Archive for the ‘Raamaanujar’ Category

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம் — ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தரம் —

September 7, 2022

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம்

காஷாயாம்பர கவிசத சாத்ரம் கவிதக மண்டலு தண்ட பவித்ரம்
வித்ரு தசிகா ஹரினாஜன சூத்ரம் வ்யாக்யதா த்வைபாயன சூத்ரம் – (பஜ யதி ராஜம்)

காஷாய வஸ்திரத்தினால் சாத்திக் கொள்ளப்பட்ட திருமேனியை உடையவரும். கமண்டலத்தையும் திரி தண்டத்தையும்,
திரி தண்டத்துக்கு மேல் பாகத்தில் உள்ள வஸ்திர விசேஷத்தை உடையவரும், சிவிகையை உடையவரும்,
மான் தோல் முகம் கொண்ட யஞ்ஞோப வீதத்தை உடையவரும் த்வைபாயனர் என்று சொல்லும்பாடியான
வ்யாசர் அருளிய ப்ரஹ்ம ஸூத்திரங்கட்கு வ்யாக்யானம் செய்தவரான
எதிராஜரை ஜெபியுங்கள் என்று வடுக நம்பிகள் வம்சத்தவரானவரும், மிதுன கால இராம வாசியான ரங்காச்சாரியார்
தாம் அருளிச் செய்த பஜ யதிராஜ ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்

————–

 

ஸ்ரீ ப⁴ஜ யதிராஜ ஸ்தோத்ரம்

ஶ்ரீரங்கே³ஶய ஜயாஶ்ரயகேது: ஶ்ரித ஜந ஸம் ரக்ஷண ஜீவாது: ।
ப⁴வப⁴யஜலதே⁴ரேவ ஹி ஸேது: பத்³மாநேது: ப்ரணதௌ ஹேது: ॥ 1॥

ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴வபீ⁴ரோ ।
ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴வபீ⁴ரோ ॥ ப⁴ஜ யதிராஜம் …

ஆதௌ³ ஜக³தா³தா⁴ர: ஶேஷ: தத³நு ஸுமித்ராநந்த³நவேஷ: ।
தது³பரி த்⁴ரு’தஹலமுஸலவிஶேஷ: தத³நந்தரமப⁴வத்³கு³ருரேஷ: ॥ 2॥ ப⁴ஜ யதி ராஜம்

பு⁴ங்க்தே வைஷயிகம் ஸுக²மந்ய: ப்ரசகாஸ்த்யேவ அநஶ்நந்நந்ய: ।
இதி யஸ்தத்வம் ப்ராஹ வதா³ந்ய: தஸ்மாத³தி⁴க: கோ நு வதா³ந்ய: ॥ 3॥ ப⁴ஜ யதிராஜம்

நஷ்டே நயநே கஸ்யாலோக: சித்தே மத்தே கஸ்ய விவேக: ।
க்ஷீணே புண்யே க: ஸுரலோக: காமே தூ⁴தே கஸ்தவ ஶோக: ॥ 4॥ ப⁴ஜ யதிராஜம் …

நிஶி வநிதாஸுக²நித்³ராலோல: ப்ராத: பரதூ³ஷணபடுஶீல: ।
அந்தர்யாதி நிஜாயுஷ்கால: கிம் ஜாநாதி நர: பஶுலீல: ॥ 5॥ ப⁴ஜ யதிராஜம்

கேசில்லீலாலாலஸக³தய: கேசித்³பா³லாலாலிதரதய: ।
கேசித்³தோ³லாயிதஹமதய: கேऽபி ந ஸந்த்யர்சிதயதிபதய: ॥ 6॥ ப⁴ஜ யதிராஜம் …

யாவாநப³லோ ஜரயா தே³ஹ: தாவாந் ப்ரப³லோ விஷயே மோஹ: ।
வசஸி விரக்தி: ஶ்ருதிபரிவாஹ: மநஸி ஹிதஸ்த்வபரோऽபி விவாஹ: ॥ 7॥ ப⁴ஜயதிராஜம்

கலுஷநிகாயம் லலநாகாயம் பஶ்யந்முஹ்யஸி ஸாயம் ஸாயம் ।
ஜஹி ஜஹி ஹேயம் தத்³வ்யவஸாயம் ஸ்மர நிரபாயம் சரமோபாயம் ॥ 8॥ ப⁴ஜ யதிராஜம்

ராத்ரிந்தி³வமபி பி⁴க்ஷாசர்யா கலஹாயைவாக³ச்ச²தி பா⁴ர்யா ।
மத்⁴யே பா³ந்த⁴வஸேவா கார்யா கத²ய கதா³ தவ தே³வஸபர்யா ॥ 9॥ ப⁴ஜ யதிராஜம்

அந்த⁴ம் நயநம் பூ⁴மௌ ஶயநம் மந்த³ம் வசநம் மலிநம் வத³நம் ।
தஸ்மிந் காலே கோ³ப்தும் ஸத³நம் வாஞ்ச²ஸி த³த்ததநூஜாநயநம் ॥ 10॥ ப⁴ஜ யதிராஜம்

தாலச்ச²த³க்ரு’தகுப்³ஜகுடீர: ப்ரதிக்³ரு’ஹஸந்த்⁴யாகப³லாஹார: ।
விவித⁴படச்சரபா⁴ர: க்ரூர: ஸோऽபி விதா⁴த்ரு’ஸமாஹங்கார: ॥ 11॥ ப⁴ஜ யதிராஜம்

மந்த்ரத்³ரவ்யவிஶுத்³தோ⁴ யாக:³ ஸர்வாரம்ப⁴விராக³ஸ்த்யாக:³ ।
கர்தும் ஶக்யோ ந கலௌ யோக:³ கிந்து யதீஶகு³ணாம்ரு’தபோ⁴க:³ ॥ 12॥ ப⁴ஜ யதிராஜம்

உபரி மஹோபலவர்ஷாஸாரோ மார்கே³ கண்டககர்த³மபூர: ।கக்ஷே பா⁴ர: ஶிரஸி கிஶோர: ஸுக²யதி கோ⁴ர: கம் ஸம்ஸார: ॥ 13॥ ப⁴ஜ யதிராஜம்

ப⁴ஜஸி வ்ரு’தா² விஷயேஷு து³ராஶாம் விவித⁴விசித்ரமநோரத²பாஶாம் ।
கியத³பி லப⁴ஸே ந ஹி தத்ரைகம் கிந்து வ்ரஜஸி மஹாந்தம் ஶோகம் ॥ 14॥ ப⁴ஜ யதிராஜம்

கஶ்சந லோகே கரபுடபாத்ர: பாதும் ஸுதமாஶ்ரிதமட²ஸத்ர: ।
தஸ்மிந்வ்ரு’த்³தே⁴ தம் ஸகலத்ர: ஶபதி ஹி ரண்டா³ஸுத இதி புத்ர: ॥ 15॥ ப⁴ஜ யதிராஜம்

மநுஜபதிம் வா தி³க³தி⁴பதிம் வா ஜலஜப⁴வம் வா ஜக³த³தி⁴பம் வா ।
மமதாஹங்க்ரு’திமலிநோ லோகோ நிந்த³தி நிந்த³தி நிந்த³த்யேவ ॥ 16॥ ப⁴ஜ யதிராஜம்

பாபஹதோ வா புண்யயுதோ வா ஸுரநரதிர்யக்³ஜாதிக³தோ வா ।
ராமாநுஜபத³தீர்தா²ந்முக்திம் விந்த³தி விந்த³தி விந்த³த்யேவ ॥ 17॥ ப⁴ஜ யதிராஜம்

கு³ணகு³ணிநோர்பே⁴த:³ கில நித்ய: சித³சித்³த்³வயபரபே⁴த:³ ஸத்ய: ।
தத்³த்³வயதே³ஹோ ஹரிரிதி தத்த்வம் பஶ்ய விஶிஷ்டாத்³வைதம் தத்த்வம் ॥ 18॥ பஜ யதிராஜம்

யதிபதிபத³ஜலக³ணிகாஸேக: சதுரக்ஷரபத³யுக்³மவிவேக: ।
யஸ்ய து ஸாலநக³ர்யவலோக: தஸ்ய பதே³ந ஹதோ யமலோக: ॥ 19॥ ப⁴ஜ யதிராஜம்

சிந்தய ஸர்வம் சித³சித்³ரூபம் தநுரிதி தஸ்ய ஹரேரநுரூபம் ।
தஸ்மாத் கஸ்மிந்கலயஸி கோபம் பஶ்சாத்³ப⁴ஜஸி து³ராபம் தாபம் ॥ 20॥ ப⁴ஜ யதிராஜம்

யஶ்சதுரக்ஷரமந்த்ரரஹஸ்யம் வேத³ தமேவ வ்ரு’ணீஹி ஸத³ஸ்யம் ।
தச்சரணத்³வயதா³ஸ்யமுபாஸ்யம் தத்³விபரீதம் மதமபஹாஸ்யம் ॥ 21॥ ப⁴ஜ யதிராஜம்

வைஷ்ணவகுலகு³ணதூ³ஷணசிந்தாம் மா குரு நிஜகுலஶீலாஹந்தாம் ।
யதிபதிரேவ ஹி கு³ருரேதேஷாமிதி ஜாநீஹி மஹத்வம் தேஷாம் ॥ 22॥ ப⁴ஜ யதிராஜம்

ஸுமஸுகுமாரம் ஶோபி⁴தமாரம் ரதிஸுக²ஸாரம் யுவதிஶரீரம் ।
க³தஜீவிதமதிகோ⁴ரவிகாரம் த்³ரு’ஷ்ட்வா க³ச்ச²ஸி தூ³ரம் தூ³ரம் ॥ 23॥ ப⁴ஜ யதிராஜம்

வித்³யாநிபுணா வயமித்யந்யே ஹ்ரு’த்³யா த⁴நிநோ வயமித்யந்யே ।
ஸத்குலஜாதா வயமித்யந்யே தேஷு கலிம் பரிபூர்ணம் மந்யே ॥ 24॥ ப⁴ஜ யதிராஜம்

யமகிங்கரகரமூலே ஶூலே பதத³பி⁴யாதி ஹி பா²லே பா²லே ।
த³ஹதி தநும் ப்ரதிகூலே காலே கம் ரமயஸி தத்காலே பா³லே ॥ 25॥ ப⁴ஜ யதிராஜம்

நரவாஹநக³ஜதுரகா³ரூட்:³ஆ: நாரீஸுதபோஷணகு³ணமூடா:⁴ ।
நாநாரஞ்ஜகவித்³யாப்ரௌடா:⁴ நாக³ரிகா: கிம் யதயோ மூடா:⁴ ॥ 26॥ ப⁴ஜ யதிராஜம்

யஸ்ய முக²ஸ்தா² யதிபதிஸூக்தி: தஸ்ய கரஸ்தா² விலஸதி முக்தி: ।
நரகே பதிதம் நவநவயுக்தி: நஹி ரக்ஷதி ஸாமாந்யநிருக்தி: ॥ 27॥ ப⁴ஜ யதிராஜம் …

ஶ்ருதிஶிரஸாமத்யந்தவிதூ³ஷ்யம் ஸூத்ராநபி⁴மதமதிவைது³ஷ்யம் ।
ப்ரத²மம் மங்க³ளமந்ரு’தவிஶேஷ்யம் ப்ரலபஸி கிம் ப்ராக்ரு’தக்ரு’தபா⁴ஷ்யம் ॥ 28॥ப⁴ஜ யதிராஜம் …

தஸ்கரஜாரவிதூ³ஷகதூ⁴ர்தா மஸ்கரிமௌநிதி³க³ம்ப³ரவ்ரு’த்தா: ।
கு³ப்தத⁴நீக்ரு’த த⁴நமத³மத்தா: கு³ரவ: கிம் பரவஞ்சகசித்தா: ॥ 29॥ ப⁴ஜ யதிராஜம்

காந்திமதீஸுகுமாரகுமாரம் கேஶவயஜ்வகிஶோரமுதா³ரம் । யஜ்வ பாட²பே⁴த³ஸிம்ஹ
ராமாநுஜமஹிராட³வதாரம் மூகாந்தா⁴நபி மோக்ஷயிதாரம் ॥ 30॥ ப⁴ஜ யதிராஜம் …

காஷாயாம்ப³ரகவசிதகா³த்ரம் கலிதகமண்ட³லுத³ண்ட³பவித்ரம் ।
வித்⁴ரு’தஶிகா²ஹரிணாஜிநஸூத்ரம் வ்யாக்²யாதத்³வைபாயநஸூத்ரம் ॥ 31॥ ப⁴ஜ யதிராஜம் …

யாமுநபூர்ணக்ரு’போஜ்ஜ்வலகா³த்ரம் ராமாப்³ஜாக்ஷமுநீக்ஷணபாத்ரம் ।
கோமலஶட²ரிபுபத³யுக³மாத்ரம் ஶ்ரீமாத⁴வஸேநாபதிமித்ரம் ॥ 32॥ ப⁴ஜ யதிராஜம் …

ஸாலக்³ராமே ஸர்வஹிதார்த²ம் யேநாஸ்தா²பி கு³ரோ: பத³தீர்த²ம் ।
தத்குலதை³வதஹிதபுருஷார்த²ம் ஸகலோபாயாதி⁴கசரமார்த²ம் ॥ 33॥ ப⁴ஜ யதிராஜம் …

ப்ரவசநஸக்த: ப்ரஜ்ஞாயுக்த: பரஹிதஸக்த: பரமவிரக்த: ।
நாநாதை³வதப⁴க்த்யா யுக்த: ந ப⁴வதி முக்தோ ப⁴வதி ந முக்த: ॥ 34॥ ப⁴ஜ யதிராஜம்

ஸந்த்யஜ ஸகலமுபாயாசரணம் வ்ரஜ ராமாநுஜசரநௌ ஶரணாம் ।
பஶ்யஸி தமஸ: பாரம் நித்யம் ஸத்யம் ஸத்யம் புநரபி ஸத்யம்॥ 35॥ ப⁴ஜ யதிராஜம்

ப⁴க³வத்³ராமாநுஜஷட்த்ரிம்ஶ: ஸாலக்³ராமகு³ரூத்தமவம்ஶ்ய: ।
கௌண்டி³ந்ய: கவிராஹ பவித்ரம் ரங்கா³ர்யோ யதிராஜஸ்தோத்ரம் ॥ 36॥ ப⁴ஜ யதிராஜம் …

இதி யதிராஜஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

——————-

ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம்–

ஸ்ரீ ராமானுஜ புஷ்கராஷோ யதீந்திர கருணாகர
காந்திமத்யாத்மஜா ஸ்ரீ மான் லீலா மானுஷ விக்ரஹ –1-

சர்வ சாஸ்திர தத்வஜ்ஞ சர்வஜ்ஞ சஜ்ஜனப்ரிய
நாராயண க்ருபா பாத்ர ஸ்ரீ பூத புர நாயக –2

அநகோ பக்த மனதார கேசவா நந்த வர்த்தன
காஞ்சி பூர்ணப்ரிய சக ப்ரணரார்த்தி விநாசன –3

புண்ய சங்கீர்த்தன புண்யோ ப்ரஹ்ம ராஷச மோசக
யாதவ பாதிதா பார்த்த வ்ருஷச் சேதகுடாரக –4

அமோகோ லஷ்மண முனி சாரதா சோக நாசன
நிரந்தர மநாஜ்ஞான நிர்மோசன விசஷண–5

வேதாந்த த்வய சாரஜ்ஞோ வரதாம்புப்ர தாயக
பராபிப்ராய தத்வஜ்ஞ யாமு நாங்குலி மோசக –6

தேவராஜா க்ருபா லப்த ஷட்வாக்யார்த்த மஹோததி
பூர்ணார்ய லப்த சந்மந்த்ரா சௌரி பாதாப்ஜ ஷட்பத –7

த்ரிதண்ட தாரி ப்ரஹ்மஜ்ஞோ ப்ரஹ்ம ஜ்ஞான பராயண
ரங்கேச கைங்கர்யயுத விபூதித்வ்ய நாயக –8

கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ ப்ரகாசக
வர ரங்காநுகம்பாத்த த்ரவிடாம் நாய பாரக –9

மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிடாம் நாயா தத்வதீ
சதுஸ் சப்ததி சிஷ்ட்யாபஞ்சாசார்யா பதாச்ரய–10

பிரபீத விஷதீர்த்தாம்ப ப்ரகடீ க்ருதவைபவ
பிரணதார்த்தி ஹராசார்யா தந்த பிஷைக போஜன –11

பவீத்ரா கருத கூரேசோ பாகி நேயத்ரி தண்டக
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயக –12-

ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவ
தேவ ராஜார்ச்ச நர்த மூக முக்தி ப்ரதாயக –13-

யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா மந்த்ரதோ தரணீதர
வரதாசார்ய சத்பக்தோ யஜ்ஞே சார்த்தி விநாசக -14

அனந்தாபீஷ்ட பலதோ விடலேந்திர ப்ரபூஜீத
ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தக –15

வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ போதாயன மதாநுக
ஸ்ரீ பாஷ்யாமி மஹாக்ரந்த காரக கலி நாசன –16

அத்வைத மத விச்சேத்தா விசிஷ்டாத்வைத பாரக
குரங்க நகரீ பூர்ணம்ந்திர ரத்நோபதேசக –17

விநா சிதாகிலமத சேஷீ க்ருத ரமாபதி
புத்ரீ க்ருத சடாராதி சடஜித் குணகோசக 18-

பாஷா தத்த ஹயக்ரீவோ பாஷ்யகாரோ மகாயச
பவித்ரீ கருட பூ பாக கூர்ம நாத ப்ரகாசக –19-

ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்கு சக்ர ப்ரதாயக
ஸ்ரீ வெங்கடேச ச்வசுர ஸ்ரீ ராமசக தேசிக –20

க்ருபாமாத்ர ப்ரசன்னார்யோ கோபிகா மோஷ தாயக
சமீசீ நார்ய சச்சிஷ்ய சத்க்ருதோ வைஷ்ணவ ப்ரிய–21

க்ருமிகண்ட ந்ருபத்வம்சீ சர்வமந்திர மஹோததி
அங்கீ க்ருதாந்திர பூர்ணாய சாலக்ராம ப்ரதிஷ்டித –22

ஸ்ரீ பக்தக்ராம பூர்ணேச விஷ்ணு வர்த்தன ரஷக
பௌத்தத் வாந்த சஹாஸ்ராம்சு சேஷ ரூபப்ரதர்சக -23

நகரீ க்ருத வேதாத்ரி டில்லீச்வர சமர்ச்சித்த
நாராயண ப்ரடிஷ்டாதா சம்பத்புத்ர விமோசக–24

சனத்குமார ஜனக சாது லோக சிகாமணி
ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜ பூர்ண மநோரத–25

கோதாக்ரஜோ திகவிஜேதா கோதா பீஷ்டப்ரபூராக
சர்வ சம்சய விச்சேத்தா விஷ்ணு லோக ப்ரதாயக –26

அவ்யாஹத மஹத்வர்த்மா யதிராஜோ ஜகத்குரு
ஏவம் ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம் –27

யா படத் ச்ருணுயாத்வாபி சர்வான் காமான் அவாப்நுயாத்
யதாந்த்ர பூர்ணேந மஹாத்ம நேதம் ஸ்தோத்ரம் க்ருதம் சர்வஜநாவநாய
தஜ்ஜீவ பூதம் புவி வைஷ்ணவா நாம் பபூவ ராமானுஜ மாநசானாம்-

———————-

ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தரம்

ஸ்ரீ இராமாநுஜாய நம:
ஓம் புஷ்கராக்ஷாய நம:
ஓம் யதீந்த்ராய நம:
ஓம் கருணாகராய நம:
ஓம் காந்திமத்யாத்மஜாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லீலாமானநுஷ விக்ரஹாய நம:
ஓம் ஸர்வயாஷ்த்ரார்த்த தத்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸஜ்ஜநப்ரியாய நம:

ஓம் நாராயண க்ருபாபாத்ராய நம:
ஓம் ஸ்ரீ பூதபுர நாயகாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் பக்தமந்தாராய நம:
ஓம் கேஸவாநந்த வர்தநாய நம:

ஓம் காஞ்சீபூர்ண ப்ரியஸகாய நம:
ஓம் ப்ரணதார்த்திவிநாயநாய நம:
ஓம் புண்யஸங்கீர்த்தநாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் ப்ரஹ்மராக்ஷஸ மோசகாய நம:

ஓம் யாதயா பாதிதா பார்த்த வ்ருக்ஷச் சேத குடாகாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் லக்ஷ்மணமுநயே நம:
ஓம் ஸாரதா யோகநாயகாய நம:
ஓம் நிரந்தர ஜநாஜ்ஞாத நிர் மோசந நம:

ஓம் விசஷணாய நம
ஓம் வேதாந்த த்வய சாரஜ்ஞாய நம
ஓம் வரதாம்புப்ர தாயகாய நம
ஓம் பராபிப்ராய தத்வஜ்ஞாய நம
ஓம் யாமு நாங்குலி மோசகாய நம

ஓம் தேவராஜா க்ருபா லப்த ஷட்வாக்யார்த்த மஹோததி
பூர்ணார்ய லப்தாய நம
ஓம் சந்மந்த்ரா சௌரி பாதாப்ஜ ஷட்பதாய நம
ஓம் த்ரிதண்ட தாரயே நம
ஓம் ப்ரஹ்மஜ்ஞாய நம

ஓம் ப்ரஹ்ம ஜ்ஞான பராயணாய நம
ஓம் ரங்கேச கைங்கர்யயுத விபூதி த்வ்ய நாயகாய நம
ஓம் கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ ப்ரகாசகாய நம
ஓம் வர ரங்காநுகம்பாத்தாய நம
ஓம் த்ரவிடாம் நாய பாரகாய நம

ஓம் மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிடாம் நாயா தத்வதீயா நம
ஓம் சதுஸ் சப்ததி சிஷ்ட்யாய நம
ஓம் பஞ்சாசார்யா பதாச்ரயா நம
ஓம் பிரபீத விஷதீர்த்தாம்பாய நம
ஓம் ப்ரகடீ க்ருதவைபவாய நம

ஓம் பிரணதார்த்தி ஹராசார்யா தந்த பிஷைக போஜனாய நம
ஓம் பவீத்ரா கருதாய நம
ஓம் கூரேசோ பாகி நேயத்ரி தண்டகாய நம
ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகாய நம

ஓம் ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவாய நம
ஓம் தேவ ராஜார்ச்ச நர்த மூகாய நம
ஓம் முக்தி ப்ரதாயகாய நம

ஓம் யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா மந்த்ரதயா நம
ஓம் தரணீதராய நம
ஓம் வரதாசார்ய சத் பக்தாய நம
ஓம் யஜ்ஞே சார்த்தி விநாசகாய நம

ஓம் அனந்தாபீஷ்ட பலதாய நம
ஓம் விடலேந்திர ப்ரபூஜீதாய நம
ஓம் ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தகாய நம
ஓம் வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ போதாயன மதாநுக
ஸ்ரீ பாஷ்யாமி மஹாக்ரந்த காரக கலி நாசனாய நம

ஓம் அத்வைத மத விச்சேத்தாய நம
ஓம் விசிஷ்டாத்வைத பாரகாய நம
ஓம் குரங்க நகரீ பூர்ணம்ந்திர ரத்நோபதேசகாய நம
ஓம் விநா சிதாகிலமதாய நம
ஓம் சேஷீ க்ருத ரமாபதி புத்ரீ க்ருத சடாராதி சடஜித் குணகோசகாய நம

ஓம் பாஷா தத்த ஹயக்ரீவாய நம
ஓம் பாஷ்யகாரோ மகா யசாய நம
ஓம் பவித்ரீ கருட பூ பாக கூர்ம நாத ப்ரகாசகாய நம
ஓம் ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்கு சக்ர ப்ரதாயகாய நம
ஓம் ஸ்ரீ வெங்கடேச ஸ்வசுராய நம

ஓம் ஸ்ரீ ராமசக தேசிகாய நம
ஓம் க்ருபாமாத்ர ப்ரசன்னார்யாய நம
ஓம் கோபிகா மோஷ தாயக சமீசீ நார்யாய நம
ஓம் சச் சிஷ்ய சத்க்ருதாய நம
ஓம் வைஷ்ணவ ப்ரிய–

ஓம் க்ருமிகண்ட ந்ருப த்வம்சீ யாய நம
ஓம் சர்வமந்திர மஹோததி அங்கீ க்ருதாந்திர பூர்ணாய நம
ஓம் சாலக்ராம ப்ரதிஷ்டித
ஓம் ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேசாய நம
ஓம் விஷ்ணு வர்த்தன ரஷகாய நம

ஓம் பௌத்தத் வாந்த சஹாஸ்ராம்சு சேஷ ரூப ப்ரதர்சகாய நம
ஓம் நகரீ க்ருத வேதாத்ரி டில்லீச்வர சமர்ச்சித்த நாராயண ப்ரடிஷ்டாதாய நம
ஓம் சம்பத் புத்ர விமோசகாய நம

ஓம் சனத்குமார ஜனகாய நம
ஓம் சாது லோக சிகாமணியாய நம
ஓம் ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜயா நம
ஓம் பூர்ண மநோரத கோதாக்ரஜாய நம
ஓம் திக் விஜேதாய நம

ஓம் கோதா பீஷ்டப்ரபூராகாய நம
ஓம் சர்வ சம்சய விச்சேத்தாய நம
ஓம் விஷ்ணு லோக ப்ரதாயகாய நம

ஓம் அவ்யாஹத மஹத்வர்த்மாய நம
ஓம் யதிராஜோ ஜகத்குரவே நம

ஸ்ரீ ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம் ஸம் பூர்ணம்-

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடுக நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய கிரந்தம் —

July 15, 2022

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் -என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமைகாந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமைகாந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமைகாந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
தீர்த்தம் கத்வா ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா
அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமைகாந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாக்கத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய
ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
போம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 12, 2022

ஸ்ரீ எம்பெருமானார் பூர்வாச்சார்ய பரம்பரை யாகிற ரத்நாஹாரத்துக்கு நடுநாயக ரத்னம் என்பதை
ஸ்ரீ தேசிகன் யதிராஜ ஸப்ததியிலே

அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி–15-

தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்

ஸம்ஸாரிகள் துர் கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி கிருபை கரை புரண்டு இருக்கையாலே அர்த்தத்தின் சீர்மை பாராதே
அநர்த்தத்தையே பார்த்து திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்ற ரஹஸ்ய த்ரய அர்த்தத்தை வெளியிட்டு அருளினார் எம்பெருமானார்
இவருடைய பர ஸம்ருத்திக்கு உகந்து -இவரது ஆஜ்ஞா அதி லங்கனம் பண்ணி அமர்யாதமாக பிரபத்தி பிரதானம் பண்ணின
ப்ரபாவத்தைக் கண்டு ஸாத்தி அருளிய திரு நாமம் அன்றோ இது
காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில் யாரே அறிபவர் நின்னருளின் தன்மை –

தர்சனம் -மதம் -பார்வை -கண் -பல பொருள்களைக் குறிக்கும் பதம்

மதம்
தர்சனம் என்னும் பதம் மதம் என்னும் பொருளைக் குறிக்கும் -நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று -ஈடு மஹா பிரவேசம்

இதம் அகில தம கர்சனம் தர்சனம் ந -தேசிகன்

எம்பெருமானார் தர்சனம் என்றே பேர் இட்டு நாட்டி வைத்தார் நம்பெருமாள் -அத்தை வளர்த்த அச்செயலுக்காக –

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –57-

யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

ஸம்ப்ரதாய பரிசுத்தி ஆரம்பத்தில் தேசிகன்
ஸர்வ லோக ஹிதமான அத்யாத்ம ஸாஸ்திரத்துக்கு பிரதம பிரவர்த்தகன் ஸர்வேஸ்வரன் -இந்த யுக ஆரம்பத்திலே ப்ரஹ்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகர் ஆனார் –

ஸ்வாமி எம்பெருமானார் தாமே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சி ஷுபு தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே -ஸ்ரீ பாஷ்யம்

பகவத் போதாயன டங்க த்ரமிட குஹ தேவர் கபர்தி பாருசி ப்ரப்ருதி அவி கீத சிஷ்ட பரிக்ருஹீத புராதன
வேத வேதாங்க வ்யாக்யா ஸூவ்யக்தார்த்த ஸ்ருதி நிகர நிதர்ச்சி தோயம் பந்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்

இம்மதம் அநாதி -எம்பெருமானார் பரம ரக்ஷகர் -ஸ்ரஷ்டா அல்லர்
நாதோ பஞ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹு பிரு பசிதம் யாமுநேய ப்ரபந்நை த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை -தேசிகன்

எம்பெருமானார் தர்சனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை வளர்த்த அந்தச்செயல் அறிகைக்காக -மா முனிகள்
நாட்டி வைத்தார் -நம்பெருமாள் தானே நேராக இந்தத் திருநாமம் சாத்தி அருளினார் என்றும்
நாட்டு வித்தார் -திருக்கோட்டியூர் நம்பிகள் மூலம் சாத்துவித்து அருளினார்

————–

இனி இதன் ப்ரமேயங்களைப் பார்ப்போம் –

பிரதிதந்தர சித்தாந்தம் -அசாதாரணம் -சரீராத்ம பாவம் -இதனாலேயே ப்ரஹ்ம விசாரம் -சாரீரிக மீமாம்ஸை –
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் -ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -உபநிஷத்
ச ஈஸ்வர வியஷ்ட்டி சமஷடி ரூப -ஸ்ரீ பராசர பகவான்
ஜகத் ஸர்வம் ஸரீரம் தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன -வேத வியாசர்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் நம்மாழ்வார்
யத் அண்டம் பராத்பரம் ப்ரஹ்ம சதே விபூதய -ஆளவந்தார்

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம்
ஹிதம் -கிருபா விசிஷ்டனானவனே பரம உபாயம்
புருஷார்த்தம் -அவன் திரு உள்ள உகப்பே பரம புருஷார்த்தம்
பரத்வ ஸ்தாபகம் காரணத்வம் -முதல் பத்தில் பரத்வம் -அருளிச் செய்து -அடுத்த பத்தில் காரணத்வத்தையும் –
தத் அநு குணங்களான வியாபகத்வாதிகளையும் அடைவே அருளிச் செய்கிறார் –

———

வேதாந்தங்கள் காரண வஸ்துவை
ஸத்
ப்ரஹ்ம
ஆத்மா
ஹிரண்ய கர்ப்ப
சிவ
இந்த்ர
நாராயண
ஸப்தங்களால் நிர்த்தேசித்து உள்ளன
முதலில் சொன்ன ஆறும் பொதுச் சொற்கள்
நாராயண ஸப்தம் விசேஷ ஸப்தம்
நாராயண ஸப்த கடித வாக்கியத்தில் மட்டும் நாராயணன் ஒருவனே இருந்தான் -ப்ரஹ்மாவும் இலன் சிவனும் இலன் என்று ஸ்பஷ்டமாக ஓதப்பட்டுள்ளது
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -உபநிஷத்

ஸத் ப்ரஹ்மாதி பரம காரண வாசிபி சப்தை நாராயண ஏவாபி தீயதே இதி நிச்சீயதே -வேதார்த்த ஸங்க்ரஹம்

ஸத் ப்ரஹ்மாத்ம பதை த்ரயீ சிரஸி

யோ நாராயண உக்த்யா ததா வ்யாக்யாதோ கதி ஸாம்ய லப்த விஷயான் அநந்ய த்வ போதோ ஜ்வலை -ஆழ்வான் ஸூந்தர பாஹு ஸ்தவம்

வாரணம் காரணன் என்று அழைக்க ஓடி வந்து அருள் புரிந்தவன் நாராயணன் ஒருவனே
ஆகவே நாராயணனே ஜகத் காரணன்

————

இனி ஸர்வ வியாபகத்வம்
உபாதானத்வமும் நிமித்தமும் -ஸஹ காரித்வமும் -ஆக – த்ரிவித காரணமும் அவனே அத்புத சக்தன்
அத்ரோச்யதே ஸகல இதர விலக்ஷணஸ்ய பரஸ்ய ப்ராஹ்மண ஸர்வ ஸக்தே சர்வஞ்ஞஸ்ய ஏக்ஸ்யைவ ஸர்வம் உபபத்யே -ஸ்ரீ பாஷ்யம்
ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வே நிமித்த உபாதானத உபயோகிநீ -ஸ்ருத ப்ரகாசிகா வாக்யம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ -ஸ்ருதி
ப்ரக்ருதிச்ச -என்றும்
சாஷாச்ச உபாயம்னானாத் – என்றும் வ்யாஸ ஸூ த்ரங்கள்
வேர் முதல் முத்து -த்ராவிட உபநிஷத்

வியாப்ய கத தோஷம் தட்டாமல் வியாபிக்கிறான்
நிர்விகாரத்வம் ஸ்வரூப நிஷ்டம் என்றும்
விகாரம் சரீர பூத சேதன அசேதன கதம்
அசேஷ ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீரதயா தத் ஆத்ம பூதம் பரம் ப்ரஹ்ம ஸ்வ சரீர பூதே ப்ரபஞ்சே —
ஸ்வஸ் மின் ஏகதாம் ஆ பன்னே சதி –ஜகச் சரீர தயா ஆத்மானம் பரிண மயதீதி ஸர்வேஷு வேதாந்தேஷு பரிணாமம் உபதேச -ஸ்ரீ பாஷ்யம்

பரமாத்ம சித் அசித் சங்காத ரூப ஜகதாகார பரிணாமமே பரமாத்ம சரீர பூத சிதம் சகதா ஸர்வ ஏவ அபுருஷார்த்தா
ததா பூதா சிதம் ச கதாச்ச சர்வே விகாரா பரமாத்மனி கார்யத்வம் ததவாப்தயோ தயோ நியந்த்ருத்வேந ஆத்மத்வம் -ஸ்ரீ பாஷ்யம்

அவிகார ஸ்ருதயே ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்
என்றும் இறே எம்பெருமானார் நிஷ்கர்ஷம்

லோகத்தில் கார்ய காரணங்கள் போல் அன்றிக்கே உபாதான காரணமும் தானே யாகையாலே கார்ய பூத ஸமஸ்த வஸ்துக்களும் வியாபகனாய் -பெரிய ஜீயர் ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம்

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -என்பதே மூல பிராமண கோஷம் –

————-

நாராயணனே ஸர்வ நியந்தா –

கீழ் சொன்ன வியாப்தி நிறம் பெறுவது நியந்த்ருதவத்தாலே
ஆகாசத்துக்கு வியாப்தி உண்டு -அசேதனம் ஆகையால் நியமன ஸாமர்த்யம் இல்லை –
ராஜாவுக்கு நியமன ஸாமர்த்யம் உண்டு -அணு மாத்ர ஸ்வரூபன் -ஆகையால் வியாபகத்வம் இல்லை
பகவான் பராமசேதனனாயும் விபூவாயும் இருக்கிற படியால் வியாபகனாயும் ஸர்வ நியாந்தாவாகவும் உள்ளான்
அனேந ந்ருப நபோ வ்யாவ்ருத்தி ஸ்ருத ப்ரகாஸகர்
சாந்தோக்யம் ஸத் வித்யா பிரகரணத்தில் -ஆதேச -பதத்துக்கு எம்பெருமானார்
ஆதிஸ்யதே அனேந இத்யாதேச –ஆதேச ப்ரஸாஸனம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
ஆதிஸ்யதே –ஆதேச -இதி ப்ரத்யயார்த்த வியாக்யானம்
ஆதேச ப்ரஸாஸனம் -இதி ப்ரக்ருத்யர்த்த வியாக்யானம் என்று இறே தாத்பர்ய தீபிகா
ஸாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய -பள்ளிப்பிள்ளை வார்த்தை
ஈஸித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க -ஆளவந்தார்
வியாப்தி நிறம் பெற தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா –
அந்தப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா -வேத கோஷம்

————

நாராயணனே உபய விபூதி யுக்தன்

புகழு நல் ஒருவன் என்கோ -திருவாய் மொழி
ஸ்ரீ கீதை பத்தாவது அத்யாயம் -நாராயணன் விபூதி மான் என்று அறுதியிட்டார்கள்

தத் வ்யதிரிக்தஸ்ய ஸமஸ்தஸ்ய ததா யத்ததாம் தத் வியாப்யதாம் தத் ஆதாரதாம் தந் நியாம்யதாம் தத் சேஷதாம் தத் ஆத்ம கதாம்ச ப்ரதிபாத்ய -வேதார்த்த ஸங்க்ரஹம் –

ப்ரஹ்ம சிவயோரபி இந்த்ராதி சமானாகரதயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதித்தம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே
அனேந த்ரி குணாத் மக்காத ஷேத்ரஜ்ஞஸ்ய போக்ய பூதாத் வஸ்துந ப்ரஸ்தாத் விஷ்ணோ வாஸஸ்தானம் இதி கம்யதே-வேதார்த்த ஸங்க்ரஹம்
த்வேவா ப்ரஹ்மணோ ரூபே -மூர்த்தம் சைவ அமூர்த்தம்ச இதி ப்ரக்ருத்ய –ஸமஸ்தம் ஸ்தூல ஸூஷ்ம ரூபம் பிரபஞ்சம் ப்ரஹ்மணோ ரூபத்வேந பராம் ருஸ்ய-ஸ்ரீ பாஷ்யம்
நிதித்யாஸனாய ப்ரஹ்ம ஸ்வரூபம் உபதிசத் த்வேவாவ ப்ரஹ்மண -இத்யாதி ஸாஸ்த்ரம் ப்ரஹ்மணோ மூர்த்தா மூர்த்த ரூபத்வாதி விசிஷ்டதாம் ப்ராக் அசித்தாம் நாநு வதிம் சமம் -ஸ்ரீ பாஷ்யம்
லோக்யத இதி லோக தத் த்ரயம் லோகத்ரயம் அசேதனம் தத் ஸம்ஸ்ருஷ்ட -சேதன முக்தச் சேதி பிரமாணாவ காம்யம் ஏதத் த்ரயம் ய ஆத்மதயா ஆவிஸ்ய பிபர்தி-கீதா பாஷ்யம் என்று
உபய விபூதி நாதத்த்வத்தை வெளியிட்டு அருளி உள்ளார்கள்
ஆக அவனே ஸர்வ ஸப்த வாஸ்யன் ஆகிறான் –

————-

திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்

அந்தராதித்யே ஹிரண்மய புருஷ –ஹிரண்மயஸ்மஸ்ரு –ஆ பிரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண –தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சுருதி
ராம கமல பத்ராஷ -ஸ்ரீ ராமாயணம்
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ரூபம் வா அதீந்த்ரியம் –ஹிரண்மய இதி ரூப சாமான்யாத் -டங்காச்சார்ய வாக்யம்
யதா பூத வா திஹி ஸாஸ்த்ரம் –ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் –த்ரமிட பாஷ்யம்
துயர் அறு சுடர் அடி -திருவாய் மொழி

ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாயா ப்ரக்ருதி ஸ்வ பாவ ஸ்வ மேவ ஸ்வ பாவம் அதிஷ்டாய ஸ்வேநைவ ரூபேண ஸ்வ இச்சையா ஸம்பவாமி
இத்யர்த்த ஸ்வ ஸ்வரூபம் ஹி ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் —
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே –அந்தராதித்யே ஹிரண்மய புருஷ -இத்யாதி ஸ்ருதி ஸித்தம் -கீதா பாஷ்யம்

இதாநீம் விஸ்வ சரீரத்வேந த்ருஸ்ய மான ரூப த்வம் தேனைவ ரூபேண பூர்வ ஸித்தேந சதுர் புஜேந ரூபேண யுக்தோ பவ -கீதா பாஷ்யம்
நீராய் நிலனாய் சிவனாய் அயனாய் -6-9-1-ஜெகதாகார அனுபவம் அனுவதித்திக் கொண்டு
கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் -என்று திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட அனுபத்தை – ஆசைப்படுகிறார் அன்றோ

—————–

உபய லிங்கம்

சத்ர சாமரங்கள் போல் அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்ய நீகம்-கல்யாண குணை கதானத்வம் -என்று இது இறே பகவத் ஸப்த அர்த்தமாய்
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத பகவத் ஸப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி -ஸ்ரீ பராசரர் நிஷ்கர்ஷம்

ப்ரஹ்மம் ஸ குணம் என்பதை
ஈஷதே நா ஸப்தம்
ஆனந்த மய அப்யாஸத்
அந்த தத் தர்மோப தேசாத்
அத்ருஸ்யத்வாதி குணகஸ் தர்ம யுக்த
சாஸ ப்ரஸா ஸனாத்
அபித்யோ பதே சாச்ச
ஆனந்தா தய ப்ரதானஸ்ய -இத்யாதிகளால் வேத வியாஸரும்
யுக்தம் தத் குண கோபா ஸநாத் -என்று வாக்யகாரரான டேங்கர் என்ற ப்ரஹ்ம நந்தியும்
யத்யபி –ததாபி அந்தர் குணா மேவ தேவதாம் பஜதே –ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யகாரர்
அபவ்ருஷே யத்வ நித்யத்வங்களாலே வேதம் அகில பிரமாண விலக்ஷணமாய் இருப்பது போல்
இந்த உபய லிங்கத்தால் இவனும் அகில பிரமேய விலக்ஷணன் –
இவற்றையே தூயானைத் தூய மறையானை -11-7-3- கலியன்
நம்மாழ்வார் முதலடியிலே மாயாவாதிகள் மிடற்றைப் பிடிக்குமா போல் நலமுடையவன் -என்றார் போல்
மாறன் அடி பணிந்து உய்ந்தவரான எம்பெருமானாரும்
நிர்மல ஆனந்த கல்யாண நிதயே -வேதார்த்த ஸங்க்ரஹம்
நிர்மல ஆனந்த உதன்வதே -வேதாந்த சாரம்
ஸ்ரீ யபதி நிகில ஹேயப்ரத்ய நீக கல்யாண குணை கதான -கீதா பாஷ்யம்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை குணை கதான -சரணாகதி கத்யம்
கல்யாண குணங்களே உள்ளவன் என்பதை ஸ குண ஸ்ருதியும்
அபேகுணங்கள் கேசமும் கிடையாது என்பதை நிர்குண ஸ்ருதியும் என்றும் இந்த நிர்ணயத்தை
ந ச நிர்குண வாக்ய விரோத ப்ராக்ருத ஹேய குண விஷயத்வாத் தேஷாம்
நிர்குணம் இத்யாதீனம்
பரஸ்ய ஸக்தி –ஏஷ ஆத்மா –ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
இத்யாத்யா ஸ்ருதய ஞாத்ருத்வ பிரமுகான் கல்யாண குணான் -என்றும் அருளிச் செய்துள்ளார்

சங்க்யாதும் நைவ ஸக்யந்தே குணா தோஷச்ச சார்ங்கி ஆனந்த்யாத் -பிரதமோ ராசி அபாவதேவ பஸ்ஸிம -ஸாஸ்த்ர வசனம்

ஆழ்வானும் -தூரே குணா தவ து ஸத்வ ரஐஸ் தமாம் ஸி தேன த்ரயீ ப்ரதயதி த்வயி நிர்குணத்வம் நித்யம் ஹரே நிகில ஸத் குண சாகரம் ஹி த்வா மாமனந்தி பரமேஸ்வரம் ஈஸ்வராணாம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

உபய லிங்கம் -உபய லக்ஷணம் நிரஸ்த நிகில தோஷத்வ கல்யாண குணாகரத்வ லக்ஷணோபேதம் இத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யம்

அந்நியோன்ய பின்ன விஷயா ந விரோத கந்தம் அர்ஹந்தி -நடாதூர் அம்மாள் தத்வ சார வாக்யம்

கல்யாணை அஸ்ய யோக ததிர விரஹோபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச -தேசிகன் -தத்வ முக்த கலாபம்

பதினாறு ஹேதுக்களைக் கொண்டு ஸத்ய கல்யாண குணாகரன் என்று ஸ்ருத பிரகாசிகர்

த இமே ஸத்ய காம -வேதாந்த கோஷம் –

—————

இவனே புருஷோத்தமன் –

பக்தனோடு முக்தனோடு நித்யனோடு வாசியற ஜீவ ஸாமான்யம் பகவத் பாரதந்த்ரம்
ஸ ஸ்வராட் பவதி
ஸ அக்ஷர பரம ஸ்வாட் -என்று ஸ்வா தந்தர்யம் ஓதப்பட்டு இருந்தாலும்
கர்மங்களைக் குறித்தே இந்த ஸ்வா தந்தர்யம்
அத ஏவ ச அநந்ய அதிபதி -வேத வியாச ஸூத்ரம்
அவன் ஒருவனே ஸ்வ தந்த்ரன் -புருஷோத்தமன் -மற்ற அனைவருமே பரதந்த்ரர்கள் -நாரீ துல்யர்கள்
இது பற்றியே நேஹ நா நா -என்று த்வதீய நிஷேதம்
பரமாத்ம ஸத்ருச ஸ்வ தந்த்ரன் மற்று ஒருவன் அல்லன் என்றவாறு –
ஸ ஏவ வாஸூ தேவோயம் ஸாஷாத் புருஷ உச்யதே -ஸ்ரீ ராமாயணம்

புருஷாத் கைவல்யார்த்தி ப்ராப்யாத் ஸ்வாத்ம ஸ்வரூபாத் உத்தம அபரிச்சின்ன தயா ஸ்ரேஷ்ட -ஸ்ரீ வசன பாஷ்ய டீகை

ந ச தேன விநா நித்ராம் லபதே புருஷோத்தம -ஸ்ரீ வால்மீகி பகவான்

புருஷோத்தம க -ஆளவந்தார்

ப்ரஹ்ம சப்தேந புருஷோத்தமோ அபி தீயதே -ஸ்ரீ பாஷ்யம்

————–

இவனே ஸ்ரீ மான்

பரமாத்வாய் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -அத ஏவ ச ஸ ப்ரஹ்ம
மலர்மகள் விரும்பும் –அடிகள் -1-3-1-
அருளாத திருமால் -1-3-8-
நம் திருவுடை அடிகள் -1-3-8-
அருளாத திருமால் -1-4-7-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-
மலராள் மைந்தன் -1-5-9-
திரு மகளார் தனிக்கேள்வன் -1-6-9-
திருவின் மணாளன் -1-9-1-
பூ மகளார் தனிக்கேள்வன் -1-9-3-
உடன் அமர் திருமகள் -1-9-4-
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-
செல்வ நாரணன் -1-10-8-
நீயும் திருமாலால் -2-1-1-
ஞாலம் படைத்தவனைத் திரு மார்வனை -3-7-8-
திரு நாரணன் தாள் -4-1-1-0
மைய கண்ணாள் –உறை மார்பினன் -4-5-2-
மணிமாமை குறைவில்லா மலர் மாதர் உரை மார்வன் -4-8-2-
குடந்தைத் திருமால் -5-8-7-
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -6-10-10-
என் திருமகள் சேர் மார்பனே -7-2-9-
எழில் மலர் மாதரும் தானும் -7-10-1-

என் திரு வாழ் மார்பன் -8-3-7-
கமல மலர் மேல் செய்யாள் திரு மார்பினில் சேர் திருமாலை -9-4-1-
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால் -10-6-9-
உன் திரு மார்பத்து மாலை நான்கை -10-10-2-
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7-
என்று த்வய விவரணமான திருவாய் மொழியிலே ஸ்ரீ மானாக அருளிச் செய்கிறார் –

ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
பாஷ்யகாரர் இது கொண்டு ஸூ த்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
புரா ஸூத்ரை வியாஸ –விவவ்ரே–வகுள தரதாம் ஏத்ய ஸ புன உபா வேதவ் க்ரந்தவ் கடயிதும் ராமாவரஜ-ஆச்சான் பிள்ளை

பொய்கையார் பரனை உபய விபூதி உக்தன் என்றும்
பூதத்தார் -அவனை நாராயணன் -என்றும்
பேயார் -அவனை ஸ்ரீ மான் என்று நிர்ணயித்து அருளிச் செய்கிறார்கள்-பெரியவாச்சான் பிள்ளை

ஸ்ரத்தயா தேவா தேவத்வம் அஸ்னுதே -என்றும்
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் வேத புருஷனும்

திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -என்று திருமழிசைப் பிரானும்
வேதாந்தா தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிந்ஹை தரந்தி -என்று பராசர பட்டரும்

கஸ் ஸ்ரீ ஸ்ரீய -என்று ஆளவந்தாரும்
ஸ்ரீ யபதித்வத்தைப் பரக்க அருளிச் செய்தார்கள் அன்றோ –

———————-

இவனே ஸகல பல பிரதன்

தத்வ த்ரயங்கள் -அசித் -சித் -ஈஸ்வரன்
புருஷார்த்த த்ரவ்யங்கள் -ஐஸ்வர்யம் -கைவல்யம் -பரம மோக்ஷம்
ஐம்கருவி கண்ட வின்பம் -தெரிவரிய அளவில்லாச் சிற்று இன்பம் –திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் -4-9-10-
இதில் முதலாவது போகம் -மற்றவை இரண்டும் அபவர்க்கம் –
போக அபவர்க்க ஸகல பல பிரதன் நாராயணனே

இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே –
வீடு முதல் முழுவதுமாய் –
வீடு முதலாம் –
பரஸ்மா தேவாஸ்மாத் புருஷாத் தத் பிராப்தி ரூபம் அபவர்காக்யம் பலம் இதி ஸம் ப்ரதி ப்ரூதே துல்ய ந்யாய தயா
ஸாஸ்த்ரீயம் ஐஹிகம் ஆமுஷ்மிகம் அபி பலம் அத ஏவ பரஸ்மாத் புருஷாத் பவதி இதி சாமான்யேந பலம் அத இத் யுச்யதே -எம்பெருமானார்

————-

ஆக
1-அகில ஜகத் காரணன்
2- ஸர்வ வியாபகன்
3-ஸர்வ நியாந்தா
4-உபய விபூதி யுக்தன்
5-திவ்ய விக்ரஹ யுக்தன்
6-உபய லிங்கம்
7-புருஷோத்தமன்
8-ஸ்ரீ மான்
9-ஸகல பல பிரதன்–
நாராயணனே என்று எம்பெருமானார் தர்சனத்தில் பர தத்வம் பற்றிய விஷயங்களை அனுபவித்தோம் –

இத்தை அறிய ஸாஸ்திரமே பிரமாணம்
தர்க்கஸ்ய அப்ரதிஷ்ட்டி தத்வாதபி ஸ்ருதி மூல ப்ரஹ்ம காரண வாத ஏவ ஆஸ்ரயணீய -ஸ்ரீ பாஷ்யம்
அத அதீந்த்ரிய அர்த்தே ஸாஸ்த்ரம் ஏவ பிரமாணம் தத் உப பிரும்ணா யைவ தர்க்க உபாதேய-ஸ்ரீ பாஷ்யம்
ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விசிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதானத்வம் நிமித்தத் வம்ச நாநுமான கம்யம் இதி
ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் தஸ்ய -யதோவா இத்யாதி வாக்கியம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயதி இதி -வேதார்த்த சாரம் –

———

இனி பர தத்வ பிரசங்காத் அவர தத்வங்களான சேதன அசேதனங்களைப் பற்றிச் சிறிது அனுபவிப்போம்

ஜீவ தத்வம்

ஞாதாவாகையையாலே -தேஹாதிகளைக் காட்டில் வேறுபட்டவன் ஜீவாத்மா
பகவத் சேஷ பூதன் என்பதால் சேஷியான பகவானைக் காட்டிலும் வேறுபட்டவன் –
இதம் சரீரம் –ஏதத்யோ வேத்தி -ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் – கீதாச்சார்யன்

மூல மந்திரத்தில் மகாரமும் லுப்த சதுர்த்தி விஸிஷ்ட ஆகாரமும் -ஜீவனை ஞாதா சேஷன் -என்று கூறும்
பிறர் நன் பொருள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு

ஞாத்ருத்வம் பஹிரங்கம்
சேஷத்வம் அந்தரங்கம்
தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம்-ஸ்ரீ வசன பூஷணம்
அகாரத்தாலே சேஷத்வத்தைச் சொல்லி –
பின்பு இறே மகாரத்தாலே ஞாத்ருத்வத்தைச் சொல்லிற்று
மனத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது
அல்லாத போது -உயிரினால் குறைவிலம் -என்கிறபடியே த்யாஜ்யம்

ஸ்ரீ வேத வியாசர் முந்துற சேஷத்வத்தை முதல் அத்யாயம் அந்தர்யாம் யதிகரணாதிகளில் சொல்லி
பின்பு இறே இரண்டாம் அத்தியாயத்தில் ஞாத்ருத்வத்தை அருளிச் செய்கிறார் –

அத ஏவ பாஷ்ய காரைர் -சேஷத்வே சதி ஞாத்ருத்வம் சேதன லக்ஷணம் ஸம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தம் க்ருதம் என்றும்
அஹம் ப்ரத்யய வேத்யத்வாத் மந்த்ரே ப்ரதமம் ஈரணாத் பாஷ்ய காரஸ்ய வஸனாத் –சேஷத்வ முக்யதா ஸித்தே -ஸ்ரீ வசன பூஷண மீமாம்ஸா வாக்கியம்

ஞாத்ருத்வ விஸிஷ்ட சேஷத்வமே தாஸ்யம்
இது இறே அசித் ஈஸ்வர உபய வை லக்ஷண்ய ஸாதகமாய் இருப்பது
ஏதத் விஷய ஞானம் இல்லாத போது சத்தான ஜீவனும் அசித் ப்ராயன் அன்றோ என்று உபநிஷத் அசன்னேவ-பவத் என்கிறது
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹி ஆத்மாந பரமாத்மந -ஸாஸ்த்ர வசனம்
தாஸ்யேந லப்த சத்தாகா தாஸ பூதா –பூ சத்தாயாம் -என்று இறே தாது
தாஸ ஸப்தம் சேஷத்வத்தையும்
ஆத்ம ஸப்தம் ஞாத்ருத்வத்தையும் காட்டுவதைக் காணலாம்

ஆக பகவத் தாஸ்யத்தாலே லப்த சத்தாகும் ஜீவா தத்வம் என அறிந்தோம் –

———

அசித் தத்வம்

அசித் தத்வம் அறிவில்லாதது
பிரகிருதி காலம் சுத்த சத்வம் தர்ம பூத ஞானாமியென்ற நான்கு வகை
பிரகிருதி தத்வம் விரோதி -அர்த்த பஞ்சக ஞானத்தில் ஓன்று விரோதி ஸ்வரூபம் -இத்தையே மாயா என்பர்
அர்த்த பஞ்சக ஞானமே நிரதிசய ஆனந்த -பரம மோக்ஷ -ஹேது
அர்த்த பஞ்சக அஞ்ஞானம் அனந்த கிலேச -ஸம்ஸார ஹேது
அநாத்மாவான தன்னை ஆத்மாவாகவும்
அபோக்யமான தன்னை போக்யமாகவும்
அஸ்திர மான தன்னை ஸ்திரமாகவும்
காட்டும் விசித்திர சக்தி மாயா -பிரக்ருதிக்கு உண்டே

மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் -உபநிஷத்
மம மாயா துரத்யயா -கீதா உபநிஷத்
இத்தை கழித்துக் கொள்ளவே பக்தி ப்ரபத்திகள் –

ஆக
அசேஷ சித்த அசித் வஸ்து சேஷீ நாராயணன் பரதத்வம் என்றும்
அவன் திருவடிகளில் தாஸ பூதன் ஜீவாத்மா என்றும்
கர்ம அனுகுண ப்ராக்ருத அசித் சம்பந்தம் விரோதி என்றும்
தத்வ த்ரயங்கள் பற்றி அறிந்தோம்

இனி
ஹிதம்
புருஷார்த்தம் பார்ப்போம்

—————-

பரம ஹிதம்
ஆத்ம க்ஷேமம் அடைய உபாயம் கிருபா விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஸ்வ ப்ராப்தவ் ஸ்வயம் இஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி தேசிகன்
உப பத்தே ச -வியாசர்
ப்ராப்யஸ் யைவ பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ் யைவ உபாயத்வ ப்ரதீதே -நாயமாத்மா -இதி அநன்ய உபாயத்வ ஸ்ரவணாத் -ஸ்ரீ பாஷ்யம்
ப்ராப்யஸ் யைவ பரமாத்மந ப்ராபகத்வ உப பத்தே யதாஹ –நாயமாத்மா -இதி –வேதாந்த ஸாரம்

புல்லைக்காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்குப் பேதம் இல்லை
ப்ராப்தாவும் ப்ராபகனும் அவனே -ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
நல்குரவும் -6-3- அவதாரிகையில் ஈட்டில் இவ்விஷயம் வியக்தம்

ஆக பகவானே உபாயம்
உபாயத அவச்சேதகம் காருண்யம் –

———

பரம புருஷார்த்தம்

பகவன் முகோலாசமே ஜீவாத்மாவுக்கு பலம் -ப்ராப்யம்
பர்த்ரு பார்யா பாவ சம்பந்தம் அடியாக -உகாரார்த்த நீர்ணீதம்
ஜீவனான பார்யையைப் பார்த்து
இச்சிப்பான்
அடைவான்
அனுபவிப்பான்
நிறைந்த அனுபவம் பெறுவான்
ஆனந்திப்பான்
பகவானாக பர்த்ருவான பரமாத்மாவின் ப்ரிய மோத ப்ரமோத ஆனந்தங்கள் இருக்கும் படி –
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் –பரஸ்மை பத நிர்தேசம் -ப்ராப்தி கிரியா பலம் ஆனந்தம் பரஸ்மை -அந்நியனான பகவானுக்கே சேரும்
ஆப்நோதி -அத்யர்த்த ஞானினம் லப்தவா –
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இளைய பெருமாள்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே -ஆழ்வார்
மற்றை நம் காமன்கள் மாற்று -ஆண்டாள்
ஆம் பரிசு அறிந்து கொண்டு ஐம் புலன் அகத்து அடக்கி -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார்
ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

ஆக பகவானே உபேயம் என்றும்
அவன் உகப்பு உபேயத அவச்சேதகம் என்றும் அறிந்தோம் –

ஆக
எம்பெருமானார் தர்சனத்தில்
தத்வ
ஹித
புருஷார்த்த
நிஷ்கர்ஷம் இருக்கும் படி அறிந்து
இனி இவற்றின் படி இருக்க வேண்டிய அனுஷ்டானம் பற்றியும் அறிய வேண்டுமே –

———–

அனுஷ்டானம் –

ஸ்ரீ கீதையில் சரம ஷட்கத்தில் முதல் மூன்று அத்யாயங்களால் தத்துவத்தையும்
அடுத்த மூன்றால் அனுஷ்டானத்தையும் நிரூபித்து அருளுகிறார் -தேசிகன்

ஆழ்வார் -உயர்வற திருவாய் மொழியால் தத்துவத்தையும்
வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியால் அனுஷ்டானத்தையும் அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை

இத்தை ஹிதத்திலும் சேர்ப்பார்கள் நம் பூர்வர்கள்

தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக அறிந்த அதிகாரி
ஐஸ்வர்ய கைவல்ய -ப்ராப்ய ஆபாசங்களிலே நசையற்று
கர்ம ஞான பக்தியாதிகளான ப்ராபக ஆபாசங்களை அடியோடு கைவிட்டு-
ஸ்வரூப அனுரூபமான திவ்ய தம்பதி கைங்கர்யங்களிலே ஆசைப்பட்டு
ஸ்வரூப அனுரூபமாக பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றி
பகவானை உபாயமாகப் பற்றக் கடவன்
இதுவே உயர்ந்த தவமான பிரபத்தி மார்க்கம்
தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஸ்ருதி

——–

இந்த ஸ்ரீவைஷ்ணவ ப்ரபன்னன் சரணாகதி செய்த பின்பு மோக்ஷம் அடையும் வரை நடந்து கொள்ள வேண்டும் படியை

உத்தர க்ருத்யத்தை ஸாஸ்த்ரம் விளக்கும்

இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் குண அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகக் கொண்டு
மங்களா ஸாஸனமும்
ஆர்த்தியும்
அணுவார்த்தன நியதியும்
ஆகார நியமமும்
அனுகூல ஸஹவாஸமும்
பிரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியும்
வர்த்தித்துக் கொண்டு போகக் கடவன்

இவனுக்கு ஐந்து ஸ்பர்சம் பரிஹார்யங்கள் -அவை
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம்

அவனுடைய பரத்வத்தை அனுசந்தித்தவாறே சைவ ஸ்பர்சம் அகலும்
அவனுடைய உபய லிங்கத்தை அறியவே மாயாவதி ஸ்பர்சம் அகலும்
ஸ்ரீ யபதித்வத்தை அனுசந்திக்கவே ஏகாயன ஸ்பர்சம் அகலும்
அவனுடைய நிரபேஷ உபாயத்வத்தை அறியவே உபயாந்தர ஸ்பர்சம் அகலும்
அவனது திவ்ய மங்கள போக்யதையை அறியவே விஷயாந்தர ஸ்பர்சம் அகலும்

தேஹ தாரணமான தள்ள அளவு போஜனமும்
பரமாத்மா ஸமாராதன சமாப்தியான ப்ரஸாத பிரதிபத்தி என்கிற புத்தியோடு வர்த்திக்கக் கடவன்- பிள்ளை
லோகாச்சார்யார்
பிரதிபத்தி கர்மம் இடா பஷணாதி உபையுக்த ஸம்ஸ்காரம் என்பர் மீமாம்ஸகர்
ப்ரபன்னன் ஆஸனாதி அனுயாக அந்தமான் பகவத் ஆராதனத்தை பரம ப்ரேமத்தோடே செய்து கொண்டு
பகவத் பாகவத ஆச்சார்ய அபசாரங்களை நெஞ்சாலும் நினையாதவனாய்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்கிறபடி
கரை குறுகும் காலம் எதிர்பார்த்து இருப்பன் –
இதுவே இவன் அனுஷ்டானம்

இப்படி
தத்வ பரமாக ஐந்து கிரந்தங்களையும்
அனுஷ்டான பரமாக நான்கு கிரந்தங்களையும்
நவரத்னங்களாக எம்பெருமான் அருளிச் செய்து ஸ்ரீ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸம் ரக்ஷணம் செய்து அருளினார்

ஆகவே இறே நம்பெருமாள் அபிமானித்து எம்பெருமானார் தர்சனம் என்று பேர் இட்டு நாட்டுவித்து அருளினார் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ப்ரஹ்ம மீமாம்ஸை -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரமும் ஸ்ரீ எம்பெருமானாரும்-விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 30, 2022

ஸ குணமான ப்ரஹ்ம விசாரம்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம்
ஹிதம் -அவன் கிருபையே பரம ஹிதம்
புருஷார்த்தம் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
ஸ்ரீ பராசர மகரிஷிக்கும் சத்யவதிக்கும் திரு அவதரித்த -வேத வியாஸர் -ஞான மார்க்க ப்ரவர்த்தனத்துக்கு ஆவேச அவதாரம் –
ஸூசநாத் ஸூத்ரம் -அநேக அர்த்தங்களை ஸூசனம் பண்ணும் –
வேதாந்தார்த்த கு ஸூம க்ருதனார்த் தத்வாத் ஸூத்ரம் -அழகானப் பூக்களைத் தொடுப்பது போல் –
ச விசேஷம் ப்ரஹ்மம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண ஏக குண மயன் -ஸர்வாத்மா –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –
பூர்வ பாக கர்ம பலன் அல்பமாயும் அஸ்திரமாயும் இருப்பதை அறிந்து -அதனாலேயே ப்ரஹ்ம விசாரம்
பரீஷ்ய லோகான் – ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்

ப்ருஹதி ப்ரஹ்மயதி தஸ்மாத் உச்யதே பரம் ப்ரஹ்ம –

ப்ருஹத்வாத் ப்ரும்ஹணாத் வாச் ச தத் ப்ரஹமேத் யபி தீயதே

ஸ்வரூப ப்ருஹத்வமாவது -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபம் -தன்னை ஒழிந்த ஸமஸ்த பதார்த்தங்களிலும் பூர்ணமாய் இருக்கும் இருப்பு –

குண ப்ருஹத்வமாவது -முக்கால ஸகல பதார்த்தங்களையும் அறிதல் முதலானவை –

யோ வேத்தி யுகபத் ஸர்வம் பிரத்யஷேண ஸதா ஸ்வத -நாத முனிகள்

ப்ருஹ்மணத்வமாவது -நாம ரூப ஸ்தூல அவஸ்தா ஜனக ஸங்கல்ப விசேஷமும்-

ஒரு கால விசேஷத்தில் ஆத்மாவுக்கு ஞான சங்கோசம் நீங்கப்பெற்று ஸ்வரூப ஆவிர்பாவமும்

யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோ வாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
எந்த ஞானத்தால் ஸ்வரூப விகாரமும் ஸ்வ பாவ விகாரமும் அற்ற புருஷனை அறிய முடியுமோ -அந்த ப்ரஹ்ம வித்யையை
தன்னைச் சரண் அடைந்த சிஷ்யனுக்கு ஆச்சார்யன் உபதேசிக்கக் கடவன் –
புருஷ ஸப்த வாஸ்யனும் ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனும் ஒன்றாகவே நிர்த்தேசித்துச் சொல்லும் ஸ்ருதி வாக்கியம் இது
நாராயண மாத்ர ப்ரதிபாதகமான ஸூக்தமே புருஷ ஸூக்தம் ஆகும் –

—————-

முதல் நான்கு ஸூத்ரங்களும் உபோத்காதம்

ஐந்தாவது ஈஷத் அதிகரணம்-சத் ஏவ சோம்ய இதம் அக்ரே –இத்யாதி
சத்தானதே காரண வஸ்து-என்பது நிர்விவாதம் –
அது ஆனுமானிக பிரதானமா -அசித் தத்துவமா -அல்லது ஸர்வஞ்ஞாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமா –
காரியமும் காரணமும் பிரதானம் தான் பூர்வபக்ஷம்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண்மயம் விஞ்ஞாதம் பவதி -த்ருஷ்டாந்தம் ஸ்பஷ்டம் என்பர்
இத்தை வேத வியாசர் ஈஷதேர் நா ஸப்தம் -என்கிற ஸூ த்ரத்தால் கண்டிக்கிறார் –
பஹுஸ்யாம் என்று ஸங்கல்பித்து -ஸ்ருஷ்டித்து -அனுபிரவேசித்து-சத்தா தாரகனாய் இருப்பது வேதாந்த விஷயம் –
இத்தால் சங்கல்பத்தைக் குணமாகச் சொல்லி ப்ரஹ்மம் ச குண விசிஷ்டம் என்று தேறும் அன்றோ –

————

ஆனந்தமய அதிகரணம்
ஸங்கல்ப விசிஷ்டமே ஜகத் காரணம் –
அசித்துக்குக் கூடாமையால் சித் -சேதனனான ஜீவனே ஜகத் காரணம் என்று கொள்ளலாம்
அதீந்த்ரமான பகவான் காரணம் அல்லன் என்று பூர்வ பக்ஷம்
இத்தை ஆனந்தமய அப்யாஸத் -என்று வேத வியாசர் கண்டிக்கிறார்
அதிக ஆனந்தம் உள்ளவன் பரமாத்மாவுக்கே புஷ்கலம்-அல்ப ஆனந்தமயமான ஜீவாத்மா காரணம் ஆகமாட்டான் –
வேதாந்தம் ஸைஷா நந்தஸ்ய மீமாம்ஸா -என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக பெருமையைப்பேசி
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று அபரிச்சின்ன த்வத்தைச் சொல்லுகையாலே
ஆனந்தம் என்கிற குண விசேஷ விஸிஷ்ட ப்ரஹ்மமே விஷயம் –

————-

அந்தர் அதிகரணம்
ப்ரஹ்ம உபாசனம் செய்யும் அதிகாரிக்கு தேச விசேஷத்தில் ப்ரஹ்மத்தையும் ப்ரஹ்ம குணங்களையும் அனுபவிப்பதே புருஷார்த்தம்
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
ஆத்ம பதார்த்தம் என்பதை ஸ்தூல அருந்ததீ நியாயத்தால் உபநிஷத் தெரிவிக்கிறது –
அன்ன ரசமான சரீரத்துக்கு ஆத்மவத்தைச் சொல்லி -பிறகு பிராணமயம் -மநோ மயம் -விஞ்ஞான மாயம் -ஆனந்த மயம் -சொல்லி பரமாத்வாவுக்கு ஆத்மத்வத்தை ஸ்தாபிக்கிறது –
அவ்விடத்திலேயே -ஸ யஸ் சாயம் புருஷே யஸ் ஸாசா வாதித்யே -என்று
யத் தத் சப்தங்களால் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தியான புருஷனுக்கும் ஹ்ருதய குஹ வாஸியான புருஷனுக்கும் ஐக்யம் தெரிகிறது

சாந்தோக்யம் -தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேஸ –
இதில் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தி புருஷனுக்கு சரீர ஸம்பந்தம் சொல்லிற்று –
கர்மானுகுணமான ஸூக துக்கம் அனுபவிப்பதற்கே சரீர ஸம்பந்தம்
ந ஹ வை ஸ சரீரஸ்ய சத ப்ரீய அப்ரீயயோ அபஹரதிஸ்தி
பரமாத்வாவுக்கு இது கூடாதே என்பதால் இவன் ஜீவனே இவனே ஜகத் காரணம் என்பது பூர்வ பக்ஷம்

அந்தஸ் தத்தர் மோபதேசாத் என்றும்
பேத வியபதே சாச்ச அந்நிய -என்றும்
உள்ள ஸூத்ர த்வயத்தாலே கண்டிக்கிறார்
அபஹத பாப்மத்வாதிகளான சில தர்ம விசேஷங்களை வேதாந்தம் சொல்லுகையாலும்
ஆதித்யாதி தேவதைகளைக் காட்டிலும் ப்ரஹ்மதுக்கு பேதத்தை
ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்ய சரீரம் -இத்யாதி வாக்யங்களால் பேதம் சொல்லுகையாலும்
புண்டரீகாக்ஷத்வம் பகவத் அசாதாரணம் ஆகையால்
இச்சா க்ருஹீதா பிமதோரு தேஹ -அனுக்ரஹ அதீனமான சரீரம் கொண்டவன்
ஆக காரணத்வமும் பரத்வமும் உபாஸ்யத்வமும் நாராயண அசாதாரணம்
ப்ரஹ்ம ச குணத்வமே தேறும்

———–

ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
அநா வ்ருத்தி சப்தாத்
ந ச புனரா வர்த்ததே
வாஸூ தேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸூ துர்லப
உயர்வற உயர்நலம் உடையவன்
வண் புகழ் நாரணன்
நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –

——————

வேத அபஹாரிணாம் தைத்யம் மீன ரூபி நிராகரோத்
ததர்த்த அபஹாரிணஸ் ஸர்வான் வ்யாஸ ரூபீ மஹேஸ்வர –

வேதத்தை சோமுகன் அபஹரிக்க மத்ஸ்யமூர்த்தி திரு அவதாரம்
வேதார்த்தங்களை வைசேஷிக பவுத்த ஜைன பாசுபதாதி மதஸ்தர்கள் அபஹரிக்க ஸ்ரீ வேத வியாஸர் திரு அவதாரம் –

ப்ரஹ்ம ஸூ தர கிரந்தம் சாரீரகம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -எனப்படும் –
தஸ்யைஷா ஏவ சாரீர ஆத்மா -பரமாத்மாவே சாரீரன்
ஜகத் சர்வம் சரீரம் தே
ஸம்ஹிதம் ஏதச் சாரீரகம் -ஸ்ரீ போதாயன மகரிஷி

இதன் அர்த்தங்களை விஸ்தரேண ஸங்க்ரஹ பாவத்தால் ஸ்ரீ பாஷ்ய வேதாந்த தீபம் வேதாந்த சாரம் –

—————–

மூலமாக வெளியிட்டு அருளினார்

திருமந்திரம் மூன்று பதங்களால் சகல ஜீவாத்மாக்களுடைய

அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -மூன்று ஆகாரங்களும்
பரமாத்மாவினுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் கிடைக்கும்
சாரீரகத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் பர ப்ரஹ்மம்

ஜகத் ஏக காரணமாயும் சேதன அசேதன விலக்ஷணமாயும் ஸர்வ சேஷியாகவும் அறுதியிடுகின்றன
இதுவே ப்ரணவார்த்த நிரூபணம்
மூன்றாம் அத்யாயம் ப்ரஹ்மம் உபாயம் -என்று அறுதி இடுகிறது -இதுவே நமஸ் ஸப்தார்த்தம்
நான்காம் அத்யாயம் பரம ப்ராப்யம் என்று அறுதி இடுகிறது -இதுவே நாராயணாய நிரூபணம்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம் -எகிற நான்கு அர்த்தங்களும் நான்கு அத்தியாயங்களின் சாரமாகும் –

வேதாந்தங்களிலே ஜகத் காரண வஸ்துவே த்யேயம் -சரண்யம் -ப்ராப்யம் என்று காட்டப்பட்டுள்ளத்து
காரணந்து த்யேய
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -தம் ஹ தேவம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –என்று இறே வேதாந்த கோஷம்
தாபத்ரயாதுரை அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ்ஞாஸ்ய -ஸ்ரீ பாஷ்யகாரர்
இந்த வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபிக்கவே வேத வியாசர் திரு அவதாரம் –


 

ஸுத்ரீ சங்க்யா ஸூபாஸீ அதிக்ருத கணநா சின்மயீ ப்ரஹ்ம காண்டே என்கிறபடியே
545-ஸூ த்ரங்கள்
156-அதிகரணங்கள்
16-பாதங்கள்
4-அத்தியாயங்கள்

ஜைமினி அருளிச் செய்த பூர்வ மீமாம்ஸை -கர்ம மீமாம்ஸை -முதல் 12 அத்தியாயங்களில் ஜ்யோதிஷ்டோமோதி கர்மங்கள் விசாரம்
மேல் நான்கு அத்யாயங்களின் கர்ம ஆராத்யா
தேவதைகள் விசாரம் -ஆக மீமாம்ஸா சாஸ்திரம் 20 அத்தியாயங்கள் கொண்டது –
ஸர்வ கர்ம ஸமாராத்யம் -ஸர்வ தேவதா அந்தராத்ம பூதம் -பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் என்று வேதாந்த ஸித்தம்
ஐக அர்த்யம்
பூர்வ காண்ட யுக்த கர்மங்கள் அங்கங்கள்
உத்தர காண்ட யுக்த ஞானம் அங்கி
கர்ம அங்கமான ஞானம் உபாயம் -ஐக ஸாஸ்த்ர்யம்
கர்த்ரு பேதமும் விஷய பேதமுமே உண்டு

விஷய த்விகம்-அல்லது ஸித்த த்விகம் என்றும்
விஷயி த்விகம் -அல்லது ஸாத்ய த்விகம் -என்றும் இந்த நான்கு அத்தியாயங்களை பிரிப்பர்
திருவாய் மொழியையும்
முதலிட்டு ஐந்து பத்துக்கள் ஸித்த பரங்கள்
மேலிட்டு ஐந்து பத்துக்கள் ஸாத்ய பரங்கள் -என்று பிரிப்பர் ஸ்ரீ வாதி கேசரி ஜீயர் ஸ்வாமிகள் –

அது பக்தாம்ருதம்
இது பராசர்ய வசஸ் ஸூதா

16 பாதங்களும் 16 திருக்கல்யாண குணங்களைக் கூறும்
அமலனாதி பிரான் -க குணவான் கஸ் ச வீர்யவான் போலே


விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய–ஸ்ரீ அதிகரண சாராவளி

முதல் அத்யாயம் –
1-ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
2-தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
3-ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –அந்யாதாரன்
4-நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

இரண்டாம் அத்யாயம் –
5-அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
6-ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்-பஞ்சகால பராயண ஆப்தன்
7-காத்மாதே –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்-உசித ஜனன க்ருத -ஆகாச ஜீவர்களுக்கு ஸ்வரூப விகார ஸ்வாஸ் பாவ விகார ரூப ஜனனங்களுக்குக் கர்த்தா
8-தேகேந்திரியாதே – –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்-உசித ஜனன க்ருத்

மூன்றாம் அத்யாயம்
9-சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்-ஜாக்ரதாதி அவஸ்தா நிர்வாஹகன்
10-நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண குண ஏக நாதன்
11-பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்-நாநா வித வித்ய உபாஸ்யம்
12-ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்-வர்ணாஸ்ரம ஆசாரத்தாலே திரு உள்ளம் உகக்குமவன் –

நான்காம் அத்யாயம்
13-பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்-உபாஸகர்களின் உத்தர பூர்வ பாபங்களினுடைய அஸ்லேஷ விநாஸ கர்த்தா
14-ப்ரஹ்ம நாடீ கதி க்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்-ஸ்தூல தேஹ யுக்தனுக்குப் பலம்
15-ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்- ஸ்தூல தேஹாத் உதகராந்தனுக்கு ஏற்படும் பலன்கள்
16-சாம்யதச் ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி
முக்திம் ததோ ஹி பரமம் தவ ஸாம்யம் ஆஹு த்வத் தாஸ்ய மேவ விதுஷாம் பரமம் மதம் தத -ஆழ்வான்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதிகாரித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தித உசித -அசேஷ சேஷ விருத்தி தானே மோக்ஷம் -ஸாம்யா பத்தி

—————————–

முதல் அத்யாயம் -35 அதிகரணங்கள்
முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸ அதிகரணம் -ப்ரஹ்ம விசாரம் கர்த்தவ்யம் -கர்ம விசார அநந்தரம் கர்த்தவ்யம் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கிறது
35 வது அதிகரணம் -வியாக்யான அதிகரணம் -பூர்வ யுக்த நியாய அதிதேசம் பண்ணுகிறது
இடையில் 26-அதிகரணம் -அப ஸூத்ராதிகரணம் -ப்ரஹ்ம வித்யா அதிகார பரம் –
மற்ற அதிகரணங்கள் -பரமாத்மா சேதன அசேதன விலக்ஷணன் -ஜகத் ஏக காரண பூதன் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கின்றன –

ஸாஸ்த்ர உபோத்காதம் -முதலிட்டு நான்கு அதிகரணங்கள்
ஈஷத் அதிகரணம் ஐந்தாவது-அசேதன வைலக்ஷண்யத்தை ஸ்தாபித்து -இது தொடங்கியே ஸாஸ்த்ர ஆரம்பம்
ஆனந்தமய அதிகரணத்தில் சேதன வைலக்ஷண்யம் ஸ்தாபித்து
இவற்றின் விவரணம் மேலுள்ள அதிகரண விஷயங்கள்
ஈஷத் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தின் உபாயத்வமும்
ஆனந்தமய அதிகரணத்தில் ப்ரஹ்மத்தினுடைய உபேயத்வமும்
இவ்விரண்டும் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே யாகையால் அந்தர் அதிகரணத்தில் பரமாத்மா திவ்ய மங்கள விஸிஷ்டன் என்றும் ஸ்தாபித்தார்

இந்த அடைவே திருவாய் மொழியின் மூன்று பத்துக்களின் அடைவாகும் -இதின் விவரணமே மேல் பிரபந்த சேஷம் –

காரண வாக்கியங்கள் சேதன அசேதன விலக்ஷண விசிஷ்ட ப்ரஹ்மத்தின் இடத்தில் அந்வயம் என்பதால் முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் எனப்படுகிறது –

இரண்டாம் அத்யாயம் அவிரோத அத்யாயம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -ஜகத் ப்ரஹ்ம கார்யம் -என்பதில் விரோதம் இல்லை என்று ஸ்தாபிக்கிறார்
முதல் இரண்டு பாதங்கள் காரணத்வ விசார பரம்
அடுத்த இரண்டு பாதங்கள் கார்யத்வ விசார பரம்

ப்ரஹ்ம காரணத்வத்தை அங்கீ கரியாமல்
பிரதான -ப்ரக்ருதி தத்வ -காரணத்வத்தையும்
பரமாணு காரணத்வத்தையும் கூறும்
சாங்க்ய -வைசேஷிக -பவ்த்த -ஜைன -சைவ மதங்களைக் கண்டித்து
சேதன அசேதன விலக்ஷண ப்ரஹ்ம காரணத்வத்தைத் தழுவிய பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்

இரண்டாம் பாதத்தில் ஸாங்க்யாதி பஞ்ச மதங்களைத் தூஷித்து பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்
பஞ்சே தராணி சாஸ்த்ராணி ராத்ரீ யந்தே மஹாந்த்யபி -பாத்மதந்திர வசனம்

மூன்றாம் பாதமான வியத் பாதத்திலும்
நான்காம் பாதமான ப்ராண பாதத்திலும்
ஸர்வம் ப்ரஹ்ம கார்யம் என்பதை ஸ்த்ரீ கரணம் செய்து ஸ்தாபிக்கிறார்

ஆகாசத்துக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ப்ரஹ்ம காரியத்தை உபபாதிக்கிறார்
அசித்துக்குக் கார்யத்வம் ஸ்வரூப அந்யதா பாவம்
சித்துக்குக் கார்யத்வம் ஸ்வ பாவ அந்யதா பாவம் என்று ஸித்தாந்தம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மத்வா –

அசித்து போக்யமாக ஸ்வரூப விகாரம் அடைய வேணும் -மாம்பூ மாம்பிஞ்சு மாவடு மாங்காய் மாம்பழம் போல் ஆக வேண்டுமே –
அதே போல் பிரகிருதி -மஹான் -அகங்கார பூத பஞ்ச காதிகளாகப் பரிணமிக்க வேண்டுமே
அவ்வாறு பரிணமிக்கும் படி சங்கல்பிக்கிறான் காரணபூதனான ஸர்வேஸ்வரன்
ஜீவன் இவற்றுக்குப் போக்தா
ஸ்வரூபத்தால் நிர்விகாரன்
ஸ்வ தர்மபூத பெற்று அனுபவிக்கிறான் –
இவற்றுக்கு நியாந்தா ஸர்வேஸ்வரன்
ஜீவாத்மா வேறு அவனது தர்மபூத ஞானம் வேறு -ஓன்று தர்மி -மற்ற ஓன்று தர்மம் –
தத்வத்ரயமும் ச விசேஷமே
வைலக்ஷண்யம் கூற ஓரோர் அதிகரணத்திலும் ஒரு விசேஷம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –
ஸங்கல்பம் ஆனந்தம் முதலான விசேஷ குணங்களோடு ப்ரஹ்மம் என்று ஸ்தாபிக்கிறார் –

மூன்றாம் அத்தியாயத்தில்
உபபத்தேச்ச -என்று உபாய பூதன் என்று கூறுகிறார்
வ்யாஜங்களாக பக்த்யாதிகள்
பக்தி விளையும் போது விஷயாந்தர வைராக்கியமும் -பகவத் விஷய ராகமும் வேண்டுமே –
முதல் பாதம் வைராக்ய பாவம் -இரண்டாம் பாதம் உபாயலிங்க பாதம் –
மூன்றாம் பாதத்தில் ப்ரஹ்ம உபாஸ்ய குணங்கள் விசாரம்
நான்காம் பாதம் ப்ரஹ்ம வித்யா அங்க பாதம்

நான்காம் அத்யாயம் பல அத்யாயம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுடைய பலம் –
இதில் முதல் முன்னமே வித்யா ஸ்வரூப சோதனம் செய்து மேலே வித்யா பலத்தைக் கூறுகிறார்
கர்ம விநாசம் அஸ்லேஷம் தூநநம் -உதறுதல் -உபாயனம் -வேறே ஒருவன் இடம் சேர்த்தால் இவன் எல்லாம் சொல்லப்படுகின்றன –
இப்படி சரீரத்தோடு கூடி இருக்கும் காலத்தில் வித்யா பலம் கூறப்பட்டு மேல் –
மூன்றாம் பாதத்தில் அர்ச்சிராதி கதி
நான்காம் பாதம் பிராப்தி பாதம் -பரமபதபிராப்தி
அனைத்துலகும் யுடைய அரவிந்த லோசனனைத் தினைத்தனையும் விடாதே அனுபவிக்கும் அனுபவம்
அபுநா வ்ருத்தி -பலமும் கூறப்படுகிறது –

ஆக
ஜகத் ஏக காரணமாய்
ஸர்வ சேஷியாய்
சேதன அசேதன விலக்ஷணமாய் உள்ள
ப்ரஹ்மமே
உபாஸ்யம்
முக்த ப்ராப்யம்
முக்தி பிரதம்
பரம போக்யம்
என்று சாரீரகத்தில் ஸ்ரீ வேத வியாஸ பகவான் அறுதியிடுகிறார்

இவை இத்தனையும்
ஸ்ரீ பாஷ்ய
வேதாந்த தீப
வேதாந்த சார
வேத்யங்கள் ஆகும் –

————-

விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது

ஸ்ரீ வாஸூதேவனையே விஷயமாகக் கொள்ள வேண்டும்
ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்ற புருஷார்த்தங்களாவன சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயங்கள் -நஞ்சீயர்

தரதி சோகம் ஆத்மவித் -சாந்தோ -7-1-3-என்று சோக நிவ்ருத்தியும்
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே நூ நுதே -கௌ -2-1-4- என்று புண்ய பாப கர்ம நிவ்ருத்தியும் –
சோத்வ ந பரம ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட -1-3-9-என்று தேச விசேஷ பிராப்தியும்
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்று ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவமும்
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபையதி -முண்ட -3-1-3- என்று பரம சாம்யா பத்தியும்
ஆனந்தமயம் ஆத்மானம் உப ஸங்க்ராமதி -தைத்ரியம் ஆனந்த -8- என்று பகவத் ஸாமீப்யமும்
சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா -தைத்த-ஆனந்த -1- என்று பகவத் குண அனுபவமும்
ரஸம் ஹ்யேவாயம் லப்தவா ஆனந்தீ பவதி -தைத்ரியம் -என்று பகவத் அனுபவ ஜெனித ஆனந்தமும்
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதா -என்று பகவத் அனுவ்ருத்தி ரூபமான கைங்கர்யமும்
ஞான பலமாக உபநிஷத்துக்கள் கோஷிக்கும் –
பக்திக்கும் பிரபதிக்கும் விஷய நியமம் பரம அவஸ்யகம் என்று நம் முன்னோர் அறுதியிட்டுள்ளனர் –

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமமும் இல்லை விஷய நியமமே உள்ளது -பிள்ளை லோகாச்சார்யார்-

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

——–

மூன்றாம் அத்யாயம் மூன்றாவது பாதம் -26 அதிகரணங்கள் கொண்டது
பர வித்ய அனுபந்தி விஷயங்கள் விசாரம் சில அதிகரணங்கள்
த்ருஷ்ட உபாஸன விஷயங்கள் விசாரம் பல அதிகரணங்கள் –
உபாஸன பேத அபேத விஷய விசாரம் சில அதிகரணங்கள்

இதில் 19 அதிகரணத்தில் -லிங்க பூயஸ்த்வ அதிகரணத்தில்
நாராயண அநுவாகம் ஸர்வ பர வித்ய உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம்-என்று அறுதிப்படுகிறது –
ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் -தைத்ரியம் -தஹர வித்யா ப்ரகரணம் -ஆரம்பித்து
ஸோஷர பரம ஸ்வராட் -என்று முடிவாக ஓதப்பட்டதே இவ்வதிகரணத்துக்கு விஷய வாக்கியம் –
இந்த நாராயண அனுவாகம் -தஹர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா –
ஸர்வ பர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா என்பது சம்சயம்
தஹ்ரம் விபாப்மம் -என்று முன்னுக்கும் பத்மகோச ப்ரதீகாசம் என்றும் பின்னும் தஹர வித்யா பிரஸ்தாபம் உள்ளபடியால்
நடுவே உள்ள நாராயண ஸப்த கடித வாக்கியங்கள் தஹர வித்யா உபாஸ்யம் என்று பூர்வ பக்ஷம்
இத்தைக் கண்டிக்கிறார் -லிங்க பூயஸ்த்வாத் தத்தி பலீய ததபி -3-3-43-இது ஸித்தாந்த ஸூத்ரம்-

லிங்க ஸப்தம் வாக்ய பரம்
இந்த அனு வாகத்தில் பிரதி ஸ்லோகம் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும்
நான்காவது ஸ்லோகத்தில் பதம் தோறும் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும் உள்ளது
பரவித்யைகளில் அக்ஷரம் என்றும் சம்பு என்றும் சிவன் என்றும் பரப்ரஹ்மம் என்றுமாம் பரஞ்சோதி என்றும் பரதத்வம் என்றும் பரமாத்மா என்றும்
நிர்தேசிக்கப்பட்ட உபாஸ்ய வஸ்துவை தத் தச்சப்தத்தாலே இங்கு -நாராயண அனுவாகத்தில் -அனுவதித்து அந்த உபாஸ்ய வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது –
ஆக இது ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமே
வாக்ய பஹுத்வத்தைக் கொண்டு பூர்வ பக்ஷம் நிரஸனம்

தத்தி பலீய -என்று மேலே ஸ்ருதி லிங்க வாக்யாதி பிராமண உபந்யாஸம் தோற்றுகிறபடியால் லிங்க ஸப்தம் ஹேது பரம் அன்று -சிஹ்ன பூத வாக்ய பரம் என்று கொள்ளப்பட்டது –
ப்ரகரணத்தை விட வாக்யம் பலிதம் என்பதே சித்தாந்தம் –

இதற்கு பூர்வபஷி மீண்டும் -எங்களுக்கு சாதகமாக லிங்கம் உள்ளது -முடிவில் பத்மகோச ப்ரதீகாசம் -என்று தஹர வித்யா சேஷத்வ உபபாதக லிங்கம் உள்ளதே
பிரகரணத்தை விடப் வாக்யம் பலிதமானாலும் லிங்கம் வாக்யத்தை விட பலிதம் ஆகுமே –

இதுக்கு லிங்க பூயஸ்த்வாத் -பரிஹார ஸூத்ரம்
இங்கே வாக்ய பூயஸ்தம் இருக்கிறபடியால் வாக்யங்களுக்கே பிரா பல்யம் –
மேலும் ஸஹஸ்ர ஸீர்ஷம் தேவம் -உபக்ரம லிங்கம் புருஷ ஸூக்த ப்ரத்யபிஜ்ஞ்ஞாபகம்
ஆகையால் உப சம்ஹாரகத லிங்கம் உபக்ரம லிங்கத்தை விட துர்லபம்
இந்த ப்ராபல்ய துர்லபத்வத்தை ததபி சப்தத்தால் பூர்வ காண்டத்தில்
ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான ஸமாக்யானம் சமவாயே பரா துர்பல்யம் அர்த்த விப்ர கர்ஷாத் -என்றே சொல்லிற்றே –

தஹர வித்யா ப்ரகரணத்தில் நாராயண அனுவாகம் படிக்கப்படுவான் என் என்னில்
உத்தாலகரான தகப்பனார் –
ஜகதாத்ம்யமிதம் ஸர்வம் -என்றும் –
ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் என்றும் பொதுவாகச் சொல்லி
பிறகு தத்வமஸி ஸ்வேதகேதோ -என்று பிள்ளை இடத்தில் விசேஷித்து உப ஸம்ஹரித்தால் போலே
பொதுவான விஷயத்தை தஹர வித்யா ரூப ப்ரஹ்ம வித்யா விசேஷத்தில் காட்டி அருளுகிறார் வேத புருஷன் –
தஹர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று அறுதிப்படுமே யானால்
விகல்ப அவிசிஷ்ட பலத்வாத் -என்கிற ஸூத்ரத்தின் படியே
ஸர்வ பர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று நியாய பூர்வகமாக அறுதிப்படும் –
நியாய நிரபேஷமாகவே ஸ்ருதியைக் கொண்டே இவ்வர்த்தத்தை அறுதியிட வேண்டி
நாராயண அனுவாகத்துக்கு தஹர வித்யா மாத்ர சேஷத்வத்தைக் கண்டித்து

ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணார்த்தத்வத்தை ஸ்ரீ வேத வியாசர் நிர்ணயித்தார் –

இந்த அநுவாகத்தில் -நாராயண பரம் ப்ரஹ்மா என்ற இடத்தில் நாராயணாத் பரம் -என்று பஞ்சமி ஸமாஸம் கொண்டு
சிலர் நாராயணனைக் காட்டிலும் மேம்பட்டது ப்ரஹ்மம் என்று வாதம் செய்தார்கள் –
இதுக்கு பூர்வ அபர விரோதமும் ஸ்ருத்யந்தர விரோதமும் வரும்
தத்வம் நாராயண பர -என்று இறே மேல் வாக்யம்
ஸமஸ்த பதமாகக் கொண்டால் லக்ஷனை ப்ரசங்கிக்கும்
லக்ஷணை இல்லாத வ்யஸ்த நிர்தேச நிர்வாகமே யுக்தம்
பற்றிற்று விடாமல் நாராயண பரம் என்றதனை ஸமஸ்த பதமாகக் கொண்டாலும்
நாராயண பர என்ற மஹா உபநிஷத்தில் பிரதம விபக்தியந்த நிர்த்தேசம் காணப்படுவதால்

இங்கும் -நாராயண பரம் என்னும் இடத்தில் -நாராயண பரம் ப்ரஹ்ம -என்று கொள்வதே யுக்தம்
தத் விருத்தமாகப் பஞ்சமீ ஸமாஸம் கொள்வது யுக்தம் அன்று –

———————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் -சொல்லுவோம் இராமானுசன் திரு நாமங்களே -ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 28, 2022

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் -நம்மாழ்வார் நம் இராமானுசன் -நம் மணவாள மா முனிகள்
மூவரும் திருவாவதரித்தது ஆழ்வார் திருநகரியிலேயே –

அஷ்டதிக் கஜங்கள் எண்மர்-
1- அழகிய வரதர் எனப்படும் ராமானுஜ ஜீயர் எனப்படும் வானமா மலை ஜீயர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் பிரியாது அடிமை செய்து போருவர்
2-பட்டர் பிரான் ஜீயர் -பூர்வாஸ்ரமத்தில் கோவிந்த தாஸப்பர் -எம்பாரைப் போல் பதச்சாயை –
3-திருவேங்கட ராமானுஜ ஜீயர்
4-கோயில் அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டானைப் போல் பாதுகா ஸ்தாநீயர்
5-பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -ஆழ்வானைப் போல் உஸாத் துணை
6- எறும்பி அப்பா -எம்பெருமானாருக்கு வடுக நம்பி போல் தேவு மற்று அறியாத அத்யந்த அபிமதர்
7-அப்பிள்ளை -உறங்கா வல்லி போல் மடத்தின் ஸர்வ பரங்களையும் நடத்திக் கொண்டே போருவர்
8-அப்பிள்ளார்

இவர்களைத் தவிர நவ ரத்ன சிஷ்யர்களும் உண்டு
1-சேனை முதலியாண்டான் நாயனார்
2-சடகோப தாஸரான நாலூர் சிற்றாத்தான்
3-கந்தாடை போரேற்று நாயனார்
4-ஏட்டூர் சிங்கராசார்யர்
5-கந்தாடை அண்ணப்பன்
6-கந்தாடை திருக்கோபுரத்து நாயனார்
7-கந்தாடை நாரணப்பை
8-கந்தாடை தோழப் பரப்பை
9-கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள்

இவரது பூர்வாஸ்ரமத்து திருக்குமாரர் -ராமானுஜாச்சார்யர்
திருப்பேரர் ஜீயர் நாயனார் -இவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான் போல் அத்ய ஆதரணீயர் –

ஸ்ரீ மான் ஸூ ந்தர ஜாமாத்ரு முனி பர்யாய பாஷ்ய க்ருத்
பாஷ்யம் வ்யாகுர்வதஸ் தஸ்ய ஸ்ரோத்ரு கோடவ் மம அந்வய -என்கிறபடியே
புனர் அவதாரமான பெரிய ஜீயர் பூ ப்ரதக்ஷிணம் பண்ணி அநேக ஸ்தலங்கள் ஜீரண உத்தாரணம் பண்ணி அருளினார்
பரமத நிரசன ஸ்வமத ஸ்தாபனம் பண்ணி அருளினார்
சர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கும் மோக்ஷம் சாதித்து அருளினார்

ஈடு காலஷேபம்-இது ஸ்ருதி ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை
இது கீதா பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ரக்ரியை -இது ஸ்ரீ இராமாயண பிரகிரியை
இது மஹா பாரத ப்ரக்ரியை -இது ஸ்ரீ விஷ்ணு புராண பிரகிரியை -இது ஸ்ரீ மத் பாகவத பிரகிரியை
இது பதார்த்தம் -இது வாக்யார்த்தம் -இது மஹா வாக்யார்த்தம் -இது வ்யங்க்யார்த்தம் -என்று
அற்புதமாய் விசத வாக் சிகாமணி என்கிற தமது விருது நிறம் பெரும்படியும்
சர்வஞ்ஞ ஸார்வ பவ்மர் என்கிற பட்டம் பொலியவும் பிரவசனம் செய்து அருளினார்

ஆழ்வார் துவலில் மா மணி மாடம் -திருவாய் மொழியிலே தமது பெருமைகளை தாமே வெளியிட்டு அருளினால் போல்
இவரும் ஆர்த்தி பிரபந்தத்தில் வெளியிட்டு அருளுகிறார்

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

இதுவே நமக்கு நித்ய அனுசந்தேயம்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்று ஆண்டு இரும் –

இவரது ஸாத்விக பாவம்
இவரது பெருமையைப் பொறாத சிலர் மடத்தில் நெருப்பு வைக்க
ஆதி சேஷ ரூபம் கொண்டு இவர் வெளியேற
அந்நாட்டு மன்னன் இதை அறிந்து அவர்களைத் தண்டிக்க முற்பட
பிராட்டி ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளியது போல் பரம கிருபையால் வாத்சல்யத்தாலும் அவர்களை ரக்ஷித்து அருளினார்
தேவீ லஷ்மீர் பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -என்று கொண்டாடும் படி அன்றோ இவர் ஸாத்விக பாவ வைபவம் –

————-

சொல்லுவோம் ஸ்ரீ ராமானுஜன் திரு நாமங்களே-

தஸ்மை ராமாநுஜார்ய நம பரம யோகிநே
யஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அசீச மத்

பெரிய திருமுடி அடைவு எம்பெருமானாருடைய திருநாமங்கள் அடைவு காட்டப்பட்டுள்ளது –

1-இளையாழ்வார்
பிங்கள வருஷம் சித்திரை திருவாதிரை திரு அவதாரம் பண்ணின காலத்தில் மாதுலர் சாற்றினை முதல் திரு நாமம்

ஆளவந்தார் ஆம் முதல்வன் என்று கடாக்ஷித்து அருளினார்
யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம் கதி பெற்றுடைய ராமானுஜன்
ஆளவந்தார் திருவடிகளையே விசேஷ தனமாக கதியாக நிதியாகக் கொண்டார்

2-இராமனுஜன்
பெரிய நம்பிகள் மூலமாகப் பெற்ற தாஸ்ய திருநாமம்
பஞ்ச ஆச்சார்யர்கள் -பெரிய நம்பி பெரிய திருமலை நம்பி -திருக்கோஷ்டியூர் நம்பி -திருமாலை ஆண்டான் -ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் –
இவர்கள் அனைவரும் இவருக்கு ஐந்து திருநாமங்கள் சாற்றி அருளினார்கள் –

3- யதிராஜர் –
திருவனந்த ஸரஸ்ஸிலே நீராடி ஆஸ்ரம ஸன்யாஸ ஸ்வீ காரம் பண்ணி அருள தேவப்பெருமாள் அவருக்கு சாற்றிய திரு நாமம் யதிராஜர் –

4- உடையவர் –
தென் அத்தியூரர் கழல் இணை அடிக்கீழ் பூண்ட அன்பாளனை
தன்னிடம் சேர்த்து தன்னையும் தனது சர்வத்தையும் கொடுத்து அருளி உடையவர் என்ற திருநாமம் சாற்றி அருளினார்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்-

5-லஷ்மண முனி
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சாத்தி அருளிய திரு நாமம்
திரு மிடற்று ஆசைக்காக வேண்டிய உபசாரங்கள் எல்லாம் பண்ணுவாராம்
லஷ்மண லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மி –

6- எம்பெருமானார்
திருக்கோஷ்டியூர் நம்பிகள் சாத்தி அருளிய திருநாமம்
எம்பெருமான் காருணீகர் இவரோ பரம காருணீகர் -அவனிலும் அதிசயித்தது அன்றோ
காரேய் கருணை இராமானுச இக்கடல் இடத்தில் ஆறே அறிபவர் நின் அருளின் தன்மை

7-சடகோபன் பொன்னடி
திருமாலை ஆண்டான் சாத்தி அருளிய திருநாமம்
ஆழ்வார் திரு உள்ளக் கருத்துப்படி வியாக்யானம் காட்டி அருளியதால் பெற்ற திரு நாமம்
ஆழ்வார் திருநகரியில் இன்றும் ஆழ்வார் திருப்பாதுகைக்கு இராமானுசன் என்றே பெயர் -மற்ற இடங்களில் தான் மதுரகவி –

8-கோயில் அண்ணர்
படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -ஆவதற்காக
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களை உபதேசித்து அருளிய பொழுது
பெரிய திருமலை நம்பி சாத்தி அருளிய திரு நாமம்
ஆண்டாள் பாரித்த படி அழகருக்கு நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் சமர்ப்பித்ததற்கு உக்காந்து நாச்சியார் அழைத்த திருநாமம்

9- தேசிகேந்த்ரன்
திருவேங்கடமுடையான் சாத்தி அருளிய திருநாமம்
அப்பனுக்கும் சங்கு ஆழி கொடுத்தவர் அன்றோ
தேசிகனான பகவானுக்கும் தேசிகர் -தேசிகோ தேசிகா நாம் –

10- பூத புரீசர்
ஆதிகேசவப்பெருமாள் சாத்க்தி அருளிய திரு நாம கரணம்

11- பாஷ்யகாரர்
சாரதா தேவி உகந்து சாத்தி அருளிய திரு நாம கரணம்

12-ஸ்வாமி தகப்பன்
உலகுக்கு எல்லாம் தகப்பனாக செல்வப்பிள்ளை -தனக்கு ஸ்வாமியை தகப்பனாக அபிமானித்து சாத்தி அருளிய திருநாம கரணம்

13-ஸ்வாமி
ஸ்ரீ வைஷ்ணவ வாமன க்ஷேத்ர -திருக்குறுங்குடி நம்பி சாத்தி அருளிய திரு நாம கரணம்

————-

ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம்

லஷ்மீ நாத ஸமா ரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

ஸ ச ஆச்சார்யவம் சோ ஜேய ஆச்சார்யாணாம் அசவ் அசவ் இதி ஆபகவத்த -ரஹஸ்ய ஆம்நாய ஸ்ருதி
ஆரோஹண அவரோஹண கிரமங்களாலும் அனுசந்திக்கப்பட வேண்டும் –
சரம ஆச்சார்யர் -அத ஏவ பரமாச்சாரியார் -ஸ்ரீ மணவாள மா முனிகள்
பரம ச அசவ் ஆச்சார்ய -பரமாச்சார்ய என்றும்
பரமஸ் யாபி ஆச்சார்ய பரமாச்சார்ய -என்றும் பொருள் கொள்ளத் தகும் –
நம் பூர்வாச்சார்ய பரம்பரை மண்டலாகாரமாக அன்றோ அமைந்துள்ளது –

ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் வைபவம் ஸூ ப்ரஸித்தம் –
நம்பெருமாள் எந்தப் புறப்பாட்டிலும் மா முனிகள் ஈடு கால ஷேபம் செய்து அருளிய பெரிய திரு மண்டபத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாவரும் அறிந்ததே –
பரமாச்சார்யருக்கு தனது சேஷ பீடத்தையும் பஹு மணமாகப் பிரஸாதித்து அருளினான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வன் –

பரோ மா யஸ்மாத் ஸ பரம –
ஆனித்திருமூல ஸ்ரீ சைல வைபவம் நாடும் நகரமும் நன்கு அறியக் கொண்டாடுவதும்
பிரதி ஸம்வத்ஸரம் மாசி சுக்ல துவாதசி இவரது திரு அத்யயனத்தை மிகவும் கோலா ஹலமாகத் திருவரங்கத்தில் நடப்பதும் ஸூ ப்ரஸித்தம்
விஷ்ணு பரம சேஷீ -இவரை தனக்கு சேஷீயாகக் கொண்டானே

————-

ஆசினோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரே ஸ்தா பயத் அபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆச்சார்ய உச்யதே

கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் குரு ஸப்த தன் நிரோதக-அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே

ஆச்சார்யன் ப்ரஹ்ம வித்ய உபதேஷ்டா
குரு வேத அத்யாபகன்
ஸ்ரீ நாரத பகவான் -ஸ்வாத் யாய நிரதம்–வாக்விதாம் வரம் -முனி புங்கவம் –
நேரே ஆச்சார்யன் என்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்தவனை -ஸ்ரீ வசன பூஷணம் -315-
திருமந்த்ரத்தைச் சொன்னது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லக்ஷணம் –

ஜீவ பர ஸம்பந்த பிரகாசம் இறே திருமந்திரம்
அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம் உவ்வானவர் அடிமை என்று உரைத்தார் -ப்ரமேய சாரம்
அம்பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க ஸம்பந்தம் காட்டும் அவன் அன்றோ ஆச்சர்யம் -ஸப்த காதலி

பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச புண்டரீக ச புண்ய க்ருத் ஆச்சார்யவத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -புராண வசனம்
ஆச்சார்யாத் ஹைவ வித்யா விதிதா ஸாதிஷ்டம் பிராபத் -என்றும்
ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்றும் வேதாந்த வாக்கியங்கள்

தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆச்சார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் -439-

நாராயணோ அபி விக்ருதிம் குர்யாத் குரோ ப்ரச்யுதஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவி ந தோஷ யதி -புராண வாக்கியம்

இத்தையொழிய பகவத் விஷயம் துர்லபம் -ஸ்ரீ வசன பூஷணம் -440-
அநாதி ஸித்தமாய் இருக்கச் செய்தேயும் ஆச்சார்யன் உணர்த்துவதற்கு முன்பு அஸத் கல்பமாய் –

அவன் உணர்த்தின பின்பே கார்யகரமாகக் கடவதாய் இருக்குமது –
உஜ்ஜீவன உபதாய கதாவச்சேதகம் ஸம்பந்த ஞானம் -தத் ஹேதுத்வம் ஆச்சார்யனுக்கு என்றபடி –
உஜ்ஜீவனம் மோக்ஷம் -தத் உபதாயகம் ஞாயமான பகவத் சம்பந்தம் -தத் அவச்சேதகம் -ஞாயமானத்வம் –
தத் அவச்சின்ன -தத் விசிஷ்ட-பகவத் ஸம்பந்தம் மோக்ஷ ஹேது என்றபடி -சம்பந்த ஞானம் அவஸ்யகம் என்றபடி –
ஸம்பந்தம் ஆச்சார்யனாலே என்றபடி
பகவல் லாபம் சேர்ப்பாராலே என்று இருக்கிறாள் -1-4-8- ஈடு –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -45-

ஏகாந்தீ வியபதேஷ்டவ்ய நைவ க்ரம குலாதிபி
விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய தஸ்ய ஸர்வம் பி ச ஏவ ஹி

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்று உபகாரகரான திருவாய் மொழிப்பிள்ளை ஸம்பந்தம்
யதீந்த்ர ப்ரவணம் -உத்தாரகரான எம்பெருமானார் சம்பந்தம்
அபிமான துங்கர் செல்வர் அன்றோ மா முனிகள் தீ பக்த்யாதி குணார்ணவம் -ஆச்சார்ய லக்ஷண பூர்த்தி கூறப்பட்டது
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் -மா முனிகள் ஸம்பந்தம் பெரும் பேறாக மதித்து வணக்கம் செலுத்துகிறான் –

ஸ்ரீ சைல பூர்ணர்-பெரிய திருமலை நம்பி -தயைக்குப் பாத்திரமான எம்பெருமானார் யதீந்த்ரர் இஇராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் பெற்றார்
ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப்பிள்ளை தயைக்குப் பாத்ரமான மணவாள மா முனிகள் -யதீந்த்ர பிரவணர்-தீர்த்தங்கள் ஆயிரமும் பெற்றவர்
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ண அரண்கள் அன்றோ –

யதீந்த்ரர் தாம் அவதரித்த பூதபுரியைத் துறந்து திருவரங்கத்துக்கு எழுந்து அருளி ஸம்ப்ரதாய பரிரக்ஷணம் பண்ணி அருளினார்
யதீந்த்ர பிரவணரும் தாம் அவதரித்த உறை கோயிலான திருக்குருகூரை விட்டு
காவேரி நடுவுப்பாட்டுக் கருமணியைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்
ஸ்ருதி சக்கரத்தையும் திராவிட வேத சக்கரத்தையும் பெருகப் பண்ணிக் கொண்டு போந்தார்

யதீந்த்ரர் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தர்
யதீந்த்ர பிரவணர்-அனைத்து உலகும் வாழப்பிறந்தவர எதிராசா மா முனிகள் என்னும் பொருள் சுரந்தார் –
அவர் நாராயண வைபவ ப்ரகாசகர் -இவர் ராமானுஜ வைபவ ப்ரகாசகர் –

நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அந்த அவதாரங்கள் போலே யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவணரும்

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் –

ஆழ்வாருக்கு மதுரகவிகளிலும் சிரமமான திருவடிகள் இராமானுசன் ஆனால் போலே
ராமானுஜருக்கு ஆழ்வான் ஆண்டான் முதலானாரிலும் யதீந்த்ர பிரவணர் இறே சரமமான திருவடிகள் –
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியன் ஸகல வேத சாரம் போல் நித்ய அனுசந்தேயம்

இப்படி வைபவசாலியாய் எழுந்து அருளி உள்ள மா முனிகள் திருவடிகளே தாரக போஷக போக்யங்களாகக் கொண்ட
நம் வானமா மலை ஜீயர் -கோயில் அண்ணன் -கோயில் அப்பன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் சம்பந்திகளாகி நாம் உஜ்ஜீவிப்போம் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ அந்திமோபாய நிஷ்டை–

January 18, 2022

ஸ்ரீ ஶாஸ்த்ரம் ஸ்ரீ பகவானுக்கு நிரந்தரமாகக் கைங்கர்யம் செய்வதையே
சிறந்த புருஷார்த்தமாக நிர்ணயித்துக் காட்டுகிறது.
இப்பலனான கைங்கர்ய ப்ராப்தியை அடைவதற்குப் பல வழிகளைக் காட்டியிருந்தாலும்
பக்தி மற்றும் ப்ரபத்தி அவற்றில் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றன.
அவற்றிற்கும் மேலே இப்பலனை அடைய ஒரு ஆசார்யனிடம் முழுவதுமாக அடிமை பூண்டு இருப்பதையே
தலை சிறந்ததாகவும் எளியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆஶிநோதி ய: ஶாஸ்த்ரார்த்தம் ஆசரே ஸ்தாபயதி அபி
ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் ஆசார்யஸ் தேந கீர்த்தித:

ஆசார்யன் என்பவன் ஶாஸ்த்ரத்தைத் தான் முழுதுமாக அறிந்து,
தான் அதை அனுஷ்டித்து பிறருக்கும் அதை உபதேசிப்பவன்.

மேலும் நம் பூர்வாசார்யர்கள் ஶாஸ்த்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆசார்யன் என்பவன்
ஸ்ரீமந்நாராயணனுக்கே ஆட்பட்டு இருந்து, அவனுடைய பரத்வத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு,
ஞான பக்தி வைராக்யங்களில் சிறந்து விளங்கி, உபாயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமான் தவிர வேறு உபாயங்கள்),
உபேயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமானுக்கும் அவன் அடியாருக்கும் தொண்டு செய்வதைத் தவிர வேறு பலன்கள்),
தேவதாந்தரங்களிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும் என்று காட்டினர்.
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த குணங்களில் சிறந்து விளங்கினர்.

பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
பிள்ளை லோகாசார்யர் ஶாஸ்த்ரத்தின் ஸாரத்தை பூர்வாசார்யர்களின் உபதேசத்தின்படி
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார்.
இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது
சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை அருளியுள்ளார்.
இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர்)
தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார்.

அந்திம = சிறந்த/எல்லையான, உபாய = வழி, நிஷ்டை = நிலைத்து நிற்றல்.
இதன் பொருள் “ஆசார்யனிடத்தில் முழுமையாக அடி பணிந்து இருத்தல்”.
பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தானே, இந்த முழு க்ரந்தமும் மாமுனிகளின் நேரடி உபதேசங்களைக் கொண்டு எழுதப்பட்டது என்றும்
தான் ஆசார்யனின் வார்த்தைகளை ஏடுபடுத்த உதவும் ஓலைச் சுவடி, எழுத்தாணி போல மட்டுமே என்றும் சொல்கிறார்.
இது நம்பிள்ளையின் ஈடு காலக்ஷேபங்களை எவ்வாறு வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்தினாரோ அதைப் போன்றதே.
ஆக, இந்த நூலாசிரியரின் கருத்துப்படி இவை மாமுனிகளின் நேர் உபதேசங்களே

இந்த ஆசார்ய நிஷ்டை
மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும்,
ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும்,
தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும்,
வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது.

இந்த நிலைக்குச் சரம பர்வ நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு.
பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும்
ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது.
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் முறையே திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாகவும்
தங்கள் ஸ்ரீஸூக்திகள் மூலமாகவும் இதை உபதேசித்துளார்கள்.

பகுதி 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்
பகுதி 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்
பகுதி 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்
பகுதி 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி
பகுதி 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்
பகுதி 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை
பகுதி 7 – நம்பிள்ளை வைபவம் 1
பகுதி 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)
பகுதி 9 – நம்பிள்ளை வைபவம் 2
பகுதி 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 11 – எம்பார் மற்றும் எம்பெருமானாரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
பகுதி 13 – ஆசார்ய அபசார விளக்கம்
பகுதி 14 – பாகவத அபசார விளக்கம்
பகுதி 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்
பகுதி 16 – பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
பகுதி 17 – பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை
பகுதி 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

——–

அந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்

ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாத்ரம் முநிம் ||

ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ரேகாமயம் ஸதா|
ததாயத்தாத்மஸத்தாதிம் ராமாநுஜமுநிம் பஜே||

பரவஸ்து பட்டர்பிரான்ஜீயர் தனியன்கள்

ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ஸேவைகதாரகம் |
பட்டநாதமுநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

காந்தோபயந்த்ருயமிந: கருணாம்ருதாப்தே :
காருண்யஶீதலகடாக்ஷஸுதாநிதாநம் |
தந்நாமமந்த்ரக்ருதஸர்வஹிதோபதேஶம்
ஶ்ரீபட்டநாதமுநி தேஶிகமாஶ்ரயாமி ||

உபநிஷதம்ருதாப் தேருத்த்ருதாம் ஸாரவித்பி :
மதுரகவிமுகை ஸ்தாமந்திமோபாயநிஷ்டாம் |
உபதிஶதிஜநேப்யோ யோதயாபூர்ணத்ருஷ்டி :
பஜஹ்ருதய ஸதாத்வம் பட்டநாதம் முநீந்த்ரம் ||

ருசிவரமுநீந்த்ரேணாத ரேணோபதிஷ்டாம்
அக்ருத க்ருதிவரிஷ்டாமந்திமோபாயநிஷ்டாம் |
தமிஹ நிகிலஜந்தூத்தாரணோத் யுக்தசித்தம்
ப்ரதிதி நமபி வந்தே பட்டநாதம் முநீந்த்ரம் ||

நமோஸ்து பட்டநாதாய முநயே முக்திதாயிநே |
யேநைவமந்திமோபாயநிஷ்டாலோகே ப்ரதிஷ்டதா||

தாதொன்றும் தார்புயத்தான் மணவாளமுனிதனது
பாதம் பரவும். பட்டர்பிரான்முனி பல்கலையும்
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும்பொருளந்திமோபாயநிட்டையுரைத்தவனே!

அந்திமோபாயநிஷ்டாயாவக்தா ஸௌம்யவரோமுநி: |
லேககஸ்யாந்வயோ மேத்ர லேகநீதாலபத்ரவத் |

எந்தை மணவாளயோகி எனக்குரைத்த
அந்திமோபாயநிட்டையாமதனை – சிந்தை செய்திங்
கெல்லாரும் வாழ எழுதி வைத்தேன் இப் புவியில்
நல்லறி வொன்றில்லாத நான்.

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னிலாசை யுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தா லிகழில் வந்த தென்னெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோ தானவர்க்கு.

“ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர்வ்யவஸ்திதா: |
ப்ராணிந: கர்ம ஜநிதஸம்ஸாரவஶவர்த்திந:” என்றும்,
“ஏவம் ஸம்ஸ்ருதிசக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:” என்றும் சொல்லுகிறபடியே
இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுப வேப்யநாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே

பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்றள்ளல் பொய்ந்நிலமாகையாலே, தரை கண்டு காலூன்றித்
தரித்து நின்று அடிகண்டறுக்க வொண்ணாதபடி மூடிக் கிடக்கிற கொடு வினைத் தூற்றில் நின்று
பலகாலம் வழி திகைத்தலமருகின்ற ஸம்ஸாரி சேதநனுக்கு அஞ்சினான் புகலிடமான
ஆசார்யாபிமாநமே உஜ்ஜீவிக்கைக்கு உசிதோபாயமென்று ஶ்ரீவசநபூஷணாதி திவ்யப்ரபந்த முகேந அறுதியிட்டு,

ஸம்ஸாரத்தில் உருமாய்ந்து “அஸந்நேவ” என்கிறபடியே நஷ்டகல்பனாய் கிடந்த இவனை
“ஸந்தமேநம்” என்னும்படி நிர்ஹேதுகமாக அங்கீகரித்தருளி, த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய அறிவித்து
ரக்ஷித்தருளின மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவடிகளை உபாயமாகப் பற்றி,

“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் அந்திமோபாயநிஷ்டனுக்கு ஸ்வாசார்யனுடைய திவ்யநாமவைபவத்தையும்,
(அவருடைய ஜ்ஞாந ப்ரேமாதி குண வைலக்ஷண்யத்தையும் அவருடைய திருவவதார வைபவத்தையும்)
அவர் எழுந்தருளியிருக்கும் திவ்யதேஶ வைபவத்தையும், அவர் திருவடிகளே உபாயமென்னும் அவ்வழியாலே
உபேயமான தத் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், அவர் திருமேனியை ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்
த்ரிவித கரணத்தாலும் ஒன்றும் தப்பாமல் பேணும் வழியாலே தத்கைங்கர்ய வைபவத்தையும்,
அந்த கைங்கர்யத்வாரா அவருக்குண்டான ப்ரீத்யதிஶயத்தாலே தாம் பெறும் பேற்றினுடைய கௌரவத்தையும்
இடைவிடாமல் அநுஸந்தித்து தத் விஷயமாக மங்களாஶாஸநம் பண்ணி வாழுகையே
அநவரத கர்த்தவ்யம் என்னுமத்தையும் இப்ப்ரபந்தமுகேந சொல்லுகிறது.

அனந்தபாரம் பஹூ வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஸ்ச விக்நா: |
யத்ஸாரபூதம் தது பாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமிஶ்ரம் ||

அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் |
பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம் ||

தத்கர்ம யந்ந பந்தாய ஸாவித்யா யாவிமுக்தயே |
ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்பநைபுணம் ||

ஶாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஶம் புத்தேஶ்சலநகாரணம் |
உபதேஶாத்தரிம் புத்த்வா விரமேத் ஸர்வகர்மஸு ||

ஆத்யாநம் ஸத்ருஶேகதம் விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:
ஸத்புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |
கோவாஸங்க திஹேதுரேவமநயோ: கர்மாத ஶாம்யேத் குத:
தத்ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித் யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||

அநாசார்யோபலப்தாஹி வித்யேயம் நஶ்யதி த்ருவம் |
ஶாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸாங்கா ஸஹபலோதயா |
ந ப்ரஸீத தி வை வித்யா விநாஸதுபதே ஶத: ||

தைவாதீநம் ஜகத்ஸர்வம் மந்த்ராதீநம் து தைவதம் |
தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மணதைவதம் ||

வ்ருதைவ பவதோ யாதா பூ யஸி ஜந்மஸந்ததி: |
தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ||

பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்யக்ருத் |
ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவாந் பவேத் ||

ப்ரஹ்மண்யேவஸ்திதம் விஶ்வம் ஓங்காரே ப்ரஹ்ம ஸம்ஸ்திதம் |
ஆசார்யாத் ஸ ச ஓங்காரஸ் தஸ்மாதாசார்யவாந் பவேத் ||

ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபீ ந ஸம்ஶய: ||

தஸ்மாத் பார்யாத ய: புத்ராஸ்தமேகம் குருமாப்நுயு: ||

ஸாக்ஷாந்நாரயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் |
மக்நாநுத் தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா ||

தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா ஸம்ஸாரபய பீருணா ||

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: |
குருரேவ பராவித்யா குருரேவ பரம்தநம் ||

குருரேவ பர: காமோ குருரேவ பாராயணம் |
யஸ்மாத்தது பதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: ||

அர்ச்சநீயஶ்ச பூஜ்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா ||

உபாயோபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

யேந ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீ பப்ரதே குரௌ |
மர்த்யபுத்தி: க்ருதா தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத் ||

க்ருத்ஸ்நாம் வா ப்ருதி வீம் தத் யாந்ந தத்துல்யம் கதஞ்சந ||

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: ||

இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி: ||

யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே |
தஸ்ய வைகுண்ட துக்தாப் தித் வாரகாஸ்ஸர்வ ஏவ ஸ: ||

யத் ஸ்நாதம் குருணா யத்ர தீர்த்தம் நாந்யத் ததோதிகம் |
யச்ச கர்ம ததர்த்தம் தத்விஷ்ணோராராத நாத் பரம் ||

பஶுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவஸம்ஶ்ரயா: |
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||

பாலமூகஜடாந்தாஶ்ச பங்க வோபதி ராஸ்ததா|
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம் ||

யம் யம் ஸப்ருஶதி பாணிப்யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம்புநர்பாந்த வாஜநா: ||

அந்தோநந்த க்ரஹண வஶகோயாதி ரங்கேஶயத்வத்
பங்குர்நௌகாகுஹரநிஹிதோ நீயதே நாவிகேந |
புங்க்தே போகாநவிதி தந்ருபஸ்ஸேவகஸ்யார்ப காதி:
த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரப வதி ததா தேஶிகோ மே தயாலு: ||

ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ஶ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்
ஸத்த்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாது வ்ருத்த்யா ஸமேதம் |
டம்பா ஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

உத்பாதகப்ரஹ்மபித்ரோர்கரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்த்ரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||

கிமப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம் ||

பிந்நநாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்தஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாநஹீநம் கோரும் ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ரபக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||

ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுக்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத: |
அநந்யஸாதநஶ்சைவ ததாநந்யப்ரயோஜந : ||

ப்ராஹ்மணோ வீதராக ஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத்வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்ஷு : பரமார்த்த வித்||

ஏவமாதி குணோபேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||

ப்ரபோத் ய போதநீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||

குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||

குருஶ்ச ஸ்வப்ந த்ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்த்ரஸ்ய வஶ ஈஶ்வர: |

மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவேஶ்வரஸ்திதி: ||
ஏஷவை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாநபுருஷேஶ்வர: ||

யோகீஶ்வரைர்விம்ருக்யாங்க் ரிர்லோகோயம் மந்யதே நரம் ||

நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ரய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குரும்பஜேத் ||

தயாத மஶமோபேதம் த்ருடபக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||

ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குருமா வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷூ தீக்ஷித: |
குலே மஹ்தி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |
அஜ்ஞாநதிமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகுருவே நம: ||

மந்தர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸ்ம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||

குஶப்த ஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் தஸ்தந்நிரோத க: ||

அந்த காரநிரோதி த்வாத் குருரித்யபி தீயதே ||

ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதி சேத் குரு: ||

ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்ப வதி நிஶ்சய: ||

லோபாத் வாயதி வாமோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி நயோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயமாசரதே யஸ்து ஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவிஸந்நிதி மாத்ரேண ஸுர்யகாந்தோ விராஜதே||

குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶேதே ||

யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாணவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்சதி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி அபி ஸ்ஸதா ||

அநந்யஶரணாநாஞ்ச ததா வாந்ந்ய ஸேவிநாம் |
அநந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தம்ம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோவதேத் ||

நாதீக்ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக்நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

டம்பாஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும் |
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

உத்பாதகப் ரஹ்மபித்ரோர்க ரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித் யாதஸ்தம் ஜநயதி தச்ச் ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்தரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||

கிம்ப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்‌ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதி கம் ||

பிந்தாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்த ஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாநஹீநம் குருமா ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |

ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணுபக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ர பக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||

ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுப்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத : |
அநந்யஸாத நஶ்சைவ ததாந்ந்யப்ரயோஜந: ||

ப்ராஹ்மணோ வீதராகஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத் வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்‌ஷு: பரமார்த்த வித் ||

ஏவமாதி குணோ பேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||

ப்ரபோத்ய போத நீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||

குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்‌ஷாத் பக வாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||

குருஶ்ச ஸ்வப்நத் ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்தரஸ்ய வஶ ஈஶ்வர: |
மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவஶ்வரஸ்திதி: ||

ஏஷ வை பகவாந் ஸாக்‌ஷாத் ப்ரதாந புருஷேஶ்வர: |
யோகி ஶ்வரைர்விம்ருக் யாங்க் ரிர்லோகோ யம் மந்யதே நரம் ||

நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குருமா பஜேத் ||

தயாத மஶமோபேதம் த்ருடப்பக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||

ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குரும் வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷு தீஷித: |
குலே மஹதி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |

அஜ்ஞாந்திமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகாயா |
சக்‌ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீ குரவே நம: ||

மந்த்ர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||

குஶப்தஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் த ஸ்தந்நிரோதக: |
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே ||

ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதிசேத் குரு: |
ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்பவதி நிஶ்சய: ||

லோபாத் வா யதி வா மோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி ந யோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸவயமாசரதே யஸ்துஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவிஸந்நிதி மாத்ரேண ஸூர்யகாந்தோ விராஜதே |
குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶதே ||

யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாநவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்ச தி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி பி ஸ்ஸதா ||

அநந்யஶரணாநஞ்ச ததா வாந்நய ஸேவிநாம் |
அந்ந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தமம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்‌ஷய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோ வதேத் ||

நாதீக்‌ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக் நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

தேஶகாலாதி நியமம் அரிமித்ராதி ஶோதநம் |
ந்யாஸமுத்ராதி கம் தஸ்ய புரஶ்சரணகம் ந து ||

ந ஸ்வர: ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா |
ஸ்த்ரீணாஞ்ச ஶுத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே ||

ருஷ்யாதிஞ்ச கரந்யாஸம் அங்க ந்யாஸஞ்ச வர்ஜயேத் |
ஸ்த்ரீஶூத்ராஶ்சவிநீதாஶ்சேந்மந்த்ரம் ப்ரவணவவர்ஜிதம் ||

ந தேஶகாலௌ நாவஸ்தாம் பாத்ரஶுத்திஞ்ச நை[நே] ச்சதி |
த்வயோபதே ஶகர்த்தாது ஶிஷ்யதோஷம் ந பஶ்யதி ||

துராசோரோபி ஸர்வாஸீ க்ருதக் நோ நாஸ்திக: புரா |
ஸமாஶ்ரயேதாதி தேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி |
நிர்தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ||

மந்த்ரரத்நம் த்வயம் ந்யாஸம் ப்ரபத்திஶ்ஶரணாகதி: |
லக்‌ஷமீநாராயணஞ்சேதி ஹிதம் ஸர்வபலப்ரதம் |
நாமாநி மந்த்ரரத்நஸ்ய பர்யாயேண நிபோத த ||

தஸ்யோச்சாரணமாத்ரேண பரிதுஷ்டோஸ்மி நித்யஶ: ||

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஶ்யாஸ்ஸ்த்ரியஶ்ஶூத் ராஸ்ததே தரா: |
தஸ்யாதி காரிணஸ்ஸர்வே மம பக்தோப வேத்யதி ||

யஸ்து மந்த்ரத்வயம் ஸம்யகத் யாபயதி வைஷ்ணவாந் |
ஆசார்யஸ்ஸ து விஜ்ஞேயோ பவபந்த விமோசக: ||

ந்ருதேஹமாத்யம் ப்ரதிலப்ய துர்லபம்
ப்லவம் ஸுகல்யம் குருகர்ணதாரகம் |
மயாநுகூலேந நப ஸ்வதேரிதம்
புமாந் பவாப்திம் ஸ தரேத் ந ஆத்மஹா ||

ஆசார்யம் மாம் விஜாநீயாந்நாவமந்யேத கர்ஹிசித் |
ந மர்த்யபுத்த்யாத் ருஶ்யேத ஸர்வதே வமயோ குரு: ||

அத ஶிஷ்ய லக்ஷணம்: –

மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மிந் ந மூகோ பதிரோபி வா |
நாபக்ரமாதி ஸம்ஸாராத் ஸகலு ப்ரஹ்மஹா பவேத் ||

ஸதாசார்யோபஸத்த்யா ச ஸாபி லாஷஸ்ததாத்மக: |
ததத்வஜ்ஞாநநிதிம் ஸத்த்வநிஷ்டம் ஸத் குணஸாகரம் |

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதாவிதி |
ப்ரணிபாத நமஸ்கார ப்ரியவாக் பிஶ்ச தோஷயந் |
தத்ப்ரஸாத வஶேநைவ ததங்கீகாரலாபவாந் |
ததுக்தத்த்வயாதாத்ம் யஜ்ஞாநாம்ருதஸுஸம்ப்ருத: ||

அர்த்தம் ரஹஸ்யத்ரிதயகோசரம் லப்த வாநஹம் ||

பரீக்ஷ்ய லோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த்யக்ருத:
க்ருதேந தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித்பாணிஶ்
ஶ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்த சித்தாய
ஶமாந்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் ததத்வதோ ப்ரஹ்ம வித்யாம் ||

குரும் ப்ரகாஶயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் |
அப்ரகாஶப்ரகாஶாப் யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ ||

ஆசார்யஸ்ய ப்ரஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம் |
ப்ராப்நுயாமீதி விஶ்வஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத் ||

ஆத்மநோ ஹ்யதிநீசஸ்ய யோகித்யேயபதார்ஹதாம் |
க்ருபயைவோபகர்த்தாரம் ஆசார்யம் ஸம்ஸ்மரேத் ஸதா ||

ந சக்ராத் யங்கநம் நேஜ்யா ந ஜ்ஞாநம் ந விராகதா |
ந மந்த்ர: பாரமைகாந்த்யம் தைர்யுக்தோ குருவஶ்யத: ||

நித்யம் குருமுபாஸீத த்த் வச: ஶ்ரவணோத்ஸுக: |
விக்ரஹாலோகநபரஸ்தஸ்யைவாஜ்ஞாப்ரதீக்ஷக: ||

ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச |
நித்யம் விதி விதர்க்யாத்யாத் யைராத்ருதோப் யர்ச்சயேத்குரும் ||

ஶ்ருதி: – ஆசார்யவாந் புருஷோ வேத | தேவமிவாசார்யமுபாஸீத |

ஆசார்யாதீ நோ பவ | ஆசார்யாதீ நஸ்திஷ்டேத் | ஆசார்யதே வோ ப வ |
யதா பகவத்யேவம்வக்த்ரி வ்ருத்தி: | குருதர்ஶநே சோத்திஷ்டேத் | கச்சந்தமநுவ்ரஜேத் |

ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸூந் |
குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸஶிஷ்யோ நேதரஸ்ஸ்ம்ருத: ||

தீர்க்கதண்ட நமஸ்காரம் ப்ரத்யுத்தாநமந்த்ரம் |
ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் ||

குர்வர்த்த ஸ்யாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: |
ஸுப்ரஸந்நஸ்ஸதா விஷ்ணுர்ஹ்ருதி தஸ்ய விராஜதே ||

மந்த்ரே தீர்த்தேத் விஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஶீபாவநா யத்ர ஸித்திர் பவதி தாத்ருஶீ ||

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதேகதிதா ஹ்யர்த்தா: ப்ரகாஶ்யந்தே மஹாத்மந: |

தர்ஶநஸ்பர்ஶவசநைஸ்ஸஞ்சாரேண ச ஸத்தமா: |
பூதம் விதாய புவநம் மாமேஷ்யந்தி குருப்ரியா: ||

தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாந்மந்த்ரஸம்ஸ்காரக்ருத்பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

அவைஷ்ணவோபதிஷ்டம் ஸ்யாத்பூர்வம் மந்த்ரவரம் த்வயம் |
புநஶ்ச விதி நா ஸம்யக் வைஷ்ணவாத் க்ராஹயேத் குரோ: ||

அத ஸ்த்ரீஶூத் ரஸங்கீர்ணநிர்மூலபதிதாதி ஷு |
அநந்யேநாந்யத்ருஷ்டௌ ச க்ருதாபி ந க்ருதா பவேத் ||

அதோந்யத்ராநுவிதி வத்கர்த்தவ்யா ஶரணாகதி: |
தண்டவத் ப்ரணமேத் பூமாவுபேத்ய குருமந்வஹம் |
திஶே வாபி நமஸ்குர்யாத் யத்ராஸௌ வஸதி ஸ்வயம் ||

ஆசார்யாயாஹரதே ர்த்தாநாத்மாநஞ்ச நிவேத யேத் |
தத்தீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந்நாரயணோ ஹி ஸ: ||

ஸத் புத்தி ஸ் ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ்தத்த்வபோதாபிலாக்‌ஷீ
ஶுஶ்ரூஷுஸ்த்யக்தமாந: ப்ரணிபதநபர: ப்ரஶ்நகலாப்ரதீக்ஷ: |

ஶாந்தோ தாந்தோநஸுயுஶ்ஶரணமுபக தஶ்ஶாஸ்த்ரவிஶ்வாஸஶாலீ
ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாங்க்ருதவிதபிமதம் தத்த்வத: ஶிக்ஷணீய: ||

யஸ்த்வாசார்யபராதீ நஸ்ஸத்வ்ருத்தௌ ஶாஸ்யதே யதி |
ஶாஸேநே ஸ்திரவ்ருத்திஸ்ஸ ஶிஷ்யஸ் ஸத்பிருதாஹ்ருத: ||

ஶிஷ்யோ குருஸமீபஸ்தோ யதவாக்காயமாநஸ: |
ஶுஶ்ரூஷயா குரோஸ்துஷ்டிம் குர்யாந்நிர்தூ தமத்ஸர: ||

ஆஸ்திகோதர்மஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ்ஶுசி: |
கம்பீரஶ்சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபி தீயதே ||

ஆஸநம் ஶயநம் யாநம் ததீயம் யச்ச கல்பிதம் |
குரூணாஞ்ச பதாக்ரம்ய நரோ யஸ்த்வத மாம் கதிம் ||

கோஶ்வோஷ்டரயாநப்ரஸாத ப்ரஸ்தரேஷு கடேஷு ச |
நாஸீத குருணா ஸார்த்தம் ஶிலாப லகநௌஷு ச ||

யஸ்திஷ்டதி குரூணாஞ்ச ஸமக்ஷமக்ருநாஞ்ஜலி: |
ஸமத்ருஷ்ட்யாத தாஜ்ஞாநாத் ஸ ஸத்யோ நிரயம் வ்ரஜேத் ||

ஆஸநம் ஶயநம் யாநம் அபஹாஸஞ்ச ஶௌநக |
அதிப்ரலாபம் கர்வஞ்ச வர்ஜயேத் குருஸந்நிதௌ ||

யத்ருச்சயா ஶ்ருதோ மந்த்ரஶ்சந்நேநாதச்ச லேந வா |
பத்ரேக்‌ஷிதோ வாவ்யர்த்த ஸ்ஸ்யாத் தம் ஜபேத் யத் யநர்த்த க்ருத்||

மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ரப்ரதே கு ரௌ |
த்ரிஷுபக்திஸ்ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதமஸாதநம் ||

அத மோதே வதாப க்தோ மந்த்ரபக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குருபக்தோத்தமோத்தம: ||

ஶ்ருதி: –

ஆசார்யாந்மா ப்ரமத: | ஆசார்யாய ப்ரியம் த நமாஹ்ருத்ய |
குரோர்குருதரம் நாஸ்தி குரோர்யந்ந பாவயேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்நாம ஸதாஜபேத் |

{குருபாதாம்புஜம்த்யாயேத் குரோர்நாம ஸதா ஜபேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்ந்யந்ந பாவயேத் – பா }

அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்தயா பஜேதப் யர்ச்சயேந்முதா ||

உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

ஏவம் த்வயோபதேஷ்டாரம் பாவயேத் புத்திமாந்தியா |
இச்சாப்ரக்ருத்யநுகுணைருபசாரைஸ்ததோசிதை: ||

பஜந்நவஹிதஶ்சாஸ்ய ஹிதமாவேதயேத்ரஹ: |
குர்வீத பரமாம் பக்திம் குரௌ தத்ப்ரியவத்ஸல: ||

தத் நிஷ்டாவஸாதீ தந்நாமகுணஹர்ஷித: |
ஶாந்தோநஸுயு: ஶ்ரத் தாவாந் கு ர்வர்த்தாத் யாத்மவ்ருத்திக: ||

ஶுசி: ப்ரியஹிதோ தாந்த: ஶிஷ்யஸ்ஸோபரதஸ்ஸுதீ: |
ந வைராக் யாத்பரோ லாபோ ந போதாத பரம் ஸுகம் |
ந குரோரபரஸ்த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு: ||

————

அந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம்
மதுரகவி ஆழ்வார் மற்றும்
பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஆசார்யவைபவம் –
ஸதாசார்ய ஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி,
அன்று தொடங்கி இவனுக்கு நல்விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் –
“புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும்,
“ஆதித்ய – ராம – திவாகர – அச்யுதபாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி,
விகஸியாத போதிற் கமலமலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும்,
விடியா வெந்நரகான ஸம்ஸாரமாகிற கால ராத்ரிக்கு ஆசார்யன் தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள்.

“பார்வை செடியார் வினைத்தொகைக்குத்தீ” என்றும்,
“ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: |
தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும்,
“யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி |
தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும் சொல்லுகிறபடியே

ஆசார்ய கடாக்ஷமானது ஸ்வ விஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ண வேண்டாதபடி
தானே தூறு மண்டிக் கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ்ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை
அவர்கள் முன்பு மஹாபாபிகளே யாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய்
அவ்வளவன்றிக்கே பின்பு ஸுஸ்திரமான பரமபதத்தையும் சென்றடையப் பெறுவார்கள்.

“நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதியன்றோ
சீராருமாசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”,

“உண்ட போதொரு வார்த்தையும் உண்ணாத போதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேருண்டிறே,
அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதியிடுவது, அவர்களைச் சிரித்திருப்பாரொருவருண்டிறே,
அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதியிடக்கடவோம்”.

பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம்” என்றார்.
ஶ்ரீமதுரகவிகள் “தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார்.

அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார். இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார்.

அவர் “அடிக்கீழ்மர்ந்து புகுந்தேன்” என்றார். இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார்.

அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார். இவர் “தேவு மற்றறியேன்” என்றார்.

அவர் “பாடியிளைப்பிலம்” என்றார். இவர் “பாடித்திரிவனே” என்றார்.

அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார்.
இவர் “திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்” என்றார்.

அவர் “உரியதொண்டன்” என்றார். இவர் “நம்பிக்காளுரியன்” என்றார்.

அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார். இவர். “அன்னையாயத்தனாய்” என்றார்.

அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார். இவர் “என்னையாண்டிடும் தன்மையான்” என்றார்.

அவர் “கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார். இவர் “சடகோபன்” என்றார்.

“யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார்.
இவர் “நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார்.

அவர். “எமரேழுபிறப்பும் மாசதிரிதுபெற்று” என்றார். இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார்.

அவர் “என்னால் தன்னை இன்தமிழ் பாடியவீசன்” என்றார். இவர் “நின்றுதன்புகழேத்த அருளினான்” என்றார்.

அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார். இவர் “என்றுமென்னை இகழ்விலன்காண்மினே” என்றார்.

அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார். இவர் “எண்டிசையுமறியவியம்புகேன் ஒண்தமிழ்ச்சடகோபனருளையே” என்றார்.

அவர் “அருளுடையவன்” என்றார். இவர் “அருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார்.

அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப்புகுந்தான்” என்றார். இவர் “நிற்கப்பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார்.

அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார். இவர் “ஆட்புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார்.

அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார்.
இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்” என்றார்.

அவர் “ஆராதகாதல்” என்றார். இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார்.

அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார். இவர் “தென்குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார்.

அவர் “உலகம் படைத்தான்கவி” என்றார். இவர் “மதுரகவி” என்றார்.

அவர் “உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் ஊரெல்லாம்” என்றார்.
இவர் “நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டியருளினார்.

அவர் “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றார்.
இவர் “கோலத்திருமாமகள்கொழுநன் தானே குருவாகித்தன் அருளால்” என்றும், ***

பிள்ளை லோகாசார்யர்,
“தான் ஹிதோபதேஶம் பண்ணும்போது” என்று தொடங்கி,
“நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்தரத்தை உபதேஶித்தவனை.
ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந்மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தியில்லை.
ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப்போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக் கடவன்.
ஆசார்யனுக்கு தேஹரக்ஷணம் ஸ்வரூபஹாநி.
ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்.
ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம்.
அவன் பூர்ணனாகையாலே கொள்ளான். அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது.
ஈஶ்வரனைப்பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி,
ஆசார்யனைப் பற்றுகை காலைப்பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி.
ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டிருக்கும்.
ஆகையிறே குருபரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் அபயப்ரதாநமும் அருளிச்செய்ததும்,
ஆசார்யனுக்கு ஸத்ருஶ ப்ரத்யுபகாரம் பண்ணலாவது விபூதி சதுஷ்டயமும் ஈஶ்வர த்வயமும் உண்டாகில்.
ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாநபக்திவைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி,
“இத்தையொழிய பகவத் ஸம்பந்தம் துர்லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.
ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”. “நல்லவென் தோழி” என்று தொடங்கி,
“அசார்யாபிமாநந்தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும்.
பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி, ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது.
இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும், பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பலபர்யந்தமாக்கும்”.

“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று
ஆச்சான் பிள்ளை அருளிச்செய்வர்.

விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்‌ஷுவுக்கு த்யாஜ்யன்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச் சொல்லுமவன்.
ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும்.
ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு முழுகுமவனன்று,
தன்னைக் கரையேத்தவல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே.
ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்.
கருடத்யாநத்துக்கு விஷம் தீருமாப்போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே
ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக்கொள்ளலாம் என்று அருளிச்செய்வர்கள்.
ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும் பெரிய மதிப்பனாய்,
அர்த்தகாமோபஹதனன்றிக்கே லோக பரிக்ரஹமுடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).

————

அந்திமோபாய நிஷ்டை – 3 –
சிஷ்ய லக்ஷணம்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்,
திருவரங்கத்து அமுதனார்,
பிள்ளை லோகாசார்யர்
மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஶிஷ்யலக்ஷணம் :-
“இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து”,
“குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”,
“வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”,
“விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”,
“வேறொன்றும் நானறியேன்”,
“தேவு மற்றறியேன்”,
“ஶத்ருக்நோ நித்ய ஶத்ருக்ந”,
“வடுகநம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர்”,

“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“இராமானுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப்பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”,
“பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்காறொன்றுமில்லை மற்றச்சரணன்றி”,
“நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின் கணன்றிப் புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்”,
“இராமானுசனை யடைந்த பின் என் வாக்குரையாது என் மனம் நினையாதினி மற்றொன்றையே”,
“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”,
“கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”,
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்று தொடங்கி
“இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”,
“நந்தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப்பூமன்னவே”…

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

“மாடும் மனையும் கிளையும் மறைமுனிவர் தேடுமுயர்வீடும் செந்நெறியும்
பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகைகண்டீர் விதி”,
“வேதமொருநான்கு” என்று தொடங்கித்
“தீதில் சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகுமென்னுமது”,
“வில்லார் மணிகொழிக்கும்” என்று தொடங்கி, “எந்நாளும் மாலுக்கிடம்”,
“தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன் தாளிணையை உன்னுவதே சால வுறும்”.
“ஆசார்யப்ரேமம் கனத்திருக்கையும்”,
“ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக்கண்டாப்போலேயும்”,

“இப்படி ஸர்வப்ரகராத்தாலும் நாஶஹேதுவான அஹங்காரத்துக்கும்
அதினுடைய கார்யமான விஷய ப்ராவண்யத்துக்கும் விளைநிலம் தானாகையாலே” என்று தொடங்கி,
“இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன்.

வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும்.
பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்.
ஆசார்யகைங்கர்யமறிவது ஶாஸ்த்ரமுகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும்.

இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம்,
அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்,
ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்
அஶக்திக்கிலக்கு நிஷித்தாநுஷ்டாநம்.

ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பலஸாதந ஶுஶ்ரூஷையும், ஆர்த்தியும்,
ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”.
“மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும்” – என்று தொடங்கி –
எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்.
‘மாதாபிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ்வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச்செய்தார்.

ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக்கடவன். ஶிஷ்யன் உகப்பிலே ஊன்றிப்போரும்.
ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகை யொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை.
ஶிஷ்யனுக்கு நிக்ரஹகாரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்.
இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்யவிஷயத்தில் “என்னைத் தீமனங்கெடுத்தாய், மருவித்தொழும் மனமே தந்தாய்”
என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.
பாட்டுக்கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக்கடவன்.
இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.

ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹ யாத்ரையே தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்திருக்க வேணும்.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும்,
ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும் ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்கவடுக்கும்.
ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ்ஜ்ஞாநம் கைவந்ததென்ன வொண்ணாது.
நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும். ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள்தோறும் அநுஸந்தித்திலனாகில்
இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும்.
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்தும் செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பட்டிருப்பான்.
ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும்.

“சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண்முன்னே நிற்க
அவனை விட்டுத் தன்னுடைய ஆசார்யர்களுடைய பாத ஸேவை பண்ணப்போகிறேனென்று போனாளிறே
தான் சதிரியாயிருக்கச்செய்தேயும் எல்லைச்சதுரையாகையாலே ஶ்ரீஶபரி.

ஞானமநுட்டானமிவை நன்றாகவேயுடையனான குருவையடைந்தக்கால் – என்று தொடங்கி.
திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும். உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி –
கையிலங்கு நெல்லிக்கனி. தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி –
ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு. ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி –
ஆசையுடன் நோக்குமவன். பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி –
நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்.
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாதநந்யஶரணோ பவதீதி மத்வா என்று நம்முடைய ஜீயர்,
தாம் அந்திமோபாயநிஷ்டாக்ரேஸரர் என்னுமிடத்தை
ஸ்வ ப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும், யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித்
தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித்தருளுகிற தனியனிலும் –
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம், முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்,
முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம், பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம்,
பிறர் மினுக்கம் பொறாமை யில்லாப் பெருமையும் பெற்றோமே – என்று
தம்முடைய நிஷ்டையை மதித்துக்கொண்டு மிகவும் ஹ்ருஷ்டரானாரிறே

———

அந்திமோபாய நிஷ்டை – 4 –
வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில்
எம்பெருமானாரின் கருணை
மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி

வடுகநம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள்
அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள,
உடையவர் புறப்பட்டு ஸேவித்து, “வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள,
வடுகநம்பி, ‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால்
என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும். ஆகையால் இத்தைவிட்டு வரக்கூடாது’ என்று
அருளிச்செய்தார் என்று ப்ரஸித்தமிறே.

“உன்னையொழியவொரு தெய்வமற்றறியா, மன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்னிலையை,
என்றனுக்கு நீ தந்தெதிராசா எந்நாளும், உன்றனக்கே ஆட்கொள் உகந்து” என்று
வடுகநம்பி நிலையையும் நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித்தருளினாரிறே.

(1) ப்ரக்ருதிமானாகில் ஸத்வைத்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான்;
ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்

(2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத்
தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி,
பின்பு, ‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள,
‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
அபிமாநநிஷ்டனாகில் இப்படி இருக்கவேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும்

(3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு ஸாத்த்விகையைப் பார்த்தருளி,
‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன,
‘புழங்கு காண், “வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல்
அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச்செய்தார் என்றும்
இம்மூன்று வார்த்தையும் பலகாலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
இதில் வார்த்தை உபதேஶத்தாலே அறிய வேணும்.

உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்றொருவர்
வித்யையாலும் ஶிஷ்யஸம்பத்தாலும் அறமிகுந்தவராய் அநேக ஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி
எடுப்பித்துக் கொண்டு தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து
உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க,
பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக
உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளியிருக்க,
அவ்வளவில் அருளாளப்பெருமாள் தம்முடைய வெற்றி தோற்ற எழுந்திருந்து அற்றைக்குப் போக,

உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை
‘இத்தனைகாலமும் தேவரீருடைய ஸ்வரூபரூபகுண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்;
இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும்
அழித்துப் பொகட்டு லீலை கொண்டாடத் திருவுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று
அமுது செய்தருளாமல் கண்வளர்ந்தருள,
பெருமாளும் அந்த க்ஷணத்திலே ‘உமக்கு ஸமர்த்தனாயிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்;
அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத்தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று
உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,

உடையவரும் திருக்கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து
பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு
“வலிமிக்க சீயமிராமாநுசன் மறைவாதியராம் புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை” என்கிறபடியே
மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்ககோஷ்டிக்கு எழுந்தருள,
அவ்வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு
திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிறபோது இங்கு நின்றும் சோம்பிக்கொண்டெழுந்தருளாநின்றார்,
ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ,

உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன,
அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து ‘தேவர்க்கு இப்போது பெரியபெருமாள் ப்ரத்யக்ஷமானபின்பு
தேவரீரென்ன, பெரியபெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன்.
இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய்திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை.
ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருளவேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க,

உடையவரும் அவ்வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து
விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று
தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப் பெரியதொரு மடத்தையும் கொடுத்து,
‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும்,
உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை. விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி
வ்யாக்யாநம் பண்ணிக்கொண்டு ஸுகமே இரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள,
அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.

அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே
நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க,
அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன,
புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷணவர்கள் நெஞ்சுளைந்து “நீங்கள் இரண்டு சொல்லுவானென்?
இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன, அவர்கள் ‘உண்டு காணும்;
அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்; ஆகையாலே சொன்னோம்’ என்ன,
‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன,
ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர்காட்ட,
அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள்.

இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு,
‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை
எம்பெருமானார்க்கு எதிராகச் சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று
மிகவும் வ்யாகுலப்பட்டு, அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து
உடையவர் திருவடிகளைக் கட்டிக்கொண்டு ‘அநாதி காலம் இவ்வாத்மா தேவர் திருவடிகளை அகன்று
அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும் அகற்றிவிடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க,

உடையவர் ‘இதுவென்’ என்ன, அங்குப்பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய,
உடையவரும் அச்செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி, ‘ஆனால் இனி உமக்கு நாம் செய்யவேண்டுவதென்’ என்ன,
அருளாளப் பெருமாளெம்பெருமானார் ‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே
தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும் , ‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல்
வைத்துக்கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த்
தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம் அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும்
பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற
ப்ரபந்தங்களையும் இட்டருளி, அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும்
“தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே
ஸச்சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பரதேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும்,
அவன்தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார்
அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

———-

அந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்

கூரத்தாழ்வான் திருவயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக் கொள்ள,
பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான்,
அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன,
‘உண்டு’ என்று சொல்ல,

அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய், வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று
‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர் இரண்டாற்றுக்கும் நடுவே
பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன,
ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும்
ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று
அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார்.
அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று,
‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன,
‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன,
‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன,

‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும்
வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து வேதாந்திகளுடனே சொல்லாமல்
வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன,

அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேதஶாஸ்த்ரங்களொழிய உமக்கு
மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன,
‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று
பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர் ‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர்பூதராம்படி
பண்ணிக் கொள்ள வேணும்’ என்று தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து,
‘மேல்நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார்.
அவரைத் திருத்தி நம்முடைய தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ணவேணும் என்று அங்கே விடைக்கொள்ளுகிறேன்,
அவரை நன்றாகத் திருத்தி ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றியருளவேணும்’ என்று
பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய, பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித்
தம்முடைய குமாரரான வாசி தோற்ற, ‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப் போம்’ என்றுவிட,

பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’
என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே
ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும் இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று,
‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க,
அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன,
அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி – ‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப் போகாது.
அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்துவிடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலைவாசலிலே இருந்து நாலிரண்டு மாஸம்
வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுரவொட்டாதே தள்ளிவிடுவார்கள்’ என்ன,

பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து
வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி –
‘வேதாந்திகள் தநவானாகையாலே அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர்,
அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஸத்ரத்திலே சென்றால்
வேதாந்திகளைக் கண்களாலே காணலாம். ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி
நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’ என்று சொல்லிப்போனார்கள்.

பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம்பற்றித் தம்முடைய அனைத்து பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி,
ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி இடுக்கிக் கொண்டு ஒரு காவி வேஷ்டியையும்
தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனேகூட கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,

வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு மண்டபத்தின்மேலே பெரிய மதிப்போடே இருக்க,
ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர,
பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள,
வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன,
‘எல்லாரும் உண்கிறவிடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’ என்ன, ‘
எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன,

வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன,
பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன,
வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது
நம்முடைய முன்வந்துநின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்கவல்லார் இந்த லோகத்திலே இல்லையாகையாலே,
வேஷம் கார்பண்யமாயிருந்ததேயாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து
‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன,
அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை இவையெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளி நின்று
மஹாவேகத்திலே உபந்யஸிக்க,

அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரைகுலையத் தலைகுலைய இறங்கி வந்து
பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க
பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணியருளி,
‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச்சொல்லாவதில்லை.
விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயாவாதத்தை ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி,
ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச் செய்து,
‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று உத்யோகிக்கிறவளவிலே

ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து பட்டரை மீளவும்
ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருபல்லக்கிலேற்றி உபயசாமரங்களைப் பரிமாற எழுந்தருளுவித்துக் கொண்டு
புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு
‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும் கடைகெட்டு
ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர்கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,

‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார்,
அநாதிகாலம் தப்பி அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கைகழிந்துபோன இவ்வாத்மா
என்றும் தப்பிப்போம் என்று திருவுள்ளம் பற்றி, இப்படி அதிகார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக்கொண்டு
ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதிதுர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து
அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய்விட,
பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி, ‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச் செய்து கோயிலேற எழுந்தருளினார்.

அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிது நாள் எழுந்தருளியி ருந்து பட்டரைப் பிரிந்திருக்க மாட்டாதே
கோயிலுக்கு எழுந்தருளத் தேட அங்குள்ளவர்கள் அவரைப் போகவொண்ணாதென்று தகையத்
தமக்கு நிரவதிக தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து,
மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத்தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு ஸந்யஸித்துக்
கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும் தம்மதென்கிற அபிமாநத்தை விட்டு,
பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திருமாளிகையிலே விட்டுவைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க,

அவ்வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு ஒருக்ஷணமும் பிரியாமல்
தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஜீயரும் பட்டரையல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார்.
பட்டர் நஞ்சீயர் என்று அருளிச்செய்தவன்று தொடங்கி வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று.
நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே
ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்வர்.

நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரமாக
ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ
என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க,
அவர்களும் ‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’
என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக்காட்டுங்காண்’ என்ன,
அவரும் எழுதிக் கொடுக்க, ஜீயர் அத்தைக் கண்டு ‘எழுத்து முத்துப்போலே நன்றாயிருந்தது;
ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய,
திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’
என்று ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தை யறிந்து
‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,

அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி
ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி
‘இப்படித்தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க,
அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட,

வரதராஜன் திருக்காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே
கட்டிக்கொண்டு நீஞ்ச, அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக,
அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து,
ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச் செய்தருளின அர்த்தம்
ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே ஓரொரு பாட்டுக்களிலே
உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும் எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க,

ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்தவளவிலே தாமருளிச் செய்த கட்டளையாயிருக்கச்செய்தே
ஶப்தங்களுக்கு மிகவும் அநுகுணமாக அநேக விஶேஷார்த்தங்கள் பலவிடங்களிலும் எழுதியிருக்கையாலே
அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி வரதராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிராநின்றது; இதேது சொல்லும்’ என்ன,
அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க,

ஜீயரும் ‘நீர் பயப்படவேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன,
வரதராஜனும் ‘திருக்காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன்.
ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப்போய்த்து.
இது தேவரீர் அருளிச்செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய,

ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹாஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று
மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக்கலிக்கன்றிதாஸர்’ என்று திருநாமம் சாத்தித்
தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக்கொண்டு
பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வரதராஜனுக்கு நம்பிள்ளை என்று
திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.

இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை
“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர், அவரவர்தம் ஏற்றத்தால்,
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே, ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று
உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.
‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே
நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளையுடைய வைபவமிருப்பது.

———-

அந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை

திருக்கோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப்போது திருக்கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலேகாணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே.
நம்பி தான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு ஆளவந்தாரை த்யாநித்துக் கொண்டு
யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.

உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே
அவனைக் கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக்கொண்டு
ஸம்ஜ்ஞையாலே தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டியருள,
ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத் கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்தபின்பு
‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில் இப்பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கியருளுவர்;
கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து விட்டாராகையாலே
எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு அநதிகாரியாய் விட்டேன்’ என்று
ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற திருப்பதியிலே
எழுந்தருளினவாறே அவ்வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க,
உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க,
அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன,
உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன,
அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச்செய்கையாலே
திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத்
தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன,
அவளும் தம்முடைய அகத்தைக் காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி,
அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப் போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித்
தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து
விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார்.

அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத்ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து
வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச்செய்வர்கள்.
இந்த வ்ருத்தாந்தங்களாலே
‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா |
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே
ஶாஸ்த்ராநதிகாரிகளான இவர்களெல்லாம் பரமக்ருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.

திருக் குருகைப்பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு
ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந் நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண,
அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க,
வடுகநம்பி எழுந்திருந்து குருபரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவகாரியம் என்று அருளிச்செய்து
அவ்வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும்
“நாவகாரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.

திருமாலை யாண்டான் அருளிச்செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ் ஸம்ஸாரத்தில் ஆளில்லை; அதெங்ஙனே என்னில்,
ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச்சுமந்து ரக்ஷித்து அதினருகே கூறைகட்டிப்
பதினாறாண்டுகாலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது;
அது போலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரமபதத்தை,
இதுக்குடலாக ஒரு நல் வார்த்தை யருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒரு காலாகிலும் க்ருதஜ்ஞராகாத
ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தாமாலையிலே ப்ரஸித்தம்.

“கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்நவ்ரதே ததா|
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி:” என்கிறவிடத்தில்
க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்யோபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதியில்லாத பாபமென்றால் அப்ராக்ருதமாய்,
நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி,
“அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாநப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும் போது
உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர்ந்யாய ஸித்தமிறே.

தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையை யிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து
தெளிந்த நீரானது மேலே நிற்குமாப் போலே அஜ்ஞாநப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை
ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்;
தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே,
பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப்போய்,
அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும் கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத்துல்யர்கள் கண்வட்டத்திலே
வர்த்திக்கை ஸ்வரூபம் என்று பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வார்கள். (கதகஷோத இத்யாதி).

ஆளவந்தார் திருவநந்தபுரத்துக்கெழுந்தருளுகிறபோது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரியாண்டானை
‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள,
ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர,
பெருமாள் அவரைப் பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம் பற்றியருள,
‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டேயாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று அவரும் விண்ணப்பம் செய்ய,
‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள,

அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக்காதவழி மீண்டு,
கரைமனையாற்றங்கரையிலே விட்டெழுந்தருளியிருந்தார்.
ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க;
அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச்சோலைகள் தோன்றுகிறது,
ஶ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு போய் ஸேவித்துவாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள;
‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய,
‘இது ஒரு அதிகாரம் இருந்தபடியென்! இந்நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று
ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டு போலே திருமேனி பாங்காயிற்று.

இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச்செயதார்,
இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம்செய்ய,
பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,
பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,

அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,

பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டு, ‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,

அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன,
மீளவும் பிள்ளை அத்தைக் கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,

“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச் செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன,
‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன,

பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை; ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளியிட்டருளத்
திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன். தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித்
தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றியருளி உலாவியருளும்போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும்
சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும்
‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’ என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் –
என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து
உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.

பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே
திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும்,
அவர் அருளிச் செய்தருளும் நல் வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய்,
ஆனந்த மக்நராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச் செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட,
இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்துருந்து தண்டனிட வேண்டுகையாலே
‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலியெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக்கடவோம்’
என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.

பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு ‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்; வேர்த்தபோது குளித்து, பசித்தபோது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால் உம்மைப் பரமபதத்தில் நின்றும் தள்ளிவிடப் போகிறார்களோ? இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்கவன்றோ உள்ளது” என்று அருளிச்செய்தார்.

முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி,
அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப்பூமரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு
திருவேங்கடமுடையானுக்குத் திருநந்தவநம் செய்கிறத்தைக் கண்டு
‘அந்ந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்ய ஸூரிகளை ஒரு விடத்திலே இருக்க வொட்டாமல்
கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க் கொண்டு ஏதுக்கு நலக்குகிறீர்;
அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திரு மாளிகையிலே நாள் தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள் அமுது செய்தருளின இலை
மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்;
அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து
*பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம். திருப்பூமரங்களை பாதியாமல் எழுந்தருளமாட்டீரோ?’ என்று அருளிச் செய்தார்.

அநந்தரம் அங்குத் தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து
அநந்தாழ்வானுடைய திருமடியிலே கண்வளர, அந்ந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க,
அவரும் ‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின
அவருடைய திருமாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச்செய்த உடனே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

இத்தால் சொல்லித்தென் என்னில்,
அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க, அதில் ஒரு தாத்பர்யமற்று
ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமானபடி சொல்லிற்று.

————

அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1

நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு எழுந்தருளாநிற்க,
திருக்காவேரி இருகரையும் ஒத்துப் பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள,
நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே
திக் ப்ரமம் பிறந்து, தோணி அமிழத்தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்;
ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப்பட்டுப்போகும்’ என்று
தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே தோணியை விட்டார்களில்லை.

அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து
‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக்கரையிலே விடு’ என்று சொல்லி,
அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார்.
அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக்கரையிலே சேர்ந்தேறிற்று.
அவ்வளவில் பிள்ளையும் ‘ஐயோ! ஒராத்மா தட்டுப்பட்டு போய்விட்டதே!’ என்று பலகாலும் அருளிச்செய்து வ்யாகுலப்பட்டருள,

அந்த ஸாத்த்விகையம்மை தோணியை விட்டு நாலடி எழப்போன வளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று,
இராக்குரலாகையாலே அருளிச்செய்கிறத்தைக் கேட்டு
‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப்பட்டருள வேண்டாம்; அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல்காட்ட,
பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாகவேணும்’ என்று திருவுள்ளம் பற்றி யருளித் தோணிக் காரனை விட்டு
அவளைக் கரையிலே அழைப்பித்துக் கொள்ள, அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனை யொழிந்து
வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே
‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப்போகிற போது தேவர் அங்கே வந்து ஒருகரைமேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’ என்று கேட்க,
பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவானபின்பு அதுவும் அப்படியேயாகாதோ’ என்று
அருளிச் செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச்செய்தருளுவர்.

வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹாஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,

அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க
வென்றொரு கோல்துறையையும் நமக்குத்தாரும்’ என்று திருவுள்ளம்பற்றியருள,

அவளும் ‘அடியேன் அப்படிச்செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச்செய்ய,
‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று அருளிச்செய்த வார்த்தையால் போராது,
எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றிதாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக்கொண்டு கொடுத்தருளவும்’ என்று
ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.

பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு அன்று
மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்
நம்பிள்ளையுடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும்,
ஶிஷ்ய ஸம்பத்தியையும் கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்றுகொண்டு போருவராயிருப்பர்.
அக் காலத்திலே அந்த பட்டர் ராஜஸ்தாநத்துக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு,
‘ஜீயா! நாம் ராஜகோஷ்டிக்கு போகிறோம்; கூடவாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக் கொண்டு ராஜஸ்தானத்துக்கேற எழுந்தருள,
ராஜாவும் பட்டரை எதிர்க்கொண்டு பஹுமாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக்கொண்டு
பெரிய திருவோலக்கமாயிருக்கிற வளவிலே,

ராஜா, தான் பஹு ஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும், பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்க வேணும் என்று விசாரித்து,
‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்தக்கிற பெருமாள்,
ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க,
பட்டர் அதற்கு உத்தரம் அருளிச்செய்யச் சிறிது விசாரிக்க வேண்டியிருக்க, அவ்வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக,
அவ்வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து,
‘ஜீயா! திருக்கலிகன்றி தாஸர் பெரிய வுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம் கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க,
ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன,

பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளியிருக்க,
ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன,
பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக்கேள்’ என்று
“ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ: குரூந்ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று
இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச்செய்ய,
ராஜாவும் போரவித்தராய், ‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று
ஶிர:கம்பம்பண்ணி மிகவும் ஶ்லாகித்து, மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள்,
அநேக தநங்களெல்லாத்தையும் கட்டிக்கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து,
‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று ஸத்கரித்துவிட,

பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக் கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு
ஜீயர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே
கொண்டுபோய்க் காட்டிக் கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச்செய்ய,
ஜீயரும் பட்டர் அருளிச்செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக் கொடுக்க,

நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து,
‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுக மண்டலத்தைப் பார்த்து
‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே
அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன,

‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன,

பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்யஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது;
ஆன பின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குலப்ரபாவத்துக்குத் தகுதியாகும்
தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையே யாகிலும், அசலகத்தே யிருந்து இத்தனை நாள் தேவரை
இழந்து கிடந்த மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு
“அஸூயாப்ரஸவபூ:” என்கிறபடியே அஸூயை பண்ணித்திரிந்த இவ்வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கையல்லது
வேறு எனக்கொரு கைம்முதலில்லை. ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று
கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க,

பிள்ளையும் பட்டரை வாரியெடுத்துக் கட்டிக் கொண்டு, விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தம்முடைய திருவுள்ளத்திலே
தேங்கிக்கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும் ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள,
இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல் பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி,
ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.

அக் காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள பட்டர் பிள்ளை யருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு,
தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க ‘இதேது?’ என்று கேட்டருள,
‘தேவரீர் இந்த உருத்திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன,
பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க,
நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி மஹாபாரத ஸங்க்யையாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு,
பட்டரைப் பார்த்து, ‘இதுவென்? நம்முடைய அநுமதியின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்தபடியே
திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன,

பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்யஸூக்தியை எழுதினதொழிய,
ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன,

பிள்ளை பட்டரைப் பார்த்து, ‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில்,
நம்முடைய நெஞ்சை எழுதப் போகிறீரோ?’ என்று வெறுத்தருளிச் செய்து,
‘உடையவர் காலத்திலே திருக்குருகைப்பிரான்பிள்ளான் திருவாய்மொழிக்கு ஶ்ரீவிஷ்ணுபுராண ப்ரக்ரியையாலே
ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை.
ஆன பின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் ஸபாதலக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால்
ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச்செய்து,
பட்டர் திருக் கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக் கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க,
அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.

அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரிய ஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக் கற்றிருக்கிற
பெரியவாச்சான் பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே
இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார்.

அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை
பகல்கேட்டு தரித்து, ராத்ரியில் எழுதித் தலைக்கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டுபோய் வைக்க,
நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள,

அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று விண்ணப்பம் செய்ய,

பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள, அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே
ஆனைக் கோலம் செய்து புறப்பட்டாப் போலே மிகவும் அழகாய், ஶ்ருத ப்ரகாஶிகை கட்டளையிலே
முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி,
வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி
‘நன்றாக எழுதினீர்; ஆனாலும் நம்முடைய அநுமதியின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத்தாரும்’ என்று
அவர் திருக்கையில் நின்றும் வாங்கி வைத்துக் கொண்டு

பின்பு தமக்கு அபிமதஶிஷ்யரான ஶ்ரீமாதவப்பெருமாள் என்று திருநாமத்தையுமுடையரான
ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும்,
இவ்வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே
“சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமெனவாங்கி முன்
நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று
நம்முடைய ஜீயர் தாமே அருளிச் செய்தருளினார்.
ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான வ்யாக்யாந கட்டளைகள் எல்லாம்
உபதேச ரத்தின மாலையிலே தெளியக் காணலாம்.

ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம் திருநாட்டுக்குக்கெழுந்தருளினார்.
அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடிவிளக்குவித்துக்கொள்ள,
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து
‘திருக்கலிகன்றிதாஸர் பரம்பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர் தலை
ஷௌரம் பண்ணிக் கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன,

பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூரகுலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன,

அவரும் பட்டரைப் பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான்
கூரகுலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸக்ருத்யமான
மோவாயும் முன்கையும் வபநம் பண்ணுவித்துக்கொள்ளவேண்டியிருக்க,
அத்தைச் செய்யாதே ஶிஷ்யபுத்ரர்களுடைய க்ருத்யமான தலைமாத்ரம் ஷௌரம் செய்வித்துக் கொண்டது
உங்களுடைய கூரக்குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து ‘உம்முடைய திருக்கலிகன்றிதாஸர் போய்விட்டாரே!
இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள் உபகார ஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச் செய்கிறத்தைக் கேட்டு ‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில் யாவதாத்மபாவியோ?
இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று, பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் தெளிந்து, போர வித்தராய்,
பட்டர் திருவடிகளிலே திருத்தி, தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக் கொண்டு
ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக் கொண்டு
கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியா நிற்கும்;
அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள்.

சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து,
கல்லிட்டெறியாதே, ஏறித்துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.

பட்டருக்கு அதிபால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே விருதூதிவர,
பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன,

அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன,

பட்டர் இரண்டு திருக்கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன,
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லமாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க,

பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன,
அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன,

பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று விருதூதித் திரியமாட்டாதே
அஜ்ஞனாய் விட்டாயே! இனிப்போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளி விட்டார்.

பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ராதாரணத்துக்கு
ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞை பண்ண, ராஜாவும் மஹாஸமர்த்தனாயிருக்கையாலே
இத்தை நன்றாக அறியவேணும் என்று பட்டரைப் பார்த்து
‘பட்டரே! தப்த முத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன,

அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன,

‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன,

பட்டர் ‘என் தோளைப்பாரீர்’ என்று திருக்தோளும் திருவிலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட,
ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து,
ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டிவிட்டார் என்று
இவ்வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச்செய்வார்கள்.

ஆகையாலே
‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்திவ்வையமெல்லாம் எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமானிலங்கு
சிட்டர்தொழும் தென்னரங்கேசர் தம்கையில் ஆழியை நானெட்டனநின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று
இந்த திருநாமமும், ஶ்ருதிவாக்யமும்
“விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்தசக்ரமுத்ராம், புஜயேவமமைவ பூஸுராணாம் பகவல்லாஞ்சந்தாரணே ப்ரமாணம்” என்று
பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து.
இவ்வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில்
இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களேயாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே
ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.

———-

அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் –
ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)

மலைக் குனிய நின்றபெருமாள் என்னும் திருநாமத்தையுடையராய் இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க்
கோயிலிலே நித்யவாஸமாக எழுந்தருளியிருக்கிற பட்டருடைய திருத்தகப்பனார் நம்முடைய ஜீயருக்குத்
திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய்,
மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாடப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர்! இங்கே வாரும்’ என்று
நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக்கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர்.

அவ்வளவன்றிக்கே
“நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கு
வெள்ளிக்கிழமை வளர் பக்கம் நாலாம் நாளில் செல்வ மிகு திருமண்டபத்தில் செழுந்திருவாய்மொழிப் பொருளைச்
செப்புமென்று வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாளமுனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே
பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப்பவித்திரத் திருநாள் எழுந்தருளி
அணியரங்கன் திருமுற்றத்திலே பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திருவோலக்கமாகத் தம்மை ஸேவித்து
மங்களாஶாஸநம் பண்ணிக்கொண்டு நிற்கிறவளவிலே பெருமாள் தாமே நம்முடைய ஜீயரைத் தனித்து அருளப்பாடிட்டருளி,
ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி,
‘நம்முடைய பெரிய திருமண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று
திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநைமுதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே
பெரிய திருமண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருந்து நம்முடைய பெரிய ஜீயரைத்
திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றியருளினார்.

ஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ்விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக
ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிறபோது
முன்பு போலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப் பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறியருளி
திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச்செவி சாற்றியருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம்.

ஆகையாலே
“நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று
நம்முடைய ஜீயர்தாமும் தமக்குப் பெருமாள் செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும்
தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகாரஸ்ம்ருதி பண்ணியருளினார்.

‘வலம்புரியாயிரம் சூழ்தரவாழி மருங்கொளுரு செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர்
குலம் பல சூழ் மணவாளமாமுனி கோயிலில் வாழ நலங்கடல் வண்ணன் முன்னே தமிழ் வேதம் நவிற்றனனே.
தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார் சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என்
ஆராவமுதனையான் மணவாள மா முனியை யழைத்து ஏரார் தமிழ் மறை இங்கேயிருந்து சொல் என்றனனே” என்று
இத்யாதிகளாலே
நம்முடைய முதலிகளும் ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம்
ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.

இப்போது ஸ்வாசார்யவைபவமும் சொல்லுவானென் என்னில்,
“குரும் ப்ரகாஶயேந்நித்யம்”,
“எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”,
“வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக்கடவதிறே.

ஒரு நாள் நம்பிள்ளை பகவத் விஷயம் அருளிச் செய்த கோஷ்டி கலைந்த வளவிலே பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு
‘இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச் செய்ய வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச்செய்ய,
‘அப்படியன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய,
பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ? அத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன,
‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம்,
அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம்,
அவர்களுடைய முகமலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ஜீயரை உகந்தருளினார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 9 – நம்பிள்ளை வைபவம் 2

நம்பிள்ளை காலத்திலே முதலியாண்டானுடைய திருப்பேரனார் கந்தாடை தோழப்பர் நம்பிள்ளையுடைய வைபவத்தைக் கண்டால்
அஸூயையாலே பொறுக்க மாட்டாமல் இருப்பதாய், தோழப்பர் ஒருநாள் கோயிலுக்குள்ளே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந்தருள,
நம்பிள்ளையும் முதலிகளும் பெருமாளை ஸேவிப்பதாகப் பெருந்திரளோடு கோயிலுக்குள்ளே எழுந்தருள,
தோழப்பர் அந்த ஸம்ருத்தியைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சீறிப் பெருமாள் ஸந்நிதியிலே நம்பிள்ளையை அநேகமாகப் பரிபவிக்க,
நம்பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக்கொண்டு பெருமாளை ஸேவித்துப் புறப்பட்டெழுந்தருள,

அந்தச் செய்தியை ஜ்ஞாநாதிகையாயிருக்கிற தோழப்பர் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திருமாளிகைக்குள்ளே செய்கிற கைங்கர்யங்களையும் விட்டு, வெறுத்தருளியிருக்க,
அவ்வளவிலே தோழப்பரும் பெருமாளை ஸேவித்து மீண்டு திருமாளிகைக்கெழுந்தருள,
தேவிகள் முன்புபோலே எதிரே புறப்பட்டு ப்ரியத்துடனே தமக்கொரு கைங்கர்யங்களும் பண்ணாமையாலே
தோழப்பர் தம்முடைய தேவிகளைப் பார்த்து ‘உன்னை நாம் அங்கீகரித்தவன்று தொடங்கி இன்றளவாக
ஆசார்ய ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு போந்தாய், இன்று உதாஸீநரைப்போலே இராநின்றாய். இதுக்கடி ஏது?’ என்று கேட்க,

தேவிகள் தோழப்பரைப் பார்த்து, ‘வாரீர்! ஆழ்வார் தம்முடைய அவதாரம்போலே ஒரு அவதார விஶேஷமாய்,
பெருமாளுக்கு ப்ராண பூதராயிருந்துள்ள நம்பிள்ளையைப் பெருமாள் ஸந்நிதியிலே கூசாமல் அநேகமாகப் பரிபவித்து
இப்படிச் செய்தோம் என்கிற பயாநுதாபங்களுமற்று, உஜ்ஜீவிக்க வந்திருக்கிற உம்மோடு எனக்கென்ன ஸம்பந்தமுண்டு?
நீர் என்னை வெறுத்தாராகில் என்னுடைய மாதாபிதாக்கள் உம்முடைய கையில் காட்டித்தந்த என்னுடைய ஶரீரத்தை
உமக்கு வேண்டினத்தைச் செய்து கொள்ளும்.
என்னுடைய ஆத்மாவை எங்களாசார்யர் அடியிலே அங்கீகரித்தருளினவன்றே நான் உஜ்ஜீவித்தேன்,
ஆகையாலே ‘பத்மகோடிஶதேநாபி நக்ஷமாமி கதாசந’ என்று பாகவத நிந்தை பண்ணினவர்களை
ஒருகாலும் க்ஷமிப்பதில்லை என்று பெருமாள்தாமே அருளிச் செய்த திருமுகப்பாசுரத்தை அறிந்தும்,
அறியாதவராயிருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாஸம் கூடாது; ஆகையாலே நான் என் இஷ்டத்திலே இருந்து ஈடேறிப்போகிறேன்” என்ன,

தோழப்பரும் தேவிகள் சொல்லுகிற வார்த்தைகளைப் கேட்டும் சற்று போதிக்கும் திகைத்து எழுந்தருளியிருந்து,
பெரிய வித்வானாகையாலும், குலப்ரபாவத்தாலும் அஸூயையால் வந்த திருவுள்ளத்தில் வந்த கலக்கம் போய்,
தெளிந்து தேவைகளைப் பார்த்து ‘நீ சொன்னதெல்லாம் ஒக்கும்; நாம் தப்பும் செய்தோம். இனிமேல் செய்ய அடுக்குமது ஏது?’ என்ன,

தேவிகளும் ‘ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே கொள்ளீர். கெடுத்தவிடத்தில் தேடீர்’ என்ன,

தோழப்பரும் ‘அதுக்குப் பொருள் ஏது?’ என்ன,

தேவிகள் ‘பரம க்ருபையாளரான நம்பிள்ளை திருவடிகளிலே சென்று ஸேவித்து, அவரை க்ஷாமணம் பண்ணுவித்துக் கொண்டு
அவர் க்ருபை பண்ணியருள ஈடேறுவீர்’ என்ன,

தோழப்பரும் ‘நான் இப்போது அவரை மஹத்தான பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவித்து
இப்போது அவர் ஸந்நிதியிலே போய் நிற்கவென்றால் எனக்கு லஜ்ஜாபயங்கள் வர்த்தியா நின்றது;
நீ கூட வந்து க்ஷமிப்பிக்க வேணும்’ என்ன,

தேவிகள், தோழப்பர் அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘அப்படியே செய்கிறேன்’ என்று கடுக எழுந்திருந்து
அவரையும் கூட்டிக்கொண்டு நம்பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகப் புறப்படுகிறவளவிலே

நம்பிள்ளை செய்தபடி –
கோயிலுக்கு [கோயிலிலிருந்து] எழுந்தருளினபின்பு முதலிகளெல்லாரையும் ‘உங்களிடங்களிலே போங்கோள்’ என்றருளிச் செய்து,
பகலெல்லாம் அமுது செய்தருளாமல் தம்முடைய திருமாளிகையளவிலே எழுந்தருளியிருந்து,
போது அஸ்த்தமித்தவாறே ஒத்த {ஒற்றைத்} திருப்பரிவட்டத்துடனே முட்டாக்கிட்டுக்கொண்டு தாம் ஒருவருமே எழுந்தருளி,
கந்தாடை தோழப்பர் திருமாளிகை வாசலிலே கைப்புடையிலே வந்து கண்வளர்தருள,

தோழப்பரும் தேவிகளும் திருவிளக்கையும் ஏற்றிக்கொண்டு பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகத் திருமாளிகை வாசலிலே
புறப்பட்டவளவிலே திருவிளக்கொளியிலே ஒரு வெள்ளை கைப்புடையிலே கிடக்கிற அத்தைக் கண்டு
தோழப்பர் ‘இங்கு ஆர் கிடக்கிறார்?’ என்று கேட்க,

பிள்ளை ‘அடியேன் திருக்கலிக்கன்றிதாஸன்’ என்ன,

அவ்வளவில் தோழப்பர் ‘இதுவென்? நீரிருந்தபடியென்?’ என்று திகைத்து, பிள்ளையைப் பார்த்து,
‘மஹாதேஜஸ்வியான நம்மைப் பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவிக்கலாவதே என்கிற கோபாதிஶயத்தாலே
நம்முடைய வாசலிலே மூர்க்கம் செய்வதாக வந்து கிடக்கிறீரோ?’ என்ன,

பிள்ளை தோழப்பரைப் பார்த்து ‘அடியேன் அப்படிச் செய்யவில்லை’ என்ன,

‘ஆகில் இங்கு வந்தது கிடப்பானென்?’ என்ன,

பிள்ளை அருளிச்செய்தபடி – ‘பெரியபெருமாள் ஸந்நிதியிலே முதலியாண்டானுடைய திருப்பேரனாரான தேவரீர்
திருவுள்ளம் கலங்க வர்த்தித்த மஹாபாபியான அடியேனுக்கு தேவர் திருவாசலல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன்’ என்ன,

இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண்வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு,
அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு ‘இதோர் அதிகரமிருந்தபடி என்!’ என்று போரவித்தராய்,
பிள்ளையை வாரி எடுத்தணைத்துக்கட்டிக்கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்;
இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று –
‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டுபுக்கு,
தாமும் தேவிகளுமாகப் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத்
தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக்கொண்டு
தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று இவ்வ்ருத்தாந்தம்
“துன்னு புகழ்கந்தாடை தோழப்பர் தம்முகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் பின்னை
உலகாரியனென்னும் பேர் நம்பிள்ளைக்கோங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்” என்று
உபதேசரத்தினமாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.

‘நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாயவாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீமாதவனடிக் கன்பு செய்யும்
தஞ்சத்தொருவன் சரணாம் புயமென் தலைக்கணிந்தே” ,

“நமாமி தௌ மாதவ ஶிஷ்ய பாதௌ யத் ஸந்நிதிம் ஸுக்தி மயீம் ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்யம் ஸ்திதி மாத்ரியந்தே வைகுண்ட ஸம்ஸார விரக்த சித்தா: ||

ஶ்ருத்வாபி வார்த்தாஞ்ச யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட்யந்தராணாம் ப்ரதமாபவந்தி|
ஶ்ரீமத் கலி த்வம்ஸந்தாஸநாம்நே தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணவாய” என்றிறே
நம்பிள்ளையுடைய வைபவம் இருப்பது.

இப்படி லோகாசார்யர் என்று திருநாமத்தையுடையரான நம்பிள்ளைக்கந்தரங்க ஶிஷ்யரான வடக்குத்திருவீதிப்பிள்ளை
தாமும் தேவிகளும் விரக்தராய்க் கொண்டு எழுந்தருளியிருந்து நம்பிள்ளைக்கு ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்
ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே
ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத்திருவீதிப்பிள்ளை திருமாளிகைக்கெழுந்தருள,
அங்குள்ளாரெல்லாரும் பிள்ளை திருவடிகளிலே வந்து தண்டனிட, அப்போது வடக்குத்திருவீதிப்பிள்ளை தேவிகள்
ஈரப்புடவையுடனே தண்டனிட்டு நிற்க,

நம்பிள்ளை அருகுநிற்கிற ஸ்த்ரீஜனங்களைப் பார்த்து ‘இந்தப் பெண் ஈரப்புடவையுடன் நிற்பானென்?’ என்ன,
அவர்கள் சொன்னபடி – ‘நாலுநாளும் தூரஸ்தையாயிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’ என்ன,

அவ்வளவில் நம்பிள்ளை மிகவும் திருவுள்ளம் உகந்து அவளை ‘பெண்ணே! இங்கே வாரும்’ என்றழைத்துத்
தம்முடைய திருக்கையாலே அவளுடைய திருவுதரத்தை ஸ்பர்ஶித்து
‘என்னைப்போலே ஒரு பிள்ளையைப் பெறுவாயாக’ என்று திருவுள்ளம் பற்றியருளினார்.

ஆகையாலே அத்தைக் கண்டு அதுக்குப் பின்பு வடக்குத்திருவீதிப்பிள்ளை தமக்குக் குமாரர் உண்டானால்
ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம் என்றறிந்து ததுநுகுணமாக வர்த்திக்க, தத்ஸம்வத்ஸரத்திலே அவருடைய தேவிகள்
திருவயிறுவாய்த்து குமாரர் திருவவதரிக்க, அந்தக் குமாரரை லோகாசார்யர் என்று
ஆசார்யரான நம்பிள்ளையுடைய திருநாமம் சாற்றி யருளினார்.

இப்படி நம்பிள்ளையுடைய அருளாலே திருவவதரித்து வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யரும்
தம்முடைய பரமக்ருபையாலே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்கவேணும் என்று திருவுள்ளம் பற்றியருள,
தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஶ்ரீவசநபூஷணம் முதலாக அநேகப்ரபந்தங்கள் இட்டருளினார்.

வடக்குத்திருவீதிப்பிள்ளைக்கு பின்னையும் ஒரு குமாரர் திருவவதரிக்க, அவரை அழகியமணவாளப்பெருமாள் நாயனார்
என்று திருநாமம் சாற்றியருளினார். அவர் ஆசார்யஹ்ருதயம் இட்டருளினார்.

ஆக இப்படி அவதார விஶேஷமாயிருந்துள்ள லோகாசார்யருடைய திருவடிகளிலே தம்முடைய திருத் தகப்பனார்
திகழக் கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாதரண்ணரையும் அஞ்சு திருநக்ஷத்ரத்திலே ஆஶ்ரயிப்பித்தார்கள்
அண்ணருடைய பெரியோர்கள் என்று அஸ்மதாசார்யோக்தம்.

———–

அந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை

உடையவர் எழுந்தருளியிருக்கிற காலத்திலே அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஒருக்கால் திருமேனி பாங்கின்றிக்கே
கண் வளருகிற போது கூரத்தாழ்வான் அவரை அப்போதைக்கப்போது எழுந்தருளி ஆராயாமல்,
நாலு நாள் விளம்பித்து எழுந்தருளி, ‘தேவர் திருமேனியில் பாங்கில்லாமை செய்தபடி எப்படி’ என்று கேட்டருள,

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஆழ்வானைப் பார்த்து, ‘தேவரும் அடியேனும் இத்தனை நாளும் இருந்த ஸ்நேஹத்துக்கு
அடியேன் ஒரு நாள் தலை நொந்திருந்தேன் என்று கேட்டால் அப்போதே எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்,
ஆழ்வான்! தேவரீர் இவ்வாத்மாவை உபேக்ஷித்திருந்த நெஞ்சாறல்,
அடியேன் போய் ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவித்தவன்று தீரும்’ என்றருளிச் செய்தார்.
இந்த ப்ரஸங்கம் *பொன்னுலகாளீரோ என்கிற திருவாய்மொழி ஈட்டில் ஸுஸ்பஷ்டம்.

வடுகநம்பி உடையவருக்குப்பின்பு சிறிது நாள் எழுந்தருளியிருந்து பின்பு திருநாட்டுக்குகெழுந்தருளினவாறே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டருடனே ‘வடுகநம்பி திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று விண்ணப்பம் செய்ய,
அவரும் ‘வடுகநம்பியை அப்படிச் சொல்லலாகாது காணும்’ என்ன,

‘ஏன், வடுகநம்பியை திருநாட்டுக்கெழுந்தருளினார் என்று சொல்லலாகாதோ?’ என்ன,

‘ஆகாது காணும், சரகுதின்னிகளான உபாஸகரோடு ப்ரபந்நரோடு உபாசியரோடு {?} வாசியற,
எல்லார்க்கும் போகிற பொதுவான தேஶங்களன்று காணும் அவர் எழுந்தருளுவது’ என்ன,

‘ஆனால் திருநாடொழிய அவருக்கு ப்ராப்யபூமி வேறே உண்டோ?’ என்ன,

‘உண்டு காணும், வடுகநம்பி எம்பெருமானார் திருவடிக்கெழுந்தருளினார் என்று சொல்லீர்’ என்று
அருளிச் செய்தார் பட்டர் என்று அஸ்மதாசார்யோக்தம்.

‘அத்ர பரத்ரசாபி நித்யம் யதீயசரணௌ ஶரணம் மதீயம்” என்று ஆளவந்தார் ஸ்தோத்தரத்திலே அருளிச்செய்தார்.
‘விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலைத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனார் அருளிச் செய்தார்.

ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும், கூரத்தாழ்வான் குமாரரான பட்டரும், பரமாசார்யரான ஆளவந்தாரும்,
உடையவரும் கூரத்தாழ்வான் முதலான இவர்களுடைய திவ்ய வைபவத்தை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபசரித்த
ஸர்வஜ்ஞராயிருக்கும் பிள்ளை அமுதனாரும் இப்படி ஏக கண்டமாக அருளிச் செய்கையாலே
சரமாதிகாரிகளுக்கு நித்யவிபூதியிலே போனாலும்
“பொதுநின்ற பொன்னங்கழ”லாய்,
“தேவாநாம் தாநவாநாஞ்ச பர்வதமாயிருந்துள்ள ஈஶ்வரனைக்காட்டிலும், ஆத்மாவுக்கு அஸாதரணஶேஷியாய்,
லீலா விபூதியிலே தொடங்கி, ‘சரணாகதி தந்த தன்னிறைவன்’ என்கிறபடியே அஸாதரண ஶேஷியாய்,
சரம பர்வமாயிருந்துள்ள ஆசார்யன் திருவடிகளே பரம ப்ராப்யமாயிருக்குமென்னும் இவ்வர்த்தம் உபபந்நம்.

ஆகையாலேயிறே ‘எதிராசா என்றுன்னடி சேர்வன் யான்’,
‘எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட்கொள்உகந்து’ என்று
நம்முடைய ஜீயர் இப்படி அருளிச் செய்தருளிற்று.

ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அமுது செய்தருளா நிற்க, கிடாம்பி யாச்சான் அவருக்குத் தண்ணீரமுது திருப்பவளத்திலே
பரிமாறுகிறவர் செவ்வையிலே நின்று பறிமாறாமையாலே அந்த ஶ்ரீவைஷ்ணவருடைய திருக்கழுத்து சற்று சாய,
அத்தை உடையவர் கண்டருளி, ஆச்சானைத் தம்முடைய திருக்கையாலே அறைந்து,
‘ஶ்ரீவைஷ்ணவருக்குப் பாங்காகப் பரிமாறிற்றில்லையே!’ என்று கோபிக்க,
ஆச்சானும் உடையவர் திருவடிகளிலே தண்டனிட்டு,
“பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாய”னன்றோ தேவரீர் – என்று விண்ணப்பம் செய்து
ஆச்சானும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

ஒருநாள் கூரத்தாழ்வான் விஷயமாக உடையவர் சீறியருள, நடுவு நின்றவர்கள் ஆழ்வானைப் பார்த்து
‘உம்மை உடையவர் நிக்ரஹித்தாரே, இப்போது நீர் என்ன நினைக்கிறீர்?” என்ன,
ஆழ்வான் அருளிச்செய்தபடி – “இவ்வாத்மா பாஷ்யகாரர்க்கே ஶேஷமான பின்பு அவருடைய
விநியோக ப்ரகாரங்கொண்டு அடியேனுக்குக் கார்யமென்?’ என்றார் என்னும் இவ் வ்ருத்தாந்தம்
மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச்செய்தார்.

பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் முதலியாண்டான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஶிஷ்யலக்ஷணம் இருக்கும்படி என்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆண்டான் அருளிச்செய்தபடி –
ஆசார்ய விஷயத்தில் ஶிஷ்யன் பார்யா ஸமனுமாய், ஶரீர ஸமனுமாய், தர்ம ஸமனுமாய் இருக்கக்கடவன்.
அதாவது சொன்னத்தைச் செய்கையும்,
நினைத்ததைச் செய்கையும்,
நினைவாயிருக்கையும் என்றருளிச்செய்தார்.

அநந்தரம் பிள்ளை கூரத்தாழ்வான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஆசார்யலக்ஷணம் எங்ஙனே இருக்கும்?’
என்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வான் அருளிச்செய்தபடி –
ஶிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்ரு ஸமனுமாய், ஶரீரி ஸமனுமாய், தர்மி ஸமனுமாய் இருக்கக்கடவன்.
அதாவது
ஏவிக் கொள்ளுகையும்,
எடுத்து இடுவிக்கையும்; அதாவது
அசேதநத்தை நினைத்தபடியே விநியோகங்கொள்ளுமாப்போலே விநியோகங்கொள்ளுகையும்,
எடுத்துக் கொள்ளுகையும் என்றருளிச்செய்தார். இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவார்த்தாமாலையிலே உண்டு.

ஒருநாள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் கூடி எழுந்தருளியிருந்து சில அர்த்த விஶேஷங்களை அநுஸந்தியாநிற்க,
‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?
க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?” என்று இங்ஙனே ப்ரஸங்கமாக,
முதலியாண்டான் ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
கூரத்தாழ்வான் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
ஆண்டான் “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்” என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வாநுவர்த்தி ப்ரஸந்நாசார்யநாலே ஆகவேணும் என்ன,
ஆழ்வான் ‘அங்ஙனன்று; “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்
குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி” என்று ஶ்ரீமதுரகவியாழ்வார் நமக்கெல்லார்க்கும்
ஸ்வாநுவர்த்தி கூடாமையாலே க்ருபாமாத்ரத்தாலே மோக்ஷமாகவேணும்’ என்றருளிச்செய்தார்.
ஆண்டானும் ‘அப்படியேயாம்’ என்று மிகவும் ப்ரீதரானார் என்று அஸ்மாதாசார்யோக்தம்.

க்ருமிகண்டன் வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளை சாற்றி மேல்நாட்டுக்கெழுந்தருளின போது
பெருமாள் பரிகரத்தார் தங்களை நெருக்கிக்கொண்டு போருகையாலே விஷமத்துக்காக
‘உடையவராலேயன்றோ இத்தேஶத்துக்குக் கலக்கங்கள் விளைந்தது, ஆகையாலே உடையவர் திருவடிகளில்
ஸம்பந்தமுள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்கவொண்ணாது’ என்று திவ்யாஜ்ஞை இட்டுவைத்தார்கள்.

கூரத்தாழ்வான் தர்ஶநத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமிகண்டனிடத்திலே புக்கு அவனாலே திருநயநங்களுக்கு உபத்ரவம் வந்தது
மீண்டு கோயிலுக்கெழுந்தருளி அங்குத்தைச் செய்தியை அறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தருளினவளவிலே,
திருவாசல் காக்கிறவர்களிலே ஒருவன் ஆழ்வானை ‘உள்ளே புகுராதே’ என்று தகைய,
ஒருவன் அவரைத் தகையாதே ‘கோயிலுக்குள்ளே புகுரும்’ என்ன,
அவ்வளவில் ஆழ்வான் திகைத்து நின்று ‘இங்குற்றை விசேஷம் ஏது?’ என்று திருவாசல் காக்குமவர்களைக் கேட்க,
அவர்களும் ‘எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்களொருவரையும் பெருமாளை ஸேவிக்க விடவேண்டாம்
என்று திவ்யாஜ்ஞையிட்டுத் தகைந்துகிடக்கிறது’ என்ன,

‘ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்?’ என்ன,

அவர்கள் ‘ஆழ்வானே! நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல குணங்களை உடையவராகுயாலே புகுரச்சொன்னோம்’ என்ன,

ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜல சந்திரனைப் போலே நடுங்கி, சிவிட்கென்று நாலடி மீண்டு,
‘ஐயோ! ஆத்மகுணங்கள் உண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று;
எனக்குண்டான ஆத்மகுணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்து கொள்ளுகைக்கு ஹேதுவாய்விட்டதோ’
என்று வ்யாகுலப்பட்டுத் தம்மை மிகவும் நொந்துகொண்டு ‘எனக்குப் பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமே அமையும்;
தத் ஸம்பந்தத்தை யொழியப் பெருமாளை ஸேவிக்க வேண்டுவதில்லை’ என்று மீண்டு
ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தது அவதரித்தருளினான் என்று ஆளவந்தார் அருளிச் செய்தருளுவர் என்னுமது
திருவிருத்த வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸுநந்த ஸுநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ என்று
இவ்வாழ்வாரை பகவதவதாரமாக ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 11- ஸ்ரீஎம்பார் மற்றும் கொங்கில் பெரியபிராட்டியார் நிஷ்டை

வட்டமணி குலத்தில் எம்பார் மஹா வித்வானாய், மஹா விரக்தராய், மிகவும் ஆசாரயுக்தராய் இருக்கச் செய்தே
ஶைவாகமத்திலே புகுந்து ஶிவபக்தியிலே மண்டி விழுந்து, அலந்த கொட்டையும் பூண்டு காளஹஸ்தியில்
ஒரு ருத்ராலயத்துக்கு சடங்கியாய், ஸர்வத்துக்கும் கர்த்தாவாய், குச்சியும் தாளும் எப்போதும் கையிலே பிடித்துக் கொண்டு
இரண்டாம் முத்தமிழ் விரகனான ஸம்பந்தன் என்னும்படியே பேயன்பாட்டுப்பாடி, காளஹஸ்தியிலே வர்த்திக்கிற காலத்திலே
திருமலையில் நின்றும் பெரிய திருமலைநம்பி ஒருகார்யத்திலே எழுந்தருளி, காளஹஸ்தி ஆஸந்நமாக,
ஒரு தோப்பிலே விட்டு எழுந்தருளியிருக்க,

அவ்வளவிலே எம்பாரும் ருத்ரனுக்குப் பூப்பறிப்பதாகப் பெரியதொரு பூக்கொடலையும் கழுத்திலே கட்டிக்கொண்டு
ருத்ரப்ரபாவமான பாட்டுக்களையும் கதறிக்கொண்டு, திருமலைநம்பி எழுந்தருளியிருக்கிற தோப்பிலே
நிறைய பூத்து நிற்பதொரு பாதிரியிலேயேறிப் பூப் பறியா நிற்க,

திருமலைநம்பி எம்பாருடைய ஶிவபக்தியில் பூத்த{ஊ}த்தைக்கண்டு ‘ஐயோ! இவ்வாத்மா அதிக்ஷுத்ரமான அப்ராப்த விஷயத்தில்
ப்ராவண்யங்களை ஸவாஸநமாக விட்டு ஆத்மாவுக்கு வகுத்த ஶேஷியான ஶ்ரிய:பதியைப் பற்றினானகில்
பெரிய வித்வானாகையாலும், அதிவிரக்தனாகையாலும் லோகத்துக்கு மிகவும் உபகாரகனாம்’ என்று திருவுள்ளம் பற்றித்
தாமும் முதலிகளும் எம்பார் பூப்பறிக்கிற பாதிரிக்கு ஆஸந்நமாக எழுந்தருளியிருந்து
ஶ்ரிய:பதி நாராயணனே பரதத்வம் என்று சொல்லுகிற வேதாந்த வாக்யங்களை முதலிகளும் தாமும் ஒருவர்க்கொருவர் அநுபாஷிக்க,

எம்பார் ஆலயத்திலுண்டான கார்யங்களையும் பூப்பறிக்கிறத்தையும் மறந்து இவர்கள் அருளிச்செய்கிற
திவ்யஸுக்திகளைச் செவி மடுத்துக் கேட்டு ‘இதொன்று இருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
நெடும்போது கேட்டுக்கொண்டு திகைத்து நிற்க,

நம்பியும் எம்பாருடைய ஆபிமுக்யத்தைக் கண்டு ‘இன்னமும் ஆழ்வாருடைய திவ்ய ஸூக்தியிலே ஒன்றைச் சொல்லித்
திருத்தக்கடவோம்’ என்று திருவுள்ளம்பற்றி, “தேவரும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவனெம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்று பெருக்க நொந்து அருளிச்செய்ய,
எம்பாரும் தமிழுக்கு மஹாநிபுணராகையாலே இத்தையும் கேட்டு, அப்போதே தத்த்வஸ்திதியையும் நன்றாக அறிந்து
‘தகாது, தகாது’ என்று பாதிரியின்மேலே நின்று பூக்கொடலையும் சுழற்றி எறிந்து அரைகுலைய தலைகுலைய இறங்கி
‘இத்தனை காலமும் பெருங்கையாற் குடமெடுத்துப் பேய்ச்சுரைக்கு நீர் சொரிந்து கெட்டேன் கெட்டேன்’ என்று கூப்பிட்டு
நம்பி திருவடிகளிலே விழ,

நம்பியும் தான் நினைத்த காரியம் அப்போதே கைகூடுகையாலே மிகவும் திருவுள்ளமுகந்து
எம்பாரையும் ‘தீர்த்தமாடிவாரும்’ என்ன,
அவரும் எலந்தைக்கொட்டைவடங்களையும் அறுத்தெறிந்து பாஷண்ட வேஷத்தையும் கழித்து, தீர்த்தமாடி ஈரப்புடவையோடே
தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோன்ற வந்து நிற்க, நம்பியும் எம்பாரளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து
அப்போதே அவர்க்கு பஞ்சஸம்ஸ்காரமும் பண்ணி, த்யாஜ்யோபாதேயங்களையும் தெளிய அறிவித்து,
‘புறம்புண்டான பற்றுக்களையெல்லாத்தையும் ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப்பற்றி நம்முடைய தர்ஶநத்திலே
ஊற்றமுண்டாய் வாழும்’ என்று அருளிச்செய்ய,
அப்படியே எம்பாரும் க்ருதார்த்தராய், நம்பியை ஸேவித்துக்கொண்டு திருமலைக்கெழுந்தருளத்தேட,

அவ்வளவில் காளஹஸ்த்தியில் பாஷண்டிகளெல்லாரும் கூடிவந்து ‘எங்களுக்கு ஸர்வத்துக்கும் கர்த்தாவான நீர்
போகவொண்ணாது’ என்று எம்பாரைத் தகைய,
அவரும் ‘உங்கள் குச்சியும் தாளும் இதோ பிடியுங்கோள்’ என்று தூரத்திலே நின்று அவர்கள் மேலே எறிந்து
‘காளஹஸ்த்தியாகிற சுடுகாட்டை நாமினிப் புரிந்துபாரோம்’ என்று அருளிச்செய்து,
பிராட்டி இலங்கை நின்றும் புறப்பட்டாப்போலே அங்குள்ள பற்றுக்களை அடைய ஸவாஸநமாகவிட்டுப்
பெரிய ப்ரீதியோடே முக்தர் பரமபதத்தைக் குறித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஹார்த்தன் வழிநடத்தப் போமாப்போலே
திருமலை நம்பியை ஸேவித்துக்கொண்டு கலியுக வைகுண்டமான திருமலைக்கெழுந்தருளி,
நம்பிக்கு மிகவும் அந்தரங்கராய் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக்கொண்டு வாழுகிற காலத்திலே,

உடையவர் திருமலைக்கெழுந்தருளி திருமலைநம்பி ஶ்ரீபாதத்திலே ஶ்ரீராமாயணத்துக்கு ஸம்ப்ரதாயார்த்தம் கேட்டு
மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளுகிறபோது நம்பியும் உடையவர் அவதார விஶேஷமென்றறிந்து மிகவும் ஆதரித்து
ஆளவந்தாரைப்போலே கண்டு தம்முடைய புத்ராதிகளையும் உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்து
‘தேவரீருக்கு ஏதேனுமொன்று ஸமர்ப்பிக்கவேணும்’ என்ன,

உடையவரும் எம்பாருடைய ஆசார்ய ப்ரேமத்தைக் கண்டு திருவுள்ளமுகந்து ‘எம்பாரைத் தந்தருள வேணும்’ என்ன,

நம்பியும் எம்பாரை உடையவருக்கு உதகதாரா பூர்வமாகக் கொடுத்தார்.
அதுக்குப்பின்பு எம்பார் உடையவரை ஸேவித்துக்கொண்டு திருவரங்கத்துக்கு நாலஞ்சு பயணம் எழுந்தருள,
நம்பியைப் பிரிந்தது எம்பார்க்குத் திருமேனி ஶோஷிக்க, உடையவர் எம்பாரைப் பார்த்து ‘உமக்கிப்படி ஆவானென்’ என்ன,
‘அங்குத்தையேறப்போம்’ என்ன, எம்பாரும் முன்பு நாலஞ்சு பயணமும் ஒரு பயணமாக மீண்டு
திருமலைக்கு எழுந்தருளி நம்பி திருவடிகளிலே தண்டனிட்டுநிற்க,
நம்பியும் எம்பாரைப் பார்த்து ‘உதகபூர்வமாக உம்மை உடையவருக்குக் கொடுத்துவிட்டோமே;
அவரை விட்டு நீர் இங்கு வருவானென்?’ என்ன,
எம்பாரும் தம்முடைய திருமேனி ஸ்வபாவத்தை விண்ணப்பம் செய்ய,
நம்பியும் ‘விற்றபசுவுக்குப் புல்லிடுவாருண்டோ? நீர் உடையவர்க்குத்தானே அடிமை செய்து கொண்டிரும்’ என்று
ஒருபோதும் ப்ரஸாதமிடாமல் தள்ளிவிட்டார்.
எம்பாரும் அங்கு ஆசையற்று நமக்கினி உடையவர் திருவடிகளே தஞ்சம்’ என்று அறுதியிட்டுக் கோயிலுக்கெழுந்தருளி,
உடையவரை ஸேவித்துக் கொண்டு மிகவும் ப்ரீதராய் வாழுகிற காலத்திலே,

ஒருநாள் உடையவரும், முதலிகளும் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, முதலிகளெல்லாரும் எம்பாருடைய
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லித் தலைத்தூக்கிக் கொண்டாட,
எம்பார் தாமும் ‘அது ஒக்கும், ஒக்கும்’ என்று அவர்களைக்காட்டில் மிகவும் தம்மை ஶ்லாகித்துக்கொள்ள,
உடையவரும் அத்தைக்கேட்டு எம்பாரைப் பார்த்து, ‘எல்லாரும் உம்மை ஶ்லாகித்தால் நீர் நைச்யாநுஸந்தாநம்
பண்ண வேண்டியிராநிற்க, அது செய்யாதே நீர்தாமே உம்மை ஶ்லாகித்துக் கொள்ளாநின்றீர்;
இப்படி இருப்பது ஒன்றுண்டோ?’ என்ன,

எம்பாரும் உடையவரைப் பார்த்து, ‘ஐயா! முதலிகள் அடியேனைக்கொண்டாடில் காளஹஸ்த்தியிலே
கையும் குடமும் கழுத்தும் கப்படமுமாய்க் கொண்டு எளிவரவுபட்டுநின்ற அந்நிலையைக்
கொண்டாடுமத்தனையன்றோ அடியேனுக்குள்ளது; இப்படியானபின்பு “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே
தேவரீர் இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திருவவதாரம் பண்ணி செய்தருளின க்ருஷிபரம்பரைகளை அநுஸந்தித்து
நித்யஸம்ஸாரிகளிலும் கடைகெட்டுக்கிடந்த அடியேனை காலதத்வமுள்ளதனையும்
‘எனக்கினி யார் நிகர் நீணிலத்தே”,
“நெஞ்சமே நல்லை நல்லை” என்கிறபடியே அடியேனை ஶ்லாகித்துக்கொள்ள ப்ராப்தியுண்டு;
ஆகையாலே அடியோங்களெல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்குண்டான நன்மைகளை ஶ்லாகித்தது
தேவரீரைக் கொண்டாடித்தாமித்தனையன்றோ?’ என்று விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘ஶ்ரீகோவிந்தப்பெருமாளே! நல்லீர்! நல்லீர்!’ என்று எம்பாரை மிகவும் உகந்தருளினார்
என்று பெரியோர்கள் அருளிச் செய்தருளுவார்கள்.

ஒரு ஆசார்யர் தம்முடைய ஶிஷ்யனுக்கு த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய உபதேஶிக்க,
அவனும் அதுக்கு அநுரூபமாக நடக்க அறியாமையாலே அந்த ஆசார்யரும் “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்கிறபடியே
அவனை நியமித்துக் கொண்டுபோர, அந்த ஶிஷ்யன் ஸ்வாசார்யநியமநம் தனக்கு ஹிதம் என்று அறியாமல் வெருவி
இருந்த ஜ்ஞாநாதிகருடனே ‘ஐயோ! ஶிஷ்யன் என்ன, நியமியாநின்றார்கள்’ என்று வெறுக்க,
அந்த ஜ்ஞாநாதிகரும் ‘ஐயோ! ஶாஸநீயனான ஶிஷ்யனையன்றோ நியமிப்பது? உம்மை நியமித்தாரோ’ என்று
வெறுத்தார் என்று அஸ்மதாசார்யோக்தம்.

இத்தால் விதேயனான ஶிஷ்யனையே ஆசார்யன் நியமிக்கவேணும் என்னுமதும்,
ஸதாசார்ய நியமநம் ஸச்சிஷ்யனுக்கு ப்ராப்யாந்தர்கதமாயிருக்கும் என்னுமதும் சொல்லிற்று.

நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்து தேஶாந்தரத்திலே இருப்பானொரு ஶ்ரீவைஷ்ணவன் வந்து ஜீயரை ஸேவித்து
மீள எழுந்தருளிகிறபோது, ஜீயருக்கு அந்தரங்கராய்த் திருவடிகளிலே நித்யஸேவை பண்ணிக்கொண்டிருப்பாரொரு
ஶ்ரீவைஷ்ணவர் ஊருக்கு எழுந்தருளுகிற ஶ்ரீவைஷ்ணவரைப்பார்த்து
‘ஜயோ! உமக்கு ஜீயர் திருவடிகளைவிட்டுப் பிரிந்து எழுந்தருள வேண்டுகிறதே! என்று க்லேஶிக்க,
அவரும் ‘அடியேன் எங்கே இருந்தாலும் ஜீயர் அபிமாநமுண்டே’ என்று தேறி வார்த்தைசொல்ல,
இந்த ப்ரஸங்கங்களை ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கையாயிருப்பாளொரு அம்மையார் கேட்டு,
ஆசார்யனைப்பிரிந்து அதிலே நெஞ்சு இழியாமல் போகிறவரைப் பார்த்து
‘என் சொன்னாய் பிள்ளாய்! – ஏனத்துருவாய் உலகிடந்த ஊழியான்பாதம் – நாடோறும் –
மருவாதார்க்கு உண்டாமோ வான்’ என்று அருளிச்செய்தார் என்று அஸ்மதாரசார்யோக்தம்.

இத்தால் ஸதாசார்யன் கண்வட்டத்தை விட்டால் இவனுக்கு த்யாஜ்யோபாதேயங்கள் தெரியாது.
ஆகையால் அஜ்ஞாநமே மேலிட்டு “நண்ணாரவர்கள் திருநாடு” என்கிறபடியே திருநாடு ஸித்திக்கை அரிது என்று கருத்து.

கொங்குநாடு க்ஷாமமானவாறே ஒரு ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானும் கோயிலிலே வந்து இருந்தான்.
அக்காலத்திலே எம்பெருமானார் ஏழு க்ருஹம் மாதுகரம் பண்ணி அமுதுசெய்தருளுவர்.
திருவீதியிலே எழுந்தருளும்போது அகளங்கநாட்டாழ்வானடைய வட்டத்தில் முதலிகளெல்லாரும் தண்டனிடுவர்கள்.
அந்த ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானுமாக ஒரு மச்சிலே இருக்கையாயிருக்கும்.
ஒரு நாள் உடையவர் மாதுகரத்துக்கு அந்த க்ருஹத்துக்கு எழுந்தருளினவாறே அந்தப் பெண் மச்சுநின்றும் இழிந்து
இடைகழியிலே நின்று ‘ராஜாக்கள் உம்மை தண்டனிடாநின்றார்கள்; நீர் மாதுகரம் பண்ணா நின்றீர்;
இதுக்குக் காரணமேது?’ என்று உடையவரைக் கேட்க,

‘நாம் அவர்களுக்கு நல்வார்த்தை சொன்னோம்; ஆகையாலே தண்டனிடுகிறார்கள்’ என்று அருளிச்செய்ய, ‘

அந்நல்வார்த்தை எனக்கு அருளிச்செய்ய வேணும்’ என்று தண்டனிட்டாள்.

உடையவரும் அவளுக்கு ஹிதத்தை ப்ரஸாதித்தருளினார். பின்பு அவர்களுடைய தேஶம் ஸுபிக்ஷமாய்
அவர்கள் அங்கேறப்போகவிருக்கிறவளவிலே உடையவரை ஸேவித்துப்போகப்பெற்றிலேன் என்று அ
ந்தப்பெண் வ்யாகுலப்பட்டுக்கொண்டு இருக்கிறவளவிலே, மாதுகரத்துக்கு அங்கே எழுந்தருளினார்.
அந்தப் பெண் ‘மீளவும் எங்கள் நாடேறப்போகா நின்றோம்; முன்பு அருளிச்செய்த நல்வார்த்தை
அடியேன் நெஞ்சிலே படும்படி அருளிச்செய்து எழுந்தருளவேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க,

உடையவரும் அவ்வாத்மாவை மிகவும் க்ருபை பண்ணியருளி, ஹிதத்தை நெஞ்சிலே படும்படி ப்ரஸாதித்தருளி
எழுந்தருளப்புக்கவாறே, ‘இன்னமும் அடியேனுக்கு ஆத்மரக்ஷகமாக ஏதேனுமொன்று ப்ராஸாதித்தருள வேணும்’ என்று
அவள் விண்ணப்பம் செய்ய,

உடையவர் அப்போது சாற்றி எழுந்தருளியிருக்கிற திருவடி நிலைகளைப் பெரியபிராட்டியார் என்கிற அந்தப் பெண்ணுக்கு
ப்ராஸாதித்து எழுந்தருளினார். அவளும் அன்று தொடங்கி உடையவர் திருவடி நிலைகளைத் திருவாராதநம்
பண்ணிக்கொண்டு போந்நாள் என்னும், இவ்வ்ருத்தாந்தம் வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.

இத்தால் சொல்லிற்று ஏதென்னில், எம்பெருமானையுங்கூட உபேக்ஷிக்கிற ஸம்ஸாரத்திலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமானது
ஏதேனுமொன்று தஞ்சம் என்று விஶ்வஸித்திருக்கை அரிது. ஆசார்ய விஶ்வாஸமுண்டானவர்கள்
கொங்கில் பெரிய பிராட்டியாரைப்போலே இருக்கவேணும் என்று சொல்லிற்று.

இவ்விடத்திலே பொன்னாச்சியார், தும்பியூர்க் கொண்டி, ஏகலவ்யன், விக்ரமாதித்யன் வ்ருத்தாந்தங்களை ஸ்மரிப்பது.

———–

அந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்

ஸாக்ஷாத்காரமென்றும்,
விபூதிஸாக்ஷாத்காரமென்றும்,
உபயவிபூதிஸாக்ஷாத்காரமென்றும்,
ப்ரத்யக்ஷஸாக்ஷாத்காரமென்றும் நாலுபடியாயிருக்கும்.

ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாநவிஶேஷம்.

விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை.

உபயவிபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை.

ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்துதானே உபாயம் என்றறிகை,

இவ்விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை,
அப்புருஷார்த்தமே உபாயம் என்றறிகை.

கீழ்ச்சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததேயாகிலும் ப்ரத்ய க்ஷஸாக்ஷாத்காரம் இல்லாதபோது
அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை.
அவைதான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்கமாட்டாது.
அவையாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும்.

பரத்வம் நித்யமுக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்காலவர்த்திகளுக்கும்,
அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதிஶூந்யர்க்கும்.

இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்டவொண்ணாது.
இனி இவையிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய்திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்யாமையாலே
இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி.
ஆகையாலே பத்தசேதநன் முக்தனாம்போது, ஸகலஶாஸ்த்ரங்களாலும் அறுதியிட்டுப்பார்த்தவிடத்தில்,
ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாநப்ரதாநம் பண்ணவொண்ணாமையாலே
ஜ்ஞாநப்ரதாநம் பண்ணின வஸ்துதானே உபேயமாகவேணும்;
உபேயமான வஸ்துதானே உபாயமாகவேணும்; இவ்விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும்.
மயர்வற மதிநலமருளப்பெற்று இவ்வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும்,
மயர்வற மதிநலமருளினவன் தானே இவனுக்கு அவையெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்;
அல்லாதது உபாயாந்தரங்களோபாதி.
இப்பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக்குறை ரஹஸ்யத்திலே
வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச்செய்தார்.

“ஆசார்யாபிமாநமாவது இவையொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து
இவனுடைய இழவையும், இவனைப்பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து,
ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும்
மாதாவைப்போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்கவல்ல
பரமதயாளுவான மஹாபாகவதாபிமாநத்திலே ஒதுங்கி,
“வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும்
இவ்வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச்செய்தார்.

லோகாசார்யரும் தாம் பேரருளாளப்பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்துநம்பியாருக்கு ப்ரத்யக்ஷம்.
இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச்செய்தருளினார்.
இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச்செய்தவை பலவுமுண்டு;
அவையெல்லாம் க்ரந்த விஸ்தரபயத்தாலே சொல்லுகிறிலோம்.

ஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும்,
அவற்றினுடைய தாத்பர்யங்களை யதாதர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான
பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபயவிபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து
ஸகல வேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின
ப்ரபந்நஜனகூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும்,
ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள் தொடக்கமான
இவ்வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏககண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன்தானே
ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதியிட்டுப் பலவிடங்களிலும் கோஷிக்கையாலே,

அநாதிகாலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து,
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட”
பரத்வாதி பஞ்சப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திருமந்த்ரமுகேந
“கடுங்கதிரோன் மண்டலத்தூடேற்றிவைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டுபோய்,
“ததஸ்து விரஜாதீரப்ரதேஶம்” என்கிற அக்கரையேற்றி, அமாநவ கரஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து
நித்ய விபூதியிலே நித்ய கைங்கர்யம் கொண்டருளக்கடவோம் என்று திருவுள்ளம்பற்றி,
ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப்போலே
இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக
‘ஸாக்ஷாந்நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்|
மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா” என்கிறபடியே
ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன்தானே சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ளவேணும்.

இப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச்சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ணவேணுமென்று
கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்யபுத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது.
ஆகையாலே மநுஷ்யபுத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும்,
தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது.

“எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே
குருவிஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்யபுத்தியை ஸவாஸநமாக விட்டு,
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே பகவதவதாரமென்று கொள்ளவேணுமென்னும்
இவ்வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாணபரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு
நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலைநிற்கும்.

ஆக இப்படி “யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம்” என்றும்,
“பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸகலஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய், ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே
உபதேஶ பரம்பரா ஸித்தமாய், ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபாமூர்த்தியாய்,
அதிஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
உபாயோபேயமாகப் பற்றவேண்டியிருக்க, அத்தைச்செய்யாதே
‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”,
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும்,
“ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும்,
‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும்,
‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப”
என்றும் சொல்லுகிறபடியே அதிதுர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய்,
ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும்
“ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தையுடையளான
பிராட்டி போல்வாரையும் மறுத்து காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய்,
அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து அவர்களை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய்,
“வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய்,
“க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶ ஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,

“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து|
குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே
உத்தாரகனாய், அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே
“ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில்
ஸகலபுருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டியிருக்க,
அங்ஙனம் அன்றிக்கே,
தத் விஷயத்தில் ஸர்வஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே
நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து,
அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி
‘இதுதானே ஸத்ஸம்ப்ரதாய பரம்பராஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது –
ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்யவிஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப்பாக்யரான
ஶுஷ்கஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே
மேலெழுந்தவாரியான இடுசிவப்புப்போலே இவ்வர்த்தம் நெஞ்சில் நிலையில்லாது.

“ஆசார்யாயாஹரேதர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்|
தததீநஶ்சவர்த்தேத ஸாக்ஷாந்நாரயணே ஹி ஸ:”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந்தீபப்ரதே குரௌ, ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாச்சரரூபீ ந ஸம்ஶய:”,
‘குருரேவ பரம்ப்ரஹ்ம”, “குருமூர்த்திஸ்திதஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று
இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து, ஆசார்யநிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்;
அல்லாத போது ஈடேற வழியில்லை என்று அஸ்மதாசார்யோக்தம்.
“ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை
என்று பிள்ளை பலகாலும் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே
பிள்ளைலோகாசார்யரும் அருளிச் செய்தார்.

இவ்வர்த்தம் ஸத்ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும்,
அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்,
அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்யபூமியும் அவன் எழுந்தருளியிருக்கிற இடமாகவும்,
அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப்படியே தாரகாதிகளாகவும்,
“உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும்,
“எதிராசா என்னையினிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும்,
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும்,
“என்பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள்வாளுருவி வெட்டிக்களைந்த இராமாநுசன்” என்றும்,
“கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றியருளினான்” என்றும் சொல்லுகிறபடியே

அவனே இஷ்டப்ராப்தி – அநிஷ்டநிவாரணம் பண்ணித்தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு
“குருணாயோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌபரமாம் ஸித்திம் நியமாது பகச்சத:” என்று
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றேயாகிலும்
ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே ‘காலன்கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே
ஸ்வகதஸ்வீகாரம் அவத்யமாகையாலே ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தைவிட்டு
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகதஸ்வீகாரமே உத்தாரகம் என்று அறுதியிட்டு
“ஸம்ஸாராவர்த்தவேக ப்ரஶமந ஶுபத்ருக் தேஶிகப்ரேக்‌ஷி – தோஹம்” என்றும்,
“நிர்பயோ நிர்பரோஸ்மி” என்றும்,
“ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம்பீப்ஸிதம்| ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும்,
‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும், சொல்லுகிறபடியே
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து.
“இருந்தேனிருவினைப் பாசங்கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று,
“இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”,
“தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”,
“நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும்,
“இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச்சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற கால தத்தவமுள்ளதனையும் ஆநந்த மக்நராய்க் கொண்டு வாழத் தட்டில்லை.

ஆகையாலிறே இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று
மாணிக்கமாலையிலே நிஶ்சயமாக ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தது.

ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ? என்னில்,
நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணிநுண்சிறுத்தாம்பை அநுஸந்தித்து
“மதுரகவிசொன்னசொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டினவாறே
ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க,
அவ்விடம் நித்யவிபூதியாம்படி எங்ஙனே?’ என்று கேட்க,

திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக் கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்த பின்பு இடைச்சுவர் தள்ளி
இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார் என்னும்
இவ்வார்த்தை கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.

———

அந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம்

அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: |
ஆகார த்ரய ஸம்பந்நா: மஹாபாகவதாஸ்ஸ்ம்ருதா: ||
மஹாபாகவதா யத்ராவஸந்தி விமலாஶ்ஶுபா: தத்தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத்தீர்த்தம் தத்து பாவநம் ||
யதா விஷ்ணுபதம் ஶுபம்” என்னுமிவ்வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார்.

“பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்தவிடமும், வளைத்தவிடமும், ஊட்டுமிடமும் எல்லாம்
வகுத்த விடமே என்றிருக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும்
இவ்வர்த்தத்தை ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார்.

ஆகையால் இவர்கள் தங்களுடைய ஆசார்யனை உபயவிபூதிநாதனென்றும், உபயவிபூத்யைஶ்வர்யமும் இவனே
என்று ப்ரதிபத்தி பண்ணி இருக்கவேணும்,
“இராமானுசன் என்தன் மாநிதியே”,
“ இராமானுசன் என்தன் சேமவைப்பே” ,
“எனக்குற்ற செல்வமிராமாநுசன்” என்றிறே தந்நிஷ்டர் இருக்கும்படி.

“ஸாக்ஷாந்நாராயணோ தேவ: க்ருத்வா மத்யமயீம் தநும்” என்று இத்யாதிகளிலே
சொல்லுகிறபடியே தங்களை ஸம்ஸாரத்தில் நின்றும் எடுக்கைக்காக ஸர்வேஶ்வரன் மநுஷ்யரூபம் கொண்டு
வந்திருக்கிறானென்று அறியாதே அவன் அமுது செய்தருளுகை, கண்வளர்ந்தருளுகை முதலான
மேலெழுந்த ஆகாரத்தைப் பார்த்து ஸ்வஜாதீயபுத்தியாலே
“மாநிடவனென்றும் குருவை”,
“ஜ்ஞாநதீபப்ரதே குரௌ | மர்த்யபுத்திஶ்ருதம் தஸ்ய”,
“யோகுரௌ மாநுஷம்பாவம்”, “குருஷுநரமதி:” என்றும் சொல்லுகிறபடியே
ஆசார்யனை மநுஷ்யன் என்று ஒருக்காலாகிலும் ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் நீசர்க்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறது மேல்.

“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய: |
யோகுரௌமாநுஷம் பாவம் உபௌநரகபாதிநௌ”,
“நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்யதுர்புத்தே: |
ஜலாதபேதம் கமலம் ஶோஷயதி ரவிர்ந போஷயதி”,
“ஏகாக்ஷரப்ரதாதாரம் ஆசார்யம் யோவமந்யதே|
ஶ்வாநயோநிஶதம் ப்ராப்ய சண்டாலேஷ்வபி ஜாயதே|”,
“குருத்யாகீ பவேந்ம்ருத்யு: மந்த்ரத்யாகீ தரித்ரதா|
குருமந்த்ரபரித்யாகீரௌரவம் நரகம் வ்ரஜேத்”,
“மாடும் மனையும்” என்று தொடங்கி “பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,
“ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: |
இத்யேவம் யே ந மந்யந்தேத்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:”,
“மாநிடவனென்றும் குருவை” என்று தொடங்கி, “எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு”,
“ஏகக்ராமநிவாஸஸ்ஸந் யஶ்ஶிஷ்யோ நார்ச்சயேத்குரும்|
தத்ப்ரஸாதம் விநாகுர்யாத் ஸ வை விட்ஸூகரோ பவேத்”,
“எட்டவிருந்த குருவை இறையன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று”,
“பற்று குருவைப் பரனன்றென இகழ்ந்து” என்று தொடங்கி, “அப்பொருள் தேடித்திரிவானற்று” ,
“என்றுமனைத்துயிருக்குமீரஞ்செய் நாரணனும்” என்று தொடங்கி, “பொங்குசுடர் வெயிலின் அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று”,
“தத்தமிறையின் வடிவென்று தாளிணையை வைத்தவவரை வணங்கியிராப்பித்தராய்,
நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்”,
“தன்குருவின் தாளிணைகள்தன்னிலன்பொன்றில்லாதார்” என்று தொடங்கி,
“ஆதலால் நண்ணாரவர்கள் ததிருநாடு”,
“ப்ரதிஹந்தா குரோரபஸ்மாரி வாக்யேந வாக்யஸ்ய ப்ரதிகாதம் ஆசார்யஸ்ய வர்ஜயேத்”,
“அர்ச்சாவிஷ்ணௌஶிலாதீர்குருஷூநரமதி:” என்று தொடங்கி, “ஸர்வேஶ்வரேஶே ததிதரஸமதீர்யஸ்யவாநாரகீ ஸ:”

குருபரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படியே அநுஷ்டியாதொழிகையும்,
அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும்,
“தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே,
ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் ஈஶ்வரன்தானே ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப்பண்ணும்”,
“குரோரபஹ்நுதாத் த்யாகாத்ஸாம்யாத் அஸ்மரணாதபி|
லோபமோஹாதிபிஶ்சாந்யைரபசாரைர்விநஶ்யதி”,
“குரோரந்ருதாபிஶம்ஸநம் பாதகஸமாநம் கலு, குர்வர்த்தே ஸப்தபுருஷாந் இதஶ்ச பரதஶ்ச ஹந்தி|
மநஸாபி குரோர்நாந்ருதம் வதேத்| அல்பேஷ்வப்யர்த்தேஷு”,
“பொய்யுரைத்தல், மாறுரைத்தல், பொருளல்லாதன உரைத்தல், பொருளருளச் சிதகுரைத்தல், போற்றுதற்கு நெகிழுதல்,
நையுரைத்தல், வலியுரைத்தல், விதிமறுத்தல், கிடத்தல், மேலிருத்தல், கால்நீட்டல், விலங்குமுகமவைத்தல்,
கையெடுத்துத் தொழ நாணுதல், களை ஒதுக்காதிருத்தல், கருத்தறியாப் பொருளுரைத்தல், காயிலே வாய்க்கிடுதல்,
மெய் விதிர்த்தல், நிழல் மிதித்தல், தன்னிழல் மேலிடுதல் – வியன்குருவின் சன்னதியில் விடுங்கருமமிவையே”.
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீப்ப்ரதே குரௌ|
மர்த்யபுத்தி ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத்”,
“ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|
லப்தம் த்யக்த்வாதநம் மூடோகுப்தமந்வேஷதிக்‌ ஷிதௌ”,
“சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் து யஸ்ஸ்மரேத்|
ஹஸ்தஸ்தமுதகம் த்யக்த்வாகநஸ்தமபி வாஞ்சதி”,
“குரும்த்வங்க்ருத்ய ஹுங்க்ருத்ய விப்ரம் நிர்ஜித்ய வாதத: |
அரண்யே நிர்ஜலே தேஶே பவந்தி ப்ரஹ்மராக்ஷஸா:”- இது ஆசார்யாபசாரம்.

————

அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்

இனி தத்பக்தாபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும்,
கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து
அவரைக் கோயிலிலே குடியிருக்கவொண்ணாதபடி கடலைக் கலக்கினாப்போலே
பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில் நின்றும் புறப்பட்டுத்
திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம்
“பூகி கண்டத் வயஸஸரஸ ஸ்நிக்தநீரோபகண்டாம் ஆவிர்மோத ஸ்திமிதஶகுநாநூதிதப்ரஹ்மகோஷாம் |
மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று
பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப்பட்டுக்கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து
“அடியேனுக்குத் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருளவேணும்” என்று மிகவும் அநுவர்த்திக்க,

பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து ‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த
விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது; ஆகையாலே எனக்கு வாய்திறந்தொரு வார்த்தை சொல்லப்போகிறதில்லை.
நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை
ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக்கோடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே
பட்டரளவிலே விரோதித்த வீரஸுந்தரப்ரஹ்மராயனுக்கு ஶரீரவிஶ்லேஷமாக,
அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத்தாயாரான ஆண்டாளை ஸேவித்துக்கொண்டு எழுந்தருளியிருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள்
பட்டருடைய விரோதி போகையாலே திருப்பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு,
நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி திருமாளிகைக்குள்ளே புகுந்து
திருக்காப்பைச்சேர்த்து தாளையிட்டுக் கொண்டு வயிற்றைப்பிடித்து வாய்விட்டழுதாள்;

அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து
‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும்,
நாமெல்லாரும் கண்டு வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன,
அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச்செய்தபடி:-
பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்கிறவன் நேரே
ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர்திறத்தில்
மஹாபராதத்தை தீரக்கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருளவேணும்’ என்று
பட்டர் திருவடிகளிலே தலைசாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப்போனான்.
ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர்கையிலே அகப்பட்டுக்கலங்கி அடியுண்டு மலங்க விழிக்கிறான்
என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச்செய்தார்.
ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.

அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழமண்டலத்திலே எழுந்தருளியிருக்கும்
கடக்கத்துப் பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசியாண்டான் தாமும் மேல்நாட்டிலே எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள,
சோமாசியாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப்பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத்
தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச்செய்கிற ஶ்ரீபாஷ்யம் முதலான
பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழமண்டலத்துக்கு எழுந்தருளுவதாக
அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லையறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழிவிட்டு மீண்டு
எழுந்தருளுகிறபோது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்தவாறே
அடியேனுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிராநின்றது.
அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை ப்ரஸாதித்தருளவேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க,
அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசியாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய்,
ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரேயாகிலும்
சாற்றியிருக்கிற திருப்பரிவட்டத்தலையிலே பாகவதாபசாரநிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று
அருளிச்செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.

‘ப்ராதுர்பாவைஸ்ஸுரநரஸமோ தேவதேவஸ்ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா|
கிந்து ஶ்ரீமத் புவநபவநத்ராணதோந்யேஷு வித்யாவ்ருத்தப்ராயோ பவதி விதவாகல்பகல்ப: ப்ரகர்ஷ:”,
“அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்திசிந்தநம்|
மாத்ருயோநி பரீக்ஷாயாஸ்துல்யமாஹுர்மநீஷிண:”,
“அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந்மத்பக்தேஷுசமாம் த்ருஹந்|
விஷதக்தைரக்நிதக்தைராயுதைர்ஷந்தி மாமஸௌ”,
“யா ப்ரீதிர்மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே|
அவமாநக்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத்”,
மத்பக்தம் ஶ்வபசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: |
பத்மகோடிஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு.

“சண்டாலமபி மத்பக்தம் நாவமந்யேத புத்திமாந்|
அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”,
“அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேயஶதாநி ச|
நிஷ்க்ருதிர்நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”,
“ஶூத்ரம்வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வபசம் ததா|
ஈக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”,
“அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீநஜந்மந:|
மத்பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ்சண்டாலதாம் வ்ரஜேத்”,
“அபிசேத்ஸுதுராசாரோ பஜதே மாதநந்யபாக்|
ஸாது ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”,
“ஸர்வைஶ்ச லக்ஷணைர்யுக்தோ நியுதஶ்ச ஸவகர்மஸு|
யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:”
“அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி,
“நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும்”,
“ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச்செய்வர்”,
“அவமாநக்ரியா”, “பாகவதாபசாரந்தான் அநேகவிதம்;
அதிலேயொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம். இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம்.
அத்தை மாத்ருயோநி பரீக்ஷையோடொக்கும் என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”,
“த்ரிஶங்குவைப்போலே கர்மசண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய்விடும்”,
“ஜாதிசண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதையுண்டு; அதுவுமில்லை இவனுக்கு ஆரூடபதிதனாகையாலே”.

“திருவுடைமன்னர், செழுமாமணிகள், நிலத்தேவர், பெருமக்கள், தெள்ளியார், பெருந்தவத்தர், உருவுடையார்,
இளையார், வல்லார், ஒத்துவல்லார், தக்கார், மிக்கார், வேதவிமலர், சிறுமாமனிசர், எம்பிரான்தன சின்னங்கள்” என்று
நங்குலநாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திருநாமம் சாற்றுகையாலே
கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம்.

“தஸ்யப்ரஹ்மவிதாகஸ:”,
“நாஹம் விஶங்கே ஸுரராஜவஜ்ராநந த்ர்யக்ஷஶுலாந் ந யமஸ்ய தண்டாத்|
நாக்ந்யர்க்கஸோமா நாலவித்தஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”.
ப்ரஹ்மவிதோபமாநாத் “ஆயுஶ்ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச|
ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”,
“நிந்தந்தியே பகவதஶ்சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்மஷௌகாந்|
தேஷாம் யஶோதநஸுகாயுரபத்யபந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”,
“அப்யர்ச்சயித்வா கோவிந்தம் ததீயாந் நார்ச்சயந்தி யே|
ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”,
‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”,
“வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:|
ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”,

“இவ்விடத்திலே வைநதேயவ்ருத்தாந்தத்தையும், பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”.
இப்படி ஆசார்யாபசாரமும், தத்பக்தாபசாரமும் அதிக்ரூரமென்று வேதஶாஸ்த்ரபுராணாதிகளும்,
அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதாதர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும்
நம் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப்போலே ஒன்பதின்கால் சொல்லிக் கையெடுத்து
ஒருமிடறாகக் கூப்பிடுகையாலே ஆஸ்திகனாய், உஜ்ஜீவநபரனாய் இருக்குமவன் மறந்து ஒருகாலத்திலும், ஒரு தேஶத்திலும் ,
ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள இவ்விஷயங்களை
கிஞ்சித்மாத்ரமும் நெகிழநினைக்கக் கடவனல்லன். நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிடவொண்ணாதாப்போலவும்,
கடலுடைந்தால் அடைக்கவொண்ணாதாப் போலவும், மலைவிழுந்தால் தாங்கவொண்ணாதாப் போலவும்
இது அப்ரதிக்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச் செய்தருளுவர்.
ஆகையாலே ஸதாசார்ய – தத்துல்ய- விஷயங்களை கிஞ்சிந்மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற
அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.

———

அந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்

“யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேதஸாதநம்|
யதிசேத் குருவர்யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும்,
“குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத்புத்ரஶிஷ்யயோ:” என்றும்.
“குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும்
ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும்
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு ஆசார்யன் அமுதுசெய்து திருக்கை மாற்றியருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும்,
“ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச|
நித்யம் விதிவதர்க்யாத்யைராவ்ருதோப்யர்ச்சயேத் குரும்” என்கிறபடியே
அவனுடைய திருவடிகளில் தீர்த்தமும் பரமபாவநமுமாய், பெற்ற தாயினுடைய முலைப்பால் போலே
தாரகமுமாய், போஷகமுமாயிருக்கையாலே ஶரீராவஸாநத்தளவும் போக்யமுமாயிருக்கும்.

அவ்வளவன்றிக்கே “கங்கா ஸேது ஸரஸ்வத்யா: ப்ரயாகாந்நைமிஶாதபி|
பாவநம் விஷ்ணுபக்தாநாம் பாதப்ரக்ஷாலநோதகம்”,
“யத் தத் ஸமஸ்த பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி:|
நிர்ணீதம் பகவத்பக்தபாதோதக நிஷேவணம்”,
“திஸ்ர: கோட்யர்த்த கோடீ ச தீர்த்தாநி புவநத்ரயே|
வைஷ்ணவாங்க்ரி ஜலாத்புண்யாத்கோடிபாகேந நோ ஸம:”,
“ப்ராயஶ்சித்தமிதம் குஹ்யம் மஹாபாதகிநாமபி|
வைஷ்ணவாங்க்ரிஜலம் ஶுப்ரம் பக்த்யா ஸம்ப்ராப்யதே யதி”,
“நாரதஸ்யாதிதே: பாதௌ ஸர்வாஸாம் மந்த்ரே ஸ்வயம்|
க்ருஷ்ண: ப்ரக்ஷால்ய பாணிப்யாம் பபௌ பாதோதகம் முநே:||,
“தொண்டர் சேவடிச் செழுஞ்சேறென் சென்னிக்கணிவனே”,
“தொண்டரடிப்பொடியாட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே”,
“தத்பாதாமப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்|
ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம் தத்ஸ்ப்ருஷ்டமகிலம் ஶுசி”,
“கோடி ஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோஜ்ஞாநத: க்ருத: |
ஸத்ய: ப்ரதஹ்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத்”,
“போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியும் உடையவராயிருக்கும் பரமஸாத்த்விகராய், ஆசார்யதுல்யராயிருக்கும்
மஹாபாகவதர்கள் அமுதுசெய்தருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் வைதமாக ஸ்வீகரிக்கையன்றிக்கே ஆத்மாவினுடைய ஶேஷத்வத்தின்
எல்லை நிலமாகையாலே ஸத்தாதாரகம் என்று அவஶ்யம் ஸ்வீகரிக்கவேணும்.

அது எங்ஙனே என்னில், “ஶரீரமேவ மாதாபிதரௌஜநயத:” என்கிற ஸாமாந்ய விஷயத்தில்,
“பிது: ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுருச்சிஷ்டம் போக்தவ்யம்” என்று
அவர்களுடைய ஶிஷ்யபுத்ரர்களுக்கு ஸ்வீகார்யமென்று விதித்த ஆபஸ்தம்ப மஹர்ஷிதானே
“ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி; தச்ச்ரேஷ்டம் ஜந்ம” என்று
ப்ரஹ்மவித்யாப்ரதனாகையாலே விஶேஷபிதாவான ஸதாசார்யன் ஶரீரோத்பாதகனைப் பற்றவும்
இப்படி உத்க்ருஷ்டன் என்று ப்ரதிபாதிக்கையாலே ஶிஷ்யனுக்கு ஸதாசார்ய – தத்துல்யர்கள் அமுதுசெய்தருளின தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் அவஶ்யம் ஸ்வீகார்யமென்னுமிடம் கிம்புநர் ந்யாயஸித்தமிறே.

இவ்விடத்தில் ஸதாசார்ய தத்துல்யரென்றது ஆரை என்னில் –
‘ஆசார்யவத்தைவவந் மாத்ருவத் பித்ருவத்’ இத்யாதிகளான ஶாஸ்த்ரங்கள் ஶ்ரீவைஷ்ணவர்களை ஆசார்யதுல்யரென்று சொல்லுகையாலும்,
“அநுகூலராகிறார் ஜ்ஞாநபக்திவைராக்யங்கள் இட்டுமாறினாப்போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியிருக்கும் பரமார்த்தர்” என்றும்,
“அதாவது ஆசார்யதுல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்று நினைக்கை” என்றும்,
“அநுகூலர் ஆசார்யபரதந்த்ரர்” என்றும் ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யரும் அருளிச்செய்த திவ்யஸூக்திப்படியே
பரம பாகவதர்களாய், “இராமாநுசனைத் தொழும் பெரியோர் பாதமல்லால் என்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே”,
“இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடமே” என்கிறபடியே
அர்த்த காமங்களில் நசையற்று ஆசார்ய பரதந்த்ரர்க்கு ஶேஷமாய், தங்களுக்கு ஸதாநுபவ யோக்யராயிருக்கும் பெரியோர்களை.

இன்னமும் இவ்வர்த்தத்தை ஸர்வஜ்ஞராயிருக்கும் ஆசார்யர்கள் ஸம்ஶயவிபர்யயமற ஸப்ரமாணமாக
ஸ்வஸ்வப்ரபந்தங்களிலே தெளிய அருளிச்செய்தார்கள். மற்றுள்ளாரும் சொல்லுவார்கள்.
அதெங்ஙனே என்னில்,
“நல்லார் பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்,
அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலுமெத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே”,
“இன்புற்ற சீலத்திராமாநுச, என்றுமெவ்விடத்துமென்புற்ற நோயுடல்தோறும் பிறந்திறந்து,
எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனாரும் அருளிச்செய்தார்.

கூரத்தாழ்வான் குமாரரான ஶ்ரீபராசரபட்டர் பகவத்விஷயம் அருளிச்செய்த கொண்டு தாமும் முதலிகளும் கூடிப்
பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்கச் செய்தே கூரத்தாழ்வான் தேவிகள் ஆண்டாள் திருவோலக்கத்தின் நடுவே எழுந்தருளி
தம்முடைய குமாரரான பட்டரை தண்டனிட்டுத் தீர்த்தம் கொள்ள, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அத்தைக் கண்டு
‘பெற்ற தாயார் தம்முடைய புத்ரனைத் தண்டனிட்டுத் தீர்த்தங்கொள்ளலாமோ’ என்ன,
அப்போது ஆண்டாள் அருளிச்செய்தபடி – திருவோலக்கத்திலே எழுந்தருளியிருக்கிற முதலிகளைப் பார்த்து
‘பிள்ளைகாள்! அந்யர்க்குண்டான எம்பெருமானுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ப்ரஸாதப்படவேணும்,
தான் ஏறியருளப்பண்ணிக்கொண்ட எம்பெருமானுடய ப்ரஸாதங்கள் க்ரஹிக்கலாகாதென்று சொல்லுமவர்கள் ஶுஷ்கஹ்ருதயராய்,
யதாஜ்ஞாநம் பிறவாத ப்ராந்தரன்றோ?’ என்று அருளிச்செய்தார்.என்னும் இப்ப்ரஸங்கம்
திருப்பாவை வ்யாக்யாநத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.
ஆண்டாள்தாம் அப்படி செய்தது என்கொண்டு? என்ன,
‘ ந பரீக்ஷ்ய வயோ வந்த்யா: நாராயணபராயணா:” என்றும்,
“வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடுவினையேன்” என்றுமுண்டாகையாலே செய்தாள்.

————-

அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவுகொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜைகொண்டு
பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும்,
விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீப்ருத்யரோடே உள்கலந்து தொழுகுலமானவன் நிலையார்பாடலாலே
ப்ராஹ்மண வேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்,
தம்பிக்கு முற்பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை ஶோதித்து.
தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏககுலமானமையும்,
தூதுமொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக்ஸகுணஸஹபோஜநமும்,
ஒருபிறவியிலே இருபிறவியானாரிருவர்க்கு தர்மஸுநுஸ்வாமிகள் அக்ரபூஜைகொடுத்தமையும்,
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச்செய்த புத்ரக்ருத்யமும்,
புஷ்பத்யாக போக மண்டபங்களில் பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையுங்கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும்,
வைதிகோத்தமரும், மஹாமுநியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில்
காயாந்நஸ்தலஶுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யாவ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி,
ஶவவிதவாலங்காரமென்று கழிப்பர்கள் – என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்
பிள்ளை லோகாசார்யர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.

உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம் ப்ரம்ஶஸம்பாவனையாலே “ஶரீரே ச” என்கிறபடியே பயஜநகம்.
அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும்.
அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை. நைச்யம் ஜந்மஸித்தம்.
ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ஶ்ரேஷ்டம். “ஶ்வபசோபி மஹீபால”.
நிக்ருஷ்டஜந்மத்தால் வந்த தோஷம் ஶமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே. ஸம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம்போது
ஜந்மக்கொத்தை போகவேணும். ஜந்மத்துக்கு கொத்தையும், அதுக்குப் பரிஹாரமும்
“பழுதிலாவொழுகல்” என்கிற பாட்டிலே அருளிச்செய்தார். வேதகப்பொன்போலே இவர்களோட்டை ஸம்பந்தம்.
இவர்கள் பக்கல் ஸாம்யபுத்தியும், ஆதிக்யபுத்தியும் நடக்கவேணும். அதாவது ஆசார்யதுல்யரென்றும், ஸம்ஸாரிகளிலும்,
தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை. ஆசார்யஸாம்யத்துக்கடி ஆசார்யவசநம்.
இப்படி நினையாதொழிகையும் அபசாரம். இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ்சுடரொளி நெடுமாற்கடிமையிலும்,
கண் சோர வெங்குருதியிலும், நண்ணாத வாளவுணரிலும், தேட்டருந்திறல்தேனிலும்,
மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விஶதமாகக் காணலாம்.
க்ஷத்ரியனான விஶ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான். விபீஷணனை ராவணன் குலபாம்ஸநனென்றான்.
பெருமாள் இக்ஷவாகு வம்ஶ்யனாக நினைத்து வார்த்தை அருளிச்செய்தார்.
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணியருளினார்.
தர்மபுத்ரர் அஶரீரி வாக்யத்தையும், ஜ்ஞாநாதிக்யத்தையுங்கொண்டு ஶ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.
ருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்மஸந்தேஹங்களை ஶமிப்பித்துக் கொண்டார்கள்.
க்ருஷ்ணன் பீஷ்மத்ரோணாதி க்ருஹங்களைவிட்டு ஶ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.
பெருமாள் ஶ்ரீஶபரிகையாலே அமுது செய்தருளினார்.
மாறனேரி நம்பி விஷயமாகப் பெரியநம்பி உடையவருக்கு அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது – என்று
ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்தார்.
“பவத்தயயா யதீந்த்ர த்வத் தாஸதாஸ கணநாசரமாவதௌய: தத்தாஸதைகரஸதா விரதா மமாஸ்து” என்று
நம்முடைய ஜீயரும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச்செய்தருளினார்.

திருவயிந்திரபுரத்திலே ஶ்ரீவில்லிபுத்தூர்ப் பகவரென்று உத்தமாஶ்ரமியாயிருப்பாரொருவர் எல்லாரும்
ஒரு துறையிலே அநுஷ்டாநம்பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவராய்த்து.
அவரொரு நாள் அநுஷ்டாநம்பண்ணி மீண்டு வாராநிற்கச்செய்தே இருந்த ப்ராஹ்மணர்
‘உமக்கு ஒரு துறையிலே நீராடுவதேது?’ என்று கேட்க,
‘விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண:|
அஸ்மாகம் தாஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று,
‘நீங்கள் ப்ராஹ்மணவர்ணதர்மிகள், நாங்கள் தாஸவ்ருத்திகள். கைங்கர்யபரர். ஆகையாலே
உங்களோடு எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறைவேறிட்டுப் போந்தாரென்று இவ்வ்ருத்தாந்தம்
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே திருநாராயணபுரத்தில ஆய் அருளிச்செய்தார்.

“பூதங்களைந்தும் பொருந்துமுடலினாற்பிறந்த சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம்,
பேதங்கொண்டென்ன பயன் பெறுவீர்” என்றும்,
“குடியுங்குலமுமெல்லாம் கோகனகை கேள்வனடியார்க்கு அவனடியேயாகும்” என்றும்,
கேவலவர்ணாஶ்ரமங்களையேபற்றி நிற்கவில்லை ஒரு ப்ரயோஜநமில்லை;
ஸர்வர்க்கும் ஸர்வ ப்ரயோஜநமும் ஶ்ரிய:பதி நாராயணன் திருவடித்தாமரைகளேகாணும் என்று
ஞானசாரத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தார்.

“தேஹாத்ம ஜ்ஞாந கார்யேண வர்ணபேதேந கிம்பலம்|
கதிஸ்ஸர்வாத்மநாம் ஶ்ரீமந்நாராயண பதத்வயம்”
“ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ … தஸ்ய ஸர்வம் ஏவ ஹி” என்னக்கடவதிறே.
“அத்யப்ரப்ருதி ஹே லோகா: யூயம் யூயம் வயம் வயம்|
அர்த்தகாமபரா யூயம் நாராயணபரா வயம்” என்று ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷிதாம்
வேதவ்யாஸ புத்ரராயிருக்க ஶுகதாதர் என்று தம்மையிட்டுப் பிதாவை நிரூபிக்க வேண்டும்படியான
ஜ்ஞாநாதிக்யத்தை உடையவராகையலே லௌகிகரைப் பார்த்து ஒட்டற வார்த்தை சொல்லி அவ்வளவன்றிக்கே,
“நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகஞ்ச பரஸ்பரம்|
வயம் து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரியகிங்கரா:” என்று
தமக்குண்டான விஶேஷ ஜ்ஞாநத்தையும் அவர்களுக்குண்டான இந்த்ரிய பாரவஶ்யதையையும் சொல்லி,
தத்ஸம்பந்தத்தையும் அறுத்து, அவ்வளவுமன்றிக்கே,
“நாஹம் விப்ரோ ந ச நரபதிர்நாபி வைஶ்யோ ந ஶூத்ரோ நோ வா வர்ணீ நசக்ருஹபதிர் நோ வநஸ்தோ யதிர்வா|
கிந்து ஶ்ரீமத்புவந பவநஸ்தித்யபாயைக ஹேதோர் லக்ஷமீபர்த்துர் நரஹரிதநோர் தாஸதாஸஸ்ய தாஸ:” –
என்னுடைய ஸ்வரூபம் வர்ணாஶ்ரமங்களைவிட்டு நிரூபிக்கப்பட்டது;
ஜ்ஞாநாநந்தங்களும், பகவச்சேஷத்வமும் புறவிதழ் என்னும்படி ததீயஶேஷத்வத்தையிட்டே நிரூபிக்கும்படியிருக்கும்.
இப்படியானபின்பு பாகவதர்களென்றும், அபாகவதர்களென்றும் இரண்டு ஜாதியாகச் சொல்லுமேதொழிய
வேறொருபடி சொல்லத்தக்க பந்தமில்லை உங்களுக்கும் எங்களுக்கும் – என்று
ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷி லௌகிகரோடுண்டான ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டு ஶ்ரீநரஸிம்ஹரூபியான நாராயணனுக்கு
ஶேஷபூதராயிருக்குமவர்களுக்கு ஶேஷமாயிருக்கும் பாகவதர்களுடனே கூடிப்போனார்களென்னுமது ஜகத்ப்ரஸித்தமிறே.

“பஞ்சாஸ்த்ராங்கா: பஞ்சஸம்ஸ்காரயுக்தா: பஞ்சார்த்தஜ்ஞா: பஞ்சமோபாயநிஷ்டா: |
தேவர்ணாநாம் பஞ்சமாஶ்சாஶ்ரமாணாம் விஷ்ணோர்பக்தா:
பஞ்சகால ப்ரபந்நா:”,
“தேவர்ஷிபூதாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்|
ஸர்வாத்மநாயஶ்ஶரணம் அஶரண்யம் நாராயணம் லோககுரும்ப்ரபந்ந:” என்றிறே ஸ்வரூபமிருப்பது.
ஆகையாலே ஜ்ஞாநவான்கள், அஜ்ஞர்ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம்,
ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழித்துத் தந்தாமுக்குத் தஞ்சமாகப் பற்றுமிடத்தில்
பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஈஶ்வரனைப் பற்றுவாரும்,
மோக்ஷத்துக்கே ஹேதுவான ஆசார்யனைப் பற்றுவாரும், உபேக்ஷணீயரான ஈஶ்வர பரதந்த்ரரைப் பற்றுவாரும்,
அநுகூலரான ஆசார்ய பரதந்த்ரரைப் பற்றுவாருமாய், அதிகாராநுகுணமாயிருக்கும்.

ஆகையாலேயிறே “நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ|
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஶ:” என்று கூரத்தாழ்வான்
‘நாராயண’ ‘ராமாநுஜ” என்கிற திருமந்த்ரங்களிரண்டுக்கும் வாசி பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயும்,
மோக்ஷைக ஹேதுவாயுமிருக்குமென்னுமிடம் தோற்ற ‘சதுரா சதுரக்ஷரீ’ என்று அருளிச்செய்தார்.

——-

அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை

கண்ணன் எம்பெருமான் குசேலரை உபசரித்தல்
கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் இருத்தல்
ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக்கொள்ளுதல்
எம்பெருமான் நம்மாழ்வாரிடம் அதீத அன்பு காட்டுதல்

“லோகே கேசந மத் பக்தாஸ்ஸத்தர்மாம்ருதவர்ஷிண:|
ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவாநலம்”,
“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,
”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:”,
“மம ப்ராணா ஹி பாண்டவா:”
“நிரபேக்ஷம் முநிம் ஶாந்தம் நிர்வைரம் ஸமதர்ஶநம்|
அநுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயேயேத்யங்க்ரிரேணுபி:”,
“மம மத் பக்தபக்தேஷு ப்ரீதிரப்யதிகாந்ருப|
தஸ்மாந்மத்பக்தபக்தாஶ்ச பூஜநீயா விஶேஷத:” ,
“அந்நாத்யம் புரதோ ந்யஸ்தம் தர்ஶநாத்க்ருஹ்யதே மயா|
ரஸாந் தாஸஸ்ய ஜிஹ்வாயாமஶ்நாமி கமலோத்பவ”,
“மத்பக்தஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம்ப் யர்ச்சநஞ்சைவ மதர்த்தே டம்பவர்ஜநம்||
மத்கதாஶ்ரவணே பக்திஸ்ஸ்வரநேத்ராங்கவிக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி||
பக்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே|
ஸ்விப்ரேந்த்ரோ முநிஶ்ஶ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:||
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்” என்று
ஸர்வேஶ்வரன் தானும் தன்னுடைய அடியாரை லோக பாவநராகவும், தனக்கு ஆத்மாவாகவும், ப்ராணனாகவும்,
‘நாள்தோறும் நான் அவர்களுடைய பாதரேணுக்களை ஆசைப்பட்டுப் பின்செல்லாநின்றேன்’ என்றும்,
‘அவர்களுடைய ஸத்காரம் எனக்கு மிகவும் ப்ரியம்’ என்றும்,
‘அந்நாதிகளிலுண்டான ரஸங்களெல்லாம் அவர்கள்முகேந ஜீவிப்பேன்’ என்றும்,
ம்லேச்ச ஜாதியிலே பிறந்தார்களேயாகிலும் தன்னைப்போலே அவர்களும் பூஜ்யர் என்றும் அருளிச்செய்தான்.

“அக்ஷ்ணோ: பலம் தாத்ருஶதர்ஶநம் ஹி தந்வா: பலம் தாத்ருஶகாத்ரஸங்கம்|
ஜிஹ்வாபலம் தாத்ருஶகீர்த்தநஞ்ச ஸுதுர்லபாபாகவதா ஹி லோகே”,
“நாஹம் ஸமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணாந் பத்மபுவோப்யகண்யாந்|
பவத்ப்ரபாவம் பகவாந் ஹி வேத்தி ததாபவந்தோ பகவத்ப்ரபாவம்” என்று –
மஹாபாகவதர்களுடைய தர்ஶந – ஸ்பர்ஶந – ஸம்பாஷணங்களே தனக்கு ஸர்வப்ரயோஜநமென்று
அவர்களுடைய திவ்ய குணங்களைச் சொல்லுகைக்கு நான் ஸமர்த்தையன்று என்றும்,
அவர்களுடைய ப்ரபாவத்தை என்னால் சொல்லித் தலைக்கட்டப் போகாது என்றும்
ஶ்ரீபூமிப்பிராட்டியும் அருளிச்செய்தாள்.

எம்பெருமானார் திருவதாரத்தாலே அனைவருக்கும் உஜ்ஜீவனம்

“திறம்பேன்மின் கண்டீர்” என்று தொடங்கி ,
“இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்றும்,
“அவன்தமர் எவ்வினையராகிலும் எங்கோனவன்தமரே என்றொழிவதல்லால்
நமன்தமராலாராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல் பேராயற்காட்பட்டார் பேர்” என்றும்,
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்றும்,
“வெள்ள நீர் வெள்ளத்தணைந்த அரவணைமேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே
உன்தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்” என்று பகவத்ப்ரபந்நர் எப்படி இருந்தார்களேயாகிலும்
அவர்களை யமாதிகள் ஏறிட்டுப் பார்க்கவொண்ணாத மாத்ரமுமன்றிக்கே யம்படர் கள்ளர்பட்டது படுவார்கள் என்று
பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார்களும் அருளிச்செய்தார்கள்.

“நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள்மீதே” என்னும் மதிப்பரிறே ஆழ்வார்கள்.
“நகலுபாகவதா யமவிஷயம் கச்சந்தி” என்றும் பாகவத வைபவத்தைச் சொல்லுகிறது.
இந்த ப்ரஸங்கத்திலே யமாதிகள் பாகவத விஷயத்தில் வர்த்திக்கிறபடி சொல்லுகிறது.
“ஸ்வபுருஷமபி வீக்ஷ்ய பாஶஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ணமூலே|
பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்||
கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத ஶங்க சக்ரபாணே|
பவஶரணமிதீரயந்தி யேவை த்யஜபட தூரதரேணதாநபாபாந்” என்றும் இத்யாதிகளாலே –
நான் பகவத் ப்ரபந்நரை நியமிக்கக் கர்த்தாவன்று; என்னுடைய ப்ருத்யரான நீங்களும் அவர்களைக் கண்டால்
தடஸ்தராய் உங்களைப் பேணிக்கொண்டு தூரத்திலே விலகிப் போங்கோள் – என்று
அவர்களுக்கு புத்தி சொல்லி எல்லாரையும் கர்மாநுகுணமாக உசித தண்டம் பண்ணுகிற
யமன்தன்னாலும் ஶ்ரீவிஷ்ணுபுராணாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதிறே.

அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும், பகவத் விஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும்;
பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத ஸம்ஶ்லேஷத்தையும், அபாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து,
இவனையும் கரைமரம் சேர்த்துவிடும். இவ்வெல்லைமயக்கு ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது.
அவன் கண்வட்டம் விட்டால் நித்ய ஸம்ஸாரியாய்ப் போமித்தனை என்று ஆச்சான் பிள்ளையும் மாணிக்க மாலையிலே அருளிச்செய்தார்.

ஆகையாலே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆசார்யாதீநமாயிருக்க வேணும்;
அப்படியிராமல் கலங்கி தத்ஸம்பந்தத்தையும் மறந்து, ஸ்வாதந்த்ர்யம் தலையெடுத்து,
அக்ருத்யகரணம், பகவதபசாரம், பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் தொடக்கமான அநர்த்தங்களிலே
ஏதேனுமொன்றை விளைத்துக்கொண்டு, யாவதாத்மபாவி ரௌரவாதி கோர நரகங்களிலே விழுந்து
நஶித்துப்போகத் தக்கதான ஆத்மாக்களையும், முற்படத் தங்கள் திருவடிகளிலே ஒரு ஸம்பந்தமுண்டாகையாலும்
அவ்வாத்மாக்கள் மேல் படப்போகிற து:க பரம்பரைகளை அறிந்தருளுகையாலும் அவர்கள் விஷயத்தில்
‘ஐயோ’ என்கிற க்ருபாதிஶயத்திலே விடமாட்டாதே
“பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப்பணி கொள்”ளுகையிறே ஸதாசார்ய லக்ஷணம்.

ஆகையாலே தம்முடைய ஶிஷ்யனான நாலூரானும் க்ருமிகண்டனோடே கூடித் தம்முடைய விஷயத்திலே
மஹாபராதத்தைப் பண்ண, பெருமாள் அவனை ‘நஷமாமி’ என்று முனிந்தருள,
அவரோடே மறுதலைத்து ‘நாம்பெற்ற லோகம் நாலூரானும் பெறவேணும்’ என்று கூரத்தாழ்வானும்;

தம்முடைய ஶிஷ்யராயிருப்பாரொருவர் ஸஹவாஸ தோஷத்தாலே கலங்கி, விஷயப்ராவண்யம் தலையெடுத்து,
‘பட்டரே! உமக்கும் நமக்கும் பணியில்லை’ என்று அவருடைய திருவடிகளை விட்டகன்று போகத்தேட,
‘வாராய் பிள்ளாய்! அது உன்னுடைய அபிப்ராயத்தாலேயன்றே, நீ விட்டாலும் நான் விடேன்’ என்று
பட்டரும் தம்முடைய திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தும்;

அந்தரங்கராய், மஹாவிரக்தராய் இருப்பாரொரு ஸாது ஶ்ரீவைஷ்ணவர் அந்ந தோஷத்தாலே அஹங்கராதிகள் தலையெடுத்து,
பூர்வதஶையில் பொகட்டுவந்த சவளத்தை (= ஈட்டியை) மீளவும் எடுத்துக்கொண்டு ராஜஸேவை பண்ணித்திரிய,
இப்படிக் கைகழிந்து போனவரையும் பின்தொடர்ந்து யத்நேந பிடித்துக்கொண்டுவந்து,
ஒரு அறையிலே தாமும் அவருமாக அடைத்துக் கொள்ள, ஶ்ரீபாதத்துக்கு பரிவரான முதலிகள் எல்லாருங்கூடி
‘ஐயோ! ப்ரமாதம் பிறக்கிறது; சவளமும் உடைத்துக்கையுமான அவனைவிட்டு அறையினின்றும் புறப்படவேணும்’ என்று
அதிக்லேஶத்தோடே கூப்பிட, “இவனை ரக்ஷித்தாலல்லது நான் புறப்படேன்; இவன் உஜ்ஜீவியாதிருக்கில்
இந்த சவளக்காரனோடே அடைத்துக்கொண்டு சாவேன்’ என்ற வேதாந்திகளான நஞ்சீயரும்;

தந்தாம் விஷயங்களிலே குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும்
நடக்கவேணுமென்று அருளிச்செய்த மாத்ரமன்றிக்கே அநுஷ்டாநத்துக்கு ஸீமாபூமியாயிருக்கும் பிள்ளை லோகாசார்யரும்,
“ஸ்வீகரோதி ஸதாசார்யஸ்ஸர்வாநப்யவிஶேஷத: |
யத்புநஸ்தேஷு வைஷம்யம் தேஷாம் சிஜ்ஜ்ஞாநவ்ருத்தயோ:||
தேஷாமேவ ஹி தோஷோயம், ந சாஸ்யேதி விநிஶ்சிதம்|
அபக்வ பத்மகோசாநாம் அவிகாஸோ ரவேர்யதா” என்கிறபடியே
தங்கள் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கச் செய்தேயும் அவர்களுடைய ஜ்ஞாநதௌர்பல்யத்தாலே மீளவும் விபரீத ப்ரவ்ருத்தராய்,
பிறந்து போகத்தேடினவர்களையும் விட க்ஷமரன்றிக்கே
“ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்றும்,
“தேஶிகோ மே தயாலு:” என்றும் சொல்லுகிறபடியே
தங்களுடைய நியமத்தலும் க்ருபாதிஶயத்தாலும் இப்படி ரக்ஷித்துப் போந்தார்கள்.

ஸ்ரீ சீதாப்பிராட்டியும் ஸ்ரீ மணவாள மா முனிகளும்

“வாஸுதேவம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாநி வை|
தாந்யேவ தர்மஶாஸ்த்ராணீத்யேவம் வேத விதோ விது:”
இப்படி பூர்வசார்யர்கள் விசேஷத்தை நம்முடைய ஆசார்யர் திருநகரியிலே ஓலமேச்சான் மடத்திலே
தாம் கண்வளர்ந்தருளாநிற்க, எம்பெருமானாருக்கு விஷமிட்ட சண்டாளரைப் போலே மனக்குற்ற மாந்தரான
அஸூயாபரரானவர்கள் கர்மகாலத்திலே மத்யராத்ரியிலே அந்த மடத்திலே அக்நிப்ரக்ஷேபத்தைப்பண்ண,
அந்தக் கள்ளளரை அத்தேஶத்துக்குக் கர்த்தரான ராஜாக்கள் கண்டுபிடித்துக் கொண்டு சித்ரவதம் பண்ணத் தேட
“கேட்பார் செவிசுடு” என்கிறபடியே ஆருக்கும் ஶ்ரவணகடோரமான இம்மஹாபாபத்தைத் தம்முடைய விஷயத்திலே கூசாமல்
தீரக்கழியப் பண்ணின நிஷ்டுரரையுமுட்பட {அகப்பட}
“பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம|
கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந்நாபராத் யதி” என்றும்,
“பவேயம் ஶரணம் ஹி வ:” என்றும்,
“க: குப்யேத் வாநரோத்தம” என்றும் சொல்லுகிறபடியே
அந்த ராஜாக்களோடே மறுதலைத்து அந்தக் கள்ளரைக் கொல்லாதபடி விடுவித்து ரக்ஷித்தருளின
பரமக்ருபையாளர் என்னுமது லோகத்திலே எல்லாருமறிய ப்ரஸித்தமிறே.
இன்னமும் அஸ்மதாசார்யருடைய க்ருபாதிஶயமும், அவதார விசேஷமும் கீரி, கிளி, வ்ருக் ஷவ்ருத்தாந்தங்களிலும்,
ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களிலும் அறிவார்க்கிறே தெரிவது.

——-

அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும்,
“பஶுர்மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய்,
பரமதயாவான்களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித்
தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய்,
எப்போதும் மங்களாஶாஸநபரராய்,
“நானும் பிறந்தமை பொய்யன்றே” ,
“தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டும்” என்று சொல்லுகிறபடியே
பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தியிருக்குமவனைப்பற்றித் தெளிவுற்று வீவின்றி,
எல்லாம் வகுத்தவிடமென்று விஶ்வஸித்து மார்பிலே கைவைத்துக் கோடையிலே குளிர்காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய்,
“சிற்றவேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குருபரம்பரையைப் பற்றுகை)
“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்:

ஆழ்வார் திருமகளாராண்டாள்
நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவியாழ்வார்
நாதமுனி திருவடிகளிலே குருகைக்காவலப்பன்
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வவாரியாண்டான்
எம்பெருமானார் திருவடிகளிலே வடுகநம்பி
நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர்
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார்
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்
இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டுகொள்வது.

நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந்நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு.
மற்றும் இக்காலத்தில் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம்.
இனிமேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும்
“கலியுங்கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே ஏவம்பூதரான அதிகாரிகளும் ஸுசிதர்.

“வேதஶாஸ்த்ரரதாரூடா: ஜ்ஞாநகட்கதராத்விஜா:|
க்ரீடார்த்தம பியத்ப்ரூயுஸ்ஸதர்ம: பரமோ மத:” என்றும்,
“அதிகந்தவ்யாஸ்ஸந்தோயத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்|
யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும்,
‘அல்லிமலர்ப்பாவைக்கன்பரடிக்கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும்,
“ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநாதிகரானவர்கள் “நாவகாரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும்
நல்வார்த்தையாயிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச்செய்யார்களாகையாலே
அவர்களுடைய திவ்யஸுக்திகளெல்லாம் ஸகலவேதாந்த ஸாரமான திருமந்த்ரமாயிருக்கும்.
‘ருசோயஜும்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச|
ஸர்வமஷ்டாக்‌ஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகல ப்ரமாண ப்ரமேயங்களும் ததந்தர்பூதமாயிருக்கும்.

ஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திருமந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற
ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரைவயிறாய்,
சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ்வர்த்தம்
இம்மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட்கொண்டு
ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணிப்ரவாளவாகமவும், ஏககண்டமாக அருளிச்செய்த
ப்ரமாணபலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய்,
“தென்குருகூர்நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”,
“நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும்,
“எந்நாவிருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”,
“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயவெல்லும் பரம இராமாநுச” என்றும்,

“குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர்நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே
ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய்,
“மாதா பிதா யுவதய:”,
“அன்னையாயத்தனாய்”,
“தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே ஸர்வவிதபந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான
ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும்,

“குருரேவ பரம் ப்ரஹ்ம”,
“தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரதே குரௌ”,
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பரதேவதை என்றும்,

“யேநைவ குருணாயஸ்ய ந்யாஸவித்யா ப்ரதீயதே|
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”,
“வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல் சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள்
எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள் அருளாலே வைத்த அவர்”,
“நம்புவார்பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் எழுந்தருளியிருக்கிறவிடமே ப்ராப்யபூமியான பரமபதம் என்றும்,

“ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”,
“பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி, அப்பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச்சரணன்றி”,
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,

“ராமாநுஜார்யவஶக: பரிவர்த்திஷீய”,
“நித்யம் யதீந்த்ர தவ திவ்யவபுஸ்ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் குணகீர்த்தநேஸௌ|
க்ருத்யஞ்ச தாஸ்யகரணந்து கரத்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச”,
‘ஶக்திக்கிலக்கு ஆசார்யகைங்கர்யம்” என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
த்ரிவிதகரணத்தாலும் அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும்,

‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பலஸாதந ஶுஶ்ரூஷையும்” என்கிறவிடத்தில் சொல்லுகிறபடியே
இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும்
அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர்வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு
அவனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸதாபஶ்யந்திப்படியே அநுபவித்து,
“அத்ர, பரத்ரசாபி”ப்படியே
அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந ஸர்வாவயவராய்க் கொண்டு
காலதத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.

“கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும்” என்கிற பாட்டும்,
“நாவினால் நவிற்று” என்கிற பாட்டும்
“நல்லவென்தோழி” என்கிற பாட்டும்,
“மாறாய தானவனை” என்கிற பாட்டும்,
பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த “மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும்,
“பஶுர்மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும்,
“பாலமூகஜடாந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும்,
“ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம்” என்கிற வசநமும்,
“இஹலோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று
மாணிக்கமாலையிலே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்யஸூக்தியும்,
“மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும், பலஸாதநமும், ஐஹிகபோகமுமெல்லாம் ஆசார்யனே
என்று நினைக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்தருளின திவ்யஸுக்தியும்
இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.

ஶ்ரீஸௌம்யஜாமாத்ருமுநே: ப்ரஸாத ப்ரபாவஸாக்ஷாத்க்ருதஸர்வதத்த்வம்|
அஜ்ஞாநதாமிஸ்ரஸஹஸ்ரபாநும் ஶ்ரீ பட்டநாதம் முநிமாஶ்ரயாமி||

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத் திரட்டு

January 17, 2022

1,2,3,4 நாயனாராச்சான் பிள்ளை யருளிய உபோத்காத காரிகைகள்

1-அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||
யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

2-அஸ்மஜ் ஜநக்காருணயஸுதாஸந்து ஷிதாத்மவான் |
கரோமி சரமோபாயநிர்ணயம் மத்பிதா யதா ||
அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

3-அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||
உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

4-பூர்வாபரகு ரூகதைஶச ஸ்வப்நவ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||
எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

5. பெரியவாச்சான் பிள்ளையருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுபகுண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத்குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||
[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனியாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

6. ஸ ச ஆசார்ய வம்சோ ஜ்ஞேயோ பவதி I
ஆசார்யாணாம் அஸாவஸா வித்யா பகவத்த: II

[பகவானிடமிருந்து தொடங்கி ‘இவர் இவர்’ என்று குருபரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும்.]

7. அர்வாஞ்சோ யத்பத ஸரசிஜ த்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேசிக முக்திமாபு: I
ஸோயம் ராமாநுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமனுத கதம் வர்ண்யதே கூர நாத: II

[பின்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருவடித் தாமரையிணையோடு ஸம்பந்தம் பெற்றும்,
முன்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருமுடியோடு ஸம்பந்தம் பெற்றும் மோக்ஷம் அடைந்தனரோ,
அந்த ராமாநுஜ முனிவரே எவருடைய ஸம்பந்தத்தாலே தனக்கு மோக்ஷம் கைப்பட்டதாகக் கருதினாரோ
அத்தகைய கூரத்தாழ்வான் எப்படி வர்ணிக்கப்படுவார்.]

8-யாவரொரு ஆசார்யர் தம் அடியடைந்தவர்களைத் தன் கருணையினாலேயே ரக்ஷிக்கிறாரோ,
அவரே அளத்தற்கரிய முக்யாசார்யராவார். நல்லோர்களால் அப்படியே சொல்லப்படுகிறதன்றோ.
(ஸோமாசியாண்டான் அருளிய குருகுணாவளி)

9-இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)

10-எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)

11-ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி ||
‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்துவிட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள்
கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதாமஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)

12-வைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய்,
(குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய்,
பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.

13-மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம் பயாச்சநஞ்சைவ மதர்தே டம்ப வர்ஜநம்||
மத் கதா ஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||
பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |
ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||
1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம்
2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல்
3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல்
5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு,
6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை
7. எப்போதும் என்னை நினைத்திருக்கை,
8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை,
என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஶ்ரேஷ்டன்,
அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன்,
அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம்.
அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)

14(அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா)-(விஷ்வக்ஸேந ஸம்ஹிதை)
-உபய விபூதியும் இவளுக்கும் எனக்கும் ஶேஷமயிருப்பது.

15-(யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )(கீதை 2-7)
எனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக.
நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக. (கீதை 2-7)

16-(தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) (கீதை 4-34)
ஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும்
ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக.
உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள்.

17-(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் |
பதிவ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || )
சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது.
வளை முதலிய ஆபரணங்கள் பதி வ்ரதைக்கு அடையாளங்களன்றோ.

18-தன் வலது புறத்தில் அடக்கத்துடனும் அஞ்ஜலியோடும் கூடிய சீடனை இருத்தி,
ஞானத்தைத் தரவல்ல தன் வலதுகையை சீடனின் சிரத்தில் வைத்து,
தன் இடது கையைச் சீடனின் மார்பில் வைத்து, தன் ஆசார்யனை இருதயத்தில் தியானித்து,
குருபரம்பரையை ஜபித்து இவ்வகையாக எம்பெருமானை சரணமடைந்து ரிஷிசந்தஸ் தேவதைகளுடன் கூடிய
மூலமந்த்ரத்தைத் தானே கருணையால் சீடனுக்கு உபதேசம் செய்யக்கடவன்.

19-ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா (ரா-பா 67.22)
ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள்.

20-யஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|
நிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||(ரா-அ 17-14)
[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில்
நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்]

21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
22-ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||(ரா -பா 31-4)
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்.
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ]

23-.(விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே )
விஷ்ணுவானவர் மனித வுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)

24.(இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா |
மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || )
கோவிந்தனே! இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனித வுருக்கொண்டு த்வாரகையில் நிற்கிறாய்

25-ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய:
ஆசார்யனே நேரே நடமாடும் பரம புருஷன்: இதில் ஐயமில்லை.

26. குருரேவ பரம் ப்ரஹ்ம –,குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்;
குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்;
அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|
கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||(வி-பு. 5-20-49)

[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான்.
தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்]

28-(அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் |
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || )
திருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான்.
பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான்,
நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப் போகிறார்.

29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|
அகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||

[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன்,
உன் திருவடித் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன்,
ஶரணமடையத்தக்கவனே! உன் திருவடியை ஶரணமடைகின்றேன்]

30-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர்
ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II

ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ,
அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன்.
அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள.

31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:”
காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.

32. அழிவற்ற செல்வம்.

33. “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி
அர்ஜுனா! உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.
(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)

34.“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி |
மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||”
அர்ஜுனா! அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய்
என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.

35. “ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”
தன் சரம காலத்தில் தன் திருவடிவாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்
‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்.

36. (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)
முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்க செய்ய வல்லவர் அவரே.

37. (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்)
உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.

38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஶீம்நே|
நாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||(ஸ்தோத்ர ரத்னம் 2)

[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ
மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும்
பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.]

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்)
ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்? (வி-பு. 1-19.36)

40. உபாதத்தே ஸத்தாஸ்திதிநியமநாத்யைஶ் சிதசிதௌ
ஸ்வமுத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ
அதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம்பஜம் ||(ர-ஸ்த 2-88)

[ஹே ஶ்ரீரங்கநாதனே! ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால்
சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது.
ஆகையால் இவ்விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல.
ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.]

41-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||(ஸ்தோ – ர 5)
[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும்,
மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும்,
குலபதியுமான அவருடைய, மகிழமலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான
அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.]

42-ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா-ஆசார்யர்கள் நேரில் துதிக்கத் தக்கவர்கள்.

சரமோபாய நிர்ணய ப்ரமாணத் திரட்டு முற்றிற்று.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் ஸ்ரீ கீதாஶ்லோகார்த்த ஸாரம்

January 14, 2022

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் ஸ்ரீ கீதாஶ்லோகார்த்த ஸாரம்

ஸ்ரீ ஆளவந்தாரருளிச்செய்த கீதார்த்த ஸங்க்ரஹம்,
ஸ்ரீ வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் அருளிச் செய்த “பகவத் கீதை வெண்பா” மற்றும்
ஸ்ரீ. உ.வே. புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியின் “ஸ்ரீமத் பகவத் கீதை” விவரணத்திலிருந்து.

ஸ்ரீ எம்பெருமானாரருளிச்செய்த ஆளவந்தார் தனியன்

யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்

பாயிரம்:
1. கண்ணா நீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர் கீதை – யெண்ணாரு
நன் பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.

2. மாதவன் மாமாது மாறனும் வண் பூதூர் வாழ்
போத முனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சி மேற் கொண்டே யுயர் கீதை மெய்ப் பொருளை
நச் சிமேற் கொண்டுரைப்பன் நான்.

3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள் விரித்த பூதூர் மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.

5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.

—–

1) ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம்ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: – தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும்,
ஞானயோகத்தாலும், இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான,
நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான்.

6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில்,
ஒன்றை அ(ர்)த்தியாது – (பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற,
நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

——–

பூர்வ ஷட்கம்:

2) ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே யோகலக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வஜ்ஞாநம், இதரவிஷயங்களில் பற்றின்மை முதலான புத்திவிஶேஷங்களாலே) நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞானயோகமும், கர்மயோகமும்,
யோகலக்ஷ்யே – (ஆத்மஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப்பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும், சோதிதே – விதிக்கப்பட்டன.

7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞானயோகத்தையும், கர்மயோகத்தையும்,
ஆன மனயோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

——–

மத்யம ஷட்கம்:
3) மத்யமே பகவத்தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
ஜ்ஞாநகர்மாபி நிர்வர்த்யோ பக்தியோக:ப்ரகீர்த்தித:

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தியோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்மயோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்திவெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்திவெள்ளம் பெருகி வரும் பக்தியோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

——–

அந்திம ஷட்கம்:
4) ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:

ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூலரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என்ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐவேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம்செய்தல்,
பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக்கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடியிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தியோகத்தின் படி – பக்தியோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம்புரிவார்க்கு – நேர்மைக்குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோகமுறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞானயோகத்தின் நலம் – ஞானயோகத்தின் ஸ்வரூபமாகும்.

——–

13. இந்த வகையமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம்மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளையுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித்தனிசேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித்தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

—————-

1: அர்ஜுன விஷாத யோகம்:

5) அஸ்தாநஸ்நேஹகாருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

அஸ்தாந ஸ்நேஹகாருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்மபுத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

————

2: ஸாங்க்ய யோகம்:

6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்மதத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீலக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்யயோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
தந்மோஹஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மாமாயன் – பேராச்சிரியமான ஸ்வரூபரூபகுண விபூதிகளையுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால்,
மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

————

கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம்:
முதலத்தியாயமும், இரண்டாமத்தியாயத்தில் பத்துஶ்லோகங்கள் முடியவும்
சாஸ்திரம் அவதரித்த சந்தர்ப்பத்தைக்கூறும் அவதாரிகையாகிறது.

11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்பதுன்பம் முதலானவற்றைப் பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீரவேண்டிய ஜந்மமரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
29: ஆத்மநித்யத்வப்ரஸம்ஸை.
30: ஆத்மநித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமேயொழிய அதர்மமாகாது.
35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு. (இதுவரையில் அஸ்தானஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது. இனி, தர்மவிஷயமான உபதேசம்.)
38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்பதுன்பங்கள் முதலானவற்றில் ஸமபுத்தியுடன் போரிடவேண்டும்.
39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பலத்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை அநுஷ்டிப்பதாகிற கர்மயோகம் மோக்ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
53: முற்கூறிய கர்மயோகத்தின் பலம் ஞானயோகம். ஞானயோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்மஸாக்ஷாத்காரம்.
54-58: ஸ்திதப்ரஜ்ஞநிலை எனப்படும்ஜ்ஞானயோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.

59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்யமங்கள விக்ரஹத்தோடு கூடிய பரமபுருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
69-71: ஞானயோகத்தின் பலமான ஆத்மதர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்றுவிதமான அதிகாரிகளும்.
72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

——

3: கர்ம யோகம்:

7) அஸக்த்யா லோகரக்ஷாயை குணேஷ்வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ்யோக்தாத்ருதீயே கர்மகார்யதா

லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வரஜஸ்தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில் அக்கர்த்ருத்வத்தைச் சேர்த்துவிட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்மகார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் – முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக்கொள்ளத்தக்கதாயிருப்பது கருமயோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாபரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்மயோகம் ஆத்மதர்ஶனத்துக்கு நேரே காரணமன்று; நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாநயோகமே அதற்கு நேரே காரணம். இப்படி ஞானயோகமே சிறந்ததாயிருக்க கர்மயோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.
3-8 எளிதாகச் செய்யத்தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததாயிருக்கை, விடமுடியாததாயிருக்கை முதலான காரணங்களால் கர்மயோகம் ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் சிறந்தது.
9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தும்; அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமேயொழிய இவனைக் கட்டுப்படுத்தாது.
17-19 ஆத்மதர்ஶனம் கைவரப்பெற்ற முக்தனான கைவல்யநிஷ்டனே வர்ணாஶ்ரமதர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால், அப்படி முக்தனல்லாத நீ கர்மயோகத்தை அனுஷ்டித்தே ஆத்மதர்ஶனத்தைப் பெறவேணும்.
20 ஜனகர் முதலானோர் கர்மயோகத்தாலேயே ஆத்மதர்ஶனத்தைப் பெற்றனர்.
20-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞானயோகாதிகாரியாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்மயோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.
27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதிகுணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும் அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்மயோகத்தில் ஞானம் கலந்திருக்கையால், ஞானயோகத்தையிடையிடாமல் அதுவே நேரே ஆத்மதர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞானயோகத்தைவிடத் தாழ்ந்ததல்ல.
31-32 கர்மயோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.
33-43 எத்தகைய சிறந்த ஞாநயோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும் காமக்ரோதங்களும் ஜ்ஞாநயோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும். அநாதிவாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும். ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய், செயற்கெளியதான கர்மயோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்மயோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக்கொள்ளத்தக்கது.

——–

4: ஜ்ஞான யோகம்:

8) ப்ரஸங்காத்ஸ்வஸ்வபாவோக்தி: கர்மணோகர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞானயோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

1-3: கர்மயோகம் ஶுத்தபரம்பராப்ராப்தம்.
4: அர்ஜுனனின் கேள்வி.
5-11: அவதார ரஹஸ்யம்.
12-24: கர்மயோகம்ஜ்ஞாநாகாரமாயிருப்பதை நிரூபிப்பது.
25-30: கர்மயோக வகைகள்.
30-32: கர்மயோகிகளுக்கு நித்யநைமித்திக கர்மங்கள் அநுஷ்டிக்க வேண்டியவையே. அவர்களிடையே பலபேதம் கிடையாது.
33-40: கர்மயோகத்தில் அடங்கியஜ்ஞாநாம்ஶத்தின்ப்ராதாந்யம்.
41-42: முடிவுரை.

———-

5 – கர்மஸந்யாஸ யோகம்:

9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்மயோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக,
தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரியப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
12 பலத்யாகம் மோக்ஷஹேது.
13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
3. அதற்காக முயல்பவர்கள்
4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது; இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
20-25 ஸமதர்ஶநநிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

இவைப்ரக்ருதியின் செயல்களென எண்ணியிருத்தல்.
4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர். இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

————

6 – அத்யாத்ம யோகம்:

10) யோகாப்யாஸவிதிர் யோகீ சதுர்த்தா யோகஸாதநம்
யோகஸித்தி:ஸ்வயோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோகஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோகஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
ஸ்வயோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
— — — —
— — — — (லுப்தம்)

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலுவகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸுப்ரஸித்தமான பக்தியோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
10-12 பாஹ்ய உபகரண நியமம்.
13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.
29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
3. அந்தர்யாமியைக் காணுதல்
4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.
33-34 யோகஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
35-36 யோகஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ்ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
37-39 யோகமாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

——–

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்திசெலுத்துவதாகிற பக்தியோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும்,
கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யம ஷட்கத்தில் கூறுகிறது.

ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.

ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

————–

7 – விஜ்ஞான யோகம்:
11) ஸ்வயாதாத்ம்யம்ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்தபேத:ப்ரபுத்தஸ்யஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்தபேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது.

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
3 மோக்ஷஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்; அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன். அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
4 எட்டுவிதமான அசேதன ஸமஷ்டிப்பொருளும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
5 அசேதநப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதநஸமஷ்டியும் பரமபுருஷபரதந்த்ரமானது.
6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
*7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
7* அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக்காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்யப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவைபோலே, ராஜஸதாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும், அவ்வப்பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.
II 13-*14 பரமபுருஷனைப்பற்றிய முற்கூறிய உண்மையறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.
III 14* ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.
IV பக்தபேதம்
16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலுவகை பக்தர்கள் பரமபுருஷனை ஶரணமடைகின்றனர்.
1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)
V 17-27 ஞானியின் சிறப்பு
17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும், எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்; எம்பெருமானுக்கு மிகவினியவன்.
18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்; ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான். இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
20 ராஜஸதாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
22 பக்திஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
VI முடிவுரை
28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ, பரமபுருஷனையோ பெறவிரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்தவிஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச்சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும் பொதுவாக அறியவேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

———

8 – அப்யாஸ யோகம்:

12) ஐஶ்வர்யாக்ஷரயாதாத்ம்ய பகவச்சரணார்த்திணாம்
வேத்யோபாதேயபாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச்சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய
ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக,
முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேகநிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான கண்ணன்
அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள்,
சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

1-2
1.கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
2.ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை
3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
4. மூவருக்கும் அந்திமஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் – ‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக்காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந்நினைவுதானே அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்துவிடும்.
7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும் செய்யவேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
8-14 அவரவர்க்குரிய அந்திமஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸனபேதம்.
8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸனமுறையும், அதையொட்டி ஏற்படும் அந்திமஸ்ம்ருதியும்.
14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன். ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும், பரிபூர்ணப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
23-24 பரமபுருஷநிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னிவித்யாநிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள் ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்மபூமிக்கே திரும்பிவருகிறான்.
27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய், ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள் அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் – என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

———

9 – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்:

13) ஸ்வமாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்திரூப:ப்ரகீர்த்தித:

ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
2 கர்மஜ்ஞானயோகங்களைக் காட்டிலும் பக்தியோகத்துக்குள்ள சிறப்பு.
3 ஶ்ரத்தையின்மையால் பக்தியோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடை யாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
4-10 பக்தியோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
4,5 பரமபுருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய், படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
8 ஸமஷ்டிவ்யஷ்டிரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
11,12 ஆஸுரஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
13 ஸ்வயம்ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
14,15 ஸாதநபக்திநிஷ்டர்களான உபாஸகஜ்ஞானிகளின் பெருமை.
16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்யநிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும், அவற்றின் ஸத்தாஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த்தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோகக்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும், அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
27 பக்தியோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச் செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது, உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

——

10 – விபூதி யோகம்:

14) ஸ்வகல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

1-3 தன்னை தேவாதிதேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
12-18 கண்ணனுடைய கல்யாண குணச்சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
12-15 கண்ணன் முன்ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச் சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் – அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை முதலான கல்யாணகுணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை மற்ற பொருள்க ளோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
21-*39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
39* தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
41 இதுவரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்யவிபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி ப்ரகரணத்தை நிறைவுபடுத்தல்.
42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

——-

11 – விஶ்வரூப தர்சனம்:

15) ஏகாதஶேஸ்வயாதாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம்
தத்தமுக்தம் விதிப்ராப்த்யோர் பக்த்யேகோபாயதாததா

ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா