Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திருமங்கை ஆழ்வார் வடிவு அழகு சூர்ணிகை –ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

February 25, 2023

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனி மாலையும்,
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத் தண்டையும், சதிரான வீரக் கழலும் தஞ்சமான தாளிணையும்,
குந்தி யிட்ட கனணக் காலும் குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,
வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய,
நீலக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

உறை கழித்த வாளை யொத்த விழி மடந்தை மாதர் மேல்,
உருக வைத்த மனமொழித் திவ்வுலகளந்த நம்பிமேல்,
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,
மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன் முனே
மடி யொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து, ஒன்னலார்
கறை குளித்த வேலணைத்து நின்ற விந்த நிலைமை, என்
கண்ணை விட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.

காதும் சொரி முத்தும் கையும் கதிர் வேலும்,
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீது புனை தென்னாலி நாடன் திரு வழகைப் போல,
என்னாணை ஓப்பாரில்லையே.

வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளினிணைத் தண்டையும், தார்க் கலியன் கொண்ட நன் முகமும்
கண்டு களிக்குமென் கண்.

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்த விடம்.

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]
ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை
ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான்
வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்
எட்டெழுத்தும் பெற்ற இடம்.

பரகாலனின் இந்த திவ்ய மங்கள விக்ரஹம் எப்போதும் என் நெஞ்சில் உள்ளது.
திருத்தோள் தாங்கிய வேலும், எம்பெருமானைத்தொழுத திருக்கரங்களும், அழகிய ஊர்த்வ புண்ட்ரமும்,
ஓம் என்னும் திருப்பவளமும், கூர்த்த சிறிது தூக்கிய நாசியும், குளிர நோக்கும் விழிகளும்,சுருண்டு இருண்டு கருத்த குழலும்,
எம்பெருமானிடம் திருமந்த்ரம் கேட்ட செவ்விய செவி மடல்களும், வட்டமான கழுத்தும், அகன்ற திருமார்வும்,
வலிய திருத் தோள்களும், வனப்பான மேல் முதுகும்,
குறுகிய இடையும், எழிலார் மாலைகளும்  மனங்கவர் கைவளையங்களும், வீரம் செறிந்த திருக்கழல்களும்,
மறம் செறிந்த கணைக் கால்களும், பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஒள் வாளும்  மாமுனிகளின் வர்ணனை.

ஆழ்வார்க்கு
பர காலன்,
கலியன்,
நீலன்,
கலி த்வம்ஶன்,
கவி லோக திவாகரன்,
சதுஷ் கவி
ஶிகா மணி
ஷட் பிரபந்தக் கவி,
கலி வைரி,
நாலு கவிப் பெருமாள்,
திரு நா வீறுடைய பெருமான்,
மங்கையர் கோன்,
அருள் மாரி,
மங்கை வேந்தன்,
ஆலி நாடன்,
அரட்ட முக்கி,
அடையார் சீயம்,
கொங்கு மலர்க் குழலியர் வேள்,
கொற்ற வேந்தன்,
கொற்ற வேல் மங்கை வேந்தன்
என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.

——————–

ஸ்ரீ சைல தயா பாத்திரம் தீ பக்த்யாதி குண ஆர்ணவம் -ஞானக்கடல் குரும் ப்ரகாஸம் செய்து அருளுகிறார்

இதுவோ திருவரசு-இதுவோ திரு மணம் கொல்லை இதுவோ திருவாலி –எட்டு எழுத்தும் பறித்த ஊர்

திருமேனியில் பொதிந்த கல்யாண குணங்களை -படி எடுத்துச் சொல்லும் படி அல்லவே
கண்கள் கருணை வடிவம்

கருணை பொறுமை அன்பு -மூன்று தேவிமார்களும் ஹ்ருதயத்தில்
மூச்சுக் காற்று வேதம்

அவனை அடங்கப் பிடித்தேனே -என்று சொல்லும் ஆழ்வார் திருமேனியும் தத்வ ப்ரகாஸம்

சார்ங்கத்தில் சாய்ந்து பெருமாள் -அவருக்கும் ஆதாரம் -திருமங்கை ஆழ்வார் எம்பெருமானுக்கு ஆதாரம்
திருமேனியில் பொதிந்த தத்வம் அனைத்தையும் அருளிச் செய்த அழகு

வாய்ந்த -திரு மணம் கொல்லை

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வலது செவி சாய்த்து
அணைத்த வேலும்
ஓம் என்னும் வாய் -வேதம்
நாசி -பிராணன் தானே திருவாய் மொழி -இரும் தமிழ் நூல் புலவன் –

அணைத்த வேலும் -விரோதி நிரஸனம்

அரசமர அடியில் பெருமாளாக அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு மந்த்ர அரசான திருமந்திர உபதேசம்
மகிழ மரம் அடியில் பெரிய நம்பி நாயக ரத்னமான யதி ராசருக்கு மந்த்ர ரத்னம் உபதேசம்

க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
மண்டினார் உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே -அர்ச்சா திருஷ்ணையாலே உஜ்ஜீவனம்

நால் வேதம் கண்டான் -மந்த்ர த்ருஷ்டா ஆழ்வார் -நான்கு வேதங்களால் காணப்படுபவனைக் கண்டார் -கர்த்தரை கர்த்ரு பிரயோகம் –
ஸ்வரூபமும் விபவமும் கண்டார் ஆழ்வார்
ஆறு அங்கம் கண்டார் -ஆறு உபாயம் அங்கமே என்று கண்டார் திருமங்கை ஆழ்வார்
பிடி தோறும் அர்ச்சை -விபவமும் அர்ச்சையும் இவருக்கு
இருக்கும் நாள் அர்ச்சாவதார ப்ராவண்யமும் அருளிச் செயல்களில் ஈடுபாடும் இருந்தாலே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்

துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -இணை ஆதி -ஒவ்வொன்றுக்கும் மற்ற ஒன்றே திருஷ்டாந்தம் -ஓன்று ஓன்று துணை மற்ற ஒன்றும் துணை யாகாதே-வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் இங்கு -வசனமும் உதாஹரிக்கிறார்
நல்லீர் அறிவீர்-உம அடியார் எல்லோரோடும் ஓக்க எண்ணி இருக்கீரோ –நும்மைத் தொழுதோம் -ஆண் ஊடல் காதில் கடிப்பிட்டு -நாயகி பாவத்திலும் உண்டே-அர்ச்சையை தொட்டு இருப்பார்கள் மற்றவர்கள் -இவர் தானே மண்டி இருந்து அனுஷ்டித்துக் காட்டினார்
வேம் உயிர் –துணை முலை பயந்து -ஆழ்வார்
இங்கு வியாக்யானம் -பகவானுக்குத் துணை ஆழ்வாரது மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -மலராள் தனத்துள்ளான் -அங்கு வியாக்யானம் –

வடவரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள் -திருத்தாயார் அர்ச்சாவதார அநு காரம் இவருக்கே

ஓ மண் அளந்த தாடாளா -தூது நான்கு பாசுரங்கள் மட்டுமே விட வல்லவர்
இரும் தமிழ் நூல்-திருவாய் மொழிப் புலவர் இவரே

———————————–

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8- பகருகின்றேன் உரைக்கின்றேன் என்று சொல்லாமல் -ஓதுகின்றேன்

காண் –கண்டவர்கள் -த்ரஷ்டா -ஞானக் கண்ணால் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

சார்ங்கம் -அம்சம் -கூடவே அவனை அனுபவிக்கிறோம் –
ஆலி நாடான் திருச்சுற்று கட்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாளிகை சுற்றியே கட்டி -அருள் மாரி -பட்டம் பெற்றவர்
உன் தாமரை சேவடி கை தொழுவாரைத் தொழுவார் –
களைக் கத்திக்கு அருள் மாரி பெயர் -நெஞ்சுக்கும் இருள் கெடுக்கும் தீபம் -கவிம் லோக திவாகரம்- கவிகளுக்குள் திவாகரன்

வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி நாடன் அருள் மாரி -4-2-10-

————————-

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -14 இடங்களில் –ராமானுஜன் பத பிரயோகங்கள்
அயோத்யா 1 இடம் கிஷ்கிந்தா 6 இடங்களில் சுந்தர 2 இடங்களில் யுத்த 2 இடங்களில் -இவை எல்லாம் லஷ்மணன் 11 இடங்களில்
பரதனுக்கு 2 இடங்களில் -அயோத்யா -உத்தர
சத்ருக்னன் 1 இடத்தில்-உத்தர காண்டத்தில்
பிரயோகங்கள்
அநுஜன் -சேஷன் -பெருமாளை பிரிந்து 3 நாள்கள் -இரண்டு நாள் கழித்து அவதாரம் -ஒரு நாள் முன்பே ஸ்ரீ வைகுண்டம்
கைங்கர்ய ஸாம்ராஜ்யம் இழக்காமல் -கைங்கர்ய ஸ்ரீ -லஷ்மணோ லஷ்மி ஸம்பன்னன் -நற் செல்வன்

ராமானுஜன் = (பல)ராமனின் தம்பியான கண்ணன்

இராமவாதாரத்தில் இரு சேஷாவதாரங்கள்!
* சேஷன் இலக்குவன் = பகவத் கைங்கர்யம்
* சேஷன் பாதுகை = பாகவத கைங்கர்யம்

இந்தப் பாதுகையின் அம்சமாகத் தோன்றிய சடாரி அல்லவோ நம்மாழ்வார்!
எனவே ஆழ்வார், “இராம+அனுஜர் = இராமானுஜர்” என்னும் சொல்லுக்குப் பரிபூர்ணமாகப் பாத்யதைப் பட்டுள்ளார்!

அதான் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அந்தப் பாதுகை பாடியது!
மாறன் எங்கள் சடகோபன் = இளையாழ்வான் என்னும் இராமானுசனே!

வேள்வியினால் பிறந்து –
யாகம் காத்து
சேர்த்தியில் ஸரணாகதி
தீர்த்த கைங்கர்யம் (அயோத்யா காண்டம் 103-5-கௌசல்யை சுமத்தரை இடம் சொல்லும் ஸ்லோகம் -இவர் சாலைக்கிணறு தீர்த்தம் )
ஓங்கார வடிவில் நடந்து
கண் அழகில் ஈடுபட்டு
தாசர்கள்-அடியேன் ராமானுஜ தாசன் -தாஸ்ய நாமம் பெறுகிறோம்
நமக்கா புருஷகாரம் செய்தவர்கள்-யாத்ர ராம ச லஷ்மணா -புருஷகாரமும் உண்டே
தொண்டிலே நோக்கம்
பரந்த விசால திரு உள்ளம்-துர்வாசர் -சாபம் -அவதாரம் முடிந்து திரும்பிய விருத்தாந்தம் –
இவ்வாறு பல ஒற்றுமைகள் இளைய பெருமாளுக்கும் நம் ராமானுஜருக்கு உண்டே

ஸோஹம் –ஸஹ அஹம்
தாஸோஹம் —
ஸதா ஸோஹம்
தாஸ தாஸோஹம் -இப்பொழுது தான் முழுமையான சாந்தி கிடைக்கும்

ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரனான இராமனைப் பெருமாள் என்று அழைப்பது ஸம்பிரதாயம். அவன் தம்பியான லக்ஷ்மணனை இளைய பெருமாள் என்பர். நம், ராமநுஜரான லக்ஷ்மணமுனியை இளையாழ்வான் என்று அழைப்பர். இவ்விருவருக்கும் பல வகைகளில் ஒற்றுமை உண்டு. இங்கே சிலவற்றை மட்டும் கூறி, இவ்விருவரின் ஸாத்ருச்யத்தைக் காட்டுகிறோம். இருவருக்கும் ராமாநுஜன் என்ற பெயர் பொருத்தம் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

இலக்குவன் ஆதிசேஷனுடைய அவதாரம் என்பது பல பிரமாணங்களினால் பிரசித்தமானது. ‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்’ என்ற பாசுரப்படி, பாதுகை என்பது ஆதிசேஷனுடைய திருவவதாரம். ‘நிவாஸசய்யாஸநபாதுகா’ என்று ஆளவந்தார் கூறினார். லக்ஷ்மணனும் பாதுகையும் ஒருவரே என்பதும், பாதுகாஸஹஸ்ரத்திலுள்ள ‘பரதசிரஸி லக்நாம் பாதுகே … ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத:’ என்ற ச்லோகத்தால் ஸுவ்யக்தமாகிறது: ‘சேஷபூத: லக்ஷ்மண: என்றதனாலும், ‘ஸ்வதநுமபி’ என்றதனாலும் ஆதிசேஷனே லக்ஷ்மணனாக, அவதரித்தான் என்றும், பாதுகையும் லக்ஷ்மணனும் ஒன்றே என்றும் தெளிவாக ஏற்படுகின்றன அல்லவா? எனவே, லக்ஷ்மணன் ஆதிசேஷ அவதாரம். இது போலவே இளையாழ்வானான ராமாநுஜரும் ஆதிசேஷனின் அவதாரம்.

ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிய திவ்யஸூரி ஸ்தோத்திரத்தில், ‘ராமாநுஜன் சேஷாவதாரம்’ என்று ஸ்பஷ்டமாகக் காட்டப்படுகிறது. அதில் உள்ள ச்லோகம் – மேஷார்த்ராஸம்பவம் விஷ்ணோர் தர்சநஸ்தாபநோத்ஸுகம் | – துண்டீரமண்டலே சேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே || என்பது.

ஸ்ரீராமாநுஜருக்கு ஸாக்ஷாத் சிஷ்யரான வடுகநம்பி என்று சொல்லப்பெறும் ஆந்த்ரபூர்ணரும் இதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் – 

வேதாந்தஸித்தாந்தஸமர்த்தநாய, பாஹ்யாந்தரப்ராந்தமதாபநுத்யை |
சேஷாம்சக: கேசவயஜ்வதேவ்யாம் தேஜோநிதி: கஸ்சிததாவிராஸீத் || என்று
சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை: |
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||

என்றும் இவரைப் புகழ்ந்திருக்கின்றனர். வேங்கடாத்ரி என்ற மகாகவி தமது விச்வகுணாதர்ச சம்பூவில் இவரைச் சேஷனுடைய அவதாரம் என்றே பணிக்கிறார். 

ராமாநுஜாய குரவே நரவேஷபாஜே, சேஷாய தூதகலயே கலயே ப்ரணாமாந் |
யோ மாத்ருசாநபி க்ருசாந் பரிபாதுகாம:, பூமாவவாதரத் உதஞ்சித போத பூமா || என்று,

இப்படி பல ஆசார்யர்கள் இந்த இளையாழ்வானை சேஷாவதாரம் என்றே ஒருமுகமாக சொல்லுகின்றனர். வேதாந்தாச்சார்யார் மாத்திரம் இவரை சேஷனுடைய அவதாரம் என்று கூறவில்லை.

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஸ்ச ததாபர: |
பலபத்ரஸ் து கலெள கஸ்சித் பவிஷ்யதி ||–என்று பவிஷ்ய புராணத்தில் இவரைச் சேஷாம்சம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை அநுஸரித்ததுதான்.

ப்ரதமோ நந்தரூபஸ்ச த்விதீயோ லக்ஷ்மணஸ் ததா |

த்ருதீயோ பலராமஸ் ச கலெள ராமாநுஜோ முநி: ||–என்ற முன்னோர்களின் பாசுரமும்.

வைகுண்ட லோகத்தில் பரம ஆனந்தத்துடன் பர்யங்கத்தில் பக்தர்களும் பாகவதர்களும் சூழப் பரம த்ருப்தராய் இருக்கும் பகவான் தம் பர்யங்கபூதனான எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்து சேஷன் என்ற பெயர் பெற்ற ஆதிசேஷனைப் பார்த்து, 

ச்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதா த்விஜா: |
அங்காநி ச வி சீர்ணாநி ஹா விருத்தோ வர்த்ததே கலீ: ||

“ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் அழிந்துவிட்டன. அந்தணர்கள் தங்களுடைய நித்ய கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டனர். வேதாங்கங்களும் சிதறிப் போயிந. கலியுகம் மேன்மேலும் விருத்தியடைகிறது. ஆகவே, நீ என் பஞ்சாயுதங்களின் சக்தியை ஏந்திக்கொண்டு உலகத்தில் ராமாநுஜ தரிசனம் என்ற பெயர் விளங்கும்படியாக ராமாநுஜராக அவதரித்து, வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி முதலியவற்றுக்குக் காப்பாக உரையிட்டு ஜனங்களை உஜ்ஜீவிக்கும்படி செய்” என்று உத்தரவிட்டார். அதன்படி இவர் அவதரித்தார்.

மந்நியோகாத் பூதபுர்யாம் அஹீநாமீச்வர : கலெள |
ஸ்ரீராமாநுஜரூபேன ஜநிஷ்யதி ஸதாம் முதே ||

இளையபெருமாள் தசரதனுடைய புத்ரகாமேஷ்டி மூலமாகப் பிறந்தவர். ராமாநுஜரும் புத்ரகாமேஷ்டி மூலமாகவே பிறந்தவர். இவரது பிதா ஆஸூரி கேசவாசார்யருக்கு ஸர்வக்ரது என்ற பிருதமும் உண்டு. இவர் காந்திமதி என்ற பெண்மணியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். வெகு காலமாகியும், சந்ததி இல்லாமலிருந்து, பிறகு பெரியோர்களின் நியமனத்தினால் ப்ருந்தாவன க்ஷேத்திரம் என்று பெயர் பெற்ற திருவல்லிக்கேணியில் புத்ரகாமேஷ்டி செய்து முடித்தார். வேள்வி நிறைவேறியது. அன்றிரவு ஸ்ரீபார்த்தசாரதி, “நானோ என் படுக்கையான ஆதிசேஷனோ உனக்குப் பிள்ளையாகப் பிறந்து வேத வேதாந்தங்களை ரக்ஷிக்க வருகிறோம்” என்று ஸ்வப்னத்தில் சொன்னார் எனற வரலாற்றையும் கண்டுகொள்ள வேண்டும். ஆகவே இருவரும் புத்ரகாமேஷ்டியின் மூலமாகப் பிறந்தவர்கள்.

இளையபெருமாள் விசாலமான மனத்தைப் பெற்றவர் என்பது ராமாயணப் பிரசித்தம். ‘என் ஒருவனுக்கு மரணம் வந்தாலும் பாதகம் இல்லை; வம்சத்துக்கே விநாசம் ஏற்படக்கூடாது’ என்ற பரந்த மனத்துடன் துர்வாஸர் என்ற மகரிஷியிடம் அவர் நடந்துகொண்டார் என்பது தெளிவானது.

இளையாழ்வானும், “பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு-பாதகாத்| ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம் பதம் ||” என்று விசாலமான மனத்துடன் மந்திரார்த்தங்களை ஆசார்ய நியமனத்தை உல்லங்கனம் செய்து உபதேசித்தார் என்பது பிரசித்தமானது.

பகவானான ஸ்ரீராமனுடைய திருவடியை அடைவிப்பதற்கு லக்ஷ்மணன் எப்போதும் ராமனை விட்டுப் பிரியாமலே இருந்தார். ‘யத்ர ராம’ ஸலக்ஷ்மண:’ என்றார் வால்மீகி. விபீஷணன் இலங்கையைவிட்டு ராமனிடம் சரணாகதி செய்யச் சமுத்திரத்தின் தென்கரையை அடைந்தான். ‘இலக்குவனோடு கூடிய ராமன் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்’ என்றார் வால்மீகி. இதன் கருத்து – ராமனை அடைவதற்கு லக்ஷ்மணனுடைய உதவி வேண்டும் என்பது. ‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய’ என்று மற்றோரிடத்தில் கூறினார்.

இளையாழ்வானும் பகவானுடைய திருவடியை நம்மை அடையும்படி செய்கிறார். ‘உலகோர்கள் எல்லாம் அண்ணல் ராமாநுசன் வந்த தோன்றிய அப்பொழுதே .. நாரணற்கு ஆயினரே’ என்பது நோக்கத் தக்கது. ‘இவை என்றனுக்கு அன்று அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து’ என்பதையும் நோக்கவேண்டும்,

த்வயமந்திரத்தின் அர்த்தமான சரணாகதியை இளையபெருமாள் இராமன் காட்டுக்குச் சென்றபோது, ‘ஸ ப்ராதுஸ் சரணெ காடம் நிபீட்ய ரகுநந்தந: | ஸீதாமுவாச அதியஸா: ராகவம் ச மஹாவ்ரதம் || பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரி ஸாநுஷு ரமஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே || என்ற பாசுரங்களை அநுஷ்டித்து விவரித்தார். இளையாழ்வானும் சரணாகதிகத்யம் என்று பெயரிட்டு த்வயார்த்தத்தை உலகுக்குத் தாமே அநுஷ்டித்துக் காட்டினார்.

இளைய பெருமாளை அனுமான் பார்த்து, “இவருக்கு நீர் என்ன ஆவீர்?” என்று கேட்க, “அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யம் உபாகத:. ராமர் என்னைத் தம் தம்பி என்று நினைத்திருப்பார். அவருடைய குணங்களுக்குத் தோற்று நான் தாஸன் என்று நினைத்திருப்பேன்” என்று பதிலளித்தார் இளைய பெருமாள். இதனால் பகவானுக்கும் தமக்கும் உள்ள ஸ்வஸ்வாமி பாவஸம்பந்தம் சேஷசேஷிபாவஸம்பந்தம் காட்டப்பட்டது. பாஷ்யகாரரும், ‘சரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ:’ என்று இந்த ஸம்பந்தத்தை பல இடங்களில் வெளியிட்டார்.

ராமன் காட்டுக்குச் சென்றபோது, காட்டில் முதலில் ராமனும் பிறகு சீதையும் பிறகு லக்ஷ்மணனும் சென்றதாக ‘அக்ரத: ப்ரயயெள’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது. ராமாநுஜரும் காசியாத்திரையினின்று தெளிந்து மீண்டு திரும்பி வந்த போது காஞ்சிக்கருகில் முதலில் வேடனுடைய உருவம் தரித்த வரதனும் பிறகு பெருந்தேவியும் பிறகு ராமாநுஜரும் வந்தார்கள் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

லக்ஷ்மணன் ராமனுடைய திருவடிகளில் கைங்கர்யம் ஒன்றைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை.

ந தேவலோகாக்ரமணம் நாமரத்வம் அஹம் வ்ருணே |
ஐச்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா ||

என்றார். பகவானைப் பெற விரும்புகிறவன் மற்றப் பொருள்களில் வைராக்யமும், பகவானிடத்தில் ஆசையும் பெற்றிருக்கவேண்டும். ராமாநுஜரும் பகவானுடைய திருவடிகளில் உண்டான வியாமோகத்தினால் மற்றப் பொருள்களை த்ருணமாக நினைத்தார். ‘யோ நித்யம்’ என்ற இவருடைய தனியனை இங்கு அநுஸந்திப்பது,

லக்ஷ்மணன் தம் அண்ணனான ராமனுக்குத் தீர்த்தத்தை நதிகளிடமிருந்து எடுத்து வந்து உபசரித்தார். பரதாழ்வான் ராமனைச் சித்திரகூடத்திலிருந்து அழைத்துவர எண்ணி அந்த மலைக்குச் சென்றபோது வஸிஷ்ட முனிவர், கெளஸல்யை முதலிய தேவிகள் அனைவரும் சென்றனர். அங்கே கங்கை நதிக்கரையில் ஸுமித்ரை முதலியானவர்களைப் பார்த்துக் கெளஸல்யை சொல்லும் வார்த்தை –

இத: ஸுமித்ரே புத்ரஸ்தே ஸதா ஜலம் அதந்த்ரித: |
ஸ்வயம் ஹரதி ஸெளமித்ரிர் மம புத்ரஸ்ய காரணாத் ||
ஜகந்யமபி தே புத்ர க்ருதவாந் ந து கர்ஹித: |
ப்ராதுர் யதர்த்தஸஹிதம் ஸர்வம் தத் விஹிதம் குண: (அயோத்யா காண்டம் – 103)

என்பவை அங்குள்ள ச்லோகங்கள். “எப்பொழுதும் சோம்பலில்லாமல் இந்தக் கங்காநதியிலிருந்து என் குமாரனான ஸ்ரீராமனுக்கு உன் புதல்வன் தானாகவே தீர்த்தத்தைக் கொணர்ந்து உபசரிக்கிறான். இப்படித் தீர்த்தத்தைக் கொண்டுவரும் இந்தக் கைங்கர்யம் தோஷத்தை உண்டுபண்ணாது. இது பரிகாசத்திற்கு உரியதாகவும் ஆகாது. உலகத்தில் தண்ணீர் கிடைப்பது துர்லபமாக இருக்கும் காலத்தில் ஒரு குடம் தண்ணீர் கொணர்ந்தால் இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்று பிரபுக்களின் வார்த்தையைக் கேட்டுப் பண ஆசையால் ஒருவன் அம்மாதிரி செய்தால் அது பரிகசிப்பதற்கு உரியதாகும். ஸர்வவித பந்துவாய் ஸர்வஸ்வாமியாக உள்ள எம்பெருமானான ராமனுக்காகக் கொண்டு வரும் கைங்கர்யமானபடியால் இது எல்லோராலும் போற்றக் கூடியதாகவே முடியும்.” என்கிறாள்.

ஆளவந்தார் பல சிஷ்யர்களுக்குப் பகவத்விஷய காலக்ஷேபம் ஸாதித்து வந்தாராம். அப்பொழுது, ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு’ என்ற திருவேங்கடமுடையான் விஷயமான பாசுரம் நடந்து வந்ததாம். ‘நீர் கொண்டு என்று தீர்த்த கைங்கர்யம் சொல்லப்பட்டிருக்கிறபடியால் திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்வதில் நமமாழ்வாருக்குப் பேரவா இருந்திருக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்து அவரது மனோரதத்தை ஆளவந்தார் நிறைவேற்ற எண்ணினார். காலக்ஷேபம் முடிந்ததும், “திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யத்தை இந்தக் கோஷ்டியில் யார் செய்யப் போகிறார்கள்?” என்று வினவினார். பெரிய திருமலை நம்பி, “அடியேன் சித்தமாக இருக்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றுத் திருமலைக்குச் சென்று அந்தக் கைங்கர்யத்தை அழகுடன் செய்து வந்தாராம்.

தினந்தோறும் பாபவிநாசம் என்ற நதியிலிருந்து ஒரு கலசத்தில் இவர் தீர்த்தத்தை எடுத்து வந்து திருவேங்கடமுடையானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் கலசத்தில் தீர்த்தத்தை எடுத்துச் சென்றார். அப்போது பகவான் வில்லி வேஷம் பூண்டு, அவருக்குத் தெரியாமல் கலசத்தில் துவாரத்தை உண்டுபண்ணி நீரைக் கீழே பெருகும்படி செய்துவிட்டார். கொஞ்ச தூரம் சென்றதும், “தாதா, எனக்கு ரொம்பவும் தாகமாய் உள்ளது. கொஞ்சம் நீர் கொடு” என்றார். அப்போது கலசத்தில் நீரே இல்லை. பெரிய திருமலை நம்பி திக்பிரமம் அடைந்தார். “வெகு தூரத்திலிருந்து தீர்த்தத்தை கொண்டுவந்தேன். திருமலைக்குச் சமீபத்தில் வந்து விட்டேன். கலசத்திலோ நீர் இல்லை. மறுபடி பாபவிநாசம் சென்று கொண்டு வரவும் சக்தி இல்லை. என்ன செய்வது?” என்று கலங்கினார். அப்போது வில்லிவேஷம் பூண்ட பகவான், “பெரியவரே! கவலைப்பட வேண்டாம், நான் பாணத்தைப் பிரயோகம் செய்து இங்கிருந்தே நீரை வரவழைக்கிறேன். இதிலிருந்து தீர்த்தத்தை எடுத்துச் செல்லும்” என்று சொல்லி, ஓர் அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தார். திரிவிக்ரமாவதார காலத்தில் கங்கை எப்படி வேகமாகக் கிளம்பிற்றோ அது போல ஆகாசத்திலிருந்து கங்கை விழ ஆரம்பித்தது. இதற்குத்தான் ‘ஆகாச கங்கை’ என்று பெயர்.

நம்பி மிகவும் விஸ்மயப்பட்டு, இதிலிருந்து நீரைக் கொண்டு சென்றார். அது முதல் உண்மையை உணர்ந்து, பகவானுக்கு இங்கிருந்து தீர்த்தத்தைக்கொண்டு கொடுப்பதுதான் மிகவும் பிரீதியை உண்டுபண்ணும் என்பதை உணர்ந்து, தினமும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ‘தாதேத்யாமந்த்ர்ய கஸ்சித் வநபுவி த்ருஷிதஸ் தோயவிந்தூந் யயாசே’ என்றார் வேங்கடாத்வரி கவி. ஆகையால், பகவானுக்குச் செய்யும் இந்தக் கைங்கர்யம் மிகவும் போற்றத்தக்கது.

இளையாழ்வானும் சாலைக்கிணற்றிலிருந்து, பகவானுடைய அபிப்பிராயத்தை உணர்ந்து, தினமும் தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் என்பது உலகப் பிரசித்தம்.
இப்படிப் பல வகைகளில் இரண்டு ராமாநுஜர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

இதை ஸ்ரீதேசிகன் “தத்தம் யேன தயாஸுதாம்பு நிதினர்” என்கிற ஸலோகத்தால் காட்டினார். அமிர்தமாகிற கடல் தயை என்னும் அமிர்தம் இதற்கு கடல் ஸ்ரீபாஷ்யகாரர். தேவப் பெருமாளும் கருணைக் கடல். இவர் ஸமர்ப்பித்த அம்ருத ஜலத்தை பருகினார். புஷ்டியை அடைந்தார். கருமுகில் கடல் நீரை பருகும் மலை மீது அமரும். அதிக மழையைக் கொடுக்கும். அது பகவானாகிற கருமுகிலும் அமுத நீரைப் பருகி புஷ்டியை அடைந்து நமது விருப்பத்துக்கும் அதிகமாக நமக்கு பல பலரை பொழிகிறான் என்றார்.

தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத–ஸ்ரீ யதிராஜ ஸப்ததி 9-

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

———————-

”ஸ்ரீ ராமானுஜர் யாமுனாச்சார்யாருக்கு கொடுத்த வாக்கை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பித்தார்.
அதற்காக அவர் நீண்ட பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. வடக்கே காஷ்மீரம் வரை நடந்தே சென்றார்
ஸ்ரீ ராமானுஜர் எண்ணற்ற தடங்கல்களை இன்னல்களை எல்லாம் சந்தித்து தான் நமக்காக எத்தனை எத்தனை
செல்வங்களை அளித்திருக்கிறார் என்று அறியும்போது நமது கண்களில் நன்றிக் கண்ணீர் ஆறாக வடிகிறது.”
”வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது. தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினார்க்கு அந்
நாழற்றது, நம்மிராமாநுசன் தந்த ஞானத்திலே.-(இராமானுசன் தந்த ஞானத்தின் பயன்)
‘மஹா ஞானியான யதிராஜர் வியாசரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ஆளவந்தார் விரும்பிய படி
விசிஷ்டாத்வைத பரமாக ஶ்ரீபாஷ்யம் இயற்றும் பணியில் முனைந்தார்.
‘ தரிசனத்திற்கு (கோட்பாடு, சித்தாந்தம் ) ப்ரதானமான ஆசார்யராக ஒருவரைக் கொள்ள வேண்டும் என்றால்
ப்ரஸ்தானத்ரயம் என்று சொல்லப் படுகிற மூன்று க்ரந்தங்களுக்கு அவர்கள் ஶ்ரீபாஷ்யம் ( விளக்கம்) அளிக்க வேண்டும் .
முதலில் வேதத்தின் ப்ரஹ்ம பாகமாகிய உபநிஷத்துக்களுக்கு சரியான முறையில் விளக்கங்கள் சொல்ல வேண்டும்.
இரண்டாவதாக , அந்த உபநிஷத்துக்களுக்கு வ்யாக்யானங்கள் போல அமைந்ததான
ப்ரஹ்ம சூத்திரங்களுக்கு விளக்கங்கள் அருளிச் செய்ய வேணும்.
மூன்றாவதாக உபநிஷத்தின் சாரமாக அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் அருளிய பகவத்கீதைக்கு
ஒரு வ்யாக்யானம் (தெளிவான உரை) அருள வேண்டும் .
இவ்வாறு உபநிஷத்துக்கள் , ப்ரஹ்ம சூத்திரம், கீதை இவை மூன்றுக்கும் (பிரஸ்தான த்ரயம்) வ்யாக்யானம் (உரை) எழுதியதால்
தான் ஸ்ரீ ராமானுஜர் தர்சன ஸ்தாபகர் என்றும் ஶ்ரீபாஷ்யகாரர் என்றும் போற்றப்பட்டார்.
இப்படி ஶ்ரீபாஷ்யம் எழுதுவதற்காக யதிராஜர் முதலில் நம்மாழ்வாரின் பாசுரங்களின் ஆழமான கருத்துகளை வெகுவாக ஆராய்ந்தார்.
ஏற்கனவே பல பெரியோர்கள் விரிவுரைகளை எழுதியிருந்தார்கள்.
உதாரணமாக
1. போதாயந பாஷ்யம் என்ற ஒரு வ்யாக்யானத்தை வியாசபகவான் சீடர்களில் ஒருவரும் மகரிஷியுமான போதாயநர் எழுதி இருந்தார். .
2. திரமிட பாஷ்யம் என்று ஒரு உரையை திரமிடாசார்யர் எழுதிஇருந்தார்..
3. ப்ரமானந்தி என்கிற ஒரு ஞானி ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ‘வார்த்திகா’ என்ற உரை எழுதியிருக்கிறார்.
4. குஹா தேவாசாரியர் பாஷ்யம் என்றும் ஒன்று இருந்தது.
5. ஆசார்ய பாருசி பாஷ்யம் என்று மற்றொன்று.
6. பகவத் ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்பவரின் பாஷ்யம் ப்ரம்மசூத்ர பாஷ்யங்களில் மிகவும் பழமையானது.
7. நாதமுனிகள் ஒரு சில அருமையான நூல்களை இயற்றி இருந்தார். அவை விசிஷ்டாத்வைத தத்துவத்தின் யோகரஹஸ்யம், ந்யாயதத்வம் ஆகும். .
8. யாமுனாசார்யர் (ஆளவந்தார்) எழுதிய ஸம்வித் ஸித்தி, ஈசுவரஸித்தி, ஆத்மஸித்தி ஆகமப்ரமாண்யம் முதலிய நூல்களும் பிரசித்தமானவை.
ஞாநியான யதிராஜர் “போதாயநருடைய ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி க்ரந்தத்தின் கருத்துகளை ஆராயாமல்
உபநிஷத்துக்களுக்குப் பொருளுரைப்பது நிறைவு பெறாது” என்று நிச்சயித்து,
கூரத்தாழ்வானோடு, காஷ்மீரத்திலுள்ள சாரதா பீடத்துக்குச் சென்றார்.
அங்குள்ள வித்துவான்கள் அவரை ஆதரிப்பார்களா? எதிர்த்தார்கள். ஸ்ரீ ராமானுஜர்
சாரதா பீடத்தில் உள்ள வித்வான்கள் அனைவரையும் வாதத்தினால் ஜயித்தார்.
சாரதா பீடத்தில் அருள் புரியும் சரஸ்வதி தேவி ஶ்ரீராமாநுஜரின் வித்வத்தில் மகிழ்ந்து அவரை பரிக்ஷிக்க
‘கப்யாஸ ச்ருதியின் பொருளைச் சொல்ல முடியுமா ’ என்கிறாள்
யதிராஜர் தேவியை வணங்கி ‘கம்’ எனப்படும் ஜலத்தை பானம் பண்ணுவதால் ‘கபி’ என்று சூர்யனுக்கு பெயர்.
அவனாலே மலர்விக்கப்படும் தாமரை ‘கப்யாஸம்’ என்று பொருள் படுகிறது.
‘அந்தத் தாமரையை யொத்த கண்கள் விஷ்ணுவுக்கு உள்ளன’ என்பதைத் தான்
‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரிகம் ஏவ மஷினி (சாந் 1-6-6) என்னும் வேதவாக்கியம் உணர்த்துகிறது” என்று கூறினார்
சாரதாதேவியும் மிகவும் மகிழ்ந்து போதாயந வ்ருத்தியை ஶ்ரீராமாநுஜருக்கு அளிக்க அதை ப்ரீதியோடு பெற்றுக் கொண்டார்.
சில நாட்களில் திருவரங்கம் நோக்கிக் கிளம்பினார் .
இதற்கிடையில் சாரதா பீடத்தில் உள்ள, வித்வான்கள் அங்குள்ள ஸ்ரீ கோசங்களை ( ஒலைகள்) தேடும் போது ,
போதாயன வ்ருத்தி க்ரந்தம் அங்கு காணாமல் போனதைக் கண்டு, ராமானுஜர் அதை தேடிவந்ததால்
அவரே தான் அதை எடுத்துச் சென்றி ருக்க வேண்டும் என்று தீர்மானித்து ,
யதிராஜரிடமிருந்து அதை கைப்பற்றி மீண்டும் சாரதா பீடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவ்வளவு பிரயாசைப் பட்டு அடைந்த போதாயன பாஷ்யம் கைவிட்டு சென்றதே என்று மிகவும் வருந்திய
ஶ்ரீராமாநுஜரைக் கூரத் தாழ்வான் கவனித்து
“யதிராஜரே! குருதேவா, துளியும் நீங்கள் வருந்த வேண்டாம். கடந்த சில நாளில் இரவு நேரங்களில்
அடியேன் அந்த போதாயன பாஷ்ய க்ரந்தம் முழுவதையும் படித்து மனதில் முழுவதுமாக பதிவு செயது கொண்டு விட்டேன்.
தேவரீருடைய கடாக்ஷத்தால் இப்போதே வேண்டுமானாலும் அதில் உள்ளதனைத்தும் சொல்லமுடியும்” என்றார் கூரத்தாழ்வான்.
ஆழ்வானின் அற்புத ஆற்றலை நினைத்து மகிழ்ந்து பாராட்டிய ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் திரும்பியதும்
ஶ்ரீபாஷ்யம் எழுதும் பணி துவங்கினார்.
‘கூரேசரே! நான் ஶ்ரீபாஷ்ய வாக்யத்தைச் சொல்ல்லிக்கொண்டே வருகிறேன்,
உம்முடைய திருவுள்ளத்திற்கு அது சரி எனப்பட்டால் எழுதும். எங்கேனும் பொருத்தமில்லை என்று தோன்றினால்
சொல்வதை எழுதாமல் நிறுத்தி மௌனமாயிரும்’ என்கிறார்.
‘அப்படியே சுவாமி’ என்று கூரேசரும் ஒப்புக் கொண்டு ஸ்ரீ பாஷ்யத்தை எம்பெருமானார் சொல்லச் சொல்ல விரைவாக எழுதுகிறார்.
ஓரிடத்தில் உடையவர் சொல்லியும் ஆழ்வான் எழுதாமல் நின்று விட்டார்.
இதைக் கவனித்த ஶ்ரீராமாநுஜர் சினமடைந்து “கூரேசா! நான் சொல்வதை எழுத மனம் இல்லை என்றால்
மேற்கொண்டு நீரே ஸ்ரீபாஷ்யம் எழுதும்” என்று சொல்லி எழுந்து சென்றார்.
அங்கிருந்த சிஷ்யர்கள் பலருக்கும் வியப்பு. ஶ்ரீராமாநுஜர்கட்டளையிட்டபடி தானே கூரேசர் எழுதுவதை நிறுத்தினார்.
என்ன காரணம்? .ஆழ்வான் அமைதியாக இருந்தார் .
சிறிது நேரம் கழித்து வந்த ஶ்ரீராமாநுஜர் திரும்பி வந்தார்.
”கூரேசா என் வாக்கியத்தை திருத்திக் கூறுகிறேன் இப்போது எழுது” என்றார் .
ஆழ்வானும் மேற்கொண்டு தடையின்றி எழுதிச் சென்றார் .
‘ஜீவாத்ம ஸ்வரூபத்தைப் பற்றி விளக்கும்போது ” பகவத் சேஷ பூத: ” அதாவது ஜீவன் பகவானது அடியவன் என்ற
தாஸ்ய ஸ்வரூபமே ஜீவாத்மாவிற்கு உள்ள முக்கிய லக்ஷணம்.
ஆனால் ஶ்ரீராமாநுஜர் அவ்விதம் கூறாமல் அந்த அம்சம் குறைவு பட ஜீவன் ஞாத்ருத்வம் (அறிவுடைமை) மட்டும் கொண்டது
என்று சொன்னதால் ஆழ்வான் தயங்கி எழுதுவதை நிறுத்தினார் .
ஶ்ரீராமாநுஜர் ஆழ்வானை கோபித்த போது ஆழ்வான் வருத்தப்படவில்லை
” உடைமை , உடையவன் இட்ட வழக்காயிருக்கும் , இதில் அடியேனுக்கு அந்வயம் இல்லை ” என்றார்.
அதாவது தன் பாரதந்திரியத்தை பிறர் இட்ட வழக்காயிருக்கும் தன்மையை வெளியிட்டார்.
வேதார்த்த நிரூபணமாக ஶ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்து அதனை சாரதா பீடத்துக்கு அனுப்பி உலகோர் அறிய
அதை வெளிப்படுத்த வேண்டும் என்று யதிராஜர் திருவுள்ளங் கொண்டார்.
கிடாம்பியாச்சான், கிடாம்பிப் பெருமாள் முதலான சிஷ்யர்களிடம் காஷ்மீரத்துக்கு ஸ்ரீகோசத்தை கொடுத்தனுப்ப,
அவர்களும் அப்படியே கொண்டு சென்று சாரதா பீடத்தை அடைந்தனர் .
ஸரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அந்த ஸ்ரீ கோசத்தை பாராட்டி உடையவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ என்று திருநாமம் சாற்றி
ஹயக்ரீவப் பெருமாளையும் ஆராதிக்கக் கொடுத்து மகிழ்ந்தாள் என்று வரலாறு சொல்கிறது.
ஶ்ரீபாஷ்யகாரர் என்ற திருநாமமும் ஶ்ரீராமாநுஜரை அடைந்து சிறப்பித்தது.
”ராமானுஜர் ஸ்ரீயாமுநாசார்யரின் முதல் மனக்குறையைப் போக்கினார் என்று அறியும்போது
அவரது குருபக்தி சேவை புல்லரிக்க வைக்கிறது
பிறகு ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் முன்பே ஶ்ரீபாஷ்யத்தை உபந்யாசம் செய்தார் .
பெரிய பெருமாளும் மிக உகந்து, அனைத்து கொத்து பரிவாரங்களையும் அழைத்து எம்பெருமானார்க்கு சதகலசாபிஷேகம் செய்து
ப்ரஹ்ம ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச ்செல்ல ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் .
யதிராஜரின் சிஷ்யர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த வைபவத்தை சிறப்பாக செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
காவேரி கொள்ளிடத்திலுள்ள அனைத்து படித்துறைகளிலும் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ,
அழகிய திவ்ய சிம்மாசனத்திலே யதிராஜரை எழுந்தருளச் செய்து ,
” யதிராஜரே நீர் இந்நின்ற திருமஞ்சனம் செய்வதே” என்று திருமஞ்சன ஸ்லோகங்கள் , ஶ்ரீபுருஷஸுக்தம் சொல்லி
விசேஷமாக அலங்காரத் திருமஞ்சனம் பண்ணி விசேஷ அலங்காரங்கள் பண்ணி ப்ரஹ்ம ரதத்திலே எழுந்தருளச் செய்து
ஶ்ரீபாதம் தாங்கிகள் சுமந்து சென்றனர் .
ஆயிரக்கணக்கான சிஷ்யர்களோடு அனைத்து வாத்தியங்கள் ஒலிக்க திருவீதி வலம் வந்தார்.
மாவிலைத் தோரணங்கள் கட்டி , வீதிகள் தோறும் பெரிய கோலங்கள் இழைத்து விளக்குகள் ஏற்றி மஞ்சநீர் சுழற்றி
” வாய்த்த பெரும்பூதூரில் மன்னவன் வந்தான் ;ஏத்தும் இளையாழ்வார் என்னும் எம்பிரான் வந்தான் ;
எதிராச முனிவன் வந்தான் ; ஶ்ரீபாஷ்யகாரர் என்னும் ஶ்ரீமான் வந்தான்”
”.போற்றி போற்றி” ”வாழி வாழி” என்றும் மங்களாசாசனம் பண்ணி
யதிராஜரை மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்கள்.
கல்யாண வைபவம் போல எல்லோரும் கூடியிருந்து கிடாம்பி ஆச்சான் பரிமார அனைவரும்
இன்சுவையோடு கூடிய ப்ரசாதத்தை அமுது செய்து மகிழ்ந்திருந்தனர்.
—————
ஸபரி திருக்கச்சி நம்பியாக அவதாரம் என்பர்
கஜேந்த்ரனுக்கும் கஜேந்திர தாசருக்கும் பல ஒற்றுமைகள்
வரதன் இடம் ப்ராவண்யம்-லீலை -சக்கரைப் பொங்கல் ஊட்டி விட்டு -வீர ராகவன் தந்தையும் நம்பாமல்-கோயிலுக்கு உள்ளே வர விடாமல் -திருக்கச்சி நம்பியைக் கூட்டி வந்தால் தான் அமுது செய்வேன் -100 தடா உண்டு வியர்வை உடன் இருக்க -உலகு உண்ட பெரு வாயன் -காட்டி அருளி -இவரால் உண்ண முடியாது என்று காட்டி அருளி
வரதனே பேசி கைங்கர்யம் செய்ய அழைத்து -வீச சொல்லி -நிரந்தரமாக இன்றும் வீசிக் கொண்டே இருக்கிறார்
முதலை யானையின் காலைப் பிடித்து முதலில் மோக்ஷம்
திருக்கச்சி நம்பி தாசர் திருவடிகளை பற்றி முதலில் பேறு

அருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்…….!!!

இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

1. “அஹமேவ பரம் தத்துவம்”
நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.

2. “தர்சநம் பேத ஏவச”
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

5. “தேஹாவஸாகே முக்கிஸ் யாத்”
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

6. “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து ராமானுஜருக்கு விளக்கினார் திருக்கச்சி நம்பிகள்.

கஜேந்திரனின் ஆறு வார்த்தைகள்
நமோ நமஸ்தே
அகில காரணாயா
நிஷ் காரணாயா
அத்புத காரணாயா
கேசவர் kes
ஸர்வ ஆகம மஹார்ணவம் ஸர்வ ஆகமங்கள் சென்று சேர்க்கும் கடல்
அபவர்க்கா -மோக்ஷம் அளிப்பவன்
பராயணாயா –

முனிவர் -மனன சீலர்
முனிதல் கோபித்தல்

முனியே நான்முகனே முக்கண் அப்பா -அவனும் முனிவன்
நம்மை உஜ்ஜீவிக்கும் நமது பிரதிபந்தங்களைப் போக்கவும் கோபிக்கவும் வேண்டுமே
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து சரண் அடைகிறோம்

நம்மாழ்வார் நின் கண் வேட்க்கை எழுவிப்பன் –ஊரும் நாடும் உலகம் தன்னைப்போல் ஆக்க மனனம்
சட வாயுவை கோபித்து
நாதமுனி யமுனா முனி

ராமானுஜரும் முனிவர் -திவாகர முனி -அப்போது ஒரு சிந்தை செய்து

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

சவும்ய மணவாள மா முனி -கோபிக்காத முனி -நம்மை உஜ்ஜீவித்து கால ஷேபம் நன்றாக செய்யவே மனனம் ராமானுஜ பிரவணர் என்பதால் –

இரு பிறவிகள்-திருக்கோளூர் பெண் பிள்ளை போற்றும் இரண்டு கஜேந்திரன் திருவடிகளே சரணம்
கைங்கர்யம் ஸ்ரீ யால் திகழ்பவர்கள்-ஸ்ரீ வரதர் பாராட்டும் இரண்டு கஜேந்திரர் தார்கள் புகழ் வாழியே
——————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான சாரங்கள் —

April 23, 2022

ஸ்ரீ ஆராவமுதன் இடம் சரணாகதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் போல் இவரும்
சம்சார துக்கம் போக்கவே
ஆறு அங்கம் கூற அவதரித்தவர் அன்றோ –

20- குணங்களை காட்டி சரண்

1-ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி
2-விரோதி நிரஸனம்
3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை
4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை
5-ஸர்வ பல பிரதத்வம்
6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை
7-சர்வ ரக்ஷகத்வம்
8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை
9-ஆயுதங்கள் தரித்து
10-புருஷகாரம்
11-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –
12-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
13-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-
14-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
15-ஆராதனைக்கு எளியவன்
16-சரீர சரீரீ பாவம் –
17-பிரதிபந்தகம் போக்கி
18-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
19–சர்வ அந்தர்யாமி
மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –
20-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்
ஸ்ரீ நம்மாழ்வார் போல்

————-

ஸ்ரீ திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

————–

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக்கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –

நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனை கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தை கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை –

அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு
உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே
இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் நடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் நடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்

நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து
நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் –
நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய்
மிகவும் ஆற்றாமையாலே
எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை 
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை 
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை 
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை 
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை 
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

1- ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

———–

2-விரோதி நிரஸனம்

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————-

3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

—————-

4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

————-

5-ஸர்வ பல பிரதத்வம்

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோகவிதாம் நேதா -என்கிறபடியே –

வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல்வழி போகக் கடவதாய் இருக்கும்
ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

——————–

6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

—————

7-சர்வ ரக்ஷகத்வம்

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்

————

8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

———–

9-ஆயுதங்கள் தரித்து

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

——————

சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

10-சர்வ பல பிரதத்வம்

——————

11-புருஷகாரம்

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –
எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————

12-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

—————-

13-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

——————-

14-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

————-

15-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————–

16-ஆராதனைக்கு எளியவன்
17-சரீர சரீரீ பாவம் –
18-பிரதிபந்தகம் போக்கி
19-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
20-ஸ்ரீ யபதித்தவம்
21-சர்வ அந்தர்யாமி
22- மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்
சுக துக்கங்களுக்கு நியாமகனாய்
காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்
சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

———–

23-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –

இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

—————

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

January 5, 2022

ஸ்ரீ யதிராஜருக்கும் யதுகுல திலகமான ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள
ஸாம்யத்தை சாடுக்தியான ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய –ஸ்ரீ யதிராஜ சப்ததி—13-ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –
கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால்
யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் -பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-
பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-

ஸ்ரீ பார்த்த சாரதியே தானே இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ
சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூ க்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

———-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்

1-ஸூர்யத்வாத் –
2-ஸூசிதத்வாத் –
3-அபஹ்ருதி கரணாத் –
4-கோகுல உத்தாரகத்வாத்
5-பத்தத் வாத்
6-ஸாஸ்த்ர தத்வாத்
7-ஜன ஸஹ யோ கச்ச
8-லஷ்மீ பதித் வாத் –
9-நீலத் வாத்
10-நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்
11-அந்த தச்சா வதாராத்
12-ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்
கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஸூர்யத்வாத் –

தத் அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

கலயாமி கலி த்வம்ஸம் கவிம் லோக திவாகரம் –5-2-1-

——-

ஸூசிதத்வாத் –

அவதாரம் அசரீரி வாக்கு –

கலியும் கெடும் கண்டு கொண்மின்

கண்ணன் கம்ச வதம்
கலியன் கலி புருஷ வதம்

———

அபஹ்ருதி கரணாத் -பட்டர் மங்களா ஸாஸனம் கலியன் திருட்டுக்கு
மணி கொடுத்த பெருமாள் ஸூசிக்கும்படி காஞ்சியில் திருமங்கை சேவை மணி கையில்

வெண்ணெய் பெண்களை களவு கண்ணன்
கோயில் பிரகார மண்டபாதி நிர்மாண அர்த்தத்துக்காக கலியன் பல பல களவுகள் ப்ரஸித்தம்

வீரனாக முன்
விநயனாக பின்
இன்றும் வேடுபரி உத்சவத்தில் சேவிக்கிறோமே

————

கோகுல உத்தாரகத்வாத்

ஆயர்பாடிக்கு அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கு

இவரும்
ந்ருபசு
வ்ருத்தயா பசுர் நரவபு
ஞாநேந ஹீந பசுபிஸ் ஸமாந
நம்மை உத்தரிக்கவே இவரது அவதாரம்

———

பத்தத் வாத்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான்
இவரும் அரசனால் சிறையில் வைக்கப்பட்டார்

———-

ஸாஸ்த்ர தத்வாத்

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –
கீதாச்சார்யன்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லமுதம்
தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம்
பர சமயப் பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம்

————-

ஜன ஸஹ யோ கச்ச

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
வாரணம் ஆயிரம் சூழ வலம்

நீர் மேல் நடப்பான்
நிழலில் ஒதுங்குவான்
தாளூதுவான்
தோலா வழக்கன்

———

லஷ்மீ பதித் வாத் –

ஸுமங்களா -குமுதவல்லி நாச்சியார் இயல் பெயர்
மாப்பிள்ளை மிடுக்குடன் அண்ணன் கோயிலுக்கு எழுந்து அருளுவார்
நீசனை–நீலனை சந்தித்து பாகவத ஸ்ரேஷ்டர் ஆக்குவாய் -சாபம்
குமுத வல்லி வஸ்திரம் தலைப்பாகையாக சூட்டிக்கொண்டு மஞ்சக்குழி உத்ஸவம் திருமஞ்சனம் -சென்னிக்கு அணி

ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பதி என்றும் இவரைக் கொள்ளலாம்
மற்று எல்லாம் பேச்சிலும் உன் அடியார்க்கு அடிமை என்றார் அன்றோ –

———-

நீலத் வாத்

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட

தண் தமிழ் செய்த நீலன் தனக்கு

——–

நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்

கலியனும் இது போல் பல அநீதி சேஷ்டிதங்கள் ப்ரஸித்தம்

விமோஹநே வல்லவ கேஹி நீநாம் ந ப்ரஹ்ம சர்யம் பிபதே ததீயம் ஸம்பத்ஸ்யதே
பாலக ஜீவநம் தத் ஸத்யேன யேநைவ ஸதாம் சமஷம் –யாதவா ப்யுதம் -4-64-

யதி மே ப்ரஹ்ம சர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயிதிஷ்டதி அவ்யா ஹதம் மமைஸ்வர்யம் தேந ஜீவது பாகை

ப்ரஹ்ம சர்யம் ஸத்யம் வழுவாதனானால் உயிர் பெற்று எழுக என்றதும் கரிக்கட்டை போல் இருந்த பரிஷீத் எழுந்தான்

ஜித பாஹ்ய ஜிநாதி மணி ப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரெங்கபுரே மணி மண்டபவ பிரகாரணன் விததே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

——–

அந்த தச்சா வதாராத்

கடைக்குட்டி அவதாரங்கள் இரண்டும்
இருவரும் சரம அவதார பூதர் இப்பொழுது –
கல்கி இன்னும் அவதரிக்க வில்லையே

———

ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய

அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
ஒன்றலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி

———–

கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே ஸாம்யம் காட்டப் பட்டது

—————-

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத கலியன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருநாங்கூர் 11 கருடசேவை வைபவம்-ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்

December 16, 2021

ஸ்ரீ திருநாங்கூர் 11 கருடசேவை வைபவம் –

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது.
ஆனால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து,
அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணை கொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு
மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.

அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும்,
கண்களாக காயத்திரி மந்திரமும்,
உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும்,
இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும்,
கால்களாக வேதத்தின் சந்தங்களும்,
நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும்,
ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க,
அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.

கருட சேவை உற்சவத்தின் போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத ஸ்வரூபியான
கருட பகவான், நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருந்தாயே!
இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று
சொல்லிப் பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும் எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.

காஸ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன்.
பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு,
கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.
‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர்.
சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும்.
வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.

கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள்.
அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை.
அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று
நிபந்தனை விதித்தாள் கத்ரு. தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து
தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து மீட்டார் கருடன்.

தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறைவைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன்,
பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார்.
கருடன் தனது உடலில் எட்டுப் பாம்புகளை எட்டு இடங்களில் அணிந்துள்ளார். அவையாவன,

1.தலையில் சங்கபாலன்
2.வலக்காதில் பத்மன்
3.இடக்காதில் மகாபத்மன்
4.கழுத்தில் மாலையாகக் கார்க்கோடகன்
5.பூணூலாக வாசுகி
6.அரைஞாண்கயிறாக தட்சகன்
7.வலக்கையில் குளிகன்
8.இடக்கையில் சேஷன்

அதனால் தான் கருடன், ‘அஷ்ட நாக கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார்.
கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார்.
கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார்.
கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம்.
ஏனெனில், நாம் ஒப்பனை செய்து கொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா?
அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா?
இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத ஸ்வரூபியாகவே இருப்பதால்,
கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.
அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடனின் படம் வரைந்த கொடி,
கொடி மரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.
ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானர சேனையும் மயங்கிக் கிடந்த வேளையில்,
வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாக பாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.

இறைவனை நாம் அழைக்கும் போதெல்லாம், அவனை விரைவில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வாகனமாகக் கருடன் திகழ்கிறார்.
கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

கருடன் எத்தனை கருடனடி?
பட்சிராஜன்,
வைனதேயன்,
கருத்மான்,
சுபர்ணன்,
தார்க்ஷ்யன்,
காச்யபி,
சுதாஹரன்,
ககேச்வரன்,
நாகாந்தகன்,
விஷ்ணுரதன்,
புள்ளரசன்,
புள்ளரையன்,
மங்களாலயன்,
பெரிய திருவடி,
கலுழன் எனப் பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.

ஆளவந்தார் என்னும் மகான்,
“தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய:” என்ற ஸ்லோகத்தில்
கருடன் திருமாலுக்குத்
தொண்டராகவும்,
நண்பராகவும்,
வாகனமாகவும்,
இருக்கையாகவும்,
கொடியாகவும்,
மேல்கட்டாகவும்,
விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார்.

கருட மந்திரத்தை ஜபித்து, கருடனை நேரில் தரிசித்தவர் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகன் என்னும் மகான்.
அவர் ஒன்று, இரண்டு, மூன்று… என எண்ணிக்கைகளை வைத்து வடமொழியில் ஸ்லோகம் அமைத்துக் கருடனைத் துதித்தார்.
ஒப்பற்ற ஒருவரான கருடன்,
திருமாலின் இரண்டாவது வடிவமாய் விளங்குகிறார்.
ஞானியர், முனிவருள்ளும் மூன்று,
நான்கு பேர்கள் மட்டுமே
ஐந்தெழுத்து உடைய கருட மந்திரத்தின் பெருமையை நன்கறிவர்.
ஞானம், பலம், வீரியம், சக்தி, ஐஸ்வரியம், தேஜஸ் என ஆறு குணங்களை உடையவர் கருடன்.
ஏழு ஸ்வரங்களுக்கும் ஆதாரமான சாம வேத ரூபியாக உள்ளார்.
எட்டு மகாசித்திகளையும் பெற்றவர்.
அவரது உடல் நவமாக உள்ளது. (நவம் என்பது எண் ஒன்பதையும் குறிக்கும், எப்போதும் புதிதாக இருத்தல் என்றும் பொருள்படும்.
கருடனின் திருமேனி எப்போதும் புதிதாகவே உள்ளது. அதையே நவம் எனக்குறிப்பிடுகிறார்.)
பத்து நூறு (10×100=1000) கண்களை உடைய இந்திரனின் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்துகிறார் கருடன்.
அவர் எண்ணிலடங்காத உருவங்களை உடையவர் என்று அந்த ஸ்லோகத்தில் கூறுகிறார் வேதாந்த தேசிகன்.

இந்த ஸ்லோகத்துக்கு ஸ்ரீமான். அன்பில் ஸ்ரீநிவாசன் என்பவர் வழங்கிய
தமிழ் மொழி பெயர்ப்பை வாசகர்களின் அனுபவத்திற்காக வழங்குகிறோம்.

“ஒருவராயும் விட்டுவிற்கு இரண்டாவது மூர்த்தியாயும்
திரிநான்கு பேர்களேதான் நன்கறிய முடிந்ததான
ரகசிய மந்திரமாம் ஐயெழுத்தின் தேவராயும்
இருமூன்று குணங்களினால் இணையற்று விளங்குவரும்
ஸ்ருதியான ஏழுஸ்வர சாமத்தின் உறைவிடமும்
இருநான்கு அணிமாதி ஐஸ்வரியக் கொள்கலனும்
திருமேனி நவமென்னும் புதிதாக அமைந்தவரும்
இருவைந்து நூறான கண்ணுடைய இந்திரனின்
விரோதிகள் பல்லாயிரர் தம்மோடு விளையாடும்
சிறகுகளின் கூர்முனையைச் சிறப்பாக உடையவரும்
உருக்களுமே எண்ணற்று உடையவரும், நாகங்களின்
ஒருபெரிய பகைவருமாய் உறும் கருட பகவானே
பெரிதாம் நம் சம்சார பயந்தன்னைப் போக்கிடுக!”

எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில்
பற்பல உருவங்களோடு கருடன் வருவதைக் காணலாம்.

தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை,
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை,
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை,
திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.

நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன்,
தானே உற்சவராகவும்,
மூலவராகவும்,
வாகனமாகவும் திகழ்கிறார்.

———–

திருநாங்கூர் திருத்தலங்கள்

இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும்,
தை அமாவாசைக்கு மறுநாளன்று, சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம்
உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார்
போன்ற பெரியோர்கள் இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது.

ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர்
எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன் அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக்
கடுஞ்சினம் கொண்ட பரமசிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.

அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.
சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது,
திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு திருமால் வந்து காட்சி கொடுத்து,
பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார்.
அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்களும்,
அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் இருப்பதைக் காணலாம்.

1.திருமணிமாடக்கோவில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2.திரு அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தர்)
3.திருச்செம்பொன்செய்கோவில் (செம்பொன் அரங்கர்)
4.திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5.திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6.திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7.திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8.திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9.திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10.திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள் கேள்வன்)
11.திருக்காவளம்பாடி (கோபாலன்)
ஆகியவையே திருநாங்கூரைச் சுற்றியுள்ள பதினொரு திருமால் திருத்தலங்களாகும்.

1.திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2.திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3.திருயோகீஸ்வரம் யோகநாதஸ்வாமி
4.கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) ஸ்வர்ணபுரீஸ்வரர்
5.திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6.அல்லிவிளாகம் நாகநாதஸ்வாமி
7.திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8.திருநாங்கூர் கயிலாயநாதர்
9.திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10.பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11.அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்
எனப் பதினொரு திருவடிவங்களுடன் திருநாங்கூரைச் சுற்றி சிவபெருமான் காட்சி தருகிறார்.

திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து – ராப்பத்து உற்வசவங்களைப்
பன்னிரு ஆழ்வார்களுள் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார்.
அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில் கோயில் கொண்டிருக்கும்
பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ்ப் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத்
திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார்.

அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து,
ஆழ்வாரிடம் பாடல்களை ஏற்றுச் செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுவது தான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.
ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம்.
இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால்
நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும்.
இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
திருமங்கையாழ்வாரின் ஸ்பரிசம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.

திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெறுகிறது

1.தை அமாவாசை அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம்
2.தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை
3.அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோயில்களுக்குத் திரும்புதல்

திருநாங்கூர் பதினொரு கருட சேவை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாகத்
தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு மணிகர்ணிகை நதிக்கரையில் ‘மஞ்சள் குளி உற்சவம்’ நடைபெறுகின்றது.
மஞ்சள் குளி உற்சவம் என்றால் என்ன?
திருவரங்கத்தில் கார்த்திகை தீப நன்னாளில் ‘திருநெடுந்தாண்டகம்’ என்றழைக்கப்படும் முப்பது பாசுரங்களை இயற்றி
அரங்கன் முன்னே விண்ணப்பித்தார் திருமங்கையாழ்வார்.
அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அரங்கன், ஆழ்வாரிடம், “உமக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குத் திருமங்கை ஆழ்வார், “அரங்கா! உனக்கு மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது,
வடமொழி வேதங்களை மட்டும் ஓதுகிறார்கள். அத்தோடு சேர்த்து நம்மாழ்வார் தந்த தமிழ் வேதமாகிய
திருவாய்மொழியையும் அந்த உற்சவத்தில் ஓதச் செய்யுமாறு அருள் புரிய வேண்டும்!” என்று வேண்டினார்.
அரங்கனும் அதற்கு இசைந்தார்.

வடமொழி மறை, தென்மொழி மறை ஆகிய இருமறைகளின் பாராயணத்தோடு வெகுசிறப்பாக அத்தியயன உற்சவம் நிறைவடைந்தது.
இவ்வுற்சவத்துக்கு ஏற்பாடு செய்த திருமங்கையாழ்வாரைப் பாராட்ட விழைந்தார் அரங்கன்.
ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று, அரங்கன் மஞ்சள் நீரில் திருமஞ்சனம் கண்டருள்வது வழக்கம்.
அதற்கு மஞ்சள் குளி உற்சவம் என்று பெயர்.
“எனக்கு நடைபெறும் இந்த மஞ்சள்குளி உற்சவம் இனி திருமங்கையாழ்வாருக்கும் வருடா வருடம் நடைபெற வேண்டும்!”
என்று அருட்பாலித்தார் அரங்கன்.

அந்த வருடம் தை அமாவாசையன்று, திருமங்கையாழ்வாரைக் கொள்ளிடக் கரைக்கு அழைத்துச் சென்ற அரங்கன்,
ஆழ்வாருக்குத் தன் கையால் மஞ்சள் குளியலை நடத்தி வைத்தார்.
வெகுசிறப்பாக நடைபெற்ற அந்த மஞ்சள் குளி உற்சவத்தின் முடிவில், “அரங்கா! நீ கருணை கூர்ந்து இந்த உற்சவத்தை
எனக்காக நடத்தி வைத்தாய். ஆனால் எங்கள் ஊரில் வாழும் எனது அன்பர்கள், இவ்வளவு தூரம் தள்ளி வந்து
இக்காட்சியைக் காண இயலாதே!” என்று அரங்கனிடம் கூறினார் திருமங்கையாழ்வார்.

“உங்களது ஊரார் கண்டு களிக்கும்படி இந்த உற்வசத்தை அடுத்த ஆண்டு முதல் உங்கள் ஊரிலேயே நடத்தி விடலாம்!” என்றார் அரங்கன்.
திருமங்கையாழ்வார் திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருக்குறையலூர் என்னும் ஊரைச் சேர்ந்தவரானபடியால்,
அடுத்த வருடம் முதல் தை அமாவாசை அன்று திருநாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில்
திருமங்கையாழ்வாருக்கு மஞ்சள் குளி உற்சவம் நடைபெறத் தொடங்கியது.

மஞ்சள்குளி உற்சவம்

தை அமாவாசையன்று அதிகாலை 3 மணி அளவில், திருமங்கையாழ்வார் தனது மனைவி குமுதவல்லி நாச்சியாருடன்
திருவாலி திருநகரியில் இருந்து மஞ்சள்குளி உற்சவத்துக்காகப் புறப்படுகிறார்.
திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான சிந்தனைக்கு இனியானும் அவருடன் புறப்பட்டுச் செல்கிறார்.

முதலில் திருக்குறையலூரிலுள்ள உக்ர நரசிம்மப் பெருமாள் கோயிலை அடைந்து,
உக்ர நரசிம்மரை மங்களாசாசனம் செய்துவிட்டு,
அடுத்து,
தான் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்த இடமான மங்கை மடத்தை அடைந்து,
அங்கே வீர நரசிம்மரையும் மங்களாசாசனம் செய்து,
அதைத் தொடர்ந்து,
திருநாங்கூரிலுள்ள திருக்காவளம்பாடிக்கு எழுந்தருளி, “காவளம்பாடி மேய கண்ணா!” என்று அங்குள்ள பெருமாளைப் பாடி,
அடுத்து
திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாளை, “திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!” என்று பாடிவிட்டு,
நிறைவாகத்
திருப்பார்த்தன் பள்ளியில் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை,
“பவள வாயால் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவானே!” என்று பாடிவிட்டு,
நண்பகல் 12 மணியளவில் திருநாங்கூர் மணிகர்ணிகை நதிக்கரையில் உள்ள மஞ்சள் குளி மண்டபத்தை
அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.

அங்கிருந்தபடி, தனக்கு வைணவ இலச்சினை அளித்த ஆசாரியனாகத் திகழும் நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளை,

“குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும்
தலையார்ந்த இளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்தன் நீள்கழலே அடைநெஞ்சே!”–என்று பாடி விட்டு,
மஞ்சள் குளி உற்சவத்தை நடத்தி வைத்த திருவரங்கநாதனை மங்களாசாசனம் செய்கிறார் திருமங்கையாழ்வார்.

அந்தத் திருத்தலங்களில் இருந்து விசேஷமான மாலைகளும், பரிவட்டங்களும் ஆழ்வாருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
மஞ்சள்குளி மண்டபத்தில், முதலில் திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான
சிந்தனைக்கினியானுக்கு ஸஹஸ்ர தாரைத் தட்டில் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பின், அதே ஸஹஸ்ர தாரைத் தட்டில் திருமங்கையாழ்வாரும் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
அதன்பின் விசேஷ அலங்காரங்கள் பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் செய்யப்படுகின்றன.

அன்று மாலை 4 மணியளவில் அங்கிருந்து புறப்படும் திருமங்கையாழ்வார்,
திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைந்து,
“மணிமாடக் கோவில் வணங்கு என் மனனே!” என்று அப்பெருமாளைப் பாடி,
அதன்பின்
“நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே!” என்று
திருவண்புருடோத்தமப் பெருமாளைப் பாடி,
திருவைகுந்த விண்ணகரத்தில்,
“வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று வைகுந்த நாதனைப் பாடி,
திருச்செம்பொன்செய் கோயிலில்,
“கடல்நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே!”
என்று செம்பொன் அரங்கரைப் பாடி,
திருத்தெற்றியம்பலத்தில் பள்ளிகொண்ட பெருமாளை,
“திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே!” என்று பாடி,
அரிமேய விண்ணகரத்தை அடைந்து,
“நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று குடமாடு கூத்தரைப் பாடுகிறார்.

அன்று இரவு திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.
அங்கே அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது.
அடுத்த நாள் – தை அமாவாசைக்கு மறுநாள் காலை,
மணிமாடக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமங்கையாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்றுக் கொள்வதற்காக,
வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்த நாதப் பெருமாள்,
அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்,
திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர்,
திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்,
திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன் ஆகிய
பத்து திவ்ய தேசத்துப் பெருமாள்களும் நாங்கூர் மணிமாடக் கோயிலை நோக்கிப் பல்லக்குகளில் வரத் தொடங்குவார்கள்.

ஆழ்வாரைக் காணும் ஆவலுடன் ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் வருவார்கள்.
பக்தனைக் காண்பதில்தான் பரமனுக்கு எத்தனை ஆனந்தம்!
திருமங்கை ஆழ்வார் கோயிலுக்குள்ளே வீற்றிருக்க, வெளியே பத்து பெருமாள்கள் அவருக்காகக் காத்து நிற்கிறார்கள்.
அப்போது அங்கிருக்கும் அடியார்களுள் சிலர்,
“இதென்ன தலைகீழாக உள்ளது? பக்தரான ஆழ்வாருக்காக பகவான் காத்திருக்கிறாரே!” என்று பேசிக் கொள்வார்களாம்!
ஆனால் பத்துப் பெருமாள்களும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்களாம்,
“முப்பத்தேழு திவ்ய தேசத்துப் பெருமாள்கள் திருக்குருகூரில் புளியமரப் பொந்தில் யோகத்தில் அமர்ந்திருந்த
நம்மாழ்வாரைத் தேடிச் சென்று காத்திருந்து அவரிடம் இருந்து பாடல் பெற்று வந்தார்களல்லவா?
அவர்களெல்லாம் நம்மாழ்வாரிடம் பாடல் பெற்று திவ்ய தேசப் பெருமாள்கள் ஆகி விட்டார்கள்.
ஆனால், திருநாங்கூரில் உள்ள நமது பதினோரு கோயில்களையும் தனது பாசுரங்களால் பாடி,
திவ்ய தேசங்களாக ஆக்கிய ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். நம்முடைய ஆழ்வாருக்காக நாம் காத்திருக்க வேண்டாமா?” என்று.
பக்தன் மேல் இறைவன் கொண்டிருக்கும் அன்பை இதன் மூலம் அறிய முடிகிறதல்லவா?
அவ்வாறு காத்திருந்து, மணிமாடக் கோயிலுக்குள் வரிசையாகப் பத்துப் பெருமாள்களும் நுழைகிறார்கள்.
அவர்களுடன் மணிமாடக் கோவில் பெருமாளும் இணைவார்.
பதினோரு பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்யக் குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கையாழ்வார் தயாராவார்.

ஒவ்வொரு பெருமாளும் வந்து ஆழ்வாருக்குக் காட்சியளிக்க,
அந்தப் பெருமாளைத் தமது பாசுரங்களால் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
அந்தப் பெருமாளை வலம் வந்துவிட்டு, மாலை உள்ளிட்ட பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு,
அடுத்த பெருமாளைப் பாடச் செல்வார் ஆழ்வார்.
இவ்வளவு நேரம் புறப்பாடுகளில் திருமங்கையாழ்வார் மெல்ல நகர்வதையும்,
ஒரே நேரத்தில் பதினோரு பெருமாள்களையும் தரிசித்தபின் அந்த மகிழ்ச்சியில்
ஆழ்வாரின் புறப்பாடு புதிய வேகம் எடுப்பதையும் இன்றும் கண்கூடாகக் காணலாம்!
இவ்வாறு வரிசையாகப் பதினோரு பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தவுடன்,
வண்புருடோத்தமம் திருத்தலத்தில் இருந்து அங்கே எழுந்தருளும் மணவாள மாமுனிகள்,

“வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு எட்டெழுத்தை
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என் கண்”
என்று பாடித் திருமங்கையாழ்வாரை மங்களா சாசனம் செய்வார்.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் பதினோரு திவ்ய தேசத்துப் பெருமாள்களுக்கும்,
திருமங்கை ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.
அப்போது பெருமாள் திருமங்கையாழ்வாரிடம்,
“ஆழ்வீர்! உமது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். நீங்கள் பாடிய பாடல்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை.
எனவே இன்று இரவு வேத ஸ்வரூபியான கருடன் மேலேறி உங்களுக்கு காட்சி தர உள்ளேன்.

திருமங்கை மன்னரே! நீங்கள் வழிப்பறி செய்தாலும், என் அடியார்க்கு உணவளிப்பதற்காகவே அதைச் செய்தீர்கள்!
உங்களது உள்ளம் தங்கம் போல் தூய்மையாகத் திகழ்கிறது.
உங்களது தங்கம் போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் ஏறி உங்களுக்குக் காட்சி தரவுள்ளேன்.
நீங்கள் பாடிய பெரிய திருமொழி என்னும் நூலில் பதினொரு சதகங்கள் உள்ளன.
அதற்கு இணையாகப் பதினோரு கருடன்கள் மேல் பதினோரு வடிவங்களுடன் நான் காட்சி தர உள்ளேன்!” என்று கூறுவார்.

மேலும், “மங்கை மன்னரே! அன்னப் பறவை எப்படித் தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால்,
தண்ணீரை விலக்கி விட்டுப் பாலை மட்டும் எடுத்துக் கொள்கிறதோ,
அதுபோல் நீங்களும் சாரமில்லாத உலக விஷயங்களை விலக்கிவிட்டு, சாரமாக இருக்கும் இறைபக்தியைக் கைக்கொண்டீர்கள்!
எனவே நீங்கள் அன்னப்பறவையின் மீது அமர்ந்து வந்து என்னைத் தரிசனம் செய்யுங்கள்!
அதுவே பொருத்தமாக இருக்கும்!” என்று திருமங்கையாழ்வாரிடம் கூறுவார் பெருமாள்.

பதினோரு கருடன்மேல் பதினோரு பெருமாள்கள் அன்றைய தினம் நள்ளிரவில், தோளுக்கினியானில்
மணவாள மாமுனிகள் முதலில் மணிமாடக் கோயிலில் இருந்து வெளியே வருவார்.
அவரைத் தொடர்ந்து, அன்னப்பறவை (ஹம்ஸ) வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் வெளியே வந்து,
பெருமாள்களை வரவேற்கத் தயாராக நிற்பார்.

1.மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள்
2.அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
3.செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர்
4.திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
5.திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
6.திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
7.திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
8.வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
9.திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்
10.திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்
11.திருக்காவளம்பாடியின் கோபால கிருஷ்ணன்

ஆகிய பதினோரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில்
திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் இருந்து புறப்படுவார்கள்.
பதினோரு பெருமாள்கள் மங்களாசாசனம் பெறும் வரிசை பற்றி அழகான வடமொழி ஸ்லோகம் ஒன்று உள்ளது.

“நந்தாதீப கடப்ரணர்தக மஹாகாருண்ய ரக்தாம்மக
ஸ்ரீ நாராயண புருஷோத்தமதி ஸ்ரீ ரத்னகூடாதிபாந் |
வைகுண்டேஸ்வர மாதவௌ ச கமலாநாதம் ச கோபீபதிம்
நௌமி ஏகாதசாந் நாகபுரி அதிபதீந் ஸார்தம் கலித்வம்ஸிநா ||”

இதன்பொருள்: மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்
ஆகிய பதினோரு பெருமாள்களையும்
திருமங்கை ஆழ்வாரையும் வணங்குகிறேன்.

மணிமாடக் கோயிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோயில் வாசலில்
விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
பதினோரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின், கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் பெருமாள்களைப் பின்தொடர்ந்து,
ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்வார்.

ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த
அடியார்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில்,
பதினோரு பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி
மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருவார்கள்.

இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில்
பதினோரு திவ்ய தேசங்களைத் தரிசித்த பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.

————-

மூன்றாம் நாள் உற்சவம் திருமங்கை ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புதல்
11 கருட சேவை உற்சவம் நடைபெற்ற மறுநாள் காலை, மணிமாடக் கோயிலிலிருந்து புறப்பட்டு,
அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு மீண்டும் எழுந்தருள்வார்கள்.

காலையில் மணிமாடக் கோயிலில் திருமஞ்சனம் கண்டருளும் திருமங்கையாழ்வார், மாலையில் குமுதவல்லியுடன் புறப்பட்டு,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாளை,
“அண்ணா அடியேன் இடரைக் களையாயே!” என்று மங்களாசாசனம் செய்து,
திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாளை,
“தேதென என்றிசைப் பாடும் திருத்தேவனார்த் தொகையே!” என்று பாடி,
திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாளை “திருவாலி அம்மானே!” என்று பாடிவிட்டுத்
தனது இருப்பிடமான திருநகரியை அடைவார்.
திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளன் எனப்படும் பெருமாள், கருட வாகனத்தில் வந்து,
ராஜகோபுரத்தின் முன்னே திருமங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் எதிர்கொண்டு அழைப்பார்.

“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீள் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே!”–என்று திருமங்கையாழ்வார் பாடி,
வயலாலி மணவாளனோடு திருக்கோயிலுக்குள்ளே எழுந்தருளுவதோடு,
இந்தப் பதினோரு கருட சேவைத் திருவிழா இனிதே நிறைவடையும்.

சிறப்பம்சங்கள்
பக்தர்கள் இறைவனை நாடிச் செல்வது வழக்கமாய் இருக்க, இங்கே இறைவன் பக்தரைத் தேடி வருகிறார்.
ஆம்! திருநாங்கூரிலுள்ள பதினோரு திருத்தலங்களுள் ஒன்றான மணிமாடக் கோயில் திருமங்கையாழ்வார் அமர்ந்திருக்க,
மீதமுள்ள பத்துத் திருத்தலங்களின் பெருமாள்களும் ஆழ்வாரைத் தேடி வந்து, காத்திருந்து, அவரிடம் பாடல் பெற்றுச் செல்வார்கள்.

* திருமங்கையாழ்வார் அருளிய தமிழ்ப் பாசுரங்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை என்பதால்,
வேத ஸ்வரூபியாக இருக்கும் கருடனின் மேல் வந்து காட்சி தந்து பாடல் பெற்றுக் கொள்கிறார் பெருமாள்.

* திருமங்கை ஆழ்வாரின் பொன்போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் திருமால் காட்சி தருகிறார்.
திருமங்கை ஆழ்வார், பதினோரு சதகங்களை உடைய பெரிய திருமொழி என்னும் பிரபந்தத்தால் திருமாலைத் துதி செய்தார்.
சதகம் என்பது நூறு பாடல்களின் தொகுப்பைக் குறிக்கும்.
1084 பாடல்களை உடைய பெரிய திருமொழியில் பதினோரு சதகங்கள் உள்ளன.
அந்தப் பதினோரு சதகங்களுக்கு இணையாகத் திருமாலும் பதினோரு கருடன்கள் மேல் ஆழ்வாருக்குக் காட்சி அளிக்கிறார்.

* இறைவன் கருட சேவை கண்டருள்வதோடு மட்டுமின்றி, அந்த இறைவனைக் காட்டித் தந்த ஆழ்வார் அன்ன வாகனத்திலும்,
அந்த ஆழ்வாரின் பாசுரங்களுக்கு விளக்கவுரை தந்த ஆசாரியர் தோளுக்கினியானிலும் சேர்ந்து எழுந்தருள்வது
இந்த உற்சவத்தின் மற்றொரு சிறப்பு.

கடந்த பதினேழு ஆண்டுகளாக, பதினோரு கருட சேவைக்கு மறுநாள்,
திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருவெள்ளக்குளம் எனப்படும் அண்ணன் கோவிலில்,
ஸ்ரீஅண்ணன் பெருமாள் திருமண மண்டபத்தில், திருமாலின் பெருமைகளையும்,
திருமங்கை ஆழ்வாரின் பெருமைகளையும் பற்றிச் சான்றோர்கள் பங்கேற்று உரையாற்றும்
‘கலியன் ஒலி மாலை’ என்னும் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சித்ரகூடம் ரங்காச்சாரியார் சுவாமிகளின் தலைமையில்,
கோயில் ஸ்ரீ மான். சடகோப கல்யாணராமன் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் ஒன்று கூடி
இறைவனை வணங்கும் ஒப்பற்ற உற்சவமாகிய இந்தப் பதினோரு கருட சேவை விழாவில் பங்கேற்று,
தங்கக் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பதினோரு பெருமாள்களையும், கருடன்களையும்,
அன்ன வாகனத்தில் வரும் திருமங்கையாழ்வார் – குமுதவல்லி நாச்சியாரையும்,
மணவாள மாமுனிகளையும் கண்ணாரக் கண்டு, மனதாறத் தொழும் அனைத்து அன்பர்களுக்கும்
உடல்நலம், மன அமைதி, நீண்ட ஆயுள், ஆற்றல், பொலிவு ஆகியவை பெருகும். நினைத்த நற்செயல்கள் கைகூடும்.
நோய்கள் அகலும். நற்செல்வம் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.

—————

தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.
முதல் நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு
ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும் விழா நடைபெறும்.

அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை யாழ்வார் ஹம்ஸ வாஹன உத்ஸவமும் நடக்கும்.

முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை யாழ்வார்
திருநகரியிலிருந்து புறப்பட்டு
திருக் குறை யலூர்,
திருமங்கை மடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள் குளி மண்டபம் எழுந்தருளுவார்.

அங்கு திருநறையூர் நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகிய மணவாளனையும் மங்களாசாஸனம் செய்த பிறகு
திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும்.
அருகில் இருக்கும் நதியில் இருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருமஞ்சனம் முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார் குமுத வல்லி நாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக் கொள்கிறார்.
தன்னைக் கடைத் தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த வஸ்திரத்தை அணிந்து கொள்கிறார்.

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப் பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் – ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய் கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றி யம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா சாஸனம் செய்து முடித்து
இரவு மணிமாடக்கோயி லுக்கு எழுந்தருளிய பின் அர்த்த ஜாமம் நடைபெறும்.

இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில் மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.

ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் ஸந்நிதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம் செய்வார்.
மாலை பதினொரு திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை பெறும்.
இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட சேவையும்,
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ வாஹன உத்ஸவமும்
ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

மூன்றாம் நாள் காலை மணிமாடக் கோயிலில் ஸ்ரீ திருமங்கை யாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.
பிறகு காலையில் 11 மணியளவில் புறப்பட்டு
திருவெள்ளக் குளம்,
திருததேவனார்தொகை,
திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்து திருநகரி சேர்வார்.

இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரகாலர் அந்தாதி –ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் —

November 6, 2021

சுவை யார்ந்த சொல் லுந்து கடீர் பொருளும் தொடை நடையும்
சவையார் மகிழ அமைத்த தோர் அந்தாதி சதுர்க் கவி மன்
செவையார் பரகால வித்தகற்கு ஓத என் சிந்தை நிற்பாய்
குவையார்ந்த கீர்த்தி ராமானுஜர் இது என் கோரிக்கையே –1-

ஆசு மதுர சித்ர விஸ்தார
செவை -செவ்வாய் -செம்மை –
குவை -கூட்டம்

வான் பிடிக்கும் பொருள் வையம் பிடித்து உய்ய வாச மிகும்
தேன் பிடிக்கும் பொழில் அம் குருகூர் என்னும் தெய்வப்பதி
தான் பிடிக்கும் சடகோபர் சரோருகத்தாள் பரவி
நான் பிடிக்கும் பரகாலர் அந்தாதியை நாட்டுவனே –2-

வான் -ஆகுபெயர் -நித்ய ஸூ ரிகள்
தேன் -வண்டு

வேங்கடம் கொண்டவரே அவர் உள்ளத்துக்கு விளங்கி யன்னோர்
தாம் கடங்கட்கு நலந்தேட நன்று அருள் தாயகனாம்
வேங்கடவா பரகாலன் அந்தாதி விளம்ப என் தன்
தீங்கட நா விருந்து ஆதரிப்பாய் சுவை தேங்கிடவே –3-

வேங்கடம் கொண்டவர் -வெவ்விய கடமாகிய தேகத்தைக் கொண்டவர்கள்
தாயகன் –கடவுள் -சர்வமும் தந்தவன் –
தீங்கு அட -தீங்குகள் நீங்க

நம் பொற் குல ஆரியர் கோன் எதிராசர் நயந்து அளித்த
அம் பொற் குமாரர் எம்மான் பெமான் சந்ததியாய்ப் பாடி வாழ்
எம் பொற் குல ஆரியர் வேங்கடாச்சாரியர் இன்னிசையார்
தம் பொற் கமல மலர்த்தாள் எனது தலைக் கொள்வேனே –4-

துப்பு ஆர -தெளிவு பெற -அறிவு விளங்க

ஒப்பார் இவர்க்கு இல்லை என்று ஓத ஓத உவர்க்கடல் சூழ்
இப்பாரில் எய்தி நம் மால் சமயத்துள்ள ஏற்றம் முற்றும்
துப்பார ஓதித் துணை புரிந்து என்னைத் துலங்க வைத்த
அப்பாரியர் தம் அரவிந்தத் தாள் எம் அக விளக்கே –5–

—————–

திருமங்கை நாதன் திருப்புகழ் நாளும் சிந்தித்து இருந்து
தரு மங்கை யாள்வீர் எனும் போதனை தனைச் சாற்று நல்ல
கரு மங்கை ஏந்து மிக்கோர் இனம் நம்மைக் கடைத்தேற்ற வந்த
திருமங்கை மன் பரகாலன் திருப்பதம் சேவிப்பமே –1-

திருமங்கை நாதன் -ஸ்ரீ யபதி -பகவான்
தருமம் கை ஆள்வீர் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி வாழும் சேதனரே
நல்ல கருமம் -ஸத் கார்யம்

சேவேறும் ஈசன் திருக்கைத் தலத்தினைச் சேர்ந்த அந்தப்
பூ வேறு மண்ண றலைத் துயர் போக்கிய புண்ணியன் தாள்
நா வேறு செஞ்சொல் பனுவல் தந்து ஏத்து நல் ஆடல் எனும்
மா வேறு நம் கலிகன்றிப் பிரான் காண் நமக்கு அரணே –2-

சே -ரிஷபம்
ஏறு -வாகனமாக ஊர்ந்து செல்லும்
அந்தப் பூ ஏறும் அண்ணல் -உந்தித் தாமரையின் நின்றும் போந்த நான்முகன்

நல் திருமங்கை மன் ஆலிக் குறையலூர் நல் பதியில்
பற்று கலி ஒரு முந்நூற்று எட்டில் பெரும் பாக்யம் சேர்
கற்ற நள வாண்டு கார்த்திகை மா மதிக் கார்த்திகையில்
உற்ற நல் சார்ங்க அம்சத்துக் குருவில் உலகு உய்யவே –3-

கற்ற -பழகிய -தெரிந்த
குருவின் -வியாழக் கிழமையில்

உலகில் பொருள் சேர் இறைவன் புகழே யுறு துணை மற்று
இலகும் துணை வேறு இல்லை இஃது உணராது இகல் புரியும்
கலகத்து இறங்கல் இழிவு என்றனன் பரகாலன் முந்தை
அலகின் மறையின் அறுதியைக் கண்டு உளத்து அன்பு கொண்டே –4-

இகல் -போர் வாதம்
அலகு இல் -கணக்கில்லாத பல
அறுதி -முடிவு

அன்பின் பரிசு அறிவிப்பான் புவிக்கண் அவதரித்த
இன்புருவாய குருகூர் எதீசர் இசை மறையாம்
என்பும் உருகும் அவ் வின் தமிழ்க்கு ஆறு அங்கமேய அருள்
அன்பால் எழிலாலி அண்ணல் அடியேனை ஆதரியே –5–

பரிசு -தன்மை
எதி ஈசர் -உலகப் பற்று முற்றும் துறந்த தலைவர்
ஏய -பொருந்த

ஆதரம் கூற அவரைக் கணமேனும் அமர்ந்து நின்னை
மாதரங்கள் சூழ் தராதலத்து எண்ணிலன் மாசுடையேன்
மாதர் அம் கண் வலைப்பட்டு உழல்வேன் எனை மன்னித்து அருள்
சீதரருக்கு ஏற்ற திருவுடையாய் மங்கைத் தேசிகனே –6-

மா தரங்கம் -பெரிய கடல்

தேவர்கள் போற்றும் திரு அரங்கேசர் திருத்தளிக்கு இங்கு
ஆவன வெல்லாம் அமைத்து இசை வாய்ந்த நின்னாள் வினை தான்
ஏவருக்கு உண்டென் இழுக்கு ஒழித்து ஆள் மங்கை ஏத்த வந்த
வேதனே நினையே நம்பினேன் அருள் செய் வள்ளலே–7-

தளி-கோயில்
இசை -கீர்த்தி
வாய்ந்த -கொண்ட
ஆள் வினை -முயற்சி
ஏவருக்கு -பிறர் எவருக்கு

வள்ளற்றமிழும் வளம் திகழ் பண்ணும் வளர் மறையும்
மள்ளற் புவியும் மகிழ் வான் தலமும் மணம் பெற்றன
விள்ளற்க்கு அரிய பெரும் புகழான் மங்கை வேந்து அருளும்
உள்ளற்கு இனிய மொழி ஆயிரம் இங்கு உதித்த பின்பே –8-

வள்ளல் -வளமை
மள்ளல்-வளமை -செழுமை
வான் தலம் -பரமபதம்

பின்னை மணாளனை வாள் வலி காட்டிப் பிறங்கு நலம்
தன்னை அடைந்த தயா நிதியே இத் தரா தலத்தில்
உன்னை நினைக்கும் உபாயம் உறா வகை ஒங்க நின்றே
என்னை வருத்தும் கொடும் பிணியைச் சீறித் தீர்த்து அருளே –9-

பிறங்கு -விளங்கும்
ஈர்த்து அருள் -ஒழித்து அருள்

ஈர் ஒளியே முன் இருந்தன மூன்றாய் இலகினவால்
வேர் ஒளிருஞ் சனனத் தரு வீழ்த்தி விளங்கின சீர்
கார் ஒளி செய் பொழில் மங்கை வரோதயன் கண்டு அளித்த
பேர் ஒளியாய பெரிய திருமொழி பேறு உற்றதே –10-

ஈர் ஒளி -இரு சுடர் -ஸூர்ய சந்த்ரர்கள்
வேர் ஒளிரும் -வேர் ஊன்றிய
சனனம் தரு -பிறவியாகிய மரம்

பேயிருக்கும் பெரு வெள்ளம் விண் மீது பெருகிய
போதாய் இருக்கும் விதம் ஆதரித்தானை விட்டு அந்நியர் பால்
போய் இருப்பீர் மங்கை நாதன் புகன்றதைப் போற்ற கில்லீர்
ஆய் இருக்க அங்கு ஆன் மணை வெந்நீராட்டுதல் தக்கதன்றே –11-

பே -நுரை
ஆய் -தாய்

தத்துவச் செம் பொருளாயும் தருமம் தனைக் கை யுற்றீர்
ஒத்த மெய் ஞானம் யுடையீருடனே யுலகுரைக்கும்
வித்தகன் ஆலிப்பதியான் குறையலூர் மேவிடுவீர்
சித்தம் களிக்கச் சிறந்திடுவீர் ஒரு தீது இன்றியே –12-

தீ வினையேனைத் திருத்தித் திருக்கறச் சிந்தை வந்து
மே வினையாயின் மிளிர்ந்திடுவேன் மெச்சும் வித்தகன் சேர்
காவினை ஏந்தும் திருவாலி உற்ற என் காவலவா
நீ விசை மா ஊர்ந்து வாராய் மனத்துயர் நீங்கிடவே –13–

திருக்கு குற்றம்

நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் நேர்ந்தவர் பால்
தார் மேவு நல்லதோரா வழக்கன்று இருத்தாளூதுவான்
ஊர் மேவு சாயை பிடிப்பான் உயர நின்றே தொங்குவான்
ஏர் மேவிய இந்த நால்வரைத் தோள் துணை ஏற்றனையே –14-

தோள் துணை -பக்க சகாயம்

ஏற்றமுறும் திரு நாதன் திருவடி எண்ணி வெறும்
மாற்ற முறும்பாகிய மதத் தும்பியின் மத்தகத்தை
வீற்றமுறப் பிளக்கும் சிங்கமாகும் உன் வீரம் தன்னில்
தேற்ற முற அருள் மாரியாம் தெய்வ செகாதிபனே –15-

வெறும் மாற்றம் -பயன் இல்லாத சொல்
தும்பி -ஆனை
வீற்றம் -விளக்கம்

செப்பும் குமுத வல்லி நங்கை மேவும் செழும் கரும்பே
தப்பும் வழி இன்றி வெந்துயர் வாரியில் தத்தளித்து இங்கு
அப்பும் விழிகள் பேர் ஆறாகப் பெருக அழுது அழுது
துப்பும் இழந்து அலைகின்றேன் துணை புரி தூ மணியே –16-

புரிகின்ற பால் வாய்ப் பிறைச் சேய் மருங்கில் பொருந்த வந்தி
வருகின்ற மேல் திசை மாதழும் வேளை நம் மங்கையர் கோன்
அரி யொன்று தொங்கற்கு அவா வுறுவார்கட்க்கு அமைந்த வெல்லாம்
தெரிப்பா னிதோர் பனி வாடை புகுந்து சிவண்கின்றதே –17-

பிறை சேய் -இளம் சந்திரன்
தெரிப்பான் -விளக்க
சிவண்கின்றது -சமீபிக்கின்றது

சிவணிய தீ வினை தீட்டிய நாளிவை சேர்ந்தெமை இப்
புவனியில் சன்மப் புழுதியினால் இட்டுப் போக்கிடுமோ
பவனியில் காழிப் பதியானை வென்ற நின் பைஞ் சொற்களாம்
அவனில் பெரிய திருமொழி சேர்ந்த பேர் அன்பரையே –18-

சிவணிய -அடைந்த நெருங்கிய
தீட்டிய -எழுதிய -தலைவிதி
சன்ம புழுதி -பிறவியாகிய வயல் நிலம்
காழி -சீர்காழி
பதியான் -சம்பந்தர்

அனலைப் பிளந்தோர் மதிக் கொழுந்தாக்கிய தன்றி அன்றில்
பனையைப் பிளவார் துனியைப் பிளக்கும் பைந்தார் பயவார்
இனலைத் தரு வெம் பவக் கிழியைப் பிளந்து இன்பு அளிக்கப்
புனலை யுடைய குறையலூர் போந்து அருள் புண்ணியரே –19-

அனல் -தீ –
மதி கொழுந்து -இளம் சந்திரன்
அன்றில் பனை -அன்றில் பட்சி வாழும் பனைமரம்
துனி -மன வேதனை
பயவார் -தர மாட்டார்
இன்னல் –துன்பம்
பவம் கிழி -பிறவியாகிய கட்டு

புலஞ்சேர் கழி முகப் பொன் மங்கையாளன் புகன்ற வின்ப
நலஞ்சேர் திருமொழியாய் திருமாலை நமது கரத்
தலஞ்சேர் கனி யிற்ற றரநா மவன்றா டலை வைத்திலம்
வலஞ்சேர்ந்து இனிது வணங்கில நன்றி மறந்தனமே –20-

புலம் -வயல்
கழி முகம் -நீர்க் கால்வாயை யுடைய
கரம் தலம் சேர் கனி இல் -உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல்

மறந்தும் புறம் பணியாத திரு மங்கை மன் குலத்தில்
பிறந்தும் வயிற்றுப் பிணிக்கே திரிந்து பிறருக்கு அடிமைத்
திறந் தும்பியில் விழைகின்றோம் எவ்வாறு இனிச் சீர் பயின்று
சிறந்தும் புகழில் இருந்தும் விளங்குவஞ் செப்புமினே –21-

தும்பியில்- வண்டைப் போல்
விழைதல் -விரும்புதல்

செப்பம் உணராத தீயர் பொருளைத் திரை கடல் நீர்
உப்பு என்று மா முகில் உண்டு நன்னீர் செய்து உயிர்களுக்கு இங்கு
எப்படி தந்து பயன் பெறும் அப்படியே அடைந்து
நற் படி நல்கிப் பயன் அளித்தான் மங்கை நாயகனே –22-

நாயகனாய் நின்று நந்தகோபன் தனகர் புரந்த
தாயகன் பொன்னடி யின்னே தழிஇச் சுகஞ்சாரும் என்றான்
தீ யக வேள்வி தினமும் வளர்க்கும் திருவாலி நாட்
டேயவன் தூயவன் வாள் கலிகன்றி எமது இறையே –23-

இன்னே -இப்பொழுதே
தீ அக வேள்வி -அக்னியைக் கொண்ட யாகம்
ஏயவன் -வந்தவர்

இறையின் நிலையும் உயிரின் நிலையும் இயறடையாம்
குறையின் நிலையும் நெறியின் நிலையும் குறி பயனாம்
நிறையின் நிலையும் பரகாலர் சொன்ன நெறியின் படி
மறையின் நிலை பொருள் ஏரி நமது மயல் அறுமே –24–

இயல் தடை -பொருந்திய மயக்கம் -அசித்து

மயிலின் குண முணர் காலம் பெறாத இம்மான் விழியாள்
செயல் பிறிது ஒன்றும் புரிகிலாள் ஆலித் திரு நகரான்
பெயரே இராப்பகல் பேசுகின்றாள் என் சொல் பேண கில்லாள்
நயனோ விது மங்கை வேந்தற்கு அனை நிகர் நங்கையரே –25-

மயல் -காம இச்சை
நயனோ -நியாயமோ

நறை சேர் பசும் துளபத் திரு மார்பர் நளின வடி
நிறை சேர் மனத்தில் இருத்திய மங்கை மன் நீள் அலங்கல்
பிறை சேர் நுதற்கு இன்று நல்கிலர் நைந்து உளம் பித்தாயினள்
கறை சேர் ஒளிர் வாள் பரகாலர்க்கு ஈது கழறுமினே –26-

நறை -தேன்
நளினம் -தாமரை
நிறை -கலங்கா நிலை
அலங்கல் -மாலை
கறை -இரத்தக் கறை

கரம் சிரம் சேர்த்துக் கடும் பூசலிட்டுக் கடல் உலகைத்
திரம் பெறு சொல்லால் உய்வித்ததும் பொய் என்று செப்புதுமோ
வரம் பெறு நல் குறையல் பதி போய் வசையாடுதுமோ
தரம் பெறாப் பைதலை நேரற வேட்டேற்றுத் தஞ்சனையே –27-

பைதலை -இளம் பெண்ணை
ஏடு ஏற்றல் -மடலூரச் செய்தல்
தஞ்சன் -சகாயன்

தகு மறை ஆயிரத்திற்கும் அலங்காரம் தண் தமிழுக்கு
நிகரறு பாயிர நூற்கெலாம் தாய் நிகழ் நாற் கவிக்குத்
திகழ் படிச் சந்தந் திசைக்கு யரும் தீபம் திரு மங்கை மன்
மகிழுறும் வண்ணம் திருவாய் மலர்ந்து அருள் வான் கவியே –28-

வாசக் குழலாள் குமுத வல்லிப் பெயர் மாதர் அதி
நேசத்துடன் நிழல் போல் வாழ்வது கண்டு நிற்கும் கொலோ
பாசத்தொடு மீளும் கொலோ பரகாலன் பற்றி விடும்
தேசுற்று ஒளிர் கொக்கின் பின் சென்ற நெஞ்சந் திடத்துடனே –29-

கொக்கு -குதிரை

திரு மடப்பள்ளி திரு நட மாளிகை திண் சிகரம்
பொருவறும் ஆலி நாடன் திரு மண்டபம் பொன் மதிள்கள்
தரு நிகரஞ்சு களஞ்சியம் கொட்டாரம் சார் பணிகள்
பெருமித மங்கை மன் செய்தான் அரங்கற்குப் பெட்புடனே -30-

பெட்பு–அன்பு

பெட்பின் இரு பூதலத்தில் பிறியாது இருந்து எனது
தெட் பமுறத் தொல் வினை வேர் அறுத்தாதி தே வினையே
நட்பில் பணிய வைத்தான் பரகாலன மன்றமர்கள்
கொட் பென்றனை யென் குயிற்ற முடியும் குவலயத்தே –31-

கொட்பு–சூழ்ச்சி
குயிற்றல் -செய்தல்

குறும்பு ஒரு மூன்றும் கெடுத்தனை மெய்த் தொண்டர் கூட்டத்திலே
நறும் புகழ் எய்த இணங்க வைத்தான் ஆலி நன்னகரான்
மறம் திகழ் வாள் கலிகன்றி அருள் மாறி மங்கையர் கோன்
அறம் குலவும் கழல் போது இரண்டும் என்னகத்தனவே -32-

அகத்தை வருத்தும் புற விருள் மாற்றி யருளின யல்ல
சுகத்தை அளித்த பிரான் மங்கை வேந்தன் துணைப் பதங்கள்
இகத்தும் பரத்தும் இத யாலயத்தில் இருத்தி ஐவர்
புகுத்தும் கொடும் செயலில் புகுதாமல் பொருந்துவனே -33-

பொற் பார் கதியடை வான் கானொடு கற் புணரியுமே
நற் பார் மதிக்கக் கொதிக்கத் தவம் செயு நாட்ட மற்றேன்
அற் பால் உலகை யாதரிப்பான் வந்த வாத்தன் மங்கை
சொற் பாவலர் பெருமான் எனக்கும் துணை யாயினனே –34–

ஆத்தன் -துணைவன் பர உபகாரி

நுனியார் இடும்பைகள் முந்தினும் இன்பம் துதைந்திடினும்
கனியார் உளம் கடல் மல்லை நின்றானைக் கழல் வணங்கும்
இனியானை நல் தமிழ் மாலை செய் நீலனை எண்ணலுற்றார்
வினையாயின அனைத்தும் கெடும் ஒண்மை விளையுறுமே –35–

துனி -வருத்தம்
துதைதல் -நெருங்கல்
கனியார் -மனத்தளர்வு அல்லது உற்சாகம் அடையார்
ஒண்மை -நேர்மை

விளைத்து எழும் கீர்த்தி விளங்க வியலிசை மேவ வின்ப
மளைந்த சதுர்க்கவி தந்த பிரான் அருள் மாரி என்னை
வளைந்த வினைத்தொகை யாவும் இனி வருத்தாத வண்ணம்
களைந்து அருள் செய்தான் அவன் கழல் நாளும் கழறுவேனே –36–

அளைந்த -சேர்ந்த கலந்த

கதிக்கு அந்த மார்க்கமோ இம்மார்க்கமோ என்று காசினியில்
விதிக்கும்ப நூல் கற்று உழன்றிடுவீர் மங்கை வேந்தன் இன்ப
முதிக்கும் படி யுரை நன் மொழி தேர்ந்து உம்பரும் பணிந்து
துதிக்கும் பதம் பெற்று நீங்கா மகிழ்க் கட றேயுமினே –37-

கதி -பரகதி -முக்தி
விதிக்கும் -உண்டாக்கிய
தோய்தல் -மூழ்குதல்

தோகையர் அன்னம் கிளி வண்டு எனக்குத் தூது இருந்தும்
வாகையுறோம் என்று என் நெஞ்சம் தனை நம்பி மங்கையர் கோன்
ஆகத்து அணி மாலைக்காக விடாதவனார் எழிலில்
சோகித்து எனையும் தனையும் மறந்து துயக்குற்றதே –38-

வாகை -வெற்றி
ஆக்கம் -மார்பு
விட அஃது -விட ஃது-என நின்றது –தூது விட அந்த நெஞ்சம்
துயக்கு -மயக்கு

துயக்கமில் ஞானத்தவரையும் நன்கு துயக்க வல்ல
மயக்குடை மாயன் மலரடி வாழ்த்தி மயல் அறுத்த
வியக்குறு நம் பரகாலன் விரை கமழ் வீரக்கழல்
நயக்குறும் அன்பருக்கு இலை பிறவித்துயர் நானிலத்தே –39–

வியக்குறும் -மெச்சும்
விரை கமழ் -வாசனை வீசுகின்ற
நயக்குறும் -விரும்பும்

நால் வகை வேத நவில் ஐந்து வேள்வி நயந்து செயும்
மேல் வகை வானவரின் மிக்க வேதியர் மேவி யுறை
சேல் வயலாலித் திரு நகர்ச் செல்வன் திருப் பதங்கள்
போல் வரு நந்தம் பிறவிப் பிணிக்குப் புகல் இல்லையே – 40-

புயல்காள் உரையீர் புனல் ஆலி நாடன் புனிதமுறும்
வியன் மேனி ஒத்திடும் யோகங்கள் நீங்கள் விழைந்து அடைந்த
செயல் தான் கைம்மாறுகவாது செழும் பார் திருத்தவன் போல்
இயன் மாரி பெய்து உலகத்தை வாழ்விக்க இசைந்ததுமே –41-

இசையார் சகத்திர மா முடி யங்கை இனிது அலர்த்தி
மிசையா யிரஞ்சிர நாகம் கவிப்ப விசும்பவிர் பங்
கசமாமென வாயிரம் கண் வளர அரங்கத்து எம்பிராற்கு
இசைவான் பணிகள் இழைத்தனன் மங்கைக்கு இறை இனிதே –42-

சகத்திரம் –ஆயிரம்
விசும்பு அவிழ் -ஆகாயத்தில் பூத்த

இந்திரற்கும் த்ரி யம்பகரற்கும் கஞ்ச வேந்தலுக்கும்
முந்திய வாழ்வில் இருந்து இன்ப வாரிதி மூழ்குவரால்
வெந்திறல் வாள் கலிகன்றி விருப்பின் விளம்பிய நற்
செந்தமிழ் வேதம் ஓர் ஆயிரமும் கற்ற சேதனரே –43–

திரியம்பகன் -சிவன்
கஞ்ச எந்தல்–பிரமன்
வாரிதி -கடல்

சேடேறு செண்பகம் செய்ய செருந்தி செழும் கமுகம்
ஏடேறு தாமரை நன் மணம் வீசும் எழில் பொழிலூ
டாடேறு மா வயலாலைப் புகை கமழ் ஆலி நகர்
ஈடேற வந்த பரகாலன் எங்கட்கு இயல் கதியே –44-

சேடு -இளமை

இயலும் இசையும் இயையக் கவிகள் ஈந்த எம்மோய்
குயில் நின்று ஒளிர் பொழில் சூழும் குறையற் குலபதி யோய்
வெயில் வாள் காலிகன்றி வேந்தே அடியேன் வினை அகற்றிச்
செயலும் குணமும் செவை யுறவே அருள் செய்குவையே –45-

எம் மோய் -எங்கட்க்குத் தாய் போன்றவரே
வெயில் -ஒளி
செயல் -செய்கை

சென்று சின விடை ஏழும் வலி கெடச் செற்று ப்பினர்
மன்றற் குழலி நப்பின்னை தடம் தோள் மருவும் எந்தை
வென்றித் திறனை விளக்கிய மங்கையர் வித்தகனே
என் தன் துயர் ஒழித்து இன்பம் அளிக்க இயைந்து அருளே –46-

மன்றல் -வாசனை
இயைந்து அருள் -இசைவாய்

இலை காய் அருந்தி இரும் கானம் எய்தி எழில் கதிக்கே
அலை சூழ் புவியை வலம் வந்து அனலிடையே அமர்ந்து
நிலை இன்றி ஓடித் திரிவீர் பரகாலன் நேச மிக்கான்
மலைவின்றி அன்னவன் தாள் அடைந்தால் சுகம் வாய்த்திடுமே –47-

அலை -கடல்
அனல் -அக்னி -பஞ்சாக்னி
மலைவு -மயக்கம்

வாயில் இரங்கி வயங்காரம் வீசி வளை சொரிந்து
பயலை யுந்தி யம்மாலை அடைந்து பகர் புவிக்கண்
ஏயனந்தல் விட்டு நின்றனை என் போல் எழில் கலியன்
நேய மிகுந்து வருந்தினை கொல்லோ நெடும் கடலே –48-

வயங்கு -பிரகாசிக்கும்
ஆரம் -முத்து
வளை -சங்கு
உந்தி -தள்ளி
அனந்தல் -நித்ரை

இது கடலுக்கும் நாயகிக்கும் சிலேடை
கடலைப் பார்த்து நாயகி யானவள் –
கடலே திரு மங்கை விஷயமாய் அன்பு மேலிட்டு என்னைப் போல் நீயும் வருந்தினை போலும்
நான் வாய் விட்டுப் புலம்பியது போல் நீயும் ஓ என்கிற கோஷம் இடுகிறாய்
நான் முத்து மாலையை அகற்றியது போல் நீயும் முத்துக்களை வெளியே எறிகிறாய்
நான் என் கை வளையை இழந்தது போலே நீயும் சங்கு இனங்களைச் சொரிகிறாய்
நான் பாயலை -படுக்கையை -நிராகரித்தது போல் -நீயும் -பாயலை -பாயும் அலைகளை -வீசுகிறாய்
நான் மாலை -மயக்கத்தை அடைந்தது போல் நீயும் மாலை -பகவானை -உன்னிடம் கொண்டு இருக்கிறாய்
நான் அனந்தல் -நித்ரையை -விட்டது போல் நீயும் இரவு பகல் ஓயாமல் நித்திரை இன்றிக் கத்துகிறாய் -என்பதாகும் –

கதியாம் கடவுளும் காத்த குருவும் களித்து அளித்த
துதி யாரந்த அன்னையும் அப்பனும் சூழ் தரு சுற்றமும் என்
நிதியாக வந்து எனை ஆளும் கலிகன்றி நீலன் அல்லால்
விதியார் விதிவினைக காணவரோ மெய்ம்மை வித்தகரே –49-

விதியார் -பிரமன்

விளங்கூசலூர் சகடு ஒண் வடம் என்ன என் மெய்யொடு உயிர்
உளங் கூசும் எள்குதல் கண்டும் பாராமுகம் உற்று இருத்தல்
துளங்கூக்கம் அருள் கருணைக்கு மாண்போ சுகம் விளைக்கும்
வளங்கூரு மங்கைக்கு அதிபா எனக்கு வழுத்துவையே –50-

ஊசல்-ஊஞ்சல்
எள்குதல் -வருந்துதல்

வழுத்தவிர் மெய்யடியார் மகிழ்ந்து உள் கொள்ளும் மா மதுரம்
பழுத்தவிர் முக்கனி சக்கரை கற்கண்டு பால் அமுதம்
முழுத்திய பைந்தமிழ் வேதம் உதவிய மூதறிஞன்
விழுத்தவன் மங்கையர் வேந்தன் என்னைக் கை விடான் இனியே –51-

அவிர் -விளங்கும்
விழு தவன் -மேலான தவத்தை யுடையவன்

விரவிய தேசும் வியன் பொறை யோடு விழுப் புகழும்
பரவிய ஞானமும் திண்மையும் வெற்றிப் படைக்கலமும்
திரவியமும் பெருகும் தாரணியைத் திருத்த வந்த
உரவியனார் திரு மங்கையர் கோன் துணை உற்றவர்க்கே –52-

உலகை வருத்தும் கொடும் கலி யாட்சிக்கு ஒடுங்கி நித்தம்
அலகை எனத் திரிந்து அல்லல் கடற்குள் அழுந்தும் என்னை
இலைகைக்கிய நின்னடியர் இனத்துள் எய்த அன்பர்
திலக திருமங்கை நாயக செய்ய அருள் ஈது ஒழித்தே –53-

அலகை -பேய்

தீதறச் சிந்தையில் தூய்மையும் வாயினில் செம் மொழியும்
ஆதரித்தே அறியேன் பாவியாகி அரும் துயரில்
வேதனை ஆர்ந்தனன் வேங்கட நாதனை மேவித் தொழும்
போத எழில் பரகால எனையும் புரந்து அருளே –54-

புதல்வரும் பூங்குழலாரும் புவியும் பொருளும் என்றே
நுதலி இளைக்கு நமக்கு நெஞ்சே கதி நோக்கின் எவர்
உதவுவர் இன்றே கலிகன்றி ஒண் கழல் உற்று இறைஞ்சின்
பதவி உண்டாம் உய்ய நன்கு அவன் கீர்த்தி பரவுவமே –55-

பற்றுக பற்றிலன் பற்றினை என்னும் பணியதனை
நற்றுணையாக நமக்கு விளக்கிய நான் மறையும்
கற்றவனால் இக்கடி நகரான் கலிகன்றி மலர்ப்
பொற் திருப்பாதம் இதய அம்புவத்தில் பொருத்துவமே –56–

பணி -கட்டளை
கடி -காவல்

பொற்புறு முத்தமிழும் மறை நான்கும் புகழ் அறத்தின்
வற் புறு மார்க்கம் கண் முற்றும் தெரிந்தவன் வாள் கலியன்
அற்புத நாற் கவியாளன் நன் நாமம் அறிந்து கல்லார்
நற் பதம் எய்தார் ஒருவார் பிறவி நடலையுமே –57-

ஒருவார் -நீங்கார்

நலனறு நீசச் சமயங்கள் ஒழிந்தன நாரணனை
வலனுறக் காட்டும் சுருதி மகிழ்ந்தது மங்கையர் கோன்
பொலனுறு செந்தமிழ் வேதம் பொலிவுறப் பூ வுலகில்
பலனுறு மெய்யடியார்கள் செழித்துப் பரவினரே –58-

பவக்கடன் நீந்திப் பராங்கதி பெற்று உயும் பாக்யமாம்
தவக்கடலில் இளைக்காமல் சகத்தில் சலனமுறும்
அவத் தொழில் மேல்கொண்டு அலையும் நெஞ்சே அருள் மாரி அம் பொன்
நிவக் கழல் என்னும் புணையை யடைய நினைகுவியே – 59-

நில உலகில் பிறக்கும் வேலை நீங்கில நீலன் என்னும்
நலன் அமர் ஆலி நன்னாடன் கலிகன்றி நாந்தகக் கைத்
தலன் அருள் ஒண் தமிழ் தங்கு மனமிலந் தாபம் இன்றி
வலனுற வாழ்வது எவ்வண்ணம் மனமே வகுத்துரையே –60-

வங்கக் கடலை மதித்த முதத்தை வரர்க்கு உகந்து
பங்கிட்டு அருளும் பரமற்கு இனிய பராங்குசற்குத்
துங்க விழாவொடு அவன் தரும் வேதம் துலங்க வைத்த
மங்கைக்கு அரசே அடியேன் மனப்புன் கண் மாற்றுவையே–61-

மதித்தல் -கடைதல்
துங்கம் -பரிசுத்தம்
புன் கண் -துன்பம்
மாற்றல் -நீக்கல்

மான் விழி மைக்குழல் வாணுதல் வேய் தோள் மதி வதனத்
தேன் மொழியார் மயலில் சிக்கி வீழ் பொருள் ஓடி அந்தோ
நோன்மை கெடப் பலர் ஏச நின்றேன் மங்கை நோற்க வந்த
கோன்மையனே அடையார் சீயமே நற் குண அம்புதியே -62-

குண நலம் கொண்டார் குறை கழல் நாடேன் குவலயத்தில்
பண நலம் கொண்டார்க்கு அடிமையாய் ஓர் நற் பயனும் உறா
வண நலம் குன்றி வருந்தி யுன் தாள் மலர் வந்து அடைந்தேன்
மண நலம் சேர் பொழில் மங்கை மன்னா நல் வழி அருளே–63-

வசுந்தரை மீது அடியேன் பால் வரவு நல் வார்த்தை சொல்லிப்
பசுத் திருப்பாதம் என் சென்னியில் சூட்டிக் கண் பார்த்து மனம்
கசிந்து உரை விண்ணப்பம் கேட்டு அருள் செய்யவும் காதலிப்பாய்
வசந்த முள்ளிச் செழுந்தார் வயங்கும் புய மாதவனே –64-

மா தவத்தால் பெற்ற என் மகள் நின் முள்ளி மா மலர்த் தார்க்
கே தவம் செய்து உடல் எய்துலாள் வேறு பெண் எங்கட்கிலை
நீ தயை கூர்ந்து அருள் செய்வாய் விரைந்து நெடும் புகழ் சேர்
ஏதமில் மங்கையர் வாள் கலிகன்றி எனும் துரையே –65-

எங்கள் அரங்கற்கு தொண்டர் அடிப் பொடி ஏந்தல் கொண்ட
துங்க மதிள் பணியின் குறை தீர்த்தவன் துய்து அருள் பெட்ரா
எங்கள் நெடும் புவிக்கு இன்னருள் செய்த யாரும் தவனே
மங்கையர் கோனே அருள் மாரியே உனை வாழ்த்துவனே –66-

வாய் வுன்னை அல்லால் வாழ்த்தாது உன் தாளே வணங்கும் தலை
ஆயும் உன் திருப் புகழே செவி கேட்கும் கண் ஆர்ந்து உனையே
நேயம் கொள்ளக் காணும் வண்டு அறை மா நீர் நெடிய மங்கைத்
தூயவ நால் நிகமத் தமிழ் தந்த சுபா கரனே –67–

சுபா கரன் -சுபத்தை யுடையவர்

சுகா நந்தமாய் நெடியோற்கே உயிர்கள் ஓழும்பு என்று உணர்
விகாத மில் ஞானம் தனால் ஐம் பொறி வாசல் வேய்ந்த வன் தாள்
மகாரினடைந்து இரு பற்று இன்றி இருத்தலே மா தவம் காண்
தகாது பிறிது என்றனன் மங்கை வேந்தன் தரா தலத்தே –68–

தொழும்பு -அடிமை
விகாதம் -வேற்றுமை
வேய்தல் -மூடல் -அடைத்தல்
மகாரின் -பிள்ளைகளை போலே

தனம் கொண்ட பான் மணம் வாய் நீங்கிற்றில்லை யத் தார் குழலோ
வனம் கொண்ட என் கரத்தின் அணையேயினும் வர்த்திப்பதும்
மினுங்குந்த மங்கை மன் கண்ட ஊர் எல்லாம் விலை கொளும் அக்
கனங்கொண்ட வாள் விழியாள் சென்றது எங்கன் கடுஞ்சுரமே –69–

தனம் -கொங்கை -முலை
குந்தம் -வேலை
சுரம் -பாலை வனம்

ககனத் திருவிடமோ வட வேங்கடக் கல்லிடமோ
புகனற் கமலத் தடவிடமோ பணிப் பெண்ணிடமோ
சுக மிக்குறு குறையற் பதியா மங்கைத் தோன்றல் வந்த
உகப்பார் இடமோ விடங்காவின் நின்ற ஒருவருக்கே –70-

பணி -பாம்பு
பணிப்பொன் இடம் -நாக லோகம்

ஒரு வழி நில்லாது உழலும் மனம் தனை ஓர்ந்து அடக்கிப்
பொரு வறு மங்கையர் கோன் பரகாலன் தன் பொற் பாதத்தை
மருவுறு வைப்பின் இகத்தும் பரத்தும் மகிழ் வுறலாம்
கரு வரு மார்க்கம் நமைத் தொடராது கடந்திடுமே –71–

கதி தரும் அஷ்டாக்ஷர மந்த்ரத்தைக் கண்டு கொண்டு
மதி தரும் தூய நலத்தை அடைந்து மயர்வு ஒழிந்து அத்
துதி யுறும் பேற்றை நமக்கு அறிவித்தான் சுகம் தழைத்து
வதி தர வாள் கலிகன்றி குறையலூர் மன்னவனே –72-

வதிதர -வாழ

மன்னிய வேம்பின் புழு வேம்பினை விட்டு மற்று அருந்தா
துன்னிய நாயேன் உனது தாள் அன்றி வேறு ஓன்று உகவேன்
துன்னிய வென் சோர்வு அற அருள்வாய் நற் சுடர் அறிவே
மின்னிய வேல் வலவா பரகால விசாதரனே –73-

விசாரதன் -ஞானவான்

விதித்த வுருவார் பிறவியில் இன்னும் வியன் உலகில்
உதித்து நெகிழ என்தனை எங்கு நீக்குதியோ என யான்
மதித்து வெருவி இரு பாடு எரி கொள்ளி வைகு எறும்பில்
பதைத்து உள் உருகா நின்றனன் பார் மங்கை பார்த்திபனே –74-

பாழ்த்த பிறவியில் இன்னம் எனை எங்கு பாரிடத்தே
வீழ்த்தி விடுவையோ என்று மருண்டு வியாளத்துடன்
காழ்த்த ஒரு கூரையின் கண் பயிலவே கட்டுணல் போல்
வாழ்த்து பரகால வாடுமென் வாட்டத்தை மாற்றுவையே–75-

வியாளம் -புலி

மாற்றமுள யாகிலும் சொல்லுவன் மக்கள் மா நிலத்தில்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று உளம் தொல்லை யுற்றே
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அடியன் நான் அஞ்சுகின்றேன்
தேற்றி அருள்வாய் அருள் மாரியாம் எங்கள் தேசிகனே –76-

தேற்றமுடைய திருவாலி மைந்த சிதா நந்தனே
சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கடிண் புவியில்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சித் தொல் கடலில்
காற்றத்திடை சேர் கலவர் மனம் போல் கலங்குவனே –77-

சிதா நந்தன் -ஞானாநந்தன்
கலவர் -கப்பலோட்டிகள்

கள்ளர் மரபில் உதித்து மெய்ஞ்ஞானம் கடைப் பிடித்தோய்
கொள்ளக் குறையா இடும்பைக் குழியில் குமைய நெஞ்சம்
தள்ளிப் புகப் பெய்தி கொல் என்று அதற்கு அஞ்சித் தத்தளித்து
வெள்ளத்திடை சேர் நரியினம் போன்று விதிர்த்தனனே –78–

விடை ஏழ் தழுவும் விமலற்க்கு இனிய நல் வித்தகனே
மடை நின்று அலரும் வயலாலி மைந்த மா மங்கை யன்பா
இடையன் எறிந்த மரம் ஒத்து இராமல் என்னை அணுகி
அடைய அருள் புரிவாய் யுன் அருளானவிர் தரவே –79-

அவிர் தர –விளங்க

அவிரும் புரவியும் தேரொடு காலாள் அணி அமைந்த
சிவிகையும் சேனைத் தொகையும் உள பெரும் திண்ணியனே
அவியை நிகர்த்த இன் சங்கத்தமிழ் இன்றனன் அற்புதமார்
கவிகள் ஒரு நான்கு நல்கும் கலிகன்றி காத்தருளே –80–

அவிரும் -விளங்கும்

காத்தற்குத் தானே கருதாது இருப்பினும் காதல் மிகப்
பூத்து உன் தன்னையே நினைந்து நைவேற்கு ஒரு பூங்கணையான்
காத்திரம் கொண்டு வலி செய்ய எங்கன் கமித்திருப்பேன்
கோத்த முள்ளிக் கொழும் கண்ணி யம் மங்கையர் கோமகனே –81-

காத்திரம் -ஷத்திரம் வைராக்யம்
கமித்தல் -பொறுத்தல்

கோதற்ற பண்ணும் பரதமும் கல்வியும் கோக் கவியும்
ஓதற்கு அடியேன் உறும் போது எளிதில் உதவ அருள்
தாதுற்ற முள்ளி யம் தாராடு மார்ப தயா நிதியாய்
வாதற்று எழுதா மறையைத் தமிழ் செய்த வண்மையனே –82-

வண்ணப் புவியொடு வானும் புனலும் வளி கனலும்
எண்ணும் எழுத்தும் எக்காலத்தும் மாறாது இறைஞ்சும் அன்பர்
கண்ணும் கருத்தும் களிக்க வரும் பரகால அருள்
பண்ணும் செயலும் பழகும் குணமும் பயன் உறவே –83-

பண்ணின் மொழியார் பைய நடமின் பாடு அடைந்து
கண்ணும் சுழன்று இழி பீளையும் ஈளையும் கண்டீர் என்று
துண்ணென ஏசுமுன் துக்கச் சுழலை துணிப்பதற்கு
விண்ணும் பரவு நம் மங்கையர் வேந்து உரை மெய்க் கொண்மினே –84-

களை -கோழை
சுழலை -சூழ்ச்சி

மெய்மை இழந்து விரி குழலார் வலை மேவி என்றும்
பொய்மை புகன்று புரை பல செய்தி வண் புன்மை யுற்றேன்
நொய்மை கெடக் கடைக் கண் பார்த்து அருள் உண்மை நூல் பயன்றோ
ஐமை முகில் தங்கும் அம் பொழில் மங்கைக்கு அதிபதியே –85-

அன்னைக் கலமுத்தனையைக் குனி கோன் அணையைத் தரும்
அன்னைக்கும் அல்லவே மன்னனைக் கன்றி யடுத்து அளித்த
பின்னனைக்கும் உதவாப் புளால் எய்தினன் பீழை யந்தோ
துன்னிடர் தீர்த்து அருள் மங்கை வரோதய சோபிதனே –86-

முத்து அன்னை -கரும்பு
குனி -வளைக்கும்
கோன் -மன்மதன் -இவன் அன்னை -ஸ்ரீ லஷ்மி -அவள் அன்னை -கடல்
மன் அன்னை -ஸாஸ்வதமான தாய்
அடுத்து அளித்த பின் அனைக்கும்-அடுத்துக் காத்த பிற்பட்ட தாயான காகத்திற்கும்
இதற்கும் உதவாத பட்சி -குயில் -இந்தக் குயிலால்
பீழை -துன்பம்

சோதனை செய்வது நீதம் அன்று என் தன் உரி சொழிய
வாதரம் கூர் அன்னையில் புரந்தாள்வது அழகு கண்டாய்
பூதலத்தே அரண் புக்கவர் தம்மைப் புறக்கணித்தால்
சூது என் எவ்வாறு உய்குவேன் பரகால நீ சொல்லுவையே –87-

சொல்லிய மேம் பொருள் செல்ல விட்டு உண்மை துணிந்து உணர்ந்து
நல்லியலாம் பரி சோர்ந்து கொண்டு ஐம்புலன் நன்கு அடக்க
வல்லவர் போற்றும் பரகால இவ்வேளை வந்து எனது
புல்லறிவு வேக அருள்வாய் ஒரு வரம் புங்கவனே –88-

புகலும் திறம் கொண்டு நின் கழற்குத் தொண்டு புல்கி யற்றும்
பகரஞ் சிறிதும் இல்லாக் கொடியேன் எனைப் பார்ப்பவரார்
திகழும் கருணைக் கடலா நினை யன்றிச் சீர்மை என்றும்
மிகு நல் திரு மங்கை வேந்தே இணை யறு வித்தகனே –89-

பகரம் -விளக்கம்

விறல் சேர்ந்த சித் அசித்தோடு ஈசன் என்று விளம்புறுமம்
மிறல் சேர்ந்த தத்துவ மூன்றின் முடிபை விழைந்து உணர்ந்த
திறல் சேர்ந்த மெய்த் தொண்டர் சிந்தையின் ஆளும் திகழும் எங்கள்
அறல் சேர்ந்த நீர் மங்கை வேந்தே எனையும் நன்கு ஆண்டு அருளே –90-

அறல் -கரு மணல்

அம்பர மூடறுத்து ஓங்கி உலகை அளந்த பிரான்
செம்பத மா மலர் சென்னியில் ஏந்தும் திருத் தொண்டரே
பம்பரம் போல் சுழலும் பிறப்பின் பெரும் பற்று அறுப்பர்
நம்புமின் என்ற பரகாலன் நங்கட்க்கு ஞான வைப்பே –91-

ஞாலம் தனில் நங்கைமீர் நீவீர் பெண் பெற்று நல்கினீர் யான்
சீலம் பெறப்பெற்ற ஏழையை என் சொல்வன் சித்தம் ஒத்துக்
கோலம் பெறு திருவாளன் என்றும் வேல் என்றும் கோது அகன்ற
வாலம் பெறும் ஆடல் மா என்றும் வாய் விட்டு வாழ்த்துவனே –92-

வாலம் -வால்

வாழ்ந்தார்கள் எவர் கொல் முற்றும் வழு வின்றி வையகத்தில்
சூழ்ந்து ஆலி நாடன் தன் தொல் சீர் புகழ்ந்து அவன் தூ மலர்த்தாள்
தாழ்ந்து ஆவி யாகம் பொருள் தந்து நாளும் தனி அன்பினில்
ஆழ்ந்தார்கள் அன்றி அறைமின் அடு விழவாது அறிந்தே –93–

அறியாது பாலகனாய்ப் பல தீமைகள் ஆதரித்தேன்
நெறியாதும் இன்றிப் பெரியவனாய பின் நீண் நிலத்தில்
குறியாமலே பிறர்க்கே உழைத்து ஏழையாய்க் குன்றி நின்றேன்
வெறி யார்ந்த முள்ளி யம் தண்டார்ப் பரகால விண்ணவனே –94-

விண்ணார் சிகரத் திருவாலி நாட வினை வயத்தேன்
மண்ணாய் புனல் எரி காலொடு மஞ்சுலாம் வானகமாம்
புண்ணார் உடலில் புலம்பி நன்கு எய்த்துப் புலர்ந்து ஒழிந்தேன்
அண்ணா அளித்து அருள் நின்னை அடைந்தேன் அரண் எனவே –95–

அருள் அகத்தில் இல்லாத புல்லரைப் பாடி யலுத்து வந்த
தெருள் அறிவாளர் உளக் கொதிப்பில் கொதி செம்புலத்தை
மருள் விழி மானே கடந்து விட்டோம் இதோ வான் தழுவும்
பொருள் செறி நல் திருவாலி எனும் பதி போந்தனமே –96-

புலம் -பாலைவனம்

போதத் திரு மங்கை வேந்தே நினது புகழ்க் கடலில்
தீதற்று அடியேன் திளைத்து உய்யுமாறு திருவருள் செய்
வேதப் பொருளை வியன் தென் மொழியில் விரித்தவனே
காதல் குமுத வல்லிக்கு உகப்பாம் அரும் பேகனியே –97–

கலங்கா மனம் கொடு நின்னை எந்நாளும் கருத்து இருத்தி
நலம் காண நாயேற்கும் வாய்க்கும் ஒரு திரு நாளும் உண்டோ
துலங்காத தீ நெறியாளரைச் செற்று அருள் சுந்தரனே
வலம் காணும் வாள் படை மங்கை மன்னா எங்கள் வான் கதியே –98-

வார் இருளாய வையத்தை வயங்க வைக்கும் இரவி
ஓர் பொருளாகப் பரந்தது தான் பொதுவுற்றது போல்
தேர் அறிவாளன் எம் மங்கையர் கோன் அருள் சேர்ந்த பின்னோர்
ஏர் பரன் உண்டு என்று எலாச் சமயங்களும் இன்புற்றவே –99-

வார் -நீண்ட

இரும் தமிழ் ஆரணம் கீர் வாண வேதம் எழுத்து எட்டு எனும்
பெரும் திரு மந்திரம் ஐம்படை உம்பர் பிறங்கறவோர்
அரும் திரு நாதனோடு ஆழ்வார்கள் மண் விண் அருள் மாரியாய்
வரும் திரு மங்கை மன் வாழ்க என்றும் பெற்று வண் திருவே –100–

பிறங்கு -விளங்கும்படியான

————-

பரகாலன் பாசக் கயத்தார்ப் புணாகருள் பாரெனவம்
பரகால னாந்திரு மாலவ னெங்கட் படமையினிம்
பரகால னென்றி யவர்க்குரித் தாமுனைப்பற்றி னஞ்சீர்ப்
பரகால னான்மறை யாறங்க மோ துமெய்ப் பாவலனே.

பரகாலன்(யமன்), ஆர்ப்புணாது அருள் பார்(பாசக் கயிற்றால் கட்டுப் படாமல் இருக்க அருள்வாய்),
அம்பரக் காலனாம் திருமால்(ஆகாயத்தை அளந்தப் பாதத்தையுடையத் திருமால்),
இம்பர காலன் அன்றி அவர்க்கு உரித்தாம் உன்னை- இவ்வுலகில் அக்காலனுக்கு உரித்தாகாமல்
விஷ்ணுவிக்கே உரித் தானப் பரகாலனான உன்னைப் பற்றினேன், நான்மறை ஆரு அங்கம் ஓதும்

(நான்மறைக்குச் சமமான, திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி
ஆகியவற்றுக்கு 6 அங்கங்கள் போல் அமைந்த பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய 6 நூல்களை அருளிச் செய்தப் பரகாலன்
என்ற திருமங்கையாழ்வாரைத் தாள் பணிந்துச் சேவிக்கிறேன், என்கிறார்.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகாலர் திரு வைபவ மாலை –ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் —

November 4, 2021

வள மலியும் கலி யுகத்தில் வாய்ந்த நள வருஷம்
மன்னு முயர் கார்த்திகையில் குரு வாரம் தன்னில்
கிளர் ஒளி சேர் பவுர்ணமியில் கிருத்திகை நக்ஷத்ரம்
கெழுமிய தோர் சுப தினத்தில் விழுமியர் கொண்டாடத்
தளர்வறு சீர் கள்ளர் குலம் தனை யாளும் கோமான்
சாந்த மிகு நீலன் எனும் தந்தை மகிழ்ந்து உடலம்
புளகமுறபி புவியில் வரும் பொரு வறு சார்ங்க அம்ச
பூதன் எனும் கலி கன்றீ புங்கவர் பெம்மானே –1-

ஆர் கலி சூழ் உலகு உய்ய அவதரித்த பெருமாள்
அமுத மொழிக் குமுத வலிக்கு அன்புடைய பெருமாள்
சீர் கொள் திரு மணக்கொல்லை சேர்ந்து உறையும் பெருமாள்
திரு அரசத் தரு நிழலில் சென்று அமரும் பெருமாள்
ஏர் கொள் வயலாலி மணவாளனைக் காண் பெருமாள்
எதிர்த்து அவன் நற் காலின் விரலைக் கடித்த பெருமாள்
பார் கொள் சுமை தூக்க அரிதாய்ப் பரிவடைந்த பெருமாள்
பங்கய நாபன் கருணைப் பரிசு பெறும் பெருமாள் –2-

வட்ட உலகங்கள் அருள் மந்திரம் கொள் பெருமாள்
வாசவன் ஈசன் பரவு மந்திரம் கொள் பெருமாள்
சிட்டர் பலர் முனிவர் எனும் மந்திரம் கொள் பெருமாள்
திரு வட்டாஷரம் எனும் மந்திரம் கொள் பெருமாள்
கட்டெழில் சேர் வயலாலி மணவாளப் பெருமாள்
கருணை புரிந்து உபதேசம் செய்ய மகிழ் பெருமாள்
இட்டமுடன் கலியன் எனத் திருப் பெயர் கொள் பெருமாள்
எமை யாள வந்துதித்த நாலு கவிப் பெருமாள் –3-

பேர் அழகால் நீலன் எனப் பேர் அடையும் பெருமாள்
பேச அரிய கலை கள் எல்லாம் பெற்று உணரும் பெருமாள்
ஸூரரனை வரும் நிதமும் தொழுது ஏத்தும் பெருமாள்
சோழ நிருபன் புகழத் தொழுது ஏத்தும் பெருமாள்
சீர் அணவும் திருவாளன் மா வூரும் பெருமாள்
திவ்ய தேசங்கள் வலம் செய்து வரும் பெருமாள்
தார் அணவும் தாடாளன் தயை கூறும் பெருமாள்
சம்பந்தன் கை வேலைத் தான் பறித்த பெருமாள் –4-

நேச மிகு நீரில் நடப்பான் நிழலில் மறைவான
நெருங்கிய தோலா வழக்கன் உயரத் தொங்கிடுவான்
ஏசறு தாளூதிடடுவான் சாயை பிடிப்பான் என்று
ஏற்றமுறு தோள் துணைவர் நால்வரையும் கொண்டான்
ஆசு மதுரத்துடன் விஸ்தாரம் அரும் சித்ரமாகும்
ஒரு நாற் கவியும் அணி பெறவே சொல்வான்
வீசு புகழ் சேனையர் கோன் மெல்லடி மேல் விடுவான்
வீறுறு சிந்தனைக்கு இனியான் மெய்யருள் சேர் பெருமான் –5-

கலியன் அருள் மாரி கலி கன்றி கலி த்வம்ஸன்
கவி லோக திவாகரன் நற் பரகாலன் நீலன்
நலனுறு ஷட் பிரபந்தக் கவி யாலி நாடன்
நாலு கவிப்பெருமாள் நா வீறுடைய பெருமாள்
வலி கொள் கலி வைரி யடையார் சீயம் வையம்
மதி யரட்ட முக்கி சதுஷ் கவி மங்கை மன்னன்
குலவு நறும் கொங்கு மலர்க் குழலியர் வேள் எனும்
கொற்ற வேலுற்ற திருமங்கை யாழ்வாரே — 6-

————-

நேரிசை வெண்பா

திருவாலி நாடன் திருக் கலியன் மால் பால்
ஒரு வாள் வலியோச்சி ஒண் மந்திரமாகும்
எட்டெழுத்தும் கொண்ட இணையில் பரகாலன்
கட்டழகில் ஆழும் என் கண் –1-

கண்ணார் கடல் வண்ணக் காரணனார் தான் களிக்கத்
திண்ணார் மணக்கொல்லை சேர்ந்து இருந்து
மண்ணார் இழி பிறவி நீங்க எதிர் உறுவார் தம்மை
வழி பறித்த வேல் வேந்தே வா –2-

வாடினேன் வாடி வருந்தினேன் என்று எடுத்துத்
தேடிப் பெரிய திருமொழியைப் பாடி
நெடு பிறவி நஞ்சுக்கு நீள் அமுதமாக
இடும் கருணையார்க்கு உண்டு இவண்–3-

வாழ்த்தும் மலர் வாயும் வாண் முகமும் வண் பொருட்காத்
தாழ்த்து வலச் செவியும் தார் மார்பும் ஆழ்த்தும் அருள்
கண்ணும் கலியன் கழல் காலும் கை வேலும்
எண்ணும் தினம் எனதுளமே –4-

ஆலி நாடு ஈதோ வரசீது ஈதோ சீர்
ஏலும் மணக்கொல்லை ஈதோ தான் நீலனார்
நே மாற்றும் மாலை நெருக்கியவன் எட்டு எழுத்தை
ஏமாற்றிப் பெற்ற இடம் –5-

———

அடியார்கள் ஈடுபாடு

எச்சரிக்கை –பராக் –ஸ்வாமி பராக்
தாரக போஷக போக்ய அநு குணாதி தேவா மோதா
தராதலோத் தாரணா வதாரா சார்ங்க அம்ச பூதா
ஸமான அதிக ரஹித ஸுந்தர அங்க விநோதா
ஸர்வ துன்மத கர்வ நிவாரணா நந்த போதா
ஸர்வ அபீஷ்ட பிரத உபாய தனி மந்த்ரம் எய்து நீ தா

சடகோப வாங்மய தமிழ் மறைக்கு அமுது என ஆறு அங்கம் உதவு மதீ தா
ஸுசீல நெடு வேல பரகால மிகு கோல தனி நீலனாம் ப்ரக்யாதா
தாதோடு வண்டலம்பும் தண் மங்கை நாதா தமிழ் சொலாம் ஸஹஸ்ர வேதா
நல்லிசைக் குமுத வல்லி சமேதா நற் குணாதீதா
நளின மலர்ப்பாதா நாரணனார் உடனாடிய விவாதா

ஏ மங்கை வேந்தே
கண்டல் வேலி மங்கை வேந்தே
காரார் புறவின் மங்கை வேந்தே
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தே
கலி கெழு மாட வீதி வயல் மங்கை வேந்தே

கொங்கு மலர்க குழலியர் வேள் மங்கை வேந்தே
வண்டு பாடும் பைம் புறவின் மங்கை வேந்தே
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தே
வல்லி பொதும்பில் குயில் கூவு மங்கை வேந்தே
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கை வேந்தே

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கை வேந்தே
புல மங்கைக் குல வேந்தே
மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கை வேந்தே
கற்றார் பரவும் மங்கை வேந்தே
பார் மலி மங்கை வேந்தே
சுரும்பார் பொழில் மங்கை வேந்தே

ஜய ஜய எச்சரிக்கை

ஸ்வாமீ -ஸ்ரீ யபதியால் தேவரீருக்கு இடப்பட்ட திரு நாமத்தை கலியன் என்கோ
கல்லின் மலி தோள் கலியன் என்கோ
கல்லின் மன்னு தோள் கலியன் என்கோ
கலங்கல் இல்லாப் புகழார் கலியன் என்கோ
கலையார் பனுவல் வல்ல கலியன் என்கோ

கறை வளரும் வேல் வல்ல கலியன் என்கோ
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை கலியன் என்கோ
காமக் கதிர் வேல் கலியன் என்கோ
கை இலங்கு வேல் கலியன் என்கோ
காய் சின வேல் கலியன் என்கோ

கூரார்ந்த வேல் கலியன் என்கோ
பார் அணிந்த தொல் புகழ்க் கலியன் என்கோ
கூர் கொள் நல்ல வேல் கலியன் என்கோ
மான வேல் கலியன் என்கோ
ஊனார் வேல் கலியன் என்கோ

ஏ மங்கையர் தலைவா
மன்னு மா மாட மங்கையர் தலைவா
கன்னி நன் மாட மங்கையர் தலைவா
மலை குலா மாட மங்கையர் தலைவா

கலி கன்றீ
வாள் கலி கன்றீ
கற்ற நூல் கலி கன்றீ
ஏந்து எழில் தோள் கலி கன்றீ
காமரு சீர்க் கலி கன்றீ
வடி கொள் நெடு வேல் வல்ல கலி கன்றீ
பராக் பராக் எச்சரிக்கை –

————

திருப் பாதாதி கேச வர்ணனம்

நாயந்தே
ஜய விஜயீ பவ
நாயந்தே

1-திருவடி
குளிர்ந்து மிளிர்ந்து
நீரில் பிறந்து கொழுத்துச் செழித்துத் தழைத்துப் பழுத்துக்
குண திசைச் சிகரத்து அணை தருகின்ற ஆதித்தியனுடைய சோதிக் கிரணத்தால் விகசித்து
சிவந்த இதழ்களை யுடைத்தாய்
உவமிக்கத் தன்னிலும் உயர்வாகக் கிடைப்பது வேறே ஓன்று இன்றி விளங்கி
நிறத்தில் பவளத்தையம் குவளை யாக்கத் தக்க
தேவரீரது திருப் பாத கமலங்களின் போக்ய அதிசயத்துக்கு ஓர் போலியாய் அமைந்துள்ள கந்தமே
யரவிந்தப் பூவை அதன் ஸர்வ கர்வ பங்க அர்த்தமாக
உமது இணைத் தாள்களின் கீழ் ஒதுக்கி
அதன் சிரஸ்ஸின் மீது வெற்றி குலவப் பற்றி நிலவும்
திருக் கழல் களின் அழகும்

2- திருப் பாத விரல்
விற்பனர் பரவும் அற்புதம் வாய்ந்த கற்பகப்பூவின் பொற்புறும் அரும்பினுடையவும்
ஈரம் நிறைந்த நீரில் உறைந்து துவளும் பவளக் கவினார் கொடியினுடையவும்
ஒருமித்த காந்தியை மாந்தி துதி யுறும் கதிரவன் விதி இளம் சுடரினை நிகர்த்து
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்தித் பதித்துத் தலை பெய்தால் போன்று
ஒத்திட்டுள்ள திருப்பாத விரல்களின் அழகும்

3-திருப் பாத திரு நகம்
அந்தியம் போதினில் அந்தரத்து இருந்து சுந்தரச் சுடர் தரும் சந்த்ரன்
வடிவில் சிறுத்தும் பெருத்தும் நிற்பதோடு
என்றும் ஒன்றானதன்றிப் பத்தாக இராமையாலும்
உவமைக்கு இவ்விரண்டிலும் சுதீரியது ஓன்று எளிதில் அகப்படாமையாலும்
இவற்றையே ஒருவாறு ஒத்து ஒளிரும் திருவடி விரல்களின் திரு நக அழகும்

4-திருப்புற வடிகள்
முழுது உலகத்தும் பழுதற நிலவத் தொழுதகையாளர் நூல் எழுது புத்தகத்தை
ஏய்ந்து செம்மை வாய்ந்து விளங்கும் புறவடியின் அழகும்

5-திருக் கணைக் கால்
வம்பர் தம்முயிரை யும்பர் நாட்டுய்த்து அவர் வெம்பு மெய்யதனைப் பம்புநாய்
நரிக்கிடும் அம்பறாத் துணியை ஒருவிதம் மருவிடும்
தீங்கு அணையாத பூங்கணைக் காலின் அழகும்

6-திருத்தொடை
உவரி சூழ் தரும் அவனி முழுமையும் தவறுறா வகை தாங்கி நிற்கும்
இசைக்கு உரித்தாகிய திசைக்கரி துதிக்கையை
விதியிலாது எதிர்த்து வதி தரும் செய்ய திருத்தொடை அழகும்

7-திரு உந்தி
வலம் சுழித்தோடு நீர்ப் பொலம் சுழி அதனையும்
புகழறா மணம் கமழ் மகிழ மா மலரையும்
சிறிது நேர் எனக் கருத இலங்கும் திரு உந்தி அழகும்

8-திரு மார்பு
பாரொடு வானும் பேரொலி யார்த்திதன் நேரிலை எனப் புகழ் சீரினைப் பெற்ற
மேரு மால் வரையும் என்னே என்னே என்னலாம் படி
நன்னயப் பொன்னணி மின்னிற்றுன்னப் பரந்து சிறந்து தெண் திரைப்பூமியாம் பெண்டு
நாண் கொண்டிட விளங்கும் திரு மார்பின் அழகும்

9-திருக் கரம்
செயிரிலாக் குண திசை ஐரா வதத்தின் அந்த மிகுந்த தந்த நடுவில் தங்கி
மாண்பொடு தொங்கி நெடும் கரத்துடன் போரிட்டுப் பொலிவுற்றுக்
கெழு முறு முழம் தாளின் கீழும் நீண்டு ஒளிர்ந்து
மாமேகம் என்பதைக் காட்டுவது போல்
நெஞ்சுக்குச் சரியாகச் சிறிது சாய்த்து அஞ்சலித்த திருக்கையின் அழகும்

10-திருக் கை நகங்கள்
சிந்தா வளனுறு செந்தாமரைப் பூவின் பக்குவ மொக்குகளை ஓக்கினும் ஒக்கும் என்று
இக் குவலயம் தொழும் திருக்கை விரலின் திரு நக அழகும்

11-திருப்புயம்
மிகை மிக முந்தப் புகை விழி யுந்த வகை வகை பந்தத் தொகை கொடு வந்த பகைவர்களின் வலி சிந்த
நகை புரிந்து அவர் தம் சொந்த உயிர் தனைத் தந்த வீரம் பொருந்தி
அத்துணை உயர்ச்சியும் அமை தரு திரட்சியும் தனக்கு இன்மையால்
விரிந்து ஓங்குகின்ற பொன் மலையும் ஈடு அன்று என மனம் சரிந்து
ஓங்கிக் குன்றப் பொலிந்து உருண்டு திரண்டு விளங்கும் திருப்புய அழகும்

12-திருக்கண்டம்
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய்
ஊழி யான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய அசுரர் நடலைப் பட முழங்கும்
தோற்றத்து ஏற்றம் வாய்ந்த ஸ்ரீ பாஞ்ச சன் யாழ்வான் இருக்கப்
பிறிது ஒரு சங்கும் தெரி தரும் கமுகும் சரியென முன் வரச்
சரி தரும் பொலிவினை யுடைய திருக்கண்டத்தின் அழகும்

13-திரு முகம்
கூம்பிய ஆம்பலும் சோம்பற மேம்படத் தெளி விட்ட ஒளி வட்டம் சூழ்ந்து
தறை இருள் நீக்கும் நிறை கதிர் மதியும்
கறை யுண்டு கரும் பாம்பால் குறை யுண்டு சிறிது நாள் வளர்வுண்டு சிறிது நாள் தளர்வுண்டு
நின்றமையாலே தாழ்ச்சி எய்த
மாட்சி எய்தி அப்பொழுது அலர்ந்த அரவிந்தத்தையும் எப்படி ஒக்கும் என்று எவரும் இசைக்க நிவர்ந்து
எதிர் யுறுவோரை மயலில் இருத்தும் பேர் அருள் பொழியும் திரு முக அழகும் –

14-திருச்செவி
அலை யுறும் புலை மனம் நிலை பெறும் வலை எனச் சுருண்டு உருண்டு நீண்டு மநோ கரமாய்
விதி சிவாதியர் எவரும் துதி கொளாதி மறை ஒரு நான்கும் உணர்தற்கு அரிய
உணர்வு எனும் பெரும் பதப்பொருளைப்
பேர் அறிவு ஐந்தையும் ஓர் அறிவாக்கி யுணர்ந்து கொண்ட பெரு மிதத் திருச்செவி அழகும்

15-திருவாய்
சீருண்ட நீருண்டு நிவந்து நிவந்தாலும் பன்னுலகு அனைத்தையும் தன்னகப் படுத்தும்
மன்னமுதூறும் இன்னுரை இயம்பும் பேர் ஆற்றலும்
சரி செயும் தந்த வரிசையோடு அந்த வெள்ளென வெளுத்த ஒள்ளிய திரு முறுவலும்
தான் எய்தப் பெறாமையால் மா மலரான தாமரையே தலை நாணுமாயின்
நிவரும் பவளமோ நேர் எனப் போரிட வல்லது என்று பொலிந்து நின்ற திருவாயின் அழகும்

16-திரு மந்தஸ்மிதம்
அண்டி வரும் தொண்டக் குழாங்களை அன்புடன் நோக்கும் ஆனந்த விளைவால்
அர்ச்சாவதார நிலையை அதிக்ரமித்து விம்மி வெளி விழும் அவ்யக்த மதுர மந்த ஹாஸத்தின் அழகும்

17-திருக் கபோலம்
துளங்கும் பளிங்கு மண்டலங்கள் இரண்டைத் துகளறக் கடைந்து
துலக்கித் துடைத்துச் சேர்த்து வைத்தது போலே
பள பள என்று ஒளிரும் திருக் கபோல அழகும்

18-திரு மூக்கு
பண்பொடு தொங்கும் சண்பக மலர் என முனை மலர்ந்து உயர்ந்து அடி மிக ஒடுங்கி
உபய துவார சோபிதமாய் நிலவி
இந்த்ர நீலக் கொழுந்தையும் மரகதச் சோதியையும் புறக்கணி நிறத்ததோ இது எனக் கருதி
ப்ராந்தி ஏந்தி ஓந்தியானது இந்த்ரகோபத்தின் மேலே தாவி மேவி
நீண்டு வந்து நிமிர்ந்து இருக்கிற தோற்றத்தையும் மாற்றத் தக்க ஏற்றம் பெற்ற
கோல நீள் கொடி மூக்கின் அழகும்

19-திருப்புருவம்
குன்று எடுத்து ஆயர் மாதர் குரவை கொண்டு
ஒரு விளாவில் கன்று எடுத்து எறிந்து
வெய்ய காளியற்கு இரு தாள் நல்கிய
கோவலர் சேவகனார் நன்று எடுத்த
வைதேகியார் தம் மன்று எடுத்து ஒடித்த வில்லும்
வழியில் நின்று எடுத்து ஒசித்த வில்லும்
கம்சன் விழாவில் சென்று எடுத்து இறுத்த வில்லும்
சதுரர்கள் புகழும் விதுரன் கை வில்லும்
கனஞ்செறிந்துள்ள தனஞ்சயன் வில்லும்
பெரு வலி பெற்ற வுரு விலி வில்லும்
புல்லெனச் சொல்லும் வல்லமை ஆர்ந்து
அல் ஒக்கும் நிறத்தவளது வயிரக் குன்றக் கல் ஒக்கும்
நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயதும்
வைதவையின் மராமரம் ஏழும் தொளை எய்தச் செய்ததும்
மற்றும் பற்பல கொற்ற வசடரை முற்றும் செற்று உயர் வெற்றி உற்றதும்
வெள்ளெருக்க மலர் முடியான் வெற்பு எடுத்த திரள் தோளின் மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ எனும்படி
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியைக் கடும் சிறையில் வைத்த காதலானது
இராவணனுடைய உள்ளிருக்கும் எனக்கருதி அவன் உடல் பிளந்து தடவியதுமான
சுடு சாரம் கொண்ட நெடிய கோதண்டத்தை ஒன்றி நின்ற
திருப்புருவத்து அழகும் –

20-திரு நெற்றி
மறுவும் வெருவும் பொலிவும் நலிவும் பிறப்பும் இறப்பும் இன்றிக்கே
என்றும் ஒரு தன்மையதாய் நிலவெறிக்கும் இஷ்டமிக்குதவும் அஷ்டமிப்பிறை ஓன்று இருந்தால்
அதனைப் பொருந்தா நின்று
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரும் நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல் ஆகிய
ஆழியான் அளவினாமம் நெய் சுடர் விளக்கில் என்றப் பெற்று விளங்கும்
திரு நெற்றி அழகும்

21- திரு முடி
நீண்டு குழன்று நெய் திரண்டு நெறிந்து செறிந்து
நெடு நீலம் பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு
புகையும் நறும் பூவும் வேண்டும் அல்ல எனத் தெய்வ வெறியே கமழும்
திருச்சிகையோடு பொன்னு மணியும் பொழிந்து ஓங்கி மின்னி
மலர்ந்து உயர்ந்த திருமுடி அழகும்

சம்பூர்ணமாக அறிந்து ஏத்த
வென்றியே வேண்டி வீழ் பொருளுக்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடைய அடியோங்கள் அறியோம் அறியோம்
தேவரீர் நித்தியமான இந்த ஸுந்தர்யத்துடன் நீடூழி வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
ஜய விஜயீ பவ

—————–

பங்குனி உத்திர இரவில்.ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 35வது திவ்ய தேசம் திருவாலி – திருநகரி.

இது இரண்டும் ஐந்து கிலோ மீட்டர் இடைவெளியில் இருந்தாலும்,
ஒரே திவ்யதேசமாகவே கருதப்படும் ஆழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்து, ஞானம் கொடுத்து ,
மாற்றமும் தந்த அற்புத நிகழ்வு இந்தத் தலத்தில்தான் நடைபெற்றது.
குலசேகர ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியிருக்கும் இத்தலம் மிக சிறப்பு வாய்ந்தது.
ஆதி காலத்தில் பில்வாரண்யம், ஸ்ரீபூரி, ஆலிங்கனபுரி என்றெல்லாம் பெயர்.
மூலவருக்கு வேதராஜன், வயலாலி மணவாளன் என்று பெயர்.வீற்றிந்த கோலத்தில் காட்சி தருவார்.

உற்சவருக்கு கல்யாண ரங்கநாதப் பெருமாள் என்று பெயர். தாயாருக்கு அமிர்தவல்லி என்ற திருநாமம்.

திருமங்கையாழ்வார் தம்முடைய கடைசிக் காலத்தில் திருக்குறுங்குடியில் இருந்தார்.
அப்போது தம்மைப் போலவே தங்கத்தினால் ஒரு சிலையை வடிக்கச் செய்து,
அதன் எதிரில் தான் நின்று கொண்டு, ‘‘வா” என்று அழைத்தார்.
அந்த சிலையும் திருமங்கையாழ்வார் அருகில் நடந்து வந்தது. அதனை ஆழ்வார் கட்டித் தழுவினார்.
ஆழ்வாரின் சக்தி முழுக்க அந்த சிலையில் இறங்கியது. பிறகு ஆழ்வார் பரம பதம் அடைந்தார்.
அந்த உற்சவமூர்த்தி தான் இன்றைக்கும் நாம் திருநகரியில் தரிசிக்கிறோம்.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்சன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி சிகாமணி, ஷட் பிரபந்தக் கவி,
கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன்,
ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன்,
கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்கள் உண்டு.

பிரஜாபதிக்கு மோட்சம் பெருமாள் கொடுக்கவில்லை. இது நடந்தது முதல் யுகமான கிருதயுகத்தில்.

அடுத்த திரேதாயுகத்தில் அந்த பிரஜாபதி உபரிசரவசு என்கிற மன்னனாகப் பிறந்தான்.
ஞானத்தைத் தேடி இந்தத் தலத்திற்கு தன்னுடைய புஷ்பக விமானத்தில் வந்தான்.
இத்தலத்தில் பறக்க முயன்றபொழுது அந்த விமானமானது மேற்கொண்டு பறக்காமல் நின்று விட்டது.
எனவே இத்தலத்தில் ஏதோ ஒரு புண்ணியம் இருக்கிறது என்று நினைத்து இறங்கி பெருமாளை நோக்கி மறுபடியும் தவம் செய்தான்..

இந்த யுகத்திலும் அவனுக்கு வீடுபேறு கிடைக்காததால், அடுத்த யுகமான துவாபர யுகத்தில்
சங்கபாலன் என்ற பெயரில், ஒரு மன்னனுக்கு மந்திரியாக இருந்தான் . அப்பொழுதும் தவம் செய்தான்.
பெருமாள் சொன்னார்.“உனக்கு அடுத்த பிறவி ஒன்று உண்டு. நீ கலியுகத்தில் இதே இடத்தில் பிறப்பாய்.
அப்பொழுது நாம் உமக்கு திருமந்திர உபதேசம் செய்து மோட்சம் தருவோம். உம்மால் இந்த உலகம் நன்மை அடையும்” என்று சொன்னார் .

அதைப் போலவே கலியுகத்தில் நீலன் என்கிற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிறந்தார்.
திருவெள்ளக் குளம் என்கிற தலத்தில் அவதரித்த குமுதவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்ய விரும்பினார்.
ஆனால் குமுதவல்லி நாச்சியார், ‘‘ஓராண்டுக்கு தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு உணவு படைத்து வணங்கினால்,
உங்களுக்கு மனைவியாவேன்” என்கிற நிபந்தனை விதித்தார்.

நிபந்தனையை ஏற்றுக்கொண்ட நீலன், தன்னிடம் இருக்கின்ற பணத்தைக் கொண்டு,
வைணவர்களுக்கு உணவு படைக்கும் உத்தமமான தொண்டை நடத்திவந்தார்.
தினம் ஆயிரம் பேருக்கு உணவு படைக்கும் தொண்டைச் செய்ததால் கைப்பணம் கரைந்தது.
சோழ மன்னனுக்குச் செலுத்த வேண்டிய திறைப் பணத்தையும் செலவிட்டார். அப்பொழுதும் இந்த நிபந்தனை நிறைவேறவில்லை.

இனி பொருள் ஈட்ட வழி இல்லாத நிலையில், தனவந்தர்களிடம் பொருளைக் கவர்ந்து, நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த வேண்டும்
என்கிற உறுதிகொண்டு, வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்.
ஏற்கனவே இவருக்கு வீடுபேறு தரவில்லை என்று வருந்திய மகாலட்சுமித் தாயார், இந்த பிறவியிலாவது அவசியம்
திருமந்திர உபதேசம் செய்து மோட்சம் தர வேண்டும் என்று சொல்ல, அதனை ஏற்றுக் கொண்ட பெருமாள்,
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருவாலியில் திருமணத்தை முடித்துக் கொண்டு,
தம்பதியாக தம்மை மாற்றிக்கொண்டு, திருநகரிக்குச் செல்லும் வழியில் வேதராஜபுரம் என்ற இடத்தில் தங்கினார்.

அடுத்த நாள் அடியார்களுக்கு உணவளிக்க பொருள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த திருமங்கை ஆழ்வார்,
தம்முடைய பரிவாரத்தோடு, திருமணத் தம்பதியரின் நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.
உடனே தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரையில் புறப்பட்டார். திருநகரிக்குத் திரும்பிக் கொண்டிருந்த தெய்வத் தம்பதியரை,
இரவு நேரத்தில் வழிமறித்தார்.தன்னுடைய வாளைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி, நகைகளை எல்லாம் கொள்ளை அடித்தார்.

கடைசியில் எம்பெருமான் காலில் அணிந்திருந்த மெட்டியை அவரால் கழற்ற முடியவில்லை.
அதை விட்டுவிட்டுச் செல்வதா என்று நினைத்த நீலன், தன்னுடைய வலிமையான பற்களால் அந்த மெட்டியைக் கடித்து இழுத்தார்.
பாதத்தின் தொடுவுணர்ச்சி பரவசம் தந்தது. எம்பெருமான் புன்னகை பூத்தார். அவருடைய வலது செவியில் திருமந்திரத்தை ஓதினார்.

இந்த எட்டு எழுத்து மந்திரம் காதிலே விழுந்ததும், அதுவரை இருந்த உலகியல் சிந்தனைகள் எல்லாம் மறைந்தன.
நீலன் என்பவர் மறைந்தார். இப்போது புதியதாக ஒருவர் பிறந்தார். ஆழ்வாராக மாறினார்.
அவருடைய திரு நாவிலிருந்து பெரிய திருமொழி பாசுரத்தின் முதல் பாசுரம் வீறு கொண்டு எழுந்தது.திருமந்திரத்தின் சுருக்கம் பிரணவம்.

அதில் மூன்று எழுத்துக்கள் உண்டு. அ, உ, ம என்கிற மூன்று எழுத்துக்களின் தொகுப்பு தான் இந்த உற்சவத்தில் நடைபெறுகிறது.
அதில் “அ” என்கிற எழுத்து கல்யாண ரங்கநாதரைக் குறிக்கும்.
“உ” என்ற எழுத்து அந்த கல்யாண ரங்கநாதரின் பக்கத்தில் இருக்கக்கூடிய மகாலட்சுமியான தாயாரைக் குறிக்கும்.
‘‘ம’’ என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய திருமங்கையாழ்வாரைக் குறிக்கும்.

இந்த மூன்று அட்சரச் சேர்க்கைதான் பங்குனி உத்திர இரவிலே நடக்கிறது.அ, உ, ம -இவை மூன்றும் இணைந்தது
தான் “ஓம்” என்கிற ப்ரணவ சப்தம். அந்த சப்தத்தின் விரிவுதான் எட் டெழுத்து மந்திரம்.
அந்த எட்டெழுத்து மந்திரத்தின் விரிவுதான் இரண்டாவது மந்திரமாகிய த்வய மகா மந்திரம்.
அந்த மந்திரத்தின் விரிவானது சரம ஸ்லோகம். இவை மூன்றின் விரிவுதான் சகல உபநிடதங்கள் .
அந்த உபநிடதங்களின் விரிவுதான் சகல வேதங்கள்.

அதனால் தான் மணவாள மாமுனிகள், இந்த இடத்தில் நடந்த அந்த அதிசயத்தை சொல்லுகின்ற பொழுது,
தேவர்களின் ராஜாவான வேதராஜன்,
மந்திரங்களின் ராஜாவான திரு எட்டெழுத்து மந்திரத்தை,
அரசர்களின் அரசனான திருமங்கை ஆழ்வாருக்கு, மரங்களுக்கு
அரசனான ஒரு அரசமரத்தடியில், உபதேசித்தார் என்பதால்
இந்த தலத்திற்கு வேதராஜபுரம் என்று வியந்து பாடுகிறார்.

ஈதோ திருவரசு!
ஈதோ மணங்கொல்லைஈதோ எழிலாலி என்னுமூர் –
ஈதோதான்வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்எட்டெழுத்தும் பெற்ற இடம்.

இந்த நிகழ்ச்சிதான் திரு வேடுபறி உற்சவமாக, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில்,
இரவு 12 மணியளவில் இத்தலத்தில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அந்த உற்சவத்தைக் காண்கின்றனர்.

சாதாரண மனித எண்ணங்களும், ஆசைகளும் கூடி, உலகியல் சுகபோகத்தில் இருந்த நீலன் என்கிற ஒரு மனிதன்,
எம்பெருமானால், திரு எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப் பெற்று, ஆழ்வாராக – சாதாரண பிறப்பிலிருந்து
புதிய பிறப்பிற்கு மாறிய காட்சிதான்- கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக, இந்த பங்குனி உத்திர நன்னாளில்,
திருவாலி திருநகரியில் நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தைக் காணுகின்ற நமக்கும் அந்த ஞானம் பிறக்கும் என்பதால் அடியார்கள் எல்லாம் இந்த உற்சவத்தைக் காண்கிறார்கள்.
உற்சவத்தைக் கண்டு களிக்க நமக்கு இயலாவிட்டாலும், இந்தக் கதையையும் இந்தக் கதையின் சாரத்தையும்
தெரிந்து கொள்வதன் மூலம், நமக்கும் எம்பெருமானுடைய அருளும் ஆழ்வாரின் அருளும் கிடைக்கும்.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் அர்ச்சாவதாரமும் -ஸ்ரீ உ வே ஸூ தர்சன ராமானுஜ ஸ்வாமிகள் –

April 20, 2021

ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்
துணித்தருள வேணும் துணிந்து

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்
ஸ்ரீயபதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது
(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு பரமபதத்தில்
எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். இப்படிப்பட்ட பரமபதத்தின் லக்ஷணங்களை ஸ்ரீ பராசரபட்டர்

யத்தூரே மநஸோ யதேவ தமஸ:பாரேய தத்யத்புதம்
யத் காலா தபசேலிமம் ஸுரபுரீ யத் கச்சதோ துர்கதி: |
ஸாயுஜ்யஸ்ய யதேவ ஸுதிரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத்விஷ்ணோ: பரமம் பதம்……. * (ஸ்ரீ குண கோ – 21) என்கிற ஶ்லோகத்தில் அருளினார்.

[எந்த இடம் மனத்திற்கு தூரத்தில் உள்ளதோ, எந்த இடமே ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ எந்த இடம் மிகவும் வியக்கத்தக்கதோ,
எந்த இடம் காலத்தினால் முதுமை அடையாததோ, எந்த இடத்தை நோக்கி போகின்றவனுக்கு தேவர்களின் நகரமான
அமராவதியும் நரகமோ எந்த இடமே முக்தி நிலைக்கு பிறப்பிடமோ , இறைவனான விஷ்ணுவின் மேலான ஸ்தானம் ஆகிற பரமபதம்].

திருமாமணிமண்டபத்தில், நித்ய முக்தர்களுக்கு தன்னுடைய அழகை எல்லாம் காட்டி –
எப்படி கடலானது அலையெடுத்த வண்ணம் இருக்கிறதோ அதே போன்று தன்னுடைய திருக்கல்யாண குணங்களை
அவர்களுக்குக் அனுபவிக்கக் கொடுத்து கொண்டு தன்னுடைய செங்கோல் ஆட்சி ஒரு குடைக்குக் கீழ் நடத்துகிற இடம்.
இதனை பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில்
ஸ்புரது பரிபணாரத்நரோசிர் விதானம் விஸ்தீர் யாநந்த போகம் ததுபரி நயதா விச்வமே காத பத்ரம்
(படங்களின் ரத்நங்களினுடைய ஒளியாகிற மேல் கட்டியை உடையதுமான ஆதிசேஷன் திருவுடம்பை விரித்து
அதன்மீது வீற்றிருந்து உலகை ஒருகுடைக்கீழாம்படி நடாத்துகிறவனும்) என்றருளினார்.

வ்யூஹமாவது (2) பரமபத நாதனிடமிருந்து உத்பத்தியான வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ந, அநிருத்த ரூபங்கள்.
இந்த ரூபங்களை உடையவனாய் ஆமோத ப்ரமோத ஸம்மோத லோகங்களிலும், க்ஷீராப்தியிலும் எழுந்தருளியிருக்கும் நிலை.
ப்ரஹ்மாதிகளின் குறைகளைக் கேட்பதற்கும், ஸனத்குமாரர்கள் முதலானோர்கள் கிட்டி அனுபவிப்பதற்காகவும் இருக்கும் நிலை.

விபவமாவது(3) அநிருத்தனிடத்தில் இருந்து உண்டான இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்.
இவை பூர்ணாவதாரங்கள், ஆவேசாவதாரங்கள் என இருவகைப்படும்.
பூர்ணாவதாரங்கள் – இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்;
ஆவேசாவதாரங்கள் – பரசுராம, பலராமாதி அவதாரங்கள்; பூர்ணாவதாரங்கள்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் (கீதை – 4-9) [அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும்
எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன் தேஹத்தை விட்டு மறுஜன்மம் அடையான்; என்னை அடைகிறான்] என்கிறபடி
விக்ரஹங்கள் (திருமேனிகள்) அப்ராக்ருதம்.

அந்தர்யாமித்வமாவது (4) சேதனாசேதனங்களில் எழுந்தருளியிருக்கும் இருப்பு.
இதனைக் குறிக்கிற ஶ்ருதியானது “ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ய: ஆத்மநி திஷ்டந்” என வஸ்துக்கள் தோறும்
எம்பெருமான் அந்தர்யாமியாய் இருக்கின்றான் என ஒதிற்று.
இது தன்னை திருமழிசைப் பிரான் * நின்றியங்கும் ஒன்றலா உருக்கள் தோறும் ஆவியாய் ஒன்றி உள்கலந்து நின்ற இன்ன தன்மை *
(நின்று – நிலைபேராதே நிற்கும் மலைமுதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது;
இயங்கும் – அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது,
இப்படிப் பலவகைப்பட்ட சரீரங்கள் தோறும் ஆத்மாவாய் பொருந்தி நின்ற உன்னுடைய ஸ்வபாவம்) என்றருளினார்.
எம்பெருமான் இப்படி எழுந்தருளியிருப்பது, யோகிகளின் ஹ்ருதயத்தில் அவனை த்யானிப்பதற்காக.

அர்ச்சையாவது (5) * அர்ச்சாயாம் ப்ரதிமா பூஜா * என்கிற நிகண்டுவின்படி தனது பக்தர்களின்
திருவாராதனத்திற்காவும், உஜ்ஜீவனத்திற்காவும், தான் பரிபூர்ணனாய் நிற்கும் நிலை.
இது தன்னை வானிட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் திருக்குமாரரும், ஸ்ரீரங்கேசரின் புரோஹிதருமான பட்டர்
ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்திலே
ஆஸ்தாம் தே குணராஶிவத் குணபரீவாஹாத்மநாம் ஜன்மநாம் ஸங்க்யா பௌமநிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு ரங்கேஶ்வர | அர்ச்ச்யஸ்ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாலுபிஸ்தவ ததஶ்ஶீலாஜ்ஜடீபூயதே ||* (ஸ்ரீ ரங். ஸ்த் – உத் 74) என்றருளினார்.

ரங்கேஶ்வர – பெரிய பெருமாளே!; தே குணராஶிவத் – தேவரீருடைய திருக்கல்யாணகுணக் கூட்டங்கள் போல;
குணபரீவாஹாத்மநாம் – அந்த திருக்கல்யாண குணங்களை காரணங்களாகவும், அவற்றைப் ப்ரகாஶிப்பவைகளாகவும்
இருப்பதினாலே அந்த திருக்குணங்களுக்கு ப்ரவாஹங்களாயிருக்கிற; ஜன்மநாம் – திருவவதாரங்களுடைய;
ஸங்க்யா – எண்ணித் தலைக்கட்டி முடிக்கமுடியாமையானது;

அஜாயமானோ பஹுதா விஜாயதே * (தை. பு 21) (பிறப்பில்லாதவன் பலபடியாகப் பிறக்கிறான்),

பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி * (கீதை – 4-5) இத்யாதி ப்ரமாணங்கள் இதனை உணர்த்தும்.
ஆஸ்தாம் – இருக்கட்டும். இதனால் இவருக்கு அர்ச்சையில் உள்ள ஆதரத்தினை உணர்த்தினாராயிற்று,
அர்ச்சாவதாரத்தை அனுபவித்தால் தேவரீர் எவ்வளவு திருவவதாரங்கள் எடுத்த போதிலும் அவற்றில் ஊற்றமில்லை என்றபடி;
த்வம் – தேவரீர்; பௌமநிகேதநேஷ்வபி – இப்பூமண்டலத்திலுள்ள ஆலயங்களிலும்;
குடீகுஞ்ஜேஷு – க்ருஹங்களிலும் ஆச்ரமங்களிலும்; அல்லது பௌமநிகேதநேஷ்வபி – திருவரங்கம் முதலான கோயில்களிலும்;
குடீகுஞ்ஜேஷு – திருக்குறுங்குடி, திருக்கண்ணங்குடி, திருவெள்ளியங்குடி, முதலான குடிகளிலும்;
அர்ச்ச்ய இதி – அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி * தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரிப்பவராயும் *
ஸாக்ஷாதபசாரம், உபசாராபதேஶமான அபசாரம் (உபசாரம் செய்ய வேண்டும் என்றாரம்பித்துப் பண்ணும் அபசாரம்)
ஆகியவற்றை ஸஹிக்கையே ஸ்வபாவமாகக் கொண்டும், ப்ரீணீஷே – உகந்து எழுந்தருளுகின்றீர்;
(அணியழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – அழகிய திருவழுந்தூரில் வந்துநின்று
(அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானே);
தத: – அப்படிப்பட்டதான; தவ ஶீலாத் – தேவரீருடைய ஶீலகுணத்தினால்; ஹ்ருதயாலுபி: ஜடீபூயதே – ஸஹ்ருதயர்கள் மோஹிக்கிறார்கள்.
இங்கு ஸஹ்ருதயர்கள் என்றது ஆழ்வார்களை. மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஸர்வஜ்ஞரான ஆழ்வார்கள்,
இந்த ஶீல குணத்தை அநுஸந்தித்து மோஹிக்கிறார்கள்.

இப்படி ஐந்து ப்ரகாரங்கள் இருந்தாலும் அவற்றில் ஸ்தல பேதமேயொழிய வஸ்து பேதமில்லை என்பதினை
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்,

” பகலோலக்கமிருந்து கருப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி
யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம் ” (157)
என்ற சூர்ணிகையில் அருளினார்.

—————

கலியனும் அர்ச்சாவதாரமும்
ஸ்ரீய பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
அவர்களுள் இறுதியாக, ஆசார்ய பரம்பரையிலே ஸ்ரீமத் வரவரமுனிகள் போலே, திருவவதாரம் பண்ணியருளியவர் திருமங்கை ஆழ்வார்.
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த * என்கிற உபதேசரத்தினமாலை ஸ்ரீஸுக்திப்படியே,
நான்கு வேதங்களின் ஸாரமாக நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கு,
இவ்வாழ்வாருடைய ஆறு திவ்யப்ரபந்தங்கள் ஆறு அங்கங்களாம்.
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள் * (ஆ. ஹ். 36) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு இவர் ப்ரபாவம் அறியலாம்.

நம்மாழ்வாரை * க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் * என்றார் ஸ்ரீ பராசர பட்டர்.
ஸ்வாமி மணவாள மாமுனிகளை * யதீந்த்ர ப்ரவணர் * (எம்பெருமானார் மீது அளவற்ற ப்ரேமை கொண்டவர்) என்றான் ஸ்ரீ அழகிய மணவாளன்.
அதே போன்று * அர்ச்சாவதார ப்ராவண்யமே * வடிவெடுத்தவர் யார் என்று கேட்டால் – அது திருமங்கை ஆழ்வார் ஒருவரே ஆவர்.
நம்மாழ்வார் * செய்ய பரத்துவமாய் சீரார் வ்யூஹமாய் துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் எய்துமவற்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் * என்று உபதேசிப்பது அர்ச்சாவதார விஷயமாய் இருந்தாலும்,
அதை அனுஸரித்துக் காட்டியவர் திருமங்கை ஆழ்வாரே ஆவர்.
நம்மாழ்வார் அப்பதிகந்தன்னிலேயே (அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும் பதிகந்தன்னில்)
* அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் காண்பதென்றுகொல் கண்களே? * என்று தான்
க்ருஷ்ணாவதாரத்தில் ஆதரத்துடன் இருப்பதைக் காட்டினார்.
அயர்வறுமமரர்களுக்கு இனியனாய், நாகபர்யங்கங்கத்திலே சயனிப்பவனாயிருந்துவைத்து வஸுதேவருடைய திருமாளிகையிலே
அவதரித்தவனாய் எனக்குப் பிராணனாய், துரியோதனன் முதலானோர் படையொடும் முடியும்படியாக
பாண்டவ பக்ஷபாதியாயப் பார்த்தஸாரதியாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்னுடைய கண்கள் ஸேவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிறார்.

பேயாழ்வார் எம்பெருமானை அமுதம் என்றார் – * மருந்தும் பொருளும் அமுதமும் தானே * எம்பெருமானை அமுதம் என்றது –
இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும் மட்டுமேயன்றி
ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கும் என்றபடி.

பரத்வத்திலே அமுதமாயிருப்பது * மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது * ஆகும் –
நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அப்பால் பரமபத்திலே (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு
எழுந்தருளியிருப்பவனும் (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடமுடியாதவனும் அருமையான அம்ருதம் போன்றவன்.

* நரம்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே, அங்கண்மா ஞாலத் தமுது.* என்றிருப்பது விபவதாரங்களாகிற அமுது.
நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த அழகனுடைய இணையடியே அழகிய இடமுடைத்தான இம்மாநிலத்தில் போக்யமான அம்ருதமாகும்.

அந்தர்யாமி தஶையிலே அமுதமாயிருப்பது * கடிசேர் நாற்றத் துள்ளாலை * என்பது.
கடிசேர் நாற்றத்துள்ளாலை – விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த தேனிலுள்ள சுவையினுடைய
கோது கழிந்த (குற்றங்கள் கழிந்து) ஸாரமான பாகம் போலிருக்கிற விச்சேதமற்று (தடையின்றி) நித்யமான ஆனந்தமயனாய் இருப்பவன்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் அனுபவிப்பது அந்தர்யாமி தத்வத்தை என்பது குறித்துக்கொள்ளத் தக்கது.

இப்படி எம்பெருமான் மற்ற தஶைகளில் அமுதமாயிருந்தாலும், திருமங்கை ஆழ்வார் உகப்பது
* திருமூழிக்களத்து விளக்கே – இனியாய தொண்டரோம் பருகின்னமுதாய கனியே * என்று அர்ச்சாவதார நிலையையேயாம்.
திருமூழிக்களமென்னுந் திருப்பதியில் விளக்குப்போல் விளங்குமவனே, பரமபோக்யனே! தொண்டரான அடியோங்கள்
பானம் பண்ணுதற்கு உரிய இனிய அமுதமானவனே! கனிபோன்றவனே! ; ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அடியோங்கள் பருகும்
அம்ருதமாய் அப்போதே எடுத்து நுகரலாம்படி கனி போன்று இருக்கிறவனே!

திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீரங்கநாதன் விஷயீகரிக்கத் திருவுள்ளம் பற்றி, வாய்த்த திருமணங்கொல்லையினில்
அவருக்கு திருமந்த்ரம் அருளிச் செய்த பின்பு, ஆழ்வார் தம்முடைய நிலைக்குச் சேராதவைகளை வெறுத்து ஒதுக்கி,
அத்திருமந்த்ரம் திருவவதரித்த இடமான திருவதரி தொடங்கி அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஸாஸனம் செய்யத் தொடங்கினார்.
திருமந்த்ரம் விளைந்த இடமான திருப்பிரிதியை மங்களாஸாஸனம் செய்தருளின பின்பு, அந்த திருமந்த்ரம் உள்ளே கொண்ட
வஸ்துவான அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஶாஸனம் செய்தருளத் தொடங்கி அருளிச் செய்கிறார்.

* மந்த்ரத்திலும், மந்த்ரத்திற்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது * என்னும் மூமுக்ஷுப்படி சூர்ணிகை நினைக்கத் தக்கது.
வெறும் தேஸங்களாக இருந்த உகந்தருளின நிலங்களைத் திவ்யதேஸங்களாக ஆக்கித் தந்தவர்கள் ஆழ்வார்கள்.

திருமங்கையாழ்வார் மொத்தம் 86 எண்பத்தாறு திவ்யதேஶங்களை மங்களாஶாஸனம் செய்துள்ளார்.
இவற்றுள் கலியன் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ள திவ்யதேஶங்கள் நாற்பத்து ஏழு (47).
இந்த திவ்ய தேஶங்கள் பிற ஆழ்வார்களால் மங்களாஶாஸனம் செய்யப்படாமல் இவர் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ளார்.
இங்ஙனம் ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்து அருளவில்லை எனில் திவ்யதேஶங்கள் எண்ணிக்கை 108 ஆக இருந்திராது!
ஆழ்வார் தாமும் முதல் பத்தில் திருமந்த்ரத்தினைப் பற்றி அருளிச் செய்த பின்பு
இரண்டாம் பதிகத்தில் திருப்பிரிதி தொடங்கி வரிசையாக
வடநாடு, தொண்டைநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலை நாடு என மங்களாஸாஸனம் அருளியுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் மட்டும் மங்களாஶாஸனம் செய்த திருப்பதிகள்
திருஉறையூர்
திருக்கரம்பனூர்
திருபுள்ளம்பூதங்குடி
திருஆதனூர்
திருதேரழுந்தூர்
திருசிறுபுலியூர்
திருசேறை
திருதலைச்சங்கநாண்மதியம்
திருக்கண்டியூர்
திருநாகை
திருநறையூர்
திருநந்திபுரவிண்ணகரம்
திருஇந்தளூர்
திருக்காழிசீராம விண்ணகரம்
திருக்கூடலூர்
திருக்கண்ணங்குடி
திருக்கண்ணமங்கை
திருவெள்ளியங்குடி
திருமணிமாடக்கோயில்
திருவைகுந்தவிண்ணகரம்
திருஅரிமேய விண்ணகரம்
திருத்தேவனார்தொகை
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன்செய் கோயில்
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருக்காவளம்பாடி
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி
திருமெய்யம்
திருப்புல்லாணி
திருவஹீந்த்ரபுரம்
திருநீரகம்
திருநிலாத்திங்கள்துண்டம்
திருக்காரகம்
திருக்கார்வானம்
திருக்கள்வனூர்
திருபவளவண்ணம்
திருப்பரமேச்சுர விண்ணகரம்
திருப்புட்குழி
திருநின்றவூர்
திருஇடவெந்தை
திருசிங்கவேள்குன்றம்
திருநைமிசாரண்யம்
திருப்பிரிதி

திருநெடுந்தாண்டகத்தின் அவதாரிகையிலே, ஆழ்வார்களின் ஊற்றத்தை அருளிச் செய்யும் விதமாக
(ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த நிலையின்லே ஊன்றியிருப்பார்கள்) ,
இவரது அர்ச்சாவதார ப்ராவண்யத்தைக் காட்டியருளுகிறார் ஸ்ரீ பெரிய ஆச்சான் பிள்ளை.

முதலாழ்வார்கள்–பரத்வம்
திருமழிசைப்பிரான்–அந்தர்யாமி தஶை
குலசேகரப் பெருமாள்–ராமாவதாரம்
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்–க்ருஷ்ணாவதாரம்
தொண்டரடிப்பொடிகள், திருப்பாணாழ்வார்–திருவரங்கம் பெரிய கோவில்
திருமங்கையாழ்வார்–அர்ச்சாவதாரம்

இது தன்னைக் கலியன் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாசுரம் கொண்டு பார்க்கலாம்.

கல்லெடுத்துக் கன்மாரி காத்தாய்! என்றும்
காமருபூங் கச்சியூரகத்தாய்! என்றும்
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய்! என்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும்
மல்லடர்த்து மல்லரையன் றட்டாய்! என்றும்
மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே யென்று
துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே. (13)

ராஜகுமாரர்கள் ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நெய் கொண்டு புஜிக்குமா போலே, இவ்வாழ்வார் தாமும் பாசுரத்தின்
அடிதோறும், காமருபூங் கச்சியூ ரகத்தாய்! என்றும் – வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் – அர்ச்சையை அனுபவிக்கிறார்.
இதே போன்று அருளிச் செய்யப்பட்ட * மண்ணளந்த தாளாளா! தண்குடந்தை நகராளா! வரையெடுத்த தோளாளா! *,
முதலானவைகள் நோக்கத்தக்கது.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ ஸூக்தி * அல்லாத ஆழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இதுவிறே.
அவர்கள் மேன்மையை அநுபவிக்கும் போது பராவஸ்தையைப் பேசுவர்கள்;
அந்நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள்;
இவர் மேன்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே, நீர்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே; அத்தை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே.
* மற்றைய ஆழ்வார்களுக்கும் இத்திருமங்கை ஆழ்வாருக்கும் உள்ள வாசி (வேறுபாடு) இதுவேயாகும்.
அவர்கள் எம்பெருமானது மேன்மையை அனுபவிக்க வேண்டுமானால் பரத்வத்திலே இழிவார்கள்.
எம்பெருமானது நீர்மையை அனுபவிக்க வேண்டுமானால் அவனது அவதாரங்களைப் பேசுவார்கள்.
அந்த நீர்மையை நேராகக் காணவேண்டில் மட்டுமே அர்ச்சாவதாரத்தைப் பேசுவார்கள்.
ஆனால் திருமங்கை ஆழ்வாரோ மேன்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே; நீர்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே;
அதை நேரே கண்டனுபவிப்பதும் திருப்பதிகளிலே.

மேன்மையை அர்ச்சையிலே அனுபவித்தது
யாவருமா யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய் – மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்
[சேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய், அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்,
அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய், (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்,
முழுமுதற் கடவுளான, எம்பெருமான் அமர்ந்து உறையும் இடம்- திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-1)

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்
[நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் ஆகிய அவையெல்லாம்
தானேயாயிருக்கப்பெற்ற எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-2)

உலகுண்ட பெருவாயரிங்கே வந்து, என் பொருகயல்கண்ணீரரும்பப் புலவி தந்து புனலரங்கமூரென்று போயினாரே
[பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,
நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் ] (திருநெடுந்தாண்டகம் – 24)

அண்டமுமெண்டிசையும் நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன் [அண்டங்களையும் எட்டுத்திசைகளையும் பூமியையும்
கடல்களையும் ஆகாசத்தையும் அக்நியையும் காற்றையும் இவை முதலான மற்றும் பல பொருள்களையும் பிரளயம் கொள்ளாதபடி
திருவயிற்றிலே வைத்து நோக்கின எம்பெருமானுக்கு இடமாவது பரமேச்சுரவிண்ணகரம் ] (பெரி திரு 2-9-4)

நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ
நன்மானவொண்சுடரே! = விலக்ஷணமாய் அளவிடமுடியாத அழகிய சுடரையுடையவனே!, என்றவாறே
இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி
உடனே ‘நறையூர் நின்ற நம்பீ!’ என்கிறார்] (பெரி திரு 7-2-3)

நீர்மையை அர்ச்சையிலே அனுபவித்தது
பின்னானார் வணங்கும் சோதி – அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
பரத்துவத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்துவத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள் இங்குப் பின்னானார்’ எனப்படுகின்றனர்.
அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே எழுந்தருளியிருப்பவனே!’ என்கின்றார் ஆழ்வார்.
திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும்.
திருமூழிக்களமென்றது மற்றைய அர்ச்சாவதாரங்களுக்கு உபலக்ஷணம். பின்னானார் – அவதாரத்திற்குப் பிற்பாடர்;
வணங்கும் சோதி – ஆஶ்ரயிக்கக்கூடிய ஜ்யோதிர்மயமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே.
நம்மாழ்வாரும் ‘திருமூழிக்களத்துறையுமொண்சுடர்‘ என்றது குறிக்கொள்ளத்தக்கது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத்திருக்குணம் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
ஆகையால் ‘ஒண்சுடர்‘ என்றும் ‘விளக்கு‘ என்றும் ‘சோதி‘ என்றும் அருளினார் என்று உணரவேண்டியது.
இங்கு * இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாஶிப்பது இங்கே * என்னும் பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீஸூக்தி நினைக்கத்தக்கது.

திருக்கண்ணபுரத்து அம்மான்
திருக்கண்ணபுரத்து அம்மான் என்றால் திருக்கண்ணபுரத்திலே உறையும் ஸ்வாமி என்றர்த்தம்.
இங்கு ஆழ்வார் திருக்கண்ணபுரத்து அம்மான் என்றழைத்ததற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை அற்புதமாகத் தாத்பர்யம் அருளிச் செய்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானாகிற தத்வம் ஸர்வஸ்மாத்பரனாயிருக்கும். அதனை அனுபவிப்பவர்களும் நித்யமுக்தர்கள்.
அவதாரங்களில் மநுஷயத்வே பரத்வமாயிருக்கும். அனுபவிப்பதும் விதுரர், சபரி போன்ற ஒரு சிலருக்காயிருக்கும்.
பரகால நாயகியானவள் அர்ச்சாவதராத்தில் பரத்வம் உட்பட அனைத்தையும் அறிந்தாள்.
இதனை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை –
” அவதாரங்களிற் காட்டில் அர்ச்சாவதாரத்தில் பரத்வமும் அகப்பட அறிந்தாளென்று தோற்றியிராநின்றது “.
இதனை ஸ்வாமி அருளிய இப்பதிகத்தின் அவதாரிகையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும்.
அதன் சாராம்சம் – எம்பெருமானோடு அனுபவிக்க மாட்டாமையாலே தளர்ந்து பிராட்டி தஶையினை அடைந்து,
திருத்தாயார் வாயாலே பேசுவதாக அமைந்தது இத்திருமொழி. வேதாந்தங்களை அதிகரிக்காது ஒரு சில ஆசார்யர்களிடம் கேட்டு
எல்லாம் தெரிந்தவன் போல் இருந்த ஶ்வேதகேதுவை நோக்கி “ஸ்தப்தோஸி” (எல்லாம் அறிந்தவன் போன்று நின்றாய்!) என்று
அவனுக்கு ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்று அறிவுறுத்துவதற்காக வினவினார் அவனது தந்தையான உத்தாலகர்.
அவன் அறியாததை அறிவிப்பதற்காக தந்தை வினவினார்.
இங்கு இவள் பேச்சுக்களைக் கேட்டால் இவள் பரத்வத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; விபவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை;
வ்யூஹத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை; அர்ச்சாவதாரத்தில், அதிலும் திருக்கண்ணபுரத்தில் தான் ஈடுபட்டிருக்கிறாள்.
இங்கு கலியனது திருத்தாயார் ஸர்வாதிகனான ஸர்வேஶ்வரனையும் நன்றாக அர்ச்சையிலே அறிந்திருக்கிறாள் என்று தானறிந்ததைச் சொல்லுகிறாள்.

திருஇந்தளூர் விசேஷானுபவம்
திருமங்கையாழ்வாரின் திருஇந்தளூர் மங்களாஶாஸனம் அதிவிலக்ஷணமானது. அர்ச்சாவரதார பெருமையை இப்பதிகத்தில்
ஆழ்வார் அனுஸந்தித்தது சிறிது அனுபவிக்கலாம். ஆழ்வார் திருஇந்தளூரில் எம்பெருமானை கிட்டி அனுபவிக்கலாம் என்று
மிகுந்த பாரிப்போடே திருஇந்தளூர் எழுந்தருளினார். ஆனால் அந்த சமயம் அகாலமானதால்
திருஇந்தளூர் எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவில்லை. அதனால் ஆழ்வார் மிகவும் நைந்து எம்பெருமானோடு ஊடி வார்த்தையாடுகிறார்.

இங்கு குறிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு

ஆழ்வார் ஊடுவதும் அர்ச்சாவதார எம்பெருமானோடே! நம்மாழ்வார் ” மின்னிடை மடவாரில் ” கண்ணனோடே ஊடினார்.
ஆழ்வார் தாமான தன்மையில் ஊடுகிறார்.
திருஇந்தளூர் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்யும் ப்ரகாரம்
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியோமுக்
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.

திருவிந்தளூர்ப் பெருமாளே! தேவரீர் தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் ஜலதத்வத்திற்கு
அந்தர்யாமியான பெருமானாயும் திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும்
நின்றால் – (அஜ்ஞரான) அடியோங்கள் தேவரீரைக் காணமாட்டாதவர்களாயிருக்கிறோம்;
தாயாகவும் ஸ்வாமியாகவும் பிதாவுக்கும் பிதாவாகவும் இருக்கின்ற பெருமானே! தேவரீர் எமக்கே அஸாதாரணரான ஸ்வாமியல்லவோ?
அடியோமுக்கே எம்பாருமானல்லீரோ நீர் – பரவாஸுதேவனாயிருக்கும் இருப்பு நித்ய முக்தர்களுக்கு அநுபவிப்பதற்கு.
வ்யூஹ நிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள்
அக்காலத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பயனளித்தற்கு. அந்தர்யாமியாய் இருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் போல்வார்க்குப் பயனளிக்கும்.
அர்ச்சாவதார நிலையொன்றே அடியோங்களுக்கு ஜீவனம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காகவேயன்றோ இது ஏற்பட்டது.

பரத்வம் நித்ய ஸூரிகளுக்காய் இருக்கும். வ்யூஹம், ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்கைக்காக.
விபவங்களான ராமக்ருஷ்ணாதியவதாரங்கள் தசரத வாஸுதேவாதிகளுடைய பாக்யத்தினால் பெற்றவைகளாய் இருக்கும்.
அர்ச்சாவதாரங்களோ என்னில் ஸம்ஸாரிகளுக்காக. ஸம்ஸாரிகளோ தங்களுக்கு ஹிதம் (நன்மை) இன்னது என்றோ,
இந்த உலக வாழ்க்கையாகிற ஸம்ஸாரம் த்யாஜ்யம் (விடத்தக்கது) என்றோ,
ஸர்வேஶ்வரன் ஆகிய எம்பெருமான் ப்ராப்யன் (அடையத்தகுந்தவன்) என்றோ ஜ்ஞானம் இல்லாதவர்கள்.

இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி – * குருடர்க்கு வைத்த இறையிலியில் விழித்தார்க்குப் ப்ராப்தி இல்லையிறே *
[இறையிலி – அறச்சாலை – வரி நீக்கப்பட்ட நிலம். இறையிலி = இறை + இல். இறை – வரி].
கண் இழந்தவர்களுக்கு என்று உரித்தானதில், கண் உடையோர் அனுபவிக்கக் கூடாதிறே என்பது தாத்பர்யம்.
பரத்வத்தை அனுபவிக்கும் நித்யமுக்தர்கள் – இவர்கள் படியை ஸ்ரீ பராசர பட்டர் தம்முடைய ஸ்ரீகுணரத்னகோஸத்தில் –

தே ஸாத்யா ஸந்தி தேவா ஜநநி! குணவபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷாஸ் ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ:! ஸ்ரீரங்க பர்த்து ஸ்தவச பதவரீசாரவ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத்கார கைங்கர்ய போகா: ||

[ தாயான இலக்குமியே எவர்கள் குணங்களாலும் வடிவங்களாலும் கோலங்களாலும் நடத்தைகளாலும் ஸ்வரூபங்களாலும்
வேற்றுமையற்றவர்களோ, ஆகையால் எப்பொழுதும் சிறிதும் குற்றமற்றவர்களோ, எப்பொழுதும் ஒழிவில் காலமெல்லாம்
ப்ரீதியினால் உருகின மனோவிகாரத்தாலே கலங்கின ஹ்ருதயத்தாலே கைங்கர்யங்களின் இன்பமுடையவர்களோ அந்த நித்ய ஸூரிகள்].
இதனால் இவர்களது மேன்மை விளங்கும். இவர்களுக்கு அருளுமிடம் பரத்வம்.

வ்யூஹமோ என்னில் – மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரே வ்யூஹத்தை அருளிச் செய்யுமிடத்து
* பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் * என்றார். ஆழ்வாரே யாம் கண்டேயும் என்னாதே யாம் கேட்டேயும் என்றருளினார்.
அவர்க்கும் இது கேட்கையோடிருத்தல் என்றால் மற்றவர்களுக்கு அரிது என்பது சொல்லவும் வேண்டுமோ?

விபவமோ – அக்காலத்தில் உள்ளார்களுக்கு மட்டும் அனுபவமாய் இருக்கும்.

அந்தர்யாமி தஶை – * என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணுமேல் * என்று அரிதாய் இருக்கும்.
எக்காலத்திலும் வெளிக்கண்ணாலே காணக்கூடாத அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை நெஞ்சாகிற
அகக்கண் விகஸித்து (மலர்ந்து) ஸாக்ஷாத்கரிக்குமாகில் என்று ச்ரமாமாயும் ப்ரஹ்லாதாழ்வான், திருமழிசைப்பிரான் போன்றோருக்குமாய் இருக்கும்.

எனவே தான் இவர்களை * விழித்தார் * என்றழைக்கிறார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை.
இவ்வர்த்தங்கள் ஸ்ரீ வசனபூஷணம் ஸு 39 (பூகத ஜலம் போலே….) ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானத்தால் விரிவாக அறியலாம்.

ஸ்ரீமத் இத்யாதி பூஜ்யராய், அஸ்மத் ஆசார்யனாய், சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று
போது போக்குவது அருளிச் செயலிலேயாய், தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
நும்மடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும்மடியாரோடொப்ப எண்ணுதிரென் – நம்கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன் இன்னாமையைத்
தந்நிலை மாறாத வனாய் (39)

அநுகாரமும் அர்ச்சையிலே!
ஒருவர் போன்று மற்றொருவர் செய்து காட்டுவது அநுகாரமாகும். கோபிகைகள் கண்ணன் வாராமையாலே மிகவும்
விஶ்லேஷப்பட்டு ஒரு கோபிகை கண்ணன் போன்று அநுகரித்துத் தரித்தார்கள்.
ஆண்டாள் நாச்சியாரும் கோபிகைகள் போன்றே இடைப்பேச்சும் முடைநாற்றமும் என அநுகரித்துத் தானும் திருப்பாவை அருளிச் செய்தார்.
இவ்வாறு அநுகரித்தல் பிரிவாற்றாமையின் துன்பம் குறைவதற்க்குச் செய்ய்யும் செய்கை ஆகும்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் * கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் * (5-6) என்கிற பதிகத்தில்
கடல் ஞாலத்தீசனாக அநுகரித்துத் தரித்தார்.
ஆனால் திருமங்கையாழ்வாரோ என்னில் அவ்வநுகாரமும் அர்ச்சையினிலே அநுகரித்துத் தரித்தார்.
தெள்ளியீர் பதிகத்தில் * வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் * (8-2-6) என்பதே.
திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சௌரிப்பெருமாளாக நிற்பது யானே என்றார் ஆழ்வார்.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி
*வேறே அநுகரித்தாரும் சிலர் உண்டிறே. “கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்” என்று.
அவளைப் போலே ஜகத்காரணரூபியைப்பற்றும் அவளன்றிறே இவள். அர்ச்சாவதாரரூபியையிறே இவள் அநுகரிப்பது.
இவ்வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அநுபவமொழிய, அந்தந்த அவதாரங்களால் பிறக்குமநுபவத்தை நாய்க்கிடவென்றிருக்குமவளிறே இவள்.
அர்ச்சாவதாரங்களால் வரும் அனுபவமன்றி மற்றவை திருமங்கை ஆழ்வார் கைக்கொள்ள மாட்டார் என்பது இங்கு நோக்கத்தக்கது.
மற்றைய ஆழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வார்க்கு அர்ச்சாவதாரத்தில் ப்ராவண்யம் அளவற்றதாகையாலே
இவ்வநுகாரமும் அர்ச்சாவதார விஷயமாகவே செல்லுகின்றது.

தூதுவிடுவதும் அர்ச்சைக்கே
நம்மாழ்வார் எம்பெருமானைக் குறித்து அவரது நிலையை அறிவிக்கும் பொருட்டு திர்யக்குக்களை (பறப்பன முதலியவற்றை) தூது விட்டார்.
அது நான்கு திருவாய்மொழிகளில் – * அஞ்சிறைய மடநாராய், வைகல் பூங்கழிவாய், பொன்னுலகாளீரோ, எங்கானலகங்கழிவாய் *.
இந்த நான்கு பதிகங்களிலும் ஒவ்வொரு நிலையில் தூது விட்டார். முதலில் விபவம், கடைசியாகத் திருமூழிக்களம் அர்ச்சையில் தூதுரைத்தார்.
இவையனைத்தும், ஆசார்ய ஹ்ருதயத்தில் விரிவாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

கலியனோ தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார். * தூவிரிய மலருழக்கி * (3-6) அழகிய சிறகுகளோடு கூடிய
வண்டு, குருகு முதலானவற்றை வயலாலி மணவாளன் திறத்து தன்னுடைய சிந்தை நோய், உடலின் நோய் ஆகியவற்றை அறிவிக்கும்படி பணிக்கிறார்.
ஒன்பதாம் பத்தில் * காவார் மடற்பெண்ணை * (9-4) பதிகத்தில் ஆழ்வார் உள்ளத்தாலும், உடலாலும் எய்திய நோய் கூற
புள்ளினத்தை திருப்புல்லாணி எம்பெருமானிடத்து தூது விடுகிறார்.
திருநெடுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்கள், அணியழுந்தூர் எம்பெருமானிடத்தும், திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடத்தும் தூது விடுவதாக அமைந்தது.
இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்தி *
(திருக்கண்ணபுரம் புக்கு) ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் சொல்லுமாபோலேயன்று காணும் – இவர்க்குத் திருக்கண்ணபுரம் என்றாலிருக்கும்படி.
அவர்கள் அளவன்றே இவர்க்கு அவ்வூரில் உண்டான பாவபந்தம்.
அநந்தாழ்வான் “திருவேங்கமுடையான்” என்னுமாப்போலேயும்,
பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்னுமாப்போலேயும்.
சோமாசியாண்டான் ” எம்பெருமானாரே சரணம்” என்னுமாப்போலேயும் திருநாமங்களைச் சொல்லும்போது இவராதரம்.
ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்பதை மிகுந்த ஆதரத்துடன் (ப்ரேமத்துடன்) சொல்வார் என்பதே இதன் தாற்பர்யம்.

இன்னமும் * காணுமோ கண்ண புரமென்று காட்டினாள் * (8-2-2) என்றவிடத்தில் ஆழ்வாருக்கு
திருக்கண்ணபுரத்தில் உள்ள ஆதரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
(காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்) சுற்றும்கண்ணையோட்டிப் பார்த்தவாறே திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாக
வேண்டுவானென்னென்னில்; இவளுக்கு அபிமதம் சவுரிப்பெருமாள் பக்கலிலே யாகையாலும்,
இவள் தான் லக்ஷ்யத்தை உடையளாகையாலும், திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாயிற்று.
திருக்கண்ணபுரத்தைக் காணிகோள், அஞ்சலியைப் பண்ணிகோள்” என்று சொல்லப்புக்கு முடியச் சொல்லமாட்டாதே
குறையும் ஹஸ்தமுத்ரையாலே காட்டினாள் * இது பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி.

‘திருக்கண்ணபுரத்தைப் பாருங்கள்; கையெடுத்துக் கும்பிடுங்கள்’ என்று சொல்லத் தொடங்கி,
பூர்த்தியாகச்சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் ‘காணுமோ கண்ணபுரம்’ என்று வாயாற் சொல்லி மற்றதை கையினால்
முத்திரையினால் முடிக்கிறாள். திருக்கண்ணபுரம் என்றால் மேலே ஒன்றும் செய்ய முடியாதபடி ஆயிற்று,
இவ்வாழ்வாருக்கு அவ்வூரில் உள்ள ப்ராவண்யம்.

இவ்வாழ்வாரின் தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார்.

பாகவத சேஷத்வம்
வேதத்தின் உட்பொருளான பாகவத் சேஷத்வத்தை கலியன் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்தார்.
அதுவும், கடல்மல்லைத் தலசயனத்து எம்பெருமான் திறத்து அடியார்களாய் இல்லாதவர்களோடு கூடாமையும்,
திருச்சேறை எம்பெருமானின் அடியார்களை விட்டுப் பிரியாதவராய் இருத்தலையும் (கண்சோர வெங்குருதி வந்திழிய) சொல்லி
பாகவத சேஷத்வத்தை அனுஸந்தித்தார். இதுவும் அர்ச்சாவதார எம்பெருமானிடத்து அடியவராய் இருத்தலே சொல்லப் பட்டது.
இரண்டு திவ்யதேஶங்களைச் சொன்னது மற்றவைகளுக்கு உபலக்ஷணம்.

மடல்
ஆழ்வார் மடலெடுத்ததும் அர்ச்சாவதாரத்திலேயாகும். பெரிய திருமடல் தனியன் இது தன்னை விளக்கும்.

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் – நன்னுதலீர் நம்பி நறையூரர் *
மன்னுலகில், என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில் * மன்னு மடலூர்வன் வந்து.

அழகிய நெற்றியையுடைய மாதர்காள்! பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளும் தாமரைப்பூவிற்பிறந்த பிராட்டியும்
தோத்திரம் செய்யப்பெற்ற திருநறையூரில் எழுந்தருளியிருப்பவனும் கல்யாண குணபரிபூர்ணனுமான எம்பெருமான்
எனது அவஸ்தையைக் கடாக்ஷித்தும் க்ருபை செய்யாவிடில் திருப்பதிகள் தோறும் மடலூர்ந்து கொண்டு இருப்பேன்.

நாயகியாய் வளை இழத்தலும் அர்ச்சைக்கே
ஆழ்வார் நாயகி தஶையினை அடைந்து எம்பெருமானது திருக்குணங்களில் ஈடுபட்டு இருக்க, அந்நாயகியைப் பார்த்து திருத்தாயார்,
அவள் எப்படி வளை இழந்தாள், என்று கூறுவதாக திருவாய்மொழியிலும், திருமொழியிலும் ஒவ்வொரு பதிகம் இருக்கின்றன.
திருமொழியில் தானிழந்தவற்றைத் தன் வாக்காலே அருளினார் என்னும் வாசி குறிக்கத் தக்கது.
இங்கு * கலை வளை அஹம் மம க்ருதிகள் * என்ற ஆசார்ய ஹ்ருதயம் காட்டுகிற ஸ்வாபதேஶார்த்தம் நோக்கத் தக்கது.

* மாலுக்கு வையமளந்த மணாளற்கு * (6-6) பதிகத்தில், நம்மாழ்வார் வாமனன் எம்பெருமான் முதலாக
* இழந்தது பீடே, இழந்தது சங்கே * என எல்லாம் இழந்ததாக தாய்ப் பேச்சாலே சொல்லப்பட்டது.

பரகால நாயகி (திருமங்கை ஆழ்வாரோ) என்னில் * இழந்தேனென் வரிவளையே இழந்தேனென் கனவளையே,
இழந்தேனென் செறிவளையே, இழந்தேனென் பொன்வளையே, இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் ஒளிவளையே *
என்று வரிவளையை இழந்தது திருக்கண்ணபுரத்துறையும் எம்பெருமானுக்கே ஆதலால், இவ்வனுபவமும் அர்ச்சையிலே ஆயிற்று.
இத்திருமொழியில் ஆழ்வார் தாமான தசையில் இழந்தேன் என்னுடைய வரிவளையே என்றருளினார்.
தெள்ளியீர் பதிகத்தில் ஆழ்வார் தாய்ப்பேச்சாக சவுரிப்பெருமாளை நோக்கி இவளது கைவளையைக் கொள்ளை கொள்வது
தகுதியோ சொல்வீர் என்று கேட்கிறாள்.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி குறிப்பிடத் தக்கது –
* பராவஸ்த்தையைத் தொழுதாளோ? வ்யூஹங்களைத் தொழுதாளோ? அவதாரங்களைத் தொழுதாளோ?
அர்ச்சாவதாரத்தில் நீர் நின்ற ஊரையன்றோ இவள் தொழுதது * .

அர்ச்சாவதாரமே ஆறும் பேறும்
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் அர்ச்சாவதாரத்தில் இழிகையே உஜ்ஜீவன ஹேது என்பதனை –
* உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க்குய்யலாமே? * என்றருளினார்.
உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டனவாயுள்ள திருக்கண்டியூர், திருவரங்கம், திருமெய்யம், திருக்கச்சி, திருப்பேர்நகர், திருக்கடல்மல்லை,
ஆகிய இத்திருப்பதிகளைப் பேசிக்கொண்டு அவகாஹிக்குமவர்கள் உஜ்ஜீவிக்கலாமத்தனையொழிய அல்லாதவர்களுக்கு உஜ்ஜீவிக்க வழியுண்டோ?

பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே – திவ்யதேஶங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே! –
விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம்
தென்கோட்டி என்று தானுகந்த ஊரெல்லாம் தன்தாள் பாடி என்று அர்ச்சாவதாரங்கள் தோறும்
யாத்திரையாகப் போவது போக்கித் திரியும் பரமபாகவதர்களுக்குக் கதியே.

இனி, திருக்கண்ணபுரத்தையே ஆறாகவும் பேறாகவும் சொன்னது இரண்டு திருமொழிகள்.
* தொண்டீர் உய்யும் வகை * (8-6) என்பது திருக்கண்ணபுரத்து எம்பெருமானை ஆறாக (வழியாக) சொன்னது.
* வியமுடை விடையினம் * (8-7) திருமொழி திருக்கண்ணபுரத்தைப் பேறாக (உபேயமாகச்) சொன்னது.

தொண்டீர் உய்யும் வகை பதிகத்தில் * வருந்தாதிரு நீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா * (8-6-6) என்றும்
*மால் ஆய், மனமே! அருந்துயரால் வருந்தாதிரு* (8-6-8) என்றும் உபாயத்வம் (விரோதி நிரஸநத்வம்) சொல்லப்பட்டது.
இத்திருமொழி அவதாரிகை * ஸர்வேஶ்வரன் நம்முடைய ரக்ஷணத்தில் உத்யுக்தனாய் கொண்டு திருக்கண்ணபுரத்திலே ஸந்நிஹிதனானான்;
நாமும் அவனை ஆஶ்ரயித்து உஜ்ஜீவிப்போம் * என்று உபாயத்வம் சொல்லப்பட்டது குறிக்கத்தக்கது.

வியமுடை விடையினம் பதிகந்தன்னில் திருக்கண்ணபுரத்தின் ப்ராப்யத்வம் சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில்,
விரோதிகள் தொலைந்தால், எம்பெருமானை அனுபவிப்பது பரமபத்திலேயாம். ஆனால் அவ்வெம்பெருமானும் அதனை விட்டு
இத்திருக்கண்ணபுரமே ப்ராப்யம் என இங்கு எழுந்தருளியிருப்பதனால் இதுவே ப்ராப்யமாயிற்று,
* கணபுரம் அடிகள் தம் இடமே* என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை எம்பெருமானின் இருப்பிடத்தை அநுபவித்து இனியரானதும் நினைக்கத்தக்கது.

இவ்வர்த்தங்களை * தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கண்ணபுரத்தான் நண்ணார் ஒழிப்பானை ஆறாக * என்றும்
* வியன்ஞாலத்தில் மல்கு சீரால் நல்வானில் நயமுடைக் கண்ணபுரம் பேறாக * என்றும்
திருமொழி நூற்றந்தாதியில் அழகுற அருளியது காணத்தக்கது.

ஒரு நல் சுற்றம் பதிகம்
இப்பதிகம் பெரிய திருமொழியில் பத்தாம் பத்து முதல் பதிகமாகும். இப்பதிகந்தன்னில் ஆழ்வார் பரமபதத்தேறப் போவதாகத்
திருவுள்ளம் பற்றி இந்தத் திருமொழியை அருளிச் செய்கிறார். இதில் கல்யாணமான ஒரு பெண்பிள்ளையானவள் தனது
பிறந்தகத்தில் நின்றும் புகுந்தகத்திற்க்குச் செல்லும்முன் தனது உற்ற தோழிகளிடமும் உறவினர்களிடமும் சொல்லிவிட்டு
புறப்படுமாபோலே அமைந்தது. நவோடையான பெண் – பிறந்தகத்தின்றும் புக்ககத்துக்குப்போம்போது ஜந்மபூமியிலுள்ள
உறவுமுறையாருள்ளிடமெங்கும் புக்கு முகம் காட்டுமாபோலே
ஆழ்வார் தமக்கு ஒரு (அத்விதீயமான) நற்சுற்றமாகக் கொண்டது திவ்யதேஶ எம்பெருமான்களையே.
இங்கு திருநீர்மலை, திருக்கண்ணமங்கை முதலான திவ்யதேஶ எம்பெருமான்களின் குணாநுபவம் பண்ணுகிறார்.

இளையபெருமாள், மாதா பிதா என அனைவரும் எனக்குப் பெருமாளே என்றார். மார்க்கண்டேய மஹரிஷி பாண்டவர்களுக்கு
மாதா, பிதா, ஸுஹ்ருத் என அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனே என உபதேஶித்தார்.
கலியன் இப்படி எல்லாமாகப் பற்றுவது அர்ச்சாவதார எம்பெருமான்களையே. ஆழ்வார்க்கு இவ்வுலகம் பிறந்தகம்; புகும்வீடு பரமபதம்;
திவ்யதேஶ எம்பெருமான்களே உற்றார் உறவினர், சுற்றத்தவர் மற்றும் பிறரும் ஆவர்.
இங்குள்ள திவ்யதேஶ எம்பெருமான்களிடம் சொல்லிக் கொண்டு ஆழ்வார் வானேறப் புறப்படுகிறார்.

மோஹிப்பதும் அர்ச்சையிலே
கண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து,
எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே! * என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார்!
இதனை * த்வா மந்ய கோபக்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீய மவமாந மம்ருஷ்யமாணா,
ப்ரேம்ணா த தாம பரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரித மார்யஜனாஸ் ஸஹந்தே* (40) என்கிற
அதிமானுஷஸ்தவ ஸ்லோகத்தில் அருளிச் செய்தார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.
இங்ஙனம் நீ கட்டுண்டிருந்தாய் என்கிற சரிதத்தைப் ப்ரஸ்தாவித்த மாத்ரத்தில் ஸஹிக்க முடியாமல் *எத்திறம்* என்று ஆழ்வார்கள் மோஹிப்பர்கள்.

திருமங்கையாழ்வார் மோஹிப்பதோ அர்ச்சாவதாரத்திலே!
உம்பொன்னுமஃதே (திருநெடு – 19) * உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை;
‘மத்துறுகடைவெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘ என்று
அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது -இது வ்யாக்யான ஸ்ரீஸூக்தி.
இத்தன்மை மற்ற ஆழ்வார்களுக்குத் தான் உண்டோ என திருத்தாயார் கேட்கிறார்

இதன் மூலம் கலியனின் அர்ச்சாவதார ஈடுபாடு விண்ணப்பிக்கப்பட்டது.

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணும் திருப்பதி நூற்றெட்டினையும் நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாதம், என்றலைமேல் பூ

மால்நீர்மைக்கு எல்லை உகந்தஊர் நூற்றெட்டு
சாலநண்ணியுள்ள கணக்கினிதாய் – ஆலிநாடன்
செய்யுந்திருமொழி நூற்றெட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து. (திருமொழி நூற்றந்தாதி சாற்றுப் பாசுரம்)

திருமாலின் நீர்மை குணத்திற்கு எல்லை நிலமான திவ்ய தேசங்கள் 108. அந்த கணக்கு வரும்படி திருவாலி நாட்டிற்கு
அதிபதியான ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி 108ம் ஓதிடுவார் (திருமொழி மொத்தம் 108 பத்துக்கள்),
விரைவாக வானவர் நாடான ஸ்ரீவைகுந்தம் புக்கு அங்கு திருமாலிற்கு அடிமை செய்வார்.

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரி நாதாய கலிவைரிணே
சதுஷ்கவிப்ரதாநாய பரகாலாய மங்களம்.

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே ஸூதர்சன ராமானுஜ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி–ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்-

March 26, 2021

ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர்.
திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர்.
அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன.
இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து.
இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள்.
இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள்
திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும்.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன.
மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும்,
ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது.
முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன.
அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.

இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள் பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக
அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ?
அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள்.
முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும்.
அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும்.
ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்.
இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும்.
இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது.
வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.

பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில்
கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி.
வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில்
அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.

அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து
வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள்.
அவர்தான் திருக்குருகூர் வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர்.
அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா?
அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை.
ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள்.
ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார்.
மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து
அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப் பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.

முன்னுரையில் எழுதுகிறார் –

“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து,
ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப் பொருளையும் பொதுவாக நோக்கி
அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”

கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.

மாலை வழி மறித்தே மந்திரங்கொள் வாட் கலியன்
கோலத் திரு மொழியால் கூறு பொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில் சுருக்கி ஆக்க முயல் பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.

மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள் பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

திருமொழி அந்தாதி பேசுகிறது –

வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசை மொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.

அடுத்த திருமொழி ஆரம்பம்

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே

திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –

வாலி மதனழித்த வல் வில்லி நம் வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.

அடுத்த திருமொழி தொடக்கம்

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

திருமொழி நூற்றந்தாதி –

முற்ற மூத்து மொய் குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளை யவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீள வுரை தந்தே நமக்கு

இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.

ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலி நெஞ்சே நாளும் தொழு தெழுகென்றே சொல்
கலியனுரை வேதக் கலை.

கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல் வினைக்கு வாள்.

__________________

வாணிலவு மாதர் நகை தப்பி நிமி வனத்தே
சேணுயர் வான் சேவடியே சேர்தி யெனப் – பேணு நெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.

__________________

அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரை தேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு

__________________

கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே

இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்

செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்

தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.

__________________

தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்

வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா

புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்

கவிநமக்கு வாழ்வருளும் கண்

__________________

கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர் களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட் கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.

———————————–

ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ
நேயத்தே பித்தளை நற் செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேணுமோ மதித்து உன்னைப் பேணுகைக்கே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -20–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 23, 2021

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

பதவுரை

வானவர் தங்கள் கோனும்–தேவேந்திரனும்
மலர்மிசை அயனும்–பூவிற் பிறந்த பிரமனும்
நாளும்–நாள் தோறும்
தே மலர் தூவி–தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும்–துதிக்கும் படியாக வுள்ள
சே அடி–செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான
மாலை–ஸர்வேச்வரனைக் குறித்து,
மானம் வேல்–பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன்–திருமங்கையாழ்வார்
சொன்ன–அருளிச்செய்த
வண் தமிழ் – செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும்–இப்பாசுரமிருபதையும்
ஊனம் அது இன்றி–குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம்–கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு–பரமபதத்தை
ஆள்வர்–ஆளப்பெறுவர்

தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும்
இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற
செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும்
ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க்
கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று
பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –