ராதை அவனுடைய புளகாங்கிதம் கொண்ட அங்கங்களை நினைவு கூர்கையில், பொறாமையினால் அது அவன் கணக்கில்லாத கோபியரை ஆலிங்கனம் செய்ததால் தான் என்று நினைக்கிறாள். ராசக்ரீடை இரவில் நடைபெறும்போது கண்ணின் அங்கங்களில் உள்ள ஆபரணங்களின் ஒளி இருளைப் போக்கிவிட்டதாம்.
மேகக்கூட்டங்களால் சந்திரன் மறைக்கப படுகிறான்., ஆனால் கண்ணன் நெற்றியில் உள்ள சந்தனத் திலகம் என்ற சந்திரன் மறைக்கப் படுவதே இல்லை.
ஆறாவது அஷ்டபதி ஸ்லோகம்
கணயதி குண க்ராமம் ப்ராமம் ப்ரமாதபி நேஹதே
வஹதி ச பரீதோஷம் தோஷம் விமுஞ்சதி தூரத:
யுவதிஷு வலத்த்ருஷ்ணே க்ருஷ்ணே விஹாரிணி மாம்வினா
புனரபி மனோ வாமம் காமம் கரோதி கரோமி கிம்
ராகம் காம்போஜி தாளம் ஆதி
முந்தைய அஷ்டபதியில் ராதை கண்ணனின் அழகையும் செயல்களையும் நினைவு கூர்ந்து இந்த அஷ்டபதியில் அவனுடன் சுகித்த அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள்.
ஜீவன் இறைவனிடம் இருந்து தன் அறியாமையினால் பிரிந்து வருந்துகிறான். அந்த அனுபவம் இன்னதென்று நினைவில்லாவிட்டாலும் அந்த ஆனந்தத்தை இழந்ததை உணர்கிறான். அவனுடன் சேர்வது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்பதை உணரும்போது ராதையின் சகியைப் போல் ஆசார்யரானவர் ஜீவனையும் பகவானையும் ஒன்று சேர்க்க முயற்சிப்பதுதான் சகி என்ற பாத்திரத்தின் உருவகம்.
ராதை தான் கண்ணனுடன் இருந்ததை விவரிக்கிறாள்.
நிப்ருத நிகுஞ்ஜ க்ருஹம் கதயா நிஸி ரஹஸி நிலீய வஸந்தம்
சகித விலோகித ஸகல திஸா ரதி ரபஸ வஸேன ஹஸந்தம்
ஸகி ஹே கேசி மதன முதாரம்
ரமய மயா ஸஹ மதன மனோரத பாவிதயா ஸவிகாரம்
நிப்ர்தநிகுஞ்சகதயா ரஹஸி- ராதை கண்ணனை சந்திக்க யாரும் அறியாமல் லதாக்ருஹத்திற்கு செல்கிறாள்.
நிலீய வஸந்தம்- அங்கு மறைந்து கொண்டு
சகிதவிலோகித ஸகலதிசா- அவனைக்காணாமல் பயத்துடன் எல்லா திசைகளிலும் பார்ப்பவளைக்கண்டு
ரதிரபஸபரேண- காதல் மேலிட்டு
ஹஸந்தம்- சிரித்துக் கொண்டு நிற்பவனாய்
கேசிமதனம் உதாரம் – கேசி என்ற அரக்கனைக் கொன்ற சிறந்த வீரனான் கண்ணனை
ஹே ஸகி-தோழி
மதனமநோரதபாவிதயா – மன்மதனால் பீடிக்கப்பட்ட
மயா ஸஹ- என்னுடன்
ஸவிகாரம்- காதலோடு
ரமய – ரமிக்கச்செய்வாயாக
இனி வரும் ஸ்லோகங்கள் ராதை- கண்ணன் சேர்க்கை அதாவது நாயக நாயகி பாவ பக்தியை விளக்குகின்றன. பகவான்தான் உயிர் இந்த உலகம் அவனுடைய சரீரம். பக்தி என்பது அந்த உயிரை உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணர்வது . இந்த பாவத்தில் பார்த்தால் நாயக நாயகி பாவம் பற்றி லோகாயதமான உணர்வு ஏற்படாது. சரீர சுகம் என்பது சரீர சரீரி சம்பந்தம். இதுதான் ஆண்டாளையும் மீராவையும் பாட வைத்தது.
ப்ரதம ஸமாகமா லஜ்ஜிதயா படு சாடு ஸதைரனு கூலம்
ம்ருது மதுராஸ்மித பாஷிதயா ஸிதிலீக்ருத ஜகன துகூலம் (ஸகி ஹே)
ப்ரதம ஸமாகம லஜ்ஜிதயா- முதல் முதலாக அவனுடன் சேர்கையில் உண்டான வெட்கத்துடன் கூடிய என்னை
படுசாடுசதை: – திறமையான செயல்களாலும்
ம்ருதுமதுரஸ்மிதபாஷிதயா- இனிமையான சொற்களாலும்
அனுகூலம் – இயல்பான நிலை அடையச்செய்து
சிதிலீக்ருதஜகனதுகூலம் – ஆடையை நெகிழச்செய்த கண்ணனை
முதல் முதலாக இறை உணர்வு ஏற்படும்போது நமக்கு இந்த சரீர உணர்வு தூக்கலாக இருக்கிறது. வெட்கம் என்பது நான் எங்கே அவன் எங்கே அவனுடன் என்னால் சேர முடியுமா என்ற நாணம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் உணர்வு அற்று விடுகிறது.முதலில் அவன் ஒளிந்து கொண்டு நம்மைப் பார்த்து நகைக்கிறான். பிறகு நம் தயக்கத்தை அவனுடைய லீலைகள் மூலம் போக்கி விடுகிறான்.
ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம் (முன்னம் காண்க)
கிஸலய ஸயன நிவேஸிதயா சிரம் உரஸி மமைவ ஸயானம்
க்ருத பரிரம்பண சும்பனயா பரிரப்ய க்ருதாதர பானம் (ஸகி ஹே)
கிஸலய சயன நிவேசிதயா- தளிர்களால் ஆன சயனத்தில்
சிரம் உரஸி மமைவ சயானம்- என்மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பனை
க்ருதபரிரம்பணசும்பனயா பரிரப்ய க்ருதாதரபானம் – என்னைத்தழுவி அதரபானம் செய்தவனை
நமக்கு மிகவும் நெருங்கி வருபவன். நம்மை முழுதும் அறிந்தவன்.
ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம் (முன்னம் காண்க)
அலஸ நிமீலித லோசனயா புளகாவலி லலித கபோலம்ஸ்ரமஜல ஸகல களே பரயா வர மதன மதாத் அதிலோலம் (ஸகி ஹே)
அலஸநிமீலித லோசனயா- மகிழ்வினால் என் கண்கள் மூடியிருக்க
புலகாவலிலலிதகபோலம்- மலர்ந்த கன்னங்கள் உடையவனை
ச்ரமஜலஸகலகலேவரயா – என் உடல் வியர்த்திருக்க
வரமதனமதாததிலோலம்-மன்மதனால் பீடிக்கப்பட்டவனை
அவன் பெயரைக்கேட்டாலே புளகாங்கிதம் அடைந்து அவனை நேரில்கண்டது போல் கண்கள் மூடினாலும் உள்ளே தெரிபவனாக இருக்கிறான். அந்த நிலை அடைந்து விட்டால் அவன் நமக்கு ஒப்பான ஆனந்தம் அடைகிறான்.
ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )
கோகில கலரவ கூஜிதயா ஜித மனஸிஜ தந்த்ர விசாரம்
ஸ்லத குஸுமாகுல குந்தளயா நக லிகித கன ஸ்தனபாரம் (ஸகி ஹே)
கோகிலகலரவகூஜிதயா- ஆனந்தம் மேலிட்டு குயில் போலக் கூவின என்னைக் கண்டு
ஜிதமனஸிஜதந்த்ரவிசாரம் – காதல் மேலிட்டவனை
ச்லதகுஸுமாகுலகுந்தலயா-என் கூந்தல் அவிழ
நகலிகிதஸ்தனபாரம்- அவனுடைய நகங்கள் என் மார்பில் பதிய வைத்தவனை
கூஜ்ந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் என்று கூவின வால்மீகி முதலிய குயில்களைப்போல பக்தனும் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்று கூவும் போது அவனுக்கும் நம்மேல் காதல் மேலிடுகிறது.
ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )
சரண ரணித மணி நூபுரயா பரிபூரித ஸுரத விதானம்
முகர விஸ்ருங்கல மேகலயா ஸகசக்ரஹ சும்பன தானம் (ஸகி ஹே)
சரணரணிதமணிநூபுரயா – என் பாதங்களில் உள்ள நூபுரம் சப்திக்க பரிபூரிதஸுரதவிதானம் – காதல் விளையாட்டில் மூழ்கியவனை
முகரவிச்ருங்கலமேகலயா-என் இடை ஆபரணம் குலுங்க
ஸகசக்ரஹசும்பனதானம்- என்மேல் இதழ்கள் பதித்தவனை
காலில் சதங்கை ஒலிக்க இடையில் மணிமாலையுடன் நாம் சங்கீர்த்தனம் செய்யும் பக்தனை அவன் தழுவி முத்தம் இடாமல் வேறென்ன செய்வான்?
ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )
ரதிஸுக ஸமய ரஸாலஸயா தர முகுளித நயன ஸரோஜம்
நிஸ்ஸஹ நிபதித தனுலதயாமதுசூதனம் உதித மனோஜம் (ஸகி ஹே)
ரதிஸுகஸமயரஸாலஸயா – என் மகிழ்ச்சியையும் களைப்பையும் பார்த்து
தரமுகுளித நயனஸரோஜம்- சிறிது மலர்ந்த தாமரைக் கண்களை உடையவனை
நிஸ்ஸஹநிபதிததனுலதயா –மயங்கியதுபோன்ற உடலைக் கண்டு
மதுசூதனமுதிதமநோஜம்- மனமகிழ்ந்தவனை
பக்தி மேலீட்டால் உடல் தளர்கிறது, உணர்வு நழுவி மயங்கியது போல் இவ்வுலக உணர்வின்றி இருப்பதைக்கண்டு அவன் மனமகிழ்ந்து தன்னுடன்
சேர்த்துக் கொள்கிறான். அந்த நிலை வேண்டும் என்றால் குருக்ருபை வேண்டும். அதுதான் சகியிடம் வேண்டுதல்.
ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )
ஸ்ரீ ஜய தேவ பணிதமிதம் அதிஸய மதுரிபு நிதுவன ஸீலம்
ஸுகமுத் கண்டித ராதிகயா கதிதம் விதநோது சலீலம் (ஸகி ஹே)
ஸ்ரீஜயதேவபணிதம் இதம் – ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த
அதிசய மதுரிபு நிதுவனசீலம் –அதிசயமான கண்ணனின் காதலினால்
ஸலீலம் – விளையாட்டாகச் செய்யப்பட்டதும்
உத்கண்டித கோபவதூகதிதம்- அதனால் மகிழ்வுற்ற ராதையால் சொல்லப்பட்டவையான இவை
ஸுகம் விதநோது – கேட்பவர்களுக்கு சுகத்தை அளிக்கட்டும்.
எல்லாமே அவனுடைய் லீலா வினோதம் அதைக் கேட்பவர்க்கு எல்லா சுகங்களும் உண்டாகட்டும் என்கிறார் ஜெயதேவர்.
ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க)
———————————–
ஏழாவது அஷ்டபதி ஸ்லோகம்
கம்ஸாரிரபி ஸம்ஸார வாஸனாபந்த ஸ்ருங்கலாம்
ராதாம் ஆதாய ஹ்ருதயே தத்யாஜ வ்ரஜ ஸுந்தரீ
கம்ஸாரிரபி- கிருஷ்ணன் (கம்ஸாரி- கம்சனை கொன்றவன்), கம் என்றால் சுகம் கம் ஸாரயதி – கம்ஸாரி: – சுகத்தைக் கொடுப்பவன்
ஸம்சாரவாஸனாபந்தஸ்ருங்கலாம் – (கர்மவினை என்ற தளைக்குட்பட்ட ஜீவனான), ஸம் ஸம்யக் ஸாரம் ஸம்ஸாரம் – சிருங்காரம், வாஸனா- தொடரும் நினைவுகள் . பந்த ஸ்ருங்கலா- பிணைக்கும் சங்கிலி. அதனால் பிணைக்கப்பட்ட ராதை என்று பொருள்.
ராதாம்-ராதையை
ஹ்ருதயே ஆதாய- மனதில் கொண்டு
வ்ரஜசுந்தரீ:- மற்ற கோபியரை
தத்யஜ- விட்டு நீங்கினான்.
கிருஷ்ணனும் ராதை கோபித்துக் கொண்டு சென்றதைப் பார்த்து வருந்துகிறான். அவனுடைய மனோநிலையைக் குறிப்பது இந்த அஷ்டபதி. ஜீவன் தன்னை விட்டுப் பிரிந்து சம்சாரத்தில் அகப்பட்டு வருந்துகையில் பகவானும் அந்த ஜீவனைக்குறித்து வருந்துகிறான் என்பது இதன் பொருள்.இனி அஷ்டபதியைக் காண்போம்.
இதஸ்ததஸ்தாம் அனுஸ்ருத்ய ராதிகாம்
அனங்க பாண வ்ரண கின்ன மானஸ:
க்ருதானுதாப: ஸ களிந்த நந்தினீ
தடாந்த குஞ்ஜே விஷஸாத மாதவ:
ராகம்: பூபாளம் தாளம்: த்ரிபுடை
மாமியம் சலிதா விலோக்ய வ்ருதம் வதூநிசயேன
ஸாபராததயா மயாபி ந வாரிதா அதி பயேன ஹரிஹரி
ஸா இயம் – இந்த ராதை
மாம் – என்னை
வதூநிசயேன –பெண்களுடன்
வ்ருதம்-சூழப்பட்டவனாகப்
விலோக்ய – பார்த்து
சலிதா-சென்றுவிட்டாள்
மயா அபி- என்னாலும்
அபராததயா – குற்றம் செய்தேன் என்பதனால்
ந வாரிதா- தடுக்கப்படவில்லை
பல்லவி
ஹதாதரதயா ஸா கதா குபிதேவ
ஹரிஹரி- கஷ்டம் !
ஹதாதரதயா- கவனிக்கப படாமையால்
குபிதேவ – கோபம் கொண்டு
ஸா- அவள்
கதா – சென்றுவிட்டாள்
கிம் கரிஷ்யதி கிம் வதிஷ்யதி ஸா சிரம் விரஹேண
கிம் தனேன ஜனேன கிம் மம ஜீவிதேன க்ருஹேண (ஹரி ஹரி)
ஸா –அவள், கிம் கரிஷ்யதி ,என்ன செய்வாளோ, சிரம் விரஹேண -விரஹ தாபத்தினால் வெகு நேரம் வருந்தி , கிம் வதிஷ்யதி – தோழியிடம் என்ன சொல்வாளோ? அவளில்லாமல், தனேன -செல்வத்தினாலோ , ஜனேன -மற்றவர்களாலோ அல்லது ஜீவிதேன க்ருஹேண- வாழ்வதினாலோ, கிம் – என்ன பயன்?
சிந்தயாமி ததானனம் குடிலப்ரு கோப பரேண
ஸோண பத்ம மிவோ பரி ப்ரமதாகுலம் ப்ரமரேண (ஹரி ஹரி)
குடிலப்ரூகோபபரேண- கோபத்தால் நெரிந்த புருவத்துடன் கூடிய
ததானனம் – அவள் முகத்தை
சோணபத்மம் – சிவந்த தாமரை மலர்
உபரிப்ரமதாகுலம் ப்ரமரேண- மேல் சூழ்ந்து சஞ்சரிக்கும் வண்டுகள் போல
சிந்தயாமி. – நினைக்கிறேன்.
தாமஹம் ஹ்ருதி ஸங்கதாம் அனிஸம் ப்ருஸம் ரமயாமி
கிம் வனேனுஸராமி தாமிஹ கிம்வ்ருதா விலபாமி (ஹரி ஹரி)
அஹம் – நான்
தாம் – அவளை
ஹ்ருதி ஸங்கதாம் –என் ஹ்ருதயத்தில் உள்ளவளாக
அனிசம் -எப்போதும்
ப்ருசம் ரமயாமி- மிகவும் இன்பமடைகிறேன். அப்படி இருக்கையில்
கிம் – எதற்காக
வனே – காட்டில்
அனுஸராமி – தேடிப பின் செல்ல வேண்டும்.?
இஹ- இங்கு
கிம் – ஏன்
வ்ருதா – வீணாக
விலபாமி- புலம்ப வேண்டும்?
இறைவன் தன்னை அறியாமையால் விட்டுச்சென்ற ஜீவனிடம் என்றும் பிரியாமல்தான் இருக்கிறான். விட்டுப்பிரிதல் என்பது நம் அறியாமை என்னும் மாயையே. உலக இன்பத்தை நாடி இறைவனை மறந்து விடுவதயு ஒரு நிலை. அந்த உலக வாழ்க்கையால் துன்புற்று என்னை மறந்து விட்டான் இறைவன் என்று குழம்புவது இன்னொரு நிலை. இதுதான் ராதையின் நிலை.
தன்வி கின்னம் அஸுயயா ஹ்ருதயம் தவா கலயாமி
தன்ன வேத்மி குதோ கதாஸி ந தேன தேனுனயாமி (ஹரி ஹரி)
தன்வி-மெல்லியலாளே
தவ ஹ்ருதயம் – உன் மனம்
அசூயயா-பொறாமையினால்
கின்னம்- வருத்தம் அடைந்திருக்கிறது என்று
ஆகலயாமி- அறிகிறேன்.
குதா கதா அஸி- நீ எங்கு சென்றாய்
தத் – என்பதை
ந வேத்மி- அறியேன்
தேன – அதனால்
தே- உன்னை
அனுனயாமி-பின் தொடர்ந்து சென்று சமாதானம் செய்ய முடியவில்லை.
த்ருஸ்யசே புரதோ கதா கதமேவ மே விததாஸி
கிம் புரவே ஸஸம்ப்ரமம் பரிரம்பணம் ந ததாஸி (ஹரி ஹரி)
மே- எனக்கு
புரத: – முன்னால்
கதாகதம் ஏவ – நடமாடிக்கொண்டிருப்பவளாகவே
த்ருச்யஸி- காணப்படுகிறாய் ( அதாவது எப்போதும் கண்முன்னால் இருப்பவளாக)
கிம்_ ஏன்
புரே இவ – முன் போல்
ஸஸம்ப்ரமம் – ஆர்வமுடன்
ந ததாஸி பரிரம்பணம் – அணைத்துக்கொள்ளாமல் இருக்கிறாய் ?
க்ஷம்யதாம் அபரம் கதாபி த வேத்ருஸம் ந கரோமி
தேஹி ஸுந்தரி தர்ஸனம் மம மன்மதேன துனோமி (ஹரி ஹரி)
கதா அபி – ஒருபொழுதும்
ஈத்ருசம் – இவ்வாறு
அபரம்- மற்றொரு தவறை
தவ – உன்னிடம்
ந கரோமி- செய்ய மாட்டேன்
க்ஷம்யதாம் – மன்னிக்க வேண்டும்.
சுந்தரி- அழகியே
மம – எனக்கு
தர்சனம் தேஹி- தரிசனம் கொடு.
மன்மதேன- மதனாவஸ்தையால்
துநோமி- வருந்துகிறேன்.
பகவான் நம்மைப் பிரிந்து படும் அவஸ்தையை இது விவரிக்கிறது. கருணையால் நம்மை காக்க பாடுபடுகிறான். நாம் இருக்கும் இடம் தெரிய வில்லை என்பது நம் மன நிலை அவனை விட்டு தூரத்தில் இருப்பதால் உண்டான பச்சாதாபத்தைக் குறிக்கிறது.நான் உன்னை இனிமேல் விடமாட்டேன் என்று கூறுகிறான்.
கஜேந்தரனும் திரௌபதியும் அல்லலுறும்போது பகவானும் அவர்கள் கூப்பிடமாட்டார்களா என்று தவித்தானாம் . கூப்பிட்டவுடன் ஓடோடி வந்தான்.
வர்ணிதம் ஜயதேவகேன ஹரேரிதம் ப்ரவணேன
கிந்து பில்வ ஸமுத்ர ஸம்பவ ரோஹிணீ ரமணேன
இதம் – இந்த சம்பவம்
ஹரி ப்ரவனே(णे)ன- ஹரியின் மீது மனம் வைத்த
கிந்து பில்வஸமுத்ர ஸம்பவ ரோஹிணீரமனே(णे)ன- கிந்துபில்வம் என்கிற சமுத்திரத்திலிருந்து தோன்றிய சந்திரனைப்போன்ற
ஜெயதேவகென – ஜெயதேவரால்
வர்ணிதம் – வர்ணிக்கப்பட்டது.
—————————————-
8வது அஷ்டபதி
கிருஷ்ணனை அழைத்து வர ராதையால் அனுப்பப்பட்ட சகி அவனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.
யமுனா தீரவானீர நிகுஞ்ஜே மந்தம் ஆஸ்திதம்
ப்ராஹ ப்ரேம பரோத் ப்ராந்தம் மாதவம் ராதிகா ஸகீ
யமுனாதீரவாநீர நிகுஞ்சே-யமுனைக்கரையில் அடர்ந்த தோப்பில் ராதைஇடம் ப்ரேமையால் குழம்பி உட்கார்ந்திருக்கும் கண்ணனிடம் ராதையின் தோழி சொல்லுகிறாள்.
ராகம் ஸௌராஷ்ட்ரம் தாளம் ஆதி
நிந்ததி சந்தனம் இந்து கிரணம் அனுவிந்ததி கேத மதீரம்
வ்யாள நிலய மிளலேன கரளமிவ கலயதி மலய ஸமீரம்
சந்தனம் – சந்தனப்பூச்சை
நிந்ததி- வெறுக்கிறாள்.
குளிர்ச்சியான சந்தனம் பிரிவாற்றாமையால் உஷ்ணத்தைத் தருகிறது
இந்துகிரணம் – சந்திரனின் கிரணங்கள்
அதீரம் கேதம் – அதிகமான துக்கத்தை கொடுப்பதாக
அனு விந்ததி- உணர்கிறாள் நிலவு எரிப்பதாக உணர்கிறாள்.
மலய ஸமீரம்- தென்றல் காற்றை
வ்யாலநிலயமிலன – பாம்புகளின் இருப்பிடத்தில் இருந்து வருவதால்
கராலம் இவ கலயதி-விஷமென உணர்கிறாள்.
சந்தன மரங்களைத்தழுவி வரும் மலையமாருதம் பரிமளம் உடையதாக இருக்கும். ஆனால் அது சந்தன மரங்களின் அடியில் உள்ள பாம்புகளின் சேர்க்கையால் விஷக்காற்று போல் இருக்கிறது என்று நினைக்கிறாள்.
எதெது காதலர்களுக்கு இன்பத்தைக் கொடுக்குமோ அதெல்லாமே பிரிந்து உள்ளமையால் எதிர் பலனைக் கொடுக்கிறது என்பது கவி கற்பனை.
ஸா விரஹே தவ தீனா
மாதவ மனஸிஜ விஸிக பயாதிவ பாவனயா த்வயி லீனா(ஸா)( த்ருவ பதம்)
மாதவ – மாதவா
தவ விரஹே- உன் பிரிவினால்
ஸா – அவள்
தீனா- வாடி
மனசிஜவிசிகபயாத் இவ- காமனின் அம்புக்கு பயந்தவளாக
தவ பாவனா- உன் நினைவில்
லீனா- ஆழ்ந்திருக்கிறாள்.
அவிரள நிபதித மதன ஸராதிவ பவதவனாய விஸாலம்
ஸ்வஹ்ருதய மர்மணி வர்ம கரோதி ஸஜல நளிநீதள ஜாலம்
அவிரல நிபதித – தொடர்ந்து விழும்
மதனசராத் – மன்மதனின் அம்புகளில் இருந்து
ஸ்வஹ்ருதயமர்மணி பவத் – தன் ஹ்ருதயத்தில் உள்ள உன்னை
அவனாய – காப்பாற்றுவதற்காக
விசாலம் – அகன்ற
ஸஜலநளிநீதள ஜாலம்- ஈரமான தாமரை இலைகளாள் ஆன வலையினால்
வர்மகரோதி- அதை மூடிக்கொள்கிறாள்.
பிரிவுத்தீயால் வருந்தும் நாயகி தாமரை இலைகளை தன் உடல்மீது வைத்துக்கொண்டு உஷ்ணத்தை தணிப்பது என்பது காவியங்களில் கூறப்பட்டிருக்கிறது. உதாரணமாக காளிதாசனின் சாகுந்தலத்தில் துஷ்யந்தனைப் பிரிந்து வருந்தும் சகுந்தலையை தாமரை இலைப்படுக்கையில் அமர்த்தி தோழிகள் தாமரை இலைகளை வைக்கிறார்கள். இங்கு ராதை அவள் உள்ளத்தில் உள்ள கண்ணனை மனம்தான் அன்பிலிருந்து காப்பாற்றவே அங்ஙனம் செய்தால் என்பது. கவியின் அழகான கற்பனை.
குஸும விஸிக ஸரதல்ப மனல்ப விலாஸ கலா கமனீயம்
வ்ரதமிவ தவ பரிரம்ப ஸுகாய கரோதி குஸும ஸயனீயம்(ஸா)
அனல்ப விலாசகலா கமநீயம் – சிறந்த அழகிய பூக்குவியல்களால் ஆன
குஸுமசயநீயம் – மலர்படுக்கையில் படுத்த அவள்
தவ- உன்னுடைய
பரிரம்ப ஸுகாய – தழுவல் என்னும் சுகத்தை அடையும் பொருட்டு
குஸுமவிசிக சரதல்பம் –மலராகிய அம்புப்படுக்கையில் சயனித்து
வ்ரதமிவ கரோதி- வ்ரதம் இருப்பவள் போல் தோன்றுகிறாள்.
மலர்கள் மன்மதனின் சரங்கள் ஆதலால் மலர்படுக்கை அம்புப் படுக்கையைப்போல இருக்கிறதாம். அதனால் அவள் கிருஷ்ணனை அடையும் பொருட்டு தவம் செய்வது போல் தோன்றுகிறது என்கிறாள்.
வஹதிச களித விலோசன ஜலபரம் ஆனன கமலம் உதாரம்
விதுமிவ விகட விதுந்தத தந்த தளன களிதாம்ருததாரம்(ஸா)
ஆனனகமலம் – அவளுடைய முகத்தாமரை
வலிதவிலோசன ஜலபரம்- துயருற்ற கண்களில் இருந்து கண்ணீர் பெருகுவதாக
வஹதி- உள்ளது. ( அது எப்படி இருந்தது என்றால்)
விகட – கொடிய
விதுந்துத – ராகுவால் ( வவிது என்றால் சந்திரன் துத அவனை துன்புறுத்துபவன் அதாவது ராகு)
தந்த தலன-கடிக்கப்பட்ட
கலித அம்ருத தாரம்- ஒழுகும் அம்ருததாரையைக் கொண்ட
விதும் இவ – சந்திரனைப்போல் இருந்தது.
விலிகதி ரஹஸி குரங்கமதேன பவந்தம் அஸமஸர பூதம்
ப்ரணமதி மகரம் அதோ வினிதாய கரே ச ஸரம் நவசூதம்(ஸா)
ரஹஸி- தனிமையாக இருக்கையில்
பவந்தம் – உன்னை
அஸமசர பூதம் – மன்மதனின் உருவமாக
குரங்கமதேன-கஸ்தூரியால்
லிகதி- வரைகிறாள்.
அதை: அடியில்
மகரம்- மீனை
விநிதாய – வரைந்து ( மன்மதனின் கொடி)
கரே ச – கரத்தில்
நவசூதம் – மாம்பூக்களை
சரம்- அம்புகளாக்கி
ப்ரணமதி- வணங்குகிறாள்
கண்ணனையே மனம்தான் உருவத்தில் கண்டு என்னை துன்புறுத்தாதே அருள் செய் என்று வணங்குகிறாள்.
மன்மதன் ஐந்து புஷ்ப சரங்கள் கொண்டவன் ஆதலால் அஸமசரன் எனப்படுகிறான். அஸம என்றால் ஒற்றைப்படை, இங்கு ஐந்து.
அரவிந்தம் அசோகம் ச சூதம் ச நவமல்லிகா
நீலோத்பலம் ச பஞ்சைதே பஞ்சபாணஸ்ய ஸாயகா:
தாமரை, அசோகா புஷ்பம், மாம்பூ, மல்லிகை, நீலோத்பலம் இவை மன்மதனின் ஐந்து பாணங்களாகக் கூறப்படுகின்றன.
ப்ரதிபதம் இதமபி நிகததி மாதவ தவ சரணே பதிதாஹம்
த்வயி விமுகே மயி ஸபதி ஸுதாநிதிரபி தனுதே தனுதாஹம்
பிரதிபதம் – ஒவ்வொரு அடிவைக்கும்போதும்
இதம் அபி நிகததி- இவ்வாறு சொல்கிறாள்.
மாதவ – மாதவா
தவ சரணே- உன் பாதத்தில்
பதிதா அஹம் – வீழ்கிறேன்
த்வயி விமுகே- நீ பராமுகமாக இருப்பின்
சஸுதாநிதி: அபி- சந்திரன் கூட
தனுதாஹம் தனுதே – உடலை எரிக்கிறான்.
த்யான லயேன புர: பரி கல்ப்ய பவந்தம் அதீவ துராபம்
விலபதி ஹஸதி விஷீததி ரோதிதி சஞ்சதி முஞ்சதி தாபம்(ஸா)
அதீவ துராபம்- அடைய முடியாத
பவந்தம்-உன்னை
த்யானலயேன- த்யானிப்பதன் மூலம்
புர: பரிகல்ப்ய – தன் முன் இருப்பதாக பாவித்து
விலபதி – புலம்புகிறாள்.
ஹஸதி – சிரிக்கிறாள்
விஷீததி –சோகிக்கிறாள்
ரோதிதி –அழுகிறாள்
சந்ச்சதி –அலைகிறாள் . பின்னர் உன் சேர்க்கை கிடைக்கும் என்ற நினைவில்
முஞ்சதி தாபம்- தாபத்தை விடுகிறாள்.
ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் அதிகம் யதி மனஸா நடனீயம்
ஹரி விரஹாகுல வல்லவ யுவதி ஸகீ வசனம் படனீயம்(ஸா)
ஸ்ரீஜயதேவபணிதம்- ஸ்ரீஜயதேவரால் சொல்லப்பட்ட
இதம் -இந்த வர்ணனை
மனசா- மனதினால்
அதிகம் – மிகவும்
நடநீயம் – கற்பனை நாடகமாகக் காணப்படவேண்டும்.
ஹரி விரஹாகுல – ஹரியின் விரகத்தினால் வருந்தும்
வல்லவயுவதி – கோபியான ராதையின்
சகிவசனம் – சகி சொன்ன வார்த்தைகள்
படநீயம். படிக்கப்பட வேண்டும்’
.
குருவானவர் பகவானிடத்தில் பக்தனுக்காக பரயுந்துரைக்கும் பாவனையில் இந்த அஷ்டபதி அமைந்துள்ளது.
பின்வரும் இரண்டு அஷ்டபதியும் இந்தக் கருத்தைக் கொனடவையே ஆகும்.
ஒன்பது அஷ்டபதி ஸ்லோகம
சகி ராதையின் நிலையை மேலும் வர்ணிக்கிறாள். ராதையின் வேதனை பகவானோடு இணையத்துடிக்கும் பக்தனின் நிலையை ஒத்ததாகும். ஆழ்வார்களின் நாயக நாயகி பாவத்தை வர்ணிக்கும் பாசுரங்களும் மீரா போன்ற மற்ற பக்தர்களின் பாடல்களும் இதற்கு உதாரணம்.
ஆவஸோ விபினாயதே ப்ரியஸகீ மாலாபி ஜாலாயதே
தாபோ நிஸ்வஸிதேண தாவதஹன ஜ்வாலா கலா பாயதே
ஸாபித்வத் விரஹேன ஹந்த ஹரிணீ ரூபாயதே ஹா கதம்
கந்தர் போபி யமாயதே விரசயன் ஸார்தூல விக்ரீடிதம்
ராகம்:பிலஹரி தாளம் ஆதி
ஸ்தன வினிஹிதமபி ஹாரம் உதாரம்
ஸா மனுதே க்ருஸதனு rரிவபாரம்
ராதிகா க்ருஷ்ண ராதிகா விரஹே தவகேஸவ
ஸ்தனவிநிஹிதம் –மார்பில் அணிந்துள்ள
ஹாரம் உதாரம் – மெல்லிய ஹாரத்தை
க்ருசதனு: – உன்னைப்பிரிந்ததால் மெலிந்த உடலுடைய
ஸா- அவள்
பாரம் இவ- பெரும் சுமை போல
மனுதே – -எண்ணுகிறாள்.
கேசவ- கேசவா
தவவிரஹே- உன்னைவிட்டுப் பிரிந்துவருந்தும்
ராதிகா- ராதை
ஸரஸமஸ்ருணமபி மலயஜ பங்கம்
பஸ்யதி விஷமிவ வபுஷி ஸஸங்கம்
ஸரஸம் அஸ்ருணம் அபி மலயஜபங்கம்
பச்யதி விஷம் இவ வபுஷி ஸசங்கம் (ராதிகா)
வபுஷி- உடலில்
அஸ்ருணம் – குளிர்ச்சியாகவும்
ஸரஸம்- மிருதுவாகவும் உள்ள
மலயஜபங்கம் – சந்தனப்பூச்சை
(சந்தனமரங்கள் பெரும்பாலும் மலையமலையில் காணப்படுவதால் குழைத்த சந்தனம் மலயஜபங்கம் என்று குறிப்பிடப்படுகிறது.பங்கம் என்றால் சேறு. ராதை வெறுப்பினால் சேறு என்று கருதுகிறாள் )
விஷம் இவ ஸசங்கம் – விஷமோ என்ற சந்தேஹத்துடன்
பச்யதி- பார்க்கிறாள். (அது எறிவதுபோல் உணர்ந்ததினால் )
ஸ்வஸித பவனம் அனுபம பரிணாஹம்
மதன தஹனமிவ வஹதி ஸதாஹம்
அனுபமபரிணாஹம் –நீண்ட பெருமூச்சுடன் கூடிய
ச்வஸித பவனம்- தன் மூச்சுக்காற்றை
மதனதஹனம் இவ – காதல் தீயைப் போல்
ஸதாஹம் வஹதி- சுடுவதாக உணர்கிறாள்
திஸி திஸி கிரதி ஸஜலகண ஜாலம்
நயன நளினமிவ விகளித நாளம்
விகளிதநாலம்- தண்டில்லாத
நயனநளினம் – தாமரை போன்ற அவள் கண்கள்
திசி திசி – எல்லாதிக்குகளிலும்
ஸஜலகணஜாலம்- கண்ணீர் துளிகளை
கிரதி- இறைக்கிறது. (ஏனென்றால் நீ வருகிறாயா என்று எல்லா திசையிலும் பார்ப்பதால்.)
நயன விஷயமபி கிஸலய தல்பம்
கலயதி விஹித ஹுதாஸன கல்பம்
கிசலய தல்பம் -இளம்தளிர்களால் ஆன சயனத்தை
நயனவிஷயம் அபி- பார்த்தால் கூட
ஹுதாச விகல்பம் – நெருப்பால் ஆனதோ என்று
கணயதி- எண்ணுகிறாள்.
தாமரை மலர்களை போல இளம்தளிர்களால் ஆன சயனத்தை காதல்வயப்பட்ட மங்கையர் நாடுவர். அது கூட அவளுக்கு குளிர்ச்சியைத்தருவதற்கு பதில் நெருப்பு போல் தெரிகிறதாம்.
த்யஜதி ந பாணி தலேன கபோலம்
பால ஸஸினமிவ ஸாயம் அலோலம்
பாணிதலேன கபோலம் – கன்னத்தில கையை
ந த்யஜதி-வைத்து விடுவதே இல்லை. எப்போதும் கன்னத்தில் கை வைத்து கவலையுடன் இருக்கிறாள்.
அது எப்படி இருக்கிறது என்றால்
ஸாயம் – மாலையில் ( இரவு தொடங்குதன் முன்) காணப்படும்
பாலசசினம் அலோலம் இவ – ஒளி மங்கிய பிறைச்சந்திரன் போல இருக்கிறது,
கை முகத்தை பாதி மறைப்பதால் பிறைச்சந்திரனுக்கு ஒப்பிடப்படுகிறது.
ஹரிரிதி ஹரிரிதி ஜபதி ஸகாமம்
விரஹ விஹித மரnணேவ நிகாமம்
விரஹவிஹித மரணேவ- பிரிவாற்றாமையால் உயிர் துறப்பவள் போல
நிகாமம் – விடாமல்
ஹரிரிதி ஹரிரிதி – ஹரி ஹரி என்று
ஸகாமம்- காதல் வயப்பட்டவளாய்
ஜபதி – ஜபித்துக்கொண்டு இருக்கிறாள்
உயிர் துறக்கும்போது ஹரி நமத்திக் கூறினால் அடுத்த பிறவியிலாவது அவனை அடையலாம் என்று எண்ணுபவள் போல.
ஸ்ரீ ஜயதேவ பணிதமிதி கீதம்
ஸுகயது கேசவபதம் உபநீதம்
ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதமானது கேசவன் பாதாரவிந்தத்தை அடைந்தோர்க்கு ஆனந்தம் அளிக்கட்டும்.
——————————————-
10வது அஷ்டபதி ஸ்லோகம்
ராதையின் நிலையை அறிந்ததும் கண்ணன் தான் அங்கேயே இருப்பதாகச சொல்லி ராதையை அங்கு அழைத்து வரும்படி சகியிடம் கூறுகிறான். சகி ராதையிடம் சென்று கண்ணனும் அவள் நினைவாகவே இருப்பதாகக் கூறுகிறாள்.
அஹமிஹ நிவஸாமி யாஹி ராதாம்
அனுநய மத்வசனேன ச ஆனயேதா:
இதி மதுரிபுணா ஸகீ நியுக்தா
ஸ்வயமிதமேத்ய புனர்ஜகாத ராதாம்
ராகம் ஆனந்தபைரவி தாளம் ஆதி
வஹதி மலயஸமீரே மதனமுபநிதாய
ஸ்புடதி குஸுமநிகரே விரஹி ஹ்ருதய தளனாய
தவ விரஹே வனமாலி ஸகி ஸீததி ராதே
மலயஸமீரே – மந்தமாருதம்
மதனம் –காமதேவனை
உபநிதாய- உடன் கொண்டுவருவதுபோல
வஹதி – வீசும்போது
குஸும நிகரே –மலர்க் கூட்டங்கள்
விரஹிஹ்ருதய தலனாய- பிரிவுற்றிருக்கும் மனதை பிளப்பது போல
ஸ்புடதி – இதழ் விரியும்போது
வனமாலீ- கண்ணன்
தவ விரஹே- உன் பிரிவினால்
ஸீததி- வருந்திக்கொண்டிருக்கிறான்
தஹதி ஸிஸிரமயூகே மரணம் அனுகரோதி
பததி மதனவிஸிகே விலபதி விகல தரோதி
சிசிரமயூகே – குளிர்ந்த சந்திரகிரணம்
தஹதி- நெருப்பாக எரிக்கும்போது
மரணம் அனுகரோதி-மரணத் தருவாயில் இருப்பதாக நினைக்கிறான்.
மதனவிசிகே – மன்மதனின் பாணங்களான மலர்கள்
பததி – தன்மீது விழும்போது
அதி விகலதர: மிகவும் துன்புற்று
விலபதி-புலம்புகிறான்
த்வனதி மதுப ஸமூஹே ஸ்ரவணம் அபிததாதி
மனஸி வலிதவிரஹே நிஸிநிஸி ருஜம் உபயாதி
மதுபஸமூஹே- வண்டுகளின் கூட்டங்கள்
த்வனதி- ரீங்காரம் செய்யும்போது
ச்ரவணம் – காதை
அபிததாதி- மூடிக் கொள்கிறான்
நிசி நிசி – இரவுதோறும்
வலிதவிரஹே-விரகத்தினால்
மனஸி- மனதில்
ருஜம்- துன்பம்
உபயாதி- அடைகிறான்
வஸதி விபின விதானே த்யஜதி லலித தாம
லுடதி தரணி ஸயனே பஹு விலபதி தவ நாம
லலிததாம- வசதியான இருப்பிடத்தை
த்யஜதி- விட்டு
தரணி சயனே – மண்ணில் சயனித்தவனாக
லுடதி- அமைதியின்றி புரள்கிறான்.
தவ நாம- உன் பெயரை
பஹு விலபதி-பலமுறை கூறி வருந்துகிறான்.
பணதி கவி ஜயதேவே விரஹ விலஸிதேன
மனஸி ரபஸவிபவே ஹரிருதயது ஸுக்ருதேன
கவிஜயதேவே- ஜெயதேவ கவி
விரஹா விலஸிதேன – பகவான் பக்தனைப் பிரிந்து துயருறுவதைப்பற்றி
பணதி- கூறியதை
மனஸி- கேட்டவர் மனதில்
ஸுக்ருதேன –நல்வினைப்பயனாக
ரபஸவிபவே – பகவானிடத்தில் அன்பு உண்டாகி
ஹரி: – ஹரியானவன்
உதயது- தோன்றட்டும்
இதைக் கேட்டவுடன் ராதை மயக்கமுறுகிறாள் . அதனால் தான் இந்த அஷ்டபதி ஐந்து சுலோகங்களுடன் நின்று விடுகிறது.
———————————————-
11வது அஷ்டபதி
சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்
பூர்வம் யத்ர ஸமம் த்வயா ரதிபதே: ஆஸாதிதாஸ்ஸித்தய:
தஸ்மின்னேவ நிகுஞ்ஜமன்மத மஹாதீர்த்தே புனர்மாதவ:
த்யாயன் த்வாம் அனிஸம் ஜபன்னபி தவைவாலாப மந்த்ராவலிம்
பூயஸ்த்வத் குசகும்ப நி்ர்பர பரீரம்பாம்ருதம் வாஞ்சதி
ராகம் கேதாரகௌளம் தாளம் ஆதி
ரதி ஸுகஸாரே கதமபி ஸாரே மதன மனோஹரவேஷம்
நகுரு நிதம்பினி கமன விளம்பளம் அனுஸர தம் ஹ்ருதயேஸம்
ரதிசுகஸாரே- காதல் விளையாட்டுக்காக
அபிஸாரே- குறிக்கப்பட்ட இடத்திற்கு
கதம்- சென்றிருக்கும்
மதனமநோஹரவேஷம் –காமனைப்போல் அழகான உருவத்துடன் உள்ள
ஹ்ருதயேசம்- உன் உள்ளத்தில் குடிகொண்ட
தம் – அந்த கண்ணனை
அனுஸர – பின் தொடர்ந்து செல்
.நிதம்பினி- அழகான இடுப்பை உடையவளே
கமனவிலம்பனம் – செல்வதில் தாமதம்
ந குரு செய்யாதே
தீரஸமீரே யமுனாதீரே வஸதி வனே வனமாலீ
கோபீபீனபயோதர மரத்தன சஞ்சல கரயுகசாலீ
வனமாலீ – வனமாலை தரித்தவனாய்
கோபீபீனபயோதரமர்தனசஞ்சலதர யுகசாலீ- கோபியருடன் விளையாடுவதில் இச்சை கொண்ட கண்ணன்
தீரஸமீரே- மென்மையான காற்று வீசும்
யமுனாதீரே – யமுனையின் தீரத்தில்
வஸதி – இருக்கிறான்.
நாமஸமேதம் க்ருத ஸங்கேதம் வாதயதேம்ருது வேணும்
பஹுமனுதே தனுதே தனுஸங்கத பவனசலிதமபி ரேணும் (தீர)
ம்ருது வேணும்- மதுரமான புல்லாங்குழலை
நாமஸமேதம் க்ருதகசங்கேதம் –உன்பெயரைச்சொல்லி கூப்பிடுவதுபோன்ற பாவனையில்
வாதயதி- வாசிக்கிறான்.
தி – உன்னுடைய
தனுஸங்கத பவனசலிதம் – உன் மேனியைத்தழுவிய காற்றினால் கொணரப்பட்ட
ரேணும் அபி – மண்துகளைக்கூட
அதனு பஹுமனுதே – மிகவும் மேலானதாக நினைக்கிறான்
பததி பதத்ரே விசலதி பத்ரே ஸங்கித பவதுபயானம்
ரசயதி ஸயனம் ஸசகித நயனம் பஸ்யதி தவ பந்தானம் (தீர)
பததி பதத்ரே- ஒரு பறவை உட்காரும்போது
விசலிதபத்ரே – இலைகள் சலசலக்கையில்
சங்கித பவதுபயானம் – நீ வருகிறாயோ என சந்தேகித்து
ரசயதி சயனம்- உனக்கு மஞ்சத்தை விரிக்கிறான்.
ஸசகித நயனம் – கண்களில் எதிர்பார்ப்புடன்
தவ பந்தானம் – நீவரும் வழியை
பச்யதி- பார்க்கிறான்
முகரமதீரம் த்யஜ மஞ்ஜீரம் ரிபுமிவ கேளிஷுலோலம்
சலஸகி குஞ்ஜம் ஸதிமிர புஞ்ஜம் ஸீலய நீல நிசோளம் (தீர)
கேலிஷு லோலம்- காதல் விளயாட்டில் அசைந்து
முகரம் அதீரம்-மிகவும் சப்தம் செய்யும்
மஞ்ஜீரம்- உன் காற்சலங்கையை
ரிபும் இவ – எதிரி என்று நினைத்து
த்யஜ- கழற்றிவிடு.
ஸதிமிரபுஞ்சம் – அடர்ந்த இருளான
குஞ்சம் – கொடிவீட்டிற்கு
நீல நிசோலம் – கருப்பு நிறமுள்ள வஸ்திரத்தை
சீலய – உடுத்திக்கொள்
சல சகி- செல் தோழி
அவள் செல்வதை யாரும் அறியாதிருக்கும் பொருட்டு இந்த அறிவுரை.
உரஸி முராரே உபஹிதஹாரே கனயிவ தரளபலாகே
தடிதிவ பீதே ரதிவிபரீதே ராஜஸி ஸுக்ருத விபாகே (தீர)
ஸுக்ருதவிபாகே – உன்னுடைய நற்கர்மபலனாக
தரள பலாகே – சலிக்கும் கொக்குகள் போன்ற
உபஹித ஹாரே –மலைகளால் அலங்கரிக்கப்பட்ட
கன இவ முராரே: உரஸி- கறுத்த மேகம் போன்ற ஹரியின் மார்பில்
பீதே – பொன்வண்ணமான நீ
ரதிவிபரீதே – காதல் மேலிட்டு
தடித் இவ -மின்னலைப்போல்
ராஜஸி-பிரகாசிக்கிறாய்
விகளிதவஸனம் பரிஹ்ருதரஸனம் கடயஜகனமபிதானம்
கிஸலய ஸயனே பங்கஜ நயனே நிதிமிவ ஹர்ஷ நிதானம் (தீர)
பங்கஜநயனே- ப்ங்கஜலோசனனாகிய கண்ணனிடம்
கிஸலயசயனே – தளிர்களால் ஆன மஞ்சத்தில்
பரிஹ்ருத ரஸனம்- ஒட்டியாணம் அற்ற
விகலித வசனம் – தளர்ந்த உடையுடன்
ஜகனம் அபிதானம் –இடை ஆபரணம் அற்ற உன்னை
ஹர்ஷநிதானம் – பெரும் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய
நிதிம் இவ –பெரும் நிதியைப் போல
கடய- சமர்ப்பிப்பாயாக.
ஹரிரபிமானீ ரஜனிரிதானீம் இயமுபயாதி விராமம்
குரு மம வசனம் ஸத்வர ரசனம் பூரய மதுரிபு காமம் (தீர)
ஹரி: – கிருஷ்ணன்
அபிமாநீ- பெருமை கொண்டவன்
இதாநீம் – இப்போது
இயம் ரஜனி: அபி- இந்த இரவும்
யதிவிராமம்- – முடிவை அடையப் போகிறது.
குரு மம வசனம் – என்சொல் கேட்பாயாக
ஸத்வரரசனம்- இது விரைவில் பயனை அளிக்கும்
மதுரிபுகாமம் – கண்ணனின் ஆவலை பூர்த்தி செய்.
ஸ்ரீஜயதேவே க்ருதஹரிஸேவே பணதி பரமரமணீயம்
ப்ரமுதித ஹ்ருதயம் ஹரிமதிஸதயம் நமத ஸுக்ருதகமனீயம் (தீர)
ஸ்ரீஜயதேவே –ஸ்ரீஜயதேவரால்
க்ருத ஹரி சேவே- ஸ்ரீ ஹரியின் சேவையாக
பணிதம் – இது செய்யப்பட்டது.
பரமரமணீயம் – மிகவும் அழகிய
ப்ரமுதிதஹ்ருதயம்- மனதுக்கு ஆனந்தத்தைக்கொடுக்கும்
அதிஸதயம்- .மிகவும் தயை உள்ள
ஸுக்ருதகமநீயம் –நற் கர்மாவின் பலனாக உள்ள
ஹரிம் – ஹரியை
நமத – வணங்குவீர்.
——————————————————-
12வது அஷ்டபதி
விரஹதாபத்தால் மெலிந்த ராதையால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அதனால்சகி மீண்டும் கண்ணனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.
ஸ்லோகம்
அததாம் கந்தும் அஸக்தாம் சிரம்
அனுரக்தம் லதாக்ருஹே த்ருஷ்ட்வா
தச்சரிதம் கோவிந்தே மனஸிஜ
மந்தே ஸகீ ப்ராஹ
ராகம் சங்கராபரணம் தாளம் மிஸ்ரசாபு
பஸ்யதி திஸி திஸி ரஹஸி பவந்தம்
த்வததர மதுர மதூனி பிபந்தம்
நாத ஹரே ஜகன்னாத ஹரே
ஸீததி ராதா வாஸ க்ருஹே (நாத)
நாதஹரே – ஹரே கிருஷ்ண
ராதா- ராதை
ஆவாஸக்ருஹே- உங்கள் சந்திக்குமிடத்தில் இருப்பவளாய்
ஸீததி- வருந்துகிறாள்
ரஹஸி-தனிமையில்
திசி திசி – ஒவ்வொரு திசையிலும்
பவந்தம் – நீஇருப்பதாகவும்
தததரமதுரமதூனி பிபந்தம் –அவளுடைய தேனொத்த அதரபானம் செய்பவனாகவும்
பச்யதி- காண்கிறாள்.
த்வத பிஸரண ரபஸேன வலந்தீ
பததி பதானி கியந்தீ சலந்தீ (நாத)
த்வதபிஸரண ரபசேன- உன்னை சந்திக்கும் ஆவலால்
வலன்தீ- இழுக்கப்பட்டு
கியன்தி பதானி- சில அடிகள்
சலந்தீ- செல்பவளாய்
பததி –முடியாமல் விழுகிறாள்
விஹித விஸதபிஸ கிஸலய வலயா
ஜீவதி ப்ரமிஹ தவ ரதிகலயா (நாத)
விஹிதவிசத பிஸா- வெளுத்த தாமரைத்தண்டையே
கிஸலய வலயா- வளையாகக் கொண்டு ( சாதாரண கங்கணம் பாரமாகத் தோன்றியதால் அல்லது மெலிந்த கரங்களில் இருந்து வளை நழுவுவதால் )
தவரதிகலயா- உன் மீது கொண்ட ப்ரேமையால் மட்டுமே
இஹ – இவ்வுலகில்
பரம் ஜீவதி – உயிர்வாழ்கிறாள்.
முஹுரவ லோகித மண்டன லீலா
மதுரிபுர ஹமிதி பாவன ஸீலா (நாத)
மதுரிபு: அஹம் இதி- நானே கண்ணன்
பாவனசீலா- என்ற பாவனையில்
மண்டனலீலா – உனக்குகந்த ஆபரணங்களை பூட்டிக்கொண்டு
முஹு: அவலோகித – அவற்றைத் திரும்ப திரும்பப் பார்க்கிறாள்.
த்வரித முபைதி ந கதமபி ஸாரம்
ஹரிரிதி வததி ஸகீம் அனுவாரம் (நாத)
ஹரி: – ஹரி
த்வரிதம் – விரைவாக
அபிஸாரம்-சந்திக்குமிடத்திற்கு
கதம் – ஏன்
ந உபைதி- வரவில்லை என்று
அனுவாரம் – அடிக்கடி
சகீம் – தோழியை
வததி- கேட்கிறாள்
ஸ்லிஷ்யதி சும்பதி ஜலதர கல்பம்
ஹரிருபகத இதி திமிரம் அனல்பம் (நாத)
திமிரம் அனல்பம் – அடர்ந்த இருளைக் கண்டு
ஜலதரகல்பம் – நீருண்டமேகம் போல் இருப்பதால்
ஹரி: உபகாத – ஹரி வந்துவிட்டார் என்று’
ச்லிஷ்யதி- தழுவுகிறாள்
சும்பதி –முத்தமிடுகிறாள்
பவதி விளம்பினி விகளித லஜ்ஜா
விலபதி ரோதிதி வாஸக லஜ்ஜா (நாத)
வாஸகஸஜ்ஜா- சந்திக்கும் இடத்தில் தயாராக உள்ளவள்
பவதி விலம்பினி – நீ வராமல் தாமதிக்கையில்
விகளிதலஜ்ஜா – வெட்கத்தை விட்டு
விலபதி ரோதிதி- புலம்பி அழுகிறாள்.
ஸ்ரீ ஜயதேவ கவேரிதம் உதிதம்
ரஸிக ஜனம் தனுதாம் அதிமுதிதம் (நாத)
ஸ்ரீஜயதேவகவே:- ஸ்ரீஜயதேவகவியிடம்
உதிதம்இருந்து- தோன்றிய
இதம் – இந்த கவிதை
ரஸிகஜனம்- ரசிகர்களை
அதிமுதிதம்- மிகவும் இன்புற்றவர்களாய்
தனுதாம்- ஆக்கட்டும்
குருவால் நல்லுபதேசம் பெற்றபின் கூட நம்மால் பகவானைத்தேடிச் செல்ல முடியவில்லை. நம் பாசபந்தங்கள் தடுக்கின்றன. அப்போது பகவானின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகிறது. அதனால் நம் சார்பில் குருவே பகவானை வேண்டுகிறார் , ” இந்த ஜீவன் உன்மேல் பக்தி கொண்டாலும் சக்தியற்றது , நீதான் இதை காத்தருள வேண்டும்.” என்று
———————————————–
13வது அஷ்டபதி ஸ்லோகம
சகி கண்ணனைப் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது பிருந்தாவனத்தில் பூரண சந்திரன் பிரகாசித்தது. ராதை விரஹதாபத்தினால் துன்பமடைந்து சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்.
அத்ராந்தரே ச குலடாகுல வர்த்ம காத
ஸஞ்ஜாத பாதக இவ ஸ்புடலாஞ்சன ஸ்ரீ:
ப்ருந்தாவனாந்தரம் அதீபயத் அம்ஸுஜாலை:
திக்ஸுந்தரீ வதன சத்தன பிந்துரிந்து:
ப்ரஸரதி ஸஸதர பிம்பே விஹித விளம்பே ச மாதவே விதுரா
ராகம் ஆஹிரி, நீலாம்பரி தாளம் ஜம்பை
கதித ஸமயேபி ஹரி: அஹஹ ந யயௌ வனம்
மம விபலமிதமமல ரூபமபி யௌவனம்
ஹரி- ஹரியானவன்
கதிதஸமயே அபி– வருவதாகச் கூறிய வேளையில்
ந யயௌ-வரவில்லை
இதம்- இந்த
மம- என்னுடைய
யௌவனம் – இளமையும்
அமலரூபம் அபி –அழகும்
விபலம் – வீண்
யாமிஹே கமிஹ ஸரணம் ஸகீஜன வசன வஞ்சிதாஹம் (யாமி)
சகீஜனவசனவஞ்சிதா-( கண்ணனை அழைத்து வருவேன் என்ற) சகியின் வார்த்தையும் பொய்யாக
கம் – யாரை
இஹ – இங்கு
சரணம் யாமி – சரணமடைவேன்?
யதனு கமனாயநிஸி கஹனம்பி ஸீலிதம்
தேன மம ஹ்ருதய மிதம் அஸமஸர கீலிதம் (யாமி)
யதனுகமனாய- யார் வரவிற்காக
கஹனம் அபி- இருளடர்ந்ததாயினும் இந்தக் காடு
நிசி- இரவில்
சீலிதம் – அடையப்பட்டதோ
தேன – அவனால்
மம ஹ்ருதயம் – என் இதயம்
அஸமசரகீலிதம் – மன்மதனின் பாணங்களால் கிழிக்கப்பட்டதாயிற்று.
மம மரணமேவரம் அதிவிதத கேதனா
கிமிதி விஷஹாமி விரஹானலம் அசேதனா (யாமி)
அசேதனா- ஆள் அரவமற்ற
விததகேதனா – வீணான இந்த இடத்தில்( கண்ணன் வராததால்)
கிம் இதி- எதற்காக
விரஹானலம்- பிரிவுத்தீயை
விஷஹாமி – நான் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
மம- எனக்கு
மரணம் ஏவ- மரணமே
வரம் இதி- மேலானது
அஹஹ கலயாமி வலயாதி மணி பூஷணம்
ஹரிவிரஹ தஹன வஹனேன பஹுதூஷணம் (யாமி)
வலயாதிமணிபூஷணம்- வளைகள் முதலிய ஆபரணங்கள் ( கண்ணனை சந்திப்பதற்காக பூண்டவை)
ஹரிவிரஹதஹன வஹனேன- கண்ணனின் விரஹத்தால் நெருப்புபோல சுடுவதால்
பஹுதூஷணம்- வெறுக்கத்தக்கவையாக
கலயாமி- எண்ணுகிறேன்
மாமிஹ ஹி விதுரயதி மதுர மதுயாமினீ
காபி ஹரிமனுபவதி க்ருத ஸுக்ருத காமினீ (யாமி)
மதுரமதுயாமிநீ – இந்த இனிமையான வசந்தகால இரவு
மாம்- என்னை
விதுரயதி- வருத்துகிறது
காபி ஸுக்ருதகாமினி – யாரோ ஒருத்தி புண்ணியம் செய்தவள்
ஹரிம் அனுபவதி – ஹரியுடன் சுகம் அனுபவிக்கிறாள்.
அதனால் தான் அவன் வரவில்லை என்று எண்ணுகிறாள்.
குஸும ஸுகுமாரதனும் அஸமஸர லீலயா
ஸ்ரகபி ஹ்ருதி ஹந்திமாம் அதி விஷம ஸீலயா (யாமி)
குஸுமஸுகுமாரதனும் மாம் – மலரைப்போல மெல்லிய என் உடலை
ஹரதி- மார்பில் உள்ள
ஸ்ரக் அபி – பூமாலை கூட
அதிவிஷமசீலயா- மிகக்கொடியவையான
அதனுசரலீலயா- மன்மதனுடைய அம்பானதால்
மாம் – என்னை
ஹ்ருதி- ஹ்ருதயத்தில்
ஹந்தி –வேதனை உண்டாக்குகிறது.
அஹமிஹஹி நிவஸாமி ந விகணித வேதஸா
ஸ்மரதி மதுஸூதனோ மாமபி ந சேதஸா (யாமி)
ந கணித வனவேதஸா- இந்த மூங்கில் காடுகளை பொருட்படுத்தாமல்
அஹம் – நான்
இஹா- இங்கு
நிவஸாமி- இருக்கிறேன்,
மதுஸூதன: – மதுசூதனன்
மாம் – என்னை’
சேதஸா அபி – மனதால் கூட
ந ஸ்மரதி- நினைப்பது இல்லை
ஹரிசரண ஸரண ஜயதேவகவி பாரதீ
வஸது ஹ்ருதி யுவதிரிவ கோமள கலாவதீ(யாமி)
ஹரிசரண ஸரண- ஹரியின் பாதசேவையில் ஈடுபட்ட
ஜயதேவகவிபாரதி – ஜெயதேவகவியின் கவிதை
கோமளகலாவதீ-அழகும் கலைத்திறனும் வாய்ந்த
யுவதிரிவ – பெண்மணியைப்போல
ஹருதி- ஹ்ருதயத்தில்
வஸது- வசிக்கட்டும்
——————————————–
14வது அஷ்டபதி
சகி திரும்பி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அதைப் பார்த்து ராதை கண்ணன் தன்னைவிட மேலான ஒரு யுவதியுடன் ரமித்துக் கொண்டிருக்கிறான் அதனால்தான் சகி மௌனமாக் இருக்கிறாள் என்று எண்ணி அந்த அழகி அவனுடன் ரமிப்பதை நினைக்கிறாள்.
அதாகதாம் மாதவ மந்தரேண
ஸகீமியம் வீக்ஷ்ய விஷாதமுகாம்
விஸங்கமானா ரமிதம் கயாபி
ஜனார்த்தனம் த்ருஷ்டவத் ஏததாஹ
ராகம் ஸாரங்கா தாளம் ஆதி
ஸ்மர ஸமரோசித விரசித வேஷா
களித குஸுமபர விலுளித கேஸா
ஸ்மரஸமரோசிதவிரசிதவேஷா – மன்மத லீலைக்கொப்பான ஆடை அணிகளுடன்
தலிதகுஸுமதள விரலித கேசா- தளர்வான கூந்தலில் இருந்து நழுவும் மலர்களுடன்
காபி மதுரிபுணா விலஸதி யுவதிரத்யதிக குணா
காபி-யாரோ ஒருவள்
அதிககுணா – என்னை விட சிறந்த அழகு, குணம் உடையவள்
மதுரிபுணா-கண்ணனுடன்
விலஸதி-விளையாடுகிறாள்
ஹரிபரிரம்பண பலித விகாரா
குசகலசோபரி தரளித ஹாரா (காபி)
ஹரிபரிரம்பண – ஹரியை தழுவுதலால்
வலிதவிகாரா- உணர்ச்சி பெருகுபவளாய்
குசகலசோபரி –கலசங்கள் போன்ற ஸ்தனங்களின் மேல்
தரளிதஹாரா- புரளும் ஹாரத்தை உடையவளாய்
விசல தளக லளிதாவன சந்த்ரா
தததர பான ரபஸ க்ருத தந்த்ரா (காபி)
விசலத் அலக –புரண்டு விழும் கூந்தலால்
லலிதானனசந்த்ரா- அழகுடன் கூடிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளாய்
ததரபான – கண்ணனுடைய அதரபானத்தால்
ரபஸக்ருததந்த்ரா- உணர்ச்சிமேலிட்டு தன் நினைவிழந்தவளாய்
சஞ்சல குண்டல லலித கபோலா
முகரித ரஸன ஜகன கதிலோலா (காபி)
சஞ்சல குண்டல- அசையும் காதணிகளால்
லலிதகபோலா- அழகுறு கன்னங்களை உடையவளாய்
ஜகனகதி லோலா- இடுப்பு அசைவதனால்
முகரிதரஸன- சப்திக்கும் மணிகளை உடைய இடை ஆபரணம் உடையவளாய்
தயித விலோகித லஜ்ஜித ஹஸிதா
பஹுவித கூஜித ரதி ரஸ ரஸிதா (காபி)
தயிதவிலோகித-பிரியனான கண்ணனை பார்த்து
லஜ்ஜிதஹஸிதா- வெட்கத்துடன் சிரிப்பவளும்
ரதிரஸரஸிதா- காதல் விளையாட்டினால் மகிழ்ந்து
பஹுவிதகூஜித –பலவிதமான மதுர ஓசைகள் செய்பவளும்
விபுல புலக ப்ருது வேபது பங்கா
ஸ்வஸித நிமீலித விகஸதனங்கா (காபி)
விபுலபுலக ப்ருதுவேபதுபங்கா-புளகாங்கிதம் மற்றும் வியர்வை இவைகளால் பாதிக்கப்பட்டு
ச்வஸிதநிமீலித – பெருமூச்சினாலும் கண்மூடுவதாலும்
விகசதனங்கா – காதலை வெளிப்படுத்துபவளாய்
ஸ்ரமஜல கணபர ஸுபக ஸரீரா
பரிபதி தோரஸி ரதி ரண தீரா (காபி)
ஸ்ரமஜலகணபரஸுபகசரீரா- வியர்வை சூழ்ந்த அழகிய சரீரம் உடையவளாய்
பரிபதிதோரஸி ரதிரணதீரா- காதல் விளையாட்டில் விட்டுக்கொடுக்காது கண்ணனின் மேல் விழுந்தவளாய்
எவளோ ஒருவள் கண்ணனுடன் ரமிக்கிறாள்.
ஸ்ரீஜய தேவ பணித ஹரி ரமிதம்
கலி கலுஷம் ஜனயது பரிஸமிதம் (காபி)
ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட ஹரியின் காதல் லீலைகள் கலியுகத்து தீமைகளை அகற்றட்டும்.
15வது அஷ்டபதி
ராதை கண்ணன்யாரோ ஒருவளுடன் இன்புற்றிருபப்தால் தான் வரவில்லை என்று எண்ணி தான் அவனோடு இருக்கையில் நிகழ்ந்த எல்லா செயல்களும் இன்னொரு பெண்ணிடமும் நடப்பதாக எண்ணித் துயருறுகிறாள்.
விரஹ பாண்டு முராரி முகாம்புஜ
த்யுதிரயம் திரயன்னபி வேதனாம்
விதுரதீவ தனோதி மனோபுவ:
ஸுஹ்ருத் அயே ஹ்ருதயே மதன வ்யதாம்
ராகம் ஸாவேரி தாளம் ஆதி
ஸமுதித மதனே ரமணி வதனே சும்பன சலிதாதரே
ம்ருகமத திலகம் லிகதி ஸபுலகம் ம்ருகமிவ ரஜீனீகரே
ஸமுதிதமதனே – காதல் மேலீட்டால்
சும்பனவலிதாதரே – முத்தமிடப்பட்ட உதடுகளுடன் கூடிய
ரமணீவதனே –அழகியின் முகத்தில்
சபுலகம் – புளகாங்கிதனாய்
ரஜநீகரே ம்ருகமிவ- சந்திரனில் காணப்படும் மான் பிம்பத்தைப்போல்
ம்ருகமத திலகம் – கஸ்தூரி திலகத்தை
லிகதி- இடுகிறான்
ரமதே யமுனா புளினவனே விஜயீ முராரிரதுனா
விஜயீ முராரி:-வெற்றிபெறுபவனான கண்ணன்
அதுனா- இப்போது
யமுனாபுலினவனே – யமுனையின் மணற்பாங்கான வனத்தில்
ரமதே – களிக்கிறான்.
கனசய ருசிரே ரசயதி சிகுரே தரளித தருணானனே
குரவக குஸுமம் சபலா ஸுஷமம் ரதிபதி ம்ருக கானனே (ரமதே)
தரளிததருணானனே – அசையும் அழகிய முகத்தில்
கனசயருசிரே – –கருத்தமேகம் போல் அடர்ந்த
ரதிபதிம்ருககானனே – மன்மதன் என்ற மான் சஞ்சரிக்கும்காடுபோன்ற
சிகரே- அவளுடைய கூந்தலில்
சபலாஸுஷமம்- மின்னல்,போன்ற
குரபககுஸுமம் –சிவந்த மலரை
ரசயதி- சூடுகிறான்
கடயதி ஸுகனே குசயுக ககனே ம்ருகமத ருசிரூஷிதே
மணிஸரம் அமலம் தாரக படலம் நகபத ஸஸி பூஷிதே (ரமதே)
ம்ருகமதருசிரூஷிதே – கஸ்தூரியின் வாசம் கொண்ட
நகபத சசிபூஷிதே – அவனுடைய நகங்கள் பட்டு பிறைச்சந்திரன் உள்ளதுபோல் தோன்றிய
ஸுகனே குசயுகககனே- அவளுடைய அகன்ற ஆகாயம் போன்ற ஸ்தனங்களின் மேல்
தாரகபடலம் – நக்ஷத்திரக் கூட்டங்கள் போன்ற
மணிஸரம் அமலம்- அழகிய முத்துமாலையை
கடயதி-அணிவிக்கிறான்
ஜித பிஸஸகலே ம்ருது புஜ யுகளே கரதல நளினீ தளே
மரகத வலயம் மதுகர நிசயம் விதரதி ஹிமஸீதளே (ரமதே)
ஜிதபிஸசகலே – தாமரைத்தண்டை மிஞ்சிய
ஹிமசீதலே- குளிர்ந்த
ம்ருதுபுஜயுகளே –மிருதுவான புஜங்களை உடைய
கரதலநளிநீதலே –தாமரை ஒத்த அவள் கரங்களில்
மதுகரநிசயம் – வண்டு சூழ்ந்தாற்போல் உள்ள
மரகதவலயம் – பச்சைக்கல் வளையை
விதரதி – அணிவிக்கிறான்.
ரதி க்ருஹ ஜகனே விபுலாபகனே மனஸிஜ கனகாஸனே
மணிமய ரஸனம் தோரண ஹஸனம் விகிரதி க்ருத வாஸனே (ரமதே)
விபுலாபகனே – அகன்ற
மனஸிஜகனகாஸனே – மன்மதனின் தங்கசிம்மாசனம் போன்ற
ரதிக்ருஹஜகனே –காதல் க்ருஹமான அவள் இடுப்பை
க்ருதவாஸனே- இருப்பிடமாகக் கொண்ட
மணிமயரஸனம்-பொன்மணிகளைக் கொண்ட ஒட்டியாணம்
விகிரதி – உடைந்து சிதறுகிறது. (கண்ணன் பிடித்து இழுப்பதால்)
சரண கிஸலயே கமலா நிலயே நகமணி கணபூஜிதே
பஹிரபவரணம் யாவக பரணம் ஜனயதி ஹ்ருதி யோஜிதே (ரமதே)
கமலாநிலயே ஹ்ருதி யோஜிதே- ஸ்ரீதேவி குடிகொண்ட மார்பில் வைக்கப்பட்ட
நகமணிகணபூஷிதே- சிவந்த மணிகள் போன்ற நகங்களுடைய
சரண கிஸலயே-அவளுடைய தளிர்போன்ற பாதத்தில்
பஹிரபவரணம் – மேல்பூச்சாக
யாவகபரணம் – செம்பஞ்சுக்குழம்பை
ஜனயதி- பூசுகிறான்.
த்யாயதி ஸத்ருஸம் காமபி ஸுத்ருஸம் கல ஹலதர ஸோதரே
கிமபலமவஸம் சிரமிஹ விரஸம் வதஸகி விடபோதரே (ரமதே)
ரமயதிசஸுப்ருசம் காமபி ஸுத்ருசம் கலஹலதரஸோதரே
கிம் அபலம் அவசம் சிரம் இஹ விரஸம் வத சகி விடபோதரே (ரமதே)
கலஹலஸோதரே – அந்த வஞ்சகமான கண்ணன்
காமபி ஸுத்ருசம் – வேறு ஒரு பெண்ணை
ஸுப்ருசம் ரமயதி- மிகவும் சந்தோஷப் படுத்துகையில்
சகி- சகியே
கிம் ஏன்
இஹ –இங்கு
விடபோதரே – கொடிவீட்டில்
அபலம்- வீணாக
சிரம் – நெடு நேரம்
விரஸம்-பலனின்றி
அவஸம்- இருக்க வேண்டும்.
இஹ ரஸ பணனே க்ருத ஹரி குணனே மதுரிபு பதஸேவகே
கலியுக சரிதம் ந வஸது துரிதம் கவிந்ருப ஜயதேவகே (ரமதே)
இஹ- இங்கு
ரஸபணனே – சுவைமிக்க
க்ருத ஹரிகுணனே- ஹரியின் சிறப்பை கூறி
மதுரிபுபதசேவகே- ஹரியின் பதம் துதிக்கும்
கவிந்ருப ஜயதேவகே- கவிராஜரான ஜெயதேவருக்கு
கலியுகசரிதம் – கலியுகத்தின் இயல்பான
துரிதம் –துன்பங்கள்
ந வஸது- இல்லாமல் இருக்கட்டும்.
——————————————
16வது அஷ்டபதி
யார் கண்ணனுடன் இருக்கிறாளோ அவள் கொடுத்து வைத்தவள். ஏனென்றால் இந்த விரஹவேதனையை அனுபவிக்கவில்லை என்று ராதை சொல்லுகிறாள்.
நாயா தஸ்ஸகி நிர்தயோ யதிஸட: த்வம் தூதி கிம் தூயஸே
ஸ்வச்சந்தம் பஹுவல்லவ: ஸ ரமதே கிம் தத்ரதே தூஷணம்
பஸ்யாத்ய ப்ரியஸங்கமாய தயிதஸ்ய ஆக்ருஷ்யமாணம் குணை:
ராகம் புன்னாகவராளி தாளம் ஆதி
அனில தரள குவலய நயநேன
தபதி ந ஸா கிஸலய ஸயனேன
அனிலதரள –காற்றில் அலைபடும்
குவலய நயனேன –தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனுடன் இருப்பதால்)
ஸா- அவள்
கிஸலய சயநேன- இளம்தளிர் படுக்கையில் படுத்து ( விரஹம் மேலிட்டதால்)
ந தபதி-வெப்பத்தினால் வாடுவதில்லை
குளிர்ந்த தளிர்களால் ஆன சயனம் வெப்பத்தைக் கொடுக்கிறது விரஹத்தினால்
யா ரமிதா வனமாலினா ஸகி
சகி –தோழி,
யா ரமதே – யார் சுகம் அநுபவிக்கிறாளோ
வனமாலினா- கண்ணனுடன் (அவள்)
விகஸித ஸரஸிஜ லலித முகேன
ஸ்புடதி ந ஸா மனஸிஜ விஸிகேன (யா ரமிதா)
ஸா- அவள்
மனஸிஜ விசிகேன – காமனின் அம்பினால்
ந ஸ்புடதி- பிளக்கப்படுகிறதில்லை (ஏன் என்றால்)
விகஸித- மலர்ந்த
ஸரஸிஜ – தாமரை போன்ற
லலிதமுகேன- அழகிய முகம் கொண்ட கண்ணனோடு இருப்பதால்
அம்ருத மதுர ம்ருதுதர வசனேன
ஜ்வலதி ந ஸா மலயஜ பவனேன (யா ரமிதா)
அம்ருத- அமிர்தம் போன்ற
மதுரம்ருதுதர – மதுரமாகவும் மிருதுவாகவும் உள்ள ‘
வசனேன –கண்ணனின் சொற்களைக் கேட்பதனால்
மலயபவனேன மலையமாருதத்தால்
ந ஜ்வலதி- எரிக்கப் படுவதில்லை
குளிர்ந்த காற்று வெப்பத்தைக் கொடுக்கிறது பிரிவாற்றாமையால்.
ஸ்தல ஜலருஹ ருசிகர சரணேன
லுடதி ந ஸா ஹிமஹர கிரணேன (யா ரமிதா)
ஸா- அவள்
ஹிமகரகிரணேன- சந்திரனின் கிரணங்களால் விரஹம் மேலிட்டு
நலுடதி- புரளுவதில்லை
ஸ்தல ருஹ ருசிர கரசரணேன- நிலத்தில் உதித்த் தாமரை போன்ற கைகளும் பாதங்களும் கொண்ட கண்ணனுடன் இருப்பதால்.
தாமரை இருப்பதால் சந்திரன் இல்லை என்றாகிறது. அதனால் சந்திர கிரணங்களால் துன்பம் இல்லை.
ஸஜல ஜலத ஸமுதய ருசிரேண
தளதி ந ஸா ஹ்ருதி விரஹ பரேண (யா ரமிதா)
ஸா- அவள்
ஹ்ருதி – ஹ்ருதயத்தில்
விரஹதவேன – விரஹத்தீயால்
தஹதி- பொசுக்கப்படுவதில்லை
ஸஜலஜலத ஸமுதய – நீருண்ட மேககூட்டம் போன்ற
ருசிரேண- ஒளி வீசும் கண்ணனோடு இருப்பதால்
கனக நிசய ருசி ஸுசி வஸனேன
ஸ்வஸிதி ந ஸா பரிஜன ஹஸனேன (யா ரமிதா)
கனக நிகஷ ருசி –உரைகல் மேல் பிரகாசிக்கும் பொன் போன்ற
சுசிவஸனேன – பீதாம்பரத்தை தரித்த கண்ணனோடு இருக்கையில்
பரிஜன ஹஸனேன – சுற்றி உள்ளவர்களால் பரிகாசம் செய்யப் பட்டு.
(கண்ணன் வருவான் என்று கூறினாயே அவன் வரவில்லையே என்று பரிஹசிப்பவர்களால்)
ந ச்வஸிதி- பெருமூச்சு விடுவதில்லை.
ஸ கல புவன ஜ ன வர தருணேன
வஹதி ந ஸா ருஜம் அதி கருணேன (யா ரமிதா)
அதிகருணேன- மிகவும் கருணையுடையவனும்
ஸகலபுவனஜனவரதருணேன- அகில உலகத்திலும் உள்ளவர்களில் சிறந்த யுவநும் ஆகிய கண்ணனுடன் இருப்பதால்’
ஸா- அவள்
ந ருஜம் வஹதி- ஒருவித கஷ்டமும் அனுபவிப்பதில்லை
ஸ்ரீ ஜய தேவ பணித வசனேன
ப்ரவிஸது ஹரிரபி ஹ்ருதயம் அனேன (யா ரமிதா)
அனேன – இந்த .
ஸ்ரீ ஜயதேவ பணித வசனேன- ஸ்ரீ ஜயதேவரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளுடேன் கூட
ஹரி: அபி – ஹரியும்
ஹ்ருதயம் – உள்ளத்தில்
ப்ரவிசது- பிரவேசிக்கட்டும்
———————-
17வது அஷ்டபதி
அத கதமபி யாமினீம் வினீய
ஸ்மரஸர ஜர்ஜரி தாபி ஸா ப்ரபாதே
அனுநய வசனம் வதந்தம் அக்ரே
ப்ரண தமபி ப்ரியமாஹ ஸாப்யஸூயம்
ராகம் ஆரபி தாளம் ஆதி
ரஜனி ஜனித குருஜாகர ராக கஷாயிதமலஸ நிமேஷம்
வஹதி நயனம் அனுராகமிவஸ்புடம் உதித ரஸாபி நிவேஸம்
நயனம் –உன் கண்
ரஜனிஜநிதகுருஜாகர ராக கஷாயிதம்- இரவு தூங்காதனாலும் கலக்கமற்று சிவந்து
அலஸநிவேசம்- மெதுவாக மூடித்திறந்து
உதிதரஸாபிநிவேசம்- தீவிரமான ஸ்ருங்கர ரஸத்த்தில் ஆழ்ந்து
அனுராகம் இவ ஸ்புடம்- தெளிவாக ( அவளுடன் ) காதலை தெரிவிப்பதாக
வஹதி- இருக்கிறது.
அதாவது இரவு பூராவும் அவளுடன் களித்துவிட்டு இங்கு வருகிறாய் என்று குற்றம் சாட்டுகிறாள்.
கண்ணன சொல்கிறான் “ இல்லை இல்லை இரவு முழுவதும் உன்னையே நினைத்துக்கொண்டிருந்ததனால் தூக்கம் இல்லாமல் என் கண்கள் அப்படி உள்ளன்” என்று. அதற்கு ராதை சொல்கிறாள்.
ஹரிஹரி யாஹி மாதவ யாஹி கேசவ மாவத கைதவ வாதம்
தாமனுஸர ஸரஸீருஹ லோசன யா தவ ஹரதி விஷாதம்
ஹரிஹரி- கஷ்டம்!
யாஹி மாதவ – மாதவா நீ போய்வா
யாஹி கேசவ – கேசவா நீ போகலாம்.
கைதவ வாதம்- உன் வஞ்சகமான இன்சொல்
மா வத – பேசவேண்டாம்
ஸரஸீருஹலோசன -தாமரைக்கண்ணனே
யா – எவள்
தவ – உன்னுடைய
விஷாதம் – மனச்சோர்வை
ஹரததி- அகற்றுகிறாளோ
தாம் அனுஸர- அவளையே பின்பற்றிச்செல்
கஜ்ஜள மலின விலோசன சும்பன விரசித நீலிமரூபம்
தஸன வஸனமருணம் தவ க்ருஷ்ண தனோதி தனோரனு ரூபம் (யாஹி)
க்ருஷ்ண – கிருஷ்ணா
கஜ்ஜலமலினவிலோசன சும்பன-மைதீட்டிய விழிகளை முத்தமிட்டதால்
விரசித நீலிம ரூபம்- கரும் நிறம் உடையவையாகி
தவ – உன்னுடைய
அருணம் தசனவஸனம்-சிவந்த உதடுகள்
தனோ: -உடலுக்கு
அனுரூபம தனோதி- ஒத்ததக ஆயிற்று ( ( கருமை நிறமாக)
கிருஷ்ணன் சொல்கிறான் “ இல்லை அவை நான் உன்னைத்தேடி அலைந்தபோது வண்டுகளால் கடிக்கப்பட்டு அவ்வாறு ஆயின என்று.
அதற்கு ராதை உன் ஏமாற்றுவேலை இங்கே வேண்டாம் என்று போகச்சொல்லுகிறாள்.
வபுரனுஸரதி தவ ஸ்மர ஸங்கர கர நகர க்ஷத ரேகம்
மரகத ஸகல கலித கலதௌத லிபேரிவ ரதிஜய லேகம் (யாஹி)
தவ வபு:- உன்னுடல்
ஸ்மரஸங்கர கர நகரக்ஷத ரேகம்- காதல் விளையாட்டினால் நகக்குறிபட்டு
மரகதசகலகலிதகலதௌத லிபேரிவ- மரகதக் கல் மேல் தங்க ரேகைகள் போல
ரதிஜயலேகம்-காதலில் ஜெயத்தை காட்டுவது
அனுஹரதி- போல தோற்றம் அளிக்கிறது.
கண்ணன் “ நான் உன்னைத் தேடி அலையும்போது முட்கள் குத்திய வடுவல்லவா அவை !’ என்கிறான்.
ராதை “உன்னை அறிவேன். போய் வா என்கிறாள்.
சரண கமல கள தலக்தக ஸிக்தம் இதம் தவ ஹ்ருதயம் உதாரம்
தர்ஸய தீவ பஹிர் மதனத்ரும நவ கிஸலய பரிவாரம் (யாஹி)
தவ ஹ்ருதயம் உதாரம் – உன் பரந்த மார்பில்
சரணகமல காலத்- அவளுடைய பாதங்களில் இருந்து சிந்திய
அலக்தக ஸிக்தம் – செம்பஞ்சுக் குழம்பின் கறை
மதனத்ரும நவ கிஸலய பரிவாரம் – மன்மதனாகிற மரத்தின் தளிர்வரிசை
பஹி: வெளியில்
தர்சயதி இவ –காண்பிப்பதுபோல் இருக்கிறது.
“அவை சிகப்பு நிற கற்களால் உண்டானவை .” என்கிறான்.
ராதை பொய்யுரை போதும் போய் வா என்கிறாள்.
தஸன பதம் பவ ததரகதம் மம ஜனயதி சேதஸிகேதம்
ததயதி கதமதுனாபி மயாஸஹ தவ வபுரே ததபேதம் (யாஹி)
பவததரகதம் – உன் உதடுகளில்
தசனபதம்-பற்களின் அடையாளம்
மம சேதஸி- என்மனதில்
கேதம்- துக்கத்தை
ஜனயதி- உண்டாக்குகிறது. (இன்னொரு பெண்ணின் அடையாளமாதலால்)
அதுனா அபி- அப்படி இருக்கையில் இப்போது கூட
தவ வபு: -உன் உடல்
மயா ஸஹ- என்னுடன் கூட
ஏதத் அபேதம் – பேதமில்லாமல் இருக்கும் தன்மையை ( நாம் இருவரல்ல ஒருவர் என்னும் உணர்வை )
கதம் கதயதி – எவ்வாறு கூறும்?
கண்ணன், “ என் உதடுகளை வண்டு தாமரை என்று நினைத்துக் கடித்துவிட்டது “என்று கூற,
ராதை “போதும் போதும் நான் இனிமேல் உன்னை நம்பத்தயாரில்லை போய்வா. “என்கிறாள்.
பஹிரிவ மலின தரம் தவ க்ருஷ்ண மனோபி பவிஷ்யதி நூனம்
கதமத வஞ்யஸே ஜனம் அனுகதம் அஸம ஸர ஜ்வர தூனம் (யாஹி)
க்ருஷ்ண-கிருஷ்ணா
நூனம் – நிச்சயம்
தவ மன: அபி- உன் மனதும்
பஹி: இவ – உன் உடலைப்போல (வனத்தில் அலைவதால்)
மலினதரம் – மிகவும் அழுக்கடைந்து
பவிஷ்யதி- இருக்க வேண்டும்.
அத கதம் – பிறகு ஏன்
அசஸமசரஜ்வரதூனம் – மன்மதனின் சரத்தால் துயருறும்
அனுகதனம் – உன்னை நம்பி இருக்கும்
ஜனம் –ஜீவனை
வஞ்சயசே- ஏமாற்றுகிறாய்
கண்ணன “நான் உன்னை ஏமாற்றவே மாட்டேன் ,” எனக்கூற
ராதை கோபம் தணியாமல் ‘போய் வா ,’ என்கிறாள்.
ப்ரமதி பவான பலா கபளாய வனேஷு கிமத்ர விசித்ரம்
ப்ரதயதி பூதனிகைவ வதூவத நிர்தய பால சரித்ரம் (யாஹி)
பவான் – நீ
வனேஷு – வனங்களில்
அபலாகவலாய – அபலைகளை கவர்வதற்கே (kavala –devour)
பிரமாதி- அலைகிறாய்
அத்ர- என்பதில்
‘கிம் சித்திரம் – என்ன ஆச்சரியம்
பூதனிகா ஏவ- பூதனை வரலாறே
வதூவத நிர்தய பால சரித்ரம் – உன் தயை அற்ற பெண்வதம் செய்த பாலலீலையை
ப்ரதயதி- பறை சாற்றுகிறதே .
அதனால் ‘உன்னை நம்ப மாட்டேன் நீ போகலாம் ,’ என்கிறாள்
ஸ்ரீ ஜயதேவ பணித ரதி வஞ்சித கண்டித யுவதி விலாபம்
ஸ்ருணுத ஸுதா மதுரம் விபுதா வததாபி ஸுகம் ஸுதுராபம் (யாஹி)
விபுதா:- பண்டிதர்களே
ஸ்ரீஜயதேவபணித – ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட
ஸுதாமதுரம்- அமிர்தத்திற்கொப்பான
விபுதாலயதோ அபி – தேவர் உலகத்திலும்
துறாப்ம் – கிடைக்காத
ரதிவஞ்சித- காதலில் ஏமாற்றமடைந்து
கண்டித யுவதிவிலாபம்- மனமுடைந்த யுவதியின் ப்ரலாபத்தை
ச்ருணுத- கேளுங்கள்
ராதை கண்ணனுடன் சேர ஆவல் இருந்தும் பொறாமையால் இவ்விதம் அவனைப் புறக்கணித்தாள். அந்த மாயவனுக்கா தெரியாது அவள் மனம் ! அங்கிருந்து போவதைப்போல் விலகி சிறிது தூரத்தில் சென்று காத்திருந்தான். ராதையின் சகி அவளுக்கு நல்லுரை கூற, விடியும் சமயம் அவள் சமாதானம் ஆகி இருப்பாள்என்று கண்ணன் மறுபடி அவளிடம் வந்தான்.
இதைக்கூறுவது அடுத்த இரண்டு (18, 19)அஷ்டபதி. 19 வது அஷ்டபதி சரித்திரப்புகழ் வாய்ந்தது.
—————————
18வது அஷ்டபதி
சகி ராதையிடம் கண்ணன் தானே வந்த பின்பு அவனை போகச்சொன்னது தவறு என்று கூறுகிறாள். இது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்யும் தவறு.
பகவானை வேண்டிக்கொண்ட பின்னும் நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால் அவனை வெறுத்து ஒதுக்கி விடுகிறோம். நம் கர்மவினைப்படிதான் எல்லாம் நடக்கும் ஆனால் அவன்தான் நமக்கு ஒரே துணை என்பதை மறந்து விடுகிறோம்
. குருவானவர் நம்மை சரியான வழியில் திருப்பி விடுகிறார். நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நான் எனது என்ற அகந்தையை விட்டு அவனை சரணடையச் சொல்கிறார்.
அததாம் மன்மத கின்னாம் ரதி ரஸ பின்னாம்
விஷாத ஸம்பன்னாம்
அனுசிந்தித ஹரி சரிதாம் கலஹாந்தரிதாம்
ராகம் யதுகுல காம்போஜி தாளம் மிஸ்ரசாபு
ஹரிரபி ஸரதி வஹதி மது பவனே
கிமபரம் அதிக ஸுகம் ஸகி பவனே
ஹரி: – ஹரி
அபிஸரதி – உன் சங்கேத இடத்தில் இருக்கையில்
மதுபவனே – தென்றல் காற்று
வஹதி-வீசுகையில்
கிம் அபரம்- வேறு எது
அதிசுகம் – இதைவிட மேலான சுகம்
புவனே – உலகில்( பவனே என்பது பாடபேதம். இங்கு புவனே என்பதுதான் பொருத்தமாக இருக்கிறது)
பல்லவி
மாதவே மாகுரு மானினி மானம் அயே ஸகி
அயே மானினி-துடுக்கான பெண்ணே
மாதவே – மாதவனிடத்தில் (மா என்றால் லக்ஷ்மி, தவ என்றால் பதி, லக்ஷ்மீப்தியே உன்னைத்தேடி வரும்போது)
மா குரு மானம் – கௌரவம் பார்க்காதே
தாள பலா தபி குரும் அதி ஸரஸம்
கிமு விபலீ குருஷே குச கலாஸம் (மாதவே)
தாலபலாதபி-பனம்பழத்தை விட
குரும்- பெரிய
அதிஸரஸம் – ஸ்ருங்கார ரசம் நீரம்பிய
குச கலசம்- கலசம் போன்ற மார்பை
கிம்- ஏன்
விபலீ குருஷே – வீணாக சுமக்கிறாய்
கதி ந கதிதமிதம் அனுபதம் அசிரம்
மா பரிஹர ஹரிம் அதிசய ருசிரம் (மாதவே)
அதிசய ருசிரம்- அதிசய மநோஹரமான
ஹரிம்- ஹரியை
மா பரிஹர – அலட்சியம் செய்யாதே என்று
இதம் – இதை
அசிரம் அனுபதம் – மீண்டும் மீண்டும்
கதி கதிதம்- எவ்வளவு தரம் சொல்லி இருக்கிறேன்
கிமிதி விஷீதஸி ரோதிஷி விகலா
விஹஸதி யுவதி ஸபா தவ ஸகலா (மாதவே)
கிமிதி-எதற்காக ( செய்வதையும் செய்துவிட்டு)
விகலா- வீணாக
விஷீதஸி- புலமபிக்கொண்டும்
ரோதிஷி –அழுதுகொண்டும் இருக்கிறாய்
யுவதிஸபா -மற்ற யுவதிகள் கொண்ட
தவ ஸகலா- உன் நட்புவட்டம்
விஹஸதி – உன்னைப்பார்த்து சிரிக்கிறது.
ம்ருது நளினீ தள ஸயனே
ஹரீம் அவலோகய ஸபலய நயனே (மாதவே)
ஸஜலநளிநீதல சீதல சயனே
ஹரிம் அவலோகய ஸபலய நயனே (மாதவே)
ஸஜலநளிநீதல சீலித சயனே-நீருடன் கூடிய குளிர்ந்த தாமரை இதழ் மேல் இருப்பவனாக
ஹரிம் –ஹரியை
அவலோகய- பார்.
ஸபலனயனே –உன்கண்கள் பெற்ற பயனாக.
ஜனயஸி மனஸி கிமிதி குரு கேதம்
ஸ்ருணுமம ஸுவசனம் அனீஹித பேதம் (மாதவே)
மனஸி- மனதில்
கிம் இதி- எதற்கு
குருகேதம் – மிகுந்த துக்கத்தை
ஜனயஸி- உண்டுபண்ணிக் கொள்கிறாய்?
அநீஹிதபேதம் – உங்களுக்குள் பேதத்தை விரும்பாத
மமவசனம் – என் வார்த்தையை
ச்ருணு- கேள்
ஹரிருபயாது வதது பஹுமதுரம்
கிமிதி கரோஷி ஹ்ருதயம் அதிவிதுரம் (மாதவே)
ஹரி: – ஹரி
உபயாது- வரட்டும்
பஹுமதுரம் – மிகவும் இனிமையாக
வதது- பேசட்டும்
கிமிதி- ஏன்
ஹ்ருதயம் – உன் இதயத்தை
அதிவிதுரம் – கடுமையானதாக
கரோஷி- செய்து கொள்கிறாய்?
ஸ்ரீஜய தேவ பணிதம் அதி லலிதம்
ஸுகயது ரஸிக ஜனம் ஹரி சரிதம் (மாதவே)
ஸ்ரீ ஜயதேவ பணிதம் -ஸ்ரீ ஜெயதேவருடைய கூறப்பட்ட
அதிலலிதம்- மிகவும் அழகான
ஹரிசரிதம்- ஹரியின் சரிதம் .
ரஸிகஜனம் –ரசிகர்களுக்கு
ஸுகயதி- சுகத்தைக் கொடுக்கிறது.
————-
19 வது அஷ்டபதி
அடுத்த நாள் கண்ணன் ராதையிடம் வந்து அவளை சமாதானப்படுத்துகிறான்.
மற்றவைகளுக்கு இல்லாத ஒரு மேன்மை இந்த அஷ்டபதிக்கு உண்டு. அதை அந்த ஸ்லோகம் வரும்போது பார்க்கலாம்.
அத்ராந்தரே மஸ்ருண ரோஷ வஸாத் அஸீம்நி
ஸ்வாஸ நிஸ்ஸஹ முகீம் ஸுமுகீம் உபேத்ய
ஸவ்ரிடம் ஈக்ஷித ஸகீவதனாம் தினாந்தே
ஸானந்த கத்தத பதம் ஹரிரித்யுவாச
ராகம் முகாரி தாளம் ஜம்பை
வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதீ
ஹரது தர திமிரம் அதிகோரம
ஸ்புரததர ஸீதவே தவ வதன சந்த்ரமா
ரோசயது லோசன சகோரம்
கிஞ்சிதபி- ஏதாவது ஒரு வார்த்தையாவது
வதஸி யதி- நீ கூறினால்
தந்தருசி கௌமுதீ- உன் பற்களின் ஒளியாகிற நிலவு
தரதிமிரம் அதி கோரம்- மிகவும் பயங்கரமான என் பயத்தை ( நீஎன்னை வெறுத்துவிட்டாய் என்ற பயத்தை)
ஹரது-போக்கடிக்கட்டும்.
தவ – உன்னுடைய
வதன சந்த்ரமா- முகமாகிய சந்திரனில்
ஸ்புரத் அதர சீதவே – துடிக்கும் உதடுகளாகிய அம்ருதத்தை
மம – என்னுடைய் லோசனசகோரம்- கண்கள் என்னும் சகோரரபக்ஷிகளை ரோசயது- இன்புறச்செய்யட்டும்
ப்ரியே சாருஸீலே ப்ரியே சாருஸீலே
முஞ்ச மயி மானம் அநிதானம்
ஸபதி மதனானலோ தஹதி மம மானஸம்
தேஹி முக கமல மதுபானம்
ப்ரியே சாருசீலே- பிரியமான அழகியே
மயி- என்னிடத்தில்
அனிதானம் – காதலுக்குப் பொருந்தாத
மானம் – கோபத்தை
முஞ்ச – விட்டுவிடு.
ஸபதி-தற்சமயம்
மதனானல: -மன்மதனால் தூண்டப்பட்ட நெருப்பு
மம மானஸம்- என் மனதை
தஹதி – எரிக்கிறது
முககமல மதுபானம் – உன் இதழமுதத்தை
தேஹி – தருவாயாக.
ஸத்யமேவாஸி யதி ஸுததி மயி கோபினீ
தேஹி கர நகர ஸர காதம்
கடய பூஜ பந்தனம் ஜனய ரத கண்டனம்
யேன வா பவதி ஸுக ஜாதம் (ப்ரியே)
ஸுததி- அழகான பற்களை உடையவளே
ஸத்யம் ஏவ – உண்மையாகவே
மயி- என்னிடத்தில்
யதி கோபினி – கோபமாக இருந்தால்
கர நகர சர காதம் – உன் கூர்மையான் நகமாகிய சரத்தினால் என்னை அடித்து விடு.
புஜபந்தனம் கடய – உன் கைகளால் என்னைக் கட்டிவிடு.
ரதகண்டனம் ஜனய- உதடுகளால் என்னை கடித்துவிடு.
யேன வா பவதி ஸுகஜாதம் – அது சுகத்தைக் கொடுக்கும்
த்வமஸி மம ஜீவனம் த்வமஸி மம பூஷணம்
த்வமஸி மம பவஜலதி ரத்னம்
பவது பவதீஹ மயி ஸததமனுரோதினீ
தத்ர மம ஹ்ருதயம் அதி யத்னம் (ப்ரியே)
த்வமஸி- நீதான்
மம ஜீவனம்- உயிர்.
த்வமஸி- நீதான்
மம-என்
பூஷணம் – ஆபரணம் (சிறப்பு அம்சம்)
த்வமஸி- நீதான்
மம- எனக்கு
பவஜலதி- வாழ்க்கையாகிற கடலில் கிடைத்த
ரத்னம் – ரத்தினம்
இஹ – இங்கு
பவதீ – நீ
ஸததம் – எப்போதும்
அனுரோதிநீ- மனம் குளிர்ந்தவளாக
பவது – இருப்பாயாக.
தத்ர- அதற்காக
மம ஹ்ருதயம் – என் இதயம்
அதியத்னம். – மிகவும் யத்தனிக்கிறது.
நீல நளினாபமபி தன்வி தவ லோசனம்
தாரயதி கோகன த ரூபம்
குஸும ஸரபாண பாவேன யதி ரஞ்ஜயஸி
க்ருஷ்ணமித மேததனு ரூபம் (ப்ரியே)
தன்வி –மெல்லியலாளே
தவ லோசனம் – உன் கண்கள்
நீல நளிநாபம் அபி – நீல தாமரை போல் இருந்தும்
கோகனத ரூபம் – சிவந்த வர்ணம்
தாரயதி- தரித்துள்ளது (கோபத்தினால்)
குஸுமசரபாணபாவேன – (உன் கண்கள் என்கிற) மன்மதனின் அம்புகளால்
இதம் க்ருஷ்ணம்அபி – இந்த கிருஷ்ணனை (நீல வண்ணனையும்)
யதி ரஞ்சயஸி-சிவப்பாக செய்தாயானால் ( அம்புகளால் ஏற்பட்ட உதிரப் பெருக்கினால் ) ரஞ்சயஸி என்றால் சந்தோஷப்படுத்துவது என்றும் அர்த்தம்)
ஏதத்- இது
அனுரூபம் – பொருத்தமாக இருக்கும்.
ஸ்புரது குச கும்பயோ: உபரி மணி மஞ்சரி
ரஞ்ஜயது தவ ஹ்ருதய தேஸம்
ரஸது ரஸனாபி தவ கனஜகன மண்டலே
கோஷயது மன்மத நிதேஸம் (ப்ரியே)
குசகும்பயோ: உபரி- உன் கும்பஸ்தனங்களின் மேல்
மணிமஞ்சரீ –மணிஹாரம் மலர்க்கொத்துப்போல
ஸ்புரது- அசையட்டும்
தவஜகனமண்டலே- உன் இடுப்பில்
ரஸனா அபி – மேகலையும்
ரஸது- ஒலிக்கட்டும்.
மன்மதநிதேசம்- மன்மதனின் செய்தியை
கோஷயது – கோஷிக்கட்டும்
ஸ்தல கமல பஞ்ஜனம் மம ஹ்ருதய ரஞ்ஜனம்
ஜனித ரதி ரங்க பர பாகம்
பண மஸ்ருணவாணி கரவாணி சரணத்வயம்
ஸரஸ ஸதலக்தக ஸராகம் (ப்ரியே)
மஸ்ருணவாணி- அழகிய வாக்கை உடையவளே
பண- கட்டளையிடு
ஸ்தலகமலபஞ்ஜனம்- நிலத்தாமரையொத்த
மம ஹ்ருதய ரஞ்ஜனம் – என் இதயத்தை மகிழ்விக்கும்
சரணத்வயம் – உன் பாதங்களை
ஜனித ரதி ரங்க பர பாகம்- ஒன்றுக்கொன்று அழகு செய்வதாக இன்பம் விளைவிக்கும்
ஸரஸ லஸதலக்தக ஸராகம்-பாதங்களின் ஒரே நிறமுடைய செம்பஞ்சுக்குழம்புப் பூசுவதை
கரவாணி –செய்கிறேன்.
ஸ்மரகரள கண்டனம் மம ஸிரஸி மண்டனம்
தேஹீ பத பல்லவம் உதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கதனானலோ
ஹரது ததுபாஹித விகாரம் (ப்ரியே)
பத பல்லவம் உதாரம் –அழகிய தளிர்போன்ற பாதத்தை
ஸ்மர கரள கண்டனம் –மன்மதவேதனையால் ஏற்பட்ட விஷத்தை தணிக்கும் பொருட்டு
மமசிரஸி – என் தலையில்
மண்டனம் தேஹி – அலங்காரமாக வை.
மயி – என்னிடத்தில்
தாருண; – பயங்கரமான
மதனகதனானல: : காதல்தீயானது
ஜ்வலதி – தகிக்கிறது.
ததுபாஹித விகாரம் ஹரது –அதனால் ஏற்பட்ட பாதிப்பு விலகட்டும்.
இந்த அஷ்டபதியின் வரலாறு பின்வருமாறு.
ஜெயதேவர் ஒருநாள் ராதையின் கோபத்தையும் கண்ணன் அவளை சமாதானப்படுத்துவதையும் கூறும் இந்த அஷ்டபதியை எழுதிக்கொண்டு இருந்தார். அப்போது மேற்கண்ட வரிகளை எழுதியவர் பகவான் தலை மேல் ராதையின் பாதங்களை வைப்பதாவது ? இது அபசாரமல்லவா என்று எண்ணியவராய் அதை மாற்ற முயற்சித்தபோது ஒன்றும் சரியாக அமையாமல் அதை அப்படியே விட்டுவிட்டு ஸ்நானம் செய்வதற்கு போய் விட்டார். அப்போது கண்ணன் ஜெயதேவர் உருவம் கொண்டு அங்கு வந்து பத்மாவதியிடம் தான் எழுதிக்கொண்டிருந்ததை தரும்படி கேட்டு அவர் எந்த வரிகளை வேண்டாம் என்று நீக்கினாரோ அதையே எழுதிவிட்டுப் போய்விட்டான். ஜெயதேவர் ஸ்நானம் முடித்து வேறு கற்பனையுடன் வந்து அந்த ஏட்டை எடுத்துப் பார்த்தால் எதை வேண்டாம் என்று நீக்கினாரோ அதே வரிகள் எழுத்ப்பட்டிருப்பதைப் பார்த்து பத்மாவதியிடம் இது யார் எழுதியது என்று கேட்டார். அப்போது அவள் “நீங்கள் தான் ஸ்நானம் செய்யப்போனவுடன் திரும்பி வந்து இதை எழுதிவிட்டு நான் ஸ்நானம் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிப் போனீர்கள்?” என்றாள் அப்போதுதான் அவருக்கு அது கண்ணனின் விளையாட்டு என்று தெரிந்தது. தன் காணாத பகவானை பத்மாவதி கண்டு விட்டாள் . அவள் பாக்கியம் செய்தவள் என்று அது முதல் அடுத்த அஷ்டபதிகளுக்கு தன் முத்திரையை பத்மாவதி ரமண ஜெயதேவகவி என்று .மாற்றிக்கொண்டு விட்டார்.
இதனால் பகவானுக்கு அவர் பக்தர்களின் மேல் உள்ள அன்பு தெரிகிறது. பாகவதத்தில் ஓர் சம்பவம் இதற்கு உதாரணமாக காண்கிறோம். நாரதர் கண்ணனைக்காண த்வாரகைக்கு வருகிறார் அப்போது எல்லாபத்தினிகள் வீட்டிலும் அவனைகண்டு பிறகு ஒரு தனி இடத்தில் பூஜை செய்பவனாகக் காண்கிறார்.” எல்லோரும் உன்னை வணங்க நீ யாரை வணங்குகிறாய்?” என்று கேட்க அவன் என் பக்தர்களின் பாத தூளி இங்கு இருக்கிறது. அதை வணங்குகிறேன் என்று சொல்கிறான். இதிலிருந்து பக்தபராதீனன் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.
இதி சடுல சாடுபடு சாரு முர வைரிணோ
ராதிகாம் அதிவசன ஜாதம்
ஜயது பத்மாவதி ரமண ஜயதேவகவி
பாரதி பணிதமிதி கீதம் (ப்ரியே)
இதி- இவ்வாறு
முரவைரிண: -கிருஷ்ணனுடைய
சடுல சாடு படுசாரு- அதி சாமர்த்தியமானதும் அழகியதுமான
ராதிகாம் அதி- ராதையை குறித்துக் கூறிய
வசனஜாதம் – வார்த்தைகளை உடைய
பத்மாவதீரமண- பத்மாவதியின் பதியான
ஜயதேவகவி- ஜெயதேவரால்
பாரதீபூஷிதம்- வாக்கினால் அலங்கரிக்கப்பட்ட
மாநிநீஜனஜனித சாதம் – ஊடல் கொண்ட பெண்களுக்கு சுகம் அளிப்பதுமான கீதம்
ஜயது- வெல்லட்டும்
———–
20வது அஷ்டபதி
கண்ணன் வந்து பிரியமாகப் பேசிய பின்னும் ராதை தயங்குகிறாள். பிறகு கண்ணன் ராதை இன்னும் தயங்குவதைப் பார்த்து அவளாக வரட்டும் என்று அவர்கள் சந்திக்கும் இடத்தில் சென்று காத்திருக்கிறான். அப்போது சகி ராதையை அங்கு செல்லும்படி கூறுகிறாள்.
ஸுசிரம் அனுநயனே ப்ரீணயித்வா ம்ருகாக்ஷீம்
கதவதி க்ருதவேஷ கேஸவே குஞ்ஜ ஸய்யாம்
ரசித ருசிர பூஷாம் த்ருஷ்டி மோக்ஷே ப்ரதோஷே
ஸ்புரதி நிரவஸாதாம் காபி ராதாம் ஜகாத
ராகம் மோஹனகல்யாணி தாளம் ஆதி
விரசித சாடு வசன ரசனம் சரணே ரசித ப்ரணிபாதம்
ஸம்ப்ரதி மஞ்ஜுள வஞ்சுள ஸீமனி கேளிஸயனம் உபயாதம்
முக்தே மதுமதனம் ஹே ராதே முக்தே மதுமதனம் அனுகதம் அனுஸர ராதே ( த்ருவபதம்)
விரசித சாடு வசன ரசனம்- உன்னிடம் சாதுர்யமாகப் பேசி
சரணே ரசித ப்ரணிபாதம்- உன் பாதங்களை வணங்கி
ஸம்ப்ரதி- இப்போது
மஞ்சுள வஞ்சுள ஸீமனி-அழகான கொடிவீட்டின் சமீபம்
கேளிசயனம் – மஞ்சத்திற்கு
அனுயாதம்-சென்ற
அனுகதம் – உனக்கு அனுகூலனான
மதுமதனம் –கண்ணனை
முக்தே ராதிகே –அப்பாவியான ராதையே
அனுஸர- பின் தொடர்ந்து செல்.
கன ஜகன ஸ்தன பாரபரே தர மந்தர சரண விஹாரம்
முகரித மணி மஞ்ஜீர முபைஹி விதேஹி மராள விகாரம்
கனஜகன ஸ்தன பார பரே-ஸ்தனம் இடுப்பு இவைகளின் பாரத்தால்
தரமந்தர சரணவிஹாரம்- கால்கள் மெதுவாக நடக்க
மராளநிகாரம் – அன்னம் போல்
விதேஹி- செல்.
முகரிதமணிமஞ்ஜீரம்- உன் பாதங்களின் சலங்கை சப்திக்க
உபைஹி- செல்வாயாக.
ஸ்ருணு ரமணீயதரம் தருணீஜன மோஹன மதுபவிராவம்.
குஸுமஸராஸன ஸாஸன வந்தினி பிகநிகரே பஜபாவம்
ரமணீயதரம்- அழகான
தருணீஜனமோஹன – பெண்களை மயக்குகிற
மதுபவிலாபம்- வண்டின் ரீங்காரத்தை ( கண்ணனின் அதரமாகிற தேனை உண்டு எழும் குழல் நாதம்)
ச்ருணு- கேள்
குஸுமசராசன – மன்மதனின்
சாஸன வந்தினி – கட்டளைபோல் பாடும்
பிகநிகரே – குயில்கள் குரலில்
பஜ பாவம் – ஆனந்திப்பாயாக.
அனித தரள கிஸலய நிகரேண கரேண லதா நிகுரும்பம்
ப்ரேரணமிவ கரபோரு கரோதி கதிம் ப்ரதி முஞ்ச விளம்பம்
கரபோரு- யானைதுதிக்கையைப்போல் துடை உள்ளவளே
லதாநிகுரம்பம் –கொடிகள் எல்லாம்
அனிலதரள கிஸலய நிகரேண- காற்றில் அசையும் தளிர்களாகிய
கரேண- கைகளால்
ப்ரேரணம் கரோதி இவ – உன்னை வரவேற்பதுபோல் உள்ளன.
கதிம் பிரதி – நீ செல்வதற்கு
விளம்பம் முஞ்ச- தாமதம் செய்யாதே.
கரபோரு- அழகிய பெண்களின் துடைகள் யானைத்துதிக்கையைப்போல் அல்லது வாழைத்தண்டுபோல் இருக்கும் என்பது சாமுத்ரிகா லக்ஷணம்.
இந்த இடத்தில் காளிதாசனின் கவியழகைக் காண்போமா?
காளிதாசன் பார்வதியின் அழகை வர்ணிக்கிறான் குமாரசம்பவத்தில்.
நாகேந்தர ஹஸ்தா: த்வசி கர்கசத்வாத் ஏகாந்தசைத்யாத் கதலீவிசேஷா:
லப்த்வாபி லோகே பரிணாஹி ரூபம் ஜாதா: ததூர்வோ: உபமான பாஹ்யா:
யானைத்துதிக்கைகளின் தோல் மிகவும் கடினமானதாலும் வாழைத் தண்டுகள் மிகவும் குளிர்ந்து இருப்பதாலும் இரண்டும் உலகில் உவமைகளாககக் கூறப்பட்ட போதிலும் பார்வதியின் விஷயத்தில் ஒவ்வாததாகின்றன. அதாவது அவள் சௌந்த்ர்யத்திற்கு ஈடே இல்லை என்று கூறுகிறான்.,
ஸ்புரித மனங்க தரங்க வஸாதிவ ஸூசித ஹரி பரிரம்பம்
ப்ருச்ச மனோஹர ஹார விமலஜலதாரம் அமும் குச கும்பம்
சூசிதஹரிபரிரம்பம்- ஹரியின் ஆலிங்கனத்தை நினைவுபடுத்தும்
அனங்க தரங்க வசாத் இவ – மன்மத வேகத்தால் துடிக்கும்
மனோஹர ஹாரவிமலஜலதாரம்- அழகிய ஜலதாரைகள் போன்ற முத்துமாலைகளை தாங்கி நிற்கும்’
அமும் குசகும்பம் –இந்த உன் குசகலசங்களைக் கேள் (உன் உள்ளகிடக்கையை சொல்லும்)
அதிகதம் அகில ஸகீபிரிதம் தவ வபுரபி ரதிரண ஸஜ்ஜம்
சண்டி ரஸித ரஸனாரவ டிண்டிமம் அபிஸர ஸரஸம் அலஜ்ஜம்
சண்டி- பிடிவாதக்காரியே
அகிலஸகீபி: உன் எல்லா தோழிமார்களுக்கும்
இதம் தவ வபு: – இந்த உன் உடல்
ரதிரணஸஜ்ஜம் – கூடலுக்கு தயாராக இருக்கிறது என்று
அதிகதம் – தெரிந்ததே
ரஸித ரசனாரவடிண்டிமம்- உன் காற்சிலம்பு உன் வரவைத் தெரிவிக்கும் பறை போல் ஒலிக்க
அலஜ்ஜம்- நாணத்தை விட்டு
ஸரஸம்- காதலுடன்
அபிஸர – செல்வாயாக
ஸ்மரஸர ஸுபக நகேன ஸகீம் அவலம்ப்ய கரேண ஸலீலம்
சல வலய க்வணிதை: அவபோதய ஹரிமபி நிஜகதி ஸீலம்
ஸகீம் – தோழியாகிற என்னை
ஸ்மர சர ஸுபக நகே – மன்மதபாணம் போல் அழகிய நகம் பொருந்திய
கரேண – கரத்தால்
அவலப்ய – பிடித்துக்கொண்டு
ஸலீலம் – நளினமாக
சலவலயக்வணிதை:- உன் வளைகளின் ஒலியால்
நிகதிதசீலம் – உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
ஹரிம் அபி- ஹரிக்கும்
அவபோதய –உன் வரவைத் தெரியப்படுத்து
ஸ்ரீ ஜயதேவ பணிதம் அதரீ க்ருத ஹாரம் உதாஸித வாமம்
ஹரிவினிஹித மனஸாம் அதிதிஷ்டது கண்டதடீம் அவிராமம்
ஸ்ரீ ஜெயதேவ பணிதம்- ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதம்
அதரீக்ருத ஹாரம்- ஒரு மாலையினும் மேம்பட்டதாய்
உதாஸித வாமம்- பெண்ணாசையை அகற்றுவதாய்
ஹரிவிநிஹிதமனஸாம்- ஹரியினிடத்தில் ஒன்றுபட்ட மனம் உடையோரின்
கண்டதடீம் –கண்டத்தில்( மாலையைப்போல் )
அவிராமம்- எப்போதும்
அதிதிஷ்டது – வசிக்கட்டும்
நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்ட பக்தர்களால் பாடப்படுவதால்( கண்ட தேசத்தில் இருந்து எழுவதால்) இந்த கீதகோவிந்தம் சிறந்த மாலையைப்போல் உள்ளது.
கண்ணன பூதனையிடம் ஸ்தன்ய பானம் செய்ததை நினைத்தால் மீண்டும் இந்த உலகில் தாயிடம் பால் குடிக்கும்படி நேராது. ( பிறவி இருக்காது) அவன் உரலில் கட்டுண்டதை நினைத்தால் நம் கட்டுக்கள் அவிழும்.( சம்சார பந்தம் விடுபடும்) அவன் செய்த கோபியர் லீலையை நினைந்தால் காம இச்சை விலகும்.
நியாய சாஸ்திரத்தில் தத்க்ரது நியாயம் என்று ஒன்று உண்டு. அது என்னவென்றால் எதை நினைக்கிறோமோ அதே போல ஆகிவிடுவோம் என்பது. வேதாந்த தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார் . அந்த நியாயம் பகவான் விஷயத்தில் பயன்படாது வெட்கத்தால் ஆரண்யத்தில் ஒளிந்து கொண்டு விட்டது என்று. ஆரண்யகம் என்றால் உபநிஷத் . அங்கு இந்த நியாயம் சொல்லப்படுகிறது. கண்ணன் விஷயத்தில் அது அவனுடைய செய்கைகளுக்கு நேர் மாறான பலனைக் கொடுப்பதால் அது ஆரண்யத்தில் ஒளிந்துகொண்டு விட்டது என்கிறார்.
———————————–