Thiruvonum's Weblog

Just another WordPress.com weblog

Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

« Older Entries

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த முக்த போகா வலீ —

January 25, 2023

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

(வியாக்கியான சக்ரவர்த்தி பரம காருண்யர் -ஆவணி ரோஹிணி கண்ணன் போல் இவரும் –
சங்க நல்லூரில் திரு அவதாரம்
1167 தொடங்கி -95 திரு நக்ஷத்திரங்கள் –1262 வரை
நம்பிள்ளை சிஷ்யர்
யாமுனாச்சார்யர் திருக்குமாரர்-ஆளவந்தார் பெயரே இவர் தந்தைக்கும்
ஸ்ரீ தரன் கடாக்ஷம் எளிதில் கிட்டும் -வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
இவர் சகோதரி திருக் குமாரர் -சுந்தர வரதாச்சார்யர் இயல் பெயர் –அழகிய மணவாள பெருமாள் நாயனார் -சுவீகாரம் –
இவர் பிள்ளை லோகாச்சார்யார் தம்பி அல்ல
பெயரில் குழப்பம் வரக்கூடாது -என்பதால் நாயனார் ஆச்சான் பிள்ளை என்ற பெயர் மாற்றம் செய்தார்கள்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த கிரந்தங்கள் என்று சொல்லுவதால் பெரியவாச்சான் பிள்ளை -நாயனார் ஆச்சான் பிள்ளை இருவருக்கும் பொருந்தும்
இவர் சிஷ்யர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
இவர் சிஷ்யர் -திருமாலை ஆண்டான் வம்சத்தில் வந்த யாமுனாச்சார்யர்- ப்ரமேய ரத்னம் கிரந்தம் முன்பே பார்த்தோம்)

ஸ்ருத் யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்ல ஸத் பகவத் அங்க்ரி புராண பந்தும்
ஞானாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த தனியன்

(வேதப் பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு -மலர வைக்கும் -இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் -தாமரை இணை அடிகள் -பழைய உறவினராய்,-திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
ஞானங்களுக்கு -அதி ராஜம் -பேரரசராய்,
அபய ப்ரத ராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான-பரம காருணிகம்-பெரியவாச்சான் பிள்ளையைப் போலவே
இவரும் பரம காருணிகர் என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபய ப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாம முடைய அப் பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

அபய ப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத் ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

(அபயப்ரத பாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய்,
எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை
இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

அஸ்மஜ் ஜநக் காருணய ஸுதாஸந்துஷி தாத்மவான் |
கரோமி சரமோபாய நிர்ணயம் மத்பிதா யதா ||

அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

(பக்தி உழவனின் உபகார பரம்பரைகள் -அவற்றால் பெரும் பேற்றை விளக்கும்

இரவு கழிந்து பகல் ஆரம்பிக்கும் முன் இடைப்பட்ட பிராயஸ் சந்தி காலம் -இருள் தொலைந்தது மட்டும் –
அஞ்ஞானம் தொலைந்து
நித்ய பகவத் அனுபவம் கிட்டாத போது
கூவிக் கொள்ளும் காலம் குருகாதோ
முமுஷு -இவன் -முக்தன் ஆவதற்கு முன்
ஸம்ஸாரிகள் -பத்தாத்மாக்கள் –
முமுஷுவுக்கு ஸஹ வாசம் சம்பாஷணம் ஸஹ போஜனம் த்யாஜ்ய உபா தேயங்கள் நடைமுறைகள் பல கிரந்தங்கள் சொல்லும்
ஸ்ரீ கீதை அருளிச் செயல்கள் ரஹஸ்ய த்ரயங்கள் இவற்றை விவரிக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தில் உத்க்ராந்தி விளக்கும் பாதம் – பிரயாணம் கதி பற்றி பாதம் -அங்கு சென்ற பின்பு கிடைக்கும் அனுபவம்
சாம்யா பத்தி -ஸாலோக்யம் ஸாமீப்யம் -ஸாரூப்யம் -ஸாயுஜ்யம் -பலவும் உண்டே)

(ஒவ்வொன்றுமே நிரதிசய அனுபவம் தானே -முக்தானாம் போக ஆவலீ -அனுபவ வரிசைகளை விளக்கும் கிரந்தம்
இனிமையான பரம போக்யம் –
பேற்றுக்குத் தவரிக்கப் பண்ணும்
அர்ச்சிராதி கதி கிரந்தம் போலே இதுவும்)

இவரும் சங்க நல்லூரில் 1192 திரு அவதாரம்-இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்
ஞான வர்ணவம்
தத்வ த்ரய விவரணம்
அணுக்த புருஷகாரஸ் ச சமர்த்தனம்
சரம உபாய நிர்ணயம்
சதுஸ் ஸ்லோகி பாஷ்யம்
தத்வ ஸங்க்ரஹம்
பரம ரஹஸ்ய த்ரயம்
முக்த போகா வலீ

இவர் சிஷ்யர் பரம்பரை

வாதி கேசரி மணவாள ஜீயர்
பரகால தாசர்
ஸ்ரீ ரெங்காச்சார்யார் -(இவருக்கு சிஷ்யருக்கு சிஷ்யர் ஆதி வண் சடகோப ஜீயர்)

இந்த கிரந்தம் சிறு வயதிலே எழுதி தந்தை இடம் காட்டியதாக ஐதிகம் உண்டாம்
எனக்கு சரமத்திலே பிறந்த ஞானம் உனக்கு பிரதமத்திலே உண்டாயிற்று
இளைய வயசில் -ஆச்சார்ய விஷய ஞானம் உனக்கு பகவத் விஷயத்தில் உண்டானதே என்று
ஆனாலும் ஸ்ரீ வைஷ்ணத்வம் என்னிடம் கற்றுக் கொள் என்றாராம்

அர்ச்சிராதி கதி நான்கு பிரகரணங்கள் போல்
1-சம்சாரத்தில் படும் பாடு முதலில் -ஸம்ஸாரம் ரோகம் அறிந்து தானே போகம் ரசிக்கும்
2-உத்க்ராந்தி-உத் கிரமணம் -அடுத்து -கிளம்புவது
3-அர்ச்சிராதி கதி மூன்றாவது
4-போக விவரணம் அங்கு சென்று அனுபவிப்பதை
இது ஒரே நூலாக -பிரிவுகளைக் காட்டாமல் -கத்யமாகவே உள்ளது

—————

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருத்வீ ந நக்ஷத்ராணி(மஹா உபநிஷத்)
(ஸத் ஏவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லா அன்று-ஏகாகீ ந ரமேத-திரிபாதி விபூதியில் உண்டது உருக்காட்டாதே – –சம்சாரிகள் பக்கலிலே குடி போய் )

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 
குன்றம் போல் மணிமாடம் நீடு*   திருக் குருகூர் அதனுள்,* 
நின்ற ஆதிப் பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. 

மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரத் ஏவ ஏகீ பவதி(ஸூ பால உபநிஷத் )

(பிருத்வீ அப்பிலே தொடக்கி -ஆகாசம் அஹங்காரத்தில் மஹான் அவ்யக்தத்தில் சேர்ந்து
அது அக்ஷரத்தில் -அது தமஸ்ஸில் -அது ப்ரஹ்மத்துடன் சேர்ந்தே இருக்கும்
ஐந்து நிலைகள் -மஹான் தொடங்கி–அவ்யக்தம் -அக்ஷரம் -விபக்த தமஸ் -அவிபக்த தமஸ்
விதை -முதல் அவிபக்த தமஸ் -பூதலுத்துக்குள் –
மேல் மண்ணில் இருந்து வெளியில் வர தயார் விபக்த தமஸ்
அடுத்து அக்ஷரம் -தண்ணீரை உறிஞ்சி பெருத்து வெடிக்கத் தயார் நிலை –
நான்காவது -பெருத்து வெடித்த நிலை
முளை விட்டது மஹான் -இதுவே பிரதம தத்வம் -தத்வ த்ரய வியாக்யானத்தில் பார்த்துள்ளோம் -)

தம ஆஸீத் தமஸா கூடம் அக்ரே

(ஸூஷ்ம ப்ரக்ருதி மட்டுமே -அஞ்ஞானம் மூடி -மொத்த ஆத்ம சமஷ்டியும் உள்ளே-ஜடமாய் ஒட்டிக் கொண்டு சிக்கிக் கொண்டு இருக்கும்)

நாஸத் ஆஸீத் (ந அஸத் ஆஸீத் ந ஸத் ஆஸீத் )-என்கிறபடியே

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்–ஆச்சார்ய ஹ்ருதயம் -1-)

கரண களேபர விதுரராய் –அசித் அவிசேஷிதராய் -தன் பக்கலிலே சுவறிக் (ஒடுங்கிக் )கிடந்த ஸம்ஸாரி சேதனரரைப் பார்த்து
ஸூரிகளோபாதி ஸதா பஸ்யந்தி பண்ணி ஆனந்த நிர் பரராகைக்கு இட்டுப் பிறந்த இச் சேதனர் இறகு ஒடிந்த பக்ஷி போலே
கரண களேபரங்களை இழந்து போக மோக்ஷ ஸூன்யராய் இங்கனே கிலேசிக்க ஒண்ணாது என்று தயாமான மநாவாய்
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வ மேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தா பாதாதி ஸம்யுதா -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )என்று
தன் திருவடிகளிலே அபிமுகீ கரித்துக் கரை மரம் சேருகைக்காகத் தத் உப கரணங்களான கரண களேபரங்களை ஈஸ்வரன் கொடுக்க

(முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்று)

(தத் விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : திவீவ சக்ஷூராததம் தத் விப்ராஸோ விபந்யவோ )
(த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் – இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் – கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய்
முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –
விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்—ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-381-
(ஜிஹ்வே கேசவன் கீர்த்திதம் –முகுந்த மாலை)
அவற்றைக் கொண்டு

1-ஸ்வே தேஹ போஷண பரர் ஆவாரும்
2-இந்திரியங்களுக்கு இரை தேடி இடுகையிலே யத்னம் பண்ணுவாரும்
3-பர ஹிம்ஸையிலே விநியோகம் கொள்ளுவாரும்
4-தேவதாந்தரங்களுக்கு இழி தொழில் செய்வாரும்
5-பகவத் பாகவத நிந்தைக்கு பரிகரம் ஆக்குவாரும்
6-ஸ்வரூப அநனுரூபமான (பொருந்தாத )ஷூத்ர புருஷார்த்தங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுவாரும்
7-முமூர்ஷு க்களாய் அபேத ப்ரவ்ருத்தர் ஆவாரும்(முமூர்ஷு–ம்ருதும் இச்சை- இறக்க இச்சைப்பட்டு – அத்தை நோக்கியே போவான் -அபதம் தப்பான பாதை)
8-விதவ அலங்கார கல்பமான கைவல்யத்திலே யத்னம் பண்ணுவாருமாய்

இப்படி அந்ய பரராய்ப் போருகிற ஸம்ஸாரிகள்(தங்களையும் மறந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் )நடுவே
இச் சேதனரோட்டை நிருபாதிக ஸம்பந்தமே ஹேதுவாக
நெடுநாள் ஸ்ருஷ்டிப்பது(உன்னி உன்னி உலகம் படைத்து–சோம்பாது )
அவதரிப்பதாய்(மன்னிடை யோனிகள் தோறும் பிறந்தும் காண கில்லா )
இவை படுகிற நோவைக் கண்டு -ப்ருசம் பவதி துக்கித (ஸ்ரீ ராமாயணம் )–என்று திரு உள்ளம் நோவு பட்டுப் போந்த(அவஜா நந்தி மாம் மூடா )

(வ்யஸநேஷ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித : உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி )
ஈஸ்வரனுடைய பாக்ய வைபவத்தாலே

(நமக்கு அனுக்ரஹம் கிட்டி மோக்ஷம் இச்சை வருவது இதனாலேயே -கோர மா தவம் செய்தனன் கொல்
பொருப்பிடையே நின்றும் –நீர் வேண்டா -நானே பண்ணுகிறேன்

பொருப்பிடையே நின்றும்*  புனல் குளித்தும்,*  ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* – விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை*  மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால்,* 
அஃகாவே தீ வினைகள் ஆய்ந்து.)

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தாநாம் கஸ்சித் மாம் வேத்தி தத்வத –ஸ்ரீ கீதை -7-3-என்று
எங்கேனும் ஒருவன் பராக் அர்த்தங்களிலே (வெளி விஷயங்களிலே )பரகு பரகு என்கை தவிர்ந்து
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து வாடினேன் -என்கிறபடியே
த்யாஜ்ய உபா தேயங்களுக்கு நிர்ணாயக ப்ரமாணமான தத் ஸ்வரூப யாதாத்ம்ய (ஆச்சார்ய பர்யந்தம் யாதாத்ம்ய-யதா வஸ்து ஸ்திதி )நிரூபணத்திலே இழிந்து(பர ஸ்வரூபம் இத்யாதி அர்த்த பஞ்சக யாதாத்ம்ய ஞானம் அறிந்து )

(மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—ஸ்ரீ கீதை-7.3৷৷

சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்)

(வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (1-1-1)

தேஹ இந்த்ரிய மன ப்ராண தீப்ய (தீ புத்தி )அந்யனாய்
ஞான ஆனந்த லஷணனாய் (அடையாளம் )
ஞான குணகனாய்(ஞான மயமாயும் ஞானம் உடையவனாயும் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டுமே உண்டே )
நித்யத்வாதி குண யுக்தனான
ஆத்மாவை

யஸ்யாஸ்மி ந அந்தர்யேமி-(யஜுர்வேதம் நான் யாருடையவனோ அவனை தாண்ட மாட்டேன் )
தாஸ பூத (ஸ்வத ஸர்வே -இதைத் தவிர வேறே அடையாளம் இல்லை -பந்தத்திலும் மோக்ஷத்திலும் -ஹாரீத ஸ்ம்ருதி)
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய(கோசலேந்த்ரஸ்ய -ராமாயணம் )
பரவா நஸ்மி -என்கிறபடியே
பகவத் அநந்யார்ஹ சேஷ பூதன் (தீர்ந்த அடிமை) என்று அறிந்து

(தாஸபூதா: ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்!!
இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர்.
அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.)

(தீர்த்தனுக்கு அற்றபின் மற்றுஓர் சரணில்லை என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும் வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களேஎன்று பூசித்து நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.–7-10-11)

அத்தாலே
தேஹ ஆத்ம அபிமானம் என்ன
ஸ்வ ஸ்வா தந்தர்யம் என்ன
அந்ய சேஷத்வம் என்ன
ப்ரயோஜனாந்தர சம்பந்தம் என்ன
இவை இத்தனையும் குடநீர் வழிந்து

விஷய விஷ தர வ்ரஜ (சப்தாதி ஐந்து தலை பாம்பு சரப்பக் கூட்டம் )வ்யாகுலமாய்
ஜனன மரண சக்ர நக்ர ஆஸ்பதமாய்(முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்)
ஸ்வ பர ஸ்வரூப திரேதாந கரமாய்(கத்யத்ரயம் )
விபரீத விருத்த ப்ரவர்த்தகமாய்
அநந்த க்லேச பாஜனமான ஸம்ஸாரத்தில் பயமும்

(விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே
அகதிர் அசரணோ பவாப்தவ் லுடந் வரத சரணம் இத்யஹம் த்வாம் வ்ருணே –ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -82-

வரத
விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே –சப்தாதி விஷயங்கள் ஆகிற சர்ப்ப சமூகங்களால் நிபிடமாயும்
ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே –பிறப்பு இறப்பு ஆகிற முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்
பவாப்தவ் லுடந் அஹம் –சம்சாரக் கடலில் புரளா நின்ற அடியேன்
அகதிர் அசரணோ இதி –உபேயாந்த்ர ஸூந்யன் உபாயாந்தர ஸூந்யன் என்கிற காரணங்களால்
த்வாம் சரணம் வ்ருணே -உன்னை சரணம் புகுகின்றேன்)

(இரண்டு விபூதியும் நித்யம் -நித்ய விபூதி ஸ்வரூபத்தாலே நித்யம் -லீலா விபூதி ஸ்வ பாவத்தால் நித்யம் -ப்ரவாஹத்வேன நித்யம்
இங்கும் கைங்கர்யம் நித்தியமாக இருந்து இருந்தால் அங்கே போக த்வரிக்க வேண்டாம்)

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -அஞ்ஞானமும் அது அடியாக தீய அனுஷ்டானங்களும் –
அது அடியாக ப்ராக்ருதத்தில் அழுந்தி இருப்பதால்-சம்சாரத்தில் பயமும் பரம ப்ராப்யத்தில் ருசியும் வர வேண்டுமே )

ஸம்ஸாரத்தில் பயமும் –நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான பகவத் கைங்கர்யம்
ஆகிற பரம ப்ராப்யத்தில் ருசியையும் யுடையனாய் (அள்ள அள்ளக் குறையாத -ஸூகம் ஒன்றே -ஆஹ்லாத கரம் )

(கீழ் எல்லாம் ஞான தசை -இனி சாதன தசை-அறிந்த பின் அனுஷ்டானம் வேண்டுமே )

அஸ் ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான பரம ப்ராப்ய ஸித்திக்கு
தர்மேண பாபம் அப நுததி(மஹா நாராயண உப நிஷத் )
யஜ்ஜேன தானேந தபஸா நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-(ப்ரஹதாரண்யம்உப நிஷத்  )என்கிறபடியே

த்ரிவித பரி த்யாக பூர்வகமாக அனுஷ்டிதமான கர்ம யோகத்தாலே(நெஞ்சை நிலை நிருத்த கர்ம யோகம் வேண்டுமே )
த்ருதே பாதாதி வோதகம் -(தண்ணீர் ஒழுகிப் போமா போல் )என்று
துருத்தி மூக்குப் போலே ஞான ப்ரசரண த்வாரமான நெஞ்சை ( பட்டி மேயாதபடி )அடைத்து
அந்யதா ஞான விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸூக்களை
மனனகம் மலமறக் கழுவி -என்கிறபடியே
மறுவல் இடாதபடி ஷீணமாக்கி

(பிராகிருத சரீரம் என்பதால் -பட்டி மேயாதபடி அடைத்ததுக்கும் மேல் -மிஸ்ர ஸத்வம் மாற்றி –
பெருமாளை நோக்கித் திருப்ப ஸூத்த ஸத்வம் வேண்டுமே
தீ மனம் கெடுத்ததுக்கும் மேல்
மருவித் தொழும் மனமும் வேண்டுமே-மூன்றினில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று)

அம் மிஸ்ர ஸத்வத்தை அறுத்து
ஸத்வாத் சஞ்சாயதே ஞானம்
ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகம் -என்று
யதாவத் ஞான சாதனமான அந்த ஸத்வத்தாலே
ஆகார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி (சாந்தோக்யம் )-என்கிறபடியே
சாஷாத்கார பர்யந்தையான அநவரத பாவனை பிறந்து அது

(யதாவத் ஞான-உள்ளபடி அறிய ஸத்வம் –
ஞான அனுதயம் அறியாமலே போகவும் –
குணங்களையும் பொருளையும் மாற்றி அறியவும்-அந்யதா விபரீத ஞானம் வர ரஜஸ் தமஸ்ஸூக்கள்)

(ஞானம் பக்தியாக மாற அன்பு -ஸ்நேஹம் -காதல் -வேட்க்கை வேண்டுமே-த்ருவா ஸ்ம்ருதி தானே த்யானம் –
வேதனம் த்யானம் -அறிகை தியானம்-சிந்தனை – இடைவீடு இல்லாமல் தொடர்ந்து-அநு த்யானம் -இத்துடன் அன்பு ஸ்நேஹம் கலந்து )

ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -என்கிற
பக்தி ரூபா பன்னையாய்
அதனுடைய விபாக தசையாய்
அந்த பக்தி -பகவத் ஸம்ஸ்லேஷ வியோக ஏக ஸூக துக்கனாம் படி பண்ணக் கடவதாய்

(பரபக்தி நிலை -அவன் இடம் மட்டுமே -கூடி இருந்தால் சுகம் பிரிந்தால் துக்கம்)

யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய(நாயமாத்மா ஸ்ருதி -முண்டகம் -காட்டவே காணலாம் )
பக்த்யா மாம் அபி ஜாநாதி-(18-55)
பக்த்யா த்வந் அந்யயா சக்ய–(11-54)
மத் பக்திம் லபதே பராம் –(18-54)என்று
சாதன தயா ஸாஸ்த்ர ஸித்தமான பரபக்தியை ஸாதித்தல்

(நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ
ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன ।
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴ய-
ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் -முண்டக॥ 3॥)

(இந்த மூன்றில் கீழ் இரண்டும் கீதா ஸ்லோகங்கள் ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் உண்டே-)

(ஸ்ரீ சரணாகதி கத்யம்–சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பரபக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் )

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே பக்தி ஒன்றாலே முடியும் –

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.)

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.)

அங்கன் அன்றிக்கே
ஸாத்யமான ஸகல ஸாதனங்களையும் ஸ அங்கமாகவும் ஸ வாசனமாகவும் விட்டு
துஷ்கரத்வாதி தோஷ தூரமாய்
ஸ்வரூப அநு ரூபமாய்
(கண்ணனே சாதனம் என்பதால் )வாத்சல்யாதி குண விசிஷ்டமாய்
நித்ய அநபாயினியான பிராட்டியையும் ஸஹ காரியாக ஸஹியாத படி நிரபேஷமாய்
தஸ்மாந் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதி ரிக்தம் தபஸ் ஸ்ருதம்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்
பாவநஸ் ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸித்தமான ஸித்த ஸாதனத்தை ஸ்வீ கரித்தல் செய்து

(12 தபஸ்ஸுக்கள் நியாஸமே உயர்ந்தது -ப்ரபத்தியும் கண்ணனும் ஒன்றே என்று கொண்டு அருளிச் செய்கிறார்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்-ஒரே வேற்றுமையில் இங்கு -பக்தியே கண்ணன் சொல்ல மாட்டோம் -அவன் இடம் பக்தி பண்ணி அடைய வேண்டும்)

———-

(சாதனங்களை அருளிச் செய்து மேல் கர்மங்கள் போவதை பற்றி விளக்கி அருள்கிறார்)

(பக்திக்கு சஞ்சித கர்மங்களை அவன் தொலைத்து பிராரப்த கர்மாக்களை நாமே தொலைக்க வேண்டும்
ப்ரபத்திக்கு இரண்டுமே அவனே தொலைத்து சரீர அவசானத்தில் பேறு-கால விளம்பம் இதுக்கு இல்லையே )

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் -தீயில் இட்ட பஞ்சு போலவும் தாமரை இலைத் தண்ணீர் போலவும்)

ஆக இப்படி ஸித்த ஸாத்ய ரூபமான சாதன த்வய அவ லம்பநத்தாலே
ஏவம் விதி பாபம் கர்ம நஸ் லிஷ்யதே
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே தூ நுதே
ஸூஹ்ருதஸ் ஸாது க்ருத்யாம் த்விஷந்த பாப க்ருத்யாம்
தஸ்ய ப்ரியா ஞாதாயஸ் ஸூ ஹ்ருதம் உப யந்தி அப்ரியா துஷ் க்ருதம்
அஸ்ய இவ ரோமாணி விதூய பாபம்(சாந்தோக்யம் )
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று(கீழ் பிரமாணங்கள் பக்திக்கும் இது பிரபத்திக்கும் )
புண்ய பாப ரூபமான பூர்வாகத்தை ஸூ ஹ்ருத்துக்கள் பக்கலிலும் துஷ் க்ருதுகள் பக்கலிலும் பகிர்ந்து ஏறிட்டு
ப்ரமாதிகமாய் (கவனக் குறைவால் ) புகுந்த உத்தராகம் ஈஸ்வரன் திரு உள்ளத்தில் படாமையாலே கழன்று

ஆக
இப்படி பூர்வாக உத்தராகங்களினுடைய
அஸ்லேஷ விஸ்லேஷ ரூபமான விமோசனம் பிறந்து

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் –
தீயில் இட்ட பஞ்சு -அஸ்லேஷ ரூபமான போலவும்
தாமரை இலைத் தண்ணீர் – விஸ்லேஷ ரூபமானபோலவும்)

(ஸ்ரீ பாஷ்யம் நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-ஆவ்ருத்தி முதல் பாதம் –
அடுத்து -இரண்டாம் பாதம் -உத் க்ராந்தி பாதம் -அத்தை இங்கு விளக்கி அருள்கிறார்-கதி பாதம் முக்தி பாதம் அடுத்தவை )

(4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இல்லை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்

ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாதுஎன்றும் –ஒட்டாதவற்றையும்

சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்

ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே)

போகே ந த்விதரே ஷபயித்வாதா ஸம் பத்யதே -என்கிறபடியே
ஆரப்த கர்ம அவசானத்திலே யாதல்(ஜன்மாந்த ஸஹஸ்ரங்கள் ஆகலாம் பக்தனுக்கு )
யன் மரணம் தத வப்ருதா(அவப்ருத ஸ்நானம் போல் )
மரணமானால் (மரணம் ஆக்கி அல்ல )–என்கிறபடியே
ஆரப்த சரீர அவசானத்திலே யாதல்(இந்த சரீரம் முடிவிலேயே )

இம் முமுஷு சேதனன் இஸ் ஸரீரத்தை விட்டுப் போம் போது
அதி ப்ரபுத்தோ மாமேவ அவலோகயந் (ஸ்ரீ வைகுண்ட கத்யம் )-என்கிறபடி தான் ஈஸ்வரன் என்று இருத்தல்
காஷ்ட பாஷாணா ஸந் நிபம் அஹம் ஸ்மராமி மத் பக்தம் என்றும்
மாம் அநு ஸ்மரணம் ப்ராப்ய -என்கிறபடியே

(அஹம் மனு -நானே ஈஸ்வரன் ப்ரஹ்லாதன் போல் -பக்தி நிஷ்டன்
அவனே நினைவில் வைத்து -பேற்றுக்கு நினைவு அவன் உபாயம்
இரண்டையும் அருளிச் செய்கிறார் )

ஸ்திதே மனஸி ஸூஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

ஈஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாதல் செய்து
அஸ்ய ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங் மனஸி ஸம் பத்யதே(ஹஸ்தே புஸ்தகம் போல் ஸம்யோகம் -வாக்கு மனசில் சம்யோகம் -லயம் )
இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யதே மாநை
அத ஏவ ஸர்வாண்யநு(4-2-2) –என்கிறபடியே வாக் இந்த்ரியமும் அல்லாத கரணங்களும் லயித்து(ஸம்யோக மாத்திரம் )

(பின் ஆகாரம் கார்யம் அழிந்து முன் காரண அவஸ்தையில் ஒன்றுதல்
மண் -நீராகி -அக்னியாகி லயம்
மனஸ் வாக்கு சம்யோகம் தானே கார்ய காரண பாவம் இல்லையே)

மந ப்ராணே
தந் மந ப்ராண உத்தராத் -(4-2-3)என்று
ஸர்வ இந்த்ரிய ஸம் யுதமான மநஸ்ஸூ ப்ராணன் பக்கலிலே ஏகீ பவித்து
ஸோத் யஷே(சஹா அத்யக்ஷ ஜீவன் இடம் )
ஏவமேவம மா மாத்மாநம் அ ந்தகாலே ஸர்வே ப்ராணா அபி ஸமா யந்தி -என்கிறபடியே

பிராணன் ஜீவனோடே கூடி
ப்ராணஸ் தேஜஸி -லீயந்தி என்று
ஜீவ ஸம் யுக்தனான பிராணன் பூத ஸூஷ்மத்திலே லயித்து
பூத ஸூஷ்மம்- தான்
தேஜஸ் பரஸ்யாம் தேவதாயாம் (4-2-1 விஷய வாக்கியம் )-என்கிறபடியே
பர தேவதை பக்கலிலே ஏகீ பவிக்கும் –

ஆக இப்படி சாதாரணமான உத் க்ராந்தி யுண்டாய்(பொதுவான உத் கிராந்தி இது வரை
அர்ச்சிராதி கதிக்கும் தூ மாதி கதிக்கும் இப்படியே )
சதஞ்ச ஏகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸாம் மூர்த்தாநம் அபி நிஸ் ஸ்ருதைகா தயோர்த்வ மாயந் நம்ரு தத்வ மேதி –
ஊர்த்வ மேகா ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா ஸூர்ய மண்டலம் -ப்ரஹ்ம லோகம் அதி க்ரம்ய தேந யாதி பராம் கதிம் என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
ஹ்ருதய கமல அவ லம்பிகளான நூற்றொரு நாடிகளில் தலையில்
ஊர்த்வ கபால வலம்பியான நூற்றோராம் நாடியாலே

ததோ கோக்ர ஜ்வலநம்

தத் ப்ரகாஸி தத்வாரோ வித்யா ஸாமர்த்யாத் தச் சேஷகத்யனு ஸ்ம்ருதி யோகாச் ச ஹார்த்த அநு க்ருஹீதஸ் ஸதாதி கயா -என்கிறபடியே
இவன் தன்னை ஆஸ்ரயிக்கையினாலும்
அர்ச்சிராதி கதி சிந்தனையினாலும்
அதி ப்ரீதனாய் –
ஹ்ருதய குஹா கதனான ஈஸ்வரனுடைய ப்ரஸாத விசேஷத்தாலே ப்ரகாசி தத்வாரனாய்க் கொண்டு
ய ஏஷ ஸ்தந இவா லம்பதே சேந்த்ர யோநி -என்று
முலை போலே நாலுகிற ஹ்ருதய குஹையினின்றும் புறப்பட்டு உச்சந்தலை அளவும் சென்று

வ்ய போஹ்ய ஸீர்ஷ கபாலே -என்று தலை யோட்டைப்பிட்டு
அத யத்ரைத தஸ்மாச் சரீரா துத் க்ரமாதி
அத தைரேவ ரஸ்மிபி ரூர்த் வமா க்ரமதே
ரஸ்ம்ய அநு சாரீ -என்கிறபடியே
அந்நாடியோடே பிடையுண்டு கிடக்கிற ஆதித்ய ரஸ்மி விசேஷத்தாலே
அஸ்யைவ சோப பத்தே ரூஷ்மா
ஸூஷ்மம் ப்ராமண தஸ் சத தோப லப்தோ –என்கிறபடியே
ஊஷ்ம லக்ஷணையான ஸூஷ்ம ப்ரக்ருதியோடே புறப்பட்டு போம் போது

அர்ச்சிஷ மேவாபி ஸம் பந்தே
அர்ச்சிஷோஹ அஹ்ந ஆபூர்ய மாண பஷம் ஆபூர்ய மாண பஷாத் யாந் ஷடு தங்கேதி மா ஸாம் ஸ்தாந்
மா ஸேப்யஸ் ஸம் வத்சரம் ஸம்வத்ஸர ஆதித்யம் ஆதித்யாத் சந்த்ர மஸம் சந்த்ர மஸோ வித்யுதம்
தத் புருஷோ

அமாநவ ஸ ஏதாந் ப்ரஹ்ம கமயதீத் யேஷ தேவ பதோ ப்ரஹ்ம பத ஏதேந ப்ரதிபத்ய மாநா இமம் மாநவ மா வர்த்தம் நா வர்த்தந்தே நா வர்த்தந்த இதி

ஸ ஏதம் தேவ யாநம் பந்தாந மாபத் யாக் நி லோகமா கச்சதி ஸ வாயு லோகம் ஸ வருண லோகம் ஸ ஆதித்ய லோகம்
ச இந்த்ர லோகம் ச ப்ரஜாபதி லோகம் ஸ ப்ரஹ்ம லோகம்

அக்னிர் ஜ்யோதிர் அஹஸ் ஸூக்லஷ் ஷண் மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா –என்று

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லிக்கிறபடியே பிரதமத்திலே
அர்ச்சிஸ் என்றும்
அஹஸ் என்றும்
ஸூக்ல பக்ஷம் என்றும்
உத்தராயணம் என்றும்
சம்வத்சரம் என்றும்
இவ்வோ சப்தங்களால் சொல்லப்படுகிற தத் தத் அபிமான தேவதா பூதரான ஆதி வாஹகரும்

அதுக்கு மேலே
வாயு மப்தாத விசேஷ விசேஷாப்யாம் என்று
வாயு வாக்யனான ஆதி வாஹகனும்
இவ்வளவிலே தம் தாமுடைய எல்லை அளவிலே வழி விட
ஆதித்யன் அளவிலே வந்து

அநந்தரம்
பித்வா ஸூர்ய மண்டலம்
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தைக் கீண்டு
அவ்வருகே புறப்பட்டு சந்திரன் அளவும் சென்று

இதுக்கு அவ்வருகே வித்யுத் அபிமானியான அமானவன் அளவும் சென்று அவனோடே கூடி
தடிதோதி வருணஸ் சம்பந்தாத் என்று மேலே
வருண இந்த்ர பிரஜாபதி லோகங்களிலே
தத் தத் அபிமான தேவதைகளாலே ஸத் க்ருதானாய்க் கொண்டு போய்

அண்டம் பி நத்தி அவ்யக்தம் பி நத்தி தமோ பி நத்தி – என்றபடி
அண்ட கபாலத்தைப் பிட்டு -அவ்வருகே புறப்பட்டு
வாரி -வஹ்நி -அநல -அநில -ஆகாச -மஹத் அஹங்கார ரூபமாய்
ஒன்றுக்கு ஓன்று தசோத்தரமான ஆவரணங்களைக் கடந்து
இத்தனையும் தனக்குள் வாயிலே அடங்கி

அநந்தஸ்ய ந தஸ்யாந்தஸ் சங்க்யாநம் வாபி வித்யதே -என்றும்
முடிவில் பெரும் பாழ் -என்றும் சொல்லுகிற
ப்ரவ்ருத்தி தத்வத்தைக் கடந்து

ஆக இப்படி சிறை என்கிற கூட்டத்தின் நின்றும் புறப்பட்டுப் போமா போலே
இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையைக் கழித்து
ஒருபடி வெளிநாடு கண்டு

ஸ ஆ கச்சதி விரஜாம் நதீம் -என்கிறபடி
ஸம்ஸார பரமபதங்களுக்கு எல்லையாய்
அம்ருத மயமாய்
விரஜாக்யையான ஆற்றங்கரை அளவிலே வந்தவாறே

சந்த்ர இவர் அஹோர் முகாத் ப்ரமுஸ்ய தூத்வா ஸரீரம் -என்கிறபடியே
ராஹு முகத்துக்கு

இரையான சந்த்ரன் ராஹு முகத்தின் நின்றும் புறப்பட்டுப் போமாப் போலே
நெடுநாள் ஸ்வரூபம் கரை ஏறும்படி விழுங்கி விடாய்த்துக் கிடக்கிற கிடக்கிற ஸூ ஷ்மப் ப்ரக்ருதியை விட்டுப் புறப்பட்டவாறே
கரிப் பானையாலே கவிழ்த்து ப்ரபாவ ரஸம் இன்றியிலே திரோஹித ஸ்வரூபமான தீபம்
அதைத் தகர்த்தவாறே கண்ட இடம் எங்கும் தன் ஒளியாமோ பாதி இவனுக்கும்

பரம் ஜோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபைதி -என்று
ஞான ஆனந்த ஸ்வரூப லக்ஷணமாய்
ஸ்ரீ கௌஸ்துபம் போலே யும்
ஸ்ரீ ஸ்தனம் போலே யும்
ஈஸ்வரனுக்கு ஸ்வரூப ஹாஸ்பதமாம் படி
அத்யந்த விலக்ஷண ஸ்வரூபமும்
ஸ்வரூப ஆஸ்ரயமான அபஹத பாப்மத்வாதி குணங்களும்

யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரஷால நாத்மணே
தோஷ ப்ரஹாணான் ந ஞான ஆத்மந க்ரியதே ததா
யதோ தாபா ந கரணாத் க்ரியதே ந ஜாலம்பரம்
ஸ தேவ நீயதே வ்யக்தி மஸதஸ் ஸம்பவ குத
ததா ஹேய குண த்வம் சாத வபோதா தயோ குணா
ப்ரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே –என்கிறபடியே

கிணற்றைக் கல்லினால் உள் வாயிலே கிடக்கிற ஜல ஆகாசங்கள் ப்ரகாசிக்குமா போலே யும்
மல யோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை நேர் சாணையிலே இட்டுத் தெளியக் கடைந்தால்
தன்னடையே தத் கதமான ஒளி பிரகாசிக்குமா போலேயும்
இவனுக்கும் தன்னடையே பிரகாசிக்கும் –

ஆக இப்படி ப்ரகாசித ஸ்வரூப ஸ்வ பாவனாய்
ஸர்வத பாணி பதம் தத் ஸர்வ தோஷி ஸிரோ முகம்
ஸர்வதஸ் ஸ்ருதி மல் லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-என்கிறபடியே
ஸ்வ ஸங்கல்ப மாத்ரத்தாலேயே கர சரணத்ய அவயவங்களால் கொள்ளும் கார்யங்களைக் கொள்ளும் ஷமனாகையாலே
தாம் மனஸை வாத்யாதி –என்கிறபடியே
அவ் விரஜையாக் யையான சரித்தை ஸ்வ ஸங்கல்பத்தாலே கடந்து

ஸோத் வந பாரம் ஆப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
ஸதா பஸ்யந்தி ஸூரயா
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத் வை பஸ்யந்தி ஸூரய -என்கிறபடியே
ப்ராப்ய பூமியாக ஸ்ருதமாய்

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதயோம் அக்னி -என்றும்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந-என்கிறபடியே
ப்ராக்ருத தேஜோ பதார்த்தங்களை கத்யோதக் கல்பமாக்கக் கடவதாய்

காலம் ஸ பசதே தத்ர ந காலஸ் தத்ர வை ப்ரபு -என்கிறபடியே -அகால கால்யமாய்
ஏதே வை நிரயாஸ்தா தஸ்தா நஸ்ய பரமாத்மந -என்று
அபரிமித புண்ய ஸாத்யமான பிரம்மா லோகாதிகளை யமன் குழியாக்கும் வை லக்ஷண்யத்தை யுடையதாய்
தமஸ பரஸ் தாத்
ரஜஸ பரகே
தெளி விசும்பு
நலம் அந்த மில்லதோர் நாடு -என்கிறபடியே
அநந்த க்லேச பாஜனமான இருள் தரும் மா ஞாலத்துக்கு எதிர் தட்டாய்
பரம யோகி வாங் மனஸா அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வ பாவமான பரம பதத்திலே

அநேக ஜென்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜன்
மோஹாச் ஸ்ரமம் ப்ரயாதோசவ் வாஸநா ரேணு குண்டித -என்றும்
பெரும் காற்றில் தூறல் போலே அநாதி காலம் கர்ம வஸ்யனாய்
ஸ்ருஷ்டனாவது
ஸம் ஹ்ருதனாவது
ப்ரஹ்ம லோகஸ்தனாவது
பாதாலஸ்தனாவது
தேவனாவது
ஸ்தாவரமாவது
ஸ்த்ரீ யாவது
புருஷனாவது
ப்ராஹ்மணானாவது
சண்டாளனாவது
பாலனாவது
வ்ருத்தனாவதாய்

ஒரு நிலையிலே நிற்கப் பெறாதவனாய்
காலிலே சீலை கட்டி ஜங்காலனாய்
கண்டிடம் எங்கும் தட்டித் திரிந்தவன்
மீட்டுத் தட்ட வேண்டாத படி
அத் வந பாரமான தேசத்திலே வந்து புகுந்து
ஸா லோக்யம் பெற்று

ப்ராக்ருதமாய்
குண த்ரயாத்மகமாய்
மாம்ஸாஸ்ருகாதி மயமாய்
பரிணாம ஆஸ்பதமாய்
கர்ம ஹேதுகமாய்
அஸ்வா தீனமாய்
ஸ்வரூப திரோதான ஆகரமாய்
துக்க அனுபவ உப கரணமான உடம்பின் கையிலே அநாதி காலம் பட்டுப் போந்த பழிப்பு அடையத் தீரும் படி

அப்ராக்ருதமாய்
ஸூத்த சத்வாத்மகமாய்
பஞ்ச உப நிஷத் மயமாய்
ஏக ரூபமாய்
பகவத் ப்ரஸாத ஹேதுகமாய்
ஸ்வ அதீனமாய்
ஸ்வரூப ப்ரகாசகமாய்
கைங்கர்ய ஸூப அனுபவ உப கரணமாய்
திவ்ய மங்கள விக்ரஹ ஸ ஜாதீயமான உடம்பைப் பெற்று
இப்படி லப்த ஸ்வரூபனாய்

ஜரம் மதீயம் ஸரஸ் -என்கிற திவ்ய ஸரஸ்ஸிலே அஸ்வத்தளவும் சென்றவாறே
தம் பஞ்ச சத அந்யப் சரஸஸ் ப்ரதிதா வந்தி சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சன ஹஸ்தா
சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாஸோ ஹஸ்தா சதம் பணா ஹஸ்தா என்கிறபடி
ஐந் நூறு அப்சரஸ் ஸூக்கள் வந்து எதிர் கொள்ள
பர்த்ரு க்ரஹத்துக்கு வரும் பெண்களை அவ்வூர்க் குளக்கரையிலே குளிப்பாட்டி
ஒப்பித்துக் கொண்டு போகும் பந்துக்களைப் போலே
தம் ப்ரஹ்மா அலங்காரேணால் அங்குர்வந்தி -என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாத னுக்கு சத்ருஸமாக ஒப்பித்துக் கொண்டு போம் போது

தம் ப்ரஹ்ம கந்த ப்ரவசதி
தம் ப்ரஹ்ம ரஸ ப்ரவசதி
தம் ப்ரஹ்ம தேஜஸ் ப்ரவசதி
ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ
பரஞ்சோதி -என்கிறபடியே -சர்வேஸ்வரனுடைய
திவ்ய பரிமளத்தையும்
திவ்ய தேஜஸ்ஸையும் யுடையவனாய்

பரம பதத்தில் நாட்டு எல்லையைக் கழித்து
ஸ ஆ கச்ச தீந்த்ர பிரஜாபதி த்வார கோபவ் -என்றும்
கொடி யணி நெடும் தோள் கோபுரம் குறுகினர் -என்கிறபடி
அபராஜிதா ப்ரஹ்மண என்று
அபராஜி தாக்யையான ப்ரஹ்மபுரத் த்வார கோபுரத்து அளவும் வந்து

அநாதி காலம் இந்திரியங்கள் கையிலும்
மஹதாதிகள் கையிலும்
எளிவரவு பட்டுப் போந்த இவன்
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே
தேசாந்திர கதனான ராஜ புத்ரன் வரும் போது ராஜ பரிகரம் புறப்பட்டது தம் தாம் தரத்திலே எதிர் கொள்ளுமா போலே
த்ரிபாத் விபூதியில் உள்ள ஸூரி வர்க்கம் அடைய
வ மஞ்சியாக -(அமஞ்சி -கூலி இல்லாத வேலை )திரண்டு எதிர் கொள்ள
அவர்களோடே கூட ஒரு பெரிய திரு நாள் போலே ஸ ஸம் ப்ரமமாக உள்ளே புக்கு
ராஜ மார்க்கத்தாலே போய்ப் ப்ரஹ்ம வேஸ்மத்திலே சென்று

ஸ ஆ கச்சதி விசஷணாம்ம் ஆ சந்தீம் –என்றும்
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே –என்கிறபடி
மணி மயமாய்
அநேகம் ஆயிரம் மாணிக்க ஸ்தம்பங்களாலே
அநேகம் ஆயிரம் ஆதித்ய சங்கங்களை
உருக்கி வார்த்து வகுத்தால் போலே அபரிதமான தேஜஸ்ஸை யுடையதாய்

அவ்வாதித்ய சங்கம் போலே எரிந்து இருக்கை அன்றியிலே
புக்காரை அடைய ஆனந்த நிர்ப்பரர் ஆக்கும்படி ஆனந்த மயமாய்
மஹா அவகாசமான திரு மா மணி மண்டபத்திலே ஏறி

ஸூரி சங்க சங்குலமான நடுவில் நாயக விருத்தியில் சென்று புக்கு
பிரஞ்ஞயா ஹி விபஸ்யதி ஸ ஆகச்ச த்யமிதவ்ஜஸம் பர்யங்கம் சதம் ப்ராணஸ் தஸ்ய பூதம்
சப விஷயச்ச பூர்வவ் பாதவ் -இத்யாதிகளில் சொல்லுகிற படியே
அநேக தேவதா மயமாய்
அபரிமித விவித சித்ரித திவ்ய ஸிம்ஹாஸனமாய்

அதுக்கு மேலே ஆயிரம் தளகமாய்
எப்பொழுதும் ஓக்க அலர்ந்து அழுக்கு அற உருக்கி ஒப்பமிட்ட மேரு போலே
ஓங்கின கர்ணிகை யுடைத்தான திவ்ய கமலமாய்

அதின் மேலே அம்ருத பேந படல பாண்டரனாய்
ஸ்வ ஸாஹஸ்ர ஸிரோந் யஸ்த ஸ்வஸ்தி காமல பூஷண
பணா மணி ஸஹஸ்ரேண யஸ்ஸ வித்யோத யந்தி ஸ -என்றும்
பண மணி ஸஹஸ்ராட்யம் -என்றும்
பணா மணி வ்ராத மயூக மண்டல ப்ரகாஸ மாநோதரதி வ்யதாமநி
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த -என்கிறபடியே
பகவத் ஸ்பர்ச ஸூ கத்தாலே விரிகிற பணா ஸஹஸ்ரங்களில் இள வெய்யில் விளங்குகிற ஆதித்ய நிவஹம் போலே
அம்மண்டலத்தோடே மாளிகையோடே வாசி யறத் தன்னுடைய அருணமாகிற கிரணங்களாலே
வழிய வார்க்கிற மாணிக்ய மண்டலங்களை யுடையவனாய்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலன்களுக்கு ஏக தாமனாய்
ஸகல கைங்கர்ய ஸாம்ராஜ்ய தீஷிதனான திருவனந்த ஆழ்வானாய்

தஸ்மிந் ப்ரஹ்மாஸ்தே
தஸ்யோத் சங்கே -என்கிறபடியே
அவன் மடியிலே
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீலமுண்ட மின்னன்ன மேனி -என்கிறபடியே
மஹா மேருவை உருக்கித் தேக்கினால் போலே புற வாய் அடையப் புகர்த்து
அத்தை நீக்கிப் பார்த்தவாறே

கண்டார் கண்களை அடைய விரித்து அஞ்ஐனம் எழுதினால் போலே இருண்டு
கரு மாணிக்க மலை மேல் மணித்தடம் தாமரைக் காடுகள் போலே திரு மார்வு வாய் கை கண் யுந்தி காலுடை ஆடைகள் செய்ய பிரான்
கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் என்கிறபடி
காலமேக நிபாஸ்யாமமான திரு மேனிக்குப் பரபாகம் ஆகும்படி
கண்ட இடம் எங்கும் சிதற அலர்ந்த தாமரைக்காடு போலே சிவந்த கர சரணாதி அவயவ விசேஷங்களாலே
உத் புல்ல பங்கஜ தடாக ஸீதலனாய்
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பவ்வம் மண்டி யுண்டதொரு காலமேகத்தில் கண்ட இடம் எங்கும்
மின் கொடி படர்ந்தால் போல் கிரீட மகுடாதி திவ்ய பூஷிதனாய்

யுவா குமாரா
அரும்பினை அலரை –என்கிறபடியே
அப்பால்யத்தோடே தோள் தீண்டியான யவ்வனத்தை யுடையனாய்
ஸர்வ கந்தா -என்கிற
திவ்ய அங்க பரிமளத்தாலே த்ரிபாத் விபூதியைத் தேக்கி
ஸர்வ ரஸா -என்கிற
ஸர்வ ரஸ சாரஸ்யத்தாலும் ஸூரி சங்கங்களை விஹ்வலராக்கி

ஆதித்யாதி தேஜஸ் பதார்த்தங்களைக் கரிக் கொள்ளி யாக்குகிற தன்னுடைய திவ்ய தேஜஸ்ஸாலே
ஸோபயந் தண்ட காரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா -என்கிறபடியே
பரமபதத்தை மயில் கழுத்துச் சாயலாக்கி
பொற் குப்பியில் மாணிக்கம் புறம்பு ஒசிந்து காட்டுமா போலே
உள் வாயிலே நிழல் எழுகிற ஞான ஸக்த்யாதி குணங்களையும்

அக் குணங்களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும்
யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
செந்தாமரைத் தடம் கண் -என்று
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைத் தடாகம் போலே
நிரங்குச ஐஸ்வர்யத்தாலும்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலும்
குதறிச் சிவந்து திருச்செவி அளவும் அலை எறிகிற திருக் கண்களையும்
உள்ளே வெண் பல் இலகு சுடர் என்று -திரு முகத்திலே பால சந்த்ரிகையைச் சொரிகிற மந்த ஸ்மிதத்தையும்
திருக் கழுத்து அடியிலே ஸ்நிக்த நீலமாய் அலை எறிகிற திருக்குழல் கற்றையும்
திரு விளையாடு திண் தோள் -என்கிறபடியே
பெரிய பிராட்டியார்க்கு லீலா கல்பக உத்யோனமாய்
சார்ங்க ஜ்யாகிண கர்க்க ஸமமான நாலு திருத்தோள்களையும்
இவை தொடக்கமான திவ்ய அவயவ சோபையையும்-
ஆ பாத ஸூடம் பெருக்காறு போலே அலை எறிகிற திவ்ய லாவண்ய சிந்துவையையும்

நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் அனுபவித்து அனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம் ஸஸ் சமிந்ததே –என்கிறபடியே
பெரும் கடல் இரைக்குமாப் போலே பெரிய கிளர்த்தியோடே வாயாரப் புகழ்வாரும்
பிணங்கி அமரர் பிதற்றும் குணம்
கோதில வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் -என்கிறபடியே
ஸ்வ அநு பூதமான குணங்களினுடைய தாரதம்யத்தைச் சொல்லி சரஸ விவாத கோலா ஹலம் பண்ணுவாரும்
ஸ ஸம் ப்ரஹ்ம ந்ருத்தம் பண்ணுவாருமாய்
நித்ய ஸூரிகள் திரளாக மொய்த்துக் கொண்டு அப்பெரிய போக ஸம் ப்ரமங்களைப் பண்ணும்
இவர்களுடைய ஒவ்வொரு குண சீகரங்களிலே குமிழ் நீருண்டு

தான் நிஸ் தரங்க ஜலதி போலே
அவாக்ய அநாதர -என்கிறபடியே
ஸ்வ அனுபவ ஆனந்த வைபவத்தாலே அவிக்ருதனாய்
நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு பன்னெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பான் மதி ஏந்தி
ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -என்கிறபடியே
ஒரு மரகத கிரி தன் கொடி முடித் தலையிலே சந்த்ர ஸூர்யர்களைக் கவ்வி இருக்குமா போலே
எதிர் மடித்த திருத்தோள்களிலே ஆழ்வார்களை ஏந்தி
ஒரு திருக்கையைத் திருவனந்த ஆழ்வான் மடியிலே ஊன்றி
ஒரு பக்கத்திலே மின் குழாம் சேர்ந்தால் போல் ஸர்வ ஆபரண பூஷிதையாய்
ஸ்வ வைஸ்வ ரூப்ய வைபவத்தை யுடையளாய்
ஈஸ்வரனை வாய்க் கரையிலே அமிழ்த்தும் படியான ஸீல சரிதங்களை யுடையாளாய்
உபய விபூதி நாயகியாய்
ஈஸ்வர ஸ்வரூப குண விபூதிகளுக்கு நிரூபக பூதையாய்
ஸ்வ ஸம்பந்தத்தாலே ஈஸ்வரனுடைய சேஷித்வ போக்யத்வங்களைப் பூரிக்கக் கடவளான பிராட்டியோடும்

இடப்பக்கத்தில் இம் மிதுன போகைகளாய் அவளோடு ஒத்த சவுந்தர்யாதிகளை யுடையரான ஸ்ரீ பூமி நீளை களோடும்
ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பதிர் ஆஸ்தே
தயா ஸஹ ஆஸீநம்
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் –என்கிறபடியே
கூட எழுந்து அருளி இருந்து
நித்ய ஸூ ரிகளை அடிமை கொள்ளுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு
கண்ட போதே ப்ரீதி ப்ரகர்ஷம் பிடரி பிடித்துத் தள்ள
வேர் அற்ற மரம் போலே விழுவது எழுவதாய்
ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்கிறபடியே
க்ரம விவஷை இன்றியிலே தாய் நாடு கன்றே போல் ஸத்வரனாய்க் கொண்டு
ஆனந்த மயம் ஆத்மாநம் உப ஸங்க்ராமதி -என்கிறபடி சமீபஸ்தனாய்
இத்தம் வித் பாதே நைவாத் யாரோ ஹதி -என்று
பாத பீடத்திலே காலை இட்டுப் படுக்கையைத் துகைத்து மடியிலே சென்று ஏறும்

அவனும் நெடு நாள் தேசாந்தரம் போன ப்ரஜை சாவாதே வந்தால் பெற்ற தகப்பன் கண் வாங்காதே பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
ஸம்ஸார தாப அனுபவத்தால் வந்த விடாய் எல்லாம் ஆறும்படி அழகிய கடாக்ஷ அம்ருத தாரைகளாலே
குளிர வழிய வார்த்து
ஸம்ஸ்ப்ருஸ்யா க்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ் வஜே –என்கிறபடியே
தன் நாலு திருத்தோள்களாலும் அரவணைத்து உச்சி மோந்து இவன் நீர்ப் பண்டமாம் படி சில சாந்த்வந உக்திகளைப் பண்ணும்

அவனும் ததீய ஸ்பர்ச ஸூகத்தாலே உடம்பு அடைய மயிர் எரிந்து
ரஸம் ஹ்யேவாயம் லப்த்வ ஆனந்தீ பவதி -என்று பரம ஆனந்தியாய்
அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே யசோஹம் பவாமி ப்ரஹ்மணா நாம் யசோர் ஆஜ்ஜாம் யசோர் விசாம் -என்றும்
புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் -என்றும்
கதா அனு ஸாஷாத் கரவாணி சஷுஷா என்றும்
உன் கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே -என்றும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அப்யேஷ ப்ருஷ்டே மம பத்ம ஹஸ்தே கரம் கரிஷ்யதி -என்றும் சொல்லுகிறபடியே

அத்தேச விசேஷத்திலே சென்று பெறக் கடவோமே
திரு மா மணி மண்டபத்திலே சென்று ஏறக் கடவோமே
நித்ய ஸூரிகளோடே அந்ய தமராகக் கடவோமே
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் காணக் கடவோமே
அவன் திருவடிகளிலே சென்று விழக் கடவோமே
நம்மைக் கண்டால் இன்னான் என்று திரு உள்ளமாகக் கடவோமே -என்றால் போலே
தன் ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்துக்கு அநந்தரம் பண்ணிப்போந்த மநோ ரதங்கள் அடைய
வயிறு நிரம்பிக் கண்டவிடம் எங்கும் திறந்து பாய்கிற பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் ஸ்வரூப ரூப குணங்களில் ஒன்றும் பிரி கதிர் பட மாட்டாதே
அப்ராப்தமாய்
அபோக்யமாய்
அஸ்திரமாய்
அதி ஷூத்ரமான
துர் விஷயங்களைக் கவ்வி அநாதி காலம் பட்ட வெறுப்பு அடையத் தீரும் படி
அதற்கு எதிர் தட்டான இவ்விஷயத்தை அனுபவித்து
அவ்வனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷம் ஒரு பக்கத்திலே கடை வெட்டி விட வேண்டும் படி அணைத் தேங்கலாகத் தேங்கின வாறே

இதுக்குப் பரிவாஹ ரூபமாக
ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–என்றால் போலே
ஜ்வர சந்நி பதிதரைப் போலே வாயாரப் புகழ்ந்து

அத்தால் ஆராமையாலே
விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி –என்கிறபடியே அடிமை செய்வது
அது தனக்கும் ஓன்று இரண்டு பால் ஆராமையாலே
ஸ ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி ஸஹஸ்ரதா பவ தி -என்று
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி அடிமை செய்வது

த்ரிபாத் விபூதியில் பண்ணும் அடிமையால் ஆராமையாலே
ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –
இமான் லோகான் காமான் நீ காம ரூப்ய அநு சஞ்சரன் -என்று
லீலா விபூதியிலும் தொடர்ந்து அடிமை செய்வதாய்
அப்படி
ஸர்வ தேசங்களிலும்
ஸர்வ காலங்களிலும்
உசிதமான ஸர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி
இக் கைங்கர்யத்தால் ஈஸ்வரனுக்குப் பிறந்த முக மலர்த்தியை அனுபவியா நின்று கொண்டு
நோ பஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -பண்ணி
ந ச புனரா வர்த்ததே -என்கிறபடியே
யாவதாத்ம பாவி ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும்

அபய ப்ரதான மிஸ்ராணாம் ஸூனுநா ஸ்வாது நிர்மிதாம்
முக்த போகா வலீமே நாம் ஸே வந்தம் ஸாத்விகா ஜனா

————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in Ashtaadasa Rahayangal, ஸப்த காதை, Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சிறப்பு —

January 22, 2023

ஸ்ரீ  வைகுண்ட ஏகாதசி சிறப்பு —

வரமும் வாழ்வும் அருளும் #வைகுண்ட_ஏகாதசி

கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.

தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.
என்கின்றன ஞான நூல்கள்.

ஆமாம் ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது ‘மோட்ச ஏகாதசி’. இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர் களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள்.

அசுரர்களுக்கு அருளிய ஏகாதசி!

ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள்.

அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ”பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்” என்றார்.

கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ”நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்” என்றார்கள்.

ஸ்வாமி சிரித்தார். ”அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்” என்றார்.

அசுரர்கள் திகைத்தார்கள். ”ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்” என வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ”தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கள வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.

”ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!” என்று வேண்டினார்கள்.

”அப்படியே ஆகும்!” என அருள் புரிந்தார் அச்சுதன். ‘வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.

எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.

முன்னோருக்கும் அருளும் ஏகாதசி

கம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சி. ஆனால், மன்னருக்கு?

ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

”உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, ‘மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று வேண்டினார் மன்னர்.

”மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!” என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.

மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்:

”வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். ‘இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.’

”நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!” என்று சொன்னார் பர்வதர்.

வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்கி வருகிறோம். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

———–

இந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.

கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், “எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்’ என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்பர்.

———–

ஏகாதசி விரத நியதிகள்

தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

ஏகாதசிகள் – 25

உற்பத்தி ஏகாதசி,
மோட்ச ஏகாதசி,
ஸபலா ஏகாதசி,
புத்ரதா ஏகாதசி,
ஷட்திலா ஏகாதசி,
ஜயா ஏகாதசி,
விஜயா ஏகாதசி,
ஆமலகி ஏகாதசி,
பாப மோசனிகா ஏகாதசி,
காமதா ஏகாதசி,
வரூதிநி ஏகாதசி,
மோகினி ஏகாதசி,
அபரா ஏகாதசி,
நிர்ஜலா ஏகாதசி,
யோகினி ஏகாதசி,
சயினி ஏகாதசி,
காமிகா ஏகாதசி,
புத்ர(ஜா)தா ஏகாதசி,
அஜா ஏகாதசி,
பத்மநாபா ஏகாதசி,
இந்திரா ஏகாதசி,
பாபாங்குசா ஏகாதசி,
ரமா ஏகாதசி,
ப்ரபோதினி ஏகாதசி,
கமலா ஏகாதசி ஆகியவையே 25 ஏகாதசிகளாகும்.

————

இதற்கு ஏன் “அத்யயன உற்சவம்“ என்று பெயர் வந்தது..?

“அத்யயனம்“ என்றால் சொல்லுதல் என்று பொருள்..! “அனத்யயனம்“ என்றால் சொல்லாமலிருத்தல்..!
பாஞ்சராத்ர ஆகமம், பல உற்சவங்களை, அததற்குரிய காலத்தில் செய்யச் சொல்கின்றது..!
ஆகமம், தனுர் மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தொடங்கி வேதங்கள் ஓதி பகவானை வழிபடச் சொல்கின்றது.
இவ்விதம் செய்யப்படும் இந்த உற்சவத்திற்கு “மோக்ஷோத்ஸவம்“ என்று பெயர்.
அதில் மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று ஆரம்பித்து, பத்து நாட்கள், “வேத அத்யயனம்“ செய்யச் சொல்கின்றது..!
ஆகமத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பான உறசவம் இது..!
இது போன்று சயனத்திற்கு ஏன் ஊடல் குறித்துக் கூட ஒரு உற்சவத்தினைப் பரிந்துரைக்கின்றது..!
இந்த ஊடல் உற்சவம்தான் பங்குனி மாத பிருமமோற்சவத்தில் மட்டையடி உற்சவமாக நடைபெறுகின்றது..!
மார்கழி (தனுர்) மாதம் மிகச் சிறப்பு வாய்ந்தது. உத்ராயண புண்ய காலம் என்பது தேவர்களுக்கு ஒரு பகற் பொழுது..!
தேவர்களின் பகற் பொழுதின் விடியற்காலம் என்பது மார்கழி மாதம் ஆகும்..!
பகவான் கண்ணன் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி“ என்று சொல்கின்றான்..!

வைகுந்த வாசல் – வடக்குப்புறம் அமைந்திருப்பது ஏன்..?

“உத்ரம்“ என்ற வடமொழி சொல் வடக்குத் திக்கைக் குறிக்கும்.
இந்த “உத்ரம்“ என்ற பதத்திற்கு “ஸ்ரேஷ்டம்” (உன்னதமானது) என்ற பொருளுண்டு.
“உத்தராயண புண்ய காலம்” உன்னதமான காலம் என்றழைக்கப்படுகின்றது.
மிக உன்னதமான இந்த வடக்குத் திக்கு மோக்ஷ வாசலான வைகுந்தவாசல் அமையக் காரணமாயிற்று.

வைகுந்த வாசல் – சிறப்பு..!

( வைகுண்ட ஏகாதசி -பரமபத வாசல் –
பிரமன் ஸ்ருஷ்ட்டி -மது கைடபர் -மிருதுவானவனுக்கு மது -அவனுக்கு கடினம் கைடபர் -இருவரும் -வேதம் அபகரித்து —
ஹயக்ரீவர் அவதாரம் -பல வருஷம் சண்டை -மின்னல் பார்த்து
ஐ மின்னல் துர்க்கா தேவி -தேவி பாகவத புராணம் கதை -பீஜா மந்த்ரம் -நாங்கள் சங்கல்பம் செய்தால் தான் மரணம் -வரம் பெற்றார்கள்
அஹங்கரித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்டார்கள் –
சாக சங்கல்பம் செய்யும் வரம் கேட்கச் சொல்லி அவர்களும்-கேட்டு -அழிக்க –
அவர்களுக்கும் மோஷம்-வடக்கு வாசல் வழியாக மார்கழி சுக்ல பஷ ஏகாதசி கூட்டிப் போனார்கள் –
கும்பகோணம் -ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை பாஞ்சராத்ர ஆகமம் -ஸ்ரீ கேள்வி பெருமாள் பதில் -அதிலும் இந்த வரலாறு
கும்பகோணம் ஸ்ரீ வைகுண்டம் ஆகவே தனியாக வைகுண்ட வாசல் இல்லை
பதினோரு இந்திரியங்கள் பாபம் பிராயச்சித்தம் ஏகாதசி –
மார்கழி உகந்த மாதம் -அதில் இது வருவதால் ஸ்ரேஷ்டம்- )

வேதத்தினை அபகரித்துச் சென்ற மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை திருமால் அழித்தார்.
திருமாலின் கையினால் மோஷம் பெற்ற அவர்கள் வைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டினர்.
திருமாலின் கருணையினால், அவர்கள் சுக்லபக்ஷ ஏகாதசி யன்று வைகுந்த விண்ணகரத்தின் வடக்கு வாயிலின்
மூலமாக மோக் ஷலோகம் சென்றனர். அப்போது அவர்கள், மார்கழி சுக்ல ஏகாதசி யன்று, திருக் கோயில்களிலுள்ள
சுவர்க்க வாசல் வழியே எழுந்தருளும் பெருமாளைத் தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோக்ஷம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க,
பெருமாளும் இசைந்து ஆசி வழங்கினார். அதன் படியே இந்த வாசலானது முக்தி தரும் வாசலாயிற்று..

எப்போது திருவாய்மொழித் திருநாளாக மாறியது..?

இந்த வேத அதயயன உற்சவமானது, திருமங்கையாழ்வார் காலம் வரையில் வேதத்திற்கு ஏற்பட்ட உற்சவமாகத் தான் நடந்து வந்தது..!
திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரின் திருவாய்மொழி உற்சவமாக, சுக்லபட்ச ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள்,
இந்த உற்சவத்தினை அரங்கனருளுால் மாற்றியமைத்தார்..!,
திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து ஒரு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைத் தினத்தன்று,
அரங்கனிடத்து விசேஷமாக பிரார்த்திக்கின்றார் திருமங்கை மன்னன்…!

அரங்கனிடத்துத் திருமங்கையாழ்வார் யாசித்தது மூன்று வரங்கள் தாம்..!

1) புத்த விஹாரங்களில் உள்ள தங்கத்தினை ஸ்ரீரங்கம் விமானத்திற்காகக் கொள்ளை யடித்தப்போது நிறைய
புத்த பிட்சுக்களும் புத்த மதத்தினரும் பலியானர். இவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்கவேண்டும் என்று யாசித்தார்..!

2) திருமங்கைமன்னன் படித்துறையில் (இது வடதிருக் காவேரி கொள்ளிடம் அருகேயுள்ளது..)
பிரேத சம்ஸ்காரம் ஆனவர்களுக்கு வைகுண்ட பிராப்தி வேண்டும் என்றார்..!

3)ஆழ்வார்கள் அருளிச்செயலுக்கு ஏற்றம் தரும் வகையிலும், நம்மாழ்வாரின் மோட்ச வைபவம் சிறப்பாக நடைந்தேற வேண்டியும்,
அத்யயன உற்சவத்திற்கு அரங்கன் அனுமதியளிக்க வேண்டும் எனவும் வேண்டினார்.

ஆழ்வார் வேண்டி அரங்கன் என்ன மறுக்கவா போகிறார்…?

மனப்பூர்வமாக சம்மதித்தார் அரங்கன்..!

ஆழ்வார்களுக்கு ஏற்றம் தரும் “அத்யயன உற்சவம்“ ஆரம்பமானது..!

தமிழ் மறை உற்சவமாக மாற்றி யமைத்தார்..! அதனுடன் கூட வேதம் ஓதுதலும் நடந்து வருகின்றது..!

நாதமுனிகள் காலத்தில் எப்படி நடந்தது..? உற்சவங்கள் எப்படி மாற்றப்பட்டன..,?

வெகுகாலம் வரை ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஸ்ரீரங்கம் கோயில் பரிஜனங்களோடு, வேத பாராயணம், திவ்ய பிரபந்தத்தோடு,
நம்மாழ்வார் எழுந்தருளுவார்..! அந்த சமயம், சில முக்ய கைங்கர்ய பரர்களைத் தவிர, யாருமில்லாததால்,
வேத பாராயணம் போன்ற கைங்கர்யங்கள் நடைபெறவியலாததால், கைசிக ஏகாதசி தொடங்கி,
நம்மாழ்வார் இங்கு எழுந்தருளும் காலம் வரை “அனத்யயன” காலம் ஆனது..!
இந்த ஸம்பிரதாயங்களை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இம்மாதிரி பல நிகழ்வுகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தில் நடைமுறையிலிருந்து வருகின்றது..!

நாதமுனிகள் காலத்தில், நாதமுனிகள் இவ்வைபவத்தினை, பகல் பத்து, இராப்பத்து, என இரண்டாக பிரித்து,
பகல் பத்தில் நம்மாழ்வார் தவிர்த்த இதர ஆழ்வார்களின் பாசுரங்களை “திருமொழித் திருநாளா”கவும்,
இராப்பத்தினை “திருவாய்மொழி”த் திருநாளாகவும், தம் மருமகன்களான மேல அகத்தாழ்வார்,
கீழை அகத்தவார்களுக்கு இயல், இசை, நாடகமாக, திவ்யபிரபந்தங்களுக்கு மெருகூட்டி, திறம்பட போதித்து
அரையர் ஸேவைக்கு ஆதாரமானார்..!
அன்றுந்தொட்டு இன்று வரை இவ்வைபவம் சிறப்புற, வேதம் தமிழ் செய்த மாறனுக்கு பொலிவு தரும் வைபவமாக
“நம்மாழ்வார் மோட்ச“த்துடன் இனிதே தொடர்ந்து நடந்து வருகின்றது..!

எம்பெருமானாரின் விடாய் தீர்த்த உற்சவம்….!

தாம் ஜீவித்திருக்கும் வரை, தமது தீராத ஒர் ஆசையினை, எ்ம்பெருமானாருக்கு, அவருக்குப் பின் வந்த தரிசன ப்ரவர்த்தகர்கள்,
அவரது அர்ச்சா திருமேனியுடன் இருககும் போது பூர்த்தி செய்துள்ளார்கள்..! ஆம்..! திருக்கச்சி நம்பிக்கு பிரஸாதம் அமுது செய்தபின்,
எம்பெருமானார், அவரது சேஷத்தினை பிரஸாதம் கண்டுருளுவார்..!
ஜீவிதத்துடன் இருந்தபோது உள்ள உள்ளக்கிடக்கையினை, ஏக்கத்தினை, அவர் அர்ச்சா திருமேனியுடனிருக்கும் போது தீர்த்து வைத்துள்ளார்கள்..!

வேறு சில விசேஷங்கள்..!

இந்த உற்சவத்தின் போது நம்பெருமாளே ஒரு பக்தன் எவ்விதம் மோக்ஷ உலகம் செல்கிறான் என்பதனை காண்பிக்கின்றார்..!

இந்த ஆத்மா முக்தி பெறும் போது, வைகுண்டத்தில் “விரஜா நதி” எனும் நதிக்கரையினை அடைகின்றது.
விரஜா நதியினில் அந்த ஆத்மா திவ்யமான ஒளி பொருந்திய தேஜோ மயமாகின்றது.
தேவர்கள் எதிர் கொண்டழைத்து வைகுந்தம் அழைத்துச் செல்கின்றனர்..!

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மூல ஸ்தானத்தினை விட்டு புறப்படுகையில் போர்வை சாற்றிக் கொண்டு கிளம்புவார்.
மூன்றாம் பிராகாரத்தில் அமைந்துள்ள “விரஜா நதி“க்கு ஒப்பான “விரஜாநதி” மண்டபத்தினை அடைந்தபோது,
அங்கு வேதகோஷங்கள் நடைபெறும். இது தேவர்கள், அந்த முக்திபெற்ற ஆத்மாவினை எதிர்கொண்டழைப்பதற்கு ஒப்பாகும்.
சற்று தள்ள வைகுந்த வாசல் முன்பு, அரங்கன் தம் போர்வையினைக் களைந்து, ஒளி பொருந்திய திருவாபரணங்களை,
தம் மேல் சாற்றிக் கொண்டு தேஜோ மயமாய், மிக்கக் காந்தியுடன் சேவை சாதித்தருளுவார்.
இது விரஜா நதியில் தீர்த்தமாடிய அந்த ஆத்மா தேஜோமயமாய் விளங்குவதற்கு ஒப்பாகும்…!

இவ்விதம் அரங்கன் பெருங்கருணையுடன், தாமே ஒரு சேதனனாகயிருப்பது, தம் பக்தன் எப்படி மோக்ஷம் பெறுகின்றான்
என்பதனை தாமே நிகழ்த்திக் காட்டுகின்றார்.

நாச்சியார் திருக்கோலம், நம்பெருமாளின் வேடுபறி, நம்பெருமாள் கைத்தல சேவை, நம்மாழ்வார் கைத்தல சேவை,
நம்மாழ்வார் மோக்ஷம் ஆகிய உற்சவங்கள் அவசியம் கண்டு, உள்வாங்கி, நாம் உணர்ந்து, உய்ய வேண்டிய ஒரு அற்புத உற்சவம்,
இந்த அத்யயன உற்சவம்..!

இவ்வைபவத்தில் அரங்கனுக்கு, ஆழ்வார் மீதும் அவர்கள் பாடிய தீந்தமிழ் பாசுர்ங்கள் மீதும் கொண்ட பாசம் அபரிமிதமானது..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவம்தான் நெடிய உற்சவம்..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவ காலத்தில், அரங்கன் தம்மை அலங்கரித்துக் கொள்வதிலும்,
ஆழ்வார் பின்னே அலைந்து திரிவதிலும் அதிக நாட்டமுடையவனாக உள்ளான்..!
இந்த உற்சவத்தில் அவனது தேஜஸ், காந்தி, கீர்த்தி, தயை மிக மிக அதிகம்..!

சூரிய குல வம்ச அரசர்கள் (கட்வாங்கன், இஷ்வாகு, தசரதன், ராமன்) போன்றவர்களும்,
சந்திர குல வம்ச அரசர்கள் (சந்தனு) போன்றவர்களும் வணங்கி உய்வடைந்தனர்..!
இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சூரியனுக்குரிய நவரத்னமாகிய ரத்னாங்கியை நம்பெருமாள் அணிந்தும்,
சந்திரனுக்குரிய நவரத்னமாகிய, நல்முத்த்ங்கியைப் பெரிய பெருமாள் அணிந்தும்,
எளியவராகிய நாமும் உய்யும் வண்ணம், வைகுண்ட ஏகாதசியன்று சேவை சாதித்தருளுகின்றார்..!

எல்லா பெரிய ரக்ஷா பந்தன உற்சவத்தின் போதும், ஏழாம் திருநாள் தாயார் ஸந்நிதி எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளிச் செல்வார்..!
ஆனால் இந்த இருபது நாள் உற்சவத்தில் ஒரு நாள் கூட தாயார் ஸந்நிதி பக்கம் திரும்பமாட்டார்..!
ஆழ்வார்களையும், அரையர் கொண்டாட்டத்தினையும் ரசிப்பதில், அவன் அதில் லயித்து கிடப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு..!

இந்த மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்றுதான், தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.
இன்றுதான் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம் செய்த நாள் – கீதா ஜெயந்தி.

வைகுந்த ஏகாதசி நிர்ணயம் செய்வது எப்படி?

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் ஏகாதசி விரதத்தினைப் பற்றி பல புராணங்கள்,
சாஸ்திரங்களிலிருந்து தமது “ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்“ என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.
அவரது திருவடிகளை மனதினால் வணங்கி, வைகுண்ட ஏகாதசி சம்பந்தமான சில செய்திகளைக் காண்போம்.

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் கேசவனை ஆராதித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
பிரும்மஹத்தி தோஷம் கூட விலகும் – பாத்ம புராணம்-

இப்போது ஏகாதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல ஏற்படுகின்றன. இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..!

கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே.
பஞ்சகவ்யம் பவித்ரமாயினும் நாய் முகர்ந்தால் அசுத்தமே.
அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும்.
தசமி கலந்த ஏகாதசி அஸூர ப்ரீதி – ப்ருஹன் நாராயணீயம் –

தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது. – பாத்ம புராணம்-

தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளை விளைவிக்கும் – ப்ரம்ம வைவர்த்தம்-
உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியினை விட்டு விட வேண்டும் -கருட புராணம்-

ஆக எக்காரணம் கொண்டும் ஏகாதசியன்று தசமி திதி கலக்கக்கூடாது.
சூர்யோதயத்திற்கு முன்பு வரும் பிரும்ஹமுகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது.
(சூர்யோதயம் முன்பு நான்கு நாழிகைகள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) பிரும்ஹமுகூர்த்தக் காலம்).

————-

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.

————-

ஸ்ரீ சாரங்க பாணி திருக்கோயிலில் பரமபத வாசல் இல்லை
இவரே நேராக ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்து ஸ்ரீ கோமள வல்லித் தாயாரைத் திருமணம் கொண்டார்
இவரை சென்று சேவித்தால் ஸ்ரீ வைகுண்டம் கிட்டும்

இதே போல் காஞ்சி ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்
ஸ்ரீ பெரும் பூதூர் ஆதி கேசவப் பெருமாள் பாஷ்யகாரர் திருக்கோயிலில் இல்லை
அன்று பெருமாளும் உடையவரும் பூதக்கால் திரு மாண்டத்துக்கு எழுந்து இருந்து சேவை சாதிப்பார்கள்

திருக்கண்ணபுரம் சவுரி ராஜ்ப பெருமாள் திருக்கோயில்

திரு வெள்ளறை புண்டரீகாக்ஷபெருமாள் திருக்கோயில்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Posted in Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ ஸ்வாமி பூந்தானம் அருளிச் செய்த -ஸ்ரீ ஞானப்பான –

January 22, 2023

இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது.

இது ஞான ஊற்று என்பதுதான். ஊற்று என்பதால் இது பானம்-அள்ளிப் பருக வேண்டிய பானம்-ஞான பானம்  மொத்தம் 91 கிருதிகள் இருந்தன

தன்னுடைய மகன் மரணத்தின் சோகத்தைத் தாங்க முடியாமல் குருவாயூரப்பனையே தன் மகனாக நினைச்சுப் பாடியதுதான் இந்த ஞானப்பானம்.

பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்டத்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், “இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.

அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார்.

உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். “நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம்.  கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது  இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது 360 வரிகளைக் கொண்டது. மலையாளத்து பகவத் கீதை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.

46,660 பேர் கூடி இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.

அவர் எழுதிய காப்பியங்கள்:

  • ஞானப் பானா
  • பாஷாகர்ணமிருதம்
  • ஆஞ்சனா ஸ்ரீதரா கிருஷ்ணா
  • அம்பாடி பைதல்
  • ஹரி ஸ்தோத்ரம்
  • ஸப்த ஸ்வர கீர்த்தனம்
  • கான ஸங்கம்
  • நீயத்ரே கோவிந்தா
  • மூலதத்வம்
  • மாயா வாமனம்( தமிழ்)
  • குரு ஸ்துதி
  • த்வாதச நாம கீர்த்தனம்
  • தச அவதார ஸ்தோத்ரம்
  • வாஸுதேவ ஸ்துதி (தமிழ்)
  • அஷ்டாக்ஷர கீர்த்தனம்

மேற்கூறியவை உட்பட ஏறக்குறைய 60 காவியங்கள் பூந்தானம் இயற்றியுள்ளார்.

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும் ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

இந்த வரிகளில் பூந்தானம் இரண்டு பதங்களை கையாண்டு நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறார். ‘மூன்றும் ஒன்றில் அடங்கிவிடுகிறது; அப்பொழுது எதுவுமே இல்லாமல் ஆகிவிடுகிறது’ எங்கிறார் பூந்தானம்.

எந்த மூன்று? எந்த ஒன்று?

ஒன்று என்பது பரமாத்மனைக்குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன்

நமது வேத உபனிஷத்துக்கள் நிறைய ‘மூன்றுகள்’ குறிப்பிட்டுள்ளது.

  • பரமாத்மா ( நிர்குணபிரம்மம், ஸகுண பிரம்மம்), பிரகிருதி( மஹா மாயா, யோக மாயா, லோக மாயா),ஜீவாத்மா
  • மும்மூர்த்திகள்
  • முப்பெரும் தேவிகள்
  • சிருஷ்டி, பாலனம், சம் ஹாரம்
  • பிரகிருதியின் முக்குணங்கள்
  • ஜீவாத்மாவின் அவஸ்தாத்ரயம்
  • ஞாதா, ஞேயம், ஞானம்
  • பூதம், நிகழ்காலம், வருங்காலம்

————————-

பாடல்

கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் –

கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் – அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் – போன ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே – ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் – எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழை மடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் – என்ன செளக்கியமோ என்று கேட்கும் – அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ – மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் – அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்

பனம் என்பது மலையாளத்தில் ஒரு வித தனிப்பட்ட ராகம். நம் ஊர் காவடி சிந்து, நொண்டிச்சிந்து மாதிரி. அந்த ராகத்தில் வார்த்தைகளை நிரப்பி பூந்தானம் எழுதிய காவியம். அவரே பாடியது. ஞானம் தானே அறிவின் முதிர்ச்சி. ஞானப்பனம் பக்தி, ஞானத்தின் ஒரு அற்புத கலவை. சிலர் பான என்பது ஒரு மண் சட்டி பானையை குறிக்கிறது. ஞானம் நிரம்பிய பானை என்பார்கள். உருண்டையாக இருந்தால் லட்டு, வில்லையாக இருந்தால் மைசூர்பாக். மொத்தத்தில் கடலைமாவு சர்க்கரை கலவை தானே.-மலையாள பகவத் கீதை என்றே பெயர் பெற்றது இந்த ஞானப்பானம்.

”பக்தி ஒன்பது வகை. ஸ்ரவணம் (கேட்பது), கீர்த்தனம் (பாடுவது, தனியாகவோ சேர்ந்தோ), விஷ்ணு ஸ்மரணம் (சதா விஷ்ணுவை நினைப்பது, அதை தான் அவர் எப்போதும் செயகிறார்), பாதசேவனம் ( திருவடி தொழல் ), அர்ச்சனம் (நாமங்களால் போற்றுவது) வந்தனம் (பூஜை வழிபாடு) தாஸ்யம் (தன்னை சேவகனாக அர்பணிப்பது) சக்யம் (நண்பனாக பகவானோடு பழகுவது), ஆத்மநிவேதனம் (உள்ளம் உடல் இரண்டோ டும் சரணடைவது). இதில் ரொம்ப சுலபமானது கேட்பது பாடுவது.
பூந்தானம் நாள் என்று மலையாள கும்ப மாதத்தில், அசுவதி நட்சத்திரத்தில் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஞானப்பானா ஓதப்பெறும். மேலும் பூந்தானம் பிறந்த வீட்டில் ஐந்துநாள் இலக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட நாள் ஞானப்பானாவில் பூந்தானத்தால் சுட்டப்பெறுவதால் இந்நாள் பூந்தான நாளாகக் கொண்டாடப்பெறுகிறது.
————-

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

குருநாதன் துணசெய்க ஸந்னதம்

திருநாமங்ஙள் நாவின் மேல் எப்பொழும்

பிரியாதெயிரிக்கேணம்  நம்முடே

நரஜன்மம் ஸபல மாயிடுவான்      (2)

குரு நாதன் துணை செய்யட்டும்
சந்ததம் திரு நாமங்கள் நாவின் மேல் எப்பொழுதும் பிரியாதே இருக்க அருளட்டும்
நமது நர ஜென்மம் ஸபலமாக்கி அருளட்டும் –

திருநாமங்கள் நாவிலிருந்து என்றும் எப்போதும் பிரியாமல் இருக்க நமது மானிடப் பிறவி சாபல்ய மடைய குருநாதன் துணை செய்யட்டும்

——–

கால லீலா–

இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா

இனி நாளேயும்  எந்தென்னறிஞ்ஞிலா

இன்னீக்கண்ட தடிக்கு  வினாசவும்

இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா     (3)

நேற்று வரை என்ன நடக்கும் என்றறியவில்லை

இனி நாளைக்கும் என்னவென்று தெரியவில்லை

இன்றிருக்கும் இவ்வுடலுக்கு அழிவும் இன்ன

நேரத்தில் மரணம் என்றும் அறிவதில்லை

சாஸ்வதமில்லாத இந்த காற்றடைத்த பை பொய்யாக மாறலாமே. ஏதோ ஒரு காரணத்தால் தான் பகவான் நமக்கு முற்பிறவி ஞாபகமோ அடுத்த பிறவி பற்றி ஏதாவதோ தெரியாமல் வைத்திருக்கிறான். நாம் வாழும்வரை நமது இப்போது நடக்கும் வாழ்க்கை பிரச்னையே பெரிய மலைபோல் இருக்கிறதே…” என்கிறார் பூந்தானம். ஒரு நல்ல யோசனை. இப்போது இருக்கிற நேரத்தில் கிருஷ்ணனை கெட்டியாக பிடித்துக்கொள்வோம். அவனிருக்க பயமேன்?

கண்டுகண்டங்ஙிருக்கும் ஜனங்ஙளே

கண்டில்லேன்னு வருத்துன்னதும் பவான்

ரெண்டு நாலு தினம் கொண்டொருத்தனே

தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்     (4)

பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைக் காண முடியாமல் செய்வதும் பகவான் ஓரிரு தினங்களில் ஒருவனைப் பல்லக்கிலேற்றி மன்னனாக்குவதும்  பகவான்

மாளிக முகளேறிய மன்னண்டெ தோளில்

மாறாப்பு கேற்றுன்னதும் பவான் (5-1)

மாடமாளிகை மேல் அமர்ந்திருக்கும்  மன்னனின் தோளில் அழுக்கு மூட்டை ஏற்றுவதும் பகவான் கண்டறிவோர் சிலர் கண்டாலும் அறியாதோர் சிலர்

கண்டுகண்டங்கிரிக்கும் ஜனங்களெ

                                    கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்

                                    ரண்டுநாலு தினம் கொண்டொருத்தனெ

                                    தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்

                                    மாளிகமுகளிலேறிய மன்னன்றெ

                                    தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்–5-1

“ நாம் தினமும் பார்த்துக் கொண்டேயிருக்கின்ற மனிதர்களை, காணாமல் பண்ணுவதும் அந்த பகவான் தான்;இரண்டு நாலு நாட்களில்  நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒருவனை பாடை மேல் படுக்கவைத்து எடுத்துச் செல்ல வைப்பதும் அந்த பகவான் தான்; மாடமாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்ற மன்னனை தோளில் துண்டு போட்டுக்கொண்டு தெருவில் நடக்க வைப்பதும் அந்த பகவான் தான்.”

——-

அதிகார பேதம்

கண்டால் ஒட்டறியுன்னு சிலரிது

கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே      (5-2)

கண்டதொன்னுமே ஸத்தியமில்லென்னது

மும்பே கண்டங்ஙறியுன்னிது சிலர்

மனுஜாதியில்த் தன்னெ பலவிதம்

மனஸ்ஸினு விசேஷமுண்டோர்க்கணம்   (6)

காண்பதேதும் நிஜமல்லஎனக் கண்டறிவோர் சிலர் மானிட ஜாதியில்  இவ்வாறு பலரும் பலவிதம் மனசுக்கு  ஓரோர் குணம் என்பதும் அறிந்திருத்தல் நலமே

பலர்க்கும் அறியேணமென்னிட்டல்லோ

பலஜாதி பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்

கர்மத்தில் அதிகாரி ஜனங்ஙள்கு

கர்ம சாஸ்த்ரங்ஙளுண்டு பலவிதம்       (7)

பலரும் அறிய வேண்டும் என்றுதானே பல வர்ண தர்மங்களைச் சொல்கின்றன சாத்திரங்கள் அவரவர் வர்ண பேதங்கள்  அனுசரித்துபாவிக்கும் மக்களுக்கு கர்ம சாத்திரங்கள் பலவுண்டு பலவிதம்

ஸாங்க்ய ஸாஸ்த்ரங்ஙகள் யோகங்ஙளென்னிவ

சங்க்யயில்லது நில்க்கட்டே ஸர்வவும்  (8-1)

———-

தத்வ விசாரம்

சுழந்நீடுன்ன ஸம்ஸார சக்ரத்தில்

உழன்னீடும் நமுக்கறிஞ்ஞீடுவான்          (8-2)

சாங்கிய சாத்திரங்கள் யோகங்கள் ஆகியவை கணக்கில் அடங்காது இருக்கட்டும் ஒரு புறம் அனைத்தும்சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரத்தில் சுழலும் நம் போன்றோர்  அறிந்து கொள்ள

அறிவுள்ள மஹத்துக்களுக்குண்டொரு

பரமார்த்தம் அருள் செய்திரிக்குன்னு

எளிதாயிட்டு முக்தி  லபிப்பானாய்

செவி தன்னிது கேள்ப்பின் எல்லாவரும்         (9)

ஞானிகளான மகான்கள்  பரம் பொருள் ஒன்றே என்றறிந்து அருளிச் செய்துள்ளனர் எளிதாய் முக்தி கிடைக்க செவி கொடுத்துக் கேட்பீரே அனைவரும்

நம்மெ ஒக்கேயும்  பந்திச்ச  சாதனம்

கர்மம் என்னறியேண்டது முன்பினால்

முன்னில் இக்கண்ட  விஸ்வம்  அசேஷவும்

ஒன்னாய் உள்ளொரு ஜோதிஸ்வரூபமாய்       (10)

நம் அனைவரையும் கட்டி இருப்பது கர்மமே என்றறிய வேண்டும் முன்னால் நாம் காணும் அகிலமெல்லாம் ஒன்றேயான ஒரு ஜோதிஸ்வரூபமே

தோற்றம் என்றால் மறைவு என்பது சொல்லாமல் தெரிவது. உண்டானது எல்லாமே இல்லாததாகிவிடும். நடுவில் சில காலம் மாயையால் சாஸ்வதமாக நிலைத்த்திருப்பது போன்ற பொய் எண்ணத்தை வளர்க்கும். எல்லாமே ஒருநாள் ஜோதி ஸ்வரூபத்தில் கலக்கும். ஆக்கம் அழிவில் நிறைவுறும். அதை தான் மஹா பிரளயம் என்போம். ஒன்று என்றும் அழியாமல் சிறிய தீபமாய் நம்முள் என்றும் இருந்து மற்ற பிறவிகளிலும் நம்மோது தொடரும் அது ஒன்றே சாஸ்வதம். அதுவே ஆத்ம தீபம். சாக்ஷியானது. ஏதோடும் இணையாமல் சேர்ந்து இருப்பது. ஒன்றே பலவாக தோன்றுவது

ஒன்னும் சென்னங்கு தன்னொடு பற்றாதே ஓன்னிலும் சென்னு தானும் வலையாதே
ஒன்னொன்னாயி நினய்க்கும் ஜனங்களுக்கு ஒன்னு கொண்டு அறிவாகுன்ன வஸ்துவாய்
ஒன்னிலும் அறியாத்த ஜனங்களுக்கு ஒன்னு கொண்டும் திரியாத்த வஸ்துவாய்
ஒன்னு போலே ஒண்ணு இல்லாத உள்ளத்தில் ஒன்னாய் உள்ள ஒரு ஜீவ ஸ்வரூபமாய்
ஒன்னிலும் ஒரு பந்தம் இல்லாததாய் நின்னவன் தன்னே விஸ்வம் சமச்சு போலே
மூணும் ஒன்னில் அடங்குன்னு பின்னேயும் ஒன்னும் இல்லைபோல் விஸ்வ மன்னேரத்த

ந தத்ர சூர்யோ பாதி, ந சந்த்ரதாரகம் நேம வித்துதோ பாந்தி குதோயமக்னி தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி

அங்கே சூரியனுமில்லை நிலவுமில்லை நக்ஷத்திரங்களுமில்லை.மின்னலும் வருவதில்லை.ஆனால் ஒளிமயமாக இருக்கிறது.எப்படி? பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் பிரமனுடைய ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது.அங்கு அது மட்டும் தான் ஒளி உமிழ்கிறது;”

பிரம்ம சூத்திரம் ஒன்றாம் அத்தியாயத்தில் இரண்டாவது சூத்திரத்திலேயே பிரம்மன் என்றால் என்ன விளக்கப்பட்டுள்ளது.

————————————-

கர்மம்
ஒன்னு கொண்டு சமச்சொரு விஸ்வத்தில் மூன்னாய் இட்டுள்ள கர்மங்கள் ஓக்கேயும்
புண்ய கர்மங்கள் பாப கர்மங்களும் புண்ய பாபங்கள் மிஸ்ரமாம் கர்மவும்
மூன்னு ஜாதி நிரூ பிச்சு காணும் போன் மூன்னு கொண்டும் தனக்குன்னு ஜீவனே
பொன்னின் சங்கல ஒன்னி பறஞ்சதில் ஒன்னு இரும்பு கொண்டு அன்னத்தேற பேதங்கள்
இரண்டினாலும் எடுத்துக் பணி செய்த சங்கல யல்லோ மிஸ்ரமாம் கர்மாவும்

மூன்னுஜாதி நிரூபிச்சு காணூம்போள்

                                                     மூன்னுகொண்டும் தளைக்குன்னு ஜீவனெ

                                                     பொன்னின்சங்கலையொன்னிப்பறஞ்சதி

                                                     லொன்னிரும்புகொண்டதனெனத்ரபேதங்கள்

                        ரண்டுனாலுமெடுத்து பணிசெய்த

                         சங்கலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்

கர்மங்கள் எதுவாக இருந்தாலும் அவை நம்மை இகலோகத்துடன் பந்திக்கிறது. நாம் பந்தத்திலிருந்து விடுபட முடிவதில்லை.கட்டிப் போடுகின்ற சங்கிலியின் தரத்தில் தான் வேறுபாடு என்கிறர் பூந்தானம்.புண்ணியகர்மங்கள் செய்யும்பொழுது நாம் நல்லது செய்தோம் என்ற திருப்தி ஏற்பட்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ‘நான்’ செய்தேன் என்ற ‘அகந்தை’ ஒளிந்திருக்கிறது பாபார்மங்கள் செய்பவர்களும் நாம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தோம் என்ற மமதையில் மிதக்கிறார்கள். ரஜோகர்மத்தை அடிப்படையாகக் கொண்ட புண்ணிய –பாப கர்மங்களின் பின்னாலும் ‘ மமதாகாரம்’ செயல்படுகிறது.இந்த செயல்கள் எதுவும் ஆத்மா செய்யாததால் ‘நான்; செய்தேன் என்ற மமதாகாரம் வரும்பொழுது அந்த ‘நான்’ ‘நானல்ல’.அது ‘தனுவான நானென்ற எண்ணத்திலிருந்து உதித்த நானாக இருக்கிறது..ஆகவே இந்த கர்மங்கள் நம்மை பௌதிக உடலுடன் பிணைத்து ‘புனரபி மரணம் ,புனரபி ஜனனம்’ என்ற சக்கரச் சுழற்சியில் சிக்க வைக்கிறது.

ஆகவே பூந்தானம் ஒரு சங்கிலி தங்கத்தால் செய்த்தென்றல் இன்னொன்று இரும்பினால் செய்தது; மற்றொன்று உலோகங்களின் கலவையில் செய்தது.எங்கிறார். நிதரிசனமான உண்மை நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பது தான். கிளிக்கு தங்க கூண்டானால் என்ன? இரும்பு கூண்டானால் என்ன? கூண்டு கூண்டு  தான்.கர்மங்கள் பந்தமே-பந்தனமே.

பிரம்மா வாதியாய் ஈச்ச எரும்போளம் கர்ம பந்தன்மார் அன்னது அறிஞ்சாலும்
புவனங்கள் ஸ்ருஷ்டிக்க என்னது புவனாந்த்ய பிரளயம் கழி வோளம்
கர்ம பாசத்தே லம் கிக்க என்னது பிரம்மா வென்னும் எளுதல்ல நிர்ணயம்
திக் பாலன் மாரும் அவ்வண்ணம் ஓரொரு திக்கு தோறும் தளச்சு கிடக்கின்னு
அல்ப கர்மிகளாகிய நாம் எல்லாம் அல்ப காலம் கொண்டோர் ஒரு ஜந்துக்கள்
கர்ப்ப பாத்திரத்தில் புக்கும் புறப்பெட்டும் கர்மம் கொண்டு களிக்குன்னது இங்கனே

——————–

ஜீவ கதி
நரகத்தில் கிடக்குன்ன ஜீவன் போய் துரிதங்களோடு ஒடுங்கி மனஸ்ஸின்டே
பரிபாகவும் வன்னு க்ரமத்தாலே நர ஜாதியில் வன்னு பிறந்திட்டு
ஸூஹ்ருதம் செய்து மேல் போட்டு போயவர் ஸ்வர்க்கத்து இங்கலிருன்னு சுகிக்கின்னு
ஸூஹ்ருதங்களும் ஓக்க ஒடுங்கும் போள் பரிபாகவும் எள்ளோளும் இல்லவர்
பரிச்சோடம் அங்கு இருன்னிட்டு பூமியில் ஜாதராய் துரிதம் செய்து சத்தவர்
வன்னொர துரிதத்தின் பலமாயி பின்னே போய் நரகங்களில் வீழு என்ன
ஸூர லோகத்தில் நின்னஒரு ஜீவன் போய் நர லோகே மஹீ ஸூ ரனாகு என்ன
சண்ட கர்மங்கள் செய்தவன் சாகும் போள் சண்டால குலத்திங்கள் பிறக்குன்னு
அசுரன் மார் சூரன் மார் ஆயிடு என் அமரன் மார் மரங்கள் ஆயிடு என்னு
அஜம் சத்து கஜமாய் பிறக்கு என்னு கஜம் சத்தங்க ஜவுமாய் ஆயிடு என்னு
நரி சத்து நரனாய் பிறக்குன்னு நாறி சத்துடனோர் அரியாய் போகுன்னு
க்ருப கூடாதே பீடிப்பிச்சீடுன்ன ந்ருபன் சத்து கிருமியாய் பிறக்குன்னு
ஈச்ச சத்தொரு பூச்சையாயீடு என்ன ஈஸ்வரன் டே விலாசங்கள் இங்கனே
கீழ் மேல் இங்கனே மண்டுன்ன ஜீவன் மார் பூமி யீன்னத்ற நேடுன்னு ஜீவன் மார்
அங்கனே செய்து நேடி மரிச்சுட னன்ய லோகங்களோர் என்னில்
சென்னிரு என்னு புஜிக்கின்னு ஜீவன் மார் தங்கள் செய்த ஒரு கர்மங்கள் தன் பலம்
ஒடுங்கிடும் அது ஒட்டு நாள் செல்லும் போன் உடனே வன்னு நேடுன்னு பின்னேயும்

தன்டே தன்டே க்ருஹத்திங்கள் நின்னுடன் கொண்டு போன்ன தனம் கொண்டு நாம் எல்லாம்
மற்று எங்கானும் ஒரேடேத்தி ருன்னிட்டு விட்டுடு என்னு பறயும் கணக்கினே

————–

பாரத மஹிமா

கர்மங்களுக்கு விளை பூமியாகிய ஜென்ம தேசம் இப்பூமி அறிஞ்ஞாலும்
கர்ம நாஸம் வருத்தேனம் எங்கிலும் செம்மே மட்டெங்கும் சாதிய நிர்ணயம்
பக்தன் மாருக்கும் முமுஷு ஜனங்களுக்கும் சக்தராகிய விஷயீ ஜனங்களுக்கும்
இச்சி சீடுன்ன டொக்க கொடுத்திடும் விஸ்வ மாதாவு பூமி சிவ சிவ
விஸ்வ நாதன் டே மூல ப்ரக்ருதி தான் ப்ரத்ய ஷேண விள்ங்குன்னு பூமியாய்
அவனீ தல பாலனத்தின் அல்லோ அவதாரங்களும் பல தோற்கும் போள்
அது கொண்டு விசேஷிச்சும் பூ லோகம் பதிநாலிலும் உத்தமம் என்னல்லோ
வேத வாதிகளாய முனிகளும் வேதவும் பஹு மானிச்சு சொல்லென்னு
லவணாம்புதி மத்யே விளங்குன்ன ஜம்பூத்தீவு ஒரு யோஜனை லக்ஷவும்
ஸப்த த்வீபுகள் உண்டதில் எத்தறயும் உத்தமமாம் என்னு வாழ்த்துன்னு பின்னேயும்
பூ பத்மத்தின்னு கர்ணிகையாய் இட்டு பூதரேந்த்ரநதி லல்லோ நில்குன்னு
இதில் ஒன்பது கண்டங்கள் உண்டல்லோ அதிலும் உத்தமம் பாரத பூ தலம்
சம்ம மதராய மா முனி ஸ்ரேஷ்டன் மார் கர்ம க்ஷேத்ரம் என்னல்லோ பற யுன்னு
கர்ம பீஜ மதீன்னு முனக்கேண்டு ப்ரஹ்ம லோகத்தி ரிக்குன்ன வர்களுக்கும்
கர்ம பீஜம் வரட்டி கலஞ்சுடன் ஜென்ம நாஸம் வருத்தேனும் எங்கிலும்
பாரத மாய கண்ட மொழிஞ்சுள்ள பாரில் எங்கும் எளுதல்ல நிர்ணயம்
அத்ற முக்கியமாய் உள்ளதொரு பாரதம் இதி பிரதேசம் என்னெல்லாரும் ஓர்க் கணம்

—————–

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

——————-

கலிகால மஹிமா

இப்பிறவி பிறந்தால் மட்டுமே முக்தி அடைய இயலும். குறிப்பாக இந்தக் கலிகாலத்தில், பதினான்கு உலகங்களில் இந்த உலகு மட்டுமே மோட்சத்திற்கு வழிகாட்டும் உலகம் என்கிறார்.

” யுகம் நாலிலும் நல்ல கலியுகம்

சுகமே தானே முக்தி வருதுவன்” ( ஞானப்பானா- 27)

என்று இக்காலத்தை ஞானத்தின் காலமாகக் காட்டி நம்பிக்கை அளிக்கிறார் பூந்தானம்.

யுகம் நாலிலும் நல்லூ கலியுகம் சுகமேதன்னெ முக்தி வருத்துவான்

கிருஷ்ண கிருஷ்ண முகுந்த ஜனார்த்தன கிருஷ்ண கோவிந்த ராம என்னிங்கனெ

திருநாம ஸங்கீர்த்தன மென்னியே மற்றில்லேதுமே யத்ன மறிஞ்ஞாலும்

அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்

மற்ற பதிமூன்று லோகங்கள்

பதின் மூன்றிலுள்ள ஜனங்கள்

மற்று தீவுகள் ஆறில் உள்ளோரும்

மற்று கண்டங்களில் உள்ளோரும்

மற்று மூனு யுகங்களில் உள்ளோரும்

முக்தி தங்களுக்குச் சாத்யம் அல்லாயாகையால்

கலிகாலத்தில பரத கண்டத்தில்

கலிதடராம் கை வணங்கீடு என்ன ”(ஞானப் பானா – 29)

என்ற பகுதியில் பரதகண்டம் பற்றிப் பூந்தாம் குறிப்பிடுகிறார். உலகங்கள் பதினான்கு என்பது உலக வழக்கு. அவற்றில் பூமி ஆகிய இவ்வொன்று நீங்கினால் பதிமூன்று உலகங்கள். மொத்தத் தீவுகள் ஏழு. அதில் இதனை விடுத்தால் மற்றவை ஆறு. யுகங்கள் நான்கு. அவற்றில் இக்கலியுகம் நீங்கினால் மற்றவை மூன்று யுகங்கள். இந்நிலைப்பாட்டில் பரத கண்டத்தில் உயிர்கள் மட்டுமே ஞானத்தை, இறைபாதத்தை அடைய வழி தெரிந்தவர்கள். ஆகவே இக்காலம் நன்று. இவ்வுலகம் நன்று. இதனில் முக்தி வழி தேடுவோம் என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறார் பூந்தானம்.

அதில் வன்னொரு புல்லாய் இட்டு எங்கிலும் இது காலம் ஜனிச்சு கொண்டீடுவான்
யோக்யத வருந்தீடுவான் தக்கொரு பாக்யம் போராதே போய் அல்லோ தெய்வமே
பாரத கண்டத்து இங்கண் பிறந்த ஒரு மானுஷிற்கும் கலிக்கும் நமஸ்காரம்
என்னெல்லாம் புகழ்ந்தீடு என்னு மற்றுள்ளோர் என்னது என்தின்னு நாம் பறைஞ்ஜீடுன்னு

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

————-

என் திண்டே குறவு

காலம் இன்னம் கலி யுகம் அல்லயோ பாரதமி பிரதேசமும் அல்லயோ
நம்மள் எல்லாரும் நான்மாரும் அல்லயோ செம்மே நன்னாய் நிரூபிப்பன் எல்லாரும்
ஹரி நாமங்கள் இல்லாத போகயோ நரகங்களில் பேடி குறகயோ
நாவு கூடாத ஜென்மம் அது ஆகாயோ நமக்கு இன்னி விநாசம் இல்லாய் கயோ
கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே சுட்டுக் தின்னுன்னு ஜென்மம் பழுதே நாம்

———–

துர்லபமாய மனுஷ்ய ஜென்மம்

‘‘எத்தனை ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஐன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மரங்களில் நின்னிடும்

எத்தனை ஜன்மம் மரித்து நடன்னதும்

எத்தனை ஜன்மம் பரன்னு நடன்னதும்

எத்தனை ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்

மரத்திய ஜனதில் மும்பே கழிஞ்சதும்” (ஞானப்பானா- 32)

என்று மலம், ஜலம், மண், மரம், பறவை, விலங்கு, பசு போன்றனவாய் முற்காலத்தில் பிறந்து இளைத்தோம் என்கிறார் பூந்தானம்.

எத்தனையெத்தனை ஜன்மத்திற்குப் பின் இந்த மனித ஜன்மம் கிடைத்திருக்கிறது? எண்ணற்ற புண்ணிய கர்மங்களின் பலனாக இந்த மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது.எத்தனையோ ஜன்மங்கள் புழுவாகவும் பூச்சியாகவும், புல்லாகவும் மரமாகவும் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து உழன்றபிறகு மனித ஜன்மம் கிடைத்துள்ளது.ணிரிலும் நிலத்திலும் வாழ்ந்து இறந்தும் பிறந்தும் பல ஜன்மங்கள் கழிந்து மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது

இந்த மனித ஜன்மத்திற்கு முன் பசுவாகவும் மற்ற மிருகங்களாகவும் பிறந்தோம் இறந்தோம்.பிறகு தான் மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

மேலும் மனித வாழ்வில் எவ்வளவு நாள் அறிவின்றி இழந்தோம் என்ற கணக்கையும் தருகிறார் பூந்தானம்.

‘‘எத்ரெயும் பணி பெற்று இங்கு மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் வீணது அறிஞ்சாலும்

பத்துமாதம் வயித்தில் கழிஞ்சுபோயி

பத்து பதிரெண்டு உன்னியாய் ஆட்டம் போயி

தன்னிதான்  அறியாதி கழிஞ்சுன்னு” (ஞானப்பானா 33)

என்ற கால விரயம் கவிதையாய் பூந்தானம் வழி வெளிப்படுகிறது.

பத்து மாதம் தாயின் கர்பத்தில் இருந்தோம்; பிறந்தபின் பத்து பன்னீரெண்டு வருடங்கள் ஒன்றும் தெரியாத பால்ய பருவத்தில் –விவேகம் உதிக்காத நிலையில் எது சத்தியம்; எது நசுவரம்; எது நித்தியம் என்று அறியாத நிலையில் ‘ நான்” என்ற அகம்பாவத்துடன் இந்த உலகில் வாழ்ந்து விடுகிறோம்.

இத்ர காலம் இருக்கும் இனி என்னும் ஸத்யமோ நமக்கு ஏதும் ஒன்னில்லல்லோ

‘‘நீர்போலே போலே உள்ளொரு தேகத்தில்…..

நீர்த்துப் போகும் அதினி பறையாவு” (ஞானப்பானா 35)

என்று மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இறைசிந்தனை அந்தக் குமிழிக்குள் இல்லாமல் போகுமானல் எந்நேரமும் வாழ்க்கை என்னும் நீர்க்குமிழி உடையலாம் என்று பூந்தானம் குறிப்பிடுகிறார்

நீர்ப்போள போலெ உள்ளொரு தேஹத்தில்

வீர்ப்பு மாத்ரம் உண்டு இங்ஙனெ காணுன்னு

ஒர்த்து அறியாதே பாடு பெடுன்னேரம்

நேர்த்து பொகுமதென்னே பறயாவூ

அத்ர மாத்ரம் இரிக்குன்ன நேரத்து

கீர்த்தி சீடுன்னதில்ல திருநாமம்

In the body which is like a water bubble,–We see it filled up always,
And when we put efforts without thought,–We can tell that this bubble will only burst.-In this very limited time,-We should be Chanting the Divine Names of Lord

அப்படிப்பட்ட அனித்தியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நேரமாவது பகவன் சொல்லுகின்றோமா? இல்லையே இப்படி நமது கிடைப்பதற்கரிய வாழ்வை வீணாக்கலாமா ?பூன்தானம் அங்கலைக்கிறாற்.

————–

ஸம்ஸார வர்ணனை

ஸ்தானமானங்கள் சொல்லி கலஹிச்சு நாணம் கெட்டு நடக்குன்னுது சிலர்
மத மஞ்சரம் சிந்திச்சு சிந்திச்சு மதி கெட்டு நடக்குன்னிது சிலர்
சஞ்ச லாஷிமார் வீடுகளில் புக்கு குஞ்சிராமனா யாடுன்னுது சிலர்
கோலகங்களில் சேவகராய் இட்டு கோலம் கெட்டி ஜெலியுன்னிது சிலர்
சாந்தி செய்து புலர்த்துவனாய் இட்டு ஸந்த்யா யோலம் நடக்குன்னுது சிலர்
கொஞ்சி கொண்டு வளர்த்த ஒரு பைகலே கஞ்சிக்கு இல்லான்னு வில் குன்னிது சிலர்
அம்மக்கும் புனர் அச்சனும் பார்யைக்கும் உன்மான் போலும் கொடுக்கின்னல்ல சிலர்
அக்னி சாஷியாய் ஒரு பத்னியே ஸ்வப்னத்தில் போலும் காணுன்னுல்ல சில
சத்துக்கள் கண்டு சிஷித்து சொல்லும் போல் சத்ருவே போல் க்ருதிக்கினு சிலர்
வந்திதன்மாரே காணுன்ன நேரத்து நிந்தி சத்ரே பற யுன்னிது சிலர்
காண்க நம்முட ஸம்ஸாரம் கொண்டத்ரே விஸ்வமீ வண்ணம் நில்பு என்னும் சிலர்
ப்ராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு பிரம்மாவும் என்னிக் கொக்காய் என்னும் சிலர்
அர்த்தாசக்கு விருது விளிப்பான் அக்னி ஹோத்ராதி செய்யுன்னுதி சிலர்
ஸ்வர்ணன்கள் நவ ரத்னங்களே கொண்டும் எண்ணம் கூடாதே வில்கின்னுது சிலர்
மத்தேபம் கொண்டு கச்ச வடம் செய்தும் உத்தம துரம் கங்களது கொண்டும்
அத்தரயுமல்ல கப்பல் வெப்பிச்சிட்டு மெத்ர நேடுன்னி தர்த்ரம் சிவ சிவ
வ்ருத்தியும் கெட்டு தூர்த்தராய் எப்பொழுதும் அர்த்தத்தே கொதிச்செத்ர நசிக்குன்னு
அர்த்தமெத்ர வளரே யுண்டாயாலும் த்ருப்தியாகா மனசின் ஒரு காலம்

‘‘பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்

சதமாகில் சகாஸ்கரம் மதி என்னும்

ஆயிரம் பணம் கையில் உன்கும்போல்

ஆயுதமகில் ஆச்சர்யம் என்னுதம்

ஆசையுள்ள பாசம் மதிஞ்சன்னு” (ஞானப்பானா- 38)

ஆசை என்ற கயிறு உள்ளத்தைக் கட்டி வைத்திருக்கிறது. பத்து கிடைத்தால் நூறு கிடைக்குமா என்று எண்ணுகிறது. நூறு கிடைத்தால் ஆயிரம் வந்தால் போதும் என்கிறது. ஆயிரம் வந்தால் அதைவிட அதிகமாக எண்ணுகிறது. இதுவே மனதின் இயல்பாக உள்ளது என்று பூந்தானம் மனவாசையின் அளவை அளக்கிறார்.

வேர் விடாதே கரேறுன்னு மேல்குமேல்
சத்துக்கள் சென்னிலர் அன்னாலாய அர்த்தத்தில் ஸ்வல்ப மாத்ரம் கொடா சில துஷ்டன் மார்
சத்து பன்னேரம் வஸ்திரம் அது போலும் எத்திடா கொண்டு போவான் ஒருத்தருக்கும்
பச்சாதாபம் ஓர் எள்ளளவும் இல்லாத விச்வாஸ பாதகத்தே கருதுன்னு
வித்திலாஸ பற்றுக ஹேதுவாய் சத்யத்தே த்யஜிக்குன்னு சில ரஹோ
சத்யம் என்னது ப்ரஹ்மம் அது தன்னே ஸத்யம் என்னு கருதுன்னு சத்துக்கள்

கிடைத்த மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக மாற்றாமல் மனித குலம் அழிகிறதே என்ற மிகவும் வருத்தப்படுகிறார் பூந்தானம்.

‘வித்யா கொண்டு அறியந்தது அறியாதே

வித்வான் எண்டு நடிக்கன்னு சிலர்

குங்குமந்திந்தி வாசம் அறியாதே

குங்குமம் சுமக்கும் கழுதை’ (ஞானப்பானா 43)

என்று மனிதவாழ்வின் இயல்வினைச் சுட்டுகிறானர்

—————

வைராக்யம்

எண்ணி எண்ணி குறை யுன்னி தாயுசும் மண்டி மண்டி சுரேறுன்னும் மோஹவும்
வன்னு வோணம் கழிஞ்சு விஷு என்னும் வன்னில் எல்லோ திருவாதிர என்னும்
கும்ப மாசத்தில் ஆகுன்னு நம்முட ஜென்ம நக்ஷத்ரம் அஸ்வதி நாள் என்னும்
ஸ்ரார்த்தம் உண்டகோ விருச்சிக மாசத்தில் ஸத்ய என்னும் எழுதல் இனி என்னும்
உன்னி உண்டாயி வேல் பிச்சத்தில் ஒரு உன்னி உண்டாயி கண்டா ஊஞ்ஞான் என்னும்
கோணிக்கல் தன்னேல் யன்ன நிலமினி காண மன்னன் எடுப்பிக்க அரிது என்னும்
இத்தம் ஒரோன்னு சிந்திச் சிரிக்கும் போல் சத்து போகுன்னு பாவம் சிவ சிவ
எந்த நித்ர பரஞ்சு விசேஷிச்சும் சிந்திச் சீடு வினாவோலம் எல்லாரும்
கர்மத்தின் டே வலிப்பவும் ஓரோரோ ஜென்மங்கள் பலதும் கழிஞ்சு என்னதும்

காலம் இன்னு கலி யுக மாயதும் பாரத கண்டத்தின் டே வலிப்பதும்
அதில் வன்னு பிறன்னதும் எத்தனை நாள் பழுதே தன்னே போய ப்ரகாரமும்
ஆயுஸ்ஸிண்டே ப்ரமாணம் இல்லாததும் ஆராக்யத்தோடே இருக்குன்ன அவஸ்தையும்
இன்னு நாம சங்கீர்த்தனம் கொண்டு உடன் வன்னு கூடும் புருஷார்த்தம் என்னதுவும்
இனி யுள்ள நரக பயங்களும் இன்னும் வேண்டும் நிரூபணம் ஓக்கேயும்
எந்தினு வ்ருத காலம் களயுன்னு வைகுண்டத்தின்னு போய் கொல்வின் எல்லாரும்
கூடி யல்ல பிறக்குன்ன நேரத்துக்கு கூடி யல்ல மரிக்குன்ன நேரத்தும்
மத்யே இங்கனே காணுன்ன நேரத்து மத்சரிக்குன்னது எந்தினு நாம் வ்ருத
அர்த்தமோ புருஷார்த்தம் இருக்கவே அர்த்தித்து என்ன கொதிக்குன்னது எந்து நாம்
மத்யான்னர்க்க ப்ரகாஸம் இரிக்கவே கத்யோதத்தையோ மானிச்சு கொள்ளெண்டு

காலமின்னு கலியுக மல்லயோ

பாரத மிப்ப்ரதேசவு மல்லயோ

நம்மளெல்லாம் நரன்மாரு மல்லயோ

செம்மே நன்னாய் நிரூபிப்பினெல்லாரும்

ஹரி நாமங்ஙளில்லாதெ போகயோ

நரகங்ஙளில் பேடி குறகயோ

நாவு கூடாதெ ஜன்ம அதாகயோ

நமுக்கின்னி வினாச மில்லாய்கயோ

கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே

சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதே நாம்

Are we not living in Kali Yuga, in the land of Bharat?-Have we not got a human life?
Is there scarcity for the Names of the Lord?–Are we born without a tongue to chant them?
Have we no fear of the sufferings in hell?–Have we no thought about our end?
Have we any assurance of our next birth?–But, alas! We are wasting our life without concern!!!

‘‘கூடியல்லோ பிறக்குன்னா நீரதும்

கூடியல்லோ மரிக்குன்னா நீரதும்

மத்தியே இங்ஙனே கன்னுன்னா நீரது

மட்சரிக்குன்னது என்தின்னு விர்தா?” ( பூந்தானம், 49)

என்று பிறப்பின் இறப்பின் தனிமையைச் சுட்டுகிறது ஞானப்பானா. நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் கூடிப் பிறக்கவில்லை. ஒன்றாய்க் கூடி இறக்கவும் முடியாது. ஒவ்வொருவரும் இறப்பினைத் தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மத்தியில் நாம் இணைந்திருக்கிறோம். ஏன் மற்றவர்களோடு தேவையின்றிப் போட்டிபோடுகிறீர்கள் என்று மெய்ம்மை நாடுகிறது ஞானப்பானா.

‘உன்னிக் கிருஷ்ணன் மனசில் களிக்கும்பால்

உன்னிகள் மது வேணுமோ மக்களே

மித்ரங்கள் நமக்கேத்ரா சிவ சிவா

விஷ்ணுபக்தன் மாரிலே புவனத்தில்” (ஞானப்பானா- 51)

என்று குழந்தை வரம் வேண்டுவோர்க்கு ஆறுதல் தருகிறது ஞானப்பானா.

————–

நாம ஜபம்

சக்தி கூடாதே நாமங்கள் எப்பொழுதும் பக்தி பூண்டு ஜபிக்கணும் நம்மூடே
ஸித்த காலம் கழி வோள மீ வண்ணம் ஸ்ரத்தை யோடே வஸிக்கே ண மேவரும்
காணா குன்ன சராசர ஜீவியே நாணம் கை விட்டு கூப்பி ஸ்துதிக்கணும்
ஹரி ஷாஸ்ரு பரி ப்ளூதனாயிட்டு பருஷாதிக ளோக்கெ ஸஹிச்சுடன்
ஸஜ் ஜனங்களே காணுன்ன நேரத்து லஜ்ஜ கூடாதே வீணு நமிக்கணும்
பக்தி தன்னில் மூழ்கி சமஜ்ஜுடன் மத்தன போலெ ந்ருத்தம் குதிக்கணம்
பாரில் இங்கனே ஸஞ்சரி சீடும் போல் ப்ராரப்தங்கள் அசேஷம் ஒழிஞ்சிடும்
விதிச்சீடுன்ன கர்மம் ஒடுங்கவும் போல் பதிசீடுன்ன தேஹம் ஒரே டத்து
கொதிச் சிடுன்ன ப்ரஹ்மத்தே கண்டிட்டு குதிச்சீடுன்ன ஜீவனும் அப்போளே
ஸக்தி வேரிட்டு ஸஞ்சரி சீடும் போல் பாத்ரமாயில்ல என்னது கொண்டேதும்
பரிதாபம் மனஸ்ஸில் முழு கேண்ட திரு நாமத்தின் மஹாத்ம்யம் கேட்டாலும்
ஜாதி பார்க்கிலோ ரந்த்யஜனாகிலும் வேதவாதி மஹீ ஸூ ரனாகிலும்
நாவு கூடாதே ஜாதன் மாராகிலும் மூகரே அங்கு ஒழிச்சுள்ள மானுஷர்

எண்ணமற்ற திருநாமம் உள்ளதில்

ஒன்னு மாத்ரம் ஒரிக்கல் ஒரு தினம்

ஸ்வஸ்தன் ஆயிட்டு இருக்கும் போழெங்கிலும்

ஸ்வப்னத்தில் தான் அறியாதெ எங்கிலும்

மற்றொன்னாயி பரிஹஸிச்செங்கிலும்

மற்றொருத்தர்க்கு வேண்டியென்னாகிலும்

ஏது திக்கிலிருக்கிலும் தன்னுடே

நாவு கொண்டிது சொல்லி என்னாகிலும்

அதுமல்லொரு நேரம் ஒரு தினம்

செவி கொண்டிது கேட்டு என்னாகிலும்

ஜன்ம சாபல்யம் அப்போழே வன்னு போய்

ப்ரம்ம ஸாயுஜ்யம் கிட்டீடும் என்னேல்லோ

God’s Names are numerous;–And if any one of those Names,–At least once a day, while sitting quiet at a place,–Or unawares in a dream while sleeping,–Or mocking as something else, or to satisfy some one else;–You utter with your tongue or just hear with your ears,–At that very moment, your life is fulfilled;–And you reach the Supreme abode of Brahman.

ஸ்ரீதர் ஆச்சார்யன் தானும் பரஞ்ஞிது

பாதராயணன் தானும் அருள் செய்து

கீதயும் பரஞ்ஞீடுன்னதிங்ஙனெ

வேதவும் பஹுமாநிச்சு சொல்லுன்னு

அமோதம் பூண்டு சொல்லுவின் நாமங்ஙள்

ஆனந்தம் பூண்டு ப்ரஹ்ம்மத்தில் சேருவான்

மதியுண்டெங்கிலொக்க மதியிது

திருநாமத்தின் மாஹாத்யமாமிது

பிழையாகிலும் பிழ கேடென்னாகிலும்

திருவுள்ளம் அருள்க பகவானே

And so say Sreedhara the great scholar,–And sage Veda Vyasa who wrote the puranas.–Even Bagavad Geetha says the same,–And also so say the Vedas with respect.–So sing God’s holy names easily–And with joy become one with God.–For those aiming at salvation this book is sufficient,–For it sings about greatness of God’s holy names.–With errors or without errors.–Please grant me your grace , Oh my God

பூந்தானம் ‘‘கீதையும் வேதங்களும் பரந்தாமன் புகழைப் பாடினால் மட்டுமே முக்தி” என்று உரைக்கின்றன (ஞானப்பானா 60) என்று பாடுகிறார்.

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ  பூந்தானம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in Geetha Saaram, Sri Vaishna Concepts, Stotrams/Slokams | Leave a Comment »

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும் —

January 20, 2023

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும்

இவ்வுலகத்தினர் அனனவருக்கும் அறிவு செயல் இனவகளுக்கான திறமையை அளிப்பவரர்
இவ்வுலகில் உள்ள யோகிகள் அனனவருக்கும் தலைவர்
எல்லோராலும் அவசியம் அறியப்பட வேண்டிய
உண்னமப் பொருனள அறிந்தவர்-
இவ்வுலகமனனத்தையும் ஆட்டி னவக்கும் சிறந்த நாயகனாக இருப்பவர்-
அத்தகைய எங்கும் நினறந்த மஹா விஷ்ணுனவ உள்ளத்தால் தியானிக்கிறேன்.

பாகம்-1–பர ப்ரஹ்ம ஸ்வரூபம்

1.சச்சினாநந்த ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்துடன் ஒன்றாகி ஐக்யம் அடைவதான பரம பக்தி பரவஸ்யத்தையே
உபநிஷத்துக்கள் சாதனா மார்கத்தின் உச்சக்கட்டமாக விவரிக்கின்றன.
அந்த பர ப்ரஹ்ம தத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது -மேலும் மற்ற ஒன்றுடன் ஒப்பிட்டுக்கூற இயலாது.
அது கால தேச வர்த்தமானத்திற்கு கட்டுப்படாத ஓன்று -எவ்வளவு முயன்றும் வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் விவரிக்க
முடியாத ஓன்று-
அவனைப் ப்பற்றி விவரிக்குங்கால்,அது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லாமல் நேதி நேதி
(இதுவல்ல,இதுவல்ல) என்று இதர வஸ்துக்களுக்கு விலக்காகத்தான்
வர்ணிக்கப் பட்டுள்ளது-
இப்படி “ யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ” என்றபடி
மனத்திற்கும்,வாக்கிற்கும் எட்டாதது பர ப்ரஹ்ம ஸ்வரூபம்.

2.இந்த பஞ்ச பூதங்களாலான சரீரமும் ஜகத்தும் அழிவுள்ளனவ.
நான்,எனது என்ற எண்ணத்தால்-அனவகளுடன் ஓன்றுபடும் நிலைகளும், தோற்றங்களும், எண்ணங்களும்,
அவ்வாறே அனவகளுக்கெல்லாம் ஆதாரமாக,மாற்றம் இல்லாத சாக்ஷியாக ஸ்வயம் ப்ரகாசமாக விளங்குவதே
தன்னுனடய உண்னமயான ஸ்வரூபம் என்ற த்ருடமான முடிவுடன் அப்யாச அதிசயத்தினால், ஜீவன், ஸதா அவ்விதமான நினனவுடன்,
பர ப்ரஹ்மத்தோடு இரண்டறக் கலப்பதையே , மோக்ஷம் என்று சொல்லப்படுகிறது
“நாஹம் தேஹோ ந சான்யோஸ்மி ப்ரஹ்மை வாஹம் ந ஸோகபாக்
ஸச்சதானந்த ரூபோஹம் நித்ய முக்த ஸ்வபாவான்”

3.இப்படி தன்னுனடய ஜீவனானது பர ப்ரஹ்மமே என்ற ஐக்ய பாவமான பேர் உண்மையை அறிவதனால் தான்
அக்ருத்ரிம புருஷார்த்தமான மோக்ஷத்தை அனடயலாம்-
ஸ்வ விமர்ச:புருஷார்த்த :–தன்னுடய உண்னமயான இந்த ஸ்வரூபத்தை அவித்யா (மானயயினால்) மறந்து மயங்கிக் கிடக்கும் மனுஷ்யனானவன்,
அப்படி மறந்து போன ஸ்வரூபத்தை அறியப் பெறுவது தான் ஞானத்தின் முடிவு-
மேற் சொன்ன மாயை ஸத்வ, ரஜோ , தமோ எனும் முக் குணங்களின் வாயிலாக நாம ரூப
குணங்கணளாடு, ஜகத்தாகவும், ஜீவனாகவும், பரிணமிக்கிறது

4.சத்வ குணம் எனப்படுவது மற்ற குணங்களாகிற -ரஜோ ,தமோ குணங்களிலிருந்து-முற்றிலும் விடுபட்டு
சுத்தமானதாக இருக்கிறது.
வேத வ்யாசர் தன்னுனடய பல புராணங்களின் வாயிலாக, பர ப்ரஹ்மமும்,
மானயயும் சேர்ந்து ஸ்ருஷ்டி, ஸ்த்தி ஸம்ஹாரம் என்ற முத் தொழினலச் செய்ய, பல ரூபங்களை
ஏற்றுக் கொண்டு,
பல நாமங்களால் அனழக்கப்பட்டு,குணங்களிலிருந்து வேறுபட்டு,சுத்த சத்வ ஸ்வரூபத்துடன்,
அவதாரம் என்ற தொழிலை ஏற்றுக் கொள்கிறது என்று தெரியப் படுத்தி உள்ளார்,

5.ஸ்ரீமத் பாகவத்தில் ஸ்ரீகிருஷ்ேன், தேவகியின் கர்பத்தில் ஆவிர்பவிக்கும் சமயம்,தேவர்களுடன்,
ப்ரஹ்மா, மஹாவிஷ்ணுவின் அவதார தத்துவத்தையும்  நோக்கத்தையும் கீழ் கண்டவாறு ஸ்துதி செய்கிறார்.
“தாமரைக் கண்ணா ! சுத்த ஸத்வ ஸ்வரூபியான தங்களிடத்தில் சமாதி நினலயில் ஸ்திரமாக னவக்கப்பட்ட மனத்தினால்,
மநோ லயம் அடையப் பெற்ற ஒரு சிலரே , நின் திருவடியாகிற மரக் கலத்தால் ,ஸம்ஸார சாகரத்தை ,பசுங்கன்றின் குளம்படி போல் எளிதில் தாண்டுகிறார்கள் ( ஸ்ரீ மத் பாகவதம்-ஸ்கந்தம் – 10 அத்யா,-2 ஸ்லோ,30)

6.மேலும் இந்த ப்ரஹ்ம ஸ்துதியில் , பகவானுனடய அவதார தத்துவத்தை விளக்குங்கால்,”எல்லா
ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக,ஒளியாகப் ப்ரகாசிப்பவனே
ப்ரகிருதி வசத்தால் மனறக்கப்பட்ட
ஜீவாத்மாக்கள் அந்த ஒளியான ப்ரகாசத்தினாலேயே தங்களுனடய மநோ , வாக், காயங்களால்,
உலக அனுபவத்தை அடைகின்றன என்று அறிவதில்னல.
அந்த மாயையை உன் வசத்திலே னவத்துக் கொண்டு,
மேலும் “ஸத்வம் விஸுத்தம்” (ரஜோ ,தமோ குணங்கள் கலக்காத ) உன் சுத்த சத்வ ரூபத்தோடு,அதர்மத்தை
அழிக்க அவ்வப்போது தோற்றம் அனடகிறீர்.
அந்த அவதார தத்துவத்தையும் நாம,ரூப,குணங்கனளயும் விவரிக்க இயலாது.
அவை , ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய ப்ரமாணங்களால் அறியக் கூடியனவ அல்ல.
ஆயினும் அநந்ய பக்தி யாலும், இடை விடா முயற்சியால் அனடயப் பெற்ற சுத்த மனத்தில் நின்
அருளால், அந்தா நாம ரூப குணங்களை ஜீவர்களுக்கு அனுபவ பூர்வமாய் உணர்த்துகிறீர்கள்.
”இந்த ஸ்துதி யினால் வ்யாச பகவான்,நமக்கு பக்தி மார்கமே ஞானத்தை அளித்து மோக்ஷத்தை அளிக்க வல்லது என்று விளக்குகிறார்.
பக்தி யற்ற ஞானம்,மேல் உலகங்களில் தற்காலிகமாக, சுகத்தை யளித்து திரும்பவும் மறுபிறப்னபயும் அளிக்குமே தவிர
ஸம்ஸார ஸாகர சுழலிலிருந்து விடுவிக்காது என்று அறுதியிட்டு கூறுகிறார்..(ஸ்ரீ மத் பாகவதம் -10-2-35-37)

7.அப்படிப்பட்ட ஸச்சிதானந்தப் பரம் பொருளை விட்டகலாத கிருஷ்ேண பக்தியே ராஸ லீலையில்
கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனோடு அனுபவித்த பரமானந்தம்,
அதுவே பக்தன் பகவானுடன் அனுபவிக்கும் பரமானந்தம்.
அதுவே முக்தனுடன் சேர்ந்து முமுஷுக்கள் அனுபவிக்கும் ப்ரஹ்மானந்தம்.

8.அப்படிப் பட்ட ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கி திளைத்த மஹான்கள் பலருண்டு.
அவர்களில் பாகவத ஸமுதாயம்,
என்றென்றும் மறக்காமல் ஆராதித்துவரும் ஸ்ரீ ஜயதேகவியும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் முக்கியமானவர்கள்.
அவர்கள் அப் பரம்பொருனள அறிந்து,தான்,தனது என்ற பாவம் ஒழிந்து, அதனுடன் இரண்டறக் கலந்து பரிபூரண ஆனந்தத்தை அனுபவித்தனர்.
“ஏகம் ஸ்வாது ந புஞ்ஜீத ” என்ற கூற்றுப்படி, தான் அனுபவித்த அந்த பரமானந்தத்தை ,மற்ற பாமர மக்களும் அனுபவித்து
மோக்ஷ சாம்ராஜ்யத்தை அனடய வேண்டும் என்ற பரம கருணையால் தங்களுனடய ஆனந்த அனுபவங்கனள,
தங்களின் தெய்வீகப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தி நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாம் இப் பாடல்கனளப் பாடும் போதும்,மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும்,நம்மை மறந்த நினைவில் ,
பரவசமாகி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும்,இதற்குத் தக்க ப்ரமாணமாகும் எனபதில் ஐயமே இல்லை ,

9.ஸ்ரீஜயதேவர்”கீதா கோவிந்தம் ”என்ற நூலையும்,ஸ்ரீ நாரா யண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூலையும்,பனடத்து,
தாங்கள் ருசித்த பரமானந்த ரஸத்தை பாமர மக்களும் ருசித்து அனுபவிக்க ,ராக தாளங்களுடன் கூடிய ஜன ரஞ்சகமான பாடல்களாக அருளிச் செய்தார்கள்.

இக்கட்டுரை 3 பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
1ம் பாகத்தில் ப்ரஹ்ம ஸ்வரூப விளக்கமும்,
2ம் பாகத்தில் நூல்களும் அதன் ஆசிரியர்களும்-என்ற தலப்பில் ஸ்ரீ ஜயதேவரின் கீதா கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூல்களின் சிறப்புகளைப் பற்றியும்
3ம் பாகத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் என்ற தலைப்பில் இந் நூல்களின் இடையே உள்ள ஒற்றுமையும், வேற்றுமையும் விவரிக்கப்பட்டுள்ளன.

நாமும் இப் பாடல்களின் உட்பொருள் அறிந்து, அந்த அமிர்த ரஸத்தை முடிந்த வரை பருகி அனுபவிக்க,
முதற் கண் இந் நூல்களின் காவியத் தலைவனான ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹ புரி ஸ்ரீதேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீவேங்கடேசப் பெருமாளையும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

————————-

பாகம் -2- நூல்களும் அதன் ஆசிரியர்களும்
ஸ்ரீஜயதேவரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீ கீத கோவிந்தமும்
1.கிபி 12வது நூற்றாண்டு ஸ்ரீஜயதேவர், ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி ஷேத்திரத்தின் அருகில் உள்ள
கெண்டுபில்வா என்றகிராமத்தில் போஜதேவர் ராதா தேவி தம்பதியினரின் மைந்தனாக அவதரித்தார்.
ஸ்ரீஜயதேவரும் அவரதுமனனவி பத்மாவதியும் பூரி ஜகன்னாதரின் பரம பக்தர்கள்.
அவர் ஸ்ரீ கீத கோவிந்தம் என்கிற தெய்விக காவ்யத்தைப் படைத்து அதனை பூரி ஜகன்னாதரின் ஸந்நிதியில் தம்பதியினர்
தினந்தோறும் பாடியும்,நடனம் ஆடியும், பக்தி பரவசத்தில் மெய்மறந்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

2. காதல் எனும் சொல் தத்வரீதியில் மிக நுண்ணிய அர்த்தத்தை யுடையதாக இருக்கிறது.
ஸாதாரணமாக பொது வாழ்வில், மனித உறவுகளில், நடைமுனறயில் இது அன்பு என்று அனழக்கப்படுகிறது.
அந்த அன்பின் பரிமாணம் ஓவ்வொரு உறவுகளிலும் வேறுபடுகின்றது.
தாய்-குழந்தை , ஸ்த்ரீ-புருஷன்,நாயகி- நாயகன், கணவன்-மனைவி,பெற்றோர்-குழந்தைகள் என்ற உறவுகளில்,
அன்பின் அளவு வேறுபாட்னட நாம் உணர முடிகிறது.
இந்த அன்பு அல்லது ப்ரேமை , மனித உறவுகளைக் கடந்து, தெய்வத்திடம் காட்டப் படும் போது, அது பக்தி என்று அழைக்கப் படுகிறது.

3.ஸ்ரீ கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ராதையும், மற்ற கோபிகைகளும் கொண்ட காதல்
ஸாதாராணமாக ஸ்த்ரீ-புருஷ வேறுபாட்டினால், இந்த்ரிய வசத்தால் தோன்றும் மானிடக் காதல் அல்ல.
அது தெய்வீகக் காதல்.
இத்தகைய தெய்வீகக் காதலை ராதையும் , மற்ற கோபிகைகளும் பரமாத்மாவிடம் செய்ததும்,
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவர்களின் பேரில் கொண்ட காதலையும்
ஸ்ரீஜயதேவர் தனக்கே உரித்தான கவிநயத்துடன் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களாக தன் நூலின்
முலம் வெளிப்படுத்தி யுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
தன்னையே ராதையாகவே கற்பனை செய்து கொண்டு பரமாத்மாவுடன் சேர்ந்து அனுபவித்த
பேர் ஆனந்தத்தை , தன் பாடல்கள் வாயிலாக
வெளிப்படுத்தி யுள்ளார் என்பது பாடல்களின் பாவத்திலிருந்து, நாம், நன்கு உணர முடிகிறது..

4.காவ்யம் என்ற பெயருக்கு ஏற்ப ஸ்ரீ கீத கோவிந்தம் பண்ணிரண்டு ஸர்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இருபத்து நான்கு அஷ்டபதிகள் கொண்ட இக் காவ்யத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கு ஏற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன.
இதற்கு விதி விலக்காக முதல் அஷ்டபதியிலும் மற்றும் சில அஷ்டபதிகளிலும் எட்டுக்கு மேற்பட்ட பதங்கள் உள்ளன.
இந்த அஷ்டபதிகளில் ஒவ்வொன்றிலும் கூறப்படும் கருத்துக்களுக்கு தொடர்பு உள்ளபடி 90 ஸ்லோகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

5.முன்னுரை ஸ்லோகங்களுக்குப் பின்னர் முதல் அஷ்டபதி விஷ்ணுவின் பத்து அவதாரங்கனளயும் விவரிக்கிறது.
பின்னர் வஸந்த கால வர்ணனையும் கோபியருடன் கண்ணன் மகிழ்ந்து குலாவுவதை
ராதையிடம் அவள் தோழி வர்ணிப்பதையும் கூறப்பட்டுள்ளது.
ராதையின் பிடிவாதம் கனலந்த பின், இன்னமும் கோபப் பட்டாலும்,மீண்டும் மீண்டும் கண்ணனை நினனந்து மனம் வருந்துகிறாள்.
ராதையின் விரஹ தாபத்தை கவி மிகவும் அழகாக விவரித்துள்ள பாங்கு மிகவும் போற்றி பாராட்டப்படுகிறது,

6.கண்ணனும்,தான் ராதைக்கு மனத் துயர் அளித்ததை எண்ணி மனம் வருந்துகிறான்.
ராதையின் தோழிஅவர்களிடையே தூது சென்று அவர்களிடையே ஏற்பட்ட பிணக்கு நீங்க வழி செய்கிறாள்.
மீண்டும் ராதையும் கண்ணனும் முன் போலவே ஆனந்த மயமான கேளிக்கைகளில் ஈடுபடுவதை ,
கவி வர்ணனை செய்து இந்தக் காவ்யத்தை நிறைவு செய்துள்ளார்.

7.பதினெட்டு புராணங்களில் ஒன்றான ப்ரஹ்ம வைவர்த்த புராணம் விவரிக்கும் ராதா கிருஷ்ண
சரித்ரத்தின் அடிப்பனடயில் இந்த காவ்யம் அமைக்கப் பட்டுள்ளது.
மேலே எழுந்த வாரியாகப் பார்க்கும்
போது ச்ருங்கார ரஸமே ப்ரதானமாக வுள்ளது போலே தோன்றினாலும்,கூர்ந்து நோக்குங்கால்,
பக்தியின் உன்னத நினலக்கு நம்மை ஈர்த்துச் செல்லும் பக்தி ரஸம் நினறந்துள்ள காவ்யமாகும்.
ஒவ்வொரு அஷ்டபதியின் முடிவிலும் கண்ணனிடம் உள்ள பக்திப் பெருக்கால் பக்தர்கள் மேன்மை அடையட்டும்
என்று வேண்டி முடிக்கிறார்.
பஜனை சம்பிரதாயத்லே கீத கோவிந்தம் பாடாத பத்ததியே இல்லை என்று கூறும்படி அவ்வளவு ப்ரஸித்தம் அடைந்துள்ள காவ்யமாகும்.
இந்தியாவில் வடநாட்டில் இக் காவ்யம்
உருவானாலும் தென் நாட்டில் மிகவும் விரும்பி பரம பக்தி யுடன் பாகவதர்களால் கையாளப்பட்டு வருகிறது .
இக் காவ்யம் ஸமஸ்கிருதத்தில் எழுதப் பட்டிருந்தாலும் அந்த பாஷை தங்களுக்கு பரிச்சியமில்லாவிடினும்
அது அமர காவ்யம் என்று உணர்ந்து அதை ராகத்துடன் கற்றறிந்து
பாகவதர்கள் பாடி பரவசமடைந்து கேடபோரையும் நெகிழ னவக்கிறார்கள்,

8.இதற்கு அடிப்படைக் காரணம் என்ன வென்றால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற
மனிதனுடைய ஆத்மாவின் உள்ள கிடக்கையையும்,படிப் படியாக முன்னேறி, அதில் வெற்றி காண்பதையும்,
பரமானந்தத்தை அனுபவிப்பதையும்,  உட்கருத்தாகக் கொண்டு இக் காவ்யம் அமைக்க பட்டதேயாகும்,

9.இக் காவ்யம் ராதா என்பவளை ஜீவாத்மாவாகவும்,ஸ்ரீகிருஷ்ணனை பரமாத்மாவாகவும் பாவித்து
அவர்களின் ஐக்யத்னே -ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை -புகழ்ந்து போற்றி, சிருங்கார ரஸம் ததும்ப எழுதப்பட்டதாகும்.
ஸ்ரீஜயதேர் பூரி ஜகன்நாதரை ராதா கிருஷ்ண ஐக்கியமாகப் பாவித்து இந்த மஹா காவ்யத்தைப் படைத்தருளினார்.

10.ஸ்ரீஜயதேவர் மாபெரும் கவியாக இந்தியா முழுவதும் கருதப்படுகிறார்.
அவருடைய சங்கீத அறிவும் சமஸ்கிருதத்தில் அவருக்கு உள்ள பாண்டித்யமும் அவருடைய அஷ்டபதிகளின் வாயிலாகத் தெள் எனத் தெரிகின்றது.
அவருடைய கவித்துவத்தைப் பாராட்டாத பண்டிதர்களே இல்லை .
சொற்களின் கோர்வை ,மற்றும் பொருள் செறிவைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்,
ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இக் கவி தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது அதைத் தொடர்ந்து ஜெர்மன்,பிரான்சு மேலும்
சில ஐரோப்ய மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதிலிருந்து கீத கோவிந்தம்
என்ற காவ்யம் சிறந்த இலக்கியமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.

11.இப்போது நாம் சில முக்கிய ஸ்லோகங்கள்,அஷ்டபதிகள் அதன் பிண்ணனி ஆகியவைகளை அனுபவிக்கலாமே .
ஸ்ரீஜயதேவரின் புகழ்பாடும் தியான ஸ்லோகங்களுக்கு பின்னர், முதல் ஸர்கத்தில்
“மேகைர் மேதுர மம்பரம்“ என்று தொடங்கும் முதல் ஸ்லோகம்
“காரிருள் கவ்வுகிறது–.வானில் மேக மூட்டம் காணப்படுகிறது,குழந்தை கிருஷ்ணன் அச்சப் படுகிறான்,அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்”
இவ்விதம் நந்த கோபன் உத்திரவுப்படி, செல்லும் வழியில், யமுனை நதிக்கரையில் புதர்களின் இடையே
ராதாவும் மாதவனும் புரிந்த கேளிக்கைகள் ஜயமடையட்டும் என்று மங்களா சாஸனம் செய்து கவிதையைத் தொடங்குகிறார்,

12.இவ்விடம் குழந்தை என்று கண்ணன் அழைக்கப் பட்டு மேலும் ராதையோடு கேளிக்கை புரிந்தான்
என்று கூறியதிலிருந்தும் கண்ணனுனடய வயது மிகக் குனறவு என்பது ஊர்ஜிதமாகிறது.
அவன் ராஸ லீலா கேளிக்கை எல்லாம் தன் பத்து வயதிற்குள் முடித்து விட்டான் என்றும் கூறப்படுகிறது.
இதிலிருந்து ராஸலீனல ஒரு தெய்வீகக் கேளிக்கை எனறு சந்தேகமறத் தெரிகிறது.
மேலும் “பய க்ருத் பய நாசன:” என்று பயத்தை உண்டாக்குபவனும்,அப் பயத்தை அழிப்பவனும் அவனே என்றிருக்க
கண்ணன் பயப்படுகிறான் என்ற விவரிப்பு, கண்ணன் குழந்தை ரூபத்தை ஏற்றது மட்டுமல்லாது,
அக் குழந்தைக்குறிய குணங்கனளயும் வெளிப்படுத்தி யுள்ளான் என்பது தெளிவாகிறது,

13.ஸ்ரீ ஜயதேவர் முேல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.இதில் புத்த அவதாரத்தையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்கனளயும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார் என்று கூறுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும்
“கேசவா த்ருத ” -கேசவன் தரித்தான் -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன் முலம்
ஸ்ரீகிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதானுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோஹம்- 5 ல் தெளிவாக வராக அவதாரம் எடுத்து,வேதத்தை மீட்டவனான
ஸ்ரீகிருஷ்ணன் பத்து அவதாரங்கனள எடுத்தான்,அவனுக்கு நமஸ்காரம்.-கிருஷ்ணாய துப்யம் நமஹ- என்று கூறுகிறார்.

14. “ஸ்ரித கமலா குச மண்டலா”என்று தொடங்கும் 2வது அஷ்டபதியில்
“தவ சரணே ப்ரண தாவயமிதி பாவய ஏ குருகுசலம் ப்ரணதேஷூ ஜய ஜய தே வ ஹரே ” என்று-உன்னைச் சரணமடைந்தோம் என்று அறிவாயாக.
சரணமடைந்த எங்களுக்கு நன்னம பயக்கச் செய் -என்று சரணா கதி மஹத்வத்தை -மார்ஜார பக்தி தத்துவத்தை -விளக்குகிறார்.
மேலும் வஸந்த கால மேக வர்ணனை மஹாகவி காளி தாஸரின் மேக தூதத்தை நினனவு கூறுகிறது

15.ஸ்ரீஜயதேவர் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சிதபி”என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,
7வது சரணத்தில் அவர் கண்ணன் காதல் உன்மத்தம் கொண்டு ராதையிடம் பேசுவதாக உள்ள வரிகளில்,
அவர், ஸ்ரீ ஜகன்நாதரிடம் மனம் லயித்து தன்னன மறந்த நிலையில்,”கண்ணன் ராதையிடம்
காதல் உன்மத்தம் கொண்ட என் ஸிரஸ்ஸில் உன் மிருதுவான பாதத்தை வைத்து, அதை குளிரச் செய்”
என்று சொல்வது போலஂ எழுதி விட்டார்.-பின் சுய நினைவுடன் அதைப் படித்த பின் திடுக்கிட்டார்.
”என்ன அபச்சாரம் செய்து விட்டேன் பரமாத்மா கண்ணனின் தலையிலே ராதையின் பாதமா”என்று வருந்தி
அந்த வரிகனள நீக்கி வேறு விதமாக மாற்றி எழுத பல தடவை முயன்றும் முடியாமல் போயிற்று.
எழுது கோலை கீழே வைத்து விட்டு கங்கையில் நீராடச் சென்று விட்டார்.
திரும்பி வந்ததும் எழுதுவதற்காக ஓலையை எடுத்தார் -என்ன ஆச்சர்யம்!! அவர் முதலில் எழுதிய வாறே அந்த
நீக்கிய வரிகள் எழுதப் பட்டு இருந்ததைப் பார்த்து, வியந்து, தன் மனனவியிடம் விசாரிக்கும் போது, அவர்
மனனவி “நீங்கள் தானே சற்று முன் வந்து எழுதி விட்டு, சாப்பிட்டு விட்டு வெளியே சென்றீர்கள்” என்று சொன்னார்.
ஸ்ரீ ஜயதேவரும் பத்மாவதி தேவியும் அப்போது தான் உணர்ந்தார்கள்- பூரி ஸ்ரீ ஜகன்நாதரே
ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து அந்த வரிகனள எழுதினார் என்றும்
பத்மாவதி தேவி கையால் உணவும் அருந்திச் சென்றார் எனறும் அறிந்து ஆனந்த பாஷ்பம் பெருக மெய் மறந்தனர்.

இது ஒன்றே போதுமே “கீத கோவிந்தம் “ஒரு தெய்வீக காவ்யம்” என்பதற்கு.
பகவானால் எழுதப்பட்ட அந்த தெய்வீக வரிகனளப் பார்ப்போம்.
”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம்
தேஹி பத பல்லவமுதாரம் ஜ்வலதி மயி தாருணோ
மதன கத நாருணோ ஹரது தது பாஹித
விகாரம் ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்”
“வஞ்சிக் குறமகள் பாதம் வருடிய மணவாளா” என்று அருண கிரிநாதர் தன்
திருப் புகழில் முருகனைப் போற்றி எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

16.மேலும் இந்த அஷ்டபதி மரணத்திலிருந்து மீட்டு உயிரளிக்கும் ம்ருத சஞ்ஜீவினி மந்திரமாகவும்
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது கீழ்கண்ட சம்பவத்திலிருந்து அறிகின்றோம்
ஒரு சமயம் பத்மாவதி தேவி கஜபதி ராஜா அரண்மனையில் மஹாராணியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் ராணி வினளயாட்டாக பத்மாவதி தேவியிடம் ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீ ஜகன்நாதர் ஆலயத்தில் த்யானத்தில்
இருந்த போது உயிர் நீத்தார் என்று சொல்ல,
அதனைக் கேட்ட பத்மாவதி தேவியார் துக்கம் தாங்காமல் அந்த ஷணமே தானும் உயிர் நீத்தார்.
வினளயாட்டு விபரீதாமானதைப் பார்த்த ராணி மிகவும் வருந்தினாள்.
ராஜாவும் உடனே ஸ்ரீ ஜயதேவரிடம் சென்று நடந்ததைக் கூறி வருந்தி மன்னிப்புக் கேட்டார்.
ஸ்ரீ ஜயதேவர் துளியும் கவலைப் படாது உடனே பத்மாவேி தேவியின் உடலுக்கருகில் சென்று ஸ்ரீ ஜகன்நாதரை மனதால் வேண்டி
அஷ்டபதி – 19ல் உள்ள “ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்” என்ற வரிகனள இசை மீட்டிப் பாடினார்.
உடனே பத்மாவதி தேவியார் தூக்கத்திலிருந்து எழுவது போல உயிர் பெற்றெழுந்து ஸ்ரீஜயதேவருடன் சேர்ந்து
இந்த அஷ்டபதியை இசை மீட்டிப் பாடி ஸ்ரீஜகன்நாதரை ஸ்துதித்தார்கள் என்று சொல்லப் படுகிறது.

17. “ரதி ஸுக ஸாரே ” எனத் தொடங்கும் – 11வது அஷ்டபதியில் விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை கவி வர்ணிக்கிறார்,
கிருஷ்ணன் யமுனா நதிக் கனரயில் ராதையின் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறான்.
5வது சரணத்தில் கிருஷ்ண ராதையின் ஆனந்த ஆலிங்கனத்தை , கார் மேகத்தின் இடையே தோன்றும் மின்னலாகவும்,
கரு மேகங்களின் இடையே பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களாகவும் வர்ணித்துள்ள அழகு,கவியின் மஹா கவித்துவத்தைப் பறை சாற்றுகிறது.

18.”பச்யதி திஸி திஸி” எனத் தொடங்கும் 12வதுஅஷ்டபேியில் தன்னிடத்தே விட்டு துளியும் அகலாது, மனம் கண்ணனையே நினனத்து,
அவன் பிரிவாற்றா மையை சஹிக்க இயலாது, அவன் வரவை எதிர் நோக்கி விரஹ தாபத்தினால் வேதனை யுறும், ராதையைக் கண்ணுற்று,
தோழி, ராதையின் நிலமையைக் கண்ணனிடம் கூறுவதை விளக்கியுள்ள அழகே தனி.

19.கீத கோவிந்தத்தின் பெருமையை விளக்க மேலும் ஒரு ருசிகரமான நிகழ்ச்சி-
ஒரு இலந்தைப்பழம் விற்கும் ஒரு வயதான மூதாட்டி காட்டிற்குள் சசன்று முட்கள் அடர்ந்த மரங்களிலிருந்து
இலந்தைப் பழம் திரட்டச் சென்ற போது ,
பக்திப் பரவசத்துடன் தன் இனிமையான குரலில் கீத கோவிந்தப் பாடல்கனளப் பாடினாள்.
அந்த இசையில் மயங்கித் தன் ஆலயம் விட்டு, ஸ்ரீஜகன்நாத கிருஷ்ணர் அக் கிழவியைப் பின் தொடர்ந்தார்.
அங்குள்ள முட்கள் அவருனடய ஆடைகளைத் துண்டு துண்டாகக் கிழித்தது.
மறுநாள் அர்சகர்கள் பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் சென்று பார்க்கையில் ஸ்ரீஜகன்நாதரின் ஆடைகள்
முட்களால் கிழிக்கப் பட்டிருந்ததைக் கண்டு, என்ன காரணம் என்று அறிய முடியாமல் அதிர்சியுற்றனர்.
அவர்கள் கனவில் ஸ்ரீஜகன்நாதர் தோன்றி நடந்த நிகழ்சியைக் கூறினார் என்று கீத கோவிந்த்தத்தின் பெருமையைக் கூறுகின்றனர்

20.தினமும் ஸ்ரீஜகன்நாதரின் ஸன்நிதானத்தில் கீத கோவிந்தப் பாடல்கள் பக்க வாத்யங்களுடன் பாடப்பெற்று
நடன மாதர்களால் நாட்யமும் ஆடப் பட்டு பகவானுக்கு நித்ய ஸேவையாகச் சமர்பிக்கப்படுகிறது.

21 இவருனடய புகழிலும், கீத கோவிந்தத்தின் பிராபல்யத்தைக் கண்டும், பொறாமை கொண்ட மஹாராஜா கஜபதி
தானும் கீத கோவிந்தத்தின் மையக் கருத்தின் அடிப்படையில் பாடல்கனள எழுதி அப் பாடல் களையே , பாடகர்கள் சங்கீதத்துடன்
ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடவேண்டும் என்றும்,-கீத கோவிந்தப் பாடல்களைப் பாடக்கூடாது, என்றும் கட்டளை இட்டான்.
இருப்பினும்,ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடுவதையும்ஆடுவதையும் நிறுத்த வில்னல.
ராஜா மிகவும் கோபம் கொண்டு ஸ்ரீ ஜயதேவரிடம், எந்த வகையில் கீத கோவிந்தம் தன்கவி தையை விட உயர்ந்தது என்று வாக்குவாதம் செய்தார் .
இருவரின் பனடப்புகளில் எது சிறந்தது என்று தீர்மானிக்க இரண்டு கவிதைகளையும் , ஸ்ரீஜகன்நாதரின் திருப் பாதங்களில் னவத்து, கதவைத் தாளிட்டு, கோயிலுக்கு வெளியே சென்று விட்டனர்-சில நேரங்கள் கழித்து மறுபடி கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.என்னஆச்சர்யம்!!
ராஜாவின் கவிதை எழுதப் பட்ட ஓலை கீழே தரையில் தள்ளப்பட்டு கீத கோவிந்தமுள்ள ஓலை மட்டும் ஸ்ரீஜகன்நாதரின் பாதத்தில் காணப் பட்டது.
அதைப் பார்த்த அனைவரும் ஸ்ரீஜகன்நாதாரே கீத கோவிந்தம் தான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கி விட்டார் என்று உணர்ந்து பெரும் உவகை யடை ந்தனர்.
அன்றிலிருந்து கீத கோவிந்தத்தின் பெருமை பன் மடங்காயிற்று.
மக்கள் அனைவரும் அதை தெய்வீக காவ்யம் என்று போற்றிப் புகழலானார்கள்.

22. ஆழ்ந்த கிருஷ்ண பக்தி யுடைய ஸ்ரீஜயதேவரால் விவரிக்கப்பட்ட கீத கோவிந்தத்தின் மூலம்,அறிவாளிகள், இசைக் கலையில் திறமையும்,
விஷ்ணுவின் மேன்மையை இனடவிடாது த்யானம் செய்தலும், வெவ்வேறு காவ்யங்களில் சிறப்பாக விவரிக்கப்பட்ட ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய
ஸ்ரீகிருஷ்ணனுடைய ராஸ லீலை தத்வத்தை உணர்ந்து அறியவும், இவை அனைத்தையும்
ஒருங்கு இணைந்து , பெறட்டும் என்று 12வது ஸர்கம் ஸ்லோஹம் 88ல் பல ஸ்ருதியும் கூறி யுள்ளார்.

23.”ஸாத்வீ மாத்வீக” எனத் தொடங்கும் ஸ்லோகம் 90 ல்- “இனிய மது பானமே !நீ இனிமை என்று இனியும் நினனயாதே !
சர்க்கரையே நீ கடினம்! த்ராஷையே உன்னன காண எவர் விரும்புவர்,-அம்ருதமே இனி நீ உயிரற்றது!
பாலே நீ ருசியற்றது! மாம்பழமே (பயனற்றது என்று)ஓலமிடு!
அழகிய பெண்களின் சிவந்த உதடே ஸ்ருங்கார ரஸம் நினறந்த மங்களமான ஜயதேவனின் மிகச் சிறந்த சொற்கள் உள்ளவரை ,
இனிமைக்கு ஸமம் என்று கூற வினழயாதே !.”-என்று கூறி காவ்யத்தை நினறவு செய்கிறார்.

24.கீத கோவிந்த மாகிற அந்த அம்ருத ஸாகரத்தில் மூழ்கித் திளைத்து நம் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண பக்தி மேலிட்டு,
ஸ்ரீ ஜயதேவர் போல், அந்த பர ப்ரஹ்மத்துடன் இரண்டற கலந்து ப்ரஹ்மானந்த மாகிற மோக்ஷப் ப்ராப்தி கிட்ட,
ஸ்ரீ ஜயதேவரின் திவ்ய பாத சரணங்கனளப் பற்றுவோமாக.

“ஸ்ரீகோபால விலாஸி நீவலய ஸத் ரத்நாதி முக்தாக் க்ருதி ஸ்ரீராதா பதி பாத பத்ம ஜநா நந்தாப்தி
மக்நோ (அ) நிஸம் லோகே ஸத் கவி ராஜ ராஜ இதி ய: க்யாதோ தயாம் போநிதி : தம் வந்தே
ஜயதேவ ஸத் குரு வரம் பத்மாவதீ வல்லபம்”

கோபியர்களின் வனளகளிலுள்ள சிறந்த முத்து முதலான ரத்னங்களின் வடிவம் கொண்ட ராதையின்
மணவாளனின் பாதத் தாமரையைத் தொழுது எப்போதும் ஆனந்தக் கடலில் மூழ்கிய வரும், உலகிலேயே
சிறந்த கவியரசர் எனப் பெற்றவரும்,கருணைக் கடலும், பத்மாவதியின் பதியும்,உன்னதமான குருவுமான
ஸ்ரீ ஜயதேவரை வணங்குகிறேன்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும்–

1.ஸ்ரீநாராயண தீர்த்தர் கிபி 17ம் நூற்றாண்டில் ஆந்திர ப்ரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில்
விளத்தூர் என்ற கிராமத்தில் அவதரித்த தாகச் சொல்லப் படுகிறது.
பூர்வாஸ்ரமத்தில் அவருடைய பெயர் மாதவன் என்றும் கோவிந்த சாஸ்திரி என்றும் இருந்த தாகச் சொல்லப் படுகிறது.
அவர், தன் இளம் வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டு, பல ஷேத்திரங்களுக்குச் சென்று, பகவத் தரிஸனம் செய்தார் என்றும்
அவர் வேதாத்ரியைச் சேர்ந்த பெண்ணை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் என்றும், கரண பரம்பரை வாயிலாகத் தெரிகிறது.
அவர் இளமையிலேயே வேத சாஸ்த்திரங்கள்,சங்கீத சாஹித்யங்களில் விற்பன்னராக இருந்தார் என்றும் தெரிகிறது.

2. ஒரு சமயம் கிருஷ்ணா நதியின் அக்கரையிலுள்ள தன் மாமனார் வாழ்ந்த வேதாத்திரி கிராமத்தை அடைய நீந்திச் செல்கையில்
நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் அவரை உருட்டிச் சென்று விட்டது.
அவர் உயிருக்குப் பேர் ஆபாயம் ஏற்பட்ட சூழ் நிலையில், அவர் தான் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தைத் துறந்து,
ஸந்நியாச மார்கத்தைத் தழுவுகின்றேன் என்று ப்ரதிஜ்ஜையை எடுத்துக் கொண்டார்.
வெள்ளமும் வடிந்து அக்கரையிலுள்ள மாமனாரின் வீட்டை அடைந்தார் .
அவரைப் பார்த்த அவரின் மனனவி அவரிடம் ஒரு ஸந்யாசியின் காந்தி வீசுவதை உணர்ந்தார்
அவரிடம் விசாரித்த போது நடந்தவற்னற அறிந்தாள்.
பின் தன் மனனவிடம் அனுமதி பெற்று இல்லற வாழ்வைத்
துறந்து காஞ்சீபுரம் சென்று ஸ்ரீசிவராம தீர்த்தர் என்ற மஹானிடம் முறைப்படி ஸந்நியாசம் பெற்றார் என்று சொல்லப் படுகிறது.
கிருஷ்நா நதி வெள்ளம் ஸ்ரீ தீர்த்தரை ஸந்நியாசி ஆக்கியது , ஸ்ரீ கிருஷ்ண மஹா ஸாகரம் அவனர ப்ரஹ்ம ஞானி ஆக்கியது போலும்.
இது ஆதி சங்கரர், முதலை ,தன் காலை ப் பிடித்துக் கொண்டதையே வ்யாஜ்யமாகக் கொண்டு,
ஸந்நியாசம் வாங்கிக் கொண்டதை நினனவு படுத்துகிறது.

3.அதற்கு பிறகு, அவர் தன் குருவின் ஆஜ்ஜைப்படி தீர்த்த யாத்திரை மேற் கொண்டு காசி, ப்ரயாகை ,
மதுரா.பூரி போன்ற ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்,
காசியில் பல வருடங்கள் தங்கி ப்ரஹ்ம உபாசனையில் ஈடுபட்டார்.
பிறகு காவேரிக் கரையிலுள்ள பல ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வரும் போது
அவருக்குத் தீராத வயிற்று வலி வந்து மிகவும் சிரமப்பட்டார்

4.இப்படியாகத் திருவையாறு வந்தடைந்தார் . அவ் வூரின் தெற்கே உள்ள நடுக் காவேரி எனும் கிராமத்தை அனடந்த போது,
அவரின் வயிற்று வலி மிக அதிகமாகி அங்குள்ள வினாயகர் கோயிலில் இரவு படுத்துறங்கினார்.
அவர் கனவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி “நீ காலையில் விழித்தெழும் போது முதலில் எந்த
மிருகத்தைப் பார்க்கிறாயோ ,அதைத் தொடர்ந்து செல்,உன் வயிற்று வலி நீங்கும்”என்று சொல்லி அருளினார்.

5.அது போலவே மறுநாள் காலையில் கண்விழித்த போது, ஓரு வெள்ளைப் பன்றியைக் கண்ணுற்றார்.
காலையில் கண் விழிக்கும் போது பன்றியைப் பார்ப்பது அப சகுனம் என்று மனத்தில் தோன்றினாலும்
ஸ்ரீகிருஷ்ணனின் ஆக்ஜ்ஜையை சிரமேற் கொண்டு அப் பன்றியைப் பின் பற்றிச் சென்றார்,
சுமார் 4 கி.மீ தொலைவு வரை அதனைத் தொடர்ந்து சென்றபின் மிகவும் களைப்புற்றார்.

6.அத் தருணம் ,அப் பன்றி ,அருகாமையில் உள்ள ஒரு கோயிலினுள் சென்று மனறந்தது.
அச் சமயம் ஆகாச வாணியின் குரலைக் கேட்கலுற்றார்.
”என்னைத் தேடாதே .உன்னன இங்கு வர வழைக்கவே நான் இவ்வாறு செய்தேன்”எனற குரலொலி கேட்டது.
அதைக் கேட்ட அவர் மெய் சிலிர்த்து ,ஆனந்த பரவசம் அனடந்தார்.
அந்த ஷணமே அவருனடய தீராத வயிற்று வலியும் மனறந்தது,
பூபதி ராஜ புரம் என்ற பெயர் பெற்ற அக் கிராமம், அன்று முதல் வராஹ புரி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
வராஹ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் பன்றி என்று பொருள்,

7.ஸ்ரீ தீர்த்தர் அந்த இடத்தின் மஹிமையை உணர்ந்து கிராம ஜனங்களின் உதவியுடன் அந்த பூமியை அகழ்ந்து பார்த்ததில்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தேவியை அணைத்தவாறு உள்ள ஸ்வயம்பு ஸிலா மூர்த்தியைக் கண்டெடுத்து அந்த இடத்தில்
ஒரு கோயிலை , பக்தர்களின் சஹாயத்துடன் நிர்மாணித்து, பகவானைப் ப்ரதிஷ்டை செய்து, பூஜா வழிபாடுகள் தினமும் நடக்க ஏற்பாடுகள் செய்தார்,

8.அவர் தம் வாழ் நாள் முழுவதும் அந்த புண்ணிய வராஹ ஷேத்ரத்திலேயே தங்கி உலகப் புகழ் பெற்ற
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பக்தி சுனவ சொட்டும் பாடல்கள் நிரம்பிய காவ்யத்தை அருளிச் செய்தார்.
அவர் ஸங்கீதத்திலும்,நடன சாஸ்த்திரத்திலும் வல்லுநராக இருந்ததால் தன் இஷ்ட தேவதையான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ளத்தின் ஒருமைப் பாட்டை வெளிப்படுத்து வதற்காக ஸங்கீதத்தையும் நாட்யத்தையும் தன் பாடல்களில் சேர்த்துள்ளார்.
இந்த காவ்யத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
ஸ்ரீகிருஷ்ண ஸன்நிதியில் அவர் எழுதிய அத்தனைப் பாடல்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீருக்மிணி தேவியுடன் நடமாடி தன் அங்கீகாரத்தை வழங்கினார் என்றும்
அவர்களின் சலங்னக ஒலியை மட்டும் ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார் என்றும் சொல்லப் படுகிறது.
இங்கு, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீநாராயண பட்டத் திரியின் ஸ்ரீநாராயணீயம் முழுவதற்கும் அங்கீகாரம் வழங்கியதை நினனவு கூறுவோம்.

9.வடமொழியில் தரங்கிணி என்ற சொல், அனலகளுடன் கூடிய ஆற்னற குறிப்பதாகும்.
ஸ்ரீகிருஷ்ணனுனடய லீலைகள் ஆகிற அனலகளை 12 தரங்க பிரிவுகளுடன் கொண்டுள்ளதால்
இந்நூலுக்கு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நூலில் 303 -ஸ்லோகங்கள் 153-கீதங்கள் 31 -ஸூர்ணிகைகள் அடங்கியுள்ளன.

10.ஸ்ரீநாராயண தீர்த்தர் கடினமான சொற்களைத் தவிர்த்து லலிதமான சொற்களாலேயே தன்
கத்யங்களையும், பத்யங்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் வனகயில் அனமத்துள்ளார்.
ஸ்லோகங்கனளயும் ஸூர்ணிகைகளையும் கீதங்களிடையே சந்தர்பத்துக்கேற்ப அழகுபட பொருத்தி யுள்ளார்.
ஸ்லோகங்கள் 17அழகிய பல விருத்தங்களிலும்,கீதங்கள் 34 மனம் கவரும் ராகங்களிலும்,
கேட்போரை நடனம் ஆட வைக்கும் 10 தாளங்களிலும் அனமக்கப் பட்டுள்ளன.

11.இந்த நூலில் ஸ்ரீமத் பாகவதம் தஸம ஸ்கந்தம் 1 முதல் 58 வரையுள்ள அத்யாயங்களில் கூறப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம்,பால லீலைகள்,
கன்றுகளை மேய்த்தல் ,கோபீ வஸ்த்ராபஹரணம்,கோவர்த்தன கிரி உத்தாரணம்,ராஸக் கிரீடை , கம்ஸன் முதலிய துஷ்டர்களை அழித்தல்,
கடலின் நடுவே துவாரகையை நிர்மாணித்து அதனுள் ப்ரவேசித்தல் ஸ்ரீ பலராம விவாஹம்,ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தை வர்ணிப்பதோடு அஷ்ட மஹிஷிகளுடன் விவாஹமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12.ஒவ்வொரு தரங்கத்திலும் இன்ன இன்ன லீலைகள் அபிநயிக்கப் பட்டுள்ளன,
இந்த இந்த பாத்திரங்கள் வருகின்றனர் என்று கூறி, ஸ்லோகம்,கீதம்,ஸூர்ணிகை – இவைகளால் அந்த அந்த லீலைகளை விளக்கி யுள்ளார்,
கிருஷ்ண லீலைகனள அபிநயம் செய்தல் என்ற முனறயைத் தழுவியே இந்த நூலானது படைக்கப் பட்டுள்ளது.
ஹரி கதா கால ஷேபம் செய்யும் பாகவதர்கள் கதையின் ஆரம்பத்தில்,
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் தொடக்கத்தில் உள்ள “ஹிம கிரி தனய” பத்யத்தைப் பாடுகிறார்கள்
என்பது இதன் தனிப் பெருமையை விளக்குகிறது.

13.ஸ்ரீநாராயண தீர்த்தர், வேதார்த்தங்களில் விசாரம் செய்து நிர்ணயித்தவாறு,
ஜாதி ,குணம்,கிரியை , இவைகளற்றதும்,ஆனந்தம், பிரகாசம்,சத்து (எப்போதும்,எங்கும்,எல்லாமுமாக இருப்பது) ஆகிய லக்ஷணங்களைக் கொண்ட
பரம்பொருனள எப்போதும் உள்ளத்தில் இருத்தி ஆராதித்தவர் ஆயினும் அத்தகைய நிர்குணமான பரம்பொருனள அடைவதற்கு அவன்
ராம,கிருஷ்ண வடிவங்கனள உபாஸிக்க வேண்டும்.
இந்த ச குண வழிபாட்டை நாளடைவில் தனக்கு தானே நிர் குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீ சுகப்ப்ரஹ்மம் நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயில் தீ விரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவேத்தை – ஸ்ரீ கிருஷ்ண லீலைகனள -உபதேஸித்தார்,
ஒவ்வொரு லீலையிலும் தன் உள்ளத்திலுள்ள பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப் பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே
பரம் பொருளின் ச குண வடிவங்கனளத் துதித்து தன் பாடல்கள் மூலம் வழிபட்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச் சிறப்பு.

14–முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின்” என்ற கீதத்தில்,கணபதியையும்,
”துர்கே துர்கதி ஹாரிணீ ” என்ற ஸ்லோகத்திலும் “ஜயஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவினயயும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தானோது மதுஸூதன ஸதா ” என்ற கீதத்தில் கங்காதரன்,தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் ேரங்கங்களில் நர ஸிம்ஹனரயும்,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வ ஞான க்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல், மஹா விஷ்ணுனவயும்,
3ம் கீதத்தில், வராஹ புரி வேங்கடேசப் பெருமானளயும் துதித்துள்ளார்.

15.ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலைகனள வர்ணிக்கும் போது ஸ்ரீ ஜயதேவனரப் பின்பற்றாமல்,
ஸ்ரீவேத வ்யாஸர், ஸ்ரீமத் பாகவேத்தில் ஸ்ரீகிருஷ்ண லீலைகனள வர்ணித்த முறையையே பின் பற்றி யிருக்கிறார்.
முதலில் ஸ்ரீகிருஷ்ண அவதார கட்டத்தில்”தம் அத்புதம் பாலகம் அம்புஷேணம் ”(ஸ்ரீ மத் பாகவதம் -10-3-9)கருத்தை
”கல்யாணம் விதநோது” என்று தொடங்கும் முதல் தரங்கம் ஸ்லோஹம் -.27 ல் “சங்கம் சக்ரம்,கதை ,தாமரைப்பூ கதை ,வில்,
பல இரத்தினங்கள் பதித்த கிரீடம்,மகர குண்டலம்,மஞ்சள் பட்டு, கழுத்தில் கௌஸ்துப மணி ,இவற்றுடன் கூடியவரும்,
யாதவ குலத்தின் தலைவனான வஸுதேவருடையவும், தேவகியினுடையவும், குழந்தையாகத் தோன்றியவருமான கிருஷ்ணன்
எல்லாவிதமான மங்களங்களையும் அளிக்கட்டும்” என்று கூறுகிறார்.
இதில் கிருஷ்ணனுடைய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போதே கல்யாணம் என்று மங்களகரமாக ஆரம்பிக்கிறார்,
நாராயண பட்டத்திரி நாராயணீ யத்தில் கிருஷ்ணனுனடய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போது “ஆனந்த ரூப பகவன்” (தஸகம் 38,)என்று ஆரம்பிப்பதை நினைவு கூறுவோம்.
மேலும் நாராயணீ யம் ஆரம்பிக்கும் போதும் “ஸாந்த்ரானந்த ” என்றும்
ஆனந்த ஸ்வரூபியான பரப்ரஹ்மத்தை வர்ணிப்பதும் குறிப்பிடத்தக்கது.

16.ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் ஸூதபா என்ற ப்ரஜாபதி , ப்ருச்னி என்ற மனைவியுடன் நல்ல
பிள்ளையை அனடய 12000 தேவ ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்,
விஷ்ணு அத் தவத்தின் பலனை யளிக்க அவர்கள் முன் தோன்றினார்,
அப்பொழுது அந்த தம்பதிகள் விஷ்ணுவைப் போன்ற புத்திரனையே வரமாக வேண்டினர்.
அதனால் விஷ்ணுவும், ப்ரச்னி கர்பன் என்ற பெயருடன் பிறந்தார்.
அந்த தம்பதிகள், அதிதி -கஸ்யபராகத் தோன்றிய போது, அவர்களுக்கு உபேந்திரன்(வாமனன்)
என்ற குழந்தையாகப் பிறந்தார்.
மூன்றாவது முனறயாக, அந்த தம்பதிகள் தேவகி-வஸூ தேவராகத் தோன்றிய போது அவர்கள் செய்த புண்யத்தினால் விஷ்ணுவே அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ராக அவேரித்தார். (பாக.ஸ்க.10-அத்யா. 3-ஸ்லோ . 32-45).
மேலே குறிப்பிட்ட விஷயத்தையே “தத் ப்ராக்தனை : கர்மபி: என்ற சொற் தொடரால் குறிப்பிட்டுள்ளார் (முதல் தரங்கம் ஸ்லோ .28)

17.ஸ்ரீ பாகவதத்தில் வியாசர் கிருஷ்ணர்,ராமர்,ந்ருஸிம்ஹ அவதாரங்கனளக் குறிப்பிடும் போது ஸ்ரீமன்
நாராயணன் எல்லை யற்ற கருணையினாலேயே அவதாரங்களை எடுத்தார் என்று வலியுறுத்த
ஒவ்வொரு அவதாரத்தினைக் கூறும் போதும் “அத்புத ” என்ற அடை மொழியைச் சேர்த்து இருக்கிறார்.
இவ்விஷயத்தையே ஸ்ரீ தீர்த்தர் “மங்களாலய மாமவ தேவ என்று தொடங்கும்” முதல் தரங்கம் கீதம்10-ல்
“அதி கருண வித்ருத அத்புத ரூபா” என்ற சொற் தொடரால் விளக்கியுள்ளார்.
இதையே ஸ்ரீ ஜயதேவர் முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றி சொல்லும் போதும்
“கேஶவா த்ருத ” -கேஶவன் தரித்த -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா
என்று எடுத்துக் காட்டுகிறார்.
இவ்வாறே ஸ்ரீ தீர்த்தரும் தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும் சூர்ணிகைகளிலும் கீதத்திலும்
ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு இறப்பு அற்றவன்,
எங்கும் நினறந்திருப்பவன் ,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நிலையான ஆனந்த வடிவு உடையவன்,தன்
அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி, என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப் பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விதிதம்” என்று கூறியுள்ளார் (தரங்கம் -3,கீதம்-34ல்7வது சரணம்).
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய கால் வாய்கள் ஆயிரம் தோன்று கின்றதோ ,
அது போலே மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூர்ண தத்வம்–. மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவேம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

18.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குத் தந்தையாகப் போகிறார் என்ற காரணத்தால் வஸூதேவர்
பிறப்பின்போதே மங்கள வாத்யங்களை தேவர்கள் முழக்கினர் என்ற காரணத்தால் வஸூதேவருக்கு
“ஆனகதுந்துபி” என்ற பெயர் ஏற்பட்டது, (பாகவேம் ஸ்க.9-அத்யா. 24-ஸ்லோ . 29&30).
இதையே ஸ்ரீ தீர்த்தர் “அ லௌகிக மிதம் ரூபமாலோக்யானக துந்துபி:” என்று குறிப்பிடுகிறார் (முதலாவது தரங்கம் ஸ்லோ .29).

19.”பங்க்தி ” எனப்படும் சந்தஸ் (விருத்தம்) ஒரடிக்கு ஐந்து எழுத்துள்ளதாகும். அவ்விதம் ஐந்து
பொருட்கள் அடங்கிய கூட்டங்கள் சேர்ந்தே இவ்வுலகம் “பாங்க்தம்” என்று அழைக்கப் படுகிறது.
இவை உலக பாங்க்தம்,தெய்வ பாங்க்தம்,பூத பாங்க்தம்,வாயு பாங்க்தம்,இந்திரிய பாங்க்தம்,தாது பாங்க்தம் என்று ஆறு வகைப்படும்
இவ்வித ஆறு பாங்க்தங்களும் சேர்ந்தே உள்ளிலும், வெளியிலுமுள்ள உலகமாகும்.
இதை , ப்ரஹ்மமாக உபாஸிப்பவன், பரம் பொருளாகவே ஆகின்றான் என்று தைத்திரீய உபநிஷத் சிக்ஷாவல்லி,7ம் அனுவாகத்தில்
”பாங்க்தம் வா இதகும் ஸர்வம், பாங்தேனைவ பாங்க்தக்
ஸ்ப்ருணோதேதி ஓம் இதிப் ப்ரஹ்மா ஓம் இதீ தகும் ஸர்வம்”எனபதின் கருத்தையே
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம் ஸ்லோ .44ல் “பாங்க்த கர்ம க்ரமேண வேத்யம்” எனக் கூறுகிறார்,

20.பகவத் கீதையிலுள்ள (அத்,4ஸ்லோ 8) “பரித்ராணாய ஸாதூனாம்……ஸம்பவாமி யுகே யுகே ”.என்று
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வுலகில் தீயவர்களை யழித்து அதர்மத்தை யகற்றி பக்தர்களை ரக்ஷிக்கவும்,தர்மத்தை தழைக்கச் செய்வதற்கு, நான் இஷ்டப்படி பிறப்பு எடுக்கிறேன் என்ற கூற்றை விளக்க,
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம்,சூர்ணிகை 15ல் “ஸ்வ பத அநுக்ரஹ சிகீர்ஷயா ஸ்வேச்சயா ப்ராப்த கோபால விக்ரஹ:” என்ற சொல் தொடனரப் ப்ரயோகப்படுத்தி யுள்ளார்,

21.2வது தரங்கம்,சூர்ணிகை -17ல், ஸ்ரீ தீர்த்தர்,”ஆருருஷுநிவாரூடயோகி” என்ற சொல் தொடரைப் ப்ரயோகப் படுத்தி யுள்ளார்.
எல்லாம் அறிந்த கண்ணன் உயரத்தில் உள்ள உரிகளில் வைக்கப் பட்டிருக்கும் தயிர்,பால்,வெண்ணைய் முதலியவைகளை எடுப்பதற்கு
வழி தெரியாத கோப குழந்தைகளுக்கு, உபாயங்கனளக் கற்றுக் கொடுத்தான் என்பது பொருள்
.”ஆருருஷுநிவாரூடயோகி”- நிஷ்காம கர்மாக்களினால் சித்த ஸுத்தி அடைந்தவன் ஆரூட யோகி.
அதைப் பெற விரும்புபவன் ”ஆருருக்ஷு யோகி. என்று ஸாஸ்த்திரங்கள் கூறுகின்றன.முன்னவர் பின்னவருக்கு வழி காட்டுபவர்
.”ஆருருணக்ஷார் முனேர் யோகம்” என்று தோடங்கும் பகவத் கீதை அத்.6,ஸ்லோ.3 லும் இக் கருத்தே கூறப்படுகிறது.

22. வராஹ புரி புண்ய ஷேத்ரத்தில் ஸ்ரீநாராயண தீர்த்தரால் ஆரம்பிக்கப் பட்டதும்,பக்தர்களால்
இன்று வரை பக்தி ஸ்ரத்தை யுடன் நடத்தப் பட்டு வரும் உரியடி தத்வத்தை விளக்குவது இந்த இடத்தில்
பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது,
மனிதன் தன்னுள்ளேயே இருக்கும் ப்ரஹ்மத்தை
உணர்ந்து,தானும் அதுவாகவே ஆகி பேர் ஆனந்தத்தை அனுபவிக்க அக்ஞானம்(அறியாமை ) தடையாக உள்ளது.
வாழ்கையில் பல்வேறு இடர்கள் மனிதனை அவன் லக்ஷியத்தை அடைய முடியாமல் குறுக்கிடுகின்றன
இவற்னற ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவனம் .அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம்,ஸக்யம்,ஆத்ம நிவேதனம் ஆகிற ஒன்பது வகைப்பட்ட
பக்தியில் ஈடுபடு வதால் ஏற்படும் ஞானத்தால், இடர்களைத் தகர்த்து, பகவத் அநு க்ரஹத்தாலும், ஞானிகளின் துணை கொண்டும்,
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து, ப்ரஹ்மானந்தம் அடைவதையே விளக்குவது போல், உரியடி உத்ஸவம் அமைந்துள்ளது

23.மூங்கில் பெட்டியால் பின்னப்பட்ட உரியடிப் பெட்டியும் வழுக்கு மரத்தில் பூசப்பட்டிருக்கும் பசை முதலியவையும் அக்ஞானமாகும்,
பலவித மான இடையூறுகளுக்கிடையில் தடிகளால் உரியை அடித்தும்,கைளால் பிடித்து பெட்டியை உடைப்பதும்,
வழுக்கு மரத்தின் மீது பூசப்பட்ட அக்ஞானமாகிற பாச பந்தங்கனளக் கனளந்தும் படிப்படியாக மேலே ஏறுவதும்,
ஸ்ரவணம் முதலிய ஸாதனங்களால் உண்டாகிற அறிவாகும்.
வழுக்கு மரத்தின் அடியில் ஸ்திரமாக நின்று மேலே ஏறிச் செல்பவர்களுக்கு உதவுபவர்கள் ஆரூடயோகி க்கும், மேலே ஏறிச் செல்பவர்கள் ஆருருக்ஷுவிற்கும் ஸமமானவர்களே ,
இத் தத்துவமே உரியடித் தத்துவம்.– உரியிலும்,வழுக்கு மரத்தின் மேலும் தொங்கும் ப்ரஸாதத்தை பகவத் ப்ரஸாதமாக ஏற்று,பக்தர்கள் பகிர்ந்து கொள்வது, பகவத் அனுக்ரஹத்தினாலேயே , பர ப்ரஹ்ம ஞானம் கிட்டி பூர்ண ஆனந்தம் கிட்டும் என்பதைக் காட்டுகிறது.

24. 2வது தரங்கம்,சூர்ணிகை -17ல் ஸ்ரீ தீர்த்தர் “முக்ய ப்ராண இவ வாகாதீன்” என்ற சொல் தொடரை உபயோகித்து
ஸ்ரீகிருஷ்ணனே ப்ராணனுக்கு இணையாகவும் கோபர்கனள வாக்கு முதலிய புலன்களுக்கு இணையாகவும் உருவகப்படுத்தி ,
வாக்கு முதலிய புலன்கனளக் காட்டிலும் ப்ராணனே சிறந்தது என்று விளக்குகிறார்.
ப்ராணனே ஐம்புலன்களிலும் சிறந்தது என்ற விஷயமானது, ப்ரச்ந உபநிஷத் 2வது ப்ரசனம் 4வது வாக்யத்திலும்,
சாந்தோக்ய உபநிஷத்5வது அத்யாயம் 1வது கண்டத்திலும், ப்ரஹதாரண்ய உபநிஷத் 6வது அத்யாயம் 1வது கண்டத்திலும் கூறப்படுள்ளது.
வேத ஸாஸ்த்திரங்களையும்,வேதாந்தங்களையும் நன்கு கற்றறிந்த ஸ்ரீ தீர்த்தர்,
பாமர மக்களுக்கும் எளிதாக புரியக் கூடிய வனகயில் ஸகல வேதாந்த ஸாரங்களைத் தன் நூலில் இடை இடையே நன் மணிகளாகக் கோர்த்திருக்கிறார்.

25.ஸ்ரீ தீர்த்தர்,”பாஹி பாஹி ஜகன் மோஹன கிருஷ்ணா பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” (4வது தரங்கம்- கீதம்
35) என்று குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் அழகு உலகம் அனைத்தையும் மயங்கவைக்கும் அழகு என்றும்
பரமானந்த வடிவுடையவன் என்றும் கூறுகிறார்.
சாதாரணமாக ஒரு குழந்தையின் கள்ளம் கபடற்ற சிரிப்பைப் பார்த்தாலே நமக்கு இனம் தெரியாத ஆனந்தம் கிட்டுகிறது.
ஏன் என்றால் அது பூர்வ ஸத்வ குணத்துடன் இருப்பதாலேயே . அதற்கு அன்ன ப்ராசனம் ஆகும் வரை இந்த பூர்ண ஸத்வ குணம் அதனிடம் நீடிக்கிறது.
அதற்குப் பின் அதற்கு ரஜோ தமோ , குணங்களின் கலப்பு வந்து விடுகிறது.ஸத்வ குண அளவும் குறைய ஆரம்பிக்கிறது.
அப்படியிருக்க ஸுத்த சத்வ குணமே உருவெடுத்து இருக்கும் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் போது பரமானந்தமாக இல்லாமல் எப்படி இருக்க முடியும்.-அதையே “பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்,

26.மேலும் (4வது தரங்கம்- கீதம் 35) 3வது சரணத்தில் ஸுலபமாக மாந்தர்களால் அறிய முடியாத ,
உள்ளடங்கிய மஹிமை வாய்ந்தவர் எனபதை “கூடமஹிம ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்.
நந்த கோகுலத்தில், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன் செய்யாத சாஹசங்கள் இல்லை .
பூதனை வதம், சகடாஸுர வதம்,காளிங்க நர்தனம், கோவர்தனகிரி உத்தாரணம்,போன்ற வளர்ந்த மனிதனாலேயே முடியாத பல
அதிசயிக்கும் சாஹசங்களைச் செய்தாலும்,கோபர்கள் அவனுடைய பராக்கிரமத்தை அறியவில்னல,
ஒரு குளத்தில் இருக்கும் மீன்கள் தண்ணீரில் தெரியும் பூர்ண சந்திர ப்ரதி பிம்பத்தைக் கண்டு அதன் பெருமையை அறியாமல்,
அந்த சந்திரனையும் தன்னைப் போல் ஒரு மீன் என்று எண்ணுமாம்.
அது போல கோபர்களும் ஸ்ரீ கிருஷ்ணனை தங்கனளப் போல ஒரு சாதாரண இனடயன் என்றே எண்ணினார்கள்,என்று இதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
இந்தப் பாடலை ஸ்ரீ ஜேஸு தாஸ் அவர்கள், தன்னுனடய இனிமையான குரலில்,அர்த்த பாவத்துடன் பாடும் போது மயங்காதவர்உண்டோ .கல்லும் கனரந்து உருகுமே .

27.அத்வைத வேதாந்த ஸித்தாந்தப்படி ஆத்ம ஸ்வரூபம் ஒன்றே ப்ரகாசமாக இருக்கும் பொருள்.
அந்த ஆத்ம ஸ்வரூபத்தை தவிர்த்த அனைத்துப் ப்ரபஞ்சமே , ப்ரகாசம் அற்ற ஜடப் பொருளாகும்.
எனவே ,ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஆவரணம்(மனறப்பு) தேவை யில்னல.
மாயையின் வசத்தில் கட்டுப்பட்டு கோபிகள் இருந்தாலும், அவர்கள் தன்னிடம் கொண்ட அத்யந்த ப்ரேமையால் கவரப்பட்டு அவர்களை
அனுக்ரஹிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணன் நடத்திய லீலையே கோபிகா வஸ்த்ராபஹரணம்.
வஸ்திரம், ஸ்தூல தேஹத்தை மறைக்கும் ஆவரணம்(திரை ).மாயை , சூக்ஷ்ம தேகத்தையும் காரண தேகத்தையும் மறைக்கும் ஆவரணம்.
அபஹரணம் என்றால் பரிப்பது,களையும்படி செய்வது என்று பொருள்.
காத்யாயணி வ்ரதம் மேற்கொண்ட கோபிகை களின் ஸ்தூல தேஹ ஆவரணம் இந்த லீலையால் நீங்குகிறது.
உண்மையான ஆத்ம ஸ்வரூபம் ஸ்ரீகிருஷ்ணனிடமும் கோபிகைகளிடமும் ஒன்றே .
கோபிகை களுக்கு ஸ்வயம் ப்ரகாச ஸ்வரூபமான தன்னிடம், மனம்,சித்தம்(சூக்ஷ்ம தேஹம்),
மாயை யாகிற ஆவரணம் களையப்பட்டு தன்னிடம் பூர்ணமாக லயிக்கப் பெற வேண்டும் என்று
வஸ்த்ராபஹரணம் என்ற வ்யாஜத்தால் உபதேசித்த போது கோபிகைகளுக்கு மூல அக்ஞான ஆவரணம் போக்கடிக்கப் பட்டது.
மேலும், “என்னிடம் உள்ளத்தை நினலயாக இருக்கச் செய்தவர்களுக்கு மறுபடி உடலை யடைந்து சம்ஸாரத்தில் உழலுவது என்பது கிடையாது
தீயில் நன்கு வறுக்கப்பட்ட பயிறு,உளுந்து,கோதுமை போன்ற வித்துக்கள் ஒரு பொழுதும் வயலில் விதைக்கப் பெற்று முனளத்த தில்லை .
ஆகவே , நீங்கள் பிறவி யற்றவர்கள் ஆனீர்கள்”-என்று கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் கூறினார்,(பாகவதம் ஸ்க.10அத்யா 22-ஸ்லோ . 26).
வஸ்த்ராபஹரண தத்துவத்தை , ஸ்ரீதீர்த்தர் 5வது தரங்கத்தில் “ஆவரணம் மம நஹி தே தாதும் பாவய கோப வதூ ஜன ப்ருந்த ” என்ற கீதம் 45ல்
கிருஷ்ண கோபிகள் ஸம்பாஷணையின் வாயிலாகத் தெளிவு படக் கூறியுள்ளார்.

ஸ்ரீ ரமணரின் அக்ஷர மணி மாலாவில் கூறப்பட்ட வரிகளை இங்கு நினனவு கூர்வோம்
“மானங்கொண்டு உறுபவர் மானத்தை யழித்து அபிமான இல்லாது ஒளிர் அருணா சலா”-(அருணாசலர்
ஒளி வடிவானவர்-அக்னி தத்வம் )

28.மேலும்,”கோபிகைகள் நான்கு பிரிவாக உள்ளனர்,
உபநிஷத்துக்கள்,தண்டகாவனத்திலுள்ள ரிஷிகள்,நித்ய ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவ ஸ்த்ரீகள் ஆகியவர்களே
கோகுலத்தில் கோப ஸ்த்ரீகளாக இருப்பவர்கள். மானிடப் பிறவி உள்ளவர்கள் ஒருவரும் இல்லை “எனற ப்ரஹ்ம வைவர்த்த புராண வசனக் கருத்தை
ஸ்ரீதீர்த்தரும் 5வது தரங்கத்தில் ஸ்லோ .135 ல் “ச்ருதி சிரோ வாக் கோபிகா வல்லப:”என்று கோபிகைகள் வடிவம் எடுத்த
உபநிஷத் தேவதைகளுக்கு மிகப்ரியமானவராக விளங்குபவர் என்று ஸ்ரீகிருஷ்ணரை வரணித்துள்ளார் –

29.கங்கை , கோதாவரி , யமுனை ,காவேரி,முதலிய நதிகள் கடலில் கலந்தவுடன் பெயரையும், உருவத்தையும் இழந்து
ஒரே கடலின் வடிவத்தை அடைகின்றன,-அவ்வண்ணமே முக்தி பெற்றவர்கள்
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து தம் சுயத்தன்மையை இழக்கிறார்கள்.-என்று முண்டகோபநிஷத்தில் கூறிய கருத்தை
ஸ்ரீதீர்த்தர் 6வது தரங்கத்தில் சூர்ணிகை 24 ல் இங்கு கிருஷ்ண ஸமுத்ரத்தில் கோபிகைகளான நதிகள் கலந்து விி்ட்டன என்று வர்ணிக்கிறார்.

30.கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து எழுந்த ஒலியானது வெளி விஷயங்களில் ஈடுபாடுனடய கோபிகைகளை
கண்ணனிடம் கொண்டு போய்ச் சேரத்தது, என்று 6வது தரங்கம் ஸ்லோ 142,143 ல் ஸ்ரீதீர்த்தர் கூறுகிறார்.,
இக் கருத்து பாகவேத்திலும் (ஸ்க.10அத்யா 29-ஸ்லோ . 3-8). காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவர்கள் அறம்,பொருள், இன்பம் ஆகியவை களிலிருந்து முதலில் விடுபட வேண்டும் என்பது வேதாந்தங்கள் முடிவு.

31.ஸ்ரீதீர்த்தர் “ப்ருந்தாவன மதுனா மன்யே ஸகி ப்ரஹதாரண்யமஹம்” (6வது தரங்கம் கீதம் 52)
கண்ணனுடன் சேர்ந்து இருக்கும் ப்ருந்தாவனத்தை ,
“ப்ரஹதாரண்யகம்” என்ற உபநிஷத்தாகவே கருதுகின்றேன் என்றும்,
பிருந்தாவனம், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை உளமாற நேசிப்பவர்களுனடய, பல காலமாகத் தொடர்ந்து வரும்
அக்ஞானத்தை அடியோடு அழிக்கக் கூடியது என்றும்,
ப்ரஹதாரண்யகம் முமுக்ஷுக்கள் பலருக்கு ஜீவ பரமாத்ம ஐக்ய ஞானத்தை அளிப்பதன் மூலம்
அக்ஞானத்தை அறவே அழிக்க வல்லது என்பது போல் ,இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை களையும்
ஒரு தோழி மற்ற ஓரு தோழியிடம் விளக்குவது போல் ஸ்ரீதீர்த்தர் கூறுவது அவரது சிறந்த வேதாந்த ஞானத்தை பனற சாற்றுகிறது,

32. “நிமிஷமபி யுக ஸஹஸ்ர ஸம தயா நீயம் மயா தின மாஸாயம் -” (6வது தரங்கம் கீதம் 58, 2வது சரணம்) –
கண்ணனைப் பார்க்காத க்ஷணநேரம் ஆயிரம் யுகங்களுக்கு ஸமமாகும் என்று கோபிகள்
கூறுவதாக ஸ்ரீதீர்த்தர் ,அவர்களின் பிரிவாற்றாமையை விளக்கியுள்ளார். ,
பாகவதம் ஸ்க.10அத்யா. 31-ஸ்லோ . 15ல் கோபிகா கீத த்தில் “த்ருடிர் யுகாயதே த்வாம் அபஸ்யதாம்” என்ற வரியை இப்போது நினனவு கூர்வோம்.

33.மேலும் ஸ்ரீதீர்த்தர், ‘பூயோ பூயோ யாசேஞ்ஜலினா”-என்று தொடங்கும் மிக அருமையான கீதம் 57ல்(தரங்கம்6)
அரை நிமிஷம் கூட கிருஷ்ணனைப் பார்க்காதிருக்கும் இந்தா உடல் வெறுக்கத் தக்கதாகும்.என்றும்
“காந்தம் காந்தாரமபி தவ யோகே,……காந்தாரம் க்ருஹமபிது வியோகே கருண
தருணீ மயி தவ பவது” -எனறு கண்ணன் இருக்குமிடமானால் காடும் நாடு போன்று அழகுள்ளதாகும்,
கண்ணன் இல்லையேல் வீடானாலும் அது கஷ்டங்கள் நினறந்த காடாகும் என்று ஸ்வானுபவத்தை
கூறும் அழகு கிருஷ்ண பக்தர்களை மிகவும் கவருகிறது.
மேலும் புன்னாகவராளி ராகத்தில்
அர்த்த பாவத்துடன் உனடயாளூர் அனுபவித்துப் பாடும் போது, அதைக் கேட்போர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

ராஸக்ரீனட
34.7வது தரங்கத்தில்,கோபிகைகள் ஸம்ஸாரத்தில் வெறுப்பு ஏற்பட்டு அதனிடம் இருந்து விடுதலை அடையவே
ஸ்ரீ கிருஷ்ணனிடம் புகலிடம் அனடந்தோம்,.எனக் கூறிய பின் ராஸ க்ரீனட விவரிக்கப் படுகிறது.
ஆயர்பாடியிலுள்ள மங்கையர் அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த தவத்தால் கோப ஸ்த்ரீ என்ற
இந்தப் பிறவியில் ஸச்சிதானந்த வடிவான ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய தர்ஸனம்
பெற்று பிறவியின் பயனை அனடந்தனர் என்று கூறுகிறார்.(7வது தரங்கம் ஸ்லோ .4) .

35.மேலும் 7வது தரங்கம், கீதம் 1 ல் “அத்வயம் கண்டிதம்” என்ற சரணத்திலிருந்து 20 வது சரணம் வரை
20 சரணங்கள் அடங்கிய கீதத்தால்-ஸாம வேதத்தைச் சார்ந்ததும் 16 பிரிவுகள் கொண்டதுமான
சாந்தோக்ய உபநிஷத்தில், உத்தாலக ருஷியால் தன் புதல்வனும் சீடனுமான, ச்வேதகேது என்ற முனிகுமாரனுக்கு,
உபதேஸிக்கப்பட்ட ஆத்ம தத்வ ஸாரத்தை ,ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ராஸ மண்டலத்தில் உள்ள கோபிகைகளுக்கு
கான ரூபமாக உபதேஸித்துள்ளதாக,ஸ்ரீதீர்த்தர் வர்ணித்துள்ளது அவரின் கவித்வத்தையும் உயர்ந்த ஆத்ம ஞானத்தையும் எடுத்துக்காட்டுகிறது,

36.மிகச்சிறந்த தத்வக்ஞானம் பெற்றவர்களுள் இணையற்றவள் என்று ஒரு கோபியைக் குறிப்பதற்காக
“ஹ்ருதய நிஹிதம் காந்தம் காசித் களிந்த ஸூதா தடே ” என்ற வரியில் காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கடோபநிஷத்தில், “மிகச் சிறந்த அறிவாளி ஆத்ம தத்வத்தைக் கண்டான்” என்று கூறுகையில்
“காசித்” பதம் ப்ரயோகிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்தில் ஒருவனே ஆத்ம ஞானத்திற்காக முயற்சி செய்வான் .முயற்சிப்பவர்களுள் ஆயிரத்தில் ஒருவனே தத்துவத்தை அறிகின்றான் என்று
பகவத்கீதையிலும் “மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு……..கச்சின் மாம் வேத்தி தத்வத “(அத்.7 ஸ்லோ .3)-என்று கூறப்பட்டுள்ளது.
இங்கேயும், ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மா, காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கோபியர்கள் அத்தகைய கினடத்தற்கரிய ஆத்ம தத்வ ஞானத்தை ஸ்ரீகிருஷ்ணனுனடய அருகாமையில் இருந்த
காரணத்தாலேயே கை வரப் பெற்றனர் என்று விளக்கவே ஸ்ரீதீர்த்தர், காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார். (தரங்கம் 7 ஸ்லோ . 12).

37.“சத்யம் ஞானம் அனந்தம்– ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோஸ்நுதே
ஸர்வான் காமான் ஸஹ-“என்று தைத்ரிய உபநிஷத் ஆனந்த வல்லி கூறுகிறது,
ஹ்ருேயத்தில் இருக்கும் உபநிஷத் ஸாரச் சுருக்கமான” “புத்தியால் நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்
என்று உணருபவன் பேர் ஆனந்தத்தை அடைகிறான்-பேர் ஆனந்தத்தில் முழ்கித் திளைத்த அந்த ஜீவன்
முக்தன், நானே அந்த பர ப்ரஹ்மம் என்று பாடுகிறான்” என்று தைத்ரீய உபநிஷத் ப்ருகுவல்லி
கூறுகையில் ‘ஹாவ் ஹாவ் ஹாவ்’ என்று ஆனந்தக்கூத்து ஆடுகிறான் என்றும் கூறுகிறது.
இக் கருத்தையே ஸ்ரீதீர்த்தர், தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து இந்த பரமானந்தத்தைத் தான் அனுபவித்து,
அதையே கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் அனுபவித்தாக எழுதி யுள்ளார்.(தரங்கம் 7 ஸ்லோ . 12).

38.”நிரங்குச த்ருப்தித ”- என்ற சொல்லால் ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மாவும் நானும் ஒன்றே , வேறில்னல–அதாவது
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே , வேறில்னல என்ற ஆத்ம ஞானத்தினால் ஏற்படும் பேர் ஆனந்தம் நிகரற்றது
என்ற மஹா வாக்யங்களின் அர்த்தத்தையே உணர்த்துகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ ?. (தரங்கம் 7 ஸ்லோ . 12).

39.கோபிகைகள் யமுனாநதியில் நீராடும் போது தங்களுக்கு கிருஷ்ணனைப் போலே அழகுள்ள
கணவனை அருள வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தனர்.
கல்யாண சந்தர்பத்தில் ஓதும் வேத மந்திரங்கள் கூறுகின்றன-சோமோ கந்தர்வர்களே ,அக்னியே ,மற்ற தேவர்களே இந்தா விட்டு விலகிச் செல்லுங்கள்.
அவள் பூலோக சம்பிராதாயப்படி தன் கணவனின் மூலம் தாய்மை அனடய வேண்டியுள்ளது.-
இந்த மந்திரங்கள் அவளுக்கு அனுகூலமாக,சாதாரண உணர்ச்சி பூர்வமான அநுபவங்களிலிருந்து விடுவித்து,
அவளைத் தாய்மை எனும் உன்னதமான உயர்ந்த நிலையை அடையச் செய்ய ஹேதுவாக இருக்கிறது.

40. இந்த வேத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் நீராடப் போகு முன் அவர்கள்
மரத்தில் வைத்திருந்த வஸ்திரங்கனள அபகரித்த ஸ்ரீகிருஷ்ணனிடம் அவைகளைத் திருப்பிக்
கொடுக்குமாறு வேண்டிய அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் செய்த உபதேஸமும், ஆகியவை அழகுற சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ராஸ லீலை , கோபிகாகீதம், யுகளகீதம் ஆகியவைகள் தொடர்ச்சியாக விவரிக்கப்பட்டு
அவை மூலம் கோபியர்கள் கண்ணன் பால் கொண்டிருந்த பரம ப்ரேமையையும் ,
அவர்களின் எண்ண ஓட்டங்களையும், அவர்கள் எது பொய் எது உண்னம என்று அறிந்து மனப் பக்குவம்
அடைந்து, பரமாத்மாவுடன் ஐக்யமனடந்து ஆனந்தத்தாய் அடைந்து, சிறந்த பேற்றை அடைவது
ஆகியவை அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன .
ஸ்ரீநாரத பக்தி ஸூத்ரத்தில் (19,55,57,88 ) பரம ப்ரேமையின்
லக்ஷணங்களும்,வெளிப் பாடுகளும் எத்தகையது விளக்கப்பட்டு இருப்பதையே , மேற்கண்ட ஸர்கங்கள்,
ஸ்ரீகிருஷ்ணர் கோபிகைகளுடன் நடத்திய லீலைகளின் வாயிலாக சித்தரிக்கின்றன.

41.சாதாரணமான மனித அனுபவங்களில், விழிப்பு நினலயில், மனத்தில் தோன்றும் பூரண நினறவு பெறாத எண்ணங்கள்
நினனவுகள் உருவெடுத்து,நம் உறக்க நினலயில் கனவுகளாக மாறுகிறது.
இதையே கவிதை நயத்துடன் பார்க்கும் போது நம் கனவுகளே விழிப்பு நினலயில் நினறவு பெற்ற நிகழ்வுகளாக மாறுகிறது.
இதைத்தான் .ஸ்ரீலீலா சுகர் தான் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் (அங்கநாம் அங்கநாம் என ஆரம்பிக்கும் (2-வது ஆஸ்வாசம் ஸ்லோகம்- 35)
ராஸ லீலையை விவரிக்கும் போது,எப்படி ஒரு கனவு,விழிப்பு நினலயில் உண்மை நிகழ்வாக மாறுவதை கவி நயத்துடன் வர்ணிக்கிறார்.
இந்த நினலயில் நமது வலுப் பெற்ற ஏகாக்ர சிந்தனைகள்
பகவான் பால் இருந்தால் ,அவனருளால்,அவை நிறை வாகும் தன்மையை ராஸ க்ரீடா நிகழ்ச்சி மூலம் விவரிக்கிறார்.
இதில் கிருஷ்ணன் எப்படி தன்னை பல கிருஷ்ணன்களாக ஆக்கிக் கொண்டு கோபியர்களின் இடையே நடனம் புரிந்த நிகழ்ச்சியை அழகாக வர்ணித்துள்ளார்.
மேலும் கோபியர்கள் அனமத்த வட்டத்தின் நடுவிலும் நின்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருக்கிறான்.
அவர்களுக்கு மற்ற கோபியர்கள் மனறந்து, ஒவ்வொரு கோபியும் தான் ஒருவளே கண்ணனுடன் தனியாக
ஆடிக் கொண்டிருப்பதாகவே எண்ணி ஆனந்திக்கிறாள், அப்போது கனவும் நினனவும் ஒன்று இணைந்து,
அவர்களுக்கு தான் கனவுலகத்தில் தான் அனுபவித்த தனிப் பட்ட ஆனந்தம், நினனவு நினலயில்,ஒரு உண்மை நிகழ்வாகவே தோன்றுகிறது.
இந்த தன் உணர்வு இல்லாது ,தான்,தனது என்ற தளைகளையும் உதறித் தள்ளிவிட்டு அப்பரமாத்மாவிடம் அனன்ய பக்தி யுடன் சரணா கதி அடைவதையே ஒவ்வொரு பக்தனும்( ஜீவாத்மாவும்) விரும்புகிறான்.
இந்த விவரிக்க இயலாத , உன்னத ப்ரேம பக்தி பெருக்கு, நினைவுலகத்தையும்,கனவாக மாற்ற வல்லது என்பதை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில்
(விக்ரேது காமா எனத் தொடங்கும் ஸ்லோகம் 55-2வது ஆஸ்வாஸம்), லீலா சுகர் மற்ற ஓரு நிகழ்ச்சியால் வர்ணிக்கிறார்
தயிர் விற்கும் ஒரு கோபிகை ப்ருந்தா வனத்தி ல் “த யிர், தயிர்” என்று கூவிக் கொண்டு செல்லும் போது ,கிருஷ்ணனின் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்தி
அவனுனடய பால லீலைகளில் மனம் லயித்து, தன்னை மறந்த நிலையில், “தயிர் தயிர்” என்று கூவுவதை மறந்து
“கோவிந்தா மாதவா ,தாமோதரா “என்று தன் இனிய குரலில் கூவ ஆரம்பித்தாள்.
கனவு, நினனவுகளைத் தாண்டி,பக்திப் பரவசம் ஒருவரை எப்படி மதி மயங்கச் செய்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது.
தன் ஸ்வானுபவங்களை கவிகளா லேயே இப்படி நயம் பட வர்ணிக்கமுடியும்.

42.மேலும் பாகவத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோபியர்களுடன் ராஸ க்ரீடையில் ஈடுபட்டபோது,
இவ்விதம் கோபியர்கனளக் கட்டிக் கொள்வது, கைகளால் தொடுவது, அன்பு ததும்பப் பார்பது,
அழகிய கம்பீரமான சிரிப்பு இவைகளினால் தன் நிழனலப் பார்த்து வினளயாடும் குழந்னதை போல் வினளயாடினார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.-
“ ரே மே ரமேஸோ வ்ரஜ ஸுந்தரீபி: யதார்பக: ஸ்வ ப்ரதி பிம்ப விப்ரம:”( பாகவதம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ. 17)

43.நம்முனடய வேதங்கள், புராணங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் ஆதாரமாக உள்ளன.
புராணங்கள் காவ்யங்களும், கவிதைகளும் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன.
பலிபீடம் யக்ஞம்(அக்னி கார்யங்கள்) செய்வது எல்லாம் ப்ரக்ருதி ,புருஷன் என்ற இரண்டு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவையே .
நமது திருமணங்களில் தம்பதிகளின் நலன் குறித்து ஓதப்படும் வேத மந்திரங்கள் எல்லாம் தாய்மை
அடைவது,புத்திர உற்பத்தி என்ற புனிதமான நிகழ்வுகளுக்கு ஆசி வழங்குபவைகளாகவே இருக்கின்றன.
“ஆத்மாவை புத்ர நாமாஸி ப்ரஜாமனு ப்ரஜாயஸே ”-என்று விவாஹ சமயம் செய்யப்படும், சேஷ ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரங்கள்,
கணவன்-மனைவி, தங்களுடைய குழந்தைகளிடத்தில் மறுபிறப்பு அனடகிறார்கள் என்ற கருத்தை
ப்ரதான ஹோமத்தில்,வடு ஹோமம் செய்யப்படும்போது கீழ் கண்டவாறு மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
”இந்திரனே ! இந்த வதுவிற்கு பத்து பிள்ளைகள் பிறக்கும்படி அருள் செய்.கணவனை பதினோராவது புத்திரனாகப் பாவித்து அன்பை வழங்கட்டும்”
என்று ப்ரார்திக்கப்படுகிறது.
வேத மந்திரங்களால் சுத்தி கரிக்கப்பட்ட மனத்துடன் இணையும் தம்பதிகள் பெறுவது ப்ரஹ்மானந்தத்தின் சிறு ப்ரதி பலிப்பே .
இல்லற வாழ்க்கையில் தேடிச் செல்லும் மற்ற விஷயங்களால் ஏற்படும் சுகங்கள் நினலயற்றதே .
நம்மில் அந்தர்யாமியாய் இருக்கும் சுத்த ஸத்வமான பரமாத்வ ஸ்வரூபத்தை உள்நோக்கி மனனம், முதலிய ஒன்பது ஸாதனங்களால் செலுத்தும் போது
ஏற்படும் ஆனந்தம், ஸாமீப்யம்,ஸாரூப்யம்,ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைகளில் அடையப்படுகிறது..
கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் (ஸாலோகம்) ஸ்ரீ கிருஷ்ணன் ஸமீபத்தில் (ஸாமீப்யம்) அவனுனடய ரூப,லாவண்யத்தில் ஈடுபட்டு(ஸாரூப்யம்),
ராஸ க்ரீனடயில் மனம் லயம் அனடந்து(ஸாயுஜ்யம்) ஏற்பட்ட பரம ஆனந்தமே இவை ..
வெளி நோக்கிச் செல்லும் எண்ணங்களுக்கும்,வாஸனைகளால் நினைவுகளுக்கும் அப்பாற்பட்டவை ,
இந்த அனுபவம்.ஸ்ரீநாரதரின் பக்தி ஸூத்ரம் 21ல்-எவ்விதம் கோகுலத்துக் கோபிகைகளுக்கு பக்தி இருந்ததோ
அப்படி பக்தி செய்ய வேண்டும் என்று பக்திக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
வேத வ்யாஸரும்,இந்த பாகவத ஸர்கத்தை சுத்த மனதுடன் பாராயணம் செய்பவர்களும்,கேட்பவர்களும் விகாரமான எண்ணங்கள், துர்வாஸனை நீங்கப்
பெற்றவர்களாக, சுத்த மநோ பாவத்தை அடைகிறார்கள் என்று பல ஸ்ருதியில் சொல்வதே இதன் மேன்மைக்கு தக்க சான்றாகும். (பாகவத ம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ.40)

44. ராஸ க்ரீடா வர்ணனையை விவரிக்கும் போது, ராஜா பரீக்ஷித், கேள்வியாகக் கேட்பது போலும் ஸ்ரீசுகர் பதிலளிப்பது போலவும்
நமக்கு ஏற்படும் சம்சயங்கனள போக்கும் நோக்கத்துடன் ,பாகவேத்தில் கூறப்படுகிறது,
கோபியர்களின் உள்ளத்திலும் மற்றும் எல்லாப் பிராணிகளின் உள்ளத்திலும் எந்த பகவான் புத்தி சாக்ஷியாக உள்ளாரோ
அந்த பகவானே பூலோகத்திலுள்ள அனைவருக்கும் அனுக்ரஹம் செய்யவே மானிட சரீரத்தை எடுத்து பல லீலைகளைப் புரிகிறார்.
அந்த லீலைகளை சிரத்தை யுடன் கேட்ட மாத்திரத்தி லேயே மனிதன் அப் பரமாத்மாவிடம் உறுதியான பக்தி நிறைந்த வனாகிறான்.
அவன் மனத்தை வருத்தும் காமம் தன்னைப்போல் ஒழிந்து விடுகிறது என்றும் கூறுகிறார். ”( பாகவதம் ஸ்க.10- அத்யா. 33-ஸ்லோ . 27-40)

அங்கப்ரேக்ஷிேம்
45. வரஹூர் உரியடி உத்ஸவம் அன்று இரவு கடுங்காலிலிருந்து பகவான் ஸகல அலங்காரத்துடன்,தன்
மனைவி மார்களுடன் ஊர் கோலமாய் பவனி வருகிறார்,
அவருக்குப் பின் பக்தர்கள் நீராடி,ஈரமான
உடைகளுடன் பெருமாளின் திருவருள் வேண்டி, தரையில் படுத்துப் புரண்டு,அங்க ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள்.
அப்போது கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று உரக்க கூறிக் கொண்டு பக்தியுடன் மஞசள் பூசிய தேங்காயை கூப்பிய கைகளில் னவத்துக் கொண்டு
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தொடர்ந்து பின் செல்கின்றனர் என்று ஸ்ரீ கிருஷ்ண சிக்யோத்ஸவ ப்ரபந்தம் கூறகிறது.
இந்த வழிபாட்டை ஸ்ரீதீர்த்தரே ஆரம்பித்து னவத்தார் என்று கூறப்படுகிறது-

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் பெருமை பெற்ற கோயில்கள் பல. இவற்றோடு அங்கு நடைபெறும் திருவிழாவாலும் பெருமையுறும் கோயில்களும் உண்டு.
 
அவ்வகையில் திருவிழாவினால் பெருமை கொள்ளும் ஊர், வரகூர். இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் மிகப் பிரசித்தம். இந்திய நாட்டின் எந்தக் கோயிலிலும் இதுபோன்ற உறியடி உற்சவத்தைக் காண முடியாது.
 
வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம். வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளைத் தான் தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். முடி இறக்குதல், காது குத்துதல் போன் வேண்டுதல்கள் எல்லாமே இந்தக் கோயில் தெய்வத்திற்குத்தான் என்று இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
 
வேலை கிடைத்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் இவ்வூர் இளைஞர்கள், தங்கள் முதல் மாதச் சம்பளத்தை இக்கோயிலுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், அதாவது காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக (நவநீதம் என்றால் வெண்ணெய் எனப்பொருள்) இக்கோயில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். பின்னால் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் தொடரும். அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
 
தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமுமாக, உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். அடுத்து, பாகவதர்கள், நாராயண தீர்த்தர்  இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார்கள்.
 
இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள். கோயில் வாயிலின் முன்புறத்தில் நீளமான மூன்று மூங்கில் மரங்களை ஒன்றாக இணைத்து, ஆழமாகத் தோண்டப்பட்ட ஒரு குழியில் நடுவார்கள். மரத்தின் நடுவே 10 அடி உயரத்தில் குறுக்கே ஒரு மூங்கிலைக் கட்டித் தொங்க விடுவார்கள். அதன் ஒரு முறையில் மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.
 
போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் உறியை எட்டிப் பிடிக்க முயலுகையில் ஊர் மக்கள் இந்தக் கயிற்றை அப்படியும் இப்படியும் ஏற்றி இறக்கி ஆட்டங் காட்டுவார்கள். (ஆட்டம் காட்டுவது என்பது இதுதானோ?) கையால் எட்டிப் பிடிக்க முடியாமல், இளைஞர்கள் தடிகொண்டு அடிப்பார்கள். அதற்கும் இடையூறு செய்வதுபோல் ஊர் மக்கள் இவர்கள் மீது தணீணரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள். முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
 
உறியடியை அடுத்து, வழுக்குமரம் ஏறுதல். உயராமான ஒரு தேக்கு மரத்தை சில நாட்கள் தண்ணீரிலே போட்டு ஊற வைப்பார்கள். பின், புளியங்கொட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒருவித பசையை இதன் மீது பூசி, காயப்போடுவார்கள். உறியடி தினத்தில் இம்மரத்தின் மீது கடுகு எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் தடவி உறியடி மரத்திற்குத் தெற்கில் நடுவார்கள். உறியடி முடிந்தவுடன் எல்லோரும் இங்கு கூடுவார்கள். ஒருவர் மீது ஒருவராகத் தோள் மீது ஏறி 10 அல்லது 12 அடி உயரம் வரை ஏறிவிடுவார்கள். பின்னர் வேட்டிகளை இம்மரத்தில் சுற்றிக் கட்டி அதன் மீது காலை வைத்து ஏற முயற்சிப்பார்கள். வேட்டியும் எண்ணெயில் தோய்ந்து வழுக்கும். இளைஞர்கள் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து வழுக்குமர உச்சியை அடைய முயலுவார்கள்.
 
எண்ணெய் வழுக்குவது போதாதென்று சுற்றியிருப்பவர்களும் இவர்கள் மீது தண்ணீர் அடித்து ஆரவாரம் செய்வார்கள். அப்படி இப்படி என்று 25 அடி உயரம் ஏறி, ஒரு வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்து விடுவார். மேலே கட்டி வைத்துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். தின்பண்டங்களை நாலாபுறமும் வீசி எல்லோரக்கும் கொடுப்பது வழக்கம். இதற்குள் பொழுது விடிந்த விடும்.
 
விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து, உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங்களுடன் ருக்மணி கல்யாணம் நடைபெறும்.
 
வரகூரில் 1868-ல் பிறந்து 1935 வரை வாழ்ந்த ஸ்ரீநாராயணகவி என்பவர் “கிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்ற பெயரில் வடமொழியில் ஒரு காவியம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் உறியடி உற்சவம் என்று பொருள். சுமதி, சுகுணன் என்ற இரண்டு கின்னரர்கள் பூலோகத்திற்கு வந்து வரகூரை அடைந்து, உறியடி உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்து, தமக்கிடையே உரையாடும் விதமாக இவ்விழாவைப் பற்றி இந்நூலில் வர்ணிக்கப்படுகிறது.
 
இடையர் வேடமணிவது, உறியடி அடிப்பது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவை எல்லாம் வெறும் கேளிக்கையல்ல. கிருஷ்ண அவதார லீலைகள். இதில் அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவை. உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.
 
உறியடி, ருக்மணி கல்யாணம், அனுமத் ஜெயந்தி என்ற மூன்றுநாள் விழா அமைப்பு முறையை உருவாக்கியவர் வரகூரில் வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்த நாராயண தீர்த்தரையே சாரும். அவரது கிருஷ்ண லீலா தரங்கிணியில் இவ்விழா பத்ததி (கொண்டாடும் முறை) தெளிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது. வரகூர் உறியடி விழாவை நேரில் கண்டு இன்புறும் அனுபவத்தை, வார்த்தைகளில் எளிதில் விவரித்துவிட முடியாது.

நாராயணதீர்த்தருக்கு கிருஷ்ணராக காட்சிஅளித்த பெருமாள், தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டி வெள்ளிக்காப்பு அணிந்து கொண்டால் பிள்ளைவரம் விரைவில் கிடைக்கும்.

தல வரலாறு: நாராயணதீர்த்தர் என்ற மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல தலங்களையும் வழிபட்ட அவர், நடுக்காவேரி என்னும் இடத்திலுள்ள விநாயகர் கோயிலில் இரவில் தங்கினார். கனவில் தோன்றிய திருமால், “”நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரைத் தொடர்ந்து செல். வயிற்று வலி குணமாகும்,” என்று அருள்புரிந்தார். காலையில் கண்விழித்ததும் ஒரு வெள்ளைப் பன்றி (வராகம்) கண்ணில் பட்டது. தீர்த்தரும் பின்தொடர்ந்தார். அது பூபதிராஜபுரம் லட்சுமிநாராயணர் கோயிலுக்குள் சென்று மறைந்தது. அவரும் அங்கிருந்த பெருமாளை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். வராகவடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் “வரகூர்’ என பெயர் பெற்றது. பழமையான இந்தக்கோயில் முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது.

பாமாவின் விருப்பம்: நாராயணதீர்த்தர், வரகூரில் தங்கியிருந்த காலத்தில் திருமால் கிருஷ்ணராக காட்சியளித்தார். அவருடன் ருக்மணி, சத்தியபாமாவும் வந்திருந்தனர். அப்போது சத்தியபாமா தீர்த்தரிடம், “” கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய லீலைகளைப் பாடுங்கள்,” என வேண்டுகோள் விடுத்தார். தீர்த்தரும் மகிழ்ந்து,”ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ என்ற பாடலைப் பாடினார். நாராயண கவிராயர் என்பவர் இத்தலத்தில் “ஸ்ரீகிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்ற பிரபந்தம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் “உறியடி உற்ஸவம்’.

வெங்கடேசர் கோயில்: வரகூரில் மூலவர் லட்சுமிநாராயணர். உற்ஸவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள். உற்ஸவர் பெயரையே கோயிலுக்கு சூட்டியுள்ளனர். அர்த்தமண்டபத்தின் மேல்தளத்தில், வராகர், நாகர் சிலைகள் உள்ளன. மூலவரே பிரதானம் என்பதால் பரிவார மூர்த்திகள் இல்லை. மாட்டுப்பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி, வராக, கூர்ம, நரசிம்ம, பலராமர் ஜெயந்தி விழாக்கள் நடக்கின்றன.

மூலிகை பிரசாதம்: துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு “துளசி மூலிகைப்பொடி’ என்று பெயர். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதயநோய், தோல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்க வழிபட்டு மூலிகைப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

முதல்மாத சம்பளம்: நன்கு படித்திருந்தும் தகுதியான வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் வரகூர் கோயிலுக்கு வருகின்றனர். அதற்கு நன்றிக்கடனாக முதல் மாத சம்பளத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். வரகூரை சுற்றியுள்ள பகுதியில்
இந்த வேண்டுதல் வழக்கில் உள்ளது. இதன் மூலம் பணி, சம்பள உயர்வு போன்றவை விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்காப்பு: குழந்தை இல்லாத தம்பதியர், பெருமாளின் பாதத்தில் வெள்ளி காப்பு வைத்து அதையே அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்தபின், குழந்தையோடு வந்து காப்பை பெருமாளிடம் சமர்ப்பிக்கின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு: தீர்த்தருக்கு லட்சுமி நாராயணர் கிருஷ்ணராக காட்சியளித்ததால் இங்கு கிருஷ்ணஜெயந்தி சிறப்பாக நடக்கிறது. அப்போது “கிருஷ்ணலீலா தரங்கிணி’ பாடல்களைப் பாடுவர். அங்கப்பிரதட்சணம் செய்வர். பெருமாளின் கையில் இருக்கும் வெள்ளிக்குடத்தில் செல்வவளம் பெருக வேண்டி பக்தர்கள் வெண்ணெய் நிரப்புவர். பத்து நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி
விழா நடக்கும்.

உறியடியோ கோவிந்தா: கிருஷ்ணஜெயந்தி பல்லக்குபவனியில் குறிப்பிட்ட வீட்டில் சிறுவர்களை அடைத்து விடுவர். அவர்கள் “”உறியடியோ கோவிந்தா” என கூச்சலிட்டு கதவைத் திறக்கும்படி வேண்டுவர். ஆயர் பாடியில் கிருஷ்ணரைக் காணாமல் தவித்த பசு, கன்றுகள் கதறியதை நினைவூட்டும் விதத்தில் இது செய்யப்படுகிறது. இரவில் உறியடி கிருஷ்ணராக, பெருமாள் கையில் கம்புடன் வாய்க்கால் மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். 32 தீவட்டிகள் ஏற்றியதும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. போட்டியில் வெல்பவருக்கு முறுக்கு, சீடை, பணமுடிப்பு தரப்படும். மறுநாள் ருக்மணி கல்யாணம் நடக்கிறது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ., திருவையாறிலிருந்து 15 கி.மீ.,
போன்: 94428 52145.

46.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால், அங்க ப்ரதக்ஷிண வழிபாட்டை ஆரம்பித்து வைத்தவர்-பாகவத உத்தமரான ஸ்ரீஅக்ரூரே ஆவார்.
எப்படி என்று பார்ப்போம்.-கோகுலத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ணரை மதுரைக்கு அழைத்து வர ஸ்ரீஅக்ரூரர்,
கம்ஸனின் உத்திரவின் பேரில் புறப்பட்டு ,மாலைப் பொழுதில் சபாழுேில் கோகுலத்தை அடைந்தார்.
அங்கு இந்திரன் முதலிய திக்பாலகர்களுனடய கிரீடங்களுடன் சேர்ந்ததும் தூய்மை வாய்ந்த திருவடிப் பொடிகளை யுடையதும்,
பூதேவிக்கு மகிழ்ச்சி யளிப்பதும் தாமரை மலர், யனவ,அங்குசம் முதலிய கோடுகளுடன் கூடியதுமான, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகனளக் கண்ணுற்றார்.-கண்ட வுடனேயே ,எல்லை யற்ற ஆனந்தம் அடைந்து உணர்ச்சி வசப்பட்டார். -கண்களில் ஆனந்தக் கண்ணீர் நினறந்தது.
”இவைகள் என் தெய்வத்தின் திருவடிகள் பட்ட பொடிகள் அல்லவா” என்று எண்ணி ,தேரிலிருந்து துள்ளிக் குதித்து கண்ணனுனடய திருவடிகள் பட்ட மண்
பொடிகள் மீது மீண்டும் மீண்டும் புரண்டார் அங்கப்ரதக்ஷிணமும் செய்தார்..,(பாக.ஸ்க.10-அத்யா. 38- ஸ்லோ . 25,26)

47.இதி “தேஷு அசேஷ்டத ” என்று திருவடிப் பொடிகள் மீது விழுந்து புரண்டார் என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
இக் கருத்தை ஸ்ரீதீர்த்தர் (தரங்கம் 7 ஸ்லோ . 14)”.”புத்யாதி தத்வ பரிசிந்ஹித கோபவேஷம்,
ஸித்தானுபாவிதம் அசேஷ ஜகந் நிதானம்”என்ற சொல் தொடரால் கோபிகைகள் ,அக்ரூரர் முதலியோர் ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகளை , பத்மம் முதலிய ரேகைகளால் கண்டு பரவசமனடந்த நிலையை ,விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்தா அங்க ப்ரதக்ஷிண வழிபாட்னட வராஹ புரியில் ஆரம்பித்து வைத்து, தான் அனடந்த ஆனந்தத்தை மற்ற பக்தர்களும் அடைய வழி செய்துள்ளார் என்றே தோன்றுகிறது,

48.இருப்பினும்,இது கோகுலம் அல்லவே ஸ்ரீகிருஷ்ண னுனடய பாத தூளிகள், இவ் வராஹ புரி மண்ணில்
இருப்பது எப்படி. பொருந்தும் என்ற வினா எழும் போது,
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஊருக்கு ஸ்ரீதீர்த்தரை வரவழைக்க பன்றியின் ரூபம் தரித்ததும்,
ஸ்ரீதீர்த்தர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் தன் சலங்கை ஒலி கேட்கச் செய்ததும் ஸ்ரீ கிருஷ்ணர் வராஹ புரியில் நித்ய வாஸம் செய்கிறார் என்பதற்கு
ப்ரமாணமாகிறது.
அவரது பாத தூளிகள் இந்த மண்ணில் நினறந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
மேலும் ஸ்ரீதீர்த்தருக்கும்,ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வித்யாசமே இல்லை என்பது உறுதி .
ஸ்ரீதீர்த்தர் வராஹ புரியிலேயே பலகாலம் வாழ்ந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலா விநாேதங்களைப் பாடிப் பாடி
அவனையே ஸதா ஸர்வ காலம் நினைந்து, நினைந்து உருகி அவனுள்ளே ஐக்யமாகி,பரம அத் வைதியான அவரே ,
ப்ரஹ்மைவ ப்ரஹ்மவித் பவதி என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கிருஷ்ணராக பாவித்து ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டார் என்பதில் ஒருவித ஐயமும் இல்னல.
இதை அவரே நிரூபணமும் செய்திருக்கிறார்.-தேவர்களின் ப்ரார்த்தனை யுடன் தொடங்கும்
“பாஹிமாம் பாஹிமாம் பரம தயாளோ ” எனத் தொடங்கும் 10வது தரங்கம் கீதம்40 ல் ஈடற்ற தன் பரம பக்தியால் இப்பாடலின்
ஒவ்வொரு சரணத்திலும் ஸ்ரீவிஜய கோபாலா என்ற சொல்லை 12 தடவைகள் ப்ரயோகித்து முத்திரை சரணத்தில்
நாராயண தீர்த்த விஜய கோபாலா என்று நாராயண தீர்த்தராகவே அவரிடமிருந்து வேறு படாமல் இருப்பவரே என்று கூறியிருப்பது
ஸ்ரீதீர்த்தர், தான் ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டதை உணர முடிகிறது.
தரங்கப் பாடல்களில், தான் வேறு தரங்கம் வேறு என்றில்லாமல் ஸ்ரீகிருஷ்ணனே ப்ரத்யக்ஷமாகக் குடி கொண்டுள்ளான் என்பது ஸத்ய வாக்காகும்.
இதை உணர்ந்து, பாட்டு,பாடுபவர் என்ற வேறுபடாத
மநோ நிலையில் ,தரங்கப் பாடல்கனளப் பாடும் போது வராஹ புரியில் நித்ய வாசம் செய்யும்,ஸ்ரீகிருஷ்ணன் ப்ரஸன்னமாகிறார் என்பதில் ஐயமே இல்லை .
அப்படி ஸ்ரீதீர்த்தர் உருவில் ஸ்ரீ கிருஷ்ணர் ஐக்யமாகி இருக்கும் போது, அம் மஹானின் பாத தாமரைகள் பட்ட வராஹ புரியில்
ஸ்ரீகிருஷ்ணனின் பாத தூளிகள் என்றென்றும் விளங்கும் என்பது ப்ரமாணம்.

49.இந்த இடத்தில் பாகவதம் முதல் ஸ்கந்தம் .அத்யா.13 ஸ்லோகம்10 நினனவுக்கு வருகிறது.
இதில் தீர்த்த யாத்ரை சென்று விரும்பிய விதுரரை வரவேற்று யுதிஷ்டிர் பேசுவதாக வருகிறது.
“பவத் விதா பாகவதாஸ் தீர்த்த பூதா : ஸ்வயம் விபோ தீர்த்து குர்வந்தி தீர்த்தானி ஸ்வாந்தஸ் ஸ்தேன கதாப்ருதா
“ஹே ப்ரபோ தங்களைப் போன்ற பகவத் பக்தர்கள், புண்ய தீர்த்த ரர்களாக இருந்து கொண்டு, தங்களது மனத்தில் உனறயும்
ஸ்ரீவாஸுதேவனால், பாபிகளின் சேர்க்கையால் மாசு படிந்த புண்ய ஸ்தலங்கனளக் கூட, மாசு நீக்கி மறுபடியும் சுத்தமாக்கி
புண்ய ஸ்தலங்களாகச் செய்து விடுகின்றனர் – என்று விதுரரைப் புகழ்கிறார்.

50.ஸ்ரீநாராயண தீர்த்தர் தன் பெயரிலேயே தீர்த்தர் என்று கொண்டு, வாழ்ந்த புண்ய ஆத்மாவாகும்.
அவர் வராஹ புரியிலேயே பல காலங்கள் வாழ்ந்து வந்ததால், புண்ய ஷேத்திரமான வராஹ புரியின்
பவித்ரம் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சொல்லவும் வேண்டுமா?
அப்பேர்பட்ட இந்த மஹானின் பாத சுவடுகள் பட்ட வராஹ புரி பூமி, ஒப்புயர்வற்ற புண்ய பூமியே .
அவருடைய திருவடித் தாமரைகள் பட்ட மண் பொடிகள் நினறந்த பூமியில், பக்தர்கள் அங்க ப்ரத க்ஷிணம்
செய்ய தம் பாவங்கள் தொலைந்து நற்கதி அடைவார்கள் என்பதில் ஐயமே இல்லை .

51.இத்துணை பவித்திரமான வராஹ புரி மண்ணில் பூர்வ ஜன்ம புண்யத்தால் பிறந்தவர்கள் மிகவும் பாக்யசாலிகளே .
அதுவும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வரூபமான,ஸ்ரீநாராயண தீர்த்தர் காலடி பட்ட மண்ணில் விழுந்து புரள மிகவும் பாக்யம் பெற்றவர்களே
”அஹோ பாக்யம் அஹோ பாக்யம் வராஹ புரி ஜனித மஹா ஜனானாம்”.

52.வேத ,புராணங்கள்,சாஸ்த்திரங்கள்,வேதாந்தம் இவைகளில் மிகத் தேர்ச்சி யுடையவராக இருந்தது மட்டுமல்லாது
நாட்டிய ஸங்கீதக் கலைகளிலும் தேர்ச்சி மிக்கவராக இருந்தார் என்பது அவருடைய நூலிலிருந்து விளங்குகிறது.
தரங்கம் 7 ஸ்லோகம் 16ல் ராஸ லீலைகளை விவரிக்கும் போது கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் வாத்யங்களிலிருந்தும் னககளிலிருந்தும் தோன்றுகின்ற
த்ருவ தாளம்,மட்ய தாளம்,ரூபகம், ஜம்பா,த்ரிபுட என்ற உயர்ந்த பல தாளங்களுடனும்,
அகற்றியும், குறுக்கியும்,நீட்டியும்,வனளத்தும்,காலடிகளை வைத்தல் போன்ற அழகிய பாத வின்யாஸங்களுடன் கூடிய நாட்டியத்தை
கோபிகைகள் மிக்க ஆனந்தத்துடன் அபிநயம் செய்து கொண்டு ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டதை விவரிக்கிறார்.

53. பாகவதத்தில் (பாக.ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ . 10) ஒரு கோபி ஸ்ரீகிருஷ்ணனுடன் ஸ்வர ஜாதிகளை
ஒன்றக்கொன்று கலக்காமல் பாடி, ஸ்ரீகிருஷ்ணனுடைய பாராட்டுக்களைப் பெற்றாள்.
மேலும் அதே ஸ்வர ஜாதியை த்ருவ தாளம் போட்டு கானம் செய்ய ஸ்ரீகிருஷ்ணனால் வெகுமதி அளிக்கப் பட்டாள், என்றும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்சியையே , ஸ்ரீதீர்த்தர்,மனக் கண்ணால் பார்த்து ஆனந்தம் அடைந்து, தரங்கம் 7 கீதம்6 லிருந்து 12 வரை
நாட்டை -துருவ தாளம்,மத்யமாவதி -மட்ய தாளம்,முகாரி-ரூபக தாளம்,வராளி-ஜம்பக தாளம், மோஹனம் திரிபுட தாளம்,
ஆனந்த பைரவி-அட தாளம்,காம்போஜி- ஏக தாளம்,ஆகிய பல ராகங்களிலும்,பல தாளங்களிலும் கோபிகள் பாடி ஆடினார்கள்.என்றும் கூறுகிறார்.
ராகம்- தாளத்திற்கு ஏற்ப பாடல்களின் மூலம் ராஸ லீனல மஹத்வத்தைத் தெரியப் படுத்துதில் அவருடைய ஸங்கீத -நடன புலமை வெளிப்படுகிறது..

54.அக்ரூரருடன், ஸ்ரீகிருஷ்ணர் மதுரா நகரம் செல்லும் போது, கோபிகைகள் ,பிறிவாற்றாமையால், வெட்கத்தை விட்டு,
கோவிந்தா மாதவா தாமோதரா என்று கூக்குரலிட்டு அழுதனர் என்று ஸ்ரீவ்யாசர் விவரித்துள்ளார்.
நமக்கு வேண்டியவர்கள் பயணம் கிளம்பும் போது அழுவது அமங்கலமாகக் கருதப் படுகிறது.
ஸ்ரீவியாசர், இதை உணர்ந்தே ,கோபிகைகள் ஸுஸ்வரத்துடன் அழதனர் என்று குறிப்பிட்டுள்ளார். (பாக.ஸ்க.10-அத்யா.39-ஸ்லோ . 31)
ஸ்ரீநாராயண தீர்த்தர்,இதை நன்கு உணர்ந்து ,சந்தேகத்திற்கு துளியும் இடமளிக்காமல், தரங்கம் 9 – “விஜய கோபால தே மங்களம்” – எனத் தொடங்கும்
கீதம்32ல் , கோபிகைகள் ,ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கல்யாண குணங்கனளப் புகழ்ந்து கூறி, மதுராவில்
அவருக்கு வெற்றியும் ,எல்லா நலன்களும் கிட்டவேண்டும்,என்று மங்களம் பாடினார்கள்,என்று மங்களகரமாக வர்ணித்துள்ளார்,
இச் சமயம், ஸ்ரீராமபிரான் தந்தையின் வாக்னக நிறை வேற்ற நாடு துறந்து காட்டுக்குச் செல்லும்போது ,தாய் கௌஸல்யா தேவீ மகனின் பிரிவைத் தாங்க
முடியா விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல்,ஸ்வஸ்தி வாக்யங்கனளக் கூறிக் காப்பிட்டுஆசி
வழங்கி மங்களகரமாக ஸ்ரீராமரை வழியனுப்பினாள் என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள்
நினனவிற்கு வருகிறது. (வால்மீ,ராமா-.அயோத்யாகாண்டம் 25 வது ஸர்கம்)

55.உத்தவர் கோகுலம் சென்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளிய தத்வ உபதேஸங்களை ஸ்ரீகிருஷ்ணனை
பிரிந்து மனம் வருந்திய கோபியர்களுக்கு அளித்து-அவர்களை மனச் சமாதானம் அனடயச் செய்ததும்
அவர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தெரிவித்ததையும்,
ஸ்ரீதீர்த்தர் தரங்கம் 11 ஸ்லோ .94 முதல் 99,கீதம் 41-44 வரை விவரிக்கும் போது கோபியர்களின் வாயிலாகத் தான்
ஸ்ரீகிருஷ்ணரிடம் கொண்டிருக்கும் அத்யந்த ப்ரேம பக்தியை வெளிப்படுத்தி யுள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது,
உத்தவர், கோபியர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து “எந்த கோப ஸ்திரிகளினால் செய்யப்படும் ஸ்ரீகிருஷ்ண லீலா கானமானது,
மூவுலகத்தையும் புனிதமாக்குகிறதோ அந்த கோப ஸ்திரிகளின் பாத தூளியை நான் அடிக்கடி வணங்குகிறேன்” என்று கூறியது
ஸ்ரீதீர்த்தரின் ப்ரேம பக்திக்கும் பொருந்துகிறது அல்லவா!! (பாக.ஸ்க.10-அத்யா. 47ஸ்லோ . 63)

56.ஸ்ரீதீர்த்தர் ,”கோபாலமேவ தைவதம் ” (தரங்கம் 12 கீதம் 50) என்ற கீதத்தைப் பாடும் போதே திவ்யமான
தன் கண்களால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், தன் முன்னே நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும்
ஸ்ரீகிருஷ்ணனே கண் குளிரக் கண்டு பரவசமடைந்தார் என்றும்,மேலும் ஸ்ரீதீர்த்தர் மீது உள்ள அபார
கருணையினால், தரங்கிணி நூல் முடியும் வரை , ஸ்ரீகிருஷ்ணன் திவ்ய தரிஸனம் தந்து அவரை
ஆனந்தக் கடலில் முழுகச் செய்தார் என்றும், ஸ்ரீகிருஷ்ணனின் விருப்பப்படியே ஸ்ரீருக்மிணி
விவாஹத்துடன் தரங்கிணியை முடித்தார் என்று சிறந்த பாகவதோத்தமர்கள் கூறுகின்றனர்,
இந்தப் பாடலில்” மிக்க பாக்யசாலியான தனக்கு உண்மைப் பொருளைக் காணும் திவ்ய சக்ஷூஸை (தெய்வீகப்
பார்வையை ) ஸ்ரீகிருஷ்ணன் அளித்தான்“ என்று புகழ்கிறார்.
கோபாலன் என்ற தெய்வத்தினையே வழிபடுகிறேன், வேறு ஒருவரையும் தெய்வமாகக் கருத மாட்டேன், என்றும் கூறுகிறார்.

57.ஸ்ரீதீர்த்த ர், “காங்ஷே தவ ப்ரஸாதம்” (தரங்கம் 12 கீதம் 51) என்ற கீதத்தில் தான், பல ஷேத்திரங்களில்
தங்கியிருந்த போதிலும் , தீராது தன்னைத் தொடர்ந்து வாட்டி வந்த வயிற்று வலி, வராஹ புரி பெருமாள்
ஸந்நிதியில் தான் தீர்ந்தது என்ற விவரத்தை கடைசி சரணத்தில் “வர நாராயண தீர்த்த வாரித துஸ்தரா நர்தக “ என்று தெரிவிக்கிறார்.

58.தரங்கம்12 “ப்ரஹ்ம க்ரந்திம்” என்று தொடங்கும் கீதம்58ல் ஸ்ரீதீர்த்தர், லக்னாஷ்டகம்,ஸ்ரீகிருஷ்ண
ருக்மிணி விவாஹ நிகழ்ச்சிகளை -மண மகள் மண மகனுக்கு முத்துக்களால் அபிஷேகம்
செய்வது,ப்ரஹ்ம க்ரந்தி ,லாஜ ஹோமம்,ஸ்தாலீ பாகம்,நாக பலி,ஆகிய
கல்யாண ஸம்ப்ரதாயங்களை ஆந்திரர்களின் அனுஷ்டானப்படி விவரித்துள்ளார்.

59.“மஙகளாதீனி ,மங்கள மத்யானம்,மங்களான் தானி ஸாஸ்த்ராணி வீர்யவத் புருஷ கர்த்ரு காணி
ப்ரேந்தே ”-துவக்கம் ,நடுவு,முடிவு இவற்றில் மஙகளா ஸாஸனத்துடன் கூடிய நூல்கள் இவ்வுலகில்
நீண்ட காலம் புகழுடன் விளங்குகின்றன என்ற ஆன்றோர் வசனப்படி ஸ்ரீதீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில் தொடக்கத்தில்
“ஹிம கிரி தனயா பத்யம்” என்ற வினாயக ஸ்துதியுடன் ஆரம்பித்து
நடுவில் “கல்யாணம் வித னோது” என்ற பால கிருஷ்ண ஸ்துதியையும்
“தா ⦂குர்வந்த்வபிதானி” என்ற ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தில் பங்கு கொண்ட நல் முத்துக்களின் ஸ்துதியை அமைத்து,
முடிவில் ஜய மங்களம் என்ற மங்கள கீதத்துடனும் முடித்து அருளிச் செய்திருக்கிறார் என்பது இந்நூலின் தனிச் சிறப்பு.
ஆன்றோர் வாக்குப்படி இந்த தெய்வீக காவ்யம் சூர்ய சந்திரர்கள் இருக்கும் வரை புகழோடு இவ்வுலகில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை .

60.ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள் ,புராணங்கள் இவைகளைப் ப்ரமாணமாகக்
கொண்டு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை அருளிச் செய்தார்.
மேலும் ஸ்ரீதீர்த்தர், ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை ஸ்ரீமத் பாகவேத்தை அனுஸரித்தே தஸம ஸ்கந்த கிருஷ்ண லீலைகள் ,ஸ்ரீ ருக்மிணி விவாஹ பர்யந்தம் அருளியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதத்தில், ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல், மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீ தீர்த்தர் 8வது தரங்கத்ேில், கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவைகளை விவரித்துள்ளார்.
ஏன் இந்த மாறுபாட்னடச் செய்தார் என்று ஆராயுங்கால் கீழ்க்கண்ட இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.
1.ஸ்ரீதீர்த்தர் கீத கோவிந்தத்தை இயற்றிய ஸ்ரீஜயதேவரின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
2. வராஹ புரி பெருமாள் யாராலும் பிரிக்க முடியாதவாறு ஆதரவாகப் பிராட்டியை அணைத்தவாறும்,
பிராட்டியும், பெருமாளை விட்டுப் பிரியாமல் அன்பு பெருக்கெடுத்து ஆரத் தழுவியுள்ளார்.
இக் காட்சியை தினமும் பார்த்தாலும்.ஓவ்வொரு தரங்கிணிப் பாடலையும், சலங்கை ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து தன் தேவியுடன் காட்சி கொடுத்தும்,-
கிருஷ்ண ராதையே – ஜீவாத்மா பரமாத்ம ஐக்கிய ருபமாக- என்று அவர் மனக் கண் முன் தோன்றிய தாலும் அவர் ராதா கிருஷ்ணனைப் பற்றி எழுதி யிருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.

61.பத்ம புராணத்தில் உள்ள ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் சிறிது பார்க்கலாம்
சுகருனடய வாயிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் கதாம்ருதத்தின் பலன் அளவிட முடியாது.
கங்கை ,கயா ,காசி,புஷ்கரம்,ப்ரயாகை அளிக்கும் பலன்கள் யானவயும் இந்த பாகவத பலன்களுக்குச் சமமாகாது.என்று கூறப்பட்டுள்ளது.(அத்.3.ஸ்லோ.32)
இந்தப் பெருமையும்,புகழும் ஸ்ரீமத்பாகவதத்தை அனுஸரித்தே ஸ்ரீதீர்த்தரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கதாம்ருதமான ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணிக்கும் பொருந்தும் என்று சொல்லவும் வேண்டுமோ ?

62.ஸ்ரீதீர்த்தர் 12 தரங்கம்- “காமதா காமினா மேஷா”- எனத் தொடங்கும் ஸ்லோ .161ல் இந்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற சிறந்த பக்தி நூலை
பக்தியுடன் பாடுகிறவர்களுக்கும், கேட்பவர்களுக்கும்,அவரவர்களின் விருப்பம் போல, அறம்,பொருள்,இன்பம்,வீடு இவற்றை இந்த நூல்
அளிக்கிறது என்று பல ஸ்ருதியும் கூறிவிட்டார்.

63.ஸ்ரீதீர்த்தரின் நாமாவை உச்சரிப்ப தாலேயே நம் பாவங்கள் தொலைந்து அக்ஞான இருள் நீங்கி
ஆத்ம ஞானத்தை அடைந்து பரமானந்தத்தை அனடயலாம் என்பதில் ஒரு ஐயமே இல்லை .
ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருநாமத்தை ஒருமுனற கூறுவது லக்ஷம் தடவைகள் ஓங்காரத்தை ஜபிப்பதால் கிட்டும்
புண்ணி யத்தைக்காட்டிலும் அதிக புண்ணியத்தை அளிப்பதாகும்.
அவரின் திருவுருவத்தை வழிபடுவது ப்ரஹ்மா, சிவன்.நாராயணன், இவர்கனள வழிபடுவதால் கிட்டும் பலனுக்கு ஸமமான பலனைத்தரும்
என்று குரு த்யான ஸ்லோகத்தில் சொல்லப்பட்டதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
மேலும் அவ்வரிகள் அனுபவ பூர்வமாகவே வந்ததில் என்ன சந்தேகம்.அத்தகைய மஹான் ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருவடித் தாமரைகளை வணங்கி
நமக்கும் தூய்மையான உள்ளத்தை யளித்து,பரமாத்ம அநுபவம் ஏற்பட்டு ஆனந்த ஸ்வரூபியான பரம் பொருளுடன் ஐக்யமாகிற மோக்ஷத்தைப் பெறுவோமாக..

————–

பாகம்-3

ஒற்றுமையும் வேற்றுமையும்

1.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் சிருங்கார ரஸம் இனழந்த பக்தி ரஸம் ததும்பும் இனிமையான பாடல்களைக் கொண்டது.
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி பக்தி ரஸத்துடன் ஆத்ம ஞானத்தை போதிக்கும் இனிமையான தெய்வீகப் பாடல்களைக் கொண்டது.
2.இந்த இரண்டு நூல்களுக்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ேண பரமாத்மாவே .ஸ்ரீமத் பாகவேத்திற்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே .
3.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் 12 ஸர்கங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும் 12 தரங்கிணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமத் பாகவதமும் 12 ஸ்கந்தங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,

4.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் த்வாேஸாக்ஷரி மந்திரம் 12 அக்ஷரங்களைக் கொண்டது. ஒவ்வொரு
ஸ்கந்தம் ஆரம்பிக்கும் போது வியாசர், இந்த மூல மந்திரத்தை ஸ்மரித்தே தொடங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
துருவ சரித்திரத்தில் ஸ்ரீநாரத மஹரிஷி, துருவனுக்கு,இந்த மூல மந்திரத்தை உபதேஸிப்பதாக ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
( பாக.ஸ்க.4அத்யா.8-ஸ்லோ .54).மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திர அக்ஷரங்களின் எண்ணிக்கை 12
ஆனதால்,.ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களான ஸ்ரீஜயதேவரும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் ஸ்ரீமத் பாகவதத்தை அனுசரித்து தம் தம் நூல்களை 12 பாகமாக
பிரித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

5.ஸ்ரீஜயதேவர், சிருங்கார ரஸம் ப்ரதானமாக உள்ள இந்த நூலை 18புராணங்களில் ஒன்றான
ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் ராதா கிருஷ்ண சரித்திரத்தின் அடிப்படையில் படைத்தருளினார்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிேணியை ,ஸ்லோகங்கள் .சூர்ணிகைகள் ,கீதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீமத் பாகவேத்தை அனுசரித்து,
தஸம ஸ்கந்தம் ருக்மிணி விவாஹம் வரையில் படைத்தருளினார்.
ஸ்ரீமத்பாகவதத்தில் ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாசாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீதீர்த்தர் 8வது தரங்கத்தில் கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவை களை விவரித்துள்ளார்.
இதுஒரு சிறிய வேறுபாடு ஆகும்.எனினும் இந்நூலின் இப்பகுதி ,ஆத்ம ஞானத்தை போதிப்பதால் சிறந்து விளங்குகிறது.

6.மேலும் ஸ்ரீநாராயண தீர்த்தர் தத்வங்கள் அடங்கிய பாகவதம் ஏகாதஸ ஸ்கந்தம் பற்றி எழுதாமல்
விட்டு விட்டரே என ஏக்கப்பட வைக்காமல்
ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள்
இவைகளின் ஸாரத்தை ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி யிலேயே சந்தர்பத்துக்கு ஏற்றவாறு
புகுத்தி ,
தனக்கே உரித்தான எளிய நடையில், அருளிச் செய்தார் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு..

7.ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் இருவருமே சங்கீதம்,நாட்டிய கலைகளில் பாண்டித்யம் பெற்று
இருந்ததனால்,
எல்லாப் பாடல்களையும் பல ராகங்களிலும், தாளங்களிலும், நடனமாடக் கூடியவகையில் அனமத்து மெருகு ஊட்டியுள்ளனர்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஒருபடி மேலே போய் நாட்டிய ஜதிகளையும் அனனவரும் வியக்கும் வண்ணம் னகயாண்டிருப்பது அவரின் புலமையை நன்கு பறை சாற்றுகிறது.

8.இவ் விரண்டு நூல்களுமே ,ஆத்ம ஞானம் பெற்று பரமாத்ம ஐக்கியத்தில் ஈடுபட்டு ப்ரஹமானந்தத்தில் திளைத்த
ஸ்ரீஜயதேவர்,ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆகிய ப்ரஹ்ம நிஷ்டர்களால் ஸ்வானுபவத்தில் எழுதப் பெற்றதால், அவர்களின் பாடல்களில் பக்தி ரஸம் சொட்டுகிறது.
எனவே இப்பாடல்களை நாம் பாடும் போதும், மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும் மெய் மறந்து பரமானந்தத்தில் திளைத்து கண்ணீர் மல்கி பரவசமாகின்றோம்.
இப்படி ப்ரேம பக்தியில் முழ்கிய உறுதியான பக்தன் தனக்குப் பிரியமான பகவன் நாம கீர்த்தனைகளைப் பாடும் போது மனமுருகி உலக விவஹாரங்களை அறவே மறந்து பித்தன் போல உரக்கச் சிரிப்பான்,சில சமயம் அழுவான்,உறக்க கூச்சலிடுவான்,பாடுவான்,ஆடுவான்
என்று நவ யோகிகளில் ஒருவரான கவியோகி, விதேஹ ராஜாவிற்கு பக்தனின் லக்ஷணத்தை தெரிவிக்கிறார்( ஸ்ரீமத் பாகவேம் .ஸ்க.11அத்யா2ஸ்லோ 40).
இம்மாதிரி, ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் எழுதிய பாடல்கள், மேலே கூறியவாறு ஸ்ரேஷ்ட பக்தர்களை உருவாக்குகிறது என்று சொன்னால்
மிகையாகாது.

9.இவ் விரண்டு நூல்களுமே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்டவைகளே .
ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தம் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சதபி “ என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,7வது சரணத்தில்
ஸ்ரீ ஜகன்நாதரே ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து, .”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம் தேஹி பத பல்லவமுதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கத நாருணோ ஹரது தது பாஹித விகாரம் ப்ரியே சாருஸீல முஞ்ச மயி மாமை நிதானம்”, என்ற வரிகளை எழுதினார் என்று கூறுவர். இது ஒன்றே போதுமே கீத கோவிந்தம் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.

10.ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் ஓவ்வொரு பாடனலயும் சலங்னக ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து திவ்ய தரிஸனம் கொடுத்தும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அங்கீ கரித்தார் என்பது ஒன்றே போதுமே இந் நூல் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.
மேலும் கிருஷ்ண ருக்மிணி விவாஹத்துடன் முடிக்கச் சொன்னதும்,ஸ்ரீகிருஷ்ணரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநாராயண பட்டத்திரி அருளிய ஸ்ரீநாராயணீயமும் தரங்கிணி யைப் போலவே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் முழுவதும் அஙகீகரிக்கப்பட்ட நூலாகும்.

11.ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் குறித்தே எல்லாப் பாடல்கனளயும்
பாடியுள்ளார். மற்ற தெய்வங்கனளப் பற்றிப் பாடவில்னல.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே  மற்ற தேவதைகளையும் துதிப்பது தரங்கத்தின் தனிச் சிறப்பு.
இந்த ச குண வழி பாடே நாளனடவில் தனக்குத் தானே நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனையாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீசுகப் ப்ரஹ்மம் நிர்குண பரப் ப்ரஹ்ம உபாஸனையில் தீவிரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவதத்தை – கிருஷ்ண லீலைகளை -உபதேஸித்தார்,ஒவ்வொரு லீலையிலும் தன்
உள்ளத்திலுள்ள பரப்ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப்
பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே பரம் பொருளின் சகுண வடிவங்களைத் துதித்து தன் பாடல்கள் மூலம்வழிபட்டுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச்சிறப்பு.

12.முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின் “என்ற கீதத்தில்,கணபதியையும்,”
துர்கே துர்கதி ஹாரிணி ” என்ற ஸ்லோகத்திலும்“ஜய ஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவியையும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தனோது மதுஸூதன ஸூ தா “என்ற கீதத்தில் கங்காதரன் தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் தரங்கங்களில் நரஸிம்ஹரையும் ,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வக்ஞானக்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல் மஹா விஷ்ணுவையும்,
3ம் கீதத்தில் வராஹ புரி வேங்கடேசப் பெருமாளையும் துதித்துள்ளார்.

13.ஸ்ரீஜயதேவர்,கீத கோவிந்தத்தில் முதல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.
இதில் புத்த அவதாரத்னையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்களையும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார்.என்று கூ றுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் “கேசவா த்ருத ” -கேசவன் தரித்த -என்று கூறி அந்த
அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதா னுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோகம் 5 தெளிவாக வராக அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டவனான
ஸ்ரீ கிருஷ்ணன் பத்து அவதாரங்களை எடுத்தான் –அவனுக்கு நமஸ்காரம். -கிருஷ்ணாய துப்யம் நமஹ-.என்று கூறுகிறார்.

14.ஸ்ரீ தீர்த்தர் “அதி கருணா வித்ருதாத்புதரூபா” என்ற சொல் தொடரால் பகவானின் அவதாரங்களை விளக்கி யுள்ளார்
மேலும், தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும், சூர்ணிகைகளிலும் ,கீதத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு,இறப்பு அற்றவன்,எங்கும் நிறைந்திருப்பவன்
,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நினலயான ஆனந்த வடிவு உடையவன் ,தன் அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப்பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விகிதம்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய
கால்வாய்கள் ஆயிரம் தோன்றுகின்றதோ , அது போல் மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள்
அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூரண தத்வம். மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவதம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

15.ஸ்ரீ தீர்த்தர் தன் நூலின் துவக்கத்தில் முதல் தரங்கத்தில் “ராம கிருஷ்ண கோவிந்த ” எனத் தொடங்கும் கீதம் 6ல், ஸனகாதி யோகிகள்
“ராம கிருஷ்ண கோவிந்த ” என்று கூறிக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனுனடய ஸந்நிதிக்கு வந்தனர் என்றும்,
நூலின் முடிவிலும் தரங்கம் 12ல் தரு 8 ல் கிருஷ்ணனிடம், ருக்மிணிக்காக தூது சென்ற அறிவாளியான அந்தணர்
“கோவிந்த ராம,கோவிந்த ராம” என்று பகவானின் திரு நாமங்களைக் கூறிக் கொண்டு வருகிறார் என்று வர்ணித்து, கலியுகத்தில்
நாம ஸங்கீர்தனம் என்ற எளிதான வழியில் கடவுளை அனடய முடியும் என்பதால்,
மற்ற முன்று யுகங்களிலும் பிறந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டும், அதிலும் புண்ணிய நதிகளான காவேரி,
தாமிரபரணி ஓடும் திராவிட நாட்டில் பிறக்க வேண்டும் என்று பாகவதம்,ஸ்க-11 ,அத்யா.5 ஸ்லோ .38-
40ல் கூறப்பட்டதை நினனவு கூர்கிறார். ஆழ்வார்கள்,நாயன்மார்கள் இவர்களின் பாடல் பெற்ற
பல ஷேத்திரங்கள் உள்ள திராவிட நாட்டில்,காளிந்தி நதி பாயும் வராஹ புரி ,பூலோக வைகுண்டம் என்று பெயர் பெற்றதற்கு,இவையே சான்று.-

16.இந்த இரண்டு நூல்களுமே ஓப்பு உயர்வு அற்ற அமர காவியங்களாகும்.இரண்டும் தெய்வீக மணம் வீசும் உயர்ந்த காவியங்கள்,
இதில் எது சிறந்தது என்ற கேள்விக்கே இடமில்லை ஒருவனின் இரு கண்களில் எது சிறந்தது என்று கூற இயலாது. ஏன் எனில் இயல்பான பார்வைக்கு, மனிதனுக்கு இரு கண்களுமே முக்கியமானது.
அது போலே ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தமும், ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும், பாகவத சமுதாயத்தின் இரண்டு கண்கனளப் போன்றவை
இவை இல்லாத பஜனை சம்பிரதாயமே இருக்க முடியாது.
ராதா கல்யாணம், திவ்ய நாமம்.தீப ப்ரதக்ஷிணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவை இரண்டும் முக்ய பங்கு வஹிக்கின்றன.
நாமும் இவ் விரண்டு கிருஷ்ண ஸாகரத்தில் முழ்கித் திளைத்து பரமானந்தம் பெற அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹபுரி ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ வேங்கடேசப் பெருமானளயும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

“நவநீத சோராய நந்தாதி கோப கோ ரக்ஷிணே கோபிகா வல்லபாய,
நாரத முனீந்த் ரனுத நாமதே யாயதே நாராயண ஆனந்த தீர்த்த குரவே ”
என்று அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கும், ஸ்ரீநாராயண தீர்த்த குருவிற்கும் மங்களம் பாடி நினறவு செய்வோம்.

————————-

இக் கட்டுரை ,திருவையாறு P.நடராஜ ஸர்மாவும், கும்ப காேணம் M.S.கோபால கிருஷ்ண ஸர்மாவும்
இணைந்து,வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாளிடமும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரிடமும் கொண்ட பக்தி மேலீட்டால் எழுதப்பட்டது.

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Posted in அஷ்ட பிரபங்கள், அஷ்டோத்ரம், Sri Baagavatha saaram, Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ கண்ணன் பிறந்தான்… எங்கள் கண்ணன் பிறந்தான்!–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்–ஸ்ரீ கண்ணன் கழலிணையே ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் —

January 16, 2023

ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நள்ளிரவில், தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாக, மதுரா நகரில் சிறைச்சாலையில் அவதரித்தான் கண்ணன். அவன் அவதரித்த நாளையே கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீஜயந்தி உள்ளிட்ட பல பெயர்களால் அழைத்து, நாம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

இத்திருநாளில் கண்ணன் பிறந்ததை அக்கால ரிஷிகள் தொடங்கி, இக்காலக் கவிகள் வரை எப்படி எல்லாம் அநுபவித்தார்கள் என்பதன் தொகுப்பே இக்கட்டுரை.

ஸ்ரீபராசர முனிவர் – விஷ்ணு புராணம்:
“ததோ அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானுனா
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத் மனா”

வாடிய தாமரை மலர வேண்டும் என்றால், சூரியன் உதிக்க வேண்டும். அதுபோல் இவ்வுலகம் என்னும் தாமரை வாடிக் கிடந்த போது, சூரியனைப் போல் அவதாரம் செய்தான் கண்ணன். கண்ணன் என்ற சூரியன் உதித்ததாலே, உலகம் என்னும் தாமரை மலர்ந்தது, அதாவது உலக மக்களுக்கெல்லாம் முகமலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டானது.

சூரியன் கிழக்குத் திக்கில் உதிக்கும். கண்ணன் என்னும் சூரியன், தேவகியின் கர்ப்பத்தையே தான் உதிக்கும் கிழக்குத் திக்காகக் கொண்டு அவளது கருவிலிருந்து உதித்தான் என்றும் இந்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார் பராசர முனிவர்.சூரியனோடு கண்ணனை ஒப்பிட்ட பராசர முனிவர், கண்ணனுக்கும் சூரியனுக்கும் உள்ள வேறுபாட்டையும், இந்த ஸ்லோகத்தில் உள்ள ‘அச்யுத பானு’ என்னும் அடைமொழியால் காட்டுகிறார்.
சூரியன் காலையில் உதித்தாலும், மாலையில் அஸ்தமித்து விடுவதால், அதற்கு ‘ச்யுத பானு’ (மறையும் சூரியன்) என்று பெயர். ஆனால் கண்ணனோ, அஸ்தமிக்காமல், மறையாமல் எப்போதும் ஒளிவீசும் சூரியனாக இருப்பதால், ‘அச்யுத பானு’ (மறையாத சூரியன்) என்று கண்ணனைக் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி, கர்மவினையால் நாம் பிறப்பது போல் அவன் பிறப்பதில்லை. தனது கருணையால் கீழே இறங்கி வந்து அவதரிக்கிறான். இதைத் தெளிவு படுத்தவே ‘ஆவிர்பூதம்’ (கண்ணன் ஆவிர்பவித்தான்) என்று இந்த ஸ்லோகத்திலே கூறுகிறார் பராசர முனிவர்.

இவ்வாறு கண்ணன் அவதாரம் செய்த போது, கடல்கள் வாத்திய கோஷம் போன்ற ஒலியை எழுப்பின. தேவ லோகத்துக் கந்தர்வர்கள் தேவ கானங்களைப் பாடினார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். அப்ஸரஸ் பெண்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். உலகிலுள்ள தீ எல்லாம் சாந்தமாக எரியத் தொடங்கியது. மேகங்கள் முழங்கின.

குழந்தை கண்ணன் எப்படி இருந்தான்?

“புல்ல இந்தீவர பத்ர ஆபம் சதுர் பாஹும் உதீக்ஷ்ய தம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் ஜாதம் துஷ்டாவானக துந்துபி:” என்கிறார் பராசர முனிவர்.

அதாவது, நன்கு மலர்ந்த கருநெய்தல் பூப்போன்ற நிறத்தோடும்,
நான்கு கரங்களோடும், திருமார்பில் திருமகள் அமரும் வத்சம் என்ற மறுவோடும் குழந்தை கண்ணன்
விளங்கினான் என்பது இதன் பொருள்.

ஸ்ரீ சுக முனிவர் – ஸ்ரீ மத் பாகவத புராணம்:
“தேவக்யாம் தேவரூபிண்யாம் விஷ்ணு: ஸர்வகுஹாசய: ஆவிராஸீத் யதா ப்ராச்யம் திசி இந்துரிவ புஷ்கல:
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீ வத்ஸலக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்
மஹார்ஹ வைதூர்ய கிரீட குண்டல த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி: விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத”

“எல்லார் இதயத்திலும் ஒளிந்திருக்கும் திருமால், இருளடைந்த நள்ளிரவில், தேவப் பெண் போல் திகழ்ந்த தேவகியிடத்தில், கிழக்குத் திக்கில் பௌர்ணமி நிலவு உதிப்பது போல் வந்துதித்தார்.
தாமரைக் கண்களோடும், சங்கு சக்கரம் கதை போன்ற சிறந்த ஆயுதங்களோடும், நான்கு தோள்களோடும், மார்பில் வத்சம் எனும் மறுவோடும்,
கழுத்தில் கௌஸ்துப மணியோடும், இடையில் மஞ்சள் பட்டாடையோடும், வைடூரியத்தாலான கிரீட குண்டலங் களோடும்,
அவற்றின் பிரகாசத்தால் ஒளிவீசும் குழல் கற்றைகளோடும், ஒளிவீசும் அரைநூல், தோள்வளை, கங்கணம் ஆகியவற்றோடும்
விளங்கிய அந்த அற்புத இளங்குழந்தையை வசுதேவர் கண்டார்!” என்பது இந்த ஸ்லோகங்களின் திரண்ட பொருளாகும்.

நம்மாழ்வார் – திருவிருத்தம்:
“சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபந்தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே”

“கண்ணா! வைகுண்டத்தில் உள்ள நித்திய சூரிகள் உனக்கு நன்றாக அபிஷேகம் செய்து, மணம்மிக்க மலர்மாலைகளைச் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபம் காட்டிய போது, அந்தப் புகை உன்னை முழுவதுமாக மறைத்த நிலையில், நீ ஒரு மாயம் செய்து, இப்பூமியில் கண்ணனாக அவதாரம் செய்து, வெண்ணெயைத் திருடி உண்டு, ஏழு காளைகளை அடக்கி, நப்பின்னையைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, கூத்தாடி விட்டு, புகை அடங்குவதற்குள் மீண்டும் வைகுண்டத்துக்கே எழுந்தருளி விட்டாயே! உனது மாயத்தை என்னவென்று சொல்வேன்?” என்று இப்பாடலில் வினவுகிறார் நம்மாழ்வார்.

பெரியாழ்வார் திருமொழி:
திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டிருக்கும் சௌமிய நாராயணப் பெருமாளையே கண்ணனாகக் கண்டு, அந்தப் பெருமாளே ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்ததாகப் பெரியாழ்வார் பாடுகிறார்:

“வண்ணமாடங்கள் சூழ்த் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தளராயிற்றே”

திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டுள்ள சௌமிய நாராயணப் பெருமாள், (மதுராவில் இருந்த கம்சனிடம் இருந்து தப்பி வந்து) ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமாளிகையில் குழந்தையாகத் தோன்றினான். அப்போது ஆயர்பாடியைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் எண்ணெயையும்
மஞ்சள் பொடியையும் மகிழ்ச்சியோடு ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டு, கண்ணனின் அவதாரத்தைக் கொண்டாடினார்கள்.
அதனால் நந்தகோபனுடைய வீட்டின் பெரிய முற்றம் முழுவதும் சேறாகி விட்டது.

“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே”

கண்ணன் பிறந்த சந்தோஷத்தில், ஆயர்கள் எல்லோரும் பால், தயிர் சேமித்து வைத்த உறிகளை முற்றத்தில் உருட்டி விட்டுக் கூத்தாடினார்கள். நெய், பால், தயிர் உள்ளிட்டவற்றை வறியவர்க்குத் தானம் செய்தார்கள். ஆய்ச்சியர்கள் தங்கள் கூந்தல் அவிழ்ந்து போனது கூடத் தெரியாமல் நடனம் ஆடினார்கள். பித்துப் பிடித்தவர்கள் போல் அனைவரும் கூத்தாடினார்கள்.
வேதாந்த தேசிகன் – யாதவாப்யுதயம்:

கண்ணனின் முழு வரலாற்றை யாதவாப்யுதயம் என்னும் இருபத்து நான்கு சர்கங்கள் கொண்ட மகாகாவியமாக வடித்துத் தந்தார் வேதாந்த தேசிகன். அதில்,

“புக்தா புரா யேன வஸுந்தரா ஸா ஸ விச்வ போக்தா மம கர்ப பூத:”–என்கிறார்.

தேவகி எட்டாவது முறையாகக் கருவுற்றிருந்த நிலையில், மண்ணை உண்டாளாம். மண்ணை உண்டதன் மூலமாக, இந்த மண்ணுலகத்தை எல்லாம் உண்ட கண்ணன் என் வயிற்றுக்குள் தான் இருக்கிறான் என்பதை உலகுக்குச் சூசகமாகத் தெரிவித்தாள் தேவகி என்று இந்த ஸ்லோகத்தில் வேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.

மேலும், கண்ணன் அவதரித்த காலத்தை ஜோதிட ரீதியில் துல்லியமாகத் தெரிவிக்கிறார் வேதாந்த தேசிகன்:
“அத ஸிதருசி லக்னே ஸித்த பஞ்ச க்ரஹோச்சே
வ்யஜனயத் அனகானாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்
நிகில புவன பத்ம க்லேச நித்ரா அபனுத்த்யை
தினகரம் அனபாயம் தேவகீ பூர்வ ஸந்த்யா” என்ற ஸ்லோகத்தில்,

“சந்திரோதயம் ஆனபின், ரோகிணி நட்சத்திரத்தோடு கூடிய ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியில் (ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியோடு ரோகிணி நட்சத்திரம் இணைந்து வந்தால் அந்நாளை ஜயந்தி என்று அழைப்பார்கள்), ரிஷப ராசியில் சந்திரனும், மகர ராசியில் செவ்வாயும், கன்னி ராசியில் புதனும், கடக ராசியில் குருவும், துலா ராசியில் சனியும் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், சந்திரனுக்கு உகந்த ரிஷப லக்னத்தில், பூமியாகிய தாமரையைத் துயில் எழுப்புவதற்காக, தேவகி என்னும் கிழக்குத் திக்கில், கண்ணன் என்னும் சூரியன் தோன்றினான்!” என்று வர்ணித்துள்ளார்.

நாராயண பட்டத்ரி – நாராயணீயம்:
“ஆனந்த ரூப பகவன்னயி தே அவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவத் அங்க நிரீயமாணை:
காந்தி வ்ரஜை: இவ கனாகன மண்டலை: த்யாம்
ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷ வேலா”

“ஆனந்த வடிவமான குருவாயூரப்பா! உன் அவதாரக் காலம் நெருங்கிய போது, உன் திருமேனியில் இருந்து வெளிக்கிளம்பிய கதிர்ப் படலங்கள் போல் மேகங்கள் பெரிதாக வானில் தோன்றின. அவை வானையே மறைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறு கார்காலம் விளங்கிற்று.”

“ஆசாஸு சீதலதராஸு பயோத தோயை:
ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜனேஷு
நைசாகரோதய விதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹ த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:”

“மேகங்கள் பொழிந்த மழையால் திசைகள் எல்லாம் குளிர்ந்தன. நல்லோர் விரும்பிய அனைத்தும் கைகூடின. மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். நள்ளிரவில் சந்திரன் தோன்றும் வேளையில், மூவுலகின் துன்பத்தை அழிப்பவனான நீ தோன்றினாய்!”

“பால்யஸ்ப்ருசா அபி வபுஷா ததுஷா விபூதீ:
உத்யத் கிரீட கடகாங்கத ஹார பாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேன
மேகாஸிதேன பரிலேஸித ஸூதி கேஹே”

“குழந்தை போல் தோற்றமளித்தாலும் வல்லமை மிக்க திருமேனி கொண்டவன் அல்லவோ நீ? கிரீடம், கைவளை, தோள்வளை, முத்து மாலை முதலியவற்றின் ஒளியோடும், சங்கு சக்கரம், தாமரை, கதை போன்றவற்றோடும் நீ விளங்கினாயே! கருமேகம் போல் நீல நிறத்தோடு நீ
விளங்கினாயே!”

ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள்:
மன்னார்குடியில் கோவில் கொண்டிருக்கும் வித்யா ராஜகோபாலனைக் குழந்தை கண்ணனாக அநுபவித்து,
அவனது தோற்றத்தை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வடமொழியில் வர்ணித்துப் பாடுகிறார்
“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப:
பாலாவேசித மௌலி ரத்ன திலகோ மாலாவலீ மண்டித:
சேலாவேஷ்டித மௌலி மோஹித ஜன: சோலாவனீ மன்மத:
வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”

வலக்கையிலே செண்டை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ என்று வியக்கும்படி, இளஞ்சூரியனைப் போன்ற பொலிவுமிக்க வடிவுடன், திவ்யமான ரத்தினத் திலகத்தை நெற்றியில் அணிந்து கொண்டு, செண்பகம் போன்ற பூமாலைகளை அணிந்து கொண்டு, அழகிய தலைப்பாகைக் கட்டால் அனைவரையும் மயக்கும் சோழநாட்டு மன்மதனும், கருணைக் கடலுமான ராஜகோபாலனைத் தலையால் வணங்குகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

மகாகவி பாரதியார்:
கண்ணன் பிறந்தான்! – எங்கள் கண்ணன் பிறந்தான்! – இந்தக் காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான்! – மணி வண்ணம் உடையான்! – உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்!
பண்ணை இசைப்பீர்! – நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர்! – இந்தப் பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர்! – நன்கு கண்ணை விழிப்பீர்! – இனி ஏதும் குறைவில்லை! வேதம் துணையுண்டு!

இதைத் தழுவிக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய புதுக்கவிதையும் நோக்கத் தக்கது:
கண்ணன் பிறந்தான் – எங்கள் கண்ணன் பிறந்தான் – புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் – எங்கள் மன்னன் பிறந்தான் – மனக் கவலைகள் மறந்ததம்மா

அயோத்தியில் ராமன் அவதரித்த போது, அதைத் தசரதச் சக்கரவர்த்தி கோலாகலமாகக் கொண்டாடினார். ஆனால் மதுராவில் சிறைச்சாலையில் கண்ணன் அவதரித்த வேளையில், விலங்குகளால் கட்டப்படிருந்த தேவகியாலும் வசுதேவராலும் பெரிதாக அவனது பிறப்பைக் கொண்டாட முடியவில்லை.
அக்குறை தீரவே, இன்று ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை நமது இல்லங்களில் எல்லாம் வெகு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். பல்வகை இனிப்புகளை வீட்டில் செய்து, கண்ணன் நம் இல்லத்துக்குள் நுழைவதன் அடையாளமாக அவனது திருப்பாத வடிவில் இழைகோலம் இட்டு, பஜனைகள், பாடல்கள்,

பாராயணம் எனப் பலவிதமான முறைகளில், நம்வீட்டில் குழந்தை பிறந்தது போல் மகிழ்ச்சியோடு ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாளைக் கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணஜயந்தி நாளில் விரதம் இருப்போர்க்கு, ஒரு வருடத்தில் உள்ள அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிட்டும். இந்நாளில் கண்ணனை வழிபடுவோர்க்குக் கண்ணனைப் போலவே ஒரு குழந்தை பிறக்கும் என்பதில் ஐயமில்லை!

—————–

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

—————-

உகாரம் -ம் -அகாரம் -துக்காராம் -உமது -சொத்தாகவே அனுசந்தேயம் உபக்ரமத்தில்
உப சம்ஹாரத்திலும் என் என்பது என் -யான் என்பது என் -என்று ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களையும் நிரஸித்து அருளினார் –
ஸாது -சந்திம் இச்சந்தி ஸாத்வ -ஸத் ஸந்தாதா -சந்திமான் -பரதனுக்கும் திரு நாமங்கள் –
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்து

——————

ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்ய தேசங்கள் எனப்படும்
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷதிங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்ய தேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.
கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக்
காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய காளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்ஜ்வல பாரி ஜாதம்,
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.  திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம்–கொடை என்றுமாம் -அபீஷ்ட வரதன் அன்றோ -.
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.
இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.  இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகாரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாதுவச்சாவசேந |
யத்வீதீநாம் கார்கிபதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்வதசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை: ||   என்று.–தேவப்பெருமாளின் உத்ஸவம் விமா¢சையாக நடக்கிறது.

அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.  ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவை ஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.  அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது. -அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள். -அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
“வந்தே ஹஸ்திகிரீ சஸ்ய வீதீசோதககிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.
‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.  அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள்.
அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது,
தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.  இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.  மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது,

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டு
இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்து நான்கு சாண் கொண்டது.
வானவெடிகள் இருபத்து நான்கு வகைகள்.
த்வஜ ஸ்தம்பத்தில் இருபத்து நான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்து நான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.  இவையும் இருபத்து நான்கே.
இப்படி இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்து நான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதாரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே’
என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.
அப்பைய தீக்ஷ¢தர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸ கனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்து நான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –
ஸம்ஸாரவாரிநிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
பஸ்யந் பவந்த முபயாதி காரிச நூநம் ||
வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்தி¡¢யம் ஐந்து, ஜ்ஞாநேந்தி¡¢யம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம்
ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரம சேதனன் பரமாத்மா.

தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்துவிடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்து நான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள
அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே
கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.

இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்ய தேங்களைக் காட்டிலும் வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in கிருஷ்ணன் கதை அமுதம், Divya desams, Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ“திருத்தாள் மாலை”  —பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யரால் அருளப்பட்ட தமிழ் பாசுரங்கள்

January 15, 2023
ஸ்ரீ:“திருத்தாள் மாலை”–முகவுரை.
உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!  {திருவாய்மொழி. 1-1-1}
“தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
அக்குணங்களும் தன்னைப்பற்றி நிறம் பெற வேண்டும்படியாயிருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப்பேற்றுக்கு என் பக்கத்தில் சொல்லலாவது ஒன்றுமின்றிக்கேயிருக்க, நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகனானான்;
ஸ்வஸ்வரூபாபந்நரா யிருக்கிறவர்களுக்கும் அவ்வருகாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான் என்று அவன் பண்ணின உபகாரங்களடையச் சொல்லி,
இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார்.
ஆறு கிண்ணகமெடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்:
அதுபோல பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நானென்று பிழைக்க விரகில்லை;
அவன் திருவடிகளிலே தலைசாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே என்கிறார்;
உயர்வறவுயர் நலமுடையவன் துயரறு சுடரடி தொழுதெழப் பாராயென்கிறார்.
“அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யமுபாகத: என்னுமாப்போலே”
“ சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடிகளையிறே,
ஸ்தநந்தயப்ரஜை முலையிலே வாய்வைக்குமாப்போலே, இவரும் ‘உன் தேனேமலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்”
“செய்ய சுடராழியானுக்கே சூட்டினேன் சொன்மாலை” என்று பொய்கையாழ்வாரும்,
“நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் பனிமலராள், அங்கம்வலங் கொண்டானடி” என்று பூதத்தாழ்வாரும் 
“இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்” என்று பேயாழ்வாரும்,
“நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை, யாரோதவல்லார்?” என்று திருமழிசைப்பிரானும்,
“எப்போதும், கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான், மொய்கழலே ஏத்த முயல்” என்று நம்மாழ்வாரும்,
“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே” என்று மதுரகவியாழ்வாரும்,
“அணியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும் அம்மான்தனடி யிணைக்கீழ் அலர்களிட்டு அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே?” என்று குலசேகரப் பெருமாளும்,
“மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பெரியாழ்வாரும்,
“அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி” என்று ஸ்ரீ ஆண்டாளும்,”
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே” என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
“நீள்மதிளரங்கத்தம்மான் திருக், கமலபாதம் என் கண்ணினுள்ளனவொக்கின்றதே” என்று திருப்பாணாழ்வாரும்,
“தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே” என்று திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்துள்ளமை
இவண் காண்க.
“தனக்குவமையில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்பர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்.
“ஸ்ரீய:பதியின் திருத்தாள் வைபவம்” எனும் நன்னூலை ஸ்ரீமான் பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியாரவர்கள் இயற்றியுள்ளார்.
அது “திருத்தாள்மாலை”என்ற திருநாமத்தோடு இத்தமிழ்ச்சங்கத்தின் 88-வது வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
சிரஞ்சீவி பஞ்சாமிருதத்தின் திருமண மாலையாய்த் திகழ்வதே இச்செய்ய தமிழ்மாலையின் தனிச்சிறப்பு.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
——————————–
தூய நான் மறையின் தொன்முடி துலங்கும் சுந்தரச் சோதியார் திருத்தாள்
ஆயிரங் கண்ணன் அரன் அயனாதி யனைவருந் தொழுதெழுந் திருத்தாள்
நேயமார் தூய மாதவர் நெஞ்சில் நிலையுற நிலவு செய் திருத்தாள்
பேயனே னாமிப் பேதையே னகத்தும் பிரிவறப் பிறங்கிடுந் திருத்தாள்.                                 
சுட்டிய தூணிற் றோன்றியக் கணமே சுடரெழக் குதிகொளுந் திருத்தாள்
கிட்டிய கேடன் கனகனை மாளக் கிடத்து மாவூருடைத் திருத்தாள்
ஒட்டிய மைந்த னுரையினை மெய்ப்பித் துவந்தவன் தொழுதெழுந் திருத்தாள்
மட்டிலா வினையேன் மனத்திலு மன்ன மகிழ்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                      
ஒளிவடி வேந்தி யடியிரந் தோங்கி யுலகெலா மளந்தருள் திருத்தாள்
களமிகக் கமலங் கொண்டயன் துலக்கக் கங்கையைக் கான்றதோர் திருத்தாள்
வளமிக வழங்கு மாவலி சிரத்தே வைப்புற மகிழ்ந்தருள் திருத்தாள்
எளியனே னிருளா ரிவ்வித யத்து மிலங்கிடத் தலங்கொளுந் திருத்தாள்.              
திருமகள் வருடச் சிவந்தலர் திருத்தாள் செவ்வியத் தாமரைத் திருத்தாள்
வரமது வேண்டி யணுகிய வானோர் வணங்கிட மகிழ்ந்தருள் திருத்தாள்
தருமசிந் தையனாந் தசரதன் மனையில் தவழ்ந்தலங் கரித்தருள் திருத்தாள்
கருமியேன் வினைகள் களைந்தருள் வானென் கருத்தினுங் கனிந்தமர் திருத்தாள்.                      

தூயமா முனிவன் கௌசிகன் பின்னர்த் தொடர்ந்து கானடந்தருள் திருத்தாள்
சாயலாண் மங்கை யகலிகை சாபந் தவிர்த்தருள் பவித்திரத் திருத்தாள்
தீயவ ரரக்கர் பூண்டொடு தீவான் செறிவன முகந்தருள் திருத்தாள்
பேயனே னேனும் பெரும்பதந் தனையான் பெற்றிட  வருள்செயுந் திருத்தாள்.                       

கொங்கல ரடிக்கே யுரியவ னென்ற குகன்றனுக் குதவிய திருத்தாள்
கங்கையின் மதுரக் கனிகளாய்ந் தளித்த சபரியை யுவந்தருள் திருத்தாள்
கங்குலும் பகலும் கருணையே பொழியுங் கமலமா மென்மலர் திருத்தாள்
துங்கமி லெளியேன் மனத்திலுந் துலங்கத் தோய்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                  

பரிவுடன் பணிந்த பரத நம்பிக்குப் பாதுக மீந்தருள் திருத்தாள்
விரியழற் பங்கி விராதனை யுதைத்து வீழ்த்தி விண் ணருளிய திருத்தாள்
அரியெனக் கவந்த னறிந்துள முருக வாதரித் தருளிய திருத்தாள்
எரிவினை மிஞ்சு மெளியனே னுளத்து மிலங்கிவீற் றிருப்பமர் திருத்தாள்.                    

அஞ்சலி கரத்தோ டடிபணிந் தேத்தும் அனுமனுக் கருள்புரி திருத்தாள்
செஞ்சிறைக் கிழவன் சடாயு கண் டேத்தச் சேண்பத மருளிய திருத்தாள்
தஞ்சனே னடியே னென்ற வீடணற்குத் தண்ணளி யருளிய திருத்தாள்
நஞ்சினுங் கடிய நெஞ்ச னேனுக்கும் நலந் தர நயந்தருள் திருத்தாள்.                       

நிராசனராய தண்டக முனிவர் நினைவினில் நிலவு செய் திருத்தாள்
விராவரு கானப் புள்விலங் கவைக்கும் வியன்பத மருளிய திருத்தாள்
தராதலத் தன்று சராசர முற்றுந் தனிக்கதி தந்தருள் திருத்தாள்
பராவுத வில்லாப் பாவியே னுளத்தும் படிந்தருள் பண்ணிய திருத்தாள்.                     

வேண்டிய வசுதே வன்றளை யவிழ வியந்தவன் கண்டதோர் திருத்தாள்
ஆண்டவ னருளார் நந்தகோ பன்ற னகந்தனிற் றிகழ்தரு திருத்தாள்
மூண்டெழு காத லசோதையா மன்னை முகந்தனை மலர்த்திய திருத்தாள்
ஈண்டி வந்திந்த எளியனே னகத்து மிருளற வொளிதருந் திருத்தாள்.                    

தலைவனா நந்தன் மாளிகை யெங்குந் தவழ்ந் தெழிலூட்டிய திருத்தாள்
முலையினூ டுயிருண் டரக்கியை வீழ முடித்துமீ தாடிய திருத்தாள்
தலைநெறித் தோடித் தங்கிய கபட சகடிறத் தாக்கிய திருத்தாள்
நிலையிலா வெளியேன் நெஞ்சிலு நிலைத்து நின்றருள் பரப்பிய திருத்தாள்.                                   

தயிர்கடை யொலிக்குத் தாளமிட்டது போற் சதிருட னாடிய திருத்தாள்
உயருர லுருட்டி நிறுத்திமீ தமுத முண்ணுவா னுயர்ந்தெழு திருத்தாள்
நயமுற மடுவிற் காளியன் முடிமேல் நடனமுற் றருளிய திருத்தாள்
மயலுறு மெனது மனதையு முகந்து மன்னிட மகிழ்ந்தருள் திருத்தாள்.                           

வலம்புரி யாழிக் குறிகண்மண் படிய வனவிருந் தையிலுலாந் திருத்தாள்
சிலம்புகள் செய்யுஞ் சிஞ்சித மார்ப்பத் தெருவெலாந் திரிந்தருள் திருத்தாள்
நிலம்பெறு நித்ய போக்யமா யிலகும் நிதியென நிலவிடுந் திருத்தாள்
அலம்பெறு மடியே னகத்தையுந் தனதோ ராசனமாக்கிய திருத்தாள்.                    

சுருதிபின் தொடரக் குழலிசை சுவைப்பச் சுரபிகள் பின்தொடர் திருத்தாள்
அரிவையர் துகிலை யபகரித் தாங்கோர் குருந்திடை யமர்ந்தருள் திருத்தாள்
இருமையு மெவர்க்கு மிணையிலாக் கதியா யிலகிடு மிண்டைநாண் மலர்த்தாள்
கருவினை கனிந்த கடையனே னகத்துங் கருணையோ டமர்ந்தருள் திருத்தாள்.              

தன்னையா தரித்த தருமனாதி யர்க்காய்த் தூதுசென் றருளிய திருத்தாள்
சொன்னவா றிளையோன் தூய சிந்தனையினாற் சுருக்குறக் கட்டுணுந் திருத்தாள்.
மன்னவன் வகுத்த மல்ல ரீட்டத்தை மட்குழி யொத்திய திருத்தாள்
என்னையா தரிப்பா யென்னுளந் தங்கி யிலங்கிய பங்கயத் திருத்தாள்.                                

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in Sri Vaishna Concepts, Stotrams/Slokams | Leave a Comment »

ஸ்ரீ பராசரர் மஹிமை —

December 23, 2022

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 4 –-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

வியாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :  பௌத்ர மகல்மஷம் Iபராஸராத்மஜம் வந்தே ஸுகதாதம் தபோநிதிம் I 

மத்ஸ்ய அவதாரம் வேதங்களை மீட்க -வ்யாஸ அவதாரம் வேதார்த்தங்களை மீட்க அவதாரம்

497. கோபதயே நமஹ (Gopathaye namaha)

வசிஷ்டரின் மகன்கள் மீது ஓர் அரக்கனை ஏவி இருந்தார் விஸ்வாமித்திரர். அவன் வசிஷ்டரின் எல்லா மகன்களையும் அழித்துவிட்டான். வசிஷ்டரின் மகன்களுள் ஒருவரான சக்தி என்ற முனிவருக்குப் பராசர முனிவர் குழந்தையாகப் பிறந்திருந்தார். விவரம் அறியாக் குழந்தையான பராசரரிடம் அவருக்குத் தந்தை இல்லை என்ற செய்தியைச் சொல்ல வசிஷ்டருக்கு மனம் இல்லை. அதனால் பராசரரைத் தனது மகனாகவே கருதிப் பாட்டனாரான வசிஷ்டர் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வந்தார்.

பராசரரை உரிய வயதில் குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் வசிஷ்டர். அந்தக் குருகுலத்தில் உள்ள சிறுவர்களுள் சிலர், ஒருநாள் பராசரரிடம், “எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்கிறார்! ஆனால் உனக்குத் தந்தை கிடையாதாமே!” என்று கேட்டார்கள். “ஏன் இல்லை? வசிஷ்டர்தான் என் தந்தை!” என்று விடையளித்தார் பராசரர். “இல்லை! நாங்கள் விசாரித்துவிட்டோம்! உன் தந்தை பெயர் சக்தி, அவர் இறந்து விட்டார். வசிஷ்டர் உனக்குப் பாட்டனார்!  இதுவே உனக்குத் தெரியாதா?” என்று ஏளனமாகச் சொன்னார்களாம் மற்ற சிறுவர்கள்.

சிறுபிள்ளையான பராசரரின் பிஞ்சு மனம் இவர்கள் பேசிய இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டது. வசிஷ்டரிடம், அழுதுக்கொண்டே ஓடி வந்து நடந்தவற்றைச் சொன்னார் பராசரர். இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கருதிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஏவிய அரக்கனால் சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் இறந்தமையைக் குறித்து விரிவாகப் பராசரரிடம் கூறினார். அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பராசரர், தன் தந்தையைக் கொன்ற அரக்கனைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அத்தோடு நில்லாமல், அரக்கர்கள் என்ற ஓர் இனம் இருப்பதால்தானே, அவர் களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் கொலைகளைச் செய்யப் பிறரும் ஏற்பாடு செய்கிறார்கள்? அரக்கர்களையே மொத்தமாக அழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு வேள்வியைத் தொடங்கினார் இளம் பராசரர்.

இதைக் கேள்விப்பட்ட புலஸ்திய முனிவர், பராசரர் ஓர் இனத்தையே அழிக்க முற்படுகிறாரே! ஒருவர் தவறு செய்தால், அத்தவறுக்கான தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமே ஒழிய, அதற்காக அவர் சார்ந்த இனத்தையே அழிப்பது என்பது பெருந்தவறு ஆயிற்றே! இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் பராசரரிடம் வந்தார்.

பராசரரிடம் புலஸ்தியர், “குழந்தாய்! இப்படி ஓர் இனத்தை அழிப்பதற்காக வேள்விசெய்யாதே! உலகில் பலப்பல விதமான உயிர்களை இறைவன் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றைப் படைத்தமைக்கும் அவன் திருவுள்ளத்தில் ஒரு காரணமும் வைத்திருக்கிறான். பாம்போ, தேளோ, ஈயோ, எறும்போ, செடியோ, கொடியோ அனைத்துமே உலகில் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அவற்றுள் ஏதோ ஓர் இனத்தை அழிப்பது என்று நாம் இறங்கினால், அது மொத்த உலகின் இயல்பையும் பாதிக்கும்! யாராவது தீமை செய்தால், நீ பகவானிடம் பிரார்த்தனை செய்! அவர்களைத் திருத்துவதோ தண்டிப்பதோ எதுவோ அதை இறைவன் பார்த்துக் கொள்வான்!” என்றார்.

பெரியவரான புலஸ்தியரின் அறிவுரையைக் கேட்டுத் தனது வேள்வியை நிறுத்திவிட்டார் பராசரர். தன் சொல்லுக்கு மதிப்பளித்த பராசரருக்கு ஜடப்பொருட்களான அசேதனங்கள், அறிவுள்ள ஜீவாத்மாக்கள், இவர்களை ஆளும் இறைவன் ஆகிய மூவிதத் தத்துவங்களைக் குறித்த தெளிந்த ஞானம் ஏற்படும் என்று புலஸ்தியர் ஆசீர்வாதம் செய்தார். புலஸ்தியரின் ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும் என்று வசிஷ்டரும் பராசரரை ஆசீர்வதித்தார்.

இந்த இரண்டு மகான்கள் ஒரே நாளில் செய்த ஆசீர்வாதத்தின் விளைவினால், பராசர முனிவரின் நாவிலே ஹயக்ரீவர் வந்து அமர்ந்துவிட்டாராம். அதனால்தான் பின்னாளில் பராசர முனிவர், இந்த மூவகைத் தத்துவங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, புராணரத்னம் எனப்படும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றி வழங்கினார். ஸ்ரீவிஷ்ணு புராணத்தை ராமானுஜரின் பரமகுருவான ஆளவந்தாரும், ராமானுஜரும் பலவாறு போற்றி உள்ளார்கள்.

இப்படி மகான்களின் அருளைப் பெற்றோர்களின் நாவிலே ஹயக்ரீவர் அமர்ந்து, நல்ல வாக்கு வன்மையை அவர்களுக்கு அருள்கிறார். அதனால், ஹயக்ரீவர் ‘கோபதி:’ என்று அழைக்கப்படுகிறார். கோ என்றால் வாக்கு, பதி என்றால் தலைவர். “கோபதி:” என்றால் வாக்குக்குத் தலைவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 497-வது திருநாமம்.“கோபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல வாக்கு வன்மை ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

———-

வசிஷ்ட மகரிஷியின் குமாரர் சக்தி மகரிஷி. சக்தி மகரிஷியின் குமாரர் பராசரர். பராசரரின் தாயார் அத்ருஷ்யந்தி. பராசரர் தம் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே, சக்தி மகரிஷி கல்மாசபாதன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டார். பராசரர் பிறந்து தம் தாயின் மடியில் இருக்கும் போது தம் தாய் அமங்கலியாக இருக்கக் கண்டு காரணத்தைக் கேட்டார். உதிரன் என்னும் அரக்கனால் உன் தந்தை இறந்தார் என அவள் கூறக் கேட்டு அரக்க இனத்தையே அழிப்பதற்காகச் சத்திர யாகம் செய்தார்.

யாகத்தின் பயனாய் அரக்கர் யாக குண்டத்தில் வந்து விழுந்து இறக்கலாயினர். பின் சிவபிரானும், புலஸ்திய, பிரம்மாவும் வந்து வேண்டிக் கொள்ள யாகத்தை நிறுத்தினார். அதனால் மகிழ்ந்த புலஸ்திய மகரிஷி பராசரருக்குப் பூர்ண ஸம்ஹிதை”என்ற நூலை எழுத அருள் செய்தார்.

இவர் தன் தாயின் கர்ப்பத்திலேயே வேதங்களைச் சொன்னவர். இவரது புதல்வர் தான் வேத வியாசர். பராசரரின் மனைவியின் பெயர் சத்யவதி.

பராசரரின் மக்கள் தத்தன், அநந்தன், நந்தி, சதுமுகன், பருதிபாணி, மாலி என்னும் அறுவரும் சரவணப் பொய்கையில் முதலையுருக் கொண்டு விளையாடினர்.

இவ்விளையாட்டினால் பொய்கையில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. பொய்கையில் நீராட வந்த பராசரர் இதனைப் பொறுக்காமல் அறுவரும் தன் மக்கள் என்றும் பாராமல் சபித்தார்.

சரவணப் பொய்கையில் ஆறு திருமேனிகள் கொண்டு விளங்கினான் ஒரு திருமுருகன்.இவ் ஆறு திருமேனிகளையும் ஆர்வத்துடன் அம்பிகை கட்டியணைத்தாள். ஆறு திருமேனிகளும் ஒன்றாக இணைந்து முருகன், கந்தன் என்னும் திருநாமம் பெற்றான்.

இக்கந்தப் பெருமானுக்கு அன்னை தன் திருமுலைப் பாலை ஊட்டினாள். அந்த சிவ ஞானப்பால் சரவணப் பொய்கையிலும் பெருகியது. அதனை உண்டு மீன்களாய் இருந்த பராசரரின் குமாரர் அறுவரும் சாபவிமோசனம் பெற்றனர்.

நட்சத்திரம், திதி முதலியன அனைத்தும் குறிப்பிட்ட ஒருநாளில் நல்ல நிலையில் உச்சத்தில் இருக்கும்போது, மனைவியின் வழி ஒரு குமாரனைப் பெற்றால் அவன் உலகம் போற்றும் உத்தமன் ஆக இருப்பான் என்பதனை உணர்ந்தார்.

அத்தகைய புனிதமான நாள் வர, அந்நாளில் தம் மனைவியை அடையப் பராசரர் தவத்தில் இருந்து தம் பர்ணசாலைக்குப் புறப்பட்டார். வழியில் யமுனை நதி குறுக்கிட்டது. தாசராஜனின் வளர்ப்பு மகள் யமுனையில் படகு விட்டுக் கொண்டு இருந்தவள், படகுத்துறையில் படகுடன் இருந்தாள்.

பராசரர் படகை அக்கரைக்கு விடுமாறு கூறினார். ஸ்வாமி! படகுக்குத் தேவையான பாரம் வேண்டுமே! தாங்கள் ஒருவர்தான் இருக்கின்றீர்! இன்னும் சிலர் வந்தால் படகினை ஆற்றில் இறக்கி விடலாம் என்றாள் மச்சகந்தி.

பெண்ணே! படகினுக்குத் தேவையான பாரமாக நான் ஒருவனே இருப்பேன். படகினை நதியில் விடு என்று அவசரப்படுத்தினார் முனிவர். யாரோ ஒரு மகானுபாவர் என்று எண்ணிய மச்சகந்தி படகினை விடச் சம்மதித்தாள். படகு யமுனைக்குள் சென்றது. முனிவர் வானை ஆராய்ந்தார். நட்சத்திரம் உச்சத்தினை அடைந்தது. தாம் கணித்த நேரம் வந்து விட்டதனை உணர்ந்தார். இனி தம் ஆசிரமம் செல்லுவதற்குள் குறிப்பிட்ட காலம் கடந்து விடும் என உணர்ந்தார். மச்சகந்தியிடம் செய்தியைத் தெரிவித்து அவள் சம்மதத்துடன் அவளைப் பரிமளகந்தியாக ஆக்கி நதியின் நடுவே ஒரு த்வீபத்தை (தீவை) உண்டாக்கி அங்கே அவளிடமாக ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தை த்வீபத்தில் பிறந்ததால் துவைபாயனர் எனப்பட்டது. அக்குழந்தை தான் வேத வியாசர்.

ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளினார் பராசரர். இவர் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு ஆண்டுகள் கர்ப்ப வாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களையும் சரங்களையும் பராஜயம் (தோல்வி) அடையச் செய்தமையின் பராசரர் எனப்பட்டார்.மன்மதனின் பஞ்ச பாணங்களையும் பராஜயம் அடையச் செய்தமையாலும் (காமத்தை வென்றவர் என்று பொருள்) பராசரர் எனப்பட்டார்.

இவர் எழுதியது ஸ்ரீ விஷ்ணு புராணம். இது இவர் உலகுக்கு வகுத்துக் கொடுத்த பக்தி மார்க்கம். ஸ்ரீமத் பாகவதத்திற்கு மூலநூல் ஆகும். ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வேதாந்த கருத்துகள் பின்னிப் பிணைந்து இருக்கும்,

இவர் கர்ம நெறிகள், வாழ்க்கை முறைகள். சமூகக் கோட்பாடுகள், தனிமனித நியாயங்கள். தர்ம சாத்திரமாக “பராசரர் ஸ்மிருதி’ என்று எழுதியுள்ளார்.

பகைவர்களிடத்தும் கோபம் கொண்டு எதிரம்பு செலுத்தாமையாலும் பராசரர் எனப்பட்டார்.

தாயின் கர்ப்பகத்தில் இருந்து மந்திர உச்சாடனம் செய்து வயிற்றை பீறிக் கொண்டு வந்ததாலும் பராசரர் எனப்பட்டார்.

தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணு மூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சிப் பூமியில் புதைத்தார்.

வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவர முயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார்.உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவாநி கூடலில் உள்ள நதி இதுவாம்.

பராசரர் முனிவர் மகாராஸ்டிர மாநிலத்தில் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. “பன்ஹலா கோட்டை” கோலாபூர் ஜில்லாவில் உள்ளது. அந்தக் கோட்டையில் உள்ள ஒரு குகை பராசரர் வாழ்ந்த இடம் என்று மக்கள் கருதுகின்றனர். இந்தியாவின் புராணங்களால் ஒரு மிகச் சிறந்த முனிவராக போற்றப்படுபவர் பராசரர். பீஷ்மரை அம்பு படுக்கையில் பார்த்தவர்.

பராசரர் ஜோதிட சாஸ்திரத்தை உலகிற்கு அளித்தவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

———————

அது வசந்த காலமாகையால், மன்னன் {உபரிசரன்} சென்ற கானகம், கந்தர்வ மன்னனின் தோட்டத்தைப் போல அழகாக இருந்தது. அங்கே அசோகங்களும், சம்பகங்களும் {செண்பகங்களும்}, சுதங்களும் {மாமரங்களும்}, அதிமுக்தங்களும் {தினிசமரங்களும்} நிறைந்திருந்தன. அங்கே புன்னாகம் {புன்னை}, கர்ணீகரம் {கொன்றை}, வாகுலம் {மகிழம்}, திவ்யபாதாளம் {பாதிரிமரங்கள்},பாதாளம் {பலா}, நாரிகேளம் {தென்னை}, சந்தனம், அர்ஜுனம் {மருதமரம்} போன்ற அழகான புனிதமான மரங்கள் பெரும் நறுமணத்தோடும், சுவை நிறைந்த கனிகளோடும் காட்சியளித்தன.
அந்த முழுக் கானகமே கோகிலப் பறவைகளின் {குயில்களின்} இனிய நாதத்தால் பித்துப்பிடித்தது போல இருந்தது. போதையுடனிருந்த வண்டுகளின் ஹூங்காரத்தை அந்தக் கானகம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மன்னன் {உபரிசரன்} மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தான், ஆனால் தனது மனைவியை {கிரிகையை} தன் முன்னால் காணவில்லை. ஆசையால் பித்துப்பிடித்து, அந்தக் கானகம் முழுதும் அங்குமிங்கும் அலைந்தான். அடர்ந்த இலைகளைக் கொண்டதும், அழகான மலர்களால் மூடப்பட்ட கிளைகளை உடையதுமான அசோக மரத்தைக் கண்டு,அதன் நிழலில் அமர்ந்தான். அந்தக் காலத்தின் இனிமையாலும், சுற்றியிருந்த மலர்களின் நறுமணத்தாலும், இதமான தென்றலாலும், அவனால் {உபரிசரனால்} அவன் மனதை அழகான கிரிகையை நினைக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை.
துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் (அறம்) மற்றும் அர்த்தம் (பொருள்) குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த அவன் {மன்னன் உபரிசரன்} அதனிடம் {பருந்திடம்} சென்று, “இனிமையானவனே, இந்த எனது வித்தை {உயிரணுவை} எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் {கிரிகையிடம்} இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது” என்றான் {சேதி நாட்டின் மன்னன் உபரிசரன்}.
அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் {உபரிசரனிடம்} அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.
அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.
இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.
உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.
வசுவின் {உபரிசரனின்} வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.
சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த {அப்சரஸ் அத்ரிகை} மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.
அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, (அவர்கள் அந்த மன்னனின் குடிகளாக இருப்பதால்) மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.
அவர்கள் {மீனவர்கள்}, “ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்” என்றனர்.
ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.
அவள் {அப்சரஸ் அத்ரிகை} முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் (சபித்தவரால்), தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.
அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.
அதன்பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.
அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, “இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்” என்றான்.
அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}.
தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.
பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்.
திரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், “அஞ்சாதே” என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் “யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்” என்று சொன்னார்கள்.
அத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்” என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.
முனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, “ஓ அருளப்பட்டவளே! எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக” என்றார்.
அதற்குச் சத்தியவதி, “ஓ புனிதமானவரே! {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது?” என்றாள் {சத்தியவதி}.
அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.
முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி}, “ஓ புனிதமானவரே! {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே! {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.
ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும்? அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்றாள்.
அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, “எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.
ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை” என்றார்.
இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.
கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.
அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.
இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.
வரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள்.
அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.
அவன், “சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்” என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.
அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர் (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும், வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக வேதங்களைத் தொகுத்தார்.
அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.
பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும்), வைசம்பாயனர் மூலமாகவும் வெளிப்பட்டது.
சூரியன் ஆகாயத்தில் எழுந்து கொண்டிருந்த நேரத்தில் பராசர முனிவர் காலையில் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது அவ்விடத்திற்கு மைத்ரேய முனிவர் தனது குருநாதரை காண்பதற்காக வந்திருந்தார். தன்னுடைய குருநாதரை கண்டதும் அவரை வணங்கி நின்றார்.
குருநாதரான பராசர முனிவர், அதிகாலைப் பொழுதில் தன்னுடைய சீடன் தன்னை காண வந்திருக்கின்றார் என்றால் அவருடைய மனதில் பலவிதமான எண்ணங்களும், ஐயங்களும் ஏற்பட்டிருக்கும் என்பதை அவரை வணங்கிய விதத்திலிருந்து கண்டறிந்தார். பின்பு குருநாதர் தனது சீடனை நோக்கி மனதில் என்ன குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றாய். ஏதேனும் ஐயம் உள்ளதா? என்று வினாவினார்.
மைத்ரேய முனிவரும் தனது குருநாதரை வணங்கி ஆம் குருநாதரே! அனைத்து வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும், வேதாந்தங்களையும் தங்களிடமிருந்து நான் கற்றறிந்தேன். இன்று பல சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிஞர்கள் பலர் எம்மை பாராட்டுவதற்கு முதன்மை காரணமே தங்களிடம் நான் கற்றதே ஆகும் என்று கூறினார்.
குருவும் தனது சீடனை நோக்கி சாஸ்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும், யாமறிந்த செய்திகளையும் உமக்கு எடுத்து கூறினோம். ஆயினும் அவைகள் உண்மை வந்தடைய வேண்டும் என்பது இருந்ததினால் மட்டுமே உம்மால் அதை முழுமையாக கற்றறிய முடிந்தது என்று கூறினார்.
சீடரும் தமக்கு கலைகளை கற்றுக்கொடுத்த குருவை வணங்கி பின்பு குருவே எமக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது அதை பற்றி தாங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறினார்.
குருவும் உமது சந்தேகங்களை எடுத்துரைப்பாயாக! எம்மால் முடிந்த அளவு அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றேன் என்று கூறினார்.
குருவே! தர்மங்கள் பல அறிந்தவரே! நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த உலகம் எவ்விதத்தில் உண்டாகியது?
இனி வரப்போகின்ற நாட்களில் இந்த உலகம் தன்னை எவ்விதத்தில் மாற்றிக்கொள்ள இருக்கின்றது? என்பதையும்
இந்த உலகம் எதன் சொரூபமாக விளங்குகின்றது?
உலகம் எப்படி உருவாயிற்று?
எங்கே இருக்கின்றது?
பஞ்சபூதங்கள் எப்படி உருவானது?
அவைகள் எவ்விதத்தில் நம்மை கட்டுப்படுத்துகின்றன?
மேலும் தேவதைகள், உயிரினங்கள் முதலியவற்றின் உற்பத்திகளையும், படைப்பு தொழிலானது எப்படி தோன்றியது? என்பதையும்
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய கடல்கள், மலைகள் எவ்விதத்தில் தோன்றி இருக்கின்றன? என்பதையும்
அவைகள் பூமியில் இருக்கக்கூடிய நிலைகளை பற்றியும்..
பூமிக்கு வெளிச்சத்தை அளிக்கக்கூடிய சூரியன் மற்றும் சந்திர கோள்களின் நிலைகளை பற்றியும்..
அவர்களுடைய அளவுகளை பற்றியும்..
தேவர்களுடைய அம்சங்களை பற்றியும்..
மனுக்கள், மனுவந்தாரங்ளையும், மகா கல்பங்களையும், நான்கு யுகங்களின் பிரிவுகளையும், அவைகளுடைய முடிவு நிலைகளையும், ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய தர்மங்களையும் நான் அறிந்துகொள்ள மிகுந்த ஆவல் கொண்டிருக்கின்றேன்.
“பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்?” என்று மைத்ரேயர் கேட்டார்.
பராசர மகரிஷி கூறலானார், “மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான்.
ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா?! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.
இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன்.”
“மைத்ரேயரே! நிமிஷகள் 15 கூடியது 1 காஷ்டை; அந்தக் காஷ்டை 30-தானால் அது ஒரு கலை, அந்தக் கலைகள் 30-தானால் 1 முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு 1 அகோராத்திரம்; அதாவது 1 நாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் 2 பக்ஷங்களோடு கூடிய 1 மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் (12) தட்சணாயனம் உத்திராயணம் என்ற 2 அயனங்கள் சேர்ந்து 1 வருஷமாகும்.
தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் 12000 ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம் (4). அதில் கிருதயுகம் நாலாயிரமும் (4000) சந்தி, சந்தியம்சங்கள் 800 திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட 3600 ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட 2400 தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு 1000 சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறு(200)-மாக இருக்கும்
சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது, கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் (1000 x) திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் 14 மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக!”
“மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் 71 மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி 100 தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே, 30 கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.
இப்படிப் 14 மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள்.
அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன்.
இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் 50 ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீ வராக கல்பம்!”
தரணீதராய நமஹ…..!!!
பிரம்மதேவர் உலகைப் படைப்பதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஊழிக் கடலுக்குள்
மூழ்கி இருப்பதை உணர்ந்தார். அந்த நிலத்தை நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து நிறுத்தினால் தானே அவரால் உயிர்களைப் படைக்க முடியும்? அதனால் ஊழிக் கடலுக்குள் மூழ்கி இருக்கும் பூமியை உயர்த்துமாறு திருமாலிடம் பிரார்த்தனை செய்தார் பிரம்மா.
கடலுக்குள் மூழ்கிப் பூமியை மீட்டெடுப்பதற்கு ஏற்றபடி மிகப்பெரிய பன்றி வடிவில் தோன்றினார் திருமால். அதைத் தான் வராக அவதாரம் என்கிறோம். வேதமும் யாகங்களும் உலகைத் தாங்கி நிற்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் உலகைத் தாங்கிப் பிடிக்கப் போகும் வராகப் பெருமாள் வேதம், யாகம் இவற்றையே தனக்கு உடலாகக் கொண்டு அவதரித்தார்.
கடலுக்குள் அழுந்திக் கிடந்த பூமிதேவி, “தாமரைக் கண்ணனே! மாதவனே! நீர் தான் அடியேனைக் காத்தருள வேண்டும். நான் உன்னால் உருவாக்கப்பட்டவள். உன்னிடத்தில் நிலைநிற்பவள். உன்னையே சரணமாகப் பற்றியவள். மாதவனாகிய உன்னையே சார்ந்திருப்பதால் நான் மாதவி என்றழைக்கப்படுகிறேன். உடைமையை மீட்க வேண்டியது உடையவனின் பொறுப்பன்றோ?” என்று வராகப் பெருமாளிடம்
வேண்டினாள்.
நிலமடந்தையின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்த வராகப் பெருமாள், பன்றிகளைப் போல் குர் குர் என்ற ஒலி எழுப்பினார். அந்த ஒலி சாம வேத கானதைப் போல் இனிதாக இருந்தது. அந்த ஒலியோடு கடலுக்குள் மூழ்கினார். கோரைக் கிழங்கைப் பன்றிகள் கொத்தி எடுப்பது போல், பூமியை இடந்தெடுத்தார். கடலில் இருந்து ஒரு நீல மலை, இரண்டு பிறை சந்திரன்களைத் தன் மேல் ஏந்தியபடி வந்தால் எப்படி இருக்கும்? அதுபோல் பிறைச் சந்திரனைப் போன்ற தனது இரண்டு கோரைப் பற்களுக்கு நடுவிலே பூமியை ஏந்தியபடி, நீல மலைபோல் கடலில் இருந்து மேலே வந்தார் வராகப் பெருமாள்.
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!”
என்று நம்மாழ்வார் இதை அனுபவிக்கிறார்.
அப்போது பூமி தேவி, “சுவாமி! இந்த ஊழிக் கடலில் இருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். ஆனால் பிறவிப் பெரும் கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் துன்பப் படுகிறார்களே! அவர்களைக் காக்க என்ன வழி?” என்று கேட்டாள்.
அப்போது அனைத்து ஜீவராசிகளும் பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனடியை அடைவதற்குரிய எளிய வழிமுறைகளைச் சொல்லும் வராக புராணம் என்ற புராணத்தைப் பூமிதேவிக்கு வராகப் பெருமாள் உபதேசித்தார்.
அதில் முக்கியமாக, “ஒருவன் இளம் வயதில், உடலும் மனதும் வலிமையோடு இருக்கும் காலத்தில், எனக்குப் பூமாலை சமர்ப்பித்து, என் நாமங்களைப் பாமாலையாகப் பாடினால், அந்த பக்தன் முதுமைக் காலத்தில் என்னை மறந்தாலும் நான் அவனை மறக்காமல் அவனைக் காத்தருள்வேன்!” என்று வராகப் பெருமாள் வாக்களித்தார்.
பூமியை மீட்டுக் கொண்டு மேலே வந்த வராகரைத் தரிசித்த முனிவர்கள் யக்ஞவராகனாக அப்பெருமாளைக் கண்டு துதி செய்தார்கள். “இறைவா! யாகத்தின் அங்கங்கள் அனைத்தும் உனது திருமேனியின் அங்கங்களாக உள்ளன. உனது இரு கரங்களும் இரு திருவடிகளும் சேர்ந்து நான்கு வேதங்களாகும். உனது தலையே வேதத்தின் தொடக்கமாகிய பிரணவமாகும். உனது கோரைப் பல்லே யாகத்தில் பயன்படுத்தப்படும் யூபஸ்தம்பம் ஆகும். உனது மற்றைய பற்களே யாகங்கள். உனது நாக்கே அக்னி ஆகும். உனது ரோமங்களே தர்ப்பைப் புற்கள். யாகத்துக்குரிய காலங்களாகிய காலை, மாலை இரண்டும் உனது இரு கண்கள். உனது மூக்கே யாகக் கரண்டி!” என்றெல்லாம் வர்ணித்தார்கள் அம்முனிவர்கள்.
மேலும், “எங்களை எல்லாம் பூமி தேவி தாங்குகிறாள். நீயோ அந்த பூமியையே தாங்கிப் பிடித்து மீட்டெடுத்துள்ளாய்!” என்று சொல்லி வராகனைத் துதித்தார்கள் முனிவர்கள். வராகர் பூமியைக் கடல் மட்டத்துக்கு மேல் நிலைநிறுத்தியவாறே பிரம்மா படைப்புத் தொழிலை நடத்தியதாக வரலாறு.
(மேற்கூறிய வரலாறு விஷ்ணு புராணத்தை அடியொற்றிக் கூறப்பட்டுள்ளது. இரணியனின் தம்பி இரணியாக்ஷன் பூமியைக் கடலுக்குள் அழுத்தி வைத்ததாகவும், அவனைக் கொன்று பூமியை வராகர் மீட்டதாகச் சொல்லும் வேறு புராணங்களும் உண்டு.)
‘தாரணம்’ என்றால் தாங்குதல் என்று பொருள். அவ்வாறு தாரணம் செய்வதால், பூமி தேவியைத் ‘தரணீ’ என்று அழைக்கிறோம். அந்தத் தரணீயையே தரிப்பதால் (தாங்குவதால்), திருமால் ‘தரணீதர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 237-வது திருநாமம்.
“தரணீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் படி, பூமியை உயர்த்திக் காத்த வராகர் அருள்புரிவார்.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Posted in Puraanankal, Sri Vaishna Concepts | Leave a Comment »

பதினெட்டின் பெருமை –ஸ்ரீ கல் கருடனின் மஹிமை —

December 23, 2022

ஸ்ரீ சுதர்சனாழ்வார் – ஹேதீஶ்வரர் – எல்லா ஆயுதங்களுக்கும் ராஜா அவர். 8,16,32 என்ற எண் வரிசையில் காட்சி அளிக்கிறார்.

சில ஆகமங்களில் 8,16,32 ஆயுதங்களுடன் சக்க்ரத்தாழ்வாரை ப்ரதிஷ்டை செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரங்கத்தில் 32 என்ற எண் கணக்கில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம்.

அங்கு இருக்கும் 32 பேர் சக்கரத்தாழ்வாரின் 32 ஆயுத மூர்த்திகளாக இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் நித்ய ஸூரிகள், அவர்கள் சுதர்சனாழ்வார் போல் ஆயுத ரூபம் தரித்துப் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணுகிறார்கள்.

ஆக, ஸ்ரீரங்கத்தில் உள்ள சுதர்சனாழ்வார் மூலவரைச் சுற்றி ஆயுத மூர்த்திகள் உள்ளனர் எனத் தெரிகிறது.

சுதர்சன ஆழ்வார் 8 பூஜங்களுடனும் 8 ஆயுதங்களுடனும் இருக்கின்றார். எல்லா ஆயுதங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார். அதை காண்பிக்கும் படியாக 8 பூஜங்களில் 8 ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றார். 8 என்பது உபலக்ஷணம் தான்.

32 என்பது ஸம்ப்ரதாயத்தில் விசேஷமானது. வேதம், இதிஹாச புராணங்களில் இதன் சிறப்புக் காணப்படுகிறது.

நடாதூர் அம்மாள் இயற்றிய ஹேதி புங்கவஸ்தவத்தில் 32 வரிகள்.‌ ஒவ்வொரு வரியும் ஜய என்கின்ற சப்தத்தில் ஆரம்பமாகின்றது.

இதைப் பின்பற்றி ஸ்வாமி தேசிகனும் சுதர்ஶனாஷ்டகத்தில் 32 முறை உபயோகப்படுத்தி இருக்கின்றார். ஒரு ஶ்லோகத்தின் உடைய கடைசியில் நான்கு முறை ஜய வருகின்றது. 8 ஶ்லோகம் என்பதால் 32 கணக்காகின்றது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

—————————-

ராமாயணத்தில் 18 சர்க்கம் திருப்பு முனையாக இருக்கும்
பால காண்டத்தில் ராமாவதாரம்
அயோத்யா காண்டத்தில் கைகேயி வரம்
ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகை முக்கு அறுபட்டது
கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வதம்
ஸூ ந்தர காண்டத்தில் திருவடி சீதாப்பிராட்டியைக் காண்பது
யுத்த காண்டத்தில் இந்திரஜித்தை கொல்லும் ரஹஸ்யத்தை விபீஷணன் தெரிவித்தல்
உத்தர காண்டத்தில் வேகவதியின் சாபம்
ஆக அனைத்துமே ராவண வத நோக்குக்கே அமைந்தவை –

——————————-

மகாபாரதத்தை பொறுத்தவரை பருவங்கள் 18.
கீதையின் அத்தியாயங்கள் 18.
பாரதப் போர் 18, நாட்கள் நடைபெற்றது.
பாரதப்போரில் கலந்துகொண்ட படைகள் 18 அக்குரோணிகள்.
ஓரு அக்குரோணி என்பது ….
தேர்கள் 21870 : 2+1+8+7+0 = 18,
யானைகள்  21870 : 2+1+8+7+0 = 18,
குதிரைகள் 65610 : 6+5+6+1+0 = 18
வீரர்கள் 109350 : 1+0+9+3+5+0 = 18,
இவற்றின் மொத்தக் கூட்டுத்தொகை: 218700 : 2+1+8+7+0+0 = 18
தர்மருக்கு பீஷ்மர் உபதேசம் செய்த ராஜ தர்மங்கள் 18
அரசர் வழங்கவேண்டிய தண்டனைகள் 18
இராமாயணப்போர் 18 மாதங்கள் நடைபெற்றது.
தேவ அரசுப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது.
சபரிமலையின் படிக்கட்டுக்கள் 18
புராணங்கள் 18
கலம்பகத்தின் உறுப்புக்கள் 18
நூல்களை பதினெண் மேல் கணக்கு என்றும், பதினெண் கீழ்க்கணக்குகள் என்றும் பதினெட்டு பதினெட்டாக வகைப்படுத்தினர்.
சித்தர்கள் 18.
வேதத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் 18
ஆடிமாதம் 18ம் நாளை விதையிடச் சிறந்த நாளாகக் கொண்டு பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர்..
18 – இந்த எண்ணில்தான் அதன் தசம எண்களைக் கூட்டினால் (1+8)
வரும் எண் 9. 18-ஐ இரண்டாகப் பகுத்தாலும் 9.
வேறு எந்த எண்ணிலும் இந்தப் பண்பு இல்லை.
18 -> 1+8 = 9. 9 X 2 = 18.
18 108 (அஷ்டோத்தரம்), 1008 (சஹஸ்ரநாமம்) என விரியும்.
10, 100, 1000 – முன்பு தனித்தனிச் சின்னங்களாக எழுதுவது வழக்கம்.
பின்னர் ஆதி எண்ணான எட்டைச் சேர்த்துகிறோம்
ஒன்பதிற்றிரட்டி – பதினெட்டுக்கு-முதன்மை தந்து பேசுவார் இளங்கோவடிகள் :
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட் டுவன்..
தத்துவங்கள், ‘பதினெட்டு’
தமிழ் மெய் எழுத்துகள், ‘பதினெட்டு’
இலக்கியங்கள், ‘பதினெட்டு’
இணையில்லா சித்தர்கள், ‘பதினெட்டு’
இப்படி பதினெட்டின் பெருமைகளை பாங்காக பட்டியலிடலாம்!

குழந்தைகள் பேசும் மழலை மொழிக்கு செவிகொடுக்காத தாயும் உலகில் உண்டோ! குழந்தைகளின் குரலுக்கு இரங்காத ஒரு தாய் உலகில் உண்டோ? அதிலும் பெரும் பாரத நாட்டிற்கே அரசியான கோமகளுக்கு அந்த நிலை வருமா? என்று கவிஞர் கேட்கிறார். பாரதி காலத்தின் கணக்குப்படி பாரத மக்களின் மொழிகள் மொத்தம் பதினெட்டு. இன்றும் அம்மொழிகள் பாரத மக்களால் பேசப்பட்டும், வளர்க்கப் பட்டும் வருகின்றன. பாரத மக்கள் தங்களுடைய பதினெட்டு மொழிகளிலும் பாரத அன்னையைப் புகழ்ந்து, பாராட்டிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெருமை வேறு எந்த நாட்டிற்கு இருக்கிறது? அன்புடன் வந்து எங்களை ஆண்டு அருள் செய்வாயாக! ஈன்றவளே! உனது உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களைக் காப்பாயாக! என்று மகாகவி பாரதி பாடுவது நம் அனைவரின் உள்ளத்தை உருக்குவதாகும்.

மதலையர் எழுப்பவும் தாய் துயில் வாயோ மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?
குதலை பொழிக்கிரங்கா தொரு தாயோ? கோமகளே! பெரும் பாரதர்க்கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறுனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்தெமை ஆண்டருள் செய்வாய் ஈன்றவளே! பள்ளி யெழுந்தருளாயே!

என்று பாரதி பாடி பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடி முடிக்கிறார்.

பழந்தமிழ்ச் சமுதாயத்தில் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும், எண் எழுத்து இகழேல் என்ற கூற்றுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கணித மேதை ஆரியபட்டரின் கண்டுபிடிப்பான பூச்சியம் ,கணித உலகுக்குக் கிடைத்த பெரிய வரம்.

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்:

1.காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2.குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3.லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4.மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5.மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6.டம்பம் (வீண் பெருமை):
இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும்.அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7.அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8.சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9.ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10.தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. 11.ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12.மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். 13.அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். 14.கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15.காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16.மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17.நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. 18.மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

———–

1 முதல் 9 வரையிலான எண்கள் அராபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் சொல்வதை நமது தேச பாடநூல்களிலும் அப்படியே கற்பிக்கின்றோம். ஆனால் அராபிய வரலாற்றாசிரியர்களோ இவற்றை ஹிந்துக்கள் தந்த கொடை என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். ‘ஹிந்தஸா’ என்று இவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.

கணிதத்தை பல வகையாகப் பிரித்துள்ளனர்.

வியக்த கணிதம் – கால்குஸ்
அவ்வியக்த கணிதம் (அல்லது)
பீஜ கணிதம் – அல்ஜீப்ரா
க்ஷேத்ர கணிதம் – திரிகோணமிதி

“லீலாவதி சம்ஹிதை” என்ற நூல் நமது முன்னோரின் கணிதப் புலமையை பறைசாற்றும் நூல்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய மிகப் பெரிய எண் 1053. இதை கி.மு. 5000 ஆவது ஆண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106. நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய எண் 1012 தான்.

பத்மம் என்றால் லட்சம்-கோடி, அதாவது 1012. பிரம்மாவின் ஒரு பகல் 432 கோடி மனித ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்து 824 x 107 ஆண்டுகள்

நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்;

சமஸ்க்ருதத்திற்கு பாணினி உருவாக்கிய கட்டமைப்பின் காரணமாக அது இன்று கம்ப்யூட்டருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாக ஏற்கப்படுகிறது.

பூமி சூரியனை சுற்ற ஆகும் காலத்தை அறிஞர் ஸ்மார்ட் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லிவிட்டார். (365.258756484 நாட்கள்.) மயம்

ஒரு விநாடி நேரத்தை 33.750 பகுதிகளாகப் பிரித்து அதை ‘த்ருதி’ என்ற நுண்ணிய கால அளவை கணக்கிட்டுள்ளார்கள்.

உலோகவியல்

4,000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான உருக்கு தயாரானது என்பதற்கு டில்லியில் 10 டன் எடையுள்ள 24 அடி உயரமுள்ள துருப்பிடிக்காத தூண் சாட்சியாக உள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன எஃகு உற்பத்திக் கூடம் சென்னிமலை அருகில் கொடுமணல் என்ற ஊரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

1896 வரை உலகத்திலேயே பாரதத்திலிருந்து தான் வைரம் வந்ததாக அமெரிக்க வைர ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது.

பேராசிரியர் வில்சன், “அண்மைக் காலத்தில்தான் இங்கிலாந்தில் நாம் இரும்பை உருக்கி வார்க்கும் கலையைக் கையாண்டு வருகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இரும்பை உருக்குகிற, இணைக்கின்ற மற்றும் எஃகு இரும்பை உருவாக்கிற கலையை மிகப் பழங்காலம் முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கையாண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

———–

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்” என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா” என்றார் தேவசேனாபதி.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா” என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?” என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு” என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா… ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறாய்?” என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?” மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்” என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்.”

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்” என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?” என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப் பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்று விடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்து கொண்டே வரும்” என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்” என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே #நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Sri Vaishna Concepts | Leave a Comment »

ஹஸ்த வகைகள் -முத்திரை (பரத நாட்டியம்)–

December 13, 2022

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்

1. அபய ஹஸ்தம்

பெருமாள் தன் வலது திருக்கரத்தின் விரல்களை மேல் நோக்கி வைத்து இருப்பார். இதற்கு பொருள் “அஞ்சேல்! பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன்” என்பதாகும். இது பல கோயில்களில் காணப்படும் ஹஸ்தம். திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் அபய ஹஸ்தம் வைத்துள்ளார்.

இறைவனின் அல்லது இறைவியின் வலக்கை விரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி தன் எதிரில் நின்று தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, ‘‘நான் உங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், நான் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை; கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.

2. வரத ஹஸ்தம்

பெருமாள் தன் வலது திருக்கரத்தின் விரல்களை தன் திருவடியை காட்டி வைத்திருப்பார். இதன் பொருள், “தன் திருவடியை சரணம் என்று அடைந்தவருக்கு, சரணாகதி தருவேன்” என்பதாகும். திருப்பதி மூலவர், வேங்கடநாதன் வரத ஹஸ்தம் வைத்துள்ளார்.

வரத ஹஸ்தம் – இறைவனின் கை விரல்கள் கீழ் நோக்கி நீட்டியபடியும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும். ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

இறைவன் அல்லது இறைவியின் இடது உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளைச் சுட்டிக் காட்டும் நிலையிலும் இருக்கும் வடிவம் வரத ஹஸதம் அல்லது வரத முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி, ‘‘என் திருவடிகளை நீங்கள் சரணடைந்தால், அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள்; முழுமை பெறுவீர்கள்’’ என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.

3. ஆஹ்வான ஹஸ்தம்

பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார். இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.
திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் உற்சவர் ப்ரஹலாத வரதன் ஆஹ்வான ஹஸ்தம் வைத்துள்ளார்.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே எம்பெருமான் அழகியசிங்கராக சேவை சாதிக்கிறார்.  மூலவர் யோகநரசிம்ஹர்  – உத்சவர் தெள்ளியசிங்கர் அழைத்து, அருள் பாலிக்கும் பெருமாள் – ஒரு கை பக்தர்களை அழைக்கும் ‘ஆஹ்வான ஹஸ்தம்’ மற்றொன்று – பக்தர்களை பாதுகாத்து அரவணைக்கும் அபய ஹஸ்தம்.  ஸ்ரீநரசிம்மர் என்றால் உக்கிரம் .. அரக்கனை சிம்ம உருவாய் அழித்த அவதாரம் அல்லவா !

————

ஹஸ்த முத்திரைகள் மொத்தமாக 32 வகைகள் இருக்கின்றன.

அவற்றில் 24 முத்திரைகள் தொழிற்கை முத்திரைகள் ஆகும்.

மீதம் எழிற் கை முத்திரைகள் என நான்கும், இரட்டை கை முத்திரைகள் நான்கும் உள்ளன.

———-

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் ஸ்துதி மாலா

ஜிதந்தே மஹா ஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ
ஜிதந்தே ஜகத் ரக்ஷணார் தாவார
ஜிதந்தே ஹரே பாடலாத்ரௌ நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத

நமஸ்தே ஜகந்நாத விஷ்ணு முராரே
நமஸ்தே ந்ருஸிம்ஹ அச்சுதானந்த தேவ
நமஸ்தே க்ருபாலோ சக்ர பாணே
நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதா

பர ப்ரஹ்ம ரூபம் ப்ரபுத்தாட்ட ஹாஸம்
கர ப்ரௌல சக்ரம் ஹர ப்ரஹ்ம ஸேவ்யம்
ப்ரஸன்னம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்

க்ரிஜ ந்ருஹரிமீஸம் கர்விதாராதி வஜ்ரம்
பரம புருஷ மாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்
அபய வரத ஹஸ்தம் சங்க சக்ரேத தாநம்
ஸரண மிஹா பஜாம் ஸாஸ்வதம் ந்ருஸிம்ஹம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹ மஹாஸிம்ஹ திவ்யஸிம்ஹ
கிரி ஸம்பவ தேவேச ரக்ஷமாம் ஸரணாகதம்

இதி ஸ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹ ஸ்துதிமாலா ஸம்பூர்ணம் –

————

முத்திரை (பரதநாட்டியம்)

கை அசைவுகள் அல்லது முத்திரைகள் (சமசுகிருதம்: ஹஸ்தங்கள்) பரத நாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும்.

கை அசைவுகளை பரத நாட்டியத்தில் (சமஸ்கிருதத்தில்) ஹஸ்தம் என சிறப்பாக அழைப்பர்.

கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. இதை தமிழில் முத்திரை என்பர்.

பரத நாட்டியத்தில் அடவு,அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும்.

கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர்.

பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை ஒற்றைக்கை [இணையாக்கை], இரட்டைக்கை [இணைந்த கை] என இரண்டாகப் பிரயோகப்படுத்துகின்றனர்.

இவை தவிர்ந்த அபூர்வ முத்திரைகளும் உண்டு.

ஒற்றைக்கை முத்திரைகள்–

ஒரு கையால் செய்யப்படுவதால் ஒற்றைக்கை முத்திரை எனப்படுகிறது.

இது சமஸ்கிருதத்தில் அசம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்தெட்டாகும்.

முத்திரை கருத்து செய்முறை படிமம்
பதாகம் கொடி பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல். Hasthamudra1.JPG
திரிப்பதாகம் மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம் பதாகத்தில் மோதிர விரலை மடித்தல். Hasthamudra3.JPG
அர்த்தப்பதாகம் அரைக்கொடி திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.
கர்த்தரீமுகம் கத்தரிக்கோல் திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல். Hasthamudra9.JPG
மயூரம் மயில் திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.
அர்த்தச்சந்திரன் அரைச்சந்திரன் பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.
அராளம் வளைந்தது சுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.
சுகதுண்டம் கிளி மூக்கு பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.
முட்டி(முஷ்டி) முட்டிகை அனைத்து விரல்களையும் பொத்துதல்.
சிகரம் உச்சி முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல். Hasthamudra2.JPG
கபித்தம் விளாம்பழம் சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
கடகாமுகம் வளையின் வாய் நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல். Hasthamudra11.JPG
சூசி ஊசி முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல். Hasthamudra16.JPG
சந்திரகலா பிறைச்சந்திரன் சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல். Hasthamudra5.JPG
பத்மகோசம் தாமரை மொட்டு கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல். Hasthamudra17.JPG
சர்ப்பசீசம் பாம்பின் படம் பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல். Hasthamudra12.JPG
மிருகசீசம் மான் தலை பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல். Hasthamudra6.JPG
சிம்மமுகம் சிங்கத்தின் முகம் நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
காங்கூலம் அங்குலத்தை விட குறைந்தது மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
அலபத்மம் மலர்ந்த தாமரை சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல். Hasthamudra19.JPG
சதுரம் சாதூர்யம் மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
பிரமறம் வண்டு ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
கம்சாசியம் அன்னத்தின் அலகு பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
கம்சபக்சம் அன்னத்தின் சிறகு மிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல். Hasthamudra15.JPG
சம்தம்சம் இடுக்கி விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
முகுளம் மொட்டு விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
தாம்ரசூடம் சேவல் மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல். Hasthamudra7.JPG
திரிசூலம் சூலம் மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல். Hasthamudra18.JPG

இரட்டைக்கை முத்திரைகள்–

இரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது.

இது சமஸ்கிருதத்தில் சம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும்.

முத்திரை கருத்து படிமம்
அஞ்சலி வணங்குதல்
கபோதம் புறா
கர்கடம் நண்டு Hasthamudra13.JPG
சுவஸ்திகம் குறுக்கிட்டது Hasthamudra.JPG
டோலம் ஊஞ்சல்
புஸ்பபுடம் மலர்க்கூடை
உத்சங்கம் அணைப்பு
சிவலிங்கம் சிவலிங்கம் Hasthamudra14.JPG
கடகாவர்த்தனம் கோர்வையின் வளர்ச்சி
கர்த்தரீ ஸ்வஸ்திகம் குறுக்குக் கத்தரிக்கோல்
சகடம் வண்டி
சங்கு சங்கு
சக்கரம் சக்ராயுதம் ഹസ്തമുദ്ര3.JPG
சம்புடம் பெட்டி
பாசம் கயிறு
கீலகம் பிணைப்பு
மத்சயம் மீன்
கூர்மம் ஆமை
வராகம் பன்றி ഹസ്തമുദ്ര2.JPG
கருடன் கருடப்பறவை
நாகபந்தம் பாம்பின் கட்டு
கட்வா கட்டில்
பேருண்டம் பேருண்டப்பறவை
அவகித்தம் குறுக்கே மலர்ந்த தாமரை

——————-

லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். அப்படியென்றால் நட்சத்திரம்? அதுதான் நம் மூளை.

நம் வாழ்வில், நடக்கின்ற விஷயங்கள் அனைத்தும் ராசியால் நடக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில், நாம் எந்த நட்சத்திரமோ அந்த நட்சத்திரம் தான், நம் வாழ்வின் செயல்கள் அனைத்திற்கும் காரணம்.

27 நட்சத்திரங்களையும் மூன்று வகையாக பகுத்துப் பிரித்திருக்கிறது ஜோதிடம்.

1. தேவ கணம்
2. மனுஷகணம்
3. ராஜஸ கணம்

தேவகண நட்சத்திரங்கள் :
1) அஸ்வினி
2) மிருகசீரிடம்
3) புனர்பூசம்
4) பூசம்
5) அஸ்தம்
6)சுவாதி
7) அனுஷம்
8) திருவோணம்
9) ரேவதி

இந்த ஒன்பதும்தேவ கண நட்சத்திரங்கள். .

மனுஷ கண நட்சத்திரங்கள் :
1) பரணி
2) ரோகிணி
3) திருவாதிரை
4) பூரம்
5) உத்திரம்
6) பூராடம்
7) உத்திராடம்
8) பூரட்டாதி
9) உத்திரட்டாதி
.

இந்த ஒன்பதும் மனுஷ கண நட்சத்திரங்கள்.

ராஜஸ கண நட்சத்திரங்கள் :
1) கிருத்திகை
2) ஆயில்யம்
3) மகம்
4) சித்திரை
5) விசாகம்
6) கேட்டை
7) மூலம்
8) அவிட்டம்
9) சதயம்

இந்த ஒன்பதும் ராஜஸ கண நட்சத்திரங்கள்.

தேவகண நட்சத்திரங்கள் என்றால் உயர்ந்தவை, மனுஷ கண நட்சத்திரங்கள் என்பவை மத்திமமானவை, ராஜஸ கண நட்சத்திரங்கள் என்பவை தாழ்ந்தவை என்பதான சிந்தனையும் சந்தேகமும்  வேண்டாம்

நட்சத்திரத்தில் உயர்ந்தது தாழ்ந்தது என்பதெல்லாம் இல்லை. எந்த பேதங்களும் கிடையாது. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை.

வானம் தெளிவாகவும் இருக்கும்; மேகமூட்டத்துடனும் இருக்கும். கடல் அமைதியாகவும் இருக்கும்; கொந்தளிப்புடனும் இருக்கும். குளத்தில் நீர் நிறைந்திருக்கும்; வறண்டும் காணப்படும். அப்படித்தான்… நட்சத்திரங்களில் நிறை குறைகள் உண்டு.

தேவ கண நட்சத்திரக்காரர்களின் உடல் மெலிந்திருக்கும். மென்மையான தோலைக் கொண்டிருப்பார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எவரையும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள்.

எதிரிகளே இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். கோபத்தை வெளிக்காட்டமாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்து கறுவிக்கொண்டிருப்பார்கள்.

வீட்டை நேர்த்தியாக அழகுடன் பளிச்சென்று வைத்திருப்பார்கள். அலுவலகத்தில் இவருடைய இடம் எப்போதும் சுத்தமாக, அழகாக இருக்கும். அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். அதனாலேயே எளிதில் ஏமாறுவார்கள். அதேபோல் யார், எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள். கொஞ்சம் நைஸாகப் பேசி, இவரிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம்.

தேவ கண நட்சத்திரக்காரர்கள், நோய் தாக்கினால் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். சீசன் நோய்கள் என அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். சின்ன மழையில் நனைந்தாலே காய்ச்சல், சளி வந்துவிடும் இவர்களுக்கு. மது, புகை முதலான கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அதற்குப் பழகினால், அதில் இருந்து மீள முடியாதவர்களாக இருப்பார்கள். உறவினர்களால் பாதிப்புக்கு ஆளாவார்கள். எது எப்படியோ, மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதேபோல், தேவ கண நட்சத்திரக்காரர்கள், பல திறமைகளைக் கொண்டிருப்பார்கள். இறை சக்தி மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பலன்களை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவர்கள். முயற்சிகள் தோற்றுப் போனால், சோர்ந்து போய் விடுவார்கள். பசி தாங்க மாட்டார்கள். அதே சமயம், இன்னன்ன உணவு வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்.

இவர்கள், குடும்பத்தின் மீது அதிக பாசமும் நேசமும் கொண்டிருப்பார்கள். குழந்தைகளை திட்டமிட்டு வளர்ப்பார்கள். அவர்களின் வளர்ச்சிக்காக, ரொம்பவே மெனக்கெடுவார்கள்.

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள்.எளிமையான உடற் பயிற்சிகளை மட்டும் மேற்கொள்வார்கள். நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பார்கள்.

அடுத்து… மனுச கண நட்சத்திரக்கார்கள்:

நடுத்தரமான உடல்வாகு கொண்டவர்கள். சராசரியான உயரம் உடையவர்கள். உழைக்கத் தயங்காதவர்கள். தனக்கு ஆதாயம் இருந்தால்மட்டுமே அடுத்தவருக்கு உதவுவார்கள். பொருள் தேட எந்த ஊருக்கும், இடத்திற்கும் செல்பவர்கள் இவர்கள்.

குடும்பநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தனி மனித ஒழுக்கம் தவறுபவர்களாக சிலசமயங்களில் இருப்பார்கள். தீய பழக்கத்துக்கு எளிதில் வசமாவார்கள். அதேசமயம், விட்டுவிடவேண்டும் என்ற எண்ணம் வந்தகணமே விட்டுவிடுவார்கள்.

இவர்களுக்கு, எளிதில் நோய்தாக்கம் வராது, அப்படியே வந்தாலும் சிலநாளில் குணமாகிவிடுவார்கள். பயணங்களில் ஆர்வம் உடையவர்கள். சுற்றுலா ஆர்வம் உள்ளவர்கள். அதற்காகவே தனியாக சேமிப்பார்கள். எதிலும் திட்டமிடல் இருக்கும். குடும்பச் செலவுகளைக்கூட சரியாகத் திட்டமிட்டுக் கொள்வார்கள்.

ஆபரணங்களாக வாங்கி வைப்பவர்கள். தகுதிக்கு மேல் கடன் வாங்கமாட்டார்கள். அளவுக்கு அதிகமாக கடன்வாங்கினால் திருப்பிச் செலுத்தமுடியாமல் திண்டாடுபவர்கள்.

மனச்சோர்வு, மனசஞ்சலம் உடையவர்கள்.தோல்விகளில் பாடம் கற்பவர்கள். கடினமாகப் போராடி வாழ்வில் முன்னேறுபவர்கள். ஒருகட்டத்தில் சம்பாதிப்பது போதும் என்ற எண்ணம் வந்து வாழ்வை அமைதியாகக் கழிக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இனி, ராஜஸ கண நட்சத்திரக்கார்கள் :

நெடிய உருவம் கொண்டவர்கள். தடித்த உடல்வாகு உடையவர்கள். அதேபோல தடித்த தோல் உடையவர்கள். தலைமுடி கோரை போல இருக்கும். முன்கோபம்கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். தோல்விகளை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றியடையும் வரை விடாமுயற்சியுடன் போராடுபவர்கள்.

பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காதவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். பொருள்தேடி உலகம் சுற்றுபவர்கள். பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள். வேலை செய்துகொண்டிருந்தாலும் அதிகாரம் செலுத்தும் பதவியில் இருப்பவர்கள்.

நோய் பாதிப்பு குறைவாகக் கொண்டவர்கள். கெட்ட பழக்கங்கள் எளிதில் பற்றிக் கொள்ளும். அதிலிருந்து மீள மாட்டார்கள். ஆச்சரியம்… தீய பழக்கத்தால் குறைந்த பாதிப்புகளை மட்டுமே பெறுவார்கள்.

மன தைரியம் அதிகம் கொண்டவர்கள். துணிச்சலான முடிவுகளை எடுப்பார்கள். இறை நம்பிக்கை அளவோடு இருக்கும். முயற்சியே வெற்றி தரும் என்பதில் நம்பிக்கை உடையவர்கள்.

குடும்பப் பாசம் அளவோடு இருக்கும். ஆனால் குடும்பத்தினரின் தேவைகளை மிகச் சரியாக செய்து கொடுப்பார்கள். அதிக பொருள் சேர்க்கும் ஆசை உடையவர்கள். அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள்.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ மத் பாகவதத்தில்-ஸ்ரீ நாராயணீயத்தில் -ஸ்ரீ ருக்மிணி தாயார் -ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருமண வைபவம் –

December 6, 2022
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே
உருப்பிணி  நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான்  வீரம் சிதைய தலையைச்                      
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
                   தேவகி சிங்கத்தைப் பாடிப்பற  

ஸ்ரீ ருக்மிணி தாயாருக்கும்  ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் நடந்த தெய்வீகக் கல்யாணம் பற்றி

ஸ்ரீமத் பாகவதத்தில் 10-வது ஸ்கந்தத்தில் 52-53-54 அத்தியாயங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது

ஸ்ரீ நாராயணீயத்தில்-ருக்மிணி ஸந்தே3ச’ம்-78 சதகம் -ருக்மிணீ ஹரணம்-79-சதகம் –

———-

விதர்ப்ப நாட்டின் அரசன் பீஷ்மகா (Bhishmaka) என்பவனுக்கு 5 ஆண் குழந்தைகள் (ருக்மி, ருக்மரதா, ருக்மாபஹு, ருக்மகேஸா, ருக்மமாலி). ஒரு அழகிய பெண் குழந்தை. ருக்மிணி (வைதர்ப்பி) எனப் பெயர் கொண்ட இவள் படிப்பு, சங்கீதம், பக்தி போன்றவற்றில் தேர்ந்து விளங்கினாள்.

விதர்ப்ப நாடு இந்தியாவின் நடுநாயகமாக விளங்கும் விந்திய சாத்புரா மலை த் தொடர்  பகுதியைச் சார்ந்தது 
(விந்தியா =பிந்தியா = பிந்தி = நெற்றி நடுவில் இடும் போட்டு )

பல ஸத் கதைகளைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது அளவற்ற அன்பு கொண்டாள். ஸ்ரீ கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக் கொள்ள உறுதி கொண்டாள். தந்தை ஒத்துக் கொண்டாலும், அண்ணன் ருக்மி மறுத்து விட்டான்; தன் நண்பன் சிசுபாலனைத் தான் கல்யாணம் பண்ணிகொள்ள வேண்டுமென நிச்சயித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தான்.

துவாரகையில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தன் நிலையை விளக்கி விரிவாக ஒரு கடிதம் எழுதி, அதை அரச சபைக்கு வந்த ஒரு பாகவதர் மூலம் துவாரகைக்கு அனுப்பினாள். மொத்தம் 7 ஸ்லோகங்களில் தன் நிலையை விளக்கினாள். (ஸ்ரீமத் பாகவதம், ஸ்கந்தம் 10 – அத்தியாயம் 52 – ஸ்லோகங்கள் 37 முதல் 43 வரை).

கல்யாணத்திற்கு முதல் நாள் தான் ஒரு குறிப்பிட்ட அம்பிகை கோயிலுக்கு போவது சம்ப்ரதாயம் என்றும், அங்கு வந்து தன்னை தூக்கிக் கொண்டுபோய் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லியும் கிருஷ்ணனுக்கு சொன்னாள்.

கடிதத்தைப் படித்த கிருஷ்ணன் உடனே விதர்ப்பா வந்து, ருக்மி, சிசுபாலன் போன்றோரை வெற்றி கொண்டு, ருக்மிணியை தேரில் ஏற்றி துவாரகைக்கு வந்து, அங்கு தன் பெற்றோர் முன்னிலையில் பிராட்டியை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.

ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை முறைப்படி விவாகம் செய்து கொண்டு பிரத்யும்னன் எனும் பிள்ளையைப் பெற்றான்  .அதனால் திருமால் காமர் தாதை ஆயினார் ”

புராண குறிப்புகளின் படி கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, களின்டி, மித்ரவிந்தா, நாகனஜிதி, பத்ரா மற்றும் லக்ஷ்மண ஆவார்கள். மேலும் அவர் மேல அதிக ஈடுபாடு கொண்ட கோபியர் 16000 பேரையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தத்தில் கிருஷ்ணருக்கு 16008 மனைவிகள் இருந்தனர்.

—————-

ஏவம்ʼ ஸம்ப்ருʼஷ்டஸம்ப்ரஶ்னோ ப்³ராஹ்மண꞉ பரமேஷ்டி²னா .
லீலாக்³ருʼஹீததே³ஹேன தஸ்மை ஸர்வமவர்ணயத் .. 36..

ருக்மிண்யுவாச
ஶ்ருத்வா கு³ணான் பு⁴வனஸுந்த³ர ஶ்ருʼண்வதாம்ʼ தே
நிர்விஶ்ய கர்ணவிவரைர்ஹரதோ(அ)ங்க³தாபம் .
ரூபம்ʼ த்³ருʼஶாம்ʼ த்³ருʼஶிமதாமகி²லார்த²லாப⁴ம்ʼ
த்வய்யச்யுதாவிஶதி சித்தமபத்ரபம்ʼ மே .. 37..

கா த்வா முகுந்த³ மஹதீ குலஶீலரூப-
வித்³யாவயோத்³ரவிணதா⁴மபி⁴ராத்மதுல்யம் .
தீ⁴ரா பதிம்ʼ குலவதீ ந வ்ருʼணீத கன்யா
காலே ந்ருʼஸிம்ʼஹ நரலோகமனோ(அ)பி⁴ராமம் .. 38..

தன்மே ப⁴வான் க²லு வ்ருʼத꞉ பதிரங்க³ ஜாயா-
மாத்மார்பிதஶ்ச ப⁴வதோ(அ)த்ர விபோ⁴ விதே⁴ஹி .
மா வீரபா⁴க³மபி⁴மர்ஶது சைத்³ய ஆராத்³-
கோ³மாயுவன்ம்ருʼக³பதேர்ப³லிமம்பு³ஜாக்ஷ .. 39..

பூர்தேஷ்டத³த்தநியமவ்ரததே³வவிப்ர-
கு³ர்வர்சநாதி³பி⁴ரலம்ʼ ப⁴க³வான் பரேஶ꞉ .
ஆராதி⁴தோ யதி³ க³தா³க்³ரஜ ஏத்ய பாணிம்ʼ
க்³ருʼஹ்ணாது மே ந த³மகோ⁴ஷஸுதாத³யோ(அ)ன்யே .. 40..

ஶ்வோபா⁴வினி த்வமஜிதோத்³வஹனே வித³ர்பா⁴ன்
கு³ப்த꞉ ஸமேத்ய ப்ருʼதனாபதிபி⁴꞉ பரீத꞉ .
நிர்மத்²ய சைத்³யமக³தே⁴ந்த்³ரப³லம்ʼ ப்ரஸஹ்ய
மாம்ʼ ராக்ஷஸேனவிதி⁴னோத்³வஹ வீர்யஶுல்காம் .. 41..

அந்த꞉புராந்தரசரீமனிஹத்ய ப³ந்தூ⁴ன்
த்வாமுத்³வஹே கத²மிதி ப்ரவதா³ம்யுபாயம் .
பூர்வேத்³யுரஸ்தி மஹதீ குலதே³வியாத்ரா
யஸ்யாம்ʼ ப³ஹிர்னவவதூ⁴ர்கி³ரிஜாமுபேயாத் .. 42..

யஸ்யாங்க்⁴ரிபங்கஜரஜ꞉ஸ்னபனம்ʼ மஹாந்தோ
வாஞ்ச²ந்த்யுமாபதிரிவாத்மதமோ(அ)பஹத்யை .
யர்ஹ்யம்பு³ஜாக்ஷ ந லபே⁴ய ப⁴வத்ப்ரஸாத³ம்ʼ
ஜஹ்யாமஸூன் வ்ரதக்ருʼஶான் ஶதஜன்மபி⁴꞉ ஸ்யாத் .. 43..

ப்³ராஹ்மண உவாச
இத்யேதே கு³ஹ்யஸந்தே³ஶா யது³தே³வ மயாஹ்ருʼதா꞉ .
விம்ருʼஶ்ய கர்தும்ʼ யச்சாத்ர க்ரியதாம்ʼ தத³னந்தரம் .. 44..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ உத்தரார்தே⁴ ருக்மிண்யுத்³வாஹப்ரஸ்தாவே த்³விபஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 52..

———

ஶ்ரீஶுக உவாச
வைத³ர்ப்⁴யா꞉ ஸ து ஸந்தே³ஶம்ʼ நிஶம்ய யது³நந்த³ன꞉ .
ப்ரக்³ருʼஹ்ய பாணினா பாணிம்ʼ ப்ரஹஸன்னித³மப்³ரவீத் .. 1..

ஶ்ரீப⁴க³வானுவாச
ததா²ஹமபி தச்சித்தோ நித்³ராம்ʼ ச ந லபே⁴ நிஶி .
வேதா³ஹம்ʼ ருக்மிணா த்³வேஷான்மமோத்³வாஹோ நிவாரித꞉ .. 2..

தாமானயிஷ்ய உன்மத்²ய ராஜன்யாபஸதா³ன் ம்ருʼதே⁴ .
மத்பராமனவத்³யாங்கீ³மேத⁴ஸோ(அ)க்³நிஶிகா²மிவ .. 3..

ஶ்ரீஶுக உவாச
உத்³வாஹர்க்ஷம்ʼ ச விஜ்ஞாய ருக்மிண்யா மது⁴ஸூத³ன꞉ .
ரத²꞉ ஸம்ʼயுஜ்யதாமாஶு தா³ருகேத்யாஹ ஸாரதி²ம் .. 4..

ஸ சாஶ்வை꞉ ஶைப்³யஸுக்³ரீவமேக⁴புஷ்பப³லாஹகை꞉ .
யுக்தம்ʼ ரத²முபானீய தஸ்தௌ² ப்ராஞ்ஜலிரக்³ரத꞉ .. 5..

ஆருஹ்ய ஸ்யந்த³னம்ʼ ஶௌரிர்த்³விஜமாரோப்ய தூர்ணகை³꞉ .
ஆனர்தாதே³கராத்ரேண வித³ர்பா⁴னக³மத்³த⁴யை꞉ .. 6..

ராஜா ஸ குண்டி³னபதி꞉ புத்ரஸ்னேஹவஶம்ʼ க³த꞉ .
ஶிஶுபாலாய ஸ்வாம்ʼ கன்யாம்ʼ தா³ஸ்யன் கர்மாண்யகாரயத் .. 7..

புரம்ʼ ஸம்ம்ருʼஷ்டஸம்ʼஸிக்தமார்க³ரத்²யாசதுஷ்பத²ம் .
சித்ரத்⁴வஜபதாகாபி⁴ஸ்தோரணை꞉ ஸமலங்க்ருʼதம் .. 8..

ஸ்ரக்³க³ந்த⁴மால்யாப⁴ரணைர்விரஜோ(அ)ம்ப³ரபூ⁴ஷிதை꞉ .
ஜுஷ்டம்ʼ ஸ்த்ரீபுருஷை꞉ ஶ்ரீமத்³க்³ருʼஹைரகு³ருதூ⁴பிதை꞉ .. 9..

பித்ரூʼன் தே³வான் ஸமப்⁴யர்ச்ய விப்ராம்ʼஶ்ச விதி⁴வந்ந்ருʼப .
போ⁴ஜயித்வா யதா²ந்யாயம்ʼ வாசயாமாஸ மங்க³லம் .. 10..

ஸுஸ்னாதாம்ʼ ஸுத³தீம்ʼ கன்யாம்ʼ க்ருʼதகௌதுகமங்க³லாம் .
அஹதாம்ʼஶுகயுக்³மேன பூ⁴ஷிதாம்ʼ பூ⁴ஷணோத்தமை꞉ .. 11..

சக்ரு꞉ ஸாமர்க்³யஜுர்மந்த்ரைர்வத்⁴வா ரக்ஷாம்ʼ த்³விஜோத்தமா꞉ .
புரோஹிதோ(அ)த²ர்வவித்³வை ஜுஹாவ க்³ரஹஶாந்தயே .. 12..

ஹிரண்யரூப்யவாஸாம்ʼஸி திலாம்ʼஶ்ச கு³ட³மிஶ்ரிதான் .
ப்ராதா³த்³தே⁴னூஶ்ச விப்ரேப்⁴யோ ராஜா விதி⁴விதா³ம்ʼ வர꞉ .. 13..

ஏவம்ʼ சேதி³பதீ ராஜா த³மகோ⁴ஷ꞉ ஸுதாய வை .
காரயாமாஸ மந்த்ரஜ்ஞை꞉ ஸர்வமப்⁴யுத³யோசிதம் .. 14..

மத³ச்யுத்³பி⁴ர்க³ஜானீகை꞉ ஸ்யந்த³னைர்ஹேமமாலிபி⁴꞉ .
பத்த்யஶ்வஸங்குலை꞉ ஸைன்யை꞉ பரீத꞉ குண்டி³னம்ʼ யயௌ .. 15..

தம்ʼ வை வித³ர்பா⁴தி⁴பதி꞉ ஸமப்⁴யேத்யாபி⁴பூஜ்ய ச .
நிவேஶயாமாஸ முதா³ கல்பிதான்யநிவேஶனே .. 16..

தத்ர ஶால்வோ ஜராஸந்தோ⁴ த³ந்தவக்த்ரோ விதூ³ரத²꞉ .
ஆஜக்³முஶ்சைத்³யபக்ஷீயா꞉ பௌண்ட்³ரகாத்³யா꞉ ஸஹஸ்ரஶ꞉ .. 17..

க்ருʼஷ்ணராமத்³விஷோ யத்தா꞉ கன்யாம்ʼ சைத்³யாய ஸாதி⁴தும் .
யத்³யாக³த்ய ஹரேத்க்ருʼஷ்ணோ ராமாத்³யைர்யது³பி⁴ர்வ்ருʼத꞉ .. 18..

யோத்ஸ்யாம꞉ ஸம்ʼஹதாஸ்தேன இதி நிஶ்சிதமானஸா꞉ .
ஆஜக்³முர்பூ⁴பு⁴ஜ꞉ ஸர்வே ஸமக்³ரப³லவாஹனா꞉ .. 19..

ஶ்ருத்வைதத்³ப⁴க³வான் ராமோ விபக்ஷீயந்ருʼபோத்³யமம் .
க்ருʼஷ்ணம்ʼ சைகம்ʼ க³தம்ʼ ஹர்தும்ʼ கன்யாம்ʼ கலஹஶங்கித꞉ .. 20..

ப³லேன மஹதா ஸார்த⁴ம்ʼ ப்⁴ராத்ருʼஸ்னேஹபரிப்லுத꞉ .
த்வரித꞉ குண்டி³னம்ʼ ப்ராகா³த்³க³ஜாஶ்வரத²பத்திபி⁴꞉ .. 21..

பீ⁴ஷ்மகன்யா வராரோஹா காங்க்ஷந்த்யாக³மனம்ʼ ஹரே꞉ .
ப்ரத்யாபத்திமபஶ்யந்தீ த்³விஜஸ்யாசிந்தயத்ததா³ .. 22..

அஹோ த்ரியாமாந்தரித உத்³வாஹோ மே(அ)ல்பராத⁴ஸ꞉ .
நாக³ச்ச²த்யரவிந்தா³க்ஷோ நாஹம்ʼ வேத்³ம்யத்ர காரணம் .
ஸோ(அ)பி நாவர்ததே(அ)த்³யாபி மத்ஸந்தே³ஶஹரோ த்³விஜ꞉ .. 23..

அபி மய்யனவத்³யாத்மா த்³ருʼஷ்ட்வா கிஞ்சிஜ்ஜுகு³ப்ஸிதம் .
மத்பாணிக்³ரஹணே நூனம்ʼ நாயாதி ஹி க்ருʼதோத்³யம꞉ .. 24..

து³ர்ப⁴கா³யா ந மே தா⁴தா நானுகூலோ மஹேஶ்வர꞉ .
தே³வீ வா விமுகா² கௌ³ரீ ருத்³ராணீ கி³ரிஜா ஸதீ .. 25..

ஏவம்ʼ சிந்தயதீ பா³லா கோ³விந்த³ஹ்ருʼதமானஸா .
ந்யமீலயத காலஜ்ஞா நேத்ரே சாஶ்ருகலாகுலே .. 26..

ஏவம்ʼ வத்⁴வா꞉ ப்ரதீக்ஷந்த்யா கோ³விந்தா³க³மனம்ʼ ந்ருʼப .
வாம ஊருர்பு⁴ஜோ நேத்ரமஸ்பு²ரன் ப்ரியபா⁴ஷிண꞉ .. 27..

அத² க்ருʼஷ்ணவிநிர்தி³ஷ்ட꞉ ஸ ஏவ த்³விஜஸத்தம꞉ .
அந்த꞉புரசரீம்ʼ தே³வீம்ʼ ராஜபுத்ரீம்ʼ த³த³ர்ஶ ஹ .. 28..

ஸா தம்ʼ ப்ரஹ்ருʼஷ்டவத³னமவ்யக்³ராத்மக³திம்ʼ ஸதீ .
ஆலக்ஷ்ய லக்ஷணாபி⁴ஜ்ஞா ஸமப்ருʼச்ச²ச்சு²சிஸ்மிதா .. 29..

தஸ்யா ஆவேத³யத்ப்ராப்தம்ʼ ஶஶம்ʼஸ யது³நந்த³னம் .
உக்தம்ʼ ச ஸத்யவசனமாத்மோபநயனம்ʼ ப்ரதி .. 30..

தமாக³தம்ʼ ஸமாஜ்ஞாய வைத³ர்பீ⁴ ஹ்ருʼஷ்டமானஸா .
ந பஶ்யந்தீ ப்³ராஹ்மணாய ப்ரியமன்யன்னநாம ஸா .. 31..

ப்ராப்தௌ ஶ்ருத்வா ஸ்வது³ஹிதுருத்³வாஹப்ரேக்ஷணோத்ஸுகௌ .
அப்⁴யயாத்தூர்யகோ⁴ஷேண ராமக்ருʼஷ்ணௌ ஸமர்ஹணை꞉ .. 32..

மது⁴பர்கமுபானீய வாஸாம்ʼஸி விரஜாம்ʼஸி ஸ꞉ .
உபாயனான்யபீ⁴ஷ்டானி விதி⁴வத்ஸமபூஜயத் .. 33..

தயோர்நிவேஶனம்ʼ ஶ்ரீமது³பாகல்ப்ய மஹாமதி꞉ .
ஸஸைன்யயோ꞉ ஸானுக³யோராதித்²யம்ʼ வித³தே⁴ யதா² .. 34..

ஏவம்ʼ ராஜ்ஞாம்ʼ ஸமேதானாம்ʼ யதா²வீர்யம்ʼ யதா²வய꞉ .
யதா²ப³லம்ʼ யதா²வித்தம்ʼ ஸர்வை꞉ காமை꞉ ஸமர்ஹயத் .. 35..

க்ருʼஷ்ணமாக³தமாகர்ண்ய வித³ர்ப⁴புரவாஸின꞉ .
ஆக³த்ய நேத்ராஞ்ஜலிபி⁴꞉ பபுஸ்தன்முக²பங்கஜம் .. 36..

அஸ்யைவ பா⁴ர்யா ப⁴விதும்ʼ ருக்மிண்யர்ஹதி நாபரா .
அஸாவப்யனவத்³யாத்மா பை⁴ஷ்ம்யா꞉ ஸமுசித꞉ பதி꞉ .. 37..

கிஞ்சித்ஸுசரிதம்ʼ யன்னஸ்தேன துஷ்டஸ்த்ரிலோகக்ருʼத் .
அனுக்³ருʼஹ்ணாது க்³ருʼஹ்ணாது வைத³ர்ப்⁴யா꞉ பாணிமச்யுத꞉ .. 38..

ஏவம்ʼ ப்ரேமகலாப³த்³தா⁴ வத³ந்தி ஸ்ம புரௌகஸ꞉ .
கன்யா சாந்த꞉புராத்ப்ராகா³த்³ப⁴டைர்கு³ப்தாம்பி³காலயம் .. 39..

பத்³ப்⁴யாம்ʼ விநிர்யயௌ த்³ரஷ்டும்ʼ ப⁴வான்யா꞉ பாத³பல்லவம் .
ஸா சானுத்⁴யாயதீ ஸம்யங்முகுந்த³சரணாம்பு³ஜம் .. 40..

யதவாங்மாத்ருʼபி⁴꞉ ஸார்த⁴ம்ʼ ஸகீ²பி⁴꞉ பரிவாரிதா .
கு³ப்தா ராஜப⁴டை꞉ ஶூரை꞉ ஸன்னத்³தை⁴ருத்³யதாயுதை⁴꞉ .
ம்ருʼத³ங்க³ஶங்க²பணவாஸ்தூர்யபே⁴ர்யஶ்ச ஜக்⁴நிரே .. 41..

நானோபஹாரப³லிபி⁴ர்வாரமுக்²யா꞉ ஸஹஸ்ரஶ꞉ .
ஸ்ரக்³க³ந்த⁴வஸ்த்ராப⁴ரணைர்த்³விஜபத்ன்ய꞉ ஸ்வலங்க்ருʼதா꞉ .. 42..

கா³யந்தஶ்ச ஸ்துவந்தஶ்ச கா³யகா வாத்³யவாத³கா꞉ .
பரிவார்ய வதூ⁴ம்ʼ ஜக்³மு꞉ ஸூதமாக³த⁴வந்தி³ன꞉ .. 43..

ஆஸாத்³ய தே³வீஸத³னம்ʼ தௌ⁴தபாத³கராம்பு³ஜா .
உபஸ்ப்ருʼஶ்ய ஶுசி꞉ ஶாந்தா ப்ரவிவேஶாம்பி³காந்திகம் .. 44..

தாம்ʼ வை ப்ரவயஸோ பா³லாம்ʼ விதி⁴ஜ்ஞா விப்ரயோஷித꞉ .
ப⁴வானீம்ʼ வந்த³யாஞ்சக்ருர்ப⁴வபத்னீம்ʼ ப⁴வான்விதாம் .. 45..

நமஸ்யே த்வாம்பி³கே(அ)பீ⁴க்ஷ்ணம்ʼ ஸ்வஸந்தானயுதாம்ʼ ஶிவாம் .
பூ⁴யாத்பதிர்மே ப⁴க³வான் க்ருʼஷ்ணஸ்தத³னுமோத³தாம் .. 46..

அத்³பி⁴ர்க³ந்தா⁴க்ஷதைர்தூ⁴பைர்வாஸ꞉ஸ்ரங்மால்யபூ⁴ஷணை꞉ .
நானோபஹாரப³லிபி⁴꞉ ப்ரதீ³பாவலிபி⁴꞉ ப்ருʼத²க் .. 47..

விப்ரஸ்த்ரிய꞉ பதிமதீஸ்ததா² தை꞉ ஸமபூஜயத் .
லவணாபூபதாம்பூ³லகண்ட²ஸூத்ரப²லேக்ஷுபி⁴꞉ .. 48..

தஸ்யை ஸ்த்ரியஸ்தா꞉ ப்ரத³து³꞉ ஶேஷாம்ʼ யுயுஜுராஶிஷ꞉ .
தாப்⁴யோ தே³வ்யை நமஶ்சக்ரே ஶேஷாம்ʼ ச ஜக்³ருʼஹே வதூ⁴꞉ .. 49..

முனிவ்ரதமத² த்யக்த்வா நிஶ்சக்ராமாம்பி³காக்³ருʼஹாத் .
ப்ரக்³ருʼஹ்ய பாணினா ப்⁴ருʼத்யாம்ʼ ரத்னமுத்³ரோபஶோபி⁴னா .. 50..

தாம்ʼ தே³வமாயாமிவ வீரமோஹினீம்ʼ
ஸுமத்⁴யமாம்ʼ குண்ட³லமண்டி³தானனாம் .
ஶ்யாமாம்ʼ நிதம்பா³ர்பிதரத்னமேக²லாம்ʼ
வ்யஞ்ஜத்ஸ்தனீம்ʼ குந்தலஶங்கிதேக்ஷணாம் .. 51..

ஶுசிஸ்மிதாம்ʼ பி³ம்ப³ப²லாத⁴ரத்³யுதி
ஶோணாயமானத்³விஜகுந்த³குட்³மலாம் .
பதா³ சலந்தீம்ʼ கலஹம்ʼஸகா³மினீம்ʼ
ஶிஞ்ஜத்கலாநூபுரதா⁴மஶோபி⁴னா .
விலோக்ய வீரா முமுஹு꞉ ஸமாக³தா
யஶஸ்வினஸ்தத்க்ருʼதஹ்ருʼச்ச²யார்தி³தா꞉ .. 52..

யாம்ʼ வீக்ஷ்ய தே ந்ருʼபதயஸ்தது³தா³ரஹாஸ-
வ்ரீடா³வலோகஹ்ருʼதசேதஸ உஜ்ஜி²தாஸ்த்ரா꞉ .
பேது꞉ க்ஷிதௌ க³ஜரதா²ஶ்வக³தா விமூடா⁴
யாத்ராச்ச²லேன ஹரயே(அ)ர்பயதீம்ʼ ஸ்வஶோபா⁴ம் .. 53..

ஸைவம்ʼ ஶனைஶ்சலயதீ சலபத்³மகோஶௌ
ப்ராப்திம்ʼ ததா³ ப⁴க³வத꞉ ப்ரஸமீக்ஷமாணா .
உத்ஸார்ய வாமகரஜைரலகானபாங்கை³꞉
ப்ராப்தான் ஹ்ரியைக்ஷத ந்ருʼபான் த³த்³ருʼஶே(அ)ச்யுதம்ʼ ஸா .. 54.
தாம்ʼ ராஜகன்யாம்ʼ ரத²மாருருக்ஷதீம்ʼ
ஜஹார க்ருʼஷ்ணோ த்³விஷதாம்ʼ ஸமீக்ஷதாம் .
ரத²ம்ʼ ஸமாரோப்ய ஸுபர்ணலக்ஷணம்ʼ
ராஜன்யசக்ரம்ʼ பரிபூ⁴ய மாத⁴வ꞉ .. 55..

ததோ யயௌ ராமபுரோக³மை꞉ ஶனை꞉
ஶ்ருʼகா³லமத்⁴யாதி³வ பா⁴க³ஹ்ருʼத்³த⁴ரி꞉ .. 56..

தம்ʼ மானின꞉ ஸ்வாபி⁴ப⁴வம்ʼ யஶ꞉க்ஷயம்ʼ
பரே ஜராஸந்த⁴முகா² ந ஸேஹிரே .
அஹோ தி⁴க³ஸ்மான்யஶ ஆத்தத⁴ன்வனாம்ʼ
கோ³பைர்ஹ்ருʼதம்ʼ கேஸரிணாம்ʼ ம்ருʼகை³ரிவ .. 57..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ உத்தரார்தே⁴ ருக்மிணீஹரணம்ʼ நாம த்ரிபஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 53..

——–

ஶ்ரீஶுக உவாச
இதி ஸர்வே ஸுஸம்ʼரப்³தா⁴ வாஹானாருஹ்ய த³ம்ʼஶிதா꞉ .
ஸ்வை꞉ ஸ்வைர்ப³லை꞉ பரிக்ராந்தா அன்வீயுர்த்⁴ருʼதகார்முகா꞉ .. 1..

தானாபதத ஆலோக்ய யாத³வானீகயூத²பா꞉ .
தஸ்து²ஸ்தத்ஸம்முகா² ராஜன் விஸ்பூ²ர்ஜ்ய ஸ்வத⁴னூம்ʼஷி தே .. 2..

அஶ்வப்ருʼஷ்டே² க³ஜஸ்கந்தே⁴ ரதோ²பஸ்தே² ச கோவிதா³꞉ .
முமுசு꞉ ஶரவர்ஷாணி மேகா⁴ அத்³ரிஷ்வபோ யதா² .. 3..

பத்யுர்ப³லம்ʼ ஶராஸாரைஶ்ச²ன்னம்ʼ வீக்ஷ்ய ஸுமத்⁴யமா .
ஸவ்ரீட³மைக்ஷத்தத்³வக்த்ரம்ʼ ப⁴யவிஹ்வலலோசனா .. 4..

ப்ரஹஸ்ய ப⁴க³வானாஹ மா ஸ்ம பை⁴ர்வாமலோசனே .
வினங்க்ஷ்யத்யது⁴னைவைதத்தாவகை꞉ ஶாத்ரவம்ʼ ப³லம் .. 5..

தேஷாம்ʼ தத்³விக்ரமம்ʼ வீரா க³த³ஸங்கர்ஷணாத³ய꞉ .
அம்ருʼஷ்யமாணா நாராசைர்ஜக்⁴னுர்ஹயக³ஜான் ரதா²ன் .. 6..

பேது꞉ ஶிராம்ʼஸி ரதி²நாமஶ்வினாம்ʼ க³ஜினாம்ʼ பு⁴வி .
ஸகுண்ட³லகிரீடானி ஸோஷ்ணீஷாணி ச கோடிஶ꞉ .. 7..

ஹஸ்தா꞉ ஸாஸிக³தே³ஷ்வாஸா꞉ கரபா⁴ ஊரவோ(அ)ங்க்⁴ரய꞉ .
அஶ்வாஶ்வதரநாகோ³ஷ்ட்ரக²ரமர்த்யஶிராம்ʼஸி ச .. 8..

ஹன்யமானப³லானீகா வ்ருʼஷ்ணிபி⁴ர்ஜயகாங்க்ஷிபி⁴꞉ .
ராஜானோ விமுகா² ஜக்³முர்ஜராஸந்த⁴புர꞉ஸரா꞉ .. 9..

ஶிஶுபாலம்ʼ ஸமப்⁴யேத்ய ஹ்ருʼததா³ரமிவாதுரம் .
நஷ்டத்விஷம்ʼ க³தோத்ஸாஹம்ʼ ஶுஷ்யத்³வத³னமப்³ருவன் .. 10..

போ⁴ போ⁴꞉ புருஷஶார்தூ³ல தௌ³ர்மனஸ்யமித³ம்ʼ த்யஜ .
ந ப்ரியாப்ரியயோ ராஜன் நிஷ்டா² தே³ஹிஷு த்³ருʼஶ்யதே .. 11..

யதா² தா³ருமயீ யோஷிந்ந்ருʼத்யதே குஹகேச்ச²யா .
ஏவமீஶ்வரதந்த்ரோ(அ)யமீஹதே ஸுக²து³꞉க²யோ꞉ .. 12..

ஶௌரே꞉ ஸப்தத³ஶாஹம்ʼ வை ஸம்ʼயுகா³னி பராஜித꞉ .
த்ரயோவிம்ʼஶதிபி⁴꞉ ஸைன்யைர்ஜிக்³யே ஏகமஹம்ʼ பரம் .. 13..

ததா²ப்யஹம்ʼ ந ஶோசாமி ந ப்ரஹ்ருʼஷ்யாமி கர்ஹிசித் .
காலேன தை³வயுக்தேன ஜானன் வித்³ராவிதம்ʼ ஜக³த் .. 14..

அது⁴னாபி வயம்ʼ ஸர்வே வீரயூத²பயூத²பா꞉ .
பராஜிதா꞉ ப²ல்கு³தந்த்ரைர்யது³பி⁴꞉ க்ருʼஷ்ணபாலிதை꞉ .. 15..

ரிபவோ ஜிக்³யுரது⁴னா கால ஆத்மானுஸாரிணி .
ததா³ வயம்ʼ விஜேஷ்யாமோ யதா³ கால꞉ ப்ரத³க்ஷிண꞉ .. 16..

ஏவம்ʼ ப்ரபோ³தி⁴தோ மித்ரைஶ்சைத்³யோ(அ)கா³த்ஸானுக³꞉ புரம் .
ஹதஶேஷா꞉ புனஸ்தே(அ)பி யயு꞉ ஸ்வம்ʼ ஸ்வம்ʼ புரம்ʼ ந்ருʼபா꞉ .. 17..

ருக்மீ து ராக்ஷஸோத்³வாஹம்ʼ க்ருʼஷ்ணத்³விட³ஸஹன் ஸ்வஸு꞉ .
ப்ருʼஷ்ட²தோ(அ)ன்வக³மத்க்ருʼஷ்ணமக்ஷௌஹிண்யா வ்ருʼதோ ப³லீ .. 18..

ருக்ம்யமர்ஷீ ஸுஸம்ʼரப்³த⁴꞉ ஶ்ருʼண்வதாம்ʼ ஸர்வபூ⁴பு⁴ஜாம் .
ப்ரதிஜஜ்ஞே மஹாபா³ஹுர்த³ம்ʼஶித꞉ ஸஶராஸன꞉ .. 19..

அஹத்வா ஸமரே க்ருʼஷ்ணமப்ரத்யூஹ்ய ச ருக்மிணீம் .
குண்டி³னம்ʼ ந ப்ரவேக்ஷ்யாமி ஸத்யமேதத்³ப்³ரவீமி வ꞉ .. 20..

இத்யுக்த்வா ரத²மாருஹ்ய ஸாரதி²ம்ʼ ப்ராஹ ஸத்வர꞉ .
சோத³யாஶ்வான் யத꞉ க்ருʼஷ்ணஸ்தஸ்ய மே ஸம்ʼயுக³ம்ʼ ப⁴வேத் .. 21..

அத்³யாஹம்ʼ நிஶிதைர்பா³ணைர்கோ³பாலஸ்ய ஸுது³ர்மதே꞉ .
நேஷ்யே வீர்யமத³ம்ʼ யேன ஸ்வஸா மே ப்ரஸப⁴ம்ʼ ஹ்ருʼதா .. 22..

விகத்த²மான꞉ குமதிரீஶ்வரஸ்யாப்ரமாணவித் .
ரதே²னைகேன கோ³விந்த³ம்ʼ திஷ்ட² திஷ்டே²த்யதா²ஹ்வயத் .. 23..

த⁴னுர்விக்ருʼஷ்ய ஸுத்³ருʼட⁴ம்ʼ ஜக்⁴னே க்ருʼஷ்ணம்ʼ த்ரிபி⁴꞉ ஶரை꞉ .
ஆஹ சாத்ர க்ஷணம்ʼ திஷ்ட² யதூ³னாம்ʼ குலபாம்ʼஸன .. 24..

குத்ர யாஸி ஸ்வஸாரம்ʼ மே முஷித்வா த்⁴வாங்க்ஷவத்³த⁴வி꞉ .
ஹரிஷ்யே(அ)த்³ய மத³ம்ʼ மந்த³ மாயின꞉ கூடயோதி⁴ன꞉ .. 25..

யாவன்ன மே ஹதோ பா³ணை꞉ ஶயீதா² முஞ்ச தா³ரீகாம் .
ஸ்மயன் க்ருʼஷ்ணோ த⁴னுஶ்சி²த்த்வா ஷட்³பி⁴ர்விவ்யாத⁴ ருக்மிணம் .. 26..

அஷ்டபி⁴ஶ்சதுரோ வாஹான் த்³வாப்⁴யாம்ʼ ஸூதம்ʼ த்⁴வஜம்ʼ த்ரிபி⁴꞉ .
ஸ சான்யத்³த⁴னுராதா⁴ய க்ருʼஷ்ணம்ʼ விவ்யாத⁴ பஞ்சபி⁴꞉ .. 27..

தைஸ்தாடி³த꞉ ஶரௌகை⁴ஸ்து சிச்சே²த³ த⁴னுரச்யுத꞉ .
புனரன்யது³பாத³த்த தத³ப்யச்சி²னத³வ்யய꞉ .. 28..

பரிக⁴ம்ʼ பட்டிஶம்ʼ ஶூலம்ʼ சர்மாஸீ ஶக்திதோமரௌ .
யத்³யதா³யுத⁴மாத³த்த தத்ஸர்வம்ʼ ஸோ(அ)ச்சி²னத்³த⁴ரி꞉ .. 29..

ததோ ரதா²த³வப்லுத்ய க²ட்³க³பாணிர்ஜிகா⁴ம்ʼஸயா .
க்ருʼஷ்ணமப்⁴யத்³ரவத்க்ருத்³த⁴꞉ பதங்க³ இவ பாவகம் .. 30..

தஸ்ய சாபதத꞉ க²ட்³க³ம்ʼ திலஶஶ்சர்ம சேஷுபி⁴꞉ .
சி²த்த்வாஸிமாத³தே³ திக்³மம்ʼ ருக்மிணம்ʼ ஹந்துமுத்³யத꞉ .. 31..

த்³ருʼஷ்ட்வா ப்⁴ராத்ருʼவதோ⁴த்³யோக³ம்ʼ ருக்மிணீ ப⁴யவிஹ்வலா .
பதித்வா பாத³யோர்ப⁴ர்துருவாச கருணம்ʼ ஸதீ .. 32..

யோகே³ஶ்வராப்ரமேயாத்மன் தே³வ தே³வ ஜக³த்பதே .
ஹந்தும்ʼ நார்ஹஸி கல்யாண ப்⁴ராதரம்ʼ மே மஹாபு⁴ஜ .. 33..

ஶ்ரீஶுக உவாச
தயா பரித்ராஸவிகம்பிதாங்க³யா
ஶுசாவஶுஷ்யன்முக²ருத்³த⁴கண்ட²யா .
காதர்யவிஸ்ரம்ʼஸிதஹேமமாலயா
க்³ருʼஹீதபாத³꞉ கருணோ ந்யவர்தத .. 34..

சைலேன ப³த்³த்⁴வா தமஸாது⁴காரிணம்ʼ
ஸஶ்மஶ்ருகேஶம்ʼ ப்ரவபன் வ்யரூபயத் .
தாவன்மமர்து³꞉ பரஸைன்யமத்³பு⁴தம்ʼ
யது³ப்ரவீரா நலினீம்ʼ யதா² க³ஜா꞉ .. 35..

க்ருʼஷ்ணாந்திகமுபவ்ரஜ்ய த³த்³ருʼஶுஸ்தத்ர ருக்மிணம் .
ததா² பூ⁴தம்ʼ ஹதப்ராயம்ʼ த்³ருʼஷ்ட்வா ஸங்கர்ஷணோ விபு⁴꞉ .
விமுச்ய ப³த்³த⁴ம்ʼ கருணோ ப⁴க³வான் க்ருʼஷ்ணமப்³ரவீத் .. 36..

அஸாத்⁴வித³ம்ʼ த்வயா க்ருʼஷ்ண க்ருʼதமஸ்மஜ்ஜுகு³ப்ஸிதம் .
வபனம்ʼ ஶ்மஶ்ருகேஶானாம்ʼ வைரூப்யம்ʼ ஸுஹ்ருʼதோ³ வத⁴꞉ .. 37..

மைவாஸ்மான் ஸாத்⁴வ்யஸூயேதா² ப்⁴ராதுர்வைரூப்யசிந்தயா .
ஸுக²து³꞉க²தோ³ ந சான்யோ(அ)ஸ்தி யத꞉ ஸ்வக்ருʼதபு⁴க் புமான் .. 38..

ப³ந்து⁴ர்வதா⁴ர்ஹதோ³ஷோ(அ)பி ந ப³ந்தோ⁴ர்வத⁴மர்ஹதி .
த்யாஜ்ய꞉ ஸ்வேனைவ தோ³ஷேண ஹத꞉ கிம்ʼ ஹன்யதே புன꞉ .. 39..

க்ஷத்ரியாணாமயம்ʼ த⁴ர்ம꞉ ப்ரஜாபதிவிநிர்மித꞉ .
ப்⁴ராதாபி ப்⁴ராதரம்ʼ ஹன்யாத்³யேன கோ⁴ரதரஸ்தத꞉ .. 40..

ராஜ்யஸ்ய பூ⁴மேர்வித்தஸ்ய ஸ்த்ரியோ மானஸ்ய தேஜஸ꞉ .
மானினோ(அ)ன்யஸ்ய வா ஹேதோ꞉ ஶ்ரீமதா³ந்தா⁴꞉ க்ஷிபந்தி ஹி .. 41..

தவேயம்ʼ விஷமா பு³த்³தி⁴꞉ ஸர்வபூ⁴தேஷு து³ர்ஹ்ருʼதா³ம் .
யன்மன்யஸே ஸதா³ப⁴த்³ரம்ʼ ஸுஹ்ருʼதா³ம்ʼ ப⁴த்³ரமஜ்ஞவத் .. 42..

ஆத்மமோஹோ ந்ருʼணாமேஷ கல்பதே தே³வமாயயா .
ஸுஹ்ருʼத்³து³ர்ஹ்ருʼது³தா³ஸீன இதி தே³ஹாத்மமானினாம் .. 43..

ஏக ஏவ பரோ ஹ்யாத்மா ஸர்வேஷாமபி தே³ஹினாம் .
நானேவ க்³ருʼஹ்யதே மூடை⁴ர்யதா² ஜ்யோதிர்யதா² நப⁴꞉ .. 44..

தே³ஹ ஆத்³யந்தவானேஷ த்³ரவ்யப்ராணகு³ணாத்மக꞉ .
ஆத்மன்யவித்³யயா க்லுʼப்த꞉ ஸம்ʼஸாரயதி தே³ஹினம் .. 45..

நாத்மனோ(அ)ன்யேன ஸம்ʼயோகோ³ வியோக³ஶ்சாஸத꞉ ஸதி .
தத்³தே⁴துத்வாத்தத்ப்ரஸித்³தே⁴ர்த்³ருʼக்³ரூபாப்⁴யாம்ʼ யதா² ரவே꞉ .. 46..

ஜன்மாத³யஸ்து தே³ஹஸ்ய விக்ரியா நாத்மன꞉ க்வசித் .
கலாநாமிவ நைவேந்தோ³ர்ம்ருʼதிர்ஹ்யஸ்ய குஹூரிவ .. 47..

யதா² ஶயான ஆத்மானம்ʼ விஷயான் ப²லமேவ ச .
அனுபு⁴ங்க்தே(அ)ப்யஸத்யர்தே² ததா²(ஆ)ப்னோத்யபு³தோ⁴ ப⁴வம் .. 48..

தஸ்மாத³ஜ்ஞானஜம்ʼ ஶோகமாத்மஶோஷவிமோஹனம் .
தத்த்வஜ்ஞானேன நிர்ஹ்ருʼத்ய ஸ்வஸ்தா² ப⁴வ ஶுசிஸ்மிதே .. 49..

ஶ்ரீஶுக உவாச
ஏவம்ʼ ப⁴க³வதா தன்வீ ராமேண ப்ரதிபோ³தி⁴தா .
வைமனஸ்யம்ʼ பரித்யஜ்ய மனோ பு³த்³த்⁴யா ஸமாத³தே⁴ .. 50..

ப்ராணாவஶேஷ உத்ஸ்ருʼஷ்டோ த்³விட்³பி⁴ர்ஹதப³லப்ரப⁴꞉ .
ஸ்மரன் விரூபகரணம்ʼ விததா²த்மமனோரத²꞉ .. 51..

சக்ரே போ⁴ஜகடம்ʼ நாம நிவாஸாய மஹத்புரம் .
அஹத்வா து³ர்மதிம்ʼ க்ருʼஷ்ணமப்ரத்யூஹ்ய யவீயஸீம் .
குண்டி³னம்ʼ ந ப்ரவேக்ஷ்யாமீத்யுக்த்வா தத்ராவஸத்³ருஷா .. 52..

ப⁴க³வான் பீ⁴ஷ்மகஸுதாமேவம்ʼ நிர்ஜித்ய பூ⁴மிபான் .
புரமானீய விதி⁴வது³பயேமே குரூத்³வஹ .. 53.. ஸகோ³னஸங்கோ³கோ³
ததா³ மஹோத்ஸவோ ந்ரூʼணாம்ʼ யது³புர்யாம்ʼ க்³ருʼஹே க்³ருʼஹே .
அபூ⁴த³னன்யபா⁴வானாம்ʼ க்ருʼஷ்ணே யது³பதௌ ந்ருʼப .. 54..

நரா நார்யஶ்ச முதி³தா꞉ ப்ரம்ருʼஷ்டமணிகுண்ட³லா꞉ .
பாரிப³ர்ஹமுபாஜஹ்ருர்வரயோஶ்சித்ரவாஸஸோ꞉ .. 55..

ஸா வ்ருʼஷ்ணிபுர்யுத்தபி⁴தேந்த்³ரகேதுபி⁴-
ர்விசித்ரமால்யாம்ப³ரரத்னதோரணை꞉ .
ப³பௌ⁴ ப்ரதித்³வார்யுபக்லுʼப்தமங்க³லை-
ராபூர்ணகும்பா⁴கு³ருதூ⁴பதீ³பகை꞉ .. 56..

ஸிக்தமார்கா³ மத³ச்யுத்³பி⁴ராஹூதப்ரேஷ்ட²பூ⁴பு⁴ஜாம் .
க³ஜைர்த்³வா꞉ஸு பராம்ருʼஷ்டரம்பா⁴பூகோ³பஶோபி⁴தா .. 57..

குருஸ்ருʼஞ்ஜயகைகேயவித³ர்ப⁴யது³குந்தய꞉ .
மிதோ² முமுதி³ரே தஸ்மின் ஸம்ப்⁴ரமாத்பரிதா⁴வதாம் .. 58..

ருக்மிண்யா ஹரணம்ʼ ஶ்ருத்வா கீ³யமானம்ʼ ததஸ்தத꞉ .
ராஜானோ ராஜகன்யாஶ்ச ப³பூ⁴வுர்ப்⁴ருʼஶவிஸ்மிதா꞉ .. 59..

த்³வாரகாயாமபூ⁴த்³ராஜன் மஹாமோத³꞉ புரௌகஸாம் .
ருக்மிண்யா ரமயோபேதம்ʼ த்³ருʼஷ்ட்வா க்ருʼஷ்ணம்ʼ ஶ்ரிய꞉பதிம் .. 60..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ உத்தரார்தே⁴ ருக்மிண்யுத்³வாஹே சது꞉பஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 54..

—————

த3ச’கம் 78 ( 1 to 5)

ருக்மிணி ஸந்தே3ச’ம்

த்ரி த3ச’ வர்த்தி4க வர்த்தி4த கௌச’லம்
த்ரித3ச’ த3த்த ஸமஸ்த விபூ4தி மத் |
ஜலதி4 மத்4யக3தம் த்வமபூ4ஷயோ
நவபுரம் வபுரஞ்சித ரோசிசா’|| ( 78 – 1)

தேவ சிற்பியான விஸ்வகர்மா அதைத் தன் கைத் திறனால் விருத்தி செய்தான். இந்திராதி தேவர்கள் எல்லா ஐஸ்வர்யங்களையும் தந்தனர். சமுத்திரத்தின் நடுவில் அமைந்திருந்த புதிய நகரமான துவாரகையை தங்கள் சரீர காந்தியால் அலங்கரித்தீர்கள் அல்லவா? ( 78 – 1 )

த3து3ஷி ரேவத பூ4ப்4ருதி ரேவதீம்
ஹலப்4ருதே தனயாம் விதி4 சா’ஸனாத் |
மஹித முத்ஸவ கோ4ஷ மபூபுஷ:
ஸமுதி3தைர் முதி3தைஸ் ஸஹ யாத3வை || ( 78 – 2 )

ரேவதன் என்ற அரசன் தன் மகள் ரேவதியை பிரம்மதேவன் கட்டளைப்படி பலராமனுக்கு திருமணம் செய்தபோது மகிழ்ச்சியுற்ற யாதவர்களுடன் நீங்களும் அந்த விவாஹத்தை மேன்மைப்படுத்தினீர்கள் அல்லவா? ( 78 – 2 )

அத2 வித3ர்ப்ப4 ஸுதாம் க2லு ருக்மிணீம்
ப்ரணயினீம் த்வயி தே3வ ஸஹோத3ர:|
ஸ்வயமதி3த்ஸத சேதி மஹீ பு4ஜே
ஸ்வதமஸா தமஸாது4முபாச்’ரயன் || ( 78 – 3)

தங்களிடம் அனுராகம் கொண்டிருந்தாள் விதர்ப்ப தேச மன்னனின் பெண் ருக்மிணி. அவன் சகோதரன் ருக்மி தன் மதியீனத்தால் அவளை சேதி ராஜன் ஆகிய சிசுபாலனுக்குக் கல்யாணம் செய்து தர விரும்பினான் அல்லவா? ( 78 – 3)

சிர த்4ருத ப்ரணயா த்வயி பா3லிகா
ஸபதி3 காங்க்ஷித ப3ங்க3ஸமாகுலா |
தவ நிவேத3யிதம் த்3விஜமாதி3ச’த்
ஸ்வகத3னம் கத3னங்க விநிர்மிதம் || ( 78 – 4 )

தங்களிடம் வெகு நாட்களாக அன்பு செலுத்திவந்த அந்தப் பெண் ருக்மிணி, தன் விருப்பத்துக்கு மாறாக நடப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தாள். கருணையே இல்லாத மன்மதனால் தனக்கு ஏற்படும் துயரத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரு பிராமணனைச் சொல்லியனுப்பினாள். ( 78 – 4 )

த்3விஜ ஸுதோSபி ச தூர்ண முபாயயௌ
தவபுரம் ஹி து3ராச’ து3ராஸத3ம் |
முத3 மவாப ச ஸாத3ர பூஜித:
ஸப4வதா ப4வதாப ஹ்ருதாஸ்வயம் || ( 78 – 5 )

அந்த பிராமண குமாரன் துர் எண்ணம் கொண்டவர்களால் அடையவே முடியாத தங்கள் நகரை விரைவாக வந்து அடைந்தான். ஜனன மரண துக்கங்களை அகற்றவல்ல தாங்களால் ஸ்வயமாகப் பூஜிக்கப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தான் அல்லவா? ( 78 – 5 )

ருக்மிணி ஸந்தே3ச’ம்

ஸ ச ப4வந்த மவோசத குண்டி3னே
ந்ருப ஸுதா க2லு ராஜதி ருக்மிணீ |
த்வயி ஸமுத்ஸுகயா நிஜ தீ4ரதா
ரஹிதயா ஹி தயா ப்ரஹி தோஸ்Sம்யஹம் || ( 78 – 6 )

“குண்டினபுரத்தில் ருக்மிணி என்கின்ற ஒரு அரச குமாரி இருக்கின்றாள் அல்லவா? தங்கள் இடத்தில் ஆசை வைத்தவளும், தன் தைரியத்தை இழந்து விட்டவளும் ஆகிய அவளால் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேன்” என்று அந்த குமாரன் தங்களிடம் தெரிவித்தான் அல்லவா? ( 78 – 6 )

தவ ஹ்ருதாSஸ்மி புரைவ கு3ணைரஹம்
ஹரதி மாம் கில சேதி3 ந்ருபோSதுனா |
அயி க்ருபாலய பாலய மாமிதி
ப்ரஜக3தே3 ஜக3தே3கபதே த்வயா || ( 78 – 7 )

“நான் தங்கள் குணங்களால் முன்பே கவரப்பட்டுள்ளேன். இப்போதோ சிசிபாலன் என்னை அடையப் போகின்றானாம். கருணைக்கு இருப்பிடமான லோக நாதா! என்னை தாங்களே காத்து அருள வேண்டும்!” என்று அவள் கூறினாள். ( 78 – 7 )

அச’ரணம் யதி3 மாம் த்வமுபேக்ஷஸே
ஸபதி3 ஜீவிதமேவ ஜஹாம்யஹம் |
இதி கி3ரா ஸுதனோ ரதனோத்3 ப்4ருச’ம்
ஸுஹ்ருத3யம் ஹ்ருத3யம் தவ காதரம் || ( 78 – 8 )

“வேறு கதி இலாத எனைத் தாங்கள் கை விடுவீர்களேயானால் நான் அந்த க்ஷணத்தில் என் உயிரை விட்டுவிடுவேன்” என்ற அந்த சுந்தரியின் வார்த்தைகளைக் கூறி அந்த நல்ல மனம் படைத்த பிராமண குமாரன் தங்கள் மனதையும் பயமுற்றதாகச் செய்தான் அல்லவா? ( 78 – 8 )

அகத2யஸ் த்வமதை2 நமயே ஸகே2
தத3தி4கா மம மன்மத3 வேத3னா |
ந்ருப ஸமக்ஷ முபேத்ய ஹராம்யஹம்
தத3யி தாம் தயிதா மஸிதேக்ஷணாம் || ( 78 – 9)

அப்போது தாங்கள் அந்த பிராமண குமாரனிடம் ” ஹே நண்பரே! என்னுடைய விரகதாபம் அவளுடைய காமவேதனையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆகையால் நான் அங்கே வந்து அரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருவிழிகளை உடைய அந்த அழகியை அபகரிப்பேன்” என்று சொன்னீர்கள் அல்லவா? ( 78 – 9 )

ப்ரமுதி3தேன ச தேன ஸமம் ததா2
ரத2க3தோ லகு4 குண்டி3ன மேயிவான் |
கு3ருமருத்புர நாயக மே ப4வான்
விதனுதாம் தனுதாம் நிகி2லாபதா3ம் || ( 78 – 10)

குருவாயூரப்பா! அப்போதே மிகவும் சந்தோஷம் அடைந்த அந்த குமாரனுடன் தேரில் ஏறிக் கொண்டு விரைவாகக் குண்டினபுரத்தை அடைந்தீர்கள அல்லவா? அப்படிப்பட்ட தாங்களே என் ஆபத்துக்களைக் குறைத்துக் காக்க வேண்டும. ( 78 – 10 )

ருக்மிணீ ஹரணம்

ப3ல ஸமேத ப3லானுக3தோ ப4வான்
புர மகாஹத பீ4ஷ்மக மானித:|
த்விஜ ஸுதம் த்வது3பாக3ம வாதி3னம்
த்4ருத ரஸா தரஸா ப்ரணநாம ஸா || ( 79 – 1 )

தாங்கள், சேனையுடன் கூடிய பலராமன் பின்தொடரக் குண்டினபுரத்தில் பிரவேசித்தீர்கள். அப்ப்போது பீஷ்மக ராஜா தங்களை வெகுமானித்தார். தங்கள் வரவைத் தெரிவித்த அந்த பிராமண குமாரனை ருக்மிணி விரைவாக வந்து வணங்கினாள். ( 79 – 1 )

பு4வன காந்த மவேக்ஷ்ய ப4வத்3 வபு:
ந்ருப ஸுதஸ் ய நிச’ம்ய ச சேஷ்டிதம் |
விபுல கே2த3 ஜுஷாம் புர வாஸினாம்
ஸருதி3தை ருதி3தை ரக3மன்நிசா’ || ( 79 – 2 )

ஜகன் மோகனன் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டும், அரச குமாரன் ருக்மியின் செயலைக் கேட்டும் ஜனங்கள் அளவற்ற வருத்தம் அடைந்தனர். பட்டணத்து ஜனங்களின் அழுகை, பேச்சு இவற்றுடன் அந்த இரவு கழிந்தது.(79-2)

தத3னு வந்தி3து மிந்து3 முகி3 சி’வாம்
விஹித மங்க3ள பூ4ஷண பா4ஸுரா |
நிரக3மத்3 ப4வத3ர்பித ஜீவிதா
ஸ்வபுரத: புரத:ஸப4டாவ்ருதா || ( 79 – 3 )

அதன் பிறகு அடுத்த நாட்காலை விவாஹத்திற்கு உரிய ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்ட, பௌர்ணமி நிலவு முகம் உடைய ருக்மிணி; உயிரை உங்களிடத்தில் அர்ப்பணம் செய்தவளாகவும் , சிறந்த காவலர்களால் சூழப்பட்டவளாகவும், மங்கள ரூபிணி ஆகிய பார்வதியை வணங்குவதற்குத் தன் அந்தப்புரத்தில் இருந்து முன் சென்றாள் ( 79 – 3 )

குலவதூ4பி4ருபேத்ய குமாரிகா
கி3ரிஸுதாம் பரி பூஜ்ய ச ஸாத3ரம் |
முஹுரயாசத த்வத் பத3 பங்கஜே
நிபதிதா பதிதாம் தவ கேவலம் || ( 79 – 4 )

கன்னியான ருக்மிணி குலஸ்த்ரீக்களுடன் ஆலயத்துக்குச் சென்றாள். பார்வதி தேவியை மிகுந்த ஆதரவுடன் பூஜித்தாள். தேவியின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். தாங்களே அவள் பதியாக ஆகவேண்டும் என்று மீண்டும் மீண்டும் பிரார்த்தித்துக் கொண்டாள். ( 79 – 4 )

ஸமவலோக குதூஹல ஸங்குலே
ந்ருப குலே நிப்4ருதம் த்வயி ச ஸ்திதே|
ந்ருபஸுதா நிரகா3த்3 கி3ரிஜாலயாத்
ஸுருசிரம் ருசிரஞ்ஜித தி3ங்முகா2 || ( 79 – 5 )

அரசர் கூட்டம் ருக்மிணியைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும்போது, தாங்களும் தனிமையில் இருக்கும் பொழுது, அரசகுமாரி ருக்மிணி தன் சரீர காந்தியினால் திக்குகளை விளங்கச் செய்து கொண்டு பார்வதியின் ஆலயத்தில் இருந்து மிகவும் அழகாக வெளிக் கிளம்பினாள். ( 79 – 5 )

பு4வன மோஹன ரூப ருசா ததா3
விவசி’தாகி2ல ராஜ கத3ம்ப3யா|
த்வமபி தே3வ கடாக்ஷ விமோக்ஷணை:
ப்ரமத3யா மத3யாஞ்ச க்ருஷே மனாக் || ( 79 – 6 )

அப்போது உலகங்களை எல்லாம் மயக்கக் கூடிய சரீர காந்தி படைத்தவளும், அரசர் கூட்டத்தை பரவசம் ஆக்கியவளும், யௌவன வயதின் மதம் உடையவளும் ஆகிய ருக்மிணியின் கடைக்கண் பார்வைகளால் தாங்களும் பரவசம் அடைந்தீர்கள் அல்லவா? ( 79 – 6 )

ருக்மிணீ ஹரணம்

க்வனு க3மிஷ்யஸி சந்த்3ரமுகீ2தி தாம்
ஸரஸமேத்ய கரேண ஹரன் க்ஷணாத் |
ஸமதி4ரோப்ய ரத2ம் த்வமாஹ்ருதா2
பு4வி ததோ விததோ நினதோ3 த்3விஷாம் || ( 79 – 7 )

“சந்திரன் போன்ற முகம் உடையவளே! எங்கு செல்கின்றாய்?” என்று சொல்லிக் கொண்டே மிகுந்த காதலுடன் அவள் அருகில் சென்றீர்கள். அவளைக் கையால் பிடித்துக் கொண்டு, ஒரு நொடியில் தேரில் ஏற்றிக் கொண்டு, அபஹரித்துச் சென்றீர்கள் அல்லவா? அப்போது பகைவர்களின் கூக்குரல் உலகெங்கும் பரவியது! ( 79 – 7 )

க்வனு க3த: பசு’பால இதி க்ருதா4
க்ருத ரணா யது3பி4ச்’ச ஜிதா ந்ருபா:|
ந து ப4வானுத3சால்யத தைரஹோ
பிசு’னகை: சு’னகைரிவ கேஸரி || ( 79 – 8)

“அந்த இடையன் எங்கே சென்று விட்டான்?” என்று சொல்லிக் கொண்டு கோபத்துடன் போருக்கு வந்த அரசர்களை யாதவர்கள் ஜெயித்தார்கள். நாய்களிடைய சிங்கம் கம்பீரமாக இருப்பது போன்றே அரசர்கள் இடையே தாங்கள் கம்பீரமாக இருந்தீர்கள் அல்லவா? ( 79 – 8 )

தத3னு ருக்மிண மாக3த மாஹவே
வத4 முபேக்ஷ்ய நிப34த்த்ய விரூபயன்|
ஹ்ருத மத3ம் பரிமுச்ய ப3லோக்திபி4:
புரமயா ரமயா ஸஹ காந்தயா|| ( 79 – 9 )

அதன் பிறகு போருக்கு வந்த ருக்மியைக் கொல்லாமல், அவனைக் கட்டி வைத்து, விரூபம் செய்து, மதம் அழிந்த அவனை பலராமன் சொற்படி அவிழ்த்து விட்டீர்கள். பிறகு லக்ஷ்மி தேவியின் அவதாரமான ருக்மிணியுடன் துவரகாபுரி சென்றீர்கள் அல்லவா? ( 79 – 9 )

நவ ஸமாகம லஜ்ஜித மானஸம்
ப்ரணய கௌதுக ஜ்ரும்பி4த மன்மதா2ம் |
அரமய கலு நாத2யதா2 ஸுக2ம்
ரஹஸி தம் ஹஸிதாம்சு’ லஸன்முகீ2ம் || ( 79 – 10)

ஈசா! புதுச் சேர்க்கையால் வெட்கம் கொண்ட மனதை உடையவளும்; அன்பினாலும், சந்தோஷத்தினாலும் அதிகாரித்த காமவிகாரத்தை உடையவளும்; மந்தஹாசத்தின் காந்தியால் விளங்குகின்ற முகத்தை உடையவளும்; ஆகிய ருக்மிணியை ஏகாந்தத்தில் சுகம் அனுபவிக்கச் செய்தீர்கள் அல்லவா? ( 79 – 10 )

விவித4 நர்மபி4 ரேவமஹர்நிச’ம்
ப்ரமத3 மாகலயன் புனரேகதா3|
ருஜுமதே: கில வக்ர கி3ரா ப4வான்
வரதனோ ரதனோத3தி லோலதாம் || ( 79 – 11 )

இவ்வாறு பல பிரிய வசனங்களால் இரவும் பகலும் மிகவும் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்த தாங்கள், ஒரு நாள் விபரீதமான கடுஞ் சொற்களால் நேர்மையான அறிவையுடைய அந்த அழகிய பெண்ணுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணினீர்கள் அல்லவா?( 79 – 11 )

தத3தி4க ரத2 லாலன கௌச’லை:
ப்ரணயினீ மதி4கம் ஸுக2யன்னிமாம்|
அயி முகுந்த3 ப4வச்சரிதானி ந:
ப்ரக3த3தாம் க3த3தாந்தி மபாகுரு || ( 79 – 12 )

பிறகு கடுஞ் சொற்களைக் காட்டிலும் அதிகமான லாலனம் செய்வதில் உள்ள சாமர்த்தியத்தினால் அன்பு கொண்ட அந்த ருக்மிணியை மீண்டும் சந்தோஷப் படுத்தினீர்கள். முக்தியைக் கொடுக்கும் கிருஷ்ணா! தங்கள் சரிதத்தை கானம் செய்யும் எங்களுடைய வியாதிகளால் உண்டாகும் சோர்வை அகற்ற வேண்டும்.
( 79 – 12 )

ஸ்ரீ ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமாநுஜாய ச ருக்மிணி ப்ராண நாதாய பார்த்தஸூதாய மங்களம்.

————————-———————–———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Sri Baagavatha saaram, Sri Vaishna Concepts | Leave a Comment »

« Older Entries
  • You are currently browsing the archives for the Sri Vaishna Concepts category.

  • Archives

    • January 2023
    • December 2022
    • November 2022
    • October 2022
    • September 2022
    • August 2022
    • July 2022
    • June 2022
    • May 2022
    • April 2022
    • March 2022
    • February 2022
    • January 2022
    • December 2021
    • November 2021
    • October 2021
    • September 2021
    • August 2021
    • July 2021
    • June 2021
    • May 2021
    • April 2021
    • March 2021
    • February 2021
    • January 2021
    • December 2020
    • November 2020
    • October 2020
    • September 2020
    • August 2020
    • July 2020
    • June 2020
    • May 2020
    • April 2020
    • March 2020
    • February 2020
    • January 2020
    • December 2019
    • November 2019
    • October 2019
    • September 2019
    • August 2019
    • July 2019
    • June 2019
    • May 2019
    • April 2019
    • March 2019
    • February 2019
    • January 2019
    • December 2018
    • November 2018
    • October 2018
    • September 2018
    • August 2018
    • July 2018
    • June 2018
    • May 2018
    • April 2018
    • March 2018
    • February 2018
    • January 2018
    • December 2017
    • November 2017
    • October 2017
    • September 2017
    • August 2017
    • July 2017
    • June 2017
    • May 2017
    • April 2017
    • March 2017
    • February 2017
    • January 2017
    • December 2016
    • November 2016
    • October 2016
    • September 2016
    • August 2016
    • July 2016
    • June 2016
    • May 2016
    • April 2016
    • March 2016
    • February 2016
    • January 2016
    • December 2015
    • November 2015
    • October 2015
    • September 2015
    • August 2015
    • July 2015
    • June 2015
    • May 2015
    • April 2015
    • March 2015
    • February 2015
    • January 2015
    • December 2014
    • November 2014
    • October 2014
    • September 2014
    • August 2014
    • July 2014
    • June 2014
    • May 2014
    • April 2014
    • March 2014
    • February 2014
    • January 2014
    • December 2013
    • November 2013
    • October 2013
    • September 2013
    • August 2013
    • July 2013
    • June 2013
    • May 2013
    • April 2013
    • March 2013
    • February 2013
    • January 2013
    • December 2012
    • November 2012
    • October 2012
    • September 2012
    • August 2012
    • July 2012
    • June 2012
    • May 2012
    • April 2012
    • March 2012
    • February 2012
    • January 2012
    • December 2011
    • November 2011
    • October 2011
    • September 2011
    • August 2011
    • July 2011
    • March 2011
    • February 2011
    • January 2011
    • December 2010
    • November 2010
    • October 2010
    • September 2010
    • August 2010
    • July 2010
    • June 2010
    • January 2010
    • December 2009
    • November 2009
    • October 2009
    • September 2009
    • July 2009
    • June 2009
    • May 2009
    • April 2009
    • March 2009
    • February 2009
    • January 2009
    • December 2008
    • November 2008
    • October 2008
    • September 2008
    • August 2008
    • July 2008
    • June 2008
    • May 2008
    • March 2008
    • February 2008
    • January 2008
    • December 2007
    • November 2007
    • October 2007
    • September 2007
  • Categories

    • -திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,544)
    • Aandaal (666)
    • Abimana Desam (21)
    • Acharyarkall (5,499)
    • Ashtaadasa Rahayangal (410)
    • அமலனாதி பிரான் . (41)
    • அருளிச் செயலில் அமுத விருந்து – (442)
    • அஷ்ட பிரபங்கள் (94)
    • அஷ்டோத்ரம் (69)
    • ஆச்சார்ய ஹிருதயம் (159)
    • ஆர்த்தி பிரபந்தம் (8)
    • இரண்டாம் திருவந்தாதி (64)
    • இராமானுச நூற்றந்தாதி (303)
    • உபதேச ரத்ன மாலை (29)
    • கண்ணி நுண் சிறு தாம்பு (59)
    • கதய த்ரயம் (26)
    • கம்பராமாயணம் (352)
    • கிருஷ்ணன் கதை அமுதம் (547)
    • சிறிய திரு மடல் (27)
    • ஞான சாரம் (21)
    • தத்வ த்ரயம் (36)
    • தனி ஸ்லோக வியாக்யானம் (62)
    • தனியன் வ்யாக்யானம் (109)
    • திரு எழு கூற்று இருக்கை (15)
    • திரு நெடும் தாண்டகம் (76)
    • திரு பல்லாண்டு (41)
    • திரு மாலை (102)
    • திரு வாய் மொழி (3,704)
    • திரு விருத்தம் (156)
    • திரு வேங்கடம் உடையான் (40)
    • திருக் குறும் தாண்டகம் (48)
    • திருச்சந்த விருத்தம் (41)
    • திருப்பள்ளி எழுச்சி (24)
    • திருப்பாவை (492)
    • திருமங்கை ஆழ்வார் (527)
    • திருவாசிரியம் (26)
    • நம்பிள்ளை (2,117)
    • நாச்சியார் திருமொழி (59)
    • நான் முகன் திரு அந்தாதி (39)
    • நான்முகன் திரு அந்தாதி (39)
    • பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)
    • பிரமேய சாரம் (10)
    • பெரிய ஆழ்வார் திரு மொழி (162)
    • பெரிய திரு அந்தாதி – (24)
    • பெரிய திரு மடல் (14)
    • பெரிய திரு மொழி (478)
    • பெரியவாச்சான் பிள்ளை (2,433)
    • பெருமாள் திருமொழி (63)
    • முதல் திரு அந்தாதி (156)
    • முதல் திருவந்தாதி (147)
    • முமுஷுபடி – (42)
    • மூன்றாம் திரு அந்தாதி (135)
    • மூன்றாம் திருவந்தாதி (131)
    • ராமானுஜ நூற்றந்தாதி (283)
    • வார்த்தா மாலை (78)
    • ஸப்த காதை (45)
    • ஸ்தவம் (135)
    • ஸ்ரீ அஹோபிலம் (2)
    • ஸ்ரீ ஈடு (3,152)
    • ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (20)
    • ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (106)
    • ஸ்ரீ நம் ஆழ்வார் (4,049)
    • ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)
    • ஸ்ரீ பாஷ்யம் (228)
    • ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (301)
    • ஸ்ரீ மணவாள மா முனிகள் (4,030)
    • ஸ்ரீ யதிராஜ விம்சதி (59)
    • ஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (425)
    • ஸ்ரீ ராமானுஜர் (755)
    • ஸ்ரீ வசன பூஷணம் (138)
    • ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (13)
      • ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (13)
    • ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (38)
    • ஸ்ரீ ஹரி வம்சம் (166)
    • Boothath Aalvaar (50)
    • Boothath Aazlvaar (74)
    • Desihan (245)
    • Divya desams (553)
    • Divya Names (155)
    • favorite sites (4)
    • Geetha Saaram (305)
    • Kannan (630)
    • Krishnan kathai amutham (627)
    • Kulesekara Aazlvaar (78)
    • Madurakavi Aazlvaar (98)
    • Manna vaallla Maa munikall (3,916)
    • Namm Aazlvaar (4,085)
    • Narasimhar (21)
    • Periaazlvaar (204)
    • Peyaazlvaar (157)
    • Poyhai Aazlvaar (166)
    • Prabandha Amudhu (4,776)
    • Puraanankal (215)
    • Raamaanujar (812)
    • Ramayannam (389)
    • Sri Baagavatha saaram (890)
    • Sri Baashyam (229)
    • Sri Bhashyam (225)
    • Sri Vaishna Concepts (2,942)
    • SRi Valimiki Raamaayanam (948)
    • Srirengam (195)
    • Stotrams/Slokams (1,971)
    • Tamizl (368)
    • Thirumangai Aazlvaar (812)
    • Thirumazlisai Aazlvaar (98)
    • Thiruppaan Aazlvaar (65)
    • Thondar -adi-podi Aazlvaar (158)
    • ubanishads (139)
    • Uncategorized (92)
    • Vaazlvum Vaakkum (9)
    • Vetham (116)
    • Vishnu Sahasranama Stotrams (104)
    • you tube vaishnava links (1)

Blog at WordPress.com.
Entries (RSS) and Comments (RSS).

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Follow Following
    • Thiruvonum's Weblog
    • Join 119 other followers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Thiruvonum's Weblog
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar