Archive for the ‘Ramayannam’ Category

விபரீதானி நிமித்ததானி  —

May 24, 2023

ராமன் பட்டாபிஷேகம் நடைபெறாது என்பது முக்காலமும் உணர்ந்த முனிவரான வால்மீகிக்கு முன்னரே தெரிந்துவிட்டது. முனிவர்களும் ஜோதிடத்தை வைத்துத்தான் அப்படிச் சொல்லுகின்றனர். நிமித்தம் என்ற ஆரூடம் பற்றிய ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்துகிறார். பகவத் கீதையிலும் விபரீதானி நிமித்ததானி  என்ற வாக்கியத்தைக் காண்கிறோம். 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் காண்கிறோம். வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலும் நிறைய இடங்களில் நிமித்தம் என்ற சொல் வருகிறது ; அதற்கு இரண்டு அர்த்தம் உண்டு (1)காரணம் , (2)ஜோதிட அறிகுறிகள் என்ற இரண்டு பொருள் அவை.

இதோ வால்மீகி எச்சரிக்கை:

அவஷ்டப்தம் ச மே ராம நக்ஷத்ரம் தாருணைர் க்ரஹைஹி

ப்ராயேண ஹி நிமித்தா நாமீத்ருசா நாமு பக்ரமே

ராஜா ஹி ம்ருத்யுமாப்னோதி கோராம் வாபதம் ருச்சதி

தாவதே வாபி ஷிஞ்சஸ்வ  சலா ஹி ப்ரா ணி நாம் மதி

ராமா ! எனது நக்ஷத்ரம் கொடிய க்ரஹங்களால் தாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிமித்தங்கள் தோன்றும் பொழுது அரசன் மரணம் அடைவான் , இல்லையேல் கொடிய விபத்தைச்  சந்திப்பான். ஆதலால் அதற்குள் பட்டாபிஷேகத்தைச் செய்துகொள் என்று தசரதர் சொன்னதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது .

ராமாபிரானுக்கு மரணம் சம்பவிக்காமல் 14 வருஷ வனவாசம் என்னும் விபத்தே நிகழ்ந்தது.

புறநானூற்றிலும் இதே காட்சி :

புறநானூற்றிலும் கொடிய நிமித்தங்களால் அரசன் மரணம் அடைவான் என்று புலவர் கூடலூர் கிழார் அஞ்சுகிறார். அதே போல அரசன் மரணம் அடைகிறார்.

புலவர் கூடலூர் கிழார் ஒரு சங்க கால ஜோதிடர்

ஒருநாள் எரிகல் METEOR  ஒன்று வானத்திலிருந்து விழுந்தது.

அதனைக் கண்ணுற்ற புலவர் அப்போது இருந்த கிரஹ, நக்ஷத்ரங்களின் நிலையையும் அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் ஜாதத்தையும்  ஒப்பிட்டுக் கணித்துப் பார்த்தார்.

அரசன் அன்றைக்கு ஏழாம் நாள் மரணம் அடைவான்  என்பதைக் கண்டறிந்தார் . அதுபோலவே மன்னர் இறந்தான். அப்போது அவர் பாடிய பாடல் இது. இந்தப் பாடலில் அரண்மனைக்குள் கண்ட நிமித்தங்களையும் கூடலூர்க் கிழார் பட்டியலிட்டுள்ளார்.

புறநானூறு 229

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்,

முடப் பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காய,

பங்குனி உயர் அழுவத்து,                    5

தலை நாள்மீன் நிலை திரிய,

நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,

தொல் நாள்மீன் துறை படிய,

பாசிச் செல்லாதுஊசித் துன்னாது,

அளக்கர்த் திணை விளக்காகக்    10

கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,

ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;

அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,

‘பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்

நோய் இலனாயின் நன்றுமன் தில்’ என 15

அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,

அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;

மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,

திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,

காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,     20

கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,

மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,

ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,

தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு        25

அளந்து கொடை அறியா ஈகை,

மணி வரை அன்ன மாஅயோனே?— 229

பொருள்

மேட இராசி பொருந்திய கார்த்திகை நாளின் KRITHIKA NAKSHATHRA முதற்காலின்கண்

நிறைந்த இருளை உடைய பாதி இரவின்கண்

முடப்பனை போலும் வடிவுடைய அனுட ANUSHA NAKSHATRA நாளின் அடியின்வெள்ளி (முதல் நட்சத்திரம்) முதலாகக்,

கயமாகிய குளவடிவு போலும் வடிவமைவுடைய புனர்பூசத்துக் PUNAR PUSA கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப்,

பங்குனி FALGUNA MONTH  மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் UTTARA STAR அவ் உச்சியினின்றும் சாய,

அதற்கு எட்டாம் மீனாகிய மூலம்MOOLAM STAR அதற்கு எதிரே எழாநிற்க, அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய MRIGASHIRSHA (நட்சத்திரம்) துறையிடத்தே தாழக்,

கீழ்த்திசையிற் போகாது, வடதிசையிற் போகாது,

கடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்காநின்ற தீப் பரக்கக்,

காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து ஒரு மீன் விழுந்தது, வானத்தினின்றும்;

அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர்

எம்முடைய பறையொலி போலும் ஒலியை உடைய அருவியை உடைய நல்ல மலைநாட்டு வேந்தனாகியவன்

நோயை உடையன் அல்லன் ஆகப்பெறின் அழகிது என

இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்த உள்ளம் பரப்ப யாம் அஞ்சினேம்;

அஞ்சினபடியேஏழாம் நாள் வந்தது ஆகலின், இன்று,

BAD OMENS – BAD NIMITTAS

வலிமையுடைய யானை கையை நிலத்தே இட்டுத் துஞ்சவும்,

திண்ணிய வாரால் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும்,

உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக் குடை கால் துணித்து உலரவும்,

காற்றுப் போலும் இயலை உடைய மனம் செருக்கிய குதிரைகள் கதி இன்றிக் கிடக்கவும்,

இப்படிக் கிடக்கத்,

தேவர் உலகத்தை அடைந்தான்; ஆகையாலே,

ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்கு மேவப்பட்ட துணையாகித், தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ?

பகைவரைப் பிணித்துக்கொள்ளும் வலிமையும், நச்சினோர்க்கு அளந்து கொடுத்தல் அறியாத வண்மையும் உடைய நீலமலை போலும் மாயோன்.

இந்தப் பாடலில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன

1. தமிழர்கள், சங்க காலத்திலேயே ஜோதிடத்தில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் அடைந்தனர் என்பதைக் காட்டும் 200 சங்க கால ஜோதிடக் குறிப்புகளில் மிகவும் முக்கியமான பாடல் இது.

2. கிரேக்க நாட்டிலிருந்துதான் இந்துக்களுக்கு ஜோதிடம் வந்தது என்று சொன்ன வெளிநாட்டுஅறிஞர்களின் முகத்திரையைக் கிழிக்கிறது.

3. ஆரிய- திராவிடம் வாதம் பேசி தங்களை அறிஞர்கள் போலக் காட்டிக்கொள்ளும் அரைவேக்காடுகள் முகத்தில் தார் TAR போன்ற கரியைப் பூசுகிறது.

4. இந்தப் பாடலில் வரும் பங்குனி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் பாசி (பிராச்யை )ஊசி (உதீச்யை )  என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையும் கவனித்தல் வேண்டும். அஸ்வினி முதல் உள்ள நட்சத்திரக் கணக்கையும் கவனிக்க வேண்டும் .

இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திரு ஞான சம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்திலும் இந்த நக்ஷத்திரக் கணக்கு வருகிறது.

5. தமிழர் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் , சம்ஸ்க்ருத மாதங்களின் தமிழாக்கம் என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய சொற்பொழிவுகளிலிருந்து அறிக

6. நட்சத்திரங்களின் வடிவத்தை வைத்து, அவைகளுக்குப் பெயரிடும் முறையும் சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உளதே . மிருக சீர்ஷம் = மான்  தலை என்பது போல பல மொழி பெயர்ப்புகள்.

7. எரிகல் வீழ்ச்சி (METEOR FALLING) ஒவ்வொரு வினாடியும் லட்சக் கணக்கில் நடக்கிறது என்பது வானியல் ASTRONOMY படித்தோருக்குத் தெரியும் ; ஆயினும் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நாளில் நிகழ்வதைக் கொண்டு ஆரூடம்  சொல்லுவார்கள்..

8. இது ராமாயண, மஹாபாரத காலத்திலிருந்தே வடஇமயம் முதல் தென் குமரி வரை  இருப்பதால் ஜோதிடம் என்பது கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது பிதற்றல்.

9.ஜோதிடம் சொல்லும்போது ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்திய கூடலூர்க் கிழார் பெரிய சம்ஸ்க்ருத அறிஞராக இருந்திருக்க வேண்டும்.

10. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அறிந்தால்தான் இந்திய வரலாற்றைப்  பற்றிப்  பேச ஒருவருக்கு அருகதை உண்டு.. எடுத்துக்காட்டாக வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதாபிருஹத் ஜாதகம் ஆகியவற்றை ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்லுவதும் தவறு. கூடலூர்க் கிழார், வால்மீகி போன்றோர் சொல்லும் ஜோதிடம், இந்தக் கலை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. ராமர் பட்டாபிஷேகத்துக்கு சித்திரா பெளர்ணமி நாளை வசிஷ்டர் தேர்ந்தெடுத்ததும் இன்னொரு சுலோகத்தில் வருகிறது.

ஆகவே தமிழ் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; ஸம்ஸ்க்ருதம்  மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; இரண்டையும் பாடித்தவனே  முழு அறிஞன் . தமிழ் நாட்டில் டாக்டர் நாகசாமி, பி.எஸ் குப்புசுவாமி சாஸ்திரி போன்ற பேரறிஞர்கள் இப்போது இல்லாததால் பலரும் தமிழ் இலக்கியத்தை சரியாக எடைபோட முடிவதில்லை .

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ அயோத்தியா காண்டம் .

April 8, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக் குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

இளங்கோவும்

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து

வனம் போய்ப் புக்கு

காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

சித்திர கூடத்து இருப்ப,

தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

————-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்

இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர  நியாயத்தாலே-

————-

கொடிய கைகேயி வரம் வேண்ட

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல

———

கொடியவள் வாய் கடிய சொற் கேட்டு

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –

அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –

பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து

கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –

அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்

சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –

இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –

அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –

அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட

அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –

இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –

உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு

—————-

மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்

தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –

பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே

ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்

கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –

குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன

உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன

எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன

அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன

——

இரு நிலத்தை வேண்டாது

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

——-

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய  
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்–ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்

———–

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

———

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து அங்கங்கள் அழகு மாறி

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

———-

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா –கானமரும் கல் லதர் போய்க் காடுறைந்தான்   –
ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே –
நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து –
திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  –
தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய
விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக
காட்டிலே
முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும்
பாலை நிலத்தின் வெம்மைக்கும்
பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம்
இவளேயாய்ப் போனார் –

(காடுறைய வைதேஹி இன் துணையாகப் போவான் என் என்ன
அவளும் அவனது ரக்ஷணத்தை ஸ்தூணா நிஹனநம் நியாயத்தால் திருடி கரிக்கிறாளே

பின்பு -பாபா நாம் -என்கிற பிராட்டி
காட்டிலே வர்த்திக்கிற நாளிலே ஆயுதம் வேண்டா
நீர் சா யுதராய் திரியப் புக்கவாறே நிழல் மரமாய்த் தோற்றுவீர்-
ஆர்த்தராய் சரண்யன் தேட்டமாய் திரிகிறவர்கள் உம்மை -நிழல் மரம் -என்று ஒதுங்குவார்கள் –
சரணாகதரை கை விடாமை உமக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் ஆகையாலே ராஷசரை அழியச் செய்வீர்
அது தான் சத்தைக்கு கைம் முதலாக நினைத்து இருக்கும் உம்முடைய சத்தையும் அழியும் படி தலைக் கட்ட அடுக்கும் –
ஆன பின்பு காட்டில் வர்த்திக்கும் நாள் இத்தனையும் ஆயுதத்தைப் பொகட்டு
கண்டார் இரங்கும்படி தாபஸ வேஷத்தோடு திரிய அமையாதோ -என்று
அவள் பிரஜைகள் உடைய ரஷணத்தில்  நிற்கிறவர்
(ஊற்றத்தின் எல்லையில் இருப்பதை அறியவே சீதாபிராட்டி வார்த்தை )

அப்யஹம் த்வாம் வா –
அசாதாரணராய்
தங்களோடு அனந்யராய்
இருப்பாரை வைத்தோ -தந்தாமை விடுவார் விடுவது –
உண்டாம் அன்று ஒக்க உண்டாய்
இல்லையாம் அன்று ஒக்க இல்லையாம்படி அன்றோ இருப்பது –

(சீதா உன்னையே விட்டாலும் அதுக்கும் மேலே -லஷ்மணன் -அவனையும் விட்டாலும் —
தன்னையே -விட்டாலும் ப்ரதிஜ்ஜை விட மாட்டேன் -சொன்ன சொல்லையே தம் தம்மை -என்கிறார் -)

நது-
நான் தொடங்கின வற்றில் தவிர மாட்டாதது ஈது ஒன்றுமே
அது தன்னில் சாயுதராய் ஸ்வ ரஷணத்தில் அயோக்யதை உடையராய் இருக்கை அன்றிக்கே
நம்மைப் பார்த்து இருக்கும் பிராமணரை ரஷிக்கிறோம் என்று சொல்லி வைத்து தவிர மாட்டோம் –

———–

இளங்கோவும்

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———-

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படி ஆனாலும் நந்தகம் ஸ்ரீ சார்ங்கம் -கொண்டு –
இளைய பெருமாளை போலே மற்று வேறு ஒருவர் இல்லை -உன் பெருமைக்கு இரண்டாவது ஆள் கூடாதோ
அடியேனுக்கு அருள் செய்து கூவிப் பணி கொள்ள வேண்டும்

வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

—————

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் –கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி

———–

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து வனம் போய்ப் புக்கு

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி உண்டு

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும்
வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி
நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான்
காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

————

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப் பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

————-

சித்திர கூடத்து இருப்ப,

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

———–

தயரதன் தான்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

————–

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ!

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

———————

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

———–

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

————

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-
ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் –
குதிரைகளை விட்டு
அநந்தரம்
தேர்களாலே அலங்கரித்து –
இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு
இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து
இலங்கையை அழியச் செய்த
தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் –
(ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———–

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —

———-

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-
கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து
தத் கத சித்தனாய் இருந்து –
ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம்
தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் –
பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –

தன்னுடைய ஆற்றாமை தோற்ற
பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து
ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் –
என்னும் இடத்தை அறிவித்து –

பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து –
தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து-
தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –

பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே
உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ–
நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை –
என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –

திரு உள்ளக் கருத்து இது –
ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு
அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் –
தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும்
ஹேதுவானது தான் ஏது-என்ன

இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து
பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே
இத்தை பலகாலும் அருளிச் செய்து –
ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே –
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –

பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது

வான் பணையம் -என்கையாலே
மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது

வான் -என்று
வலியதால் –
பெருமை யாதல் –

——–

குவலயமும் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி 

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

—————

விடை கொடுத்துத்

———

திருவுடை திசைக் கருமம் திருந்தப்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு உடைய திசைக் கருமம் திருத்தி –
செரு -என்று யுத்தம்
செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது

இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே
தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை
இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் )
ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –

ராவணன் வந்து –
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –
அது நிமித்தமாக

கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் -என்று சங்கல்பித்து –
அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு –
அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து –
அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –

பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு
கடலை அணை செய்து –
மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே
அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து –
இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை

——–

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ வேத வியாஸ பகவான் அருளிச் செய்த ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் —

September 13, 2022

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ இளைய பெருமாளுக்கு உபதேசம்

வேத வியாசரின் பிரம்மாண்ட 61வது அத்தியாயத்தில் பரமசிவனும் அம்பாள் பார்வதியும் பேசிக்கொள்கிறார்கள்
( இதை நாரதருக்கு பிரம்மா சொல்லியிருக்கிறார்) இந்த பகுதி தான் அத்யாத்ம ராமாயணம் ஆகும்.

வால்மீகி ராமாயணம் 7 காண்டங்கள். 24000 ஸ்லோகங்கள்.
ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்குப் பின் முதல் எழுத்து காயத்ரி மந்த்ரத்தில் இருந்து வரும்.

வேத வியாசரின்  அத்யாத்ம   ராமாயணம்  6 காண்டங்கள்,  கிட்டத்தட்ட 4000  ஸ்லோகங்கள்  கொண்டது.

ராவண வதத்துக்குப் பிறகு மாய சீதை தான் அக்னி ப்ரவேசம் செய்கிறாள் – வியாசர்.
உண்மையான சீதை தான் அவ்வாறு செய்தது – வால்மீகி.

லக்ஷ்மனனுக்குத் தெரியாமல், ”சீதா, ராவணன் வருவான், உன்னைக் கடத்துவான்.
எனவே உன்னை அக்னியிடம் ஒப்படைத்து ஜாக்ரதையாக பிறகு பெற்றுக் கொள்கிறேன்
அதுவரை உன்னைப் போன்று இப்போது முதல் ஒரு மாய சீதா உருவாக்கி ராவணன் தூக்கிச் செல்ல வைக்கிறேன்.
பிறகு ராவண வதம் முடிந்து மாய சீதாவை அக்னியில் பிரவேசிக்க வைத்து உன்னை மீட்டுக் கொள்வோம். –
ராமன் – சீதாவின் இந்த ஒப்பந்தம் வியாசர் சொல்கிறார்.

—————

ஸ்ரீ ராமகீதாமாகாத்மியம்‌,

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் மாகாத்மியம்‌ (பெருமை) முழுவதனையும்‌ ஸ்ரீ சங்கரன்‌ அறிவார்‌.
௮தில் பாதி பார்வதி தேவி யார்‌ அறிவர்‌. முனிவரே !-௮தில் பாதி யான்‌ ௮றிவேன்‌.

எந்த மாகாத்மியத்தை யறிதலால்‌ உலகத்தினர்‌ அக்‌ கணமே சித்த சுத்தியை அடைவரோ, ௮தனை யுனக்குச்‌
சிறிது சொல்லுகிறேன்-முழுவதும்‌ சொல்லக் கூடிய தன்று

நாரதரே! ஸ்ரீ ராம கீதை எந்தப்‌ பாபத்தைக்‌ கெடுக்‌கிறதோ அந்தப் பாபம் உலகில் ஓர் இடத்திலும் ஒரு போதும்
தீர்த்தம் முதலியவற்றால் போக்க முடியாது-
ஸ்ரீ ராம கீதையினால் கெடாத பாபத்தை உலகில் எங்கும் காண முடியாது

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியினால் உபநிஷத் ஆர்ணவம் கடைந்து உண்டு பண்ணப் பட்டது
ஸ்ரீ லஷ்மணனுக்கு உகந்து உபதேசிக்கப்பட்டது
இந்த ஸ்ரீ ராம கீதா அம்ருதத்தைப் பருகின புருஷன் அமரன் ஆகிறான் –

ஸ்ரீ பரசு ராமர் கார்த்த வீர்ய அர்ஜுனனைக் கொல்ல வில் வித்யையை பழகுவதற்கு முன்
ஸ்ரீ ராம கீதையை ஸ்ரவணம் செய்து கிரஹித்து படித்து ஸ்ரீ நாராயணனின் கலையைப் பெற்றார்

ப்ரஹ்மஹத்தி பாபங்களையும் போக்கும் சக்தி இதற்கு உண்டு

இத்தால் ஸாயுஜ்யமும் அடையலாம்

——————

ஆகாசத்தில்‌ மூன்று விதமான பேதம்‌ காணப்படுகிறது.
அதாவது ஒரு தடாகத்தை வியாபித்திருக்கிற ஆகாசம்‌ (1) மஹா ஆகாசம்‌,
அதற்குள்‌ ௮டங்கி யிருக்கிற ஆசாசம்‌ (2) அவிச்சின்ன ஆகாசம்
அதில்‌ பிரதிபலித்திருக்கிற ஆகாசம்‌ (3) பிரதிபிம்ப ஆகாசம்‌
என்னும் இம்மூன்று வித பேதங்களும்‌ ஆகாயத்தில் காணப் படுகின்றன,
பிரமத்திலும்‌, ஆபாஸம்‌, ௮விச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம் -என்னும் மூன்று வித பேதங்களும் உண்டே –
ஆபாஸ மென்பது பொய்பான புத்தி, ௮து அவித்தை (அஞ ஞானத்தின் காரியம்‌.
௮.து-விச்சின்னம்‌ (வேறுபட்டது) இல்‌லாதது. அஞ்ஞானத்தால்‌ விச்சின்னம்‌ ஏற்படுகிறது,
ஞானம்‌ ஏற்பட்டால்‌, அவிச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம்‌, இவை இரண்டும்‌ ஒன்றென்றும்‌,
ஆபாஸமாகிய அவித்தை தன்‌ காரியங்களுடன்‌ நசிக்கும் என்றும்‌ ௮றியக் கூடும்‌,

ரிக்‌ வேதத்தில்‌ அபாத்திரிய உபநிஷத்தில் –ப்ரக்ஞானம் ப்ரஹ்மம் என்னும்‌ வாக்கியமும்‌,
யஜுர்‌ வேதத்தில்‌ தைத்தரிய உபநிஷத்தில் அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி என்னும்‌ வாக்கியமும்‌,
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபநிஷத்தில் தத்துவமஸி என்னும்‌ வாக்யமும்‌,
அதர்வண வேதத்தில்‌ மாண்டோக்ய உபநிஷத்தில்‌ அயமாத்மா ப்ரஹ்மம் ப்ரஹ்மம் என்‌னும்‌ வாக்யமும்‌ உண்டே –

ப்ரக்ஞானம் பிரம்மம் என்றால் தூய அறிவே பிரம்மம் எனப் பொருள். அயமாத்மா பிரம்மம் என்றால் இந்த ஆத்மாவே பிரம்மம் எனப் பொருள். அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே பிரம்மம் எனப் பொருள்.

இந்த நான்கு மகா வாக்கியங்களை
ஸ்ரவணம் (1)
மனனம் (2)
நிதித்யாசனம் (தெளிதல்) (3)
நிட்டை கூடுதல் (4) என்று
ஸ்ரீ கீதை கூறுகின்றது.-

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஸத்யம்
நித்யம்
பூர்ணம்
ஏகம்
பரமார்த்தம்
பர ப்ரஹ்மம்
கூடஸ்தர்
பரஞ்சோதி -பர்யாய பதங்கள் –

ஸ்ரீ ராம ஹ்ருதயமே இந்த உபநிஷத் வாக்கியங்களின் தாத்பர்யம்

நியந்த்ரு நியாம்ய பாவம்-
சேஷி சேஷ பாவம்-
சரீர ஆத்ம பாவம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -உணர வேண்டுமே –

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அத்புத ராமாயணம் -அகார வாஸ்ய தொகுப்பில் —

August 30, 2022

ஸ்ரீ ராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.
அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை அரவணைத்து அருளும் அருட் செல்வன்!

அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை
அடக்கி,அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.
அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.
அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து ,அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.
அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்
அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.
அடுத்து,அரக்கர்களை அலறடித்து ,அவர்களின் அரண்களை ,அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் ,அசாத்தியமான அதிசாகசம்.
அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையை அமைத்து,அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை
அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் .
அனந்த ராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே.

—————

 

 

ஸ்ரீ பிராட்டி புருஷகாரத்வம் -ஸ்ரீ பிராட்டி சரம ஸ்லோகம் –

February 27, 2022

பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44-

கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —

மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20-

ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-

எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

————-

தேவிமார் ஆவார் திருமகள் -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்

———-

பிராட்டி சரம ஸ்லோகம் -யுத்த காண்டம் -116-45
பாபானாம் வா சுபானாம் வா
உம் அபிப்ராயம் பாபம் -எம் அபிப்ராயம் சுபம்
கார்யம் கருணம் ஆர்யேன
வதகார்ஹயம்-கொல்லத்தக்க
ந கச்சின் ந அபராத்யதி

கண்டேன் கண்களால்
அஸி தேக்ஷிணா –
கண்ணே ஸர்வ அவயங்களும் சமம்
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி

—————–

ஸ்ரீ யதே -அனைவராலும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள்

ஸ்ரயதே ச பரம் பரம் –தான் நாராயணனை ஆஸ்ரயிக்கிறாள்
அமுதனினில் வரும் பெண்ணமுது தானே சென்று திரு மார்பிலே அமர்ந்தாளே
தேவர்கள் கூட்டம் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்தேயும் -வெட்கப்படாமல் -பெண்கள் நடுவில் வெட்கப்பட வேண்டாமே
அவன் ஒருவனே புருஷோத்தமன்
மணி வல்லி பேச்சு வந்தேறி அல்லவே

விஷ்ணு பத்னி -ஜெகன் மாதா இரண்டையும் காட்டிய படி

ஸ்ரீ -ஸ்ருனோதி -நமது விண்ணப்பங்களைக் கேட்க்கிறாள்

ஸ்ரீ ஸ்ராவயதி -அவனையும் கேட்ப்பிக்கிறாள் -அவனிடம் உசித உக்திகளைச் சொல்லிக் கேட்ப்பிக்கிறாள்

ஸ்ரீ -ஸ்ருணாதி-தோஷங்களைப் போக்குவித்து அருளுகிறாள் -தாய் அன்றோ
ராக்ஷஸிகளை தண்டிக்க விரும்பிய -திருவடியை
பிலவங்கமே -சீதா ராமர் கோஷ்ட்டி அறியாமல் பேசுகிறாயே -என்றாளே

ஸ்ரீ நாதி ச குணை ஜகத் -குண பரிபூர்ணை
அநசூயை ஸீதா பிராட்டி சம்வாதம் அறிவோமே
த்ரிஜடை இருப்பு அறிவோமே
வடக்கு வாசல் வழியாக செருப்பையும் பையில் வைத்து தெற்கு வாசல் வழியாக வந்து
கடைகளில் பொருள்கள் வாங்கு மீண்டு வரும் பொழுது வாசலிலே இருந்து வெறும் அஞ்சலிக்கே
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமம் பதம் அளித்தும் மேலும் கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று
வெட்கம் அடைந்து தலை குனிந்து -பட்டர்

———–

ஸ்ரீ வசன பூஷணம்

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-

சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-

இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-

உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-

—————

ஸ்ரீ வசன பூஷணம்–வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-

பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக –
தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –

இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான
நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது –
அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் –சிறை இருந்ததாலே விளப்புற்றாளே-

சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே –
ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய ஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –
ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –

இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷண அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –

ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது என்னும் இடம் –
காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம் சீதாயாஸ் சரிதம் மஹத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர் –
உம்முடைய சரித்ரத்தாலே பிராண தாரணம் -என்கிறார் -பிரகர்ஷமாக உஜ்ஜீவிக்கிறது –

———–

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-

அபராத பூயிஷ்டரான சேதனருக்கு ஆஸ்ரயணீயை யாம் அளவில் –
அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் –த்வம் மாதா சர்வ லோகாநாம் – –
க்ருபாதிகளாலும் –நிருபாதிக நித்ய -பிரியம் ஏக – தண்ட கரத்வ ஸ்வா தந்தர்ய கந்தமே இல்லையே பிராட்டிக்கு –
அவனுக்கு அபிபூதமாக மறைக்கப்பட்டு இருக்குமே —
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -தண்ணீரை ஆற்ற தண்ணீர் வேண்டாமே –வந்து ஆஸ்ரயிகலாம்படியாய்-
அபராதங்களை பார்த்து சீறி –ஷிபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி

பெருமாளை திருத்தி என்னாமல் ஈஸ்வரனை என்றது -இவனுடைய பெருமையைக் காட்டி
அவனையும் நியமிக்கும் இவளது பெருமையைக் காட்ட –
அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும்
எல்லாருக்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் -இவளுக்கு அவனைப்பற்றி ஸ்வரூப லாபம்
அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்-
என் அடியார் அது செய்யார் -எப்பொழுது இவன் அடியார் ஆனார் -நம் அடியார் என்னாமல் -என் அடியார் -என்பதால்
பிராட்டி மகிழ்ந்து -தன் புருஷகாரம் இல்லாமலும் கைக் கொள்ளுவேன் –என்கிறான் –

இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் –பாஞ்சராத்ரம் -என்றும் –
என்னை அடைய -சம்சாரத்தில் ஆழ்ந்த ஜனங்களுக்கு லஷ்மி புருஷகாரமாக -ரிஷிகள் சொல்வார் –
என் திரு உள்ளமும் அதுவே –

அந்நிய லக்ஷணம் நாஸ்தி –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
லஷ்மி பதியான நான் உபாயமாக இருக்கிறேன் -பிரசித்தம் –
நானே உபாயம் -வை சப்தம் -அவளை புருஷகாரமாக இருக்கும் பொருட்டு வைத்துள்ளேன் –
இந்த பாவனைகள் வேதாந்தத்தில் உள்ளதே

அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
சேனாபதி ஆழ்வானுக்கு பாஞ்சராத்ரத்தில் -ஆகிஞ்சன்யம் பற்றாசாக -திருவடிகளை பற்றி -ப்ரீதியான மனதுடன் –
அவளை புருஷகாரமாக பற்றி –
என்னுடைய க்ஷமையை ஏற்றுக் கொண்டு -பிரப்பயமான என்னை பிராபகமாக கொண்டு –
கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி –பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –

பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் என்னும் இடங்களில் -புருஷகாரமாகவே பர்யவசிக்கும் –
உபாயத்வம் த்வனிக்கும் சப்தங்களுக்கு பிரதி நீயத்வ தர்மமே சித்தம் —

இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம் உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயணதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை-அன்றிக்கே –
கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் —
ஹித புத்தியால் திருத்த தண்டித்தாலும் -இவன் துக்கப்பட்டு கண் கலங்க விட மாட்டாள் இவள் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும்
குற்றவாளர்க்கும் கூசாமல் வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்—பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தோடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் –இரண்டும் உண்டே புருஷோத்தமனுக்கு -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூர தண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி-அத்யந்த பயங்கரமாய் – இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன் அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-

———

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-

இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங் சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் –
ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா அனந்யார்ஹத்வங்கள் இரண்டும் –
ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –
ஸ்ரீ -நித்ய யோக மத் ப்ரத்யயம் – –அவனை ஆஸ்ரயிக்கிறாள் -பாரதந்தர்யம் அநந்யார்ஹத்வம் -இருப்பதால்
நாம் ஆஸ்ரயிக்கிறோம் -கிருபை இருப்பதால் –

தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக —என்கை

தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொப்பனம் கண்டதாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் -சரணாகதி பண்ணாத திசையிலும் –
லகுதரா ராம கோஷ்ட்டி -இதனாலே பரம கிருபை என்றார் —

பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே–சாமான்யமாக சொல்லி – அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் –
கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கும் இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும்-கையில் உள்ள ஈரமும் காயாத முன்பு -என்றபடி -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா –

————-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-

சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-

ராவண வத அநந்தரம் ராஷசிகளை சித்ர வதம் பண்ணுவதாக உத்யுக்தனாய் நிற்கிற
திருவடியை குறித்து -பாபானாம்வா சுபானாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யென ந கச்சித் ந பராத்யதி -என்று அவன்-திருவடி – இரங்கத் தக்க
வார்த்தைகளை சொல்லி அவர்கள் அபராதங்களை பொறுப்பிகையாலும்-இங்கு புருஷகாரம் பண்ணுவது திருவடி இடம் -ரஷிக்க-
இது தேறுமோ என்னில்- சேதனர் அநிஷ்டம் போக்குவதே –

உபய தசையிலும்-இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றது இறே திருவடி ராஷசிகளை அபராத அநு குணம்
தண்டிக்கும் படி காட்டித் தர வேணும் என்ற அளவில்
பிராட்டி அவனுடன் மன்றாடி ரஷித்த இத்தனை அன்றோ –
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்த்ர அபராதாஸ் த்வயா ரஷந்த்யா
பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம்
சரணமித் யுக்தி ஷமவ் ரஷதாஸ் சா நஸ் சந்திர மகா கசஸ் சூகயது ஷாந்தீ ச்தவாகச்மிகீ -என்று
பவனாத்மஜன் நிமித்தமாக ரஷித்தாள் என்று அன்றோ பட்டரும் அருளி செய்தது –

கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —

——–

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-

இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-

ஈஸ்வரனை திருத்துவது -இச் சேதனனுடைய குற்றங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக்
கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான பந்த
விசேஷத்தை பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே-
என் பிழையே நினைந்து அருளி -ஏவகாரத்தால் மற்றவை எல்லாம் மறந்தீர் —
நாரமும் அயனும் சம்பந்தம் அறியாமல் அந்த நாரங்களுக்குள் உள்ள ஸ்ரீ சொல்ல வேண்டும் படி –
குடிநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -உபாதி மூலம் வந்த தாஸ்யமானால் கும்ப நீர் உடைத்து அறுக்கலாம் –
ஆத்மசம்பந்தம் இத்தாலும் போகாதே —

ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான
உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான் சொல்ல வேணுமோ –
ரக்ஷணா சாபேஷனாய் வந்து இவனை ரஷியாத போது -உம்முடைய சர்வ ரஷகத்வம் விகலம் ஆகாதோ —
நல்கித் தான் காத்து அளிக்கும் நாரணன் —
லோக பார்த்தாராம் -லோகத்துக்குள் நான் இல்லையோ -சீதை கேட்டால் போலே -என்னையும் உளள்-போலே
அநாதிகாலம் நம்முடைய ஆஞ்சாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய் போந்த இவனை
அபராத உசித தண்டம் பண்ணாதே -அத்தை பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ
என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால்
உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-அவை ஜீவித்தாவது இவனை ரஷித்தால் அன்றோ –
நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது க்ருபாதிகள் ஜீவியாது -என் செய்வோம் என்ன வேண்டா –
சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கி -க்ருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆன பின் இவனை ரஷித்து அருளீர் என்னும் உபதேசத்தாலே —
இவ் உபதேச க்ரமம் இவர் தாம் அருளி செய்த பரந்தபடியிலும் –
ஆச்சான் பிள்ளை அருளி செய்த பரந்த ரஹச்யத்திலும் விஸ்தரேன காணலாம் –

பிதேவ த்வத் பிர யேத் ஜன நி பரிபூர்ணா கஸி ஜனே ஹிதே ஸ்ரோதோ வ்ருத்தையா
பவதிச சுதாசித் கலுஷதீ -கிமேதன் நிர்தோஷ -க இஹா ஜகதீதி த்வமுசிதைரூபாயைர்
விஸ்மார்ய ச்வஜநயசி மாதா ததாசி ந–ஸ்ரீ குண ரத்ன ஸ்லோகம் -என்று
அபராத பரிபூர்ண சேதன விஷயமாக ஹித பரனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் சீரும் படியையும் –
அத்தசையில் இச்சீற்றத்துக்கு அடி என் எனபது -இவன் தீர கழிய செய்த அபராதம் என்றவன் சொன்னால் –
மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் -என்பதே உசித உபாயங்களால் -அபராதங்களை
மறப்பித்து பிராட்டி சேர்த்து அருளும்படியையும் அருளி செய்கையாலே உபதேசத்தாலே
ஈஸ்வரனை திருத்தும் படி ஸங்க்ரஹேன பட்டரும் அருளி செய்தார் இறே-

தம் பிழையும் படைத்த பரப்பும் –அபராத சஹத்வம் பாராமல் – –மறப்பித்த தூது நாலுக்கும் விஷயம் –
அவதார தசையிலும் -பிராண சம்சய மா பன்னம் த்ருஷ்ட்வா சீதாத வாயசம்
த்ராஹி த்ராஹீதி பார்த்தார முவாச தாயாய விபும் -என்று வாசா மகோசரமான மகா அபராதத்தை பண்ணின
காகத்தை தலை அறுப்பதாக விட்ட ப்ரஹ்மாச்த்தரத்துக்கு ஒரு கண் அழிவு கற்ப்பித்து பெருமாள் ரஷித்து
அருளிற்றும்-இவள் உபதேசத்தாலே என்னும் இடம் -பாதம புராணத்திலே சொல்லப் பட்டது இறே –
த்ராஹி த்ராஹி -காப்பாற்ற வேண்டும் -என்பதே உபதேசம் -கிருபையை ரஷித்து அருள வேண்டும் என்றபடி

இனி சேதனனை திருத்துவது –
உன் அபதாரத்தின் கனத்தை பார்த்தால் உனக்கு ஓர் இடத்தில் காலூன்ற இடமில்லை –
ஈச்வரனானவன் நிரந்குச ச்வாதந்த்ரன் ஆகையாலே -அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு
அறுத்து அறுத்து தீர்த்தா நிற்கும் -இவ் அனர்ததத்தை தப்ப வேண்டில் -அவன் திருஅடிகளில் தலை
சாய்க்கை ஒழிய வேறு ஒரு வழி இல்லை -அபராத பரி பூர்ணனான என்னை அவன் அங்கீகரிக்குமோ
தண்டியானோ என்று அஞ்ச வேண்டா -ஆபிமுக்க்ய மாத்ரத்திலே அகில அபராதங்களையும் பொறுக்கைக்கும்-
போக்யமாக கொள்கைக்கும் ஈடான குணங்களாலே–ஷமா வாத்சல்யம் – புஷ்கலன் என்று லோக பிரசித்தனாய் இருப்பான் ஒருவன் –
ஆனபின்பு நீ சுகமே இருக்க வேணும் ஆகில் அவனை ஆஸ்ரயிக்க பார் -என்றும் பரம ஹித உபதேசத்தாலே –
அப்படி எங்கே கண்டோம் என்னில் –அவனும் ஹித காமன் -இவள் பரம ஹிதை-
பாபிஷ்டனாய் வழி கெட நடந்து திரிகிற ராவணனை குறித்து –
1-மித்ரா மவ்பயிகம் கர்த்தும் ராம / -2-ஸ்தானம் பரீப்சதா /-3-வதஞ்ச அநிச்சதா கோரம்
4-த்வயா ஸௌ புருஷர்ஷப–இந்த நாலையும் கீழே விவரித்து அருளுகிறார் –

விதிதஸ் சஹி தர்மஞ்சச் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்ச்சசி-என்று

1-பெருமாள் உடன் உறவு கொண்டாடுகை காண் உனக்கு பிராப்தம் -உசிதம் –
2-அது செய்ய பார்த்திலை யாகில் வழி யடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று-வழி அடிக்க வேணுமே –
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –அவர் அல்லாத ஒரு ஸ்தலம் இல்லை காண்
3–எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ் இருப்பு இருப்பதில் காட்டில் –
பட்டு போக அமையும் என்று இருந்தாயோ -உன்னை சித்ரவதம் பண்ணாமல் நல் கொலையாக கொல்லும்
போதுமவரை பற்ற வேணும் காண்
4–நான் பண்ணின அபதாரத்துக்கு என்னை அவர் கைக் கொள்வாரோ
என்று இருக்க வேண்டா -ஆபிமுக்க்யம் பண்ணினால் முன்பு செய்த அபராதத்தை பார்த்து சீரும்
அந்த புன்மை அவர்பக்கல் இல்லை காண் -அவர் புருஷோத்தமர் காண் -சரணாகதி பரம தர்மம் என்று அறிந்தவராய் –
சரணாகத தோஷம் பாரத வத்சலராக எல்லாரும் அறியும் படி காண் பெருமாள் இருப்பது –
நீ ஜீவிக்க வேண்டும் என்று இச்சித்தாய் ஆகில் அவரோடு உனக்கு உறவு உண்டாக வேணும் என்று
இப்படி அச்சம் உறுத்தி உபதேசித்தாள் இறே —

மைத்ரே– நட்ப்புக்கும் சப்தம் தர்மம் -சரணாகதியை இவனுக்கு தர்மம் -அறிந்தவன்
அவன் திருந்தாது ஒழிந்தது இவளுடைய உபதேச குறை அன்றே –
அவனுடைய பாப பிரசுர்யம் இறே இப்படி உபயரையும் உபதேசத்தாலே என்கையாலே
ஸ்ரூஸ்ரா -என்கிற தாதுவிலே
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்தில்
ச்ருணோதி ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் -வைத்து கொண்டு –
ச்ராவயதி என்கிற வ்யுத்பத்தி அர்த்தம் சொல்லப் பட்டது-

ச்ராவயதி -என்கிறது ஈஸ்வர விஷயமாக
பூர்வர்கள் கிரந்தங்களில் பலவற்றிலும் காணப் பட்டதாகிலும்

அதவா
விமுகா நாமபி பகவத் ஆஸ்ர்யேன உபதேச ஸ்ராவயித் ர்த்வம்
விதிதஸ் சஹி தர்மனஜஸ் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சசி
இதி ராவணம் பிரத்யு உபதேசாத் -என்று தத்வ தீபத்திலே சேதன விஷயமாகவும்–கேட்ப்பிக்கிறாள்- வாதி கேசரி அழகிய மணவாள
ஜீயர் அருளி செய்கையாலே இவ் இடத்திலும் சேதன விஷயமாகவும் சொல்லக் குறை இல்லை –

ச்ருணோதி -கேட்க்கிறாள்-
ச்ராவயதி -கேட்க்கும் படி செய்கிறாள்-இருவரையும் –

—-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-

உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-

ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது –
ஒம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிழ்த்துதல்-செய்து தன் அழகாலே அவனை
பிச்சேற்றி தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாத படி பண்ணி
அங்கீகார உன்முகன் ஆக்குகை-

ஆக -புருஷகாரம் ஆம் போது-7- -என்று தொடங்கி-இவ்வளவாக
புருஷகாரத்வ உபயோகிகளான குண விசேஷங்களையும் –
அவை தன்னை தானே வெளி இட்டபடியையும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டிலும் புருஷீகரிக்கையும் –
தத் பிரகார விசேஷங்களையும் –
சொல்லிற்று ஆய்த்து-

—————————

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –-மும்மணிக்கோவை -1-

ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம்
செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் -ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத் தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்

1-அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
2-இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
ஓர்–ஒப்பற்ற விலக்ஷணமான -நந்தா விளக்கு -தானே தனக்கு விளங்கும் நமக்கும் காட்டும் –
இன்–மங்களம் -மாசு படியாத- குளிர்ந்த- அனுகூலமான விளக்கு – ஒளி விளக்கு -அதிக தேஜஸ்
உண்மை காட்டும் -நாலா பக்கமும் – தன்னையும் காட்டும் விளக்கு
ஆபீ முக்கியம் மாத்திரத்தாலே –அவனை காட்டுபவள்–தீபம் பின் பக்கம் இருளாக காட்டும் -அது போலே இல்லையே
அவனுக்கே விளக்காக இருந்து விளங்குபவள் –விளக்கின் ஒளி -இவள் -தீர்க்க சமஸ்
கார் இருள் -போக்கும் -தீப பிரகாசர் -மிதுனம் –மஹத்தியா பிரபை

3-மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
குன்றில் இட்ட விளக்கு -குடத்தில் வைத்த விளக்கு இல்லை – மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே —
வரை -மலை என்றும் –பர்யந்தம் அதுவரை இதுவரை
கடலின் அடி வரை மந்தரம் வரை சென்றது -அது தாங்குமவரை கூர்ம மூர்த்தியை நாம் வணங்குவோம் –
பகவான் திரு உருவம் ரத்ன பர்வதம் –பத்து ஒற்றுமைகள் உண்டே –

தோஷம் இல்லா-அகில ஹேய ப்ரத்ய நீக
பெருமை நிலைப்பாடு -கௌரவம் கொடுக்கும் -தன்னை தொழுவார்க்கு நின் வடிவு அழகு மறவாதார் பிறவாதார் –
ஸ்திரம் -நிலை நிற்குமே – போக்யம்-மனத்துக்கு இனியான்-அஸ்ப்ருஷ்ட சிந்தா பதம் –
பிரகாசகம் -இயல்பாகவே -அணையா -ரத்ன தீப பிரகாசம் –அறிவு மலர வைக்கும் – மஹார்க்கம் விலையனான –
மங்களம் -பாராட்டுக்கு உரியவை – ஸூ ரக்ஷம்–எளிதில் ரஷிக்கலாமே –
ஸூ க்ரம்-முந்தானையில் முடிந்து ஆளலாம்-மனசில் கிரகிக்க எளியவன்
இந்த பத்து சாம்யம்

மணி வரை –அன்ன நின் திரு உருவம் –
பச்சை மா மலை போல் மேனி
திகழ் பசும் சோதி –மரகத்தைக் குன்றம் –கண் வளருவது போல் -திருவாசிரியம் –
மணி வரையும் மா முகிலும் –போல் இருந்த மெய்யானை மெய்ய மலையானை –கை தூக்கி தொழா கை அல்ல கண்டோமே –
என்னுள் திகழும் மணிக் குன்றம் ஓத்தே நின்று -திருவாய் மொழி – அவனே திரு மலை -ஸ்வரூபமும் ரூபமும் –
ரத்ன பர்வத –யதா ரத்னம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் —கிருஷ்ணன் இடம் மனோ ரதங்கள் சக்திக்கு ஏற்க கொள்கிறான்
ரத்ன பர்வத்தில் ஏறி சக்திக்கு தக்க கொள்வது போலே -இங்கே ஸ்வரூபம் உவமை –
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை -திரு நறையூர் நம்பி –நின் -மணி வரை -நீ மணி வரை -உன்னிடம் திரு –
மணியும் வரையும் போல -மணிவரை என்றுமாம்-
மணியும் வரையும் அன்ன என்றுமாம் –நீள் வரை போல் மெய்யனார் -நம் பாணனார் –
விட்டிலங்கு –மலையே திரு உடம்பு -திரு வாய் மொழியிலும் —
கருவரை போல் நின்றானை கண்ணபுரத்தம்மானை -பெரிய திருமொழி
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்கும் -தனித் தனியாகவும்
நீல மரதகம் மழை முகில் – வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தெய்வ நாயகனை
இமயம் மேய எழில் மணித் திரளை – -குடந்தை மேய குரு மணித் திரளை -முத்துஒளி மரகதமே –
கலியன் உரை தேசிகன் கருத்தில் குடி கொண்டு இருக்குமே -பை விரியும் –திருச்சேறை
கூற்றினை குரு மா மணிக் குன்றினை -படு கடலுள் மணி வரை போல் மாயவன் -மை விரியும் -திரு மேனி -கருமை மிக்கு
படுக்கையில் பை விரியும் -பணங்கள்- பள்ளி கொண்ட பரமன் –

மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
திரு மார்பில் -மலை போன்ற மார்பில் –ஸ்வரூபம் -விக்ரகம் -மார்பு -மூன்றுக்கும் –
மணி வரை யன்ன -நின் – மணி வரை யன்ன -நின் திரு உருவில் –
மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து -என்றபடி –
பண்புகள் பொது -மூன்றுக்கும் –மலைக்கு –
1-ஓங்கி நிற்கும் / 2-சிலா மாயம் -/ 3-திண்மை உறுதி /4- செல்ல அறியாது துர்லபம் /5-தபஸ்விகள் ரிஷிகள் நாடுவார்கள் /
6-ஷமா ப்ருத் -மலை-பூமியை தாங்கிக் கொண்டு இருக்கும்-பொறுமை – / 7- எல்லா உலகும் தாங்கு/
8-கயவர் கவர்ந்து போக முடியாதே -/9-இயற்க்கை எழில் /10-நதிகள் -குரு பரம்பரை ஆரம்பம் -பத்தும் உண்டே
உயரம் -உன்னதி உத்துங்கதி -நித்ய உன்னதர்கள் –வான மா மலையே அடியேன் தொழ வந்து அருளே –ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –
ப்ராம்சூ-நெடிய உயர்ந்தவன் -வான் அளாவியவன் –பெற்றி-ஸ்வபாவம் –நெடியானே வேங்கடவா –நின் கோயிலின் வாசல் –

4-நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க -வன்புடன் நின்னோடு வதரித்து அருளி

5-வேண்டுரை கேட்டு
மீண்டவை கேட்பித்து –
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக –
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே

————————————————

ரமாவின் பெருமை சொல்ல வந்ததே ராமாயணம் -சீதாயா சரிதம்

கந்தம் கமழும் குழலீ -அவனுக்கும் வாசம் கொடுக்கும்
உந்து மத கயிற்றில் ஆறு அர்த்தங்களும் உண்டே

———–

அநுபவ ரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும்
*அப்பொழுதைக்கு
அப்பொழுது*
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்த ஸத்த்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்தேயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிஹாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரப்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ -ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

January 20, 2022

ஸ்ரீ ॥ ஹனுமத் பஞ்ச ரத்னம் ॥

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதானந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1 ॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவனமாஶாஸே மஞ்ஜுல-மஹிமானமஞ்ஜனா-பா⁴க்³யம் ॥ 2 ॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசனோதா³ரம் ।
கம்பு³க³லமனிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்தி: ॥ 4 ॥

வானர-னிகராத்⁴யக்ஷம் தா³னவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼஶம் ।
தீ³ன-ஜனாவன-தீ³க்ஷம் பவன தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்
ய: பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-னிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா
ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6 ॥

இதி ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: க்ருʼதௌ ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம் – ஸம்பூர்ணம் ॥

————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

“வீதாகி²ல-விஷயேச்ச²ம்” –
எல்லா விஷய இச்சைகள், புலன்களுக்கு இன்பத்தை தரக் கூடிய, போகப் பொருட்கள் மேல்
இருக்கிற ஆசைகளிடமிருந்து விடுபட்டவர்.

“ஜாதாநந்தா³ஶ்ர புலகம்” –
அவர் ராம நாமத்தை ஜபிச்சு,

‘ஆனந்த அஶு’ – ஆனந்த கண்ணீர் பெருகுபவராகவும்,
‘புலகம்’னா மயிர்கூச்செரியறது. அப்படி அந்த ராம நாமத்துனால, இடையறாது ராம நாம ஜபத்துனால,
எவருக்கு கண்களில் ஆனந்த பாஷ்பமும், உடம்புல மயிர்கூச்சலும் ஏற்படறதோ, அப்படி ராம பக்தி வந்துடுத்துனா,
எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் வராமாட்டான்! அப்பா கிட்ட பிள்ளைக்கு பயம்!
எங்க காமன் இருக்கானோ, அங்க ராமர் வர மாட்டார்!
அந்த மாதிரி அந்த காம வாஸனையே இத்து போன ஒரு
‘அத்யச்ச²ம்’ –
ரொம்ப நிர்மல வடிவானவர், தூய்மையே வடிவானவர் ஹனுமார்!

“ஸீதாபதி தூ³தாத்³யம்” –
ஸீதா பதியினுடைய, ஸீதையினுடைய கணவரான ராமருடைய தூதர்.
இந்த ‘ஸீதாபதி தூ³தாத்³யம்’ங்கறது கிஷ்கிந்தா காண்டத்துல, 3வது ஸர்கத்துல மொதல்ல
ஸுக்ரீவன அனுப்ச்சு ராமர் கிட்ட ஹனுமார் வேஷம் போட்டுண்டு வரார்!
ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து நமஸ்காரம் பண்ணி, ரொம்ப அழகா பேசறார்.
“நீங்க யாரு? உங்களைப் பார்த்தா ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள்! ஆனா ரிஷிகள் மாதிரி வேஷம் போட்டுண்டு இருக்கேள்!
சுத்திமுத்தி ஏதோ தேடிண்டே வரேள். சந்த்ர ஸூர்யாளே பூமில இறங்கி வர்றமாதிரி அவ்ளோ தேஜஸா இருக்கேள்!
உங்களுடைய தேஜஸுனால இந்த பம்பை ஏரியும் இந்த மலையும் ஒளிர்கிறது!”, அப்படீன்னு அழகா பேசி ,
ராம லக்ஷ்மணாளை வந்து பார்த்து நமஸ்காரம் பண்ணவொடனேயே அவா மேல பக்தி ஏற்படறது!

அதனால ஸுக்ரீவன் “சூழ்ச்சியா பேசி தெரிஞ்சுண்டு வா”னு சொன்னா கூட, ஹனுமார் உள்ளபடி சொல்லிட்டார்.
“நான் ஸுக்ரீவன் என்கிற வானர ராஜாவின் மந்திரி. என் பேர் ஹனுமான். ஸுக்ரீவன் உங்களோடு நட்பை விரும்புகிறார்!”
அப்படீன்னு சொல்லிடறார்.

அப்போ ஹனுமாருடைய இந்த பேச்சைக் கேட்டு ராமர் ரொம்ப கொண்டாடறார்.
“ரிக் யஜுஸ் ஸாம வேதங்களை அத்யயனம் பண்ணி, நவ வ்யாகரணங்களையும் பல முறை கேட்டாத் தான் இந்தமாதிரி பேச முடியும்!
இவளோ நேரம் பேசினார். இவர் பேசினதுல ஒருவிதமான grammatical mistake, அபசப்தம் ஒண்ணு கூட வரல!
இவர் ரொம்ப உரக்க பேசல! ரொம்ப அடி தொண்டைல பேசல! ரொம்ப விருவிருன்னு பேசல!
ரொம்ப இழுத்து இழுத்து subjectடுக்கே வராம பேசிண்டே இருக்கல!”

ஸம்ஸ்கார க்ரம ஸம்பந்நாம அத்3ருதாம விலம்பி3தாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருத3ய ஹாரிணீம் ||

மனத்தை கொள்ளைக் கொள்ளும் மங்களகரமான வார்த்தைகளைப் பேசறார்.
‘ஸம்ஸ்காரம்’ – ரொம்ப பண்பாடோட cultureரோட இருக்கு இவரோட வார்த்தைகளும் பேச்சும்!
இப்பேர்ப் பட்ட ஒரு தூதன் ஒரு ராஜாக்கில்லைன்னா அவனோட காரியங்கள் எப்படி நடக்கும்!”

ஏவம் குணக3ணைர்யுக்தா யஸ்ய ஸ்யு: கார்யஸாத4கா: |
தஸ்ய ஸித்4யந்தி ஸர்வார்தா2 தூ3தவாக்ய ப்ரசோதி3தா: ||

“அதே நேரத்துல இப்பேர்ப்பட்ட ஒரு தூதன் இருந்தான்னா, அந்த ராஜாக்கு இந்த தூதனுடைய வார்த்தைகள்னால
எல்லா காரியங்களும் நடக்குமே!” அப்படீன்னு சொல்லி, ராமர் அந்த ஹனுமாரைப் பார்த்தவொடனேயே
‘இந்த ஹனுமார் தான் நமக்கு ஸஹாயமா இருக்கப் போறார்ன்னு ராமதூதன் அப்படீங்கற அந்த titleல அங்கேயே குடுத்துட்டார்!’

லக்ஷ்மணன்கிட்ட, “நீ நம்மளுடைய விஷயத்தை சொல்லிடு”னு லக்ஷ்மணன் ரொம்ப தயவா ரொம்ப பரிதாபமா சொல்றான் .
“இந்த சக்ரவர்த்தி குமாரர், தானா காட்டுக்கு வந்திருக்கார். மனைவியை இழந்து கஷ்டப்படறார்.
தனுங்கற கந்தர்வன் , ஸுக்ரீவன் ஸஹாயம் பண்ணுவான்னு சொல்லிருக்கான்.
எங்களுக்கு ஸுக்ரீவனோட தயவு வேணும்!”னு சொல்லும் போது,

ஹனுமார் சொல்றார் , “ஆஹா! நீங்க அப்படி சொல்லாமா? உங்களை மாதிரி உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் ,
புலன்களையும் கோபத்தையும் ஜெயிச்சவர்களுமா இப்பேர்ப்பட்ட மஹானுபாவர்கள் அந்த ஸுக்ரீவனுக்கு ஒரு நட்பா கிடைக்கறது
இப்ப அவன் பண்ண புண்ணியம்! அவன் இந்த ரிஷ்யமுக மலையிலேர்ந்து வெளியே போகமுடியாம மாட்டிண்டிருக்கான்!
அப்படி இருக்கும்போது நீங்க வந்தது அவன் பண்ண பாக்யம்! நான் உங்களை அவன்கிட்ட அழைச்சுண்டு போறேன்”னு அழைச்சுண்டு போறார்.

ஸுக்ரீவன்கிட்ட, அழகா ராம லக்ஷ்மணாளைப் பத்தி பெருமையா சொல்லி, , “இவாளுடைய நட்பை நீ கோர வேண்டும்.
இதனால உனக்கு காரியம் நடக்கும். உனக்கு உன்னுடைய மனைவி, ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்!”
அப்படீன்னு சொன்னவொடனே,

ஸுக்ரீவன் கை கூப்பி, “நான் ஒரு ஸாதாரண வானரம். என்னை நீங்க நண்பனா ஏற்றுக்கொள்வீர்களா?” அப்படீன்னு கேட்கறான்.

ராமரும் அவன் கையை பிடிச்சு ஆலிங்கனம் பண்ணிண்டு, “நானும் நீயும் நண்பர்கள்” அப்படீன்னு சொல்றார்.
உடனே ஹனுமார், அக்னியை மூட்டி, அக்னி சாட்சியா ராமரும் ஸுக்ரீவனும் ஸக்யம் பண்ணிக்கறா!

ஸுக்ரீவன் கிட்ட ராமரை அழைச்சிண்டு வந்ததுலேர்ந்து, ஸீதா தேவிகிட்ட ராம தூதனா போய், ராமருடைய சேதியை சொல்லி,
ஆச்வாஸப்படுத்தி, அவளுடைய உயிரையே காப்பாத்தினார். அவ உயிரையே விடறதா இருந்தா. அவகிட்ட மெதுவா,
அவ காதுல மட்டும் விழறமாதிரி ராம கதையை சொல்லி, அவ மனஸை ஸமாதானப்படுத்தி, அப்புறம் போய்
எதிர்ல நமஸ்காரம் பண்ணி, நம்பிக்கையை சம்பாதிச்சு, நடந்த விவரங்களெல்லாம் ஒண்ணு விடாம அழகா சொல்லி,
அப்புறம் ராமருடைய மோதரத்தைக் கொடுத்து,

ராம நாமாங்கிதம் சேத3ம் பஶ்ய தே3வி அங்கு3லீயகம் ||

“இதோ பாரம்மா! ராமருடைய மோதரம் கொடுத்திருக்கார்!” அப்படீன்னவொடனே ஸீதைக்கு பரம சந்தோஷம்!

விக்ராந்தஸ்த்வம் ஸமர்த2ஸ்த்வம் ப்ராஜ்ஞஸ்த்வம் வாநரோத்தம |

“ஹே வானரோத்தமா! ஹே ஹனுமான்! நீதான் ‘விக்ராந்த:’ – உன்னிடத்தில் தான் உடல் பலமிருக்கு!
‘ஸமர்த்த:’ – மனோபலம் இருக்கு! ‘ப்ராஞ:’ – புத்தி பலமிருக்கு! எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு!
இப்பேர்ப்பட்ட காரியத்தை இந்த ராவணனுக்கு பயப்படாம வந்து இத்தனை படையும் காவலையும் தாண்டி,
மீறி என்னை வந்து பார்த்து, என் உயிரைக் காப்பாத்தி, ராமருடைய செய்தியை சொல்லி என்ன ஆச்வாஸப்படுத்தினியே!”
அப்படீன்னு கொண்டாடறா.

“ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜம்” – எப்படி ஹனுமாரால இந்த ஸமுத்ரத்தை தாண்ட முடியறதுனா,
ஜாம்பவான் உத்ஸாஹப்படுத்தும் போது சொல்றார்,
“ஹே ஹனுமான்! நீ வாயுவோட அனுக்ரஹத்துனால அஞ்ஜனா தேவிக்கு பிறந்தவன்.
அதனால உன்னால வாயு மாதிரி, கருடன் மாதிரி ஆகாஶத்துல பறக்க முடியும்! கருடனுக்கு றெக்கைகள்ல என்ன பலமோ,
அந்த பலம் உன்னுடைய கைகள்ல இருக்கு! உன்னால இந்த காரியத்த பண்ண முடியும்!

த்வய்யேவ ஹனுமனஸ்தி பலம் புத்தி: பராக்கிரம:

உன்னால முடியும்னு சொல்லல. “உன்னாலதான் முடியும் ஹனுமான்!” அப்படீன்னு சொல்லி உத்ஸாஹப் படுத்தி,
எல்லா வானராளுமா ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணின உடனே,
“ஆமா. நான் என்னுடைய அப்பாவுக்கு நிகரான பலமும் பராக்ரமமும் படைத்தவன்! என்னாலேயே எங்கும் தடையில்லாம போகமுடியும்!
இதோ ஆகாசத்துல போறேன் பாருங்கோ!” அப்படீன்னு சொல்லிட்டு,

யதா2 ராக4வ நிர்முக்த: ஶர: ஶ்வஸன விக்ரம: |
க3ச்சேத் தத்3வத்3 க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் ||

“எப்படி ராம பாணம் தடையில்லாம போகுமோ, அந்த மாதிரி நான் கிளம்பி இப்போ இலங்கைல போய் குதிப்பேன்!
அங்க ஸீதை இல்லனா மூவுலகத்துலேயும் தேடி எப்படியாவது ஸீதைய கண்டுபிடிச்சிண்டு வருவேன்!
இராவணனை வால்ல கட்டி இழுத்துண்டு வருவேன்! எப்படியாவது காரியத்தை முடிச்சிண்டு வருவேன்!”
அப்படீன்னு கர்ஜனை பண்ணிண்டு ஆகாச மார்க்கமா, பல தடைகள்லாம் வர்றது. அதை மீறிண்டு போய் இலங்கைல குதிக்கறார்.

‘வாதாத்மஜம் அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ –
‘என்னுடைய ஹ்ருதயத்துல இன்னிக்கு நான் அவரை த்யானம் பண்றேன்!’ அப்படீன்னு சொல்றார்.

———–

அடுத்த ஸ்லோகம்,

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

‘தருணாருண முக²கமலம்’ –
‘அருண:’னா ஸூரியன். ‘தருணாருண:’னா இளம் ஸூரியன்! உதய ஸூரியன் போன்ற தேஜஸ் கொண்ட முகம்.
‘கமலம்’ – கமலம் போன்ற அழகான ஸூரியனை போன்ற அழகான அவருடைய முகம்!

‘கருணாரஸபூர’ –
கருணாரஸம் நிரம்பிய,

‘பூரிதாபாங்க³ம்’ –
கண்கள். அவருடைய கண்கள்ல கருணை நிரம்பியிருக்கு! அப்பேர்ப்பட்ட கருணை!
அதனால தானே அவர் ஸீதை படற கஷ்டத்தைப் பார்த்து தவிக்கறார்.
இந்த ஸீதை இப்படி கஷ்டப் படலாமா? ராமன் கணவரா, ஜனகர் அப்பாவா, தஶரதரை மாமனாராப் பெற்ற
இந்த ஸீதை இப்படி இங்க கஷ்டப் படறாளே!
இந்த ராமரையும் ஸீதையயும் சேர்த்து வெக்கணும். அந்த ராமர் அங்க அப்படி கஷ்டப்படறார் ஸீதைய பிரிஞ்சு!

ஸீதேதி மது4ராம் வாணீம் வ்யாஹரந்ப்ரதிபு3த்4யதே৷৷

ராமர் தூங்காம சாப்படாம இந்த ஸீதைய நெனச்சுண்டு கஷ்டப்படறார்.
எப்பயாவது தூங்கினாகூட “ஸீதா!”னு சொல்லிண்டு எழுந்துண்டுடறார்.
அப்படி அங்க அவர் தவிக்கறார். இங்க இவ இப்படி தவிக்கறா. தபஸ் பண்ணிண்டிருக்கா.

நைஷா பஶ்யதி ராக்ஷஸ்யோ நேமாந்புஷ்பப2லத்3ருமாந் |
ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி৷৷

இவள், இந்த அசோகவனம் இவ்ளோ அழகா இருக்கு! இதையும் பார்க்கல!
ராக்ஷஸிகள் கோரமா இருந்துண்டு பயமுறுத்தறா! அதையும் பார்க்கல!

‘ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி’ –

‘ஒரே மனஸா ராமனயே பார்த்துண்டிருக்கா! தபஸ் பண்ணிண்டிருக்கா இவோ!
அதனால இந்த ராமனையும் ஸீதையையும் சேர்த்து வெக்கணும்!’
அப்படீன்னு அதுக்கு என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம் பண்றார்.
அங்கிருந்து வந்து, ராமரை பார்த்தவொடனே ஸீதை படற கஷ்டத்தை சொல்லி,

ஸர்வதா2 ஸாக3ரஜலே ஸம்தார: ப்ரவிதீ4யதாம்|

‘உடனே எப்படி கடல் தாண்டறது? அதுக்கான முயற்சியைப் பண்ணுவோம்’னு அப்படி கிளப்பறார் ஹனுமார் ராமரை!

‘ஸஞ்ஜீவநமாஶாஸே’ –
உயிரைக் கொடுத்த அந்த ஹனுமாரை போற்றுகிறேன்! ஹனுமார் இந்தமாதிரி ஸீதைக்கு மட்டுமா உயிர் கொடுத்தார்!
லக்ஷ்மணன் அடிப்பட்டு விழுந்த போது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.
எல்லா வானரப்படையுமே இந்திரஜித் ப்ரம்மாஸ்த்ரத்துனால வீழ்த்தினபோது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.

அப்படி நமக்கே ஹனுமாருடைய த்யானம்

அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமா பூஜிதா |

அவருடைய ஸ்தோத்ரம் பண்ணா, நம்முடைய உயிர் வளரும். அப்படி உயிரைக் கொடுப்பவர் எல்லாருக்கும்!

‘மஞ்ஜுள-மஹிமாநம்’ –
அவருடைய மஹிமை ரொம்ப அழகான மஹிமை அப்படீங்றார் ஆசார்யாள். அவரே ஸுந்தரர்னு பேரு!
அவருடைய மஹிமையும் ரொம்ப ஸுந்தரமா இருக்கு! அதனால தான் அந்த காண்டத்துக்கே ‘ஸுந்தர காண்டம்’னு பேரு!
‘மஞ்ஜுள-மஹிமாநம்’ – அவர் பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார். ஏன்னா,

‘அஞ்ஜநா-பா⁴க்³யம்’ –
‘அஞ்ஜநா’ங்கறவ ஒரு அப்ஸர ஸ்த்ரீ வானரமா பொறந்திருக்கா! அந்த அப்ஸர ஸ்த்ரீக்கு குழந்தையா பொறந்து,
அந்த ஹனுமார் அவ்ளோ அழகா இருக்கார். ஸீதா தேவி ராம கதையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது,
ஸூர்யோதயம் போன்று மஞ்சள் பட்டு உடுத்திக்கொண்ட அழகான அந்த வானர வீரரைப் பார்த்து,
மனஸுல ஸந்தோஷப்பட்டா! அவர் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, ‘கொரங்கைப் பார்த்தேனே!’ன்னு கவலைப்படறா.
அப்பறம் இது கனவில்லை! கனவுல தான் கொரங்கைப் பார்த்தா கஷ்டம். இது நனவு தான்!
“ஏன்னா எனக்கு ஸுகமிருந்தாதான் தூக்கம் வரும். தூக்கமிருந்தாதான் கனவு வரும். எனக்கு கனவே கிடையாது.
இது நேரத்தான் நான் பார்க்கறேன். இவன் சொன்ன வார்த்தையெல்லாம் சத்தியமாகட்டும்”!
அப்படீன்னு. நமஸ்காரம் பண்ணும்போது இராவணனான்னு ஸந்தேஹம் வர்றது!
ஆனா சீதை சொல்றா, “அன்னைக்கு ஸந்யாஸி வேஷம் போட்டுண்டு வந்த இராவணனைப் பார்த்தபோது என் மனம் நடுங்கித்து!
இன்னிக்கு வானரமா நீ வந்திருக்க! ஆனாலும் உன்னைப் பார்த்து என் மனஸுல ஒரு உல்லாசம் ஏற்படறது! ஒரு சாந்தி ஏற்படறது!”ன்னு சொல்றா.

அப்படி ஒரு ரூபம் ஹனுமாருடைய ஒரு ரூபம்! அந்த ஹனுமார்ங்கறதே குருவினுடைய வடிவம்தான்!
ஸீதாதேவி, அம்பாளே ஒரு ஜீவனா இருந்து, ராமர்ங்கிற பகவானை அடையறதுக்காக தவிச்சிண்டிருக்கா.
தபஸ் பண்ணிண்டிருக்கா. அப்போ நம்ம மஹா பெரியவா மாதிரி, ஆசார்யாள் மாதிரி வர அந்த குரு,
அந்த குரு மாதிரி ஹனுமார் வந்தார்! அந்த ஸுந்தர காண்டத்துல, த்ரிஜடை ஸ்வப்னம் சொன்ன பின்ன ஒரு ஸ்லோகம் வர்றது.

பக்ஷீ ச ஶாகாநிலயம் ப்ரவிஷ்ட: புந: புநஶ்சோத்தமஸாந்த்வவாதீ3 |
ஸுஸ்வாக3தாம் வாசமுதீ3ரயாந: புந: புநஶ்சோதயதீவ ஹ்ரு’ஷ்ட:৷৷

ஒரு பக்ஷியானது மரக்கிளைல உட்கார்ந்துண்டு, ‘புந: புநஶ்ச உத்தமஸாந்த்வவாதீ3’ –
‘மீண்டும் மீண்டும் உத்தமமான மனஸ் ஸமாதானம் ஆகக்கூடிய வார்த்தைகளைப் பேசிண்டே இருக்கு’
அப்படீன்னு! இது ஹனுமார் வந்திருக்கார்ங்கறதுக்கு ஸூசகமா சொல்றார். வால்மீகி,
“ஒரு குருவானவர் ஒரு ஜீவன் கிட்ட, பகவான் வருவார்! உன்னை மீட்டுண்டு போவார்”.

“க்ஷிப்ரமேஷ்யதி ராகவா:”
சீக்கிரம் வருவார். வானரப் படைய இழுத்துண்டு வருவார். எப்படி கருடனை இழுத்துண்டு கஜேந்திரனைக்
காப்பாத்தறதுக்காக விஷ்ணு பகவான் வந்தாரோ, அந்த மாதிரி, வானரப் படைய இழுத்துண்டு வந்துருவார்.
உன்னை மீட்டுண்டு போவார். நான் போய் திரும்பி சொல்ற இந்த நேரம் தான் delay ஆகப் போறது!
இனிமே நீ கவலையே படவேண்டாம்!” அப்படீன்னு ஒரு 25 வாட்டி வர்றது அந்த பத்து ஸர்கத்துல!
அத்தனை வாட்டி சொல்லி ஆறுதல் சொல்றார். இதத்தான் ஒரு குருவானவர் பண்ணுவார்!
“பகவான் உன்னை நினைச்சுண்டிருக்கார். உன்னை வந்து மீட்பார்! நீ கவலைப்படாதே!”
அப்படீன்னு சொல்ற அந்த வார்த்தையை ஹனுமார் பண்றார்.
அதனால ஹனுமார் வந்து ஒரு குருவுக்கு உருவகம். அந்த ஹனுமாருடைய மஹிமை மஞ்ஜுள மஹிமை!
அஞ்ஜனையுடைய பாக்யமா அவதாரம் பண்ணவர்! அதனால ஆஞ்சநேயன்னு பேரு!

———-

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

‘ஶம்ப³ர:’ –
ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன்.
மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார்.
அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். மன்மதனை ஜயிச்சவர் ரொம்ப கொஞ்ச பேர்தான்.
பிள்ளையார், ஹனுமார், நம்ப மகாபெரியவா.
அந்த இராவணன் அந்தபுரத்துல போய் பெண்கள் தூங்கிண்டிருக்கிறதை பார்த்தார்.
ஆனா கொஞ்சங்கூட அவருக்கு சலனம் இல்லை. அவர் அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கறார்.
“என்னடா இது? பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே!
இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு!”.
அப்புறம், “மனசு தான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு.
அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை.
ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன்.
நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும்? மான் கூட்டத்துலயா தேட முடியும்?
அதனால நான் இங்க வந்தேன்!”னு சொல்றார்.

அந்த மாதிரி, அவருடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய situationலயும் அவருக்கு கொஞ்சம்கூட
சலனம் இல்லாமல் இருந்தாலும், “இந்த மாதிரி இடங்களுக்கு நான் வரமாட்டேன்”னு தீர்மானமும் வெச்சிருந்தார்.
அந்த மாதிரி ஒழுக்கத்தை வெச்சுதான் மகா பெரியவா, social service பண்றவாள்லாம் ஹனுமாரை பாத்துக்கணும்னு பேசியிருக்கார்.
Social service பண்ணும்போது, பலவித இடைஞ்சல்கள் வரும். பலவித temptations வரும்.
ஆனா ரொம்ப humbleஆ இருக்கணும். நாம பண்றோம்னு நினைச்சுக்கக் கூடாது.
“ராம பாணம் மாதிரி போவேன்”னு ஹனுமார் சொன்னார்னா, ராமர் விட்டாதான் பாணம் போகும்.
அதுமாதிரி ராமருடைய சக்தியினால, பிரபாவத்துனால்தான் எல்லாமே நடக்கறது.
நம்மகிட்ட ஒண்ணுமே இல்லைனு நினைச்சவர் அவர். அந்த ஒரு சரணாகதி பாவம் அவருக்கு இருந்ததுனால,
உலகத்துல யாருமே பண்ண முடியாத அபார காரியங்கள் எல்லாம் அவர் பண்ணார். சமுத்திரத்தை தாண்டினார்.
இலங்கையை எரிச்சார். எல்லா காவலையும் மீறி சீதையைப் பார்த்து சமாதனம் சொன்னார். ராவணனையே மிரட்டிட்டு வந்தார்.
அப்படி அவருடைய வைபவம்! அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால! தனக்கு எந்த சக்தியுமே இல்லை.
ஆனா “ராமர் 14 உலகங்களையும் ஸ்ருஷ்டி பண்ணி சம்ஹாரம் பண்ணக் கூடியவர்”ங்கிற பூரண நம்பிக்கை வச்சிருந்தார்
அவர். அப்படி, ‘ஶம்ப³ரவைரி ஶராதி’ – மன்மதனுடைய அம்புகளுக்கு மீறினவர்!

‘அம்பு³ஜத³ல’ – ‘அம்பு³ஜம்’னா தாமரை. ‘‘அம்பு³ஜத³லம்’னா தாமாரையினுடைய இதழ்.
அது போன்ற ‘விபுல-லோசநோதா³ரம்’ – பெரிய கண்கள்.
‘உதா³ரம்’ – அதுல எப்பவுமே கருணை இருக்கும்.
‘கம்பு³க³லம்’ – ‘கம்பு³’னா சங்கு. சங்கு போன்ற அழகான கழுத்து.
‘அநிலதி³ஷ்டம்’ – வாயுபகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர்.
பொறந்த உடனே சூரியனை பழம்னு நினைச்சு 3௦௦௦ யோஜனை ஆகாசத்துல பறந்தார்.
சூரியனைப் பிடிச்சு சாப்பிடனும்னு! எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார்.
ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction!’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான்.
ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது.
உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்!”னு ஒரு குகைல போய் உட்கார்ந்துடறார்.
உடனே பிரம்மாதி தேவர்கள் எல்லாரும் ஓடி வந்து, ஹனுமாருக்கு சிரஞ்சீவி வரமும்,
இன்னும், பிரம்மாஸ்திரம் முதற்கொண்டு எந்த அஸ்திரமும் ஒண்ணும் பண்ணாதுங்கிற வரமும் கொடுத்த பின்ன
வாயு பகவான் வெளியில வந்து எல்லாருக்கும் திரும்ப உயிர் கொடுக்கறார்.
அப்படி ‘அநிலதி³ஷ்டம்’ – வாயு பகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர் ஹனுமார்.

‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²ம்’ – கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் கொண்டவர்.
‘ஏகம் அவலம்பே³’ – அவர் ஒருத்தர்தான். ஹனுமார் மாதிரி இன்னொருத்தர் கிடையாது.

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

அப்படின்னு ஹனுமாரை ஸ்மரணம் பண்ணா நமக்கே புத்தி, பலம், யஶஸ், ‘யஶஸ்’னா புகழ், தைர்யம்,
நிர்பயக்த்வம், அரோகதா. எந்த ஒரு வியாதியும் இல்லாத health. இப்படி எல்லாமே கிடைக்கும்.
ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. புத்தி இருந்தா ரொம்ப நோஞ்சானா இருப்பான் .
பலசாலியா இருந்தா அசடா இருப்பான். இப்படி இல்லாமல் எல்லாம் தன்னிடத்தில் இருந்தவர்,
இதுக்கெல்லாம் மேல பணிவு. இதுக்கெல்லாம் மேல பிரம்மச்சர்யம்.
அப்பேற்பட்ட அந்த ஹனுமாரை நினைச்சா நமக்கும் அதெல்லாம் வரும்.

அப்பேற்பட்ட தன்னிகரில்லாத ‘ஏகம்’. அந்த ஹனுமாரை,
‘அவலம்பே³’ – நான் சரணடைகிறேன். என்னுடைய புகலிடமாக கொண்டிருக்கிறேன்.

————

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

‘தூ³ரீக்ருʼத-ஸீதார்தி:’ –
சீதையினுடைய கஷ்டத்தை போக்கினவர். சீதா தேவியை முதல்ல பார்த்த உடனே, அவளுடைய நிலைமையை உணர்ந்து,
அவளை ராமனோட சேர்த்து வைக்கணும்னு தீர்மானம் பண்ணிடறார். அப்புறம் இராவணன் வந்து சீதையை மிரட்டறான்.
கொஞ்சம் கூட சீதை பயப்படலை. அப்புறம் ஹனுமார் ராம கதையை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணி, “நீ யாரம்மா?”

“கிமர்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி ஷோகஜம் |”
ஏன் உன் கண்ணுல இந்த துக்க கண்ணீர் வர்றது? நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும்,
பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான்! தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன்.
நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண்,
ராமருடைய மனைவி சீதையா?”ன்னு கேட்கறார்.

அப்புறம் சமாதானம் சொல்லிட்டு கிளம்பும் போது,

“மா ருதோ3 தே3வி ஶோகேந மாபூ4த்தே மனஸோऽப்ரியம் |”

“அம்மா! இனிமே நீங்க அழவே வேண்டாம். மனசுல எந்த அப்ப்ரியமான எண்ணமும் வேண்டாம்.
உங்களுக்கு ராம லக்ஷ்மணா இருக்கா. அக்னி, வாயு போன்ற அவா இருக்கும்போது உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
வெகு விரைவில் இலங்கை வாசலில் பெரும்படையுடன் அவர்கள் வருவார்கள். அதை நீங்க பார்க்கத்தான் போறேள்!”னு
சீதையோட வருத்தத்தை போக்கினார். பின்னாடியே ராமர் வந்து சீதையை மீட்டுண்டு போயிடறார்.

‘ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி:’ –
ராமருடைய வைபவத்தை உலகுக்கு தெரியபடுத்தினவர் ஹனுமார் தான். ஹனுமார், ராமரை உற்சாகப்படுத்தி,
“என் தோள்ல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ!”ன்னு ராவணனோட யுத்தம் பண்ணும்போது சொல்றார்.
“எப்படி விஷ்ணு பகவான் கருடன் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுவாரோ,
அப்படி என் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு கூட்டிண்டு போறார்.

‘தா³ரித-த³ஶமுக²-கீர்தி:’ –
‘த³ஶமுக²’னான பத்துதலை படைத்த ராவணனுடைய ‘கீர்தி:’ – கீர்த்தியை, புகழை, ‘‘தா³ரித’ – கிழிச்சு போட்டார்.
முதல்ல அவனை பார்த்த உடனே சொல்றார். “ஹே ராவணா! நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே!
சுகப்பட்டே! ஆனா பெரிய தப்பு பண்றே. சீதையை ராமர் கிட்ட ஒப்படைச்சு உயிர் பிழைச்சுக்கோ. இல்லேன்னா,

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூ4தான் ஸசராசரான் |
புனரேவ ததா2 ஸ்ரஷ்டும் ஶக்தோ ராமோ மஹாயஶா: ||

“14 லோகங்களையும் ஸம்ஹாரம் பண்ணி, ஸ்ருஷ்டி பண்ணகூடியவர் ராமர்! அவர்கிட்ட அபசாரம் பண்ணா,
நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது!”ன்னு கர்ஜிக்கறார். அவரை “கொல்லுங்கோ”ங்கிறான்.
விபீஷணன் “தூதரை கொல்ல வேண்டாம்”ங்கிறான். “வால்ல நெருப்பு வைங்கோ”ங்கிறான்.
அந்த வால்ல இருக்கிற நெருப்பை வெச்சு இலங்கையையே எரிச்சுட்டு வந்துடறார்.

‘ருத்3ரேண த்ரிபுரம் யதா2 ‘ –
எப்படி ருத்ரன் பகவான் முப்புரங்களை எரித்தாரோ, அப்படி ஹனுமார் இலங்கையை எரிச்சார்!
முதல்ல அசோக வனத்தை அழிச்ச உடனே, இராவணன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான்.
அவாளை எல்லாரையும் ஒரு பெரிய தூணை எடுத்து சுழட்டி அடிக்கறார்.
அதுலேயிருந்து நெருப்பு வர்றது. எல்லாரையும் வதம் பண்ணிடறார். கர்ஜிக்கறார்.

ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |
ராஜா ஜயதி சுக்3ரீவோ ராக4வேணபி4பாலித: ||
தா3ஸோ(அ)ஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதிப3லம் ப4வேத் |
ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||
அர்த3யித்வா புரீம் லங்காமபி4வாத்3ய ச மைதி2லீம் |
ஸம்ருத்3தா4ர்தோ க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||–என்று கர்ஜிக்கறார்.

“1௦௦௦ ராவணர்கள் வந்தாலும் என்னை அழிக்க முடியாது! ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம்.
ஆன ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன்! யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன்!
சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன்.
என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ ! நான் ராமதூத ஹனுமான்”னு கர்ஜிக்கறார்.
அப்பேற்பட்ட ஹனுமார் யுத்தத்தின் போதும் ராவணனை அழ விடறார். அவர் விட்ட குத்துல இராவணன் மயங்கி விழுந்துடறான்.
அப்பேற்பட்ட பராக்ரமம். இராவணனுடைய புகழை ஒண்ணும் இல்லாம பண்ணவர் ஹனுமார்.

‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“அப்பேற்பட்ட ஹனுமார் என் முன்னால் காட்சி கொடுக்கட்டும்!”னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார்.
அப்படி பிரார்த்தனை பண்ண உடனே, அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைக்கறது.

ஸமர்த்த ராமதாசர், “ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம”ன்னு 13 கோடி தரம் ஜபிச்சு ராம தரிசனம் பண்ணாரோ,
எப்படி, 96 கோடி “ராம நாமா” ஜபிச்சு தியாகராஜ ஸ்வாமிகள், ஹனுமாரையும், ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசனம் பண்ணாரோ,
அந்த மாதிரி ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தை சொல்லி ஹனுமத் தரிசனம் பண்ணார்.

அப்பேற்பட்ட ஸ்லோகம்.
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

—————–

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

‘வாநர-நிகராத்⁴யக்ஷம்’ –
வானர கூட்டத்தில் சிறந்த தலைவர்! ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும் போது,
“ஹே ஹனுமான்! நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன்!”னு சொல்றார்.
ஹுனுமார் சீதையை பார்த்துட்டு அசோக வனத்தை அழித்த போது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான்.
80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை.
சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன்,
ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே!”ன்னு ராவணனே சொல்றான்.
அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார்.

இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம்.
இப்ப இவாளே கூட்டிண்டு போறா!”ன்னு நேரா ராவணனை பார்க்கப் போறார். வானரக் கூட்டத்தின் தலைவர்.
இலங்கையை எரிச்சபோது, ராக்ஷஸர்களுடைய கர்வமே அவாகிட்ட சொத்து இருக்குன்னு தான். எல்லாம் போயிடறது.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உயிரை காப்பாதிண்டா போறும்னு ஓடறா. அவா அப்போ சொல்றா. அவா மூலமா வால்மீகி ஹனுமார்
“தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வம்” ங்கிறதை வேற விதமா சொல்றார்.

வஜ்ரீ மஹேந்த்3ரஸ்த்ரித3ஶேஶ்வரோ வா
ஸாக்ஷாத்3யமோ வா வருணோ (அ)னிலோ வா |
ருத்3ரோ(அ)க்3னிரர்கோ த4னத3ஶ்ச ஸோமோ
ந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||

இது சாதாரண வானரமா தெரியலை! ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா.
சாக்ஷாத் எமனா? வருணனா? வாயுவா? ருத்ர பகவானா? அக்னியா? குபேரனா? சாதாரண சோமனா?
அஷ்டதிக் பாலருக்கும் மேலான தெய்வம்”ங்கிறார்.

கிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய ஸர்வஸ்ய தா4துஶ்சதுரானனஸ்ய |
இஹாக3தோ வானரரூபதா4ரீ ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||

“பிரம்மாதான் ராக்ஷதர்கள் மேல இருக்கிற கோவத்துனால இந்த உருவம் எடுத்துண்டு வந்துட்டாரா?”

கிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய ரக்ஷோ வினாஶாய பரம் சுதேஜ: |
அனந்தமவ்யக்தமசிந்த்யமேகம் ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||

விஷ்ணு பகவான்தான் தன்னுடைய மாயைனால, இப்படி ஒரு ரூபம் எடுத்துண்டு வந்து நம்மளை எல்லாம் வதம் பண்றாரா?
“மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார்!”ங்கிறதை காவியத்துல சொல்லும்போது,
இப்படி மத்தவா மூலமாதான் சொல்லணும்னு வால்மீகி சொல்றார்.
அப்படி வானரர்களுக்கு மட்டும் இல்ல. தெய்வங்களுக்கெல்லாம் நிகரான தெய்வம் ஹனுமார்!

‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ –
சில பாடங்கள்ல, ‘ஸத்³ருʼஶம்’னு போடறா. ‘ஸத்³ருʼக்ஷம்’மும் உண்டு.

வலக்ஷஶ்ரீர்ருʼக்ஷாதி3பஶிஶு ஸத்3ரு’க்ஷைஸ்தவ நகை2:
ஜிக்4ரு’க்ஷுர்த3க்ஷத்வம் ஸரஸிருஹ பி4க்ஷுத்வகரணே |
க்ஷணான்மே காமாக்ஷி க்ஷபிதப4வஸங்க்ஷோப4க3ரிமா
வசோவைசக்ஷன்யம் சரணயுக3லீ பக்ஷ்மலயதாத் ||57||என்று ஒரு மூக கவி பாதாரவிந்த ஸ்லோகம் இருக்கு!

‘ஸத்³ருʼக்ஷம்’ங்கிற வார்த்தையை use பண்றார்.
இங்க ‘பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ங்கிறதுக்கு, ‘ஸத்³ருʼக்ஷம்’னு ஆச்சார்யாள் use பண்ணியிருக்கார். அதுதான் correct.
‘தா³நவகுல’ – ராக்ஷஸ குலம் என்ற ‘குமுத³’ – அல்லி மலருக்கு, ’ரவிகர ஸத்³ருʼக்ஷம்’ – சூரியனை போன்றவர்.
அல்லி ராத்திரி ஆனா மலரும். சூரியன் வந்தா வாடி போயிடும். ராக்ஷச கூட்டத்தை வாடச் செய்பவர் ஹனுமார்.
ராம, ராவண பிரதம யுத்தம். அதுக்கு முன்னாடி இராவணன், ‘ப்ரஹஸ்தன்’ வதம் ஆன உடனே, பெரிய எதிரியா தெரியறான்,
நானே யுத்தத்துக்கு வரேன்னு வரான். வந்த இடத்துல ஹனுமார் எதிர்ல வரார்.
ராவணன் சொல்றான், “தெரியும் தெரியும்! நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு.
உன் பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன்.
ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா!”ங்கறார்.
உடனே அவனுக்கு ரோஷம் ஆயிடறது. ஹனுமாரை இராவணன் ஒரு குத்து விடறான்.
ஹனுமார் ஒரு நிமிஷம் ஆடிடறார். அப்புறம்“இந்தா!”ன்னு ஹனுமார் ஒரு குத்து விடறார்.
அவன் அப்படியே தேர் தட்டுல கலங்கி போய் உட்கார்ந்துடறான்.
இராவணன் எழுந்துண்டு சொல்றான், “ஹே ஹனுமான்! நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான்.

அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து
பலசாலின்னு சொல்றதாவது! எனக்கு அவமானம்”ங்கிறார்.
உடனே இராவணனுக்கு திரும்பி ரோஷம் வந்துடறது. அவன் ஹனுமாரை திரும்ப குத்து விடறான்.
இந்த வாட்டி ஹனுமார் தளர்ந்து உட்கார்ந்துடறார்.
அப்புறம் நீலன் வரார். இராவணன் நீலனோட யுத்தம் பண்ணப் போயிடறான். நீலன் நிறைய மாயை பண்றான்.
அப்புறம் லக்ஷ்மணனோட யுத்தம் பண்றான். அப்போ லக்ஷ்மணனை இராவணன் வீழ்த்திடறான்.
லக்ஷ்மணனை தூக்கிண்டு போகப் பாக்கறான். மேரு மந்த்ரமலை எல்லாம் தூக்கின இராவணனால,
லக்ஷ்மண பகவானை தூக்க முடியலை. ஏன்னா, அவர் விஷ்ணு அம்சம்.
லக்ஷ்மணனை தூக்கப் பார்க்கும்போது, ஹனுமார் வந்து ராவணனைப் பார்த்து,
“ஒரு குத்து பாக்கியிருக்கு! இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான்.
ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது!
லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர் கிட்ட சேர்த்துடறார்.
ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன்!”னு ராவணனோட யுத்தம் பண்றார்.

ராம ராவண யுத்தம். ஹனுமார் ராமரை தூக்கிண்டிருக்கார். இந்த ராவணனுக்கு ஹனுமார் மேல கோவம்.
அதுனால ஹனுமாரையே அடிக்கறான். ராமர் பார்க்கறார். என்னடா இது! இவ்ளோ அம்பு வர்றது,
நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது!
ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே,
ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும்,
‘கர’ வதம் போது! இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு!
பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார்.
குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து.
தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார்.

முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது! ஆனா ராமர், “நீ பிழைச்சு போ! நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க.
ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன்.
நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா!”ங்கறார் ராமர்.
இராவணன் ரொம்ப அவமானப்பட்டு, அப்புறம் போய் கும்பகர்ணனை எழுப்பறான். ராம ராவண பிரதம யுத்தம் அது!
அப்பேற்பட்ட வீரம்! ‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – ராக்ஷச குலத்தை தவிக்க விட்டவர் ஹனுமார்.

‘தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம்’ –
இந்த ஹனுமார் தீனர்களை காப்பது என்று தீக்ஷை எடுத்துண்டு இருக்கார்.
ராமர் எப்படி, “தன்னை சரணாகதி பண்ணவாளை காப்பாத்துவேன்!”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ,
அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்!”
அதுதான் நமக்கு பெரிய லாபம். ஹனுமாரை சரண் புகுந்தா ஹனுமாரும் காப்பாத்துவார், ராமரும் நம்மளை காப்பாத்துவார்!

‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ –
‘பவந’ன்னா வாயு பகவான். அவர் பண்ண தபஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளி உருவம் எடுத்தது.
அதுதான் ஹனுமார். அந்த ஹனுமாரை ‘அத்³ராக்ஷம்’ – ‘நான் கண்டேன்!’னு சொல்றார்.

போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ –
“என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்!”னு சொன்னார்.
“இங்க ஹனுமாரை கண்டேன்!”ங்கிறார்.
அதுனால இந்த ஸ்லோகத்தை சொன்னா ஹனுமார் தர்சனம் கிடைக்கும்!

——–

ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

‘ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்’ –
இந்த வாயு குமாரனான ஹனுமார் மேல பண்ண இந்த ஸ்தோத்திரத்தை,

‘ய: பட²தி பஞ்சரத்நாக்²யம்’ –
ஹனுமத் பஞ்சரத்னம் என்ற பேர் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ,

‘சிரம் இஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா’ –
வெகு காலம் இந்த உலகத்தில் மூன்று போகங்களையும் அனுபவித்து,

‘ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி’ –
ஸ்ரீராமரிடத்தில் மாறாத பக்தியை அடைவான்! ஹனுமாரை தியானம் பண்ணா,
ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராம பக்தி வராதா?
அப்பேற்பட்ட ராமபக்தர் அவர்!

அவரை பார்க்கும் போது எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாம் முடிஞ்சு புஷ்பக விமானத்துல திரும்ப வந்துண்டிருக்கா!
பரத் வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத் வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு.
பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார்.
“உனக்கென்ன வரம் வேணும்?”ங்கிறார்.
ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும்
தேன் சொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்!”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக!
பரத்வாஜரும், “ஆஹா!”ங்கிறார். ராமர் ஹனுமாரை கூப்பிட்டு, “நீ போய் பரதன்கிட்ட நான் வருவேன்னு சொல்லு.
என்னை எதிர்பார்த்திண்டிருப்பான். பரத்வாஜர் என்னை தங்க சொல்லியிருக்கார்.
நான் நாளைக்கு வரேன்னு பரதன்கிட்ட சொல்லு”ங்கிறார்.

ஹனுமார் ஒருநாளும் விருந்துக்கு ஆசைப்படறவர் கிடையாது. ராம காரியம் தான் அவருக்கு விருந்து!
ஓடிப் போறார் ஹனுமார். அப்படி ஹனுமார் எந்த சுகத்தையும் ஆசைபடாதவர்.
சுக்ரீவன் தெற்கு திக்குல வானரர்களை அனுப்பும்போது, எல்லாரையும் பார்த்து சொல்றான்.
நாலா திக்குல போறவாளையும் பார்த்து, “யார் போய் சீதா தேவியை பார்த்து, திரும்ப என்கிட்ட வந்து,
‘த்ருஷ்டா சீதா!’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன்.
எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்!”னு சொல்றார்.
ஆனா யார் பார்த்துட்டு வந்தா? ஹனுமார்தான் பார்த்துட்டு வந்தார். ஹனுமார் எந்த போகத்தையும் விரும்பாதவர்.
அவர் எந்த தப்புமே பண்ணாதவர்.

ஸ்வாமிகள் சொல்வார், “புராணங்கள் எல்லாம் பலஸ்ருதி கொடுத்திருக்கும். போகங்கள் கிடைக்கும்.
தப்புகள் எல்லாம் பகவான் மன்னிப்பார்னு! ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல்,
எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ,
அந்த மாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும்!

———————

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய꞉ பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீமச்ச²ங்கர-ப⁴க³வத: ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ திருவடி -ஸ்ரீ பரத ஸ்ரீ சத்ருக்ந ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டி ஸமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ராமர் சரம ஸ்லோகம் -ஸ்ரீ அபய பிரதான சாரம் –தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் / ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள்–

January 4, 2022

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

————–

அவதாரிகை –
இப்படி சொன்ன இடத்திலும் மஹா ராஜர் நேராகத் தெளியாதே
சலித ஹ்ருதயராய் இருக்கிற படியைக் கண்டு அருளி
ப்ரக்ருத்யநுகுணமாக ப்ரபன்ன பரித்ராண பிரதிஜ்ஞையைப் பண்ணி அருளுகிறார் –
ஸக்ருதேவ -என்கிற ஸ்லோகத்தாலே –

மித்ர பாவேந -என்கிற ஸ்லோகத்தில்
பிரகிருதி -தன்மையை -அருளிச் செய்தார் –
இதில் தத் அநு குணமாக பிரதிஜ்ஞையைப் பண்ணுகிறார்-

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-

ஸக்ருதேவ -ஒரு தரமே
ப்ரபன்னாய -பிரபத்தி பண்ணினவன் பொருட்டும்
தவாஸ் மீதி ஸ யாசதே –
தவ -உனக்கு அடியேனாய் –
அஸ்மி -ஆகிறேன் –
இனி -என்று -யாசதே -யாசிக்கிறவன் பொருட்டும்
சர்வ பூதேப்யோ-எல்லா பிராணிகள் இடத்தில் நின்றும்
அபயம் -பயம் இன்மையை
ததாமி-பண்ணிக் கொடுக்கிறேன்
யேதத் வ்ரதம் மம –இது எனக்கு விட முடியாத சங்கல்பம் –

ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு –
சஹஸா ஆதேஸமாய் –
சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி

அதாகிறது –
தன் அயோக்யதையைப் பார்த்துத் தே-இது ஆழ்வான் நிர்வாஹம் –

கீழ் அநாதிகாலம் சம்சரித்துப் போந்தவன்
மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும்
அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –

ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்
ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –

ஸக்ருதேவ -என்கையாலே
உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது –

தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –

ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி

தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் –
அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு

அபயம் சர்வ பூதேப்யோ ததாமி-
சர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன் –

பீத்ரார்த்தா நாம் பய ஹேது -பாணினி ஸூத்த்ரம் -1-4-25-

இதி ஹேதௌ பஞ்சமீ –
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டக் கொடோம் என்றபடி

யேதத் வ்ரதம் மம —
நமக்கு அநு பால நீயமான சங்கல்பம் இது
அமோக சங்கல்பரான நமக்கு சங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத சங்கல்பமாகும் இது –

————————————————————————————————————————————————————————————-

தனி ஸ்லோக- வியாக்யானம்-

அவதாரிகை –
ஸ ராவண -யுத்த -11-33-என்று பெருமாளும் பரிகரமுமாகக் கடல் கரையிலே குறுகி
வந்து விட்டார்கள என்று கேட்ட ராவணன்
சசிவசா மந்த மந்த்ரி புரோஹிதாதி வர்க்கத்தைக் குறைவறக் கூட்டி

பவித்பிர் -12-26-என்று நியமித்து கார்ய விசாரம் பண்ணுகிறவன்
தான் செய்து நின்ற நிலைகளையும் செய்ய வேணும் கார்யங்களையும் சொல்லி

தஸ்ய காம பரி தஸ்ய -12-27-என்று இத்தைக் கேட்ட கும்ப கர்ணனும் குபிதனாய்

யதா து ராமஸ்ய -12-28-என்று இவன் அபஹரித்த வன்றே இப்படி விளையும் என்று அறுதி இட்டோமே என்று
ஸ்வ புத்தி சம்வாதத்தை சம்வதித்து

சர்வமேத -12-29-என்று செருக்கி நான் செய்த வற்றுக்கு ஒப்புண்டோ என்ற ராவணனை அதி ஷேபித்து
எங்கள் சொல் கேட்டுச் செய்ய இருந்தாய் ஆகில் இந்த சீதா அபஹாரத்துக்கு முன்பே அன்றோ செய்வது -என்றும்

ய -பஸ்சாத்-12-32- என்று பூர்வ உத்தர கார்யங்களை க்ரம ஹீனமாகப் பண்ணுகிறவன் நயாப நயங்களை அறியான் என்றும்

திஷ்ட்யா-12-34-என்று நஞ்சூட்டின பழம் போலே இனியராய் இருக்கச் செய்தேயும் அறக் கொடியர் பெருமாள்
அவர் உன்னைக் கொல்லாது ஒழிந்தது உன் புண்யம் -என்றும்

அதில் கோபித்து இவன் வெறுக்க ஒண்ணாது என்று சமீ கரிஷ்யாமி -12-35-என்று
பள்ளத்துக்கு மேட்டை நிரவுமா போலே உன் அநீதியை என் தோள் வலியாலே ஒக்க விடுகிறேன் -என்று சமாதானம் பண்ண

மஹா பார்ச்வனும் அவனுக்கு பிரியமாக சில வார்த்தைகளைச் சொல்லி -நிசாசர-14-1- என்று
அவர்கள் நிரர்த்தகமாகப் பிதற்றின வார்த்தைகளைக் கேட்டு விபீஷணப் பெருமாள் ஹிதரூபமாக

வ்ருதோ-14-2-என்று
பாம்போடு ஒரு கூரையிலே பயிலுவாரைப் போலே -பெரிய திருமொழி -11-8-3-
சீதை யாகிற பெரும் பாம்பின் அருகே கையை நீட்டுவார் உண்டோ –

யாவந்த -14-3/4-என்று தொடங்கி-குரங்குகள் கடலை அடைத்துப் படை வீட்டை அடைக்கப் பார்க்க புகுகிறார்கள்
ராம சரங்கள் குறும் தெருவும் நெடும் தெருவுமாக புகுந்து தலைகளைத் திருகப் புகுகிறது
அதுக்கு முன்னே பிராட்டியைப் பெருமாள் பக்கலிலே போக விடாய்-என்றால் போலே சில வார்த்தைகளைச் சொல்ல

ப்ரகுஅச்த இந்த்ரஜித் ப்ரப்ருதிகளும் அதுக்கு விபரீதமாக சில வார்த்தைகளைச் சொல்ல

ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் குபிதராய் –
ந தாத -15-9/10/11-என்று தொடங்கி உனக்கு இவற்றில் அபியோகம் இல்லை
பெற்ற பிள்ளை நீ தான் புத்ரன் என்று ஒரு சத்ருவாய் இருந்தாய்
தகப்பனார் அனர்த்தத்தை இப்படி இசைவார் உண்டோ
சத்ருக்களைக் கொல்லில் முற்பட உன்னைக் கொல்ல வேண்டும் என்று வார்த்தை சொல்லி

த நாநி -15-14-என்று உபஹார புரஸ் சாரமாகப் பிராட்டியை உடையவன் வசத்திலே விட்டு
உங்கள் முடியோடு நெஞ்சாறல் கெட்டிருக்கப் பாருங்கோள்-என்றுசர்வர்க்கும் ஹிதம் சொல்ல

இத்தைக் கேட்ட ராவணன் ஸூ நிவிஷ்டம் -16-1-என்று இப்படி ஹிதம் சொன்னால்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய்-2-7-8–என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2- என்றும்
காலிலே விழப் பிரார்தமாய் இருக்க
தன் வசம் இன்றியிலே கால பரவசனான படியாலே பருஷங்களைச் சொல்லி

த்வாம் து திக் குல பாம்சனம் –16-16-என்று திக்கரிக்க

உத்பபாத கதா பாணி -16-17-என்று
சோதர ப்ராதாவுமாய் ஹித உபதேசம் பண்ணின என்னை இப்படிச் சொன்ன இவன் என் படப் புகுகிறான் -என்று
தளர்ந்து தடியூன்றி எழுந்து இருந்து தனக்கு பவ்யராய் இருப்பார் நாலு பேரோடு கிளம்பி

ஆத்மானம் -16-26- என்று நாலு வார்த்தை சொல்லி

ஆஜகாம முஹூர்த்தே ந -17-1-என்று
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-புரிவதற்கு முன்னே
தம்பி சொல்லு ஜீவியாத ராவண கோஷ்டியில் நின்றும்
தம்பி சொல்லு ஜீவிக்கிற ராம கோஷ்டியை நோக்கி வந்து

நிவேதயாத மாம் ஷிப்ரம் ராகவாய மகாத்மனே -17-15-என்று
நெறி கெட மடுத்துக் கொண்டு புகலாகாது
அதி சங்கையும் பண்ணுவார்கள்
த்வார சேஷிகளை கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து
ஆனய-18-34-என்னப் புக வேணும் என்று நின்ற நிலையிலே நின்று விண்ணப்பம் செய்ய

இத்தைக் கேட்ட மஹா ராஜர் -யேதத்து -17-16-என்று இவன் வார்த்தையைக் கேட்டு
பெருமாள் முற்பாடராய் வருவதற்கு முன்னே தாம் நடை இட்டுச் சென்று ராஜ்ய கார்யங்கள் விசாரிக்க வேண்டாவோ –
ஓய்ற்றரியோ போக விட வேண்டாவோ -நம்மிலும் அவர்கள் முற்பட்டார்கள் –

ப்ரணிதீ -17-20-என்று இங்கு ஆகாசத்திலே நிற்கிற இவன் ஒற்றனாக வேணும் –
ராவணன் தமி -மூர்க்கன் -நலிய வந்தவன்
இவனைக் கழுத்திலும் காலிலும் கோக்க அடுக்கும் -என்பது –
அது பெருமாள் செவிக்குப் பொறுத்த வாறே –
வந்தவனையும் அவனையும் கொல்ல பிராப்தம் -என்று சொல்ல

இத்தைக் கேட்டு அருளின பெருமாள் திரு உள்ளம் தளும்பி முதலிகளைப் பார்த்து –
யதுக்தம் -17-30-என்று முதலிகளைப் பார்த்து
தோழனார் ராஜாக்களாய்ச் செருக்கிச் சொன்ன வார்த்தையை
சரணாகத ரஷணம் பண்ணின ஜாதியிலே பிறந்த நீங்களும் கேட்டிகோளே-
உங்கள் நினைவுகளை சொல்லுங்கோள்-என்ன

ஸ்வம் ஸ்வம் -17-32-என்று மாட்டார்கள் -மகா ராஜர்க்காக மாட்டார்கள் உபயாவிருத்தமாகப் பரீஷித்து
ஒழுக விசாரித்துக் கைக் கொள்ள பிராப்தம் -என்று சொல்லித் தலைக் கட்ட –

இத்தைக் கேட்ட திருவடியும் எழுந்து இருந்து ந வாதான் -17-50-என்று
இப் பஷங்களை அழிக்கப் புகுகிறவன் ஆகையாலே
சிலரோடு பிணக்கு யுண்டாய் அல்ல -சிலரோடு வெறுப்பு யுண்டாய் அல்ல –
எல்லார்க்கும் மேலாய் நியாமகனாய் அல்ல -பிரதிபன்ன வாதி யல்ல –
அப்யஹம் ஜீவிதம் ஐ ஹ்யாம் -ஆரண்ய -10-19-என்கிற பெருமாளை இழக்க வரும் என்று
பெருமாள் பக்கல் ஆதாரத்தால் சொல்லுகிறேன் -என்று அவை அடக்கம் சொல்லி

புகுர விட்டால் பரீஷிப்பது -பரீஷித்தால் புகுர விடுவது என்று அந்யோந்ய ஆஸ்ரயணம் வரும்
தாத்ரா -17-58-என்று சாம பேதம் பண்ணிக் குலைத்து அழைக்க ப்ராப்தமாய் இருக்க
தன்னடையே விஸ்வசித்து வந்தவனை அதிசங்கை பண்ணினால் குலைந்து போம்
அப்போது ராஜ நீதி அல்ல -சாஸ்திர விருத்தம் -என்று பர பஷ தூஷணம் சொல்லி
ந த்வச்ய-17-60/61-என்றும் இப்புடைகளிலே ஸ்வ பஷ ஸ்தாபனத்தையும் பண்ணி
திரு முன்பே நாமும் சில அறிந்தோமாகஒண்ணாது என்று யதா சக்தி -17-66-என்று
அடியேனுக்குத் தோன்றின அளவு விண்ணப்பம் செய்தேன் இத்தனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -என்று
தேவரீர் திரு உள்ளத்தில் அகலத்துக்கு இது எங்கே -இனி திரு உள்ளமான படி செய்து அருளீர் என்று தலைக் கட்ட

அத ராம-18-1-என்று காற்றின் மகனான திருவடியாலே லப்த சத்தரான பெருமாள்
தன் திரு உள்ளத்தில் கிடந்தது அருளிச் செய்வதாகக் கோலி

மித்ர பாவேந -18-3-என்கிற ஸ்லோகத்தாலே
மித்ர பாவேந சம்ப்ராப்தன் சதோஷனே யாகிலும் கை விடேன் என்று சொல்லி

தஸ்யாநு பந்தா பாபமாந சர்வே நச்யந்தி தத் ஷணாத்-அஹிர்புத்த -37-33-என்று
பிரபன்னன் ஆனபோதே நிர்த்தோஷன்
இப்படி -பிரபன்னனாய் நிர்த்தோஷன் ஆனவனுக்கு –
உம்மாலும் என்னாலும் பிறராலும் வரும் பயன்களைக் போக்கக் கடவேன் -என்கிறார் இந்த ஸ்லோகத்தால்

வேதோ உபப்ப்ரும்ஹணா ர்த்தாய தாவக்ராஹயாத பிரபு -பால -4-6-என்று
வேத ப்ரும்ஹண ப்ரவண ப்ரபந்தம் அன்றோ இது
இவ்விடத்தில் உபப்ரும்ஹிக்கிற வேதார்த்தம் எது -வேத வாக்கியம் தான் எது -என்னில் –

தம் ஹி தேவமாத்மபுத்தி பிரசாதம் முமுஷூவை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வே-6-18-என்றும்
ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே ஸ்வஸ்தி சம்பாதேஷ்வபயம் நோ அஸ்து-ருக்வேத -என்றும் சொல்லுகிற
பிரபத்புபாய வைபவம் இவ்விடம் உபப்ரும்ஹிக்கிறது

வாக்யமும் ப்ரயதபாணி சரணமஹம் ப்ரபத்யே என்கிற இது
சரனௌ சரணமஹம் ப்ரபத்யே –என்று த்வயம்
சரணம் காடம் நிபீட்ய–அயோ என்றும்
திருவடிகளைக் கையாலே பிடிக்கும் போது ஸூத்த ஹஸ்தனாக வேணும்

அந்த ஸூத்த ஹஸ்ததையாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை -என்றும்

வீடு மின் முற்றவும் -திருவாய் -1-2-1- என்றும்
மற்றாரும் பற்றிலேன் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் உபாயாந்தரங்களை விட்டுப் பற்றுகை –

அத்தை இறே ப்ரயதபாணி -என்கிறது –

மாம் வ்ரஜ -சரணம் ப்ரபத்யே –
பிரார்த்தனா மதி சரணாகதி -என்று
உபாய பிரார்த நாரூப ஜ்ஞானத்தை -சரணம் பிரபத்யே -என்கிறது –

இவ்வாக்யத்தை இந்த ஸ்லோகம் உபப்ரும்ஹித்தபடி ஏன் என்னில்
சக்ருத் ஏவ -என்கிற பதங்களால்
அசக்ருதாவ்ருத்தி சாபேஷையான பக்தியை வ்யாவர்த்திக்கையாலே
சர்வ தர்ம தியாக பூர்வகமான ப்ரயுத பாணி என்கிற பதத்தையும்
பிரபன்னாய-என்கிற பதத்தாலே சரணம் பிரபத்யே -என்கிற பதங்களையும்
த்வாஸ் மீதி ச யாசதே -என்கிற பதங்களாலே ஸ்வஸ் த்யஸ்து -என்கிற பதங்களையும்
அபயம் ததாமி -என்கிற பதங்களாலே அபயமஸ்து-என்கிற பதங்களையும் உபப்ரும்ஹிக்கிறது

ஆகிறது -ப்ரபத்யே என்கிற பிரபதன தசையில்
ஏக வசனமாய் இரா நின்றது

பல தசையிலே ந என்று-எங்களுக்கு என்று – பஹூ வசனமாய் இரா நின்றது –
இது செய்யும்படி ஏன் என்னில்

வைஷ்ணவோ ந குலே ஜாத என்று ஏக வசனமாகச் சொல்லி
தே சர்வே முகத்திமா யாந்தி -என்று பஹூ வசனமாகவும்

யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே பிராஸ் யந்தி -என்று ஏக வசன பஹூ வசனங்களாலும்
இப்படி பஹூ பிரமாணங்கள் உண்டாகையாலும் –

லோகத்தில் ஒருவன் ராஜ சேவை க்ருஷ்யாதிகளைப் பண்ண
அவன் யத்ன பலமான அன்ன தான தான்யா வஸ்த்ராதி பலங்களை
அவன் அபிமானத்திலே பார்யா புத்திர சிஷ்ய தாசாதிகள் வருத்தமற புஜிக்கக் காண்கையாலும்

இப்படி லோக வேதங்களிலே அநு பூத சரமாகையாலே
ஒருவன் பிரபன்னனாக
அவன் அபிமானத்திலே ஒதுங்கினார்க்கு எல்லாம் பலமாகக் கடவது -என்கிறது –

ஆகிறது -பிரபத்த்யுபாயம் என்பது
எம்பெருமான் உபாயம் என்பதாகா நின்றது –

பிரபத்தியாவது –
த்வமேவோ பாய பூதோ மே பவதி -ப்ரார்த்த நா மதி -சரணாகதி -என்று
சேதனனுடைய ப்ரார்த்த நா ரூப ஜ்ஞானமாய் இரா நின்றது –

எம்பெருமான் ஆகிறான்
ப்ரார்த்த நீயானாய் இருப்பான் ஒருவன் பரம சேதனனாய் இரா நின்றது –
இது செய்யும்படி என் என்ன –

ப்ராம்ருஷ்ட லிங்கம் அநு மானமாய் இருக்க –
லிங்க பராமர்சோ அநு மானம் -என்று பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற
ஔ பசாரிகமாகப் பராமர்சத்தைச் சொன்னால் போலவும்

நீலாம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் என்றால்
ஜ்ஞானத்துக்கு ஒரு நைல்ய பீதி மாதிகள் அற்று இருக்க
விஷயகதமான நைல்ய பீதி மாதிகளை விஷயியான ஜ்ஞானத்திலே உபசரித்து
நீளம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் -என்றால் போலேயும்

ஸ்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற
ஸ்வீ கார விஷயமான பகவத் கத உபாய வ்யவஹாரத்தை
விஷயியான ஸ்வீகார ரூப பிரபத்தி ஜ்ஞானத்திலே உபசரித்து சொல்லுகிறது
ஆகையால் ஒரு விரோதமும் இல்லை –

மலை நெருப்பை யுடையது புகை இருப்பதால் -அநு மானம்
மலை -பஷம்
நெருப்பு சாத்தியம்
ஹேது -லிங்கம் –

அடையாளம் காரணம் -ஆகிறது-
ஸ ஸ்வேநைவ பலப்ரத ஸ்வே நைவ நாராயண -அனர்க்க ராகவம் -3-20-என்றும்
மாம் வ்ரஜ -ஸ்ரீகீதை -18-66-என்றும்
மாமேவைஷ்யசி -ஸ்ரீ கீதை -18-65-என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நான் ஆட் செய்யோம் -என்றும்
எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று இறே சொல்லுகிறது –

அந்த உபாய உபேயங்கள் ஆகிறது கார்ய காரணங்கள் இறே

யத நந்தரம் யத்த்ருச்யதே தத் தஸ்ய காரணம் -என்றும்
நியத பூர்வ பாவி காரணம் -என்றும்
பூர்வ பாவியுமாய் பூர்வ காலத்திலேயே சத்துமாய் இறே காரணம் இருப்பது

நியத பஸ்சாத் பாவித்வம் ச கார்யத்வம் -என்றும்
ப்ராக சத் சத்தா யோகித்வம் கார்யத்வம் -என்றும்
பூர்வ காலத்திலேயே சத்துமாய் இராதே
அத்தாலே பிறக்கக் கடவதுமாய் பஸ்சாத் பாவியுமாய் இறே கார்யம் இருப்பது

இப்படி இருக்க
நித்யம் விபும் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் என்றும்
ஏகமே யத்விதீயம் -என்றும்
நித்யமுமாய் ஏகமுமாய் இருக்கிற பகவத் வஸ்துவுக்கு
பரஸ்பர விருத்தமான பாவ அபாவத்மகத்வம் கூடும்படி என் -என்னில் –

ஸ தேவ சோம்யேத மக்ர ஆசீதே கமேவாத் விதீயம்ம்,-என்றும்
அவிகாரமுமாய் நித்யமுமாய் ஏகமுமான ப்ரஹ்மத்துக்கு
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத் -என்றும்
ஸோ ஆகாமயத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி -என்றும்
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே -ஸ -என்றும்
த்ரிவித காரணத்வமும் ஸ்ருஷ்டுஸ்ருஜ்யத்வமும் பரஸ்பர விருத்தமுமாய் இருக்க

ஸூஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் காரணம்
ஸ்தூல சிதசித விசிஷ்ட ப்ரஹ்மம் கார்யம் -என்று
அவ்விருத்த தர்மங்கள் விசேஷணங்களிலேயாய் –
விசிஷ்ட ஐக்யத்தாலே நிர்வஹித்தால் போலே

இங்கும் –
தாது ப்ரசாதான் மஹிமா நமீ சம்-என்றும்
தஸ்மின் பிரசன்னே க்லேச சங்ஷய -என்றும்
ப்ரஹர்ஷயாமி-என்றும்
த்வத் ப்ரீதயே-என்றும்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் வியக்க இன்புறுதும்-என்றும்

பிரசாத விசிஷ்டன் உபாயம்
ப்ரீதி விசிஷ்டன் உபேயம்
என்று விசேஷண பேதம் கிடக்கச் செய்தே விசிஷ்ட ஐக்யத்தாலே
உபாய உபேய எம்பெருமான் என்கிறது ஆகையாலே எல்லாம் கூடும்

இரக்கம் உபாயம் –
இனிமை உபேயம் -என்று இறே ஜீயர் அருளிச் செய்யும் படி –

அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்று பிரபத்யாதி சாத்யம் இறே மோஷம்
சாத்யம் ஆவது முன்பு இன்றியிலே பின்பு உத்பன்னம் ஆவது

உத்பன்னச்ய வினாச யோகாத் -என்று உத்பன்னமாய் நசிக்கும் ஆகில்
உபேயமான பகவத் ப்ராப்தி ரூப மோஷ நசிக்குமாய் இருந்ததே என்னில் நசியாது

இதுக்கு இரண்டு பிரகாரம் உண்டு –

அதில் ஓன்று சாத்யம் தான்-
உத்பாத்யம் என்றும் –
ப்ராப்யம் என்றும் –
விகார்யம் -என்றும்
சம்ஸ்கார்யம் -என்றும் நாலு பிரகாரமாய் இருக்கும்

உண்டு பண்ணப் படுவது –
அடையப்படுவது –
விகாரம் அடைவிக்கப் படுவது –
சம்சரிக்கப் படுவது –
சாதிக்கப் படுபவை நான்கு வகை –

அவற்றில் உத்பாத்யமாவது –
கடம் கரோதி -படம் கரோதி போலே முன்பு இன்றியிலே பின்பு உண்டாவது

ப்ராப்யம் ஆவது –
க்ராமம் கச்சதி ராஜா நம் கச்சதி -என்றும்
காம் தோக்தி பய -என்று முன்பே சித்த ரூபமான வஸ்துவை அதிகாரிக்கு இடுகை –

விகார்யம் ஆவது –
ஷீரமப் யஞ்ஜயதி -என்றும்
தரபுசீசே ஆவர்த்தயதி –
பாலைத் தயிர் ஆக்குகையும் ஈயங்கள் உருக்குகையும்

சம்ஸ்கார்யம் ஆவது
வ்ரீஹீன் ப்ரோஷதி -என்றும்
வ்ரீஹீ நவ ஹந்தி -என்று தன்னைக் கார்யாந்தர யோக்யமாகப் பண்ணுகை-
மந்திர ஜலத்தால் பிரோஷித்து -நெல்லை உரலில் இட்டு குத்தி போல்வன

இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும்
பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய -என்றும்
உன்னை எய்தி -என்றும்
பண்டே சித்த ரூபனான பரமாத்மாவை இவன் கிட்டுகையாலே ப்ராப்யம் நித்தியமே யாகிறது

இனி மற்றை இரண்டாவது பிரகாரம் –
நிதிப் நித்யா நாம் -என்றும்
அஜோஹ்யேக-என்றும்
ந ஹாய் விஜ்ஞாதூர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும்
பர நல மலர்ச் சோதி -என்றும்
ஆத்மாக்கள் நித்யர் ஆகையாலும்
இவர்களுக்கு தர்மமான ஜ்ஞானா நந்தாதிகள் நித்யங்கள் ஆகையாலும்

தமஸா கூட மக்ரே பிரகேதம் -என்றும்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா-என்றும்
ஆத்ம ஸ்வரூப தர்மங்களுக்குத் திரோ தாயகமாய் பிரகிருதி சம்சர்க்கம் போய்

ஸ்வே ந ரூபே ணாபி நிஷ்பத்யதே -என்றும்
ஆவுர்ப்பூதஸ்வ ரூபஸ்து-என்றும்
அவபோதா தயோ குணா பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே-என்றும்
ஸ்வா பாவிகாரம் விஸ்த்ருதமாய் உத்பாத்யம் அன்றிக்கே ஒழிகையாலும் நித்யம் ஆகிறது என்ற பிரகாரம் –

அவையும் அப்படி ஆகிறது –
இப் பிரதேசம் பிரபத்த்யுபப்ரும் ஹணம் பண்ணுகிறதாகில்
அஹம் அஸ்மா அபராதானாம் ஆலய –என்கிற
பிரபத்தி லஷணம் கிடந்ததோ என்னில்

ராவணோநாம துர்வ்ருத்தோ -17-19-என்று ராவண சம்பத்தாலும்
பீஷ யசே ஸ்மபீரோ-15-4-என்று நாம நிர்வசனத்தாலும்
ஸ்வ தோஷத்தை முன்னிடுகையாலே –
அஹம் அஸ்ம்ய அபராதானாம் ஆலய -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

ராஜ்யம் ப்ரார்த்தயமா நச்ச-17-65- என்று
தனக்கு ராஜ்யம் வேண்டி வந்தவனாய் பெருமாளுக்கு கிஞ்சித்காரம் பண்ண வந்தவன் அல்லாமையாலே
அகிஞ்சன -என்னும் அர்த்தம் சொல்லுகிறது

த்வாம் து திக் குல பாம்சநம் -16-15- என்று தள்ளி விடும்படி
ஸோ தரப்ராதாவுக்கு உட்பட ஆளன்றிக்கே போருகையாலே அகதி என்னும் அர்த்தம் சொல்லுகிறது

பவந்தம் சரணம் -19-4- என்கையாலே
த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்த நா மதி சரணாகதி -என்னும் அர்த்தம் சொல்லுகிறது

பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்கையாலே
சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்னும் அர்த்தம் சொல்லலுகிறது

ஆகையால் இது நேராகக் கிடந்தது

ஆநு கூல்ய சங்கல்பாதிகளும் கிடந்ததோ என்னில் –
இந்த லஷணமும் புஷ்கலம்

ஆத்மாநாம் -16-25-என்று ராவணனுக்கும் படை வீட்டுக்கும் நன்மையை ஆசாசிக்கையாலே
ஆநு கூல்ய சங்கல்பம் சொல்லிற்று

உத்பபாத கதா பாணி -16-16- என்று கையிலே தடி இருக்க
பரிபவித்தனை கரைய வடித்து போராமையாலே ப்ராதி கூல்ய வர்ஜனம் சொல்லிற்று –

வாலி நஞ்ச –17-6-என்று ஸோ தா ஹரணமாக ராஜ்யம் த்ரவ்யம் என்று
அறுதி இட்டு வருகையாலே ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லிற்று

பவந்தம் சரணம் கத -19-4-என்று சொல்லுகையாலே
கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்று

பவத்கதம் -19-5-என்று அகில பர சமர்ப்பணம் பண்ணுகையாலே
ஆத்ம நிஷேபம் சொல்லிற்று –

பிராணா தச்ச-18-14-என்று ஸ்வரத்தில் தளர்த்தியாலும்
சீக்ரம் -17-7- என்று பெருமாள் பக்கல் போக ஒண்ணாத படி நடு வழியிலே கொல்ல நிற்கையாலும்
தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -என்கிற
கார்ப்பண்யம் சொல்லிற்று

ஆகையாலே இந்த லஷணமும் புஷ்கலம் –

இப்படி
புஷ்கல லஷணையான பிரபத்தியைப் பண்ணி
இதுக்குப் பலமாக கொள்ளைக் குப்புக்கு கூலம் எடுத்தவோ பாதி
நாம் இருக்க பலாந்தரங்களை ஆசைப்படாதே
நம்மையே உகந்து வந்தவனுக்கு சகல பய நிவ்ருத்தியும் பண்ணுவேன்
இது நமக்கு வ்ரதம் என்கிறார் இந்த ஸ்லோகத்தாலே –

———————

இப்படி அபய பிரதானம் பண்ணுவது ஆருக்கு என்னில் –
சக்ருதேவ பிரபன்னாய –
ச லஷண பிரபத்தி பண்ணினவனுக்கு –
அதாவது -சக்ருதேவ பிரபன்னனாய் இருக்கை-

சக்ருத்-தனக்குப் பொருள் என் என்றால் –
ஆவ்ருத்தி ரசக்ருதுபதே சாத் -என்றும்
அநேக ஜன்ம சமசித்த -என்றும்
பக்தி போலே ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் சிரகால சாத்யை யன்றிக்கே

தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவது -கடவல்லி -என்றும்
உபாயோசயம் சதிர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-76-என்றும்
ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் ஒரு காலேயாய் இருக்கை –

சக்ருதேவ -என்கிற அவதாரணம் –
பிரபன்னனே-என்றும்
ஒருகாலே -இருகால் மாட்டில்லை -என்றும்
அயோக வ்யவச் சேதமோ -அந்யயோக வ்ய்வச் சேதமோ

சங்கு வெளுப்பே –அயோக வ்யவச் சேதம் -அப்பொருள் அங்கே இருக்கிறது போலே
பார்த்தன் ஒருவனுமே வில்லாளி – ஒருவன் தான் என்பதை குறிக்கும் அந்ய யோக வயவச் சேதம் –

பிரபன்னனே -என்ற போது பிரபன்னனை அநு வதித்து
அவனுக்கு அபய பிரதானம் பண்ணுவன் என்று வாக்யத்துக்கு விதேயம் இத்தனை போக்கி
பிரபன்னனோ அபய பிரபன்னனோ என்று விமர்சமாய்
பிரபன்னனே என்று விதயம் அல்லாமையாலும் –
அயோக வ்யவச் சேத பொருள் பொருந்தாது

சக்ருச்சாரோ பவதி -என்றும்
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த -என்றும் பிரபத்தியாகில்
சக்ருத் பிரயோஜ்யையாய் -அசக்ருத் பிரயோஜ்யை அல்லாமையாலே
சக்ருத்தா வ்ருத்தியாய் இருப்பதொரு பிரபத்தியில் வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அயோக வ்யவச் சேதம் இல்லாமையாலும்

அபயங்கதோ பவதி என்று அப்பிரபன்னனான பக்தி நிஷ்டனுக்கும்
அபாய பிரதானம் பண்ணின படியாலே
அந்ய யோக வ்யவச் சேதம் அல்லாமையாலும்
வ்யாவர்த்தம் இல்லை என்று இட்டு வ்யர்த்தம்

இனி சக்ருதேவ -என்று இங்கே கூட்டின போது-
சக்ருதேவ குர்யான் ந அசக்ருத் -என்று
பிரபத்தி ஸ்வரூப அபிதானம் பண்ணுகிறது அன்றிக்கே
பிரபன்னன் அநூத்யனாய்
அபாய பிரதானத்திலே தாத்பர்யம் ஆகையாலே சக்ருத்தோடே கூட்டிலும் வ்யர்த்தம்

இந்த உபபத்திகளாலே சக்ருத் பிரயோகமும் வ்யர்த்தம்

சக்ருதேவா பயம் ததாமி -என்று
இங்கே அன்வயித்தாலோ என்னில்
ஒரு சரீரிக்குப் பிறக்கக் கடவ பயன்கள் எல்லாம் ஒரு காலே சஹிதமாய்
அவற்றினுடைய நிவ்ருத்தியை ஒரு காலே பண்ணுகிறதல்ல-

பூத காலத்தில் பயங்கள் பண்டே அனுபவித்துப் போயிற்றன –

ஆகாமி காலத்தில் பயங்கள் உத்பன்னம் அல்லாமையாலே
நிவ்ருத்தி இப்போது பண்ண ஒண்ணாது

இன்னமும் ததாமி -என்று ப்ராரப்தமாய் –
நிகழ கால பிரயோகம் -பரிசமாப்தம் அல்லாத பயங்கள் உத்பன்னங்கள் அல்லாமையாலே
மேல் வரும் அவை அடைய வர வரப் போக்குகிறேன் என்கிற வர்த்தமானத்துக்கும்
ஒரு கால் என்கிற சக்ருத் பதத்துக்கும் வ்யாஹதியும் வரும்

அபாய பிரதானம் பண்ணுகிற இன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாகவும்
பயங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் அவதி இல்லாமையாலே அனுஷ்டான விருத்தமும் ஆகையாலே
சக்ருத் என்றும்
ஏவ என்றும் ப்ரஸ்துத பதங்களுக்கு வையர்த்யம் வரும் என்னில்
வாராது –

1- சக்ருத் ஏவ –
பிரபன்னன் என்றார் பெருமாள் –

அதுக்கு அனுபபத்தியாக மஹா ராஜர் சக்ருத் பிரயோஜ்யை யான ப்ரபத்தியை –
ராகவம் சரணம் கத –17-14- என்றும்
பவந்தம் சரணம் கத-19-4- என்றும்
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்றும்
முக்கால் பண்ணி பிரபத்தி லஷண ஹாநியும்
ப்ரபத்த்ரு ஸ்வரூப ஹாநி யும்
பிரபத்தவ்ய ஸ்வரூப ஹாநி யும் -பண்ணினான் என்று தூஷணம் சொல்ல

சக்ருதேவ பிரபன்னாய –
அவன் பலகால் பண்ணிற்று இலன் –
ஒரு கால் பண்ணினான் -என்கிறார்-

நாலு மூன்று பண்ணை பண்ணிற்றாக எடுத்த பிரமாணங்கள்
செய்யும்படி என் என்னில்

ராஷசோ -17-5- என்று
அபிசாபம் -கடும் சொல் -சொன்ன உங்களைப் பார்த்து
ஸோ அஹம் —ராகவம் சரணம் கத -17-14- என்கிறபடி
விரோதியாய் வந்தவன் அல்லேன்
அவன் தானே பரிபவித்து போகச் சொல்ல –
அவனோட்டை சம்பந்தங்களையும் விட்டு பெருமாளை சரணம் புக வந்தேன்
என்று தன அருள்பாடு சொன்னான் முற்பட –

சரணம் கத-என்கிற நிஷ்டை
உம்முடைய வார்த்தைகளாலே கலங்கினோமே என்று சங்கித்து
நம்மைத் தெளிய விடுகைக்கு
பவந்தம் சரணம் கத -என்று விண்ணப்பம் செய்த படி

பாதகனாய் வந்தவன் அல்லன்
உம்மை சரணம் புகுவதாக வந்தவன் என்று நமக்கு பட்டாங்கு சொன்னான் இரண்டாம் பண்ணை –

ஆ நய-18-34-மேல் -என்று நாமும் அழைத்து
அஸ்மாபிஸ் துல்யோ பவது –18-38-என்றும்
ஸ்கித் வஞ்சாப்யுபைது ந-என்று நீர் அனுமதி பண்ணின பின்பாயிற்று –
காத் பபாதாவ நிம் -19-1- என்று பூமியிலே இழிந்து
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2-என்று
நம் காலிலே விழுந்தது ஆகையாலே ஒரு காலே யாயிற்று அவன் சரணம் புகுந்தது –

ஒரு ஹானியும் பண்ணிற்று இலன் -என்கிறார் –
ஆகையாலே சக்ருதேவ -என்கிற பதம் பிரயோஜனம் ஆகிறது

2-அன்றியிலே -சக்ருதேவ பிரபன்னாய -என்று
அநேகஸ்மாத வ்யாவ்ருத்தோ தர்ம –அநேக தர்ம -என்கிறாப் போலே
சக்ருத்வ நிச்சித்ய ப்ரபன்னன்-என்றாய் –
மத்யம பத லோபி யான சமாசமாய் –

விசார்யா ச புன புன -என்று
துஷ்டனோ அதுஷ்டனோ –
மித்ரனோ அமித்ரனோ
வத்யனோ அவத்யனோ –
ஸ்வீகாரனோ பஹிஷ்கார்யானோ
என்று நாம் பட்டால் போலே

லங்கா மித்ர நாதிகளை விடுவேனோ பற்றுவேனோ
ராவணனை விடுவேனோ பற்றுவேனோ –
போகிற இடத்தில் கைக் கொள்ளுவார்களோ தள்ளுவார்களோ
ராஜ்யம் கிடைக்குமோ கிடையாதோ என்று
இப்புடைகளிலே பஹூ முகமாய் விசாரித்து அளப்பது முகப்பதாகை அன்றிக்கே
சக்ருத் சமீஷ்யைவ ஸூ நிச்சிதம் ததா -யுத்த -12-28-போலே
ஒரு காலே அறுதியிட்டு வந்தவன் என்கிறார் ஆகவுமாம் –

3- அன்றியிலே சஹஸா சப்தத்துக்கு சக்ருதேசமாய் –
சஹஹைவ பிரபன்னாய -என்றாய் –
அதாவது ஆஜகாம முஹூர்த்தேந -17-1-என்றும்
ஒல்லை நீ போதாய் -என்றும் சொல்லுகிறபடியே –
நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ஆநு கூல்யம் புரிவதற்கு முன்பே வந்தான் -என்கை

4- அன்றியிலே -சரணாகத ரஷணம் பண்ணுகிறீர் ஆகில் அடியேன்
சஹஸா பிரபன்னாயா -என்று ஒன்றையும் நிரூபியாதே
சாஹசிகனாய் வந்தான் –

அதாவது
ராவணன் கோஷ்டியில் நின்று கடல் கரையில் இருக்கிற பெருமாளை சரணம் புக்கால்
அவர் பிடித்துக் கொண்டு போய் விலங்கிலே இடில் செய்வதென் -என்று
பயப்படாதே பட்டது படுகிறது என்று அவன் வந்த சாஹசம் காணும் என்கிறார் ஆகவுமாம் –

5-இப்படி சரணாகதியில் சர்ப்பம்ருதி யுண்டோ என்ன –
சஹாச பிரபன்னாய –
அன்று ஈன்ற கன்றுக்காக முன்னீன்ற கன்றைக் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளும் தாயைப் போலே
பால்பாயப் பாய சரனாகதனாய் பலமும் பெறாத இவனுக்கே
யாம் அத்தனை போக்கி பூர்வ சரணாகதனாய்
ராஜ்ய தார பலமும் பெற்ற உமக்காகோம் –

இப்படியாவது அவன் தான் சரனாகதன் ஆகில் அன்றோ –
சீக்ரம் 17-7- என்றும்
வத்யதாம் -17-27- என்றும்
நாங்கள் சொன்ன வார்த்தையிக் கேட்டு வெருவிப் போக நிற்கிறவன் அன்றோ -என்ன

1- பிரபன்னா யைவ –
நாம் இப்படி விபரத்தி பின்னர் ஆன அளவிலும் அவன்
பிரபன்னனே -போகான் காணும் -என்கிறார்

பிரபன்னனே காணும் என்று அருளிச் செய்யா நின்றீர் –
அவன் பக்தி நிஷ்டனைப் போலே அங்கமாக சில தர்ம அனுஷ்டானம் பண்ணி –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -14-3/4- என்று நல் வார்த்தை சொல்லுவதும்
தூத வதம் ஆகாது என்பதும் –
தன் மகள் அநலையை இட்டு நல் வார்த்தை சொல்லுவதுமாய்
அநேகம் புனஸ் சரணம் பண்ணி அன்றோ வந்தது –
ஆன பின்பு அவன் பக்தி நிஷ்டன் என்றார் மஹா ராஜர் –

பெருமாள் -2- பிரபன்னா யைவ –
அவன் நல் வார்த்தை சொல்லிற்று நமக்காக அல்ல –
விபீஷணஸ்து-17-24-என்று ப்ரக்ருத்யா தார்மிகன் ஆகையாலும்
குருத்வாத்தி தமிச்சதா -என்று தமையன் விஷயத்தில் ஹித பரன் ஆகையாலும்
ஆநு கூல்யச்ய சங்கல்ப -என்று பிரபத்த்யாதி காரியாகச் சொன்னான் இத்தனை –

ஆகையால் இது அந்யா சித்தம் -பக்தி நிஷ்டன் என்ன ஒண்ணாது
சேனயோர் உபயோர் மத்யே ரதம் சதாபய -ஸ்ரீ கீதை -1-21-என்று
பள்ளரும் பறையரும் பார்ப்பாரும் பார்க்கருமான இரு படைக்கு நடுவே தேரை நிறுத்திச்
சரம ஸ்லோகம் உபதேசித்த போது அர்ஜுனன்
எங்கே குளித்து குலை குடுமியும் தோதவத்தியுமாய் நின்றான் –

வெளுத்த உடுப்பை -தோதவத்தித் தூய மறையோர் -பெரியாழ்வார் -4-8-1-
இன்னமும் உறங்குதியோ -என்ன நங்கைமீர் போதர்கின்றேன் -என்றும்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் -என்றும்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் நோன்புக்கு போகிற போது
அனந்தலிலே-தூக்கக் கலகத்தாலே -கண்ணையும் கடை வாயையும்
துடைத்து வந்தார்கள் அத்தனை போக்கி
எந்த உவர்க் குழியிலே குளித்து வந்தார்கள் –

அப்படியே இவனும் -யோ விஷ்ணும் சததம த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரே தசம் -என்று
விஷ்ணு த்வேஷியாய் கர்ம சண்டாளனான ராவணன் கோஷ்டியில் நின்று போருகிற போது
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -17-8-என்று
ஆகாசத்திலே நின்றான் இத்தனை போக்கி என்ன கடலாடி புனலாடி வந்தான்

யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபால உபநிஷத் -என்றும்
நாஸ்தி நஷத்ர சம்பந்தோ ந நிமித்த பரீஷணம் ஸ்ரத்தைவ காரணம் நித்ய மஷ்டாஷர பரிக்ரஹே-நாராதீய கல்பம் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும்
ருசி பிறந்த போதே வந்தான் அத்தனை –

கங்கை ஆடுவாருக்கு ஒரு உவர் குழியிலே குளிக்க வேணுமோ
பகவான் பவித்ரம் வாசு தேவ பவித்ரம் –
பவித்ராணாம் பவித்ரம் –
பாவனா சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -என்று
பேசப்பட்ட நம் பக்கல் வருகிறவனுக்கு பெரு புரச் சரணம் வேண்டா –
ப்ரபன்னன் ஆகில் -என்கிறார்

அது இருந்தபடி என் –
பக்திக்கு சாஸ்திர விஹிதம் வர்ணாஸ்ரம தர்மங்கள் உண்டாய் இரா நின்றது –
இதுக்கு
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்று உள்ள தர்மங்களையும் விடச் சொல்லா நின்றது
ஆகையாலே பிரபத்தியில் பக்தி விலஷனையாய் தொடரா நின்றதீ என்னில் –
அது சொல்ல ஒண்ணாது

சப்த பிரமாணகே ஹ்யர்த்தே யதா சப்தம் வ்யவஸ்திதி-என்று
சாஸ்திர பிரமாண கரானால் அது சொன்ன படி கொள்ளக் கடவோம்
அதாவது –
பஹவோ ஹி யதா மார்க்கா விசந்த யேகம் மஹா புறம் –
ததா ஜ்ஞாநாநி சர்வாணி ப்ரவிசந்தி தமீஸ்வரம் -என்று
ஓர் ஊருக்குப் போகா வென்றால் பல வழியாய் இருக்குமாப் போலே
பகவத் ப்ராப்திக்கு பல உபாயங்கள் உண்டு என்று சொல்லி

ஒரு உபாயம் ஸ்வயம் அசக்தம் ஆகையாலே சில சஹ கார்யாந்தரங்களை விதித்து –
ஒரு உபாயம் சர்வ சக்தி யாகையாலே சஹ கார்யாந்தரங்களை வேண்டா என்கிறது

பிரகார பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று வை லஷண்யம் வாராது
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்றும்
நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷ சமர்ப்பக தர்மங்கள் என்றும் யுண்டு
அநேக விசேஷ சமர்ப்பகங்களைப் பார்த்தால்
பிரபத்தியே விலஷணை -எங்கனே என்னில்

ஸோ அன்வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
ப்ரஹ்ம விடாப்நோதி பரம் -என்றும்
ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை -என்றும்
தமேவைகம் ஜானதாத்மானம் அந்யா வாசோ விமுஞ்ச்சத அம்ருதச்யைஷ சேது -என்றும்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்

வேதாந்த விஹிதத்வமும் மோஷாதி சாதனத்வமும் ஒத்து இருக்கச் செய்தேயும்
பக்த்யாபாய ஸ்வரூபம் போலே
சாத்திய பக்தயேக சோசா என்று இவனாலே சாத்தியமாக அன்றிக்கே
பிரபத்ய்யுபாய ஸ்வரூபம்
சித்தரூபம் பரம் ப்ரஹ்ம -என்றும்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
பண்டே சித்த ரூபமாய்

த்யாயீத -என்றும்-
த்ருவா ஸ்ம்ருதி என்றும்
ஸ்ம்ருதி சந்தான ரூப ஜ்ஞானமாய் அசேதனமாகை அன்றிக்கே
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் –
சத்யம் ஜ்ஞானம் –
சர்வம் சர்வத்ர சர்வதா ஜாநாதி -என்று

ஜ்ஞாதாவாய் சதாதன ஜ்ஞான ஸ்வரூபமாய் –
ஸ்வீகரிக்கும் இடத்தில்
ஆவ்ருத்திர சக்ருதுபதேசாத் -என்று
அநேக ஜன்ம சித்தமாய் சிரகால சாத்தியமாய் இருக்கை அன்றிக்கே
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி –உபாய பூதோ மே பவதி ப்ரார்த்த நா மதி சரணா கதி –
தஸ்ய தாவதேவ சிரம் -யாவததிகாரம் -என்று
விளம்பித பலப்ரதமாகை அன்றிக்கே

உபாயோ அயம் சதுர்த்த் தஸ்தே ப்ரோக்த சீகர பலப்ரத –
தாவதார்த்திஸ் ததா வாஞ்ச தாவன் மோஹஸ் ததா ஸூ கம் யாவன்னயாதி சரணம் -என்று
சீகர பல பிரதமாய்

தபஸா அ நாஸ கேன் –
யஜ்ஞோ தானம் தபஸ் சைவ –
பஞ்சாக் நயோ யே ச திரிணா சிகேதா –
தபஸ் சந்தாப லப்தச்தே ஸோ அயம் தர்ம பரிக்ரஹ –
கார்யஸ் த்ரிஸ்வபி ஷேகச்ச காலே காலே ச நித்யச-என்றும்
ஓதி ஆமாம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப்பாதம் நாளும் பணிவோம் -என்றும்

மாரி கோடை இன்றியிலே
உப்பு நீரிலும் உவர் நீரிலும் சுட்ட நீரிலும் சுனை நீரிலும் தோய்ந்தும்
க்லேசிக்கும்படி யாகை அன்றிக்கே

ஆனந்தோ ப்ரஹ்ம –
ஆனந்தம் ப்ரஹ்ம –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -என்றும்
சர்வ கந்த சர்வ ரச என்றும் ஸூக ரூபமாய்
மித்யா பிரயிக்தோ யஜமானம் ஹி நஸ்தி -என்றும்
ஜ்ஞான தோஷ பரிப்ரஷ்டஸ் சண்டாளீம் யோனி மா கத -என்றும்
அல்ப்பம் தப்பில் கர்த்தா நசிக்கை அன்றிக்கே

யதா ததா வாபி சக்ருத் க்ருதோஞ்சலி ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்ய சேஷத
ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக புறா -சமாஸ்ரயே தாதி தேவம் சரத்தா சரணம் யது
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்றும்

பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்றும்
அடைவு கெடப் பண்ணினாலும் தோஷங்களைப் போக்கி திருத்தி
அனுஷ்டாதாவை உஜ்ஜீவிப்பிக்கக் கடவதாய்
அவித்யயா ம்ருத்யும் தீர்த்தவா வித்யயா அம்ருத மஸ் நுதே -என்றும்
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமாகதி -கஷாய கர்மபி பக்வே ததா ஜ்ஞானம் ப்ரவர்த்ததே-என்றும்
தரத்தும் ம்ருத்யு மவித்யயா -என்றும் -ஸ்வ உத்பத்தி பிரதிபந்தக நிவர்தகமாய்

அந்தவதே வாஸ்ய தத்பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை பராப்யதே -என்றும்
பலவா ஹ்யேதே அத்ரூடா யஜ்ஞரூபா -என்றும்
நஸ்யத் த்ரவ்ய உபகரணமாய்-நஸ்வர க்ரியா ரூபமுமாய் –
ஸ்வயம சக்த தேவதாத்மகமுமாய் ஸ்வர்க்க பசு புத்ராதி சாதாரணமான கர்மாதிகளை
அங்கமாக அபேஷிக்கை அன்றிக்கே

தமேவைகம் ஜானதாத்மான மன்யா வாசோ விமுஞ்சத் -என்றும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும்
ததே கோபாயதாயாச்ஞா -என்றும்
மாமேவைஷ்யசி என்றும்
சிருஷ்டியில் த்ரிவித காராணமும் தானே யாகிறாப் போலே

ஆத்யந்திக பிரளயமான மோஷத்திலும்
அங்கமும் அங்கியும்
உபாயமும் உபேயமும் ஒன்றேயாய்
சர்வ முக்தி வை ஷம்யம் நைர்க்ருண்யாதிகள் வாராமைக்காக
அதிகாரி ஸ்வரூப யோக்யதாபாதகமான ஆநு கூல்ய சங்கல்பாதி மாத்ர சாபேஷையாய்
இப்படிக்கொத்த அநேக குண பௌஷ் கல்யங்களாலே
பக்தியில் பிரபத்தியே அத்யந்த விலஷணை –
இப்படிகொத்த பிரபத்தியைப் பண்ணினவனுக்கு –

3- பிரபன்னா யைவ –
மந்திர வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிதுமர்ஹதி-17-18–என்று
கர்ம யோக நிஷ்டரான உமக்கும் ஆகோம்-

ஜாம்பவாம்ஸ் த்வதசம்ப்றேஷ்ய சாஸ்திர புத்த்யா விசஷண -17-43-என்கிற
ஜ்ஞான யோக நிஷ்டரான ஜாம்பவானுக்கும் ஆகோம்

பக்திச்ச நியதா வீர -உத்தர -40-16-என்கிற
பக்தி யோக நிஷ்டரான ஹனுமானுக்கும் ஆகோம்

ராகவம் சரணம் கத -17-14- என்று பிரபன்னனான விபீஷணனுக்கே ஆகக் கடவோம் –

4- பிரபன்னா யைவ –
அகார்த்தாயைவ -அஷ்டச்லோகீ-3 என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் -2-9-4-என்றும்
அவன் நமக்கேயாய் இருக்குமா போலே

எனக்கே தந்தைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11-என்று
அபியுக்தர் சொன்னபடியே பிரபன்னனுக்கே யாகக் கடவோம்

அவன் பிரபன்னனாவது ஷூத்ர பிரயோஜனத்துக்காக அன்றோ
ராஜ்ய -17-66-என்று
உம்முடைய ஹனுமான் அன்றோ சொன்னான் -என்ன

1-தவாஸ் மீதி ச யாசதே –
உனக்கே யாவேன் என்று யாசிப்பவனுக்கு
அநந்ய பிரயோஜனநாயே வந்தான் காணும் -என்கிறார்

அதாவது-ச காரம் அவதாரண அர்த்தமாய் –
தூத வதம் ஆகாது என்று தனக்குப் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக
ராஜ்யம் கொடுக்க வேணும் என்று அபிப்ராயமாக ஹனுமான் சொன்னான் அத்தனை போக்கி
விபீஷணன் சொன்னானோ –

ந தேவ லோகா க்ரமணம் நா மரத்வமஹம் வ்ருனே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமே ந த்வயா வி நா -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் -5-8-3- என்றும்
லஷ்மணனும் சடகோபனும் சொன்னால் போலே
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -17-14- என்றும்
பரித்யக்தா -19-5-என்றும்
புறம்பு உள்ளவற்றை அடைய விட்டுச்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும்
தாமேயாக-திருவாய் -5-1-8- வந்தவன் -என்கிறார் –

2- தவாஸ்மீதி ச யாசதே –
தவை வாச்ம்யஹ மச்யுத -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும்
அநந்ய பிரயோஜனனாயே வந்தான் –

3- தவாஸ்மி
ந மம-ந ராவணஸ்ய-
ஸ்வா தந்த்ர்யமும் இல்லை -பர பாரதந்த்ர்யமும் இல்லை
மத பாரதந்த்ர்யமே ஏவ ஸ்வரூபம் -என்று வந்தவன் –

4-தவைவாஸ்மி-
அவன் நம்மை நோக்கி தவைவாஸ்மி -என்றான் –
நாமும்
புக்த்வா ச போகான் விபுலான் ததோ அந்தே மத பிரசாதாதாதா –
மம அநுஸ்மரணம் ப்ராப்ய மம லோகம் ச கச்சதி -என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு மொழி -5-8-5-என்று
லாங்கா ராஜ்யமும் கைங்கர்ய சாம்ராஜ்யமும் –
தவைவாஸ்து -என்னக் கடவோம் –

ஸ்ரீ மதா ராஜராஜோ லங்காயாம் அபிஷேசித-யுத்த -28-27-என்றும்
விபீஷண விதேயம் ஹி லங்கா ஐஸ்வர்யம் இதம் க்ருதம் -யுத்த -116-13-என்றும்
லப்த்வா குல தனம் ராஜா லங்காம் ப்ராயாத விபீஷண -யுத்த -131-9-என்றும்
இப்படி இரண்டும் கொடுத்து விட்டு அருளினான் இறே-

குல தனம் என்னக் கோயில் ஆழ்வாரைக் காட்டுகிறபடி என்-என்னில்
இதம் விமானம் ஆச்சர்யம் இஷ்வாகு குல தைவதம் -என்றும்
மநு வம்ச ப்ரசூதா நாம் ஷத்ரியாணாம் இதம் தனம் காமகம் காமதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிதம்-என்றும்
உப புராணத்திலும் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் ஸ்பஷ்டமானத்தை
இங்கே அநு வதிக்கிறது ஆகையாலே குறை இல்லை –

5- தவாஸ்மி –
ஸ்தித மாத்மநி சேஷத்வம் -என்றும் –
ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம -என்றும் –
ஆத்ம தாஸ்யம் -என்றும்
ஆத்ம சத்தையுண்டாகிற போதே சேஷமாய் அன்றோ இருப்பது –

6- தவாஸ்மி –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -போலே சாமா நாதி கரண்யத்தாலே சொன்னாலும்
சேஷ சேஷி பாவம் சித்திக்கும் இறே
அப்படிச் சொல்லாதே வ்யதிகரணமாகச் சொல்லிற்று –
பூர்வாபரங்களாலும் பிரமாணாந்தரங்களாலும் உபபாதிக்க வேண்டி
ஆபாதத்தில் ஸ்வரூப ஐக்கியம் போலே தோன்றி பிரமிக்க ஒண்ணாது என்று
ஜீவ பரமாத்மா பேதமும் வ்யக்தம் ஆகைக்காக

1-இதி –
இப்பாசுரம் ரசித்த படியாலே –
தவாஸ்மி-என்ற பிரகாரத்தைச் சொல்லுவதே -என்று
அநுபாஷித்து ப்ரீதராகிறார் –

2- இதி –
இத்யாஹா மால்யோப ஜீவந-என்றால் போலே
யாராகச் சொல்லக் கடவ பாசுரத்தை யார் சொல்லுகிறார் –
புலஸ்த்யன் புல ஹாதிகள் இதி ஹாசமாகச் சொல்லக் கடவ பாசுரத்தை
ஒரு ராஷசன் சொல்லுவதே –

ச –
உபாய மாத்ரத்தை அபேஷித்து விடாமே
பலத்தையும் வேண்டுவதே -என்று சமுச்ச்யார்த்த மாக வுமாம்

1-தவாஸ்மீதி ச –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா-என்று
பல சதுஷ்ட்ய சாதாரணமான உபாயத்தை அபேஷித்தால்
உபேயங்களில் த்ரிவர்க்கத்தை அபேஷியாதே பரம புருஷார்த்தமான அபவர்க்கத்தை அபேஷிப்பதே-

2- தவாஸ்மீதி ச –
பூர்வார்த்தத்தில் உபாயத்தை அபேஷித்து-
சரணாகதனாய்ப் போகாதே -உக்த அர்த்தத்தில் கைகர்யத்தையும்
அபேஷித்து த்வய நிஷ்டன் ஆவதே –

3-தவாஸ்மீதி ச –
த்வாஸ்மீத் யபி என்றாய் –
அதாவது –
பரிபாலய நோ ராஜன் வத்யமாநான் நிசாசரை-என்ற ரிஷிகளையும்
த்ராணகாம இமாம் லோகம் சர்வம் வை விசசார ஹ -என்றும்
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்ற ஜெயந்தனைப் போலே
ஷூத்ர சரீர ரஷணத்துக்காக அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தமான நம்மை -என்கை-

ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் –
ஸ்ரீ மதே நாராயணாய -என்றும் –
சஹ வைதேஹ்யா–அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருவருமான சேர்த்தியிலே அன்றோ –

தனித்து இருக்கிறது உமக்கு சேஷமானால்
ஏகா யனனாகானோ -என்ன –
பித்ரா ச பரித்யக்த -என்கிற இடத்தில் –
மாத்ரா ச பரித்யக்த -என்று அநுக்த சமுச்சயமானால் போலே
இங்கும் தவாஸ்மீதி ச -என்றது –
வைதேஹ்யாஸ் சாஸ்மி அநுக்த சமுச்சயமாய் மிதுன விஷயத்திலே காணும் அபேஷித்தது என்கை-

அன்றியிலே-
உங்களைப் போலே சாகா ம்ருகமாய் சாகைக்கு மேலே சஞ்சரிக்கை அன்றிக்கே
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே க்ருஹே -என்றும்
ஸூஸ்ராவ ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷசாம் -என்றும்
அகத்துக்கு உள்ளே சாகா சஞ்சாரியாய் -வேதம் ஓதி -இருப்பவனுக்குத் தெரியும் காணும்
அதாவது –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நித்யைவைஷாநபாயிநீ -என்றும்
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அப்ருதக் சித்த நித்ய தர்மமே-ச -வ்வுக்கு உள்ளே உண்டு என்று
அறிந்து சொன்னான் காணும் -என்கிறார் ஆகவுமாம் –

இப்படி எல்லாம் அறிந்து இருக்கிற இவன் பர தந்த்ரனாய் செய்த படி கண்டிருக்க ப்ராப்தம்
இத்தனை போக்கி நிர்பந்திக்கப் பெறுமோ -என்னில்
1- யாசதே –
தனக்கு இது அபிமதம் என்னும் இடம் தோற்ற இரந்தான்-இத்தனை –

2- யாசதே –
ரஷா பேஷாம் ப்ரதீஷதே -என்றும்
அர்த்திதோ –ஜஜ்ஞே -என்றும்
வேண்டித் தேவர் -இரக்க-திருவாய் -6-4-5-என்றும்
அத்தலையிலே இரப்பை நாம் பாரித்து இருந்த படியாலே இரந்தான் –

3- யாசதே –
கதாஹமை காந்திக நித்ய கிங்கரர் பிரகர்ஷ்யிஷ்யாமி -ஸ்தோத்ர ரத்னம் -46-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1- என்றும் பிரார்த்திக்கிறான்
அவன் கண் குழியும் பையாப்பும் கண்டால் ஆர்க்கு மறுக்கலாம்

இப்படி இருந்தால் அவனுக்குச் செய்து அருளப் புகுகிறது ஏது என்னில்
1-அபயம் ததாமி –
அத ஸோ பயங்க தோ பவதி -என்னும்படி பண்ணுவன்
அபயம் -தத் அந்ய– தத் அபாவ -தத் விரோதிகளை இறே கூட்டுவது –

ஆகையால் –
2-தத் அந்யமான மங்களங்களை கொடுப்பன்

3-தத் அபாவமான அச்சம் இல்லாமையைப் பண்ணுவன்

4-பரகரிஷ்யமான ஆபச் சிந்தை இறே பயம் –
தத் விரோதியான இவன் புஜபல ரஞ்சிதரான பரரால் பண்ணப் படுகிற
உபகார சந்துஷ்டியை உடையவனாம் படி பண்ணுவன் –

5-அபயம் –
அதீதே ஸோ க வர்த்தமா நே வ்யதா ஆகாமி நி பயம் -என்று இறே லஷணம்
சோகம் இறந்த கால துன்பம் –
வ்யதை-வதை – நிகழ் கால துன்பம் –
பயம் வரும்கால துன்பம் –
ஆகையால் மேல் ஒரு அநர்த்தம் வாராதபடி பண்ணுவன் –

ஆர் நிமித்தமாக-பய நிவ்ருத்தி பண்ணுவது -என்ன –
1- சர்வ பூதேப்ய –
ஏதேனுமாக பய ஸ்தானமாய் உள்ளவை எல்லாம் -நிமித்தமாக –

2- சர்வ பூதேப்ய –
பூதங்கள் ஆகின்றன அசித் சம்ஸ்ருஷ்டங்கள் இறே-
அதாவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத்மகமாய் இறே இருப்பது –
இவை இத்தனையும் நலியாதபடி பண்ணுவன் –

3- சர்வ பூதேப்ய –
ராவணனால் பட்ட பரிபவத்தாலே -அவன் தம்பி என்றும் இந்த்ராதிகளால் வருமது-
நம் பக்கலிலே பரிவாலே -வத்யதாம் -17-27-என்று திர்யக்கான உம்மால் வருமது –
ராவண விஜயத்தாலே பரிபூதரான மருத்தன் தொடக்கமான மனுஷ்ய ராஜாக்களால் வருமது –
பீடத்தோடு பிடுங்குண்ட ஸ்தாவரமான கைலாசம் அடியாக வரும் இவ்வாபத்தை அடியைப் பரிஹரிபபன்-

4- சர்வ பூதேப்ய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11- என்றும்
பௌதிகா நீந்த்ரியாண் யாகூ-என்னும் பிரக்ரியையால்
ப்ருதிவ்யாதி பூத கார்யமான சரீரேந்த்ரிய விஷயாதிகள் நலியிலும் பரிஹரிப்பன் –

5- சர்வ பூதேப்ய –
நானே நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- என்ற
உன்னால் வரும் பயமும்
ஜகத் சசைலபரிவர்த்தயாமி -ஆரண்ய -64-7- என்றும்
ஷிபாமி -ந ஷமாமி -என்றும் நம்மால் வரும் பயமும்
ஹிரண்ய ராவணாதி பித்ரு பிராத்ரு திகளால் வரும் பயமும் பரிஹரிபபன்

5- சர்வ பூதேப்ய –
என்று அசேதனமான பாபங்களும் –
அவ்வோ பாபங்கள் அடியாக பாதிக்கும் ஜந்துக்களும் –
இதடியாக வரும் பயமும் அடையப் போக்குவான்

இப்படி பீத்ரார்த்தானாம் பய ஹேது -பஞ்சமி யாக வுமாம்
அன்றியிலே
சதுர்த்தியாய் -பிரபன்னனாய் -தவாஸ்மீதி ச யாசதே -என்று
சரணாகதனாய் -பலார்த்தியான விபீஷணன் ஒருவனுக்குமோ பய நிவ்ருத்தி பண்ணுவன் -என்றால்
இதி ச -என்கிற சவ்வை இங்கே கூட்டி

6-சர்வ பூதேப்யச ச –
அவனுக்கே அல்ல -சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -17-5- என்று அவனோடு கூட வந்தவர்களுக்கும் –
அவர் தங்களைப் பற்றினார்க்கும் -அபய பிரதானம் பண்ணுவன் என்றாக வுமாம் –

பய நிமித்தம் சொல்ல வேண்டாவோ -என்னில் –
ராகவேணாபயே தத்தே -19-1-என்கிற இடத்தில் உண்டோ
பயம் பா நாம்ப ஹாரிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-36-என்கிற இடத்தில் உண்டோ
அது தன்னடையே வரும் –
அன்றியிலே –
பிரபன்னாய -என்று பிரபன்னருக்கயோ பண்ணுவது –
பக்தி நிஷ்டருக்கும் புருஷகார நிஷ்டருக்கும் இல்லையோ –

7- சர்வ பூதேப்ய –
பக்தி நிஷ்டரோடு புருஷகார நிஷ்டரோடு வாசி அற-
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் ததோ விது-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே சத்தை பெற்றார் எல்லார்க்குமாம்

இப்படி கைம்முதல் உடையரான விலஷண அதிகாரிகளுக்கோ கொடுத்து அருளுவது –
சரணாகதர் -பக்தர் -ஆச்சார்ய நிஷ்டர் -பகவத் ஞானம் உள்ளோர் -போன்றாருக்கு மட்டுமா –
கிம் பஹூ நா-பல சொல்லி என்
8-சர்வ பூதேப்ய
ச லஷண உபாய நிஷ்டராக வேண்டா –
அதி ப்ரசங்கம் வாராதபடி பவத் விஷய வாசிந-ஆரண்ய -1-20- என்று
நம் எல்லைக்குள் கிடக்கையே உள்ளது –

யதி வா ராவண ஸ்வயம் -18-34- என்று சத்ருவான ராவணனோடு
பாத மூலம் கமிஷ்யாமி யா நஹம் பர்யசாரிஷம் -ஆரண்ய -4-14- என்று-உதாசீனையான சபரியோடு
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8-என்று மிருகமான வாலியோடு
கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்று பஷியான ஜடாயுவோடு
பாஷாண கௌதம வதூ வபுராப்தி ஹேது -என்று ஸ்தாவரமான அஹல்யா சிலையோடு
பிரதிபேதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38- என்று ஜங்கமமான ஜெயந்தனோடு
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே -நற்பால் அயோத்தியில் வாழும்
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய் -7-5-1-என்று த்ருண குல்ம வீருதாதிகளோடு
பிதாமஹபுரோகாம்ஸ் தான் –பால -15-26-என்று அடியிலே நம்மைப் பெற வேணும் என்று அபேஷித்த ப்ரஹ்மாதிகளோடு
வாசி அற -ப்ரஹ்மாதி பிபீலீகாந்தமான சர்வ வஸ்துக்களுக்குமாம்

இவர்களுக்கு செய்து அருளுவது என் என்னில்
1- ததாமி –
த்யாகமும் அல்ல -ஔ தார்யமும் அல்ல -உபகாரமும் அல்ல –
தானமாகவே பண்ணுவேன் –

த்யாகமாவது –
கீர்த்தி முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் -என்று
பிறர் அபேஷித்ததை கீர்த்தி பலமாக பசையறக் கொடுக்கை

ஔ தார்யமாவது –
சர்வ விஷய விதாரணம் ஔ தார்யம் -என்று விஷய வைஷம்யம் பாராதே
முலைக் கடுப்பு தீரச் சுரக்குமா போலே தன் பேறாகக் கொடுக்கை

உபகாரமாவது –
பிரத்யுபகாரதியா பந்து க்ருதிருபகார -என்று
பிரத்யுபகார பிரயோஜனமாக ஆசன்னருக்குக் கொடுக்கை –

அத்ருஷ்ட முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் தானம் -என்று
விலஷண விஷயத்தில் விலஷண பதார்த்தங்களை அத்ருஷ்ட பலமாகக் கொடுக்கை

2- ததாமி –
மோஷயிஷ்யாமி போலே -தாஸ்யாமி-என்று கால விளம்பனம் பண்ணோம் –
வரும் கால பிரயோகம் செய்ய மாட்டேன்

3- ததாமி -கொடுக்கிறேன் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -போலே –
உபாசன ப்ராரம்பே மோஷ ப்ராரம்ப -என்று
அவன் நம்மை நோக்கிக் கிளம்பின போதே நாமும் உபக்ரமித்தோம்
இது யாவதாத்மா பாவியாகக் கடவது
ப்ராரப்தோ ஸ்பரிசமாப் தஸ்ச வர்த்தமான -தொடங்கியதாய் முடியாமல் இருப்பது உங்கள் காலம் -இறே-

4- பிரபன்னாய ததாமி –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ்ருதம் -என்றும் –
இதர உபாயங்களில் பிரபத்தி விலஷணை யானால் போலே –
நார் ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி -என்று
அல்லாத அதிகாரிகளில் ப்ரபன்ன அதிகாரி விலஷணனாய் இறே இருப்பது –

இவ் விலஷண அதிகாரியைக் கண்டால் தானம் பண்ணாது இருக்கப் போமோ –
அது தான் பாஷிகமோ -நியமம் உண்டோ -என்னில்
1- ஏதத் வ்ரதம் மம-
இது நமக்கு நியத அநு ஷ்டேயம்-

2-ஏதத் -பிரபன்னனுக்குப் பண்ணுகிற அபய பிரதானம் -அநு பல நீயஸ் ஸ-என்று ஏறிட்டுக் கொண்டால்
முடியும் அளவும் விடாதே நடக்குமது இறே வ்ரதம் ஆகிறது
ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-என்று
அடியிலே சொன்னோமே

3-ஏதத் வ்ரதம் –
பரித்ராணாய சாதூநாம் –சம்பவாமி –ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சரீரக்ர ஹணம் வ்யாபின் தர்மத் ராணாய கேவலம் – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-50-என்றும்
பொழில் ஏழும் காவல் பூண்ட -திரு நெடும் -10-என்றும்
காக்கும் இயல்விணன் -திருவாய் -2-2-9- என்றும்
இது நமக்கு சத்தா பிரயுக்தம் –

இது அனுஷ்டேயம் ஆருக்கு என்ன
1- மம-
அர்த்திதோ மா நுஷே லோகே -அயோத்ய -1-7-என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5- என்றும்
பராபேஷையாய் அதுக்கு இட்டுப் பிறந்த நமக்கு –

2- மம –
ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் பணி அல்ல –
சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் பணி யல்ல
நஹி பாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வராத்ஹரே -ஸ்ரீ விஷ்ணு புரா -1-22-21- என்றும்
ரஷார்த்தம் சர்வ லோகா நாம் விஷ்ணுத்வம் உபஜக் மிவான் -உத்தர -104-9-என்றும்
ரஷணை நமக்கே பணி என்கிறார் –

3- மமைதத் வ்ரதம் –
நம் பக்கல் பரிவாலே விலக்குகையும் உனக்குப் பணி யானால் போலே
ஆஸ்ரீத ரஷணமும் நமக்குத் தொழில் காணும்

4- ஏதத் வ்ரதம் மம –
சதா மேத்த கர்ஹிதம் -18-3-போலே
சத்தா பிரயிக்தத்துக்கு பிரயோஜனம் இல்லை
செய்யாத போது கபோத வானர விச்வாமித்ராதிகள் இருந்து
எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் என்று கதவை அடைப்பார்கள்-
அது செய்யாதே
சாது கோட்டியுள் கொள்ளப் படுகிறதே பிரயோஜனமாக இது நமக்கு அனுஷ்டேயம் என்கிறார்

5-ஏதத் வ்ரதம் மம –
இது நமக்கு அனுஷ்டேயம் –
இத்தத் தலைக் கட்டித் தாரீர் என்று மஹா ராஜரை இரக்கிறார்-

இப்படி பெருமாள் மஹா ராஜரைப் பார்த்து அபய பிரதானம் பண்ணி
ஆஸ்ரீதனான விபீஷண ரஷணம் பண்ண வேணும் என்று
இந்த ஸ்லோகத்தில் தாத்பர்யார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————————————————–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் –
இருபதொரு சரணாகதி வேதம்

இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம்
சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்

ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்

இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும்
இரண்டு வகையாய் இருக்கும் –

பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

——

முதல் அவதாரம் -பிரபந்தாவதாரம்

மங்களா சரணம் -ஸ்ரீ ராம சரம ஸ்லோக அர்த்த ஸங்க்ரஹம் –
ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம் -ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

மங்களா சரணம்
ஜெயதி ஆஸ்ரித சந்த்ராச த்வாந்த வித்வம்சந உதய
பிரபாவாந் சீதயா தேவ்யாம் பரமா வ்யோம பாஸ்கர

பிராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந்
ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்து மாம் அவ்யத் அபயமுத்ரித

நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சன ஜந
ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தான யஸசே
ஸூரா தீச ஸ்வை ரக்ஷண குபித சாபாயுதா வதூ
த்ருஷத்தா துர் ஜாத ப்ரசமந பதாம் போஜ ரஜஸே

வதூ த்ருஷத்தா-கௌதம மகரிஷி பார்யை -அகல்யை -கல்லாய் இருக்க
துர் ஜாத-கெட்ட ஜென்மத்தை
நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது- அந்த ஸ்ரீ ராமன் பொருட்டு நமஸ்காரம் இருக்கட்டும்

சோகம் தவிர்க்கும் ஸ்ருதிப் பொருள் ஓன்று சொல்லு கின்றேன்
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணாம்
ஆ கண்டலன் மகனாகிய ஆவலிப்பு ஏறியதோர்
காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும் உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பவன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

———

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம்

பரித்ராணாய ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –என்கிறபடியே

ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒரு த்ரேதா யுகத்தில் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்த காலத்தில்

ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரஹ்ம புத்திரனான ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
சங்க்ஷேபேண ஸ்ரவணம் பண்ணி

மச்சந்தா தேவ தே ப்ரஹ்மன் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ—பால-2-32–என்கிறபடியே
ஸ்ரீ ஸரஸ்வதீ வல்லபனான ப்ரஹ்மாவினுடைய ப்ரஸாதத்தாலே ப்ரவ்ருத்தமான திவ்ய ஸாரஸ்வதத்தை யுடையனுமாய்

ரஹஸ்யம் ச பிரகாசம் ச யத் வ்ருத்தம் தஸ்ய தீமத
ராமஸ்ய ஸஹ ஸுவ்மித்ரே ராக்ஷஸா நாம் ச ஸர்வஸ
வைதேஹ்யாஸ் சாபி யத் வ்ருத்தம் பிரகாசம் யதி வா ரஹ
தச்சாப்ய விதிதம் சர்வம் விதிதம் தே பவிஷ்யதி
ந தே வாகந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று ப்ரஹ்மாவால் தத்த வரனுமாய்

ஹசிதம் பாஷிதம் சைவ கதிர் யா யச்ச சேஷ்டிதம்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம் ப்ரபஸ்யதி–பால-3-4-என்கிறபடியே

தர்ம வீர்ய பிரஸூ தமான திவ்ய சஷுஸ் சாலே -இவ்வவதார வ்ருத்தாந்தத்தை

பாணவ் ஆம லகம் யதா -பால-3-6-என்னும்படி
நிரவசேஷமாக சாஷாத் கரித்து

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீசரம்
விவேக சர ஜாலேந சமம் நயதி யோகிநாம் –என்கிறபடியே
முமுஷுவுக்குப் பரம உபகாரகமான
இவ்வவதார ரஹஸ்யத்தை வெளியிட்டு லோகத்தை உஜ்ஜீவிப்பைக்காகத் தன் கருணையால் ப்ரவ்ருத்தனாய்

————-

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபப்ரும்ஹயேத்
பிபேத் யல்பஸ்ருதாத் வேதோ மா மயம் பிரதர்ஷயிதி –என்கிற சாஸ்திரத்தை அநு சந்தித்துக் கொண்டு

வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும் அவர்களைப் பற்ற
வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காவும்

புண்யம் வேதைஸ் ச சம்மிதம் –பால-1-97-என்கிறபடியே
நாலு வேதங்களும் ஒரு தட்டிலும் தான் ஒரு தட்டிலுமாக நிற்கிற
ஸ்ரீ ராமாயணம் ஆகிற பிரபந்தத்தை அருளிச் செய்து

சிந்த யாமாச கோந் வேதத் ப்ரயுஞ்ஜீயாத் இதி பிரபு -பால-4-3-என்கிறபடியே
யாரைக் கொண்டு இந்த பிரபந்தத்தை ப்ரவர்த்திக்கக் கடவோம்-என்று சிந்தித்த சமயத்தில்
குச லவர் வந்து பாதோப ஸங்க்ரஹணம் பண்ண

தவ் து மேதாவிநவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ்
வேத உப ப்ரும்ஹணார்த்தாய தவ் அக்ராஹயத பிரபு -என்கிறபடியே
உசித அதிகாரி முகத்தால் உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை ப்ரவர்த்திப்பித்தான் –

ஸ்ரீ பிரபந்த அவதாரம் -முதல் அதிகாரம் முற்றுற்று –

————–

சரண்ய விரத விசேஷ பிரகாசம் என்னும் எட்டாம் அதிகாரம் –

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் –விபீஷணோ வா ஸ்லோகார்த்தம்

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் —

ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார ஸ்வஸ்ய ச பிரிய மாத்மந
சம்யக் சங்கல்பஜ காம தர்ம மூலமிதம் ஸ்ம்ருதம் -யாஜ்ஞ ஸ்ம்ருதி -1-7-என்று

மஹரிஷிகள் சொன்ன தர்ம பிரமாணங்கள் ஐந்தில் நாலை அருளிச் செய்து காட்டி –
பஞ்சம தர்ம பிரமாணத்தை அருளிச் செய்கிறார் –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–

சக்ருதேவ
மற்ற உபாயத்தில் ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தம் ஆனால் போலே காணும்
பிரபத்தியில் அநா வ்ருத்தி சாஸ்த்ரார்த்தமாய் இருக்கும் படி

ஏவ -கார்த்தாலே
நைரபேஷ்யம் சொன்னபடி

ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
என்கிற இரண்டாலே கோப்த்ருத்வ வரணமும்
ஆத்ம நிக்ஷேபமும் சொன்னபடி

ப்ரபந்நாய-என்று மாசநமுமாய்
யாசதே -என்று வாஸிகமுமாய்-என்றுமாம்

த்வயத்தில் போலே அடைவே உபாயத்தையும்
பலத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம்

ப்ரபந்நாய-என்று
கோபலீ வர்த்த நியாயத்தாலே ப்ரயோஜனாந்தர பரனைச் சொல்லி
தவாஸ்மீதி ச யாசதே -என்று
அநந்ய ப்ரயோஜனனைச் சொல்லுகிறது ஆகவுமாம்

சரணம் ச ப்ரபந்நா நாம் தவாஸ் மீதி ச யாசதாம்
பிரசாதம் பித்ரு ஹந்த்ரூணாம் அபி குரவந்தி சாதவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -106-53-என்கிற ஸ்லோகத்திலும்
இப்படியே யசோசித விவஷையைக் கண்டு கொள்வது

சதுர்விதா பஜந்தே மாம் –ஸ்ரீ கீதை -7-16- என்கிற உபாசனம் போலே

தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-இத்யாதி பிரமாணங்களாலே
பிரபத்தியும்
சகல பல சாதகமாய் இருக்கும்

அபயம்-என்று
சங்கோசா பாவத்தால் சர்வ பயாபாவத்தையும் சொல்லுகிறது

சர்வ பூதேப்ய -என்கிற
இத்தை பஞ்சமீ என்று சிலர் வியாக்யானம் பண்ணினார்கள்

ஸ்ரீ சோமயாஜி யாண்டான் உள்ளிட்டார் சதுர்த்தீ என்று நிர்வஹித்தார்கள்

இரண்டு பக்ஷத்திலும் உள்ள குண தோஷ தத் சமாதானங்களைத் தத் தத் கிரந்தங்களில் கண்டு கொள்வது

அதில் பஞ்சமீ பஷத்தில் –
ப்ரபந்நாய-என்கிற இதுக்கு -சங்கோசம் இல்லாமையால்
ப்ரபத்தியினுடைய சர்வாதிகாரம் சித்திக்கும்

சதுர்த்தீ பக்ஷத்தில்
சர்வாதிகாரத்வம் கண்ட யுக்தமாம்

பஞ்சமீ யானால்
கேவல ராவணாதி மாத்ரத்தைப் பற்ற அன்றி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் –
நம்மையும் -பற்ற
பயம் இல்லாதபடி பண்ணுவோம் என்று அருளிச் செய்தபடியாம்

சதுர்த்தீ யானால்
விபீஷணன் என்று நினைக்க வேண்டா –
ராவணன் தான் ஆகிலும் நாம் அவனுக்கு அபய பிரதானம்
பண்ணுவோம் என்றதாம்

இப்பொருள் கீழில் பிரகரணத்துக்கும்
மேலில் பிரகாரணங்களில் ஸ்லோகங்களுக்கும் சேரும்

இந்த யோஜனையில் சர்வரையும் பற்ற பயாபாவம் அர்த்த சித்தம்

நிதா நாம் சர்வ பூதா நாம் ஏக கர்ம பல ப்ரத
இதி பஸ்யந் கஸாதுல்யத் குதஸ்ஸிந் நபி பேதி ஹி
சர்வா பராத நிஷ் க்ருத்யா பிரபத்த்யா கருணா நிதிம்
ப்ரஸாதயன் ந ஹி புநச ததோபி பயம் ருச்சதி
அபாய சம்ப்லவே பூய யதார்ஹம் அநு சிஷ்யதே
பிராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புந சரணம் வ்ரஜேத்–ஸ்ரீ தேசிகருடைய காரிகை ஸ்லோகம் இது

ஏதத் விரதம்
இது சர்வ பிராமண அநு மதமாய்-
தவறில் பிரத்யவாயம் வரும்படியான தர்ம்யமான சங்கல்பம் காணும்

மம —
நமக்கு சங்கல்பம் நடத்துகைக்கு விலக்கான
அஞ்ஞான அசக்தைகள் ஒரு காலும் வாரா காணும் –

ஆகையால் விலக்க ஒண்ணாத இவ்விரதத்தை
பரிவரான நீங்களும் இசைந்து ரஷியுங்கள் என்று திரு உள்ளம்-

———

அபதிஸ்ய வேங்கடேசம் ஸ்வ ஹஸ்த சம்சக்த தூலிகா துல்யம்
அபய பிரதான சாரம் குரு பிரசாத ஸ்வயம் வ்யலிக்த்

பொன்னை இகழ்ந்து விருகங்கள் புல்லிய புல் உகந்தால்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே மன்னு உலகு அனைத்தும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன்
பொன்னடி நாம் அடைந்தோம் புறமார் என் கொல் செய்திடிலே

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற
முனிவர்களும் தேவர்களும் மினிந்த அந்நாள்
தாவரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த
தனிக் காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக்
காண நிலை இலச்சினை யன்று இட்ட வள்ளல்
ஏவல் பயன் இரக்கம் இதுக்கு ஆறு என்று ஓதும்
எழில் உடையோர் இணை யடிக் கீழ் இருப்போம் நாமே

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

வேதத் திரளில் விதி யுணர்ந்தோர்கள் விரித்து உரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
ஒதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே

இத்தால் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி என்னும் அர்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால்

——————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

——————————————————————————————————————————————————————————-——————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம் /ஸ்ரீராமபிரான் ஸ்ரீ திருவடிக்கு உபநிஷத் பற்றி ஸ்ரீ ஸூக்திகள் —

December 30, 2021

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்.

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்.

யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.

துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே.

———————–

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
ஸ்ரீராமபுண்யஜெயம்

—–

ஓம் நமோ ப்ரஹ்மாதிப்யோ ,ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய–கர்த்ருப்யோ வம்ச –ரிஷிப்யோ ,மஹத்ப்யோ நமோ குருப்ய :

ப்ரஹ்மா போன்றவர்கள் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை அருளினார்கள் கோத்ர ப்ரவர்த்தகர்களான மஹரிஷிகள் ,
மஹான்கள் —-இவர்கள், இந்த ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஆசார்யர்களுக்கு நமஸ்காரம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதா (கும்) சப்ரஹிணோதி தஸ்மை |
த (கும்)ஹ தேவ–மாத்ம –புத்தி–ப்ரகாஸம் முமூக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே ||

முதன் முதலில் ப்ரஹ்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களைக் கொடுத்து, அருளியவர் எவரோ,
நமது உள்ளத்திலே இருந்துகொண்டு நமது புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்பவர் எவரோ,
அந்தத் தேவனை மோக்ஷத்தில் விருப்பமாக இருக்கிற முமுக்ஷூவான அடியேன்
சரணமடைகிறேன்

ஸ்ரீராமபிரான், அநுமனுக்குச் சொல்கிறார்;–

1.ருக்வேதாதி –விபாகேன வேதாச்–சத்வார ஈரிதா : |
தேஷாம் சாகா –ஹ்யனேகா : ஸ்யுஸ்தாஸூபநிஷதஸ்–ததா ||
2. ருக்வேதஸ்ய து சாகா : ஸ்யு –ரேக விம்சதி சங்க்யகா : |
நவா திகசதம் சாகா யஜூஷோ மாருதாத்மஜ ||
3. சஹஸ்ர–சங்க்யயா ஜாதா :சாகா :ஸாம்ந : பரந்தப |
அதர்வணஸ்ய சாகா :ஸ்யு :பஞ்சாசத்பேத தோஹரே ||
4. ஏகைகஸ்யாஸ்து சாகாயா ஏகைகோபநிஷன் மதா |
மாண்டூக்ய –மேக –மேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே ||
ததாப்–யஸித்தஞ்சேஜ்—ஜ்ஞானம் தசோபநிஷதம் பட
5. ஈச–கேன–கட–ப்ரச்ன -முண்ட மாண்டோக்ய தித்திரி : |
ஐதரேயஞ்ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் ததா ||
6. ஸர்வோப நிஷதாம் மத்யே ஸார மஷ்டோத்தரம் சதம் |
ஸக்ருச் –ச்ரவண– மாத்ரேண ஸர்வா கௌக நிக்ருந்தனம் ||
7. மயோபதிஷ்டம் சிஷ்யாய துப்யம் பவன நந்தன |
இத –மஷ்டோத்தர சதம் நதேயம் யஸ்ய கஸ்யசித் ||

இவைகளின் சுருக்கமான பொருளாவது:–

1.ருக் வேதம் முதலிய வேதங்கள், வ்யாஸ பகவானால் நான்காகப் பிரிக்கப்பட்டது.
அவற்றில் பல சாகைகள் (கிளைகள்) உள்ளன ; உபநிஷத்துக்கள் உள்ளன
2. மாருதி புத்ர ! —-அநுமனே !ருக் வேத சாகைகள் 21; யஜுர் வேத சாகைகள் 109
3. எதிரிகளைத் தகிப்பவனே !சாம வேதத்தில் சாகைகள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதர்வண வேதத்தில் 50 சாகைகள் உள்ளன.
4. ஸ்லோகம் 4ம் 5ம் சொல்வதாவது—ஒவ்வொரு சாகையிலும் உபநிஷத் உள்ளது.
மோக்ஷத்தை அபேக்ஷிக்கும் முமுக்ஷுக்களுக்கு மாண்டூக்ய உபநிஷத்தே போதுமானது.
அப்படியும் ஜ்ஞானம் வரவில்லையெனில்,
1-ஈசாவாஸ்ய ,
2-கேன,
3-கட ,
4-ப்ரச்ன ,
5-முண்டக,
6-மாண்டூக்ய ,
7-தைத்திரீய ,
8-ஐதரேய,
9-சாந்தோக்ய ,
10-ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்களான இந்தப் பத்து உபநிஷத்துக்களையும்,
ஆசார்ய முகேன தெரிந்துகொள்ள வேண்டும்.

இவை தசோபநிஷத்என்று ப்ரஸித்தி பெற்றவை.

மேலும் -8 உபநிஷத்துக்கள்
11. ச்வேதாச்வதரோபநிஷத்
12.அதர்வசிர உபநிஷத்
13.அதர்வசிகோபநிஷத்
14.கௌஷீ தகி உபநிஷத்
15. மந்த்ரிகோபநிஷத்
16. ஸுபாலோபநிஷத்
17.அக்நி ரஹஸ்யம்
18. மஹோபநிஷத்

உபநிஷத் என்றால்
ஆசார்யனின் அருகில் சென்று உபதேசமாகக் கேட்பது. இதனால் துன்பங்கள் தொலைந்து பேரின்பம் நிலைக்கும்.
ஆதலால், உபநிஷத் எனப்பட்டது. இது லௌகிக வார்த்தை என்று சொல்வர்.
உபநிஷத்துக்கு வேதாந்தம் என்றும் பெயர். பரப்ரஹ்மத்திடம் நெருங்கி இருப்பதாலே உபநிஷத் எனப்பட்டது
6. உபநிஷத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்ய ஸாரமாக இருப்பது—-108.

இவற்றை ஒருமுறை ச்ரவணம் (கேட்பது) செய்த உடனேயே எல்லாப் பாவங்களும் நசித்துவிடும்.
7. பவன நந்தன ! இந்த 108ம் , என்னுடைய சிஷ்யனான உனக்கு, உபதேசிக்கப்பட்டது.
இதை ஆராயாமல் எவருக்கேனும் உபதேசிக்கக் கூடாது.

ஸ்ரீ ராமபிரான் மேலும் சொல்கிறார் —–

ஸேவாபராய சிஷ்யாய ஹித–புஷ்டாய மாருதே |
மத்பக்தாய ஸுசீலாய குலீநாய ஸுமேத ஸே ||

ஸம்யக் பரீக்ஷ்ய தாதவ்ய –மேவ –மஷ்டோத்த்ரம் சதம் |
ய: படேச் –ச்ருணுயாத் வாபி ஸ மாமேதி ந ஸம்சய : ||

இவற்றின் அர்த்தமாவது—-
ஹே—-மாருதி ! கைங்கர்யத்தைச் செய்பவனும், பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவனும் என்னிடம் பக்தி உள்ளவனும்
நல்ல குலத்தில் உதித்தவனும் நல்ல புத்தியும் உடைய சிஷ்யனுக்கு அவனை நன்கு பரீக்ஷை செய்தபிறகே
இந்த 108 உபநிஷத்துக்களையும் உபதேசிக்கவேண்டும்.
இவற்றைப் படிப்பவன், கேட்பவன், அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.

வேதத்தில், நமகம், சமகம் என்று இரண்டு இருக்கிறது.
நமகம் என்பது,பகவானை ஸ்தோத்தரிக்கும்படியான மந்த்ரம்.
சமகம் என்பது நம்முடைய வேண்டுதல்களை பகவானிடம் சமர்ப்பிக்கும்படியான மந்த்ரம்.
நமக்கு வேண்டியவை எவை எவை என்று சமகம் சொல்லிக் கொடுக்கிறது. இவைகளில் எண்கள் வருகின்றன

ஏகாச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம
ஏகாதச ச மே த்ரயோதச ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே
நவதச ச ம ஏக விகும்சதிச் ச மே த்ரயவிகும் சதிச் ச மே பஞ்சவிகும் சதிச் ச மே ஸப்தவிகும் சதிச்ச மே நவவிகும் சதிச்ச மே ஏகத்ரிகும் சச்ச மே த்ரயஸ்த்ரிகும் சச்ச மே சதஸ்ரச்ச மே –ஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விகும் சதிச் ச மே சதுர்விகும் சதிச் ச மே –ஷ்டாவிகும் சதிச் ச மே த்வாத்ரிகும் சச்ச மே ஷட்த்ரிகும் சாச்ச மே சத்வாரிகும் சச்ச மே சதுச்சத்வாரிகும் சச்ச மே –ஷ்டாசத் வாரிகும் சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சா –விஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்த்தாச வ்யச்நியச்சா-ந்த்யாயநச்சா–ந்த்யச்ச பௌவநச்ச புவநச்சா –திபதிச்ச

வேதங்களில் , எண்கள் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பது வியக்க வைக்கும்

————————————————–

புராணம் என்றால் பழைய கதைகள் என்று பொருள்.
அதாவது ‘’புரா அபி நவம்’’ என்று வடமொழியில் விளக்கம் தருவர். பழையது ஆனால் என்றும் புதியது.

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்
மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம
வேத சுதர்வாங்கிரச இதிஹாச
புராணம் வித்யா உபநிஷத் —என்று பிருஹதாரண்யம் கூறுகிறது.

இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

18 புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:-
பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்
பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்
விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்
சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்
பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்
பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்
மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்
ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்
நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்
பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்
லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்
வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்
ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்
வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்
கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்
மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்
காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்
பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்

ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும்
கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும்
வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.

——————-

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீ ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே! -ஸ்ரீ சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்-ஸ்ரீ கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே-ஸ்ரீ கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்-ஸ்ரீ கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

———-

அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக;‘ கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவிஉண்டோ

——–

அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.
” இதுவே தமிழின் சிறப்பு..”
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் / ஸ்ரீ ராம மங்களம்

December 17, 2021

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன்
இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,
போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

———–

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,
போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராமராம மஹாபாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,
(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது.
குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதிபரமனின் ஹிருதயம் – மந்திரம் நல்வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரமசிவம்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

————–

ஸர்வ தேவாத்மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ர்துகர்த்தா ப்ரபாகரஹ: || 9

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கருமவசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவலோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ர்துகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

—————-

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸ¤வர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸ¤வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).
பச்சைப்பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் / உலகங்கள் / நிறங்கள் / நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக்கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.
திமிரோன் மதன – இருளை / அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.
பொன்மயமான கருப்பையை உடையவன்.
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.
பாஸ்கரோ -ஒளியானவர்/ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாத ஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கமஹ: || 13-

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.
(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.
ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.
விஷ்வோ- அண்ட வடிவானவன்.
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் / சூரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால்வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லையில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷெ நம ஹ: || 19 ||

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும்முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத்தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டசோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ-ஸுப்ரிதொ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ர்தோ-பவது || 30

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச்சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

———

மகிமைகள்
ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் – அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
ஜயாவஹம் (வெற்றி தருவது)
ஜபேத் நித்யம் – நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் – அழிவற்றது பொங்கி பெருக கூடியது.
பரமம் – மிகப்பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது)
ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
உத்தமம் – சிறந்தது

———–

வத்ரு வைலக்ஷண்யம் ,ஸ்தல வைலக்ஷண்யத்துடன் கூடிய அவதாரிகையுடன் – முன்னுரையுடன்
ஆதித்ய மண்டலத்தில் மத்யமத்தில் எழுந்தருளியிருக்கும் சூரியநாராயணன் பீடு கொண்டு அத்புதமாய் உதயமானார் .
ஆதித்ய ஹ்ருதயத்தை அருளிய அகஸ்தியர் மஹரிஷி நாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் பிறந்த கதை – விவரணம் அருமை .
ஆரோக்கியத்திற்கு – பாஸ்கரரையும் ,
ஞானத்திற்கு – ஈஸ்வரனையும்
தனத்திற்கு – அக்னிபகவானையும் மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் வல்லமை படைத்த ஜனார்தனனான
நாராயணனையும் மோக்ஷபலத்திற்கு ஸ்துதிக்க வேண்டும் .தன்யோஸ்மின் .

சுந்தர காண்டத்தில் குறிப்பிட்டது போல் ஹனுமன் சீதாப்பிராட்டியுடன் உரையாட அருமையான
பொன்மொழியாகிற செந்தமிழை தேர்ந்தெடுத்து பேச தீர்மானித்ததின் மூலம் செம்மொழியாகிற
செந்தமிழ் – தீந்தமிழின் ஏற்றம் உலகுக்கு புலப்படும் .
ஸ்ரீ ராமாயணத்தில் ராவணனுடன் ராமன் போர் புரியும்போது சற்று சோர்வு அடைந்த தருணத்தில்
அகஸ்தியர் மகரிஷியால் ராமருக்கு புத்துணர்ச்சி ஊட்ட உத்திராயண புண்ய காலத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கபட்டது
ஆதித்ய ஹ்ருதயத்தில் முதல் இரு ஸ்லோகத்தின் அர்த்தவிசேஷங்கள் அருமை .
உலகமெங்கும் சூரியனாருக்கென்று ப்ரத்யோகமாய் பல கோவில்கள் எழுப்பப்பட்டுள்ள – அரிய பெரிய தகவல்கள்
விவரம் மற்றும் சூரியபகவானை ஆராதனை தெய்வகமாக கருதி வணங்கும் சௌராஷ்டிர வகுப்பினர் செய்தி அத்புதம் .

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட’ சூரிய ஸுக்தம் ‘ ,ஸ்ரீ இராமாயணத்தில் அகஸ்திய மகரிஷியால் வழஙகப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம் ,
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் ,த்ரௌபதியும் கூறிய சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி மற்றும்
மஹநீயர் அப்பய்ய தீக்ஷிதராரால் இயற்றப்பட்ட சூரிய சதகம் – இவைகள் சூரியநாயனாரின் பெருமைகளை உணர்த்தவல்லது .

ஆதித்யஹ்ருதயத்திற்கு கோவிந்த ராஜ்ஜிய பூஷணம் என்ற பெயரில் தனி வ்யாக்யானம் மற்றும்
மஹேஸ்வர தீர்த்தர் அருளிய ‘தத்துவ தீபிகா ‘ போன்ற பெரிய வ்யாக்யாத்தாக்களால் போற்றப்பட்ட
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் என்பதின் மூலம் இந்த ஸ்லோகத்தின் ப்ராதான்யத்தை ஆஸ்த்ரிகர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது .

சூரியனை சஞ்சாரிக்கும் பாதை ஒரு எல்லைக்குள் உட்படாத நீண்ட பாதையாக இருப்பதாலும் ,
சூர்ய ரதத்திற்கு ஏக சக்ரம் அதை சாரத்யம் செய்யும் கருடனின் தமையனார் அங்க ஹீனம் கொண்ட அருணன் ,
அதில் பூட்டப்பட்ட 7 குதிரைகளுக்கு ஓரே ஒருசக்ரம் என பொருத்தமில்லாமல் சூரிய ரதத்தை செலுத்தும் பிரபாவம்
நமக்கு எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதில் வென்று விடலாம் என்ற உத்வேகத்தை கொடுக்க வல்லது
சூரியநாயனாரின் பிண்ணனி என்பது வெட்ட வெளிச்சம் .ஆதித்ய ஹ்ருதயத்திற்கு குரு அகஸ்திய மகரிஷி .
இது போன்ற பலபல அரிய பெருமைகளை அறிய வைக்கும் ஆதித்ய ஹ்ருதயம்

கும்பகோணத்தைச் சுற்றி சோழர்கள் கால நவக்ரஹ ஸ்தலங்களைப்போலவே சென்னையச் சுற்றி
பல்லவர் கால நவக்ரஹ ஸ்தலங்கள் ௨ள்ளன.கொளப்பாக்கத்தில் சூரிய ஸ்தலம். ௮கஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
நல்ல வேலை கிடைக்க இப்போதும் இளைஞர் கூட்டம் ௮லைமோதும்.

வந்தவாசியில் உள்ள இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோவில் திருமணிச்சேறையில் அகஸ்திய முனிவர் குகை உள்ளது.
அவர் தெற்கு நோக்கி வந்த போது அந்த மலையில் கால் பதித்து தெற்கை தாழச்செய்து சமப்படுத்தியதாக கூறப்படுகிறது

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம் -அப்பயா தீக்ஷிதர்
வால்மீகி பெயராலே திருவான்மியூர்
திரு நீர் மலை எழுந்து அருளு உள்ளார்
பூஷணம் கோவிந்தராஜர் -ஸ்ரீ ராமாயண வியாக்யானம்

ப்ரணவத்துடன் சேர்த்து ஸ்மரிக்கும் இம்மந்திரம் காம க்ரோத மத மாத்ஸயலயாதிகள் உட்பட
எல்லா விரோதிகளையும் போக்க வல்லது .
இந்த ஸ்லோகத்தை ஜபிப்போருக்கு அழிவு இல்லாத பலத்தையும் பரம மங்களத்தையும் கொடுக்கும் .
இதை கேட்பவருக்கு கவலை ,துக்கம் ஒழிந்து, பக்தி ரூபாவண்ண ஞானம் பிறந்து ,
நல்ல ஆரோக்யத்துடன் கூடிய தீர்காயுசை பெற்றுத்தரும் .
இந்த ஸ்லோகத்தை சொன்னவர் – அகஸ்திய மகரிஷி கேட்டவர் – ராமர் ,
இதை தொகுத்தவர் தபஸ்வி வாலமீகி.ஜ்வாஜலயமாய் – அதீத பிரகாசத்துடன் ஸ்வர்ணத்தை ஒத்த எண்ணற்ற
சூர்ய கிரணங்கள் பஞ்ச இந்திரியங்கள் வழியாய் – சரீரத்திற்குள் ஊடூரூவி சைதன்யமான- ஞானத்தை பிறப்பிக்கிறது .
அக்னி ,இந்திரன் ,வருணாதிகள் போன்ற தேவர்களுக்கு மிஸ்ர ஸத்வத்தையும் அசுரர்களை ரஜஸ் தமஸ் போன்ற குணங்களையும் கொடுத்து
தேவர்கள் ,இந்திரர்களால் ஏக ஸ்துதியாய் போற்றப்படுபவனாகவும் ஆதித்யன் திகழ்கிறான் .
இங்கனம் அவனை துதிப்போருக்கு நல்ஞானத்தை கொடுக்க வல்ல சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் .

தேவாஸுர நமஸ்க்ருத்தாய நமஹ வைவஸ்தே நமஹ ,பாஸ்கராய நமஹ ,புவனேஸ்வராய நமஹ ,தேஜஸ்வியே நமஹ ,
ரஷ்மி பாவ்னாயே நமஹ ,ப்ரஹ்மணே நமஹ ,ப்ரஜாபதியே நமஹ மஹேந்திராய நமஹா –
இந்த ஆதித்யனாய் விளங்கும் சூரிய நாராயணனை குறிக்கும் நவ நாமாவளிகளின் அணிவரிசை –
அவைகளின் அர்த்த விசேஷங்கள் அத்புதம் .தன்யோஸ்மின் .

எவன் ஒருவன் – யஞயத்திற்கு ப்ரஜாபதியாய் இருப்பதாலும் (ப்ரஜாபதியே நமஹ ),இந்திரனின் ஐராவத மஸ்தகத்தில்
சூர்யகிரணங்கள் பட்டு தெறித்து அக்கற்றைகள் தாமரைத்தடாகம் வரை பரவி அதையும் பிரகாசிக்க வைப்பதால் –
மஹேந்திராய நமஹ என போற்றப்படுவதாய் , ஸ்வாமி திலகர் வ்யாக்யானத்தின் படி தனம் என்ற ஞானத்தை பெற்று தந்து ,
பின் தனதான்யத்தையும் குபேரன் போல் கொடுப்பதால் தநதாந்யய் நமஹ எனவும் ,

செவந்தகமணி ப்ரபாவத்தை எடுத்துரைத்து – அதற்கு உடையவனான சத்யஜித் அதனுடன் நடந்தது வரும் தோற்றம் –
சூரியன் ஆகாசத்திலிருந்து இறங்கி பூமியில் பவனி வரும் தோற்றத்தை ஒத்து இருந்தது என அதன் பெருமைகளையும் கூறி ,
காலனாயும் சூரியன் இருப்பதால் கால மண்டல ஸ்பந்தனாய நமஹ எனவும் போற்றப்பட்டு ,
பின் ம்ருத்யுக்கும் ம்ருத்யுவையை சூர்யநாராயணனாய் திகழ்வதால் எமனாய நமஹ எனவும் ,
சோமனாகிய சந்திரனும் சூரியனிடத்திலிருந்து ஒளிக் கற்றைகளை பெற்று தான் பிரகாசிப்பதாலும் ,
சிவனார் தன் உடலின் பாதி பாகத்தை உமையவளைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் என பெயர் பெற்று
தன் சக்தியை வெளிப்படுத்திய- சக்தியுடன் கூடிய ஆதித்யனாய் கருதுவதாலும் -சோமாய நமஹ என ஸ்துதிக்க படுகிறார் ஆதித்யன் .

இங்கனம் அக்னியாய ,திவாகராய பித்ருதேவதாய மருதமூர்த்தாய ,வசுமூர்த்திய சத்ய மூர்த்தியே ,வாயுவே ,ப்ராணாய ,
ருது கர்த்தயே ,பிரபாகராய , ஆதித்யாய சவித்ரே ,ஸ்வர்ணசத்ருயை பானுவே பூஷனோ ,கபஸ்திதே ,பானுவேஷாய ,
திவகராய சாயாதிபதே – போன்ற பற்பல ப்ரபாவத்தை உள்ளடக்கியதால் பல்வேறு பெருமைகள் வாய்ந்த
திரு நாமங்களால் சூர்ய நாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட ஆதித்யன் போற்றப்படுகிறார் என்பதை அழகாய் ஸ்வாமி வருணித்தார் .

As per Rig Veda (8:72:16) says :
Adhukshat pipyushimisham urjam saptapadimarih Suryasya sapta rashmibhih
It means, 7 different colors of rays emitting from Sun, will give 7 different energies.
Sun temples built in Konark etc places in india are seen with 7 colored horses chariot.

ஆரோக்கியத்திற்கு பாஸ்கரனையும் ,தனதான்ய வ்ருத்திக்கு அக்னி பகவானையும் ,ஞானத்திற்கு சிவபெருமானையும் பிரார்தித்தாலும்
இவர்கள் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக ஸ்ரீமன் நாராயணன் உறைந்து அவரவர் தம்தம் தொழில்களை புரிய வைக்கிறார் என்றும்
மோக்ஷத்தை பெற்றுத்தர ஜனார்தனனான ஸ்ரீமந் நாராயணன் அனுகிரஹிக்கிறார்

ஸ்வாமி மயூர கவி அருளிய சூரிய சதகம் சதஸ் – ஸ்வாமி வேதாந்த தேசிகரின் கருட பஞ்சாசத்த்தை
ஓத்து இருப்பதை கோடிட்டு .கூர்நாராயணஜீயர் சாதித்த சுதர்ஷன் சதகமும் ஆதித்யனின் பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறது என்றார் .
மேலும் அகஞானம் என்கின்ற இருளை போக்குவதால் திமிரோன் மதனாய நமஹ என ஆதித்யன் போற்றப்படுகிறார்.
மற்றும் ,ரக்ஷிமிப்பதயே நமஹ,ஹரிதஸ் வஹாய நமஹ ,த்வவுட்ரே நமஹ மார்த்தாண்டாய நமஹ ,ஹயன சந்தயே நமஹ
அம்சுபதயே நமஹ ,ஹிரண்ய கர்ப்பாய

ஹரண்யகர்ப்பாயை ,சிசிராய ,தபாநாய யஸ்கரோ ரவிகி or பாஸ்கரோ ரவிகி ,ரவயே ,அக்னிகர்ப்ப ,அதிதே புத்ராய ,
சங்காய ,சிசிரநாசன ,வ்யோமநாதாய ,
தபோபேதியை ,ரிக் யஜுர் சாம பாரகாயை ,கண்வருஷ்டயே ,அபா மித்ராயே ,விந்த்யவீதி ப் ல வங்க மாணாய ,
ஆத்மீனே ,மண்டலினே ,ம்ருத்யவே ,பிங்களாய ,ஸர்வதாபனாயே ,
கவயே , விஸ்வஸ்மை, மஹாதேஜஸே சர்வேஷ்வரேலூ ரக்தக ,ரக்தாய ,ஸர்வ ப்யோத்பலாயே ,சூரியனாவே ,விஸ்வபாலனாக –
போன்ற இந்த நாமக்களுடன் ‘நமஸ் ‘ சப்தத்தை கூட்டி நாமாவளியாக நாராயணனை அந்தர்யாமியாக கொண்ட
சூரியபாகவனை ஸ்துதி செய்யக்கடவோம் என்றார் .

இந்த விஸ்வத்தில் ப்ரத்யக்ஷமாய் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு ஸ்வரூப ரூபமாக ஒளிவிட்டு காப்பதால்
விஸ்வபாலனாயே நமஹா என போற்றப் படுகிறார் .
மஹா தேஜஸ்வியாய் ஒளியை கொடுக்கும் ஸ்ரீமன் நாராயணனை அந்தர்யாமியாய் கொண்ட தேஜஸ்வியான
சூரியபகவான் என்றபடியால் தேஜஸாமபி தேஜஸ்வி என அழைக்கப்படுகிறார் .
இதுபோல் துவாதச மாதங்களுக்கும் சுடர் விடும் பெரும் ஜ்யோதியாய் – நாயகனாய் திகழ்வதால் த்வதசாத்மனே என ஸ்துதிக்கப்படுகிறார் .

நம பூர்வாய நமஹ – தொண்டரடிபொடி ஆழவார் திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் சாதித்தபடி
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி என்றாற்போல் திருவரங்கப்பெருமான் –
குணதிசையாக போற்றப்படும் கிழக்கு திசையில் தன் திருவடிதாமரைகளை நீட்டிக்கொண்டு அடியார்களுக்கு திருவடி சேவை சாதிப்பதாலும் ,
மேலும் எம்பெருமானின் கால்களை தொழ ஹேதுவாய் சூரியன் காலையில் கிழக்குத்திசையில் உதித்தும் ,
பின் மாலை வேளையில் மால் ஆன திருமாலின் கடாக்ஷம் பெற்று மேற்கு திசையில் அஸ்தமிக்கிறார் என்கிற வேங்கடகவியின் கூற்றை .

இந்த வகையான காரணங்களால் சூரியன் முறையே – பூர்வாயாகிரனே நமஹ என்றும் ,பஸ் சிமாத்ரயே நமஹ எனவும்
அழைக்கிக்கப்படுகிறார் .வாரத்தின் எழு நாட்களுக்கும் அதிபதியாய் விளங்குவதில் தினாதிபதியே என வணங்கப்படுகிறார்.
மேலும் ஜெயமூர்த்தயே ,ஜெயபத்ராய ,ஹர்யஸ்வாய ,ஸ்யமாஸ் வாய வாய, சஹஸ்ராக்ஷீ ,ஆதித்யாய,உக்ராய ,வீராய சாரங்காய ,பத்மபிரதாய
பிரசாண்டாய ,ப்ரஹ்மாவிஷ்ணு சிவாத் மிகாயை ,- ஏஷ நாராயனாக – ப்ரஹ்மாச்சுத்தாயே ,பாஸ்வதே ,சர்வபக்ஷயாயே ,ரௌத்ரவடிவே ,தமோக் நாய ,ஹிமக் நாய சத்ருக்கினாயே என அந்தந்த நாமாவளிக்கு ஏற்ப அர்த்தங்களை தாங்கிக்கொண்டு ஜ்வாஜால்யமாய் பிரகாசிக்கிறார்

ஆதித்யா கிருதய நாமாவளியை நிறைவாய் வரிசைப்படுத்தியத்திலிருந்து –
சத்ருக்னாயே ,அமிதாத்மினே ,க்ருதகனனாகி ,தேவாய ,ஜ்யோதிஷயாம் பதயே ,தப்தகாமிக்கரா பாய ,
ஹரவே விஸ்வகர்மனே ,தபோயீ நிர்ணாயே ,ருசயே ,லோகஸாக்ஷினே ,பூதநாஸாயே ,பூத சிரஷ்டரே ,ப்ரபவே பாத யே ,
தபதே ,வர்ஷதே சுக் தேவி ஜாக்ரதே ,அந்தர்யாமிஸ்திதாயே ,அக்னிஹோத்ராயா ,அக்னிஹோத்ரபலப்ரதா யே
பதுமஸ்ம்ருத்தாயே பகவதே ப்ரஹ்மணே ,ருதேஹு விஜயஸ் யசு நிசந்தேகமாயே – போன்ற இந்த நாமாக்களை
‘நமஸ் ‘ சப்தத்தைக்கூட்டி 125-நாமாவளியாக்கி ஸ்வாமி ராமவர்மா என்ற திலகர் ,ஸ்வாமி சுதாகர் போன்றோரின் வ்யாக்யானத்த –

மேலும் அகஸ்திய மகரிஷி அருளிய இந்த ஸ்லோகம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது.
மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூரியநாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட சூரியபகவானை ப்ரார்தித்து
அக்ஷய பாத்திரத்தை பெற்றதாலும் சூரியசதகத்தில் இதன் ப்ராதான்யத்தைக் குறிப்பிட்டதாலும் –
இதிகாசங்கள் புராணங்களில் இதன் முக்கிய பங்கு அனைவரும் அறியும் வண்ணம் புலப்படுகிறது .
இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஆதித்ய ஹ்ருதயத்தின் ச்லோகர்த்தங்களை எளிமைப்படுத்தி
ஆஸ்த்ரிகர்கள் அனைவரும் ஆச்ரயிக்கும் வண்ணம் அத்புதமாய் இதன் முக்கியத்துவத்தையும் பலாப லனையும் உணர வேண்டும்

——

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

மூன்றாம் அத்யாயம்-சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்

இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்
குற்றம் குறை அற்றவன் -அளவற்ற திருக் கல்யாண குணங்களை கொண்டவன்
தாழ்வு அற்றவன் -என்கிறார் இதில்-

இந்தப் பாதமே ஆரம்பிப்பது வீண் என்று
சங்கித்து
விடை தருகிறார் ஸ்வாமி
கீழே இரண்டு அத்யாயங்களாலே ப்ரஹ்மம் தனக்கு உரிய ஸ்வ பாவங்களுடன் விளக்கப் பட்டு இருக்க
இந்த சாதன அத்தியாயத்தின் நடுவிலே அதே ப்ரஹ்மம் உபய லிங்க பாதத்தில் மறுபடி இழுத்து விசாரிக்கப் படுவான்
என் எனில்
அறிய வேண்டும் ப்ரஹ்மத்தின் குண பேதத்தால் வித்யா பேதம் சொல்லுகையாலும்
ப்ரஹ்மமே ஸித்த உபாயம் ஆகையாலும்
அதன் மேல் மிக்க ஆசை ஆர்த்தி வேண்டும் என்பதற்காக இவ்விடம் ப்ரஹ்மம் பற்றிப் பேசுவதில் விரோதம் இல்லை என்பதாம்

அடுத்தபடி இப் பாதத்தின் நடுவில் ஜீவனின் ஸ்வப்னாதி அவஸ்தைகளை பற்றிப் பேசுவது எவ்வாறு பொருந்தும்
எனில்
ஸ்வப்ன பதார்த்தங்கள் யாவும் பரமாத்ம அதீனம் ஆகையாலும்
ஜீவனுக்கு முக்தி தசையிலும்-மிக்க பர வசமானவன் தான் நான் என்னும் ஞானம் உதிக்கைக்காகவும்
வைராக்ய பாதத்தில் கூறாமல் இங்கு சொல்வதில் விரோதம் இல்லை

இதற்கு முன் கர்மத்துக்கு ஏற்றவாறு போக்குவரத்து பிறப்பு முதலியவை சேர்வதால்
விழித்து இருக்கும் ஜீவனுக்குத் துக்கம் உண்டு எனச் சொல்லப் பட்டது
இப்போது ஸ்வப்ன அவஸ்தை விசாரிக்கப் படுகிறது என்று சங்கதி –

——————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –

எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

————————————————————————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன –
என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது-

ஸ்வப்னம் பற்றி ஸ்ருதி கூறுகிறது
கனவில் ரதங்களோ -குதிரைகளோ -நல்ல வீதிகளோ இல்லை
அப்போது இவற்றை நிர்மிக்க தடாகம் முதலியவற்றையும் படைக்கிறானே -அவனே கர்த்தா என்று கூறிய இடத்தில்
கனவில் பொருள்களைப் படைத்தவன் ஜீவனா பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான்
ஏன் எனில்
கனவு காணும் ஜீவன் -ப்ரகரணத்தில் -அவ்விடம் -இருப்பதால்
ஸ -என்று குறிப்பிடத் தக்கவனாய் இருப்பதாலும்
பிரஜாபதி வாக்கியத்தில் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப என்று
ஸத்ய ஸங்கல்பத்வம் சொல்லப்படுவதால்
என்று பூர்வ பக்ஷம்
இந்த பூர்வ பக்ஷம் மேல் வரும் இரண்டு ஸூத்ரங்களால் விளக்கப் படுகிறது –

312-சந்த்யே சிருஷ்டி ஆஹஹி–3-2-1-

கனவு நிலையில் உள்ளதைப் பற்றி
ப்ருஹத் உபநிஷத் -4-3-10-ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தா நோ பவந்தி அத ரதான்
ரதயோகான் பத –ஸ்ருஜதே ந தத்ர ஆனந்தா முத பிரமுதோ பவந்தி அத ஆனந்தான் முத
ப்ரமுத ஸ்ருஜதே ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்யோ பவந்தி அத வேசாந்தா
புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ச ஹி கர்த்தா-

சந்த்யே -ஸ்வப்னத்தில்
சிருஷ்டி -ரதாதிகளின் ஸ்ருஷ்டி யானது
ஆஹஹி-ஸ்வப்னம் காணும் ஜீவனால் செய்யப்படுவதாக வேதம் கூறுகிறது அன்றோ
ஸஹி கர்த்தா என்று ஜீவனையே கர்த்தாவாக வேதம் பேசுகிறது என்பதாம் –

சந்த்யம் -கனவில் உள்ள இடம்
ச ஹி கர்த்தா -அவனே செய்கிறான் –
படைப்பவன் ஜீவனா பரமாத்மாவா
பூர்வ பஷி ஜீவன் என்பார்-

—————————————————————————————————————-

313-நிர்மாதாரம் ச ஏகே புத்ராய ச–3-2-2-

ஏகே-சில வேதாந்திகள்
நிர்மாதாரம் ச -ஜீவாத்மாவையே ஸ்வப்ன பொருள்களைப் படைப்பவன் என்கிறார்கள்
அது எப்படி என்றால்
புத்ராய ச-கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்ற இடத்தில்
காம ஸப்தத்தாலே புத்ர பவ்த்ராதிகளும் சொல்லப் படுகின்றனர்
அவர்களை ஜீவன் படிப்பதனால் என்று கருத்து

கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்கிறது
விரும்பியவற்றை தூங்கும்பொழுது தானே படைக்கின்றான் –
பூர்வ பஷி

விரும்பியவற்றை -புத்ராதிகளையும் –
கட உபநிஷத் -1-5-சர்வான் காமான் சந்தத ப்ரார்த்தயஸ்வ
கட உபநிஷத்-1-23- -சதாயுஷு புத்திர பௌத்ரான் வ்ருணீஷ்வ-என்கிறது

இந்த பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –
மேலே சித்தாந்த பதில்

——————————————————————————————————————

314-மாயா மாத்ரம் து கார்த்ஸ்யேன அநபி வ்யக்த ஸ்வரூபத்வாத்–3-2-3-

து -பூர்வ பஷ வாதங்களை மறுக்கிறது –
ஸ்வப்னத்தில் காணும் ரதம் முதலியவை ஜீவனால் படைக்கப் பட்டவை அல்ல
மாயா -ஆச்சர்யம் -மித்யை அல்ல-
மாயா மாத்ரம் -ஸ்வப்னங்கள் காண்பவனால் மட்டும் அனுபவிக்கத் தக்கவையாய் -மற்றோருக்குப் பயன் படாததவையாய்
அந்தக் காலத்திலேயே அழிவதாயும் ஆச்சர்ய ரூபமாகவும் உள்ளன
இவை ஜீவனால் படைக்கக் கூடாதவை
ஏன் எனில்
ஜீவனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வமும் ஸம்ஸார தசையில் முற்றும் வெளிப்படாத நிலையில் நிலையில் இருப்பதால்
ஸங்கல்ப மாத்ரத்தால் படைப்பது என்பது பொருந்தாது –

காமம் காமம் புருஷ நிர்மி மாண -ஸ்ருதி -அப் புருஷனையே ஸ்ருஷ்டி கர்த்தா என்கிறது
தொடக்கத்தில் இவர் அனைவரும் உறங்குகையில் விழித்து இருக்கிறான் என்றும்
முடிவில் இவை அனைத்தும் அவன் இடத்திலே ஆஸ்ரயித்து இருக்கின்றன
அவனை யாரும் மீற முடியாது -என்றும்
பரம புருஷனுக்கே உரிய தர்மங்கள் சொல்லப் பட்டு இருப்பதால்
ஸஹி கர்த்தா என்ற தத் சப்தமும் பிரகரணத்தே பொருந்த -புருஷோத்தமனையே புலப்படுத்துகிறது –
காமம் காமம் -என்று ஸங்கல்பித்து ஸங்கல்பித்து என்றபடி –

ஜனகஸ்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27-
ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது –
இந்த ஆச்சர்யமே மாயா-சத்ய சங்கல்பன் அன்றோ –

கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –
இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்

மேலும் அதே வரியில் –
தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று
அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது

ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று
பரம புருஷனைப் பற்றிக் கூறியது

ஜீவனின் ஸத்ய ஸங்கல்பத்வம் சம்சார தசையில் ஏன் புலப்படவில்லை
என்பதற்கு விடை அளிக்கிறார் மேலே

———————————————————————————————————————–

அபஹத பாப்மத்வம் ஜீவனுக்கு சம்சாரத்தில் இல்லாத காரணம்

315-பராபித்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயௌ –3-2-4-
பரம புருஷனின் சங்கல்பம் காரணமாகவே மறைக்கப் பட்டு சம்சார பந்தம் ஏற்படுகின்றது

பராபித்யா நாத் -பரமாத்மாவின் சங்கல்பத்தாலேயே
து -பூர்வ பஷம் நிரசனம்
அஸ்ய -இந்த ஜீவனின் ஸ்வா பாவிகமான ரூபம்
திரோஹிதம்-மறைந்து உள்ளது
ததோ ஹி -அந்த ஸங்கல்பத்தாலேயே
அஸ்ய பந்த விபர்யயௌ –இந்த ஜீவனுக்கு ஸம்ஸாரமும் மோக்ஷமும் உண்டாகின்றன

தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச
அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்

2-8-1-பீஷாச்மாத்வாத பவதே -என்றும் கூறும்-

கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்
பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன

ஸத்ய சங்கல்பம் மறையும் காரணத்தைக் கூறுகிறார் –

—————————————————————————————————————————

316-தேக யோகாத்வா ச அபி –3-2-5-

ஜீவனின் ஸ்வரூப மறைவு உடல் சேர்க்கையின் பொழுது உண்டாகிறது –
ஸூஷ்மம் நிறைந்த பிரக்ருதியின் தொடர்பால் –
ஆக ஜீவன் படைக்க சக்தன் அல்லன்

வா -விகல்பம் என்னும் பொருளில் வந்தது
ச அபி –-சங்கல்பத்தின் மறைவும்
தேக யோகாத்-தேவ மனுஷ்யாதி -அசித் -சம்பந்தத்தாலும்
பிரளய காலத்தில் நாம ரூப விபாகங்கள் அற்ற ஸூஷ்ம தசையில் உள்ள அசித்துடன் சம்பந்தத்தாலும் உண்டாகிறது
ஆகவே மறைந்த ஸங்கல்பம் உள்ள ஜீவன் ஸ்வப்ன பதார்த்தங்களை படைபவன் அல்லன்

கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-

—————————————————————————————————————————

317-ஸூ கச்ச ஹி ஸ்ருதே ஆச ஷதே ச தத்வித —3-2-6-

கனவுகள் நற்பலன் தீய பலன்களை உணர்த்தும் ஸ்ருதிகளும் அப்படியே சொல்லும்
சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —

ஸூ கச்ச ஹி ஸ்ருதே –எக்காரணத்தால் ஸ்வப்னங்கள் எதிர்கால ஸூக துக்க ஸூசகங்கள் -என்று ஸ்ருதியில் கூறப்படுகிறது
தத்வித —ஸ்வப்ன அத்யாயம் பற்றி அறிந்தவர்கள்
ஆச ஷதே ச –ஸூ சகம் என்று கூறினார்களோ -அதனாலே ஸ்வப்ன பதார்த்தங்கள் ஜீவனால் படைக்கப் படுபவை அல்ல
அவை ஜீவனுக்கு வசப்பட்டு இருந்தால் நல்லதையே படைப்பான் -தீயவற்றைப் படைக்க மாட்டான்
காம்யமான கர்மங்கள் நிறைவேற வேண்டுபவன் கனவில் அழகிய ஸ்த்ரீயைக் கண்டால் ஐயமும்
கருத்த பல்லும் கருத்த நிறமும் உள்ள மனிதனைக் கண்டால் தோல்வியும் அடைகிறான் என்று சுருதி பலவற்றைக் காட்டுகிறது –

எனவே கனவும் சர்வேஸ்வரன் நியமனம் என்றதாயிற்று-

—————————————————————————————————————————–

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

கீழ் ஸ்வப்ன நிரூபனம் -இதில் ஸூஷ்ப்தி தசை பற்றி விசாரம்

318-தத் பாவ நாடீஷூ தத் ஸ்ருதே ஆத்மநி ச –3-2-7-

ஆழ்ந்த உறக்க நிலை -கனவுகள் அற்ற -ஸூ ஷுப்தி நிலை -நாடிகளில் நுழைந்து –

சாந்தோக்யம் -8-6-3-யத்ர ஏதத் ஸூ ப்த சமஸ்த சம்ப்ரசந்தம ஸ்வப்னம் ந விஜா நாதி ஆ ஸூ ததா நாடீஷூ ஸூ ப்தோ பவதி -என்றும்

ப்ருஹத் உபநிஷத் -2-1-19-அத யதா ஸூ ஷூப்தோ பவதி யதா ந கஸ்ய ச ந வேத ஹிதா நாம நாட்யோ
த்வாசப்ததி சஹஸ்ராணி ஹ்ருதயாத் புரீததம் அபி பிரதிஷ்டந்தே தாபி பிரத்யவஸ்ருப்ய புரீதாதி சேத -என்று
ஹிதா நாடிகள் என்று கூறப்படும் 74000 நாடிகள் இதயத்தில் நின்றும்ன் புறப்பட்டு
புரீதத் என்னும் இடத்தை அடைந்து ஜீவன் இவைகளால் சூழப் பட்டு உறங்குகின்றான்

சாந்தோக்யம் -6-8-1- யத்ர ஏதத் புருஷ ஸ்வபுதி நாம சதா நாம்ய ததா சம்பன்னோ பவதி -என்று
ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவன் பரமாத்வா உடன் சேர்ந்து உள்ளான் -என்கிறது –

ஆக ஜீவன் உறங்கும் இடங்கள் நாடிகள் புரீதத் ப்ரஹ்மம் மூன்றும் கூறப் பட்டன
மூன்றும் வெவ்வேற இடங்கள் இல்லை
மாடியில் கட்டில் மேல் -மெத்தை மேல் உறங்குகிறான் போலே –
நாடி மாடி /புரீதத் -கட்டில் /பரமாத்மா மெத்தை -போலே –

மூன்றும் விகல்பம் என்பது பூர்வ பக்ஷம்
இம்மூன்றும் ஒன்றோடு ஓன்று அபேக்ஷை இன்றியே ஸ்தானமாக சுருதியில் சொல்லப்பட்டு இருப்பதால்
இவை தனித்தனி ஸ்தானம் என்பர்
இத்தை நிரஸிக்கிறார் இதில்
ப்ரஹ்மமே ஸாஷாத்தாக படுக்கை ஸ்தானத்தில் இருப்பதால் மூன்றும் சேர்ந்து ஸ்தானம் ஆகும்
விகல்பம் பொருந்தாது என்பதாம் –

————————————————————————————————————————————–

319-அத பிரபோத அஸ்மாத் —3-2-8-

அஸ்மாத் —இந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
பிரபோத -விழித்து எழுவதாக ஸ்ருதி
அத -இக்காரணத்தாலேயே பொருந்துகிறது

ஸ்ருதி -ஸத் -ப்ரஹ்மத்தின் இடம் இருந்து வருபவன் அங்கு இருந்து வந்ததை உணர வில்லை என்கிறது –

ப்ரஹ்மத்திடம் உறங்குவதால் அங்கே இருந்தே விழித்து எழுதல் எனபது பொருந்தும்
சாந்தோக்யம் -6-10-2-சத ஆகம்ய ந விது சதா ஆகச்சாமஹே-என்றபடி
ப்ரஹ்மத்திடம் உறங்கி விட்டு வந்த போதிலும் தாங்கள் அவ்விதம் செய்வதை ஜீவன் அறிவதில்லை

————————————————————————————————————————————–

மூன்றாவது அதிகரணம் -கர்மாநுஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் –
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது

ஸூஷுப்தனான ஜீவனே விழித்ததும் எழுந்து கொள்கிறானா
அல்லது வேறு யாராவதா என்று சம்சயம்
ஸூஷுப்தனாயும் –எல்லா உபாதைகளில் இருந்து விடுபட்டவனாயும் -ப்ரஹ்ம சம்பாத்தி உள்ளவனுமான
ஜீவன் முக்தன் போன்றவனாதலால்
பழைய கர்ம சம்பந்தம் இல்லாமல் உறங்கியவனை விட்டு வேறான ஜீவனே எழுந்து கோயில்கிறான் என்று பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
உறங்கினவனுக்கு கர்மாவை அழிக்க வல்ல ப்ரஹ்ம ஞானம் இல்லாமையாலும்
தனது கர்ம பலன் தன்னாலே அனுபவிக்கப்பட வேண்டியதாலும்
தானே உறங்கி எழுந்தேன் என்ற நினைவாலும்
முன்பு இருந்த படியே புலியாகவோ சிங்கமோ எப்படி இருந்ததோ அதே போலவே ஆகின்றன என்ற ஸப்தத்தாலும்
முக்தி சாதனத்தை அனுஷ்ட்டிக்க விதிக்கும் ஸாஸ்த்ர நியமனம் வீணாகி விடுமே என்பதாலும் –
உறங்கினவனே எழுந்து கொள்கிறான் என்று சித்தாந்தம் –

320-ச ஏவது கர்மானு ஸம்ருதி சப்த விதிப்ய-3-2-9-

கர்மம்– ஞாபகம் –வேத வரி –விதிகள் –ஆகிய நான்கு காரணங்களாலும் அதே ஜீவனே விழித்து எழுகிறான்
உண்மையான ஞானம் வரும் வரை கர்மங்களின் பலன்களை அனுபவித்தே தீர வேண்டுமே

சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா
தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி ததா பவந்தி -என்று
புலி சிங்கம் ஓநாய் பன்றி புழு பறவை ஈ கொசு -அதே உருவில் எழுந்து வருகிறான்

சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ
இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி -என்றும்

முக்தனைப் பற்றி –
சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்

7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும்

7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –

—————————————————————————————————————————————

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் –
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

இதுவரை ஜாக்ரத் -ஸ்வப்ன -ஸூஷுப்தி -தசைகளை விசாரித்து –
ஸூஷுப்திக்கு சமமான மூர்ச்சா நிலை விசாரிக்கப்படுகிறது
முதல் இரண்டிலும் ஞானம் உள்ள தசைகள்
பின் இரண்டிலும் ஞான லோப தசை

321- முக்தே அர்த்த சம்பதி பரி சேஷாத்–3-2-10-

மூர்ச்சையும் மரணமும் ஒன்றா -வெவ்வேறா -சங்கை
இந்திரிய வியாபாரங்கள் இல்லை என்பதால்
இரண்டும் ஒன்றே பூர்வ பக்ஷம்
மயக்கம் மூர்ச்சை மற்ற மூன்று நிலைகளுக்குள் சேர்ந்ததே என்பர்
மரணத்தின் பாதி நிலையே -ஞானம் இல்லாததால் விழிப்போ கனவோ இல்லை

அத்தைக் கண்டிக்கிறார்

முக்தே -மூர்ச்சை அடைந்தவனுடைய நிலை
அர்த்த சம்பதி -அரை மரணம் அடைந்த நிலையே
பரி சேஷாத்–ப்ராணாதி சர்வ வியாபாரங்களும் இல்லாமையால் ஸ்வாபமும் இல்லை –
ஜாக்ர அவஸ்தையும் இல்லை -மீண்டும் எழுந்து வருவதால் மரண நிலையம் இல்லை
தோற்றத்தின் வேறுபாட்டால் பிராணன் ஸூஷ்மமாய் இருப்பது தெரிவித்தாலும் மூர்ச்சை அரை மரண நிலையே –

ஆழ்ந்த உறக்கம் இறந்த நிலையும் இல்லை -மரணத்தின் பாதி நிலையே பிராணன் இருப்பதால் என்றவாறு

இந்த நான்கு அதிகரணங்களும் ஒரு பெட்டி
இதில் ஜீவனுக்கு நான்கு நிலைகளிலும் உள்ள துக்கங்கள் காட்டப்படுகின்றன

இனி ப்ரஹ்மம் ஜாக்ராதிகள் ஆகிய எந்த நிலையிலும் தோஷம் அற்றது என்றும்
தானே நிர்த்தோஷமான கல்யாண குணம் மிக்கது என்றும்
நான்கு அதிகரணங்களாலும் விளக்குகிறார் –

—————————————————————————————————————————————–

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் –
அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

322-ந ஸ்தாநத அபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ர ஹி–3-2-1-

அகில ஹேய நீயகத்வ -சமஸ்த கல்யாண ஏக குணங்கள் கொண்டவன் –
ப்ரஹ்மத்தை அடையும் பொருட்டு சம்சார விரக்தி பிறந்த பின்பு அவனது உபய லிங்கத்வம் விளக்குகிறார் –
மிகுந்த வைராக்யம் சித்திக்கவே மரண அவஸ்தை நிரூபணம் கீழ்
இனி பரம புருஷார்த்த ஆற்வம் பெருக்க உபய லிங்கத்வம் இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-8-சம்போக பிராப்தி இதி சேத் ந வைசேஷ்யாத்–என்று
அந்தராத்மாவாக இருப்பது உபாசகன் தன்னை அடைய -சுக துக்கங்களை அனுபவிக்க இல்லை –

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-6-ஸ்தித்யத நாப்யாம்-ச -இருப்பதாலும் உண்பதாலும் -ஒரு மரம் இரண்டு பறவைகள் -முண்டக உபநிஷத்

ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-5–தேஹயோகாத்வாத் -தேக சம்பந்தம் இருப்பதாலும் –

ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய ப்ருதிவ்யாம் திஷ்டன் -பூமியில் இருப்பதாலும்

ப்ருஹத் உபநிஷத் -3-7-22–ய ஆத்மநி திஷ்டன் -ஆத்மாவில் இருப்பதாலும்

ப்ருஹத் உபநிஷத்-3-7-18- -ய சஷூஷூ திஷ்டன்

ப்ருஹத் உபநிஷத்-3-7-23- -ய ரேதஸ் திஷ்டன் -ரேதசில் இருப்பதாலும் –
தோஷங்கள் தட்டும் என்பர் பூர்வ பஷி —

ஜீவனைப் போலே அவனுடைய அந்தர்யாமியான பர ப்ரஹ்மத்துக்கும் ஜாக்ரத் தசையில்
ஸ்தானம் முதலியவற்றால் தோஷங்கள் ஸம்பவிக்குமா ஸம்பவிக்காதா என்று சம்ஸயம்
சர்வ அவஸ்தைகளிலும் ஸ்திதி சொல்லப்படுவதால் சர்வ தோஷங்களும் சம்பவிக்கும்
என்று பூர்வ பக்ஷம்
அதை நிராகரிக்கிறார் –

ஸ்தாநத அபி –பிருத்வீ முதலியவற்றில் அந்தர்யாமியாய் இருந்தாலும்
பரஸ்ய-ப்ரஹ்மத்துக்கு
ந –முன் கூறிய தோஷங்கள் வருவது இல்லை
ஸ்தான ப்ரயுக்தமான தோஷம் ஜீவனுக்கு வருவது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லை
சர்வத்ரஹி உபயலிங்கம்–ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் எங்கும்
நிகில தோஷங்கள் அற்றவன் என்றும்
கல்யாண குணங்களுக்கு உறைவிடமானவன் என்றும்
உபய லிங்கமாக பர ப்ரஹ்மம் பேசப்படுகிறது
ஆதலின் தோஷம் சம்பவிக்காது –

அபஹத பாப்மா இத்யாதி -யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித் போன்ற சுருதிகள்
யோ மாம் அஜம் அநாதிஞ்ச பர பராணம் -போன்ற ஸ்ம்ருதிகளும்
மேலும் பலவும் உண்டே –

சாந்தோக்யம் -8-1-5-அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84/85–
சமஸ்த கல்யாண குணாத் மகோ சௌ ஸ்வ சக்தி லேசோத்ருத பூத வர்க்க
தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைகராசி
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதய சந்தி பராவரே சே-என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51-சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமபதம் –
தோஷம் அற்றவன் என்றதாயிற்று

————————————————————————————————————————————-

323-பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத் வசநாத் –3-1-12-

பேதாத் இதி சேத் –இயற்கையில் பாபம் அற்ற ஜீவனுக்கு சரீர சம்பந்தத்தால் ஏற்படும் அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் ஏற்படுவது போல்
பரமாத்மாவுக்கும் பிருத்வீ முதலிய சரீர சம்பந்த அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் சம்பவிக்கலாமே என்னில்
ந -வாராது
ப்ரத்யேகம் அதத் வசநாத் –ஒவ்வொரு பர்யாயத்திலும் ஏஷ ஆத்மா அந்தர்யம் அம்ருத –என்று
தோஷம் அற்றவன் என்று சொல்வதால்
சரீர சம்பந்தம் மட்டும் தோஷத்துக்கு காரணம் ஆகாது
ஜீவனுக்கோ -பராபித்யா னுத்து திரோ ஹிதம் என்றபடி பரமாத்மாவின் ஸங்கல்பத்தாலே கர்மாதீனமான
ஞான சங்கோசத்துக்குக் காரணமான சரீர சம்பந்தம் னேஏற்படுவதால் தோஷங்கள் உண்டாகின்றன என்பதாகும் –

சரீர தொடர்பு கூறும் இடங்களிலும் பரமாத்மா தோஷம் அற்றவன் –
ப்ருஹத் உபநிஷத் –
3-7-3-ய ப்ருதிவ்யான் திஷ்டன் –
3-7-23- ய ஆத்மா நி திஷ்டன் -இடங்களிலும்
ச தே ஆத்மா அந்தர்யாமி அம்ருத -தோஷம் அற்று தானாகவே -கர்மம் அடியாக அன்று -உள்ளான்

ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-4-பராபித்யா நாத் து திரோஹிதம் -ஸூ த்ரத்தில் நிரூபிக்கக் கண்டோம்

அசேதனப் பொருள்களும் சில கால கட்டத்தில் அவனது சங்கல்பத்தின் படி இன்பம் பயக்கும் படியைக் காண்கிறோம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48-
நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச –
கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே –
தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி

ப்ரஹ்மத்துக்கு உடல் தொடர்பு லீலைகளுக்கு மட்டுமே இருக்கும்-

————————————————————————————————————————————

324-அபி ச ஏவம் ஏகே –3-1-13-

முண்டக உபநிஷத் -3-1-1-
த்வா ஸ்பர்ணா சயுஜா சகாய சமா நம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயரன்யே பிப்பலம் ச்வாத்வத்தி
அனச்னன் அந்ய அபிசாகசீதி -என்றும்

சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி –என்றும் உண்டே

அபி ச –மேலும்
ஏகே -சில வேதாந்திகள்
ஏவம்-ஒரே சரீரத்தில் உள்ள ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் தோஷத்தையும் அது இல்லாமையையும் கூறி
நியமனம் ஐஸ்வர்யம் பிரகாஸம் =போன்றவற்றை ப்ரஹ்மத்துக்கு வெளிப்படையாக ஸ்தாபிக்கின்றனர்
கர்மபத்தை அனுபவியாமை ப்ரஹ்மத்துக்கு மட்டும் எவ்வாறு கூடும் என்ற ஆஷேபம் எழ
அதற்கு விடை அருளுகிறார்

கர்ம வசப்படுவானோ பரம் பொருளும் என்றால்
ரூபம் அற்றவன் என்கிறது அடுத்த ஸூத்ரத்தில்-

———————————————————————————————————————————–

325-அரூபவதேவ ஹி தத் ப்ரதா நத்வாத் —3-2-14-

தத் அரூபவதேவ ஹி –ஜீவனைப்போலே கர்ம வச்யத்வம் இல்லாமையால்
ஸமஸ்த அந்தர்யாமியாக இருந்தாலும் அரூபத்வமே இவனுக்கு
ஏன் எனில்
ப்ரதா நத்வாத்–நிர்வாஹனானமையால் -இவனே ப்ரதானன்
இவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ -நாம ரூப காரியங்களின் துக்காதிகளின் ஸ்பர்சம் இல்லாதவன் என்றதாயிற்று –

கர்மம் அடியாக தேவாதி மனுஷ்ய தேகம் எடுப்பது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லையே –
உள்ளே புகுந்தாலும் நாம ரூபங்களால் பாதிக்கப் படுவதில்லை
சந்தோக்யம் -8-14-1-ஆகாசோ வை நாம ரூபாயோ நிர்வஹிதா தே யதந்த்ரா தத் ப்ரஹ்மம்-

அந்தர்யாமியாக இருந்தும் தோஷம் தட்டாமல் உள்ளான்-

ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு விதி வஸத்வம் நீங்குகிறது என்னில்
விதி இரண்டு விதம்
அறியாததை அறிவிப்பது
ஒன்றில் ஈடுபடாதவனை ஈடுபடுத்துவது
இவனோ ஸர்வஞ்ஞன் -ஸர்வ நியந்தா
எனவே அஞ்ஞானமோ பராதீனத் தன்மையும் இல்லாத ப்ரஹ்மத்திடம் விதிகள் சக்தியை இழந்து
அவனது விசேஷணமான ஜீவன் இடத்தில் பயன் உள்ளவை ஆகின்றன
ஆகவே ப்ரஹ்மம் உபய லிங்கமே என்றதாயிற்று –

இனி ஸத்யம் ஞானம் -ஸ்ருதியில் விசேஷம் அற்ற -ப்ரகாஸ மாத்ர -ப்ரஹ்மமே சொல்வதால்
உபய லிங்கம் எப்படிக் கூறலாம் என்ற சங்கைக்கு பதில் அருளுகிறார் –

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -1-1-ஒளி ரூபம் என்றும் –

ப்ருஹத் உபநிஷத் –நேதி நேதி-இல்லை இல்லை -என்பதால்

கல்யாண குணங்கள் உள்ளவை எனபது எவ்வாறு என்றால்

————————————————————————————————————————————-

326–பிரகாசவத் ச அவையர்த்தாத் —3-2-15-

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்ற சுருதி பொய்யாகக் கூடாது என்பதால்
ஒளி மயமானது ப்ரஹ்மம் எனபது போலே
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் இத்யாதி வாக்கியங்களும் ச பலமாக வேண்டுமே

சத்ய சங்கல்பன் ஜகத் காரணன் அந்தர்யாமி அகி ஹேய ப்ரத்யநீகத்வம் அனந்த கல்யாண குண சாகரம்
என்ற ஸ்ருதி வாக்யங்களையும் ஏற்க வேண்டும்

—————————————————————————————————————————————

327-ஆஹ ச தந்மாத்ரம்–3-2-16–

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மம் என்று ஒளி மயம் என்றது மற்றையவற்றை மறுக்க வில்லை –
நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -4-2-4- எதனால் என்பதை மேலே பார்ப்போம்

————————————————————————————————————————-

328-தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-3-2-17-

தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-அதோ என்று முற்றிலும் –
முழு வேதாந்தமும் நிரஸ்த நிகில தோஷனாய்
கல்யாண குணகரனாய் உள்ள உபய லக்ஷணங்களையும் காட்டுகிறது –

உபய லிங்கத்வம் அநேக ஸ்ருதி ஸ்ம்ருதிகளும் சொல்லுமே –

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் –
6-7-தம் ஈஸ்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்

6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்

6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருஸ்யதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்

முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப -என்றும்

தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்

தைத்ரிய ஆனந்த வல்லி-
2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்

2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந-என்றும்

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்

ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – –
10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் -என்றும் –

10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் -என்றும்

9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூயதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47–
சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ
க்லமதந்த்ரீ பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-என்றும்

ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்தும்
உபய லிங்கங்கள் நிறைந்தவன் என்பதை பல இடங்களிலும் சொல்லிற்றே –

———————————————————————————————————————————–

329-அத ஏவ ச உபமா சூரியகாதிவத்–3-2-18-

ஆகவே நீரில் -கண்ணாடியில் -பிரதிபலிக்கும் சூர்யன் போன்றவை
பர ப்ரஹ்மத்துக்கு உபமானமாக சொல்லப் பட்டன

ப்ருத்வீ முதலிய ஸ்தானங்களில் ஏற்படும் தோஷம் உபய லிங்க விஸிஷ்ட ப்ரஹ்மத்திடம்
ஏற்படாத காரணத்தாலேயே இந்த த்ருஷ்டாந்தங்கள்

யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144-
ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான்
ஏக ஏவ ஹி பூதாத்மா போதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் –

ஒரே ஆகாசம் எவ்வாறு குடம் முதலியவற்றில் வெவ்வேறாகத் தோன்றுகிறதோ
ஒரே ஸூர்யன் நீர் நிலைகளில் வெவ்வேறாகத் தோன்றுகிறானோ
அப்படியே ஒருவனே என்று ஸ்தான ப்ரயுக்தமான விரிதலோ சுருக்கமா -இல்லாமல் –
தோஷம் தட்டாத ஒரே தன்மையுடன் பல பொருள்களில் ப்ரஹ்மம் இருப்பான் என்கிறது-

———————————————————————————————————————————–

330-அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம் —3-2-19-

நீரில் உள்ளது போலே பொய்யானவன் அல்லவே
ப்ரஹ்மம்-உண்மையாகவே உள்ளான் –

ப்ருஹத் உபநிஷத் –
3-7-3- ய பிருதிவ்யாம் திஷ்டன் -என்றும் –

3-7-4- ய அப்ஸூ திஷ்டன் -என்றும் –

3-7-22-ய ஆத்மநி திஷ்டன் -என்றும்

தோஷம் தட்டாது என்பதற்கு சொல்லிய திருஷ்டாந்தம் உண்மையாக இருப்பவன் ஆகையால்
பொருந்தாது என்பர் பூர்வ பஷி

து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது
அம்புவத் அக்ரஹணாத் –தண்ணீரில் உண்மையாக ஸூர்யன் க்ரஹிக்கப் படாதது போலே
ப்ருத்வீ முதலியவற்றில் ப்ரஹ்மம் க்ரஹிக்கப்பட வில்லை
ஆதலால்
ந ததாத்வம் —ஸூர்யனிடம் ஜலகத தோஷம் தட்டாதது போல்
ப்ரஹ்மத்தின் இடமும் இவற்றின் தோஷம் தட்டாது என்று சொல்ல முடியாது
ஏன் எனில்
அவற்றில் உண்மையாகவே ப்ரஹ்மம் இருப்பதால்
என்று பூர்வ பக்ஷம்

—————————————————————————————————————————————-

331–வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச –3-2-20-

சிறிய நீர் நிலை பெரிய நீர் நிலை பிம்மம் தோன்றுவது போலே
சுருக்கமும் விரிவும் இல்லாதவன் என்பதற்கே திருஷ்டாந்தம்

ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் -வெற்றிடம் குடங்களில் தனித் தனியே உள்ளது போலே
ஜலதாரேஷூ இவ அம்சுமான் -நீர் நிலைகளில் சூரியன் போலே பலவற்றிலும் உள்ளான்-

அந்தர்பாவாத் -ப்ருத்வீ முதலான விஷம ஸ்தானங்களில் உள்ள பரமாத்வாவுக்கு -அவற்றினுள் இருப்பதாலேயே
வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் -நீர் நிலைகளில் ஸூர்யனை உபமானமாகக் காட்டியமையால் சுருக்கமும் விரிவும் விலக்கப் படுகின்றன
இது எவ்வாறு தோன்றுகிறது என்றால்
உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச -இரண்டு உதாரணங்களும் அப்போதே பொருந்துவனவாகும்
குடாகாசம் நீர் நிலைகளில் உண்மை இல்லாத ஸூர்யனையும் காட்டியது
பரமாத்மாவுக்கு ப்ருத்வீ யாதிகளின் தோஷம் ஒட்டாது என்று காட்டவே
இரண்டு உதாரணங்கள் காட்டி ஒரு அம்சம் ஒத்து ஒத்து இருப்பதைக் காட்டியவாறு
இம்மாணவன் சிங்கம் என்றால் க்ரூரத்தன்மைகளில் ஒன்றை மட்டும் காட்டவே
உவமையில் ஏதேனும் ஒரு அம்சத்தில் தான் ஒற்றுமை காட்ட வேண்டும்

ப்ருஹத் உபநிஷத் -2-3-1-
த்வே வாவா ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ச -என்று
ஸ்தூல அஸ்தூல ரூபங்கள் இரண்டும் உண்டு என்று சொல்லத் தொடங்கி–

2-3-6-தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மஹாரஜநம் வாச -என்று
திவ்யமான ரூபம் உள்ளது என்று சொல்லி தொடர்ந்து –

அதாத ஆதேச நேதி நேதி இதி நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரம் அஸ்தி என்று
இதி -என்றது –மூர்த்தம் அமூர்த்தம் ஸூ ஷ்மம் ஸ்தூலம் போன்றவை சொல்லி
உடனே ந -என்று இவற்றை நிராகரித்து
ப்ரஹ்மம் மட்டுமே உண்மை மற்றவை அவன் மேல் ஏறிட்டுக் கூறப்பட்டன என்று சொல்லி
தோஷம் அற்றவன் என்று எவ்வாறு சொல்ல முடியம்
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் தடுக்கப் படுகிறதே
உபய லிங்கத்வவம் அன்று என்று தோற்றும்
என்பர் பூர்வ பஷிகள்

அதற்கு பதிலாக அடுத்த ஸூத்ரம் –

——————————————————————————————————————————————-

332-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய–3-2-21-

முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து
அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் –

அத்தையே நிராகரித்தது –

பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி -முன் தொடக்கப்பட்ட ஸ்தூல ஸூஷ்ம ரூபமான பிரபஞ்சம் மட்டும்
ப்ரஹ்மத்தின் ரூபம் அன்று என்றே –
அதாத ஆதேசோ நேதி நேதி-என்ற சுருதியில் விளக்கப் படுகிறது
தாதா ப்ரவீதி ச பூய-முன் சொன்னதைக் காட்டிலும் பூயஸ்த்வத்தை -பெருமையை –
வாக்ய சேஷம் சொல்லுகிறது

நேதி நேதி என்று தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-
ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை
சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது

பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் –
இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்

ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்ம வச்யன் இல்லை –
அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –

ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே
நேதி நேதி என்கிறது
சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்

இதி ந -இது முன் சொன்ன ப்ரப்ரகாரம் அன்று ப்ரஹ்மம்
நேதி நேதி என்று குறிப்பிட்ட ப்ரஹ்மத்தை விட்டு
அந்யத் நஹ் யஸ்தி-வஸ்து ஸ்வ ரூபத்தாலும் குணத்தாலும் உயர்ந்தது வேறு இல்லை என்று பொருள்
ஸத்யம் என்பது ப்ரஹ்மத்தின் பெயர்
ஏன் அப்பெயர் வந்தது என்னில்
ப்ராணனுடன் கூடவே சஞ்சரிப்பதாலும்
ஆகாசம் போல் ஸ்வரூப விகாரம் பெறாததால் ஜீவன் ஸத்யம் எனப்படுகிறான்
ஸ்வரூப விகாரமும் ஞான சங்கோச ஸ்வபாவ விகாரமும் இல்லாததால்
ப்ரஹ்மம் தேப்ய -ஜீவர்களைக் காட்டிலும் அதிக ஸத்யன்
ஆகையால் வேறு ப்ரமாணங்களால் அறியாத ப்ரஹ்மதுக்கு மூர்த்த அமூர்த்த ரூபமான பிரபஞ்சத்தை
பிரகாரமாக உபதேசிகையாலே உபய லிங்கமே ப்ரஹ்மம்
ஆகவே திரும்ப திரும்ப பிரகார விசேஷமே உபதேசிக்கப் படுகையாலே
நேதி நேதி என்பதன் மூலம் முன் ப்ரக்ருதமான அளவு மட்டும் நிஷேதிக்கப் படுகிறது

மேல் ஒரு ஆசங்கை
உண்மையில் ப்ரத்யக்ஷத்தால் நிர்விசேஷ ப்ரஹ்மம் மட்டுமே க்ரஹிக்கப் படுகிறது
அதற்கு வேறுபட்டதும் பிராந்தியால் ஏற்படுவதுமான விசேஷ ரூபத்தை
நேதி நேதி என்று மறுக்கிறது என்று கொள்ளலாமே என்னில்
இதற்கு மறுப்புக் கூறுகிறார் மேல் –

———————————————————————————————————————————————–

333-தத் அவ்யக்தம் ஆவ ஹி –3-2-22-

தத் -அந்தப் ப்ரஹ்மம்
அவ்யக்தம் -சப்தம் தவிர்த்த எந்தப் ப்ரமாணத்தாலும் புலப்படுவது அன்று
ஆஹஹி -ஸ்ருதி அவ்வாறே சொல்கிறது

சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் என்பதை
கட உபநிஷத் -6-9-ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச ந ஏ நம் -என்றும்

முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்கிறதே –

மேலும் ஒரு ஸூத்ரத்தால் உணர்த்துகிறார் –

———————————————————————————————————————————————-

334-அபி சம்ராதனே ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–3-2-24-

பக்தி என்னும் உபாசனம் கொண்டே ப்ரஹ்மத்தை அறிய -ப்ரஹ்மத்துக்கு மகிழ்வு ஏற்ப்படுத்தி –
உணர இயலும் என்று ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும் –

முண்டக உபநிஷத் -3-2-3-
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே
தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்

3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்

ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்

11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும்
ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே

அபி ச -மேலும்
சம்ராதனே -மிகவும் ப்ரீதி கரமான உபாஸனம் இருந்தால் பகவானின் ஸாஷாத் காரம் ஸம்பவிக்கும்
வேறு பிரகாரங்களாலே ஸம்பவிக்காது
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–ஸ்ருதி ஸ்ம்ருதிகள் இருக்கிற படியால் என்றபடி –

சம்ராதனே -ஆழ்ந்த பக்தி என்னும் உபாசனத்தையே ஸூத்ரத்தில் குறிக்கப் படுகிறது –
இதுவே அவனுக்கு மகிழ்வு ஏற்படுத்தும் என்றதாயிற்று-

———————————————————————————————————————————————-

335-பிரகாசாதி வத் அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத் –3-2-25-

ஞான ஆனந்த மயம் போலேவே மூர்த்தமாகவும் அமூர்தமாகவும் உள்ள பொருள்களை உடலாகக் கொண்ட
ப்ரஹ்மம் என்றே யோகிகள் இடைவிடாத உபாசனத்தால் உணர்ந்து காண்கிறார்கள்

ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்கிறது –

இதனாலும் மூர்த்த அமூர்த்த ரூபத்துடன் கூடியமை தடுக்கப் படவில்லை –
வாமதேவன் கூறினார் -நான் மனுவாய் இருந்தேன் -பின்பு ஸூர்யன் ஆனேன் –
அத்தகையவருக்கு பக்தியோகம் என்னும் கர்மாவினால்
பிரகாசாதி வத் ச -தர்சனம் முதலியவை உண்டானவோ
அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத்–அவர்களின் ப்ரஹ்ம ஸ்வரூபம் குணம் இவை பற்றிய தர்சனத்தில்
ஞானம் ஆனந்தம் முதலிய ஸ்வரூபம் போலவே
மூர்த்தம் அமூர்த்தம் என்னும் ரூபமும் விசேஷம் இன்றி இடம் பெற்றதே
ஜகத் நஸ்வரத் தன்மைக்கு மட்டும் ப்ரஹ்ம குணத்வம் தடுக்கப் படுகிறது என்ற விசேஷம் ஏதும் இல்லை

ஆகவே
மூர்த்த அமூர்த்த ரூப விசிஷ்டம் ப்ரஹ்மம் என்பதற்குத் தடையில்லை என்பதாம் –

———————————————————————————————————————————————-

336- அதோ அனந்தேன ததாஹி லிங்கம்–3-2-26-

அனந்தேன -எல்லையில்லாத கல்யாண குண கணங்களுடன் சம்பந்தம்
அதோ –கூறிய காரணங்களால் நிலை யாயிற்று
ததாஹி -அப்படி இருந்தாலே
லிங்கம்-உபய லிங்கம் ப்ரஹ்மம் என்பது பொருந்தும்

மேலே கூறியவற்றால் உபய லிங்கமாகவே உள்ளது என்று காட்டி அதிகரணத்தை நியமிக்கிறார்

அளவற்ற திருக் கல்யாணங்களை கொண்டதாயும்
அகில ஹேய ப்ரத்ய நீகனாயும்ந ப்ரஹ்மம் உண்டு
என்று நிரூபித்தாயிற்று-

உபசர்க அபவாத நியாயம் -பொது விதியும் சிறப்பான விதியும் -விரோத அதிகரண நியாயம்
இவற்றைக் கொண்டு இவை விளக்கத் தக்கது
இதில் அபேச்சேத அதிகரணத்துக்கு இடம் இல்லை என்று கூற வேண்டும்

பிராணிகளை ஹிம்சிக்கலாவது பொது விதி
அக்னீ ஷோமீய யாகத்தில் பசுவை ஹிம்ஸிக்கலாம் சிறப்பு விதி
இந்த சிறப்பு விதியை விட்டு வேறு தன் இச்சையால் செய்யும் ஹிம்சைகளைத் தடை செய்வதாகக் கொள்ளுவதே
உத்சர்க அபவாத நியாயம் எனப்படுகிறது

அதே போலே நிர்க்குணம் நிரஞ்சனம் அத்ரேஸ்யம் -முதலியவை பொது விதிகள் –
ஸர்வஞ்ஞன்-ஸ்வா பாவிக ஞானம் பலம் ஸம்ருத்திகளை யுடையவன் என்பவை அபவாதங்கள் -சிறப்பானவை –
இவற்றால் ஸித்தமான விசேஷ குணங்களை விட்டு வேறான விரஜோ -விம்ருத்யு -விசோகா -விஜிகத்சோ-அபி பாஸ-என்று
சிறப்பாய் நிஷேதிக்கப்பட்ட ஹேய -தீய குணங்கள் இல்லை என்பதையே நிர்க்குணம் இத்யாதியால் பொதுவாகச் சொல்வதால்
நிர் குண -ச குண ஸ்ருதிகளுக்கு ஹேய ப்ரத்ய நீகத்வம் -கல்யாண குண கரத்வம் என்ற விஷயம் வேறுபடுவதால் விரோதம் இல்லை
விதி நிஷேதங்களுக்கும் இவாறே விரோதம் சாந்தமாகிறது

இங்கு அபேச்சேத அதிகரண நியாயத்துக்கு இடம் இல்லை
அதாவது
ஒரு யாக விசேஷத்தில் ஐந்து ரித்துவிக்குகள் ஒருவருக்கு ஒருவர் கச்சத்தைப் பிடித்துக் கொண்டு பின் செல்வர் –
அத்வர்யுவை -ப்ரஸ்தோதாவும் -அவரை ப்ரதி ஹர்த்தாவும் தொட்டுக் கொண்டே செல்ல வேண்டும் –
இவர்கள் அன்வாரம்பணத்துக்கு-தொட்டுக் கொண்டே செல்வத்துக்கு -தடை ஏற்பட்டால் பிராயச்சித்தம் செய்யுமாறு விதிக்கப்படுகிறது
1- உத்காதா விட்டால் தக்ஷிணை இன்றி யாகத்தை முடித்து
மறுபடியும் அவனைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
2-ப்ரதி ஹர்த்தாவால் அபச்சேதம் வந்தால் ஸர்வஸ்வத்தையும் தானம் செய்ய வேண்டும்
இந்த இடத்தில் உத்காதாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தி
ப்ரதி கர்த்தாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தியால் பாதிக்கப் படுகிறது என்பது அபச்சேத நியாயம்

இந்த நியாயத்தாலே அத்வைதிகள் நிர்க்குண ஸாஸ்த்ரம் குண ப்ராப்தியை எதிர்பார்ப்பதால் பிரபலமானது பரமானது
ஆதலின் இதனால் ச குண சாஸ்திரம் பாதிக்கப் படுவதால் ப்ரஹ்மம் நிர்க்குணம் என்றே தேறும் என்பர்

அது அனு உசிதமானது -ஏன் எனில்
உத்காதாவின் அபச்சேதம் ஏற்படுகையில் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம் உண்டாக வேணும் என்ற நிர்பந்தம் இல்லை
இரண்டும் முறையே க்ரமமாக ஏற்பட வேண்டும் என்பதும் இல்லை
க்ரமமாக ஏற்பட்டாலும் உத்காதாவின் அபாச்சேதம் முதலிலும் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம்
அடுத்தபடி ஏற்படுவதையும் இருக்கட்டும்
அதுவே மாறியும் இருக்கட்டும்

பூர்வ அபூர்வ க்ரம நியதம் இல்லாமையாலே விரோதத்துக்கோ க்ரமத்துக்கோ எங்கு நியமம் உள்ளதோ
அங்கு அபாச்சேத நியாயம் வாராது
அதிலும் அபாச்சேத நியாயம் சொன்னால் எப்போதும் பூர்வ ஸாஸ்த்ரத்துக்கு அப்ராமாண்யம் வந்து சேரும் –
அதை ஆச்சார்யர்களும் அருளினார்கள்
உன்க்கு பூர்வ அபூர்வம் விரோதம் முந்தையதற்கு அப்ராமாண்யம் இவை நியதமாய் இல்லையோ
அங்கு அபச்சேத நியாயம் பொருந்தும் என்றனர்
பூர்வ அபர்யம் விரோதச்ச பூர்வா ப்ராமாண்யம் ஏவச நியமான் நாஸ்தி தத்ராஸவ் அபச்சேத நயோ பவேத் -என்று –

ஆகவே அபச்சேத நியாயத்தைக் கொண்டு -நியதபரமான நிர்க்குண சாஸ்திரம் கொண்டு ச குண ஸாஸ்த்ரத்தைப் பாதிக்க இயலாது
நிர்க்குண ஸாஸ்த்ரம் நியத பரமாகையாலே இதை அபேக்ஷித்து உபக்ரம அதி கரண நியாயப்படி ச குண ஸாஸ்திரமே பிரபலம்
அதாவது
பிரஜாபதி வருணாய அஸ்வம் அநயத்-என்ற இடத்தில் அஸ்வத்தைப் ப்ரதி க்ரஹிக்க இஷ்டி கூறப்படுகிறது
இது உபக்ரமம் தொடக்கம் -தான் தோன்றும் போது விரோதம் தோன்றாததாலே அஸஞ்சாத விரோதி எனப்படும் -இது பிரபலம்
இந்த இஷ்டி செய்வது தாதாவுக்கா ப்ரதி க்ரஹீதாவுக்கா என்ற சங்கை வந்தால் உபக்ரம வாக்கியத்தை அனுசரித்து
தாதாவுக்கே என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது
இந்த நியாயத்தைக் கொண்டு ச குண நிர்க்குண வாக்கியங்களை ஆராய்ந்தால்
ச குண விதி பூர்வ பாவி என்றும் நிர்க்குண விதி பரமானது என்றும்
அவர்கள் கூற்றுப்படி உபக்ரமமான ஸாஸ்த்ரத்தை விட பரமான -உப ஸம்ஹாரமான நிர்க்குண ஸாஸ்த்ரம் துர்ப்பலம் என்று தேறுகிறது
ஆதலின் பரத்தைக் கொண்டு பூர்வத்தைப் பாதிக்க இயலாது
அப்படிப் பாதிக்கும் என்றால் மாத்யமிகளின் ஸர்வ ஸூந்ய வாதம் பிரமம் ஆதலின் அவன் மதமே வெற்றி பெறும் –

———————————————————————————————————————————————–

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் –
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே
ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

கீழே ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் சாதிக்கப் பட்டது
அதை நிலை நாட்ட அசித் வஸ்துக்களும் ப்ரஹ்மத்தின் ரூபமே என்று சாதிக்க வேண்டும்
அசித்து ப்ரஹ்மத்தின் ரூபம் என்பது அஹி குண்டல நியாயத்தால் ஸித்திக்குமா
பிறப்பையும் விளக்கு அல்லது ஸூர்யன் போன்ற நியாயத்தால் ஒரே ஜாதி என்ற முறையில் ஸித்திப்பதா
அன்றி விசேஷண விசேஷ்ய பாவத்தால் ஸித்திக்குமா
என்ற சம்சயத்தால் இவ்வதிகரணம் தோன்றுகிறது –

337-உபய வ்யபதேசாத் து அஹி குண்டலவத் —3-2-26-

இது பூர்வ பஷ ஸூத்ரம் –
சுருண்டும் நீண்டும் உள்ள பாம்பு போலே ப்ரஹ்மம் –
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூப-மூர்த்தம் அமூர்தம் இரண்டும் ப்ரஹ்மத்தின் ரூபம்

தொடர்ந்து
அதாத ஆதேச நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -2-3-6- என்று
ப்ரஹ்மம் அசித் பொருள்கள் அளவு மட்டும் அல்ல என்றது

நஹி ஏ தஸ்மாத் ந அத்ய அன்யத பரமச்ய-என்று ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் இல்லை -என்றும்
இதையே திருடமாக
அத நாமதேயம் சத்யச்ய சத்யம் பிராண ஏவ சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-16-பிரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச – என்றும் –
6-13-நித்யோ நித்யச் சேதநச்சேதநா நாம் -என்றும்

மஹா நாராயண உபநிஷத் -13-1-பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் –என்றும் சொல்லிற்று-

அசேதனம் ப்ரஹ்ம ரூபம் என்பது
1-ப்ரஹ்ம ஸ்வரூபமமே அசித் ரூபமாக பரிணமிப்பதாலே ஏற்படுகிறதா
2- அல்லது ப்ரஹ்மமும் அசித்தும் ஒரே ஜாதி என்பதால் ஏற்படுகிறதா
3-ஜீவனைப் போல் சரீரம் என்பதால் ப்ரஹ்மத்தின் விசேஷணம் என்பதாலா

1-சுருண்டும் நீண்டுமுள்ள பாம்பு போலேயா
2-சூரியனும் ஒளிக் காற்றையும் போலேயா
3-அம்சம் அம்சி பாவமா –
மூன்று வித கேள்விகள் ப்ரஹ்மத்துக்கும் அசித்துக்கும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-பிரக்ருதிச்ச பிரதிஜ்ஞாத் ருஷ்டாந்தா னுபரோதாத் -என்று
பிரமமே உபாதான காரணம் என்றும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-15-தத நன்யத்வம் ஆரம்பண சப்தாதிப்ய-பொருளும் காரணமும் வேறு அல்ல -என்றும்
அம்ச அம்சி பாவம் முன்பே கூறப்பட்டது

மூன்றில் பாம்பு போலே நீட்டியும் சுருண்டும் என்பதே அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் என்பதே சரியான விடையாகும்

ப்ரஹ்ம ஏவ இதம் சர்வம் -ப்ருஹத் உபநிஷத் -4-5-1- இவை அனைத்தும் பிரமமே என்றும்

சாந்தோக்யம் -7-25-2-ஆத்மா ஏவ இதம் சர்வம் -இவை அனைத்தும் ஆத்மாவே

சாந்தோக்யம் -6-3-2-ஹந்தா ஹமிமாஸ் திஸ்ரோ தேவதா அநேன ஜீவேன ஆத்ம அநு ப்ரவச்ய -என்று
தேஜஸ் நீர் பூமி மூன்றின் உள்ளே புகுந்து அநேக நாம ரூபங்களை எடுக்கிறேன்

உபய வ்யபதேயாத் து அஹி குண்டலவத் —
து -ஸப்தம் -ஏவ போல் அவதாரணம்
அஹி குண்டலவத் —=சர்ப்பத்துக்கு குண்டல பாவமும் நேரான தன்மையும் போலே
ப்ரஹ்மம் அசித் ரூபமாகிறது எனலாம்
ஏன் எனில்
உபய வ்யபதேசாத் –பேதமாயும் அபேதமாயும் வழங்கப் படுவதால்
இப்பிரபஞ்சம் எல்லாமே ப்ரஹ்மம் என்று அபேதமும்
இந்த ஜீவனைத் துணை கொண்டு யாவற்றிலும் உள்ளே நுழைந்து நாம ரூபங்களை அமைக்கிறேன் என்று
சங்கல்பிக்கும் போது பேதமும் பேசப்படுகின்றது
இவை சர்ப்பத்தின் வெவ்வேறு தன்மை போலே -ருஜு பாவமும் -வக்ர பாவமும் -பொருந்தலாம் என்பது பூர்வ பக்ஷம் –

எனவே அசித் என்பதும் ப்ரஹ்மத்தின் ஒரு வகையான விசேஷ நிலை என்றதாயிற்று-

——————————————————————————————————————————————–

338-பிரகாசஸ்ரயவத்வா தேஜஸ் த்வாத் —3-2-27-

ஒளியும் உத்பத்தி இடமும் போன்று -காரணம் இரண்டும் தேஜஸ் என்ற ஜாதியினால்
இது பூர்வ பஷ ஸூத்ரம்

வா என்றது பாம்பு போன்று நீண்டும் சுருங்கியும் –
அம்ச அம்சி பாவம் இரண்டையும் தள்ளுகிறது

அசித் ரூபம் என்றால் இரண்டும் வெவ்வேறே என்கிற பேத ஸ்ருதிகள் தள்ளப்படும் –
அவிகாராய சுருதி வாக்யமும் தள்ளுபடும்

ஒளியும் ஒளி உள்ள தீபாதிகளும் தேஜஸ்த்வம் -ஒரே ஜாதி சேர்க்கையால்
ஸ்வரூபத்தில் பேதம் இருந்தாலும் அபேதம் பேசப்படுவது போலே
அசித்தான பிரபஞ்சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூடும் -அசித்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் கூடும் –
முன் கூறிய பிரகாரத்தில் ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் அபரிணாமித்வம் சொல்லும் ஸ்ருதிகளுடன் விரோதம் ஏற்படும் –
இப்பஷத்தில் அவ்விரோதம் வாராது என்றபடி –

இந்த பக்ஷத்தை ஏற்றாலும் ப்ரஹ்மமே சர்வமும் என்று அபேதமும்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம் சொல்வதால் அசேதன ரூபம் இல்லாமல் போகட்டும்
ஒரு பசு கண்டம் முண்டம் பூர்ண ஸ்ருங்கம் என்று கூறப்பட முடியாது அல்லவா
எனும் அஸ்வாரஸ்யத்தால்
சித்தாந்தம் கூறுகிறார் –

——————————————————————————————————————————————–

339-பூர்வவத் வா–3-2-28-

முன்பு கூறப் பட்டது போன்று என்றவாறு –
வா -ஸப்தம் இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தள்ளுகிறது
கடந்த இரண்டு ஸூத்ரங்களில் உள்ள பூர்வ பஷத்தை தள்ளுகிறது

முதல் வாதம் படி அசித் ஸ்வரூபம் ப்ரஹ்மத்துக்கு வரும் தோஷங்களும் தட்டும்
ஒளி ஒளிக்கதிர் என்று கொண்டால் பசு குதிரை இரண்டு பிரிவுகளான ப்ரஹ்மம் ஸ்ருதி வாக்ய விரோதம் ஆகும்

பூர்வ வத்வா -அம்ச அதிகரணத்தில் பேத அபேத வியபதேசங்கள் பொருந்தவும் –
ப்ரஹ்மம் நிர் தோஷம் என்று ஸாதிக்கவும்
ஜீவனை -பிரகாச குண ஜாதிகளை போலே விட்டுப் பிரிக்க இயலாத -அப்ருதக் ஸித்த -விசேஷணம் -ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு அம்சமே என்று கீழே சாதித்தால் போலவே அசித்தும் விசேஷணமாதலின் அம்சமாகலாம்
இத்தால் அசித் என்ற சொல்லும் அத்துடன் கூடிய ப்ரஹ்மத்தையே சொல்லும்
ஆகவே இவை யாவுமே ப்ரஹ்மமே என்று சொல்வதும் பொருத்தம் ஆகுமே
விசிஷ்டத்தில் விசேஷணம் ஏக தேசம் என்பதால் அபேதம் முக்கிய வழக்கே
ஸ்வரூப ஸ்வபாவ பேதங்களாலே இரண்டுக்கும் பேத வழக்கே முக்யமாம்
இதனால் ப்ரஹ்மம் நிர்தோஷம் என்பது ஸித்தம் –

ஆக முன்பு கூறிய படி ஒரு அம்சமாகவே கொள்ள வேண்டும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-42-அம்சோ நாநா வ்யபதேசாத் -ஒரு அம்சமாகவே ஆகும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-45-பிரகாசாதிவத் து நைவம்பர-பரமாத்மாவின் அம்சம்

பிரிக்க இயலாது
பேத அபேத ஸ்ருதிகளும் கொள்ள முடியும்
தோஷங்களால் தீண்டப் படாததது என்ற வாதமும் கொள்ளப் படும்

ஆக ஒளி ரத்னக் கல்லை விட்டு பிரிக்க முடியாதது போலேயும்
குணம் குணம் உள்ளவன் -ஆத்மா உடல் போலே
ஜீவனும் அசித்தும் ப்ரஹ்மத்தின் அம்சங்களே -என்றாகிறது-

————————————————————————————————————————————————

340-பிரதிஷேதாச்ச–3-2-29-

தள்ளப் படுவதாலும் -கடந்த ஸூத்ர சித்தாந்தம் தொடர்கிறது

ப்ருஹத் உபநிஷத் -4-4-25-ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அஜரோ அமர –
பரமாத்மா பிறப்பு இறப்பு கிழத் தன்மை அற்றவன் -என்றும்

சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயா ஏதத் ஜீரயதி –
வயதாகி கிழத் தன்மை அடைவது இல்லை

தோஷங்கள் தட்டாமல்
காரணமாகவும்
அம்ச அம்சி பாவமே பொருந்தும் என்றதாயிற்று

ஸூஷ்மமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாக காரணமாயும்
ஸ்தூலமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாகக் கார்யமாகவும்
கார்ய கார்யங்களுக்கு இடையில் பேதம் இல்லை -அபேத ஸ்ருதியும்

காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தவன் கார்யப் பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கொண்டு
ப்ரஹ்மத்தை தோஷங்கள் தீண்டுவது இல்லை என்றும்
சமஸ்த கல்யாண குணங்கள் கொண்டவன் என்றும்
உபய லிங்கத்வம் நிரூபிக்கப் பட்டது

————————————————————————————————————————————————

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் –
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும்
இவனை தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது-

ப்ரஹ்மம் உபய லிங்கம் என்று ஸ்தாபித்தார்
இனி முன் கூறிய ஜகத்துக்கு எல்லாம் நிமித்தமாயும் உபாதானமாயும் உள்ள ப்ரஹ்மத்தை விட
சிறந்ததோர் தத்வம் உள்ளது என்று சில போலி ஹேதுக்களால்
சங்கித்து
கண்டிக்கப்படுகிறது என்று சங்கதி –

341-பரமத சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-31-

அணை அளவு தொடர்பு வேறுபாடு ஆகியவை கூறப்பட்டதால் இதை விட உயர்ந்தது உள்ளது

சேது சேர்ப்பது ஓன்று என்றால் சேர வேண்டியது சிறந்த வேறு ஓன்று இருக்குமே
இந்த பூர்வபக்ஷ ஸூத்ரம் இது –

சாந்தோக்யம் -8-4-1-அத ய ஆத்மா ச சேது வித்ருதி –
இந்த ஆத்மாவைத் தாங்கும் பாலமாக உள்ளான்

சாந்தோக்யம் -8-4-2-ஏதம் சேதும் தீர்த்தவா அந்தஸ் சந் அனந்தோ பவதி –
பாலத்தை கடந்து குருடனானவன் நிலை மாறப் பெறுகிறான்

இவற்றால் ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை உண்டு என்றதாயிற்று

உந்மிதம்-என்று அளவு பட்டு ப்ரஹ்மம் கூறப் படுகிறது

சாந்தோக்யம் -3-18-2-சதுஷ்பாத் ப்ரஹ்ம-நான்கு பாதங்கள் கொண்டது என்றும்

ப்ரசன உபநிஷத் -ஷோடாசகலம் -பதினாறு பிரிவுகள் கொண்டது -என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-19-அம்ருதஸ்ய பரம் சேதும் தக்தேந்த மிவா நலம் –
தானாக வெளிப்படும் மோஷத்தை அடைய உதவும் பாலமாக ப்ரஹ்மம் உள்ளான் என்றும்

முண்டக உபநிஷத்-2-2-5- -அம்ருதஸ்யைஷ சேது -மோஷத்தை அடைவிக்கும் பாலம் ப்ரஹ்மம் என்றும்

முண்டக உபநிஷத் -3-2-8-பராத்பரம் புருஷம் உபைதி -பரமாத்மாவை விட உயர்ந்த புருஷன் அடைகிறான் என்றும்

தைத்ரிய நாராயண வல்லி -1-5- பராத்பரம் யத் மஹதோ மஹாந்தம் -பெரியதான பரமாத்மாவை விட பெரியதான என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் –
3-9-தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –
அந்த புருஷனால் இவை நிரம்பி உள்ளன -என்றும்

3-10-ததோ யதுத்தரதரதரம் தத் அரூபம் அநாமயம் –
அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது-உருவம் அற்றது -துன்பம் அற்றது -என்றும்

இப்படி பல ஸ்ருதிகள் அந்த பிரமத்தைக் காட்டிலும் மேலான வஸ்து உள்ளதைச் சொல்லிற்று–

அத -இது வரை ஸர்வ காரணமாயும் -உபய லிங்கமாயும் கூறப்பட்டுள்ள ப்ரஹ்மத்தை விட
பரம் -உயர்ந்த தத்வம் உள்ளது
ஏன் எனில்
சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-வியபதேசம் என்பது சேது உன்மானம் முதலிய ஒவ்வொன்றுடன் சேர்க்கிறது
1- சேது வ்யபதேசத்தால் அடையப்படும் பொருள் வேறே ஓன்று என்று புலனாகிறது
2-சதுஷ்பாத் ப்ரஹ்ம ஷோடசகலம் -என்று உன்மான வ்யபதேசத்தால் -உன்மானம் -அளவு –
நான்கு பாதங்கள் பதினாறு கலைகள் என்று அளவிட்டதை விட அளவில்லாத வேறு தத்வம் இருக்க வேண்டும் என்று கருத்து
3-ஸம்பந்த வியபதேசத்தாலே -அம்ருதஸ்ய பரம் சேதும் -என்று ப்ராப்ய ப்ராபக சம்பந்தம் சொல்வதால்
அம்ருதம் என்று அடைய வேண்டிய தத்வம் சேதுவை விட வேறானது
4-பேத வியபதேசத்தால் -பராத்பரம் புருஷம் உபைதி–ததோ யதுத்தரதரதரம் –என்று எல்லாம்
புருஷன் என்றும் பர ப்ரஹ்மத்தை விட மேலான தத்வம் உள்ளது என்று தோன்றுகிறது என்று பூர்வ பக்ஷம்

இனி இந்த பூர்வ பஷத்துக்கு பதில் மேலே –இதைக் கண்டிக்கிறார் –

——————————————————————————————————————————————–

342-சமான்யாத்து-3-2-31-

பொதுவான தன்மை காரணத்தால் ஆகும் –
து -பதம் பூர்வ பஷத்தை தள்ளுகிறது
சேது என்று ஒரு கரையில் இருந்து அடுத்த கரைக்கு செல்வதை சொல்ல வில்லை

உலகங்கள் தம் தம் ஸ்வபாவங்களில் சாங்கர்யம்–கலப்பு -ஏற்படாமல் இருக்க
பரம புருஷனே சேது போலே தரிக்கிறான் என்று சுருதி சொல்லும்
ஸிநோதி -காட்டுகிறது என்பதால் சேது என்று காரணப்பெயர்
ஆதலால் வேறே ப்ராப்யம் இங்கே தோன்றவில்லை
ஏதம் சேதும் தீர்த்வா –என்ற இடத்தில் அடைந்து என்ற பொருள்
வேதாந்தம் தரதி என்பது போலே ப்ராபக ப்ராப்யங்களுக்கு அபேதத்தைச் சொல்லுகிறது –

சாந்தோக்யம் -8-4-1-ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய-
இந்த உலகங்கள் ஒன்றுடன் ஓன்று கலக்காமல் இருக்க -என்கிறது
சேதனம் அசேதனங்களை தன்னுள் வைத்து ஒன்றுடன் ஓன்று கலவாமல் காப்பதால் சேது எனப்படுகிறான்

சாந்தோக்யம் -8-4-2- ஏதும் சேதும் தீர்த்தவா –
தீர்த்தவா அடைதல் பொருளில் கடந்து என்று அல்ல –
வேதாந்தத்தை கடக்கிறான் முற்றிலும் அறிந்தவன் ஆகிறான் என்றே பொருள்

—————————————————————————— —————————————————————

343-புத்த்யர்த்த பாதவத் —3-2-32-

இதனால் இரண்டாவது ஹேதுவுக்கு விடை கூறுகிறார்
ப்ரஹ்மத்தை அளவிட்டுக் கூறியது உன்மானம்
ஏன் என்றால்
புத்த்யர்த்த -அனுசந்தானம் செய்ய வசதிக்காக
பாதவத் —வாக் பாத -சஷு பாத என்று எல்லாம் ப்ரஹ்மத்துக்கு வாகாதிகளைப்
பாதங்களாகச் சொல்லுவது உபாசானத்துக்கானது
அது போலவே இதுவும்
ப்ரஹ்மம் பரிமாணம் உள்ளது என்பதைக் காட்டுவதற்கு அல்ல

பாதம் போன்று உபாசனத்துக்கு கூறப் பட்டது –
சதுஷ்பாத் ப்ரஹ்ம –ஷோடசகலம் –பாதோச்ய விசவா பூதானி என்று
உபாசனத்துக்கு புத்திக்கு அளவு படுத்தி சொன்னவை

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-தெளிவாக உள்ளதே –

இவனே காரணம் என்பதை
தைத்ரியம் -2-1-தஸ்மாத்வா ஏ தஸ்மாத் ஆத்ம ந ஆகாச சம்பூத –
இதில் இருந்து ஆத்மாவும் ஆகாசமும் வெளிப்பட்டன என்றும்

தைத்ரியம்-2-6- -சோகாமயாத பஹூச்யாம் பிரஜாயேய-
அது தன்னைப் பலவாகக் கடவது என்று எண்ணியது -என்றும்

சாந்தோக்யம் -3-18-2-வாக் பாத பிராண பாத சஷூ பாதோ மன பாத –
பாதங்களாக வாக் போன்றவை உள்ளன என்றது உபாசனைக்கு எளிதாக்கவே என்றவாறு

உபாஸனார்த்தமாயினும் பரிமாணம் ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு பொருந்தும்
என்பதற்கு விடை மேல் –

———————————————————————————————————————————————-

344-ஸ்தான விசேஷாத் பிரகாசாதிவத்–3-2-33–

அளவிட முடியாத வஸ்துவை உபாசனை பொருட்டு மாத்ரம் எப்படி அளவிட்டு சொல்ல முடியும் என்றால் –
எங்கும் பரவும் பிரகாசத்துக்கு -ஒளி முதலான ஸ்தானங்களின் சம்பந்தம் காரணம் ஆகும்
ஜன்னல் ஒளி –குட ஆகாசம் போலே

———————————————————————————————————————————————-

345-உபபத்தேச்ச–3-2-34-

மூன்றாவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –

தன்னை அடையும் உபாயமாக தானே உள்ள தன்மை பொருந்துவதால் –
முண்டகம் -அம்ருதஸ்யைஷ சேது -அடியைப் படும் இலக்கே அவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்
முண்டகம் -3-2-3-நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ ந மேதயா

ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தே ந லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்-என்று
பரமாத்மாவை கேட்டோ ஆழ்ந்த ஞானத்தாலோ அறிய அடைய முடியாது –
அவனே யாரைத் தெரிந்து எடுத்து அவன் மட்டுமே அடைகிறான் அவனுக்கு தனது ரூபத்தை வெளிப்படுத்துகிறான்-

—————————————————————————————————————————————–

346-ததா அந்ய பிரதிசேஷாத்-3-2-35-

நான்காவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –

பேத ஸ்ருதிகளாலே அதிகமான ஒரு தத்வம் உண்டு என்பது தவறு
ததா -அவ்விடத்திலேயே
அந்ய பிரதிசேஷாத்-அந்யனான பரன் தடுக்கப் படுவதால்

இப்படி அவனைக் காட்டிலும் வேறு இல்லை என்று மறுப்பதால் ஆகும்
ததோ எதுத் தர தரம் -என்றும்
பராத்பரம் புருஷம் -என்றும் –
அஷராத் பரத பர -என்றும்
உயர்ந்த வஸ்து வேறே உண்டு என்கிறீர்கள்

அதே ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -3-9-
யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் ந அணீய ந ஜ்யோயோஸ்தி கச்சித் என்றதே

ப்ருஹத் உபநிஷத்

2-3-6-நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரமஸ்தி-என்றும்

நாராயண வல்லி -1-2- ந தஸ்ய ஈசே கச்ச ந தஸ்ய நாம மஹத்யச-என்றும் –

சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா நதி -என்றும்

ச ஆப ப்ரதுகே உபே இமே -என்றும்

1-3-அத்ப்யஸ் சம்பூத ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டௌ-என்றும் அவனே ஜகத் காரணம் என்றதே

ஆனால் ஸ்வேதாஸ்வதர -3-10-
ததோ எதுத் தர தரம் என்று சொன்னது எதனால் என்றால் –

இந்த வரிக்கு முன்னால் -3-8- வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ புரஸ்தாத்
தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நான்ய பன்னா வித்யதே அயநாயா -என்று முழங்கி

3-9-யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீய நஜ்யா யோஸ்தி கச்சித் வருஷ இவஸ்தப்த
திவி திஷ்டதி ஏக தே நேதம் பூர்ணம் புருஷே ந சர்வம் -என்றும்

நிகமத்தில் -3-10-ததோ எதுத் தர தரம் தத் அரூபம் அநாமயம் ய எதத் விது அம்ருதாச்தே பவந்தி
அதே தர துக்க மேவ அபியந்தி -என்றது

மேலும் முண்டகம் 3-2-8–பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
என்பதை 2-1-2-அஷராத் பரத பர -என்றதே –

பர ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே தத்வம் இல்லை -அவனே தோஷம் அற்றவன் -அம்ருதம் –
அவனை அறிந்தவன் சம்சாரத்தைக் கிடக்கிறான்
வேறு முக்திக்கான உபாயம் இல்லை என்று
அதே ஸ்ருதிகள் உப சம்ஹரிக்கின்றனவே

ஸ்ருத்யந்தரங்களும் இத்தையே பறை சாற்றுகின்றன

————————————————————————————————————————————

347-அநேந சர்வ கதத்வம் ஆயாம சப்தாதிப்ய —3-2-36-

அநேந -இந்த ப்ரஹ்மத்தால்
சர்வ கதத்வம் -ஜகத் எங்கும் வியாபித்து இருத்தல்
ஆயாம சப்தாதிப்ய-எங்கும் வியாபித்து இருப்பதாகச் சொல்லும் ஸப்தங்களால் –
வியாப்ய நாராயண ஸ்தித -போன்றவைகளால் அறிவிக்கப் படுகிறது
இதனால் இந்தப் ப்ரஹ்மத்தை விடச் சிறந்தது ஏதும் இல்லை என்று நிரூபணம் ஆயிற்று

ஆயாம -அனைத்தும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப் பட்டது என்கிறது-சர்வ வ்யாபகத்வம்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -தே நதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும் –

நாராயண வல்லி -11-6-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ச்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச
தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்

‘முண்டகம் -1-1-6-நித்யம் விபும் சர்வ கதம் ஸூஷூஷ்மம் யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்

ஸூத்ரத்தில் உள்ள ஆதி என்ற பதம் ப்ரஹ்மத்துக்கு அனைத்துமாய் இருக்கும் பெருமையை

ப்ருஹத் உபநிஷத் -4-5-1-ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும்

சாந்தோக்யம் -ஆதமை வேதம் சர்வம் -என்றும்

ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்தது என்று முழங்கும் –

இதனால் யதோவா இமானி -இத்யாதிகளாலே கூறப்படும் ஜகத் நிமித்த உபாதான
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறான தத்வம் கிடையாது என்பது ஸித்தம் –

————————————————————————————————————————————-

எட்டாவது அதிகரணம் -பலாதிகரணம் –
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

பரத்வமும் பல பிரதத்வமும் உபாஸிப்பதற்குத் தேவையானவை
பின்னால் சொல்ல இருக்கும் உபாஸ்யத்தின் ஸித்திக்காக பரத்வம் சொல்லப்பட்டது
இவ்வதி கரணத்தில் பல பரதனும் இவனே என்ற முறையில் ஓவ்தார்யம் கூறப்படுகிறது –

348-பலம் அத உபபத்தே —3-2-37-

யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்

பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-

பலம் அத உபபத்தே-இவன் இடம் இருந்தே கர்மபலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்
ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் என்பதே பொருந்தும்

————————————————————————————————————————————-

349-ஸ்ருதத்வா ச–3-2-38-

கீழே அசேதனமான கர்மங்களுக்குப் பல பிரதத்வம் கூடாமையாலே இவனே பல பிரதன் என்றார்
இதில் வெளிப்படையாகக் காட்டி அருளுகிறார் –

இப்படியே ஸ்ருதி வரிகள் -பல போகங்களையும் மோஷத்தையும் பரம் பொருளே அளிப்பதாக கூறுகின்றன –

ப்ருஹத் -4-4-24-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா அந்நாத வஸூதான -என்றும்

தைத்ரிய ஆரண்யகம் -2-7- எஷஹி ஏவ ஆனந்த யாதி -என்றும் கூறும்

—————————————————————————————————————————————–

350-தர்மம் ஜைமினி அத ஏவ-3-2-39-

தர்மம் ஜைமினி
தர்மம் முதளியவைகளே பலன் அளிப்பதாக ஜைமினி கூறுகிறார்
கண்களில் புலப்படாத அபூர்வம் -எதிர்காலத்தில் அந்த பலன்களை அளிக்கின்றது

அத ஏவ -அதற்க்கு ஏற்ப ஸ்ருதியும் உண்டே என்றவாறு
சாஸ்திரம் யஜேன ஸ்வர்க்க காமா -யாகம் மூலம் ஸ்வர்க்கம் கிட்டும் என்றதே –

—————————————————————————————————————————————-

351-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத் —3-2-40-

பூர்வம் து பாதராயண-பலனை அளிப்பதால் முந்தையதே -என்கிறார் பாதராயணர்-
து -பூர்வ பஷத்தை தள்ளுகிறது
முன் கூறியதே என்று பாதராயணர் -வியாசர் -திரு உள்ளம்

வாயு அக்னி குறித்து யாகம் பண்ணும் பொழுது
யஜ் -அந்த யாகங்களின் எஜமானனாக உள்ள தேவதைகளே பலன்களை அளிப்பதாக கூறும்

தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயவ்யாம் ஸ்வேதமால பேத பூதி காமோ வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா
வாயுமேவ ஸ்வேன பாக தேயேன உபதாவதி ச ஏவ எனம் பூதிம் கமயதி -என்று

இது போன்ற வாதங்களை அர்த்த வாதங்கள் என்று தள்ள இயலாது –
இதனை மருத்து கண்களுக்கு புலப்படாத அபூர்வம் என்பதை உருவாக்கி பலன் அளிப்பதாக சொல்வதை
பிரமாணிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பூர்வ பஷிகள் யஜேத என்பதை யஜ் ஏத என்று பிரித்து
யஜ் தவத்தை என்றும்
ஏத அபூர்வம் என்றும் சொல்வதை ஏற்க இயலாது

ஏத எனபது கர்த்தாக்கள் மூலம் இயற்றப்படும் கர்மங்களைக் குறிக்கும்

இதனை உணர்த்தவே-தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயுர்வை ஷேபிஷ்டா த்கேவதா -என்றன –
ஆயினும் ஆராதிக்கத் தகுந்தவனாக உள்ளவன் பரம புருஷனே –

அவனே அந்தர்யாமியாக இருந்து கொண்டு பலனை அளிக்கின்றான் என்பதை
நாராயண வல்லி -1-2-
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவனச்ய நாபி –
ததே வாக்னி தத் வாயு தத் ஸூர்ய தாது சந்த்ரமா -என்று கூறியது

ப்ருஹத் உபநிஷத்- 3-7-7- யோ வாயௌ திஷ்டன் யஸ்ய வாயு சரீரம் என்றும் –

3-7-5-யோ அக்னௌ திஷ்டன் -என்றும்

3-7-9–யோ ஆதித்யே திஷ்டன் -என்றும் சொல்லிற்று

ஸ்ரீ கீதையிலும் -7-21-
யோ யோ மாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தயா அர்ச்சிதும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ரத்தாம் தாம் ஏவ வித்தாம் யஹம் -என்றும்

7-22-ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்ய ஆராதன மீஹதே லபதே சே தத காமான் மயைவ விஹிதான் ஹிதான் -என்றும்

9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -என்றும்

7-23-தேவான் தேவ யஜோ யாந்தி மத் பக்தோ யாந்தி மாம்பி -என்றும்

9-25-யாந்தி மத்யாஜி நோபிமாம் -என்றும்
அரசன் தானே நேரடியாகவோ வேலையாட்கள் மூலமாகவோ மகிழ்ந்து பரிசு அளிப்பது போலே
பரமபுருஷன் இடம் இருந்தே ஸ்வர்க்கம் போன்ற போகங்களும் மோஷமும் கிட்டுகிறது என்று நிரூபணம் ஆயிற்று –

ஹேது வ்யபதேசாத் –யஜேத -யஜ தேவ பூஜாயாம் -பகவத் ஆராதனம் –
பரமாத்மாவே நேராகவும் -அக்னியாதி தேவர்கள் மூலமாகவும் பல பிரதன்
இவ்வாறு அதிகாரி இருக்க
அபூர்வம் என்று கல்பிக்க வேண்டியது இல்லை

அனைத்து அர்த்தவாதங்களும் பொருந்தி விடுகின்றன —

அடுத்த பாதத்தில் வித்யா பேதங்களில் வெவ்வேறு கல்யாண குணங்களைக் காட்டி அருளப் போகிறார் –

——————————————————

இப்பாத அர்த்தங்களை சுருக்கமாக ஸ்வாமி தேசிகன் காட்டி அருளுகிறார்

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

அருளிச் செய்து
இந்தக் குணங்களைக் கூறியது ப்ரஹ்ம வித்யா ரூபத்தில் பக்தி ஸித்திப்பதற்காக
யதார்த்தமான குணங்களைக் கொண்டு எம்பெருமானை உபாஸிக்கையில்
ரூப பேதங்கள் சொல்ல வேண்டி இருப்பதால்
அவற்றைப் பிற மதத்தவர் போலே வ்யவஹாரிகங்கள் என்று சொல்வது பொருந்தாது
என்பது ஸூத்ரகாரரின் திரு உள்ளம் –

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-