ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
—————————————————————-
மூன்றாம் அத்யாயம்-சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்
குற்றம் குறை அற்றவன் -அளவற்ற திருக் கல்யாண குணங்களை கொண்டவன்
தாழ்வு அற்றவன் -என்கிறார் இதில்-
இந்தப் பாதமே ஆரம்பிப்பது வீண் என்று
சங்கித்து
விடை தருகிறார் ஸ்வாமி
கீழே இரண்டு அத்யாயங்களாலே ப்ரஹ்மம் தனக்கு உரிய ஸ்வ பாவங்களுடன் விளக்கப் பட்டு இருக்க
இந்த சாதன அத்தியாயத்தின் நடுவிலே அதே ப்ரஹ்மம் உபய லிங்க பாதத்தில் மறுபடி இழுத்து விசாரிக்கப் படுவான்
என் எனில்
அறிய வேண்டும் ப்ரஹ்மத்தின் குண பேதத்தால் வித்யா பேதம் சொல்லுகையாலும்
ப்ரஹ்மமே ஸித்த உபாயம் ஆகையாலும்
அதன் மேல் மிக்க ஆசை ஆர்த்தி வேண்டும் என்பதற்காக இவ்விடம் ப்ரஹ்மம் பற்றிப் பேசுவதில் விரோதம் இல்லை என்பதாம்
அடுத்தபடி இப் பாதத்தின் நடுவில் ஜீவனின் ஸ்வப்னாதி அவஸ்தைகளை பற்றிப் பேசுவது எவ்வாறு பொருந்தும்
எனில்
ஸ்வப்ன பதார்த்தங்கள் யாவும் பரமாத்ம அதீனம் ஆகையாலும்
ஜீவனுக்கு முக்தி தசையிலும்-மிக்க பர வசமானவன் தான் நான் என்னும் ஞானம் உதிக்கைக்காகவும்
வைராக்ய பாதத்தில் கூறாமல் இங்கு சொல்வதில் விரோதம் இல்லை
இதற்கு முன் கர்மத்துக்கு ஏற்றவாறு போக்குவரத்து பிறப்பு முதலியவை சேர்வதால்
விழித்து இருக்கும் ஜீவனுக்குத் துக்கம் உண்டு எனச் சொல்லப் பட்டது
இப்போது ஸ்வப்ன அவஸ்தை விசாரிக்கப் படுகிறது என்று சங்கதி –
——————————————————————————-
முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-
இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-
மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –
நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-
ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-
ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –
ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –
எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
————————————————————————————————————————————-
முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன –
என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது-
ஸ்வப்னம் பற்றி ஸ்ருதி கூறுகிறது
கனவில் ரதங்களோ -குதிரைகளோ -நல்ல வீதிகளோ இல்லை
அப்போது இவற்றை நிர்மிக்க தடாகம் முதலியவற்றையும் படைக்கிறானே -அவனே கர்த்தா என்று கூறிய இடத்தில்
கனவில் பொருள்களைப் படைத்தவன் ஜீவனா பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான்
ஏன் எனில்
கனவு காணும் ஜீவன் -ப்ரகரணத்தில் -அவ்விடம் -இருப்பதால்
ஸ -என்று குறிப்பிடத் தக்கவனாய் இருப்பதாலும்
பிரஜாபதி வாக்கியத்தில் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப என்று
ஸத்ய ஸங்கல்பத்வம் சொல்லப்படுவதால்
என்று பூர்வ பக்ஷம்
இந்த பூர்வ பக்ஷம் மேல் வரும் இரண்டு ஸூத்ரங்களால் விளக்கப் படுகிறது –
312-சந்த்யே சிருஷ்டி ஆஹஹி–3-2-1-
கனவு நிலையில் உள்ளதைப் பற்றி
ப்ருஹத் உபநிஷத் -4-3-10-ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தா நோ பவந்தி அத ரதான்
ரதயோகான் பத –ஸ்ருஜதே ந தத்ர ஆனந்தா முத பிரமுதோ பவந்தி அத ஆனந்தான் முத
ப்ரமுத ஸ்ருஜதே ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்யோ பவந்தி அத வேசாந்தா
புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ச ஹி கர்த்தா-
சந்த்யே -ஸ்வப்னத்தில்
சிருஷ்டி -ரதாதிகளின் ஸ்ருஷ்டி யானது
ஆஹஹி-ஸ்வப்னம் காணும் ஜீவனால் செய்யப்படுவதாக வேதம் கூறுகிறது அன்றோ
ஸஹி கர்த்தா என்று ஜீவனையே கர்த்தாவாக வேதம் பேசுகிறது என்பதாம் –
சந்த்யம் -கனவில் உள்ள இடம்
ச ஹி கர்த்தா -அவனே செய்கிறான் –
படைப்பவன் ஜீவனா பரமாத்மாவா
பூர்வ பஷி ஜீவன் என்பார்-
—————————————————————————————————————-
313-நிர்மாதாரம் ச ஏகே புத்ராய ச–3-2-2-
ஏகே-சில வேதாந்திகள்
நிர்மாதாரம் ச -ஜீவாத்மாவையே ஸ்வப்ன பொருள்களைப் படைப்பவன் என்கிறார்கள்
அது எப்படி என்றால்
புத்ராய ச-கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்ற இடத்தில்
காம ஸப்தத்தாலே புத்ர பவ்த்ராதிகளும் சொல்லப் படுகின்றனர்
அவர்களை ஜீவன் படிப்பதனால் என்று கருத்து
கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்கிறது
விரும்பியவற்றை தூங்கும்பொழுது தானே படைக்கின்றான் –
பூர்வ பஷி
விரும்பியவற்றை -புத்ராதிகளையும் –
கட உபநிஷத் -1-5-சர்வான் காமான் சந்தத ப்ரார்த்தயஸ்வ
கட உபநிஷத்-1-23- -சதாயுஷு புத்திர பௌத்ரான் வ்ருணீஷ்வ-என்கிறது
இந்த பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –
மேலே சித்தாந்த பதில்
——————————————————————————————————————
314-மாயா மாத்ரம் து கார்த்ஸ்யேன அநபி வ்யக்த ஸ்வரூபத்வாத்–3-2-3-
து -பூர்வ பஷ வாதங்களை மறுக்கிறது –
ஸ்வப்னத்தில் காணும் ரதம் முதலியவை ஜீவனால் படைக்கப் பட்டவை அல்ல
மாயா -ஆச்சர்யம் -மித்யை அல்ல-
மாயா மாத்ரம் -ஸ்வப்னங்கள் காண்பவனால் மட்டும் அனுபவிக்கத் தக்கவையாய் -மற்றோருக்குப் பயன் படாததவையாய்
அந்தக் காலத்திலேயே அழிவதாயும் ஆச்சர்ய ரூபமாகவும் உள்ளன
இவை ஜீவனால் படைக்கக் கூடாதவை
ஏன் எனில்
ஜீவனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வமும் ஸம்ஸார தசையில் முற்றும் வெளிப்படாத நிலையில் நிலையில் இருப்பதால்
ஸங்கல்ப மாத்ரத்தால் படைப்பது என்பது பொருந்தாது –
காமம் காமம் புருஷ நிர்மி மாண -ஸ்ருதி -அப் புருஷனையே ஸ்ருஷ்டி கர்த்தா என்கிறது
தொடக்கத்தில் இவர் அனைவரும் உறங்குகையில் விழித்து இருக்கிறான் என்றும்
முடிவில் இவை அனைத்தும் அவன் இடத்திலே ஆஸ்ரயித்து இருக்கின்றன
அவனை யாரும் மீற முடியாது -என்றும்
பரம புருஷனுக்கே உரிய தர்மங்கள் சொல்லப் பட்டு இருப்பதால்
ஸஹி கர்த்தா என்ற தத் சப்தமும் பிரகரணத்தே பொருந்த -புருஷோத்தமனையே புலப்படுத்துகிறது –
காமம் காமம் -என்று ஸங்கல்பித்து ஸங்கல்பித்து என்றபடி –
ஜனகஸ்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27-
ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது –
இந்த ஆச்சர்யமே மாயா-சத்ய சங்கல்பன் அன்றோ –
கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –
இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்
மேலும் அதே வரியில் –
தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று
அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது
ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று
பரம புருஷனைப் பற்றிக் கூறியது
ஜீவனின் ஸத்ய ஸங்கல்பத்வம் சம்சார தசையில் ஏன் புலப்படவில்லை
என்பதற்கு விடை அளிக்கிறார் மேலே
———————————————————————————————————————–
அபஹத பாப்மத்வம் ஜீவனுக்கு சம்சாரத்தில் இல்லாத காரணம்
315-பராபித்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயௌ –3-2-4-
பரம புருஷனின் சங்கல்பம் காரணமாகவே மறைக்கப் பட்டு சம்சார பந்தம் ஏற்படுகின்றது
பராபித்யா நாத் -பரமாத்மாவின் சங்கல்பத்தாலேயே
து -பூர்வ பஷம் நிரசனம்
அஸ்ய -இந்த ஜீவனின் ஸ்வா பாவிகமான ரூபம்
திரோஹிதம்-மறைந்து உள்ளது
ததோ ஹி -அந்த ஸங்கல்பத்தாலேயே
அஸ்ய பந்த விபர்யயௌ –இந்த ஜீவனுக்கு ஸம்ஸாரமும் மோக்ஷமும் உண்டாகின்றன
தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச
அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்
2-8-1-பீஷாச்மாத்வாத பவதே -என்றும் கூறும்-
கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்
பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன
ஸத்ய சங்கல்பம் மறையும் காரணத்தைக் கூறுகிறார் –
—————————————————————————————————————————
316-தேக யோகாத்வா ச அபி –3-2-5-
ஜீவனின் ஸ்வரூப மறைவு உடல் சேர்க்கையின் பொழுது உண்டாகிறது –
ஸூஷ்மம் நிறைந்த பிரக்ருதியின் தொடர்பால் –
ஆக ஜீவன் படைக்க சக்தன் அல்லன்
வா -விகல்பம் என்னும் பொருளில் வந்தது
ச அபி –-சங்கல்பத்தின் மறைவும்
தேக யோகாத்-தேவ மனுஷ்யாதி -அசித் -சம்பந்தத்தாலும்
பிரளய காலத்தில் நாம ரூப விபாகங்கள் அற்ற ஸூஷ்ம தசையில் உள்ள அசித்துடன் சம்பந்தத்தாலும் உண்டாகிறது
ஆகவே மறைந்த ஸங்கல்பம் உள்ள ஜீவன் ஸ்வப்ன பதார்த்தங்களை படைபவன் அல்லன்
கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-
—————————————————————————————————————————
317-ஸூ கச்ச ஹி ஸ்ருதே ஆச ஷதே ச தத்வித —3-2-6-
கனவுகள் நற்பலன் தீய பலன்களை உணர்த்தும் ஸ்ருதிகளும் அப்படியே சொல்லும்
சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —
ஸூ கச்ச ஹி ஸ்ருதே –எக்காரணத்தால் ஸ்வப்னங்கள் எதிர்கால ஸூக துக்க ஸூசகங்கள் -என்று ஸ்ருதியில் கூறப்படுகிறது
தத்வித —ஸ்வப்ன அத்யாயம் பற்றி அறிந்தவர்கள்
ஆச ஷதே ச –ஸூ சகம் என்று கூறினார்களோ -அதனாலே ஸ்வப்ன பதார்த்தங்கள் ஜீவனால் படைக்கப் படுபவை அல்ல
அவை ஜீவனுக்கு வசப்பட்டு இருந்தால் நல்லதையே படைப்பான் -தீயவற்றைப் படைக்க மாட்டான்
காம்யமான கர்மங்கள் நிறைவேற வேண்டுபவன் கனவில் அழகிய ஸ்த்ரீயைக் கண்டால் ஐயமும்
கருத்த பல்லும் கருத்த நிறமும் உள்ள மனிதனைக் கண்டால் தோல்வியும் அடைகிறான் என்று சுருதி பலவற்றைக் காட்டுகிறது –
எனவே கனவும் சர்வேஸ்வரன் நியமனம் என்றதாயிற்று-
—————————————————————————————————————————–
இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-
கீழ் ஸ்வப்ன நிரூபனம் -இதில் ஸூஷ்ப்தி தசை பற்றி விசாரம்
318-தத் பாவ நாடீஷூ தத் ஸ்ருதே ஆத்மநி ச –3-2-7-
ஆழ்ந்த உறக்க நிலை -கனவுகள் அற்ற -ஸூ ஷுப்தி நிலை -நாடிகளில் நுழைந்து –
சாந்தோக்யம் -8-6-3-யத்ர ஏதத் ஸூ ப்த சமஸ்த சம்ப்ரசந்தம ஸ்வப்னம் ந விஜா நாதி ஆ ஸூ ததா நாடீஷூ ஸூ ப்தோ பவதி -என்றும்
ப்ருஹத் உபநிஷத் -2-1-19-அத யதா ஸூ ஷூப்தோ பவதி யதா ந கஸ்ய ச ந வேத ஹிதா நாம நாட்யோ
த்வாசப்ததி சஹஸ்ராணி ஹ்ருதயாத் புரீததம் அபி பிரதிஷ்டந்தே தாபி பிரத்யவஸ்ருப்ய புரீதாதி சேத -என்று
ஹிதா நாடிகள் என்று கூறப்படும் 74000 நாடிகள் இதயத்தில் நின்றும்ன் புறப்பட்டு
புரீதத் என்னும் இடத்தை அடைந்து ஜீவன் இவைகளால் சூழப் பட்டு உறங்குகின்றான்
சாந்தோக்யம் -6-8-1- யத்ர ஏதத் புருஷ ஸ்வபுதி நாம சதா நாம்ய ததா சம்பன்னோ பவதி -என்று
ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவன் பரமாத்வா உடன் சேர்ந்து உள்ளான் -என்கிறது –
ஆக ஜீவன் உறங்கும் இடங்கள் நாடிகள் புரீதத் ப்ரஹ்மம் மூன்றும் கூறப் பட்டன
மூன்றும் வெவ்வேற இடங்கள் இல்லை
மாடியில் கட்டில் மேல் -மெத்தை மேல் உறங்குகிறான் போலே –
நாடி மாடி /புரீதத் -கட்டில் /பரமாத்மா மெத்தை -போலே –
மூன்றும் விகல்பம் என்பது பூர்வ பக்ஷம்
இம்மூன்றும் ஒன்றோடு ஓன்று அபேக்ஷை இன்றியே ஸ்தானமாக சுருதியில் சொல்லப்பட்டு இருப்பதால்
இவை தனித்தனி ஸ்தானம் என்பர்
இத்தை நிரஸிக்கிறார் இதில்
ப்ரஹ்மமே ஸாஷாத்தாக படுக்கை ஸ்தானத்தில் இருப்பதால் மூன்றும் சேர்ந்து ஸ்தானம் ஆகும்
விகல்பம் பொருந்தாது என்பதாம் –
————————————————————————————————————————————–
319-அத பிரபோத அஸ்மாத் —3-2-8-
அஸ்மாத் —இந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
பிரபோத -விழித்து எழுவதாக ஸ்ருதி
அத -இக்காரணத்தாலேயே பொருந்துகிறது
ஸ்ருதி -ஸத் -ப்ரஹ்மத்தின் இடம் இருந்து வருபவன் அங்கு இருந்து வந்ததை உணர வில்லை என்கிறது –
ப்ரஹ்மத்திடம் உறங்குவதால் அங்கே இருந்தே விழித்து எழுதல் எனபது பொருந்தும்
சாந்தோக்யம் -6-10-2-சத ஆகம்ய ந விது சதா ஆகச்சாமஹே-என்றபடி
ப்ரஹ்மத்திடம் உறங்கி விட்டு வந்த போதிலும் தாங்கள் அவ்விதம் செய்வதை ஜீவன் அறிவதில்லை
————————————————————————————————————————————–
மூன்றாவது அதிகரணம் -கர்மாநுஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் –
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது
ஸூஷுப்தனான ஜீவனே விழித்ததும் எழுந்து கொள்கிறானா
அல்லது வேறு யாராவதா என்று சம்சயம்
ஸூஷுப்தனாயும் –எல்லா உபாதைகளில் இருந்து விடுபட்டவனாயும் -ப்ரஹ்ம சம்பாத்தி உள்ளவனுமான
ஜீவன் முக்தன் போன்றவனாதலால்
பழைய கர்ம சம்பந்தம் இல்லாமல் உறங்கியவனை விட்டு வேறான ஜீவனே எழுந்து கோயில்கிறான் என்று பூர்வ பக்ஷம் –
சித்தாந்தம்
உறங்கினவனுக்கு கர்மாவை அழிக்க வல்ல ப்ரஹ்ம ஞானம் இல்லாமையாலும்
தனது கர்ம பலன் தன்னாலே அனுபவிக்கப்பட வேண்டியதாலும்
தானே உறங்கி எழுந்தேன் என்ற நினைவாலும்
முன்பு இருந்த படியே புலியாகவோ சிங்கமோ எப்படி இருந்ததோ அதே போலவே ஆகின்றன என்ற ஸப்தத்தாலும்
முக்தி சாதனத்தை அனுஷ்ட்டிக்க விதிக்கும் ஸாஸ்த்ர நியமனம் வீணாகி விடுமே என்பதாலும் –
உறங்கினவனே எழுந்து கொள்கிறான் என்று சித்தாந்தம் –
320-ச ஏவது கர்மானு ஸம்ருதி சப்த விதிப்ய-3-2-9-
கர்மம்– ஞாபகம் –வேத வரி –விதிகள் –ஆகிய நான்கு காரணங்களாலும் அதே ஜீவனே விழித்து எழுகிறான்
உண்மையான ஞானம் வரும் வரை கர்மங்களின் பலன்களை அனுபவித்தே தீர வேண்டுமே
சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா
தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி ததா பவந்தி -என்று
புலி சிங்கம் ஓநாய் பன்றி புழு பறவை ஈ கொசு -அதே உருவில் எழுந்து வருகிறான்
சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ
இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி -என்றும்
முக்தனைப் பற்றி –
சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்
7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும்
7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –
—————————————————————————————————————————————
நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் –
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-
இதுவரை ஜாக்ரத் -ஸ்வப்ன -ஸூஷுப்தி -தசைகளை விசாரித்து –
ஸூஷுப்திக்கு சமமான மூர்ச்சா நிலை விசாரிக்கப்படுகிறது
முதல் இரண்டிலும் ஞானம் உள்ள தசைகள்
பின் இரண்டிலும் ஞான லோப தசை
321- முக்தே அர்த்த சம்பதி பரி சேஷாத்–3-2-10-
மூர்ச்சையும் மரணமும் ஒன்றா -வெவ்வேறா -சங்கை
இந்திரிய வியாபாரங்கள் இல்லை என்பதால்
இரண்டும் ஒன்றே பூர்வ பக்ஷம்
மயக்கம் மூர்ச்சை மற்ற மூன்று நிலைகளுக்குள் சேர்ந்ததே என்பர்
மரணத்தின் பாதி நிலையே -ஞானம் இல்லாததால் விழிப்போ கனவோ இல்லை
அத்தைக் கண்டிக்கிறார்
முக்தே -மூர்ச்சை அடைந்தவனுடைய நிலை
அர்த்த சம்பதி -அரை மரணம் அடைந்த நிலையே
பரி சேஷாத்–ப்ராணாதி சர்வ வியாபாரங்களும் இல்லாமையால் ஸ்வாபமும் இல்லை –
ஜாக்ர அவஸ்தையும் இல்லை -மீண்டும் எழுந்து வருவதால் மரண நிலையம் இல்லை
தோற்றத்தின் வேறுபாட்டால் பிராணன் ஸூஷ்மமாய் இருப்பது தெரிவித்தாலும் மூர்ச்சை அரை மரண நிலையே –
ஆழ்ந்த உறக்கம் இறந்த நிலையும் இல்லை -மரணத்தின் பாதி நிலையே பிராணன் இருப்பதால் என்றவாறு
இந்த நான்கு அதிகரணங்களும் ஒரு பெட்டி
இதில் ஜீவனுக்கு நான்கு நிலைகளிலும் உள்ள துக்கங்கள் காட்டப்படுகின்றன
இனி ப்ரஹ்மம் ஜாக்ராதிகள் ஆகிய எந்த நிலையிலும் தோஷம் அற்றது என்றும்
தானே நிர்த்தோஷமான கல்யாண குணம் மிக்கது என்றும்
நான்கு அதிகரணங்களாலும் விளக்குகிறார் –
—————————————————————————————————————————————–
ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் –
அத்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-
322-ந ஸ்தாநத அபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ர ஹி–3-2-1-
அகில ஹேய நீயகத்வ -சமஸ்த கல்யாண ஏக குணங்கள் கொண்டவன் –
ப்ரஹ்மத்தை அடையும் பொருட்டு சம்சார விரக்தி பிறந்த பின்பு அவனது உபய லிங்கத்வம் விளக்குகிறார் –
மிகுந்த வைராக்யம் சித்திக்கவே மரண அவஸ்தை நிரூபணம் கீழ்
இனி பரம புருஷார்த்த ஆற்வம் பெருக்க உபய லிங்கத்வம் இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது
ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-8-சம்போக பிராப்தி இதி சேத் ந வைசேஷ்யாத்–என்று
அந்தராத்மாவாக இருப்பது உபாசகன் தன்னை அடைய -சுக துக்கங்களை அனுபவிக்க இல்லை –
ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-6-ஸ்தித்யத நாப்யாம்-ச -இருப்பதாலும் உண்பதாலும் -ஒரு மரம் இரண்டு பறவைகள் -முண்டக உபநிஷத்
ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-5–தேஹயோகாத்வாத் -தேக சம்பந்தம் இருப்பதாலும் –
ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய ப்ருதிவ்யாம் திஷ்டன் -பூமியில் இருப்பதாலும்
ப்ருஹத் உபநிஷத் -3-7-22–ய ஆத்மநி திஷ்டன் -ஆத்மாவில் இருப்பதாலும்
ப்ருஹத் உபநிஷத்-3-7-18- -ய சஷூஷூ திஷ்டன்
ப்ருஹத் உபநிஷத்-3-7-23- -ய ரேதஸ் திஷ்டன் -ரேதசில் இருப்பதாலும் –
தோஷங்கள் தட்டும் என்பர் பூர்வ பஷி —
ஜீவனைப் போலே அவனுடைய அந்தர்யாமியான பர ப்ரஹ்மத்துக்கும் ஜாக்ரத் தசையில்
ஸ்தானம் முதலியவற்றால் தோஷங்கள் ஸம்பவிக்குமா ஸம்பவிக்காதா என்று சம்ஸயம்
சர்வ அவஸ்தைகளிலும் ஸ்திதி சொல்லப்படுவதால் சர்வ தோஷங்களும் சம்பவிக்கும்
என்று பூர்வ பக்ஷம்
அதை நிராகரிக்கிறார் –
ஸ்தாநத அபி –பிருத்வீ முதலியவற்றில் அந்தர்யாமியாய் இருந்தாலும்
பரஸ்ய-ப்ரஹ்மத்துக்கு
ந –முன் கூறிய தோஷங்கள் வருவது இல்லை
ஸ்தான ப்ரயுக்தமான தோஷம் ஜீவனுக்கு வருவது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லை
சர்வத்ரஹி உபயலிங்கம்–ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் எங்கும்
நிகில தோஷங்கள் அற்றவன் என்றும்
கல்யாண குணங்களுக்கு உறைவிடமானவன் என்றும்
உபய லிங்கமாக பர ப்ரஹ்மம் பேசப்படுகிறது
ஆதலின் தோஷம் சம்பவிக்காது –
அபஹத பாப்மா இத்யாதி -யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித் போன்ற சுருதிகள்
யோ மாம் அஜம் அநாதிஞ்ச பர பராணம் -போன்ற ஸ்ம்ருதிகளும்
மேலும் பலவும் உண்டே –
சாந்தோக்யம் -8-1-5-அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84/85–
சமஸ்த கல்யாண குணாத் மகோ சௌ ஸ்வ சக்தி லேசோத்ருத பூத வர்க்க
தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைகராசி
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதய சந்தி பராவரே சே-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51-சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமபதம் –
தோஷம் அற்றவன் என்றதாயிற்று
————————————————————————————————————————————-
323-பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத் வசநாத் –3-1-12-
பேதாத் இதி சேத் –இயற்கையில் பாபம் அற்ற ஜீவனுக்கு சரீர சம்பந்தத்தால் ஏற்படும் அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் ஏற்படுவது போல்
பரமாத்மாவுக்கும் பிருத்வீ முதலிய சரீர சம்பந்த அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் சம்பவிக்கலாமே என்னில்
ந -வாராது
ப்ரத்யேகம் அதத் வசநாத் –ஒவ்வொரு பர்யாயத்திலும் ஏஷ ஆத்மா அந்தர்யம் அம்ருத –என்று
தோஷம் அற்றவன் என்று சொல்வதால்
சரீர சம்பந்தம் மட்டும் தோஷத்துக்கு காரணம் ஆகாது
ஜீவனுக்கோ -பராபித்யா னுத்து திரோ ஹிதம் என்றபடி பரமாத்மாவின் ஸங்கல்பத்தாலே கர்மாதீனமான
ஞான சங்கோசத்துக்குக் காரணமான சரீர சம்பந்தம் னேஏற்படுவதால் தோஷங்கள் உண்டாகின்றன என்பதாகும் –
சரீர தொடர்பு கூறும் இடங்களிலும் பரமாத்மா தோஷம் அற்றவன் –
ப்ருஹத் உபநிஷத் –
3-7-3-ய ப்ருதிவ்யான் திஷ்டன் –
3-7-23- ய ஆத்மா நி திஷ்டன் -இடங்களிலும்
ச தே ஆத்மா அந்தர்யாமி அம்ருத -தோஷம் அற்று தானாகவே -கர்மம் அடியாக அன்று -உள்ளான்
ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-4-பராபித்யா நாத் து திரோஹிதம் -ஸூ த்ரத்தில் நிரூபிக்கக் கண்டோம்
அசேதனப் பொருள்களும் சில கால கட்டத்தில் அவனது சங்கல்பத்தின் படி இன்பம் பயக்கும் படியைக் காண்கிறோம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48-
நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச –
கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே –
தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி
ப்ரஹ்மத்துக்கு உடல் தொடர்பு லீலைகளுக்கு மட்டுமே இருக்கும்-
————————————————————————————————————————————
324-அபி ச ஏவம் ஏகே –3-1-13-
முண்டக உபநிஷத் -3-1-1-
த்வா ஸ்பர்ணா சயுஜா சகாய சமா நம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயரன்யே பிப்பலம் ச்வாத்வத்தி
அனச்னன் அந்ய அபிசாகசீதி -என்றும்
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி –என்றும் உண்டே
அபி ச –மேலும்
ஏகே -சில வேதாந்திகள்
ஏவம்-ஒரே சரீரத்தில் உள்ள ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் தோஷத்தையும் அது இல்லாமையையும் கூறி
நியமனம் ஐஸ்வர்யம் பிரகாஸம் =போன்றவற்றை ப்ரஹ்மத்துக்கு வெளிப்படையாக ஸ்தாபிக்கின்றனர்
கர்மபத்தை அனுபவியாமை ப்ரஹ்மத்துக்கு மட்டும் எவ்வாறு கூடும் என்ற ஆஷேபம் எழ
அதற்கு விடை அருளுகிறார்
கர்ம வசப்படுவானோ பரம் பொருளும் என்றால்
ரூபம் அற்றவன் என்கிறது அடுத்த ஸூத்ரத்தில்-
———————————————————————————————————————————–
325-அரூபவதேவ ஹி தத் ப்ரதா நத்வாத் —3-2-14-
தத் அரூபவதேவ ஹி –ஜீவனைப்போலே கர்ம வச்யத்வம் இல்லாமையால்
ஸமஸ்த அந்தர்யாமியாக இருந்தாலும் அரூபத்வமே இவனுக்கு
ஏன் எனில்
ப்ரதா நத்வாத்–நிர்வாஹனானமையால் -இவனே ப்ரதானன்
இவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ -நாம ரூப காரியங்களின் துக்காதிகளின் ஸ்பர்சம் இல்லாதவன் என்றதாயிற்று –
கர்மம் அடியாக தேவாதி மனுஷ்ய தேகம் எடுப்பது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லையே –
உள்ளே புகுந்தாலும் நாம ரூபங்களால் பாதிக்கப் படுவதில்லை
சந்தோக்யம் -8-14-1-ஆகாசோ வை நாம ரூபாயோ நிர்வஹிதா தே யதந்த்ரா தத் ப்ரஹ்மம்-
அந்தர்யாமியாக இருந்தும் தோஷம் தட்டாமல் உள்ளான்-
ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு விதி வஸத்வம் நீங்குகிறது என்னில்
விதி இரண்டு விதம்
அறியாததை அறிவிப்பது
ஒன்றில் ஈடுபடாதவனை ஈடுபடுத்துவது
இவனோ ஸர்வஞ்ஞன் -ஸர்வ நியந்தா
எனவே அஞ்ஞானமோ பராதீனத் தன்மையும் இல்லாத ப்ரஹ்மத்திடம் விதிகள் சக்தியை இழந்து
அவனது விசேஷணமான ஜீவன் இடத்தில் பயன் உள்ளவை ஆகின்றன
ஆகவே ப்ரஹ்மம் உபய லிங்கமே என்றதாயிற்று –
இனி ஸத்யம் ஞானம் -ஸ்ருதியில் விசேஷம் அற்ற -ப்ரகாஸ மாத்ர -ப்ரஹ்மமே சொல்வதால்
உபய லிங்கம் எப்படிக் கூறலாம் என்ற சங்கைக்கு பதில் அருளுகிறார் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -1-1-ஒளி ரூபம் என்றும் –
ப்ருஹத் உபநிஷத் –நேதி நேதி-இல்லை இல்லை -என்பதால்
கல்யாண குணங்கள் உள்ளவை எனபது எவ்வாறு என்றால்
————————————————————————————————————————————-
326–பிரகாசவத் ச அவையர்த்தாத் —3-2-15-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்ற சுருதி பொய்யாகக் கூடாது என்பதால்
ஒளி மயமானது ப்ரஹ்மம் எனபது போலே
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் இத்யாதி வாக்கியங்களும் ச பலமாக வேண்டுமே
சத்ய சங்கல்பன் ஜகத் காரணன் அந்தர்யாமி அகி ஹேய ப்ரத்யநீகத்வம் அனந்த கல்யாண குண சாகரம்
என்ற ஸ்ருதி வாக்யங்களையும் ஏற்க வேண்டும்
—————————————————————————————————————————————
327-ஆஹ ச தந்மாத்ரம்–3-2-16–
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மம் என்று ஒளி மயம் என்றது மற்றையவற்றை மறுக்க வில்லை –
நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -4-2-4- எதனால் என்பதை மேலே பார்ப்போம்
————————————————————————————————————————-
328-தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-3-2-17-
தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-அதோ என்று முற்றிலும் –
முழு வேதாந்தமும் நிரஸ்த நிகில தோஷனாய்
கல்யாண குணகரனாய் உள்ள உபய லக்ஷணங்களையும் காட்டுகிறது –
உபய லிங்கத்வம் அநேக ஸ்ருதி ஸ்ம்ருதிகளும் சொல்லுமே –
ஸ்வேதாஸ்வதார உபநிஷத் –
6-7-தம் ஈஸ்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்
6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்
6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருஸ்யதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்
முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப -என்றும்
தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்
தைத்ரிய ஆனந்த வல்லி-
2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்
2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந-என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்
ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – –
10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் -என்றும் –
10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் -என்றும்
9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூயதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்
15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47–
சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ
க்லமதந்த்ரீ பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-என்றும்
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்தும்
உபய லிங்கங்கள் நிறைந்தவன் என்பதை பல இடங்களிலும் சொல்லிற்றே –
———————————————————————————————————————————–
329-அத ஏவ ச உபமா சூரியகாதிவத்–3-2-18-
ஆகவே நீரில் -கண்ணாடியில் -பிரதிபலிக்கும் சூர்யன் போன்றவை
பர ப்ரஹ்மத்துக்கு உபமானமாக சொல்லப் பட்டன
ப்ருத்வீ முதலிய ஸ்தானங்களில் ஏற்படும் தோஷம் உபய லிங்க விஸிஷ்ட ப்ரஹ்மத்திடம்
ஏற்படாத காரணத்தாலேயே இந்த த்ருஷ்டாந்தங்கள்
யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144-
ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான்
ஏக ஏவ ஹி பூதாத்மா போதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் –
ஒரே ஆகாசம் எவ்வாறு குடம் முதலியவற்றில் வெவ்வேறாகத் தோன்றுகிறதோ
ஒரே ஸூர்யன் நீர் நிலைகளில் வெவ்வேறாகத் தோன்றுகிறானோ
அப்படியே ஒருவனே என்று ஸ்தான ப்ரயுக்தமான விரிதலோ சுருக்கமா -இல்லாமல் –
தோஷம் தட்டாத ஒரே தன்மையுடன் பல பொருள்களில் ப்ரஹ்மம் இருப்பான் என்கிறது-
———————————————————————————————————————————–
330-அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம் —3-2-19-
நீரில் உள்ளது போலே பொய்யானவன் அல்லவே
ப்ரஹ்மம்-உண்மையாகவே உள்ளான் –
ப்ருஹத் உபநிஷத் –
3-7-3- ய பிருதிவ்யாம் திஷ்டன் -என்றும் –
3-7-4- ய அப்ஸூ திஷ்டன் -என்றும் –
3-7-22-ய ஆத்மநி திஷ்டன் -என்றும்
தோஷம் தட்டாது என்பதற்கு சொல்லிய திருஷ்டாந்தம் உண்மையாக இருப்பவன் ஆகையால்
பொருந்தாது என்பர் பூர்வ பஷி
து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது
அம்புவத் அக்ரஹணாத் –தண்ணீரில் உண்மையாக ஸூர்யன் க்ரஹிக்கப் படாதது போலே
ப்ருத்வீ முதலியவற்றில் ப்ரஹ்மம் க்ரஹிக்கப்பட வில்லை
ஆதலால்
ந ததாத்வம் —ஸூர்யனிடம் ஜலகத தோஷம் தட்டாதது போல்
ப்ரஹ்மத்தின் இடமும் இவற்றின் தோஷம் தட்டாது என்று சொல்ல முடியாது
ஏன் எனில்
அவற்றில் உண்மையாகவே ப்ரஹ்மம் இருப்பதால்
என்று பூர்வ பக்ஷம்
—————————————————————————————————————————————-
331–வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச –3-2-20-
சிறிய நீர் நிலை பெரிய நீர் நிலை பிம்மம் தோன்றுவது போலே
சுருக்கமும் விரிவும் இல்லாதவன் என்பதற்கே திருஷ்டாந்தம்
ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் -வெற்றிடம் குடங்களில் தனித் தனியே உள்ளது போலே
ஜலதாரேஷூ இவ அம்சுமான் -நீர் நிலைகளில் சூரியன் போலே பலவற்றிலும் உள்ளான்-
அந்தர்பாவாத் -ப்ருத்வீ முதலான விஷம ஸ்தானங்களில் உள்ள பரமாத்வாவுக்கு -அவற்றினுள் இருப்பதாலேயே
வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் -நீர் நிலைகளில் ஸூர்யனை உபமானமாகக் காட்டியமையால் சுருக்கமும் விரிவும் விலக்கப் படுகின்றன
இது எவ்வாறு தோன்றுகிறது என்றால்
உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச -இரண்டு உதாரணங்களும் அப்போதே பொருந்துவனவாகும்
குடாகாசம் நீர் நிலைகளில் உண்மை இல்லாத ஸூர்யனையும் காட்டியது
பரமாத்மாவுக்கு ப்ருத்வீ யாதிகளின் தோஷம் ஒட்டாது என்று காட்டவே
இரண்டு உதாரணங்கள் காட்டி ஒரு அம்சம் ஒத்து ஒத்து இருப்பதைக் காட்டியவாறு
இம்மாணவன் சிங்கம் என்றால் க்ரூரத்தன்மைகளில் ஒன்றை மட்டும் காட்டவே
உவமையில் ஏதேனும் ஒரு அம்சத்தில் தான் ஒற்றுமை காட்ட வேண்டும்
ப்ருஹத் உபநிஷத் -2-3-1-
த்வே வாவா ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ச -என்று
ஸ்தூல அஸ்தூல ரூபங்கள் இரண்டும் உண்டு என்று சொல்லத் தொடங்கி–
2-3-6-தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மஹாரஜநம் வாச -என்று
திவ்யமான ரூபம் உள்ளது என்று சொல்லி தொடர்ந்து –
அதாத ஆதேச நேதி நேதி இதி நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரம் அஸ்தி என்று
இதி -என்றது –மூர்த்தம் அமூர்த்தம் ஸூ ஷ்மம் ஸ்தூலம் போன்றவை சொல்லி
உடனே ந -என்று இவற்றை நிராகரித்து
ப்ரஹ்மம் மட்டுமே உண்மை மற்றவை அவன் மேல் ஏறிட்டுக் கூறப்பட்டன என்று சொல்லி
தோஷம் அற்றவன் என்று எவ்வாறு சொல்ல முடியம்
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் தடுக்கப் படுகிறதே
உபய லிங்கத்வவம் அன்று என்று தோற்றும்
என்பர் பூர்வ பஷிகள்
அதற்கு பதிலாக அடுத்த ஸூத்ரம் –
——————————————————————————————————————————————-
332-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய–3-2-21-
முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து
அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் –
அத்தையே நிராகரித்தது –
பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி -முன் தொடக்கப்பட்ட ஸ்தூல ஸூஷ்ம ரூபமான பிரபஞ்சம் மட்டும்
ப்ரஹ்மத்தின் ரூபம் அன்று என்றே –
அதாத ஆதேசோ நேதி நேதி-என்ற சுருதியில் விளக்கப் படுகிறது
தாதா ப்ரவீதி ச பூய-முன் சொன்னதைக் காட்டிலும் பூயஸ்த்வத்தை -பெருமையை –
வாக்ய சேஷம் சொல்லுகிறது
நேதி நேதி என்று தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-
ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை
சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது
பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் –
இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்
ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்ம வச்யன் இல்லை –
அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –
ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே
நேதி நேதி என்கிறது
சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்
இதி ந -இது முன் சொன்ன ப்ரப்ரகாரம் அன்று ப்ரஹ்மம்
நேதி நேதி என்று குறிப்பிட்ட ப்ரஹ்மத்தை விட்டு
அந்யத் நஹ் யஸ்தி-வஸ்து ஸ்வ ரூபத்தாலும் குணத்தாலும் உயர்ந்தது வேறு இல்லை என்று பொருள்
ஸத்யம் என்பது ப்ரஹ்மத்தின் பெயர்
ஏன் அப்பெயர் வந்தது என்னில்
ப்ராணனுடன் கூடவே சஞ்சரிப்பதாலும்
ஆகாசம் போல் ஸ்வரூப விகாரம் பெறாததால் ஜீவன் ஸத்யம் எனப்படுகிறான்
ஸ்வரூப விகாரமும் ஞான சங்கோச ஸ்வபாவ விகாரமும் இல்லாததால்
ப்ரஹ்மம் தேப்ய -ஜீவர்களைக் காட்டிலும் அதிக ஸத்யன்
ஆகையால் வேறு ப்ரமாணங்களால் அறியாத ப்ரஹ்மதுக்கு மூர்த்த அமூர்த்த ரூபமான பிரபஞ்சத்தை
பிரகாரமாக உபதேசிகையாலே உபய லிங்கமே ப்ரஹ்மம்
ஆகவே திரும்ப திரும்ப பிரகார விசேஷமே உபதேசிக்கப் படுகையாலே
நேதி நேதி என்பதன் மூலம் முன் ப்ரக்ருதமான அளவு மட்டும் நிஷேதிக்கப் படுகிறது
மேல் ஒரு ஆசங்கை
உண்மையில் ப்ரத்யக்ஷத்தால் நிர்விசேஷ ப்ரஹ்மம் மட்டுமே க்ரஹிக்கப் படுகிறது
அதற்கு வேறுபட்டதும் பிராந்தியால் ஏற்படுவதுமான விசேஷ ரூபத்தை
நேதி நேதி என்று மறுக்கிறது என்று கொள்ளலாமே என்னில்
இதற்கு மறுப்புக் கூறுகிறார் மேல் –
———————————————————————————————————————————————–
333-தத் அவ்யக்தம் ஆவ ஹி –3-2-22-
தத் -அந்தப் ப்ரஹ்மம்
அவ்யக்தம் -சப்தம் தவிர்த்த எந்தப் ப்ரமாணத்தாலும் புலப்படுவது அன்று
ஆஹஹி -ஸ்ருதி அவ்வாறே சொல்கிறது
சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் என்பதை
கட உபநிஷத் -6-9-ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச ந ஏ நம் -என்றும்
முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்கிறதே –
மேலும் ஒரு ஸூத்ரத்தால் உணர்த்துகிறார் –
———————————————————————————————————————————————-
334-அபி சம்ராதனே ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–3-2-24-
பக்தி என்னும் உபாசனம் கொண்டே ப்ரஹ்மத்தை அறிய -ப்ரஹ்மத்துக்கு மகிழ்வு ஏற்ப்படுத்தி –
உணர இயலும் என்று ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும் –
முண்டக உபநிஷத் -3-2-3-
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே
தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்
3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்
ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்
11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும்
ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே
அபி ச -மேலும்
சம்ராதனே -மிகவும் ப்ரீதி கரமான உபாஸனம் இருந்தால் பகவானின் ஸாஷாத் காரம் ஸம்பவிக்கும்
வேறு பிரகாரங்களாலே ஸம்பவிக்காது
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–ஸ்ருதி ஸ்ம்ருதிகள் இருக்கிற படியால் என்றபடி –
சம்ராதனே -ஆழ்ந்த பக்தி என்னும் உபாசனத்தையே ஸூத்ரத்தில் குறிக்கப் படுகிறது –
இதுவே அவனுக்கு மகிழ்வு ஏற்படுத்தும் என்றதாயிற்று-
———————————————————————————————————————————————-
335-பிரகாசாதி வத் அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத் –3-2-25-
ஞான ஆனந்த மயம் போலேவே மூர்த்தமாகவும் அமூர்தமாகவும் உள்ள பொருள்களை உடலாகக் கொண்ட
ப்ரஹ்மம் என்றே யோகிகள் இடைவிடாத உபாசனத்தால் உணர்ந்து காண்கிறார்கள்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்கிறது –
இதனாலும் மூர்த்த அமூர்த்த ரூபத்துடன் கூடியமை தடுக்கப் படவில்லை –
வாமதேவன் கூறினார் -நான் மனுவாய் இருந்தேன் -பின்பு ஸூர்யன் ஆனேன் –
அத்தகையவருக்கு பக்தியோகம் என்னும் கர்மாவினால்
பிரகாசாதி வத் ச -தர்சனம் முதலியவை உண்டானவோ
அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத்–அவர்களின் ப்ரஹ்ம ஸ்வரூபம் குணம் இவை பற்றிய தர்சனத்தில்
ஞானம் ஆனந்தம் முதலிய ஸ்வரூபம் போலவே
மூர்த்தம் அமூர்த்தம் என்னும் ரூபமும் விசேஷம் இன்றி இடம் பெற்றதே
ஜகத் நஸ்வரத் தன்மைக்கு மட்டும் ப்ரஹ்ம குணத்வம் தடுக்கப் படுகிறது என்ற விசேஷம் ஏதும் இல்லை
ஆகவே
மூர்த்த அமூர்த்த ரூப விசிஷ்டம் ப்ரஹ்மம் என்பதற்குத் தடையில்லை என்பதாம் –
———————————————————————————————————————————————-
336- அதோ அனந்தேன ததாஹி லிங்கம்–3-2-26-
அனந்தேன -எல்லையில்லாத கல்யாண குண கணங்களுடன் சம்பந்தம்
அதோ –கூறிய காரணங்களால் நிலை யாயிற்று
ததாஹி -அப்படி இருந்தாலே
லிங்கம்-உபய லிங்கம் ப்ரஹ்மம் என்பது பொருந்தும்
மேலே கூறியவற்றால் உபய லிங்கமாகவே உள்ளது என்று காட்டி அதிகரணத்தை நியமிக்கிறார்
அளவற்ற திருக் கல்யாணங்களை கொண்டதாயும்
அகில ஹேய ப்ரத்ய நீகனாயும்ந ப்ரஹ்மம் உண்டு
என்று நிரூபித்தாயிற்று-
உபசர்க அபவாத நியாயம் -பொது விதியும் சிறப்பான விதியும் -விரோத அதிகரண நியாயம்
இவற்றைக் கொண்டு இவை விளக்கத் தக்கது
இதில் அபேச்சேத அதிகரணத்துக்கு இடம் இல்லை என்று கூற வேண்டும்
பிராணிகளை ஹிம்சிக்கலாவது பொது விதி
அக்னீ ஷோமீய யாகத்தில் பசுவை ஹிம்ஸிக்கலாம் சிறப்பு விதி
இந்த சிறப்பு விதியை விட்டு வேறு தன் இச்சையால் செய்யும் ஹிம்சைகளைத் தடை செய்வதாகக் கொள்ளுவதே
உத்சர்க அபவாத நியாயம் எனப்படுகிறது
அதே போலே நிர்க்குணம் நிரஞ்சனம் அத்ரேஸ்யம் -முதலியவை பொது விதிகள் –
ஸர்வஞ்ஞன்-ஸ்வா பாவிக ஞானம் பலம் ஸம்ருத்திகளை யுடையவன் என்பவை அபவாதங்கள் -சிறப்பானவை –
இவற்றால் ஸித்தமான விசேஷ குணங்களை விட்டு வேறான விரஜோ -விம்ருத்யு -விசோகா -விஜிகத்சோ-அபி பாஸ-என்று
சிறப்பாய் நிஷேதிக்கப்பட்ட ஹேய -தீய குணங்கள் இல்லை என்பதையே நிர்க்குணம் இத்யாதியால் பொதுவாகச் சொல்வதால்
நிர் குண -ச குண ஸ்ருதிகளுக்கு ஹேய ப்ரத்ய நீகத்வம் -கல்யாண குண கரத்வம் என்ற விஷயம் வேறுபடுவதால் விரோதம் இல்லை
விதி நிஷேதங்களுக்கும் இவாறே விரோதம் சாந்தமாகிறது
இங்கு அபேச்சேத அதிகரண நியாயத்துக்கு இடம் இல்லை
அதாவது
ஒரு யாக விசேஷத்தில் ஐந்து ரித்துவிக்குகள் ஒருவருக்கு ஒருவர் கச்சத்தைப் பிடித்துக் கொண்டு பின் செல்வர் –
அத்வர்யுவை -ப்ரஸ்தோதாவும் -அவரை ப்ரதி ஹர்த்தாவும் தொட்டுக் கொண்டே செல்ல வேண்டும் –
இவர்கள் அன்வாரம்பணத்துக்கு-தொட்டுக் கொண்டே செல்வத்துக்கு -தடை ஏற்பட்டால் பிராயச்சித்தம் செய்யுமாறு விதிக்கப்படுகிறது
1- உத்காதா விட்டால் தக்ஷிணை இன்றி யாகத்தை முடித்து
மறுபடியும் அவனைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
2-ப்ரதி ஹர்த்தாவால் அபச்சேதம் வந்தால் ஸர்வஸ்வத்தையும் தானம் செய்ய வேண்டும்
இந்த இடத்தில் உத்காதாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தி
ப்ரதி கர்த்தாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தியால் பாதிக்கப் படுகிறது என்பது அபச்சேத நியாயம்
இந்த நியாயத்தாலே அத்வைதிகள் நிர்க்குண ஸாஸ்த்ரம் குண ப்ராப்தியை எதிர்பார்ப்பதால் பிரபலமானது பரமானது
ஆதலின் இதனால் ச குண சாஸ்திரம் பாதிக்கப் படுவதால் ப்ரஹ்மம் நிர்க்குணம் என்றே தேறும் என்பர்
அது அனு உசிதமானது -ஏன் எனில்
உத்காதாவின் அபச்சேதம் ஏற்படுகையில் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம் உண்டாக வேணும் என்ற நிர்பந்தம் இல்லை
இரண்டும் முறையே க்ரமமாக ஏற்பட வேண்டும் என்பதும் இல்லை
க்ரமமாக ஏற்பட்டாலும் உத்காதாவின் அபாச்சேதம் முதலிலும் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம்
அடுத்தபடி ஏற்படுவதையும் இருக்கட்டும்
அதுவே மாறியும் இருக்கட்டும்
பூர்வ அபூர்வ க்ரம நியதம் இல்லாமையாலே விரோதத்துக்கோ க்ரமத்துக்கோ எங்கு நியமம் உள்ளதோ
அங்கு அபாச்சேத நியாயம் வாராது
அதிலும் அபாச்சேத நியாயம் சொன்னால் எப்போதும் பூர்வ ஸாஸ்த்ரத்துக்கு அப்ராமாண்யம் வந்து சேரும் –
அதை ஆச்சார்யர்களும் அருளினார்கள்
உன்க்கு பூர்வ அபூர்வம் விரோதம் முந்தையதற்கு அப்ராமாண்யம் இவை நியதமாய் இல்லையோ
அங்கு அபச்சேத நியாயம் பொருந்தும் என்றனர்
பூர்வ அபர்யம் விரோதச்ச பூர்வா ப்ராமாண்யம் ஏவச நியமான் நாஸ்தி தத்ராஸவ் அபச்சேத நயோ பவேத் -என்று –
ஆகவே அபச்சேத நியாயத்தைக் கொண்டு -நியதபரமான நிர்க்குண சாஸ்திரம் கொண்டு ச குண ஸாஸ்த்ரத்தைப் பாதிக்க இயலாது
நிர்க்குண ஸாஸ்த்ரம் நியத பரமாகையாலே இதை அபேக்ஷித்து உபக்ரம அதி கரண நியாயப்படி ச குண ஸாஸ்திரமே பிரபலம்
அதாவது
பிரஜாபதி வருணாய அஸ்வம் அநயத்-என்ற இடத்தில் அஸ்வத்தைப் ப்ரதி க்ரஹிக்க இஷ்டி கூறப்படுகிறது
இது உபக்ரமம் தொடக்கம் -தான் தோன்றும் போது விரோதம் தோன்றாததாலே அஸஞ்சாத விரோதி எனப்படும் -இது பிரபலம்
இந்த இஷ்டி செய்வது தாதாவுக்கா ப்ரதி க்ரஹீதாவுக்கா என்ற சங்கை வந்தால் உபக்ரம வாக்கியத்தை அனுசரித்து
தாதாவுக்கே என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது
இந்த நியாயத்தைக் கொண்டு ச குண நிர்க்குண வாக்கியங்களை ஆராய்ந்தால்
ச குண விதி பூர்வ பாவி என்றும் நிர்க்குண விதி பரமானது என்றும்
அவர்கள் கூற்றுப்படி உபக்ரமமான ஸாஸ்த்ரத்தை விட பரமான -உப ஸம்ஹாரமான நிர்க்குண ஸாஸ்த்ரம் துர்ப்பலம் என்று தேறுகிறது
ஆதலின் பரத்தைக் கொண்டு பூர்வத்தைப் பாதிக்க இயலாது
அப்படிப் பாதிக்கும் என்றால் மாத்யமிகளின் ஸர்வ ஸூந்ய வாதம் பிரமம் ஆதலின் அவன் மதமே வெற்றி பெறும் –
———————————————————————————————————————————————–
ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் –
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே
ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –
கீழே ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் சாதிக்கப் பட்டது
அதை நிலை நாட்ட அசித் வஸ்துக்களும் ப்ரஹ்மத்தின் ரூபமே என்று சாதிக்க வேண்டும்
அசித்து ப்ரஹ்மத்தின் ரூபம் என்பது அஹி குண்டல நியாயத்தால் ஸித்திக்குமா
பிறப்பையும் விளக்கு அல்லது ஸூர்யன் போன்ற நியாயத்தால் ஒரே ஜாதி என்ற முறையில் ஸித்திப்பதா
அன்றி விசேஷண விசேஷ்ய பாவத்தால் ஸித்திக்குமா
என்ற சம்சயத்தால் இவ்வதிகரணம் தோன்றுகிறது –
337-உபய வ்யபதேசாத் து அஹி குண்டலவத் —3-2-26-
இது பூர்வ பஷ ஸூத்ரம் –
சுருண்டும் நீண்டும் உள்ள பாம்பு போலே ப்ரஹ்மம் –
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூப-மூர்த்தம் அமூர்தம் இரண்டும் ப்ரஹ்மத்தின் ரூபம்
தொடர்ந்து
அதாத ஆதேச நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -2-3-6- என்று
ப்ரஹ்மம் அசித் பொருள்கள் அளவு மட்டும் அல்ல என்றது
நஹி ஏ தஸ்மாத் ந அத்ய அன்யத பரமச்ய-என்று ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் இல்லை -என்றும்
இதையே திருடமாக
அத நாமதேயம் சத்யச்ய சத்யம் பிராண ஏவ சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் என்றும்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-16-பிரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச – என்றும் –
6-13-நித்யோ நித்யச் சேதநச்சேதநா நாம் -என்றும்
மஹா நாராயண உபநிஷத் -13-1-பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் –என்றும் சொல்லிற்று-
அசேதனம் ப்ரஹ்ம ரூபம் என்பது
1-ப்ரஹ்ம ஸ்வரூபமமே அசித் ரூபமாக பரிணமிப்பதாலே ஏற்படுகிறதா
2- அல்லது ப்ரஹ்மமும் அசித்தும் ஒரே ஜாதி என்பதால் ஏற்படுகிறதா
3-ஜீவனைப் போல் சரீரம் என்பதால் ப்ரஹ்மத்தின் விசேஷணம் என்பதாலா
1-சுருண்டும் நீண்டுமுள்ள பாம்பு போலேயா
2-சூரியனும் ஒளிக் காற்றையும் போலேயா
3-அம்சம் அம்சி பாவமா –
மூன்று வித கேள்விகள் ப்ரஹ்மத்துக்கும் அசித்துக்கும்
ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-பிரக்ருதிச்ச பிரதிஜ்ஞாத் ருஷ்டாந்தா னுபரோதாத் -என்று
பிரமமே உபாதான காரணம் என்றும்
ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-15-தத நன்யத்வம் ஆரம்பண சப்தாதிப்ய-பொருளும் காரணமும் வேறு அல்ல -என்றும்
அம்ச அம்சி பாவம் முன்பே கூறப்பட்டது
மூன்றில் பாம்பு போலே நீட்டியும் சுருண்டும் என்பதே அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் என்பதே சரியான விடையாகும்
ப்ரஹ்ம ஏவ இதம் சர்வம் -ப்ருஹத் உபநிஷத் -4-5-1- இவை அனைத்தும் பிரமமே என்றும்
சாந்தோக்யம் -7-25-2-ஆத்மா ஏவ இதம் சர்வம் -இவை அனைத்தும் ஆத்மாவே
சாந்தோக்யம் -6-3-2-ஹந்தா ஹமிமாஸ் திஸ்ரோ தேவதா அநேன ஜீவேன ஆத்ம அநு ப்ரவச்ய -என்று
தேஜஸ் நீர் பூமி மூன்றின் உள்ளே புகுந்து அநேக நாம ரூபங்களை எடுக்கிறேன்
உபய வ்யபதேயாத் து அஹி குண்டலவத் —
து -ஸப்தம் -ஏவ போல் அவதாரணம்
அஹி குண்டலவத் —=சர்ப்பத்துக்கு குண்டல பாவமும் நேரான தன்மையும் போலே
ப்ரஹ்மம் அசித் ரூபமாகிறது எனலாம்
ஏன் எனில்
உபய வ்யபதேசாத் –பேதமாயும் அபேதமாயும் வழங்கப் படுவதால்
இப்பிரபஞ்சம் எல்லாமே ப்ரஹ்மம் என்று அபேதமும்
இந்த ஜீவனைத் துணை கொண்டு யாவற்றிலும் உள்ளே நுழைந்து நாம ரூபங்களை அமைக்கிறேன் என்று
சங்கல்பிக்கும் போது பேதமும் பேசப்படுகின்றது
இவை சர்ப்பத்தின் வெவ்வேறு தன்மை போலே -ருஜு பாவமும் -வக்ர பாவமும் -பொருந்தலாம் என்பது பூர்வ பக்ஷம் –
எனவே அசித் என்பதும் ப்ரஹ்மத்தின் ஒரு வகையான விசேஷ நிலை என்றதாயிற்று-
——————————————————————————————————————————————–
338-பிரகாசஸ்ரயவத்வா தேஜஸ் த்வாத் —3-2-27-
ஒளியும் உத்பத்தி இடமும் போன்று -காரணம் இரண்டும் தேஜஸ் என்ற ஜாதியினால்
இது பூர்வ பஷ ஸூத்ரம்
வா என்றது பாம்பு போன்று நீண்டும் சுருங்கியும் –
அம்ச அம்சி பாவம் இரண்டையும் தள்ளுகிறது
அசித் ரூபம் என்றால் இரண்டும் வெவ்வேறே என்கிற பேத ஸ்ருதிகள் தள்ளப்படும் –
அவிகாராய சுருதி வாக்யமும் தள்ளுபடும்
ஒளியும் ஒளி உள்ள தீபாதிகளும் தேஜஸ்த்வம் -ஒரே ஜாதி சேர்க்கையால்
ஸ்வரூபத்தில் பேதம் இருந்தாலும் அபேதம் பேசப்படுவது போலே
அசித்தான பிரபஞ்சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூடும் -அசித்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் கூடும் –
முன் கூறிய பிரகாரத்தில் ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் அபரிணாமித்வம் சொல்லும் ஸ்ருதிகளுடன் விரோதம் ஏற்படும் –
இப்பஷத்தில் அவ்விரோதம் வாராது என்றபடி –
இந்த பக்ஷத்தை ஏற்றாலும் ப்ரஹ்மமே சர்வமும் என்று அபேதமும்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம் சொல்வதால் அசேதன ரூபம் இல்லாமல் போகட்டும்
ஒரு பசு கண்டம் முண்டம் பூர்ண ஸ்ருங்கம் என்று கூறப்பட முடியாது அல்லவா
எனும் அஸ்வாரஸ்யத்தால்
சித்தாந்தம் கூறுகிறார் –
——————————————————————————————————————————————–
339-பூர்வவத் வா–3-2-28-
முன்பு கூறப் பட்டது போன்று என்றவாறு –
வா -ஸப்தம் இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தள்ளுகிறது
கடந்த இரண்டு ஸூத்ரங்களில் உள்ள பூர்வ பஷத்தை தள்ளுகிறது
முதல் வாதம் படி அசித் ஸ்வரூபம் ப்ரஹ்மத்துக்கு வரும் தோஷங்களும் தட்டும்
ஒளி ஒளிக்கதிர் என்று கொண்டால் பசு குதிரை இரண்டு பிரிவுகளான ப்ரஹ்மம் ஸ்ருதி வாக்ய விரோதம் ஆகும்
பூர்வ வத்வா -அம்ச அதிகரணத்தில் பேத அபேத வியபதேசங்கள் பொருந்தவும் –
ப்ரஹ்மம் நிர் தோஷம் என்று ஸாதிக்கவும்
ஜீவனை -பிரகாச குண ஜாதிகளை போலே விட்டுப் பிரிக்க இயலாத -அப்ருதக் ஸித்த -விசேஷணம் -ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு அம்சமே என்று கீழே சாதித்தால் போலவே அசித்தும் விசேஷணமாதலின் அம்சமாகலாம்
இத்தால் அசித் என்ற சொல்லும் அத்துடன் கூடிய ப்ரஹ்மத்தையே சொல்லும்
ஆகவே இவை யாவுமே ப்ரஹ்மமே என்று சொல்வதும் பொருத்தம் ஆகுமே
விசிஷ்டத்தில் விசேஷணம் ஏக தேசம் என்பதால் அபேதம் முக்கிய வழக்கே
ஸ்வரூப ஸ்வபாவ பேதங்களாலே இரண்டுக்கும் பேத வழக்கே முக்யமாம்
இதனால் ப்ரஹ்மம் நிர்தோஷம் என்பது ஸித்தம் –
ஆக முன்பு கூறிய படி ஒரு அம்சமாகவே கொள்ள வேண்டும்
ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-42-அம்சோ நாநா வ்யபதேசாத் -ஒரு அம்சமாகவே ஆகும்
ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-45-பிரகாசாதிவத் து நைவம்பர-பரமாத்மாவின் அம்சம்
பிரிக்க இயலாது
பேத அபேத ஸ்ருதிகளும் கொள்ள முடியும்
தோஷங்களால் தீண்டப் படாததது என்ற வாதமும் கொள்ளப் படும்
ஆக ஒளி ரத்னக் கல்லை விட்டு பிரிக்க முடியாதது போலேயும்
குணம் குணம் உள்ளவன் -ஆத்மா உடல் போலே
ஜீவனும் அசித்தும் ப்ரஹ்மத்தின் அம்சங்களே -என்றாகிறது-
————————————————————————————————————————————————
340-பிரதிஷேதாச்ச–3-2-29-
தள்ளப் படுவதாலும் -கடந்த ஸூத்ர சித்தாந்தம் தொடர்கிறது
ப்ருஹத் உபநிஷத் -4-4-25-ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அஜரோ அமர –
பரமாத்மா பிறப்பு இறப்பு கிழத் தன்மை அற்றவன் -என்றும்
சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயா ஏதத் ஜீரயதி –
வயதாகி கிழத் தன்மை அடைவது இல்லை
தோஷங்கள் தட்டாமல்
காரணமாகவும்
அம்ச அம்சி பாவமே பொருந்தும் என்றதாயிற்று
ஸூஷ்மமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாக காரணமாயும்
ஸ்தூலமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாகக் கார்யமாகவும்
கார்ய கார்யங்களுக்கு இடையில் பேதம் இல்லை -அபேத ஸ்ருதியும்
காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தவன் கார்யப் பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கொண்டு
ப்ரஹ்மத்தை தோஷங்கள் தீண்டுவது இல்லை என்றும்
சமஸ்த கல்யாண குணங்கள் கொண்டவன் என்றும்
உபய லிங்கத்வம் நிரூபிக்கப் பட்டது
————————————————————————————————————————————————
ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் –
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும்
இவனை தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது-
ப்ரஹ்மம் உபய லிங்கம் என்று ஸ்தாபித்தார்
இனி முன் கூறிய ஜகத்துக்கு எல்லாம் நிமித்தமாயும் உபாதானமாயும் உள்ள ப்ரஹ்மத்தை விட
சிறந்ததோர் தத்வம் உள்ளது என்று சில போலி ஹேதுக்களால்
சங்கித்து
கண்டிக்கப்படுகிறது என்று சங்கதி –
341-பரமத சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-31-
அணை அளவு தொடர்பு வேறுபாடு ஆகியவை கூறப்பட்டதால் இதை விட உயர்ந்தது உள்ளது
சேது சேர்ப்பது ஓன்று என்றால் சேர வேண்டியது சிறந்த வேறு ஓன்று இருக்குமே
இந்த பூர்வபக்ஷ ஸூத்ரம் இது –
சாந்தோக்யம் -8-4-1-அத ய ஆத்மா ச சேது வித்ருதி –
இந்த ஆத்மாவைத் தாங்கும் பாலமாக உள்ளான்
சாந்தோக்யம் -8-4-2-ஏதம் சேதும் தீர்த்தவா அந்தஸ் சந் அனந்தோ பவதி –
பாலத்தை கடந்து குருடனானவன் நிலை மாறப் பெறுகிறான்
இவற்றால் ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை உண்டு என்றதாயிற்று
உந்மிதம்-என்று அளவு பட்டு ப்ரஹ்மம் கூறப் படுகிறது
சாந்தோக்யம் -3-18-2-சதுஷ்பாத் ப்ரஹ்ம-நான்கு பாதங்கள் கொண்டது என்றும்
ப்ரசன உபநிஷத் -ஷோடாசகலம் -பதினாறு பிரிவுகள் கொண்டது -என்றும்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-19-அம்ருதஸ்ய பரம் சேதும் தக்தேந்த மிவா நலம் –
தானாக வெளிப்படும் மோஷத்தை அடைய உதவும் பாலமாக ப்ரஹ்மம் உள்ளான் என்றும்
முண்டக உபநிஷத்-2-2-5- -அம்ருதஸ்யைஷ சேது -மோஷத்தை அடைவிக்கும் பாலம் ப்ரஹ்மம் என்றும்
முண்டக உபநிஷத் -3-2-8-பராத்பரம் புருஷம் உபைதி -பரமாத்மாவை விட உயர்ந்த புருஷன் அடைகிறான் என்றும்
தைத்ரிய நாராயண வல்லி -1-5- பராத்பரம் யத் மஹதோ மஹாந்தம் -பெரியதான பரமாத்மாவை விட பெரியதான என்றும்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் –
3-9-தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –
அந்த புருஷனால் இவை நிரம்பி உள்ளன -என்றும்
3-10-ததோ யதுத்தரதரதரம் தத் அரூபம் அநாமயம் –
அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது-உருவம் அற்றது -துன்பம் அற்றது -என்றும்
இப்படி பல ஸ்ருதிகள் அந்த பிரமத்தைக் காட்டிலும் மேலான வஸ்து உள்ளதைச் சொல்லிற்று–
அத -இது வரை ஸர்வ காரணமாயும் -உபய லிங்கமாயும் கூறப்பட்டுள்ள ப்ரஹ்மத்தை விட
பரம் -உயர்ந்த தத்வம் உள்ளது
ஏன் எனில்
சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-வியபதேசம் என்பது சேது உன்மானம் முதலிய ஒவ்வொன்றுடன் சேர்க்கிறது
1- சேது வ்யபதேசத்தால் அடையப்படும் பொருள் வேறே ஓன்று என்று புலனாகிறது
2-சதுஷ்பாத் ப்ரஹ்ம ஷோடசகலம் -என்று உன்மான வ்யபதேசத்தால் -உன்மானம் -அளவு –
நான்கு பாதங்கள் பதினாறு கலைகள் என்று அளவிட்டதை விட அளவில்லாத வேறு தத்வம் இருக்க வேண்டும் என்று கருத்து
3-ஸம்பந்த வியபதேசத்தாலே -அம்ருதஸ்ய பரம் சேதும் -என்று ப்ராப்ய ப்ராபக சம்பந்தம் சொல்வதால்
அம்ருதம் என்று அடைய வேண்டிய தத்வம் சேதுவை விட வேறானது
4-பேத வியபதேசத்தால் -பராத்பரம் புருஷம் உபைதி–ததோ யதுத்தரதரதரம் –என்று எல்லாம்
புருஷன் என்றும் பர ப்ரஹ்மத்தை விட மேலான தத்வம் உள்ளது என்று தோன்றுகிறது என்று பூர்வ பக்ஷம்
இனி இந்த பூர்வ பஷத்துக்கு பதில் மேலே –இதைக் கண்டிக்கிறார் –
——————————————————————————————————————————————–
342-சமான்யாத்து-3-2-31-
பொதுவான தன்மை காரணத்தால் ஆகும் –
து -பதம் பூர்வ பஷத்தை தள்ளுகிறது
சேது என்று ஒரு கரையில் இருந்து அடுத்த கரைக்கு செல்வதை சொல்ல வில்லை
உலகங்கள் தம் தம் ஸ்வபாவங்களில் சாங்கர்யம்–கலப்பு -ஏற்படாமல் இருக்க
பரம புருஷனே சேது போலே தரிக்கிறான் என்று சுருதி சொல்லும்
ஸிநோதி -காட்டுகிறது என்பதால் சேது என்று காரணப்பெயர்
ஆதலால் வேறே ப்ராப்யம் இங்கே தோன்றவில்லை
ஏதம் சேதும் தீர்த்வா –என்ற இடத்தில் அடைந்து என்ற பொருள்
வேதாந்தம் தரதி என்பது போலே ப்ராபக ப்ராப்யங்களுக்கு அபேதத்தைச் சொல்லுகிறது –
சாந்தோக்யம் -8-4-1-ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய-
இந்த உலகங்கள் ஒன்றுடன் ஓன்று கலக்காமல் இருக்க -என்கிறது
சேதனம் அசேதனங்களை தன்னுள் வைத்து ஒன்றுடன் ஓன்று கலவாமல் காப்பதால் சேது எனப்படுகிறான்
சாந்தோக்யம் -8-4-2- ஏதும் சேதும் தீர்த்தவா –
தீர்த்தவா அடைதல் பொருளில் கடந்து என்று அல்ல –
வேதாந்தத்தை கடக்கிறான் முற்றிலும் அறிந்தவன் ஆகிறான் என்றே பொருள்
—————————————————————————— —————————————————————
343-புத்த்யர்த்த பாதவத் —3-2-32-
இதனால் இரண்டாவது ஹேதுவுக்கு விடை கூறுகிறார்
ப்ரஹ்மத்தை அளவிட்டுக் கூறியது உன்மானம்
ஏன் என்றால்
புத்த்யர்த்த -அனுசந்தானம் செய்ய வசதிக்காக
பாதவத் —வாக் பாத -சஷு பாத என்று எல்லாம் ப்ரஹ்மத்துக்கு வாகாதிகளைப்
பாதங்களாகச் சொல்லுவது உபாசானத்துக்கானது
அது போலவே இதுவும்
ப்ரஹ்மம் பரிமாணம் உள்ளது என்பதைக் காட்டுவதற்கு அல்ல
பாதம் போன்று உபாசனத்துக்கு கூறப் பட்டது –
சதுஷ்பாத் ப்ரஹ்ம –ஷோடசகலம் –பாதோச்ய விசவா பூதானி என்று
உபாசனத்துக்கு புத்திக்கு அளவு படுத்தி சொன்னவை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-தெளிவாக உள்ளதே –
இவனே காரணம் என்பதை
தைத்ரியம் -2-1-தஸ்மாத்வா ஏ தஸ்மாத் ஆத்ம ந ஆகாச சம்பூத –
இதில் இருந்து ஆத்மாவும் ஆகாசமும் வெளிப்பட்டன என்றும்
தைத்ரியம்-2-6- -சோகாமயாத பஹூச்யாம் பிரஜாயேய-
அது தன்னைப் பலவாகக் கடவது என்று எண்ணியது -என்றும்
சாந்தோக்யம் -3-18-2-வாக் பாத பிராண பாத சஷூ பாதோ மன பாத –
பாதங்களாக வாக் போன்றவை உள்ளன என்றது உபாசனைக்கு எளிதாக்கவே என்றவாறு
உபாஸனார்த்தமாயினும் பரிமாணம் ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு பொருந்தும்
என்பதற்கு விடை மேல் –
———————————————————————————————————————————————-
344-ஸ்தான விசேஷாத் பிரகாசாதிவத்–3-2-33–
அளவிட முடியாத வஸ்துவை உபாசனை பொருட்டு மாத்ரம் எப்படி அளவிட்டு சொல்ல முடியும் என்றால் –
எங்கும் பரவும் பிரகாசத்துக்கு -ஒளி முதலான ஸ்தானங்களின் சம்பந்தம் காரணம் ஆகும்
ஜன்னல் ஒளி –குட ஆகாசம் போலே
———————————————————————————————————————————————-
345-உபபத்தேச்ச–3-2-34-
மூன்றாவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –
தன்னை அடையும் உபாயமாக தானே உள்ள தன்மை பொருந்துவதால் –
முண்டகம் -அம்ருதஸ்யைஷ சேது -அடியைப் படும் இலக்கே அவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்
முண்டகம் -3-2-3-நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ ந மேதயா
ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தே ந லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்-என்று
பரமாத்மாவை கேட்டோ ஆழ்ந்த ஞானத்தாலோ அறிய அடைய முடியாது –
அவனே யாரைத் தெரிந்து எடுத்து அவன் மட்டுமே அடைகிறான் அவனுக்கு தனது ரூபத்தை வெளிப்படுத்துகிறான்-
—————————————————————————————————————————————–
346-ததா அந்ய பிரதிசேஷாத்-3-2-35-
நான்காவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –
பேத ஸ்ருதிகளாலே அதிகமான ஒரு தத்வம் உண்டு என்பது தவறு
ததா -அவ்விடத்திலேயே
அந்ய பிரதிசேஷாத்-அந்யனான பரன் தடுக்கப் படுவதால்
இப்படி அவனைக் காட்டிலும் வேறு இல்லை என்று மறுப்பதால் ஆகும்
ததோ எதுத் தர தரம் -என்றும்
பராத்பரம் புருஷம் -என்றும் –
அஷராத் பரத பர -என்றும்
உயர்ந்த வஸ்து வேறே உண்டு என்கிறீர்கள்
அதே ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -3-9-
யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் ந அணீய ந ஜ்யோயோஸ்தி கச்சித் என்றதே
ப்ருஹத் உபநிஷத்
2-3-6-நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரமஸ்தி-என்றும்
நாராயண வல்லி -1-2- ந தஸ்ய ஈசே கச்ச ந தஸ்ய நாம மஹத்யச-என்றும் –
சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா நதி -என்றும்
ச ஆப ப்ரதுகே உபே இமே -என்றும்
1-3-அத்ப்யஸ் சம்பூத ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டௌ-என்றும் அவனே ஜகத் காரணம் என்றதே
ஆனால் ஸ்வேதாஸ்வதர -3-10-
ததோ எதுத் தர தரம் என்று சொன்னது எதனால் என்றால் –
இந்த வரிக்கு முன்னால் -3-8- வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ புரஸ்தாத்
தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நான்ய பன்னா வித்யதே அயநாயா -என்று முழங்கி
3-9-யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீய நஜ்யா யோஸ்தி கச்சித் வருஷ இவஸ்தப்த
திவி திஷ்டதி ஏக தே நேதம் பூர்ணம் புருஷே ந சர்வம் -என்றும்
நிகமத்தில் -3-10-ததோ எதுத் தர தரம் தத் அரூபம் அநாமயம் ய எதத் விது அம்ருதாச்தே பவந்தி
அதே தர துக்க மேவ அபியந்தி -என்றது
மேலும் முண்டகம் 3-2-8–பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
என்பதை 2-1-2-அஷராத் பரத பர -என்றதே –
பர ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே தத்வம் இல்லை -அவனே தோஷம் அற்றவன் -அம்ருதம் –
அவனை அறிந்தவன் சம்சாரத்தைக் கிடக்கிறான்
வேறு முக்திக்கான உபாயம் இல்லை என்று
அதே ஸ்ருதிகள் உப சம்ஹரிக்கின்றனவே
ஸ்ருத்யந்தரங்களும் இத்தையே பறை சாற்றுகின்றன
————————————————————————————————————————————
347-அநேந சர்வ கதத்வம் ஆயாம சப்தாதிப்ய —3-2-36-
அநேந -இந்த ப்ரஹ்மத்தால்
சர்வ கதத்வம் -ஜகத் எங்கும் வியாபித்து இருத்தல்
ஆயாம சப்தாதிப்ய-எங்கும் வியாபித்து இருப்பதாகச் சொல்லும் ஸப்தங்களால் –
வியாப்ய நாராயண ஸ்தித -போன்றவைகளால் அறிவிக்கப் படுகிறது
இதனால் இந்தப் ப்ரஹ்மத்தை விடச் சிறந்தது ஏதும் இல்லை என்று நிரூபணம் ஆயிற்று
ஆயாம -அனைத்தும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப் பட்டது என்கிறது-சர்வ வ்யாபகத்வம்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -தே நதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும் –
நாராயண வல்லி -11-6-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ச்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச
தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்
‘முண்டகம் -1-1-6-நித்யம் விபும் சர்வ கதம் ஸூஷூஷ்மம் யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
ஸூத்ரத்தில் உள்ள ஆதி என்ற பதம் ப்ரஹ்மத்துக்கு அனைத்துமாய் இருக்கும் பெருமையை
ப்ருஹத் உபநிஷத் -4-5-1-ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும்
சாந்தோக்யம் -ஆதமை வேதம் சர்வம் -என்றும்
ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்தது என்று முழங்கும் –
இதனால் யதோவா இமானி -இத்யாதிகளாலே கூறப்படும் ஜகத் நிமித்த உபாதான
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறான தத்வம் கிடையாது என்பது ஸித்தம் –
————————————————————————————————————————————-
எட்டாவது அதிகரணம் -பலாதிகரணம் –
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
பரத்வமும் பல பிரதத்வமும் உபாஸிப்பதற்குத் தேவையானவை
பின்னால் சொல்ல இருக்கும் உபாஸ்யத்தின் ஸித்திக்காக பரத்வம் சொல்லப்பட்டது
இவ்வதி கரணத்தில் பல பரதனும் இவனே என்ற முறையில் ஓவ்தார்யம் கூறப்படுகிறது –
348-பலம் அத உபபத்தே —3-2-37-
யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்
பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-
பலம் அத உபபத்தே-இவன் இடம் இருந்தே கர்மபலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்
ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் என்பதே பொருந்தும்
————————————————————————————————————————————-
349-ஸ்ருதத்வா ச–3-2-38-
கீழே அசேதனமான கர்மங்களுக்குப் பல பிரதத்வம் கூடாமையாலே இவனே பல பிரதன் என்றார்
இதில் வெளிப்படையாகக் காட்டி அருளுகிறார் –
இப்படியே ஸ்ருதி வரிகள் -பல போகங்களையும் மோஷத்தையும் பரம் பொருளே அளிப்பதாக கூறுகின்றன –
ப்ருஹத் -4-4-24-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா அந்நாத வஸூதான -என்றும்
தைத்ரிய ஆரண்யகம் -2-7- எஷஹி ஏவ ஆனந்த யாதி -என்றும் கூறும்
—————————————————————————————————————————————–
350-தர்மம் ஜைமினி அத ஏவ-3-2-39-
தர்மம் ஜைமினி
தர்மம் முதளியவைகளே பலன் அளிப்பதாக ஜைமினி கூறுகிறார்
கண்களில் புலப்படாத அபூர்வம் -எதிர்காலத்தில் அந்த பலன்களை அளிக்கின்றது
அத ஏவ -அதற்க்கு ஏற்ப ஸ்ருதியும் உண்டே என்றவாறு
சாஸ்திரம் யஜேன ஸ்வர்க்க காமா -யாகம் மூலம் ஸ்வர்க்கம் கிட்டும் என்றதே –
—————————————————————————————————————————————-
351-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத் —3-2-40-
பூர்வம் து பாதராயண-பலனை அளிப்பதால் முந்தையதே -என்கிறார் பாதராயணர்-
து -பூர்வ பஷத்தை தள்ளுகிறது
முன் கூறியதே என்று பாதராயணர் -வியாசர் -திரு உள்ளம்
வாயு அக்னி குறித்து யாகம் பண்ணும் பொழுது
யஜ் -அந்த யாகங்களின் எஜமானனாக உள்ள தேவதைகளே பலன்களை அளிப்பதாக கூறும்
தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயவ்யாம் ஸ்வேதமால பேத பூதி காமோ வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா
வாயுமேவ ஸ்வேன பாக தேயேன உபதாவதி ச ஏவ எனம் பூதிம் கமயதி -என்று
இது போன்ற வாதங்களை அர்த்த வாதங்கள் என்று தள்ள இயலாது –
இதனை மருத்து கண்களுக்கு புலப்படாத அபூர்வம் என்பதை உருவாக்கி பலன் அளிப்பதாக சொல்வதை
பிரமாணிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
பூர்வ பஷிகள் யஜேத என்பதை யஜ் ஏத என்று பிரித்து
யஜ் தவத்தை என்றும்
ஏத அபூர்வம் என்றும் சொல்வதை ஏற்க இயலாது
ஏத எனபது கர்த்தாக்கள் மூலம் இயற்றப்படும் கர்மங்களைக் குறிக்கும்
இதனை உணர்த்தவே-தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயுர்வை ஷேபிஷ்டா த்கேவதா -என்றன –
ஆயினும் ஆராதிக்கத் தகுந்தவனாக உள்ளவன் பரம புருஷனே –
அவனே அந்தர்யாமியாக இருந்து கொண்டு பலனை அளிக்கின்றான் என்பதை
நாராயண வல்லி -1-2-
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவனச்ய நாபி –
ததே வாக்னி தத் வாயு தத் ஸூர்ய தாது சந்த்ரமா -என்று கூறியது
ப்ருஹத் உபநிஷத்- 3-7-7- யோ வாயௌ திஷ்டன் யஸ்ய வாயு சரீரம் என்றும் –
3-7-5-யோ அக்னௌ திஷ்டன் -என்றும்
3-7-9–யோ ஆதித்யே திஷ்டன் -என்றும் சொல்லிற்று
ஸ்ரீ கீதையிலும் -7-21-
யோ யோ மாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தயா அர்ச்சிதும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ரத்தாம் தாம் ஏவ வித்தாம் யஹம் -என்றும்
7-22-ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்ய ஆராதன மீஹதே லபதே சே தத காமான் மயைவ விஹிதான் ஹிதான் -என்றும்
9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -என்றும்
7-23-தேவான் தேவ யஜோ யாந்தி மத் பக்தோ யாந்தி மாம்பி -என்றும்
9-25-யாந்தி மத்யாஜி நோபிமாம் -என்றும்
அரசன் தானே நேரடியாகவோ வேலையாட்கள் மூலமாகவோ மகிழ்ந்து பரிசு அளிப்பது போலே
பரமபுருஷன் இடம் இருந்தே ஸ்வர்க்கம் போன்ற போகங்களும் மோஷமும் கிட்டுகிறது என்று நிரூபணம் ஆயிற்று –
ஹேது வ்யபதேசாத் –யஜேத -யஜ தேவ பூஜாயாம் -பகவத் ஆராதனம் –
பரமாத்மாவே நேராகவும் -அக்னியாதி தேவர்கள் மூலமாகவும் பல பிரதன்
இவ்வாறு அதிகாரி இருக்க
அபூர்வம் என்று கல்பிக்க வேண்டியது இல்லை
அனைத்து அர்த்தவாதங்களும் பொருந்தி விடுகின்றன —
அடுத்த பாதத்தில் வித்யா பேதங்களில் வெவ்வேறு கல்யாண குணங்களைக் காட்டி அருளப் போகிறார் –
——————————————————
இப்பாத அர்த்தங்களை சுருக்கமாக ஸ்வாமி தேசிகன் காட்டி அருளுகிறார்
1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்
அருளிச் செய்து
இந்தக் குணங்களைக் கூறியது ப்ரஹ்ம வித்யா ரூபத்தில் பக்தி ஸித்திப்பதற்காக
யதார்த்தமான குணங்களைக் கொண்டு எம்பெருமானை உபாஸிக்கையில்
ரூப பேதங்கள் சொல்ல வேண்டி இருப்பதால்
அவற்றைப் பிற மதத்தவர் போலே வ்யவஹாரிகங்கள் என்று சொல்வது பொருந்தாது
என்பது ஸூத்ரகாரரின் திரு உள்ளம் –
————————————————————————————————–—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-