விஷ்ணுவின் மகிமைகளைச் சொல்லி அவனது அவதாரங்களைக் குறித்து வைசம்பாயனரிடம் விளக்கிச் சொல்லுமாறு கேட்ட ஜனமேஜயன்
ஜனமேஜய உவாச
ப்ராது³ர்பா⁴வான்புராணேஷு விஷ்ணோரமிததேஜஸ꞉ |
ஸதாம் கத²யதாமேவ வராஹ இதி ந꞉ ஸ்²ருதம் || 1-40-1
ந ஜானே தஸ்ய சரிதம் ந விதி⁴ம் நைவ விஸ்தரம் |
ந கர்மகு³ணஸந்தானம் ந ஹேதும் ந மனீஷிதம் || 1-40-2
கிமாத்மகோ வராஹ꞉ ஸ கா மூர்தி꞉ கா ச தே³வதா |
கிமாசார꞉ ப்ரபா⁴வோ வா கிம் வா தேன புரா க்ருதம் || 1-40-3
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, அளவற்ற சக்தி கொண்ட விஷ்ணுவின் அவதாரங்களைக் குறித்துப் புராணங்களில் முனிவர்கள் விளக்குகின்றனர். தலைவன் {விஷ்ணு} பன்றியாக {வராகமாக} அவதரித்தான் என்று நாம் அவர்களிடம் இருந்து கேள்விப்படுகிறோம். ஆனால், அவன் (இவ்வடிவை) ஏற்பதற்கு முன்னர், அவனது வரலாறு, அவனது ஆணைகள், அவனது செயல்கள், அவனது சாதனைகள், அவனது நோக்கங்கள், அவனது ஒழுக்கம் {நடத்தை} மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து நாம் முழுமையாக அறிந்ததில்லை.(1-3)
யஜ்ஞார்த²ம் ஸமவேதானாம் மிஷதாம் ச த்³விஜன்மனாம் |
மஹாவராஹசரிதம் க்ருஷ்ணத்³வைபாயனேரிதம் || 1-40-4
ஒரு வேள்விக்காகக் கூடியிருந்த இருபிறப்பாளர்களின் முன்னிலையில் இந்தப் பெரும்பன்றி அவதாரத்தைக் குறித்துக் கிருஷ்ண த்வைபாயனர் {வியாசர்}[“துவைபாயனர் என்பது கிருஷ்ணரின் {வியாசரின்} மரபுப்பெயராகும். இந்தச் சொல்லின் பொருள் தீவில் பிறந்தவர் என்பதாகும். கங்கையில் இருந்த ஒரு சிறு தீவே அவரது பிறப்பிடமாகும் என்பதைக் குறிக்கும் வகையில், “தீவில் பிறந்தவர்” என்ற பொருளில் இந்தச் சொல் அமைந்திருக்கிறது” ] விளக்கிச் சொன்னதை நாம் கேட்டிருக்கிறோம்
யதா² நாராயணோ ப்³ரஹ்மன் வாராஹம் ரூபமாஸ்தி²த꞉ |
த³ம்ஷ்ட்ரயா கா³ம் ஸமுத்³ரஸ்தா²முஜ்ஜஹாராரிஸூத³ன꞉ || 1-40-5
ஓ! பிராமணரே, மதுசூதனன் பன்றியாக அவதரித்து, பெருங்கடலில் மூழ்கிய பூமியைத் தன் தந்தங்களால் எவ்வாறு காப்பாற்றினான் என்பதை நாம் கேட்டிருக்கிறோம்
விஸ்தரேணைவ கர்மாணி ஸர்வாணி ரிபுகா⁴தின꞉ |
ஸ்²ரோதுமிச்சா²ம்யஸே²ஷேண ஹரே꞉ க்ருஷ்ணஸ்ய தீ⁴மத꞉ || 1-40-6
ஓ! பிராமணரே, பகைவரைக் கொல்பவனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, தன்னுடைய பன்றி அவதாரத்திலும், பிற அவதாரங்களிலும்[பல்வேறு காலங்களில் விஷ்ணு ஏற்ற பத்து அடிப்படை வடிவங்களே அவனது அவதாரங்களாகச் சொல்லப்படுகின்றன; மீன், ஆமை, பன்றி, சிங்க மனிதன், குள்ளன், இரண்டு ராமர்கள், கிருஷ்ணன் மற்றும் கல்கி ஆகிய அவதாரங்களே அவை”] செய்த பல்வேறு செயல்களை இப்போது விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.
கர்மணாமானுபூர்வ்யாச்ச ப்ராது³ர்பா⁴வாஸ்²ச யே விபோ⁴꞉ |
யா சாஸ்ய ப்ரக்ருதிர்ப்³ரஹ்மம்ஸ்தாம் மே வ்யாக்²யாதுமர்ஹஸி || 1-40-7
ஓ! பிராமணரே, அந்தத் தலைவனின் பல்வேறு செயல்களையும், அவனது குணத்தையும் நீர் மட்டுமே முறையாக விளக்கவல்லவராவீர்.
கத²ம் ச ப⁴க³வான்விஷ்ணு꞉ ஸுரஸ²த்ருனிஷூத³ன꞉ |
வஸுதே³வகுலே தீ⁴மான்வாஸுதே³வத்வமாக³த꞉ || 1-40-8
தேவர்களின் மன்னனும், பகைவரைக் கொல்பவனுமான தலைவன் விஷ்ணு, ஏன் வஸுதேவரின் குடும்பத்தில், வாஸுதேவனாகப் பிறந்தான்?
அமரைராவ்ருதம் புண்யம் புண்யக்ருத்³பி⁴ர்னிஷேவிதம் |
தே³வலோகம் ஸமுத்ஸ்ருஜ்ய மர்த்யலோகமிஹாக³த꞉ || 1-40-9
அவன், இறவாதவர்கள் மற்றும் பக்திமான்கள் நிறைந்த தேவர்களின் நகரை விட்டுவிட்டுக் கீழே பூமிக்கு ஏன் வந்தான்?
தே³வமானுஷயோர்னேதா யோ பு⁴வ꞉ ப்ரப⁴வோ விபு⁴꞉ |
கிமர்த²ம் தி³வ்யமாத்மானம் மானுஷ்யே ஸம்ந்யயோஜயத் || 1-40-10
எவன் தேவர்கள் மற்றும் மனிதர்களின் மன்னனோ, எவனிடம் இருந்து இந்த உலகம் உண்டானதோ அவன் ஏன் தன் தெய்வீக உடலை மனித வடிவில் மாற்றிக் கொண்டான்?
யஸ்²சக்ரம் வர்தயேத்யேகோ மானுஷாணாமனாமயம் |
மானுஷ்யே ஸ கத²ம் பு³த்³தி⁴ம் சக்ரே சக்ரப்⁴ருதாம் வர꞉ || 1-40-11
மனித குலத்தின் நற்சக்கரத்தைத் தனியாகச் சுழற்றுபவனும், சக்கரதாரிகளில் {சக்கராயுதம் தரித்தவர்களில்} முதன்மையானவனுமான அவன், மனித வடிவம் ஏற்பதில் தன் இதயத்தை ஏன் நிலைநிறுத்தினான்?(
கோ³பாயனம் ய꞉ குருதே ஜக³த꞉ ஸார்வலௌகிகம் |
ஸ கத²ம் கா³ம் க³தோ தே³வோ விஷ்ணுர்கோ³பத்வமாக³த꞉ || 1-40-12
உலகத்தின் பெரும் மனிதர்கள் அனைவரையும் பாதுகாப்பவனான தலைவன் விஷ்ணு, இந்தப் பூமிக்கு ஏன் ஒரு பால்காரனாக {கோபாலனாக} வந்தான்?
மஹாபூ⁴தானி பூ⁴தாத்மா யோ த³தா⁴ர சகார ச |
ஸ்²ரீக³ர்ப⁴꞉ ஸ கத²ம் க³ர்பே⁴ ஸ்த்ரியா பூ⁴சரயா த்⁴ருத꞉ || 1-40-13
பூதங்களோடு அடையாளங்காணப்படுபவனும், பெருங்காரணனும், பூதங்களாகவே இருப்பவனுமான ஸ்ரீகர்ப்பன்[ஸ்ரீ என்றால் நற்பேறு, கர்ப்பம் என்றால் கருவறை. இஃது இவையிரண்டும் இணைந்த விஷ்ணுவின் மற்றொரு பெயராகும்”], பூமியில் திரிந்த ஒரு பெண்ணின் கருவறையில் எவ்வாறு இருந்தான்?
யேன லோகான்க்ரமைர்ஜித்வா த்ரிபி⁴ஸ்த்ரீம்ஸ்த்ரித³ஸே²ப்ஸயா |
ஸ்தா²பிதா ஜக³தோ மார்கா³ஸ்த்ரிவர்க³ப்ரப⁴வாஸ்த்ரய꞉ || 1-40-14
தேவர்களால் விரும்பப்படுபவனான அவன் மூன்று காலடிகளால்[“ஓர் அசுர மன்னனான பலி இந்தியாவின் அரசுரிமையை அடைய பல வேள்விகளைச் செய்த கதை இங்கே மறைகுறிப்பாக இருக்கிறது. அதன்படி தேவர்கள் பெருங்கவலை அடைந்து விஷ்ணுவிடம் உதவியைக் கோரினர். அவன், அவர்களின் வேண்டுதலின் பேரில் குள்ள பிராமணரின் வடிவை ஏற்று, பிச்சைக்காகப் பலியிடம் சென்றான். எதைக்கேட்டாலும் கொடுப்பேனெனப் பலி சொன்ன பிறகு, மூன்று கால்களுடன் {காலடிகளுடன் கூடிய} பெரும் வடிவை ஏற்ற விஷ்ணு, மூன்றாவது காலை {அடியை} வைப்பதற்கான இடத்தைப் பலியிடம் கேட்டான். மூன்றாவதை வைப்பதற்கான இடமேதும் இல்லாததால் அவன் பலியின் தலையில் வைத்தான்” ] மூவுலகங்களையும் கைப்பற்றி, பூமியில் மூன்று வர்க்கங்கள்[தர்மம் (அறம்), உலகம் சார்ந்த லாபமான அர்த்தம், ஆசையான காமம் என்ற வாழ்வின் மூன்று வகை நோக்கங்கள். இந்த மூன்று வீதிகளும் மனிதகுலத்திற்கென அவனால் விதிக்கப்பட்டன. அறத்தால் சொர்க்கத்தையும், உலகம் சார்ந்த லாபம் பூமியையும், ஆசை அதற்கு அடியில் உள்ள உலகத்தையும் அவர்கள் அடைகின்றனர்” ] எனும் மூன்று வீதிகளை {பாதைகளை} அமைத்தான்.
யோ(அ)ந்தகாலே ஜக³த்பீத்வா க்ருத்வா தோயமயம் வபு꞉ |
லோகமேகார்ணவம் சக்ரே த்³ருஸ்²யாத்³ருஸ்²யேன வர்த்மனா || 1-40-15
அண்ட அழிவின் போது அவன் பூமியைக் குடித்து, நீரின் வடிவை ஏற்றான். அவன் மொத்த பூமியையும் ஒரே நீர்ப்பரப்பாக மாற்றினான்[அவன் அண்ட நுண்ணறிவின் வடிவில் ஒன்றை ஏற்றான்”]
ய꞉ புராணே புராணாத்மா வாராஹம் ரூபமாஸ்தி²த꞉ |
விஷாணாக்³ரேண வஸுதா⁴முஜ்ஜஹாராரிஸூத³ன꞉ || 1-40-16
பழங்காலத்தில் அவன் பன்றியின் {வராக} வடிவை ஏற்றுத் தன் தந்தங்களால் பூமியைக் காத்தான்
ய꞉ புரா புருஹூதார்தே² த்ரைலோக்யமித³மவ்யய꞉ |
த³தௌ³ ஜித்வாஸுரக³ணான்ஸுராணாம் ஸுரஸத்தம꞉ || 1-40-17
அந்தத் தேவர்களில் முதன்மையானவன் {விஷ்ணு}, பழங்காலத்தில் புருஹூதனின்[இஃது இந்திரனின் பெயராகும். புருவில் இருந்து அதிகம் வழிபடப்பட்ட அல்லது அழைக்கப்பட்ட ஹுதன்] சார்பில் அசுரர்களை வீழ்த்தி, மூவுலகங்களையும் தேவர்களுக்கு அளித்தான்
யேன ஸைம்ஹம் வபு꞉ க்ருத்வா த்³விதா⁴ க்ருத்வா ச தத்புன꞉ |
பூர்வம் தை³த்யோ மஹாவீர்யோ ஹிரண்யகஸி²புர்ஹத꞉ || 1-40-18
சிங்க மனிதனின் {நரசிம்ம} வடிவை ஏற்ற அவன், தைத்திய தலைவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான ஹிரண்யகசிபுவைக் கொன்றான்[“கொண்டாடப்படும் பிரகலாதன் கதையை இது குறிப்பிடுகிறது. அவன் அசுரமன்னனான ஹிரண்யகசிபுவின் மகனாவான். அவன் ஹிரண்யகசிபுவின் பகைவனான விஷ்ணுவை வழிபடத் தொடங்கினான். அவன் தன் மகனைப் பல்வேறு வழிகளில் தண்டித்தான், பிறகு அவன் சிங்க மனிதனின் வடிவில் வந்த விஷ்ணுவால் அவன் கொல்லப்பட்டான்”].
ய꞉ புரா ஹ்யனலோ பூ⁴த்வா ஔர்வ꞉ ஸம்வர்தகோ விபு⁴꞉ |
பாதாலஸ்தோ²(அ)ர்ணவக³தம் பபௌ தோயமயம் ஹவி꞉ || 1-40-19
பழங்காலத்தில், ஆழ்கடலில் சம்வர்த்தக நெருப்பின் வடிவை ஏற்ற அந்தத் தலைவன் ஆழ்கடல் உலகின் நீர் ஆகுதிகளைக் குடித்தான்
ஸஹஸ்ரஸி²ரஸம் ப்³ரஹ்மன்ஸஹஸ்ராரம் ஸஹஸ்ரத³ம் |
ஸஹஸ்ரசரணம் தே³வம் யமாஹுர்வை யுகே³ யுகே³ || 1-40-20
ஓ! பிராமணரே, பல்லாயிரம் யுகங்களில் அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஆயிரம் தலைகளுடனும், ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் கால்களுடனும் தோன்றினான்.
நாப்⁴யாரண்யாம் ஸமுத்பன்னம் யஸ்ய பைதாமஹம் க்³ருஹம் |
ஏகார்ணவஜலஸ்த²ஸ்ய நஷ்டே ஸ்தா²வரஜங்க³மே || 1-40-21
மொத்த உலகும் ஒரே நீர் பரப்பாக மாற்றப்பட்டு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் மொத்தமும் அழிந்தபோது, அவனது உந்தியில் (பெரும்பாட்டனான) பிரம்மன் ஓயும் தாமரை உதித்தது.
யேன தே நிஹதா தை³த்யா꞉ ஸங்க்³ராமே தாரகாமயே |
ஸர்வதே³வமயம் க்ருத்வா ஸர்வாயுத⁴த⁴ரம் வபு꞉ || 1-40-22
தாரகனுடனான மோதலில் அவன், தேவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வடிவை ஏற்று, ஆயுதங்கள் அனைத்தையும் ஏந்தி அசுரர்களைக் கொன்றான்
க³ருத³ஸ்தேனசோத்ஸிக்த꞉ காலனேமிர்னிபாதித꞉ |
நிர்ஜிதஸ்²ச மயோ தை³த்ய꞉ தாரகஸ்²ச மஹாஸுர꞉ || 1-40-23
கருடனில் அமர்ந்து, பெரும் வடிவை ஏற்ற அவன், பேரசுரனான காலநேமியைக் கொன்று, பேரசுரனான தாரகனை வீழ்த்தினான்.
உத்தராந்தே ஸமுத்³ரஸ்ய க்Sஈரோத³ஸ்யாம்ருதோத³தே⁴꞉ |
த꞉ ஸே²தே ஸா²ஸ்²வதம் யோக³மாஸ்தா²ய திமிரம் மஹத் || 1-40-24
மாய சக்தியுடன் கூடிய அவன் அமுதம் தோன்றி பாற்கடலின் வடக்குக் கரையில் நித்திய யோகத்தில் ஈடுபட்டவாறு கிடக்கிறான்.
ஸுராரணிர்க³ர்ப⁴மத⁴த்த தி³வ்யம் தப꞉ ப்ரகர்ஷாத³தி³தி꞉ புராணம் |
ஸ²க்ரம் ச யோ தை³த்யக³ணாவருத்³த⁴ம் க³ர்பா⁴வஸானே நிப்⁴ருதம் சகார || 1-40-25
அதிதி, தன் கடுந்தவங்களின் நிறைவில், தேவர்கள்ளின் மத்தைப் போல இருந்த அந்தத் தெய்வீகப் புராதன புருஷனைக் கருவில் கொண்டாள். அவளது கருவறையில் இருந்து வெளி வந்த குள்ளன் {வாமனன்}, அசுரர்களால் அடைத்துவைக்கப்பட்டிருந்த இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்றினான்
பதா³னி யோ லோகமயானி க்ருத்வா சகார தை³த்யான்ஸலிலேஸ²யாம்ஸ்தான் |
க்ரித்வா ச தே³வாம்ஸ்த்ரிதி³வஸ்ய தே³வாம்ஸ்²சக்ரே ஸுரேஸ²ம் த்ரித³ஸா²தி⁴பத்யே || 1-40-26
அவன் தன் காலை உலகங்கள் அனைத்திலும் வைத்து, அசுரர்கள் அனைவரையும் நீரில் வைத்தான். தேவர்களைச் சொர்க்கத்தில் விளையாடச் செய்த அவன், இந்திரனுக்குத் தேவர்களின் அரசைக் கொடுத்தான்
பாத்ராணி த³க்ஷிணா தீ³க்ஷா சமஸோலூக²லானி ச |
கா³ர்ஹபத்யேன விதி⁴னா அன்வாஹார்யேண கர்மணா || 1-4-27
அவன் கார்ஹபத்ய[“இந்தப் புனித நெருப்பானது, ஓர் இல்லறத்தானால், தன் தந்தையிடம் இருந்து பெறப்பட்டு, தன் வீட்டில் நிரந்தரமாகப் பராமரிக்கப்பட்டு, தன் சந்ததிக்கும் கொடுக்கப்படுகிறது. வேள்விக் காரியங்களுக்கு இதில் இருந்தே நெருப்பு எடுக்கப்படுகிறது”], அன்வாஹார்ய[“இது புது நிலவு நாளில் பித்ருக்களைக்கு மதிக்கும் வகையில் மாதந்தோறும் செய்யப்படும் சிராத்தம்” ] சடங்குகளுக்கான விதிகளை விதித்தான், தக்ஷிணை[“கொடைகள்”], தீக்ஷை[“{வேள்வி / சடங்கின்} தொடக்கம்”], சமஸம்[வேள்விகளில் அமிலம் போன்ற சாற்றைக் குடிப்பதற்குரிய பாத்திரம் அல்லது ஒரு வகைக் கரண்டி”], உலூகலாம்[இஃது அரிசியைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு மரக் குழவி”] முதலிய வேள்விக்கான பொருட்கள் பலவற்றைப் படைத்தான்,
அக்³னிமாஹவனீயம் ச வேதீ³ம் சைவ குஸ²ம் ஸ்ருவம் |
ப்ரோக்ஷணீயம் த்⁴ருவாம் சைவ ஆவப்⁴ருத்²யம் ததை²வ ச || 1-40-28
ஆகுதிகள் காணிக்கையளிக்கப்படும் நெருப்பைப் படைத்தான், வேள்விப்பீடம், குசம்[“இது புனிதமான மற்றும் அறம் சார்ந்த காரியங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகைப் புல்லாகும்; எனவே இது வேள்விப் புல் என்றழைக்கப்படுகிறது”], ஸ்ருவம்[இது மரத்தினால் செய்யப்பட்டதும், வட்டமான இரு குழிகளைக் கொண்டதும், வேள்வி நெருப்பில் நெய்யை ஊற்றுவதற்குப் பயன்படுவதுமான ஓர் அகப்பையாகும்”], ப்ரோக்ஷணீம்[“அசையாமல் வைப்பதற்குரிய ஒரு பொருள்”], த்ருவாம்[“ஆலிலையின் வடிவில் அமைந்த ஒரு வேள்விக் குடுவையாகும். இது கொட்டைக்களை மரத்தில் செய்யப்படுவதாகும்”] ஆகியவற்றை அமைத்தான்
ஸுதா⁴த்ரீணி ச யஸ்²சக்ரே ஹவ்யகவ்யப்ரதா³ந்த்³விஜான் |
ஹவ்யாதா³ம்ஸ்²ச ஸுரான்யஜ்ஞே க்ரவ்யாதா³ம்ஸ்து பித்ர்^ஈனபி || 1-40-29
வேள்வி செய்த பிறகு செய்யும் நீராடலில் மூவகையான அமுத நன்மைகளைப் படைத்தான். இருபிறப்பாளர்களை ஹவ்யமும்[“ஆகுதியில் காணிக்கையளிக்கத் தகுந்தது. தேவர்களுக்கான காணிக்கை”], கவ்யமும் [பித்ருக்களுக்கான உணவுக்காணிக்கை அல்லது ஆகுதி”] கொடுக்கச் செய்தான், முன்னதை {ஹவ்யத்தைத்} தேவர்களும், பின்னதை {கவ்யத்தைப்} பித்ருக்களும் எடுத்துக் கொள்ளச் செய்தான்.
பா⁴கா³ர்தே² மந்த்ரவிதி⁴னா யஸ்²சக்ரே யஜ்ஞகர்மணி |
யூபான்ஸமித்ஸ்ருசம் ஸோமம் பவித்ரான்பரிதீ⁴னபி || 1-40-30
யஜ்ஞியானி ச த்³ரவ்யாணி யஜ்ஞாம்ஸ்²ச ஸசயானலான் |
ஸத³ஸ்யான்யஜமானாம்ஸ்²ச மேத்⁴யாதீ³ம்ஸ்²ச க்ரதூத்தமான் || 1-40-31
விப³பா⁴ஜ புரா ஸர்வம் பாரமேஷ்ட்²யேன கர்மணா |
யாகா³னுரூபான்ய꞉ க்ருத்வா லோகானநுபராக்ரமத் || 1-40-32
பரமேஷ்டியால் (பிரம்மனால்) விதிக்கப்பட்ட விதிகளின் படியே பழங்காலத்தில் அவன் {விஷ்ணு}, பல்வேறு வேள்வி மந்திரங்களின்[ஓர் அறச்சடங்கைச் செய்யும்போது ஓதப்படும் பாடல்கள்”] மூலம், யூபங்கள்[இது பொதுவாக மூங்கிலில் செய்யப்படும், அல்லது கருங்காலி மரத்தில் செய்யப்படும் ஒரு வேள்வித் தண்டு அல்லது தூண் ஆகும். இதில் தான் வேள்விப் பலி கட்டப்படும்” ], ஸமிதங்கள்[நெருப்பை மூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விறகு, மரம் மற்றும் புல் முதலியன” ], ஸுருசங்கள்[ஒரு கரண்டி”], சோமங்கள்[“குடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இதே பெயர் கொண்ட ஒரு செடியின் சாறாகும்” ], புனிதமான பரிதீகள்[இது வேள்வி நெருப்பு ஏற்றப்படும் குழி அமைந்த ஒரு மரச்சட்டம்” ] மற்றும் வேறு பல வேள்விப் பொருட்களிலும், வேள்வி நெருப்பை அமைக்கும் அறையிலும், யஜமானர்கள்[வேள்வியைச் செய்பவர்கள்”] மற்றும் மேத[“ஒரு வகை வேள்வி”] வகைப்பாட்டிலும், பிற சிறந்த வேள்விகளிலும் பிரிவினைகளை அமைத்தான். (30-32)
க்ஷணா லவாஸ்²ச காஷ்டா²ஸ்²ச கலாஸ்த்ரைகால்யமேவ ச |
முஹூர்தாஸ்தித²யோ மாஸா꞉ பக்ஷா꞉ ஸம்வத்ஸராஸ்ததா² || 1-40-33
ருதவ꞉ காலயோகா³ஸ்²ச ப்ரமாணம் த்ரிவித⁴ம் த்ரிஷு |
ஆயு꞉ க்ஷேத்ராண்யுபசயோ லக்ஷணம் ரூபஸௌஷ்ட²வம் || 1-40-34
த்ரயோ வர்ணாஸ்த்ரயோ லோகாஸ்த்ரைவித்³யம் பாவகாஸ்த்ரய꞉ |
த்ரைகால்யம் த்ரீணி கர்மாணி த்ரயோ(அ)பாயாஸ்த்ரயோ கு³ணாஹ் || 1-40-35
யுகங்களின் பல்வேறு வகைகளை அமைத்து, மனிதர்கள் அனைவருக்கும் முன்பாகத் தன் வலிமையை வெளிப்படுத்திய அவன், க்ஷணம்[முப்பது கலைகளுக்கு இணையான கால அளவு அல்லது நான்கு நிமிடங்கள்”], லவம்[“ஒரு கண்சிமிட்டலுக்கு ஆக்ககூடிய நேரத்தில் அறுபதில் ஒரு பங்கு நேரம் என்ற மிக நுட்பமான காலப்பிரிவு” ], காஷ்டை[“ஒரு கலையில் முப்பதில் ஒரு பங்கு காலம் அல்லது பதினெட்டுக் கண்சிமிட்டல்களுக்கு ஆகும் காலம்” ], கலை[ஒரு காலப்பிரிவினை”], தற்காலம், கடந்த காலம், எதிர்காலம், காலப்பிரிவினை, முகூர்த்தம்[ஒரு பகல் மற்றும் இரவில் முப்பதில் ஒரு பங்கு காலம், அல்லது நாற்பத்தெட்டு நிமிடங்கள்” ], திதி[ஒரு சந்திர நாள், ஒரு மாதத்தில் முப்பதில் ஒரு பங்கு காலம்”], மாதங்கள், ஒளிப்பக்கங்கள் {பக்ஷங்கள்}, வருடங்கள், பருவ காலங்கள், ஆயுளின் மூன்று பிரிவினைகள், குணப் பெருக்கம், அசையும் மற்றும் அசையான உயிரினங்களின் அழகு, மூன்று வர்ணங்கள்[புரோஹதி சாதி, அல்லது பிராமணர்கள், படை சாதியான க்ஷத்திரியர்கள், வணிகச் சாதியான வைசியர்கள் ஆகிய மூன்று சாதிகள்” ], மூன்று உலகங்கள்[“சொர்க்கம், பூமி, பாதாளம் என்ற மூன்று உலகங்கள்” ], மூன்று வேதங்கள்[“ரிக், யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்கள்”], மூன்று நெருப்புகள்[38], மூன்று காலங்கள்[“நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்கள்”], மூன்று வகைச் செயல்கள்[“நல்லியல்பு {சத்வ}, இருள் {தமஸ்} மற்றும் அறியாமை {ஆசை / ரஜஸ்} ஆகிய குணங்கள் சார்ந்த மூவகைச் செயல்கள்”], மூன்று உபாயங்கள்[“சுயத்தின் அழிவு, செல்வமீட்டல், கடுமையான கல்வி ஆகியவையே முக்தியை அடைவதற்கான மூவகை வழிமுறைகள்”] (வழிமுறைகள்), மூவகைக் குணங்கள்[“நல்லியல்பு {சத்வம்}, இருள் {தமஸ்}, அறியாமை {ரஜஸ்} என்ற மூவகைக் குணங்கள்” ] ஆகியவற்றையும் படைத்தான்.(33-35)
த்ரயோ லோகா꞉ புரா ஸ்ருஷ்டா யேனானந்த்யேன கர்மணா |
ஸர்வபூ⁴தக³ணஸ்ரஷ்டா ஸர்வஹூதகு³ணாத்மக꞉ || 1-40-36
முடிவிலாத செயல்களின் மூலம் மூவுலங்களையும் முன்பே படைத்தவன் அவனே. பூதங்களையும், குணங்களையும், அவற்றோடு அடையாளங்காணப்படும் அனைத்தையும் படைத்தவன் அவனே
ந்ருணாமிந்த்³ரியபூர்வேண யோகே³ன ரமதே ச ய꞉ |
க³தாக³தாப்⁴யாம் யோ நேதா ஸர்வத்ர ஜக³தீ³ஸ்²வர꞉ || 1-40-37
மனித குலத்திற்கு மத்தியில் பிறப்பையும், இறப்பையும் அறிமுகம் செய்து, அண்டத்தில் அவர்களைத் திரியச் செய்தவன் அவனே. ஒரு விலங்கின் வடிவில் எங்கும் விளையாடிக் கொண்டிருப்பவன் அவனே. அண்டத்தின் தலைவனும் அவனே
யோ க³திர்த⁴ர்மயுக்தானாமக³தி꞉ பாபகர்மணாம் |
சாதுர்வர்ண்யஸ்ய ப்ரப⁴வ꞉ சாதுர்ஹோத்ரஸ்ய ரக்ஷிதா || 1-40-38
நல்லோரின் புகலிடமும், தீயோரைத் தண்டிப்பவனும் அவனே. நான்கு வர்ணங்களின் பிறப்பிடமும், நான்கு ஹோத்ரர்களின்[“நான்கு வகைப் புரோகிதர்கள்”] பாதுகாவலனும் அவனே
சாதுர்வித்³யஸ்ய யோ வேத்தா சாதுராஸ்²ரம்யஸம்ஸ்²ரய꞉ |
தி³க³ந்தரோ நபோ⁴பூ⁴தோ வாயுராபோ விபா⁴வஸு꞉ || 1-40-39
நால்வகை ஞானத்தின் ஆசானும், நான்கு ஆசிரமங்களின்[“மாணவன் {பிரம்மச்சாரி}, இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, துறவி {வானப்ரஸ்தன்} மற்றும் பிச்சைக்காரன் {ஸந்நியாசி} என்ற வாழ்வின் நான்கு நிலைகள்” ] பாதுகாவலனும் அவனே. திசைகள், வானம், காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றோடு அடையாளங்காணப்படுபவன் அவனே
சந்த்³ரஸூர்யமயஜ்யோதிர்யோகீ³ஸ²꞉ க்ஷணதா³ந்தக꞉ |
யத்பரம் ஸ்²ரூயதே ஜ்யோதிர்யத்பரம் ஸ்²ரூயதே தப꞉ || 1-40-40
சூரியன், சந்திரன் மற்றும் கதிர்களுடன் அடையாளம் காணப்படுபவன் அவனே. யோகிகளின் தலைவன் அவனே, இரவை முடிவுறச் செய்பவன் அவனே. மிகச் சிறந்த ஒளி மற்றும் நாம் கேள்விப்படும் தபங்கள் ஆகியவற்றோடு அடையாளங்காணப்படுபவன் அவனே
யம் பரம் ப்ராஹுரபரம் ய꞉ பர꞉ பரமாத்மவான் |
நாராயணபரா வேதா³ நாராயணபரா꞉ க்ரியா꞉ || 1-40-41
ஆன்மாக்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு சரடு அவனே என்றும், மொத்த அண்டமும் அவனது வடிவமே என்றும் முனிவர்கள் சொல்கிறார்கள். வேதங்களும், அனைத்துப் படைப்புகளும் நாராயணனில் இருக்கின்றன.
நாராயணபரோ த⁴ர்மோ நாராயணபரா க³தி꞉ |
நாராயணபரம் ஸத்யம் நாராயணபரம் தப꞉ || 1-40-42
பேரறமும் {உயர்ந்த தர்மமும்}, மிகச் சிறந்த நிலையும் {உயர்ந்த கதியும்} நாராயணனே. வாய்மை நாராயணனில் இருக்கிறது, {உயர்ந்த} தபமும் அவனில் இருக்கிறது.
நாராயணபரோ மோக்ஷோ நாராயணபராயணம் |
ஆதி³த்யாதி³ஸ்து யோ தி³வ்யோ யஸ்²ச தை³த்யாந்தகோ விபு⁴꞉ || 1-40-43
முக்தி நாராயணனில் இருக்கிறது, மிகச் சிறந்த புகலிடம் நாராயணனே. ஆதித்யனும், பிற தேவர்களும் அவனே, அசுரர்களைக் கொன்றவன் அவனே
யுகா³ந்தேஷ்வந்தகோ யஸ்²ச யஸ்²ச லோகாந்தகாந்தக꞉ |
ஸேதுர்யோ லோகஸேதூனாம் மேத்⁴யோ யோ மேத்⁴யகர்மணாம் || 1-40-44
அண்ட அழிவின் போது அனைத்தையும் அழிப்பவன் அவனே. அனைத்தையும் அழிக்கும் கால தேவனுக்கே காலன் அவனே. மனித குலத்தில் மதிப்புமிக்கப் பல்வேறு வகைகளை அமைத்திருப்போரின் (மனு மற்றும் பிறரின்) தலைவன் அவனே, மனித குலத்தைத் தூய்மைப்படுத்தும் (கங்கை மற்றும் பிறரைவிட) மிகப் புனிதமானவன் அவனே.
வேத்³யோ யோ வேத³விது³ஷாம் ப்ரபு⁴ர்ய꞉ ப்ரப⁴வாத்மனாம் |
ஸோமபூ⁴தஸ்து ஸௌம்யானாமக்³னிபூ⁴தோ(அ)க்³னிவர்cஅஸாம் || 1-40-45
வேதங்களை அறிந்தோரின் கல்விப் பொருள் அவனே; தற்கட்டுப்பாடு கொண்டோரின் (முனிவர்களின்) தலைவன் அவனே; அழகிய பொருட்கள் அனைத்தையும் விட அழகன் அவனே; நெருப்பு போன்ற பிரகாசம் கொண்டவர்களுக்கு நெருப்பைப் போன்றவன் அவனே
மனுஷ்யாணாம் மனோபூ⁴தஸ்தபோபூ⁴தஸ்தபஸ்வினாம் |
வினயோ நயவ்ருத்தீனாம் தேஜஸ்தேஜஸ்வினாமபி |
ஸர்கா³ணாம் ஸர்க³காரஸ்²ச லோகஹேதுரனுத்தம꞉ || 1-40-46
மனிதர்களின் மனமும், தவசிகளின் தவச் சக்தியும், கடும் அறவோரின் அறநெறியும், சக்தி மிக்கோரின் சக்தியும், படைப்புகள் அனைத்தின் படைப்பாளனும், அனைத்து உலகங்களின் மிகச் சிறந்த பிறப்பிடமும் அவனே
விக்³ரஹோ விக்³ரஹார்ஹாணாம் க³திர்க³திமதாமபி |
ஆகாஸ²ப்ரப⁴வோ வாயுர்வாயுப்ராணோ ஹுதாஸ²ன꞉ || 1-40-47
சிலைகளை நாடுவோரின் தெய்வச்சிலையும், அசைவைக் கொண்டோருக்கு அசைவும் அவனே. ஆகாயம் காற்றின் பிறப்பிடமாகும், காற்று, நெருப்பின் உயிராகும்.
தே³வா ஹுதாஸ²னப்ராணா꞉ ப்ராஙோ(அ)க்³னேர்மது⁴ஸூத³ன꞉ |
ரஸாத்³வை ஸோ²ணிதம் ஜாதம் ஸோ²ணிதான்மாம்ஸமுச்யதே || 1-40-48
தேவர்களின் உயிர் சக்தி நெருப்பாகும், நெருப்பின் உயிர் மதுசூதனனாவான்.சாற்றின் மூலம் குருதி உண்டாகிறது, குருதியின் மூலம் சதை உண்டாகிறது.
மாம்ஸாத்து மேத³ஸோ ஜன்ம மேத³ஸோ(அ)ஸ்தீ²னி சைவ ஹி |
அஸ்த்²னோ மஜ்ஜா ஸமப⁴வன்மஜ்ஜாத꞉ ஸு²க்ரமேவ ச || 1-40-49
சதையில் இருந்து கொழுப்பும், கொழுப்பில் இருந்து எலும்புகளும், எலும்புகளில் இருந்து நரம்புகளும், நரம்புகளில் இருந்து விந்து நீரும் உண்டாகின்றன.
ஸு²க்றாத்³க³ர்ப⁴꞉ ஸமப⁴வத்³ரஸமூலேன கர்மணா |
தத்ராபாம் ப்ரத²மோ பா⁴க³꞉ ஸ ஸௌம்யோ ராஸி²ருச்யதே || 1-40-50
க³ர்போ⁴ஷ்மஸம்ப⁴வோ(அ)க்³னிர்யோ த்³விதீயோ ராஸி²ருச்யதே |
ஸு²க்ரம் ஸோமாத்மகம் வித்³யாதா³ர்தவம் வித்³தி⁴ பாவகம் |
பா⁴கௌ³ ரஸாத்மகௌ ஹ்யேஷாம் வீர்யம் ச ஸ²ஸி²பாவகௌ || 1-40-51
கப²வர்கே³ ப⁴வேச்சு²க்ரம் பித்தவர்கே³ ச ஸோ²ணிதம் |
கப²ஸ்ய ஹ்ருத³யம் ஸ்தா²னம் நாப்⁴யாம் பித்தம் ப்ரதிஷ்டி²தம் || 1-40-52
தே³ஹஸ்ய மத்⁴யே ஹ்ருத³யம் ஸ்தா²னம் தன்மனஸ꞉ ஸ்ம்ருதம் |
நாபி⁴கோஷ்டா²ந்தரம் யத்து தத்ர தே³வோ ஹுதாஸ²ன꞉ || 1-4-53
மன꞉ ப்ரஜாபதிர்ஜ்ஞேய꞉ கப²꞉ ஸோமோ விபா⁴வ்யதே |
பித்தமக்³னி꞉ ஸ்ம்ருதம் ஹ்யேதத³க்³னீஷோமாத்மகம் ஜக³த் || 1-40-54
கருவுறும் கருவியாக விந்துநீரே இருக்கிறது. சாறாக இருக்கும் வேரான இதன் செயல்முறையின் மூலமே இவை அனைத்தும் உண்டாகின்றன. அவற்றில் முதல் பகுதி நீராகும், எனவே அது சௌம்யம்[“(உடற்கூறியலில்) ஊனீர் என்ற ரத்தச்சிவப்பணுக்களை ரத்தம் பெறுகிறது”] என்றழைக்கப்படுகிறது. இரண்டாவது உட்பொருள், கருவறையில் இருக்கும் நெருப்பாகும். இவ்வாறு நெருப்புக்கு ஒப்பான விந்து நீரும் குருதியால் அமைந்ததாகும். சாறுகள் அனைத்தின் சாரமான விந்து நீரானது, அதிகமான சளியால் {கபத்தால்} படைக்கப்படுகிறது, கோடிக்கணக்கான பருப்பொருட்களின் மூலம் குருதி உண்டாகிறது. சளியின் {கபத்தின்} இருப்பிடம் இதயமும், பித்தத்தின் இருப்பிடம் உந்தியுமாகும். உடலில் இருக்கும் இதயமே மனத்தின் இருப்பிடமாக அறியப்படுகிறது. உந்திக்குழிக்குப் பின்னால் பசியானது நெருப்பாக இருக்கிறது. மனம் பிரஜாபதியாகவும் {பிரம்மனாகவும்}, சளி {கபம்} சோமனாகவும், பித்தம் அக்னியாகவும் (நெருப்பின் தேவனாகவும்) அறியப்படுகின்றன. இவ்வாறு மொத்த உலகமும் நெருப்போடு அடையாளங்காணப்படுகிறது.(51-54)
ஏவம் ப்ரவர்ததே க³ர்பே⁴ வர்தி⁴தே(அ)ம்பு³த³ஸன்னிபே⁴ |
வாயு꞉ ப்ரவேஸ²ம் ஸஞ்சக்ரே ஸங்க³த꞉ பரமாத்மனா || 1-40-55
மேகம் உண்டாவதைப் போலக் கருவுறுதல் நடைபெறும்போது, பரமாத்மனுடன் கூடிய காற்று அங்கே நுழைகிறது[புகை, ஒளி, நீர் மற்றும் காற்றின் உதவியால் மேகம் பெருகுவதைப் போலவே, உணவு, நெருப்பு மற்றும் நீரால் ஊட்டமளிக்கப்படும் கருவும் வளர்கிறது. இங்கே குறிப்பிடப்படும் காற்று உயிர் சக்தியைக் குறிக்கிறது. ஆன்மாவானது உயிர் சக்தியின் வடிவிலேயே நுழைகிறது”].
ததோ(அ)ங்கா³னி விஸ்ருஜதி பி³ப⁴ர்தி பரிவர்த⁴யன் |
ஸ பஞ்சதா⁴ ஸ²ரீரஸ்தோ² பி⁴த்³யதே வர்த⁴தே புன꞉ || 1-40-56
பிறகு அது பல்வேறு அங்கங்களை உண்டாக்கி அதற்கு ஊட்டமளிக்கிறது. உடலுக்குள் உள்ள உயிர் காற்று ஐந்தாகப் பிரிந்து படிப்படியான விகிதங்களை அடைகிறது
ப்ராணோ(அ)பான꞉ ஸமானஸ்²ச உதா³னோ வ்யான ஏவ ச |
ப்ராண꞉ ஸ ப்ரத²மம் ஸ்தா²னம் வர்த⁴யன்பரிவர்ததே || 1-40-57
பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகியவை ஐந்து உயிர் காற்றுகளாகும். உடலின் மிக முக்கியப் பகுதியான இதயத்துக்குப் பிராணன் ஊட்டமளிக்கிறது.
அபான꞉ பஸ்²சிமம் காயமுதா³னோர்த்⁴வம் ஸ²ரீரிண꞉ |
வ்யானோ வ்யாயச்C꞉அதே யேன ஸமான꞉ ஸன்னிவர்தயேத் |
பூ⁴தாவாப்திஸ்ததஸ்தஸ்ய ஜாயதேந்த்³ரியகோ³சராத் || 1-40-58
கால் வரையுள்ள உடலின் கீழ் பகுதிகளுக்கு அபானன் ஊட்டமளிக்கிறது. நெஞ்சு மற்றும் உடலின் மேல் பகுதிக்கு உதானன் ஊட்டமளிக்கிறது. பெரும்பலம் தேவைப்படும் பணிகளைச் செய்வதற்குப் பயன்படும் உயிர் காற்று வியானன் என்றழைக்கப்படுகிறது. சமானன் என்ற உயிர் காற்று உடல் முழுவதிலும் இருந்து, உந்திப் பகுதியில் தங்கி, குடிக்கப்படும், உண்ணப்படும் எதையும் அதனதற்குரிய இடங்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது. (உயிர் காற்றுகள் பகுக்கப்பட்ட பிறகு) உயிரினங்கள் பூமியைக் குறித்த அறிவைத் தங்கள் புலனங்களின் மூலம் அடைகின்றன.(
ப்ருதி²வீ வாயுராகாஸ²மாபோ ஜ்யோதிஸ்²ச பஞ்சமம் |
தஸ்யேந்த்³ரியாணி விஷ்டானிஸ்வம் ஸ்வம் யோக³ம் ப்ரசக்ரிரே || 1-40-59
பார்தி²வம் தே³ஹமாஹுஸ்தம் ப்ராணாத்மானம் ச மாருதம் |
சி²த்³ராண்யாகாஸ²யோனீனி ஜலாத்ஸ்ராவ꞉ ப்ரவர்ததே || 1-40-60
ஜ்யோதிஸ்²சக்ஷுஸ்²ச தேஜாத்மா தேஷாம் யந்தா மன꞉ ஸ்ம்ருத꞉ |
க்³ராமாஸ்²ச விஷயாஸ்²சைவ யஸ்ய வீர்யாத்ப்ரவர்திதா꞉ || 1-40-61
நிலம், காற்று, ஆகாயம், நீர் மற்றும் ஒளி ஆகியவை புலன்களாக மாற்றப்படுகின்றன. பிறகு அவை உடலின் குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்றித் தங்களுக்குரிய செயல்பாடுகளைச் செய்கின்றன. நீரைத் தன்னுள் கொண்ட நாக்கானது, சாற்றை உறிஞ்சுகிறது; ஒளியைத் தன்னுள் கொண்ட கண்ணானது வடிவங்களைக் காண்கிறது; காற்றைத் தன்னுள் கொண்ட தோலானாது ஒலியைக் கேட்கிறது. நிலத்தின் மாற்றமே கடினமான பகுதியாகும். உயிர் காற்றானது காற்றின் வடிவமாற்றமாக இருக்கிறது; துளைகள் அனைத்தும் ஆகாயத்தில் இருந்து தோன்றுகின்றன; நீர்ப்பகுதி நீராகவும்; கண்ணானது, ஒளியின் வடிவமாகவும், ஐம்பூதங்களின் சக்தியான மனமானது புலன்களின் தலைவனாகவும் இருக்கின்றன. மனமானது தன் சக்தியால் புலன்களைத் தங்களுக்குரிய பொருட்களை உணர வைக்கிறது.(59-61)
இத்யேவம் புருஷ꞉ ஸர்வான்ஸ்ருஜம்ள்ளோகான் ஸனாதனான் |
கத²ம் லோகே நைத⁴னே(அ)ஸ்மின்னரத்வம் விஷ்ணுராக³த꞉ || 1-40-62
அந்தப் பெரும்புருஷன், எப்போதும் இருக்கும் உலகங்களை இவ்வாறு படைத்துவிட்டு, அழியக்கூடிய இவ்வுலகில் ஏன் மனிதனாகப் பிறந்தான்?
ஏஷ மே ஸம்ஸ²யோ ப்³ரஹ்மன்னேவம் மே விஸ்மயோ மஹான் |
கத²ம் க³திர்க³திமதாமாபன்னோ மானுஷீம் தனும் || 1-40-63
ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, இதுவே என் ஐயமாகும், இதுவே என்னை ஆச்சரிப்படுத்துகிறது. மனித குலத்திற்கு சக்தியாக இருப்பவனே ஒரு மனிதனாகப் பிறக்கிறான்
ஸ்²ருதோ மே ஸ்வஸ்வவம்ஸ²ஸ்ய பூர்வேஷாம் சைவ ஸம்ப⁴வ꞉ |
ஸ்²ரோதுமிச்சா²மி விஷ்ணோஸ்து வ்ருஷ்ணீனாம் ச யதா²க்ரமம் || 1-40-64
நான் என் குடும்பத்தைக் குறித்தும், என் மூதாதையரின் குடும்பங்களைக் குறித்தும் கேட்டேன். இனி விஷ்ணு மற்றும் விருஷ்ணிகளின் குடும்பங்களை உரிய வரிசையில் கேட்க விரும்புகிறேன்
ஆஸ்²சர்யம் பரமம் விஷ்ணுர்தே³வைர்தை³த்யைஸ்²ச கத்²யதே |
விஷ்ணோருத்பத்திமாஸ்²சர்யம் மமாசக்ஷ்வ மஹாமுனே || 1-40-65
அந்த விஷ்ணு பேரற்புதன் எனத் தேவர்களும், அசுரர்களும் சொல்கின்றனர்
ஏததா³ஸ்²சர்யமாக்²யானம் கத²யஸ்வ ஸுகா²வஹம் |
ப்ரக்²யாதப³லவீர்யஸ்ய விஷ்ணோரமிததேஜஸ꞉ |
கர்ம சாஸ்²சர்யபூ⁴தஸ்ய விஷ்ணோஸ்தத்த்வமிஹோச்யதாம் || 1-40-66
உலகம் முழுவதையும் ஆச்சரியப் படுத்தியவையும், நன்கறியப்பட்டவையுமான விஷ்ணுவின் செயல்கள் மற்றும் பெரும் வலிமையையும், ஆற்றலையும் கொண்ட அவனது அற்புதமான, மகிழ்ச்சியான கதையை உண்மையாகவே எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}
இதி ஸ்²ரீமன்மஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி
வராஹோத்பத்திவர்ணனே சத்வாரிம்ஸோ²(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-