ஸ்ரீ ஶாஸ்த்ரம் ஸ்ரீ பகவானுக்கு நிரந்தரமாகக் கைங்கர்யம் செய்வதையே
சிறந்த புருஷார்த்தமாக நிர்ணயித்துக் காட்டுகிறது.
இப்பலனான கைங்கர்ய ப்ராப்தியை அடைவதற்குப் பல வழிகளைக் காட்டியிருந்தாலும்
பக்தி மற்றும் ப்ரபத்தி அவற்றில் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றன.
அவற்றிற்கும் மேலே இப்பலனை அடைய ஒரு ஆசார்யனிடம் முழுவதுமாக அடிமை பூண்டு இருப்பதையே
தலை சிறந்ததாகவும் எளியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆஶிநோதி ய: ஶாஸ்த்ரார்த்தம் ஆசரே ஸ்தாபயதி அபி
ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் ஆசார்யஸ் தேந கீர்த்தித:
ஆசார்யன் என்பவன் ஶாஸ்த்ரத்தைத் தான் முழுதுமாக அறிந்து,
தான் அதை அனுஷ்டித்து பிறருக்கும் அதை உபதேசிப்பவன்.
மேலும் நம் பூர்வாசார்யர்கள் ஶாஸ்த்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆசார்யன் என்பவன்
ஸ்ரீமந்நாராயணனுக்கே ஆட்பட்டு இருந்து, அவனுடைய பரத்வத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு,
ஞான பக்தி வைராக்யங்களில் சிறந்து விளங்கி, உபாயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமான் தவிர வேறு உபாயங்கள்),
உபேயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமானுக்கும் அவன் அடியாருக்கும் தொண்டு செய்வதைத் தவிர வேறு பலன்கள்),
தேவதாந்தரங்களிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும் என்று காட்டினர்.
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த குணங்களில் சிறந்து விளங்கினர்.
பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
பிள்ளை லோகாசார்யர் ஶாஸ்த்ரத்தின் ஸாரத்தை பூர்வாசார்யர்களின் உபதேசத்தின்படி
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார்.
இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது
சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை அருளியுள்ளார்.
இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர்)
தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார்.
அந்திம = சிறந்த/எல்லையான, உபாய = வழி, நிஷ்டை = நிலைத்து நிற்றல்.
இதன் பொருள் “ஆசார்யனிடத்தில் முழுமையாக அடி பணிந்து இருத்தல்”.
பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தானே, இந்த முழு க்ரந்தமும் மாமுனிகளின் நேரடி உபதேசங்களைக் கொண்டு எழுதப்பட்டது என்றும்
தான் ஆசார்யனின் வார்த்தைகளை ஏடுபடுத்த உதவும் ஓலைச் சுவடி, எழுத்தாணி போல மட்டுமே என்றும் சொல்கிறார்.
இது நம்பிள்ளையின் ஈடு காலக்ஷேபங்களை எவ்வாறு வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்தினாரோ அதைப் போன்றதே.
ஆக, இந்த நூலாசிரியரின் கருத்துப்படி இவை மாமுனிகளின் நேர் உபதேசங்களே
இந்த ஆசார்ய நிஷ்டை
மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும்,
ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும்,
தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும்,
வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது.
இந்த நிலைக்குச் சரம பர்வ நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு.
பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும்
ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது.
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் முறையே திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாகவும்
தங்கள் ஸ்ரீஸூக்திகள் மூலமாகவும் இதை உபதேசித்துளார்கள்.
பகுதி 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்
பகுதி 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்
பகுதி 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்
பகுதி 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி
பகுதி 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்
பகுதி 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை
பகுதி 7 – நம்பிள்ளை வைபவம் 1
பகுதி 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)
பகுதி 9 – நம்பிள்ளை வைபவம் 2
பகுதி 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 11 – எம்பார் மற்றும் எம்பெருமானாரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
பகுதி 13 – ஆசார்ய அபசார விளக்கம்
பகுதி 14 – பாகவத அபசார விளக்கம்
பகுதி 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்
பகுதி 16 – பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
பகுதி 17 – பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை
பகுதி 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்
——–
அந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்
ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாத்ரம் முநிம் ||
ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ரேகாமயம் ஸதா|
ததாயத்தாத்மஸத்தாதிம் ராமாநுஜமுநிம் பஜே||
பரவஸ்து பட்டர்பிரான்ஜீயர் தனியன்கள்
ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ஸேவைகதாரகம் |
பட்டநாதமுநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||
காந்தோபயந்த்ருயமிந: கருணாம்ருதாப்தே :
காருண்யஶீதலகடாக்ஷஸுதாநிதாநம் |
தந்நாமமந்த்ரக்ருதஸர்வஹிதோபதேஶம்
ஶ்ரீபட்டநாதமுநி தேஶிகமாஶ்ரயாமி ||
உபநிஷதம்ருதாப் தேருத்த்ருதாம் ஸாரவித்பி :
மதுரகவிமுகை ஸ்தாமந்திமோபாயநிஷ்டாம் |
உபதிஶதிஜநேப்யோ யோதயாபூர்ணத்ருஷ்டி :
பஜஹ்ருதய ஸதாத்வம் பட்டநாதம் முநீந்த்ரம் ||
ருசிவரமுநீந்த்ரேணாத ரேணோபதிஷ்டாம்
அக்ருத க்ருதிவரிஷ்டாமந்திமோபாயநிஷ்டாம் |
தமிஹ நிகிலஜந்தூத்தாரணோத் யுக்தசித்தம்
ப்ரதிதி நமபி வந்தே பட்டநாதம் முநீந்த்ரம் ||
நமோஸ்து பட்டநாதாய முநயே முக்திதாயிநே |
யேநைவமந்திமோபாயநிஷ்டாலோகே ப்ரதிஷ்டதா||
தாதொன்றும் தார்புயத்தான் மணவாளமுனிதனது
பாதம் பரவும். பட்டர்பிரான்முனி பல்கலையும்
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும்பொருளந்திமோபாயநிட்டையுரைத்தவனே!
அந்திமோபாயநிஷ்டாயாவக்தா ஸௌம்யவரோமுநி: |
லேககஸ்யாந்வயோ மேத்ர லேகநீதாலபத்ரவத் |
எந்தை மணவாளயோகி எனக்குரைத்த
அந்திமோபாயநிட்டையாமதனை – சிந்தை செய்திங்
கெல்லாரும் வாழ எழுதி வைத்தேன் இப் புவியில்
நல்லறி வொன்றில்லாத நான்.
கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னிலாசை யுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தா லிகழில் வந்த தென்னெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோ தானவர்க்கு.
“ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர்வ்யவஸ்திதா: |
ப்ராணிந: கர்ம ஜநிதஸம்ஸாரவஶவர்த்திந:” என்றும்,
“ஏவம் ஸம்ஸ்ருதிசக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:” என்றும் சொல்லுகிறபடியே
இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுப வேப்யநாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்றள்ளல் பொய்ந்நிலமாகையாலே, தரை கண்டு காலூன்றித்
தரித்து நின்று அடிகண்டறுக்க வொண்ணாதபடி மூடிக் கிடக்கிற கொடு வினைத் தூற்றில் நின்று
பலகாலம் வழி திகைத்தலமருகின்ற ஸம்ஸாரி சேதநனுக்கு அஞ்சினான் புகலிடமான
ஆசார்யாபிமாநமே உஜ்ஜீவிக்கைக்கு உசிதோபாயமென்று ஶ்ரீவசநபூஷணாதி திவ்யப்ரபந்த முகேந அறுதியிட்டு,
ஸம்ஸாரத்தில் உருமாய்ந்து “அஸந்நேவ” என்கிறபடியே நஷ்டகல்பனாய் கிடந்த இவனை
“ஸந்தமேநம்” என்னும்படி நிர்ஹேதுகமாக அங்கீகரித்தருளி, த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய அறிவித்து
ரக்ஷித்தருளின மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவடிகளை உபாயமாகப் பற்றி,
“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் அந்திமோபாயநிஷ்டனுக்கு ஸ்வாசார்யனுடைய திவ்யநாமவைபவத்தையும்,
(அவருடைய ஜ்ஞாந ப்ரேமாதி குண வைலக்ஷண்யத்தையும் அவருடைய திருவவதார வைபவத்தையும்)
அவர் எழுந்தருளியிருக்கும் திவ்யதேஶ வைபவத்தையும், அவர் திருவடிகளே உபாயமென்னும் அவ்வழியாலே
உபேயமான தத் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், அவர் திருமேனியை ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்
த்ரிவித கரணத்தாலும் ஒன்றும் தப்பாமல் பேணும் வழியாலே தத்கைங்கர்ய வைபவத்தையும்,
அந்த கைங்கர்யத்வாரா அவருக்குண்டான ப்ரீத்யதிஶயத்தாலே தாம் பெறும் பேற்றினுடைய கௌரவத்தையும்
இடைவிடாமல் அநுஸந்தித்து தத் விஷயமாக மங்களாஶாஸநம் பண்ணி வாழுகையே
அநவரத கர்த்தவ்யம் என்னுமத்தையும் இப்ப்ரபந்தமுகேந சொல்லுகிறது.
அனந்தபாரம் பஹூ வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஸ்ச விக்நா: |
யத்ஸாரபூதம் தது பாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமிஶ்ரம் ||
அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் |
பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம் ||
தத்கர்ம யந்ந பந்தாய ஸாவித்யா யாவிமுக்தயே |
ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்பநைபுணம் ||
ஶாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஶம் புத்தேஶ்சலநகாரணம் |
உபதேஶாத்தரிம் புத்த்வா விரமேத் ஸர்வகர்மஸு ||
ஆத்யாநம் ஸத்ருஶேகதம் விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:
ஸத்புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |
கோவாஸங்க திஹேதுரேவமநயோ: கர்மாத ஶாம்யேத் குத:
தத்ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித் யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||
அநாசார்யோபலப்தாஹி வித்யேயம் நஶ்யதி த்ருவம் |
ஶாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸாங்கா ஸஹபலோதயா |
ந ப்ரஸீத தி வை வித்யா விநாஸதுபதே ஶத: ||
தைவாதீநம் ஜகத்ஸர்வம் மந்த்ராதீநம் து தைவதம் |
தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மணதைவதம் ||
வ்ருதைவ பவதோ யாதா பூ யஸி ஜந்மஸந்ததி: |
தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ||
பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்யக்ருத் |
ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவாந் பவேத் ||
ப்ரஹ்மண்யேவஸ்திதம் விஶ்வம் ஓங்காரே ப்ரஹ்ம ஸம்ஸ்திதம் |
ஆசார்யாத் ஸ ச ஓங்காரஸ் தஸ்மாதாசார்யவாந் பவேத் ||
ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபீ ந ஸம்ஶய: ||
தஸ்மாத் பார்யாத ய: புத்ராஸ்தமேகம் குருமாப்நுயு: ||
ஸாக்ஷாந்நாரயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் |
மக்நாநுத் தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா ||
தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா ஸம்ஸாரபய பீருணா ||
குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: |
குருரேவ பராவித்யா குருரேவ பரம்தநம் ||
குருரேவ பர: காமோ குருரேவ பாராயணம் |
யஸ்மாத்தது பதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: ||
அர்ச்சநீயஶ்ச பூஜ்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா ||
உபாயோபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||
யேந ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீ பப்ரதே குரௌ |
மர்த்யபுத்தி: க்ருதா தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத் ||
க்ருத்ஸ்நாம் வா ப்ருதி வீம் தத் யாந்ந தத்துல்யம் கதஞ்சந ||
ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: ||
இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி: ||
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே |
தஸ்ய வைகுண்ட துக்தாப் தித் வாரகாஸ்ஸர்வ ஏவ ஸ: ||
யத் ஸ்நாதம் குருணா யத்ர தீர்த்தம் நாந்யத் ததோதிகம் |
யச்ச கர்ம ததர்த்தம் தத்விஷ்ணோராராத நாத் பரம் ||
பஶுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவஸம்ஶ்ரயா: |
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||
பாலமூகஜடாந்தாஶ்ச பங்க வோபதி ராஸ்ததா|
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம் ||
யம் யம் ஸப்ருஶதி பாணிப்யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம்புநர்பாந்த வாஜநா: ||
அந்தோநந்த க்ரஹண வஶகோயாதி ரங்கேஶயத்வத்
பங்குர்நௌகாகுஹரநிஹிதோ நீயதே நாவிகேந |
புங்க்தே போகாநவிதி தந்ருபஸ்ஸேவகஸ்யார்ப காதி:
த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரப வதி ததா தேஶிகோ மே தயாலு: ||
ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ஶ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்
ஸத்த்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாது வ்ருத்த்யா ஸமேதம் |
டம்பா ஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||
உத்பாதகப்ரஹ்மபித்ரோர்கரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்த்ரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||
நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||
கிமப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம் ||
பிந்நநாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்தஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||
ஜ்ஞாநஹீநம் கோரும் ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ரபக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||
ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுக்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத: |
அநந்யஸாதநஶ்சைவ ததாநந்யப்ரயோஜந : ||
ப்ராஹ்மணோ வீதராக ஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத்வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்ஷு : பரமார்த்த வித்||
ஏவமாதி குணோபேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||
ப்ரபோத் ய போதநீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||
குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||
குருஶ்ச ஸ்வப்ந த்ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்த்ரஸ்ய வஶ ஈஶ்வர: |
மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவேஶ்வரஸ்திதி: ||
ஏஷவை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாநபுருஷேஶ்வர: ||
யோகீஶ்வரைர்விம்ருக்யாங்க் ரிர்லோகோயம் மந்யதே நரம் ||
நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ரய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குரும்பஜேத் ||
தயாத மஶமோபேதம் த்ருடபக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||
ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குருமா வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷூ தீக்ஷித: |
குலே மஹ்தி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |
அஜ்ஞாநதிமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகுருவே நம: ||
மந்தர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸ்ம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||
குஶப்த ஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் தஸ்தந்நிரோத க: ||
அந்த காரநிரோதி த்வாத் குருரித்யபி தீயதே ||
ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதி சேத் குரு: ||
ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்ப வதி நிஶ்சய: ||
லோபாத் வாயதி வாமோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி நயோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||
ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயமாசரதே யஸ்து ஆசார்யஸ்ஸோபி தீயதே ||
ரவிஸந்நிதி மாத்ரேண ஸுர்யகாந்தோ விராஜதே||
குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶேதே ||
யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாணவ: ||
ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்சதி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி அபி ஸ்ஸதா ||
அநந்யஶரணாநாஞ்ச ததா வாந்ந்ய ஸேவிநாம் |
அநந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தம்ம் ||
ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோவதேத் ||
நாதீக்ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக்நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||
டம்பாஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும் |
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||
உத்பாதகப் ரஹ்மபித்ரோர்க ரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித் யாதஸ்தம் ஜநயதி தச்ச் ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்தரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||
நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||
கிம்ப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதி கம் ||
பிந்தாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்த ஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||
ஜ்ஞாநஹீநம் குருமா ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணுபக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ர பக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||
ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுப்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத : |
அநந்யஸாத நஶ்சைவ ததாந்ந்யப்ரயோஜந: ||
ப்ராஹ்மணோ வீதராகஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத் வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்ஷு: பரமார்த்த வித் ||
ஏவமாதி குணோ பேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||
ப்ரபோத்ய போத நீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||
குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்ஷாத் பக வாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||
குருஶ்ச ஸ்வப்நத் ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்தரஸ்ய வஶ ஈஶ்வர: |
மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவஶ்வரஸ்திதி: ||
ஏஷ வை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாந புருஷேஶ்வர: |
யோகி ஶ்வரைர்விம்ருக் யாங்க் ரிர்லோகோ யம் மந்யதே நரம் ||
நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குருமா பஜேத் ||
தயாத மஶமோபேதம் த்ருடப்பக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||
ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குரும் வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷு தீஷித: |
குலே மஹதி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |
அஜ்ஞாந்திமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகாயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீ குரவே நம: ||
மந்த்ர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||
குஶப்தஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் த ஸ்தந்நிரோதக: |
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே ||
ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதிசேத் குரு: |
ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்பவதி நிஶ்சய: ||
லோபாத் வா யதி வா மோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி ந யோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||
ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸவயமாசரதே யஸ்துஆசார்யஸ்ஸோபி தீயதே ||
ரவிஸந்நிதி மாத்ரேண ஸூர்யகாந்தோ விராஜதே |
குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶதே ||
யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாநவ: ||
ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்ச தி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி பி ஸ்ஸதா ||
அநந்யஶரணாநஞ்ச ததா வாந்நய ஸேவிநாம் |
அந்ந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தமம் ||
ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்ஷய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோ வதேத் ||
நாதீக்ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக் நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||
தேஶகாலாதி நியமம் அரிமித்ராதி ஶோதநம் |
ந்யாஸமுத்ராதி கம் தஸ்ய புரஶ்சரணகம் ந து ||
ந ஸ்வர: ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா |
ஸ்த்ரீணாஞ்ச ஶுத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே ||
ருஷ்யாதிஞ்ச கரந்யாஸம் அங்க ந்யாஸஞ்ச வர்ஜயேத் |
ஸ்த்ரீஶூத்ராஶ்சவிநீதாஶ்சேந்மந்த்ரம் ப்ரவணவவர்ஜிதம் ||
ந தேஶகாலௌ நாவஸ்தாம் பாத்ரஶுத்திஞ்ச நை[நே] ச்சதி |
த்வயோபதே ஶகர்த்தாது ஶிஷ்யதோஷம் ந பஶ்யதி ||
துராசோரோபி ஸர்வாஸீ க்ருதக் நோ நாஸ்திக: புரா |
ஸமாஶ்ரயேதாதி தேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி |
நிர்தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ||
மந்த்ரரத்நம் த்வயம் ந்யாஸம் ப்ரபத்திஶ்ஶரணாகதி: |
லக்ஷமீநாராயணஞ்சேதி ஹிதம் ஸர்வபலப்ரதம் |
நாமாநி மந்த்ரரத்நஸ்ய பர்யாயேண நிபோத த ||
தஸ்யோச்சாரணமாத்ரேண பரிதுஷ்டோஸ்மி நித்யஶ: ||
ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஶ்யாஸ்ஸ்த்ரியஶ்ஶூத் ராஸ்ததே தரா: |
தஸ்யாதி காரிணஸ்ஸர்வே மம பக்தோப வேத்யதி ||
யஸ்து மந்த்ரத்வயம் ஸம்யகத் யாபயதி வைஷ்ணவாந் |
ஆசார்யஸ்ஸ து விஜ்ஞேயோ பவபந்த விமோசக: ||
ந்ருதேஹமாத்யம் ப்ரதிலப்ய துர்லபம்
ப்லவம் ஸுகல்யம் குருகர்ணதாரகம் |
மயாநுகூலேந நப ஸ்வதேரிதம்
புமாந் பவாப்திம் ஸ தரேத் ந ஆத்மஹா ||
ஆசார்யம் மாம் விஜாநீயாந்நாவமந்யேத கர்ஹிசித் |
ந மர்த்யபுத்த்யாத் ருஶ்யேத ஸர்வதே வமயோ குரு: ||
அத ஶிஷ்ய லக்ஷணம்: –
மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மிந் ந மூகோ பதிரோபி வா |
நாபக்ரமாதி ஸம்ஸாராத் ஸகலு ப்ரஹ்மஹா பவேத் ||
ஸதாசார்யோபஸத்த்யா ச ஸாபி லாஷஸ்ததாத்மக: |
ததத்வஜ்ஞாநநிதிம் ஸத்த்வநிஷ்டம் ஸத் குணஸாகரம் |
ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதாவிதி |
ப்ரணிபாத நமஸ்கார ப்ரியவாக் பிஶ்ச தோஷயந் |
தத்ப்ரஸாத வஶேநைவ ததங்கீகாரலாபவாந் |
ததுக்தத்த்வயாதாத்ம் யஜ்ஞாநாம்ருதஸுஸம்ப்ருத: ||
அர்த்தம் ரஹஸ்யத்ரிதயகோசரம் லப்த வாநஹம் ||
பரீக்ஷ்ய லோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த்யக்ருத:
க்ருதேந தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித்பாணிஶ்
ஶ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்த சித்தாய
ஶமாந்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் ததத்வதோ ப்ரஹ்ம வித்யாம் ||
குரும் ப்ரகாஶயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் |
அப்ரகாஶப்ரகாஶாப் யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ ||
ஆசார்யஸ்ய ப்ரஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம் |
ப்ராப்நுயாமீதி விஶ்வஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத் ||
ஆத்மநோ ஹ்யதிநீசஸ்ய யோகித்யேயபதார்ஹதாம் |
க்ருபயைவோபகர்த்தாரம் ஆசார்யம் ஸம்ஸ்மரேத் ஸதா ||
ந சக்ராத் யங்கநம் நேஜ்யா ந ஜ்ஞாநம் ந விராகதா |
ந மந்த்ர: பாரமைகாந்த்யம் தைர்யுக்தோ குருவஶ்யத: ||
நித்யம் குருமுபாஸீத த்த் வச: ஶ்ரவணோத்ஸுக: |
விக்ரஹாலோகநபரஸ்தஸ்யைவாஜ்ஞாப்ரதீக்ஷக: ||
ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச |
நித்யம் விதி விதர்க்யாத்யாத் யைராத்ருதோப் யர்ச்சயேத்குரும் ||
ஶ்ருதி: – ஆசார்யவாந் புருஷோ வேத | தேவமிவாசார்யமுபாஸீத |
ஆசார்யாதீ நோ பவ | ஆசார்யாதீ நஸ்திஷ்டேத் | ஆசார்யதே வோ ப வ |
யதா பகவத்யேவம்வக்த்ரி வ்ருத்தி: | குருதர்ஶநே சோத்திஷ்டேத் | கச்சந்தமநுவ்ரஜேத் |
ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸூந் |
குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸஶிஷ்யோ நேதரஸ்ஸ்ம்ருத: ||
தீர்க்கதண்ட நமஸ்காரம் ப்ரத்யுத்தாநமந்த்ரம் |
ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் ||
குர்வர்த்த ஸ்யாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: |
ஸுப்ரஸந்நஸ்ஸதா விஷ்ணுர்ஹ்ருதி தஸ்ய விராஜதே ||
மந்த்ரே தீர்த்தேத் விஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஶீபாவநா யத்ர ஸித்திர் பவதி தாத்ருஶீ ||
யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதேகதிதா ஹ்யர்த்தா: ப்ரகாஶ்யந்தே மஹாத்மந: |
தர்ஶநஸ்பர்ஶவசநைஸ்ஸஞ்சாரேண ச ஸத்தமா: |
பூதம் விதாய புவநம் மாமேஷ்யந்தி குருப்ரியா: ||
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாந்மந்த்ரஸம்ஸ்காரக்ருத்பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||
அவைஷ்ணவோபதிஷ்டம் ஸ்யாத்பூர்வம் மந்த்ரவரம் த்வயம் |
புநஶ்ச விதி நா ஸம்யக் வைஷ்ணவாத் க்ராஹயேத் குரோ: ||
அத ஸ்த்ரீஶூத் ரஸங்கீர்ணநிர்மூலபதிதாதி ஷு |
அநந்யேநாந்யத்ருஷ்டௌ ச க்ருதாபி ந க்ருதா பவேத் ||
அதோந்யத்ராநுவிதி வத்கர்த்தவ்யா ஶரணாகதி: |
தண்டவத் ப்ரணமேத் பூமாவுபேத்ய குருமந்வஹம் |
திஶே வாபி நமஸ்குர்யாத் யத்ராஸௌ வஸதி ஸ்வயம் ||
ஆசார்யாயாஹரதே ர்த்தாநாத்மாநஞ்ச நிவேத யேத் |
தத்தீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந்நாரயணோ ஹி ஸ: ||
ஸத் புத்தி ஸ் ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ்தத்த்வபோதாபிலாக்ஷீ
ஶுஶ்ரூஷுஸ்த்யக்தமாந: ப்ரணிபதநபர: ப்ரஶ்நகலாப்ரதீக்ஷ: |
ஶாந்தோ தாந்தோநஸுயுஶ்ஶரணமுபக தஶ்ஶாஸ்த்ரவிஶ்வாஸஶாலீ
ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாங்க்ருதவிதபிமதம் தத்த்வத: ஶிக்ஷணீய: ||
யஸ்த்வாசார்யபராதீ நஸ்ஸத்வ்ருத்தௌ ஶாஸ்யதே யதி |
ஶாஸேநே ஸ்திரவ்ருத்திஸ்ஸ ஶிஷ்யஸ் ஸத்பிருதாஹ்ருத: ||
ஶிஷ்யோ குருஸமீபஸ்தோ யதவாக்காயமாநஸ: |
ஶுஶ்ரூஷயா குரோஸ்துஷ்டிம் குர்யாந்நிர்தூ தமத்ஸர: ||
ஆஸ்திகோதர்மஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ்ஶுசி: |
கம்பீரஶ்சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபி தீயதே ||
ஆஸநம் ஶயநம் யாநம் ததீயம் யச்ச கல்பிதம் |
குரூணாஞ்ச பதாக்ரம்ய நரோ யஸ்த்வத மாம் கதிம் ||
கோஶ்வோஷ்டரயாநப்ரஸாத ப்ரஸ்தரேஷு கடேஷு ச |
நாஸீத குருணா ஸார்த்தம் ஶிலாப லகநௌஷு ச ||
யஸ்திஷ்டதி குரூணாஞ்ச ஸமக்ஷமக்ருநாஞ்ஜலி: |
ஸமத்ருஷ்ட்யாத தாஜ்ஞாநாத் ஸ ஸத்யோ நிரயம் வ்ரஜேத் ||
ஆஸநம் ஶயநம் யாநம் அபஹாஸஞ்ச ஶௌநக |
அதிப்ரலாபம் கர்வஞ்ச வர்ஜயேத் குருஸந்நிதௌ ||
யத்ருச்சயா ஶ்ருதோ மந்த்ரஶ்சந்நேநாதச்ச லேந வா |
பத்ரேக்ஷிதோ வாவ்யர்த்த ஸ்ஸ்யாத் தம் ஜபேத் யத் யநர்த்த க்ருத்||
மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ரப்ரதே கு ரௌ |
த்ரிஷுபக்திஸ்ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதமஸாதநம் ||
அத மோதே வதாப க்தோ மந்த்ரபக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குருபக்தோத்தமோத்தம: ||
ஶ்ருதி: –
ஆசார்யாந்மா ப்ரமத: | ஆசார்யாய ப்ரியம் த நமாஹ்ருத்ய |
குரோர்குருதரம் நாஸ்தி குரோர்யந்ந பாவயேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்நாம ஸதாஜபேத் |
{குருபாதாம்புஜம்த்யாயேத் குரோர்நாம ஸதா ஜபேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்ந்யந்ந பாவயேத் – பா }
அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்தயா பஜேதப் யர்ச்சயேந்முதா ||
உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||
ஏவம் த்வயோபதேஷ்டாரம் பாவயேத் புத்திமாந்தியா |
இச்சாப்ரக்ருத்யநுகுணைருபசாரைஸ்ததோசிதை: ||
பஜந்நவஹிதஶ்சாஸ்ய ஹிதமாவேதயேத்ரஹ: |
குர்வீத பரமாம் பக்திம் குரௌ தத்ப்ரியவத்ஸல: ||
தத் நிஷ்டாவஸாதீ தந்நாமகுணஹர்ஷித: |
ஶாந்தோநஸுயு: ஶ்ரத் தாவாந் கு ர்வர்த்தாத் யாத்மவ்ருத்திக: ||
ஶுசி: ப்ரியஹிதோ தாந்த: ஶிஷ்யஸ்ஸோபரதஸ்ஸுதீ: |
ந வைராக் யாத்பரோ லாபோ ந போதாத பரம் ஸுகம் |
ந குரோரபரஸ்த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு: ||
————
அந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம்
மதுரகவி ஆழ்வார் மற்றும்
பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்
இன்னமும் ஆசார்யவைபவம் –
ஸதாசார்ய ஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி,
அன்று தொடங்கி இவனுக்கு நல்விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் –
“புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும்,
“ஆதித்ய – ராம – திவாகர – அச்யுதபாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி,
விகஸியாத போதிற் கமலமலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும்,
விடியா வெந்நரகான ஸம்ஸாரமாகிற கால ராத்ரிக்கு ஆசார்யன் தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள்.
“பார்வை செடியார் வினைத்தொகைக்குத்தீ” என்றும்,
“ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: |
தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும்,
“யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி |
தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும் சொல்லுகிறபடியே
ஆசார்ய கடாக்ஷமானது ஸ்வ விஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ண வேண்டாதபடி
தானே தூறு மண்டிக் கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ்ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை
அவர்கள் முன்பு மஹாபாபிகளே யாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய்
அவ்வளவன்றிக்கே பின்பு ஸுஸ்திரமான பரமபதத்தையும் சென்றடையப் பெறுவார்கள்.
“நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதியன்றோ
சீராருமாசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”,
“உண்ட போதொரு வார்த்தையும் உண்ணாத போதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேருண்டிறே,
அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதியிடுவது, அவர்களைச் சிரித்திருப்பாரொருவருண்டிறே,
அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதியிடக்கடவோம்”.
பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம்” என்றார்.
ஶ்ரீமதுரகவிகள் “தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார்.
அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார். இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார்.
அவர் “அடிக்கீழ்மர்ந்து புகுந்தேன்” என்றார். இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார்.
அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார். இவர் “தேவு மற்றறியேன்” என்றார்.
அவர் “பாடியிளைப்பிலம்” என்றார். இவர் “பாடித்திரிவனே” என்றார்.
அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார்.
இவர் “திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்” என்றார்.
அவர் “உரியதொண்டன்” என்றார். இவர் “நம்பிக்காளுரியன்” என்றார்.
அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார். இவர். “அன்னையாயத்தனாய்” என்றார்.
அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார். இவர் “என்னையாண்டிடும் தன்மையான்” என்றார்.
அவர் “கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார். இவர் “சடகோபன்” என்றார்.
“யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார்.
இவர் “நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார்.
அவர். “எமரேழுபிறப்பும் மாசதிரிதுபெற்று” என்றார். இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார்.
அவர் “என்னால் தன்னை இன்தமிழ் பாடியவீசன்” என்றார். இவர் “நின்றுதன்புகழேத்த அருளினான்” என்றார்.
அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார். இவர் “என்றுமென்னை இகழ்விலன்காண்மினே” என்றார்.
அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார். இவர் “எண்டிசையுமறியவியம்புகேன் ஒண்தமிழ்ச்சடகோபனருளையே” என்றார்.
அவர் “அருளுடையவன்” என்றார். இவர் “அருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார்.
அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப்புகுந்தான்” என்றார். இவர் “நிற்கப்பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார்.
அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார். இவர் “ஆட்புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார்.
அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார்.
இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்” என்றார்.
அவர் “ஆராதகாதல்” என்றார். இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார்.
அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார். இவர் “தென்குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார்.
அவர் “உலகம் படைத்தான்கவி” என்றார். இவர் “மதுரகவி” என்றார்.
அவர் “உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் ஊரெல்லாம்” என்றார்.
இவர் “நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டியருளினார்.
அவர் “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றார்.
இவர் “கோலத்திருமாமகள்கொழுநன் தானே குருவாகித்தன் அருளால்” என்றும், ***
பிள்ளை லோகாசார்யர்,
“தான் ஹிதோபதேஶம் பண்ணும்போது” என்று தொடங்கி,
“நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்தரத்தை உபதேஶித்தவனை.
ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந்மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தியில்லை.
ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப்போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக் கடவன்.
ஆசார்யனுக்கு தேஹரக்ஷணம் ஸ்வரூபஹாநி.
ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்.
ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம்.
அவன் பூர்ணனாகையாலே கொள்ளான். அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது.
ஈஶ்வரனைப்பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி,
ஆசார்யனைப் பற்றுகை காலைப்பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி.
ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டிருக்கும்.
ஆகையிறே குருபரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் அபயப்ரதாநமும் அருளிச்செய்ததும்,
ஆசார்யனுக்கு ஸத்ருஶ ப்ரத்யுபகாரம் பண்ணலாவது விபூதி சதுஷ்டயமும் ஈஶ்வர த்வயமும் உண்டாகில்.
ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாநபக்திவைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி,
“இத்தையொழிய பகவத் ஸம்பந்தம் துர்லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.
ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”. “நல்லவென் தோழி” என்று தொடங்கி,
“அசார்யாபிமாநந்தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும்.
பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி, ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது.
இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும், பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பலபர்யந்தமாக்கும்”.
“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று
ஆச்சான் பிள்ளை அருளிச்செய்வர்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்ஷுவுக்கு த்யாஜ்யன்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச் சொல்லுமவன்.
ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும்.
ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு முழுகுமவனன்று,
தன்னைக் கரையேத்தவல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே.
ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்.
கருடத்யாநத்துக்கு விஷம் தீருமாப்போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே
ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக்கொள்ளலாம் என்று அருளிச்செய்வர்கள்.
ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும் பெரிய மதிப்பனாய்,
அர்த்தகாமோபஹதனன்றிக்கே லோக பரிக்ரஹமுடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).
————
அந்திமோபாய நிஷ்டை – 3 –
சிஷ்ய லக்ஷணம்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்,
திருவரங்கத்து அமுதனார்,
பிள்ளை லோகாசார்யர்
மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்
இன்னமும் ஶிஷ்யலக்ஷணம் :-
“இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து”,
“குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”,
“வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”,
“விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”,
“வேறொன்றும் நானறியேன்”,
“தேவு மற்றறியேன்”,
“ஶத்ருக்நோ நித்ய ஶத்ருக்ந”,
“வடுகநம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர்”,
“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“இராமானுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப்பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”,
“பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்காறொன்றுமில்லை மற்றச்சரணன்றி”,
“நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின் கணன்றிப் புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்”,
“இராமானுசனை யடைந்த பின் என் வாக்குரையாது என் மனம் நினையாதினி மற்றொன்றையே”,
“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”,
“கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”,
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்று தொடங்கி
“இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”,
“நந்தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப்பூமன்னவே”…
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
“மாடும் மனையும் கிளையும் மறைமுனிவர் தேடுமுயர்வீடும் செந்நெறியும்
பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகைகண்டீர் விதி”,
“வேதமொருநான்கு” என்று தொடங்கித்
“தீதில் சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகுமென்னுமது”,
“வில்லார் மணிகொழிக்கும்” என்று தொடங்கி, “எந்நாளும் மாலுக்கிடம்”,
“தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன் தாளிணையை உன்னுவதே சால வுறும்”.
“ஆசார்யப்ரேமம் கனத்திருக்கையும்”,
“ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக்கண்டாப்போலேயும்”,
“இப்படி ஸர்வப்ரகராத்தாலும் நாஶஹேதுவான அஹங்காரத்துக்கும்
அதினுடைய கார்யமான விஷய ப்ராவண்யத்துக்கும் விளைநிலம் தானாகையாலே” என்று தொடங்கி,
“இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன்.
வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும்.
பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்.
ஆசார்யகைங்கர்யமறிவது ஶாஸ்த்ரமுகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும்.
இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம்,
அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்,
ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்
அஶக்திக்கிலக்கு நிஷித்தாநுஷ்டாநம்.
ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பலஸாதந ஶுஶ்ரூஷையும், ஆர்த்தியும்,
ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”.
“மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும்” – என்று தொடங்கி –
எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்.
‘மாதாபிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ்வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச்செய்தார்.
ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக்கடவன். ஶிஷ்யன் உகப்பிலே ஊன்றிப்போரும்.
ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகை யொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை.
ஶிஷ்யனுக்கு நிக்ரஹகாரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்.
இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்யவிஷயத்தில் “என்னைத் தீமனங்கெடுத்தாய், மருவித்தொழும் மனமே தந்தாய்”
என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.
பாட்டுக்கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக்கடவன்.
இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹ யாத்ரையே தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்திருக்க வேணும்.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும்,
ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும் ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்கவடுக்கும்.
ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ்ஜ்ஞாநம் கைவந்ததென்ன வொண்ணாது.
நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும். ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள்தோறும் அநுஸந்தித்திலனாகில்
இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும்.
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்தும் செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பட்டிருப்பான்.
ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும்.
“சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண்முன்னே நிற்க
அவனை விட்டுத் தன்னுடைய ஆசார்யர்களுடைய பாத ஸேவை பண்ணப்போகிறேனென்று போனாளிறே
தான் சதிரியாயிருக்கச்செய்தேயும் எல்லைச்சதுரையாகையாலே ஶ்ரீஶபரி.
ஞானமநுட்டானமிவை நன்றாகவேயுடையனான குருவையடைந்தக்கால் – என்று தொடங்கி.
திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும். உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி –
கையிலங்கு நெல்லிக்கனி. தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி –
ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு. ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி –
ஆசையுடன் நோக்குமவன். பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி –
நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்.
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாதநந்யஶரணோ பவதீதி மத்வா என்று நம்முடைய ஜீயர்,
தாம் அந்திமோபாயநிஷ்டாக்ரேஸரர் என்னுமிடத்தை
ஸ்வ ப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும், யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித்
தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித்தருளுகிற தனியனிலும் –
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம், முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்,
முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம், பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம்,
பிறர் மினுக்கம் பொறாமை யில்லாப் பெருமையும் பெற்றோமே – என்று
தம்முடைய நிஷ்டையை மதித்துக்கொண்டு மிகவும் ஹ்ருஷ்டரானாரிறே
———
அந்திமோபாய நிஷ்டை – 4 –
வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில்
எம்பெருமானாரின் கருணை
மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி
வடுகநம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள்
அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள,
உடையவர் புறப்பட்டு ஸேவித்து, “வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள,
வடுகநம்பி, ‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால்
என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும். ஆகையால் இத்தைவிட்டு வரக்கூடாது’ என்று
அருளிச்செய்தார் என்று ப்ரஸித்தமிறே.
“உன்னையொழியவொரு தெய்வமற்றறியா, மன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்னிலையை,
என்றனுக்கு நீ தந்தெதிராசா எந்நாளும், உன்றனக்கே ஆட்கொள் உகந்து” என்று
வடுகநம்பி நிலையையும் நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித்தருளினாரிறே.
(1) ப்ரக்ருதிமானாகில் ஸத்வைத்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான்;
ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்
(2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத்
தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி,
பின்பு, ‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள,
‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
அபிமாநநிஷ்டனாகில் இப்படி இருக்கவேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும்
(3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு ஸாத்த்விகையைப் பார்த்தருளி,
‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன,
‘புழங்கு காண், “வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல்
அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச்செய்தார் என்றும்
இம்மூன்று வார்த்தையும் பலகாலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
இதில் வார்த்தை உபதேஶத்தாலே அறிய வேணும்.
உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்றொருவர்
வித்யையாலும் ஶிஷ்யஸம்பத்தாலும் அறமிகுந்தவராய் அநேக ஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி
எடுப்பித்துக் கொண்டு தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து
உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க,
பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக
உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளியிருக்க,
அவ்வளவில் அருளாளப்பெருமாள் தம்முடைய வெற்றி தோற்ற எழுந்திருந்து அற்றைக்குப் போக,
உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை
‘இத்தனைகாலமும் தேவரீருடைய ஸ்வரூபரூபகுண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்;
இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும்
அழித்துப் பொகட்டு லீலை கொண்டாடத் திருவுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று
அமுது செய்தருளாமல் கண்வளர்ந்தருள,
பெருமாளும் அந்த க்ஷணத்திலே ‘உமக்கு ஸமர்த்தனாயிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்;
அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத்தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று
உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,
உடையவரும் திருக்கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து
பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு
“வலிமிக்க சீயமிராமாநுசன் மறைவாதியராம் புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை” என்கிறபடியே
மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்ககோஷ்டிக்கு எழுந்தருள,
அவ்வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு
திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிறபோது இங்கு நின்றும் சோம்பிக்கொண்டெழுந்தருளாநின்றார்,
ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ,
உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன,
அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து ‘தேவர்க்கு இப்போது பெரியபெருமாள் ப்ரத்யக்ஷமானபின்பு
தேவரீரென்ன, பெரியபெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன்.
இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய்திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை.
ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருளவேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க,
உடையவரும் அவ்வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து
விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று
தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப் பெரியதொரு மடத்தையும் கொடுத்து,
‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும்,
உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை. விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி
வ்யாக்யாநம் பண்ணிக்கொண்டு ஸுகமே இரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள,
அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.
அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே
நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க,
அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன,
புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷணவர்கள் நெஞ்சுளைந்து “நீங்கள் இரண்டு சொல்லுவானென்?
இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன, அவர்கள் ‘உண்டு காணும்;
அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்; ஆகையாலே சொன்னோம்’ என்ன,
‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன,
ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர்காட்ட,
அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள்.
இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு,
‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை
எம்பெருமானார்க்கு எதிராகச் சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று
மிகவும் வ்யாகுலப்பட்டு, அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து
உடையவர் திருவடிகளைக் கட்டிக்கொண்டு ‘அநாதி காலம் இவ்வாத்மா தேவர் திருவடிகளை அகன்று
அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும் அகற்றிவிடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க,
உடையவர் ‘இதுவென்’ என்ன, அங்குப்பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய,
உடையவரும் அச்செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி, ‘ஆனால் இனி உமக்கு நாம் செய்யவேண்டுவதென்’ என்ன,
அருளாளப் பெருமாளெம்பெருமானார் ‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே
தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும் , ‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல்
வைத்துக்கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த்
தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம் அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும்
பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற
ப்ரபந்தங்களையும் இட்டருளி, அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும்
“தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே
ஸச்சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பரதேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும்,
அவன்தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார்
அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
———-
அந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்
கூரத்தாழ்வான் திருவயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக் கொள்ள,
பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான்,
அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன,
‘உண்டு’ என்று சொல்ல,
அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய், வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று
‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர் இரண்டாற்றுக்கும் நடுவே
பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன,
வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன,
ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன,
வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும்
ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று
அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார்.
அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று,
‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன,
‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன,
‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன,
‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும்
வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து வேதாந்திகளுடனே சொல்லாமல்
வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன,
அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேதஶாஸ்த்ரங்களொழிய உமக்கு
மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன,
‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று
பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர் ‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர்பூதராம்படி
பண்ணிக் கொள்ள வேணும்’ என்று தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து,
‘மேல்நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார்.
அவரைத் திருத்தி நம்முடைய தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ணவேணும் என்று அங்கே விடைக்கொள்ளுகிறேன்,
அவரை நன்றாகத் திருத்தி ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றியருளவேணும்’ என்று
பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய, பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித்
தம்முடைய குமாரரான வாசி தோற்ற, ‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப் போம்’ என்றுவிட,
பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’
என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே
ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும் இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று,
‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க,
அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன,
அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி – ‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப் போகாது.
அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்துவிடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலைவாசலிலே இருந்து நாலிரண்டு மாஸம்
வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுரவொட்டாதே தள்ளிவிடுவார்கள்’ என்ன,
பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து
வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி –
‘வேதாந்திகள் தநவானாகையாலே அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர்,
அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஸத்ரத்திலே சென்றால்
வேதாந்திகளைக் கண்களாலே காணலாம். ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி
நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’ என்று சொல்லிப்போனார்கள்.
பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம்பற்றித் தம்முடைய அனைத்து பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி,
ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி இடுக்கிக் கொண்டு ஒரு காவி வேஷ்டியையும்
தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனேகூட கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,
வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு மண்டபத்தின்மேலே பெரிய மதிப்போடே இருக்க,
ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர,
பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள,
வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன,
‘எல்லாரும் உண்கிறவிடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’ என்ன, ‘
எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன,
வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன,
பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன,
வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது
நம்முடைய முன்வந்துநின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்கவல்லார் இந்த லோகத்திலே இல்லையாகையாலே,
வேஷம் கார்பண்யமாயிருந்ததேயாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து
‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன,
அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை இவையெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளி நின்று
மஹாவேகத்திலே உபந்யஸிக்க,
அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரைகுலையத் தலைகுலைய இறங்கி வந்து
பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க
பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணியருளி,
‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச்சொல்லாவதில்லை.
விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயாவாதத்தை ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி,
ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச் செய்து,
‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று உத்யோகிக்கிறவளவிலே
ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து பட்டரை மீளவும்
ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருபல்லக்கிலேற்றி உபயசாமரங்களைப் பரிமாற எழுந்தருளுவித்துக் கொண்டு
புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு
‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும் கடைகெட்டு
ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர்கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,
‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார்,
அநாதிகாலம் தப்பி அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கைகழிந்துபோன இவ்வாத்மா
என்றும் தப்பிப்போம் என்று திருவுள்ளம் பற்றி, இப்படி அதிகார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக்கொண்டு
ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதிதுர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து
அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய்விட,
பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி, ‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச் செய்து கோயிலேற எழுந்தருளினார்.
அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிது நாள் எழுந்தருளியி ருந்து பட்டரைப் பிரிந்திருக்க மாட்டாதே
கோயிலுக்கு எழுந்தருளத் தேட அங்குள்ளவர்கள் அவரைப் போகவொண்ணாதென்று தகையத்
தமக்கு நிரவதிக தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து,
மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத்தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு ஸந்யஸித்துக்
கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும் தம்மதென்கிற அபிமாநத்தை விட்டு,
பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திருமாளிகையிலே விட்டுவைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க,
அவ்வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு ஒருக்ஷணமும் பிரியாமல்
தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஜீயரும் பட்டரையல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார்.
பட்டர் நஞ்சீயர் என்று அருளிச்செய்தவன்று தொடங்கி வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று.
நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே
ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்வர்.
நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரமாக
ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ
என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க,
அவர்களும் ‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’
என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக்காட்டுங்காண்’ என்ன,
அவரும் எழுதிக் கொடுக்க, ஜீயர் அத்தைக் கண்டு ‘எழுத்து முத்துப்போலே நன்றாயிருந்தது;
ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய,
திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’
என்று ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தை யறிந்து
‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,
அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி
ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி
‘இப்படித்தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க,
அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட,
வரதராஜன் திருக்காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே
கட்டிக்கொண்டு நீஞ்ச, அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக,
அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து,
ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச் செய்தருளின அர்த்தம்
ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே ஓரொரு பாட்டுக்களிலே
உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும் எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க,
ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்தவளவிலே தாமருளிச் செய்த கட்டளையாயிருக்கச்செய்தே
ஶப்தங்களுக்கு மிகவும் அநுகுணமாக அநேக விஶேஷார்த்தங்கள் பலவிடங்களிலும் எழுதியிருக்கையாலே
அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி வரதராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிராநின்றது; இதேது சொல்லும்’ என்ன,
அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க,
ஜீயரும் ‘நீர் பயப்படவேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன,
வரதராஜனும் ‘திருக்காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன்.
ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப்போய்த்து.
இது தேவரீர் அருளிச்செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹாஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று
மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக்கலிக்கன்றிதாஸர்’ என்று திருநாமம் சாத்தித்
தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக்கொண்டு
பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வரதராஜனுக்கு நம்பிள்ளை என்று
திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.
இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை
“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர், அவரவர்தம் ஏற்றத்தால்,
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே, ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று
உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.
‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே
நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளையுடைய வைபவமிருப்பது.
———-
அந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை
திருக்கோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப்போது திருக்கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலேகாணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே.
நம்பி தான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு ஆளவந்தாரை த்யாநித்துக் கொண்டு
யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.
உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே
அவனைக் கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக்கொண்டு
ஸம்ஜ்ஞையாலே தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டியருள,
ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத் கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்தபின்பு
‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில் இப்பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கியருளுவர்;
கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து விட்டாராகையாலே
எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு அநதிகாரியாய் விட்டேன்’ என்று
ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற திருப்பதியிலே
எழுந்தருளினவாறே அவ்வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க,
உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க,
அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன,
உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன,
அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச்செய்கையாலே
திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய,
உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத்
தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன,
அவளும் தம்முடைய அகத்தைக் காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி,
அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப் போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித்
தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து
விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார்.
அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத்ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து
வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச்செய்வர்கள்.
இந்த வ்ருத்தாந்தங்களாலே
‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா |
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே
ஶாஸ்த்ராநதிகாரிகளான இவர்களெல்லாம் பரமக்ருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.
திருக் குருகைப்பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு
ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந் நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண,
அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க,
வடுகநம்பி எழுந்திருந்து குருபரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவகாரியம் என்று அருளிச்செய்து
அவ்வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும்
“நாவகாரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.
திருமாலை யாண்டான் அருளிச்செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ் ஸம்ஸாரத்தில் ஆளில்லை; அதெங்ஙனே என்னில்,
ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச்சுமந்து ரக்ஷித்து அதினருகே கூறைகட்டிப்
பதினாறாண்டுகாலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது;
அது போலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரமபதத்தை,
இதுக்குடலாக ஒரு நல் வார்த்தை யருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒரு காலாகிலும் க்ருதஜ்ஞராகாத
ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தாமாலையிலே ப்ரஸித்தம்.
“கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்நவ்ரதே ததா|
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி:” என்கிறவிடத்தில்
க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்யோபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதியில்லாத பாபமென்றால் அப்ராக்ருதமாய்,
நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி,
“அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாநப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும் போது
உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர்ந்யாய ஸித்தமிறே.
தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையை யிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து
தெளிந்த நீரானது மேலே நிற்குமாப் போலே அஜ்ஞாநப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை
ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்;
தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே,
பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப்போய்,
அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும் கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத்துல்யர்கள் கண்வட்டத்திலே
வர்த்திக்கை ஸ்வரூபம் என்று பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வார்கள். (கதகஷோத இத்யாதி).
ஆளவந்தார் திருவநந்தபுரத்துக்கெழுந்தருளுகிறபோது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரியாண்டானை
‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள,
ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர,
பெருமாள் அவரைப் பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம் பற்றியருள,
‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டேயாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று அவரும் விண்ணப்பம் செய்ய,
‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள,
அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக்காதவழி மீண்டு,
கரைமனையாற்றங்கரையிலே விட்டெழுந்தருளியிருந்தார்.
ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க;
அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச்சோலைகள் தோன்றுகிறது,
ஶ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு போய் ஸேவித்துவாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள;
‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய,
‘இது ஒரு அதிகாரம் இருந்தபடியென்! இந்நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று
ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.
பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டு போலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச்செயதார்,
இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம்செய்ய,
பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,
பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டு, ‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன,
மீளவும் பிள்ளை அத்தைக் கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச் செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.
பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன,
‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன,
பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை; ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளியிட்டருளத்
திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன். தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித்
தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றியருளி உலாவியருளும்போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும்
சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும்
‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’ என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் –
என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து
உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.
பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே
திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும்,
அவர் அருளிச் செய்தருளும் நல் வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய்,
ஆனந்த மக்நராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச் செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட,
இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்துருந்து தண்டனிட வேண்டுகையாலே
‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலியெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக்கடவோம்’
என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.
பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு ‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்; வேர்த்தபோது குளித்து, பசித்தபோது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால் உம்மைப் பரமபதத்தில் நின்றும் தள்ளிவிடப் போகிறார்களோ? இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்கவன்றோ உள்ளது” என்று அருளிச்செய்தார்.
முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி,
அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப்பூமரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு
திருவேங்கடமுடையானுக்குத் திருநந்தவநம் செய்கிறத்தைக் கண்டு
‘அந்ந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்ய ஸூரிகளை ஒரு விடத்திலே இருக்க வொட்டாமல்
கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க் கொண்டு ஏதுக்கு நலக்குகிறீர்;
அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திரு மாளிகையிலே நாள் தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள் அமுது செய்தருளின இலை
மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்;
அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து
*பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம். திருப்பூமரங்களை பாதியாமல் எழுந்தருளமாட்டீரோ?’ என்று அருளிச் செய்தார்.
அநந்தரம் அங்குத் தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து
அநந்தாழ்வானுடைய திருமடியிலே கண்வளர, அந்ந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க,
அவரும் ‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின
அவருடைய திருமாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச்செய்த உடனே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
இத்தால் சொல்லித்தென் என்னில்,
அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க, அதில் ஒரு தாத்பர்யமற்று
ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமானபடி சொல்லிற்று.
————
அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1
நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு எழுந்தருளாநிற்க,
திருக்காவேரி இருகரையும் ஒத்துப் பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள,
நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே
திக் ப்ரமம் பிறந்து, தோணி அமிழத்தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்;
ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப்பட்டுப்போகும்’ என்று
தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே தோணியை விட்டார்களில்லை.
அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து
‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக்கரையிலே விடு’ என்று சொல்லி,
அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார்.
அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக்கரையிலே சேர்ந்தேறிற்று.
அவ்வளவில் பிள்ளையும் ‘ஐயோ! ஒராத்மா தட்டுப்பட்டு போய்விட்டதே!’ என்று பலகாலும் அருளிச்செய்து வ்யாகுலப்பட்டருள,
அந்த ஸாத்த்விகையம்மை தோணியை விட்டு நாலடி எழப்போன வளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று,
இராக்குரலாகையாலே அருளிச்செய்கிறத்தைக் கேட்டு
‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப்பட்டருள வேண்டாம்; அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல்காட்ட,
பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாகவேணும்’ என்று திருவுள்ளம் பற்றி யருளித் தோணிக் காரனை விட்டு
அவளைக் கரையிலே அழைப்பித்துக் கொள்ள, அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனை யொழிந்து
வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே
‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப்போகிற போது தேவர் அங்கே வந்து ஒருகரைமேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’ என்று கேட்க,
பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவானபின்பு அதுவும் அப்படியேயாகாதோ’ என்று
அருளிச் செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச்செய்தருளுவர்.
வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹாஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க
வென்றொரு கோல்துறையையும் நமக்குத்தாரும்’ என்று திருவுள்ளம்பற்றியருள,
அவளும் ‘அடியேன் அப்படிச்செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச்செய்ய,
‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று அருளிச்செய்த வார்த்தையால் போராது,
எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றிதாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக்கொண்டு கொடுத்தருளவும்’ என்று
ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு அன்று
மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.
கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்
நம்பிள்ளையுடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும்,
ஶிஷ்ய ஸம்பத்தியையும் கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்றுகொண்டு போருவராயிருப்பர்.
அக் காலத்திலே அந்த பட்டர் ராஜஸ்தாநத்துக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு,
‘ஜீயா! நாம் ராஜகோஷ்டிக்கு போகிறோம்; கூடவாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக் கொண்டு ராஜஸ்தானத்துக்கேற எழுந்தருள,
ராஜாவும் பட்டரை எதிர்க்கொண்டு பஹுமாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக்கொண்டு
பெரிய திருவோலக்கமாயிருக்கிற வளவிலே,
ராஜா, தான் பஹு ஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும், பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்க வேணும் என்று விசாரித்து,
‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்தக்கிற பெருமாள்,
ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க,
பட்டர் அதற்கு உத்தரம் அருளிச்செய்யச் சிறிது விசாரிக்க வேண்டியிருக்க, அவ்வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக,
அவ்வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து,
‘ஜீயா! திருக்கலிகன்றி தாஸர் பெரிய வுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம் கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க,
ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன,
பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளியிருக்க,
ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன,
பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக்கேள்’ என்று
“ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ: குரூந்ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று
இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச்செய்ய,
ராஜாவும் போரவித்தராய், ‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று
ஶிர:கம்பம்பண்ணி மிகவும் ஶ்லாகித்து, மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள்,
அநேக தநங்களெல்லாத்தையும் கட்டிக்கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து,
‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று ஸத்கரித்துவிட,
பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக் கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு
ஜீயர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே
கொண்டுபோய்க் காட்டிக் கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச்செய்ய,
ஜீயரும் பட்டர் அருளிச்செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக் கொடுக்க,
நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து,
‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுக மண்டலத்தைப் பார்த்து
‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே
அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன,
‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன,
பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்யஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது;
ஆன பின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குலப்ரபாவத்துக்குத் தகுதியாகும்
தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையே யாகிலும், அசலகத்தே யிருந்து இத்தனை நாள் தேவரை
இழந்து கிடந்த மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு
“அஸூயாப்ரஸவபூ:” என்கிறபடியே அஸூயை பண்ணித்திரிந்த இவ்வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கையல்லது
வேறு எனக்கொரு கைம்முதலில்லை. ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று
கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க,
பிள்ளையும் பட்டரை வாரியெடுத்துக் கட்டிக் கொண்டு, விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தம்முடைய திருவுள்ளத்திலே
தேங்கிக்கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும் ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள,
இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல் பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி,
ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.
அக் காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள பட்டர் பிள்ளை யருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு,
தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க ‘இதேது?’ என்று கேட்டருள,
‘தேவரீர் இந்த உருத்திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன,
பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க,
நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி மஹாபாரத ஸங்க்யையாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு,
பட்டரைப் பார்த்து, ‘இதுவென்? நம்முடைய அநுமதியின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்தபடியே
திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன,
பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்யஸூக்தியை எழுதினதொழிய,
ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன,
பிள்ளை பட்டரைப் பார்த்து, ‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில்,
நம்முடைய நெஞ்சை எழுதப் போகிறீரோ?’ என்று வெறுத்தருளிச் செய்து,
‘உடையவர் காலத்திலே திருக்குருகைப்பிரான்பிள்ளான் திருவாய்மொழிக்கு ஶ்ரீவிஷ்ணுபுராண ப்ரக்ரியையாலே
ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை.
ஆன பின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் ஸபாதலக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால்
ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச்செய்து,
பட்டர் திருக் கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக் கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க,
அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.
அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரிய ஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக் கற்றிருக்கிற
பெரியவாச்சான் பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே
இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார்.
அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை
பகல்கேட்டு தரித்து, ராத்ரியில் எழுதித் தலைக்கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டுபோய் வைக்க,
நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள,
அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள, அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே
ஆனைக் கோலம் செய்து புறப்பட்டாப் போலே மிகவும் அழகாய், ஶ்ருத ப்ரகாஶிகை கட்டளையிலே
முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி,
வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி
‘நன்றாக எழுதினீர்; ஆனாலும் நம்முடைய அநுமதியின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத்தாரும்’ என்று
அவர் திருக்கையில் நின்றும் வாங்கி வைத்துக் கொண்டு
பின்பு தமக்கு அபிமதஶிஷ்யரான ஶ்ரீமாதவப்பெருமாள் என்று திருநாமத்தையுமுடையரான
ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும்,
இவ்வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே
“சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமெனவாங்கி முன்
நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று
நம்முடைய ஜீயர் தாமே அருளிச் செய்தருளினார்.
ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான வ்யாக்யாந கட்டளைகள் எல்லாம்
உபதேச ரத்தின மாலையிலே தெளியக் காணலாம்.
ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம் திருநாட்டுக்குக்கெழுந்தருளினார்.
அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடிவிளக்குவித்துக்கொள்ள,
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து
‘திருக்கலிகன்றிதாஸர் பரம்பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர் தலை
ஷௌரம் பண்ணிக் கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன,
பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூரகுலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன,
அவரும் பட்டரைப் பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன,
பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான்
கூரகுலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸக்ருத்யமான
மோவாயும் முன்கையும் வபநம் பண்ணுவித்துக்கொள்ளவேண்டியிருக்க,
அத்தைச் செய்யாதே ஶிஷ்யபுத்ரர்களுடைய க்ருத்யமான தலைமாத்ரம் ஷௌரம் செய்வித்துக் கொண்டது
உங்களுடைய கூரக்குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன,
அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து ‘உம்முடைய திருக்கலிகன்றிதாஸர் போய்விட்டாரே!
இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள் உபகார ஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன,
பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன,
அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச் செய்கிறத்தைக் கேட்டு ‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில் யாவதாத்மபாவியோ?
இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று, பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் தெளிந்து, போர வித்தராய்,
பட்டர் திருவடிகளிலே திருத்தி, தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக் கொண்டு
ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக் கொண்டு
கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியா நிற்கும்;
அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள்.
சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து,
கல்லிட்டெறியாதே, ஏறித்துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.
பட்டருக்கு அதிபால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே விருதூதிவர,
பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன,
அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன,
பட்டர் இரண்டு திருக்கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன,
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லமாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க,
பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன,
அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன,
பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று விருதூதித் திரியமாட்டாதே
அஜ்ஞனாய் விட்டாயே! இனிப்போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளி விட்டார்.
பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ராதாரணத்துக்கு
ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞை பண்ண, ராஜாவும் மஹாஸமர்த்தனாயிருக்கையாலே
இத்தை நன்றாக அறியவேணும் என்று பட்டரைப் பார்த்து
‘பட்டரே! தப்த முத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன,
அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன,
‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன,
பட்டர் ‘என் தோளைப்பாரீர்’ என்று திருக்தோளும் திருவிலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட,
ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து,
ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டிவிட்டார் என்று
இவ்வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச்செய்வார்கள்.
ஆகையாலே
‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்திவ்வையமெல்லாம் எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமானிலங்கு
சிட்டர்தொழும் தென்னரங்கேசர் தம்கையில் ஆழியை நானெட்டனநின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று
இந்த திருநாமமும், ஶ்ருதிவாக்யமும்
“விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்தசக்ரமுத்ராம், புஜயேவமமைவ பூஸுராணாம் பகவல்லாஞ்சந்தாரணே ப்ரமாணம்” என்று
பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து.
இவ்வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில்
இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களேயாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே
ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.
———-
அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் –
ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)
மலைக் குனிய நின்றபெருமாள் என்னும் திருநாமத்தையுடையராய் இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க்
கோயிலிலே நித்யவாஸமாக எழுந்தருளியிருக்கிற பட்டருடைய திருத்தகப்பனார் நம்முடைய ஜீயருக்குத்
திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய்,
மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாடப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர்! இங்கே வாரும்’ என்று
நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக்கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர்.
அவ்வளவன்றிக்கே
“நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கு
வெள்ளிக்கிழமை வளர் பக்கம் நாலாம் நாளில் செல்வ மிகு திருமண்டபத்தில் செழுந்திருவாய்மொழிப் பொருளைச்
செப்புமென்று வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாளமுனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே
பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப்பவித்திரத் திருநாள் எழுந்தருளி
அணியரங்கன் திருமுற்றத்திலே பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திருவோலக்கமாகத் தம்மை ஸேவித்து
மங்களாஶாஸநம் பண்ணிக்கொண்டு நிற்கிறவளவிலே பெருமாள் தாமே நம்முடைய ஜீயரைத் தனித்து அருளப்பாடிட்டருளி,
ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி,
‘நம்முடைய பெரிய திருமண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று
திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநைமுதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே
பெரிய திருமண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருந்து நம்முடைய பெரிய ஜீயரைத்
திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றியருளினார்.
ஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ்விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக
ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிறபோது
முன்பு போலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப் பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறியருளி
திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச்செவி சாற்றியருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம்.
ஆகையாலே
“நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று
நம்முடைய ஜீயர்தாமும் தமக்குப் பெருமாள் செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும்
தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகாரஸ்ம்ருதி பண்ணியருளினார்.
‘வலம்புரியாயிரம் சூழ்தரவாழி மருங்கொளுரு செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர்
குலம் பல சூழ் மணவாளமாமுனி கோயிலில் வாழ நலங்கடல் வண்ணன் முன்னே தமிழ் வேதம் நவிற்றனனே.
தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார் சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என்
ஆராவமுதனையான் மணவாள மா முனியை யழைத்து ஏரார் தமிழ் மறை இங்கேயிருந்து சொல் என்றனனே” என்று
இத்யாதிகளாலே
நம்முடைய முதலிகளும் ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம்
ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.
இப்போது ஸ்வாசார்யவைபவமும் சொல்லுவானென் என்னில்,
“குரும் ப்ரகாஶயேந்நித்யம்”,
“எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”,
“வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக்கடவதிறே.
ஒரு நாள் நம்பிள்ளை பகவத் விஷயம் அருளிச் செய்த கோஷ்டி கலைந்த வளவிலே பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு
‘இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச் செய்ய வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச்செய்ய,
‘அப்படியன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய,
பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ? அத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன,
‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம்,
அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம்,
அவர்களுடைய முகமலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ஜீயரை உகந்தருளினார்.
———
அந்திமோபாய நிஷ்டை- 9 – நம்பிள்ளை வைபவம் 2
நம்பிள்ளை காலத்திலே முதலியாண்டானுடைய திருப்பேரனார் கந்தாடை தோழப்பர் நம்பிள்ளையுடைய வைபவத்தைக் கண்டால்
அஸூயையாலே பொறுக்க மாட்டாமல் இருப்பதாய், தோழப்பர் ஒருநாள் கோயிலுக்குள்ளே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந்தருள,
நம்பிள்ளையும் முதலிகளும் பெருமாளை ஸேவிப்பதாகப் பெருந்திரளோடு கோயிலுக்குள்ளே எழுந்தருள,
தோழப்பர் அந்த ஸம்ருத்தியைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சீறிப் பெருமாள் ஸந்நிதியிலே நம்பிள்ளையை அநேகமாகப் பரிபவிக்க,
நம்பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக்கொண்டு பெருமாளை ஸேவித்துப் புறப்பட்டெழுந்தருள,
அந்தச் செய்தியை ஜ்ஞாநாதிகையாயிருக்கிற தோழப்பர் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திருமாளிகைக்குள்ளே செய்கிற கைங்கர்யங்களையும் விட்டு, வெறுத்தருளியிருக்க,
அவ்வளவிலே தோழப்பரும் பெருமாளை ஸேவித்து மீண்டு திருமாளிகைக்கெழுந்தருள,
தேவிகள் முன்புபோலே எதிரே புறப்பட்டு ப்ரியத்துடனே தமக்கொரு கைங்கர்யங்களும் பண்ணாமையாலே
தோழப்பர் தம்முடைய தேவிகளைப் பார்த்து ‘உன்னை நாம் அங்கீகரித்தவன்று தொடங்கி இன்றளவாக
ஆசார்ய ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு போந்தாய், இன்று உதாஸீநரைப்போலே இராநின்றாய். இதுக்கடி ஏது?’ என்று கேட்க,
தேவிகள் தோழப்பரைப் பார்த்து, ‘வாரீர்! ஆழ்வார் தம்முடைய அவதாரம்போலே ஒரு அவதார விஶேஷமாய்,
பெருமாளுக்கு ப்ராண பூதராயிருந்துள்ள நம்பிள்ளையைப் பெருமாள் ஸந்நிதியிலே கூசாமல் அநேகமாகப் பரிபவித்து
இப்படிச் செய்தோம் என்கிற பயாநுதாபங்களுமற்று, உஜ்ஜீவிக்க வந்திருக்கிற உம்மோடு எனக்கென்ன ஸம்பந்தமுண்டு?
நீர் என்னை வெறுத்தாராகில் என்னுடைய மாதாபிதாக்கள் உம்முடைய கையில் காட்டித்தந்த என்னுடைய ஶரீரத்தை
உமக்கு வேண்டினத்தைச் செய்து கொள்ளும்.
என்னுடைய ஆத்மாவை எங்களாசார்யர் அடியிலே அங்கீகரித்தருளினவன்றே நான் உஜ்ஜீவித்தேன்,
ஆகையாலே ‘பத்மகோடிஶதேநாபி நக்ஷமாமி கதாசந’ என்று பாகவத நிந்தை பண்ணினவர்களை
ஒருகாலும் க்ஷமிப்பதில்லை என்று பெருமாள்தாமே அருளிச் செய்த திருமுகப்பாசுரத்தை அறிந்தும்,
அறியாதவராயிருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாஸம் கூடாது; ஆகையாலே நான் என் இஷ்டத்திலே இருந்து ஈடேறிப்போகிறேன்” என்ன,
தோழப்பரும் தேவிகள் சொல்லுகிற வார்த்தைகளைப் கேட்டும் சற்று போதிக்கும் திகைத்து எழுந்தருளியிருந்து,
பெரிய வித்வானாகையாலும், குலப்ரபாவத்தாலும் அஸூயையால் வந்த திருவுள்ளத்தில் வந்த கலக்கம் போய்,
தெளிந்து தேவைகளைப் பார்த்து ‘நீ சொன்னதெல்லாம் ஒக்கும்; நாம் தப்பும் செய்தோம். இனிமேல் செய்ய அடுக்குமது ஏது?’ என்ன,
தேவிகளும் ‘ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே கொள்ளீர். கெடுத்தவிடத்தில் தேடீர்’ என்ன,
தோழப்பரும் ‘அதுக்குப் பொருள் ஏது?’ என்ன,
தேவிகள் ‘பரம க்ருபையாளரான நம்பிள்ளை திருவடிகளிலே சென்று ஸேவித்து, அவரை க்ஷாமணம் பண்ணுவித்துக் கொண்டு
அவர் க்ருபை பண்ணியருள ஈடேறுவீர்’ என்ன,
தோழப்பரும் ‘நான் இப்போது அவரை மஹத்தான பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவித்து
இப்போது அவர் ஸந்நிதியிலே போய் நிற்கவென்றால் எனக்கு லஜ்ஜாபயங்கள் வர்த்தியா நின்றது;
நீ கூட வந்து க்ஷமிப்பிக்க வேணும்’ என்ன,
தேவிகள், தோழப்பர் அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘அப்படியே செய்கிறேன்’ என்று கடுக எழுந்திருந்து
அவரையும் கூட்டிக்கொண்டு நம்பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகப் புறப்படுகிறவளவிலே
நம்பிள்ளை செய்தபடி –
கோயிலுக்கு [கோயிலிலிருந்து] எழுந்தருளினபின்பு முதலிகளெல்லாரையும் ‘உங்களிடங்களிலே போங்கோள்’ என்றருளிச் செய்து,
பகலெல்லாம் அமுது செய்தருளாமல் தம்முடைய திருமாளிகையளவிலே எழுந்தருளியிருந்து,
போது அஸ்த்தமித்தவாறே ஒத்த {ஒற்றைத்} திருப்பரிவட்டத்துடனே முட்டாக்கிட்டுக்கொண்டு தாம் ஒருவருமே எழுந்தருளி,
கந்தாடை தோழப்பர் திருமாளிகை வாசலிலே கைப்புடையிலே வந்து கண்வளர்தருள,
தோழப்பரும் தேவிகளும் திருவிளக்கையும் ஏற்றிக்கொண்டு பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகத் திருமாளிகை வாசலிலே
புறப்பட்டவளவிலே திருவிளக்கொளியிலே ஒரு வெள்ளை கைப்புடையிலே கிடக்கிற அத்தைக் கண்டு
தோழப்பர் ‘இங்கு ஆர் கிடக்கிறார்?’ என்று கேட்க,
பிள்ளை ‘அடியேன் திருக்கலிக்கன்றிதாஸன்’ என்ன,
அவ்வளவில் தோழப்பர் ‘இதுவென்? நீரிருந்தபடியென்?’ என்று திகைத்து, பிள்ளையைப் பார்த்து,
‘மஹாதேஜஸ்வியான நம்மைப் பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவிக்கலாவதே என்கிற கோபாதிஶயத்தாலே
நம்முடைய வாசலிலே மூர்க்கம் செய்வதாக வந்து கிடக்கிறீரோ?’ என்ன,
பிள்ளை தோழப்பரைப் பார்த்து ‘அடியேன் அப்படிச் செய்யவில்லை’ என்ன,
‘ஆகில் இங்கு வந்தது கிடப்பானென்?’ என்ன,
பிள்ளை அருளிச்செய்தபடி – ‘பெரியபெருமாள் ஸந்நிதியிலே முதலியாண்டானுடைய திருப்பேரனாரான தேவரீர்
திருவுள்ளம் கலங்க வர்த்தித்த மஹாபாபியான அடியேனுக்கு தேவர் திருவாசலல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன்’ என்ன,
இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண்வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு,
அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு ‘இதோர் அதிகரமிருந்தபடி என்!’ என்று போரவித்தராய்,
பிள்ளையை வாரி எடுத்தணைத்துக்கட்டிக்கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்;
இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று –
‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டுபுக்கு,
தாமும் தேவிகளுமாகப் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத்
தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக்கொண்டு
தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று இவ்வ்ருத்தாந்தம்
“துன்னு புகழ்கந்தாடை தோழப்பர் தம்முகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் பின்னை
உலகாரியனென்னும் பேர் நம்பிள்ளைக்கோங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்” என்று
உபதேசரத்தினமாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.
‘நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாயவாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீமாதவனடிக் கன்பு செய்யும்
தஞ்சத்தொருவன் சரணாம் புயமென் தலைக்கணிந்தே” ,
“நமாமி தௌ மாதவ ஶிஷ்ய பாதௌ யத் ஸந்நிதிம் ஸுக்தி மயீம் ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்யம் ஸ்திதி மாத்ரியந்தே வைகுண்ட ஸம்ஸார விரக்த சித்தா: ||
ஶ்ருத்வாபி வார்த்தாஞ்ச யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட்யந்தராணாம் ப்ரதமாபவந்தி|
ஶ்ரீமத் கலி த்வம்ஸந்தாஸநாம்நே தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணவாய” என்றிறே
நம்பிள்ளையுடைய வைபவம் இருப்பது.
இப்படி லோகாசார்யர் என்று திருநாமத்தையுடையரான நம்பிள்ளைக்கந்தரங்க ஶிஷ்யரான வடக்குத்திருவீதிப்பிள்ளை
தாமும் தேவிகளும் விரக்தராய்க் கொண்டு எழுந்தருளியிருந்து நம்பிள்ளைக்கு ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்
ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே
ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத்திருவீதிப்பிள்ளை திருமாளிகைக்கெழுந்தருள,
அங்குள்ளாரெல்லாரும் பிள்ளை திருவடிகளிலே வந்து தண்டனிட, அப்போது வடக்குத்திருவீதிப்பிள்ளை தேவிகள்
ஈரப்புடவையுடனே தண்டனிட்டு நிற்க,
நம்பிள்ளை அருகுநிற்கிற ஸ்த்ரீஜனங்களைப் பார்த்து ‘இந்தப் பெண் ஈரப்புடவையுடன் நிற்பானென்?’ என்ன,
அவர்கள் சொன்னபடி – ‘நாலுநாளும் தூரஸ்தையாயிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’ என்ன,
அவ்வளவில் நம்பிள்ளை மிகவும் திருவுள்ளம் உகந்து அவளை ‘பெண்ணே! இங்கே வாரும்’ என்றழைத்துத்
தம்முடைய திருக்கையாலே அவளுடைய திருவுதரத்தை ஸ்பர்ஶித்து
‘என்னைப்போலே ஒரு பிள்ளையைப் பெறுவாயாக’ என்று திருவுள்ளம் பற்றியருளினார்.
ஆகையாலே அத்தைக் கண்டு அதுக்குப் பின்பு வடக்குத்திருவீதிப்பிள்ளை தமக்குக் குமாரர் உண்டானால்
ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம் என்றறிந்து ததுநுகுணமாக வர்த்திக்க, தத்ஸம்வத்ஸரத்திலே அவருடைய தேவிகள்
திருவயிறுவாய்த்து குமாரர் திருவவதரிக்க, அந்தக் குமாரரை லோகாசார்யர் என்று
ஆசார்யரான நம்பிள்ளையுடைய திருநாமம் சாற்றி யருளினார்.
இப்படி நம்பிள்ளையுடைய அருளாலே திருவவதரித்து வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யரும்
தம்முடைய பரமக்ருபையாலே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்கவேணும் என்று திருவுள்ளம் பற்றியருள,
தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஶ்ரீவசநபூஷணம் முதலாக அநேகப்ரபந்தங்கள் இட்டருளினார்.
வடக்குத்திருவீதிப்பிள்ளைக்கு பின்னையும் ஒரு குமாரர் திருவவதரிக்க, அவரை அழகியமணவாளப்பெருமாள் நாயனார்
என்று திருநாமம் சாற்றியருளினார். அவர் ஆசார்யஹ்ருதயம் இட்டருளினார்.
ஆக இப்படி அவதார விஶேஷமாயிருந்துள்ள லோகாசார்யருடைய திருவடிகளிலே தம்முடைய திருத் தகப்பனார்
திகழக் கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாதரண்ணரையும் அஞ்சு திருநக்ஷத்ரத்திலே ஆஶ்ரயிப்பித்தார்கள்
அண்ணருடைய பெரியோர்கள் என்று அஸ்மதாசார்யோக்தம்.
———–
அந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை
உடையவர் எழுந்தருளியிருக்கிற காலத்திலே அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஒருக்கால் திருமேனி பாங்கின்றிக்கே
கண் வளருகிற போது கூரத்தாழ்வான் அவரை அப்போதைக்கப்போது எழுந்தருளி ஆராயாமல்,
நாலு நாள் விளம்பித்து எழுந்தருளி, ‘தேவர் திருமேனியில் பாங்கில்லாமை செய்தபடி எப்படி’ என்று கேட்டருள,
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஆழ்வானைப் பார்த்து, ‘தேவரும் அடியேனும் இத்தனை நாளும் இருந்த ஸ்நேஹத்துக்கு
அடியேன் ஒரு நாள் தலை நொந்திருந்தேன் என்று கேட்டால் அப்போதே எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்,
ஆழ்வான்! தேவரீர் இவ்வாத்மாவை உபேக்ஷித்திருந்த நெஞ்சாறல்,
அடியேன் போய் ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவித்தவன்று தீரும்’ என்றருளிச் செய்தார்.
இந்த ப்ரஸங்கம் *பொன்னுலகாளீரோ என்கிற திருவாய்மொழி ஈட்டில் ஸுஸ்பஷ்டம்.
வடுகநம்பி உடையவருக்குப்பின்பு சிறிது நாள் எழுந்தருளியிருந்து பின்பு திருநாட்டுக்குகெழுந்தருளினவாறே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டருடனே ‘வடுகநம்பி திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று விண்ணப்பம் செய்ய,
அவரும் ‘வடுகநம்பியை அப்படிச் சொல்லலாகாது காணும்’ என்ன,
‘ஏன், வடுகநம்பியை திருநாட்டுக்கெழுந்தருளினார் என்று சொல்லலாகாதோ?’ என்ன,
‘ஆகாது காணும், சரகுதின்னிகளான உபாஸகரோடு ப்ரபந்நரோடு உபாசியரோடு {?} வாசியற,
எல்லார்க்கும் போகிற பொதுவான தேஶங்களன்று காணும் அவர் எழுந்தருளுவது’ என்ன,
‘ஆனால் திருநாடொழிய அவருக்கு ப்ராப்யபூமி வேறே உண்டோ?’ என்ன,
‘உண்டு காணும், வடுகநம்பி எம்பெருமானார் திருவடிக்கெழுந்தருளினார் என்று சொல்லீர்’ என்று
அருளிச் செய்தார் பட்டர் என்று அஸ்மதாசார்யோக்தம்.
‘அத்ர பரத்ரசாபி நித்யம் யதீயசரணௌ ஶரணம் மதீயம்” என்று ஆளவந்தார் ஸ்தோத்தரத்திலே அருளிச்செய்தார்.
‘விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலைத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனார் அருளிச் செய்தார்.
ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும், கூரத்தாழ்வான் குமாரரான பட்டரும், பரமாசார்யரான ஆளவந்தாரும்,
உடையவரும் கூரத்தாழ்வான் முதலான இவர்களுடைய திவ்ய வைபவத்தை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபசரித்த
ஸர்வஜ்ஞராயிருக்கும் பிள்ளை அமுதனாரும் இப்படி ஏக கண்டமாக அருளிச் செய்கையாலே
சரமாதிகாரிகளுக்கு நித்யவிபூதியிலே போனாலும்
“பொதுநின்ற பொன்னங்கழ”லாய்,
“தேவாநாம் தாநவாநாஞ்ச பர்வதமாயிருந்துள்ள ஈஶ்வரனைக்காட்டிலும், ஆத்மாவுக்கு அஸாதரணஶேஷியாய்,
லீலா விபூதியிலே தொடங்கி, ‘சரணாகதி தந்த தன்னிறைவன்’ என்கிறபடியே அஸாதரண ஶேஷியாய்,
சரம பர்வமாயிருந்துள்ள ஆசார்யன் திருவடிகளே பரம ப்ராப்யமாயிருக்குமென்னும் இவ்வர்த்தம் உபபந்நம்.
ஆகையாலேயிறே ‘எதிராசா என்றுன்னடி சேர்வன் யான்’,
‘எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட்கொள்உகந்து’ என்று
நம்முடைய ஜீயர் இப்படி அருளிச் செய்தருளிற்று.
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அமுது செய்தருளா நிற்க, கிடாம்பி யாச்சான் அவருக்குத் தண்ணீரமுது திருப்பவளத்திலே
பரிமாறுகிறவர் செவ்வையிலே நின்று பறிமாறாமையாலே அந்த ஶ்ரீவைஷ்ணவருடைய திருக்கழுத்து சற்று சாய,
அத்தை உடையவர் கண்டருளி, ஆச்சானைத் தம்முடைய திருக்கையாலே அறைந்து,
‘ஶ்ரீவைஷ்ணவருக்குப் பாங்காகப் பரிமாறிற்றில்லையே!’ என்று கோபிக்க,
ஆச்சானும் உடையவர் திருவடிகளிலே தண்டனிட்டு,
“பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாய”னன்றோ தேவரீர் – என்று விண்ணப்பம் செய்து
ஆச்சானும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.
ஒருநாள் கூரத்தாழ்வான் விஷயமாக உடையவர் சீறியருள, நடுவு நின்றவர்கள் ஆழ்வானைப் பார்த்து
‘உம்மை உடையவர் நிக்ரஹித்தாரே, இப்போது நீர் என்ன நினைக்கிறீர்?” என்ன,
ஆழ்வான் அருளிச்செய்தபடி – “இவ்வாத்மா பாஷ்யகாரர்க்கே ஶேஷமான பின்பு அவருடைய
விநியோக ப்ரகாரங்கொண்டு அடியேனுக்குக் கார்யமென்?’ என்றார் என்னும் இவ் வ்ருத்தாந்தம்
மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச்செய்தார்.
பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் முதலியாண்டான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஶிஷ்யலக்ஷணம் இருக்கும்படி என்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆண்டான் அருளிச்செய்தபடி –
ஆசார்ய விஷயத்தில் ஶிஷ்யன் பார்யா ஸமனுமாய், ஶரீர ஸமனுமாய், தர்ம ஸமனுமாய் இருக்கக்கடவன்.
அதாவது சொன்னத்தைச் செய்கையும்,
நினைத்ததைச் செய்கையும்,
நினைவாயிருக்கையும் என்றருளிச்செய்தார்.
அநந்தரம் பிள்ளை கூரத்தாழ்வான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஆசார்யலக்ஷணம் எங்ஙனே இருக்கும்?’
என்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வான் அருளிச்செய்தபடி –
ஶிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்ரு ஸமனுமாய், ஶரீரி ஸமனுமாய், தர்மி ஸமனுமாய் இருக்கக்கடவன்.
அதாவது
ஏவிக் கொள்ளுகையும்,
எடுத்து இடுவிக்கையும்; அதாவது
அசேதநத்தை நினைத்தபடியே விநியோகங்கொள்ளுமாப்போலே விநியோகங்கொள்ளுகையும்,
எடுத்துக் கொள்ளுகையும் என்றருளிச்செய்தார். இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவார்த்தாமாலையிலே உண்டு.
ஒருநாள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் கூடி எழுந்தருளியிருந்து சில அர்த்த விஶேஷங்களை அநுஸந்தியாநிற்க,
‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?
க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?” என்று இங்ஙனே ப்ரஸங்கமாக,
முதலியாண்டான் ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
கூரத்தாழ்வான் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
ஆண்டான் “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்” என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வாநுவர்த்தி ப்ரஸந்நாசார்யநாலே ஆகவேணும் என்ன,
ஆழ்வான் ‘அங்ஙனன்று; “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்
குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி” என்று ஶ்ரீமதுரகவியாழ்வார் நமக்கெல்லார்க்கும்
ஸ்வாநுவர்த்தி கூடாமையாலே க்ருபாமாத்ரத்தாலே மோக்ஷமாகவேணும்’ என்றருளிச்செய்தார்.
ஆண்டானும் ‘அப்படியேயாம்’ என்று மிகவும் ப்ரீதரானார் என்று அஸ்மாதாசார்யோக்தம்.
க்ருமிகண்டன் வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளை சாற்றி மேல்நாட்டுக்கெழுந்தருளின போது
பெருமாள் பரிகரத்தார் தங்களை நெருக்கிக்கொண்டு போருகையாலே விஷமத்துக்காக
‘உடையவராலேயன்றோ இத்தேஶத்துக்குக் கலக்கங்கள் விளைந்தது, ஆகையாலே உடையவர் திருவடிகளில்
ஸம்பந்தமுள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்கவொண்ணாது’ என்று திவ்யாஜ்ஞை இட்டுவைத்தார்கள்.
கூரத்தாழ்வான் தர்ஶநத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமிகண்டனிடத்திலே புக்கு அவனாலே திருநயநங்களுக்கு உபத்ரவம் வந்தது
மீண்டு கோயிலுக்கெழுந்தருளி அங்குத்தைச் செய்தியை அறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தருளினவளவிலே,
திருவாசல் காக்கிறவர்களிலே ஒருவன் ஆழ்வானை ‘உள்ளே புகுராதே’ என்று தகைய,
ஒருவன் அவரைத் தகையாதே ‘கோயிலுக்குள்ளே புகுரும்’ என்ன,
அவ்வளவில் ஆழ்வான் திகைத்து நின்று ‘இங்குற்றை விசேஷம் ஏது?’ என்று திருவாசல் காக்குமவர்களைக் கேட்க,
அவர்களும் ‘எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்களொருவரையும் பெருமாளை ஸேவிக்க விடவேண்டாம்
என்று திவ்யாஜ்ஞையிட்டுத் தகைந்துகிடக்கிறது’ என்ன,
‘ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்?’ என்ன,
அவர்கள் ‘ஆழ்வானே! நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல குணங்களை உடையவராகுயாலே புகுரச்சொன்னோம்’ என்ன,
ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜல சந்திரனைப் போலே நடுங்கி, சிவிட்கென்று நாலடி மீண்டு,
‘ஐயோ! ஆத்மகுணங்கள் உண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று;
எனக்குண்டான ஆத்மகுணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்து கொள்ளுகைக்கு ஹேதுவாய்விட்டதோ’
என்று வ்யாகுலப்பட்டுத் தம்மை மிகவும் நொந்துகொண்டு ‘எனக்குப் பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமே அமையும்;
தத் ஸம்பந்தத்தை யொழியப் பெருமாளை ஸேவிக்க வேண்டுவதில்லை’ என்று மீண்டு
ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.
எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தது அவதரித்தருளினான் என்று ஆளவந்தார் அருளிச் செய்தருளுவர் என்னுமது
திருவிருத்த வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸுநந்த ஸுநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ என்று
இவ்வாழ்வாரை பகவதவதாரமாக ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.
———
அந்திமோபாய நிஷ்டை- 11- ஸ்ரீஎம்பார் மற்றும் கொங்கில் பெரியபிராட்டியார் நிஷ்டை
வட்டமணி குலத்தில் எம்பார் மஹா வித்வானாய், மஹா விரக்தராய், மிகவும் ஆசாரயுக்தராய் இருக்கச் செய்தே
ஶைவாகமத்திலே புகுந்து ஶிவபக்தியிலே மண்டி விழுந்து, அலந்த கொட்டையும் பூண்டு காளஹஸ்தியில்
ஒரு ருத்ராலயத்துக்கு சடங்கியாய், ஸர்வத்துக்கும் கர்த்தாவாய், குச்சியும் தாளும் எப்போதும் கையிலே பிடித்துக் கொண்டு
இரண்டாம் முத்தமிழ் விரகனான ஸம்பந்தன் என்னும்படியே பேயன்பாட்டுப்பாடி, காளஹஸ்தியிலே வர்த்திக்கிற காலத்திலே
திருமலையில் நின்றும் பெரிய திருமலைநம்பி ஒருகார்யத்திலே எழுந்தருளி, காளஹஸ்தி ஆஸந்நமாக,
ஒரு தோப்பிலே விட்டு எழுந்தருளியிருக்க,
அவ்வளவிலே எம்பாரும் ருத்ரனுக்குப் பூப்பறிப்பதாகப் பெரியதொரு பூக்கொடலையும் கழுத்திலே கட்டிக்கொண்டு
ருத்ரப்ரபாவமான பாட்டுக்களையும் கதறிக்கொண்டு, திருமலைநம்பி எழுந்தருளியிருக்கிற தோப்பிலே
நிறைய பூத்து நிற்பதொரு பாதிரியிலேயேறிப் பூப் பறியா நிற்க,
திருமலைநம்பி எம்பாருடைய ஶிவபக்தியில் பூத்த{ஊ}த்தைக்கண்டு ‘ஐயோ! இவ்வாத்மா அதிக்ஷுத்ரமான அப்ராப்த விஷயத்தில்
ப்ராவண்யங்களை ஸவாஸநமாக விட்டு ஆத்மாவுக்கு வகுத்த ஶேஷியான ஶ்ரிய:பதியைப் பற்றினானகில்
பெரிய வித்வானாகையாலும், அதிவிரக்தனாகையாலும் லோகத்துக்கு மிகவும் உபகாரகனாம்’ என்று திருவுள்ளம் பற்றித்
தாமும் முதலிகளும் எம்பார் பூப்பறிக்கிற பாதிரிக்கு ஆஸந்நமாக எழுந்தருளியிருந்து
ஶ்ரிய:பதி நாராயணனே பரதத்வம் என்று சொல்லுகிற வேதாந்த வாக்யங்களை முதலிகளும் தாமும் ஒருவர்க்கொருவர் அநுபாஷிக்க,
எம்பார் ஆலயத்திலுண்டான கார்யங்களையும் பூப்பறிக்கிறத்தையும் மறந்து இவர்கள் அருளிச்செய்கிற
திவ்யஸுக்திகளைச் செவி மடுத்துக் கேட்டு ‘இதொன்று இருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
நெடும்போது கேட்டுக்கொண்டு திகைத்து நிற்க,
நம்பியும் எம்பாருடைய ஆபிமுக்யத்தைக் கண்டு ‘இன்னமும் ஆழ்வாருடைய திவ்ய ஸூக்தியிலே ஒன்றைச் சொல்லித்
திருத்தக்கடவோம்’ என்று திருவுள்ளம்பற்றி, “தேவரும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவனெம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்று பெருக்க நொந்து அருளிச்செய்ய,
எம்பாரும் தமிழுக்கு மஹாநிபுணராகையாலே இத்தையும் கேட்டு, அப்போதே தத்த்வஸ்திதியையும் நன்றாக அறிந்து
‘தகாது, தகாது’ என்று பாதிரியின்மேலே நின்று பூக்கொடலையும் சுழற்றி எறிந்து அரைகுலைய தலைகுலைய இறங்கி
‘இத்தனை காலமும் பெருங்கையாற் குடமெடுத்துப் பேய்ச்சுரைக்கு நீர் சொரிந்து கெட்டேன் கெட்டேன்’ என்று கூப்பிட்டு
நம்பி திருவடிகளிலே விழ,
நம்பியும் தான் நினைத்த காரியம் அப்போதே கைகூடுகையாலே மிகவும் திருவுள்ளமுகந்து
எம்பாரையும் ‘தீர்த்தமாடிவாரும்’ என்ன,
அவரும் எலந்தைக்கொட்டைவடங்களையும் அறுத்தெறிந்து பாஷண்ட வேஷத்தையும் கழித்து, தீர்த்தமாடி ஈரப்புடவையோடே
தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோன்ற வந்து நிற்க, நம்பியும் எம்பாரளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து
அப்போதே அவர்க்கு பஞ்சஸம்ஸ்காரமும் பண்ணி, த்யாஜ்யோபாதேயங்களையும் தெளிய அறிவித்து,
‘புறம்புண்டான பற்றுக்களையெல்லாத்தையும் ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப்பற்றி நம்முடைய தர்ஶநத்திலே
ஊற்றமுண்டாய் வாழும்’ என்று அருளிச்செய்ய,
அப்படியே எம்பாரும் க்ருதார்த்தராய், நம்பியை ஸேவித்துக்கொண்டு திருமலைக்கெழுந்தருளத்தேட,
அவ்வளவில் காளஹஸ்த்தியில் பாஷண்டிகளெல்லாரும் கூடிவந்து ‘எங்களுக்கு ஸர்வத்துக்கும் கர்த்தாவான நீர்
போகவொண்ணாது’ என்று எம்பாரைத் தகைய,
அவரும் ‘உங்கள் குச்சியும் தாளும் இதோ பிடியுங்கோள்’ என்று தூரத்திலே நின்று அவர்கள் மேலே எறிந்து
‘காளஹஸ்த்தியாகிற சுடுகாட்டை நாமினிப் புரிந்துபாரோம்’ என்று அருளிச்செய்து,
பிராட்டி இலங்கை நின்றும் புறப்பட்டாப்போலே அங்குள்ள பற்றுக்களை அடைய ஸவாஸநமாகவிட்டுப்
பெரிய ப்ரீதியோடே முக்தர் பரமபதத்தைக் குறித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஹார்த்தன் வழிநடத்தப் போமாப்போலே
திருமலை நம்பியை ஸேவித்துக்கொண்டு கலியுக வைகுண்டமான திருமலைக்கெழுந்தருளி,
நம்பிக்கு மிகவும் அந்தரங்கராய் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக்கொண்டு வாழுகிற காலத்திலே,
உடையவர் திருமலைக்கெழுந்தருளி திருமலைநம்பி ஶ்ரீபாதத்திலே ஶ்ரீராமாயணத்துக்கு ஸம்ப்ரதாயார்த்தம் கேட்டு
மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளுகிறபோது நம்பியும் உடையவர் அவதார விஶேஷமென்றறிந்து மிகவும் ஆதரித்து
ஆளவந்தாரைப்போலே கண்டு தம்முடைய புத்ராதிகளையும் உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்து
‘தேவரீருக்கு ஏதேனுமொன்று ஸமர்ப்பிக்கவேணும்’ என்ன,
உடையவரும் எம்பாருடைய ஆசார்ய ப்ரேமத்தைக் கண்டு திருவுள்ளமுகந்து ‘எம்பாரைத் தந்தருள வேணும்’ என்ன,
நம்பியும் எம்பாரை உடையவருக்கு உதகதாரா பூர்வமாகக் கொடுத்தார்.
அதுக்குப்பின்பு எம்பார் உடையவரை ஸேவித்துக்கொண்டு திருவரங்கத்துக்கு நாலஞ்சு பயணம் எழுந்தருள,
நம்பியைப் பிரிந்தது எம்பார்க்குத் திருமேனி ஶோஷிக்க, உடையவர் எம்பாரைப் பார்த்து ‘உமக்கிப்படி ஆவானென்’ என்ன,
‘அங்குத்தையேறப்போம்’ என்ன, எம்பாரும் முன்பு நாலஞ்சு பயணமும் ஒரு பயணமாக மீண்டு
திருமலைக்கு எழுந்தருளி நம்பி திருவடிகளிலே தண்டனிட்டுநிற்க,
நம்பியும் எம்பாரைப் பார்த்து ‘உதகபூர்வமாக உம்மை உடையவருக்குக் கொடுத்துவிட்டோமே;
அவரை விட்டு நீர் இங்கு வருவானென்?’ என்ன,
எம்பாரும் தம்முடைய திருமேனி ஸ்வபாவத்தை விண்ணப்பம் செய்ய,
நம்பியும் ‘விற்றபசுவுக்குப் புல்லிடுவாருண்டோ? நீர் உடையவர்க்குத்தானே அடிமை செய்து கொண்டிரும்’ என்று
ஒருபோதும் ப்ரஸாதமிடாமல் தள்ளிவிட்டார்.
எம்பாரும் அங்கு ஆசையற்று நமக்கினி உடையவர் திருவடிகளே தஞ்சம்’ என்று அறுதியிட்டுக் கோயிலுக்கெழுந்தருளி,
உடையவரை ஸேவித்துக் கொண்டு மிகவும் ப்ரீதராய் வாழுகிற காலத்திலே,
ஒருநாள் உடையவரும், முதலிகளும் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, முதலிகளெல்லாரும் எம்பாருடைய
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லித் தலைத்தூக்கிக் கொண்டாட,
எம்பார் தாமும் ‘அது ஒக்கும், ஒக்கும்’ என்று அவர்களைக்காட்டில் மிகவும் தம்மை ஶ்லாகித்துக்கொள்ள,
உடையவரும் அத்தைக்கேட்டு எம்பாரைப் பார்த்து, ‘எல்லாரும் உம்மை ஶ்லாகித்தால் நீர் நைச்யாநுஸந்தாநம்
பண்ண வேண்டியிராநிற்க, அது செய்யாதே நீர்தாமே உம்மை ஶ்லாகித்துக் கொள்ளாநின்றீர்;
இப்படி இருப்பது ஒன்றுண்டோ?’ என்ன,
எம்பாரும் உடையவரைப் பார்த்து, ‘ஐயா! முதலிகள் அடியேனைக்கொண்டாடில் காளஹஸ்த்தியிலே
கையும் குடமும் கழுத்தும் கப்படமுமாய்க் கொண்டு எளிவரவுபட்டுநின்ற அந்நிலையைக்
கொண்டாடுமத்தனையன்றோ அடியேனுக்குள்ளது; இப்படியானபின்பு “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே
தேவரீர் இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திருவவதாரம் பண்ணி செய்தருளின க்ருஷிபரம்பரைகளை அநுஸந்தித்து
நித்யஸம்ஸாரிகளிலும் கடைகெட்டுக்கிடந்த அடியேனை காலதத்வமுள்ளதனையும்
‘எனக்கினி யார் நிகர் நீணிலத்தே”,
“நெஞ்சமே நல்லை நல்லை” என்கிறபடியே அடியேனை ஶ்லாகித்துக்கொள்ள ப்ராப்தியுண்டு;
ஆகையாலே அடியோங்களெல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்குண்டான நன்மைகளை ஶ்லாகித்தது
தேவரீரைக் கொண்டாடித்தாமித்தனையன்றோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும் ‘ஶ்ரீகோவிந்தப்பெருமாளே! நல்லீர்! நல்லீர்!’ என்று எம்பாரை மிகவும் உகந்தருளினார்
என்று பெரியோர்கள் அருளிச் செய்தருளுவார்கள்.
ஒரு ஆசார்யர் தம்முடைய ஶிஷ்யனுக்கு த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய உபதேஶிக்க,
அவனும் அதுக்கு அநுரூபமாக நடக்க அறியாமையாலே அந்த ஆசார்யரும் “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்கிறபடியே
அவனை நியமித்துக் கொண்டுபோர, அந்த ஶிஷ்யன் ஸ்வாசார்யநியமநம் தனக்கு ஹிதம் என்று அறியாமல் வெருவி
இருந்த ஜ்ஞாநாதிகருடனே ‘ஐயோ! ஶிஷ்யன் என்ன, நியமியாநின்றார்கள்’ என்று வெறுக்க,
அந்த ஜ்ஞாநாதிகரும் ‘ஐயோ! ஶாஸநீயனான ஶிஷ்யனையன்றோ நியமிப்பது? உம்மை நியமித்தாரோ’ என்று
வெறுத்தார் என்று அஸ்மதாசார்யோக்தம்.
இத்தால் விதேயனான ஶிஷ்யனையே ஆசார்யன் நியமிக்கவேணும் என்னுமதும்,
ஸதாசார்ய நியமநம் ஸச்சிஷ்யனுக்கு ப்ராப்யாந்தர்கதமாயிருக்கும் என்னுமதும் சொல்லிற்று.
நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்து தேஶாந்தரத்திலே இருப்பானொரு ஶ்ரீவைஷ்ணவன் வந்து ஜீயரை ஸேவித்து
மீள எழுந்தருளிகிறபோது, ஜீயருக்கு அந்தரங்கராய்த் திருவடிகளிலே நித்யஸேவை பண்ணிக்கொண்டிருப்பாரொரு
ஶ்ரீவைஷ்ணவர் ஊருக்கு எழுந்தருளுகிற ஶ்ரீவைஷ்ணவரைப்பார்த்து
‘ஜயோ! உமக்கு ஜீயர் திருவடிகளைவிட்டுப் பிரிந்து எழுந்தருள வேண்டுகிறதே! என்று க்லேஶிக்க,
அவரும் ‘அடியேன் எங்கே இருந்தாலும் ஜீயர் அபிமாநமுண்டே’ என்று தேறி வார்த்தைசொல்ல,
இந்த ப்ரஸங்கங்களை ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கையாயிருப்பாளொரு அம்மையார் கேட்டு,
ஆசார்யனைப்பிரிந்து அதிலே நெஞ்சு இழியாமல் போகிறவரைப் பார்த்து
‘என் சொன்னாய் பிள்ளாய்! – ஏனத்துருவாய் உலகிடந்த ஊழியான்பாதம் – நாடோறும் –
மருவாதார்க்கு உண்டாமோ வான்’ என்று அருளிச்செய்தார் என்று அஸ்மதாரசார்யோக்தம்.
இத்தால் ஸதாசார்யன் கண்வட்டத்தை விட்டால் இவனுக்கு த்யாஜ்யோபாதேயங்கள் தெரியாது.
ஆகையால் அஜ்ஞாநமே மேலிட்டு “நண்ணாரவர்கள் திருநாடு” என்கிறபடியே திருநாடு ஸித்திக்கை அரிது என்று கருத்து.
கொங்குநாடு க்ஷாமமானவாறே ஒரு ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானும் கோயிலிலே வந்து இருந்தான்.
அக்காலத்திலே எம்பெருமானார் ஏழு க்ருஹம் மாதுகரம் பண்ணி அமுதுசெய்தருளுவர்.
திருவீதியிலே எழுந்தருளும்போது அகளங்கநாட்டாழ்வானடைய வட்டத்தில் முதலிகளெல்லாரும் தண்டனிடுவர்கள்.
அந்த ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானுமாக ஒரு மச்சிலே இருக்கையாயிருக்கும்.
ஒரு நாள் உடையவர் மாதுகரத்துக்கு அந்த க்ருஹத்துக்கு எழுந்தருளினவாறே அந்தப் பெண் மச்சுநின்றும் இழிந்து
இடைகழியிலே நின்று ‘ராஜாக்கள் உம்மை தண்டனிடாநின்றார்கள்; நீர் மாதுகரம் பண்ணா நின்றீர்;
இதுக்குக் காரணமேது?’ என்று உடையவரைக் கேட்க,
‘நாம் அவர்களுக்கு நல்வார்த்தை சொன்னோம்; ஆகையாலே தண்டனிடுகிறார்கள்’ என்று அருளிச்செய்ய, ‘
அந்நல்வார்த்தை எனக்கு அருளிச்செய்ய வேணும்’ என்று தண்டனிட்டாள்.
உடையவரும் அவளுக்கு ஹிதத்தை ப்ரஸாதித்தருளினார். பின்பு அவர்களுடைய தேஶம் ஸுபிக்ஷமாய்
அவர்கள் அங்கேறப்போகவிருக்கிறவளவிலே உடையவரை ஸேவித்துப்போகப்பெற்றிலேன் என்று அ
ந்தப்பெண் வ்யாகுலப்பட்டுக்கொண்டு இருக்கிறவளவிலே, மாதுகரத்துக்கு அங்கே எழுந்தருளினார்.
அந்தப் பெண் ‘மீளவும் எங்கள் நாடேறப்போகா நின்றோம்; முன்பு அருளிச்செய்த நல்வார்த்தை
அடியேன் நெஞ்சிலே படும்படி அருளிச்செய்து எழுந்தருளவேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க,
உடையவரும் அவ்வாத்மாவை மிகவும் க்ருபை பண்ணியருளி, ஹிதத்தை நெஞ்சிலே படும்படி ப்ரஸாதித்தருளி
எழுந்தருளப்புக்கவாறே, ‘இன்னமும் அடியேனுக்கு ஆத்மரக்ஷகமாக ஏதேனுமொன்று ப்ராஸாதித்தருள வேணும்’ என்று
அவள் விண்ணப்பம் செய்ய,
உடையவர் அப்போது சாற்றி எழுந்தருளியிருக்கிற திருவடி நிலைகளைப் பெரியபிராட்டியார் என்கிற அந்தப் பெண்ணுக்கு
ப்ராஸாதித்து எழுந்தருளினார். அவளும் அன்று தொடங்கி உடையவர் திருவடி நிலைகளைத் திருவாராதநம்
பண்ணிக்கொண்டு போந்நாள் என்னும், இவ்வ்ருத்தாந்தம் வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.
இத்தால் சொல்லிற்று ஏதென்னில், எம்பெருமானையுங்கூட உபேக்ஷிக்கிற ஸம்ஸாரத்திலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமானது
ஏதேனுமொன்று தஞ்சம் என்று விஶ்வஸித்திருக்கை அரிது. ஆசார்ய விஶ்வாஸமுண்டானவர்கள்
கொங்கில் பெரிய பிராட்டியாரைப்போலே இருக்கவேணும் என்று சொல்லிற்று.
இவ்விடத்திலே பொன்னாச்சியார், தும்பியூர்க் கொண்டி, ஏகலவ்யன், விக்ரமாதித்யன் வ்ருத்தாந்தங்களை ஸ்மரிப்பது.
———–
அந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
ஸாக்ஷாத்காரமென்றும்,
விபூதிஸாக்ஷாத்காரமென்றும்,
உபயவிபூதிஸாக்ஷாத்காரமென்றும்,
ப்ரத்யக்ஷஸாக்ஷாத்காரமென்றும் நாலுபடியாயிருக்கும்.
ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாநவிஶேஷம்.
விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை.
உபயவிபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை.
ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்துதானே உபாயம் என்றறிகை,
இவ்விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை,
அப்புருஷார்த்தமே உபாயம் என்றறிகை.
கீழ்ச்சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததேயாகிலும் ப்ரத்ய க்ஷஸாக்ஷாத்காரம் இல்லாதபோது
அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை.
அவைதான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்கமாட்டாது.
அவையாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும்.
பரத்வம் நித்யமுக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்காலவர்த்திகளுக்கும்,
அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதிஶூந்யர்க்கும்.
இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்டவொண்ணாது.
இனி இவையிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய்திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்யாமையாலே
இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி.
ஆகையாலே பத்தசேதநன் முக்தனாம்போது, ஸகலஶாஸ்த்ரங்களாலும் அறுதியிட்டுப்பார்த்தவிடத்தில்,
ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாநப்ரதாநம் பண்ணவொண்ணாமையாலே
ஜ்ஞாநப்ரதாநம் பண்ணின வஸ்துதானே உபேயமாகவேணும்;
உபேயமான வஸ்துதானே உபாயமாகவேணும்; இவ்விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும்.
மயர்வற மதிநலமருளப்பெற்று இவ்வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும்,
மயர்வற மதிநலமருளினவன் தானே இவனுக்கு அவையெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்;
அல்லாதது உபாயாந்தரங்களோபாதி.
இப்பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக்குறை ரஹஸ்யத்திலே
வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச்செய்தார்.
“ஆசார்யாபிமாநமாவது இவையொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து
இவனுடைய இழவையும், இவனைப்பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து,
ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும்
மாதாவைப்போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்கவல்ல
பரமதயாளுவான மஹாபாகவதாபிமாநத்திலே ஒதுங்கி,
“வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும்
இவ்வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச்செய்தார்.
லோகாசார்யரும் தாம் பேரருளாளப்பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்துநம்பியாருக்கு ப்ரத்யக்ஷம்.
இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச்செய்தருளினார்.
இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச்செய்தவை பலவுமுண்டு;
அவையெல்லாம் க்ரந்த விஸ்தரபயத்தாலே சொல்லுகிறிலோம்.
ஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும்,
அவற்றினுடைய தாத்பர்யங்களை யதாதர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான
பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபயவிபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து
ஸகல வேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின
ப்ரபந்நஜனகூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும்,
ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள் தொடக்கமான
இவ்வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏககண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன்தானே
ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதியிட்டுப் பலவிடங்களிலும் கோஷிக்கையாலே,
அநாதிகாலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து,
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட”
பரத்வாதி பஞ்சப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திருமந்த்ரமுகேந
“கடுங்கதிரோன் மண்டலத்தூடேற்றிவைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டுபோய்,
“ததஸ்து விரஜாதீரப்ரதேஶம்” என்கிற அக்கரையேற்றி, அமாநவ கரஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து
நித்ய விபூதியிலே நித்ய கைங்கர்யம் கொண்டருளக்கடவோம் என்று திருவுள்ளம்பற்றி,
ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப்போலே
இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக
‘ஸாக்ஷாந்நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்|
மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா” என்கிறபடியே
ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன்தானே சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ளவேணும்.
இப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச்சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ணவேணுமென்று
கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்யபுத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது.
ஆகையாலே மநுஷ்யபுத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும்,
தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது.
“எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே
குருவிஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்யபுத்தியை ஸவாஸநமாக விட்டு,
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே பகவதவதாரமென்று கொள்ளவேணுமென்னும்
இவ்வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாணபரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு
நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலைநிற்கும்.
ஆக இப்படி “யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம்” என்றும்,
“பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸகலஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய், ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே
உபதேஶ பரம்பரா ஸித்தமாய், ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபாமூர்த்தியாய்,
அதிஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
உபாயோபேயமாகப் பற்றவேண்டியிருக்க, அத்தைச்செய்யாதே
‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”,
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும்,
“ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும்,
‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும்,
‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப”
என்றும் சொல்லுகிறபடியே அதிதுர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய்,
ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும்
“ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தையுடையளான
பிராட்டி போல்வாரையும் மறுத்து காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய்,
அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து அவர்களை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய்,
“வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய்,
“க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶ ஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,
“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து|
குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே
உத்தாரகனாய், அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே
“ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில்
ஸகலபுருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டியிருக்க,
அங்ஙனம் அன்றிக்கே,
தத் விஷயத்தில் ஸர்வஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே
நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து,
அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி
‘இதுதானே ஸத்ஸம்ப்ரதாய பரம்பராஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது –
ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்யவிஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப்பாக்யரான
ஶுஷ்கஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே
மேலெழுந்தவாரியான இடுசிவப்புப்போலே இவ்வர்த்தம் நெஞ்சில் நிலையில்லாது.
“ஆசார்யாயாஹரேதர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்|
தததீநஶ்சவர்த்தேத ஸாக்ஷாந்நாரயணே ஹி ஸ:”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந்தீபப்ரதே குரௌ, ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாச்சரரூபீ ந ஸம்ஶய:”,
‘குருரேவ பரம்ப்ரஹ்ம”, “குருமூர்த்திஸ்திதஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று
இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து, ஆசார்யநிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்;
அல்லாத போது ஈடேற வழியில்லை என்று அஸ்மதாசார்யோக்தம்.
“ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை
என்று பிள்ளை பலகாலும் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே
பிள்ளைலோகாசார்யரும் அருளிச் செய்தார்.
இவ்வர்த்தம் ஸத்ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும்,
அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்,
அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்யபூமியும் அவன் எழுந்தருளியிருக்கிற இடமாகவும்,
அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப்படியே தாரகாதிகளாகவும்,
“உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும்,
“எதிராசா என்னையினிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும்,
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும்,
“என்பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள்வாளுருவி வெட்டிக்களைந்த இராமாநுசன்” என்றும்,
“கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றியருளினான்” என்றும் சொல்லுகிறபடியே
அவனே இஷ்டப்ராப்தி – அநிஷ்டநிவாரணம் பண்ணித்தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு
“குருணாயோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌபரமாம் ஸித்திம் நியமாது பகச்சத:” என்று
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றேயாகிலும்
ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே ‘காலன்கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே
ஸ்வகதஸ்வீகாரம் அவத்யமாகையாலே ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தைவிட்டு
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகதஸ்வீகாரமே உத்தாரகம் என்று அறுதியிட்டு
“ஸம்ஸாராவர்த்தவேக ப்ரஶமந ஶுபத்ருக் தேஶிகப்ரேக்ஷி – தோஹம்” என்றும்,
“நிர்பயோ நிர்பரோஸ்மி” என்றும்,
“ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம்பீப்ஸிதம்| ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும்,
‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும், சொல்லுகிறபடியே
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து.
“இருந்தேனிருவினைப் பாசங்கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று,
“இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”,
“தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”,
“நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும்,
“இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச்சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற கால தத்தவமுள்ளதனையும் ஆநந்த மக்நராய்க் கொண்டு வாழத் தட்டில்லை.
ஆகையாலிறே இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று
மாணிக்கமாலையிலே நிஶ்சயமாக ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தது.
ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ? என்னில்,
நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணிநுண்சிறுத்தாம்பை அநுஸந்தித்து
“மதுரகவிசொன்னசொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டினவாறே
ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க,
அவ்விடம் நித்யவிபூதியாம்படி எங்ஙனே?’ என்று கேட்க,
திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக் கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்த பின்பு இடைச்சுவர் தள்ளி
இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார் என்னும்
இவ்வார்த்தை கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
———
அந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம்
அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: |
ஆகார த்ரய ஸம்பந்நா: மஹாபாகவதாஸ்ஸ்ம்ருதா: ||
மஹாபாகவதா யத்ராவஸந்தி விமலாஶ்ஶுபா: தத்தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத்தீர்த்தம் தத்து பாவநம் ||
யதா விஷ்ணுபதம் ஶுபம்” என்னுமிவ்வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார்.
“பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்தவிடமும், வளைத்தவிடமும், ஊட்டுமிடமும் எல்லாம்
வகுத்த விடமே என்றிருக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும்
இவ்வர்த்தத்தை ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார்.
ஆகையால் இவர்கள் தங்களுடைய ஆசார்யனை உபயவிபூதிநாதனென்றும், உபயவிபூத்யைஶ்வர்யமும் இவனே
என்று ப்ரதிபத்தி பண்ணி இருக்கவேணும்,
“இராமானுசன் என்தன் மாநிதியே”,
“ இராமானுசன் என்தன் சேமவைப்பே” ,
“எனக்குற்ற செல்வமிராமாநுசன்” என்றிறே தந்நிஷ்டர் இருக்கும்படி.
“ஸாக்ஷாந்நாராயணோ தேவ: க்ருத்வா மத்யமயீம் தநும்” என்று இத்யாதிகளிலே
சொல்லுகிறபடியே தங்களை ஸம்ஸாரத்தில் நின்றும் எடுக்கைக்காக ஸர்வேஶ்வரன் மநுஷ்யரூபம் கொண்டு
வந்திருக்கிறானென்று அறியாதே அவன் அமுது செய்தருளுகை, கண்வளர்ந்தருளுகை முதலான
மேலெழுந்த ஆகாரத்தைப் பார்த்து ஸ்வஜாதீயபுத்தியாலே
“மாநிடவனென்றும் குருவை”,
“ஜ்ஞாநதீபப்ரதே குரௌ | மர்த்யபுத்திஶ்ருதம் தஸ்ய”,
“யோகுரௌ மாநுஷம்பாவம்”, “குருஷுநரமதி:” என்றும் சொல்லுகிறபடியே
ஆசார்யனை மநுஷ்யன் என்று ஒருக்காலாகிலும் ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் நீசர்க்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறது மேல்.
“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய: |
யோகுரௌமாநுஷம் பாவம் உபௌநரகபாதிநௌ”,
“நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்யதுர்புத்தே: |
ஜலாதபேதம் கமலம் ஶோஷயதி ரவிர்ந போஷயதி”,
“ஏகாக்ஷரப்ரதாதாரம் ஆசார்யம் யோவமந்யதே|
ஶ்வாநயோநிஶதம் ப்ராப்ய சண்டாலேஷ்வபி ஜாயதே|”,
“குருத்யாகீ பவேந்ம்ருத்யு: மந்த்ரத்யாகீ தரித்ரதா|
குருமந்த்ரபரித்யாகீரௌரவம் நரகம் வ்ரஜேத்”,
“மாடும் மனையும்” என்று தொடங்கி “பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,
“ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: |
இத்யேவம் யே ந மந்யந்தேத்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:”,
“மாநிடவனென்றும் குருவை” என்று தொடங்கி, “எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு”,
“ஏகக்ராமநிவாஸஸ்ஸந் யஶ்ஶிஷ்யோ நார்ச்சயேத்குரும்|
தத்ப்ரஸாதம் விநாகுர்யாத் ஸ வை விட்ஸூகரோ பவேத்”,
“எட்டவிருந்த குருவை இறையன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று”,
“பற்று குருவைப் பரனன்றென இகழ்ந்து” என்று தொடங்கி, “அப்பொருள் தேடித்திரிவானற்று” ,
“என்றுமனைத்துயிருக்குமீரஞ்செய் நாரணனும்” என்று தொடங்கி, “பொங்குசுடர் வெயிலின் அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று”,
“தத்தமிறையின் வடிவென்று தாளிணையை வைத்தவவரை வணங்கியிராப்பித்தராய்,
நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்”,
“தன்குருவின் தாளிணைகள்தன்னிலன்பொன்றில்லாதார்” என்று தொடங்கி,
“ஆதலால் நண்ணாரவர்கள் ததிருநாடு”,
“ப்ரதிஹந்தா குரோரபஸ்மாரி வாக்யேந வாக்யஸ்ய ப்ரதிகாதம் ஆசார்யஸ்ய வர்ஜயேத்”,
“அர்ச்சாவிஷ்ணௌஶிலாதீர்குருஷூநரமதி:” என்று தொடங்கி, “ஸர்வேஶ்வரேஶே ததிதரஸமதீர்யஸ்யவாநாரகீ ஸ:”
குருபரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படியே அநுஷ்டியாதொழிகையும்,
அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும்,
“தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே,
ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் ஈஶ்வரன்தானே ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப்பண்ணும்”,
“குரோரபஹ்நுதாத் த்யாகாத்ஸாம்யாத் அஸ்மரணாதபி|
லோபமோஹாதிபிஶ்சாந்யைரபசாரைர்விநஶ்யதி”,
“குரோரந்ருதாபிஶம்ஸநம் பாதகஸமாநம் கலு, குர்வர்த்தே ஸப்தபுருஷாந் இதஶ்ச பரதஶ்ச ஹந்தி|
மநஸாபி குரோர்நாந்ருதம் வதேத்| அல்பேஷ்வப்யர்த்தேஷு”,
“பொய்யுரைத்தல், மாறுரைத்தல், பொருளல்லாதன உரைத்தல், பொருளருளச் சிதகுரைத்தல், போற்றுதற்கு நெகிழுதல்,
நையுரைத்தல், வலியுரைத்தல், விதிமறுத்தல், கிடத்தல், மேலிருத்தல், கால்நீட்டல், விலங்குமுகமவைத்தல்,
கையெடுத்துத் தொழ நாணுதல், களை ஒதுக்காதிருத்தல், கருத்தறியாப் பொருளுரைத்தல், காயிலே வாய்க்கிடுதல்,
மெய் விதிர்த்தல், நிழல் மிதித்தல், தன்னிழல் மேலிடுதல் – வியன்குருவின் சன்னதியில் விடுங்கருமமிவையே”.
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீப்ப்ரதே குரௌ|
மர்த்யபுத்தி ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத்”,
“ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|
லப்தம் த்யக்த்வாதநம் மூடோகுப்தமந்வேஷதிக் ஷிதௌ”,
“சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் து யஸ்ஸ்மரேத்|
ஹஸ்தஸ்தமுதகம் த்யக்த்வாகநஸ்தமபி வாஞ்சதி”,
“குரும்த்வங்க்ருத்ய ஹுங்க்ருத்ய விப்ரம் நிர்ஜித்ய வாதத: |
அரண்யே நிர்ஜலே தேஶே பவந்தி ப்ரஹ்மராக்ஷஸா:”- இது ஆசார்யாபசாரம்.
————
அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்
இனி தத்பக்தாபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும்,
கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து
அவரைக் கோயிலிலே குடியிருக்கவொண்ணாதபடி கடலைக் கலக்கினாப்போலே
பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில் நின்றும் புறப்பட்டுத்
திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம்
“பூகி கண்டத் வயஸஸரஸ ஸ்நிக்தநீரோபகண்டாம் ஆவிர்மோத ஸ்திமிதஶகுநாநூதிதப்ரஹ்மகோஷாம் |
மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று
பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப்பட்டுக்கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து
“அடியேனுக்குத் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருளவேணும்” என்று மிகவும் அநுவர்த்திக்க,
பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து ‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த
விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது; ஆகையாலே எனக்கு வாய்திறந்தொரு வார்த்தை சொல்லப்போகிறதில்லை.
நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை
ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக்கோடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே
பட்டரளவிலே விரோதித்த வீரஸுந்தரப்ரஹ்மராயனுக்கு ஶரீரவிஶ்லேஷமாக,
அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத்தாயாரான ஆண்டாளை ஸேவித்துக்கொண்டு எழுந்தருளியிருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள்
பட்டருடைய விரோதி போகையாலே திருப்பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு,
நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி திருமாளிகைக்குள்ளே புகுந்து
திருக்காப்பைச்சேர்த்து தாளையிட்டுக் கொண்டு வயிற்றைப்பிடித்து வாய்விட்டழுதாள்;
அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து
‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும்,
நாமெல்லாரும் கண்டு வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன,
அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச்செய்தபடி:-
பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்கிறவன் நேரே
ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர்திறத்தில்
மஹாபராதத்தை தீரக்கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருளவேணும்’ என்று
பட்டர் திருவடிகளிலே தலைசாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப்போனான்.
ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர்கையிலே அகப்பட்டுக்கலங்கி அடியுண்டு மலங்க விழிக்கிறான்
என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச்செய்தார்.
ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.
அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழமண்டலத்திலே எழுந்தருளியிருக்கும்
கடக்கத்துப் பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசியாண்டான் தாமும் மேல்நாட்டிலே எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள,
சோமாசியாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப்பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத்
தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச்செய்கிற ஶ்ரீபாஷ்யம் முதலான
பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழமண்டலத்துக்கு எழுந்தருளுவதாக
அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லையறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழிவிட்டு மீண்டு
எழுந்தருளுகிறபோது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்தவாறே
அடியேனுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிராநின்றது.
அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை ப்ரஸாதித்தருளவேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க,
அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசியாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய்,
ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரேயாகிலும்
சாற்றியிருக்கிற திருப்பரிவட்டத்தலையிலே பாகவதாபசாரநிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று
அருளிச்செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.
‘ப்ராதுர்பாவைஸ்ஸுரநரஸமோ தேவதேவஸ்ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா|
கிந்து ஶ்ரீமத் புவநபவநத்ராணதோந்யேஷு வித்யாவ்ருத்தப்ராயோ பவதி விதவாகல்பகல்ப: ப்ரகர்ஷ:”,
“அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்திசிந்தநம்|
மாத்ருயோநி பரீக்ஷாயாஸ்துல்யமாஹுர்மநீஷிண:”,
“அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந்மத்பக்தேஷுசமாம் த்ருஹந்|
விஷதக்தைரக்நிதக்தைராயுதைர்ஷந்தி மாமஸௌ”,
“யா ப்ரீதிர்மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே|
அவமாநக்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத்”,
மத்பக்தம் ஶ்வபசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: |
பத்மகோடிஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு.
“சண்டாலமபி மத்பக்தம் நாவமந்யேத புத்திமாந்|
அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”,
“அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேயஶதாநி ச|
நிஷ்க்ருதிர்நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”,
“ஶூத்ரம்வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வபசம் ததா|
ஈக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”,
“அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீநஜந்மந:|
மத்பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ்சண்டாலதாம் வ்ரஜேத்”,
“அபிசேத்ஸுதுராசாரோ பஜதே மாதநந்யபாக்|
ஸாது ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”,
“ஸர்வைஶ்ச லக்ஷணைர்யுக்தோ நியுதஶ்ச ஸவகர்மஸு|
யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:”
“அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி,
“நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும்”,
“ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச்செய்வர்”,
“அவமாநக்ரியா”, “பாகவதாபசாரந்தான் அநேகவிதம்;
அதிலேயொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம். இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம்.
அத்தை மாத்ருயோநி பரீக்ஷையோடொக்கும் என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”,
“த்ரிஶங்குவைப்போலே கர்மசண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய்விடும்”,
“ஜாதிசண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதையுண்டு; அதுவுமில்லை இவனுக்கு ஆரூடபதிதனாகையாலே”.
“திருவுடைமன்னர், செழுமாமணிகள், நிலத்தேவர், பெருமக்கள், தெள்ளியார், பெருந்தவத்தர், உருவுடையார்,
இளையார், வல்லார், ஒத்துவல்லார், தக்கார், மிக்கார், வேதவிமலர், சிறுமாமனிசர், எம்பிரான்தன சின்னங்கள்” என்று
நங்குலநாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திருநாமம் சாற்றுகையாலே
கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம்.
“தஸ்யப்ரஹ்மவிதாகஸ:”,
“நாஹம் விஶங்கே ஸுரராஜவஜ்ராநந த்ர்யக்ஷஶுலாந் ந யமஸ்ய தண்டாத்|
நாக்ந்யர்க்கஸோமா நாலவித்தஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”.
ப்ரஹ்மவிதோபமாநாத் “ஆயுஶ்ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச|
ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”,
“நிந்தந்தியே பகவதஶ்சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்மஷௌகாந்|
தேஷாம் யஶோதநஸுகாயுரபத்யபந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”,
“அப்யர்ச்சயித்வா கோவிந்தம் ததீயாந் நார்ச்சயந்தி யே|
ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”,
‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”,
“வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:|
ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”,
“இவ்விடத்திலே வைநதேயவ்ருத்தாந்தத்தையும், பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”.
இப்படி ஆசார்யாபசாரமும், தத்பக்தாபசாரமும் அதிக்ரூரமென்று வேதஶாஸ்த்ரபுராணாதிகளும்,
அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதாதர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும்
நம் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப்போலே ஒன்பதின்கால் சொல்லிக் கையெடுத்து
ஒருமிடறாகக் கூப்பிடுகையாலே ஆஸ்திகனாய், உஜ்ஜீவநபரனாய் இருக்குமவன் மறந்து ஒருகாலத்திலும், ஒரு தேஶத்திலும் ,
ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள இவ்விஷயங்களை
கிஞ்சித்மாத்ரமும் நெகிழநினைக்கக் கடவனல்லன். நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிடவொண்ணாதாப்போலவும்,
கடலுடைந்தால் அடைக்கவொண்ணாதாப் போலவும், மலைவிழுந்தால் தாங்கவொண்ணாதாப் போலவும்
இது அப்ரதிக்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச் செய்தருளுவர்.
ஆகையாலே ஸதாசார்ய – தத்துல்ய- விஷயங்களை கிஞ்சிந்மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற
அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.
———
அந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்
“யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேதஸாதநம்|
யதிசேத் குருவர்யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும்,
“குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத்புத்ரஶிஷ்யயோ:” என்றும்.
“குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும்
ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும்
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு ஆசார்யன் அமுதுசெய்து திருக்கை மாற்றியருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும்,
“ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச|
நித்யம் விதிவதர்க்யாத்யைராவ்ருதோப்யர்ச்சயேத் குரும்” என்கிறபடியே
அவனுடைய திருவடிகளில் தீர்த்தமும் பரமபாவநமுமாய், பெற்ற தாயினுடைய முலைப்பால் போலே
தாரகமுமாய், போஷகமுமாயிருக்கையாலே ஶரீராவஸாநத்தளவும் போக்யமுமாயிருக்கும்.
அவ்வளவன்றிக்கே “கங்கா ஸேது ஸரஸ்வத்யா: ப்ரயாகாந்நைமிஶாதபி|
பாவநம் விஷ்ணுபக்தாநாம் பாதப்ரக்ஷாலநோதகம்”,
“யத் தத் ஸமஸ்த பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி:|
நிர்ணீதம் பகவத்பக்தபாதோதக நிஷேவணம்”,
“திஸ்ர: கோட்யர்த்த கோடீ ச தீர்த்தாநி புவநத்ரயே|
வைஷ்ணவாங்க்ரி ஜலாத்புண்யாத்கோடிபாகேந நோ ஸம:”,
“ப்ராயஶ்சித்தமிதம் குஹ்யம் மஹாபாதகிநாமபி|
வைஷ்ணவாங்க்ரிஜலம் ஶுப்ரம் பக்த்யா ஸம்ப்ராப்யதே யதி”,
“நாரதஸ்யாதிதே: பாதௌ ஸர்வாஸாம் மந்த்ரே ஸ்வயம்|
க்ருஷ்ண: ப்ரக்ஷால்ய பாணிப்யாம் பபௌ பாதோதகம் முநே:||,
“தொண்டர் சேவடிச் செழுஞ்சேறென் சென்னிக்கணிவனே”,
“தொண்டரடிப்பொடியாட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே”,
“தத்பாதாமப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்|
ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம் தத்ஸ்ப்ருஷ்டமகிலம் ஶுசி”,
“கோடி ஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோஜ்ஞாநத: க்ருத: |
ஸத்ய: ப்ரதஹ்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத்”,
“போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியும் உடையவராயிருக்கும் பரமஸாத்த்விகராய், ஆசார்யதுல்யராயிருக்கும்
மஹாபாகவதர்கள் அமுதுசெய்தருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் வைதமாக ஸ்வீகரிக்கையன்றிக்கே ஆத்மாவினுடைய ஶேஷத்வத்தின்
எல்லை நிலமாகையாலே ஸத்தாதாரகம் என்று அவஶ்யம் ஸ்வீகரிக்கவேணும்.
அது எங்ஙனே என்னில், “ஶரீரமேவ மாதாபிதரௌஜநயத:” என்கிற ஸாமாந்ய விஷயத்தில்,
“பிது: ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுருச்சிஷ்டம் போக்தவ்யம்” என்று
அவர்களுடைய ஶிஷ்யபுத்ரர்களுக்கு ஸ்வீகார்யமென்று விதித்த ஆபஸ்தம்ப மஹர்ஷிதானே
“ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி; தச்ச்ரேஷ்டம் ஜந்ம” என்று
ப்ரஹ்மவித்யாப்ரதனாகையாலே விஶேஷபிதாவான ஸதாசார்யன் ஶரீரோத்பாதகனைப் பற்றவும்
இப்படி உத்க்ருஷ்டன் என்று ப்ரதிபாதிக்கையாலே ஶிஷ்யனுக்கு ஸதாசார்ய – தத்துல்யர்கள் அமுதுசெய்தருளின தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் அவஶ்யம் ஸ்வீகார்யமென்னுமிடம் கிம்புநர் ந்யாயஸித்தமிறே.
இவ்விடத்தில் ஸதாசார்ய தத்துல்யரென்றது ஆரை என்னில் –
‘ஆசார்யவத்தைவவந் மாத்ருவத் பித்ருவத்’ இத்யாதிகளான ஶாஸ்த்ரங்கள் ஶ்ரீவைஷ்ணவர்களை ஆசார்யதுல்யரென்று சொல்லுகையாலும்,
“அநுகூலராகிறார் ஜ்ஞாநபக்திவைராக்யங்கள் இட்டுமாறினாப்போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியிருக்கும் பரமார்த்தர்” என்றும்,
“அதாவது ஆசார்யதுல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்று நினைக்கை” என்றும்,
“அநுகூலர் ஆசார்யபரதந்த்ரர்” என்றும் ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யரும் அருளிச்செய்த திவ்யஸூக்திப்படியே
பரம பாகவதர்களாய், “இராமாநுசனைத் தொழும் பெரியோர் பாதமல்லால் என்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே”,
“இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடமே” என்கிறபடியே
அர்த்த காமங்களில் நசையற்று ஆசார்ய பரதந்த்ரர்க்கு ஶேஷமாய், தங்களுக்கு ஸதாநுபவ யோக்யராயிருக்கும் பெரியோர்களை.
இன்னமும் இவ்வர்த்தத்தை ஸர்வஜ்ஞராயிருக்கும் ஆசார்யர்கள் ஸம்ஶயவிபர்யயமற ஸப்ரமாணமாக
ஸ்வஸ்வப்ரபந்தங்களிலே தெளிய அருளிச்செய்தார்கள். மற்றுள்ளாரும் சொல்லுவார்கள்.
அதெங்ஙனே என்னில்,
“நல்லார் பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்,
அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலுமெத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே”,
“இன்புற்ற சீலத்திராமாநுச, என்றுமெவ்விடத்துமென்புற்ற நோயுடல்தோறும் பிறந்திறந்து,
எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனாரும் அருளிச்செய்தார்.
கூரத்தாழ்வான் குமாரரான ஶ்ரீபராசரபட்டர் பகவத்விஷயம் அருளிச்செய்த கொண்டு தாமும் முதலிகளும் கூடிப்
பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்கச் செய்தே கூரத்தாழ்வான் தேவிகள் ஆண்டாள் திருவோலக்கத்தின் நடுவே எழுந்தருளி
தம்முடைய குமாரரான பட்டரை தண்டனிட்டுத் தீர்த்தம் கொள்ள, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அத்தைக் கண்டு
‘பெற்ற தாயார் தம்முடைய புத்ரனைத் தண்டனிட்டுத் தீர்த்தங்கொள்ளலாமோ’ என்ன,
அப்போது ஆண்டாள் அருளிச்செய்தபடி – திருவோலக்கத்திலே எழுந்தருளியிருக்கிற முதலிகளைப் பார்த்து
‘பிள்ளைகாள்! அந்யர்க்குண்டான எம்பெருமானுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ப்ரஸாதப்படவேணும்,
தான் ஏறியருளப்பண்ணிக்கொண்ட எம்பெருமானுடய ப்ரஸாதங்கள் க்ரஹிக்கலாகாதென்று சொல்லுமவர்கள் ஶுஷ்கஹ்ருதயராய்,
யதாஜ்ஞாநம் பிறவாத ப்ராந்தரன்றோ?’ என்று அருளிச்செய்தார்.என்னும் இப்ப்ரஸங்கம்
திருப்பாவை வ்யாக்யாநத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.
ஆண்டாள்தாம் அப்படி செய்தது என்கொண்டு? என்ன,
‘ ந பரீக்ஷ்ய வயோ வந்த்யா: நாராயணபராயணா:” என்றும்,
“வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடுவினையேன்” என்றுமுண்டாகையாலே செய்தாள்.
————-
அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவுகொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜைகொண்டு
பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும்,
விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீப்ருத்யரோடே உள்கலந்து தொழுகுலமானவன் நிலையார்பாடலாலே
ப்ராஹ்மண வேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்,
தம்பிக்கு முற்பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை ஶோதித்து.
தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏககுலமானமையும்,
தூதுமொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக்ஸகுணஸஹபோஜநமும்,
ஒருபிறவியிலே இருபிறவியானாரிருவர்க்கு தர்மஸுநுஸ்வாமிகள் அக்ரபூஜைகொடுத்தமையும்,
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச்செய்த புத்ரக்ருத்யமும்,
புஷ்பத்யாக போக மண்டபங்களில் பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையுங்கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும்,
வைதிகோத்தமரும், மஹாமுநியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில்
காயாந்நஸ்தலஶுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யாவ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி,
ஶவவிதவாலங்காரமென்று கழிப்பர்கள் – என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்
பிள்ளை லோகாசார்யர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.
உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம் ப்ரம்ஶஸம்பாவனையாலே “ஶரீரே ச” என்கிறபடியே பயஜநகம்.
அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும்.
அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை. நைச்யம் ஜந்மஸித்தம்.
ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ஶ்ரேஷ்டம். “ஶ்வபசோபி மஹீபால”.
நிக்ருஷ்டஜந்மத்தால் வந்த தோஷம் ஶமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே. ஸம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம்போது
ஜந்மக்கொத்தை போகவேணும். ஜந்மத்துக்கு கொத்தையும், அதுக்குப் பரிஹாரமும்
“பழுதிலாவொழுகல்” என்கிற பாட்டிலே அருளிச்செய்தார். வேதகப்பொன்போலே இவர்களோட்டை ஸம்பந்தம்.
இவர்கள் பக்கல் ஸாம்யபுத்தியும், ஆதிக்யபுத்தியும் நடக்கவேணும். அதாவது ஆசார்யதுல்யரென்றும், ஸம்ஸாரிகளிலும்,
தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை. ஆசார்யஸாம்யத்துக்கடி ஆசார்யவசநம்.
இப்படி நினையாதொழிகையும் அபசாரம். இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ்சுடரொளி நெடுமாற்கடிமையிலும்,
கண் சோர வெங்குருதியிலும், நண்ணாத வாளவுணரிலும், தேட்டருந்திறல்தேனிலும்,
மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விஶதமாகக் காணலாம்.
க்ஷத்ரியனான விஶ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான். விபீஷணனை ராவணன் குலபாம்ஸநனென்றான்.
பெருமாள் இக்ஷவாகு வம்ஶ்யனாக நினைத்து வார்த்தை அருளிச்செய்தார்.
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணியருளினார்.
தர்மபுத்ரர் அஶரீரி வாக்யத்தையும், ஜ்ஞாநாதிக்யத்தையுங்கொண்டு ஶ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.
ருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்மஸந்தேஹங்களை ஶமிப்பித்துக் கொண்டார்கள்.
க்ருஷ்ணன் பீஷ்மத்ரோணாதி க்ருஹங்களைவிட்டு ஶ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.
பெருமாள் ஶ்ரீஶபரிகையாலே அமுது செய்தருளினார்.
மாறனேரி நம்பி விஷயமாகப் பெரியநம்பி உடையவருக்கு அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது – என்று
ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்தார்.
“பவத்தயயா யதீந்த்ர த்வத் தாஸதாஸ கணநாசரமாவதௌய: தத்தாஸதைகரஸதா விரதா மமாஸ்து” என்று
நம்முடைய ஜீயரும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச்செய்தருளினார்.
திருவயிந்திரபுரத்திலே ஶ்ரீவில்லிபுத்தூர்ப் பகவரென்று உத்தமாஶ்ரமியாயிருப்பாரொருவர் எல்லாரும்
ஒரு துறையிலே அநுஷ்டாநம்பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவராய்த்து.
அவரொரு நாள் அநுஷ்டாநம்பண்ணி மீண்டு வாராநிற்கச்செய்தே இருந்த ப்ராஹ்மணர்
‘உமக்கு ஒரு துறையிலே நீராடுவதேது?’ என்று கேட்க,
‘விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண:|
அஸ்மாகம் தாஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று,
‘நீங்கள் ப்ராஹ்மணவர்ணதர்மிகள், நாங்கள் தாஸவ்ருத்திகள். கைங்கர்யபரர். ஆகையாலே
உங்களோடு எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறைவேறிட்டுப் போந்தாரென்று இவ்வ்ருத்தாந்தம்
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே திருநாராயணபுரத்தில ஆய் அருளிச்செய்தார்.
“பூதங்களைந்தும் பொருந்துமுடலினாற்பிறந்த சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம்,
பேதங்கொண்டென்ன பயன் பெறுவீர்” என்றும்,
“குடியுங்குலமுமெல்லாம் கோகனகை கேள்வனடியார்க்கு அவனடியேயாகும்” என்றும்,
கேவலவர்ணாஶ்ரமங்களையேபற்றி நிற்கவில்லை ஒரு ப்ரயோஜநமில்லை;
ஸர்வர்க்கும் ஸர்வ ப்ரயோஜநமும் ஶ்ரிய:பதி நாராயணன் திருவடித்தாமரைகளேகாணும் என்று
ஞானசாரத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தார்.
“தேஹாத்ம ஜ்ஞாந கார்யேண வர்ணபேதேந கிம்பலம்|
கதிஸ்ஸர்வாத்மநாம் ஶ்ரீமந்நாராயண பதத்வயம்”
“ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ … தஸ்ய ஸர்வம் ஏவ ஹி” என்னக்கடவதிறே.
“அத்யப்ரப்ருதி ஹே லோகா: யூயம் யூயம் வயம் வயம்|
அர்த்தகாமபரா யூயம் நாராயணபரா வயம்” என்று ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷிதாம்
வேதவ்யாஸ புத்ரராயிருக்க ஶுகதாதர் என்று தம்மையிட்டுப் பிதாவை நிரூபிக்க வேண்டும்படியான
ஜ்ஞாநாதிக்யத்தை உடையவராகையலே லௌகிகரைப் பார்த்து ஒட்டற வார்த்தை சொல்லி அவ்வளவன்றிக்கே,
“நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகஞ்ச பரஸ்பரம்|
வயம் து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரியகிங்கரா:” என்று
தமக்குண்டான விஶேஷ ஜ்ஞாநத்தையும் அவர்களுக்குண்டான இந்த்ரிய பாரவஶ்யதையையும் சொல்லி,
தத்ஸம்பந்தத்தையும் அறுத்து, அவ்வளவுமன்றிக்கே,
“நாஹம் விப்ரோ ந ச நரபதிர்நாபி வைஶ்யோ ந ஶூத்ரோ நோ வா வர்ணீ நசக்ருஹபதிர் நோ வநஸ்தோ யதிர்வா|
கிந்து ஶ்ரீமத்புவந பவநஸ்தித்யபாயைக ஹேதோர் லக்ஷமீபர்த்துர் நரஹரிதநோர் தாஸதாஸஸ்ய தாஸ:” –
என்னுடைய ஸ்வரூபம் வர்ணாஶ்ரமங்களைவிட்டு நிரூபிக்கப்பட்டது;
ஜ்ஞாநாநந்தங்களும், பகவச்சேஷத்வமும் புறவிதழ் என்னும்படி ததீயஶேஷத்வத்தையிட்டே நிரூபிக்கும்படியிருக்கும்.
இப்படியானபின்பு பாகவதர்களென்றும், அபாகவதர்களென்றும் இரண்டு ஜாதியாகச் சொல்லுமேதொழிய
வேறொருபடி சொல்லத்தக்க பந்தமில்லை உங்களுக்கும் எங்களுக்கும் – என்று
ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷி லௌகிகரோடுண்டான ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டு ஶ்ரீநரஸிம்ஹரூபியான நாராயணனுக்கு
ஶேஷபூதராயிருக்குமவர்களுக்கு ஶேஷமாயிருக்கும் பாகவதர்களுடனே கூடிப்போனார்களென்னுமது ஜகத்ப்ரஸித்தமிறே.
“பஞ்சாஸ்த்ராங்கா: பஞ்சஸம்ஸ்காரயுக்தா: பஞ்சார்த்தஜ்ஞா: பஞ்சமோபாயநிஷ்டா: |
தேவர்ணாநாம் பஞ்சமாஶ்சாஶ்ரமாணாம் விஷ்ணோர்பக்தா:
பஞ்சகால ப்ரபந்நா:”,
“தேவர்ஷிபூதாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்|
ஸர்வாத்மநாயஶ்ஶரணம் அஶரண்யம் நாராயணம் லோககுரும்ப்ரபந்ந:” என்றிறே ஸ்வரூபமிருப்பது.
ஆகையாலே ஜ்ஞாநவான்கள், அஜ்ஞர்ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம்,
ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழித்துத் தந்தாமுக்குத் தஞ்சமாகப் பற்றுமிடத்தில்
பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஈஶ்வரனைப் பற்றுவாரும்,
மோக்ஷத்துக்கே ஹேதுவான ஆசார்யனைப் பற்றுவாரும், உபேக்ஷணீயரான ஈஶ்வர பரதந்த்ரரைப் பற்றுவாரும்,
அநுகூலரான ஆசார்ய பரதந்த்ரரைப் பற்றுவாருமாய், அதிகாராநுகுணமாயிருக்கும்.
ஆகையாலேயிறே “நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ|
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஶ:” என்று கூரத்தாழ்வான்
‘நாராயண’ ‘ராமாநுஜ” என்கிற திருமந்த்ரங்களிரண்டுக்கும் வாசி பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயும்,
மோக்ஷைக ஹேதுவாயுமிருக்குமென்னுமிடம் தோற்ற ‘சதுரா சதுரக்ஷரீ’ என்று அருளிச்செய்தார்.
——-
அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை
கண்ணன் எம்பெருமான் குசேலரை உபசரித்தல்
கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் இருத்தல்
ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக்கொள்ளுதல்
எம்பெருமான் நம்மாழ்வாரிடம் அதீத அன்பு காட்டுதல்
“லோகே கேசந மத் பக்தாஸ்ஸத்தர்மாம்ருதவர்ஷிண:|
ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவாநலம்”,
“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,
”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:”,
“மம ப்ராணா ஹி பாண்டவா:”
“நிரபேக்ஷம் முநிம் ஶாந்தம் நிர்வைரம் ஸமதர்ஶநம்|
அநுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயேயேத்யங்க்ரிரேணுபி:”,
“மம மத் பக்தபக்தேஷு ப்ரீதிரப்யதிகாந்ருப|
தஸ்மாந்மத்பக்தபக்தாஶ்ச பூஜநீயா விஶேஷத:” ,
“அந்நாத்யம் புரதோ ந்யஸ்தம் தர்ஶநாத்க்ருஹ்யதே மயா|
ரஸாந் தாஸஸ்ய ஜிஹ்வாயாமஶ்நாமி கமலோத்பவ”,
“மத்பக்தஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம்ப் யர்ச்சநஞ்சைவ மதர்த்தே டம்பவர்ஜநம்||
மத்கதாஶ்ரவணே பக்திஸ்ஸ்வரநேத்ராங்கவிக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி||
பக்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே|
ஸ்விப்ரேந்த்ரோ முநிஶ்ஶ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:||
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்” என்று
ஸர்வேஶ்வரன் தானும் தன்னுடைய அடியாரை லோக பாவநராகவும், தனக்கு ஆத்மாவாகவும், ப்ராணனாகவும்,
‘நாள்தோறும் நான் அவர்களுடைய பாதரேணுக்களை ஆசைப்பட்டுப் பின்செல்லாநின்றேன்’ என்றும்,
‘அவர்களுடைய ஸத்காரம் எனக்கு மிகவும் ப்ரியம்’ என்றும்,
‘அந்நாதிகளிலுண்டான ரஸங்களெல்லாம் அவர்கள்முகேந ஜீவிப்பேன்’ என்றும்,
ம்லேச்ச ஜாதியிலே பிறந்தார்களேயாகிலும் தன்னைப்போலே அவர்களும் பூஜ்யர் என்றும் அருளிச்செய்தான்.
“அக்ஷ்ணோ: பலம் தாத்ருஶதர்ஶநம் ஹி தந்வா: பலம் தாத்ருஶகாத்ரஸங்கம்|
ஜிஹ்வாபலம் தாத்ருஶகீர்த்தநஞ்ச ஸுதுர்லபாபாகவதா ஹி லோகே”,
“நாஹம் ஸமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணாந் பத்மபுவோப்யகண்யாந்|
பவத்ப்ரபாவம் பகவாந் ஹி வேத்தி ததாபவந்தோ பகவத்ப்ரபாவம்” என்று –
மஹாபாகவதர்களுடைய தர்ஶந – ஸ்பர்ஶந – ஸம்பாஷணங்களே தனக்கு ஸர்வப்ரயோஜநமென்று
அவர்களுடைய திவ்ய குணங்களைச் சொல்லுகைக்கு நான் ஸமர்த்தையன்று என்றும்,
அவர்களுடைய ப்ரபாவத்தை என்னால் சொல்லித் தலைக்கட்டப் போகாது என்றும்
ஶ்ரீபூமிப்பிராட்டியும் அருளிச்செய்தாள்.
எம்பெருமானார் திருவதாரத்தாலே அனைவருக்கும் உஜ்ஜீவனம்
“திறம்பேன்மின் கண்டீர்” என்று தொடங்கி ,
“இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்றும்,
“அவன்தமர் எவ்வினையராகிலும் எங்கோனவன்தமரே என்றொழிவதல்லால்
நமன்தமராலாராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல் பேராயற்காட்பட்டார் பேர்” என்றும்,
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்றும்,
“வெள்ள நீர் வெள்ளத்தணைந்த அரவணைமேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே
உன்தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்” என்று பகவத்ப்ரபந்நர் எப்படி இருந்தார்களேயாகிலும்
அவர்களை யமாதிகள் ஏறிட்டுப் பார்க்கவொண்ணாத மாத்ரமுமன்றிக்கே யம்படர் கள்ளர்பட்டது படுவார்கள் என்று
பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார்களும் அருளிச்செய்தார்கள்.
“நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள்மீதே” என்னும் மதிப்பரிறே ஆழ்வார்கள்.
“நகலுபாகவதா யமவிஷயம் கச்சந்தி” என்றும் பாகவத வைபவத்தைச் சொல்லுகிறது.
இந்த ப்ரஸங்கத்திலே யமாதிகள் பாகவத விஷயத்தில் வர்த்திக்கிறபடி சொல்லுகிறது.
“ஸ்வபுருஷமபி வீக்ஷ்ய பாஶஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ணமூலே|
பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்||
கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத ஶங்க சக்ரபாணே|
பவஶரணமிதீரயந்தி யேவை த்யஜபட தூரதரேணதாநபாபாந்” என்றும் இத்யாதிகளாலே –
நான் பகவத் ப்ரபந்நரை நியமிக்கக் கர்த்தாவன்று; என்னுடைய ப்ருத்யரான நீங்களும் அவர்களைக் கண்டால்
தடஸ்தராய் உங்களைப் பேணிக்கொண்டு தூரத்திலே விலகிப் போங்கோள் – என்று
அவர்களுக்கு புத்தி சொல்லி எல்லாரையும் கர்மாநுகுணமாக உசித தண்டம் பண்ணுகிற
யமன்தன்னாலும் ஶ்ரீவிஷ்ணுபுராணாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதிறே.
அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும், பகவத் விஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும்;
பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத ஸம்ஶ்லேஷத்தையும், அபாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து,
இவனையும் கரைமரம் சேர்த்துவிடும். இவ்வெல்லைமயக்கு ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது.
அவன் கண்வட்டம் விட்டால் நித்ய ஸம்ஸாரியாய்ப் போமித்தனை என்று ஆச்சான் பிள்ளையும் மாணிக்க மாலையிலே அருளிச்செய்தார்.
ஆகையாலே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆசார்யாதீநமாயிருக்க வேணும்;
அப்படியிராமல் கலங்கி தத்ஸம்பந்தத்தையும் மறந்து, ஸ்வாதந்த்ர்யம் தலையெடுத்து,
அக்ருத்யகரணம், பகவதபசாரம், பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் தொடக்கமான அநர்த்தங்களிலே
ஏதேனுமொன்றை விளைத்துக்கொண்டு, யாவதாத்மபாவி ரௌரவாதி கோர நரகங்களிலே விழுந்து
நஶித்துப்போகத் தக்கதான ஆத்மாக்களையும், முற்படத் தங்கள் திருவடிகளிலே ஒரு ஸம்பந்தமுண்டாகையாலும்
அவ்வாத்மாக்கள் மேல் படப்போகிற து:க பரம்பரைகளை அறிந்தருளுகையாலும் அவர்கள் விஷயத்தில்
‘ஐயோ’ என்கிற க்ருபாதிஶயத்திலே விடமாட்டாதே
“பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப்பணி கொள்”ளுகையிறே ஸதாசார்ய லக்ஷணம்.
ஆகையாலே தம்முடைய ஶிஷ்யனான நாலூரானும் க்ருமிகண்டனோடே கூடித் தம்முடைய விஷயத்திலே
மஹாபராதத்தைப் பண்ண, பெருமாள் அவனை ‘நஷமாமி’ என்று முனிந்தருள,
அவரோடே மறுதலைத்து ‘நாம்பெற்ற லோகம் நாலூரானும் பெறவேணும்’ என்று கூரத்தாழ்வானும்;
தம்முடைய ஶிஷ்யராயிருப்பாரொருவர் ஸஹவாஸ தோஷத்தாலே கலங்கி, விஷயப்ராவண்யம் தலையெடுத்து,
‘பட்டரே! உமக்கும் நமக்கும் பணியில்லை’ என்று அவருடைய திருவடிகளை விட்டகன்று போகத்தேட,
‘வாராய் பிள்ளாய்! அது உன்னுடைய அபிப்ராயத்தாலேயன்றே, நீ விட்டாலும் நான் விடேன்’ என்று
பட்டரும் தம்முடைய திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தும்;
அந்தரங்கராய், மஹாவிரக்தராய் இருப்பாரொரு ஸாது ஶ்ரீவைஷ்ணவர் அந்ந தோஷத்தாலே அஹங்கராதிகள் தலையெடுத்து,
பூர்வதஶையில் பொகட்டுவந்த சவளத்தை (= ஈட்டியை) மீளவும் எடுத்துக்கொண்டு ராஜஸேவை பண்ணித்திரிய,
இப்படிக் கைகழிந்து போனவரையும் பின்தொடர்ந்து யத்நேந பிடித்துக்கொண்டுவந்து,
ஒரு அறையிலே தாமும் அவருமாக அடைத்துக் கொள்ள, ஶ்ரீபாதத்துக்கு பரிவரான முதலிகள் எல்லாருங்கூடி
‘ஐயோ! ப்ரமாதம் பிறக்கிறது; சவளமும் உடைத்துக்கையுமான அவனைவிட்டு அறையினின்றும் புறப்படவேணும்’ என்று
அதிக்லேஶத்தோடே கூப்பிட, “இவனை ரக்ஷித்தாலல்லது நான் புறப்படேன்; இவன் உஜ்ஜீவியாதிருக்கில்
இந்த சவளக்காரனோடே அடைத்துக்கொண்டு சாவேன்’ என்ற வேதாந்திகளான நஞ்சீயரும்;
தந்தாம் விஷயங்களிலே குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும்
நடக்கவேணுமென்று அருளிச்செய்த மாத்ரமன்றிக்கே அநுஷ்டாநத்துக்கு ஸீமாபூமியாயிருக்கும் பிள்ளை லோகாசார்யரும்,
“ஸ்வீகரோதி ஸதாசார்யஸ்ஸர்வாநப்யவிஶேஷத: |
யத்புநஸ்தேஷு வைஷம்யம் தேஷாம் சிஜ்ஜ்ஞாநவ்ருத்தயோ:||
தேஷாமேவ ஹி தோஷோயம், ந சாஸ்யேதி விநிஶ்சிதம்|
அபக்வ பத்மகோசாநாம் அவிகாஸோ ரவேர்யதா” என்கிறபடியே
தங்கள் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கச் செய்தேயும் அவர்களுடைய ஜ்ஞாநதௌர்பல்யத்தாலே மீளவும் விபரீத ப்ரவ்ருத்தராய்,
பிறந்து போகத்தேடினவர்களையும் விட க்ஷமரன்றிக்கே
“ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்றும்,
“தேஶிகோ மே தயாலு:” என்றும் சொல்லுகிறபடியே
தங்களுடைய நியமத்தலும் க்ருபாதிஶயத்தாலும் இப்படி ரக்ஷித்துப் போந்தார்கள்.
ஸ்ரீ சீதாப்பிராட்டியும் ஸ்ரீ மணவாள மா முனிகளும்
“வாஸுதேவம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாநி வை|
தாந்யேவ தர்மஶாஸ்த்ராணீத்யேவம் வேத விதோ விது:”
இப்படி பூர்வசார்யர்கள் விசேஷத்தை நம்முடைய ஆசார்யர் திருநகரியிலே ஓலமேச்சான் மடத்திலே
தாம் கண்வளர்ந்தருளாநிற்க, எம்பெருமானாருக்கு விஷமிட்ட சண்டாளரைப் போலே மனக்குற்ற மாந்தரான
அஸூயாபரரானவர்கள் கர்மகாலத்திலே மத்யராத்ரியிலே அந்த மடத்திலே அக்நிப்ரக்ஷேபத்தைப்பண்ண,
அந்தக் கள்ளளரை அத்தேஶத்துக்குக் கர்த்தரான ராஜாக்கள் கண்டுபிடித்துக் கொண்டு சித்ரவதம் பண்ணத் தேட
“கேட்பார் செவிசுடு” என்கிறபடியே ஆருக்கும் ஶ்ரவணகடோரமான இம்மஹாபாபத்தைத் தம்முடைய விஷயத்திலே கூசாமல்
தீரக்கழியப் பண்ணின நிஷ்டுரரையுமுட்பட {அகப்பட}
“பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம|
கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந்நாபராத் யதி” என்றும்,
“பவேயம் ஶரணம் ஹி வ:” என்றும்,
“க: குப்யேத் வாநரோத்தம” என்றும் சொல்லுகிறபடியே
அந்த ராஜாக்களோடே மறுதலைத்து அந்தக் கள்ளரைக் கொல்லாதபடி விடுவித்து ரக்ஷித்தருளின
பரமக்ருபையாளர் என்னுமது லோகத்திலே எல்லாருமறிய ப்ரஸித்தமிறே.
இன்னமும் அஸ்மதாசார்யருடைய க்ருபாதிஶயமும், அவதார விசேஷமும் கீரி, கிளி, வ்ருக் ஷவ்ருத்தாந்தங்களிலும்,
ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களிலும் அறிவார்க்கிறே தெரிவது.
——-
அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்
இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும்,
“பஶுர்மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய்,
பரமதயாவான்களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித்
தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய்,
எப்போதும் மங்களாஶாஸநபரராய்,
“நானும் பிறந்தமை பொய்யன்றே” ,
“தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டும்” என்று சொல்லுகிறபடியே
பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தியிருக்குமவனைப்பற்றித் தெளிவுற்று வீவின்றி,
எல்லாம் வகுத்தவிடமென்று விஶ்வஸித்து மார்பிலே கைவைத்துக் கோடையிலே குளிர்காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய்,
“சிற்றவேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குருபரம்பரையைப் பற்றுகை)
“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்:
ஆழ்வார் திருமகளாராண்டாள்
நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவியாழ்வார்
நாதமுனி திருவடிகளிலே குருகைக்காவலப்பன்
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வவாரியாண்டான்
எம்பெருமானார் திருவடிகளிலே வடுகநம்பி
நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர்
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார்
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்
இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டுகொள்வது.
நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந்நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு.
மற்றும் இக்காலத்தில் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம்.
இனிமேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும்
“கலியுங்கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே ஏவம்பூதரான அதிகாரிகளும் ஸுசிதர்.
“வேதஶாஸ்த்ரரதாரூடா: ஜ்ஞாநகட்கதராத்விஜா:|
க்ரீடார்த்தம பியத்ப்ரூயுஸ்ஸதர்ம: பரமோ மத:” என்றும்,
“அதிகந்தவ்யாஸ்ஸந்தோயத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்|
யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும்,
‘அல்லிமலர்ப்பாவைக்கன்பரடிக்கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும்,
“ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநாதிகரானவர்கள் “நாவகாரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும்
நல்வார்த்தையாயிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச்செய்யார்களாகையாலே
அவர்களுடைய திவ்யஸுக்திகளெல்லாம் ஸகலவேதாந்த ஸாரமான திருமந்த்ரமாயிருக்கும்.
‘ருசோயஜும்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச|
ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகல ப்ரமாண ப்ரமேயங்களும் ததந்தர்பூதமாயிருக்கும்.
ஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திருமந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற
ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரைவயிறாய்,
சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ்வர்த்தம்
இம்மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட்கொண்டு
ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணிப்ரவாளவாகமவும், ஏககண்டமாக அருளிச்செய்த
ப்ரமாணபலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய்,
“தென்குருகூர்நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”,
“நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும்,
“எந்நாவிருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”,
“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயவெல்லும் பரம இராமாநுச” என்றும்,
“குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர்நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே
ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய்,
“மாதா பிதா யுவதய:”,
“அன்னையாயத்தனாய்”,
“தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே ஸர்வவிதபந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான
ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும்,
“குருரேவ பரம் ப்ரஹ்ம”,
“தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரதே குரௌ”,
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பரதேவதை என்றும்,
“யேநைவ குருணாயஸ்ய ந்யாஸவித்யா ப்ரதீயதே|
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”,
“வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல் சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள்
எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள் அருளாலே வைத்த அவர்”,
“நம்புவார்பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் எழுந்தருளியிருக்கிறவிடமே ப்ராப்யபூமியான பரமபதம் என்றும்,
“ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”,
“பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி, அப்பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச்சரணன்றி”,
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,
“ராமாநுஜார்யவஶக: பரிவர்த்திஷீய”,
“நித்யம் யதீந்த்ர தவ திவ்யவபுஸ்ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் குணகீர்த்தநேஸௌ|
க்ருத்யஞ்ச தாஸ்யகரணந்து கரத்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச”,
‘ஶக்திக்கிலக்கு ஆசார்யகைங்கர்யம்” என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
த்ரிவிதகரணத்தாலும் அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும்,
‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பலஸாதந ஶுஶ்ரூஷையும்” என்கிறவிடத்தில் சொல்லுகிறபடியே
இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும்
அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர்வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு
அவனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸதாபஶ்யந்திப்படியே அநுபவித்து,
“அத்ர, பரத்ரசாபி”ப்படியே
அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந ஸர்வாவயவராய்க் கொண்டு
காலதத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.
“கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும்” என்கிற பாட்டும்,
“நாவினால் நவிற்று” என்கிற பாட்டும்
“நல்லவென்தோழி” என்கிற பாட்டும்,
“மாறாய தானவனை” என்கிற பாட்டும்,
பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த “மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும்,
“பஶுர்மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும்,
“பாலமூகஜடாந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும்,
“ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம்” என்கிற வசநமும்,
“இஹலோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று
மாணிக்கமாலையிலே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்யஸூக்தியும்,
“மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும், பலஸாதநமும், ஐஹிகபோகமுமெல்லாம் ஆசார்யனே
என்று நினைக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்தருளின திவ்யஸுக்தியும்
இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.
ஶ்ரீஸௌம்யஜாமாத்ருமுநே: ப்ரஸாத ப்ரபாவஸாக்ஷாத்க்ருதஸர்வதத்த்வம்|
அஜ்ஞாநதாமிஸ்ரஸஹஸ்ரபாநும் ஶ்ரீ பட்டநாதம் முநிமாஶ்ரயாமி||
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.