அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனி மாலையும்,
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத் தண்டையும், சதிரான வீரக் கழலும் தஞ்சமான தாளிணையும்,
குந்தி யிட்ட கனணக் காலும் குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,
வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய,
நீலக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.
உறை கழித்த வாளை யொத்த விழி மடந்தை மாதர் மேல்,
உருக வைத்த மனமொழித் திவ்வுலகளந்த நம்பிமேல்,
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,
மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன் முனே
மடி யொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து, ஒன்னலார்
கறை குளித்த வேலணைத்து நின்ற விந்த நிலைமை, என்
கண்ணை விட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.
காதும் சொரி முத்தும் கையும் கதிர் வேலும்,
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீது புனை தென்னாலி நாடன் திரு வழகைப் போல,
என்னாணை ஓப்பாரில்லையே.
வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளினிணைத் தண்டையும், தார்க் கலியன் கொண்ட நன் முகமும்
கண்டு களிக்குமென் கண்.
இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்த விடம்.
பரகாலனின் இந்த திவ்ய மங்கள விக்ரஹம் எப்போதும் என் நெஞ்சில் உள்ளது.
திருத்தோள் தாங்கிய வேலும், எம்பெருமானைத்தொழுத திருக்கரங்களும், அழகிய ஊர்த்வ புண்ட்ரமும்,
ஓம் என்னும் திருப்பவளமும், கூர்த்த சிறிது தூக்கிய நாசியும், குளிர நோக்கும் விழிகளும்,சுருண்டு இருண்டு கருத்த குழலும்,
எம்பெருமானிடம் திருமந்த்ரம் கேட்ட செவ்விய செவி மடல்களும், வட்டமான கழுத்தும், அகன்ற திருமார்வும்,
வலிய திருத் தோள்களும், வனப்பான மேல் முதுகும்,
குறுகிய இடையும், எழிலார் மாலைகளும் மனங்கவர் கைவளையங்களும், வீரம் செறிந்த திருக்கழல்களும்,
மறம் செறிந்த கணைக் கால்களும், பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஒள் வாளும் மாமுனிகளின் வர்ணனை.
ஆழ்வார்க்கு
பர காலன்,
கலியன்,
நீலன்,
கலி த்வம்ஶன்,
கவி லோக திவாகரன்,
சதுஷ் கவி
ஶிகா மணி
ஷட் பிரபந்தக் கவி,
கலி வைரி,
நாலு கவிப் பெருமாள்,
திரு நா வீறுடைய பெருமான்,
மங்கையர் கோன்,
அருள் மாரி,
மங்கை வேந்தன்,
ஆலி நாடன்,
அரட்ட முக்கி,
அடையார் சீயம்,
கொங்கு மலர்க் குழலியர் வேள்,
கொற்ற வேந்தன்,
கொற்ற வேல் மங்கை வேந்தன்
என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.
ஸ்ரீ சைல தயா பாத்திரம் தீ பக்த்யாதி குண ஆர்ணவம் -ஞானக்கடல் குரும் ப்ரகாஸம் செய்து அருளுகிறார்
இதுவோ திருவரசு-இதுவோ திரு மணம் கொல்லை இதுவோ திருவாலி –எட்டு எழுத்தும் பறித்த ஊர்
திருமேனியில் பொதிந்த கல்யாண குணங்களை -படி எடுத்துச் சொல்லும் படி அல்லவே
கண்கள் கருணை வடிவம்
கருணை பொறுமை அன்பு -மூன்று தேவிமார்களும் ஹ்ருதயத்தில்
மூச்சுக் காற்று வேதம்
அவனை அடங்கப் பிடித்தேனே -என்று சொல்லும் ஆழ்வார் திருமேனியும் தத்வ ப்ரகாஸம்
சார்ங்கத்தில் சாய்ந்து பெருமாள் -அவருக்கும் ஆதாரம் -திருமங்கை ஆழ்வார் எம்பெருமானுக்கு ஆதாரம்
திருமேனியில் பொதிந்த தத்வம் அனைத்தையும் அருளிச் செய்த அழகு
வாய்ந்த -திரு மணம் கொல்லை
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-
வலது செவி சாய்த்து
அணைத்த வேலும்
ஓம் என்னும் வாய் -வேதம்
நாசி -பிராணன் தானே திருவாய் மொழி -இரும் தமிழ் நூல் புலவன் –
அணைத்த வேலும் -விரோதி நிரஸனம்
அரசமர அடியில் பெருமாளாக அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு மந்த்ர அரசான திருமந்திர உபதேசம்
மகிழ மரம் அடியில் பெரிய நம்பி நாயக ரத்னமான யதி ராசருக்கு மந்த்ர ரத்னம் உபதேசம்
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
மண்டினார் உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே -அர்ச்சா திருஷ்ணையாலே உஜ்ஜீவனம்
நால் வேதம் கண்டான் -மந்த்ர த்ருஷ்டா ஆழ்வார் -நான்கு வேதங்களால் காணப்படுபவனைக் கண்டார் -கர்த்தரை கர்த்ரு பிரயோகம் –
ஸ்வரூபமும் விபவமும் கண்டார் ஆழ்வார்
ஆறு அங்கம் கண்டார் -ஆறு உபாயம் அங்கமே என்று கண்டார் திருமங்கை ஆழ்வார்
பிடி தோறும் அர்ச்சை -விபவமும் அர்ச்சையும் இவருக்கு
இருக்கும் நாள் அர்ச்சாவதார ப்ராவண்யமும் அருளிச் செயல்களில் ஈடுபாடும் இருந்தாலே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -இணை ஆதி -ஒவ்வொன்றுக்கும் மற்ற ஒன்றே திருஷ்டாந்தம் -ஓன்று ஓன்று துணை மற்ற ஒன்றும் துணை யாகாதே-வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் இங்கு -வசனமும் உதாஹரிக்கிறார்
நல்லீர் அறிவீர்-உம அடியார் எல்லோரோடும் ஓக்க எண்ணி இருக்கீரோ –நும்மைத் தொழுதோம் -ஆண் ஊடல் காதில் கடிப்பிட்டு -நாயகி பாவத்திலும் உண்டே-அர்ச்சையை தொட்டு இருப்பார்கள் மற்றவர்கள் -இவர் தானே மண்டி இருந்து அனுஷ்டித்துக் காட்டினார்
வேம் உயிர் –துணை முலை பயந்து -ஆழ்வார்
இங்கு வியாக்யானம் -பகவானுக்குத் துணை ஆழ்வாரது மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -மலராள் தனத்துள்ளான் -அங்கு வியாக்யானம் –
வடவரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள் -திருத்தாயார் அர்ச்சாவதார அநு காரம் இவருக்கே
ஓ மண் அளந்த தாடாளா -தூது நான்கு பாசுரங்கள் மட்டுமே விட வல்லவர்
இரும் தமிழ் நூல்-திருவாய் மொழிப் புலவர் இவரே
———————————–
பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8- பகருகின்றேன் உரைக்கின்றேன் என்று சொல்லாமல் -ஓதுகின்றேன்
காண் –கண்டவர்கள் -த்ரஷ்டா -ஞானக் கண்ணால் –
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-
சார்ங்கம் -அம்சம் -கூடவே அவனை அனுபவிக்கிறோம் –
ஆலி நாடான் திருச்சுற்று கட்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாளிகை சுற்றியே கட்டி -அருள் மாரி -பட்டம் பெற்றவர்
உன் தாமரை சேவடி கை தொழுவாரைத் தொழுவார் –
களைக் கத்திக்கு அருள் மாரி பெயர் -நெஞ்சுக்கும் இருள் கெடுக்கும் தீபம் -கவிம் லோக திவாகரம்- கவிகளுக்குள் திவாகரன்
வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி நாடன் அருள் மாரி -4-2-10-
————————-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -14 இடங்களில் –ராமானுஜன் பத பிரயோகங்கள்
அயோத்யா 1 இடம் கிஷ்கிந்தா 6 இடங்களில் சுந்தர 2 இடங்களில் யுத்த 2 இடங்களில் -இவை எல்லாம் லஷ்மணன் 11 இடங்களில்
பரதனுக்கு 2 இடங்களில் -அயோத்யா -உத்தர
சத்ருக்னன் 1 இடத்தில்-உத்தர காண்டத்தில்
பிரயோகங்கள்
அநுஜன் -சேஷன் -பெருமாளை பிரிந்து 3 நாள்கள் -இரண்டு நாள் கழித்து அவதாரம் -ஒரு நாள் முன்பே ஸ்ரீ வைகுண்டம்
கைங்கர்ய ஸாம்ராஜ்யம் இழக்காமல் -கைங்கர்ய ஸ்ரீ -லஷ்மணோ லஷ்மி ஸம்பன்னன் -நற் செல்வன்
ராமானுஜன் = (பல)ராமனின் தம்பியான கண்ணன்
இராமவாதாரத்தில் இரு சேஷாவதாரங்கள்!
* சேஷன் இலக்குவன் = பகவத் கைங்கர்யம்
* சேஷன் பாதுகை = பாகவத கைங்கர்யம்
இந்தப் பாதுகையின் அம்சமாகத் தோன்றிய சடாரி அல்லவோ நம்மாழ்வார்!
எனவே ஆழ்வார், “இராம+அனுஜர் = இராமானுஜர்” என்னும் சொல்லுக்குப் பரிபூர்ணமாகப் பாத்யதைப் பட்டுள்ளார்!
அதான் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அந்தப் பாதுகை பாடியது!
மாறன் எங்கள் சடகோபன் = இளையாழ்வான் என்னும் இராமானுசனே!
வேள்வியினால் பிறந்து –
யாகம் காத்து
சேர்த்தியில் ஸரணாகதி
தீர்த்த கைங்கர்யம் (அயோத்யா காண்டம் 103-5-கௌசல்யை சுமத்தரை இடம் சொல்லும் ஸ்லோகம் -இவர் சாலைக்கிணறு தீர்த்தம் )
ஓங்கார வடிவில் நடந்து
கண் அழகில் ஈடுபட்டு
தாசர்கள்-அடியேன் ராமானுஜ தாசன் -தாஸ்ய நாமம் பெறுகிறோம்
நமக்கா புருஷகாரம் செய்தவர்கள்-யாத்ர ராம ச லஷ்மணா -புருஷகாரமும் உண்டே
தொண்டிலே நோக்கம்
பரந்த விசால திரு உள்ளம்-துர்வாசர் -சாபம் -அவதாரம் முடிந்து திரும்பிய விருத்தாந்தம் –
இவ்வாறு பல ஒற்றுமைகள் இளைய பெருமாளுக்கும் நம் ராமானுஜருக்கு உண்டே
ஸோஹம் –ஸஹ அஹம்
தாஸோஹம் —
ஸதா ஸோஹம்
தாஸ தாஸோஹம் -இப்பொழுது தான் முழுமையான சாந்தி கிடைக்கும்
ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்
தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரனான இராமனைப் பெருமாள் என்று அழைப்பது ஸம்பிரதாயம். அவன் தம்பியான லக்ஷ்மணனை இளைய பெருமாள் என்பர். நம், ராமநுஜரான லக்ஷ்மணமுனியை இளையாழ்வான் என்று அழைப்பர். இவ்விருவருக்கும் பல வகைகளில் ஒற்றுமை உண்டு. இங்கே சிலவற்றை மட்டும் கூறி, இவ்விருவரின் ஸாத்ருச்யத்தைக் காட்டுகிறோம். இருவருக்கும் ராமாநுஜன் என்ற பெயர் பொருத்தம் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
இலக்குவன் ஆதிசேஷனுடைய அவதாரம் என்பது பல பிரமாணங்களினால் பிரசித்தமானது. ‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்’ என்ற பாசுரப்படி, பாதுகை என்பது ஆதிசேஷனுடைய திருவவதாரம். ‘நிவாஸசய்யாஸநபாதுகா’ என்று ஆளவந்தார் கூறினார். லக்ஷ்மணனும் பாதுகையும் ஒருவரே என்பதும், பாதுகாஸஹஸ்ரத்திலுள்ள ‘பரதசிரஸி லக்நாம் பாதுகே … ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத:’ என்ற ச்லோகத்தால் ஸுவ்யக்தமாகிறது: ‘சேஷபூத: லக்ஷ்மண: என்றதனாலும், ‘ஸ்வதநுமபி’ என்றதனாலும் ஆதிசேஷனே லக்ஷ்மணனாக, அவதரித்தான் என்றும், பாதுகையும் லக்ஷ்மணனும் ஒன்றே என்றும் தெளிவாக ஏற்படுகின்றன அல்லவா? எனவே, லக்ஷ்மணன் ஆதிசேஷ அவதாரம். இது போலவே இளையாழ்வானான ராமாநுஜரும் ஆதிசேஷனின் அவதாரம்.
ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிய திவ்யஸூரி ஸ்தோத்திரத்தில், ‘ராமாநுஜன் சேஷாவதாரம்’ என்று ஸ்பஷ்டமாகக் காட்டப்படுகிறது. அதில் உள்ள ச்லோகம் – மேஷார்த்ராஸம்பவம் விஷ்ணோர் தர்சநஸ்தாபநோத்ஸுகம் | – துண்டீரமண்டலே சேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே || என்பது.
ஸ்ரீராமாநுஜருக்கு ஸாக்ஷாத் சிஷ்யரான வடுகநம்பி என்று சொல்லப்பெறும் ஆந்த்ரபூர்ணரும் இதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் –
வேதாந்தஸித்தாந்தஸமர்த்தநாய, பாஹ்யாந்தரப்ராந்தமதாபநுத்யை |
சேஷாம்சக: கேசவயஜ்வதேவ்யாம் தேஜோநிதி: கஸ்சிததாவிராஸீத் || என்று
சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை: |
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||
என்றும் இவரைப் புகழ்ந்திருக்கின்றனர். வேங்கடாத்ரி என்ற மகாகவி தமது விச்வகுணாதர்ச சம்பூவில் இவரைச் சேஷனுடைய அவதாரம் என்றே பணிக்கிறார்.
ராமாநுஜாய குரவே நரவேஷபாஜே, சேஷாய தூதகலயே கலயே ப்ரணாமாந் |
யோ மாத்ருசாநபி க்ருசாந் பரிபாதுகாம:, பூமாவவாதரத் உதஞ்சித போத பூமா || என்று,
இப்படி பல ஆசார்யர்கள் இந்த இளையாழ்வானை சேஷாவதாரம் என்றே ஒருமுகமாக சொல்லுகின்றனர். வேதாந்தாச்சார்யார் மாத்திரம் இவரை சேஷனுடைய அவதாரம் என்று கூறவில்லை.
அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஸ்ச ததாபர: |
பலபத்ரஸ் து கலெள கஸ்சித் பவிஷ்யதி ||–என்று பவிஷ்ய புராணத்தில் இவரைச் சேஷாம்சம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை அநுஸரித்ததுதான்.
ப்ரதமோ நந்தரூபஸ்ச த்விதீயோ லக்ஷ்மணஸ் ததா |
த்ருதீயோ பலராமஸ் ச கலெள ராமாநுஜோ முநி: ||–என்ற முன்னோர்களின் பாசுரமும்.
வைகுண்ட லோகத்தில் பரம ஆனந்தத்துடன் பர்யங்கத்தில் பக்தர்களும் பாகவதர்களும் சூழப் பரம த்ருப்தராய் இருக்கும் பகவான் தம் பர்யங்கபூதனான எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்து சேஷன் என்ற பெயர் பெற்ற ஆதிசேஷனைப் பார்த்து,
ச்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதா த்விஜா: |
அங்காநி ச வி சீர்ணாநி ஹா விருத்தோ வர்த்ததே கலீ: ||
“ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் அழிந்துவிட்டன. அந்தணர்கள் தங்களுடைய நித்ய கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டனர். வேதாங்கங்களும் சிதறிப் போயிந. கலியுகம் மேன்மேலும் விருத்தியடைகிறது. ஆகவே, நீ என் பஞ்சாயுதங்களின் சக்தியை ஏந்திக்கொண்டு உலகத்தில் ராமாநுஜ தரிசனம் என்ற பெயர் விளங்கும்படியாக ராமாநுஜராக அவதரித்து, வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி முதலியவற்றுக்குக் காப்பாக உரையிட்டு ஜனங்களை உஜ்ஜீவிக்கும்படி செய்” என்று உத்தரவிட்டார். அதன்படி இவர் அவதரித்தார்.
மந்நியோகாத் பூதபுர்யாம் அஹீநாமீச்வர : கலெள |
ஸ்ரீராமாநுஜரூபேன ஜநிஷ்யதி ஸதாம் முதே ||
இளையபெருமாள் தசரதனுடைய புத்ரகாமேஷ்டி மூலமாகப் பிறந்தவர். ராமாநுஜரும் புத்ரகாமேஷ்டி மூலமாகவே பிறந்தவர். இவரது பிதா ஆஸூரி கேசவாசார்யருக்கு ஸர்வக்ரது என்ற பிருதமும் உண்டு. இவர் காந்திமதி என்ற பெண்மணியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். வெகு காலமாகியும், சந்ததி இல்லாமலிருந்து, பிறகு பெரியோர்களின் நியமனத்தினால் ப்ருந்தாவன க்ஷேத்திரம் என்று பெயர் பெற்ற திருவல்லிக்கேணியில் புத்ரகாமேஷ்டி செய்து முடித்தார். வேள்வி நிறைவேறியது. அன்றிரவு ஸ்ரீபார்த்தசாரதி, “நானோ என் படுக்கையான ஆதிசேஷனோ உனக்குப் பிள்ளையாகப் பிறந்து வேத வேதாந்தங்களை ரக்ஷிக்க வருகிறோம்” என்று ஸ்வப்னத்தில் சொன்னார் எனற வரலாற்றையும் கண்டுகொள்ள வேண்டும். ஆகவே இருவரும் புத்ரகாமேஷ்டியின் மூலமாகப் பிறந்தவர்கள்.
இளையபெருமாள் விசாலமான மனத்தைப் பெற்றவர் என்பது ராமாயணப் பிரசித்தம். ‘என் ஒருவனுக்கு மரணம் வந்தாலும் பாதகம் இல்லை; வம்சத்துக்கே விநாசம் ஏற்படக்கூடாது’ என்ற பரந்த மனத்துடன் துர்வாஸர் என்ற மகரிஷியிடம் அவர் நடந்துகொண்டார் என்பது தெளிவானது.
இளையாழ்வானும், “பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு-பாதகாத்| ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம் பதம் ||” என்று விசாலமான மனத்துடன் மந்திரார்த்தங்களை ஆசார்ய நியமனத்தை உல்லங்கனம் செய்து உபதேசித்தார் என்பது பிரசித்தமானது.
பகவானான ஸ்ரீராமனுடைய திருவடியை அடைவிப்பதற்கு லக்ஷ்மணன் எப்போதும் ராமனை விட்டுப் பிரியாமலே இருந்தார். ‘யத்ர ராம’ ஸலக்ஷ்மண:’ என்றார் வால்மீகி. விபீஷணன் இலங்கையைவிட்டு ராமனிடம் சரணாகதி செய்யச் சமுத்திரத்தின் தென்கரையை அடைந்தான். ‘இலக்குவனோடு கூடிய ராமன் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்’ என்றார் வால்மீகி. இதன் கருத்து – ராமனை அடைவதற்கு லக்ஷ்மணனுடைய உதவி வேண்டும் என்பது. ‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய’ என்று மற்றோரிடத்தில் கூறினார்.
இளையாழ்வானும் பகவானுடைய திருவடியை நம்மை அடையும்படி செய்கிறார். ‘உலகோர்கள் எல்லாம் அண்ணல் ராமாநுசன் வந்த தோன்றிய அப்பொழுதே .. நாரணற்கு ஆயினரே’ என்பது நோக்கத் தக்கது. ‘இவை என்றனுக்கு அன்று அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து’ என்பதையும் நோக்கவேண்டும்,
த்வயமந்திரத்தின் அர்த்தமான சரணாகதியை இளையபெருமாள் இராமன் காட்டுக்குச் சென்றபோது, ‘ஸ ப்ராதுஸ் சரணெ காடம் நிபீட்ய ரகுநந்தந: | ஸீதாமுவாச அதியஸா: ராகவம் ச மஹாவ்ரதம் || பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரி ஸாநுஷு ரமஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே || என்ற பாசுரங்களை அநுஷ்டித்து விவரித்தார். இளையாழ்வானும் சரணாகதிகத்யம் என்று பெயரிட்டு த்வயார்த்தத்தை உலகுக்குத் தாமே அநுஷ்டித்துக் காட்டினார்.
இளைய பெருமாளை அனுமான் பார்த்து, “இவருக்கு நீர் என்ன ஆவீர்?” என்று கேட்க, “அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யம் உபாகத:. ராமர் என்னைத் தம் தம்பி என்று நினைத்திருப்பார். அவருடைய குணங்களுக்குத் தோற்று நான் தாஸன் என்று நினைத்திருப்பேன்” என்று பதிலளித்தார் இளைய பெருமாள். இதனால் பகவானுக்கும் தமக்கும் உள்ள ஸ்வஸ்வாமி பாவஸம்பந்தம் சேஷசேஷிபாவஸம்பந்தம் காட்டப்பட்டது. பாஷ்யகாரரும், ‘சரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ:’ என்று இந்த ஸம்பந்தத்தை பல இடங்களில் வெளியிட்டார்.
ராமன் காட்டுக்குச் சென்றபோது, காட்டில் முதலில் ராமனும் பிறகு சீதையும் பிறகு லக்ஷ்மணனும் சென்றதாக ‘அக்ரத: ப்ரயயெள’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது. ராமாநுஜரும் காசியாத்திரையினின்று தெளிந்து மீண்டு திரும்பி வந்த போது காஞ்சிக்கருகில் முதலில் வேடனுடைய உருவம் தரித்த வரதனும் பிறகு பெருந்தேவியும் பிறகு ராமாநுஜரும் வந்தார்கள் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.
லக்ஷ்மணன் ராமனுடைய திருவடிகளில் கைங்கர்யம் ஒன்றைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை.
ந தேவலோகாக்ரமணம் நாமரத்வம் அஹம் வ்ருணே |
ஐச்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா ||
என்றார். பகவானைப் பெற விரும்புகிறவன் மற்றப் பொருள்களில் வைராக்யமும், பகவானிடத்தில் ஆசையும் பெற்றிருக்கவேண்டும். ராமாநுஜரும் பகவானுடைய திருவடிகளில் உண்டான வியாமோகத்தினால் மற்றப் பொருள்களை த்ருணமாக நினைத்தார். ‘யோ நித்யம்’ என்ற இவருடைய தனியனை இங்கு அநுஸந்திப்பது,
லக்ஷ்மணன் தம் அண்ணனான ராமனுக்குத் தீர்த்தத்தை நதிகளிடமிருந்து எடுத்து வந்து உபசரித்தார். பரதாழ்வான் ராமனைச் சித்திரகூடத்திலிருந்து அழைத்துவர எண்ணி அந்த மலைக்குச் சென்றபோது வஸிஷ்ட முனிவர், கெளஸல்யை முதலிய தேவிகள் அனைவரும் சென்றனர். அங்கே கங்கை நதிக்கரையில் ஸுமித்ரை முதலியானவர்களைப் பார்த்துக் கெளஸல்யை சொல்லும் வார்த்தை –
இத: ஸுமித்ரே புத்ரஸ்தே ஸதா ஜலம் அதந்த்ரித: |
ஸ்வயம் ஹரதி ஸெளமித்ரிர் மம புத்ரஸ்ய காரணாத் ||
ஜகந்யமபி தே புத்ர க்ருதவாந் ந து கர்ஹித: |
ப்ராதுர் யதர்த்தஸஹிதம் ஸர்வம் தத் விஹிதம் குண: (அயோத்யா காண்டம் – 103)
என்பவை அங்குள்ள ச்லோகங்கள். “எப்பொழுதும் சோம்பலில்லாமல் இந்தக் கங்காநதியிலிருந்து என் குமாரனான ஸ்ரீராமனுக்கு உன் புதல்வன் தானாகவே தீர்த்தத்தைக் கொணர்ந்து உபசரிக்கிறான். இப்படித் தீர்த்தத்தைக் கொண்டுவரும் இந்தக் கைங்கர்யம் தோஷத்தை உண்டுபண்ணாது. இது பரிகாசத்திற்கு உரியதாகவும் ஆகாது. உலகத்தில் தண்ணீர் கிடைப்பது துர்லபமாக இருக்கும் காலத்தில் ஒரு குடம் தண்ணீர் கொணர்ந்தால் இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்று பிரபுக்களின் வார்த்தையைக் கேட்டுப் பண ஆசையால் ஒருவன் அம்மாதிரி செய்தால் அது பரிகசிப்பதற்கு உரியதாகும். ஸர்வவித பந்துவாய் ஸர்வஸ்வாமியாக உள்ள எம்பெருமானான ராமனுக்காகக் கொண்டு வரும் கைங்கர்யமானபடியால் இது எல்லோராலும் போற்றக் கூடியதாகவே முடியும்.” என்கிறாள்.
ஆளவந்தார் பல சிஷ்யர்களுக்குப் பகவத்விஷய காலக்ஷேபம் ஸாதித்து வந்தாராம். அப்பொழுது, ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு’ என்ற திருவேங்கடமுடையான் விஷயமான பாசுரம் நடந்து வந்ததாம். ‘நீர் கொண்டு என்று தீர்த்த கைங்கர்யம் சொல்லப்பட்டிருக்கிறபடியால் திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்வதில் நமமாழ்வாருக்குப் பேரவா இருந்திருக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்து அவரது மனோரதத்தை ஆளவந்தார் நிறைவேற்ற எண்ணினார். காலக்ஷேபம் முடிந்ததும், “திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யத்தை இந்தக் கோஷ்டியில் யார் செய்யப் போகிறார்கள்?” என்று வினவினார். பெரிய திருமலை நம்பி, “அடியேன் சித்தமாக இருக்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றுத் திருமலைக்குச் சென்று அந்தக் கைங்கர்யத்தை அழகுடன் செய்து வந்தாராம்.
தினந்தோறும் பாபவிநாசம் என்ற நதியிலிருந்து ஒரு கலசத்தில் இவர் தீர்த்தத்தை எடுத்து வந்து திருவேங்கடமுடையானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் கலசத்தில் தீர்த்தத்தை எடுத்துச் சென்றார். அப்போது பகவான் வில்லி வேஷம் பூண்டு, அவருக்குத் தெரியாமல் கலசத்தில் துவாரத்தை உண்டுபண்ணி நீரைக் கீழே பெருகும்படி செய்துவிட்டார். கொஞ்ச தூரம் சென்றதும், “தாதா, எனக்கு ரொம்பவும் தாகமாய் உள்ளது. கொஞ்சம் நீர் கொடு” என்றார். அப்போது கலசத்தில் நீரே இல்லை. பெரிய திருமலை நம்பி திக்பிரமம் அடைந்தார். “வெகு தூரத்திலிருந்து தீர்த்தத்தை கொண்டுவந்தேன். திருமலைக்குச் சமீபத்தில் வந்து விட்டேன். கலசத்திலோ நீர் இல்லை. மறுபடி பாபவிநாசம் சென்று கொண்டு வரவும் சக்தி இல்லை. என்ன செய்வது?” என்று கலங்கினார். அப்போது வில்லிவேஷம் பூண்ட பகவான், “பெரியவரே! கவலைப்பட வேண்டாம், நான் பாணத்தைப் பிரயோகம் செய்து இங்கிருந்தே நீரை வரவழைக்கிறேன். இதிலிருந்து தீர்த்தத்தை எடுத்துச் செல்லும்” என்று சொல்லி, ஓர் அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தார். திரிவிக்ரமாவதார காலத்தில் கங்கை எப்படி வேகமாகக் கிளம்பிற்றோ அது போல ஆகாசத்திலிருந்து கங்கை விழ ஆரம்பித்தது. இதற்குத்தான் ‘ஆகாச கங்கை’ என்று பெயர்.
நம்பி மிகவும் விஸ்மயப்பட்டு, இதிலிருந்து நீரைக் கொண்டு சென்றார். அது முதல் உண்மையை உணர்ந்து, பகவானுக்கு இங்கிருந்து தீர்த்தத்தைக்கொண்டு கொடுப்பதுதான் மிகவும் பிரீதியை உண்டுபண்ணும் என்பதை உணர்ந்து, தினமும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ‘தாதேத்யாமந்த்ர்ய கஸ்சித் வநபுவி த்ருஷிதஸ் தோயவிந்தூந் யயாசே’ என்றார் வேங்கடாத்வரி கவி. ஆகையால், பகவானுக்குச் செய்யும் இந்தக் கைங்கர்யம் மிகவும் போற்றத்தக்கது.
இளையாழ்வானும் சாலைக்கிணற்றிலிருந்து, பகவானுடைய அபிப்பிராயத்தை உணர்ந்து, தினமும் தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் என்பது உலகப் பிரசித்தம்.
இப்படிப் பல வகைகளில் இரண்டு ராமாநுஜர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.
இதை ஸ்ரீதேசிகன் “தத்தம் யேன தயாஸுதாம்பு நிதினர்” என்கிற ஸலோகத்தால் காட்டினார். அமிர்தமாகிற கடல் தயை என்னும் அமிர்தம் இதற்கு கடல் ஸ்ரீபாஷ்யகாரர். தேவப் பெருமாளும் கருணைக் கடல். இவர் ஸமர்ப்பித்த அம்ருத ஜலத்தை பருகினார். புஷ்டியை அடைந்தார். கருமுகில் கடல் நீரை பருகும் மலை மீது அமரும். அதிக மழையைக் கொடுக்கும். அது பகவானாகிற கருமுகிலும் அமுத நீரைப் பருகி புஷ்டியை அடைந்து நமது விருப்பத்துக்கும் அதிகமாக நமக்கு பல பலரை பொழிகிறான் என்றார்.
தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத–ஸ்ரீ யதிராஜ ஸப்ததி 9-
ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –
பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்
———————-
கஜேந்த்ரனுக்கும் கஜேந்திர தாசருக்கும் பல ஒற்றுமைகள்
வரதன் இடம் ப்ராவண்யம்-லீலை -சக்கரைப் பொங்கல் ஊட்டி விட்டு -வீர ராகவன் தந்தையும் நம்பாமல்-கோயிலுக்கு உள்ளே வர விடாமல் -திருக்கச்சி நம்பியைக் கூட்டி வந்தால் தான் அமுது செய்வேன் -100 தடா உண்டு வியர்வை உடன் இருக்க -உலகு உண்ட பெரு வாயன் -காட்டி அருளி -இவரால் உண்ண முடியாது என்று காட்டி அருளி
முதலை யானையின் காலைப் பிடித்து முதலில் மோக்ஷம்
திருக்கச்சி நம்பி தாசர் திருவடிகளை பற்றி முதலில் பேறு
அருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்…….!!!
இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.
1. “அஹமேவ பரம் தத்துவம்”
நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.
2. “தர்சநம் பேத ஏவச”
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.
4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.
5. “தேஹாவஸாகே முக்கிஸ் யாத்”
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.
6. “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.
இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து ராமானுஜருக்கு விளக்கினார் திருக்கச்சி நம்பிகள்.
நமோ நமஸ்தே
அகில காரணாயா
நிஷ் காரணாயா
அத்புத காரணாயா
கேசவர் kes
ஸர்வ ஆகம மஹார்ணவம் ஸர்வ ஆகமங்கள் சென்று சேர்க்கும் கடல்
அபவர்க்கா -மோக்ஷம் அளிப்பவன்
பராயணாயா –
முனிவர் -மனன சீலர்
முனிதல் கோபித்தல்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -அவனும் முனிவன்
நம்மை உஜ்ஜீவிக்கும் நமது பிரதிபந்தங்களைப் போக்கவும் கோபிக்கவும் வேண்டுமே
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து சரண் அடைகிறோம்
நம்மாழ்வார் நின் கண் வேட்க்கை எழுவிப்பன் –ஊரும் நாடும் உலகம் தன்னைப்போல் ஆக்க மனனம்
சட வாயுவை கோபித்து
நாதமுனி யமுனா முனி
ராமானுஜரும் முனிவர் -திவாகர முனி -அப்போது ஒரு சிந்தை செய்து
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –
சவும்ய மணவாள மா முனி -கோபிக்காத முனி -நம்மை உஜ்ஜீவித்து கால ஷேபம் நன்றாக செய்யவே மனனம் ராமானுஜ பிரவணர் என்பதால் –
கைங்கர்யம் ஸ்ரீ யால் திகழ்பவர்கள்-ஸ்ரீ வரதர் பாராட்டும் இரண்டு கஜேந்திரர் தார்கள் புகழ் வாழியே
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –