ்ஜைப்படும்படியாகவும் விண்ணுவார் ஆச்சரியப்படும்படியாகவும் வந்து என்க.

வியப்ப –
பரஹ்மாதிகள் நெடுங்காலமாக எதிர்பாராநிற்க அவர்களையும் எங்களையும் அநாதரித்து
ஒரு திர்யக்ஜந்துவின் காற்கடையிலே அரைகுலையத்தலைகுலைய ஓடிப்போய்விழுவதே! என்று
நித்யஸுரிகள் வியப்ப கண்ணறாய் ஸ்ரீ கண்ணறை யென்பதன் விளி.

“உன்னையென்னோ களைகணாக் கருதுமாறே”
ஆஸ்ரித பக்ஷபாதியான உன்னை ஜகத்துக்குப் பொதுவான ரக்ஷகனென்று
சொல்லுமவர்கள் மதிகேடரென்றுகிறார்
(தேவாநாம் தாநவா நாஞ்ச ஸாமாந்ய மதிதைவதம்’ என்கிற பந்தம் கிடக்க
சிலர்க்காகச் சிலரை அழிக்கிற இவனை ஸர்வரக்ஷகனென்று நினைக்கலாமோ?” என்பது
வ்யாக்யாநஸுக்தி.

களைகண்-ரக்ஷகம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-43–அமர ஓர் அங்கம் ஆறும் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!-;
ஓர் அங்கம் ஆறும்–(வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
ஓர் வேதம் நான்கும்–நான்கு வேதங்களையும்
அமர ஓதி–நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
தமர்களில் தலைவர் ஆய–பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
சாதி அந்தணர்களேனும்–ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
நுமர்களை–தேவரீருடைய ஜந்மத்தைப்
பழிப்பர் ஆகில்–(அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
நொடிப்பது ஓர் அளவில்–ஒரு நிமிஷகாலத்துக்குள்ளே
அவர்கள் தாம்–அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
ஆங்கே–அப்போதே
புலையர் –சண்டாளராவர்கள்
(போலும்-வாக்யாலங்காரம்.)

விளக்க உரை

ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு;
சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு;
இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து,
அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும்
சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள்,
கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய
ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை)
அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால்
தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள்.

இப்படிப் போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-41–வானுளார் அறியலாகா –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

பகவத் ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு நீஹீந ஜந்மத்தாலும் நிஹீன அநுஷ்டாநத்தாலும்
ஒரு குறையுமில்லை யென்பது மாத்திரமேயல்ல;
அவர்கள் தங்களுடைய உச்சிஷ்டாந்நத்தாலே ஸம்ஸாரிகளையெல்லாம் பரிசுத்தராக்கும் படியான
பெருமை பொருந்தியவர்கள் என்பது இப்பாட்டு.

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –

பதவுரை

ஊனம் ஆயினகள் செய்யும்–தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும்.
ஊன காரகர்கள் ஏனும்–பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும்.
வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் –மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாததேவனே, என்று அநுஸந்திப்பராகில்.
தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில்–‘தேன் பெருகா நின்ற திருத்துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்
(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்)
போனகம் செய்த சேடம்–தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை
தருவர் ஏல் அன்றே–அநுக்ரஹிப்பாரானால் அப்போதே
புனிதம் –(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.

விளக்க உரை

தேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர்களுக்கு எம்பெருமானுடைய
ஸ்வரூபம் ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது.
“நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம்.
கடவர்களாயிருக்கிறோம்” என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால்,
“அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை
அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க.

இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல்,
அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும்,
தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும்
அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி
இழிதொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள். அ

வ்வளவேயுமன்று;
அவர்கள் தாங்களமுது செய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால்
அதனைப் பெற்று மற்றையோர் தூய்மைபெறலாம்படி
அத்தனை பெருமை பொருந்தியவர்கள் காண் என்கிறது.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-39 –அடிமையில் குடிமை யில்லா–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

இனிமேல், கீழ்ப்பாட்டில் சொன்ன ஞானமுடைய பாகவதர்களின் வைபவம் கூறுகிறது.
எம்பெருமான் தன் திருவடித்தாமரைகளில் பக்திசெய்யாதவர்கள் உயர்குலத்திற் பிறந்தவர்களாயிருந்த போதிலும்
அவர்களை ஒருபதார்த்தமாகவும் நினையாமல் உபேஷித்துவிட்டு,
தனது திருவடிகளில் பகதி செய்பவர் மிகவும் இழிகுலத்தவராயினும்
அவரையே விரும்புவன் என்கிறது இப்பாட்டில்.

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

பதவுரை

முடியினில் துளபம் வைத்தாய்–திருமுடியிலே திருத்துழாய் மாலையை அணிந்தவனே
அரங்கம் மாநகர் உளானே!-:
அடிமையில்–(உனக்குக்) கைங்கரியம் செய்வதில்
குடிமை இல்லா–உயிர்குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத
அயல்–(அடிமைக்கு) அயலான
சதுப்பேதிமாரில்–நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும்.
குடிமையில் கடைமைபட்ட –குடிப்பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்)
குக்கரில்–பரம சண்டாள ஜாதியில்
பிறப்பர் ஏனும்–பிறப்பர்களானாலும்
மொய் கழற்கு–(உனது) நெருங்கிய திருவடிகளிடத்து
அன்பு செய்யும்–பக்தி செய்கின்ற
அடியரை–அடியார்களையே
உகத்தி போலும் –நீ விரும்புவாய் போலும்

விளக்க உரை

மேன்மைக்குக் காரணம் –
எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று.
அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்;
இழிகுலப்பிறப்பு அன்று,
ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க.

குடிமை-
குடிப் பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம்.

அயலாதலாவது ‘
எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை.
அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள்
நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.

சதுப்பேதிமார் -சதுர் வேதிமார்; இருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்ற
நான்கு வேதங்களை ஓதினவர்களென்கை.
குக்கர் – மிகவும் தாழ்ந்தவர் என்பது பொருள்
(க்ஷுத்ர) என்ற வடசொல் குக்கர் எனத்திரிந்தது.

ஏனும்-எனினும் என்பதன் மரூஉ.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-38—மேம்பொருள் போக விட்டு –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

“அளியல் நம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே
“இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும்
அதற்காக நம் கைபார்த்திருப்பதும்
அதுக்கு மேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறதே!
இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று பெரியபெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய்,
அந்த ப்ரஸாதமெல்லாம் திருமுகத்திலே தோற்றும்படி யிருக்கக்கண்ட ஆழ்வார்,
“பெருமானே! தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வபாரங்களையும் ஸமர்பித்து
நிச்சிந்தையாயிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று
பெரியபெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

பதவுரை

புனல் சூழ் அரங்கத்தானே –காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மேம்பொருள்–(ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை
போக விட்டு–வாஸகையோடு விட்டிட்டு
மெய்ம்மையை–ஆத்ம ஸ்வரூபத்தை
மிக உணர்ந்து–உள்ளபடி அறிந்து
ஆம் பரிசு–ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும்
அறிந்து கொண்டு-தெரிந்து கொண்டு
ஐம்புலன்–ஐந்து இந்திரியங்களையும்
அகத்து அடக்கி–(விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி,
காம்பு அற–அடியோடே
தலை சிரைத்து–தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து
உன் தலைக்கடை இருந்து –உனது திருவாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து
வாழும்–உஜ்ஜீவிக்கின்ற
சோம்பரை–(தம்முடைய ஹிதத்தில்) சோம்பியிருக்குமவர்களை
உகத்தி போலும்–உகக்குமவனல்லையோ நீ.

விளக்க உரை

மேம்பொருள் என்பதற்கு
மேலெழுந்த பொருளென்றும்,
மேவின பொருளென்றும்,
மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்றுபடியாக நிர்வாஹம்;

கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே
விட்டகலும்படியாயிருக்கும் பொருள்-மேலெழுந்த பொருள் எனப்படும்.
அதாவது
ஸம்ஸாரஸம்பந்தம்.

மேவின பொருளாவது-
சிக்கன ஒட்டிக்கொண்டிருக்கும் பொருள்;
சேதநனால் பிரிக்கவெண்ணாதபடியிருக்கை.
அதாவது
தேஹஸம்பந்தம்,
அவித்யா ஸம்பந்தம்.

மேம்பாட்டை விளைக்கையாவது-
தன்னைப் பற்றினாரை ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.
அப்படிப்பட்ட பொருளாவது-ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்; ஆ
கிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.
தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதாபுத்தி
தேஹத்திற்காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரியபுத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.

அதற்குமேல் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி உணரவேணும்:
அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன்,
நித்யன், உணர்வைக் குணமாகவுடையவன்: அணுபரிமாணன்,
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன்,
அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன் என்றிங்ஙனே விரிவாக உணருகை.

ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த
பிறகு பின்னையும் ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது –
கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை.

ஐம்புலனகத்தடக்குகையாவது-
எம்பெருமானுக்குப் பண்ணும் கைங்கரியத்தில் ஸ்வப்ரயோஜநத்வபுத்தி பிறவாதபடி நோக்குகை.
“தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” என்றபடி.
எம்பெருமானுக்கே இனிதாகப் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஸூக்ஷ்மார்த்தம் இங்கு உணரத்தக்கது.

காம்பு அறத் தலைசிரைத்து –
உபாயாந்தரங்களில் தனக்குள்ள பற்று அறும்படி தன் தலையிலுண்டான துரிதங்களைப்போக்கி.
அதாவது
பேற்றுக்கு எம்பெருமான் ஸாதநமே யொழிய நாம் செய்யும் க்ரியாகலாபங்களொன்றும் ஸாதநமல்ல என்று
உறுதியான அத்யவஸாயம் வஹித்து என்றபடி.
அஹங்கார கர்ப்பமான உபாயாந்தரங்களின் விடுகையைச் சொன்னபடி.

இப்படி பரமைகாந்திகளாய் எப்போதும் உன் திருவாசலையே பற்றிக்கிடந்து வாழுஞ் சோம்பராகிய
பரமபாகவதர்கள் விஷயத்திலே தேவரீர் திருவுள்ளம் உப்ந்திருக்கும்படியே! என்று வியக்கிறபடி.

வாழும் சோம்பர் என்றது
கெடுஞ்சோம்பரை வ்யாவர்த்திக்கிறது.
கெடுஞ்சோம்பராவார் ஈச்வரனில்லை, சாஸ்த்ரமில்லை, பரலோகமில்லை என்றாற்போலே
எல்லாவற்றையும் இல்லைசெய்து
விஹிதகர்மங்களை அநுஷ்டியாமல் தோன்றிற்றுச் செய்து சோம்பேறிகளாய்த் திரிவார்.

வாழுஞ் சோம்பராவார்-
சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய்க் கர்த்தவ்யங்களை விடுகையன்றிக்கே
ஆஸ்திகசிகாமணிகளாய் ஸித்தோபாயமான எம்பெருமானை ஸ்வீகரித்து
அவ்வெம்பெருமானுடைய அநுபவமே காலக்ஷேபமாய்த்
தமது ஹிதத்தைத் தாமே தேடிக்கொள்ளுவதில் சோம்பியிருப்பவர்கள்.

உகத்தி- முன்னிலையொருமை வினைமுற்று

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-37–தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தாம் இப்படி கதறா நிற்கச் செய்தேயும் பெரியபெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே,
தம்மையொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ?
ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ?
‘நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமாயிருக்க
இவ்வளவுகூட அபிமாநியாமல் கூக்குரல் கேட்டுக்கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே!
இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார்.

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –

பதவுரை

தெளிவு இலா கலங்கல் நீர் சூழ்–(ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற
திரு அரங்கத்துள் –கோயிலிலே
ஓங்கும் –விஞ்சி யிருக்கிற
ஒளி உளார் தாமே அன்றே–தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே
தந்தையும் தாயும் ஆவார் –(நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்;
என் திறத்து–(அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது)
எளியது ஓர் அருளும் அன்றே–ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே?
எம்பிரானார்–எனக்கு உபகாரகரான அவர்
நம் பையல் அளியன் என்னார்–“நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை;
அம்ம ஓ கொடிய ஆறே–கொடுமையா யிராநின்ற தீ!

விளக்க உரை

காவேரிக்குத் தெளிவில்லாமை-
மேன்மேலும் பெருக்கு மிக்கிருக்கையாலே. இத்தெளிவில்லாமையை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
ஒரு சமத்காரம் தோற்ற வருணிக்கிறார் –
“துக்தாப்திர்ஜநகோ ஜந்ந்யஹமியம்” இத்யாதி ச்லோகத்தால் .
அதன் கருத்து-
பாற்கடல் தகப்பனார்;
பொன்னி என்ற நான் தாய் ;
ஸ்ரீரங்கநாய்ச்சியார் பெண்;
பெரிய பெருமாள் மணவாளன்;

இந்த விஷயத்திலே பெரிய பெருமாளுக்கும் பெரியபிராட்டியார்க்கும் தகுதியாக
நான் என்ன பண்ணப்போகிறேன்? என்று கலங்கினாற்போல,
சாமரம், கருப்பூரம், சந்தந வ்ருக்ஷங்கள், சிறந்த ரத்நங்கள், முத்துக்கள் முதலியவற்றை
அலைகளாகிற கைகாலே உந்தா நின்று கொண்டு ஆழ்ந்து வருகிற காவேரியைப் பற்றுங்கள் என்பதாம்.

திருவரங்கத்துள் ஓங்குமொளியுளார் என்றது –
பரமபதம் முதலிய இடங்கில் எழுந்தருளியிருக்கு மிருப்பைக் காட்டிலும்
கோயிலிலே எழுந்தருளியிருக்கு மிருப்பிலே உள்ள அதிசயம் தோற்ற.

விபீஷணாதிகிளை ரக்ஷித்தாற்போலே வில்லும் கோலுமெடுத்து ரக்ஷிக்க வேண்டியதில்லை;
குளிர ஒருகால் நோக்கியருளினால் என்தாபம் தீரும் என்ற கருத்துப்பட அருளிச்செய்கிறார்
எளியதோரருளுமன்றே என்திறத்து என்று.

எம்பெருமான் சோதிவாய்திறந்து
‘ ஆழ்வீர்’ என்றழைக்க வேணுமென்று இவர் ஆசைப்படுகின்றாரில்லை,
‘அடே பையா’ என்று ஒரு இன்சொல் சொல்லக்கேட்க விரும்புகின்றாரித்தனை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-36-மழைக்கன்று வரை முன் ஏந்தும்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –

பதவுரை

அன்று–(இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக் காலத்திலே
முன்–(பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே
மழைக்கு–மழையைத் தடுப்பதற்காக
வரை ஏந்தும் மைந்தனே–கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே!
மதுர ஆறே–இனிய ஆறு போல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே!
உழைக் கன்று போல நோக்கம் உடையவர்–மான் குட்டியின் விழி போன்ற விழியை யுடைய மாதர்களின்
வலையுள்–(அந்த நோக்காகிற) வலையினுள்ளே
பட்டு–அகப்பட்டு
உழைக்கின்றேற்கு என்னை–துடிக்கிற என்னை
நோக்கா தொழிவதே–கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ?
ஆதி மூர்த்தி–முழுமுதற் கடவுளே!
அரங்கமா நகருளானே!-;
உன்னை அன்றே -தேவரீரை நோக்கி யன்றோ
அழைக்கின்றேன் –நான் கூப்பிடா நின்றேன்.

விளக்க உரை

பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரை புரண்டு பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்து வருத்தப் படுத்தின காலத்தில்
கோவர்த்தந கிரியைக் கொற்றக் குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ;
அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் என்ன குணம் கண்டுபிடித்தாய்?
அவ்விடையருடைய கோஷ்டியிலாவது
பசுக்களின் திரளிலாவது
அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப் பொருள் தோன்ற
மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார்.

மதுர ஆறே! –
ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்த போதிலும் உன்னை விட முடியவில்லையே! என்பது கருத்து.

ஆறானது ஏரி, குளம் முதலியவை போலே ஒரிடத்திலேயே இராமல்
நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல்
எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம் போய் ஸேவை ஸாதித் தருள்கின்ற ஸௌலப்யமும்
இந்த முற்றுவமையால் தோற்று மென்க.

“உன்னையன்றே யழைக்கின்றேன்” என்றவாறே
எம்பெருமான்
“ஆழ்வீர்! நீர் அழைத்தவுடனே நான் ‘ஏன்?’ என்ன வேணுமோ? என்ன ஆவச்யகதை? என்று கேட்க,

ஆதிமூர்த்தி என்கிறார் –
இவ்வுலகம் உரு மாய்ந்து கிடந்த காலத்திலே ஒருவருடைய அபேக்ஷையும் எதிர்பாராமல்
இவற்றை உண்டாக்கின உனக்கு இவற்றின் ரக்ஷணம் அவஸ்ய கர்த்தவ்யமன்றோ என்கை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-35–தாவி அன்று உலகம் எல்லாம்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –

பதவுரை

அன்று–அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
உலகம் எல்லாம் தாவி–எல்லா உலகங்களையும் கடந்து
தலை விளாக் கொண்ட எந்தாய்–(திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே!
செங்கண்மாலே–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே!
ஆவியே –(எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே!
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்–(என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே!
பாவியேன்–பாவியாகி யான்
சிக்கென–உறுதியாக (எப்போதும் விடாமல்)
உன்னை அல்லால் சேவியேன்–உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்;
(உன்னையல்லாது வேறொருவரை)
பாவியேன்–நினைக்கவும் மாட்டேன்
பாவியேனே–நான் பாவியனேயாவேன்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி,
“இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க
ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது
அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி
அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று
தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமை கொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை
இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய;

அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச் செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி,
“பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக் கூறி,
எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை
நினைத்தலும்
தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.