Archive for the ‘Thiruppaan Aazlvaar’ Category

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் பிரபந்தம் -ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் அருளிச் செய்தது –

March 17, 2023

காராரும் பொழில் வஞ்சி கா வலவன் கதிர் மௌலிக்
கூராரும் சுடர் வேல் கைக் குல சேகரின் திறமும்
ஏராரும் பாகவதர் இன்னருளால் சிறுத்தை இயம்பி
சீராரும் திருப்பாண் ஆழ்வார் திறமும் செப்புவோம் –1-

மாணார்ந்த திறல் அரங்கர் மணி வண்ணனைக் கண்ட கண்கள்
காணா மற்று ஒன்றினையும் எனக் கரந்து கட்டுரைத்த
பாணாழ்வார் அனுபவத்தைப் பாட எனப் பக்தர்கள் முன்
நாணாதே ஒருப்பட்டேன் இதன் வேறு நகை யுளதோ –2-அவை அடக்கம்

மனு மகனுக்கு அயன் கொடுத்த மரகத மா மணிக்குன்றம்
எனும் அரங்கத்து அம்மானை இதயமலர் அணைக்கிடத்தி
அனுபவிக்கும் திறம் உணரில் திருமகளும் அஞ்சும் அடியேன்
பனுவலுக்கோ வெளியாவர் பாணாழ்வார் அல்லரோ –3

மனு மகன் -இஷ்வாஹு –
இவர் பெருமையைச் சொல்ல திருமகளும் அஞ்சும் படி இருக்க அடியேன் பாட்டுக்கு உட்படுவாரோ மாட்டாரோ

என்றால் பொய்யடியேனுக்கு எளிதோ மற்றவன் கீர்த்தி
நின்று ஆங்கே அது நிற்க நாயினேன் புன் சொலினும்
ஒன்றாம் அது என் எனில் உரை தோறும் திருப்பாணன்
குன்றாத திரு நாமம் வரலான் மெய் குறித்தோரே-4

திருநாமம் சொல்வதால் பெற்ற வலிமையாலே சொல்லுவேன்

திருப்பாணார் திரு அவதாரம்

ஆங்கு அவையே துணையாக அறைவேன் மெய் விண் நின்று
பூம் கமலக் கண் எம்மான் திருவருளால் புவியின் மறை
ஓங்கு திரு உறையூரில் திருக்குலத்தார் உறு தவத்தின்
பங்கு அதனால் கார்த்திகை மாதத்தில் வளர் பக்கத்தில் –5-

செய்ய நெறி உரோகிணியில் தேவர்களும் திரு மறையும்
வையக மா முனிவர்களும் மா தவரும் மகிழ்ந்து ஏத்தப்
பையத் தரவணைக் கிடந்தான் பத்தர் குழாம் பரிந்து ஓங்க
ஐயன் என ஆள வந்த திருப்பாணான் அவதரித்தான் –6-

இளமையிலேயே பாண் பெருமாள் சிறப்பு

ஈன்றாரும் அறியாதே இலை மறை காய் என மண்ணில்
தோன்றாதே வளர்ந்து அருளிச் சுருதி தொழ உலகு உய்ய
மூன்றாறு திரு வயதில் கைசிக நாரத முனிவர்
போன்றாரும் இவர்க்கு ஒவ்வார் எனும் இசையில் பொதுவின்றி –7-

சூழ் விசும்பு மதில் அமரர் தொல் உலகும் அம் புவியும்
ஆழ் கடலும் எண் கிரியும் அயன் அரனும் அசுரர்களும்
வாழும் உயிர்ச் சராசரமும் நீராள மயமாக
ஏழிசையும் பாண் பெருமாள் நம் பெருமாள் இடத்து இசைத்தார் –8-

பாணரது இசைத் தொண்டினை பலரும் போற்றுதல்

தென்னாற்றங்கரை நின்று திருப்பாணார் இவை பயில
அந்நாட்டார் திருக்குலத்தில் அவதரித்தார் இவர் யாரோ
பொன்னாட்டில் உள்ளவரோ எனப் புகலப் புண்ணியரும்
பன்னாளும் திருவரங்கத்து அம்மானைப் பணிந்து ஏத்தி –9–

அப்படியே பல காலம் அந்தரங்க சேவை பண்ணி
ஒப்பிலார் சங்கீதம் பயின்றிடு நாள் உயர்வானும்
இப்படியும் அளந்த பிரான் திரு மார்பில் இந்து அமரும்
செப்பென்னும் கன தனத்தாள் திரு மங்கை மனம் மகிழ்ந்தே –10-

பிராட்டி ஏவ அரங்கன் திருப்பாணரை அழைத்து வரச் சொல்லி வாயில் காப்போரை நியமித்தல்

திருவரங்க நகர் எம்பிரான் வடிவை செப்பும் வானில் உறை தேவரும்
மருவரும் பொருவில் வீடதாதி உலகு ஏழினும் இசை வழுத்துவோர்
ஒருவர் இங்கு அவரை ஒத்துளார்கள் பிறர் உண்டு கொல் உரை செயும் பவிப்
பெருகு காதலர் புறம்பு நிற்றல் பழுது என்று செங்கமலை பேசலும்

அண்டர் அண்டமுள் அடங்க உண்டு துயில் கொண்ட மால் அணி அரங்கனார்
புண்டரீக மலர் மங்கை கட்டுரை செய் போதில் அங்கு அவளின் நைந்து நம்
தொண்டரைக் கொணர்மின் என்று செம்பவள வாய் திறந்து இறைவர் சொல்ல அக்
கொண்டல் கோயில் திரு வாசல் காவலவர் ஏகினார் குழுவோடு ஏகியே –12-

வீதி பற்பல கடந்து சென்றவர்கள் திரு முகத்துறையை மேவி நின்று
ஆதி நாதன் அருள் அச்சு தன்னணி அரங்கன் இன்று உனை அழைத்தனன்
போதி எங்களோடும் என்று செப்பியவர் பொற் பாதங்களில் இறைஞ்சலும்
சாதியில் கடையன் என்று பாணர் அது தக்கது அன்று என வணங்கினார்

வர மறுத்த பாணரை அரங்கன் தொண்டர் குலமே தொழு குலாம் என்று சொல்லி அழைத்து வரச் சொல்லுதல்

வணங்கி நின்றவர் உரைப்ப மற்றவர்கள் மாசிலா நெறி அரண்கள் முக்
குணங்கள் தந்தவர் முன் எய்தி இம்மொழிகள் கூறுவோம் என வம் ஏகி நல்
பணங்கள் ஆயிரம் இலங்கு அநந்தன் மிசை மன்னா ஓ இனிய பத்தனார்
இணங்கு கின்றிலர் குணங்கள் எண்ணி இவண் எய்துவான் என இறைஞ்சினார் –14-

அந்த உரை சிந்தை புக ஆதி யவரோடு
முந்தை மறை நீதி குல முற்றும் வருவித்த
எந்தம் உறு தொல் குலம் இயம்பில் எமது அன்ப
வந்த குலமே குலம் வரச்சொலும் என்றார் –15–

நன்றிவை உரைத்திடுவம் நாத என நால்வர்
சென்று விரைவில் திருமுகத்துறை செறிந்தே
நின்று இசை வழுத்து நிமலர்க்கு இவை நிகழ்த்த
ஓன்று உளது கேண்மின் என மற்றவர் உரைப்பார் –16-

மின்னல் போன்று ஒளி வீசும் சரீரத்தை யுடைய விஷ்ணுவின்
பின்னை மணாளனை அடைந்து பிறிதற்றுத்
தன்னை யற விட்டு தலைவர்க்கு அது தகும் கொல்
என்னை யவரோடும் இறை எண்ணிடவும் என்றே –17-

செப்பி அடியேன் முடிவில் தீ வினை செய் நீசன்
ஒப்பரிய சோதி வளர் உத்தம தலத்தில்
எப்படி மிதிப்பது இரு கால் கொடு எனை ஆளும்
அப்பனொடு கட்டுரைமின் அன்பர் என ஆழ்வார் –18-

கூற இறை ஏவலோடே சென்றவர்கள் கோவே
மாறிடில் உமைக்கொடு செல்வோம் வலியில் என்றே
ஏறி எதிர் செல்ல அவர் ஓடி அவண் எட்டாது
ஆறு வரு காவிரியின் அக்கரையில் ஆனார் –19-

இத்திறம் அரங்கரோடு இயம்பிடுவம் என்றே
மெய்த்திறம் உணர்ந்த நெறி நால்வர்களும் மீண்டு ஆங்கு
அத்திறமும் ஆயனோடு அறைந்தனர்கள் அம்மான்
எத்திறம் இயற்றில் இவண் எய்தும் என எண்ணி –20-

அரங்கன் லோக சாரங்க முனிவரைக் கூவிப் பாணரைத் தோளில் தூக்கி வரச் சொல்லுதல்

அலகிலா மா மாயை அரங்கன் தனை அர்ச்சனை செய்யும்
உலக சார்ங்க முனியை உவந்து கூவி உத்தம போய்ப்
பலரும் காண நின் தோளில் பாணாழ்வானைப் பரிந்து ஏற்றி
நிலவும் பதியை வளம் செய்து கொணர்க என்றான் நிகர் இல்லான் –21-

மாசிலா முனிவன் மாயன் மலரடி வணங்கி ஏக
ஆசிலா அனைத்துக் கொத்தும் அவனுடன் சென்மின் என்றே
ஈசனும் அருளிச் செய்ய யாவரும் எழுந்து சென்று அத்
தேசினான் நின்று பாடும் திரு முகத்துறையை மன்னி –22-

சுற்றுற வளைந்து கொண்டு தொழுதனர் திருப்பாணாழ்வார்
உற்றவர் தாள்கள் தம்மில் உடன் பணிந்து உருக ஈசற்கு
அற்ற மா முனிவன் ஆழ்வீர் அருளிப்பாடு உமக்கு இன்று என்றான்
நற்றவம் உடைய பத்தர் நான் அது செய்யேன் என்றார் –23-

ஏடவிழ் துளபத்தாரான் எடுத்து உமைக் கொணரச் சொன்னான்
ஓடவும் ஓட்டோம் ஆழ்வீர் என்றனர் உவந்து சென்றார்
மாடு நின்றவரை நோக்கார் மற்றொரு திசையை நோக்கிக்
கூடுமோ நீசன் மாசில் குலத்தொடும் என்று கூற –24-

லோக சாரங்கர் திருப்பாணாழ்வாரைத் தோளில் தூக்கிக் கொண்டு திருவரங்கம் கோயிலினுள் செல்லுதல்

கடுப்பினில் ஆழ்வார் ஓடக் காத்துற வளைந்து நின்றார்
தடுத்தனர் ஓடல தன்னைச் சரண் என வணங்கி மண்ணில்
படுத்தனர் திருப்பாணாழ்வார் பங்கயத்து அயனும் போற்ற
எடுத்துற முனிவன் ஏந்தி இருத்தினான் திருத்தோள் தன்னில் –25-

நண்ணரும் இலங்கை வேந்தை நாளை வா என்ற அந்நாள்
கண்ணனைத் தோள் மேல் கொண்டு களித்த மாருதியை மானப்
பண்ணமர் கவி வலானைத் தாங்கிய பனவன் பெற்ற
உள் நிறை மகிழ்ச்சி ஏழேழ் உலகினில் ஒருவருக்கு உண்டோ –26–

இடி நிகர் முரசம் ஆர்ப்ப இமையவர் முனிவர் சித்தர்
கடி மலர் சிந்தி ஆர்ப்பக் காசினியோர்கள் போற்றிப்
படி மீசை இறைஞ்சி வாழ்த்தப் பக்தர்கள் குழாங்கள் ஆடும்
அடி தொறும் சேறு பாயும் ஆனந்த அருவி நீரால் –27–

அணி அரங்கத்தை முக்கால் அவ்வணம் வலம் செய் தேகப்
பணியணைக் கிடந்த மா மால் பாணர் மெய் விழிகள் நேர் முன்
கணி கணன் பின்னே போன கஞ்ச மா மலர்த்தாள் ஆதி
மணி முடி வரையும் காட்டி மாசிலா மகிழ்ச்சி ஈந்தார் –28–

பாணர் பரவிய பாட்டு

மும்மலமும் அற்ற நீதி முனி வரன் திருத்தோள் மன்னி
எம்மலமும் கடிவார் வீதி ஊடவர் ஏகும் காலை
அமலன் என்னாதி நீதி அணி அரங்கத்துள் எம்மான்
கமல பாதங்கள் வந்து என் கண்ணுள் ஓக்கின்றன என்றும் –29-

நின்ற தாள் போய தாளால் நிலம் விசும்பு அளந்து நீண்ட
வென்றி வேல் அரக்கர் துஞ்ச வெங்கணை துரந்த வேந்தன்
மன்றல் சேர் துளபத் தாரான் வளர் திரு அரையில் கண்டு
சென்றதாம் சிவந்த செம்பொன் ஆடையில் சிந்தை என்றும் –30-

மந்தி பாய் வேங்கட மலையை மன்னியும்
இந்தியம் கடிந்தவர் இதயப் போதிலும்
சிந்தியாது அடி தொழும் திருவரங்கனார்
உந்தி மேல் எனதுயிர் ஒடுங்கிற்று என்னவும் –31-

கலகமார் இலங்கையர் வேந்தன் காட்டிய
அலகிலா ஆற்றலை அறுத்த மாயனார்
உலகெலாம் உண்டு ஒடுக்கு உதர பந்தனம்
நிலவும் என்னுள்ளத்து என நெகிழ்ந்து கூறியும் –32-

தந்தை தாய் சுற்றம் உற்ற தமியனேன் உயிரும் ஆகி
முந்தை நாள் விரும்பிச் செய்து மொய்த்த வல் வினையும் தீர்த்து என்
சிந்தையே கோயில் கொண்டு திரு வரங்கத்துள் மன்னும்
எந்தையார் திரு மார்பு அன்றோ என்னை ஆட் கொண்டது என்றும் –33–

வண்டடர் இதழித் தாரோன் வல் வினை முழுதும் தீர்த்துக்
கொண்டல் வந்து அமரும் சோலைக் குளிர் புனல் அரங்கம் மன்னி
அண்டரண்டங்கள் ஆதி அணைத்துள்ள பொருளும் தண்டாது
உண்டமர் மிடறு கண்டீர் உயக்கொண்டது என்னை என்றும் –34-

கையமர் ஆழி சங்கம் கதிர் மதி இருபால் மன்னும்
மையமர் கிரி யிது என்ன வளர்வதாம் கருணைக் குன்றம்
பையர வணையுள் மன்னும் அரங்கனார் பதுமம் போன்ற
செய்ய வாய் ஐயோ இன்று என் சிந்தனை கவர்ந்தது என்றும் –35-

பரிய வாள் அவுணன் ஆகம் படி மிசை மடி மேல் இட்ட
அரிய வாள் உகிரால் கீண்ட அரி எனது அரங்கத்து அம்மான்
உரிய மா முகத்தில் நீண்டு செவ்வரி ஓடி வாடாப்
பெரிய வான் கண்கள் என்னைப் பேதைமை செய்த என்றும் –36–

பாலனாய் ஞாலம் உண்டு பங்கயச் செல்வி தன்னோடு
ஆல மரத்திலோர் சிற்றிலை அமர் அரங்கத்து அம்மான்
கோல மா மணிகள் ஆரம் குறு நகை முடிவில் சோதி
நீல மா மேனி நெஞ்சை நிறை கொண்டது ஐயோ என்றும் –37–

கொண்டல் போல் உருவத்தானைக் கோவலனாகி நெய் பால்
உண்ட செவ்வாயினானை உளம் புகுந்து உருக்குவானை
அண்டர்கள் பெருமாள் தன்னை அமுதினை அரங்கத்தானைக்
கண்ட என் கண்களால் பின் காண்கிலேன் ஒன்றை என்றும் –38-

அப்படியே திருமொழி ஓர் பத்து உரைத்து அங்கு அணி யரங்கன் திரு முற்றத்தில்
ஒப்பரிய முனி வரனோடு எய்தி அவன் திருத்தோள் நின்று உம்பர் வாழ்த்தச்
செப்பரிய பாண் பெருமாள் நம்பெருமாள் சரணம் எனச் சென்று தாழ்ந்தார்
இப்படியே இறை அருளின் செயல் இருக்கும் என்று ஒருவருக்கு இயம்பலாமே –39-

ஆழ்வார் திருவரங்கன் திருவடியில் அடங்குதல்

சரணம் எனத் திருவடிக்கீழ் சென்று இறைஞ்சும் பாண் பெருமாள் தன்னை நோக்கிக்
கரண ஒழுங்குறும் வஞ்சப் பொய்யன்புக்கு எட்டாத கமல செவ்வாய்ப்
பூரணன் எழுந்து இணை யடியை மெய்யன்பர் சென்னி மிசைப் பொருத்தப் பூட்ட
அரண் இதுவே புகலிடம் என்று அக்கமலத் திருவடியில் அடங்கினாரால் –40-

இன்ப வீடு அடைவார் தூலமாம் உடல் விட்டு எழில் திகழ் சூச்சுமம் கழற்றித்
துன்பவா தனையும் விரசையில் போக்கிச் செறிவர்கள் துகளறு பாணர்
என்பு தோல் உரோமத் தூலமும் அரங்கன் இணை யடி எய்தியது என்றால்
அன்பினால் அன்றி ஒன்றினால் உய்யும் உபாயம் என் அண்டத்தில் உளதே –41-

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அமலனாதிபிரான் அனுபவம் (அன்பில் ஸ்ரீ உப.வே. கோபாலாசாரியார் ஸ்வாமி அனுபவம்)

January 13, 2021

தேவரிஷியான நாரதர் வீணாபாணி. அவருடைய வீணை அவருக்கு நித்யஸஹசரீ; நித்யமாக ஸஹதர்மசரீ.
பகவத் குணங்களைப் பரவசமாகப் பாடி ஆனந்திப்பதே அவருடைய காலக்ஷேபம்; அவர் தர்மம்.
அந்தத் தர்மத்தில் ‘வல்லகீ’ என்னும் அவர் வீணை ஸஹசரீ. ஆத்மயாகம் செய்யும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு
‘ச்ரத்தை பத்நீ’ என்று சரணாகதியை விஸ்தாரமாக விவரிக்கும் வேதம் ஓதுகிறது.
நாரதருடைய வீணை அவருக்குப் பத்நி போல் ஸஹ தர்ம சரீ. அப்படியே நம்பாணனுக்கு அவர் யாழ் ஸஹதர்மசரீ.

ஆழ்வார்கள் ரிஷிகள், த்ரமிடவேத த்ரஷ்டாக்கள்; வேதோபப்ருஹ்மணம் செய்தார்கள்.
அந்த ரிஷிகளில் நம் பாணர் நாரதரைப் போன்ற காயக தேவ ரிஷி. பாட்டினால் பகவானை ஸாக்ஷாத்கரிப்பவர் நாரதர்.
பாட்டினால் பரமாத்மாவினிடம் லயிப்பது ஸுலபம். ‘வீணாவாதந தத்வத்தையறிந்த, ச்ருதி ஜாதிகளில் நிபுணராய்,
தாள ஞான முடையவர் அப்ராயேஸந(எளிதில்) மோக்ஷவழியை அறிவார் – அடைவார்’ என்பர்.

நம் பாணர் இப்படி ஸுலபமாய் பரமாத்மா வினிடம் லயித்துப் பரவசமாகுபவர். பாட்டினால் கண்டு வாழ்பவர் நாரதர்.
இருவரும் பாட்டினால் கண்டு வாழ்கிறவரே. பாணர் துதி பாடுவர்.
(பண–ஸ்துதௌ) (விபந்யவ) (பாணிணி தாதுபாடம்) என்று பாடும் நித்யஸூரிகளைப் போல இவர் அரங்கனைப் பாடியே போந்தார்.
இவர் வீணாபாணி. யாழ்ப் பாணி. ( தனியன் சுலோகம்) என்றபடி பாணி என்றும் திருநாமம்.
வாத்யத்தோடு பாடிய ஆழ்வார் இவரொருவரே.
வேணு கானம் பண்ணின க்ருஷ்ணன் ஒருவரே அவதாரங்களில வாத்யத்தோடு காயகர். வேதாந்தத்தையும் கீதையாகப் பாடினார்.
மற்றைய அவதாரங்களில் பாடவில்லை. வராஹரான ஞானப் பிரான் மூக்கினால் “குரு குரு” என்று சப்தித்துக் குருவானார்.
(குருபிர்கோணாரவைர் குர்குரை). அபிநவதசாவ தாரமான பத்து அவதாரங்களில் இவரொருவரே
கண்ணனைப் போல வாத்யம் வாசித்த காயகர்.
“வீணையும் கையுமாய் ஸேவிக்கிற விவர்க்குச் சேமமுடை நாரதனாரும் ஒருவகைக்கு ஒப்பாவர்” என்று பிள்ளைலோகம் ஜீயர்.

அஷ்டாங்க‌ யோக‌த்தில் ஸ‌மாதியென்னும் ல‌ய‌த்தை அடைவ‌துண்டு. அந்த‌ ஸ‌மாதியில் கிடைக்கும் த‌ர்ச‌ந‌ம்,
த‌ர்ச‌ந‌ ஸ‌மாநாகார‌மே யொழிய‌ முழு த‌ர்ச‌ந‌ம‌ல்ல‌, த‌ர்ச‌ந‌ம் போன்ற‌ மிக்க‌ தெளிவான‌ ஞான‌ம்.
பாட்டினால் வ‌ரும் ல‌ய‌மும் ப்ராயேண‌ அப்ப‌டியே. மோக்ஷ‌த்தில் அடைவ‌து உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌த்தின் காட்சி
இவ‌ர் அர‌ங்க‌ன் முன் அம‌ல‌னாதி பிரான் பாடி அர‌ங்க‌ன‌ருளால் அக்காட்சியைப் பெற்று முக்த‌ரானார்.
இவ‌ர் அர‌ங்க‌ன் முன் பாடிய‌த‌ற்கு் தத் க்ஷ‌ண‌மே ப‌ர‌ம‌ புருஷார்த்த‌ முத்தியே அர‌ங்க‌ன் அளித்த‌ ப‌ரிசு.
(விச‌தே தத‌நந்த‌ர‌ம்) என்ற‌ப‌டி ப‌ர‌மாத்மாவிற்குள் நுழைந்து முக்திப் பேரின்ப‌ம் பெற்றார்.
இவ‌ர் முத‌லில் அர‌ங்க‌னைப் பாட்டாலும் யோக‌த்தாலும் ல‌யித்து் க‌ண்ட‌து த‌ர்ச‌ந‌ ஸ‌மாநாகார‌மான‌ தெளிந்த‌ ஞான‌ம்.
அந்த‌க் காட்சிக்கும், அர‌ங்க‌னை நேரில் காணும் காட்சிக்கும் பேத‌முண்டு.
அர‌ங்க‌னுடைய‌ த‌ர்ச‌ந‌ம் இவ‌ருக்கு அர‌ங்க‌ன‌ருளால் தான் கிடைத்தது என்ப‌தை ஒருவ‌ரும் ம‌றுக்க‌வொண்ணாது.
இவ‌ர் வ‌ள‌ர்ந்த‌ குல‌ம் அர‌ங்க‌ன‌ருகில் செல்ல‌க் கிடைக்கக்கூடிய‌ குல‌ம‌ல்ல‌.

(ய‌மேவைஷ‌ வ்ருணுதே தேந‌ ல‌ப்ய‌: த‌ஸ்யைஷ‌ ஆத்மா விவ்ருணுதே த‌நூம் ஸ்வாம்) என்று
க‌ட‌வ‌ல்லியும் முண்ட‌க‌மும் ஓதிவைத்த‌ன‌. இந்த‌ இர‌ண்டு உப‌நிஷ‌த்துக‌ளும் இதே ம‌ந்த்ர‌த்தை ஓதின‌.
“வேத‌ புருஷ‌ன் இதை அபேக்ஷித்தான்” என்ப‌து ஸ்ரீவ‌ச‌ன‌ பூஷ‌ண‌ம். இந்த‌ ச்ருதிக்கு ந‌ம் பாண‌நாத‌ன் நேர் நித‌ர்ச‌ந‌ம்.
அர‌ங்க‌னே இவ‌ரைக் காட்சித‌ர‌ வ‌ரித்துத் த‌ன‌த‌ருகே வ‌ருவித்துத் த‌ன் காட்சியைப் ப‌ரிபூர்ண‌மாக‌த் த‌ந்தான்.
த‌ன் ஸ்வ‌ரூப‌ விவ‌ர‌ண‌ம் செய்தான். அவ‌ன் “உவ‌ந்த‌ உள்ள‌த்த‌னாய்” இவ‌ருக்கு விவ‌ர‌ண‌ம் செய்த‌ திருமேனியை
(த‌நுவை) இவ‌ர் உல‌க‌த்திற்குத் த‌ன் பாட‌ல்க‌ளால் விவ‌ர‌ண‌ம் செய்து இன்புற்று இன்ப‌ம் ப‌ய‌ந்தார்.

(அனுபூய‌ ஹ‌ரிசயான‌ம்) (நாத‌முனிக‌ள் சாதித்த‌ பாண‌ன் த‌னிய‌ன் ச்லோக‌ம்) என்ற‌ப‌டி
தாம் அனுப‌வித்த‌ இன்ப‌த்தை உல‌க‌த்திற்குத் த‌ம் பாட‌ல்க‌ளால் சாச்வ‌த‌மாக‌ ப‌ய‌ந்தார்.
“காட்ட‌வே க‌ண்ட‌” என்ற‌ ந‌ம்பிக‌ள் பாசுர‌த்தில் “பெருமாள் அருளால் வ‌ரித்து அவ‌ராகக் காட்டின‌தால் தான் க‌ண்டார்”
என்று (ய‌மேவைஷ‌) ச்ருதியின் பொருள் ஸூசிக்க‌ப் ப‌ட்ட‌து.
“ஆதி” என்ப‌த‌ற்கு “வ‌லுவில் தாமாக‌வே முத‌லில் அழைத்தான்” என்னும் பொருளுரைக்க‌ப் ப‌ட்ட‌து. தான் முந்திக் கொண்டான்.
“த‌ம்மை விஷ‌யீக‌ரிக்கைக்கு அடியானான்”, “என் பேற்றுக்கு முற்பாடானான‌வ‌ன்” என்று பிள்ளையும் நாய‌னாரும் ப‌ணித்தார்.
“ந‌ல்ல‌தோர் அருள் த‌ன்னாலே காட்டினான் திருவ‌ர‌ங்க‌ம் உய்ப‌வ‌ர்க் குய்யும் வ‌ண்ண‌ம்”(திருமாலை) என்று
பாடிய‌ திருவ‌ர‌ங்க‌ம் காட்டும் அருள் இவ‌ர் வ‌ள‌ர்ந்த‌ குல‌த்திற்கு எட்டுவ‌த‌ல்ல‌.
அர‌ங்க‌ன் அருளி ப‌லாத்கார‌ம் செய்யாவிடில் ஸ‌ந்நிதியில் க‌ர்ப்ப‌க்ருஹ‌த்தில் ப்ர‌வேச‌ம் இவ‌ருக்கு அக்கால‌த்தில் கிடைப்ப‌து ஸாத்திய‌மோ?
ம‌நுஷ்ய‌ ய‌த்ன‌த்தில் அஸாத்ய‌மென்ப‌து நிச்ச‌ய‌ம். நந்த‌னாருக்குக் கிடைத்ததுபோல் இதுவும் கேவ‌ல‌ம் தைவ‌ ய‌த்ன‌ம்.
ப‌ர‌மாத்மா தானே த‌ன் காட்சியைத் த‌ருகிறா னென்ப‌தை அர‌ங்க‌ன் தானே வ‌ற்புறுத்தி இவ‌ரை அழைத்துத் த‌ந்து
ஸ‌ர்வ‌லோக‌ ஸாக்ஷிக‌மாய் மூத‌லிப்பித்து அருளினார். இந்த‌ ச்ருதியில் காட்டிய‌ப‌டி ப‌ர‌ம‌ புருஷ‌ன் த‌ம்மை ப்ரிய‌த‌ம‌னாக‌
வ‌ரித்துத் த‌ம் திருமேனியைக் காட்டித் த‌ந்தானென்ப‌தை “என்னைத் த‌ன் வார‌மாக்கி வைத்தான்” என்று ஸூசித்தார்
வார‌ம் = வர‌ணீய‌ வ‌ஸ்து.

“காட்ட‌வே க‌ண்ட‌” (பாண‌ன் த‌னிய‌ன்) என்று முத‌ல‌டியில் கூறிய‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ர‌ஹ‌க் காட்சி.
(மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதிய‌ஞ்சோதியோடு அபேத‌மாய் அனுப‌வ‌ம்.
ப‌ர‌, விப‌வ‌, ஹார்த்த‌ அர்ச்சாமூர்த்திக‌ளை ஒன்றாக‌ அனுப‌வ‌ம். பெரிய‌ பெருமாள் திருமேனியிலே திரும‌லை
முத‌லாகக் கோவில் கொண்ட‌ அர்ச்சாவ‌தார‌ங்க‌ளிலும், ராம‌ க்ருஷ்ண‌ வாம‌ன‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌னாதிக‌ளிலுமுள்ள‌
போக்ய‌தையெல்லாம் சேர‌ அனுப‌வித்து என்ப‌து முனிவாஹ‌ன‌ போக‌ம்.
உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌னாக‌ ஜ‌க‌ஜ் ஜ‌ந்மாதி கார‌ண‌மாக‌ அனுப‌வ‌ம். உப‌ய‌ லிங்கானுப‌வ‌ம்.
நிர்த்தோஷ‌ க‌ல்யாண‌ குணாக‌ர‌த்வ‌, ஆதி கார‌ண‌த்வ‌, ர‌க்ஷ‌க‌த்வாதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்மமாக‌ அம‌ல‌னாதிபிரானில் அனுப‌வ‌ம்.
பாட்டுக்க‌ள் காட்சி அனுப‌வ‌த்தின் ப‌ரீவாஹ‌ம். யோக‌மென்னும் ல‌ய‌த்திற்கு ஸாத‌க‌ம். விரோதிய‌ல்ல‌.

உப‌ய‌ விபூதி விசிஷ்டாநு ப‌வ‌த்தில்
(முண்ட‌க‌ம் 2,3,9) (பித்ய‌தே ஹ்ருத‌ய‌க்ர‌ந்திச்சித்ய‌ந்தே ஸ‌ர்வ‌ ஸ‌ம்சயா: க்ஷீய‌ந்தே சாஸ்ய‌ க‌ர்மாணி த‌ஸ்மிந்த்ருஷ்டே ப‌ராவ‌ரே)
என்ற‌ப‌டிக்கும் (ய‌த்ர‌ நாந்ய‌த்ப‌ச்ய‌தி) (சாந்தோகிய‌ம் — பூமமித்யை) என்ற‌ப‌டிக்கும்,
ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ந‌ம் கிடைத்துப் பார‌மாய‌ ப‌ழ‌வினை ப‌ற்றறுந்தது.
நான்காம் அடியில் “பாட்டினால் க‌ண்டு வாழும்” என்ற‌து, முக்தி த‌ந்த‌ருளின‌ உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌
ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ன‌க் காட்சி. முத‌ல் பாதத்தில் “க‌ண்ட‌” என்ற‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி.

ந‌ம் பாண‌நாத‌ர் யோகி ஸார்வ‌பௌம‌ர்: பாட்டினாலும் யோக‌த்தினாலும் த‌ர்ச‌ன‌ ஸ‌மாநா கார‌ண‌மான‌ காட்சி போன்ற‌
தெளிந்த‌ அறிவாகிய‌ ஸ‌மாதியை அடிக்க‌டி ஏறுப‌வ‌ர். ப‌ல்கால் யோகாரூட‌ர்.
யோகாரோஹ‌மே இவ‌ருக்குப் பொழுது போக்காய் இருந்தது.
க‌டைசியில் இவ‌ருக்குப் பெருமாள் நிய‌ம‌ன‌த்தால் கிடைத்தது யோக்யாரோஹ‌ம் முனியேறின‌து.
யோகாரூட‌ராக‌ நெடுகிலும் இருந்து வ‌ந்த‌வ‌ர் க‌டைசியில் யோக்யாரூட‌ரானார். எந்த‌ யோகிக்கும் இந்த‌ ஏற்ற‌ மில்லை.
ந‌ம்பிக‌ளும் இதை “முனியேறி” என்று ர‌ஸ‌மாக‌ வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்தார். யோக‌மேறுவ‌து யோகிமாத்ர‌ ஸாதார‌ண‌ம்.
ஆழ்வார்க‌ளெல்லாரும் யோகாரூட‌ர்க‌ள்: யோக‌மேறின‌வ‌ர்க‌ள்.
(ப‌ச்ய‌ந் யோகீ ப‌ர‌ம்) என்று முத‌ல் திருவாய்மொழியின் ஸ‌ங்க்ர‌ஹ‌ ச்லோக‌த்திலேயே,
தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ ச‌ட‌கோப‌ முனியை யோகி என்ற‌து. முநித்வ‌ம் ம‌ட்டிலும் எல்லாருக்கும் ஸாதார‌ண‌ம்.
முனியேறின‌ முனி இவரொருவரே.

யோக‌ம் அஷ்டாங்க‌ம்: எட்டு அங்க‌ங்க‌ளுடைய‌து. ஆனால் எட்டாவ‌து அங்க‌மாகிய‌ ஸ‌மாதியே அங்கி.
ய‌ம ‌நிய‌மாதிக‌ளான‌ அங்க‌ங்க‌ள் ஸாத‌க‌னுடைய‌ ப்ர‌ய‌த்ன‌ங்க‌ள். திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் யோக‌த்திற்கு ஆல‌ம்ப‌ந‌மாகும்.
ஸால‌ம்ப‌ந‌மாகச் செய்யும் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌ த்யான‌த்தில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் சுபாச்ர‌ய‌மான‌ ஆல‌ம்ப‌ந‌ம்.
அந்த‌ யோகால‌ம்ப‌நத்தைப் பாண‌யோகி எட்டு அங்க‌ங்க‌ளாக‌ வ‌குத்து, அந்த‌ த்யான‌த்தை அஷ்டாங்க‌மாக‌ வ‌குத்தார்.
“பாத‌க‌ம‌ல‌ம், ந‌ல்லாடை, உந்தி, உத‌ர‌ப‌ந்த‌ம், திருமார்பு, க‌ண்ட‌ம், செவ்வாய், க‌ண்க‌ள், என்ப‌ன‌ எட்டு அங்க‌ங்க‌ள்.
முத‌ல் எட்டுப் பாட்டுக்க‌ளிலும் இந்த‌ எட்டு அங்க‌ங்க‌ளின் அநுப‌வ‌ம்.
ஒவ்வொன்றிலும் விக்ர‌ஹியின் ஸ்வ‌ரூபாநுப‌வ‌மும் க‌ல‌ந்தது. அங்க‌விசிஷ்ட‌ ஸ்வ‌ரூபாநுப‌வ‌ம்.

ஸ்வ‌ரூபாநுப‌வ‌த்தில் குண‌ க்ரியாத் ய‌நுப‌வ‌மும் சேர்ந்தது. “ந‌ல்லாடை” என்ப‌து திருத்துடை முத‌லிய‌வ‌ற்றின் ஆவ‌ர‌ண‌ம்.
( வ‌ஸ்த்ர‌ப்ராவ்ருத‌ஜாநு) ந்யாய‌த்தை நினைக்க‌ வேணும். ஜ‌ங்காஜாநு, ஊருக்க‌ளுக்கும் ந‌ல்லாடை உப‌ல‌க்ஷ‌ண‌ம்.
இப்ப‌டி ஓர் வில‌க்ஷ‌ண‌மான‌ அஷ்டாங்க‌ த்யாநாநுப‌வ‌ம் ப‌ண்ணி,
ஒன்ப‌தாம் பாசுர‌த்தில் அக‌ண்ட‌மாக‌த் திருமேனி முழுவ‌தையும் அனுப‌விக்கிறார்.
இப்ப‌டி விசித்திர‌மான‌ ஓர் அஷ்டாங்க‌ த்யான‌ முறையைக் காட்டுகிறார்.

அஷ்டாங்க‌ங்க‌ளையும் அனுப‌வித்து, அக‌ண்ட‌மான‌ திருமேனியை அனுப‌வித்து,
உப‌ய‌விபூதி விசிஷ்ட‌ ப்ர‌ஹ்ம‌த்தை அர‌ங்க‌னாகக் க‌ண்டு,
பூம‌ வித்யையில் கூறிய‌ ப‌ரிபூர்ண‌ ஸுகாநுப‌வ‌ம் வ‌ந்து மோக்ஷ‌ம் பெற்றார்.

ஆத்மாவில் ஜாதிபேத‌மில்லை. ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் ஜ்ஞாநைகாகார‌ம்: ப்ர‌த்ய‌ஸ்த‌மித‌ பேத‌ம்.
சுத்த‌மான‌ ஞான‌ ம‌ய‌மான‌ இவ‌ர‌து ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் அர‌ங்க‌னுக்குள் ப்ர‌வேசித்தது யுக்த‌மே.
பீஷ்ம‌ர் க‌ண்ண‌னைத் துதித்துக் கொண்டே அவ‌ருக்கு ஸ‌ம்ப‌ந்ந‌ராகும்போது
(ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸ‌ம்யுத‌ம்) என்று வ‌ர்ணித்த‌ப‌டி பீஷ்ம‌ருடைய‌ ஆத்ம‌ஜ்யோதிஸ்
ஸ்ரீக்ருஷ்ண‌ ப‌ர‌மாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிப‌க்த‌மாக‌ “இனி மீள்வ‌தென்ப‌துண்டோ!” என்று சாச்வ‌த‌மாகக் க‌ல‌ந்தது.
அவ‌ருடைய‌ திருமேனி ம‌ட்டும் நின்றுவிட்ட‌து. அத‌ற்கு அக்னி ஸ‌ம்ஸ்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

சிசுபால‌னுடைய‌ ஆத்ம‌ ஜ்யோதிஸ்ஸும் அப்ப‌டியே க‌ண்ண‌னுக்குள் க‌ல‌ந்தது.
“சிசுபால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து ஒரு தேஜோக்னி கிள‌ம்பி, தாம‌ரைக் க‌ண்ண‌னாகிய‌ க்ருஷ்ண‌னை ந‌ம‌ஸ்க‌ரித்து,
அவ‌ருக்குள் நுழைந்த‌ அத்புதத்தை எல்லா ராஜாக்க‌ளும் க‌ண்டார்க‌ள்” என்று பார‌த‌ம்.
“எல்லோர் முன்னே சிசுபால‌ னுடைய‌ தேஹ‌த்திலிருந்து கிள‌ம்பிய‌ ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவ‌னுக்குள் நுழைந்தது.
த்யான‌ம் செய்துகொண்டே த‌ந்ம‌ய‌த்வ‌த்தை அடைந்தான்” என்று பாக‌வ‌த‌ம்.

அங்கும் தேஹ‌ம் க‌ண்ண‌னுக்குள் நுழைய‌வில்லை. இங்கு ந‌ம் பாண‌ர் த‌ம் திருமேனியோடு அர‌ங்க‌னுக்குள் நுழைந்து க‌ல‌ந்தார்.
பாண‌னுடைய‌ திருமேனியும் ப‌க‌வ‌த‌வ‌தார‌த் திருமேனிக‌ளைப்போல‌ அப்ராக்ருத‌மாக‌வே இருந்திருக்க‌ வேண்டும்.
சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌மான‌ திவ்ய‌ திருமேனி சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌த் திருமேனிக்குள் ப்ர‌வேசித்துக் க‌ல‌ந்தது.
இத‌னால் அவ‌ர் தேஹ‌மும் ப்ராக்ருத‌ம‌ல்ல‌ என்று தெளிவாக‌ ஏற்ப‌டுகிற‌து.

—————

அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமல னின்மல னீதிவானவ னீண்ம திளரங்கத்தம்மான் றிருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே. (1)

(1) அமலன் – தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்து பெருமாளை யணுகுவதால் பெருமாளுக்கு என்ன அவத்யம்
விளையுமோ வென்று மிகக் கவலை. நம் ஞானத் தெளிவினால் அக் கவலையை நிவர்த்திக்கிறார்.
பெருமாளுக்கு ஒன்றும் ஹேயமில்லை. எல்லாம் அவருக்கு அனுகூலமே. அவர் உபயலிங்கர். அகில ஹேய ப்ரத்யநீகர்.
அவர் ஸ்வபாவத்தாலேயே அமலர். யாதொரு மலமும் தன்னைத் தீண்ட முடியாத ஸ்வபாவமுடையவர்.
அவர் எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக ஓர் விக்ரஹத்தோடு வஸிப்பவர்.
(ந ததே விஜிகுப்ஸதே) அவர் எவர் நெஞ்சினுள்ளும் நெருங்கி உட்புகுந்து வஸிக்கக் கூசுவதில்லை.
இந்த அற்புதமான ஸ்வபாவத்தைத் திரும்பவும் திரும்பவும் நினைந்து பேசுவதும், தம்மால் வரக்கூடிய அவத்யத்திற்குப் பயந்தே.

“அமலன்”, “நிமலன்”, “விமலன்”, “நின்மலன்’ “அரங்கத்தமலன்” என்று இச்சிறு கிரந்தத்தில்
ஐந்து தடவை “மலமற்றவன்”, “மலம் நெருங்கக்கூடாத ஸ்வபாவ சக்தி யுடையவன்” என்கிறார்.
“வளவேழுலகில்” போல் பயந்து உடனே பரிஹரித்துக் கொள்கிறார்.
பெருமாள் திருமுன் நிற்பதே இவருக்கு ஸங்கோச மாயிருக்கிறது.
மிகவும் விரைவாகத் தம் ப்ரபந்தத்தை முடித்துவிட ஆசைப்படுகிறார்.
பெருமாள் நிர்ப்பந்தத்தை எத்தனை நாழிகை தான் இவர் ஸஹிப்பார்?
நீண்டதொரு க்ரந்தம் செய்யத் தெரியாதவரல்லர்.
ஒரே தசகம் பாடி உடனே மோக்ஷத்தைப் பெறுவதால் அகன்று போவதற்கும் போதில்லை.

2) ஆதி என்று காரணத்வத்தைத் தொடக்கத்திலேயே அனுஸந்தித்துப் பேசுகிறார்.
சில வித்யைகளில் காரணத்வத் தையும் சேர்த்து அனுஸந்திப்பதில் ருசி.
(காரணம் து தயேய:) (அதர்வ சிரஸு) என்றபடி த்யானத்திற்கு விஷயமான பொருள் ஆதி காரணமே.
ஆகிலும் காரணத்வத்தை சேர்த்தும் சேர்க்காமலும் உபாஸிக்கலாம்.
இவர் காரணத்வத்தைச் சேர்த்து உபாஸிப்பதில் ருசியுள்ளவர்.
உலகத்திற்குக் காரணமாவதில், விகாரம் அசுத்தி ஸம்பந்தம், ஸாவயவத்வம் ஜடத்வம் முதலிய பல தோஷங்கள் வரக்கூடும்.
அந்த தோஷங்கள் ஒன்றும் வருவதில்லை, ப்ரஹ்மம் காரணமாகவிருந்தும் தன் சுத்தியைக் கொஞ்சமேனும் விடுவதில்லை,
அசுத்தியென்பது தீண்டுவதேயில்லை என்று சோதக வாக்கியங்கள் நமக்குத் தெளிவிக்கின்றன.

காரணத்வத்தை “ஆதி” என்று சொல்லுவதற்கு முன்பே,
இவர் “அமலன்” என்று அசுத்தி ப்ரஸங்கத்தை வாரணம் செய்கிறார்.
ஸத்யத்வம், ஞானத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும் ஐந்து குணங்கள் ஸர்வ வித்யைகளிலும் உபாஸ்யம்.
இந்த குணங்களின் அறிவில்லாமல் ப்ரஹ்மத்தின் அறிவே சித்திக்காது.
(ஸத்யம் ஞான மனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி)
“அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம், அதீர்க்கம்” (ப்ருஹ தாரண்யகம் – அக்ஷரவித்யை),
“அசப்தமஸ்பர்சம்” (கடவல்லி), முதலிய சோதக வாக்யங்கள்
“அமலன்” என்பதால் தொடக்கத்திலேயே ஸூசிக்கப் படுகிற அழகு மிக ரஸிக்கத் தக்கது.

தைத்திரீயத்திலும் (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி) என்று முதலில் சோதக வாக்கியத்தைப் படித்து,
பிறகு (தஸ்மாத்வா ஏதஸ்மா தாத்மந ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசத்வாயு:) என்று காரண வாக்யத்தைப் படித்தது.
(ஆனந்தாதய: ப்ரதானஸ்ய) என்ற ஸூத்திரத்தில் ஆநந்தத்வம், ஸத்யத்வம், ஞானத்வம், அனந்தத்வம் என்ற
குணங்களை எல்லா வித்யாநிஷ்டரும் உபாஸித்தே தீர வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

இங்கே “அமலன்” என்றது அந்த நாலுக்கும் உபலக்ஷணம். நிர்த்தோஷத்வம் மிகவும் முக்யம்.
ஆகையால் அதை முதலில் பேசி மற்ற நான்கையும் உபலக்ஷண முறையாக ஸூசிக்கிறார்.
இங்கே ஸூசிக்கும் ஆனந்தத்வத்தை “என் அமுதினை” என்று முடிவில் ஸ்பஷ்டமாகக் கூறுகிறார்.
ஆனந்தத்தோடு முடிக்கிறார்.
(ஏதம் ஆனந்த மயமாத்மாநம் உபஸம்க்ரம்ய) என்றபடிக்கு (யத்ர நாந்யத் பச்யதி) என்று நிரதிசய ஸுகத்தையும்
விளக்கும் பூமவித்யைப் படிக்கும் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத,
அதீதமான ஆனந்த ப்ரஹ்ம ப்ராப்தியோடு முடித்துத் தாமும் பேரின்ப முடிவு பெற்றார்.

3) அமலத்வமென்பதை ஆன‌ந்தாத்ய‌திக‌ர‌ண‌த்தில் நான்கொடு ஐந்தாவ‌தாக‌ ஸூத்ர‌காரர் ஸூசித்திருப்ப‌தும‌ன்றி,
அக்ஷ‌ர‌த்ய‌தி க‌ர‌ண‌த்தில் அதை ம‌றுப‌டியும் த‌னியாக‌ வ‌ற்புறுத்துகிறார்.
அம‌ல‌த்வ‌ம் என்கிற‌ நிர்த்தோஷ‌த்வ‌ம் மிக‌வும் முக்ய‌மென்ப‌து ஸூத்ர‌காரர் திருவுள்ள‌ம்.
அது கார‌ண‌ம்ப‌ற்றி முத‌லிலேயே “அம‌ல‌ன்” என்று அனுஸ‌ந்திப்ப‌து.

4) ஆதிய‌ஞ்சோதியான‌ ப‌ர‌வாஸுதேவ‌ விக்ர‌ஹ‌மும், ம‌ற்ற‌ விப‌வ‌ (அவ‌தார‌) மூர்த்திக‌ளும்,
அந்த‌ர்யாமி மூர்த்திக‌ளும், அர்ச்சாமூர்த்திக‌ளும் ஒன்றென்றே சொல்லலாம்.
ஆதிய‌ஞ்சோதியிலிருந்து ம‌ற்ற‌வை எல்லாம் உதித்து, முடிவில் அதிலேயே ல‌யிக்கும்.
பெருமாள் உல‌க‌த்திற்கு ஆதிகார‌ண‌மாவ‌து போல், ம‌ற்ற‌ திவ்ய‌ விக்ர‌ஹ‌ங்க‌ளுக்குப் ப‌ர‌ விக்ர‌ஹ‌மான‌
ஆதிமூர்த்தி கார‌ண‌ம். “ஆதி” என்று அதையும் ஸூசிக்கிறார்.

ஆதிம‌றை யென ‌வோங்கு ம‌ர‌ங்க‌த் துள்ளே
ய‌ருளாருங் க‌ட‌லைக் க‌ண்ட‌வ‌ன் ந‌ம் பாண‌ன் (அமிருதாஸ்வாதினி) என்ப‌தையும் நினைக்க‌வேணும்.

5) “அம‌ல‌ன்” என்ப‌தால் “விஜ்ஞான‌ம்” என்றும் ஏற்ப‌ட்ட‌து.
விஜ்ஞான‌மும் ஆதியுமான‌ ப‌ர‌வாஸுதேவ‌ன் ரூப‌ங்க‌ளே ம‌ற்ற‌ வ்யூஹ‌ ரூப‌ங்க‌ளும் என்று சொல்லும்
விஜ்ஞாநாதிபாவ‌ ஸூத்ர‌த்தை “அம‌ல‌ன் ஆதி” என்று ஸூசித்து,
பாஞ்ச‌ராத்ர‌ ப்ராமாண்ய‌த்தை ஸூத்ர‌காரர் ஸ்தாபித்ததை ஸூசிக்கிறார்.
அதைக் கொண்டு அர்ச்சாதிக‌ளுக்கு திவ்ய‌ ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌த் த‌ன்மையை ஸ்தாபிக்க‌ வேண்டும்.

6)(நிர்வாண‌ம‌ய‌ ஏவாய‌ம் ஆத்மாஞான‌ம‌யோ அம‌ல‌:) என்ற‌ப‌டி ஜீவ‌ ஸ்வ‌ரூப‌மும் அம‌ல‌ம்.
ப்ர‌க்ருதி ம‌ல‌த்தைப் போக்கி விட்டால், அம‌ல‌மான‌ ஜீவாத்ம ஸ்வ‌ரூப‌ அம‌ல‌மான‌ ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்திற்
புகுந்து பிரியாக் க‌ல‌வி பெறுகிற‌து. ந‌ம்முடைய‌ அம‌ல‌ ஸ்வ‌ரூபாதிக‌ளையும் அனுஸ‌ந்தான‌ம் செய்ய‌ வேண்டும்.
அம‌ல‌னென்று அத‌ன் நினைவும் சேரும்.
“ஆதி” மூல‌ கார‌ண‌ப் பொருள். அத்தாவான‌ ஸ‌ம்ஹ‌ரிக்கும் பொருள்.
அம‌ல‌த்வ‌ம் இருவ‌ருக்கும் ஒருவாறு கூடுவ‌தாக‌ச் ச‌ங்கித்தாலும் ஆதி கார‌ண‌த்வ‌ம் ப‌ர‌னுக்கேயுள்ள‌து.
“அம‌ல‌ன்” என்று ம‌ட்டும் சொன்னால், ஜீவ‌னுக்கும் ஒரு விதத்தில் அது பொருந்தி விடுமென்று ச‌ங்கை வ‌ரும்.
ஆதி கார‌ண‌த்வ‌ம் ஈச்வ‌ர‌ ல‌க்ஷ‌ண‌ம். “ஆதி” என்ப‌த‌ற்கு முற்பாட‌ன் என்றும்,
“ஆதீய‌தே” – எல்லோராலும் ப‌ரிவுட‌ன் போற்ற‌ப்ப‌டும்ப‌டி ஸ்ப்ருஹ‌ணீய‌ன் என்றும் பிள்ளை அருளிய‌ ர‌ஸ‌ம்.
பிரான் – ர‌க்ஷ‌க‌ன் ஸ்திதி கார‌ண‌த்வ‌த்தைத் த‌னியே நிரூபிக்கிறார். ஸ்வாமித்வ‌த்தையும் கூறுகிறார்.

‘ அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் ‘-
அடியரான லோக ஸாரங்கர் இவருக்கு ஆட்பட்டு இவரை தோளில் தூக்கிக் கொண்டு சென்றிருக்க,
அவருக்கு இவரை ஆட்படுத்தினதாகப் பாடுவது எப்படிப் பொருந்துமென்று சங்கை வரலாம்.
இவ் விஷயத்தை ஊன்றி ஆராய வேண்டும். நடந்த வ்ருத்தாந்தத்திற்கு இந்த வார்த்தை முழுவதும் ரஸமாகப்
பொருந்தும்படி பொருள் கொள்ள வேண்டும். ஸ்வாமியின் ஆஜ்ஞை தனக்கு எவ்வளவு அப்ரியமா யிருந்தாலும்,
இறாய்க்காமல் அதற்கு இணங்குவது தான் ஆட்பட்ட தாஸனுக்கு முக்ய லக்ஷணம்.
‘என் தோள் மேலேறு’ என்றால், அது தனக்கு அத்யந்தம் அப்ரியமாயினும், அந்தச் சொல்லைக் கேட்க வேண்டும்.
தன்னிஷ்டம் என்பதை அடியோடு தள்ளி ஸ்வாமி இஷ்டத்தையே நிறைவேற்ற வேண்டும்.
ராம தாஸரான பரதர் கைகேயி ‘ராஜந்’ என்று சொல்லுகையில் மிகவும் புண்பட்டார். அது அவருக்கு அருந்துதம்.
(தாஸ பூதோபவிஷ்யாமி) [‘ நான் பூர்ண ஸந்தோஷத்தோடு ராமனுக்குத் தாஸனாகப் போகிறேன் ‘] என்று
தாயாரிடம் சபதம் செய்தார் ; அப்படியே தாஸரானார். ‘ராஜ்யத்தை நீ ஆளத்தான் வேண்டும்’ என்று
இவரை ராமன் திருப்பி விடுகையில், அவருக்குத் தாஸரானபடியால் அதற்கு உடன்பட்டார்.
ராமனுக்கு ஆட்பட்ட தாஸராக இருந்ததே தான் அவர் ராஜ்யம் ஆண்டதற்குக் காரணம்.
திருப்பாணாழ்வார் ஒருக்காலும் ஸ்ரீரங்கத்தை மிதிக்கத் துணியாதவர். ஸ்ரீரங்க த்வீபத்தை மிதிக்க ஸம்மதியாதவரும்,
அம் மண்ணை மிதிக்க அஞ்சியவருமான அவர், விப்ரரான முனியின் தோளை மிதிக்க ஸம்மதிப்பரோ?
அவருக்குத் தாம் ஆட்பட்ட தாஸ ரானதால்தான், அவர் சொல்வது இவருக்குக் கடோரமாயிருந்தும், அதற்கு உடன்பட்டார் .
அவரிடத்தில் தாஸ்ய காஷ்டையைப் பற்றியது தான் அவர் அநுமதிப்படி உலகமறிய அவர் தோளிலே.
‘அரங்கம் சென்றதற்குக் காரணம். ‘உலகறிய……. உலோக சாரங்க மா முனி தோள் தனிலே வந்து’ என்பது ப்ரபந்த ஸாரம்.
அரங்கத்தில் ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்த விசித்ரக் காட்சி.

2) ப்ருகுமஹர்ஷியின் அடிபதிந்தது திருமார்பில்.
ஸ்ரீவத்ஸரான இவ்வாழ்வார் நித்யஸ்தாநத்தில் ப்ருகுவென்னுமடியார் திருவடியை இவர் தாங்கி அவ்வடி யாருக்காட்பட்டவர்.

(3) தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு அடுத்த அவதாரம் இவ்வாழ்வார்.
அரங்கனைத் தவிர ‘மற்றுமோர் தெய்வமுண்டோ ‘ என்று கேட்டவர் அரங்கன் தொண்டரே உத்தம தெய்வமென்று
துணிந்து அவர் அடிப்பொடியானார். பக்தாங்க்ரி ரேணுவுக்கு அடுத்த அவதாரமான இவர், தாமும் அடியார்க்காட்பட்டு,
தொண்டரடிப்பொடி யாகுமாசையை முதற் பாசுரம் முதலடியிலேயே காட்டுகிறார்.

(4) அடியார்க்குத் தன்னை யாட்படுத்துவதில் ருசியுள்ள அரங்கனாகிய பித்தன் வரித்து க்ருபையால்
பாகவத தாஸனாக்கினாரென்பதை நினைத்து விமலனென்று அவரைப் புகழ்கிறார்.
தனக்குத் தாஸராயிருப்பவர் பிறருக்கு ஸ்வாமியாவதை சாமாந்ய ப்ரபுக்கள் ஸஹியார்.
இவர் விலக்ஷணமான ப்ரபுவென்று ஆச்சரியப் படுகிறார்.

(5) ‘மலம்’ என்பது சம்சயம். அச்யுதனை ஸேவிப்பவர்க்கு மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்கும், கிடையாமற்போனாலும் போகும்.
அச்யுதன் பக்தர்களைப் பரிசர்யை செய்வதில் இன்புறுபவர்க்கு அதில் சம்சயமே கிடையாது.
அடியார்க்கு ஆட்படுத்துவதால் தனக்கு மோக்ஷம் கிடைப்பதில் சம்சயத்தை நீக்குகிறார் என்று ஸூசகம்.

“விண்ணவர்கோன்” காண்பனவும் உரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்’ என்றும்,
‘கோவலனும் கோமானுமான வந்நாள் குரவை புணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு சேவலுடன் பிரியாத பேடை போல் சேர்ந்து ‘ என்றும்
முநி வாஹந போகப் பாசுரங்களின்படி, கண்ணனிடமே இவ்வாழ்வாருக்குக் காதல் மிகுதி.
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெயுண்ட வாயன் இவருள்ளத்தைக் கவர்ந்ததால்
இவர் கண்களும் மனமும் அங்கு லயித்து, இவருக்கு பூமவித்யையிற் கூறிய மோக்ஷ லயம் கிடைத்தது.
விண்ணவர் கோனும் இவருக்குக் கோவலக் கோன் என்று அநுபவம். அண்டர் கோன் என்று முடிவிலும் ‘கோன்’ என்றே அநுபவம்.

விரையார் பொழில் வேங்கடவன் :-
(1) ஆதிமூர்த்தி வானின்றிழிந்து மத்தியில் திருமலையில் அவதரித்து, அரங்கத்தில் பள்ளிகொண்டருளினார்.
சந்தி ரஸத்தில் இவ்வாழ்வார் முழுகுகிறார்.
வாநரருக்கும் நரருக்கும் எப்படி சந்தி (சமாகமம்) நேர்ந்தது என்று பிராட்டி ஆச்சரியப்பட்டாள்.
அரங்கத்தரவணையான் கர்ப்ப க்ருஹத்தில் ஸ்வப்நத்திலும் நேரக்கூடாததான ஒரு சந்தி இவருக்கு நேர்ந்ததில் இவருக்கு விஸ்மயம்.
ஸ்வப்நத்தை விழிப்புக்கும் தூக்கத்திற்கும் நடுவிலுள்ள ஓர் சந்தி, சந்த்யம் என்பர். சந்தியில் ஏற்படுவது ‘சந்த்யம்’
ஸ்வப்நத்தில் சேராததெல்லாம் சேர்வது போல் புலப்படத் தூக்கத்தில் ப்ரஹ்மத்திற்கும் ஜீவனுக்கும் ஓர் நெருங்கிய ஸம்ச்லேஷம் (சந்தி).
மனம் அஹங்காரம் முதலியன ஜீவனைத் தொடாமல் , ப்ரஹ்மத்தினிடம் ஜீவன் தாய்மார்பில் ப்ரஜை போல்
வாத்ஸல்யத்தால் அணைக்கப்பட்டு, மெய்ம் மறந்து, ச்ரமமற்று சுகப்படும் சமயம்.

ப்ரஹ்மத்தோடு நேரும் அந்த சந்தியில் ஜாதி பேதம், துஷ்டர் ஸாது முதலிய பேதமொன்றுமில்லை.
ப்ரஹ்மத்தால் கெட்டியாய் அணைக்கப்பட்டு, மெய் மறந்திருக்கும் தூக்க சமயத்தில்
‘திருடன் திருடனல்ல;’ ‘பாபி பாபியல்ல ; சண்டாளன் சண்டாளனல்ல ‘ என்று உபநிஷத்து கூறுகிறது.
பெருமாள் தன்னைத் தருவித்துத் தனக்கு அவரோடு ஏற்படுத்திய சந்தி ரசத்தில் ஆச்சர்யப் படும் இவ்வாழ்வார்
திரும்பவும் திரும்பவும் பலவாறாக சந்தி ரசத்தில் ஈடுபடுகிறார்.
வேங்கடம் ஓர் சந்தி ஸ்தானம். ‘வானவர்கள் சந்தி செய்ய நின்றான்’ என்று அங்கு
மண்ணோரும் விண்ணோரும் வந்து ஒக்கத் தொழுது சந்தி செய்யுமிடம் ;
அரங்கன் ஆடையும் அந்தி போல் நிறம் ‘ – அந்தி ஓர் சந்தி.
“உந்தி” நடு மேனியிலிருந்து மேலும் கீழும் சந்தி செய்கிறது.
(தத்ராரூடைர்மஹதி மநுஜை: ஸ்வர்கிபிஸ் சாவ தீர்ணை: ஸத்வோமேஷாத் வ்யபகதமிதஸ் தாரதம்யாதி பேதை : என்று
ஹம்ஸ சந்தேசத்தில் வட வேங்கட மா மலையில் வானவர் இறங்கி வந்தும், மண்ணோர் ஏறி வந்தும்
சந்தி செய்து சத்வம் தலையெடுத்துத் தாரதம்ய மன்றியில் தொழுவது வர்ணிக்கப்பட்டது.

2) பெருமாள் திருவடி வாரத்தில் நிற்கையில் (தம் ப்ரம்மகந்த: ப்ரவிசதி (கௌஷீதகி உபநிஷத்து) என்றது
போல ப்ரஹ்ம பரிமளம் வீசி இவருள் புகுகிறது. இங்கே திருக்கமலபாதத்தின் அநுபவம்.
(வேலாதீதச்ருதி பரிமளம் பாதாம்போஜம் (பகவத்தியான ஸோபாநம்) என்றது போல ஸர்வ கந்தனுடைய கந்தம்
அலைத்து வீசுகிற அனுபவம் பரம பதத்திலிருந்த ப்ரஹ்மகந்தம் அவதரிக்கும் பெருமாளுடன் கூட
வேங்கடப் பொழில்களில் அமர்ந்து “கடியார் பொழிலரங்கத்தில்” அமர்ந்தது.
ஸர்வ கந்தனுடைய திருமேனியிலிருந்தும் ப்ரஹ்ம கந்தம் வீசுகிறது.
”துளபவிரையார் கமழ் நீண்முடி எம் ஐயனார் ” என்று திருமுடி வாசனை அநுபவம்.

(3)(வஹதே வாஸநாம் மௌளிபந்தே) யோகத்தில் சுபமான வாசனைகள் முக்யம்.

(4) இவருக்கு அடுத்த அவதாரமான கலியன்,
‘விரையார் திருவேங்கடவா’ என்று பாடியதும் இதையொத்தது. “வேயேய் பூம்பொழில் – சூழ்.’

நிமலன் நின்மலன்:–
திரும்பவும் திரும்பவும் தன்னுடைய சாமீப்யத்தால் என்ன மலம் வருமோ வென்கிற அச்சம் கிளம்புகிறது.
உடனுக்குடன் ஹேய ப்ரதிபடமான ஸ்வபாவத்தை அறுதியிட்டு மனதைத் தேற்றிக் கொள்ளுகிறார்-
இந்த சங்கை ‘அரங்கத்தமலன் ‘ என்று மேலும் உதித்து நிவ்ருத்திக்கப் படுவதைக் காண்கிறோம்.
‘தம்முடைய ஜந்மாதிகளால் உண்டான நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகல, அது தானே பற்றாசாகத் திருவுள்ளம்
புண்பட்டு மேல் வீழ்ந்த இடத்திலும் அத்தனைக்கு அவத்யமின்றியிலே நிர்மலனாயிருக்கிற படியைக் கண்டு
அமலன் என்கிறார்’ என்று நாயனார்.

நீதி வானவன் —
விண்ணவர் கோனே நீண் மதிளரங்கத் தம்மானாக எழுந்தருளி யிருப்பதால் வானாட்டு நீதியை
இங்கும் செலுத்துகின்றான் போலும் ! எல்லாச் சேதநர்களுக்கும் ஸாம்யமே மேனாட்டு நீதி.
அந்த நீதியைத் தாழ்ந்த என் விஷயத்திலும் செலுத்தி என்னை உத்தமரோடு அத்யந்த சமமாய்
பாவிக்கிறானோ வென்று ரஸமாய் உபபத்தி செய்யப் பார்க்கிறார்.

நீண் மதிளரங்கத் தம்மான்–
அரங்கத்தின் மதிள் நீண்டது போல் அரங்கத்தம்மான் பாத கமலமும் நீண்டதே என்று ரஸம்.
அரங்கத்தில் பத்ம ஸரஸ்ஸுக்களில் பத்மங்களிருப்பது ஸஹஜம்.
இவருக்கு முந்திய தொண்டரடிப்பொடியாழ்வார் திருநாமத்தை அநுசரித்து ‘அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன்’
என்று முதலடியிலேயே இவர் ஈடுபட்டது போல இப்பாசுரம் கேட்டுப்போலே காணும் (இவருக்கடுத்த)
திருமங்கையாழ்வார் திருமதிள்கள் செய்தது. அழகிய வாயாலே இதருளிச் செய்த பின்பாகாதே
திருமாளிகைகளும் திருக்கோபுரங்களும் கனத்தது ‘ என்று நாயனார்.
(ரிஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தாநு தோவதி) (பவபூதி உத்தரராம சரிதம்) என்பார்கள்.

திருக்கமலபாதம் வந்து –
தாய் முலையில் போல் பெருமாள் திருவடிகளில் ஸ்நேஹம் என்பர்.
சஹஜ நிரவதிக ஸ்நேகத்தால் திருவடிக்கு நீண்டு நெருங்கும் ஸ்வபாவம்.
திருவடி நீளக் காரணம் திருவுள்ளம் உவந்து நீள்வது.
சயனத்திலிருந்த திருவடிப்பூ ஸ்நேஹ பாரவச்யத்தால் நீண்டு என் கண்ணுள் வந்து நின்றது போலும்.
‘திரு’ என்று இங்கு லஷ்மியைச் சொல்லுகிறது. இது பூமிப் பிராட்டி யாருக்கும் உபலக்ஷணம்.
(லஷ்மீ பூம்யோ : கரஸரஸிஜைர்லாலிதம் ரங்கபர்த்து: பாதாம் போஜம்) (ஸோபாநம்) என்ற அநுபவம்.
தாய்மார்கள் இந்தக் கமலத்தைப் பிடித்து லாளநம்செய்து என் கண்ணினுள் ஒத்துகிறார்கள் போலும் ‘ என்று அநுபவம்-
‘பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்’ என்று பிள்ளை.

என் கண்ணிலுள்ளன வொக்கின்றதே –
தினமும் இவர் திருக்காவிரிக் கரையிலிருந்து யோகம் செய்கையில் தர்ஸந சமாநா காரமான
பிம்ப தர்ஸந மேற்பட்டு வந்தது. ‘கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்’ (திருவாய்மொழி 1,10,2) என்றது
போல இவர் காதல் தொழுகையாகிய யோகத்தில் இவர் கண்ணுள்ளே திருவடி நின்று கொண்டிருந்தது.
பெரிய பெருமாள் திருவடிக்கமலம் இவர் கண்ணிற்கு யோக தசையிலே சேவை சாதித்துக் கொண்டிருந்தது.
யோக தசையில் சேவை சாதித்து இவர் கண்ணுள்ளே நின்றுகொண்டிருந்த திருவடிக் கமலத்தோடு இப்பொழுது
தன் கண் வரையில் நீண்டு வந்த அரங்கன் திருவடிக் கமலத்தை ஒத்துப் பார்க்கிறார்.
யோகாநுபவ உறுதியால் என் கண்ணுள்ளே நிற்கும் திருக்கமல பாதத்தோடு இப்பொழுது நேரில்
ஸாக்ஷாத்தாக சேவிக்கும் திருக்கமலபாதம் மிகவும் ஒக்கின்றதே யென்று அத்புத ரஸம்.

2) கண்ணினுள்ளே வந்து விட்டாலும் ஸாக்ஷாத் ஸ்பர்சத்தை நினைக்கவும் பச்சையாகச் சொல்லவும் மனமில்லாதவராய்,
கண்ணில் வந்து புகுந்தது போலிருக்கிறது என்று பேசுகிறார்.
இப்படியே மேலும் ‘சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே’ என்று பேசுகிறார்.
தாமாகப் பெருமாள் பாத கமலங்களைத் தீண்ட அச்சமே; அவையே வலிய என்னிடம் வந்து என்னை ஸ்பர்சிக்கின்றன;
நான் என்ன செய்வேன் ! திருமேனி அவயவங்களை எட்டு ச்லோகங்களால் அநுபவிக்கிறார்.
அஷ்டாங்க யோகக் கணக்கு. பகவத் த்யாந ஸோபாநமும் இதை அநுசரித்தது.
அங்கும் அவயவங்களின் அநுபவம் எட்டு ச்லோகங்களால் செய்யப் படுகிறது.
இங்கு, 1, 4, 5, 6, 7, 8-வது: பாசுரங்களில் அவயவங்களை தாமாக நெருங்குவதாக அநுபவமில்லை.
2-ம் பாசுரத்தில் ‘சென்றதாம் என் சிந்தனை’ என்கிறார். சிந்தனை தொடுவதால் தீட்டில்லை.
‘உந்திமேல தன்றோ அடியேனுள்ளத்தின் னுயிரே’ என்று தன் ஆத்மா தொடுவதைப் பேசுகிறார். ஆத்மாவுக்கும் தீட்டில்லை.

3) ஒன்பது பாட்டு வழியிலே அநுசந்தித்துப் பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதாரென்கிற ஐதிஹ்யத்தின்படியே
மாநஸ ஸாக்ஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டாப் போலே இருக்கை.
அங்ஙனமன்றிக்கே மாநஸ ஸாக்ஷாத்காரத்தோடு சேர்ந்திருந்த தீ சஷுர் விஷயமான திருப்புகழென்றுமாம்’ என்று
இரண்டு விதமாகவும் நாயனார் அருளியது. மாநஸ ஸாக்ஷாத்கார மென்பது யோக ஸாக்ஷாத்காரம் ; தர்சன ஸமாநாகாரம்.
‘கருமணியைக் கோமளத்தைக் கண்ணாரக் கண்டு, மனத்தூணே பற்றி
நின்று வாயார வாழ்த்தும் ப்ரபந்தமாகை யாலே ‘ என்றும் அருளியுள்ளார்.

————-

துண்டவெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேயவப்பன்
அண்டரண்ட பகிரண்டத்தொருமா நில மெழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண்டீ ரடியேனை யுய்யக் கொண்டதே. (6)

துண்டம் — ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான):
வெண் பிறையன் –வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய:
துயர்–(பிச்சை எடுத்துத் திரிந்த) பாதகத்தை:
தீர்த்த‌வ‌ன் – போக்கினவனும்:
அம் சிறைய வண்டு …. அழகிய சிறகையுடைய வண்டுகள்:
வாழ் – வாழ்தற்கிடமான
பொழில் சூழ் — சோலைகள் சூழப் பெற்ற:
அரங்கம் நகர்—திருவரங்கப் பெரு நகரிலே:
மேய .. பொருந்தியிரா நின்ற:
அப்பன் …. ஸ்வாமியுமான ஸ்ரீரங்க நாதனுடைய்.:
அண்டர் –அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம் … அண்டங்களையும் ப‌கிர‌ண்டம் –அண்டாவர‌ண‌ங்களையும்:
ஒரு மாநிலம் — ஒப்பற்ற மஹாப்ருதிவியையும்:
ஏழுமால் வரை …… எழு குலபர்வதங்களையும்:
முற்றும் — சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவ‌ற்றையும்:
உண்ட – அமுதுசெய்த‌:
கண்டம் கண்டீர் – திருக்கழுத்துக்கிடீர்:
அடியேனை — தாஸனான என்னை:
உய்யக் கொண்டது……. உஜ்ஜீவிப்பித்தது.-

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் :-
(1) இங்கே கண்டத்தின் அநுபவம். நீலகண்டருடைய கண்டம் உயர்ந்ததென்பர்.
ஜ‌நங்களை நாசம், செய்யவந்த கால கோடி விஷத்தைப் பாநம் செய்து உலகத்தைக் காப்பாற்றித் தம் கண்டத்திற்குள்
விஷத்தையடக்கியதால் பொன் வர்ணமாயிருந்த கண்டம் நீலமாய்க் கறுத்ததென்பர்.
அவர் பெருமைக்கும் மேற்பட்ட பெருமையைக் காட்டுகிறார். அவருக்கேற்பட்ட குரு பாதகத்தைத் தீர்த்தவரென்கிறார்.
பாதகம் விஷத்திலும் கொடியவிஷம்.

(2) காலகோடி விஷத்தையுண்டதால் நீலகண்டர் கண்டம் பெருமை பெற்றது.
அவர் கண்டத்தையும், அவரையும், உலகத்திலுள்ள ஸகல விஷங்களையும் அண்ட பஹிரண்டத்து ஒரு மாநில
மெழுமால்வரையும் முற்று முண்ட கண்டம் எத்தனை பெருமையுடயதென்று நீரே காண்பீரென்கிறார்.

3) விஷத்தால் கண்டம் நீலமாயிற்று. இவர் திருமேனி முழுவதும் ஸ்வபாவ மாகவே நீலம்.
‘முடிவில்லதோ ரெழில் நீலமேனி ஐயோ ‘ என்று மேலே பாடுகிறார்.

(4) பாரமாய என் பழவினை யறுப்பவர் மட்டுமல்ல. நீல‌ கண்டருக்கும் வினைத் துயர் தீர்த்தவரென்கிறார்.

5) அயனைப் படைத்ததோரெழில் என்று உந்தியை வர்ணித்து அயனிலும் பெரியார் என்றார்.
இங்கு துண்ட வெண் பிறையாரிலும் பெரியாரென்கிறார்.

(6) சந்த்ரன் பகவானுடைய மனத்திலுதித்தவர். பிறையைச் சூடுவதால், பகவானுடைய மனத்தில் உதிக்கும்
திருவுள்ளத்தைத் தலையால் தாங்குகிறார் என்றும் த்வநிக்கிறது. தலையில் வெண் சந்த்ரன், அக்நி வர்ணமான செஞ்சடை,
கங்கை நீர்ச்சுழல், கண்டம் நீலம், பொன்னார் திருமேனி என்றிப்படிப் பலவர்ணங்கள்.
பெருமாள். திருமேனி முழுதும் கருமேக வண்ணம், அதிலும் கேசம் மைவண்ணம்.

7) ‘ பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே, கபாலனன் மோக்கத்துக் கண்டு கொண்மிண்’
என்ற திருவாய் மொழியில் பரத்வ நிர்ணய ப்ரகரணத்தில் அநுபவம். .

அஞ்சிறையவண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர்மேய அப்பன்:-

(1) அவன் கருமைபோல் அவனைப் பாடும் வண்டுகளும் கரிய; அப்பெருமாள் பாடகரும் பெருமாள் போன்ற வண்ணத்தவர்.

(2) அரங்க நகரில் பாடும் வண்டுகள் வாழ் வண்டுகள்; வாழாட்பட்டு நின்றவை.

(3) மதுகரர் ஸந்யாஸிகள்; திருவடித்தாமரைத் தேனைப் பருகி இன்புறுமவர்;
ஞாந கர்மங்களாகிய இரண்டு சிறகுகளை உடையவர். (ஸாரங்காநாம் பதாம்புஜம்) என்று திருவவடித்தாமரைத் தேனை
யருந்தி இன்புறுவர் பக்தரென்றார் சுகப்ரஹ்மரிஷி (பாக‌வ‌த‌ம்1,11,26) ‘ ஸாரங்கம் ‘ என்று வண்டுக்குப் பெயர் ;
ஸார ப்ரஹ்மத்தைப் பாடும் பக்தருக்கும் அப் பெயரென்றார் ஸ்ரீதரஸ்வாமி. -ஸாரம் காயந்தீதி ஸாரங்கா

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்று முண்ட கண்டம் –
எழுமால் வரையில் கிரீசர் வஸிக்கும் வெள்ளி மலையும் அடங்கியது. நீலகண்டருடைய கண்டத்தினும் மஹத்தான கண்டம்.

கண்டீர் – நீங்களே பாருங்கள்.

அடியேனை உய்யக் கொண்டதே–
அஹமந்நம் அஹமந்தம் அஹமந்தம்’ என்றபடி என்னை அவருண்டு அவருக்கு நான் போக்கியனாகிறேன். –

அண்டரண்ட பஹிரண்டங்களை உண்டதிலும் திருப்தி யடையாமல்,
மலைகளை (குல பர்வதங்களை) யுண்டும் திருப்தியடையாமல், அணுவாகிய என்னை ஆசை யுடன் உண்கிறான்;
நீங்களே பாருங்கள். உண்ணப்படும் வஸ்து ஜீர்ணமாகி விடும் என்பர். உண்ணப்படும் நான் அதனாலேயே உஜ்ஜீவித்து
இன்புறுகிறேனென்னும் விந்தையையும் பாருங்கள். இந்த அற்புதக் காட்சியை நீங்களே கண்கூடாகக் காணுங்கள்.

ப்ரஹ்மஹத்யா என்பது பெரும் பாதகம். ப்ராஹ்மண ஜாதி ஸாமாந்யரின் ஹத்தியையே பாதகமென்பர்.
ப்ரஹ்மாவின் தலையையே கிள்ளியெறிந்தது பெரும் பாதகம் , குருபாதகம். கிள்ளின கையிலேயே அந்தப் பாதகம் ஒட்டிக்கொண்டது.
எந்த அவயவம் பாபம் செய்ததோ அங்கே அது கெட்டி யாய் ஒட்டிக்கொண்டு விட்டது.
இதனால்,ஈச்வரனாயினும் ஒரு பாபம் செய்தால் அது கழற்ற முடியாமல் அவரிடம் ஒட்டிக் கொண்டு
அவரையே பாதிக்கும் என்று ருஜுவாகிறது. ஈச்வரன் வலிமையினும் பாபத்தின் வலிமை அதிகம்.
இந்த உண்மை ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்தச் சரித்ரத்தால் விளக்கப் பட்டது. தலையில் பிறை சூடி என்ன?
கையில் கபாலம் விடாமல் ஒட்டிக் கொண்டு விட்டதே! உலகத்திற்கெல்லாம் க்ஷேமம் செய்யும் சங்கரராயினும்,
ஈச்வரனென்று ஐச்வர்யம் பெற்றவராயினும், பாபம் செய்தால் அது விடாமல் ஒட்டிக் கொள்ளும்.
ஸர்வேச்வரன் க்ருபையால் தான் அது கழியுமென்று இந்த விருத்தாந்தம் உலகமறியக் காட்டுவது.

‘மாநுஷ ஜந்மம் பெற்றும், ஊமையும் செவிடுமில்லா மலிருந்தும், வாயிலிருந்தும், நமோ நாரணாவென்றோவாது
உரைக்கும் உரையிருந்தும், பகவந்நாமத்தைச் செவியுறக் காதிருந்தும், எவன் ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கு
சுலபமான வழிகளைத் தேடுகிறதில்லையோ அவன் ப்ரஹ்மஹத்யைக்காரன்’ என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

ப்ரஹ்மமாசைப் பட்டு ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கென்று கொடுத்த மநுஷ்ய ஜந்மத்தை வீணாக்குகிறவன்
ப்ரஹ்மத்தை பக்னாசமாக்கிக் கொலை செய்தவன் போலாகிறான்.
எல்லாவித ப்ரஹ்மாக்களையும் அபஹதபாப்மர்களாக்குவது ப்ரஹ்மம். மாத்ஸ்ய வசநத்தை நாயனார் உதாஹரித்தார்.
(தத்ர நாராயண : ஸ்ரீமான் மயா பிக்ஷாம் ப்ரயாசித:) என்றார் சங்கரர்.

முன் பாட்டில் திருவாரமார்பை ஸேவித்ததும், ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வேச்வரத்வத்தையும்,
எல்லையற்ற கருணையையும் இங்கே பாடுகிறார். கபாலம் ஆயிரம் துண்டமாய் உடைந்தது.
வெண்பிறைச் சந்த்ரனுக்கும் ராஜயக்ஷ்மாவான பாபரோகம் போக்கப்பட்டதையும் பிள்ளை உரைத்தார்.
‘உண்ட கண்டம் (அத்தா சராசர க்ரஹாணாத்) என்று ஸூத்ரத்தை நாயனார் உதாஹரித்தார்.
கண்டம் யாவற்றையும் உண்டு வயிற்றில் சேர்த்தது “ஆதி” என்பதும், கண்டத்திலொட்டுமென்று ரஸம்.
“ஆதி”, “அத்தா” என்று உபநிஷத் பாஷ்யம்.

——————–

ப‌ரிய‌ னாகிவ‌ந்த‌ அவுண‌ னுட‌ல்கீண்ட‌ அம‌ரர்க்
க‌ரிய‌ வாதிப்பிரான‌ர‌ங் க‌த்த‌ம‌ல‌ன் முக‌த்துக்
க‌ரிய‌ வாகிப் புடைப‌ர‌ந்து மிளிர்ந்து செவ்வ‌ரியோடி
நீண்ட‌வ‌ப்பெரிய‌ வாய‌க‌ண்க‌ளென்னைப் பேத‌மை செய்த‌ன‌வே.

பரியன் ஆகி … மிகவும் ஸ்தூலமான வடிவையுடையனாய்க் கொண்டு;
வந்த … (ப்ரஹ்லாதனை நலிய) வந்த:
அவுணன் – அஸுரனான இரணிய னுடைய :
உடல் – ச‌ரீர‌த்தை:
கீண்ட – கிழித்துப் பொக‌ட்ட‌வ‌னும்:
அமார்க்கு – பிர‌ம‌ன் முத‌லிய‌ தேவ‌ர்க‌ட்கும்,:
அரிய – அணுக‌முடியாத‌வ‌னும்:
ஆதி – ஜ‌க‌த்கார‌ண‌ பூத‌னும்:
பிரான் – ம‌ஹோப‌கார‌க‌னும்:
அர‌ங்க‌த்து – கோயிலில் எழுந்த‌ருளியிருக்கிற‌:
அம‌ல‌ன் – ப‌ர‌மபாவ‌னனுமாகிய‌ எம்பெருமானுடைய‌:
முக‌த்து – திருமுக‌ ம‌ண்ட‌ல‌த்தில்
க‌ரிய‌ ஆகி – க‌றுத்த‌ நிற‌முடைய‌வையாய்:
புடைப‌ர‌ந்து — விசால‌ங்க‌ளாய்:
மிளிர்ந்து –பிர‌காச‌முடைய‌வை யாய்:
செவ்வரி ஓடி — செவ்வரி படர்ந்திருப்பனவாய்:
நீண்ட — காதுவரை நீண்டிருப்பனவாய்:
பெரிய ஆய‌ — பெருமை பொருந்தியவையுமான‌:
அக்கண்கள்— அந்தத் திருக்கண்களானவை:
என்னை –அடியேனை:
பேதமை — உந்மத்தனாகச் செய்து விட்டன.

பரியனாகி வந்த :-
(1) திருக்கண்ணை வர்ணிக்கையில், சீற்றத்தோடு கூடிய திருமுகத்தில் அருள் மயமாய் ப்ரஹ்லாத சிசுவைக்
குளிரக் கடாக்ஷித்த ந்ருஸிம்ஹன் திருக்கண்களை அநுபவிக்கிறார்.

ந்ருஸிம்ஹாவதாரத்தில் சிங்க நாதம் செய்யும் பயங்கரமான திருமுகத்தில் மேல் பாகத்தில்
அக்நி வர்ணமாய்க் கோரமான கேசங்களாலும் புருவ நொடிப்புகளாலும், கீழ் பாகத்தில் கோரமான சிங்கப் பற்களாலும்
அண்ட கடாஹத்தைப் பிளக்கும் – சிங்கநாதத்தாலும் — சூழப்பட்ட திருக்கண்களில் தயை பூர்ணமாய்ப் பூரித்துக்
குழந்தையைக் குளிரக் கடாக்ஷித்து ஸ்நேஹ ப்ரசுரமாய்ப் பால் கொடுப்பதுபோல வாத்ஸல்யத்தை
ஆவிஷ்கரித்ததென்று தயாசதகத்தில் அநுபவம்.

‘சீற்றத் தோடருள் பெற்றவன்’ என்று இந்த அகடிதகடனாரசத்தில் ஆழ்வார் ஈடுபட்டார்.
திருக்கண்களின் அநுபவத்தோடு அவயவங்களின் அநுபவம் முடிகிறது.

(2) சேராத விரோதங்களையெல்லாம் சேர்த்து ஸந்தி செய்த அவதாரம்;
அத்புதங்களை கடிப்பித்த அவதார விசேஷம்.
இந்தளத்தில் தாமரை போலே, சீற்றம் நிரம்பிய திருமுகத்தில் தயாமயமான திருக்கண்கள் குழந்தையைக்
கடாக்ஷித்ததிலும் அகடிதகடதையுண்டோ ?
ஸந்தி ரசத்தை அநுபவிக்கும் இப் பிரபந்தத்தில் நரசிங்கனை அனுபவிக்காம லிருக்கக்கூடுமோ?
வாநர நர ஸந்தியே பிராட்டிக்கு அத்புதமாயிற்று; நரஸிம்ஹ ஸந்தி அத்யத்புதமே.

(3) ப்ரஹ்ம மென்பது நிரதிசய ப்ருஹத் என்பர். ‘என்னிலும் பரியனுண்டோ ?
நானல்லவோ நிரதிசய ப்ருஹத்தான ப்ரஹ்மம் என்று மார்பு தட்டி வந்தான் அவுணன்.
தன்னை யொத்தாரும் மிக்காரும் இல்லை யென்று அஹங்கரித்தான்.
மந்தபாக்யோக்தோ மதக்யோ ஜகதீச்வர: என்னிலும் வேறான ஒர் ஜகதீச்வர னுண்டென்று வீணே பேசுகிறாயே;
ஜகதேக ஈச்வரனான என் வயிற்றில் பிறந்தும் இப்படிப் பாக்யஹீனனானாயே’ என்றும் ப்ரஹ்லாதரிடம் பேசினவன்.

4) பகவத் த்வேஷமே பூரித்த பரிய உடல், உடல் பரியது; த்வேஷம் அதனிலும் பரியது.
(ஸுதம் மஹாபாகவதம் மஹாஸுர:)’ என்றார் சுகர் நாரத முகமாக. பரியனான அவுணன் புத்ரனும் பரியனானவன்;
ஆயின் – அவன் தெய்வத் தன்மையால் பரியன் ; சிறிய சிசுவாயினும் அத்தன்மையால் பரியன்.
(ரஹிதாஸுரோசுர:) என்றபடி அவுணத் தன்மையே இல்லாத அஸுர சிசு..

(5) (பரமேஸ்வர ஸம்ஞோஞ கிமன்யோ மய்யவஸ்திதே ) என்று பிள்ளையைக் கேட்டான்.
பரமம் மஹேச்வரம் என்று நீ புகழும் பரமேச்வரன் நானே. நானிருக்கையில் என்னிலும் வேறுளரோ?
நீ அஜ்ஞன், அநீசன்; நானே ஜ்ஞன், ஈசன்; உலகத்திற்கு ஒரு பரமேச்வரன் உண்டென்பது உண்மையே;
ஆனால் அப்பரமேச்வரன் நானே.

(6) ( க்ருத்தஸ்ய யஸ்ய கம்பந்தே த்ரயோ லோகா: ஸஹேச்வரா) ‘ எவன் சீற்றமுற்றால் ஈச்வரர்களோடு கூடிய
மூவுலகங்களும் நடுங்குமோ, அந்தப் பரமேஸ்வரனாகிய என்னுடைய கட்டளையை எந்த பலத்தைக் கொண்டு மீறினாய்?’
என்று பிள்ளையைக் கோபித்துக் கேட்டவன்;
(கம்பநாத்) என்று ஸூத்ரகாரர் காட்டிய ப்ரஹ்ம லிங்கம் தனக்கே உளது,
தானே ப்ரஹ்மம், தானே பரியன் என்று அஹங்கரித்தவன்.

(7) (ப்ருஹ வ்ருத்தௌ -பரிபீருடம் ஸர்வத) (யாசகர் நிருத்தம்) நிரதிசயமாகப் பரியனாயுளது ப்ரஹ்மம்.
ப்ரஹ்மத்தோடு போட்டி போட யார் அர்ஹர்?’ என ச்ருதி கேட்டது.
‘நானே ப்ரஹ்மத்தோடு ஸ்பர்த்திக்க அர்ஹன்’ என்று மார்பு தட்டுபவன்.

(8)’ எங்குமுளன் கண்ணன் ‘ என்று மகன் பேசினால்
‘ நானல்லவோ எங்கும் பரந்த பரியன் ‘ என்று பேசுபவன்.

(9) உடலும் அஹங்காரமும் பரியதாயின ; ஆத்மாவோ உடலுக்குள் முழுகி உள்ளிருப்பதே தெரியாமலிருந்தது.
‘ ஸர்வ லோகத்திலுமுள்ள தபஸ்ஸெல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாற்போல அதிஸ்தூலனாய்
மஹா மேரு நடந்தாற் போலே எதிர்த்து வந்த ‘ என்று போகம். ஹிரண்யன் ‘ என்ற நாமமும், –
(ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:) (சாந்தோக்யம் – அந்தராதித்ய பித்யை) என்ற ஹிரண்மய ப்ரஹ்ம புருஷனுக்கு எதிர்த்தட்டு.
‘மஹாமேரு என்றதனால் ஸ்வாமி அதை வ்யஞ்ஐநம் செய்கிறார்.
(ஏவம் லப்தவரோதைத்யோ பிப்ரத்தேம மயம் வபு:) (பாகவதம் -7, 4. 4-4) என்றும் சுகரும் இவன் வரம் பெற்றதும்
பொன் மேனியனானான் என்று இதைக் காட்டினார். விஷ்ணுவினிடம் தான் அவனுக்கு த்வேஷம்.
செம்பொன்னாகத் தவுணனுடல் கீண்டவன்’,

(10) (பாகவதம் 7-3-1) (ஆதிமானமப்ரதி த்வந்த்வம் மேகராஜம் வ்யதித்ஸத, ஏகமே வாத்விதீயம்) என்ற
பரஹ்மத்தைப் போல தான் அத்விதீயனாய் ஏக ராஜாவாய் இருப்பதற்காகத் தவம் செய்து வரங்கள் பெற்றான் ;.
பெற்றதும் வரம் கொடுத்தவரை மறந்தான்.

வந்த:-
(1) குழந்தை நம்முடையவன் ; தொண்டக் குலத்தில் ஸர்வோத்தமன்.
(வந்தனம் தாஸ்யம் ஸக்யமாத்ம நிவேதனம்) என்று ஆத்ம ஸ்மர்ப்பண பர்யந்தமான பக்திபர்வங்களை
தோழச் சிறுவருக்கு உபதேசித்தவன்.
(மஹீயபஸாம் பாதரஜோயிஷேகம் நிஷ்கிஞ்சனானாம் ந வ்ருணீத யாவத்)
(நிஷ்கிஞ்சநரான பெரியோர் திருவடி ரஜஸ்ஸினால் அபிஷேகத்தை விரும்பி வரிக்காதவரையில்
த்ரிவிக்ரமன் தாளிணை ஸ்பர்சம் கிடையாது) என்று உபதேசிப்பவன் ,
இச் செல்வக் குழந்தையை அம் மஹாஸுரன், அதி பலன், கத்தியை உருவிக் கொண்டு ஸிம்ஹாசனத்தில்
இருந்து குதித்தோடி வந்து தன் முஷ்டியினால் ஸ்தம்பத்தைத் தட்டினான்.
‘உன் உடலிலிருந்து உன் தலையைப் பிடுங்குகிறேன் ‘ என்று இம் மகனை ரோஷமாய் விரட்டிக் கொண்டு வந்தான்.
‘வந்த’ என்பதால் இவற்றையெல்லாம் ஸுசிப்பிக்கிறார்.

அவுணனுடல் கீண்ட :-
(1). அவனும் ஸ்வத:விஷ்ணு பார்ஷதனே. சாப விசேஷத்தால் அசுராவேசம் வந்து கொடியனானான்.
அவனுக்கு அவுண‌க்ரஹம், அசுர க்ரஹம்; மகனுக்கு க்ருஷ்ண க்ரஹம்.
(க்ருஷ்ண க்ரஹக்ருஹீதாத்மா ந வேத ஜகதீ த்ருஶாம்) நிற்கின்றதெல்லாம் நெடுமா லென்றே மகன் பார்வை.
நெடுமாலென்பவரே இல்லையென்பவன் அவுணன்.

2.ஏரகாம் கடக்ருத்யதா) (கோரைப் பாய் பின்னுபவன் கோரையைக் கிழிப்பது போல)
(ந காம் குரோத்பாடித ஹ்ருத்ஸரோருஹம்) தாமரைப் பூவைக் கிழிப்பது போல் அவுணன்
ஹ்ருதய புண்டரீகத்தைக் கிழித்தார் என்று பிள்ளை.
உலர்ந்த தாழை நாரைக் கிழிக்குமாப் போல இரண்டு கூறு செய்தவனாய் என்று போகம்.
( கிள்ளிக் களைந்தானை ‘ என்றாள் ஒரு பெண் குழந்தை.
தன் பூந்தோட்டத்திலே ஒரு பூக்கிள்ளுவது போல என்று அவ்ள் கருத்து.
ஆத்மா அச்சேத்யன். கீண்டது உடலை மட்டும்.(பித்யதே ஹ்ருதயக்ரந்தி:) என்றபடி
இங்கே ஆழ்வார் தம் ஹ்ருதயம் பிளக்க வேண்டிய ஸமயத்தையும் நினைப்பதாகும். முக்தி பெறும் அவஸரம். –

அமரர்க்கு அரிய:–
(1)(ந மே விதுஸ்ஸுரகணர் ப்ரபவம் – ந மஹர்ஷய: அஹமாதிர்ஹி தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வச:) என்று கீதை.
எல்லோருக்கும் ஆதியான என்னைத் தேவர்களு மறியார் மஹர்ஷிகளுமறியார் ‘
‘தன்னாலே ஸ்ருஷ்டமாய் உபக்ருதமான் – தேவர்கள் தான் காரண பூதனாய் உபகாரகனாய் நிற்கிற நிலையை
அறிய மாட்டாமையாலே ப்ரஹ்லாதர் அணுகி அநுபவித்தாற் போலே அணுகவும் அனுபவிக்கவு மரியனாயிருக்கிற ‘ என்று போகம்.
‘ப்ரபாவத்தை யறியவில்லை’ என்று கீதை. ஸௌலப்ய ப்ரபாவத்தையு மறியவில்லை;
அந்த ப்ரபாவத்தை யறிந்தால் விலகமாட்டார்.; அணுகவே அணுகுவார்.

(ராமாயணம் – ஸம்க்ஷேபம்) (கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே) என்றபடி அச்சமு முறுவாரமரர்.
(க்வாஹம் ரஜ:ப்ரக்ருதி:) என்று ப்ரஹ்லாத ஸ்தோத்ர ச்லோகத்தைப் பிள்ளையும் நாயனாரும் உதாகரித்தார்கள். –
அங்கே (ரஜ, ப்ரக்ருதி:, பத்மகரப்ரக்ருதி ) என்ற ப்ராசீனப் பாடங்களைக் காண்கிறோம்.—
(ரஜ:ப்ரபவ:) என்றும் (பத்மகர: * ப்ரஸாத:) என்றும் இப்போது ஸார்வத்ரிக பாடம்.
ப்ராசீந பாடங்களில் கொஞ்சம் ரஸம் தொக்கி நிற்கின்றது.

இவ்வஸுரகுலத்தில் பிறந்த ஆஸுர ப்ரக்ருதியான நானெங்கே? உம்முடைய தயா குண மெங்கே?
என் சிரஸ்ஸில் வைக்கப்பட்ட தாமரை ஹஸ்த ப்ரஸாதம் ப்ரஹ்மாவுக்கு மில்லை; சிவனுக்குமில்லை,
(இப்பொழுது) லக்ஷ்மிக்குமில்லை.’

3) ( த்வத்வீர்ய காயன மஹாக்ருதமக்ன சித்த:): என்று பாட்டாய் பல பாடும் இன்பக்கடலினிலாழும்
ப்ரஹ்லாதாழ்வாரை நினைப்பது உசிதம். ஆழ்வார்கள் பரஸ்பர ஸஜாதீயர்.
பிறர்களுக்கு அரிய ‘ என்றதால் பத்துடையடியவர்க் கெளியவன்’ என்பது தானே ஸித்திக்கிறது.
அமரர்க்கரியனைத் தமர்கட் கெளியானை ‘ அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே. ”

ஆதிப் பிரான்-
(1) ஆதி –(அஹமாதிர்ஹி பூதாநாம்) என்று கீதை. ஆதி காரணப் பொருள் என்று பயந்து அகன்றார்கள்.
நாம் அணுகுவதற்கு முன்பே தானே வலுவில் முதலில் மேல் விழுந்து உள் நுழைந்து நமக்கு
ஸத்தையை உண்டாக்கும் ‘ஆதி’ என்றறியவில்லை. (பூர்வ பாஷீ ச ராகவ:)
‘என்னின் முன்னம் பாரித்துத்தான் என்னை முற்றப்பருகினான்’ என்று பாடிய ஆதிப் பிரான்
திருவருள் பெற்ற ஆழ்வாரையும், அவர் ஒன்றும் தேவில் பரத்வ நிர்ணயம் செய்த ஆதிப் பிரானையும் நினைக்கிறார்.
திவ்ய தேசத்து எம்பெருமான்களில் ஆதிப்பிரான் ‘அரங்கன்’ என்பர்.

(3) அவதார வேஷங்கள் அரங்கத்திலேற்படுவது உசிதம்.
(ரங்கதாம் யாதி ரங்கம்) அவதார நாடகங்கள் அரங்கத்திலாட்டம். எல்லா அவதார வேஷங்களுக்கும் ஆதி அரங்கம்.
தசாவதார நாடகங்களும் அரங்கத்திலாட்ட மென்று தசாவதார ஸ்தோத்ர பூமிக ச்லோகம்.
(ரங்கேதாமநி லப்தநிர்பரரஸைரத்யக்ஷிதோ பாவுகை) இவ்வாழ்வாரும் அந்த நாடகங்களைப் பார்த்து ரஸிக்கும் ஓர் பாவுகர்.

அரங்கத்து அமலன் ;–
(1) ந்ருஸிம்ஹாவதாரம் சில க்ஷண காலமே. உக்ரம் என்றும் பீஷணம் என்றும் முதலில் அநுஸந்தாநம்.
‘பயக்ருத் பயநாசம் என்னுமிடத்தில் முன்பு ‘பயக்ருத்’ என்று ஆபாதபிரதீதி.
‘பத்ரர் ‘ என்பதே ஸஹஜத்வம். – பயநாசந: ‘ – என்பது ஸாமாந்யமாக.
ந்ருஸிம்ஹன்: ம்ருத்யு ம்ருத்யுவாகிறவர். ம்ருத்யு பயத்தையும் ஹரிப்பவர்.
உக்ரரும் பீஷணருமா யிருப்பதும், ஆச்ரித விரோதி விஷயத்திலும். ஆஸ்ரிதருக்கு வரும் ம்ருத்யு பய விஷயத்திலும்,
அரங்கத்தமலனிடம் பய ப்ரஸக்தியே இல்லை. ‘ஆராத வருளமுதம் பொதிந்த கோயில்.’

(2) ப்ரஹலாதனொருவனுக்கே , ஸ்வல்ப க்ஷணங்கள் மட்டுமே என்றபடியல்லாத
ஓர் விலக்ஷண சுத்தியாகுமென்று பிள்ளைபும் நாயனாரும் பணித்த படி.

(3) (காந்தம் வக்த்ரம், சந்த்ரகாந்தானனம் ராமம்) என்றதுபோல.
‘சந்த்ரனும் தாமரையும் ஒன்றினாற்போலே யிருக்கிற திருமுகத்தில்’ என்று போகம்.-

கரியவாகி :-
(1) ‘நிகரில்லாத நீல ரத்நம் போலே இருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய்’ என்று போகம்.
திருமேனியின் நிறத்தை யொத்தது கருவிழி யென்னும் தாரகை. சந்த்ர முகத்தில் தாரகை யென்னும்
நக்ஷத்ராநுபவம் சப்த மாத்ரத்தால் ஸ்புரிப்பது. சந்த்ரனுக்கும் – நீலோத்பலங் களுக்கும் மைத்ரீ.
பின்பு அரவிந்த மென்னும் விரோதியும் விரோதத்தை விட்டு உவமையாய்ச் சேருகிறது.

(2) ‘விடாய்த்தவர் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டால் போலே யிருக்கை’ என்று பிள்ளை.
‘கண்ணனைக் கண்டபோதே தாபத்ரய தப்தருடைய ஸகல தாபங்களும் போம்படி குளிர்ந்திருக்கு மென்னுதல்’ என்றும்,
‘புண்டரீகம் போலே வெளுத்திருக்கிற திருக் கண்களுக்குப் பரபாகமாகும் படி இரண்டு கருவிழி யுடைத்தாய்’ என்றும் நாயனார்.

புடை பரந்து :–
(1) ‘ஆச்ரித தர்சந ப்ரீதியாக அன்றலர்ந்த தாமரைப் பூப்போலே அதி விகஸிதங்களாய்’ என்று போகம்
(2) கடலைத் தடாகமாக்கினாற்போலே இடமுடைத்தாயிருக்கை ‘ என்று பிள்ளை –
(தயாசிசிரிதாசயா ஜலதிடிம்ப டம்பஸ்ப்ருச:). என்று அபீதிஸ்தவ வர்ணநம்.
திருமேனி ஓர் குட்டிக் கடலாக அநுபவம். – திருக்கண்களே ஓர் தயாபூர்ணமான குட்டி ஸமுத்ர மென்று பிள்ளையின் கருத்து.

மிளிர்ந்து :–
[1] ஆஸந்நரானா ரெல்லார் பக்கலிலும் ஆதரம் தோன்றும் படியான உல்லாஸத்தை யுடையவையாய்’ என்று போகம்.
அதி நீசரான என் பேரிலும் விழுந்து என்னைப் பருகுவது என்பது கருத்து. (லோசநாப்யா பிபந்நிவ]
[2] க்ருபா பரிதமாயிருக்கையாலே கரையருக்கும் வழிபோக வொண்ணாதபடி திரைவீசுகை.
கண்களின் தவரையைச் சொல்லுகிறது என்று நாயனார். குட்டிக் கடல் அநுபவமும் அதில் அலைய நுபவமும் ஓடுகிறது.

செவ்வரி ஓடி. –
[1] அநந்யர் பக்கல் அநூராகத்திற்குக் கீற்றெடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே –
வ்யாப்தங்களாய்’ – என்று போகம்

(2)ஸ்ரீய:பதித்வத்தாலும் – வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கை” என்று பிள்ளை .

[3] ஜிதந்தே புண்டரீகாக்ஷ) என்று ஓர் மங்களப் பாட்டு.

நீண்ட :-
(1) ஸ்வபாவ ஸித்தமான ஆயாமத்தை உடைய’ என்று போகம்.
(2)’செவியௗவும் அலையறிகை’ என்று பிள்ளை தம்மளவும் கடாக்ஷம் தந்து விஷயீகரித்த படியும்’ என்று நாயனார்.

2) முதல் பாசுரத்தில் திருக் கமலபாதம் தம் கண் வரையில் நீண்டு வந்ததை அநுபவித்தார்.
இங்கே ப்ரத்யேக அவயவங்களின் அநுபவம் திருமுகத்துத் திருக்கண்களோடு முடிகிறது.
கடாக்ஷங்கள் க்ருபா ப்ரேமைகளோடு நீண்டலைத்துத் தம்மீது – மோதுவதை அநுபவிக்கிறார்.
(தூரதக்தாபி முக்யம்) யார் வருகிறாரென்று வெகுதூரம் நீண்டு பார்த்துக் காத்திருக்கும் ஸ்வபாவம்.

அப் பெரியவாய கண்கள் :-
(1) ப்ரஹ்மத்தின் கண்கள் மிக விஸ்தாரமாகின்றன. ப்ரும்ஹத்திலும் ப்ருஹத்தானவை.
இக் கண்களின் பெருமை சொல்லிலடங்காத தென்பதை அப்பெரிய’ என்பதால் விளக்குகிறார்.

(2) ப்ரஹ்மத்தின் கண்கள் ப்ரும்ஹிதமாகின்றன. கண்கள் – க்ருபை வெள்ளத்தால் உடம்பெல்லாம்
கண்ணாகச் செய்யப் பார்க்கின்றன’ என்று பட்டர் ஸ்தவம். (ஸகலாங்கம் கில ஸர்வதோக்ஷி நேத்ரே)

என்னைப் பேதைமை செய்தனவே –
என் நீசத்தன்மயை நினைத்து நானெத்தனை ஓதுங்கப் பார்த்தும், என்னைப் பலாத்கரித்து
என் நெஞ்சையே யழித்து, என்னை மூர்ச்சிதன் போல நினைவு சக்தி முதலியனவற்றவனாக்கி விட்டன.
ஆநந்த மூர்ச்சை (ஆனந்தநேன ஜடதாமாதனோதி) – சுகவெள்ளம் விசும்பிறந் தறிவை மூழ்கச் சூழ்ந்தது.’

————

ஆலமாமரத்தி னிலைமேலோரு பாலகனாய்
ஞாலமேழுமுண்டா னரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்ல தோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்ட தென்நெஞ்சினையே. .9.

மா – பெரிதான;
ஆலமரத்தின் – ஆலமரத்தினுடைய;
இலைமேல் – (சிறிய) இலையிலே;
ஒரு பாலகனாய் – ஒரு சிறு பிள்ளையாகி;
ஞாலம் ஏழும் உண்டான் – ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்;
அரங்கத்து – கோயிலிலே;
அரவு இன் அணையான் – திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருளுபவனுமான ஸ்ரீரங்கநாதனுடைய;
கோலம் – அழகிய;
மா – சிறந்த;
மணி ஆரமும் – ரத்னங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்;
முத்துத் தாமமும் – முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்);
முடிவு இல்லது – எல்லை காணமுடியாமல் அபரிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்;
ஓர் எழில் –ஒப்பற்ற அழகையுடையதும்;
நீலம் – கருநெய்தல் மலர் போன்றதுமான;
மேனி – திருமேனியானது;
என் நெஞ்சினை – எனது நெஞ்சினுடைய;
நிறை – அடக்கத்தை;
கொண்டது – கொள்ளைகொண்டு போயிற்று;
ஐயோ—இதற்கென் செய்வேன் என்கிறார்.

ஆலமாமரத்தின் இலையின்மேல் ஒரு பாலகனாய்:–திருவடி முதல் திருமுகம் வரையில்
ஆபாதசூடம் அவயங்களை அனுபவித்து, அரங்கத்தமலன் முகத்துத் திருக்கண்களின் குளிர்ந்த கடாக்ஷங்களைப் பெற்று அனுபவித்தார்.
‘அமலன்’ என்று த்யானத்தைத் தொடங்கினவர் அமலனாகவே ஸுமுகமாய்க் குளிரக் கடாக்ஷிக்கப் பெற்றார்.
அமலனென்று தொடங்கிய த்யானத்திற்கு அமலன் முகத்துக் கடாக்ஷம் பலம். தத்க்ரது ந்யாயம், யதோபாஸனம் ப்ராப்தி.
அவய வர்ணனப் பாசுரங்களில் உபக்ரமப்படியே உபஸம்ஹாரம். அமலனென்று தொடங்கி அமலனென்று அவய வர்ணனையில் ஸமாப்தி.

(2)(காரணம் துத்யேய என்றபடி , காரணமாக அரங்க ப்ரும்மத்தை த்யானம் செய்கையில், காரணத்வத்தை
விஸ்தாரமாக விளக்கும் சாந்தோக்ய ஸத்வித்தையில் கூறிய ஆலமாமர த்ருஷ்டாந்தத்தை
‘ஆலமாமரத்தின்’ என்பதால் வ்யஞ்சனம் செய்கிறார்.

மஹாந்யக்ரோதாஸ்திஷ்டதி –‘இதோ இங்கே ஆலமரம் நிற்கிறதே ஆலம்பழமொன்று எடுத்து வா’ என்றார்
தகப்பனார் மகன் ச்வேதகேதுவைப் பார்த்து. அவன் கொணர்ந்ததும் அதை உடைத்து ஒரு விதையை எடுக்கச் செய்து,
அதனைக் கிழிப்பித்து, ‘உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்டார். ‘ஒன்றையும் காணேன்’ என்றான் மகன்.
‘இந்த நுண்ணிய விதையிலிருந்து இவ்வாலமரம் விரிந்தது.
இதுபோல ஸத் என்னும் ஸூக்ஷ்ம ஸூக்ஷ்மமான அணிமையிலிருந்து புவனம் விரிந்தது. அதிலேயே நிற்கிறது.
அதிலேயே மறுபடியும் லயிக்கிறது என்று தகப்பன் மகனுக்கு விளக்கினார்.
ஒன்றுமில்லை என்று சொல்லலாம்படி நுண்ணிய ப்ரஹ்மத்திடமிருந்து புவனப் பரப்பெல்லாம் விரிந்து முடிவில்
அதனுள்ளே லயித்துக் கிடக்கிறதென்று காட்டும் ஆல மாமர த்ருஷ்டாந்தத்தின் வ்யஞ்ஜனத்தால்
வடதள சிசு லீலைக்காட்சி என்ன அதிசயமென்று கைமுத்ய வ்யஞ்ஜனத்தில் கருத்து.
‘ஒரு பாலகன் அளவான உருத்தான் வேண்டுமோ என்று வ்யஞ்ஜனம்.

(3) ஆலமாமரத்தின் –
பெரிய மரத்தின் பேரில் சயனிக்கலாகாதா? அதையும் ப்ரளயம் செய்து ஒரு சிற்றிலையின் பேரில் தான் சயனிக்க வேண்டுமோ?
அகடிதகடனக் காட்சி ஸேவையில் நோக்கு. குழந்தைக்கு ஏற்ற விளையாட்டில் கருத்து.
பள்ளியாலிலை ஏழுலகும் கொள்ளும்’
‘பாரனாயேழுலகுமுண்டு பிரிவின்றி ஆலிலையன்ன வசஞ்செய்யு மண்ணலார்’
‘அடியார்ந்த வையமுண்டு ஆலினைத் துயின்றவாழியான்’

(4) மார்க்கண்டேயன் கரியே.
சிரஞ்ஜீவியாயிருந்து ப்ரளயத்தில் திருவடிகளை சிரஸால் க்ரஹித்து,
‘அன்று ப்ரளயத்தில் நான் நமஸ்கரித்தவரே இக்கண்ணன்’ என்று பாண்டவர்களிடம் ஸாக்ஷ்யத்தை அறுதியிட்டார்.
ஸோயம் தேவ: என்று ப்ரத்யபிஜ்ஞா ஸாக்ஷ்யம். ஒன்றும் தேவில்,
“புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை நக்கபிரானும் அன்றுய்யக் கொண்டது நாராயணனருளே”
என்பதை நினைப்பூட்டுகிறது.

(5) “ஆதி” என்று தொடக்கத்தில் ப்ரளய காரணத்வத்தை ஸூத்ரம்போல ஸூசித்ததை இங்கே விளக்குகிறார்.

(6) ஸ்ரீபாகவதத்தின் கடைசி ஸ்கந்தத்தில் மூன்று அத்யாயங்களால் மார்க்கண்டேயர் ப்ரளயத்தில்
பகவானுடைய பரத்வத்தை ஸாக்ஷாத் த்ரஷ்டாவாகக் கண்டு ஸாக்ஷி சொல்வது விஸ்தரித்துள்ளது.
இப்பிரபந்தமும் ஓர் ஸம்க்ஷேப பாகவதம்.
வடபத்ர புடே தோகம் சயாநம் த்வேகமத்புதம் என்று மார்க்கண்டேயர் நேரில் கண்ட ப்ரளயக் காட்சியைச் சொல்லி பாகவதம் முடிவு பெற்றது.
பகவதவதாரமான நர நாராயணர் இருவரும் மார்க்கண்டேயருக்கு ஸேவை ஸாதித்து,
அவருக்குத் தத்வோபதேசம் செய்தார்கள். அர்ஜுனன் ப்ரார்த்தித்து விச்வரூபக்காட்சி பெற்றான். அது ப்ரளயக் காட்சி அல்ல.
ஸ்திதியில் விச்வரூபக் காட்சி. ப்ரளயத்தில் விச்வம் அரூபமாய் அஸத் வ்யபதே சார்ஹமாய் பகவானுக்குள் ஒன்றியிருக்கும்.

மார்க்கண்டேயர் ப்ரளயக் காட்சியை விரும்பிப் பெற்று ஸேவித்தார்.
(ச‌யாந‌ம் ப‌ர்ண‌புட‌கேக்ர‌ஸ‌ந்த‌ம் ப்ர‌ப‌யா த‌ம‌:| மஹாம‌ர‌க‌த‌ ஸ்யாமம் ஸ்ரீம‌த் வ‌த‌ந‌ப‌ங்க‌ஜ‌ம்
ப‌த்ம‌க‌ர்பாருணாபாங்க‌ம் ஹ்ருத்ய‌ ஹாஸாவ‌ லோக‌ன‌ம்) என்று சுக‌ர் வ‌ர்ணித்த‌ மார்க்க‌ண்டேயாநுப‌வ‌ம்
இவ்வாழ்வார் நெஞ்சில் ஓடுகிற‌து.

(மஹாம‌ர‌க‌த‌ ச்யாமம்) என்று சுக‌ர் வ‌ர்ணித்ததை “முடிவில்லாதோரெழில் நீல‌மேனி ஐயோ” என்கிறார்.
மார்க்க‌ண்டேய‌ர் நெஞ்சினை நிறைகொண்ட‌ நீல‌மேனி என் நெஞ்சினை நிறைகொண்ட‌ தென்கிறார்.
ப்ர‌ளாய‌வ‌ஸ‌ர‌த்தில் சித‌சித் புவ‌ன‌மான‌ ச‌ரீர‌ம் இல்லாததுபோல‌ ல‌யித்துக் கிட‌க்கிற‌து.
ப‌க‌வானுடைய‌ திவ்ய‌ம‌ங்க‌ள‌ நீல‌மேனியான‌ ச‌ரீர‌ம் ம‌ட்டும் ஸேவை. ம‌ற்றொன்றின் காட்சியேயில்லை.
திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹாம்ருதத்தோடு கூடிய‌ அமுதொன்றே காணும் அவ‌ஸ‌ர‌ம்,
ஸ‌ம்ஸார‌ ப‌ந்தத்தின் ப்ர‌ள‌ய‌மான‌ மோக்ஷ‌ம் இவ்வாழ்வாருக்கு ஸித்திக்கும் அவ‌ஸ‌ர‌மிது.
(ஸ்ரீம‌த் வ‌த‌ந‌ப‌ங்க‌ஜ‌ம் ப‌த்ம‌க‌ர்பாருணா பாங்க‌ம் ஹ்ருத்ய‌ ஹாஸாவ‌ லோக‌ன‌ம்) என்ற‌ப‌டி

முன்பாசுர‌த்தில் திருமுக‌த்தையும் ஹ்ருத்ய‌ க‌டாக்ஷ‌ங்க‌ளையும் அனுப‌வித்தார்.
(ப்ரஹ்ருஷ்டரோமாsத்புத பாவஶங்கிதம் ப்ரஷ்டும் புரஸ்தம் ப்ரஸார பாலகம்”
“யதா புராமுஹ்யததீவ விஸ்மித:”
”தோகம் ச தத்ப்ரேம ஸுதாஸ் மிதேந நிரீக்ஷிதோ பாங்கநிரீக்ஷணேந”
“அத தம் பாலகம் வீக்ஷ்ய நேத்ராப்யாம் திஷ்டிதம் ஹ்ருதி) என்று சுக‌ வ‌ர்ண‌ந‌ ச்லோக‌ங்க‌ள்
இவ்விர‌ண்டு பாசுர‌ங்க‌ளிலும‌் ஆழ்வார் நெஞ்சில் ஓடுகின்ற‌ன‌.
“பால‌க‌னாய்” என்று சுக‌ர் ச்லோக‌ ஸ‌மார‌ண‌ம். (த‌ம‌த்புத‌ம் பால‌க‌ம்) என்ற‌ கோவ‌ல‌ன் அவ‌தார‌ ச்லோக‌த்திற்கும் ஸ்மர‌ண‌ம்.

(7) சிறு குழ‌விக்கேற்ப‌ ஒரு சிறு த‌ளிர்.
“நீரார் க‌ட‌லும் நில‌னும் முழுதுண்டு ஏராரிள‌ந்துளிர்மேல் துயிலெந்தாய்”

ஞால‌மேழும் உண்டு —
(அத்தா ச‌ராச‌ர‌ க்ர‌ஹ‌ணாத்) என்ற‌ சூத்ர‌த்தை நினைக்கிறார். ஸ‌ம்ஹ‌ரிக்க‌ப்ப‌டும் உல‌க‌ முழுவ‌தும்
ஓத‌ன‌ம், சோறு என்று ச்ருதி ஸூத்திர‌ங்க‌ள் பேசுவ‌தை அனுஸ‌ரிக்கிறார்.
இக்குழ‌ந்தைக்கு ஏழுல‌கும் செவ்வெண்ணெய் போலும்.
ஏழுல‌க‌மும் உண்ண‌ இந்த‌ச் சிசு வேஷ‌ம்தான் வேணுமோ?
ச‌ய‌ன‌த்திற்கு ஓர் ஆல‌ந்துளிர்தான் வேணுமோ?
அவ‌ன் ஆச்ச‌ர்ய‌ ஸ‌ங்க‌ல்ப‌மான‌ மாயையை யார் அறிய‌வ‌ல்லார்?

அர‌ங்க‌த்த‌ர‌வின‌ணையான் –
ஓர‌க்ஷ‌ர‌மான‌ ப்ர‌ண‌வ‌த்திற்குள் விச்வ‌மும் அட‌ங்கியுள‌தென்ப‌ர்.
ப்ர‌ண‌வ‌ விமான‌த்திற்குள்
அர‌வ‌ணையில் ப‌ள்ளி கொண்ட‌வ‌னுக்குள் விச்வ‌ம் அட‌ங்கியிருப்ப‌தில் ஐய‌மில்லை
என்ப‌தை விள‌க்க‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌ன‌ சிசு வ்ருத்தாந்தத்தை எடுத்தது.

கோல‌ மா ம‌ணி ஆர‌மும் முத்துத் தாமமும் –
கௌஸ்துப‌ம் போன்ற‌ நித்ய‌ முக்த‌ரெல்லாருக்கும் ஸ்தான‌ம் திருமார்பு. இவ்வாழ்வாருக்குத் திருமார்பு நித்ய‌ஸ்தான‌ம்.
அவ‌தார‌ கார்ய‌ம் முடிகிற‌து. த‌ம் ஸ்தான‌மாகிய‌ திருமார்பில் க‌ண் போகிற‌து.
மாம‌ணி கௌஸ்துப‌ம் ஜீவாபிமானியான‌ நித்ய‌ர்.
முத்துத் தாமமென்ப‌து முக்த‌ர்க‌ளின் கோவையை நினைப்பூட்டுகிற‌து.
நித்ய‌ முக்த‌ர்க‌ள் வாழும் திருமார்பின் அனுப‌வ‌ம்.
இந்த‌ அவ‌தார‌ விக்ர‌ஹ‌த்தைவிட்டு ஸித்தி பெறும் அவ‌ஸ‌ர‌த்தில் இத‌ன் பொருத்த‌ம் ர‌ஸிக்க‌த்த‌க்க‌து.

நீல‌மேனி ஐயோ நிறைகொண்ட‌து என் நெஞ்சினையே –
பெருமாள் திருமேனியிலேயே இவ‌ருக்கு நித்ய‌வாஸ‌ம். திருமேனி இவ‌ரையும் இவ‌ர் நெஞ்சையும் உட்கொண்டு,
இவ‌ரையும் இவ‌ர் நெஞ்சையும் ப்ரும்ஹ‌ண‌ம் செய்கிற‌து. பெருமாளைப்போல‌ இவ‌ர் திவ்ய‌மேனியும் ப்ர‌ஹ்மம்.

(மூர்த‌ம் ப்ர‌ம்ம‌ ததோபி தத்ப்ரிய‌த‌ர‌ம் ரூப‌ம் ய‌தத்ய‌த்புத‌ம்) பெருமாளுக்குள்ள‌ ல‌க்ஷ‌ண‌ம் திருமேனிக்குமுண்டு.
“ப‌க‌வான் எப்ப‌டியோ , அப்ப‌டியே அவ‌ர் வ்ய‌க்தியும்” ப்ர‌ஹ்ம‌ த‌ன்மையும், ப்ர‌ஹ்ம‌ண‌த் த‌ன்மையும் அத‌ற்கும் உண்டு.
முக்த‌ராவாரை ப்ர‌ஹ்ம‌ண‌ம் செய்வ‌து திருமேனியோடு கூடிய‌ ப‌க‌வான். ஞான‌த‌ர்ம‌த்தின் பூர‌ண‌ விகாஸ‌ம்தான் ப்ர‌ஹ்ம‌ண‌ம்.

“நிறை கொண்ட‌து என் நெஞ்சினையே” என்று த‌ர்மபூத‌ ஞான‌த்தின் நிர‌திஸ‌ய‌ விகாஸ‌மான‌ பூர்ண‌தை பெறுவ‌தைப் பேசுகிறார்.
(ஸ‌ம்ப‌த்ய‌ ஆவிர்பாவ‌:) “முடிவில்லதோரெழில்”
(அத்யர்காநல தீப்யமாநஜ்யோதிரனுபவம்) யதத் பராதிவோ ஜ்யோதிர்தீப்யதே) (த்ரிபாதஸ்யாம்ருதம் திவி) என்ற
அனுபவங்கள் கிடைக்கின்றன.

‘ஐயோ’ என்பது ‘ஹாவு ஹாவு ஹாவு’ என்கிற முக்தர் ஸாமகானத்தையும் ஸூசிக்கிறது.
“நிறைகொண்டது” – என் அடக்கத்தை யழித்ததென்று, என் நெஞ்சைக் கொள்ளை கொண்டதென்று பொருளுரை.
என் நெஞ்சு நிறையப் புகுந்து தன்மயமாக்கி விட்டது. நெஞ்சை அதன் வசமாக்கி விட்டது. நிறை = நிறைவு.
முன் பாசுரங்களில் அவயவங்களின் சோபையின் அனுபவம். இங்கே ஸமுதாய சோபையின் அனுபவம்.
அகண்டத் திருமேனியின் அனுபவம். (பாதாம்போஜம்ஸ்ப்ருசதி) என்று சோபானத்தில் முடிவில் அகண்டானுபவம்.
ஸர்வாவய சோபைகளோடும் கூடின ஸமுதாய சோபையாலே பூர்ணமாய் என்று ஆழ்வார் நெஞ்சை போகம் வர்ணித்தது.

இங்கே சொல்லும் ப்ரளயம் அவாந்தர ப்ரளயம்.
‘ஓர் இலையிலே தாயும் தந்தையு மில்லாததொரு தனிக்குழவியாய்’ என்று போகம்.
கர்ணனைத் தாய் ஒரு சிறு பெட்டியில் வைத்துக் கங்கையில் மிதக்கவிட்டாள்.

“அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி ஸர்வ லோகங்களையும் திருவயிற்றில் வைத்தவன்” என்று
போகம் மார்க்கண்டேயர் அனுபவம் ஆழ்வார் நெஞ்சில் உள்ளதைக் காட்டிற்று.

‘பாலகன்’ என்பதில் “க” என்னும் விகுதி சிறுமையைக் காட்டும்.
“யசோதை குழந்தையும் பெரியதென்னும்படி அத்விதீயனான பாலனாய்” என்று பிள்ளை.
சிறு ப்ரஜைகள் புரோவர்த்தி பதார்த்தங்களை எடுத்து வாயிலிடுமாப் போலே வைத்தானாய்த்து பிள்ளைத்தனம்.
ப்ரளயத்தில் தன் அகடிதகடனாதோ டொக்குமென்னை அகப்படுத்தினபடியும் என்று நாயனார்.

“மருளேயின்றி உன்னை என் நெஞ்சகத் திருத்துந் தெருளே தரும்”,
“திருமால் வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்”,
“என்னைமுற்று முயிருண்டு” என்று பரமபதம் செல்லும் அவஸரத்தனுபவங்கள்.
“அந்நீலமேனி”, “நீலவரை” என்று திருவாய் மொழி முடிவிலனுபவம்.
“நீலக்கடல் கடைந்தாய்” என்று அந்நீலமேனி ஒளியாலே திருப்பாற்கடலே நீலக்கடலெனலாம்படி ஆயிற்று.

“அம்ருத மதன ஸமய சடுலதர மரகதமணி ச்யாமள திவ்ய மங்கள விக்ரஹ கிரணவாஹிநீ பரம்பரானுஷகத்தாலே
அவிரளோந்மீளதபிநவ குவலய ஜால பாரம்பரீ பரி மண்டிதா போகமானாற்போலே ஸர்வதோ நீலமான க்ஷீரார்ணவத்தை”
என்று ஸாக்ஷாத் ஸ்வாமி உரை. –

முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்);
முடிவு இல்லது – எல்லை காணமுடியாமல் அபரிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்;
ஓர் எழில் –ஒப்பற்ற அழகையுடையதும்;
நீலம் – கருநெய்தல் மலர் போன்றதுமான;
மேனி – திருமேனியானது;
என் நெஞ்சினை – எனது நெஞ்சினுடைய;
நிறை – அடக்கத்தை;
கொண்டது – கொள்ளைகொண்டு போயிற்று;
ஐயோ—இதற்கென் செய்வேன் என்கிறார்.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உப.வே. கோபாலாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அமலனாதி பிரான் -விளக்கம் –

April 6, 2020

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -அவதார ஸ்தலம் ஸ்ரீ திரு உறையூர்-ஸ்ரீ நிகிளாபுரி–கோழியும் கூடலும்-மங்களா சாசனம் –
முனி வாஹனர் -ஆபாத சூடம் -பாத கமலம் -நல்லாடை -உந்தி -உதர பந்தம் -திரு மார்பு -கண்டம் -செவ்வாய் –
வாட்டமில் கண்கள் –அஷ்ட அங்க அனுபவம் -பின்பு திரு மேனி அனுபவம் –
அனுபவ பரிவாஹம் – அடியேன் என்னுமது ஒழிய இப்பிரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி தாம் பெற்ற அனுபவம் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

திருக் கமல பாதம் அனுபவம் –
திருமகள் கூசிப் பிடிக்கும் மெல்லடி-போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் உண்டே – –
ஸ்ரீ லக்ஷ்மீ பூம்யோ:கர ஸரஸிஜை: லாளிதம் – பாதோம் போஜம், —
1–அமலன் -பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம்-
2–ஆதி -காரணம்
3–பிரான் –பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் -ஸ்ரீ பொய்கையாழ்வார்-
4–அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -புருஷார்த்த காஷ்டை –பகவத் கிங்கரத்வம் –
த்வத் பரிசாரக ப்ருத்த்ய ப்ருத்த்யஸ்ய –அடியார் அடியார் தமக்கடியார்-
லோக சாரங்க முனிவர் சொல்படி கேட்க வைத்த அருள் –
5–விண்ணவர் கோன்-
6–விரையார் பொழில் வேங்கடவன் –
7–நிமலன் –நிர்ஹேதுக அருள்
8–நின்மலன் –தனது பேறாக அருள் -அவ்விஞ்ஞாதா -அடியார் பிழைகள் நின் கருத்து அடையா –
9–நீதி வானவன் -இமையோர் தலைவன் -அயர்வரும் அமரர்கள் அதிபதி
10–நீள் மதிள் அரங்கத்து அம்மான் -சர்வவித பந்து

திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே —
என் கண்ணுள் நீங்கா, நெஞ்சுள்ளும் நீங்காவே-ஸ்ரீ நம்மாழ்வார்
ஸ்ரீ பாதாம்போஜம் ப்ரதிபலதி மே பாவநாதீர்க்கி காயாம்-ஸ்ரீ தேசிகன் —
மனக்கடலில் வாழ வல்ல மாய நம்பி -ஸ்ரீ பெரியாழ்வார் –

இங்கு திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -என்று உபக்ரமம்
அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -நிகமனம் –

அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்தனத்துக்கு செய்தான் -பெரிய திரு மொழி -4-2-3-
தனக்கு அடிமைப் பட்டவனை ததீய சேஷத்வத்தில் நிலை நாட்டி அருளினான் –
தனது அபிமானத்தில் ஒதுங்கின இடையர்களை ஸ்ரீ கிருஷ்ணன் அந்ய சேஷமாக்காதபடி நோக்கி
திருமலை ஆழ்வாருக்கு சேஷமாக்கினான் -இப்படி பகவான் செய்யும் சேமத்தை கூறி ஆழ்வார்கள் ஆனந்திக்கிறார்கள் –

விண்ணவர் கோன் –வேங்கடவன் ..அரங்கத் தம்மான் -1-
ஆடும் கருளக் கொடி உடையார் –நல் வேம்கட நாடர் வந்து -நாச்சியார் திருமொழி -10-5-
பரம பதத்தில் நின்றும் கோயில் ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
ஆடும் -பரம பதம் கலவி இருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார் –
ஸ்ரீ வில்லி புத்தூரில் போலே இருந்தது பயணம் –

நீண்ட தோள் சென்று அளந்தது -இரண்டாம் திருவந்தாதி -61
ஒரு காலும் எண் மதியம் கடந்து -என்று திருவடிக்கு வளர்த்தி சொல்ல –இருக்க -திரு முடிக்கு அருளியது
ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற- நீண்ட தோள் என்கிறார் பூதத் ஆழ்வாரும்-

————

உவந்த உள்ளத்தனாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

உவந்த உள்ளத்தனாய் —
பக்த பிரகலாதன் வம்ச மஹா பலியைக் கண்ட உகப்பு –
இந்திரனுக்கு இரந்து கொடுத்தோம் என்ற உகப்பு –
பிரஜைகளைத் தீண்டப் பெற்றோமே என்ற உகப்பு –
ஆழ்வார்கள் பாடல் பெற அளந்தோமே என்ற உகப்பு
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த
திருவடியால் அளந்தவன் ஸர்வேஸ்வரேஸ்வரன் என்று காட்டிக் கொடுக்கும் -உயர்த்திய -நிமிர்ந்த -திரு அபிஷேகம்
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்-காகுஸ்த வம்ச ஸ்ரீ பெருமாள் அன்றோ இங்கே சேவை –
ஸ்ரீ ராம பானமே அமோகம் -வில்லாண்டான் என்றது கோதண்டத்தை போதும் என்று ஆள்வதையே குறிக்கும் –
கடியார் பொழில் அரங்கத்தம்மான் –வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை -அண்டர் கோன் அமரும் சோலை –
ஸ்ரீ பெரிய பெருமாள் -மரகதமலை—பச்சை மா மலை போல் மேனி அன்றோ –
மரகதகிரிமேல் மாணிக்கவொளி சூழ்ந்தாப்போல்-
அரைச் சிவந்த வாடையின் மேல்–திருப் பீதாம்பர அனுபவம் –
சென்றதாம் என சிந்தைனையே —-சிந்தனை -ஆழ்வாரைப் பிரிந்து வகுத்த இடத்தே சென்றதே –
என் -சாத்விக அஹங்காரம் –

நீண் முடியன் -2-
மலர் புரையும் திருவடி -திரு நெடும் தாண்டகம் -5-
திரு விக்ரமனின் திருமுடி விகாசத்தையும்-திருவடி விகாசத்தையும் அனுபவிக்கிறார்கள் –

—————-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்-அரங்கனின் வரத்து சொல்கிறது
மண்ணோரும் விண்ணோரும் தொழும் வெற்பு —
மந்தி போலவே அவயவங்கள் தோறும் அலைபடுகிறார் ஆழ்வாரும் –
விஷயாந்தரங்களில் அலைபடுகிறோம் நாம் –
அரங்கத்து அரவின் அணையான்–அரங்கத்தம்மான் கீழ் இரண்டிலும் -இங்கு அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ இங்கு அந்தி என்றது
காலை மாலை சந்திகள் இரண்டையும் -காலை சந்தி -மயர்வற மதி நலம் -ஞான உதயம்
மாலை சாந்தி -குளிர்ந்து -தாபத்ரயம் போக்கி அருளும் –
அடியேன் உள்ளத்து இன்னுயிரே–கீழே இரண்டிலும் என் கண் -என் சிந்தனை -என்றவர் இதில் அடியேன் –
இதில் உள்ளத்து இன் உயிர் என்று ஜீவாத்மாவைச் சொல்லி –
ஆத்ம தாஸ்யம், ஹரே : ஸ்வாம்யம்-என்பதால் அடியேன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் அன்றோ

எழில் உந்தி -3-
காமனைப் பயந்த காளை -திருவாய் மொழி -10-2-8-

எழில் உந்தி -என்று இளகிப் பதிக்கை-பிரசவாந்தம ச யௌவனம் -என்கிறபடி அன்றிக்கே இருக்கை-
பிரமனை உண்டாக்கிய பின்பும் ஒளியும் அழகும் மிக்கு -யோ ப்ரஹ்மானாம் விததாதி தம ஹ தேவம – விளங்குகிறான் –
பயந்த என்று பிரசவத்தை சொல்லி–காளை -என்று யௌவனத்தை கூறினார் இறே –

மூன்றாலும் ஓங்காரம் சொல்லி -அமலன் -உவந்த -மந்தி -பாவோ நான்யத்ர கச்சதி –
அடுத்த நான்கையும் சேர்த்து – அமலன் உவந்த மந்தி ச பாதுகை -அடி சூடும் அரசு-

———————

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்–ஓர் -அத்விதீயம்
ஒட்டி -இன்று போய் நாளை வா என்றது ஸூசகம்
ஓத வண்ணன்-கோபமாஹாரயேத் தீவ்ரம்-கோப வசமானாலும்-ஸ்வரூபம் மாறாதே -முகில் வண்ணன் அன்றோ இங்கு
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் –முகிலைக் கண்டு தானே மயிலினம் ஆலும் -வண்டினம் முரலும் –
திரு வயிற்று உதர பந்தம் —-தேட்டரும் உதர பந்தம் –அரை ஞான்- மேகலை- ஒட்டியாணம் -அனுபவம் –
அரங்கனுக்கு தேட்டரும் திறல் தேன் அன்றோ
என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே –பந்தம் என்ற பெயர் -ஆனால் உலாவுகின்றதே –
தாமோதர ஈடுபாடு எத்திறம் என்னப் பண்ணுமே-

மதுர மா   வண்டு பாட மா மயில் ஆட -அமலனாதி பிரான் -4
வண்டு பலவிசை பாட மயிலாலு -பெரிய திருமொழி -3-9-3-
மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடும் -பெரிய திருமொழி -4-2-3-

——————–

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்–கானோ மறி கடலோ வானோ கண்டிலமால்
அதுக்கும் மேல் அடியார்க்கு என்னை ஆட் படுத்தி அருளினான் –
அத்துடன் இல்லாமல் மறப்பேன் என்று
வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்–என்னுள் புகுந்தான்
கீழே –
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே -என்றவர் –
இதில்
அவனே புகுந்ததை அருளிச் செய்கிறார்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான்–கீழ் பாசுரங்கள் போலே அவனது விபவ சேஷ்டிதங்கள்
எதுவும் இல்லாத பாசுரம் –
இதில் அடியேனைப் பெற அவன் செய்த கோரா மா தவத்தையே அருளிச் செய்கிறார் –
அடியாரானார்க்கு இரங்கும் அரங்கனாய பித்தன் அன்றோ இவன் –
திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–ஸ்ரீ வைஜயந்தி மாலையின் பிரபாவம் அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பு அன்றோ–
ஸூபாஸ்ரய மிதுன திவ்ய மங்கள விக்ரஹம் கண்ட பிரபாவத்தை அருளிச் செய்கிறார்

மற்ற ஒன்பது பாசுரத்திலும், “கவர்ந்ததுவே”, “உலாகின்றதே”, “சென்றதுவே”, “ஒக்கின்றதே”-ன்னு பாடும் இவர்…”திரு-ஆர-மார்பு” என்பதால் “ஆட்கொண்டதே” என்று பாடுவதில் தான் எத்தனை லயிப்பு!

தத்வக்ஷஸ் ஸ்தல “நித்ய” வாஸ ரஸிகாம்-பத்மாலங்க்ருத பாணி பல்லவ யுகாம்,
பத்மாசனஸ்தாம் ஸ்ரீயம்!-வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்,
பகவதீம்ம்ம்ம் வந்தே ஜகன் மாதரம்!

———————–

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -பிறையின்-துயர்–சந்திரனின் துயர்-சந்த்ர சேகரின் துயர் தீர்த்தவன்
அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்–அஞ்சிறைய மட நாராய் –இனக்குயில்காள் –
மென்னடைய அன்னங்காள்-அகன்றில்காள் -சிறு குருகே-வரி வண்டே-இளங்கிளியே -போன்ற ஆச்சார்யர்கள் –
நல்லார் வாழும் நளிர் அரங்கம் அன்றோ –
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் —
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும், –
வையம் எல்லாம் பிள்ளை வாயுள் கண்டாள்-

முற்றும் உண்ட கண்டன் -6
நீடு உலகு உண்ட திறங்கிளர்வாய -திருவாய்மொழி -6-6-3
எஞ்சாமல் வயிற்று அடக்கி -பெரிய திருமொழி -2-10-1-

சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருப்பது போலே
இவற்றின் ரஷணம் இவனுக்கு தாரகமாய் இருக்கும் –
உலகு உண்ட திறங் கிளர்வாய-ரஷகத்வ ப்ரகாசகமான திரு வதரம் -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –
வயிற்று அடக்கி-பிரளய ஆபத்தில் உலகத்தை வாயாலே உட் கொண்டு கண்டத்தின் வழியாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினான் –
நிரபேஷ ரஷகத்வம் -இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள் –

—————

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் -திருமேனி அனுபவம்-திவ்ய சஷுஸ்-காட்டவே கண்டார்
துளப விரையார் கமழ் நீண் முடி–நீள்முடி-2-பாசுரம் -நாற்றத்துழாய் முடி –ஸ்ரீ ஆண்டாள் –
யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே —
ஐயோ என்னப் பண்ணுகிறதே -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே–

ஆர் – நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி – சுழி; துளை
ஆர் சுரி சங்கு – நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு – கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி – சக்கரம்
அனலாழி – தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை – மலை
மெய் – உடல்
துளபம் – துளசி
துளப விரை – துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் – துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி – அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு – நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை – மேல்; மேலிடம்
மேய்தல் – உறைதல்
செய்ய வாய் – சிவந்த வாய்

கை வண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்; கண்ணினையும் அரவிந்தம்; அடியும் அஃதே;

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ!
அரங்கன் திருமேனியில் ஒரு தாமரைக் காடே பூத்து இருக்கு!
ஒரு தாமரை, இரு தாமரை அல்ல! பெரும் தாமரைக் காடு!

தாமரைக் காடு பூத்து = எம்பெருமான் திருமேனியில் மொத்தம் ஒன்பது தாமரைகள்!
* திரு விழிகள் = 2
* செவ்விதழ்கள் = 2
* முகத் தாமரை = 1
* பத்ம நாபம் (தொப்புள் கொடி) = 1
* திருவடிகள் = 2
* இதோடு கூடே…மலர்மாமகள், அலர்மேல்மங்கை அவன் மார்பில் = 1
இப்படி உடலெங்கும் தாமரைக் காடு பூத்துள்ளது!

——————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–

கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -அப்பாஞ்சசனியம்– —
நிகரில்லாத நீல ரத்னம் போலே யிருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பலம் போன்று.-
ஸ்வாகதோதார நேத்ரம்-அப்பொழுதைத் தாமரைப்பூ –ஸரோஜஸத்ருசா–
ஜிதம் தே புண்டரீகாக்ஷ:-ஈச்வரோஹ மென்றிருப்பாரைத் தோற்பித்து
நமஸ்தே என்று திருவடிகளிலே விழப் பண்ணும்.

ஆதிப் பிரான் -8
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–திருவாய் மொழி -5-3-1-

தான் முற் கோலி உபகரிக்குமவன் -பிரகலாதனுடைய விரோதியை முற் பாடனாய் சென்று
போக்கின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறார் -ஆதிப் பிரான் என்று –
நம்மோட்டை கலவிக்கு அவன் முற் பாடனாகச் செய்தே பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பாடை யாகவோ –
ஆழ்வாருடைய ஆன்ம ஷேமத்துக்கு அவன் முற்பட்டமை -ஆதி -என்று கூறப் பட்டது –

——————————

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்–வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம்.–அவாந்தர பிரளயம்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்–அண்டரண்ட பகிரண்டத் தொரு மாநில மெழுமால் வரை கீழே-6-பாசுரம்–
வைய மேழும் கண்டாள் பிள்ளை வாயுளே–ஒரு–அத்விதீயன்
பேயிருக்கு நெடு வெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்ட –பெரிய திருமொழி -11-6–பதிகம்
முழுவதும் இதன் அனுபவம்
அகில புவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே —
ஆலிலை சயனம் விட்டு அரவணை துயில அன்றோ அரங்கத்துக்கு எழுந்து அருளினான்
ரக்ஷகத்வம் -காரணத்வம்-திவ்யாத்ம ஸ்வரூபம்–திவ்ய மங்கள விக்ரஹம்-மிதுன அனுபவம்

கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்–கோல மா மணி ஆரமும் -கோல மா முத்துத் தாமமும்-முக்தாஹாரமும் –
முடிவில்லதோ ரெழில் நீல மேனி –நீள் வரை போல் மெய் –
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாலும் ஆரங்களாலும் -ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்-
பூஷாயுதை ரதிகதம் நிஜ காந்திஹேதோ–ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் –
அதிகரண சாராவளி -தாத்பர்ய ரத்னாவளி -என்ற பெயர்களும் இதனாலேயே –
ஸர்வபூஷண பூஷார்ஹா–ஸ்ரீ திருவடி –
ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே –சிந்தை கவர்ந்ததுவே–7-பாசுரம் —
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ! –கம்பர் —
ஐயோ! கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே. –திருவாய்மொழி–
ஐயோ —
பச்சையுடையுடுத்துத் தனக்குள்ளத்தையடையக் காட்டி, எனக்குள்ளத்தை யடையக் கொண்டான்–ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை —
பச்சை மா மலை போல் மேனி அன்றோ-

————————

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே— 10–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை-செய்ய வாய் -7-பாசுரம் –
வெண் தயிர் தோய்ந்த செவ்வாய்-குலசேகரப் பெருமாள் –
தயிருண்டவாய் துடைத்த–
வைகலும் வெண்ணெய் கை கலந் துண்டான் பொய் கலவாதென் மெய் கலந்தானே
இதில் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ண அவதார அருளிச் செயல்
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்–அமுதன் என்று இல்லாமல் அமுது என்கிறார் -அனுபவிக்கப் பண்ணுவித்தானே
ஊர் பேருமரங்கமே-
இவனும் முகில் வண்ணன் அன்றோ -வெண்ணெய் முடை நாற்றம் இன்றும் உண்டே –
வண்ணம் -நிறத்துக்கும் வள்ளல் தன்மைக்கும் –
அநாலோசிதவிசேஷ அசேஷலோக சரண்ய-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று அன்றோ படுகாடு கிடக்கிறான் –
அடியேன் -என்று -3-5-6–பாசுரங்களில்
மற்றவற்றில் என் -என்று -சாத்விக அஹங்காரம்
ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது —
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னையாளுங் கொண்டு
கண்ட கண்கள்—-அமுதினைப் பருகிய என்று இல்லாமல் கண்ட கண்கள் –
முதல் பாசுரத்தில் கண்ணினுள்ளே ஒக்கின்றது -பார்த்தோம் –
கண்ட கண்கள் -வகுத்த விஷயத்தை அன்றோ கண்டது -கண் படைத்த பிரயோஜனம் பெற்றார் –
மற்றொன்றினைக் காணாவே.

கோவலனாய் வெண்ணெய் உண்ட -அமலனாதி பிரான் -10
நெய் பருக நந்தன் பெற்ற -பெரிய திருமொழி -5-5-3-

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் -10
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா -திருவாய்மொழி -5-7-6-

கோவலனாய் வெண்ணெய் உண்டானைப் போலே
கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் –
யசோதை பிராட்டி வெண்ணெயில் பண்ணின ஸ்ரத்தையை -என் நெஞ்சிலே பண்ணி அனுபவித்தவன்
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே ஆய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போனபடி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினால் போலே -உள்ளம் கவர்ந்து வெறும் உடம்பு ஆக்கினான் –
ஏனமாய -பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுத்தாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய் சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தாய் –
திருப் பாண் ஆழ்வார் திரு உள்ளத்தை மணாளன் அரங்கன் கவர்ந்தான் –
இது தனக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ கிருஷ்ண நவநீத சௌர்யம்
ஆழ்வார் சம்சார ஆரணவம் அமுங்கி கிடக்க பகவான் உத்தாரணம் செய்து அருளினான்
இதுக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ வராஹ பூமி உத்தாரணம் -என்றது ஆயிற்று –

—————–

பாணர் ஸ்ரீவத்ஸத்தின் அம்சம் என்பர். ஸ்ரீவத்ஸ ரென்னும் நித்ய சூரி பாணராக அவதரித்தார் போலும்.
ஸ்ரீவத்ஸத்தின் ஸ்தானம் திருமார்பு.
‘அரங்கத்தம்மான் திருவார மார்பதன்றோ அடியேனை யாட்கொண்டதே’ என்று தன் நித்ய ஸ்தானமான
திருமார்பு விஷயத்தில் மட்டும் பாடுகிறார்.
ஒன்பதாம் பாட்டில் அகண்ட நீலமேனி அனுபவத்திலும்
“கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்” என்று தம் நித்ய ஸ்தான மாகிய திரு மார்பின் கண் சென்றது.
“ஆட்கொள்வது” என்பது இவ்வாழ்வார் அனுபவத்தில் திருமேனியில் வஸிப்பது.
“அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன்” என்றவிடத்திலும் தோளில் வஹிக்கப்பட்டது ஆட்பட்டதாயிற்று.
திருமார்பில் வஹிக்கப்படுவது இவர் பெருமாளுக்கு ஆட்பட்டது.
சேஷர்களான சக்கரத்தாழ்வான் பாஞ்சஜன்யாழ்வான் முதலியவர்கள் பெருமாள் திருத்தோள்கள் முதலிய
அங்கங்களில் வஹிக்கப் படுகிறார்கள்.
சங்காழ்வானும் சக்கரத்தாழ்வானும் பெருமாள் தோள்களிலேறி அங்கிருந்தபடியே அவருக்கு ஆட்பட்டார்கள்.
அது போலவே இவரும் லோக சாரங்கமுனி தோளிலும், ஸ்ரீவத்ஸ மாகப் பெருமாள் திருமார்பிலும் ஏறி ஆட்பட்டார்.
திருமார்பு தவிர மற்ற ஓரிடத்திலும் இப்படிப் பாடவில்லை.
அடியாரான லோக சாரங்கமுனி விஷயத்திலும் முதற்பாட்டில் இவ்விதமாக ‘ஆட் படுத்த’ என்று பாடக் காண்கிறோம்.

ஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி பாகவதம் தசம ஸ்கந்தம் முடிவில், ப்ருகு மஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப்
பரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு.
அடியாராகிய ப்ருகு மஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்க
வேண்டுமென்று பெருமாள் அனுக்ரஹம்.
ஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப் போல – லாளநம் செய்ததாகவும்,
அதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில் பாடுகிறார்.
திருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது.
அந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார்.
இது பெருமாள் தன்னை அடியார்க்காட் படுத்தும் முறையைக் காட்டின வழி.
‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார்.
லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம் முனிவர் மார்பில் தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்!
பக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல்,
இந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது.

இவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்.
“காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி,
இவரும் சடகோபரைப் போல் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமே வடிவெடுத்துதித்தது போல் இருந்தவர்.
தீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம்.
முக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார்.
அந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய: என்பது கீதை.

இந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதிகதி ஸாமாந்யமான மார்க்கம்.
அர்ச்சி ஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர்.
சிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில்– சைத்யாதீ நாம்– என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது.
சிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன.
சிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.

“பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்!
சீர்மறையின் செம்பொருள் செந் தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள்
வேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை.
யோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவச மாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது.
“வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார்.
இவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவு மாகவே சென்றது.
நாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தை யும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர்
அதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ—ஸ்ரீபாகவதம் 1-5-39- என்று கூறினார்.
இத் திருப் பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை.

யோக‌ம் அஷ்டாங்க‌ம்: எட்டு அங்க‌ங்க‌ளுடைய‌து. ஆனால் எட்டாவ‌து அங்க‌மாகிய‌ ஸ‌மாதியே அங்கி.
ய‌ம‌நிய‌மாதிக‌ளான‌ அங்க‌ங்க‌ள் ஸாத‌க‌னுடைய‌ ப்ர‌ய‌த்ன‌ங்க‌ள். திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் யோக‌த்திற்கு ஆல‌ம்ப‌ந‌மாகும்.
ஸால‌ம்ப‌ந‌மாகச் செய்யும் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌ த்யான‌த்தில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் சுபாச்ர‌ய‌மான‌ ஆல‌ம்ப‌ந‌ம்.
அந்த‌ யோகால‌ம்ப‌நத்தைப் பாண‌யோகி எட்டு அங்க‌ங்க‌ளாக‌ வ‌குத்து, அந்த‌ த்யான‌த்தை அஷ்டாங்க‌மாக‌ வ‌குத்தார்.
“பாத‌க‌ம‌ல‌ம், ந‌ல்லாடை, உந்தி, உத‌ர‌ப‌ந்த‌ம், திருமார்பு, க‌ண்ட‌ம், செவ்வாய், க‌ண்க‌ள், என்ப‌ன‌ எட்டு அங்க‌ங்க‌ள்.
முத‌ல் எட்டுப் பாட்டுக்க‌ளிலும் இந்த‌ எட்டு அங்க‌ங்க‌ளின் அநுப‌வ‌ம். ஒவ்வொன்றிலும் விக்ர‌ஹியின்
ஸ்வ‌ரூபாநுப‌வ‌மும் க‌ல‌ந்தது.

அங்க‌ விசிஷ்ட‌ ஸ்வ‌ரூபாநுப‌வ‌ம். ஸ்வ‌ரூபாநுப‌வ‌த்தில் குண‌க்ரியாத் ய‌நுப‌வ‌மும் சேர்ந்தது.
“ந‌ல்லாடை” என்ப‌து திருத்துடை முத‌லிய‌வ‌ற்றின் ஆவ‌ர‌ண‌ம். வ‌ஸ்த்ர‌ப்ராவ்ருத‌ஜாநு- ந்யாய‌த்தை நினைக்க‌ வேணும்.
ஜ‌ங்காஜாநு, ஊருக்க‌ளுக்கும் ந‌ல்லாடை உப‌ல‌க்ஷ‌ண‌ம். இப்ப‌டி ஓர் வில‌க்ஷ‌ண‌மான‌ அஷ்டாங்க‌ த்யாநாநுப‌வ‌ம் ப‌ண்ணி,
ஒன்ப‌தாம் பாசுர‌த்தில் அக‌ண்ட‌மாக‌த் திருமேனி முழுவ‌தையும் அனுப‌விக்கிறார்.
இப்ப‌டி விசித்திர‌மான‌ ஓர் அஷ்டாங்க‌ த்யான‌ முறையைக் காட்டுகிறார்.
அஷ்டாங்க‌ங்க‌ளையும் அனுப‌வித்து, அக‌ண்ட‌மான‌ திருமேனியை அனுப‌வித்து,
உப‌ய‌விபூதி விசிஷ்ட‌ ப்ர‌ஹ்ம‌த்தை அர‌ங்க‌னாகக் க‌ண்டு,
பூம‌ வித்யையில் கூறிய‌ ப‌ரிபூர்ண‌ ஸுகாநுப‌வ‌ம் வ‌ந்து மோக்ஷ‌ம் பெற்றார்.

ஆத்மாவில் ஜாதிபேத‌மில்லை. ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் ஜ்ஞாநைகாகார‌ம்: ப்ர‌த்ய‌ஸ்த‌மித‌ பேத‌ம். சுத்த‌மான‌ ஞான‌ ம‌ய‌மான‌
இவ‌ர‌து ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் அர‌ங்க‌னுக்குள் ப்ர‌வேசித்தது யுக்த‌மே.
பீஷ்ம‌ர் க‌ண்ண‌னைத் துதித்துக் கொண்டே அவ‌ருக்கு ஸ‌ம்ப‌ந்ந‌ராகும் போது ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸ‌ம்யுத‌ம்- என்று வ‌ர்ணித்த‌ப‌டி
பீஷ்ம‌ருடைய‌ ஆத்ம‌ஜ்யோதிஸ் ஸ்ரீக்ருஷ்ண‌ ப‌ர‌மாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிப‌க்த‌மாக‌
“இனி மீள்வ‌தென்ப‌துண்டோ!” என்று சாச்வ‌த‌மாகக் க‌ல‌ந்தது. அவ‌ருடைய‌ திருமேனி ம‌ட்டும் நின்றுவிட்ட‌து.
அத‌ற்கு அக்னி ஸ‌ம்ஸ்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.
சிசுபால‌னுடைய‌ ஆத்ம‌ ஜ்யோதிஸ்ஸும் அப்ப‌டியே க‌ண்ண‌னுக்குள் க‌ல‌ந்தது.
“சிசுபால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து ஒரு தேஜோக்னி கிள‌ம்பி, தாம‌ரைக் க‌ண்ண‌னாகிய‌ க்ருஷ்ண‌னை ந‌ம‌ஸ்க‌ரித்து,
அவ‌ருக்குள் நுழைந்த‌ அத்புதத்தை எல்லா ராஜாக்க‌ளும் க‌ண்டார்க‌ள்” என்று பார‌த‌ம்.
“எல்லோர் முன்னே சிசுபால‌ னுடைய‌ தேஹ‌த்திலிருந்து கிள‌ம்பிய‌ ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவ‌னுக்குள் நுழைந்தது.
த்யான‌ம் செய்துகொண்டே த‌ந்ம‌ய‌த்வ‌த்தை அடைந்தான்” என்று பாக‌வ‌த‌ம். அங்கும் தேஹ‌ம் க‌ண்ண‌னுக்குள் நுழைய‌வில்லை.
இங்கு ந‌ம் பாண‌ர் த‌ம் திருமேனியோடு அர‌ங்க‌னுக்குள் நுழைந்து க‌ல‌ந்தார்.
பாண‌னுடைய‌ திருமேனியும் ப‌க‌வ‌த‌வ‌தார‌த் திருமேனிக‌ளைப்போல‌ அப்ராக்ருத‌மாக‌வே இருந்திருக்க‌ வேண்டும்.
சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌மான‌ திவ்ய‌ திருமேனி சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌த் திருமேனிக்குள் ப்ர‌வேசித்துக் க‌ல‌ந்தது.
இத‌னால் அவ‌ர் தேஹ‌மும் ப்ராக்ருத‌ம‌ல்ல‌ என்று தெளிவாக‌ ஏற்ப‌டுகிற‌து.

காட்ட‌வே க‌ண்ட‌” (பாண‌ன் த‌னிய‌ன்) என்று முத‌ல‌டியில் கூறிய‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ர‌ஹ‌க் காட்சி.
மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதிய‌ஞ்சோதியோடு அபேத‌மாய் அனுப‌வ‌ம்.
ப‌ர‌, விப‌வ‌, ஹார்த்த‌ அர்ச்சாமூர்த்திக‌ளை ஒன்றாக‌ அனுப‌வ‌ம்.
பெரிய‌ பெருமாள் திருமேனி யிலே திரும‌லை முத‌லாகக் கோவில் கொண்ட‌ அர்ச்சாவ‌தார‌ங்க‌ளிலும்,
ராம‌ க்ருஷ்ண‌ வாம‌ன‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌னாதிக‌ளிலுமுள்ள‌ போக்ய‌தையெல்லாம் சேர‌ அனுப‌வித்து என்ப‌து முனிவாஹ‌ன‌போக‌ம்.
உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌னாக‌ ஜ‌க‌ஜ் ஜ‌ந்மாதி கார‌ண‌மாக‌ அனுப‌வ‌ம். உப‌ய‌ லிங்கானுப‌வ‌ம். நிர்த்தோஷ‌ க‌ல்யாண‌ குணாக‌ர‌த்வ‌,
ஆதி கார‌ண‌த்வ‌, ர‌க்ஷ‌க‌த்வாதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்மமாக‌ அம‌ல‌னாதிபிரானில் அனுப‌வ‌ம்.
பாட்டுக்க‌ள் காட்சி அனுப‌வ‌த்தின் ப‌ரீவாஹ‌ம். யோக‌மென்னும் ல‌ய‌த்திற்கு ஸாத‌க‌ம். விரோதிய‌ல்ல‌.
உப‌ய‌ விபூதி விசிஷ்டாநு ப‌வ‌த்தில்
பித்ய‌தே ஹ்ருத‌ய‌க்ர‌ந்திச்சித்ய‌ந்தே ஸ‌ர்வ‌ ஸ‌ம்சயா: க்ஷீய‌ந்தே சாஸ்ய‌ க‌ர்மாணி த‌ஸ்மிந்த்ருஷ்டே ப‌ராவ‌ரே–(முண்ட‌க‌ம் 2,3,9) என்ற‌ப‌டிக்கும்
(ய‌த்ர‌ நாந்ய‌த்ப‌ச்ய‌தி) (சாந்தோகிய‌ம் — பூமமித்யை) என்ற‌ப‌டிக்கும்,
ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ந‌ம் கிடைத்துப் பார‌மாய‌ ப‌ழ‌வினை ப‌ற்றறுந்தது.
நான்காம் அடியில் “பாட்டினால் க‌ண்டு வாழும்” என்ற‌து, முக்தி த‌ந்த‌ருளின‌ உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ன‌க் காட்சி.
முத‌ல் பாதத்தில் “க‌ண்ட‌” என்ற‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி.

ந‌ம் பாண‌ நாத‌ர் யோகி ஸார்வ‌ பௌம‌ர்: பாட்டினாலும் யோக‌த்தினாலும் த‌ர்ச‌ன‌ ஸ‌மாநா கார‌ண‌மான‌ காட்சி போன்ற‌
தெளிந்த‌ அறிவாகிய‌ ஸ‌மாதியை அடிக்க‌டி ஏறுப‌வ‌ர். ப‌ல்கால் யோகாரூட‌ர்.
யோகாரோஹ‌மே இவ‌ருக்குப் பொழுதுபோக்காய் இருந்தது.
க‌டைசியில் இவ‌ருக்குப் பெருமாள் நிய‌ம‌ன‌த்தால் கிடைத்தது யோக்யாரோஹ‌ம் முனியேறின‌து.
யோகாரூட‌ராக‌ நெடுகிலும் இருந்து வ‌ந்த‌வ‌ர் க‌டைசியில் யோக்யாரூட‌ரானார்.
எந்த‌ யோகிக்கும் இந்த‌ ஏற்ற‌ மில்லை. ந‌ம்பிக‌ளும் இதை “முனியேறி” என்று ர‌ஸ‌மாக‌ வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்தார்.
யோக‌மேறுவ‌து யோகிமாத்ர‌ ஸாதார‌ண‌ம். ஆழ்வார்க‌ளெல்லாரும் யோகாரூட‌ர்க‌ள்: யோக‌மேறின‌வ‌ர்க‌ள்.
ப‌ச்ய‌ந் யோகீ ப‌ர‌ம்) என்று முத‌ல் திருவாய்மொழியின் ஸ‌ங்க்ர‌ஹ‌ ச்லோக‌த்திலேயே, தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ ச‌ட‌கோப‌ முனியை யோகி என்ற‌து.
முநித்வ‌ம் ம‌ட்டிலும் எல்லாருக்கும் ஸாதார‌ண‌ம். முனியேறின‌ முனி இவரொருவரே.

————-

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே ––இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்— 11- –

பாவளரும் தமிழ்மறையின் பயனே கொண்ட
பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய்க் கலந்து நின்ற
காரணனைக் கருத்துறநாம் கண்ட பின்பு
கோவலனும் கோமானும் ஆன வந்நாள்
குரவைபுணர் கோவியர்தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பேடைபோற் சேர்ந்து
தீவினையோர் தனிமையெலாம் தீர்ந்தோம் நாமே.

ஆதிமறை யெனவோங்கும் அரங்கத்துள்ளே
அருளாரும் கடலைக்கண்டவன் என் பாணன்
ஓதியதோர் இருநான்கும் இரண்டுமான
ஒருபத்தும் பற்றாக உணர்ந்துரைத்தோம்
நீதியறி யாதநிலை யறிவார்க் கெல்லாம்
நிலையிதுவே என்றுநிலை நாடி நின்றோம்
வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம்
விதையாகும் இதுவென்று விளம்பினோமே.

காண்பனவும் உரைப்பனவும் மற்றொன் றின்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடியகாதல்
பாண்பெருமாள் அருள்செய்த பாடல்பத்தும்
பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே
வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம்
நாண்பெரியோ மல்லோம்நாம் நன்றும் தீதும்
நமக்குரைப்பார் உளரென்று நாடுவோமே.

பாண் பெருமாள்–நம் பாண நாதன்–நம் பாணன்–என்று அன்றோ கொண்டாடுகிறோம் –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 8, 2019

முதல் பாசுரம் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை —
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
முதல் பாட்டில் –
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் அழகு தம்மை ஆட் கொண்டது என்கிறார் –
ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே
பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
ஸ்ரீ திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான ஸ்ரீ கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற
மதுரவாற்றின் இடைப்புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது–

————————————-

இரண்டாம் பாசுரம் –

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
முதல் பாட்டில் அவன் தொடர்ந்து வந்த படி சொன்னார்
இப்பாட்டில் தாம் மேல் விழுந்த படி சொல்லுகிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை-
அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றனவே -என்று
திருவடிகள் தானே தம்மை விஷயீ கரித்துத் தம் திரு உள்ளத்திலே பிரகாசித்த படியைச் சொன்னார்
இப்பாட்டில் -திருவடிகளில் தொடர்ந்த திரு உள்ளம் திருப் பரியட்டதின் மேல் சேர்ந்தபடி எங்கனே என்னில் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்குக் குற்றமாம்
ஆகையாலே போக்யதை அளவுபட்டதும் அல்ல
ஆசை தலை மடிந்ததும் அல்ல
கடலோதம் கிளர்ந்து அலைக்ப் புக்கால் உள்ளே கிடந்த தொரு துரும்பு கடலை அளவிட்ட வல்லவே கரை ஏறுவது –
ஒரு திரை ஒரு திரையிலே ஏற வீசும் அத்தனை இறே –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை –
இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –

———————–

மூன்றாம் பாசுரம் –

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று –
முதல் பாட்டில் -ஆதி -பிரான் என்று
ஜகத் காரண பூதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று சொல்லக் கேட்டவர்கள் –
ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம் -என்று மூவர் ஜகத் காரண பூதர் என்று பிரசித்தமாய் இருக்க –
இவனே ஜகத் காரண பூதன் என்று அறியும்படி என் என்ன –
சாஸ்திர முகத்தாலே நம்முடைய காரணத்வத்தை பிரகாசிப்பித்தோம் ஆகில்
அது கர்மாதீநமான ருச்யநுகூலமாக -கமுகின் நிரை போலே -அயதாவாக பிரகாசிக்கும் என்று பார்த்தருளி-
த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரி தயமித மத்வை தமதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி விதர்க்கான் விகடயன்
விபோர் நாபீ பத்மோ விதி ஸிவ நிதாநம் பகவதஸ்த தன்யத் ப்ரூ பங்கீ பரவதிதி ஸித்தான்யதி ந -என்றும் –
முதலாம் திரு உருவம் மூன்று என்பார் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
முதல்வா நிகரில் அலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரில் இலகு தாமரையின் பூ -என்றும்-சொல்லுகிறபடியே
தன் திரு நாபீ கமலத்திலே -ஜகத் காரண பூதராக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ரர்களை சிருஷ்டித்துக் காட்ட
அந்த நாபீ கமலம் அம் முகத்தாலே தன்னுடைய மேன்மையையும் அழகையும் காட்டி
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற என்னுடைய மனஸை தன் பக்கலில் இழுத்துக் கொள்ளா நின்றது -என்கிறார்
அனுபாவ்யத்தை எல்லை கண்டு மீளுதல்
தம்முடைய ஆதரம் மட்டமாய் மீளுதல் செய்கிறார் அல்லரே
தம்முடைய சாபல்யம் அடியாக இழுப்பு உண்கிறார் இத்தனை இறே-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே
பகவத் சேஷத்வ பர்யவஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து -அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் –
காதா சித்த சேஷத்வ ஞானம் உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல அநுகூல உபய வித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார்

————————————–

நான்காம் பாசுரம் –

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய அவதாரிகை –
திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்-
முதல் பாட்டில்
ஜகத் காரண பூதனானவன் -தம்முடைய அபேஷா நிரபேஷமாக தம்மை விஷயீ கரித்து -தம்முடைய திரு உள்ளத்தில்
திருவடிகள் தானே வந்து பிரகாசித்த படியை சொன்னாராய் –
நிரபேஷமாக செய்யக் கூடுமோ என்கிற அபேஷையிலே சோதாஹரணமாகச் சொல்லா நின்று கொண்டு
தம் திரு உள்ளம் திரு வரையும் திரு பீதாம்பரமுமான சேர்த்தியிலே மேல் விழுந்து நசை
பண்ணுகிற படியைச் சொன்னார் இரண்டாம் பாட்டில்
அவ் விரண்டாம் பாட்டில் சொன்ன த்ரைவிக்ர அபதானம் பிரமாண உபபத்திகளாலே
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கே சேருமதன்றோ என்கிற அபேஷையிலே ஸ்ரீ திருமலையில் நின்றும்
ஸ்ரீ திரு உலகு அளந்தருளினாரும் ஸ்ரீ பெரிய பெருமாளே -என்று கொண்டு –
முதல் பாட்டில் -ஆதி -என்று சொன்ன அவனுடைய காரணத்வத்தை –
திரு நாபீ -கமலத்திலே ப்ரஹ்மாவை உண்டாக்கி அம் முகத்தாலே வெளி இடா நின்று கொண்டு –
அந்த திரு நாபீ கமலம் தானே திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற தம் திரு உள்ளத்தை –
ப்ரஹ்ம உத்பாதகமான தன்மையையும் அழகையும் காட்டி தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள –
அதிலே சுழி யாறு படுகிற படியை யிறே மூன்றாம் பாட்டில் சொல்லி நின்றது-

தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழி யாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆச்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆச்ரயமான நம்மைப் பார்த்தால் –
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்தா வலம்பி வலி த்ரயம் கணயதி தவைச்வர்யம் வ்யாக்யாதி ரங்கமஹே ஸிது
ப்ரணதவசதாம் ப்ரூதே தாமோத மத்வக்ர கிணஸ் ததுபய குணாவிஷ்டம் பட்டம் கிலோதர பந்தநம் –என்கிறபடியே –
பக்த முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாதமகமாயும் -சத்வ சூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆஸ்ரயமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்கவுமாம் படி எளியோமான சௌலப்ய நீர்மையையும் உடையோமான
ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி –
திரு நாபீ கமலத்தில் ஆழங்கால் படுகிற் என் நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க –
அத் திரு வயிற்றை ஆஸ்ரயமாகப் பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று
தம் திரு உள்ளத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் அவதாரிகை –

இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும் ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –
நாலாம் பாட்டாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் வரம் கொடுத்து வாழ்வித்த ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ் த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும் அனுசந்திதுக் கொண்டு
ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகடிதகடநா சக்திகளுக்கு அடைய வளைந்தான் போலே யிருக்கிற உதர பந்தம்
தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –

கீழ் மூன்று பாட்டாலும் ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து -தசேந்த்ரியா நநம் கோரம் –என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு -நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக
அனுசந்திகிறார் ஆகவுமாம்

————————————————

ஐந்தாம் பாசுரம் –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–அவதாரிகை-

எனக்கு பற்றாசான ஸ்ரீ பெரிய பிராட்டியார் இருக்கிற திரு மார்பு கிடீர் என்னை
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யம் கொண்டது–என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–அவதாரிகை-

எனக்கு பற்றாசான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடனே -திருவார மார்பானது என்னை ஸ்வரூப அநுரூபமான
கைங்கர்யத்தைக் கொண்டது என்கிறார் –
மூன்றாம் பாட்டிலே
திரு நாபீ கமலம் ப்ரஹ்மாவை தரித்துக் கொண்டு இருக்கிற தன் மதிப்பையும் அழகையும் காட்டி -தம்முடைய திரு உள்ளத்தை
திருப் பீதாம்பரத்தின் நின்றும் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள -அங்கே அது சுழி யாறு பட்டபடி இறே சொல்லிற்று
கீழில் -பாட்டில்
இத்தைக் கண்ட திரு வயிறானது சகல சேதன அசேதனங்களையும் தானே தரித்துக் கொண்டு இருக்கிற மதிப்பையும் –
யசோதைப் பிராட்டி கட்டக் கட்டுண்ட தழும்பைக் காட்டி -தன்னுடைய சௌலப்யத்தையும் -சிற்றிடையான அழகையும் காட்டி –
அத் திரு நாபீ கமலத்தின் நின்றும் திரு உள்ளத்தைத் தன் பக்கலிலே யிசிக்க அங்குப் போக ஒட்டாதே
அப்படிக்கு பட்டம் கட்டி இருக்கிறாப் போலே இருக்கிற
திரு உதர பந்தனம் மேலிட்டு நின்று ஸ்வைர சஞ்சாரம் பண்ணுகிற படியை இறே சொல்லிற்று –
அந்த திரு வயிற்ருக்கு
ஒரு கால விசேஷத்திலே காதா சித்கமாக சகல அண்டங்களையும் வைத்ததால் உண்டான மதிப்பும் –
ஒரு கால் யசோதைப் பிராட்டி கட்ட அத்தால் வந்த சௌலப்யமும் இறே இருப்பது -அப்படி யன்றே திரு மார்பு –
ஸ்ரீ வத்ஸ ஸம்ஸ்தாந தரமநந்தேச சமாச்ரிதம் -ப்ரதாநம் –என்றும்
ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ காலமும் சேதன அசேதனங்களை ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முகத்தாலே தரித்துக் கொண்டு இருக்கிற பெரிய மதிப்பையும் –
அவனுடைய ஸ்வரூபாதி களுக்கு நிரூபக பூதையாய் -நீர்மைக்கு எல்லை நிலமாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு
கோயில் கட்டணமாய் இருக்கிற-ஏற்றத்தையும் உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலையை தரித்துக் கொண்டு இருக்கிற
ஆகாரத்தையும் உடைத்தாய் –
அக்கு வடமுடுத் தாமைத்தாலி பூண்ட வனந்த சயனன் -என்கிறபடியே
யசோதை பிராட்டி பூட்டின ஆபரணங்களையும் உடைத்தாய் இறே இருப்பது-

ஆகையாலே -அந்த திரு மார்பானது –
திரு வயிற்றில் காட்டில் தனக்கு உண்டான ஆதிக்யத்தையும்
சௌலப்யத்தையும் திருவாரம் உள்ளிட்ட ஆபரண சேர்த்தியால் வந்த அழகையும் உடையோம் நாம் அன்றோ –
ஆன பின்பு பேர்கலமான நமக்கு சிற்றிடை யான் தான் நிகரோ -என்று தன் இறுமாப்பைக் காட்டி –
அத் திரு உதிர பந்தனத்தின் நின்றும்
தன் பக்கலிலே யிசித்துக் கொள்ள -தம்முடைய நெஞ்சு அளவன்றிக்கே -கரணியதான
தம்மையும் ஸ்வரூப ஜ்ஞாநாதிகளை பிறப்பித்து அடிமை கொண்ட படியை சொல்லுகிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் – அவதாரிகை-

மேல் இரண்டு பாட்டில் –
ஸ்ரீ நாராயண சப்தார்தம் உள்ளீடாகப் ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால்
நிகரில்லாத திரு மார்பையும் திருக் கழுத்தையும் அனுபவிக்கிறார் –

—————————————

ஆறாம் பாசுரம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

கீழ்ப் பாட்டில் திரு மார்பானது ஹராத்ய ஆபரண சோபையையும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற மேன்மையையும் காட்டி
தம்மை திரு வயிற்றின் நின்றும் வர யீர்த்துக் கொண்டு எழுதிக் கொண்டபடி யிறே சொல்லிற்று –
இதில் -அந்த திரு மார்புக்கு மேலாய் –
ரமயது ஸ மாம் கண்ட ஸ்ரீ ரங்க நே துரு தஞ்சி தக்ரமுக தருண க்ரீவாகம் புப்ர லம்பமலிம்லுச
ப்ரணய விலகல் லஷ்மீ விச்வம் பராகர கந்தளீ கநக வலய க்ரீடா சங்கராந்த ரேக இவோல்ல சன் – என்கிறபடியே
கமுகுக் கன்றின் கழுத்துப் போலே பசுகு பசுகு என்று இருப்பதாய் -ரேகாத்ரயாங்கிதமாய் –
இரண்டருகும் நெருங்கி நடுவு பெருத்து இருக்கையாலும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற
திருக் கழுத்தானது-
இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும் திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –
இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார் ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே –
அவ் வாபரணங்கள் அழுத்த அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும் நாம் அல்லோமோ –
அதுவும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ – என்றாப் போலே
தன்னுடைய
ஆபரண சோபையையும் –
யௌவனத்தையும் –
ஆபன் நிவாரகத்வத்தையும்-காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –
கீழ்ப்பாட்டில்
கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம்
நிராகரித்த படியை அருளிச் செய்தார் –
இப்பாட்டில்
ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

—————————–

ஏழாம் பாசுரம் –

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

கீழ்ப் பாட்டில் –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டது -என்று திருக் கழுத்தானது
தன்னுடைய ஆபத் சகத்வாதிகளைக் காட்டி தம்மை எழுதிக் கொண்ட படியை இறே சொல்லிற்று –
இதுக்கு மேலான -திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –
ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க

செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் -என்கிறபடியே
அந்த திருப் பவளச் செவ்வாயிலே தாம் அபஹ்ருதராய் அகப்பட்ட படியைச் சொல்லுகிறார்

ஆனால் -செய்ய வாயையோ என்னைச் சிந்தை கவர்ந்தது -என்ன அமைந்து இருக்க –
கீழில் விசேஷணங்களால் செய்கிறது என் என்பது என்னில் –
கீழ் -அஞ்சாம் பாட்டில் –
பாரமாய பழ வினை பற்று அறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் -என்று அநேக ஜன்மார்ஜிதமான
பாபராசியை அடைய இத்தலையில் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னுடைய
நிகர்ஷம் பாராதே ஸவாசனமாகப் போக்கினான் என்று சொல்லி -அது கூடுமோ என்கிற அபேஷையிலே –
ஈஸ்வர அபிமாநியாய் துர்மாநியாய் ருத்ரனுடைய துயரை அவன் தண்மை
பாராதே போக்கினாப் போலே -என்னுடைய நிகர்ஷம் பாராதே பாபங்களையும் போக்கினான்
என்று ருத்ரனை த்ருஷ்டாந்தமாக சொன்னாராய் இறே கீழ்ப்பாட்டில் நின்றது –
இத்தைக் கேட்டவர்கள் இது விஷம உதாஹரணம் காணும் -அந்த ருத்ரன் -ஆகிறான்
ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி சம்ஹார கார கௌ -என்கிறபடியே சம்ஹார தொழிலிலே
புருஷோத்தமனாலே நியுக்தன் ஆகையாலே அதிகாரி புருஷனுமாய் -அவனுக்கு
ப்ரஹ்ம சிரஸ் க்ருந்த நத்தாலே வந்த ஆபத்து தானும் ப்ராமாதிகமாக ஒருகால்
பிறந்தது ஆகையாலே -தன் அலங்கல் மார்பில் வாசநீர் மாத்ரத்தாலே போக்கலாம் –
நீராகிறீர் -ச்ருதிஸ் ஸ்மருதிர் மமை வாஜ்ஞா -என்கிறபடியே பகவத ஆஜ்ஞா ரூபமான
வேத வைதிக மர்யாதையை அதிக்ரமித்தவருமாய் அதுக்கு மேலே அக்ருத்ய கரண
க்ருத்ய அகரண ரூபமான பாபங்களை அநாதி காலம் கூடு பூரித்தவருமாய் அன்றோ -இருப்பது
ஆன பின்பு உம்முடைய பக்கல் ஒரு கைம் முதல் இன்றிக்கே இருக்க உம்முடைய பாபங்களை அப்படிப் போக்க போமோ
அது கிடக்க –
அந்த ருத்ரன் தானே தேவர்களுக்கு மேலாய் இருக்கையாலே ஆனை மேல்
இருந்தார் ஆனை மேல் இருந்தாருக்கு சுண்ணாம்பு இடுமோபாதி அவன் கார்யம் செய்யக் கூடும்
மனுஷ்யர்களுக்கும் கீழாய் இருக்கிற உம்முடைய பாபங்களை போக்கக் கூடுமோ –
அது கிடக்க –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்கிறபடியே ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்ரனான படியாலே
தனக்கு பௌத்ரன் என்று இட்டு அவன் கார்யம் செய்யலாம் -அப்படி இருப்பதொரு பந்த விசேஷம் உமக்கு இல்லையே –
அதுவும் கிடக்க
அந்த ருத்ரன் தான் மூ வுலகும் பலி -திரிவோன் என்கிறபடியே திருப்பாற் கடலிலே செல்ல பின்பன்றோ அவன் துயரைப் போக்கிற்று –
நீரும் அப்படிப் போனீரோ -என்ன அதற்க்கு அடைவே உத்தரமாய் இருக்கிறது

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை-

மேல் நாலு பாட்டாலே ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் –
அதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு திருமுடி யளவும் சென்று மீண்ட சிந்தையை
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -என்னும்படியான
திருப் பவளத்தில் அழகு தன் வசம் ஆக்கிற்று என்கிறார்

—————————————-

எட்டாம் பாசுரம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-கீழில் பாட்டில் –
செய்யவாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்தது-என்று திருப் பவளத்திலே இவர்
அப்ஹ்ருத ஹ்ருதயர் ஆகிற படியைக் கடைக் கணித்து கொண்டு கிடக்கிற திருக் கண்கள் ஆனவை –
செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும் நாம் அல்லோமோ –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது –
ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ
அது கிடக்க –
அந்த வார்த்தை தான் -ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தால் போலே அன்றிக்கே –
மெய்ம்மை பெரு வார்த்தை -என்று விச்வசித்து இருக்கலாம்படி வாத்சல்யம்
அடியாக பிறந்த வார்த்தை என்று அந்த அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ –
அது கிடக்க
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ –
அதுக்கு மேலே
புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் –
புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது
நம்மோட்டை சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து – என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –
செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து -என்று தம்முடைய அஜ்ஞ்ஞாந ஆசாத் கர்மாதி நிகர்ஷம்
பாராதே -ஸ்ரீ பெரிய பெருமாள் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரமாக -தாம் அநாதி கால்ம் அர்ஜித்த
பாபங்களை அடைய போக்கின படியை சொன்னாராய்
அது கூடுமோ என்கிற அபேஷையிலே
கூடும் என்னும் இடத்துக்கு ருத்ரனை த்ருஷ்டாந்தமாகச் சொன்னாராய் –
அநந்தரம் விஷம த்ருஷ்டாந்தம் என்று சில ஹேதுக்களை சொல்ல -அதுக்கு அடைவே உத்தரம் சொன்னார் கீழ் -பாட்டில்

இதில்
அந்த -பாரமாய -என்கிற பாட்டைப் பற்றி ஓர் அபேஷை எழும்ப அதுக்கு உத்தரமாய் இருக்கிறது –
அதாவது அநாதி கால ஆர்ஜிதமான உம்முடைய பாபங்களை அடையப் போக்கினார் என்றீர்
அது மறு கிளை எழாதபடி போய்த்தாவது –
அவித்யா சஞ்சித கர்மம் என்றும் –
அநாத்ய வித்யா சஞ்சித புண்ய பாப கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தம் என்றும் -சொல்லுகிறபடியே அந்த கர்மத்துக்கு
ஹேது பூதையான அவித்யை போனால் அன்றோ அது போய்த்தாவது -அது போய்த்ததுவோ என்கிற அபேஷையில் –
அந்த அவித்யைவாது தன்னோடு அனுபந்தித்தாரை பகவத் பிரவணர் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்குமது இறே –
அப்படியே தன்னோடு அனுபந்தித ஸ்ரீ பிரஹ்லாதனை பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்க தேடின
ஹிரண்யனை-தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே தமோ குணம் ஹிரண்யன்
என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது அப்படியே இருக்கிறவனை –
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ஸ்ரீ ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே –
ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை கிழித்துப் பொகட்டான் என்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

தன்னை ஜிதந்தே புண்டரீகாஷ -இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே விழப் பண்ணி
மேன்மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு தாம் அற்றுத் தீர்ந்த படியை –
ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

——————————————–

ஒன்பதாம் பாசுரம் –

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-
கீழ்ப் பாட்டில் –
கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே -என்று –
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசாநாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம் -ஸ்மரன் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேஸ்வர –என்கிறபடியே
ஸ்ரீ ராம சரம் போலே இருக்கிற அந்த கடாஷ பாதங்களாலே –
கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ் சூடுருவவே வுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை –என்றாப் போலே
இவர் படுகிற பாட்டைக் கண்ட திரு மேனியானது -தனிப் பூ சூடுவாரைப் போலே நம்முடைய
அவயவ சௌந்தர்யத்தை தனித் தனியே அனுபவித்தார்
இத்தனை யன்றோ -இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆச்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –
இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்க பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த திவ்ய அவயவங்களோடும் திவ்ய ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க வேணும் என்று பார்த்து –
ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு
அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -திவ்ய அவயவங்களையும் -திவ்ய ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி –
உய்விட மேழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

திவ்ய அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ திவ்ய அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் -நித்ய அநுபவ
ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

———————————

பத்தாம் -நிகம -பாசுரம் —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

நிகமத்தில் -இவ்வளவும் ஜ்ஞான சாஷாத் காரம் –
மேல் லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பெருமாள் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–அவதாரிகை –

நிகமத்தில் -இவ் வாழ்வார் இவ் வூருக்கு புறம்புள்ள தேசங்களில் உள்ளாருடைய ரஜஸ் தமஸ் ப்ரசுரராய் –
சப்தாதி விஷய ப்ரவணராய் -அது தானும் நேர்கோடு நேர் கிடையாமையாலே அர்த்தார்ஜநாதிகளிலே இழிந்து –
பெரியதோர் இடும்பை பூண்டு இருக்கிற படியையும்
இவ் வூரில் உள்ளார் பரம சாத்விகராய் நிரதிசய போக்யதராய் இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளை
தொண்டு பூண்டு அமுதம் உண்டு களித்து இருக்கிற படியையும் கண்டு –
வரம் ஹூத வஹஜ் வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி -ந சௌரி சிந்தாவி முகஜநசம்வாஸ வைஸஸம் –
என்று புறம்பு உள்ளாரோடு பொருத்தம் இன்றிக்கே -இவ் வூரைப் பார்த்தால்
சர்வ புண்ய மையோ தேச -என்கிறபடியே –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் -என்னும்
பரம பாவநரான பெரிய பெருமாள் தாமும் -சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்று
இவ் வூரோட்டை சம்பந்தத்தாலே பாவனபூதர் என்னும்படியான வைலஷண்யத்தை வுடைத்தாய் இருக்கையாலே –
நாம் இவ் வூரிலே புகுருகை இவ் வூருக்கு மாலின்யாவஹம் என்று பார்த்து –
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் என்கிறபடியே பிறருடைய நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே –
தம்முடைய நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஈஸ்வரோஹமஹம் போகீ -நான்யோஸ்தி சத்ருசோ மயா -என்று தேசமாக
அஹங்கார க்ரச்தமாய் சப்தாதி விஷய ப்ரவணராய் நோவு படா நிற்க -இவர் இப்படி யாவதே
என்று மனசிலே போர உகந்து -நிமக்ந ஆப ப்ரணவ -என்கிறபடியே இவர் அளவிலே திரு உள்ளம்
பேராறு மண்டி -நிஹீநாநாம் முக்கியம் சரணமான திருவடிகளைக் கொடு வந்து இவருடைய
திரு உள்ளத்திலே -என் கண்ணினுள்ளன வொக்கின்றவே -என்று ப்ரத்யஷ சாமாநா காரமாக
ப்ரகாசிக்கும் படி வைக்க -அந்தத் திருவடிகளை அனுசந்தித்து தம்முடைய மனஸ் ஆனது ஜ்ஞாநாஸ் பதமாகையாலே –
அந்த திருவடிகளுக்கு மேலான திருப் பீதாம்பரைத்தையும் திருவரையுமான சேர்த்தியை மடி பிடித்து அனுபவித்து –
இப்படி கரணமும் நாமும் அனுபவிக்கும்படி நம்மை உண்டாக்கிற்றுத் திரு நாபீ கமலம் அன்றோ
அத்தை அனுபவித்து மேன்மைக்கும் சௌலப்யத்தையும் பட்டம் கட்டி யிருக்கிறோம் நாம் அல்லோமோ என்று
திரு வுதர பந்தனம் தன் பக்கலிலே வர விசிக்க அத்தை அனுபவித்து-

அதுக்கு மேலே இருக்கிற திரு மார்பானது தன்னுடைய ஹாரத்ய ஆபரணங்களையும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமான மேன்மையையும் காட்டி இசித்துக் கொள்ள
அந்தத் திரு மார்பை அனுபவித்து -அந்த பிராட்டிக்கும் ஹாரத்ய ஆபரணங்களுக்கும்
ஆஸ்ரயமான திருக் கழுத்தை அனுபவித்து –
அதுக்கு மேலே –
வாயில் -சர்வ பூதேப்யோ அபயம் ததாமி – என்றாப் போலே சொல்லா நிற்கச் செய்தே அனுபவிக்கிற நாய்ச்சிமார்க்கு அகப்பட –
வாயழகர் தம்மை யஞ்சுதம் -என்று கண்களை செம்பிளித்து அனுபவிக்கும்படி ஸ்வா பாவிக
சௌந்தர்யத்தை உடைத்தான திருவதரத்தை அனுபவித்து –
இப்படி அவயவங்களை அனுபவியா நிற்கச் செய்தே
இடையில் திவ்யாயுதங்களும் இறாய்ஞ்சிக் கொள்ள அவற்றை அனுபவித்து -அபயம் ததாமி –
என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகளை மேல் எழுத்து இட்டு கொடுக்கிற குளிர்ந்த
கடாஷங்களை உடைத்தான திருக்கண்களை அனுபவித்து –
பாலும் பழமும் கண்ட சர்க்கரையுமான ரசவஸ்துக்களை சேர்த்து புஜிப்பாரைப் போலே
இந்த அவயவங்களோடு உண்டான சேர்த்தியால் வந்த அழகையும்
ஸ்வா பாவிகமான அழகையும் உடைத்தான திருமேனியின் பசும் கூட்டமான சமுதாய சோபையையும்
அனுபவித்தாராய் இறே கீழ் நின்றது –

இவருடைய இப்படிப்பட்ட மானஸ அனுபவத்தையும் -மன பூர்வகமான வாசிக அனுபவத்தையும்
கண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் -இப்படி குணா விஷ்டராய் அனுபவிக்கிற படியைக் கண்டு –
த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -என்கிறபடியே அவரை அழைத்துக் கொண்டு இருக்க
வேண்டும்படி அவர் அளவிலே அபி நிவிஷ்டராகையாலும் -க்ஷண அபி தே யத் விரஹோஸ்தி தஸ்சஹ –
என்கிறபடியே தம்மை ஒருகால் காண வேணும் என்னும் ஆசை உடையாரை ஷண காலமும்
பிரிந்து இருக்க மாட்டாமையாலும் அவரை அழைப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்தார்
இனி நாம் போய்க் கொடு வர வென்றால் -அசந்கேத மநாலாபம் -என்றாப் போலே சொல்லுகிற சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டுகையாலே அது செய்ய ஒண்ணாதாய் இருந்தது –
இனி இவர் தாமே வர வென்றால்
அதுவும் தமக்கு ஸ்வரூப ஹாநியாய் இருந்தது -ஆன பின்பு ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஸ்ரீ மஹா ராஜரை யிட்டு
ஆநயைநம் -என்றாப் போலே இவரையும் ஒருவரை யிட்டு அழைப்பிக்க வேணும் என்று பார்த்தார் –

அந்த ஸ்ரீ விபீஷணன் ராஜ்யகாங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற ஸ்ரீ இளையபெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிஸ்ரேஷ்டரான ஸ்ரீ மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற ஸ்ரீ லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் ஸ்ரீ பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே ஸ்ரீ பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்க கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர-

இவரும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய கௌரவத்தைக் குலைக்க ஒண்ணாது என்று முநிவாஹநராய்
வந்து புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழ -ஸ்ரீ பெரிய பெருமாளும் –
ஆவிர்ப்ப பூவ பகவான் பீதாம்பாதரோ ஹரி -என்று ஸ்தோத்ர பரனான ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு
வந்து ஆவிர்ப்பவித்து அபேஷிதங்களைக் கொடுத்து -அவன் ராஜ்யாதிகளிலே போது போக்க
வல்லன் ஆகையாலே அவன் பார்த்துக் கொடு நிற்கச் செய்தே -தத்ரைவாந்தர தீயதே -என்று போக
பின்பு அந்த ராஜ்யாதிகளாலே ஸ்ரீ ப்ரஹ்லாதனும் போது போக்கி இருந்தான் இறே-

இவர் அவனைப் போல் அன்றிக்கே அநந்ய சாதநராய் அநந்ய ப்ரயோஜனராய் இருக்கையாலே
நம் விச்லேஷம் பொறுக்க வல்லவர் அல்லர் என்று பார்த்தருளி தம்முடைய ஸ்வரூபாதிகளைக் காட்ட
இவரும் ப்ரீதரான வளவிலே இவர் மானஸ அனுசந்தானம் பண்ணுகிற தசையிலே –
ஆதி -விண்ணவர் கோன் -நீதி வானவன் –அரங்கத்தம்மான் என்றும் –
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக் கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
என்றும் -விரையார் பொழில் சூழ் வேங்கடவன் -என்றாப் போலே தம்முடைய
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களையும் தம் பக்கலிலே அனுசந்திக்கையாலே
இவற்றைத் தனித்தனியே அனுபவிக்க வேனும் என்கிற அபேஷை இவர்க்கு இல்லை என்கிற விடம்
ஹ்ருதயனாய்க் கொண்டு-

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியா நிற்கச் செய்தேயும் இவரைச் சோதிக்கைக்காக
இவற்றையும் இவர்க்குத் தனித் தனியே காட்டி இவர் அனுபவிக்கும்படி பண்ணுவோம் என்று
பார்த்தருளி -அது செய்யும் இடத்துப் புருஷார்த்தமாக வேண்டுகையாலே இவருடைய
அபேஷை யறிந்து செய்ய வேணும் -இல்லை யாகில் இவர் நாம் அத்தை பிரகாசிப்பித்துக் கொள்ள
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -என்னும் ஸ்ரீ திரு மங்கை யாழ்வாரைப் போலே நிந்தித்தல்
ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போலே -அச்சுவை பெறினும் வேண்டேன் -என்று காற்கடைக் கொள்ளுதல் செய்வரோ
அறிய வேணும் என்று தம் திரு உள்ளத்திலே முன்னோர் அடிக் கொண்டத்தை அறிந்து -இவர் –
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே ஸ்ரீ பெரிய பெருமாள் பாடே எல்லாம் இல்லையோ –
ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை அனுபவிக்க ச்ரத்தை யில்லை –
எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன் என்னுமது ஒழிய இப் ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூறும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் இனி ஒரு
விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு -தம்முடைய ஆத்மாவதியான
அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி அநாதி காலம்
பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 6, 2019

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ————————-1-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய அவதாரிகை —

ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –

——————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

முதல் பாட்டில் –
பெரிய பெருமாள் திருவடிகளின் அழகு தம்மை ஆட் கொண்டது என்கிறார் –
ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே
பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற
மதுர வாற்றின் இடைப் புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –

——————–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

அமலன் –
சுத்தன் -என்றபடி
இவன் சுத்தனாகை -யாவது -தான் ஒருவன் சுத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும் சுத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகுநந்தன -என்னுமா போலே-

அமலன் -என்கிறது
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற தம்மை விஷயீ கரித்த பின்பு தன் பக்கல் தோஷம் தட்டாதே –
அநச் நன்ந நயோ அபிசாக ஸீத -என்கிறபடி விளங்குகிறபடி பரமாத்மா அக் கனியை உண்ணாமலேயே -பிரகாசிக்கிறது –
என் கண் பாசம் வாய்த்த பரஞ்சுடர் சோதிக்கே-

ஆதி –
ஆதியத இதி ஆதி -ஸ்ப்ருஹணீயன் -என்றபடி –
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியானான் -என்று -ஆதி –என்னவுமாம் –
ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லவுமாம் –

ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது –

பிரான் –
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த உபகாரகன்
பிரான் –
உபகாரத்தைச் சொல்லி -சொல்லப் பற்றாமே -எத்திறம் -என்கிறார்

அடியார்க்கு
சத்நஹாரீ ச பார்த்தவ -என்கிறபடியே -இவ் வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவில் அடங்காது –
நம் அடியார்க்கு ஆம் இத்தனை -என்று அவர்களுக்காக்கினான் என்கிறார் –
அடியார் -தம் பக்கலிலே சேஷி ப்ரதாரராய் இருக்குமவர்கள் –

என்னை யாள்படுத்த விமலன் –
தன்னிடை யாட்டமும் யறியாத என்னை -தன் அடியார்க்கு சேஷ பூதன் ஆக்கின சுத்தன் -என்கிறார் –

என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்தத்தின் சீர்மை அறியாத என்னை –
தேஹாத்ம அபிமாநிகள் தீண்டாத என்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதது போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத என்னை –

ஆள் படுத்த –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வைத்திலன்
அவர்களுக்கு சேஷம் ஆக்கினான்
பகவத் சேஷத்து அளவில் நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்த்ளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ காரத்துக்கு முற்பட்டாப் போலே
இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட -அங்கு
இங்கு லோக சாரங்க மஹா முநிகளை போய் ஆழ்வாரை அழைத்துக் கொண்டு வாரும் என்றான்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால் போலே -சேஷத்வத்தின் எல்லையில் என்னை வைத்தான் –

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தாம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
ஆள் இல்லாதவன் அல்லன் கிடீர் இப்படி விஷயீ கரித்தான் –
நித்ய சூரிகள் எடுத்து கை நீட்டும் படி இருக்கிறவன் கிடீர் -கதிர் பொறுக்கி ஜீவிப்பாரை போலே
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை நித்ய முக்தரோடு ஒக்க விஷயீ கரித்தான்
இவ் ஔதார்யம் கற்றதும் அவர்களோடே கிடீர் என்றுமாம்
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே
விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை
கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன் –
பெரிய பெருமாளை பாடா நிற்க திருமலையிலே போவான் என் என்னில்
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இறே கவி பாடுவது –
ஸ்ரீ பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -ஸ்ரீ திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -ஸ்ரீ திருமலையிலே தங்கிக் காணும் ஸ்ரீ கோயிலுக்கு வந்தது –என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி
அன்றியே –
ஸ்ரீ கோயில் போக்யதை தமக்கு நிலம் அல்லாமையாலே ஸ்ரீ திருமலையிலே போய் தரிக்கப் பார்க்கிறார் -என்றுமாம் –
விரையார் –
நித்ய சூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்-

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம் காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும் வந்து அடிமை செய்யும் இடம்
வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
இத் தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத் தலையில் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப் பார்த்து இராது ஒழிகை
பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச-

நீதி -வானவன்
சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதியில் உள்ளவன்
ஈச்வரோஹம் -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இறே இவ் விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள் அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே-நீள் மதிள்-

ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பரம சேஷி –

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூர்ணம் ஆவது
ஸ்ரீ திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் ஸ்ரீ கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
ஸ்ரீ திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்

திருக் கமல பாதம் –
செவ்வி குளிர்த்தி விகாசம் பரிமளம் தொடக்கமானவை ஆதித்யனைக் கண்டால் இறே தாமரை அலருவது –
இத் தாமரைக்கு ஆதித்யன் இவர் –
பிராட்டி திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –
தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி –

வந்து –
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்களுக்கு இவை விஷயம் ஆகின்றன
நீதி வானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்-கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி
ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநகாரமாய் -இருத்தது -என்னுதல்
என் கண்ணுக்கு இலக்கான இடத்திலும் பழைய நிலை குலையாது -இருந்தது என்னுதல்
சம்சாரிகளைப் -பார்த்து உங்களுக்கும் ஒக்குமோ என்கிறார் ஆதல்
இந்த லாபம் அத் தலைக்கு ஒக்குமோ என்கிறார் ஆதல் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் –மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன-

——————————————————————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம்-

அமலன் –
ஸ்ரீ வால்மீகி பகவான் -கோ குணவான் -என்று ப்ரச்நம் பண்ண -இஷ்வாகு வம்ஸ ப்ரபவ –
என்று சீல குணத்தை முந்துறச் சொன்னாப் போலேயும் –
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஆநந்த வல்லியில் ஆநந்த குணத்தை -உயர்வற உயர்நலம் உடையவன் –
என்று ப்ரதமத்திலே அநுபவித்தாப் போலேயும் –
இவரும் தம்முடைய நிஹீநதையைப் பாராதே மேல் விழுந்தபடியைக் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்யநீகதையைப் முற்பட அனுபவிக்கிறார் –
தம்முடைய ஜன்மாதிகளால் உண்டான நிகர்ஷ அனுசந்தாநத்தாலே அகல –
அது தானே பற்றாசாக -திரு உள்ளம் புண்பட்டு மேல் விழுந்த இடத்திலும்
அத் தலைக்கு அவத்யம் இன்றியிலே நிர்மலனாய் இருக்கிற படியைக் கண்டு -அமலன் -என்கிறார் –
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி –

அமலன் –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் ஆத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஹேய சம்பந்த அவஹமாய் பகவத் ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்கும் –
இவன் அங்கன் அன்றியே இருக்கும் –
அமலன் –
சுத்தன் என்றபடி -இவன் சுத்தனாகை -யாவது -தான் ஒருவன் சுத்தனாகை யன்று –
தன்னோடு சம்பந்தித்தாரையும் சுத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகுநந்தன -என்னுமா போலே-

அமலன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் –
அசித் கதமான பரிணாமம் -தத் சம்ஸ்ருஷ்ட சேதன கதமான -அஞ்ஞான துக்கங்கள் –
முக்தகதமான ஜ்ஞான சங்கோச விகாசங்கள் –
நித்ய சித்தகதமான பாரதந்த்ர்யம்
இவையாகிய ஹேயங்களுக்கு ப்ரத்யநீகனாய் இருக்கும்
பாரதந்த்ர்யத்துக்கு குறை என் என்னில் –
தனக்கு அவ்வருகு ஒருவன் உளனானால் வருமதே பாரதந்த்ர்யம் -அது ஈஸ்வரனுக்கு அவத்யம் இறே –
பரதந்த்ரனுக்கு சேஷித்வம் அவத்யமா போலே
புருஷனுக்கு ஸ்தநோத் பேதமும் ஸ்திரீகளுக்கு சமச் குணம் யோகமும் காணும் அந்த மாருட்டத்தாலே வரும் அவத்யம் –
ப்ரத்யநீகனாகையாவது -உக்த அவத்யங்கள் தன்னை ஸ்பர்சியாமல் இருக்கும் அளவன்றிக்கே
புறம்புள்ள அவத்யங்களையும் அறுத்துக் கொடுக்க வல்லவனாகை
தேஜஸ் திமிரங்கள் போலே ஹேய ப்ரத்யநீகன் -என்கை –
ஆகை இறே இவனை ஒழிந்தாருக்கு அடைய இவனே சுபாஸ்ரயமாய் இருக்கிறது –

ஆதி –
இப்படி நிஹீநரான உம்மை மேல் விழுந்து அங்கீகரிக்கைக்கு அடி என் என்ன
பெற்ற பாவிக்கு விடப்போமோ -என்கிறார் –
ஆதி –
ஆதி யத இதி ஆதி -ஸ்வரூப ரூபாதிகளைக் கண்டு எல்லாரும் மேல் விழும்படி இருக்கிற தான்
இத் தலையில் நிஹீநதை பாராதே மேல் விழுந்தான் -என்கை
ஆதி யத இதி ஆதி-தன்னை அனுபவித்தால் வேறு ஒன்றில் போக ஒட்டாதபடியாய் இருக்கும் –
ஆதி –
பூர்வஜ -என்னுமாபோலே -என்னுடைய நிகர்ஷத்தைப் போக்கி தன் பக்கலில் சேர்த்துக் கொள்ளுகையாலே
என் பேற்றுக்கு முற்பாடன் ஆனவன் –
ஆதி –
அடியில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே -நான் அழித்துக் கொண்ட ஸ்வரூபத்தை
உண்டாக்கினவன் –
இத்தால் -கல்யாண குண யோகத்தை சொல்லிற்று –

ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லிற்று –

பிரான் –
கீழ்ப் பண்ணின உபகாரத்தை நினைத்து -பிரான் -என்கிறது ஆதல் –
மேல் பண்ணப் புகுகிற உபகாரத்தை நினைத்து பிரான் -என்கிறது ஆதல் –
பிரான் –
என் நிகர்ஷம் பாராதே என்னை விஷயீ கரித்த உபகாரகன்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
எனக்கு -என்றும் -பிறர்க்கு -என்றும் திரிந்த என்னை –
தனக்கும் தன் அடியார்க்கும் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் –
ரத்ன ஹாரீ ச பார்த்திவ என்னுமா போலே நல்லது கண்டால் -அவர்களுக்கு -என்று இறே –
ஸ்வ விஷய சேஷத்வத்தை உண்டாக்கின அளவு அன்றிக்கே
ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி
ததீய சேஷத்வம் நிலை நிற்கும்படி பண்ணினான்
ஆத்மாவுக்கு நிலை நின்ற வேஷம் சேஷத்வம் ஆகையாலே -அடியார்க்கு -என்கிறார்-

அடியார்க்கு –
இவர்களுக்கு -ஊரும் பேரும் தாருமாகிறது சேஷத்வம் ஆய்த்து –
சேஷத்வம் இறே இவ் வாத்மாவுக்கு பிரதம நிரூபகம்

என்னை –
தேஹாத்ம அபிமாநிகளும் தீண்டாத என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்த பதத்தின் சீர்மை யறியாத வென்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதாப் போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத வென்னை

ஆட்படுத்த –
பகவத் சேஷத்து அளவில் நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்த்ளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீகாரம் பெருமாளுடைய விஷயீ காரத்துக்கு முற்பட்டாப் போலே
இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட –

ஆட்படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால் போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
அவர்களோடு சம புத்தி பண்ணித் தராமே -அவர்களுக்கு சேஷ பூதன் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன் –
ஐஸ்வர்யார்த்திகளும் ஆத்ம ப்ராப்தி காமரும் தன்னைப் பற்றுவர்கள் இறே –
இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு அதிகாரிகள் அல்லர்களே யவர்கள்
அநந்ய பிரயோஜனர் இறே இவர்க்கு ஆவார்
தாமும் அநந்ய பிரயோஜனர் ஆகையாலே -விசேஷித்து லோக சாரங்க மஹா முனிகளை
இட்டு தம்மை விஷயீகரித்ததை சொல்லுகிறார்
தம்மை வஹித்த அளவில் தாம் சேஷ பூதர் ஆனபடி என் என்னில்
திருத் துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தது என்னா சேஷத்வம் குலையாதே-
மயி ப்ருத்யே ஸ்திதே தேவாநாஜ்ஞா பயது கிம்ன் ருபை -என்றாம் என்னா
அவனுடைய சேஷித்வம் குலையாதாப் போலே-

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
நிஹீ நரான உம்மை இப்படி விஷயீகரித்தது ஆள் இல்லாமையாலேயோ என்னில் –
ஒரு த்ரிபாத் விபூதியாக தன்னை தாலாட்ட இருக்கிறவன் கிடீர் என்னை விஷயீ கரித்தான் -என்கை
இவ் ஔதார்யம் கற்றது அவர்களோடே கிடீர் என்றுமாம் –
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே
விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை
கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன்
சர்வ கந்த என்கிற வஸ்து வாகையாலே போலியான பரிமளம் கண்டு கால் தாழ்ந்தது இத்தனை
குஸஸ்தலே நிவஸத் -என்னுமா போலே
பரமபதத்தில் நின்றும் கோயிலிலே ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர் -பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர்
திருவேம்கடஉடையானைப் பாடப் போவது என் என்ன –
ஆற்றிலே அமிழ்ந்துகிறவன் ஒரு காலை தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ
என்று கால் தாழ்க்குமா போலே இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார்-
அது மடுவாகிறது அறிகிறிலர் –
வேறு சிலர் பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் -என்று அவரைக் கேட்க
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இறே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
நித்ய சூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும் வந்து அடிமை செய்யும் இடம்
வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்த ஸூத்தி யோகத்தை உடையவன் –
இத்தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத்தலையில் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப்பார்த்து இராது ஒழிகை
ஓர் அடி இட்டார் உண்டாகில் -பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச –
ஆபிமுக்யம் அடியாக அங்கீகரித்து ஓர் அஞ்சலி மாத்ரமும் கூட உண்டு அறுக்க மாட்டாதான் ஒருவன்
நிமலன் –
இத்தலைக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாக இருக்கை-

அமலன் -என்றது இவரைத் தனக்கு ஆக்கினபடி –
விமலன்-என்றது தன் அடியார்க்கு ஆக்கினபடி –
நிமலன் -என்றது நான் பச்சை இடா நிற்க என் கார்யம் செய்தான் -என்கை
நிமலன் –
இது தன் பேறாக செய்தான் -என்கிறார் –
க்ருத க்ருத்யஸ்த தாராம -என்கிறபடியே
நின்மலன் –
தான் உபகரித்தானாய் இத்தலை -உதவிக் கைம்மாறு என்னுயிர் -என்றால் போலே
பிரத்யுபகாரம் தேடித் தடுமாறாத படி -ப்ரணஷ் டஸ்ய யதா லாப என்கிறபடியே
உடையவன் உடைமையைப் பெற்றான் ஆகில் நமக்கு என் என்று –
ஆத்ம லாபம் தன்னதாம்படி இருக்கிற ஸூத்தியை உடையவன் –

நீதி -வானவன்
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதி-வாசனை என்கை
ஈச்வரோஹம் -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இறே இவ்விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள் அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே
நீள் மதிள் அரங்கம் –
ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பரம சேஷி –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
அழகிய வாயாலே இது அருளிச் செய்த பின்பாகாதே திரு மாளிகைகளும் திருக் கோபுரங்களும் கனத்தது-

அம்மான் –
அங்குள்ளோரோடு ஒத்த ப்ராப்தி இங்கு உள்ளோரோடும் உண்டாகையாலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்-

திருக் கமல பாதம் –
பெரும் காற்றிலே யிழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே -ஒரு தாமரைப் -பூவை திருஷ்டாந்தம் -ஆக்குகிறார் –
செவ்வி குளிர்த்தி நாற்றம் விகாசம் -இவை தாமரைப் பூவைப் போலே இருக்கையாலே –
ஆதித்ய சன்னதியிலே அலறும் தாமரை போலே ஆஸ்ரித சன்னதியிலே அலறும் தாமரை யாயத்து -திருவடிகள்-
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி-

அம்மான் திருக் கமல பாதம் –
என்கையாலே ப்ராப்தமுமாய் ப்ராப்யமுமாய் ஆன திருவடிகள் -என்கை
நாராயண சரணங்கள் –என்றபடி

வந்து –
என்று அவனுடைய உபாய பூர்த்தி -சொல்லுகிறது
விதிஸி வசனகாத் யைர்தத் யாது மத்யந்த தூர -மான திருவடிகள் கிடீர் என்னளவும் வந்து விஷயீ கரித்தது
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் – வருதல் –
ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்ககளுக்கு இவை விஷயம் ஆகின்றன

நீதிவானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி
ஒக்கின்ற –
என் கண்ணுக்கு இலக்கான உங்களுக்கும் ஒக்கும் என்கிறார் –ஆதல்
கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று ஒரு பதமாய்
என் கண்ணினுள்ளன வானாப் போலே இரா நின்றது -என்றபடி –
ஒன்பது பாட்டு வழியிலே அனுசந்தித்து பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதார் என்கிற
ஐதிகத்தின் படியே மானஸ சாஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை
அங்கன் இன்றிக்கே –
மானஸ சாஷாத்காரத்தோடு சேர்ந்து இருந்ததீ -சஷூர் விஷயமான திருவடிகள் என்றுமாம் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன –

——————————————————————————————————————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை
இதில்- முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய அனுசந்தேயங்களான
அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது-

வியாக்யானம்
அமலன் -என்கிறது மல ப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் -காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-

பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா க்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
இவை தம்மளவில் பர்யவசித்த படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-

அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும் அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –
அடியார் -என்றால்
சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை எல்லாம் காட்டிற்றே யாகிலும் –
இங்கு அடியார் -என்கிறது -யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஞானரான ரசிகரை –
இப்படி அடியார்க்கு -என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே –
மத்யம அஷரத்தின் படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாத -படியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான சர்வேஸ்வரன் –
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே
இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி வருகிறது ஆகையாலே -என்னை அடியார்க்கே ஆட்படுதினான் -என்ற
அவதாரணமும் இங்கே விவஷிதம்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-

என்னை ஆட்படுத்த –
யூயமிந்த்ரிய கிங்கரா -என்னும்படி இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –
ஈச்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை –
அதோஸஹமபி தே தாஸ -என்னப் பண்ணின உபகாரத்தில் காட்டிலும் -உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப்
பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று –
இப் பரம உபகாரத்தையும் பிரித்து -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்-

கீழ்ச் சொன்ன க்ர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –
விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –

இவ்வளவு சூரிகளுக்கும் இல்லையோ என்ன –
விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான சூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன

விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –

இப்படி சர்வ சுலபன் ஆனாலும்
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே என்னும்படி -நிற்குமோ -என்ன
நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பற்ற நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ச்லேஷம் பண்ணலாம்படி
தன் ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்

இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்
நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார் என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஞஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -என்றபடி –

விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று
மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று –
சதுர்த்தியில் கருத்தான கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்

நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன் -என்னவுமாம் –
தேன வஞ்சயதே லோகன் மாயா யோகேந கேசவ -என்கிறபடியே –கலக்குவாரும்
அவசா நந்தி மாம் மூடா -என்கிறபடியே கலங்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே -என்றும்
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம்
பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-

இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிக்கலாம்படியைப் பேசுகிறார் –
நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு
சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி
அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்
திருக் -கமலபாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-

வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது –

இத் திருவடிகளில் வைத்த கண் வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை
ஓர் உத்ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்
என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸுக்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –

நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –

இப்பாட்டால் –
1-மோஷ -பிரதத்வத்தையும்
2-ஜகத் -காரணத்வத்தையும்
3-மற்றும் சர்வ ப்ரகார உபகாரத்வத்தையும்
4-அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
5-நித்ய நிர்தோஷத்வத்தையும்
6-நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
7-நித்ய விக்ரஹவத்தையும்
8-சர்வ சுலபத்வத்தையும்
9-சௌசீல்யத்தையும்
10-வாத்சல்யத்தையும்
11-கைங்கர்ய உத்தேச்யத்வத்தையும்
12-கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
13-சர்வ ஸ்வாமித்வத்தையும்
14-திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
15அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்-முன்னிட்டு
16-ஸ்ரீ யபதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-

அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை

5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்கு அஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை
9-சௌலப்ய காஷ்டை யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை

10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சங்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே
விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தை அசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப்பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-

————————–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே ——-10

——————————————————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

நிகமத்தில் -இவ்வளவும் ஜ்ஞான சாஷாத் காரம் –
மேல் ஸ்ரீ லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பெருமாள் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா என்கிறார் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க்குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –
கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –
வெண்ணெய் வுண்ட வாயன் –
களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
ஸ்ரீ பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-

என் உள்ளம் கவர்ந்தானை-
என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ஸ்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை –
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-

அண்டர் கோன் –
திருவாய்ப்பாடியில் இடைக்குலத்துக்கு நிர்வாஹகன் -என்னுதல்
அண்டாந்தர வ்ர்த்திகளான ஆத்ம வர்க்கத்துக்கு நிர்வாஹகன் என்னுதல்

அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்களுடைய உப்புச் சாறு போல் அன்று இவருடைய அம்ருதம்
என் அமுதினை –
ப்ரஹ்மாதிகளுக்கு முதலியாய் இருக்கும்
எனக்குச் சாகாமல் காக்கும் அம்ருதமாய் இருக்கும்

கண்ட கண்கள் –
சுவை அறிந்த கண்கள் -ஸ்ரவண இந்திரிய மாத்ரம் அன்றியே விடாய் தீரக் கண்ட கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே -பாவோ நான்யத்ர கச்சதி -போலே கண்களுக்கு பச்சை இட்டாலும்
வேறு ஒரு அர்ச்சாவதாரம் அவதார விசேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யம் என்று கருதாது
காட்சி ஒழிய வேறு ஒரு பலம் சொல்லா விட்டது பலமும் காட்சியாகையாலே
முக்த ப்ராப்யம் என்று ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பஸ்யந்தி -இறே

தம்மைச் சொல்லுதல் பாட்டுக்கு சங்க்யை சொல்லுதல் செய்யில்
கரை மேலே நின்ற அல்லாத ஆழ்வார்களோ பாதி யாவர் –
அஸ்தமி தான்ய பாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார்
நோ பஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே
முக்த ப்ராப்யமான புருஷார்த்தத்தை அனுபவித்தார் என்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய் விட்டது –
இப் பாட்டில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை –

நிகமத்தில் –
இவ் வாழ்வார் இவ் வூருக்கு புறம்புள்ள தேசங்களில் உள்ளாருடைய ரஜஸ் தமஸ் ப்ரசுரராய் -சப்தாதி விஷய ப்ரவணராய் –
அது தானும் நேர்கோடு நேர் கிடையாமையாலே
அர்த்தார்ஜநாதிகளிலே இழிந்து -பெரியதோர் இடும்பை பூண்டு இருக்கிற படியையும்
இவ் வூரில் உள்ளார் பரம சாத்விகராய் நிரதிசய போக்யதராய் இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளை
தொண்டு பூண்டு அமுதம் உண்டு களித்து இருக்கிற படியையும் கண்டு –
வரம் ஹூத வஹஜ் வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி -ந சௌரி சிந்தாவி முகஜநசம்வாஸ வைஸஸம் –
என்று புறம்பு உள்ளாரோடு பொருத்தம் இன்றிக்கே –

இவ் வூரைப் பார்த்தால்
சர்வ புண்ய மையோ தேச -என்கிறபடியே -பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் -என்னும்
பரம பாவநரான பெரிய பெருமாள் தாமும் -சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்று
இவ் வூரோட்டை சம்பந்தத்தாலே பாவன பூதர் என்னும்படியான வைலஷண்யத்தை வுடைத்தாய் இருக்கையாலே –
நாம் இவ் வூரிலே புகுருகை இவ் வூருக்கு மாலின்யாவஹம் என்று பார்த்து –
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் என்கிறபடியே பிறருடைய நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே –
தம்முடைய நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே
ஆந்த ராளிகராய் -உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஈஸ்வரோஹமஹம் போகீ -நான்யோஸ்தி சத்ருசோ மயா -என்று தேசமாக
அஹங்கார க்ரஸ்தமாய் சப்தாதி விஷய ப்ரவணராய் நோவு படா நிற்க -இவர் இப்படி யாவதே என்று மனசிலே போர உகந்து –
நிமக்ந ஆப ப்ரணவ -என்கிறபடியே இவர் அளவிலே திரு உள்ளம் பேராறு மண்டி –
நிஹீநாநாம் முக்கியம் சரணமான திருவடிகளைக் கொடு வந்து இவருடைய திரு உள்ளத்திலே –
என் கண்ணினுள்ளன வொக்கின்றவே -என்று ப்ரத்யஷ சாமாநா காரமாக ப்ரகாசிக்கும் படி வைக்க –

அந்தத் திருவடிகளை அனுசந்தித்து தம்முடைய மனஸ் ஆனது
ஜ்ஞாநாஸ் பதமாகையாலே -அந்த திருவடிகளுக்கு மேலான திருப் பீதாம்பரைத்தையும்
திருவரையுமான சேர்த்தியை மடி பிடித்து அனுபவித்து –

இப்படி கரணமும் நாமும் அனுபவிக்கும்படி நம்மை உண்டாக்கிற்றுத் திரு நாபீ கமலம் அன்றோ அத்தை அனுபவித்து
மேன்மைக்கும் சௌலப்யத்தையும் பட்டம் கட்டி யிருக்கிறோம் நாம் அல்லோமோ என்று திரு வுதர பந்தனம்
தன் பக்கலிலே வர விசிக்க அத்தை அனுபவித்து-

அதுக்கு மேலே இருக்கிற திரு மார்பானது தன்னுடைய ஹாரத்ய ஆபரணங்களையும்
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமான மேன்மையையும் காட்டி இசித்துக் கொள்ள அந்தத் திரு மார்பை அனுபவித்து –

அந்த பிராட்டிக்கும் ஹாரத்ய ஆபரணங்களுக்கும் ஆஸ்ரயமான திருக் கழுத்தை அனுபவித்து –

அதுக்கு மேலே -வாயில் -சர்வ பூதேப்யோ அபயம் ததாமி –
என்றாப் போலே சொல்லா நிற்கச் செய்தே அனுபவிக்கிற நாய்ச்சிமார்க்கு அகப்பட –
வாயழகர் தம்மை யஞ்சுதம் -என்று கண்களை செம்பிளித்து அனுபவிக்கும்படி ஸ்வா பாவிக
சௌந்தர்யத்தை உடைத்தான திருவதரத்தை அனுபவித்து –

இப்படி அவயவங்களை அனுபவியா நிற்கச் செய்தே
இடையில் திவ்யாயுதங்களும் இறாய்ஞ்சிக் கொள்ள அவற்றை அனுபவித்து –
அபயம் ததாமி –என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகளை மேல் எழுத்து இட்டு கொடுக்கிற குளிர்ந்த
கடாஷங்களை உடைத்தான திருக்கண்களை அனுபவித்து –

பாலும் பழமும் கண்டசர்க்கரையுமான ரச வஸ்துக்களை சேர்த்து புஜிப்பாரைப் போலே
இந்த அவயவங்களோடு உண்டான சேர்த்தியால் வந்த அழகையும் ஸ்வா பாவிகமான
அழகையும் உடைத்தான திருமேனியின் பசும் கூட்டமான சமுதாய சோபையையும் அனுபவித்தாராய் இறே கீழ் நின்றது –

இவருடைய இப்படிப்பட்ட மானஸ அனுபவத்தையும் -மன பூர்வகமான வாசிக அனுபவத்தையும்
கண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் -இப்படி குணா விஷ்டராய் அனுபவிக்கிற படியைக் கண்டு –

த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -என்கிறபடியே அவரை அழைத்துக் கொண்டு இருக்க வேண்டும்படி
அவர் அளவிலே அபி நிவிஷ்டராகையாலும் –
க்ஷண அபி தே யத் விரஹோஸ்தி தஸ்சஹ –-என்கிறபடியே தம்மை ஒருகால் காண வேணும் என்னும் ஆசை உடையாரை
ஷண காலமும் பிரிந்து இருக்க மாட்டாமையாலும் அவரை அழைப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்தார்-

இனி நாம் போய்க் கொடு வர வென்றால் -அசந்கேத மநாலாபம் -என்றாப் போலே சொல்லுகிற சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டுகையாலே அது செய்ய ஒண்ணாதாய் இருந்தது –
இனி இவர் தாமே வர வென்றால் அதுவும் தமக்கு ஸ்வரூப ஹாநியாய் இருந்தது –
ஆன பின்பு ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஸ்ரீ மஹா ராஜரை யிட்டு
ஆநயைநம் -என்றாப் போலே இவரையும் ஒருவரை யிட்டு அழைப்பிக்க வேணும் என்று பார்த்தார் –

அந்த ஸ்ரீ விபீஷணன் ராஜ்யகாங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிச்ரேஷ்டரான ஸ்ரீ மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என் சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே
இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற ஸ்ரீ லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வ்ருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று உபதேசிக்க கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர-

இவரும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய கௌரவத்தைக் குலைக்க ஒண்ணாது என்று முநி வாஹநராய்
வந்து புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழ -ஸ்ரீ பெரிய பெருமாளும் –
ஆவிர்ப்ப பூவ பகவான் பீதாம்பாதரோ ஹரி -என்று ஸ்தோத்ர பரனான ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு
வந்து ஆவிர்ப்பவித்து அபேஷிதங்களைக் கொடுத்து -அவன் ராஜ்யாதிகளிலே போது போக்க
வல்லன் ஆகையாலே அவன் பார்த்துக் கொடு நிற்கச் செய்தே -தத்ரைவாந்தர தீயதே -என்று போக
பின்பு அந்த ராஜ்யாதிகளாலே ஸ்ரீ ப்ரஹ்லாதனும் போது போக்கி இருந்தான் இறே-

இவர் அவனைப் போல் அன்றிக்கே அநந்ய சாதநராய் அநந்ய ப்ரயோஜனராய் இருக்கையாலே
நம் விச்லேஷம் பொறுக்க வல்லவர் அல்லர் என்று பார்த்தருளி தம்முடைய ஸ்வரூபாதிகளைக் காட்ட
இவரும் ப்ரீதரான வளவிலே இவர் மானஸ அனுசந்தானம் பண்ணுகிற தசையிலே –
ஆதி -விண்ணவர் கோன் -நீதி வானவன் –அரங்கத்தம்மான் என்றும் –
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக் கவர்ந்த வெங்கணை காகுத்தன் –என்றும் –
விரையார் பொழில் சூழ் வேங்கடவன் -என்றாப் போலே தம்முடைய
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களையும் தம் பக்கலிலே அனுசந்திக்கையாலே
இவற்றைத் தனித்தனியே அனுபவிக்க வேணும் என்கிற அபேஷை இவர்க்கு இல்லை என்கிற விடம்
ஹ்ருதயனாய்க் கொண்டு-

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியா நிற்கச் செய்தேயும் இவரைச் சோதிக்கைக்காக
இவற்றையும் இவர்க்குத் தனித்தனியே காட்டி இவர் அனுபவிக்கும்படி பண்ணுவோம் என்று பார்த்தருளி –
அது செய்யும் இடத்துப் புருஷார்த்தமாக வேண்டுகையாலே இவருடைய அபேஷை யறிந்து செய்ய வேணும் –
இல்லை யாகில் இவர் நாம் அத்தை பிரகாசிப்பித்துக் கொள்ள
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -என்னும் திரு மங்கை யாழ்வாரைப் போலே நிந்தித்தல்
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போலே -அச்சுவை பெறினும் வேண்டேன் -என்று காற்கடைக் கொள்ளுதல் செய்வரோ
அறிய வேணும் என்று தம் திரு உள்ளத்திலே முன்னோர் அடிக் கொண்டத்தை அறிந்து -இவர் –
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே ஸ்ரீ பெரிய பெருமாள் பாடே எல்லாம் இல்லையோ –
ஆன பின்பு எனக்குப் ஸ்ரீ பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை அனுபவிக்க ஸ்ரத்தை யில்லை –
எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கண்களுக்கு விஷயம் இருந்தபடி –
ந மாம்ஸ சஷூ ரபி வீஷதே தம் -என்றும் –
ந சஷூஷா பஸ்யதி கச்சநைநம் -என்கிற இலச்சினையை அழித்துத் தன் வடிவைக் காணும்படி
பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து சொல்லுகிறார் –
அங்கன் இன்றிக்கே
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்
ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –
வண்ணம் -என்று ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –
நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
அந்த மேகமானால் ஆகாசத்தே கடக்க நின்று நீரை வர்ஷித்துப் போம் இத்தனை இறே
அங்கன் இன்றிக்கே இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்து
தன் வடிவு அழகை அவர்களுக்கு சர்வ ஸ்வ தாநம் பண்ணின படி –

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
பர அவஸ்தனாய் வந்து வெண்ணெய் யமுது செய்யில் மாளிகைச் சாந்து நாறுமே –
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே ராஜாவாக்கிச் சிலர்
சீராட்டுகையாலே வந்து வெண்ணெய் காண ஒண்ணாதே -அதுக்காக –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
சக்ரவர்த்தி தன்னுடைய ராஜ ஐஸ்வர்யத்தை புஜிக்கைக்கு -எனக்கொரு பிள்ளை வேணும் -என்று
மஹதா தபஸா -என்கிறபடியே நோற்றுப் பெருமாளைப் பெற்றாப் போலே
ஸ்ரீ நந்த கோபரும் -கானாயர் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் –
என்கிறபடியே திருவாய்ப்பாடியிலே கவ்ய ஸம் ருத்தி யடைய பாழ் போக ஒண்ணாது என்று
இத்தை புஜிக்கைகாக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து கிருஷ்ணன்-

வெண்ணெய் உண்ட வாயன் –
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும் –
வெண்ணெய் உண்ட வாயன் —
ஆஸ்ரிதர் உடைமை யாகையாலே தத் ஸ்பர்சம் ஆகாதே என்று இன்றும் அகப்பட அந்தக் குணுங்கு
நாற்றம் வாயிலே தோன்றும்படி இறே ஸ்ரீ பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவது –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -என்று சந்தேஹிக்க வேண்டாதபடி யாய்த்து
இன்றும் அகப்பட வாய் குணுங்கு நாறும்படி
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ஸ்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக் கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள்
அந்த உறிகளின் குறி அழியாது இருக்க அந்த வெண்ணெய்களை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து –
அரங்கம் தன்னுள் கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-

என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –
என் உள்ளம் கவர்ந்தானை –
தைவீம் சம்பதமபிஜாதரான -பெரியவர்கள் அகப்பட தம்தாமுடைய
மனஸை இவன் பக்கலிலே வைக்க வேணும் என்று பார்த்து -அது செய்யப் போகாமல்
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண -என்றாப் போலே பெரும் காற்றைத் தாம் பிடிக்கலாம் –
என் மனஸை ஒரு அளவாக்கப் போகிறதில்லை -என்னும்படி இறே மனஸ்ஸினுடைய
சஞ்சலத்வமும் திமிரும்படியான மிடுக்கும் -அப்படி -நின்றவா நில்லாத மனஸ்சை
என் பக்கல் அபேஷை இன்றிக்கே இருக்க -நானும் அறியாதபடி -அபஹரித்து தன் பக்கலிலே சேர்த்துக் கொண்டான் –

அண்டர் கோன்
இப்படி இடையரோடும் இடைச்சிகளோடும் தண்ணியரான உம்மோடும் வாசியற வந்து கலந்து
வெண்ணெயையும் மனசையும் அவன் களவு கண்டது -புறம்பு ஆள் இல்லாமையாலும் தன் குறையிலுமாவோ என்ன –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி
அந்தூபந்தரா நிற்கச் செய்தே கிடீர் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து அவதரித்தது என்கிறார் –
அன்றிக்கே –
அண்டர் -என்று இடையர் என்னுதல் -அண்டாந்தர்வர்த்திகள் என்னுதல்

அணி யரங்கன் –
என் நெஞ்சை அபஹரித்து -சேணுயர் வானத்திலே -போய் இருக்கை அன்றிக்கே
கண்ணிட்டு காணலாம்படி சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவன்
சம்சாரிகள் அறவைத்தனப் படாதபடி யாலே இறே இக்கிடை கிடக்கிறது
அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்கள் அம்ருதம் போலே உப்புச் சாறாய் எட்டா நிலத்திலே இருக்குமதன்று இறே இவருடைய அம்ருதம்-

அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை –
அளப்பரிய வாரமுதை அரங்க மேய வந்தணனை -என்கிற அம்ருதம் இறே –

அமுதினைக் கண்ட கண்கள் –
இந்தக் கண்கள் இவரைக் காணாது ஒழியப் பெற்றதாகிலும் புறம்பே போகலாய்த்து –
காட்சி தான் அரை வயிற்று யாகிலும் புறம்பே போகலாய்த்து
அங்கன் இன்றிக்கே -பூர்ண அனுபவம் பண்ணின கண்கள் –

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –
மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -போலே இந்தப் பெரிய பெருமாள் தம்மை கேசாதி பாதாந்தமாக
அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்
என் உள்ளம் கவர்ந்தான் -என்கையாலே சித்த அபஹாரம் பண்ணின படியைச் சொன்னார் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கையாலே த்ருஷ்ட்ய அபஹாரம் பண்ணின படியைச் சொல்லுகிறார்

அல்லாதார் திரு நாமப் பாட்டுப் போலே தம்மை சொல்லிற்று இலர்
விஸஸ்மார ததாத்மாநம் -என்கிறபடியே தாம் போக ப்ரவணராய் தம்மை மறக்கையாலே –
பலம் -சதா பச்யந்தி -யாகையாகில் அது இங்கே சித்திக்கையாலே பலத்துக்கு பலம் வேணுமோ என்று சொல்லிற்று இலர்
இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
வடிவில் பசை இல்லை என்று போகவோ –
சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
மேன்மை இல்லை என்று போகவோ –
சௌலப்யம் இல்லை என்று போகவோ –
போக்யதை இல்லை என்று போகவோ –
அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –

—————————————————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன் என்னுமது ஒழிய இப் ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் இனி ஒரு
விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு -தம்முடைய ஆத்மாவதியான
அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாமகானத்தின் படியிலே பாடி அநாதி காலம்
பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் அறியாத இடையரையும் இடைச்சிகளையும் ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய் -சூட்டு நன் மாலை -யில் படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-

என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய் போலே இவருடைய திரு உள்ளம் ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு நவநீதம் ஆயிற்று –
ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள் வடிம்பிடுகிற என்னுடைய மனஸை –
வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும் வசீகரித்து –
இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –

அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி –
அண்டாதிபதியான ப்ரஹ்மா முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் என்கிறார் ஆகவுமாம் –

அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை-

என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச்சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம் போல் அன்றிக்கே –
அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான அம்ருதமானவனை என்னவுமாம்-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும் மமகாரம் பின் தொடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர்மமத்தோடே சேர்ந்த இம்மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது

மற்று ஒன்றினைக் காணாவே
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் -அவற்றைக் கண்ட போது
ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை அநுபவிக்கப் பெற்ற கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே ப்ரஹ்ம புத்ரர்களாய்
யூயம் ஜிஜ்ஞா சவோ பக்தா -என்னும் அளவான ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –
ப்ராப்ய ச்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ் ஸூ பூஜித -என்று
ஸ்ரீ நாரத பகவான் அளவிலும் அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது
உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற
ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்
அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ ய பதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மேனியிலே ஸ்ரீ திருமலை முதலா ஸ்ரீ கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ண ஸ்ரீ வாமன ஸ்ரீ வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப்
போலே -பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் நன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே

இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்
முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –

————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் என்னை ஆளுடை அப்பன் எம்பிரான் இத்யாதி -போன்ற பாசுரங்கள் —

March 21, 2019

என்னை ஆளுடை அப்பன் -மன்னாதன் —

என்னை ஆளுடை எம்பிரான் -9-10-6- -திருக்குறுங்குடி எம்பெருமான் -திருமங்கை ஆழ்வார்

———————————–

எந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆள் செய்கின்றோம் –திருப்பல்லாண்டு -6-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எனக்குத்தான் என்பார் –பெரியாழ்வார் திருமொழி -1-1-2–

எந்தம் பிரானார் எழில் திரு மார்வற்கு -1-3-3–

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-1-6-11–

எம்பெருமான் வாராவச்சோ வச்சோ -1-8-1-/4-

எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1-9-2-/8-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய –1-9-10-

எண்ணற்க்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு விடுவன் -2-3-2–

சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-3-4-

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் -2-3-5-

சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திருவாயர் பாடிப்பிரானே -2-3-7–

துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே 2-3-8–

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2-4-1-

இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2-4-2 —

சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-4-5–

தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-3 -/5-

கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-6-

தேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் -2-7-1-

ஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் -2-7-8-

எம்பிரான் காப்பிட வாராய் -2-8-3–

வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி –2-9-1-

வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3-1-1-

பொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் -3-1-7-

ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகலந்தான் என் மகளை பண்ணறையாய் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-10–

எம்பிரான் வன்மையைப் பாடிப்பற-3-9-1-

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7–

ஆயிரம் பைந்தலையை அனந்த சயனன் ஆளும் மலை -4-3-10-

நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே–4-4-9-

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம்மண்ணை நரகம் புகாள்-4-6-4-

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4-9-2-

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அமருமூர் அணி அரங்கமே -4-9-3-

புது நாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் -4-9-4-

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச் செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழு உலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10-

என்னுடைய இன்னமுதே ஏழு உலகும் உடையாய் என்னப்பா –4-10-7-

அடிமை என்னும் அக்கோயின்மையாலே அங்கு அங்கே யவை போதரும் கண்டாய்-5-1-4-

இருக்கு எச்சுச் சாம வேத நாண் மலர் கொண்டுன பாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5-1-6-

எம்பிரான் என்னை ஆளுடைத்தேனே ஏழையேன் இடரைக் களையாயே-5-1-9-

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -5-2-1-

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–

சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் -5-2-4-

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் -5-2-6-

பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் தொடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய் 5-3-3-

அன்று வயிற்றில் கிடந்து இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் இன்று வந்து இங்கு
உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே -5-3-9-

திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் –5-3-10-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வெற்றி பெரும் பதம் ஆகின்றதால் -5-4-2-

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் -5-4-3-

என்னப்பா என்னிருடீ கேசா என்னுயிர்க் காவலனே –5-4-5-

என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே -5-4-5-

உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

வடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-

———————————————

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாதிப் பறை கொண்டு ஈம பெரும் சம்மணம் –திருப்பாவை -27-

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-

சென்று இறைஞ்சி அங்கு அப் பறை கொண்ட வாற்றை -30-

————————-

அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே
சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி -1-3-

ஆழி சங்குத்தமற்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-

பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்தம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் -1-9-

புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-10-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய -5-10-

இம்மைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி -6-8-

என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே -8-6-

வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7-

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -9-7-

பண மாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே -10-6-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் -10-7-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -11-3-

கொங்கைத் தலமிவை நோக்கிக் கண்ணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -13-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைப் பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-

———————————————–

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-

அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-

அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே -3-6-

பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே 3-7-

பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -3-8 –

எம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் தம்பக்கமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே -4-5-

செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -4-10-

வித்துவக் கோட்டம்மா நீ கொண்டு ஆளாயாகிலும் உன் குரை கழலே கூறுவேனே -5-2-

வித்துவக் கோட்டம்மா நீ ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-5-4-

எந்தையே என் தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கனத்து எழில் கவர் ஏறே -7-3-

எண்டிசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ -8-2-

எங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ-8-3-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே-8-10-

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-

————————————-

என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-

ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே -35-

சரந்துரந்த உம்பராளி எம்பிரான்-73-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -78-

வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81-

ஆழியான் தன் திறத்தோர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்தே -84-

நின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம்மீசனே -107-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

————————————————–

அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –திருமாலை -6-

தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண் என் அம்மான் -18-

மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -27-

எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-

எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே -30-

எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே-37-

—————————————————-

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-

————————————–

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-

திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆள் கொண்டதே -5-

—————————-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்—பெரிய திருமொழி -1-1-6-

எந்தை எம்மடிகள் எம்பெருமான் –வதரி யாச்சிரமத்துள்ளானே -1-4-7–

சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -1-2-10-

இடவெந்தை மேவிய எம்பிரான் தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-4-

திரு வேங்கடவா நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டு அருளே -1-9-1-
திருவேங்கட மா மலை என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-2-
குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-3-
திருவேங்கடவா அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-4-
திரு வேங்கட மா மலை என் அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-5-
திரு வேங்கடவா அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-6-
பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-7-
குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-8-
கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-9-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உள்ளானே-1-10-6-

வேங்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-1-
வேங்கடத்து அறவன் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-2-
வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமீசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-3-
வேங்கட மலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-
வேங்கடம் மேவி நின்று அருள் அங்கண் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-5-
வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-6-
வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே 2-1-7-
வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-
தாமரையோனும் ஈசனும் அமரர் காணும் நின்றேதும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-9-

எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-1-
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-4-
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-6-
எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-7-

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-2-

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய் எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இட வெந்தை பிரானை -2-7-10-

மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –அணி யாலி யம்மானே -3-5-4-

நிலையாளா நின் வணங்க வேண்டாயேயாயினும் என் முலையாள வொருநாள் உன்னகலத்து ஆளாயே
சிலையாளா மரம் எய்த திரு மெய்யா மலையாளா நீ யாள வலையாள மாட்டோமே-3-6-9-

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-

தேவா திரு வெள்ளக்குளத்துள் உறைவானே ஆவா வடியான் இவன் என்று அருளாயே 4-7-9-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும்மடியோம் -4-9-1-
தேசம் அரிய உமக்கே யாளாய்த் திரிகின்றோமுக்கு -4-9-4-
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் எழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல் -4-9-9-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -4-10-9-

அறிவது அரியான் அனைத்துலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமரும் இடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-2-

கூற்று ஏருருவின் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-
கலை வாழ் பிணையோடு அணையும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் –கூடலூரே -5-2-8-

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–திரு வெள்ளறை நின்றானே -5-3-1-
திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே -5-3-4-
பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே -5-3-9-

வானவர் தம் உயிர் ஆளன் ஒலி திரை நீர்ப் பவ்வம் கொண்ட திருவாளன் -5-5-1-
மெய்ய மலை யாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் எழு எய்த வென்றிச் சிலையாளன் -5-5-2-
பூ மேல் மாது ஆளன் குடமாடி மது சூதன் மன்னார்க்காய் முன்னம் சென்ற தூது ஆளன் -5-5-6-
பேர் ஆளன் பேர் அல்லால் பேசாள் இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தார் ஆளன்
தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன்-5-5-7-
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன்-5-5-8-

தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கு பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-8-

அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயன் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-9-

நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-1/2/3/4/5/6/7/8–
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-9-

தன் தாள் அடைவரேல் அடிமை யாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே -5-9-1-
செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-
அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -5-9-4-
நக்க அரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே -5-9-5-
நலம் கொள் நான் மறை வல்லார்கள் ஒத்து ஒலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப் பேர் மருவி நான் வாழ்ந்தவாறே -5-9-6-
தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே -5-9-7-
தென் திருப் பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-8-
திருப் பேர்ச் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தார் சிந்தை யாளி என் சிந்தையானே -5-9-9-

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-1-
விண்ணவர் அமுதுண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-2-
நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற வம்பது வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-3-
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-4-
ஓர் எழுத்துரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-5-
சீர் கெழு நான்மறை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-6-
இருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-7-
உனது அடி அணுகுவன் நான் போது அலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-8-
உன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான் மறையாகி உம்பராதல் செய் மூவுரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-9-

சிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் உன்னை என் மனத்தகத்தே
திரும்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே -6-3-2-
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடீ மது சூதனே உலகில் சொல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே -6-3-9-

நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-ஒன்பது பாசுரங்களிலும்-கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர்
வானவர்க்கு இன்னரசர் ஆவரே-6-4-10-

ஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்–திரு நறையூர் மணி மாடம் -6-6-1-
ஈசன் எந்தை இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-
பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திரு முடியா நின்றான் பால்
செல்லகிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-3-
துகில் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-4-
தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த் தான் ஆயனாயினான் சரண் என்று உய்வீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-
இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக்கீழ் எய்த கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-7-
வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் திணித்தான் திருவடி நும்
சென்னி வைப்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-8-
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன்–திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-1-

திருமாலை எம்மானை நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே 6-8-2-

திரு நறையூர்– திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-1-/ அடி இணையே அடை நெஞ்சே 6-9-2-/3-/
குரை கழலே அடை நெஞ்சே 6-9-4-
இவ்வுலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே 6-9-5-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே 6-9-6-
திரு நறையூர் –தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே அடை நெஞ்சே 6-9-7-
திரு நறையூர் மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையாரே நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே 6-9-8-
திரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-9-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன்
நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-
நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை –கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

நறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி எந்தை பிரானே -7-1-1-
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே -7-1-2-
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே -7-1-5-
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1–6-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்
தமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உத்தமம் இல்லை துயரே -7-1-10-

உள்ளே நின்றுருகி நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் நள்ளேன் உன்னை யல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-
நாடேன்உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-2-
நன்மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -7-2-3-
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப்
போகல் ஓட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-
என்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஓட்டேன்
அந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப்ப பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-9-

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -7-3-3-
அரங்கம் ஆளி என்னாளி விண்ணாளி-7-3-4-
காதல் செய்து என்னுள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே -7-3-8-

தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை கடியார் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த வக்காவலைப் பிழைத்து குடி போந்து உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-8-

உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர்ச் சல சயனத்து ஐவார்
அரவணை மேல் உறையமலா வருளாயே -7-9-8 —
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா பெருமால் வரை யுருவா பிற உருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சலசயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே -7-9-9-

கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-

வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-1-
கரி வெருவ மருப்பு ஓசித்தார்க்கு இழந்தேன் என் கன வளையே-2-
செங்கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே -3-
புனர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே -4-
தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே -5-
யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -6-
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -7-
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே -8-
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -9-
கண்ண புரத்து எம்மடிகளை திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் -8-6-10-

எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -4-
அஞ்சேல் என்று அடியேனை ஆள் கொள்ள வல்லானை –வயலாலி மைந்தனையே -6-

உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால்வேதம் கண்ட கண்ண புரத்துறை அம்மானே -8-10-1-
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை மற்று எல்லாம்
பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே -3-
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை அம்மானே -9-
கண்ட சீர்க் கண்ண புரத்துறை அம்மானை கொண்ட சீர்த்த தொண்டன் கலியன் ஒலி மாலை -10-

அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-9–

என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –அழகாய புல்லாணியே -9-3-1-
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் –புல்லாணியே -2-
ஏது செய்தால் மறக்கேன் –புல்லாணியே -3-
மங்கை நல்லாய் தொழுதும் எழு –புல்லாணியே -4-
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு –புல்லாணியே -5-
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு மா மலர் பாத நாளும் பணிவோம் என் தொழுதும் எழு –புல்லாணியே -6-
பரவி நெஞ்சே தொழுதும் எழு –புல்லாணியே -7-
நாம் தொழுதும் எழு –புல்லாணியே -8-
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி நமக்கே நலமாதலில்–புல்லாணியே -9-

பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் -9-4-

முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-10-1-
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முந்நீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-

இண்டையும் புனலும் கொண்டு இடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர் குடிக் கடவுள் தம் கோயில் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-2-
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –மாலிருஞ்சோலை -9-8-9-

வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி
தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ -9-9-6-
திருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாழ் நுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -7-
திருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே -8-
திருமாலிருஞ்சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொலோ என் நன்னுதலே -9-

எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாத
அருள் புரிவான் –திருக் கோட்டியூரானே-9-10-1–
என்னை ஆளுடை எம்பிரான் -நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -6-
அடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்–திருக் கோட்டியூரானே -8-

பொன்னை மா மணியை அணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை
எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-
பத்தராவியைப் பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் முத்தினை மணியை
மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்கே காண்டுமே -8-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை -10-

நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ -11-2-9-

தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -6-
முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப் பெற்றோமே -9-

ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது நம்மை ஆளும் அரசே-11-4-3-
அந்தரம் ஏழு னூடு செல யுய்த்த பாதமது நம்மை ஆளும் அரசே –5-
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயாராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -6-
அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்தவது நம்மை யாளும் அரசே -8-

திரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கனிக்களவத் திரு வுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே-11-6-4-
உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களை பேசீர்களே –5-
உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல்
கைம் மணி வண்ணன் தன் குடந்தை நகர் பாடி ஆடீர்களே -11-6-9-

தேனோடு வண்டாலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாகக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு
அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -11-7-9-

அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே
மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

———————-

இரும்பு அகன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமை பூண்டு உய்ந்து போனேன் –திருக் குறும் தாண்டகம் -4-
பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்து ஒளி மரகதம் முழங்கு ஒளி முகில் வண்ணா
என் அத்த நின்னடிமை யல்லால் யாதும் ஒன்றும் இலேனே -10-
தொண்டு எல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் -11-
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -12-
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை -20-

————————————–

எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –திரு நெடும் தாண்டகம் -1-
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் -5-
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -6-/-7 –
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு
இதுவோ நன்மை எண்ண நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே -17-
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன் பேரோதும்
பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -20-
என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
கண்டேன் கன மகரக் குலை இரண்டும் நான்கு தோளும்-22-
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே -24-
என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு —
புனல் அரங்கமூர் என்று போயினாரே -25-
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-

———————————————–

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –திருவாய் மொழி -1-1-1-

உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கி -1-2-8-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறிலா வண் புகழ் நாரணன் திண் கழல் சென்றே -10-

நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது அவனுடை நம்முடை நாளே -1-3-7-
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே -8-

முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே -1-4-2-
நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று –9-

பரிவதில் யீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே -1-6-1-
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யுமீடே -2-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே -7-
கழிமின் தொண்டீர்கள் கழித்து தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே -8-

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-8-10-

நெற்றியில் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்-1-9-10-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு
நுண்ணேர் இடை மார்வனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே-1-10-3-
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் –7–

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி -2-1-7-

என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -3-
பரமன் பவித்ரன் சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே-9-

தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் -2-5-8-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கு ஏத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட
நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -2-6-3-
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் கழித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –4-
உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -5-
உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான்-6-

வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-
தேவும் தன்னையும் பாடி யாடத்திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் காய்த்து
எமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கினான் வல்லன் எம்பிரான் வீட்டுவே -4-
ஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -6-
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -7-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -8-

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-2-9-6-
யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-

மாலிருஞ்சோலை பதியது வேத்தி எழுவது பயனே -2-10-2-
மாலிருஞ்சோலை வல முறை எய்தி மருவுதல் வலமே-7-
மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -8-

சொல்லாய் யான் உன்னைத் சார்வதோர் சூழ்ச்சியே -3-2-3-

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -3-3-1-
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -8-

ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே -3-4-4-

எம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்துள்ளீரே -3-5-1 –
வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற -8-
தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -10-

அன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொள் கண்களே -3-6-10–

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை தோளுமோர் நன்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை -3-7-2-
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பனை -7-

ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -3-9-1-
ஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான்கிலேன்-7 –

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே-3-10-8-

தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2-
நின் பூம் தண் மாலை நெடும் முடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே -6-
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -6-
உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–7-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை -4-5-1-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-
தண் தாமரை சுமக்கும் பாத்தப்பெருமாள்ச சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே -8-
குடமாடியை வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-9-
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -10-
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆள் செய்து நோய் தீர்ந்த வழுவாத தோள் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-4-6-11-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் -4-7-11-

ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறு ஆளும் தனியுடம்பன் -4-8-1–
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணி மாயன்- 4-8-2-

கடல் வண்ணா அடியேனை பாண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே -4-9-3-
வெறித் துளப முடியானே வினையேனை யுனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என் ஆரமுதே கூய் அருளாயே -4-9-6-

கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் ஆடு புட் கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே -4-10-7-
உறுவது ஆவது –திருக் குருகூர் அதனுள் கூறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே -10-
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் -11-

என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-
தேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் -9-
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -10-

பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே -5-3-4-
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழிக் கண் புரைய மூடிற்றால் -5-4-6-
கழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள் வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -5-5-10–

எம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே –6-

எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே -5-8-2-
நால் தோள் எந்தாய் யுனது அருளே பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –9-

திரு வல்ல வாழ் கன்னலங்கட்டி தன்னைக் கனியின் இன்னமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -5-9-5–

அது விது வுது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் -5-10-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற வந்தாதி -5-10-11-

திரு வண் வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1-
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பனியீர் அடியேன் திறமே -6-1-2-
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எலக் சேற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே–10-

இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்-6-2-10–

பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்குடித் திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே -2-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே -8-
திரு விண்ணகர்ச் சேர்ந்த வைப்பான் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே -9-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -10-

மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு இவ்வுலகம் நிகரே -6-4-2-

வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-
தொலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே –6-6-9-
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-10-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர்கள் மல்கி -6-7-1-
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் அவள் சேர் திருக் கோளூருக்கே-6-7-10-

முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்தே 6-8-1-

கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -9-
அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும் சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே -10-

திலதம் உலக்குக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-
திரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே -4-
திருவேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-

எண்ணிலாப் பெரு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே யமுதே யப்பனே என்னை ஆள்வானே -7-1-1-

கட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திட் கொடி மதிள் சூழ்
திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே -7-2-3-
முடிவிலள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் மூ வுலகு ஆளியே என்னும் -10-

கொண்ட என் காதலுக்கு உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்-7-3-8-

வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -7-5-10-

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -7-6-5-

என்னை ஆளும் கண்ணா இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை -7-8-8-

என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை உறப் பல வின் கவி சொன்ன உதவிக்கே -7-9-9-

இன்பம் பயக்க எழில் மாதர் மாதரும் தானும் இவ்வேழு உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –7-10-1-
திரு வாறன் விளை மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொலோ -2-
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -6-
அன்றி மற்று ஓன்று இலன் சரண் என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -8-
திருவாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனையே -9-
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே -10-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆள் செய்வார் -8-1-1-
எங்கு வந்துறுகோ என்னை ஆள்வானே ஏழு உலகங்களும் நீயே -8-1-6-
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -11-

கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே -8-3-2-
ஆளும் ஆளார் அலையும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -3-
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -9-

முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் அண்ட வாணா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -8-5-6-
உன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -7-

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

இருந்தான் கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாதவோர் ஐவரைத் தேய்ந்தற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு
அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து -8-

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே -9-1-1-

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி
வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -9-2-1-
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -2-
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -3-
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி -4-
எம்மிடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே -7-
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -10-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலில் பழுதில் தொல் புகழ்ப்
பாம்பணைப் புள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே -9-3-9-

அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை
குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே -9-4-10-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே -9-6-1-
தென் காட்கரை என்னப்பா நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே -2-
ஆள் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால் கோள் குறைபட்டது என்னாருயிர் கோள் உண்டே -7-
தென் காட்கரை என் அப்பருக்கு ஆள் அன்றே பட்டது என்னாருயிர் பட்டதே -8-

நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-
நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -7–
அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை
என் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -8-
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி யுறையும் திரு நாவாய் -9-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட காலை மாலை கமல மலரிட்டு நீர் வேலை மோதும்
மதிள் சூழ் திருக் கண்ண புரத்து ஆலின் மேல் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி –9-
குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே -11-

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே -10-1-4-
திருமோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே -7-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே -11-

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வார் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே -10-2-6–
வயல் அணி யனந்த புரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே -7-
எழில் அணி அனந்த புரம் படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -8-
செறி பொழில் அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே -9-
அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள்
நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -10-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -10-3-6–

என்றும் திரு மெய்யம் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருவினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே -10-4-2-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -3-
பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி
மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே -7-

ஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணையான் தாள் வாய் மலர் இட்டு நாள் வாய் நாடீரே -10-5-4–
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -5-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே -7-

தேன் ஏறு மலர்த்துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே -10-6-5–
பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியாருக்கு ஆள் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே -10-

செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மாலிருஞ்சோலை வஞ்சக கள்வன் மா மாயன் மாயாக் கவியாய் வந்து
என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை யுண்டு தானே யாகி நிறைந்தானே -10-7-1-
திருமாலிருஞ்சோலை யானேயாகித் செழு மூ உலகும் தன் ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து
ஊழி யூழி தலை யளிக்கும் திருமால் என்னை ஆளுமால் -6-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையில் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே -10-8-3-
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே -7-
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-
குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே -11-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-

எனக்கு ஆராவமுதாய எனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-10-10-6-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழாயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -11-

—————————————————

அரி வுருவும் ஆளுருவுமாகி –முதல் திருவந்தாதி -31-

திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90-

முத்தீ மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இரையாவான் எங்கள் பிரான்–96-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ -97-

எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-

திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே -20-

திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -59-

திருமலை மேல் எந்தைக்கு -63-

வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை –நான்முகன் -4-

நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -14-

அவன் என்னை ஆளி -30-

எம்பிரான் மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -58-

பொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவன் கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ கன்கறிந்தேன் நான் -96-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான் எம் பிரான் –திருவிருத்தம் -39-

எப்பால் யவர்க்கும் எண்ணும் இடத்ததுவோ எம்பிரான் எழில் நிறமே -43-

எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-54-

இரண்டே அடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே -61-

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே -86-

அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே -89-

ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-

கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று–பெரிய திருவந்தாதி -3-

உண்ணாட்டுத் தேசு அன்றே உள் வினையை அஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே
மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவு உற்றானாலும் ஆளி யம் கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு -79-

தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடித்தான் எம்பெருமான் –சிறிய திருமடல்

அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக் காலத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –இந்நிலைமை எல்லாம் அறிவித்தால்
எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -பெரிய திருமடல்-

அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–இராமானுச நூற்றந்தாதி -51-

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆள வந்த கற்பகம் -53-

ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசனை -90-

உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -107-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -பரியனாகி வந்த /-ஆல மா மரத்தினிலை /-கொண்டல் வண்ணனை–வியாக்யானம் –

February 2, 2019

அவதாரிகை –
தன்னை ஜிதம் தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந -நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –
இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே விழப் பண்ணி
மேன் மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு தாம் அற்றுத் தீர்ந்த படியை –
ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக்கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்துவிட்டன.

வியாக்யானம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –
சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் –
மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
ஒரு வாழை மடலைக் கிழிக்குமா போலே இரண்டு கூறு செய்தவனாய்

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தன்னாலே ஸ்ருஷ்டருமாய் உபக்ருதருமான தேவர்கள் –
தான் காரண பூதனாய் -உபாகாரகனாய் நிற்கிற நிலை அறிய மாட்டாமையாலே அவர்களுக்கு
ப்ரஹ்லாதன் அனுபவித்தாப் போலே அணுகவும் அநுபவிக்கவும் அரியனாய் இருக்கிற

அரங்கத்தமலன் முகத்து –
ஹேய பிரசுரமான சம்சாரத்துக்கு உள்ளே கோயில் ஆழ்வார் உடன் எழுந்தருளி வந்து –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்று இருப்பார்
தம்முடைய திருவடிகளை அடைந்து அடி சூடி உய்யும் படி அவர்களுடைய
ஐயப்பாடு முதலான ஹேயங்களை அறுத்துத் தோன்றும் அழகை வுடையரான பெரிய பெருமாள் உடைய
கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் கோள் இழைத் தண் முத்தமும் தளிர்க்கும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா யுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் -7-7 8—இத்யாதிகளால் பேசப்பட்ட
பேர் அழகை வுடைத்தே சந்திரனும் தாமரையும் ஒன்றினால் போலே இருக்கிற திரு முகத்தில்-

கரியவாகிப் புடை படர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள் –
நிகர் இல்லாத நீல ரத்னம் போலே இருக்கிற தாரைகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய் –
ஆஸ்ரீத தர்சன ப்ரீதியாலே அன்று அலர்ந்த தாமரைப் பூ போலே அதி விகசிதங்களாய் –
ஆசன்னர் எல்லாம் பக்கலிலும் ஆதரம் தோன்றும்படியான உல்லாசத்தை வுடையவையாய் –
அனந்யர் பக்கல் அநு ராகத்துக்குக் கீற்று எடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே வ்யாப்தங்களாய் –
ஸ்வபாவ சித்தங்களான ஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –

அப் பெரிய –
என்றதுக்கு இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய்
அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும் மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்

என்னைப் பேதைமை செய்தனவே –
இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

————————————–

அவதாரிகை –

அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் –
நித்ய அநுபவ ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-

பதவுரை

மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் –
ஓர் அவாந்தர பிரளயத்திலே -ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ -என்று
அறிய அரியதாய் அநந்த சாகமாய் இருப்பதொரு வட வருஷத்திலே ஓர் இலையிலே தாயும் தந்தையும்
இல்லாத தொரு தனிக் குழவியாய்

ஞாலம் ஏழும் உண்டான் –
அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்தவன் –
ய ச தேவோ மயா த்ருஷ்டா புரா பத்மய தேஷண-ச ஏஷ புருஷ வ்யாக்ர சம்பந்தீ தே ஜனார்த்தந
ஸர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -கச்சத்வ மேநம் சரணம் சரணம் புருஷர்ஷபா —
பாண்டவர்கள் இடம் மார்க்கண்டேயன் சொன்னது
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம் மேல் ஒரு நாள் உண்டவனே-

அரங்கத்து அரவின் அணையான் –
பிரளய காலத்திலே பாலனாய்க் கொண்டு ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளுகிற போதோடு
சர்வ காலத்திலும் கோயில் ஆழ்வார்க்கு உள்ளே ஸூரிகளுக்கு எல்லாம் தலைவரான திருவனந்தாழ்வான் மேலே –
உலகுக்கு ஓர் தனியப்பன் -என்னும்படி தன் பிரஜைகளான ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க கண் வளர்ந்து அருளுகிற போதோடு
வாசியறக் காரணத்வ ரஷகத்வாதிகள் காணலாம்படியாய் இருக்கிற பெரிய பெருமாளுடைய
(பிரளய காலத்தில் இருந்தவன் என்பதால் காரணத்வமும்
உண்டவன் என்பதால் ரக்ஷகத்வமும் தேரும் )
வாசியற
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்வரூப ஸ்வபாவங்களுடனே பூ உலகிலும் பிறந்த

கோல மா மணி யாரமும் –
நாய்ச்சியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற திரு மார்வுக்கு
ஒரு ரத்ன ப்ரகாரம் போலே -அபி ரூபமாய் -அதி மஹத்தாய் -மஹார்க்க ரத்னமான திருவாரமும் –

முத்துத் தாமமும் –
சந்நவீரமாயும் ஏகவாளியாயும் -த்ரி சரமாயும் -பஞ்ச சரமாயும் உள்ள திரு முத்து வடங்களும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
இவை தனக்கும் அதிசயகரமாய் -அநந்தமய –
அத்விதீயமான ஆபி ரூப்யத்தை உடைத்தாய் -காளமேகம் போலே ஸ்ரமஹரமான திருமேனியும்
ஆபரணங்களுக்கு முடி இல்லாதோர் எழிலை உண்டாக்கும் படியான நீலமேனி என்னவுமாம்
குணா ஸத்ய ஞான ப்ரப்ருத்ய யூத த்வத் கத தயா சுபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதி வசாத் -ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஞானாதி குணங்கள் உம்மை அடைந்து மங்களைத் தன்மை அடைந்தது போலே
திரு முத்து வடங்களுக்கு மேன்மையூட்டும் படியான நீல மேனி -என்றவாறு

ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித் தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே
முன்புற்ற பூர்ணத்வ அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை கழித்து
இப் பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று

————————————————–

அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன்
என்னுமது ஒழிய இப்ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு பெரிய பெருமாள்
இனி ஒரு விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு –
தம்முடைய ஆத்மாவதியான அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி
அநாதி காலம் பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே ——-10–

பதவுரை

கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவையுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.

வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் திரு மந்த்ரமும் -சரம ஸ்லோகங்களும் — அறியாத இடையரையும் இடைச்சிகளையும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்ச்சியர்- ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய்
சீரார் கலை அல்குல் சீரடி செந்துவர் வாய் வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய் சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை —
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமியேற்று வன் கூன் கோட்டிடை ஆடினை கூற்று
அடலாயர் தம் கொம்பினுக்கே –திருவிருத்தம் -21- படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-

என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய்-ஸஜ்ஜனஸ்ய ஹ்ருதயம் நவநீதம் -போலே
இவருடைய திரு உள்ளம் பெரிய பெருமாளுக்கு நவநீதம் ஆயிற்று –
ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள் வடிம்பிடுகிற என்னுடைய மனஸை –
வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும் வசீகரித்து –
இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –

அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி -அண்டாதிபதியான ப்ரஹ்மா
முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் என்கிறார் ஆகவுமாம் –
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியான் இமையோர்க்கும் சாழலே–பெரிய திருமொழி -11-5-5-

அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை

என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச்சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
அன்றிக்கே-
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம் போல் அன்றிக்கே –
அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான அம்ருதமானவனை என்னவுமாம்-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது –
இப்படி பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர் மமத்தோடே சேர்ந்த இம் மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது

மற்று ஒன்றினைக் காணாவே-
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் –
ராஜ போக விருத்தங்களான ஜூகுப்சித விஷயங்களிலே தனக்குப் பேறும் இழவுமாக-ஹர்ஷ சோகங்களாக –
அவற்றைக் கண்ட போது ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை அநுபவிக்கப் பெற்ற கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே-
தவாம்ருதஸ் யந்தினி பாத பங்ஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி -ஸ்திதேரவிந்த மகரந்த
நிர்ப்பரே மதுவ்ர்தோ நே ஷுரகம் ந வீக்ஷதே

மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே
ப்ரஹ்ம புத்ரர்களாய்
ஸூ தப்தம் வஸ்தபோ விப்ரா பிரஸந்நே நாந்த ராத்மநா -யூயம் ஜிஜ்ஞாசவோ பக்தா கதம்
த்ர்யஷத தம் விபும் என்னும் அளவான
ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –

ப்ராப்ய ஸ்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ் ஸூ பூஜித -என்று ஸ்ரீ நாரத பகவான் அளவிலும்
அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது

உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-

நாரத பகவான் ஸ்வேத தீபம் அடைந்து -வெள்ளை நிறத்தவர் -சந்திரன் போன்ற தேஜஸ் உள்ள அப்புருஷர்களைக் கண்டு
மனசாலே பூஜித்து தலையால் வணங்க எம்பெருமான் இனிதாக -இங்கு இருந்து விரைவிலே செல் –
இவர்கள் இந்த்ரியமும் உணவும் அற்றவர்கள் –
என் அடியார்கள் சந்திரன் போல் தேஜஸ் உள்ளவர்கள் -ஒரே நினைவுடன் த்யானிப்பவர்கள்
இவர்கள் தியானத்துக்கு இடையூறு நேரக்கூடாது -என்று அருளிச் செய்தார்

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்
அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ யபதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே
ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித –பக்திச்ச நுயதா வீர பாவோ நான்யத்ர கச்சதி -40-15–
என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே-

வேதத்தின் முதல் அக்ஷரமாகிய பிரணவம் என்னும்படி உயர்ந்து நிற்கும் ப்ரணவாகார விமானத்துக்கு உள்ளே
கருணைக் கடலாம் அரங்கனைக் கண்டு அனுபவித்த திருப் பாண் ஆழ்வாரால் அருளப்பட்டதும்
ரஹஸ்யார்த்தங்களைப் பொதிந்து கொண்டு இருப்பதால் நித்ய அனுசந்தானமாயும் உள்ள
இப்பத்து பாசுரங்களை கதியாக அனுசந்தித்தோம்
தத்வங்களின் ஸ்வரூபம் அறிந்த போதிலும் யுக்திகள் அறியாதவர்களுக்கு
இப்பிரபந்தமே உறுதி அளிக்கும் என்பதாகக் கொண்டு
பகவத் அனுபவத்தை அடைய விரும்பினோம் -வேதாந்திகள் வியாக்யானங்களுக்கு எல்லாம்
இப்பிரபந்தமே வித்தாகும் என்று கூறினோம்

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே-

பார்ப்பதும் பேசுவதும் வெவ்வேறு வஸ்துவாக இல்லாமல் எம்பெருமானையே கண்டு –
அவனையே பேசியவரும் -மிகுந்த பக்தி உடையவருமான திருப் பாண் ஆழ்வார் அருளிய இவை
வேத சாரம் என்று விளக்கிக் கொண்டாடுகிறோம்
அரங்கன் வேதாந்தாசார்யர் என்று புகழும்படி ஆனோம் -இருப்பினும் அஹங்காரம் கொள்ள மாட்டோம்
நமக்கு பிரிய ஹிதம் அளிக்கும் ஆச்சார்யர்கள் கிருபை உண்டு என்று விஸ்வஸித்து நிற்போம்

இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்–
சாத்விகர் உகப்புக்காக விரித்து வியாக்யானம் அருளிச் செய்தார்

முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –
இத்தை அனுபவிக்கும் போகம் ப்ரஹ்மானந்த முக்த போகம் ஒக்கும் –

—————————-

திருமந்த்ரார்த்தங்கள்
அகாரம் -லுப்த சதுர்த்தி -பகவத் சேஷத்வ பர்யவசானம் -அமலன்
உகாரம் -அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி -உவந்த
மகாரம் -சேதன அசேதன கர்ம அதிகாரத்துவம் -மந்தி பாய்
நம-அஹங்கார மமகார நிவ்ருத்தி -சதுர மதிள்
நாராயண -உபாய உபேயங்களுக்குத் தேவையான -ஸுலப்ய -ஸுசீல்யம் –
நராஜ்ஜாதாநி தத்வாநி -பாரமாய் -துண்ட வெண் பிறையன்
ஆய -கைங்கர்ய அனுபவம் -பரவசம் ஆக்கியது -கையார் -பரியனாய் -ஆல மா -கொண்டல்

திருவாய் மொழிக்கு ஸங்க்ரஹம் முதல் திருவாய் மொழி -அதுக்கு ஸங்க்ரஹம் முதல் மூன்று பாசுரங்கள் –
அதுக்கு ஸங்க்ரஹம் முதல் பாசுரம் போலே இப்பிரபந்தத்துக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம்
குருகேசன் அங்கி -மற்றைய ஆழ்வார்கள் அங்கங்கள் -திரு விருத்தம் ரிக்வேத சாரம்
விஷயாந்தர பற்று அற்று அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று பரபக்தி நிஷ்டையில் அருளிச் செய்தது
திருவாசிரியம் யஜுர் வேத சாரம்
ஓம் இத் அக்ரே வ்யாஹரேத்–நம இதி பச்சாத் -நாராயணாயேத் யுபரிஷ்டாத்
ஓம் இத் ஏக அக்ஷரம் -நம இதி தவே அஷரே – நாராயணாயேதி பஞ்ச அக்ஷராணி
ஏதத்வை நாராயணஸ்ய அஷ்டாக்ஷரம் பதம் -யோ ஹை வை நாராயணஸ்ய அஷ்டாக்ஷரம் பதமத்யேதி –
இதி நாராயண அதர்வ சிர உபநிஷத் என்று சிலரும்
யஜுஸ் சாகையில் அந்தர்கதம் என்றும் சிலரும் சொல்வர்
பரஞான தசையில் தர்சன சாமாந காரமான அனுபவம்
இது வேண்டுதல் ஏதும் இன்றி தனிப்பெரும் நாயக மூவுலகளந்த சேவடியோயே -என்ற
அனுபவ மாத்ரம் அருளிச் செய்வதால் தெளியும் –

இப் பிரபந்தம் யஜுர் வேத சாரமாம் திருமந்த்ரார்த்தம் -எல்லா வேதங்களும் அஷ்டாக்ஷரார்தம்-விளக்குபவையே
கண்ணா நான் முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை
ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்க யசுச் சாம நாண் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்தறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே பெரியாழ்வார் -5-1-6-

இப் பிரபந்தமும் பரஞான தசையிலே அருளிச் செய்ததாய் உள்ளது

இப் ப்ரபந்தம் அதி விஸ்தரம் அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம் ( விஷயம் விளங்காமை )
துரவபோதார்த்த்வம் ( பொருள் விளங்காமை ) சம்சயாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில்- ( வேதாத்மா நூல்கள்) உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கநரசமாய் ( அனுபவத்தின் திரண்ட ரசம் ) இருக்கிறது –
அனுபவ ரசம் பிரபந்தம் தலைக்கட்டும் பொழுதும்
ஊரும் பேரும் மறக்கும்படி -திருவாசிரியத்தில் நம்மாழ்வாரைப் போலவே உண்டே

இப் பிரபந்தம் -திருவாசிரியம் ஒற்றுமை மேலும் –இங்கும் அங்கும் —
அரைச் சிவந்த ஆடை –செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர் பரிதி சூடி / பீதக வாடை
உலகம் அளந்து -மூவுலகளந்த சேவடியோயே
கோல மணி யாரமும் முத்துத் தாமமும் -பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து
செய்ய வாய் -வாயுவும்
பெரிய கண்கள் -கண்ணவும்
நீல மேனி -மரகதக் குன்றம் / பச்சை மேனி
முடி -நீள் முடியன்
சமுதாய சோபை நீல மேனி ஐயோ -பச்சை மேனி மிகைப் பயப்ப
அரவிந் அணை மிசை மேய -நச்சுவினைக் கவர் தலை அரவின் அமளி ஏறி
பரிசர்யார்த்தமாக பார்ச வர்த்திகள் -பத்ம யோனி -உந்தி மேல் நான்முகன் -சிவன் அயன் இந்திரன் —
தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடக்க
திருக் கமலபாதம் -சேவடி
ஐயோ –
முற்றும் உண்ட கண்டம் -ஞாலம் ஏழும் உண்டான் -உலகு படைத்து உண்ட எந்தை
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன –அறை கழல் சுடர் பூந் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர்
மற்று ஒன்றினைக் காணாவே -மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்ளுவது எண்ணுமோ
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -மூ உலகும் விளைத்த உந்தி
மேலே கவிழ்த்த கனக சத்ரம் போலே -மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் -முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த

—————————-

பெரியாழ்வாரும் திருப்பாணாழ்வாரும்
கல்ப ஸூத்ர வ்யாக்யாதாவாக நின்ற போதிலும் ரிஷிகளை போலே கரையிலே நின்று சொல்லிப் போகை அன்றிக்கே
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்றபடி
பாவநா பிரகர்ஷத்தாலே யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை தான் அவர்களாகப் பேசி அவதார குண சேஷ்டிதங்களை அனுபவித்தவர்
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ சோபையில் திவ்ய அவயவங்கள் தோறும் தம்மை இழந்து
பேதைக் குளவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் -1-2-1-
பத்து விரலும் -2-
கணைக் கால் -3-
முழந்தாள் -4-
குறங்குகள்-5-
முத்தம் -6-
நெருங்கு பவளமும் நேர் நானும் முத்தும் மருங்கும் -7-
அழகிய உந்தி -8-
பழந்தாம்பால் ஆர்த்த உதரம்-9-
குரு மா மணிப் பூந் குலாவித் திகழும் திரு மார்பு -10-
தோள்கள் -11-
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் -12-
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் -13 –
செந்தொண்டை -14-
வாக்கும் ஞானமும் வாயும் முறுவலும் மூக்கும் -15-
கண்கள் -16-
புருவம் -17-
மகரக்குழை -18-
நெற்றி -19-
குழல்கள் -20-
திருப் பாத கேசத்தை தென் புதுவைப் பட்டன் விருப்பால் உரைத்த -21-உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே
சாஷாத் ஸ்ரீ ரெங்க நாதஸ்ய ஸ்வ ஸூரரான விஷ்ணு சித்தர் கருட வாஹனனை அனுபவித்து
அருளிச் செய்தது போலவே
முனி வாஹனரும் இங்கே அனுபவித்து அருளிச் செய்கிறார்

————————

திரு அவதார நஷத்தால் -கார்த்திகை -ரோஹிணி -முன்னும் திரு அவதாரத்தால் பின்னும் கலியன்
இருவர் பிரபந்தங்களும் அஷ்டாக்ஷரமே கரு –
மோக்ஷ பிரதத்வம் -ஜகத் காரணத்வம் ரக்ஷகத்வம் -அமலன் -ஆதி -பிரான் போலவே
திரு ஏழு கூற்று இருக்கையில் உந்தியில் அயனைப் படைப்பதில் –ஒரு சிலை ஒன்றி வாளியில் அட்டதையும் -அருளிச் செய்கிறார்

இவற்றை ஒப்பு நோக்குவோம் -இங்கும் அங்கும் –
ஓர் எழில் உந்தி மேலது அன்றோ –ஒரு பேர் உந்தி –
அயனைப் படைத்த -ஒரு முறை அயனை ஈன்றனை
வெங்கணை காகுத்தன் –சதுர –வெங்கணை உய்த்தவன் –இலங்கை –வாளியில் அட்டனை
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற –நிவந்த நீள் முடியன் -மூவடி நானிலம் வேண்டி ஈரடி மூவுலகு அளந்தனை
அமரர்க்கு அரிய ஆதிப்பிரான் -ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
முற்றும் உண்ட கண்டம் -ஞாலம் ஏழும் உண்ட -ஏழு உலகு வயிற்றினில் கொண்டானை
கொண்டல் வண்ணனை -முந்நீர் வண்ண
கடியார் பொழில் -அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் –குன்றா மது மலர்ச் சோலை
அரவின் அணை மிசை மேய மாயனார் -ஆடு அரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம
திருக் கமல பாதம் வந்து -நின் அடியிணை பணிவன்
பாரமாய பழ வினை பற்று அறுத்து -வேங்கடவன் -வரும் இடர் அகல மாற்றோ வினையே

—————————-

திருப்பாணாழ்வார் பின்னடி நடக்கும் தூப்புல் புனிதன்
புகல் அறிவார் முன்னாடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப் பின்னடி பார்த்து வர்த்திப்பதே க்ருத்யம்
மாறன் துணை அடிக்கீழ் வாழ்வை உகப்பவர்
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன்
வானில் மால் கருட வாஹனனாயத் தோன்ற வாழ்த்தும் ஸ்ரீ விஷ்ணு சித்தரை வணங்குபவர்
பாணர் தாள் பரவி நிற்பவர்
பகவத் த்யான சோபனம் –தேவ நாயக பஞ்சாசத் -அச்சுத சதகம் -அச்சுய சயயம் இவற்றில் –
அரங்கன் -தேவ பெருமாள் -அயிந்தை நகர மேய அப்பன் இவர்களின்
திவ்ய அவயவ சமுதாய சோபைகளில் அனுபவித்து தம்மை இகழ்க்கிறார்

திருக் கமல பாதம் வந்து –பாதாம் போஜம் பிரதி பலதி மே பாவநா தீர்க்கி காயம் -பகவத் த்யான சோபனம்-2-
கமண கண ஜணிய ஸூரணஇ பசமிய தெல்லொக்க பாயயம் பது பதுமம் -அச்சுத சதகம்-43-

அரைச் சிவந்த ஆடை –மஹுக இடவ சோனிய படல பரிபாடலம்பர –அச்சுத சதகம்-40-
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -நாலீ கேன ஸ்புரித ரஜசா வேதஸோ நிர்மிமாணா ரம்யா வர்த்தத்யுதி ஸஹ சரீ
ரெங்க நாதஸ்ய நாபி –பகவத் த்யான சோபனம்-5-/ ணாஹி ருஹம் –பம்ஹ பமரம் -அச்சுத சதகம்-39-

திரு வயிற்று -பம்ஹண்டேஹி விபரியம் –உயரம் -அச்சுத சதகம்-38-

திருவார மார்பு -ஸ்ரீ பத ந்யாச தந்யம் –சந்த்ரி கோதார ஹாரம் –மத்யம் பாஹோ -பகவத் த்யான சோபனம்-6-
ஸ்ரீ வத்ச கௌஸ்துப ரமா வனமாலிக அங்கம் பாஹு மத்யம் -தேவ நாயக பஞ்சாசத்-32-டிர வனமாலம் வச்சம் -அச்சுத சதகம்-36-

உண்ட கண்டம் –கண்டே குணீ பவதி –தேவ நாயக பஞ்சாசத்-28-

செய்ய வாய் -ஸ்மித விகசிதம் சாரு பிம்பா தரோஷ்டம்–ஆருண்ய பல்லவித பிம்பாதரம் -தேவ நாயக பஞ்சாசத்-27-

கரியவாகி –கண்கள் –ஸ்வாந்தே காடம் மம விலகதி ஸ்வாகத உதார நேத்ரம்– பகவத் த்யான சோபனம்–8-
ஸ்நிக்தா யதம் ப்ரதிமசாலி விலோசநம் -தேவ நாயக பஞ்சாசத்–24–
பதும சரிச்ச ப்பசண்ண லோயண ஜூயளம் -c–35-

எழில் நீல மேனி நெஞ்சினையே –மத்யே ரங்கம் மம ச ஹ்ருதயே வர்த்தே சாவரோத-பகவத் த்யான சோபனம்-11-
ப்ரத்யங்க பூர்ண ஸூஷமா ஸூபகம் வபுஸ்தே த்ருஷ்ட்வா த்ருசவ் ந த்ருப்யதோ மே -தேவ நாயக பஞ்சாசத்–14–
சாமம் துஜ்ஜ தணும்–ணிஹம் வ பெச்சந்தி துமம் –தேவ நாயக பஞ்சாசத்–45-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் –பாரமாய பழ வினை/துண்ட வெண் பிறையன்/பரியனாகி வந்த–வியாக்யானம் –

February 2, 2019

அவதாரிகை-

மேல் இரண்டு பாட்டில் –
நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பையும்
திருக் கழுத்தையும் அனுபவிக்கிறார் –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே ————-5-

பதவுரை
பாரம் ஆய–பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத்திருமார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப்படுத்திக் கொண்டது.

வியாக்யானம்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து –
கால தத்வம் உள்ளதனையும் ப்ராயாச் சித்தம் பண்ணினாலும் கழிக்க ஒண்ணாத படி
உபசிதமாய்க் கொண்டு-சேர்த்துக் கொண்டு-அநாதி காலம் நடக்கிற சம்சாரிக கர்மக லாபத்தை
(யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநு பவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே)
ச வாசனமாக என்னுடன் துவக்கு அறுத்து

என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் –
இப்படி கர்ம பரவசனாய் இந்த்ரிய கிங்கரனாய் தாத்ருசரான இந்த்ராதிகளை எடுத்துச்
சுமந்து தனிசு தீராதே ( வட்டி மட்டும் செலுத்தும் )-பொலிசை இறுத்துத் திரிகிற என்னை –
அபஹத பாப்மாவாய் ஸ்வாமி பாவத்துக்கு எல்லை நிலமாய் ஸூரி போக்யனான
தன்னுடைய அந்தபுர ஸ்திரீகளைப் போலே அன்யர்க்கு கூறு இல்லாதபடி பண்ணி
அசாதாரண கைங்கர்ய ரசத்தை -தந்து இது மேல் ஒரு காலத்திலும் மாறாதபடி வைத்தான் –

வைத்ததன்றி என்னுள் புகுந்தான் –
அநந்யனாக்கி வைத்த வளவன்றிக்கே முன்பு பிரயோஜ நாந்தர ப்ரவணனான
என்னுடைய ஹ்ருதயத்தில் அநந்ய பிரயோஜன அநுபவ விஷயமாக்கிக் கொண்டு –
தஸ்யு பரிக்ருஹீதமான தன் படை வீட்டிலே தஸ்யுக்களை ஒட்டி புகுருமா போலே புகுந்தான் –

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –
அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய் இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்
இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி( மிகைப்படுத்தி ஊஹித்த படி )-சர்வ சம்சார நிவர்தகமாய்-
அமோகமாய் இருப்பதொரு –
மோஷ யிஷ்யாமி -என்கிற சங்கல்ப ரூபமான தபசி பண்ணினான் என்று தாத்பர்யம் –

அங்கன் அன்றிக்கே –
இப் பெரிய பேறு பெறுகைக்கு அயோயனான நான் இதுக்கு அநு ரூபமாய் அமோகமாய்
இருப்பதொரு மகா தபசி பண்ணிப் பெற்றேன் அல்லேன் –
இதுக்கு –
ப்ரியமிதர ததாபி வா யத்யதா விதரசி வரதப்ரபோ த்வம் ஹி மே தத் அநு பவநமேவ யுக்தம் ஹி மே
த்வயி நிஹித பரோஸ்ஸ்மி சோஸ்ஹம் யத -என்றும் –
தவ பரோஹம் அகாரிஷி தார்மிகை சரணம் இத்யபி வாச முதைரிரம்- இதி ச சாக்ஷி கயந்நித மத்ய மாம் குரு
பரம் தவ ரங்க துரந்தர–ஆச்சார்யர்களால் நான் தேவரீருக்கு பரமாகச் சமர்ப்பிக்கப் பட்டேன் -என்றும் சொல்லுகிறபடியே –
இப்போது நானும் பிறரும் அறியலாவது எனக்கொரு தபஸ் காண்கிறிலேன் -என்று ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத் பர்யமாகவுமாம்-
(குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம்மீசனே —90-
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணார விந்தே )

இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத-மாறாத- சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –

அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சஹிஷ்ணுவாய்க் கொண்டு -( அனைத்தையும் பொறுப்பவன்)-
கோயில் ஆழ்வாருக்கு உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய் நின்றது –

இப்பாட்டில்-பதங்களின் அடைவே-நாராயண சப்தத்தில் விவஷிதமான
1-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
2-இஷ்ட -ப்ராபகத்வமும் –
3/4-உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் படியும்
5-நித்ய -கிருபையும்
6-உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
7-ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமித்வமும்
8-சர்வ அநு குணமான ஸ்ரீ ய பதித்வமும்
9-பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
10-நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
11-தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்–அனுசந்தேயம்

நாராயண சப்தார்த்தம்
1-அஷ்ட நிவர்த்தகம் –பழ வினை பற்று அறுத்து
2-இஷ்ட ப்ராபகத்வம் -வாரமாக்கி வைத்தான்
3-பஹிர் வ்யாப்தி -வாரமாக்கி வைத்தான்
4-அந்தர் வ்யாப்தி -என்னுள் புகுந்தான்
5-நித்ய கிருபை -கோர மாதவம்
6-ஸுலப்யம் -செய்தனன்
7-ஸ்வாமித்வம் -அரங்கத்தம்மான்
8-ஸ்ரீ யபதித்தவம் -திரு
9-திவ்ய மங்கள விக்ரஹ யோகம் -ஆர மார்பு
10-தாஸ பூத ஸ்வரூபம் -அடியேனை
11-தாஸ்ய பல கைங்கர்யம் -ஆட்கொண்டதே

—————————–

அவதாரிகை –

கீழ்ப் பாட்டில்
கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான
நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம் நிராகரித்த படியை -அருளிச் செய்தார் –
இப் பாட்டில்
ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை-இஹ லோக செல்வ நசையை- கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —————6-

பதவுரை

துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண்பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகையுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுதுசெய்த
கண்டம் கண்டீர்-திருக்கழுத்துக்கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது

வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
ஈஸ்வரன் என்று பேரைச் சுமந்த தனக்கும் பூரணத்வம் இல்லை என்கைக்கு ஜ்ஞாபகம் போலே
சகல மாத்ரமாய்க் கொண்டு பிரகாசிக்கிற சந்திர கலையை தரிக்கிற ருத்ரன் ப்ரஹ்மாவினுடைய புத்ரனாய் வைத்து –
பிதாவின் திறத்திலே அபராதம் பண்ணி -அத்தாலே மஹா பாதகா க்ராந்தனாய் -இப்பாதகத்தை தீர்க்க வல்லார் ஆர் -என்று
கரகலித கபாலனாய்க் கொண்டு திரிந்து -ஓர் அளவிலே கெடு மரக்கலம் கரை சேர்ந்தாப் போலே
காருணிகனான சர்வேஸ்வரனை வந்து கண்டு –
என்னெந்தாய் சாபம் தீர் -என்ன-இவனுடைய சாபத்தைத் தீர்க்க -வல்லவன் –

இத்தால்
ஈஸ்வரன் என்று பேருடைய ருத்ரன் கர்ம வைஷ்யன் என்னும் இடமும்
தன்னைத் தான் ரஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறு ஒருத்தருக்கு நிரபேஷை ரஷகனாக மாட்டான் என்னும் இடமும்
சர்வேஸ்வரனே சர்வ அநிஷ்ட நிவர்த்தகன் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
ஆர்த்தி வுடையார் அபேஷித்தால் அவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணுகைக்கும்
(தருமன் விடத் தான் தூது போனார் வந்தார் )
மாசில் மலரடிக் கீழ் அவர்களை சேர்க்கைக்கும் ஹேதுவான கதிக்கு சாதனங்களாய் –
(எம் மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே–திரு விருத்தம் -54-)
அபி ரூபங்களான சிறகுகளை உடைத்தான வண்டுகள்
அபிமத போகத்தோடே வாழுகிற திவ்ய உத்யானங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ ரெங்க நகரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற சேவை லோக பிதாவானவன் –

இத்தால்-
காரண பூதனாய் –
கரண களேபரங்களை கொடுத்து உபகரித்தவன் கண்ணுக்கு இலக்காய் வந்து கண் வளர்ந்து –
கரணங்கள் பட்டி புகுராதபடி காக்கிற உபகார அதிசயத்தை உதாஹரிக்கிறது -ஆகிறது –
(உடையவன் உடைமையை ரஷிக்கையும் ஸமர்த்தன் அசமர்த்தனை ரஷிக்கையும்
பிராப்தம் இறே-பிரதான பிரதிதந்தர அதிகாரம் )
ந ராஜ் ஜாதாநி தத்வான் -இத்யாதிகளின் அர்த்தமும்-இங்கே அனுசந்தேயம்

காரண அவஸ்தையில் எல்லாக் கார்யங்களையும் தன் பக்கலிலே உப சம்ஹரித்து
பின்பு ஸ்ருஷ்டிக்கும் படிக்கு உதாஹரணமாக -வெற்றிப் போர்க் கடலைரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட உபகாரத்தைக் காட்டி –
நெற்றி மேல் கண்ணானும் நான் முகனும் – முதலாக -எம்பெருமான் உண்டு உமிழ்ந்த
எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்னும்
அர்த்தத்தை பேசிக் கொண்டு தம்மை இப்போது சம்சார ஆர்ணவம் விழுங்காதபடி
உய்யக் கொண்ட படியை உபாலாலிக்கிறார்-

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்சா சத கோடி-ஐம்பது கோடி யோஜனை பரந்த
விஸ்தீரணையான- மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம் என்று தோன்றுகிறது-

—————————————–

அவதாரிகை-

கீழே நாலு பாட்டாலே
ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் -இதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு
திருமுடி யளவும் சென்று மீண்ட சிந்தையை
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -7-7-3–என்னும்படியான
திருப் பவளத்தில் அழகு தன் வசம் ஆக்கிற்று என்கிறார்-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ————7–

பதவுரை

கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தியிருக்கிற
சுரி சங்கு-சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள்முடி–உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப்பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
திருக் கைக்கு ஆயுதமாகைக்கும் ஆபரணம் ஆகைக்கும் போரும் என்னும்படி ஆர்ந்த சந்நிவேசத்தை உடைத்தாய் –
அவலம்புரியான வடிவாலே ப்ரணவ் சந்நிவேசமாய்
சப்த ப்ரஹ்ம மயமாய் -நிரதிசய ஆநந்த ஹேதுவான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் –
தாநவ வநதா வக்னியாய்-அரக்கராம் காட்டுக்குத் தீ போன்ற -மனஸ் தத்வ அபிமானியான –
மனம் திகிரியாக -திருவாழி யாழ்வானையும் உடையராய் –
( ராம அக்நிம் ஸஹஸா தீப்தம் ந பிரவேஷ்டும் த்வம் அர்ஹஸி–37-15 -ராவணன் இடம் மாரீசன் வார்த்தை )
இத்தால் –
மந்தரத்தையும் மனசையும் அநுகூல சிந்தைக்கு அனுகுணம் ஆக்க வில்ல உப கரணங்களை உடையவர் என்றது ஆய்த்து –
(நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் -பெரியாழ்வார் -1-3–12-)
திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக்கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
பெருமாள் திரு மேனியிலே தோன்றி நிற்பர்கள்-

நீள் வரை போல் மெய்யனார் –
ஸ்வரூபம் போலே சூஷ்ம த்ருஷ்டிகள் காணும் அளவன்றிக்கே
மாம்ச சஷூஸ்ஸூக்களும் காணலாம் படி மலை இலக்கான திருமேனியை வுடையவர்

துளப விரையார் கமழ் நீண் முடி எம் ஐயனார் –
சர்வாதிகத்வ ஸூசகமான திருத் துழாயின் பரிமளத்தைப் பரி பூர்ணம் ஆக்கும்படி கமழ்ந்து –
(வானோர் தலைமகனாம் –சீராயின தெய்வ நல் நோய் இது –
தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே –திரு விருத்தம் -53- )
விபூதி த்வய சாம்ராஜ்ய வ்யஞ்சகமான திவ்ய கிரீடத்தை வுடைய சர்வ லோக பிதாவானவர்

அணி அரங்கனார் –
பரம வ்யோம ஷீரார்ண வாதிகளைக் காட்டில் குணா திசயத்தாலே
ஆஸ்ரீதற்கு ஹ்ருத்ய தமமான படியாலே விபூதி இரண்டுக்கும் ஏக ஆபரணம் என்னலாய்
சௌலப்ய அதிசயம் உண்டாம் படியான ஸ்ரீ ரெங்க விமாநத்தை சயன ஸ்தானமாக உடையவர்
அணிமையாலே-அணு-திவ்ய மங்கள விக்ரஹத்தை சிறியதாக ஆக்கிக் கொண்டு-
அணி அரங்கனார் -என்கிறது ஆகவுமாம்

அரவின் அணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-
தம்முடைய ஜ்ஞான பலங்கள் வடிவு கொண்டால் போல
இருக்கிற திருவனந்தாழ்வான் ஆகிற ஆநுகூலதிவ்ய பர்யங்கத்தின் மேலே அளவறத்
தேங்கின அம்ருத தடாகம் போலே ஆஸ்ரீதர்கு அனுபவிக்கலாய் –
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜா ஸ்ரீ ரெங்கேசயமாஸ்ரயே சிந்தாமணி மிவோத் வாந்தம் உத் சங்கே அநந்த போகிந
என்னும்படி அத்ய ஆச்சர்ய பூதரானவருடைய
வாலியதோர் கனி கொல் -நன்கு கனிந்த ஒப்பற்ற பழம் –என்னலாம் படி வர்ண மாதர்யாதிகளை வுடைத்தாய்
(வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -பெரியாழ்வார் -1-2-6-)
வையம் ஏழும் உள்ளே காணலாம் படியான செய்ய வாய் என் சிந்தையைப் பறித்துக் கொண்டது

ஐயோ
என்று ஆச்சர்யத்தை யாதல்
அனுபவித்து ஆற்ற அரிதான படியை யாதல்
அநுபவ ரசத்தை யாதல் -காட்டுகிறது

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -உவந்த உள்ளத்த்னாய்/மந்தி பாய் /சதுர மா மதிள்-வியாக்யானம் –

February 2, 2019

அவதாரிகை –

இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் .காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே ———-2–

பதவுரை

உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்

வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜயத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
ஆர்த்தன்-அர்த்தார்த்தீ -ஜிஞ்ஞாஸூ -ஞானி நால்வருமே என்னை ஆஸ்ரயிப்பதால் உதாரர்கள் –
உதாரா சர்வ ஏவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிச்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்
(அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம் அபியாசாம வைதேஹீம் எதத்தி மம ரோஸதே -த்ரிஜடை உபதேசிக்க
ராக்ஷஸிகள் விலக்காததே பற்றாசாக அவோசத்யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ -என்று அருளிச் செய்தாலே பிராட்டி )

இழந்த ராஜ்யத்தை வேறு எவரிடம் கேளாமல் தன்னிடம் இந்திரன் கேட்டதால் உகப்பு
காஸ்யப அதிதிக்கு பிள்ளையாய் தானே அவதரித்து கொடுத்த வரத்தை நிறைவேற்றிய உகப்பு
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய உகப்பு
குருவின் உபதேசத்தையும் உபேக்ஷித்து மஹா பலி நீர் வார்த்த உகப்பு
மன்னு நமுசியை வானில் சுழற்றிய உகப்பு
இத்தை வியாஜ்யமாக சர்வ லோகத்தையும் திருவடியால் தீண்டிய உகப்பு

உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வச்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேச்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும்
அபிவ்யக்தமாய் ஆகிறது இத்த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும்
சொல்லிற்று ஆயிற்று
இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குடி இருக்க ஒண்ணாத படி த்ரைலோக்ய ஷோபம் பிறந்து –
தேவர்கள் சரணாகதராக ஆன அன்று -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரித்து தாடகா தாடகேய
விரோத கபந்த கர தூஷணாதிகளை நிராகரித்து இலங்கைக்கு பரிகையான லாவணார்ணவத்தை
பர்வதங்களாலே பண்பு செய்து கொம்பிலே தத்தித் திரியும் குரங்குப் படையைக் கொண்டு
இலங்கையை அடை மதிள் படுத்தின அன்றும்
பெருமாளுடைய பிரபாவம் அறியாதே விளக்கு விட்டில் போலே வந்து எதிர்ந்த பகல் போது
அறியாத கூட யோதிகளை எல்லாம் எனக்கு எனக்கு என்று இரையாக கைக் கொண்ட-
தீப்த பாவக சங்காசங்களான திருச் சரங்களை உடையவனாய்
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் நின்றவன் –

காகுத்தன் –
மாயாவிகளான ராஷசரும் கூட மோஹிக்கும்படி மனுஷ்ய பாவத்தை முன்னிட்டு நின்றவன்
(தீர்க்க பாஹு விசாலாக்ஷ சீர கிருஷ்ணாஜி நாம்பர -கந்தர்ப்ப ஸமரூபச்ச ராமோ தசாரதாத்மஜ -சூர்பணகா வார்த்தை )
(புத்ரவ் தசரதஸ் யாஸ்தே ஸிம்ஹ சம்ஹ ந நோ யுவா -ராமோ நாம மஹாஸ் கந்தோ வ்ருத்தாயத மஹா புஜ ஸ்யாம
ப்ருதுயஸா ஸ்ரீ மான் அ துல்ய பல விக்ரம ஹதஸ் தேந ஜனஸ் தாநே கரச்ச ஸஹ தூஷண -அகம்பனன் வார்த்தை )
(ந ச பித்ரா பரித்யக்த நா மர்யாதா கதஞ்சன -ந லுப்தோ ந ச துச் சீலோ ந ச ஷத்ரிய பாம்சன –
ந ச தர்ம குணைர் ஹீந கௌசல்யா ஆனந்த வர்த்தன-ந ச தீஷ்ணோ ஹி பூதா நாம் சர்வ பூத ஹிதே ரத
ராமோ விக்ரஹவான் தர்ம சாது ஸத்ய பராக்ரம -ராஜா ஸர்வஸ்ய லோகஸ்ய தேவாநாமிவ வாசவ
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா -ந த்வம் சமர்த்தஸ்தாம் ஹர்தும் ராம சாபாஸ்ரயம் வ நே -மாரீசன் வார்த்தை )
(சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சணீ யஸ்ய விக்ரமை பஸ்யதோ யுத்த லுப்தோஹம் க்ருத கா புருஷஸ் த்வயா -ராவணன் வார்த்தை )

காகுத்தன் –கடியார் பொழில் அரங்கத்தம்மான்
ஸூரிகள் முதலாக ஸ்தாவர ரூபங்களைக் கொண்டு நித்ய ஆமோதராய் நிற்கிற
ஆராமங்களாலே சூழப்பட்ட கோயில் ஆழ்வாருக்குள்ளே பிரஹ்மாதிகள் ஆராதிக்க
சர்வ ஸ்வாமித்வம் தோற்றக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளுடைய –

அரைச் சிவந்த வாடையின் மேல் –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம் பொற் கடிச் சோதி கலந்ததுவோ
என்னும்படி திகழா நின்ற திரு வரையிலே -மது கைடப ருதிர படலத்தாலே போலே
பாடலமாய் மரகத கிரி மேகலையில்-ஒட்டியாணத்தில் – பாலாதபம் பரந்தாப் போலே
இருக்கிற திருப் பீதாம்பர விஷயமாக

சென்றதாம் என் சிந்தனையே –
அநாதி காலம் அநு சித விஷயங்களில் ஓடி-அவர்கள் ஆடையிலே கட்டுண்ட என் சிந்தை
(கூடினேன் கூடி இளையவர் தம்மொடு அவர் தம் கலவியே கருதி—
வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வனமுலைப் பயனே பேணினேன் )
இவன் திருவடிகளைப் பற்றி என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்திலே சென்று-துவக்குண்டது
என் சிந்தனை சென்றதாம் -என்கையாலே ஆச்சர்யம் தோற்றுகிறது
சென்றது –
நாம் ப்ரேரிக்க போந்த தன்று
விஷய வைலஷண்யத்தாலே ஆக்ருஷ்டமாயிற்று –

——————————————-

அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே பகவத் சேஷத்வ பர்யவ ஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து –
(அடியார்க்கு என்னை ஆட்படுத்த -என்று முதல் பாசுரத்தால் ததீய சேஷத்வ பர்யந்தம் ஆக்கி அருளியதையும்
இரண்டாம் பாட்டால் உலகம் அளந்து அருளி-உலகமே அவனுக்கு சேஷம் -அயோக வியவச்சேதம் –
வேறு யாருக்கும் சேஷம் இல்லை அந்நிய யோக வியவச்சேதம் -)
அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் –
காதா சித்த சேஷத்வ ஞானம் உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல (சபலர் மந்தி பாய்) அநுகூல (வானவர்கள் )உபயவித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே ———-3–

பதவுரை

மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும்
அதன்மேல்–அப்பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்மஸ்வரூபம்.

வியாக்யானம் –

மந்திபாய் வடவேங்கட மாமலை
சபலரான சம்சாரிகளுக்கு நிதர்சனமான வானர வர்க்கம் -நாநா சாகைகளில் உள்ள
ஷூத்ர பலங்களை புஜிப்பதாக –
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி –
ஏவம் த்ரயீதர் மமநு ப்ரபந்நா கதா தம் காம காமா லபந்தே -ஸ்ரீ கீதை -9-21- -என்கிறபடியே -ஒன்றை விட்டு
ஒன்றிலே பாய்ந்து திரிகைக்கு நிலமாய் -கலி யுகத்திலே பாகவத் சம்பாவனை உடைத்ததாக
புராண சித்தம் ஆகையாலே ஆழ்வார்கள் அவதரிக்க பெற்ற –

(கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா -க்வசித் க்வசித் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிச –
தாம்ப்ரபரணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ-காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ
தாம்ரபர்ணீ -நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்
வைகை -பெரியாழ்வார் ஆண்டாள்
பாலாறு -முதல் ஆழ்வார் திரு மழிசைப் பிரான் ஸ்ரீ பாஷ்ய காரர்
காவேரி –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்
மேற்கே ஓடும் பெரியாறு -குலசேகர ஆழ்வார் )

அகஸ்ய பாஷா தேசத்துக்கு உத்தர அவதியாய் இருக்கிறது
புராண சித்தமாய் -ஈஸ்வரன் தன்னைப் போலே ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரபாவங்களால்
உண்டான மஹத்வத்தை உடைத்தான திருமலையிலே
(வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு -திண்ணம் இது வீடு என்னத் திகழும் வெற்பு —
புண்ணியத்தின் புகல் இது என புகழும் வெற்பு -பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு –
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு -)

வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பரம பதத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அதி க்ருதரான முக்தரும் நித்தியரும் தேச
உசிதமான தேஹங்களைக் கொண்டு உசிதமான கைங்கர்யத்தைப் பண்ணி இவர்கள்
ஆஸ்ரயிக்கைக்கு உத்தேச்யனாய் நின்றான் –

அரங்கத்தரவின் அணையான்
ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டும்படியான திருமலை ஆழ்வாரும் பரமபத ஸ்தாநீயம்
என்னும்படி எளிதாக கிட்டலாம்படியான கோயில் ஆழ்வாருக்கு உள்ளே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா வடிமை செய்யும் வானவர்களுக்கு படிமாவாய்
நிச்சேஷ ஜகத் ஆதார குருவான தன்னைத் தரிக்கைக்கு ஈடான
ஞான பல ப்ரகர்ஷத்தை உடையனாய் -ஸூரபி ஸூகுமார ஸீதளமான-( மணம் மென்மை குளிர்ச்சி )-
திரு அரவு அணையிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய-
(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு –மூன்றாம் திருவந்தாதி -53-
ச பிப்ரச் சேகரீ பூதம் அசேஷம் ஷிதி மண்டலம் –பூ மண்டலம் முழுவதையும் கொண்டை போலே சுமக்கும் சேஷன்
பணிபத சப்தேன ஸூரபி – ஸூகுமார -சீதள – விசால -உந்நதத் வாதி ரூபா பர்யங்க குணா வ்யஜ்யந்தே-
பரிமளம் -மார்த்வம் -குளுமை -அகன்று -உயர்ந்தமை )

அந்தி போல் நிறத்தாடையும்
ஆஸ்ரீதருடைய அஞ்ஞான அந்தகாரத்தை கழிக்க வல்ல சமயக் ஞான சூர்யோதததுக்கு பூர்வ சந்த்யை போலேயும்
அவர்களுடைய தாப த்ரயங்களை – ஆத்யாத்மிக-ஆதி பவ்திக -ஆதி தைவீக-கழிக்கைக்கு-
பச்சிம ஸந்த்யை -அந்திப் பொழுது -போலேயும்
புகர்த்த நிறத்தை உடைதான -செவ்வரத்த உடை யாடையும் –
இது மேலில் அனுபாவ்யத்தை அவலம்பிக்கைக்கு அனுபூதாம்சத்தை அனுவதித்த படி –
(மேலே அனுபவிக்கப் புகும் திரு உந்தியின் அழகுக்கு ஈடாய் நிற்கும் பிரகாசமுடைய -அதற்கு கரை கட்டினால் போலே
இருக்கும் ஸுந்தர்ய பிரகர்ஷத்தாலே கீழே அரைச் சிவந்த ஆடையின் மேலே சென்றதாம் என் சிந்தனையே –
என்றத்தை அனுபாஷிக்கிறார் ) மேல் அநுபாவ்யம் ஏது -என்ன –

அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி –
அநுபூதமான திருப் பீதாம்பரத்துக்கு மேலாய் -இதன் நிறத்துக்கு நிகரான சிவந்த
தாமரைப் பூவை உடைத்தாய் -அதின் மேல் வ்யஷ்டி ஸ்ருஷ்டி சமயத்தில் முற்பட
அயோநிஜனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த அத்விதீயமான அழகை உடைத்தான திரு வுந்தி
ப்ரஹ்மாவுடைய ஸ்ருஜ்யத்வம் சொல்ல -கைமுதிக ந்யாயத்தாலே ருத்ர இந்த்ராதிகள்
உடைய ஸ்ருஜ்யத்வம் சொல்லிற்றாம்
இத்தால் ப்ரதிபுத்தர்க்கு-சம்யக் ஞானம் பெற்றவர்க்கு- ஸ்ரீயபதி ஒழிய சரண்யாந்தரமும் ப்ராப்யாந்தர்மும் இல்லை என்றது ஆயிற்று
இங்கு ப்ரஹ்மாவை சொன்னது முமுஷுக்களை ஸ்ருஷ்டித்த உபகாரத்துக்கு உதாஹரணமுமாகிறது
(நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் –
ப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தைவதாஸ் ஸ்ம்ருதா-ப்ரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -)

மேலதன்றோ –
என்றது இந்த திரு வுந்தியையே அனுபாவ்யமாகக் கொண்டன்றோ இருக்கிறது என்னவுமாம்
இதனுடைய அனுபவம் இட்ட வழக்காய் இருக்கிறது என்னவுமாம்

அடியேன் உள்ளத்து இன்னுயிரே –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச சதா ச்மர -என்கிறபடியே
பரம காருணிக கடாஷத்தாலே ஸ்வபாவ தாஸ்ய ப்ரதிபோதம் உடையேனான என்னுடைய
சத்வோத்தரமான மனசிலே பிரகாசிக்கிற ஸ்வாதுதமமான என் ஆத்ம ஸ்வரூபம்
உள்ளம்-
என்று ஹிருதய பிரதேசத்தைச் சொல்லவுமாம் –
இன்னுயிர்
என்று பகவத் அனுபவத்துக்கு அநுரூபம் ஆகையாலே இனிதான ப்ராணாதிகளைச் சொல்லவுமாம் –
ஜ்ஞாநீது பரமை காந்தீ பராயத் தாத்ம ஜீவந -மச் சித்தா மத்கத ப்ராணா -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது
(ஞானீ து பரமை காந்தீ பராயத்த ஆத்ம ஜீவன -தத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கஸ்த் தேக தீ
மச் சித்தா மத் கத பிராணா போத யந்த பரஸ்பரம் -கத யந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்த ச ரமந்தி ச -10-9–)

————————————–

அவதாரிகை –

இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும் ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –
(உலகம் அளந்து -அளப்பவன் ஸ்வாமி -அளக்கப்படுபவை அவனுக்கு அடங்கி -கர்ம வஸ்யர் அர்த்தம் த்வனிக்கப்படுகிறது
அயனைப் படைத்த எழில் உந்தி -கர்மாதீனம் பிறப்பில் உழன்று இருப்பவர் என்பது சப்தார்த்தம் )
நாலாம் பாட்டாலே –
ப்ரஹ்ம ருத்ராதிகள் வரம் கொடுத்து வாழ்வித்த ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ் த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே
அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும் அனுசந்திதுக் கொண்டு ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே
ஏக தேசத்திலே வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகதி தகடநா சக்திகளுக்கு
அடையவளைந்தான் போலே யிருக்கிற உதர பந்தம் ( ஒட்டியாணம் )-தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே
வெளியில் போலே இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –

கீழ் மூன்று பாட்டாலும் ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் ஏஷ மே சஹஜோ தோஷ ஸ்வபவோ துரதிக்ரம –
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து –
தசேந்திரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீ சரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகி நாம் –
தசேந்த்ரியா நநம் கோரம் – என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு –
நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற
நமஸ்ஸில் அர்த்தத்தை மறை பொருளாக அனுசந்திகிறார் ஆகவுமாம்-

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே—————4-

பதவுரை

சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல்நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலைபத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதரபந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது

வியாக்யானம் –

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர-
குல பர்வதங்களை சேர்த்து இசைத்தாப் போலே -செறிவும் திண்மையும் உயர்த்தியும் உடைத்தாய்
எட்டு திக்குகளில் உள்ள திக்பலர்களுக்கும் எட்டிப் பார்க்க ஒண்ணாது இருக்கிற
மதிள்களாலே இற்ற விடம் முறிந்த விடம் இல்லாதபடி எங்கும் ஒக்க சூழப்பட்டு
ஜல துர்க்க கிரி துர்க்க வன துர்க்கங்களாலே -துர்கங்களுக்கு எல்லாம்
உபமானம் ஆம்படி பிரசித்தமான இலங்கைக்கு ஈச்வரனாய்
துர்க்க பல வர பல பு ஜ பல சைன்ய பலங்களாலே செருக்கனாய்
மால்யவான் அகம்பனன் மாரீசன் முதலான ராஷசர்களோடு
ஹனுமான் விபீஷணன் முதலான சத்வ பிரக்ருதிகளோடு வாசியற
அவகீதமாக-( வித்யாசம் இன்றி ) பேசப்பட்ட பெருமாள் பெருமையை அறிந்து வைத்தும் கண்டும்
மதி கெட்டான் படியே –
விதித ச ஹி தர்மஞ்ஞா சரணாகத வத்ஸல தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி–21-20- என்ற
தாய் வாய் சொல்லும் கேளாதே

அராஷசமிமம் லோகம் கர்த்தாச்மி நிசிதைசரை ந சேச் சரண மப்யேஷி மாமுபாதாய மைதிலீம் –41-66–என்று
பெருமாள் அருளிச் செய்து விட்ட பரம ஹிதமான பாசுரத்தையும் அநாதரித்து -அடைகோட்டைப் பட்டவளவிலும்
பூசலுக்கு புறப்பட்டு விட்ட மகா பலரான படை முதலிகள் எல்லாரையும் படக் கொடுத்து
தான் ஏறிப் பொருதவன்று ரிபூணா மபி வத்சலரான பெருமாள் சரச் செருக்கு வாட்டி -நம்முடனே பொரும்படி
இளைப்பாறி நாளை வா -என்று விட -நாணாதே போய் மண்டோதரி முதலான பெண்டுகள்
முகத்திலே விழித்து -தன்னில் பெரிய தம்பியையும் மகனையும் படக் கொடுத்து தான் சாவேறாக
வந்து ப்ரதிஹத சர்வ அஸ்தரனான -எல்லா அஸ்திரங்களை இழந்த பின்பும்
சினம் தீராதே சேவகப் பிச்சேறி நின்ற ராவணனை
இனித் தலை யறுக்குமது ஒழிய வேறு ஒரு பரிஹாரம் இல்லை என்று திரு உள்ளம் பற்றி
ஒரு தலை விழ வேறு ஒரு தலை கிளைக்க முன்பு பண்ணின சித்ர வத ப்ரகாரம் அன்றிக்கே
ஒரு காலே பத்துத் தலையும் உதிரும்படியாக
(உத்தம அமர்த்தலம் அமைத்ததோர் எழில் தனுவின் உய்த்த கணையால் அத்திர வரக்கன்
முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன் )

ஒட்டி யோர் வெங்கணை வுய்த்தவன்
தானே போய் ராவணன் தலை பத்தும் கைக் கொள்ள வேணும் -என்று சினம் உடைத்தாய் –அத்விதீயமாய் இருப்பதொரு
திருச் சரத்தை -தகையதே ஓட விட்டு -இரை போந்த இலக்கு பெறுகையாலே அத் திருச் சரத்தை உய்யப் பண்ணினவன் –
(ச சரோ ராவணம் ஹத்வா ருதிரார்த்த க்ருதச்சவி க்ருதகர்மா நிப்ருத்வத் ச தூணீம் புநராவிசத்-108-20–)
சரத்தினுடைய ஆஸூகாரித்வத்தாலும்-வேகத் திறனாலும்- ராவணனுடைய தைர்யத்தாலும்
தலை பத்தும் உதிர்ந்த பின்னும் அவன் உடல் கட்டைப் பனை போலே சிறிது போது இருந்து நிற்கும்படியாய் -இருந்தது

தலை பத்து உதிர ஒட்டி –
என்றது முன்னில் பூசலில் ராவணனைத் தலை சாய்த்து –
கச்ச அநுஜாநாமி ரணார்த்தி தஸ்த்வம் பிரவிஸ்ய ராத்ரிம் சர ராஜ லங்காம் ஆஸ்வாஸ்ய நிர்யாஹி
ரதீ ச தன்வீ ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த-41-66- -என்று துரத்தி விட்ட படியாய்

ஓர் வெங்கணை வுய்த்தவன் –
என்றது பின்பு அவனுடைய வத அர்த்தமாக அத்விதீயமான அஸ்த்ரத்தை விட்டவன் என்னவுமாம்

ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ஸ்யாமளமான
திருமேனியை உடையவன் –

மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மியுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ் ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே –
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் சோயம் யச்சே யதச்சாஹம் பகவாம்ஸ்த்த் ப்ரவீது மே -117-11-
என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு-மாறு வேஷத்துக்கு – அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –
பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண –
இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய

திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே
பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை வெளி இடா நின்ற திரு வயிற்றில் –
திரு உதர பந்தம் -என்று
திரு நாமத்தை உடைத்தான திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப் பண்ணா நின்றது
இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை/-அமலனாதிபிரான்-வியாக்யானம் –

February 2, 2019

ஸ்ரீ பெரிய நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

ஆபாத சூட மநுபூய ஹரிம் சயாநாம்
மத்யே கவேரே துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட் ருதாம் நயநயோர் விஷயாந்த்ர
யோநிஸ்சிகாயா மநவை முநி வாஹநம்த –

திருமலை நம்பி அருளிச் செய்த தனியன் –

காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திரு மார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –

———————————

வ்யாசிக் யாசத பக்த்யா விரக்த தோஷாயா வேங்கடேச கவி
முகுந்த விலோக ந முதித முநி வாஹந ஸூக்தி பங்க்தி மிமாம் –

அடியாரைக் காண விழையும் அரங்கனைக் கண்டு களிக்க ஆசைப்படுபவரும் –
ஸ்ரீ லோக சாரங்க முனிவரை வாகனமாகப் பெற்றவரும் நல் கவியுமான
திருப் பாண் ஆழ்வாருடைய இந்த திவ்ய பிரபந்தத்தை
பக்தியுடன் முக்கரணங்களையும் அடக்கி சமதமதாதி குணங்கள் நிறைந்த முகுந்தனைக் காண விழையும்
அடியார்களின் மகிழ்ச்சிக்காக ஸ்ரீ வேங்கடேச கவி வ்யாக்யானம் செய்து அருளுகிறார்

ப்ரணதிம் வேங்கடேசஸ்ய பதயோர் விததீ மஹி
யத் உக்தயோ யதீந்த்ர யுக்தி ரஹஸ்யாநாம் ரஸாயநம்

எவருடைய ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீ பாஷ்யகாரர் உபதேசித்த ரஹஸ்யங்களை அறியும் குளிகையாக
அமைகிறதோ அந்த வேங்கடேசரின் திருவடிகளை வணங்குவோம்

பாவளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வந்நாள்
குரவை பணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போற் சேர்ந்து
தீ வினையோர் தனிமை யெலாம் தீர்ந்தோம் நாமே

பாக்கள் செறிந்த தமிழ் வேதமாம் திவ்ய ப்ரபந்தங்களின் உள் பொருள்களை அடக்கியவையும்
திருப் பாண் ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட இப் பத்து பாசுரங்களால்
காப்பவனும் -நாயகனுமாக இசைந்து நிற்கும் காரணமாம் நாரணனை நாம் நன்கு அறிந்த பின்
இடையனும் அரசனுமாக திரு அவதரித்த போது அவனுடன் திருக் குரவைக் கூத்தாடிய
இடைப் பெண்கள் கருத்தையே தானும் கொண்டு
ஆண் பறவையை விட்டு அகலாத பெண் பக்ஷி போலே அவனைச் சேர்ந்து
பாபிகளுக்கான துணை அற்ற நிலையை விட்டு ஒழிந்தோம்

ஸுலப்யம் பரத்வம் இரண்டும் ஒருங்கே அமைந்த எம்பெருமானே உபாயம் -காரணந்து த்யேயயா –
குரவைக் கூத்து உதாஹரணம்
சர்வேஸ்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நர அதமன் என்று பேர் பெற்ற பிறந்து கெட்டானில் காட்டிலும்
இடைச்சிகளைப் போலே விவேகம் இல்லையே ஆகிலும் ஸுலபயத்தை அறிந்து
அந் நலனுடை ஒருவனை நணுகுமவனே பரம ஆஸ்திகன் -அப்புள்ளார் ஸ்ரீ ஸூக்தி

நமோ ராமாநுஜார்ய ஸவ்ம்ய மூர்த்தி ஸூ ஸூநவே
யஸ்ய ப்ரஸாதான் நிர்யாதி போக ஸ்வாது தரங்கிணீ –

காரண விசேஷம் இன்னது என்று அறுதி இட அரிதாய் இருப்பதொரு பகவத் கடாஷத்தாலே
அயத்ந லப்தமான பர தத்வ -பரம ஹித -பரம புருஷார்த்த -விவேகத்தை உடையவராய் –
(தத்வ த்ரய விவேகம் உண்டாகைக்கு ஹேது எம்பெருமான் நிருபாதிக ஸூஹ்ருத கார்யம்
விளம்ப ரஹித மோக்ஷ ஹேதுக்களான ஸூஹ்ருத விசேஷங்கள் ஆர் பக்கலிலே கிடைக்கும் என்று தெரியாது –
ரஹஸ்ய த்ரயம் -அர்த்த பஞ்சக அதிகாரம் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்றும் குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றபடி
பராதீன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தியான தன் அதிகாரத்தில் அடங்கிய ஆகிஞ்சன்யத்தைக் காட்டுகிறது )

அநாதி கால பிரவ்ருதங்களான ஷூத்ர புருஷார்த்தராதிகளையும் –
ஷூத்ர புருஷ ஸ்தோத்ராதிகளையும் -ஷூத்ர புருஷார்த்த பிரவ்ருத்திகளையும்
தப்பின தம்முடைய கரண த்ரவ்யமும் இப்போது ப்ராப்தமான ஏக விஷயத்திலே –
(மநோ வாக் காயங்களின் வியாபாரங்கள் அல்ப அஸ்திரத்வாதிகளை தவிர்ந்து பகவத் விஷயத்தில் இருந்தமை )
அநந்ய பிரயோஜன அநுகூல வ்ருத்தியை உடைத்தான படியைக் கண்டு
சந்தோஷ யுக்தரான திருப்பாண் ஆழ்வார் -பின்பு பரம பதத்திலே பெரும் பேற்றை இங்கே
பெரிய பெருமாள் திருவருளாலே பெற்று –
(ஆழ்வார் தாம் தம்முடைய திரு உள்ளத்தால் அனுபவித்து -அவ்வனுபவ ஜெனிதமான நிரவதிக ப்ரீதியாலே
அவனை அனுபவித்த படியே பேசுகிறார் -திருவாராயிரப்படி வ்யாக்யானத்தை ஒட்டி சாதித்து அருளுகிறார் )

இப் பேற்றை அடி தொடங்கி –
அமலனாதி பிரான் முதலான பத்துப் பாட்டாலே அநுபவ ப்ரீவாஹமாக (உணர்ச்சிப் பெருக்காலே)அருளிச் செய்கிறார்-
இப்ப்ரபந்தம் அதி விஸ்தரம் அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம் ( விஷயம் விளங்காமை )
துரவபோதார்த்த்வம் ( பொருள் விளங்காமை ) சம்சயாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில்- ( வேதாத்மா நூல்கள்) உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கநரசமாய் ( அனுபவத்தின் திரண்ட ரசம் ) இருக்கிறது –
முதல் பாட்டான அமலனாதிபிரான் தொடங்கி
கொண்டல் வண்ணனை என்கிற தலைக் கட்டுப் பாட்டளவும்
இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம்
மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-

——————————–

அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–

பதவுரை

அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்காரபூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆச்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளையுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆச்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆச்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷசேஷி முறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களையுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே

அமலன் –
என்கிறது மல ப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது
(ஸ்வயம் பிரகாச ஸ்வரூபனான ஜீவன் கர்ம அநு ரூபமாக பிரகிருதி சம்பந்தத்தால் அழுக்கு அடைந்து இருப்பதையும்
அத்தை விலக்கும் சக்தி எம்பெருமானுக்கு மட்டுமே உள்ளத்தையும் சொல்கிறது –
எம்பெருமானின் பிரதான அசாதாரண வியாபாரம் மோக்ஷ பிரதத்வம் பேசப்படுகிறது )

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் காரணந்து த்யேயய–காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
(முமுஷுவால் பற்றப்படுபவர் நாராயணன் என்றதாயிற்று )
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் ( ராஜாவுக்கு )சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-

பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா அக்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
(அமலன் -ஆதி -பிரான் -என்கிற மூன்று பாதத்தால் குறிக்கப் பட்ட
மோக்ஷ பிரதத்வம் -காரணத்வம் -உபகாரகத்வம் –
ஆகியவை நம்மை ரக்ஷிக்க மேற் கொள்ளும் செயலின் வகைகளே )
இவை தம்மளவில் பர்யவசித்த படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-

அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-
என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
(ம -வியாகரண வ்யுத்பத்தியின் படி -ஞான ஸ்வரூபம் -அறிவிப்பது -அளவுபட்டது
அஸ்மத் -வேத இலக்கணப்படி அஸ் / அத் -மறைந்து ம -ஜீவன்)
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும்
அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –
அடியார் –
என்றால் சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை-( தாதர்த்தம் -அதற்காகவே ) எல்லாம்
காட்டிற்றே யாகிலும் -இங்கு
அடியார் –
என்கிறது – யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –(பாரதம் -தர்ம புத்திரனுக்கு மார்க்கண்டேயர் உபதேசம் )
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஜ்ஞான ரசிகரை –
இப்படி அடியார்க்கு –
என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே -மத்யம அஷரத்தின்
படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாதபடியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
(மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-)
சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான
சர்வேஸ்வரன் -அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே
இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி வருகிறது ஆகையாலே –
என்னை அடியார்க்கே ஆட்படுதினான் –
என்ற அவதாரணமும் இங்கே விவஷிதம்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-
தேஷாம் ஞானி நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே –கீதை -7-17-
ததீய சேஷத்வம் நிலைத்து நிற்குமே-

என்னை ஆட்படுத்த –
அத்ய ப்ரப்ருதி ஹே லோகா யூயம் யூயம் வயம் வயம் -அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம் –
வயம் து கிங்கரா விஷ்ணோ யூயமிந்த்ரிய கிங்கரா–ஸ்ரீ கீதை-16-14- -என்னும்படி
இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –ஈஸ்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை –
தாஸ பூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந அதோஹமபி தே தாஸ இதி மத்வா நமாம்யஹம் -மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
அதோஸஹமபி தே தாஸ -என்னப் பண்ணின உபகாரத்தில் காட்டிலும் –
(ப்ரக்ருத்யாத்ம பிரமம் -ஸ்வதந்த்ராத்மா பிரமம் -இவற்றுக்கு நிதானமான அநீஸ்வர வாத ருசி -ஆகிய
மஹா விரோதிகளை போக்கி அருளிய உபகாரங்கள் -இவற்றுக்கும் மேலே -)
உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப் பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று –
இப் பரம உபகாரத்தையும் பிரித்துப் -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்
(நான் எனக்கு சேஷம் அல்லேன் -ஒன்றும் எனக்கும் சேஷமும் இல்லை -ஒன்றுக்கும் நான் சேஷியும் இல்லை –
எனக்கு ஸ்வாதந்தர்யம் இல்லை -போன்ற பல அர்த்தங்கள் உண்டே )
கீழ்ச் சொன்ன கர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –

விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –
இவ்வளவு சூரிகளுக்கும் இல்லையோ என்ன –

விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான சூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன

விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –
இப்படி சர்வ சுலபன் ஆனாலும்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே என்னும்படி -நிற்குமோ -என்ன

நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பு அறுத்த நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ச்லேஷம் பண்ணலாம்படி
(யா க்ரியா சம்ப்ரயுக்தா ஸ்யுஹு ஏகாந்த கத புத்திபி -தாஸ் சர்வா சிரஸா தேவ பக்தி க்ருஹணாதி வை ஸ்வயம் –
என்கிறபடியே-சிரஸால் ஏற்றுக் கொள்கிறான் )
தன் ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
(ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹாத்மநாம் ஜென்மநாம் சங்க்யா பவ்நிகேத நேஷ்வபி குடீ குஞ்ஜேஷு ரங்கேஸ்வர
அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி ப்ரீணீஷே ஹ்ருதயா லுபி தவ
தத சீலாஜ் ஐடீ பூயதே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-74–)
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்
(பத்துடை அடியவர்க்கு எளியவன் –தேர் முன்னே தான் தாழ நின்ற)
இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்

நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார்–பெரியாழ்வார் -4-9-2- என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -ஈஸ்வர நிக்ரஹமும் அநுக்ரஹ சங்கல்பமே-என்றபடி –

விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று
(விமலன் -ஒருபோதும் தோஷம் இல்லாதவன்
விண்ணவர் கோன் -பராத்பரன்
வேங்கடவன் ஆஸ்ரயிக்கவும் அனுபவிக்கவும் ஸூலபன்
நிமலன் -ஆஸ்ரித பரதந்த்ரன்
நின்மலன் -ஆஸ்ரிதர் தோஷங்களை காணாதவன் –இவ்வைந்துமே நாராயண சப்தார்த்தங்கள் )

மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று
(நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனாய் -நித்ய அனுபவம் பண்ணும் அந்தமில் பேர் இன்பத்து அடியரான
நித்ய ஸூரிகளோடு ஓக்க நித்ய கைங்கர்ய த்துக்கு ஸ்வரூப யோக்யதையால் இட்டுப் பிறந்து வைத்து -)
சதுர்த்தியில் கருத்தான கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்

நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன்–வீற்று இருந்து செங்கோல் ஒச்சுமவன் -என்னவுமாம் –
தேன வஞ்சயதே லோகன் மாயா யோ கேந கேசவ -பாரதம் –
சஞ்சயன் கிருஷ்ணன் மஹிமையை த்ருதராஷ்ட்ரனுக்கு சொல்கிறான் -என்கிறபடியே –கலக்குவாரும்
அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவ மஜா நந்த மம பூத மஹேச்வரம் –ஸ்ரீ கீதை -9-11- –
என்கிறபடியே கலங்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –
ஈஸ்வர ஸ்வபாவம் ஆகிற ஸ்வா தந்தர்யத்தாலே ஆஸ்ரித பாரதந்தர்யம் ஏறிட்டுக் கொண்டுள்ளேன் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-
ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதன் இடம் -நான் இங்கே இருக்க பரமேஸ்வரன் வேறே உள்ளானோ என்றது -என்றும்
(இத்தால்
பிராக்ருதாத்மா பிரம்மமும்
ஸ்வ தந்தராத்மா பிரம்மமும்
அநீஸ்வர வாத ருசியும் -சொல்லிற்று ஆயிற்று
வள வேழுலகின் முதலாய வான் இறையை அருவினையேன் கள வேழ் வெண்ணெய் தோடு உண்ட கள்வா என்பன் -1-5-1–)
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-
இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிகலாம்படியைப் பேசுகிறார் –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
(பரமபதத்தில் நின்றும் ஸ்ரீ வடமதுரையிலே தங்கி திருவாய்ப்பாடிக்கு வந்தது போலே
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தாங்கிக் காணும் கோயிலில் வந்தது -ஸ்ரீ பட்டர் )
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி

அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
(அரங்கத்து -நம்மிடம் தேடி வந்த ஸுலப்யமும்-அம்மான் -பரத்வமும் )
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்

திருக் -கமல -பாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
(திரு -ஸ்ரீ ஸ்ரீ ணாதி இதி ஸ்ரீ -பிரதிபந்தங்களைப் போக்கும் பாவனத்வமும் /
கமலா -போக்யத்வமும் -ஆக இரண்டாலும் ஸூபாஸ்ரயம் )
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-
(வடிவிணை இல்லா மலர் மகள் மற்றும் நிலா மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10–)

வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
(அஜோபி சந் அவ்யயாத்மா பூதா நாம் ஈஸ்வரோபி சந் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்ம மாயையா -4-6–)
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது –
இத் திருவடிகளில் வைத்த கண் வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை
ஓர் உத் ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்

என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸு க்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்-(சகல மனுஷ நயன விஷயதாம் கத -ஸ்ரீ கீதா பாஷ்யம் )
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –
(யோகேந நாத ஸூபம் ஆஸ்ரயம் ஆத்மவந்த ஸாலம்பநேந பரிச்சிந்த்ய ந யாந்தி த்ருப்திம் -சரணாகதி தீபிகா
கட் கண்ணாலும் கண்டு வியக்கின்றனர் )

நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –

இப்பாட்டால் –
மோஷ -பிரதத்வத்தையும்
ஜகத் -காரணத்வத்தையும்
மற்றும் சர்வ ப்ரகார உபகாரத்வத்தையும்
அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
நித்ய நிர்தோஷத்வத்தையும்
நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
நித்ய விக்ரஹவத்தையும்
சர்வ சுலபத்வத்தையும்
சௌசீல்யத்தையும்
வாத்சல்யத்தையும்
கைங்கர்ய உத்தேச்யத்வத்தையும்
கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
சர்வ ஸ்வாமித்வத்தையும்
திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்
முன்னிட்டு ஸ்ரீய பதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-

அகாரம் -அமலன் ஆதி பிரான் -ரக்ஷண பேதத்தை சொல்லி
லுப்த சதுர்த்தி மகாரம் -அடியாருக்கு
உகாரம் -அடியார்க்கே
நம -என்னை ஆட்படுத்த -இந்த சேஷத்வம் பகவத் பாகவதர்கள் அன்றி மற்ற எவர்க்கும் தனக்கும் கூட இல்லாத வரையறை கொண்டது –
நாராயண -விமலன் -விண்ணவர் கோன் -வேங்கடவன் -நிமலன் -நின்மலன் -ஈயதே அநேந -அஸ்மிந் -அஸ்மை –
ஆய -நீதி வானவன் -கைங்கரத்தை ஏற்றுக் கொள்பவன்
த்வயம் பூர்வ உத்தர நாராயண சப்தம் -அரங்கத்து அம்மான் -ஸுலப்ய பரத்வ காஷ்டை
திருக் கமல பாதம் -பாவனத்வ போக்யத்வங்கள்

அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை-( த்வயி ரஷதி ரஷகை கிமந்யை )
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை
(சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணிக அபி சந் சம்சார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ அபேக்ஷம் பிரதீஷதே-
பக்ஷபாதம் இல்லாமல் லோகத்தை நியமிக்க ரக்ஷண அபேக்ஷை எதிர்பார்க்கிறான் –
அஞ்சலிம் யாசமாந -கை கூப்புதலை வேண்டுபவன் -ஸ்வேநைவ க்லுப்தமபதேசம வேஷமாண –
தானே உண்டாக்கிய சிறு வியாஜ்யத்தை எதிர்பார்க்கிறான்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நம் – ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாந் நாபசர்பதி
ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா கஸ்மை சித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய-
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதமித்யதாம்ப த்வம் லஜ்ஜசே கதய காயம் உதார பாவ -ஸ்ரீ பட்டர் )

5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
வத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந சசிவைஸ் ஸஹ -ராவணஸ்ய ந்ருசம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண –
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் யா பரித்யஜேத் -கோ நாம பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் –யுத்த -18-5-6–
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்கு அஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை

9-சௌலப்ய காஷ்டை யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை-( வள வேழுலகம் -அனுசந்திப்பது )
10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சந்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
(காசீ -வ்ருக -அந்தக -சராசந -பாண-கங்கா -சம்பூதி -நாம க்ருதி -சம்வதன-ஆத்யுதந்தை-
ஸ்வ யுக்தி – அம்பரீஷ பய சாபமுகைச்ச சம்பும் த்வன் நிக்னம் ஈஷிதவதாம் இஹ க சரண்ய
இவ் விருத்தாந்தங்களை அறிந்தவர்களுக்கு உன்னைத் தவிர வேறே சரண்யர் யார் )

13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே
விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தை அசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .