என்னை ஆளுடை அப்பன் -மன்னாதன் —
என்னை ஆளுடை எம்பிரான் -9-10-6- -திருக்குறுங்குடி எம்பெருமான் -திருமங்கை ஆழ்வார்
———————————–
எந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆள் செய்கின்றோம் –திருப்பல்லாண்டு -6-
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எனக்குத்தான் என்பார் –பெரியாழ்வார் திருமொழி -1-1-2–
எந்தம் பிரானார் எழில் திரு மார்வற்கு -1-3-3–
ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-1-6-11–
எம்பெருமான் வாராவச்சோ வச்சோ -1-8-1-/4-
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1-9-2-/8-
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய –1-9-10-
எண்ணற்க்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு விடுவன் -2-3-2–
சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-3-4-
சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் -2-3-5-
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திருவாயர் பாடிப்பிரானே -2-3-7–
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே 2-3-8–
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2-4-1-
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2-4-2 —
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-4-5–
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-3 -/5-
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-6-
தேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் -2-7-1-
ஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் -2-7-8-
எம்பிரான் காப்பிட வாராய் -2-8-3–
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி –2-9-1-
வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3-1-1-
பொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் -3-1-7-
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகலந்தான் என் மகளை பண்ணறையாய் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-10–
எம்பிரான் வன்மையைப் பாடிப்பற-3-9-1-
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7–
ஆயிரம் பைந்தலையை அனந்த சயனன் ஆளும் மலை -4-3-10-
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே–4-4-9-
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம்மண்ணை நரகம் புகாள்-4-6-4-
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4-9-2-
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அமருமூர் அணி அரங்கமே -4-9-3-
புது நாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் -4-9-4-
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச் செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழு உலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10-
என்னுடைய இன்னமுதே ஏழு உலகும் உடையாய் என்னப்பா –4-10-7-
அடிமை என்னும் அக்கோயின்மையாலே அங்கு அங்கே யவை போதரும் கண்டாய்-5-1-4-
இருக்கு எச்சுச் சாம வேத நாண் மலர் கொண்டுன பாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5-1-6-
எம்பிரான் என்னை ஆளுடைத்தேனே ஏழையேன் இடரைக் களையாயே-5-1-9-
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -5-2-1-
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் -5-2-4-
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் -5-2-6-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் தொடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-
உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய் 5-3-3-
அன்று வயிற்றில் கிடந்து இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் இன்று வந்து இங்கு
உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே -5-3-9-
திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் –5-3-10-
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வெற்றி பெரும் பதம் ஆகின்றதால் -5-4-2-
எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் -5-4-3-
என்னப்பா என்னிருடீ கேசா என்னுயிர்க் காவலனே –5-4-5-
என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே -5-4-5-
உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-
வடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-
———————————————
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாதிப் பறை கொண்டு ஈம பெரும் சம்மணம் –திருப்பாவை -27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-
சென்று இறைஞ்சி அங்கு அப் பறை கொண்ட வாற்றை -30-
————————-
அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே
சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி -1-3-
ஆழி சங்குத்தமற்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-
பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்தம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் -1-9-
புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-10-
அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய -5-10-
இம்மைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி -6-8-
என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே -8-6-
வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7-
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -9-7-
பண மாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே -10-6-
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் -10-7-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -11-3-
கொங்கைத் தலமிவை நோக்கிக் கண்ணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4-
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -13-9-
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைப் பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-
———————————————–
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-
என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-
அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-
அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே -3-6-
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே 3-7-
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -3-8 –
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் தம்பக்கமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே -4-5-
செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -4-10-
வித்துவக் கோட்டம்மா நீ கொண்டு ஆளாயாகிலும் உன் குரை கழலே கூறுவேனே -5-2-
வித்துவக் கோட்டம்மா நீ ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-5-4-
எந்தையே என் தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கனத்து எழில் கவர் ஏறே -7-3-
எண்டிசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ -8-2-
எங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ-8-3-
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே-8-10-
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-
தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-
தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-
————————————-
என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே -35-
சரந்துரந்த உம்பராளி எம்பிரான்-73-
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -78-
வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81-
ஆழியான் தன் திறத்தோர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்தே -84-
நின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம்மீசனே -107-
அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
————————————————–
அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –திருமாலை -6-
தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண் என் அம்மான் -18-
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -27-
எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே -30-
எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே-37-
—————————————————-
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-
————————————–
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-
திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆள் கொண்டதே -5-
—————————-
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்—பெரிய திருமொழி -1-1-6-
எந்தை எம்மடிகள் எம்பெருமான் –வதரி யாச்சிரமத்துள்ளானே -1-4-7–
சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -1-2-10-
இடவெந்தை மேவிய எம்பிரான் தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-4-
திரு வேங்கடவா நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டு அருளே -1-9-1-
திருவேங்கட மா மலை என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-2-
குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-3-
திருவேங்கடவா அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-4-
திரு வேங்கட மா மலை என் அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-5-
திரு வேங்கடவா அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-6-
பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-7-
குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-8-
கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-9-
திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உள்ளானே-1-10-6-
வேங்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-1-
வேங்கடத்து அறவன் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-2-
வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமீசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-3-
வேங்கட மலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-
வேங்கடம் மேவி நின்று அருள் அங்கண் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-5-
வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-6-
வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே 2-1-7-
வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-
தாமரையோனும் ஈசனும் அமரர் காணும் நின்றேதும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-9-
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-1-
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-4-
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-6-
எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-7-
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-2-
பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய் எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இட வெந்தை பிரானை -2-7-10-
மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –அணி யாலி யம்மானே -3-5-4-
நிலையாளா நின் வணங்க வேண்டாயேயாயினும் என் முலையாள வொருநாள் உன்னகலத்து ஆளாயே
சிலையாளா மரம் எய்த திரு மெய்யா மலையாளா நீ யாள வலையாள மாட்டோமே-3-6-9-
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-
தேவா திரு வெள்ளக்குளத்துள் உறைவானே ஆவா வடியான் இவன் என்று அருளாயே 4-7-9-
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும்மடியோம் -4-9-1-
தேசம் அரிய உமக்கே யாளாய்த் திரிகின்றோமுக்கு -4-9-4-
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் எழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல் -4-9-9-
குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -4-10-9-
அறிவது அரியான் அனைத்துலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமரும் இடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-2-
கூற்று ஏருருவின் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-
கலை வாழ் பிணையோடு அணையும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் –கூடலூரே -5-2-8-
நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–திரு வெள்ளறை நின்றானே -5-3-1-
திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே -5-3-4-
பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே -5-3-9-
வானவர் தம் உயிர் ஆளன் ஒலி திரை நீர்ப் பவ்வம் கொண்ட திருவாளன் -5-5-1-
மெய்ய மலை யாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் எழு எய்த வென்றிச் சிலையாளன் -5-5-2-
பூ மேல் மாது ஆளன் குடமாடி மது சூதன் மன்னார்க்காய் முன்னம் சென்ற தூது ஆளன் -5-5-6-
பேர் ஆளன் பேர் அல்லால் பேசாள் இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தார் ஆளன்
தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன்-5-5-7-
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன்-5-5-8-
தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கு பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-8-
அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயன் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-9-
நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-1/2/3/4/5/6/7/8–
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-9-
தன் தாள் அடைவரேல் அடிமை யாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே -5-9-1-
செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-
அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -5-9-4-
நக்க அரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே -5-9-5-
நலம் கொள் நான் மறை வல்லார்கள் ஒத்து ஒலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப் பேர் மருவி நான் வாழ்ந்தவாறே -5-9-6-
தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே -5-9-7-
தென் திருப் பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-8-
திருப் பேர்ச் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தார் சிந்தை யாளி என் சிந்தையானே -5-9-9-
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-1-
விண்ணவர் அமுதுண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-2-
நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற வம்பது வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-3-
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-4-
ஓர் எழுத்துரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-5-
சீர் கெழு நான்மறை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-6-
இருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-7-
உனது அடி அணுகுவன் நான் போது அலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-8-
உன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான் மறையாகி உம்பராதல் செய் மூவுரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-9-
சிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் உன்னை என் மனத்தகத்தே
திரும்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே -6-3-2-
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடீ மது சூதனே உலகில் சொல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே -6-3-9-
நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-ஒன்பது பாசுரங்களிலும்-கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர்
வானவர்க்கு இன்னரசர் ஆவரே-6-4-10-
ஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்–திரு நறையூர் மணி மாடம் -6-6-1-
ஈசன் எந்தை இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-
பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திரு முடியா நின்றான் பால்
செல்லகிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-3-
துகில் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-4-
தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த் தான் ஆயனாயினான் சரண் என்று உய்வீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-
இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக்கீழ் எய்த கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-7-
வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் திணித்தான் திருவடி நும்
சென்னி வைப்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-8-
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன்–திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-1-
திருமாலை எம்மானை நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே 6-8-2-
திரு நறையூர்– திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-1-/ அடி இணையே அடை நெஞ்சே 6-9-2-/3-/
குரை கழலே அடை நெஞ்சே 6-9-4-
இவ்வுலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே 6-9-5-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே 6-9-6-
திரு நறையூர் –தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே அடை நெஞ்சே 6-9-7-
திரு நறையூர் மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையாரே நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே 6-9-8-
திரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-9-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன்
நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-
நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை –கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-
நறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி எந்தை பிரானே -7-1-1-
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே -7-1-2-
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே -7-1-5-
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1–6-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்
தமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உத்தமம் இல்லை துயரே -7-1-10-
உள்ளே நின்றுருகி நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் நள்ளேன் உன்னை யல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-
நாடேன்உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-2-
நன்மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -7-2-3-
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப்
போகல் ஓட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-
என்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஓட்டேன்
அந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப்ப பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-9-
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -7-3-3-
அரங்கம் ஆளி என்னாளி விண்ணாளி-7-3-4-
காதல் செய்து என்னுள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே -7-3-8-
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை கடியார் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த வக்காவலைப் பிழைத்து குடி போந்து உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-8-
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர்ச் சல சயனத்து ஐவார்
அரவணை மேல் உறையமலா வருளாயே -7-9-8 —
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா பெருமால் வரை யுருவா பிற உருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சலசயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே -7-9-9-
கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-1-
கரி வெருவ மருப்பு ஓசித்தார்க்கு இழந்தேன் என் கன வளையே-2-
செங்கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே -3-
புனர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே -4-
தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே -5-
யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -6-
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -7-
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே -8-
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -9-
கண்ண புரத்து எம்மடிகளை திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் -8-6-10-
எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -4-
அஞ்சேல் என்று அடியேனை ஆள் கொள்ள வல்லானை –வயலாலி மைந்தனையே -6-
உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால்வேதம் கண்ட கண்ண புரத்துறை அம்மானே -8-10-1-
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை மற்று எல்லாம்
பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே -3-
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை அம்மானே -9-
கண்ட சீர்க் கண்ண புரத்துறை அம்மானை கொண்ட சீர்த்த தொண்டன் கலியன் ஒலி மாலை -10-
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-9–
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –அழகாய புல்லாணியே -9-3-1-
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் –புல்லாணியே -2-
ஏது செய்தால் மறக்கேன் –புல்லாணியே -3-
மங்கை நல்லாய் தொழுதும் எழு –புல்லாணியே -4-
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு –புல்லாணியே -5-
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு மா மலர் பாத நாளும் பணிவோம் என் தொழுதும் எழு –புல்லாணியே -6-
பரவி நெஞ்சே தொழுதும் எழு –புல்லாணியே -7-
நாம் தொழுதும் எழு –புல்லாணியே -8-
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி நமக்கே நலமாதலில்–புல்லாணியே -9-
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் -9-4-
முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-10-1-
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முந்நீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-
இண்டையும் புனலும் கொண்டு இடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர் குடிக் கடவுள் தம் கோயில் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-2-
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –மாலிருஞ்சோலை -9-8-9-
வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி
தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ -9-9-6-
திருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாழ் நுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -7-
திருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே -8-
திருமாலிருஞ்சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொலோ என் நன்னுதலே -9-
எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாத
அருள் புரிவான் –திருக் கோட்டியூரானே-9-10-1–
என்னை ஆளுடை எம்பிரான் -நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -6-
அடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்–திருக் கோட்டியூரானே -8-
பொன்னை மா மணியை அணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை
எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-
பத்தராவியைப் பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் முத்தினை மணியை
மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்கே காண்டுமே -8-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை -10-
நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ -11-2-9-
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -6-
முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப் பெற்றோமே -9-
ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது நம்மை ஆளும் அரசே-11-4-3-
அந்தரம் ஏழு னூடு செல யுய்த்த பாதமது நம்மை ஆளும் அரசே –5-
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயாராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -6-
அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்தவது நம்மை யாளும் அரசே -8-
திரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கனிக்களவத் திரு வுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே-11-6-4-
உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களை பேசீர்களே –5-
உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல்
கைம் மணி வண்ணன் தன் குடந்தை நகர் பாடி ஆடீர்களே -11-6-9-
தேனோடு வண்டாலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாகக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு
அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -11-7-9-
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே
மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-
———————-
இரும்பு அகன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமை பூண்டு உய்ந்து போனேன் –திருக் குறும் தாண்டகம் -4-
பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்து ஒளி மரகதம் முழங்கு ஒளி முகில் வண்ணா
என் அத்த நின்னடிமை யல்லால் யாதும் ஒன்றும் இலேனே -10-
தொண்டு எல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் -11-
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -12-
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை -20-
————————————–
எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –திரு நெடும் தாண்டகம் -1-
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் -5-
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -6-/-7 –
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு
இதுவோ நன்மை எண்ண நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே -17-
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன் பேரோதும்
பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -20-
என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
கண்டேன் கன மகரக் குலை இரண்டும் நான்கு தோளும்-22-
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே -24-
என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு —
புனல் அரங்கமூர் என்று போயினாரே -25-
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-
———————————————–
உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –திருவாய் மொழி -1-1-1-
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கி -1-2-8-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறிலா வண் புகழ் நாரணன் திண் கழல் சென்றே -10-
நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது அவனுடை நம்முடை நாளே -1-3-7-
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே -8-
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே -1-4-2-
நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று –9-
பரிவதில் யீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே -1-6-1-
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யுமீடே -2-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே -7-
கழிமின் தொண்டீர்கள் கழித்து தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே -8-
அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-8-10-
நெற்றியில் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்-1-9-10-
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு
நுண்ணேர் இடை மார்வனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே-1-10-3-
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் –7–
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி -2-1-7-
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -3-
பரமன் பவித்ரன் சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே-9-
தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் -2-5-8-
எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கு ஏத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட
நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -2-6-3-
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் கழித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –4-
உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -5-
உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான்-6-
வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-
தேவும் தன்னையும் பாடி யாடத்திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் காய்த்து
எமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கினான் வல்லன் எம்பிரான் வீட்டுவே -4-
ஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -6-
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -7-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -8-
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-2-9-6-
யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-
மாலிருஞ்சோலை பதியது வேத்தி எழுவது பயனே -2-10-2-
மாலிருஞ்சோலை வல முறை எய்தி மருவுதல் வலமே-7-
மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -8-
சொல்லாய் யான் உன்னைத் சார்வதோர் சூழ்ச்சியே -3-2-3-
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -3-3-1-
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -8-
ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே -3-4-4-
எம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்துள்ளீரே -3-5-1 –
வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற -8-
தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -10-
அன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொள் கண்களே -3-6-10–
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை தோளுமோர் நன்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை -3-7-2-
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பனை -7-
ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-
திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -3-9-1-
ஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான்கிலேன்-7 –
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே-3-10-8-
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2-
நின் பூம் தண் மாலை நெடும் முடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே -6-
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -6-
உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–7-
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை -4-5-1-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-
தண் தாமரை சுமக்கும் பாத்தப்பெருமாள்ச சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே -8-
குடமாடியை வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-9-
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -10-
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-11-
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆள் செய்து நோய் தீர்ந்த வழுவாத தோள் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-4-6-11-
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் -4-7-11-
ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறு ஆளும் தனியுடம்பன் -4-8-1–
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணி மாயன்- 4-8-2-
கடல் வண்ணா அடியேனை பாண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே -4-9-3-
வெறித் துளப முடியானே வினையேனை யுனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என் ஆரமுதே கூய் அருளாயே -4-9-6-
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் ஆடு புட் கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே -4-10-7-
உறுவது ஆவது –திருக் குருகூர் அதனுள் கூறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே -10-
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் -11-
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-
தேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் -9-
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -10-
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே -5-3-4-
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழிக் கண் புரைய மூடிற்றால் -5-4-6-
கழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள் வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -5-5-10–
எம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே –6-
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே -5-8-2-
நால் தோள் எந்தாய் யுனது அருளே பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –9-
திரு வல்ல வாழ் கன்னலங்கட்டி தன்னைக் கனியின் இன்னமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -5-9-5–
அது விது வுது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் -5-10-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற வந்தாதி -5-10-11-
திரு வண் வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1-
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பனியீர் அடியேன் திறமே -6-1-2-
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எலக் சேற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே–10-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்-6-2-10–
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்குடித் திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே -2-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே -8-
திரு விண்ணகர்ச் சேர்ந்த வைப்பான் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே -9-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -10-
மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு இவ்வுலகம் நிகரே -6-4-2-
வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-
தொலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே –6-6-9-
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-10-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –11-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர்கள் மல்கி -6-7-1-
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் அவள் சேர் திருக் கோளூருக்கே-6-7-10-
முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்தே 6-8-1-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -9-
அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும் சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே -10-
திலதம் உலக்குக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-
திரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே -4-
திருவேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-
எண்ணிலாப் பெரு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே யமுதே யப்பனே என்னை ஆள்வானே -7-1-1-
கட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திட் கொடி மதிள் சூழ்
திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே -7-2-3-
முடிவிலள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் மூ வுலகு ஆளியே என்னும் -10-
கொண்ட என் காதலுக்கு உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்-7-3-8-
வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -7-5-10-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -7-6-5-
என்னை ஆளும் கண்ணா இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை -7-8-8-
என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை உறப் பல வின் கவி சொன்ன உதவிக்கே -7-9-9-
இன்பம் பயக்க எழில் மாதர் மாதரும் தானும் இவ்வேழு உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –7-10-1-
திரு வாறன் விளை மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொலோ -2-
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -6-
அன்றி மற்று ஓன்று இலன் சரண் என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -8-
திருவாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனையே -9-
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே -10-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆள் செய்வார் -8-1-1-
எங்கு வந்துறுகோ என்னை ஆள்வானே ஏழு உலகங்களும் நீயே -8-1-6-
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -11-
கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே -8-3-2-
ஆளும் ஆளார் அலையும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -3-
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -9-
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் அண்ட வாணா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -8-5-6-
உன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -7-
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-
இருந்தான் கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாதவோர் ஐவரைத் தேய்ந்தற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு
அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து -8-
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே -9-1-1-
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி
வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -9-2-1-
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -2-
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -3-
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி -4-
எம்மிடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே -7-
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -10-
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலில் பழுதில் தொல் புகழ்ப்
பாம்பணைப் புள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே -9-3-9-
அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை
குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே -9-4-10-
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே -9-6-1-
தென் காட்கரை என்னப்பா நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே -2-
ஆள் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால் கோள் குறைபட்டது என்னாருயிர் கோள் உண்டே -7-
தென் காட்கரை என் அப்பருக்கு ஆள் அன்றே பட்டது என்னாருயிர் பட்டதே -8-
நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-
நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -7–
அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை
என் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -8-
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி யுறையும் திரு நாவாய் -9-
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட காலை மாலை கமல மலரிட்டு நீர் வேலை மோதும்
மதிள் சூழ் திருக் கண்ண புரத்து ஆலின் மேல் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி –9-
குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே -11-
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே -10-1-4-
திருமோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே -7-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே -11-
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வார் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே -10-2-6–
வயல் அணி யனந்த புரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே -7-
எழில் அணி அனந்த புரம் படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -8-
செறி பொழில் அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே -9-
அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள்
நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -10-
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -10-3-6–
என்றும் திரு மெய்யம் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருவினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே -10-4-2-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -3-
பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி
மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே -7-
ஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணையான் தாள் வாய் மலர் இட்டு நாள் வாய் நாடீரே -10-5-4–
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -5-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே -7-
தேன் ஏறு மலர்த்துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே -10-6-5–
பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியாருக்கு ஆள் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே -10-
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மாலிருஞ்சோலை வஞ்சக கள்வன் மா மாயன் மாயாக் கவியாய் வந்து
என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை யுண்டு தானே யாகி நிறைந்தானே -10-7-1-
திருமாலிருஞ்சோலை யானேயாகித் செழு மூ உலகும் தன் ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து
ஊழி யூழி தலை யளிக்கும் திருமால் என்னை ஆளுமால் -6-
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையில் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே -10-8-3-
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே -7-
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-
குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே -11-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-
எனக்கு ஆராவமுதாய எனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-10-10-6-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழாயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -11-
—————————————————
அரி வுருவும் ஆளுருவுமாகி –முதல் திருவந்தாதி -31-
திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90-
முத்தீ மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இரையாவான் எங்கள் பிரான்–96-
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ -97-
எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-
திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே -20-
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -59-
திருமலை மேல் எந்தைக்கு -63-
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை –நான்முகன் -4-
நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -14-
அவன் என்னை ஆளி -30-
எம்பிரான் மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -58-
பொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவன் கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-
என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ கன்கறிந்தேன் நான் -96-
பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான் எம் பிரான் –திருவிருத்தம் -39-
எப்பால் யவர்க்கும் எண்ணும் இடத்ததுவோ எம்பிரான் எழில் நிறமே -43-
எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-54-
இரண்டே அடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே -61-
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே -86-
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே -89-
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று–பெரிய திருவந்தாதி -3-
உண்ணாட்டுத் தேசு அன்றே உள் வினையை அஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே
மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவு உற்றானாலும் ஆளி யம் கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு -79-
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடித்தான் எம்பெருமான் –சிறிய திருமடல்
அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக் காலத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –இந்நிலைமை எல்லாம் அறிவித்தால்
எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -பெரிய திருமடல்-
அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–இராமானுச நூற்றந்தாதி -51-
அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆள வந்த கற்பகம் -53-
ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசனை -90-
உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -107-
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்