ஸ்ரீ வேங்கடேச புராணம்
த்ரை லோக்யம் கிம் சிரேஷ்ட ஸ்தலம் வால்மீகி நாரதர் இடம் வாமன புராணம்
சங்கர ஸ்கந்த -இதே கேள்வி உத்தம ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலம் -பிரகலாதன் அம்பரீஷன் -வழியில்
அம்பரீஷ வனம் இங்கும் உண்டே
விஷ்ணுவே திருமலை வடிவம்ன் -தபஸ்
அகஸ்தியர் உபாசிட்டவசுக்கு உபதேசம் -சார்ங்கம் ஏந்திய வாசுதேவனுக்கு உகந்த
வராஹ புராணம்
ரிஷிகள் வியாசர் -அதி ப்ரேசியமான ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
பூமி தேவி வராஹ –
ஸ்ரீ வேண்டடேசன் வாசுதேவா ஆலயம்
பாத்திமா புராணம்
நாராயணன் ஆவிபிரபாவம் செய்த திருமலை
கருட புராணம்
அருந்ததிக்கு வசிஷ்டர் -நித்ய விபூதி விடவும் ஸூர்ய மண்டலம் விடவும் ஸ்வேதா தீபம் விட இங்கு உகந்து
ப்ருஹ்மாண்ட மாண்ட ப்ருகுவுக்கு நாரதர்புண்ய க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய
ரிக் வேதம் -அராயி காணே விகடே கிரீம் கச்ச யவிஷ்யோத்தர புராணம் 14-21) 6160. சொல்லப்பட்ட இயரிய திருமலையே …ஸ்ரீம் பீடன் -வேதமே சொல்லுமே
ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”என்ற மந்திரம்,
“மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ,
சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே!
அலர்மேல் மங்கைத் தாயாரைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக!
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால்,
அவர் உன்னைக் காப்பார்! திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.
ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.
சிலப்பதிகாரத்தில் திருமலை
சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.
திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.
திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.
மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.
திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.
திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.
விமான வேங்கடேசன்
பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.
தெய்வீக மலை
‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.
வேங்கடம் என்றால் என்ன?
வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.
ஒலியும் ஒளியும்
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.
சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான்.
அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.
கோவர்த்தன மலையே திருமலை
கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.
கலியுக வைகுண்டம்
வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.
யசோதையே வகுளமாலிகை
கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.
வேதவதியே பத்மாவதி
திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.
வேங்கடேச சுப்பிரபாதம்
மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.
திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?
திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம்.
அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.
திருப்பதி மலையின் அடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்
——————————————————————————
ஸ்ரீநிவாச புராணம் என்று தனியாக எதுவும் இல்லை. பதினெட்டுப் புராணங்களில் வேங்கடேசரின் லீலைகள் பன்னிரண்டு புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து திருவேங்கட மஹாத்மியம் என்ற பெயரில் ஒன்று சேர்த்துள்ளார்கள். திருமலையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கி பி 1491 ஜூன் மாதம் 27ம் தேதி பாஸிந்தி வேங்கடதுறைவார் தாம் தொகுத்த திரு வேங்கட மஹாத்ம்யத்தை விண்ணப்பம் செய்ததாகக் காணப்படுகிறது. 1884 ல் இது தெலுங்கு புத்தகமாக தேவஸ்தானத்தரால் வெளியிடப்பட்டது 1896ல் இரண்டாவது பதிப்பும் 1928 ல் மூன்றாவது பதிப்பும் வெளி வந்தன.
க்ருதேது நரசிம்ஹோபூ4த்
த்ரேதாயாம் ரகு4 நந்தன:
த்3வாபரே வாஸு தே3வஸ்ச
கலௌ வேங்கட நாயக:–(ஆதித்ய புராணம்)
கிருத யுகத்தில் நரசிம்ஹராக இருந்தவரே, திரேதா யுகத்தில் ரகுநந்தனராக அவதரித்தார்.
அவரே துவாபரயுகத்தில் வாசுதேவர் ஆனார்.அவரே கலியுகத்தில் வேங்கடநாயகர் ஆனார்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாராயணாய
சூத முனிவர்
நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்; –நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு,
பகவத் தியானமும், பகவத் சர்ச்சைகளும், அகத்தை வென்ற முனிவர்கள் இடையே!
சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்,
“பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம், பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர!”
அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்.
“கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள், வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை.
வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்.
ஸ்வேத வராஹம்
ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்; ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு.
பிரமனின் ஒருநாள் பொழுது நீளும் நமக்கு இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்!
ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்; ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்!
முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள் சென்று அடைக்கலம் புகுவர் ஞான வுலகில்
மரம், செடி, கொடி, ஜீவராசிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும் அதீதஉஷ்ணத்தில். தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு.
அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில். கொட்டும் கனமழை பூமியின் மேற்பரப்பு அதிர; கெட்டிப்பட்டு பூமி பதிந்துவிடும் பாதாளத்தில்!
பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால் தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்! வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை
படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்!
வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு; வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை. பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்.
தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம் ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்!
தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே! தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்!
கூரிய நகங்களாலும், கோரைப் பற்களாலும் கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்.
ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி ஜலப்ரவாஹம் ஆகிவிடும் செந்நீராக அப்போது!
கிரீடாசலம்
ஞான லோகத்தில், தியானத்தில் இருந்த, மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை.
தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார் வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே. ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே;
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே.
சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன் சிருஷ்டித்தான் சூரிய, சந்திரர்களை முதலில்.
பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர் பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்.
பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான் பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்.
கருடனைப் பணித்தார், “வைகுந்தம் செல்க! பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க!”
வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்; வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்!
கோமதி நதிக்குத் தெற்கேயும், மற்றும் கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது. நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்!
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்!
காய் கனி, மூலிகைகளால் நிறைந்தது; கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது;
ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது.
தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப் பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது.
இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம், கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே.
நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்.
அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம் அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்.
எழுந்தருளினார் வராஹ பெருமான் – தாம் விழைந்தபடி பூவுலகில், விமானத்தின் கீழ்.
ஸ்துதி
வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால் வந்து பூமியில் துதித்தனர் வானவர், முனிவர், இந்திரன், பிரமன், துவாதச ஆதித்யர்கள்,
ருத்திரர், தேவர், வசுக்கள், திக்பாலகர்கள், கந்தருவர், சப்த ரிஷிகள், மருத் கணங்கள்!
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்,
“தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில். ப்ரபாவமும், தோற்றமும் மாறவேயில்லை!
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்.’ மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே,
தோற்றத்தையும், தன் முக விலாசத்தையும்!
அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்; அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்,.
கருணை பொழியும் கமலக் கண்களுடனும்; கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்; கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை.
வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால் – ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
நாரதர்
கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம் காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து. வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு. “அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.
“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.
“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்; சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து, பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.
“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத் திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”
தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை. சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரம்மன். சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!
நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரம்மன்!
‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச் சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.
அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை அலட்சியம் செய்தார் பிரம்ம தேவன் சபையில்!
முனிவரை அலட்சியம் செய்த பிரம்மனுக்குக் கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை
ஈசனும், உமையும்
பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார். அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு;
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக!
தனிமையில் இனிமை கண்டிருந்தவரின் தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்.
கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன் கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை.
பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு; கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை.
விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த, முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்;
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்.
தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று; தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு; நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று;
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு!
தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது.
கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர் சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு,
“உலகில் இனிக் கிடையாது உனக்கு உருவ வழிபாடு என்ற ஒன்று!” என்றார்
நின்றுவிட்டது சிவனுக்கு உருவ வழிபாடு! இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே.
சத்துவ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்.
நாரணன்
கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர் வைகுந்த நாதனைச் சோதிக்க விரைந்தார்.
ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன் ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.
தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.
‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன் வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’
இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர் இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”
உதைத்த காலைப் பற்றினார் நாரயணன், உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.
“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக் கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.
“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்! துயர் அடைந்தீரோ என்னை உதைத்தால்?”
முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ? உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று
“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!” பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.
யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று லோகத்திலும் சத்துவ குணனை கண்டறிந்ததால்.
லக்ஷ்மியின் கோபம்
ஏகாந்தமாக இருந்த வேளையில் உள்ளே வேகமாக வந்ததோடு நிற்கவில்லை பிருகு!
உதைத்தார் தன் இருப்பிடமான மார்பினை. உதைத்த காலுக்கு நாரணனின் உபசாரம் வேறு. வெகுண்டு எழுந்தாள் அமர்ந்த நிலையில் இருந்து.
வெலவெலத்துப் போனார் நாரணன் அதுகண்டு
பதறிய விஷ்ணு சாந்தப்படுத்தினார் லக்ஷ்மியை. உதறித் தள்ளினாள் கோபம் குறையாத லக்ஷ்மி.
‘அசுத்தம் செய்தான் என் இருப்பிடத்தை பிருகு! அதற்கு அவனைக் கொண்டாடினீர்கள்!” என்றாள்
“அவமதிக்கும் எண்ணம் இல்லை பிருகுவுக்கு! அதீத பக்தி தந்த உரிமையில் உதைத்தான்” என,
“பக்தன் அவன் என்றால் பக்தையே நானும். பக்தன் ஒரு பக்தையை அவமதிக்கலாமா?
வாசஸ்தலம் களங்கப் பட்டது பிருகுவால் வசிக்க முடியாது மீண்டும் அங்கு என்னால்.” எத்தனை சொல்லியும் கேட்கவில்லை அவள்.
“என்னிருப்பிடத்தை உதைத்தான்! ” என்றாள்
வைகுந்தம் விடுத்தாள் லக்ஷ்மிதேவி உடனே. வையகம் அடைந்தாள் தவக் கோலம் பூண்டிட. கரவீரபுரம் சென்று அடைந்தாள் – அங்கு
பரந்தாமனின் பாதங்களை தியானித்தாள்
எப்படி இருக்குமோ லக்ஷ்மி இல்லாத இடம் அப்படியே இருந்தது வைகுந்தம் இப்போது. சோபை மறைந்தது; சோகம் நிறைந்தது;
சூனியமாக இருந்தது காணும் இடங்கள்!
வைகுண்டம் விடுத்தான் நாரணனும்; வையகம் அடைந்தான் நாரணனும் ;
சேஷாச்சலம் இருந்தது கரவீரபுரத்தின் அருகே; சேஷாச்சலத்தைத் தேர்வு செய்தார் நாரணன்.
எறும்புப் புற்று
நாற்புறங்களிலும் மலைச் சிகரங்கள்; ஊற்றெடுத்து ஓடும் இனிய சுனைகள்; சலசலத்து ஓடும் அழகிய சிற்றோடைகள்;
கலகலப்பால் மகிழ்வூட்டும் பறவையினங்கள்;
பள்ளத்தாக்குகள் மலைகளின் இடையிடையில்; உள்ளம் கொள்ளை கொள்ளும் இயற்கையெழில்;
தெளிந்த நீர்த் தடாகத்தைக் கண்டார் நாரணன்; விளங்கிய ஆலயத்தையும் கண்டார் நாரணன்;
அழகிய மண்டபங்கள், விமானம் கொண்ட, ஆதி வராஹ மூர்த்தியின் அழகிய ஆலயம்.
தடாகத்தில் நீராடி வராஹப் பெருமானிடம் தங்குவதற்கு அனுமதி வேண்டினார் நாரணன்;
“எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம்!”எனத் தங்கு தடையின்றி அனுமதித்தார் வராஹர்.
“தங்குவேன் இங்கேயே கலியுகம் முழுவதும். தடாகத்தில் நீராடித் தங்களைத் தொழுத பிறகே
இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும் இங்கே தொழ வரவேண்டும் இனிமேல்” என்றார்.
நாரணன் சேஷாசலம் சென்றதை அறிந்து நாரணனைத் தேடி ஓடினான் பிரம்மதேவன்.
பிரிவுத்துயர் தாங்காமல் வருந்தி நாரணன் திரிவதைக் கண்டு வருந்தினான் பிரமன்.
வெட்ட வெளியில், கட்டாந்தரையில், படுத்து உறங்கினார் வைகுந்தவாசன்.
அமைக்க விரும்பினான் இருப்பிடம் ஒன்றை; அமைத்தான் நிழல் தரும் புளிய மரத்தினை.
அமைத்தான் அதன் கீழ் எறும்புப் புற்றினை; அமைத்தான் இறங்கிச் செல்லப் படிக்கட்டு.
அமைத்தான் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய மண்டபத்தினை புற்றினுள் பிரமன்.
இடைப் பெண்
நாரணனுக்குப் பிடித்திருந்தது புதிய மண்டபம்; நிரந்தரமாகத் தங்க விரும்பினான் அங்கேயே.
‘வைகுந்தம் விடுத்து விண்ணிலிருந்து நாரணன் வையகம் வந்ததை அறிவிக்க வேண்டும் உடனே’. கைலாசநாதனிடம் விரைந்து சென்றான் பிரம்மன்.
“சேஷாச்சலத்தில் உள்ளான் நாரணன்” என்றான்;
நாரணனுக்கு உதவிட ஆவல் கொண்டனர், பிரம்மனும், பிரானும் விரைந்தனர் வையகம்.
சிறு பிணக்கினால் நாரணனிடமிருந்து பிரிந்து சென்ற லக்ஷ்மியிடம் சென்றனர்.
கரவீரபுரம் வந்த பரமேச்வரன், பிரம்மனை வரவேற்றாள் லக்ஷ்மிதேவி மனமுவந்து.
“தாங்கள் பிரிந்து வந்து விட்டதால் நாரணன் தானும் வந்து விட்டார் இப்போது வையகம்.
அனாதை போல அலைந்து திரிகின்றார் வனாந்தரங்களிலும், மலைச்சரிவுகளிலும்!
வராஹ பெருமான் கோவில் தடாகத்தருகே இருப்பிடம் ஒன்றை அமைத்துவிட்டேன்.
ஆகாரத்துக்குச் செய்ய வேண்டும் ஒரு ஏற்பாடு. அரனும், நானும் வைத்துள்ளோம் ஒரு திட்டம்.
மாறிவிடுவோம் நாங்கள் இருவரும் உடனே மடி சுரக்கும் ஜாதிப் பசுவாகவும், கன்றாகவும்!
தடை சொல்லாமல் தாங்களும் உதவ வேண்டும்; இடைப் பெண்ணாக மாறிவிட வேண்டும் நீங்கள்.
சேஷாசலத்தின் அருகே சந்திரகிரியை ஆளும் சோழ ராஜனிடம் விற்று விடுங்கள் எங்களை!”
சந்திரகிரியை நோக்கிப் புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி, விந்தையான பசு, கன்றுடன் இடைப்பெண்ணாக மாறி.
பசுவின் மாயம்
கரவீர புரத்திலிருந்து புறப்பட்ட இம்மூவரும் விரைவாகச் சென்றடைந்தனர் சந்திரகிரியை.
கன்றையும், பசுவையும் விற்க வந்ததாக நின்ற காவலரிடம் கூறினாள் இடைச்சி.
கொழுகொழு பசுவும், மொழுமொழு கன்றும், அழகால் கவர்ந்தன காவலரின் உள்ளங்களை! அறிவித்தனர் அதை அரசனிடம் சென்று;
தருவித்தான் அவன் அவர்களைத் அருகே.
பளபளப்போடும், சுழிகளோடும் கூடிய பசுவும், கன்றும் கவர்ந்தன அரசனை.
அரசிக்கும் பிடித்துவிட்டது அவற்றை, பராமரித்தாள் தன் கவனத்தில் வைத்து.
இடையன் செல்வான் தினமும் மலைக்கு, விடியற் காலையில் பசுக்களை மேய்க்க.
அரண்மனை திரும்புவான் அன்றாடமும். ஆவினத்துடன், ஆதவன் மறையும் முன்.
மலைக்குச் சென்றபின் பசுவும், கன்றும், மலைச் சரிவில் ஒதுங்கிவிடும் தனியாக.
இடையனின் தலை மறைந்த உடனே எடுக்கும் ஓட்டம் சேஷாச்சலத்துக்கு.
புற்றின் மேல் நின்று பசு பால் பொழிய புற்றினுள்ளே பசியாறுவான் நாரணன்.
திரும்பக் கலந்துவிடும் பிற மாடுகளுடன்! அறியவில்லை இடையன் இம் மாயத்தை!
பசுவைக் கறந்தாள் ராணியே சுயமாக; பசு பால் தரவில்லை ராணிக்குச் சரியாக.
அதிக உணவு அளித்தாள் பசுவுக்கு எனினும் அதிகப் பால் கரக்கவில்லை அந்த மாயப் பசு!
பரந்தாமன்
அரசி சந்தேகித்தாள் அப்பாவி இடையனை,
‘கறந்து குடிக்கின்றனோ வருகின்ற வழியில்?’“மடி பெரிதாக இருக்கிறது பசுவுக்கு – ஆனால்
அடி தட்டுகிறது கறக்கும் பால் விந்தையாக!
கூறு உண்மையை என்ன நடக்கிறது?” அதட்ட ,“அறியேன் நான் ஒரு பாவமும் ” என அழுதான்.
“ஜாக்கிரதை நாளைக்குக் தரவேண்டும் பால்!” எச்சரித்தாள் இடையனைச் சந்திரகிரி அரசி.
இத்தனை ஆண்டுகள் பெறாத அவப் பெயரை பெற்றுத் தந்துவிட்டன இந்தப் பசுவும் கன்றும்.
நம்பவில்லை அந்தப் பசுவை இடையன் சற்றும், ‘ஓம்புகிறதோ பழைய எஜமானுக்குப் பால் தந்து?’ கண் இமைக்காமல் கண்காணித்தான் மறுநாள்;
நண்பகலில் பிரிந்து ஓடின அப் பசுவும், கன்றும். ஓடின சேஷாசலத்தின் மலைச் சரிவுகளில்,
ஓடினான் துரத்திய இடையன் கோடரியுடன்!
புற்றை அடைந்ததும் நின்று விட்டன அங்கு. புற்றின் உள்ளே சுரந்தது மொத்தப் பாலையும்!
கோபம் கொண்டான் இடையன் – ‘அரசியின் நோகும் சொற்களை நான் கேட்டது இதனால்’.
பாய்ந்தான் பசு மீது கோடரியை ஓங்கியபடி; பாய்ந்து வெளிவந்தார் புற்றிலிருந்த நாரணன்.
விழுந்தது வெட்டு நாரணன் நெற்றியில் பிளந்த நெற்றியிலிருந்து பீறிட்டது ரத்தம்!
நனைந்தன பசுவும், கன்றும் ரத்தத்தில்! நினைவிழந்தான் இடையன் அச்சத்தில்!
சோழராஜன்
ரத்தக் கறையுடன் ஓடிவந்தன பசுவும், கன்றும்! சித்தம் குழம்பியது அரண்மனைக் காவலருக்கு!
‘துஷ்ட மிருகங்கள் சேதம் விளைவித்தனவா? கஷ்ட காலம் காணவில்லை இடையனையும்!
யார் யாருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ? யாருக்குத் தெரியும்?’ அரசனிடம் ஓடினர்.
வாசலுக்கு விரைந்தான் அரசன் – ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் குழம்பியது மனம்.
வாலைச் சுழற்றிய பசு ஓடியது தெருவில். வரச் சொல்லுகிறது எனத் தெரிந்து விட்டது.
“செல்லுங்கள் பசுவைத் தொடர்ந்து நீங்கள்! சொல்லுங்கள் அங்கு கண்டதை இங்கு வந்து!”
ஆயுதங்களுடன் விரைந்தனர் காவலர்கள்; அடைந்தனர் புற்று இருக்கும் இடத்தினை.
இடையன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான்; கிடந்தது அவன் அருகே ரத்தக் கோடாரி!
கசிந்தது ரத்தம் புற்றின் துவாரத்தில்! வசித்த நாகம் வெட்டுண்டு விட்டதோ?
விரைந்து சென்று கூறினார் அரசனிடம் விரைந்து வந்தான் அரசன் பல்லக்கில்
‘நிகழ்ந்துள்ளது அசாதாரண சம்பவம் ஒன்று ! நிகழ்ந்து விட்டதோ தெய்வக் குற்றம் இன்று?’
தெய்வத்தை எண்ணி தியனித்தான் மன்னன்; “தெளிவாக்குவாய் நிகழ்ந்தவற்றை நீ எனக்கு!
பிழை செய்யப் பட்டிருந்தால் மனமுவந்து பிராயச் சித்தம் செய்கின்றேன் பாவத்துக்கு!”
நாரணன் சாபம்
கோபத்தோடு எழுந்தார் நாரணன் புற்றிலிருந்து கோடரி பிளந்த நெற்றியில் வழிந்தது ரத்தம்!
தரையில் விழுந்து நமஸ்கரித்தான் அரசன், “உரையுங்கள் தேவதேவா! நிகழ்ந்தது என்ன?”
கண்ணீர் விட்டுக் கதறினான் சோழராஜன், செந்நீர் வழிய நின்றிருந்த நாரணனிடம்.
“வைகுந்தம் விடுத்து வையகம் வந்த பின்னர் வாழ்ந்து வருகின்றேன் நான் இந்தப் புற்றில்!
தெய்வப் பசு வந்து சுரக்கும் பாலை எனக்காக; செய்வது ஏதென்று அறியவில்லை இடையன்.
கோடரியால் தாக்க வந்தான் பசுவினை – எனக்குக்கோடரி வெட்டு அடாத செயலைத் தடுத்ததற்கு!”
“ஏய்க்கிறது பசு என்று எண்ணினான் அவன், துய்க்கிறது இறைவன் என்று அறியவில்லை!
சாந்த மூர்த்தியான தாங்கள் கோபம் விடுத்துச் சாந்தம் அடைய வேண்டும் லோக ரக்ஷகா!”
“புற்றில் பால் சுரந்த உடனேயே அவனது சிற்றறிவுக்கு எட்டி இருக்கவேண்டும் இது!
புற்றில் உள்ளது ஏதோ விசேஷம் என்பது. குற்றமே இடையன் கோடரியை வீசினது!”
அத்தனின் உக்கிரம் குறையவில்லை – மன்னன் எத்தனை கெஞ்சினாலும் மாறவில்லை கோபம்!
“குடிமக்கள் செய்யும் பாவம் சேரும் சென்று, குடிமக்களை ஆளும் அரசனையே என்றும்!
யோசியாமல் இடையன் செய்த தவற்றுக்குப் பைசாசமாக மாறித் திரிவாய் நீ வனங்களில்!”
சாபம் இட்டார் அப்பாவிச் சோழமன்னனுக்குச் சாந்த மூர்த்தியாகிய சத்துவ குண நாரணன்.
சாப விமோசனம்
“பிரஜைகளின் தவறுகள் சேரும் அரசனையே! குறைப் படவில்லை கிடைத்த சாபத்துக்கு நான்.
கூறுவீர் சாப விமோசனம் என்ன என்பதை; கூறுவீர் சாபவிமோசனம் பெறும் வழியை!”
“திரிவாய் பிசாசாக மாறி மிகுந்த ஆயுளில்; பெறுவாய் பெருமை நீ அடுத்த பிறவியில்.
பிறப்பாய் சுதர்மன் மகன் ஆகாச ராஜனாக, பிறப்பாள் என் மனைவி உந்தன் மகளாக.
நற்கதி அடைவீர் நீயும், உன் வம்சத்தினரும்; கற்பகாலம் விளங்கும் புகழுடன் உன் பெயர்.”
“சாபமா இது? அரிய வரம் அல்லவோ இது? கோபத்தின் பரிசாகக் கிடைத்தவை இவை!
வைகுந்தவாசனை அடைவேன் மருமகனாக! வைபவ லக்ஷ்மியை அடைவேன் என் மகளாக!
மன்னித்து விடுங்கள் இடையனின் குற்றதை; புன்செயல் புரிந்தான் மதியற்ற மடையன்.”
மயங்கிய இடையன் விழித்துக் கொண்டான் தயங்கித் தயங்கி எழுவதற்கு முயன்றான்.
கண்கள் தெரியவில்லை; பார்வை போய்விட்டது! கண்ணீர் வழிய அழுதான் “ஆண்டவனே!” என்று.
“தண்டனை அனுபவிப்பான் சிறிது காலம் கண் மூடித்தனமான செயல் செய்ததற்கு.
நித்தியவாசனாக அமர்வேன் நான் இங்கு; எத்தினம் இவன் என்னிடம் வருவானோ,
கிடைக்கும் கண் பார்வை மீண்டும் அன்று. கிடைக்கும் வைகுந்தம் பாவத்தை வென்று!
விண்ணுலகு விட்டு பூமிக்கு வந்தபின் கண்டீர்கள் என்னை இந்தக் கோலத்தில்.
இதே கோலத்தில் தங்குவேன் இங்கே!” அதே நொடியில் அந்தர் தியானமானார்.
பைசாச உருவம் தாங்கினான் சோழ ராஜன்; வைகுந்தவாசன் மேல் செய்தான் தியானம்.
வகுள மாலிகை
விடை பெற்றுச் சென்று விட்டாள் லக்ஷ்மி! இடையன் பிளந்தான் நெற்றியைத் தாக்கி!
பிருஹஸ்பதி வந்தார் நாரணனைக் காண; வருந்தினார் நாரணன் படும் துயர் கண்டு.
“கசிகின்றதே நிற்காமல் இன்னமும் உதிரம்! கசியும் காண்போர்கள் கண்களிலும் உதிரம்!
சேஷாச்சலத்தில் இல்லாத மூலிகைகளா? ஈசா! தாங்கள் அறியாத வைத்தியமா?” என
மூலிகையைத் தேடிச் சென்ற நாரணனை – வகுள மாலிகை என்னும் மாது சிரோன்மணி கண்டார்.
ஆதி வராஹரிடம் அதீத பக்தி கொண்டிருந்த அகவை மிகுந்த ஒரு கண்ணியப் பெண்மணி.
பிளந்த நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் பிளந்தது அவள் நெஞ்சத்தைத் துயரால்.
கொய்து கொண்டிருந்த மலர்களை விடுத்துத் தொய்ந்து நடந்திருந்த நாரணனிடம் வந்தாள்.
“யாரப்பா நீ? அலைகிறாய் ரத்தக் காயத்துடன் ! யாரும் இல்லையா உன்னைக் கவனிப்பதற்கு?”
கிழித்துத் துடைத்தாள் சேலைத் தலைப்பால்; பிழிந்து கட்டினாள் மூலிகையின் சாற்றால்.
கள்வர்கள் வழிமறித்துத் தாக்கினார்களா கூறு? காயம் வந்த மாயம் என்ன சொல்லு!” என்றாள்.
“அம்மா! யாரும் இல்லாத அநாதை நான் அழைப்பர் என்னை ஸ்ரீனிவாசன் என்று.
பசுவைத் தாக்க முயன்றான் ஒரு பாதகன்; பசுவைக் காத்தேன்; விழுந்தது ஒரு வெட்டு!”
இதயத்தைத் தொட்டது “அம்மா!” என்னும் சொல்! இவளும் யாருமில்லாத ஓர் அநாதை அல்லவா?
ஆனந்தக் கண்ணீருடன் நாரணனை அவள் நோக்க, அகக்கண்கள் திறந்து கொண்டன அதே நொடியில்!
‘தன் எதிரே நிற்பது ஸ்ரீனிவாசன் அல்லவே! தன் எதிரே நிற்பது ஸ்ரீ கிருஷ்ணன் அல்லவா?’
கண் இமைக்கும் நேரத்தில் கண்ட ஒரு காட்சி கண் முன் கொண்டு வந்தது பூர்வ ஜென்மத்தை!
யசோதை
கலியுகம் பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது. காலில் அம்பு தைத்திருந்தது கிருஷ்ணனுக்கு!
செயல் புரிந்தது ராமாவதாரத்தில் – ஆனால் செயல் பலன் தந்தது கிருஷ்ணாவதாரத்தில்!
வாலியோடு சுக்ரீவன் புரிந்த துவந்த யுத்தத்தில், வாலியைக் கொன்றான் மறைந்திருந்த ஸ்ரீ ராமன்.
கோபம் கொண்ட வாலி ராமச்சந்திரனுக்குச் சாபம் அளித்தான் தன் உயிர் பிரியும் முன்பு.
“மறைந்திருந்து வீழ்த்தினாய் ராமா நீ என்னை! மறைந்திருந்து வீழ்த்துவான் ஒருவன் உன்னை!”
தனிமையில் வனத்தில் அமர்ந்திருந்த கண்ணனின் இனிய பாதங்களை ஒரு பறவை என எண்ணினான்.
அம்பு எய்தான் வேடன் சாபத்தை நிறைவேற்ற. அன்பு கொண்டவர்கள் துடித்தனர் இதைக் கண்டு .
“வைகுந்தம் திரும்புகின்றேன் நான் – நீங்களும் மெய்யுருவம் அடையலாம் முன் போலவே!
சேஷாச்சலத்தில் உறைவேன் நான் கலியுகத்தில். சென்று காத்திருங்கள் என் வருகைக்கு!” என்றான்
விடுத்தனர் கோபியர் தங்கள் மாய உருவங்களை. எடுத்தனர் முன் போல் தம் பழைய உருவங்களை.
“எப்போதும் உன் அன்னையாகும் பாக்கியத்தைத் தப்பாமல் எனக்குத் தரவேண்டும் என் கண்ணா!”
யசோதை வேண்டினாள் கண்களில் அருவியுடன், யசோதைக்கு அருளினான் அவள் கேட்ட வரத்தை.
வகுள மாலிகையாகக் காத்திருப்பாய் அம்மா! வெகு விரைவில் வருவேன் சேஷாச்சலத்துக்கு.”
இருவரும் ஒருவரே!
கண நேரத்தில் உணர்ந்தாள் தான் யாரென! “கண்ணா! ” என அணைத்ததாள் அன்புடன்!
“அநாதைகள் அல்ல இனி நாம் என் மகனே! அநாதி காலமாக உள்ளது நமது உறவு!” என
அழைத்துச் சென்றாள் இனிக்கும் ஓடைக்கு; பழுத்த கனிகளைப் பறித்து உண்ணத் தந்தாள்.
“இனிமேல் இருந்துவிடு நீ என்னுடனேயே! தனியாக முன்போல் தவிக்க வேண்டாம்!”
“வந்து பார் நான் தாங்கும் இடத்தை!” என்று சிந்தை மகிழ்ந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்
புற்றுக்கு அழைத்துச் சென்றார் அவளை; புற்றினுள் காட்டினர் தம் இருப்பிடத்தை!
வராஹ பெருமானை வணங்கச் சென்றாள், வகுள மாலிகை தினமும் செய்வது போல.
“வழக்கதை விடத் தாமதமாக வந்துள்ளாய்! வழக்கத்தை விட நீ ஆனந்தமாக உள்ளாய்!”
வம்புக்கு இழுத்தார் அந்த வகுள மாலிகையை, அன்புடன் அவள் தொழும் வராஹ பெருமான்!
ஸ்ரீனிவாசன் கதையைக் கூறினாள் அவள்.
“ஸ்ரீனிவாசன் வேறு, நான் வேறு அல்ல!
அங்கே அவனுக்கு நீ செய்யும் தொண்டு இங்கே எனக்கு இனி வந்து சேர்ந்து விடும்.
கவனிப்பாய் நீ ஸ்ரீனிவாசனின் தேவைகளை. கலியுக முடிவில் சேர்வாய் என் பாதங்களை!”
ஆகாச ராஜன்
திரிந்தான் பைசாச உருவில் சோழராஜன்; பிறந்தான் பூவுலக வாழ்வை நீத்த பிறகு, நாராயண புரத்தை ஆண்டு கொண்டிருந்த
நல்ல மன்னன் சுதர்மனின் முதல் மகனாக. ஆகாச ராஜன் என்ற பெயரை வைத்தனர். அன்புடன் அவனைப் பேணி வளர்த்தனர்.
பிறகு பிறந்தது இன்னொரு ஆண் மகவு; பெயர் விளங்கியது தொண்டைமான் என. ஒற்றுமையாக வளர்ந்தனர் இருவரும்;
போற்றினர் அனைவரும் இருவரையும்.
சுதர்மன் விரும்பினான் வனவாசம் செல்ல; சுபமாக மணிமுடி தரித்தான் ஆகாசராஜன்.
இளவரசுப் பட்டம் கிட்டியது இளையவனுக்கு; இருவரும் ஏற்றனர் தந்தையின் விருப்பத்தை.
உயர்குலப் பெண்களை மணந்து கொண்டனர்; பெயர் விளங்கும்படி நிர்வகித்தனர் நாட்டினை.
உருண்டோடின வருடங்கள் ஒவ்வொன்றாக, பெருகின வளமும், நலமும் அந்த நாட்டில்.
ஆனந்தம் கொண்டிருந்தனர் அனைவருமே ஆகாச ராஜன் என்னும் மன்னனைத் தவிர!
குழந்தை ஒன்று இல்லை கொஞ்சுவதற்கு! குழந்தை ஒன்றில்லை முத்தாடுவதற்கு!
“இப்பிறவியில் செய்யவில்லை ஒரு பாதகம்; முற்பிறவியில் செய்ததை யாம் அறிகிலோம்.
குலகுரு சுகர் அறிவார் மூன்று காலத்தையும். குலகுரு கூறுவார் நல்வழி ஒன்றை நமக்கு!”
அரசி ஆலோனை கூறினாள் அரசனுக்கு; அரசன் அழைத்து வரச் சொன்னான் சுகரை.
பல்லக்குச் சென்றது சுகரை அழைத்துவர, சொல்லுக்கு வல்லவர் சுகர் அங்கு வந்தார்.
மரப் பேழை
பல்லக்கில் வந்த குலகுரு சுகரை ஆகாசராஜன் உள்ளன்போடு வரவேற்றான் அரசியுடன் சென்று.
‘அழைத்த காரணம் என்ன அரசே?” என வினவ, “விழைகின்றோம் மழலைச் செல்வத்தை யாம்!
பலன் தரவில்லை புரிந்த தான தருமங்கள்; பலன் தரும் வழியைக் கூறவேண்டும் தங்கள்!”
“புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் – உனக்கு உத்திரவாதமாகப் பிறக்கும் குழந்தை!” என
“பொய்க்காது பெரியோரின் ஆசி மொழிகள்; செய்வோம் யாகத்தைத் தங்கள் ஆசியுடன்!”
குறித்தனர் நல்ல நாள் ஒன்றை யாகத்துக்கு; குவித்தனர் யாகப் பொருட்களைக் கொணர்ந்து.
குழுமினர் வேத விற்பன்னர்கள் யாகம் புரிந்திட அழைப்புகள் சென்றன அருமை நண்பர்களுக்கு!
உழுதான் ஆகாச ராஜன் அந்த யாக பூமியை, தொழுத பின்பு இறையையும், குருவையும்.
வேத கோஷம் செய்தனர் வேத விற்பன்னர்கள். கீத நாதம் ஒலித்தனர் இசை விற்பன்னர்கள்.
நிலத்தை உழுத ஆகாச ராஜனின் கலப்பை நின்று விட்டது ஓரிடத்துக்கு வந்தவுடன்.
அழுத்தி உழுதவுடன் எழுந்தது ஒரு சப்தம்; ஆழத்தில் கலப்பையைத் தடுத்தது எதுவோ!
தோண்டினர் காவலர் நிலத்தை விரைந்து; கண்டனர் அழகிய ஒரு மரப் பேழையை!
பேழை வந்தது அரசனிடம் பத்திரமாக! பேழை வீசியது ஓர் அரிய நறுமணத்தை.
பத்மாவதி
தென்றல் தழுவிச் சென்றது குளிர்ச்சியாக! தெளித்தது வானம் நன்னீர்த் துளிகளை!
பூமியை உழுத ஜனகனுக்குச் சீதையைப் போல, பூமியை உழுத மன்னனுக்கு கிடைத்தது என்ன?
பேழையைச் சமர்பித்தான் மன்னன் குருவிடம்; பேழையைத் திறந்தார் ஆர்வத்துடன் குலகுரு.
ஆயிரக் கணக்கான தாமரை இதழ்களில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் குழந்தை!
பெருகியது கண்ணீர் பெருகிய உவகையால்! பரிவுடன் வணங்கினான் குருவின் பாதங்களை!
ஆகாசத்தில் இருந்து ஒலித்தது ஓர் அசரீரி.“ஆகாச ராஜன்! பூர்வ ஜன்ம புண்ணியம் இது.
பூர்த்தியடைந்தது உன் நித்திய கோரிக்கை. புத்திரி கிடைத்தாள் உன் மனக் குறை தீர!”
மார்புறத் தழுவினான் மலர்க் குழந்தையை! ஆர்வத்துடன் அடைந்தான் அரண்மனையை.
பெயர் இட்டான் குழந்தைக்கு பத்மாவதி என. பெயர்க் காரணம் தாமரையிதழ்களில் சயனம்.
நடத்தினான் தான தருமங்கள் நாடெங்கும்; நடத்தினான் பூஜைகள் ஆலயங்கள் எங்கும்.
தன் வீட்டிலேயே தேவி வந்து பிறந்ததுபோல தன்னிறைவு அடைந்தனர் ஒவ்வொருவரும்.
நாரதர்
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்;
நற்குணங்கள் அனைத்தின் ஓர் இருப்பிடம்.
நந்த வனத்தில் தோழியாரோடு ஆனந்தமாகப்
பந்து விளையாடுகையில் வந்தார் ஒரு கிழவர்.
வயது முதிர்ந்த கிழவராக வந்த நாரதர்
“பயத்தை விட்டுவிட்டு வா இங்கே!” என,
தயங்கினாள் பத்மாவதி அவரை அறியாது!
“தயக்கம் வேண்டாம் நான் அந்நியனல்ல!
கைரேகை கண்டு சொல்லுவேன் பலன்
தையல் உந்தன் எதிர் காலத்தைப் பற்றி!”
நீட்டினாள் தன் இடக் கரத்தை பத்மாவதி
நீட்டிய கரத்தைப் பிடித்து நோக்கினார் அவர்.
“தெய்வாம்சம் பொருந்திய கை கூறுகிறது!
வைகுந்த வாசனை நீ மணக்கப் போகிறாய்!”
“அத்தனை பாக்கியமா எனக்கு?” வியந்தாள்!
அவள் கண்டாள் நாரத முனிவரை எதிரில்.
“அறிவிக்கவே வந்தேன் உனக்கு நான் இன்று !
அறிவாய் உன் கணவன் வைகுந்தவாசன் என்று!”
ஆட்டத்தில் செல்லவில்லை அவள் மனம்;
நாட்டம் கொண்டு விட்டது பரந்தாமனிடம்!
நிறைத்தாள் உள்ளம் முழுவதும் நாரணனை.
உரைத்தாள் உள்ளன்போடு “நாராயணா!” என்று!
“பருவ வயதில் உனக்கு இத்தனை பக்தியா?” என
அருமைத் தோழிகள் கேலி செய்தனர் அவளை!
கேட்டாள் நாராயணன் செய்த லீலைகளை.
கண்டாள் நாராயணனின் திவ்விய ரூபத்தை.
உரைத்தாள் நாராயணின் திவ்ய நாமங்களை.
பணிந்தாள் நாராயணின் திவ்ய விக்ரஹத்தை.
வைகுந்தவாசனை மணக்கும் சுபவேளைக்குத்
தையல் காத்திருந்தாள் மிக்க ஆர்வத்துடன்.
11a. சந்திப்பு
உலவின துஷ்ட மிருகங்கள் தம் இஷ்டம் போல!
நிலவியது ஆபத்து வனத்தில் வசிப்பவர்களுக்கு!
சுனை அருகே வசிப்பவர்களுக்கு பிராண அபாயம்,
சுனையில் நீர் பருகும் சாது பிராணிகளுக்கும் கூட.
“வேட்டைக்குப் போகின்றேன் அம்மா – விலங்குகளின்
கொட்டத்தை அடக்குவதற்கு!” என்றான் ஸ்ரீனிவாசன்.
காட்டை விட்டு வெளியே வந்து திரிபவைகளைக்
காட்டுக்குள் விரட்டினான் அவற்றை அச்சுறுத்தி.
துவம்சம் செய்து கொண்டிருந்தது ஒரு மத யானை!
துரத்தியவுடன் ஓடியது காட்டை விட்டு வெளியே.
வெளியறியது அது சேஷாச்சலத்தை விட்டு விட்டு!
வெறி கொண்ட யானையை விடலாகாது அன்றோ?
நாரயணபுரத்தை நோக்கி ஓடியது மத யானை.
நாராயணனும் துரத்திச் சென்றான் யானையை.
நுழைந்தது ஆகாசராஜனின் உத்தியான வனத்தில்!
‘இழைக்குமோ ஆபத்து அங்கிருந்த பெண்களுக்கு?’
அம்பினால் அடித்தான் அந்த மத யானையை.
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறிவிட்டு ஓடியது.
யானை சென்றபின் அழைத்தனர் பத்மாவதியை,
“யானை வந்துள்ளது, திரும்புவோம் அரண்மனை!”
யானையை விரட்டிய நாரணன் வந்தான் அங்கே.
யானை சென்று விட்டது; இருந்தனர் அப் பெண்கள்.
மற்ற பெண்களிடையே இருந்தாள் பத்மாவதி
மணிகளிடையே ஜொலிக்கும் வைரம் போல.
முககாந்தி ஈர்த்தது இரும்பைக் காந்தம் போல.
முன்னேறினான் பெண்கள் கூட்டத்தை நோக்கி.
11b. “வாசுதேவன் நானே!”
அந்நிய ஆடவனைக் கண்டதும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.
“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”
நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!
“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்து விட்டேன் இங்கு!
கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!
காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !
கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.
பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”
“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”
“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.
பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”
“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!
உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?
பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.
ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.
11c. சினம் பெருகியது
“அரசகுமாரி தங்களைப் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அறிய வேண்டும் நான் இப்போது.”
“தாராளமாகத் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா!
நாராயணபுர மன்னன் ஆகாசராஜனின் மகள்.
பத்மாவதி என்பெயர், தாரணி தேவி என் தாய்;
அத்திரி கோத்திரம், நாங்கள் சந்திர வம்சம்.
உத்தியான வனம் உண்டானது எனக்காக.
இத்தனை விவரங்கள் போதுமா உமக்கு?”
“என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
என்னை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?”
கோபம் வந்து விட்டது இளவரசி பத்மாவதிக்கு!
கோபம் கொண்டனர் பத்மாவதியின் தோழியரும்.
“அத்து மீறிப் பேசவேண்டாம் பித்துப் பிடித்த ஐயா!
பத்திரம் இவள் அரசகுமாரி, நினைவிருக்கட்டும்!”
“கன்னி பெண்ணை நான் மணக்க விரும்புவதில்
என்ன தவறு எனத் தெரியவில்லையே!” என்றான்.
பல்லைக் கடித்தாள், கண்களை உருட்டினாள்,
தொல்லை தரும் மனிதனுடன் என்ன பேச்சு?
வைகுந்தவாசனை வரித்த என்னை ஒரு
வழிப் போக்கன் மணக்க விரும்புவதா?
சினம் தலைக்கு ஏறியது பத்மாவதிக்கு
மனம் அவனைத் தண்டிக்க விரும்பியது.
“அனுமதி இல்லாத இந்த இடத்துக்கு வந்து
அத்து மீறி நுழைந்தது உம் முதல் தவறு!
தனித்து இருக்கும் இளம் பெண்களிடம்
தவறாகப் பேசுவது இரண்டாவது தவறு.
கன்னிப் பெண் இவள் என்று அறிந்திருந்தும்
கண்ணியம் இன்றிப் பேசுவது மூன்றாவது.
சுய உணர்வு இல்லை போலும் உமக்கு!
மயக்கத்தில் பேசுகின்றீர் போலும் நீர்!
தயவு செய்து சென்று விடுங்கள் உடனே!
பயம் இல்லையா அரசனின் கோபத்துக்கு?”
விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையானது!
இடத்தைக் காலி செய்ய மறுத்தான் ஸ்ரீநிவாசன்!
1d. மோதலும், காதலும்!
“எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் பெண்ணே?
என்னை மணக்கப் புண்ணியம் பண்ண வேண்டும்!”
“அம்பு எய்து மதயானையை விரட்டிய பின்பும்
வம்பு செய்து எம்மைத் துன்புறுத்துவது ஏனோ?”
“போகாவிட்டால் என்ன செய்ய முடியும் உன்னால்?”
“போகாவிட்டால் உங்கள் உயிரை வாங்கிவிடுவேன்!”
“உயிருக்கு அதிபதியான என் உயிரையா?”என்றான்.
“பயித்தியத்தை அடித்து விரட்டிவிடுங்கள்!” என்றாள்.
சொல்லடிகள் பட்டு நின்றிருந்த ஸ்ரீனிவாசனுக்குக்
கல்லடிகள் கொடுக்கலாயினர் தோழிப் பெண்கள்.
காயம் பட்டது சில கற்கள் தாக்கி – எனினும்
நியாயம் கேட்க நிற்கவில்லை ஸ்ரீநிவாசன்!
மோதல் ஏற்படும் இருவர் சந்தித்தவுடனே!
காதல் ஆகிவிடும் பின்னர் சிந்தித்தவுடனே!
அடித்து விரட்டச் சொன்ன பத்மாவதியை
அடித்து விட்டன மன்மதனின் பாணங்கள்.
நாரணன் வெளியேறிய பின்னர் உலகம் தன்
பூரணத்துவம் இழந்தது போல் தோன்றியது.
உலகமே இருண்டது போலத் தோன்றியது
கலகமே நிறைந்த மனதின் நினைவுகளால்!
பாலும் கசந்தது; பஞ்சணை வருத்தியது;
கோலம் மாறியது; பசலை நோய் படர்ந்தது.
“மந்திரம் போட்டுவிட்டானோ அந்தத்
தந்திரம் அறிந்த வம்புக்கார வாலிபன்?
உற்சாகமாகச் சண்டையிட்டாள் அவனுடன்!
உற்சாகம் இழந்து ஆளே மாறிப் போய்விட்டாள்.
ரதத்தில் ஏற்றி அமர்த்தினர் பத்மாவதியை;
ரதம் விரைந்தது மன்னனின் மாளிகைக்கு.
11e. காதல் நோய்
அந்தப்புரம் சென்று வணங்கினர் அரசியை
அரண்மனை திரும்பிய உடன் தோழிகள்
வாடிய முகங்கள்; வாயடைத்த பெண்கள்;
தேடினாலும் காணவில்லை பத்மாவதியை!
“அன்னியன் ஒருவன் நுழைந்து விட்டான்
அரண்மனை உத்தியான வனத்தில் இன்று!
மதயானையைத் துரத்தி வந்தானாம் அங்கு.
மதயானை ஓடிவிட்டது அவன் பாணத்துக்கு!
வம்பு செய்து பேசினான் பத்மாவதியிடம்;
கம்பு கொண்டு புடையாமல் கல் எறிந்தோம்.
நழுவினான் கழுவும் மீனில் நழுவும் மீனாக!
இழந்துவிட்டாள் இவள் தன் உற்சாகத்தை!
மகளைத் தேடி ஓடினள் அரசி அந்தப்புரத்தில்.
மகளோ வெட்டவெளியை வெறித்திருந்தாள்!
‘கெடுதலே நினையாத நான் இன்று மட்டும்
கொடூரமாக ஏன் நடந்து கொண்டு விட்டேன் ?
அடி பலமாகப் பட்டிருக்குமோ என்னவோ?
துடிப்பான இளைஞன்! பயித்தியம் அல்ல!’
அன்னை வந்ததையும் கவனிக்கவில்லை;
சொன்ன சொற்களையும் கவனிக்கவில்லை!
திருஷ்டி கழித்தாள் அரசி பத்மாவதிக்கு!
திரு நீறு பூசினாள் அரசி பத்மாவதிக்கு!
உணவு இறங்கவில்லை பத்மாவதிக்கு!
உறக்கமும் பிடிக்கவில்லை பத்மாவதிக்கு.
குலகுரு சுகர் வந்தார், அறிவுரைகள் தந்தார்;
“மலர்வனம் அருகேயே அகத்தியர் ஆசிரமம்!
பரமசிவன் அபிஷேக நீரைக் கொண்டுவந்து
அரசகுமாரி மேல் தெளித்தால் குணமாகும்!”
பதினோரு வேத விற்பன்னர்கள் சென்றனர்,
பரமசிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய!
12. பத்மாவதி யார்?
விடியலில் எழும் ஸ்ரீனிவாசன் அன்று
வெகுநேரம் வரையிலும் எழவில்லை.
வேட்டையாடின களைப்பு என்று எண்ணி
விட்டு விட்டாள் அவனை வகுளமாலிகை.
விழித்துக் கொண்டு விருதாகப் படுத்திருந்தான்;
எழுப்பினாலும் எழவில்லை மஞ்சத்திலிருந்து.
என்ன நடந்தது என்று பலவாறாகக் கேட்டும்,
என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை.
“எவள் மீதாவது மோஹம் கொண்டாயா?” என,
“எப்படிக் கண்டு பிடித்தீர்கள் அம்மா?” என்றான்!
“நீராடி உணவருந்திய பின் கூறு என்னிடம்,
நீ கண்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை!”
“காட்டில் வேட்டையாடும் போது நான் கண்டேன்
காட்டு யானை ஒன்று மதம்கொண்டு திரிவதை!
மனிதர்களுக்குத் தீங்கு செய்யுமோ என்றஞ்சி
கனத்த காட்டுக்குள் விரட்டி விட முயன்றேன்.
மலைச் சரிவில் இறங்கி ஓடியது மதயானை.
மலர் வனம் ஒன்றில் புகுந்தது அம்மதயானை.
நாராயண புரத்தை ஆட்சி செய்யும் மன்னன்
ஆகாசராஜனின் விசேஷ மலர்வனமாம் அது.
மன்னன் மகள் இருந்தாள் தன் தோழியருடன்;
மனதைப் பறிகொடுத்துவிட்டேன் கண்டவுடன்!
விருப்பத்தைத் தெரிவித்தேன் நான் அவளிடம்;
விரட்டி விட்டாள் என்னைக் கல்லால் அடித்து .
எங்கெங்கு நோக்கிலும் தெரிவது அவள் முகமே!
எங்கள் திருமணம் நடக்குமா அம்மா?” என்றான்.
“மணம் செய்ய விரும்புகிறாய் பத்மாவதியை.
குணம் கொண்டவளா உனக்கு ஏற்றவாறு?”
“அறியமாட்டாய் நீ அவள் யார் என்பதை!
அறிவேன் நான்! கூறுவேன் உனக்கும்!”
13a. வேதவதி
திரேதா யுகத்தில் இலங்கேஸ்வரன்
திரிலோக சஞ்சாரம் செய்து வந்தான்.
இமாலயச் சாரலில் கண்டு மோஹித்தான்
அமானுஷ்ய அழகுடைய ஒரு சுந்தரியை.
வேதவதி என்ற அந்தக் கன்னிகைக்கு
வேதவாக்கு ஆகும் தந்தையின் சொல்.
மகாவிஷ்ணுவை வரித்தாள் தன் மணாளனாக;
ஹிமாச்சலத்தில் செய்து வந்தாள் கடும் தவம்.
நெருங்கினான் வேதவதியை இலங்கேஸ்வரன்.
விரும்பினான் அவள் அழகை அனுபவிப்பதற்கு!
“பரந்தாமனை வரித்துவிட்டேன் மணாளனாக!
பர புருஷர்களுக்கு இடமில்லை மனதில்” என்றாள்.
“பரந்தாமனுக்கு இளைத்தவனோ இந்த ராவணன்?
பரம சுகமாக வாழலாம் என்னை மணந்துகொண்டு!”
வேதவதி ஏற்கவில்லை இந்தக் கோரிக்கையை.
வேண்டாம் என்றால் விடுபவனா இராவணன்?
தலைக்கு ஏறிவிட்ட மோக வேகத்தில் – அவள்
தலை மயிரைப் பற்றிக் கொண்டு சூளுரைத்தான்.
“அடையாமல் ஓய மாட்டேன் நான் விரும்பியதை!”
அடிபட்ட பெண் நாகமாக மாறிவிட்டாள் வேதவதி.
“கேசத்தைத் தீண்டி அதை மாசு படுத்திவிட்டாய்!
கேசவனுக்கு உகந்தது அல்ல அது இனிமேலும்!”
திட மனத்தோடு தவம் புரிந்துவந்த வேதவதியின்
இடக்கையே மாறி விட்டது ஒரு கூரிய கத்தியாக!
கேசத்தையே துண்டித்து விட்டாள் இடக் கையால்!
மோசமான எண்ணத்தை அது மாற்றிவிடவில்லை.
திடுக்கிட்டான் ராவணன்; மனம் தளரவில்லை;
தடுத்ததால் மேன்மேலும் வளர்ந்தது காம ஜுரம்.
13b. வேதவதியின் சாபம்
அண்டம் குலுங்க நகைத்தான் ராவணன்;
கொண்டது விடா முதலையும், மூர்க்கனும்!
“மந்திர, தந்திரப் பிரயோகங்கள் என்னிடத்திலா ?
தந்திரங்களில் பெயர் போனவன் இந்த ராவணன் !”
மீண்டும் நெருங்கினான் வேதவதியை ராவணன்;
மீண்டும் தியானித்தாள் வேதவதி பரந்தாமனை;
வேதவதி ஒரு புனிதவதி அதனால் அங்கு
வேகமாக வளர்ந்தது அக்கினி ஒரு தடுப்பாக.
திகு திகு என்று எரியத் தொடங்கியது அது
திகில் அடைந்த அபலையைக் காப்பதற்கு.
வரவழைத்தான் ராவணன் வஜ்ஜிராயுதத்தை.
எரியும் தீயை அணைக்க முயன்றான் அவன்.
‘கற்பைக் காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி
கயவன் தொடுமுன் உயிரை விடுவதே ஆகும்!’
“காமத்தால் கண்ணிழந்து விட்ட அரக்கனே!
காமம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்!
விடுவேன் என்னுயிரை எரியும் தீயில் குதித்து;
விடாது என்றும் இந்தப் பாவம் உன் குலத்தை!
பழி தீர்க்கும் உன்னை என்றாவது ஒருநாள்!
அழிவாய் நீயும், உன் குலமும் பெண்ணால்!”
சாபம் இட்டாள்; குதித்தாள் அந்த நெருப்பில்
சாபம் வீண் போகவில்லை பலித்தது பிறகு.
சீதையிடம் கொண்ட விபரீத மோஹமே
சீரழித்துவிட்டது அவன் வம்சத்தினையே1
13c. இரண்டு சீதைகள்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தன்னாட்டை விடுத்துக் கனகம் ஏகினான்
தம்பியுடனும், சீதையுடனும் ஸ்ரீ ராமன்.
தங்கினர் பஞ்சவடியில் அமைதியுடன்.
தையல் சீதையைத் தாக்கினாள் – ராமனிடம்
மையல் கொண்டுவிட்ட அரக்கி சூர்ப்பனகை.
காது, மூக்கு அறுபட்டு அலறி ஓடிச் சென்று
ஓதினாள் சீதையின் அழகை ராவணனிடம்.
காமம் கொண்டான் கண்டிராத சீதைமீது!
ஏமாற்றினான் ஒரு மாய மானை அனுப்பி!
அப்புறப்படுத்தினான் ராம, லக்ஷ்மணர்களை.
அபகரித்தான் சீதையைப் பர்ணசாலையுடன்.
“அபாயம் நேரக் கூடாது சீதைக்கு!” என்று
உபாயம் ஒன்று. செய்தான் அக்கினிதேவன்
வேதவதியுடன் வந்தான் விரைந்து வெளியில்!
வேகமான ராவணனை மறித்தான் வழியில்!
“உண்மை சீதை இருக்கிறாள் என்னிடம்;
உன்னிடம் இருப்பவள் ஒரு மாயச் சீதை.
எடுத்துச் செல் இந்த உண்மை சீதையை!
விடுத்துச் செல் அந்த மாயச் சீதையை!”
நம்பினான் அக்கினியின் சொற்களை ராவணன்;
அம்பென விரைந்தான் வேதவதியுடன் இலங்கை.
சீதையை விட்டு விட்டான் அக்கினிதேவனிடம்;
சீதையை விட்டான் ஸ்வாஹாவிடம் அக்கினி.
ராவணன் அழிந்தபின் அக்கினிப் பரீட்சை
ராமன் செய்யச் சொன்னன் வேதவதியிடம்.
வலம் வந்தாள் அக்கினியை மூன்று முறை;
வணங்கினாள் ராமனை; இறங்கினாள் தீயில்!
வெளிப்பட்டார் அக்கணமே அக்கினி தேவன்!
வெளிப்பட்டனர் அவருடன் இரண்டு சீதைகள்!
13d. ஏக பத்தினி விரதம்
“இருவரையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்பேன்.
“இவர் தங்கள் தேவி சீதா பிராட்டியார்;
இவர் வேதவதி என்னும் பிராட்டியார் .
வேதவதியே ராவணனின் சிறையிலிருந்தவர்;
தேவன் விஷ்ணுவை மணாளனாக வரித்தவர்.
இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் வேளை,
இராவணன் கண்டு மோஹித்தான் இவளை.
பலவந்தம் செய்ய நெருங்கினான் இவளை;
பயந்து தீயினில் குதித்துவிட்டாள் இவள்.
பத்திரமாக ஒப்படைத்தேன் என் மனைவியிடம்
தந்திரமாக மீட்டோம் சீதா தேவியைப் பின்னர்.
இருவருமே தங்களுக்கு உரியவர்கள் தாம்!
இருவரையும் ஏற்க வேண்டும் தங்கள்!” என;
சீதையும் கூறினாள் ராமனிடம் சென்று
“வேதவதி துன்புற்று என்னைக் காத்தாள்.
தாமதம் இன்றி ஏற்றுக் கொள்வீர் அவளை!”
ராமன் ஏற்கவில்லை இந்த வேண்டுகோளை.
“ஏக பத்தினி விரதம் பூண்டுள்ளதை அறிவாய்
ஏற்றுக் கொள்ள முடியாது இவளை இப்போது!
கலியுகத்தில் வசிப்பேன் சேஷாச்சலத்தில்,
கலியுகத்தில் மணப்பேன் நான் வேதவதியை.
ஆகாசராஜன் மகள் பத்மாவதி ஆவாள் – இவள்.
அரும் தவம் பலித்து என்னையும் மணப்பாள்!”
14a. சிவ ஆராதனை
“வேதவதியே இப்போது பத்மாவதி – அதனால்
வேண்டுமென்றே விலகிச் சென்றாள் லக்ஷ்மி.”
மன்னனைச் சந்திக்கச் சென்றாள் வகுளமாலிகை;
அன்னையுடன் சற்று வழி நடந்தான் சீனிவாசன்.
மாலை மங்கியது நகரை நெருங்குகையில்;
கோலாகல ஆராதனைகளின் ஒலி கேட்டது
அருகிலே இருந்த அகத்தியரின் ஆசிரமத்தில்;
விரும்பிக் கலந்து கொண்டாள் பூஜைகளில்!
விரைந்து சென்று நகரை அடைந்தாலும்
இரவில் மன்னனைக் காண முடியாதே!
வேதபாராயணம் தொடர்ந்து நடந்தது;
வேத வல்லுனர் செய்தனர் அபிஷேகம்.
விமரிசையாக நடந்தன பூஜைகள்.
வந்த காரியத்தில் வெற்றி நிச்சயம்!
“ஆராதனைக்குக் காரணம் என்ன?” என
“நாரயணபுரி இளவரசிக்காக நடக்கிறது.
உற்சாகம் இழந்து விட்டாளாம் திடீரென்று!
உறங்குவதும், உண்பதும் இல்லையாம்!”
‘காதல் வயப்பட்டுள்ளாள் பத்மாவதி தேவி!
காதலுக்கு வைத்தியம் கல்யாணம் அன்றோ?’
பூஜை முடிந்தது பொழுது புலருகையில்!
பூஜைப் பிரசாதமும், தீர்த்தமும் சென்றன.
வகுள மாலிகையும் சென்றாள் அவற்றுடன்
வெகு விரைவாக மன்னனைக் கண்டு பேசிட!
14b. குறத்தி வந்தாள்!
அன்னையுடன் வழி நடந்த ஸ்ரீனிவாசனுக்குப்
பின்னர் இருப்புக் கொள்ளவில்லை தனியே.
‘சென்ற காரியம் வெற்றி அடையுமா? அன்னை
வென்று திரும்புவாளா? அல்லது தோற்பாளா?’
தோற்று விடும் எண்ணமே தோற்றுவித்தது
தேற்ற இயலாத மனக்கவலையை நெஞ்சில்.
தன் பங்குக்கும் செய்ய வேண்டும் ஏதாவது,
தன் விருப்பம் தடையின்றி நிறைவேறிட.
மாறினான் நகரின் எல்லையை அடைந்ததும்,
குறி சொல்லும் அழகிய குறத்தியாக அவன்!
“சொல்வேன் உள்ளபடி மூன்று காலத்தையும்!
வெல்வேன் உங்கள் எல்லா தோஷங்களையும்!”
குறத்தியை அழைத்து வரச் சொன்னாள் அரசி.
குறத்தியை அழைத்து வந்தனர் தோழியர்கள்.
“குறி சொல்வதில் நீ திறமைசாலியாமே!
குறி சொல்கிறாயா அரசகுமாரிக்கு?” என,
“நான் சொல்வது ஒன்றும் இல்லை தாயே!
நாவில் அமர்பவன் செந்தில் ஆண்டவன்!
அழையுங்கள் உங்கள் அரசகுமாரியை!”
“குழந்தையின் கைபார்த்துக் குறி சொல்!”
நாணத்துடன் வந்து அமர்ந்தாள் பத்மாவதி;
காணத் தந்தாள் தன் இடக்கரத்தை நீட்டி.
வெள்ளிப் பூண் போட்ட குழலால் தடவிய
கள்ளக் குறத்தியும் குறி சொல்லலானாள்!
14c. குறத்தி சொன்ன குறி
“குல தெய்வம் யார் கூறுங்கள் அரசி” எனவும்,
“குல தெய்வம் சேஷாத்ரி வாசனே!” என்றாள்.
“சேஷாத்ரி வாசன் உள்ளான் உங்கள் முன்பு!
பேசுவது அவனே என் நாவிலிருந்து இப்போது!
மலர் வனத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு
மகள் சந்தித்தது அந்த சேஷாத்ரி வாசனையே!
மணக்கக் கேட்டான் இவளிடம் சம்மதம்;
பிணங்கிக் கொண்டு அடித்தாள் கல்லால்!
புறப்பட்டுப் போகுமுன் அவன் இவளுடைய
புறக் கண்களுக்கும் காட்சி அளித்துள்ளான்!
ஆகிவிட்டாள் அவன் நினைவால் இங்ஙனம்.
ஆகிவிடுவாள் சஹஜமாக, அவனை மணந்தால்.
விட்டு விட்டால் இவளை இப்படியே – இவள்
விட்டு விடுவாள் தன் உயிரையே ஏக்கத்தில்!”
யாரும் பேசவில்லை இதைக் கேட்ட பின்னர்.
யாரும் நம்பவில்லை குறத்தியின் குறியை!
“பகவானை மணப்பது நடக்கும் காரியமா?
பகவானிடம் மணம் பேசுவதும் சாத்தியமா?”
“மனதைப் பறி கொடுத்தவனே அனுப்புவான்;
மணம் பேசி முடிக்கத் தகுந்த நபரை!” என்றாள்.
பொற்காசுகளை அளித்தாள் அரசி குறத்திக்கு,
“நற்காரியம் நடப்பதே போதும் எனக்கு!” என்று
விடை பெற்றுச் சென்றவள் குறத்தி – ஆனால்
வீட்டைச் சென்று அடைந்தவன் ஸ்ரீனிவாசன்.
15a. அன்னையர் சந்திப்பு
விடியலுக்குக் காத்திருந்தாள் தரணி தேவி.
விடிந்தவுடன் விடியும் சில பிரச்சனைகள்.
வந்தனர் அந்தணர் சிவன் ஆலயத்திலிருந்து;
தந்தனர் அபிஷேகத் தீர்த்தப் பிரசாதங்கள்.
அழகிய கோலமிட்ட மணையில் அமர்த்தி,
அழகி பத்மாவதிக்குச் செய்தனர் அபிஷேகம்.
முழங்கின எங்கும் மங்கல வாத்தியங்கள்;
வழங்கினர் பரிசுகள் அங்கு வந்தவர்களுக்கு.
“சேஷாச்சலத்தில் இருந்து வந்துள்ள மாது
பேச விரும்புகிறார் அரசி தரணி தேவியிடம்”
வந்தவர், திருமணம் பேச வந்தவர் தான் என்று
அந்த மாதை அழைத்து வந்தனர் அரசியிடம்.
“சேஷாச்சலம் என் ஊர், வகுளமாலிகை என் பேர்;
பேச வேண்டும் அரசகுமாரியைப் பற்றி ” என்றார்.
“காத்திருக்கிறேன் உங்களிடம் பேசுவதற்கு – எதிர்
பார்த்திருந்தேன் உங்கள் இனிய வருகைக்கு!
குறத்தி வந்தாள் அரண்மனைக்கு நேற்று மாலை;
குறி சொன்னாள் சேஷாத்ரி வாசனைக் குறித்து.
உத்தியானவனத்தில் என் பெண்ணைக் கண்டானாம்;
பத்மாவதியிடம் மையல் கொண்டானாம்!” என்றாள்.
“குறத்தி சொல்லியது முற்றிலும் உண்மையே,
குமாரத்தியுடன் மணம் பேசவே வந்துள்ளேன்.
அனுப்பியவன் மகன் சேஷாச்சலம் ஸ்ரீனிவாசன்;
அனுமதி வேண்டும் இத் திருமணம் நடப்பதற்கு!”
பிள்ளையைப் பற்றிய விவரங்களைக் கேட்டு
கொள்ளை மகிழ்ச்சி கொண்டாள் தரணி தேவி.
அரண்மனையில் தங்க வைத்தாள் அந்த மாதை.
அரசனிடம் விரைந்தாள் செய்தி சொல்வதற்கு.
15b. திருமணப் பேச்சு
“உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!
மஹாலக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;
மஹாவிஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.
சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்.”
தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.
“கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்;
கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.”
குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
“குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!
வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.
வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!
நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!”
பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.
ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.
நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்;
நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.
பொன்னும், மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
“பின்னர் வரும் திருமணவோலை!” என்றாள்.
ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;
அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.
16. சுகரின் செய்தி
நாட்குறிப்புக்களைக் கொண்டு ஆராய்ந்து
நாளைத் தேர்வு செய்தனர் திருமணத்துக்கு.
மஞ்சள் தடவிய ஓலையில் எழுதினார்
மணப் பத்திரிக்கையை குலகுரு சுகர்.
வைத்தனர் திருமண ஓலையை பவ்யமாக
சந்தனப் பேழையில் அரசனும், அரசியும்.
மங்கல வாத்தியம் முழங்க ஓலையுடன்
அங்கிருந்து சென்றார் பல்லக்கில் சுகர்.
வகுள மாலிகையைக் கண்டவுடன் அவளை
வரவேற்றான் ஸ்ரீனிவாசன் ஆர்வத்தோடு வந்து.
“விருப்பம் நிறைவேறியது உன் மனம் போல.
திருமணத்துக்குக் கிடைத்து விட்டது சம்மதம்.
விவரித்தாள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை.
அவளருகே அமர்ந்து ரசித்தான் ஸ்ரீனிவாசன்.
அகத்தியர் ஆசிரமத்தில் ஆலயம் சென்றது;
அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டது;
அரசி தரணி தேவியை சந்தித்துப் பேசியது;
அரசனிடம் பேசி அவன் அனுமதி பெற்றது;
பிரபுக்கள் மனம் மகிழ்ந்து சம்மதம் தந்தது ;
பிரதானிகள் மனம் மகிழ்ந்து சம்மதித்தது;
குறத்தி ஒருத்தி வந்து சொன்ன செய்திகள்;
குடி மக்களிடம் காணப்பட்ட மன மகிழ்ச்சி;
நகரத்தின் எல்லைவரை வந்து தன்னை
நட்புடன் வழியனுப்பிய அரசன், அரசியர்;
வகுள மாலிகையைப் பேசச் சொல்லி விட்டு
வெகு சுவாரசியமாகக் கேட்டான் ஸ்ரீனிவாசன்.
17a. பணம் தேவை!
பல்லக்குத் தூக்கிகளின் அரவம் கேட்டது;
பல்லக்கில் வருவது யாராக இருக்கும் ?
நெருங்கி அருகில் வந்து நின்றது பல்லக்கு;
இறங்கினார் சுகமுனிவர் பல்லக்கிலிருந்து.
மேனி சிலிர்க்கத் தொழுது வணங்கிய பின்,
ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தார் பேழையை.
“பத்மாவதியின் மணம் பற்றிப் பேச வேண்டும்.”
உத்தம முனிவரை வரவேற்றான் ஸ்ரீனிவாசன்.
பாத பூஜை செய்தான் முனிவருக்கு – பின்னர்
ஆதரவுடன் அழைத்துச் சென்றான் புற்றுக்கு.
மண நாள் பூரண சம்மதமே மணமகனுக்கு!
மன மகிழ்வோடு திரும்பினார் சுகர் மறுநாள்.
“பெரிய இடத்தில் நிச்சயித்துள்ளோம் பெண்ணை.
சரியான அந்தஸ்துடன் செல்ல வேண்டும் அங்கு!”
ஆதிசேஷனையும், பிரம்மனையும் நினைத்ததும்
ஆதிசேஷனும், பிரம்மனும் வந்து தோன்றினார்கள்.
“சித்திரை சுத்தத் திரயோதசியில் என் திருமணம்;
உத்தம மணப்பெண் இளவரசி பத்மாவதி தேவி.
முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள்
தப்பாமல் வரவேண்டும் என் திருமணம் காண.
துரிதமாகச் செயல் படவேண்டும் நீங்கள்,
விரைந்து மணநாள் நெருங்கி வருவதால்!”
“கூட்டம் சேர்ப்பது எங்கள் வேலை – ஆனால்
வாட்டம் அடைகிறோம் பணம் இல்லாததால்!
லக்ஷ்மி இல்லாத இடத்தைச் செல்வம் – அ
லட்சியம் செய்வது நாம் அறிந்தது தானே!”
17b. குபேரன்
“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும், முதலுமாக!”
அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.
திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்ம தேவன்.
ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!
“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”
எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.
கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இரு மரங்கள் சாட்சிகளாக.
தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.
தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.
சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.
அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.
ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.
17c. முதல் உரிமை
மணமகனைப் புனித நீராட்டுவதற்கு
முன் வந்தனர் முதல் உரிமை கோரி!
வகுள மாலிகை முதல் உரிமை கோர,
வெகு நயமாகக் கூறினார் ஸ்ரீனிவாசன்;
“லக்ஷ்மிக்கு முதலுரிமை மறவாதீர்!”
“லக்ஷ்மி வருவாளா திருமணத்துக்கு?”
“கரவீரபுரத்திலிருக்கும் லக்ஷ்மியை
வரவழைக்க ஒரு வழி கூறுகிறேன்.
உடல் நலமில்லை எனக்கு என்றால்,
உடன் ஓடி வருவாள் லக்ஷ்மிதேவி!”
கதிரவனை அனுப்பினர் கரவீரபுரத்துக்கு;
கதிரவன் செய்தி சொன்னான் லக்ஷ்மிக்கு.
“வைகுந்தம் விட்டு நீங்கள் வந்ததால்,
வையகம் வந்துள்ளார் ஸ்ரீனிவாசரும்.
உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது தேவி!
தடை சொல்லாமல் வரவேண்டும் தாயே!”
கரவீரபுரத்திலிருந்து லக்ஷ்மி புறப்பட்டதும்,
பிரமனும், சிவபிரானும் கைலாகு கொடுக்க;
நலிவுற்றவன் போல நடித்தான் ஸ்ரீனிவாசன்
பொலிவிழந்து உடல் நலம் குன்றியவனாக!
“ராமாவதாரத்தில் தந்த வரம் நினைவுள்ளதா?”
“ஆமாம் ஸ்வாமி! நினைவுள்ளது நன்கு எனக்கு!
வேதவதியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்;
வேளை வந்ததும் ஏற்றுக் கொள்வேன் என்றீர்!”
“வேளை வந்து விட்டது தேவி இப்போது!
வேதவதியே ஆவாள் இளவரசி பத்மாவதி!
சித்திரை சுத்தத் திரயோதசியில் திருமணம்;
உத்தேசித்தேன் உன்னை இங்கு வரவழைக்க.”
ஆனந்தம் அடைந்தாள் லக்ஷ்மி இது கேட்டு.
அனைவரும் சென்றனர் ஸ்ரீநிவாசன் புற்றுக்கு.
18a. புறப்பாடு
நாராயண புரத்துக்குச் செல்லும் துடிப்பு
நாட்காலையிலேயே துவங்கி விட்டது.
அலங்கரித்துக் கொண்டனர் அழகாக – பிறர்
அலங்கரித்துக் கொள்ள உதவிகள் செய்தனர்.
சரசர என்றன புத்தம் புதிய பட்டாடைகள்;
கலகல என்றது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
புனித நீரால் ஸ்ரீநிவாசனுக்கு அபிஷேகத்தை
இனிதே தொடங்கி வைத்தாள் லக்ஷ்மி தேவி.
பட்டுப் பீதாம்பரம் அணிந்தான் ஸ்ரீநிவாசன்;
இட்டாள் லக்ஷ்மி அவன் நெற்றியில் திலகம்.
வைத்தாள் திருஷ்டிப் பொட்டை அன்னை – அணி
வித்தாள் ரத்தின ஆபரணங்களைப் பார்வதி தேவி.
அழகுக்கு அழகு கூட்டினர் தேவர்கள் ஒன்றுகூடி,
அணிவித்தனர் பல வண்ண மலர் மாலைகளை.
கொட்டிக் கிடந்தன உணவுப் பொருட்கள்;
அட்டில் பணியோ அக்னி தேவனுடையது!
பாத்திரங்கள் இல்லை சமையல் செய்வதற்கு!
தீர்த்தங்கள் மாறின சமையல் பாத்திரங்களாக!
முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர் சமதளத்தை;
இனிய கோலங்கள் வரைந்தனர் பெண்கள்.
சங்கல்பம் செய்தான் மணையில் அமர்ந்து;
சமீ விருக்ஷமே தன் குலதெய்வம் என்றான்.
சுவாமி புஷ்கரிணியில் ஸ்தாபித்தான் அந்தச்
சமீ விருக்ஷத்தின் ஒரு கிளையை உடைத்து.
பகலுணவைத் தயார் செய்துவிட்டான் அக்னி.
பரிமாறினான் நரசிம்மருக்கு நிவேதனம் செய்து.
பரிமளச் சந்தனம், தாம்பூலம், புஷ்பம் இதைப்
பரிவுடன் அளித்தனர் வந்திருந்த அதிதிகளுக்கு.
நாராயணபுரம் புறப்பட்டனர் உணவு உண்டபின்;
ஏராளமான வாஹனங்கள் காத்திருந்தன அங்கே.
ஆரோஹணித்தனர் ஸ்ரீனிவாசன் கருடன் மீதும் ,
பிரமன் அன்னத்தின் மீதும், சிவன் நந்தியின் மீதும் .
கரிகள், பரிகள், ரதங்களில் அமர்ந்து கொண்டு
உரிமையுடன் சென்றனர் நாராயணபுரத்துக்கு.
18b. சுகரின் உபசரிப்பு
சுகமாக அடைந்தனர் பத்ம தீர்த்தத்தை;
சுகமுனிவரின் ஆசிரமம் இருந்தது அங்கு.
பூரண கும்பத்துடன் காத்திருந்தார் முனிவர்,
பூரண மகிழ்ச்சியுடன் ஒரு சிறு இடைவேளை.
பாத பூஜை செய்தார்; வலம் வந்தார் சுகர்
பரம பக்தியுடன் மணமகன் ஸ்ரீனிவாசனை.
“மணக் கோலத்தில் உம்மைக் காண்பதற்கு
மாதவம் செய்திருப்பேன் முற் பிறவியில்.
இளைப்பாறி விட்டுச் செல்ல வேண்டும்;
களைப்பு மாறும் வரை இங்கு தங்கி விட்டு.
உபசரித்துப் பெற வேண்டும் ஆனந்தம்!
உபசார வார்த்தையல்ல உண்மையே!”
“இத்தனை பேர்களை உபசரிப்பதா எனச்
சிந்தனை செய்கின்றேன் நான் முனிவரே!”
“ஈரேழு உலகங்களும் ஒன்றாகி ஒளிந்து
இருப்பது உமக்குள் அல்லவா நாராயணா?
ஒரு கவளம் தாங்கள் உண்ட மாத்திரத்தில்
ஒரு புவனம் முழுவதும் திருப்தி அடையுமே!”
பர்ணசாலைக்குச் சென்றான் முனிவருடன்,
பாலும், பழமும் உண்டான் ஸ்ரீனிவாசன்.
திருப்தி அடைந்தார் சுகர் அவன் உண்பது கண்டு.
திருப்தி அடைந்தனர் அதிதிகள் உண்டது போல .
பிரயாணம் தொடங்கியது கலகலப்பாக,
நாராயணபுரத்தை நோக்கி மறுபடியும்.
19a. மணவிழா
எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – நகர
எல்லையை மணமகன் குழுவினர் அடைந்ததும்.
எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – அதைச்
சொல்லக் கேட்ட ஆகாச ராஜனும், தரணி தேவியும்.
‘எதிர் கொண்டழைக்க வேண்டும் நாமே சென்று
இதர பிரதானிகள் அமைச்சர்களுடன் இன்று!”
பட்டத்து யானை நின்றது தயாராக – ரத்தினப்
பட்டத்தை அணிந்திருந்தது பெரிய நெற்றியில்.
தந்த நுனிகளில் துலங்கின தங்கக் குமிழிகள்.
தந்தனர் யானையிடம் ரோஜாமலர் மாலையை.
ஆகாசராஜன், தரணி தேவி அமர்ந்தனர் – யானை
அம்பாரியில் மணப் பெண் பத்மாவதியுடன்.
இசைக் குழுவினர் நடந்தனர் யானை முன்னால்;
இளம் பெண்கள் தொடர்ந்தனர் யானை பின்னால்.
மலர்கள், சந்தனம், பன்னீர் இவை சொரிந்து
மலர்ந்த முகத்தோடு மணமகனை வரவேற்க;
ஒலித்தது மணமகன் குழுவின் ஆரவாரம்!
தலை நிமிரவில்லை மணமகள் நாணத்தால்!
பூரண கும்பத்துடன் வரவேற்றான் மன்னன்
நாரணன் கோஷ்டியைத் திருமணத்துக்கு.
ஒலித்தது வெற்றி கோஷம் “ஜெயா விஜயீ பவ!”
தெளித்தனர் நறுமண மலர்களை நாட்டு மக்கள்.
வலம் வந்தது பகவானைப் பட்டத்து யானை;
தலையால் வணங்கித் தந்தது ரோஜா மாலை.
வெகு நாணத்துடன் முன் வந்தாள் பத்மாவதி;
வகுள மாலிகையும் முன் வந்தாள் குழுவிலிருந்து.
“பத்மாவதியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றதும்
“உத்தமியை நீ ஏற்பாய்!” என்றாள் வகுளமாலிகை.
19b. மாலை மாற்று
கருடனிலிருந்து இறங்கினான் ஸ்ரீனிவாசன்
கறுத்த மேனியில் ரத்தின மாலைகள் புரள.
அணிவித்தாள் மலர்மாலையைப் பத்மாவதி.
அணிவித்தான் மலர்மாலையை ஸ்ரீனிவாசன்.
பத்மாவதியின் கரம் பற்றி ரதம் ஏறியதும்
கூத்தாடினார் ஆனந்தத்தில் அனைவரும்.
வைகுந்தமாக மாறி இருந்தது நாராயணபுரம்.
வெகு நேர்த்தியான வளைவுகள், பந்தல்கள் !
வண்ணக் கோலங்களுடன், பூரண கும்பங்கள்;
பெண்கள் எடுத்தனர் ஆரத்தி வழி நெடுகிலும்!
நின்றான் மலர்த் தட்டுடன் ஆகாச ராஜன்;
நின்றாள் தீர்த்தக் குடத்துடன் தரணி தேவி.
வசுதானா என்னும் பட்டத்து இளவரசன்
வாசனை வீசும் சந்தனத்துடன் நின்றான்.
ஆகாச ராஜன் செய்தான் பாத பூஜை – பின்
அழைத்துச் சென்றான் தன் அரண்மனைக்கு.
கூடாரம் அமைத்திருந்தனர் தங்குவதற்கு,
கூட வந்தவர்களுக்குத் தனித் தனியாக!
நகரம் ஜொலித்தது ஜகஜ் ஜோதியாக!
பகலா? இரவா? பேதம் தெரியவில்லை.
ஆகாரம் வந்தது தங்கியிருந்த இடத்துக்கு;
ஆகாச ராஜன் உயர்வாக உபசரித்தான்.
மற்றவர் உண்டனர் அரண்மனை முற்றத்தில்;
குற்றம் சொல்ல முடியாத இனிய உபசரிப்பு!
இரவில் நடந்தது அப்சரசுகளின் நாட்டியம்;
இதுவரை கண்டதில்லை மனிதர் எவருமே!
உறங்கவில்லை எவருமே அன்று இரவு;
உற்சாகமாகக் காத்திருந்தனர் விடியலுக்கு.
20a. திருமணம்
நீராடிப் புத்தாடை அணிந்தனர் விடியற்காலை;
நடக்க விருந்த திருமணத்தால் மிக உற்சாகம்.
கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பீதாம்பரத்தைப்
பெண்ணைப் பெற்ற மன்னன் அனுப்பினான்.
ஆபரணங்களை அணிவித்தனர் லக்ஷ்மி, உமை!
ஆணழகன் ஸ்ரீனிவாசன் ஆனார் மணமகனாக!
வாசனைத் திரவிய நீரில் குளிக்க வைத்தபின்
வாரி ஜடை போட்டனர் பத்மாவதி தேவிக்கு.
வைத்திருந்த புஷ்பங்களின் பாரத்தினால்
வைத்திருந்தாள் தன் தலையைத் தாழ்த்தி!
தான் தன் மணநாளன்று அணிந்தவற்றை
தன் மகளுக்கு அணிவித்தாள் தரணி தேவி.
நெருங்கி விட்டது சுப முஹூர்த்த வேளை;
நெருங்கினர் மணமண்டபத்தை அனைவரும்.
இந்திரன் வெண்கொற்றக் குடை தாங்க,
அந்த நிழலில் நடந்தான் ஸ்ரீனிவாசன்.
அளித்தான் தொண்டைமான் மலர்மாலை;
அணிவித்தாள் ஸ்ரீநிவாசனுக்குப் பத்மாவதி.
ஊஞ்சல் பாடினர் வாணியும், லக்ஷ்மியும்;
ஊஞ்சல் ஆடினர் ஒய்யாரமாக மணமக்கள்.
திருஷ்டி கழித்தபின் சென்றனர் மண்டபம்,
திருஷ்டி படும் மணமக்களைக் கண்டால்!
வைதீகக் காரியங்கள் செய்தார் வசிஷ்டர்;
வேத கோஷம் முழங்க மாங்கல்ய தாரணம்!
அன்னையர் இருவரும் தழுவி மகிழ்ந்தனர்;
ஆனந்த வெள்ளத்தில் மன்னன் ஆகாச ராஜன்!
வரிசைகள் வந்து சேர்ந்தன கூடாரத்துக்கு;
பரிசுகள் வழங்கினர் வந்த விருந்தினர்களுக்கு.
20b. பிரியாவிடை
நடந்தது திருமணம் நான்கு நாட்களுக்கு;
முடிந்ததும் திரும்பவேண்டும் தத்தம் இல்லம்.
விடை பெற்றனர் மணமக்கள் எல்லோரிடமும்;
மடை திறந்து பாய்ந்தது அரசியின் கண்ணீர்.
வகுள மாலிகை தேற்றினாள் தரணி தேவியை,
“வெகு தூரம் செல்லப் போவதில்லையே!” என்று.
“எப்படியும் கணவன் வீடு செல்ல வேண்டியவள்!
எப்போது வேண்டுமானாலும் காண முடியுமே!”
கணவன் வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய
கண்ணியத்தை எடுத்துரைத்தாள் அன்னை.
ஆகாச ராஜன் தன் மனம் திறந்து பேசினான்
பூலோக நாதன் மருமகன் ஸ்ரீனிவாசனிடம்.
“செல்லமாக வளர்ந்து விட்டாள் பத்மாவதி!
சொல்ல முடியாது பொறுப்பு உள்ளதாக.
தெரியாமல் அவள் தவறு செய்துவிட்டால்
பெரிய மனதுடன் அவளை மன்னிக்க வேண்டும் .
அம்மையாரிடம் நான் சொன்னதும் இதுவே;
தம்பதிகள் இனிதே வாழவேண்டும்!” என்றான்
வரிசைகள் வந்து இறங்கின வரிசையாக.
“வரம் தருவேன் கேளுங்கள்” என்றான்.
“ஒன்று தான் வரம் வேண்டும் எமக்கு;
என்றுமே உம்மை மறவாது இருப்பது!”
“மறக்கவே மாட்டீர்கள் என்னை எவருமே!
சிறப்பாகக் குடி இருப்பேன் உம் சிந்தையில்!”
சேஷாசலம் சென்றனர் மணமகன் குழுவினர்;
ஆகாச ராஜனும், தரணியும் உடன் சென்றனர்.
21a. பிரியா விடை
ஆகாசராஜன், தரணி தேவி திரும்பிப்
போகாமல் உடன் சென்றனர் வெகுதூரம்.
ஸ்ரீநிவாசன் சொன்னான் பத்மாவதியிடம்,
“இனிமையாகப் பேசித் திருப்பி அனுப்பி விடு!”
தேற்றினாள் பத்மாவதி தாய் தந்தையரை,
“ஏற்க வேண்டும் தவிர்க்க இயலாத பிரிவை!”
சேஷாச்சலம் செல்லவில்லை ஸ்ரீனிவாசன்;
சென்றனர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு.
சுவர்ணமுகி நதித் தீரத்தை அடைந்தனர்;
பர்ணசாலை அமைத்தனர் மணமக்களுக்கு.
இந்திராதி தேவர்கள் திரும்பிச் சென்றனர்;
தந்தார் பிரமன் பொன்னும் மணியும் பரிசாக!
கரவீர புரம் திரும்பினாள் லக்ஷ்மி தேவி;
தர விரும்பினாள் தடையில்லாத ஆனந்தம்.
ஆடிப் பாடிக்காலம் கழித்தனர் மணமக்கள்;
ஓடை நீரில் விளையாடினர் மணமக்கள்.
மலருடன் சென்று ஆராதித்தாள் வராஹரை
மறவாமல் அனுதினம் தாய் வகுளமாலிகை.
மலர் சூட்டி அலங்கரித்தனர் பத்மாவதியை
மாலை வேளைகளில் முனிவர் மனைவிகள்.
குதிரை வீரன் விரைந்து வந்தான் ஒருநாள்;
அதிர வைக்கும் செய்தி ஒன்று சொன்னான்.
“அரசன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது
அரசியார் அனுப்பினார் செய்தி தெரிவிக்க.”
ரதம் தயாரானது பயணத்துக்கு – இருவரும்
விரைந்தனர் உடன் நாராயண புரத்துக்கு.
22. விண்ணுலக வாழ்வு
சயனித்து இருந்தான் ஆகாசராஜன் மஞ்சத்தில்;
சோகமே வடிவாக தரணி தேவி அருகினில்!
இளவரசனும், இளவல் தொண்டைமானும்
இருந்தனர் கால் மாட்டில் அமர்ந்தபடி.
மகளைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான்;
மருமகனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தான்.
ஒப்படைத்தான் இளவரசனை ஸ்ரீநிவாசனிடம்;
ஒப்புக் கொள்ளச் செய்தான் அரசன் தன் அரசி
தரணியின் உடன்கட்டை ஏறும் முடிவினை.
தரணி வாழ்வினைத் துறந்தான் அந்த மன்னன்.
சுகர் செய்வித்தார் இறுதிச் சடங்குகள்
சிதை மூட்டினான் இளவரசன் வசுதானன்.
சர்வாலங்கார பூஷிதையாக தரணி தேவி
சுற்றி வந்தாள் எரியும் சிதையை மும்முறை.
தீயினில் புகுந்து விட்டாள் ஒரு நொடியில்!
தீ எரிந்தது கொழுந்து விட்டு வானளவாக!
வந்து இறங்கியது விண்ணிலிருந்து விமானம்;
வந்தனர் வெளியே திவ்ய சரீரத்துடன் இருவரும்.
ஆகாசராஜனும், தரணி தேவியும் அமர்ந்ததும்
வேகமாக விண்ணில் பறந்து மறைந்தது அது!
23a. சிங்காதனம்
வசுதானனுக்கு முடிசூட்டினான் ஸ்ரீநிவாசன்;
வசுதானனுக்கு உதவிடத் தொண்டைமான்!
திரும்பினர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு;
திரும்பியது இயல்பு நிலை மனதில் மெல்ல.
தொண்டைமான் எதிர்த்தான் புதிய அரசனை!
“பண்டைக் காலத்தின் இளவரசன் நானே!” என்று.
“தந்தைக்குப் பின் தனயன் ஆளவேண்டும்!” என்ற
தன் கட்சியை எடுத்து உரைத்தான் வசுதானன்.
பூசல் தொடங்கியது மிகச் சிறிய அளவில்;
பூசல் பெருகி விட்டது வெகு விரைவில்.
பிரதானிகளின் துணையோடு தொண்டைமான்
அரசன் வசுதானனைஅழிக்க விரும்பினான்.
உதவி கோரினான் தொண்டைமான் ஸ்ரீநிவாசனிடம்;
மதி இழந்தவனிடம் பேசி என்ன பயன் விளையும்?
அளித்தான் அவனுக்குத் தன் சங்குச் சக்கரங்களை!
களித்தான் தொண்டைமான் தான் வென்றது போல.
செய்தி அறிந்ததும் பதறி ஓடி வந்தான் அங்கு
செய்வது அறியாத வசுதானன் ஸ்ரீநிவாசனிடம்.
“என்னைக் கொல்ல எண்ணும் சித்தப்பாவுக்கு
எந்தை போன்ற உங்கள் உதவி தேவையா?
பாசமே இல்லையா பத்மாவதி அக்கா! நான்
மோசம் போவதில் உனக்குச் சம்மதமா?”
தேற்றினான் ஸ்ரீநிவாசன் மைத்துனனை,
“தோற்றுப் போவான்; கவலைப் படாதே!
ஆயுதங்கள் உள்ளன அவனிடம் ஆனால்
ஆதரித்துப் போரிடுவேன் உன் பக்கம் நான்.
சமரசம் பேசு முதலில். சண்டையைத் தவிர்!”
சமரசத்துக்கு ஒப்பவில்லை தொண்டைமான்!
23b. சண்டை
அமைதியை விரும்பியது ஸ்ரீனிவாசன் மட்டுமே!
ஆகாயக் கோட்டை காட்டினான் தொண்டைமான்!
நாரணனின் சங்கும், சக்கரமும் கிடைத்ததும்
நாராயாணபுர சிங்காதனம் கிடைத்தது போல!
சமரசத்துக்குத் தயாராக இல்லை அவன்;
சமருக்குத் தயார் ஆனான் படை திரட்டி.
சிற்றப்பன் போருக்குத் தயார் ஆனதால்,
சிறப்பாகத் தயார் ஆனான் வசுதானனும்.
செய்தி அனுப்பினான் ஸ்ரீநிவாசனுக்கு;
செய்தி வந்ததும் சென்றான் களத்துக்கு.
“உயிர் சேதம் சம்மதமா?” என்றாள் பத்மாவதி
“உயிர் சேதம் தவிர்க்கவே செல்கிறேன் நான்!”
நிலமை தலைகீழாக இருந்தது அங்கு!
நிகழவில்லை சமரசம் நினைத்தபடி!
சொன்னபடித் தலைமை தாங்கினான்
மன்னன் வசுதானன் படைக்கு ஸ்ரீநிவாசன்
யுத்தத்தில் உயிர் சேதத்தைத் தவிர்க்க
யுக்தி ஒன்று செய்தான் யுத்தகளத்தில்.
தொண்டைமான் முன் ஸ்ரீநிவாசன் செல்லத்
தொண்டைமான் எய்தான் மார்பில் ஓர் அம்பு
மயங்கிச் சாய்ந்து விட்டான் ரதத்திலேயே!
தயங்கிச் சண்டையை நிறுத்தினான் எதிரி!
ஆசிரமத்தை எட்டியது போர்ச் செய்தி
“பேசி நிறுத்துவேன் போரை!” என்று கூறி
முனிவருடன் கிளம்பினாள் பத்மாவதி
தனி ஒருவளாகப் போரை நிறுத்துவதற்கு.
23c. சமரசம்
“அடிபட்டு மயங்கி விட்டான் ஸ்ரீநிவாசன்!”
துடித்து விட்டாள் பத்மாவதி செய்தி கேட்டு.
கதறி அழுதபடி ஓடி வந்தாள் அவனிடம்,
பதறிய அவன் கேட்டான், “ஏன் வந்தாய்?”
“சமரசம் பேச வந்தார் தேவியார் – தாங்கள்
சமரில் அடிபட்டது கேட்டு துடித்து விட்டார்.”
அகத்தியர் இடைமறித்துக் கூறினார் – ஆனால்
“அதற்கு இடமே இல்லை!” என்றான் அவன்.
“இருவரையும் வரவழையுங்கள் என்னிடம்;
இருவருக்கும் செய்கிறேன் நான் சமரசம்”
அகத்தியர் அழைத்து வந்தார் இருவரையும்;
அகத்தீ கண்களில் வெளிவந்தது பத்மாவதிக்கு!
“அழிவதென முடிவு செய்து விட்டீர்களா?
பழி பாவத்துக்கும் அஞ்சுவது இல்லையா?”
“இளவரசுப் பட்டம் காட்டினார் என் அண்ணா!
இது உனக்கு நினைவு இல்லையா பெண்ணே ?”
“அரசனாக்கினார் என்னை ஸ்ரீநிவாசனே!
தர வேண்டாமா நாம் அதற்கு மதிப்பு ?”
“சமரஸத்துக்கு ஏற்பாடு செய்வார் இவர்;
சம்மதமா இருவருக்கும் கூறுங்கள்!” என
“தந்தைக்குப் பின் அவர் இடத்தில் நாங்கள்
எந்தையாகக் கருதுவது இவரைத் தானே!”
“நாட்டை இரு சம பாகங்கள் ஆக்குவோம்
நாட்டை ஆள வேண்டும் இருவரும் நட்புடன்!’
இருவரும் ஏற்றனர் இந்த முடிவினை;
இரண்டாக்கப் பட்டது அந்த ராஜ்ஜியம்.
தொண்டை நாடு தொண்டைமானுக்கு!
சோழ நாடு கிடைத்தது வசுதானனுக்கு!
நிலைமையைச் சீர் செய்து திரும்பினர்
நிம்மதியாக அகத்தியருடன் அவர்கள்.
24a. ஆலயம்
தொண்டைமான் காண வந்தான் ஸ்ரீநிவாசனை;
கொண்டு வந்தான் ஏராளமான பரிசுகளை.
” ஒன்றும் குறை இல்லை இந்த ஆசிரமத்தில்;
என்ன செய்வேன் பரிசுகளை வைத்துக் கொண்டு?”
“எண்ணியிருந்தேன் அண்ணன் மருமகன் என்று!
உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தேன் இன்று!”
“அன்னிய இடத்தில் எத்தனை காலம்?
பொன்னும் மணியும் தர வேண்டாம்
தங்குமிடம் ஒன்று அமைத்துத் தரலாமே;
எங்களுக்கு அது தனியிடம் என்று ஆகுமே!”
“எங்கே எப்படி அமைக்க வேண்டும்;
தாங்கள் கோடி காட்டினாலே போதும்!”
மாலையில் சென்றனர் மீண்டும் புற்றுக்கு.
“ஆலயம் நிர்மாணிப்பாய் இந்த இடத்தில்!
புற்று உள்ள இடத்தில் வேண்டும் கர்ப்பக்கிரகம்
சுற்றிலும் எழுப்ப வேண்டும் மதில் சுவர்களை.
வைகுந்த வாசல் வேண்டும் இடையில்;
இரண்டாம் பிராகாரத்தில் வேண்டியவை
மடைப் பள்ளியும், கல்யாண மண்டபமும்,
மணக்கும் திரவியசாலையும், பள்ளி அறையும்.
இருக்க வேண்டும் மூன்றாவது பிராகாரத்தில்
உக்கிராண அறைகள், ஆஸ்தான மண்டபங்கள்.
வேண்டும் அழகிய ஏழு வாயில்கள்;
வேண்டும் அழகிய இரு கோபுரங்கள்;
வேண்டும் ஒரு கோபுரம் நுழை வாயிலில்;
வேண்டும் ஒரு கோபுரம் பிராகார வாயிலில்;
வேண்டும் பலி பீடமும், துவஜ ஸ்தம்பமும்!”
தொண்டைமான் நினைவில் கொண்டான்.
24b. ரங்கதாஸன்
தோட்டத்தில் இருந்தது ஒரு கிணறு,
“தோண்டியவன் நீயே முற்பிறப்பில்!”
வைகாநஸன் ஒரு முனிவர் சோழநாட்டில்;
வைத்தார் தணியாத ஆசையை மனத்தில்.
வைகுந்தனைக் கிருஷ்ணணாகக் காணக்
கைக்கொண்டார் கடுமையான தவநெறி.
தவம் செய்தார் கனி, கிழங்குகள் உண்டு!
தவம் செய்தார் தழை, சருகுகள் உண்டு!
தவம் செய்தார் உணவே உண்ணாமல்;
தவம் செய்தார் காற்றை சுவாசித்து!
கண் எதிரே தோன்றினான் வைகுந்தன்
“கண்ணனாகக் காட்சி தர வேண்டும்” என,
“ஸ்ரீநிவாசனை ஆராதித்து வந்தால்
இனிதே நிறைவேறும் உம் விருப்பம்!”
கால் நடையாகச் சென்றார் சேஷாசலம்;
கண்டார் வழியில் பக்தன் ரங்கதாஸனை.
உடன் நடந்தான் முனிவருடன் அவன்;
“கேட்டான் எதற்கு சேஷாசலத்துக்கு?”
“கிருஷ்ணாவதாரத்தில் செய்தான் லீலைகள்;
கிருஷ்ணனைக் காணக் கடும் தவம் செய்தேன்.
சேஷாசலம் ஸ்ரீநிவாசனை ஆராதித்தால்
பேஷாக நிறைவேறுமாம் என் கோரிக்கை”
முனிவருடன் நடப்பது நல்லதாகி விட்டது!
இனிக்கும் கண்ணனைத் தரிசிக்கலாமே!
“அனாதை என்னைப் பணியாளாக எற்பீர்.
அநேக சேவைகள் செய்து உதவுவேன்!”
சேஷாசலத்தைச் அடைத்தனர் இருவரும்
வாசஸ்தலம் ஸ்வாமி பூஷ்கரிணீ அருகே.
தினமும் ஆராதித்தனர் பகவானை – ரங்கன்
முனிவருக்குப் பணிவிடைகள் செய்தான்.
வனத்துக்குச் சென்று மலர் கொய்தவன்
நந்தவனம் ஒன்று அமைக்க விரும்பினான்.
முனிவரிடம் விண்ணப்பித்தான் ரங்கன்;
கனிவுடன் பாராட்டி முனிவரும் உதவினார்.
உருவானது அழகிய நந்தவனம் அங்கே!
இருவாக்ஷி, சம்பங்கி, ஜாதி, முல்லை
மல்லிகை, அலரி, மந்தாரை என்று
மலர்கள் பூத்துக் குலுங்கின விரைவில்.
நறுமணம் நிறைத்தது நாற்றிசைகளை;
நிறங்கள் மயக்கின காண்பவர் கண்களை!
விடியலில் நீராடி மலர் கொய்து வருவான்;
செடிகளுக்கு நீரூற்ற வெட்டுவித்தான் கிணறு.
மலர் பறிக்கச் சென்ற ரங்கதாசன் ஒருநாள்,
மனத்தை மயக்கும் காட்சியைக் கண்டான்!
திவ்விய தேஜசுடன் சென்றான் கந்தர்வன்,
திவ்விய அழகு வாய்ந்த தன் மனைவியுடன்.
ஆகாய மார்க்கமாகச் சென்றவர் கண்டனர்
ஆதி வராஹமூர்த்தி ஆலயத்தை அங்கே.
ஸ்வாமி பூஷ்கரிணீயில் புனித நீராடி
ஸ்வாமி தரிசனம் செய்ய விரும்பினர்.
கந்தர்வனும், மனைவியும் நீராடுவது கண்டு
வந்த வேலையை மறந்து போனான் ரங்கன்.
சௌந்தரியத்தில் மனம் பறி போனதால்
செல்லவில்லை மலர் கொய்து ஆசிரமம்.
கரையேறி, ஆலயத்தில் தொழுது, கண்ணுக்கு
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்!
24d. தவறும் தண்டனையும்
வானில் பறந்து மறைந்தனர் கந்தருவர்;
வந்தது சுய நினைவு ரங்கதாஸனுக்கு.
‘மலர் கொய்ய வந்தவன் அதைச் செய்யாமல்
மனதை அலைய விட்டு விட்டேனே அந்தோ!
கெடுத்தேனே பூஜையை அநாவசியமாக;
காக்க வைத்தேனே முனிவரை இதுவரை!
உல்லாசமாக வேடிக்கை பார்த்து நின்று
உபாஸனையில் தடங்கல் செய்தேனே!’
பதறியது உடல் செய்த தவற்றை எண்ணி;
பறித்துக் கொண்டு ஓடினான் மலர்களை!
உக்கிர மூர்த்தியாக மாறி இருந்தார் முனிவர்;
சிக்கெனக் காலைப் பற்றிக் கொண்டான் ரங்கன்.
“பாதகம் செய்துவிட்டேன் மன்னியுங்கள்!”
“தாமதம் ஏன் எனச் சொல்லு நீ முதலில்!”
“மாயைக்கு அடிமை ஆகிவிட்டேன் நான்!
மனதைத் தறிகெட்டு அலைய விட்டேன்!”
ஸ்ரீநிவாசன் தோன்றினார் அவர்கள் முன்பு;
சேவித்தான் ரங்கதாசன் விழுந்து விழுந்து.
“தவறு செய்தவன் தண்டனை அடைவான்;
தவறு தான் என் பூஜையைத் தாமதம் செய்தது!
சுதன்மனின் இளைய மகனாகப் பிறந்து பல
சோதனைகளை அனுபவி அடுத்த பிறவியில்!”
“பாதங்களை அடைய விரும்பியவனுக்குச்
சோதனைகளை அனுபவிக்கும் சாபமா?”என
“செய்த தவம் வீண் போகாது ஒரு நாளும்;
செய்தாய் தாமதம் பகவத் பூஜையில் – அது
செய்யும் சற்றுத் தாமதம் விரத பூர்த்தியில்;
எய்துவாய் எண்ணிய பேற்றைத் தாமதமாக!
மன்னன் மகனாகப் பிறந்து ஆள்வாய்
தொண்டை நாட்டை உன் குடைக் கீழ்.
அழைத்து வருவேன் நானே உன்னை இங்கு;
ஆலயம் எழுப்பச் செய்வேன் இதே இடத்தில்!”
25a. ஆனந்த நிலயம்
“ரங்க தாஸனாக இருந்தவனும் நீயே!
இங்கு கிணறு வெட்டுவித்தவனும் நீயே!
சாபம் காரணமாக நின்றுவிட்ட பணியைத்
தாபம் தீரத் தொடருவாய் இந்தப் பிறவியில்!”
தொண்டைமான் தொடங்கினான் ஆலயப் பணியை;
கொண்டு வந்து குவித்தான் கற்களைப் பாறைகளை!
வண்டி வண்டியாக வந்தன மரங்கள்,
சுண்ணம்பு, பிற தேவையான பொருட்கள்.
பாறைகளைச் செதுக்கினார் சிற்பிகள் தொடர்ந்து;
யாரும் ஊர் திரும்பவில்லை பணி முடியும் வரை!
சிற்பிகள் உழைத்தனர் உற்சாகத்துடன்
புற்று இருந்த இடத்தில் கர்ப்ப கிரகம்!
வைகுந்த வாசல் அமைந்தது அதன் வாயிலில்
எழுந்தது முதல் பிராகாரத்தைச் சுற்றி மதில்!
பள்ளியறை, மடைப்பள்ளி, திரவிய சாலை;
கல்யாண மண்டபம், உக்கிராண அறைகள்.
பலிபீடம், துவஜஸ்தம்பம், கோரியாவாறு;
ஆஸ்தான மண்டபங்கள், கோரியாவாறு;
உயர்ந்த கோபுரம் விளங்கியது வாயிலில்;
உச்சி வரையில் உயர்ந்த வேலைப்பாடுகள்.
கண் கவர் தூண்கள்; பாறைகளால் தளம்;
கண் கவர் விமானம் கர்ப்பகிரகத்தின் மேல்.
சந்தித்துக் கூறினான் ஸ்ரீநிவாசனிடம் சென்று,
“சந்தோஷத்துடன் ஏற்று அருள வேண்டும்!”
25b. சிலாரூபம்
நெருங்கியது சுபதினம் ஆலயம் புகுவதற்கு;
ததும்பியது குதூகலம் அகத்தியர் ஆசிரமத்தில்.
வந்து குவிந்தனர் இந்திராதி தேவர்கள் அங்கே;
சொந்தமாக ஏற்பாடுகளைக் கவனித்தார் பிரமன்.
வந்து சேர்ந்தனர் வசுதானனும், தொண்டைமானும்;
வந்து சேர்ந்தனர் அனைவரும் ஆனந்த நிலயம்.
ரதத்தில் வந்தனர் ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்;
ரதத்தை ஓட்டினார் சுயமாக பிரம்மதேவன்.
கண்ணைப் பறித்தன வண்ணக் கோலங்கள்
மண்ணைத் தெளித்திருந்தனர் பன்னீரால்.
தோரணங்கள் தொங்கின பார்த்த இடம் எல்லாம்!
பூரணத் திருப்தி ஸ்ரீநிவாசன் உள்ளத்தில் நிலவ;
ஆனந்தம் பொங்கியது பத்மாவதி மனதில்!
ஆனந்த நிலயம் ஆனது விமானத்தின் பெயர்.
ஹோமகுண்டத்தை வளர்த்தான் பிரமன்;
வேத காரியங்களை முடித்தான் பிரமன்.
விமானத்தின் கீழ் நின்றான் ஸ்ரீநிவாசன்-
விரும்பி அமர்த்தினான் தேவியை மார்பில்!
வலது கரம் காட்டியது ஒரு திருவடியை;
இடது கரம் மடங்கியது முழங்கால் அருகில்!
“ஆகும் பாதம் வைகுந்தமாக பக்தருக்கு.
ஆகும் சம்சாரம் முழங்கால் அளவு நீராக!”
பிரமன் பணிந்து வணங்கி வேண்டினான்,
“பிரபு தங்க வேண்டும் இங்கு கலியுகத்தில்!”
“பூலோக வைகுந்தம் ஆகவேண்டும் இது – நான்
சிலா ரூபத்தில் இருப்பேன் ஆனந்த நிலயத்தில்!”
தூண்டா விளக்குகளை ஏற்றினான் பிரமன்!
ஆண்டாண்டு காலமாகப் பிரகாசிக்கின்றன.
சுபதினம் ஆனது முதல் பிரம்மோத்சவமாக;
சிலா உருவெடுத்து நிற்கின்றான் ஸ்ரீநிவாசன்!
25c. பிரம்மோத்ஸவம்
பிரமன் தெரிவித்தான் தொண்டைமானுக்கு
பிரம்மோத்ஸவத்துக்கான பல விவரங்களை.
பொன்னும், மணியும் வாரித் தந்தான் – அவன்
முன் வந்தான் உற்சாகமாக உற்சவம் நடத்த.
செய்தி பரவியது நான்கு திசைகளிலும்;
எய்தினர் உவகை செய்தியைக் கேட்டவர்.
குவிந்தனர் ஜனங்கள்; உருவாகின வீதிகள்;
குழுமினர் தேவர்கள்; உருவாகின கூடாரங்கள்!
காணக் கிடைக்காத காட்சிகள் கிடைத்தன.
காணிக்கை அளித்தனர் தம் சக்திக்கு ஏற்ப.
திருவிழா நடந்தது வெகு கோலாகலமாக.
திரும்பினர் தம் இருப்பிடம் குதூகலமாக.
தொண்டைமானுக்குப் பிரிய மனம் இல்லை.
“தொண்டை நாட்டை மறந்து விடாதே நீ!
தொண்டு புரியவேண்டும் உன் மக்களுக்கு.
மீண்டும் வருவாய் மோக்ஷம் அடைவதற்கு.
தொண்டை நாட்டை ஆட்சிசெய் அதுவரையில்!”
தொண்டைநாடு திரும்பினான் தொண்டைமான்.
26a. கிருஷ்ண சர்மா
கூர்மன் விரும்பினான் கங்கையில் நீராட.
ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா?
நிறைவேறவில்லை ஒருநாளும் கோரிக்கை;
நீத்து விட்டான் உலக வாழ்வையே ஒருநாள்.
கிருஷ்ண சர்மா கூர்மனின் மகன் ஆவான்;
விரும்பினான் தந்தையின் கனவை நனவாக்க.
‘இறந்தார் தந்தை ஆசை நிறைவேறாமல்!
கரைக்க வேண்டும் அஸ்தியை கங்கையில்.’
குடும்பத்தோடு புறப்பட்டான் காசி நகருக்கு.
தடங்கல் மேல் தடங்கல்கள் வந்து சேர்ந்தன.
அடைந்திருந்தான் அப்போது தொண்டை நாட்டை.
அதிசயித்தான் தொண்டைமான் புகழைக் கேட்டு.
தோன்றியது ஒரு எண்ணம் அவன் மனத்தில்.
மூன்று மாதக் குழந்தையை, மனைவியை,
மன்னன் பாதுகாப்பில் விட்டுச் சென்றால்
முன்னேற முடியும் தனியாளாக, வேகமாக.
தொண்டைமானைச் சந்தித்தான் கிருஷ்ண சர்மா.
ஒண்ட ஓரிடம் தந்து பாதுகாக்க வேண்டினான்.
“காசி செல்ல ஆசைப்பட்டார் என் தந்தையார்.
தாசில் பண்ண ஆசை இருந்தால் மட்டும் போதுமா?
கைக் குழந்தையை, மனைவியைப் பாதுகாத்து
கை கொடுத்து உதவிட யாருமில்லை அரசே!
இளம் குழந்தையை, இளைய மனைவியைத்
தளிர் போலப் பாதுகாப்பீரா நான் வரும் வரை?”
தொண்டைமான் அளித்தான் சம்மதம் – உடனே
தொண்டைமானிடம் விடுத்தான் குடும்பத்தை.
மனப் பளு அகன்றவனாக விரைந்தான்
மகனின் கடமையைச் செய்யக் காசிநகர்.
26b. பட்டினிச் சாவு!
தொண்டைமான் சுயமாக கவனித்தான்
தன்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை.
ஏற்பாடு செய்தான் தனி வீடு ஒன்றை;
ஏற்படுத்தினான் சகல வசதிகளையும்.
பொருட்களைக் கொண்டு குவித்தான் – பிறர்
நெருங்க வண்ணம் பூட்டினான் கதவுகளை.
அடிக்கடி விசாரித்தான் முதலில் சில நாட்கள்;
அடியோடு மறந்து விட்டான் அதன் பின்னர்.
அரசனே கவனித்து வந்ததால் வேறு எவரும்
அக்கறை எடுக்கவில்லை மறந்தே விட்டனர்!
குந்தித் தின்றால் குன்றும் மாளும் அன்றோ?
முந்தி சேமித்த உணவுப் பொருட்கள் தீர்ந்தன!
பூட்டி இருந்ததால் செல்ல முடியவில்லை வெளியே!
மாட்டிக் கொண்டனர் பொறியில் இரு எலிகள் போல.
பட்டினி கிடந்தனர் தாயும் சேயும் பல நாட்கள்!
விட்டனர் தம் இன்னுயிரை ஒருவர் பின் ஒருவராக.
காசியிலிருந்து திரும்பினான் கிருஷ்ண சர்மா;
காசித் தீர்த்தம் அளித்தான் தொண்டைமானுக்கு.
“யாத்திரை இனிதே முடிந்தது உங்கள் தயவால்!
பத்திரமாக உள்ளனரா என் மனைவியும், மகனும் ?
திடுக்கிட்டான் தொண்டைமான் இது கேட்டு
நடுக்கம் எடுத்தது அவர்களை நினைத்ததும்!
“சிரம பரிஹாரம் செய்யுங்கள் – அவர்களைச்
சிறிது நேரத்தில் வரவழைக்கிறேன் இங்கு.”
மகனிடம் தந்தான் அந்த வீட்டுச் சாவியை.
ரகசியமாகப் பார்த்து விட்டு வரச் சொன்னான்.
26c. சரணாகதி
ஆடிப் போய்விட்டான் தொண்டைமான் மகன்
ஆவி பிரிந்த உடல்களை அங்கு கண்டவுடன்.
ஓடினான் தந்தையிடம் மிகுந்த துயருடன்,
“தேடி வந்தது நம்மை பிரம்மஹத்தி தோஷம்.
இறந்து விட்டனர் இருவரும் பட்டினியால்
மறந்தே போய் விட்டோம் நாம் அவர்களை.
களங்கம் ஏற்பட்டுவிட்டதே நல்ல பெயருக்கு!
விளங்குமா இதைச் சொன்னால் யாருக்காவது?”
மீண்டும் வந்தான் கிருஷ்ண சர்மா – “நான் காண
வேண்டும் என் மனைவியை, மகனை!”என்றான்.
“ஆலயம் சென்றுள்ளனர் இந்த அந்தப்புர மகளிர்.
அவர்களுடன் சென்றுள்ளனர் இவர்கள் இருவரும்!
இரண்டு நாட்களில் திரும்ப வந்துவிடுவார்கள்.
இருங்கள் நீங்கள் அரண்மனையில் அதுவரை.”
கிருஷ்ண சர்மா நிம்மதியாகச் சென்றுவிட்டான்;
கிருஷ்ண சர்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டால்?
‘ஸ்ரீனிவாசனே என்னைக் காக்க முடியும் இப்போது!’
ஸ்ரீனிவாசனை விரைந்து சென்று சரணடைந்தான்.
பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
” பாதி இரவில் வந்து கண்ணீர் விடுவது ஏன்?” என
“வாக்குத் தந்தால் விடுவேன் பாதங்களை அன்றிச்
சாக்குச் சொன்னால் விடுவேன் என் உயிரையே!”
“உனக்கு வந்த இடர் என்னுடையது அல்லவா?
என்னிடம் கூறுவாய் நடந்தது என்னவென்று!”
ஆதியோடு அந்தமாக உரைத்தான் அனைத்தையும்;
“பாதிப்பு அடைந்தவனுக்கு என்ன பதில் சொல்வேன்?”
26d. விஸ்வரூபம்
” இந்த முறை உதவுகிறேன் தொண்டைமான்
இன்னொரு முறை நடக்கக் கூடாது இது போல!
உடல்களைக் கொண்டு வா என் சன்னதிக்கு!” என
உடல்களைக் கொண்டு கிடத்தினான் சன்னதியில்.
“உயிர்ப்பித்துத் தருவாய் மீண்டும் ஸ்ரீனிவாசா!
உயிர்ப் பிச்சை தருவாய் குற்றவாளி எனக்கும்!”
பாத்திரத்தில் இருந்து பகவான் எடுத்துத் தெளித்த
தீர்த்தத்தினால் உயிர் பெற்றனர் தாயும், சேயும்.
எழுந்தனர் தூக்கத்தில் இருந்து எழுவது போல;
விழுந்தனர் வியப்புக் கடலில் அதைக் கண்டவர்.
“பட்டினியால் மெலிந்து நலிந்த மகன் இப்போது
பட்டொளி வீசி ஜொலிப்பது எப்படி?” என்றாள்.
“சரணடைந்தேன் ஸ்ரீனிவாசநிடம் நான் – அவன்
அரவணைத்து உயிர்ப்பித்தான் தன் கருணையால்!”
அவளும் தொழுதாள் பகவான் பாதங்களை;
“அருளுங்கள் என்றும் குறையாத பக்தியை!”
“நித்திய வாசம் செய்வேன் நாடி வருபவருக்கு!
சத்தியமாக உதவுவேன் தேடி வருபவர்களுக்கு!”
பகவான் மார்பில் தோன்றி மறைந்தன – ஈரேழு
லோகங்கள் பதினான்கும், கடல்கள் ஏழும்!
அழைத்து வந்தனர் கிருஷ்ண சர்மாவை அங்கு,
அடைந்தான் ஆச்சரியம் அவர்களைக் கண்டு.
‘இத்தனை வனப்புள்ளவளா என் மனைவி?
இத்தனை தேஜஸ் உடையவனா என் மகன்?’
“மறுபிறவி எடுத்து வந்துள்ள்ளோம் நாங்கள்!
மறவோம் என்றும் ஸ்ரீனிவாசன் கருணையை!”
விளங்கவில்லை ஒன்றும் கிருஷ்ண சர்மாவுக்கு;
விளக்கினான் அனைத்தையும் தொண்டைமான்.
ஊர் திரும்பும் அந்தணனுக்கு அளித்தான் அவன்
சீர் போலப் பொன்னும், மணியும், பல பரிசுகளும்.
27a. மண் பூக்கள்
முதிர்ந்து விட்டது வயது தொண்டைமானுக்கு;
முன்போல் சுமக்க முடியவில்லை ராஜ்யபாரம்.
நாடியது மனம் ஸ்ரீநிவாசனுடன் இருப்பதையே;
தேடின கண்கள் ஸ்ரீனிவாசனின் திருவுருவத்தையே!
முடி சூட்டினான் மகனுக்கு அடுத்த மன்னனாக;
விடை பெற்றான் அன்பு மனைவியிடமிருந்து.
ஆனந்த நிலையத்தில் மிகுந்த ஆர்வத்துடன்
ஆராதனை, பூஜைகள் செய்தான் ஸ்ரீநிவாசனுக்கு.
மாறுபாடு தெரிந்தது ஸ்ரீனிவாசனிடம் – அவன்
வேறுபட்டு நின்றான் கற்சிலையாக இப்போது.
அளவளாவுவான் முன்பு அழைத்த போதெல்லாம்;
அழைத்த போதிலும் வருவதே இல்லை இப்போது.
“பிழை என்ன செய்துவிட்டேன் ஸ்ரீனிவாசா? கூறும்
அழைத்தாலும் நீங்கள் வாராததின் காரணம் எனக்கு!
பக்தியில் குறை ஏற்பட்டு விட்டதா கூறுவீர்!
பழிகளில் இருந்து காத்தீரே முன்பெல்லாம்!”
கல்லாகவே நின்றான் ஸ்ரீனிவாசன் அப்போதும்;
சொல்லொன்றும் கூறவே இல்லை இப்போதும்.
அர்ச்சனை செய்தான் அன்றலர்ந்த மலர்களால்;
அடையவில்லை அவை இறைவன் பாதங்களை!
மண்ணால் செய்யப்பட மணமற்ற மலர்களே
அண்ணலின் இரு பாதங்களை அலங்கரித்தன!
“மணம் வீசும் புது மலர்களை நிராகரித்து விட்டு
மணமில்லாத மண்மலர்களை நீங்கள் ஏற்பது ஏன் ”
பாதங்களைப் பற்றிக் கொண்டு படுத்து விட்டான்!
“பாராமுகம் ஏன்?” என அழுதான், எழவே இல்லை.
மனம் இளகிவிட்டது ஸ்ரீநிவாசனுக்கு – வாய் திறந்து
“இனிப் போதும் நீ அழுதது எழுந்திரு!” என்றான்.
27b. பீமாவரம் பீமன்
“மௌனம் கழிய இத்தனை நேரமா உமக்கு?”என,
“சௌகரியமாக நீ வாழலாம் உன் அரண்மனையில்!
வருத்திக் கொள்கிறாய் அனாவசியமாக உன்னையும்;
வருத்துகின்றாய் அனாவசியமாக என்னையும்!” என்றான்
“வெறுப்பு ஏற்பட்டுவிட்டது உலக வாழ்வில் எனக்கு;
நறுமண மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன் – ஆனால்
மணம் வீசும் என் மலர்களை நீங்கள் ஏற்பதில்லை;
மணமற்ற மண் மலர்களை நீங்கள் ஏற்கின்றீர்கள்!
குறை ஏற்பட்டு விட்டதா என்னுடைய பக்தியில் ?
குறை ஏற்பட்டதா என்னுடைய ஆராதனையில் ?
ஆனந்த நிலையத்தை அமைத்திட உழைத்தேன்;
அடுத்த சேவையைச் சிந்தித்துக் கொண்டுள்ளேன்!
பக்தி நிலவுகிறது என் மூச்சுக் காற்றில் கலந்து;
பக்தியை வெளிப்படுத்த முடியுமா இதை விட?”
கலகலவென நகைத்தான் ஸ்ரீனிவாசன் இப்போது;
“கலப்படம் இல்லாதது உன் பக்தி என்று அறிவேன்!
இருக்கின்றது உன்னுடைய மனதில் ஓர் இறுமாப்பு;
‘இவை அனைத்தும் செய்தவன் நானே!’ என்ற கருத்து.
ஆணவம் அகன்றால் மட்டுமே ஐக்கியம் சித்திக்கும்.
காண விரும்பினால் உடனே செல்வாய் பீமாவரம்!
மயங்காமல் கண்டால் மனதுக்குத் தெரியும்
குயவனும், மனைவியும் கொண்டுள்ள பக்தி!”
தொண்டைமான் சென்றான் பீமாவரத்துக்கு;
கண்டு கொண்டான் குயவன் பீமன் வீட்டை.
ஏழ்மை நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.
‘தாழ்மையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்.
எளிமையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்
வலிமையைக் காட்டுபவர்களை அல்லவே அல்ல!’
27d. விமானம்
பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.
பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.
அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.
இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.
‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!
விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.
பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.
ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!
“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”
இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.
27d. விமானம்
பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.
பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.
அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.
இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.
‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!
விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.
பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.
ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!
“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”
இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.
28a. வட்டி கட்ட வழி?
ஆனந்தமாக இருந்தான் ஸ்ரீனிவாசன்,
ஆனந்த நிலயத்தில் பத்மாவதியுடன்.
பக்தர்கள் தேடி வந்தனர் பகவானை;
சக்திக்கு ஏற்பக் காணிக்கை அளித்தனர்.
மகிழ்வுடன் பகவான் இருந்த போதிலும்,
நெகிழ்வுடன் நினைப்பதுண்டு லக்ஷ்மியை!
‘உற்சாகம் குன்றி பகவான் இருப்பதற்கு
உபசரணையில் உள்ள குறைபாடுகளோ?’
பத்மாவதி ஆலோசிப்பதுண்டு அடிக்கடி;
பகவானிடம் கேட்டுவிட்டாள் நேரடியாக.
“சுகமாக இருப்பதை விட்டு அடிக்கடி நீங்கள்
சோகமாகி விடுவதன் காரணம் கூறுங்கள்!”
“லக்ஷ்மி என்னைப் பிரிந்ததனால் வாழ்க்கை
லக்ஷ்யம் இழந்ததைப் போல ஆகிவிட்டது.
திருமணச் செலவுக்கு வாங்கினேன் கடன்;
திருப்பித் தர வேண்டும் கலியுக முடிவில்.
வட்டி கட்ட வேண்டும் வருடா வருடம்
கட்ட வில்லை வட்டி ஒரு வருடம் கூட.
லக்ஷ்மி மீண்டும் என்னிடம் வந்தால் தான்
லக்ஷணமாகும் நம் வாழ்க்கை!” என்றான்.
“லக்ஷ்மி வருவதில் தடை என்ன சுவாமி?”
“லக்ஷ்மி உனக்குப் போட்டி அல்லவா?”என,
“இந்த வாழ்க்கையே லக்ஷ்மி தந்தது!
அந்த லக்ஷ்மியை நான் வெறுப்பேனா?
அழைத்து வருவோம் நாம் சென்று!” என்றாள்.
“அழைத்து வருவேன் நான் சென்று!” என்றான்.
வகுள மாலிகை துணையானாள் அவளுக்கு.
பகவான் மட்டும் சென்றார் கரவீரபுரத்துக்கு.
28b. பத்ம ஸரோவர்
பகவான் கரவீரபுரம் வருகின்றான் என்றதும்,
பாதாள லோகம் சென்று விட்டாள் லக்ஷ்மி!
கபில முனிவரைக் கண்டாள் லக்ஷ்மி தேவி;
கபில முனிவர் வரவேற்றார் அங்கே தங்கிவிட!
எந்த இடமானால் என்ன பகவானைத் தியானிக்க?
அந்த இடத்திலே தங்கிவிட்டாள் லக்ஷ்மி தேவி.
கரவீரபுரம் அடைந்த ஸ்ரீனிவாசன் கண்டது எது?
வெறிச்சோடிக் கிடந்த தேவியின் இருப்பிடத்தை.
கடுமையான தவம் மேற்கொண்டு விட்டாளா?
காடுகளில் தேடி அலைந்தான் லக்ஷ்மி தேவியை.
திருவுருவத்தின் அருகே அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்;
தியானம் செய்தான் தன் லக்ஷ்மி தேவியின் மீது.
பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன – ஆனால்
பார்க்க முடியவில்லை பகவானால் லக்ஷ்மியை!
அசரீரி ஒன்று பேசியது ஆகாயத்தில் இருந்து,
“வசப்படமாட்டாள் லக்ஷ்மி உன் தியானத்துக்கு!
ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரினை
அமைப்பாய் பத்ம ஸரோவர் என்ற பொய்கையில்.
கிழக்கில் இருந்து சூரியன் ஒளி வீசும் பொழுது,
அழகிய தாமரையில் உன் தேவி தோன்றுவாள்!”
அடைந்தான் சுவர்ணமுகி தீரத்தை ஸ்ரீனிவாசன்.
அனுப்பினான் வாயு தேவனை இந்திர லோகம்.
பறித்து வந்தான் இந்திரனின் அனுமதியோடு
அரிய தாமரை மலர் ஒன்றை வாயுதேவன்.
ஆயிரம் இதழ்த் தாமரையை ஸ்தாபித்தான்;
ஆயிரம் இதழ்த் தாமரை மீது தியானித்தான்.
29a. அப்சரஸ்
நாட்கள் உருண்டு ஓடின – பகவானின் தவம்
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது மேலும்!
பத்ம தீர்த்தத்தின் கரையில் ஒருவன் அமர்ந்து
உக்கிர தவம் செய்வது ஒரு செய்தியானது!
பூலோகத்தில் தவம் நடந்தால் ஆபத்து நிகழும்
தேவலோகத்தை ஆளும் இந்திரனின் பதவிக்கு.
தவத்தைக் குலைத்துக் கலைப்பதற்கு இந்திரன்
தேவ மகளிரை அனுப்பினான் பூலோகத்திற்கு.
பூலோகப் பெண்களைப் போல மாறிவிட்டனர்.
பூஜைக்கு உதவி செய்திட விரும்பி வந்தனர்.
தடை சொல்லவில்லை பகவான் அவர்களிடம்;
நடை பெறவில்லை அவர்கள் விரும்பியதும்!
நெருங்க வில்லை பகவான் அந்த சுந்தரிகளை!
நெருங்கவும் விடவில்லை அந்த சுந்தரிகளை!
அடுத்த திட்டத்தினை அமல்படுத்தினர்அப்சரஸ்.
அடுத்து அடுத்துப் பாடினர் இனிய பாடல்களை!
அர்ப்பணித்தான் அந்தப் பாடல்களை லக்ஷ்மிக்கு;
கற்பனை பலிக்கவில்லை பெண்கள் எண்ணியபடி.
மாலைகளை அணிவிக்க வந்தனர் பகவானுக்கு;
மாலைகளை அணிவித்தான் அவன் தாமரைக்கு!
“நாட்டியம் செய்யலாமே நீங்கள்!” என்று சொல்லப்
போட்டி போட்டுக் கொண்டு இனிய நடனம் ஆடினர்.
மேனி எழிலை வெளிப்படுத்தினர் ஆடும் போது;
பேணினான் பிரம்மச்சரியத்தை பகவான் நன்கு!
கற்பனையில் உருவான அழகிய பெண்ணை
கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான் பகவான்
‘படைக்கும் சக்தி படைத்த இவன் மனிதன் அல்ல!’
மடை திறந்தது போல எல்லாம் நினவு வந்தது!
இந்திரன் தந்தான் வாயுவிடம் தாமரை மலரை;
இந்தத் தாமரை மலரே அவன் தந்த மலர் என்று!
விழுந்து வணங்கினர் பகவான் பாதங்களில்;
அழுதும், தொழுதும், கேட்டனர் மன்னிப்பு.
“செய்ய வந்தீர்கள் உங்களுக்கு இட்ட ஆணையை;
எய்தவன் இருக்க அம்பை நான் நோக மாட்டேன்!”
தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள்
அப்போதே சென்றனர் இந்திரனின் சபைக்கு.
29b. பத்மாவதியின் கனவு
“அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும்!”
கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.
ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.
விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!
“தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை.
மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!” என்றான்.
இந்திரன் திரும்பினான் தன் இந்திரலோகம்.
சொந்த சிருஷ்டியான தேவதையிடம் அவன்
“வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!” என்றான்.
தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.
இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.
‘லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர்?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர்?
கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?’
இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்
விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!
வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!
30a. தீப லக்ஷ்மி
மன நிம்மதி இழந்து விட்டாள் லக்ஷ்மி;
மனம் கலங்கியது நடப்பதைக் கண்டு.
‘கபிலரின் ஆசிரமத்தில் தங்கிவிட்டால்
கரவீர புரத்திலிருந்து திரும்பி விடுவான்!’
எண்ணிய எண்ணம் தவறானது – கணவன்
பண்ணுகின்றான் தவம் பத்ம ஸரோவரில்.
கூறினாள் மனக் கவலையைக் கபிலரிடம்;
கோரினார் கபிலர் பிரிந்து வந்த காரணத்தை.
“வாசஸ்தலத்தைக் களங்கம் செய்த பிறகு
வசிக்க முடியுமா மீண்டும் என்னால் அங்கு?”
“மகன் போன்றவன் அல்லவா பிருகு ருஷி ?
மகனிடம் கோபம் கொள்ளலாமா ஒரு தாய்?
கணவனைப் பிரிந்து தனியே வரலாமா?
கணவனைத் தவத்தில் தவிக்க விடலாமா?
பாராமுகம் செய்வது தகுமா தேவி – இங்கு
யாராவது மகிழ்ச்சியாக உள்ளார்களா?
தவிக்கின்றீர்கள் நீங்கள் தனிமையில்;
தவிக்கின்றான் பகவான் தவம் செய்து;
தவிக்கின்றாள் பத்மாவதி கவைலையில்;
தவிப்பினால் விளைந்த நன்மை என்ன?
மலரில் சென்று எழுந்தருள்வீர் தாயே!
பல காலம் செய்த தவம் பலிக்கட்டும்!”
தீபச் சுடர் உருவில் தோன்றி பகவானின்
தாபம் தீர்த்தாள் தாமரையில் லக்ஷ்மி.
தேவி தோன்றியவுடன் பிரகாசித்தது
கோடி சூரிய ஒளியுடன் தாமரை மலர்.
நிஷ்டை கலைந்து எழுந்தான் பகவான்;
இஷ்டத்துடன் நோக்கினான் லக்ஷ்மியை.
30b. பிணக்குத் தீர்ந்தது!
தாமரையில் மகாலக்ஷ்மி தோன்றியதும்
தாமதமின்றி விரைந்து வந்தனர் தேவர்.
பிரிந்தவர் சேரும் வைபவத்தைக் காணப்
பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!
தேவர்கள் துதித்தனர் தேவியைப் பலவாறு;
தேவி இறங்கவில்லை தாமரையை விட்டு.
பிருகுவிடம் பேசினார் ஈசன் தனிமையில்,
“பிரிவுக்குக் காரண கர்த்தா நீரே அல்லவா?
தேவியிடம் சென்று மன்னிப்புக் கேட்பீர்!” என,
தேவியிடம் சென்று பிருகு கேட்டார் மன்னிப்பு.
சாந்தம் அடைந்து இறங்கினாள் லக்ஷ்மி தேவி.
சந்தனம் பூசினாள் பகவான் வக்ஷஸ்தலத்தில்.
வணங்கினாள் அவனை மண்டியிட்டு – அவளைப்
பிணக்குத் தீர்ந்து மார்பில் அமர்த்தினான் அவன்.
கந்தருவர் இசையுடன் கலந்து மலர் சொரிந்திட,
துந்துபி முழங்கியது எண் திசைகளிலும் பரவி.
அப்சரஸ் விண்ணில் ஆடினர் ஆனந்த நடனம்.
அருளினார் பகவான் உலகுக்குச் சிறந்த வரம்.
“கார்த்திகை மாத சுத்த பஞ்சமியில் – பத்ம
தீர்த்தத்தில் நீராடுபவருக்கு சகல சம்பத்து.”
அனைவரும் அடைந்தனர் சேஷாசலம் ;
அனைவரையும் வரவேற்றாள் பத்மாவதி/
ஆரத்தி எடுத்தாள்; திருஷ்டி கழித்தாள் அவள்;
ஆனந்தத்தில் தத்தளித்தாள் வகுள மாலிகை!
31a. ஆனந்தம் ஆனந்தம்!
ஆனந்த மயமாக மாறிவிட்டது அங்கே
ஆனந்த நிலயத்தில் மூவரின் வாழ்க்கை.
சக்களத்திகள் போல இருக்கவில்லை – இரு
சஹோதரிகள் போல அன்பு செலுத்தினர்.
பரம சந்தோஷம் பக்த கோடிகளுக்கு;
வரம் அளிக்க இருந்தனர் மூவர் என்று!
தனிமையில் கூறினான் லக்ஷ்மியிடம்,
ஸ்ரீனிவாசன் குபேரனின் கடனைப் பற்றி.
“வட்டி கட்ட ஒப்புக் கொண்டேன் நான்
வட்டி கட்ட வில்லை ஒரு முறை கூட.
பழிக்கு ஆளாகி விடுவேனே – நான்
இழிச் சொற்களைக் கேட்க நேருமோ?
உதவ முடியும் உன்னால் எனக்கு!
அதுவும் மிக எளிதான் முறையில்!
உன்னைத் தேடி வரும் பக்தருக்கு வழங்கு
பொன்னையும், பொருளையும் வாரி வாரி.
என்னைத் தேடி வருபவர்கள் அளிப்பர் – அந்தப்
பொன்னையும், பொருளையும் காணிக்கையாக!”
புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி கேட்ட உடனே,
“நிறைவேற வேண்டும் நம் நோக்கம் சுவாமி!
தனியே இருக்க வேண்டும் நான் – நம்முடைய
பணிகள் சரிவர நடை பெறுவதற்கு!” என்றாள்.
பாதாள லோகம் சென்றாள் லக்ஷ்மி
பகவானுக்கு உதவத் தயார் ஆனாள்.
“நினைத்த காரியம் இனிதாக நடைபெறப்
புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும் நான்.”
பகவன் பாடு மீண்டும் திண்டாட்டம்
பாதாள லோகத்தில் லக்ஷ்மி தவத்தில்
பூலோகத்தில் வந்து நிலை பெற்றால் தான்
ஆலோசிக்க முடியும் குபேரன் வட்டியை!
31b. மீண்டும் தவம்
சென்றான் ஸ்ரீனிவாசன் பாதாள லோகம்;
நின்றான் தியானம் செய்த லக்ஷ்மி முன்பு.
கண்டாள் லக்ஷ்மி அகக்கண்களில் அவனை;
காணவில்லை அவள் புறக்கண்கள் அவனை.
“தரிசனம் தந்தீர்கள் எனக்கு – ஆனால்
அரிதாகி மீண்டும் மறைந்து விட்டீர்கள்.”
கலைந்து விட்டது உன் தவம் லக்ஷ்மி!
வேலைகள் அநேகம் காத்திருக்கின்றன.
தடைபட்டுள்ளன அவை உன் தவத்தால்;
உடைபடும் தடை நீ பூலோகம் சென்றால்!
சுகரின் ஆசிரமத்தில் காத்திருக்கின்றது,
சுகமான ராஜ போகம் உனக்கு!” என்றான்.
ஆதிசேஷனை தியானித்தாள் லக்ஷ்மி;
ஆதிசேஷன் வந்து வணங்கி நின்றான்.
“சேர வேண்டும் சுகரின் ஆசிரமத்தை!”
தேர் நின்றது வெள்ளைப் பரிகள் பூட்டி!
ஏறி அமர்ந்தாள் அழகிய ரதத்தினில்,
அரிய ஆபரணங்கள் அணிந்த லக்ஷ்மி.
ரதத்துடன் தேவியைத் தலையில் தாங்கி,
வேகத்துடன் வெளிப்பட்டான் ஆதிசேஷன்.
சாயாசுகர் கண்டார் மஹாலக்ஷ்மியை,
“சரணம் சரணம் லோக மாதா!” என்றார்.
31c. சாயா சுகர்
சுகர் விரும்பினார் சாயுஜ்ய முக்தியை;
சுகர் எழும்பினார் தம் யோகசக்தியால்.
தடுத்தான் சூரியன் சுகரின் பிரயாணத்தை;
விடுத்தான் சுகரிடம் கேள்விக் கணைகளை.
“முன்னோர்கள் பூவுலகில் வாழ்ந்திருக்க,
முன்பாக சாயுஜ்யம் அடைய முடியுமா?
அருகதை இல்லை உமக்கு சாஸ்திரப்படி,
அறிந்திருப்பீர் இதனை நீரும் முன்பாகவே!
கிருஹஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்;
பிறக்க வேண்டும் புத்திரர்கள், சந்ததியினர்;
பிரம்மஞானி ஆவது அதற்கும் பின்பு;
அரிய சாயுஜ்யம் அதற்கும் பின்பு என்று.”
“மனிதனுக்குத் தேவை நான்கு ஆசிரமங்கள்;
முனிவனுக்குத் தேவை இல்லை ஆசிரமங்கள்;
நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்று
நீத்து விடுகிறோம் அதை முற்றிலுமாக.
அடைய முடியுமா ஞான மார்க்கத்தை என
விடை அறிய விரும்பினேன் தந்தையிடம்.
அனுப்பினார் என்னை ஜனக ராஜனிடம்,
வனப்புடன் விளக்கினார் ஜனகர் எனக்கு.
பக்குவம் அடையாதவனுக்குத் தேவை இவை;
பக்குவம் அடைந்தவனுக்கு அல்ல என்பாதை.”
“விதிகளைக் கூறுபவர்களே தாம் கூறிய
விதிகளை உடைக்கவில்லை முனிவரே!
விஷ்ணு, பிரமதேவன், வசிஷ்டர், சக்தி,
பராசரர், வியாசர், நீர் ஒரு வம்சத்தினர்.
தேவை ஒரு சந்ததி சேவை செய்திட;
தோற்றுவித்தால் உமக்கு சாயுஜ்யம்!”
31d. சூரியனும், சுகரும்.
சக்தியினால் தோற்றுவித்தார் மானசீக புத்திரனை,
யுக்தியுடன் நிறுத்தினார் அவனை சூரியனின் முன்பு.
சாயாசுகர் வணங்கிய பின் கேட்டார் சுகரிடம்,
“மாயையால் என்னைத் தோற்றுவித்தது ஏன்?”
“கங்கைக் கரையில் வசிக்கும் என் தந்தைக்குத்
தங்கு தடையின்றி சேவை செய்து வருவாய்!”
வியாசருக்குப் பணிவிடை செய்வதற்குச்
சாயாசுகர் வசித்தார் சுவர்ண முகி தீரத்தில்.
கவர்ந்தது சுகரின் அறிவாற்றல் சூரியனை;
கதிரவன் கேட்டான் புதிர் போலச் சுகரிடம்,
தத்துவம் என்ன உள்ளது என் உருவில்?”
“சித்தத்துக்கு எட்டிய வரை கூறுகின்றேன்,
உண்டாயிற்று பிரணவம் நாரணனிடம்;
உண்டாயிற்று ஆகாசம் பிரணவத்திடம்;
உண்டாயிற்று வாயு ஆகாசத்திடம்;
உண்டாயிற்று அக்னி இவைகளிடம்.
வாயுவும், ஆகாசமும் கலந்த போது
வியாபித்தது அக்னி தோன்றிப் பரவி.
பிரளயம் தோன்றியது ஜல வடிவத்தில்!
பிரளய ஜலம் தோற்றுவித்தது பலப்பல
தங்க நிறம் கொண்ட ஒளிக் கிரணங்களை;
தங்க நிற ஒளிக்கிரணங்கள் ஆயின சூரியனாக!
அண்ட சராசரம் தோன்றியது அதிலிருந்து!
கொண்டிருந்தது வாழ வைக்கும் சக்தியை.
அசையும் அசையாப் பொருட்கள் வாழ
அவசியம் ஆனது அந்த சூரியனின் சக்தி.
சூரிய சக்தியால் மனிதன் பிறக்கிறான்;
சூரிய சக்தியால் மனிதன் வாழ்கிறான்.
அவன் சக்தி அடைகின்றது மீண்டும்
அதே சூரியனை ஒளிக்கிரணம் வழியே!”
அனுமதித்தான் சூரியன் சுகர் செல்வதற்கு;
வியந்தான் சுகரின் அறிவாற்றல் கண்டு!
சுக க்ஷேத்ரம்
போற்றினார் லக்ஷ்மியை சாயா சுகர்; போற்றினர் லக்ஷ்மியை மும்மூர்த்திகள்;
போற்றினர் லக்ஷ்மியைத் தேவ கந்தர்வர்கள்; போற்றினர் லக்ஷ்மியை முனி புங்கவர்கள்.
பிரமன் வேண்டினான் லக்ஷ்மி தேவியிடம், “தர வேண்டும் பத்ம தீர்த்தத்தில் நீராடினால் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அள்ளி அள்ளி!
கஷ்டங்கள் எல்லாம் தொலைய வேண்டும்!
ஆலயம் அமைக்கும் எண்ணம் கொண்டேன்; அனுமதி வேண்டும் அதை இங்கு அமைக்க”.
“சுக க்ஷேத்திரத்தை விடுத்தது என்னுடன் சேஷாச்சலம் நீயும் வரவேண்டும் தேவி” பகவான் கூறினான் லக்ஷ்மி தேவியிடம்,
பகவானுக்கு பதில் அளித்தாள் லக்ஷ்மி.
“சுக க்ஷேத்திரத்தில் இருக்க விருப்பம்; இக பரம் தர வேண்டும் என் பக்தருக்கு!”
விசுவகர்மா அமைத்தான் ஆலயத்தை! விசுவாசி சாயா சுகர் ஆராதனைகளை!
“செல்வதை வாரி வாரி வழங்குவாய் நீ! செல்வர் என்னை வந்து தொழுத பின்பே.”
“கார்த்திகை மாதம் சுக்கில பஞ்சமியன்று காத்திருப்பேன் தங்கள் மாலை, சேலைக்கு!
மறக்காமல் தர வேண்டும் ஆண்டுதோறும்!” இறைவனிடம் வேண்டினாள் லக்ஷ்மி தேவி.
சுக க்ஷேத்திரத்தில் குடி கொண்டாள் லக்ஷ்மி; சேஷாச்சலத்தில் குடி கொண்டான் பகவான்.
மலர்ந்த தாமரை மேல் தோன்றியவளை அலர்மேல் மங்கை என அழைக்கின்றனர்.
——————
ஸ்ரீ வேங்கடேச புராணம் முற்றுப் பெற்றது.
சுபம், சுகம், சாந்தி நிலவட்டும் எங்கும்!
————-
தீர்த்த மஹிமை
தீர்த்தமாட விரும்பினான் ஓரந்தணன்;
யாத்திரை நீளும் நெடுங் காலம் என்று
உற்றார் உறவினரிடம் விடை பெற்றுப்
பிற்பாடு யாத்திரை செல்வது வழக்கம்.
கனவிலே தோன்றினார் மஹாவிஷ்ணு!
“கருதுகின்றாய் அகல தீர்த்த யாத்திரை!
புஷ்கர சைலம் என்பது சேஷாச்சலம்;
புனித தீர்த்தங்கள் பதினேழு உள்ளன.
புவனமெங்கும் உள்ள தீர்த்தங்கள் – அப்
புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ளன!
சகல பாவங்களிலிருந்து விடுதலையும்,
சகல சம்பத்துக்களும் கிடைப்பது உறுதி.
நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம்.
நாடுவாய் நீ சேஷாச்சலத்தை!” என்றார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது – மேலும்
பலன் இரண்டுக்கும் ஒரு போலானது.
பதினேழு தீர்த்தங்களிலும் சென்று நீராடிப்
பரம பாவனம் அடைந்தார் அந்த அந்தணர்.
02. சேஷாச்சலம்
நாரதர் சென்றார் திருப்பாற் கடலுக்கு;
நாரணனைத் தேவியருடன் தரிசித்தார்.
ஒளிர்ந்தது கௌஸ்துபம் மார்பினில்;
மிளிர்ந்தன நாரணனின் பஞ்சாயுதங்கள்.
“பூலோகத்தில் நான் திருவிளையாடல்
புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறு!” என்று
நாரணன் கேட்டான் நாரத முனிவரிடம்,
நாரதர் விண்ணப்பித்தார் நாரணனிடம்.
‘கங்க தீரத்துக்குத் தெற்கே உள்ளது
தண்டகாரண்யம் என்னும் ஓர் இடம்.
விண்ணோரும் மண்ணோரும் வந்து
தெண்டனிடத் தகுந்த இடம் ஆகும்”.
தேவருஷி சென்றதும் நாரணன் – ஆதி
சேஷனுக்கு ஆணை இட்டார் இங்கனம்.
“மலை உருக் கொள்வாய் நீ அனந்தா!
சில காலம் தங்குவேன் பூவுலகினில் !”
“மலையாக மாறுகிறேன் ஆணைப்படி.
மலை மீது எழுந்தருளும் தேவியருடன்!
இருப்பிடம் ஆகவேண்டும் என் தலை;
திருவடிகள் பதித்து நின்றிட வேண்டும்.
புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றையும்
என்னிடம் நீங்கள் உருவாக்க வேண்டும்!”
அருள் செய்தான் நாரணன் அவ்வாறே;
திருப் பாற்கடல் விடுத்தான் அனந்தன்.
மலையானான் தண்டகாரண்யத்தில்;
தலை ஆனது திரு வேங்கடாச்சலமாக.
உடல் ஆகிவிட்டது அகோபிலமாக;
முடிவில் வால் ஆனது ஸ்ரீ சைலமாக.
அனந்தன் பூமியில் மலை ஆனபோது;
அருந்தவம் தொடங்கியது அவன் மீது.
வேங்கடேசனாகக் காட்சி தந்தருளினார்
வேங்கடமலையில் குடிகொண்ட நாரணன்
03. நாராயணாத்ரி
நாராயண முனிவர் ஒரு நல்ல தபஸ்வி.
நாராயணனைத் தேடியலைந்தார் எங்கும்.
காட்சி தரவில்லை நாராயணன் அவருக்கு
மாட்சிமை பொருந்திய தவம் செய்வித்திட.
பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தார்.
பிரம்மன் கேட்டான்,” என்ன வரம் தேவை?”
“நாரணனைத் தரிசிக்கத் தவம் செய்தேன்.
காரணம் என்னவோ காண முடியவில்லை!
காணும் வழியினைக் கூறுங்கள் சுவாமி!
காணும் பாக்கியத்தை அருளுங்கள் சுவாமி!”
“கோனேரிக் கரையிலே சேஷாச்சலத்திலே
கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீமன் நாராயணன்.
தவம் செய்வீர் நீர் சேஷாச்சலம் சென்று!
தவமும் பலிக்கும்; தரிசனமும் கிடைக்கும்”
சேஷாச்சலம் அடைந்தார் முனிபுங்கவர்;
செய்தார் கடும் தவம் பன்னெடுங் காலம்!
தேவியுடன் காட்சி தந்தான் நாரயணன்;
“தேவை எதுவோ கூறுங்கள்!” என்றான்.
“தரிசனம் வேண்டித் திரிந்தேன் – எங்கும்
தரிசனம் கிடைக்காமல் தவித்தேன் நான்.
பிரம்மன் கூறினார் இங்கு தவம் புரியுமாறு,
அரிய தரிசனம் பெற்றேன் உமது அருளால்!
முனிவர்களுக்கே கடினமான இத் தவத்தை
மனிதர்கள் செய்வது எங்கனம் சாத்தியம் ?
புனிதத் தலத்திலேயே தங்கி வசிப்பீர்!
மனிதர்களுக்கும் ஆசிகள் வழங்குவீர்!
என் பெயரால் விளங்க வேண்டும் – நீர்
எனக்கு தரிசனம் தந்த இந்த இடம்” என,
“நிறைவேற்றுவேன் உம் கோரிக்கையை.
நித்தியவாசம் செய்வேன் இந்தத் தலத்தில்.
தீரும் வரும் அடியவர் குறைகள் எல்லாம்!
பேரும் விளங்கும் நாராயணாத்திரி என்று!”
04. ரிஷபாத்ரி
வேட்டைக்குச் செல்ல விழைந்தான் ஸ்ரீனிவாசன்;
காட்டுக்குச் செல்லத் தயாராயினர் படைவீரர்கள்.
சேனைத் தலைவன் தலைமையில் வந்தனர்,
சேஷாத்திரி வாசனைத் தொடர்ந்து வீரர்கள்.
வேட்டை ஆடினர் வெகுநேரம் மிருகங்களை;
வேட்கை மிகுந்தது நீர் பருகித் தாகம் தீர்ந்திட.
அழகிய சோலை ஒன்று தென்பட்டது அங்கு;
தழுவியது வீசிய குளிர்ந்த தென்றல் காற்று.
ரிஷபன் என்னும் அசுரனின் சோலை அது;
ரிஷபன் தடுத்தான் அதில் நுழைந்த வீரர்களை.
அரச குமாரன் என்று எண்ணினான் பகவானை;
பரந்தாமனையும் அச்சுறுத்தினான் அசுரன் ரிஷபன்!
“சம்பரா! இவனுக்குப் பதில் கூறு!” என்று சொல்ல
சம்பரன் தயாரானான் ரிஷபனுடன் போர் புரிய.
சிவ பக்தி மிகுந்தவன் அசுரன் ரிஷபன் – எனவே
தேக சக்தியும் மிகுந்தவன் அசுரன் ரிஷபன் !
நொடியில் அடித்து வீழ்த்தினான் சம்பரனை;
அடுத்து ஓடி வந்தான் ஸ்ரீனிவாசனை நோக்கி!
சரங்களைப் பொழிந்தான் சேனை நாயகன்;
சரங்கள் தடுத்தன அசுரனைச் சுவராக மாறி!
கரங்களாலே உடைத்தான் சுவற்றை அசுரன்,
பரபரவென்று முன்னேறினான் அசுரன் ரிஷபன்
அஸ்திரங்களை ஏவினான் அசுரன் ரிஷபன்;
அஸ்திரங்களை ஏவினான் சேனை நாயகன்!
06. அஞ்சனாத்ரி
திரேதா யுகத்தில் கடும் தவம் செய்தான்,
பரமசிவனைக் குறித்துக் கேசரி என்பவன்.
“வேண்டும் வரம் யாது?” என்று கேட்க
வேண்டினான் கேசரி இந்த வரத்தினை.
“எவராலும் வெல்ல முடியாத பலத்துடன்,
என்றும் வாழ்ந்திருக்கும் மகன் வேண்டும்!”
“புதல்வி தான் பிறப்பாள் உமக்கு – அந்தப்
புதல்விக்குப் பிறப்பான் நீர் கோரும் மகன்!”
அஞ்சனை அவதரித்தாள் அந்தக் கேசரிக்கு;
அருமை பெருமையாக அவளை வளர்த்தான்.
வானரத் தலைவன் விரும்பிக் கேட்டதால்,
வானரனுக்கு அவளை மணம் செய்வித்தான்.
குறை இருந்தது புத்திரன் இல்லையென்று!
குறத்தி போல் வந்தாள் தருமதேவதை அங்கே.
“வேங்கடம் சென்று தவம் செய்தால் – மனம்
வேண்டியபடிப் பிறப்பான் நல்ல மகன்!” என
அனுமதி பெற்றாள் தன் கணவனிடமிருந்து,
அடைந்தாள் வேங்கட மலையைச் சென்று.
ஆகாய கங்கையில் நீராடினாள் – பின்பு
அமர்ந்தாள் அஞ்சனைஅரும் தவம் புரிந்திட.
காற்றை மட்டுமே உட்கொண்டாள் – அவள்
மற்றவற்றைத் துறந்தாள் முற்றிலுமாக!
அஞ்சனை தவத்துக்கு இரங்கினான் வாயு;
கொஞ்சமேனும் தானும் உதவ நினைத்தான்.
கனிந்த பழத்தைக் கரத்தில் கொண்டு போட,
இனிய பிரசாதமாக அதைத் தினமும் புசிப்பாள்.
07. அஞ்சனாத்ரி
வந்தனர் அங்கே சிவனும், உமையும்.
கண்டனர் மந்திகள் கூடிக் களிப்பதை!
இன்புற விரும்பினர் தாமும் அவ்விதமே ;
இருவரும் மாறினர் இரண்டு மந்திகளாக!
பரம சிவனிடம் வெளிப்பட்ட தேஜசைப்
பிரசாதமாகத் தந்துவிட்டான் வாயு அன்று!
கனி என்று எண்ணிப் புசித்துவிட்டாள்!
கனி அல்ல அது; சிவனுடைய தேஜஸ்!
அசரீரி கேட்டது அஞ்சனைக்கு அப்போது;
“அசாதரணமான மகன் பிறப்பான் உனக்கு!
மகேஸ்வரனின் ஒரு அருட் பிரசாதமாக;
மகா பலவானாக; ஒரு மகா பண்டிதனாக;
மகா பக்தனாக, ஒரு சிரஞ்சீவியாக!” என்று.
மன நிம்மதி கொண்டாள் தேவி அஞ்சனை.
வானர உருவில் வந்து பிறந்தான் ஒரு மகன்,
வானில் பாய்ந்து சென்று விளையாடினான்!
கனி எனக் கருதினான் செங்கதிரவனை!
இனித்துச் சுவைக்கப் பறிக்கச் சென்றான்.
தடுத்தான் பிரம்மாஸ்திரத்தால் பிரமன்;
தரையில் விழுந்தான் மயங்கிய குழந்தை!
அஞ்சனையின் கண்ணீருக்கு அளவில்லை.
அஞ்சி ஓடி வந்தனர் தேவர்கள் அவர்களிடம்.
“பாலகனுக்கு இல்லை என்றுமே ஆபத்து!
பாலகனுக்கு இல்லை என்றுமே மரணம்!”
தேவ கானமும், சாஸ்திர ஞானமும் தந்து,
தேஹ வலிமை, தொண்டு மனப்பான்மை,
வாக்கில் சாதுர்யம், மனதில் பூரண பக்தி,
திக்கெட்டும் பரவிய புகழ், அஷ்டசித்திகள்;
அனைத்தும் தந்தனர் அஞ்சனை மகனுக்கு;
“இனி ஒருவர் இணையாகார் இவனுக்கு!
புனிதத் தலம் விளங்கிடும் இப் புவனத்தில்
இனி அஞ்சனாத்ரி என்று உன் பெயரால்!”
08. மாதவன்
நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.
நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்;
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.
தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.
தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.
தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!
புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்!
உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.
அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குல ஆசாரத்தைத் துறந்து விட்டான்;
வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!
காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.
வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!
09. வேங்கடம்
தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.
மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!
நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
நேர்மை அல்ல என்பதை உணர்ந்தான்.
ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என்று எதுவும் இல்லை மனதில்!
சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.
பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;
காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .
பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.
வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.
கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!
வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!
மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.
10. நாக கன்னிகை
சோழ ராஜன் சென்றான் வேட்டைக்கு,
சேஷாச்சலத்தை அடைந்தான் திரிந்து.
பிரிந்து விட்டான் படை வீரரிடமிருந்து;
மறந்து விட்டான் வெளிச்செல்லும் வழி!
தட்டு தடுமாறி வெளிவர முயன்றவன்
பட்டு ரோஜாப் பெண்ணைக் கண்டான்!
மலரே மலர்களைக் கொய்யுமா என்ன?
மலர் மங்கை மலர்கள் கொய்திருந்தாள்!
மையல் வசப் பட்டான் சோழ மன்னன்
தையலின் லாவண்யத்தைக் கண்டதும்.
“கொடிய விலங்குகள் திரியும் வனத்தில்
கொடி இடையாள் நீ என்ன செய்கிறாய்?
நீ யார்? எந்த ஊர்? என்ன பேர்? ” என
நீளமாக அடுக்கினான் கேள்விகளை.
“நாகர் குலத்தைச் சேர்ந்தவள் நான்
நாகர்களின் வேந்தன் என் தந்தை! ”
“மணம் செய்து கொள்கிறாயா என்னை?
மனம் பறி போய்விட்டது கண்டவுடன்!”
“நற்குணங்கள் பொருந்திய மன்னனைக்
கற்பு மணம் புரிய வேண்டுமாம் நான்!
தந்தையிடம் நீர் பேசினால் நடக்கும்
தடைகள் இல்லாமல் நம் திருமணம்! ”
“நாக லோகம் செல்ல நேரம் இல்லை!
காம வேதனை தாங்க முடியவில்லை!
கந்தர்வ விவாஹம் செய்து கொள்வோம்;
தந்தையிடம் சொல் திரும்பச் சென்றபின்.”
காமவசப் பட்டிருந்தாள் நாககன்னிகை;
தாமதம் இன்றிக் கந்தர்வ விவாஹம்!
ஆனந்த வெள்ளத்தில் நீந்தினர் பல நாள்;
அவரவர் வீட்டுக்குச் சென்றனர் ஒரு நாள்.
11. யுவராஜன்
பாதாள லோகம் சென்ற நாக கன்னிகை
பூலோகத்தில் நடந்ததைச் சொன்னாள்.
மணந்தாள் அவள் சோழ மன்னனை என
மகிழ்ந்தான் தந்தை மன்னன் தனுசன்.
கந்தர்வ விவாஹத்தின் பலன் கர்ப்பம்!
சுந்தரனான ஆண் மகவு ஒன்று பிறந்தது.
பிறந்த நேரமும், அவன் தோற்றமும்,
சிறந்த அரசனுக்கு மட்டுமே உரியவை.
கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் அவனை;
கண்மணி வளர்ந்தான் கண்களைக் கவரும்படி.
“என் தந்தை யார்?” எனக் கேட்டான் தாயை.
“உன் தந்தை சோழ மன்னர்!” என்றாள் தாய்.
தந்தையைக் காண விரும்பினான் அவன்;
தடை சொல்லாமல் அனுப்பினர் அவனை.
சோழ மன்னனை வந்து வணங்க – மன்னன்
” தோழமையோடு கேட்டான் நீ யார்?” என.
“வந்தீர்கள் நீங்கள் சேஷாச்சலம் வேட்டையாட;
தந்தீர்கள் கந்தர்வ மணம் அன்னை நாககன்னிக்கு!”
அகன்ற ஆகாயத்தில் எழுந்தது ஓர் அசரீரி ;
“புகன்றது உண்மையே! இவன் உன் மகன்!
ஸ்ரீனிவாசனுக்குத் தொண்டுகள் புரிவான்;
மேதினியில் அழியாத புகழ் அடைவான்!”
அணைத்துக் கொண்டான் அருமை மகனை;
வினவினான் அன்னை, பாட்டனைப் பற்றி .
முதுமை எய்தி விட்டான் சோழ மன்னன்;
புதிய மன்னன் ஆனான் நாககன்னி மகன்.
நாடினான் நாட்டு மக்களின் நன்மைகளை,
நாற்றிசையும் அவன் புகழ் பரவி விரவியது
12. அபூர்வக் கனவு
இடையர்கள் கண்டனர் மன்னனை;
இயம்பினர் வியத்தகு நிகழ்ச்சிகளை.
“வேங்கட மலையினில் வாழ்பவர்கள் நாங்கள்;
தங்களுக்குப் பால் குடங்கள் எடுத்து வருவோம்.
வழியில் உள்ள புற்றின் அருகே வந்ததும்
வழிந்தோடுகிறது பால் குடங்கள் உடைந்து!
தினமும் நிகழ்கிறது இது போலவே மன்னா!
இனம் புரியவில்லை இதன் காரணம் எமக்கு!”
விந்தையாக இருந்தது சோழ மன்னனுக்கு;
“இந்த நிகழ்வைக் கண்டு பிடிப்பேன் நான்!”
கனவு கண்டான் மன்னன் அன்றிரவு;
கருமை நிற அழகன் ஒருவன் வந்தான்.
கையில் வில், மார்பில் பெண் உருவம்;
“கையுடன் அழைத்து வரச் சொன்னார்
சேஷகிரி ஸ்ரீனிவாசன் தங்களை!” என்றான்.
பேசாமல் அவன் பின் சென்றான் மன்னன்.
சேஷகிரியை அடைந்தனர் இருவரும் – வி
சேஷமான நவரத்தினம் மின்னும் மண்டபம்!
சங்குடன் சக்கரம், மகர குண்டலங்கள்;
பொங்கும் அழகுடைய தேவியர் மூவர்;
கோடி சூரியப் பிரகாசத்துடன் நாரயணன்;
தேடி வந்து கண்ட காட்சியில் உருகினான்!
அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம்;
மெல்ல மெல்ல மறைந்தது அக்காட்சி.
கனவு என்றே நம்ப முடியவில்லை அவனால்;
நனவு போலவே இருந்தது விழித்த பின்னரும்.
சபா மண்டபத்தில் உரைத்தான் தன் கனவை,
“அபாரமான கனவின் பொருள் என்ன?” என,
ஆழமாகச் சிந்தித்தனர் விசுவாச மந்திரிகள்;
சோழ மன்னனிடம் கூறினர் சிந்தனைகளை.
13. வேடுவன்
“இடையர்கள் குடம் உடைவதற்கும், கனவுக்கும்,
தொடர்பு உள்ளது இதில் ஐயம் இல்லை மன்னா!
புற்றிலே உள்ளாரா ஸ்ரீநிவாசன் என்று அறியப்
புற்றுக்குச் செய்வோம் பால்குடம் அபிஷேகம்.
இறைவன் வெளிப்பட்டால் பொருள் விளங்கும்
சிறந்த ஆலயம் கட்டுவிக்க விழைகின்றான் என.”
வேடன் வந்தான் வேந்தனிடம் சேதி சொல்ல.
வேடனின் சேதியைக் கேட்கும் ஆவல் மீறியது!
“புங்கம் விதையை உண்கின்றோம் மாவாக்கி;
எங்கிருந்தோ வருகிறது வெள்ளைஆண் பன்றி.
தின்றுவிட்டுப் போய் விடுகிறது புங்கம் மாவை!
இன்று காவல் வைத்துச் சென்றேன் என் மகனை.
உண்டான் அவன் புங்கம் மாவை வெண்ணையுடன்!
கண்டதும் என் கோபம் எல்லை மீறியது – அவனிடம்
‘பன்றி தின்கிறது என்று உன்னைக் காவல் வைத்தால்
பன்றிக்குப் பதிலாக நீயே தின்கின்றாயா?’ என்றேன்.
கொடுவாளை ஓங்கியபடிப் பாய்ந்த போது – என்னை
நடுங்க வைத்தது இடி போன்று முழங்கிய கர்ஜனை.
‘உண்டார் பரந்தாமன் உங்கள் புங்கம் மாவை,
வெண்ணை கலந்து உங்கள் மகன் உருவினில்!
நேராகச் சென்று கூறு இதை உன் மன்னனிடம்;
வேறு கனவு கண்டிருப்பான் உன் மன்னனும் கூட.’
விளங்கவில்லை என் அறிவுக்கு எதுவுமே மன்னா!
விளம்ப வந்தேன் விவரங்களை உமக்கு!” என்றான்.
“வேடன் கூறுவதற்கும், கண்ட கனவுக்கும், இடையர்
குடம் உடைவதற்கும் தொடர்பு உள்ளது உறுதியாக!”
ஆராய விரும்பினான் திருமலைக்குச் சென்று;
பிரதானி, மந்திரிகளுடன் சென்றான் புற்றுக்கு.
வேடன் ஓடி வந்தான்; சொன்னான் மன்னனிடம்,
“கூட வந்தால் காட்டுவேன் வெள்ளைப் பன்றியை!”
4. ஆலயங்கள்
வேடுவனைப் பின் தொடர்ந்தனர் அனைவரும்;
ஓடத் தொடங்கியது பன்றி இருந்த புதரை விட்டு.
வளைந்து, நெளிந்து, புகுந்தோடி வெள்ளைப் பன்றி
நுழைந்து, மறைந்தது ஒரு புற்றுக்குள் திடீரென்று!
“மன்னா! நாங்கள் சொன்ன புற்றும் இதுவே தான்!” என்று
சொன்னார்கள் இடையர்கள் சோழ மன்னனிடம் அப்போது.
“ஹிரண்யாக்ஷன் பூமியை ஒளித்து வைத்த போது,
தரணியைக் காக்க வந்த வெள்ளைப் பன்றி இதுவே!
புற்றின் அடியில் இருக்க வேண்டும் பகவான் – நாம்
புற்றைத் தோண்டினால் தெரியும் உண்மை!” என்ற
வேடனைக் கடிந்து கொண்டான் சோழ வேந்தன்;
“வேறு வழியில் வெளிப்படுத்துவோம் இறைவனை!”
பால் குடங்கள் வந்து குவிந்தன அங்கே உடனே!
பால் அபிஷேகம் செய்தான் சோழமன்னன் புற்றுக்கு.
கரைந்தது புற்று; கண்டனர் அதன் உள்ளே
இருந்தது ஆதி வராஹரின் அழகிய உருவம்!
பரவசம் அடைந்துக் கை தொழுது நின்றிருந்த
அரசனிடம் கூறினார் ஆதி வராஹப் பெருமான்.
“சுவாமி புஷ்கரிணியின் அருகே பகவான்
ஸ்ரீனிவாசன் உள்ளான் புளிய மரத்தின் கீழ்!
பூலோகம் வந்துள்ளான் பக்தருக்கு அருள;
புற்று மூடி விட்டது முழந்தாள் வரையில்!
ஆலயம் எழுப்பி ஆராதிப்பாய் ஸ்ரீனிவாசனை.
ஆலயம் எழுப்பு எனக்கும் மேற்குக் கரையில்.”
சென்றனர் அனைவரும் சுவாமி புஷ்கரிணி;
கண்டனர் ஸ்ரீனிவாசனைப் புளிய மரத்தடியில்.
புற்றுக் கரைந்து போனது பால் அபிஷேகத்தால்.
பூரணம் ஆனது பகவானின் திவ்விய தரிசனம்!
“திருமலையில் என்றும் இருந்திட வேண்டும்!”
திரும்பத் திரும்ப வேண்டினான் சோழ மன்னன்.
“திருக் கோவில்கள் அமைத்துத் திருப்பணி செய் !
தினமும் மூன்று காலமும் ஆராதனைகள் செய்!”
கண் கவர் ஆலயங்களை விரைந்து எழுப்பினான்.
விண்ணோரும், மண்ணோரும் வந்து தொழுதனர்
15. ஆதிசேஷன்
சேஷன்:
‘சயனிக்கின்றான் என் மேல் பகவான்;
தயங்காமல் தாங்குகிறேன் உலகினை.
பாக்கியசாலி என் போல் யார் உளர்?
பகவானிடம் நெருங்கிப் பழகுவதற்கு!’
கர்வம் தலை தூக்கியது மனத்தில்,
சர்வம் தனக்குத் தாழ்ந்தவை என்று.
வந்தான் வாயுதேவன் தரிசனத்துக்கு;
“இந்த நேரத்தில் இல்லை தரிசனம்.
ஏகாந்தத்தில் உள்ளார் இறைவன்;
போகவிட மாட்டேன் காண்பதற்கு!”
காற்று:
“என்னைத் தடுக்க முடியுமா உன்னால்?
எங்கும் நிறைந்திருக்கும் காற்று நான்!”
சேஷன்:
“விரிகிறேன் பாயாக இறைவனுக்கு;
விரிகிறேன் குடையாக இறைவனுக்கு!
ஈடு எவர் பக்தி செய்வதில் எனக்கு?
ஈடு எவர் சேவை செய்வதில் எனக்கு?”
காற்று:
“ஆதாரம் அனைத்துக்கும் காற்று!
அதிகம் என் ஞானம், பக்தி, சக்தி.
பணியாள் நீ; சுதந்திரன் நான்;
உணர்ந்து கொள் வேறுபாட்டை!”
சேஷன் வெகுண்டான் இது கேட்டு!
“சோதிப்போம் யார் பலசாலி என்று!”
உரைத்தனர் இருவரும் தமது கட்சியை;
உன்னினார் இறைவன் மமதையை நீக்க.
6. கர்வ பங்கம்
“தொண்டாற்றும் எனக்குச் சக்தி இல்லையாம்!
கொண்டாடுகின்றனர் அனைவருமே என்னை!”
“உனக்கு என்று சக்தி இல்லை அனந்தா – ஆனால்
தனக்கு என்று சக்தி உள்ளவன் வாயு தேவன்.
அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதாரம் வாயு;
அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ளான்.
சக்தி அதிகம் உடையவன் வாயு தேவனே!
சந்தேகம் வேண்டாம் உண்மையும் இதுவே!”
“சோதித்துப் பார்க்கலாம் இந்த உண்மையை;
பாதிக்காது நம்மை பலப் பரீட்சை!” என்றான்.
“மேருவை நான் கட்டிக் கொள்கிறேன் – வாயு
வேருடன் பெயர்க்கட்டும் முடிந்தால் அதனை.”
அழுத்திக் கட்டிக் கொண்டான மேரு மலையை,
ஆதிசேஷன் தன் பலத்தை ஒன்றாகத் திரட்டி.
வாயு தேவன் முயன்றான் நகர்த்துவதற்கு;
வாயு தேவனின் முயற்சி வெற்றி பெற்றது.
வேருடன் பெயர்க்கப் பட்டது மேரு மலை!
வேறு இடத்தில் பறந்து சென்று விழுந்தது!
விழுந்த இடம் சுவர்ணமுகி தீர்த்தம் – அங்கு
விழுந்த சேஷன் மலையாகக் கிடக்கின்றான்!
சேஷகிரி ஆகிவிட்டது அந்த மலை – அதன் பின்
சேஷனின் கர்வம் சென்ற இடம் தெரியவில்லை.
நீராடினான் கோனேரித் தீர்த்தத்தில் ஆதிசேஷன்,
நாக தீர்த்தத்தை அடைந்தான் பிறகு சென்று.
தவம் செய்தான் தீவிரமாக நாராயணன் மீது;
தவம் பலித்து நாராயணன் தரிசனம் தந்தான்.
“மன்னித்து எழுந்தருள வேண்டும் என் மீது;
மக்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும்;”
கோனேரியில் எழுந்தருளினான் ஸ்ரீநிவாசன்;
கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இன்றும்!
17. சரஸ்வதியின் தவம்
“புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும்
புனிதமானவள் ஆக வேண்டும் நான்”
நதி வடிவாகி தியானித்தாள் சரஸ்வதி;
விதி விளையாடியது அவள் தவத்தில்.
புலஸ்தியர் வந்தார் சரஸ்வதி தேவியிடம்;
புலஸ்தியர் தன்னுடைய மகன் என்பதால்
உபசரிக்கவில்லை சரஸ்வதி சரியாக,
அபசாரமாகக் கருதிவிட்டார் முனிவர்.
“எல்லாத் தீர்த்தங்களிலும் சிறந்ததாகும்
பொல்லாத கனவு இல்லாது போகட்டும்.
அறிந்தவர்கள் அனைவரும் கூறுவர்,
திரிபதகைத் தீர்த்தமே சிறந்தது என!”
தடையானான் மகனே தவத்துக்கு;
உடைந்து போனாள் சரஸ்வதி தேவி.
“பரந்தாமனுக்கு எதிரியாக அசுரனாகப்
பிறவி எடுப்பாய் நீ!” என்று சபித்தாள்.
“சாப விமோசனம் எப்போது?” என்று
சாந்தம் அடைந்த புலஸ்தியர் கேட்டார்.
“ராமனாக அவதரிப்பார் நாரணன் – நீ
ராவணன் தம்பி விபீஷணன் ஆவாய்!
இறைவனின் நட்புக் கிடைக்கும் – அதனால்
சிரஞ்சீவியாக இருப்பாய் உலகில் என்றும்!”
கருடாரூடராக வந்தார் நாராயணன்;
“சிறந்த தீர்த்தமாக அனுகிரஹியுங்கள்!”
“புலஸ்தியர் சாபத்தால் கிடைக்காது அது!
புஷ்கரிணியாக வேங்கடத்தில் இருந்து வா!
லக்ஷ்மியும் நானும் வாசம் செய்வோம் – ஒரு
லக்ஷியத்துடன் உன் தீர்த்தக் கரையினில்!
நீராடுவர் பக்தர்கள் தனுர் மாதத்தில்,
சூரியோதயத்தில், சுக்கில துவாதசியில்.
பாவங்கள் தீர்க்கும் புஷ்கரிணியாகிப்
பாரினில் நீ விரும்பும் புகழ் பெறுவாய்!”
வேங்கடத்தில் ஸ்வாமி புஷ்கரிணியாகி
வேண்டிய மகிமைகள் பெற்றாள் சரஸ்வதி.
18. தேக காந்தி
வாயுதேவன் விரும்பினான் மனதார
வாசுதேவன் போன்ற தேக காந்தியை.
ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.
காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.
“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”
வாயுதேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசுதேவனை ஆராதனை செய்தான்;
வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.
தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேக காந்தியை.
வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!
பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,
வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.
19. அகஸ்தியர்
அரியதொரு தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைப் பொதிகையில் காண.
பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”
வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.
“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!
மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
மலையின் மகிமை கூறி வலம் வருவாய்!
தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”
ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;
வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.
சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!
20. சங்கன்
சூரிய வம்சத்தின் ஓரரசன் சங்கன்,
கோரினான் இறைவன் தரிசனத்தை.
கேட்டான் வசிஷ்ட முனிவரிடம் சென்று,
“நாட்டம் கொண்டேன் இறை தரிசனத்தில்!
தேட்டம் இல்லை தவம் செய்யும் இடம்;
வாட்டம் அடையாது தரிசிக்க உதவுவீர்.”
“சுவர்ணமுகி தீரத்தில் அமைந்துள்ளது
சேஷாச்சலம் என்னும் வேங்கடமலை.
முனிவர்கள் செய்தனர் அங்கே தவம்
புனிதன் நாராயணனின் தரிசனம் பெற.
பரம சிவன் உள்ளான் அடிவாரத்தில்;
பரந்தாமன் உள்ளான் மலையுச்சியில்.
விண்ணோர், மண்ணோர் தொழுவர்
கண்ணனை ஸ்ரீனிவாசனாக அங்கே.
பர்ணசாலை அமைத்துத் துதித்தான்,
சுவர்ண முகி தீரத்தில் வாயு தேவன்.
வந்தார் வயோதிகர் ஒருவர் அங்கு.
வாயுவின் தவத்தை மெச்சினார் .
வந்தவர் இறைவனோ என ஐயுற்றுத்
தங்க வைத்தான் சதுர்மாச விரதத்தில்.
திருவுருவைக் காட்டினார் வாயுவுக்கு,
விரதத்தைப் பூர்த்தி செய்ய உதவினர்.
கற்பத்தின் முடிவில் குழுமுவர் முனிவர்
சக்கர தீர்த்தத்தில்!” என்றார் சுக முனிவர்.
“மலையை வலம் வந்து ஞானயோகம் செய்.
அலைமகளுடன் தரிசிக்கலாம் நாரணனை!”
சங்கன் செய்தான் அவர் கூறியவாறு;
சங்கன் முன் தோன்றினான் நாரணன்.
“சந்திரன் சூரியன் உள்ள வரையில்
சன்னதி கொள்வீர் திருமலையில்!”
“சகலரும் வணங்கி அர்ச்சிக்கும்படி
சமைப்பாய் என் உருவத்தை இங்கு!”
ஆராதித்தான் திருவுருவை அமைத்து;
மாறாத பரமபதம் அடைந்தான் பிறகு.
21. பசு நெய் விளக்கு
அந்தணன் ஒருவன் விஷ்ணு சர்மன்,
சொந்த குல ஆசாரத்தை மறந்தான்.
இன்பம் தூய்த்தான் பல பெண்களுடன் கூடி;
இன்பம் தூய்த்தான் குரு பத்தினியைக் கூடி!
பாவம் பற்றியது முதுமையுடன் கூடி;
நோய் வாய்ப்பட்டான் மனது மிக வாடி.
வெறுத்தனர் அவனை உற்றார், உறவினர்;
துரத்தினர் வீட்டை விட்டு, ஊரை விட்டு!
ஓடிச் சென்றான் காட்டுப் பிரதேசத்துக்கு;
வாடி விழுந்து விட்டான் நாடிகள் தளர்ந்து.
கடித்துத் தின்றன நாய்களும், நரிகளும்;
துடி துடித்து இறந்தான் விஷ்ணு சர்மன்.
“குரு பத்தினியைக் கூடியவன் இவன்;
குருத் துரோகம் செய்தவன் இவன்!”
கூசியது இதைக் கேட்ட யமதர்மன் உடல்;
ஏசியபடி அனுப்பி விட்டான் நரகத்துக்கு.
வேத நாமன் விஷ்ணு சர்மனின் மகன்;
‘ வேத குலத்தில் பிறந்தார் என் தந்தை.
பேதம் பாராமல் செய்தார் பாவங்கள்;
வேதனையோடு துறந்தார் உடலை.
நற்கதி கிடைக்காது; நரகமே கதி !’
நன்கு அறிந்திருந்தான் வேத நாமன்.
“பாவம் தீர்த்து நற்கதி தர வேண்டும்;’
தேவனைப் பிரார்த்தித்து ஏற்றினான்
பசு நெய் விளக்குகளை ஸ்ரீநிவாசனுக்கு;
நசித்தது விஷ்ணு சர்மன் செய்த பாவம்!
முற்றிலும் பாவங்கள் நீஙகிய பின்னர்,
நற்கதி அடைந்து சென்றான் வைகுந்தம்.
22. அவிர் பாகம்
வையகத்தில் நடந்தான் லக்ஷ்மியுடன்,
வைகுந்தவாசன் இயற்கையை ரசித்தபடி.
சேஷாச்சலத்தின் மலைச் சரிவுகளில் யாகம்
செய்து கொண்டிருந்தனர் முனி புங்கவர்கள்.
திருமலையில் செய்யும் யாகமும், தவமும்,
ஒரு குறைவும் இன்றி நிறைவேறும் அல்லவா?
அரசன் என எண்ணிய முனிவர் இறைவனை,
வரவேற்று அளித்தனர் பாலும், பழங்களும்.
பீதாம்பரம், இரத்தின ஹாரம் அணிந்தவன்
சாதாரண மனிதனாக இருக்க முடியாதே!
“எந்த நாட்டு அரசர்? தங்கள் பெயர் என்ன?
இங்கு வந்த காரணம் கூறுங்கள்!” என்றனர்.
“அரசனும் அல்ல, நான் அந்தணனும் அல்ல;
ஆசாரம், ஜாதி, குலம், கோத்திரம் இல்லை!
தந்தையும் இல்லை, தாயும் இல்லை எனக்கு!
எந்த தேசமும் என் தேசமே! எப்போதுமே!
எங்கும் இருப்பவன், எல்லாம் என் ரூபம்;
எத்தனை பெயர்கள், அத்தனை குணங்கள்!”
‘மனநிலை சரியாக இல்லையோ இவருக்கு?’
முனிவர்கள் தொடர்ந்தனர் தம் ஹோமத்தை.
மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்கையில்,
வந்தன இரு கரங்கள் அவிர் பாகம் பெற்றிட.
அக்கினியின் நடுவில் கரங்களை நீட்டி – அச்
சக்கரவர்த்தி பெற்றார் முனிவரின் ஹவிசை!
சங்குச் சக்கரதாரியாகக் காட்சி அளித்தார்;
அங்கு வந்திருந்தவர் ஸ்ரீனிவாசன் அல்லவா?
23. குமார தாரிகை
அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.
வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!
கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!
துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?
தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!
முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!
“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!
வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”
மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”
“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!
சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.
“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”
நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!
நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!
காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.
“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.
முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!
24. சங்கனன்
சங்கனன் ஆண்டு வந்தான் காம்போஜ நாட்டில்
சங்காச்யம் என்னும் நகரைக் கீர்த்தியுடன்.
கர்வம் மிகுந்து விட்டது பராக்கிரமத்தால்;
தர்மம் குறைந்து நலிந்து மெலிந்து விட்டது.
புண்ணியம் குறையலானது சங்கனனுக்கு
கண்ணியம் குறையலானது சங்கனனுக்கு.
விலகி விட்டனனர் பாதுகாத்த வீரர்கள்;
விலை போயினர் மறைந்திருந்த எதிரிக்கு.
வழக்கம் போலப் பழகவில்லை பிரதானிகள்;
குழப்பம் மேலிட்டது; குறைந்தது அவன் மதிப்பு.
அவதிப் பட்டனர் அவன் நாட்டு மக்கள்;
அவன் மேல் விழுந்தது அந்தப் பழியும்!
ஆட்சியைக் கைப் பற்ற முயன்றனர்;
மாட்சிமை இல்லை அவர்களை அடக்க.
உயிருக்கு ஆபத்து என்ற நிலை உருவாக
எவருக்கும் தெரியாமல் தப்பி ஓடினான்!
பட்டத்து ராணியுடனும் இன்னமும் தன்
கட்டளைக்குப் பணியும் அமைச்சருடன்.
சேது கரையைச் சென்று அடைந்தனர்.
வேதனை தீரும் ராமேஸ்வரம் சென்றால்.
கடல் நீராடினான் சேதுவில் சங்கனன்
உடன் சென்று தரிசித்தான் இராமநாதரை.
அடைந்தான் சுவர்ணமுகி தீர்த்தத்தை!
விழைந்தான் வேங்கடத்தில் தவம் புரிய!
வட பகுதியைத் தேர்ந்தெடுத்தான் சங்கனன்;
“விட நேர்ந்த்தது நற்பணிகளைச் செருக்கால்.
அரியணையும் துறந்து அஞ்சி வாழ்கிறேன்!
சரியாகுமா மீண்டும் முன்போல இந்த நிலை?
நாட்டை அடைந்து ஆட்சி செய்வேனோ?
காட்டிலேயே காலத்தைக் கழிப்பேனோ?”
25. சங்கனன்
அன்றிரவு தூங்கும் போது குரல் கேட்டது,
நின்று தேடியும் காணவில்லை எவரையும்!
விண்ணில் இருந்து ஒலித்தது அந்தக் குரல்,
எண்ணங்களை அறிந்தது போலப் பேசியது!
“வடக்கே உள்ளது வேங்கடம் எனும் திருமலை;
தடாகம் உள்ளது சுவாமி பூஷ்கரிணி என்பது.
தடாகக் கரையில் உள்ளது எறும்புப் புற்று;
தடாகத்தில் நீராடி விடாமல் துதித்து வா!”
வேங்கட மலையில் தடாகத்தை அடைந்தனர்;
தங்குவதற்குக் குடில் அமைத்தனர் புற்றருகே.
மூன்று வேளை நீராடினான் பூஷ்கரிணியில்-மனம்
ஊன்றித் தொழுதான் பகவானை நாள் முழுவதும்.
சுவாமி மனம் கனிவதற்கு ஆறு மாதமானது!
சுவாமி பூஷ்கரிணியில் தோன்றியது ஓர் ஒளி!
ரத்தின மயமான விமானத்தில் இருந்தனர்
யத்தனம் பலித்திட நாரணனும் தேவியரும்.
குழுமினர் தேவர்கள், துதித்தனர் முனிவர்;
ஆடினர் தேவ மகளிர்; பாடினர் கந்தருவர்.
புல்லரித்தது சங்கனனின் உடல் மகிழ்வால்,
சொல்லைக் கேட்டதும் துள்ளியது மனம்!
“உன் நாடு திரும்பும் நேரம் வந்தது!
உன் ஆட்சி திரும்பும் நேரம் வந்தது!”
சங்காச்யத்தில் சங்கடமான குழப்பம்;
சங்கனன் ஆட்சியே மேல் என்றானது!
தங்களுக்கே அரசபதவி வேண்டும் என்று
தானைத் தலைவர்கள் போட்டி இட்டனர்.
வேங்கட நாதன் அருள் பெற்ற மன்னன்
சங்கனன் திரும்பி வருவதை அறிந்தனர்.
குடிமக்கள் போர்க் கொடி தூக்கினர்;
பிடிவாதமாக அதிகாரிகளைச் சாடினர்!
சிற்றரசர்கள் ஆதரித்தனர் அரசனையே;
முற்றிலும் தோற்று விட்டனர் அதிகாரிகள்.
நாட்டை விட்டு ஓடிவிட்டனர் காட்டுக்கு;
நாட்டை மீட்டு ஆட்சி செய்தான் சங்கனன்.
வேங்கட நாதனின் பேரருளே அவனுக்குச்
சங்கடம் தீர்த்தது; ராஜ்ஜியம் அளித்தது.
26. ஆத்மா ராமன் (1)
விந்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த
அந்தணரின் மகன் ஆத்மா ராமன்.
தெய்வ பக்தி மிகுந்தவன் – எனவே
தெய்வ அருள் பெற்று இருந்தான.
வேத, வேதாந்தங்களைக் கற்றவன்;
பேதமின்றி மதித்தனர் அனைவரும்.
மறைந்து போனார் அவன் தந்தை – ஆனான்!
பெரும் செல்வத்துக்கு புது அதிபதியாக!
பணம் வந்ததும் முழுதும் மாறி விட்டான்;
குணத்தை முற்றிலும் இழந்து விட்டான்.
குல ஆசாரங்களைத் துறந்து விட்டான்;
குல தெய்வத்தையும் மறந்து விட்டான்.
தலைக்கு ஏறியது செல்வச் செருக்கு;
விலைக்கு வாங்கினான் இன்பத்தை.
“குந்தி தின்றால் குன்றும் மாளும்” அல்லவா?
குறைந்தும், மறைந்தும் போனது செல்வம்!
பணம் போனவுடன் போயிற்று கௌரவம்!
குணம் என்றோ போய்விட்டது அல்லவா?
ஒதுக்கி வைத்தனர் வறுமை வந்தவுடன்;
மதிக்கவில்லை குலத்தைச் சேர்ந்தவர்கள்.
“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு!”
பலவித பரிஹாசங்களைக் கேட்டு நொந்தான்.
நட்பு என்று சொல்ல யாரும் இல்லை!
நாணம் வந்தது உறவினரைக் காண.
ஊரை விட்டே வெளியேறி விட்டான்;
ஊர் ஊராக அலைந்து திரிந்தான் அவன்.
கால்போன திசையில் நடந்து சென்றவன்
கலியுக வரதனின் திருமலை அடைந்தான்.
27. ஆத்மா ராமன் (2)
பாவங்கள் தீரும் தாபங்கள் மாறும் என,
பகவானை ஆராதித்தான் திருமலையில்.
கபில தீர்த்தத்தில் நீராடினான் முதலில்,
கபிலேஸ்வரரைத் தரிசித்தான் கண்குளிர.
தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடினான்;
தீர்ந்தன அவன் பாவச்சுமைகள் அவற்றில்.
சுவாமி புஷ்கரிணியை நோக்கிச் சென்றான்.
சுவாமி தரிசனம் செய்தது போல மகிழ்ந்தான்.
கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒரு குஹையில்
தேடினாலும் கிடைக்காத சனத்குமாரர் இருந்தார்.
வலம் வந்து நமஸ்கரித்தான் அவரை – தன்
வளம் குன்றிவிட்ட பின்புலத்தைக் கூறினான்.
“முற்பிறவியில் நான் செய்த பாவம் என்ன?
முக்காலமும் அறிந்த நீர் சொல்லுங்கள்!” என,
“தான தர்மங்களை இகழ்ந்து பேசினாய்;
தானம் பெறுபவர், தருபவர் இருவரையும்.
நல்ல செயல்களைத் தடுத்தாய் – போனாய்
பொல்லாத வழிகளில் நன்னெறி தவறி!
தந்தையின் புண்ணியம் காத்தது உன்னை!
தந்தை சென்ற பின்னர் பற்றின பாவங்கள்.”
“வியாதியஸ்தனுக்கு வைத்தியன் போலவும்,
வறியவனுக்குக் கிடைத்த புதையல் போலவும்,
காயும் பயிருக்குப் பெய்யும் மழை போலவும்,
தீயோன் எனக்குக் கிடைத்துள்ளீர்கள் நீங்கள்.
இன்னல்கள் தீர வழி கூறுங்கள் சுவாமி!
இனியும் என்னால் தாள முடியாது சுவாமி!”
28. ஆத்மா ராமன் (3)
“ஒரு வழி இருக்கிறது இன்னல் தீர்ந்திட,
திருமகள் கருணையைப் பெறுவது அது!
திருமால் மார்பில் உறைபவள் அவள்,
திருவென்னும் செல்வத்துக்கு அதிபதி!
பூரணச் சந்திரன் போன்ற முகத்தினள்;
கருணையே வடிவாகிக் காக்க வந்தவள்,
வியூக லக்ஷ்மியாக இருந்து தருவாள்,
விஜயம், புகழ், செல்வம் இவை நமக்கு.
முற்பிறப்பில் செய்த பாவங்கள் தீர்ந்திட
பொற் பதங்களைச் சிக்கெனப் பற்றுவாய்!
தாமரை மலரில் அமர்ந்து கொண்டு அவள்
தங்குகிறாள் வேங்கட நாதனின் மார்பில்.”
லக்ஷ்மியின் திருமந்திரத்தை உபதேசித்தார்.
லக்ஷியத்துடன் அவனை ஜபிக்கச் சொன்னார்.
பய பக்தியுடன் பெற்றான் உபதேசம்-அதை
சுய புத்தி மாறாமல் நடந்தான் உச்சரித்து.
சுவாமி புஷ்கரிணியை அடைவதற்குள்
சுலபமாகி விட்டது அந்த மந்திர ஜபம்.
அனைத்துத் தீர்த்தங்களிலும் மேலான
அந்தத் தீர்த்தத்திலும் நீராடினான் அவன்.
அரிய காட்சி தெரிந்தது அருகே வனத்தில்.
அழகிய விமானத்துடன் ஆலயம் ஒன்று.
மண்டபத்தில் குழுமி இருந்தனர் தேவர்;
கண்டான் ஆலயத்தில் அற்புத தரிசனம்.
சங்கு, சக்கரம், கிரீட, குண்டலங்களுடன்
வேங்கடேசன் இருந்தார் தேவியர்களோடு.
கண் கொள்ளாக் காட்சியில் மெய் சிலிர்த்து
தெண்டனிட்டவன் இருந்தான் தடாகம் அருகே!
குறைவற்ற செல்வம் தேடி வந்தது அவனை!
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் நெடுநாள்.
29. சக்கர ராஜன்
துஷ்டர்கள் சாது ஜனங்களுக்கு நானாவிதக்
கஷ்டங்கள் தந்தனர் முன்பொரு சமயம்.
அசுரர்கள் தபஸ்விக்களின் கர்மங்களைப்
பிசுபிசுக்கச் செய்து துன்புறுத்தி வந்தனர்.
முனிவர்கள் குழுமினர் சேஷாச்சலத்தில்;
கனிவுடன் காட்சி தந்தார் ஸ்ரீனிவாசன்.
துயரப் பட்டியலைக கேட்ட ஸ்ரீனிவாசன்,
அயரவில்லை அதனைக் கேட்டுச் சற்றும்!
“நிர்பயமாகத் தொடருங்கள் பணிகளை;
அபயம் அளிப்பான் இனிச் சக்கர ராஜன்!”
அனல் விழிகளுடன் அவன் வீசிய சக்கரம்
அழகிய ராஜகுமாரனாக உருவெடுத்தது.
“எட்டுத் திசைகளிலும் சென்று வேரறுப்பாய்
துஷ்டர்களைக் கூண்டோடு!” உத்தரவிட்டார்.
பெற்றான் சக்கர வேந்தன் என்ற பெயரை;
பெற்றான் அழகிய ரதத்தை மானசீகமாக.
பெற்றான் வலிய கரங்கள் ஓராயிரம்!
பெற்றான் அரிய ஆயுதங்கள் ஓராயிரம்!
கிழக்குப் பக்கம் சென்றான் அவன் முதலில்;
அழித்தான் துஷ்டரைக் கேசிமலைக் காட்டில்.
தென் கிழக்குப் பக்கம் சென்றான் அடுத்து;
தேடி துவம்சம் செய்தான் துஷ்டர்களை!
தெற்கு நோக்கிச் சென்றான் சக்ரராஜன்;
துடிப்புடன் எதிர்த்து வந்தனர் அவனை
உக்கிராங்கன், அங்கன், புளிந்தன், காலகன்
முக்தாயிகன் என்ற ஐந்து அரக்கர்கள்.
சதுரங்க சேனையுடன் வந்தவர் கண்டனர்
எதிரில் வருபவன் தன்னந்தனியன் என்பதை!
நகைத்தனர் சக்கர ராஜனைக் கண்டு!
பகைவர் வந்து சூழ்ந்தனர் ஒன்று சேர்ந்து!
30. அயி சிரசன்
ஐந்து அசுரர்கள் சூழ்ந்தனர் படையுடன்
அஞ்சா நெஞ்சன் சக்கர வேந்தனை!
ஆயிரம் கரங்களால் எய்தான் பாணங்களை;
ஆயிரம் பாணங்களை விலக்கினான் போரில்.
சக்கரம் போலவே சுற்றிச் சுழன்றான்;
சக்கராஜன் போரிட்டான் அசுரருடன்!
போரினைத் தொடர்ந்தனர் வெகுநேரம்;
சூரியனை மறைத்தது பரவிய புழுதி.
கரங்களால் பொழிந்த சர மழையால்
சிரங்களை அறுத்தான் சக்கர ராஜன்!
அயசிரசன் ஆவான் ஐவரின் தலைவன்;
ஐயுற்றான் ஐவரின் அழிவைக் கேட்டு.
“அழிப்பேன் சக்கரனை!” சபதம் இட்டவன்
அழிவது கண்டான் தன் எஞ்சிய படையும்!
வளைத்துக் கொள்ள ஆணையிட்டான்;
அழிக்கும் அஸ்திரத்தையும் விடுத்தான்.
ஆக்னேய அஸ்திரம் விடுத்தான் சக்கர ராஜன்
அக்னிக்கு முன்னால் நிற்க முடியுமா எதுவும்?
அக்னி அஸ்திரம் அழித்தது பாணத்தை;
அக்னி அஸ்திரம் அழித்து அயசிரசனை!
“யமனிடம் அனுப்புவேன் அவனை!” என்று
போர்க்களம் சூளுரைத்து வந்த அயசிரசன்,
யமனிடம் சென்று விட்டான் தான் அவனே
போர்க்களம் வந்து நாழிகைப் பொழுதில்!
தெற்கு திசையில் அழித்தான் துஷ்டர்களை;
தென் மேற்கிலும் அழித்தான் துஷ்டர்களை;
மேற்கு திசை நோக்கிச் சென்றான்,
மேற்கொண்டு அசுரரை அழிப்பதற்கு!
31. வனகர்த்தன்
மேற்கில் வசித்தான் அசுரன் வனகர்த்தன்,
மேற்கொண்டான் தவம் சிவனைக் குறித்து.
“பிறக்க வேண்டும் புஜபலம் மிகுந்த ஒரு மகன்;
சிறக்க வேண்டும் மூவுலகங்களையும் வென்று!”
காலம் கடந்தது; காட்சி தரவில்லை சிவபிரான்,
ஞாலம் வெல்லும் மகனை விரும்பிய அசுரனுக்கு.
தலையை அறுத்து அக்கினியில் இடும் போது,
பலியைத் தடுத்துத் தரிசனம் தந்தான் சிவன்.
“மனிதரும் தேவரும் வெல்ல முடியாத – வீர
மகன் பிறக்க அருள் புரிவீர்!” என்றான் இவன்.
பெருமிதம் கொண்டான் மகன் பிறந்ததும்;
செருக்கு மிகுந்துவிடத் துன்புறுத்தலானான்.
சாதுகளைத் தாக்கினான் ஈவு இரக்கமின்றி.
பேதமின்றிச் சேதப்படுத்தினான் முனிவரை.
சக்கர ராஜனை எதிர்க்க அனுப்பினான் – ஒரு
சதுரங்க சேனையைத் திரட்டி வனகர்த்தன்.
நெருப்பில் வீழ்ந்த விட்டில்கள் ஆயினர்.
நெருங்க முடியவில்லை சக்கர ராஜனை.
படை அழிந்து விட்டது என்று கேட்டதும்
மடை திறந்து கோபம் பெருக்கெடுத்தது.
ஜ்வால பாதனை அனுப்பினான் போருக்கு.
ஜெயிக்க முடியாத மகனே ஜ்வால பாதன்!
அரசகுமாரன் என்று எண்ணினான் பகைவனை.
அறியவில்லை அவன் சுதர்சனத்தின் உருவென!
அஸ்திரங்கள் பாய்ந்தன இரு திசைகளிலும்;
அஸ்திரங்கள் மாய்ந்தன தாக்கிக் கொண்டபின்.
சக்கர ராஜனின் அஸ்திரம் விரைந்து சென்றது;
மிக்க பலத்துடன் ஜ்வால பாதனை நெருங்கியது.
மாயையால் மறைந்துவிட முயன்ற அசுரனை
மாய்த்தது பாய்ந்து தாக்கிய சக்கரனின் பாணம்!
திரட்டி வந்தான் போரில் சிதறி ஓடிய வீரர்களை.
மரித்தான் தொடர்ந்து நடந்த போரில் வனகர்த்தன்.
32. பேரண்டவன்
வடதிசையில் வாழ்ந்தான் அரக்கன் பேரண்டவன்;
வெடவெடக்கும் அண்ட சராசரம் பேர் கேட்டவுடன்!
பிரம்மாண்டமான சேனை வெள்ளத்துடன் வந்ததும்,
பெருமானை தியானித்தான் சக்கர ராஜன் ஒரு கணம்.
அசுர சேனைக்கு இணையான அரிய சேனை ஒன்று
அதே கணத்தில் தோன்றியது ஆயுதங்களுடன் அங்கு.
கொடிய யுத்தம் தொடங்கி நடந்தது உடனே – போரில்
மடிந்தனர் எண்ணற்ற வீரர்கள் இரு சேனைகளிலும்.
வெற்றியும், தோல்வியும் இன்றி நீண்ட போரில்
வெறி கொண்ட அசுரர்களின் கை ஓங்கலானது.
சக்கர ராஜனின் படை வீரர்கள் பின் வங்கலாயினர்;
மிக்க சினம் கொண்டு அவன் செய்தான் ஹூங்காரம்.
சினத்தில் தோன்றினான் தேவ புருஷன் பாவகன்!
“சின்னா பின்னம் செய்வாய் அசுரர்களை!” என
பாவகன் தலைமையில் பொருதனர் மீண்டும்;
பாய்ந்து முன்னேறிய சக்கர ராஜனின் வீரர்கள்.
பாவகன் மீது பாய்ந்தனர் அசுரர்கள் இப்போது!
பாவகன் எய்தான் மயக்கும் மோகன அஸ்திரம்!
மறந்தனர் தம்மையே; துறந்தனர் போரையே;
எறிந்தனர் ஆயுதங்களை; மறிந்தனர் நிலத்தில்!
பேரண்டவன் எய்தான் ஹாஹாகாரம் செய்தபடி
மோகன அஸ்திரத்தை வெல்லும் ஞான அஸ்திரம்.
தூக்கத்தில் இருந்து எழுபவர்போல மீண்டும்
எழுந்து தாக்கினர் ஆயுதங்களால் அசுரர்கள்.
எய்தான் பாவகன் தன் கிரௌஞ்ச வாளியை!
எய்தான் பேரண்டவன் பைசாச அஸ்திரத்தை!
இரண்டும் தாக்கின அசுரர்கள் படையினையே!
பேரண்டவன் எய்தான் பிரமன் தந்த சூலாயுதம்!
வாயு அஸ்திரத்தை எடுத்து விடுத்தான் பாவகன்;
வாயு அஸ்திரம் வாயுவென விரைந்து சென்றது.
வாரிச் சுருட்டிப் பாய்போல எறிந்தது அசுரனை!
நேரில் பார்த்தவர் வீழ்ந்தனர் வியப்புக் கடலில்!
மண்டை உடைந்து மடிந்தான் அசுரன் பேரண்டவன்;
சண்டை முடிந்து திரும்பி விட்டான் சக்கர ராஜன்.
இனிதாக ஆணைகளை நிறைவேற்றிய பின்னர்
இணைந்தான் ஸ்ரீனிவாசனின் சக்கரத்தில் மீண்டும்.
வேறு புராணங்களில் காணப்பட்ட சில கதைகளின் தொகுதி முற்றியது.
பொங்குக மங்களம்!!! தங்குக எங்கும்!!!
————————–
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –