Archive for the ‘Thirumazlisai Aazlvaar’ Category

ஸ்ரீ பேயாழ்வாரும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-அன்யாப தேச–திருத்தாயார் பாசுரம் —

April 7, 2023

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –

அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை   போய்
பகவத்  விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு  பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள்  –

—————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

—————————————————————————————

வியாக்யானம் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக  யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –

வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –

வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-

கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –

சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-

மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே   நீராட வென்று   நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய  சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –

மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –

மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –

நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –

அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-

ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –

ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்

அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –

இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –

பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்

பாடும் –
பாடுங்கோள்-

சூடும் –
சூடுங்கோள்-

புகும் –
புகுங்கோள்-

—————————————————

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

——————————————————

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்

இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –

பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

—————————————————————

செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்

(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–

பதவுரை

வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை

மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –

வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்

நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்

கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)

(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)

அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்

—————————————————————

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன் துழாய்‌
கற்பென்று சூடும்‌ கருங் குழல் மேல்‌ – மற்பொன்ற
நீண்ட தோள்‌ மால் கிடந்த நீள் கடல்‌ நீராடுவான்‌
பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) வியன் துழாய்‌ – வியக்கத்தக்க துளசி;

மற்பொன்ற – மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான;
மால்‌ – திருமால்‌;
நீள் கடல்‌ -திருப்பாற்கடல்‌.

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ அமைந்துள்ளது.
இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌.
என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌.
தனது கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக் கொள்கிறாள்‌.
மல்லர்கள்‌ அழியும்படியான நீண்ட தோள்களை யுடைய திருமால்‌ பள்ளி கொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே
நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌.
இப் பாசரத்தில்‌
‘கற்பென்று” பாதி வ்ரத்யத்தையும்‌,
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌,

‘என்‌ மகள்‌’ என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌.
மற்பொன்ற: மல்லர்களை யழித்த;
கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌,
கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, முஷ்டிகன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌.
பூண்ட நாள்‌ எல்லாம்‌: பூண்ட – பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌’ என்கிறபடியே,
“விடிந்த விடிவுகள்‌ தோறும்‌’ என்று பொருள் பட்டது.
எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌:
அவனுடைய திரு நாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திருக் கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திவ்ய சேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌,
வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌,
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌,
௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌
என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌.
இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு:
அதாவது –
தாமான தன்மையை (ஆண்மையை/ விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ எனப்படும்‌).
இப்படி அனுபவிக்கும்‌ இடத்தில்‌ தாய்ப் பாசுரம்‌, தோழிப் பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு.
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌.
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீ பாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை.

ஸ்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள்‌ அருளி செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌.
ஆயினும்‌ இப் பாசுரம்‌ ஒன்று தாய் வார்த்தையாகச்‌ செல்லுகிறது.
பேயாழ்வாராகிய பெண் பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது.
“என்னுடைய மகளானவள்‌” என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக் கொள்ள வேண்டும்‌.
இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌
இங்ஙனே தாய்ப் பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌,
“என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌
இவ் வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌
இப் பாசுரத்திற்கு வேறு வகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌.
எங்ஙனே எனில்‌:
”பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினை முற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு,
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌;
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே
சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச்‌ சூடுங்கள்‌;
நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌” என்பதாக.
இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌:
‘*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ அந்யாபதேசமின்றிக்கே யிருக்க
இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌…
திருமலையைப்‌ பாடுங்கோள்‌… திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌…
விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌” என்று.
திருவேங்கடத்தின்‌ புகழைப் பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌,
நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு …

——————————–

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ – கற்கின்ற
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40),

வீடு – மோட்சம்‌;
நூல் வலை – வேதங்களாகிய வலை;
நூலாட்டி – வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி;
கேள்வனார்‌ – கணவர்‌, இங்கே திருமால்‌.

மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌;
இதன்‌ பலனாகவே மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌…
“*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ எத்தகையது!” என்று
நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌!
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌
திருவடிகளாகிய வலையில்‌ அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌.
“மலை’ என்று வருகிற பெயர்களை யெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து
‘பசு மலை, குருவி மலை’ என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே,
என்னையும்‌ அறியாமல்‌ ‘திருவேங்கடமலை’ என்று என்‌ வாயில்‌ வந்துவிட்டது
இவ் வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌
கணக்கு செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து.
நின்று நினைக்கின்றேன்‌: நாம்‌ புத்தி பூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌,
எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டு
இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை.
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌,
ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌.
எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே என்னை
அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு.

எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, –
நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி.
வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி
ஆராய்ந்தபோது, எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று…
சரணாகதரைக்‌ காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி)
அந்நூல்களே * எதற்கென்று கேள்வனை (ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌.
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று,
அதனால்‌ அதை எனக்கு வீடாக்கினான்‌.
அதே மோட்சத் தானம்‌.
இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌).
இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ வாய்த்தது என்றபடி.
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோ ரூப முக்கரணங்களின்‌
வியாபாரங்கள்‌ (செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சிவவாக்கியர் பாடல்கள்–

December 30, 2021

ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரே ஸ்ரீ சிவவாக்கியர் என்று ஒரு சிலரும்

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோச தோச பாவமாயை தூர தூர ஓடவே

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கள் நூற் கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே (1)

அக்ஷர நிலை

ஆன அஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே (2)

சரியை விலக்கல்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (3)

யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே (4)

தேக நிலை

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் ந்ததினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே (5)

ஞானநிலை

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே (6)

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே (7)

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய் (8)

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே (9)

அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே (10)

கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே (11)

நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே (12)

யோக நிலை
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே (13)

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (14)

வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாற தெங்கனே
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே (15)

அஞ்சும் மூன்றும் எட்டாதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்து கொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே (16)

அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடியான வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே (17)

சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்
காம நோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே (18)

சங்கிரண்டு தாரை ஒன்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கி மாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரை ஊதவல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமோ (19)

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே (20)

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே (21)

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது காயகன்று நிற்பிரே
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே (22)

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம்உடைந்தபோதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லை ஆனதே (23)

கிரியை நிலை
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே (24)

உற்பத்தி நிலை
அண்ணலே அனாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலா நீர்ச் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்கனே (25)

அறிவு நிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்து விட்ட மந்ததிரங்கள் எத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகள்
ஆண்டறிந்த பான்மைதன்னை யார் அறியவல்லரே
விண்டவேத பொருளை அன்றி வேறு கூற வகாயிலா
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்பது இல்லையே (26)

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே (27)

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே (28)

யோக நிலை
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம் ந்ததம் நீரிலே
விருப்பமோடு நீர் குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே (29)

பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே (30)
40 வரை

செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே (31)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே (32)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே (33)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் எனகிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே (34)

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே (35)

இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடலாகுமே (36)

கலத்தின் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த நீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கிலே மனத்துளே கரந்ததோ (37)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே (39)

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே (40)

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே (21)

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது காயகன்று நிற்பிரே
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே (22)

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம்உடைந்தபோதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லை ஆனதே (23)

கிரியை நிலை
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே (24)

உற்பத்தி நிலை
அண்ணலே அனாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலா நீர்ச் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்கனே (25)

அறிவு நிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்து விட்ட மந்ததிரங்கள் எத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகள்
ஆண்டறிந்த பான்மைதன்னை யார் அறியவல்லரே
விண்டவேத பொருளை அன்றி வேறு கூற வகாயிலா
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்பது இல்லையே (26)

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே (27)

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே (28)

யோக நிலை
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம் ந்ததம் நீரிலே
விருப்பமோடு நீர் குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே (29)

பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே (30)
40 வரை

செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே (31)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே (32)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே (33)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் எனகிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே (34)

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே (35)

இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடலாகுமே (36)

கலத்தின் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த நீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கிலே மனத்துளே கரந்ததோ (37)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே (39)

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே (40)

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாறு தெங்கனே
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் (41)

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (42)

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது
முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)

ஒடுக்க நிலை
சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)

கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)

அறிவு நிலை
கறந்தபால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே (46)

அறையினில் கிடந்தபோது அன்று தூமை எனகிறீர்
துறை அறிந்து நீர்குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர்பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்கனே (47)

தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந்து அநேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டிருண்டு சொற்குருக்கள் ஆனதே (48)

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆவதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே (49)

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையைப் பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய்கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே (50)

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே (51)

இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண் திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்ற மயம் யாவர் காண வல்லரோ (52)

நாழிஉப்பு நாழி உப்பு நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
எருதில் ஏறும் ஈசனும்இயங்கு சக்ரதரனையும்
வேறு வேறு பேசுவார் வீழ்வர் வீண்நரகிலே (53)

தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏக முத்தியும் அவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே (54)

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின்
அத்தன் ஆடல் கண்டபின் அடங்கல் ஆடல் காணுமே (55)

உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்திலீர்
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே (56)

போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடா நீ இராமராம ராமவென்னும் நாமமே (57)

அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வுவந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமன்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே (58)

அறத்திறங்க ளுக்கும்நீ அகண்டம் எண் திசைக்கும் நீ
திறத்திறங் களுக்குநீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே (59)

அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம்நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மான நேர்மை கூர்மை என்ன கூர்மையே (60)

மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐஇறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்று இருப்பீர்காள்
மெய்அறிந்த சிந்தையாய் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே (61)

கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்ற நீர்
திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே (62)

தீர்த்தம் ஆட வேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம்தெளிந்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே (63)

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழுந்து போன பாவம் என்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலோ எழுத்திலே இருக்கலாம் இருத்துமே (64)

கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமாய்ப் பயந்த வேத சுத்தராய்
அண்டைமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் ஆவிரே (65)

ஈன் றவாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர் காள்
கான் றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான் றவாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன் றுமாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே (66)

உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும் வாசலைத் துறந்து உண்மைசேர எண்ணிலீர்
உழலும் வாசலைத் துறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே (67)

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆணை உண்மையே (68)

இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்க வேண்டும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர் (69)

அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ
விண்பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே (70)

சிவாயம் என்ற அக்ஷரம் சிவன் இருக்கும் அக்ஷரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ் செழுத்துமே (71)

உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே (72)

ஆத்துமா அனாதியோ ஆத்துமா அனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே (73)

அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணெய் தேடும்
அறிவிலா மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே (74)

அன்பு நிலை
இருவர் அரங்க மும்பொருந்தி என் புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கரு அரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்து பின்
திருஅரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே (75)

தன்னைத் தான் அறியவேண்டும் எனல்
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (76)

சமயவாதிகள் செய்கையை மறுத்தல்
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண்மறந்த வாறுபோல்
எண்ணில் கோடி தேவரும் இதின் கணார் இழப்பதே (77)

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்றஃ போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே (78)

மிக்க செல்வம் நீர்படைத்த விறகு மேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள் பெண்டீர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்து கூடலாகுமோ

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே (79)

மாடுகன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாடமாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாகவே மோதவே
உடல் கிடந்து உயிர்கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்

பாடுகின்ற உம்பருக்கு ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கர்மகூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்திய கல்வியாணனே (80)

கானமற்ற காட்டகத்தில் வேந்தெழுந்த நீறுபோல்
ஞானம் உற்ற நெஞ்சகத்தில் வல்லதே தும் இல்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால்
தேன் அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே (81)

பருகி ஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே (82)

சோதிபாதி ஆகி நின்று சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா
வீதியாக ஓடிவந்து விண்ணடியில் ஊடுபோய்
ஆதிநாதன் நாதன் என்று அனந்தகாலம் உள்ளதே (83)

இறைவனால் எடுத்த மாடத் தில்லையம்பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவுநாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே (84)

நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர்கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே (85)

தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவை
எல்லையைக் கடந்து நின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே (86)

உயம்புஉயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர்
உடம்புஉயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே (87)

அவ்வெனும் எழுந்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுந்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (88)

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்றுகாண்
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே (89)

என்ன என்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம் கடந்த பண்பென
மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே (90)

ஆலவித்தில் ஆல் ஒடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்மிளே பரப்பிரமம் ஆவிரே (91)

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால்
அவ்வும் உவ்வும்மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (92)

நவ்விரண்டு காலதாய் நவின்ற மவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே (93)

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்த தீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே (94)

கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே (95)

மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே (96)

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அஞ்செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே (97)

சோருகின்ற பூதம்போல் சுணங்கு போல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறுகோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே (98)

வட்ட மென்று உம்முளே மயக்கி விட்ட திவ்வெளி
அட்டரக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானை நாம் அறிந்தபின் (99)

பேசுவானும் ஈசனே பிரம ஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே (100)

நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராஞமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே (101)

பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமச்சிவாயவே (102)

பச்சை மண் பதிப்பிலே புழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்
பச்சைமண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்பிரான் இயற்று கோலமே (103)

ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநா தனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே (104)

விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும்
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே (105)

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே (106)

அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப் பிறப்பது இல்லையே (107)

ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்
சாதிபேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது
ஆதுயோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே (108)

மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
பலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்ற மாயம் நின்ன மாயம் ஈசனே (109)

பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர்
அரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெரிந்த ஞானியே (110)

தல யாத்திரை நீக்கல்
மண்கிடார மேசுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள் தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே (111)

ஞான நிலை
நாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விகாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார் (112)

இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்றஃ நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே (113)

காரகார காரகார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே (114)

நீடுபாரிபல பிறந்து நேயமான காயந்தான்
வீடுவேறு இதுஎன்றபோது வேண்டி இன்பம் வேண்டுமே
பாடி நாலுவேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடுராம ராமராம ராம என்னும் நாமமே (115)

உயிரு நன்மையால் உடல்எடுத்துவந்து இருந்திடும்
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே (116)

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்
நெட்டெழுத்திர் வட்ட மொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே (117)

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்து நின்ற தென்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே (118)

விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண் களிக்க உள்ளுளே கலந்து பிக்கிருந்தபின்
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே (119)

மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மைஆணை உண்மையே (120)

மின்எழுந்து மின்பந்து மின் ஒடுங்கும் வாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற வென்னியானி நான் அறிந்தது இல்லையே (121)

இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே (122)

ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே
ஆகிலும் அழிகிலும் அதன் கண்நேயம் ஆனபின்
சாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே (123)

வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்து பூசைபண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே (124)

ஞான நிலை
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்நதரே
துருத்தி நூல் முறுக்கிவிட்டுத் துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும்
திருத்தி நூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே (125)

சாவதான தத்துவச் சசடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே (126)
காலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கண் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி ஆகுமே (127)

மதவாதம் மறுத்தல்
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய்புழுத்து மாள்வரே (128)

அறிவு நிலை
அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்றஃ தூமை என்கிறீர்
துரை அறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்
பொறை இலாத நீசரோடும் பொருந்து மாறது எங்ஙனே (129)

சுத்தம் வந்த வெளியிலே சிலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது கட்டதேது தூய்மைகண்டு நின்றது ஏது
பித்தர்காயம் உற்றதேது பேதம் ஏதுபோதமே (130)

மாதாமாதம் தூமைதான் மறந்து போன தூமைதான்
மாதம் அற்று நின்றலோ வளர்ந்துருபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா (131)

தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தாண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும் அற்று நின்றதே (132)

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளைந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே (133)

தூமைகண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே (134)

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே (135)

சிட்டர் ஓது வேதமும் சிறந்து ஆக மங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்
கட்டி வைத்த போதகம் கதைக்கு கந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின் (136)

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே (137)

காலைமாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலைகாலையாச் சிவந்தமாயம் ஏது செப்பிடீர்
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே (138)

எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்றுமண்டலம்
நட்ட மண்டபத்துளே நாதன் ஆடி நின்றதே (139)

நாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்ட தங்கு உருத்திரன்
சேரிரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே (140)

அம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மை அப்பன் அப்புநீர் ஆதியாகி ஆனபின்
அம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே (141)

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே (142)

ஆதி உண்டு அந்தம் அல்லை அன்றிநாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே (143)

புலால் புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே (144)

உதிரமான பால்குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே (145)

உண்டகல்லை எச்சில் என்று உள்ளெறிந்து போடுறீர்
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்தபாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே (146)

ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே (147)

ஈனெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்
மூணு நாலு சீலையில் முடிந்த விழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே (148)

சாவல்நாலு குஞ்சது அஞ்சு தாயதீன வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநரி கூட்டிலே புகுந்தபின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே (149)

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே (150)

செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
சீவனுக்கு அழிவுவந்த சேதி ஏது செப்பிடீர்
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதி ஏது காணுமே(151)

நாடி நாடி தம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே (152)

பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே (153)

மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மான் உரித்த தோல்லோ மார்பில் நூல் அணிவதும் (154)

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது (155)

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டுமாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே (156)

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே (157)

நவ்வுமவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வுயவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம்
ஒவ்வுசுத்தி யுள் நிறைந்து உச்சியூடுருவியே
இவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே (158)

அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ (159)

பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ பழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச் சிவம் அதாம்
பார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே (160)

நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே (161)

நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (162)

நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே (163)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (164)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (165)

தாதரான தூதரும் தலத்தில் உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த கார்ரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே (166)

ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே (167)

சதுரம் நாலு மறையும் எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்ட மேவியே
உதிரந்தான் வரைகள் எட்டும் எண்ணும் என்சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே (168)

நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடனூ மேதிரண்ட தொன்றுமே
கோல்அஞ் செழுத்துடே குருவி வந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே (169)

கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆசனம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே (170)

அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்குதா மரையிதும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்சு எழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (171)

உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்
உவலையாகி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்
தற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்

சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்
சொல்லுகீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே (172)

உதிக்கின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்
கதிக்குகின்றது எவ்விடம் கன்றுறக்கம் எவ்விடம்
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்
விதிக்கவல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (173)

திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருங்கிலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றிவந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே (174)

தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே (175)

முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்து ச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே (176)

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே (177)

நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும்
கட்டுவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே (178)

வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படைத்திலே சங்குசக்கரங்களாய்
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசீவன் விட்டவாறது எங்ஙனே (179)

கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே (180)

நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்டதாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே (181)

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகாள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே (182)

உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே (183)

ஈரெழுத்து உலகெலாம் உதித்தஅட் சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே (184)

ஆதி அந்த மூலவிந்து நாதம் ஐந்து பூதமாம்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதமே சிவாயமே (185)

அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே (186)

ஓதொணமல் நின்றநீர் உறக்கம் ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும் இன்றி நின்றநீர் இயங்குமாறது எங்ஙனே (187)

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்குநாள் சடங்கெலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம்பிளந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே (188)

துருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்னமான சோதி யுண்டு
திருத்தமாய் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே (189)

வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூபதீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசை என்ன பூசையே (190)

முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிகொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று சுட்டும் அற்று முடியில் நின்ற நாதனை
எட்டுதிக்கும் கையினால் இருந்தவீட தாகுமே (191)

அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே (192)

மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோலவட்டம் மூன்று மாய் குலைந்தலைந்துநின்ற நீர்
ஞானவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (193)

சுக்கிலத் திசையுளே சுரோணிதத் தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார வரையிலே
அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே (194)

பூவம் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவிஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினால்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தூபதீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே (195)

உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறக்கில் ஏன் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே (196)

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே (197)

பொய்க் குடத்தில் ஐந்நொ துங்கி போகம் வீசுமாறுபோல்

இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே (198)

பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை (199)

அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ருபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொருப உண்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே (200)

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே (201)

அங்கவிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும்
சங்கு சக்கரத்திலும் சகல வானத்திலும்
பங்கு கொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (202)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்கள்
அஞ்செழுத்தும்மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்சழுத்தி அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே (203)

ஆதரித்த மந்திரம் அமைந்த ஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே (204)

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே (205)

ஒன்பதான வாசல் தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே (206)

அள்ளி நீரை இட்டதேது அங்கையில் குழைத்ததேது
மெள்ளவே மிணமிண வென்று விளம்புகிற்கி மூடர்கள்
கள்ள வேடம் இட்ட தேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் (207)

அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னிதொக் குளழலும் தூமையுள் அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே (208)

அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாத்து எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே (209)

அனுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல்லி போனியாய்
மனுப்பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே (210)

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே (211)

ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
எக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே (212)

அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே (213)

அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே (214)

உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா (215)

சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே (216)

உருத்தரிப்ப தற்குமுன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவு மூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே (217)

எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே (218)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே (219)

வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே (220)

அகார காரணத்திலே அனேகனேக ருபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயக்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே (221)

அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (222)

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே (223)

வானிலாத்து ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத்து ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாத்து ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத்து ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே (224)

சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகந்து இருத்தியே
துன்ப இன்பமுங்கடந்து சொல்லும் நாடி யூடுபோய்
அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே

விழித்த கண் குவித்தபோது அடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை நாருமில்லை ஆனதே (225)

நல்லமஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடு றீர்
நல்லமஞ்சனங்களுண்டு நாதன் உண்டு நம்முளே
எல்லை மஞ்சனங்கள் தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே (226)

உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன்
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுப்பவாறு உரைக்கினே (227)

அண்டம் ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால் அயனுடன் பரந்து நின்று உழலவே
எண்திசை கடந்து நின்ற இரூண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே (228)

உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே
கரியமாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (229)

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைந்து வைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே (230)

நாலதான யோனியும் நவின்ற விந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (231)

அருவமாய் இருந்தபோது அன்னை அங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னை நான் அறிந்தனன்
குருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே (232)

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே (233)

கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே (234)

ஆடுநாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடிஇட்ட பிச்சையும் உகந்து நெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம் வந்து நிற்குமே (235)

எள இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே (236)

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமன தாய்க்கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பை வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே (237)

மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டுபாடுதான் படுவரே (238)

அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய்
தன்னை ஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே

உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ள மீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரெளிப் பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்று நல்க வேணுமே (239)

பிடித்ததொண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தை விட்டு சாதிபே தங்கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மை கூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்று கூடலாகுமே (240)

சத்தி நீ தயவும்நீ தயங்குசங்கின் ஓசை நீ
சித்தி நீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்து நீ
முத்திநீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (241)

சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே (242)

உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே (243)

வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகம் பிறவியை வதைத்திடவம் வல்லிரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ள லாகுமே (244)

காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே (245)

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின் றபேயர்காள்
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே (246)

மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலி எட்டி தழுமாய் குளிர்ந் தலர்ந்த தீட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே (247)

ஆதிகூடு நாடிஓடி காலைமாலை நீரிலே
சோதி மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்த காரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே (248)

பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துளே
ஓங்கிநாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய்விதத்தினில்
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே (249)

புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடுமன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே (250)

அம்பலங்கள சந்தியில் ஆடுகின்ற வம்பனை
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே (251)

அண்ணலாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகல புராணம் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் (252)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காணவேணும் அப்பனே (253)

ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே (254)

என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னே நான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றி யாதுமென்றும் இல்லையே (255)

விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்றும் எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யான்றிந்தது இல்லையே (256)

அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே (257)

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புனல்சுழல்
விட்டு வீழில் தாகபோக விண்ணில் மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதலின்பம் ஆகுமே (258)

ஏகமுத்தி மூன்று முத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தாய்
நாகமுற்ற சயனமாய் நலங் கடல் கடந்த தீ
யாகமுற்றி ஆகி நின்ற தென்கொலாதி தேவனே (259)

மூன்று முப்பது ஆறினோடு மூன்று மூன்று மாயமாய்
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றனாவின் உள்புகுந்த தென்கொலோ நம் ஈசனே (260)

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்ற நீ
ஐந்தும் ஐந்தும் ஆயநின்னை யாவர் காண வல்லரே (261)

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாமாயம் மாயனே (262)

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதிதேவனே
எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே (263)

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஒன்பதாய்
பத்து நாற் திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையா
பத்துமாய் கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்தி முத்தியாகுமே (264)

வாசியாகி நேசம் ஒன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்த தோளியில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே (265)

எளியதான காயமீதும் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான ஜோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே (266)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே (267)

பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மை தன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே (268)

ஒன்றை ஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (269)

மச்சகத்து ளே இவர்ந்து மாயைபேசும் வாயூவை
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்தி கொள்விரேல்
அச்சகத்து ளேயிருந்து அறுஉணர்த்தி கொண்டபின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே (270)

வயலிலே முளைத்த நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே (271)

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்று நீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே (272)

ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்தும் இல்லை இல்லையே (273)

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப் பரத்துளே (274)

ஏழுபார் எழுகடல் இடங்கள் எட்டு வெற்புடன்
குழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிர்மாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே (275)

கயத்துநீர் இறைக்குறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்
மனத்துள் ஈரம் ஒன்றில்லாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துள் ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த வோதியும் நீயும் நானும் ஒன்றலோ (276)

நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்
ஆரை உன்னிநீரெலாம்அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழும்
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே (277)

பத்தொடுற்ற வாசலில் பரந்து மூல வக்கர
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே (278)

அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விர லைஒன்றி மீளவும்
தின ந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே (279)

மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ (280)

முச்சதுர மூலமூகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே (281)

வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே (282)

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே (283)

பொருந்துநீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம்
எருதிரண்டு கன்றை ஈன்ற வேகமொன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே (284)

அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே (285)

ஈரொளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே (286)

கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறது எங்ஙனே (287)

வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கை எங்கள் நோக்குமே (288)

உள்ளினும் புறம்பினும் உலகம் எங்ஙணும் பரந்து
எள்ளில் எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட் புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே (289)

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம் நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமொடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே (290)

சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே
பேணி அப்பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே (291)

அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சு கூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே (292)

அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போய் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்ற நேர்மை யாவர் காணவல்லரே (293)

ஆகமதின் உட் பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும் நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே (294)

மூலவாசல் மீதுளே முச்சதுரம் ஆகியே
நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம்
கோலம் ஒன்றும் அஞ்சுமாகுமெ இங்கலைந்து நின்ற நீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே (295)

சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்த ஆதிசோதி நீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே (296)

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே (297)

சுற்றும் ஐந்து கூடமொன்று சொல்லிறந்ததோர்வெளி
சக்தியும் சிவனுமாக நின்றதன்மை ஒக்கிலீர்
சக்தியாவது உம்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே (298)

மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே (299)

தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (300)

மூன்று பத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்று சேரஞானிகாள் துய்யபாதம் என் தலை
ஏன் றுவைத்த வைத்தபின் இயம்பும் ஐந்தெழுத்தையும்
தோன்றோத வல்லிரேல் துய்யசோதி காணுமே (301)

உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே (302

பூவாலய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறு வேறு தன் மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர் காண வல்லரே (303)

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்துவப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே (304)

மனவிவகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே (305)

இட்டகுண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா
சுட்டமண் கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா
முட்டிநின்ற தூணிலே முளைத் தெழுந்த சோதியை
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே (306)

நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடி நின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே (307)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
சிறந்தஐம் பலன்களும் திசைத்திசைகள் ஒன்றின் என்
புறம்புமுள்ளும் எங்ஙனும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே (308)

ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யான் உணர்ந்த நேர்மையே (309)

பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குரு இருந்த கோலமே (310)

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
கண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே (311)

ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடத்துகாலில் ஏறியே
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்று அறிமினோ அனாதி நின்ற ஆதியே (312)

உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதிநீ
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்தபின்
சிரித்தமண்டலத்துளே சிறந்ததே சிவாயமே (313)

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும்பட்டதே (314)

விழித்த கண்துதிக்கவும் விந்துநாத ஓசையும்
மேருவும் கடந்த அண்ட கோலமுங் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரஞான வெளியிலே
யானும் நீயு மேகலந்த தென்ன தன்மை ஈசனே (315)

ஓம்நமா என்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்
நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா
ஊனும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா எனக்குளே (316)

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதாய்
நல்புலன்க ளாகி நின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே (317)

ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமே
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்த்திரேல்
ஊன்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே (318)

ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன் றெழுத்துமே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே (319)

புவனசிக்க ரத்துளே பூதநாத வெளியிலே
பொங்கு தீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே

மவுன அஞ்செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்தபின்
அவனும் நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே (320)

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமை என்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே (321)

வலுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதுபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூக்ஷ சூக்ஷ சூக்ஷமே (322)

ஆகிகூவென் றேஉரைத்த அக்ஷரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே (323)

கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடி நாடி நாளகன்று வீணதாய்
தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே
கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே (324)

கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே (325)

வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான்
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதி வீதி வீதி வீதி விடைஎருப் பொறுக்குவோன்
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் (326)

ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே
காண்மையான வாதிருபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே (327)

மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகி கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி (328)

சுடரெழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே (329)

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலாத சாகரத்தின் தண்மைகாணா மூடர்கள்
முனிலாமல் கோடி கோடி முன்ன றிந்த தென்பரே (330)

சூக்ஷமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே
தீக்ஷையான தீவிலே சிறந்ததே சிவாயமே (331)

பொங்கிநின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்குநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே (332)

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ் சுடரிலே
ஞான மானமூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஒனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே (333)

உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும் ஹீயும் ஆனதே (334)

கூவுமுகியும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித் தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போல் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே (335)

ஆண்மைகூறும் மாந்தரே அருக்கினோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே (336)

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே (337)

ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே (338)

வித்திலே முளைத்த சோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே ஒளிவதாகி யோனமான தீபமே
ந்ததிலோ திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே (339)

மாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே (340)

மோனமான வீதியில் முடிகி நின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்து நின்ற வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே (341)

உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்றுலவுமே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே (342)

அஞ்சு கொம்பில் நின்றநாத மாலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்து நின்ற மோனமே (343)

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைந்ததே (344)

அமையுமால் மோனமும் அரன் இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தை உற்று நோக்கிலார் (345)

பாய்ச்ச லூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டிநின்ற சோதியே (346)

சோதி சோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர் (347)

சுடரதாகி எழும்பியங்கும் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்ற ஆதிபஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே (348)

நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றி அற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும் (349)

வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை
நயங்கள் கோவென்றே நடுங்கி நங்கையான தீபமே (350)

தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூக்ஷமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே (351)

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில்
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதேவிரிந்து நின்ற மோனமே (352)

உட்கமல மோனமில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே (353)

உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளிகிரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல் கீயில் நின்று கீச்சு மூச்சு என்றதே (354)

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பர வெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே (355)

ஆறுமுலைக் கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறுமென்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே
பாறுகொண்டு நின்றதுபரந்ததே சிவாயமே (356)

பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன் அன்றிப் பெண்ணும் ஆணும்
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே (357)

அருளிருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும் ஹீயும் ஆனதே (358)

ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே
தானும் தானும் ஆனதே சமாந்தமாலை காலையில்
வேனலோடும் வாறுபோல் விரிந்ததே சிவாயமே (359)

ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்கும் உள் கமலமும்
மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே (360)

வாயில்கண்ட கோணமில் வயங்கும் ஐவர்வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும்
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே (361)

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமல் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே (362)

வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாதத்தி னால்எழுப்பி வாசல் ஐந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரி ஆல யம் கடந்து மூலநாடி ஊடுபோய்

அடிதுலக்கி முடியளவும் ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே (363)

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்திலூறல் அன்றுகாண்
மந்திர்ரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே (364)

மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்து எழுத்துமே (365)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவ்வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காண வேண்டும் மாந்தரே (366)

ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாவெழுந்து நாவிளே நவுன்றதே சிவாயமே (367)

முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த அப்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர் நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (368)

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே (369)

வெளியுருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்த பின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே (370)

முப்புறத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செழுத்துமாம்
தற்பரம் உதித்து நின்று தாணுஎங்கும் ஆனபின்
இப்புறம் ஒடுங்குமோடி எங்கும் லிங்கம் ஆனதே (371)

ஆடிநின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே (372)

உருத்தரித்த போது சீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ் செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே (373)

கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது கரணம் இரண்டு கண்களாய்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்து நாதனே (374)

ஆன வன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது
மானசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதான தானதாய் அவலமாய் மறைந்திடும் (375)

ஈன்றறெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே (376)

எங்கும் எங்கும் ஒன்றலோ ஈரேழ் லோகம் ஒன்றலோ
அங்கும் இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்கு தாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே (377)

அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்தது
அம்பரக் குளியிலே அங்க மிட்டுருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (378)

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்தது
மாடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுமே குருவிருந்த கோலமே (379)

விட்டடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ
எட்டி நின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ
தட்டுவரும் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்த பேர்கள் வானதேவர் ஆவரே (380)

வானவர் நிறைந்த சோதிமானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வாதேனவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்த மண்ணு மாணிக்கங்கள் ஆனவே (381)

பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே (382)

உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மைக் கண்டது எவ்விடம்
மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோகம் ஆய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே (383)

வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத்தொலியிலே
கோயிலிட்டு வாவியும் அம்கொம்பிலே உலர்ந்தது
மாயலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே (384)

அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாம்
அச்சரத்தையும் திறந்து அகோரமிட்டு அலர்ந்தது
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (385)

கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்
மயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும அறிந்துணர்ந்து கொள்வீரேல்
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்த துஒக்குமே (386)

கோயில் எங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ
தேயு வாயு ஒன்றலோ சிவனும் அங்கே ஒன்றலோ
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ
காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே (387)

காது கண்கள் மூக்கு வாய் கலந்து வாரது ஒன்றலோ
சோதி யிட்டெடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்றலோ
ஓதிவைத்த சாத்திரம் உதித்து வாரது ஒன்றலோ
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர் ஆவர் காணுமே (388)

அவ்வுதித்த அட்சரத்தின் உட் கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே (389)

அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ
அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ
விகாரமற்றி ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே (390)

சத்தியாவது உன்னுடல் தயங்கு சீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
சுத்தி ஐந்துகூடம் ஒன்று சொல்லிறந்நதோர் வெளி
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மையாவது உண்மையே (391)

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே (392)

அக்கரம் அனாதி அல்ல ஆத்துமா அனாதி அல்ல
புக்கிலுந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல
தக்கமிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல
ஒக்க நின்று உடன்கலந்த உண்மை காண் அனாதியே (393)

மென்மையாகி நின்றது ஏதுவிட்டு நின்ற தொட்டது ஏது
உண்மையாக நீயுரைக்க வேணும் எங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றதொன்றுவிட்டு நின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந்து இருந்ததே (394)

அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே
உடக்கினால் எடுத்த காயம் உண்மையென்று உணர்ந்து நீ
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால்
விடக்கு நாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ (395)

உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தன்மையான சக்கரம் காயமும் தரித்த ருபம் ஆனதும்
வெண்மையாகி நீறியே வீளைந்து நின்றதானதும்
உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே (396)

எள்ளகத்தில் எண்ணெய்போல எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளை நாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே (397)

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணுமன்றி வேறியாவும் கனாமயக்கம் ஒக்குமே (398)

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே (399)

ஆடுகின்ற எம்பிரானை அங்கும்இங்கும் நின்றுநீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவதொன்றை ஓர்கிலீர்
நாடிநாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே (400)

சுற்றி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர் வெளி
சத்தியும் சிவமுமாகி நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது எம்முடன் தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் அறிந்துகொள்பிரான் இருந்த கொலமே (401)

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (402)

சக்கரம் பறந்ததோடி சக்கரமேல் பலகாயாய்
செக்கிலாமல் எண்ணெய்போல சிங்குவாயு தேயுவு
முக்கிலே ஒளிகலந்து உகங்களும் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே (403)

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தோர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே (404)

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சால உன்னிநெஞ்சுளே தரித்ததே சிவாயமே (405)

சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்றுபாழது
பித்தரே இதைக்கருதி பேசலாவது எங்ஙனே (406)

எங்ஙஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம் அண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றவே (407)

அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதில் பிற வாதபூசை ஏத்தியே
நற்றவம் புரிந்து ஏக நாதர் பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே (408)

பார்த்துநின்றது அம்பலம் பரமன் ஆடும் அம்பலம்
கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (409)

சென்று சென்று இடந்தோறும்சிறந்த செம்பொன் அம்பலம்
அன்றும் இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம்
ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே (410)

தந்தைதாய் தமரும் நீ சகலதே வதையும் நீ
சிந்தைநீ தெளிவும்நீ சித்தி முத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம் நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே (411)

எப்பிறப்பி லும்பிறந்து இறந்து அழிந்த ஏழைகாள்
இப்பிறப்பிலும்பிறந்து என்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே (412)

எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்
எட்டு அக்கரத்துளே உகாரமும் மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அக்ஷரத்துளே அமர்ந்ததே சிவாயமே (413)

பிரான்பிரான் என்றுநீர் பினத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல் (414)

ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே (415)

அம்மையப்பன் அப்ப நீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை இல்லையே (416)

நூறுகோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்
நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய்
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (417)

முந்த ஓர் எழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்த ஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்த ஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்த ஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே (418)

கூட்டம் இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென் எழுத்துளே
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே (419)

காக்கை மூக்கை ஆமையர் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரமம் ஆனதே (420)

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே (421)

ஓட்டுவைத்து கட்டி நீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்ந்தன் அங்கு வாழுமோ
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம் இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே (422)

இந்த ஊரில் இல்லை என்று எங்குநாடி ஓடுறீர்
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில்அறிந்துணர்ந்து கொள்ளுமே (423)

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணி கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே (424)

பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண்பற்றியே
பின்புமாங் கிஷத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்த பேர்கள் ஆறுநீந்தல் போல்விடே (425)

விட்டிருந்த தும்முளே விதனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று
கட்டி வைத்த வாசலும் கதவு தாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிஷத்துளே (426)

ஆகும்ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்தி நிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் (427)

உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல்
தண்மைபெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும்
கன்மதன்மம் ஆகும் ஈசர் காட்சிதானுங் காணுமே (428)

பாலகனாக வேணும் என்று பத்திமுற்றும் என்பரே
நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால்
மூல நாடி தன்னில் வன்னி மூட்டி அந்த நீருண்
ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே (429)

எய்து நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல்
எய்தும் உண்மை தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும் அது திண்ணமே (430)

திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே (431)

இருப்பன் எட்டெட் டெண்ணிலே இருந்து வேறது ஆகுவன்
நெருப்புவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவான்
கருப்புகுந்து காலமே கலந்த சோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே (432)

கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே (433)

தெளிந்தநற் சரியை தன்னில் சென்றுசா லோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே (434)

சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மை என்றது இல்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டு நாலும் செய்தொழில் திடப்படே (435)

திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டி உள்குறித்து நோக்கவல்லிரேல்
வெறிகமழ் சடையுடை யோன்மெய்ப்பதம் அடைவரே (436)

அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறுமாறுபோல்
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே (437)

ஊன்றியேற்றி மண்டலம் உருவிமூன்று தாள் திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுர் தம் வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்பரம் பொருந்தி வாழ்வதாகவே (438)

ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் மியல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடி ஏகர் ஏகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே (439)

அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே (440)

சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்
ஆதிசக் கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே (441)

திருவுமாய் சிவனுமாய் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கனமவாதனை யெலாம்
ப,உதிமுன் இருளதாய் பறியும் அங்கி பாருமே (442)

பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன்
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே (443)

கண்டிலாது அயன்மால் என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன்தொழுது நோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம் எரித்த பத்தி வந்து முற்றுமே (444)

முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்று தன்னை பற்றிநிற்க வல்லது
கற்றதாலே ஈசர்பாதம் காண லாயிருக்குமோ
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே (445)

கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே
வாட்டம் உள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே (446)

எழுப்பி மூல நாடியை இதப்படுத்தலாகுமோ
மழுப்பிலாத சபையை நீர் மலித்துவாங்க வல்லிரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பன த்தில் அப்புறம்
அழுத்தி ஓர் எழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே (447)

அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள் இணைக்கு நாதனுக்கும் ஈந்திலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருத்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூர தூரம் ஆனதே (448)

ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே (449)

உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும் அங்கு நேசமாகி நின்றமுர் தம் உண்டுதாம்
குலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே (450)

கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே (451)

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்த ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்கீசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே (452)

கருக்கலந்த காலமேகண்டு நின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னை நான் உணர்ந்தது
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ (453)

ஞான நூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானம் அல்லது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே (454)

கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருட்பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்
உருப்புணர்ந்த ஞானிகள் விரித்துரைக்க வேணுமே (455)

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மருவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உருவினைப் பயன் இதென்று உணர்ந்த ஞானி சொல்லுமே (456)

வாயில் எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில் போன வாறதென்ன எவ்விடம்
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏது சொல் (457)

தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே (458)

மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேதமாய் உருத்தரிக்கும் ஆறுபோலவே
வேதம் ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே (459)

வகைக்குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக் குலங்கள் ஆன நேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்தசுக்கிலம் அன்றியே வேறு ஒன்று கண்டிலீர்(460)

ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும்
பூததத் துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே (461)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என்
புறம்பும் உள்ளும் எங்கணும் பொதிந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பதும் ஏதும் இல்லையே (462)

அங்கலிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டு நீ அமர்ந்திருந்த மார்பனே
எங்கும் ஓடி எங்கும் எங்கும் ஆடழிந்து மாய்கிறீர்
செங்கல் செம்பு கல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே (463)

தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டு வந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே (464)

உந்திமேலே நாலுமூன்று ஓம் நம சிவாயமாம்
சந்தி சந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்தி சந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே (465)

வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டுசிந்தையில் இரண்டில் ஒன்று
உன்னி உன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே (466)

தொண்டு செய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர்
உண்டு உழன்று நம்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுளாடு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே (467)

பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா
கரம் உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே (468)

மூலவட்ட மீதிலே முளைத்த ஐந்து எழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (469)

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே (470)

இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும் ஞானம் எவ்விடம்
அடங்குகின் றது எவ்விடம் அறிந்து பூசை செய்யுமே (471)

புத்தகங்களைச் சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றுஅறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல்
உத்தமத் தூள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே (472)

அருளிலே பிறந்துதித்து மாயைருபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல்
மருள் அது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே (473)

தன்மசிந்தை ஆம் அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தமிழ்ந்த கசடரே
சென்ம சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே (474)

கள்ளவுள்ள மேயிருக்க கடந்த ஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதி இதன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே (475)

காண வேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்றசீவன் தான்சிவம் அதாகுமே (476)

அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர் (477)

எச்சில் எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்த எச்சில் தேனலோ வண்டின் எச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே (478)

தீர்த்தலிங்கமூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லிரேல்
தீர்த்தலிங்கம் தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே (479)

ஆடுகொண்டு கூறு செய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்பபூசை என்ன பூசை என்ன பூசையே (480)

என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனது நாட்டம் எனதுநாவில் உதவி செய்வீர் ஈசனே (481)

எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
எந்தைபூர ணப்பிரகாசர் ஏகபோகம் ஆகியே
நல்லின்ப மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம் உண்டு நான் அழிந்து நின்றநாள் (482)

ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வான நாடும் ஆளலாம் வண்ண நாடார் ஆணையே (483)

நித்தமும் மணி துலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே (484)

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லிரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே (485)

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே (486)

பன்னிரண்டு நாள் இருத்திப் பஞ்சவன்னம் ஒத்திட
மின்னி அவ்வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆவரே (487)

தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே (488)

முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அப்புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (489)

வல்லவாசல் ஒன்பதும் மருத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்பது இல்லையே (490)

வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும் வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத் தொடுங்க வல்லிரேல்
பண்டுகொண்ட வல்லினை பறந்திடும் சிவாயமே (491)

ஓரெழுத்தி லிங்கமாகஓதும் அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே (482)

தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம் என்று பரிந்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே (493)

குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள் தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டை ஏந்துகையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன் தொழப்பணிந்து வாழ லாகுமே (494)

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெய் உண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே (495)

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)

நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான நாதனான தான்னா (497)

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போத்து நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே (498)

பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா
நாய்கள்பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே (499)

உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில் நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே (500)

பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே (501)

சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏதுகாண் (502)

வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம் ஓடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே (503)

பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்குப் பரம் இலை அது உண்மையே
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே (504)

மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக் கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே (505)

சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தர் இங்கு இருந்தபோது பித்தன் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டிருப்பரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே (506)

மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இது உண்மையே (507)

சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தி தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே (508)

காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடுவிட்டு அகன்று உன் ஆலி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே (509)

கட்டையால் செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாடியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே (510)

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே (511)

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே (512)

நேசமுற்றுப் பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே (513)

வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தர வெனச்
சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காததூரம் ஓடிச் செல்வர் காண்பதும் அருமையே (514)

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே (515)

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்துநேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே (516)

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம் என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும் கைப்பற்றுவார் (517)

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவியேன்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே (518)

முத்திசேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பாரென
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தயம் வயிறு வளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே (519)

செம்மை சேர்மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே (520)

எத்திசை எங்கும் எங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்த ஞானி யாவரோ
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தி இன்றி பாழ்நரகில் மூழ்கி நொந்து அலைவரே (521)

கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ருபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லை அற்றிடப்பெரும் சகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே (522)

இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவம் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலுயிர்கள் ஓங்கல் அஞ்சு எழுத்திலே
நிச்சயம் மெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்து எழுத்திலே (523)

சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரம் கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்கள்
பாத்திரம் அறிந்து மோன பக்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே (524)

மனவுறுதி தானிலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் (525)

சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத் தீ ஆகுமே (526)

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சிவவாக்கியர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆழ்வார்களும் மங்களா சாசன திவ்ய தேசங்களும் –

October 23, 2021

ஸ்ரீ பொய்கையாழ்வார் ஸ்ரீ காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலில்(திருவெக்கா)
உள்ள பொய்கையில்(குளம்)அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – திருவோணம்
திவ்விய ப்ரபந்தம் – முதல் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய பாஞ்சச்சன்னியத்தின் அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பொய்கையாழ்வார் பாடி திவ்ய தேசங்கள்-6

திருவரங்கம்
திருக்கோவலூர்
திருவெஃகா
திருவேங்கடம்
திருப்பாற்கடல்
திருபரமபதம்

—————-

ஸ்ரீ பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த ஸ்ரீ மாமல்லபுரத்தில் உள்ள
ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயில் அருகில் அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – அவிட்டம்
திவ்விய ப்ரபந்தம் – இரண்டாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின்(கதை)அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பூதத்தாழ்வார் பாடி திவ்ய தேசங்கள் – 13

திருவரங்கம்
திருக்குடந்தை
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருக்கோவலூர்
திருக்கச்சி
திருப்பாடகம்
திருநீர்மலை
திருகடல்மல்லை
திருவேங்கடம்
திருதண்கால்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்

————–

ஸ்ரீ பேயாழ்வார் சென்னையில் உள்ள ஸ்ரீ திருமயிலையில்(மயிலாப்பூர்) அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – சதயம்
திவ்விய ப்ரபந்தம் – மூன்றாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய நாந்தகம்(வாள்)அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பேயாழ்வார் பாடிய திவ்யதேசங்கள் – 15

திருவரங்கம்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கச்சி
அஷ்டபுயகரம்
திருவேளுக்கை
திருப்பாடகம்
திருவெஃகா
திருவல்லிக்கேணி
திருக்கடிகை
திருவேங்கடம்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்
திருபரமபதம்

—————–

ஸ்ரீ திருமழிசையாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார்.
இவர் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் அவதரித்தவர்.

மாதம் – தை
நட்சத்திரம் – மகம்
திவ்விய ப்ரபந்தம் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்.

இவர் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.

ஸ்ரீ திருமழிசையில் பார்கவர் என்பவர் யாகம் புரிகையில் அவரது மனைவி கனகாங்கிக்கு தலை,கை,கால் உள்ளிட்ட
உறுப்புகளின்றி ஓர் பிண்டமாக அவதரித்தார்.
இதனால் மனம் வருந்தி பெற்றோர், பிண்டத்தை ஒரு பிரம்புதூற்றின் அடியில் விட்டுச் சென்றனர்.
பின்னர் திருமகளின் அருளால், எல்லா அவயவங்கள் பெற்று ஒரு குழந்தையானார்.
பின்னர், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க போனவிடத்தில் குழந்தை அழுகுரலைக் கேட்டு,
அதை எடுத்துக்கொண்டு வந்து தமது மனைவி, பங்கயச்செல்வியுடன் சேர்ந்து வளர்த்தார்.
அக்குழந்தைக்கு, பசி, துக்கமின்றி இருந்தும் உடல் சிறிதும் தளரவில்லை.

இந்த ஆச்சர்யத்தை கேள்வியுற்று அருகில் இருந்த சிற்றூரில் இருந்து வந்த வயதான தம்பதியர் பால் கொடுத்தனர்.
அவர்களின் அன்பின் மிகுதியால் குழந்தை பால் குடிக்கத் தொடங்கியது.
சிறிதுகாலம் கழித்து, தனக்கு பால் கொடுத்த தம்பதியருக்கு கைம்மாறு பொருட்டு,
தனக்கு கொடுத்தப் பாலில் மீதியை உண்ணுமாறு செய்தார்.
அவ்வாறு உண்டபின் அவர்களுக்கு இளமை திரும்பியது.
அவர்களுக்கு ஸ்ரீ கணிகண்ணன் என்ற குழந்தை பிறந்தது.
ஸ்ரீ கணிகண்ணன் பின்னர் ஸ்ரீ திருமழிசையாழ்வார் சீடரானார்.

இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை,இவரே பாடினார்-

சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்

இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி
பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு.

ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாளும்
தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்காவில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார்.
அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகப்பலதாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார்.
கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட இயலாமையை நீக்குமாறு கேட்க,
ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார்.பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத
அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான்.
அவள் ஆழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல
ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல,
‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன்,
கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, ஸ்ரீ யதொக்தகாரி பெருமானிடம்-

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்–என்று பாடினார்.

பெருமானும் அவ்வாறு சென்றார்.அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு,
அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன்,
தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார்.
ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.–என்று வேண்ட திருமாலும் திரும்பினார்.

ஸ்ரீ ஆழ்வார் சொன்னபடி செய்தமையால்,
பெருமானுக்கு “ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர் பெற்றார்.

ஸ்ரீ திருக்குடந்தையில் ஸ்ரீ திருமழிசையாழ்வார்
ஸ்ரீ கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார்.பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்தார்.
அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர்.
இதைப் புரிந்துக்கொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.அதன்பின்,பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர்.
ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார்.
”கிருஷ்ணனாம் வ்ரீஹிணாம்நகநிர்பிந்நம்“
என்ற ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.

ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர்.
யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருங்கயைப் பொறுக்கவில்லை.
இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்கு காட்டுமாறு பாடினார்-

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்
சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே

பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்கு தன்னைக் காட்டினார்.

ஸ்ரீ ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருச்சந்த விருத்தம்-61)

இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஸ்ரீ ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க,
பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.அவர் சொன்னதை தட்டாமல், பெருமான் அப்படியே இருந்தார்.
இக்கோலத்தை இன்றும் இக்கோயிலில் சேவிக்கலாம்.

பிறப் பெயர்கள்
ஸ்ரீ பக்திசாரர்
ஸ்ரீ உறையில் இடாதவர் – வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)
ஸ்ரீ திருமழிசைபிரான்
இவர் நிறைய திவ்யபிரபந்தங்கள் எழுதிக் காவிரியில் விட்டார்.
அவற்றுள் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்தவிருத்தமும் திரும்ப வந்தது

———–

ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.இவர் தூத்துக்குடி மாவட்டம்,
ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

மாதம் – சித்திரை
நட்சத்திரம் – சித்திரை
திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான ஸ்ரீ கருடனின் அம்சமாக அவதரித்தார்.

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு ஸ்ரீ நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீ மதுரகவிகள், ஸ்ரீ நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால்,
பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு,
பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார்.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.
அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணி கொண்டு ஸ்ரீ மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று
ஸ்ரீ நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,திருநகரிப்பெருமாள் வந்தார்,
திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்”
என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல்,
விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.
பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)

என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது.
நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக
நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரே பாடலை எழுதினர்.
இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி
அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்.
அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால்,
பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும்.
ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில் இருந்து தவறினால்,
சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால்,
அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.

—————-

ஸ்ரீ நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீ திருக்குறுங்குடி (ஸ்ரீ ஆழ்வார் திருநகரி) என்னும் ஊரில் அவதரித்தார்.
ஸ்ரீ நம்மாழ்வார், ஆழ்வார்களுக்கு தலைவராய் கொண்டாடப்படுபவர். அவர் அவயவி என்றுப் போற்றப்படுவர்.
அதாவது, மற்றைய ஆழ்வார்களை உடலாக எடுத்துக்கொண்டால், நம்மாழ்வார் அவர்களுக்கு ஆத்மா அவர்.

மாதம் – வைகாசி
நட்சத்திரம் – விசாகம்

திவ்வியப்பிரபந்தம் – திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி.

காரியார், உடையநங்கை ஆகியோருக்கு இன்றைய கேரளாவில் உள்ள ஸ்ரீ திருவண்பரிசாரத்தில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின் அவர்கள் ஸ்ரீ திருக்குறுங்குடி திரும்பினர். தங்களுக்கு குழந்தை வேண்டி இருவரும் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியிடத்தில் பிரார்த்திக்க,
அவரும் அர்ச்சகர் முகமா “நாமே வந்து அவதரிக்கிறோம்” என்று சொன்னார்.

அவ்வாறே விஷ்வக்சேனர் அம்சமாக வைகாசி மாதம், சுக்ல பக்ஷம், பௌர்ணமி திதியில், விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார்.
அவருக்கு துணையாக ஆதிசேஷனும் திருப்புளி ஆழ்வாராக(புளிய மரம்) அவதரித்தார்.பொலிந்து நின்ற பிரான் சன்னதி
குழந்தையை எடுத்துச்சென்று மாறன் என்றுப் பெயரிட்டனர். பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால்
பெற்றோர் இவருக்கு “மாறன்” என்றுப் பெயரிட்டனர்.

மாறன் கோயிலில் உள்ள புளியமரத்தில் சென்று அமர்ந்துவிட்டார். யாரிடமும் பேசாமல், எதுவும் உண்ணாமல்,
கண்களை மூடிக்கொண்டு த்யானத்தில் 16 வருடம் இருந்தார். பின்னர் மதுரகவி ஆழ்வார் வந்தபின் தான் நம்மாழ்வார் கண் திறந்தார்.

கலி பிறந்த 43வது நாளில் அவதரித்தவர்.

நம்மாழ்வார் வடமொழி வேதங்களை தமிழ் படுத்தியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று போற்றபடுகிறார்.
அவர் பாடியப் பாசுரங்களில், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி முறையே
ரிக், யஜுர், அதர்வண,சாமவேத சாரங்களாகும்.
திருவாய்மொழி – 1102 பாசுரங்கள்
திருவிருத்தம் – 100 பாசுரங்கள்
திருவாசிரியம் – 7 பாசுரங்கள்
பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள்

கம்பர் திருவரங்கத்தில் கம்பராமாயணத்தை அரங்கேற்ற சென்ற போது, அரங்கநாதன் “நம்மாழ்வாரை பாடினியோ”
என்று கேட்க கம்பர் நம்மாழ்வாரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டே “சடகோபர் அந்தாதி” இயற்றினார் .

பாடிய திவ்யதேசங்கள்

ஸ்ரீ நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசங்கள் மொத்தம் 37

திருவரங்கம்
திருப்பேர்நகர்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கண்ணபுரம்
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருவெக்கா
திருவயோத்தி
திருவடமதுரை
திருத்வாரகை
திருவேங்கடம்
திருநாவாய்
திருக்காட்கரை
திருமூழிக்களம்
திருவல்லவாழ்
திருக்கடித்தானம்
திருசெங்க்குன்றூர்
திருப்புலியூர்
திருவாறன்வினை
திருவண்வண்டூர்
திருவனந்தபுரம்
திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
திருக்குறுங்குடி
திருச்சிரீவரமங்கை
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருப்புளிங்குடி
திருத்தொலைவில்லிமங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
தென்திருப்பேரை
திருக்குருகூர்
திருமாலிரும்சோலை
திருமோகூர்
திருப்பாற்கடல்
திருப்பரமபதம்

பிற பெயர்கள் –கீழ் உள்ளவை, நம்மாழ்வாரின் பிற பெயர்கள்.
சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

February 16, 2021

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —-இரண்டாம் திருவந்தாதி -24-

(உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -ஸ்வரூப பரம் போல் இதுவும் அவன் கண்டாய் என்று விளக்கிக் காட்டி அருளுகிறார்)
இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ -அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

———————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –முதல் திருவந்தாதி–99-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன்
திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான்
ஏது என்னில்
விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் –

ஆன பின்பு -நெஞ்சே
நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு
திரு உள்ளம் பயப்பட

நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ
விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் –என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
நாம் பிரபன்னரான அன்றைக்கு தஞ்சமாக
அவன் ஒருவன் உளன் கண்டாயே –

நெஞ்சே
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தாத்வயி ஜீவத்யபி பிரபோ –
நீயும் உளையாய் இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க் காண் –

பிரபோ –
நீயும் என்னைப் போல் ஒரு ஸ்த்ரீயாதல்
புருஷோத்தமன் அன்றிக்கே ஒழிதல் செய்தாயோ நான் எளிமைப் பட –
இல்லாதவனானவனை உளன் என்கிறதன்று-
அவனுடைய சத்தை நம்முடைய ரஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும்-
நாம் பிரபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்று
நம்மை அஞ்சி இறே
கழுத்திலே சுருக்கி இட்டுக் கொள்ளுமன்று
அறுத்து விடு கிடாய் என்று அறிவுடையவனுக்குச் சொல்லி வைக்குமா போலே –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நமக்கு உளன் என்னப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
இவ்வர்த்தத்தில் உன்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் –
அவனுடைய வண்மை ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது
பர சம்ருத் ஏக பிரயோஜனனாய் -நம்முடைய ரஷணம் ஸ்வ பிரயோஜனமாய்க் கொண்டு –

என்றும் உளன் கண்டாய்
அசந்நேவ ச பவதி -என்றவனோடு
சந்தமேனம் ததோ விதது -என்றவனோடு
வாசி இல்லை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்
பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன் என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத் தடுக்காதார் நெஞ்சை
வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்
என்றும் உளனானமை காட்டுகிறார் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
திருப்பாற் கடலில் சாய்ந்தவனும்
திருமலையிலே நின்றவனும்
நம்முடைய ஹ்ருதயத்திலே உளனாக புத்தி பண்ணு
அவ்வோ இடங்களிலே இங்குற்றைக்கு வருகைக்காக நின்ற நிலை யாய்த்து
அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம் என்று இரு

அணைப்பார் கருத்தனாவான் -நான்முகன் -திரு -36-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

அணைப்பார் கருத்தானாவான்–அன்புடைய ஆஸ்ரிதர் நெஞ்சில் புகுந்தவன் ஆவதற்காகவே –
அவனுடையவர் அந்தரங்கம் புகுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டே திவ்ய தேசங்களில் சந்நிஹிதன் ஆகிறான்-

உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
இடவகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி -5–4-10-என்னுமா போலே –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –

————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நாட்டில் பெரியவராய் இருக்கிறவர்களும் தங்களுக்கு ஏற ஷேத்ரஞ்ஞராய் இருக்கிற படி அறிந்து இருக்கச் செய்தே-
ஈஸ்வரர்களாகப் பிரமிக்கிற படி கண்டு திரு உள்ளம் பயப்பட –
நாம் கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் என்கிறது –
புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் –நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

உளன் கண்டாய் –
இலனானவனை உளன் என்கிறது அன்று –
அவனுடைய சத்தை நம்முடைய ரக்ஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும் –
நாம் பிரதிபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்றி -நம்மை அஞ்சி
பித்தத்தாலே மோஹித்து கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டேன் ஆகில் அறுத்து விழ விடு கிடாய் என்று
அறிவுடையார்க்குச் சொல்லி வைக்குமா போலே

நன்னெஞ்சே –
எம்பெருமான் நமக்கு உளன் என்று சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
அவனுடைய உண்மை ஸூ ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனனாய் இருக்கை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் ஒரு நாள் உளன் என்று இருக்கில் -பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்கும் –
தான் புகுரப் புக்கால் விலக்காதவர்களுடைய ஹிருதயம் விட்டுப் போக அறியான் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்-உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —-
திருப் பாற் கடலில் கிடக்கிறதும்
திருமலையில் நிற்கிறதும்
தம்முடைய ஹ்ருதயத்தில் புகுருகைக்கு அவகாசம் பார்த்து என்று அறி –

உளன் கண்டாய் –
பிறருக்கு உபதேசிக்கிறவர் –எம்பெருமான் உளன் என்று இருக்கிறார் அல்லர்
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –

நன்னெஞ்சே –
இவ்வர்த்தத்தில் என்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் -தன் பேறாக உபகரிக்கை -என்றும்
அசன்னேவ ச பவதி -ஆனவன்றோடு–சந்தமேனம் ததோ விது–ஆனவன்றோடு வாசி இல்லை –

உள்ளுவார்–
புகுர சம்வத்திப்பார்

உள்ளத்து உளன் –
இடவகைகள் இகழ்ந்திட்டு -வெள்ளம் இத்யாதி -என்றும் உளனானமை காட்டுகிறார் –
அணைப்பார் கருத்தானாவான் —

——————-

திவ்யார்த்த தீபிகை —

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான் காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான் காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன் காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத் தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

———————————————————————————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
அவதாரிகை –

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன்
என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு
நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
பண்டு உளன் அன்றிக்கே
இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அசந்நேவ ஸ பவதி -யாய் இருந்தான் –
நாம் நமக்கு இல்லை என்று அஞ்ச வேண்டாம்
அவன் நமக்கு உண்டு கிடாய் -என்கிறார்

நாம் நம்முடைய விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுகைக்கு உளோம் ஆனாப் போலே யாய்த்து –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி –

அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது -என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
அவனுடைய உண்மையைப் பலமாக்கு –

நன்னெஞ்சே –
அத்வேஷம் உண்டான பின்பு இறே-அவன் உண்டாய்த்து –
அத்வேஷமும் உண்டாய் –
நீயும் உளாயானாய்-
இப்போது இறே சந்தமேனம் ஆய்த்தது –

உத்தமன்-
நம் பேறு தன் பேறாகக் கொண்டு உளன் கிடாய் –
நம்முடைய ரஷணம் பிரயோஜனமாய்க் கிடாய் அவன் இருப்பது –
அல்லாதார்க்கு அழியச் செய்து கொள்ளுகை ஸ்வ பாவம் ஆனால் போலே
அவனுக்கு ஆக்கிக் கொள்ளுகை ஸ்வ பாவம் –

என்றும் உளன் கண்டாய் –
நாம் வேண்டாத காலமும்
நம்மை வேண்டி இருக்குமவன் –
சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
செய்ய வேண்டுவது இவ்வளவே கிடாய் –
ஓர் அனுசந்தானமே கிடாய் வேண்டுவது –
புகுரப் புக்கால் விளக்காதார் ஹிருதயத்திலே உளன் –
அன்றிக்கே
அறிந்த அம்சம் அமையும் -என்னுமாம் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறத்தை யுபபாதிக்கிறது –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
ஆகாசமானது சுருங்கும் படி ஓங்கா நின்றுள்ள
சிகரங்களை யுடைத்தாய் –
உபரிதன லோகங்களும் சில எல்லைகளும் உண்டு என்று இராதே
இவை வேண்டா வென்று கொண்டு –
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படி –
அன்றியே
த்ரிபாத் விபூதி சங்குசிதமாம்படி-என்றுமாம் –

வீங்கருவி வேங்கடத்தான்-
மிக்க ஜலத்தை உடைத்தாய் உள்ள திரு மலையை
இருப்பிடமாக உடையனானவன் –

மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —-
பூமிப் பரப்பு அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும்படி
தான் அளந்து கொண்ட ராஜா –

மண் ஒடுங்க –
திருவடிகளிலே பூமி ஒடுங்க
பரப்பின திருவடிகளே தோற்றி
பூமி தோற்றாதபடி யளந்து கொண்டான் –

மன் –
ஈரரசு தவிர்த்த படி –

மன்-
உடையவன் –
இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்
மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –

தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்
அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ
எனக்கு ஒருவரும் இல்லை
நீயும் இல்லை
உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு –

பிரபோ –
என்னையும் என் பர்த்தாக்களையும் போலே
கழுத்துக் கட்டியாய்
ஒட்டை ஒடத்தோடு ஒழுகல் ஓடமாய் இருந்தாய் ஆகில்
எனக்கு கண்ண நீர் பாயுமோ –

ந தேரூபம் –பக்தா நாம் -ஜிதந்தே
என்ற அவன்
உதவா விடில் அன்றோ வெறுப்பாவது-

——–

திவ்யார்த்த தீபிகை —

நம்முடைய சத்தையை நோக்குவதற்காகவே தான் சத்தை பெற்று இருக்கிறான்
எம்பெருமான் உளன் என்று நாம் இசைந்தாலும் இசையா விட்டாலும்
நம்முடைய ரஷணத்தில் முயன்று உளனாய் இருக்கிறான்
தன்னை சிந்திப்பவர்கள் நெஞ்சிலே படுகாடு கிடக்கின்றான்
இதற்கு உறுப்பாக திரு வேங்கடமலையில் வந்து தங்குமவன்
இக் குணங்களை எல்லாம் திரி விக்கிரம திருவவதாரத்தில் விளங்கக் காட்டினவன் –

———–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

இப்படி சர்வாதிகனானவன் எண் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா —

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திரா அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு
உயரா நின்ற ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக
உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையிலே நின்றவன்
பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்
இந்திரன் இழந்தது பெறுகையாலும் –
மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

———–

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே –
நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும் ஸ்வபாவனான சர்வேஸ்வரன்
நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –

நாம் அவனுடைய உண்மைக்கு இசைந்த அன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு
உளனாய் இருக்குமவன் கிடாய் –

அவன் தானே வந்து புகுரும் இடத்திலே விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய
ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-

ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான –
திருமலையை இருப்பிடமாக உடையனானவன்
பூமிப் பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————–

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி -86-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-

நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

உளன் இத்யாதி
எம்பெருமான் என்றால் அபி நிவேசித்து இருக்கிற நெஞ்சே
அவன் நமக்கு உளன் கிடாய் –
இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்
தன் ஒப்பான் இத்யாதி
ஈஸ்வரன் சமாதிக தரித்ரனாய்க் கொண்டே உளன் –
அகிஞ்சனான படிக்கு வேறு ஒப்பில்லை
எனக்கும் மற்றும் என்னைப் போலே வெறுவியராய் இருப்பாருக்கும் அவன் நிர்வாஹகன்
இமை –
அனுசந்தி -புத்தி பண்ணு என்றபடி –

————-

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –
நல் நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-
என்னைப் போலே உபாய சூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான-ஈஸ்வரன் உளன் –
இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

————

திவ்யார்த்த தீபிகை

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார்

உத்தமன் உளன் கண்டாய் –
ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் –
ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் –
எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–
என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

—————————————————————————–—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசைப்பிரான் தனிப்பாடல்கள் -ஸ்ரீ சிவ வாக்யர் பாடல்கள் —

November 3, 2020

சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல்

கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந் நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந் நாகப் பாய்சூருட்டிக் கொள்

கணி கண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணி வண்ணா கிடக்க வேண்டும்-துணிவுடைய
செந் நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உன்றன்
பைந் தாகப் பாய்படுத்துக் கொள்.

திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, திருமகள் நாதனை நோக்கி,
“சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன் போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால்,
இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும்வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும்
உன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டி பின்வரும் பாடலைப் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்
சக்கரம்கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே!

இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளைத் திருமகளும் பூமகளும் வருடிட,
தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார்.
அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள்.
பிறகு திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி
விடைபெற்று திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

———-

அந்தி மாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே. -சிவ வாக்கியர்

கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் அதல்ல என்று வைத்துழலும் ஏழைகள்
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே.-சிவ வாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராம ராம ராம என்ற நாமமே!-சிவவாக்கியர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சு மூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராம ராம ராம வென்னும் நாமமே -சிவவாக்கியர்

ஒழியத்தான காசி மீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதி மேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராம விந்த நாமமே!!! -சிவவாக்கியர்

கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் எழும் எய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே!! -சிவ வாக்கியர்

நீடு பாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடு பேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே !!! -சிவ வாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே! -சிவவாக்கியர்

ஒன்பதான வாசல் தான் ஒழியு நாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!-சிவ வாக்கியர்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானத்திலும் -பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானத்திலும் -உள்ள அமுத மொழிகள் —

July 4, 2020

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோக த்ருஷ்டியாலும் -வேத த்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

————

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு
ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
ஆழ் பொருள்-மங்கிப் போகிற பொருள்-நசிக்கிற பொருளை -என்றுமாம் –
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்-
சம்சாரத்தின் உடைய தண்மையையும் நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்-நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

———–

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-
ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்
எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்-அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

————-

ஞாலத் தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்-ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை முட்டக் காண வல்லார் இல்லை –
நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது

—————

எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்
சர்வ சப்த வாச்யன் ஆனவனை எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை தொகுத்து சொன்னேன் –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்-

————-

யுள் வாங்கி நீயே–5-
சம்ஹரிக்கிறாய் நீயே –ஜகத் அடைய சம்ஹரித்த நீயே-
தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்

——-

வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –6-

நிரதிசய போக்யனான ஆச்சர்ய பூதனாய் வ்யாமுக்தனாய் ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –
ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று – அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும் நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-

————-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே நீ என்னை அன்றி இலை -7-

இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று பேர்த்திடுகிறார்-
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –

———-

இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை–8-

கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –
வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே- எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –

—————-

கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ் ஸிலே படும்படியாகக் கழுவினான் –
சாஹசிகரான பிரஜைகள்-வழியே வழியே வர வேணும் என்று தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –

—————–

ஆங்கு ஆரவாரமது கேட்டு- அழல் உமிழும் பூங்கார் அரவு–10-
திசை வாழி எழ -என்னும்படி திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய் இருக்கிற அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான்-

—————

மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய் ஸூகிகளாம்படி -என்றுமாம்-
விடும்படிக்கு ஈடாக சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-நினைத்தாய்-

—————–

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் – வேத முதல் பொருள் தான் -விண்ணவர்க்கும் நற்பொருள் தான் -நாராயணன்-13-

மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் –வேதை க சமதி கம்யனுமாய் –அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-
பிராப்யனுமாய் இருக்கிறானும் – சர்வேஸ்வரன்-
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –சர்வேஸ்வரன் –

————–

திருமால் -தன் பேரான பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து
அருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது –
தேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள்
ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்-
இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப் பெறாதே -ஜீவியா நிற்கச் செய்தே -ம்ருதப் ப்ராயராய் இருக்கும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

———

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –

————–

பல மன்னர் போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு
நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை
ந்யாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப்பாட்டால் சொல்லுகிறது-

—————

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-

———————-

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –
இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்–அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே-அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அரி பொங்கிக் காட்டும் அழகு – நித்ய சூரிகள் பரிய இருக்குமவன்-ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு–இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

———–

அழகியான் தானே அரி உருவன் தானேபழகியான் தாளே பணிமின்–22-

ஆபத் சகனானவனே அழகியான் –த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை ஆஸ்ரயிக்க பாருங்கோள்-
பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனைவ்யாதிக்ரஸ்தர் பற்றுமா போலே

—————

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி
வைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
ஈர நெல் வித்தி என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே
முன்னின்று பிறப்பியா நிற்கும் -இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை-

—————-

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –26-
கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

————–

மால் தான் புகுந்த மட நெஞ்சம் –27-
மால் தான்-ஈஸ்வரன் வ்யாமுக்தனாய்-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு
கடல் வண்ணா –நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது =பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்-

—————-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–

இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –
இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

————–

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் . திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –
அரங்கு – சம்சாரம் ஆகிற நாடக சாலை –பிறவி மா மாயக் கூத்து -என்று-சம்சாரம் ஆகிய
நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார்
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

————-

வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –31-

ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-ஒருத்தன் சோச்யனாக- இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள் பேசி முடிக்க ஒண்ணாது –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை-ஏத்தாத அறிவு கேடர்காள் – இவ்வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு அடியான
கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள ஆச்சர்யம் சொல்லப் புகில்-மகா பாரதம்-

————–

குறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-
திருவேங்கடமுடையானையும் ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன -வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி
சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –
சரீரம் அடியாக வந்த வியாதியும்-வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும் கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –

—————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம் பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும்
திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ -உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்-

——————–

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –
ஆதி நெடுமால் –சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்-
அணைப்பார் கருத்தனாவான் – ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் – இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது –
அவ்வவ தேசங்களிலே ஆஸ்ரயிப்பார் யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில் புகுருகைகாக இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்-
என் என்னில் -தான் ஆகையாலே-

—————–

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன்-நின்று நினைக்கின்றேன் –-40-

விசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி இத்தைச் சொல்ல –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு நின்று ஒழிந்தேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்-

——————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
சம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு
திருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

—————-

ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த
சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
தத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

—————-

என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார்
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

——————

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் –
இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –

——————

கிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ஸ்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ஸ்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூகத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

———————-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–62-

அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே-இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்-அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய் -வேறு ஒன்றால் அறியாதது –-ஒரு சேதனர் ஆகில் அறியலாம்

———-

பொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64-

ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய் –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப்
போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –சொல்லானை -சப்த மாதரம் –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி ஸ்ப்ருஹணீ யனானவனை –
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே நமக்கு உத்பாதகனானவன் – ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய் நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

——————

மாதாய மாலவனை மாதவனை –யாதானும் வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-
சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –தம்முடைய திருவந்தாதி–ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும் பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்

———-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-

————————

ஆயன் துவரைக்கோன் – மாயன் அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று–அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி–அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள்
பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே-அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி
தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய்
ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்–மெய்யான ஞானம் இல்லை –
இடையனாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய் ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
தேர் தட்டிலே நின்று-உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன் நீ சோகிக்க வேண்டா – என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று நினைக்கும்படி சத்ருக்களாய் தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்-

—————

நல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத் -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும் -இவை இறே அவர்கள் வார்த்தை –

பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள் இதிஹாச புராணங்களில் சொல்லுகிற திருநாம சங்கீர்தனங்கள்
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம் இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
அல்லாதவை போல் அன்றிக்கே உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

—————

அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி–73-

பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் திரு நாடு
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது-

————

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு
அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து-அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான
ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது
சரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் -ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன்
அத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-

————–

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டும் –கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள்
கேட்ட மனுவும் –ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –ஆச்சர்ய பூதனானவனுடைய
தத மாயையில் பட்ட தற்பு-தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –தத்த்வார்த்தம் –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படுகதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-

——————–

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த – எம்பெருமான் திரு நாமங்களைக் கேட்டிருந்து –
அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே பரவசனாய்த் துவண்டபடி
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து பாரவச்யதையைச் சொன்ன படி-
தபஸ்வியான நாரதர் -வால்மீகி கேட்டபின்பு பாரவஸ்யரானது போலவே –

————–

ஏய்ந்த தம் மெய் குந்தமாக –79-

ச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை குந்தமாக -நோயாக-
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-

———–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய திரு நாமங்களை
லோகங்கள் ஆனவை பரந்து பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

—————-

விதையாக நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்–81-

வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள்
குறைவற்ற நீ விளையப் பண்ணினாய் அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு
வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –

————

சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

பிரபன்னராய்க் கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ சீலா நாம் -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச்
செய்வது அறியாமல் அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –

——————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் – இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-
என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –
கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –
ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று

—————–

உத்தமன் என்றும் உளன் கண்டாய் –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –86-

இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்-
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –

————-

ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்–88-

ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த
அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி-தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார் –
இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-

————

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு
ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு
ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் –

———-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-
தத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்
ததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி
யதோபாசனம் பலம் -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-
விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க
வேண்டி இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –

————

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் என்கிறார்-
ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

———————–

அடியேற்கு வேம்பும் கறியாகும் என்று-94-

நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரந்தர் மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

———–

எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்
அதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும் புண்யார்ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து
விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்
என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்
இப்போது அறிந்தேன் -சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்
சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

இத்தால் –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு விரோதியான அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படி பரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை நடுங்கித்
தம் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும் அருளிச் செய்தார் ஆய்த்து-

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே
சர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-
அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் பக்திசாரர் ஆனமை–/ஆனைக்கும் இவனுக்கும் உள்ள சாம்யம்-/கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று – என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தி–

June 20, 2020

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –
அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்
ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள
வல்லிகோள் -என்கிறார் –

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–69-

காணிலும் உருப்பொலார் –
தாமஸ தேவதைகள் ஆகையாலே முமுஷுக்களுக்கு அவர்கள் த்ரஷ்டவ்யர் அல்லர் –
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா பிரதி ஷித்தாஸ் து பூஜநே –
அசுத்தாஸ் தே சமஸ்தாச்ச தேவாத்ய கர்மயோநய -என்னக் கடவது இ றே –
ஆத்மாவாரேத்ரஷ்டவ்ய -என்னும் அவன் அல்லன் இறே
இங்கன் இருக்கச் செய்தே உங்கள் குண அநுரூபமான ருசியாலே கண்டாலும்
விருபா ஷத்வாதிகளாலே வடிவு பொல்லாதாய் இருப்பர்
திரு உள்ளத்தில் தண்ணளியை கோட் சொல்லித் தாரா நின்ற புண்டரீகாஷனைப் போலே
வடிவு ஆகர்ஷமாய் இருக்கிறது அன்றே
அவர்களுடைய ஹ்ர்தயத்தில் க்ரௌர்யமே அவர்கள் வடிவில் பிரகாசிப்பது

செவிக்கினாத கீர்த்தியார் –
த்ரஷ்டவ்யர் அல்லாதவோபாதி ச்ரோதவ்யரும் அல்லர்
கேட்க வேண்டி இருந்தி கோளே யாகிலும்
பித்ர் வத ப்ரசித்தி என்ன –
தத் பலான பிஷாடந சாரித்ர ப்ரதை என்ன –
அத்வரத்வம்ச கதை என்ன –
சுர அசுர வத கதை -என்ன –
இத்யாதி சரவண கடுகமான கீர்த்தியை உடையராய் இருப்பர் –
ம்ர்தனான புத்ரனை சாந்தீபிநிக்கு மீட்டுக் கொடுத்தான்
புநராவ்ர்த்தி யில்லாத தேசத்தில் நின்றும் வைதிகன் புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்று -இத்யாதிகளாலே ஸம்ச்ரவே மதுரமான கீர்த்தி இ றே

பேணிலும் –
ஆஸ்ரயணீயரும் அல்லர் –
ஆஸ்ரயித்தார் திறத்தில் -உன் பயலை அறுத்து இடும் -என்றும் -ஊட்டியிலே தட்டிற்றிலை
காண் -என்றும் சொல்லுகையாலே -உங்கள் ருசியாலே அவற்றையும் பொறுத்து
ச்ரவண கடோரமான கீர்த்தியையும் ஸ்வரூபத்தையும் பொறுத்து ஆஸ்ரயித்தாலும் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் -ஸூ ஸூகம் கர்த்தும் -என்றும் ஆஸ்ரயணம்
ஸூக கரமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கிறது அன்றே –
வரந்தர மிடுக்கிலாத தேவரை –
பர ஹிம்சையிலே வந்தால் -ஜகது உபசம்ஹார ஷமராய்
அபிமத பலம் தருகைக்கு சக்தி இல்லாத தேவதைகளை
ஒரு பிசாசுக்கு மோஷம் கொடுப்பது
ஒரு பஷிக்கு மோஷம் கொடுப்பது
உதாராஸ் சர்வ யேவைதே -என்று தானும் -பிறரும் –
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்னும் விஷயம் அன்று இறே
நீ தந்த நித்யத்வம் எனக்கு கழுத்து கட்டி யாய்த்து -என்று மார்கண்டேயன் அவனை வளைக்க
மோஷ ப்ரதன் கையிலே காட்டிக் கொடுத்து நழுவும் சீலம் இறே பிறரது

ஆணம் என்று அடைந்து –
இப்படி இவர்கள் ஆஸ்ரயணீயரும் அன்றிக்கே இருக்கச் செய்தே தங்கள் பிரேமத்தால் ஆஸ்ரயித்து
ஆணம் -அரண்
நத்யஜேயம் -என்னும் விஷயம் அன்றே
மா சுச -என்ன மாட்டான்
ஏறுண்டவன் ஆகையாலே-
வாழும் ஆதர்காள் –
ம்ர்த்ராய் இருக்கிற அறிவு கேடர்காள்
ஆதர் -குருடரும் -அறிவு கேடரும்
நா ஹாரயதி சந்த்ரா சம்பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -என்றும்
பாஹூ இச்சாயமவஷ்ட ப்தோ யஸ்ய லோகோ மகாத்மாந -என்றும் –
அதஸோ பயங்கதோ பவதி -என்றும் -இருக்கிறார்கள் அன்றே

எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை
எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்
நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே –
ஒருத்தராலும் அறுக்கப் போகாத உங்களுடைய பிறப்பு என்கிற தூற்றை அறுத்துக் கொள்ள
வல்லி கோளே
பிணப்பு அறுக்க -ஜன்மம் அறுக்க
ஜென்மத்தை தூறு என்கிறது அகப்பட்டவனுக்கு புறப்படாது போக ஒழிகையும்
தன்னால் தரிக்க ஒண்ணாது ஒழிகையும்
முதலும் முடிவும் காண முடியாது இருக்கையும் –

காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி –
ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்

மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார். மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்), அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன் மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனை பேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க் கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!
எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார். சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.

“செவிக்கினாத கீர்த்தியார்” –
செவிக்கு இனிய கீர்த்தி என்றால், பகவானுடைய ஸ்ரீ திரிவிக்கிரம அவதாரமா – ஸ்ரீ வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ஸ்ரீ ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன் தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.
ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்; வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
தன் சிஷ்யனிடத்திலேயே அவர் “பிள்ளைக் கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாக யஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக்கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –

“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று
பாடி! அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?
ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப் பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் கேட்டால்,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க, அவனிடம் தானம் கேட்டாலும்
அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்! ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை; அவனும் கொடுக்கபோறதில்லை;
நமக்கும் கிடைக்கப் போறதில்லை!ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.
இதனால்தான், ஸ்ரீ ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக் கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்க போறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்பட வேண்டாம் என்று தவிர்க்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
“திவுக்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; || திவு காந்தீந்:தாது; || திவு கதீந்:தாது.”

“கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) – அவன் ஒருத்தன் தான் தெய்வமே தவிர,
மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” –
எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்; அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் .
இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு ஸ்ரீ “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

——

அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே துக்க ப்ரசுரமான இஸ் சம்சாரத்தில் சுகம்
உண்டாகக் கூடுமோ -என்னில்
ப்ராப்தி தசையில் சுகமும் –
சம்சாரத்தே இருந்து வைத்து தேவரீர் திருவடிகளிலே விச்சேதம் இல்லாத ப்ரேமத்தால்
பிறக்கும் சுகத்துக்கு போராது -என்கிறார் –

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –83-

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய்-
தேன் மாறாத செவ்வித் திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே
இத்தால் -திருத் துழாய் யோட்டை சம்பந்தத்தால் -சர்வாதிக வஸ்து -என்னும் இடமும் –
உபய விபூதி நிர்வாஹணத்துக்கு இட்ட தனி மாலை என்னும் இடமும் –
ஒப்பனை யழகும் -சொல்லிற்று ஆய்த்து

புலன் கழல்விட்டு வீள்விலாத போகம் –
தர்சநீயகமாய் -நித்ய சூரிகளுக்கு சதா தர்சநீயமான தேவரீர் திருவடிகளை விட்டு
வேறு போக்கில்லாத போகத்தை
புலன் கழல் -புலப்படும் திருவடிகளை
விண்ணில் நண்ணி ஏறினும்-
பரமபதத்தில் ஏறிக் கிட்டினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்-திருஅஷ்டாஷரம் -த்வயம் –
எட்டும் இரண்டும் கூட்டு –பத்தாய் -அத்தை பக்தி -என்கிறது
பகவத் பக்தியிலே தமக்கு உள்ள கௌரவாதி அதிசயத்தாலே மறைத்துச் சொல்லுகிறார் –
கயிறு -என்று பந்தகம் என்றபடி –
மனம் தனைக்கட்டி –
சர்வ இந்திரியங்களுக்கும் ப்ரதானமான மனசை விஷயாந்தரங்களில் போகாதபடி
பந்தித்து –
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-
விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம்
சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே
தானே சுகமாய் இருக்கும் –

மட்டுலாவு –
தேன் நித்தியமாய் இருக்கும்
தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு-
திருவடிகளை இந்த பூ உலகத்திலேயே அனுபவிப்பதை விட்டு
வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்-அழிவில்லாத கைங்கர்யம் பரம பதத்திலே சென்று கிட்டினாலும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி
பத்து என்ற பக்தி யாகிற பாசத்தால் மனசைக் கட்டுப் படுத்தி
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –
விச்சேதம் இல்லாத அமைக்கப் பட்ட ப்ரேமையால் கிடக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இல்லை
பத்துடை அடியவர்க்கு எளியவன் போலே –பத்து -பக்தி –வைத்த காதலே இன்பம் பயக்கும்
வைத்த காதலே இன்பமாகும் -ப்ரேமம் ஒரு ஸூகத்துக்கு சாதனமாக இல்லாமல் ஸ்வதஸ் ஸூகமாகவே இருக்கும்

அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழியூழிதோறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம் என்னும்படியிருபான்.
2.யானையின் மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப்பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேரவேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துகொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுபடுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்தஸத்வமயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேனில் பெண்யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளிவிடும்.
எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரத்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடிநூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பலகோடி பக்தவர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானு அலம்புரிந்த நெடுந்தடக்கையளிறே “நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மாள் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலாவரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே-

———-

120-பாட்டு –அவதாரிகை –

உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு –
என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை சொன்னார் -கீழ்-
இதில் –
கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே
நிர்ஹேதுகமாக பெரிய பெருமாள் தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே விரோதி வர்க்கத்தை
அடையப் போக்கி – அபுநா வ்ர்த்தி லஷணமாய் நிரதிசய ஆநந்த ரூபமான கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே தலைக் கட்டுகிறார் –

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

வியாக்யானம்-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –
இயக்க யறாமை யாவது -ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து –
அநேக தேக ஆரம்பகமான கர்மங்களைப் பண்ணுகையாலே
தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –
இயக்கு -நடையாட்டம் –
இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –
மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –

இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து
தன பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் –
எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால்
நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –
நண்ணுதல் -அணைதல்
நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –
பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் –
சொல்லிப் போந்தவர் ஆகையாலே -இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-

என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இ றே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –
இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன் பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக –

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –

ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே
என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –

இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்

அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்களில் இருந்து அமுத துளிகள் –

June 20, 2020

முதல் பத்து பாசுரங்களால் எம்பெருமானே உபாதான காரணம் என்று அறுதியிட்டு
11-48- தேவதாந்த்ர விலக்ஷணம் -கூர்மாவதாரம் நரசிம்ம கிருஷ்ண அவதாரங்களில் ஈடுபட்டு பரத்வ ஸ்தாபனம்
49–தொடங்கி 56-திரு அரங்கனுக்கு -ஏழு பாசுரங்கள்
திருக்குறுங்குடி ஒரு பாசுரம்
ஆறு பாசுரங்கள் திருக்குடந்தை
63-64-65-நெஞ்சுக்குள் வந்தமை
சம்சாரி இழவை -66 பாசுரத்தால் அனுசந்தித்து
67-73- பர உபதேசம் அ ல்பம் அஸ்திரம் –
74- தன்னைப் பார்த்து-அவனது நிர்ஹேதுக கிருபை
75-81உபாயாந்தரங்களின் தோஷம் அப்ராப்தம் -மீண்டும்
82-120-பகவான் உடம் சம்வாதம் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம்
நெஞ்சுக்கு உபதேசம் சில பாசுரங்கள் இவற்றில் உண்டு
ப்ராப்ய ருசியை விண்ணப்பம் 119 பாசுரம்
பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

———-

இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே
அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி
அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்
அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து –ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி -பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று
தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட
வருத்தமற நான் கண்டாப் போலே வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –

ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள
அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட நான் கண்டால் போலே ஏவம்விதன்
என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்

தாரக பதார்த்தங்களும் பகவதாஹித சக்திகமாய் கொண்டு தரிக்கின்றன
அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாளே அனைத்துக்கும் தாரகம்-

தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை
பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்-

முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –-பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி
அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்
நினைக்க வல்லார் என்கிறார்

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ
உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி –
அதாகிறது –
விமுகரான காலத்திலே ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் –
அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை –
ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்கஒண்ணாமையாலே
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் –

கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும்
அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே -சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய
விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு
நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –

ஆமையாகி –
பிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு
ஆழ் கடல் துயின்ற –
அகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே –
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே —
நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான
அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன்

ஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யுகத்திலே
சேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து –
அதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை
நிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ –
இப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் –
ஆத்மாநாம் மாநுஷம் மநயே -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய
நீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர்

மேலாக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –

ஆத்ம குணங்களால் ரஷகன் ஆனால் போலே ரூப குணங்களாலே போக
பூதனான படியைச் சொல்லுகிறது

அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி

நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம் –
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது –
இவற்றை பிரித்து எனக்கு அருளிச் செய வேணும் –
எல்லா அவதாரங்களிலும் இரண்டும் கலந்து இருக்குமே-

ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக
அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்-
இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -கீழ்-
வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே என்று கருத்து

சர்வாதிகன் கிடீர் பிரளய ஆர்ணவத்திலே ஒருவர் இல்லாதாரைப் போலே தனியே கண் வளர்ந்து அருளுகிறான்

சிங்கமாய தேவ தேவ –
அத் திவ்யாயுதங்கள் அசத் சமமாம் படி வரம் கொண்ட ஹிரண்யனை நக ஆயுதமான
சிம்ஹமாய் அழியச் செய்த ஆஸ்ரித பஷபாதத்தாலே நித்ய சூரிகளை எழுதிக் கொண்டவனே –
திவ்ய மங்கள விக்ரஹத்தின் சுவடு அறியும் நித்ய சூரிகளுக்கு இறே அவ்வடிவையும் அழிய மாறி
ரஷித்த ஆஸ்ரித பஷபாதத்தின் எல்லை தெரிவது-

அநந்ய பிரயோஜனனான பிரகலாதனோடு -பிரயோஜநாந்த பரனான இந்த்ரனோடு விமுகரான
சம்சாரிகளோடு வாசியற ரஷிக்கிற உன் நினைவை ஜ்ஞானாதிகர் ஆர் தான் அறிய வல்லார்

ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும் இடத்தில் சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு
ஆயுதத்தால் அழிக்குமவன்

பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளும் சம்சாரிகளை -தன்னை அழிய மாறி ரஷிக்கிற
அனுக்ரஹத்தை எவர் அறிய வல்லரே –

திருவடிகளின் சௌகுமார்யமும் பார்த்திலை –-மகாபலி பக்கல் ஔதார் யமும் பார்த்திலை –
அர்திக்கிறவன் பிரயோஜநாந்த பரன் என்றும் பார்த்திலை -இந்த இந்தரனுடைய இரப்பையே பார்த்த இத்தனை இறே

அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு
வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –

ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவுமாம்படி ந்யாம்யனாய் வந்து அவதரித்த குணாதிக்யம் உண்டு இறே
ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் -என்கிற ஸ்வரூபமும் அழிந்தது இறே இதில் –

கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –
தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்–வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே இவ்வதாரங்களை அனுபவிக்கிறார்

சாஸ்திர வஸ்ய ஜன்மத்திலே பிறந்து ஏழு கோ ஹத்தியைப் பண்ணச் செய்தேயும்
ஈச்வரத்வம் நிறம் பெற நின்றாய் நீ –

புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே —
தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம
அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன -இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே-

நாயினேன் வீடு பெற்று –இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே —
அநாதி காலம் திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து சர்வராலும் பரிபூஹதனான நான்
உகந்து தொட்டாலும் எதிர்தலைக்கு அசுத்தியை விளைப்பிக்கும் நிஹீநதையை உடைய நான்
இப்படி பட்டு இருந்துள்ள நான் உனக்கு ஸத்ர்சராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள் பேற்றைப் பெற்று
அகிஞ்சனான நான் பூரணனுடைய பேற்றைப் பெற்று-இச் சரீரத்தினுடைய விமோசனத்தோடே இனி ஒரு சரீர பரிக்ரஹம்
பண்ண வேண்டாதபடி சம்சாரத்தை அறுக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –
சிறைக்கூடத்தில் இருக்கும் ராஜ குமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்பு
சிறையை வெட்டி விட்டால் போலே ப்ராப்தி முன்பாக விரோதியைப் போக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –

சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே —
பரமபதம் தேசத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும்-அவதாரம் காலத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும் –
ஷீராப்தி அதிக்ர்த அதிகாரம் ஆகையாலும்-அந்தர்யாமித்வம் பிரதிபத்திக்கு அபூமி ஆகையாலும் –
த்ரைவர்ணிக அதிகாரம் ஆகையாலும் – நிலம் அல்ல –அயோக்யனான நான் -இதம் -என்று புத்தி பண்ணி
ஆஸ்ரயிக்கலாம் படி ஆஸ்ரயணீய ஸ்தலத்தை அருளிச் செய்ய வேணும் –

நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் –
அதன் மிகுதியைக் கண்டு கெண்டை யானது பயத்தாலே பரப்பு மாற பூத்த நீலத்தின் இருட்சியை அண்டை கொண்டு –
அரணுக்கு உள்ளே வர்த்திப்பாரைப் பயம் கெட்டு மேய்ந்து வர்த்திக்கிற தேசம் –
இத்தால் -சம்சாரிகளை நலிகிற அஹங்காரத்தைக் கண்டு பீதராய் –முமுஷுக்களாய்-உபாசநத்திலே இழிந்த சாதகரைக் கண்டு
இவை இரண்டும் பய ஸ்தானம் என்று சர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரராய் -ஸ்வரூப அநுரூபமான
பகவத் குண அநுபவமே யாத்ரையாய் வர்த்திக்கும் பிரபன்னரருக்கு ஸ்மா ரகமாய் இருக்கிறது ஆய்த்து –
கெண்டைகளினுடைய யாத்ரை -என்கை-

வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50
அவதாரத்துக்கு பிற் பாடரான ஆஸ்ரிதருக்கு ஸ்வ அநுபவ விரோதியான சப்தாதிகளில் ப்ராவண்யத்தைப் போக்குகைக்காக
கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறபடி -என்கை-

அற்ற பத்தர் –
புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –
த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய் பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள்-
சுற்றி வாழும் –
சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள்-

ஆஸ்ரிதருக்கு விரோதிகளாம் இத்தனையே வேண்டுவது –எதிர்தலை திர்யக் ஆகவுமாம்-சர்வாதிகனான ருத்ரன் ஆகவுமாம்
அழியச் செய்கைக்கு குவலயாபீடம் -கொலை யானையாய்த் தோற்றுகையாலே கொன்று அருளினான் –
க்ருஷ்ணனைத் தோற்ப்பித்து பாணனை ரஷிக்க கடவோம் என்று வந்த ருத்ரன் தோற்று போம்படி பண்ணி யருளினான் –
பாராய மம கிம் புஜை -என்று தோள் வலி கொண்டு வந்த பாணனுடைய தோள்களைக் கழித்தான் –
ஆக –அவர்கள் உடைய நினைவு அவர்கள் தலையிலே யாக்குமவன் என்கை –

புண்டரீக அவயவன் அல்லையோ –திவ்ய அவயவங்களுக்கு ஸ்ரமஹரமான தேச வாசத்தாலே பிறந்த செவ்விக்கு மேலே
என்னோட்டை சம்ச்லேஷத்தாலேயும் புதுக் கணித்தது என்கை –

கிடந்த புண்டரீகனே —
தாமரைக்காடு பரப்பு மாறப் பூத்தாப் போலே இருக்கிற திவ்ய அவயவங்களோடு தன்னை
அனுபவிக்கைக்காக கண் வளர்ந்து அருளுகிறவன் –

தன் வாத்ஸல்யத்தாலே-பிற்பாடருக்கு உதவ வந்து கிடக்கிற தேசம் திருக் குடந்தை கிடை அழகிலே துவக்குண்டு அனுபவிப்பார்
ஆரோ -என்று அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன் அல்லையோ –

சர்வாதிகனாய் அத்யந்த ஸூகுமாரமான அவன் –விமுகரான சம்சாரிகள் நடுவே திருக் குருங்குடியிலே வந்து தாழ்ந்தாருக்கு
முகம் கொடுக்க நிற்கிற நிலை யாய்த்து அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்
இவ் வாழ்வாருக்கு நம்பி உடைய சௌகுமார்யத்தையே அனுசந்திகைக்கும் ஹேது

பாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-
உன்னை நோக்கோம் என்று இருந்த சம்சாரிகள் உடைய உகப்பை ஆசைப்பட்டு வளைப்பு கிடக்கிற இது என்ன நீர்மை -என்கிறார்
உபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம் ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –
என்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில் கடாஷம் தனக்கு தேட்டமாவதே

எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின செயல்கள் எல்லாவற்றையும் –
திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய ஹ்ர்தயத்தில் பண்ணி அருளா நின்றான்-
முதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள என்னையும் உளனாம்படி பண்ணி –
தன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து – அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து –
தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –
தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான
தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –
இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –

சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே-ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று – அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று
சென்று சென்று –-தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –

வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –தேவதாந்தரங்கள் ரஷகர் ஆனாலும் ஆபத்துக்கு உதவாதவர்கள்
ஈஸ்வரன் முனிந்த தசையிலும் ஆபத்சகன் என்றது ஆய்த்து– க்ருபயா பர்ய பாலயத் –
விரோதி நிரசந சீலனான தசரதாத்மஜன் பிரசன்னரானார்க்கு அல்லது
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரத்தாலே நின்றாருக்கும் நித்யமான மோஷத்தை ப்ராபிக்க விரகு இல்லை

அறிந்து அறிந்து -என்று–சாஸ்திர ச்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும்

இந்த்ரியங்களுக்கு விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து – பகவத் விஷயமே விஷயமாக்கி –தத் விஷய ஜ்ஞானம்
பக்தி ரூபாபன்ன ஜ்ஞாநமாய் அது பரபக்தியாதிகளாய் பழுத்தால் அல்லது சர்வேஸ்வரனை லபிக்க விரகு இல்லை -ஆய்த்து –

திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் – வல்லர் வானம் ஆளவே –
அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்
இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரம பதம் -என்கை-
அவன் பெயர் எட்டு எழுத்தும் –
ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் –
நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் –பவான் நாராயணோ தேவ -என்றும் –
தர்மி புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் –

உன்னுடைய விரோதி நிரசன சீலதயை அனுசந்தித்து உன் பக்கலிலே ப்ரேமம் உடையாருக்கு அல்லது
நித்ய ஸூரிகளோடு ஸத்ர்சராய் தேவரீரை அனுபவிக்கப் போமோ -என்கிறார் –

ஆஸ்ரிதருக்கு திருவேங்கடமுடையான் திருவடிகளே ஆஸ்ரயணீய ஸ்தலம்
திருவேங்கடமுடையானுக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம் திருமலை –

எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே —
சரீரத்தோடே இருக்கும் இருப்பிலும் –பரம பதத்தில் இருக்கும் இருப்பிலும் –உத்க்ரமண தசையிலும் –
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற அவஸ்தா விசேஷங்களிலும் –ஸூ கமேயாய் இருக்கும் –
எத்திறத்தும் இன்பமான சர்வேஸ்வரனான -உன்னுடைய – ஸ்வரூப ரூப குண விபூதிகளை அநுபவித்து பிரகார பேதங்களிலும்
த்வத் அநுபவத்தால் வந்த ஸூகமே யல்லது இல்லை-விஷயாந்தர ப்ராவண்யாம் எங்கனம் யாகிலும் துக்கமே யானவோபாதி
பகவத் பராவண்யம் எங்கனம் யாகிலும் ஸூகமேயாய் இருக்கும் -என்கை –

வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-
விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம் சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே தானே சுகமாய் இருக்கும் –

ஓர் அன்பிலா அறிவிலாத நாயினேன் –
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே ப்ரேம கந்தம் இன்றிக்கே – அதுக்கடியான ஜ்ஞான லேசமும் இன்றிக்கே ஹேயனான நான் –
ப்ரேம கந்தம் இன்றிக்கே -அது இல்லை என்கிற அறிவும் இல்லாத -என்றுமாம் –
பிறந்த பின் மறந்திலேன் -என்கிற ஜ்ஞாநத்தையும்-நடந்த கால்கள் நொந்தவோ -என்கிற பிரேமத்தையும் -உபாயம் -என்று இருக்கிலர்
ஈஸ்வரன் நினைவே தனக்கு உபாயம் -என்று இருக்கிறார் –
எதிர் அம்பு கோக்க பண்ண வல்லை -பிராதிகூல்யத்தில் வ்யவஸ்திதனான சிசுபாலனுக்கு சாயுஜ்ய ப்ரதனாகவும் வல்லை –
இதுவன்றோ தேவரீர் உடைய ஸ்வாதந்த்ர்யம் -என்கிறார்

அஹங்கார லேசம் உண்டானால் அது நிரஸநீயம் என்று தோற்றுகைக்காக சகடாசூர நிரசநத்தை அருளிச் செய்தார் –
தனக்கு போக்யமான ஆத்மாவுக்கு விஷ ஸம்ஸர்க்கம் போலே நிரஸநீயம் தேக சம்பந்தம் என்று தோற்றுகைக்காக
காளியமர்த்தனத்தை அருளிச் செய்தார்-

புனித –
விஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும் குறைவாளரையும்
ஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ
அதாவது –
உத்கர்ஷ்ட ஜன்மம் என்ன –வேத ஸ்பர்சம் என்ன -வேதார்த்த அனுஷ்டானம் என்ன –-இவற்றினுடைய ஸ்தானத்திலே
பகவத் அனுக்ரஹம் நின்று விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை
நின்னிலங்கு பாதமஅன்றி மற்று ஓர் பற்றிலேன் –
இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே-குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விளங்கா
நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-
எம் மீசனே-வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –

நின்னை என்னுள் நீக்கல் –என்றுமே-
சர்வ சக்தியாய் இருந்துள்ள உன்னை –அகிஞ்சனனாய் இருந்துள்ள என் பக்கலில் நின்றும்-ஷூத்ரமான உபாயாந்தரங்களைக்
காட்டி அகற்றாது ஒழிய வேணும் -நான் கலங்கின வன்றும் என்னை விடாது ஒழிய வேணும் –

அரங்க வாணனே –கோயிலுக்கு நிர்வாஹகனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே –
தம் தாம் பக்கலிலே முதல் இன்றிக்கே இருக்க -அனுபவத்திலே இழிந்தவர்களுக்கு தேவரீர் அழகாலே –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –தேவரீர் பக்கலில் ஆதரத்தை பிறப்பித்து – அனுபவிக்கைக்காக அன்றோ
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –என்னக் கடவது இறே
கரும்பு இருந்த கட்டியே –இவருக்கு ருசி பிறப்பித்த உபாத்யாயரைச் சொல்லுகிறது –

1-ப்ராப்தராய் -2–சந்நிஹிதராய் -3–நிரதிசய போக்ய பூதராய்-4- -விரோதி நிரசன சீலராய் -தேவரீர் இருக்க –
5-இத்தலையில் ருசி உண்டாய் இருக்க –நான் இழக்க வேண்டுகிறது என்

வந்து நின்னடைந்து –உய்வதோர் உபாயம் –நல்க வேண்டுமே
ஒரு தேச விசேஷத்திலே வந்து-நிரதிசய போக்யனான உன்னை ப்ராபித்து-அடிமை செய்து -உஜ்ஜீவிப்பதொரு வழியை
நீ எனக்கு –1-ஸ்ரீ ய பதியாய் –2-திவ்ய ஆயுத உபேதனாய் –3-எனக்கு இல்லாதவை எல்லாம் தரக் கடவ-நீயே –
4-எல்லாவற்றுக்கும் உன் கையை எதிர்பார்த்து இருக்கிற எனக்கு-தந்தருள வேணும் –
எனக்கு நல்க வேண்டுமே –
பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும்
பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக் கொடுத்தருளக் கடவ தேவரீர் –
அநந்ய ப்ரயோஜனனாய் –அநந்ய சாதனனாய் –இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை
தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்-உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை –

அத் திருவடிகளை தஞ்சம் என்று நினைத்து இருக்கிற எனக்கு -ஊனத்தை விளைக்கும்-சரீர சம்பந்தம் ஆகிற
நோயை போக்க நினைத்து இருக்கிற விரகு
ஊனமாகிறது –ஸ்வ ஸ்வரூப விஷயமான ஜ்ஞான சங்கோசமும் –பகவத் ஜ்ஞான சங்கோசமும் –பகவத் அனுபவ சங்கோசமும் –
இவற்றை விளைக்கும் அது இறே தேக சம்பந்தம் –சரீரம் -என்றும் -வியாதி -என்றும் -பர்யாயம் இறே
இத்தால் –வேறு ஒன்றைத் தஞ்சம் என்று இழக்கிறேனோ –சரீரத்தில் ஆதாரம் உண்டாய் இழக்கிறேனோ –

ஸ்ரீ ய பதி-அயர்வறும் அமரர்கள் அதிபதி -ஹேயப் ப்ரத்யநீகன் -விலஷண விக்ரஹ உக்தன் –ஆஸ்ரித சுலபன் -என்று
நிர்தோஷ பிரமாண ப்ரதிபாத்யனான உன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை-
வடிவு அழகோடே -இடைவிடாதே நான் பேசுகைக்கு வழியை அருளிச் செய்ய வேணும் –
உன்னுடைய விசேஷ கடாஷத்துக்கு அடியான வாத்ஸல்யாதி குணங்கள் ஒழிய உன் வடிவு அழகே எனக்கு
இம் மநோ ரதத்துக்கு ஹேது என்கை-

ப்ரயோஜநாந்த பரரான இந்த்ராதிகள் உடைய ஆபத்தை ஆயுதத்தாலே அழித்தும்
ஸ்வ அபிமாநத்துக்கு உள்ளே கிடக்கிற பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை மலையை எடுத்து ரஷித்தும்
இப்படியால் வந்த உன் ஆபத் சகத்வத்துக்கு அல்லது என் நெஞ்சுக்கு வேறு ஒரு ஸ்நேஹம் இல்லை

எம் ஈசனே –-என் நாதனே-விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும் தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு
விரோதியான பாபங்களையும் போக்கி இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை-

வீற்று இருந்த போதிலும் – கைங்கர்ய உபகரணங்கள் குறைவற்று இருந்த போதிலும் -என்னுதல்
நிரதிசய ஆனந்த நிர்பரனாய் இருந்த போதிலும் -என்னுதல்
கைங்கர்ய உபகரண சம்பத்தி சங்கல்ப மாத்ரத்திலே உண்டாமது இறே -போக மோஷங்கள் ஏக ஆஸ்ரயத்தில் சம்பவிக்கிலும்-
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே –
உன்னைக் கூட வேணும் என்னும் யாசை யல்லது வேறு ஒன்றை நெஞ்சால் விரும்புவனோ-

தேவரீர் உடைய சௌலப்யத்தையும் -விரோதி நிரசன சீலத்தையும் பேசி-கால ஷேபம் பண்ணி யல்லது நிற்க மாட்டாமையாலே
யானும் ஏத்தினேன் இத்தனை-இது ஒழிய ஒரு சாதனா புத்த்யா ஏத்தினேன் அல்லேன்

இது தம்மைப் பெறுகைக்கு ஹேது அருளிச் செய்கிறார்-திருப் பாற் கடலிலே படுக்கையோடே -அக்கடல் செவ்வே நின்றாப் போல்
ஸ்ரமஹரமான வடிவோடே -ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் சகல தாபங்களும் போம்படி நித்ய வாஸம் பண்ணும் ஸ்வபாவனே –
ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் புகுரக் கணிசித்து -திருப் பாற் கடலிலே அவசரப் ப்ரதீஷனாய் வந்து கண் வளர்ந்து அருளி –
ஆசாலேசம் உடையாருடைய ஹ்ர்தயத்தில் ஸ்ரமஹரமாகப் புகுருமவன் ஆகையாலே என்னைப் பொறுத்து நல்க வேணும் -என்கிறார் –

அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –
நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு
அதாகிறது –அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை-

பாதம் எண்ணியே – அவன் திருவடிகளையே உபாயமாக அனுசந்தித்து – மஹா வராஹமாய் -பிரளய ஆர்ணவத்தின் நின்றும்
பூமியை உத்தரித்தாப் போலே சம்சார ஆர்ணவத்தின் நின்றும் நம்மை உத்தரிக்கும் என்று அத்யவசித்து வணங்கி வாழ்த்தி -என்கிறார்-

புகுந்து நம்முள் மேவினார் –ஷிபாமி -என்கிறபடிய த்யாக விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –
ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –
நம்முடைய தண்மை பாராதே –தம்முடைய பெருமை பாராதே –
சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்

எத்தினால் இடர் கடல் கிடத்தி –நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ –
ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ –
அவன் அப்ராப்தனாயோ –தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க – துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –
ஏழை நெஞ்சமே –பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –
ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்
நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை 0

வாட்டமின்றி எங்கும் நின்றதே – ஷூத்ர விஷய வாசனையால் சலிப்பிக்க ஒண்ணாத படி உன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எனக்கு ப்ராப்தமாய் நின்றது –
அவ் விக்ரஹம் தான் ஷாட் குண்ய விக்ரஹம் என்னும்படி குண பிரகாசகம் என்கையாலே குணங்களிலே மூட்டிற்று –
அக்குணங்கள் தான் ஸ்வ ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் மூட்டிற்று –
அஸ் ஸ்வரூபம் தான் ஸ்வ ந்யாம்யமான விபூதியிலே மூட்டிற்று –
ஆக –
என்னுடைய ஆதரத்துக்கு உள்ளே ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாம் அந்தர்பூதமாய்த்து -என்கை –

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான – திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –
ஆதலால் –இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே
என்னாவி தான் –தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –
இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன – தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி –
எலாம் –அறுத்து என்கிறார்
அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான -கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமழிசைப்பிரான் வைபவம் —

February 10, 2020

ஸ்ரீ மகாயாம் மகரே மாஸே சக்ராம்சம் பார்கவோத்பவம்
மஹீ சார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்
தொண்டை நாட்டில் உள்ள திருமழிசையில் தை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் அவதரித்த
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளியவர்.
அவை நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்) என்று அழைக்கப் படுகின்றன.

ஸ்ரீ முதல் ஆழ்வார்களும், ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும் தொண்டை நாட்டினர். நால்வரும் அந்தாதி பாடி அருளியவர்கள்; சமகாலத்தவர்கள்.

தொண்டை நாட்டில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.
“தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்கிறார் ஒளவையார்.
இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.
தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.
ஸ்ரீ திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும்,
ஸ்ரீ திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் ஸ்ரீ திருமழிசையாழ்வார்.
கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால்
வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது.

இவர் ஸ்ரீ திருமழிசையில் பிறந்ததால் ஸ்ரீ திருமழிசையாழ்வார் என்றும், ஸ்ரீ பக்திசாரர், ஸ்ரீ திரு மழிசைப் பிரான் என்றும் அழைக்கப்பட்டார்.
ஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாக ஸ்ரீ ஆராவமுதாழ்வார் என்று கூறுவர்.

இவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.
1) திரு அரங்கம் 2) திரு அல்லிக்கேணி 3) திரு அன்பில் 4) திரு ஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திரு எவ்வுள் (திருவள்ளுர்)
6)திரு கபிஸ்த்தலம் 7) திருக் குடந்தை 8) திருக் குறுங்குடி9) திருக் கோட்டியூர்10) திருத் துவாரபதி 11) திருக் கூடல்
12) திருப் பரமபதம் 13) திருப் பாடகம் 14) திருப் பாற்கடல் 15) திரு வடமதுரை 16) திரு வெக்கா 17) திரு வேங்கடம் ]

————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – யான்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின்நீர் தேர்ந்து–(3484)

பிரமனை நாராயணன் படைத்தான்; பிரமன் சங்கரனைப் படைத்தான். எனவே நாராயணனே முதற்பொருள் என்பதை நான்
இவ்வந்தாதியின் மூலம் அறிவிக்கிறேன்; நீங்கள் இதனைக் குறைவற மனத்தில் கொள்ளுங்கள் எனத் தன் நோக்கத்தை விளக்கி,
ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியைத் தொடங்குகின்றார், ஸ்ரீ திருமழிசைப்பிரான்.

அடுத்தே, எப்படி இருப்பினும் எத்தவம் செய்தாருக்கும் ‘அருள் முடிவது ஆழியானிடம்’ என்கின்றார் (3485).

மெய்ப்பொருள்-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ‘எல்லாப் பொருள்களுக்கும் சொல்லாகி நின்றவனைத் தொகுத்துச் சொல்வேன்’ (3487) என்பர்.
அவனை ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அறிந்தது போல் யாரும் அறியவில்லையாம்.

பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதும் ஆரறிவார் – ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?– (3486)

ஆல்இலை மேல் துயின்றவனை வழிபட,
வாழ்த்துக வாய்;காண்க கண்;கேட்க செவி மகுடம்
தாழ்ந்து வணங்குமின்கள் தண்மலராய் -(3494:1-2)

இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச் சொல்லும்
பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பர்.
ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ (3558) எனச் சொன்னவர் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்.

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவியதுவே கண்டீர் – கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் (3552)

(புவி = பூமி, புவி = இடம்) என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார்.

வீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி, எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து வாழவேண்டாம்.
வீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத முதற் பொருளான நாராயணன் தான் (3496) என வீடுபேறு பெறும் வழி காட்டுகின்றார்.

பூதங்களும் புனிதனும்
‘வானும் தீயும் கடலும், மலையும் கதிரும் மதியும் கொண்டலும் உயிரும், திசை எட்டும், இந்த உலகமும்
திருமாலின் வெளிப்பாடுதான்’ (3520) என இயற்கை அனைத்தையும் அவனாகவோ
அல்லது அவன் படைப்பாகவோ காண்கின்றார் ஆழ்வார்.

குலங்களாய ஈரிரண்டி லொன்றிலும் பிறந்திலேன்
கலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன், பொறியிலேன்,புனித! நின்
இலங்குபாத மன்றி மற்றோர் பற்றிலேனெம் ஈசனே!– (841)

மேற்குலங்களில் பிறத்தலும் கலைகளில் சிறத்தலும் ஐம்பொறிகளை வெல்லுதலும் ஆகிய சிறப்புகள் ஏதும் எனக்கு இல்லை.
உன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் அறியேன் என்று தம் இயலாமையையும் அளவில்லாத பக்தியையும்
ஸ்ரீ ஆழ்வார் தம் ஸ்ரீ திருச்சந்த விருத்தத்தில் குறிப்பிடுகிறார்.

பாம்பணையில் துயில் கொண்டிருக்கும் நாதன் தமக்குக் கண்ணாக இருந்து நெறிப்படுத்துபவன் எனச் சொல்லும் திருமழிசை ஆழ்வார்,

ஊனில்மேய ஆவிநீ; உறக்கமோடு உணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீ: அவற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும் நீ
யானும்நீ, அதன்றி எம் பிரானும் நீ; இராமனே! (845)

(ஊனில் = உடம்பில், ஆனில் மேய ஐந்தும் = பசுதரும் பயன்கள்-பால், தயிர், நெய், கோமியம், சாணம்,
கடற்பயன் = அமுதம், பவழம் போன்றன) என்று பாடி ‘உன்னை என்னிலிருந்து பிரித்து விடாதே’ என வேண்டுகிறார்.

பேசு, கேசனே!–காட்டில் நடந்து கால்களும், ஏனமாய் உலகைச் சுமந்து உடலும் நொந்ததால்
ஸ்ரீ திருக்குடந்தையில் துயில் கொண்டாயோ என வினாவுகின்றார்.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே! (812)
(ஏனம் = வராக அவதாரம்) எனத் திருமாலின் அருளிச் செயல்களுக்குக் காரணம் கற்பிக்கின்றார் ஆழ்வார்.

எல்லாம் நெஞ்சுள்ளே-
ஸ்ரீ திருமழிசை பிறக்கும் முன்பு ஸ்ரீ திருவூரகத்தில் நின்றும்,ஸ்ரீ திருப்பாற்கடலில் இருந்தும், ஸ்ரீ திருவெஃகாவில் கிடந்தும்
அருளிய ஸ்ரீ திருமால், பிறந்தபின் தம் நெஞ்சிலே எல்லாக் கோலமும் கொண்டருளினார் என்கிறார் அவர். எப்படி?

அன்றுநான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததுமென் நெஞ்சுளே (815)
என்பர். பிறந்த உயிர் அழிவது தெரிந்திருந்தும் இந்த உலகத்தில் உள்ள மக்கள் ஏன் இறைவனை எண்ணி
வாழ முடியாமல் உள்ளனர் என வினவுகின்றார் (817).

கால் வலையில்படுதல்
வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம்.
வீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும்
நாராயணன் தான் (நான்முகன் திருவந்தாதி – 3496) என வழிகாட்டுகின்றார். அந்த வழி மிக எளிது.
பல மலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது ஸ்ரீ திருவேங்கடமலையைச் சொன்னேன்.
இதனால் வீடுபேறு உறுதி என்னும் நிலையை அடைந்தேன். அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் – (3523)

அவதாரம்
‘ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவன்’ எனக் கூர்ம அவதாரத்தைப் (765, 771) போற்றும் ஸ்ரீ ஆழ்வார்
ஒவ்வொரு அவதாரத்திற்கும் உள்ள பெருமையாகக் கூறுவனவற்றுள் சில:

ஸ்ரீ வாமனன் அடியினை வணங்கினால் ‘ஞானமும் செல்வமும் சிறந்திடும்! ஸ்ரீ திருமாலைப் போற்றினால் தீவினைகள் நீங்கும் (825),
அவன் ‘விண் கடந்த சோதி, ஞான மூர்த்தி, பாவநாச நாதன்’ (778), விண்ணின் நாதன் (798), கடல் கிடந்த கண்ணன் (844),
வேதகீதன் (868), சாம வேத கீதன் (765) எனப் போற்றிப் புகழ்கின்றார்.
காளிங்கன் என்னும் பாம்பின்மேல் நடனம் ஆடியவன்; குடக்கூத்தாடிய கொண்டல் வண்ணன்,
கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவன். விளங்கனி வடிவில் வந்த அரக்கனைக் கொன்றவன் (789).

ஆய்ச்சிபாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெயுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டு பண்டொ ரேனமாய வாமனா! (788:3-4)
என ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லும் ஆழ்வார் ஸ்ரீ வராக அவதாரத்தைச் சுட்டி விளிக்கின்றார்.
‘உரத்தில் (மார்பு) கரத்தை (கை) வைத்து நகத்தால் கீறியவன், ஸ்ரீ வாமனன் ஆகி மண் இரந்தவன் (776) என
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தையும் ஸ்ரீ வாமன அவதாரத்தையும் ஒரு பாசுரதத்தில் சுட்டுவர்.

ஸ்ரீ திருமால் உள்ளங்கையில் ஆழி (சக்கரம்), சங்கு, தண்டு, வில், வாள் ஏந்தியவன் (775, 848, 857).
கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் ஸ்ரீ திருவரங்கம்.

கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்
உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர் (800)
‘இலங்கை மன்னன் சிரங்கள் பத்தும் அறுத்து உதிர்த்த செல்வர்’ வாழும் இடம் ஸ்ரீ திருவரங்கம் ஆகும்.
அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே(802)
இலங்கையை அழித்த ஆழியானை நான்முகன் வந்து பணிந்த ஊர் அரங்கம் எனப் பாசுரம் செய்கின்றார்
ஸ்ரீ திருமழிசையாழ்வார், ஸ்ரீ திருச்சந்தவிருத்தில்.

திவ்ய தேசங்களின் புகழ்பாடும் அடியார் பழைய புராணக் கதைகளைப் பொதிந்து புதிய விளக்கம் கொடுக்கின்றார்.

கூடல் இழைத்தல்
தலைவனைப் பெற விரும்பும் தலைவி கூடல் இழைத்தல் அகப்பொருள் மரபாகும்.
இங்கு ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ஸ்ரீ திருமழிசையாழ்வார் நாயகி நிலையில் நின்று,

அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட (3522)
எனப் பாடுவது, மானுடக் காதல் இறைவன் மீது கொண்ட காதலாக மாற்றம் செய்யப் பெற்றதைக் காட்டுகின்றது.

நிலையாமை
வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளும்நாள்அது ஆதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே! (863)

எனப் பிறப்பு இறப்பு நீங்க, உடம்பின் நிலையாமையைச் சொல்லி மனத்தை மாயன்பால் வைக்க வேண்டுகிறார்.
வீடுபேறு தருபவன்; வெற்றி அளிப்பவன்; ஞானம் ஆனவன், அத்தலைவன்.

அத்தனாகி, யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை ஆட்கொள்வான் (866:1-2)
அச்சம், நோய், அல்லல் (துன்பம்), பல்பிறப்பு, மூப்பு (முதுமை) ஆகியவற்றை அகற்றி வான் ஆளும் பேறு கொடுப்பான்.
நாகணையில் (பாம்பணை) கிடந்த நாதன் என்பர்.

பலபிறவிகள் எடுத்த தம் உடம்பை, அவனே உய்யக் கொள்வான்.
‘என் ஆவி தான் இயக்குஎலாம் அறுத்து அறாத இன்பவீடு பெற்றதே’ (871) எனத் திருச்சந்த விருத்தத்தின் இறுதிப் பாசுரம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பற்று அறுத்த நிலையைக் காட்டுகின்றது.

ஒன்று சாதல், நின்றுசாதல், அன்றியாரும் வையகத்து
ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ
அன்று பாரளந்த பாத போதை யுன்னி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே? (812)

என்னும் பாசுரம் தம்முயிர் போலவே பிற உயிரும் உய்திபெறும் வழியை நாட வேண்டும் என
ஏங்கும் ஆழ்வாரின் விழைவைக் காட்டுகின்றது.

மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்துநின் கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் (849)

எனப் பாடி மீண்டும் பிறவாமல் இருக்கும் பேறும், உன்னை மறவாதிருக்கும் பேறும் வேண்டும் என்பர்.

——————

சிவவாக்கியம்

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கினோசை மூல’நாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!–98

நாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்
மேலு பத்து மாறுடன் ஊமேதிரண்ட தொன்றுமே
கோலி அஞ்செழுத்துடே குருவிருந்து கூறிடில்
தோலி மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே–174

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாயமாயம் மாயனே–270

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதி தேவனே
எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே–271

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய்
பத்து நாற்திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்துமாய் கொத்தமோடும் அத்தலம்மிக் காதிமால்
பத்தர்கட்கலாது முத்தி முத்தி முத்தி யாகுமே–272

திருச்சந்த விருத்தம்

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடாசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே -2 (சிவவாக்கியர் 270)-

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓரேழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று அவன்பெயர்
எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்ல வானம் ஆளவே –77 (சிவவாக்கியர் 271)

பத்தினோடு பத்துமாய் ஓரேழினோடு ஓர் ஒன்பதாய்
பத்தினால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தினாய தோற்றமோடு ஓராற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கல்லாது முத்தி முற்றலாகுமே? –79 (சிவவாக்கியர் 272)

இதுபோல் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 4700 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும்,
ஆரம்பத்தில் சிவ வாக்கியராக இருந்தவர் கடைசியில் ஸ்ரீ திருமழிசை யாழ்வாராகினர்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் இவ்வுலகத்தில் இருந்தது 4700 ஆண்டுகள்.
அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக வாழ்ந்திருக்கிறார்
என்று “பன்னீராயிரப்படி” வியாக்யானம் தெரிவிக்கிறது.
தனது காலத்திலே, ஆழ்வார் சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று,
அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார்.

“சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்” என்று உரைத்தார்.

சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல்,
பின்னர் ஸ்ரீ பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .

—————-

ஸ்ரீ திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணி கண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது.

ஆடவர்கள் எங்கன் அன்று ஒழிவார் வெக்காவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா நீடிய மால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ
மென்றார் பொழில் கச்சி மாண்பு –ஸ்ரீ கனி கண்ணன் மன்னனிடம் பாடிய பாடல்

இவரது சீடனான ஸ்ரீ கணி கண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, ஸ்ரீ கச்சியை விட்டு வெளியேறிய போது,
ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்ப ஸ்ரீ திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமான்,
தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன்,
இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டதாகக் கூறுவர்.
இந்தக் கதையின் ஆதாரம் ஸ்ரீ திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப் பாடல்கள்:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.–என்று முதல் பாட்டுக்கு ஸ்ரீ பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.–என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.

அதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது, வளர்த்த தாயின் பாலையும் மறுத்து,
தன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார் என்பதை

எந்தையே வினையேன், தந்த இந்தத் தொள்ளமுதினை அமுது செய்க என்று,
சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே
அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்–என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.

———–

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதனை ஸேவிக்க விரும்பி, ஸ்ரீ திருக்குடந்தை செல்லும் வழியில்,
பெரும்புலியூர் என்ற இடத்தில் ஓய்வெடுக்க தங்கினார். அங்கு சில அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர்.
வேற்று மனிதர் ஒருவர் வந்து அமர்ந்ததைக் கண்ட அந்த அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர்.
இதனை உணர்ந்து கொண்ட ஆழ்வாரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத விழைந்தனர்.

ஆனால் அவர்கள் எந்த இடத்தில் தாங்கள் நிறுத்திய வேத மந்திரத்தை தொடங்குவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
இதனை கண்ட ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், அவர்கள் தொடங்க வேண்டிய
ஸ்ரீ கிருஷ்ணாநாம் வரீஹீனாம் நக நிர்ப்பின்னம் -மந்திரத்தை
உணர்த்த ஒரு விதையை எடுத்து அதனை உரித்து காண்பித்து,
பூடகமாக எந்த இடத்தில் அவர்கள் வேத மந்திரத்தை தொடங்க வேண்டும் என்று சைகை காட்டினார்.
தங்கள் தவறினை புரிந்து கொண்ட அந்த அந்தணர்கள் , ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு,
அவரையும் வேத கோஷ்டியில் கலந்து கொள்ள வேண்டினர்.

பெரும்புலியூர் வேதியர் யாகம்
ஸ்ரீ திருமழிசையாழ்வார் அவ்வூரில் பிட்சை பெறும் பொருட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வூரில் கோயில் கொண்டிருந்த ஸ்ரீ திருமால் விக்கிரகத்தின் முகம் அவர் செல்லும் திசைகளில் எல்லாம்
திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அர்ச்சகர்கள் பெரும் வியப்பெய்தினார்கள்.
வேதியர் சிலரிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அவர்களுக்கு அது வியப்பை அளித்தது.
அவர்கள் யாகசாலைக்குச் சென்று அங்கு வேள்வித் தலைவராக யாகம் தொடங்கும் பெரும்புலியூர் அடிகளிடம் எடுத்துரைத்தார்கள்.
பெரும்புலியூர் அடிகள் பெருமான் இவ்வாறு செய்வதன் காரணத்தை உணர்ந்தார்.
யாகசாலையை விட்டுச் சென்று ஸ்ரீ திருமழிசையாரை அடைந்து, அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.
அவரை யாகசாலை, உன்னதமான பீடத்தில் அமரச் செய்து உபசரித்தார். யாகம் தொடங்கியது.
வேள்வித் தலைவர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பூஜையை ஸ்ரீ திருமழிசையாருக்குச் செய்தார்.
அப்போது வேள்விச் சடங்குகள் செய்வதற்கு அமர்ந்திருந்த வேதியர் சிலர், “நான்காம் வருணத்தானுக்கு அக்கிர பூஜை செய்வதா?”
என்று ஆத்திரப்பட்டார்கள். பெரும்புலியூர் அடிகள் அதைக் கண்டு மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்.

இதைக் கண்ட ஸ்ரீ திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, ஸ்ரீ திருமகள் நாதனை நோக்கி,
“சக்கரத்தைக் கையில் ஏந்திய ஸ்ரீ திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன்போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால்,
இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும் வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும்
உன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டி பின்வரும் பாடலைப் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம் கொலோ?
இக் குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்
சக்கரம் கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே!

இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளை ஸ்ரீ திருமகளும் ஸ்ரீ பூமகளும் வருடிட,
தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் ஸ்ரீ திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார்.
அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள்.
பிறகு ஸ்ரீ திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி விடைபெற்று
ஸ்ரீ திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

————

உலகத்தின் பார்வையாலும், வேதத்தின் பார்வையாலும், பக்தியின் பார்வையாலும்,
எம்பெருமான் தானே தன்னைக் கொண்டுவந்து காட்ட,
முதலாழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டு அனுபவித்தார்கள்.
அதாவது, இவர்கள் மூவருக்கும் பகவான் நேரே ஞானத்தை வழங்கி,
தானே பரம்பொருள் என்பதையும் உணர்த்த, அவர்களும் அவனை மனமாரத் தரிசித்து, அவன் புகழைப் பாடினார்கள்.

நான்காமவரான திருமழிசை ஆழ்வார் முதலில் நெடுங்காலம் பிற சமயங்களில் இருந்து விட்டு,
பின்னர் எது உண்மையான பரம்பொருள் என்பது பேயாழ்வாரால் காட்டப்பட்டு,
அதன்பின் இவரும் முதலாழ்வார்களைப் போலவே, அந்த நிலையை அடைந்த போது, தானும் அனுபவித்து மகிழ்ந்தார்.

ஆனால், வேதத்தின் அடிப்படையில், நியமிப்பவன் எம்பெருமான்; நியமிக்கப்படுபவர்கள் ஜீவாத்மாக்கள்
என்கின்ற உண்மைத் தன்மை உலகில் வெளிப்படாமல் மறைந்திருப்பதைக் கண்டு,
இப்படி, எது உண்மையான பரம்பொருள் என்று உலகோர்கள் அறியாமல் இருப்பதைக் கண்டு,
அப்படி அஜ்ஞானத்துடன் இருப்பவர்கள் மீது பரிவு (இரக்கம்) கொண்டு,
அனைத்து வேதங்களின் ரகசியங்களையும் உபதேசித்து அருளினார் (அறிவுறுத்தினார்) தனது திவ்யப் பிரபந்தங்களின் மூலம்.

பெருமான் மீது எத்தனையோ பிரபந்தங்களைப் பாடியுள்ளார் திருமழிசைபிரான்.
ஆனால், இன்று நமக்குக் கிடைத்துள்ளது இரண்டே இரண்டு.
அதாவது,
ஆழ்வார் தானும், தான் இயற்றிய அபாரமான ப்ரபந்தங்கள் அத்தனையையும் காவிரி ஆற்றினில் போட,
இரண்டே இரண்டு பிரபந்தங்களை மட்டும் இந்தக் காவிரி ஆறு அவரிடத்திலே மீண்டும் கொண்டுவந்து சேர்த்ததாம்!
உடனே திருமழிசை ஆழ்வார் நினைத்தார் – இந்த ரெண்டு போதும்,
“ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்று உலகத்தாருக்கு அறிவிக்க!
இன்னும் அவர் இயற்றிய அத்தனையும் இருந்திருந்தால் மற்ற சமயங்கள் என்ன பாடுபடுமோ தெரியாது!
இந்த ரெண்டை வைத்துக் கொண்டே இவரை “உறையிலிடாதவர்” என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றால்,
அவர் பாடினது அத்தனையும் நம் கைக்கு வந்திருந்தது என்றால், எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோம்.
நமக்குக் கிடைத்த அந்த இரண்டு பிரபந்தங்கள் :
நான்முகன் திருவந்தாதி மற்றும்
திருச்சந்தவிருத்தம் ஆகியவை ஆகும்.

நான்முகன் திருவந்தாதியின் முதல் பாடலிலேயே “நான்முகனை நாராயணன் படைத்தான்”
(பிரமனைப் படைத்தவன் நாராயணன்) என்று சொல்லி,
அவனே ஜகத்காரணன் – அதாவது,
இந்தப் பிரபஞ்சமானது அவனிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பதால்,
அப்படிப் பட்டவனே முழுமுதற்கடவுள் ஆவான் என்று உணர்த்தி, இதை “சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து” –
நாராயணனே பரம்பொருள் என்பதை நான் உணர்ந்தேன்; அதை உங்களுக்கும் அறிவிக்கிறேன்;
நீங்களும் நன்கு ஆராய்ந்து, கை நழுவவிடாமல் இதைக் கொள்ளுங்கள்” என்றும் உணர்த்தினார்.

அடுத்து, நான்.திரு.2ஆவது பாடலில்,
“தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர், ஆரும் அறியார் அவன் பெருமை,
ஓரும் பொருள் முடிவும் இத்தனையே” என்று உபதேசித்தார்.
இதன் அர்த்தம், “ஆராய்ந்து பார்த்தால் பரதேவதை ஒருவனே என்று ஞானிகள் கூறுவார்;
யாரும் அவன் பெருமையை (வேதத்தில்) உள்ளபடி யாரும் அறியமாட்டார்கள்.
வேதங்களில் ஆராயப்படும் அர்த்தத்தின் முடிவும் இவ்வளவே” என்பதாகும்.
“ஓரும் பொருள்” – வேத வாக்கியங்களின் அர்த்தம்.
“வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:” (கீதை, அத்யாயம் 15, ஸ்லோகம் 15) –
“வேதங்கள் எல்லாவற்றாலும் நானே அறியப்படுகிறேன்” – என்று
கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளான்.
ஆழ்வார் இதை நேரே தமிழ்படுத்திக் காட்டினார் “ஓரும் பொருள் முடிவும் இத்தனையே” என்று!

“பரம்பொருள்” (முழுமுதற்கடவுள்) தானே என்பதை கீதை முழுவதும் உபதேசித்துள்ளார் கண்ணன் எம்பெருமான்.
“மாமேகம் சரணம் வ்ரஜ:” – என் ஒருவனையே சரணடை;
அதுமட்டுமே உன் துன்பங்களைத் தீர்க்கும் என்று கீதையின் இறுதியில் வெளியிட்டு,
தன் பரத்வத்தை (தானே பரம்பொருள் என்னும் தத்துவத்தை) உறுதிபடுத்துகிறார்.

மேலும் கண்ணன் எம்பெருமான்,
“யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம், ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத” (கீதை, அத்.15, ஸ்லோ.19) –
எவன் புருஷோத்தமனான என்னைக் கலக்கமில்லாமல் அறிகிறானோ, அவன் என்னை அடைவதற்குரிய வழி அனைத்தையும்
அறிந்தவனாகிறான்; என்னை எல்லாப் பிரகாரங்களாலும் (வழிகள்) பக்தி செய்தவனாகிறான்” என்று உரைத்துள்ளார்.

இப்படி கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளதை நன்கு உணர்ந்து, தேர்ந்தால் நல்லது நடக்கும்;
அப்படி உணராமல் இருப்பவர்களை மிகவும் தாழ்ந்தவர்கள் என்று சாடுகிறார் இவ்வாழ்வார்.
“மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் எதிலராய் மெய்ஞானம் இல்” (நான்.திரு., 71) –
“எம்பெருமான் பாரத யுத்தம் நடந்தபோது அருளிய சரம ச்லோகமாகிய வாக்கைக் கற்காதவர்கள்
எதுவும் இல்லாதவர்களாய் மெய்யான அறிவும் இல்லாதவர்கள் ஆவர்” என்று சாடியுள்ளார்.

இவ்வாழ்வார் அருளியுள்ள ரெண்டு பிரபந்தங்களாலே, தேறின பொருள் எதுவென்று பார்த்தால்,
நாராயணனே பரதெய்வம்! மற்றபேரைப் (மற்ற தெய்வங்கள், தேவதைகள்) பற்றி
நாம் பேசுவதற்குக் கூட யோக்கியதை கிடையாது! என்பது தெளிவாகும்.
இவர் அருளிய “திருச்சந்த விருத்தம்” பிரபந்தத்தில் ஒரு பாடலை ஆராய,
ஆழ்வார் கூற வந்தது என்ன என்பது இன்னும் நன்கு விளங்கும்.

“காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை
ஆணமென்றடைந்து வாழும் ஆதலால் எம்மாதர்காள்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே!” (திருச்.விரு., 69)

மேற் பாசுரத்தின் (பாடல்) சுருக்கமான அர்த்தம்:
மற்ற தேவதைகள் காண்பதற்குச் சகியாதவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்கள் சரித்திரமோ கேட்பதற்குச் சகியாமல் உள்ளது;
அவர்கள் கேட்கும் வரங்களைக் கொடுக்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள்;
கம்பீரம் அற்றவர்களாய் இருக்கிறார்கள்; இப்படிப் பட்ட பலவீனமான தேவதைகளைத் தேடிப்போய் பற்றி,
ஆதரவாகக் கொள்பவர்கள் “குருடர்கள்” (ஆதர்காள் – குருடர்கள்) ஆவார்கள்.
குருடர்களே! இனியும் அவர்களிடத்தில் சிக்கி உழலாமல், எது பரம்பொருளோ,
எவன் காணக் காண அழகாக இருக்கிறானோ, எவனது சரித்திரம் கேட்கக்கேட்க திகட்டாமல் இருக்கிறதோ,
எவன் கேட்கும் வரம் எதுவாக இருந்தாலும் கொடுக்கக் கூடியவனோ, எல்லாவற்றுக்கும் மேலாக,
எவன் நம் பிறவி என்னும் துயர்க்கடலை வற்றச் செய்து “மோக்ஷம்” என்னும் நற்கதி அளிப்பவனோ,
அவனையே பற்றி உய்யுங்கள் (நல்ல கதியை அடையுங்கள்) என்று அறிவுறுத்துகிறார். இது மேலோட்டமான அர்த்தம்.

இதற்கு “பெரியவாச்சான் பிள்ளை” – இவர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள்
அத்தனைக்கும் அற்புதமான விளக்க உரை அருளியுள்ளார் (எழுதியுள்ளார்).
கண்ணன் எம்பெருமானே, ஆழ்வார்களின் பாடல்களுக்கு விளக்கம் தருவதற்காக “பெரியவாச்சான் பிள்ளை” என்னும்
மகானாக அவதரித்தார் என்று வைணவப் பெரியோர்கள் இவரைப் போற்றுகின்றனர்.
ஏனென்றால், கண்ணன் எம்பெருமானும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்;
பெரியவாச்சான் பிள்ளையும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
இனி, இவ்வாசாரியர் (பெரியவாச்சான் பிள்ளை) மேற்பாசுரத்திற்கு அளித்துள்ள விரிவான உரையைக் கீழே அனுபவிப்போம்.

அதாவது, மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார்.
மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்),
அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன்மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனைபேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க்கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!

எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார்.
சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.

“செவிக்கினாத கீர்த்தியார்” -செவிக்கு இனிய கீர்த்தி என்றால்,
பகவானுடைய திரிவிக்கிரம அவதாரமா – வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.

“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன்தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.
ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்; தன் சிஷ்யனிடத்திலேயே அவர்
“பிள்ளைக்கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாகயஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக் கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –

“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று பாடி!
அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?
ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப்பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் ,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க,
அவனிடம் தானம் கேட்டாலும் அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்!
ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை;
அவனும் கொடுக்கபோறதில்லை; நமக்கும் கிடைக்கப் போறதில்லை!
ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.
இதனால்தான், ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக்கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்கபோறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்படவேண்டாம் என்று தவிர்க்கிறார் ஆழ்வார்.

ஏதோ, ஆழ்வார்கள் வேதங்களைத் தமிழ்படுத்திப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார்கள்;
அத்தோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது என்று இல்லாமல், அவர்கள் மனதில் இருந்த ஆதங்கம் என்ன
என்பதை அணு அணுவாக ஆராய்ந்து, ஏன் இப்படி ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்பதை அறிய,
அவர்களுக்கும் மேலே ஒருபடி ஏறி, அவர்கள் பாடிய பாடல்களுக்கு உரை அளித்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை என்னும் பெரியவர்.
இவர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால், ஆழ்வார்களின் தேனிலும் இனிய பாடல்களின் அர்த்தம் என்ன என்றே தெரியமாமல் போயிருக்கும்.

வெறுமே ஆழ்வார்கள் பாடலுக்கு உரை அளித்ததோடு நின்றுவிடாமல்,
வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் ஆழ்வார்களின் பாடல்களுக்கு ஏற்ப
என்னென்ன மேற்கோள்கள் (உதாரணங்கள்) காட்ட வேண்டுமோ காட்டித்தான்,
உரை நூலை அருளிச் செய்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை.
மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.

“திவுக்ரீடாயாந் தாது; ||
திவு விஜிஹீஷாந் தாது; ||
திவு வியவஹாரந்: தாது; ||
திவு த்யுதீந்: தாது; ||
திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; ||
திவு மதாந்: தாது; ||
திவு காந்தீந்:தாது; ||
திவு கதீந்:தாது.”
இந்த வேத வாக்கியங்களின் விரிவான அர்த்தங்களையும், மேலே உள்ள “காணிலும் உருப்பொலார்” பாசுரத்தின்
விரிவான அர்த்தங்களையும் ஒன்றுசேர்த்து அனுபவித்தால்தான் ஒரு பாடலுக்கான உரை
(வியாக்யானம், explanations) எவ்வளவு அழகாக அமைந்துள்ளது என்பது புரியும்.

ஏன் உரைநூல் எழுதுபவர் இவ்வளவு சிரமப்படவேண்டும் என்றால், அது நம் பயனுக்காக என்று புரிந்துகொள்ளவேண்டும்.
ஏனென்றால், ஆழ்வார்கள் எம்பெருமானைப் பற்றிய மெய்ஞானத்தைப் பெற்றபின், இதுபோதும் என்று இருந்திருக்கலாம்;
ஆனால், நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு,
பகவான் அருளிய ஞானத்தைக் கொண்டு, நாமும் அவற்றை அறிந்து, இன்பம் பெறவேண்டும் என்பதாலேயே
பகவானின் திருக்குணங்களைப் போற்றிப்பாடி, அவற்றை நாமும் அறியும்படி பரப்பினார்கள்.

மேலும், ஆழ்வார்கள் பாடிய பாடலின் அர்த்தங்களை நன்கு புரிந்துகொண்டார்கள் முன்பு வாழ்ந்திருந்த வைணவப் பெரியோர்கள்.
சரி; அவர்களுக்குப் புரிந்து அவர்கள் நன்மை பெற்றார்கள் என்று அதை அப்படியே விட்டுவிடாமல்,
அந்த உயர்ந்த, மங்களகரமான பாடல்களின் அர்த்தங்கள் எல்லோரையும் சென்று அடைந்து,
எல்லோரும் நன்மை பெறவேண்டும் என்று அவர்கள் நல்லெண்ணம் கொண்டார்கள்;
அதனால், ஆழ்வார்களின் பாடல்களுக்கு மேலே சொன்னபடி
வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் உதாரணங்களைக் காட்டி,
உரைநூல் (Explanations அண்ட் Commentaries) அருளினார்கள்.
வைணவப் பெரியோர்களால், அவை அனைத்தும் இன்றும் நன்று பாதுகாக்கப்பட்டு,
அனுதினமும் பல இடங்களில் சொற்பொழிவுகளின் மூலமும் பரப்பபடுகின்றன என்றால்,
ஒருபோதும் இவ்வுலகத்தார் உண்மையை அறியாமல் சீரழிந்துவிடக்கூடாது என்ற நன்னோக்கே ஆகும்.

ஏற்கனவே தெரிவித்தபடி, தெய்வம்னு ஒருத்தன் இருக்கிறான் என்றால்,
அவன் “கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) –
அவன் ஒருத்தன்தான் தெய்வமே தவிர, மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” – எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்;
அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் திருமழிசை ஆழ்வார் .

இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

அதன்பின்,திருமழிசைப்பிரான் திருக்குடந்தையிலே பல ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து உலகத்தோர் இனிதுடன் வாழ அருளி,
திருநாட்டுக்கு எழுந்தருளினார் (எம்பெருமான் திருவடியில் முக்தியை அடைந்தார்) திருமழிசை ஆழ்வார்.

திருமழிசைப்பிரான் அவதரித்தது திருமழிசையில்.
பரமபத கதியை (முக்தி) அடைந்தது திருக்குடந்தை என்னும் திவ்யதேசத்தில்.
ஆழ்வாரது “திருவரசு” (முக்தி அடைந்த இடம்)திருக்குடந்தையில் உள்ளது.
ஆழ்வாரை ஸ்தூலமாக திருமழிசையிலும் மற்ற தேசத்துக் கோயில்களிலும் ஸேவிக்கலாம்;
சூஷ்ம ரூபமாகவும் அவரை, திருக்குடந்தையில் உள்ள அவரது திருவரஸில் ஸேவிக்கலாம்.
ஸேவித்து, ஆழ்வார் பெற்றிருந்த ஞான வைராக்யத்தை எளிதில் அடையலாம்.

“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் – துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்”

என்று திருமழிசைப்பிரானின் அவதாரத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மணவாள மாமுனிகள் (உபதேச இரத்தினமாலை, பா.12).
ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்ற தூய்மையான அறிவைப் பெற்றிருந்ததனால்,
“துய்யமதி பெற்ற” மழிசைப்பிரான் என்று போற்றியுள்ளார் மாமுனிகள்.
இப்படித் தூய்மையான மதியுடன் திகழ்ந்த திருமழிசைப்பிரானின் திருவடிகளிலேயே தன்னைப் புகுத்திக் கொண்டவர்,
இந்த உலகோர் உய்ய பகவானால் அருளப்பட்ட ஆசார்யரான பகவத் இராமானுசர்.

“ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி” என்றும்,
“ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி” என்றும் – அதாவது,
அவர்கள் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கு அற்புதமான உரைகள் (வியாக்யானம் – Explanations)
இட்ட ஆசார்யர்களையும் வணங்குகிறேன் என்று சொல்வதற்குத் துளியும் அருகதை இல்லாதவனாய் அடியேன் இருந்தாலும்,
அவர்கள் அனுக்ரஹத்தைப் பெறும் பாக்கியம் திருமழிசை ஆழ்வார் அருளியுள்ளபடி இன்று இல்லாவிட்டாலும் சரி;
நாளை இல்லாவிட்டாலும் சரி; அல்லது இன்னும் சிறிது நாட்கள் கழிந்தாலும்
அது கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் இருந்து, ஆன்மீக எழுத்துப் பணியைத் தொடரும்
பாக்கியத்தையாவது அவர்கள் அருளுவார்கள் என்று இருக்கக் கடவேன்.

——————–

மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில்
மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஸ்ரீ ஆழ்வாரை, ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்,
“உறையில் இடாதவர்” என்று அழகிய ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார்.
( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )

மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்
அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த
வேதச் செழும் பொருள்–என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.

வேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்
மெய்ம்மிகுந்த திருச்சந்த விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்
எழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.
“ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல் கொண்மின் நீர்தேர்ந்து”–என்று தொடங்கி,
“இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை”–என்று ஸ்ரீ திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் “துய்மதி பெற்ற மழிசை பிரான்” ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும்
இவர் அவதரித்த திருநாளை “நல்லவர்கள் கொண்டாடும் நாள்” ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்.
இன்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் நாமும் அதைக் கொண்டாடலாம்.

இப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசை ஆழ்வார்.

“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் – துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்”

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றுஆறு உரைத்தான் வாழியே!
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே!
இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே!
எழில் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே!
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே!
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே!
நன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே!
நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே!

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்