Archive for the ‘Prabandha Amudhu’ Category

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் உகந்த ஸ்ரீ அருளிச் செயல் பாசுரங்கள் —

September 2, 2022

அலங்காராசனத்தில் செவிக்கு இன்பம் தரும் இனிய ஸ்தோத்ரங்களால் எம்பெருமானை
இன்புறச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் சொல்லும்

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடி யாடி விழாச் செய்து திருந்து நான்மறையூர்
இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்–ஸ்ரீ பெரியாழ்வார் -4-4-7-
திருந்து நான்மறை என்றது ஸ்ரீ நம்மாழ்வாருடைய நாலு வேத சாரமான நான்கு திவ்ய பிரபந்தகளை –

அமரர்கள் தம் தலைவனை அந்தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியைப் பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை –ஸ்ரீ குலசேகர பெருமாள் -1-4-

செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ஸ்ரீ பெரிய திருமொழி -2-8-2–
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்க்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை -2-10-4-
செம்மொழி வாய் நாள் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலை -6-6-10-
செம் தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர் திசை முகனை யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின்
புகையார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே -7-8-7-
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர் -7-9-3-
கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் –ஆறங்கம் வல்லவர் தோளும் தேவ தேவ பிரான் கோட்டியூரானே-9-10-9-

————-

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

——-

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –நாச்சியார் திரு மொழி–2-9-

உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ -நம்மோடு அணைகை பொல்லாததோ -எத்தனையேனும் யோகிகளும்
நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது -உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –
எங்களுக்கும் அழகிது -ஆனாலும் இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் – அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும் வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று
நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ச்லேஷத்தில் உண்டான இசைவை மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –

———–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் –
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

———-

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-

நல் சங்கே –
இரு கரையர்களாய் இருப்பார் உனக்கு ஒப்பாவார்களோ
குற்றத்தையும் குணத்தையும் கணக்கிட்டு செய்யுமவர்கள் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே
கர்ம அநு குணமாக ஸ்ருஷ்டிக்குமவன் இறே அவன் –

நஞ்சீயர் சந்நியசித்து அருளின காலத்திலேயே
அனந்தாழ்வான் கண்டு முன்புத்தை ஐஸ்வர்யம் அறியுமவன் ஆகையாலே
ஒரு பூவைச் சூடி வெற்றிலையும் தின்று சந்தனத்தைப் பூசி போரா நிற்கச் செய்தே
எம்பெருமானே ரஷகன் என்று இருந்தால் பரம பதத்தில் நின்றும் இழியத் தள்ளுவர்களோ –
இங்கனே செய்யத் தகாது -என்று போர வெறுத்தவாறே

கூட நின்றவர்களும் –
இங்கனே செய்வதே -என்று வெறுத்தார்களாய்-இவர் தாம் செய்வது என் -என்று விட்டு
திருமந்த்ரத்தில் பிறந்து -என்று முக்கால் சொல்லி –
மூன்று பதங்களின் பொருளையும் அறியும்படி -மூன்று முறை சொல்லி-
திரு மந்த்ரத்திலே பிறந்து –
த்வயத்திலே வளர்ந்து –
த்வயைக நிஷ்டனாம் படியாய் தலைக் கட்டுவது உன் கார்யம் -என்று பிரசாதித்தான்

திரு மந்த்ரத்திலே சொல்லுகிறபடியே ஸ்வரூப ஜ்ஞானம் உண்டாய்
த்வயத்திலே சொல்லுகிறபடியே உபாய பரிக்ரஹம் உண்டாக வேணும் -என்று பிரசாதித்தான்

கிருஹஸ்தாஸ்ரமம் விட்டு சன்யாஸ்ரமம் கொள்வது புதிய பிறப்பு அல்ல
திரு மந்திர ஞானம் வந்து
ஸ்ரீ வைஷ்ணவனாய் பிறக்கும் பிறப்பே புதிய பிறப்பாகும் என்றபடி –

———

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

ஏறு திருவுடையான் –
நாள் செல்ல நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை உடையவன்
நிரபேஷனாகையாலே இவன் இடுகிற த்ரவ்யத்தில் தாரதம்யம் பாரானாய்த்து

இன்று வந்து இவை கொள்ளும் கொலோ –
இது ஒரு வாங மாத்ரமாய்ப் போகாமே –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி ஸ்வீ கரிக்க வல்லனேயோ-
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் சாயம் சமயத்திலே நின்று நான் ராமன் இவள் மைதிலி இவன் லஷ்மணன் என்று
நின்றால் போலே இவைற்றை ஸ்வீகரிக்க வல்லனேயோ

ஏறு திருவுடையான் –
ஆரூட ஸ்ரீ –
இத்தையே ஸ்ரீ கூரத் தாழ்வான் ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவத்தில் அருளிச் செய்தார்

வங்கி புரத்து நம்பி ஸ்ரீ பாதத்திலே யாய்த்து சிறியாத்தான் ஆஸ்ரயித்தது-
போசள ராஜ்யத்தில் நின்றும் வந்த நாளிலே
ராஜ கேசரியிலே ஆச்சான் நடந்து இருந்தானாய் காண வேணும் என்று அங்கே சென்று கண்டு இருக்கும் அளவிலே
நம்பி எனக்கு இங்கனே பணிக்கக் கேட்டேன்
பாஹ்ய சமயங்களில் உள்ளாரும் ஒரு வஸ்துவைக் கொண்டு
அது தனக்கு ஜ்ஞானாதிக்யத்தையும் உண்டாக்கி கொள்ளா நின்றார்கள்
அவர்களில் காட்டிலும் வைதிக சமயமான நமக்கு ஏற்றம் –
ஸ்ரீ யபதி ஆஸ்ரயணீயன் என்று பற்றுகிற இது காண்-என்று பணித்தானாம் –

நம்பியின் தந்தையும் குமாரரும் ஆச்சி எனப் பெயர் பெற்றவர் -பெரிய திருமுடி அடைவு

ஆகையால் இறே நாம் இரண்டு இடத்திலும்
அவள் முன்னாக த்வயத்தை அனுசந்திக்கிறது
ஜகத் காரண்த்வாதிகளைக் கொள்ளப் புக்கால் ஒரூருக்கு ஒருத்தன் ஸ்ரஷ்டாவாக இருக்கும் –
காரணம் து த்யேய-
ஸ்ரீ யப்பதித்வம் தான் ஆஸ்ரயாந்தரத்தில் கிடப்பது ஓன்று அன்றே –
திருவில்லா தேவரை தேறல் மின் தேவு —

————-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு போது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று

———

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

1-இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்
பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —
கைவல்ய கோஷ்டியில் –
மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-
பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

2-கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார் அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே
என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே
சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

3-அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே –
அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம் என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே-
அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –

———–

கண்ணால் கண்ட பதார்த்தங்களை எல்லாம் பாதகமாக்கி -பின்னையும் விடாதே –
மேகங்கள் நின்று வர்ஷிக்கப் புக்கதாய்க் கொள்ளீர் –
திருமலை நம்பி இவ்விரண்டு பாட்டையும் ஆதரித்து போருவராய் –
அவ்வழியாலே-நம்முடையவர்கள் எல்லாரும் ஆதரித்துப் போருவார்கள்
இப்பாட்டையும் மேலில் பாட்டையும் அனுசந்தித்து –
கண்ணும் கண்ணீருமாய் ஒரு வார்த்தையும் சொல்லாதே வித்தராய் இருப்பாராம்

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

—————–

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதார்த்தம் -வேத பிரதிபாத்யன்
ஓலைப் புறத்தில் கேட்டுப் போரும் வஸ்து கண்ணுக்கு இலக்காய் வந்து கிட்டி
இட்டீட்டுக் கொள்ளும் உடம்பைக் கொண்டு
தன்னை புஜிக்குமவர்கள் ஸ்வரூபங்களை விட்டு திரு மேனியை விரும்புமா போலே
தானும் ததீய விஷயத்தில் ஸ்வரூபாதிகளை விட்டு உடம்பை யாய்த்து விரும்புவது
இருவரும் உடம்பை யாய்த்து விரும்புவது

திருமாலை ஆண்டான் -பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று கேட்டுப் போரா நிற்கச் செய்தேயும்
இத்தை விட வேண்டி இருக்கிறது இல்லை
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் என்று ஆதரியா நின்றேன் -என்றாராம் –

மெய்ப்பொருள் – ஆத்மா/ கைப்பொருள்- ஆத்மீயம்

————

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

இலைத்தலைச் சரம் துரந்து-இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–சக்யம் என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து
நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்தக் கொடிகளில் இருந்து
வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்-

இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-

——————

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–ஸ்ரீ திரு மாலை-11

நஞ்சீயர் இப்பாட்டைக் கேட்டவன்று
தம்மிலே அனுசந்திதுப் போகா நிற்க
ஒரு சேவகனும் ஸ்திரீயும் விவாதம் பண்ணின அளவிலே
அவனுக்கு இவள் சொன்ன வார்த்தையை கேட்டு
வித்தரான வார்த்தையை அனுசந்திக்கிறது
அதாகிறது
பிணங்கின அளவிலே உன்னால் என் செய்யலாம்
ஏழைக்கும் பேதைக்கும் அன்றோ -சாமந்தனார் -ராஜா -பத்திரம் காட்டிற்று என்றால் –
பட்டரை ஆஸ்ரயித்த சோழ சிகாமணி பல்லவ ராயர்க்கு
ராம லஷ்மண குப்தாஸா – என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்து
கடல்கரையில் வெளியை நினைத்து இருக்கும் என்றத்தை அனுசந்திப்பது

அத்தைக் கூடக் கேட்ட
நஞ்சீயரும்-
பிள்ளை விழுப்பரையரும்-
நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசருமாக
இதுக்குச் சேர்ந்து இருந்தது என்று
இலை துணை மற்று என்நெஞ்சே – என்கிற பாட்டை அனுசந்தித்தார்கள்
ஆக
அநந்ய கதிகளான நமக்குத் தஞ்சம் சக்கரவர்த்தி திருமகன் -என்கை

———

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–-ஸ்ரீ பெரிய திருமொழி–3-6-9-

திரு மெய்ய மலையாளா !
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –

நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்
கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ

அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்

புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-

ஆக
இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –

—————————————

அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
தான் புறப்படுதல் -வைகாசி கருட சேவை -தானே ஆஸ்ரிதற்கு அருள
அழகு செண்டேற புறப்படுதல்- ஆனி கருடன் -பெரியாழ்வார் சாத்து முறை
ஆடி கருடன் கஜேந்திர யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல்
ஓன்று கேட்டால் மூன்று கருட சேவையும்
ஆழ்வார் போகம் ஓன்று கேட்டால் -இஹ போகம் ஸ்வர்க்காதி போகம் பரம போகம்
ஓன்று கேட்டால் நாலாயிரம் ஆழ்வார் நாத முனிகளுக்கும் ஆழ்வார் அருளினார்
பிள்ளை லோகாச்சார்யார் சாத்து முறை –பொய்கையாழ்வார் ஐப்பசி திரு ஓணம் –
நாள் பாசுரம் அன்னல் முடும்பை பாசுரம் சாதிப்பார்கள் –
திரு ஓணம் தோறும் புறப்பாடு
திருக்காஞ்சியில் தேவப்பெருமாள் திருக்கோயிலில் பிள்ளை லோகாச்சார்யார் தனியான சந்நிதி அதனால் இல்லை
ஈடு பெற காரணமும் இவனே -திருவடி ஊன்றிய தேவப் பெருமாள் –
ஈ உண்ணி பத்ம நாபர் -சடாரி சாதித்து -மஹா உதாரர்

கார்த்திகை தீபம் முந்திய பரணி தீபம் கச்சி வாய்ந்தான் மண்டபத்தில் மாலை 8 மணிக்கு திரு மஞ்சனம்
திருக்கச்சி நம்பி நினைவாக -அன்று தான்
திரு நாடு எழுந்து அருளிய தினம்

பெருமாள் வந்து செய்தி சொல்லிய பின்பு தாயார் எழுந்து அருளி
சேர்த்தி புறப்பாடு
திரும்பியும் தாயார் ஆஸ்தானம் சேரும் வரை காத்து இருந்து பின்பே கண்ணாடி அறைக்கு எழுந்து அருளுவார்
ஸ்ரீ வல்லபன் அன்றோ –

—————-

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;
தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி,
‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

———–

உய் வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண் கழல்கள்மேல்
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

வையம்மன்னி வீற்றிருந்து மண்ணுர்டே விண்ணுமாள்வர்-“பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடே நெடுங்காலமிருந்து இங்கே யிருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்; அங்கேபோனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான்தமர்’ என்கை யன்றிக்கே இங்கே யிருக்கச் செய்தே தாங்களிட்ட வழக்காகப் பெறுவர்.” என்பது நம்பிள்ளையீடு.

நஞ்சீயர் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்தபின்பு நெடுங்காலம் பட்டர்பாடே அர்த்த விசேஷங்கள் கேட்டு இன்புறவேணுமென்று இருந்தார்-

இருக்கையில் பட்டர் திருநாட்டுக்கெழுந்தருள நேர்ந்துவிட்டது;

இந்த வருத்தத்தினால் நஞ்சீயர் “வையம்மன்னி வீற்றிருந்து” என்ற இவ்விடத்தை அருளிச்செய்யும்போது உருத்தோறும் வெகுநிர்வேதப்படுவராம்.

பட்டர் இருபத்தெட்டு (அல்லது 32) பிராயத்திலே திருநாட்டுக்கெழுந்தருளினாரென்று சிலர்கூறுவதுண்டு.  இதற்குப் போதுமான பிராமணம் கிடைத்திலது; ஆராய்ந்து பார்க்குமளவில்; பட்டர் ஐம்பது ஐம்பத்தைந்து பிராயம் எழுந்தருளியிருந்தார் என்று சொல்வதற்குச் சான்றுகள் உள்ளன.  நூற்றிருபது திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்த எம்பெருமானாரை நோக்குமிடத்து பட்டர் எழுந்தருளியிருந்தது மிகவும் ஸ்வல்பகாலம் என்று சொல்லலாம்படியுள்ளது.

———————

துவளில் மா மணி -6-5- ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –

“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும்
போர விரும்பி இருப்பர்கள்.
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினை யுடையவராய்,
“வேத வாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை
மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும் போதும்.

“பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே,
தமக்குப் பிறந்த பிராவண்யத்தின் மிகுதியை அருளிச் செய்கிறார். –பட்டர் நிர்வாகம் இது

மேலே அநுபவித்த அநுபவம் தான் மானச அநுபவ மாத்திரமாய்,
புறத்திலேயும் அநுபவிக்க வேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து,
அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். –பூர்வர் நிர்வாகம்

‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலே யுள்ளவை’ என்னுதல்,
‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல்,
உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ?
அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?

“கணபுரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே.
யாரே இருவர் கன புரம் பேச அந்த சொல்லைக் கேட்டே கை தொழும் -முக்கோட்டை அவருக்கு அது இவருக்கு இது –
இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்தி பண்ணி யன்றோ மீட்பது!
இவள் படி கை மேலே காணா நிற்கச் செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே?

————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி.

இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனி வாய்ப் பெருமானாய்,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
பட்டர், “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’
என்று இருக்கின்றதே, என்ன ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும்
திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————-

வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தானேறித் திரிவான் தாளிணை யென் தலை மேலே.–10-6-5-

பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ;

அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம் பற்றித் திருமாலை திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை வரவிட்டருளினவளவிலே

“நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப் பார்த்துச் சிரித்தாராம்.

———–

ஸ்ரீ பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப் பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி–76-

ததீய சேஷத்வ  பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –

——————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார்  பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு  உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –

———-

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

————

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

இன்னுயிர்ச் சேவல் -9-5–இதன் விவரணம்

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

எம்பெருமானார் உகந்த பாசுரம்
திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)

————-

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –-திரு விருத்தம் –82-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது

————-

பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –
ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –

இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –
அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன –
பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –
ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –

வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே –
கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-
எம்பெருமான்-திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் –
என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –

அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –
அது எனக்கு போகாது –
இப்பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –

நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார் –
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – திரு-விருத்தம்-95 – திருமாலிருஞ்சோலை -10-8-–

யாதானும் பற்றி -பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –
பற்றுவது ஏதேனும் ஒன்றாக அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும் -பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுக்கைக்கு-
சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-
இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –

த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே
இரண்டாக பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –
மாதாவினைப் பிதுவை –
சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –
இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான்
என் என்னில் –

திருமாலை –
ஸ்ரீ யபதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே –

வணங்குவனே –
இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –
தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –

———–

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -சக்கரவர்த்தி துஞ்சினான் -பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே
அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது -நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட
நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை –
சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –

ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை
நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க -ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் –
அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –
நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன -லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு
பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே -அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –
அப்படியே செய்து கொடு போந்தார்களாய் -இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள்
குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என் என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே -இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- செஞ்சொல் கவிகாள் -10-7-

ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே-பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ-
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான்-
உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள்
தங்களுக்கே அன்றி -அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் –
அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே
உறங்கி குறட்டை விடா நிற்க -அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே
இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே
வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –
உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே

பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –
அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

———-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி 76-

எம்பார்-விடியும் பொழுது தொடங்கி ஓவாதே அநுஸந்திக்கும் பாசுரம் –

————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன -நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கேசவ நாம -வை லக்ஷண்யம் —

March 1, 2022

(புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:)
(இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:)

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி
எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல
அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது

“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”.
(இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் –
வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு.
பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும்.
சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும்.
கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.

அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர்.
ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
“கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்”

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார்.
க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்).
நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம்.
இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன்.
அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான்.
ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது.
ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க,
அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம்.
பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார்.
பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார்.
நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார்
(வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்…).
திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார்.

வாழி கேசவா!!!

நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவ ப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

———-

திவ்யப்ப்ரபந்தம் 3776 ஆக இருப்பினும் 4000 பாசுரமாக கணக்கில் கொள்வது எப்படி?

“இலங்கெழு கூற்றிருக்ககையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றிலிருநூற்றிருபத்தே ழீந்தான் வாழியே “
என்னும் அப்பிள்ளையருளிய வாழித்திருநாமத்தைப் பின்பற்றி திருமடல்களில் ஈரடி கொண்ட கண்ணிகளை
ஒரு பாட்டாகக்கொண்டு சிறிய திருமடல் 77 1/2 பாட்டாகவும்,
பெரியதிருமடல் 148 1/2 பாட்டாகவும் கொண்டு மூன்றாமாயிரத்தில் மொத்தப் பாசுரங்கள் 817 என்று கொண்டு
சில பதிப்புகளில் திருவாய்மொழியோடு சேர்த்து திவ்யப்ரபந்தம் நாலாயிரம் பாட்டாகக் கணக்கிடப்பட்டது.

“சிறியமடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும் சீர்பெரியமடல்தனிற் பாட்டெழுபத்தெட்டும் (தேசிகப்ரபந்தம் 389) என்னும்
பிரபந்த பாட்டில் உள்ளபடி சிறியமடலை 40 பாட்டாகவும்
பெரிய திருமடலை 78 பாட்டாகவும் கொண்டு
மூன்றாமாயிரம் 709 பாசுரங்களாகவும்
திருவாய்மொழியையும் இராமானுஜ நூற்றாந்தாதி 108 பாட்டையும் சேர்த்து 4000 பாசுரங்களாக கணக்கிடப்படுகிறது.

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———

கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –

கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –

கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –

(அவருக்கும் ஒரு அவயவம்-குழலுக்கு- இவளுக்கும் ஓர் அவயவம் -கண்ணி-சொல்லி )

————–

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –

ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-

இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –

—————

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

—————

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரிலே பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்

(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)

——————

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

கேசவன் பேர் இட்டு –
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவாம் கே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
கேசவ க்லேச நாசன -என்கிறபடியே
க்லேச நாசனாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை இட்டு –
கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித் திருமினோ –
நீங்கள் அந்த பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து சந்தோஷத்தோடு இருங்கள்
தேனித்து இருக்கை யாவது -இனியராய் இருக்கை

நாயகன் நாரணன்
நாயகன் -என்றது – சர்வ சேஷி -என்றபடி
நாரணன் -என்றது -சமஸ்த கல்யாண குணாத்மகன்-என்றபடி

இத்தால் –
ஆஸ்ரிதரத்தை ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியையும்
குண யோகத்தையும் உடையவன் என்கை

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்

——————

கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார்.
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.

————-

பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மை தனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–திருவாய்மொழி நூற்றந்தாதி-16-

வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

——————-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே –2-7-1-

நம்முடைய வாழ்வு -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ -வி லஷணமாக உள்ளது -கேசவன் தமர் என்னும்படியான சிறப்பு பெற்றார்கள்
சர்வேஸ்வரன் -கண் அழகால் என்னை ஈடுபடுத்திக் கொண்டு
வடிவு அழகாய் முடூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ கரித்த மகா உபாகாரகன் நாராயணனாலே மா சதிர் பெற்றோம்
கேசவன் -கேசாபாசம்/கேசி நிரசித்தவன் /பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன் –

—————–

கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி ஹந்தாவான -கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
கீழில் திருவாய் மொழியிற் -நல்குரவும்”-சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும்,
இத் திருவாய் மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும்
அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறது” என்று சொல்லுவர்.
அன்றிக்கே,
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”–மஹாபாரதம் சபாபர். 38 : 23.
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

————–

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

————

மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:3688/1

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மால் –
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவாய் உடையவன்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிடச் செய்த வியாமோஹம்

அரி –
விரோதிகளை அழிக்கும் தன்மையன்-விரோதி -நிரசன சீலன் –

கேசவன்
காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் மீள ஒண்ணாத பிரசஸ்த கேசன் –
செறிந்த நீண்ட மயிர் முடியை உடையவன்

நாரணன் –
ஆஸ்ரித வத்சலன் -அடியார்கள் இடத்தில் அன்பை உடையவன்

சீ மாதவன் –
அதற்கு அடியான ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆனவன்

கோவிந்தன்
அவளுடைய சேர்த்தியாலே ஆஸ்ரிதற்கு அடியார்கட்கு கையாளாய் இருக்குமவன்

வைகுந்தன்
இவற்றுக்கு எல்லாம் அடியான மேன்மையை உடையவன்

என்று என்று
நிரந்தரமாக -எப்பொழுதும்

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

————–

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –
மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
இந்த உடலின் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேண்டும் அன்றோ
நாம் சர்வேஸ்வரன் திருவடிகளைப் பற்றியது –
அதற்கு மேலே நம்மை அவன் அடிமையும் கொண்டானே கண்டாயே
வாக்கினாலாய அடிமை அன்றோ கொண்டது -பாட்டாய பல பாடுதல் –

கேசவன் எம்பெருமானை –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரனை -என்றது
கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி
நம்முடைய சேஷத்வத்தை -அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி
நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –
அன்றிக்கே –
பிரசஸ்த கேசன் -நீண்ட மயிரை உடையவன் தன் அழகினைக் காட்டி
நம்மை அடிமை கொண்டவன் -என்றுமாம் –

பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
நாம் அடிமை செய்ய-பிராப்தி பந்தகமாய் -அடைவதற்குத் தடைகளாய்-அநாதி கால ஆர்ஜிதமான –
பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள் எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –
இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண
கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கேசவனாகிய மருத்துவனை –
இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலாய் இருக்கும் அன்றோ –

————-

கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது
மருதரும் வசுக்களும் அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள்

கிளர் ஓளி மணி முடி
மிக்க ஒளியை யுடைய ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேயம்
வ்யூஹ விபவங்கள் அளவு அன்றிக்கே திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகையாலே நீர்மையிலே தோற்று
சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

————-

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –

————-

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
ப்ரஸித்த நாமம் ஆதல்

—————

கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு

பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –

————–

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு –
ஆழியம் கை பேராயர்க்கு ஆட்பட்டார்க்கு அடிமை —
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள்-
புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளே-ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தையும் காட்டும் திரு நாமம்

நாராயணன் மூர்த்தி கேசவன் –
வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

————–

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

———————–

தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

——————-

தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

——————

கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

———————

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

————–

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவனோடி வளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
கேசவனோடே –ப்ரசஸ்த கேஸனானவனோடே
இவளை -பருவத்து அளவே அன்றியே பரிபாகம் மிக்க இவள்
இவள் பிறங்கு இரும் கூந்தலானாலும் -இவள் சொல்லுவது
மயிரும் முடி கூடிற்று இல –என்று இறே

கேசவன் -இத்யாதி –
ஆன பின்பு -பிரசஸ்த கேசவனோடே-
அவ் வை லக்ஷண்யத்தில் எடுப்புண்டு பின் பற்றித் திரிகிற இவளை –

————

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – 3-3 2-

(கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரம் -குலசேகரப்பெருமாள் )

நித்ய வாசம் பண்ணுகிற ஸௌசீல்ய குணயுக்தனாய்-
ஆஸ்ரித விரோதிகளை -மதுவை – நிரசித்தால் போலே நிரசித்து பொகடுமவனாய் –
அவர்களுக்கும் அனுபாவ்யமாம்படி பிரசஸ்தமான திருக் குழலை உடையனாய் இருக்கிறவனே

பிரபத்தி மார்க்க பிரகாசகமான
தெற்கு திக்கு முதலான எல்லாத் திக்கு களுக்கும் ப்ரதாநமான கோயிலிலே நித்ய வாஸம் செய்கையாலே
ஆஸ்ரிதருக்கு ஸூ லபனாய்
விரோதி நிரசன சீலனுமாய்
ப்ரசஸ்த கேஸ ப்ரதானனுமாய் –இருக்கிறவனே

——————–

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் -3 -3-8 –

கேசவா
ப்ரம்மா ஈஸா நாதிகளுக்கு காரணமாகை அன்றிக்கே
இப் பழிச் சொல்லுக்கு நீ காரணம் ஆவதே –
(அகில காரணம் அத்புத காரணம் அன்றோ )

பிரம ருத்ரர்களுக்கு காரண பூதன் ஆகையாலே -கேசவன் -என்னும்
திருநாமத்தை உடையவனே –

—————

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3

பேசவும் தெரியாத பெண்மை என் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுருகின்றாளே – 3-7 -7-

கேசவா என்றும்
பிரசச்த கேச வனானவனே-என்றும்

கேசவா என்றும்
விரோதி நிரசன சீலன் என்னுதல்
ப்ரசஸ்த கேசன் என்னுதல்

கேடிலீ என்றும் –
உன்னால் அல்லது செல்லாதவர்களை ஒரு நாளும் கை விடாதவனே -என்றும்

————–

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

—————

கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

—————-

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து –

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

——————–

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———–

பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்
கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

—————

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் –
ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்;
எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்;
நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

—————

கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது
ப்ரஹ்ம ஹத்யைக்கு -பிராயச்சித்தமாக -கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு பிராயச்சித்தம் -கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –
இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –
ப்ராயச்சித்தமும் -கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன

கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல
விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
ராவணன் ஒருவனும் பிரதிகூல்யம் -தீ வினை செய்ய ராக்ஷஸ ஜாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே
எல்லாம்-
அனுபவிக்க கடவனவும்
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்
எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
என்ன –
கார்யத்தில் வந்தால் -அர்த்தக்ரியா காரியாயே – அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின்
யுக்தி -வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –

இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
பிரசஸ்த கேசனாய் -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-சம்சார துரிதங்கள் –
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் நிர்வாஹகன் -தலைவனே என்ன
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே

————-

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

கேசனே —
கேசவ சப்தமாய் கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்
இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

————

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின
நாசம் -துக்கம்
வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்
இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி
நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –
பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இ றே

எம் ஈசனே –
என் நாதனே
விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் – —கண்டேன் -கண்டு கொண்டேன் –போன்றவை ஒரே பாசுரத்தில் பல காலும் உள்ள -பாசுரங்கள் –

December 11, 2021

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1-2-1-

நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-

கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

உருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

எழில் கொள்மகர குழை இவை திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-

பரமன் தன நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-

கன்று இனங்கள் மறித்து திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -3-4-4 – –

அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –

நாடுதிரேல்-என்றும் -கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும்
சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும் பல உண்டு ஆகையாலே

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளர் தரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1 1-

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4 1-2 –

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4 1-3 –

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1 4-

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால்
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 5-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1 8-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

——–

கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

———

கண்டாள் கொலோ –
ஸ்ரவண ஜ்ஞானம் என்று தோற்றி இருக்கிறது இல்லை
கண்டவர்களுக்கு தெரியுமா போலே தெரியுமோ இவள் வார்த்தையை கேட்டு அறிந்த நமக்கு –
கண்டாள் கொலோ –
நெடுநாள் நோன்பு நோற்று பெற்ற தாயான முன்னே அறிந்த அம்சம் மறைக்கக் கடவதே இருக்க
என் முன்னே இப்படி வெளியிட்டுச் சொல்லும் போது
அவ்விஷயத்தில் இப்படி ஒரு சக்ருத் தர்சனம் உண்டாய் இருக்க வேணுமே –
ஒரு கால் கண்டால் பூர்வ வாசனையும் மறக்கும் படியான
வை லஷண்யம் உள்ளத்து அவ்விஷயத்துக்கே இறே
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார் அவ் ஊரில் உள்ளார் –
அப்படியே இவள் பேச்சைக் கொண்டு-இவள் திருக் கண்ண புரத்திலே புக்கு
சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அகவாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே

ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-

———–

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

கண்ண புரம் என்று காட்டினாள்-
பிரான் இருந்தமை காட்டினீர் -என்று அவனைக் காட்டினாள் தாயார் –
அவன் இருந்த ஊரை காட்டுகிறாள் இறே இவள் –
இது போலே காணும் சதாசார்யானில் காட்டில் சத் சிஷ்யனுக்கு உண்டான வாசி –
உனக்கு பிராப்ய பிர்ராபகங்கள் இரண்டும் ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
அதவா –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்–
திருக் கண்ண புரத்தை காணி கோள்-அஞ்சலியைப் பண்ணி கோள்
என்று சொல்லப் புக்கு-முடியும் சொல்ல மாட்டாதே குறையும் ஹஸ்த முத்ரையாலே காட்டினாள் –
அதவா –
காணுமோ -என்கிறாள் –
இக் கண்ணால் கொள்ளும் பிரயோஜனம் திருக் கண்ண புரத்தை காண்கை அன்றோ –
இத்தை நிஷேதிப்பாரும் சிலர் உண்டாவதே -என்று-விஷண்ணை யாகிறாள் -என்றுமாம் –

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ-
ஒரு தேச விசேஷத்திலே போனால்-சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே —8-10-9-

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் –
விரோதி போகப் பெற்ற அளவேயோ – அது போனால் பெறக் கடவ கைங்கரியத்தையும் பெற்றேன் –
வாசிகமான வடிமையும் செய்யப் பெற்றேன் –
நாம் பாடின கவியினுடைய மதிப்பு இருந்த படியாலே இது நம்மால் வந்ததாகக் கூடாது –
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது கொண்டே
நீ என் ஹிருதயத்தில் இருக்கிற இருப்பை நிச்சயிக்கலாம் படி பண்ணினாய் –
கண்ண புரத்துறை யம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டையாய் இருந்தபடி –

—-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–-திரு நெடும் தாண்டகம்–-21–

கண்டும் -குணம் கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தே –கண்டும் –என்கிறபடி -என் என்னில் –
கண் என்று உட் கண்ணாய் -ஜ்ஞான சாஷாத் காரத்தை சொல்கிறது –
அவன் பண்ணின தாழ்ச்சிகளை அனுபவித்து இருக்கச் செய்தேயும் -என்றபடி –
கண்டும்
முன்பு உன் பக்கல் கேட்டுப் போந்தேன் இத்தனை இ றே -கேட்டாப் போலே கண்டு வைத்தும்
கண்டும்
நெடுநாள் சாதனானுஷ்டானம் பண்ணி காண வேண்டிய விஷயம் அனாயாசமாக கண்ணுக்கு விஷயமாக
இருக்கச் செய்தே கிடாய் நழுவ விட்டது –
காணாத போது வெருவ ப்ராப்தமாய் இருக்க கண்டு வைத்து கலங்கினேன் –
கண்டு தெளிய கில்லீர் -என்னக் கடவது இறே –

——-

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது – பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –
கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்ட லமந்தால் இரங்கி யொரு நாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயி றுதிக்கும் கரு மா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர் தனக்கும் ஆங்கு அனையாய்
செம்மடல் வரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை அடியவர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து உள நலங்கூர
இம்மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –9-2-7-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

———

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் ——முதல் திரு வந்தாதி–99-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —இரண்டாம் திருவந்தாதி–24-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ——மூன்றாம் திருவந்தாதி—-1-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதி

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-நான்முகன் திருவந்தாதி-86-

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – திரு விருத்தம்– 97- –

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –பெரிய திருவந்தாதி–28-

காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்–
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே–சிறிய திருமடல்–

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 –

இவர் நம்மோடு சஜாதீயர் அல்லர் –நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று
அஸ்மத் ஸ்வாமியான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன் .
(ஜென்ம கர்மம் மே திவ்யம் யோ வேத்தி தத்வதக -உண்மையாக )
இப்படி தர்சித்த அளவிலே -அவர் தம் அளவிலே -நின்று விடாதே
அவர்க்கு அநந்யார்ஹர் ஆனவர்களுடைய அழகிய திருவடிகளிலே அடிமைப்பட்டேன் –
என்னுடைய அநாதியாய் -அதிக்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன் –
அவருடைய குண பூரமாகிற சமுத்ரத்தைப் பெரு விடாயர் மடுவிலே வாய் மடுத்து
பருகுமா போலே பெரிய அபிநிவேசத்தொடே இன்று புசித்து கொண்டேன்

பிரார்த்தித்து பெற வேண்டிய வடிவு அழகை ஆகஸ்மிகமாக கண்ணாரக் கண்டு கொண்டேன் –-
கண்டோம் கண்டோம்-கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும்
கண்டேன் -இத்யாதிப் படியே-மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
ததீயரைக் கண்டால் போலே சாஷாத் கரித்தது என்றபடி-
கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை–
இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்லர் -நம்மை உய்விப்பதற்காக விண்ணின் தலை
பரம பதத்தில் -நின்றும் மண்ணின் தலத்து உதித்தவர் என்று உள்ளபடி கண்டு கொண்டேன் -என்றபடி .
காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

October 30, 2021

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆழ்வார்கள்அருளிச் செயல்களில் ஸ்ரீ அம்புயத்தாளுறை திரு மார்பனின் திருநாமங்கள்– ஸ்ரீ திருவஹீந்திரபுரம் திரு ஸ்ரீநிவாஸ தேசிகன் ஸ்வாமி

October 4, 2021

அக்காரக்கனியே!
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
அங்கண்ணன்
அங்கனாயகன்
அங்கண்மா ஞாலத்து அமுது

அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து மிழ்ந்தாய்!
அச்சுதா!
அஞ்சனக்குன்றம்
அஞ்சனவண்ணன்
அஞ்சன வண்ணனே ஆயர் பெருமானே! –10-

அஞ்சனம் புரையும் திருவுருவன்
அசோதைதன் சிங்கம்
அசோதைக் கடுத்த பேரின்பக் குலவிளங்களிறு!
அசோதை இளஞ்சிங்கம்
அட்ட புயகரத்தாதி

அடர் பொன்முடியான்
அடலாமையான திருமால்
அடலாழி கொண்டான்
அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன்
அடியவர்க்கு அருளி அரவணை துயின்ற ஆழியான் –20-

அடியவர்கட் காரமுதமானான்
அண்டவாணன்
அண்டத்தமரர் பெருமான்
அண்ணலமரர் பெருமான்
அணங்காய சோதி

அணி நகரத்துலகனைத்தும் விளங்கும் சோதி
அணி நீலவண்ணன்
அணிநின்ற செம்பொனடலாழியான்

அணிவாணுதல் தேவகி மாமகன்
அணி மணி ஆசனத்திருந்த அம்மான்
அதகன்
அத்தா! அரியே!
அத்தனெந்தை ஆதிமூர்த்தி –30-

அத்தன் ஆயர்களேறு
அந்தணர் தம் அமுதம்
அந்தணாளி மாலே!
அந்தமாய் ஆதியாய்! ஆதிக்கும் ஆதியாய்!
அந்தமில் புகழ்க் காரெழிலண்ணலே!

அந்தமில் புகழாய்!
அந்தமில் புகழ் அனந்தபுர நகராதி
அந்தமில் வரையால் மழை தடுத்தான்
அந்தமிலாக் கதிர் பரப்பி அலர்ந்ததொக்கும் அம்மானே!
அப்பனே! அடலாழியானே! –40-

அப்புலவ புண்ணியனே!
அம்பர நற்சோதி!
அம்புயத்தடங்கண்ணன்
அம்மான் ஆழிப்பிரான்
அமரர் தம் அமுதே!

அமரர்க்கரிய ஆதிப் பிரான்
அமரர்கள் ஆதி முதல்வன்
அமரர்க் கரியேறே!
அமரர் தலைமகனே!
அமரர்க்கருள் செய்துகந்த பெருமான் திருமால் –50-

அமரரேறே!
அமுதம் பொதியின் சுவை
அமுதாய வானேறே!
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அரங்கத்தரவணைப் பள்ளியானே!

அரங்க மா நகருளானே!
அரங்கமேய அண்ணலே!
அரவணை மேல் பள்ளிகொண்ட முகில் வண்ணனே!
அரவணையான்
அரவினணை மிசை மேயமாயனார் –60-

அரவிந்த லோசனன்
அரவிந்த வாயவனே!
அரவிற் பள்ளிப் பிரான்
அரியுருவ மானான்
அரியேறே என்னம் பொற்சுடரே!

அரிமுகன் அச்சுதன்
அரும் பெருஞ்சுடர்
அருமா கடலமுதே!
அருவாகிய ஆதி
அருள் செய்த வித்தகன் –70-

அலங்கல் துழாய் முடியாய்!
அலம்புரிந்தடக்கை ஆயனே! மாயா!
அலமுமாழிப் படையுமுடையார்
அல்லிக் கமலக் கண்ணன்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந்தோளன்

அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
அல்லி மாதர மரும் திரு மார்பினன்
அலைகடல் கடைந்த அம்மானே!
அலைகடல் கடைந்த ஆரமுதே! –80-

அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே!
அலை நீருலகேழும் முன்னுண்ட வாயா!
அலை கடலரவமளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்
அழகனே!
அழலும் செருவாழி ஏந்தினான்

அழலுமிழும் பூங்காரரவணையான்
அழறலர் தாமரைக் கண்ணன்
அளத்தற்கு அரியனே!
அளவரிய வேதத்தான் வேங்கடத்தான்
அறமுயலாழிப் படையான் –90-

அறம் பெரியன்
அறிஅரிய பிரானே!
அற்புதன் நாராயணன்
அனந்த சயனன்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா!

அனந்தனணைக் கிடக்கும் அம்மான்
அன்பா!
அன்றிவ்வுலக மளந்தாய்
அன்றுலகமுண்டு மிழ்ந்த கற்பகம்
அன்றுலக மளந்தானே! –100-

அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகளன்பனே!
அன்னமும் கேழலும் மீனுமாய் ஆதியை
அன்னமதானானே அருமறை தந்தோனே!
அலையும் கடல் கொண்டவையம் அளித்தவன்
அம்புயத்தாள் கணவன்

அழியாதவருளாழிப் பெருமான்
அருளாளப் பெருமான்
அருளாழியம்மான்
அத்திகிரித் திருமால்
அயனார் தனித்தவங் காத்த பிரான் –110-

அருமறையினுச்சிதனில் நின்றார்
அருள் வரதர்
அருளாளர்
அமலனவியாத சுடர்
அளவில்லா ஆரமுதம்

அத்திகிரி அருள் முகிலே!
அருமறையின் பொருளனைத்தும் விரித்தார்
அடியவர் மெய்யர்
அடியவர்க்கு மெய்யன்
அடைக்கலம் கொண்ட திருமால் –120-

அந்தமிலாதி தேவன்
அருளாலுதவும் திருமால்
அம்புயத் தாளாரமுது
அயன் மகவேதியிலற்புதன்
ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த வேத முதல்வன்

ஆளும் பரமனைக் கண்ணனை
ஆழிப் பிரான்
ஆடிய மா நெடுந்தேர் படை நீரெழச் செற்ற பிரான்
ஆயர் குலத் தீற்றிளம் பிள்ளை
ஆழியங் கண்ண பிரான்–130-

ஆயர்க்கதிபதி அற்புதன்
ஆழியங்கண்ணா!
ஆறாமத யானையடர்த்தவன்
ஆயர்களேறு அரியேறு
ஆலின் மேலால் அமர்ந்தான்

ஆயிரம் பேருடையான்
ஆழியான்
ஆலின் இலை மேல் துயின்றான்
ஆகத்தனைப் பார்க்கருள் செய்யுமமம்மான்
ஆழி வண்ணனென்னம்மான்–140-

ஆதியாய் நின்றார்
ஆயிர வாய் நாகத்தணையான்
ஆலிலையில் முன்னொருவனாய முகில் வண்ணா!
ஆழியேந்தினான்
ஆழிவலவன்

ஆழிக் கிடந்தான்
ஆல்மேல் வளர்ந்தான்
ஆதி நெடுமால்
ஆதிப் பெருமான்
ஆழிசங்கம் படைக்கலமேந்தி–150-

ஆழியங்கை அம்மான்
ஆடரவமளியில் அறிதுயிலமர்ந்த பரமன்
ஆராவமுதம்
ஆறாவெழுந்தான் அரியுருவாய்
ஆயர்கள் போரேறே!

ஆழிப்படை அந்தணனை
ஆலிலைச் சேர்ந்தவனெம்மான்
ஆதிமூர்த்தி
ஆதியஞ்சோதி
ஆராவமுதூட்டிய அப்பன்–160-

ஆவியே ! ஆரமுதே!
ஆய் கொண்ட சீர்வள்ளல்
ஆலிலை யன்னவசம் செய்யும் அண்ணலார்
ஆற்ற நல்லவகை காட்டுமம்மான்
ஆதிப்பிரான்

ஆதிப் பெருமூர்த்தி
ஆற்றலாழியங்கை அமரர் பெருமானை
ஆலினீளிலை ஏழுல குமுண்டு அன்று நீ கிடந்தாய்
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை
ஆம் வண்ணம் இன்னதொன்றென்று அறிவதரிய அரியை–170-

ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி
ஆழியங் கண்ணபிரான்
ஆதியாய் நின்ற என் சோதி
ஆழியங்கை யெம்பிரான்
ஆவியே!அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!

ஆதியான்
ஆயன் அமரர்க்கரியேறு
ஆயர்கள் நாயகனே!
ஆழியங்கையனே!
ஆயர்தங்கோ–180-

ஆயர் பாடிக்கணி விளக்கே!
ஆலத்திலையான்
ஆமாறு அறியும் பிரானே!
ஆயா!
ஆயரேறு

ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு
ஆலினிலையாய்
ஆலிலை மேல் துயின்ற எம்மாதியாய்
ஆலை நீள் கரும்பன்னவன்
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகமுண்டவனே!–190-

ஆதி தேவனே!
ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற
ஆதி தேவ
ஆமையான கேசவ!

ஆழிமேனி மாயனே!
ஆலின் மேலோர் கண் வளர்ந்த ஈசன்
ஆயர் பூங்கொடிக் கினவிடை பொருதவன்
ஆதியாயிருந்தாய்
ஆதியை அமுதத்தை–200-

ஆழித் தடக்கையன்
ஆமருவி நிரை மேய்ந்த அணியரங்கத்தம்மான்
ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்
ஆயிரம் சுடர்வாய் அரவணைத் துயின்றான்
ஆழியாலன்றங்காழியை மறைத்தான்

ஆயனாயன்று குன்றமொன்றெடுத்தான்
ஆழி வண்ண!
ஆயிரம் பேருடையவாளன்
ஆரா இன்னமுது
ஆதி வராஹமுன்னானாய்–210-

ஆழியேந்திய கையனே!
ஆதியுமானான்
ஆலிலைமேல் கண் துயில் கொண்டுகந்த கருமாணிக்க மாமலை
ஆடற் பறவையன்
ஆழிவண்ணர்!–220-

ஆழியும் சங்குமுடைய நங்களடிகள்
ஆயிரம் பேரானை
ஆதிமுனேனமாகி அரணாய மூர்த்தி
ஆதியாதி ஆதி நீ
ஆடரவின்வன்பிடர் நடம் பயின்ற நாதனே!–220-

ஆய நாயகர்
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆழி வலவா!
ஆயர்க்கதிபதி அற்புதன்
ஆலம் பேரிலையன்னவசம் செய்யும் அம்மானே!

ஆழிநீர் வண்ணன் அச்சுதன்
ஆற்றலாழியங்கை அமரர் பெருமானை
ஆசறு சீலன்
ஆற்ற வல்லவன்
ஆடுபுட்கொடி ஆதிமூர்த்தி–230-

ஆணிச் செம் பொன்மேனி யெந்தாய்
ஆற்ற நல்லவகை காட்டும் அம்மானை
ஆரமுதூட்டிய அப்பனை
ஆர்ந்த புகழச்சுதன்
ஆழிப்படை அந்தணனே!

ஆழிசங்கம் படைக்கலமேந்தி

இருடிகேசா
இலங்கைமாநகர் பொடிசெய்த அடிகள்
இன்னார் தூதனென நின்றான்
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றான் –240-

இலங்கொளிசேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானே!
இருள் நாள் பிறந்த அம்மான்
இமையோர்க்கு நாயகன்
இமையோர்தம் பெருமான்
இறைவன்

இமயம் மேய எழில் மணித் திரள்
இன ஆநிரை காத்தான்
இளங்குமரன்
இன ஆயர் தலைவன்
இலங்கை செற்றான் –250-

இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான்
இராமன்
இமையோர் பெருமான்
இமையோர் தலைவா!
இருள்விரி சோதி பெருமான்

இலங்கைக்குழா நெடுமாடம் இடித்த பிரானார்
இமையோர்தன் சார்விலாத தனிப்பெரு மூர்த்தி
இருளன்னமாமேனி எம்மிறையார்
இரைக்கும் கடல் கிடந்தாய்
இன்னமுத வெள்ளம் –260-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன்
இலங்கை பாழாளாகப் படை பொருதான்
இனத்தேவர் தலைவன்
இழைகொள் சோதி செந்தாமரைக் கண்ணபிரான்
இமையோரதிபதியே!

இமையோர்களேத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே!
இன்னமுதே!
இன்தமிழ் பாடிய ஈசன்
இமையவரப்பன் என்னப்பன்
இமையவர் பெருமான் –270-

இமையவர் தந்தை தாய்
இனமேதுமிலான்
இன்னுரை ஈசன்
இறையவன்

ஈசனென் கருமாணிக்கம்
ஈட்டிய வெண்ணெயுண்டான்
ஈன் துழாயான்

உகப்புருவன்
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவன் –280-

உத்தமனே!
உம்பர் கோன்
உம்பர் கோமானே!
உம்பர் வானவர் ஆதியஞ்சோதி
உம்பருலகினில் யார்க்கும் உணர்வரியான்

உயிர்க்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா!
உருவக் குறளடிகள்
உருவமழகிய நம்பி
உரைக்கின்ற முகில் வண்ணன்
உலகமுண்ட பெருவாயா! –290-

உலகளந்த உத்தமன்
உலகளந்த மால்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!
உலகேத்தும் ஆழியான்
உலகேழு முண்டான்

உலகுக்கோர் தனியப்பன்
உலகுண்ட ஒருவா! திருமார்பா!
உலகுண்டவன் எந்தை பெம்மான்
உலகளந்த பொன்னடியே!
உலகளப்பானடி அடி நிமிர்ந்த அந்த அந்தணன் –300-

உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான்
உம்பர் போகமுகந்து தரும் திருமால்
உத்திர வேதிக்குள்ளே உதித்தார்
உம்பர் தொழும் கழலுடையார்
உவமையில திலகு தலைவனார்

உம்பர் தொழும் திருமால்
உள்ளத்துறைகின்ற உத்தமன்
உயிராகி யுள்ளொளியோடுறைந்த நாதன்
உலகம் தரிக்கின்ற தாரகனார்
உண்மையுரைக்கும் மறைகளிலோங்கிய உத்தமனார் –310-

உலப்பில் கீர்த்தி யம்மானே!
உலகுக்கே ஓருயிருமானாய்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்
உயர்வற உயர்நலமுடையவன்
உடன்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்

உலகமளந்தானே!
ஊழிப்பிரான்
ஊழிமுதல்வன்
ஊழியான்
ஊழிபெயர்த்தான் –320-

ஊழியெல்லாமுணர்வானே!
ஊற்றமுடையாய் பெரியாய்

எங்கள் தனி நாயகனே!
எங்கள் குடிக்கரசே!
எங்களீசனெம்பிரான்

என் சோதி நம்பி!
என் சிற்றாயர் சிங்கமே!
எண்ணற்கரியானே!
எம்மீசனே!
எழிலேறு –330-

எம் விசும்பரசே !
என் கண்ணனெம்பிரான்
என் அன்பனே!
என்தன் கார்முகிலே!
என்னுயிர்க் காவலன்

என்னப்பா!
எம்பிரான்
என்னையாளுடைத்தேனே!
எண்ணுவாரிடரைக் களைவானே!
எயிற்றிடை மண் கொண்ட எந்தை –340-

எங்கள் நம்பி கரியபிரான்
என் பவள வாயன்
என் கடல் வண்ணன்
எம்மி ராமாவே !
எந்தை தந்தை தம் பெருமான்

என்னையாளுடையப்பன்
எண்ணிறந்த புகழினான்
எங்கள் தனி நாயகனே !
என்னமர் பெருமான்
என்னாருயிரே ! அரசே ! –350-

என் பொல்லாக் கருமாணிக்கமே !
என்னிருடீகேசன்
என்னுடையாவியே !
எங்கள் பிரான்
என் திருமகள் சேர் மார்பனே!

எந்தை மால்
எட்டு மா மூர்த்தி என் கண்ணன்
எட்டவொண்ணாத இடந்தரும் எங்களெம் மாதவனார்
எங்கள் பெற்றத் தாயன்
எழுத்தொன்றில் திகழ நின்றார் –360-

ஏதமின்றி நின்றருளும் பெருந்தகை
ஏத்தருங்கீர்த்தியினாய்
ஏரார்ந்த கருநெடுமாலிராமன்
ஏரார்ந்த கண்ணிய சோதை இளஞ்சிங்கம்
ஏவரி வெஞ்சிலையான்

ஏழுலகுக்காதி
ஏழுலகுமுடையாய்
ஏழுலகப் பெரும் புரவாளன்
ஏனத்துருவாகிய ஈசன்
ஏனமாய் நிலங்கீண் என்னப்பனே ! –370-

ஐயனே ! அரங்கா!
ஐவாய்பாம்பினணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதி

ஒண்சுடராயர் கொழுந்தே!
ஒத்தார் மிக்காரையிலையாய மாமாயன்
ஒருபாலகனாய் ஞாலமேழு முண்டான்

ஒருநாள் அன்னமாய் அன்றங்கரு மறை பயந்தான்
ஒளி மணி வண்ணன்
ஓங்கி யுலகளந்த உத்தமன்
ஓங்கோத வண்ணனே !
ஓதமா கடல் வண்ணா! –380-

ஓதநீர் வண்ணன்
ஓரெழுத்து ஓருருவானவனே !

கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்
கடல் போலொளி வண்ணா!
கடல் வண்ணர்

கடற்பள்ளியம்மான்
கடல் ஞாலத்தீசன்
கடல் வண்ணா!
கடவுளே!
கடியார் பொழிலணி வேங்கடவா! –390-

கணபுரத்தென் காகுத்தன்
கண்ணனென்னும் கருந்தெய்வம்
கண்ணபிரான்
கண்ணுக்கினியன்
கமலக் கண்ணன்

கரிய முகில் புரை மேனி மாயன்
கருங்குழற்குட்டன்
கரும்பெருங்கண்ணனே
கருஞ்சிறுக்கன்
கருந்தடமுகில் வண்ணன் –400-

கருவுடை முகில் வண்ணன்
கருவினைபோல் வண்ணன்
கருமுகிலெந்தாய்
கரும்பிருந்த கட்டியே!
கடற்கிடந்த கண்ணனே!

கருந்தண்மாகடல் திருமேனி அம்மான்
கருத்தனே!
கருமாணிக்கச் சுடர்
களங்கனி வண்ணா! கண்ணனே!
கற்கும் கல்விநாதன் -410-

கன்று குணிலா எறிந்தாய்
கன்னலே ! அமுதே!
கண்ணா என் கார்முகிலே!
கரும்போரேறே!
கடற்பள்ளி மாயன்

கருளக் கொடியானே!
கஞ்சைக் காய்ந்த கழுவில்லி
கண்ணபுரத்தென் கருமணியே!
கங்கைநீர் பயந்த பாத!
கதநாகம் காத்தளித்த கண்ணன் –420-

கலையார் சொற்பொருள்
கருங்கடல் வண்ணா!
கருமாமுகில் வண்ணர்
கடல் வண்ணனார்
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்

கன்று மேய்த்தினிதுகந்த காளாய்
கருந்தேவனெம்மான்
கடிசேர் கண்ணிப் பெருமானே!
கறந்த பால் நெய்யே!
கடலினுளமுதமே! –430-

கட்கரிய கண்ணன்
கட்டெழில் சோலை நல்வேங்கட வாணன்
கடல்ஞாலமுண்டிட்ட நின்மலா!
கடிய மாயன்
கறங்கு சக்கரக் கனிவாய்ப் பெருமான்

கடலின்மேனிப்பிரான்
கமலத்தடங்கண்ணன்
கரிய முகில் வண்ணன்
கடற்பள்ளி அண்ணல்
கரிய மேனியன் -440-

களிமலர்த்துளவன் எம்மான்
கருமாணிக்கம்
கருகிய நீலநன்மேனி வண்ணன்
கடிபொழில் தென்னரங்கன்
கடல் கவர்ந்த புயலோடுலாங்கொண்டல் வண்ணன்

கடல் கிடக்கும் மாயன்
கலந்து மணி இமைக்கும் கண்ணா
கலங்காப் பெரு நகரம் காட்டுவான்
கமல நயனத்தன்
கருவளர் மேனி நம் கண்ணன் –450-

கருவாகிய கண்ணன்
கண்ணன் விண்ணோரிறை
கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால்
கருணை முகில்
கமலையுடன் பிரியாத நாதன்

கருணைக் கடல்
கருதவரம் தரு தெய்வப் பெருமாள்
காண இனிய கருங்குழற் குட்டன்
காண் தகு தாமரைக் கண்ணன்
கார்மலி மேனி நிறத்துக் கண்ணபிரான் –460-

கார்முகில் வண்ணன்
கார் வண்ணன்
கார்க்கடல் வண்ணன்
கார்தழைத்த திருவுருவன்
காரணா கருளக் கொடியானே!

காரார்மேனி நிறத்தெம்பெருமான்
காரானை இடர்கடிந்த கற்பகம்
காரொடொத்தமேனி நங்கள் கண்ணன்
காரொளி வண்ணனே! கண்ணனே!
காயாமலர் வண்ணன் –470-

காராயின காள நன் மேனியன்
காய்சினப் பறவை யூர்ந்தானே!
காய்சின வேந்தே! கதிர் முடியோனே!
காயா மலர் நிறவா!
காயாவின் சின்ன நறும் பூத் திகழ் வண்ணன்

காரார் கடல் வண்ணன்
கார் கலந்த மேனியான்
கார்வண்ணத்து ஐய!
கார் மேக வண்ணன்
கார் போல் வண்ணன் –480-

கார் மலி வண்ணன்
காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்
காளமேகத் திருவுருவன்
காத்தனே!
காரார்ந்த திருமேனி கண்ணன்

காமருசீர் முகில் வண்ணன்
கானுலாவிய கருமுகில் திருநிறத்தவன்
காகுத்தா கரிய கோவே!

கிளரும் சுடரொளி மூர்த்தி
கிளரொளி மாயன் –490

குடக்கூத்தன்
குடமாடுகூத்தன்
குருத்தொசித்த கோபாலகன்
குரைகடல் கடைந்தவன்
குறியமாணெம்மான்
குன்றம் குடையாக ஆகாத்த கோ

குன்றமெடுத்தானிரை காத்தவன்
குன்றமொன்றெடுத்தேந்தி மாமழை அன்று காத்த அம்மான்
குரவை முன் கோத்த கூத்த எம்மடிகள்
குருமாமணிக்குன்று
குன்றால் மாரி தடுத்தவன் –500-

குடமாடி மதுசூதன்
குன்றால் மாரி தடுத்துக் காத்தானே!
குன்றமேந்திக் கடுமழை காத்த எந்தை
குவலயத்தோர் தொழுதேத்தும் ஆதி
குளிர்மாமலை வேங்கடவா!

குடத்தையெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே!
குறையொன்றுமில்லாத கோவிந்தா!
குன்று குடையாய் எடுத்தாய்
குலமுடைக் கோவிந்தா!
குன்றெடுத்தாய் –510-

குன்றமெடுத்தபிரான்
குடந்தைத் திருமாலே
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்
குற்றமறியாத கோவலனார்

கூராழிப்படையான்
கூனற்சங்கத் தடக்கையன்

கெழுமியகதிர்ச் சோதி
கேடில் விழுப்புகழ்க் கேசவன்
கேழல் திருவுரு
கை கலந்த ஆழியான் –520-

கைந் நின்ற சக்கரத்தன்
கை கழலா நேமியான்
கையார் சக்கரத்தென் கருமாணிக்கமே!
கொந்தார் துளவ மலர் கொண்டவனே!
கொண்டல் வண்ணா!

கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
கோலமாணிக்கமென்னம்மான்
கோலங்கரிய பிரான்
கோவலனே!
கோவிந்தா! –530-

கோளரி மாதவன்
கோமள ஆயர்கொழுந்தே
கோயிற் பிள்ளாய்
கோபால கோளரி
கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்

கோவலனெம்பிரான்
கோணாகணையாய்!
கோலால் நிரை மேய்த்த எம்கோவலர் கோவே!
கோதில் செங்கோல் குடைமன்னரிடை நடந்த தூதர்
கோல வல் விலிராம பிரானே! –540-

கோவலனே! குடமாடீ!
கோவலர் குட்டர்
கோனே குடந்தைக் கிடந்தானே
கௌத்துவமுடைக் கோவிந்தன்

சக்கரத்தண்ணலே!
சங்கு சக்கரத்தாய்

சந்தோகா பௌழியா!
சாமவேதியனே நெடுமாலே!
சந்தோகா ! தலைவனே!
சங்கேறு கோலத்தடக்கைப் பெருமான்–550-

சவிகொள் பொன் முத்தம்
சங்கொடு சக்கரத்தன்
சக்கரக் கையனே!
சக்கரக் கை வேங்கடவன்
சங்கமிடத்தானே!

சங்கோதப் பாற் கடலான்
சார்ங்கத்தான்
சிரீதரனே! சிறந்த வான் சுடரே!
சீலமெல்லையிலான்
சீர்கெழு நான்மறையானவரே!–560-

சீ மாதவன்
சீர்கொள் சிற்றாயன்
சீலமிகு கண்ணன்
சீர்ப்பெரியோர்
சீரார்சிரீதரன்

சீலப் பெருஞ்சோதி
சுடர் கொளாதி
சுடர் ஞானமின்பமே
சுடர்ச்சோதி முடிசேர் சென்னியம்மானே!
சுடர் நீள் முடியாய்–570-

சுடர் நேமியாய்
சுடர்ப் பாம்பணை நம்பரன்
சுவையன் திருவின் மணாளன்
சுழலின் மலி சக்கரப் பெருமாள்
சுடரொளி ஒரு தனி முதல்வன்

சுடர்கொள் சோதி
சுடராழியான்
சுவையது பயனே
சுடர்போல் என் மனத்திருந்த வேதா!
சுடராழிப்படையான்–580-

சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடி மாரி
சூட்டாயநேமியான்
செங்கண் மால்
செஞ்சுடர்ச்சோதி
செஞ்சுடர்த்தாமரைக் கண்ணா!

செம்மின் முடித் திருமால்
செய்ய கமலக் கண்ணன்
சென்னி நீண் முடியாதியாய்
செய்யாளமரும் திருவரங்கர்
செய்யாளன்பர்–590

சேண்சுடர்க்குன்றன்ன செஞ்சுடர்மூர்த்தி
சொற் பொருளாய் நின்றார்
ஞாலப் பிரான்
ஞாலமுண்டாய் ஞால மூர்த்தி
ஞாலமுற்றுமுண்டுமிழ்ந்தான்

ஞாலம்விழுங்கும் அநாதன்
ஞாலம் தத்தும் பாதன்
ஞான நல்லாவி
ஞானப்பிரான்
தடம் பெருங்கண்ணன்–600-

தண்ணந் துழாயுடையம்மான்
தண் துழாய் விரைநாறுகண்ணியன்
தண் துழாய்த் தாராளா!
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான்
தண் வேங்கடமேகின்றாய்

தம்மானென்னம்மான்
தன்சொல்லால்தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்
தன்தனக்கின்றி நின்றானை
தனக்கும் தன்தன்மை யறிவரியானை
தன்னடியார்க்கினியன்–610-

தருமமெலாம் தாமாகி நிற்பார்
தனித் தாதை
தனித் திறலோன்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்
தன் கழலன்பர்க்கு நல்லவன்

தன்னடிக்கீழுலகேழையும் வைத்த தனித் திருமால்
தந்தையென நின்ற தனித் திருமால்
தண் துளவ மார்பன்
தனக்கிணையொன்றில்லாத திருமால்
தன் திருமாதுடனிறையுந்தனியாநாதன்–620-

தண் துழாய் மார்பன்
தாசரதீ!
தாதுசேர்தோள் கண்ணா!
தாமரைக் கண்ணன்
தாமரைக்கையாவோ?

தாமரைக் கண்ணினன்
தாமரையன்ன பொன்னாரடி எம்பிரான்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
தாள்களாயிரத்தாய்
தார்தழைத்த துழாய்முடியன்–630-

தாயெம்பெருமான்
தாமரைக் கண்ண னெம்மான்
தாமரைமேலய னவனைப் படைத்தவனே!
தாமரைமேல் மின்னிடையாள் நாயகனே!
தாரலங்கல் நீள் முடியான்

தாளதாமரையான்
தாமரையாள் திருமார்பன்
தாதையரவணையான்
தாமனைத்தும் தீவினையைத் தவிர்ப்பார்
தாமரையாளுடனிலங்கும் தாதை–640-

திருக் கலந்து சேரு மார்ப!
திரிவிக்கிரமன்
திருநாரணன்
திருக்குறளப்பன்
திருமங்கை மணாளன்

திருவிருந்த மார்பன்
திருமகளோடு இனிதமர்ந்த செல்வன்
திருமகளார் தனிக் கேள்வன்
திருமாமகள் கேள்வா! தேவா!
திருமார்பன்–650-

திருவமர் மார்பன்
திருமாலார்
திருவிண்ணகர் சேர்ந்தபிரான்
திருவேங்கடத்தெழில்கொள் சோதி
திருவேங்கடத்தெம்பிரானே!

திருவுடைப் பிள்ளை
திருவைகுந்தத்துள்ளாய் தேவா!
திறம்பாத கடல்வண்ணன்
திருவே! என்னாருயிரே!
திருமாமகள்தன் கணவன்–660-

திருமறுமார்பான்
திருவுக்கும் திருவாகிய செல்வா!
திருவாழ் மார்பன்
திருநீர்மலை நித்திலத்தொத்து
திருவயிந்திரபுரத்துமேவு சோதி

திருவெள்ளக்குளத்துள் அண்ணா!
திகழும் மதுரைப் பதி
திரண்டெழுதழைமழை முகில்வண்ணன்
திருவாயர்பாடிப் பிரானே!
திருந்துலகுண்ட அம்மான்–670-

திருநீலமணியார்
திருநேமிவலவா!
திருக்குறுங்குடி நம்பி
திருமணிவண்ணன்
திருநறையூர் நின்ற பிரான்

திருச்செய்ய நேமியான்
திருமாலவன்
திண்பூஞ்சுடர்நுதி நேமி அஞ்செல்வர்
திருமாமணி வண்ணன்
திருமலை மேல் எந்தை–680-

திருமங்கை நின்றருளும் தெய்வம்
திருமொழியாய் நின்ற திருமாலே!
திருப்பொலிந்த ஆகத்தான்
திரைமேல் கிடந்தான்
திருமோகூர் ஆத்தன்

திருக்கண்ணபுரத்து ஐயன்
திலகமெனும் திருமேனிச் செல்வர்
தினைத்தனையும் திருமகளை விடாதார்
திருவத்தியூரான்
திகழரவணையரங்கர்–690-

திருமகளார் பிரியாத தேவன்
திருவுடனே அமர்ந்த நாதன்
திருமகளோடு ஒருகாலும் பிரியாநாதன்
திருநாரணனென்னும் தெய்வம்
திருமகளார் பிரியாத் திருமால்

தீவாய்வாளி மழை பொழிந்த சிலையா!
தீவாய் நாகணையில் துயில்வானே!
தீங்கரும்பின் தெளிவே!
தீமுகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
தீர்த்தன்–700-

துணை மலர்க் கண்களாயிரத்தான்
துவராபதி யெம்பெருமான்
துழாயலங்கல் பெருமான்
துழாய் முடியார்
துயர் தீர்க்கும் துழாய் முடியான்

துளவ முடி யருள் வரதர்
துளங்காவமுதக் கடல்
துவரை மன்னன்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன்
தூ மொழியாய்–710-

தூவி யம் புள்ளுடையாய்
தூ மணி வண்ணன்
தெண்டிரைக்கடற் பள்ளியான்
தெய்வப் புள்ளேறி வருவான்
தெய்வ நாயகன்

தெளிவுற்ற கண்ணன்
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
தெள்ளியார் வணங்கப்படும் தேவன்
தேசுடையன்
தேசமுன்னளந்தவன்–720-

தேவக்கோலப்பிரான்
தேவகி சிங்கமே!
தேவகி சிறுவன்
தேவர்கள் நாயகன்
தேவர்பிரான் –

தேவாதிதேவபெருமான்
தேனுடைக்கமலத் திருவினுக்கரசே!
தேனே இன்னமுதே!
தேவர்க்கும் தேவாவோ!
தேன்துழாய்த்தாரான்–730-

தேங்கோதநீருருவன் செங்கண்மால்
தேசுடைய சக்கரத்தன் சங்கினான்
தேங்கோத வண்ணன்
தேனின்ற பாதன்
தேசொத்தாரில்லையெனும் தெய்வநாயகர்

தேனமர் செங்கழலான்
தேசொத்தார் மிக்காருமிலாதார்
தேனார் கமலத் திருமகள்நாதன்
தேரிலாரணம்பாடிய நம் தேவகி சீர் மகனார்
தேனுளபாதமலர்த் திருமால்–740-

தேனவேதியர் தெய்வம்
தொல்லைநன்னூலிற்சொன்ன உருவும் அருவும் நீயே
தோலாத தனி வீரன்
தோளாத மா மணி
நந்தன் மதலை

நந்தா விளக்கின் சுடரே!
நம் கண்ணன் மாயன்
நம் கோவிந்தன்
நம் சுடரொளி ஒரு தனி முதல்வன்
நம் திருமார்பன்–750-

நரனே நாரணனே
நல்லாய்
நறுந்துழாய்ப் போதனே
நன் மகளாய் மகளோடு நானில மங்கை மணாளா
நம் அத்திகிரித் திருமால்

நம் பங்கயத்தாள் நாதன்
நறுமலர்மகள்பதி
நங்கள் நாயகன்
நந்துதலில்லா நல்விளக்கு
நன்மகன்–760-

நந்திருமால்
நம்மை யடைக்கலம் கொள்ளும் நாதர்
நாகணை மிசை நம் பிரான்
நாகத் தணையான்
நாராயணனே!

நாறுபூந்தண்துழாய் முடியாய்
நாகணை யோகி
நான்முகன்வேதியினம் பரனே
நாறுதுழாய் முடியான்
நாதன்–770-

நாகமலை நாயகனார்
நாராயணன் பரன்
நிகரில் புகழாய்
நிரை மேய்த்தவன்
நிலமங்கைநல்துணைவன்

நிலமாமகட்கினியான்
நிலவு புகழ் நேமி யங்கைநெடியோன்
நிறங்கிளர்ந்த கருஞ்சோதி
நிறந்திகழும் மாயோன்
நிறைந்த ஞான மூர்த்தி–780-

நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியான்
நின்னொப்பாரையில்லா என்னப்பா!
நிலை தந்த தாரகன்
நியமிக்குமிறைவன்
நீண்ட தோளுடையாய் .

நீண்டமுகில் வண்ணன் கண்ணன்
நீதியான பண்டமாம் பரமசோதி
நீரார் கமலம் போல் செங்கண்மால்
நீரேற்றுலகெல்லாம் நின்றளந்தான்
நீரோத மேனி நெடுமாலே!–790-

நீலமாமுகில் வண்ணன்
நீலமுண்டமன்னன்ன மேனிப் பெருமாள்
நீள்கடல் வண்ணனே!
நெடுமால்
நெடியான் .

நேமிவலவா!
நேமி அரவணையான்
பங்கயத்தடங்கண்ணன்
படநாகணைக் கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
பணங்கொளரவணையான்–800-

பண்புடையீர்
பண்புடை வேதம் பயந்த பரன்
பத்துடையடியவர்க்கெளியவன்
பரஞ்சோதி
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன்

பரஞ்சுடர்
பரமனே!
பரனே பவித்திரனே!
பனிப் புயல் வண்ணன்
பரன்–810-

படைத்தேந்துமிறைவன்
பரவும் மறைகளெல்லாம் பதம் சேர்ந்தொன்ற நின்ற பிரான்
பாகின்றதொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமனே!
பாமருமூவுலகுமளந்த பற்ப பாதாவோ!
பாமருமூவுலகுமளந்த பற்பநாபாவோ! –820-

பாம்பணையப்பன்
பாரளந்தீர்
பாரிடந்த அம்மா!
பாரெல்லாமுண்ட நம்பாம்பணையான்
பாரென்னும் மடந்தையை மால் செய்கின்ற மாலார்

பாற்கடலான்
பார்த்தன்தேர்முன்னே தான்தாழ நின்ற உத்தமனார்
பிறப்பிலி
பிறப்பில் பல்பிறவிப் பெருமான்
பின்னை தோள் மணந்த பேராயா! –830-

பீடுடையப்பன்
பீடுநான்முகனைப் படைத்தான்
புணர்ந்த பூந்தண்டுழாய் நம்பெருமாள்
புயற்கரு நிறத்தினன்
புயல் மழைவண்ணர்

புயல் மேகம் போல் திருமேனி அம்மான்
புவனியெல்லாம் நீரேற்றளந்த நெடிய பிரான்
புள்ளூர்தி
புள்ளை யூர்வான்
புனத்துழாடாய் முடிமாலை மார்பன் –840-

புனிதன்
புண்ணியனார்
புராணன்
பூத்தண்துழாய் முடியாய்
பூந்துழாய் மலர்க்கே மெலியுமடநெஞ்சினார்

பூமகள் நாதன்
பூமகள் நாயகன்
பூம்பிணைய தண்டுழாய் பொன்முடியம் போரேறே!
பூவில்நான்முகனைப் படைத்த தேவன் எம்பெருமான்
பூவினை மேவியதேவி மணாளனை –850-

பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியனார்
பெற்றமாளி
பெரு ஞானக் கடல்
பேராயிரமுடையான்
பேராழிகொண்ட பிரான்

பேராத அருள் பொழியும் பிரான்
பேரருளாளன்
பேராயிரமும் திருவும் பிரியாத நாதன்
பைகொள் பாம்பணையாய்
பைகொள் பாம்பேறி உறை பரனே! –860-

பைங்கோத வண்ணன்
பைந்நாகப்பள்ளியான்
பைவிடப் பாம்பணையான்
பொய்யிலாத பரம்சுடரே!
பொருநீர்த்திருவரங்கா!

பொலிந்துநின்ற பிரான்
பொன் நெடுஞ்சக்கரத்தெந்தை பிரான்
பொன்முடியன்
பொன்பாவை கேள்வா!
பொன்னாழிக்கையென்னம்மான் –870-

பொன்னூலினன்
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்கோதா!
போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியன்
மண் மகள் கேள்வன்
மலர் மங்கை நாயகன்

மணி மாயன்
மத்தமாமலை தாங்கிய மைந்தன்
மதுசூத அம்மான்
மது நின்ற தண்துழாயம்மான்
மதுசூதனன் –880-

மதுவார் தண்ணந்துழாயான்
மதுரைப் பிறந்த மாமாயனே!
மதுவின் துழாய் முடிமாலே!
மயர்வற மதிநலமருளினன்
மருப்பொசித்த மாதவன்

மல்லாகுடமாடீ!
மறுத்திருமார்வன்
மறையாளன்
மற்றொப்பாரையில்லா ஆணிப்பொன்னே!
மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே! –890-

மன்னு பெரும்புகழ் மாதவன்
மணிமுடி மைந்தன்
மாணிக்குறளனே!
மாணிக்குறளுருவாய மாயவனே!
மாதவனே!

மாதாய மாலவனை
மாநீர் வண்ணர்
மா மணி வண்ணன்
மாமதுவார் தண்டுழாய் முடிமாயவன்
மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் –900-

மாயக் கடவுள்
மாயக் கூத்தன்
மாயன் மணி வண்ணன்
மாயவனே!
மால் வண்ணனே!

மாலவனே!
மாவாய் பிளந்தானே!
மாலே மணி வண்ணா!
மாலாய்ப் பிறந்த நம்பி
மாலே செய்யும் மணாளன் -910-

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதை
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்தாமரைக் கண்ணன்
முடிகளாயிரத்தாய்
முடிசேர் சென்னியம்மா!
முடிவிலீயோ!

முகில் வண்ணன் கண்ணன்
முதல் மூவர்க்கு முதல்வன்
முது வேத முதல்வன்
முத்தமே என் தன் மாணிக்கமே!
முத்தீ மறையாவான் –920–

முனிவர்க்குரிய அப்பனே!
முத்தனார் முகுந்தனார்
மூவர்தம்முள்ளும் ஆதி
மூவா முதல்வா
மூவுலகளந்த சேவடியோயே!

மையகண்ணாள் மலர்மேல் உறைவாளுறை மார்பினன்
மைய வண்ணா மணியே!
வடமதுரைப் பிறந்தான்
வடி சங்கம் கைக் கொண்டான்
வடிவுடை வானோர் தலைவனே! –930-

வண்ண மாமணிச் சோதி!
வண் துழாய் மால்
வண் புகழ் நாரணன்
வண்ணமருள்கொள் அணி மேக வண்ணா
தண்டார் தண்ணந்துழாயான்

வண்தாமரை நெடுங்கண் மாயன்
வராஹத்தணி யுருவன்
வளரொளி மாயோன்
வள்ளலே! மணி வண்ணா!
வண்மையுகந்தவருளால் வரந்தரும் மாதவனார் –940-

வண் துவரைக் கண்ணன்
வண்டுவரைக்கரசான நம் மாயன்
வண்மை யுடைய அருளாளர்
வண்டுவரீசன்
வாமனா!

வாயும் ஈசன் மணி வண்ணன்
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன்
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
வானவர் தம் நாயகன்
வான தம் மெய்ப் பொருள் –950-

வானவராதி
வானவர் தெய்வம்
வானக்கோன்
வானுளார் பெருமான்
வானோர் கோமானே!

வானோர் தொழுதிறைஞ்சும் நாயகத்தான்
வான்கலந்த வண்ணன்
வானமருந்திருமால்
வாரண வெற்பிறையவன் வாசுதேவன்
விட்டுவே! –960-

விண்ணவர் கோன்
விண்ணோர் நாயகன்
விண்ணோர் பெருமான்
விண்ணகத்தாய்
விடரிய பெரிய பெருமாள்

வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வெள்ளைப் பரிமுகர் தேசிகர்
வெறித் துளப வித்தகனார்
வெறியார் துளவுடை வித்தகன்
வெற்றிக் கருளக் கொடியோன் –970-

வெண்புரி நூலினன்
வேங்கடவாணன்
வேங்கட நல்வெற்பன்
வேங்கடத்தெம் வித்தகன்
வேங்கடத்து மேயான்

வேத முதல்வன்
வேத முதற் பொருள்
வேழ மலை நாயகனார்
வேழ மலை மெய்யவனே!
வையமெல்லாமிருள் நீக்கும் மணிவிளக்கு–980-

வைகுந்தம் கொடுக்கும் பிரான்
வைகுந்தன்
வையமளந்தானே!
வைகுந்தா மணி வண்ணனே!

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் — மருந்து -பத பிரயோகங்கள் —

September 18, 2021

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்–பெரியாழ்வார் -2-7-1-

அரு மருந்து ஆவது அறியாய் –
நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

அரு மருந்து ஆவது அறியாய்
பெறுவதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறாய் இல்லை –
இவன் ஆரா வமுது இறே
இது கடல் படா அமுது இறே
ஆகை இறே அரு மருந்து ஆயிற்று –

மருந்து -அம்ருதம்
இம் மருந்து தான்
சந்நிதி பண்ணின போது போக்யமுமாய்
நீங்கின போது சத்தா நாஸ பரிஹாரமுமாய் இறே இருப்பது –

————

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே -3-7-10 –

மருத்துவ பதம் -இத்யாதி
மருத்துவனானவன் சமைக்கிற ஒவ்ஷதத்திலே -பாகம் பார்த்து செய்யாத போது –
அது கை தவறுமா போலே –
இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள்
கை கழிந்தாள் என்னும் வார்த்தை லோகத்தில் உண்டாவதுக்கு முன்பே

ஒருப்படுத்திடுமின் -இத்யாதி
தன்னுடைமையை -மகா பலி -என்னது -என்று இருக்க
விரகாலே அவன் பக்கலில் நின்று வாங்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டவன் பக்கலிலே
இவளை நீங்களே சேர்த்து விடும் கோள் –
நீங்கள் சேராத போது-இவள் ஸ்வபாவத்தாலும் இரண்டு தலையும் சேர்ந்தே விடும்
ஆன பின்பு ஏற்கவே நீங்களே சேர்த்து விடும் கோள் என்று த்வரிப்பிக்கிறார்கள்

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஆரோக்யாதிகளுக்கு(ஆதி -ஆயூஸ்ஸூக்கள்-உயர -இளைக்க -இத்யாதிகள் ) ஹேதுவாக ஓவ்ஷதங்கள்
சமைப்பார் பாகம் பார்க்குமா போலே
பருவம் தப்பாமல் பார்க்க வேணும் இறே பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு
அது தப்பினாள் என்னும் வார்த்தை பிறப்பதற்கு முன்பே

ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே
வரையாதே திரு உலகு அளந்து ரஷித்த ஸர்வ ரக்ஷகன் பக்கல் நெஞ்சு
ஒருமித்துக் கொண்டு போய் விடப் பாருங்கோள்

இடுமின்
கொண்டு போய் இட்டு வைக்கப் பாருங்கோள் -என்னுமாம் –

ஸ்வரூபானுரூபமான புருஷார்த்தத்திலும் காட்டில்
விஷய அனுரூப புருஷார்த்தம் உத்தேச்யம் என்று அறுதியிட்டுச்
சரம பர்வ ஸ்திதியை பிரதம பர்வத்திலே கொண்டு போய்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
சேர்க்கப் பாருங்கோள் என்கிறது –

————

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும்  மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா –
மருந்தாய் இருக்கை அன்றிக்கே –
மருந்து அறிவதும் செய்யும் –

இது தான் –
மலை மேல் மருந்துமாய் –
ஏக மூலிகையுமாய் –
ஸக்ருத் சேவ்யுமாய்-
பலியாத மருந்து பல காலும் சேவித்தாலும் பலியாது இறே

இவ் ஒவ்ஷதம் தான்
வேறு ஒரு ஒவ்ஷதம் பொறாத அளவு அன்றிக்கே –
மீண்டு தன்னையும் பொறாது

மருத்துவன் -என்று ஆசார்யன்
ஆய் – -என்று ஏறிட்டு கொண்டான் என்றது
ஆகையால் இறே-
பீதக வாடைப் பிரானார் வந்து இவரை -இராப்பகல் ஒதுவித்தது –

மா மணி வண்ணா
மருந்து இருக்கிறபடி –
மணி மந்திர ஒவ்ஷதம் -என்னக் கடவது இறே

மணியும் –
மந்த்ரமும் –
ஒவ்ஷதமும் -நாட்டுக்கு வெவ்வேற

இங்கு எல்லாம் ஒரு தலைத்த விஷயம்

அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரம் என்று
நெஞ்சுக்கு இனிய மந்த்ரமும்

மறவாத மந்த்ரமும் –
வாழும் மந்திரமும் -இது இறே
அச்சுதன் அமலன் (3-4 )இறே
நச்சு மா மருந்தம் -(3-4 )
நழுவ விடாததுமாய் –
ஹேயத்தைக் கழிக்குமதாய்  –
ஆசைப்படும் மருந்து இறே –

வைப்பாம் மருந்தாம் ( 1-7-5 )-என்று
இரண்டும் ஒன்றான மருந்து இறே –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே (மூன்றாம் திருவந்தாதி )-என்று மூன்றும் ஒன்றான மருந்து இறே

(மருந்து அநிஷ்ட நிவர்த்தக உபாயம்
பொருள் இஷ்ட பிராப்தி உபாயம் -சாதனம்
அம்ருதம் ப்ராப்யம் )

பொருள்-உபாயம் -சமஸ்த வஸ்து ஹீநோபி –
அம்ர்தம் ப்ராப்யம் –
மருந்து -விரோதி நிவர்தகம் -பந்தம் அறுப்பதோர் மருந்து -என்னக் கடவது இறே
என்றும் ஒன்றான மருந்து இறே

தீர் மருந்து இல்லா ஐந்து நோய்க்கு ஆர் மருந்து ஆகுவார் -(திருவாய் – 7-1-5 )
மருந்து -என்று அஞ்ச வேண்டாதபடி தீர் மருந்தான மருந்து இறே

தீர்க்கும் மருந்து –
ஊருகிற பாம்புக்கு தடை இடுமா போலே –
வருகிற நரகத்தை தீர்க்கும் மருந்து –
அற்றவர்கட்கு அரு மருந்து (பெருமாள் திருமொழி )-என்ன கடவது இறே

ஆனை தன் பலம் அறியாதாப் போலே –
அரு மருந்து ஆவது அறியாய் -என்ன கடவது இறே –

ஆர்க்கும் அறிய ஒண்ணாத பிரேம வியாதியும் அகப்பட தீரும் என்னும் படி
கை கண்ட மருந்து இறே –

போக மகிழ்ச்சிக்கு மருந்து (9-3 )-என்று
ஒரு விபூதியாக கொண்டாடும் மருந்து -இறே

மறு பிறவி தீர்க்கும் மருந்து
மருத்துவனைச் (மருந்தகாகச் )சொல்லி –
மருந்து செய்யும் கார்யம் சொல்லுகிறது மேல் –

வருகிற ஜன்மங்களைப் போக்கி தவிர்க்கை யாவது –
வீடு அறுக்கை
மறுமைக்கு மருந்தினை (பெரிய திருமொழி -7-10 )-என்று சொல்லக் கடவது இறே

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
மருந்தாகும் அது அன்றிக்கே
மருந்து அறிவதும் செய்யும்
இது தான் மலை மேல் மருந்து

நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனே
இவருடைய மருந்து இவனுடைய வடிவு அழகு ஆய்த்து
நச்சு மா மருந்து இறே
மருந்தும் -இத்யாதி

மறு பிறவி தவிரத் திருத்தி
புனர் ஜென்மம் இல்லாத படி
ஜன்மாந்தர ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம் அறும் படி திருத்தி

—————-

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-ஸ்ரீ நாச்சியார் திருமொழி-12-2-

பாணியாது என்னை மருந்து செய்து -பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பாணித்தல் -காலம் தாழ்த்தல் —
காதல் நோயைத் தீர்க்கப் பரிஹாரம் செய்தல்
தாழாதே எனக்கு வேண்டும் பரிஹாரம் பண்ணி –

பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பண்டு -சம்சஸ்லேஷ நிலை
பண்டு பண்டு -முந்திய நாயகனைப் பற்றி அறியாத நிலை
சம்ஸ்லேஷத்துக்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாக்கப் பார்த்தி கோளாகில்-
கலக்கப் புக்கவன்று தொடங்கி-மெலிவுக்கு இறே கிருஷி பண்ணிற்று –

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
மாணியுருவாய் –
உண்டு என்று இட்ட போதொடு -இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதொடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையவனாய்

யுலகளந்த மாயனைக் காணில் –
த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனைக் காணில் –
குண ஜ்ஞானத்தால் ஜீவித்து இருக்கும் அவஸ்தை இல்லை என்கிறது
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருக்கும் -8-3- நிலை தாண்டிற்றே

தலை மறியும்-
தொடருகிற பாம்பை திரிய விடுவிக்குமா போலே –
பிரிவாற்றாமையால் வந்த நோய் தீரும்

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் –
உங்கள் ஆணையே -உங்கள் மேல் ஆணை என்றபடி
நீர் என்னை நோக்க வேண்டில் -என்னுதல்
நான் தெரிந்து இருந்து உங்களுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் படியாக
என்னை நோக்கப் பார்க்கில் -என்னுதல்

ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-
அவன் தீம்புக்கு பெற்ற தாய் -பெரு நிலை -துணை -நிற்கும் ஊரிலே-
என்னைக் கொண்டு பொய் போகடப் பாருங்கோள்-
அங்கனம் தீமை செய்வார்களோ நம்பீ-ஆயர் மட மக்களை –பெரிய திருமொழி -10-7-11-என்று இறே அவள் சொல்லுவது

———–

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்

பரம பிராப்யமாய் –
நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை –
உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று

பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்

தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————–

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—ஸ்ரீ பெருமாள் திருமொழி- 5-4-

வாளால் அறுத்து சுடினும் –
ஹிம்சகர் சாதனத்தைக் கொண்டு அறுப்பது -சுடுவதானாலும்

மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் –
அஹிதங்களை மேல் மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும்
பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு
தனது சர்வஸ்தையும் கொடுத்து
அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே

மாயத்தால் மீளா துயர் தரினும் –
மம மாயா -என்னும்படி உன்னுடையதான பிரகிருதி சம்பந்தத்தாலே
அபுநராவர்த்தி லஷணமே துக்கத்தை விளைக்கிலும்

வித்துவ கோட்டு அம்மா ! நீ-மீளா துயர் தரினும் –
எனக்கு த்யாஜ்யமான சம்சாரத்திலே என்னுடைய ரஷணத்துக்காக குடி ஏறி இருக்கிற நீ
நித்ய துக்கத்தை விளைக்கிலும் –
பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—
ஆளா -ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக

வுன தருளே பார்ப்பன் –
இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –
இப்படி இருக்கைக்கு நிபந்தனம் என் என்னில்

அடியேனே—
அடியேன் ஆகையாலே –
என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவன் ஆகையாலே –
அன்று கண்டாப் போலே கையும் வில்லுமாக நிற்பன் –
அவனுக்கு-ராவணனுக்கு- அச்சத்தாலே தனக்கு உருவு வெளிப்பாட்டாலே முன்னே நிற்பர்

தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் க்ருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாகக் கொண்டு
புருஷர் ஷப–நீ அநு கூலனாய் ஓரடி வர நின்றால்-அத்தையே நினைத்து
நீ பண்ணின அபகாரம் எல்லாம் புத்தி பண்ணுவாரோ
அவர் ஸ்ரீ புருஷோத்தமன் காண் –முன்பூழி காணான்-குற்றத்தை மறக்கும் –
அன்றியே –
குற்றம் செய்த நாளை நினைக்கில் குற்றம் என்று ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்த படியே
இனி நீர் அல்லது புகல் இல்லை என்கிறார் —

————-

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

அற்றவர்கட்க்கு அரு மருந்தே! –
கர்ப்ப பூதாஸ்த போதநா –என்று இருக்குமவர்களுக்கு -அரு மருந்தே —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-என்று இருக்கும் மருந்து ஆனவனே

—————-

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே -ஸ்ரீ பெரிய திருமொழி—5-7-2-

பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும்
இப்படிப் பட்ட சம்சார சம்பந்தத்தை போக்கக் கடவதான பேஷஜமும்
( நிர்வாணம் பேஷஜம் பிஷக் அவனே )
இஸ் சம்சார பந்தம் அற்றால் இருக்கக் கடவ நிஷ்கல ஸ்வபாவமும்

———–

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

இம்மையை மறுமைக்கு மருந்தினை –
ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –

———–

வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பா லவன் எங்கள் ஆயர் கொழுந்தே–1-7-2-

வைப்பாம் –
ஆடு அறுத்துப் பலியிட்டு-‘-அரைப்பை யாக்கி -பணப்பை யாக்கி,- இஷ்ட விநியோக அர்ஹமாம்படி –
தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் -சேமித்து வைக்கும் சேமநிதி போன்று,
ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.

மருந்தாம் –
‘ஆயினும்,-ஷூத்ர – சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ் வுயிர்கட்கு அன்றோ
சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்?
இவன் அவ் விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில்,
அக் குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான
சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார்.
இதனால், பிராபகத்வம் கூறிய படி.

ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ் விரண்டாலும்
பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர்.

————–

அணங்குக்கு அரு மருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே–4-6-7-

அணங்குக்கு அரு மருந்து என்று –
அப்ராக்ருத ஸ்வபாவையான -தெய்வத் தன்மையை யுடைய இவளுக்குத் தகுதியான பெறுதற்கு அரிய மருந்து என்று.
இவள் வைலக்ஷண்யமும் -வேறுபட்ட சிறப்பினையும் அறிந்திலீர்கோள்’ என்பாள், ‘அணங்குக்கு’ என்கிறாள்.

—————-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே–5-2-7-

மறுத்தும் அவனோடே கண்டீர்-
நீங்கள் ‘அவனிலும் இவர்கள் ஆஸ்ரயணீயர்- அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற,
இவர்கள் உங்களை அவன் பக்கலிலே கொண்டு போய் அன்றோ காப்பாற்றுவது.
“நஹிபாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்”-ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 19.
காப்பாற்றுவதில் நிலை நிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும்
ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,
காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே,
என்றும் ரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலே யாம்.
வேறு சிலரை ஆச்ரயிக்க -ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான்

————-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

செடியார் வினைகள் தீர் மருந்தே-
செடி -பாபம் –
பாபத்தோடே பொருந்தின அஸத் கர்மங்களால் -தீய வினைகளா லுண்டான
துக்கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே!
அது புஜிப்பிக்கைக்கு -உண்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி.
அன்றிக்கே, தூறு மண்டின பாவங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே என்னுதல்.
அந்த அமுதம் தானே காணும் மருந்தாகிறது.
மருந்தும் பொருளும் அமுதமும் தானே”–மூன்றாந்திருவந். 4. – என்றும்,
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு”-திருவாய். 9. 3 : 4 – என்றும் கூறுகிறபடியே
அவன் தன்னை ஒழிய வேறு மருந்தும் இல்லையே.
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் அன்றோ.பெரியாழ்வார் திரு. 5. 3 : 6.–

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி.

இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனி வாய்ப் பெருமானாய்,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
பட்டர், “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’
என்று இருக்கின்றதே, என்ன ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே இருக்கும்
திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————-

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின் னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலி னீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!–7-1-4-

வினையேன் வினை தீர் மருந்தே –
பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே!
என்னுடைய சப்தாதி விஷய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் -ப்ராவண்யத்தை -ஈடுபாட்டினைப் போக்கி
என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?

————-

தீர் மருந் தின்றி ஐவர் நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங் குடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்!அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

தீர் மருந்து இன்றி-
வேறு ஒரு பிரதி கிரியை -பரிகாரம் – உண்டாகிலும் ஆற்றலாம் அன்றோ?
சர்வ சக்தியாலும் போக்கப் போகாதன்றோ?

ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு-
ஐம்புலன்களாகிற நோயாலே இவ்வாத்மாவை முடிக்கும் சரீரமாகிற செக்கிலே இட்டு.

திரிக்கும் ஐவரை-
பாதிக்கிற ஸ்தோத்ராதிகளை -வருத்துகின்ற ஐம் பொறிகளை. என்றது,
சரீரத்திலே புகுவித்து ஓசை முதலிய புலன்களைக் காட்டி நெருக்குகிற செவி முதலிய பொறிகளை’ என்றபடி.

நேர் மருங்கு உடைத்தா அடைத்து-
எதிரும் பக்கங்களுமாக அடைத்து. என்றது,
அபிமந்யு என்ற ஓர் இளைஞனை நலிகைக்கு அதி ரதர் மஹா ரதர் என்னுமவர்கள் அடங்கலும்
சூழப் போந்து அடைத்தால் போலே, இந்திரியங்களுக்குக் கை யடைப் பாக்கி’ என்றபடி.

நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-
இதுவோ தான் எனக்கு நிலை நிற்கப் புகுகிறது?
இங்ஙனே தான் செல்லுகிறதோ?’ என்று இருக்க ஒண்ணாதபடி உன் பக்கல் செய்த
நம்பிக்கையையும்-விஸ்வாசத்தையும் – குலையா நின்றாய்.
ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக் கொண்டாலோ?’ என்றான்;

ஆர் மருந்து இனி ஆகுவார்-
என் இடையாட்டம் பிறரைக் கொண்டு காரியம் இல்லை:
நான் நோவு படா நின்றேன். நீ கை வாங்கினாய்.
ஆன பின்பு எனக்கு ஒரு ரஷகர் உளரோ? நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு:
நீ விட்ட அன்று யார் உண்டு? ஆனால் நீரோ?’ என்றான்;
நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?
மருந்தாம் போதும் ஒரு சேதநன் வேணுமன்றோ?
மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந் திருவந்தாதி, 4.

——————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று –
நங்கள் போக மகிழ்ச்சிக்கு-மருந்தே -என்று –
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்தை-வர்த்திப்பவனே –
மேலும் மேலும் வளர்க்கின்றவனே என்று –

இப்படிச் சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –
பெரும் தேவர் –அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான –சம்சாரத்தின் சம்பந்தம் சிறிதும் இல்லாதாரான
நித்ய ஸூரிகள் –

குழாங்கள்-
அவர்கள்-கிண்ணகத்தில் இழிவாரைப் போலே-திரள் திரளாக ஆயிற்று இழிவது –

பிதற்றும் –
ஜன்னி ஜுரம் பிடித்தவர்களைப் போன்று-பலவாறாக கூப்பிடா நிற்ப்பார்கள் –

பிரான் –
அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் உபகாரகன் –

—————

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——மூன்றாம் திருவந்தாதி–3-

தீர்க்கும் மருந்து –
அனுபவித்தால் அல்லது விடாத நரகத்தைக் கடக்கைக்கு பேஷஜம் ஆனவன்
மருத்துவன் என்று அவன் ஸ்வ பாவம் சொல்லுகிறது
கருத்து இருக்கும் என்னுமா போலே
மனஸ்ஸூக்குப் புகுருகைக்கு அடி இவ்வாத்மா தானே இறே
ஆத்மைவ ரிபுராத் மன –

வரு நரகம் தீர்க்கும் மருந்தாய்க் கொண்டு மனத்துள்ளான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –

அனுபவித்து அல்லது விடாத நரகத்தைக் கடைக்கைக்கு பேஷஜம் ஆனவன் –
மனத்துள்ளான்-என்னுடைய மனசிலே உள்ளான் –

தண் துழாய் மார்வனாய் மலராள் தனத்துள்ளானாய் மா கடல் நீருள்ளானாய்
சினத்துச் செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணனாய் மனத்துள்ளானவன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –

ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அத்தாலே தேங்கின கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்-
அந்த மா கடலிலே பள்ளி கோளைப் பழக விட்டு என் மனக் கடலிலே வந்து நித்ய வாசம் பண்ணி வாழுமவனானவன் –
தப்பாமல் வரக் கடவதான சம்சாரம் ஆகிற நரகத்தை சவாசனமாகப் போக்கும் ஒவ்ஷதம்

———–

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே –
மருந்து என்று
விரோதி நிரசன மாதரத்தைக் கொண்டு
பொருள் என்று
உபாயம் ஆக்கி
அமுதமும் தானே -என்று
உபேயத்தைச் சொல்லுகிறது –

விரோதியைப் போக்குவானும்
அபிமதத்தைத் தருவானும்
அபிமதம் தானும்
அவனே -என்றபடி

அநிஷ்ட நிவாரண பூர்வகமான
இஷ்ட பிராப்தி பண்ணித் தருவானும் அவனே -என்றபடி

அன்றிக்கே
மருந்து என்று உபாயமாக்கி
பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது
என்றுமாம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின
ஜஞ்யாக்யம் பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து

அர்தியாய் வருகையாலே பொருளானான்

திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்

திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே
சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –

திருந்திய செங்கண் மால் –
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம்படி
திருந்திச் சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்

அன்றிக்கே
திருந்திய –
ப்ராப்ய பிராபகங்கள் ஆகை-
ஸ்வரூப பிரயுக்தமாகை -என்றுமாம்

அன்றிக்கே
இவ்வாத்மா திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே
இவற்றுக்கு ஈடாக தன்னைத் திருத்திக் கொண்டு இருக்கும் -என்றுமாம்

இவை திருந்தாதே இருக்குமா போலே
அவன் என்றும் திருத்தி இருக்கும் -என்றுமாம் –

செங்கண்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்

மால் –
வ்யாமுக்தன் -என்றுமாம் –
ஆங்கே பொருந்தியும் நின்று –
ஸ்ரீ யபதி வந்து நீர் ஏற்கிறான் என்று
கூச வேண்டாதபடி இரப்பிலே பொருந்தி நின்று –

பொருந்தியும்
ரஷணத்திலே பொருந்தப்பட்டு –

நின்று –
அதிலே திரு உள்ளம் மண்டி நின்று

உலகம் உண்டு உமிழ்ந்தும்
லோகத்தை வயிற்றிலே வைத்து காத்தும்
வெளி நாடு காண உமிழ்ந்தும்
நீரேற்றும்
தன்னது அல்லாதது கொள்வாரைப் போலே

நீர் ஏற்றும்
அலாப்ய லாபம் போலே

மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
நீர் ஏற்ற லோகத்தை மூவடியாலே அளந்தவனுடைய திருவடிகள் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
உண்டு -மருந்தான படி
உமிழ்ந்து -பொருளான படி
செங்கண் மால் -அமுதமான படி
என்றுமாம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –
மருந்து என்று உபாயம் ஆக்கி பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

————

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–62-

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

———–

மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே —-ஸ்ரீ பெரிய திருமடல்

மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று
கடலைச் சரணம் புக என்றால் போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே
இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள் -என்று பட்டர் –

முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்-
இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ
முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ
வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –

மன்னு மருந்து –
தப்பாத மருந்து –

அறிவீர் இல்லையே –
அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –
ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ -என்று
இவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே
பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இறே
இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இ றே –

மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க
சேய்க்களின் கழுத்திலே மணி யோசையானது செவிப்பட்டது –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –ஒன்பதாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

July 20, 2021

நிகமத்தில் –

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ
ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-
அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்பது என் எண்ணம் –
என்று அவன் அருளிச் செய்தாப் போலே
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார் -கற்பவர்கள் எனக்கு ப்ரியகரர் -பிரியத்தை செய்கின்றவர்-என்கிறார்

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து –
அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள்- அடையப் படும் பொருளும்
அடைதற்கு உரிய வழியும் -இல்லை -என்று அத்யவசித்து -துணிந்து –

இவர்க்கு இப்படி இந்த வ்யவசயத்தை -துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –
அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ –என்கிறார் மேல் –

தாது சேர் தோள் கண்ணனை –
அவனுடைய ஸுந்தர்யம் -பெரு வனப்பு ஆயிற்று -இவரை இப்படி துணியப் பண்ணிற்று –

தீதிலாத-
தீது இல்லாமையாவது
கதாந்தர ப்ரஸ்தாவம் -பகவானுடைய சம்பந்தம் இல்லாத சரிதங்கள் இதில் கூறப் படாமல் இருத்தல் –

ஒண் தமிழ்கள் –
ஒண்மையாவது-உள் உண்டான அர்த்த விசேஷங்கள் எல்லாம் வெளிட்டு கொடுக்க வற்றாய் இருக்கை –
அன்றிக்கே –
நிர் தோஷமாய்- குற்றம் இல்லாதவையாய் -பஹு -பல குணங்களை உடைத்தாய் -இருத்தல் என்றுமாம் –
அகில ஹேய பிரத்யநீக கல்யாண குணங்கள் நிறைந்தவன் போலே –

குருகூர்ச் சடகோபன் சொன்ன இவை ஆயிரத்துள் இப்பத்தும் ஓத வல்ல பிராக்கள்–

இவ் உலக வாழ்க்கையின் தண்மையையும்-
சர்வேஸ்வரன் உடைய பிராப்ய பிராபகங்களின் உடைய தன்மையையும் – அன்றோ
இத் திருவாய் மொழியில் சொல்லப் பட்டன –
இப் பத்தினை கற்க வல்ல உபகாரகர் – இதனைக் கற்கவே அப்யஸிக்கவே –
தீய வழியைத் தவிர்ந்து – நல் வழி போகத் தொடங்குவார்கள் –
இதற்கு மேற்பட இவர்கள் இவருக்கு செய்யும் உபகாரம் இல்லை அன்றோ –

நம்மை ஆளுடையார்கள் பண்டே –
ஒரு பிறவியிலே இதனைக் கற்கைக்கு -அப்யஸிக்கைக்கு ஈடான -தகுதியான அதிகாரத்தை
உடையராய் இருப்பார்கள் ஆகில்
அவர்கள் பண்டே நமக்கு நாத பூதர் -தலைவர் –
அத்யேஷ்யதே -எவன் படிப்பானோ -அவன் என்கிறபடியே
இதனைக் கற்பதற்கு அப்யசிக்கைக்கு ஈடான தகுதியான தன்மை உள்ளவர் பிறவி தொடக்கி நமக்கு நாதர்

படிக்கிறவன் – நிகழ் காலத்தில் சொல்லாமல்–படிப்பவன் -எதிர் காலத்தில் சொன்னது போலே –
படிக்க தகுதி யானவர்கள் -என்கிற பொருளில்
இங்கும் ஓத வல்ல பிராக்கள் -ஓதுவதற்கு தகுதி உள்ளவர்கள் -என்று அருளிச் செய்கிறார்-

———–

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை –
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று
முறை கெடவுமாம்
முறையிலே ஆகவுமாம்
காணும் இத்தனையே வேண்டுவது –

குரை கடல் கடைந்தவன் தன்னை —
இந்த அபேக்ஷை விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்
கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது

மேவி நன்கு அமர்ந்த –
இந்த ஸ்வபாவ தன்மையின் அனுசந்தானத்தாலே நினைவாலே பொருந்தி
கால் தரையிலே பாவினார் ஆயிற்று –

வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் –
விஸ்மய நீயமான பரந்த புனல் நிறைந்த திருப் பொருநலை உடைய
திரு வழுதி நாட்டுக்கு தலைவரான ஆழ்வார்

நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் –
மனத்தின் சஹகாரம் -துணையும் இன்றிக்கே ஆயிற்றுச் சொல்லிற்று
அங்கனம் சொன்ன ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் – வல்லவர்கள்

ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே –
யுலகம் மூன்று அளந்தான் அடி இணை -யுள்ளத்து -ஓவுதல் இன்றி-ஒர்வாரே
ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார்

இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்
என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே
இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று

இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம்
மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்

துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத
யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்
உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்
அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன் -என்கிறபடியே –

———-

நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார் பரம பதத்தே செல்லுதல் ஆச்சர்யம் அன்று –ப்ராப்தமே தக்கதே –என்கிறார் –

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-

சீலம் எல்லை இலான் அடிமேல் –
அமர்யாத எல்லை இல்லாத சீல குணத்தை உடையவனுடைய திருவடிகளிலே –
இதனால்
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது -சீலாதிக்யமாயிற்று –சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று
அதனை நிகமிக்கிறார் -முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-
அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரியை உடைய ஆழ்வார்

அன்றிக்கே
கோலம் நீள் என்ற சொற்கள் இருப்பதினாலே
அணி -என்பதனை
அடி மேல் அணி மாலை -என்று
மாலைக்கு அடையாகக் கோடலுமாம் –

ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –
இப் பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது
யுக்தி மாத்திரம் -இப் பாசுரங்களை ஒரு கால் சொல்லுதல்
பாட தாரணம் -இவற்றைப் பாடம் செய்தல்
அர்த்த அனுசந்தானம் -இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –
என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –

வைகுந்தம் ஏறுதல் பான்மையே –
பரம பதத்தில் செல்லுதல் பிராப்தம் -இயல்பாகவே இருக்கும் –
யாங்கனம் -எனின்

மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப் பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு
பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும் என்பதாம் –

தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பிராப்தம் – தாய பாகமாக அடைய வேண்டியதாகவே
இருக்கும் அன்றோ –

—————

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி தன் போக்யத்தையால் -இனிமையினால் நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் –
ஹ்ருதயம் ஈர்க்கப் பண்ணும் -என்கிறார்

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

ஆறா மத யானை அடர்த்தவன் தன்னைச் –
ஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய குவலயா பீடத்தை அழித்தவனை –
அதனை அழித்தாப் போலே-என் விரோதியைப் போக்கினவனை –

சேறு ஆர் வயல் –
குவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக-ஒட்டாதே கிடந்தது –

தென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –
கிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே-நூறு நூறாக சொன்னபடி
பாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே
பாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் – தரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –

இப்பத்தும் — வானவர் தம் இன்னுயிர்க்கே -ஏறே தரும் –
இத் திருவாய்மொழி நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-
அன்றிக்கே
நித்ய ஸூரிகளுக்கு ஏறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-

—————

நிகமத்தில்
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்
என்கிறார்

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த –
எங்கும் தழைத்த -இன்பம் தலைப் பெய்து-
உலகம் எல்லாம் வெள்ளம் இட்ட நிரதிசய -எல்லை இல்லாத ப்ரீதியை உடையராய்க் கொண்டு –

பல் ஊழிக்குத்தன் புகழ் ஏத்தத் –
காலம் உள்ளதனையும் குணங்களை ஏத்தும்படி –

தனக்கு அருள் செய்த-
உலக மக்களில் அந்ய தமர் -வேறு பட்டவரான தமக்கு
மயர்வற மதிநலம் அருளிச் செய்தபடி –

மாயனைத் –
இவ் உலக மக்கள் நடுவே என்னை ஒருவனையும் விசேஷ கடாஷம் செய்த
ஆச்சர்யத்தை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த
தன் புகழ் ஏத்த பல ஊழிக்கு தன்னை அருள் செய்த மாறனை என்று கொண்டு கூட்டி
அனுபவிப்பார்க்கு நிரதிசய -எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைப்பதாய்
எங்கும் ஒக்க பரம்பின தன் கல்யாண குணங்களை
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நான் அனுபவிக்கும்படி செய்த மாயன் –என்றுமாம் –

இவர் குண ஞானத்தால் -குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –
நித்ய ஸூரிகள் அனுபவத்தையும்
தமக்கு அவர்களோடு ஒத்த ப்ராப்தியையும் அனுசந்தித்து -சம்பந்தத்தையும்
நினைத்து நோவு பட்டார் என்றும்
ஒக்க இழந்து இருக்கிற இவ் உலக மக்கள் படியைப் பார்த்தவாறே
இன் நோவு தான் பேறாய்த் தோற்றிற்று –

தென் குருகூர் சடகோபன் சொல் -ஆயிரத்துள் இவை –
சடகோபன் சொல் என்று பரோக்ஷ நிர்த்தேசத்தாலே -படர்க்கையில் கூறுகையாலே
தனக்கு அருள் செய்த -என்று படர்க்கையில் கூறலாம் அன்றோ
பகவானாகிய வால்மீகி ருஷி -என்னுமாறு போலே –

ஒன்பதோடு ஒன்றுக்கும்-
கீழ் ஒன்பது பாசுரங்களில் உண்டான வியஸனம் -துக்கம் ஸூகம் என்னும்படி-வியஸனம்-
துக்கம் மிக்க பத்தாம் பாசுரத்தை உடைய இவை —
ஸ்மாரக -நினைப்பு ஊட்டுகிற பொருள்களாலே
பிழைப்பில் நசை யோடு நோவு பட்ட ஒன்பது பாசுரங்களோடு
பிழைப்பில் நசை அற்ற ஒரு பாசுரத்துக்கும் –

மூ வுலகும் உருகுமே –
ஆரேனும் ஆகிலும் தரியார்
என்னுடைய ஆர்த்த நாதத்தாலே –துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது என்றவர்க்கு
பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு ஸைதில்யமே -நலிந்து வருந்துவதே பலித்து விட்டது

எங்கும் தழைத்த இன்பம் தலைப் பெய்து–பல் ஊழிக்கு தன் புகழ் ஏத்த
தென் குருகூர் சடகோபன்–தனக்கு அருள் செய்த மாயனை–சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும்–மூ வுலகும் உருகும் –

—————-

நிகமத்தில்
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து
அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் –
கம்சன் தான் நினைத்த நினைவினை அவன் தன்னோடு போம்படி செய்தான்
தன் பக்கல் இல்லாதது–வந்தேறி ஆதலால் கடியன் ஆய் -என்கிறார்
கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ –
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –

பிரான் தன்னை –
முன்பு உபகாரகன் ஆனவன் கண்டீர் நம்மை அழித்தான் –

உகந்தாரை அழித்தல் அன்றோ பாதகம் -தீமை யாவது
விரோதிகளை அழிக்குமது உபகாரகம் அன்றோ –

கொடி மதிள் தென் குருகூர்ச் –
கம்சனை வென்ற விஜயத்துக்கு -வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று
ஸ்வாமியின் விஜயத்துக்கு -வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே அன்றோ கொடி கட்டுவது –

சடகோபன் சொல் வடிவு அமை ஆயிரத்து –
சமுதாய சோபையை -முழுவதும் அழகினை உடைத்தாய் இருக்கை-என்றது
கட்டடங்க அழகியதாய் இருக்கையைத் தெரிவித்த படி
விஜயம் -வெற்றி உண்டாகையாலே -பிரசஸ்தி -வெற்றி மாலைகளும் செல்லா நிற்கும் அன்றோ –

இப் பத்தினால் சன்மம் முடிவு எய்தி-
பிறவிகளின் தொடர்ச்சிக்கு முடிவினைப் பெற்று –வசனத்தை லபித்து –

நாசம் கண்டீர்கள் எம் கானலே –
பிறவிகட்கு அடியான சம்சாரமும் நசிக்கும்
கானல் –ம்ருக த்ருஷ்ணிகை –பேய்த் தேர்
இங்கும் இங்கே பிறக்க இருக்காமல் பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்
அனுசந்தானம் சாத்மிக்கும் -பொறுக்கக் கூடிய தேசத்திலே புகுவார்கள் –

————-

நிகமத்தில் –
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு -கற்பார்க்கு பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –
பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் – என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும்-
ஒரு நாளும் விட நினையாமல்-அவ் ஊரில் நித்ய வாசம் செய்யுமவனை –

ஒண் சுடரை –
பின்னானார் வணங்கும் சோதி -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
அவ் ஊரில் நிலையால் வந்த புகர் இருக்கிறபடி –

அன்றிக்கே
அவ் ஊரில் போக்யதையால் -இனிமையால் வந்த புகர் என்னுதல் –
பிற் பாடர்க்கு முகம் கொடுக்கும் நீர்மையால் வந்த புகர் -என்றபடி –

ஒழிவில்லா –
அவன் அவ் ஊரை நீங்கில் தரிக்க மாட்டாதவாறு போன்று
அவனை ஒழியில் தரிக்க மாட்டாதவள் -என்கை

நச சீதா த்வயா ஹீநா நசாஹம் அபி ராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மச்த்யாவிவோத்த்ருதௌ-அயோத்யா -33-31-
எனப் படுமவள் அன்றோ இவளும் –

அணி மழலைக் கிளி மொழியாள் –
அழகிய முக்தமான -இளமையான கிளியின் பேச்சுப் போல் இருக்கிற பேச்சினை உடையவள் –

அலற்றிய சொல் –
தன் ஆற்றாமையாலே-அக்ரமமாக -முறை பிறழச் சொல்லிய சொல் –

வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன்-
பிராட்டி படியில் ஒன்றும் குறைவு அற்று இருக்கிற ஆழ்வார் –

வாய்ந்து உரைத்த –
கிட்டி உரைத்த -என்றது-பாவ பந்தத்தால் சொன்ன -என்றபடி –

அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் –
கேட்டவர்கள் நெஞ்சினை ஒரு நாளும் விடாமல் தங்கி இருக்கிற இப் பத்து -என்றது
இப் பாசுரத்தை கேட்டார்க்கு-சம -அக் காலத்தில் போலே
எல்லாக் காலங்களிலும் இன்பம் பிறக்கும்படி ஆயிற்று இருப்பது -என்றபடி –

நோய் அறுக்குமே –
பகவானைப் பிரிதல்-விஸ்லேஷம் – ஆகிற நோயை அறுக்கும் -என்றது
கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா-கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து கிளேஸிக்க வேண்டா –
விஸ்லேஷம் -பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

———–

நிகமத்தில் –
இத் திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்
இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும்
அனுப்பிக்கப் பெறுவர் என்கிறார்

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
நாநா வர்ணங்களான -பல வகைப் பட்ட நிறங்களை உடைய
ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களை உடைத்தாய்
நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமையை உடைய
திரு நாவாயிலே நின்று அருளினவனை

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் –
திண்ணியதான மதிளை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார்
அருளிச் செய்த
திரு நாவாய்க்கு ரக்ஷை -காவல் திரு நகரியின் மதிள் போலே காணும்
ஆழ்வார் பரியவே அப் பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்

அன்றிக்கே –
சர்வேஸ்வரனுக்கு தனம் -செல்வம் ஆழ்வார் ஆகையாலே
செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –

பண்ணார் தமிழ் –
பண் மிகுந்த தமிழ்

ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மண் ஆண்டு –
இஹ -இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –

மணம் கமழ்வர் மல்லிகையே
மல்லிகை மணம் கமழ்வர் –
மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்
இவருடைய மநோ ரதம் -எண்ணம் அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –

———–

நிகமத்தில்
அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி
அவனைப் பெறுங்கோள் என்கிறார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் -மாலைப் பூசல்
அவனைப் பிரிந்து-விஸிலேஷித்து – தங்களுடைய பிராணங்களை -உயிர்களைக் கொண்டு
தரிக்க மாட்டாதே ஷமைகள் இன்றிக்கே –
அவனுடைய வரவுக்கு உறுப்பாக ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை உடைய ஆயர் பெண்கள் –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து -நாச்சியார் திருமொழி -என்கிறபடியே
திரு ஆய்ப்பாடியிலே ஐந்து லஷம் குடியில் பெண்கள் அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து இருக்க
வரும் காலத்தில் அவன் வரவு காணாமையாலே கிருஷ்ணனைப் பிரிந்த விரஹத்தாலே
ஒரு ஸந்த்யையில் -மாலைப் பொழுதில் கூப்பிட்ட கூப்பீடு ஆயிற்று –

அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன் –
அவனுடைய பிரிவால் நோவுபட்டு அவர்கள் எல்லாரும் பட்ட கிலேசத்தை -துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை

அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த –
சர்வரையும் -பிரளய காலத்தில் பாதுகாத்து அழிந்தவற்றை அடைய உண்டாக்கின
சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஆயிற்று சொல்லிற்று –

தொண்டீர் அணி குருகூர் சடகோபன் மாறன் அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல் சொன்ன இப்பத்தும் கொண்டு
அம்மாலை நண்ணித் தொழுது அவனியுள் அலற்றி உய்ம்மின் -என்று அந்வயம் –
இப்போது இது சொல்லிற்று
விரஹப் பிரளயத்தின் நின்றும் தம்மை எடுக்க வேண்டும் -என்கைக்காக

ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின்
தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே –
அப்படிப் பட்ட வ்யாமோஹத்தை -காதலை விளைக்க வல்லவனைக் கிட்டி
அவனைத் தொழுது-அவன் பக்கல் சாபலம் -ஆசை உடையார்
பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு உய்ந்து போகப் பாருங்கோள் –

இப் பாசுரத்தை அப்யசிப்பாருக்கு -கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று
ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –

———–

நிகமத்தில்-பிரதிபந்தகங்கள் ச வாசனமாக – உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில்
இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –
என்கிறார்

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
வினைகள் உங்கள் பார்ஸ்வத்திலே -பக்கத்தில் வந்து கிட்டாதபடி-ச வாசனமாக –
வாசனையோடு போகவேண்டி இருந்தீர்கோள் ஆகில்

மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் –
நித்யமான- அழியாத மாடங்களை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே
திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை

பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
அநாப்தர் -நம்பத் தகாதவர்கள் சொல்லிலும் விட ஒண்ணாத போக்யதை – இனிமையை உடைத்தான இப் பத்து-
புஷ்பம்-பரிமளத் தோடே – மலர் மணத்தோடு மலருமா போலே
இசையோடு கூடிப் பாடின தமிழ் –

பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே –
ப்ரீதி பூர்வகமாக முன்னாகப் பாடி இருந்த இடத்தில் இராதே ஆடி
ப்ரீதியினால் பிரேரிதராய் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு அவன் திருவடிகளில் விளுங்கோள்
இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –எட்டாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

July 20, 2021

நிகமத்தில் -இத் திருவாய் மொழியில் சொன்ன அர்த்தத்தை ஸங்க்ரஹேண- சுருக்கமாக சொல்லி
இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம் -என்கிறார்

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

பெரிய அப்பனை –
உபய விபூதிகளையும் உடையவனை

பிரமன் அப்பனை –
சதுர்தச புவன -பதினான்கு உலகுக்கும் ஈஸ்வரனான ப்ரஹ்மாவுக்கும் உத்பாதகனானவனே -தந்தை யானவனே

உருத்திரன் அப்பனை –
பிரமன் புத்ரனான உருத்திரனுக்கும் நிர்வாஹகன் ஆனவனே –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான் முகனும்
தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் –

மலர் வந்த நான் முகன் திரு மைந்தன் அவன் மைந்தன் மதி சூடி –

முனிவர்க்கு உரிய அப்பனே –
சனகன் முதலிய மகரிஷிகளுக்கு ப்ரஹ்ம பாவனையே ஆகையாலே
முனிவர்க்கு உரிய அப்பனே -என்கிறது
உரிய -என்று
அணுமையைச் சொன்னபடி

அமரர் அப்பனை –
தேவர்களுக்கு உத்பாதகனானவனை -தந்தை யானவனை

உலகிற்கு ஒரு தனி அப்பன் தன்னை
இப்படி பிரித்து சொல்லுகிறது என் –
சகல -எல்லா உலகங்கட்கும் ஏக -ஒரே நிர்வாஹகன் ஆனவனை
பூதா நாம் யோ அவ்யய பிதா -எல்லா பிராணிகட்கும் அழியாத தந்தை என்று அன்றோ இருப்பது
இப்போது இவை சொல்லுகிறது என் என்னில்
பெரிய நிதி எடுத்தவன் இன்னது கண்டேன் இன்னது கண்டேன்
என்னுமா போலே –
ஸ்வரூபத்திலும் குணத்திலும் அதி சங்கை -ஐயம் கொண்ட போது இழந்தாராய்
இருந்தனவற்றைப் பெறுகையாலே இவற்றைப் பிரித்து சொல்லுகிறார்
முனிவர்க்கு உரிய அப்பனை என்றதனால் ஆஸ்ரித -அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும்
தன்மையை சொல்லுகிறது-

பெரிய வண் குருகூர் –
ரக்ஷகன் -காப்பவன் தாழ்ந்தவாறே ஐயம் கொள்ளுகையும்-உபகார ஸ்ம்ருதியாலே –
செய் நன்றி நினைவாலே ஹ்ருஷ்டராகையும் -உவகையர் ஆகையும் ஆகிற இவற்றுக்கு அடி –
அவ் ஊரில் பிறப்பு என்கை

வண் சடகோபன் –
மானச அனுபவ மாத்ரமாய் விடாதே -பிரபந்தமாக செய்து கொடுத்த ஔதார்யம்

பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை இவையும் பத்து –
அவனைத் தாம் ஆசைப்பட்ட படியைச் சொன்ன பத்து

உரிய சொல் மாலை
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று தைத்ரியம் -9-1-
வேத வாக்குகள் எந்த ஆனந்த குணத்தின் நின்றும் சொல்ல மாட்டாது மீண்டனவோ -என்கிறபடி
மீளுகை அன்றிக்கே பகவான் உடைய குணங்களுக்கு நேரே வாசகமாக இருத்தலின் –
உரிய சொல் மாலை -என்கிறது

தொண்டீர் நங்கட்கு இவற்றால் உய்யலாம்
அநாதி காலம் பகவான் இடம் விமுகராய் -விருப்பு இல்லாதவர்களாய் –
விஷயாந்தர ப்ரவணராய் -வேறு விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் –
அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்
அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -–
அசத் சமராய் -இல்லாதவன் ஆகிறான் என்கிறபடியே
இல்லாதவர்களைப் போலே இருக்கிற நுங்கட்கு –
சந்தமேனம் -இருக்கின்றவனாக அறிகிறார்கள் -என்றபடியே உஜ்ஜீவிக்கலாம்-

இதே போலே –
நங்கட்கு என்பதை நுங்கட்கு அர்த்தமாக
கம்பரும்
செங்கயல் போல் கரும் நெடும் கண் தேமரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன -சூர்பணகை படலம் -119-

————–

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய
எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -என்கிறார் –

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு –
திருவடிகளை கிட்டுகையில் உண்டான சங்கத்தாலே -விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை
அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-என்றது
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே
திருவடிகளின் பற்றாலே -ஓவ்பாதிகமான -ஒரு காரணம் பற்றி வந்த -பாஹ்ய சங்கத்தை -புறம்பு உண்டான
பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி

கோது இல் புகழ் –
திருவடிகளில் சங்கத்துக்கு -பற்றுக்கு காரணம் அவனுடைய கல்யாண குணங்கள் –
குணங்களுக்கு கோதாவது-தன்னை ஒழிய புறம்பேயும் நசை செய்யும்படி இருக்கை

கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன –
இப் புகழ்களை உடைய கிருஷ்ணன் திருவடிகளில் ஆயிற்று சொல்லிற்று
பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த

தீதில் அந்தாதி –
பிரபந்தத்துக்கு தீதாவது கதாந்தர பிரஸ்தாபம் – -வேறு கதைகளை எடுத்து கூறுதல் என்றது
ஸ்ரீ ராம சரிதம் சொல்லப் புக்கு முருகனுடைய பிறப்பு புஷ்பக விமான வர்ணனம் என்னும்
இவை தொடக்க மான வற்றினிலே இழிந்து பேசுதலை தெரிவித்தபடி
இந்த நாராயணன் உடைய சரித்ரத்தை சொல்லப் புகுகின்றேன் -என்று தொடங்கி-
நாராயண கதாம் இமாம் –போரின் வகை முதலானவற்றைச் சொல்லுதல்

ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார் –
ஒப்பற்றவையான ஆயிரம் திருவாய் மொழியில் இப் பத்தையும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே –
மிக்க பிரீதியோடே சொல்லுமவர்கள்

ஆதுமோர் தீதிலராகி –
அவித்யாதி தோஷங்களும் -அறிவின்மை முதலான குற்றங்களும் நீங்கப் பெறுவார்
புறம்பு உள்ள நசை அற்று இருக்கச் செய்தே பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக இருக்குமதுவும்
இவர்களுக்கு இல்லை –

இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் –
இஹ -இவ் உலகத்தோடு பர -மேல் உலகத்தோடு வாசி அற குறை அற்று இருப்பார்கள் -என்றது
கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –-இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை
செய்து முடித்தவர்கள்-யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் -என்ற படியே
பர -மேல் உலகத்தில் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25
நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –

தாமே-
ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா
உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்

————

நிகமத்தில்-இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள்
அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

உரையா வெந்நோய் –
வாசா மகோசரமாய் -சொல்லுதற்கு முடியாததாய் -அதி குரூரமான -மிகக் கொடியதான நோய்
தம் அளவில் சாத்மிக்கை -பொறுத்தல் அன்றிக்கே
உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ –

தவிர அருள் நீண் முடியானை –
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் அபேக்ஷித்த விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை
துலுக்கினான் போலே காண் –-என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்
அன்றிக்கே
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
ரஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்

வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நிவ்ருத்தம் -நீங்கின வாறே சம்ருத்தமாய் -நிறைவு பெற்றதுமாய் -ஸ்திரமுமாய் –
நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்

உரையேய் சொல் தொடை ஓராயிரம் –
உக்திகளால் சொற்களால் சேர்ந்த சொல் தொடையை உடைத்தாய்-விலஷணமான ஆயிரம் –

இப் பத்தும் நிரையே வல்லார் –
இப் பத்தை அடைவு தப்பாமல் கற்க வல்லவர்கள்
தமக்கு பிறந்த கலக்கத்தாலே இதில் இழிவாருக்கும் அடைவு பட அனுசந்திக்க -சொல்ல ஒண்ணாது என்று இருக்கிறார்

நீடுலகத்தப் பிறவாரே –
இப் பூமிப் பரப்பை அடைய அனுசந்தித்தால் -நினைத்தால் பரப்பேயாய்
சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள்
ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

————

நிகமத்தில்
இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில்
பரம பதத்து ஏறக் கொடு போய்
பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
பய சங்கா ஹேதுக்கள்- இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே
சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே பய நிவ்ருத்தி ஹேதுக்கள் -அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –

திருந்துலகுண்ட வம்மானை –
கட்டளைப் பட்ட உலகத்தை பிரளயத்தில் அழியாதபடி
திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்த பாதுகாத்த பெரியோனே –

வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை –
கொப்பூழ் மலர்ந்த தண்- மலர்மிசை -வான நான்முகனை -படைத்த மாயோனை –
வானிலே இருக்கிற பிரமனை படைப்பிற்கு தகுதியாக
செவ்வியை உடைத்தாய் திரு நாபி கமலத்தில் படைத்த
ஆச்சர்யத்தை உடையவனை –

கோனை –
நிருபாதிக சேஷியை -காரணம் பற்றாத தலைவனை –
மேலே பிரமன் சிவன் இவர்களுக்கு சொன்ன ஐக்யம் ஸ்வரூபத்தால் அன்று –
கார்ய காரண பாவத்தால் சொல்லிற்று என்னும் இடம் இங்கே ஸ்பஷ்டம் -தெளிவாகும் –

ஆபத்துக்கு துணைவனாய்-சஹனாய் -உலகு உண்ட அம்மானாய் –
அழிந்தவற்றை உண்டாக்க வல்லனாய் -மலர்மிசை படைத்த மாயோனாய் –ப்ராப்தனாய் –
சம்பந்தத்தை உடையவனாய் -கோனை –என்கை-

வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து -பிறவி மா மாயக் கூத்தினையே -முடிக்கும் –
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே
இப் பத்து தானே முந்துற பரம பதத்தைக் கொடுத்து
பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே
இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே
அவனைப் பெற்று எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் – என்கிறார்

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் –
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் எங்கே காண்கேன்-
ஐஸ்வர்ய ஸூ சகமான -இறைமை தன்மைக்கு அறிகுறியான திருத் துழாய் மாலை உடைய சர்வேஸ்வரனை
கண்டு தரிக்க மாட்டாதபடி சபலனான ஆசை உடையனான -யான் எங்கே காணக் கடவேன் –

என்று என்று –
பரத்வம் முதலானவற்றை பெறாத நான்
உன்னை நிரந்தரமாக -எக் காலத்திலும் சொல்லி
ஒரு கால் சொல்லி ஆசையை வெளிப்படுத்தினோம் அன்றோ என்று ஆறி இருக்கிறார் அல்லரோ
லாபத்து அளவும் சொல்லும் இத்தனை அன்றே ஆதலின் என்று என்று -என்கிறார் –

அங்கே தாழ்ந்த சொற்களால் –
தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் -இறைவன் தன்மையில்
ஈடுபட்ட சொற்களாலே –

அந் தண் குருகூர்ச் சடகோபன் –
உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா
அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்
தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் -ஸ்ரீ வசன பூஷணம்
சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது
இவ் வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்

செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும்
மனம் வாக்கு காயம் என்னும் இம் மூன்றும் ஏக ரூபமாய் -ஒரே தன்மையராய்ச் சொன்ன
ஆயிரத்திலும் இப் பத்தையும் –

வல்லார்கள்-
அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் –

இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-
இங்கே விப் பிறப்பே எல்லியும் காலையே காண மகிழ்வர் –
இந்த உலகத்திலே இப் பிறப்பிலே திவா ராத்திரி விபாகம் – பகல் இரவு என்ற வேறுபாடு இன்றிக்கே
பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவார்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-என்று கூப்பிட வந்து முகம் காட்டாத அவத்யத்தை -தாழ்வினை
இப் பத்தினை கற்று வல்லவர்களோடு கடுக வந்து முகம் காட்டி தீருமாயிற்று ஈஸ்வரன் –
மனைவியோடு வெருப்புண்டானால் அவள் பக்கல்
முகம் பெறுகைக்காக பிரஜைகளை ஸ்லாகிப்பாரை -குழந்தைகளைக் கொண்டாடுவாரைப் போலே —

—————

நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றவர்களை
இது தானே திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை –
ஸ்ரமஹரமாய் -ஸ்ரமத்தைப் போக்குவதாய்-தர்ச நீயமான -காட்சிக்கு இனியதான
சோலையை உடைய திருக் கடித் தானத்திலே
நித்ய வாசம் செய்கிற ஸ்ரீ யப்பதியை -திருமகள் கேள்வனை –

மதிட் குருகூர்ச் –
சம்சாரம் காரணமாக உண்டாகிற பாப கூட்டங்களுக்கு துரிதங்களுக்கு -புக ஒண்ணாத
அரணை உடைய திருநகரி –

சடகோப சொல் –
ரகுவர சரிதம் முனிப்ரணீதம் -பால -2-43-ஸ்ரீ வால்மீகி முனிவராலே சொல்லப் பட்ட
ஸ்ரீ ராகவனுடைய சரிதை –என்னுமாறு போலே –

பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும் –
பாலோடு அமுதன்ன ஆயிரம் என்னுதல்
பாலோடு அமுதன்ன இப்பத்து என்னுதல்
வாச்சிய வாசகங்களின் சேர்த்தி இருக்கிறபடி –

பால் -என்றது
சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை
அமுது -என்றது
சடகோபன் சொல் வாசகத்தை –
இது ஆளவந்தார் நிர்வாஹம் –

இப் பத்தும் வியந்து மேலை வைகுந்தத்து இருத்தும் –
சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் –

————

நிகமத்தில்
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் என்கிறார் –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திரு மாலை –
இப் பத்தும் கற்றார்க்கு
பிறவி அறுகை அன்றோ பலமாக சொல்லுகிறது
அதனால் சென்று அனுபவிக்கும் பேற்றினைச் சொல்லுகிறது –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலே
பெரிய பிராட்டியார் உடன் எழுந்தருளி இருக்கக் கண்டு அனுபவிக்கை அன்றோ முக்த ப்ராப்ய போகம் –
முக்தனாலே அடையப் படுகின்ற இன்பம் தான் –

அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் –
திருவடிகளில் சேருகையே தமக்கு ஸ்வபாவமாக உடைய ஆழ்வார் –
அன்றிக்கே –
அடிச்சேர் வகை முடிப்பான் -என்றுமாம் –
ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்
சேஷத்வமே -அடிமையே ஆயிற்று

முடிப்பான் சொன்ன வாயிரத்து –
சம்சார சம்பந்தத்தை அறுக்கைக்காக சொன்ன ஆயிரத்து –
அடிச்சேர் முடிப்பான் என்றுமாம்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் –
சன்ம மானது விட்டுப் போம்படியாக நோக்கும்
அது செய்யும் இடத்தில்

இப்பத்தும் கண்கள் சிவந்து நோக்கும்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் –
அதாவது
இப் பிறவிக்கு இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை-என்றது
இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய
தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –

————-

நிகமத்தில்
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீ -அங்கீகரித்தாப் போலே விஷயீ -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும் -என்கிறார்

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரஹ்மாவின் ராஜசம் அடியாக வந்த குத்ருஷ்டி ஞானமானதும் –
சிவனுடைய தாமச ஞானம் அடியாக வந்த ஆகமம் முதலான பாஹ்ய – புற ஞானம் ஆகிற அஞ்ஞானமும் மாய்த்து –

அன்றிக்கே
ஸ்வ தம்முடைய அனுபவத்துக்கு விரோதியான-ப்ராக்ருத
இவ் வுலக விஷயமான ஞான அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி -என்னுதல்

அந்யதா ஞானம் -பிறர் தெய்வங்கட்கு தன்னை அடிமை என்று நினைத்தல்
விபரீத ஞானம் -தனத்து தானே உரியன் என்றும் கைவல்ய அனுபவ புத்தியையும் -இவற்றைப் போக்கி என்னுதல்

தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் –
ஆஸ்ரிதரை -அடியார்களை வேறு ஒருவர் காலில் குனிய விடாததாய் –ஸ்ப்ருஹணீயமாய் –
விரும்பத் தக்கதாய் –
வீரக் கழலை உடைத்தான-திருவடிக் கீழ்

இப்போதைய வீரக் கழல்
பிராட்டி முன்னாக ஆஸ்ரயித்தாரை அடைந்தாரை அவன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –

அருளி இருத்தும் –
கேவல கிருபையாலே இருத்தும் –

அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் –
பிரமன் சிவன் முதலிய எல்லா ஆத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய்
சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே- திருமகள் கேள்வனாலே-

அருளப் பட்ட சடகோபன் –
மயர்வற மதிநலம் அருளினான் -என்றபடியே அருளுக்கு விஷய பூதரான -பாத்ரமான ஆழ்வார் –
இந்த அருளுக்கு வாய்த்தலை –பிறப்பிடம் -பிராட்டி ஆதலால்-திருமாலால் -என்கிறார் –

ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே –
ஓராயிரத்துள் இப்பத்தால்–நம் அண்ணல் கரு மாணிக்கமே –-அருளி யடிக் கீழ் இருத்தும்-
சர்வ -எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-ஸ்ப்ருஹணீயமான -விரும்பத் தக்க வடிவு அழகையும் குணங்களையும் –
முடிந்து ஆளும் படியும் -உடையவனுமான -சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –
இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

————–

நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

நேர் பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் –
குறைவு அற்ற மூன்று உலகங்கட்கும் நேர் பட்ட நாயகன்
த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந்நாத வத்தரம்
எந்த நாதனால் மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையவன ஆகுமோ -என்கிறபடியே
ரஷ்ய வர்க்கத்து -பாது காக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அன்றிக்கே இருக்கிற-ரக்ஷகத்வ –
பாது காக்கின்ற தன்மையின் துடிப்பு
இதனால் நாயகன் படி சொல்லிற்று –
அனுரூபஸ் ச வை நாத -அந்த இராமன் தகுந்த நாதன் என்னுமா போலே

அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
இதனால் இவர் படி சொல்கிறது –
அவன் சேஷித்வத்துக்கு இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று
இவர் சேஷத்வத்துக்கு -அடிமை யாம் தன்மைக்கு எல்லை யாம்படி –

சொல் நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர் பட்டார் –
அந்த வாஸ்யத்துக்குத் தகுதியான நாயகனுக்கு தகுதியான யுக்தி -சொற்கள் வாய்ந்த
தமிழ் தொடை ஆயிரத்திலும் -இத் திருவாய் மொழி நேர் பட்டவர்கள் –

அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே –
நெடுமாற்கு அடிமை செய்ய நேர் பட்டார் –
இவர் பாசுரத்தை சொன்னவர்
இவர் செய்ய விரும்பிய வ்ருத்தியிலே -கைங்கர்யத்திலே அந்வயிக்க -சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –

ஆக
இப்பாட்டால்
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் வை லக்ஷண்யத்தையும் -சிறப்பினையும்
இதனைக் கற்றவர்கள் அப்யசித்தார்களுடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் -பெரும் பேற்றின் சிறப்பினையும்
சொல்லிற்று ஆயிற்று —

———-

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-ச பரிகரமாக –
பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

நல்ல கோட்பாட்டுலகங்கள்-
இவர் பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலே-ததீய சேஷத்வமே பரம புருஷார்த்தம் -மிக மேலான பேறு -என்று
நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய்மொழி -அருளிச் செய்த பின்பு காணும் உலகம் கட்டளைப் பட்டது –

மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-
வியாப்தியும் -பரந்து இருக்கும் தன்மையும் தேவை ஆகை அன்றிக்கே புதுக் கணித்தது
அடியார்க்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிய ஞானம் உடையவர்கள் உடைய மனத்தில்
இருக்கையாலே வ்யாப்தியும் தேவையாய் இராதே புதுக் கணித்தது –

அல்லிக் கமலக் கண்ணனை-
இவர் தன்னைப் பற்றினாரைப் பற்றி விரும்ப விரும்ப திருக் கண்களும் சிவந்து புதுக் கணித்தது –

அந்தண் குருகூர்ச் –
ஊரும் தர்ச நீயமாய் -காண்பதற்கு இனியதாய்-ஸ்ரமஹரமாய் – ஸ்ரமத்தை போக்கக் கூடியதாயிற்று –

சடகோபன் சொல்லப்பட்ட வாயிரத்துள்-
வேதம் போல் தான் தோன்றி இன்றிக்கே -இருக்கை
பரத்வம் போலே வேதம்
அவதாரம் போலே திருவாய்மொழி –

இவையும் பத்தும் வல்லார்கள்-
இப் பத்தை அப்யஸிக்க கற்க வல்லவர்கள்

நல்ல பதத்தால் –
நல்ல பதம் ஆகிறது –பாகவத சேஷத்வம் –
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தல் அன்றோ –
அதனை இத் திருவாய் மொழியிலே இவர் அறுதி இட்ட படியாலே –
அதனோடு கூட -மனை வாழ்வர்-கார்ஹஸ்த்ய -தர்மம் அனுஷ்ட்டிக்கப் பெறுவார் –
இல்லற தர்மத்தில் வாழ்வார்கள்

கொண்ட பெண்டிர் மக்களே-
தாங்கள் ஒன்றனை நினைக்க-பரிகரம்-
தம் மனைவி மக்கள் முதலாயினோர் வேறு ஒன்றை நினைக்கை அன்றிக்கே
ச பரிகரமாக குடும்பத்தோடு பாகவதர்களுக்கு உறுப்பாக வாழப் பெறுவர் –

திருவனந்த புரத்துக்கு சாத்தாகப் -கூட்டமாகப் -போகா நிற்கச் செய்தே
திருக் கோட்டியூரிலே செல்வ நம்பி திரு மாளிகையிலே போய்ப் புக்கார்களாக
நம்பி தாம் வேற்று ஊருக்காக சென்று இருக்க
நங்கையார் நூறு வித்துவக் கோட்டை கிடக்க
அவற்றைக் குத்தி ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணி விட
பிற்றை நாள் நம்பி வந்து -அவை செய்தது என் என்ன –
பரம பதத்திலே விளைவதாக வித்தினேன் -என்றாராம் –

தொண்டனூர் நம்பி எச்சான் -என்று மகா புருஷர்கள் சிலர் உளர் அன்றோ
பாகவத சேஷத்வமே யாத்ரையாக போந்தவர்கள்
அவர்கள் படியே யாகப் பெறுவர்கள்-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –ஏழாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

July 20, 2021

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்திரியங்களால்
ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்,’ என்கிறார்.

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-

குணங்கள் கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்-
சத்வம் முதலான குணங்களுக்குத் தகுதியான வடிவை யுடைய மூவராய்.
குணங்கட்குத் தகுதியான படைத்தல் முதலிய தொழில்கள் அந்த அந்த
வ்யக்தி -உருவம் தோறும் பர்யவசிக்கும் -நிறைந்திருக்கு மன்றோ?
பிரமன் சிவன் என்னும் இரண்டு உருவங்களிலும் ஜீவனுக்குள் அந்தர்யாமியாய் நின்று,
விஷ்ணு உருவத்தில் ஸ்வரூபேண – தானே நின்றபடி.

படைத்து அளித்துக் கெடுக்கும் –
ரஜோ குணத்தை யுடையனாய்க் கொண்டு படைத்து,
தமோ குணத்தை யுடையனாய்க் கொண்டு அழித்து,
சத்வ குணத்தை யுடையனாய்க் கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி.

அப் புண்டரிகக் கொப்புழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கு-
இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே திருக் கண் வளர்ந்தருளின படியைச் சொல்லுகிறது.

உலகம் தோன்றுவதற்குக் காரணாமாயிருத்தலின், பிரசித்தமான திரு நாபிக் கமலத்தை யுடையனாய்க் கொண்டு,
படைத்தலின் நோக்குள்ளவனாய் ஏகார்ணவத்திலே திருக் கண் வளர்ந்தருளின உபகாரகனான வனுக்கே.

அப் புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே,
பிரமன் சிவன் முதலாயினோர் காரியம் என்னுமிடமும்,
அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று.

ஒருவனுடைய பிறப்பை -உத்பத்தியை -அன்றோ சொல்ல வேண்டவது? ‘
ப்ராஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -பிரமனுடைய ஜ்யேஷ்ட புத்திரனுக்கு, சிறந்தவனுக்கு’ என்கிறபடியே,
மற்றையோனான சிவனுடைய பிறப்பு, தன்னடையே வரும் இறே

நான்முகனை நாராயணன் படைத்தான்’ என்றால், மற்றையவன் பிறப்பும் உடனே சொல்லப்படும் அன்றோ?
இப்படி வேத வைதிகங்கள் சொல்லாநின்றான அன்றோ?

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர,
சேஷத்வத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்;
தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.

கண்டு பாட வல்லார் –
இவருடைய தசையை -நிலையை -அனுசந்தித்தால் -நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?

கண்டு –
நமக்குத் தஞ்சம் என்று அனுசந்தித்து -நினைத்து.

வினை போம் கங்குலுப் பகலே –
இரவு பகலில் வினை போம். இராப் பகல் மோதுவித்திட்டு’ என்ற துரிதம் -துயரம் போம்.

———-

இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல்
திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –
பெரிய பெருமாள் திரு வடிகளைக் கிட்டி அங்குத்தைத் திரு வருளைப் பெற்றுத் தரித்தர்.
பூர்வ அவஸ்தையில் -முன்னைய நிலையில் சத்தையும் அழியும் படியாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது .

மொய் புனல் பொருநல் துகில் வண்ணம் தூ நீர்ச் சேர்ப்பன் –
வலியை யுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தையுடைத்தான தூ நீர்த் துறைவன்.
‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம்.
இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது.

சேர்ப்பன் –
துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன்.

மொய்ப்புனல்’ என்னா நிற்கவும், ‘தூநீர்’என்கிறது,
பெரு வெள்ளமாய் இருக்கச் செய்தே தெளிந்திருக்கும் படியைப் பற்ற.

‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’- பால. 2:5.
‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரை யுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.

சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி யெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார்’-கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9

வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் –
காண்பதற்கு இனியதான பொழிலை யுடைத்தாய் வண்மையை யுடைய திருநகரிக்கு நாதன்.

முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
காளமேகம் போன்று நிரதிசய ஸுந்தர்ய -மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்த
சப்தாத்மகமான -சொற்களை யுடைய மாலை ஆயிரத்து இப் பத்தையும் பாவ விருத்தியோடே –
கருத்தோடு அப்யஸிக்க வல்லவர்கள்.
பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று;

திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11-
திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று பிரித்துக் கொடுத்த இத்தனை;

பெருமாள் திருப் பலகையில் அமுது படியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து
கொடுக்குமாறு போலே’என்று பிள்ளை அருளிச் செய்வர்.

முகில் வண்ணம் வானத்து-
அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன் படியாய் இருக்கிற வானம் என்னுதல்;
முகில் வண்ணனுடைய வானம் என்னுதல்

இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே-
இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
நித்ய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே
மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன்-
அடியார்களைக் காப்பாற்றும் பொருட்டுக் கல்பம் தோறும் கல்பம் தோறும் திரு மேனியும் திருப் பெயரும்
சேஷ்டிதங்களும் -செயல்களும் வேறுபடக் கொள்ளமவன்.
இதற்குப் பயன்-பிரயோஜனம் – என்?’ என்னில்,

வையம் காக்கும்-
உலகத்தைக் காப்பாற்றுதல். அப்படியே காத்திலனாகில் இப்படி விஸ்வசிப்பார் -நம்புவார் இல்லையே, இவனை ‘ரஷகன்’ என்று,

ஆழி நீர் வண்ணனை –
நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும்
அசாதாரண விக்ரஹத்தைச் சொல்லுகிறது.

அச்சுதனை –
அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல்.
பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல்.

அணி குருகூர் –
ஆபரணமான திருநகரி.

கேழ் இல் அந்தாதி –
ஒப்பு இல்லாத அந்தாதி.தம்மாலும் பிறராலும் மீட்க ஒண்ணாதபடி பகவத் விஷயத்தில்
வ்யவசாயத்தை -உண்டான உறுதியைச் சொன்ன பத்து ஆகையாலே, ஒப்பு இன்றிக்கே இருக்கிறபடி.

ஓர் ஆயிரத்துள் திருப் பேரெயில் மேய இவை பத்தும் –
ஒப்பு இல்லாத ஆயிரத்துள் திருப் பேரெயிலிலே சேர்ந்த இப் பத்தைக் கொண்டு.

ஆழி அம் கையனை ஏத்த வல்லார் –
இவை எல்லாவற்றாலும் என் சொல்லியவாறோ?’ எனின், கையும் திருவாழியுமான அழகிலே இவர்
அகப்பட்ட படியைத் தெரிவித்த படி.
அல்லாத அழகுகள் ஒரு படியும் இது ஒரு படி யுமாய் இருக்கை; இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.

அவர் அடிமைத் திறத்து ஆழியாரே –
அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.

————

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே
விஜயத்தைக் கொடுக்கும் என்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும் அப்போதை அழகிலும் ஈடுபட்டு
இருக்குமவர்களோடே கூடி நின்று தாமும் பிரீதராய், பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.

நன்றி புனைந்து ஓர் ஆயிரம் –
சர்வேஸ்வரனுடைய பரத்வ சௌலப்யங்களை வகை யிட்டுத் தொடுத்த ஆயிரம்

நன்மையாவது,
சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும்,
சர்வ ஸூலபன் என்றும்,
சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச் செய்தது?
அன்றிக்கே,
எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும்’ என்னுதல்.

மேவிக் கற்பார்க்கு வென்றி தரும் –
சாதாரமாக -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு விஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும்.
ஐஸ்வர்யார்த்திக்கு -செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
இந்திரிய ஜயாதிகளை -ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

(இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-
ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்-
கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்-
பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும்
போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

———-

நிகமத்தில் -இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்’ என்கிறார்.

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு-
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு,
பின்னர் நாட்டார் செயல்களைக் கண்டாதல்,
போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.
நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள்.
போலி வார்த்தைகளாவன: உபாய பல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல், உத்தேஸ்ய துர் லபத்துவம் –
பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல், ஸ்வ கிருத தோஷ பூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள்
பலவாக இருத்தல் என்னுமிவை.

பாரதப் போரிலே நின்று அர்ஜூனனை நோக்கி,
நான் சொன்ன இது உனக்குத் தொங்கிற்றோ? எதிரே போந்ததோ?’ என்ன,
ஸ்த்திதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 73.-‘நிலைபெற்றேன்’ என்ன,
அவன், ‘ஆனால் நம் காரியம் செய்யப் பார்த்தது என்?’ என்று கேட்க,
கரிஷ்யே வசநம் தவ’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 72.உன்னுடைய வார்த்தையின் படி செய்கிறேன்’ என்கிறபடியே,
தேவரீர் ஏவின அடிமை செய்யக் கடவேன்,’ என்றான் அன்றோ?

அர்ஜூனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ,இல்லையோ?’ என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க,
உமக்கு அது கொண்டு காரியம் என்?
இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில்,
பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில்.
தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்;
பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச் செய்தார்.

சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத் தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே
தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது?

இன்பக் கதி செய்யும் –
நிரதிசய -தனக்குமேல் ஒன்று இல்லாததான ஆனந்தத்தோடு கூடிய பேற்றினைப் பண்ணிக் கொடுக்கும்,

தெளிவுற்ற கண்ணனை –
இவன் தெளியமாட்டாத இழவு தீர இவனுக்கு நித்யமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே
தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை.
ஸ்திதே மநஸி ஸூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்’
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட பாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்’- வராஹ சரம ஸ்லோகம்.
அஹம் ஸ்மராமி-நான் நினைக்கிறேன்’ என்பது போலே.

தெளிவுற்ற ஆயிரம் –
ஸஹ்யத்திலே -மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து
உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே

மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக்
காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின ஸ்ருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’ஆசார்யஹ்ருதயம், சூத். 71.

அந்த மிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமி ழார் கவியின்
பந்தம் விழா ஒழுகும் குருகூர் வந்த பண்ணவனே.’- சடகோபரந்தாதி 14.

ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப் பசினும் போலே
ஒன்றே அறுதி யிட்டுப் பிரிக்க ஒண்ணாதபடி யாயிருக்கிற வேதார்த்தாமானது,
எல்லாரும் படிக்கத் தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே.

இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர்-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள், இவ் வாழ்வார் தம்மைப் போலே
தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர்.
அப்படித் தெளிவது தேச விசேஷத்திலே போனாலோ?’ என்னில்,

பாமரு மூவுலகத்துள்ளே –
பாபத்தை பா என்று கடைக் குறைத்தலாய்
பாபம் நிறைந்திருக்கிற-பூயிஷ்டமான – தேசத்திலே’ என்றபடி.
அவ்வருகே ஒரு தேச விசேஷத்தே போனால் பெறக் கடவ தெளிவை அதற்கு எதிர்த் தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே
தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல
இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-

—————-

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித்
திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-

புக்கு அ அரி உருவாய் –
அந்த அரி உருவாய்ப் புக்கு.
அவ் வரி யுரு என்னு மித்தனை யாயிற்றுச் சொல்லலாவது.
நரசிங்கமான வேஷத்தைக் கொண்டு விரோதி சந்நிதியில் -பகைவன் அண்மையிலே கிட்டி.
அன்றிக்கே,
ஹிரண்யனின் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக் கடுமை,
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு
புறப்பட்டால் போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.

அவுணன் உடல் கீண்டு உகந்த –
ஹிரண்யனின் உடலைப் பிளந்து பொகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப் பெற்றோம்!’
என்று உகந்தனாயிற்று.

சக்கரச் செல்வன் தன்னை –
ஹிரணியனுடைய உடலும் கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,
பின்னை அழகுக்குப் பத்திரம் கட்டின இத்தனை யாயிற்று.
அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பான திருவாழியை யுடையவனை

குருகூர்ச் சடகோபன் சொன்ன –
ஆழ்வார் அருளிச் செய்த.

மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்-
பகவத் விஷயத்தை உள்ள அளவும் சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்தையும் கற்றவர்களை.

தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண பரிசர்யைகளை கைங்கரியங்களை யடைய இப் பத்தை அப்யசித்தவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதி முக மடந்தையர்.
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.
தொக்கு -திரண்டு
கவரி -சாமரம்
ஏழையர் -பாகவத கிஞ்சித்கார சபலைகளான மதி முக மடந்தையர் –

————-

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே
நித்ய ஸூரிகளோடே கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும் கட்கு அரிய கண்ணனை –
மக்களுடைய கண்களுக்குப் புலப்படாதபடி -அவிஷயமாம் படி -இருக்கிற பிரமன் சிவன் இந்திரன் என்னும்
இவர்களுக்கும் கண்களுக்குப் புலப்படாதபடி -அவிஷயமாம் படி-இருக்கிற கிருஷ்ணனை.

பிரமன் முதலானோர்களுடைய கண்களுக்குக் காண முடியாதவனாய் இருக்கிற கிருஷ்ணன்,
மறக்க ஒண்ணாதபடி உருவு வெளிப்பாடாய்த் தோன்ற,
அதனாலே நலிவு பட்டு,
போன போன இடம் எங்கும் சூழ்ந்து கொண்டது என்னும்படி ஆயிற்று இவர்க்குப் பிரகாசித்தபடி.
அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனால் போலே ஆயிற்று,
இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி.

குருக்கூர்ச் சடகோபன் சொன்ன-
ஆழ்வார் அருளிச் செய்த

உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே –
சொல்லப் படுகின்ற பொருளை உள்ளபடி சொல்ல வல்ல ஆற்றலை யுடைத்தான ஆயிரத்திலும்
வைத்துக் கொண்டு இப் பத்தையும் கற்க வல்லவர்கள்,

நித்யானுபவம் பண்ணா நின்றாலும் மேன்மேலெனப் பகவத் குணங்களைப் பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான
யோக்யதையை யுடைய நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய்
உருவு வெளிப் பாட்டாலே நோவு படாமல்
அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவர்.
மாய்கையும் உருவு வெளிப்பாடும் பர்யாயம் என்று இருக்கிறார் காணும்.

அன்றிக்கே,
‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.
பகவத் அபசாரம் பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே,
பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்?
பிரளயம் கோத்தால் போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது?

சூழவும் –
இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?

———–

அங்குத்தைக்குத் தகுதியாக ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளிலும்
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார்
என்றைக்கும் க்ருத்தியர்,’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை –
இன்னபடிப் பட்டது ஒரு தன்மையை யுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’-தைத்திரீய. ஆனந். 9 : 1.
அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே,
வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.

ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-
அவனுக்குத் தகுதி யாம்படி ஆழ்வார் அருளிச் செய்த.
அறிவது அரிய அரியை’ என்றதாகில், ‘ஆம் வண்ணத்தால் உரைக்கையாவது என்?
வ்யாஹதம் -முரண் அன்றோ?’ என்னில்,
அறிந்து உரைத்த’ –
என்கிறார்; என்றது, அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று.
தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது,
அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ?
நெறி வாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சார்த்தி
அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

ஆம் வண்ணம் ஒண் தமிழ்கள் –
அவனுக்குத் தகுதியாம்படி இருக்கிற அழகிய தமிழ்’ என்னுதல்;
தகுதியாக இருக்கிற சந்தஸ்ஸூ -பாசுரங்களை யுடைத்தாய்,
சர்வாதிகாரமாகிற நன்மையை யுடைத்தான தமிழ்’ என்னுதல்.
வண்ணம் – சந்தஸ்ஸூ -பா. அன்றிக்கே,
வண்ணம்
என்று ஓசையாய், ‘நல்ல ஓசையை யுடைய செந்தமிழ்’ என்னுதல்.

தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் –
தமிழாக இருந்துள்ள இவை ஆயிரத்துள் இப் பத்தையும்.

ஆம் வண்ணத்தால் உரைப்பார் –
பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப் பெற்று
அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில்,
அத் தேவை எல்லாம் ஆழ்வார் தம்மோடே;
இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.

அமைந்தார் தமக்கு என்றைக்கும் –
அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;
ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.
என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

———-

நிகமத்தில் இத் திருவாய் மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்,’ என்கிறார்.

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே–7-9-11-

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு –
சாதனத்தைச் செய்கின்ற காலத்தோடு ப்ராப்ய வஸ்துவை ப்ராபித்த -பேற்றினை அடைந்த சமயத்தோடு வாசி அற,
இஹ லோக பர லோகங்கள் -இந்த உலகம் பரம பதம் என்ற இரண்டிலும் திருமகள் கேள்வன் அல்லது போக்கி,
இவ் வாத்ம வஸ்துவுக்குத் தஞ்சமாக இருப்பார் வேறு இலர் என்னுமதனை அனுசந்தித்து – சொல்லி;
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து’ திருவாய் 9. 2 : 1.
என்கிறபடியே, கைங்கரியம் செய்யுமிடத்திலும் அவள் முன்னாகச் செய்ய வேணுமன்றோ?
ஆஸ்ரயண -அவனைப் பற்றுகிற வேளையிலும் அவள் முன்னாக வேணுமன்றோ? ஆதலின் ‘திருமால்’ என்கிறது.
ஹதே தஸ்மிந் நகுர்யு: ஹி தர்ஜநம் வாநரோத்தம!’-யுத். 116 : 41.
ஹதே தஸ்மிந் ந குர்யு: – அவன் கொல்லப்பட்ட பின் செய்ய மாட்டார்கள்’ என்கிறபடியே,
இராவணன் சொல்லுகையாலே அன்று இருந்து நலிந்தார்களாகில்,
இராவணன் பட்டுப் போன இப்போதும் நலிவார்களோ?’ என்று அவர்கள் பக்கலிலும்
குணத்தை ஏறிட்டுச் சொல்லும் நீர்மையை யுடையவளாயிற்று.

அன்னை அஞ்சன்மின் அஞ்சன்மின் நீரெனா
மன்னு மாருதி மா முகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத் தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய்!’-கம்பராமாயணம்.

அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன் –
நமக்கும் நல்லாசிரியன் அருகே இருந்து ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஒழிய
இவ் வாத்மாவுக்குத் தஞ்சமாய் இருப்பார் இலர்,’ என்று உபதேசித்தால், அத்தனை போதும் அப்படியே’ என்று
இருக்குமது உண்டே அன்றோ?
இவர் அங்ஙனம் அன்றிக்கே,
அந் நினைவுக்கு அனுரூபமான பரிமாற்றத்தை – தகுதியான செயலை யுமுடையவராய் இருப்பாராயிற்று.
ஆனால், மனம் வாக்குக் காயங்கள் என்னும் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்குமோ?’ என்னில்,

இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்து –
இப் பாவை வ்ருத்தியிலே -இந்த எண்ணத்தோடு சொல்லிற்றாயிற்று ஆயிரம் திருப் பாசுரங்களும்.
நீர், மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றிலும் ஸ்ரீ யபதியே -திருமகள் கேள்வனே
இவ்வாத்ம வஸ்துவுக்குத் தஞ்சம்’ என்று அறுதி யிட்டு அருளிச் செய்த இப் பாசுரங்களைக் கற்பார்க்கு,
மனம் வாக்குக் காயம் என்னும் இம் மூன்றும் புறத்து விஷயங்களினின்றும் மீள வேணுமோ?
நீர், சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று
அடைந்தவராய் இரா நின்றீர்;-திருவாய். 6. 5 : 11.
இவர்களுக்கு எல்லாம் பின்னை இப்படி வேணுமோ?’ என்னில்,
அத் தேவைகள் எல்லாம் நம்மோடே: இது கற்பார்க்கு அது வேண்டா,’ என்கிறார்:

எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்கும் –
ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.
இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஈஸ்வரன் இவர்களைக் கடாஷிப்பது?
இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய்
அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற் றத்தனை

இது. இன்பம் பயக்குமே –
ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ தைத். ஆன.
இந்த இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே,
எப்பொழுதும் பகவானுடைய அனுபவத்தால் பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.

———-

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,’ என்கிறார்.

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

தீர்த்தன் –
இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே ஸ்வ வ்யதிரிக்த -தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு
எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.
தீர்த்தமாவது, தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.

தீர்த்தன் உலகளந்த சேவடியைப் பிரமன் விளக்க.
அந்தத் தீர்த்தத்தை பாவன அர்த்தமாக – பரிசுத்தத்தின் பொருட்டு ஜடா மத்யே – ஜடையின் மத்தியில் தரித்தான் சிவன்.
ஆறு பொதி சடையோன்’ –திரு வெழு கூற்றிருக்கை.-என்னக் கடவது அன்றோ?
கங்காதரன்’ என்றே பெயர் அவனுக்கு.
அந்தக் கங்கைக்கு அடியை ஆராய்ந்து கொள்ளுகை அன்றோ இனி உள்ளது?
ஆராய்ந்தவாறே அது அடிப் பட்டு இருக்குமே;
கங்கை போதரக் கால் நிமிர்த் தருளிய கண்ணன் அன்றோ?

அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன்
அலர் கொடு தொழுதேத்தக்
கங்கை போதரக் கால் நிமிர்த் தருளிய
கண்ணன் வந்துறை கோயில்’-பெரிய திருமொழி, 4. 2 : 6.

அண்ட கோளகைப் புறத்ததாய் அகில மன்றளந்த
புண்டரீக மென் பதத்திடைப் பிறந்து பூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் அரன் கொளப் பகிரதன் கொணர
மண்டலத்து வந்தடைந்த திம் மாநதி மைந்த!’- கம்பராமாயணம், அகலிகைப்படலம் . 60.

அன்றிக்கே, தீர்த்தனுக்கு அற்ற பின் –
தன்னுடைய போக்யதா அதிசயத்தாலே இனிமையின் மிகுதியாலே தன்னை ஒழிந்த விஷயங்களில்
உண்டான ருசியைக் கழித்தவனுக்கு அற்ற பின்’ என்றுமாம்.

மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி –
அவனை ஒழிய ரஷகர் இலர் என்று தெளிந்தார் ஆயிற்று.

தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி –
பாஹ்ய -புறம்பு உண்டான விஷயங்களிலே ருசியைப் போக்கினவனுக்கே அறுதியாக எழுதிக் கொடுத்த
நெஞ்சினை யுடையராய்.
உனை நினைந்து எள்கல் தந்த எந்தாய்’ –திருவாய். 2. 6 : 4.-என்றாரே கீழ்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ –மூன்றாந்திருவந். 14.என்றும், –
பரமாத்மநி யோரக்த: விரக்த; அபரமாத்மநி’ பார்ஹஸ் பத்ய ஸ்மிருதி.-
பரமாத்மா விஷயத்தில் அன்புடையர் அன்னிய விஷயத்தில் அன்பிலர் ஆவர்,’என்றும் சொல்லுகிறபடியே,
தன் பக்கல நெஞ்சினை வைத்தால் பின்பு புறம் போக ஒட்டாதே அழகு;
மனைப்பால், பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார்
அத் தோள்–இரண்டாந்திருவந். 42.என்கிறபடியே,
மனைப்பால் பேரின்பத்திலே கை கழிய ஒட்டாதே.

செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
அதற்கு அடியான ஜன்ம பூமியையுடைய ஆழ்வார் அருளிச் செய்த.

தீர்த்தங்கள் ஆயிரம் –
ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்கள் ஆயின.

இவை பத்தும் வல்லார்களை –
இந்தப் பத்தைக் கற்க வல்லவர்களை.

தேவர் தீர்த்தங்களே என்று தம் தேவியர்க்குப் பூசித்து நல்கி உரைப்பர் –
திருவடி, திருவனந்தாழ்வான், சேனை முதலியார் தொடக்கமானார், இவர்களை
நாள் தோறும் பவித்ர பூதர் -தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக் கொண்டு போந்து.
தங்கள் மஹிஷிகளை -மனைவி மார்களைச் ஸ்னேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.

நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே –
மனைவிமார்களும் தாங்களுமாக ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு அடிமை செய்து,
மனைவிமார்கள் எடுத்துக் கை நீட்டின பிரீதியின் ப்ரகர்ஷத்தாலே -மிகுதியாலே ஓடம் ஏற்றிக்
கூலி கொள்ளுமளவானவாறே, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கனக்கத் தங்கள்
பிரபாவத்தைச் சொல்லும்படியாகப் பெறுவர்.

ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் தசையாகிறது, பகவத் விஷயத்தில் கைங்கரியம் செய்யும் போது
எடுத்துக் கை நீட்டுகை அன்றோ?’
சரம ஸ்லோகம் ரஷித்துக் கொண்ட அளவு போலே இருக்கும் அளவுகளிலே,’ என்றபடி
அதாவது
உடையவர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி தமக்கு அத்யந்த ரஹஸ்யமாக உபதேசித்த
சரம ஸ்லோக அர்த்தத்தை தெற்கு ஆழ்வார் திரு முன்பே எடுத்துக் கை நீட்டினவர்களுக்கு
அவர்கள் விஷயத்திலே உகப்பாலே அருளிச் செய்தார் இறே அத்தைச் சொல்கிறது

வைகலும் பூசித்து
அபர்வணி ‘பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றால் போலே,
அதற்கு ஒரு நியதி இல்லை ஆதலின், ‘வைகலும் பூசித்து என்கிறார்.
வைகல் – காலம்.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ –திருவாய். 3. 3 : 1.-என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை
இது கற்ற அடியார் விஷயத்திலே நித்ய ஸூரிகள் அடிமை செய்வார்கள்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்