ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
————————————————————————
1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-
2-சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-
3-பிரபாவ பத்ததி -பெருமைப் பத்ததி -பாதுகையின் பெருமை -ஸ்லோகங்கள் -31-100-
4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-
5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-
6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-
7-அபிஷேக பத்ததி -முடி சூட்டுப் படலம் -ஸ்லோகங்கள் -181-210-
8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-
9-வைதாளிக பத்ததி -வந்திவை தாளிக பத்ததி -அரசர்கள் புகழ்வது -ஸ்லோகங்கள் -241-250-
10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-
11-சஞ்சார பத்ததி -ஸ்லோகங்கள் -261-320-
12-புஷ்ப பத்ததி -ஸ்லோகங்கள் -321-350-பூக்களால் அர்ச்சனை –
13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-
14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-
15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520-birds eye view
16-பஹூ ரத்ன பத்ததி -ஸ்லோகங்கள் -531-580-
17-பத்மராக பத்ததி -செம்மணிப் படலம் -ஸ்லோகங்கள் -581-610-
18-முக்தா பத்ததி -முத்துப் படலம் -ஸ்லோகங்கள் -611-660-
19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-
20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-
21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730-
22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-
23-சேஷ பத்ததி -சேஷ பூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-
24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-
25-சந்நிவேச பத்ததி -ஸ்லோகங்கள் -781-800-
26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவம்- குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-
27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820-
28-ஸூபாஷித பத்ததி -நன் மொழிப் படலம் -ஸ்லோகங்கள் -821-830-
29-பிரகீர்ண பத்ததி -கலம்பக படலம் -ஸ்லோகங்கள் -831-910-
30-சித்ர பத்ததி -ஸ்லோகங்கள் -911-950-
31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-நைச்ய அனுசந்தானம் –
32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-
——–
அஷ்டாக்ஷரம் +த்வயம் -32
சரம ஸ்லோகம் -32
காயத்ரி -24-+அஷ்டாக்ஷரம் சேர்த்து -32
ப்ரஹ்ம வித்யை -32-
———-
சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீச சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-
தலைக்கு மேல் பாதுகை வைத்த அடியார்களின் திருவடி ரேணவ-மண் துகள்கள் -இதுவே இதன் கவி நயம்
புவந த்ராண-புவனங்களை காக்க வல்லது –
அடியார்க்கு அடியார் –அடியோங்களே -சரம -நிஷ்டை –
ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகைகளை ஸ்ரத்தை யுடன் சிரஸ்ஸில் தரித்துக் கொள்ளும் பெரியோர்கள் உடைய
திருவடித் தூள்கள் உலகம் அனைத்தையும் உஜ்ஜீவிக்கச் செய்கின்றன –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழும் பரமை காந்திகள் உலகையே உஜ்ஜீவிக்கச் செய்யும் சக்தி பெற்றவர்கள் ஆகிறார்கள் –
————-
நீசே அபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்—5—
நீசே அபி ஹந்த -தாழ்ந்தவனாக இருந்தாலும்
மம மூர்த்தநி நிர்விசேஷம்-ஏற்றத் தாழ்வு பாராமல் அடியேனுடைய சென்னியிலும் அமர்ந்து –
சடாரி தலையில் வைத்தாலும் அலம்ப வேண்டா பாவனத்வம் உண்டே
துங்கே அபி யன் நிவிசதே நிகம உத்தமாங்கே -வேதாங்கம் -உபநிஷத் -மலைக்கும் மடுவுக்கும் போல் அன்றோ –
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி ப்ரதம உபகீதம் -வால்மீகி தொடக்கமான ரிஷிகளால் ஸ்துதிக்கப் பட்ட
ஸ்தோஷ்யாமி ரங்க பதி பாதுக யோர் யுகம் தத் -அந்த பாதுகை இணை -ஸ்துதிக்கப் புகுந்தேனே –
———–
அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே:
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்–16—
அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே -தொடக்கம் இல்லாத வேதத்தினுடைய -ரிஷிகள் மந்த்ர த்ருஷ்டா தானே மந்த்ர கர்த்தாக்கள் இல்லையே –
சப்த ராசே -வார்த்தைக்கு கூட்டங்களாலும் கூட
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம் -சொல்லி முடிக்க முடியாத -ஸ்ரீ ரெங்க நாத பாதுகா தேவியே -உன்னை –
கதபீதி ரபிஷ்டுவன் விமோஹாத் –பயமே இல்லாமல் -அறியாமையால் -ஸ்துதிக்கிறேன்
பரிஹாசேன விநோதயாமி நாதம்-ஸ்ரீ ரெங்க நாதனுக்கு ஏளன விஷயமாகும் -சேஷிக்கு மகிழ்வு கொடுக்கவே ஸ்துதி –
————
ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம்
சேஷத்வ காஷ்டாம பஜன் முராரே
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ
லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி –26-
ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன் முராரே –எந்த ஆழ்வார் -முரனை வதைத்த
அவனது சேஷத்வ எல்லை நிலத்தில் அடைந்தாரோ
அடியார் அடியார் தம் அடியார் –பயிலும் சுடர் ஒளி –
ப்ருத்ய ப்ருத்ய -முகுந்த மாலையிலும் உண்டே -இப்படி எட்டாவது படியில் இருக்கும் ஆழ்வாரை
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி-அந்த நம்மாழ்வார் பெயரைத் தாங்கி –
தொண்டர் தலைவன் பெயரைத் தங்குவது போல் –
உன்னாலே -இவரை வென்று -சடகோப தாசன் -என்று ஒன்பதாவது படிக்குச் சென்றாயே –
———–
நிச் சேஷம் அம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:—-32-
பாதுகையின் பெருமைகளை எழுத இயலும் – எப்படி? ஆகாயம் முழுவதுமாகச் சேர்ந்து பெரியதொரு காகிதமாக இருந்தல் வேண்டும்.
ஏழு கடலும் இணைந்து, எழுதும் மையாக மாற வேண்டும். எழுதுபவனாக ஆயிரம் தலைகளுடன் கூடிய பரமபுருஷனாகிய
ஸ்ரீரங்கநாதனே இருக்க வேண்டும். இப்படி என்றால் – பாதுகையின் பெருமைகளை ஏதோ ஒரு சிறிய அளவு எழுதி முடிக்க இயலும்.
————-
யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக
ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச
தூத்யாதிஷ் வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத்
தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரண த்ராணம் வ்ருணே ரங்கிண:–39-
நம்பெருமாளின் திருவடிகள் எப்படிப்பட்டவை – கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை;
பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து, கங்கையை உண்டாக்கியவை;
சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும்.
இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன.
இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு மேன்மை ஏற்பட அருள்வாயாக.
—————-
பத சரசி ஜயோஸ்த்வம் பாதுகே ரங்க பர்த்து
மனசி முநி ஜநாநாம் மௌலி தேசே ஸ்ருதீ நாம்
வசசி ஸ ஸூ கவீ நாம் வர்த்தசே நித்ய மேகா
ததிதம வகதம் தே சாஸ்வதம் வைஸ்வ ரூப்யம்–49-
ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை போலவே நீயும் ஒரே காலத்தில் பல இடங்களிலும் இருக்கிறாய்
பெருமாள் திருவடியிலும்
ரிஷிகள் உடைய மனதிலும்
வேதாந்தங்களிலும்
கவிகளுடைய வாக்கிலும் வசிக்கிறாய்
இதுவே நீ எங்கும் பரந்தமையைக் காட்டுகிறது –
———–
கனக சரித நூபே கல்ப வ்ருஷஸ்ய பூஷ்ணோ
பதகி சலைய லக்னா பாதுகே மஞ்ஜரீ த்வம்
பரிணதி மதுராணாம் யா பலா நாம் சாவித்ரீ
வஹசி நிகம ப்ருந்தை சம்பதம் ஷட்பதா நாம் –57-
ஸ்ரீ பாதுகையே காவிரிக் கரையில் கல்ப தருவாக ஸ்ரீ ரங்க நாதன் எழுந்து அருளி இருக்கிறார் –
பெருமாளுடைய மிருதுவான திருவடித் தளிர்களில் பூத்த புஷ்பமாகவும் நீ விளங்குகிறாய் –
இந்த புஷ்பத்தில் சதுர்வித புருஷார்த்தங்களும் பழமாக பழுக்கின்றன –
வேதங்கள் பூவில் சாரம் அறிந்த வண்டுகளாக உன் மகிமையை ஓதுகின்றன –
———
பரதாஸ்வஸநேஷு பாத சப்தம் வஸுதா ஸ்ரோத்ர ஸமுத்பவ: முநீந்த்ர:
படதி த்வயி பாதுகே ததஸ் த்வம் நியதம் ராம பதாத் அபிந்ந பூமா—-70-
பாதுகையே! புற்றில் இருந்து தோன்றிய வால்மீகி மஹரிஷி, இராமாயணத்தில் பரதன் மக்களைச் சமாதானப்படுத்தக்
கூறிய சொற்களில், உன்னைப் பற்றிக் கூறும்போது திருவடி என்ற பதத்தையே பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் உனக்கும் இராமனின் திருவடிகளுக்கும் உள்ள பெருமைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று புரிகிறது.
————-
அஸ்த்ர பூஷணதயா ஏவ கேவலம் விஸ்வம் ஏதத் அகிலம் பிபர்த்தி ய:
அகிலம் ஏந மணி பாதுகே த்வயா ஸ: அபி சேகரதயா ஏவ தார்யதே–78–
உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பெற்ற பாதுகையே! பெரியபெருமாள் செய்வது என்ன?
இந்த உலகங்கள் முழுமையையும் தனது ஆயுதம் போன்றும், ஆபரணம் போன்றும் எந்தவிதமான சிரமமும் இன்றி தரிக்கின்றான்.
அப்படிப்பட்ட பெரியபெருமாளை நீயும் அதே போன்று, உனது தலையில் எந்தவிதமான சிரமமும் இன்றி,
மலர் போன்று வைத்துக் கொள்கிறாய்.
————-
பரஸ்ய பும்ஸ: பத ஸந்நிகர்ஷே
துல்ய அதிகாராம் மணி பாதுகே த்வாம்
உத்தம்ஸயந்தி ஸ்வயம் உத்தமாங்கை:
சேஷாஸமம் சேஷ கருத்ம தாத்யா:—-83-
உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! பரம்பொருளான பகவானின் திருவடிகளின் கீழே
நீயும் ஆதிசேஷன், கருடன் முதலானோர்களும் ஒரே போன்றுதான் கைங்கர்யம் செய்து வருகின்றீர்கள்.
ஆயினும் ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள் உன்னைப் பரிவட்டம் போன்று தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
இது உனக்குப் பெருமை அல்லவா?
———–
மூர்த்நா ததாநாம் மணி பாதுகே த்வாம்
உத்தம் ஸிதம் வா புருஷம் பவத்யா
வதந்தி கேசித் வயமாமநாம:
த்வாம் ஏவ ஸாஷாத் அதி தைவதம் ந:—-99-
ஸ்ரீ பாதுகையே சிலர் பெருமாளையாவது உன்னையாவது த்யானிப்பது அவசியம் என்று கூறுகிறார்கள்
நாங்களோ உன்னை மட்டுமே த்யானிப்பது போதும் என திடமாக நம்புகிறோம்
ஆசார்ய பலம் இருந்தால் தானே பகவத் கிருபையும் கிட்டுமே –
————
ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ—-103-
மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம் -சமாதானம் சொல்கிறாள் -ஆசுவாசம் படுத்துகிறாள்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-காலைப் பிடித்து பிரார்த்தனை பண்ணுவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி
—————
பாதாவநி ப்ரபுதராந் அபராத வர்க்காந்
ஸோடும் க்ஷமா த்வம் அஸி மூர்த்திமதீ க்ஷமைவ
யத் த்வாம் விஹாய நிஹதா: பரிபந்தி நஸ்தே
தேவேந தாசரதி நா தச கண்ட முக்யா—110-
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே!
அனைத்துக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு சரீரம் பெற்றவளாக, பொறுமையே வடிவமாக நீ உள்ளாய்.
ஆகையால் தான் இராமன் உன்னைப் பரதனிடம் அளித்து விட்டு, இராவணன் போன்றவர்களை அழித்தான் போலும்.
————-
நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே—116–
ஸ்ரீ பாதுகையே பொறுமையின் பிறப்பிடமான உன் மீது ஏறி பெருமாளும் தானும் எதையும் தாங்க வல்ல
உனது குணத்தை சம்பாதித்துக் கொண்டார் -இல்லாவிடில் மிருதுவான பாதங்களைக் கொண்டு
கற்கள் முட்கள் நிறைந்த ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எவ்வாறு சஞ்சரிப்பார்
————–
பரதஸ் ஏவ மாம் அபி பிரசமித விஸ்வாபவா துர் ஜாதா
சேஷேவ சிரஸி நித்யம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ –120-
வீரனாகிய இராமனின் பாதுகையே! ”இராமனைக் கானகம் அனுப்பிய கைகேயின் மகன்” என்ற அபவாதங்கள்
பரதன் மீது விழாமல் அவன் காப்பாற்றப்பட்டான் – எப்படி? உன்னைத் தனது தலையில் ஏற்ற காரணத்தினால் ஆகும்.
இது போன்று எனது தலையிலும் நீ எப்போதும் தங்கி நின்று, எனது அபவாதங்களையும் போக்க வேண்டும்.
———–
ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ரு சம்ஸ்யம் யயோர் ஆஸீத் ஆஸ்ரிதேஷு அநவக்ரஹம்—-121-
இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் –
காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?
————
ஆஸா: ப்ரஸாதயிதும் அம்ப ததா பவத்யாம்
தைவாத் அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம்
ஸ்தோகாவசேஷ ஸலிலாஸ் ஸஹஸா பபூவு:
ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:—-130-
தாயே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ அயோத்திக்கு மீண்டும் வந்தாய்.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வல்ல சரத் காலம் போன்று நீ வந்தாய்.
உன்னைக் கண்டவுடன் அயோத்தி நகரத்தில் இருந்த பெண்களின் கண்கள் என்ற மேகங்கள், தங்கள் மழை நீரை நிறுத்தின.
——————–
ஸமுபஸ்திதே ப்ரதோஷே
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத்
அபஜத புநஸ் ஜந பதம்
வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ—-140-
பாதுகையே! மேய்வதற்காகச் செல்லும் பசுவானது அஸ்தமன நேரத்தில் கன்றுக் குட்டியிடம் வந்து விடுகிறது.
அது போன்று நாட்டிற்கும் பரதனுக்கும் கவலை ஏற்பட்ட போது,
நீ சித்திர கூடத்தில் இருந்து மிகவும் விரைவாக கோசலத்திற்குத் திரும்பினாய் போலும்.
————
வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யுவசம் ஜகாம
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்—-153-
இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அயோத்தியை ஆண்ட போது –
மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர); எந்தக் குழந்தையும் இறந்து போகவில்லை;
ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.
————–
அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா
வந்த்ய: ஸ்வயம் வ்யோமஸதாம் பபூவ—166-
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு,
பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை,
முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர்.
இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.
————–
மஹீஷிதாம் ராகவ பாத ரக்ஷே
பத்ராஸ நஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ருசந்த:
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:
கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:—-171-
இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது,
உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன.
அவை முன்பே தங்கமாக உள்ளபோதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.
————-
ப்ராப்த உதயா ததாநீம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவ்தீ
தநுரிவ மனுகுல ஜநுஷாம்
ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—180-
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்த போது நீ அரச பதவி ஏற்கும்
உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள ஸூரியன் போன்று நீ ஆனாய்.
இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.
————–
ப்ராது: நியோகே அபி அநிவர்த்தமாநம்
ராஜ்ய அபிஷேகம் ச பரித்ய ஜந்தம்
ராமாநுஜௌ தௌ நநு பார தந்த்ர்யாத்
உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய—-184-
பாதுகையே! இராமனின் ஆணைகளை அவனது தம்பிகளான இலட்சுமணனும், பரதனும் மீறாதவர்களே ஆவார்கள்.
ஆயினும் இராமனின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் இருவரும் பட்டாபிஷேகம் ஏற்கவில்லை.
ஆனால், நீ ஏற்றுக் கொண்டாய். இதன் மூலம் அவர்கள் இருவரையும் நீ வென்றாய்.
————-
மநு வம்ஸ புரோஹிதேந மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம்
அபிஷேக ஜலம் க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்—-200-
பாதுகையே! மனுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர் உன் மீது மந்திரங்கள் கொண்டு ஜபிக்கப்பட்ட புண்ணிய நீரை,
பட்டாபிஷேகத்தின்போது சேர்த்தார். இந்த நீர் செய்தது என்ன?
விரோதிகளான அனைவருடைய வீரம் என்ற தீயை அணைத்துவிட்டது.
————–
அபிஷேசயது ஸ ராம: பதேந வா ஸ்ப்ருசது பாதுகே பவதீம்
அவிசேஷித மஹிமா த்வம் கிம் வா விசேஷ: க்ஷமா ஸமேதாநாம்—210-
பாதுகையே! இராமன் உனக்கு உயர்ந்த அரச பதவி என்ற பட்டாபிஷேகம் அளித்தாலும், தனது திருவடிகளில் உன்னை வைத்தாலும் –
உனது பொறுமை காரணமாக, நீ குறைவற்ற பெருமை மாறாமலேயே உள்ளாய்.
பூமியின் பொறுமையை ஒத்தபடி உள்ளவர்களுக்கு இது போன்று ஏற்றத் தாழ்வுகளில் பேதம் என்ன உள்ளது?
———–
உபாஸ்ய வர்ஷாணி சதுர் தச த்வாம்
உத்தாரிகாம் உத்தர கோஸலஸ்தா:
ஸநந்த நாத்யைரபி துர் விகாஹம்
ஸந்தாநிகம் லோகம் அவாபுர அக்ர்யம்—-212–
பாதுகையே! வடக்கு கோஸலை நாட்டில் உள்ள மக்கள் உன்னை பதினான்கு வருடங்கள் வணங்கி வந்தனர்.
இதனால் அவர்களுக்குக் கிட்டியது என்ன?
ஸநந்தனர் போன்ற உயர்ந்தவர்களாலும் அடைய இயலாத ஸாந்தாநிக லோகத்தை அவர்கள் எளிதாக அடைந்தனர்.
—————-
பாதாவநி த்வத் அபிஷேசந மங்களார்த்தம்
பேரீசதம் ப்ருசம் அதாட்யத யத் ப்ரதீதை:
ஆகர்ண்ய தஸ்ய ஸஹஸா துமுலம் நிநாதம்
லங்கா கவாட நயநாநி நிமீலிதாநி—-220-
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னுடைய பட்டாபிஷேகம் என்னும் மங்கள கரமான நிகழ்வின் போது, நூற்றுக் கணக்கானவர்கள் பெரிதாக வாத்தியம் ஒலித்தனர்.
இந்த ஓசை இலங்கை வரை கேட்டது. இதனைக் கேட்ட இலங்கையின் கதவுகள் மூடப்பட்டன.
———————–
நிஸ்தீர்ண துங்க ஜலதே: அநகஸ்ய தேவி
த்வத் ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந
ஸத்ய ஸநந்தன முகை: அபி துர் நிரீக்ஷா
ஸாம்ராஜ்ய ஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே—-237–
பாதுகாதேவியே! உன்னுடன் தொடர்பு கொண்டதால் உயர்ந்த இராமனின் திருவடிகள் மூலமாகப் பரதன்
தனது துக்கம் என்ற பெரிய கடலை எளிதாகக் கடந்தான். இதன் மூலம் தூய்மை அடைந்த பரதன்,
ஸநந்தர் போன்றவர்கள் கூடக் காண இயலாத தேஜஸ் அடைந்தான்.
இதனால் பக்தர்களுக்குச் சக்ரவர்த்தி போன்றவன் என்ற பட்டம் பெற்றான்.
———–
இதி நிகமவந்தி வசஸா ஸமயே ஸமயே க்ருஹீத ஸங்கேத:
அபி ஸரதி ரங்கநாத: ப்ரதிபத போகாய பாதுகே பவதீம்—-250-
நம்பெருமாளின் பாதுகையே! இப்படியாக அந்தந்த காலத்தில் இவற்றைச் செய்யவேண்டும் என்று
வேதங்களாகிய வந்திகள் (துதி செய்பவர்கள் எனலாம்) மூலம் ஸ்ரீரங்கநாதன் உணர்கிறான்.
அந்தந்த காலத்தில் சுகங்களை அனுபவிக்கும் பொருட்டு உன்னை அடைகிறான்.
————
சரண கமல ஸங்காத் ரங்க நாதஸ்ய நித்யம்
நிகம பரிமளம் த்வம் பாதுகே நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதி வஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்—258-
அழகிய மணவாளனின் பாதுகையே! பெரிய பெருமாளின் திருமார்பில் உள்ள மஹாலக்ஷ்மியுடன் தொடர்பு கொண்டுள்ளதால்,
அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்கிற மாலைக்கு நறுமணம் அதிகமே ஆகும்.
ஆயினும் அவனது திருவடிகளின் தொடர்பு உனக்கு மட்டுமே அல்லவா உள்ளது?
இதன் மூலம் நீ எப்போதும் வேதங்களின் நறுமணத்தை பரப்பியபடி உள்ளாய்.
ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் தொடர்பு பெற்ற அந்த மாலையை விட, அவனது திருவடிகளின் தொடர்பு பெற்ற நீ உயர்ந்தே உள்ளாய்.
———
ஸ்ப்ருசத: சிரஸா பதேந ச த்வாம்
கதிம் உத்திஸ்ய முகுந்த பாதுகே த்வௌ
அவரோஹதி பஸ்சிம: பதாத் ஸ்வாத்
அத்ரோஹத்யநக: ததேவ பூர்வ:—-267-
க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை இருவர் தொடுகின்றனர். ஒருவர் உன்னைத் தனது கால்கள் கொண்டு தொடுகிறார்,
மற்றோருவர் உன்னைத் தனது தலையால் தாங்குகிறார். தலையால் தொட்டவர் மேலே (பரமபதம்) ஏறியபடி உள்ளார்.
காலால் தொட்டவர் (நம்பெருமாள் ஆசனத்தில் இருந்து இறங்க எண்ணி, பாதுகை மீது திருவடி வைக்கிறான்) கீழே இறங்குகிறார்.
————–
த்வயா அநுபத்தாம் மணி பாத ரக்ஷே
லீலா கதிம் ரங்க சயஸ்ய பும்ஸ:
நிஸா மயந்த: ந புநர்பஜந்தே
ஸம்ஸார காந்தார கதாகதாநி—-275-
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பரம புருஷனாகிய பெரிய பெருமாள்,
உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சாரம் செய்கிறான். இதனைக் காண்பவர்கள், இந்த உலகில் பிறப்பது-இறப்பது
என்று சுழற்சியை இனி மேற்கொள்வதில்லை.
———–
பதஸ் ப்ருசா ரங்க பதிர் பவத்யா
விசக்ரமே விஸ்வம் இதம் க்ஷணேந
ததஸ்ய மந்யே மணி பாத ரக்ஷே
த்வயைவ விக்யாதம் உருக்ரமத்வம்—-281-
ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியில் இருந்ததால் தான் அவர் நொடிப் பொழுதில் உலகை அளந்தார் –
அதனாலேயே -உருக்ரமன் -த்ரிவிக்ரமன் -என்ற பெயரையும் பெற்றார் –
——————
ஸம்பத்யதே ஸமுசிதம் க்ரமம் ஆஸ்ரயந்த்யா
ஸத்வர்த்மநா பகவதோ: அபி கதிர் பவத்யா
ஈஷ்டே பதாவநி புந: க இவேத ரேஷாம்
வ்யாவர்த்த நஸ்ய விஷமாத் அபத ப்ரசாராத்—290-
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நல்ல வழியில் சென்று
சஞ்சாரம் செய்வது என்பது, உனது அடிவைப்பு மூலமே உண்டாகிறது.
இப்படி உள்ளபோது, மற்றவர்களைத் தீய வழிகளில் நடக்காமல் திசை திருப்பும் திறன் வேறு யாரிடம் உள்ளது?
————-
நித்யம் ய ஏவ ஜகதோ மணி பாத ரக்ஷே
ஸத்தாஸ்திதி ப்ரயதநேஷு பரம் நிதாநம்
யோ அபி ஸ்வதந்த்ர சரிதஸ் தவத் அதீந வ்ருத்தி:
கா வா கதா ததிதரேஷு மிதம்பசேஷு—-299-
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகைப் படைப்பது, இந்த உலகில் உள்ள
அனைத்தைக் காட்டிலும் உயர்ந்திருப்பது ஆகிய தன்மைகளை உடைய ஸ்ரீரங்கநாதனே உன் வசப்பட்டுள்ளான்.
இப்படி உள்ளபோது இந்த உலகில் உள்ள மற்ற அற்பர்கள் உனக்கு அடிமை என்று கூறவும் வேண்டுமா?
—————
கமபி கநக ஸிந்தோ: ஸைகதே ஸஞ்சரந்தம்
கலச ஜலதி கந்யா மேதிநீ தத்த ஹஸ்தம்
அநிசம் அநுபவேயம் பாதுகே த்வயி அதீநம்
ஸுசரித பரிபாகம் ஸூரிபி: ஸேவநீயம்—-309-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் மணல்திட்டில் ஸ்ரீரங்கநாதன் சஞ்சரிக்கிறான்.
அவன் ஸ்ரீதேவியாலும் பூதேவியாலும் சூழப்பட்டு உள்ளான். சிறந்த புண்ணியங்களின் பயனாக உள்ளான்.
நித்யஸுரிகளால் என்றும் போற்றப்பட்டபடி உள்ளான். உன்னிடம் எப்போதும் வசப்பட்டு உள்ளான்.
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீரங்கநாதனை நான் எப்போதும் வணங்கியபடி இருப்பேனாக.
—————
ஸம்பவது பாதரக்ஷே ஸத்ய ஸுபர்ண: ஆதி: ஔபவாஹ்ய கண:
யத்ராஸு ரங்கபர்த்து: ப்ரதம பரிஸ்பந்த காரணம் பவதீ–320–
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செல்வதற்கு அவனுக்கு வாகனங்களாக ஸத்யன், கருடன் என்று பலரும் இருக்கக்கூடும்.
ஆனால் இவர்களுக்கு முன்பாக அவன் முதல் அடி எடுத்து வைப்பதற்கு நீ அல்லவோ காரணமாக உள்ளாய்?
———–
அஸ்ப்ருஷ்ட தோஷ பரிமர்ஸம் அலங்க்யம் அந்யை:
ஹஸ்தாபசேயம் அகிலம் புருஷார்த்த வர்கம்
சித்ரம் ஜநார்த்தந பதாவநி ஸாதகாநாம்
த்வயி அர்ப்பிதா: ஸுமநஸ: ஸஹஸா பலந்தி—-331-
ஜனார்த்தனனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் மலர்களைச் சமர்ப்பணம் செய்பவர்களுக்குக் கிட்டுவது என்ன?
எந்தவிதமான தோஷங்களும் இல்லாததும், மற்றவர்களுக்கு எட்டாததும், இவர்களுக்குக் கையினால் பறிக்கக்கூடியதும்
ஆகிய உயர்ந்த புருஷார்த்தங்கள் மிகவும் எளிதாகக் கிட்டுகின்றன.
———–
ஸூடாரக்வத ரஜஸா ஸூர்ண ஸ்நபனம் விதாய தே பூர்வம்
ரங்கேஸ பாதுகே த்வம் அபிஷிஞ்சதி மௌளி கங்கயா சம்பு:—350-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கொன்னை மலர்கள் கொண்டு உனக்கு சூர்ணாபிஷேகம் செய்கிறார்.
அதன் பின்னர் தனது தலையில் உள்ள கங்கையைக் கொண்டு உனக்கு திருமஞ்சனம் செய்து வைக்கிறார்.
————–
க்ருதிந: சிரஸா ஸமுத் வஹந்த:
கதிசித் கேசவ பாதுகே ரஜஸ்தே
ரஜஸஸ் தமஸோ அபி தூரபூதம்
பரிபஸ்யந்தி விசுத்தமேவ ஸத்வம்—-356-
அழகான கேசத்தைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய துகள்களைத் தங்கள் தலைகளில்
கொள்கின்ற புண்ணியம் செய்தவர்களின் நிலை என்ன? அப்படிப்பட்டவர்கள் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய
இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஸத்வகுணம் நிறைந்த பரம பதத்தைக் காண்கின்றனர்.
————
கங்காபகா தட லதாக்ருஹம் ஆஸ்ரயந்த்யா:
பாதாவநி ப்ரசலிதம் பதவீ ரஜஸ்தே
ப்ராயணே பாவநதமம் ப்ரணதஸ்ய சம்போ:
உத்தூளநம் கிம் அபி நூதநம் ஆதநோதி—-368-
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கைக் கரையில் எழுந்து அருளிய போது உண்டான
தூசியைச் சிவன் தலை வணங்கி தோஷ நிவாரண அர்த்தமாக புதியதாகத் தன் உடலில் பூசிக் கொள்கிறார் –
—————–
பஞ்சாயுதீ பூஷண மேவ சௌரே
யதஸ் தவைதே மணி பாதரஷே
விதந்வதே வ்யாப்ததிச பராகா
சாந்தோதயான் சத்ருசமூ பராகான் –374-
ஸ்ரீ பாதுகையே சத்ருக்களைக் கொல்வதற்காகப் பெருமாள் எழுந்து அருளுகிறார்
உன்னுடைய தூளியைக் கண்ட மாத்ரத்திலேயே சத்ருக்கள் ஓடோடிப் போகிறார்கள்
பெருமாளுடைய பஞ்சாயுதங்களும் அலங்காரத்திற்காக மட்டுமே ஆகின்றன –
————-
மதுரம் மணி பாதுகே ப்ரவ்ருத்தே
பவதீ ரங்க ந்ருபதே விஹார காலே
அபயார்த்த்நயா ஸமப்யு பேதாந்
அவி ஸம்வாதயதீவ மஞ்ஜு நாதை:–390-
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் பலரும் அவன் அருகில் வந்து,
தங்களுக்கு அபயம் அளிக்க வேண்டி நிற்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “அபயம் அளிக்கப்பட்டது”, என்று கூறுகிறாய் அல்லவோ?
——————-
நித்யம் பதாம் புருஹயோ: இஹ கோபிகாம் த்வாம்
கோபீ ஜந ப்ரியதமோ மணி பாத ரக்ஷே
ஸம்பந்ந கோஷ விபவாம் கதிபி: நிஜாபி:
ப்ரீத்யேவ ந த்யஜதி ரங்க ஸமாஸ்ரிதோபி—-420-
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கோபிகைகளுக்கு மிகவும் ப்ரியமானவனாகிய நம்பெருமாள்,
தனது ஸஞ்சாரங்கள் முடிந்து ஸ்ரீரங்க விமானத்தை அடைந்த பின்னரும் உன்னை விடுவதில்லை.
மிகவும் இனிமையான நாதம் கொண்ட உன்னை அவன் கோபிகை என்றே கருதியுள்ளான் போலும்.
————-
க்ஷிபதி மணி பாத ரக்ஷே நாதைர் நூதம் ஸமாஸ்ரித த்ராணே
ரங்கேஸ்வரஸ்ய பவதீ ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷண விளம்பம்—-480-
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தனது அடியார்கள் தன்னிடம், ” என்னைக் காக்கவேண்டும்”, என்று
விண்ணப்பம் செய்யவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பார்க்கிறான்.
இத்தகைய அவனது எண்ணத்தை உனது நாதங்களால் நீக்கி, அவன் காப்பாற்றும் காலதாமதத்தைக் குறைத்து விடுகிறாய்.
———–
ரங்கேஸ பாதாவநி தாவகாநாம்
ரத்ந உபலாநாம் த்யுதய: ஸ்புரந்தி
ஸ்ரேய: பலாநாம் ஸ்ருதி வல்லரீணாம்
உபக்நசாகா இவ நிர்வ்யபாயா:—-485-
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மக்களுக்கு வேண்டிய புருஷார்த்தம் என்னும் பழங்களை
அளிக்கின்ற கொடிகளாக வேதங்கள் உள்ளன. அந்த வேதங்கள் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்புகளாக
உனது இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் உள்ளன.
———–
ப்ரபவந்தி தவீயஸாம் ஸ்வபாவாத்
தவ ரத்நாநி முகுந்த பாத ரக்ஷே
அயஸாமிவ ஹந்த லோஹ காந்தா:
கடிநாநாம் மநஸாம் விகர்ஷணாய—512–
ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஒரு சிலர் ஸ்ரீரங்கநாதன் வீதியில் வலம் வரும்போது,
வீட்டை விட்டு வராமல் இருப்பார்கள். அவர்களது இரும்பு போன்ற மனங்களை, தூரத்தில் இருந்தே இழுக்க வல்ல
காந்தம் போன்று உன்னுடைய இரத்தினக் கற்கள் சாமர்த்தியம் கொண்டவையாக உள்ளவனவே!
————
ரங்காதிராஜ பத ரக்ஷிணி ராஜதே தே
வஜ்ர உபஸங்கடித மௌக்திக வித்ரும ஸ்ரீ:
ஸக்தா சிரம் மநஸி ஸம்யமிநாம் நிவாஸாத்
ஸூர்ய இந்து அஹ்நிமய மண்டல வாஸநேவ—-550–
ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வைரத்துடன் சேர்த்துப் பதிக்கப்பட்ட முத்து, பவழம் ஆகியவற்றின் ஒளியானது –
நீண்டகாலமாக யோகிகளின் மனதில் நீ இருந்து வருவதால், அங்குள்ள சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களின்
வாசனையுடன் கூடியதாக உன்னில் காணப்படுகிறது.
———–
ஜநயஸி பதாவநி த்வம்
முக்தா சோண மணி சக்ர நீலருசா
நகருசி ஸந்ததி ருசிராம்
நந்தக நிஸ்த்ரிம்ச ஸம்பதம் சௌரே:—580-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி, பத்மராகக் கற்களின் ஒளி மற்றும் இந்த்ரநீலக் கற்களின் ஒளி
ஆகியவை ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நகங்களில் புதிய ஒளியை ஏற்படுத்துகின்றன.
இதனைக் காணும்போது நீ அவனுடைய நந்தகம் என்னும் கத்தியின் தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
————
அர்ச்சிஷ்மதீ காஞ்சந பாத ரக்ஷே
ப்ரஸ்தௌதி தே பாடல ரத்ந பங்க்தி:
ரேகா ரதாங்கஸ்ய மஹ: ப்ரபஞ்சம்
ரங்கேச பாதாம்புஜ மத்ய பாஜ:—-591–
ஸ்ரீரங்கநாதனின் பொன்மயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியின் நடுவில்,
ரேகை வடிவத்தில் சக்கரம் உள்ளது. உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
அந்தச் சக்கரத்தின் ஒளியைப் போன்று காணப்படுகிறது.
———–
அருணமயஸ் தவ ஏதே
ஹரி பத ராகேண லப்த மஹிமாந:
கமயந்தி சரண ரக்ஷே
த்யு மணி கணம் ஜ்யோதி ரிங்கணதாம்—-610-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின்
சிவந்த ஒளியைப் பெறுகின்றன. இதனால் அவை, மற்ற சூரியன்கள் அனைத்தையும், ஒளி குறைந்த,
மின்மினிப்பூச்சிகள் போன்று மாற்றி விடுகின்றன.
————-
ரங்கேஸ சரண ரக்ஷா
ஸா மே விததாது சாஸ்வதீம் ஸூத்திம்
யத் மௌக்திக ப்ரபாபி:
ஸ்வேத த்வீபம் இவ ஸஹ்யஜா த்வீபம்—-660-
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எனக்கு அழிவற்ற வெண்மையை
(பாவங்கள் அற்ற தன்மை, ஞானம்) உண்டாக்க வேண்டும். உன்னுடைய முத்துக்களின் அந்த ஒளியால் அல்லவோ
ஸ்ரீரங்கம் என்னும் காவேரியால் சூழப்பட்ட தீவானது, ச்வேத த்வீபம் போன்று வெண்மையாக உள்ளது?
——————-
ஸ்தல கமலநீவ காசித்
சரணாவநி பாஸி கமல வாஸிந்யா:
யத் மரதக தள மந்யே
ய: கச்சிதஸௌ ஸமீக்ஷ்யதே சௌரி:-680–
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரையில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏற்ற ஒரு நிலத் தாமரை வனமாக நீ உள்ளாய்.
அந்தத் தாமரை வனத்தின் இலைகளாக உனது மரதகக் கற்களின் பச்சை ஒளி உள்ளது.
அந்த இலைகளின் நடுவே ஸ்ரீரங்கநாதன் ஒரு இலை போன்று காணப்படுகிறான்.
——————
நமதாம் நிஜ இந்த்ரநீல ப்ரபவேந முகுந்த பாதுகே பவதீ
தமஸா நிரஸ்யதி தம: கண்டகம் இவ கண்ட கேநேவ—710–
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போன்று, கருமையாகக் காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மூலமாகவே நீ உன்னை வணங்குகின்றவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்குகிறாய்.
———–
ப்ரஜ்வலித பஞ்ச ஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ:
ஆவஹது ஜாத வேதா: ஸ்ரியம் இவ ந: பாதுகே நித்யம்—750–
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களை ஏற்தியபடி,
ஹிரண்யன் போன்றவர்களை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
இப்படிப்பட்ட அவன், தங்கமயமான உன்னை, அவனுக்குச் செய்யும் கைங்கர்யச் செல்வமாக உள்ள உன்னை,
எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டும்.
——————
பஹுமுகபோக ஸமேதை: நிர்முக்ததயா விஸூத்திம் ஆபந்நை:
சேஷாத்மிகா பதாவநி நிஷேவ்யஸே சேஷ பூதைஸ் த்வம்—-760–
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனின் அவதாரமான நீ, பலவிதமான இன்பங்களுடன் கூடியவர்களும்,
அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட்டதனால் தோஷம் இல்லாத தன்மையை அடைந்தவர்களும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் தொண்டர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாய்.
————-
பாதுகே பவ பய ப்ரதீ பயோ:
பாவயாமி யுவயோஸ் ஸமாகமம்
ஸக்தயோர் தநுஜவைரிணர் பதே
வித்யயோர் இவ பராவராத் மநோ:–768–
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீங்கள்,
ஸம்ஸார பயத்திற்குச் சத்ருவாக உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்கள் இருவரது சேர்க்கையைக் காணும் போது,
பரை மற்றும் அபரை என்ற வித்யைகளின் சேர்க்கை என்றே நான் எண்ணுகிறேன்.
————
பத்த ஹரி பாத யுகளம் தபநீய பாதுகே யுவயோ:
மோசயதி ஸம்ஸ்ரிதாநாம் புண்யாபுண்யமய ஸ்ருங்கலா யுகளம்—-780–
தங்கமயமான பாதுகைகளே! உங்களது இந்த இணை என்பது இரண்டாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை ஒன்றாகக் கட்டுகிறது.
இந்த இணையே, உங்களை அண்டியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்னும் சங்கிலிகளின் பிணைப்பை விடுவிக்கின்றன.
——–
அப்ரபூதமபவத் ஜகத்ரயம்
யஸ்ய மாதும் உத்தி தஸ்ய பாதுகே
அப்ரமேயம் அமி தஸ்ய தத்பதம்
நித்யமேவ நநு சம்மிதம் த்வயா –795-
ஸ்ரீ பாதுகையே -திரு உலகு அளந்த சமயம் மூன்று உலகும் அவன் திருவடிக்கு போதாமல் போயிற்று –
அளவிட முடியாதவனான அவனுடைய அளவிட ஒண்ணாத மஹிமை கொண்ட அந்த திருவடியும் கூட உன்னாலே
நித்தியமே அளவிடப் பட்டு நிகிறதே -உன் பெருமைக்கு மற்றவை ஏதும் இணையாகாது –
———–
ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்க சந்த்ரமஸ:
ஸ்ருங்க உந்நதிரிவ யத்ர ஸ்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக:—-810-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைக் காணும்போது ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜனின்
முதல் கலை போன்று உள்ளாய். இப்படியாக உள்ள அந்தக் கலையின் நுனி போன்ற அழகை உனது குமிழ் ஏற்படுத்துகிறது.
———-
ரேகா அபதேசதஸ் த்வம்
ப்ரசமயிதும் ப்ரளய விப்லவ ஆசங்காம்
வஹஸி மதுஜித் பதாவநி
மந்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம்—-820-
மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரளய காலத்தில் வேதங்கள் அழித்துவிடுமோ
என்ற சந்தேகம் சிலருக்கு உண்டாகலாம். இதனால் அந்த சந்தேகத்தை நீக்கும் விதமாக உன்னில் காணப்படும்
கோடுகள் என்பதன் மூலம், வேதங்களின் ப்ரதியை நீ வைத்துக் கொண்டுள்ளாய் என்பதை உணர்த்துகிறாய் போலும்.
———
அதரீக்ருத: அபி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு:
அலபத ஸமயே ராமாத்
பாத க்ராந்தாபி பாதுகே ராஜ்யம்—830-
மேலும் மேலும் உயர எண்ணுபவன், உயர்ந்த ஒருவனால் தாழ்வாக நடத்தப்பட்டாலும், அவனையே அண்டி வணங்கி நிற்க வேண்டும்.
பாதுகையானது இராமனின் திருவடிகளால் மிதிக்கப்பட்டாலும், ஒரு காலகட்டத்தில் இந்த இராமனின் ராஜ்யத்தையே அடைந்தாள்
————–
ஸ்பீதம் பதாவநி தவ ஸ்நபந ஆர்த்ர மூர்த்தே:
ஆஸாகரம் ததம் அபூத் மணிரஸ்மி ஜாலம்
லீலோசிதம் ரகு ஸுதஸ்ய சரவ்யம் ஆஸந்
யாதூநி யஸ்ய வலயேந விவேஷ்டிதாநி—-842–
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருமஞ்சனம் மூலம் நனைந்துள்ள உனது இரத்தினக்கற்களின் ஒளியானது ஸமுத்திரம்
வரை பரவி நின்றது. அந்த ஒளியானது ஒரு வலை போன்று காணப்பட்டது.
அந்த வலையில் சூழப்பட்ட அரக்கர்கள் அனைவரும் இராமனின் பாணங்களுக்கு விளையாட்டு போன்று இலக்கானார்கள்.
—————-
ரங்காதி ராஜ பத பங்கஜம் ஆஸ்ரயந்தீ
ஹைமீ ஸ்வயம் பரிகதா ஹரி நீல ரத்நை:
ஸம்பாவ்யஸே ஸுக்ருதிபி: மணி பாதுகே தவம்
ஸாமாந்ய மூர்த்தி: இவ ஸிந்து ஸுதா தரண்யோ:—853–
இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பற்றியவளாகவும்,
தங்கமயமாக இந்த்ரநீலக் கற்களால் இழைக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய்.
ஆக நீ திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி என்றும், பூமிபிராட்டி என்றும் புண்ணியவான்களால் எண்ணப்படுகிறாய்
(தங்க நிறம் = மஹாலக்ஷ்மி, இந்த்ரநீலம் = பூதேவி).
———
ரகுபதி ஸங்காத் ராஜ்ய கேதம் த்யஜந்தீ
புநரபி பவதீ ஸ்வாந் தர்ஸ யந்தீ விஹாராந்
அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷ கோலாஹலாநாம்
ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந—-883-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சேர்ந்ததால்,
அதுவரை ராஜ்ய பாரம் காரணமாக உண்டான துயரங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் நீ விட்டாய்.
மீண்டும் உனது உல்லாஸமான ஸஞ்சாரங்களைக் காட்டியபடி, இனிமையான நாதத்தால்,
அயோத்தியில் உண்டான இனிமையான சந்தோஷக் கூச்சல்களை மேலும் வளர்த்தாய்.
———–
ரம்ய ஆலோகா லளித கமநா பத்மராக அதரோஷ்டீ
மத்யே க்ஷாமா மணி வலயிநீ மௌக்திக வ்யக்த ஹாஸா
ஸ்யாமா நித்யம் ஹரி தமணிபி: சார்ங்கிண: பாத ரக்ஷே
மந்யே தாது: பவஸி மஹிளா நிர்மிதௌ மாத்ருகா த்வம்—-898–
சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் அழகிய தோற்றத்தைக் கொண்டவளாக,
மெதுவான அழகிய நடையைக் கொண்டவளாக, பத்மராகக் கற்களின் சிவந்த தன்மையால் அழகான உதடுகள் கொண்டவளாக,
நடுப்பாகத்தில் (இடை) சிறுத்தவளாக, இரத்தினக்கற்களின் கூட்டம் என்ற வளையல்கள் அணிந்தவளாக,
முத்துக்கள் போன்ற அழகான சிரிப்பைக் கொண்டவளாக, பச்சைக்கல் மூலம் என்றும் யுவதியாகத் தோற்றம் அளிப்பவளாக நீ உள்ளாய்.
இப்படியாக நான்முகன் உத்தமப் பெண்களைப் படைக்க உதவுகின்ற மாதிரி உருவமாக (model) நீ உள்ளாய் என்று எண்ணுகிறேன்.
இந்த சுலோகத்தினை அதியற்புதமாய் ஒரு சிலேடை நடையில் அமைத்துள்ளார்.
இதிலுள்ள “நித்ய“ என்னும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பதங்களோடு சேர்த்து
விசேஷமான அர்த்தங்களைக் காண்போம்!
நித்யம் ரம்யாலோகா – எப்பொழுதும் தெளிவும், ஆனந்தமும் கொண்ட ஆத்மாவிலிருந்து உண்டான
வெளிப்படையான தேஜஸ்ஸை உடைத்தாயிருக்கை.
நித்யம் லலிதகமனா – ஜனங்களுக்கு நடையில் பல கோணல், விகாரங்கள் இருப்பது போல் அவர்கள் கடைபிடிக்கும்
அனுஷ்டானத்திலும் பல தோஷங்கள் உண்டு. அம்மாதிரியெல்லாம் இல்லாமல் சாஸ்திர ரீதியாய், ஸத் ஸம்ப்ரதாயமான
ஆசார அனுஷ்டானங்களை விதிப்படிக்கும், பெரியவர்களது உபதேச க்ரமபடிக்கும், சிரத்தை, பக்தி, விசுவாசத்தோடு ,
ஆடம்பரம், அஹங்காரம், பிரதிபலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், எப்போதும் ஒரே மாதிரியாய் அனுஷ்டிப்பது.
நித்யம் பத்மராகாத்ரோஷ்டி தன்னுடைய நற்குணங்களாலும், நல்வாக்கினாலும், தம்முடைய வாக்கு,
கேட்பவர்களிடத்து ஆனந்தமான மெய்யுணர்வு ஏற்படும்படி இருக்கை.
நித்யம் மத்யே க்ஷாமா இத்தனை பெருமைகளும், யோக்யதைகளும் இருந்தும் கூட பவ்யமாகயிருத்தல்.
நித்யம் மணிவலயிநி – வேதம் கூறும் சாஸ்திரங்களையும், அது குறித்த பூர்வாச்சார்யர்களுடைய விளக்கங்களையும்,
வியாக்யானங்களையும் எப்போதும் ஆபரணம் போன்று நினைவில் கொண்டிருக்கை
நித்யம் மெளக்திகவ்யக்தஹாஸா – எப்போதும் தன்னுடைய சௌஹார்த்ததாலும் (எல்லாரையும் அன்போடு அணைத்துச் செல்லும் குணம்)
மலர்ச்சியோடு கூடிய தோற்றத்தினாலும் எப்போதும் இவர் நம்மோடுயிருந்து அருள வேண்டும் என்றிருக்கை.
நித்யம் ஸ்யாமா ஹிதமணிபி – நல்ல இறையனுபவத்தாலே காமக்ரோதாதிகள் அறவேயொழிந்து, புத்தி தெளிவடைந்து,
அதனால் சரீரம் நல்ல தேஜஸ்ஸையடைந்திருக்கை.
நித்யம் சார்ங்கிண: பாதரக்ஷே – பெருமாளுக்கு எந்தவிதமான அபராதங்களும் ஜனங்கள் செய்யமால்,
அபஹாரம் வராதபடிக்கு நித்ய ரக்ஷகர்களாய் இருக்கை. இதற்கு ஜனங்களுக்குப் பெருமாளைக் குறித்த
தெளிவான அறிவு வேண்டும். அதனை பல ப்ரமாணங்கள் மூலம் புகட்டும் தெளிவு வேண்டும்.
இவைகள் தாம் ஸதாச்சார்யனுடைய லக்ஷணங்கள். அவர்களால் சிக்ஷையடைந்து தேறிய நல்ல சீடர்களின் லக்ஷணமும் ஆகும்.
—————–
காலே தல்பப புஜங்கமஸ்ய பஜத: காஷ்டாம் கதாம் சேஷதாம்
மூர்த்திம் காமபி வேத்மி ரங்க ந்ருபதே: சித்ராம் பத த்ரத்வயீம்
ஸேவா நம்ர ஸுராஸுரேந்த்ர மகுடீ சேஷாபடீ ஸங்கமே
முக்தா சந்த்ரிகயேவ யா ப்ரதயதே நிர்மோக யோகம் புந:—-907–
ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! வியப்பை அளிக்கவல்ல ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளான உங்களை
அவனது ஸஞ்சார காலத்தில் அடிமைத்தனத்தின் எல்லைக்கே செல்வதால்,
அவனுடைய படுக்கையான ஆதிசேஷனின் உருவமே என்று எண்ணுகிறேன்.
ஸ்ரீரங்கநாதனை வணங்கி நிற்பவர்களான தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைகளில் உங்களை வைக்கும்போது
உங்கள் முத்துக்களின் ஒளியானது பரிவட்டம் போன்று காணப்படுகிறது. மேலும் அவர்களின் தலையில் உள்ள பரிவட்ட
வஸ்த்ரத்துடன் இந்த ஒளியும் இணையும்போது, உரித்த நாகத்தின் தோல் போன்று காணப்பட்டு, ஆதிசேஷனை நினைவுபடுத்துகிறது.
ஆதிசேஷனுடைய இன்னொரு உருவம்தான் பாதுகை.
இவ்விதம் கூறுவதற்கு இரண்டு காரணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.
1-ஆதிசேஷனை வெள்ளிமலை போல் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. நல்முத்துக்கள் பதிக்கப்பெற்ற பாதுகையிலிருந்து
வெளிப்படும் காந்தியானது வெள்ளிமலையை போன்று காட்சியருளுகின்றது.
2-தம் பக்தர்களை கௌரவிக்கும் போது, அவர்களது சிரஸ்ஸில் வெள்ளைத் திருப்பரிட்டத்தினைச் சுற்றி கட்டி
அதன் மேல் பாதுகையை சாதிக்கும் போது, வெள்ளைத் திருப்பரிவட்டம், உரித்து விட்ட பாம்பு சட்டைப் போன்றும்,
பாதுகை ஆதிசேஷனின் சிரஸ் போன்றும் காட்சியருளுகின்றது.
(“சேஷப்படி“ என்பது திருப்பரிவட்டத்திற்கான சமஸ்கிருதப் பெயர்.
இந்த சுலோகத்தின் மூலம் இது அந்த காலத்தில் வெளுப்பு வர்ணத்திலிருந்த்து அறியப்படுகின்றது.)
சேஷத்வ காஷ்டை மிகுந்தவர்கள் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள். இவர்கள் ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகளின் அவதாரமேயாவர்.
(ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொரூபத்தில் கூட சட்டை உரித்த பாம்பினைப் போன்று பால் போன்ற நிறத்தில்தான் இருப்பாராம்.)
சுத்த சத்துவ குணத்தோடேயே அவதரித்தவர்கள். இவர்களை, இவர்களின் ஸ்ரீசூக்திகளைப் போற்ற போற்ற
நமக்கு சத்துவ குணம் மேலிடும், தோலுரித்த பாம்பின் பிரகாசம் போன்று.
————-
பாபாத பாபாத பாபாஸ் பாத பாத தபா தபா
தபாதபா பாதபாத பாத பாத தபாதபா –933– (சித்ர பத்ததி )
பாபம் அற்றது -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீ பாதத்திற்கு ஒளி கொடுப்பது -ஜீவர்களுக்கும் ஒளி வழங்குவது –
தன்னை பகவான் இடம் சமர்ப்பிக்குமவர் விஷயத்தில் ரஷை தரும் திருமஞ்சன தீர்த்தம் உடையது
சர்வ லோக ரஷகமாய் இருப்பதும் சர்வ பாபா நாசகமாய் இருப்பதுமான பெருமாள் திருவடிகளுக்கும் கூட ரஷணம் தருவது ஸ்ரீ பாதுகையே –
அது என்னை சர்வ பாபங்களில் இருந்து காத்து அருளிற்று –
ஒரே வார்த்தையை 16 முறை-இது அ ஆ என்கிற உயிர் எழுத்துக்களை கொண்டது , இரண்டு மெய் எழுத்துக்களையும் கொண்டது .
பாதபா , பாபா , அத , அபா , பாதபா , பாத , பா , பாத , பாபாத் , அபாபாத் , ஆ , பாபா , த , பாபா , ஆத , பா , பாத , பா
என்று பிரித்து படிக்கப் பட வேண்டும் , அதன் பொருள் என்னவெனில் ,
மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய
அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை
காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை ,
பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்வோர் விஷயத்திலும் , நன்கு காப்பாற்றாதவர்கள் விஷயத்திலும் முறையே
பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் ,
நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே –என்று பாடுகிறார்-
———–
சரம் அசரம் ச நியந்துஸ் சரணௌ
அந்தம் பரேதரா சௌரே:
சரம் புருஷார்த்த சித்ரௌ சரணாவநி
திசஸி சத்வரேஷு ஸதாம்—950-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அடியார்களைக் காப்பாற்றும் அதே சிந்தனை கொண்டவளாக உள்ளாய்.
அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய அனைத்தையும் நியமிக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள்,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றிய ஞானத்தை உண்டாக்கி, காக்கவல்லவையாக உள்ளன.
இப்படிபட்ட அவனது திருவடிகளை (இதன் மூலமாக ஸ்ரீரங்கநாதனை) ஸாதுக்களின் வீட்டிற்கே அழைத்து வந்து,
அவர்களின் பூஜை அறையில் நிலையாக நிறுத்தி விடுகிறாய்.
ஆக நீ ஸ்ரீரங்கநாதனை வெகு சுலபமாக அவர்களது இல்லங்களுக்கு அழைத்து வருகிறாய்.
———-
அபி ஜந்மநி பாதுகே பரஸ்மிந்
அநகை: கர்மபி: ஈத்ருசோ பவேயம்
ய இமே விநயேந ரங்க பர்த்து:
ஸமயே த்வாம் பதயோஸ் ஸமர்ப் பயந்தி—-952-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகர்கள் உன்னை அவனது திருவடிகளில்
மிகவும் அன்புடன் ஸமர்ப்பணம் செய்கிறார்கள். எனது அடுத்த பிறவியில் இவர்கள் போன்று
ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகராகப் பிறந்து உனக்கு கைங்கர்யம் செய்வேனோ?
————
காலே ஜந்தூந் கலுஷ கரணே க்ஷிப்ரம் ஆகார யந்த்யா:
கோரம் நாஹம் யம ப்ரிஷதோ கோஷமா கர்ண யேயம்
ஸ்ரீமத் ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநாம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகா ஸேவக இதி —969-
கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே –
ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற –
யமபரிஷத:=யமக் கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை –
அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும். – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய –
ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் –
ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக –
ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக –
அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.
———–
ஜ்ஞாந க்ரியா பஜந ஸீம விதூர வ்ருத்தே:
வைதேசி கஸ்ய தத் அவாப்தி க்ருதாம் குணாநாம்
மௌளௌ மமாஸி மது ஸூதந பாதுகே த்வம்
கங்கேவ ஹந்த பதித விதிதைவ பங்கோ:—983-
மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஞானயோகம், கர்மயோகம் மற்றும் பக்தியோகம்
ஆகியவற்றின் எல்லைகளுக்கு வெகுதூரத்தில் நான் உள்ளேன். அவற்றைப் பெறுவதற்குரிய குணங்களுக்கும் அப்பால் நான் உள்ளேன்.
இப்படிப்பட்ட என் தலை மீது, முடவன் ஒருவன் கங்கையில் விழுந்தது போன்று, நீயாகவே வந்து அமர்ந்தாய். என்ன வியப்பு!
———
இதி ரங்க துரீண பாதுகே த்வம்
ஸ்துதி லக்ஷ்யேண ஸஹஸ்ரசோ விம்ருஷ்டா
ஸபலம் மம ஜந்ம தாவத் ஏதத்
யதி ஹாசாஸ்யம் அத: பரம் கிம் ஏதத்—-1001–
ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! இப்படியாக உன்னைத் துதிப்பது என்ற ஸ்தோத்ரம் ஒன்றைச் சாக்காக
வைத்துக் கொண்டு, என்னால் ஆயிரக்கணக்கில் நீ சிந்திக்கப்பட்டாய்.
இதன் மூலமாக எனது பிறவியானது மிகுந்த ப்ரயோஜனம் மிக்கதாகி விட்டது.
இதற்கு மேல் இந்த உலகத்தில் நான் பெற வேண்டியதும், ப்ரார்த்தனை செய்ய வேண்டியதும் வேறு என்ன உள்ளது?
——–
ஜயதி யதிராஜ ஸூக்தி:
ஜயதி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயதநா: த்ரிவேதீம்
அவந்தயயந்த: ஜயந்தி புவி ஸந்த:—-1008–
யதிகளின் தலைவர் என்று போற்றப்படும் எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
இந்த இரண்டையும் ஒருவர் தனது செல்வமாகக் கொண்டாலே போதுமானது –
அப்படிப்பட்டவர்கள் மூன்று வேதங்களையும் ஸபலமாக்கியபடி வாழ்ந்து மேன்மை அடைகின்றனர்.
ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம்
என்று கொண்டு இருக்கும் சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் –
அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –
முதல் ஸ்லோகம் “ஸந்த” என்ற தொடங்கியது.
இந்த ஸ்லோகத்தின் முதல் பதமும் “ஸந்த” என்று முடிவதைக் காண்க.
இந்த ஸ்லோகம் கூறி முடித்தவுடன், மீண்டும் முதல் ஸ்லோகத்தைக் கூறுவது மரபாகும்.
சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீஸ சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-
——————————————————————————–
அயோத்யா காண்டத்தில் நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம் உருக்கமான ஒரு காட்சியை நம் முன் காட்டுகிறது.
அதிரோஹார்ய பாதாப்யாம் பாதுகே ஹேமபூஷிதே I
ஏதே ஹி சர்வலோகஸ்ய யோகக்ஷேமம் விதாஸ்யத: II-(நூற்றிப்பன்னிரண்டாவது ஸர்க்கம், 21வது ஸ்லோகம்)
ஆர்ய – ஸ்வாமியே!
ஹேமபூஷிதே – பொன்னால் அலங்கரிக்கப்பெற்ற
பாதுகே – பாதுகைகளில்
பாதாப்யாம் – திருவடிகளால்
அதிரோஹ – ஏறி அருள்வீராக!
ஹி ஏதே – ஏனெனில் இவைகள்
சர்வலோகஸ்ய – எல்லா உலகத்தின்
யோகக்ஷேமம் – யோகக்ஷேமத்தை விதாஸ்யத: – வகிக்கப் போகின்றன
பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும்.
ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்.”
ஸ்தோத்ர காவ்யம் -இது –
திரி ஸானு -கெட்டதையே பேசுபவர் -விஸ்வவஸூ -நல்லதையே பேசுபவர்
புஷபவத் -புஷபவந்தவ் -இரட்டைக்கு -பூ விழுந்த கண் பார்வை தெரியாத என்பான் திரிசாஸூநு
ஸூர்ய சந்த்ரர்களையும் சேர்த்து குறிக்கும் ஒரே வார்த்தை -புஷபவந்தவ்-திங்களும் ஆதித்யனும் போல்
வேங்கடாத்ரி கவி -இப்படி பாடி -இழந்த கண்ணை மீட்க லஷ்மீ சஹஸ்ரம் பாடி கண் பார்வை பெற்றார் –
23-ஸ்லோகம் -பாதுகா சஹஸ்ர மஹிமை சொல்கிறார்
பாதுகையையே பாடி உள்ளார் -தாயே உன்னை பாட முடியாதா –
சாஷாத் ஹயக்ரீவர் தேசிகன் -கவி ஸிம்ஹம் -தார்க்கிக ஸிம்ஹம் –
அவரை ஓப்பிடும் பொழுது ஊமையைப் போன்ற நான் பாடுவதே விஸ் மயம்
———————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .