Archive for the ‘SRi Valimiki Raamaayanam’ Category

விபரீதானி நிமித்ததானி  —

May 24, 2023

ராமன் பட்டாபிஷேகம் நடைபெறாது என்பது முக்காலமும் உணர்ந்த முனிவரான வால்மீகிக்கு முன்னரே தெரிந்துவிட்டது. முனிவர்களும் ஜோதிடத்தை வைத்துத்தான் அப்படிச் சொல்லுகின்றனர். நிமித்தம் என்ற ஆரூடம் பற்றிய ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்துகிறார். பகவத் கீதையிலும் விபரீதானி நிமித்ததானி  என்ற வாக்கியத்தைக் காண்கிறோம். 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் காண்கிறோம். வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலும் நிறைய இடங்களில் நிமித்தம் என்ற சொல் வருகிறது ; அதற்கு இரண்டு அர்த்தம் உண்டு (1)காரணம் , (2)ஜோதிட அறிகுறிகள் என்ற இரண்டு பொருள் அவை.

இதோ வால்மீகி எச்சரிக்கை:

அவஷ்டப்தம் ச மே ராம நக்ஷத்ரம் தாருணைர் க்ரஹைஹி

ப்ராயேண ஹி நிமித்தா நாமீத்ருசா நாமு பக்ரமே

ராஜா ஹி ம்ருத்யுமாப்னோதி கோராம் வாபதம் ருச்சதி

தாவதே வாபி ஷிஞ்சஸ்வ  சலா ஹி ப்ரா ணி நாம் மதி

ராமா ! எனது நக்ஷத்ரம் கொடிய க்ரஹங்களால் தாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிமித்தங்கள் தோன்றும் பொழுது அரசன் மரணம் அடைவான் , இல்லையேல் கொடிய விபத்தைச்  சந்திப்பான். ஆதலால் அதற்குள் பட்டாபிஷேகத்தைச் செய்துகொள் என்று தசரதர் சொன்னதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது .

ராமாபிரானுக்கு மரணம் சம்பவிக்காமல் 14 வருஷ வனவாசம் என்னும் விபத்தே நிகழ்ந்தது.

புறநானூற்றிலும் இதே காட்சி :

புறநானூற்றிலும் கொடிய நிமித்தங்களால் அரசன் மரணம் அடைவான் என்று புலவர் கூடலூர் கிழார் அஞ்சுகிறார். அதே போல அரசன் மரணம் அடைகிறார்.

புலவர் கூடலூர் கிழார் ஒரு சங்க கால ஜோதிடர்

ஒருநாள் எரிகல் METEOR  ஒன்று வானத்திலிருந்து விழுந்தது.

அதனைக் கண்ணுற்ற புலவர் அப்போது இருந்த கிரஹ, நக்ஷத்ரங்களின் நிலையையும் அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் ஜாதத்தையும்  ஒப்பிட்டுக் கணித்துப் பார்த்தார்.

அரசன் அன்றைக்கு ஏழாம் நாள் மரணம் அடைவான்  என்பதைக் கண்டறிந்தார் . அதுபோலவே மன்னர் இறந்தான். அப்போது அவர் பாடிய பாடல் இது. இந்தப் பாடலில் அரண்மனைக்குள் கண்ட நிமித்தங்களையும் கூடலூர்க் கிழார் பட்டியலிட்டுள்ளார்.

புறநானூறு 229

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்,

முடப் பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காய,

பங்குனி உயர் அழுவத்து,                    5

தலை நாள்மீன் நிலை திரிய,

நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,

தொல் நாள்மீன் துறை படிய,

பாசிச் செல்லாதுஊசித் துன்னாது,

அளக்கர்த் திணை விளக்காகக்    10

கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,

ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;

அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,

‘பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்

நோய் இலனாயின் நன்றுமன் தில்’ என 15

அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,

அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;

மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,

திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,

காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,     20

கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,

மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,

ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,

தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு        25

அளந்து கொடை அறியா ஈகை,

மணி வரை அன்ன மாஅயோனே?— 229

பொருள்

மேட இராசி பொருந்திய கார்த்திகை நாளின் KRITHIKA NAKSHATHRA முதற்காலின்கண்

நிறைந்த இருளை உடைய பாதி இரவின்கண்

முடப்பனை போலும் வடிவுடைய அனுட ANUSHA NAKSHATRA நாளின் அடியின்வெள்ளி (முதல் நட்சத்திரம்) முதலாகக்,

கயமாகிய குளவடிவு போலும் வடிவமைவுடைய புனர்பூசத்துக் PUNAR PUSA கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப்,

பங்குனி FALGUNA MONTH  மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் UTTARA STAR அவ் உச்சியினின்றும் சாய,

அதற்கு எட்டாம் மீனாகிய மூலம்MOOLAM STAR அதற்கு எதிரே எழாநிற்க, அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய MRIGASHIRSHA (நட்சத்திரம்) துறையிடத்தே தாழக்,

கீழ்த்திசையிற் போகாது, வடதிசையிற் போகாது,

கடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்காநின்ற தீப் பரக்கக்,

காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து ஒரு மீன் விழுந்தது, வானத்தினின்றும்;

அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர்

எம்முடைய பறையொலி போலும் ஒலியை உடைய அருவியை உடைய நல்ல மலைநாட்டு வேந்தனாகியவன்

நோயை உடையன் அல்லன் ஆகப்பெறின் அழகிது என

இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்த உள்ளம் பரப்ப யாம் அஞ்சினேம்;

அஞ்சினபடியேஏழாம் நாள் வந்தது ஆகலின், இன்று,

BAD OMENS – BAD NIMITTAS

வலிமையுடைய யானை கையை நிலத்தே இட்டுத் துஞ்சவும்,

திண்ணிய வாரால் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும்,

உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக் குடை கால் துணித்து உலரவும்,

காற்றுப் போலும் இயலை உடைய மனம் செருக்கிய குதிரைகள் கதி இன்றிக் கிடக்கவும்,

இப்படிக் கிடக்கத்,

தேவர் உலகத்தை அடைந்தான்; ஆகையாலே,

ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்கு மேவப்பட்ட துணையாகித், தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ?

பகைவரைப் பிணித்துக்கொள்ளும் வலிமையும், நச்சினோர்க்கு அளந்து கொடுத்தல் அறியாத வண்மையும் உடைய நீலமலை போலும் மாயோன்.

இந்தப் பாடலில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன

1. தமிழர்கள், சங்க காலத்திலேயே ஜோதிடத்தில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் அடைந்தனர் என்பதைக் காட்டும் 200 சங்க கால ஜோதிடக் குறிப்புகளில் மிகவும் முக்கியமான பாடல் இது.

2. கிரேக்க நாட்டிலிருந்துதான் இந்துக்களுக்கு ஜோதிடம் வந்தது என்று சொன்ன வெளிநாட்டுஅறிஞர்களின் முகத்திரையைக் கிழிக்கிறது.

3. ஆரிய- திராவிடம் வாதம் பேசி தங்களை அறிஞர்கள் போலக் காட்டிக்கொள்ளும் அரைவேக்காடுகள் முகத்தில் தார் TAR போன்ற கரியைப் பூசுகிறது.

4. இந்தப் பாடலில் வரும் பங்குனி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் பாசி (பிராச்யை )ஊசி (உதீச்யை )  என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையும் கவனித்தல் வேண்டும். அஸ்வினி முதல் உள்ள நட்சத்திரக் கணக்கையும் கவனிக்க வேண்டும் .

இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திரு ஞான சம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்திலும் இந்த நக்ஷத்திரக் கணக்கு வருகிறது.

5. தமிழர் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் , சம்ஸ்க்ருத மாதங்களின் தமிழாக்கம் என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய சொற்பொழிவுகளிலிருந்து அறிக

6. நட்சத்திரங்களின் வடிவத்தை வைத்து, அவைகளுக்குப் பெயரிடும் முறையும் சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உளதே . மிருக சீர்ஷம் = மான்  தலை என்பது போல பல மொழி பெயர்ப்புகள்.

7. எரிகல் வீழ்ச்சி (METEOR FALLING) ஒவ்வொரு வினாடியும் லட்சக் கணக்கில் நடக்கிறது என்பது வானியல் ASTRONOMY படித்தோருக்குத் தெரியும் ; ஆயினும் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நாளில் நிகழ்வதைக் கொண்டு ஆரூடம்  சொல்லுவார்கள்..

8. இது ராமாயண, மஹாபாரத காலத்திலிருந்தே வடஇமயம் முதல் தென் குமரி வரை  இருப்பதால் ஜோதிடம் என்பது கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது பிதற்றல்.

9.ஜோதிடம் சொல்லும்போது ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்திய கூடலூர்க் கிழார் பெரிய சம்ஸ்க்ருத அறிஞராக இருந்திருக்க வேண்டும்.

10. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அறிந்தால்தான் இந்திய வரலாற்றைப்  பற்றிப்  பேச ஒருவருக்கு அருகதை உண்டு.. எடுத்துக்காட்டாக வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதாபிருஹத் ஜாதகம் ஆகியவற்றை ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்லுவதும் தவறு. கூடலூர்க் கிழார், வால்மீகி போன்றோர் சொல்லும் ஜோதிடம், இந்தக் கலை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. ராமர் பட்டாபிஷேகத்துக்கு சித்திரா பெளர்ணமி நாளை வசிஷ்டர் தேர்ந்தெடுத்ததும் இன்னொரு சுலோகத்தில் வருகிறது.

ஆகவே தமிழ் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; ஸம்ஸ்க்ருதம்  மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; இரண்டையும் பாடித்தவனே  முழு அறிஞன் . தமிழ் நாட்டில் டாக்டர் நாகசாமி, பி.எஸ் குப்புசுவாமி சாஸ்திரி போன்ற பேரறிஞர்கள் இப்போது இல்லாததால் பலரும் தமிழ் இலக்கியத்தை சரியாக எடைபோட முடிவதில்லை .

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்–ஸ்ரீ சம்பு ராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்–– பெங்களூரு ஸ்ரீகாந்த். (வலம் இதழில் வெளிவந்த கட்டுரை)

February 24, 2023
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் 

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் | 
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

வேதங்கள் “எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும்” என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மீகி போன்றோர் உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி, நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான்.

அவரது குணாதிசயங்களைப் பற்றி படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மீகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மீகி வாழ்ந்திருந்தார் என்றால், “ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும்” என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மீகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர் போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மீகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

பதினாறும் பெற்ற பெருவாழ்வு

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் | 
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||
சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: | 
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: ||  1.1.3 ||
ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: | 
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

நற்குணங்களின் குன்று, 
வீரன், 
கடமையில் கருத்துடையவன், 
நன்றி மறவாதவன், 
உண்மை விளம்பி, 
மனத்திடம் மிக்கோன், 
நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், 
அனைவரின் நலம் விரும்பி, 
கல்வி மிக்கோன், 
திறமை மிக்க தொழிலாளி, 
பழகுதற்கு எளிமையானவன், 
தன்னிலே இன்புற்றோன், 
சீற்றத்தை அடக்கியவன், 
அழகன், 
அழுக்காறு அகன்றோன், 
சீண்டினால் சீறுவோன் 
என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. 
இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், 
இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் 
மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, 
அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.

தேவ பாடையின்-தெய்வ மொழி எனப்படுகின்ற வடமொழியில்;
இக்கதை செய்தவர்-இந்த இராம கதையை இயற்றிய; மூவரானவர்
தம்முளும்- வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவருள்;
முந்திய நாவினார் உரையின்படி-முதன்மையாராகியவரும் வாக்கிற்
சிறந்தவருமாகிய வான்மீகி முனிவர் சொல்லியபடியே; தமிழ்ப் பாவினால்-தமிழ்ப் பாடல்களால்;
இது நான் உணர்த்திய பண்பு-
இந்த இராமாவதாரத்தை நான் சொல்லிய இயல்பாகும்.

வடமொழியில் இராமபிரான் கதை சொல்லியவர் மூவர்;
அவர்களுள் ஆதிகவி வான்மீகி அருளிய காப்பியத்தின் வழியாலேயே கவிச் சக்கரவர்த்தி
இராமாவதாரக் காப்பியத்தை நடத்துவதாக இச்செய்யுள்
சொல்லுகிறது.
காப்பியக் கதையின் பொது அமைப்பு ஆதிகாவியத்தின்
வழியதே;
எனினும், காப்பியக் கட்டமைப்புச் சீர்மையையும், தமிழ்ப்
பண்பாட்டு மரபையும் கருதிக்
கவிச் சக்கரவர்த்தி பல மாற்றங்கள் செய்துள்ளார் என்பதை மறந்திடுதல் கூடாது.
ஆதிகவி விரிவாக ஓதியதைச் சுருக்கியும், சுருங்கக் கூறியதை விரித்தும், சில
செய்திகளை விடுத்தும்
புதியன சில புகுத்தியும், செய்திகளை இடம்
மாற்றியும் கம்பர் தம் காவியத்தை இயற்றியுள்ளனர் என்பதையும் மனங்கொள்ளவேண்டும்.
(‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
என்பது தொல்காப்பிய விதி,
அசைச் சொல்லாகிய ‘அரோ’ இக்
குறிப்பினை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ‘அசை’என்பது வெற்றிடம்
நிரப்புவதாக மட்டும் கொள்ளலாகாது.
அசைத்தல், கட்டுதல்;
கவிதை வாசித்துச் சொல்பவனைக் கட்டி நிறுத்திச் சிந்திக்க வைப்பது அசைகளின் பொருண்மையுள் ஒன்று.)

வசிட்டர் இராமபிரானுக்கு வைராக்கிய உபதேசமாகக் கூறிய நூல்
‘யோக வாசிட்டம்’;
அதில் இராம சரிதம் முழுமையாகக்
கூறப்படவில்லை.
போதாயனார் இராம காதை பாடினார் என்பது
செய்தியளவாகவே நிற்கிறது. நூல் கிடைக்கவில்லை.
கம்பர் காலத்தில் பரவியிருந்த வடமொழி இராமாயணங்கள்
வான்மீக இராமாயணம்,
அத்யாத்ம ராமாயணம்,
சம்பு ராமாயணம் என்பனவே என்பர்.
இவற்றையே கம்பர் தம் பாடலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதலாம்.
வான்மீகி, வசிட்டர், போதாயனர் என்ற பட்டியலில்
வசிட்டருக்குப் பதிலாக வியாசர் பெயரை இணைத்துரைப்பதும் உண்டு.

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2.ஸ்ரீ புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன.

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு
ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன.

1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு
வரையில் தோன்றியுள்ளன.-
ஸ்ரீ காளிதாசரின் ஸ்ரீ இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் ஸ்ரீ இராமசரிதையைப்
பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:

1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4)
2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா
(கி. பி. 550-600)
3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650)
4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8)
5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9)
6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11).
: (b)தசாவதார சரிதை
7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12)
8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை (கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன.
பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம்
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
கம்பன் : கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1. கோன புத்தா ரெட்டி : ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் : பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல : மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. அபிநவ பம்பா என்னும் -நாக சந்திரர் : பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும- நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. கன்னச இராம பணிக்கர் : கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன் : அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1. கோஸ்வாமி துளசிதாஸ் : துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ் : இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு
மக்களிலக்கியப் பாடல்கள்.

——————–

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப் போக்கில் மேலும்
பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

ஸ்ரீ மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும்
ஸ்ரீ பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது.
இவை தவிர ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட
ஸ்ரீ ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.
மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார்
அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது
v கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட
கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர்
இயற்றிய ஸ்ரீ ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும்
கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான
v ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.
கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம்
(ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட
ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
தவிரவும்–கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான
அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ஸ்ரீ ராம கதையாக
கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்ரீ கம்பர் இயற்றிய ‘ஸ்ரீ கம்பராமாயணம்’.
கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு
மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய
பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால்
கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள்
போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி,
ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட
கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த
பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

———-

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்,
தாய் மொழியில் உள்ள ராமகியென்,
லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்,
மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

——–

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்.
அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது.
இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள
சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

——–

ஸ்ரீ இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien,) என்பது
தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.
இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில்
சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார்.
இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்.
இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் ஸ்ரீ வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை,
ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை
தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்
பாத்திர அமைப்பு தொகு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும்
இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது

வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப்போக்கில் மேலும் பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

  • அத்யாத்ம ராமாயணம்
  • வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
  • லகு யோக வசிஸ்டா
  • ஆனந்த ராமாயணம்
  • அகஸ்திய ராமாயணம்
  • அத்புத ராமாயணம்

துளசி தாசரின் ராமசரித மானஸை -இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.

ஜம்மு & கஷ்மீரில் ‘ராமாவதார சரிதை’ இன்னொரு விதமான ராமாயணம் புழங்குகிறது. அது எழுதப்பட்ட காலம் 19 ஆம் நூற்றாண்டு.

குஜராத்தில் 17 ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் ராமசரிதமானஸை அடியொற்றி துளசி கிருத ராமாயணத்தை பிரேமானந்த ஸ்வாமி எனும் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் இயற்றினார்.

மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார். மகாராஷ்டிரத்தில் முன்னதாக 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட
மற்றொரு ராமாயணமும் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில்  மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது

வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட   கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர் இயற்றிய ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கி

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும் கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.

கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம் (ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன. தவிரவும்.. கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ராமகதையாக கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கம்பர் இயற்றிய ‘கம்பராமாயணம்’.

கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய  ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.

கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் இயற்றப்பட்ட  ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள் போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

மலையாளத்தில் தொடர்ந்து ராமாயண வடிவங்கள் எழுந்தபடியே இருந்தன. 12 ஆம் நூற்றாண்டில் சீராமன் என்னும் கவிஞர் எழுதிய ராமசரிதம் என்னும் பாட்டுவடிவம் மலையாளமாக அப்போதும் உருவாகியிராத அரைத்தமிழில் எழுதப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கண்ணச்ச பணிக்கர் எழுதிய கண்ணச்ச ராமாயணம் கம்பராமாயணத்தின் நகல்வடிவம்போன்றது.

சம்ஸ்கிருத ராமாயணங்களுக்கு நெருக்கமான ராமாயண வடிவமான ராமாயணம் சம்பு [சம்பு ஓரு செய்யுள்வகை] புனம் நம்பூதிரியால் எழுதப்பட்டது. சம்ஸ்கிருத மணிப்பிரவாள நடையில் 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இது மலையாளமொழி சம்ஸ்கிருதக் கலப்பால் இன்றைய வடிவத்தை அடைவதையும் காட்டுகிறது

கதகளிக்காக கொட்டாரக்கர தம்புரான் இயற்றிய ராமாயண ஆட்டக்கதை என்னும் காவியவடிவம் பெரும்பாலும் உத்தர ராமாயணத்திற்கு நெருக்கமான நாடக உருவாக்கம். ராமாயணத்தின் கதகளி வடிவங்களுக்கான முன்வடிவம். கதகளியில் ராமனைவிட ராவணனே பெரிய கதாபாத்திரம். பதினாறாம் நூற்றாண்டில் இது உருவானது

பதினேழாம் நூற்றாண்டில் அத்யாத்ம ராமாயணம் என அழைக்கப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயணம் எழுந்தது. மலையாளமொழியின் பிதாவாகவும் எழுத்தச்சன் கருதப்படுகிறார். சம்ஸ்கிருத மணிப்பிரவாளத்தை விட்டு விலகி மக்கள்மொழியில் எழுதப்பட்ட இந்த ராமாயணம் மிகப்புகழ்பெற்றது. இன்றும் கேரளத்தில் ஒவ்வொரு நாளும் வாசிக்கப்படுகிறது.

இதுவன்றி கேரளத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டார் ராமாயண வடிவங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது வாய்மொழியில் இருந்து பதிவுசெய்யப்பட்ட மாப்பிள ராமாயணம். பதினெட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம் கடற்பயணிகளால் பாடப்பட்டது. அரபுச்சொற்களும் முஸ்லீம் வழக்காறுகளும் கொண்டது இது.

  • கம்போடியாவில் ரீம்கர்
  • தாய்லாந்தில் ராமாகீய்ன்
  • லாவோஸில் பிர லாக் பிர லாம்
  • பர்மாவில் யம ஸாட்டாவ்
  • மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
  • இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
  • பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
  • இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
  • ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
  • ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
  • சீனா, திபெத் & யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

—————-

ஸ்ரீ சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள் பெரும்பாலும் இயற்றப் பட்டு வந்த நிலையில் போஜராஜன் சம்பு (Champu) என்கிற காவிய அமைப்பில், கவிதையையும் உரைநடையையும் கலந்து வித்தியாசமாக அளித்திருக்கிறார்.

गद्यानुबन्ध रसमिश्रित पद्यसूक्ति:
ह्रुद्या हि वाद्यकलया कलितेव गीति: |
तस्माद्दधातु कविमार्गजुषां सुखाय
चम्पुप्रबन्ध रचनां रसना मदीया || (बालकाण्डम् ३)

க³த்³யானுப³ந்த⁴ ரஸமிஶ்ரித பத்³யஸூக்தி:
ஹ்ருத்³யா ஹி வாத்³யகலயா கலிதேவ கீ³தி: |
தஸ்மாத்³த³தா⁴து கவிமார்க³ஜுஷாம்ʼ ஸுகா²ய
சம்புப்ரப³ந்த⁴ ரசனாம்ʼ ரஸனா மதீ³யா || (பாலகாண்டம் – 3)

வாத்தியங்களும், வாய்ப்பாட்டும் இணைந்து ஒலிக்கும்போது அது கேட்பவர்களுக்கு எத்தனை இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போல கவிதையும் உரைநடையும் கலந்த சம்பு பிரபந்தமாக அமைந்துள்ள என் கவிதை, ரசனை மிகுந்த பெரியோர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கட்டும் என்று கூறுகிறார் கவி.

அவையடக்கம்

பகீரதன் கதை தெரிந்தது தான். தன் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்று அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய, தேவலோகத்தில் இருந்து கங்கையை கடுந்தவம் இருந்து தருவித்தான் பகீரதன். இன்றோ சாதாரண மனிதர்கள் கூட தன் முன்னோர்களுக்காக, பகீரதப் பிரயத்தனத்தில் சிறு துளி அளவு கூட இன்றி அதே கங்கை நீரை வெகு சுலபமாக எடுத்து தர்ப்பணம் செய்து விடுகிறார்கள். அது அவர்களின் முன்னோர்களுக்கும் நற்கதியை அளித்து விடுகிறது.

அதே போல, வால்மீகி முதலிய மாபெரும் கவிகள் மிகுந்த பிரயாசைப் பட்டு, அனைவரும் ரசித்து அனுபவிக்கும் விதத்தில் தம் வாழ்நாள் சாதனையாக வெளிப்படுத்திய கதையை, சுலபமாக நானும் எடுத்து என் சிறு முயற்சியில் காவியமாகப் படைத்தால் அது நல்லோர்கள் விரும்ப மாட்டார்களா என்ன என்று சாதுர்யமாகக் கேட்கிறார்.

वाल्मीकिगीत रघुपुंगवकीर्तिलेशै:
तृप्तिं करोमि कथमप्य्धुना बुधानाम् |
गङ्गाजलैर्भुवि भगीरथयत्नलब्धै:
किं तर्पणं न विदधाति नर:पितृणां || (बालकाण्डम् ४)

வால்மீகிகீ³த ரகு⁴புங்க³வகீர்திலேஶை:
த்ருʼப்திம்ʼ கரோமி கத²மப்ய்து⁴னா பு³தா⁴னாம் |
க³ங்கா³ஜலைர்பு⁴வி ப⁴கீ³ரத²யத்னலப்³தை⁴:
கிம்ʼ தர்பணம்ʼ ந வித³தா⁴தி நர:பித்ருʼணாம்ʼ || (பாலகாண்டம் – 4)

சம்பு ராமாயணம் வால்மீகியின் கதையமைப்பை அப்படியே தொடர்கிறது. ஆனாலும் போஜனின் கவித்துவம் பல புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறிப்பிட்டு ஒரு சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீராம ஜனனம்

பழைய இலக்கியங்கள் பெண்ணழகை பலவிதங்களில் பாடியிருந்தாலும், தாய்மையுற்றிருக்கும் பெண்ணை வர்ணித்த கவிதைகள் அதிகம் கிடைப்பதில்லை. தசரதனின் பட்டத்தரசிகள் பாயசத்தை அருந்தி கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றார்கள் என்ற அளவில் மற்ற இராமாயணக் காவியங்கள் கடந்து சென்று விடுகின்றன. ஆனால் போஜன் அழகிய கவிதைகளால் தாய்மை அடைந்த அரசியர்களை மேலும் அலங்கரிக்கிறார்.

अपाटवात्केवलमङ्गकानां मनोज्ञकान्तेर्महिषीजनस्य |
शनै: शनै: प्रोज्झितभूषणानि चकाशिरे दौहृदलक्षणानि || (बालकाण्डम् २५)

அபாடவாத்கேவலமங்க³கானாம்ʼ மனோஜ்ஞகாந்தேர்மஹிஷீஜனஸ்ய |
ஶனை: ஶனை: ப்ரோஜ்ஜி²தபூ⁴ஷணானி சகாஶிரே தௌ³ஹ்ருʼத³லக்ஷணானி || (பாலகாண்டம் – 25)

ஒளிபொருந்திய அரசியர்கள் சிற்சில காலத்தில், உடல் மெலிந்து ஆபரணங்கள் கூட அணியமுடியாமல் ஆனது, அவர்களிடம் இரு இதயம் உள்ளதற்கான அடையாளங்கள், தௌஹ்ருத லக்ஷணங்கள் அல்லது த்வி ஹ்ருதய லக்ஷணங்கள் அழகாக மிளிர்ந்தன.
குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணை, இரண்டு இதயம் உள்ளவள் (குழந்தையின் இதயம் மற்றும் தாயின் இதயம்) என்று கவிஞர் சமத்காரமாகக் குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல் பின்வருமாறு கூறுகிறது:

मातृजन्यस्य हृदयं मातुश्च हृदयेन यत् |
संबद्धं तेन गर्भिण्या नेष्टं श्रद्धाविमाननं || (अष्टाङ्गहृदयम् )

மாத்ருʼஜன்யஸ்ய ஹ்ருʼத³யம்ʼ மாதுஶ்ச ஹ்ருʼத³யேன யத் |
ஸம்ப³த்³த⁴ம்ʼ தேன க³ர்பி⁴ண்யா நேஷ்டம்ʼ ஶ்ரத்³தா⁴விமானனம்ʼ || (அஷ்டாங்கஹ்ருதயம்)

சாதாரண நாட்களில் ஒரு பெண்ணுக்கு சில உணவு, உடைகள், வாசனைகள் பிடிக்கும். ஆனால் பேறுகாலத்தில் அந்த விருப்பு வெறுப்புகள் பெரிதும் மாறி இருக்கும். முன்பு பிடிக்காதது இப்போது வேண்டும் என்று கேட்பார்கள். இதற்கு காரணம் உள்ளே இருக்கும் இன்னொரு இதயம் தான் என்கிறது ஆயுர் வேத நூல். கவி போஜனுக்கு ஆயுர்வேதம் தெரியும் என்பதால்தான் அந்தக் குறிப்பை இங்கே கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

அரசியர் மூவரில் கௌசல்யைக்கு கொஞ்சம் சிறப்பு அதிகம். ஏனெனில் அவள் வயிற்றில் தான் கதையின் நாயகன் தோன்றுகிறான். அவன் சாதாரணமானவனல்ல. விஷ்ணுவின் அவதாரம்.

न्यग्रोधपत्रसमतां क्रमश: प्रयातामङ्गीचकार पुनरप्यदरं कृशाङ्गया: |
जीवातवे दशमुखोरगपीडितानां गर्भञ्चलेन वसता प्रथमेन पुंसा || (बालकाण्डम् २७)

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம்ʼ க்ரமஶ: ப்ரயாதாமங்கீ³சகார புனரப்யத³ரம்ʼ க்ருʼஶாங்க³யா: |
ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்ʼ க³ர்ப⁴ஞ்சலேன வஸதா ப்ரத²மேன பும்ʼஸா || (பாலகாண்டம் – 27)

கௌசல்யையின் வயிறு ஆலிலை போல இருக்குமாம். இளமையின் காரணமாக சிறுத்துப் போன இடை, கர்ப்பத்தின் காரணமாக அதன் ஆலிலை வடிவம் வெளித்தெரியுமாறு வளர்ந்ததாம். உலகெங்கும் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிவிட, அப்போது ஆலிலையில் படுத்திருக்கும் குழந்தையாக விஷ்ணு மிதந்து வருவார் என்பது புராணக் கோட்பாடு. அதனை இங்கே கௌசல்யையின் இடையை ஆலிலையாகவும் அதில் சிசுவாகப் படுத்திருக்கும் ராமனே விஷ்ணு என்று அழகாக உருவகப் படுத்துகிறார்.

பெண்களின் இடை சிறுத்து இருப்பது அழகு. பல இடங்களில் காவியங்களில் பெண்களின் இடை இருந்தும் இல்லாதது போல இருப்பதாக உவமைகளுடன் குறிப்பிடுவர். கௌசல்யையும் அப்படித்தான். அவள் கருவுற்ற காலத்தில் இல்லாதிருந்த இடை தன் இருப்பை வெளிப்படுத்துகிறதாம். ஆகாயம் போல சூன்ய பிரதேசமாக இருந்த இடை இன்று விஷ்ணு பதம் ஆகி விட்டது என்கிறார் கவி. ஆகாயத்திற்கு விஷ்ணுபதம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதைக் சிலேடையாகக் குறிப்பிடுகிறார்.

मध्यं तनुत्वादविभाव्यमानं आकाशमासीद् असितायताक्ष्या: |
गर्भोदये विष्णुपदापदेशात्कार्श्यं विहायापि विहाय एव || (बालकाण्डम् २८)

மத்⁴யம்ʼ தனுத்வாத³விபா⁴வ்யமானம்ʼ ஆகாஶமாஸீத்³ அஸிதாயதாக்ஷ்யா: |
க³ர்போ⁴த³யே விஷ்ணுபதா³பதே³ஶாத்கார்ஶ்யம்ʼ விஹாயாபி விஹாய ஏவ || (பாலகாண்டம் – 28)

முன்பு இவள் வயிறு காணமுடியாத ஆகாசம் போல இருந்தது. இப்போது கர்ப்ப காலத்தில் விஷ்ணுபதமாக ஆகி விட்டது. ராமன் விஷ்ணுவின் அவதாரம், அவன் இருக்கும் இடமாக அவள் வயிறு ஆனது என்று ஒரு அர்த்தத்திலும், ஆகாயம் போல விரிந்து பெரிதானது என்று இன்னொரு அர்த்தத்திலும் அந்த சொல்லை கவிஞர் உபயோகித்திருக்கிறார்.

ஸ்ரீராமனின் வனவாசம்

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள..” நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கைகேயி கூறியதைக் கேட்டும் இராமனின் முகமலர்ச்சியில் ஒரு சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை என்பதை எல்லா இராமசரித கவிஞர்களும் பாடியுள்ளனர். இத்தருணத்தில், போஜனின் இராமன் கீழ்கண்டவாறு பேசுகிறான்:

वनभुवि तनुमात्रत्राणमाज्ञापीतं मे
सफलभुवनभार: स्थापितो वत्समूर्ध्नि |
तदिह सुकरतायामावयोस्तर्कीतायां
मयि पतति गरीयानम्ब ते पक्षपात: || (अयोद्याकाण्डम् २५)

வனபு⁴வி தனுமாத்ரத்ராணமாஜ்ஞாபீதம்ʼ மே
ஸப²லபு⁴வனபா⁴ர: ஸ்தா²பிதோ வத்ஸமூர்த்⁴னி |
ததி³ஹ ஸுகரதாயாமாவயோஸ்தர்கீதாயாம்ʼ
மயி பததி க³ரீயானம்ப³ தே பக்ஷபாத: || (அயோத்யா காண்டம் -25)

அம்மா நீங்கள் சிறிது பாரபட்சம் காட்டி விட்டீர்கள். அனைத்துலகையும் அதனுள் வாழும் மக்களையும் காப்பாற்றும் சுமை பரதனுக்கு, என்னுடைய உடலை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்கிற சுமை எனக்கு என்று, எனக்கு சிறிய வேலையையும் தம்பிக்கு மிகப்பெரிய பாரத்தையும் சுமத்தி விட்டீர்களே என்று கேட்கிறான்.

ராமனிடம் காமம் கொண்ட சூர்ப்பனகை

ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப் படுகிறது.

दशरथात्मज युग्म निरीक्षण समाकुल बुद्दिरियं दधौ |
उभयकुल समस्थितशाद्वलभ्रम गतागत खिन्नगवीदशाम् || (आरण्यकाण्डम् १६)

த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண ஸமாகுல பு³த்³தி³ரியம்ʼ த³தௌ⁴ |
உப⁴யகுல ஸமஸ்தி²தஶாத்³வலப்⁴ரம க³தாக³த கி²ன்னக³வீத³ஶாம் || (ஆரண்யகாண்டம் – 16)

சூர்ப்பனகை ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, எந்த கரையில் மேய்வது என்று திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி இவரிடமும் அவரிடமும் என்று அலைந்தாளாம் சூர்ப்பனகை.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு ஏன் இந்த கஷ்டம் என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் அவள்.

लावण्याम्बुनिधे: अमुष्य दयितामेनामिवैनं जनं
कस्मान्नसृजदस्मदन्वय गुरोरुत्पत्तिभू: पद्मभू: |
आस्तां तावदरण्यवासरसिके हा कष्टमस्मिन्निमां
कान्तिं काननचन्द्रिकासमदाशां किं निर्ममे निर्ममे || (आरण्यकाण्डम् २८)

லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்ʼ ஜனம்ʼ
கஸ்மான்னஸ்ருʼஜத³ஸ்மத³ன்வய கு³ரோருத்பத்திபூ⁴: பத்³மபூ⁴: |
ஆஸ்தாம்ʼ தாவத³ரண்யவாஸரஸிகே ஹா கஷ்டமஸ்மின்னிமாம்ʼ
காந்திம்ʼ கானனசந்த்³ரிகாஸமதா³ஶாம்ʼ கிம்ʼ நிர்மமே நிர்மமே || (ஆரண்யகாண்டம் – 28)

பிரம்மன் நமது குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? சரி அதாவது போகட்டும், இந்த ராம லட்சுமணர்களை சந்திரனைப் போல ஒளியுடையவர்களாக படைத்தும் காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? என்ன கஷ்டம் இது! என்று புலம்புகிறாள்.

புத்திமான் ஹனுமான்

கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமான் முதலில் ராம லட்சுமனர்களைச் சந்தித்து அவர்கள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, அண்ணனுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் தம் மன்னன் சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறார். சுக்ரீவனும் ராம லட்சுமணர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு நண்பர்களான வேளையில் சுக்ரீவன் ஹனுமானின் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லுகிறான்.

अयमसुखयदेवं देव! धीमान् हनुमान्
रिपुरिति भवतोऽपि त्रस्तमस्तौजसं माम् |
दवहुतवहधूमस्तोम इत्यम्बुवाहा-
च्चकितमिव मयूरं मारुतो वारिशीत: || (किष्किन्दाकाण्डम् १२)

அயமஸுக²யதே³வம்ʼ தே³வ! தீ⁴மான் ஹனுமான்
ரிபுரிதி ப⁴வதோ(அ)பி த்ரஸ்தமஸ்தௌஜஸம்ʼ மாம் |
த³வஹுதவஹதூ⁴மஸ்தோம இத்யம்பு³வாஹா-
ச்சகிதமிவ மயூரம்ʼ மாருதோ வாரிஶீத: || (கிஷ்கிந்தா காண்டம் 12)

சுக்ரீவன் சொல்லுகிறார், பயத்தில் நான் உங்களைக் கூட விரோதி என்று நினைத்து அஞ்சினேன். அப்போது புத்திசாலியான ஹனுமான் தான் ஆறுதல் அளித்தார். எப்படி என்றால், கறுத்து திரண்டு வரும் மேகத்தை காட்டுத் தீயின் புகை என்று எண்ணி அஞ்சி நடுங்கும் மயிலுக்கு, அந்த மேகம் நெருங்குவதற்கு முன்னால், மழையின் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசி எப்படி அந்த மயிலை ஆனந்தப் படுத்துமோ அப்படி இருந்தது ஹனுமானின் செயல் என்று கூறுகிறார். ஹனுமானும் வாயுவின் சம்பந்தம் உள்ளவர். மாருத என்ற சொல் இங்கே ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஆகிறது.

சுந்தர காண்டம்

ராம லட்சுமணர்கள் சுக்ரீவனை சந்தித்து, வாலி வதம் முடிந்து, அனுமான் இலங்கைக்கு சீதையைத் தேடியபடி வருகிறார். ராவணனின் அரண்மனை, நகரம் முழுவதும் அனுமான் தேடத் துவங்கும் போது, இரவு நேரம். அந்நேரத்தில் ஒரு காட்சி வருணனை:

आदित्य: कृतकृत्य एष भविता सीतापतेरीदृशं
साहाय्यं विरचय्य कीर्तिमतुलामादित्सुना सूनुना |
इत्यालोच्य तदा किल स्वयमपि ख्यातिं ग्रहीतुं परां
लङ्कायां रघुनाथदूतसरणौ चन्द्रेण दीपायितम् || (सुन्दरकाण्डम् १४)

ஆதி³த்ய: க்ருʼதக்ருʼத்ய ஏஷ ப⁴விதா ஸீதாபதேரீத்³ருʼஶம்ʼ
ஸாஹாய்யம்ʼ விரசய்ய கீர்திமதுலாமாதி³த்ஸுனா ஸூனுனா |
இத்யாலோச்ய ததா³ கில ஸ்வயமபி க்²யாதிம்ʼ க்³ரஹீதும்ʼ பராம்ʼ
லங்காயாம்ʼ ரகு⁴னாத²தூ³தஸரணௌ சந்த்³ரேண தீ³பாயிதம் ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 14)

சூரியனின் அம்சம் சுக்ரீவன் என்று கருதப் படுகிறது. ராமனுக்கு தன் பிள்ளை சுக்ரீவனைக் கொண்டு உதவி செய்து சூரியன் புகழடைந்தான். இதை ஆலோசித்து, தானே ராமனுக்கு உதவி செய்யும் காரியத்தில் இறங்கி, ராம தூதனான அனுமன் செல்லும் இடமெல்லாம் தன் ஒளிக்கிரணங்களை நிறைத்து வழிகாட்டினான் சந்திரன் என்று கவித்துவமாக குறிப்பிடுகிறார்.

பல இடங்களில் சுற்றித் தேடிவிட்டு அசோக வனத்துக்கு வந்து சீதையைச் சந்திக்கிறார். சீதையைத் தானே தூக்கிச் சென்று ராமனிடம் சேர்த்து விடுகிறேன் என்று அவர் கேட்கும்போது சீதை பலவாறும் நன்றியுடன் மறுத்து பின்னர் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியை ராமனிடம் அடையாளமாகக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறாள்.

चूडामणिं कपिवरस्य ददौ दशास्य
संत्रासपुञ्जितरुषाग्निदशं कृशाङ्गी |
आदाय तंप्रणतिपूर्वमासौ प्रतस्थे
माणिक्यगर्भवदनोरगतुल्यबाहु: || (सुन्दरकाण्ड ३६)

சூடா³மணிம்ʼ கபிவரஸ்ய த³தௌ³ த³ஶாஸ்ய
ஸந்த்ராஸபுஞ்ஜிதருஷாக்³னித³ஶம்ʼ க்ருʼஶாங்கீ³ |
ஆதா³ய தம்ப்ரணதிபூர்வமாஸௌ ப்ரதஸ்தே²
மாணிக்யக³ர்ப⁴வத³னோரக³துல்யபா³ஹு: || (சுந்தரகாண்டம் 36)

இளைத்த உடலுடன் வலிமை குன்றி இருந்த சீதை, அனுமனிடம் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். அது அவளுக்கு ராவணன் மீது இருந்த கோபத்தீயைப் போல ஒளிர்ந்தது. அதைக் கையில் வாங்கிய அனுமனின் கைகள், ரத்தினம் தாங்கிய நாகப் பாம்பு போல இருந்தது.

அனுமன் திரும்பி வந்து, தன்னுடன் வந்த வானர சேனையுடன் இணைந்து ராமனை சந்தித்து சீதையச் சந்தித்த விவரத்தைச் சொல்லுகிறார்.

अक्लेशसंभूतगतागताभ्यां वितीर्णविस्तीर्ण महार्णवोऽपि |
आनन्दसिन्दौ पृतनासमक्षमक्षस्य हन्ता नितरां ममज्ज || (सुन्दरकाण्डम् ७२)

அக்லேஶஸம்பூ⁴தக³தாக³தாப்⁴யாம்ʼ
விதீர்ணவிஸ்தீர்ண மஹார்ணவோ(அ)பி |
ஆனந்த³ஸிந்தௌ³ ப்ருʼதனாஸமக்ஷமக்ஷஸ்ய
ஹந்தா நிதராம்ʼ மமஜ்ஜ || (சுந்தரகாண்டம் 72)

ஒரு துன்பமும் இல்லாமல் சுலபமாக பெருங்கடலை இருமுறை தாண்டி வந்த அனுமன், இங்கே வானர சேனை ராமலட்சுமணர்கள் மத்தியில் அவர்களின் ஆனந்தக் கடலில் மூழ்கிவிட்டார். அரக்கர்களிடம் போரிட்டது, ராவணனைச் சந்தித்து எச்சரித்தது, சீதையைச் சந்தித்து பேசி தைரியம் சொல்லி, அவள் தந்த சூடாமணியைப் பெற்று வந்தது என்று பல சாதனைகள் செய்து எல்லோருடைய ஆனந்தத்துக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அனுமன் பேச்சின்றி அவர்கள் அன்பிலும் அங்கீகாரத்திலும் மூழ்கினார் என்று கவி அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுத்த காண்டத்தில் சில கவிதைகள்

சுந்தரகாண்டத்துடன் போஜ ராஜன் எழுதிய சம்புராமாயணம் நின்று விடுகிறது. அந்த சமயம் ஏற்பட்ட போரில் போஜராஜன் வீரமரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் லக்ஷ்மண சூரி என்னும் கவி போஜனின் கவிதை அமைப்பிலேயே யுத்த காண்டத்தையும் எழுதி முழுமை செய்துள்ளார்.

भोजेन तेन रचितामपि पूरयिष्यन्
अल्पीयसापि वचसा कृतिमत्युदराम् |
न व्रीडितोऽहमधुना नवरत्नहार-
सङ्गेन किन्न हृदि धार्यत एव तन्तु: || (युद्धकाण्डम् – २)

போ⁴ஜேன தேன ரசிதாமபி பூரயிஷ்யன்
அல்பீயஸாபி வசஸா க்ருʼதிமத்யுத³ராம் |
ந வ்ரீடி³தோ(அ)ஹமது⁴னா நவரத்னஹார-
ஸங்கே³ன கின்ன ஹ்ருʼதி³ தா⁴ர்யத ஏவ தந்து: || (யுத்த காண்டம் – 2)

ஆரம்பத்தில் பால காண்டத்தில் வால்மீகி முனிவருக்கு போஜன் வணங்கி தன எளிமையை வெளிப்படுத்தியது போலவே இங்கு, லக்ஷ்மண சூரியும் போஜகவியின் மீது தன் மரியாதையை வெளிப்படுத்துகிறார். போஜராஜனால் இயற்றப் பட்ட சம்பு ராமாயணத்தை பூர்த்தி செய்யப் புகுவதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. ஏனெனில் நவரத்தின மாலையை நெஞ்சில் தவழ விட, அதற்கு ஒரு நூல் தேவைப் படுகிறது தானே என்று கூறுகிறார். ஆனால் யுத்த காண்டத்தின் கவிதைகளும் போஜராஜனின் கவிதையின் தரத்துக்கு சற்றும் குறைவில்லாதவை.

சம்பு இராமாயணம் முழுவதுமே கவித்துவமும், சுவையும் மிகுந்த ஒரு படைப்பு. இங்கே ஒரு சில கவிதைகளை மட்டுமே பார்த்தோம். சம்ஸ்க்ருத மொழியை கற்க விரும்போவோருக்கும், பக்தியுடன் படிக்க எண்ணுவோருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆழ்ந்த பொருளை அறிந்து ரசிக்கக் கூடிய வேத சாத்திர விற்பன்னர்களுக்கும் கூட சம்பு ராமாயணம் அள்ள அள்ள குறையாமல் வழங்கும் பொக்கிஷமாகவே இருக்கும்.

———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராகவ யாத வீயம்–ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் மகிமைகள் –

February 24, 2023

வைணவன் என்ற சொல்லிற்கு அர்த்தம் ஐந்து குறள் பாக்களில் சொல்லப் படுகிறது )
1. தைவத்துள் தைவம் பர தெய்வம் நாராயணனையே தெய்வம் எனப் போற்றுபவன் வைணவன்
2. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலே பேணுபவனே எல்லோரிலும் சாலச் சிறந்த வைணவன் .
3. உடுக்கை இழந்தவன் கை போல் மற்றவர்களின் இடுக்கண் களைபவனே வைணவன் .
4. மது, புலால் நீக்கி ஸாத்விக உணவினைத் தவிர வேறு எதுவும் விரும்பாதவன் வைணவன் .
5. தெய்வத்திலும் மேலானவன் நம் ஆச்சார்யரே என்று மெய்யாக வாழ்பவனே வைணவன் .

————-

இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||

விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||

இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:

தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.

பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:

1) மனு :

விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரி பாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.

2) மயன் :

விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.

3) த்வஷ்டா:

விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :         ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.

5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :

ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ண ரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.

இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது.

கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்

வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.

ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.

வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்.

1) தமிழகம் :

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

2) ஆந்திர மாநிலம் :

விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3) கேரளம் :

கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடகம்:

கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

5) கோவா:

கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தான்:

ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.

சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.

மறைக்கப்பட்ட வரலாறு:

சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…

பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.

பேஷ்வாக்கள் எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது.

——————

ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

———————-

தைவக்ஞர் சூரிய கவி-கவி வேங்கடாத்வரி -ஸ்ரீ ராம யாத வீயம் -ஸ்ரீ ராம கிருஷ்ண விலோம காவ்யம்
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II -ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

ராம மாநா ஸதா கேத பாவே தயா வான்
அதாபி இந தேஜா ரிபவ் அநதே
காதி மோதா சஹாதா ஸ்வ பாஸா
ரஸாமே ஸூக ரேணுகா த்ரஜே பூருமே –7-

இடர் உற்றவருக்கு அருளும் காருண்ய சீலன்
கரு ஞாயிறு போன்றவன் இந்தேஜோ -ஸூர்யன் போல் பிரகாசிக்ப்பவன்
ஆனாலும் அருகில் செல்ல ஸுலப்யன் உடையவன்
அப்படிப்பட்ட ராமன் பூமி முழுவதும் சுற்றி அதைச் செல்வமாக யுடைய
ரேணுகையான புதல்வனான பரசுராமன் விரோதத்துடன் தோன்றி
பின் அவனைப் பணிந்ததும் ஸ்ரீ ராமசந்திரன் கருணையுடன் திகழ்ந்தான்

கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர் தம் புரமும் பொற்பும்
சிதைவு செய் குறியைக் காட்டி வட திசைச் சிகரக் குன்றின்
உதயம் அது ஒழித்துத் தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஓத்தான் -கம்பர் –

கட்டார் சிலைக் கரு ஞாயிறு புரைவான்
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
செந் தண் கமலக்கண் சிவந்த வாய் ஒரு கரு ஞாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய் -8-5-7-

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!’ என்றான்.–பரசுராம படலம் 36-

‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை’ எனத் தொழுது போயினான். 40-

மேரு பூ ஜேத் ரகா காணுரே கோ ஸூமே ஸா அரஸா
பாஸ்வதா ஹா ஸதா மோதிகா
தேந வா பாரிஜாதே ந பீதா நவா யாதவே அபாத் அகேதோ
ஸமாநாமரா —ஸ்லோகம் 7 -ப்ரதிலோமம்

எப்படி ரைவதக பர்வதமானது கிருஷ்ணனின் இருப்பாள் மேருவை விஞ்சியதோ
அதே போல் பாரிஜாத மலரை அடைந்த உடன் ருக்மிணி பிராட்டி சிறிதே மணம் நிறைந்த பூ லோகத்து மலர்களை எல்லாம் அறவே விட்டாள்
அத்தைச் சூடிய பின் அவள் அம் மலரைப் போலவே வெண்மை நிறம் வீசக்கூடிய திவ்ய மேனி பெற்று
தேவ லோக மங்கையரைப் போல் கவலை அற்று மகிழ்ச்சியுடன் விளங்கினாள்
ரைவதக பர்வம் த்வாராகை ஒட்டி இருக்கும் மலை-கிர் நார் இப்பொழுது உள்ள பெயர் -ஹரி வம்சம்

————-

ஸாரஸ அஸம தாத அஷி பூம்நா தாம அசவ் ஸீதயா
ஸாது அசவ் இஹ ரேம ஷேமே அரம் ஆஸூர ஸாரஹா –ஸ்லோகம் -8-

இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரி வட்டக் கண்கள் -இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு -திருமழிசைப் பிரான் பாசுரம் போலவே இங்கு கவி வேங்கடாத்ரி அருளிச் செய்கிறார்

ஹார ஸார ஸூமா ரம்யா ஷேமேர இஹ விஸாத் வஸா
யா அதஸீ ஸூ மதாம் நா பூஷிதா தாம ஸ ஸார ஸா –ஸ்லோகம் -8-ப்ரதி லோமம் 

அழகிய முத்தினாலான மாலையைப் போல் ஒளிர்ந்ததும்
செல்வத்துக்கு எல்லாம் அணி கலனாய் திகழ்ந்ததுமான
அந்த பாரிஜாத மலரைச் சூடின ருக்மிணி பிராட்டி அதஸி புஷ்ப மாலையை சூடின கண்ணனுடன்
மற்ற மனைவியரைக் கண்டு பயம் அற்றவளாய் அவன் திரு மாளிகைக்கு சென்றாள்

————-

ஸாகஸா பர தாய இபமா பாதா மந்யு மத்தயா
ஸா அத்ர மத்யமா தாபே போதாய அதி கதா ரஸா –ஸ்லோகம் -9- அநு லோபம்

ராஜ்ய லஷ்மியின் வைபவத்தால் பிரகாசிக்கும் அயோத்தியை நகரை கைகேயி யானவள்
ராமனுக்கு முடி சூட்டும் வைபவம் பற்றிக் கேள்விப்பட்ட வுடன் கோபத்தாலும் வருத்தத்தாலும்
உன்மத்த நிலையை அடைந்தவளாய் பரதனுக்காக நிலை நிறுத்தினாள் –

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். –கைகேயி சூழ்ச்சிப் படலம் –3-

ஸாரதா கதியா தபோ பேதா யா மத்யம த்ரஸா
யாத்த மந்யு மதா பாமா பயேதா ரபஸா ஆகஸா –ஸ்லோகம் -9-ப்ரதி லோமம்

தன் சீலத்தால் பெரும் புகழை யுடைய யோசித்த இடை யுடையளான -மத்ய மா -ஸத்ய பாமை
கண்ணன் பாரிஜாத மலரை ருக்மிணியிடம் அளித்த செய்தி அறிந்து கோபமும்
கண்ணனின் அன்பு தன்னிடத்தில் குறைந்ததோ என்ற பயமும் அடைந்தாள்

மேல் உள்ள இரண்டு ஸ்லோகங்களும் இரு மனைவியரின் துக்கத்தையும் கோபத்தையும் காட்டுகிறது
கைகேயி -கௌசல்யை
ஸத்ய பாமை -ருக்மிணி பிராட்டி
முன்னுரிமை பறிக்கப் பட்டு தங்களை மத்யமா -secondary -என்று கணவர் எண்ணுகிறார்கள் என்ற நினைவு

————–

தாநவாத் அபகா உமாபா ராமே கானனத ஆஸ ஸா
யா லதா அவ்ருத்த ஸேவாகா கைகேயீ மஹத அஹஹ –ஸ்லோகம் -10- அநு லோமம்

ராமனுக்கு முடி சூட்டப் போகும் விஷயம் அறிந்த கைகேயி துயரத்தால் நலிவுற்று வெளுத்தவளாய்
அறுந்த கொடி போல் தரையிலே விழுந்து தயரதனுக்கு செய்யும் அனைத்து பணிவிடைகளையும் மறந்தவளாய்
முடி சூட்டுதலை எதிர்த்து ரானைக் காட்டுக்கு அனுப்பினாள்

கூன் உருவில் கொடும் தொழுத்தை தன் சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகர் –பெருமாள் திரு மொழி

‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் –
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.–கைகேயி சூழ்ச்சிப் படலம்– 14-

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15-

ஹஹ தாஹ மயீ கோகைகா வாஸோத் தா வ்ருதாலயா
ஸா ஸத் ஆந நகா அமேரா பாமா கோபத வா நதா –ஸ்லோகம் -10- ப்ரதி லோமம்

அழகிய முகம் கொண்டவளான பாமா இப்பொழுது கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ போன்ற கோபத்தால்
முகம் எல்லாம் ஜ்வலிக்க கலக்கமுற்ற மனத்தளாகி அழகிய மயில்கள் நடமாடும் தனது வீட்டினுள்
பணிப்பெண்கள் நுழையா வண்ணம் தாள் இட்டாள்

அநு வ்ரதா காம கலா ஸ்வ தீதி நீ விசித்ர சஸ்த்ராஸ்த்ர விஹார வேதி நீ
பஹு ப்ரிய ஸ்யாபி ஹரேர் அதீவ ஸா பபூவ தேவீ பஹு மாந கோசர –யாதவாப்யுதம் -14-72-ஸத்ய பாமா வர்ணனம்

பர்த்தாவின் திரு உள்ளபடி நடப்பவள்=காம சாஸ்திரம் கற்றவள்
அம்பு அஸ்த்ரங்களின் பிரயோகம் அறிந்தவள்
ஆகையால் பல மனைவியர்களிலும் இவளே கண்ணனின் அன்புக்கு பூர்ண பாத்ரமானவள்

கைகேயி யாருடன் பேசாமல் தன்னையே வருத்திக் கொள்ள
ஸத்ய பாமையோ கோபத்தால் பணிப் பெண்களை தவிர்த்தாள்

————————-

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

—————-

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II -ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II – ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!

ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.

அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
******************

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே  கிடையாது  என்று கூறும்

காரணம் என்ன?

காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும்  பல கட்டங்களைக் காண்கிறோம்.

இந்தப்  பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர்  எவரேனும் உண்டா?  என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும்  காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப்  பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க  உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.

இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-

வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும்  பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ  ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது  அந்தச் சொற்சித்திரம் :-

(1)

அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய

ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா

பொருள்

பரத்வாஜரே  இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.

நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ  (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச்  செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர்  அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை  பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை  பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச்  சாம்பலிலிருந்து  பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக்  காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.

(2)

சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட  வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது.  ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.

“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான  ஸீதை சொல்கிறாள் :-

பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம

கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னா பராத்யதி

சீதை சொல்கிறாள் –

“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ,  தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”

(3)

வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?

“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப்  புறப்படுகிறது . வானத்தில் கண்கள்  (நட்சத்திரங்கள்)  முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச  சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.

இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன

இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார்,
இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள்,
விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள
ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

இஷுவாகு தொடங்கி ராமர் வரை நான்கு சதுர்யுகம் காலம்

———————–

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஏக ஸ்லோக ராமாயணம்

 ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ராமாயணம்

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

—————-

ஏக ஸ்லோக பாகவதம்

 ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே மஹா பாரதம்

ஸ்ரீ வேத வியாஸ பகவான் அருளிச் செய்த ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் —

September 13, 2022

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ இளைய பெருமாளுக்கு உபதேசம்

வேத வியாசரின் பிரம்மாண்ட 61வது அத்தியாயத்தில் பரமசிவனும் அம்பாள் பார்வதியும் பேசிக்கொள்கிறார்கள்
( இதை நாரதருக்கு பிரம்மா சொல்லியிருக்கிறார்) இந்த பகுதி தான் அத்யாத்ம ராமாயணம் ஆகும்.

வால்மீகி ராமாயணம் 7 காண்டங்கள். 24000 ஸ்லோகங்கள்.
ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்குப் பின் முதல் எழுத்து காயத்ரி மந்த்ரத்தில் இருந்து வரும்.

வேத வியாசரின்  அத்யாத்ம   ராமாயணம்  6 காண்டங்கள்,  கிட்டத்தட்ட 4000  ஸ்லோகங்கள்  கொண்டது.

ராவண வதத்துக்குப் பிறகு மாய சீதை தான் அக்னி ப்ரவேசம் செய்கிறாள் – வியாசர்.
உண்மையான சீதை தான் அவ்வாறு செய்தது – வால்மீகி.

லக்ஷ்மனனுக்குத் தெரியாமல், ”சீதா, ராவணன் வருவான், உன்னைக் கடத்துவான்.
எனவே உன்னை அக்னியிடம் ஒப்படைத்து ஜாக்ரதையாக பிறகு பெற்றுக் கொள்கிறேன்
அதுவரை உன்னைப் போன்று இப்போது முதல் ஒரு மாய சீதா உருவாக்கி ராவணன் தூக்கிச் செல்ல வைக்கிறேன்.
பிறகு ராவண வதம் முடிந்து மாய சீதாவை அக்னியில் பிரவேசிக்க வைத்து உன்னை மீட்டுக் கொள்வோம். –
ராமன் – சீதாவின் இந்த ஒப்பந்தம் வியாசர் சொல்கிறார்.

—————

ஸ்ரீ ராமகீதாமாகாத்மியம்‌,

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் மாகாத்மியம்‌ (பெருமை) முழுவதனையும்‌ ஸ்ரீ சங்கரன்‌ அறிவார்‌.
௮தில் பாதி பார்வதி தேவி யார்‌ அறிவர்‌. முனிவரே !-௮தில் பாதி யான்‌ ௮றிவேன்‌.

எந்த மாகாத்மியத்தை யறிதலால்‌ உலகத்தினர்‌ அக்‌ கணமே சித்த சுத்தியை அடைவரோ, ௮தனை யுனக்குச்‌
சிறிது சொல்லுகிறேன்-முழுவதும்‌ சொல்லக் கூடிய தன்று

நாரதரே! ஸ்ரீ ராம கீதை எந்தப்‌ பாபத்தைக்‌ கெடுக்‌கிறதோ அந்தப் பாபம் உலகில் ஓர் இடத்திலும் ஒரு போதும்
தீர்த்தம் முதலியவற்றால் போக்க முடியாது-
ஸ்ரீ ராம கீதையினால் கெடாத பாபத்தை உலகில் எங்கும் காண முடியாது

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியினால் உபநிஷத் ஆர்ணவம் கடைந்து உண்டு பண்ணப் பட்டது
ஸ்ரீ லஷ்மணனுக்கு உகந்து உபதேசிக்கப்பட்டது
இந்த ஸ்ரீ ராம கீதா அம்ருதத்தைப் பருகின புருஷன் அமரன் ஆகிறான் –

ஸ்ரீ பரசு ராமர் கார்த்த வீர்ய அர்ஜுனனைக் கொல்ல வில் வித்யையை பழகுவதற்கு முன்
ஸ்ரீ ராம கீதையை ஸ்ரவணம் செய்து கிரஹித்து படித்து ஸ்ரீ நாராயணனின் கலையைப் பெற்றார்

ப்ரஹ்மஹத்தி பாபங்களையும் போக்கும் சக்தி இதற்கு உண்டு

இத்தால் ஸாயுஜ்யமும் அடையலாம்

——————

ஆகாசத்தில்‌ மூன்று விதமான பேதம்‌ காணப்படுகிறது.
அதாவது ஒரு தடாகத்தை வியாபித்திருக்கிற ஆகாசம்‌ (1) மஹா ஆகாசம்‌,
அதற்குள்‌ ௮டங்கி யிருக்கிற ஆசாசம்‌ (2) அவிச்சின்ன ஆகாசம்
அதில்‌ பிரதிபலித்திருக்கிற ஆகாசம்‌ (3) பிரதிபிம்ப ஆகாசம்‌
என்னும் இம்மூன்று வித பேதங்களும்‌ ஆகாயத்தில் காணப் படுகின்றன,
பிரமத்திலும்‌, ஆபாஸம்‌, ௮விச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம் -என்னும் மூன்று வித பேதங்களும் உண்டே –
ஆபாஸ மென்பது பொய்பான புத்தி, ௮து அவித்தை (அஞ ஞானத்தின் காரியம்‌.
௮.து-விச்சின்னம்‌ (வேறுபட்டது) இல்‌லாதது. அஞ்ஞானத்தால்‌ விச்சின்னம்‌ ஏற்படுகிறது,
ஞானம்‌ ஏற்பட்டால்‌, அவிச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம்‌, இவை இரண்டும்‌ ஒன்றென்றும்‌,
ஆபாஸமாகிய அவித்தை தன்‌ காரியங்களுடன்‌ நசிக்கும் என்றும்‌ ௮றியக் கூடும்‌,

ரிக்‌ வேதத்தில்‌ அபாத்திரிய உபநிஷத்தில் –ப்ரக்ஞானம் ப்ரஹ்மம் என்னும்‌ வாக்கியமும்‌,
யஜுர்‌ வேதத்தில்‌ தைத்தரிய உபநிஷத்தில் அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி என்னும்‌ வாக்கியமும்‌,
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபநிஷத்தில் தத்துவமஸி என்னும்‌ வாக்யமும்‌,
அதர்வண வேதத்தில்‌ மாண்டோக்ய உபநிஷத்தில்‌ அயமாத்மா ப்ரஹ்மம் ப்ரஹ்மம் என்‌னும்‌ வாக்யமும்‌ உண்டே –

ப்ரக்ஞானம் பிரம்மம் என்றால் தூய அறிவே பிரம்மம் எனப் பொருள். அயமாத்மா பிரம்மம் என்றால் இந்த ஆத்மாவே பிரம்மம் எனப் பொருள். அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே பிரம்மம் எனப் பொருள்.

இந்த நான்கு மகா வாக்கியங்களை
ஸ்ரவணம் (1)
மனனம் (2)
நிதித்யாசனம் (தெளிதல்) (3)
நிட்டை கூடுதல் (4) என்று
ஸ்ரீ கீதை கூறுகின்றது.-

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஸத்யம்
நித்யம்
பூர்ணம்
ஏகம்
பரமார்த்தம்
பர ப்ரஹ்மம்
கூடஸ்தர்
பரஞ்சோதி -பர்யாய பதங்கள் –

ஸ்ரீ ராம ஹ்ருதயமே இந்த உபநிஷத் வாக்கியங்களின் தாத்பர்யம்

நியந்த்ரு நியாம்ய பாவம்-
சேஷி சேஷ பாவம்-
சரீர ஆத்ம பாவம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -உணர வேண்டுமே –

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மனுக்களின் பெயர்கள் –

August 27, 2022

ஸ்ரீ பகவாநுவாச-

14 மனுக்கள் -71-3/7 சதுர் யுகங்கள் ஒவ்வொரு மனுவுக்கு ஆட்சி காலம்-

ஸ்ரீ பகவாநுவாச-
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா நஹமவ்யயம்.-
விவஸ்வாந் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேப்ரவீத்—৷৷4.1৷৷

முதல் மனு ஸ்வாயம்பு மனு
அடுத்து ஸ்வ ரோசிச மனு
அடுத்து உத்தம மனு
அடுத்து தாமஸ மனு
அடுத்து ரைவத மனு
அடுத்து சாஷுச மனு
அடுத்து வைவஸ்வத மனு

இரண்டாவது பாதியில் -ஏழாவது மனு வைசஸ்வத மன்வந்தரம் -27 சதுர் யுகங்கள் முடிந்து -அடுத்ததில் -28வது சதுர்யுகத்தில் – கலியுகத்தில் உள்ளோம்
தொடக்கத்தில் விவஸ்வானுக்கு உபதேசம் -பழைமையானது -நல்ல வழி காட்ட -தத் பேஷஜம் -மனுவின் சொல் மருந்து

எட்டாவது மன்வந்தரம் ஸா வர்ணி மன்வந்தரம்
அடுத்து தக்ஷ ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து பிரம்ம ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து தர்ம ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து ருத்ர ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து ரவ்ஸ்ய தேவ ஸாவர்ணி மன்வந்தரம்
கடைசியில் 14-இந்த்ர ஸாவர்ணி மன்வந்தரம்

————

இந்து சமய நூல்களில் கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கும்.

பகவத்கீதை  ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு’ என்று குறிப்பிடுகிறது. இங்கு ‘யுகம்’ என்பது ‘மகாயுகம்’ என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு. அதாவது வடமொழியில் ‘சதுர்யுகம்’ என்று வழக்கில் இருப்பது. இதன் அளவு கீழே காட்டியபடி:

ஆக ஒரு  சதுர் யுகம்- மகாயுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள் கொண்டது. ஆயிரம் மகாயுகங்கள் 432 கோடி மானுட ஆண்டுகளுக்குச் சமம்.

ஒரு கல்பகாலத்திற்குள் பதினான்கு ‘மனு’க்களும் பதினான்கு இந்திரர்களும் வந்து செல்கிறார்கள். ‘மனு’ என்பவர் பூமி அனைத்துக்கும் மன்னராவார். இந்திரன் தேவலோகத்திற்கு மன்னராவார். ஒரு மனுவின் காலம் 71 மகாயுகங்கள். இந்திரனின் கால அளவும் அவ்வளவே. இக்கால அளவிற்கு ‘மன்வந்தரம்‘ என்று பெயர். இரு மன்வந்தரங்களுக் கிடையில் ஒரு இடைவேளை (‘ஸந்தியா காலம்’) நான்கு கலியுககால அளவு கொண்டதாக இருக்கும். அதாவது 17,28,000 மானிட ஆண்டுகள். 14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும். ஆக, பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.

14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.-

15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.
ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.

இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இதனுள் மூன்று யுகங்கள் — அதாவது, கிருதயுகம், திரேதாயுகம், துவபரயுகம் — சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது கலியுகம். இதனுள் கி.பி.2011க்குச்சரியான கலியுக ஆண்டு 5112-13.

பிரம்மாவின் இரவில் இந்திரனோ, மனுவோ, பூலோகமோ எதுவும் இருக்காது. பிரம்மாவும் தூங்கும் நிலையில் இருப்பார். பிரம்மாவின் அடுத்த நாள் காலையில் அவர் மறுபடியும் முன்போல் படைப்பைத் தொடங்குவார். அந்த நாள் முடிவில் ஊழிக்கால சம்பவங்கள் நடந்து எல்லாம் இறைவனிடத்தில் ஒடுங்கும். இப்படி ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். இதுதான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்மாவின் வாழ்க்கை. இவ்விதம் 360 நாட்கள் கொண்ட ஆண்டுகளாக, நூறு ஆண்டுகள் இந்த பிரம்மா இருப்பார். அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.

பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள். அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு ‘பரார்த்தங்கள்’ என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன. இப்பொழுது முதல் பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தின் முதல் கல்பம் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்குமுன் முடிந்து போன முதல் பரார்த்தத்தின் கடைசி நாள் ‘பாத்ம’ கல்பம் எனப்படும். முதல் பரார்த்தத்தின் முதல் நாள் ‘பிராம்ம’ கல்பம் எனப்படும். இவையிரண்டு கல்பத்தைப் பற்றியும் புராணங்களில் சில சம்பவங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

‘பரார்த்தம்’ என்ற சொல் கணிதத்தில் 1017 என்ற எண்ணைக் குறிக்கும். பிரம்மாவின் ஆயுட்காலத்தின் பாதியிலும் ஏறக்குறைய அத்தனை மனித ஆண்டுகளே எனப் புராணங்கள் கொள்கின்றன.ஆனாலும் கணக்கிட்டுப் பார்க்கும்போது இதில் வேறுபாடு தெரிகின்றது.

ஒரு மகாயுகம் = 432 x 104 மனித ஆண்டுகள்.

ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 107 மனித ஆண்டுகள்.

ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 107 மனித ஆண்டுகள்

இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x107 மனித ஆண்டுகள்

இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 107 .
இது ஏறக்குறைய 1014 x 1.5 மனித ஆண்டுகளாகின்றது. இது கணிதப்படி பரார்த்தம் ஆகாவிட்டாலும் இதையே பிரம்மனின் பரார்த்தம் என்று புராணங்கள் சொல்கின்றன.

  • ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், எட்டாவது ஸ்கந்தம், அத்தியாயம் 13, 14.
  •  ஸஹஸ்ரயுகபர்யந்தம் அஹர்யத் பிரம்மணோ விது: — பகவத் கீதை 8 – 17
  • ஸஹஸ்ர யுகபர்யந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது–ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ர விதோ ஜநா–৷৷8.17৷৷
  • குந்தீ புத்திரனே மனிதன் தொடக்கமான நான்முகன் ஈறாக உள்ள அனைவருக்கும் இரவு பகல்களை அறியும்-அறிவாளிகள் எவர்கள் உளரோ -அவர்கள் பிரமனின் பகலை ஆயிரம் சதுர் யுகம் காலத்தில் முடிவதாக அறிகின்றனர்-பிரமனின் இரவையும் ஆயிரம் சதுர் யுகம் காலத்தில் முடிவதாக அறிகின்றனர்-பிரமனின் பகல் தொடங்கும் போது உலகில் உள்ள எல்லா பொருள்களும் பிரமனின் தேஹமானஅவ்யக்தத்தின் நின்றும் உண்டாகின்றன -பிரமனின் இரவு தொடங்கும் போது அவ்யக்தம் எனப்படும் அந்த பிரமனின் தேகத்திலேயே அவை ஒடுங்குகின்றன
    கர்மத்துக்கு வசப்பட்ட அத்தகைய இந்த ஜீவ ஸமூஹம் ஒவ் ஒரு பகலின் தொடக்கத்திலும் உண்டாகி உண்டாகி–இரவின் தொடக்கத்தில் லயத்தை அடைகிறது -மறுபடியும் பகலின் தொடக்கத்தில் உண்டாகிறது
  • ——————————–
  • மனு என்பது ஒரு பட்டம். ராஜா, பெரியவர், சிறந்தவர், மனிதருள் மாணிக்கம் என்று பொருள்
  • மன்வந்திரம் மனு இந்திரர்-1 சுயம்பு, இந்திரன்-2 . ச்வாரோசிஷன்ரோசன்-3 . உத்தமன், சத்யஜித்-4 . தபாசன், திரிசிகன்-5 . ரைவதன், விபு-6. சாசூசன், மந்திரதுருமன்
  • 7 . வைவஸ்த மனு, புரந்தரன்
  • 8 . சாவர்ணி, மகா பலி-9 . தசாசாவர்ணி, சுரதன்-10 . பிரம்மா சாவர்ணி, சம்பு-11 . தர்மசாவர்ணி, வைதிருதி-12 . ருத்ர சாவர்ணி, ருது சாமவே-13 . தேவ சாவர்ணி, திவஸ்பதி-14 . இந்திரசாவர்ணி, சுகி
  • ————————–
    1.    ப்ரபஞ்சம் என்பது  அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும் மறு முறை அழியும். ஆக   இது ஒரு சுழற்சியே.
    ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு. ப்ரம்மாவின் பிறப்புஇறப்பு போன்ற காலத்தின் நடுவே  வருவது  “மஹாகல்பம்”;;  ப்ரம்மாவின் இறப்பிற்குப் பிறகு வரும் ப்ரளயம்தான்  “மஹாப்ரளயம்”. ப்ரம்மாவின் ஒரு வாழ் நாளை  “கல்பம்”  என்று அழைப்பர் ;; இந்தக் கல்பம் 14 மந்வந்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு  மனு உண்டு. அந்த மனுவின் வாழ்நாள் ஒரு “மன்வந்திரம்”. என்று அழைக்கப் படுகிறது.
    இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன. ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்கள் கொண்டது. அவைக்ருதயுகம் த்ரேதாயுகம்,த்வாபரயுகம்,கல்கியுகம்  என நான்கு யுகங்கள்  ஆகும் . ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிந்துவிடுகிறது.. அதைச் சிறிய ப்ரளயம் என்று கூறுவர். ப்ரம்மாவின் ஆயுட்காலம் 120 வருடங்கள்  ஆகும் . ஆக ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120X360).உருவாகின்றன.
    2.     மனுஷ்ய வருஷம் : இரண்டு இலைகளை ஒரு ஊசி துளைக்கும் நேரம் “அல்பகாலம்” எனப்படும் . .
    30 அல்பகாலம்- 1த்ருதி:  
    30 த்ருதி– காலம்;
    30 காலம்–கஸ்தா;
    30 காஸ்தா–1நிமிஷம்(மாத்ரை);
     4நிமிஷம் —கணித;
    10 கணித–நெடுவீர்ப்பூ;
       6 நெடுவீர்ப்பு–விநாழிகை;;
      60 விநாழிகை–கடிகை;
      60 கடிகை —நாள்;
    15நாள்–பக்ஷம்;
    பக்ஷம் —மாதம்;
    இந்த ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்:
    12 மாதம் –ஒரு வருஷம்;
    இந்த ஒருவருஷம் தேவர்களுக்கு ஒருநாள் (அஹோராத்ரம்) ;
    300வருஷம் தேவ வருஷம்;
     4800 தேவ வருஷம்–க்ருத யுகம்;
     3600 தேவ வருஷம்.–த்ரேதாயுகம்;
    2400 தே.வருஷம்—துவாபரயுகம்;
     1200 தே.வருஷம்–கலியுகம்;
    71 சதுர்யுகங்கள் முடிந்ததும் ஒரு மனு முடிவடைகிறது.
    அத்தோடு அந்தக் கடவுள் தேவர்கள் அழிகின்றனர். அக்காலம் ப்ரம்மாவின் ஒரு பகல். இரவில் படைப்பு கிடையாது. 120 ஆண்டுகள் வாழ்ந்ததும் ப்ரம்மாவும் அழிந்துவிடுகிறார்
    ஆக ஒரு ப்ரம்மாவின் வயது–முப்பது கோடியே,ஒன்பது லட்சத்து,பதினேழாயிரத்து,முன்னூற்று எழுபத்திஆறு மனித ஆண்டுகள். ஒரு மனுவின் வயது–  4,32,000 மனித வருடங்கள்.
    ஒவ்வொரு சதுர் யுகத்திலும் வேதங்கள் அழியும். ஸப்த ரிஷிகள் கிழே வந்து வேதங்களை புதுப்பிப்பர். க்ருத யுகத்தில்மறுபடியும் மனு உருவாவான்.ஆக ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனுதேவர்கள்,ஸப்த ரிஷிகள்இந்திரன் புதிதாக உருவாவார்கள். கல்பகாலத்தின் முடிவில் விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொள்கிறார். பிறகு மறுபடியும் படைப்பு துவங்குகிறது.
    க்ருத யுகத்தில் அவர் கபிலராக வந்து “பரமஞானத்தை” போதிக்கிறார். த்ரேதாயுகத்தில் பேரரசனாக வ்ந்து கொடியவர்களை அழிக்கிறார்.
    துவாபர யுகத்தில் வ்யாசராக வந்து வேதங்களை உருவாக்குகிறார்கலியுகத்தில்  நேர்மையை நிலை நாட்டுகிறார். ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனு,  இந்திரன்சப்தரிஷிகள்போன்றவர்கள் இருப்பர்;; மனுவின் மகன்களும் ஒத்துழைப்பார்கள்;
    14 மன்வந்திரங்கள்–ஸ்வாயம்புஸ்வரோசிசஉத்தமதாமஸரைவதசக்ஷூசவைவஸ்வதஸாவர்ணிதக்ஷ ஸாவ்ர்ணிப்ரம்ம ஸாவர்ணிதர்ம ஸாவர்ணிருத்ர ஸாவர்ணிரௌச்ய ஸாவர்ணிஇந்திர ஸாவர்ணி.
    1) ஸ்வாயம்பு மனுப்ரம்மாவின் மனதில் உதித்தவர்.தேவி சடரூபியை(ப்ரம்மாவின் மகள்) மணந்தார்;நூறு ஆண்டுகள் வாக்பவ மந்திரத்தை உச்சரித்துதேவியை நோக்கித் தவமிருந்து பல வரங்கள் பெற்றான்மனுஸ்ம்ருதியை உருவாக்கினான்ஸப்த ரிஷிகள்: மரீசிஆங்கிரஸ்,அத்ரி,புலஹ,க்ரௌதுபுலஸ்தயவசிஷ்ட. தேவர்கள் எமன் என்ற பெயர் உடையவர்கள்
    மனுவின் மகன்கள்; அகனிதாரா,அக்னிபாஹு,மேதா,மேதாதிதி,வஸு,ஜ்யோதிஷ்மான்த்யுதிமான்ஹவ்யஸாவனபுத்ர. இவர்கள் உலகை ஆண்டனர்.(ஹரிவம்ச்ம்-7). இந்த மனுவை “ப்ரஜாபதி” மனு என்று அழைப்பர்.இவன் விராட அண்ட/புருஷனிலிருந்து வந்தவன் என்பர்;; முனிவர் ஸ்யாவநர் இவனின் மகளை மணந்தான். மனுவின் மனைவியின் பெயர் சரஸ்வதி(ப்ரம்மாவின் சரஸ்வதி அல்ல);.
    2) ஸ்வரோசிச  மனு;; ஸ்வயம்பு மனுவின் மகன்கள் ப்ரியவ்ருதன்உத்தானபாதன். ப்ரியவ்ரதனின் மகனே இம்மனு. தாரிணி தேவியை ஆராதித்தவன். ஸப்தரிஷிகள்ஊர்ஜ்ஜஸ்தம்பப்ரானராமரிஷபநிராயபரீவான். மகன்கள்;; சைத்ரகிம்புருஷ,ஸங்கவதன
    இந்திரன்;; விபஸ்சித்.: தேவர்கள்:- பாராவதர்கள்துசிதர்கள் . ப்ரம்மா இம்மனுவிற்கு ஸாத்வத தர்மத்தை சொல்லிக் கொடுத்தார்.இவன் அதை தன் மகன்களுக்கு சொல்லி கொடுத்தான். ( விஷ்ணு புரா-1-3; ஹரிவம்சம்–7; சாந்தி–348)
    3)உத்தம (ஔத்தமி); உத்தமனும் ப்ரியவர்தனின் மகன். இவனும் வாக்பீஜ மந்திரம் கூறி தேவியின் அருள் பெற்றான். (தேவி பாக-10) ஸப்தரிஷிகள்;; வசிஷ்டரின் ஏழு மகன்களே–ரஜஸ்கோத்ரஊர்தவபாஹுஸாவனஅநங்கஸுடாபஸ்சுக்ரமகன்கள்;;; அஜபரஸுதீப்த. என்று மற்றும் பலர். இந்திரன்;;; ஸுசாந்தி;;தேவர்கள்:- ஸுதாமன்ஸத்யர்ஜபஸ்,ப்ரதர்தனசிவ;; ஒவ்வொரு பகுதியிலும் 12 தேவர்கள்.
    4) தாமஸ;; இவனும் ப்ரியவர்தனின் மகனே. இவன் காமராஜ மந்திரம் ஜபித்து தேவியின் அருள் பெற்றான். ஸ்பத்ரிஷிகள்;;;ஜோதிர்மான்ப்ருதுகாவ்யசைத்ரஅக்னிவனகபிவரநர;;
    இந்திரன்;; சிபி;; தேவர்கள்:-ஸுபார,ஹரிஸத்யஸுதீஒவ்வொரு கூட்டத்திலும் 27 தேவர்கள்.
    மகன்கள்;;; க்யாதிகேதுரூபஜானுஜங்க என்று பலர் உண்டு
    5) ரைவத;;இவன் தாமஸனின் கடைசி தம்பி.இவன் காமபீஜ மந்திரம் ஜபித்து தேவி அருள் பெற்ரான். ஸப்தரிஷிகள்;;;ஹிரண்யரோமவேதஸ்ரீஊர்தவபாஹுவேதபாஹுஸுதாமபரஞ்சயமஹாமுனி;; இந்திரன்;;;விபு;; தேவர்கள்:-அமீதாபர்கள்பூதரயஸ்வைகுந்தஸுமேத– ஒவ்வொரு கூட்டத்திலும் 14 தேவர்கள்மகன்கள்;;;; பாலபந்துஸம்பாவ்யஸத்யகஎன்று பலர்.சிறந்த அரசர்களாக இருந்தனர்;;
    6)சாக்ஷுச;;; அங்கனின் மகன். ராஜரிஷி புலஹரின் உபதேசத்தால்தேவியை உபாசித்து மனு பதவி பெற்றான். ஸப்தரிஷிகள்;; ஸுமேதவிரஜஸ்ஹவிஸ்மான்உத்தமமதுஅதிநாமன்ஸஹிஷ்னுஇந்திரன்;; மனோஜவ;; தேவர்கள்:-ஆக்யர்ப்ரஸுதர்பாவ்யப்ருதுகலேக;; ஒவ்வொரு கூட்டத்திலும் தேவர்கள். வம்சாவளி ;; துருவன் அவன் மனைவி ஸாம்பு இருவருக்கும் இரண்டு மகன்கள்;; ஸிஸ்டிபாவ்ய;; ஸிஸ்டியின் மனைவி சுச்சயாவிற்கு ஐந்து மகன்கள்ரிபுரிபுஞ்சயன்விப்ரவ்ர்கலவ்ர்கதேஜஸ்;;ரிபுவின் மனவி ப்ரகதியின் மகன் சாக்ஷுச;;விரான ப்ராஜபதியின் மகள் புஷ்கரணி இவனின் மனைவிஇவர்களின் மகன் மனுஇவன் வைராஜ ப்ரஜாபதியின் மகள் நட்வலாவை மணந்தான். இவர்களுக்கு குருபுருஸதத்யும்னன்தபஸ்விஸத்யவான்ஸுசிஅக்னிஸ்தோமன்அதிராத்ரஸுத்யும்னன்அபிமன்யு என10 மகன்கள்;;ஆக்னேயி (குருவின் மனைவி)க்கு அங்(ம்)கஸுமனஸ்க்யாதிக்ரௌதுஆங்கிரஸ்,சிபி என மகன்கள்சுனிதா(அம்கனின் ம்னைவி) வேனாவை பெற்றெடுத்தாள்.ப்ருது வேனாவின் மகன்;; வைன்ய எனவுமழைப்பர்;; இம்மனுவின் மகன்கள் “வரிஷ்டர்கள்” என புகழப்பட்டனர்.
    7) வைவஸ்வத;; சூர்யனின் மகன். இவனே நமது மனு. ஸத்யவ்ருத மனுவே போன ப்ரளயத்திலிருந்து விஷ்ணுவால்( மத்ஸ்யாவதாரம்)
    காப்பாற்றப்பட்டு. வைவஸ்வத மனுவானார்.இவனே சூர்ய வம்சத்தின் முதல் அரசன். இவனும் தேவி உபாசகன். ஸப்தரிஷிகள்;;வசிஷ்டகஸ்யபர்அத்ரிஜமதக்னிகௌதமவிஸ்வாமித்ரபாரத்வாஜ;; இந்திரன்;;; புரந்தர;;;; தேவர்கள்:-ஆதித்யர்வஸுருத்ர–மகன்கள்;;; தார்மீக புத்திரர்கள்;;இக்ஷவாஹுந்ருகத்ருஷ்ட,ஸர்யாதிநரிஸ்யந்தநாபாகஅரிஸ்டகரூஸப்ரஸ்த்ர;;(யாவரும் மனுக்கள்)பிறந்தவர்கள்;;வேனாத்ருஷ்ணுநரிஸ்யந்தநாபாகஇக்ஷவாஹுகரூசஸர்யாதிஇலாப்ரஸ்த்ரநாபாகாரிஷ்டத்ரேதாயுகத்தில் சூர்யன் இம்மனுவிற்கு “ஸாத்வத தர்மம்” போதித்தான். இவன் அதை இக்ஷவாஹுவிற்கு உபதேசித்தான்.
    8) ஸாவர்னி;; முற்பிறவியிலேயே இவன் தேவி பக்தன். முற்பிறவியில் சைத்ர வம்சத்தில் பிறந்த சுரதாவே ஸாவர்னிமனு. ப்ரம்மாவின் மகன் அத்ரிஅத்ரியின் மகன்நிஸாகரன்;ராஜசூய யாகம் செய்தவன். இவனின் மகன் புதன்புதனின் மகன் சைத்ர( சைத்ர வம்சத்தின் முதல் அரசன்). இவனின் மகன் சுரத;இவன் போரில் தோற்று காட்டில் அலையமுனிவர் ஸுமேதஸி உபதேசத்தால் தேவி அருள் பெற்று அரசை மீட்டதோடுமறு பிறவியில் மனுவானான். சூர்ய வம்சத்தில் பிறந்தவன்.
    சூர்யனுக்கு ஸ்மஞா மூலம் யமாயமி,மனு என மூன்று மகன்கள். சூர்யனுக்கு சாயா மூலம்–ச்னீஸ்சர,ஸாவர்னிதபதீ என மூன்று குழந்தைகள். ஸப்தரிஷிகள்;;; தீப்திமான்காலவராமக்ருபஅஸ்வத்தாமவ்யாஸரிஷ்யஸ்ருங்கர்,;; இந்திரன்;;;மஹாபலி;; ஸுடாபஸ்அமீதாபர்முக்ய என தேவர்கள்–ஒவ்வொரு கூட்டத்திலும்12 தேவர்கள்;;
    மகன்கள்;;; விரஜஸ்உர்வரீயான்நிர்மோகஎன பலர்;
    9) தக்ஷஸாவர்னி;;; ஸப்தரிஷிகள்;; ஸாவனத்யுதிமான்பாவ்யவஸுமேதாதிதிஜ்யோதிஸ்மான்ஸத்ய;; இந்திரன்;;அத்பூத;;தேவர்கள்:- பாரஸ்மரீசிகர்பஸுதர்மன்;; இக்கூட்டத்தில் 12 தேவர்கள் (ஒவ்வொன்றிலும்)மகன்கள்;;; த்ருதகேதுதீப்திகேதுபஞ்சஹஸ்தநிராமயப்ருதுஸ்ரவஸ்,
    10) ப்ரம்ம ஸாவர்னி;; ஸப்தரிஷிகள்;; ஹவிஸ்மான்ஸுக்ருதஸத்யதபோமூர்த்திநாபாக,அப்ரதிமௌஜஸ்ஸத்யகேது இந்திரன்;;; ஸாந்தி;; தேவர்கள்:-ஸுதமன்விஸுத்தாஸ். ஒவ்வொரு கூட்டத்திலும் 100தேவர்கள். மகன்கள்;; பத்து பேர். அதில் ஸுக்சேத்ரஉத்தமௌஜஸ்பூதிஸேன இவர்களே அரசர் ஆவார்கள்.
    11) தர்ம ஸாவர்னி;; சப்தரிஷிகள்;;; வ்ரஜஅகனிதேஜஸ்வப்ஸ்மான்க்ருணிஆருனிஹவிஸ்மான்அநக;; இந்திரன்;;;; –; விகங்கமஸ்காமகநிர்வானரதி –ஒவ்வொரு கூட்டத்திலும் 30 தேவர்கள். மகன்கள்;;;; ஸர்வத்ரகஸுதர்மாதேவானிகஎன பலர்;
    12)ருத்ர ஸாவர்னி;; இவன் ருத்ரனின் மகன். ஸப்தரிஷிகள்;; தபஸ்விஸுடாபஸ்தபோமூர்த்திதபோரதிதபோத்ருதிதபோத்யுதிதபோதன;; இந்திரன்;; ருதுதாமன்;;தேவர்கள்:-ஹரிதரோஹிதஸுமனஸ்சுக்ரமன்சுபார–ஒவ்வொரு கூட்டத்திலும்10 தேவர்கள்.
    மகன்கள்;;; தேவவான்உபதேவதேவஸ்ரேஷ்டஎன பலர்.
    13) ரௌச்ய தேவ ஸாவர்னி (ருசி);;; ஸப்தரிஷிகள்;; நிர்மோகதத்வதர்ஸிநிஸ்ப்ரகம்யநிருத்ஸகத்ருதிமான்அவ்யயஸுடாபஸ்;; இந்திரன்;;; திவஸ்பதி;;தேவர்கள்:- ஸுத்ராமன்சுகர்மன்ஸுதர்மன்ஒவ்வொரு கூட்டத்திலும் 33 தேவர்கள் மகன்கள்;;; சித்ரஸேனன்விசித்ரன் என பலர்.
    14) இந்திர ஸாவர்னி (பௌமி);; சப்தரிஷிகள்;; அக்னிபாஹுசுசிசுக்ரமாகதஅக்னிதாரயுக்தஜித;; இந்திரன்;; சுசி;;தேவர்கள்:- சாக்ஷுசபவித்ரகனிஸ்தப்ராஜகவாசவ்ர்த்த;; இவர்களே தேவர்கள்மகன்கள்;;; உரூகம்பீரபுத்திஎன பலர் மற்றவைகள்:-ஒன்பதாவது மனுவிலிருந்து கடைசி மனுவரை உள்ள மனுக்கள்வைவஸ்வத மனுவின் மகன்களான கரூசப்ரஸ்தரநாபாகதிஸ்தஸார்யதித்ரிசங்கு.இவர்களின் மறு பிறப்பே.”ப்ரமராம்பிகாவின் ” அருளால் இவர்கள் மனு பட்டம் பெற்றனர். விஷ்ணுவின் சக்திகளாகிய ஆபூதிஅஜீதஸ்த்ய,ஹரிமாநஸஸம்பூதிரைவத,வாமன என்பவைகளே,மன்வந்திரங்களை ஆளுகின்றன
    ————————————————————-
    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
     

ஸ்ரீ திவ்ய தேச ப்ரஹ்மோத்சவ விவரணம் —ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

May 4, 2022

ஸ்ரீ ரெங்கம் விருப்பன் திருநாள் – 21.04.22 முதல் 01.05.22 முடிய

திருமுளை 19.04.22
நகரசோதனை – 20.04.22

21.04.22 – முதல் திருநாள் – காலை: துவஜாரோஹணம்
மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடு .

22.04.22 – இரண்டாம் திருநாள் – காலை: பல்லக்கு
மாலை : கற்பகவிருட்சம்.

23.04.22 – மூன்றாம் திருநாள் – காலை: சிம்ம வாகனம்
மாலை : யாளி வாகனம்

24.04.22 – நான்காம் திருநாள் -காலை : இரட்டை பிரபை
மாலை : கருட சேவை.

25.04.22 – ஐந்தாம் திருநாள் – காலை : சேஷ வாகனம்
மாலை : ஹனுமந்த வாகனம்.

26.04.22 – ஆறாம் திருநாள் – காலை : தங்க ஹம்ஸ வாகனம்
மாலை : யானை.

27.04.22 – ஏழாம் திருநாள் – மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன்
திருச்சிவிகையில் புறப்பாடு. (பூந்தேர்)

28.04.22 – எட்டாம் திருநாள் – காலை : வண்டலூர் சப்பரம்.
வெள்ளி குதிரை வாகனம்.
மாலை : தங்க குதிரை வாகனத்தில் வையாளி…

29.04.22 – ஒன்பதாம் திருநாள் – காலை : திருத்தேர். .

30.04.22 – பத்தாம் திருநாள் – மாலை : சப்தாவரணம்.

01.05.22- பதினோராம் திருநாள் இரவு : ஆளும் பல்லக்கு

———–

நாலாம் நாள் மாலை கருட உத்சவம்
மாசி கருடன் வெள்ளி கருடன்
மற்ற தங்க கருடன்
தங்க ஹம்ச வாஹனம் சித்திரை -விருப்பம் திரு நாள் -ஆறாம் நாள்
வெள்ளிக்குதிரை சித்திரை
ஒரே நாள் இரண்டு குதிரை வாஹனம் எட்டாம் நாள் -தங்க குதிரை வாஹனம்
வையாளி தங்க குதிரையில்
திரு ஆபரணங்கள் சாத்தி வெள்ளிக்குதிரை வாஹனம்
காலையில் வெள்ளிக் குதிரை வாஹனம் மாலையில் தங்க குதிரை வாஹனம்

பங்குனி ப்ரஹ்மோத்சவம் விபீஷணன் மட்டும் எழுந்து அருளி மிருத ஸங்க்ரஹம்
மற்றவற்றில் திருவடியும் சேர்ந்து எழுந்து அருளிச் செய்வார்
ஐப்பசி திருவோணத்தில் திருப்பாற்கடலில் தோன்றியவர்
முன்பும் ஐப்பசி ஸ்ரவண ப்ரஹ்மோத்சவமும் பிள்ளை லோகாச்சார்யார் காலம் வரை நடந்து வந்ததாம்

ஐப்பசி திருவோணம் -திருப்பாற்கடலில் ஆவிர்பாவம்
முன்பு ப்ரஹ்மோஸ்த்வம் நடந்ததாம்
ரோஹிணி -பிரதிஷடை -பங்குனி ரோஹிணி தொடங்கி உத்தரம் முடியும்
தீர்த்தவாரிக்கு அடுத்த நாள் திருத்தேர்
சித்திரை ரேவதி தீர்த்தவாரி-திருத்தேர் -மீண்டும் பிரதிஷ்டை 1371 வைகாசி ரேவதி
தண்டோரா போட்டு துலா பாரம் -செய்து பொருள் சேர்த்து 12 வருஷம் சரிப்படுத்தி
60 வருஷம் கழித்தே நடந்ததாம் –
வெங்கல திருத்தேர் தட்டு -குண்டு சார்வன் காட்டியது -அங்கு எழுந்து அருளி கொடி ஏற்றம் நடக்கும்
தை புனர்வசு -பூபதி ராஜா நக்ஷத்ரம் -1413 தொடங்கி நடக்கிறது –
மா முனிகள் வந்த இதே வருஷம் -மா முனிகள் அனுமதி உடன் தொடங்கிற்றாம்
கதிர் அலங்காரம் தாயார் சந்நிதியில் -நடக்கும் –

————

கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கத்தில்– இன்று ஸ்ரீராமநவமி….

ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்…
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….

இன்று சித்திரை வளர்பிறை, நவமி….
ஸ்ரீராமபிரான் அவதார திருநாள்.
இன்று தான்
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடப் படுகிறது.
(மற்ற திவ்ய தேசங்களிலும் கோவில்களிலும் பங்குனி மாதத்திலேயே கொண்டாடப் படுகிறது)

இன்றைய சேர்த்தி ஸேவையில் அரங்கனும் சேரகுலவல்லித் தாயாரும்……!!!*

அரங்கனோடு அற்புதமாகச் சேர்ந்தவர்கள்…

பெரிய பிராட்டியார் ஸ்ரீரங்கநாயகித் தாயார்
உறையூர் கமலவல்லித் தாயார்
சேரகுலவல்லி நாச்சியார்
பூமிப்பிராட்டி ஆண்டாள்
துலுக்கநாச்சியார்
மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.
குலசேகராழ்வாரின் திருமகள்
சேரகுலவல்லி நாச்சியார்

ஸ்ரீராமபிரான் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் .
இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான புனர்வசு அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது.
இராமாயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுவார்.சில கட்டங்களில் மெய்ம்மறந்து,கொதித்தெழுந்து
தன் சேனைகளுடன், இராவண சேனையுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார்.
இத்தனைக்கும் இவருக்கு திடவ்ரதன் என்று பெயர்.. மாமன்னன்..!
சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.

இராம என்னும் நாமம் இவரை மெய்மறக்கச் செய்தது. அனைத்தையும் மறந்து, அவர் ஒருவரை மட்டுமே
சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள்.
இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள்.
இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றே அழைக்கப்படுகின்றது.

இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்!
மற்ற ஆழ்வார்க்கு இல்லாத பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப் பெருமாள்!
இவர் பாடிய முதல் பாசுரமே அரங்கன் மீது தான்!

இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளை
அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு
என்கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?

(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடையகாவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால்
இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில்,
இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும்,
மாணிக்கக் கற்கள் பொருத்தியுள்ள நெற்றி யினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு
நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மை
நிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை,
என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானதுஎந்நாளோ? என்றவாறு
அரங்கனைநினைத்து ஏங்குகிறார். அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம்.

இந்த தாபம்/பாரிப்பு இருந்தால் போதும்…
பெருமாள் அழைத்துக் கொள்வார்.

ஆழ்வாரின் திருமகள் சேரகுல வல்லி நம்பெருமாளையே ஸ்ரீராமபிரானாக வரித்து
ஆழ்ந்த பக்தியில் லயித்திருந்தார்.

(ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திலும்,
நம்பெருமாளை ஸ்ரீராமராகவும்
பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளை
ஸ்ரீகிருஷ்ணராகவும் வழிபடும் வழக்கம் உள்ளது)

அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை.
யாரை எண்ணி எண்ணி, அவரும் அவரது மகளான சேரகுலவல்லியும் ஏங்கினார்களோ
அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறு பெற்றார்.
அரங்கன் மனமுவந்து ஏற்ற பக்தை இந்த சேரகுலவல்லி!

நம்பெருமாள்-சேரகுலவல்லித் தாயார் சேர்த்தி:

ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தார் அரங்கன்.
இன்று கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சுன மண்டபத்தில் சேர்த்தி! 🙏

அரையர்கள் பெருமாள் திருமொழி சேவிக்க, அடியார்கள் சூழ்ந்திருக்க, இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று
ஏக ஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள்!
சேரகுலவல்லி நாச்சியார் சந்நிதி அர்ச்சுன மண்டபத்தின் வலது(மேற்குப்) புறத்தில் உள்ளது.

நம்பெருமாள் வருடத்தில் மூன்று சேர்த்தி கண்டருள்கிறார்

1-பங்குனி ஆயில்ய நட்சித்திரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி
2-பங்குனி உத்திரத்தில் பெரியபிராட்டியாருடன் சேர்த்தி
3-சித்திரை ஸ்ரீராமநவமியில் சேரகுலவல்லி நாச்சியாருடன் சேர்த்

————

ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை

முதல் நாள் -மாலை அங்குரார்ப்பணம் –
ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் போல் சித்திரை திருவோணம் தீர்த்தவாரி

இரண்டாம் நாள் –
காலை துவஜ ஆரோஹணம்
காலை -தோளுக்கு இனியான்
இரவு -தோளுக்கு இனியான்

மூன்றாம் நாள்
காலை -ஸிம்ஹ வாஹநம்
மாலை -ஹம்ஸ வாஹநம்

நான்காம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -ஹனுமந்த வாஹநம்

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -சேஷ வாஹநம்

ஆறாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -கருட சேவை

ஏழாம் நாள்
காலை -சூர்ண உத்ஸவம்
மாலை -யானை வாஹநம்

எட்டாம் நாள்
காலை -திருத்தேர்

ஒன்பதாம் நாள் –
காலை -பல்லக்கு
மாலை -திருமஞ்சனம்
மாலை -குதிரை வாஹநம்

பத்தாம் நாள்
காலை -பல்லக்கு -தீர்த்த வாரி
மாலை -த்வஜ அவரோஹணம்

பதினோராம் நாள்
மாலை -தோளுக்கு இனியான் -துவாதச ஆராதனம்

பன்னிரண்டாம் நாள்
மாலை -விடையாற்றி உத்ஸவம்

———-

சித்திரை திருவோணம்
ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில் -மயிலாப்பூர்
த்வஜ ஆரோஹணம்

————-

ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம்

முதலில் இரவில் -செல்வர் உத்சவம் -புஷ்ப பல்லாக்கு
அடுத்த நாள் -மாலை -அங்குரார்ப்பணம் –சேனை முதன்மையார்

முதல் நாள்
காலை –தர்மாதி பீடம்
மாலை –புன்னை மர வாஹனம்

இரண்டாம் நாள்
காலை –சேஷ வாஹனம் –பரமபத நாதன் திருக்கோலம்
மாலை -ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள்
காலை -கருட சேவை
பகல் -ஏகாந்த சேவை
மாலை -ஹம்ஸ வாஹனம்

நான்காம் நாள்
காலை –ஸூர்ய ப்ரபை
மாலை –சந்த்ர ப்ரபை

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள்
காலை -ஸூர்ணாபிஷேகம்
காலை -ஆனந்த விமானம்
மாலை -யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை –திருத்தேர்
இரவு –தோட்டத் திருமஞ்சனம்

எட்டாம் நாள்
காலை -வெண்ணெய் தாழிக் கண்ணன்
மாலை -குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள் -சித்திரை திருவோணம்
காலை -ஆளும் பல்லாக்கு
மதியம் -தீர்த்தவாரி
மாலை -கண்ணாடி பல்லாக்கு

பத்தாம் நாள்
மதியம் -துவாதச ஆராதனம்
இரவு -சப்தாவரணம் -சிறிய தேர்

பிரதி தினம் மாலை -பத்தி உலாத்தல்

விடையாற்று உத்சவம் -பத்து நாள்கள்

————–

ஸ்ரீ கனக வல்லி ஸமேத ஸ்ரீ வீர ராகவ பர ப்ரஹ்மணே நம

வீஷாவநே விஜய கோடி விமான மத்யே வேதாந்தம் ருக்யமபி நித்யம் அசேஷ த்ருஸ்யம்
ஹ்ருத் தாப நாஸந ஸரஸ் தடே பாரிஜாதம் ஸ்ரீ வீர ராக்வம் அஹம் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீ பூமிலாலித பதம் ஸ்ரித சேஷ தல்பம் கல்பாந்த யோக்ய புவந யோக நித்ரம்
ஸ்ரீ சாலி ஹோத்ர சிரஸா த்ருத ஹஸ்தம் ஸ்ரீ வீர ராகவா விபும் ஸ்ரயதாம் மநோ மே

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைக்க
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன்
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே –

சுபக்ருத் வருஷம் சித்திரை -23-வெள்ளிக்கிழமை ஆரம்பம்
வைகாசி மாதம் -1-ஞாயிற்றுக்கிழமை
முதல் நாள்-
6-5-2022– மே -வெள்ளி – –
காலை 4-45- மேஷ லக்கினம் த்வஜ ஆரோஹணம்
தங்கச்சப்பரம் காலை 5 மணிக்குப் புறப்பாடு
பக்தி உலா காலை 9-30-
திருமஞ்சனம் காலை -11 -00
இரவு
பக்தி உலா -மாலை 5 மணி
புறப்பாடு -ஸிம்ஹ வாஹனம் -7 மணி

இரண்டாம் நாள் காலை -ஹம்ஸ வாஹனம் -5-00 மணி
பக்தி உலா காலை 8-00 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
இரவு
பக்தி உலா -மாலை 5 -00 மணி
புறப்பாடு -7-00 மணி -ஸூர்ய பிரபை

மூன்றாம் நாள்
காலை 4-00 மணி கோபுர தர்சனம்
கருட சேவை புறப்பாடு -காலை 5-30-மணி
திருமஞ்சனம் 12-00 மணி

பக்தி உலா -5-00-மணி
புறப்பாடு -7-30- மணி ஹநுமந்த வாஹனம்

நான்காம் நாள்
காலை -புறப்பாடு -5-00 மணி சேஷ வாஹனம்
பரமபத நாதன் திருக்கோலம்
பக்தி உலா -8-00 மணி
திருமஞ்சனம் -காலை -10-00 மணி

இரவு –
பக்தி உலா மாலை -5-00 மணி
புறப்பாடு –7-00 மணி -சந்த்ர பிரபை –

ஐந்தாம் நாள்
புறப்பாடு -காலை 4-00 மணி நாச்சியார் திருக்கோலம்
திருமஞ்சனம் -காலை 10-30 மணி
ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம்

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -7-00 மணி -யாளி வாஹனம்

ஆறாம் நாள்
வேணுகோபாலன் திருக்கோலம்
சூர்ணாபிஷேகம் காலை 5-00 மணி
புறப்பாடு -காலை -6-00 மணி வெள்ளி சப்பரம்
திருமஞ்சனம் -காலை -11 மணி

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -யானை வாஹனம் -7-00 மணி

ஏழாம் நாள்
காலை திருத்தேர்
மீனா லக்கினம் -காலை 4-00 மணிக்கு தேருக்கு எழுந்து அருளுதல்
7-30 மணி திருத்தேர் புறப்பாடு

மாலை 5-00 திருத்தேரில் இருந்து எழுந்து அருளுதல்
திருமஞ்சனம் -மாலை 6-30-மணி
கோயிலுக்கு பெருமாள் எழுந்து அருளுதல் இரவு 9-30 மணி

எட்டாம் நாள்
காலை 9-30 மணி திருமஞ்சனம்
திருப்பாதம் சாடி
திருமஞ்சனம் மாலை -3-00 மணி
பக்தி உலா மாலை 4-30 மணி
புறப்பாடு -இரவு 7-30 மணி குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள்
காலை -4-00 ஆள் மேல் பல்லக்கு
தீர்த்தவாரி -காலை -10-30 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
பக்தி உலா 5-30-
புறப்பாடு 7-00 மணி விஜயகோடி விமானம்
திருவாய் மொழி சாற்றுமுறை

பத்தாம் நாள்
காலை 9-30 திருமஞ்சனம்
துவாதச ஆராதனம் -காலை -10-30
பக்தி உலா -இரவு 7-00 மணி
புறப்பாடு கண்ணாடி பல்லக்கு-9-0 மணி
த்வஜ அவரோஹணம் -இரவு 11-30மணி

————–

ஸ்ரீ வைகுண்டம் –
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் –
உத்தமர் கோயில்
ஆராவமுதாழ்வான்
திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதப்பெருமாள்
இதே சமயத்தில் ப்ரஹ்மோத்சவம்

—————–

ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

வையம் கண்ட வைகாசி திருநாள்-

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புகழ் பெற்றிருக்கும் நகரம் காஞ்சி, ‘நகரேஷு காஞ்சி’ என்பர்.
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரி த்வராவதி சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற
வாக்கியத்தின்படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற
ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும்.
பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிகலனுக்கு காஞ்சி என்று பெயர்.
இந்த நகரம், அந்த அணிகலன் வடிவில் இருந்ததால் காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.
காஞ்சி ஒரு புண்ணிய பூமி.
தொண்டை மண்டலத்தில் உள்ள 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களை காஞ்சியிலே காணலாம்.

பெரிய காஞ்சியில் 9 திவ்ய தேசங்களும்
(திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திரு நீரகம், திருக்காரகம்,
திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம்-திருப்பச்சைவண்ணன், திருப்பரமேச்சுர விண்ணகரம்)
சின்னக் காஞ்சியில் 5 திவ்ய தேசங்களும்
(திருக்கச்சி, திருஅட்டபுயகரம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருவெஃகா ) உள்ளன.

அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுப்பதால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலை வடிவம் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றதால்,
இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது.

ஐராவதம் என்பது வெள்ளை நிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

மலை மீது காட்சி தருவதால், மூலவருக்கு மலையாளன் என்ற திருநாமுமம் உண்டு.

இவர் பல யுகம் கண்ட எம்பெருமான்.
கிருத யுகத்தில் பிரம்மனும்,
திரேதாயுகத்தில் கஜேந்திரனும்,
துவாபர யுகத்தில் பிருஹஸ்பதியும்,
கலியுகத்தில் அனந்தனும் வழிபட்டு பல நற்பலன்களை அடைந்தனர்.
பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாகஐதீஹம்.
அதே போல் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேஷனுமும் இங்கு வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மலைகளால் ஆனது இந்த திருத்தலம்.
வாரணகிரி என்ற முதல் தளத்தில் நரசிம்ம அவதார அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர்
ஹரித்ரா தேவித் தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.
இரண்டாவது தளமான அத்திகிரியில் தேவப்பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.

இங்குள்ள அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.
அதில் தெற்கில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்தி மரத்தால் ஆன
எம்பெருமானை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்து அடியார்கள் தரிசனத்திற்குப்
பிறகு மீண்டும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே எழுந்தருள செய்கிறார்கள்.

இந்த குளக்கரையில் உள்ள சுதர்சன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் விஷேசமானது.
மிக பெரியவடிவில், பதினாறு திருக்கரங்களுடன், காட்சி அளிக்கும் இந்த சக்கரத்தாழ்வாரை சுற்றி உள்ள
அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் புறப்பாடு,
ஒவ்வொரு ஏகாதசியும் எம்பெருமான் புறப்பாடு.
இரண்டும் சேர்ந்து வந்தால், இருவருக்கும் சேர்ந்து புறப்பாடு என்று அடியவர்களுக்கு ஆனந்தம்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாக கருட சேவை (3ம் நாள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதனை வையம் கண்ட வைகாசி திருநாள் என்று கொண்டாடுவர்.
இந்த கருட சேவையை குறிப்பிட்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் கீர்த்தனை பாடி உள்ளார்.

உடையவர் திருமாளிகை என்று இராமானுஜர் இளமை காலத்தில் வாழ்ந்த இல்லம் இன்றும் இங்கு உள்ளது.
இந்த கோவிலின் பிரகாரத்தில் தான் ஸ்ரீஆளவந்தார் என்ற ஆச்சாரியார், இராமானுஜரை முதன் முதலில் கண்டு
ஆம், முதல்வன் இவன் என்று அருளியது.
ஸ்வாமி இராமானுஜரை திருவரங்கத்திற்கு தந்தருளியதும் இந்த தேவப்பெருமாள் தான்.

ஸ்தல வரலாறு

ஒரு முறை பிரம்மா எம்பெருமானிடம் தான் ஓர் அஸ்வமேதயாகம் நடத்த வேண்டும் என்று கேட்க,
அதற்கு எம்பெருமான், பிரம்மாவை சத்தியவ்ரத க்ஷேத்திரமான இந்த திருக்கச்சிக்கு வந்து யாகம் செய்ய சொன்னார்.
ப்ரம்மா சரஸ்வதி தேவி இல்லாமல் இந்த யாகத்தை காயத்திரி தேவியுடன் தொடங்கினார்.
இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, இந்த யாகத்தைத் தடுக்க பல தடைகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு முறையும் எம்பெருமான் அந்த தடைகளை உடைத்து,
பிரம்மாவின் யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற காரணமாக இருந்தார்.

சரஸ்வதி, இருள்மயமாக, யாக குண்டத்தை மாற்றியபோது,
திருத்தண்கா தீப பிரகாசராக (விளக்கொளிபெருமாள்) எம்பெருமான் வந்தார்.
சரஸ்வதி அரக்கர்களை அனுப்பி வைத்தார்.
அப்பொழுது எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாக ஆதிகேசவ பெருமாளாக வந்து அரக்கர்களை விரட்டி அடித்தார்.

தொடர்ந்து, சரஸ்வதி யானைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்து இந்த யாகத்தை தடை செய்ய முயற்சித்த போது,
எம்பெருமான் வேளுக்கை யோகநரசிம்மராக வந்து யானைகளை விரட்டினார்.

சரஸ்வதி வேகவதி என்ற நதியில் வெள்ளமாக வந்தபோது,
சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக வந்து நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார்.

இப்படி, இங்குள்ள திவ்யதேச எம்பெருமான்கள் ஒரே காரணத்திற்காக ஒரே காலத்தில் எழுந்தருளி உள்ளனர்.

இப்படி எல்லா தடைகளையும் தாண்டியபின்,
பிரம்மாவின் யாககுண்டத்தில் இருந்து புண்ணியகோடி விமானத்துடன் தோன்றியவர் தான் இந்த திருக்கச்சி தேவப்பெருமாள்.
யாககுண்டத்தில் இருந்து அக்னி ஜுவாலைகளுக்கு மத்தியில் இருந்து வந்ததால் தான் இன்றும்
எம்பெருமானின் திருமுகத்தில் அக்னி வடுக்கள் இருப்பதை நாம் காணலாம்.
பிரம்மா அத்தி மரத்தால் வடித்த ஒரு எம்பெருமானை இங்கே அத்தி வரதர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு சிஷ்யர்கள், குருவிற்கு எடுத்துவைத்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து
இருந்ததை கவனிக்காததால், முனிவர் கோபம் கொண்டு அவர்கள் இருவரையும் பல்லியாக மாற சபித்தார்.
அவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க, முனிவர் இந்திரன் திருக்கச்சிக்கு வரும்வரை காத்து இருந்தால்,
அவர்கள் மீண்டும் பழைய நிலை அடைவார்கள் என்று கூற அவர்களும், பல்லிகளாக திருக்கச்சியில் காத்து இருந்து,
பின் கஜேந்திரன் என்ற யானையாக இந்திரன் இங்கு நுழைந்த போது,
இருவரும் சாபம் தீர்ந்து பழைய நிலை அடைந்தார்கள் என்பது வரலாறு.
அந்த பல்லிகளே இன்று தங்க, வெள்ளி பல்லிகளாக பிரகாரத்தில் உள்ளன.
இவற்றை தரிசித்தால் எல்லா நோய்களும் அகலும் என்று நம்பிக்கை.

வைகாசி விசாக கருட சேவையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி.
சோளிங்கரில் வசித்த தொட்டாச்சார்யார் என்ற பக்தர் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரிசனத்தை காண்பார்.
ஒரு வருடம் உடல் நலம் குன்றியபோது அவரால் காஞ்சி வந்து இந்த திவ்ய சேவையை காண இயலவில்லை.
அதனால் அவர் சோளிங்கரில் உள்ள குளக்கரை அருகே வந்து நின்று எம்பெருமானிடம் உருகி
தன்னுடைய நிலையை சொல்லி வருந்தினார். எம்பெருமான் அவருக்கு உடனே அங்கேயே கருட சேவை காட்சியைக் கொடுத்தார்.
அதனால் இன்றும், காஞ்சியில் இந்த கருட சேவை போது, எம்பெருமானை ஒரு வினாடி குடைகளால் மூடி
அந்த அடியவருக்கு காட்சி கொடுத்ததை நடத்தி காண்பிப்பார்கள்.

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியில் (96), அத்தியூரான் புள்ளை ஊர்வான் என்று பாடி இருப்பது,
இந்த திவ்யதேச எம்பெருமானான பேரருளாளன், கருட சேவையை முன்னிட்டு என்பதால் இன்றும் வரதனின் கருடசேவை பிரசித்தம்.

பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியில் (26), நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் என்று திருக்கச்சிக்கு நிரந்தசீர் என்று
சிறப்பு அடைமொழி கொடுத்து உள்ளார்.
இதற்கு உரையாசிரியர், நிறைய திவ்யதேசங்களை உடைய காஞ்சி என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.

இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எம்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார்.
அதாவது பெருமாளுக்கு விசிறி வைத்து காற்று வீசுவார். திருக்கச்சி நம்பிக்கு காஞ்சி பூர்ணர் என்ற சிறப்பு பெயர் உண்டு.
எம்பெருமான், திருக்கச்சி நம்பிகள் தன்னுடன் நேரடியாக உரையாடும் அளவுக்கு அவருக்கு அருள் புரிந்து இருந்தான்.

ராமானுஜர், தம் முதல் குருவான யாதவப்பிரகாசருடன் வடநாட்டு யாத்திரை சென்ற போது, அவருக்கு எதிரான சதி,
அவரின் சித்தி பிள்ளை கோவிந்தபட்டர், (பின்னாளில் எம்பார் என்ற ஆச்சார்யர்) மூலம் தெரிய வந்ததால்
யாருக்கும் தெரியாமல் விந்திய மலையிலேயே தங்கிவிட்டார்.
பிறகு ஒரே இரவில், தேவப்பெருமாளும், பெரிய பிராட்டியும், வேடன், வேடுவச்சி வேடம் புனைந்து
ராமானுஜரை காஞ்சிக்கு அருகில் உள்ள சாலைக்கிணறு என்ற இடத்தில கொண்டு விட்டார்கள்.

தமக்கு உதவி புரிந்தது தேவப்பெருமாளும் தாயாரும் என்று உணர்ந்து கொண்ட ராமானுஜர்,
திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்றுக்கொண்டு, சாலைக் கிணற்றிலிருந்து தேவப்பெருமாளுக்கு
திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டார்.
சுவாமி ராமானுஜருக்கு ஆரம்ப காலத்தில், நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளுடன் பேசி,
தேவப்பெருமாள் அருளிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு சொல்லியவர் திருக்கச்சி நம்பி ஆவார்.

இராமானுஜருக்கு அருளிய அந்த ஆறு வார்த்தைகள்.

1-அஹமேவ பரம்தத்வம் ஸ்ரீமந் நாராயணனே எல்லாவற்றிக்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள்
2-தர்சனம் பேத ஏவச ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை.
3-உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத் மோட்சம் அடைய சரணாகதியே சிறந்தவழி
4-அந்திமஸ்ம்ருதி வர்ஜனம் இறுதி காலத்தில் எம்பெருமானை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை
5-தேஹாவஸானே முக்திஶ்யாத் அவனை உபாயமாகக் கொண்டவர்களுக்கு, பிறவி முடிந்ததும் மோக்ஷம் தருகிறார்.
6-பூர்ணச்யார்ய ஸமாச்ரய பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது

ஸ்ரீ இராமானுஜருக்காக கிருமி கண்ட சோழ மன்னனிடம் தன்னுடைய கண்களை இழந்த
கூரத்தாழ்வான், ராமானுஜரின் ஆணைப்படி வரதராஜ ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை இந்த எம்பெருமானுக்குகாக எழுதி,
அவர் முன்னே சொல்ல, உடனே இந்த எம்பெருமான் அவருக்கு மீண்டும் கண் பார்வையை அருளினார்.

வேதாந்த தேசிகரிடம் ஒரு ஏழை பிரம்மச்சாரி பையன் தன் திருமணத்திற்காக நிதி உதவி கேட்க,
அவர் பெருந்தேவி தாயார் சந்நிதியில், ஸ்ரீ ஸ்துதி என்ற இருபத்திஐந்து ஸ்லோகங்களை பாட,
தாயாரின் மனதை தொட்ட ஸ்லோகங்கள், அங்கே ஒரு பொன்மழையை கொட்ட செய்து அந்த பையனின் துயரைத் தீர்த்தது.
இது கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் ஆதி சங்கரர் ஓர் ஏழைப் பெண்ணிற்காக தங்கமழை பெய்வித்ததைப் போலவே
இந்த திவ்யதேசத்தில் நடந்த சரித்திர நிகழ்ச்சி. இதனால் இந்த தாயாருக்கு தங்கத்தாயார் என்ற திருநாமமும் உண்டு.

———–

24 கருட சேவை
மூன்று திவ்ய தேசப் பெருமாள் கோயில் உட்பட 24 கோயில்களைச் சேர்ந்த கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள்
வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி
ஆகிய வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை கொண்டாடப்படுகிறது.

————

12 கருட சேவை தரிசனம்

கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது 12 கருட சேவை தரிசனம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான
அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில்
உற்சவப் பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் இந்த தரிசனம் காண கண் ஆயிரம் வேண்டும் என்பார்கள்.

விதியை மாற்றும் சக்தி திதிக்கு உண்டு. அந்த திதிகளில் சிறப்பானது அட்சய திருதியை என்று கருதப்படுகிறது.
இந்த திதியில் எந்தச் செயலை செய்தாலும் வெற்றி கிட்டும்.
எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்பது புராணம் கூறும் ஐதீகம்.
குசேலன், குபேரன் ஆனதும் இந்த தினத்தில் தான்.
எனவே இந்த தினத்தில் தங்கம், வீடு, மனை, துணிகள் என எது வாங்கினாலும் இல்லத்தில் தங்கும் என்பது
பொதுமக்களிடையே சமீப காலமாக அதிகரித்து வரும் நம்பிக்கையாகும்.

அதன்படி அட்சய திருதியை நாளான மே-9 ம் தேதி கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில்
சாரங்க பாணி,
சக்கரபாணி,
ராமசுவாமி,
ராஜகோபாலசுவாமி,
ஆதிவராகபெருமாள்,
பட்டாபிராமர்,
சந்தான கோபாலகிருஷ்ணன்,
நவநீதகிருஷ்ணன்,
வேணு கோபாலசுவாமி,
வரதராஜபெருமாள்,
பட்டாச்சாரியார் தெரு கிருஷ்ணன்,
சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய
12 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்திலும்,
இந்த சுவாமிகளுக்கு நேரெதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

————-

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில்
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.
108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன.
மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.
தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.
நாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள்,
அரிமேய வின்னகரம் குடமாடு கூத்தர்,
செம்பொன்னரங்கர்,
பள்ளிகொண்ட பெருமாள்,
வண்புருடோத்தம பெருமாள்,
வைகுந்தநாதன்,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்,
திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள்,
கீழச்சாலை மாதவப்பெருமாள்,
பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள்,
திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.

ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார்.
அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி,
தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு.
அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைக்கிறார்.

பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார்.
அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று,
11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.

சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார்.
அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார்.
அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார்.
அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.

திருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும்,
மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும்.
பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர்.
பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில்
தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது.
அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

March 25, 2022

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமத் வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிராட்டி புருஷகாரத்வம் -ஸ்ரீ பிராட்டி சரம ஸ்லோகம் –

February 27, 2022

பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44-

கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —

மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20-

ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-

எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

————-

தேவிமார் ஆவார் திருமகள் -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்

———-

பிராட்டி சரம ஸ்லோகம் -யுத்த காண்டம் -116-45
பாபானாம் வா சுபானாம் வா
உம் அபிப்ராயம் பாபம் -எம் அபிப்ராயம் சுபம்
கார்யம் கருணம் ஆர்யேன
வதகார்ஹயம்-கொல்லத்தக்க
ந கச்சின் ந அபராத்யதி

கண்டேன் கண்களால்
அஸி தேக்ஷிணா –
கண்ணே ஸர்வ அவயங்களும் சமம்
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி

—————–

ஸ்ரீ யதே -அனைவராலும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள்

ஸ்ரயதே ச பரம் பரம் –தான் நாராயணனை ஆஸ்ரயிக்கிறாள்
அமுதனினில் வரும் பெண்ணமுது தானே சென்று திரு மார்பிலே அமர்ந்தாளே
தேவர்கள் கூட்டம் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்தேயும் -வெட்கப்படாமல் -பெண்கள் நடுவில் வெட்கப்பட வேண்டாமே
அவன் ஒருவனே புருஷோத்தமன்
மணி வல்லி பேச்சு வந்தேறி அல்லவே

விஷ்ணு பத்னி -ஜெகன் மாதா இரண்டையும் காட்டிய படி

ஸ்ரீ -ஸ்ருனோதி -நமது விண்ணப்பங்களைக் கேட்க்கிறாள்

ஸ்ரீ ஸ்ராவயதி -அவனையும் கேட்ப்பிக்கிறாள் -அவனிடம் உசித உக்திகளைச் சொல்லிக் கேட்ப்பிக்கிறாள்

ஸ்ரீ -ஸ்ருணாதி-தோஷங்களைப் போக்குவித்து அருளுகிறாள் -தாய் அன்றோ
ராக்ஷஸிகளை தண்டிக்க விரும்பிய -திருவடியை
பிலவங்கமே -சீதா ராமர் கோஷ்ட்டி அறியாமல் பேசுகிறாயே -என்றாளே

ஸ்ரீ நாதி ச குணை ஜகத் -குண பரிபூர்ணை
அநசூயை ஸீதா பிராட்டி சம்வாதம் அறிவோமே
த்ரிஜடை இருப்பு அறிவோமே
வடக்கு வாசல் வழியாக செருப்பையும் பையில் வைத்து தெற்கு வாசல் வழியாக வந்து
கடைகளில் பொருள்கள் வாங்கு மீண்டு வரும் பொழுது வாசலிலே இருந்து வெறும் அஞ்சலிக்கே
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமம் பதம் அளித்தும் மேலும் கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று
வெட்கம் அடைந்து தலை குனிந்து -பட்டர்

———–

ஸ்ரீ வசன பூஷணம்

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-

சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-

இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-

உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-

—————

ஸ்ரீ வசன பூஷணம்–வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-

பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக –
தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –

இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான
நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது –
அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் –சிறை இருந்ததாலே விளப்புற்றாளே-

சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே –
ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய ஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –
ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –

இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷண அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –

ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது என்னும் இடம் –
காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம் சீதாயாஸ் சரிதம் மஹத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர் –
உம்முடைய சரித்ரத்தாலே பிராண தாரணம் -என்கிறார் -பிரகர்ஷமாக உஜ்ஜீவிக்கிறது –

———–

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-

அபராத பூயிஷ்டரான சேதனருக்கு ஆஸ்ரயணீயை யாம் அளவில் –
அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் –த்வம் மாதா சர்வ லோகாநாம் – –
க்ருபாதிகளாலும் –நிருபாதிக நித்ய -பிரியம் ஏக – தண்ட கரத்வ ஸ்வா தந்தர்ய கந்தமே இல்லையே பிராட்டிக்கு –
அவனுக்கு அபிபூதமாக மறைக்கப்பட்டு இருக்குமே —
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -தண்ணீரை ஆற்ற தண்ணீர் வேண்டாமே –வந்து ஆஸ்ரயிகலாம்படியாய்-
அபராதங்களை பார்த்து சீறி –ஷிபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி

பெருமாளை திருத்தி என்னாமல் ஈஸ்வரனை என்றது -இவனுடைய பெருமையைக் காட்டி
அவனையும் நியமிக்கும் இவளது பெருமையைக் காட்ட –
அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும்
எல்லாருக்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் -இவளுக்கு அவனைப்பற்றி ஸ்வரூப லாபம்
அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்-
என் அடியார் அது செய்யார் -எப்பொழுது இவன் அடியார் ஆனார் -நம் அடியார் என்னாமல் -என் அடியார் -என்பதால்
பிராட்டி மகிழ்ந்து -தன் புருஷகாரம் இல்லாமலும் கைக் கொள்ளுவேன் –என்கிறான் –

இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் –பாஞ்சராத்ரம் -என்றும் –
என்னை அடைய -சம்சாரத்தில் ஆழ்ந்த ஜனங்களுக்கு லஷ்மி புருஷகாரமாக -ரிஷிகள் சொல்வார் –
என் திரு உள்ளமும் அதுவே –

அந்நிய லக்ஷணம் நாஸ்தி –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
லஷ்மி பதியான நான் உபாயமாக இருக்கிறேன் -பிரசித்தம் –
நானே உபாயம் -வை சப்தம் -அவளை புருஷகாரமாக இருக்கும் பொருட்டு வைத்துள்ளேன் –
இந்த பாவனைகள் வேதாந்தத்தில் உள்ளதே

அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
சேனாபதி ஆழ்வானுக்கு பாஞ்சராத்ரத்தில் -ஆகிஞ்சன்யம் பற்றாசாக -திருவடிகளை பற்றி -ப்ரீதியான மனதுடன் –
அவளை புருஷகாரமாக பற்றி –
என்னுடைய க்ஷமையை ஏற்றுக் கொண்டு -பிரப்பயமான என்னை பிராபகமாக கொண்டு –
கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி –பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –

பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் என்னும் இடங்களில் -புருஷகாரமாகவே பர்யவசிக்கும் –
உபாயத்வம் த்வனிக்கும் சப்தங்களுக்கு பிரதி நீயத்வ தர்மமே சித்தம் —

இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம் உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயணதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை-அன்றிக்கே –
கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் —
ஹித புத்தியால் திருத்த தண்டித்தாலும் -இவன் துக்கப்பட்டு கண் கலங்க விட மாட்டாள் இவள் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும்
குற்றவாளர்க்கும் கூசாமல் வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்—பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தோடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் –இரண்டும் உண்டே புருஷோத்தமனுக்கு -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூர தண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி-அத்யந்த பயங்கரமாய் – இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன் அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-

———

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-

இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங் சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் –
ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா அனந்யார்ஹத்வங்கள் இரண்டும் –
ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –
ஸ்ரீ -நித்ய யோக மத் ப்ரத்யயம் – –அவனை ஆஸ்ரயிக்கிறாள் -பாரதந்தர்யம் அநந்யார்ஹத்வம் -இருப்பதால்
நாம் ஆஸ்ரயிக்கிறோம் -கிருபை இருப்பதால் –

தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக —என்கை

தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொப்பனம் கண்டதாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் -சரணாகதி பண்ணாத திசையிலும் –
லகுதரா ராம கோஷ்ட்டி -இதனாலே பரம கிருபை என்றார் —

பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே–சாமான்யமாக சொல்லி – அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் –
கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கும் இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும்-கையில் உள்ள ஈரமும் காயாத முன்பு -என்றபடி -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா –

————-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-

சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-

ராவண வத அநந்தரம் ராஷசிகளை சித்ர வதம் பண்ணுவதாக உத்யுக்தனாய் நிற்கிற
திருவடியை குறித்து -பாபானாம்வா சுபானாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யென ந கச்சித் ந பராத்யதி -என்று அவன்-திருவடி – இரங்கத் தக்க
வார்த்தைகளை சொல்லி அவர்கள் அபராதங்களை பொறுப்பிகையாலும்-இங்கு புருஷகாரம் பண்ணுவது திருவடி இடம் -ரஷிக்க-
இது தேறுமோ என்னில்- சேதனர் அநிஷ்டம் போக்குவதே –

உபய தசையிலும்-இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றது இறே திருவடி ராஷசிகளை அபராத அநு குணம்
தண்டிக்கும் படி காட்டித் தர வேணும் என்ற அளவில்
பிராட்டி அவனுடன் மன்றாடி ரஷித்த இத்தனை அன்றோ –
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்த்ர அபராதாஸ் த்வயா ரஷந்த்யா
பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம்
சரணமித் யுக்தி ஷமவ் ரஷதாஸ் சா நஸ் சந்திர மகா கசஸ் சூகயது ஷாந்தீ ச்தவாகச்மிகீ -என்று
பவனாத்மஜன் நிமித்தமாக ரஷித்தாள் என்று அன்றோ பட்டரும் அருளி செய்தது –

கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —

——–

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-

இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-

ஈஸ்வரனை திருத்துவது -இச் சேதனனுடைய குற்றங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக்
கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான பந்த
விசேஷத்தை பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே-
என் பிழையே நினைந்து அருளி -ஏவகாரத்தால் மற்றவை எல்லாம் மறந்தீர் —
நாரமும் அயனும் சம்பந்தம் அறியாமல் அந்த நாரங்களுக்குள் உள்ள ஸ்ரீ சொல்ல வேண்டும் படி –
குடிநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -உபாதி மூலம் வந்த தாஸ்யமானால் கும்ப நீர் உடைத்து அறுக்கலாம் –
ஆத்மசம்பந்தம் இத்தாலும் போகாதே —

ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான
உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான் சொல்ல வேணுமோ –
ரக்ஷணா சாபேஷனாய் வந்து இவனை ரஷியாத போது -உம்முடைய சர்வ ரஷகத்வம் விகலம் ஆகாதோ —
நல்கித் தான் காத்து அளிக்கும் நாரணன் —
லோக பார்த்தாராம் -லோகத்துக்குள் நான் இல்லையோ -சீதை கேட்டால் போலே -என்னையும் உளள்-போலே
அநாதிகாலம் நம்முடைய ஆஞ்சாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய் போந்த இவனை
அபராத உசித தண்டம் பண்ணாதே -அத்தை பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ
என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால்
உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-அவை ஜீவித்தாவது இவனை ரஷித்தால் அன்றோ –
நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது க்ருபாதிகள் ஜீவியாது -என் செய்வோம் என்ன வேண்டா –
சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கி -க்ருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆன பின் இவனை ரஷித்து அருளீர் என்னும் உபதேசத்தாலே —
இவ் உபதேச க்ரமம் இவர் தாம் அருளி செய்த பரந்தபடியிலும் –
ஆச்சான் பிள்ளை அருளி செய்த பரந்த ரஹச்யத்திலும் விஸ்தரேன காணலாம் –

பிதேவ த்வத் பிர யேத் ஜன நி பரிபூர்ணா கஸி ஜனே ஹிதே ஸ்ரோதோ வ்ருத்தையா
பவதிச சுதாசித் கலுஷதீ -கிமேதன் நிர்தோஷ -க இஹா ஜகதீதி த்வமுசிதைரூபாயைர்
விஸ்மார்ய ச்வஜநயசி மாதா ததாசி ந–ஸ்ரீ குண ரத்ன ஸ்லோகம் -என்று
அபராத பரிபூர்ண சேதன விஷயமாக ஹித பரனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் சீரும் படியையும் –
அத்தசையில் இச்சீற்றத்துக்கு அடி என் எனபது -இவன் தீர கழிய செய்த அபராதம் என்றவன் சொன்னால் –
மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் -என்பதே உசித உபாயங்களால் -அபராதங்களை
மறப்பித்து பிராட்டி சேர்த்து அருளும்படியையும் அருளி செய்கையாலே உபதேசத்தாலே
ஈஸ்வரனை திருத்தும் படி ஸங்க்ரஹேன பட்டரும் அருளி செய்தார் இறே-

தம் பிழையும் படைத்த பரப்பும் –அபராத சஹத்வம் பாராமல் – –மறப்பித்த தூது நாலுக்கும் விஷயம் –
அவதார தசையிலும் -பிராண சம்சய மா பன்னம் த்ருஷ்ட்வா சீதாத வாயசம்
த்ராஹி த்ராஹீதி பார்த்தார முவாச தாயாய விபும் -என்று வாசா மகோசரமான மகா அபராதத்தை பண்ணின
காகத்தை தலை அறுப்பதாக விட்ட ப்ரஹ்மாச்த்தரத்துக்கு ஒரு கண் அழிவு கற்ப்பித்து பெருமாள் ரஷித்து
அருளிற்றும்-இவள் உபதேசத்தாலே என்னும் இடம் -பாதம புராணத்திலே சொல்லப் பட்டது இறே –
த்ராஹி த்ராஹி -காப்பாற்ற வேண்டும் -என்பதே உபதேசம் -கிருபையை ரஷித்து அருள வேண்டும் என்றபடி

இனி சேதனனை திருத்துவது –
உன் அபதாரத்தின் கனத்தை பார்த்தால் உனக்கு ஓர் இடத்தில் காலூன்ற இடமில்லை –
ஈச்வரனானவன் நிரந்குச ச்வாதந்த்ரன் ஆகையாலே -அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு
அறுத்து அறுத்து தீர்த்தா நிற்கும் -இவ் அனர்ததத்தை தப்ப வேண்டில் -அவன் திருஅடிகளில் தலை
சாய்க்கை ஒழிய வேறு ஒரு வழி இல்லை -அபராத பரி பூர்ணனான என்னை அவன் அங்கீகரிக்குமோ
தண்டியானோ என்று அஞ்ச வேண்டா -ஆபிமுக்க்ய மாத்ரத்திலே அகில அபராதங்களையும் பொறுக்கைக்கும்-
போக்யமாக கொள்கைக்கும் ஈடான குணங்களாலே–ஷமா வாத்சல்யம் – புஷ்கலன் என்று லோக பிரசித்தனாய் இருப்பான் ஒருவன் –
ஆனபின்பு நீ சுகமே இருக்க வேணும் ஆகில் அவனை ஆஸ்ரயிக்க பார் -என்றும் பரம ஹித உபதேசத்தாலே –
அப்படி எங்கே கண்டோம் என்னில் –அவனும் ஹித காமன் -இவள் பரம ஹிதை-
பாபிஷ்டனாய் வழி கெட நடந்து திரிகிற ராவணனை குறித்து –
1-மித்ரா மவ்பயிகம் கர்த்தும் ராம / -2-ஸ்தானம் பரீப்சதா /-3-வதஞ்ச அநிச்சதா கோரம்
4-த்வயா ஸௌ புருஷர்ஷப–இந்த நாலையும் கீழே விவரித்து அருளுகிறார் –

விதிதஸ் சஹி தர்மஞ்சச் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்ச்சசி-என்று

1-பெருமாள் உடன் உறவு கொண்டாடுகை காண் உனக்கு பிராப்தம் -உசிதம் –
2-அது செய்ய பார்த்திலை யாகில் வழி யடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று-வழி அடிக்க வேணுமே –
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –அவர் அல்லாத ஒரு ஸ்தலம் இல்லை காண்
3–எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ் இருப்பு இருப்பதில் காட்டில் –
பட்டு போக அமையும் என்று இருந்தாயோ -உன்னை சித்ரவதம் பண்ணாமல் நல் கொலையாக கொல்லும்
போதுமவரை பற்ற வேணும் காண்
4–நான் பண்ணின அபதாரத்துக்கு என்னை அவர் கைக் கொள்வாரோ
என்று இருக்க வேண்டா -ஆபிமுக்க்யம் பண்ணினால் முன்பு செய்த அபராதத்தை பார்த்து சீரும்
அந்த புன்மை அவர்பக்கல் இல்லை காண் -அவர் புருஷோத்தமர் காண் -சரணாகதி பரம தர்மம் என்று அறிந்தவராய் –
சரணாகத தோஷம் பாரத வத்சலராக எல்லாரும் அறியும் படி காண் பெருமாள் இருப்பது –
நீ ஜீவிக்க வேண்டும் என்று இச்சித்தாய் ஆகில் அவரோடு உனக்கு உறவு உண்டாக வேணும் என்று
இப்படி அச்சம் உறுத்தி உபதேசித்தாள் இறே —

மைத்ரே– நட்ப்புக்கும் சப்தம் தர்மம் -சரணாகதியை இவனுக்கு தர்மம் -அறிந்தவன்
அவன் திருந்தாது ஒழிந்தது இவளுடைய உபதேச குறை அன்றே –
அவனுடைய பாப பிரசுர்யம் இறே இப்படி உபயரையும் உபதேசத்தாலே என்கையாலே
ஸ்ரூஸ்ரா -என்கிற தாதுவிலே
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்தில்
ச்ருணோதி ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் -வைத்து கொண்டு –
ச்ராவயதி என்கிற வ்யுத்பத்தி அர்த்தம் சொல்லப் பட்டது-

ச்ராவயதி -என்கிறது ஈஸ்வர விஷயமாக
பூர்வர்கள் கிரந்தங்களில் பலவற்றிலும் காணப் பட்டதாகிலும்

அதவா
விமுகா நாமபி பகவத் ஆஸ்ர்யேன உபதேச ஸ்ராவயித் ர்த்வம்
விதிதஸ் சஹி தர்மனஜஸ் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சசி
இதி ராவணம் பிரத்யு உபதேசாத் -என்று தத்வ தீபத்திலே சேதன விஷயமாகவும்–கேட்ப்பிக்கிறாள்- வாதி கேசரி அழகிய மணவாள
ஜீயர் அருளி செய்கையாலே இவ் இடத்திலும் சேதன விஷயமாகவும் சொல்லக் குறை இல்லை –

ச்ருணோதி -கேட்க்கிறாள்-
ச்ராவயதி -கேட்க்கும் படி செய்கிறாள்-இருவரையும் –

—-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-

உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-

ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது –
ஒம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிழ்த்துதல்-செய்து தன் அழகாலே அவனை
பிச்சேற்றி தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாத படி பண்ணி
அங்கீகார உன்முகன் ஆக்குகை-

ஆக -புருஷகாரம் ஆம் போது-7- -என்று தொடங்கி-இவ்வளவாக
புருஷகாரத்வ உபயோகிகளான குண விசேஷங்களையும் –
அவை தன்னை தானே வெளி இட்டபடியையும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டிலும் புருஷீகரிக்கையும் –
தத் பிரகார விசேஷங்களையும் –
சொல்லிற்று ஆய்த்து-

—————————

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –-மும்மணிக்கோவை -1-

ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம்
செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் -ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத் தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்

1-அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
2-இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
ஓர்–ஒப்பற்ற விலக்ஷணமான -நந்தா விளக்கு -தானே தனக்கு விளங்கும் நமக்கும் காட்டும் –
இன்–மங்களம் -மாசு படியாத- குளிர்ந்த- அனுகூலமான விளக்கு – ஒளி விளக்கு -அதிக தேஜஸ்
உண்மை காட்டும் -நாலா பக்கமும் – தன்னையும் காட்டும் விளக்கு
ஆபீ முக்கியம் மாத்திரத்தாலே –அவனை காட்டுபவள்–தீபம் பின் பக்கம் இருளாக காட்டும் -அது போலே இல்லையே
அவனுக்கே விளக்காக இருந்து விளங்குபவள் –விளக்கின் ஒளி -இவள் -தீர்க்க சமஸ்
கார் இருள் -போக்கும் -தீப பிரகாசர் -மிதுனம் –மஹத்தியா பிரபை

3-மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
குன்றில் இட்ட விளக்கு -குடத்தில் வைத்த விளக்கு இல்லை – மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே —
வரை -மலை என்றும் –பர்யந்தம் அதுவரை இதுவரை
கடலின் அடி வரை மந்தரம் வரை சென்றது -அது தாங்குமவரை கூர்ம மூர்த்தியை நாம் வணங்குவோம் –
பகவான் திரு உருவம் ரத்ன பர்வதம் –பத்து ஒற்றுமைகள் உண்டே –

தோஷம் இல்லா-அகில ஹேய ப்ரத்ய நீக
பெருமை நிலைப்பாடு -கௌரவம் கொடுக்கும் -தன்னை தொழுவார்க்கு நின் வடிவு அழகு மறவாதார் பிறவாதார் –
ஸ்திரம் -நிலை நிற்குமே – போக்யம்-மனத்துக்கு இனியான்-அஸ்ப்ருஷ்ட சிந்தா பதம் –
பிரகாசகம் -இயல்பாகவே -அணையா -ரத்ன தீப பிரகாசம் –அறிவு மலர வைக்கும் – மஹார்க்கம் விலையனான –
மங்களம் -பாராட்டுக்கு உரியவை – ஸூ ரக்ஷம்–எளிதில் ரஷிக்கலாமே –
ஸூ க்ரம்-முந்தானையில் முடிந்து ஆளலாம்-மனசில் கிரகிக்க எளியவன்
இந்த பத்து சாம்யம்

மணி வரை –அன்ன நின் திரு உருவம் –
பச்சை மா மலை போல் மேனி
திகழ் பசும் சோதி –மரகத்தைக் குன்றம் –கண் வளருவது போல் -திருவாசிரியம் –
மணி வரையும் மா முகிலும் –போல் இருந்த மெய்யானை மெய்ய மலையானை –கை தூக்கி தொழா கை அல்ல கண்டோமே –
என்னுள் திகழும் மணிக் குன்றம் ஓத்தே நின்று -திருவாய் மொழி – அவனே திரு மலை -ஸ்வரூபமும் ரூபமும் –
ரத்ன பர்வத –யதா ரத்னம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் —கிருஷ்ணன் இடம் மனோ ரதங்கள் சக்திக்கு ஏற்க கொள்கிறான்
ரத்ன பர்வத்தில் ஏறி சக்திக்கு தக்க கொள்வது போலே -இங்கே ஸ்வரூபம் உவமை –
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை -திரு நறையூர் நம்பி –நின் -மணி வரை -நீ மணி வரை -உன்னிடம் திரு –
மணியும் வரையும் போல -மணிவரை என்றுமாம்-
மணியும் வரையும் அன்ன என்றுமாம் –நீள் வரை போல் மெய்யனார் -நம் பாணனார் –
விட்டிலங்கு –மலையே திரு உடம்பு -திரு வாய் மொழியிலும் —
கருவரை போல் நின்றானை கண்ணபுரத்தம்மானை -பெரிய திருமொழி
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்கும் -தனித் தனியாகவும்
நீல மரதகம் மழை முகில் – வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தெய்வ நாயகனை
இமயம் மேய எழில் மணித் திரளை – -குடந்தை மேய குரு மணித் திரளை -முத்துஒளி மரகதமே –
கலியன் உரை தேசிகன் கருத்தில் குடி கொண்டு இருக்குமே -பை விரியும் –திருச்சேறை
கூற்றினை குரு மா மணிக் குன்றினை -படு கடலுள் மணி வரை போல் மாயவன் -மை விரியும் -திரு மேனி -கருமை மிக்கு
படுக்கையில் பை விரியும் -பணங்கள்- பள்ளி கொண்ட பரமன் –

மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
திரு மார்பில் -மலை போன்ற மார்பில் –ஸ்வரூபம் -விக்ரகம் -மார்பு -மூன்றுக்கும் –
மணி வரை யன்ன -நின் – மணி வரை யன்ன -நின் திரு உருவில் –
மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து -என்றபடி –
பண்புகள் பொது -மூன்றுக்கும் –மலைக்கு –
1-ஓங்கி நிற்கும் / 2-சிலா மாயம் -/ 3-திண்மை உறுதி /4- செல்ல அறியாது துர்லபம் /5-தபஸ்விகள் ரிஷிகள் நாடுவார்கள் /
6-ஷமா ப்ருத் -மலை-பூமியை தாங்கிக் கொண்டு இருக்கும்-பொறுமை – / 7- எல்லா உலகும் தாங்கு/
8-கயவர் கவர்ந்து போக முடியாதே -/9-இயற்க்கை எழில் /10-நதிகள் -குரு பரம்பரை ஆரம்பம் -பத்தும் உண்டே
உயரம் -உன்னதி உத்துங்கதி -நித்ய உன்னதர்கள் –வான மா மலையே அடியேன் தொழ வந்து அருளே –ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –
ப்ராம்சூ-நெடிய உயர்ந்தவன் -வான் அளாவியவன் –பெற்றி-ஸ்வபாவம் –நெடியானே வேங்கடவா –நின் கோயிலின் வாசல் –

4-நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க -வன்புடன் நின்னோடு வதரித்து அருளி

5-வேண்டுரை கேட்டு
மீண்டவை கேட்பித்து –
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக –
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே

————————————————

ரமாவின் பெருமை சொல்ல வந்ததே ராமாயணம் -சீதாயா சரிதம்

கந்தம் கமழும் குழலீ -அவனுக்கும் வாசம் கொடுக்கும்
உந்து மத கயிற்றில் ஆறு அர்த்தங்களும் உண்டே

———–

அநுபவ ரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும்
*அப்பொழுதைக்கு
அப்பொழுது*
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்த ஸத்த்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்தேயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிஹாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரப்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமர் சரம ஸ்லோகம் -ஸ்ரீ அபய பிரதான சாரம் –தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் / ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள்–

January 4, 2022

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

————–

அவதாரிகை –
இப்படி சொன்ன இடத்திலும் மஹா ராஜர் நேராகத் தெளியாதே
சலித ஹ்ருதயராய் இருக்கிற படியைக் கண்டு அருளி
ப்ரக்ருத்யநுகுணமாக ப்ரபன்ன பரித்ராண பிரதிஜ்ஞையைப் பண்ணி அருளுகிறார் –
ஸக்ருதேவ -என்கிற ஸ்லோகத்தாலே –

மித்ர பாவேந -என்கிற ஸ்லோகத்தில்
பிரகிருதி -தன்மையை -அருளிச் செய்தார் –
இதில் தத் அநு குணமாக பிரதிஜ்ஞையைப் பண்ணுகிறார்-

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-

ஸக்ருதேவ -ஒரு தரமே
ப்ரபன்னாய -பிரபத்தி பண்ணினவன் பொருட்டும்
தவாஸ் மீதி ஸ யாசதே –
தவ -உனக்கு அடியேனாய் –
அஸ்மி -ஆகிறேன் –
இனி -என்று -யாசதே -யாசிக்கிறவன் பொருட்டும்
சர்வ பூதேப்யோ-எல்லா பிராணிகள் இடத்தில் நின்றும்
அபயம் -பயம் இன்மையை
ததாமி-பண்ணிக் கொடுக்கிறேன்
யேதத் வ்ரதம் மம –இது எனக்கு விட முடியாத சங்கல்பம் –

ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு –
சஹஸா ஆதேஸமாய் –
சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி

அதாகிறது –
தன் அயோக்யதையைப் பார்த்துத் தே-இது ஆழ்வான் நிர்வாஹம் –

கீழ் அநாதிகாலம் சம்சரித்துப் போந்தவன்
மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும்
அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –

ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்
ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –

ஸக்ருதேவ -என்கையாலே
உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது –

தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –

ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி

தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் –
அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு

அபயம் சர்வ பூதேப்யோ ததாமி-
சர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன் –

பீத்ரார்த்தா நாம் பய ஹேது -பாணினி ஸூத்த்ரம் -1-4-25-

இதி ஹேதௌ பஞ்சமீ –
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டக் கொடோம் என்றபடி

யேதத் வ்ரதம் மம —
நமக்கு அநு பால நீயமான சங்கல்பம் இது
அமோக சங்கல்பரான நமக்கு சங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத சங்கல்பமாகும் இது –

————————————————————————————————————————————————————————————-

தனி ஸ்லோக- வியாக்யானம்-

அவதாரிகை –
ஸ ராவண -யுத்த -11-33-என்று பெருமாளும் பரிகரமுமாகக் கடல் கரையிலே குறுகி
வந்து விட்டார்கள என்று கேட்ட ராவணன்
சசிவசா மந்த மந்த்ரி புரோஹிதாதி வர்க்கத்தைக் குறைவறக் கூட்டி

பவித்பிர் -12-26-என்று நியமித்து கார்ய விசாரம் பண்ணுகிறவன்
தான் செய்து நின்ற நிலைகளையும் செய்ய வேணும் கார்யங்களையும் சொல்லி

தஸ்ய காம பரி தஸ்ய -12-27-என்று இத்தைக் கேட்ட கும்ப கர்ணனும் குபிதனாய்

யதா து ராமஸ்ய -12-28-என்று இவன் அபஹரித்த வன்றே இப்படி விளையும் என்று அறுதி இட்டோமே என்று
ஸ்வ புத்தி சம்வாதத்தை சம்வதித்து

சர்வமேத -12-29-என்று செருக்கி நான் செய்த வற்றுக்கு ஒப்புண்டோ என்ற ராவணனை அதி ஷேபித்து
எங்கள் சொல் கேட்டுச் செய்ய இருந்தாய் ஆகில் இந்த சீதா அபஹாரத்துக்கு முன்பே அன்றோ செய்வது -என்றும்

ய -பஸ்சாத்-12-32- என்று பூர்வ உத்தர கார்யங்களை க்ரம ஹீனமாகப் பண்ணுகிறவன் நயாப நயங்களை அறியான் என்றும்

திஷ்ட்யா-12-34-என்று நஞ்சூட்டின பழம் போலே இனியராய் இருக்கச் செய்தேயும் அறக் கொடியர் பெருமாள்
அவர் உன்னைக் கொல்லாது ஒழிந்தது உன் புண்யம் -என்றும்

அதில் கோபித்து இவன் வெறுக்க ஒண்ணாது என்று சமீ கரிஷ்யாமி -12-35-என்று
பள்ளத்துக்கு மேட்டை நிரவுமா போலே உன் அநீதியை என் தோள் வலியாலே ஒக்க விடுகிறேன் -என்று சமாதானம் பண்ண

மஹா பார்ச்வனும் அவனுக்கு பிரியமாக சில வார்த்தைகளைச் சொல்லி -நிசாசர-14-1- என்று
அவர்கள் நிரர்த்தகமாகப் பிதற்றின வார்த்தைகளைக் கேட்டு விபீஷணப் பெருமாள் ஹிதரூபமாக

வ்ருதோ-14-2-என்று
பாம்போடு ஒரு கூரையிலே பயிலுவாரைப் போலே -பெரிய திருமொழி -11-8-3-
சீதை யாகிற பெரும் பாம்பின் அருகே கையை நீட்டுவார் உண்டோ –

யாவந்த -14-3/4-என்று தொடங்கி-குரங்குகள் கடலை அடைத்துப் படை வீட்டை அடைக்கப் பார்க்க புகுகிறார்கள்
ராம சரங்கள் குறும் தெருவும் நெடும் தெருவுமாக புகுந்து தலைகளைத் திருகப் புகுகிறது
அதுக்கு முன்னே பிராட்டியைப் பெருமாள் பக்கலிலே போக விடாய்-என்றால் போலே சில வார்த்தைகளைச் சொல்ல

ப்ரகுஅச்த இந்த்ரஜித் ப்ரப்ருதிகளும் அதுக்கு விபரீதமாக சில வார்த்தைகளைச் சொல்ல

ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் குபிதராய் –
ந தாத -15-9/10/11-என்று தொடங்கி உனக்கு இவற்றில் அபியோகம் இல்லை
பெற்ற பிள்ளை நீ தான் புத்ரன் என்று ஒரு சத்ருவாய் இருந்தாய்
தகப்பனார் அனர்த்தத்தை இப்படி இசைவார் உண்டோ
சத்ருக்களைக் கொல்லில் முற்பட உன்னைக் கொல்ல வேண்டும் என்று வார்த்தை சொல்லி

த நாநி -15-14-என்று உபஹார புரஸ் சாரமாகப் பிராட்டியை உடையவன் வசத்திலே விட்டு
உங்கள் முடியோடு நெஞ்சாறல் கெட்டிருக்கப் பாருங்கோள்-என்றுசர்வர்க்கும் ஹிதம் சொல்ல

இத்தைக் கேட்ட ராவணன் ஸூ நிவிஷ்டம் -16-1-என்று இப்படி ஹிதம் சொன்னால்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய்-2-7-8–என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2- என்றும்
காலிலே விழப் பிரார்தமாய் இருக்க
தன் வசம் இன்றியிலே கால பரவசனான படியாலே பருஷங்களைச் சொல்லி

த்வாம் து திக் குல பாம்சனம் –16-16-என்று திக்கரிக்க

உத்பபாத கதா பாணி -16-17-என்று
சோதர ப்ராதாவுமாய் ஹித உபதேசம் பண்ணின என்னை இப்படிச் சொன்ன இவன் என் படப் புகுகிறான் -என்று
தளர்ந்து தடியூன்றி எழுந்து இருந்து தனக்கு பவ்யராய் இருப்பார் நாலு பேரோடு கிளம்பி

ஆத்மானம் -16-26- என்று நாலு வார்த்தை சொல்லி

ஆஜகாம முஹூர்த்தே ந -17-1-என்று
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-புரிவதற்கு முன்னே
தம்பி சொல்லு ஜீவியாத ராவண கோஷ்டியில் நின்றும்
தம்பி சொல்லு ஜீவிக்கிற ராம கோஷ்டியை நோக்கி வந்து

நிவேதயாத மாம் ஷிப்ரம் ராகவாய மகாத்மனே -17-15-என்று
நெறி கெட மடுத்துக் கொண்டு புகலாகாது
அதி சங்கையும் பண்ணுவார்கள்
த்வார சேஷிகளை கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து
ஆனய-18-34-என்னப் புக வேணும் என்று நின்ற நிலையிலே நின்று விண்ணப்பம் செய்ய

இத்தைக் கேட்ட மஹா ராஜர் -யேதத்து -17-16-என்று இவன் வார்த்தையைக் கேட்டு
பெருமாள் முற்பாடராய் வருவதற்கு முன்னே தாம் நடை இட்டுச் சென்று ராஜ்ய கார்யங்கள் விசாரிக்க வேண்டாவோ –
ஓய்ற்றரியோ போக விட வேண்டாவோ -நம்மிலும் அவர்கள் முற்பட்டார்கள் –

ப்ரணிதீ -17-20-என்று இங்கு ஆகாசத்திலே நிற்கிற இவன் ஒற்றனாக வேணும் –
ராவணன் தமி -மூர்க்கன் -நலிய வந்தவன்
இவனைக் கழுத்திலும் காலிலும் கோக்க அடுக்கும் -என்பது –
அது பெருமாள் செவிக்குப் பொறுத்த வாறே –
வந்தவனையும் அவனையும் கொல்ல பிராப்தம் -என்று சொல்ல

இத்தைக் கேட்டு அருளின பெருமாள் திரு உள்ளம் தளும்பி முதலிகளைப் பார்த்து –
யதுக்தம் -17-30-என்று முதலிகளைப் பார்த்து
தோழனார் ராஜாக்களாய்ச் செருக்கிச் சொன்ன வார்த்தையை
சரணாகத ரஷணம் பண்ணின ஜாதியிலே பிறந்த நீங்களும் கேட்டிகோளே-
உங்கள் நினைவுகளை சொல்லுங்கோள்-என்ன

ஸ்வம் ஸ்வம் -17-32-என்று மாட்டார்கள் -மகா ராஜர்க்காக மாட்டார்கள் உபயாவிருத்தமாகப் பரீஷித்து
ஒழுக விசாரித்துக் கைக் கொள்ள பிராப்தம் -என்று சொல்லித் தலைக் கட்ட –

இத்தைக் கேட்ட திருவடியும் எழுந்து இருந்து ந வாதான் -17-50-என்று
இப் பஷங்களை அழிக்கப் புகுகிறவன் ஆகையாலே
சிலரோடு பிணக்கு யுண்டாய் அல்ல -சிலரோடு வெறுப்பு யுண்டாய் அல்ல –
எல்லார்க்கும் மேலாய் நியாமகனாய் அல்ல -பிரதிபன்ன வாதி யல்ல –
அப்யஹம் ஜீவிதம் ஐ ஹ்யாம் -ஆரண்ய -10-19-என்கிற பெருமாளை இழக்க வரும் என்று
பெருமாள் பக்கல் ஆதாரத்தால் சொல்லுகிறேன் -என்று அவை அடக்கம் சொல்லி

புகுர விட்டால் பரீஷிப்பது -பரீஷித்தால் புகுர விடுவது என்று அந்யோந்ய ஆஸ்ரயணம் வரும்
தாத்ரா -17-58-என்று சாம பேதம் பண்ணிக் குலைத்து அழைக்க ப்ராப்தமாய் இருக்க
தன்னடையே விஸ்வசித்து வந்தவனை அதிசங்கை பண்ணினால் குலைந்து போம்
அப்போது ராஜ நீதி அல்ல -சாஸ்திர விருத்தம் -என்று பர பஷ தூஷணம் சொல்லி
ந த்வச்ய-17-60/61-என்றும் இப்புடைகளிலே ஸ்வ பஷ ஸ்தாபனத்தையும் பண்ணி
திரு முன்பே நாமும் சில அறிந்தோமாகஒண்ணாது என்று யதா சக்தி -17-66-என்று
அடியேனுக்குத் தோன்றின அளவு விண்ணப்பம் செய்தேன் இத்தனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -என்று
தேவரீர் திரு உள்ளத்தில் அகலத்துக்கு இது எங்கே -இனி திரு உள்ளமான படி செய்து அருளீர் என்று தலைக் கட்ட

அத ராம-18-1-என்று காற்றின் மகனான திருவடியாலே லப்த சத்தரான பெருமாள்
தன் திரு உள்ளத்தில் கிடந்தது அருளிச் செய்வதாகக் கோலி

மித்ர பாவேந -18-3-என்கிற ஸ்லோகத்தாலே
மித்ர பாவேந சம்ப்ராப்தன் சதோஷனே யாகிலும் கை விடேன் என்று சொல்லி

தஸ்யாநு பந்தா பாபமாந சர்வே நச்யந்தி தத் ஷணாத்-அஹிர்புத்த -37-33-என்று
பிரபன்னன் ஆனபோதே நிர்த்தோஷன்
இப்படி -பிரபன்னனாய் நிர்த்தோஷன் ஆனவனுக்கு –
உம்மாலும் என்னாலும் பிறராலும் வரும் பயன்களைக் போக்கக் கடவேன் -என்கிறார் இந்த ஸ்லோகத்தால்

வேதோ உபப்ப்ரும்ஹணா ர்த்தாய தாவக்ராஹயாத பிரபு -பால -4-6-என்று
வேத ப்ரும்ஹண ப்ரவண ப்ரபந்தம் அன்றோ இது
இவ்விடத்தில் உபப்ரும்ஹிக்கிற வேதார்த்தம் எது -வேத வாக்கியம் தான் எது -என்னில் –

தம் ஹி தேவமாத்மபுத்தி பிரசாதம் முமுஷூவை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வே-6-18-என்றும்
ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே ஸ்வஸ்தி சம்பாதேஷ்வபயம் நோ அஸ்து-ருக்வேத -என்றும் சொல்லுகிற
பிரபத்புபாய வைபவம் இவ்விடம் உபப்ரும்ஹிக்கிறது

வாக்யமும் ப்ரயதபாணி சரணமஹம் ப்ரபத்யே என்கிற இது
சரனௌ சரணமஹம் ப்ரபத்யே –என்று த்வயம்
சரணம் காடம் நிபீட்ய–அயோ என்றும்
திருவடிகளைக் கையாலே பிடிக்கும் போது ஸூத்த ஹஸ்தனாக வேணும்

அந்த ஸூத்த ஹஸ்ததையாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை -என்றும்

வீடு மின் முற்றவும் -திருவாய் -1-2-1- என்றும்
மற்றாரும் பற்றிலேன் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் உபாயாந்தரங்களை விட்டுப் பற்றுகை –

அத்தை இறே ப்ரயதபாணி -என்கிறது –

மாம் வ்ரஜ -சரணம் ப்ரபத்யே –
பிரார்த்தனா மதி சரணாகதி -என்று
உபாய பிரார்த நாரூப ஜ்ஞானத்தை -சரணம் பிரபத்யே -என்கிறது –

இவ்வாக்யத்தை இந்த ஸ்லோகம் உபப்ரும்ஹித்தபடி ஏன் என்னில்
சக்ருத் ஏவ -என்கிற பதங்களால்
அசக்ருதாவ்ருத்தி சாபேஷையான பக்தியை வ்யாவர்த்திக்கையாலே
சர்வ தர்ம தியாக பூர்வகமான ப்ரயுத பாணி என்கிற பதத்தையும்
பிரபன்னாய-என்கிற பதத்தாலே சரணம் பிரபத்யே -என்கிற பதங்களையும்
த்வாஸ் மீதி ச யாசதே -என்கிற பதங்களாலே ஸ்வஸ் த்யஸ்து -என்கிற பதங்களையும்
அபயம் ததாமி -என்கிற பதங்களாலே அபயமஸ்து-என்கிற பதங்களையும் உபப்ரும்ஹிக்கிறது

ஆகிறது -ப்ரபத்யே என்கிற பிரபதன தசையில்
ஏக வசனமாய் இரா நின்றது

பல தசையிலே ந என்று-எங்களுக்கு என்று – பஹூ வசனமாய் இரா நின்றது –
இது செய்யும்படி ஏன் என்னில்

வைஷ்ணவோ ந குலே ஜாத என்று ஏக வசனமாகச் சொல்லி
தே சர்வே முகத்திமா யாந்தி -என்று பஹூ வசனமாகவும்

யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே பிராஸ் யந்தி -என்று ஏக வசன பஹூ வசனங்களாலும்
இப்படி பஹூ பிரமாணங்கள் உண்டாகையாலும் –

லோகத்தில் ஒருவன் ராஜ சேவை க்ருஷ்யாதிகளைப் பண்ண
அவன் யத்ன பலமான அன்ன தான தான்யா வஸ்த்ராதி பலங்களை
அவன் அபிமானத்திலே பார்யா புத்திர சிஷ்ய தாசாதிகள் வருத்தமற புஜிக்கக் காண்கையாலும்

இப்படி லோக வேதங்களிலே அநு பூத சரமாகையாலே
ஒருவன் பிரபன்னனாக
அவன் அபிமானத்திலே ஒதுங்கினார்க்கு எல்லாம் பலமாகக் கடவது -என்கிறது –

ஆகிறது -பிரபத்த்யுபாயம் என்பது
எம்பெருமான் உபாயம் என்பதாகா நின்றது –

பிரபத்தியாவது –
த்வமேவோ பாய பூதோ மே பவதி -ப்ரார்த்த நா மதி -சரணாகதி -என்று
சேதனனுடைய ப்ரார்த்த நா ரூப ஜ்ஞானமாய் இரா நின்றது –

எம்பெருமான் ஆகிறான்
ப்ரார்த்த நீயானாய் இருப்பான் ஒருவன் பரம சேதனனாய் இரா நின்றது –
இது செய்யும்படி என் என்ன –

ப்ராம்ருஷ்ட லிங்கம் அநு மானமாய் இருக்க –
லிங்க பராமர்சோ அநு மானம் -என்று பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற
ஔ பசாரிகமாகப் பராமர்சத்தைச் சொன்னால் போலவும்

நீலாம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் என்றால்
ஜ்ஞானத்துக்கு ஒரு நைல்ய பீதி மாதிகள் அற்று இருக்க
விஷயகதமான நைல்ய பீதி மாதிகளை விஷயியான ஜ்ஞானத்திலே உபசரித்து
நீளம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் -என்றால் போலேயும்

ஸ்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற
ஸ்வீ கார விஷயமான பகவத் கத உபாய வ்யவஹாரத்தை
விஷயியான ஸ்வீகார ரூப பிரபத்தி ஜ்ஞானத்திலே உபசரித்து சொல்லுகிறது
ஆகையால் ஒரு விரோதமும் இல்லை –

மலை நெருப்பை யுடையது புகை இருப்பதால் -அநு மானம்
மலை -பஷம்
நெருப்பு சாத்தியம்
ஹேது -லிங்கம் –

அடையாளம் காரணம் -ஆகிறது-
ஸ ஸ்வேநைவ பலப்ரத ஸ்வே நைவ நாராயண -அனர்க்க ராகவம் -3-20-என்றும்
மாம் வ்ரஜ -ஸ்ரீகீதை -18-66-என்றும்
மாமேவைஷ்யசி -ஸ்ரீ கீதை -18-65-என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நான் ஆட் செய்யோம் -என்றும்
எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று இறே சொல்லுகிறது –

அந்த உபாய உபேயங்கள் ஆகிறது கார்ய காரணங்கள் இறே

யத நந்தரம் யத்த்ருச்யதே தத் தஸ்ய காரணம் -என்றும்
நியத பூர்வ பாவி காரணம் -என்றும்
பூர்வ பாவியுமாய் பூர்வ காலத்திலேயே சத்துமாய் இறே காரணம் இருப்பது

நியத பஸ்சாத் பாவித்வம் ச கார்யத்வம் -என்றும்
ப்ராக சத் சத்தா யோகித்வம் கார்யத்வம் -என்றும்
பூர்வ காலத்திலேயே சத்துமாய் இராதே
அத்தாலே பிறக்கக் கடவதுமாய் பஸ்சாத் பாவியுமாய் இறே கார்யம் இருப்பது

இப்படி இருக்க
நித்யம் விபும் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் என்றும்
ஏகமே யத்விதீயம் -என்றும்
நித்யமுமாய் ஏகமுமாய் இருக்கிற பகவத் வஸ்துவுக்கு
பரஸ்பர விருத்தமான பாவ அபாவத்மகத்வம் கூடும்படி என் -என்னில் –

ஸ தேவ சோம்யேத மக்ர ஆசீதே கமேவாத் விதீயம்ம்,-என்றும்
அவிகாரமுமாய் நித்யமுமாய் ஏகமுமான ப்ரஹ்மத்துக்கு
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத் -என்றும்
ஸோ ஆகாமயத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி -என்றும்
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே -ஸ -என்றும்
த்ரிவித காரணத்வமும் ஸ்ருஷ்டுஸ்ருஜ்யத்வமும் பரஸ்பர விருத்தமுமாய் இருக்க

ஸூஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் காரணம்
ஸ்தூல சிதசித விசிஷ்ட ப்ரஹ்மம் கார்யம் -என்று
அவ்விருத்த தர்மங்கள் விசேஷணங்களிலேயாய் –
விசிஷ்ட ஐக்யத்தாலே நிர்வஹித்தால் போலே

இங்கும் –
தாது ப்ரசாதான் மஹிமா நமீ சம்-என்றும்
தஸ்மின் பிரசன்னே க்லேச சங்ஷய -என்றும்
ப்ரஹர்ஷயாமி-என்றும்
த்வத் ப்ரீதயே-என்றும்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் வியக்க இன்புறுதும்-என்றும்

பிரசாத விசிஷ்டன் உபாயம்
ப்ரீதி விசிஷ்டன் உபேயம்
என்று விசேஷண பேதம் கிடக்கச் செய்தே விசிஷ்ட ஐக்யத்தாலே
உபாய உபேய எம்பெருமான் என்கிறது ஆகையாலே எல்லாம் கூடும்

இரக்கம் உபாயம் –
இனிமை உபேயம் -என்று இறே ஜீயர் அருளிச் செய்யும் படி –

அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்று பிரபத்யாதி சாத்யம் இறே மோஷம்
சாத்யம் ஆவது முன்பு இன்றியிலே பின்பு உத்பன்னம் ஆவது

உத்பன்னச்ய வினாச யோகாத் -என்று உத்பன்னமாய் நசிக்கும் ஆகில்
உபேயமான பகவத் ப்ராப்தி ரூப மோஷ நசிக்குமாய் இருந்ததே என்னில் நசியாது

இதுக்கு இரண்டு பிரகாரம் உண்டு –

அதில் ஓன்று சாத்யம் தான்-
உத்பாத்யம் என்றும் –
ப்ராப்யம் என்றும் –
விகார்யம் -என்றும்
சம்ஸ்கார்யம் -என்றும் நாலு பிரகாரமாய் இருக்கும்

உண்டு பண்ணப் படுவது –
அடையப்படுவது –
விகாரம் அடைவிக்கப் படுவது –
சம்சரிக்கப் படுவது –
சாதிக்கப் படுபவை நான்கு வகை –

அவற்றில் உத்பாத்யமாவது –
கடம் கரோதி -படம் கரோதி போலே முன்பு இன்றியிலே பின்பு உண்டாவது

ப்ராப்யம் ஆவது –
க்ராமம் கச்சதி ராஜா நம் கச்சதி -என்றும்
காம் தோக்தி பய -என்று முன்பே சித்த ரூபமான வஸ்துவை அதிகாரிக்கு இடுகை –

விகார்யம் ஆவது –
ஷீரமப் யஞ்ஜயதி -என்றும்
தரபுசீசே ஆவர்த்தயதி –
பாலைத் தயிர் ஆக்குகையும் ஈயங்கள் உருக்குகையும்

சம்ஸ்கார்யம் ஆவது
வ்ரீஹீன் ப்ரோஷதி -என்றும்
வ்ரீஹீ நவ ஹந்தி -என்று தன்னைக் கார்யாந்தர யோக்யமாகப் பண்ணுகை-
மந்திர ஜலத்தால் பிரோஷித்து -நெல்லை உரலில் இட்டு குத்தி போல்வன

இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும்
பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய -என்றும்
உன்னை எய்தி -என்றும்
பண்டே சித்த ரூபனான பரமாத்மாவை இவன் கிட்டுகையாலே ப்ராப்யம் நித்தியமே யாகிறது

இனி மற்றை இரண்டாவது பிரகாரம் –
நிதிப் நித்யா நாம் -என்றும்
அஜோஹ்யேக-என்றும்
ந ஹாய் விஜ்ஞாதூர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும்
பர நல மலர்ச் சோதி -என்றும்
ஆத்மாக்கள் நித்யர் ஆகையாலும்
இவர்களுக்கு தர்மமான ஜ்ஞானா நந்தாதிகள் நித்யங்கள் ஆகையாலும்

தமஸா கூட மக்ரே பிரகேதம் -என்றும்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா-என்றும்
ஆத்ம ஸ்வரூப தர்மங்களுக்குத் திரோ தாயகமாய் பிரகிருதி சம்சர்க்கம் போய்

ஸ்வே ந ரூபே ணாபி நிஷ்பத்யதே -என்றும்
ஆவுர்ப்பூதஸ்வ ரூபஸ்து-என்றும்
அவபோதா தயோ குணா பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே-என்றும்
ஸ்வா பாவிகாரம் விஸ்த்ருதமாய் உத்பாத்யம் அன்றிக்கே ஒழிகையாலும் நித்யம் ஆகிறது என்ற பிரகாரம் –

அவையும் அப்படி ஆகிறது –
இப் பிரதேசம் பிரபத்த்யுபப்ரும் ஹணம் பண்ணுகிறதாகில்
அஹம் அஸ்மா அபராதானாம் ஆலய –என்கிற
பிரபத்தி லஷணம் கிடந்ததோ என்னில்

ராவணோநாம துர்வ்ருத்தோ -17-19-என்று ராவண சம்பத்தாலும்
பீஷ யசே ஸ்மபீரோ-15-4-என்று நாம நிர்வசனத்தாலும்
ஸ்வ தோஷத்தை முன்னிடுகையாலே –
அஹம் அஸ்ம்ய அபராதானாம் ஆலய -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

ராஜ்யம் ப்ரார்த்தயமா நச்ச-17-65- என்று
தனக்கு ராஜ்யம் வேண்டி வந்தவனாய் பெருமாளுக்கு கிஞ்சித்காரம் பண்ண வந்தவன் அல்லாமையாலே
அகிஞ்சன -என்னும் அர்த்தம் சொல்லுகிறது

த்வாம் து திக் குல பாம்சநம் -16-15- என்று தள்ளி விடும்படி
ஸோ தரப்ராதாவுக்கு உட்பட ஆளன்றிக்கே போருகையாலே அகதி என்னும் அர்த்தம் சொல்லுகிறது

பவந்தம் சரணம் -19-4- என்கையாலே
த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்த நா மதி சரணாகதி -என்னும் அர்த்தம் சொல்லுகிறது

பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்கையாலே
சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்னும் அர்த்தம் சொல்லலுகிறது

ஆகையால் இது நேராகக் கிடந்தது

ஆநு கூல்ய சங்கல்பாதிகளும் கிடந்ததோ என்னில் –
இந்த லஷணமும் புஷ்கலம்

ஆத்மாநாம் -16-25-என்று ராவணனுக்கும் படை வீட்டுக்கும் நன்மையை ஆசாசிக்கையாலே
ஆநு கூல்ய சங்கல்பம் சொல்லிற்று

உத்பபாத கதா பாணி -16-16- என்று கையிலே தடி இருக்க
பரிபவித்தனை கரைய வடித்து போராமையாலே ப்ராதி கூல்ய வர்ஜனம் சொல்லிற்று –

வாலி நஞ்ச –17-6-என்று ஸோ தா ஹரணமாக ராஜ்யம் த்ரவ்யம் என்று
அறுதி இட்டு வருகையாலே ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லிற்று

பவந்தம் சரணம் கத -19-4-என்று சொல்லுகையாலே
கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்று

பவத்கதம் -19-5-என்று அகில பர சமர்ப்பணம் பண்ணுகையாலே
ஆத்ம நிஷேபம் சொல்லிற்று –

பிராணா தச்ச-18-14-என்று ஸ்வரத்தில் தளர்த்தியாலும்
சீக்ரம் -17-7- என்று பெருமாள் பக்கல் போக ஒண்ணாத படி நடு வழியிலே கொல்ல நிற்கையாலும்
தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -என்கிற
கார்ப்பண்யம் சொல்லிற்று

ஆகையாலே இந்த லஷணமும் புஷ்கலம் –

இப்படி
புஷ்கல லஷணையான பிரபத்தியைப் பண்ணி
இதுக்குப் பலமாக கொள்ளைக் குப்புக்கு கூலம் எடுத்தவோ பாதி
நாம் இருக்க பலாந்தரங்களை ஆசைப்படாதே
நம்மையே உகந்து வந்தவனுக்கு சகல பய நிவ்ருத்தியும் பண்ணுவேன்
இது நமக்கு வ்ரதம் என்கிறார் இந்த ஸ்லோகத்தாலே –

———————

இப்படி அபய பிரதானம் பண்ணுவது ஆருக்கு என்னில் –
சக்ருதேவ பிரபன்னாய –
ச லஷண பிரபத்தி பண்ணினவனுக்கு –
அதாவது -சக்ருதேவ பிரபன்னனாய் இருக்கை-

சக்ருத்-தனக்குப் பொருள் என் என்றால் –
ஆவ்ருத்தி ரசக்ருதுபதே சாத் -என்றும்
அநேக ஜன்ம சமசித்த -என்றும்
பக்தி போலே ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் சிரகால சாத்யை யன்றிக்கே

தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவது -கடவல்லி -என்றும்
உபாயோசயம் சதிர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-76-என்றும்
ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் ஒரு காலேயாய் இருக்கை –

சக்ருதேவ -என்கிற அவதாரணம் –
பிரபன்னனே-என்றும்
ஒருகாலே -இருகால் மாட்டில்லை -என்றும்
அயோக வ்யவச் சேதமோ -அந்யயோக வ்ய்வச் சேதமோ

சங்கு வெளுப்பே –அயோக வ்யவச் சேதம் -அப்பொருள் அங்கே இருக்கிறது போலே
பார்த்தன் ஒருவனுமே வில்லாளி – ஒருவன் தான் என்பதை குறிக்கும் அந்ய யோக வயவச் சேதம் –

பிரபன்னனே -என்ற போது பிரபன்னனை அநு வதித்து
அவனுக்கு அபய பிரதானம் பண்ணுவன் என்று வாக்யத்துக்கு விதேயம் இத்தனை போக்கி
பிரபன்னனோ அபய பிரபன்னனோ என்று விமர்சமாய்
பிரபன்னனே என்று விதயம் அல்லாமையாலும் –
அயோக வ்யவச் சேத பொருள் பொருந்தாது

சக்ருச்சாரோ பவதி -என்றும்
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த -என்றும் பிரபத்தியாகில்
சக்ருத் பிரயோஜ்யையாய் -அசக்ருத் பிரயோஜ்யை அல்லாமையாலே
சக்ருத்தா வ்ருத்தியாய் இருப்பதொரு பிரபத்தியில் வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அயோக வ்யவச் சேதம் இல்லாமையாலும்

அபயங்கதோ பவதி என்று அப்பிரபன்னனான பக்தி நிஷ்டனுக்கும்
அபாய பிரதானம் பண்ணின படியாலே
அந்ய யோக வ்யவச் சேதம் அல்லாமையாலும்
வ்யாவர்த்தம் இல்லை என்று இட்டு வ்யர்த்தம்

இனி சக்ருதேவ -என்று இங்கே கூட்டின போது-
சக்ருதேவ குர்யான் ந அசக்ருத் -என்று
பிரபத்தி ஸ்வரூப அபிதானம் பண்ணுகிறது அன்றிக்கே
பிரபன்னன் அநூத்யனாய்
அபாய பிரதானத்திலே தாத்பர்யம் ஆகையாலே சக்ருத்தோடே கூட்டிலும் வ்யர்த்தம்

இந்த உபபத்திகளாலே சக்ருத் பிரயோகமும் வ்யர்த்தம்

சக்ருதேவா பயம் ததாமி -என்று
இங்கே அன்வயித்தாலோ என்னில்
ஒரு சரீரிக்குப் பிறக்கக் கடவ பயன்கள் எல்லாம் ஒரு காலே சஹிதமாய்
அவற்றினுடைய நிவ்ருத்தியை ஒரு காலே பண்ணுகிறதல்ல-

பூத காலத்தில் பயங்கள் பண்டே அனுபவித்துப் போயிற்றன –

ஆகாமி காலத்தில் பயங்கள் உத்பன்னம் அல்லாமையாலே
நிவ்ருத்தி இப்போது பண்ண ஒண்ணாது

இன்னமும் ததாமி -என்று ப்ராரப்தமாய் –
நிகழ கால பிரயோகம் -பரிசமாப்தம் அல்லாத பயங்கள் உத்பன்னங்கள் அல்லாமையாலே
மேல் வரும் அவை அடைய வர வரப் போக்குகிறேன் என்கிற வர்த்தமானத்துக்கும்
ஒரு கால் என்கிற சக்ருத் பதத்துக்கும் வ்யாஹதியும் வரும்

அபாய பிரதானம் பண்ணுகிற இன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாகவும்
பயங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் அவதி இல்லாமையாலே அனுஷ்டான விருத்தமும் ஆகையாலே
சக்ருத் என்றும்
ஏவ என்றும் ப்ரஸ்துத பதங்களுக்கு வையர்த்யம் வரும் என்னில்
வாராது –

1- சக்ருத் ஏவ –
பிரபன்னன் என்றார் பெருமாள் –

அதுக்கு அனுபபத்தியாக மஹா ராஜர் சக்ருத் பிரயோஜ்யை யான ப்ரபத்தியை –
ராகவம் சரணம் கத –17-14- என்றும்
பவந்தம் சரணம் கத-19-4- என்றும்
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்றும்
முக்கால் பண்ணி பிரபத்தி லஷண ஹாநியும்
ப்ரபத்த்ரு ஸ்வரூப ஹாநி யும்
பிரபத்தவ்ய ஸ்வரூப ஹாநி யும் -பண்ணினான் என்று தூஷணம் சொல்ல

சக்ருதேவ பிரபன்னாய –
அவன் பலகால் பண்ணிற்று இலன் –
ஒரு கால் பண்ணினான் -என்கிறார்-

நாலு மூன்று பண்ணை பண்ணிற்றாக எடுத்த பிரமாணங்கள்
செய்யும்படி என் என்னில்

ராஷசோ -17-5- என்று
அபிசாபம் -கடும் சொல் -சொன்ன உங்களைப் பார்த்து
ஸோ அஹம் —ராகவம் சரணம் கத -17-14- என்கிறபடி
விரோதியாய் வந்தவன் அல்லேன்
அவன் தானே பரிபவித்து போகச் சொல்ல –
அவனோட்டை சம்பந்தங்களையும் விட்டு பெருமாளை சரணம் புக வந்தேன்
என்று தன அருள்பாடு சொன்னான் முற்பட –

சரணம் கத-என்கிற நிஷ்டை
உம்முடைய வார்த்தைகளாலே கலங்கினோமே என்று சங்கித்து
நம்மைத் தெளிய விடுகைக்கு
பவந்தம் சரணம் கத -என்று விண்ணப்பம் செய்த படி

பாதகனாய் வந்தவன் அல்லன்
உம்மை சரணம் புகுவதாக வந்தவன் என்று நமக்கு பட்டாங்கு சொன்னான் இரண்டாம் பண்ணை –

ஆ நய-18-34-மேல் -என்று நாமும் அழைத்து
அஸ்மாபிஸ் துல்யோ பவது –18-38-என்றும்
ஸ்கித் வஞ்சாப்யுபைது ந-என்று நீர் அனுமதி பண்ணின பின்பாயிற்று –
காத் பபாதாவ நிம் -19-1- என்று பூமியிலே இழிந்து
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2-என்று
நம் காலிலே விழுந்தது ஆகையாலே ஒரு காலே யாயிற்று அவன் சரணம் புகுந்தது –

ஒரு ஹானியும் பண்ணிற்று இலன் -என்கிறார் –
ஆகையாலே சக்ருதேவ -என்கிற பதம் பிரயோஜனம் ஆகிறது

2-அன்றியிலே -சக்ருதேவ பிரபன்னாய -என்று
அநேகஸ்மாத வ்யாவ்ருத்தோ தர்ம –அநேக தர்ம -என்கிறாப் போலே
சக்ருத்வ நிச்சித்ய ப்ரபன்னன்-என்றாய் –
மத்யம பத லோபி யான சமாசமாய் –

விசார்யா ச புன புன -என்று
துஷ்டனோ அதுஷ்டனோ –
மித்ரனோ அமித்ரனோ
வத்யனோ அவத்யனோ –
ஸ்வீகாரனோ பஹிஷ்கார்யானோ
என்று நாம் பட்டால் போலே

லங்கா மித்ர நாதிகளை விடுவேனோ பற்றுவேனோ
ராவணனை விடுவேனோ பற்றுவேனோ –
போகிற இடத்தில் கைக் கொள்ளுவார்களோ தள்ளுவார்களோ
ராஜ்யம் கிடைக்குமோ கிடையாதோ என்று
இப்புடைகளிலே பஹூ முகமாய் விசாரித்து அளப்பது முகப்பதாகை அன்றிக்கே
சக்ருத் சமீஷ்யைவ ஸூ நிச்சிதம் ததா -யுத்த -12-28-போலே
ஒரு காலே அறுதியிட்டு வந்தவன் என்கிறார் ஆகவுமாம் –

3- அன்றியிலே சஹஸா சப்தத்துக்கு சக்ருதேசமாய் –
சஹஹைவ பிரபன்னாய -என்றாய் –
அதாவது ஆஜகாம முஹூர்த்தேந -17-1-என்றும்
ஒல்லை நீ போதாய் -என்றும் சொல்லுகிறபடியே –
நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ஆநு கூல்யம் புரிவதற்கு முன்பே வந்தான் -என்கை

4- அன்றியிலே -சரணாகத ரஷணம் பண்ணுகிறீர் ஆகில் அடியேன்
சஹஸா பிரபன்னாயா -என்று ஒன்றையும் நிரூபியாதே
சாஹசிகனாய் வந்தான் –

அதாவது
ராவணன் கோஷ்டியில் நின்று கடல் கரையில் இருக்கிற பெருமாளை சரணம் புக்கால்
அவர் பிடித்துக் கொண்டு போய் விலங்கிலே இடில் செய்வதென் -என்று
பயப்படாதே பட்டது படுகிறது என்று அவன் வந்த சாஹசம் காணும் என்கிறார் ஆகவுமாம் –

5-இப்படி சரணாகதியில் சர்ப்பம்ருதி யுண்டோ என்ன –
சஹாச பிரபன்னாய –
அன்று ஈன்ற கன்றுக்காக முன்னீன்ற கன்றைக் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளும் தாயைப் போலே
பால்பாயப் பாய சரனாகதனாய் பலமும் பெறாத இவனுக்கே
யாம் அத்தனை போக்கி பூர்வ சரணாகதனாய்
ராஜ்ய தார பலமும் பெற்ற உமக்காகோம் –

இப்படியாவது அவன் தான் சரனாகதன் ஆகில் அன்றோ –
சீக்ரம் 17-7- என்றும்
வத்யதாம் -17-27- என்றும்
நாங்கள் சொன்ன வார்த்தையிக் கேட்டு வெருவிப் போக நிற்கிறவன் அன்றோ -என்ன

1- பிரபன்னா யைவ –
நாம் இப்படி விபரத்தி பின்னர் ஆன அளவிலும் அவன்
பிரபன்னனே -போகான் காணும் -என்கிறார்

பிரபன்னனே காணும் என்று அருளிச் செய்யா நின்றீர் –
அவன் பக்தி நிஷ்டனைப் போலே அங்கமாக சில தர்ம அனுஷ்டானம் பண்ணி –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -14-3/4- என்று நல் வார்த்தை சொல்லுவதும்
தூத வதம் ஆகாது என்பதும் –
தன் மகள் அநலையை இட்டு நல் வார்த்தை சொல்லுவதுமாய்
அநேகம் புனஸ் சரணம் பண்ணி அன்றோ வந்தது –
ஆன பின்பு அவன் பக்தி நிஷ்டன் என்றார் மஹா ராஜர் –

பெருமாள் -2- பிரபன்னா யைவ –
அவன் நல் வார்த்தை சொல்லிற்று நமக்காக அல்ல –
விபீஷணஸ்து-17-24-என்று ப்ரக்ருத்யா தார்மிகன் ஆகையாலும்
குருத்வாத்தி தமிச்சதா -என்று தமையன் விஷயத்தில் ஹித பரன் ஆகையாலும்
ஆநு கூல்யச்ய சங்கல்ப -என்று பிரபத்த்யாதி காரியாகச் சொன்னான் இத்தனை –

ஆகையால் இது அந்யா சித்தம் -பக்தி நிஷ்டன் என்ன ஒண்ணாது
சேனயோர் உபயோர் மத்யே ரதம் சதாபய -ஸ்ரீ கீதை -1-21-என்று
பள்ளரும் பறையரும் பார்ப்பாரும் பார்க்கருமான இரு படைக்கு நடுவே தேரை நிறுத்திச்
சரம ஸ்லோகம் உபதேசித்த போது அர்ஜுனன்
எங்கே குளித்து குலை குடுமியும் தோதவத்தியுமாய் நின்றான் –

வெளுத்த உடுப்பை -தோதவத்தித் தூய மறையோர் -பெரியாழ்வார் -4-8-1-
இன்னமும் உறங்குதியோ -என்ன நங்கைமீர் போதர்கின்றேன் -என்றும்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் -என்றும்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் நோன்புக்கு போகிற போது
அனந்தலிலே-தூக்கக் கலகத்தாலே -கண்ணையும் கடை வாயையும்
துடைத்து வந்தார்கள் அத்தனை போக்கி
எந்த உவர்க் குழியிலே குளித்து வந்தார்கள் –

அப்படியே இவனும் -யோ விஷ்ணும் சததம த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரே தசம் -என்று
விஷ்ணு த்வேஷியாய் கர்ம சண்டாளனான ராவணன் கோஷ்டியில் நின்று போருகிற போது
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -17-8-என்று
ஆகாசத்திலே நின்றான் இத்தனை போக்கி என்ன கடலாடி புனலாடி வந்தான்

யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபால உபநிஷத் -என்றும்
நாஸ்தி நஷத்ர சம்பந்தோ ந நிமித்த பரீஷணம் ஸ்ரத்தைவ காரணம் நித்ய மஷ்டாஷர பரிக்ரஹே-நாராதீய கல்பம் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும்
ருசி பிறந்த போதே வந்தான் அத்தனை –

கங்கை ஆடுவாருக்கு ஒரு உவர் குழியிலே குளிக்க வேணுமோ
பகவான் பவித்ரம் வாசு தேவ பவித்ரம் –
பவித்ராணாம் பவித்ரம் –
பாவனா சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -என்று
பேசப்பட்ட நம் பக்கல் வருகிறவனுக்கு பெரு புரச் சரணம் வேண்டா –
ப்ரபன்னன் ஆகில் -என்கிறார்

அது இருந்தபடி என் –
பக்திக்கு சாஸ்திர விஹிதம் வர்ணாஸ்ரம தர்மங்கள் உண்டாய் இரா நின்றது –
இதுக்கு
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்று உள்ள தர்மங்களையும் விடச் சொல்லா நின்றது
ஆகையாலே பிரபத்தியில் பக்தி விலஷனையாய் தொடரா நின்றதீ என்னில் –
அது சொல்ல ஒண்ணாது

சப்த பிரமாணகே ஹ்யர்த்தே யதா சப்தம் வ்யவஸ்திதி-என்று
சாஸ்திர பிரமாண கரானால் அது சொன்ன படி கொள்ளக் கடவோம்
அதாவது –
பஹவோ ஹி யதா மார்க்கா விசந்த யேகம் மஹா புறம் –
ததா ஜ்ஞாநாநி சர்வாணி ப்ரவிசந்தி தமீஸ்வரம் -என்று
ஓர் ஊருக்குப் போகா வென்றால் பல வழியாய் இருக்குமாப் போலே
பகவத் ப்ராப்திக்கு பல உபாயங்கள் உண்டு என்று சொல்லி

ஒரு உபாயம் ஸ்வயம் அசக்தம் ஆகையாலே சில சஹ கார்யாந்தரங்களை விதித்து –
ஒரு உபாயம் சர்வ சக்தி யாகையாலே சஹ கார்யாந்தரங்களை வேண்டா என்கிறது

பிரகார பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று வை லஷண்யம் வாராது
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்றும்
நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷ சமர்ப்பக தர்மங்கள் என்றும் யுண்டு
அநேக விசேஷ சமர்ப்பகங்களைப் பார்த்தால்
பிரபத்தியே விலஷணை -எங்கனே என்னில்

ஸோ அன்வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
ப்ரஹ்ம விடாப்நோதி பரம் -என்றும்
ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை -என்றும்
தமேவைகம் ஜானதாத்மானம் அந்யா வாசோ விமுஞ்ச்சத அம்ருதச்யைஷ சேது -என்றும்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்

வேதாந்த விஹிதத்வமும் மோஷாதி சாதனத்வமும் ஒத்து இருக்கச் செய்தேயும்
பக்த்யாபாய ஸ்வரூபம் போலே
சாத்திய பக்தயேக சோசா என்று இவனாலே சாத்தியமாக அன்றிக்கே
பிரபத்ய்யுபாய ஸ்வரூபம்
சித்தரூபம் பரம் ப்ரஹ்ம -என்றும்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
பண்டே சித்த ரூபமாய்

த்யாயீத -என்றும்-
த்ருவா ஸ்ம்ருதி என்றும்
ஸ்ம்ருதி சந்தான ரூப ஜ்ஞானமாய் அசேதனமாகை அன்றிக்கே
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் –
சத்யம் ஜ்ஞானம் –
சர்வம் சர்வத்ர சர்வதா ஜாநாதி -என்று

ஜ்ஞாதாவாய் சதாதன ஜ்ஞான ஸ்வரூபமாய் –
ஸ்வீகரிக்கும் இடத்தில்
ஆவ்ருத்திர சக்ருதுபதேசாத் -என்று
அநேக ஜன்ம சித்தமாய் சிரகால சாத்தியமாய் இருக்கை அன்றிக்கே
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி –உபாய பூதோ மே பவதி ப்ரார்த்த நா மதி சரணா கதி –
தஸ்ய தாவதேவ சிரம் -யாவததிகாரம் -என்று
விளம்பித பலப்ரதமாகை அன்றிக்கே

உபாயோ அயம் சதுர்த்த் தஸ்தே ப்ரோக்த சீகர பலப்ரத –
தாவதார்த்திஸ் ததா வாஞ்ச தாவன் மோஹஸ் ததா ஸூ கம் யாவன்னயாதி சரணம் -என்று
சீகர பல பிரதமாய்

தபஸா அ நாஸ கேன் –
யஜ்ஞோ தானம் தபஸ் சைவ –
பஞ்சாக் நயோ யே ச திரிணா சிகேதா –
தபஸ் சந்தாப லப்தச்தே ஸோ அயம் தர்ம பரிக்ரஹ –
கார்யஸ் த்ரிஸ்வபி ஷேகச்ச காலே காலே ச நித்யச-என்றும்
ஓதி ஆமாம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப்பாதம் நாளும் பணிவோம் -என்றும்

மாரி கோடை இன்றியிலே
உப்பு நீரிலும் உவர் நீரிலும் சுட்ட நீரிலும் சுனை நீரிலும் தோய்ந்தும்
க்லேசிக்கும்படி யாகை அன்றிக்கே

ஆனந்தோ ப்ரஹ்ம –
ஆனந்தம் ப்ரஹ்ம –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -என்றும்
சர்வ கந்த சர்வ ரச என்றும் ஸூக ரூபமாய்
மித்யா பிரயிக்தோ யஜமானம் ஹி நஸ்தி -என்றும்
ஜ்ஞான தோஷ பரிப்ரஷ்டஸ் சண்டாளீம் யோனி மா கத -என்றும்
அல்ப்பம் தப்பில் கர்த்தா நசிக்கை அன்றிக்கே

யதா ததா வாபி சக்ருத் க்ருதோஞ்சலி ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்ய சேஷத
ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக புறா -சமாஸ்ரயே தாதி தேவம் சரத்தா சரணம் யது
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்றும்

பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்றும்
அடைவு கெடப் பண்ணினாலும் தோஷங்களைப் போக்கி திருத்தி
அனுஷ்டாதாவை உஜ்ஜீவிப்பிக்கக் கடவதாய்
அவித்யயா ம்ருத்யும் தீர்த்தவா வித்யயா அம்ருத மஸ் நுதே -என்றும்
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமாகதி -கஷாய கர்மபி பக்வே ததா ஜ்ஞானம் ப்ரவர்த்ததே-என்றும்
தரத்தும் ம்ருத்யு மவித்யயா -என்றும் -ஸ்வ உத்பத்தி பிரதிபந்தக நிவர்தகமாய்

அந்தவதே வாஸ்ய தத்பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை பராப்யதே -என்றும்
பலவா ஹ்யேதே அத்ரூடா யஜ்ஞரூபா -என்றும்
நஸ்யத் த்ரவ்ய உபகரணமாய்-நஸ்வர க்ரியா ரூபமுமாய் –
ஸ்வயம சக்த தேவதாத்மகமுமாய் ஸ்வர்க்க பசு புத்ராதி சாதாரணமான கர்மாதிகளை
அங்கமாக அபேஷிக்கை அன்றிக்கே

தமேவைகம் ஜானதாத்மான மன்யா வாசோ விமுஞ்சத் -என்றும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும்
ததே கோபாயதாயாச்ஞா -என்றும்
மாமேவைஷ்யசி என்றும்
சிருஷ்டியில் த்ரிவித காராணமும் தானே யாகிறாப் போலே

ஆத்யந்திக பிரளயமான மோஷத்திலும்
அங்கமும் அங்கியும்
உபாயமும் உபேயமும் ஒன்றேயாய்
சர்வ முக்தி வை ஷம்யம் நைர்க்ருண்யாதிகள் வாராமைக்காக
அதிகாரி ஸ்வரூப யோக்யதாபாதகமான ஆநு கூல்ய சங்கல்பாதி மாத்ர சாபேஷையாய்
இப்படிக்கொத்த அநேக குண பௌஷ் கல்யங்களாலே
பக்தியில் பிரபத்தியே அத்யந்த விலஷணை –
இப்படிகொத்த பிரபத்தியைப் பண்ணினவனுக்கு –

3- பிரபன்னா யைவ –
மந்திர வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிதுமர்ஹதி-17-18–என்று
கர்ம யோக நிஷ்டரான உமக்கும் ஆகோம்-

ஜாம்பவாம்ஸ் த்வதசம்ப்றேஷ்ய சாஸ்திர புத்த்யா விசஷண -17-43-என்கிற
ஜ்ஞான யோக நிஷ்டரான ஜாம்பவானுக்கும் ஆகோம்

பக்திச்ச நியதா வீர -உத்தர -40-16-என்கிற
பக்தி யோக நிஷ்டரான ஹனுமானுக்கும் ஆகோம்

ராகவம் சரணம் கத -17-14- என்று பிரபன்னனான விபீஷணனுக்கே ஆகக் கடவோம் –

4- பிரபன்னா யைவ –
அகார்த்தாயைவ -அஷ்டச்லோகீ-3 என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் -2-9-4-என்றும்
அவன் நமக்கேயாய் இருக்குமா போலே

எனக்கே தந்தைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11-என்று
அபியுக்தர் சொன்னபடியே பிரபன்னனுக்கே யாகக் கடவோம்

அவன் பிரபன்னனாவது ஷூத்ர பிரயோஜனத்துக்காக அன்றோ
ராஜ்ய -17-66-என்று
உம்முடைய ஹனுமான் அன்றோ சொன்னான் -என்ன

1-தவாஸ் மீதி ச யாசதே –
உனக்கே யாவேன் என்று யாசிப்பவனுக்கு
அநந்ய பிரயோஜனநாயே வந்தான் காணும் -என்கிறார்

அதாவது-ச காரம் அவதாரண அர்த்தமாய் –
தூத வதம் ஆகாது என்று தனக்குப் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக
ராஜ்யம் கொடுக்க வேணும் என்று அபிப்ராயமாக ஹனுமான் சொன்னான் அத்தனை போக்கி
விபீஷணன் சொன்னானோ –

ந தேவ லோகா க்ரமணம் நா மரத்வமஹம் வ்ருனே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமே ந த்வயா வி நா -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் -5-8-3- என்றும்
லஷ்மணனும் சடகோபனும் சொன்னால் போலே
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -17-14- என்றும்
பரித்யக்தா -19-5-என்றும்
புறம்பு உள்ளவற்றை அடைய விட்டுச்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும்
தாமேயாக-திருவாய் -5-1-8- வந்தவன் -என்கிறார் –

2- தவாஸ்மீதி ச யாசதே –
தவை வாச்ம்யஹ மச்யுத -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும்
அநந்ய பிரயோஜனனாயே வந்தான் –

3- தவாஸ்மி
ந மம-ந ராவணஸ்ய-
ஸ்வா தந்த்ர்யமும் இல்லை -பர பாரதந்த்ர்யமும் இல்லை
மத பாரதந்த்ர்யமே ஏவ ஸ்வரூபம் -என்று வந்தவன் –

4-தவைவாஸ்மி-
அவன் நம்மை நோக்கி தவைவாஸ்மி -என்றான் –
நாமும்
புக்த்வா ச போகான் விபுலான் ததோ அந்தே மத பிரசாதாதாதா –
மம அநுஸ்மரணம் ப்ராப்ய மம லோகம் ச கச்சதி -என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு மொழி -5-8-5-என்று
லாங்கா ராஜ்யமும் கைங்கர்ய சாம்ராஜ்யமும் –
தவைவாஸ்து -என்னக் கடவோம் –

ஸ்ரீ மதா ராஜராஜோ லங்காயாம் அபிஷேசித-யுத்த -28-27-என்றும்
விபீஷண விதேயம் ஹி லங்கா ஐஸ்வர்யம் இதம் க்ருதம் -யுத்த -116-13-என்றும்
லப்த்வா குல தனம் ராஜா லங்காம் ப்ராயாத விபீஷண -யுத்த -131-9-என்றும்
இப்படி இரண்டும் கொடுத்து விட்டு அருளினான் இறே-

குல தனம் என்னக் கோயில் ஆழ்வாரைக் காட்டுகிறபடி என்-என்னில்
இதம் விமானம் ஆச்சர்யம் இஷ்வாகு குல தைவதம் -என்றும்
மநு வம்ச ப்ரசூதா நாம் ஷத்ரியாணாம் இதம் தனம் காமகம் காமதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிதம்-என்றும்
உப புராணத்திலும் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் ஸ்பஷ்டமானத்தை
இங்கே அநு வதிக்கிறது ஆகையாலே குறை இல்லை –

5- தவாஸ்மி –
ஸ்தித மாத்மநி சேஷத்வம் -என்றும் –
ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம -என்றும் –
ஆத்ம தாஸ்யம் -என்றும்
ஆத்ம சத்தையுண்டாகிற போதே சேஷமாய் அன்றோ இருப்பது –

6- தவாஸ்மி –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -போலே சாமா நாதி கரண்யத்தாலே சொன்னாலும்
சேஷ சேஷி பாவம் சித்திக்கும் இறே
அப்படிச் சொல்லாதே வ்யதிகரணமாகச் சொல்லிற்று –
பூர்வாபரங்களாலும் பிரமாணாந்தரங்களாலும் உபபாதிக்க வேண்டி
ஆபாதத்தில் ஸ்வரூப ஐக்கியம் போலே தோன்றி பிரமிக்க ஒண்ணாது என்று
ஜீவ பரமாத்மா பேதமும் வ்யக்தம் ஆகைக்காக

1-இதி –
இப்பாசுரம் ரசித்த படியாலே –
தவாஸ்மி-என்ற பிரகாரத்தைச் சொல்லுவதே -என்று
அநுபாஷித்து ப்ரீதராகிறார் –

2- இதி –
இத்யாஹா மால்யோப ஜீவந-என்றால் போலே
யாராகச் சொல்லக் கடவ பாசுரத்தை யார் சொல்லுகிறார் –
புலஸ்த்யன் புல ஹாதிகள் இதி ஹாசமாகச் சொல்லக் கடவ பாசுரத்தை
ஒரு ராஷசன் சொல்லுவதே –

ச –
உபாய மாத்ரத்தை அபேஷித்து விடாமே
பலத்தையும் வேண்டுவதே -என்று சமுச்ச்யார்த்த மாக வுமாம்

1-தவாஸ்மீதி ச –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா-என்று
பல சதுஷ்ட்ய சாதாரணமான உபாயத்தை அபேஷித்தால்
உபேயங்களில் த்ரிவர்க்கத்தை அபேஷியாதே பரம புருஷார்த்தமான அபவர்க்கத்தை அபேஷிப்பதே-

2- தவாஸ்மீதி ச –
பூர்வார்த்தத்தில் உபாயத்தை அபேஷித்து-
சரணாகதனாய்ப் போகாதே -உக்த அர்த்தத்தில் கைகர்யத்தையும்
அபேஷித்து த்வய நிஷ்டன் ஆவதே –

3-தவாஸ்மீதி ச –
த்வாஸ்மீத் யபி என்றாய் –
அதாவது –
பரிபாலய நோ ராஜன் வத்யமாநான் நிசாசரை-என்ற ரிஷிகளையும்
த்ராணகாம இமாம் லோகம் சர்வம் வை விசசார ஹ -என்றும்
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்ற ஜெயந்தனைப் போலே
ஷூத்ர சரீர ரஷணத்துக்காக அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தமான நம்மை -என்கை-

ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் –
ஸ்ரீ மதே நாராயணாய -என்றும் –
சஹ வைதேஹ்யா–அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருவருமான சேர்த்தியிலே அன்றோ –

தனித்து இருக்கிறது உமக்கு சேஷமானால்
ஏகா யனனாகானோ -என்ன –
பித்ரா ச பரித்யக்த -என்கிற இடத்தில் –
மாத்ரா ச பரித்யக்த -என்று அநுக்த சமுச்சயமானால் போலே
இங்கும் தவாஸ்மீதி ச -என்றது –
வைதேஹ்யாஸ் சாஸ்மி அநுக்த சமுச்சயமாய் மிதுன விஷயத்திலே காணும் அபேஷித்தது என்கை-

அன்றியிலே-
உங்களைப் போலே சாகா ம்ருகமாய் சாகைக்கு மேலே சஞ்சரிக்கை அன்றிக்கே
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே க்ருஹே -என்றும்
ஸூஸ்ராவ ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷசாம் -என்றும்
அகத்துக்கு உள்ளே சாகா சஞ்சாரியாய் -வேதம் ஓதி -இருப்பவனுக்குத் தெரியும் காணும்
அதாவது –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நித்யைவைஷாநபாயிநீ -என்றும்
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அப்ருதக் சித்த நித்ய தர்மமே-ச -வ்வுக்கு உள்ளே உண்டு என்று
அறிந்து சொன்னான் காணும் -என்கிறார் ஆகவுமாம் –

இப்படி எல்லாம் அறிந்து இருக்கிற இவன் பர தந்த்ரனாய் செய்த படி கண்டிருக்க ப்ராப்தம்
இத்தனை போக்கி நிர்பந்திக்கப் பெறுமோ -என்னில்
1- யாசதே –
தனக்கு இது அபிமதம் என்னும் இடம் தோற்ற இரந்தான்-இத்தனை –

2- யாசதே –
ரஷா பேஷாம் ப்ரதீஷதே -என்றும்
அர்த்திதோ –ஜஜ்ஞே -என்றும்
வேண்டித் தேவர் -இரக்க-திருவாய் -6-4-5-என்றும்
அத்தலையிலே இரப்பை நாம் பாரித்து இருந்த படியாலே இரந்தான் –

3- யாசதே –
கதாஹமை காந்திக நித்ய கிங்கரர் பிரகர்ஷ்யிஷ்யாமி -ஸ்தோத்ர ரத்னம் -46-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1- என்றும் பிரார்த்திக்கிறான்
அவன் கண் குழியும் பையாப்பும் கண்டால் ஆர்க்கு மறுக்கலாம்

இப்படி இருந்தால் அவனுக்குச் செய்து அருளப் புகுகிறது ஏது என்னில்
1-அபயம் ததாமி –
அத ஸோ பயங்க தோ பவதி -என்னும்படி பண்ணுவன்
அபயம் -தத் அந்ய– தத் அபாவ -தத் விரோதிகளை இறே கூட்டுவது –

ஆகையால் –
2-தத் அந்யமான மங்களங்களை கொடுப்பன்

3-தத் அபாவமான அச்சம் இல்லாமையைப் பண்ணுவன்

4-பரகரிஷ்யமான ஆபச் சிந்தை இறே பயம் –
தத் விரோதியான இவன் புஜபல ரஞ்சிதரான பரரால் பண்ணப் படுகிற
உபகார சந்துஷ்டியை உடையவனாம் படி பண்ணுவன் –

5-அபயம் –
அதீதே ஸோ க வர்த்தமா நே வ்யதா ஆகாமி நி பயம் -என்று இறே லஷணம்
சோகம் இறந்த கால துன்பம் –
வ்யதை-வதை – நிகழ் கால துன்பம் –
பயம் வரும்கால துன்பம் –
ஆகையால் மேல் ஒரு அநர்த்தம் வாராதபடி பண்ணுவன் –

ஆர் நிமித்தமாக-பய நிவ்ருத்தி பண்ணுவது -என்ன –
1- சர்வ பூதேப்ய –
ஏதேனுமாக பய ஸ்தானமாய் உள்ளவை எல்லாம் -நிமித்தமாக –

2- சர்வ பூதேப்ய –
பூதங்கள் ஆகின்றன அசித் சம்ஸ்ருஷ்டங்கள் இறே-
அதாவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத்மகமாய் இறே இருப்பது –
இவை இத்தனையும் நலியாதபடி பண்ணுவன் –

3- சர்வ பூதேப்ய –
ராவணனால் பட்ட பரிபவத்தாலே -அவன் தம்பி என்றும் இந்த்ராதிகளால் வருமது-
நம் பக்கலிலே பரிவாலே -வத்யதாம் -17-27-என்று திர்யக்கான உம்மால் வருமது –
ராவண விஜயத்தாலே பரிபூதரான மருத்தன் தொடக்கமான மனுஷ்ய ராஜாக்களால் வருமது –
பீடத்தோடு பிடுங்குண்ட ஸ்தாவரமான கைலாசம் அடியாக வரும் இவ்வாபத்தை அடியைப் பரிஹரிபபன்-

4- சர்வ பூதேப்ய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11- என்றும்
பௌதிகா நீந்த்ரியாண் யாகூ-என்னும் பிரக்ரியையால்
ப்ருதிவ்யாதி பூத கார்யமான சரீரேந்த்ரிய விஷயாதிகள் நலியிலும் பரிஹரிப்பன் –

5- சர்வ பூதேப்ய –
நானே நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- என்ற
உன்னால் வரும் பயமும்
ஜகத் சசைலபரிவர்த்தயாமி -ஆரண்ய -64-7- என்றும்
ஷிபாமி -ந ஷமாமி -என்றும் நம்மால் வரும் பயமும்
ஹிரண்ய ராவணாதி பித்ரு பிராத்ரு திகளால் வரும் பயமும் பரிஹரிபபன்

5- சர்வ பூதேப்ய –
என்று அசேதனமான பாபங்களும் –
அவ்வோ பாபங்கள் அடியாக பாதிக்கும் ஜந்துக்களும் –
இதடியாக வரும் பயமும் அடையப் போக்குவான்

இப்படி பீத்ரார்த்தானாம் பய ஹேது -பஞ்சமி யாக வுமாம்
அன்றியிலே
சதுர்த்தியாய் -பிரபன்னனாய் -தவாஸ்மீதி ச யாசதே -என்று
சரணாகதனாய் -பலார்த்தியான விபீஷணன் ஒருவனுக்குமோ பய நிவ்ருத்தி பண்ணுவன் -என்றால்
இதி ச -என்கிற சவ்வை இங்கே கூட்டி

6-சர்வ பூதேப்யச ச –
அவனுக்கே அல்ல -சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -17-5- என்று அவனோடு கூட வந்தவர்களுக்கும் –
அவர் தங்களைப் பற்றினார்க்கும் -அபய பிரதானம் பண்ணுவன் என்றாக வுமாம் –

பய நிமித்தம் சொல்ல வேண்டாவோ -என்னில் –
ராகவேணாபயே தத்தே -19-1-என்கிற இடத்தில் உண்டோ
பயம் பா நாம்ப ஹாரிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-36-என்கிற இடத்தில் உண்டோ
அது தன்னடையே வரும் –
அன்றியிலே –
பிரபன்னாய -என்று பிரபன்னருக்கயோ பண்ணுவது –
பக்தி நிஷ்டருக்கும் புருஷகார நிஷ்டருக்கும் இல்லையோ –

7- சர்வ பூதேப்ய –
பக்தி நிஷ்டரோடு புருஷகார நிஷ்டரோடு வாசி அற-
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் ததோ விது-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே சத்தை பெற்றார் எல்லார்க்குமாம்

இப்படி கைம்முதல் உடையரான விலஷண அதிகாரிகளுக்கோ கொடுத்து அருளுவது –
சரணாகதர் -பக்தர் -ஆச்சார்ய நிஷ்டர் -பகவத் ஞானம் உள்ளோர் -போன்றாருக்கு மட்டுமா –
கிம் பஹூ நா-பல சொல்லி என்
8-சர்வ பூதேப்ய
ச லஷண உபாய நிஷ்டராக வேண்டா –
அதி ப்ரசங்கம் வாராதபடி பவத் விஷய வாசிந-ஆரண்ய -1-20- என்று
நம் எல்லைக்குள் கிடக்கையே உள்ளது –

யதி வா ராவண ஸ்வயம் -18-34- என்று சத்ருவான ராவணனோடு
பாத மூலம் கமிஷ்யாமி யா நஹம் பர்யசாரிஷம் -ஆரண்ய -4-14- என்று-உதாசீனையான சபரியோடு
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8-என்று மிருகமான வாலியோடு
கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்று பஷியான ஜடாயுவோடு
பாஷாண கௌதம வதூ வபுராப்தி ஹேது -என்று ஸ்தாவரமான அஹல்யா சிலையோடு
பிரதிபேதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38- என்று ஜங்கமமான ஜெயந்தனோடு
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே -நற்பால் அயோத்தியில் வாழும்
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய் -7-5-1-என்று த்ருண குல்ம வீருதாதிகளோடு
பிதாமஹபுரோகாம்ஸ் தான் –பால -15-26-என்று அடியிலே நம்மைப் பெற வேணும் என்று அபேஷித்த ப்ரஹ்மாதிகளோடு
வாசி அற -ப்ரஹ்மாதி பிபீலீகாந்தமான சர்வ வஸ்துக்களுக்குமாம்

இவர்களுக்கு செய்து அருளுவது என் என்னில்
1- ததாமி –
த்யாகமும் அல்ல -ஔ தார்யமும் அல்ல -உபகாரமும் அல்ல –
தானமாகவே பண்ணுவேன் –

த்யாகமாவது –
கீர்த்தி முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் -என்று
பிறர் அபேஷித்ததை கீர்த்தி பலமாக பசையறக் கொடுக்கை

ஔ தார்யமாவது –
சர்வ விஷய விதாரணம் ஔ தார்யம் -என்று விஷய வைஷம்யம் பாராதே
முலைக் கடுப்பு தீரச் சுரக்குமா போலே தன் பேறாகக் கொடுக்கை

உபகாரமாவது –
பிரத்யுபகாரதியா பந்து க்ருதிருபகார -என்று
பிரத்யுபகார பிரயோஜனமாக ஆசன்னருக்குக் கொடுக்கை –

அத்ருஷ்ட முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் தானம் -என்று
விலஷண விஷயத்தில் விலஷண பதார்த்தங்களை அத்ருஷ்ட பலமாகக் கொடுக்கை

2- ததாமி –
மோஷயிஷ்யாமி போலே -தாஸ்யாமி-என்று கால விளம்பனம் பண்ணோம் –
வரும் கால பிரயோகம் செய்ய மாட்டேன்

3- ததாமி -கொடுக்கிறேன் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -போலே –
உபாசன ப்ராரம்பே மோஷ ப்ராரம்ப -என்று
அவன் நம்மை நோக்கிக் கிளம்பின போதே நாமும் உபக்ரமித்தோம்
இது யாவதாத்மா பாவியாகக் கடவது
ப்ராரப்தோ ஸ்பரிசமாப் தஸ்ச வர்த்தமான -தொடங்கியதாய் முடியாமல் இருப்பது உங்கள் காலம் -இறே-

4- பிரபன்னாய ததாமி –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ்ருதம் -என்றும் –
இதர உபாயங்களில் பிரபத்தி விலஷணை யானால் போலே –
நார் ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி -என்று
அல்லாத அதிகாரிகளில் ப்ரபன்ன அதிகாரி விலஷணனாய் இறே இருப்பது –

இவ் விலஷண அதிகாரியைக் கண்டால் தானம் பண்ணாது இருக்கப் போமோ –
அது தான் பாஷிகமோ -நியமம் உண்டோ -என்னில்
1- ஏதத் வ்ரதம் மம-
இது நமக்கு நியத அநு ஷ்டேயம்-

2-ஏதத் -பிரபன்னனுக்குப் பண்ணுகிற அபய பிரதானம் -அநு பல நீயஸ் ஸ-என்று ஏறிட்டுக் கொண்டால்
முடியும் அளவும் விடாதே நடக்குமது இறே வ்ரதம் ஆகிறது
ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-என்று
அடியிலே சொன்னோமே

3-ஏதத் வ்ரதம் –
பரித்ராணாய சாதூநாம் –சம்பவாமி –ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சரீரக்ர ஹணம் வ்யாபின் தர்மத் ராணாய கேவலம் – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-50-என்றும்
பொழில் ஏழும் காவல் பூண்ட -திரு நெடும் -10-என்றும்
காக்கும் இயல்விணன் -திருவாய் -2-2-9- என்றும்
இது நமக்கு சத்தா பிரயுக்தம் –

இது அனுஷ்டேயம் ஆருக்கு என்ன
1- மம-
அர்த்திதோ மா நுஷே லோகே -அயோத்ய -1-7-என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5- என்றும்
பராபேஷையாய் அதுக்கு இட்டுப் பிறந்த நமக்கு –

2- மம –
ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் பணி அல்ல –
சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் பணி யல்ல
நஹி பாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வராத்ஹரே -ஸ்ரீ விஷ்ணு புரா -1-22-21- என்றும்
ரஷார்த்தம் சர்வ லோகா நாம் விஷ்ணுத்வம் உபஜக் மிவான் -உத்தர -104-9-என்றும்
ரஷணை நமக்கே பணி என்கிறார் –

3- மமைதத் வ்ரதம் –
நம் பக்கல் பரிவாலே விலக்குகையும் உனக்குப் பணி யானால் போலே
ஆஸ்ரீத ரஷணமும் நமக்குத் தொழில் காணும்

4- ஏதத் வ்ரதம் மம –
சதா மேத்த கர்ஹிதம் -18-3-போலே
சத்தா பிரயிக்தத்துக்கு பிரயோஜனம் இல்லை
செய்யாத போது கபோத வானர விச்வாமித்ராதிகள் இருந்து
எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் என்று கதவை அடைப்பார்கள்-
அது செய்யாதே
சாது கோட்டியுள் கொள்ளப் படுகிறதே பிரயோஜனமாக இது நமக்கு அனுஷ்டேயம் என்கிறார்

5-ஏதத் வ்ரதம் மம –
இது நமக்கு அனுஷ்டேயம் –
இத்தத் தலைக் கட்டித் தாரீர் என்று மஹா ராஜரை இரக்கிறார்-

இப்படி பெருமாள் மஹா ராஜரைப் பார்த்து அபய பிரதானம் பண்ணி
ஆஸ்ரீதனான விபீஷண ரஷணம் பண்ண வேணும் என்று
இந்த ஸ்லோகத்தில் தாத்பர்யார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————————————————–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் –
இருபதொரு சரணாகதி வேதம்

இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம்
சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்

ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்

இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும்
இரண்டு வகையாய் இருக்கும் –

பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

——

முதல் அவதாரம் -பிரபந்தாவதாரம்

மங்களா சரணம் -ஸ்ரீ ராம சரம ஸ்லோக அர்த்த ஸங்க்ரஹம் –
ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம் -ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

மங்களா சரணம்
ஜெயதி ஆஸ்ரித சந்த்ராச த்வாந்த வித்வம்சந உதய
பிரபாவாந் சீதயா தேவ்யாம் பரமா வ்யோம பாஸ்கர

பிராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந்
ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்து மாம் அவ்யத் அபயமுத்ரித

நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சன ஜந
ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தான யஸசே
ஸூரா தீச ஸ்வை ரக்ஷண குபித சாபாயுதா வதூ
த்ருஷத்தா துர் ஜாத ப்ரசமந பதாம் போஜ ரஜஸே

வதூ த்ருஷத்தா-கௌதம மகரிஷி பார்யை -அகல்யை -கல்லாய் இருக்க
துர் ஜாத-கெட்ட ஜென்மத்தை
நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது- அந்த ஸ்ரீ ராமன் பொருட்டு நமஸ்காரம் இருக்கட்டும்

சோகம் தவிர்க்கும் ஸ்ருதிப் பொருள் ஓன்று சொல்லு கின்றேன்
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணாம்
ஆ கண்டலன் மகனாகிய ஆவலிப்பு ஏறியதோர்
காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும் உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பவன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

———

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம்

பரித்ராணாய ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –என்கிறபடியே

ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒரு த்ரேதா யுகத்தில் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்த காலத்தில்

ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரஹ்ம புத்திரனான ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
சங்க்ஷேபேண ஸ்ரவணம் பண்ணி

மச்சந்தா தேவ தே ப்ரஹ்மன் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ—பால-2-32–என்கிறபடியே
ஸ்ரீ ஸரஸ்வதீ வல்லபனான ப்ரஹ்மாவினுடைய ப்ரஸாதத்தாலே ப்ரவ்ருத்தமான திவ்ய ஸாரஸ்வதத்தை யுடையனுமாய்

ரஹஸ்யம் ச பிரகாசம் ச யத் வ்ருத்தம் தஸ்ய தீமத
ராமஸ்ய ஸஹ ஸுவ்மித்ரே ராக்ஷஸா நாம் ச ஸர்வஸ
வைதேஹ்யாஸ் சாபி யத் வ்ருத்தம் பிரகாசம் யதி வா ரஹ
தச்சாப்ய விதிதம் சர்வம் விதிதம் தே பவிஷ்யதி
ந தே வாகந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று ப்ரஹ்மாவால் தத்த வரனுமாய்

ஹசிதம் பாஷிதம் சைவ கதிர் யா யச்ச சேஷ்டிதம்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம் ப்ரபஸ்யதி–பால-3-4-என்கிறபடியே

தர்ம வீர்ய பிரஸூ தமான திவ்ய சஷுஸ் சாலே -இவ்வவதார வ்ருத்தாந்தத்தை

பாணவ் ஆம லகம் யதா -பால-3-6-என்னும்படி
நிரவசேஷமாக சாஷாத் கரித்து

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீசரம்
விவேக சர ஜாலேந சமம் நயதி யோகிநாம் –என்கிறபடியே
முமுஷுவுக்குப் பரம உபகாரகமான
இவ்வவதார ரஹஸ்யத்தை வெளியிட்டு லோகத்தை உஜ்ஜீவிப்பைக்காகத் தன் கருணையால் ப்ரவ்ருத்தனாய்

————-

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபப்ரும்ஹயேத்
பிபேத் யல்பஸ்ருதாத் வேதோ மா மயம் பிரதர்ஷயிதி –என்கிற சாஸ்திரத்தை அநு சந்தித்துக் கொண்டு

வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும் அவர்களைப் பற்ற
வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காவும்

புண்யம் வேதைஸ் ச சம்மிதம் –பால-1-97-என்கிறபடியே
நாலு வேதங்களும் ஒரு தட்டிலும் தான் ஒரு தட்டிலுமாக நிற்கிற
ஸ்ரீ ராமாயணம் ஆகிற பிரபந்தத்தை அருளிச் செய்து

சிந்த யாமாச கோந் வேதத் ப்ரயுஞ்ஜீயாத் இதி பிரபு -பால-4-3-என்கிறபடியே
யாரைக் கொண்டு இந்த பிரபந்தத்தை ப்ரவர்த்திக்கக் கடவோம்-என்று சிந்தித்த சமயத்தில்
குச லவர் வந்து பாதோப ஸங்க்ரஹணம் பண்ண

தவ் து மேதாவிநவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ்
வேத உப ப்ரும்ஹணார்த்தாய தவ் அக்ராஹயத பிரபு -என்கிறபடியே
உசித அதிகாரி முகத்தால் உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை ப்ரவர்த்திப்பித்தான் –

ஸ்ரீ பிரபந்த அவதாரம் -முதல் அதிகாரம் முற்றுற்று –

————–

சரண்ய விரத விசேஷ பிரகாசம் என்னும் எட்டாம் அதிகாரம் –

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் –விபீஷணோ வா ஸ்லோகார்த்தம்

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் —

ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார ஸ்வஸ்ய ச பிரிய மாத்மந
சம்யக் சங்கல்பஜ காம தர்ம மூலமிதம் ஸ்ம்ருதம் -யாஜ்ஞ ஸ்ம்ருதி -1-7-என்று

மஹரிஷிகள் சொன்ன தர்ம பிரமாணங்கள் ஐந்தில் நாலை அருளிச் செய்து காட்டி –
பஞ்சம தர்ம பிரமாணத்தை அருளிச் செய்கிறார் –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–

சக்ருதேவ
மற்ற உபாயத்தில் ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தம் ஆனால் போலே காணும்
பிரபத்தியில் அநா வ்ருத்தி சாஸ்த்ரார்த்தமாய் இருக்கும் படி

ஏவ -கார்த்தாலே
நைரபேஷ்யம் சொன்னபடி

ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
என்கிற இரண்டாலே கோப்த்ருத்வ வரணமும்
ஆத்ம நிக்ஷேபமும் சொன்னபடி

ப்ரபந்நாய-என்று மாசநமுமாய்
யாசதே -என்று வாஸிகமுமாய்-என்றுமாம்

த்வயத்தில் போலே அடைவே உபாயத்தையும்
பலத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம்

ப்ரபந்நாய-என்று
கோபலீ வர்த்த நியாயத்தாலே ப்ரயோஜனாந்தர பரனைச் சொல்லி
தவாஸ்மீதி ச யாசதே -என்று
அநந்ய ப்ரயோஜனனைச் சொல்லுகிறது ஆகவுமாம்

சரணம் ச ப்ரபந்நா நாம் தவாஸ் மீதி ச யாசதாம்
பிரசாதம் பித்ரு ஹந்த்ரூணாம் அபி குரவந்தி சாதவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -106-53-என்கிற ஸ்லோகத்திலும்
இப்படியே யசோசித விவஷையைக் கண்டு கொள்வது

சதுர்விதா பஜந்தே மாம் –ஸ்ரீ கீதை -7-16- என்கிற உபாசனம் போலே

தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-இத்யாதி பிரமாணங்களாலே
பிரபத்தியும்
சகல பல சாதகமாய் இருக்கும்

அபயம்-என்று
சங்கோசா பாவத்தால் சர்வ பயாபாவத்தையும் சொல்லுகிறது

சர்வ பூதேப்ய -என்கிற
இத்தை பஞ்சமீ என்று சிலர் வியாக்யானம் பண்ணினார்கள்

ஸ்ரீ சோமயாஜி யாண்டான் உள்ளிட்டார் சதுர்த்தீ என்று நிர்வஹித்தார்கள்

இரண்டு பக்ஷத்திலும் உள்ள குண தோஷ தத் சமாதானங்களைத் தத் தத் கிரந்தங்களில் கண்டு கொள்வது

அதில் பஞ்சமீ பஷத்தில் –
ப்ரபந்நாய-என்கிற இதுக்கு -சங்கோசம் இல்லாமையால்
ப்ரபத்தியினுடைய சர்வாதிகாரம் சித்திக்கும்

சதுர்த்தீ பக்ஷத்தில்
சர்வாதிகாரத்வம் கண்ட யுக்தமாம்

பஞ்சமீ யானால்
கேவல ராவணாதி மாத்ரத்தைப் பற்ற அன்றி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் –
நம்மையும் -பற்ற
பயம் இல்லாதபடி பண்ணுவோம் என்று அருளிச் செய்தபடியாம்

சதுர்த்தீ யானால்
விபீஷணன் என்று நினைக்க வேண்டா –
ராவணன் தான் ஆகிலும் நாம் அவனுக்கு அபய பிரதானம்
பண்ணுவோம் என்றதாம்

இப்பொருள் கீழில் பிரகரணத்துக்கும்
மேலில் பிரகாரணங்களில் ஸ்லோகங்களுக்கும் சேரும்

இந்த யோஜனையில் சர்வரையும் பற்ற பயாபாவம் அர்த்த சித்தம்

நிதா நாம் சர்வ பூதா நாம் ஏக கர்ம பல ப்ரத
இதி பஸ்யந் கஸாதுல்யத் குதஸ்ஸிந் நபி பேதி ஹி
சர்வா பராத நிஷ் க்ருத்யா பிரபத்த்யா கருணா நிதிம்
ப்ரஸாதயன் ந ஹி புநச ததோபி பயம் ருச்சதி
அபாய சம்ப்லவே பூய யதார்ஹம் அநு சிஷ்யதே
பிராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புந சரணம் வ்ரஜேத்–ஸ்ரீ தேசிகருடைய காரிகை ஸ்லோகம் இது

ஏதத் விரதம்
இது சர்வ பிராமண அநு மதமாய்-
தவறில் பிரத்யவாயம் வரும்படியான தர்ம்யமான சங்கல்பம் காணும்

மம —
நமக்கு சங்கல்பம் நடத்துகைக்கு விலக்கான
அஞ்ஞான அசக்தைகள் ஒரு காலும் வாரா காணும் –

ஆகையால் விலக்க ஒண்ணாத இவ்விரதத்தை
பரிவரான நீங்களும் இசைந்து ரஷியுங்கள் என்று திரு உள்ளம்-

———

அபதிஸ்ய வேங்கடேசம் ஸ்வ ஹஸ்த சம்சக்த தூலிகா துல்யம்
அபய பிரதான சாரம் குரு பிரசாத ஸ்வயம் வ்யலிக்த்

பொன்னை இகழ்ந்து விருகங்கள் புல்லிய புல் உகந்தால்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே மன்னு உலகு அனைத்தும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன்
பொன்னடி நாம் அடைந்தோம் புறமார் என் கொல் செய்திடிலே

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற
முனிவர்களும் தேவர்களும் மினிந்த அந்நாள்
தாவரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த
தனிக் காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக்
காண நிலை இலச்சினை யன்று இட்ட வள்ளல்
ஏவல் பயன் இரக்கம் இதுக்கு ஆறு என்று ஓதும்
எழில் உடையோர் இணை யடிக் கீழ் இருப்போம் நாமே

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

வேதத் திரளில் விதி யுணர்ந்தோர்கள் விரித்து உரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
ஒதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே

இத்தால் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி என்னும் அர்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால்

——————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

——————————————————————————————————————————————————————————-——————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம் /ஸ்ரீராமபிரான் ஸ்ரீ திருவடிக்கு உபநிஷத் பற்றி ஸ்ரீ ஸூக்திகள் —

December 30, 2021

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்.

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்.

யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.

துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே.

———————–

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
ஸ்ரீராமபுண்யஜெயம்

—–

ஓம் நமோ ப்ரஹ்மாதிப்யோ ,ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய–கர்த்ருப்யோ வம்ச –ரிஷிப்யோ ,மஹத்ப்யோ நமோ குருப்ய :

ப்ரஹ்மா போன்றவர்கள் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை அருளினார்கள் கோத்ர ப்ரவர்த்தகர்களான மஹரிஷிகள் ,
மஹான்கள் —-இவர்கள், இந்த ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஆசார்யர்களுக்கு நமஸ்காரம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதா (கும்) சப்ரஹிணோதி தஸ்மை |
த (கும்)ஹ தேவ–மாத்ம –புத்தி–ப்ரகாஸம் முமூக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே ||

முதன் முதலில் ப்ரஹ்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களைக் கொடுத்து, அருளியவர் எவரோ,
நமது உள்ளத்திலே இருந்துகொண்டு நமது புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்பவர் எவரோ,
அந்தத் தேவனை மோக்ஷத்தில் விருப்பமாக இருக்கிற முமுக்ஷூவான அடியேன்
சரணமடைகிறேன்

ஸ்ரீராமபிரான், அநுமனுக்குச் சொல்கிறார்;–

1.ருக்வேதாதி –விபாகேன வேதாச்–சத்வார ஈரிதா : |
தேஷாம் சாகா –ஹ்யனேகா : ஸ்யுஸ்தாஸூபநிஷதஸ்–ததா ||
2. ருக்வேதஸ்ய து சாகா : ஸ்யு –ரேக விம்சதி சங்க்யகா : |
நவா திகசதம் சாகா யஜூஷோ மாருதாத்மஜ ||
3. சஹஸ்ர–சங்க்யயா ஜாதா :சாகா :ஸாம்ந : பரந்தப |
அதர்வணஸ்ய சாகா :ஸ்யு :பஞ்சாசத்பேத தோஹரே ||
4. ஏகைகஸ்யாஸ்து சாகாயா ஏகைகோபநிஷன் மதா |
மாண்டூக்ய –மேக –மேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே ||
ததாப்–யஸித்தஞ்சேஜ்—ஜ்ஞானம் தசோபநிஷதம் பட
5. ஈச–கேன–கட–ப்ரச்ன -முண்ட மாண்டோக்ய தித்திரி : |
ஐதரேயஞ்ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் ததா ||
6. ஸர்வோப நிஷதாம் மத்யே ஸார மஷ்டோத்தரம் சதம் |
ஸக்ருச் –ச்ரவண– மாத்ரேண ஸர்வா கௌக நிக்ருந்தனம் ||
7. மயோபதிஷ்டம் சிஷ்யாய துப்யம் பவன நந்தன |
இத –மஷ்டோத்தர சதம் நதேயம் யஸ்ய கஸ்யசித் ||

இவைகளின் சுருக்கமான பொருளாவது:–

1.ருக் வேதம் முதலிய வேதங்கள், வ்யாஸ பகவானால் நான்காகப் பிரிக்கப்பட்டது.
அவற்றில் பல சாகைகள் (கிளைகள்) உள்ளன ; உபநிஷத்துக்கள் உள்ளன
2. மாருதி புத்ர ! —-அநுமனே !ருக் வேத சாகைகள் 21; யஜுர் வேத சாகைகள் 109
3. எதிரிகளைத் தகிப்பவனே !சாம வேதத்தில் சாகைகள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதர்வண வேதத்தில் 50 சாகைகள் உள்ளன.
4. ஸ்லோகம் 4ம் 5ம் சொல்வதாவது—ஒவ்வொரு சாகையிலும் உபநிஷத் உள்ளது.
மோக்ஷத்தை அபேக்ஷிக்கும் முமுக்ஷுக்களுக்கு மாண்டூக்ய உபநிஷத்தே போதுமானது.
அப்படியும் ஜ்ஞானம் வரவில்லையெனில்,
1-ஈசாவாஸ்ய ,
2-கேன,
3-கட ,
4-ப்ரச்ன ,
5-முண்டக,
6-மாண்டூக்ய ,
7-தைத்திரீய ,
8-ஐதரேய,
9-சாந்தோக்ய ,
10-ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்களான இந்தப் பத்து உபநிஷத்துக்களையும்,
ஆசார்ய முகேன தெரிந்துகொள்ள வேண்டும்.

இவை தசோபநிஷத்என்று ப்ரஸித்தி பெற்றவை.

மேலும் -8 உபநிஷத்துக்கள்
11. ச்வேதாச்வதரோபநிஷத்
12.அதர்வசிர உபநிஷத்
13.அதர்வசிகோபநிஷத்
14.கௌஷீ தகி உபநிஷத்
15. மந்த்ரிகோபநிஷத்
16. ஸுபாலோபநிஷத்
17.அக்நி ரஹஸ்யம்
18. மஹோபநிஷத்

உபநிஷத் என்றால்
ஆசார்யனின் அருகில் சென்று உபதேசமாகக் கேட்பது. இதனால் துன்பங்கள் தொலைந்து பேரின்பம் நிலைக்கும்.
ஆதலால், உபநிஷத் எனப்பட்டது. இது லௌகிக வார்த்தை என்று சொல்வர்.
உபநிஷத்துக்கு வேதாந்தம் என்றும் பெயர். பரப்ரஹ்மத்திடம் நெருங்கி இருப்பதாலே உபநிஷத் எனப்பட்டது
6. உபநிஷத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்ய ஸாரமாக இருப்பது—-108.

இவற்றை ஒருமுறை ச்ரவணம் (கேட்பது) செய்த உடனேயே எல்லாப் பாவங்களும் நசித்துவிடும்.
7. பவன நந்தன ! இந்த 108ம் , என்னுடைய சிஷ்யனான உனக்கு, உபதேசிக்கப்பட்டது.
இதை ஆராயாமல் எவருக்கேனும் உபதேசிக்கக் கூடாது.

ஸ்ரீ ராமபிரான் மேலும் சொல்கிறார் —–

ஸேவாபராய சிஷ்யாய ஹித–புஷ்டாய மாருதே |
மத்பக்தாய ஸுசீலாய குலீநாய ஸுமேத ஸே ||

ஸம்யக் பரீக்ஷ்ய தாதவ்ய –மேவ –மஷ்டோத்த்ரம் சதம் |
ய: படேச் –ச்ருணுயாத் வாபி ஸ மாமேதி ந ஸம்சய : ||

இவற்றின் அர்த்தமாவது—-
ஹே—-மாருதி ! கைங்கர்யத்தைச் செய்பவனும், பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவனும் என்னிடம் பக்தி உள்ளவனும்
நல்ல குலத்தில் உதித்தவனும் நல்ல புத்தியும் உடைய சிஷ்யனுக்கு அவனை நன்கு பரீக்ஷை செய்தபிறகே
இந்த 108 உபநிஷத்துக்களையும் உபதேசிக்கவேண்டும்.
இவற்றைப் படிப்பவன், கேட்பவன், அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.

வேதத்தில், நமகம், சமகம் என்று இரண்டு இருக்கிறது.
நமகம் என்பது,பகவானை ஸ்தோத்தரிக்கும்படியான மந்த்ரம்.
சமகம் என்பது நம்முடைய வேண்டுதல்களை பகவானிடம் சமர்ப்பிக்கும்படியான மந்த்ரம்.
நமக்கு வேண்டியவை எவை எவை என்று சமகம் சொல்லிக் கொடுக்கிறது. இவைகளில் எண்கள் வருகின்றன

ஏகாச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம
ஏகாதச ச மே த்ரயோதச ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே
நவதச ச ம ஏக விகும்சதிச் ச மே த்ரயவிகும் சதிச் ச மே பஞ்சவிகும் சதிச் ச மே ஸப்தவிகும் சதிச்ச மே நவவிகும் சதிச்ச மே ஏகத்ரிகும் சச்ச மே த்ரயஸ்த்ரிகும் சச்ச மே சதஸ்ரச்ச மே –ஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விகும் சதிச் ச மே சதுர்விகும் சதிச் ச மே –ஷ்டாவிகும் சதிச் ச மே த்வாத்ரிகும் சச்ச மே ஷட்த்ரிகும் சாச்ச மே சத்வாரிகும் சச்ச மே சதுச்சத்வாரிகும் சச்ச மே –ஷ்டாசத் வாரிகும் சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சா –விஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்த்தாச வ்யச்நியச்சா-ந்த்யாயநச்சா–ந்த்யச்ச பௌவநச்ச புவநச்சா –திபதிச்ச

வேதங்களில் , எண்கள் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பது வியக்க வைக்கும்

————————————————–

புராணம் என்றால் பழைய கதைகள் என்று பொருள்.
அதாவது ‘’புரா அபி நவம்’’ என்று வடமொழியில் விளக்கம் தருவர். பழையது ஆனால் என்றும் புதியது.

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்
மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம
வேத சுதர்வாங்கிரச இதிஹாச
புராணம் வித்யா உபநிஷத் —என்று பிருஹதாரண்யம் கூறுகிறது.

இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

18 புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:-
பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்
பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்
விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்
சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்
பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்
பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்
மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்
ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்
நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்
பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்
லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்
வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்
ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்
வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்
கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்
மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்
காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்
பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்

ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும்
கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும்
வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.

——————-

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீ ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே! -ஸ்ரீ சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்-ஸ்ரீ கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே-ஸ்ரீ கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்-ஸ்ரீ கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

———-

அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக;‘ கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவிஉண்டோ

——–

அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.
” இதுவே தமிழின் சிறப்பு..”
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.