ஸ்ரீ மத் பாகவத ஏக ஸ்லோகம்
ஆதவ் தேவகீ கர்ப்ப ஜனனம் கோபீ க்ருஹ வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம் கோவர்த்தன உத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம் குந்தீ ஸூத பாலநம்
ஏதத் பாகவத புராண கதிதம் ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்
ஸ்ரீ மத் பாகவதம்–12 ஸ்கந்தங்கள்-–100 அதிகாரங்கள் –18000-ஸ்லோகங்கள் –
————–
சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்சோ மன்வந்தராணி ச வம்சய
அனுசரிதச் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் –மத்ஸ்ய புராணம்
வைஷ்ணவம் நாரதீயஞ்ச ததா பாகவதம் ஸூபம் கருடாஞ்ச ததா பத்மம் வராஹம்
ஸூப தர்சனே சாத்விகானி புராணிவிஜ்நேயனி ஸூபாநீவை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்தம் மார்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ராஜசானி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் ததா லைங்கம் சிவம் ஸ்கந்தம் ததைவ ச அக்னேயம் ச சதேதானி தமஸானி நிபோதமே
யத்ர அதிக்ருத்ய காயத்ரீம் வர்ணயதே தர்ம விஸ்தாரா வ்ருத்தாஸூர வதோ பேதேம் தத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ ததியாத் தேம ஸிம்ஹாஸ மன்விதம் ப்ரவ் க்ஷ தபத்யம் பவுர்ணமாஸ்யாம் ச யதி பரமாம் கதிம்
அஷ்டாக்ஷ சஹஸ்ராணி புராணம் ப்ரகீர்திதம் -மத்ஸ்ய புராண ஸ்லோகம் –53-20-22-
யாவன் ஒருவன் உயர்ந்த வேதாந்த கருத்துக்களை அளிக்கும் ஸ்ரீ மத் பாகவதம் எழுதி பொன்னால் செய்த
சிம்ஹாசனத்தில் வைத்து பத்ர–ஆவணி – மாச பவுர்ணமி அன்று தானமாக அளிக்கிறார்களோ அவர்கள் பரம கதி அடைகிறார்கள்
அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூ த் ராணாம் பரதர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ் வேதார்த்த பரிபிரும்ஹத புராணம்
சாம ரூபா சாஷாத் பகவதோதித துவாதச ஸ்கந்த யுக்தோயம் சதா விச்சேத சம்யுத கிரந்த
அஷ்டாதச சஹஸ்ர ஸ்ரீ மத் பாகவாதபிதம் –கருட புராணம் -ஹரி பக்த விலாசம் –10-394-395-
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விவரணம் –
மஹா பாரத சாரம் –
காயத்ரி பாஷ்யம் –
வேத விவரணம் –
பதவ் யதியவ் பிரதம த்வித்யவ்
த்ரிதியதுர்யவ் கதிதவ் யதுரு நாபிஸ் தத பஞ்சம ஏவ சாஸ்தோ புஜாந்தரம்
தோரயுக லம் யதன்யவ் முகாரவிந்தம் தசமம் பிரபுல்லம்
ஏகாதஸவ் யஸ்ய லலத பதகம் சிரோ பி
யத் துவாதச ஏவ பதி தமதி தேவம் கருண நிதானம் தமல வர்ணம்
சுஹித வதரம் அபரஸம்ஸார சமுத்ர சேதும் பஜ மே ஹே பாகவத ஸ்வரூபம்
முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருப்பாதங்கள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்-ஊரு
ஐந்தாவது -திரு நாபி
ஆறாவது -திரு மார்பு – புஜாந்தரம்
ஏழாவதும் எட்டாவதும் -திருக்கைகள் -தோர் யுகலம்
ஒன்பதாவது -திருக்கண்டம்
பத்தாவது திரு முகாரவிந்தம்
பதினொன்றாவது -லலாட பதக்கம்
பன்னிரண்டாவது சிரஸ்ஸூ
————
ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்–ஸ்ரீ நாரதர் சதுஸ் ஸ்லோகி —
ஸ்ரீ வேத வியாசர் அனைத்து வேத புராணங்களையும் அருளிச் செய்த பின்பும்
திரு உள்ளம் சோகமாய் இருக்கக் கண்ட ஸ்ரீ நாரதர்
நான்கு ஸ்லோகங்களால்-2.9.33-36- வேத சாரங்களை அருளிச் செய்து
ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியே முழுவதுமாக ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்யச் சொல்ல பிறந்த கிரந்தம்
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் -ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ பாதாரயனர் -உடைய திருக் குமாரார்
ஸ்ரீ ஸூகர் ஸ்ரீ பரிஷித்துக்கு அருளிச் செய்த ஸ்ரீ மத் பாகவதம்
யாவன் அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம
ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –2-9-33-
யாவன்-எங்கும் பரந்து உள்ள
அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –
நிர்ஹேதுக அனுக்ரஹத்தால் அறியக் கடவீர்
அஹம் ஏவ சம் ஏவ அக்ரே நான்யத் யத் சத் அசத் பரம் பஸ்சத்
அஹம் யத் ஏதக் ச யோ அவசிஸ்யேத சோஸ்மை அஹம் –34-
ருதே அர்த்தம் எது பிரதியேத ந பிரதியேத ச ஆத்மனி தத் வித்யாத்
ஆத்மனோ மயாம் யத அபாஷஹ யத தமஸ்–35-
ப்ரஹ்மாத்மகம் இல்லா ஓன்று இல்லை -இருப்பது போல் -தமஸாகவே தோன்றும்
யதா மஹந்தி பூதாநி பூதேஸூ உச்ச அவஸேஸூ அனுப் பிரவிஸ்தானி
அப் பிரவிஸ்தானி ததா தேசு ந தேசு அஹம் -36
உள்ளே உறைந்து நியமிக்கிறேன் -வியாப்த கத தோஷம் தட்டாமல்
ஸ்ரீ வாஸூ தேவன் இந்த நான்கு ஸ்லோகங்களையே விவரித்து ஸ்ரீ மத் பாகவாதமாக-வேத சாரமாக
ஸ்ரீ கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை விவரித்து
கிருஷ்ண ஸ்வ தமோபகதே தர்ம ஞான திபீ ஸஹ கலவ் நஸ்தத் ரசம் ஏச புராணர்கோ துணோதித்
ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதி எழுந்து அருள –
தமஸில் ஆழ்ந்த உலகம் ஸ்ரீ மத் பாகவத புராணம்
மூலமாகவே கலியில் நாம் ஒளி பெறுகிறோம்
———————
ஸ்ரீ தசம ஸ்கந்த சுருக்கம் —
ஸ்ரீ தசம ஸ்கந்த தொடக்கத்தில் , பரீக்ஷித் ராஜன் , ஸ்ரீ சுகப்ரஹ்மத்தைக் கேட்பதான வ்யாஜத்தில்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதார மஹிமையை, அனுக்ரஹிக்கச் செய்த , அந்த உத்த ரையின் புத்ரனை நமஸ்கரிக்கிறேன்.
அவனாலன்றோ , ஸ்ரீ கிருஷ்ண மஹா சரிதத்தைப் படிக்கக் கூடிய- கேட்கக்கூடிய பாக்யம் கிடைத்தது
அதற்காக அந்த அர்ஜுன பௌத்ரனை, உத்தரை மைந்தனை —-ஸ்ரீ பரீக்ஷித் மகாராஜனை எப்போதும் நமஸ்கரிக்கிறேன்.
ஸ்ரீ சுகப்ரஹ்ம ரிஷி —-ஸ்ரீ வ்யாஸ பகவானின் புத்ரர் ———பிக்ஷைக்காக எவர் வீட்டின் முன்பும்
“பால் கறக்கும் வேளை ” தாண்டி (கோதாஹண வேளை ) நிற்க மாட்டார் .
அப்படிப்பட்ட மஹரிஷி , ஏழு நாட்கள் கங்கைக் கரையில் , பரீக்ஷித் மஹாராஜன் முன்பு உட்கார்ந்து,
ஸ்ரீ கிருஷ்ண சரிதத்தைச் சொன்னார்.
பரீக்ஷித் மகாராஜாவுக்குச் சொல்லும் வ்யாஜத்தில், இந்த க்ரந்தத்தை எல்லாருக்கும் சொன்ன ,
ஸ்ரீ சுகப்ரஹ்ம ரிஷியை மனசாலும், உடலாலும், வாக்காலும் நமஸ்கரிக்கிறேன்; பலதடவை நமஸ்கரிக்கிறேன் .
அவர் அல்லவா, இந்த அம்ருதத்தை; தேவாம்ருதத்தை; திகட்டாத அம்ருதத்தை நமக்கெல்லாம் பருகக் கொடுத்தவர் !
நம்மைக் கொடுத்து வைத்தவர்களாக ஆக்கியவர்!
ஆக,சுகப்ரஹ்ம ரிஷிக்கு க்ருதஜ்ஞ்சதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தைத்யர்கள், தானவர்கள், அஹங்காரம் மற்றும் மதம் பிடித்த அரசர்களாக த்வாபரயுகத்தில் பூமியில் பிறந்து
வேத வ்ருத்தமான அக்ரமங்களைச் செய்து, அட்டஹாசம் பொங்கி எழ சாதுக்களை ஹிம்சைப் படுத்தி வாழ்ந்து , பூமி பாரத்தை
அதிகரிக்கச் செய்து, பூமிப் பிராட்டிக்கு கஷ்டத்தைக் கொடுத்த சமயத்தில், பூமிப் பிராட்டியை அழைத்துக் கொண்டு, ,
ப்ரஹ்மா , தேவர்கள் புடைசூழ , க்ஷீராப்தியை அடைந்து, பகவானான உன்னை,
புருஷ ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், நாராயண அநுவாகம் —-இவற்றால் துதித்து,
சாது சம்ரக்ஷணத்துக்காக ராக்ஷஸ ர்களை அழிக்க , பூவுலகில் அவதாரம் செய்ய உன்னைப் ப்ரார்த்தித்ததற்காக ,
உன் அனுக்ரஹத்தைப் பெற்றதற்காக ,
பூமிப் பிராட்டியையும், ப்ரஹ்மாவையும் பல தடவை நமஸ்கரிக்கிறேன்.
மதுராவில், நித்ய வாஸம் செய்யும் கிருஷ்ணனே !
மதுரா ராஜ்யத்தின் அரசனான உக்ரசேனனுடைய தம்பி, —–தேவகனுடைய புத்ரியான “தேவகியை “,
சூரன் எனப்படும் யாதவ குலத் தலைவனின் பிள்ளையான வஸுதேவர், விவாஹம் செய்துகொண்டு தேவகியுடன் ரதத்தில் ,
தன்னுடைய நகருக்குத் திரும்பும்போது, ராஜாவான உக்ரசேனனின் பிள்ளை “கம்ஸன் ” ,
தன் தங்கையின் மீது ( ஒன்று விட்ட தங்கை ) வாத்ஸல்யம் மிகுதியாக , தேரின் மீது ஏறி, தானே தேரைச் செலுத்தினான்.
பாதி வழியில், —-ஆகாசத்திலிருந்து குரல்—- கம்ஸனிடம் பேசியது.
” முட்டாளே ! இவளுடைய எட்டாவது கர்பத்தில் தோன்றும் குழந்தை , உன்னைக் கொல்வான்.எந்தத் தங்கையைப் பாசத்துடன்,
தேரில் , குதிரைகளைப் பிடித்து அழைத்துச் செல்கிறாயோ, அந்தத் தேவகியின் எட்டாவது கர்பத்தில் பிறக்கும் சிசு ,
உனக்கு ம்ருத்யு ” என்று சொன்னது.
உடனே, பாபியும், துஷ்டனுமான கம்ஸன் , குதிரைகளின் கடிவாளத்தை விட்டு விட்டு, மஹா கோபத்துடன், கத்தியை எடுத்து,
தேவகியைக் கொல்ல முயற்சித்தான். அப்போது, வஸுதேவர் , அவனைத் தடுத்து, இனிய வார்த்தைகளைச் சொன்னார்.
” ஒரு ஆத்மா, ததேகம் எடுத்ததும் , ம்ருத்யு கூடவே வருகிறது;
இந்த தேகத்தில், ஐந்து , ஐந்து இந்த்ரியங்கள் இருந்து தேகம் அழியும் போது, அவையும் மறைகின்றன.
ஆத்மா, தன் கர்ம வினைக்கு ஏற்ப , மற்றொரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது;
தூக்கத்தில் இருந்தாலும், ஸ்வப்னத்தில் இருந்தாலும், ஆத்மாவை,மாயையால் , பகவான் செயல்பட வைக்கிறான்;
மாயையின் மூன்று குணங்களால் உள்ள தேகத்துடன், மனஸ் ஸும் சேர்ந்து, மாயையினால் ஆத்மா செயல் படுகிறது;
பிறகு, ஞானம் வரப்பெற்று, மாயையிலிருந்து விடுபடுகிறது; ஆதலால், ஒரு ஜீவன் , இன்னொரு ஜீவனுக்குத் த்ரோக
சிந்தனையுடன் நடந்து கொள்ளக் கூடாது; உன்னுடைய க்ஷேமத்துக்காக பிறருக்குப் பயத்தை ஏற்படுத்தக் கூடாது;
உன் தங்கை சிறியவள்; உனக்குப் புத்ரியைப் போன்றவள்; புதிதாக விவாஹம் ஆனவள்; கொல்லத் தகாதவள் ” என்று,
பலப்பல புத்திமதிகளைச்சொன்னார்.
கம்ஸன் சமாதானம் அடையவில்லை. க்ரூர ஸ்வபாவத்துடன் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முயன்றான்.
வஸுதேவர் யோசித்தார். இப்போதைக்கு, இவளுக்கு ஏற்பட்ட ம்ருத்யுவைத் தடுக்க வேண்டும்.என்று ஆலோசித்து,
” ஹே, கம்ஸ !இவளிடமிருந்து, பயப்பட ஒன்றுமில்லை; குழந்தைகள் பிறந்தவுடன் , உன்னிடம் கொடுத்து விடுகிறேன்;
ஆகாசத்திலிருந்து, அசரீரி, இவளுடைய குழந்தையால் தானே, நீ கொல்லப்படுவாய் என்றது ?
குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ இஷ்டப்படி செய்து கொள்என்றார்.
இதைக் கேட்டதும் கம்ஸன் , சரியென்று தலையை அசைத்து, தேரை விட்டு இறங்கிச் சென்றான்.
வஸுதேவர் , தேவகியுடன் தன்னுடைய வீட்டுக்குச் சென்றார். சில நாட்கள் சென்றன;
தேவகி கர்ப்பமடைந்து, முதல் குழந்தையைப் பெற்றாள். இக் குழந்தையின் பெயர் ” கீர்த்தமான் “.
சொன்ன சொல் தவறாத வஸுதேவர், மனஸ் சங்கடப் பட்டுக்கொண்டே , பிறந்த குழந்தையை கம்ஸனிடம் கொடுத்தார்.
கம்சன், குழந்தையைப் பார்த்தான். சந்தோஷப்பட்டான். சிரித்துக் கொண்டே, “இந்தக் குழந்தை உன்னிடமே இருக்கட்டும்;
எட்டாவது குழந்தை தானே எனக்கு ம்ருத்யு ” என்றான். வஸுதேவர் “சரி” என்று சொல்லி குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பினார்.
இருந்தாலும், கம்ஸனிடம் அவருக்குச் சந்தேகம் தான்.
நாரதர் , கம்ஸனுடைய சபைக்கு வந்து, ப்ரஹ்மாவின் முயற்சி , பூமிப் பிராட்டியின் பாரம் தீர பகவானின் அவதாரம்,
என்கிற தேவ ரஹச்யங்களைக் கம்ஸனுக்குச் சொல் லிவிட்டுச் சென்றார். கம்சன் மிகவும் பயப்பட்டான்.
தேவகி, வஸுதேவரைச் சிறையிலிட்டான். பிதாவான உக்ரசேனரை, சிறையில் அடைத்து, ராஜ்யத்தைப் பறித்து, தானே அரசன் ஆனான்.
தேவகி, வஸுதேவர் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றான்.
ஹே, ப்ரபோ ! உன்னுடைய சங்கல்பத்தாலன்றோ வஸுதேவர்—-தேவகி விவாஹம் நடந்தது;
உன்சங்கல்பத்தால் அல்லவா கம்ஸன் தானே முன்
வந்து, வஸுதேவர்—தேவகி வந்த தேரைச் செலுத்தினான்; உன் ஆக்ஜைப்படி தானே, ஆகாசத்தில் , அசரீரி கம்ஸனிடம்
பேசி அவனுக்குப் பயத்தை ஏற்படுத்தியது; நாரதர், கம்ஸனிடம் வந்து பேசியது எல்லாம், உன்னுடைய லீலை தானே;
கம்ஸனுக்கு, அஹங்காரமும்,கோபமும், பயமும் ஏற்பட்டு தகப்பனாரைச் சிறையில் அடைத்ததும்
ராஜ்யத்தை அபஹரித்துக் கொண்டதும்,கர்பத்திலிருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றதும் உன்னுடைய எண்ணம் தானே!
அப்படிப்பட்ட சங்கல்பத்துக்கும் ,ஆஞ்ஜைக்கும், லீலைக்கும், எண்ணத்துக்கும் , அடியேனுடைய க்ருதக்ஜதை உரித்தாகுக.
உனக்கு முன்பு பிறந்து உயிரை விட்ட ஏழு குழந்தைகளின் த்யாகம் அல்லவா உன் அவதாரத்துக்கு வித்திட்டது !
அவர்களால் அல்லவா,உன் திரு அவதாரம் ஏற்படப் போகிறது !
அந்தக் குழந்தைகளை, பக்தியுடனும், நன்றியுடனும் நமஸ்கரிக்கிறேன்
நீ, தேவகியைத் தாயாக அடைந்தாய். தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடி தோன்றினாள்.கம்ஸன் மிகவும் பயந்தான்.
தன்னை அழிப்பவன், எட்டாவது கர்பமாக தேவகியின் வயிற்றில் இருக்கிறான் ;
அவன் பிறந்ததும்,அந்தக் குழந்தையைக் கொன்று விட வேண்டும் என்று,எப்போதும் உன் நினைவாகவே இருந்தான்.
தேவகியின் கர்பத்தில், நீ வாஸம் செய்யும்போது, உன்னை, ருத்ரன், ரிஷிகள்,தேவர்கள்,முன்னிலையில்
ப்ரஹ்மா துதித்தார். அல்லவா ? அதை , அடியேனும் சொல்லி உன்னை ஸ்தோத்ரம்செய்கிறேன்
—————————————————-
அத்யாயம் –2–
பகவான், தேவகியின் கர்ப்பத்தை அடைவது, ப்ராஹ்மாவின் ஸ்துதி
கம்ஸனுக்கு யாதவ குலத்தின் மீதே அசூயை ஏற்பட்டது.
அந்தக் குலத்தையே அழிக்க முற்பட்டான்.
இவனுடன், ப்ரலம்பகன், சாணூரன், த்ருணாவர்த்தன், முஷ்டிகன், அரிஷ்டன், த்விதன், பூதனை,
கேசி, தேனுகன், பாணன், பௌமன், மகத தேசத்து அரசனும் மாமனாருமான ஜராஸந்தன்
என்பவர்களும் சேர்ந்து கொண்டனர். அஸுரர்கள் பலம் இப்படி வளர்ந்தது. தேவகியின் கர்ப்பத்தில் ஏற்பட்ட
ஆறு குழந்தைகளையும் , கம்ஸன், ஒருவர் பின் ஒருவராகப் பிறக்கப் பிறக்கக் கொன்றான்.
ஏழாவது கர்ப்பம் —-ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக அனந்தன் என்கிற ஆதிசேஷன் ஆவிர்ப்பவித்தார்.
இப்போது, கம்ஸனுக்கு , மரண பயம் மிகவும் அதிகரித்தது.
பகவானே ! பயத்தை நீ தானே உண்டாக்கினாய் !இப்போது, நீ தானே யோக மாயையை அழைத்து,
“ஹே, யோக மாயை ! வசுதேவருடைய இன்னொரு பத்னி —ரோஹிணீ—-, கோகுலத்தில்
, நந்தகோபன் பாதுகாப்பில் வசிக்கிறாள்( வசுதேவருக்கு ஏழு மனைவிகள் . தேவகி கடைசி மனைவி )
தேவகியின் வயிற்றில் , என் அம்சமாக அனந்தன் இருக்கிறான்;அந்த கர்ப்பத்தை இழுத்து, , ரோஹிணீயின் வயிற்றில் வைத்து விடு;
நான் , தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதரிப்பேன்; நீ, நந்தகோபனுடைய மனைவி யசோதையின் கர்ப்பத்தில் அவதரிப்பாயாக;
நான் பூமியில் அவதரித்ததும், வசுதேவர் என்னை , நந்தகோபன் வீட்டில் யசோதைக்குப் பக்கத்தில் வைத்து விட்டு,
யசோதை வயிற்றில் பிறக்கும் உன்னை, வசுதேவர் தன்னுடைய இருப்பிடமான காரக்ருஹத்துக்குக் கொண்டு வந்து விடுவார்;
நீ, இடம் மாறி தேவகியிடம் வந்து சேர்; உன்னை, உலக மக்கள் துர்க்கை, காளி, விஜயா,
வைஷ்ணவீ , குமுதா, சண்டிகா, கிருஷ்ணை, மாதவி, கன்யகா, மாயா, நாராயணீ, ஈசானீ ,
சாரதா, அம்பிகா, என்று பலப் பலப் பெயர்களில் பூஜை செய்வர் ” என்று ஆஜ்ஜை இட்டாய்.
உன் கட்டளைப்படிதானே,யோகமாயை என்கிற யோக நித்ரை “சரி ” என்று சொல்லி,
உன்னைப் பிரதக்ஷணம் செய்து, தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை, ரோஹிணிக்கு மாற்றினாள்;
நீ செய்த மாயையால் தானே, தேவகியின் ஏழாவது கர்ப்பம் அழிந்து விட்டதாக நம்பி ஜனங்கள் ஸூகப் பட்டனர்
பகவானாகிய நீ, தேவகியின் கர்ப்ப வாசத்துக்காக, முதலில் வசுதேவர் மனஸ்சில் புகுந்தாய்;
அதனால், அவர், ஜகஜ்ஜோதியாகக் காக்ஷி அளித்தார் ;
ஆசார்யன் , தன் கடாக்ஷத்தினால் சிஷ்யனை அனுக்ரஹிப்பதைப் போல, வசுதேவரால் , தேவகி அனுக்ரஹிக் கப்பட்டாள்.
இதுவும் உன் மாயையால், நடந்தது தானே . நீ, தேவகியைத் தாயாக அடைந்தாய்.
தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடி தோன்றினாள் கம்ஸனின் பயம் மிக மிக அதிகமாக ஆகிவிட்டது.
தன்னை அழிப்பவன் , எட்டாவது கர்ப்பமாக, தேவகியின் வயிற்றில் இருக்கிறான்;
அவன் பிறந்ததும் அந்தக் குழந்தையைக் கொன்று விட வேண்டும் என்று , சதா சர்வ காலமும்
உன் நினைவாகவே இருந்தானல்லவா
ஹே, ஸத்ய வ்ரதரே! நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும், நீயே ப்ரமாணம்.
அதை,ஸத்யமாக ஆக்குவதும் நீயே.”” ஆகாயம் சரிந்தாலும், கடல் வற்றினாலும்,
நான் சொல்வது எப்போதும் பொய்யாகாது ,ஸத்யமே ” என்று,த்ரௌபதிக்கு வாக்களித்த கண்ணனே !
ஸத்யனே ! , நித்யனே! சநாதனனே ! சரணாகத ரக்ஷகனே ! நீ தேவகி கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் கூடியிருக்க, ப்ரஹ்மா உன்னை ஸ்தோத்ரம் செய்து சரணமடைந்ததைப் போல,
பிரபன்னனாகிய அடியேனும்,அந்த ஸ்தோத்ரத்தையே சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.
பிரும்மாவின் ஸ்துதி
ஓ… …. ஆதி வ்ருக்ஷமான பகவானே !
இந்த சம்ஸாரம் ஓர் அஸ்வத்த வ்ருக்ஷம் ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை; அநாதி;
மேலே ஆகாயத்தை நோக்கி வேர்களும், கீழே பூமியில் கப்பும் , கிளையும் ,இலையுமாக மண்டிக் கிடக்கிறது;
இதற்கு, ஸுகம் , துக்கம் என்கிற இரண்டு பழங்கள்;
மூன்று ஆணி வேர்கள்—- இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்என்கிற காலமான மூன்று ஆணி வேர்கள்;
முக்குணங்கள் —-ரஜஸ், தமஸ்,ஸத்வம் என்கிற மூன்று குணங்கள்;
நான்கு விதமான புருஷார்த்தங்கள் , இந்த வ்ருக்ஷத்துக்கு, மரப்பட்டை;
ஐந்து இந்த்ரியங்கள் –கரணங்கள் ;
ஆறு அவஸ்தைகள் —அதாவது, ஆறு நிலைகள் ..பிறப்பு, ஸ்திதி, வளர்ச்சி,முதுமை, மரணம், அறிவு .
மற்றும் , பசி, தாகம், வருத்தம், மோஹம் , முதுமை, மரணம் .
ஏழு தாதுக்கள் —கபம், ரத்தம், வியர்வை( பருமன் ),மாம்சம், மஜ்ஜை, எலும்பு, ரேதஸ் என்கிற ஏழு தாதுக்கள்;
எட்டு கிளைகள்—-ஐந்து இந்த்ரியங்கள், மனஸ், புத்தி, அஹங்காரம் என்கிற எட்டு கிளைகள்;
ஒன்பது கண்கள், அதாவது த்வாரங்கள்— இரண்டு கண்களின் பொந்துகள், இரண்டு காதுகளின்
த்வாரங்கள், மூக்கின் இரண்டு த்வாரங்கள், வாய், குறி, ஆசன வாய்—என்கிற ஒன்பது த்வாரங்கள்;
பத்துப் ப்ராண ப்ரவ்ருத்திகள்— பிராணன், அபானன், வ்யானன், ஸமானன், உதானன்,
நாகன், கூர்மன், க்ருகசன், தேவதத்தன், தநஞ்ஜயன்—ஆகிய பத்துப் பிராணன்கள்
இரண்டு பக்ஷிகள்—-ஜீவாத்மா, பரமாத்மா
இப்படிப்பட்ட ஆதி வ்ருக்ஷமான உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணம் அடைந்ததைப் போல,பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி -உன்னைச் சரணம் அடைகிறேன்.
நீயே புருஷோத்தமன்; உபாதான காரணமும் நீயே; நிமித்த காரணமும் நீயே;
நீயே எல்லா உலகங்களையும் , ஜீவன்களையும் படைக்கிறாய்; காப்பாற்றுகிறாய்;
பிரளய சமயத்தில், அழித்து, நீயே லயஸ்தானமாக இருக்கிறாய்;
உன் நியமனத்தால், எல்லாப் பிரவ்ருத்திகளும் உண்டாகின்றன;
உனது மாயையால், சேதனர்கள் அஞானத்தில் மூழ்கி, நீயே யாவும்,
நீதான் ஒருவன், நீயே எல்லா உலகங்களிலும் வ்யாபித்து இருக்கிறாய் என்பதை மறந்து,
புத்தி பேதலித்து, அறிவை இழந்து, உன்னை—நானா வகைப் பட்ட —பலவைப் பட்ட பொருள்களாகப் பார்க்கிறார்கள்;
ஆனால், வித்வான்கள்,
அண்டசராசரம் அனைத்துக்கும் , அவற்றின் க்ஷேமத்துக்கும், நீதான் காரணம் என்று உணர்கிறார்கள்;
உன் சுத்வ ஸத்வ அவதாரங்கள், சாதுக்களுக்கு சுகத்தையும் மங்களத்தையும் அளிக்கிறது;
அதுவே, துஷ்டர்களுக்குத் தீங்கையும் நாசத்தையும் அளிக்கிறது;
உனது, அன்றலர்ந்த தாமரைக் கண்களின் கடாக்ஷத்தால், எல்லா ஸத்வங்களுக்கும் இருப்பிடமான
உன் ரூப லாவண்யத்தை, ஸுபாஸ்ரயத்தை, ஸாதுக்கள் மனத்தில் தரித்து,
சமாதி நிலையிலும் அவற்றை அனுபவிக்கிறார்கள்;
அதனால், ஸம்சாரமாகிய, இந்தப் பெரிய ஸமுத்ரத்தை, கன்றுக் குட்டியின் கால் குளம்பில்( கோவத்ஸபதம்)
தேங்கின ஜலத்தைத் தாண்டுவதைப் போலத் தாண்டி, உனது திருவடிகளையே நம்பி,
அதையே தெப்பமாக (படகு ) வைத்துக் ,கடக்கிறார்கள்;
இப்படிப்பட்ட பெருமைகள் உள்ள நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில்
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணமடைந்ததைப் போல,
பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்..
உன்னை பூஜை செய்யும் பக்தர்கள், உன் திருவடிகளை நமஸ்கரித்துப் பூஜிக்கிறார்கள்;
அதனால், கஷ்டங்கள் நிறைந்த, கடக்க முடியாத “பவார்ணவத்தை”, —பயங்கரமானதும்,
சௌஹார்த்த மில்லாததுமான அடர்ந்த பெரிய இருளை, உனது பிரகாசத்தால் கடக்கிறார்கள்;
அப்படிக் கடந்து, சம்சாரக் கடலைக் கடந்து, அக்கரையான –உனது திவ்ய வாசஸ்தலமான
பரமபதத்தை அடைந்த முக்தர்கள், உலகத்தில் உள்ளவர்களுக்கு, உதாரணமாக —ஆதர்ச புருஷர்களாக
இருக்கிறார்கள்; ஆனால், ஹே, கண்ணா! ….எவ்வளவு க்ஜானம் இருந்தும் , பண்டிதனாக இருந்தும்,
உன்னிடம் பக்தி இல்லாதவர்கள் , இந்த மார்க்கத்திலிருந்து நழுவி, கஷ்டப்படுகிறார்கள்;
உன்னிடத்தில் பரமபக்தி உள்ளவர்கள், உன்னையே நம்பி, பயமே இல்லாமல், எவ்வளவு
ஆபத்து வந்தாலும், அந்த ஆபத்துகளைச் சுலபமாகத் தாண்டுகிறார்கள்;
பெரிய பண்டிதர்களாக இருந்தாலும், வித்வான்களாக இருந்தாலும், பெரிய நல்ல குடும்பங்களில்
பிறந்து, அந்த நல்ல பிறவியினால் கர்வம் கொண்டவர்கள், உன்னைத் துதிக்காமல்,
பக்தி செய்யாமல், முக்தியை அடைவதில்லை; உன்னிடம் பரம பக்தி உள்ளவர்கள்,
எல்லா வகைகளிலும் உன்னால் காப்பாற்றப் பட்டு, தேவர்களின் தலைமீது
தங்கள் பாதங்களை வைத்து, பயமில்லாமல் சஞ்சரிக்கிறார்கள்;
நீ ஸுத்த ஸத்வ ஸ்வரூபி! பக்தர்கள் ( ஜீவாத்மாக்கள் ) ஆஸ்ரம தர்மங்களை, நன்கு அனுஷ்டித்து,
அவற்றால் ஏற்படும் பலன்களைத் தள்ளி விட்டு ( உனக்கே அர்ப்பணித்து ) உன்னை ஆராதிக்கிறார்கள்;
யாகம், யஜ்ஜம், யோகம், தபஸ், தானம், புண்ய தீர்த்தாடனம், ஸமாதி இவைகளால் செய்யப்படும்
பூஜையை ஏற்றுக்கொண்டு, அவர்களை அனுக்ரஹிக்கிறாய் ;
இப்படி அனுக்ரஹிக்கும் உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் இவர்கள் முன்பாக, ப்ரஹ்மா, உன்னை ஸ்தோத்ரம் செய்துஉன்னைச் சரணம் அடைந்ததைப் போல,
அடியேனும் அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, , ஜகத் காரணா ! ….சாஸ்த்ர க்ஜானத்தாலும், அனுமானத்தினாலும்,
உனது கிருபையால் ஏற்பட்ட இந்த்ரியங்களால், ஓரளவுதான் உன்னை அறிய முடிகிறது;
உனது நாமாக்கள் , உனது ரூபங்கள், உனது சேஷ்டிதங்கள் , அனந்தம், மிக மிக அனந்தம்;
அவை அற்புதம், மிக மிக அற்புதம்; நீ எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தாலும்,, எதிலும் உனக்குப் பற்று இல்லை;
ஆனால், உனது க்ருபையால், உனது கதா உபன்யாசங்களைக் கேட்டும், குண சேஷ்டிதங்களை வாயாரச் சொல்லியும்,
உனது திருவடிகளை வணங்கி சரணம் அடைந்தும், இந்தப் பூமியில் ஏற்பட்ட “பந்தம் ”அறுபடுகிறது;
மறுபடியும், பிறவித் துயர் என்பது இல்லை; இந்த பூமி , உனது திருவடி;
இந்தப் பூமியின் தாங்கொணா பாரம், உனது அவதாரத்தால் குறைகிறது;
உன்னுடைய அவதாரம் சாதுக்களுக்கு அபயம்;
நீ, இப்போது அவதரித்து, பூமியின் பாரத்தை ஒழிக்க வேண்டும்;
அடியோங்களைக் காக்க வேண்டும்; இப்படியாகப் பலதடவை,அவதாரங்களை எடுத்திருக்கிறாய்; இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
ஜீவனுக்கு, உன்னைப் பற்றிய சாஸ்த்ர க்ஜானம் இல்லாததால்,பிறப்பு, இறப்பு, சுழலில் சிக்கி, சம்ஸார பந்தத்தில் உழல்கிறது;
நீ, மத்ஸ்ய, கூர்ம, ஹயக்ரீவ, ஸுகர ( பன்றி ), ந்ருஸிம்ஹ , ஹம்ஸ ,வாமன,
பரஸுராம, ராம, இப்படிப் பல அவதாரங்களை எடுத்திருக்கிறாய்;
அப்போதெல்லாம், எல்லா உலகங்களுக்கும், நீதான் அதிபதி என்று காட்டி,
பூமியின் பாரத்தைப் போக்கி இருக்கிறாய்.;இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
இப்போதும் அவ்வாறே அவதாரம் செய்யப் போகிறாய்; உனக்கு ஜயம் உண்டாகட்டும்;
இப்படிப் பராக்ரமம் உள்ள, உன்னை நீ , தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில், ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணமடைந்ததைப் போல
பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி,உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, பரந்தாமா….ப்ரஹ்மா, ருத்ரன், ரிஷிகள் தேவர்கள்,
எந்த ஸ்துதி வசனங்களால் உன்னுடைய நிஜ ஸ்வரூபம் காணப்படுமோ ,அவற்றால் துதித்து,
அடியேனுக்கும் காட்டிக் கொடுத்து,உபகாரம் செய்தமைக்காக , அவர்களையும் நமஸ்கரிக்கிறேன்
( 2 வது அத்யாயம் முடிகிறது. )
———–
அத்யாயம்—3
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம்
பரம பவித்ரமான காலம்; ஆவணி மாசம்; ஆகாயம் நிர்மலமாக இருந்தது;
தடாகங்களில் தாமரைப் புஷ்பங்கள் நிறைந்து இருந்தன; காடுகளில் மரங்கள் புஷ்பங்களை வர்ஷித்தன;
பக்ஷிகள் குதூகலம் அடைந்தன; எங்கும் சாந்தம்; சாதுக்களின் ஹ்ருதயம் குளிர்ந்து இருந்தது;
வாயு சுத்தமான காற்றை வீசிற்று. ஆகாயத்தில் , துந்துபி, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கின;
வித்யாதரர், அப்சரஸ்கள் , கின்னரர், கந்தர்வர், சித்தர், சாரணர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினர்;
தேவர்கள், ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர்;
த்வாபர யுகம்; ஸ்ரீ முக வருஷம்; தக்ஷிணாயனம்; ஆவணி மாசம்;
கிருஷ்ண பக்ஷம்; அஷ்டமி திதியும் ரோஹிணி நக்ஷத்ரமும் கூடிய சுப வேளையில் ,
ப்ரஹ்மா அதி தேவதையாக உள்ள ரோஹிணி நக்ஷத்ரத்தில், சந்திரன் உச்சத்தில், சந்திரனுக்குப்
பிரியமானதும், பிரஜாபதியின் நக்ஷத்ரமுமான இந்த ரோஹிணி நக்ஷத்ரத்தில்,
நள்ளிரவு 11–30 முதல் 12-00 மணிக்குள்ளாக ,
நீ, தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதாரம் செய்தாய்.
தேவகியின் ரூபம் தேவ ரூபத்தை மிஞ்சியது.
ஹே, ப்ரபோ, உன் அவதார காலத்தில் , அடியேன் எந்தப் பிறவியில்
எங்கு இருந்தேனோ தெரியாது; ஆனால், இப்போது , உன், அவதார வேளையைச் சொல்லி,
நீ அவதரித்ததை, உடலெல்லாம் புல்லரிக்க, மனஸ் எல்லாம் மகிழ்ச்சி ததும்ப ,
தேவகி , வசுதேவர் உள்ள காராக்ருஹத்தில் , உன்னைப் பிரதக்ஷணம் வந்து, வந்து,
உன் மெல்லிய, மிக மெல்லிய , பிஞ்சுத் திருவடிகளைத் தொட்டுத் தொட்டு ,
அடியேனின் கண்களில் ஒற்றிக்கொண்டு , உன்னையே சரணம் என்று அடைகிறேன்.
நளினம் அழகு, இப்படி எல்லாம் திருமேனியில் கலந்து,
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகனே !
நீ, நீலரத்ன மணியைப் போல ஜொலிக்கிறாய்;
அலர்ந்த கேசபாசம்;
பவளத்தை மிஞ்சும் திரு உதடுகள்;
புண்டரீக நயனங்கள்; கள்ளச் சிரிப்பு ;
அதனால் கன்னத்தில் குழி;
சின்னஞ்சிறிய, மிகவும் சின்னஞ்சிறிய நான்கு திருக் கைகள்;
அவைகளில் திவ்ய ஆயுதங்கள் சக்ரம், சங்கு,
கதை, தாமரை; திருமார்பில் ஸ்ரீ வத்ஸ மரு;
திருக் கழுத்தையும் , திரு மார்பையும் அணைத்துச் சேர்க்கும் முத்துச் சரங்கள்; கௌஸ்துபம்;
வனமாலை; இடையில் பீதாம்பரம்; வைடூர்யத்தால் இழைக்கப்பட்ட க்ரீடம்;
குண்டலங்கள்; தாமரை ஆயிரம் இதழ்களுடன் கொத்தாக இருப்பதைப் போல ,
இடையில் தங்க ஆபரணங்கள்; விரல்களில் மோதிரங்கள்;
தோள்பட்டையில் ஆபரணம்; இதுதான் சிவப்போ என்று ,சிவந்து இருக்கும் திருவடிகள்,
சின்னஞ்சிறு, மிகச் சின்னஞ்சிறு திருவடிகள்;
அவைகளில் தண்டை, கொலுசு
ஹா, ஹா, அற்புதம் , மிக மிக அற்புதம்!
மறுபடியும் மறுபடியும் உன் பிஞ்சுத் திருவடிகளை ஸ்பர்சித்து,
உன்னையே சரணம் அடைகிறேன்.
ஹே, ப்ரபோ, நீதான் சாக்ஷாத் நாராயணன்;
நீயே விஷ்ணு; நீயே சர்வலோக சரண்யன்;
நீயே ப்ரகிருதி தத்வங்களுக்கு மேலான புருஷன்;
நீயே 26 வது தத்வம்;
நீயே , சர்வ புத்தியையும் தாங்கும் சமஷ்டி புத்தித்வம்;
முக்குணம் உள்ள ப்ரக்ருதியைப்படைத்து, செயல்படுத்தி,
ஆட்டுவிப்பது நீயே; இப்படியாக உன்னை ஸ்ரீ வசுதேவர் ,
உன் திரு அவதாரம் ஆனவுடன் , காரக்ருஹத்தில் ஸ்தோத்ரம் செய்ததைத்
திருப்பிச் சொல்லி ஸ்ரீ வசுதேவரை முன்னிட்டு , அடியேனும் ஸ்தோத்தரிக்கிறேன்.
நீயே, ஒவ்வொரு தத்வத்திலும் அநுப்ரவேஸம் செய்து,
அவைகளை வஸ்துவாக ஆக்கினாய்; அவை யாவும் உனக்குச் சரீரமே;
ஆனால், அதன் குண தோஷங்கள் உன்னைப் பாதிக்காது;
இருபத்தைந்து தத்வங்களான, மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்,
ஐந்து தன் மாத்ரங்கள், ஐந்து கர்ம, க்ஜாநேந்த்ரியங்கள், , ப்ரகிருதி, ஜீவன், இவைகளைத்
தாமே செயல்படுவது போல,
நீ, தூர விலகி நிற்கிறாய்;
அதைப் போல, தேவகியின் வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்து,
பிறகு பிறந்து,
உனக்கும் ஒரு மாதா தேவை என்று, உலகத்துக்குக் காட்டினாயோ;
நீ. சிருஷ்டிக்கு முன்பு, மஹத், அஹங்கார தத்வங்கள் மாறுபாட்டை அடையாமல்,
பிறகு உன்னுடைய சங்கல்பத்தாலும், அநு ப்ரவேசத்தாலும், நியமனத்தாலும்,
பஞ்சீகரணம் செய்யப்பட்டு, பரிணமித்து, தாமே அவைகளை உண்டாக்குவது போல ப்ரமை ஆயிற்று;
இந்த ஸ்ருஷ்டி என்பது, ஸத்கார்யவாதம்; உள்ளே இருக்கும் பொருள் ,
தானே உண்டாகும் —ஸ்ருஷ்டியாகும்;
நெல் விதைத்தால், நெல் தானே வளரும் உனக்கு எந்த மாறுதலும் இல்லை;
தேவகிக்குக் குழந்தையாக நீ பிறந்தது, ” அசந்தநீயம் ” !
( நீ, அதனுள் நுழைந்து பிறந்தாயா? அல்லது, உன் சங்கல்பத்தால் உள் நுழைந்து பிறந்தாயா ?
அவை தாமாகப் பிறந்தனவா ? எது சரி என்று தீர்மானிக்க முடியாதபடி ,
என் புத்தி கலங்குகிறது; உனக்கு, மனுஷ்யர்களைப் போல இந்த்ரியங்கள் இருந்தாலும்
அவை அப்ராக்ருதம்—–சுத்த ஸத்வத்தால் ஆனது ; சுபாஸ்ரயம்;
நீ, எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மா; அவை யாவும் உனக்குச் சரீரம்;
நீதான் அவைகளை உண்டாக்குகிறாய்;
இது, வித்வான்கள் அல்லாத அறிவிலிகளுக்குப் புரியாது;
உனது சக்தி , சங்கல்பம், வீர்யம், அளவிட இயலாதது;
இந்தப் பொருட்கள் உண்மையாகவே உள்ளனவா ?
பொய்த் தோற்றமா ? ஒன்றா, பலவா ? யாரால் எப்படிச் சொல்ல முடியும் ?
இவை உன்னிடமே லயித்து, உனது சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிக்கப்படுகிறது;
இது உனக்கு ஒரு லீலை ! இதனால் உனக்கு ஒரு தோஷமும் இல்லை;
நீதான் ஸத்யம்;
நீதான் ஈஸ்வரன், சர்வேஸ்வரன்;
நீதான் ப்ரஹ்மம்;
சத்வம், ரஜஸ் , தமஸ் இவைகளை நீதான் உண்டாக்குகிறாய்;
நீ அகில லோகாதிபதி; ஆனாலும்
உனக்கு கர்ப்ப வாஸம் ஏற்பட்டது ஆச்சர்யம் !
உலகங்களை எல்லாம் படைக்கும் நீ, எங்களுக்காக, அடங்கி, ஒடுங்கி,
வயிற்றில் பதுங்கி இருந்தது, ஆச்சர்யம் !
நானும் மனுஷ்யக் குழந்தை தான் என்கிற கபட வேஷமா இது ?
அநீதியைச் செய்யும் அசுரர்களை அழிக்க, எனது க்ருஹத்தில் பிறந்து
இருக்கிறாய்; தர்மத்தை ஸ்தாபனம் செய்ய, அவதாரம் செய்திருக்கிறாய்;
நீ பிறந்திருப்பதை அறிந்து, கம்ஸனும் அவனுடன் சேர்ந்த துஷ்டர்களும்
, உன் ப்ராதாக்களைக் கொன்றதைப் போல , உன்னையும் கொன்று விடுவார்களே,
, உன்னைக் கொல்ல ஆயுதமேந்தி வருவார்களே ”
இப்படியாக, ஸ்ரீ வசுதேவர் , உன்னை ஸ்தோத்ரம் செய்ததைத் திருப்பிச் சொல்லி,
ஸ்ரீ வசுதேவரை முன்னிட்டு, அடியேனும் அப்படியே ஸ்தோத்தரிக்கிறேன்
உன் தாயாரான தேவகியும் , மஹா புருஷ லக்ஷணங்களைக் கொண்ட
உன்னைப் பார்த்து, கம்ஸனிடம் பயம் நீங்கியவளாக, உன்னைத் துதித்தாள்
நீயே, ப்ரஹ்மம், நீயே விஷ்ணு, நீயே அத்யாத்ம தீபம்,
அவ்யக்தமாக கண்களுக்குத் தெரியாது இருந்த நீ
இப்போது எங்களுக்குக் குழந்தையாகத் தோன்றி இருக்கிறாய்.
நீ நிர்குணன்;
நிர்விகாரன்;
ஒவ்வொரு வஸ்துவுக்கும் நீயே ஆதாரம்;
உனது வீர்யத்தால், வஸ்துக்களின் ஸ்திதி முதலான எல்லாவற்றையும் நடத்துகிறாய்;
ஆனால், அதன் குண விசேஷங்கள் உன்னைப் பற்றுவதில்லை;
அப்படியான விஷ்ணுவான நீ, இப்போது என் குழந்தை என்று சொல்லும்படி விளங்குகிறாய்; உன்னை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்.
இப்படி உன்னை, உன் தாயான தேவகி ஸ்தோத்ரம் செய்ததை,
அடியேனும் திருப்பிச் சொல்லி, அந்த தேவகி மாதாவை முன்னிட்டு,அடியேனும் உன்னை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்.
மஹா பிரளய சமயத்தில், ( இரண்டு பரார்த்தம்—-ப்ரஹ்மாவின் ஆயுள் முடியும்போது )
எல்லாப் பொருள்களும் அழிந்து, சூக்ஷ்ம ஸ்திதியில் எல்லாப் பொருளும் ஒடுங்கி,
அவ்யக்தமாக ஆகி, நீ மட்டும் அழியாமல் இருக்கிறாய்.
நீயே கால மூர்த்தி;
என்னை ரக்ஷிப்பவனாகிய உன்னைச் சரணமடைகிறேன்.
கம்ஸனுக்குப் பயந்து வாழ்கிறோம்.
நீதான் அந்தப் பயத்தைப் போக்க வேண்டும்.
இந்த மிக அத்புதமான, அழகான, ஆச்சர்யமான ரூபத்தை மறைத்துக் கொள்.
சாதாரண மனுஷ்யக் குழந்தையாக மாறி விடு;
அந்தக் கம்ஸன் உன்னை, என்னுடைய குழந்தை என்று அறியாமல் இருக்கட்டும்.
நான்கு திருக்கரங்களுடன் கூடிய உன் திவ்ய ரூபத்தை மாற்றிக்கொள்
எல்லாருக்கும் மேலான நீ, என் வயிற்றில் வசித்து, பிறகு பிறந்தாய்.
இது, மனுஷ்ய லோகத்தில் உன்னுடைய லீலை. உன்னை நமஸ்கரிக்கிறேன் ”
இப்படியாகச் சொல்லி, உன் தாயான தேவகி உன்னை ஸ்தோத்ரம் செய்ததை,
அடியேனும் இப்போது சொல்லி, உன் தாயார் தேவகியின் முன்பாக உன்னை அடியேனும் நமஸ்கரிக்கிறேன்.
இந்தச் சமயத்தில், நீ சொன்னதை உனக்கு நினைவு படுத்துகிறேன்.
“”ஹே, தேவகி, ஸ்வாயம்பூ மன்வந்தரத்தில் ,
உனக்கு ” ப்ருஸ்நீ ” என்று பெயர்; உன் கணவர் ” சுதபர் ” என்கிற ப்ரஜாபதி.
ப்ரஹ்மாவின் கட்டளையான சந்ததியை உண்டாக்குங்கள் என்கிற ஆணையை மீறி,
நீங்கள் இருவரும் இந்த்ரியங்களை அடக்கி, தபஸ் செய்து ,
அவ்வப்போது ஏற்பட்ட சீதோஷ்ண மாறுதல்களைப் பொறுத்துக் கொண்டு,
என்னை உபாஸித்தீர்கள் . 12000 தேவ வருஷங்கள் அவ்வாறு தபஸ் செய்தீர்கள்.
நான், அந்தத் தபஸ்ஸால் சந்தோஷமடைந்து, உங்கள் முன்பு தோன்றி
உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றேன்.
உடனே, நீங்கள், உன்னைப் போல ஒரு புத்ரன் வேண்டும் என்று ப்ரார்த்தித்தீர்கள்.
நீங்கள் மோக்ஷத்தைக் கேட்கவில்லை.
என்னையே உங்கள் பிள்ளையாகக் கேட்டீர்கள்.
நானே உங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன் என்று வரம் தந்தேன்.
நீங்கள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்தபோது, நான் ” ப்ருஸ்னி -கர்ப்ப ” என்கிற
பெயருடன் பிள்ளையாகப் பிறந்தேன்.
இரண்டாவது தடவையாக, நீங்கள், அதிதி—-கச்யபராக இருந்தபோது,
உபேந்த்ரனாக அவதரித்தேன். வாமனன் என்றும் பெயர்.
இப்போது உங்களின் இந்த மூன்றாவது பிறவியில்,
சதுர் புஜத்துடன் உங்களுடைய குழந்தையாகத் தோன்றி இருக்கிறேன்.
இப்போது, உங்களுக்கு என்னைப் பார்ப்பதால் ஏற்படும் அனுபவம்
ப்ரஹ்ம பாவத்தாலும், புத்ர பாவத்தாலும், மாறி மாறி ஏற்படும்.
இதே ப்ரேமையுடன் வாழ்ந்து, கடைசியில் பரமபதத்தை அடைவீர்கள்
வசுதேவ……. உடனே என்னை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில்
நந்தகோபன் க்ருஹத்தில் யசோதைக்கு அருகில் என்னை விட்டு விட்டு,
யசோதை அருகில் இப்போதுதான் பிறந்திருக்கும் குழந்தையை
எடுத்துக் கொண்டு, இங்கு வந்து விடு…..எல்லாம் ஸுபமாக நடக்கும் ”
ஹே … பகவன்…….தேவகி—வசுதேவர் தம்பதியரைப் போல
அடியோங்களால் தபஸ் செய்ய இயலாது.; இது ஸ்வாயம்பூ
மன்வந்தரம் அல்ல;.
கலியுகத்தில், வைவஸ்வத மன்வந்தரம்.;
அடியோங்களுக்கு பலவீனமான புத்தி; பலவீனமான சரீரம்;
ஆனால், ஆசை மட்டும், ஏழு கடல்களுக்கும் அதிகம்;
அந்த ஆசையை , உன் திருவடியில் திருப்ப அனுக்ரஹிப்பாயாக
எட்டாவது குழந்தை தன்னுடைய சதுர் புஜத்தை மறைத்து, சாமான்ய—-மானிடக் குழந்தையாக மாறிற்று.
வசுதேவர், தேவகி இருவரின் இரும்பு விலங்குகள் தாமாகவே கழன்று விழுந்தன;
பகவானாகிய இக் குழந்தையின் கட்டளைப்படி, வசுதேவர்,குழந்தையைக் கூடையில் வைத்து , தலையில் சுமந்து கொண்டார்;
கதவுகள் தானாகவே திறந்து வழி விட்டன
காவலாளிகளுக்கு நன்கு உறக்கம்;
காரக்ருஹத்திலிருந்துவெளியே வந்தார்;
இருள் சூழ்ந்த ராத்ரி;
மழை பெய்து கொண்டிருந்தது;
மேகங்கள் மெதுவாகக் கர்ஜித்தன;
ஆதிசேஷன், கூடையில் உள்ள குழந்தையான பகவானுக்குத் தன் முகங்களை விரித்துக் குடை போல ஆகி,
மழைத் தூறல் பகவானின் மேலே விழாத வண்ணம் செய்து ,தொடர்ந்து வர, வசுதேவர் நடந்து, யமுனை நதியை அடைந்தார்
யமுனையில் பெருவெள்ளம் சுழியிட்டு ஓடிக்கொண்டிருந்தது.
வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததும்,நதி, தன் வெள்ளப் பெருக்கை நிறுத்தி, அவருக்கு வழி விட்டது.
வசுதேவர், யமுனை நதியைக் கடந்து, கோகுலத்தில் நந்தகோபன் க்ருஹத்துக்கு வந்தார்.
இங்கு எல்லோரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.யசோதையின் அருகில் வந்தார்.
“அஜா ” என்று அழைக்கப்படும், யோகமாயை , யசோதைக்குப் பக்கத்தில்,பெண் சிசுவாகப் பிறந்து இருந்தாள்.
பகவானை, யசோதை அருகில் படுக்கையில் விட்டு விட்டு,
யோகமாயையான பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு,
முன்பு போலவே யமுனை வழி விட, தன்னுடைய இடமான காராக்ருஹத்துக்கு வந்து சேர்ந்தார்.
உள்ளே நுழைந்ததும், கதவுகள் தானாகவே மூடிக் கொண்டன.
விலங்குகள், தானாகவே, கால்களிலும், கைகளிலும் வந்து பூட்டிக் கொண்டது.
அங்கு , கோகுலத்தில், யோக மாயையினால் மூர்ச்சித்துக் கிடந்த
யசோதை கண் விழித்துப் பார்த்தபோது, தனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை
பிறந்து இருப்பதைப் பார்த்து, மிகவும் சந்தோஷம் அடைந்தாள்
ஹே….பிரபோ…..உன்னுடைய அகடிதகடினா சாமர்த்தியத்தால்,
ஒருத்தி மகனாய்ப் பிறந்தாய்;
ஓரிரவில் இன்னொருத்தியின் மகனாக நீயே ஆக்கிக் கொண்டாய்;
உன்னைச் சுமந்த கூடைக்கும், குடையாக வந்த ஆதிசேஷனுக்கும்,
வழிவிட்ட யமுனா நதிக்கும், யசோதையின் பெண்ணாக அவதரித்த
யோகமாயைக்கும், வசுதேவர்—தேவகி தம்பதியரை முன்னிட்டு,
அடியேனின் க்ருத்க்ஜயைத் தெரிவிக்கிறேன்.
இந்தப் பெரும் பாக்யசாலிகளாலன்றோ ,
உன்னுடைய லீலைகள் கோகுலத்தில் தொடங்கப் போகிறது
3 வது அத்யாயம் முடிவடைகிறது ஸுபம்
————————-
அத்யாயம் –4-
யோக மாயையான பகவதி, கம்ஸனை எச்சரிப்பது
(ஹே …பகவானே….வசுதேவர் சிறைக்குத் திரும்பியதும், வெளிக் கதவுகள், உள்கதவுகள் எல்லாம்,
தாழிட்டுக் கொண்டது உன் சங்கல்பத்தால் அல்லவா !
காவலர்கள் தூங்கியதும், பின்பு இப்போது கண் விழித்ததும் உன் சங்கல்பத்தால் தானே நடந்தது )
ஹே, பிரபோ… காராக்ருஹத்தில், , யோகமாயை வீரிட்டுக் கத்தியதும், எட்டாவது குழந்தை பிறந்ததைக் காவலர்கள் மூலம் கேள்விப்பட்ட கம்ஸன் ,
தலைவிரி கோலத்துடன் , தள்ளாடும் நடையுடன், கர்ரக்ருஹத்துக்கு வந்தான். தேவகி, அவனிடம் மன்றாடினாள்.
” இந்தப் பெண் குழந்தையை,உனக்கு மருமகள் போல இருப்பவளை, நீ கொல்லாதே. விட்டு விடு” என்று கதறினாள்.
மார்போடு குழந்தையை அனைத்துக் கொண்டிருந்த அவளைத் தள்ளி விட்டு,குழந்தையை அவள் கையிலிருந்து பிடுங்கி,
யோகமாயையின் இரண்டு பிஞ்சுத் திருவடிகளையும் தன்னுடைய இரு கரங்களால் பிடித்து,ஆத்திரமும் கோபமும் இணைய , கல்லின் மீது வீசினான்.
ஆனால், ஹே பிரபோ, உன் கிருபையால் , யோகமாயை , கம்சனின் பிடியிலிருந்து விலகி,ஆகாசத்தில் கிளம்பினாள்.
என்ன ஆச்சர்யம் ! உன் தங்கை அல்லவா ?
( எட்டுத் திருக்கரங்களுடன் திவ்யமான வஸ்த்ரத்துடன் ,
தேவலோக மாலைகளுடன், ரத்ன ஆபரணங்கள் அணிந்து,எட்டுத் திருக்கரங்களிலும்
தனுசு, சூலம், அம்பு, கேடயம், கத்தி, சங்கு, சக்ரம், கதை என்று எட்டு ஆயுதங்கள் ஏந்தியவளாக ,
சித்த, சாரண, கந்தர்வ, கின்னர, அப்சரஸ்கள் சமர்ப்பித்த பூஜைகளை ஏற்று, பகவதி—துர்க்கை —என்று போற்றப்படும்
உன் தங்கையை ,தேவியை, பலதடவை நமஸ்கரிக்கிறேன் )
அந்த யோகமாயை, கம்ஸனைக் கோபத்துடன் பார்த்து,
” ஹே, முட்டாளே……என்னைக் கொல்வதால் ஒரு பயனும் இல்லை; உன்னைக் கொல்வதற்கு உன் விரோதி பிறந்து விட்டான்;
இனிமேலாவது, குழந்தைகளைக் கொள்வதை நிறுத்து; என்று கர்ஜித்தது .
(பூமியில் பல கோவில்களில் துர்க்கை என்றும் , பகவதி என்றும் , குடிகொண்டு இப்போதும் அநுக்ரஹம் செய்து கொண்டிருக்கும் ,
விஷ்ணுவாகிய உனக்குத் தங்கையாகிய , அந்தத் துர்க்கையை நமஸ்கரிக்கிறேன். )
யோக மாயையின் வார்த்தைகளைக் கேட்ட கம்ஸன் , அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.
வசுதேவர், தேவகியை சிறையிலிருந்து விடுவித்தான்.
அவர்களை நோக்கி, ” என்னை மன்னியுங்கள்; குழந்தைகளைக் கொன்ற பாபி நான்;
சிசுஹத்தி பாபத்தினால், எந்த நரகத்தை அடைவேனோ தெரியாது; தெய்வமே பொய் பேசுகிறது;
( எட்டாவது குழந்தையாக ஆணுக்குப் பதில் பெண் குழந்தை பிறந்து,, எட்டாவது குழந்தை ஆணாக எங்கு உள்ளதோ என்கிற சந்தேகத்தில் ) ;
குழந்தைகளை இழந்ததால் அழாதீர்கள்; பிறக்கும் யாவும் ஒரு நாள், இறக்க வேண்டியதே; இது விதியின் செயல்;
தேகம்தான் நாசமடைகிறது; ஆத்மா நாசமடைவதில்லை
மரித்தபின் புதுப் புதுத் திரேகம் அதற்குக் கிடைக்கிறது; ” இப்படிப் பலவாறாகப் பேசி,அவர்களின் மன்னிப்பை வேண்டினான்.
வசுதேவர் ” நீ சொல்லியவை சத்யம்; ஜீவன்கள், அக்ஜானத்தாலே புத்தி பேதலித்து, ஒருத்தரை ஒருத்தர் கொன்றுகொண்டு அழிகிறார்கள்; ” என்றார்.
கம்ஸன் அரண்மனையை அடைந்தான்.. மறுநாள் காலை, மந்த்ரிகளை அழைத்து,யோகமாயை சொன்னதை அவர்களிடம் சொன்னான்.
அவர்கள் தேவ சத்ருக்கள். அசுரர்கள். கோபத்துடன் கம்ஸனிடம் பேசினார்கள்.
” எல்லா இடங்களிலும் பத்து நாட்களுக்குள், எந்தக் குழந்தை பிறந்திருந்தாலும்,அதைக் கொல்வோம்;
விரோதிகளிடம் கருணை காட்டாதீர்கள்; ஹரியோ, சிவனோ, ப்ரும்மாவோ, நம்மை ஒன்றும் செய்ய முடியாது; ஆனாலும், விரோதிகளிடம்
அலக்ஷ்யமாக இருக்கக்கூடாது; அவர்களுக்கு விஷ்ணு தான் மூலபலம்; அவரை அழிக்க வேண்டும்; குழந்தையாக எங்காவது பிறந்திருக்க வேண்டும்;
கால தாமதம் கூடாது; எங்கே சனாதன தர்மம் தழைத்து இருக்கிறதோ,எங்கே பிராம்மணர்கள் பசுக்களுடன் தபஸ், யக்ஜம் என்று செய்துகொண்டு
இருக்கிறார்களோ , அவர்களைத் தேடித் தேடி அழிப்போம்; இவர்களை ஒழிப்பது, விஷ்ணுவை ஒழிக்கச் சிறந்த உபாயம் ” என்று கர்ஜித்தனர்.
கம்ஸன் கால பாசத்தினால் தூண்டப்பட்டு , “சரி ” என்று அனுமதி கொடுத்தான்
.
(ஹே, பிரபோ … கம்ஸனுடைய மந்த்ரிகள், உன்னைப் பற்றிய ஆழ்ந்த அறிவுடன் இருந்தும்,
அஹம்பாவம், அஹங்காரத்தால், அவர்களும் அழிந்து, அரசனையும் அழித்தார்கள்.
இது உன் லீலை; கிருஷ்ணாவதார லீலை; அந்த லீலைக்கு அடியேனின் நமஸ்காரங்கள் )
4 வது அத்யாயம் முற்றிற்று —ஸுபம்
——————————————————-
5வது அத்யாயம்
ஸ்ரீகிருஷ்ண ஜனன கோலாஹலங்கள்–
கோகுலம் உயர்ந்தது–
வசுதேவரும், நந்தகோபரும் மதுராவில் சந்திப்பு
யசோதை, பிரசவ அறையில் கண்விழித்துப் பார்த்தாள்.
அருகே ஆண் குழந்தை. ஜகஜ்ஜோதியாகப் ப்ரகாசம் . நந்தகோபனுக்கு , இந்த ஸுபச்செய்தி
சொல்லப்பட்டது. மிகுந்த சந்தோஷத்துடன், குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்துவைத்து,
வேதவிற்பன்னர்கள் , பிராம்மணர்களை அழைத்து, புண் யாஹவாசனம், ஜாதகர்மா முதலிய
கர்மாக்களைச் செய்யும்படி சொல்லி, ஸ்வஸ்திவாசனம் சொல்லும்படி பிரார்த்தித்து,
பித்ருக்களையும் தேவர்களையும் பூஜை செய்தான்.
நாந்தி ஸ்ராத்தம் செய்து வைத்தான். எள்ளை மலைபோலக் குவித்து, அதில் ரத்னங்களைப் போட்டு,
அவற்றைத் தங்கத் துணியில் கட்டி, தானம் செய்தான்.
த்ரேகம், ஸ்நானம், சௌசம் முதலிய ஸம்ஸ்காரங்களாலும்,
தபஸ், இஜ்ஜை ஆராதனம் ,போன்றவைகளாலும் சுத்தி அடைகிறது.
ஆனால், ஆத்மா, ஆத்ம வித்யையினால் சுத்தி- சுத்தம் அடைகிறது.
பிராம்மணர்கள், புராணக் கதைகள் சொல்லும் சூதர்கள், குலப் பெருமைகளை எடுத்துச் சொல்பவர்கள்,
இவர்களெல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து சம்பாவனை வாங்கிச் சென்றார்கள்.
துந்துபி வாசிப்பவர்கள், மேளம் வாசிப்பவர்கள் வந்து தக்ஷிணை பெற்றுச் சென்றார்கள்.
கோகுலத்தில் , பசுக்கள் வசிக்கும் தொழுவங்கள் (வ்ரஜ பூமி ) மெழுகி சுத்தம் செய்யப்படுகிறது.
கோகுலம் முழுவதும் வீடுகள் எல்லாம், மெழுகிச் சுத்தம் செய்யப்படுகின்றன.
கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் படுகின்றன.
பசுக்கள், காளைமாடுகள், கன்றுகள், நன்கு குளிப்பாட்டப்பட்டு,மஞ்சள், குங்குமம், அணிவிக்கப்பட்டு, மாலைகளாலும், வஸ்த்ரங்களாலும்,
அலங்கரிக்கப்படுகின்றன.
கோபர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள்.
வெகுமதிகளைச் சுமந்துகொண்டு, நந்தகோபன் மாளிகைக்குச் செல்கிறார்கள்.
கோபிகைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கண்களுக்கு மை தீட்டி,
பலவித நிறம் கொண்ட சேலைகளை உடுத்தி, நகைகளை அணிந்து,
குதி போட்டுக் கொண்டு, காதில் குண்டலங்கள் ஆட,
கழுத்தில் தங்க ஹாரங்கள் கைகளில் தங்க வளைகள்,
குதிக்கும் போது ஒன்றுடன் ஒன்று உரசி ,
தங்கள் மகிழ்சசியை வெளிப்படுத்துமாப் போல ஸப்திக்க,
கால்களில் சலங்கைகள் ஜதி போட, புஷ்பங்கள், சந்தனம், மங்கள அக்ஷதைகளை
எடுத்துக் கொண்டு, நந்தகோபன் மாளிகைக்குச் செல்கிறார்கள்.
வயது முதிர்ந்த கோபிகைகள், குழந்தைக்கு, ஹரித்ரா சூர்ணதைலாத்பி தெளித்து, பகவான் , இந்தக் குழந்தையைப் பலகாலம் க்ஷேமமாக
ஜீவிக்கும்படி செய்யவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
கோகுலத்தில் , கிருஷ்ணன் மாத்ரமல்ல, ரோஹிணிக்குப் பிறந்த, பலராமனும் இருப்பதால்,
எங்கும் விசித்ரமான மங்கள வாத்தியங்கள் சப்திக்கின்றன.
கோபிகைகள் “கிருஷ்ண தர்சனம் ” முடித்து, பிரிய முடியாமல் அங்கிருந்து புறப்பட்டுத்
தத்தம் வீடுகளுக்கு வந்து, சந்தோஷத்தால், தயிர், வெண்ணெய், பால் இவைகளை
பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் அப்பி, விளையாடுகிறார்கள் .
நந்தகோபன், தன் மாளிகைக்கு வந்தவர்களுக்கெல்லாம் உபசாரங்கள் செய்து
தானங்கள் கொடுக்கிறான். வெகுமதிகள் வழங்குகிறான்.
வழங்க, வழங்க, கொஞ்சமும் குறையாத செல்வச் செழிப்பு ஏற்படுகிறது.
வசுதேவரின் இன்னொரு மனைவி “ரோஹிணீ ”
—கோகுலத்தில் பலராமனைப் பெற்றவள்—நந்தகோபன் மாளிகைக்கு வருகிறாள்;
நன்கு உபசரிக்கப்பட்டு, அந்த மஹோத்சவத்தில் மகிழ்ச்சியுடன் சஞ்சரிக்கிறாள்.
எல்லா ஐஸ்வர்யங்களும் , க்ருஷ்ண க்ருஹத்துக்கு வருகின்றன
இப்படியாக, கோகுலத்தில் நடந்து வரும்போது, ஒருநாள் , நந்தகோபன் ,கம்சனுக்கு ,
கோகுலத்தில் வசிக்கும் கோபர்கள் சார்பாக, —-வருஷாந்திரக் கப்பம்
கட்டுவதற்கு, மதுராவுக்கு வந்தார். நந்தகோபன் வந்த செய்தி கேள்விப்பட்டு,
வசுதேவரும், நந்தகோபன் தங்கி இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
ஹே,, சகோதரா…..உன்னைப் பாக்ய வசத்தால் பார்த்தேன். தகுந்த காலத்தில் உனக்கு,
யாத்ருச்சையாக, குழந்தை பிறந்துள்ளதைப்பற்றி ரொம்ப சந்தோஷம்;
நம் போன்ற பந்துக்கள், ஒரே இடத்தில் சேர்ந்து வசிக்க முடிவதில்லை;
காரணம், நமக்குள் உள்ள தொழில்களின் வித்யாசத்தாலே;
நீர், கோகுலத்தில், பந்து,மித்ரர்களுடன் பசுக்களுடன், வியாதி இல்லாதபடி வசிக்கிறீர்;
ரோஹிணியிடம் வளரும் என் பிள்ளை பலராமன் சௌக்யமா ” என்று பேசினார்.
உடனே, நந்தகோபர், “உமக்குக் கம்சனால் ஏற்பட்ட துன்பங்களும் குழந்தைகளின் இழப்பும்,
ஒரே ஒரு கன்யா ஆகாசத்தில் சென்றதும் கேள்விப்பட்டேன்;
விதி ஒவ்வொருவரையும் படாத பாடு படுத்துகிறது;
தெய்வத்தை நம்பி வாழ்பவன் பகவத் கிருபையால் அத்ருஷ்டத்தை அடைகிறான்;என்றார்.
வசுதேவர் , ” சரி… நீர் கம்சனுக்குக் கப்பம் கட்டியாகி விட்டது;
நாம் யதேச்சையாகச் சந்தித்துக்கொண்டோம்;
உத்பாதங்கள் ( கெட்ட சகுனங்கள் ) தோன்றுகின்றன;
சீக்ரமாக் கோகுலத்துக்குத் திரும்பங்கள் ” என்றார்.
வசுதேவரால், இப்படிச் சொல்லப்பட்டதும், நந்தகோபரும் உடனே புறப்பட்டார்.
5 வது அத்யாயம் முற்றிற்று.
——-
அத்யாயம் 6–
பூதனை மோக்ஷம்
நந்தகோபன் , கோகுலத்துக்குத்திரும்பும் வழியில்,
வசுதேவர் சொன்னதை நினைத்துக்கொண்டே வந்தான் .
எதுவாக இருந்தாலும், பகவான்தான் ரக்ஷணம் என்று மனத்தால்,
பகவானைச் சரணமடைந்தான்
வசுதேவர் சொன்னபடியே, கோகுலத்தில்
கெட்டவை நடப்பதற்கான, சூசகங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன.
பூதனை என்கிற ராக்ஷஸி —-கோர ரூபமுள்ளவள்—கம்ஸனால் ஏவப்பட்டவள்—
கோகுலத்துக்குள் புகுந்து, வீடு வீடாகச் சென்றாள்.
உருவத்தை, அழகான, அதிரூபசுந்தரியாக மாற்றிக்கொண்டு, சென்றாள்.
கோபிகைகள், இவளைப் பார்த்ததும், மயங்கினார்கள்.
தேவலோகத்து சுந்தரியோ என்று அதிசயித்தார்கள்.
இந்த பூதனை,, யதேச்சையாக நந்தகோபன் மாளிகைக்குள் நுழைந்தாள்.
கிருஷ்ணன், படுக்கையில் தனியாக இருப்பதைப் பார்த்தாள்.
கிருஷ்ணன், தன் தேஜஸ்சை முற்றிலும் மறைத்துக் கொண்டு,
சாம்பலால் மூடியிருக்கும் அக்நியைப் போல இருந்தான்.
இந்தக் குழந்தையை, தன்னுடைய நிஜ ராக்ஷஸ ஸ்வரூபத்தை
முற்றிலும் மறைத்துக்கொண்டு, தேவலோகத்து சுந்தரியைப் போல
மிளிரும் பூதனை பார்த்தாள்
.
ஹே, பிரபோ…..நீ ஓரக்கண்ணால், அவளைப்பார்த்து, கண்களை மூடிக் கொண்டாய்.
தூங்கும் சர்ப்பத்தை, கயிறு என்று எண்ணி, மடியில் எடுத்துப் போட்டுக் கொள்ளும்
மனிதரைப் போல, வெளிப் பார்வைக்கு மிகவும் அன்புள்ளவளாக ,
யசோதை, ரோஹிணீ இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்கள், இவள் தளுக்கிலும் மினுக்கிலும் ப்ரமை பிடித்து ,
அவளைத் தடுக்காமல் இருக்க,
பூதனை, உன்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.
உனக்கு, ஸ்தன்ய பானம் கொடுக்கத் தொடங்கினாள்.
நீ, ஸ்தன்யத்துப்பாலை உறிஞ்ச ஆரம்பித்ததும், அவளுக்கு வலி பொறுக்கவில்லை.
“என்னை விட்டு விடு, என்னை விட்டு விடு ” என்று கதறினாள்.
ஆனால் அதற்குள் , எல்லா அங்கங்களும் உலர்ந்து,
ஜீவனும் வறண்டு, கண்கள் பிதுங்கி, கால் கைகளை உதறிக் கொண்டு,
உடலெல்லாம் வியர்க்க, பெரிதாக ஓலமிட்டாள்.
அந்த சப்தத்தால் பூமியும் மலைகளும் நடுங்கின,
பூதனை, தன் சுய ரூபமான ராக்ஷ்ஸியின் உருவத்துடன் ,
வாயைப் பிளந்துகொண்டு, கைகளும் கால்களும் பூமியில் நீட்டிக்கொள்ள ,
12 மைல் விஸ்தீரணத்துக்கு செடிகொடிகள் ஒடிந்து விழ, —–
செம்பட்டைத் தலைமயிர் பறக்க——பூமியில் உயிரற்று விழுந்தாள்.
இதைப் பார்த்த, கோபர்களும், கோபியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சுகபிரம்ம ரிஷி, ராஜா பரீக்ஷித்துக்குக் கூறுகிறார்;-
பகவானான -நீ மட்டும் அவளுடைய மார்பில் பயமே இல்லாமல்
விளையாடிக்கொண்டிருந்தாய். பயந்த நிலையல் இருந்த கோபியர்கள்
உடனே ஓடிவந்து, உன்னைத் தாவி எடுத்து, அணைத்துக் கொண்டார்களாம்.
யசோதையும் ரோஹிணியும் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, உன்னை
அவர்கள் எடுத்துக் கொண்டு, உன்னைத் தடவித் தடவிப் பார்த்து,
பசுமாட்டின் வால்மயிரால் ரக்ஷை செய்து,
அத்தால் உன்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றி, கண் எச்சில் படாதவாறு
இருக்கவேண்டும், ஆபத்து விலகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு,
அதை எறிந்தார்களாம். கர்ப்பூர ஹாரத்தி எடுத்தார்களாம்.
கோமூத்ரத்தினால் உன்னை நீராட்டினார்களாம்.
பசுவின் சாணத்தினால் , உன் அங்கங்களில் தேய்த்து,
உன்னுடைய பன்னிரண்டு நாமாக்களை——–
இந்த நாமாக்கள் உன்னைத்தான் குறிக்கின்றன, என்று அறியாது,
உன்னையும் பகவான் விஷ்ணு என்று அறியாது——
அந்த த்வாதச நாமாக்களை பீஜாக்ஷரங்களினால்,
உன்னுடைய 12 அங்கங்களில் சுத்தி செய்தார்களாம்.
மேலும், பிரார்த்தித்தார்களாம்
“அஜர்” என்பவர், உன் பாதங்களைக் காப்பாராக;
கௌஸ்துபம் அணிந்த “மணிமான் ” உன் முழங்கால்களைக் காப்பாராக;
“யஜ்ஞர் ” உன் தொடைகளை ரக்ஷிப்பாராக;
“அச்யுதர் ” உன் கடிதடப் பிரதேசத்தை ரக்ஷிப்பாராக;
” ஸ்ரீ ஹயக்ரீவர்” உன் வயிற்றை ரக்ஷிப்பாராக;
” கேசவன் ” உன் ஹ்ருதயத்தைக் காப்பாற்றட்டும் ;
” ஈஸர் ” உன் உதரத்தையும்,
“இனர் ” கழுத்தையும்,
“விஷ்ணு ” புஜங்களையும்,
“ருக்ரமர்” முகத்தையும்,
” ஈஸ்வரர் ” தலையையும் ரக்ஷிக்கட்டும்.
சக்ரதாரி , உன்னை முன்புறமாகக் காப்பாற்றட்டும்;
ஹரி, கதையுடன், உன்னைப் பின்புறமாகக் காப்பாற்றட்டும்;
மதுசூதனன், அஜனர் இருவரும் சார்ங்கத்தையும், கத்தியையும் தரித்து,
உன் இரண்டு பக்கங்களிலிருந்து , உன்னைக் காப்பாற்றட்டும்;
வாமனர்,உச்சந்தலைப்பாகத்தையும்,
கருடவாஹனர் நீ இருக்கும் பூமியையும் ,
சங்கர்ஷணர் (கலப்பையை வைத்திருப்பவர் ) எல்லாப் பக்கங்களிலிருந்தும்
உன்னைக் காப்பாற்றட்டும்;
ஹ்ரூஷீகேசன் இந்த்ரியங்களையும்,
நாராயணன் பிராணன்களையும்,
வாசுதேவர், சித்தத்தையும் ( புத்தி ),
அநிருத்தர் மனசையும், ரக்ஷிக்கட்டும்;
கோவிந்தன் , உன் விளையாட்டு லீலைகளில் உன்னைக் காக்கட்டும்;
மாதவன், நீ படுத்திருக்கும்போதும்,
வைகுந்தர், நீ நடக்கும்போதும்,
ஸ்ரீயப்பதி , நீ ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போதும்,
யக்ஜபுக் , நீ சாப்பிடும்போதும், உன்னைக் காக்கட்டும்.;
டாகினிகள், யாதுதான்யர்கள், கூஷ்மாண்டர்கள்,
பூத,பிரேத, பிசாசர்கள், யக்ஷ, ராக்ஷசர்கள், கோடராக்கள்,
ரேவதி, ஜ்யேஷ்டா , பூதனா, பதினாறு மாத்ரிகா தெய்வங்கள்,
அபஸ்மாரங்கள், தேகம் இந்த்ரியம், பிராணன் இவைகளைப் பீடிக்கும்
துஷ்ட தேவதைகள், கெட்ட ஸ்வப்னங்களில் காணப்படும் தேவதைகள்——-
யாவரும் அழிந்து போகட்டும்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்வதால்
இவை அனைத்தும் அழிந்து போகும். என்று சொல்லி வேண்டினார்களாம்.
யசோதை உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துத் தூங்க வைத்தாள்.
நந்தகோபன் , திரும்பி வந்து நடந்ததைக் கேட்டும்,
பூதனையின் தேகத்தைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தான்.
வசுதேவர் சொன்னதை நினைத்தான்.
அங்கிருந்தவர்கள், பூதனையின் உடலைக் கோடாலியால் வெட்டி,
ஓரிடத்தில் குவித்து எரியூட்டினர். அப்போது எழுந்த புகை,
சந்தனம்–அகில் கட்டை வாசனையைப் போல இருந்தது என்று
ஸ்ரீ சுக பிரம்மம் கூறுகிறார்.
உன்னால் அவளுடைய உயிர் மாத்ரம்
உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் உறிஞ்சப்பட்டன;
அதனால், நற்கதி அடைந்தாள்.
இவளுக்கே இப்படி என்றால், உன்னிடம் பக்தி செய்து பூஜித்தால்,
பிரார்த்தித்தால், அந்த பக்தர்களுக்கு எல்லாவித நன்மைகளையும்
கொடுத்து ரக்ஷிப்பாயே !
உன்னிடத்தில் செய்யப்படும் புத்ர ஸ்நேஹம் யசோதை ரோஹிணீ
இருவருக்கும் பெருமை அல்லவா !
சுகமஹரிஷி பரீக்ஷித்துக்குச்
சொன்னதைப்போல, நந்தகோபன் , உன்னை, கைகளில் எடுத்து,
உச்சிமுகர்ந்து மகிழ்ந்து பரவசப்பட்டான்
6 வது அத்யாயம் முற்றிற்று.
——–
அத்யாயம் —–7
சகடாசுரன் ,த்ருணாவர்த்தன் வதம்—-அதாவது மோக்ஷம்.
மற்றும் யசோதை, கண்ணனின் திருவாயில் உலகங்கள் என்று யாவற்றையும் பார்ப்பது
பிரபோ, உத்தரையின் புத்ரன் ராஜாவாகிய பரீக்ஷித்,
, சுக ப்ரஹ்மரிஷியைக் கேட்டதை இப்போது சொல்கிறேன்
ஹே, ப்ரஹ்மன், பகவானின் லீலைகளைக் கேட்கக் கேட்க,மனம் அதிலேயே லயிக்கிறது. விபரீதமான எண்ணங்கள் அழிகின்றன.
அவரிடம் பக்தி மேலும் மேலும் அதிகரிக்கிறது.
அவருடைய பால்ய லீலைகளைச் சொல்வீராக என்று
பரீக்ஷித் கேட்டவுடன், ஸ்ரீ சுகர் மேலும் சொல்ல ஆரம்பித்தார்.
நீ மூன்று மாதக் குழந்தை; உன்னுடைய மாச திருநக்ஷத்ரம்( ரோஹிணி )
மூன்றாவது தடவையாக வந்த தினம். . யசோதை, உன்னை நன்கு குளிப்பாட்டி,
வஸ்த்ரம் அணிவித்து, உன்னைத் தொட்டிலில் விட்டு,
வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். உனக்குப் பசி வந்து, பாலுக்காகக் கத்தினாய்;
உன்னுடைய இந்தக் கத்தல் யசோதைக்கு கேட்கவில்லை;
நீ, பசியால், கையையும் காலையும் ஆட்டி, உதைத்துக் கொண்டு அழுதாய்;
உன்னுடைய உதையால், பக்கத்திலிருந்த பால் பாத்ரம்,தயிர் பாத்ரம் எல்லாம் சப்தத்துடன் கீழே விழுந்தன;
பக்கத்தில் இருந்த ஒரு வண்டியின் சக்ரம் , நுகத்தடி, உன் திருவடிகளால் உதை பட்டு, நசுங்கின; ஒடிந்தன;விழுந்தன.
அருகில் இருந்த ஆய்ச்சியர்கள்,
இதென்ன, ஆச்சர்யம் என அதிசயித்தனர். யசோதையும், நந்தகோபனும் சப்தம் கேட்டு,
ஓடிவந்து பார்த்து, குழந்தையின் காலுக்கு இவ்வளவு பலமா என்று ஆச்சர்யப் பட்டனர்.
இது கோகுலம் முழுவதும் பரவியது. சகடாசுரன் என்கிற அசுரன், வண்டி, சக்ரம் என்று ரூப மெடுத்து ,
உன்னை அழிக்க, உன் அருகில் ஒளிந்திருக்கும்
விஷயமானது உனக்குத் தெரிந்து, உன் சிறிய திருவடியால் உதைத்து,அதை உடைத்து, அவனையும் அழித்தாய்.
யசோதை, கெட்ட பிசாசு செய்த வேலையே என்று பயந்து,உன்னைத் தூக்கி வைத்துக் கொண்டு ,
ஸ்தன்ய பானம் கொடுத்து,உன்னைத் தூங்க வைத்தாள்.
இப்போது, நீ, ஒரு வயது பாலகன்; இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சும் பருவம்;
யசோதை, ஒருநாள், உன்னை இப்படியே இடுப்பில்
தூக்கி வைத்துக் கொஞ்சி , மடியில் அமர்த்திக் கொண்டாள்;
நீ, திடீரென்று அவளுக்குக் கனத்தாய்—-கனமாக ஆனாய்;
அவள் பயந்து , உன்னைத் தரையில் விட்டுவிட்டு ,
பகவானை வேண்டிக் கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்;
இந்தச் சமயத்தில், “தைத்யன் ” என்கிற அசுரன்,
“த்ருணாவர்த்தன் ” என்கிற பெயருடன், கம்ஸனால் அனுப்பப்பட்டு ,வேகமாக வீசும் காற்று உருவத்தில் வந்தான்;
எல்லாப் பொருள்களையும், தூசியினால் மறைத்து, உன்னையும் தூக்கிக் கொண்டான்;
உஷ்ணக் காற்றாக வீசி, திக்குகளை மறைத்தான்;கோகுலத்தை மறைத்தான்;
கோர சப்தத்துடன் , ஊழிக்காற்று போல வீசினான்;
யசோதை பயந்தாள்; உன்னைத் தரையில் விட்ட இடம் தெரியவில்லை;தேடினாள் ; அழுதாள் ;
பகவானை ஸ்மரித்துக் கொண்டே மூர்ச்சையானாள்;
கோபியர்களும் அழுதார்கள்.
திருணாவர்த்தன் , உன்னைத் தூக்கிக் கொண்டு, ஆகாயத்தில் கிளம்ப முயற்சித்தான்.
ஆனால், உன்னுடைய பாரத்தை, அவனால் தாங்க முடியவில்லை.சுய உருவம் எடுத்துக் கொண்டான்.
கற்பாறையைப் போன்று , நீ, அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாய். அதனால், அவன் தொண்டை ,
இறுக்கப்பட்டது. அவன் கண்கள் பிதுங்கின; ” ஹா ” என்கிற பெரிய சப்தத்துடன்,திருணாவர்த்தன்,
கீழே விழுந்து உயிரை விட்டான்.பயங்கரமான சப்தம் வந்த திசையை நோக்கி, கோபர்கள், கோபியர்கள் ஓடினார்கள்;
த்ருணாவர்த்தனின் உயிரற்ற சடலத்தில், ஒரு வயதுக் குழந்தையான நீ ,எவ்விதப் பயமும் இல்லாமல், விளையாடிக் கொண்டிருந்தாய்.
கோபிகைகள், உன்னை வாரி எடுத்து, யசோதையிடம் கொடுத்தனர்.
யசோதை, உன்னை, உச்சி முகர்ந்து, சந்தோஷப்பட்டாள்.
பெரிய காற்றின் பிடியிலிருந்து, குழந்தை காப்பாற்றப் பட்டிருக்கிறான்;
ராக்ஷசன் இறந்து கிடக்கிறான்; பெரிய ஆபத்திலிருந்து, காப்பாற்றப்பட்டது,புண்ய கர்மாவின் பலன் என்று,
நந்தகோபனும், பந்துக்களும், நினைத்தார்கள்.
வேறொரு சமயம், யசோதை, உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
பாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த நீ, தூங்குவதற்கு நினைத்தவன் போல, வாயைத் திறந்து கொட்டாவி விட்டாய்.
அப்போது, ஆகாயம், நக்ஷத்ரக் கூட்டங்கள், எல்லாத் திசைகள், சந்திரன், சூர்யன்,நெருப்பு, காற்று, சமுத்ரங்கள்,
ஏழு த்வீபங்கள், மலைகள், காடுகள்,
அவற்றில் ப்ரவஹிக்கும் ஆறுகள், நடமாடும் எல்லாப் பிராணிகள், —-
இப்படி விஸ்வம் முழுவதையும் , யசோதை, உன் வாயில் பார்த்தாள்.
பயம் கலந்த ஆச்சர்யத்துடன், கண்களை மூடிக்கொண்டாள்.
அவளுக்கு, இது ஸ்வப்னமா, நிஜமா என்று சந்தேகம் வந்து விட்டது.
உன்னை “பரமாத்மா, இவன்; மானிடக் குழந்தை அல்ல ” என்று யசோதை எண்ணியதாக,
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார்.
7 வது அத்யாயம் முற்றிற்று
——————————————-
அத்யாயம்– 8
பெயர் சூட்டுதல்—பால்ய லீலைகள் —மண்ணைத் தின்ற மாமாயன்
ஸ்ரீ சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.
மதுராவில் ஒருநாள், யதுக்கள் எனப்படும் இடையர்களுக்கு ( கோபர்கள், கோபிகைகள் )
ப்ரோஹிதரான “கர்க்கர் ” என்கிற ரிஷியை, வசுதேவன் ரஹஸ்யமாக அழைத்து,
” ஹே, முனிபுங்கவரே ! கோகுலத்துக்குச் சென்று, அடியேனுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள் ”
என்று கேட்டுக்கொண்டார். கர்க்கரும் சம்மதித்து, கோகுலத்துக்கு வந்தார்.
நந்தகோபன் அவரை வரவேற்று , நமஸ்கரித்து, ஆசனம் கொடுத்து அவரிடம் பேசினான்.
“ஹே, ப்ரஹ்மந்….உங்கள் விஜயம் எங்களுக்குப் பாக்யத்தைக் கொடுக்கிறது
; நீர் ஜ்யோதிஷ சாஸ்த்ரத்துக்குப் பொக்கிஷம்; முக்காலமும் உணர்ந்தவர்;
ஆத்ம வித்யைகளை அறிந்த ப்ரஹ்ம வித்து; எனக்குக் குழந்தை இருக்கிறான்;
வசுதேவருக்கு ரோஹிணி மூலம் குழந்தை இருக்கிறான்;
என்னென்ன ஸம்ஸ் காரங்கள் செய்ய வேண்டுமோ , அவற்றை, ப்ராம்மணராயும், .
குருவாயும் இருந்து செய்யுமாறு பிரார்த்திக்கிறேன் ” என்றான்.
அதற்கு, கர்க்கர், ” நந்தகோபா, நான் யது குல மக்களுக்கு எல்லாம் ஆசார்யன்;
அதனாலேயே, குழந்தைக்கு ஸம்ஸ் காரம் செய்துவைக்க வேண்டும்;
ஆனால், இந்தக் குழந்தை, வசுதேவர்—-தேவகியின் எட்டாவது குழந்தை;
பாப எண்ணம் கொண்ட கம்ஸன், தேவகியின் எட்டாவது குழந்தை ஆண் குழந்தை என்று
உறுதியாக இருக்கிறான்; அதுவும், வசுதேவருக்கும், உனக்கும் உள்ள உறவை
நன்கு அறிவான்; ஆகவே, இந்தக் குழந்தைக்குச் செய்யும்
ஸம்ஸ் காரம் , அவனுக்குத் தெரிந்தால் உடனே இக்குழந்தையைக் கொல்லத் துணிவான்;
இதற்காகக் கலங்குகிறேன் ” என்றார்.
அதற்கு, நந்தகோபன், ” ஆசார்யரே, என் பந்துக்களுக்குக் கூடத் தெரிய வேண்டாம்;
இந்தக் குழந்தைக்கு, ரஹஸ்யமாக, பசுத் தொழுவத்தில்
( மாட்டுக் கொட்டிலில் ) ஸம்ஸ் காரம் ,ஸ்வஸ்திவாசனம், இவற்றைச் செய்யுங்கள் ” என்றான்.
ஸ்ரீ கர்க்காசார்யர், சரி என்று சம்மதித்து, “முதலில், ரோஹிணியின் பிள்ளைக்கு ஸம்ஸ்காரம் செய்கிறேன் ;
இக்குழந்தை பலம் மிகுந்தவன்; உன்னையும் வசுதேவரையும் போல இரண்டு வம்சத்தைச் சேர்த்து வைப்பதால்,
“சங்கர்ஷணன் ” ஆகிறான்; ஆதலால்,
இவனுக்கு , ” ராம ” , “பல ” என்கிற இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து, “பலராமன் ”
என்கிற பெயரை , இக்குழந்தைக்குச் சூட்டுகிறேன். ” என்றார்.
பிறகு, ” நந்தகோபா …..உன்னுடைய குழந்தைக்கு ஸம்ஸ்காரம் செய்கிறேன்;
இந்தக் குழந்தை, இதற்கு முன்பு, மூன்று வர்ணங்களில் பிறந்திருக்கிறான்;
வெள்ளை, சிகப்பு, மஞ்சள் அவை; இப்போது இவனுடைய நிறம் கறுப்பு ;
இவனுக்குப் பலப்பல ரூபங்கள், பலப்பலத் திருநாமங்கள், இவைகளை நான் அறிவேன்;
உனக்கும், உன் யது குலத்துக்கும், கோகுலத்துக்கும்புகழைத் தருபவன்; பெருமையைத் தருபவன்; சந்தோஷத்தைத் தருபவன்;
எவன், இக்குழந்தையிடம் அன்புடன் இருக்கிறானோ
அவனுக்குப் பயமே இல்லை; இவன் நாராயணனுக்குச் சமம்; இவனே வாசுதேவன்,இவனே விஷ்ணு, இவனே நாராயணன் ,
இவனுக்குக் “க்ருஷ்ணன் ” என்று
திருநாமமிடுகிறேன் என்று சொல்லி, மேலும் சில திருநாமங்களை இட்டு,குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள் ,
கவனமாக வளர்த்து வருவாயாக ” என்று சொல்லி,விடைபெற்றுக் கொண்டு மதுரா திரும்பினார்.
சிலகாலம் சென்றது. குழந்தைகள் வளர்ந்தார்கள்.பலராமன், கிருஷ்ணன் ஆகிய
நீங்கள் இருவரும் சேர்ந்தே அலைந்து, கோகுலம் முழுவதும் திருவடி சம்பந்தம் ஏற்படுத்தியதாக
ஸ்ரீ சுகர் சொல்கிறார். கோகுலம் முழுவதும் விழுந்து புரண்டு, தூசுகள், மண்துகள்கள் உடம்பு முழுவதும் பரவி இருக்க,
ஓடிவரும்போது கொலுசும், சலங்கையும் சந்தோஷத்துடன் சப்திக்க, உங்கள் தாய்மார்களின் அங்கங்களில் படுத்து
நீங்கள் புரளும்போது, தூசு, மண் இவைகளைப் பாராது உங்கள் தாய்மார்கள் உங்களை அணைத்துக் கொண்டு ,
உங்களின் இளம் புன்னகை, சின்னஞ்சிறிய பற்கள் ,நெற்றியின் சோபிதம், இவைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பார்களாமே !
உங்கள் இருவரின் குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் , பால லீலைகள், இப்படி நந்தகோபனுக்கும்,
யசோதைக்கும், ரோஹிணிக்கும், கோபர்களுக்கும், கோபியர்களுக்கும் அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்ததாமே !
இதற்குப் பிறகு, உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வயது ஆனவுடன்,உங்கள் வயதை ஒத்த ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து,
கன்றுக்குட்டிகளுடனும், பசுக்களுடனும், விளையாடியதாக , ஸ்ரீ சுக ப்ரஹ்ம ரிஷி, பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.
நீங்கள் எல்லோரும் , அவைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு, அவைகளின் பின்னாலே ஓடுவீர்களாம்;
துடுக்குத் தனம், அதிகமாகி விட்டதாம்.; மாடுகளின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு விளையாடுதல் என்று
இப்படி கோகுலத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பீர்களாமே !
பிறகு, கோகுலத்தில் வீடுகளுக்குள் புகுந்து, மற்ற கோபர்களையும் சேர்த்துக் கொண்டு,
அவர்கள் வீடுகளில் பாலைத் திருடி சாப்பிடுதல் போன்ற விஷமங்களைச் செயதீர்களாமே !
கோபிகைகள், யசோதையிடம் வந்து, உங்களைப்பற்றி, புகார் சொல்வார்களாமே !
யசோதைக்கு, ஒரே சமயத்தில் , அன்பும் கோபமும் வந்து ,அடிப்பதா, வைவதா என்று விழிப்பாளாமே !
கன்றுக் குட்டியை, வேண்டாத சமயத்தில் அவிழ்த்து விட்டு, தாய்ப் பசுவிடம் , பால் நிறைய சாப்பிடும்படி செய்வதால்,
ஆய்ச்சியர்கள் கறப்பதற்கு , பசுவிடம் பால் இருக்காதாமே !
அங்கு வீடுகளில் உள்ள, வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி , மற்ற கோபர்களுடன் சேர்ந்து
சாப்பிடுவீர்களாமே ! பூனை, குரங்கு இவைகளுக்குக் கொடுத்து, காலிப் பானைகளைக் கீழே போட்டு உடைப்பீர்களாமே !
பாலோ, வெண்ணெயோ , கைக்கு எட்டாத உயரத்தில் உறியில், பாத்ரங்களில் வைத்து இருந்தால்,
ஏணி போட்டுக் கொண்டு ஏறி, மற்ற கோபர்களைக் குனியச் சொல்லி, அவர்கள் முதுகின் மேல் ஏறி ,
பால், வெண்ணெய் இவைகளைத் திருடி எல்லாரும் சாப்பிடுவீர் களாமே !
சில சமயம், பாத்ரங்களை, அடித்து , உடைத்து விடுவீர்களாமே !
இருட்டு அறைகளின் உள்ளே உள்ள, பாத்ரங்களில் இருக்கும் பால், வெண்ணெய் இவைகளை ,
நீங்கள் அணிந்திருக்கும் ரத்ன ஆபரணங்களின் பிரகாசத்தினால், இடம் அறிந்து, எடுத்து உண்பீர்களாமே !
கோபிகைகளின் ஜீவனத்துக்கு , பாலும் வெண்ணையும் இல்லாமல் செய்து விடுவீர்களாமே !
அவர்கள், கோபம் தாங்காது, யசோதையிடம் புகார் சொல்லும்போது,
ஹே, கிருஷ்ணா ……நீ ஒன்றும் தெரியாதவன் போல ,ரொம்ப அடங்கியவன் போல,ஒன்றுமே செய்யாதவன் போல , கால்களைக் கட்டிக் கொண்டு,
அப்பாவிப் பையன் போல உட்கார்ந்து இருப்பாயாமே ! அப்போது, உன்னைப் பார்க்க பரம சோபிதமாக ” இருக்கும் என்று,
சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.
இவ்விதமாக, விளையாடி, கோபஸ்த்ரீகளின் மனங்களை அன்பினால் திருடினாய்;
இந்த விஷமச் செய்கைகள் செய்யும் சமயத்தில், கோப ஸ்திரீகள் உன்னைப் பார்த்து விட்டால்,
நீ அவர்களை ஓரக் கண்ணால் பார்த்தும்,பயத்தால் அழுவதாகப் பாசாங்கு செய்தும், கண்ணீர் வழிந்து, உன் கண் மைகள்
கலைய விழிப்பதாலும், உன்னை அடிக்க இயலாமல் , பிரமையுடன் – பிரேமையுடன்
உன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்களாமே !
ஒரு சமயம், கோபர்கள் பலராமனையும் அழைத்துக் கொண்டு, யசோதையிடம் ஓடி வந்தார்கள்.
” கிருஷ்ணன், மண்ணைத் தின்கிறான், வந்து பாருங்கள் ” என்று புகார் செய்தார்கள்.
யசோதை ஓடிப் போய், கிருஷ்ணனைப் பிடித்துக் கொண்டு, அடிப்பதற்காகக் கையை ஓங்கினாள்.
அப்போது, நீ, பயந்தமாதிரி அழுதுகொண்டு, கண்களிருந்து நீர் ,கங்கையெனப் பெருக
” நான் சாப்பிடவில்லை; இவர்கள் வீணாகப் புகார் சொல்கிறார்கள் ;பொய் சொல்கிறார்கள்; என் வாயைப் பார் ” என்று,
வாயைத் திறந்து, யசோதை உன் வாயைப் பார்க்கும்படி செய்தாயாமே !
ஸ்ரீ சுகர், பரீக்ஷித்துக்குச் சொன்னதை, கிருஷ்ணா, அப்படியே உன்னிடம் இப்போது சொல்கிறேன்.
யசோதை, கண்ணனின் வாய்க்குள் , எல்லா உலகங்களையும், ஆகாசம், மலைகள், திசைகள்,
வனங்கள், நக்ஷத்ரங்கள், சந்த்ரன் , காற்று, அக்நி, மின்னல், இந்த்ரியங்களின் அபிமான தேவதைகள்,
ஜ்யோதிஸ் சக்ரம், மனஸ், தன்மாத்ரைகள், சத்வ, ரஜஸ், தாமஸ குணங்கள் கொண்ட அஹங்காரம்,
மஹத், ப்ரகிருதி, இவற்றைஎல்லாம் பார்த்தாள்.
ஜீவன், அதன் அபிமான தேவதை, வ்ரஜ பூமியான கோகுலம், அதில் வசிக்கும் கோபாலகர்கள்
கோபியர்கள், பசுக்கள், அங்கு நந்தகோபன், யசோதையாகிய தான்
எல்லாவற்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
யசோதை ஸ்துதி கீதத்தை, ஸ்ரீ சுகர் , பரீக்ஷுத்துக்குச் சொன்னதை , ஹே கிருஷ்ணா,
இப்போது சொல்லி உனக்கு நினைவு படுத்துகிறேன்.
” இதென்ன, ஸ்வப்னமா ? தேவ மாயையா ? என் புத்தி பேதலித்து விட்டதா ?
புத்தி, மோஹம் அடைந்து விட்டதா ? என் மடியில் விளையாடும் சிறு குழந்தை,ஆத்ம யோகம் செய்பவனா ?
இவைகளை, அவன் எப்படி உற்பத்தி செய்ய முடியும் ?
இக்குழந்தை என் பிள்ளை அல்ல! சாக்ஷாத் நாராயணன் ! எந்தப் பகவானை, எல்லாக்காலங்களிலும் ,
எல்லா ஜீவன்களும் ஆச்ரயிக்கிரார்களோ, எவரால், எந்தக் காரணத்தால்,என் கண்முன்னே, வாய் புதைத்து,
கைகளைக் கட்டிக் கொண்டு, மிகவும் அடக்கமான
பிள்ளையாகக் காக்ஷி தருகிறாரோ, அவரைப் பல தடவை நமஸ்கரிக்கிறேன்;
நானும், என் பதியான நந்தகோபரும் அப்படியே நினைத்து, நமஸ்கரிக்கிறோம்;
இந்தப் பிள்ளை, உலகங்களின் பதி; கோகுலத்துக்கு
( வ்ரஜ பூமி ) ஈஸ்வரன்; எல்லா ஐஸ்வர்யங்களையும் உடையவர்; கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கூட்டங்கள், கன்றுகள், —-
இவைகளை என் அல்ப புத்தியால், எங்களுடைய சொத்து என்று நினைக்கிறேன்;
நான் யசோதை, நந்தகோபரின் மனைவி, இந்த ஐஸ்வர்யங்களுக்கு எஜமானி,இக்குழந்தை என் புத்ரன்,
இவையெல்லாம் எங்களுடையது என்று தவறாக நினைக்கிறோம் .
இது முட்டாள்தனம் அல்லவா ? எல்லாமே, பகவானாகிய அவனுடையது;
அவன் கொடுத்ததை, எங்களுடையது என்று நினைத்து, அவனுக்கும் கொடுக்கிறோம்;அந்தப் பிரபுவே தஞ்சம்; ”
பகவானைப் பற்றி, பரம க்ஜானிகளுக்கும் கிடைக்க அரியதான அறிவை,தாயான யசோதை அடைந்தாள்.
அடுத்த க்ஷணம், பகவான், தன்னுடைய பிரபலமான வைஷ்ணவ மாயையை ஏற்படுத்தி,
யசோதையின் நினைவுகளை ,அறிவு தீக்ஷண்யத்தை மாற்றிவிட்டான்.
” அம்மா……அம்மா …. ” என்று கூப்பிட்டு, புடவைத் தலைப்பைப் பிடித்து இழுக்க,
யசோதை, பிள்ளைப் பாசம் பெருக, கண்ணனாகிய உன்னை ,
இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள்.
எந்தப் பிரபுவை, தேவகி, சதுர் புஜத்துடன் , மந்தஹாச வதனத்துடன், பீதாம்பரதாரியாக காராக்ருஹத்தில் சேவித்தாளோ ,
எந்த பிரபுவை வேதங்களும் உபநிஷத்துக்களும் சாங்க்யயோக சாஸ்திரங்களும் , பாஞ்சரார்த்ர சாத்வ தந்த்ர சாஸ்திரமும்
தேடி களைத்துப் போயிற்றோ,அந்த பர ப்ரஹ்மத்தை, பாக்யசாலியான யசோதை , மீண்டும் தன் புத்ரன் என்கிற நினைவோடு பார்த்தாள்.
பரீக்ஷித், சுகப்ரம்ம ரிஷியைக் கேட்டான்
” ஹே, ப்ரஹ்மந் , நந்தகோபனும், யசோதையும், என்ன உத்தமமான கார்யத்தைச் செய்து,
எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடியதான பால்ய லீலைகளைப் பார்த்துஅனுபவித்தார்கள் ? காரணமென்ன ? ”
ஸ்ரீ சுகப்ரம்மம் பதில் சொன்னார் ” ஹே ராஜன் ……கிருஷ்ணனின் இந்த மாதிரியான
பால்ய லீலைகளை உனக்குச் சொல்லும்போது, சந்தோஷத்தால்நான் , ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்.
உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.
அஷ்ட வசுக்களில் ஒருவன் த்ரோணன்; இவன் நந்தகோபனாகவும்,”தரா ” என்கிற அவனுடைய மனைவி யசோதையாகவும் பிறந்தார்கள்;
இது, அவர்களுக்கு ப்ரஹ்மாவின் கட்டளை; அப்போது, இவர்கள் இருவரும் ப்ரஹ்மாவிடம், “எங்களுக்குப் பகவானிடம் பக்தி தொடர்ந்து இருக்க வேண்டும்; ”
என்று பிரார்த்தித்து, அப்படியே அநுக்ரஹம் பெற்றவர்கள்;
அந்த அனுக்ரஹத்தாலே, நந்தகோபன்–யசோதைக்கு, பகவான் குமாரனாக—–
கிருஷ்ணனாக அவதரித்து, பலராமனுடன் பால்ய லீலைகளை,கோகுலத்தில் செய்து, சந்தோஷத்தைக் கொடுத்தார்;
8 வது அத்யாயம் முற்றிற்று.
——–
தசமஸ்கந்தம் —-9 வது அத்யாயம்-
ஸ்ரீ கிருஷ்ணனின் பால்ய லீலை —–தொடருகிறது–
ஒரு சமயம், யசோதை, தயிர்ப் பானையின் எதிரே உட்கார்ந்து,
தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள். வெண்ணெய்க்காகக் கடைந்து கொண்டிருந்தாள்.
பகவானுடைய லீலைகளை, இந்தமாதிரி , வெண்ணெய்க்காகத் தயிர் கடையும்
சமயங்களில், ஆய்ச்சியர்கள் பாடிக்கொண்டே , தயிரைக் கடைவார்கள்.
யசோதையும் அப்படியே , பக்தி பரவசமாகப் பாடிக் கொண்டே ,
தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.
உத்தமமான பட்டு வஸ்த்ரம் அணிந்து இருந்தாள்.
இடுப்பில் ஒட்டியாணம்; கைகளில் வளையல்கள்.மோர்த் திவலைகள் மேலே பட்டு
மேல் துணி நனைந்தது.காதுகளில் உள்ள குண்டலங்கள் ஆட,
கை வளையல்கள் யசோதையின் பக்தி ததும்பும் பாட்டுக்குக்குத்
தாளம் போடுவது போல சப்திக்க,
உடம்பு வியர்த்துக் களைத்துப் போனாள்.
அப்போது, நீ அம்மாவிடம் ஓடி வந்து, “பசிக்கிறது ” என்று சொல்லி,
யசோதை தயிர் கடைய முடியாதபடி, மடியில் உட்கார்ந்து, ஸ்தன்ய பானம் செய்தாய்.
அப்போது, நீ, உன் தாயைப் பார்த்த அனுக்ரஹப் பார்வை, கருணைப் பார்வை ,
ஹே, கிருஷ்ணா, யசோதை என்ன பாக்யம் செய்தாளோ!
அந்தச் சமயம் ,
யசோதையான உன் அம்மா எழுந்திருந்தாள். உன்னை மடியிலிருந்து
இறக்கி விட்டு விட்டு , அடுப்புக்கு அருகில் ஓடினாள்.
அடுப்பில், பாத்ரத்தில் பால் பொங்கிக் கொண்டிருந்தது.
உடனே, உனக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது.
கோப நடிப்பு; உன் இளஞ்சிவப்பு உதடுகள் துடிக்க, மத்தினால்,
தயிர்ப் பானையை உடைத்தாய்; உன் கண்களில் ஏமாற்றம்;
கோபம்; வீட்டின் உள்ளே, “அரங்கு ” என்று சொல்வார்களே,
அங்கே போய் , அங்கு ஒளித்து வைத்திருந்த வெண்ணெயை ,
பசிக்காக சாப்பிட்டாய்;
யசோதை , பால் பாத்ரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விட்டு,
தயிர் கடையும் இடத்துக்குப் பழையபடியும் வந்தாள்.
உன் விஷமத் தனம் தெரிந்தது. உன்னை அங்கு காணவில்லை.
நீ, ஒரு மரக்கட்டிலின் மேல் ஏறிக் கொண்டு, நீ சாப்பிட்ட வெண்ணையின் மீதியை,
அனுமனைப் போலுள்ள ஒரு குரங்குக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாய்
உன்னை, யசோதா பார்த்து விட்டாள். கண்களுக்குப்
பூசப்பட்டிருந்த அஞ்சனம் ( கண்மை ) கலைந்து, உன் கன்னங்களில் வழிந்து இருந்தது.
கூடவே, நீ வெண்ணெய் சாப்பிட்ட அடையாளமாககன்னங்களில் வெண்ணையின்
சிதறல்கள். யசோதை, உன்னுடைய பின்புறமாக வந்து,
கைகளால் உன்னைப் பிடித்துக் கொண்டாள்.
யசோதை, ஒருகையால் உன்னைப் பிடித்து, இன்னொரு கையால் மாடுகளை மேய்க்கும்
கோலை எடுத்து, உன்னை அடிப்பது போல பாசாங்குடன் கையை ஒங்க ,
உடனே நீ, யசோதையைப் பார்த்து, கண்களைக் கசக்கிக்கொண்டு,
கைகளைக் கூப்பிக் கொண்டு, “அம்மா… இனி தவறு செய்யமாட்டேன் ”
என்று சொன்னாய்.
யசோதை, உண்மையிலேயே , நீ பயப்படுவதாக நினைத்து , ஓங்கிய கையைத்
தாழ்த்தி , கோலைத்தூர எறிந்து, உன்னை வாரி அணைத்து,
உன் முகத்தில் முத்தமிட்டாள்.
தலைகேசம் அவிழ்ந்து புரளுவதைக் கூட லக்ஷ்யம்
செய்யவில்லை.
யசோதைக்கு, நீ செய்த விஷமத்தனம் நினைவுக்கு வர,
உன்னைக் “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ( கயிற்றால் ) கட்டி, “உன்னை வெளியே
ஓடாதபடி செய்கிறேன் பார் ” என்றாள்.
உன்னைக் கயிற்றால் கட்டி, பக்கத்தில் இருந்த மரத்தால் ஆன உரலில் இணைக்க ,
யசோதை முயற்சித்தாள்.கயிற்றின் அளவு குறைந்தது;
இன்னொரு கயிற்றை எடுத்து , முடிச்சுப் போட்டு, மறுபடியும் கட்டினாள்;
மறுபடியும் இரண்டு அங்குல அளவு கயிறு குறைந்தது; கயிற்றை
எடுத்து முடிச்சுப் போட்டு, முடிச்சுப் போட்டு உன்னை கட்ட எத்தனித்தபோதெல்லாம்
கயிறு இரண்டு அங்குல அளவு குறைந்தது.
யசோதைக்கு ஆச்சர்யம் ! முகத்தில் , முத்துக்கள் போல வியர்வைத் துளிகள்;
யசோதை படுகின்ற கஷ்டத்தைப் பார்த்த நீ,
உன் லீலையைக் குறைத்துக் கொண்டு , கட்டுண்டாய்.
நீ சர்வ ஸ்வதந்த்ரன்; சர்வேஸ்வரன் ; எல்லோரும், ஈரேழு உலகங்களும்,
அவற்றில் உள்ள , சித், அசித் யாவும் உனக்குக் கட்டுப்பட்டது;
அப்படிப்பட்ட நீ, யசோதையின் தாய்ப் பாசத்துக்குக்
கயிற்றால் கட்டுண்டாய்; பிற்பாடு, சஹாதேவன் உன்னைக் கட்டப் போகிறான்;
ப்ரஹ்ம , ருத்ராதிகளுக்கு, ஏன், அகலகில்லேன் என்று உன் வக்ஷஸ்தலத்தில்
நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டிக்குக் கூட,
இந்த பாக்யம் கிட்டவில்லை.
நீ, தாமத்தால் கட்டப்பட்டாய்; தாமோதரன் ஆனாய் !
யசோதை, வீட்டு வேலைகளில் ஈடுபட்டு இருக்கும்போது,
நீ, உரலையும் இழுத்துக் கொண்டு , முன்னாலே இருந்த இரண்டு மருத மரங்களை
நோக்கித் தவழ்ந்தாய். இரண்டு மருத மரங்களும் , முன் ஜன்மத்தில் ,
குபேரனுடைய பிள்ளைகள். நளகூபரன், மணிக்க்ரீவன் என்று பெயர்.
பிராம்மணரான ஸ்ரீ நாரதர் வரும்போது, காமத்தினால் இனிப்பான
கள்ளைச்சாப்பிட்டுக்கொண்டு, தேவஸ்த்ரீகளுடன் மயங்கி, நாரதர்
அந்த வழியாக வருவதைப் பார்த்தும், அவரை லக்ஷ்யம் செய்யாமல்,
நிர்வாணமாக இருந்தனர். அதனால், நாரதர் சாபமிட, மருத மரங்களாக,
இந்த வ்ரஜபூமியில் முளைத்து, வளர்ந்து, சாப விமோசனத்துக்கு,
ஸ்ரீ கிருஷ்ண ஸ்பர்சத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள். இந்த இரண்டு
மருத மரங்களுக்கு நடுவில் , உரலையும் இழுத்துக் கொண்டு, நீ தவழ்ந்து சென்றாய்
9 வது அத்யாயம் முற்றிற்று . ஸுபம் .
——————————————————————————–
அத்யாயம்—10
நளகூபரன், மணிக்ரீவன் சாப விமோசனம்,, ஸ்துதி
பரீக்ஷித் , ஸ்ரீ சுக பிரம்மத்திடம், ” ஹே, ரிஷியே……நளகூபரன், , மணிக்ரீவன் செய்த
நிந்திக்க வேண்டிய கார்யம் மற்றும் தேவரிஷி நாரதர், ஏன் சாபம் கொடுத்தார் என்பதை
விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்க, ஸ்ரீ சுகர் சொன்னார்.
இந்த இருவரும், ருத்ர பகவானுடைய தாஸ்யர்கள்; குபேரனின் புத்ரர்கள்;
தனத்தினால் கர்வம் அடைந்தவர்கள்; மிகப் பெரிய பதவியில் இருப்பதாக
செருக்கு உடையவர்கள்; ஒரு சமயம் மந்தாகினி நதி ஓடும் பிரதேசத்தில்,
“வாருணீ ” என்கிற கள்ளைக் குடித்து, புஷ்பங்கள் பூத்திருந்த காட்டுக்குள் நுழைந்து,
தேவ ஸ்திரீகளுடன் ஜலக்ரீடையில் இருந்தனர்.
அப்போது, தேவரிஷி நாரதர், யதேச்சையாக அந்த வழியாக வந்தார்.
அவரைக் கண்டதும், தேவ ஸ்திரீகள், வஸ்த்ரமில்லாமல் இருந்ததால்,
நாரதரின் சாபத்துக்குப் பயந்து, அவசரம் அவசரமாக வஸ்த்ரங்களை எடுத்து
அணிந்து கொண்டனர். ஆனால், குபேரனுடைய பிள்ளைகளான இந்த இரண்டு பேரும்,
கள்மயக்கத்தில், கர்வத்துடன் வெட்கமின்றி, நிர்வாணமாக இருந்தனர்.
நாரதர், அவர்களைத் திருத்த எண்ணம் கொண்டார். இவர்கள், தனச் செருக்கினாலும்,
குபேரனுடைய பிள்ளைகள் என்கிற கர்வத்தினாலும், தாங்கள் சாஸ்வதம் என்று
எண்ணுகிறார்கள்; தேவர்களாக இருந்தாலும், இறந்துவிட்டால் அந்தத் த்ரேகம்
எரிக்கப்பட்டோ , கிருமிகள், பக்ஷி, மிருகங்களால் சாப்பிடப்பட்டோ அழிகிறது;
ஒன்றுக்கும் உதவாத இந்தத் த்ரேகத்தை சாஸ்வதம் என்றும்
தங்களைக் கிழத்தனம் அண்டாது என்றும், எண்ணுகிறார்கள்;
தேகம், அநித்தியம் என்று அறியாத அஸத்துக்கள்;
தனமில்லாத வறியவனுக்குக் கர்வமில்லை; அஹங்காரமில்லை;
அவன் பகவத் சிந்தனையுடன் வாழ்கிறான்; தாரித்யனுக்குப் பசி இருப்பதால்,
இளைத்துப் போய், இந்த்ரியங்கள் அவன் சொல்படி கேட்கின்றன;
இப்படியெல்லாம் நினைத்த நாரதர், இவர்களின் கர்வத்தைப் போக்க வேண்டும்
என்கிற எண்ணமுடை யவராய், இவர்களுக்குத் தண்டனையும்
கொடுத்து திருந்தவும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று யோசித்து,
இவர்கள், நூறு தேவ வர்ஷங்கள் பூமியில் மரமாகப் பிறந்து, வாழ்ந்து,
பகவானின் திவ்ய சரணார விந்தங்களில் பக்தி ஏற்பட்டு, அந்த பக்தியினால்,
சாப நிவ்ருத்தி ஆகி, மறுபடியும் தேவப் பிறப்பை அடையட்டும் என்று சாபமிட்டார்.
இப்படிச் சபித்தவர், தான் சாபமிட்டதற்குப் பரிகாரம் தேட,
நாராயண ஆஸ்ரமமாகிற பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்றுவிட்டார்.
அந்த சாபப்படி, நளகூபரனும், மணிக்ரீவனும் வ்ரஜபூமியில்
( கோகுலத்தில் ) மரங்களாக முளைத்து , வளர்ந்து இருந்தனர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாகிய நீ, இதை நினைத்துப் பார்த்து,
ரிஷியின் சாபம் சத்தியமாக இருக்கவேண்டுமென்று எண்ணி அந்த மரங்கள்
இருந்த இடத்துக்கு உடலுடன் கட்டியிருந்த உரலையும் உருட்டிக் கொண்டு,
அந்த இரண்டு மரங்களின் அடித் தண்டின் இடைவெளி நடுவே தவழ்ந்து சென்று ,
உரலை, உன் பலத்தால் இழுத்தாய்.
அந்த வேகம் தாங்காமல்,கப்பும் கிளையுமாக நன்கு கொழுத்து வளர்ந்து இருந்த
இரண்டு மரங்களும் பெரும்சப்தத்துடன் கீழே விழுந்தன.
உடனே , இரண்டு தேவ குமாரர்கள், ஜ்வலித்து, நான்கு திக்குகளிலும்
ப்ரகாசத்தை ஏற்படுத்திக்கொண்டு, கர்வம் நீங்கியவர்களாக,
கிருஷ்ணனாகிய உன்னிடம் பக்தி மேலோங்க , உன்னை நமஸ்காரம் செய்து,
உன் திருவடிகளில் சிரஸ்ஸை வைத்து, உன்னை ஸ்துதித்தார்கள்.
நளகூபர—–மணிக்ரீவ ஸ்துதி
ஹே,,,,கிருஷ்ண…..கிருஷ்ண ….மஹாயோகி….. நீர் பரம புருஷன்;
அவ்யக்தமான ப்ரக்ருதியிலிருந்து, சிருஷ்டித்து, வ்யக்தமாக (வெளிப்படையாக)
விஸ்வம் இதம், ஜகத் இதம் என்று ரூபம் கொண்டதாக,
நீர் பிரபஞ்சமாக இருக்கிறீர்.
நீர், பார்ப்பதற்கு, அத்வீதீய ஏகர் —சமமோ, மேல்பட்டவரோ, குணத்திலோ,
சேஷ்டிதங்களிலோ, ஐஸ்வர்ய விபவங்களிலோ—எவரும் இல்லாதவர் .
நீர்தான், எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் மேலானவர்;
நீர், அனைவர்க்கும் அந்தர்யாமி; உமது விருப்பப்படி நியமிக்கிறீர்;
உடல், ஆத்மா இவைகளை செயல்படுத்தும் பகவான் நீரே ;
அந்த ஜீவாத்மாவின் , ஸ்வரூபஸ்திதி, ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி —
எல்லாம் உமது அதீனம். சூக்ஷ்ம ஆத்மாவாக இருந்து,
ரஜஸ், தமோ, ஸத்வ பூதமாக இருக்கும் ப்ரக்ருதியை ,
நீர், சரீரமாகக் கொண்டுள்ளீர்.
நீரே, எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஈஸ்வரன்;
பரமாத்மா; ஜீவன்களின் பாப, புண்யங்களுக்கு ஏற்ப, அவைகளுக்கு,
நாமம், ரூபம் இவைகளை உண்டாக்குபவர்; ஆனால், உம்மை,
இந்த மாம்ஸக்கண்களால் பார்க்க இயலாது;உமது மஹிமையை யாராலும்
முழுமையாக அறியமுடியாது; ஆகவே, உம்மைப் பக்தி செய்து நமஸ்கரிப்பதே சிறந்தது;
பகவதே…………வாஸுதேவாய……..நமஸ்காரங்கள் உமக்கே உரியது;
உமக்கு என்று ஒரு ரூபமில்லை; ஆனால், பலப் பல ரூபங்களில் ப்ரகாசிக்கிறீர்;
அவதாரம் ஏற்படும் போதெல்லாம், உமது ரூபம் வெளிப்படுகிறது;
நீர், சரீரங்கள் படைத்தவர்களில், அசரீரி; அவதார காலங்களில்,
அப்ராக்ருத சரீரம்; த்ரியக், ம்ருக, மனுஷ்ய அவதாரங்களில், அது அதற்குத் தக்கபடி
அதிசய வீர்யமுள்ள சரீரம்; அப்போதும், எவ்விதத் தோஷமும் உம்மிடம் இல்லை;
அப்பேர்ப்பட்ட, பற்பலப் பெருமைகளைப் பெற்ற நீர், எல்லா உலகங்களின்
க்ஷேமத்துக்காகவும், எங்களைப் போன்ற மந்த மதியர்களை உஜ்ஜீவிக்கவும்
உத்தேசித்து, அவதாரம் எடுக்கிறீர்; எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்
நீர், பரம கல்யாண மூர்த்தி; உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர் வாஸூ தேவர் (வஸூ தேவரின் திருக்குமாரர் );
பரம ஸாந்தர்; யதுக்களுக்குப் பதி;உமக்கு எங்கள் நமஸ்காரங்கள்;
ரிஷியினுடைய பரம அனுக்ர ஹத்தாலே, உம்முடைய தர்ஸனம் கிடைத்தது;
எங்கள் மனஸ், உமது திருவடிகளில் , பற்றுடன் இருக்கட்டும்;
நாங்கள், சிவபிரானின் கிங்கரர்கள் ; நாங்கள் போக உத்தரவு கொடுங்கள்
என்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.
ஸ்ரீ சுகர், மேலும் சொல்கிறார். நீ, உரலில் கட்டப்பட்ட தாமோதரனாகவே
இருந்துகொண்டு, அந்தத் தேவகுமாரர்களைப் பார்த்துச் சொன்னது இதுதான்.
பரம கருணை உள்ள நாரதராலே, என்னுடைய அநுக்ரஹம் உங்களுக்குக் கிடைத்தது;
என்னிடம் திட நம்பிக்கை வைத்து, மனஸ்ஸை அர்ப்பித்து, என்னைத் தரிசித்த நீங்கள்,
திருந்திய புருஷர்களாக ஆகி, பந்தங்களில் இருந்து விடுபட்டீர்கள்;
என்னையே உபாயமாக(ஸாதனம் ) வைத்து என்னிடம் வைத்த பக்தி ,ப்ரேமையாகி,
உங்கள் அபீஷ்டங்களை அடைந்து, அனுபவித்து, மீண்டும் பிறவி இல்லாமல்,
என்னை வந்து அடைவீர்களாக !
ஹே,கிருஷ்ணா, இவ்விதம் ஆக்ஜை பெற்ற இருவரும், உன்னைப் ப்ரதக்ஷிணம் செய்து,
அடிக்கடி நமஸ்காரம் செய்து, வடதிசை நோக்கிப் புறப்பட்டு, குபேரபட்டணமாகிய
அளகாபுரிக்குப் போய்ச் சேர்ந்தனர் . இழந்த சம்பத்தை, பகவானை பஜித்து,
மீண்டும் அடைந்த அர்த்தார்த்தி களான இவர்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்
10 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
————–
அத்யாயம் – 11
பழக்கூடையில் ரத்னங்கள்—–கோகுலத்திலிருந்து, பிருந்தாவனம்—இங்கு வத்ஸாசுரன், பகாசுரன் வதம்
பெருத்த சப்தத்தைக் கேட்டு, நந்தகோபனும், மற்ற யாதவர்களும் ( கோபர்களும் ) ஓடி வந்தனர்.
பெரிய இரண்டு மரங்கள், கீழே விழுந்து கிடந்தன. எப்படி இவை இரண்டும் கீழே விழுந்தது என்று,
அவர்களுக்குத் தெரியவில்லை. அருகில் வந்து பார்த்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்.
கயிற்றால் கட்டப்பட்டு இருந்த உன்னை, கயிற்றை அவிழ்த்து, பயந்து கொண்டே ,
இது என்ன ஆச்சர்யம் என்று பேசினார்கள். அருகில் விளையாடிக்கொண்டிருந்த கோபர்கள்
ஆகிய கோபாலகர்கள், ( சிறுவர்கள் ) ” நாங்கள் பார்த்தோம்; இதற்குக் கிருஷ்ணன்தான் காரணம்;
இரண்டு மரங்களுக்கு நடுவே தவழ்ந்து சென்று, உரலை இழுத்தான்; மரங்கள் முறிந்து விழுந்தன;
இரண்டு புருஷர்கள் வெளியே வந்து, கிருஷ்ணனுடன் பேசினார்கள்;
நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றுவிட்டார்கள் ” என்றார்கள்.
நந்தகோபர் உன் அருகே வந்து, உன்னை கயிற்றின் பிடியிலிருந்து வெளியே தூக்கினார்.
ஒரு சமயம், கோபிகைகள், உன்னைக் கொஞ்சி சீராட்டினார்கள்.
நீ, அவர்களுக்குக் ” குடக்கூத்து ” நடனம் ஆடிக் காண்பித்தாயாமே !
பாட்டுப் பாடினாயாமே !
அவர்கள், சந்தோஷப்பட்டு, மரப் பொம்மையுடன் விளையாடுவதைப் போல,
உன்னிடம் விளையாடினார்களாமே ! அவர்கள் இட்ட கட்டளையை
நிறைவேற்றினாயாமே ?
அதாவது, முக்காலியைக் கொண்டுவந்து கொடுப்பது;
படியைக் கொண்டுவந்து கொடுப்பது என்று செய்தாயாமே ? இப்படிப் பல
சேஷ்டிதங்களால், கோபிகைகளுக்கு, ஆனந்தத்தை அளித்தாயாமே !
(அந்த பால சேஷ்டிதங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன் )
ஒரு நாள் , நீ வாஸம் செய்யும் வீதியில், ஒரு கிழவி “பழம் வாங்கலையோ ….. பழம்….. ”
என்று கூவிக்கொண்டு வந்தபோது, நீ, அவளிடம் சென்று,
“எனக்குப் பழம் கொடு ” என்று, உன் சின்னஞ்சிறு கைகளை நீட்டி வேண்ட,
அதற்கு அந்தக் கிழவி, “அரிசியைக் கொடு ” என்று கேட்க,
நீ, வீட்டின் உள்ளே போய், இரண்டி உள்ளங்கைகளிலும் அரிசியை எடுத்துக் கொண்டு ,
அரிசி தரையில் சிந்தாமல் இருக்க, ஜாக்ரதையாக நடந்து வர ,
அப்படியும் பல அரிசிகள் கீழே சிந்த,
இது தெரியாதவனைப்போல நடித்த நீ,
கையில் உள்ள அரிசியைக் கிழவியிடம் கொடுக்க,
அந்தக் கிழவி உன்னைத் தடவிக்கொடுத்து,
உன் சின்னஞ்சிறு கைகள் நிறையப் பழங்களைக் கொடுக்க,
நீ, அவளை அனுக்ரஹித்த உடன் , பழக்கூடை முழுவதும் ரத்னங்களால் நிரம்ப,
அது கண்டு ஆச்சர்யப்பட்ட அந்தக் கிழவி,
கண்களில் நீர் வழிய, உன் திருக்கைகளைப் பிடித்து முத்தமிட்டாளாமே !
ஒருநாள், நீயும் பலராமனும் , தாய்மார்கள் பின்தொடர, யமுனா தீரத்துக்குச் சென்று,
கோபர்களுடன் விளையாடினீர்கள். நேரம் மிகவும் ஆகியது; ரோஹிணி
பலராமனை ” விளையாடியது போதும், வீட்டுக்குப் போகலாம் வா … ” என்று கூப்பிட்டாள்.
பலராமனும் வரவில்லை; நீயும் வரவில்லை. தொடர்ந்து விளையாடிக்கொன்டிருந்தீர்கள்.
யசோதை வந்து, உன்னைக் கூப்பிட்டாள். புத்திர வாத்சல்யத்துடன் கூப்பிட்டாள்.
“விடியற்காலம் சாப்பிட்டீர்கள்; வெகு நேரம் ஆகிவிட்டது; உங்களுக்குப் பசிக்கும்;
வ்ரஜபூமியின் அதிபரான நந்தகோபன், உங்களை எதிர் பார்த்துக் காத்திருப்பார்;
ஹே….கிருஷ்ணா… இன்று உன் பிறந்த நாள்; பிறந்த நக்ஷத்ரம் ரோஹிணீ ” என்று சொல்லி
உங்களைக் கூப்பிட்டாள். இருவரும் திரும்பி வர, உங்களை அழைத்துக் கொண்டு
வீட்டுக்கு வந்த யசோதை, உங்களை நன்கு ஸ்நானம் செய்துவைத்து,
புது வஸ்த்ரங்கள் அணிவித்து, நன்கு ஆகாரம் கொடுத்து, நீங்கள் க்ஷேமமாக இருக்க ,
மங்கள கார்யங்களைச் செய்தாள்.
ஒருசமயம், கோகுலத்தில் , உத்பாதங்கள் ஏற்பட்டன. விருத்தர்கள் மிகவும் பயந்து,
ஒன்று கூடி, என்ன செய்வது என்று ஆலோசித்தார்கள். அப்போது, மிகவும் வயதான
க்ஜான வ்ருத்தன் “உபநந்தன் ” பேசினான் .
” பெரிய உத்பாதங்கள் ஏற்படுகின்றன; குழந்தைகளுக்கு நாசம் ஏற்படும்படி நடக்கின்றன;
பூதனையிலி ருந்து விடுபட்டது, சகடாசுரன் அழிந்தது, தைத்யன் அழிந்தது,
மரங்கள் முறிந்து குழந்தையின் மேல் விழாமல் இருந்தது, என்று, இப்படிப்
பல கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும்,கஷ்டங்கள் ஏற்படுவதற்குள் ,
நாம் யாவரும் கோகுலத்தை விட்டு, பிருந்தாவனம் சென்று விடுவோம்;
அது, பசுமை நிறைந்த காடு; பசுக்களுக்கு நன்கு ஆகாரம் உள்ளது;
நாமும் அங்கே செல்லலாம் ; உங்களுக்குப் பிடித்திருந்தால் இதைச் செய்யுங்கள் ” என்றான்.
இதைக்கேட்ட கோபர்கள் யாவரும் , சரியான யோசனை என்று ஆமோதித்து,
கோக்களையும் கன்றுக் குட்டிகளையும் முன்பாகப் போக விட்டு, சாமான்கள்,
மூட்டை முடிச்சுகளை வண்டிகளில் ஏற்றி, வாத்தியங்களை வாசித்துக் கொண்டு
புரோஹிதர்கள் கூடவே வர, ப்ருந்தாவனம் புறப்பட்டனர்.
யசோதை, நீ, பலராமன், ரோஹிணி ஒரு வண்டியில் ஏறி அமர்ந்து, எல்லாருமாக
ப்ருந்தாவனம் வந்து சேர்ந்தீர்கள். இங்கு, வசிக்கும் இடங்களை
கோபர்கள் நன்கு ஏற்பாடு செய்தார்கள்.
அருகிலேயே யமுனை நதி; கோவர்த்தன கிரி ; பச்சைபசேல் என்று பூமி;
அடர்த்தியான காடு; உங்களுக்கு, சந்தோஷத்துக்குக் கேட்பானேன் !
இங்கு நீங்கள், மற்ற கோபர்களுடன் நன்கு வளர்ந்து, வனத்தில் பசு கன்றுகளுடன்
சுற்றித் திரிந்தீர்கள்; விளையாடினீர்கள். இந்த மாதிரியாக, நீங்கள் , யமுனா தீரத்தில்
கன்றுகளுடன் விளையாடும்போது, உங்களை அழிக்க, வத்ஸாசுரன் , கன்றுக்குட்டி
வேஷத்தில் வந்தான். அதை, பலராமன், உன்னிடம் கையைக் காட்டிச் சொல்ல,
நீ, அதன் பின்னாலே சப்தமில்லாமல் சென்று, பின்னங்கால்களைப் பிடித்து
மேலே தூக்கி சுழற்றி எறிய , அந்த அசுரன் எதிரே இருந்த விளாம்பழ மரத்தில் மோதி,
அழிந்தான். விளாம்பழங்கள் உதிர்ந்தன. அசுரனின் கோர ஸ்வரூப உடலும் கீழே விழுந்தது.
இதைப் பார்த்த கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள் .
சில காலம் கழிந்தது. ஒருநாள் நீர் நிரம்பிய தடாகத்தில், நீங்களும், கோபாலகர்களும்,
கோக்களும் தாகத்துக்கு நீர் அருந்தினீர்கள் . அச்சமயம், எதிரே ஒரு மலைச் சிகரத்தைக்
கோபாலகர்கள் கண்டனர். அந்தச் சிகரத்தில், கொக்கு உருவில் ஒரு அசுரன் , உன்னைக் கண்டான்.
உடனே, பறந்து வந்தான்; உன்னை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தான் ,
இதைப்பார்த்துக் கொண்டிருந்த பலராமனும் கோபாலகர்களும் என்ன செய்வது
என்று கலங்கினார்கள். அப்போது, அந்த கொக்கு வடிவில் வந்த அசுரன் உன்னை முழுங்க முடியாமல்,
அவஸ்தைப்பட்டான். நீ உலகத்துக்கு எல்லாம் காரணன்;
நீ, அவன் வாயிலிருந்து வெளியே வந்தாய்; ஆனால், அசுரன் உன்னை விடவில்லை;
உன்னைக் கொத்துவதற்காக உன்னை நெருங்கினான்;
நீ, அவன் இரண்டு அலகுகளையும் , வாயின் இரண்டு பக்கத்தையும்
இரண்டு கைகளால் பிடித்து, பிளந்து, அறுத்து எறிவதைப்போல த் தூர எறிந்தாய்.
கொக்கு உருவில் உன்னைக் கொல்ல வந்த அசுரனைக் கொன்றாய்.
இதைப் பார்த்த கோபர்கள், ஆச்சர்யமடைந்தனர்.
இப்படியாக, அந்த அசுரனை அழித்து, பலராமனும் கோபர்களும் இருந்த இடத்துக்குத்
திரும்பி வந்தாய் பிறகு, நீங்கள் எல்லாரும், கோக்களுடன் ப்ருந்தாவனம்
திரும்பினீர்கள். கோபர்களும், கோபியர்களும் இந்தச் செயல்களைக் கேட்டு,
அதிசயமும் ஆச்சரியமும் அடைந்தனர். கிருஷ்ணனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள்;
அவர்கள், அவனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்;ஆனால், அவர்களை, கிருஷ்ணன் அழிக்கிறான்;
கர்க்கர் மகரிஷி சொன்னது நடக்கிறதே என்று பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், பலராமனுடன் சேர்ந்து நீ, பிருந்தாவனத்தில் திரிந்து, கோபர்களுடன் விளையாடி, எல்லாரையும் மகிழ்வித்தாய்.
11 வது அத்யாயம் நிறைவடைந்தது
———-
அத்யாயம் ——12
அகாசுரன் மோக்ஷம்
ஹே, கிருஷ்ணா….. இதற்குப்பின் நடந்ததை, ஸ்ரீ சுக ப்ரம்ம ரிஷி ,
பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை , இப்போது உன்னிடம் சொல்கிறேன்.
பிறகு ஒரு நாள், நீ, மத்யான வேளையில் “வனபோஜனம் ” செய்யத் திட்டமிட்டாய்.
அதற்காகக் காலையிலேயே, கோபாலகர்கள், பசுக்கூட்டங்கள் இவற்றுடன்
யமுனா நதி தீரத்தில் உள்ள வனத்துக்குப் புறப்பட்டாய். கோபாலகர்கள்,
ஆயிரக்கணக்கான பசுக்கள், கன்றுகளுடன் , வாத்தியங்களை இசைத்துக் கொண்டு,
முன்னாலே சென்றார்கள். வனத்தை அடைந்து, உல்லாசமாக விளையாடினார்கள்.
அங்கு பூத்திருந்த புஷ்பங்களைப் பறித்து, தலையில் சூடிக் கொண்டார்கள்.
வனத்தின் வனப்பை ரசித்தபடி, கிருஷ்ணனாகிய உன்னை விட்டு,
வெகு தூரம் சென்று விட்டார்கள். அப்படிப் போகும்போது, விளையாடுதல்,
பந்து போன்ற பொருளைத் தூர எறிதல், வாத்தியங்களை முழக்குதல்,
நதியில் இறங்கி ஹம்சம் போல் நீந்துதல், தவளையைப்போலத் தத்தித்தத்தி ஓடுதல்,
குரங்குகளின் வாலைப் பிடித்து விளையாடுதல்,பட்சிகளைப் போலக் கூவுதல்,
இப்படிப் பலவிதமாக, விளைடிக் கொண்டே சென்றார்கள். முன் ஜென்மங்களின்
புண்ய பலத்தினாலே , இந்த ஜன்மத்திலே உன்னுடைய ஸ்நேஹம் —உன் அனுபவம் ,
அதன் சுகம்— இவைகள் ஏற்பட்டன. ஆனால், பார்ப்பதற்கு ,
நீ, மனுஷ்யக் குழந்தையைப் போல இருந்தாய். இந்த பாக்யம், –பெரும் பாக்யம் —
கோபாலகர்களுக்குக் கிடைத்தது.
இச்சமயத்தில், அங்கு, “அகன் ” என்கிற அசுரன் வந்தான்.
இவன் பகாசுரனின் ஒன்று விட்ட தம்பி. பூதனையின் சஹோதரன்.
இந்தக் கிருஷ்ணனை (உன்னை ) எப்படியும் கொல்ல வேண்டும் என்கிற
திட சித்தத்துடன் , தன்னுடைய உடம்பைப் பெரிதாக ஆக்கிக்கொண்டு,
மிகவும் நீளமான மலைப்பாம்பு உருவத்தை எடுத்துக்கொண்டு,
இந்தக் கோபாலகர்களும், நீயும் வரும் வழியில் , வாயை நன்கு பிளந்து கொண்டு,
மலையின் குகையைப் போலத் தோற்றம் அளிக்குமாறு செய்து ,
உங்கள் வருகையை எதிர்பார்த்து இருந்தான்.
கோபாலகர்கள் விளையாடிக்கொண்டே அங்கு வந்தனர்.
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே , அதைப் போலிப் பாம்பாக நினைத்து,
கிருஷ்ணனை ஹ்ருதயத்தில் நிறுத்தி, அந்த அசுரனின் வாய்க்குள் புகுந்தனர்.
பசுக்கள் கூட்டம், கன்றுகள் கூட்டம் யாவும் உள்ளே சென்றன. அந்த அசுரன்,
கிருஷ்ணனும் உள்ளே வரட்டும் என்று, உனக்காக, வாயைத் திறந்தே இருந்தான்.
நீ, அவர்களைத் தடுக்க முயற்சிப்பதற்குள் , அவர்கள் யாவரும் மலைப் பாம்பாக
உள்ள அசுரனின் வாய்க்குள் சென்று விட்டனர். நீ, அவர்கள் அனைவரையும்
காப்பாற்ற சங்கல்பித்தாய். நீயும் மலைப் பாம்பின் வாய்க்குள் நுழைந்து,
அதன் வயிற்றை அடைந்து, உன் திருமேனியைப் பெரியதாகச் செய்தாய்.
நீ, அந்தப் பாம்பின் வயிற்றுக்குள் , பெரிய ரூபமாக வளர, வளர அந்த அசுரனின்
வயிறு பிளந்தது. கண்களின் விழிகள் பிதுங்க; வாய் ரத்தத்தைக் கக்க,
எல்லா இந்த்ரியங்களும் நாசமடைய, , நீ , உன் ஸ்பர்சத்தாலும், த்ருஷ்டியாலும்
கோபர்களையும் கோக்களையும் கன்றுகளையும் காப்பாற்றி அவர்களுடன்
வெளியே வந்தாய். நீ வெளியே வந்ததும், ஒரு ஜோதி பத்து திக்குகளிலும்
பிரகாசித்துக் கொண்டு, இறந்த பாம்பின் உடலிலிருந்து வெளியே வந்து,
உன் திருமேனியில் சேர்ந்தது. பாபிக்கு மோக்ஷம்; தேவர்களுக்கு
இது அற்புதக் காக்ஷி; ப்ரஹ்மா , சத்ய லோகத்திலிருந்து வந்து இந்த அற்புதத்தைப்
பார்த்து, ஆச்சர்யமடைந்தார்.
ஹே, கிருஷ்ணா ……பரீக்ஷித்துக்கு, சுக ப்ரஹ்மம்
என்ன சொன்னார் தெரியுமா ?அந்தப் பாம்பின் தோலை உலர்த்தி,
அதை விளையாடுவதற்காக கோபர்கள் எடுத்துச் சென்றார்களாம்.
இது, உன்னுடைய ஐந்தாவது வயதில் நடந்த லீலை என்றும் சொன்னார்.
பரீக்ஷித் மகாராஜன், முநிபுங்கவரை நோக்கி, பகவான் ஹரியின்
லீலா வினோத சரிதங்களைக் கேட்கக் கேட்க, மெய்மறந்து போகிறது;
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மேலும் சொல்வீராக …. என்றான்
(ஹே கிருஷ்ணா…. பசுக்களும் , கன்றுகளும் செய்த பாக்யம்தான் என்னே ! )
12 வது அத்யாயம் நிறைவடைந்தது.
——
ஹே ….. கிருஷ்ணா……உன்னுடைய கதாம்ருதத்தைப் பருகப்பருக, ஆனந்தம் மேலிடுகிறது.
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்துக்குச் சொன்னதைப் போல, சாதுக்களுக்கு ,
பகவத் கதாம்ருதம் மிகவும் பிடிக்கும். முனிபுங்குவர், ராஜனுக்கு,
மிக ரஹஸ்யமான சரிதம் ஒன்றைச் சொன்னார்.
உன்னுடைய சரிதம்தான்; உன்னுடைய லீலைதான்;
அதை இப்போது உன்னிடமே சொல்கிறேன்.
நீ, கோபாலகர்களை நோக்கி, யமுனாதீர உபவனம், மிகவும் நேர்த்தியானதென்றும்,
மணற்பாங்கான திடல் உள்ளதென்றும், விளையாடுவதற்குத் தகுதியான இடம்
என்றும் சொல்லி , யமுனா தீரத்துக்கு அழைத்து வந்தாய். பசுக்களும், கன்றுகளும்
நீர் அருந்திவிட்டு, புற்களை மேயச் சென்றன. மத்யான வேளை.
கோபாலகர்கள் , தாங்கள் கொண்டுவந்த பிரசாதங்களை, முதலில் உனக்கு சமர்ப்பித்துவிட்டு ,
சாப்பிடத் தொடங்கினார்கள். சிலர், அங்குள்ள இலைகளைப் பறித்து,
அதில் சாதத்தை வைத்துச் சாப்பிட்டனர். சிலர், பழங்களைப் பறித்து,
உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டனர். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டும்,
கேலி செய்துகொண்டும் , பகவானாகிய உன்னுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
உன்னைப்பற்றிச் சொல்ல வேணும் ! நீ எப்படி சாப்பிட்டாய் தெரியுமா !
அதை சுகப் பிரம்மம் கூறுகிறார்.
புல்லாங்குழலை இடுப்பில் செருகிக் கொண்டு,
கொம்பு வாத்தியத்தைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு,
இடது திருக்கையில் ஒரு கவளம் சோற்றை வைத்து,
வலது கையில் உள்ள ஊறுகாயைக் கடித்து,
கேலிப் பேச்சு பேசிக்கொண்டே, சாப்பிட்டுக்கொண்டிருந்தாயாம்.
இந்த பரம சௌலப்யம், தேவலோகவாசிகளை ஆச்சர்யப்பட வைத்ததாம்.
இப்படி நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
பசுக்களும், கன்றுகளும் புற்களை மேய்ந்துகொண்டே , வெகு தூரம் சென்று விட்டன.
கோபாலகர்களுக்குக் கவலை, பசுக்களையும் கன்றுகளையும் தேடிக்கொண்டு
எங்கே போவது என்று ?
நீ, அவர்களைப் பார்த்து, “கவலை வேண்டாம்; நான் போய் பசுக்களையும் கன்றுகளையும்
திரும்பவும் விரட்டிக் கொண்டு வருகிறேன் ; இங்கேயே இருங்கள் ” என்று சொல்லி,
ஊறுகாயும், சோறுமாகக் கிளம்பினாய்.
ப்ருஹ்மாவுக்கு, உன்னுடைய லீலைகளைப் பார்க்க ஆவல். என்ன செய்தார் தெரியுமா ?
பசுக்களையும் கன்றுகளையும் ஓட்டிச் சென்று ஒரு குகையில்
ஒளித்து வைத்தார். உனக்கு, இவைகள் எங்கே போயின என்று தெரியாததால்,
அலைந்து , திரிந்து, மறுபடியும் கோபாலகர்களை விட்டுப் போன இடத்துக்கு வந்தாய்.
அதற்குள், ப்ருஹ்மா , அவர்களையும் மறைத்து வைத்து விட்டார். நீ, உடனே புரிந்து கொண்டாய்,
இது ப்ருஹ்மாவின் கார்யம் என்று. உடனே சங்கல்பித்தாய்.
அதேமாதிரி பசுக்கள், அதேமாதிரி கன்றுகள், அதேமாதிரி அச்சாக கோபாலகர்கள்,
என்று நீயே இப்படி மாறினாய். “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ‘ என்று வேதம் சொல்கிறது.
வேதம் சொல்வது சத்ய வாக்கு அல்லவா ?
கோபாலகர்கள் அப்படி அப்படியே உருவம், உயரம், நடை உடை பாவனை , நிறம் ,
அதேமாதிரி பசுக்கள் அந்தந்த வர்ணங்கள், சுபாவங்கள் மிருதுவான கன்றுகள், ,
இப்படியே கோக்களாகவும் யும் கன்றுகளாகவும் கோபாலகர்களாகவும் மாறி, நீயும் அப்படியே இருக்க ,
இவர்களுடன் எப்போதும் போல, விளையாடிக்கொண்டு,
பிருந்தாவனத்துக்கு வந்து, அவரவர் வீடுகளில் அவரவர்கள் ஸ்வபாவப்படி போக,
பசுக்கள், கன்றுகள் கொட்டில்களில் அடைய, நீயும் யசோதை மைந்தனாக விளங்கினாய்.
ஒவ்வொரு நாள் காலையிலும், கோபிகைகளுக்கு, தங்கள் புத்ரர்களை எழுப்பிப் பால் கொடுக்கும்போது,
அதீத வாத்ஸல்யம். பசுக்களும், கன்றுகளும் பரஸ்பரம் அதீத அன்பைச் செலுத்தின.
இப்படியே கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆயிற்று. ஒரு சமயம், பலராமன்,
உன்னுடனும் கோபாலகர்களுடனும் வனத்துக்கு வந்தார்.
அப்போது, பசுக்கள் தனியாக மேய்ந்து கொண்டிருந்தன.
கோவர்த்தன மலையின் உச்சியில் உள்ள புற்களைப் பார்த்து, அங்கு போய்ச் சேர்ந்தன.
கன்றுகள், வேறு இடத்தில் தனியே மேய்ந்து கொண்டிருந்தன. மலையின் உச்சியில் இருந்த பசுக்கள்,
கன்றுகளைப் பார்த்தன. மடியில் பால் கனக்க, கோபாலகர்களின் கட்டுக் காவலையும் மீறி,
கன்றுகளை நோக்கி மலையடி வாரத்துக்குப் பாய்ந்து வந்து, அவைகளுக்குப் பால் கொடுத்தன.
இதைப் பார்த்த கோபர்கள், பசுக்களிடம் கோபப்படவில்லை. கண்களில் அன்பு கனிய இதைப் பார்த்தனர்.
இந்தக் காக்ஷிகளை, பலராமர் பார்த்தார். இந்த அற்புத, அபூர்வ பிரேமபாசம் அடிக்கடி ஏற்படுகிறதே ,
காரணம் என்ன என்று யோசித்தார். இது பகவானுடைய மாயை; இந்த மாயை,
என்னையும் மோஹித்து விடுகிறது என்று எண்ணி, எல்லாப் பசுக்களும், கன்றுகளும், கோபாலகர்களும்
சாக்ஷாத் விஷ்ணுவே என்கிற முடிவுக்கு வந்து, அருகில் இருந்த உன்னைப் பார்த்து,
” கிருஷ்ணா… நீயே இவர்கள் எல்லாருக்குள்ளும் புகுந்து எல்லாவற்றையும் செயற்படுத்துகிறாய்,
இது உன் விளையாட்டு ” என்று சந்தோஷப் பட்டார்.
ப்ருஹ்மாவுக்கு, ஒருநாள் கழிந்தது. பூலோகத்துக்கு வந்தார். தான் ஒளித்து வைத்திருந்த பசுக்கள்
கன்றுகள் கோபாலகர்கள், ஒளித்து வைத்த இடத்தில் அப்படியே இருக்க,
கிருஷ்ணன் , வழக்கம்போல இவர்களுடன் வனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறானே ?
இது எப்படி சாத்யம் ? நான் ஒளித்து வைத்துள்ள பசுக்கள், கன்றுகள், கோபாலகர்கள் நிஜமா ?
அல்லது, இதோ இங்கு கிருஷ்ணனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்களே , இவர்கள் நிஜமா ?
என்று குழம்பினார்.
ஸத்யனான உன்னை ஏமாற்ற , தனது மாயையைப் பிரயோகம் செய்த ப்ருஹ்மா,
தனது மாயையில் தானே சிக்கிக் கொண்டு, தன்னையே ஏமாற்றிக் கொண்டு,
உன்னுடைய விஷ்ணு மாயையால் தாக்கப்பட்டு, ஒன்றும் புரியாமல் கவலையுடன் விழித்து,
சோகத்தின் வசப்பட்டார். தனது லோகமான ப்ரும்ம லோகத்துக்கு வந்தார்.
அங்கே, இன்னொரு ப்ருஹ்மா இருப்பதைப் பார்த்தார். தனக்கே, தான் யார் என்று தெரியாமல்,
மயங்கினார்.
மின்மினிப் பூச்சியின் பிரகாசம், சூர்ய ஒளியில் ஒன்றும் இல்லாது ஆவது போல,
உன்னுடைய விஷ்ணு மாயையில், அவரது மாயை ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.
ப்ருஹ்மாவின் மாயா சக்தி அடங்கி ஒடுங்கியது. அதே க்ஷணத்தில், ப்ருஹ்மா கண்ட காக்ஷி
அவரைத் திகைக்க வைத்தது. எல்லா கோபாலகர்களும் அவருக்கு சாக்ஷாத் விஷ்ணுவாகவே
காக்ஷி அளித்தனர். ஒவ்வொருவரும் ச்யாமள நிறம்; அரையில் ( இடுப்பில் ) மஞ்சள் பட்டு பீதாம்பரம்;
சதுர்ப்புஜம்;
திருவாழி
திருச்சங்கு
கதை
திருக்கரத்தில் தாமரை;
சிரஸ்ஸில் ஜ்வலிக்கும் கிரீடம்;
மகர குண்டலங்கள்;
வனமாலை;
ஸ்ரீ வத்ஸ மறு;
திருக்கைகளில் தங்கக் காப்புகள்;
அங்குலீயம்( மோதிரம் )
இடுப்பில் கடிசூத்ரம்;
மார்பில் துளசி மாலை;
மிருதுவான அங்கங்கள்;
திருவடிகளில் நூபுரம்;
உதட்டில் மந்தஹாசம்; ……இப்படிப் ப்ருஹ்மாவுக்கு, ஒவ்வொரு கோபாலகர்களும் விஷ்ணுவாகவே
காக்ஷி கொடுத்தனர்.
குளிர்ச்சி பொருந்திய கடைக்கண் பார்வை;
எல்லா ஜகத் கார்யங்களும் அணிமா முதலிய சித்திகளும் பிரக்ருதியின் மஹத்
என்பன போன்ற 24 தத்வங்களும் அந்தந்த தேவதா ரூபம் எடுத்துக் கொண்டு,
கோபாலகர்களை , சேவிப்பதைப் பார்த்தார். சேதனாசேதன வர்க்கங்கள்,
காலத்தின் ஸ்வபாவமும் ( அபிமான தேவதை ) , காமங்கள், கர்மாக்கள், அதற்குள்ள முக்குணங்கள் ——
எல்லாம் உருவம் எடுத்து, உனக்கு ஸேவை செய்வதைப் போல,
கோபாலகர்களுக்கும் ஸேவை செய்தன. பேரானந்த மூர்த்தியான உன்னை,
கோபாலகர்கள் உருவில் உபாசிப்பதை, ப்ருஹ்மா பார்த்தார்.
இப்படிப்பட்ட அனுபவத்தை, தத்வ க்ஜாநியான ப்ருஹ்மாவுக்கு, நீ, அளித்தாய்.
அவரது, ஏகாதச இந்த்ரியங்கள் தடைப்பட்டு, கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மையைப்
போல உணர்ந்தார். உன்னை, உபநிஷத்துக்களின் க்ஜானத்தாலேதான், ஒருவாறு அறிய முடியும்.
ப்ருஹ்மா தன்னுடைய நிலைக்கு வரமுடியாமல் திணறினார். தடுமாறினார்.
அப்போது, நீ , அவரை மாயையிலிருந்து விடுவித்தாய்.
இப்போது, பிருந்தாவனம், கோபாலகர்கள், பசுக்கள், கன்றுகள் யாவும் சஹஜமாக
விளையாடிப் பேசுவதைக் கண்டார். ஒளித்து வைப்பதற்கு முன்பு , என்ன சேஷ்டைகள்
செய்து விளையாடினார்களோ, அப்படியே இருந்ததைக் கண்டார்.
உடனே, ப்ருஹ்மாவுக்கு, ஞானோதயம் ஏற்பட்டது.
கிருஷ்ணா ! உன்னை நமஸ்கரித்தார்;
தரையில் விழுந்து சேவித்தார். நான்கு கிரீடங்களும் உன் திருவடியில் படுமாறு சேவித்தார்.
மீண்டும் மீண்டும் சேவித்தார்.
கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்க,
தன் திருஷ்டியை உன் திருவடிகளில் வைத்து,
மறுபடியும் மறுபடியும் சேவித்தார்.
எழுந்து, தலை குனிந்து, கைகளைக் கூப்பிக்கொண்டு,
உன்னை, ஸ்தோத்ரம் செய்ய ஆரம்பித்தார்.
13 வது அத்யாயம் நிறைவு பெற்றது .
——–
14 வது அத்யாயம்
சதுர் முக ப்ருஹ்மா , தலைகளைக் குனிந்து கொண்டு, கூப்பிய கைகளுடன், உன்னை ஸ்தோத்தரிக்கத் தொடங்கினார்.
ஹே…. பிரபோ……உம்மைப் பல தடவைகள் துதிக்கிறேன்.
உமது திருமேனி, ஆகாயத்தைப்போல நீல நிறத்தோடும் மின்னும் மேகத்தைப் போலும் ஜ்வலிக்கிறது.
காதுகளில் காட்டுப் புஷ்பங்களை அணிந்துகொண்டு, மயில் இறகுகளைத் தலையில் அணிந்து,
கைகளில் ஒரு கவளம் சோற்றையும், ஊறுகாயையும்
வைத்துக் கொண்டு, இடுப்பில் புல்லாங்குழலைச் செருகிக் கொண்டு,
பசுக்களை மேய்க்க கம்பை வைத்துக் கொண்டு, பசுக்களை அழைக்கக் கொம்பு வாத்தியத்தையும்
வைத்துக் கொண்டு, ஒரு கோபாலகன் எந்த அடையாளத்துடன் இருப்பானோ, அப்படி உம்மைக் காண்கிறேன்.
உமது கோமளமான திருவடிகளைக் காண்கிறேன்.
உமது மகிமைகள் அநந்தம். இந்த, அப்ராக்ருதமான உம்முடைய சரீரம், உமது சங்கல்பத்தால், நீரே படைத்துக் கொண்டது.
உமக்கு சமமானவர், மேலானவர் ஒருவருமில்லை.
மனத்தால் உம்மைப் பார்ப்பதற்கு, உம்முடைய அநுக்ரஹம் இருந்தால்தான் முடியும். அதுவும், ஆத்ம சுகம் விரும்புகிறவர்கள் ,
யோக முறையால்தான் பார்க்க முடியும். உமது ஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில் தரித்து, உமது கதா விசேஷங்களைக் கேட்டு,
திருநாமங்களைச் சொல்லி, அதையே
வாழ்க்கையாகக் கொண்ட மகான்கள், பாகவத ஸ்ரேஷ்டர்கள் உமக்காகவே வாழ்கிறார்கள்.
உமது ஆத்ம ஸ்வரூபத்தை, உமது திருவருளால்தான் அறிகிறார்கள்.
பக்தி மார்க்கத்தால் உம்மை அறிபவர்கள், க்ஜான மார்க்கத்தாலோ, நிஷ்டையாலோ எவ்வளவு ஸ்ரமப் பட்டாலும்
அந்த பாக்யத்தை அடைவதில்லை. அவர்கள், உமியைக் குத்துபவர்கள்.
பல யோகிகள் , தங்கள் கர்மாவை, உமது பாத சரோஜங்களில் ஸமர்ப்பித்து, அதிலேயே பற்று வைத்து,
ஸதா ஸர்வ காலமும் உமது புண்ய சரிதங்களையே கேட்டு,
உமது வாஸமான ஸ்ரீ வைகுண்டத்தை அடைகிறார்கள். உமது குணமஹிமையைச் சொல்லிச் சொல்லி,
உமது திவ்ய ஸ்வரூபத்தைத் த்யானித்து, நீர் ,
பல அவதாரம் எடுத்ததை நினைத்து, வாழ்கிற பக்தர்கள், காலக்ரமத்தில் , உமது கிருபையால் உம்மை வந்து அடைகிறார்கள்.
உலகில் உள்ள தூசுகள் அநந்தம்;
உமது குண சேஷ்டிதங்களும், மகிமைகளும் அநந்தம். இருந்தும் கோபாலகர்கள் , உமது கிருபையால் உம்மை அடைந்துள்ளார்கள்.
அதைப்போல, அடியேனுக்கும் கருணை காட்ட வேண்டும். உமது க்ருபை இருந்தால், உமது திருவடிகளை அடைந்து விடலாம்.
ஹே….பிரபோ……..உமது மஹிமையை அறியாமல், முட்டாள் தனத்துடன், உம்மோடு போட்டிபோட்டு,
என் மாயையைத் துஷ் பிரயோகம் செய்தேன். நீர், பரமாத்மா. உமது, மஹாமாயையின் முன்பு நான் எம்மாத்ரம் ?
ஹே….அச்யுதா……என்னை ரக்ஷிக்க வேண்டும். உமது ரஜோ குணத்தால் உண்டான நான், உமது மகிமையைப்
புரியாது, நானே ஸ்வதந்திர னாக நினைத்துக் கொண்டு, மனம் கலங்கி, அக்ஜானத்தால் குருடாகி,
மோஹத்துக்கு வசப்பட்டு, உம்மை சாதாரணக் குழந்தையைப் போல எண்ணி, சோதித்து விட்டேன். என்மீது, கருணை காட்டுவீராக.
என் சரீரம் எட்டு சாண்; இந்த உலகம் அண்ட வடிவம் ; நான் அண்டத்துக்கு அதிபதியாகி ,
உமது அனுக்ரஹத்தால், சமஷ்டி புருஷனாக இருக்கிறேன். மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்—–
ஐந்து தன் மாத்ரைகள் —ஐந்து க்ஜான, ஐந்து கர்மேந்த்ர்யங்கள் இவை சேர்ந்து, 24 வது தத்வமாகிய பிரக்ருதியின்
பரிணாமங்கள் ஆனாலும், நீர், ஒவ்வொரு தத்வத்திலும் அந்தர்யாமியாக இருந்து, எல்லாவற்றையும் செயற்படுத்தி,
அந்த ப்ரக்ருதிக்கு மேலே ஜீவாத்மா, அங்கும் அந்தர்யாமியாக இருந்து,
அதற்கு மேலே 26 வது தத்வமாக, பரமாத்மாவாக விளங்குகிறீர்.
இந்த ப்ரும்மாண்டத்தைப் போலப் பல ப்ரும்மாண்டங்கள் உள்ளன.
அவைகளில் நானும் ஒருவன். ஒவ்வொரு பிரும்மாண்டமும் காரண ஜலத்தில் மிதந்து கொண்டு, ——அணு அளவாக இருப்பதால், —-
உம்முடைய நிஜ ஸ்வரூபத்தை
அற்ப சக்தியுள்ள அடியேனால் அறிய இயலாது. என்னை மன்னியும். வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்யும் குழந்தை
கால்களால், உதைத்தால், தாயார் கோபிப்பதில்லை.;
வருத்தமடைவதில்லை. அதைப் போல என் குற்றத்தையும் பொறுத்தருள்க
உமது வயிற்றிலே நாங்கள் , பிரளய காலத்தில் காப்பற்றப்பட்டு, ஸ்ருஷ்டி காலத்திலும் கருணையால் படைக்கப்பட்டு,
லய காலத்திலே உம்மை வந்து அடைவதால்,
உமது வயிற்றைத் தவிர எங்களுக்கு வேறு வாசஸ்தானம் இல்லை.
உலகங்கள் யாவும், பிரளய காலத்தில் உமது வயிற்றில் ஒடுங்குகிறது. ஸ்ருஷ்டி காலத்தில்,
நான், உமது நாபீ கமலத்திலிருந்து படைக்கப்பட்டேன். நான் தான் , உமது முதல் ஸ்ருஷ்டி. நீர் எனக்கு ஈஸ்வரன்.
ஆதியில் நான், உம்மைக் காணவில்லை.
எவ்வளவு காலம் நான் எங்கு இருந்தேன்; எங்கிருந்து வந்தேன் என்று அறியாமல் விழித்தேன்.
தாமரைத் தண்டின் வழியே உள் நுழைந்து, உம்மைக் காணமுடியாமல்
தவித்தேன்.பிற்பாடு , நீரே , என் ஹ்ருதயத்தில் தோன்றினீர். அது , ஏன் இப்போது தோன்றவில்லை ?
உமது சங்கல்பத்தால்தான் உம்மை அறியமுடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
இந்த கிருஷ்ணாவதாரத்தில் , பிரபஞ்சம் அனைத்தும் உமது திருவயிற்றில் இருக்கிறது என்பதை,
உமது வாயைத் திறந்து , நீரே
உமது தாயாரான யசோதைக்குக் காட்டினீர். கன்றுகள், பசுக்கள், கோபாலகர்கள், நீர், …………
மற்றும் நீர் அவர்களுடன் பேசிக்கொண்டு விளையாடுவது எல்லாம்,
உமது லீலை. விஷ்ணு மாயை. கோபாலகர்கள், பசுக்கள் யாவும், விஷ்ணு ரூபமாகக் காக்ஷி அளித்தது,
அபிமான தேவதைகள் ,உம்மையும் அவர்களையும் துதித்ததும்,
எனக்குப் புத்தி ஏற்படும்படி …..இரண்டு ப்ருஹ்மாக்கள் தோன்றியதும் உமது விளையாட்டாகும், லீலையாகும்.
உமது ஸ்வரூபத்தை அறியாதவர்கள், தேஹத்தையே ஆத்மாவாக நினைத்துத் தாங்கள் பிரகாசிப்பதாகச் சொல்கிறார்கள்.
அதாவது, உமது உதவியின்றி, பிரகாசிப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் நீரே படைத்து, காப்பாற்றுவதில் விஷ்ணுவாகவும், அழியும் நேரத்தில் த்ரிநேத்ரனாகவும் இருக்கிறீர்.
ஒவ்வொருவருக்கும் நீர் அந்தர்யாமி. சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் அவதாரம் எடுக்கிறீர்.
ஹே….பரமாத்மன்……இது உம்முடைய மாயையின் விளையாட்டு. எப்போது அவதரிக்கிறீர் ? எப்போது மறைகிறீர் யாருக்குத் தெரியும் ?
ஆயினும் நீர் சத்யம். உமக்கு மேலானவர் யாருமில்லை. எல்லாப் பொருள்களுக்கும் நீரே ஆத்மா. அஹங்கார புத்தியை உண்டாக்கி,
மாயையினால் மயங்கச் செய்கிறீர். குருவின் உபதேசத்தாலே ஒளியான க்ஜானத்தை அடைந்தவர்கள் ,
அந்த ஞானக் கண்ணாலே மாயையைத் தாண்டி , “ஸர்ப்ப ஞானம் ” ஏற்பட்டு, அதாவது இது பாம்பு இல்லை;
கயிறுதான் என்று தெளிந்து, உமது ஸ்வரூபத்தையும், தாங்கள், உமக்கு
சேஷபூதர்கள் என்கிற சேஷத்வ ஞானத்தைப் பெற்று, ஸம்சாரத்தை ஜெயித்து உம்மையே வழிபடுகிறார்கள்.
அஞானத்தால் பவபந்தமும், ஞானத்தால் பவமோக்ஷமும் ஏற்படுகிறது.
நான், அஞானத்தால், உமது ஸ்வரூபத்தை அறியாமல், இதைச் செய்துவிட்டேன்.ஸத்யம் எது என்று தெரியாத படியாலே ஏற்பட்டது.
உம்மை விட்டுத் தனியாக பந்தமோ, மோக்ஷமோ இருக்காது. எல்லாம் உம்மால்தான் இயங்குகிறது.
மனிதர்கள், தேகாத்ம அபிமானத்தால் ஸ்வதந்திர ஆத்ம ப்ரமம்
கொள்கிறார்கள். தங்கள் ஆத்மாவை வெளியே தேடுகிறார்கள். உம்மைப் பரமாத்மா என்று கருதாமல்,
தங்களையே பெரிதாக எண்ணி ஏமாந்து போகிறார்கள்.
சாதுக்கள், உம்மையே பஜித்து உம்மையே வந்து அடைகிறார்கள்.
ஹே….பிரபோ…..உமது “பாதாம் புஜ த்வய ” ஸேவை எவனுக்கு, லவலேசமானும் கிடைக்கிறதோ , அவன் மஹா பாக்யவான்.
அதனால், அவர்கள் பலகாலம் உம்மையே த்யானிக்கிறார்கள். எனக்கு அந்த பாக்யம் கிடைக்கட்டும்.
உமது பக்தனாக, இப்போதே, இங்கேயே, ஆவேன். இந்த பிருந்தாவன வாசிகள் ரொம்ப பாக்யம் செய்தவர்கள்.
பசுக்களும் கன்றுகளும் பாக்யம் செய்தவை. அந்த பசுக்களின் பால், உமது அன்பின் ப்ரஸாதம்.
இந்த ப்ரசாதத்துக்குச் சமமாக, யாக, யக்ஜ பலன் கூட இருக்காது. நந்தகோபன், கோபாலகர்கள்
அடையும் ஆனந்தத்துக்கு இணை இல்லை. நீரே அவர்களுக்கு ஆனந்தம்.
ஹே….அச்யுதா……இந்தக் கோபாலகர்களின் பதினோரு இந்த்ரியங்களும் , அவற்றின் அபிமான தேவதைகளும் பாக்யம் படைத்தவை.
நாங்கள், அபிமான தேவதைகளாக இருந்தாலும், அந்தந்த அபிமான தேவதை மூலம் அடையப்படுவதால்—-பரிமிதம்—-அளவுக்கு உட்பட்டது.
ஆனால், இந்தக் கோபாலகர்களே எல்லா இந்த்ரியங்களின் ஆனந்தத்தை , உன்னைப் பார்த்துக் கொண்டும்
உன்னுடன் பேசிக்கொண்டும், உன்னோடு விளையாடிக் கொண்டும், எங்களை விட மிக அதிகமாக பேரானந் தத்தை அடைகிறார்கள்.
அதனால், பாக்யமற்ற எங்களுக்கு, ஒரே வழி, இந்த பிருந்தாவனக் காட்டில் ஏதாவது ஒரு ஜன்மம் எடுப்பதுதான்.
எந்தப் பிறவியானாலும் பரவாயில்லை. புல்லானாலும், மரம், கல், புழுவானாலும் பக்ஷியானாலும் , எதுவானாலும் பரவாயில்லை .
உம்முடைய பாத ரஜஸ் ஸின் ஸ்பர்சம் கிடைத்தால் போதும். நீர் ச்யாமசுந்தரன்;
பிருந்தாவனக் காட்டில், கரிய திருமேனி வாட, சஞ்சாரம் செய்ததாலே, உம்முடைய திருவடி ஸ்பர்சம் பட்ட
புல் பூண்டு எல்லாமே பாக்யம் அடைந்தது. எந்த திவ்ய பாத ரஜஸ் களை . ஸ்ருதிகளோ, ரிஷிகளோ, மிகவும் முயற்சி செய்து ,
த்யானம் செய்து, அடைவார்களோ , அந்தப் பாத தூளியை இந்த வ்ரஜபூமியில் வசிப்பவர்கள் அடைந்து,
ஸகல புருஷார்த்த சாரமாகிய உம்மையே அடைந்து, பெரும் பாக்யம் செய்திருக்கிறார்கள்.
பூதனை போன்ற ராக்ஷஸிகள்,கபட வேஷம் தரித்த தன் இனத்தாருடன், , உன்னால் அழிக்கப்பட்டு,
எந்த வைகுண்ட பதத்தை அடைந்தார்களோ, அதற்கு மாறாக, வ்ரஜபூமி வாசிகளான இவர்கள்,
உமக்குப் பிடித்தமான சுஹ்ருத்துகள்—-ப்ராண சஹாக்கள் —-அவர்களுக்கு எதுதான் கிடைக்காது !
விரோதி களுக்கே, உன் பாத ஸ்பர்சம் பட்டு வைகுண்ட வாஸம் கிடைக்கும்போது, இந்த சுஹ்ருத்துக்களுக்கு இகசுகம்,
வைகுண்ட வாஸம் இவைகளெல்லாம் கிடைப்பதற்குக் கேட்பானேன் !
உம்மையே சரணமடைந்து வாழும் ,இந்த சாது ஜனங்களின் ஆனந்தத்தை நீர் வ்ருத்தி செய்கிறீர்.
அதிகமாகப் பேசுவதால் என்ன லாபம் ?ஹே….பிரபோ…..உனது பெருமைகள் மனசுக்கும், வாக்குக்கும்,
தேகத்தின் அவயவங்களுக்கும் அதீதம்.—-அவை அகோசரமானவை நீர் எல்லாவற்றையும் நன்கு அறிவீர்.
நீரே எல்லா ஜகத்துக்கும் நாதர். எனக்கும் நாதர்.
ஹே…க்ருஷ்ணகுல புஷ்கர ஜோஷதாயிந் ——–வ்ருஷ்ணீ குல தீபமே……உம்முடையப் பெருமைகள் அதீதப் பிரகாசம் உள்ளவை.
அப்படிப்பட்ட உம்மை, ப்ரும்ம தேவனாகிய நான், கல்பம் முடியும் காலம் வரை நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறேன். —–
ஸதா ப்ரணாமம் செய்கிறேன்.
ஹே, கிருஷ்ணா, சுகப்ப்ரம்மம், பரீக்ஷித்துக்கு, மேலும் சொன்னார்.
ப்ருஹ்மா உன்னை மூன்று தரம் ப்ரதக்ஷிணம் வந்து, உன் திருவடியில் பணிந்து , நமஸ்கரித்து,
தன்னுடைய இருப்பிடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
ப்ருஹ்மாவை அனுப்பிய பிறகு, நீ, பசுக்களையும் கன்றுகளையும் மீட்டுக் கொண்டு, கோபாலகர்கள்
முன்னே இருந்த இடத்துக்கு வந்தாய். கோபாலகர்கள், தங்களுடைய பிராணனும், அந்தராத்மாவுமான உன்னை,
ஒரு வருஷ காலத்துக்கு மேலாகப் பிரிந்து இருந்தாலும்,
உன் மாயையால், அது, ஒரு க்ஷண கால நேரமாக அவர்களுக்குத் தெரிந்ததாம்.
அவர்கள், உன்னை ” இங்கே வா…..இந்தக் கவளச் சோற்றை சாப்பிடு…..நீ வரும்வரை நாங்கள்
உன் நினைவாகவே ஒன்றும் சாப்பிடாமல் காத்துக் கிடக்கிறோம் ….” என்று சொல்லி அழைத்தார்களாம்.
சிரித்துக் கொண்டே, நீ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வனத்தைவிட்டுப் புறப்பட்டு, ஊருக்கு வந்தாயாம்.
எப்படி வந்தாய் தெரியுமா ?
உடலில் புஷ்பங்களைத் தரித்துக் கொண்டு, தலையின் உச்சியில் மயில் இறகுகளால் அலங்கரித்துக் கொண்டு,
புல்லாங்குழலை வாசித்துக் கொண்டு, கன்றுகளை அன்புடன் தடவி விரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தாயாம்.
பரீக்ஷித் , மெய்மறந்து , சரிதத்தைக் கேட்டான். அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. முனிவரைக் கேட்டான்.
கிருஷ்ணனுடைய பெற்றோர் வசுதேவர், தேவகி ,
அப்படியிருக்க, நந்தகோபன், யசோதையிடம் இவ்வளவு பிரேமை ஏன் ஏற்பட்டது?
அதைப்போல, கோபாலகர்களின் பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளிடம்
ஏன் ப்ரேமம் ஏற்பட்டது ? அதைவிட, கிருஷ்ணனிடம் அதீத ப்ரேமம் ஏற்பட்டது எதனால் ? என்று கேட்டான்.
ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்.
ஹே….ராஜன்…..ஒவ்வொருவருக்கும் ஆத்மா பிரியமானது குழந்தைகளும் ப்ரியமானவையே.
அதைப்போல, செல்வம், வீடு இவைகளும் மனத்துக்குப் பிடித்தமாக ஆகிறது.
ஆனாலும், ஆத்மாவைப் போலப் ப்ரியமாவதில்லை. இந்தப் ப்ரியம் , தேகத்தையே ஆத்மாவாக எண்ணுபவர் களிடமும் காணப்படும்.
ஆனால், ஸ்ரீ கிருஷ்ணன் விஷயத்தில், அவனே அகில உலகங்களுக்கும் ஆத்மா——-அந்தராத்மா. மாயையினால்,
அதை மறைத்துக் கொண்டு, மனுஷ்யனைப் போல , இவர்களுடன் விளையாடுகிறான்.
அதனால், பிரேமை மிக அதிகமாகிறது. ஆனால், எவர்களுக்கு, ஸ்ரீ கிருஷ்ணனே ஜகத் காரணன்,
அண்டசராசரங்களுக்கும் அவனே அந்தராத்மா என்கிற உறுதி இருக்கிறதோ, அவர்களுக்கு, எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணன் தான்.
அதனாலே, அவனை ஆச்ரயித்து, அவன் பாத பல்லவங்களைத் தெப்பமாக வைத்து, வைகுண்ட பதத்தை அடைகிறார்கள்.
அவன் திருவடிகளை நம்பியவர்களுக்கு, இந்தஸம்சாரமாகிய ஸமுத்ரம், “வத்ஸ பதம் ” (மாட்டின் குளம்படியில் உள்ள தேங்கிய நீரைப் போல ).
அதனால், இந்த சமுத்ரத்தை, சுலபமாகத் தாண்டி, வைகுண்டத்தை அடைகிறார்கள்.
ஹே….ராஜன்…….பகவான், தன்னுடைய பால்யத்தில், இளம் சகாக்களுடன் அத்புத விளையாட்டுகளைச் செய்தார்.
இவற்றை எவர்கள் கேட்கிறார்களோ, எவர்கள் படிக்கிறார்களோ, அவர்கள், எல்லா அபீஷ்டங்களும் நிறைவேறப் பெறுவார்கள்.
ப்ருஹ்மாவின் ஸ்துதியைக் கேட்பதாலும், படிப்பதாலும் , எல்லாப் பாபங்களும் விலகி,
எல்லா அபீஷ்டங்களும் கைகூடும் என்று சொன்னார்.
தேனுகாசுரன் வதம்-
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்கு மேலும் விவரித்ததை, உனக்குச் சொல்கிறேன்.
உனக்கும், பலராமனுக்கும் குழந்தைப் பருவம் என்பது போய், இப்போது, பையன்களாக, யுவாவாகக் காக்ஷியளித்தீர்கள்.
அதாவது, பால பருவம் —–குமார தசை.நீங்களே , பசுக்களை மேய்க்கத் தொடங்கினீர்கள்.
பிருந்தாவனம் முழுவதும் உங்கள் திருவடிகளால் பாவனமாகியது. கோபர்கள் சூழ, நீ, புல்லாங்குழலை ஊதிக்கொண்டு,
பசுக்களை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றாய். அப்போது, பலராமனைப் பார்த்து, இந்தப் பழங்களால் குலுங்கும் மரங்கள்,
உன்னை வணங்குகின்றன; குயில்கள் கூவுகின்றன; புல், பூண்டுகள்உன்னுடைய பாத ஸ்பர்சத்தால் பாவனமாகியது;
மரங்களும், கொடிகளும், நீ மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிக்கும்போது, உன் பாத ஸ்பர்சம் பட்டு பாபம் போய் , புனிதமாக ஆகிவிட்டன.
இப்படியெல்லாம், நீ, பலராமனிடம் பேசிக்கொண்டே பிருந்தாவனத்தில் நதி தீரத்திலும், உத்யான வனத்திலும் விளையாடினாய்.
நீ, சில சமயம் ,ஹம்ஸத்தைப் போலக் கத்துவாய்;
மேகத் த்வனியாக கர்ஜிப்பாய்;
சகோர பக்ஷியைப் போலவும்,
கிரௌஞ்ச பக்ஷியைப் போலவும்,
சக்ரவாகப் பக்ஷியைப் போலவும்
பாரத்வாஜ பக்ஷிகளைப் போலவும் கத்துவாய்;
சில சமயம் பலராமனை, ஒரு கோபன் மடியில் படுக்க வைத்து, பலராமனின் காலை வருடி விடுவாய்;
நீ, சில சமயம், கோபன் மடியில் தலையை வைத்து உறங்குவாய்;
கோபச் சிறுவர்கள், ஒரு மஹாராஜாவைச் சேவகர்கள் சூழ்வதைப் போல,ஸ்நேஹத்துடன் உன்னைச் சூழ்ந்து,
சைத்ய உபசாரங்களை உனக்குச் செய்வார்கள்.
இப்படி, நீயும் பலராமனும், பிருந்தாவனக் காட்டில், பசுக்களை மேய்த்து விளையாடி வரும்போது,
ஒரு சமயம், ஸ்ரீ தாமன் என்கிற கோபச் சிறுவனும் ,இன்னும் சில சிறுவர்களும் உன்னிடம் வந்து,
அருகே ஒரு பெரிய காடு இருப்பதாகவும், அதில் பனைமரங்கள் நிறையப் பழுத்து, பழங்கள் கீழே விழுந்து கிடப்பதாகவும்,
ஆனால், அங்குள்ள தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்துடன் ,பந்துக்கள் நண்பர்கள் யாவரையும் அருகே
அண்ட விடுவதில்லை என்றும் , அவனுக்குப் பயந்து, ஒருவரும் அங்கு போவதில்லை என்றும்,
பழுத்த பழங்களின் வாஸனை, வெகு தூரத்தில் தங்களுக்கு,பழங்களைச் சாப்பிடும் ஆசையை வளர்த்து உள்ளதாகவும்,
தங்களை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கோரினார்கள்.
நீ, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பலரானும், நீயும் , கோபர்களுமாகஅங்கு சென்றீர்கள்.
பலராமன் முதலில் சென்று, ஒரு பெரிய மரத்தை ஆட்டி, பழங்களைக் கீழே விழச் செய்தார்
பழங்கள் விழும் சப்தத்தைக் கேட்டு, தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்தில் ஓடிவந்தான்.
பலராமனை, முழுவேகத்துடன் தாக்கினான். பூமி அதிர்ந்தது. தன் கால்களால், பலராமனின் மார்பில் உதைத்தான்.
அங்குமிங்கும் ஓடினான்.-மறுபடியும் வந்து பின்னங்கால்களால் தாக்க,
பலராமன் கோபத்துடன் அவன் முன்னங்கால்களைப் பிடித்து, முழு வேகத்தில் சுழற்றி, பனைமரத்தின் மீது ஓங்கி அடித்தான்.
புல், பூண்டு அழிவதைப் போல, பனைமரத்தின் வேர்பாகத்தில் தாக்கப்பட்டு , தேனுகன் மடிந்தான்.
பனை மரத்தின் அடிப்பாகம் பழங்களை உதிர்த்துக் கொண்டே, பக்கத்துப் பனைமரத்தின் மீது சாய,
இப்படி நான்கு பனை மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
வேரோடு சாய்ந்தன. பெரிய சுழற்காற்று வீசினால், மரங்கள் எப்படி சாய்ந்து விழுமோ ,அப்படி விழுந்தன.
இது, பலராமனுக்கு லீலையாக இருந்தது.
தேனுகாசுரனின் பந்துக்கள் வந்து தாக்க, அவர்களையும் நீங்கள் அழித்தீர்கள்.இந்த அதிசயத்தைப் பார்த்த ,
வானில் இருந்த வித்யாதரர்கள், உங்கள்மீது, புஷ்பமாரி பொழிந்தார்கள்.
தேனுகாசுரன் அழிந்ததும், அந்த வனத்தில் ஜனங்கள் பயமின்றி நடமாடினார்கள். பசுக்களும் பயமின்றி சஞ்சரித்தன.
கோபர்கள் சந்தோஷத்துடன் உங்களைத் துதித்தனர்.
இப்படியாக, தேனுகாசுரனை வதம் செய்து , வீடுகளுக்குத் திரும்பும் உங்களை,
கோபிகைகள் ஆசை ததும்பப் பார்த்தனர். இதோ….கிருஷ்ணனைப்பார்…. கிருஷ்ணனைப்பார்…
என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.
ஹா…. எப்படிப்பட்ட ரூபம்……புல்லாங்குழலைத் தரித்திருக்கிறார்;
தலையில் மயில் இறகு; காட்டுப் புஷ்பங்கள்;
கேசத்தில் பல வர்ண மணிகளின் முடிச்சுகள்;
அரவிந்த வதனம்;
புன்சிரிப்பு;
உன் முகம் கோதூளியால் சிவந்து இருக்க,
உன்னுடைய அந்த அரவிந்த முக சாரத்தைப் பருக
க்ஷண காலம் கூடப் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தை விரட்ட,எவருடைய அபாங்க ( கடைக்கண் ) வீக்ஷண்யத்தாலே ,
மோக்ஷம் கிடைக்கிறதோ அந்த முகுந்த முக சேவைக்காக, வ்ரஜசுந்தரிகளான இடைச்சிகளான வனிதைகள், இளம் கோபிகைகள், —-ஓடி வந்தார்கள்
இது, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் தொடர்ந்தது. நீயும் பலராமனும் பசுக்களை ஓட்டிக் கொண்டு,
மேய்ச்சலுக்காகவனத்துக்குப் போகும்போதும் , சாயந்திரம் திரும்பி வரும் போதும்,
இது, தொடர்ந்தது.
யசோதையும் ரோஹிணியும் இந்த முக தர்ஸனம் செய்வதில் முக்யமானவர்கள்.
புத்திர வாத்சல்யத்தாலே, உங்களைக் குளிப்பாட்டி, நல்ல வஸ்த்ரம் அணிவித்து, ஆபரணங்கள் அணிவித்து,
நன்கு ஆகாரம் கொடுத்து, வனத்துக்கு அனுப்புவதும்,
திரும்பி வருவதை எதிர்பார்த்து , வீட்டுக்கு வந்தவுடன் உங்களை உச்சி முகந்து ,மறுபடியும் குளிப்பாட்டி,
வஸ்த்ரம் ஆகாரம் கொடுத்து, திவ்யமான மஞ்சத்தில் படுக்க வைத்து, கண்ணை இமை காப்பது போலக்
காப்பாற்றினார்கள். தினந்தோறும் இப்படியாக,
நீங்கள் ப்ருந்தாவனக்காடுகளில் சஞ்சரித்தீர்கள்.
ஒரு நாள், நீ மாத்ரம், பலராமன் இல்லாமல்,
காளிந்தீ நதியாகிற யமுனை நதிக்கரைக்கு, கோபர்கள் பசுக்கள் கன்றுகளுடன் வந்தாய்.
நல்ல வெய்யில் காலம்; சூர்ய வெப்பம் தாங்க முடியவில்லை; அவர்களுக்குத் தாகம்;
நதியின் மடுவில் இறங்கி , ஜலத்தை எடுத்துப் பருகினார்கள்.
அந்த யமுனா ஜலத்தில் காளியன் என்கிற சர்ப்பத்தின் விஷம் கலந்து இருந்ததால்,
மனம் கலங்கி, பிரமித்து, கீழே விழுந்து உயிர் இழந்தார்கள்.
நீ, உடனே, அவர்களைக் கடாக்ஷித்தாய்.
அம்ருத கடாக்ஷ வீக்ஷிண்யம் எல்லோரும் மூர்ச்சை தெளிந்து எழுந்தாற்போல , எழுந்து உட்கார்ந்தார்கள்.
இறந்தவர்கள்—விஷ ஜலத்தைப்பருகி இறந்தவர்கள்,
உயிர் பெற்று எழுந்து பேசுவது…….கிருஷ்ணா இது உன் அனுக்ரஹத்தால்தான்
15 வது அத்யாயம் நிறைவடைந்தது
—————–
16–அத்யாயம்
காளியன் விடுபட்டான்—நாக பத்நிகளின் ஸ்துதி
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார். ஹே. ராஜன்………..பசுக்களும், கன்றுகளும்,
கோபர்களும் கிருஷ்ணனின் அனுக்ரஹத்தால் உயிர் பிழைத்து, எழுந்து,
ஆச்சர்யத்துடன், இது கிருஷ்ணனின் அனுக்ரஹம்தான் என்று எண்ணி சந்தோஷப்பட்டார்கள்.
அப்போது, நீ யோசித்தாய். யமுனை நதி , காளிங்கனால், விஷமாக்கப் பட்டுள்ளது;
இதைச் சுத்தமாக்கி, யாவரும் இந்த ஜலத்தை அருந்தவும், தீர்த்தாமாடவும், —–
இந்த ஜலத்தை மாற்றவேண்டும் என்று எண்ணினாய்.
கிருஷ்ணா, காளிந்தீ என்கிற பெயர்கள், யமுனை நதிக்கு உண்டு.
இந்த நதியில், காளிங்கன் என்கிற கொடிய விஷமுள்ள ஸர்ப்பம் ,
தன் விஷத்தால், ஜலம் முழுவதையும் விஷமாக்கிக் கொண்டும்,
விஷ அக்னியால் யாவரையும் தஹித்துக்கொண்டும் இதில் வசித்துக் கொண்டு இருந்தான்.
பறவைகள், மேலே பறந்து சென்றால், விஷக்காற்று மேலே பட்டு, மடிந்து விழுவது
வழக்கமாக இருந்தது. இந்த விஷக் காற்று பட்ட மரங்கள், செடிகள் யாவும் கருகி,
பட்டுப் போய் மொட்டையாகக் காக்ஷி அளித்தன.
பசுக்களும், மனிதர்களும் யமுனை நதிக்கரைக்குப் போனாலே,
விஷக் காற்று பட்டு ,மடிந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்த நீ, அந்த யமுனை மடுவின் ஒரு ஓரத்தில் இருந்த
கதம்ப மரத்தில் ஏறி , வேஷ்டியை இறுகக் கட்டிக் கொண்டு,
தோள் பட்டைகளைத் தட்டிக் கொண்டு, பெரிய சப்தத்துடன் ,
மடுவில் குதித்தாய். விஷம் முழுவதும் உள்ள ஜலம், உயர எழும்பியது.
நான்கு திக்குகளிலும் அலைகள் எழும்பின; பெரிதாகிச் சுழன்றன;
பெரும் சப்தம் உண்டாகியது.
இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்ட,அதாவது காதும் கண்ணும் ஒன்றாக இருக்கும் பாம்பு,
காளிங்கன் என்கிற அந்தக் கொடிய விஷஸர்ப்பம், கோபத்துடன் கிளர்ந்து
எழுந்தது. ஜலத்துக்கு வெளியே வந்தது.
உன்னைப் பார்த்தது. ஸ்ரீ வத்ஸ மருவினால் அலங்கரிக்கப்பட்ட,
உன் சுகுமார—-கோமள—-திவ்ய மேனியைக் கோபத்துடன்
தன் விஷப் பற்களால் கடித்தது ;
உன்னுடைய தாமரைத் தண்டுபோன்ற மெல்லிய கால்களைக் கடித்தது;
உன்னைத் தன்னுடைய வாலால் நன்கு சுற்றிக் கட்டியது;
நசுக்கியது
உன்னைப் பார்த்த கோபாலகர்கள் கதறி அழுதனர்;
உன்னுடைய ப்ரிய மித்ரர்கள் —-உன்னையே நம்பி வாழும் ப்ரிய சகாக்கள்,
நாங்களும் யமுனையில் குதித்து விடுகிறோம் என்று கத்தினர்.
பசுக்களும், கன்றுகளும் பயத்தால் கத்தி , கண்களில் ஜலம் வழிய நின்றன.
பூமி, ஆகாயம், வ்ரஜவாசிகளின் உடல்கள் இங்கெல்லாம் தாபம் ஏற்பட்டது.
பலராமன் இல்லாமல் நீ தனியாக வந்துள்ளதை அறிந்த நந்தகோபரும் யசோதையும்
மனம் துடி துடித்து , உனக்கு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று பயந்து,
வேதனையுடன், பாலர்கள், வ்ருத்தர்கள், ஸ்திரீகள் தொடர்ந்து வர,
எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு,
உன்னைப் பார்க்க வேண்டும் என்று தீனக் குரலில் கதறி,
யமுனா நதி தீரத்துக்கு ஓடி வந்தனர்.
பலராமனுக்கு, உன்னைப் பற்றி நன்கு தெரியும்.
அதனால், அவன் ஒன்றும் சொல்லவில்லை.
பிருந்தாவனத்தில் உள்ள புழுதியில் , உன்னுடைய திருவடிகளின் அடையாளங்களான
தாமரைத் தண்டுடன் புஷ்பம், அங்குசம், வஜ்ரம், கொடி, சங்கு, சக்ரம் இவற்றால்
நீ சென்ற இடத்தை தெரிந்து கொண்டு ஓடோடி வந்தனர்.
நீ, காளிங்கனால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு, அசைவின்றி இருப்பதை,
வெகு தூரத்தில் வரும்போதே பார்த்தார்கள்.
ஸ்திரீகளும், வ்ருத்தர்களும் வழியிலேயே மூர்ச்சை அடைந்தார்கள்.
கோபிகைகள், கோபர்கள், ஸ்திரீகள், வ்ருத்தர்கள் —-எல்லாருக்கும்
உன்னுடைய நினைவுதான்; வேறு நினைவு இல்லை.
உன்னுடைய புன்னகையுடன் கூடிய திருமுகம்;
உன் ஒவ்வொரு பேச்சு , இவற்றைஎல்லாம் நினைத்தார்கள்.
நீ இல்லாத இந்த உலகம் எங்களுக்கு சூன்யம், என்று சொல்லி
உன்னுடைய கதாம்ருதங்களை ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்கள்.
தாங்களும் மடுவில் குதித்து, கிருஷ்ணனுடன் உயிரை விட்டு விடுவோம் என்று துடிக்க ,
பலராமன் அவர்களைத் தடுத்து, உன் மகிமைகளை எடுத்துச் சொன்னார்.
இவைகளை, இரு முஹூர்த்த நேரம், ( சுமார் ஒரு மணி நேரம் ) பார்த்துக் கொண்டு,
காளிங்கன் கட்டுதலில் இருந்த நீ, உடனே உன்னை மிகச் சிறிய உருவாகஆக்கிக்
கொண்டாய். காளிங்கனின் பந்தத்திலிருந்து விடுபட்டாய்.
உடனே, பெரிய உருவம் எடுத்தாய்.
ஸர்ப்பம், தன் மூச்சுக் காற்றால், விஷத்தைக் கக்கியது ;.
சீறியது;
வாயால் நெருப்புப் பொறிகளைக் கக்கியது.
உன்னை, மறுபடியும் தாக்க முயற்சித்தது.
நீ, விளையாட்டாக, அந்தஸர்ப்பத்தை ஒரு தடவை வலம் வந்து,
கருடன், பாம்பு மீது எப்படிப் பாயுமோ அப்படி ஒரு க்ஷணத்தில்,
அதன் தலைமீது பாய்ந்து, ஏறினாய்.
அதன் தலை மீது நடனம் புரிய ஆசைப் பட்டாய் .
அதன் முகங்களில் ஒளி விடும் ரத்னங்களால்
உன் திவ்ய திருவடிகள் ஜொலிக்க, காளிங்கன் தலைகள் மீது நர்த்தன மாடினாய்.
ஆகாயத்தில், கந்தர்வர்கள், சித்தர்கள், தேவர்கள், அப்சரஸ்கள், எல்லோரும் கூடி,
ஆனந்தத்துடன், உன்னை சேவித்து, ம்ருதங்கங்கள், பேரிகைகள் வாசித்தார்கள்,
என்று ஸ்ரீ சுகர் கூறினார்.
உன் புகழைப் பாடினார்களாம்.
புஷ்பங்களை வாரி, உன்மேல் இறைத்தார் களாம் .
நீ, காளிங்கனின் ஒவ்வொரு தலையிலும் உன் திருவடியை வைத்து,
எந்தத் தலை நிமிர்ந்ததோ, அந்தத் தலையில் உன் திருவடியை வைத்து,
அழுத்தி, நூறு தலைகளிலும் மாறி மாறி நர்த்தனம் செய்தாய்.
எந்தத்தலை வணங்கவில்லையோ, அந்தத் தலையின் மீது ,
உன் திருவடியை வைத்து, நசுக்கினாய்.
உன் திருவடிகளைத் தூக்கியும், மடித்தும் ஆடினாய்.
அதன் தலைகள் குடைபோல் விரிந்தபோது, அவற்றின்மீது ஏறி,
தாண்டவ ந்ருத்யம் செய்தாய். அதற்கு, சக்தி குறைய ஆரம்பித்து,
அதன் ரத்தம், உன் பாத துளிகளை ஸ்பர்சித்தது.
அதன் அங்கங்கள் ஒடிந்து, நசுங்கி,
இனிப் பிழைக்க மாட்டோம் என்கிற நிலையில்
ஸ்ரீ மன் நாராயணனை மனத்தால் சரண் அடைந்தது.
இதைக்கண்ட காளிங்கனின் பத்னிகள்——நாக பத்னிகள்,
தங்கள் பதிக்கு ஆயுளை வேண்டி, கேசபாசங்களை விரித்துக் கொண்டு,
உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, கைகளைக் கூப்பி,
சாதுக்கள், பதிவ்ரதைகள் எப்படி வேண்டுவார்களோ ,
அவ்விதமாக உன்னிடம் ப்ரார்த்தித்துச் சரணமடைந்தார்கள்.
உன்னைத் துதித்தார்கள்.
நாக பத்நிகளின் ஸ்துதி
ஹே….பிரபோ…..உன் அவதாரம் துஷ்டர்களைத் தண்டிக்க ஏற்பட்டது.
ஆதலால், இந்தத் தண்டனை இவருக்குத் (காளிங்கனுக்குத் ) தகும்.
இந்தத் தண்டனை, அவருக்கு அனுக்ரஹமாகும் .
பாபத்தால், இவருக்கு, இந்த ஸர்ப்ப ஜன்மம் ஏற்பட்டது.
ஆனால், உமது க்ருபா கடாக்ஷத்தைப் பெற, மிகப் பெரிய தவம் செய்திருக்க வேண்டும்.
இவர் அவமானம் அடைந்து, சாகும் நிலையில் இருக்கிறார்.
ஆனால், உமது கிருபையால், புது கௌரவம் கிடைத்து இருக்கிறது.
இவர் செய்த எந்தப் புண்யத்தால், உமது திருவடி சம்பந்தம் இவருக்கு ஏற்பட்டது
என்பது எங்களுக்குத் தெரியாது. எந்தத் திருவடிகளை ஸ்ரீ மஹாலக்ஷ்மி ,
மிக்க ஆசையுடன் பிடித்து, லாலனம் செய்வாளோ,
ப்ருஹ்மா, சிவன் போன்ற மகாத்மாக்கள் கடும் தபஸ்ஸை விட்டுவிட்டு ,
எந்தத் திருவடித் தாமரைகளையே த்ருடமாக நினைத்து, ஸேவை செய்வார்களோ,
அந்தத் திருவடி ஸ்பர்சம் , உமது கிருபையால், இவருக்குக் கிடைத்திருக்கிறது.
எங்களுக்கு, உம்முடைய பாதபத்மங்கள் கிடைத்தபிறகு,
நாக ப்ருஷ்டமோ ( சர்ப்பங்களின் உச்ச, ஆதிபத்ய நிலை )
சார்வ பௌமத்வமோ ( சகல லோகங்களையும் ஆளும் அதிகாரம் )
பாரமேஷ்டியமோ ( ப்ருஹ்ம பதவியோ, பரமேஸ்வர பதவியோ )
வேண்டவே வேண்டாம்.
நாங்கள் ப்ரபன்னர்கள்.
உமது பாத பத்ம ரஜஸ்ஸை ( திருவடித் தாமரைத் துகள்களை )
அடைந்து விட்டோம்.
வேறு எதுவும் எங்களுக்குப் பெரிது இல்லை.
எவருக்கும் கிடைக்காத, உமது பாதத்துகள்களை ,
நீரே இவருக்குக் கொடுத்து இருக்கிறீர்.
இவர் புண்ய கதி அடைந்திருப்பது, எங்கள் பாக்யமாகும்.
உம்மை, நாங்கள், பல தடவை நமஸ்கரிக்கிறோம்.
நீர், மஹா புருஷர்.
மகாத்மா.
சர்வ பூதங்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்.
நீர், சர்வ பூதங்களுக்கும் மேலான பரமாத்மா.
உம்மை, அநேக ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறோம்
க்ஜானத்துக்கும், விக்ஜானதக்கும் விஷயமாக உள்ள,
பரப்ரஹ்மம் நீர்.
அனந்த சக்தியை உடையவர் நீர்.
அனந்த கல்யாண குணங்களை உடையவர் நீர்.
உமக்கு, இயற்கையாகவே, ஸ்வரூப, ஸ்வபாவ மாறுதல்கள் இல்லை.
நீர் பிரகிருதியை ஆள்பவர்.
ஷாட்குண்ய பரிபூர்ணர்.
நீர் கால ரூபி.
காலத்தை ஆள்பவர்.
காலத்தைத் தாங்குபவர் ( நிமிஷம், மணி, சம்வத்சரம் முதலியவை ).
நீர் சகலத்தையும் நடத்துபவர்.
நீர் சர்வத்துக்கும் சாக்ஷி.
நீர் , உபாதான நிமித்த காரணமாகவும், ஜகத் ஸ்வரூபமாகவும்,
எல்லாப் பொருட்களையும் உண்டாக்குகிற ஆதி பிதா.
ப்ரபிதா பிதாமஹர் .
உமக்குப் பலபல நமஸ்காரங்கள்.
நீரே ஐந்து பூதங்கள் ;
நீரே தன் மாத்ரைகள்;
நீரே ப்ராண, மனஸ், புத்தி, இவைகளின் வ்ருத்திக்குக் காரணம்;
அவற்றின் அபிமான தேவதைகளும் நீரே;
நீரே, அவற்றில் ஊடுருவி, அந்தர்யாமியாக இருக்கிறீர்;
நீர் முக்குணங்களாகவும், அவைகளால் கூட அறிய முடியாத
அதீத, ஆத்மானுபூதியாக இருக்கிறீர்.
நீர், அனந்த நாமம் உள்ளவர்;
சூக்ஷ்மமாகவும், கூடஸ்தராகவும் எல்லாவற்றுக்கும் காரணமாகி ,
ஆனால் நீர் மாறாதபடி இருக்கிறீர்;
விஹார ரஹிதர் நீர்;
ஸத்யஸ்ய ஸத்யர் நீர்;
எல்லாவற்றையும் அறியும் த்ரிகால க்ஜாநி நீர்;
நீர், எல்லாப் பொருள்களாகவும், சப்தங்களாகவும்,
அவற்றால் அறியப்படும் ரஹஸ்யமாகவும் இருக்கிறீர்;
பலவித நாம ரூபங்களாகவும் இருக்கிறீர்;
உமது க்ருபை இருந்தால்தான், உம்மை அறிய இயலும்;
பரமான அதீதர் ( சாஸ்த்ரங்களால் மட்டுமே அறியத்தக்கவராக இருக்கிறீர் )
நீர், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி தர்மங்களுக்கும் நிகமங்களுக்கும்
ஸர்வ ஸுப ஆசரணைகளுக்கும் ஆதாரம்;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.
ஹே…கிருஷ்ணரே……நீரே பலராமன்; நீரே வசுதேவரின் திருக்குமாரர்
; நீரே பிரத்யும்னர்; நீரே அநிருத்தர்; நீரே சாத்வதர்களுக்குப் பதி;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்;
நீர், உள்ளிருக்கும் குணங்களை வெளிப்படுத்தி, எல்லாவற்றையும் நடத்துபவர்;
நீரே, நான்கு வ்யூஹங்களான மனஸ், புத்தி, தர்க்கம், அஹங்காரம்;
நீர் குணங்களை அறியும்படி செய்கிறீர்;
குணங்களை வ்ருத்தி செய்கிறீர்;
நீரே, ஒன்றிலும் பற்று இல்லாதவர்
; நீரே, மூலப்ரக்ருதியையும் , மாறுதலையும் உண்டாக்குகிறீர்
; நீர், சர்வ வ்யாக்ருத மஹத் ஆதி தத்வத்துக்குக் காரணம்;
நீரே இந்த்ரியங்களை ஆளும் ஹ்ருஷீகேசன்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர், பர, அவர தத்வங்களை அறிந்தவர்;
எல்லாவற்றையும் உள் இருந்து நடத்துபவர்;
நியமன அத்யக்ஷர்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீரே விஸ்வம்;
நீரே விஸ்வாதீதன்;
நீரே அவற்றை நடத்தும் திருஷ்டி; உமக்குப் பல நமஸ்காரங்கள்
உமக்கு சமமாகவும், மேலாகவும் எவரும் இல்லாதவர் நீர்;
சர்வ சர்வேஸ்வரன்; சர்வ ஸ்வதந்த்ரன் நீர்;
நீரே கால சக்தி;
நீரே காலத்தைத் தாங்குபவர்;
இருக்கிற, இல்லாத வஸ்துக்களின் ஸ்வபாவத்தைக் காண்பித்துக் கொண்டு,
ஜீவன்களின் நிலைமைகளில் விளையாடுபவர்;
எல்லா உலகங்களிலும் உள்ள, ஸத்வ, ரஜஸ், தாமஸ, குணங்களுக்கு ஏற்ப,
பலவித சிருஷ்டிகளைச் செய்பவர் நீரே ;
சாதுக்களிடம் பிரியமானவர்;
உமக்கும், உமது பக்தர்களுக்கும் அபராதம் செய்பவர், உமக்குப்
ப்ரியமில்லாதவர்; அவர்களைத் தண்டிக்க அவதாரம் செய்கிறீர்;
எல்லாருக்கும் மஹா அபராதம் செய்த காளிங்கனையும்,
எங்களையும் மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறோம்.
உமது, மகிமைகளை அறியாத எங்களை, க்ஷமிக்கும்படி
வேண்டுகிறோம்.
ஹே….பகவானே……எங்கள் குற்றங்களை மன்னிப்பீராக ;
இந்த ஸர்ப்பம், பிராணனைவிடும் நிலையில் இருக்கிறது;
இவர், எங்களுடைய ப்ராண நாதர்;
இவரிடம் கருணை செய்யுங்கள்;
உயிருடன் விட்டு விடுங்கள்;
நாங்கள், என்ன செய்ய வேண்டும் என்று ஆக்ஜை இடுங்கள் ;
உங்கள் கட்டளைப்படி நடப்பதால், எல்லாப் பாபங்களும் ,
எல்லா ஆபத்துக்களும் நீங்குகிறது
என்று துதித்துப் பிரார்த்தித்தார்கள்.
ஹே….கிருஷ்ணா…..ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம், மேலும் சொன்னார்.
இப்படி மனஸ்ஸை உருக்கும் ஸ்துதிகளால்,
நாக பத்னிகள், உன்னைத் துதித்ததால்,
மூர்ச்சை அடைந்து, தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு,
உன் திருவடிகளால் மிதிக்கப்பட்ட வனான காளிங்கனை நீ,
உயிருடன் விடுவித்தாயாம்.
உன்னுடைய கடாக்ஷத்தால்,
தன் இந்த்ரிய சுவாதீனத்தை அடைந்த காளிங்கன்,
கைகளைக் கூப்பி அஞ்சலி செய்து, உன்னிடம் ப்ரார்த்தித்தானாம்
அதை இப்போது சொல்கிறேன்.
ஹே….பகவானே….ஸ்வபாவமாகவே நாங்கள் துஷ்டர்கள்;
கோபக்குணம் உடையவர்கள்;
எங்களுடைய புத்தி , தேகத்தை ஆத்மாவாகக் காணும் ஸ்வபாவமுள்ளது;
கோபத்தையும், பொறாமையையும் இயற்கையாகக் கொண்டவர்கள்;
உமது மாயையை எங்களால் விலக்க இயலவில்லை;
அதில் மோஹப்பட்டு வீழ்ந்து நசித்து விட்டோம்;
நீர் சர்வக்ஜர்; ஜகத்துக்கு எல்லாம் ஈஸ்வரர்;
உமது அபிப்ராயத்தில் , எது அனுக்ரஹமோ அல்லது நிக்ரஹமோ ,
எதைச் செய்ய விரும்புகிறீரோ
அதைத் தெரியப் படுத்தப் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னானாம்.
இதற்கு, நீ சொன்ன பதில் என்ன தெரியுமா ?
ஸர்ப்பமே…..இந்த இடம் நீங்கள் வசிப்பதற்கு யோக்யதை இல்லை;
உன் பரிவாரத்துடன் புறப்பட்டு, காலதாமதம் செய்யாமல்
ஸமுத்ரத்துக்குப் போய்விடு;
மனைவி, புத்ர பந்துக்கள் சஹிதம் போய் விடு;
இந்த யமுனா நதி தீர்த்தம் பசுக்களுக்கும், மனுஷ்யர்களுக்கும்
உபயோகப்பட வேண்டும்
எவன், நான் சொன்னதை ஸ்மரிக்கிறானோ, எவன் இதை காலை, மாலை
இருவேளை யும் படித்துக் கீர்த்தனம் செய்கிறானோ,
அவனுக்கு எந்தஸர்ப்ப பயமும் இல்லை.
எவன், இந்த யமுனா நதி மடுவில் நான் ஜலக்ரீடை செய்த இடத்தில் தீர்த்தமாடி,
தேவரிஷி தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம் செய்கிறானோ
உபவாசம் இருந்து பூஜிக்கிறானோ, அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும்
விடுபடுகிறான். இது என் கட்டளை.
நீ, இங்கிருந்து, சமுத்ரத்தில் உள்ள, ரமணகம் என்கிற தீவை அடைவாயாக;
உன் ஹ்ருதயத்தில் என்னை பூஜிப்பாயாக; எந்தக் கருடனுடைய பயத்தால்,
தப்பிப்பதற்காக இந்த இடத்துக்கு வந்தாயோ,
அந்த பயம் இனி உனக்கு இல்லை;
இதன் காரணம், என் பாத ஸ்பரிசம் உன் தலைகளில் அடையாளமாக இருக்கின்றன;
ஆதலால், உனக்கு, கருடனிடமிருந்து பயமில்லை என்று அருள் புரிந்தாயாம்.
காளியன் உடனே உன்னைப் பூஜித்து, வணங்கினான்.
நாக பத்னிகள், சந்தோஷத்துடன் உன்னைப் பூஜித்தனர்.
காளியன், உனக்கு, திவ்ய வஸ்த்ரங்கள், ரத்னங்கள், உயர்ந்த தாமரை மாலை,
வாஸனை த்ரவ்யங்கள் இவைகளை சமர்ப்பித்து, உன்னைப் பல தடவை
பத்நிகளுடன் பரிக்ரமம் ( ப்ரதக்ஷிணம்) செய்து, புத்ர பந்துக்களுடன்
ரமணத் த்வீபத்துக்குச் சென்றான்.
அதே சமயத்தில் உன் கிருபையால், யமுனா ஜலத்தின் விஷம்
போக்கடிக்கப்பட்டு, அம்ருதத்துக்கு ஒப்பாக ஆயிற்று.
16 வது அத்யாயம் நிறைவு பெற்றது.
—–
17-அத்யாயம்
ஸ்ரீ கிருஷ்ணன் , ப்ருந்தாவனவாசிகளை , அக்நி விபத்திலிருந்து காத்தல்
பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார்
காளியனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும் ….
ஸ்ரீ சுகர் சொன்னார். கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு
அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி
ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து,
அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன.
இதன்படி,ஸர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன.
இந்த உபசாரங்கள் செய்வதற்கு வேண்டியவைகளை, சர்ப்பங்கள், தங்களுடைய பக்தர்களிடமிருந்து பெற்று வந்தன.
இந்த ஏற்பாடு, பலகாலமாக நடந்து வந்தது.
கத்ருவின் பிள்ளையான காளிங்கன், திமிர் கொண்டு,
கருடனுக்கு ஆகாரம் கொடுக்கவேண்டிய சமரசத் திட்டத்தை மீறி,அதை நிறுத்தி, எல்லாவற்றையும் தானே சாப்பிட்டு வந்தான்.
இதனால் கோபம் கொண்ட கருடன், காளிங்கனைத் தாக்கினான்.
கருடனால் தாக்கப்பட்ட காளிங்கன், உயிருக்குப் பயந்து,
யமுனா நதி தீரத்தில் உள்ள இந்த மடுவில் வந்து ஒளிந்து கொண்டான்.
ஏன் இங்கு கருடன் வர இயலாது என்றால், ஒரு சமயம், கருடன்,மீன்களைச் சாப்பிட இந்த மடுவுக்கு வந்தபோது,
மீன்கள் இங்கு வசித்த சௌபரி ரிஷியைத் தஞ்சம் அடைந்தன. மீன்கள்மீது கருணைகொண்டு, கருடன் இந்த மடுவுக்கு வந்தால்
அவன் உயிர் உடனே போய்விடும் என்று சாபம் கொடுத்திருந்தார்.
இதை அறிந்து வைத்திருந்த காளிங்கன், கருடன் வர இயலாத இந்த மடுவுக்குள் வந்து மறைந்து வாழலானான்.
இப்போது ஸ்ரீ கிருஷ்ணனால் துரத்தப் பட்டு, குடும்ப சஹிதம்இந்த மடுவைவிட்டு வெளியே போய்விட்டான்.
அன்று இரவு, யமுனைக் கரையிலேயே தங்கி, நன்கு தூங்கினர்.
அப்போது, பெரிய நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
களைப்பால் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை, நெருப்பு சூழ்ந்து கொண்டது.திடுக்கிட்டு எழுந்த யாவரும்,
செய்வது அறியாது திகைத்து, உன்னைச் சரணம் அடைந்தார்கள்.
நீ, அந்த அக்னியை வாயால் பருகி விட்டாய்.
எல்லாரும் அக்னியின் ஆபத்திலிருந்து உன்னால் காப்பற்றப் பட்டனர்.
17 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
————————————————————
அத்யாயம் 18
ப்ரலம்பாசுரன் வதம்
நீயும், பலராமனும் , கோபர்களுடன் சேர்ந்து, வ்ரஜபூமியைப் பாவனமாக்கினீர்கள் .
ஒரு சமயம் வனத்தில், பசுக்களை மேய்த்துக் கொண்டு இருக்கும்போது,ப்ரலம்பன் என்கிற அசுரன், கோபாலகர்களைப்போல வேஷம் தரித்து,
உங்கள் இருவரையும் அபஹரித்துப்போக எண்ணினான்.
அவன் யார் என்றும், அவன் கபட எண்ணத்தையும் தெரிந்துகொண்ட நீ, கோபாலகர்களிடம் நாம் யாவரும்
இரண்டு கக்ஷிகளாகப் பிரிந்துவிளையாடுவோமென்றும்,
எந்தக் கக்ஷி ஜெயிக்கிறதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை, தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் ,
முதுகில் ஏற்றிக்கொண்டு, மூட்டை சுமப்பதுபோலச் செய்யவேண்டுமென்றும்சொல்ல,
அதன்படியே, உன் கக்ஷி , பலராமன் கக்ஷி என்று இரண்டாகப் பிரிந்து
விளையாடினீர்கள். பலராமன் கக்ஷி ஜெயித்தது.
ப்ரலம்பன் என்கிற அசுரன்—கோபனாக வேஷமிட்டு வந்தவன் —-பலராமனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு சென்றான்.
பலராமன், இவன் அசுரன் என்பதை அறிந்து இருந்ததால், அவனுக்கு, மலையைத் தூக்குவது போன்ற கனத்தை ஏற்படுத்தினான்.
பாலராமனைச் சுமக்க முடியாமல்,அசுரனின்
வேகம் தடைப்பட்டது. அதனால் கோபமடைந்த அசுரன்,
சுய ரூபத்தை எடுத்துக் கொண்டான். பலராமனைத் தாக்கினான். பலராமன், தன்னுடைய முஷ்டியால் , அசுரனை ஓங்கி அடித்தான்.
உடனே, அசுரனின் தலை நொறுங்கியது. ரத்தத்தைக் கக்கிக்கொண்டு,
பெரிதாக ஓலமிட்டு ,பூமியில் விழுந்து அசுரன் மாண்டான்.
இதைப் பார்த்த கோபர்கள், பலராமனைப் பாராட்டிப் புகழ்ந்து , மகிழ்ந்தனர்.
18 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
—————————
19 வது அத்யாயம்
மீண்டும் நெருப்பு ஆபத்து
பின்னொரு சமயம் , நீயும் கோபாலகர்களும் விளையாடிக்கொண்டிருந்தபோது, பசுக்களும், கன்றுகளும்
புற்களை மேய்ந்து கொண்டே வெகு தூரம் போய்விட்டன. கோபர்கள், பசுக்களைத் தேட ஆரம்பித்தனர். அந்தச் சமயத்தில், நீ,
மேகத் த்வனியைப்போலச் சப்தம் செய்தாய். அதைக்கேட்ட பசுக்களும் கன்றுகளும் சந்தோஷத்துடன் ,
நீங்கள் இருக்குமிடத்துக்குத் திரும்பி வந்தன.
அப்போது, ஒரு பெரிய தீ———புகையுடன் உண்டாகி , வனத்தில் மரங்களையும் ,செடிகளையும் நாசம் செய்தது;
காற்று பலமாக வீசவும், உங்களை நோக்கி
நெருப்பு வேகமாகப் பரவியது. கோபாலகர்கள் மிகவும் பயந்து விட்டனர்.
“கிருஷ்ணா—-கிருஷ்ணா——எங்களைக் காப்பாற்று” என்று கத்தினார்கள்.
உடனே, நீ, ” பயப்படாதீர்கள்——–ஒரு க்ஷணம் எல்லாரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள் —-”
என்று சொன்னாய். கோபாலகர்கள்,
உடனே கண்களை மூடிக்கொண்டனர்.
அந்த க்ஷணத்தில் நீ, அக்னியை வாயால் பருகி விட்டாய்.
கோபாலகர்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, நெருப்பைக் காணவில்லை.
பசுக்களும் பக்கத்தில் இருந்தன.
கோபாலகர்கள், உன்னைத் தெய்வம் என்று கருதினார்கள்.அவர்கள், பசுக்களுடனும், கன்று களுடனும் , நீயும் பலராமனும் பின்தொடர,
அவரவர் வீடுகளுக்கு வந்தனர்.
நீ, புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு, திரும்பி வரும்போது,கோபியர்கள், உன் தர்சனத்தால் பரமானந்தம் அடைந்தார்கள்.
19 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
—————–
20 வது அத்யாயம்
மழையும், வேனிலும்
கோபாலகர்கள், தங்கள் பெற்றோர்களிடம், ப்ரலம்பாசுரன் வதம், நெருப்பிலிருந்து காப்பற்றப்பட்டது, என்று எல்லாவற்றையும் கூறி,
உன்னையும், பலராமனையும் புகழ்ந்தார்கள்.
கோபாலகர்களின் தாய்தந்தையர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
மழைக்காலம் வந்தது. கருமேகங்கள் சூழ்ந்து, மழையைப் பொழிந்தன
. நீயே சூர்யன்; நீ, எட்டு மாதங்களில் உன் தாபத்தால் ஜலத்தை உறிஞ்சி, மாரிக் காலத்தில் மழையைக் கொடுக்கிறாய்.
நீயே பர்ஜன்யன்; உன் கருணை வெள்ளமே மழை .
பசுக்கள் கொடுக்கும் பால், வழிந்து, நீ செல்லும் வழியெல்லாம், பாலாக இருந்தது பிருந்தாவனம் சுபிக்ஷமாக இருந்தது.
பிறகு, சரத் காலத்தில், குளங்களிலும், வாவிகளிலும் தாமரைப் புஷ்பங்கள் விகஸித்தன.
நாட்கள் செல்லச் செல்ல, சூர்யனின் தாபம் அதிகரித்தது.
நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது.
காற்று, வனத்திலிருந்து , பிருந்தாவனத்தை நோக்கி வீசி
தாபத்தை உண்டாக்கியது.
ஆனால், கோபர்களுக்கும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் எந்தத் தாபமும் தெரியவில்லை.
சதா, நீ, அவர்களுடன் கூடவே இருந்ததால்,
அவர்களுக்கு எந்தத் தாபமும் தெரியவில்லை
ஹே, கிருஷ்ணா, உன்னையும், பலராமனையும் ,
யசோதையும், நந்தகோபனும் ,ரோஹிணியும், அளவில்லாப் பாசத்துடன் கொஞ்சி மகிழ்ந்தனர்.
கோபஸ்த்ரீகள் அதீத வாத்சல்யத்துடன் இருந்தார்கள் கோபச் சிறுவர்கள்,உரிமையுடன் நட்பு பாராட்டி ,
உங்களுடன் எப்போதும் வனத்திலும், யமுனா நதி
தீரத்திலும் , விளையாடி மகிழ்ந்தார்கள். கோபிகைகள் ,
நீ, பசுக்களை ஓட்டிக் கொண்டு , காலையில் வனத்துக்குச் செல்லும்போதும்,
மாலையில் பசுக்கள், கன்றுகள், கோபாலகர்களுடன் திரும்பும் போதும், உன் ரூபசௌந்தர்யத்தைப் பார்த்துப்
பரவசம் அடைய அவரவர்கள் வீட்டு வாயிலில் காத்துக் கிடந்தனர்
20 வது அத்யாயம் நிறைவு பெற்றது. ஸுபம்
————–
21 வது அத்யாயம்
பிருந்தாவனத்தை அடுத்துள்ள காடு , புஷ்பங்கள் நிறைந்து இருந்தது.
பூச் செடிகள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள், புஷ்பங்களிளிருந்து
தேனை உறிஞ்சி அருந்தின. பூமி முழுவதும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல ,
பச்சைப்பசேல் என்று இருந்தது. மிகவும் ரம்யமான காக்ஷி.
இந்த வேளையில், நீ, பலராமனுடன் காட்டுக்குள் பிரவேசித்தாய்.
கிளிகள், மயில்கள், குயில்கள், குரங்குகள் என்று மரங்களில் கூட்டம்.
உனக்கு என்ன தோன்றிற்றோ , புல்லாங்குழலைக் கையில் எடுத்து,
கானம் இசைக்கத் தொடங்கினாய். இந்த வேணுகானம், காட்டில்
எங்கும் பரவியது; வ்ரஜபூமியில்—–பிருந்தாவனத்தில், வீடுகள்தோறும் பரவியது;
புஷ்பவதியாக இருந்த கோபிகைகளின் மனஸ்ஸை, வசப்படுத்தியது.
ஹே…..கிருஷ்ணா….நீ எப்படி அலங்கரித்துக் கொண்டிருந்தாய் என்பதை,
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொல்கிறார் . கர்ணீகாரப் பூக்கள்; மயில் தோகை;
இவற்றைத் தலையிலும், காதுகளிலும் வைத்து, அலங்கரித்துக் கொண்டிருந்தாய்.
இடையில், தங்க நிறப் பட்டுப் பீதாம்பரம்; திருமார்பில் வைஜயந்தீ மாலை;
விரல்களால், புல்லாங்குழலின் த்வாரங்களை மூடியும், திறந்தும், உன் திருப்பவள உதடு—–
அம்ருதமயமான உதடு படும்படி, புல்லாங்குழலை வைத்துக் கானம் செய்தாய்.
இந்த வேணுகானம், சர்வபூத மனோஹரமாக இருந்ததாம்.
இப்போது, கோபிகைகள் அடைந்த நிலையைச் சொல்கிறார்.அதை உனக்குச் சொல்கிறேன்
“நம் கண்கள், காதுகள், போன்ற இந்த்ரியங்களின் பலனை—-பாக்யத்தை——இன்று அடைந்தோம்…..
ஹே, தோழிகளே…..ஒரு தடவை, ஜகன்மோகன கிருஷ்ண ரூபத்தைப் பார்த்தாலே ,
,மறுபடியும் மறுபடியும் பார்க்கத்தூண்டும் ; புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு,
கள்ளப் பார்வையுடன்—கடாக்ஷ வீக்ஷண்யத்துடன் ,எங்களைப் பார்த்துக் கொண்டு,
பசுக்களை மேய்ப்பதற்காக அவைகளை ஓட்டிக்கொண்டு,
கோபாலகர்களுடன் செல்லும் அந்த சித்திரம் —
படம்போல மனஸ் ஸில் பதிந்து விட்டிருக்கிறது.
எங்கள் மனம், அவரிடம், பேதலித்திப்போய் நிற்கிறது.
ஹே….சகிகளே….கிருஷ்ணன், சில சமயம், மாமரத்தின் இலைகளைப்
பட்டுப் பீதாம்பரத்துடன் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டு, தாமரை மலர்களை,
இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, குமுத மலர்களைக் காதுகளின் ஓரங்களில்
வைத்துக் கொண்டு, கழுத்தில் வைஜயந்தீ மாலையை அணிந்துகொண்டு,
பசுக்களைப் பராமரிக்கும் என்பதான நாடக மேடையிலே,
இவரும், பலராமனும் இரண்டு உத்தம நடிகர்களைப் போலக்
காக்ஷியளிக்கிறார்கள்.
ஹே….சகிகளே……மேலும் கேளுங்கள்……இந்தப் புல்லாங்குழல்
என்ன பாக்யம் செய்திருக்க வேண்டும் !
கிருஷ்ணனின் அதரச் சுவையை சுவாதீனமாக அனுபவிக்கிறதே !
இந்த அதரம், அதரத்தின் அம்ருதம் கோபிகைகளின் சொத்துக்கள் அல்லவா !
புல்லாங்குழல் அனுபவித்தது போக,
மீதி ரஸத்தைதானே நமக்குக் கொடுக்கிறது.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ,இந்த மூங்கிலின் மாதா பிதாவான
மூங்கில் புதர்கள், யமுனைநதிக்கரையில் இருந்து,
அதன் மயிர்க்கால்கள் ஆனந்தத்தால் நிற்க,
அதன் வளைந்த கிளைகளின் முனைகளில் இருக்கும் தண்ணீரில்
வளரும் தாமரைப் புஷ்பங்களைச் சுமந்துகொண்டு,
இந்த மூங்கில் மரங்கள் ஹ்ருதயம் விகசித்து,
ஆனந்த பாஷ்பங்களை உதிர்க்க,
எப்படி ஒரு சத் புத்ரன், பகவானுடைய கிருபையைப்
பெறும்போது, அந்த சத் புத்ரனின் தாய் தந்தையர் ஆனந்தத்தை அடைவார்களோ ,
அந்த ஆனந்தத்தை, இந்த மூங்கில் மரங்கள் அடைந்திருக்கின்றன.
ஹே, சகிகளே……வேணு கானத்தை கேட்டு, மயில்கள் ஆடுவதைப் பாருங்கள்!
பக்ஷிகள், கோவர்த்தன மலையில் உள்ள பிராணிகள் யாவும்,
எவ்வித சப்தமும் இன்றி, தங்களை மறந்து, இந்தக் கானத்திலே
உன்மத்தமாகிஇருப்பதைப் பாருங்கள் !
இந்தப் பெண்மான்கள், கிருஷ்ணனுடைய விசித்திர வேஷத்தைப் பார்த்தும்,
விசித்திர வேனுகானத்தைக் கேட்டும், தங்கள் பதிகளான ஆண் மான்கள்
அருகில் இருக்கும்போதே, தங்களுடைய கடைக்கண் பார்வையை—
ப்ரணய நோக்கை,கிருஷ்ணனிடம் செலுத்திப் பூஜை செய்கின்றன !
ஹே….சகிகளே……..ஈதென்ன ஆச்சர்யம் !
ஆகாயத்தைப் பாருங்கள்; அப்சரஸ்கள், கந்தர்வ ஸ்திரீகள் கூட்டம்,
கூட்டமாக இருக்கிறார்கள் !கிருஷ்ணனுடைய ரூபத்தையும்,
சீலத்தையும் பார்த்தும் , வேணுவின் கானத்தையும் கேட்டும் ,
மோஹித்துப் போய் மதன வேகத்தால், மனம் பறி கொடுத்தவர்களாக,
புஷ்பங்கள் தலையிலிருந்து நழுவி விழ, வளைகள் கழல,
தலைமயிர் கேசங்கள் அங்குமிங்கும் அலைபாய,
புடவைகள் நழுவுவது கூடத் தெரியாமல், மோஹித்து இருப்பது,
வினோத காக்ஷியாக இருக்கிறதே !
இந்தப் பசுக்களைப் பாருங்கள் ! கன்றுகளுக்குப் பால் கொடுக்க மறந்து,
வாயில் உள்ள புல்லைக்கூடத் தின்னாமல், அப்படியே வழியவிட்டு
தங்கள் காதுகளை நீட்டி, வேணுகானத்தைக் காதுகளால் பருகுகிறதே !
சித்திரங்கள்போல , அப்படியே ஆடாமல், அசையாமல் நிற்கின்றனவே !
ஹே….சகிகளே…. மரங்களில் அமர்ந்து இருக்கும் பக்ஷிகளைப் பாருங்கள் !
மரங்களின் அழகான கிளைகளையும், கொடிகளையும் பாருங்கள்!
இந்தப் பக்ஷிகள், பூர்வ ஜன்மத்தில் ரிஷிகளாக இருந்தவர்களோ!
பழங்களைத் தின்னாமல், தூங்காமல், இயற்கையான ஸ்வபாவமான,
கூவுதலையும் மறந்து, இமைகொட்டாமல் கிருஷ்ணனையே பார்த்து,
வேணுகானத்தைக் கேட்கின்றனவே !
( மரக்கிளை—-வேத சாகை. பழங்களைத் தின்னாமல், கூவாமல் இருப்பது –
பகவானிடம் ஏகாக்ர சிந்தனை )
இந்த மரங்களின் இலைகளைப் பாருங்கள் !கிருஷ்ண தர்சநம் என்கிற
காந்தத்தால் இழுக்கப்பட்டு, கிருஷ்ணனை ஆசையுடன்
பார்ப்பதுபோல் உள்ளதே !
ஹே….சகிகளே….நதிகளைப் பார்த்தீர்களா !முகுந்த கீதம்—-அதன் ராகம்—-
மதுரமான ஆவர்த்தனம் –மனோபாவம், இவைகளால் ஈர்க்கப்பட்டு,
பிரவாகத்தின் வேகம் தடைப்பட்டு, அப்படியே அமைதியாக நிற்கிறதே !
கிருஷ்ணனுடைய திருவடிகளை ஸ்பர்சித்து, தன்னுடைய பிரவாகத்தில்
பூத்த தாமரைப் புஷ்பங்களை , அவனுடைய திருவடித் தாமரைகளில்
சமர்பித்து, அவனை அணைப்பதைப்போல, அலைகளையும்
ஜலத்தின் வலைகளையும் வாரி வாரி இறைக்கிறதே !
ஹே….சகிகளே….ஆகாயத்தில் இதோ மேகங்களைப் பாருங்கள் !
புஷ்பங்களை வர்ஷித்து, குடைபிடிப்பது போல, கிருஷ்ணனுக்கு
ஸேவை செய்கின்றனவே !
ஹே….சகிகளே….இந்த மலைஜாதிப் பெண்களைப் பாருங்கள் !
இவர்களிடம், கிருஷ்ணப் பிரேமை, பரிபூரணமாகத் தெரிகிறதே !
இவர்கள் முகங்களில் உள்ள குங்குமப்பூக்கள், கிருஷ்ண பக்தியின்
தகிப்பால் இளகி, அவர்கள் ஸ்தனங்களில் இந்தப் பூச்சுக்கள்
இறங்கி இருக்கின்றனவே !
கிருஷ்ண தர்சனத்துக்கு தாபப்படுகிறார்களே !
மதன வேகத்தால் துடிக்கிறார்களே !
பிருந்தாவன மேடுகளில் பதிந்துள்ள, ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளையும்,
அதில் உள்ள சிகப்பு வர்ணத்தையும், நினைத்து, நினைத்துப்
புளகாங்கிதம் அடைகிறார்களே ! அவர்களின் மார்புப் பூச்சுகள்;
ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிப் பூச்சுகள் ; இரண்டிலும் உள்ள சிகப்பு நிறம்
ஒத்து இருக்கிறதே !
இவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளை மனஸ்ஸில்
தரித்து இருக்கிறார்கள், ஆச்சர்யம் !
ஹே, சகிகளே !இந்த மலையைப் பாருங்கள் !கிருஷ்ண ப்ரேமையால்,
புதிய ஆனந்தத்தை அடைந்து, புதிய தளிர்களையும்,
புற்களையும் மேனியில் உண்டாக்கி, வாருங்கள்….வாருங்கள்….
.பசுக்கூட்டங்களுடன் வாருங்கள் ! கோபாலகர்களே, இங்கு வந்து
விளையாடுங்கள் ! நிறையப் புல்மேடுகள், நிறையப் பழங்கள்,
நிறைய தீர்த்தம் உள்ளன என்று சொல்லாமல் சொல்லி,
அழைப்பது போல் தெரிகிறதே !
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம் மேலும் சொல்கிறார்;
இந்த கோபஸ்த்ரீகள், கிருஷ்ணனின் வேணுகானத்தைக் கேட்டு,
மாடுகளைக் கட்ட வேண்டிய கயிற்றை மறந்து, யாத்ரீகர்கள்மாதிரி,
உன்னுடைய பால்ய சேஷ்டிதங்களைத் தங்களுக்குள் மகிழ்ச்சியுடன்
பேசிக்கொண்டு, போகும் வழியில் , புளகாங்கிதம் அடைந்து நிற்கும்
மரங்களைப் பார்த்துக் கொண்டு, புல்லாங்குழல் இசையில் ,
சதா உன்னுடைய சிந்தனையில் ஒன்றிப்போனார்கள். அவர்கள் உடல்தான்
தனிப்பட்டு இருந்தது.
21 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்
——————————————————————————————————————————————–
.
அத்யாயம் 22
கோபிகைகளின் காத்யாயினி வ்ரதம்——
ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் வஸ்த்ரங்களை அபகரித்தது—அனுக்ரஹித்தது.
ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்கு மேலும் சொல்கிறார்.
கிருஷ்ணா….கோபிகைகள் காத்யாயினி வ்ரதம் அனுஷ்டித்ததையும்,
யமுனையில் வஸ்த்ரமில்லாமல் குளித்ததால்,தேவதைகளுக்குச் செய்த அபசாரம் என்று,
நீ, அவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பாபம் போக, உன்னை வந்து வணங்கி
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதையும் விவரிக்கிறார்.
ஹேமந்த ருதுவான மார்கழி மாதம் முதல்வாரத்தில்,
கோபிகைகளான கன்னிகைகள் —–உன்னைப் பதியாக அடைவதற்காக,
காத்யாயினி வ்ரதம் அநுஷ்டித்தார்கள்.
மார்கழி மாசத்தில், விடியற்காலையில் எழுந்து, யமுனையில் நீராடி,
அங்கு களிமண்ணால் காத்யாயினி உருவத்தைச் செய்து, சந்தன, குங்கும
த்ரவ்யங்களை இட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து,
கந்த புஷ்பங்களைச் சாற்றி, அக்ஷதை, தூப தீபங்களைச் சமர்ப்பித்து,
தேங்காய், பால் போன்றவைகளால் பிரசாதம் செய்து,
அதை -நைவேத்யம்செய்து, அர்ச்சித்து,
“ஹே….காத்யாயினி……மஹாமாயே….
ஈஸ்வரி….
நந்தகோப குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனை, எங்களுக்குப் பதியாக அளிப்பாய் ..
.உனக்குப் பல நமஸ்காரங்கள்…..” என்று சொல்லி,
பகல் ஒருவேளை மட்டில் ஸாத்விக ஆகாரமான
அக்னியில் சமர்ப்பிக்கப்படும் “சாரு ” போன்ற கஞ்சிப் பாயசத்தை அருந்தி,
இப்படியே பத்ரகாளியையும் பூஜித்து, தினந்தோறும் இப்படிப் பூஜை செய்து,
மாதக் கடைசியில், ——-மார்கழி நோன்பு எனச் சொல்லப்படும்
இதன் முடிவில், வ்ரதம் முடியும் நாளில், விடியற்காலையில்,
உன்னை ஸ்மரித்துக் கொண்டும், உன் கீதங்களைப் பாடிக் கொண்டும்,
தங்களுடைய வஸ்த்ரங்களை யெல்லாம் யமுனைக் கரையில் வைத்துவிட்டு,
யமுனை நதியில்இறங்கி ,கடுமையான குளிரில் தீர்த்தமாடினார்கள்.
இதை அறிந்த நீ, அவர்களுக்கு அநுக்ரஹம் செய்யத் தீர்மானித்தாய் .
அதே சமயம், வஸ்த்ரமில்லாமல் நீராடியது பாபமென்றும்,வ்ரதத்துக்குப்
பங்கமென்றும், அதைப்போக்கி அவர்களுக்கு வ்ரதபலனைக் கொடுக்கத் தீர்மானித்தாய்.
யமுனைக் கரைக்கு வந்து, அவர்களுடைய வஸ்த்ரங்களைஎல்லாம்
எடுத்துக் கொண்டு, கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி, அமர்ந்து,
“பெண்களே……நீங்கள் ஒருமாத காலம் வ்ரதம் அனுஷ்டித்துக் களைத்துப்
போய் இருக்கிறீர்கள்….ஒவ்வொருவராக இங்குவந்து, வஸ்த்ரங்களைப்
பெற்றுக் கொள்ளுங்கள்…..”என்றாய்.
கோபிகைகள், லஜ்ஜையினால், கழுத்தளவு ஜலத்தில் நின்றுகொண்டு ,
“ச்யாமசுந்தரா…..எங்களுக்குக் கெடுதல் செய்யாதே…
.நீ, நந்தகோபனின் ப்ரிய புத்ரன்….அவர் எங்கள் வணக்கத்துக்கு உரியவர்….
குளிரில் நடுங்கும் எங்களுக்கு வஸ்த்ரத்தைக்கொடு….
நாங்கள் உன் தாஸர்கள்…அடிமைகள்…
நீ சொல்லும் எல்லாக் கார்யங்களையும் செய்வோம் ..
.வஸ்த்ரங்களைக் கொடுத்துவிடு…..தராதுபோனால்,
நந்தகோபரிடம் சொல்வோம் ….’ என்றார்கள்.
அதற்கு, நீ, “எனக்குத் தாசர்கள்….சேவகர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்…
.இப்போது ஒவ்வொருவராக நதியிலிருந்து மேலே வந்து,
வஸ்த்ரங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள் ….” என்று சொன்னாய்.
கோபிகைகள், குளிரினால் நடுங்கிக்கொண்டு, யமுனை ஜலத்திலிருந்து
மேலே வந்து, வெட்கப் பட்டுக் கொண்டே, தலையைக் குனிந்து கொண்டு,
உன்னருகே வந்தார்கள்.
நீ, அவர்களிடம், “சுத்தமான வ்ரதம் இருந்தீர்கள்;
ஆனால், வஸ்த்ரமில்லாமல் தீர்த்தாமாடியது, தேவதைக்குச் செய்யும் அபசாரம்;
அந்தப் பாபம் போக, கைகளைக் கூப்பியபடி வந்து, வணங்கி,
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் ; அதனால், உங்கள் பாபம் கழியும் …” என்றாய்.
இப்படி, நீ சொன்னதும், கோபிகைகள் வ்ரதத்துக்குப் பங்கம் வந்தது
என்பதை உணர்ந்து, யாருக்காக வ்ரதம் இருந்தார்களோ , அந்தக் கிருஷ்ணனாகிய நீயே
நேரில் வந்து, பாபத்துக்குப் பிராயச் சித்தம் செய்வதால்,
வ்ரதம் பூர்த்தி ஆகிறது என்று மனம் சமாதானம் அடைந்து, தலையைக் குனிந்து,
கைகளைக் கூப்பி, உன்னிடமிருந்து வஸ்த்ரங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
வஸ்த்ரம் இல்லாததால் வெட்கம்; வஸ்த்ரம் கிடைத்ததால் சந்தோஷம் ;
கிருஷ்ணனே நேரில் வந்து அநுக்ரஹித்ததால் மனஸ் நிறைய கிருஷ்ணப் பிரேமை .
நீ , மேலும் கூறினாய். ” ஹே….சாத்விகளே…….உங்கள் சங்கல்பம், நிறைவேறும்….
.என்னிடம் உங்கள் மனஸ் அர்ப்பணிக்கப்பட்டதால், காமபோக ஆசைகள் விலகி,
என்னிடம் பக்தி செய்து, மீண்டும் மறுபிறவி இல்லாமல், என்னையே அடைவீர்கள் … ”
கோபிகைகள், லஜ்ஜையுடன், தங்கள் சங்கல்பம் நிறைவேறியது என்று பூரித்து,
உன்னுடைய திருவடிகளைத் த்யானம் செய்துகொண்டு,தங்கள் தங்கள் வீடுகளுக்குப்
போய்ச் சேர்ந்தார்கள்.
பிறகு, நீ, கோபர்கள் சூழ்ந்து வர, பிருந்தாவனத்திலிருந்து
பசுக்களை ஓட்டிக்கொண்டு, வெகு தூரம் சென்றாய். சூர்யனின் வெப்பம் கடுமையாக இருந்தது.
கோபர்கள் மரங்களின் நிழலில் ஒதுங்கிக் கொண்டே சென்றார்கள்.
மேலே, மரங்களின் கிளைகளும், இலைகளும் குடைகளைப் போலக் கவிந்து,
சூர்ய வெப்பம், உங்களை அதிகமாகத் தாக்காமல் தடுத்தது.
அப்போது, நீ, கோபர்களிடமும், பலராமனிடமும் பேசினாய்.
” இந்த மரங்கள் பிறருக்காக வாழ்கின்றன; காற்று,மழை, வெய்யில், பனி,
இவைகளைச் சகித்துக் கொண்டு, தங்களை அண்டியவர்களைக் காக்கின்றன ;
பசு,பக்ஷி, ராக்ஷசன், யக்ஷன், மிருகம் மனிதன் எல்லாரையும்
இந்த மரங்கள் காக்கின்றன; இலை, பழம், நிழல், அடிமரம்,
( சந்தனம், அகில் போன்றவை )வாஸனை, பால், பஸ்மம், இப்படிப் பலப்பலவாகக்
கொடுத்து, மனிதர்களின் ஆசையைப் பூர்த்தி செய்கிறது;
இதுதான் வாழ்க்கையின் ஸாரம்—-ஜன்ம சாபல்யம் —திரேகம் எடுத்தவை
பிறருக்காக வாழ்ந்து, தன்னை அழித்துக் கொண்டாவது,
பிறருக்கு உதவுவது உயர்ந்த சுப லக்ஷணம் .
தன்னுடைய ஆயுஸ், பணம், வாழ்க்கை ஜீவனம், புத்தி, வாக்கு, ப்ராணன்
இவைகள் பிறருக்கு உபயோகப்பட்டால், அதுவே ஸ்ரேயஸ்….”
இப்படிப் பேசிக்கொண்டே, நீ, பச்சைப் பசேலென்ற புல்வெளிப்
பிரதேசத்தை,அடைந்தாய். கோபர்கள் , யமுனையில்இறங்கி ஜலத்தை
அள்ளி அள்ளிக் குடித்தார்கள். அவர்களுக்குப் பசி. உன்னையும்,
பலராமனையும் அணுகி, பசிக்கிறது; ஆகாரம் வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
22 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்.
—————————————————————————————————————————
23 வது அத்யாயம்
யக்ஜ பத்நிகளுக்கு அருளியது
கோபர்களால், பசி என்றும், ஆகாரம் வேண்டும் என்றும்
பிரார்த்திக்கப் பட்டதும், நீ, ஆதுரத்துடன்அவற்றைக் கேட்டு,
கோபர்களிடம் பேசினாய்.
ஹே….மித்ரர்களே…… ப்ரஹ்மவாதிகள்…….ப்ராம்மணர்கள்…..
.ஸ்வர்க்கம் செல்லவேண்டும் என்கிற எண்ணத்துடன், “அங்கிரஸம் ”
என்கிற “ஸத்ர ” யாகத்தை, அதோ தெரியும் பர்ணசாலையில்…….யக்ஜ பூமியில்,
செய்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள், அவர்களிடம்போய்,
நானும், பலராமனும் அனுப்பியதாகச் சொல்லி, “அன்னம் கொடுங்கள் ”
என்று கேளுங்கள் என்று சொன்னாய்.
கோபர்கள், அவ்விதமே செய்கிறோம் என்று உன்னிடம் சொல்லி,
யக்ஜவாடிகைக்குச் சென்று, பிராம்மணர்களை அஞ்சலி செய்து,
பூமியில் விழுந்து எழுந்திருந்து, “ஹே……பூதேவர்களே…..நாங்கள் பசுமாடுகளை
மேய்த்துக் களைத்துப்போய் இருக்கிறோம் எங்களுக்குச் சரியான பசி.
பலராமனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் சரியான பசி.
அவர்களுடைய கட்டளைப்படி, உங்களுக்கு அவர்கள்மீது விசுவாசமும்
ச்ரத்தையும் இருக்கிறதென்றால், சாப்பிடுவதற்கு அன்னம் தந்து உதவுங்கள்
நீங்கள் தர்மம் அறிந்தவர்கள். யாகதீக்ஷையுடன், க்ருஹஸ்தன் ஹோமம் செய்யும்
அன்னத்தைச் சாப்பிடுபவர்களைப் போல , நீங்கள் கொடுக்கும் அன்னம்
தோஷத்தை ஏற்படுத்தாது. இது பகவத் ஆக்ஜை…. என்றார்கள்.
ஆனால்…..ஹே…கிருஷ்ணா….அந்தப் ப்ராம்மணர்கள்,
தங்களைப் பெரும் பண்டிதர்கள் என்று நினைத்து, ஸ்வர்க்கம் செல்வதிலேயே
ஆசையாக, கோபர்களுக்கு அன்னத்தைக் கொடுக்கவில்லை.
அந்தப் பண்டிதப் ப்ராம்மணர்கள்—–மூடர்கள். உன் நிஜ ஸ்வரூபத்தை அறியவில்லை.
உன்னை, சாதாரண மனுஷ்யக் குழந்தையாக நினைத்தார்கள்.
க்ருஷ்ணனான , நீயே—-பகவான் விஷ்ணு.;
நீயே யக்ஜ வபு; நீயே தேசம்; நீயே காலம்;
நீயே பூஜா த்ரவ்யம்; நீயே மந்த்ரம்; நீயே தந்த்ரம்;
நீயே ருத்விக்குகள் உச்சரிக்கும் மந்த்ரம்;
நீயே, ஹவிஸ் செய்யும் பொருள்; எந்தத் தேவதையைக்
குறித்து யாகம் செய்யப்படுகிறதோ, அந்தத் தேவதையின் அந்தராத்மா நீதான்;
நீயே, அந்த யாகத்தை அங்கீகரிக்கிறாய்; நீயே, அதற்கு உரிய பலனைக்
கொடுக்கிறாய்; நீயே ருத்விக்குகள்; நீயே, யாக தீக்ஷத யஜமானன்;
நீயே தர்மம்; நீயே யக்ஜமயம் ; நீயே பரப்ரஹ்மம்; நீயே, பூமியில் ஸ்ரீ கிருஷ்ணனாக
அவதரித்து இருக்கிறாய்; இவையெல்லாம் தெரியாமல், உன்னை,
மனுஷ்ய சிசுவாக நினைத்து, தேக, ஆத்ம, விவேகமில்லாத அந்தப் பண்டிதர்கள்,
உன்னை உபேக்ஷித்தனர். அன்னம் தருகிறேன் என்றோ,
தரமுடியாது என்றோ எந்தப் பதிலையும் கூறாமல் உதாசீனப் படுத்தினர்.
கோபர்கள், நிராசையுடன், ஏமாற்றமடைந்து,
உங்களிடம் வந்து நடந்ததைச் சொன்னார்கள்.
நீ சிரித்துக்கொண்டாய். கோபர்களைப் பார்த்து, மறுபடியும் கூறினாய்.
கோபர்களே…..என்னிடம் அன்பைச் செலுத்தி, மனஸ்ஸை அர்பணித்துள்ள
யக்ஜபத்னி களிடம் போய், நானும், சங்கர்ஷணனும் வந்திருக்கிறோம் என்று
சொல்லி, அவர்களிடம் கேளுங்கள்……
கோபர்கள், திரும்பவும் யக்ஜசாலைக்கு வந்தார்கள்;
யக்ஜபத்நிகளைப் பார்த்தார்கள்
“யக்ஜம்செய்யும் ரிஷிகளின் பத்நிகளே…..உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்….
.நாங்கள் பசுக்களை மேய்ப்பவர்கள்; பசுக்களை மேய்த்துக்கொண்டு,
நாங்களும், பலராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வளவு தூரம் வந்து விட்டோம்;
எங்களுக்குப் பசிக்கிறது; ஸ்ரீ கிருஷ்ணனாலும், பலராமனாலும் அனுப்பப்பட்டு,
உங்களிடம் அன்னத்தை யாசித்து வந்திருக்கிறோம் ……என்றார்கள்
இந்த வார்த்தைகளைக் கேட்டார்களோ இல்லையோ, அடுத்த க்ஷணம்,
ரிஷிபத்னிகள், உன்னுடைய கதாம்ருதத்தால் மோஹிக்கப்பட்ட
அந்த உத்தம ஸ்திரீகள்,
ருசியானவை,
சூடானவையான நான்கு விதமான அன்னங்கள்,
பக்ஷணங்கள், ஆகியவைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
யாகம் செய்யும் ரிஷிகள் அவர்களைத் தடுத்தார்கள். பந்துக்கள் தடுத்தார்கள்;
சஹோதரர்கள் தடுத்தார்கள் . இப்படிப் பலரும் தடுத்தும்,
ரிஷிபத்னிகள் அவர்களை லக்ஷ்யம் செய்யவில்லை.
உன் கதாம்ருதத்தைப் பருகி, மனசைப் பறி கொடுத்து இருந்த அவர்கள்,
கோபர்கள் பின்னாலேயே அன்னம், பக்ஷணங்களைச் சுமந்துகொண்டு,
ஓடோடி நீ இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்;
அப்போது, நீ, எப்படி இருந்தாய் தெரியுமா !
ச்யாமள நிறம்; தங்கத்தால் ஆன பீதாம்பரத்தை
உடுத்திக் கொண்டிருந்தாய்; மார்பில் வனமாலை; தலையில் மயில் தோகை;
மற்றும் பலப்பல புஷ்பங்கள்; இலைகள்; காது ஓரங்களில் உத்பல புஷ்பங்கள்;
தாமரை வதனம்; அதில் புன்சிரிப்பு; புன்சிரிப்புடன் அவர்களைக் கடாக்ஷித்தாய்.
ஹே….கிருஷ்ணா…
அந்தக் கடாக்ஷ வீக்ஷிண்யத்தாலே ,ரிஷிபத்நிகளின் நெஞ்சம் நிரம்பியது.
ஹே….கிருஷ்ணா… நீ சர்வக்ஜன்….கணவன்மார்கள் தடுத்தபோதும்,
உன்னிடம் உள்ள பக்தியால் உன்னைப் பார்க்கும் ஆசையில்
ஓடோடி வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சொன்னாய்.
உங்களுக்கு நல்வரவு; நீங்கள் என் ஆத்மப் பிரியர்கள்;
உங்களது பிராணன், மனஸ், புத்தி, பதி, தனம் எல்லாவற்றையும்
என்னிடம் அர்ப்பணித்தீர்கள்;
நான் மிகவும் திருப்தி அடைந்தேன்; யக்ஜசாலைக்குத்திரும்புங்கள்;
உங்கள் பதிகள் யக்ஜத்தை நிறைவேற்றட்டும் .
அதற்கு , ரிஷிபத்னிகள், ஹே….பரமாத்மா…..நாங்கள்,
வெகு ஸ்ரமத்துடன் துளசி தாசர்களாக ஆகி இருக்கிறோம்;
உமது பாத பத்மங்களை அடைந்து, அங்குள்ள துளசியை ,
எங்கள் சிரஸ்ஸில் சூட்டிக்கொண்டிருக்கிறோம்;
அதை, உமது கால்களால் உதைத்ததுபோல் இருக்கிறது, உமது பேச்சு;
பந்துக்கள், மித்ரர்கள், பதிகள் இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு,
நீயே கதி என்று வந்து விட்டோம்; இப்போது திரும்பிப்போனால்,
பிதாக்களோ, மாதாக்களோ, பந்துக்களோ ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;
உமது பாதங்களில் விழுந்து சரண் அடைந்த எங்களைக் காப்பாற்று;
உம்மைத்தவிர வேறு கதி இல்லை……..என்றார்கள்.
ஹே….ரிஷிபத்நிகளே…….உங்களுடைய கணவன்மார்களோ,
பந்துக்களோ, மேலே ஆகாசத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தேவர்களோ,
எந்தக் குறையும் சொல்லமாட்டார்கள்;
என்னுடன் உங்கள் ஆத்மாவை ஐக்கியப் படுத்தினீர்கள்;
என் பாதஸ்பர்சம் பெற்றதால், உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை
என்று சொல்லி ஆசீர்வதித்தாய்.
ரிஷிபத்னிகள் ,திருப்தி அடைந்து, யாகசாலைக்குத் திரும்பினார்கள்.
ரிஷிகள் தங்கள் யாகத்தை நிறைவு செய்தார்கள். நீயும், பலராமனும், கோபர்களும் ,
ரிஷிபத்னிகள் கொண்டுவந்து கொடுத்த வைகளைச் சாப்பிட்டீர்கள்.
இப்போது, ரிஷிகளுக்கு, மனவருத்தம் ஏற்பட்டது.
பகவான் கட்டளையால், நம்மிடம் வந்த கோபர்களை உல்லங்கனம் செய்துவிட்டோமே….
ஆனால், இந்த ஸ்திரீகள் பக்தியினால், பகவானைத் தரிசித்து விட்டார்களே……
.நமது ஆத்மா நாசமடைந்து விட்டதே…..வேதங்களை ஓதி என்ன பயன்…
பிராம்மணப்பிறவி, யாகம் எல்லாம் வீணாகி விட்டதே…..
இது பகவான் செய்யும் மாயை என்று அறியாமல் இருந்து விட்டோமே…
.இந்த ஸ்த்ரீகளுக்கு,நம்மைப் போல எந்த சம்ஸ்காரமும் இல்லை;
வித்யை இல்லை; ஆனால், விலை மதிக்க முடியாத கிருஷ்ண பக்தி இருக்கிறது;
அது, நம்மிடம் இல்லாமல் போய் விட்டது…நாம், படித்தும் மூடர்கள்….
நல்லது,கெட்டது தெரியவில்லை…படிப்பு இருந்து என்ன பயன்..
நமது பக்தியினால், பகவானுக்கு என்ன லாபம் ? நமக்கல்லவா லாபம் !
அதை விட்டு விட்டோமே…பசிப்பதற்கு அன்னம் வேண்டுமென்று
பசிப்பவனைப்போல நடித்த , பகவானை
ஏமாற்றிவிட்டோமே….நமக்கு மோக்ஷம் கொடுக்கும் பிரபுவுக்கு,
அன்னம் கொடுக்காமல் இருந்து விட்டோமே…..
நமக்கு, ஹரி இல்லால், வேறு பகவான் இல்லை…
.குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்திப்போம்…..
ஸ்ரீ மஹா லக்ஷ்மி, பகவத் பக்தியைக் கொடுப்பவள்….புருஷகார பூதை….
அவளையும் பூஜிப்போம்…ஸ்ரீ கிருஷ்ணனே விஷ்ணு…..
அவரே, யோகிகளுக்கெல்லாம் மேலானவர்…
அவரே, ஸ்ரீ கிருஷ்ணனாக ,யது குலத்தில் அவதரித்து
இருக்கிறார் என்பதை அறியவில்லையே……
இந்தப் பேரறிவு, பத்நிகளால் அல்லவா வந்தது !
அவர்களைப் பத்நிகளாக அடைய நாம் பாக்யம் பெற்றவர்கள்…
அவர்களுடைய புத்தி, ஸ்ரீ கிருஷ்ணனிடம் பூரணமாக
அர்ப்பணிக்கப் பட்டதைப்போல நாமும் அர்ப்பணிப்போம்…..
எங்கள் குற்றங்களை மன்னியுங்கள் என்று பிரார்த்திப்போம்…
.ஸ்ரீ மஹா லக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை—–
ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்து இருப்பவனை நமஸ்கரிக்கிறோம்…
என்றார்கள்.
இப்படி, ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரித்த பிராம்மணர்கள்,
உனக்குச் செய்த அவமானத்தாலும், கம்சனிடம் உள்ள பயத்தாலும்
, யாகசாலையை விட்டு வெளியே வரவில்லை.
அது அவர்கள் துர்பாக்கியம்
23 வது அத்யாயம் நிறை வடைந்தது. ஸு ப ம்
—————————————————————————————
அத்யாயம் 24
கோவர்த்தன கிரிக்கு பூஜை
இப்படியாக, கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கள் யாவரும்
நீயும், பலராமனும் செய்யும் லீலைகளை அனுபவித்துக்கொண்டு,சந்தோஷமாக
இருந்தார்கள். அப்போது ஒரு நாள்…….
இந்திரனைக் குறித்து யாகம் செய்வதற்காக, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இதை, நீ பார்த்தாய். இந்த யாகம் , யாருக்காக, எதற்காக என்று தெரிந்திருந்தும்,
(நீ பரமாத்மா அல்லவா ) நீ, நந்தகோபனைக் கேட்டாய்; பெரியவர்களைக் கேட்டாய்.
“கோலாகலமாக ஏற்பாடுகள் செய்கிறீர்களே,
யாருக்காக, எந்த பலனை உத்தேசித்து இப்படி ஏற்பாடுகள் செய்கிறீர்கள்?
பண்டிதர்கள், தீர்க்கமாக ஆலோசனை செய்து, கர்மாவைத் தொடங்கி
அதைச் செய்து, ஸித்தியை அடைகிறார்கள்;
அவிவேகிகள், ஆலோசனை செய்யாமல் கர்மாக்களைச் செய்தால்,
அந்தப் பலனை அடைவதில்லை;
ஆதலால், இந்தக் கோலாகலம் எதற்காக ….? ” என்று கேட்டாய்.
இதற்கு, நந்தகோபன் பதில் சொன்னார். “குமாரா…..நானும் மற்றவர்களும்,
இந்திரனை…..மேகங்களுக்கு அதிபதியாக இருப்பவனை….
.பூஜை செய்யப் போகிறோம்; இந்திரன், மழைக்குத் தேவதை;
மேகங்கள் அவனிடமிருந்து உண்டாகின்றன;
அவன் அருளால், மழை வர்ஷிக்கிறது; அதனால், கோக்கள், என்று
எல்லாருக்கும் சுபிக்ஷம் ஏற்படுகிறது;
தொன்றுதொட்டு, இதை நடத்தி வருகிறோம் ” என்றார்.
அதற்கு, நீ, இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக
மனத்துக்குள் தீர்மானித்து, பதில் சொன்னாய்.
” பிதாவே….ஒரு ஜீவன் கர்மாவினால் பிறக்கிறான்;
சுகம், துக்கம், பயம் எல்லாம் கர்மாவினால் ஏற்படுகிறது;
கர்மாவினாலேயே முடிவை அடைகிறான்;
பகவான், அந்தந்தக் கர்மாக்களுக்கு , அதற்கு உரிய பலனை அளிக்கிறார்;
அதனால், அவர்தான் பூஜிக்கப்படவேண்டும்;
இந்திரன், பகவான் அல்ல; கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணம்;
கர்மாவுக்குக் குரு பகவான்; இந்திரன் அல்ல;
பகவானை விட்டு விட்டு, அந்நிய தேவதையைப் பூஜிபபது சரி அல்ல;
சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களே
ஸ்திதி, உற்பத்தி, நாசம் ஆகிய மூன்றுக்கும் காரணம்;
ரஜோ குணத்தால், உலகம் பலவிதமாக விரிவடைகிறது;
உற்பத்திக்குக் காரணம், ரஜஸ்;
இதனால், மேகங்கள் வர்ஷிக்கின்றன; வர்ஷிக்கும் ஜலத்தால்
எல்லாப் பிராணிகளும் சந்தோஷம் அடைகின்றன;
இதில், இந்திரன் செய்வது என்ன இருக்கிறது ?
நாம், நித்யம் வனத்தில் சஞ்சரித்து, காடுகளிலும், மலையிலும்
பசுக்களை ஓட்டிக்கொண்டு திரிகிறோம்;
ஆகவே, ஆராதிக்கப்பட வேண்டியவை பசுக்கள், பிராம்மணர்கள்,
இதோ இந்தக் கோவர்த்தன மலை;
இப்போது சேகரித்து வைத்துள்ள த்ரவ்யங்களால், இந்த மூன்றையும் பூஜிப்போம்;
இந்திரனுக்கு வேண்டாம்; பிதாவே, நீங்கள் யாவரும் சம்மதித்தால்,
இப்படியே செய்வோம்; இதனால், பசுக்கள், பிராம்மணர்கள், கிரி மூவரும்
சந்தோஷித்து, நமது இஷ்டங்களைப் பூர்த்தி செய்வார்கள்;
இது என் அபிப்ராயம் ” என்று சொன்னாய்.
உன்னுடைய, இந்த யோசனையை, நந்தகோபரும், மற்ற கோபர்களும் கேட்டு,
“நல்லது, நல்லது….” என்று சொல்லி, பசுக்கள், பிராம்மணர்கள், கோவர்த்தனகிரி ……..
பூஜையை ஆரம்பித்தார்கள்.
இந்திரனுக்குச் செய்யவேண்டிய யாகத்துக்காக சேமிக்கப்பட்ட த்ரவ்யங்கள்
இவைகளுக்கு உபயோகப்பட்டன. பிராம்மணர்கள், சந்தோஷித்து, ஆசீர்வாதம் செய்தார்கள்.
நீ, பெரிய ரூபமாக எடுத்து, நானே கோவர்த்தன கிரி என்று சொல்லி,
எல்லாவற்றையும் சாப்பிட்டாய். கோபர்கள் நமஸ்கரித்தனர்.
அவர்களுடன் சேர்ந்து, நீயும் பூஜித்து, “பெரிய ரூபத்தைப் பாருங்கள்….நாம் கொடுக்கும்
பூஜை த்ரவ்யங்களை ஏற்று, நம்மை, இந்தக் கோவர்த்தன கிரி அனுக்ரஹிக்கிறது ;
எவர்கள் தன்னை மரியாதை செய்யவில்லையோ அவர்களைக் கொல்கிறது;
நம்முடைய நலன், பசுக்களுடைய நலம் இவற்றுக்காக கோவர்த்தன கிரியைப்
பூஜித்து வணங்குவோம் …..” என்றாய். எல்லோரும், அப்படியே கிரியைப் பூஜித்தனர்
. பிறகு, அவரவர் வீடு திரும்பினர்.
24 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்
——–
25-அத்யாயம்
கோவர்த்தன கிரிதாரி
இந்திரனுக்குப் பிரமாதமான கோபம்; தனக்குச் செய்ய வேண்டிய பூஜையை வழக்கம் போலச் செய்யாமல்,
மலைக்குச் செய்ததால் இந்தக் கோபம்.
ஸம்வர்த்தகம் என்கிற மேகக் கூட்டங்களைக் கூப்பிட்டான்;
“”கோபர்களுக்கு மிகவும் மதம் பிடித்து விட்டது;கர்வம் அவர்களுக்கு;
கிருஷ்ணன் என்கிற ஒரு சாதாரண மனிதக் குழந்தையின் சொல்லைக் கேட்டு
என்னை அலட்சியம் செய்துவிட்டனர்;
கர்மவசப்பட்ட சாமான்ய மனுஷ்யர்கள்,தங்களைப் பண்டிதர்களாக நினைத்து, சம்சாரத்தைத் தாண்டும் செயல் போல இது இருக்கிறது;
செல்வச் செருக்காலே என்னை அவமதித்து,
அற்ப மானிடப் பையன் —-மூடன்——தன்னைப் பண்டிதன் என்று நினைத்து இறுமாப்புடன் உள்ள
இந்தக் கிருஷ்ணனின் பேச்சை நம்பிஎனக்கு அநீதி செய்கிறார்கள்; நீங்கள் கூட்டமாகச் சென்று,
பிரளய காலத்தில் எப்படி மழையாகப் பொழிவீர்களோ அப்படி மழையைப் பொழிந்து சர்வ நாசத்தை உண்டாக்குங்கள் “” என்று கட்டளை இட்டான்.
ஹே……கிருஷ்ணா….உன்னை , இன்னாரென்று இந்திரன் அறியவில்லை
ஸம்வர்த்தகம் என்கிற அந்த மேகக் கூட்டங்கள், இந்திரனின் ஆணைப்படி, அசுர வேகத்துடன்
இடியும் மின்னலுமாக தாரை தாரையாக பலத்த காற்றுடன்
ஆலங்கட்டியாக ,கற்களை வர்ஷிப்பதுபோல இடைவிடாமல் மழையைப் பொழிந்தன
வ்ரஜபூமி முழுவதும் வெள்ளக்காடு ஆகக் காக்ஷி அளித்தது.
கோபர்களும்,கோபியர்களும் , பசுக்களும் நடுநடுங்கினர்;
ஹே கிருஷ்ணா—–ஹே கிருஷ்ணா —உன் பாதங்களைச் சரண் அடைந்தோம்;
பக்தவத்சலா —-நீதான் துணை—நீதான் எங்களைக் காக்க வேண்டும் என்று உன்னை அடைக்கலமாக வந்து சரண் அடைந்தனர்;
பலத்த காற்று, கல்மழை , வெள்ளப் பெருக்கு இவைகளை நீ பார்த்தாய்.
சரி, இது இந்திரனின் கோபத்தால் விளைந்த செயல் என்று அறிந்தாய். இதற்கு ஒரு மாற்று உபாயம் தேடி ,
தங்களை சர்வ லோகங்களுக்கும் அதிபதி
என்று நினைத்து, மூடத்தனத்தினால் எதிர்ப்பவர்களை சிக்ஷிக்கிறேன் என்று சங்கல்பித்தாய்
யோக சக்தியால் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்தாய்.
சரணம் என்று சொன்னவர்களை—–சரணம் என்று வந்தவர்களை——
காப்பாற்றுவது உன் வ்ரதம் அல்லவா !
இப்படி உனக்குள் சங்கல்பித்து, மழையில் தோன்றி இருக்கும் காளானை எடுப்பது போல
ஒரு கையால் கோவர்த்தன கிரியை ,அடித் தளத்தோடு பெயர்த்து எடுத்து,உன்னுடைய இடது கையின் சுண்டு விரலால் தாங்கி ,
உயரத் தூக்கி, உரக்கச் சொன்னாய்
ஹே–கோபர்களே,கோபியர்களே—-வயதானவர்கள், இளம் சிறார்கள் , பசுக்கள், கன்றுகள் எல்லாரும் உங்கள் உடைமைகளுடன் ,
இந்தக் குடையின் கீழே வாருங்கள், உங்களுக்கு எந்தப் பயமும் வேண்டாம்,
மலை நழுவி விழுந்து விடுமோ பலத்த காற்று அடித்துக்கொண்டு போய்விடுமோ ,மழைவெள்ளம் உயிரைப் பறித்து விடுமோ
என்கிற எந்தப் பயமும் வேண்டாம், சரணம் என்றவர்களைக் காப்பாற்றுவது
என் வ்ரதம், உங்கள் எல்லாருக்கும் அபயம் அளிக்கிறேன் —-“என்றாய்
உடனே, கோபர்கள், கோபியர்கள் வயதான ஸ்திரீ புருஷர்கள் , நந்தகோபன் யசோதை ரோஹிணீ பசுக்கூட்டங்கள்
வண்டிகள் இவர்களின் உடைமைகள் என்று எல்லாமே கோவர்த்தன கிரியின்அடியிலே புகுந்தனர். உன்னுடைய தர்சனம், கடாக்ஷ வீக்ஷிண்யம்
இவற்றாலே அவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் பசி இல்லை;தாகம் இல்லை;. மிகவும் சௌகர்யமாக , ஒருநாள், அல்ல,
இருநாட்கள் அல்ல—–ஏழு நாட்கள், கோவர்த்தன மலையின் அடியில் –உன் திருவடி நிழலில் , எவ்வித பாதிப்பும் இன்றி இருந்தனர்.
இந்திரன் கலங்கி விட்டான்; பயத்தால் நடுங்கி விட்டான்;
தன்னுடைய தவறுக்கு வருந்தினான்;
மேகங்களைத் திருப்பிப் போகும்படி உத்தரவிட்டான்.
மழை நின்றது ; காற்று அடங்கியது; சூர்யன் தோன்றினான்
நீ, கோபர்கள் எல்லாரிடமும் , இனிமேல் நீங்கள் வ்ரஜ பூமிக்கு—விருந்தாவனத்துக்குச் செல்லலாம் என்று சொன்னாய்.
யசோதையும் நந்தகோபனும் ரோஹிணியும் வ்ருத்தர்களானகோபர்களும் கோபிகைகளும் உனக்குத் திருஷ்டி கழித்து,
அக்ஷதை புஷ்பங்கள் தூவி ஆசீர்வதித்தனர்.
பலராமனும் ஆலிங்கனம் செய்து ஆசீர்வதித்தான்.
இவற்றைக் கண்ட தேவ கணங்கள் ஆகாயத்திலே
வாத்தியங்களை வாசித்தார்கள். உன்மீது புஷ்பமாரி பொழிந்தார்கள். கோபர்கள் அவர்களும் வண்டிகள்,
உடைமைகள் பசுக்கள் இவைகளுடன் தத்தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.
நீ, அந்த மலையை , பழைய இடத்திலேயே வைத்தாய்;
இந்த அதி மானுஷச் செயலை எல்லாரும் பார்த்தார்கள்;
அடியேனும் இப்போது மனக் கண்ணால் பார்த்தேன்
நீயும் விருந்தாவனத்தை அடைந்தாய் ஆனந்த பரவசர்களான கோபிகைகள்,
உன்னுடைய பெருமைகளைப் பாடி, உன்னை எப்போதும் போல ஹ்ருதயத்தில் தரித்தார்கள்
25 வது அத்யாயம் நிறைவடைந்தது —–சுபம்
—————————————————————————
அத்யாயம்—-26
ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமைகள்—-நந்தகோபன் கொண்டாடுதல்
கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்; கோப ஸ்திரீகள் வியந்து போனார்கள்;
உன்னுடைய அமானுஷ்ய செயல்கள் அவர்களைப் பிரமிக்க வைத்தது
.நம்முடைய கண்ணனா இப்படி வியப்பான செயல்களைச் செய்வது ?
இவன் எல்லாக் குழந்தைகளைப்போல சாதாரண பாலகன் இல்லை ;
ஆனால், நினைப்பதற்கே வெட்கப்படும் ஏழைகளான நம்மிடையே இவன் இங்கு வந்து பிறந்து , வளர்வதற்குக் காரணம் என்ன ?
ஏழு வயதுகூட நிரம்பாத சின்னஞ்சிறு பாலகன், ஒரு பெரிய மலையைப் பெயர்த்து எடுத்து,
இடதுகை சுண்டுவிரலால் அனாயாசமாக ஏழுநாட்கள் தாங்கிக்கொண்டு ,நம்மையெல்லாம் பாதுகாத்தான்; ஆச்சர்யம்
சின்னஞ்சிறு சிசுவாக இருந்தபோது, மகாபலம் கொண்ட பூதனையை ஸ்தன்யபானம் செய்யும் பாவனையில், பாதிக் கண்களை மூடிக்கொண்டு ,
அவள் உயிரையே உறிஞ்சி அவளை முடித்தான்; ஆச்சர்யம்
மூன்றுமாதக் குழந்தையாக இருந்தபோது, தொட்டிலில் படுத்துக்கொண்டே ,தொட்டிலுக்கு அடியில் வண்டி—-சகடம் உருவில் ,
தன்னைக் கொல்ல வந்திருந்த அசுரனை ,திருவடியால் உதைத்து ,
அவனை அழித்தான்;ஆச்சர்யம்
ஒருவயதுகூட நிரம்பாத சமயத்தில், தரையில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணனை,
சுழற்காற்று ரூபத்தில் வந்து தூக்கிக் கொண்டுபோய்க் கொல்ல முயற்சித்த திருணாவர்த்தன் என்கிற அசுரனை ,
அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டே ,கழுத்தை நெறித்துக்கொன்றான்; ஆச்சர்யம்
யசோதை தாம்புக் கயிற்றால் கிருஷ்ணனை, உரலோடு கட்டியிருந்த சமயத்தில் ,உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டு
போய் இரண்டு மரங்களுக்கு நடுவில் புகுந்து
உரலை அவற்றின் நடுவே இழுத்து, இரண்டு மரங்களையும் வேரோடு சாய்த்தான்;ஆச்சர்யம்
கோபாலகர்களும் ,பலராமனும் சூழ்ந்து இருக்க, ஒரு அசுரன் கொக்கு வடிவத்தில் வந்து இவனைமட்டில் கொத்தி எடுத்துச் செல்ல,
கிருஷ்ணன் அந்தக் கொக்கின்
இரு அலகுகளையும் பிளந்து அந்த அசுரனை முடித்தான்; ஆச்சர்யம்
இன்னொரு சமயம் இதேபோல பசுக்களை மேய்க்கும்போது,கன்றுக்குட்டி உருவில் வந்து இவனைக் கொல்ல நெருங்கிய
அசுரனின் இருகால்களைப் பிடித்து விளாமரத்தின்மீது வீசி அந்த அசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்
பலராமனும் கிருஷ்ணனும் பனங்காட்டில் ஒருசமயம் விளையாடிக் கொண்டிருந்த போது,கழுதை உருவில் வந்து
கிருஷ்ணனைக் கொல்ல நெருங்கிய தேனுகாசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்
ஒரு சமயம்,பிரலம்பன் என்கிற அசுரன் பலராமனால் கொல்லப்பட்டான்;கோபாலகர்கள் காட்டுத் தீயால் சூழப்பட்டு நடுங்கிய வேளையில்
கிருஷ்ணன் இவர்களையும் பசுக்களையும் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றினான்; ஆச்சர்யம்
பிறிதொரு சமயம், சர்ப்பராஜனான காளியனை அடக்கி ,
யமுனையிலிருந்து அவனையும் மற்ற சர்ப்பங்களையும் அகற்றி,யமுாதீர்த்தம் பசு பக்ஷி மரம் மனிதர்கள் யாவருக்கும்
உபயோகப்படும்படி செய்தான் ; ஆச்சர்யம்
இப்போது, ஒரு சுண்டு விரலால் மிகப் பெரிய மலையான கோவர்த்தன கிரியை எடுத்துத் தூக்கிப் பிடித்து ஏழுநாட்கள் அதை—அந்த மலையைக்
குடைபோலத் தாங்கி எங்கள் எல்லாரையும் காப்பாற்றினான்; அதி ஆச்சர்யம்
ஹே நந்தகோபா, ஹே யசோதா—–இந்தக் கிருஷ்ணன் ,உங்களுக்குமட்டில் புத்ரன் அல்ல
எங்கள் புத்ரனைப்போல அன்புடன் அவனை நாங்கள் நேசிக்கிறோம்;
இவன் சாதாரண பாலகன் இல்லை; அதிமானுஷச் செயல்களைச் செய்கிறான்;
இவன் அந்த பகவான்தான் என்று கோபர்கள் கூறினார்கள்.
அதற்கு , நந்தகோபன்
கோபர்களே,கிருஷ்ணனின் சின்னஞ்சிறு வயதிலேயே , கர்க்கரிஷி இங்கு வந்திருந்து,இந்தக் குழந்தை,
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணத்துடன்
பல ரூபங்களில் பிறந்து இருக்கிறான்; கருப்பு வர்ணத்துடன், இவன் வசுதேவருடைய க்ருஹத்தில் பிறந்தான்;
இவனுக்குப் பல ரூபங்கள், பல நாமங்கள் உண்டு ;அவைகளை நான் அறிவேன்; மற்றவர்கள் அறியமாட்டார்கள்;
இந்தக் குழந்தை உங்களுக்கு, கோகுல வாசிகளுக்கு நன்மை யை அளிப்பான்;
ஆனந்தத்தை அளிப்பான்; இவனால் உங்கள் அனைவர்க்கும் வரும் கஷ்டங்கள் விலகும்;
ஆபத்துக்கள் அகலும்; இவனிடம் அன்பு செலுத்துபவர்கள் பாக்யசாலிகள்;
அவர்களை எந்த எதிரியாலும் வெல்ல முடியாது;
எவனைக் கீர்த்தனம் செய்வதாலும், கதாம்ருதத்தைக் கேட்பதாலும் எல்லாப் பாபங்களும் தொலைந்து நற்கதி ஏற்படுமோ
அவனே உனக்குக் குழந்தையாக வந்து இருக்கிறான்
இப்படியாக,ஸ்ரீ கர்க்காசார்யர் என்னிடம் சொன்ன நாளிலிருந்து,கிருஷ்ணனை என் பிள்ளையாகப் பார்ப்பதில்லை;
சாக்ஷாத் ஸ்ரீ நாராயணனின் அம்சமாகவே பார்க்கிறேன் ;
நம் துன்பங்களைப் போக்க வந்த பிரபுவாகக் கருதுகிறேன்என்று நாத்தழுதழுக்க, மெய்சிலிர்க்க விரித்து ரைத்தான் .
ஹே—-கிருஷ்ணா—-கோபர்கள்
மிக மிக ஆ ச்சர்யப்பட்டார்கள்.
நந்தகோப னையும் யசோதையையும் உன்னையும் மிகவும் கொண்டாடினார்கள்.
உன்னை வேண்டிக்கொண்டார்கள்
ஹே,பிரபோ,எப்போதும் எங்களுக்கு அநுக்ரஹ ம் செய்யவேண்டும்;
இந்திரன் கோபித்து ,இடி மின்னலுடன் பெரிய மழையை உண்டாக்கிஎங்களை அழிக்க முற்பட்டபோது, கோவர்த்தனகிரியை அனாயாசமாகப்
பெயர்த்து எடுத்து ,இடது சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி ஏழுநாட்கள் எங்களுக்கு எவ்வித ஸ்ரமமும் இன்றி
எங்களையும் பசுக்களையும்கன்றுகளையும் ரக்ஷித்தீரே
உமக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் என்று கண்ணீர் மல்கஉனக்கு நமஸ்காரங்களைச் செய்தார்கள்
26 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
—————————————————————————-
அத்யாயம் 27
இந்திரனின் ஸ்துதி—–காமதேனுவின் ஸ்துதி–கோவிந்த பட்டாபிஷேகம்
வ்ரஜபூமி வாசிகளையும்,பசுக்களையும் , கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து
நீ காப்பாற்றியதைப் பார்த்த காமதேனு என்கிற பசு தேவலோகத்தில் இருந்துஇங்கு உன்னிடம் வந்தது.
இந்திரன் யோசித்தான்; தன் செயலுக்கு மிகவும் வெட்கப்பட்டான்; அவனும் ,நீ தனியாக இருக்கும் சமயத்தை
எதிர்பார்த்துக் காத்து இருந்து ,தேவ லோகத்தில் இருந்து கீழிறங்கி உன் இருப்பிடம் வந்தான்.
அவனுடைய தலைக் கிரீடம் பூமியில் படியும்படி கீழே விழுந்துஉன்னை நமஸ்கரித்தான்.
உன்னை அஞ்சலி செய்தான். ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினான்
ஹே—பிரபோ—–உமது ஸ்வரூபம், விசுத்தஸத்வம்—-
-இந்த உலகம் உம்மிடமிருந்து தோன்றினாலும், அதன் தோஷங்கள் உம்மை அண்டாது;
மனுஷ்யர்களுக்கு ஏற்படும் மறுபிறப்பு, லோபம், தேகத்தையே ஆத்மாவாகக்கண்டு பிரமித்தல் இவை யாவும் சம்சாரிகளுக்கு அடையாளங்கள்;
நீர் பகவான்; உம்மிடம் இந்த தோஷங்கள் கிடையாது;
நீர் சர்வ நியந்தா; தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் சக்தி பெற்றவர்;
நீரே எங்களுக்குப் பிதா;
நீரே எங்களுக்குக் குரு;
நீர்,யாராலாலும் ஜெயிக்கப்பட முடியாதவர்;
உலக க்ஷேமத்துக்காக ,மனுஷ்ய தேகத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்;
நிஜ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு இருக்கிறீர்;
மதம்—கர்வம் கொண்ட என்னைப் போன்றவர்களின் கர்வத்தை அழிக்கிறீர்;
நாங்கள்,அற்ப புத்திசாலிகள்; உம்மை அலட்சியப்படுத்தி இருக்கிறோம்;
அதைப் பொருட்படுத்தாமல் ,பிரார்த்திக்கும்போது அபாயத்தை அளிக்கிறீர்;
அதனால்,உம்மிடம் பக்தி மேலோங்குகிறது;
நாங்கள் ஜகத்துக்கு ஈசர்கள் என்கிற அபிமானம் அழிகிறது;
உமது கட்டளையை சிரமேற் கொள்கிறோம்;
கர்வத்தில் மிதந்த எனக்கு, உமது பிரபாவம் எளிதில் புலப்படவில்லை;
அபராதம் செய்துவிட்டேன்;
ஹே—பிரபோ—எங்களை மன்னிப்பீர்களாக ;
மீண்டும் அதே குற்றத்தைச் செய்யாதபடி நல்ல புத்தியை அளிப்பீராக;
உம்மைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன்;
வாசுதேவருக்கு நமஸ்காரம்—கிருஷ்ணருக்கு நமஸ்காரம்;
உமது ரூபம் உமது சங்கல்பத்தால், பக்தர்களை அனுக்ரஹிக்க ஏற்பட்டது;
விசுத்த ஞான மூர்த்தியான உமக்குப் பல நமஸ்காரங்கள்
; உமது சர்வஸ்மைக்கு நமஸ்காரம்;
சர்வத்துக்கும் ஆதிபீஜமாக ,உபாதான காரணமாக உள்ள உமக்கு நமஸ்காரம்;
அனைத்து ஆத்மாக்களையும் சரீரமாகக் கொண்டு அவற்றுக்கு ஆத்மாவாக
விளங்கும் உமக்கு நமஸ்காரம்; என் அஹங்காரச் செயலாகிற
வ்ரஜா பூமியை நாசம் செய்கிறேன் என்கிறகெட்ட புத்தியைப் பொறுத்துக் கொண்டு,
எனக்கு அருள் புரிவீராக;
என் அஹங்காரம் அழிந்தது; கர்வம் தொலைந்தது; நீரே எனக்கு ஈஸ்வரர்;
நீரே எனக்குக் குரு; நீரே பரமாத்மா; உம்மை நான் சரணமடைகிறேன்;
ரக்ஷியுங்கள்; ரக்ஷியுங்கள்.
என்று பலவாறு துதித்து ,இந்திரன் பிரார்த்தித்தான்.
ஹே—கிருஷ்ணா—நீ,அதற்கு என்ன சொன்னாய் என்பதை ஸ்ரீ சுகர் அருளியதை
உனக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்
ஹே,இந்திரா—உனக்கு நல்ல புத்தி ஏற்பட்டு, எப்போதும் என் சிந்தனையோடு நீ இருக்கவேண்டும் என்பதற்காக இந்த லீலை செய்யப்பட்டது;
எவர்கள் ஐஸ்வர்யத்தால் மதம் பிடித்து அலைகிறார்களோ,என்னைப் பக்தி செய்யாமல் இருக்கிறார்களோ
அவர்களின் பதவியைப் பறித்துக் கீழே தள்ளுகிறேன்;
ஐஸ்வர்யத்தை அழிக்கிறேன்;
இதுவும் என்னால் அவர்களுக்குக் காட்டப்படும் அநுக்ரஹம்;உனக்குக் க்ஷேமம் உண்டாகட்டும்; நீ போகலாம்என்று சொன்னாய்.
காமதேனு என்கிற தேவலோகத்துப் பசு இதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவள், உன் அருகில் வந்து உன்னை நமஸ்கரித்தாள்.
தன் மனத்தால் எதையும் செய்யும் வல்லவளான கோமாதா, தன் சந்தானங்களுடன் வந்து உன்னை நமஸ்கரித்து, ஸ்துதி செய்தாள்.
காமதேனு ஸ்துதி
கிருஷ்ண—-கிருஷ்ண—-மஹா யோகின்—-
விஸ்வாத்ம ன்—- விஸ்வ சம்பவ—
அனாதர்களாகிய நாங்கள் உம்மால் காப்பாற்றப்பட்டோம் ;
நீர் எங்களுக்கு நாதர்— சகல லோக நாதர்;
அச்யுதா —உம்மை அடிக்கடி நமஸ்கரிக்கிறோம்—-
சதா எங்களைக் காக்கும்படி வேண்டுகிறோம்;
உம்முடைய க்ருபை, தேவர்கள், சாதுக்கள் கோக்கள் எல்லோருக்கும் கிடைக்கிறது;
அவர்களுடைய க்ஷேமத்துக்காக எங்களுக்கும் க்ருபை செய்வீராக;
நீர்,எங்களுக்கு எப்போதும் பதி;
ப்ரும்மாவினால் கட்டளை இடப்பட்ட நாங்கள், உம்மை,
பசுக்களின் நாயகனாக—-இந்திரனாக வரிக்கிறோம் .
இந்தப்பூவுலகில், நீர் ,எங்களை அனுக்ரஹித்து கோவிந்தனாக இருக்கிறீர்,
பூபாரம் ஒழியப்போகிறது, இதனால், நாங்கள், உம்மை கோவிந்தராக
அபிஷேகம் செய்து வணங்குகிறோம்
இவ்வாறு காமதேனு சொல்லி, தன் பால் அம்ருதவர்ஷத்தால்
உன்னை நன்கு நனைத்தாள். இந்திரன்,ஆகாச கங்கையிலிருந்து,
ஐராவதத்தால் ,புண்ய ஜலத்தை எடுத்து வரச் செய்து,
உன்னை அபிஷேகம் செய்தான்.
தேவமாதாக்களானஅதிதி போன்றவர் உடன் இருக்க,
தேவர்கள் ரிஷிகள் அருகில் இருக்க,
இந்திரன் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான்
.
தும்புரு, நாரதர், வித்யாதரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆடிப் பாடினார்கள்.
கோவிந்தநாமாவைச்சொல்லி ,அடிக்கடிப் பலதடவை சங்கீர்த்தனம் செய்து புஷ்பங்களால் அர்ச்சித்து
அதி சந்தோஷத்துடன் உன் பாதங்களை நமஸ்கரித்தார்கள்.
இந்திரனும், காமதேனுவும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக உன்னை அர்ச்சித்து நமஸ்கரித்தார்கள்.
இச்சமயத்தில், மரங்கள் தேனைச் சொரிந்தன; புஷ்பங்களை வர்ஷித்தன;
இவ்விதம் உனக்கு, கிருஷ்ணனாகிய உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது.
உன்னால் அனுமதி கொடுக்கப்பட்டஇந்திரன் மிகுந்த சந்தோஷத்துடன் தேவர்கள் சூழ ,தேவலோகம் சென்றான்.
27 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
————————————————————————————————-
அத்யாயம் 28
ஸ்ரீ கிருஷ்ணன், நந்தகோபரை வருண லோகத்திலிருந்து மீட்டது
ஒரு சமயம், நந்தகோபர், வழக்கமான ஏகாதசி வ்ரதமிருந்து, பகவானைப் பூஜித்தார்.
த்வாதசி பாரணைக்காக யமுனா நதியில் தீர்த்தமாடச் சென்றார்.
அவர் ஜலத்தில் இறங்கியதும், வருணனுடைய ஏவலாள் ,நந்தகோபரை அசுரன் என்று தவறாக நினைத்து,
அவரை வருண லோகத்துக்கு இழுத்துச் சென்று விட்டான்,. அசுரர்களின் காலம் இரவு;
இவர் தீர்த்தமாடச் சென்றது பின்னிரவு நேரம்;
இதனை நந்தகோபரும் அறியவில்லை;
நந்தகோபரைக் காணாமல், வ்ரஜ பூமியில் எல்லாரும் கதறினார்கள்.
நீ அந்தக் கதறலைக் கேட்டாய். உடனே உனக்கு, உன் பிதா வருண லோகத்துக்குக் கொண்டு போகப்பட்டது ,தெரிந்தது.
உடனே, நீ வருண லோகத்துக்குச் சென்றாய்.
உன் விஜயத்தை எதிர்பார்க்காத வருணன்,
உன்னை, மரியாதையுடன் மகத்தான பூஜை செய்து வரவேற்றான்.
“ஹே, பிரபோ—-இன்றுதான் அடியேனின் வாழ்வு சபலம் அடைந்தது; பெரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது;
உம்முடைய திருவடிகளைப் பூஜித்து,
சம்சாரக் கடலைத் தாண்டும் பாக்யம் பெற்றேன்;
ஓம் நமோ பகவதே , ப்ருஹ்ம ணே, பரமாத்மனே —–பரமாத்மாவாகிய
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
என்னுடைய சேவகன் ஒரு மூடன்; அகார்யத்தைச் செய்து இருக்கிறான்;
என்னை மன்னியுங்கள், ஹே, பிரபுவே என்னை
அனுக் ரஹியுங்கள் ;
எல்லாவற்றையும் அறிந்த பிரபுவே, கோவிந்த, பித்ரு வத்சல,
உமது பிதாவை அழைத்துச் செல்லலாம் “என்றான்,
ஹே, கிருஷ்ணா—-ஸ்ரீ சுகர் கூறுகிறார்.
நீ நந்தகோபருடன் திரும்பவும் நந்த க்ருஹம் வந்தாயாம்.
நந்தகோபன் மிக ஆச்சர்யப்பட்டானாம்.
உன்னை, வருண லோகத்தில் வரவேற்ற விவரம் எல்லாவற்றையும்
பந்துக்களிடம் சொல்லி நீ ஈஸ்வரன்தான் என்றானாம்.
அவர்கள் நந்தகோபனிடம் கேட்டார்களாம் இந்தப் பரமாத்மாவாகிய கிருஷ்ணன்,
நம் எல்லாருக்கும் தம்முடைய அழியாத வைகுண்ட ப்ராப்தியை அளிப்பானா ?
தன்னுடைய சங்கல்பத்தாலே நமக்கு நல்ல கதி கிடைக்க அருள்வானா
என்றெல்லாம் கேட்டார்களாம்.
நீ ,உனக்குள் எண்ணமிட்டாயாம்
அவித்யா,காமம், கர்மா இவைகளாலே மனிதன் பலப் பிறவிகள் எடுத்து சம்ஸாரத்தில் மூழ்கி
கரையேற வழி இல்லாமல் திண்டாடுகிறான்;
தன்னுடைய சொந்த ஸ்வரூபத்தை உணர்வதில்லை;
இவர்கள் என்னையே நம்பி இருப்பவர்கள் என்று எண்ணி
மஹா கருணையுடன் தமஸ்ஸுக்கு அப்பாற்பட்ட,
உன்னுடைய வைகுண்ட லோகத்தைக் காண்பித்தாயாம்.
எந்த ப்ரஹ்மம் சத்தியமோ க்ஜானமோ, ஆனந்தமோ, அமலமோ,அந்த சனாதனமான பர ப்ரஹ்ம ஜ்யோதிஸ் ஆன நீ,
எதனை மஹாயோகிகள் முக்குணங்களைத் தாண்டி —-ஸதா பஸ்யந்தி —-
-ஸதா -பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ —-
அந்த மஹோன்னத ஸ்தானத்தை அவர்களுக்குக் காண்பித்தாய்.
இதனால், அவர்கள் உன்னுடைய பர ப்ருஹ்ம நினைவில் மூழ்கி விட்டார்கள்
.உன்னை நான்கு வேதங்களும் புகழ்ந்து பாடுவதையும்,
தேவர் தானவர்கள் அர்ச்சித்து நமஸ்கரிப்பதையும் பார்த்தார்கள்.
அவர்களை மீண்டும் ஸ்வய நிலையை அடையச் செய்தாய்.
28 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
——————-
அத்யாயம்-29-
சரத்காலம்—ஸ்ரீ கிருஷ்ணனின் வேணுகானம்—
கோபிகைகள் தங்களை மறந்து ,ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ஓடுதல்
இந்த அத்யாயத்தில் இருந்து 33 வது அத்யாயம் முடிய
மிக ஆச்சர்யமான”” ராஸ க்ரீடை”” என்கிற ராதா பஞ்சாத்யாய விபவங்களைப்
பார்க்கப் போகிறோம்
கோபிகைகள் காத்யாயினி வ்ரதத்தை அனுஷ்டித்ததையும் ,
அப்போது நீ அவர்களுக்கு வாக்குக் கொடுத்ததையும்
இப்போது நீ நினைத்துப் பார்த்தாய். (22வது அத்யாயத்தைப் பார்க்க )
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற சரியான காலத்தை எதிர் பார்த்துக்
காத்து இருந்தாய். அப்படிப்பட்ட காலமான சரத் காலமும் இப்போது வந்தது.
ராத்திரி நேரம்; மல்லிகைப் புஷ்பங்கள் ,மணம் பரப்பிக் கொண்டு இருந்தன;
குமுதமலர்கள் பூத்துக் குலுங்கின; விருந்தாவனம் சந்திர கிரணங்களால் பிரகாசித்தது;
காடு முழுவதும் கோலாஹலம்; எங்கும் பார்க்கப் பார்க்க மனோஹரம்; அதிரஞ்சிதம்;
ஜகன் மோகனனான நீ, உன் புல்லாங்குழலை எடுத்தாய்;
வேணுகானம் செய்யத் தொடங்கினாய்;
வ்ரஜ சுந்தரிகளான கோபிகைகள், வேணுகானத்தைக் கேட்டார்கள்;
வேணுகானம் அவர்களை இழுத்தது;
உன்னால் ஆகர்ஷிக்கப்பட்டனர்;
மனத்தை உன்னிடம்அர்ப்பணித்தனர்;
நீ இருக்குமிடத்துக்கு ஓடி வந்தனர்;
எப்படி ஸதி ஸ்திரீகள் , தங்கள் காந்தர்களிடம் ஓடி வருவார்களோ ,
அப்படி ஓடி வந்தனர்; காதுகளில் அணிந்து இருந்த குண்டலங்கள் ,மகிழ்ச்சியால் ஆடின;
பிரகாசித்தன; அவர்களது ஆசையின் தீவிரம்அன்யோன்ய திருஷ்டிக்கு —–
பார்வைக்கு அப்பால் இருந்தது;
உலகத்தையே மயக்கும் உன் வேணு கானத்தைக் கேட்ட,கோபிகைகள்
நிலைமையை ,ஸ்ரீ சுகர் சொல்கிறார்; அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்
சிலர் பசுக்களைக் கறந்து கொண்டு இருந்தனர்;
பால் பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தனர்;
சிலர் , பாலை அடுப்பில் காய்ச்சிக் கொண்டு இருந்தனர்;
அதை அப்படியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
சிலர் பாயசத்தை அடுப்பில் வைத்து, இருந்தனர்
இந்த வேணுகானம் கேட்டதும் ,பாயசத்தை மறந்து ஓடி வந்தனர்;
சிலர், குழந்தைகளுக்கு வேலை செய்துகொண்டு இருந்தனர் ;
அவற்றை அப்ப டியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
கணவர்களுக்கு, உணவு இவற்றைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள்
அந்த சுஸ்ருக்ஷையை அப்படியே நிறுத்தி ,உன்னிடம் ஓடி வந்தனர்;
சிலர் வஸ்த்ரங்களைத்தவறுதலாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
சிலர் ஆபரணங்களைத் தாறுமாறாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
கண்களுக்கு அஞ்சனம் இட்டுக் கொண்டு இருந்தவர்கள்
அதை அப்படியே நிறுத்தி விட்டு ஓடி வந்தனர்;
இன்னும் சிலர், பந்துக்கள் தடுத்ததையும் மீறி ஓடி வந்தனர்;
கணவர் தடுத்தபோதும் ,உன்னிடம் மனத்தைப் பறி கொடுத்தவர்களாய்,
தடுத்ததையும் திரஸ்கரித்து விட்டு, உன்னிடம் ஓடி வந்தனர்;
வீட்டை விட்டு, வெளியே வருவதற்கு ,சந்தர்ப்பம் கிடைக்காத சிலர்,
கண்களை மூடிக் கொண்டு அங்கேயே உன் த்யானத்தில் ஈடுபட்டனர்;
இன்னும் சிலர், உன்னுடைய விரஹ தாபத்தால் கொளுத்தப்பட்டு,
அதனால் அவர்கள் பாபங்களும் கொளுத்தப்பட்டு,
த்யானத்தில் உன்னை அணுகி ஆனந்தம் அனுபவித்து,
கர்மபந்தங்களை அறுத்து எறிந்தார்கள்;
இன்னும் சிலர், தங்கள் புத்தியால் உன்னை ஜார புருஷனாகவே
வரித்து, குணமயமான தேகத்தை விட்டவர்களாக ஆகி,
கர்மபந்தங்கள் விலக, சிந்தனையால் உன்னுடன் ஒன்றினார்கள்;
இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராஜா பரீக்ஷித்,
ஸ்ரீ சுகரைக் கேட்டான்
கோபிகைகள், ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா என்று தெரிந்துகொள்ளவில்லை,
அவர்கள் எப்படி சம்சாரகதியை ஒழித்தார்கள் ?
அவர்களுக்கு இத்தகைய கிருஷ்ண பக்தி எப்படி வந்தது ?
ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்.
எதற்கும் தீர்க்க சிந்தனை வேண்டும்; அளவிடமுடியாத மகிமைகளைப் பெற்ற
ஸ்ரீ கிருஷ்ணனை சதா சர்வகாலமும் சிந்தனை செய்தார்கள்;
பிரேமபாவம் ,இவர்களுக்குத் தலை தூக்கி இருந்தது;
எந்த பாவத்துடன் யார் அவரை பூஜிக்கிறார்களோ ,
அவர்கள் சம்சாரத்திலிருந்து விடுபடுகிறார்கள்;
ஸ்ரீ க்ருஷ்ணனை சினேகிதனாக சதா சர்வகாலமும் சிந்தனை செய்பவருக்கு
அவன் சிநேகிதன்;
தந்தையாகச் சிந்தித்தால் தந்தை;
இங்கு இவர்கள் ஆயர்குலப் பெண்கள்; பிரேமை முழுவதையும் பொழிந்து
புருஷனாக சிந்தித்தார்கள்;
சேதிநாட்டு அரசன் சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணனை எப்போதும் வெறுத்து,
த்வேஷ புத்தியுடன் வைதுகொண்டே இருந்தான் ;அப்படி வைதபோதிலும்,
அவருடன் மனத்தால் ஒன்றிப்போனான் இதிலிருந்தே உனக்கு உன் கேள்விக்கு
விடை கிடைக்கும் என்றார்
உன் முன்பாக வந்து நின்ற கோபிகைகளைப் பார்த்து ,
அவர்கள் இன்னும் மோஹித்துப் போகும்படி நீ அவர்களுடன் பேசினாய்.
ஹே பெண்களே, உங்களுக்கு ஸ்வாகதம்
இப்படி இரவு நேரத்தில் பயமின்றி இங்கு என் வந்தீர்கள் ?
வ்ருந்தாவனத்தில் ஏதாவது சங்கடமா ?
பயங்கரமான மிருகங்கள் உலாவும் இரவு வேளையில்
இப்படி இந்த இடத்துக்கு வரலாமா ? உங்கள் பெற்றோர், உறவினர்,
கணவர் ,பிள்ளைகள் உங்களைக்காணாமல் பரிதவிப்பார்கள்;
உங்களைத் தேடுவார்கள்; உடனே அவரவர் வீடுகளுக்குத் திரும்புங்கள்;
குழந்தைகளைப் போஷியுங்கள் ; மாதா பிதா பர்த்தா இவர்களுக்கு
சிசுருக்ஷை செய்யுங்கள்;
ஒரு வேளை என்மீதுள்ள ப்ரேமையால் இங்கு வந்து இருந்தால்,
அது சரி என்றாலும், பர்த்தாவுக்கு சிசுருக்ஷை செய்வது பரம தர்மம்;
ஸ்திரீகளுக்குப் பிற புருஷர்களுடன் சேர்வது மஹா பாவம்;
என்னிடம் பிரேமை செலுத்துவது என்பது, என் அருகில் இருந்துகொண்டு,
என் இஷ்டப்படி நடந்து கொள்வது என்பதல்ல ;
என் கதைகளைக் கேட்பது, என்னைத் தியானிப்பது,
என்னைக் கீர்த்தனம் செய்வது இவையே போதுமானவை;
உடல் சேர்க்கை தேவையே இல்லை;
அதனால், உடனே உங்கள் வீடுகளுக்குத் திரும்புங்கள்
என்று சொன்னாய்.
ஸ்ரீ சுகர் ,கோபிகைகளின் நிலைமையை கூறுகிறார்.
அப்ரியமான வார்த்தைகளை, கோபிகைகள் கேட்டார்கள்;
மனவியாஹூலம் அடைந்தார்கள்; முகம் தரையை நோக்க,
வாய் உலர, கால் நகங்களால் தரையைக் கீறினார்கள்;
மௌனமாக நின்றார்கள்; கண்களிலிருந்து ,கண்ணீர் தாரை தாரையாகப்
பெருக்கெடுத்து மார்பகங்களை நனைத்தது;
கண்மைகள் அழிந்தன;
மானம், ஐஸ்வர்யம், யௌவனம் ,அழகு, பதி, புத்திர ,பந்துக்கள் எல்லாரையும்
க்ருஷ்ணனுக்காகவே பறிகொடுத்தவர்கள் ,தீனமாக அழுதார்கள்;
உன்னை நிமிர்ந்து பார்த்தார்கள்; தொண்டை அடைக்க, தடுமாறும் பேச்சுக்களால்
,உன்னிடம் உள்ள அன்பு குறையாமல் சிறிது கோபத்துடன் உனக்குப் பதில் சொன்னார்கள்
ஹே—பிரபோ—-நாங்கள், சர்வ விஷய சுகங்களையும், மானம், ஐஸ்வர்யம்,
பதி புத்ரன்பந்துக்கள் , வீடு எல்லாவற்றையும் விட்டு விட்டு
உனது திருவடியையே நம்பி வந்திருக்கிறோம்;
நாங்கள் உனது பக்தர்கள்; உன்னால், கைவிடத்தக்கவரல்ல;
நீ, எங்களுக்கு பதி தர்மத்தைப்பர்றிச் சொன்னாய்;
புத்திர புத்ரிகளை போஷிப்பது என்று ஸ்திரீகளின் தர்மத்தைச் சொன்னாய்;
ரொம்ப சரி; இந்த சுஸ்ருக்ஷை யாவும் உமக்கே செய்ய வந்திருக்கிறோம்;
ஏன் என்றால், நீர் சர்வ ரக்ஷகர்; நீரே சர்வ பந்து; நீரே எங்களுக்கு எல்லாம் ஆத்மா—பரமாத்மா;
உம்மிடம் ப்ரியம் கொள்வது, உம்மைப் பூஜிப்பது,
இவைதான் எங்களுக்கு முக்கியம்;
ஹே, ஆத்மந்
உம்மிடம் நித்யமும் ப்ரியம் செலுத்துவது—–,
ஹே, அரவிந்த நேத்ர , —–மரத்தின் வேருக்குத் தண்ணீர் வார்ப்பது போல
பதி,பிள்ளைகள், பந்துக்கள் –இவர்களிடம் ப்ரியம் செலுத்துவதால் என்ன பலன் ?
உம்மிடமே, எங்களின் பக்தி வெகு காலமாக வேரூன்றி இருக்கிறது;
உம்மால், எங்களது ஹ்ருதயம் அபஹரிக்கப் பட்டு இருக்கிறது;
இவற்றைஎல்லாம் இல்லாதபடி செய்து விடாதீர்;
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த எங்களை,
உம்மிடமுள்ள அன்பே ,அவைகளைச் செய்ய விடாமல் தடுத்து விட்டது;
அப்படி இருக்க, எங்களை வீட்டுக்குத் திரும்பிப் போகுங்கள் என்று சொல்வதில்
நியாயமில்லை; உம்முடைய திருவடிகளையே அடைய வேண்டும் என்று
இருப்பவர்களைத் திரும்பவும் வீடுகளுக்குச் செல் என்று நீர் சொல்வது சரியல்ல;
உமது கடாக்ஷ அம்ருதப் பார்வையால் உமது அதரங்களாகிய பூரண குடங்களிளிருந்து,
ஆசையாகிற அம்ருதத்தை எங்கள்மீது தெளிப்பீராக;
உமது சிநேகப் பார்வைகள், உமது வேணுகான கீதங்கள் ,
எங்கள் ஹ்ருதய ஆசைகளைத் தூண்டிவிட்டு,அவை அக்னியைப்போல
உக்ரமாக எரிந்து கொண்டு இருக்கின்றன; உம்மை விட்டுப் பிரிந்தால்,
அந்தத் துக்கமாகிய அக்னியால் கொளுத்தப்பட்டு,
உமது பாதங்களையே நினைத்து, நினைத்து, த்யானயோகத்தால்,
ப்ரியசகிகளைப்போலவும், ப்ரிய தோழர்களைப் போலவும்
உம்மையே திரும்பவும் வந்து அடைவோம்.
ஹே—அம்புஜாக்ஷ—காத்யாயினி வ்ரத நாளிலிருந்து,
எந்த உமது பாத ஸ்பர்சம் ஏற்பட்டதோ, எந்தப் பாதங்களை
ரமாதேவி மிக்க ச்ரத்தையுடன் ஆச்ரயித்துப் பூஜை செய்கிறாளோ
அந்தப் பாத மூலங்களை —-நாங்கள் சதா பூஜிக்கிறோம்.
நாங்கள், உம்மையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;
உமது ஹ்ருதயத்திலும் இடம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்;
எந்த உமது பாத ரேணுக்களை—-ஸ்ரீ தேவியாகிய மஹாலக்ஷ்மி —-
துளசி தேவியுடன் போட்டி போட்டுக்கொண்டு –அடைந்து இருக்கிறாளோ,
அந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி உம்முடைய வக்ஷஸ் தலத்தில் அரைவினாடி கூட
விடாமல் வசித்துக் கொண்டு இருக்கிறாள்.
நாங்கள் உமது திருவடிகளையே பஜிக்கிறோம்; நாங்கள் ப்ரபன்னர்கள்,
உமது திருவடிகளையே ஆச்ரயிப்பவர்கள்.
எங்கள் துக்கங்களை அறவே அழிக்கும்
ஹே–பிரபோ—எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்;
எங்கள் உபாசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்;
உமது ஸுந்தர ரூபம்—-உமது ஸ்மிதம்—-கள்ளப்பார்வையின் கடாக்ஷம்—
-எங்களைப் பித்தாக்கி இருக்கின்றன;
ஹே,புருஷபூஷண ——உமக்குச் ஸேவை செய்யும் பாக்யத்தை அளிப்பீராக;
உமது திருமுக அழகு—-கம்பீரம்—-மகரகுண்டலங்கள்—-வனமாலை—-
-புஜதண்டயுகம்—–உமது வேணுகானம