Archive for the ‘Periaazlvaar’ Category

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம் —

October 27, 2022

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம்

ஸ்ரீ உத்தம நம்பி பரம்பரைக்கு கூடஸ்தர் ஸ்ரீ பெரிய திருவடி ஐயன் உத்தம நம்ப ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருப்பேரானார்
ஸ்ரீ பெரியாழ்வார் முதல் 90 தலைமுறையில் இருந்த உத்தம நம்பிகளின் வைபவம் காணப்படுகிறது

பெரியாழ்வார் தம்முடைய திரு மகளாரான ஆண்டாளை ஸ்ரீ ரெங்கநாதனுக்கு பாணி கிரஹணம் பண்ணிக் கொடுத்து
ஸ்ரீ ராமாண்டார் என்னும் திருக்குமாரரும் தாமுமாக அவளை திரு ஆபாரணங்கள் முதலிய வரிசைகளுடன் ஸ்ரீ கோயிலிலே கொண்டு விட
அவள் பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமாக –பெரிய பெருமாள் திரு உள்ளம் உகந்து அவளது ஐயரான பெரியாழ்வாரை ஐயன் என்றும்
அவரது திருக் குமாரரான ராமாண்டானை பிள்ளை ஐயன் என்றும் அருளப்பாடிட்டு அழைத்து தீர்த்தம் பறியாட்டங்களை ப்ரஸாதித்து அருளி
தம்முடைய ஆதீனங்களை நிர்வஹித்துக் கொண்டு சொத்துக்களுக்கு எல்லாம் கருட முத்ரை இடச்சொல்லி ஸ்ரீ ரெங்கத்திலேயே நித்ய வாஸம் பண்ணும்படி நியமித்து அருளினார் –

பெரியாழ்வார் பெரிய திருவடி நாயனார் குலத்திலே முகுந்த பட்டருக்கு திருக்குமாரராக
கலி பிறந்த 46 மேல் செல்லா நின்ற க்ரோதன நாம ஸம்வத்சரத்திலே -ஆனி மாஸம் -9 தேதி ஸ்வாதி திரு நக்ஷரத்திலே திரு அவதரித்தார்
கலி -105-ஸம்வத்ஸரத்தில் -அரங்கன் ஆண்டாள் திருக்கல்யாணம் -அதுக்கு எழுந்து அருளப் பண்ணி வந்த
பெரிய திருவடியும் ஆண்டாளும் அரங்கனுக்கு சேர்ந்தே இன்றும் ஸேவை ஸாதித்து அருளுகிறார்
ஆகவே தான் கருட முத்ரை இலச்சினை செய்ய அரங்கன் அருளிச் செய்தார்
இன்றும் கோயில் கருவூல அறைக்கும் திரு ஆபரண பெட்டிகளுக்கும் உத்தம நம்பியை முத்ர அதிகாரியாக்கி கருட முத்ரையே வைக்கப்படுகிறது

பெரியாழ்வார் திருக்குமாரரான ராமாண்டரான பிள்ளை ஐயன் அவர்களின் திருக்குமாரர் பெரிய திருவடி ஐயன் –
இவரைப் பெருமாள் உத்தம நம்பிள்ளை என்று அருளப்பாடிட்டு அழைத்தார்
பிள்ளை ஐயன் திருக்குமாரரான உத்தம நம்பிள்ளைக்கு -பிள்ளை ஐயன் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
அவரது திரு மாளிகை ஐயன் திருமாளிகை என்று வழங்கப்பட்டு வருகிறது –

———————————

வம்ஸ பரம்பரை

1-பெரியாழ்வார் -ஐயன் -110 வருஷங்கள்
2-ராமாண்டார் -பிள்ளை ஐயன் -70 வருஷங்கள்
3-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பிள்ளை -(1)-பிள்ளை ஐயன் உத்தம நம்பி-60 வருஷங்கள்
4-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்களுக்கு 4 மாதங்களும் 16 நாள்களும்
5-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(2)-65-வருஷங்கள்

6-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்கள்
7-பெரிய ஐயன் உத்தம நம்பி -(1)-40 வருஷங்கள் 2 மாதங்கள் -14 நாள்கள்
8-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(3)-50 வருஷங்கள்
9-சின்ன ஐயன் உத்தம நம்பி -(1)-69- வருஷங்கள்
10-அநந்த ஐயன் உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்

11-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
12-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(1)-70-வருஷங்கள்
13- வரதராஜ உத்தம நம்பி -(1)-60 வருஷங்கள் -1 மாதம் -15-நாள்கள்
14-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(3)-60-வருஷங்கள்
15-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்

16-பெரிய ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
17-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-99-வருஷங்கள்
18-அநந்த ஐயன் உத்தம நம்பி -(2)-70-வருஷங்கள்
19-ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்
20-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(3)-56-வருஷங்கள் -3 மாதங்கள் -3 நாள்கள்

21-வரதராஜ உத்தம நம்பி -(2)-57-வருஷங்கள்
22-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி -(2)-67-வருஷங்கள்
23-அநந்த ஐயன் உத்தம நம்பி -(3)-62-வருஷங்கள்
24-சின்ன ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்
25-திருமலை நாத உத்தம நம்பி -(1)-65-வருஷங்கள்

26-முத்து ஐயன் உத்தம நம்பி என்கிற ரெங்கராஜ உத்தம நம்பி -(2)56-வருஷங்கள்
27-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி -(1)-70 வருஷங்கள்
28-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி -(3)-66-வருஷங்கள்
29-வரதராஜ உத்தம நம்பி -(3)-59 வருஷங்கள் -ஐந்து மாதங்கள் 4 நாள்கள்
30-அநந்த ஐயன் உத்தம நம்பி -(4)-55 வருஷங்கள்

31-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(3)-65 வருஷங்கள்
32-பெரிய பெருமாள் உத்தம நம்பி -70 வருஷங்கள் -9 மாதங்கள் -25 நாள்கள்
33-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(4)-60 வருஷங்கள்
34-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(4)-61 வர்ஷன்கள் -7 மாதங்கள் -1 நாள்
35-ரகுநாத உத்தம நம்பி -(1)-55 வருஷங்கள் -3 மாதங்கள் -12 நாள்கள்

36-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி -(1)-53 வருஷங்கள் -2 மாதங்கள்
37-அனந்த ஐயன் உத்தம நம்பி -5-60 வருஷங்கள்
38-வரதராஜ உத்தம நம்பி–(4-)49 வருஷங்கள்
39- ஸ்ரீ ரெங்க உத்தம நம்பி -61- வருஷங்கள் -3 மாதங்கள் -9 நாள்கள்
40-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி -(1)-61 வருஷங்கள்

41-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி -(1)-57 வருஷங்கள் -2 மாதங்கள் -8 நாள்கள்
42-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (5)–30 வருஷங்கள்
43-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (5)–44 வருஷங்கள்
44-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி (4)–30 வருஷங்கள் 3 மாதங்கள் 3 நாள்கள்
45-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி (4)-40 வருஷங்கள்

46-குமார வரதராஜ ஐயன் உத்தம நம்பி (5)-50 வருஷங்கள் -9 மாதங்கள் –
47-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (2 )-49 வருஷங்கள்
48-ரெங்கநாத உத்தம நம்பி (5)–59 வருஷங்கள்
49-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (2)-42 வருஷங்கள் -6 மாதங்கள் -9 நாள்கள்
50-பெருமாள் ஐயன் உத்தம நம்பி -58 வருஷங்கள் -3 மாதங்கள் -13 நாள்கள்

51-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (6) –47 வருஷங்கள் -2 மாதங்கள் -5 நாள்கள்
52-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (@) 49 வருஷங்கள்
53-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி (5) 56 வருஷங்கள் நான்கு மாதங்கள் 7 நாள்கள்
54-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (3) 57 வருஷங்கள்
55-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (6)-37 வருஷங்கள் 10 மாதங்கள்

56-திருவடி ஐயன் உத்தம நம்பி -62 வருஷங்கள்
57-சொல் நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (7)-53 வருஷம் -237 நாள்கள்
58-சின்ன ஐயன் உத்தம நம்பி (3)-37 வருஷங்கள்
59-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (7)-49 வருஷங்கள்
60-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (4) 61 வருஷங்கள் 2 மாதங்கள் 3 நாள்கள் –

61-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (3) 55 வருஷங்கள்
62-ரகுநாத உத்தம நம்பி (2) 38 வருஷங்கள்
63-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (8) 50 வருஷங்கள்
64-கோவிந்த ஐயன் உத்தம நம்பி -39 வருஷங்கள்
65-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி (2) 66 வருஷங்கள் 3 மாதங்கள் 7 நாள்கள்

66-வரதராஜ உத்தம நம்பி (6)–59 வருஷங்கள்
67-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி (9) 50 வருஷங்கள்
68-அநந்த ஐயன் உத்தம நம்பி (6) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 10 நாள்கள்
69-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (3) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 17 நாள்கள்
70-பெரிய ஐயன் உத்தம நம்பி (3)60 வருஷங்கள்

71-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (10)-52 வருஷங்கள்
72-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (5)63 வருஷங்கள்
73-பெரிய ஐயன் உத்தம நம்பி (5) 67 வருஷங்கள் 1 மாதம் 1 நாள்
74-மஹா கவி ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (4)-கருட வாஹந பண்டிதர் -கவி வைத்ய புரந்தரர் -69 வருஷங்கள்
75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (1)43 வருஷங்கள்

76-வரதாச்சார்ய உத்தம நம்பி –40 வருஷங்கள்
77-ராமாநுஜர்சார்ய உத்தம நம்பி -53 வருஷங்கள் இ மாதம் 7 நாள்கள்
78-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (1)-31 வருஷங்கள்
79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ண ராய உத்தம நம்பி –79 வருஷங்கள்
80-வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி(2) -68 வருஷங்கள்

81-ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி -72 வருஷங்கள்
82-திருமலை நாத உத்தம நம்பி (2) 67 வருஷங்கள்
83-குடல் சாரவாளா நாயனார் என்கிற சின்ன க்ருஷ்ணராய உத்தம நம்பி –52 வருஷங்கள் 1 மாதம் 8 நாள்கள்
84-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (6) 53 வருஷங்கள்
85-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்கராஜா உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்

86-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்
87-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (8) 45 வருஷங்கள் 7 மாதங்கள்
88-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (3)
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (3) 18 வருஷங்கள்
90-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -ஸ்வீ காரம்

91- உத்தம நம்பி ஸ்ரீ நிவாசார்யர்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யர்
93-உத்தம நம்பி தாதாச்சாரியர்
94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்

——————-

இவர்கள் செய்து அருளின கைங்கர்யங்கள்-

3-முதல் முதலாக ஸ்ரீ ரெங்க ஸ்ரீ நிர்வாஹம்
4- தேவராஜ மஹா ராஜர் மூலமாய் -முத்துக்குடை தங்க ஸிம்ஹாஸனம் போன்றவை சமர்ப்பித்தார்
11- நவரத்ன அங்கி சமர்ப்பித்தார்
13– நவரத்ன கிரீடம் சமர்ப்பித்தார்
15- தங்க வட்டில்கள் சமர்ப்பித்தார்
21- வெள்ளிக்குடம் சமர்ப்பித்தார்
27- கோபுர மண்டப பிரகார ஜீரண உத்தாரணம் பண்ணினார்
28- ஸ்தலத்துக்கு வந்த இடையூறுகளைத் தீர்த்தார்
35-த்வஜ ஆரோஹண மண்டப ஜீரண உத்தாரணம் பண்ணினார்
39- திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
47-திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
54- பெருமாள் உபய நாச்சிமார்களுக்கு தங்கக் கவசங்கள் கிரீடங்கள் சமர்ப்பித்தார்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கும் கவசம் கிரீடம் சமர்ப்பித்தார்

57-இவர் காலத்தில் தேசாதிபதியான பிரபு ஸ்ரீ ரெங்க நாச்சியாரைத் திரு வீதி எழுந்து அருளப் பண்ணி உத்சவம் நடத்த வேணும் என்று சொல்ல
இவர் கூடாது என்ன
பிரபுவும் அப்படியே நடத்த வேணும் என்று பலவந்தம் பண்ண
கழுத்தை அறுத்துக் கொண்டார்
உடனே தாயார் அர்ச்சக முகேந ஆவேசமாகி தமக்கு விருப்பம் இல்லாமையை அறிவித்து தடை செய்தாள்
நாச்சியாரால் இவரது சொல் நிலை நாட்டப்பட்டது படியே இவருக்கு இது பட்டப்பெயர் ஆயிற்று

63- நாச்சியார் கோயில் சந்தன மண்டபம் முதலியவற்றை ஜீரண உத்தாரணம் பண்ணினார்
64- பெருமாள் சந்நிதி வாசலுக்கும் அதற்கு உட்பட்ட திரு அணுக்கன் திரு வாசலுக்கும் தங்கம் பூசவித்தார்
70-ஆதி சேக்ஷனுடைய சிரஸ் ஸூ க்களுக்கு தங்கக் கவசம் சமர்ப்பித்தார்

74- கருட வாஹந பண்டிதர்
இவர் ஸ்ரீ ராமானுஜர் காலத்தவர்
ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி இவர் திரு நாமம்
இவர் சிறந்த கவியாய் இருந்ததால் ஸ்ரீ நிவாஸ மஹா கவி என்றும்
சிறந்த வைத்தியராயும் இருந்ததால் கவி வைத்ய புரந்தரர் என்றும் சொல்லப் படுபவர்

உடையவரை பெரிய பெருமாள் நியமனப்படி எதிர்கொண்டு அழைத்து -வரிசைகளை சமர்ப்பித்தார்
அவருக்கு அந்தரங்க கைங்கர்ய பரராயும் இருந்தார்

இவரையே பெரிய பெருமாள் பெரிய அவஸர அக்கார அடிசிலை கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு கொண்டு கொடுக்க நியமித்து அருள
அதில் இரண்டு திரளை ஸ்வீ கரித்து ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப்பிள்ளையும் அவதரித்தார்கள்

முதலியாண்டான் தத்தியானத்துடன் நாவல் பழம் சமர்ப்பிக்க -இவரைக் கொண்டே தன்வந்திரி சாந்நித்தியை ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்

இவரே திவ்ய ஸூரி சரிதம் பிரசாதித்து அருளினார்

75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி

கருட வாகன பண்டிதருக்குப் பின்பு ஸ்ரீ ரெங்க ஸ்ரீ கார்யம் நிர்வஹித்தவர்-உடையவர் திரு நாட்டுக்கு எழுந்து அருளியது இவர் காலத்திலேயே –
உடையவர் இருக்கும் பொழுதே கருட வாஹந பண்டிதர் திரு நாட்டுக்கு எழுந்து அருளி விட்டார்
ஆகவே திவ்ய ஸூரி சரிதம் உடையவர் திரு நாட்டை அலங்கரித்தது பற்றிக் குறிப்பிட வில்லை
உடையவரின் சரம கைங்கர்யங்களை செய்தவர் இவரே

79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற கிருஷ்ண ராயர் உத்தம நம்பி

இவர் காலத்துக்கு முன் கி பி 1310 ல் மாலிக் கபூர் படை எடுத்து ஸ்ரீ ரெங்கத்தைப் பாழ் படுத்தினான் –
செஞ்சி ராஜா கொப்பண உடையார் திருமலையில் இருந்து எழுந்து அருளப்பண்ணி செஞ்சியிலேயே பூஜை பண்ணிக் கொண்டு இருந்தார்
கிபி 1371ல் இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜயநகர ராஜாவைக் கொண்டு துலுக்கப் படையை ஜெயித்து விரட்டிவிட்டு
விஜய நகர இரண்டாம் அரசரான புக்க ராயர் -அவரது குமாரரான ஹரிஹராயர் இருவரையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அழைத்து வந்தார்
செஞ்சி ராஜா கொப்பண உடையாரும் இவருக்கு உதவியாய் இருந்து துலுக்கர்களை வென்று பெருமாளை ஸ்ரீ ரெங்கத்துக்கு எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு வந்தார்
புக்கராயர் காலத்தில் கன்யாகுமரி வரை ராஜ்ஜியம் பரவி இருந்தது
சோழ பாண்டிய மன்னர்கள் இவருக்குக் கப்பம் செலுத்தி வந்தார்கள்

இந்த கிருஷ்ண ராய உத்தம நம்பியால் மேல் உள்ள அரசர்களால் தாராதத்தமாக 17000 பொன் தானம் பெற்று கோயிலுக்கு 106 கிராமங்கள் வாங்கப் பட்டன
மேலும் சகாப்தம் 1304-கிபி 1382-மேல் -ருதி ரோத்காரி வருஷம் முதல் ஈஸ்வர வருஷம் வரையில்
ஹரிஹர ராயர் மஹா ராயர் -விருப்பண உடையார் -கொப்பண உடையார் -முத்தய்ய தென்நாயகர் -தம்மண்ண உடையார் -பிரதானி சோமப்பர் -காரியத்துக்கு கடவ அண்ணார்
முதலானார்கள் இடம் 5000பொன் வாங்கி அதன் மூலம் 13 க்ராமங்கள் வாங்கப்பட்டன –
சகாப்தம் 1207-கிபி 1375-ல் திருவானைக் காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் எல்லைக் சண்டை உண்டாகி -விஜய நகர மன்னர் அறிந்து அவர் தம் குருவான வ்யாஸ உடையார் முதலானவர்களை மத்தியஸ்தம் பண்ண அனுப்பினார்
பெருமாளுக்கு ஸ்தான அதிபதியான உத்தம நம்பி ஈரப்பாவாடை உடுத்தி கையில் மழு ஏந்தி கண்ணைக் கட்டிக்கொண்டு எந்த வழி போகிறாரோ அந்த வழியே பெருமாளும் எழுந்து அருள வேண்டியது என்று மத்யஸ்த்தர்கள் நிச்சயித்தார்கள் –
திருவானைக்காவலாரும் அதை சம்மதிக்க அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு எல்லை ஓடியதால்
இவருக்கு எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
தான் எல்லை ஓடி நின்ற இடத்தில் 16 கால் மண்டபமும் இரண்டொரு சிறு மண்டபங்களும் இவர் கட்டி வைத்தார்
பெருமாள் நாச்சிமார்களுடைய ஒவ்வொரு உத்சவத்தின் கடைசி நாளில் இன்றைக்கும் திருத்தாழ்வாரை தாசர் விண்ணப்பம் செய்யும் திருப்பணிப்பு மாலையில் உத்தம நம்பிக்க ஏற்பட்ட
மல்ல நிலையிட்ட தோள் அரங்கேசர் மதிளுள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போல் அல்ல -நீதி தன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தம நம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கும் எட்டு எழுத்தே –என்ற பாசுரத்தில்
எல்லை நிலை இடுகைக்கு ஆதாரமாய் இருந்த அஷ்டாக்ஷரத்தின் சிறப்பும்
59 வது உத்தம நம்பி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அனுக்ரஹத்தால் தம்முடைய சொல்லை நிலையிட்ட விவரமும் தெரிகிறது

இப்போது உள்ள ஸ்ரீனிவாச நகர் பள்ளிக்கூடமே முன்பு 16 கால் மண்டபமாக இருந்த இடம் –
பங்குனி 8 நாள் எல்லைக்கரை நம்பெருமாள் எழுந்து அருளும் போது
இப்போதும் அங்கே வெறும் தரையில் உத்தம நம்பி ஐயங்கார் வ்யாஸ ராய மடத்தார் முதலானோர் பெற்றுக் கொள்கிறார்கள் –

இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜய நகர அரசர் புக்க உடையார் உதவியுடன் துலா புருஷ மண்டபம் கட்டி வைத்தார்
ஹரிகர ராயர் விருப்பண்ண உடையார் துலா புருஷன் ஏறிக் கொடுத்த பொன்னைக் கொண்டு ரெங்க விமானத்தைப் பொன் மேய்ந்தார்
நம்பெருமாளும் அப்போது செஞ்சியில் இருந்து எழுந்து அருளினார்
விருப்பண்ண ராயர் பெயரில் சித்திரை திரு நாள் நடத்து வைத்து ரேவதியின் திருத்தேர் -செய்ததும் இந்த உத்தம நம்பியே

துலுக்கர் கலஹத்தில் யானை ஏற்று மண்டபம் ஜீரணமாக இந்த உத்தம நம்பி ஜீரண உதாரணம் பண்ணி வைத்தார்
யானை மேல் வைக்கப்படும் பூ மாங்குத்தி -என்ற புஷ்ப அங்குசம் உபஹார ஸ்ம்ருதியாக வாஹந புறப்பாடுக்குப் பின் இன்றும் உத்தம நம்பி பரம்பரையில் உள்ளாருக்கு அனுக்ரஹிக்கப் படுகிறது
இவர் ஹரிஹர ராயர் பேரால் திருப்பள்ளிக்கட்டில் என்னும் திவ்ய ஸிம்ஹாஸனம் சமர்ப்பித்தார்
இப்போதும் திருக் கார்த்திகை அன்று திருமுகப் பட்டயம் செல்லுகையில் –நாம் –ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டிலின் மேல் வீற்று இருந்து -என்றே பெருமாள் அருளிச் செய்கிறார்
இவர் கைங்கர்யங்களைப் பண்ணிக்கொண்டு 99 வருஷங்கள் இருந்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

—————

80- வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பியின் திருக்குமாரர்
சகாப்தம் -1329-கிபி 1406 மேல் ஸர்வஜித்து வருஷம் முதல் பிரமோதூத வருஷம் வரையில்
44 வருஷங்களில் நான்கு தடவை விஜய நகரம் சென்று பெருமாளுக்கு திருவிடையாட்ட கிராமங்கள் வாங்க -18000 பொண்ணுக்கு 101 கிராமங்கள் வாங்கினார்
இவர் காலத்தில் பெரிய ஜீயர் -மணவாள மா முனிகள் சன்யாசித்து கோயிலுக்கு எழுந்து அருள
பெருமாள் நியமனப்படி பல்லவ ராயன் மடத்தில் எழுந்து அருளப் பண்ணினார்
இவர் ஜீயருடைய வெள்ளை திருமேனியை தரிசித்து தேற மாட்டாமல் பெருமாளை சேவித்துப் பரவசராய் இருக்க
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் அணையான் திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி
இவர் கிடீர் ஜீயராக அவதரித்து அருளினார் – அவர் வண்ணம் வெளுப்பு என்று விஸ் வசித்து இரும் என்று அருளிச் செய்தார்
இவரும் பீத பீதராய் கோயில் அன்னான் உடன் ஜீயர் இடம் சென்று தெண்டம் சமர்ப்பித்துப் பிரார்த்திக்க
அப்பொழுது சாதித்த சேவை இன்றும் ஒரு கம்பத்தில் மேற்கு முகமாக சித்திர ரூபமாகவும் இரண்டு பக்கமும் உத்தம நம்பியும் கோயில் அண்ணனும் எழுந்து அருளி உள்ளார்கள்

ஜீயரின் நியமனம் படி அண்ணனுக்கு ஆச்சார்ய புருஷ வரிசையாக பெரிய நம்பிக்குப் பிறகு தீர்த்தமும் -கந்தாடை அண்ணன் என்ற அருளப்பாடும் உத்தம நம்பியால் ஏற்பட்டது
திருக்கார்த்திகை அன்று ஆழ்வாருக்கு திருமுகப்பட்டயம் கொண்டு போகும் தழை யிடுவார் கைங்கர்யம் -தம்முடையதாய் இருந்ததை உத்தம நம்பி அண்ணனுக்கு கொடுத்தார்
பூர்வம் வல்லப தேவன் கட்டி வைத்த வெளி ஆண்டாள் சந்நிதியையு ம் -தம்முடையதாய் இருந்ததை -அண்ணனுக்கு கொடுத்தார்
இன்றும் அண்ணன் வம்சத்திலேயே இருந்து வருகிறது –

சகாப்தம் 1354-கிபி 1432-பரிதாபி வருஷம் -அனுமந்த தேவர் கோயில் -திருப்பாண் ஆழ்வார் உள்ள வீர ஹனுமான் கோயில் தக்ஷிண சமுத்ராதிபதி தென்நாயகன் கைங்கர்யமாக கட்டி வைத்தார்
கிபி 1434-திருவானைக்காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் இடையில் மதிள் கட்டி வைத்தார்
இந்த உத்தம நம்பி காலம் வரையில் வசந்த உத்சவம் திருக்கைவேரிக்கரையிலே நடந்து வந்தது
ஒரு வைகாசியில் வெள்ள ப்ரவாஹத்தால் இது நடவாமல் போக கோயிலுக்கு உள்ளே ஒரு பெரிய குளம் வெட்டி -கெடாக் குழி – அதில் மய்ய மண்டபம் சுற்று மண்டபம் பெரிய மண்டபமும் போடுவித்து
இப்பொழுதும் அந்த வம்சத்தார் கைங்கர்யமாகவே நடைபெற்று வருகிறது
இவர் 68 திரு நக்ஷத்திரங்கள் எழுந்து அருளி இருந்தார்
தம்முடைய தம்பிக்கு சக்ர ராயர் பட்டப்பெயர் வாங்கிக் கொடுத்து தனியாக அவருக்கு ஆதீனம் மரியாதை ஏற்படுத்தினார்

————-

பூ சக்ர ராயர்
சக்ர ராயருடைய பாண்டித்யத்துக்கு ஏற்க பூ மண்டலத்துக்கே ராயர் என்னும் படி பூ சக்ர ராயர் என்று முடி சூட்டி ஸ்ரீ ரெங்கத்தில் தனி ஆதீனமும் உண்டாக்கினார் அரசர்
பிள்ளை ஐயன் என்ற பேராய இருந்த உத்தம நம்பி கோசம் இவர் காலத்துக்குப் பின்னர் இரண்டாக்கப் பிரிந்து பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -என்று தேவ ஸ்தான கணக்குகளில் முறை வீதம் இரண்டாக இன்றைக்கும் எழுதப்படுகிறது –

சகாப்தம் 1337-கிபி 1415-மன்மத வருஷத்தில் -பெரிய திரு மண்டபத்தில் -கருட மண்டபத்தில் -கருடன் கலஹத்தில் பின்னமான படியால்
அழகிய மணவாளன் திரு மண்டபத்தில் சந்நிதி கருடனை ஏறி அருளப் பண்ணினார்
மன்மத வருஷே ஜ்யேஷ்ட்ட்டே ரவி வாரசே ரேவதீ தாரே
ஸ்ரீ சக்ர ராய விபுநா ஸ்ரீ மான் கருட ப்ரதிஷ்டிதோ பூத்யை -என்று தர்மவர்மா திரு வீதியிலே இந்த வ்ருத்தாந்தம் சிலா லிகிதம் பண்ணப்பட்டது –

பூர்வம் சோழன் ப்ரதிஷ்டையான சக்ரவர்த்தி திரு மகனையும் ஜீரண உத்தாரணம் பண்ணி வைத்து
அதிலே உள்ளாண்டாள் நாச்சியார் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் – ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்-

————

திம்மணார்யர்
இவரும் வழி யடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பிக்கு திருத்தம்பி
இவர் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஸ்ரீ ராமானுஜ பீடமான ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் பட்டத்தில் எழுந்து அருளி இருந்தார் –

————

51- ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி
இவர் நிர்வஹித்த காலத்தில் பங்குனி ஆதி ப்ரஹ்ம உத்சவம் 3 நாள் ஜீயர் புரத்துக்குப் போக வர குதிரை வாஹனம் ஏற்பட்டு இருந்தது
மழை பெய்ததால் மேல் உத்தர வீதியில் உத்தம நம்பி திருமாளிகையிலே நம் பெருமாள் எழுந்து அருளி இருந்தார்
ஆ வ்ருஷ்டி பாத விரதே -மழை ஓயும் வரையிலே –
இனி தூர புறப்பாட்டுக்கு வாஹனம் கூடாது என்றும் பல்லக்கு தான் உசிதம் என்றும் ஏற்பாடு செய்தார்
இவரே நான்கு பக்கங்களிலும் நான்கு நூற்று கால் மண்டபங்களைக் கட்டி வைத்தார்
அக்னி மூலையிலே ஸ்ரீ பண்டாரம் -நைருதியில் கொட்டாரம் -வாயுவில் முதல் ஆழ்வார் வாஸூ தேவன் சந்நிதி -ஈஸான்யத்தில் ராமர் சந்நிதி கட்டப் பட்டன
இந்தக் கைங்கர்யத்தை பெரிதும் உகந்து -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று அவருக்குப் பட்டப்பெயரும் அருளினார்
அத்யயன உத்சவ மேலப்படி மரியாதை உத்தம நம்பிக்கு நடக்கையில் இந்த அருளப்பாடு வழங்குகிறது

இவ்வாறு பல கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு 72 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்

———–

82- திருமலை நாத உத்தம நம்பி
இவர் லஷ்மீ காவ்யம் அருளிச் செய்துள்ளார்
பெரிய திரு மண்டபத்துக்கு கிழக்கே கிளி மண்டபம் என்னும் நூற்றுக் கால் மண்டபம்
இவரது முன்னோர் 81 உத்தம நம்பி தொடங்கியதை பூர்த்தி செய்தவராவார் –
இதில் ஜ்யேஷ்டாபிஷேகமும் ஸஹஸ்ர கலச அபிஷேகமும் -பகிரங்கமாக நடைபெற்று வந்தது
இப்பொழுது பரம ஏகாந்தமாய் விமான ப்ரதக்ஷிணத்தில் நடைபெறுகிறது
ப்ரஹ்ம உத்சவம் 8 திரு நாள் எல்லைத்த திருநாளாகவே நடைபெறுகிறது
இவர் 37 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார் –

————–

83-குடல் சார வாளா நாயனார் என்கிற சின்ன கிருஷ்ண ராய உத்தம நம்பி
இவர் கோயில் நிர்வகிக்கும் பொழுது கர்ணாடக நாயகர்கள் மதுரையில் அரசாண்டு இருந்தார்கள்
1534-ஜய வருஷத்தில் ஷாமம் வரவே கோயில் திருக்கொட்டாரத்தில் இருக்கும் நெல்லைக்கு கொடுக்க கேட்டார்கள்
உத்தம நம்பி -அரங்கன் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது என்று ஹிதம் சொல்லியும் நாயகர் பலவந்தம் பண்ணினார்
நீர் கூடை பிடித்தால் நான் மரக்கால் பிடித்து அளக்கிறேன் என்று சொல்லி
முதல் மரக்காலுக்கு திருவரங்கம் என்று அளந்து மறு மரக்காலுக்கு -பெரிய கோயில் -என்று சொல்லி
தம் குடலை அளந்து பிராண தியாகம் பண்ணினார்
ராஜாவும் வெளியே வந்து -குடல் சாரா வாளா நாயனார் -என்ற பட்டம் சூட்டினார்
அது முதல் வேறே காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நிஷ்கர்ஷம் ஆயிற்று
த்ரவ்யம் அளக்கும் பொழுதும் திருவரங்கம் -பெரிய கோயில் -மூன்று என்று சொல்லியே அளக்கும் வழக்கமும் வந்தது
கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்த செங்கமல வல்லித்தாயார் -தான்ய லஷ்மி எழுந்து அருளி இருக்கும் திரு மதிள் கட்டினார்
இவர் 32 திருநக்ஷத்ரம் 1 மாதம் 8 நாள்களுக்குப் பின் திருநாட்டை அலங்கரித்தார் –

——————

86- ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
கிபி 1662-1692- வரை ஆண்ட நாயக்கர்களின் ஏழாமவரான கர்ணாடக ஷோக்கா நாத நாயகர் பெருமாள் உத்சவங்களுக்காக பல கிராமங்களை சமர்ப்பித்து தம்மை ஆசீர்வதிக்க சாசனம் இவருக்கு தெலுங்கில் எழுதிக் கொடுத்தாட்ர்

————

88- ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் காலத்தில் ஸ்ரீ ரெங்கம் மஹாராஷ்டிரர்களுக்கு அதீனமாயிற்று -திருச்சியில் முராரிராவ் நீதி செலுத்தி வந்தார்
கிபி 1748க்கு மேல் திருச்சிராப்பள்ளி நவாப் ஷீரஸ்வதீன் தேவுல்லா மஹம் மதலிகான் பஹதூர் வசமாயிற்று

———–
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
இவர் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பியின் திருக்குமாரர் –
இவர் நிர்வாகத்துக்கு வரும் பொழுது அதி பால்யமாய் இருந்தார்
அப்போது அமீர் முறாம் பகதூர் நவாப் நிர்வாகத்துக்கு ஒரு அமுல்தாரனையும் நியமித்தார்

18 திரு நக்ஷத்ரத்திலேயே இவர் ஆச்சார்யர் திருவடி சேர ஸ்வீ காரம் மூலம் 90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி நிர்வாஹத்துக்கு வர
அப்பொழுது ஆங்கிலேயர் வசமாயிற்று

இவர் நிர்வாகத்துக்கு வந்த பின்னர் அவருடைய தாயாதியான சக்ரராய ஸ்ரீ ரெங்க ராஜருக்கும் விவாதம் உண்டாகி நியாய ஸ்தலம் போக வேண்டிற்று
அதுக்கும் மேலே 1830க்கு மேல் உத்தம நம்பி திரு மாளிகையில் தீப்பற்றி ஓரந்தங்களும் சொத்துக்களை பற்றிய ஆவணங்களும் எரிந்து போயின
இவ்வாறு பல காணி பூமி சந்நிதி மிராசுகளை இழக்க வேண்டிற்று
இவ்விதமாக குடும்பம் சோர்வுற்றது
1842 வரை சர்க்கார் நிர்வாகத்திலே கோயில் இருக்க பரம்பரை தர்மகர்த்தாவாக 90 உத்தம நம்பி நியமிக்கப் பட்டார்
1859 திரு நாடு எழுந்து அருளினார்

90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பிக்கு ஐந்து திருக் குமாரர்கள்
ஜ்யேஷ்டர் சிங்கு ஐயங்கார்
இவர் சந்ததி விருத்தி யாகவில்லை
இவர் தம்பி உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர் -உத்தம நம்பி ரெங்க ஸ்வாமி ஐயங்கார் சந்ததியார்களே இப்பொழுது உள்ளார்கள்

91-உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர்–1872 திருநாடு அலங்கரித்தார்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -67 திரு நக்ஷத்திரங்கள்
92-உத்தம நம்பி தாத்தாச்சாரியார் -61 திரு நக்ஷத்திரங்கள்

94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்
1898-கார்த்திகை பூரம் ஜனனம்
93-உத்தம நம்பி தாதாச்சார்யருக்கு சந்ததி இல்லாமையால் இவர் 1903 ஸ்வீ காரம்
தர்ம கர்த்தாவாக ஆறு தடவை 1924 முதல் 1949 வரை இருந்தார்
இவர் திருத்தமையானாரான ஸ்ரீ நரஸிம்ஹா சார்யர் இந்த வம்சப் ப்ரபாவம் அருளிச் செய்துள்ளார்

அத்யயன உத்சவம் இராப்பத்தில் மேலப்படியில் -உத்தம நம்பிள்ளை -பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று
அருளப்பாடு சாதித்து தொங்கு பட்டு பரிவட்டம் சாதிக்கப்படுகிறது

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உத்தம நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–4–சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்–

September 6, 2021

பர
வ்யூஹ
விபவ
அந்தர்யாமி
அர்ச்சாவதாரங்களான
இடங்களிலே எழுந்து அருளி நிற்கிறது
சேதனரைத் திருத்துகைக்கும்
திருந்தின சேதனரை அடிமை கொள்ளுகைக்கும் ஆய்த்து

அவை எல்லாவற்றிலும்
அவை மிக்கு இருப்பது திருமலையிலே நிற்கிற நிலை இறே

திருமால் இருஞ்சோலை மலை என்றேன் –இத்யாதி
வெற்பு என்று இருஞ்சோலை –இத்யாதி
வெற்பு என்று வேங்கடம் பாடும் –இத்யாதிகளிலே காணலாம்

ஆகையால் ஈஸ்வரன் ஆழ்வார்களுக்கு
பிரதம காலத்திலே
மயர்வற மதி நலம் அருளி விநியோகம் கொள்ளும்
அவர்கள் பின்பு இருக்கிறது பகவத் இச்சையாலே யாய்த்து

நமக்கு எல்லாம்
சரீர அவசானத்திலே இவற்றைப் பிறப்பித்துக் கார்யம் செய்யும்

ஊரவர் இத்யாதி –
பாகவத அங்கீ காரமாகிற எருவை இட்டு
ஆச்சார்ய உபதேச ஞானம் ஆகிற நீரைப் பாய்ச்சி
சங்கம் ஆகிற நெல்லை வித்தி இறே கிருஷி பண்ணுவது

இப்படி திருந்தின இவரைக் கண்டு அவன் உகக்க
அவன் உகப்பைக் கண்டு இவர் உகக்க
இவ்வுகப்புக்கு மேல் இனி வேறே ஒரு பேறும் இல்லை -என்று இவர் இருக்க

இவர் காரியத்தில் நாம் முதல் அடி இட்டிலோம் -என்று
அவன் பதறுகிற பதற்றத்தைக் கண்டு

விரோதிகள் அடையப் போய்த்தாகில்
அபேக்ஷிதங்களைப் பெற வேண்டும் அம்சம் அடையப் பெற்றதாகில்
இனி தேவர் பதறுகிறது என் -என்று
அவன் பதற்றத்தை அமைக்கிறார் –

———–

திருமலையிலே கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு ஸந்நிஹிதனாய்
என்னை விஷயீ கரித்து உன் கிருபையை எனக்கு அவலம்பமாம் படி பண்ணினாய்
இனி மேல் தேவர்க்குத் திரு உள்ளம் ஏது என்கிறார் –

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –

பதவுரை

சென்னி ஓங்கு–கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண்–குளிர்ந்த
திருவேங்கடம்–திருவேங்கட மலையை
உடையாய்–(இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை–உலகத்தவர்களை
வாழ–வாழ்விப்பதற்காக
நின்ற–எழுந்தருளி யிராநின்ற
நம்பீ–(கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா–தாமோதரனே!
சதிரா–(அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும்–எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும்–என் உடைமையான சரீரத்திற்கும்
உன்–உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு–ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின்–உன்னுடைய
அருளே–கருணையே
புரிந்திருந்தேன்–(ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்;
இனி–இப்படியான பின்பு
திருக் குறிப்பு–திரு வுள்ளக் கருத்து
என்–எதுவாயிருக்கின்றது?–

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்
உயர்ந்த கொடி முடியை யுடைத்தாய்
ஸ்ரம ஹரமான திருமலையை உனக்கு இருப்பிடமாக உடையவனே
உபய விபூதிக்கும் முகம் காட்டுகைக்கு நிற்கும் இடம் இறே த்ருதீய விபூதி இறே திருமலை –

உலகு தன்னை வாழ நின்ற நம்பீ
வை ஷம்யம் அற எல்லாரும் உன்னைக்கிட்டி வாழும்படி
நிலையார நின்ற கல்யாண குண பூர்ணனே
கானமும் வானரமும் ஆனவற்றுக்கும் முகம் கொடுக்கும் படி யாய்த்து நீர்மையில் பூர்த்தி
வாத்சல்யத்தி குண பூர்ணனே

தாமோதரா
அந்தப் பூர்த்தியை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின படி
வெண்ணெயைக் களவு கண்டான் என்று கொண்டி யோடே பிடித்து
யசோதைப்பிராட்டி கட்டக் கட்டுண்டு
அத்தால் வந்த தழும்பை நிரூபகமாக யுடையவனே

இத்தால்
ஆஸ்ரித பவ்யதை சொல்லுகிறது

சதிரா
ஆஸ்ரித தோஷம் காணாத விரகு

என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
ஆத்மாவையும் ஆத்மீயங்களையும்
திருவாழியாலே முத்திரை இட்டு
ஆத்மாவுக்கு சேஷத்வ ஞானத்தை உண்டாக்குகை
ஆத்மீயங்களான தேஹாதிகளுக்குத் திரு இலச்சினை சாத்துகை

நின்னருளே புரிந்து இருந்தேன்
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து
நிர்பரனாய் இருந்தேன்

இனி என் திருக் குறிப்பே
ஞான லாபத்தையும் பண்ணித் தந்து
விரோதி நிவ்ருத்த பூர்வமாக
அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில்
இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

———-

கீழ் அவன் அருளாலே பேற்றுக்கு ஹேது என்றார்
இதில் அவன் அருளாலே தாம் பெற்ற பேறு சொல்லுகிறார் –

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –

பதவுரை

பறவை ஏறு–பெரிய திருவடி மேல் ஏ றுமவனான
பரம் புருடா–புருஷோத்தமனே!
நீ–(ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை–(வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின்–ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும்–ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி–வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது–பெரிய தரம் பெற்றதாகிறது;
இறவு செய்யும்–(இவ் வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு–பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ–நெருப்புப் பட்டு
வேகின்றது–வெந்திட்டது;
அறிவை என்னும்–ஞானமாகிற
அமுதம் ஆறு–அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது–மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது–
கிரமம் -இராதே ராஜ குமாரன் என்று அறிந்த பின்பே கிரீடம் தலையிலே ஏறி
பின்பு தானே சிறை வெட்டி விடுவார்

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பெரிய திருவடியை வாகனமாக யுடைய பரம புருஷனே
சங்க ஸ்வ பாவனான நீ
உன்னால் அல்லது செல்லாத என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட பின்பு

பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலும் சுவறிப்
பெரிய தரமும் உண்டாகா நின்றது
மேல் சாத்தும் பர்யட்டமும் வாரா நின்றது
பரம சாம்யா பத்தி உண்டாகா நின்றது

இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
இவ் வாத்மாவை முடிக்கிற கர்ம ஆரண்யம்
சீறா எரியும் திரு நேமியினுடைய ஜ்வாலாக்நி
கொழுந்தி தக்தமாகா நின்றது

அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே
ஞானம் ஆகிற அம்ருத ப்ரவாஹினியான நதி பெருகி
வாயளவாயத் தலைக்கு மேலே போகா நின்றது

அதனில் பெரிய அவா -என்கிறபடியே
இனி என் திருக்குறிப்பு -என்று கீழோடே அந்வயம் –

———-

பாப நிவ்ருத்தி என் அளவிலே அன்றிக்கே
நான் இருந்த தேசத்தில் உள்ள பாபங்களும் நசித்துப் போன பின்பு
நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ என்கிறார் –

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

பதவுரை

எம் மனா–எமக்குத் தலைவனே!-தாய் -மன்னன் –
என் குல தெய்வமே–என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே–எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய்–உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும்–உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்
நாடு சாஸ்திரம் என்றுமாம்
சும்மெனாதே–மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை–பெற்ற நன்மையை
இ உலகினில்–இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார்–மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல–பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும்–கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு–ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி–ஓடிப் போய்
தூறுகள்–புதர்களில்
பாய்ந்தன–ஒளிந்து கொண்டன–

எம்மனா
எம்மன்னா -என்று வலித்து
எனக்குத் தாய் போலே பரிவன் ஆனவனே

அன்றிக்கே
மன்னா -என்று ராஜாவாய்
ஈரரசு தவிர்த்தவன் என்னவுமாம்
என் ஸ்வா தந்தர்யத்தைக் குலைத்தவனே

என் குல தெய்வமே
என் குலத்துக்குப் பர தேவதையானவனே
என் குல நாதனே

என்னுடை நாயகனே
என் குலத்தில் உள்ளாருக்கு ஸ்வாமி யானதும் என்னாலே என்னும்படி
எனக்கு நாதன் ஆனவனே
(அர்வாஞ்சோ இத்யாதி –திருமுடி சம்பந்தத்தால் ஏற்றம் )

இம் மூன்று பதத்தாலும்
ஸ்வரூப
சாதன
ப்ராப்ய விரோதிகளைப் போக்கி
ஆகார த்ரய பிரதி சம்பந்தி யானவன் என்னுமாம்

நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை
உன் அபிமானத்தில் அந்தர் பூதனாய்ப் பெற்ற பிரயோஜனம்

இவ்வுலகினில் யார் பெறுவார்
இஸ் ஸம்ஸாரத்தில் யாருக்கு லபிக்கும்
இது எனக்கு அலாப்ய லாபம் அன்றோ
இப்படி பேறு பெற்றார் உண்டோ

நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
யம படரைப் போலே விழவிட்டு அமுக்கும் படியான
என் நாட்டில் உள்ள பாபங்கள் எல்லாம்

சும்மேனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே
மூச்சு விடாதே போய்
முன்பு இருந்த இடத்தைக் கை விட்டு
துடர்ந்து பிடிக்க வருகிறார்களோ என்று புரிந்து பார்த்து ஓடிக்
காட்டிலே விழுந்து போயிற்றன

கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே

ஸம்ஸார மருகாந்தரத்திலே போய்ப் புகுந்தன -என்கை –

———–

தாம் பகவத் விஷயத்திலே அவஹாகிக்கையாலே
தம்முடைய ஆஜ்ஜை நடக்கும் இடம் எல்லாம்
யம வஸ்யதை புகுரப் பெறாது என்கிறார்

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 –

பதவுரை

தட வரை–பெரிய மலை போன்ற
தோள்–தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ–திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில்–சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே–வீரனே!
கடல்–திருப் பாற் கடலை
கடைந்து–(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு–(அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை–கலசத்தில்
நிறைந்த ஆ போல்–(நீ) நிறைந்தது போல
(அடியேன்)
உடல் உருகி–உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து–வாயைத் திறந்து கொண்டு
உன்னை–(ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன்–உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்;
(இனி)
கொடுமை செய்யும்–கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும்–யமனும்
என் கோல் ஆடி–எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு–அணுக வல்லவனல்லன்–

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
கடலைக் கடைந்து
அம்ருதத்தை வாங்கி
கலசத்தை நிறைத்தால் போலே

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
ஸரீரமானது அபி நிவேச அதிசயத்தாலே உருகி
ப்ரீதி ப்ரேரிக்க
வாய் திறந்து
இரண்டு கையையும் மடுத்து -என்னுமா போலே
மண்டிக் கொண்டு நிரதிசய போக்யனான உன்னைப் பூர்ணமாக அனுபவித்தேன்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்னுமா போலே

கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
பாபம் பண்ணினவர்களைக் கண்ணற்று நலிகிற மிருத்யுவும்
என் ஆஜ்ஜை நடக்கிற இடத்திலும் கிட்டப் பெறாது

தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே
மலை போலே பெரிய தோள்களை யுடையையாய்
பெரிய மலை என்னுமாம்

திருவாழியாலே அலங்க்ருதமான திருக்கைகளை யுடையையாய்
ஸ்ரீ சார்ங்கமாகிற வில்லை யுடைய ஸூரனே
உன்னை அண்டை கொண்ட பலம் இறே யமாதிகள் அஞ்சுகிறது –

———-

ஸ்லாக்யனான யுன்னை நாவால் ஹிருதயத்திலே வைத்துக் கொண்ட எனக்கு
வேறே அபேக்ஷிதம் உண்டோ என்கிறார் –

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5-

பதவுரை

என் அப்பா–எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா–எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர்–என் ஆத்மாவை
காவலனே–(அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை–ஸுவர்ணத்தை
நிறம் ஏழ–நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு–உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல்–உரைப்பது போல
உன்னை–(பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு–என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி–மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன்–உரைத்துக் கொண்டேன்.-பேசிக்கொண்டு நின்றேன்
உன்னை–(யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள்–என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன்–அமைத்தேன்;
என்னையும்–(நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன்–உனக்குச் சேஷப் படுத்தினேன்–
மேலைத்தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அனுபவம் சரணாகதியை பண்ணத் தள்ளும் -கையாலாகாத் தனம்

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
பொன்னை உரை கல்லிலே நிறம் பிறக்கும் படி உரைக்குமா போலே

உன்னைக் கொண்டு என் நாவகம் பால்
பொன்னிவர் -என்னும் உன்னை
என் நாவாகிற உரை கல்லிலே
வேதங்களாலும் அளவிட ஒண்ணாத யுன்னை

மாற்றின்றி
மாற்று அற
ஸத்ருசம் அற

உரைத்துக் கொண்டேன்
வஸ்துவை உள்ளபடி வ்யஹரிக்க வல்ல வாசகமாக யுரைக்கப் பெற்றேன்

உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
ஸ்ப்ருஹணீயமான உன்னுடைய அங்கீகாரத்தைக் கொண்டு
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட -என்னும்படி
என்னுடைய அனுபவத்துக்கு விஷயம் ஆக்கினேன்

என்னையும் உன்னில் இட்டேன்
நீ இப்படி மேல்விழுந்து ஆதரிக்கைக்கு யோக்யனான என்னையும்
உனக்கு போக்யம் ஆக்கினேன்
நம இத்யேவ வாதீந -என்னுமா போலே

என்னப்பா
எனக்கு ஜனகன் ஆனவனே

என் இருடீகேசா
எனக்கு சர்வ இந்திரியங்களுக்கு விஷயம் ஆனவனே

என் உயிர்க் காவலனே
என் ஆத்மாவுக்கு ரக்ஷகன் ஆனவனே
நான் இனிப் பெறாதது உண்டோ என்கை –

—————

நீ என்னுடைய ஹிருதயத்திலே ஞான விஷயமாகக் கொண்டு ஸந்நிஹிதனான பின்பு
என்னை விட்டு இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்கிறார் –

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –

பதவுரை

மன்–(துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க–அழியும்படி
மழு–மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட–வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன்–பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராம நம்பீ–குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய–உன்னுடைய
விக்கிரமம்–வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல்–ஒன்று தப்பாமல்
எல்லாம்–எல்லாவற்றையும்
என்னுடைய–என்னுடைய
நெஞ்சகம் பால்–நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன்–சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;
பிரகாசிக்கும் படி கொண்டேன்
எம் பெருமான்–எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே
கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்
என்னிடை வந்து–என் பக்கலில் எழுந்தருளி
இனி–இனி மேல்
போகின்றது–போவதானது
எங்கு–வேறு எவ்விடத்தைக் குறித்து?–

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
உன்னுடைய திவ்ய அபதானங்கள் ஓன்று ஒழியாமல் எல்லாவற்றையும்

என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
சுவரிலே சித்ரம் எழுதினால் கண்ணுக்குத் தோற்றுமா போலே
என்னுடைய நெஞ்சிலே இவற்றையும் பிரகாசிக்கும் படி பண்ணிக் கொண்டேன்
ரிஷிகளுக்கும் பிரகாசியாத அர்த்தங்களும் எனக்குப் பிரகாசித்து அனுசந்திக்கப் பெற்றேன்

மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
ஆஸூர ப்ரக்ருதிகளான ராஜாக்கள் முடியும்படியாக
மழு என்கிற திவ்ய ஆயுதத்தை வலக்கையில் தரித்து
ஞான சக்த்யாதிகளாலே பூர்ணனான
ஸ்ரீ பரஸூ ராமாவதாரத்தைப் பண்ணினவனே

என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே
என் சேஷத்வத்தையும்
உன் சேஷித்வத்தையும்
எனக்குப் பிரகாசித்து என்னைக் கைக் கொண்ட பின்பு
இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ
போகிலும் கூடப் போம் அத்தனை –

————

என்னை உனக்கே அநந்யார்ஹம் ஆம் படி
நிர்ஹேதுகமாகக் கைக் கொண்டு வைத்து
இனிப் பொகட்டுப் போகலாமோ -என்கிறார் –

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

பதவுரை

பருப்பதத்து–மகா மேரு பர்வதத்தில்
கயல்–(தனது) மகர த்வஜத்தை
பொறித்த–நாட்டின்
பாண்டியர் குல பதி போல்–பாண்டிய வம்சத்து அரசனைப் போல்,
திருப் பொலிந்து–அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி–செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல்–என் தலையின் மீது
பொறித்தாய் என்று–(அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்,
மருப்பு ஒசித்தாய் என்று–(குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்,
மல்–மல்லரை
அடர்ந்தாய் என்று–நிரஸித்தவனே! என்றும்
(இவ்வாறான)
உன் வாசகமே–உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை–தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை.
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே–

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
பாண்டிய வம்சத்துக்கு நிர்வாஹனாய் இருப்பான் ஒரு ராஜா தன் தேசத்தின் நின்றும்
மஹா மேரு அளவும்
வழியில் உள்ள வன்னியம் அறுத்து ஜெயித்துக் கொடு சென்று
மஹா மேருவிலே தன் வெற்றி எல்லாம் தோற்றும்படி
தன் அடையாளமான கயலை இட்டுப் போந்தால் போலே

பரம பதம் கலவிருக்கையான ஈஸ்வரனான நீ
அங்கு நின்றும் என் பக்கலிலே வரும் அளவும் உண்டான
பாவக் காட்டைச் சீய்த்து
என்னுடைய ப்ராதிகூல்ய ரூப வன்னியம் அறுத்து
என்னிடத்தில் பாத இலச்சினை வைத்தாய்
உன் அடையாளம் இட்டுக் கொண்டாய்

திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல்
பொறித்தாய்
அழகு விஞ்சி இருப்பதாய்
ருஜுவான திருவடிகள்
ஆர்ஜவ ஸ்வ பாவமானது என்கை

அதவா
ஐஸ்வர்ய சிஹ்னங்களை யுடைத்தான திருவடிகள் என்றுமாம்
கதா புந–இத்யாதி
அமரர் சென்னிப் பூவான ப்ராப்யத்தை லபிக்கப் பெற்றேன்

மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை
ப்ராப்ய விரோதிகளை
குவலயா பீடத்தையும் சாணூர முஷ்டிகரையும் நிரசித்தால் போலே நிரசித்துப் பொகட்டு
அவ்வபதானங்களுக்குத் தோற்று நான் ஏத்தும் படி பண்ணினவனே –

யுனக்கு உரித்து ஆக்கினையே
இதுவே யாத்ரையாய் இருக்கும்படி இருக்கிற என்னை
உன்னை ஒழியப் புறம்பு ஆளாகாத படி பண்ணின பின்பு
இனி எங்குப் போவது –

——–

அநந்த கருடாதிகளிலும் காட்டில் என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி
நீ என்னோடே ஸம்ஸ்லேஷிக்க
நானும் அத்தை அனுசந்தித்து விஸ்ராந்தனான பின்பு
இனி உனக்குப் போக்கிடம் உண்டோ என்கிறார் –

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பதவுரை

நேமி–திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே–ஸர்வாதிகனே!
எம் பிரான்–எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும்–திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும்–பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து–(அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே–எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி–வந்து பொருந்தி
வாழச் செய்தாய்–(என்னை) வாழ்வித்தருளினாய்;
(இப்படி வாழ்வித்த உன்னை.)
என் உள்ளே–என் நெஞ்சில்
நினைந்து நின்று–அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு–(அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக–கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே–(நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன்–இளைப்பாறப் பெற்றேன்–

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து
பிராட்டிமாரோ பாதி
தனக்கு போக்யரான திருவனந்த ஆழ்வான் பெரிய திருவடி இவர்கள் பக்கல்
தனக்கு உண்டான ஸ்நேஹம் அத்யல்பம் என்னும்படி
என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி

என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
தான் மயர்வற மதி நலம் அருள
அத்தாலே
நெஞ்சு நாடு என்னும்படி திருந்தின என் ஹிருதயத்துக்கு உள்ளே
அஹேதுகமாக வந்து வர்த்தித்து
நான் அனுபவித்து ஸூகிக்கும் படி பண்ணின என் உபகாரகனனே

என்னாயன் செய்த உபகாரம் தான் என் என்ன
த்ரிபாத் விபூதியில் உள்ள எல்லோரோடும் பரிமாறும் பரிமாற்றத்தை எல்லாம்
இவர் ஒருவரோடும் பரிமாறும் உபகாரம்

நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
உன் வியாமோஹாதி கல்யாண குணங்களையும்
வடிவு அழகையும் என்னிலே நினைத்து
அத்தாலே வந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
ஸ்தப்த்தனாய்ப் பின்னை
சிதில அந்தக் கரணனாய்
அந்த ஸைதில்யம் கண்ண நீராகப் ப்ரவஹிக்க

உள் உருகுகின்றது
புற வெள்ளம் விட்டபடி

நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன்
நீ பண்ணின யுபகார பரம்பரைகளை அனுசந்தித்து
இளைப்பாறி இருந்து
உன்னைப் பெறாமையாலே வந்த ஸ்ரமம் எல்லாம் ஆறப் பெற்றேன்

நேமி நெடியவனே
திருக் கையும் திருவாழியுமான அழகுக்கு எல்லை இல்லாதவனே
ஆழ்வார் பக்கல் ப்ரேமத்துக்கு முடிவு இல்லாதவன் என்னவுமாம் –

———–

போக ஸ்தானங்களான ஷீராப்தி யாதிகளையும் உபேக்ஷித்து
என் நெஞ்சையே போக ஸ்தானமாகக் கொண்டான் என்கிறார்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

பதவுரை

பனி–குளிர்ந்த
கடலில்–திருப்பாற் கடலில்
பள்ளி கோளை–பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு–பழகியதாக விட்டு (மறந்து விட்டு)
பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது
சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே -குகன் இடம் பெருமாள்
ஓடி வந்து–(அங்கு நின்றும்) ஓடி வந்து
என்–என்னுடைய
மனம் கடலில்–ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல–வாழ வல்லவனும்
மாயம் ஆச்சரிய சக்தியை யுடையவனும்
மணாள–(பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ–குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று–ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று–ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று–ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை)
உனக்கு இடம் ஆய் இருக்க–உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை–(மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)–

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு
திருமேனியில் ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஸ்ரமஹரமாம் படி
குளிர்ந்த திருப் பாற் கடலிலே இறே பள்ளி கொண்டு அருளுவது –

அத்தைப் பழக விட்டு –
மறந்து விட்டு
அத்தை மறப்பித்தது இறே இவர் திரு உள்ளத்தில் குளிர்த்தி

ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல
கடுக நடையிட்டு வந்து
(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு )
என் உடைய நெஞ்சாகிற கடலிலே புக்கு
அபிமத லாபத்தாலே வந்த ஐஸ்வர்யத்தாலே குறைவற்று ஸூகிக்க வல்ல

மாய மணாளா நம்பீ
ஆச்சர்யமான வடிவு அழகாலும்
குணங்களாலும்
பூர்ணனானவனே

இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே
குணங்களும்
திருமேனியில் செவ்வியும்
பூர்த்தி பெற்றது

தனிக் கடலே
அத்விதீயமான கடல் போலே அபரிச்சேதயனானவனே

தனிச் சுடரே
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -என்கிறபடியே
வந்து திரு அவதரித்து ப்ரகாசகனான அத்வதீயனே
ஸ்வயம் பிரகாச ஸ்வரூப ஸ்வபாவன் என்னுமாம்
(விளக்கு தான் தன்னையும் விளக்கி மற்ற அனைத்தையும் விளக்கும்
அவனையும் விளக்கும் குத்து விளக்கு அன்றோ பிராட்டி )

தனி உலகே
அத்விதீயமான ப்ராப்யம்
ஒரு விபூதிக்காக ஒருவனுமே இறே ப்ராப்யம்
அந் நினைவிலே இறே விபூதியாக நடக்கிறது

என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே
இப்படிப்பட்ட திரு நாமங்களை மாறாதே ரஸ்யதையாலே சொல்லும்படி பண்ணி
உனக்கு ஷீராப்தியாதி தேசங்கள் அநேகங்கள் எல்லாம் உண்டாய் இருக்க
அவற்றை உபேக்ஷித்து
அவை எல்லாம் என்னுடைய ஹிருதயமாகவே விரும்புகையாலே
அவாப்த ஸமஸ்த காமனான யுனக்கு
சேஷ பூதனான என்னை
அநந்யார்ஹன் ஆக்கினாய் —

———

பரமபதம் முதலான தேசங்கள் எல்லாத்தையும் விட்டு
என் நெஞ்சில் புகுந்த பின்பு நீ உஜ்ஜவலன் ஆனாய் என்கிறார் –
(கீழே அவற்றை விட்டு ஓடி வந்தவர் உஜ்ஜவலமாக இருப்பதை இங்கு அருளிச் செய்கிறார் )

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

பதவுரை

தடவரை வாய்–பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும்–மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல்–பரிசுத்தமான பெரியதொரு கொடி போல,
சுடர் ஒளி ஆய்–மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே–எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும்–விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ–ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும்–வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும்–ஸ்ரீவைகுண்டமும்
மதிள்–மதில்களை யுடைய
துவராபதியும்–த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை–இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு–உபேஷித்து விட்டு,
என் பால்–என்னிடத்தில்
இடவகை கொண்டனையே–வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)–

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
பரப்பை உடைத்தான மலையிடத்திலே பிரகாசகமுமாய்
தேஜஸ்ஸாலே விளங்கா நிற்பதாய்
பரி ஸூத்தமான பெரிய கொடி போலே

தடவரை -பெரிய பர்வதம் என்றபடி
மிளிருகை -ஒளி விடுகை –
தவழுகை என்றுமாம்

சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
நிரவதிக தேஜஸ்ஸாய்
நெஞ்சுக்குள்ளே தோன்றுகிற தேஜஸ்ஸாலே பூர்ணன் ஆனவனே

சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரஹம் -என்னவுமாம்
சோதி -குணங்கள் என்னவுமாம்
நம்பி -இவற்றால் குறைவற்று இருக்கும் படி
என் -இவற்றை எல்லாம் தமக்குப் பிரகாசிப்பித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு
திருமேனியும் புகர் பெற்று
பூர்த்தியும் உண்டாய்த்து

வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு
சனகாதிகளுக்கு முகம் கொடுக்கிற திருப்பாற் கடலும்
நித்ய ஸூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும்
பிரணயி நிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும்
அரணையும் உடைத்த தேசம் என்கை

இவை முதலான திவ்ய தேசங்கள் எல்லாத்தையும் அநாதரித்து
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி
முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளுமா போலே
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன -என்னக் கடவது இறே

என் பால் இடவகை கொண்டனையே
இவற்றில் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணினாய்

இப்படி ஆதரித்தது உன்னுடைய பிரயோஜனம் என்னும் இடம்
உன் திருமேனியிலே காணலாம்படி இருந்தாய்
இது என்ன வ்யாமோஹம் தான் -என்கிறார் –

———-

நிகமத்தில்
இத் திருமொழியை அப்யஸித்தாருக்குப் பலம் தம்மைப் போலே
எம்பெருமானுக்கு அநந்யார்ஹர் ஆகை என்கிறார் –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –

பதவுரை

வேயர் தங்கள்–வேயர் வைதிகர்களுடைய
குலத்து–வம்சத்து-வைதிகர் குலம்
உதித்த–அவதரித்த
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய
மனத்து–ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட–திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை–கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை–கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்.
ஆயரேற்றை–இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர்–சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை–அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம்–(இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல–நிழல் போல
அணுக்கர்களே–(எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்–
பாத ரேகா சாயை போல் அணுக்கர்

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக்
ஜகத்துக்கு ஆதித்யன் உதித்து அந்தகாரத்தைப் போக்குமா போலே
வேயர் கோத்ரத்திலே இவர் வந்து அவதரித்து
ஜகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கின படி

இப்படிப்பட்ட ஆழ்வாருடைய ஹிருதய கமலத்தையே தனக்கு
அசாதாரணமான கோயிலாக அங்கீ கரித்த கிருஷ்ணனை யாய்த்து
இப்பிரபந்தத்தாலே ப்ரதிபாதித்தது –

விட்டு சித்தன்
ஸர்வேஸ்வரனுக்கு ஹ்ருத்யரான ஆழ்வார்
இவர் திரு உள்ளத்திலே
பர வ்யூஹாதி ஸ்தலங்களான ஸ்ரீ வைகுண்டாதிகளை எல்லாம் உபேக்ஷித்து
ஆழ்வார் திரு உள்ளத்தையே அவை எல்லாமுமாகக் கொண்டான்

கோவலன்
நிமக்நரை உத்தரிப்பிக்கைக்காக தாழ்ந்த குலத்தில் வந்து அவதரித்தவனை

கொழும் குளிர் முகில் வண்ணனை
அழகியதாய் ஸ்ரம ஹரமான மேகம் போன்ற திரு மேனியை யுடையவனை
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பாய்த்து
குளிர்ந்து செவ்வி யுண்டாய்த்
தன் நிறம் பெற்றது திரு மேனி

முகில் வண்ணன் -என்று
இவன் அவருக்குப் பண்ணின ஒவ்தார்யத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆகவுமாம்

ஆயர் ஏற்றை
இடையரோடே கலந்து பரிமாறுகையாலே மேனாணித்துச் செருக்கி இருக்கிறவனை

அமரர் கோவை
அனுபவம் மாறில் முடியும்படியான ஸ்வ பாவத்தை யுடைய நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியானவனை

அந்தணர் தம் அமுதத்தினை
இவ் விபூதியில் முமுஷுக்களாய்
நிரதிசய பக்திமான்களான ப்ராஹ்மணருக்கு நிரதிசய போக்யமான அம்ருதம் போலே ப்ராப்யனானவனை
அவர்களை விண்ணுளாரிலும் சீரியர் என்னக் கடவது இறே
இங்கேயே அவர்களை போலவே இவ் வமுருதத்தைப் பாநம் பண்ணுகையாலே

சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -–
பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே என்று எம்பார் யோஜனை

பாடுகையாவது
உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று
ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு
ரஷ்ய ரக்ஷக பாவத்தை மாறாடி மங்களா ஸாஸனம் பண்ணுகை

சாயை போலே என்றது
புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கும் புறப்பட்ட இடத்தே புறப்பட்டு
அதன் பிரவிருத்தி நிவ்ருத்திகள் அடைய புருஷன் இட்ட வழக்கமாம் போலே

இத் திருமொழி கற்றாருக்கும் தங்களுக்கு என்று ஒரு ப்ரவ்ருத்தியாதிகள் இன்றிக்கே
ஈஸ்வரன் இட்ட வழக்காய் அவனுக்கு அந்தரங்கராகப் பெறுவார்கள் –

சாயா வா ஸத்வம் அநு கச்சேத் -என்றும்
நிழலும் அடி தாறும் ஆனோம் (பெரிய திருவந்தாதி )-என்று சொல்லக் கடவது இறே

அதவா
சாயை போலேப் பாட வல்லார்
சாயை என்று நிழலாய்
குளிரப்பாட வல்லார் என்றுமாம்
தங்கள் அந்தரங்கர்கள் ஆவார்கள் என்கை

ஆக
பத்துப் பட்டாலும்
தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்து
இது கற்றாருக்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

ஆக
திருப் பல்லாண்டில் தொடங்கின மங்களா சாஸனமே யாத்திரையாகக் கொண்டு போந்து
நிகமிக்கிற இடத்திலும்
சாயை போலே பாட வல்லார் -என்றது
திருப் பல்லாண்டு பாட வல்லார் என்று
மங்களா ஸாசனத்தோடே தலைக் கட்டுகையாலே
இவருக்கு மங்களா சாஸனமே எவ் வஸ்தையிலும் யாத்ரை -என்றதாயிற்று –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–3–துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை-

September 5, 2021

கீழில் திருமொழியில்
திருமால் இருஞ்சோலை மலையிலும்
சூழ் விசும்பு அணி முகிலிலும் சொன்ன அர்த்தங்கள் சொல்லிற்று

இதில்
முனியே நான் முகனில் ஒன்பது பட்டாலும் சொன்ன அர்த்தத்தைச் சொல்லுகிறது

பத்தாம் பாட்டில் அர்த்தம்
மேலில் திரு மொழியிலே சொல்லுகிறது

அன்றிக்கே
கீழில் திருமொழியில்
அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லி

இத் திருமொழியிலே
இஷ்ட ப்ராப்திக்கு
திருவாணை இட்டுத் தடுக்கிறார் -என்னவுமாம் –

—————————————–

அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
உன்னைக் காணப் பெற்ற நான்
இனிப் போக விடுவேனோ என்கிறார் –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-

பதவுரை

மக்கள் அறுவரை–உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்
கல் இடை மோத–(கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்–(அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்–திரு வயிற்றில்
சிக்கென வந்து–சடக்கென வந்து
பிறந்து நின்றாய்–திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்–(எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு–(நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
உன்னை
கண்டுகொண்டு–ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த–துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை–வலை போன்ற சரீரத்தில் நசையை
அற–அறும்படி
பறித்தேன்–போக்கிக் கொண்ட அடியேன்
இனி–(உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே–(வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?

துக்கச் சுழலையை
சுழல் ஆறு போலே வளைய வருகிற துக்கத்தை விளைப்பதாய் இருக்கை
கர்ப்ப வாஸம் போலே இவனைச் சுற்றிக் கிடக்கிற துக்கங்களை என்றுமாம் –

சூழ்ந்து கிடந்த வலையை
தப்ப ஒண்ணாத படி வீசின சரீரமாகிய வலையை
ஆத்மாவைச் சுற்றிக் கொண்டு கிடக்கிற அவித்யா கர்மாதிகள் -என்னுமாம்

அறப் பறித்து
ருசி வாசனைகளோடே போம்படி பண்ணி

புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன்
புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன்
பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார அளவாகச் சொல்லுகை
எல்லா இடத்தலும் உன்னை ஸாஷாத் கரிக்கப் பெற்றேன்

இனிப் போக விடுவது உண்டே
கைப்பட்ட உன்னை நான் போக ஸம்மதிப்பேனோ
போகிலும் கூடப் போகும் அத்தனை
உன்னாலே பெற்ற நான் உன்னைப் போக விடுவேனோ

நான் உன்னைப் போக விடுவேனாய் இருந்தேனோ -என்று
அவனையே கிடக்கிறார் ஆகவுமாம்

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழுந்தவடன் வயிற்றில்
தேவகியார் இழவு தீர்ந்தால் போல்
என் இழவையும் தீர்த்து அருள வேணும் என்கிறார் –

கால நேமியோடே சம்பந்தம் உடையராய் ப்ரஹ்ம சாபத்தாலே பாதாளத்திலே வர்த்திப்பார்
ஆறு அஸூரர்களை யோக நித்ரையாலே தேவகி கர்ப்பத்தில் பிரவேசிப்பிக்க
அந்த அஸூரர்களை ஜனிக்க ஜனிக்க
கம்சன் கல்லோடே அடித்துப் பொகட்டான்

ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோஹிணியார் திரு வயிற்றிலே அவதரிப்பித்து
தான் அஷ்டம கர்ப்பமாக விறே திரு அவதரித்தது
இப்படி ஆறு புத்ரர்களைக் கல்லோடே மோத
இழந்த தேவகியார் திரு வயிற்றிலே

சிக்கனே வந்து பிறந்து நின்றாய்
அந்த கம்சனால் நலிவு பண்ணாதபடி வலியையாய்
அவன் தனக்கே பாதகனாய்க் கொண்டு
வந்து திரு அவதரித்தாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த அவதாரத்தில் உதவப் பெறாத எனக்காகவே
திருமலையில் ஸந்நிஹிதனாய்
கிருஷியைப் பண்ணி
பல வேளையில்
பொகட்டுப் போகலாமோ –

————-

அவனுக்குப் போக ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் (பேரில் )ஆணை இடுகிறார்

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 2-

பதவுரை

நாடும்–நாட்டிலுள்ளாரும்-அவிசேஷஞ்ஞார்
நகரமும்–நகரத்திலுள்ளாரும்-விசேஷஞ்ஞார்
எங்கும்–மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து–நெருங்கி
தம்முடைய–தங்கள் தங்களுடைய
தீ வினை–துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று–ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து–ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்–பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற-பலத்தைக் கொடுக்கும் என்றுமாம்
தீர்த்தம் உடை –தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில்
(எழுந்தருளியிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்–(உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி–இனி மேல்
போகல் ஒட்டேன்–(நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்–உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்–மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்–(உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு –நின் திரு உனக்கு சேஷ பூதை -–
திரு ஆணை-உனது பிராட்டியின் மேலாணை.
(அப்படி ஒளிக்கலாகாது)
நீ–நீ
ஒருவர்க்கும்–ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை–உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை–

வளைத்து வைத்தேன்
ஸ்ரீ பரதாழ்வான் பெருமாளை வளைத்து
போக ஒண்ணாது -என் கார்யம் செய்து அல்லது -என்றால் போலே
இவரும் ஈஸ்வரனை வளைக்கிறார்
தம் செல்லாமை இறே வளைக்கிறது

இனி போகல் ஒட்டேன்
உன் சுவடு அறிந்த நான் இனிப் போக விடுவேனோ

உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில்
உன்னுடைய ஐந்திர ஜாலங்களை இட்டு என்னை மறைத்து
நீ மறைய நிற்கில்
இங்கே இருத்தி ஒரு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணி மறப்பித்துத் தான் மறைய நிற்கை

அன்றிக்கே
மம மாயா துரத்தயா -என்கிற
பிரக்ருதியை இட்டு மறைக்கை என்னுமாம்

நின் திருவாணை கண்டாய்
உனக்கு அநன்யார்ஹமாய்
நிரதிசய போக்ய பூதையுமான
பெரிய பிராட்டியார் ஆணை கிடாய்

அவள் பக்கல் முகம் பெற வேண்டி இருந்தாய் யாகில்
அவள் பரிகரமான என் அபேக்ஷிதம் செய்து அல்லது
உனக்குத் தரம் சொல்ல ஒண்ணாது

இங்கனே நம்மை நிர்பந்திக்கைக்கு நாம் உமக்கு தப்பினது உண்டோ என்ன
நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
கரு மலர்க்கூந்தல் –இத்யாதி
ஒரு பேதைக்குப் பொய் குறித்து -என்கிறபடியே
நீ யாருடனே நிலை நிற்க ஸம்ஸ்லேஷித்தாய்

அளித்து எங்கும் நாடும் நகரமும்
அஞ்ஞரோடே
சர்வஞ்ஞரோடே
வாசியற
அவி சேஷஞ்ஞரோடு
வி சேஷஞ்ஞரோடு
வாசியற–என்கை
இப்படி எங்கும் ரஷித்து

தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்து அளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய்
தம் தாமாலே பண்ணப்பட்ட துஷ்கர்மங்களைப் போக்குகையிலே ஒருப்பட்டு இருக்கும்
அவர்களாலே
தீர்த்தங்களை ப்ரோக்ஷித்துக் கொண்டு ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணப் படும்
தீர்த்தங்களை யுடையதான திரு மலையிலே
நின்று அருளின என் ஸ்வாமியே

அளித்து இத்யாதி
அழகருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

(நூபுர கங்கை திருமலை அழகர் -மூன்றுக்கும் விசேஷணமாகக் கொண்டு மூன்று நிர்வாகம் )

—————-

முதல் பாட்டில்
உன் ஸ்வரூப சித்திக்காக என் கார்யம் செய் என்றார்
இரண்டாம் பாட்டில்
உன் பிரணயித்வத்துக்காக என் கார்யம் செய் என்றார்
இப்பாட்டில்
உனக்கு தேஜோ ஹானி வராமல் இருக்க வேண்டில் என் கார்யம் செய் என்கிறார்

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –

பதவுரை

இனம் குறவர்–திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்–புனத்திலுண்டான
தினை–தினைகளை
கிள்ளி–பறித்து
புது அவி காட்டி–(அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
(அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)
உன் பொன் அடி வாழ்க என்று–“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று
(மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது–புதியதாகிய அத் தினையை
உண்ணும்–உண்ணுதற்கு இடமான
எழில்–அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
உனக்கு–(சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்–கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி–இனி மேல்
போய்–புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து–ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை–(அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை–(கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்–உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?–

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்
வகுத்த விஷயமான உனக்கு
முற்பட சேஷத்வ ஞானம் பிறந்த பின்பு
சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து
கைங்கர்யமே யாத்ரையாய்
அது இல்லாத போது சத்தை குலையும் படியாய்
இப்படி கைங்கர்யம் பண்ணி அதுவே யாத்ரையாய் இருக்கும் படியான தபஸ்ஸை யுடையேன்

இவருக்குத் தபஸ்ஸூ அவன் பிரசாதம் ஆயிற்று

இனிப் போய்
இப்படி கைங்கர்யமே யாத்ரையான பின்பும்
இவற்றை விட்டுப் புறம்பே போய்
அந்நிய விஷய ஸா பேஷனாய்

ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை
ஷூத்ரனாய் இருப்பான் ஒரு சம்சாரி சேதனன் காலில் விழுந்து
அவன் வாசலைப் பற்றி நிற்கை

நின் சாயை அழிவு கண்டாய்
உனக்குத் தேஜோ ஹானி கிடாய்
உன் ஸ்வரூப ஹானிக்காய்த்து நான் கிலேசிக்கிறது

புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்றினக் குறவர் புதியது உண்ணும்
புனத்தினிலே புதுத் தினைக்கதிரை முறித்து
அக்னியிலே பக்வமாக்கி
அழகருடைய ஸ்ப்ருஹ ணீயமான திருவடிகளை சொல்லி
மங்களா ஸாஸனம் பண்ணி
உன் திவ்ய ஐஸ்வர்யம் ஸம்ருத்தமாக வேணும் -என்று திருப்பல்லாண்டு பாடி
திருமலையில் திருக் குறவர்
தங்களுடைய புத்ர தாரங்களோடும்
நவ போஜனம் பண்ணா நிற்பர்கள்

எழில் மால் இரும் சோலை எந்தாய்
அழகிய திருமலையிலே வர்த்திக்கிற ஸ்வாமியே
அந் நிலையிலே உன் ஸ்வாமித்வத்தை எனக்குப் பிரகாசிப்பித்தவனே –

————-

உன் திருவடிகளை ஒழிய புறம்பு போக்கிடம் இல்லாத என் கார்யம்
செய்து அருள வேணும் என்கிறார் –

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமால் இரும் சோலை எந்தாய் – 5-3- 4- –

பதவுரை

குரு-குரு வம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்–பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று–ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு–துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்–தூது போய்
பேதம் செய்து–ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் -இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
(பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்)
இல்லை–கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
எங்கும்–துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்–பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காதம் பலவும்–பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு–திரிந்து அலைந்த எனக்கு
அங்கு–அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை–(ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
(அன்றியும்)
நீர்–(தாபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்–மற்றொரு
இல்லை–கண்டதில்லை
ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்பு இடம்–மூச்சு விட இடம் -ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்–நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை–

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை
நெஞ்சுக்கும் கண்ணுக்கும் எட்டின இடம் எல்லாம்
அலர்மந்து திரிந்த இடத்தில்
அவ்விடங்களில் ஒரு நிழலாதல் நீராதல் கண்டிலேன்-

கண்டது ஸம்ஸார விஷ விருஷத்தின் நிழலும்
மாரீசிகா ஜலமும் இறே
வாஸூ தேவ தருச்சாயையும்
அவன் திரு உள்ளத்தில் நீர்மையையும் இறே
நிழலும் நீரும் ஆவது

உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
அவனடி நிழல் தடம் -என்னக் கடவது இறே
இது ஒழிந்து மூச்சு விடுகைக்கு ஓர் இடமும் அநந்ய கதியான நான் காண்கிறிலேன்

அந் நிழலில் ஒதுங்கினார் உண்டோ என்ன
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய்
குரு குலத்தில் பிறந்த பாண்டு புத்ரர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்து இல்லையோ
அவர்கள் அநந்ய கதித்வம் கண்டு அன்றோ நீ அது செய்தது

அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்
அந்த துர்யோதனர்கள் பக்கல்
உங்களோடு அவர்களோடு வாசி என்
நீங்களும் எனக்கு பந்துக்கள் அன்றோ என்று
அஹ்ருதயமாக உறவு சொல்லிக் கொண்டு சென்று
ஸம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகத்தைப் பண்ணி
பூ பாரமானவர்களை நிரஸித்துப் பொகட்டிலையோ

திருமால் இரும் சோலை எந்தாய்
அவ் வவதாரத்தில் உதவாத எனக்காகவேத் திருமலையிலே நின்று அருளினவனே —

————–

பக்தியாலே பரவசனான என் கார்யம் செய்து அருள வேணும் என்கிறார் –

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 5-

பதவுரை

சேல்–மீன்களானவை
உகளா நிற்கும்–துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்–பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற
என–என்னுடைய
காலும்–கால்களும்
எழா–(வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை;
கண்ண நீரும்–கண்ணீரும்
நில்லா–உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்–சரீரமானது
சோர்ந்து நடுங்கி–கட்டுக் குலைந்து நடுங்கியதனால்
குரலும்–குரலும்
மேல் எழா–கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா–மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும்–தோள்களும்
வீழ்வு ஒழியா–விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை
( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்–எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்–வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ–வாழ்வுறும்படி
உன்னை–உன்னை
தலைப் பெய்திட்டேன்–சேர்ந்து விட்டேன்–

காலும் எழா
காலும் எழா –என்கிறபடியே
கால் நடை தாரா

கண்ண நீரும் நில்லா
கண்கள் நீர் மாறாது

உடல் சோர்ந்து நடுங்கி
ஸரீரமானது பரவசமாய்த் தடுமாறி

குரல் மேலும் எழா
வார்த்தை சொல்ல பலமில்லை

மயிர்க் கூச்சமறா
ரோமங்கள் புளகிதமாய் மாறுகிறது இல்லை

என தோள்களும் வீழ் ஒழியா
என் கைகளும் அஞ்சலி மாறா

மாலுகளா நிற்கும் என் மனமே
என் மனஸ்ஸானது மேல் மேல் என பித்தேறா நின்றது

உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
உன்னை அனுபவித்து வாழ வேணும் என்று தலைப்பட்டேன்

சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய்
சேல்களாகிற மத்ஸ்யங்கள் உகளிக்கும் படி பரப்பை யுடைத்தான தடாகங்கள் சூழப்பட்டு இருக்கிற
திருமலையிலே ஸந்நிஹிதனாய் எனக்கு இந்த பக்தியை விளைத்தவனே

இத்தால்
ஜலத்தைப் பிரிந்து தரிக்க மாட்டாத
மத்ஸ்யம் போலே உன்னைப் பிரிந்து ஆற்ற மாட்டேன் -என்கிறார் –

—————

நீர் மற்ற ஓர் இடம் இல்லை என்பான் என்
ப்ரஹ்ம ருத்ராதிகள் இல்லையோ -என்ன
அவர்கள் அஸக்தர் -என்கிறார் –

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-

பதவுரை

திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருதுக் கொடி உடையானும்–வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்–(அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்–மற்றுள்ள எந்தத் தேவரும்
இப் பிறவி என்னும் நோய்க்கு–இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை–மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற–(இப் பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான-ஆச்சார்யராய்
மா மணி வண்ணா–நீல மணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர–(எனக்கு) ஜந்மாந்தரம் நேராத படி
திருத்தி–(அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்–உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்–

எருத்துக் கொடி உடையானும்
அறிவு கேட்டுக்கு எல்லை யான விருஷபத்தை த்வஜமாக யுடைய ருத்ரனும்
இத்தால் அவனுடைய தமஸ் ஸூ பிராஸுர்யம் சொல்லிற்று

பிரமனும்
அவனுக்கு ஜனகனாய்
தேவர்களுக்கு ஞான பிரதானம் பண்ணினவன் என்னும்படி
ஞாதாவான ப்ரஹ்மாவும்
ஸ்ருஷ்ட்டி கர்த்தா வாகையாலே ராஜஸோத்தரன் என்று தோற்றுகிறது

இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
த்ரை லோக்ய அதிபதியான இந்திரனோடே கூட மற்றும் உண்டான தேவ ஜாதியும்
ஒருவரும் இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை –
ஸம்ஸார பீஜமாம் அத்தனை

சர்வேஸ்வரன் ஸம்ஸார நிவர்த்தகன் என்று அறியார்கள் –
ஈஸ்வரோஹம் என்று இருக்குமவர்கள் ஆகையாலே
கடிக் கமலம் இத்யாதி
கார் செறிந்த இத்யாதி
நீறாடி —

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
மருந்தாகும் அது அன்றிக்கே
மருந்து அறிவதும் செய்யும்
இது தான் மலை மேல் மருந்து

நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனே
இவருடைய மருந்து இவனுடைய வடிவு அழகு ஆய்த்து
நச்சு மா மருந்து இறே
மருந்தும் -இத்யாதி

மறு பிறவி தவிரத் திருத்தி
புனர் ஜென்மம் இல்லாத படி
ஜன்மாந்தர ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம் அறும் படி திருத்தி

உன் கோயில் கடை புக பெய்
உன் கோயிலில் திரு வாசலைப் பற்றி இருந்து வாழும்படி பண்ணி

திருமால் இரும் சோலை எந்தாய்
என் ஜென்மத்தை அறுக்கைக்கு அன்றோ
நீ திருமலையிலே ஸந்நிஹிதனாயிற்று
மா மாயையை மங்க ஓட்டுமவன் அன்றோ –

————–

உன் நிர்ஹேதுக கிருபையாலே விஷயீ க்ருதனான என்னை
அஞ்சாதே கொள் என்று
சோக நிவ்ருத்தியைப் பண்ணி அருளாய் என்கிறார் –

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 7-

பதவுரை

சக்கரமும்–திருவாழியாழ்வானும்
தட கைகளும்–பெரிய திருக்கைகளும்
கண்களும்–திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்–திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்–செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்–ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்–அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி–(நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து–(அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
(பின்பு)
உன் பேர் அருளால்–உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை–இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்–அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள வேணும்–

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி
பகவத் விஷயத்துக்கு அவ்வருகாய்
ஆத்ம வஸ்துவுக்கு ஹானியை விளைப்பதான ஸம்ஸார சமுத்ரத்திலே அவகாஹித்து

உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலே
துயர் அறு சுடர் அடியான திருவடிகள் ஆகிற
இக்கரையை ஏறிப்
பின்னையும் ஞான லாபம் ஒழிய பிராப்தி இல்லாமையாலே
தளர்ந்து பதஸ் பந்தம் பண்ண மாட்டாதே இருக்கிற என்னை
ப்ராப்ய ருசியாலே த்வரித்து கிலேசிக்கிற என்னை

அஞ்சேல் என்று கை கவியாய்
பிராப்தியைப் பண்ணித் தந்து -மாஸூச -என்னாய்

ப்ராப்ய வேஷம் சொல்லுகிறது மேல்

சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும் செக்கர் நிறத்து சிவப்புடையாய்
திருக் கைகளுக்கு அழகை உண்டாக்கும் திருவாழியும்
வெறும் புறத்தே ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய திருக் கைகளும்
அவ் வாழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்களும்
பும்ஸத்வ அவஹமாய் ஸ்ப்ருஹணீயமான திருப் பீதாம்பரத்தோடே கூட
ஸந்த்யா ராகம் போலே சிவந்த நிறத்தை யுடையையாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
இவ் வடிவு அழகைத் திருமலையிலே எனக்குப் பிரகாசிப்பித்தவனே

ஸந்த்யா ராக ரஞ்சிதமான ஆகாசம் போலே யாய்த்துத் திருமேனியும்
திவ்ய அவயவங்களும்
திவ்ய ஆயுதங்களும்
திருப்பீதாம்பரமுமான
சேர்த்தி அழகு இருப்பது –

—————

அநாதி காலம் இழந்தது போராதோ
நீ கடாஷித்த பின்பும் போக ஸஹிப்பேனோ -என்கிறார்

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

பதவுரை

மைத்துனன் மார்களை–உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து–வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை–(அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்–ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
இன்றொடு நாளை என்றே–இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே
(கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்–எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்–இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்–(ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி–(அதில் நின்றும் விடு பட்டு ஞானம் பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே–(ஸர்வ ரக்ஷகனான உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்–(எனது) நெஞ்சானது
நின் பாலது–உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே–அறிகின்றா யன்றோ?–

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே யித்தனை காலமும் போய்க்
இன்று நாளை நேற்று என்று தொடங்கி
அநேக கல்பங்களான இந்தக் காலம் எல்லாம்
இப்படி அநாதி காலம் எல்லாம் வியர்தமாகவே போயிற்றே

கிறிப் பட்டேன்
இதுக்கு அடியாய் இருபத்தொரு விரகிலே அகப்பட்டேன்
அதாவது
பிரம ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம்

அதவா
கீழே அநாதி காலம் பழுதே போம்படி இழந்த நான்
கிறிப்பட்டேன்
நல்ல விரகிலே அகப்பட்டேன்
பெரும் கிறியார் (திரு விருத்தம் )-என்கிற விரகிலே அகப்பட்டேன் என்னவுமாம் –

இனி உன்னைப் போகல் ஒட்டேன்
உன்னாலே நிர்ஹேதுகமாக விஷயீ க்ருதனாய்
உன்னால் அல்லது செல்லாமை பிறந்த பின்பு இனிப் போக ஒட்டுவேனோ

நீர் இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ விரோதி கிடைக்க என்ன
பாண்டவர்கள் விரோதியிலும் காட்டில் பிரபலமோ என் விரோதி என்கிறார்

மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
பிரகிருதி சம்பந்த மாத்ரமான பாண்டவர்களை ராஜ்ய ஸ்ரீ யாலே ஸூகிக்கும் படி பண்ணி
அவர்களுக்கு விரோதியான துர்யோத நாதிகளை நரக ப்ராப்தராம் படி நசிப்பித்தாய்

அவர்களுக்கு நாம் அல்லது இல்லை ஆகையால் செய்தோம் என்ன
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய்
அவர்களை போலியோ நான்
உன் பக்கல் ப்ரவணமான நெஞ்சை உடையேன் என்னும் இடம்
அதுக்கு வாய்த்தலையான நீயே அறிவுதியே

என் நெஞ்சை நீ வஸீ கரித்து
திருமலையில் நின்ற நிலையைக் காட்டி அன்றோ (இவற்றைச் செய்து அருளினாய் )

—————-

ஜாயமான கால கடாக்ஷமே பிடித்துக் கைங்கர்ய அபேக்ஷை யுடையனாய்
பிரதி சம்பந்தியான உன்னைக் காணப் பெற்று இனிப் போக விடுவேனோ
என் விரோதியைப் போக்கி பிராப்தியைப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் -5 -3-9 –

பதவுரை

அங்கு–சோணித புரத்திற்கு
சென்று–எழுந்தருளி
வாணனை–பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களும்
திசை திசை–திக்குகள் தோறும்
தென்றி வீழ–சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்–சக்ராயுதத்தினால்
செற்றாய்–நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே–கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்–(உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்–அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று–இப்போது
இங்கு வந்து–இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை–(அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்–ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே:.–

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
கர்ப்பத்தில் கிடக்கிற காலத்திலேயே
அடிமை செய்கையே புருஷார்த்தம் என்று துணிந்து இருப்பன்

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
அன்று நான் பிரார்த்தித்த படியே
இப்போது உன்னைக் கிட்டி இங்கே காணப் பெற்றேன்
ப்ராப்ய தேசமான திருமலையில் காணப் பெற்றேன்
இப்படி ஸூ லபனான உன்னைக் கண்ட பின்பு போக விடுவேனோ

விரோதி கனத்து இருந்ததே என்ன
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால் சென்றித் திசை திசை வீழச் செற்றாய்
வாணனுடைய பஹு வனத்திலும் கனத்து இருந்ததோ என்னுடைய விரோதி என்கிறார்

ஸ்ரீ துவாரகையின் நின்றும் சோணித புரத்திலே எடுத்து விட்டுச் சென்று
பாணனுடைய புஜ வனத்தைத் திக்குகள் தோறும் தெறித்து விழும்படி
திருவாழியாலே அறுத்துப் பொகட்டு
உஷா அநிருத்த கடகன் ஆனவனே

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த கிருஷ்ண அவதாரத்துக்கு பிற்பாடானான எனக்காகவே அன்றோ
திருமலையில் ஸந்நிஹதன் ஆய்த்து-

————–

நிகமத்தில் இத்திருமொழியை அப்யசித்தவர்களுக்கு பலம் அருளிச் செய்கிறார் –

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –

பதவுரை

உலகம்–உலகத்தாரெல்லாரும்
சென்று–(தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து–அவகாஹித்து
ஆடும்–நீராடா நிற்கப் பெற்ற
சுனை–தீர்த்தங்களை யுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்–திருவடிகள் மேல்
அடிமைத் திறம்–கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்–ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற
மாடம்–மாடங்களினால்
பொலிந்து தோன்றும்–நிறைந்து விளங்கா நின்ற
புதுவை–ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்–தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
நேர்பட–பொருந்தும்படி
விண்ணப்பம் செய்–அருளிச் செய்த
ஒன்றினோடு ஒன்பதும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்–பாட வல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்–திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்–

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல்
அஞ்ஞரோடு விசேஷஞ்ஞரோடு வாசியற தம்தாம் அபிமதங்கள் பெறுகைக்காகச் சென்று
ஆழ இழிந்து அவகாஹிக்கும் தலை அருவி தொடக்கமான தீர்த்தங்களை யுடைய
திருமலையில் ஸந்நிதி பண்ணி நிற்கிற உபகாரகன் திருவடிகளில்

அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
அடிமை விஷயமாக
கைங்கர்ய பிராப்தி பண்ண வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்த

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஸ்ப்ருஹ ணீயமாய் உஜ்ஜவலமான மாடங்களாலே நிறையப்பட்டு
ப்ரத்யக்ஷமாய் இருக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்திக்கு உறுப்பாகத் சொல்லுகிறார்

ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
நின் திருவாணை கண்டாய் -என்ற ஒரு பாட்டோடு
அது பெறா ஆணை அல்லவாக்கின ஒன்பது பாட்டையும்

அன்றிக்கே
ப்ராப்ய துவரையை விண்ணப்பம் செய்த ஒன்பது பாட்டோடு
பலம் சொன்ன ஒரு பாட்டையும் கூட்டி
ப்ரீதி பிரேரிதராய் பாட வல்லார் என்றுமாம்

உலகம் அளந்தான் தமரே–
இவ்வாத்மாவினுடைய அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ரங்களைப் போக்கின
செயலை யுடைய திரிவிக்ரமனுக்கு அநந்யார்ஹராகப் பெறுவர்

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
உலகம் அளந்தான் தமரே–
என்று அந்வயம்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–2–நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள்–

September 4, 2021

தாம் அயோக்யதையை அனுசந்தித்து அகலச் செய்தேயும்
தம் கரணங்கள் மேல் விழுகிற படியைக் கண்டு க்ஷமை கொண்டார் கீழ்

நீர் தோஷம் பார்த்து நம்மை க்ஷமை கொள்ள வேண்டுவது
நாம் கடக்க இருக்கில் அன்றோ -என்று
தன் ஸுசீல்யத்தாலே மேல் விழுந்து வந்து
புகுந்த படியைக் காட்டிக் கொடுக்கக் கண்டு பேசுகிறார்
இத்திரு மொழியில்

(ஏற்கவே வந்து புகுந்து கிடந்தாலும் மறந்து இருக்க
பிரகாசப்படுத்தி -ஞானம் பெற்ற தசையை அருளிச் செய்கிறார்
யோகம் தியானிக்க தியானிக்க இருப்பதை உணர்கிறோம் )

இப்படி அவன் வந்து புகுர
அவித்யையும்
கர்மமும்
வியாதியும்
இந்திரியங்களையும்
யம படரையும் பார்த்து
நீங்கள் பண்டை தேஹமும் ஆத்மாவும் என்று இருக்க வேண்டா

அவன் திவ்ய தேசங்களில் பண்ணும் ஆதாரத்தை எல்லாம்
என் தேஹத்திலும் ஆத்மாவிலும் பண்ணிக் கொண்டு புகுந்தான்
இனி நீங்கள் ஜீவிக்க வேண்டி இருந்தீ கோளாகில்
இங்கு நின்றும் போகப் பாருங்கோள் -என்கிறார் –

—————-

நோய்களைப் பார்த்து நீங்கள் சடக்கெனப் போங்கோள் என்கிறார் –

நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2-1-

பதவுரை

நெய்க் குடத்தை–நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி–பற்றிக் கொண்டு
ஏறும்–(அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்–எறும்புகளைப் போல்
நிரந்து எங்கும்–என்னுடைய உடம்பு முழுவதும் பரவி
கைக் கொண்டு–(என்னை) வசப்படுத்தி
நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற
நோய்காள்–வியாதிகளே!
காலம்பெற–விரைவாக
உய்ய –(நீங்கள்) பிழைக்க வேண்டி
போமின்–(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள்
வேதம் பிரானார்–(பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட–பரம்பினை படங்களை யுடைய
பாம்பு அணையோடும்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட
வந்து புகுந்து — எழுந்தருளி
மெய்–(எனது) சரீரத்தை
கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
கிடந்தார்–(என் சரீரத்தை கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
(என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்–(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று–பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு (அவனால்) காக்கப் பெற்றது–

நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல்
ஸூத்தமாய் போக்யமான ஆஜ்யமாய் இருக்கிற கடத்தைப் பற்றிக் கொண்டு ஏறுகிற
ஷூத்ரமான பீபிலிகைகள் போலே

நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
பரந்து இடைவிடாதே தர்ம பூத ஞானம் உள்ள இடம் எங்கும்
ஆக்ரமித்துப் போக்கு வரத்து இன்றிக்கே
அவஸர ப்ரதிக்ஷமாய் நிற்கிற வ்யாதிகாள்

காலம் பெற உய்யப் போமின்
நீங்கள் ஜீவிக்க வேண்டில் இப்போதே உடனே போங்கோள் –

எங்களுக்குப் போக வேண்டுகிறது என் என்ன

மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணையோடும்
என்னுடைய தேஹத்தை போக்யமாகக் கொண்டு நான் இருக்கிற இடத்திலே தான் வந்து
என் ஹிருதயத்துக்கு உள்ளே புகுந்து
வேதைக ஸமதி கம்யனானவன்
தன்னை நமக்கு உபகரித்துக் கொண்டு பள்ளி கொண்டு அருளினான்
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகஸிதமான பணங்களை யுடைய திருவனந்த ஆழ்வானோடே யாய்த்துப்
பள்ளி கொண்டு அருளிற்று

பண்டு அன்று
பழைய தேஹமும்
நானும் அன்று

பட்டினம் காப்பே
பட்டினம் -பத்த நம் -ராஜ தானி
நிதி கிடக்கும் இடம்

நிதி யாவது -ஆத்மா விறே
அவன் இவரை ஆள் இட்டுக் காவாதே தானே காத்துக் கொண்டு கிடக்கிறான் இறே
அவன் இவரைக் காத்துக் கொண்டு கிடக்குமா போலே
இவரும் வைத்த மா நிதியான அவரைக் காக்கிற படி —

——–

யம படர் தாங்களே அஞ்சி ஒளித்தார்கள் என்கிறார் –

சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5- 2-2 –

பதவுரை

சித்திர குத்தன்–சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன்
தென் புலம் கோன்–தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி–மேலெழுத்தை இடுவித்து
எழுத்தால் வைத்த–(தான்) எழுதி வைத்த
இலச்சினை–குறிப்புச் சீட்டை
தூதுவர்–யம கிங்கரர்கள்
மாற்றி–கிழித்துப் போட்டு விட்டு
ஓடி ஒளிந்தார்–கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;
முத்து–முத்துக்களை (க்கொண்டு வீசுகிற)
திரை–அலைகளை யுடைய
கடல்–கடலில்
சேர்ப்பன–கண் வளர்ந்தருளுமவனும்,
மூது அறிவு ஆளர்–முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு
முதல்வன்–தலைவனும்,
பத்தர்க்கு–அடியார்களுக்கு
அமுதன்–அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு
அடியேன் (யான்) தாஸனாயினேன்;
பண்டு அன்று பட்டினம் காப்பு–

சித்தர குத்தன் எழுத்தால்
ஸர்வ ஆத்மாக்கள் பண்ணும் புண்ய பாபங்களைப் பதினாலு பேர் ஸாக்ஷியாக
யமனுடைய கணக்கன் சித்ர குப்தன் பட்டோலை கொள்ளும்

தென் புலக் கோன் பொறி ஒற்றி
தெற்குத் திக்கான யம புரத்துக்கு ஸ்வாமியான யமன் மேல் எழுத்து இடா நிற்கும்

வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
இட்ட இலச்சினையை அழித்துக் கணக்கைச் சுட்டுப் பொகட்டு
யம படர் பகவத் தூதர்களுக்கு அஞ்சி ஓடி ஒளித்தார்கள்

முத்து திரை கடல் சேர்ப்பன்
திரையானவை முத்துக்களைக் கரையிலே கொடு வந்து சேரா நின்றுள்ள கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவன்

மூதறிவாளர் முதல்வன்
அநாதியாக ஸர்வஞ்ஞரான நித்ய ஸூரிகளுக்கு சத்தா ஹேது வானவன்

பத்தர்க்கு அமுதன்
தன்னால் அல்லது செல்லாத ஆஸ்ரிதற்கு நிரதிசய போக்யமானவன்

அடியேன்
நான் அவன் போக்யதையிலே தோற்று அவனுக்குப் பரியுமவன்

பண்டு அன்று
முன் போல் அன்று

பட்டினம் காப்பே
ஆத்மாவுக்குக் காவல் உண்டாய்த்து –

(தாம் இப்படிப்பட்ட அமுதத்தில் ஈடுபட்டு பாட
நாம் அறிந்து
பட்டர் பிரானுக்கு அமுதனாக முன்பு இருந்தவன்
இவர் பாசுரம் பிறந்த பின்பே பக்தருக்கு அமுதன் ஆகிறான் )

—————

என்னுடைய தேஹ அவஸ்யதையைத் தவிர்த்து
ஞான அனுஷ்டானங்களையும் உண்டாக்கினான் என்கிறார் –

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –

பதவுரை

(வராஹ ரூபியாய் திருவதரித்த போது.)
எயிற்றிடை–(தனது) கோரப் பல் மேல்
மண்–பூமியை
கொண்ட–தாங்கி யருள
எந்தை–எம்பெருமான் (அடியேனுக்கு)
வயிற்றில் தொழுவை–வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை
பிரித்து–கழித்தருளியும்
புலம்–இந்திரியங்களால்
வல் சேவை–கடுமையான ரிஷபங்களை
அதக்கி-(பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும்
கயிற்றும்–நரம்புகளும்
அக்கு–எலும்புகளுமேயா யிருக்கின்ற
ஆணி–சரீரத்தில் (ஆசையை)
கழித்து–ஒழித்தருளியும்
பாசம்–(யம தூதர்களுடைய) பாசங்களை
காலிடை கழற்றி–காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும்,
இரா பகல்–இரவும் பகலும்
ஓதுவித்து–நல்லறிவைப் போதித்து
பயிற்றி–(கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும்
பணி செய்ய–நித்திய கைங்கர்யம் பண்ணும்படி
என்னை கொண்டான்–அடியேனைக் கைக் கொண்டருளினான்;
பண்டு அன்று பட்டினம் காப்பு–

வயிற்றில் தொழுவைப் பிரித்து
கர்ப்ப வாசமாகிற சிறைக் கூடத்தைக் கழற்றி

தொழு –
விலங்கு விசேஷம்

வன் புல சேவை அதக்கி
இந்த்ரியங்களான வலிய சேக்களை அதக்கி -நெருக்கி –

கயிறும் அக்கும் ஆணி கழித்து
நரம்பு எலும்புமான சரீரத்தில் நசை அறும்படி பண்ணி
அக்கு -எலும்பு

காலிடை பாசம் கழற்றி
யம படர் கையில் பாசத்தாலே காலிலே துவக்கி இழுப்பர்கள்
அத்தைத் தவிர்த்து

அன்றியே
கால் என்று காற்றாய்
பாசம் என்று ஆத்மாவை வரிந்து கொண்டு இருக்கிற ஸூஷ்ம ஸரீரம்

ஆக
உபய சரீர சம்பந்தத்தையும் அறுத்து என்றுமாம்

காலிடைப் பாசம்
கால் கட்டான தேஹ ஸம்பந்தம் என்னவுமாம்
கால் கட்டான விஷயாந்தர (சம்பந்தத்தைப் ) ஸங்கத்தைப் போக்கி என்றுமாம் –

எயிற்றிடை மண் கொண்ட எந்தை
பிரளய ஆர்ணவத்திலே அகப்பட்ட பூமியை எடுத்தாப் போலே
ஸம்ஸார பிரளயத்தின் நின்றும் என்னை எடுத்த என் ஸ்வாமி

யிராப் பகலா ஓதுவித்து
திவா ராத்ரி விபாகம் அற என்னை ஸிஷிப்பித்துக்
கீழ் உக்தமான த்யாஜ்யஉபா தேயங்களை யடைய அறிவிக்கை

என்னை பயிற்றிப் பணி செய்யக் கொண்டான்
பயிற்றி –
அனுஷ்டான பர்யந்தமாம் படி வாஸனை பண்ணுவித்து

பணி செய்யக் கொண்டான்
மங்களா ஸாஸன ரூப நித்ய கைங்கர்யம் கொண்டு அருளினான்

பண்டன்று
இந்திரியங்களுக்கு சேஷமான பண்டு போலே அன்று

பட்டினம் காப்பே
பத்தனம் காவல் உண்டாய்த்து

அவன் இத் தலையை நோக்க
நாம் அத்தலையை நோக்குகையாலே
காவல் உற்றது என்கை –

————-

நோய்களைப் பார்த்து நீங்கள் ஹிரண்யன் பட்டது படாதே போகப் பாருங்கோள் -என்கிறார் –

மங்கிய வல் வினை நோய்காள் உமக்கும் ஓர் வல் வினை கண்டீர்
இங்குப் புகேல்மின் புகேல்மின் எளிதன்று கண்டீர் புகேல்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே 5-2- 4- –

பதவுரை

மங்கிய–(ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை–வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்–வியாதிகளே
உமக்கும்–உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை–ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே-மிருத்யுவுக்கும் மிருத்யு போல்
கண்டீர்–(இன்று) பாருஙக்ள்
இங்கு–இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்– வர வேண்டா, வர வேண்டா
(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)
எளிது அன்று சுலபமான கரியமன்று;
புகேன்மின்–ஆகையால் இனி இங்கு வர வேண்டா
(என் ஆத்துமா)
எம்மான் அவன்–எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சிங்கப் பிரான் -நரஸிம்ஹமாய் -எனக்கு உபகாரம் செய்து அருளினவன்
சேரும்–எழுந்தருளி யிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்‘–திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத–பரிபவப் படாமல்
உய்யப் போமின்–பிழைத்துப் போங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பு–

மங்கிய வல் வினை நோய்காள்
நான் உரு மாயும்படி பண்ணக் கடவ பிரபல பாப பலமான வியாதிகாள்
விபஜிக்க ஒண்ணாத படி கிடக்கிற பாபங்கள் என்னவுமாம் –

நீங்கள் இங்குப் புகுராதே கொள்ளுங்கோள்
வீப்சையாலே தனித் தனியே நியமிக்கிறமை தோற்றுகிறது

உமக்கும் ஓர் வல் வினை கண்டீர்
உங்களுக்கும் வலிய விரோதி கிடி கோள்
மிருத்யுவுக்கும் மிருத்யு கிடி கோள்

இங்குப் புகேல்மின் புகேல்மின்
இவற்றின் நெஞ்சில் படுகைக்காகப் பலகாலும் சொல்லுகிறார்

இங்கு என்று
திருப் பல்லாண்டில் அந்வயம் யுடையாரையும் கூட்டுகிறார் என்று பட்டர்

எளிதன்று
உங்களுக்கு இவ்விடம் ஸூலபம் அன்று
அது என் என்ன

கண்டீர்
ஹிரண்யன் பட்டபடி கண்டி கோளே

புகேல்மின்
ஆன பின்பு புகுராதே கொள்ளுங்கோள்

சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
ஸிம்ஹம் கிடக்கிற முழஞ்சிலே புகுவார் உண்டோ
ஸ்ரீ நரஸிம்ஹ ரூபியாய் ஆஸ்ரிதற்கு உதவினால் போல்
எனக்கும் உதவி என்னை அடிமை கொண்டவன்
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ விமானம் கிடி கோள்

பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே
பரிபவப் படாதே பிழைத்துப் போகப் பாருங்கோள்
பண்டு போல் உங்களுக்கு எளிது அன்று
பட்டினம் காவலுடைத்து –

————-

தேவ கார்யம் செய்தால் போல்
என் காரியமும் செய்வதாக வந்து புகுந்தான் –
சுக்ராதிகள் பட்டது படாதே போங்கோள் என்று
இந்த்ரியங்களுக்குச் சொல்லுகிறார் –

மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – 5-2- 5-

பதவுரை

மாணி–பிரமசாரி வேஷத்தை யுடைய
குறள் உரு–வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்–மாணிக்க நிதி போல் இனியவனும்
மாயனை–ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி–ஆசைப் பட்டு
கொணர்ந்து–எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் மனத்துள்ளே–என் நெஞ்சினுள்ளே
புகுத–புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி–வேற்றுமை யில்லாமல்
வைத்துக் கொண்டேன்–அமைத்துக் கொண்டேன்.
வலி வல் குறும்பர்கள் உள்ளீர்–மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்–(வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா–தாமதிக்க வேண்டியதில்லை,
பண்டு அன்று பட்டினம் காப்பு–

மாணிக் குறள் உருவாய மாயனை
இரப்பிலே தகண் ஏறி
நிரதிசய போக்யனுமாய்
தன் குண சேஷ்டிதங்களில் ஆச்சர்யத்தாலே அவனை வஸீ கரித்தவன்

மாணி -அழகு என்னவுமாம்

குறள் -சேர்ப்பால் போலே

உருவாய மாயன் -மாயம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

என் மனத்துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
என் நெஞ்சுக்கு உள்ளே ஸ்நேஹத்தோடே வைத்துக் கொண்டேன்

பேணுதல் -ஆசைப்படுத்தல்

ஆதரம் ஆகவுமாம்

பிறிதின்றி-
இரண்டு இன்றி
வேறு இன்றி என்றபடி

மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
உலகு அளந்த மாணிக்கம் (திரு விருத்தம் )என்கிறபடியே
நீல ரத்ன பண்டாரம் கிடி கோள்

வலி வன் குறும்பர்களுள்ளீர்
மிகவும் வலியராய் மூலையடியே நடந்து திரிகிற இந்திரியங்கள்
ஆகிற குறும்பராய் உள்ளீர்

வலி -பலம்

வன்மை -தொன்மை கேடு

குறும்பர் -கள்ளர்
ஏஷ இந்திரிய தஸ் யூநம்
கோவாய் இத்யாதி

பாணிக்க வேண்டா நடமின் விளம்பிக்க வேண்டா
கால் வாங்கிப் போங்கோள்

அது என் என்ன
பண்டன்று பட்டினம் காப்பே
பண்டு போலே இது அராஜகம் அன்று
ஸ ராஜகமாய்த்து என்கிறார் –

————-

பசுக்களை நோக்கினால் போலே என்னையும் நோக்குவதாக
கிருஷ்ணன் வந்து என் ஹிருதயத்திலே புகுந்தான்
நீங்கள் நலிவு படாதே போங்கோள் என்று
நோய்களைப் பார்த்துச் சொல்லுகிறார் –

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்றம் உரைகின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – 5-2- 6-

பதவுரை

உற்ற–நெடு நாளாக இருக்கிற
உறு பிணி–மிக்க வருத்தத்தைச் செய்கிற
நோய்காள்–நோய்களே!
உற்ற நோய்கள்–உறு பிணிகாள் -இரண்டும் மிக்க கொடுமையால்
உமக்கு–உங்களுக்கு
ஒன்று–ஒரு வார்த்தை
சொல்லுகேன்–சொல்லுகிறேன்:
கேண்மின்–கேளுங்கள்;
(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்–பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான
திருக் கோயில்–திருக் கோயிலாயிற்று;
கண்டீர்–முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்;
ஆழ்–(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை காள்–ஓ கொடுமைகளே!
இன்னம்–மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்–அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு–உங்களுக்கு
இங்கு–இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை–ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்–(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பே–

உற்ற உறு பிணி நோய்காள்
அநாதி காலமே பிடித்து என்னை விடாதே வலி செய்கிற
துக்க ஹேதுவான நோய்காள்
பிணி -துக்கம்
நோய் -வியாதி

உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்
புத்தி பண்ணிக் கேளுங்கோள்
அது ஏது என்ன

பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
பசுக்களை மேய்க்குமவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் உபகாரத்தையே தனக்கு நிரூபகமாய் யுடையனான
கிருஷ்ணன் ஆதரித்து வர்த்திக்கிற திவ்ய விமானம் கிடி கோள்

அற்றம் உரைகின்றேன் இன்னம்
இன்னம் உங்களுக்கு அறுதி சொல்லுகிறேன்

ஆழ் வினைகாள்
நான் தரைப்படும் படி கொண்டு மூழ்த்துகிற நோய்காள்

உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின்
உங்களுக்கு இங்கு ஒரு அவலம்பம் இல்லை கிடி கோள்
நீங்கள் போக அமையும்

பண்டன்று பட்டினம் காப்பே
அவன் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மாஸூச என்ற இன்று
பண்டு போல் அன்று
இது காவல் உடைத்து –

———-

என்னுடைய விஷய ப்ராவண்யத்துக்கு அடியான
பாபத்தைப் போக்கி ரக்ஷித்தான் -என்கிறார்

கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே -5 -2-7 –

பதவுரை

சிறு வரை–சிறிய மலை போன்ற
கொங்கை என்னும்–முலைகளாகிற
கொங்கை என்றும் சிறிய இடை என்றுமாம்
பொதும்பினில்–பொந்தில்
வழுக்கி வீழ்ந்து–வழுக்கி விழுந்து
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு–(நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து
அழுந்திக் கிடந்த–(அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து
உழல்வேனை–(திரியப் போகிற என்னுடைய)
வல் வினை ஆயின–தீவினைகளா யிருப்பவைகளை
வங்கம் கடல் வண்ணன் அம்மாள்–கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்
மாற்றி–போக்கி யருளி
பங்கப்படா வண்ணம்–பரிபவப் படாதபடி
செய்தான்–செய்தருளினான்;
பண்டு அல்லது பட்டினம் காப்பு–

கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
முலையாகிய சிறு வரை
சிறிதான மலைகள் என்கிற குழியிலே வழுக்கி விழுந்து
சிறு வரை -தாழ்வரை என்னவுமாம்

அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
அம்மலை அருகே யுண்டானதொரு பாழியிலே பிரவேசித்துக்
கால் வாங்க மாட்டாதே தடுமாறுகிற என்னை

வங்கக் கடல் வண்ணன் அம்மான்
மரக்கலங்களை யுடைத்தான கடல் போலே
ஸ்ரமஹரமாய் அழகியதான வடிவு அழகாலே என்னை அடிமை கொண்ட என் ஸ்வாமி

வல்வினை யாயின மாற்றி
விஷய ப்ராவண்யத்துக்கு அடியான பாபங்களை போக்கி

பங்கப் படா வண்ணம் செய்தான்
என்னைப் பரிபவப்படாத படி பண்ணினான்

பண்டன்று பட்டினம் காப்பே
முன்பு போலே அன்று
இது காவல் உடைத்து –

—————–

ஆச்சார்யனாய் நின்று
அஞ்ஞாத ஞாபகன் ஆனான் என்கிறார் –
(அறியாதன அறிவித்த அத்தா )

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –

பதவுரை

பீதக ஆடை பிரானர்–திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து–ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்–அறிவுக்கு இருப்பிடானதும்
வல்–அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான
நெஞ்சம் கமலம்–ஹ்ருதய கமலத்தினுள்
1-1புகுந்து–பிரவேசித்து
என் னுள்ளே–எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்–தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம்.
இறங்க விடுவித்து–நீக்கி
என்–என்னுடைய
சென்னித் திடரில்–தலையினிது
பாத விலச்சினை–ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்–ஏறி யருளப் பண்ணினான்
பண்டு அன்று பட்டினம் காப்பு-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து
ஏதம் -குற்றம்

குற்றங்கள் ஆனவை எல்லாம் -அவை யாவன
1-தேஹாத்ம அபிமானம்
2-அந்நிய சேஷத்வம்
3-ஸ்வ ஸ்வா தந்த்ரம்
4-ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி
5-ஸ்வ பிரயோஜனம்
இவை எல்லாவற்றையும் வாஸனையோடே நசித்துப் போம்படி பண்ணி

என்னுள்ளே
இப்படி நிர்தோஷமான என் நெஞ்சுக்கு உள்ளே

பீதக வாடைப் பிரானார்
பொற்கென்ற திருப் பீதாம்பரத்தை யுடைய உபகாரகர்

பிரம குருவாகி வந்து
ப்ரஹ்ம உபதேஷடாவான ஆச்சார்யராக வந்து
ஆச்சார்யனான விக்ரஹத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டு வந்தாய்த்து திருத்துவது

போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும்
ஹ்ருதய கமலமாகிற புஷ்பத்திலே என்னுதல்
ஹ்ருதய கமலத்தில் ஞானத்துக்கு இருப்பிடமான வலிய நெஞ்சு என்னுதல்

வன்மை
பகவத் வைமுக்யத்தால் வந்த வன்மை
தாமே ஆபி முக்யத்தை விளைத்துக் கொடு வந்து புகுந்து

என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார்
என் தலை யாகிய நீர் ஏறா மேட்டிலே தம் திருவடிகளாகிற
கால் ஏறிப் பாயும் படி திருவடி நிலைகளை வைத்தார்
கதா புந –இத்யாதி

பண்டு அன்று பட்டினம் காப்பே
முன்பு போல் அன்றிக்கே
இப்போது ஆச்சார்ய அபிமானத்தாலே ரக்ஷையை யுடைத்து
நீங்கள் போங்கோள் என்கிறார் –

———-

கீழ் தமக்கு அவன் காவலான படி சொன்னார்
தாம் அவனுக்கு காவலான படி சொல்கிறார் இதில்

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –

பதவுரை

ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸை யுடைய
ஆழியே–திருவாழி யாழ்வானே!
எறி–(எம்பெருமானால்) வீசப் படுகின்ற
நாந்தக வாளே!–நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே!
அழகிய சார்ங்கமே–அழகு பொருந்திய சார்ங்கமே–சார்ங்கமென்கிற தநுஸ்ஸே!
தண்டே–(கௌமோதகி என்கிற) கதையே!
இருந்த–(எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற
எண்மர் உலோக பாலீர்காள்–அஷ்ட திக்குப் பாலகர்களே!-இவர்கள் லீலா விபூதியில் உள்ளவர்கள்
இறவு படாமல்–தப்பிப் போகாமல்
சங்கே–ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே!
அற–(ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி
உறகல் உறகல் உறகல்–உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்–

உறகல் உறகல்
உறங்காதே கொள்ளுங்கோள் -என்று பலகாலும் சொல்லுகிறார் இறே
அநவதாநம் (கவனக்குறைவு) வாராமைக்காக

யாரைத் தான் இப்படி உணர்த்துகிறது என்னில்
அ நிமிஷரான நித்ய ஸூரிகளை யாய்த்து

அவர்களையும் உறங்காதே கொள்ளுங்கோள் என்று நியமிக்கும் படி யாயிற்று
இவருடைய பரிவின் மிகுதி

ஒண் சுடர் ஆழியே
அழகிய பிரபையை யுடைய திருவாழி

சங்கே
வேறே ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல ஒண்ணாத அழகை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்

அறவெறி நாந்தக வாளே
சத்ரு சரீரங்கள் அறும் படியாக எறியப்படுவதாய் நாந்தகம் என்னும்
திரு நாமத்தை யுடைய வாளாகிற திவ்ய ஆயுதம்

யழகிய சார்ங்கமே
அழகை யுடைய ஸ்ரீ சார்ங்கம்

தண்டே
அப்படிப்பட்ட கதை

ஆக
திவ்ய ஆயுதங்களையும் காவலாக அடைத்து
அதுக்கும் மேலே
திக் பாலர்களையும் காவலாக அடைக்கிறார்

இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள்
லோகங்களுக்கு அழிவு வராதபடி சர்வேஸ்வரனாலே திக் பாலநத்திலே நியோகிக்கப் பட்டு
பாலனத்தையே நிரூபகமாக யுடைய இந்த்ராதிகள் எட்டுப் போரையும் சொல்லுகிறது

இவர்களும் போராது என்று பெரிய திருவடியைத் தனிக்காவலாக அடைக்கிறார்
பறவை அரையா
பறவைக்கு அரசே -நீ -உறங்காதே கொள்

உறகல் பள்ளியறை குறிக் கொள்மின்
திருப்பள்ளி அறையைக் குறிக் கொண்டு நோக்கிக் கொள்

பள்ளி அறை என்கிறது
திருமேனியை இறே

—————-

தம்முடைய திருமேனி திருப்பள்ளி அறையான படி சொல்லுகிறார் –

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 –

பதவுரை

அரவத்து அமளியினோடும்–திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்
அரவம் அத்து சரிகை
அழகிய பால் கடலோடும்–அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட
அரவிந்தப் பாவையும் தானும்–செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும்
வந்து– எழுந்து அருளி
அகம்படி–(எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து–பிரவேசித்து,
பரவை–(அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திரை–பல அலைகள்
மோத–தளும்ப
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பிரானை–உபகாரகனான எம்பெருமானை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
பட்டினம் காவல் பொருட்டே- ஆத்ம ரக்ஷண நிமித்தமாக
பரவுகின்றான்–போற்றுகின்றார்–

அரவத்து அமளியினோடும்
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையோடும்

அழகிய பாற் கடலோடும்திருப்பாற் கடலோடும்
சர்வேஸ்வரன் பள்ளி கொண்டு அருளுகையாலே வந்த அழகு என்கை

அரவிந்த பாவையும் தானும்
தாமரைப்பூவை பிறப்பிடமாக யுடையவள் ஆகையாலே
நிரதிசய போக்யையாய்
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை யுடைய
பெரிய பிராட்டியாரும்

தானும்
அவளுக்குத் தகுதியான
தானும்

அகம்படி வந்து புகுந்து
அடியார் குழாங்களுடனே வந்தாய்த்து புகுந்தது

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
இப்படிப் புகுந்து
கடலிலே அலை கேட்க்கும் படி பள்ளி கொள்ளுகிற உபகாரகனை

பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே
உபகார ஸ்ம்ருதியாலே அக்ரமமாக ஏத்த
அது தானே பிரபந்தமாய்த் தலைக் கட்டின இத்தனை

திருப்பல்லாண்டில் தொடங்கின
மங்களா ஸாஸனத்தை
இங்கே நிகமிக்கிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–1–வாக்குத் தூய்மை யிலாமையினாலே–

September 3, 2021

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் –
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் -என்று
திரு நாமத்தின் போக்யதையை அனுபவித்தார் –

இத்தை அநாதி காலம் இழைக்கைக்கு அடி என் -என்று பார்த்தவாறே –
அதுக்கு ஹேது
இதர விஷயங்களிலே ப்ராவண்யமாகையாலே யாயிருந்தது -என்று வெறுத்து
இப்படி அயோக்யனான நான் இவ்விஷயத்திலே இழிந்து
அத்தை தூஷித்தது என் -என்றும்
அத்தைப் பொறுத்து அருள வேணும் என்றும்
க்ஷமை கொள்ளா நின்று கொண்டு
அவன் போக்யதையிலே தம்முடைய கரணங்கள் மேல் விழுகிறபடியை அருளிச் செய்கிறார் –

————

நான் அஸூத்தன் என்று அகலா நிற்க
என்னுடைய ஜிஹ்வை உன் பக்கலிலே மேல் விழா நின்றது என்கிறார் –

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-

பதவுரை

மாதவா–ஸ்ரீ ய: பதியானவனே!
நாரணா–(உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே!
கருளன்–பெரிய திருவடியை
கொடியானே–த்வஜமாக வுடையவனே!
வாக்கு–(என்னுடைய) வாய் மொழிக்கு
தூய்மை இலாமையினாலே–பரி சுத்தி இல்லாமையால்
உன்னை–(ஹேய ப்ரதிபடனான) உன்னை
வாய் கொள்ள மாட்டேன்–வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன்
(வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்)
நாக்கு–(ரஸமறிந்த எனது) நாக்கானது
நின்னை அல்லால்–உன்னை யொழிய மற்றொருவரை
அறியாது–(வாய்க் கொள்ள) அறியாது;
அது–அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து
நான் அஞ்சுவன்–நான் அஞ்சுகின்றேன்;
(அது) அந்த நாக்கானது
என் வசம் அன்று–எனக்கு வசப்பட்டு நிற்பதன்று;
இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று–“இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி
முனிவாயேலும்–நீ சீறி யருளினாலும்
என் நாவினுக்கு ஆற்றேன்–என்னுடைய நாக்கின் பதற்றத்தை நான் ஸஹகிக்க வல்வேனல்லேன்;
காக்கை வாயிலும்–காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும்
கட்டுரை–நற் சொல்லாக
கொள்வர்–(அறிவுடையார்) கொள்ளுவார்கள்–

வாக்குத் தூய்மை யிலாமையினாலே –
உன்னை அனுசந்திக்கைக்கு கரணமான வாக்குக்கு ஸூத்தி இல்லாமையாலே

வாக்குக்கு அஸூத்தியாவது
1-பகவத் ஸந்நிதியில் அஸத்யம் சொல்லுகையும்
2-பர ஸ்தோத்ரம் பண்ணுகையும்
3-ப்ரயோஜனத்துக்காக பகவத் ஸ்தோத்ரம் பண்ணுகையும்

வாக்கு -சொலவு

மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
ஸ்ரீ யபதியான உன்னை என் வாக்குக்கு விஷயம் ஆக்க விளையா )இளையா) நின்றேன்

ஆனால் தவருகிறீர் என்ன

நாக்கு நின்னை அல்லால் அறியாது
ரஸந இந்த்ரியமானது
ஸர்வ ரஸமான உன்னை அல்லது அறியாது –
அது விஷயாதீனமாய்ப் புறம்பு ஒன்றும் அறிகிறதில்லை

ஆனால் நீரும் அத்தோடே கூடினாலோ என்ன

நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
நான் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து அஞ்சா நின்றேன்
அது ரஸநை யாகையாலே மேல் விழா நின்றது
என் வசத்தில் வருகிறது இல்லை

இங்கன் சொல்லப் பெறுமோ என்ன

மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும்
என் பாசுரத்தைப் பார்க்கில்
மூர்க்கர் சொல்லும் பாசுரம் போலே தோற்றி
நீ சீறினாயே யாகிலும்

என் நாவி னுக்காற்றேன்
உன் முனிவுக்கு ஆற்றலாம்
என் நாவுக்கு ஆற்றப் போகாது
என்னால் தகையைப் போகிறது இல்லை
ஆனால் அது நமக்கு அவத்யம் ஆகாதோ என்னில்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
பெரியவர்கள் குற்றமாகக் கொள்ளாத அளவன்றிக்கே -குணமாகக் கொள்வார்கள்
காகமானது தனக்கு வேண்டியபடி கூப்பிடவற்றை
அறிவுடையார் தங்களுக்கு நன்மைக்கு ஹேது என்று கொள்வார்கள்

கட்டுரை
நற் சொல்லு

அப்படியே நான் வேண்டிற்றுச் சொன்னவற்றையும் குணமாகக் கொள்ள வேணும்

நமக்கு அப்படி செய்ய வேண்டுகிறது என் என்ன

காரணா கருளக் கொடியானே
உடையவன் ஆகையாலே எல்லாம் பொறுக்க வேணும்
இதுக்கு உத்பாதகன் அவன் அல்லையோ

1-இல்லாதவற்றை அடைய உண்டாக்குகைக்கும்
2-அபராத ஷாமணத்துவத்துக்கும்
3-ரக்ஷகத்துவத்துக்கும் கொடி கட்டி இருக்குமவன் அல்லையோ –

————

உனக்கு அடிமையான நான்
அயோக்கியமான நாவாலே சொன்ன இத்தைப் பொறுத்து அருள வேணும் என்கிறார் –

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –

பதவுரை

சங்கு சக்கரம் ஏந்து கையானே!
ஊழி–பிரளயக் காலத்தில்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)
உமிழ்ந்தானே (அவற்றை) வெளிப்படுத்தினவனே!
சழக்கு நாக்கொடு–பொல்லாத நாக்கினால்
புன் கவி–அற்பமான பாசுரங்களை
சொன்னேன்–நான் சொன்னேன்;
பிழைப்பர் ஆகிலும் (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும்
தம் அடியார்–தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய
செயல்–சொல்லை.
பொறுப்பது–பொறுத்தருளுகை
பெரியோர் கடன் ஆனதே–பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ
நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்–உன்னுடைய கடாஷம் அல்லால்
வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;
(அன்றியும்)
வேறு ஒருவரோடு–மற்று ஒருவர் பக்கலிலும்
என் மனம்–என் நெஞ்சானது
பற்றாது–பொருந்த மாட்டாது
உழைக்கு–புள்ளிமானுக்கு
ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்–ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ?

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன்
பிறரை முன்பு ஸ்துதித்துப் போருகையாலே
அஸூத்த மான நாவைக் கொண்டு
புல்லிதான கவிதைகளை சொன்னேன்
(காலத்தாலும் இடத்தாலும் முன்பு
அவனுக்கு முன்பே என்றுமாம் )

சழக்கு –பொல்லாங்கு

புன்கவி -உனக்கு அநர்ஹமாய் இருக்கை

சொன்னேன் –
நெஞ்சிலே நினைக்கவும் கூட அவத்யமாய் இருக்க
அதுக்கும் மேலே
சொல்லுவதும் செய்தேன்

சங்கு சக்கரம் ஏந்து கையானே
கையும் ஆழ்வார்களுமான அழகைப் பேச நான் அர்ஹனோ –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டிய கையில்
பூ ஏந்தினால் போலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திரு வாழியையும் தரித்தவனே

இப்படி அறிந்து வைத்தும் சொல்லிற்று என் கொண்டு என்ன

பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் என்றே
தப்பச் செய்தார்களே யாகிலும்
அநந்யார்ஹ சேஷ பூதர் செய்தவற்றைப் பெரியோருக்குப் பொறுக்கை உசிதம்
என்று நினைத்துச் சொன்னேன்

இங்கனம் செய்ய வேண்டுகிறது என்
உமக்குப் புறம்பு விஷயம் இல்லையோ என்ன

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால்
உன்னுடைய குளிர்ந்த கடாக்ஷம் ஒழிய
வேறு குளிர நோக்குவாரை உடையேன் அல்லேன்

வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
நீ குளிர நோக்காது ஒழிந்தாலும்
வகுத்த உன்னை ஒழிய
என் மனஸ்ஸூ புறம்பு பற்றாது

ஆனால் உம்மைக் கைக்கொள்ளுகை நமக்கு அவத்யம் அன்றோ என்ன

உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே
அது நமக்கு அவத்யமாகாது
அபராத சஹன் -என்றதுவே உனக்கு நிரூபகமாம் என்கிறார்
புள்ளிமானுக்கு ஒரு புள்ளி ஏறி என் குறைந்தால் என்
சர்வாத்மாக்களுடையவும் அபராதங்களைப் பொறுக்கிற உனக்கு
என்னுடைய அபராத ஷாமணம் அவத்யமாகப் புகுகிறதோ

அதவா
இது உமக்கு அவத்யம் அன்றோ நாம் பொறுத்தாலும் என்ன

உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய்
புள்ளிமானுக்கு ஒரு புள்ளி ஏறி ஏறி என் குறைந்தால் என்
முன்பே சாபராதி
அத்தோடு இதுவும் கூட தேவரீர் க்ஷமைக்கு விஷயம் ஆகிறது என்றுமாம்

(தாரை -பெருமாளை அப்ரமேயஸ்ய -ச -ஜிதேந்த்ரிரஸ்ய ச –உத்தம தார்மிக –ஷிதி ஷாமாவான்
-ச -என்று சொல்லாமல்
பொறுப்பவன் இதற்கும் பொறுப்பானே
அதே போல் இங்கும் )

நாம் அப்படி அங்கீகரித்தது உண்டோ என்ன

ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே
சம்சாரிகளில் உனக்கு அபராதம் பண்ணாது இருப்பார் உண்டோ
அத்தைப் பாராதே யன்றோ
அவர்களை வயிற்றிலே வைத்துப் புறப்பட விட்டு ரஷித்தது
அப்படியே இதுவும் செய்து அருள வேணும் —

—————

உம்முடைய அடிமைக்கு அடி ஏது என்ன
உன் கோயிலில் வாழும் வைஷ்ணவன் என்னும் வன்மை என்கிறார் –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –

பதவுரை

திருமாலே–ஸ்ரீய: பதியானவனே!
நாரணா என்னும் இத்தனை அல்லால்–‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
நன்மை தீமைகள் ஒன்றும்–(வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறியேன்–அறிகிறேனில்லை.
புன்மையால்–(எனக்கு இயற்கையாக உள்ள-ப்ரயோஜனாந்தர நசையாலே ) அற்பத் தனத்தினால்
உன்னை–உன்னைக் குறித்து
புள்ளுவம் பேசி–வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழ்வான் அன்று கண்டாய்–புகழுவனல்லன் (அடியேன்)
உன்னை–உன்னை
உன்னும் ஆறு–இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில்
ஒன்றும்–ஒரு வழியையும்
அறியேன்–அறிந்தேனில்லை;
ஓவாறே–(ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்பன–நமோ நாராணாய என்னா நின்றேன்
வன்மை ஆனது–அடியேனுக்கு மிடுக்காவது
உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்–உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
இங்கு ஸ்ரீ ரெங்கம் இல்லை பகவத் சன்னிதானம் என்றவாறு
கண்டாய்–முன்னிலை யசைச் சொல்-

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நான் திரு நாமத்தைச் சொல்லுகை அத்தலைக்கு நன்மையாய்த் தலைக்கட்டு கிறதோ
தீமையாய்த் தலைக்கட்டு கிறதோ
அறிகிறிலேன்

நாரணா என்னும் இத்தனை அல்லால்
நல்கத்தான் ஆகாதோ நாரணனை-என்று சொல்லுகிறபடியே
இந் நாராயண பதத்துக்கு அபராத ஸஹத்வம் அர்த்தமாகிறது
அபராதங்களைப் பொறுக்கைக்குத் திரு நாமமாக உடையவனே என்னுமது ஒழிய

புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய்
தண்மையாலே சர்வாதிகனான யுன்னைக் கிருத்ரிமம் சொல்லிப் புகழுமவன் அல்லேன்

திருமாலே
பிராட்டி முன்னாக இழிந்த எனக்கு
அபராததுக்கு அஞ்ச வேணுமோ

உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன்
ஸாஸ்த்ர யுக்தமான க்ரமத்திலே உன்னை அனவரத பாவனை பண்ண அறிகிறிலேன்

ஓவாதே நமோ நாரணா என்பன்
அநந்ய ப்ரயோஜநன் ஆகையால்
ஒரு காலும் இடைவிடாதே திரு மந்த்ரத்தை அர்த்த ஸஹிதமாக அனுசந்திப்பேன்

வன்மை யாவது
எனக்குப் பலமாக உள்ளது

உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் –
உன் எல்லைக்கு உள்ளே வர்த்திக்கிறோம் என்னும் பலம் இறே எனக்கு உள்ளது
பவத் விஷய வாஸிந -என்னக் கடவது இறே
பகவத் அபிமானம் உள்ள தேசத்திலே
வர்த்திக்கை இறே
இவ்வாத்மாவுக்குத் தஞ்சம் –

———-

அத்தேச வாசத்தாலே தமக்கு உண்டான
அநந்ய ப்ரயோஜனத்வத்தை அருளிச் செய்கிறார்

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே -5 -1-4 –

பதவுரை

நெடுமையால்–(குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால்
உலகு எழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–அளந்தருளினவனே!
நின்மலா–பரிசுத்தமானவனே!
நெடியாய்–(அனைவர்க்கும்) தலைவனானவனே!
கொடுமை கஞ்சனை–கொடிய கம்ஸனை
கொன்று–உயிர்க் கொலை செய்து,
நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே–உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில்
பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே!
அடியேனை–(உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை
குடிமை கொள்வதற்கு–கிங்கரனாகக் கொள்வதற்கு
ஐயுறு வேண்டா–ஸந்தேகிக்க வேண்டியதில்லை;
கூறை சோறு இல்லை–இக் கூறையையும் சோற்றையும்
வேண்டுவது இல்லை–(நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை;
அடிமை என்னும்–அடிமை யென்ற
அ கோயின்மையாலே–அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால்
அடிமையை அரசனாக இருப்பதே ஸ்வரூபம்
அவை–அக்கூறை சோறுகள்
அங்கு அங்கு–அவ்வவ் விடங்களில்
போதரும்–(தாமாகவே) கிடைக்கும்
(கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.)

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய்
ஏக ரூபமான வடிவை அபரிச்சேதயமாக்கி வியாபித்து
ஸர்வ லோகங்களையும் அளந்து கொண்டவனே

நின்மலா
ஸ்வ ப்ரயோஜன ராஹித்யத்தால் வந்த நைர்மல்யம் –

நெடியாய்
அநாஸ்ரிதற்குக் கிட்ட ஒண்ணாமையால் வந்த அபரிச்சேதயத்தைச் சொல்லுகிறது

அடியேனை குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
உனக்கு அநந்யார்ஹன் ஆகையாலே
அநந்ய ப்ரயோஜனான என்னை
ஸ்வரூப அனுரூபமான விருத்தியைக் கொண்டு அருளுகைக்கு சந்நே ஹிக்க வேண்டா
நான் அநந்ய பிரயோஜனன் என்ன

அது எங்கனே கூடும்படி
தேஹ யாத்ரை உமக்கு வேண்டாவோ என்ன

கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
நான் அன்ன பாநாதிகளால் தரிக்குமவன் அல்லேன்
கைங்கர்ய ஏக தாரகன் நான்

சேஷ பூதனுக்கு சேஷ பூத விருத்தியே தாரகாதிகள் இருக்கும் இறை
தேஹாதி விலக்ஷணன் ஆகையாலே சப்தாதிகள் தாரகங்கள் ஆகாது
பரதந்த்ரன் ஆகையாலே ஸ்வ அனுபவமும் அன்று
ஸ்வரூபம் நித்யமாகையாலே ஸ்வரூப விச்சேதமும் நித்ய ஞானாதி குண கத்வாத் குண வி நாஸமும் அன்று
புருஷார்த்தம் அன்று என்றதாய்த்து

ஆனால்
நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் –

அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
உனக்கு சேஷ பூதன் என்கிற ராஜ குலத்தாலே
அந்த அந்தக் கைங்கர்யங்களே எனக்கு தாரகாதி ஸகல புருஷார்த் தங்களும் ஆகையால்
நின்னையே தான் வேண்டி -இத்யாதி

கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே
அக் கைங்கர்ய விரோதிகளான இதர புருஷார்த்தங்களில் சங்கங்களையும்
அதுக்கு அடியான கர்மங்களையும்
க்ரூரனான கம்சனை நிரஸித்து
உனக்குப் பிதாவான ஸ்ரீ வாஸூ தேவர் காலில் வலிய விலங்கை வெட்டி விட்டால் போலே
போக்கி அருள வேணும் என்கிறார் –

————

எனக்கு கிருஹ ஷேத்ராதிகளான ஸர்வ ஐஸ்வர்யங்களும்
உன் திருவடிகளே என்கிறார் –

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பு வகுத்து கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

பதவுரை

கேழல் ஒன்று ஆகி–ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு
கோடு–(தனது) கோரப் பல் நுனியில்
மண் கொண்ட–பூமியைத் தாங்குகையாகிற
கொள்கையினாளே–கால பாவத்ந யுடையவனே
குஞ்சரம்–(குவலயாபீடமென்ற) யானையானது
வீழ–முடியும்படி
கொம்பு–(அதன்) தந்தத்தை
ஓசித்தானே–முறித்தெறிந்தவனே!
தோட்டம்–தோட்டமும்
இல்லவள்–மனைவியும்
ஆ–பசுக்களும்
தொழு–மாட்டுத் தொழுவமும்
ஓடை-குளமும்
துடவையும்–விளை நிலமும்
கிணறும் இவை எல்லாம்–கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும்
வாட்டம் இன்றி–குறைவில்லாமல்
அடியேன்
உன் பொன் அடி கீழே–உனது அழகிய திருவடியிலே
வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்–திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன்
எனக்கு–(எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு
நாடு மானிடத்தோடு–நாட்டிலுள்ள மநுஷ்யரோடு
அரிது–(ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்;
பலர்–பல பேர்
நச்சுவார்–(இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள்-

தோட்டம்
ஸஸ்யங்களுக்கு கிருஷி பண்ணும் இடம்

இல்லவள்
க்ரஹணி


பசு

தொழு
பசு நிற்கும் பிரதேசம்

ஓடை
குளம்

துடவையும்
விளை நிலம்

கிணறும்
துரவு

இவை எல்லாம் வாட்டம் இன்றி
இவை ஒன்றும் குறையாமல்

உன் பொன்னடிக் கீழே வளைப்ப அகம் வகுத்து கொண்டு இருந்தேன்
இனி உமக்கு ஒரு குறை இல்லையே என்ன
ஒரு குறை உண்டு
அது ஏது என்ன

நாட்டு மானித்தொடு எனக்கரிது
உன்னை ஒழியப் புறம்பே தாரக போஷக போக்யங்களாய் இருப்பாரோட்டை ஸஹவாசம்
எனக்கு துஸ் ஸகம்

நச்சுவார் பலர்
இத்தை ஆசைப்படுவார் பலர் உண்டாய் இருந்தது

கேழல் ஒன்றாகி கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
ஸர்வ லோகங்களும் பிரளயத்திலே அகப்படக் கொம்பிலே கோத்து எடுத்து
யதா ஸ்தானத்திலே வைத்து ரஷிக்கையை ஸ்வ பாவமாக யுடையவனே

குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே
குவலயா பீடத்தை விழ விட்டு அதன் கொம்பை முறித்தவனே
அப்படியே என்னுடைய சம்சார சம்பந்தத்தை அறுத்து
உன் திருவடிகளைத் தந்து அருள வேணும்

————

ப்ரக்ருதி சம்பந்தம் கிடக்க
தாரகாதிகள் எல்லாம் அன்ன பாநாதிகளாக வேண்டாவோ என்ன
அவற்றில் தமக்கு அபேக்ஷை இல்லாமையை அருளிச் செய்கிறார்

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1-6-

பதவுரை

காரணா–(லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!)
நான்முகனை–பிரமனை
படைத்தானே–(உந்தி மேல்) படைத்தருளினவளே!
கண்ணா–ஸர்வ ஸூ லபனான கண்ணபிரானே!
கரியாய்–காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே!
அடியேன் நான் (உனக்கு) அநந்யார்ஹ சேக்ஷபூதனான நான்
உண்ணா நாள்–உண்ணா தொழிந்த போது
பசி ஆவதொன்றுமில்லை–பசி என்பது மறந்து முண்டாவதில்லை.
ஓயாதே–இடைவிடாமல்
நமோ நாராயணா என்று–‘நமோ நாராயணாய’ என்று
எண்ணா நாளும்–அநுஸந்திக்கப் பெறாத நாளும்
இருக்கு எசுச் சாமவேதம்–ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்)
நாண் மலர் கொண்டு–அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து)
உன் பாதம்–உன் திருவடிகளை
நண்ணா நான்–கிட்டப் பெறாத நாள்களும்
அவை–(எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்;
அவை–அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும்
தத்துவம் ஆகில்–தட்டுப்படுமாகில்
அன்று–அந்த நாளானது
எனக்கு–எனக்கு
பட்டினி நாள்–உண்ணாதொழிந்த நாளாகும்–

கண்ணா
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூலபனானவனே –

நான்முகனைப் படைத்தானே
ப்ரஹ்மாவை திரு நாபியிலே ஸ்ருஷ்டித்தவன் கிடீர்
இப்படி ஸூலபனானான் என்கை

காரணா
ப்ரஹ்மாவுக்கு முன் உண்டான
ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைச் சொல்லுகிறது

கரியாய்
காரணத்வ நிபந்தனமான உபகாரம் இல்லை யாகிலும்
விட ஒண்ணாத படியான திருமேனி என்கை

காரணா -நான்முகனைப் படைத்தானே -கண்ணா -கரியானே -என்ற அந்வயம்
அத்தலை இருந்தபடி இது

அடியேன் நான் உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை
உனக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
வந்தேறியான தேஹம் கிடந்ததே யாகிலும்
அன்ன பாநாதிகள் ஜீவியாத போது ஷூதாதிகள் உண்டாகாது –

ஆனால் உனக்கு எதில் அபேக்ஷை என்ன
ஓவாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளும்
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை
மாறாதே அஹங்கார நிவ்ருத்தி பூர்வகமான
ஸ்வரூப சாதன புருஷார்த்தங்களுக்கு வாசகமான திரு நாமத்தை
ப்ராப்ய புத்த்யா ப்ரீதி பிரேரிதனாய் அநுஸந்தியாத போதும்
அதின் விவரணமான ருக்யாதி வேத த்ரயங்கள் யாகிற செவ்விப் பூக்களைக் கொண்டு
உன் திருவடிகளைக் கிட்டி நின்று அனுபவியாத நான்

தத்துறுமாகில்
அப்படிப்பட்ட திவசங்கள் கூடுமாகில்

ஆகில் என்கையாலே
அது கூடாது என்கை

அன்று எனக்கு அவை பட்டினி நாளே
அது இறே சேஷ பூதனான எனக்கு உபவாஸ திவஸம்
அப்போது ஸ்வரூப ஹானி பிறக்கும் என்கை –

———–

கீழில் பாட்டிலே தமக்கு அவனே ப்ராப்யம் என்றார்
அந்தப் பிராப்யத்தை அப்போதே கிட்டப் பெறாமையாலே நோவு படுகிறார் இதில் –

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல்
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம் கொல் என் ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி வுரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே -5 -1-7 –

பதவுரை

வெள்ளை–பால் மயமான
வெள்ளத்தின் மேல்–பெருக்கிலே
ஒரு பாம்பை–ஒப்பற்ற திருவனந்தாழ்வானை
மெத்தை ஆக விரித்து–படுக்கையாக விரித்து
அதன் மேலே–அப் படுக்கையின் மீது
கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்–(நீ) யோக நித்ரை செய்தருளும்படியை
காணலாம் கொல் என் ஆசையினாலே–காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால்,
உள்ளம் சோர–நெஞ்சு அழிய
உகந்து எதிர் விம்மி–மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி
உரோம கூபங்கள் ஆய்–(உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று
கண்ண நீர்கள்–கண்ணீர்
அணை–படுக்கையில்
துயில் கொள்ளேன்–உறங்கப் பெறுகிறேனில்லை;
யான்–(இப்படிப்பட்ட) அடியேன்
உன்னை–உன்னை
தத்துறும் ஆறு–கிட்டும் வழியை
சொல்லாய்–அருளிச் செய்ய வேணும்–

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து
நிர்மலமான ஜலத்தின் மேலே வெளுத்த நிறத்தை யுடைத்தான வெள்ளத்தின் மேலே
நாற்றம் குளிர்த்தி மென்மை தொடக்கமான குணங்களைப் ப்ரக்ருதியாக யுடையனாய்
கைங்கர்யத்துக்கு அத்விதீயனான திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக நிருத்தாத படி விரித்து

அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற
அப் படுக்கையின் மேலே படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் என்னும் படியாய்
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு பள்ளி கொள்ளுகிற பிரகாரம்

மார்க்கம்
வழி
நீ ரக்ஷண சிந்தை பண்ணுகிற வழி என்றபடி

காணலாம் கொல் என் ஆசையினாலே
காண வேணும் என்னும் ஸ்நேஹத்தாலே

உள்ளம் சோர
நெஞ்சம் அழிய
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும்–என்கிறபடியே

உகந்து எதிர் விம்மி
ப்ரீதி அதிசயத்தாலே வார்த்தை சொல்ல ஒண்ணாத படி
எதிர் விம்மிப் பொருமி

வுரோம கூபங்களாய்
உடம்பு எல்லாம் மயிர் கூச்சு எறிந்து
இவ்வநுஸந்தானம் ப்ரத்யக்ஷம் போலே பிரகாசித்து
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ணி
அது கிடையாமையாலே

கண்ண நீர்கள் துள்ளம் சோரத்
உள் அழிந்து கண்ண நீர் பாய

துயில் அணை கொள்ளேன்
படுக்கை சேர்த்தியை அனுசந்தித்த எனக்குப்
படுக்கை பொருந்துகிறது இல்லை

சொல்லாய் உன்னைத் தத்துறுமாறே
நான் உன்னைக் கிட்டும் வழி சொல்லாய்
எல்லாத் தசையிலும் அவனையே கேட்க்குமவர் இறே இவர்–

————-

கிட்டும் தனையும் உன்னை மாறாமல் ஏத்தும் படி பண்ணி அருள வேணும் என்கிறார்
(கிட்டிய பின்பு உன்னை மாறாமல் ஏத்த சொல்ல வேண்டாமே )

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணுவர் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம் பிரானே -5-1-8 –

பதவுரை

காரணா–(உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே–(எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே!
மது ஸூதா–மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே–கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!
கண்ணனே!
வண்ணம்–அழகிய
மால்–பெரிய
வரை–கோவர்த்தன மலை
குடை ஆக–குடையாக (அமைய)
மாரி–மழையினின்றும்
காத்தவனே–(பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே!
களிறு–(குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட–முடித்த
பிரானே–உபகாரகனே!
ஏத்த அரும் பெரு கீர்த்தியினானே–ஸ்துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே!
எம்பிரானே–எமக்குத் தலைவனே!
நான்–அடியேன்
உன்னை–உன்னை
நாள் தொறும்–தினந்தோறும்
நண்ணி–ஆஸ்ரயித்து
ஏத்தும் நன்மை–ஸ்துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்–அருள் செய்ய வேணும்–

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே
நாநா வர்ணமான தாதுக்களை யுடைத்தான பெரிய மலையைக் குடையாகக் கல் வர்ஷத்தைக் காத்தவனே

மதுசூதா
முதல் களையாகிற மெதுவான அசூரனை நிரசித்தவனே

கண்ணனே
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனே

கரி கோள் விடுத்தானே
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ஆபத்தைப் போக்கினவனே

காரணா
ஜகத் காரண பூதனே

களிறட்ட பிரானே
குவலயா பீடத்தை நிரசித்த உபகாரகனே

எண்ணுவர் இடரைக் களைவானே
உன்னை அனுபவிப்பாருடைய விரோதியைப் போக்குமவனே

ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
அபரிச்சேதயமாய் போக்யதை அளவிரந்த குணங்களை யுடையவனே

நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருளு செய்யும் பிரானே
ஏத்தி அல்லது தரிக்க மாட்டாத நான் உன்னைக் கிட்டி
நாள்தோறும் ஏத்தும்படிக்கு ஈடான நன்மையை அருள வேணும்
ஸ்ரேயஸ்ஸை உண்டாக்கி அருள வேணும்

எம்பிரானே
அநந்ய ரானவர்களுக்கு உபகாரகன் ஆனவனே

காரணா
எண்ணுவர் இடரைக் களைவானே
மதுசூதா
கரி கோள் விடுத்தானே
கண்ணனே
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே
களிறட்ட பிரானே
ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய்
எம் பிரானே
என்று அந்வயம்

ஆக
ஸர்வ ஸூ லபத்வமும்
ப்ராப்யத்வமும்
சொல்லிற்று –

———-

ரக்ஷகனுமாய்
ப்ராப்யனுமான
நீயே என் பிராப்தி விரோதியைப் போக்கி அருள வேணும் என்கிறார் –

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே – 5-1 -9-

பதவுரை

நம்பனே–(ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே!
நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே–(ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே!
நரசிங்கம் அது ஆனாய்–நரசிங்க அவதராம் செய்தருளினவனே!
உம்பர்-நித்ய ஸூரிகளுக்கு
கோன்–தலைவனே!
உலகு ஏழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–(திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே!
ஊழி ஆயினாய்–காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!
முன்–முன்னே
ஆழி–திருவாழி யாழ்வானை
ஏத்தி–(திருக் கையில்) ஏந்திக் கொண்டு
(எழுந்தருளி)
மா கம்பம்–மிக்க நடுக்கத்தை அடைந்த-கம்பம் -கம்பநம் -நடுக்கம்
கரி–கஜேந்திர ஆழ்வானுடைய
கோள்–சிறையை
விடுத்தானே–விடுத்தருளினவனே!
காரணா–ஜகத் காரண பூதனே!
கடலை–(திருப்பாற்) கடலை
கடைந்தானே–(தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே!
எம்பிரான்–எம்பிரானே!
என்னை–அடியேனை
ஆளுடை–ஆட்படுத்திக் கொண்டவனும்
தேனே–தேன் போல் இனியனுமானவனே!
ஏழையேன்–(உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய
இடரை–துன்பத்தை
களையாய்–களைந்தருள வேணும்.

நம்பனே
என்னை உன் கையிலே பொகடலாம் படி விஸ்வச நீயனானவனே

நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே
ஸ்நேஹ பூர்வகமாக பரிந்து ஏத்த வல்லார்களுக்கு ஸ்வாமி யானவனே

நரசிங்கமதானாய்
திரு நாமம் சொல்லப் பெறாத ஹிரண்யனை
அச் செய்கைக்காக
அவன் வரத்தில் அகப்படாத நரஸிம்ஹம் ஆனவவனே

அது என்று
அழகைச் சொல்லுகிறது

உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய்
தேவர்களை மெய் காட்டிக் கொண்டு போருகிற இந்திரனுக்காக
ஸப்த லோகங்களையும் அளந்தவனே
(கீழ் எல்லாம் ஒன்றாக்கி -மேல் ஆறும் -ஆக ஏழும் )

அன்றிக்கே
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் வைத்து
அங்கு நின்றும் போந்து அவதரித்து
உலகு ஏழையும் அளந்தான்
என்னவுமாம்

ஊழி யாயினாய்
ஊழிக் காலம் -கால உப லஷித ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன் ஆனவனே

ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே
ஏற்கவே திருவாழியைத் தரித்துக் கொண்டு இருந்து
முதலையின் கையில் அகப்பட்டு நடுங்குகிற யானையினுடைய பேய் சிறையை வெட்டி விட்டவனே
வடிவில் பெருமை யாகவுமாம்
கோள் முதலை முஞ்ச குறித்து எறிந்த சக்கரம் -என்னக் கடவது இறே

காரணா
ஜகத் காரண பூதனானவனே
காரணமாய் உத்பாதித்தவனே
ரக்ஷகன் என்கை

கடலைக் கடைந்தானே
இந்திராதி தேவர்களுக்காக மஹோ ததியைக் கடைந்தவனே
(உததி-கடல் –மஹா உததி -பெரும் கடல் )

எம்பிரான்
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவனே
அவற்றை எனக்கு அறிவித்த உபகாரகன் -என்னவுமாம்

என்னை ஆளுடைத் தேனே
உன் போக்யதையைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே

ஏழையேன் இடரைக் களைவாயே
உன் போக்யதையில் சபலனான நான்
என்னுடைய மங்களா ஸாஸன விரோதியை
வாஸனையோடே போக்கி அருள வேணும் –

——–

நிகமத்தில் இப்பத்தை அப்யசித்தவர்கள்
இதன் பாசுர மாத்ரத்தாலே சடக்கெனப் பரமபத்தைப் பிராபிப்பர்கள்-என்கிறார் –

காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1- 10-

பதவுரை

காமர் தாதை–மன்மதனுக்குத் தந்தையும்
கருதலர் சிங்கம்–(தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும்
காண–ஸேவிப்பதற்கு
இனிய–அழகாயிருக்கிற
கரும் குழல் குட்டன்–கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும்
வாமனன்–வாமாநாவதாரம் செய்தருளியவனும்
என்–எனக்குத் தலைவனும்
மரகத வண்ணன்–மரகதப் பச்சை போன்ற வடியை யுடையவனும்
மாதவன்–பிராட்டிக்குக் கணவனும்-ஸ்ரீ யபதி
மதுசூதனன் தன்னை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த
சேமம்–க்ஷேமமானது
நன்கு–நன்றாக (குறைவின்றி)
அமரும்–அமைந்திருக்கப் பெற்ற
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான
விட்டு சித்தன்–பெரியாழ்வாரது
வியன் தமிழ் பத்தும்–பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
நாமம் என்று–(எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி
நவின்று–அன்பு கொண்டு
உரைப்பார்கள்–ஓதுமவவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–கிட்டப் பெறுவர்கள்–

காமர் தாதை
தன வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற மன்மதனுக்கு ஜனகன் ஆனவனே
அவனுக்கு அவ் வைலக்ஷண்யத்துக்கு அடி இவன் என்கை

கருதலர் சிங்கம்
இவ்வடிவு அழகு காண வேண்டாதவர்களை ஸிம்ஹம் போலே
கிட்ட அரியனாய் இருக்குமவன்

காண இனிய கரும் குழல் குட்டன்
அனுகூலர் கண்ணுக்கு இனியனாய்
கறுத்த நிறத்தை யுடைய திருக்குழலை யுடைய பிள்ளை

காண இனிய கரும் குழல்-என்று
குழலுக்கு விசேஷணம் ஆகவுமாம்

வாமனன்
இவர்களை பெருகைக்குத் தான் அர்த்தி யாமவன்
அவ்வடிவு அழகைச் சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி
வாமனன் ஆனவன் என்னவுமாம்

என் மரகத வண்ணன்
மரகதம் போல் பசுத்துக் குளிர்ந்த திரு மேனியைக் காட்டி
என்னை வஸீ கரித்தவன்

மாதவன்
இவ்வடிவு அழகைப் பிராட்டிக்கு முற்றூட்டாகக் கொடுக்குமவன்
அவள் புருஷகாரமாகக் கிடீர்
அவ்வடிவு அழகை எனக்கு உபகரித்தவன் என்னவுமாம்

மது ஸூதன் தன்னை
அவ் வனுபவ விரோதிகளை மதுவைப் போக்கினால் போல் போக்குமவன்

சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
வஸ்துவுக்குத் தானே ரக்ஷகமாகப் போரும்படியான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான பத்துப் பாட்டும்
ரக்ஷை பொருந்தின ஊர்
மங்களா ஸாஸன பரரை உடைத்தது என்கை

(வியம் தமிழ் -வியப்பாக சொன்ன தமிழ் என்று சொன்ன அத்யாஹாரம் கொள்ள வேண்டும்
வியத்தல் -கொடுத்தல் -கடைக்குறையாக வியந் தமிழ் )

நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
ப்ராப்ய வாசகம் என்று
ஸ்நேஹத்தோடு அனுசந்திக்க வல்லார்

நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே
பரம பதத்தை சடக்கென கிட்டப் பெறுவார்கள்

நாரணர் உலகே
உபய விபூதி நாதனுடைய தேசம் என்கை
அவன் இறே முக்த ப்ராப்யன் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-10–துப்புடையாரை அடைவது எல்லாம்—

August 4, 2021

கீழில் திரு மொழியிலே
புருஷகாரத்தால் அல்லது பகவத் ஸமாஸ்ரயணம் ஸித்தியாது என்னும் இடமும்

எல்லாத் தேஸத்திலும்
எல்லாக் காலத்திலும்
எல்லா அவஸ்தைகளிலும்
மங்களா சாஸனமே ஸ்வரூபத்தோடே சேர்ந்த நிலை நின்ற புருஷார்த்தம் என்று
அறுதி இட்டார் கீழ்

மங்களா ஸாஸனம் பண்ணாத போது க்ஷண காலமும் பொறுக்க மாட்டாத
தம்முடைய மார்த்தவத்தை அவன் திரு உள்ளத்திலே படும்படியாக விண்ணப்பம் செய்கிறார் –

இது அந்திம ஸ்ம்ருதி ஆனாலோ என்னில் –
அது கூடாது
ப்ரபன்னரான இவருக்கு அந்திம ஸ்ம்ருதி உபாய பூதனான ஈஸ்வரன் பக்கலிலே கிடக்கையாலே
அஹம் ஸ்மராமி –என்னக் கடவது இறே

ஆகையால் கரணங்கள் அவிதேயங்களான மரண காலத்திலும்
மங்களா ஸாஸனம் பண்ணாத போதும் தரிக்க மாட்டேன் –
இதுக்கு விச்சேதம் வராதபடி பரிஹரித்துத் தந்து அருள வேணும் என்று
பெரிய பெருமாளை அர்த்திக்கிறார் –

இம் மங்களா ஸாஸனம் ஸ்வரூபத்தோடே சேருமோ என்னில்
ரஷ்ய ரஷக பாவம் மாறாடும்படி
ப்ரேமம் தலை மண்டி இட்டு அதன் காரியமாய்க் கொண்டு வருகிற
பரிவாகையாலே சேரும் –

———–

சர்வ சக்தியான நீ அந்திம தசையிலே எனக்கு ரக்ஷகனாக வேணும் என்கிறார் –

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10-1-

பதவுரை

அரங்கத்து–திருவரங்கம் பெரிய கோயிலில்
அரவு அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
பள்ளியானே–பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
துப்பு உடையாரை அடைவது–(அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது
உடையாரை–முன்னிலை படர்க்கை பிரயோகம்
எல்லாம் சோர்வு இடத்து–‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில்
துணை ஆவர் என்றே–தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ?

(அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் ப்ரபன்னர்களுக்கு அன்றோ என்று அவன் சொன்னதாகக் கொண்டு
சரணம் என்று வாய் வார்த்தையாக
புரிதல் இல்லாமல் செய்தேன் என்கிறார் )

ஒப்பு இலேன் ஆகிலும்–(இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர்
திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும்,
நீ ஆனைக்கு அருள் செய்தமையால்–தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால்
(அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று)
நின் அடைந்தேன்–தேவரைச் சரணம் புகுந்தேன்

(அப்போது வந்து ரக்ஷிக்கிறேன் என்று சொன்னதாக )

எய்ப்பு–(வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது
என்னை–அடியேனை
வந்து நலியும் போது–கிட்டி வருந்துங்காலமாகிற
அங்கு–அந்த சரம தசையில்
நான்–அடியேன்
உன்னை–தேவரீரை
ஏதும்–க்ஷண காலமாயினும்
நினைக்க மாட்டேன்–நினைக்க முடியாதவனாவேன்
இப்போதே–(கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே
சொல்லி வைத்தேன்–(என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன்

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
சக்திமான்களை ஆஸ்ரயிக்கிறது தானும் தன் கரணங்களும் தனக்கு உதவாத ஆபத் தசையிலலே
தனக்கு ரக்ஷகர்கள் ஆவார் என்று இறே
ஆன பின்பு ஸர்வ ஸக்தியான நீ உன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருக்கிற என்
சரீர அவசான காலத்திலே என் ஆத்மீயங்கள் ஒன்றும் எனக்கு உதவ மாட்டாதே
அத் தசையில்
அஹம் ஸ்மராமி
நயாமி
என்று நீ அருளிச் செய்தபடி ரக்ஷகனான வேணும் –

ஒப்பிலேன் ஆகிலும்
உன்னை ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை இல்லாத படி தோஷ யுக்தனாய் இருக்கும் இருப்பு
அஸத்ருசனாய் இருந்தேனே யாகிலும்
உன்னுடைய ஷமா வாத்சல்ய தயாதி குணங்களை அனுசந்தித்து உன்னை ஆஸ்ரயித்தேன்
இப்படி நம்மை ஆஸ்ரயித்தவர்களை நாம் ரக்ஷிக்க எங்கே கண்டீர் என்ன

நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
ஏன் -ஸ்ரீ கஜேந்திரனை ரஷித்தது இல்லையோ
ஆனையினுடைய துதிக்கை முழுத்தின ஆபத்தில் உன் கிருபையாலே ரக்ஷித்திலையோ

உமக்கு அப்படி ஆபத்து ஏது என்ன

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
தேஹ விமோசன காலத்திலே
த்ரிவித கரணங்களும் சோரும்படியான தசையிலே

அன்றிக்கே
அத் தசையிலே மங்களா ஸாஸன விச்சேதத்தால் வந்த
இளைப்பு நலியும் அளவில் -என்னவுமாம்

அப் போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே-
அத் தசையில் உன்னை ரக்ஷகனாக அனுசந்திக்க ஷமன் ஆகேன்
அதுக்காக அனுசந்தான ஷமனான இப்போதே விண்ணப்பம் செய்து வைத்தேன்

இந்த ரக்ஷகத்வத்தை பிரத்யஷப்பித்துக் கொண்டு
கோயிலிலே திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
பிராட்டியோடே கூடப் பள்ளி சாய்ந்து (கொண்டு )அருளுகிறவனே
சொல்லி வைத்தேன் -என்று அந்வயம் –

————-

சரீர வியோக காலத்தில் யம படர் வந்து கிட்டாதபடி நோக்கி அருள வேணும் என்கிறார் –

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –

பதவுரை

சங்கொடு–ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
சக்கரம்–ஸ்ரீஸுதர்சனாழ்வானையும்
ஏந்தினானே–திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே
அரங்கத்து அரவு அணை பள்ளியானே!
அனேக தண்டம் செய்வதா நிற்பா–பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய்
போம் இடத்து–இழுத்துக் கொண்டு போம் போது
(என்னுடைய நெஞ்சானது)
உன் திறத்து–உன் விஷயத்தில்
எத்தனையும்–சிறிதாயினும்
புகா வண்ணம்–அவகாஹிக்க மாட்டாதபடி
நிற்பது ஓர் மாயை வல்லை–மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய்
நமன் தமர்கள்–யம படர்கள்
நா மடித்து–(மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு
என்னை–(மஹா பாபியான) அடியேனை
(ஆதலால்)
ஆம் இடத்தே–ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே
சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று–“சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத)
அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்”
உன்னை–உன்னைக் குறித்து
சொல்லி வைத்தேன்–விண்ணப்பஞ் செய்து கொண்டேன்–

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய்
தேஹ விமோசநம் பிறக்கும் போது என் ப்ரக்ருதி அறிந்து
என்னைத் திரு உள்ளம் பற்றி அருள வேணும்
என் ஸ்வபாவம் கண்டாய் இறே

சங்கோடு சக்கரம் ஏந்தினானே
அழகுக்கும்
ஆண் பிள்ளைத் தனத்துக்கும்
உறுப்பாக ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடு திருவாழியையும் பூ ஏந்தினால் போல் தரித்தவனே
கையும் ஆழ்வார்களுமான அழகைக் கண்டால் பரியாது இருக்க மாட்டார் இறே –

நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
பூர்வ தோஷங்களை நினைத்து நாவை மடித்துப் பல் கறுவிக் கொண்டு
நாநாவான தண்டங்களைச் செய்யக் கடவதாக அவசர பிரதீஷராய் நிற்பர்களாய்த்து யம படர்

போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
அவர்கள் கொண்டு போம் இடத்து உன் விஷயத்தில் அத்யல்பமும் நினைவு உண்டாகாதபடி பண்ணும்
அத்விதீயமான ஆச்சர்ய சங்கல்பத்தை யுடைய

ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன்
காரணங்கள் விதேயமான தசையில் -நீயே அத் தசையிலே ரக்ஷகனாக வேணும் -என்று
சொல்லி வைத்தேன்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
எனக்கு விண்ணப்பம் செய்யலாம் படி அடுத்து அணித்தாக
பள்ளி கொண்டு அருளுகிறவனே –

————

அந்திம ஸ்ம்ருதி என் கையில் இல்லை
ரக்ஷணத்துக்குப் பரிகரமுடைய நீயே எனக்குத் துக்கங்கள் வராதபடி
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமின் என்ன வுபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொள் என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 3-

பதவுரை

நேமியும்–திருவாழியையும்
சங்கமும்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
ஏந்தினானே–கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்–(யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமர்–யம கிங்கரர்கள்
எற்றி–அடித்து
பற்றும் போது–பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்–“கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான
உபாயம் இல்லை–ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே–வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
எல்லையில்–(அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில்
உன்–உன்னுடைய
நாமம் எல்லாம்–திரு நாமங்களை யெல்லாம்
சொல்லினேன்–சொன்னேன்;
என்னை–அடியேனை
குறிக் கொண்டு–திருவுள்ளத்திற் கொண்டு
என்றும்–எப்போதும்
அல்லல் படா வண்ணம்–அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்–ரக்ஷித்தருள வேணும்–

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
ஆயுஸ்ஸூ னுடைய எல்லையிலே யாம்ய மார்க்கம் அத்யா சன்னமானால்
வாசல் -வழி

எற்றி நமன் தமர் பற்றும் போது
பிடரியிலே ப்ரஹரித்து யமபடர் பிடிக்கும் தசையிலே

நில்லுமின் என்ன வுபாயம் இல்லை
அவர்களை நிவாகரிக்கத் தக்கதொரு சாதகம் என் பக்கலில் இல்லை

நேமியும் சங்கமும் ஏந்தினானே
நிவாரண பரிகரமான திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
இடைவிடாமல் தரித்துக் கொண்டு இருக்கிறவனே
உன் கையில் சாதநத்துக்கு என் பக்கலிலே ஜீவனமும் உண்டு என்கை
(குறைகளை போக்கியே திருவாழி போல்வாருக்கு ஜீவனம் )

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன்
கரணங்கள் வச வர்த்தியான தசையிலே
உன்னுடைய ப்ராப்ய வாசகமான திரு நாமங்களை சொல்லி
மங்களா ஸாஸனம் பண்ணி அனுபவித்தேன்

என்னைக் குறிக் கொள் என்றும்
இவன் மங்களா சாசனத்தால் அல்லது தரியான் என்று திரு உள்ளம் பற்றி அருளி

அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்
மரண தசை தொடங்கி மேல் உள்ள காலம் எல்லாம் மங்களா ஸாஸன விச்சேதத்தால் வரும்
கிலேசங்கள் வாராத படி ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே-
என்னுடைய அல்லலைப் போக்குகைக்கு
அவசர ப்ரதீஷரராய்க் கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனே காக்க வேணும்
என்று அந்வயம் –

————–

மரண தசையில் மங்களா ஸாஸன விச்சேதத்தால் வந்த வியசனம்
யம பாதையோடு ஒக்கும் என்றார் கீழே
இப் பாட்டில் அந்த வியசனத்தை ப்ரணவ ப்ரதிபாத்யனான நீயே
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –
(இத்தாலே பகவான் ப்ரகர்ஷேண ஸ்துதிக்கப்படுவதால்
அது பிரணவம் ஆகிறது -தாது அர்த்தம் )

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியாப் பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 -10-4 –

பதவுரை

ஒற்றை விடையனும்–ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும்
நான்முகனும்–ப்ரஹ்மாவும்
உன்னை–உன்னை
அறியா–(உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே–பெருமை பொருந்தியவனே!
நமன் தமர்–யம கிங்கரர்கள்
இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி–இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து
முற்ற உலகு எல்லாம்-ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும்
நீயே ஆகி–நீயே ஆய்
மூன்று எழுத்து ஆய–மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும்
ஓ முதல்வனே–ஸர்வ காரண பூதனுமானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.
அஞ்ச–(பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி
பற்றல் உற்ற அற்றைக்கு–பிடிக்கப் புகுகிது அன்றைக்கு
நீ என்னை காக்க வேண்டும்–

ஒற்றை விடையனும்
ருஷப வாஹனத்தைத் தனக்கு அசாதாரணமாக யுடையனான ருத்ரனும்

நான் முகனும்
அவனுக்கும் கூட ஜனகனாய்
நாலு வேதங்களையும் அதிகரிக்கைக்கு நாலு முகங்களை யுடையனாய் இருக்கிற ப்ரஹ்மாவும்

உன்னை அறியாப் பெருமையோனே
இவர்கள் ப்ரஹ்ம பாவனை தலை எடுத்து ஸ்வ யத்னத்தாலே உன்னை அறியப் பார்த்தால்
அவர்களுடைய ஞானத்துக்கு அபூமியான மஹாத்ம்யத்தை யுடையவனே
யஸ்ய மஹிமா ஆர்ணவ விப்ருஷஸ்தே (ஸ்தோத்ர ரத்னம் )-என்னக் கடவது இறே
வேதங்களால் அபரிச்சேதயனான வுன்னை கர்ம வஸ்யரான இவர்களால்
ஓவ்பாதிக ஞானம் கொண்டு அறியப் போமோ

(ஸ்வ பாவிக அநவததிக அதிசய ஈஸிக்ருத்யம் உன்னிடமே
மஹிமைக்கடல் நீ
அதன் சிறு துளி அவர்களுக்கு ஒக்குமோ )

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி
அவன் ப்ராதேசிகன் ஆகில் அன்றோ இவர்களுக்கு அறியலாவது
லோகம் அடங்கலும் ஓன்று ஒழியாமல்
நீ என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படி ஜகதாகாரனாய்

மூன்று எழுத்தாய முதல்வனேயோ
இவ்வர்த்த ப்ரதிபாதகமாய்
அக்ஷர த்ரயாத்மகமான ப்ரணவ ப்ரதிபாத்யனாய்
(தஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய )யஸ் பரமஸ் மஹேஸ்வர என்று
அத்தாலே
ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாதிக்கப் பட்டவனே
ஜகத் காரண பூதன் என்றுமாம்

அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற வற்றைக்கு
இவர்களுக்கு ஜீவன ஹேதுவான ஆயஸ்ஸூ க்ஷயித்தது என்று மநோ ரதித்துத்
தங்கள் தர்சனத்தாலும் செயல்களாலும் இவர்கள் பயப்படும்படி
யமபடர் பற்றுகையிலே உத்யுக்தரான வந்த திவசத்திலே

நீ என்னை காக்க வேண்டும்
நமன் தமர் என் தாமரை வினவப் பெறுவாரலர்-என்னும் நீ
உன்னையே ரக்ஷகனாக அத்யவசித்த என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணை பள்ளியானே
உன்னுடைய பிரணவ ப்ரதிபாத்யதையைப் பிரகாசிப்பித்துக் கொண்டு
கோயில் ஆழ்வாருக்கு உள்ளே பள்ளி கொண்டு அருளுகிறவனே

(பிரணவ ஆகார விமானம் அன்றோ –
ப்ரபத்யே பிரணவ ஆகாரம் பாஷ்யம் ரெங்க மந்த்ரம் பாஷ்யம் —
சேஷித்வம் ஸ்புடம்)

————-

ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி
ரக்ஷணார்த்தமாகத் திருப்பாற் கடலிலே சாய்ந்து அருளி
அதிலும் ஸூலபனாய்க் கோயிலிலே பள்ளி கொண்டு அருளுகிற நீயே
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-

பதவுரை

பால்கடலுள்–திருப் பாற் கடலில்
பை அரவ இன் அணை–(பரந்த) படங்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
இன் -சாரியை என்றுமாம்
பரம மூர்த்தி–பரம சேஷியானவனே !
உய்ய–(எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு–லோகங்களை
படைக்க வேண்டி–ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில்–திரு நாபிக் கமலத்தில்
நான் முகனை–பிரமனை
தோற்றினாய்–தோற்று வித்தவனே!
வையம்–பூமியிலுள்ள
மனிசர்–மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி–பொய்யர் என்று எண்ணி (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய்
நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும்–யமனையும்
உடனே–கூடவே
படைத்தாய்–ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய–பரம பந்துவானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
இவர் என்னை காக்க வேண்டும்–

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடையவனாய்
மென்மை நாற்றம் குளிர்த்தி -இவைகளை பிரக்ருதியாக யுடையவனாய் இருக்கிற
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு
திருப்பாற் கடலிலே இவ்விபூதியில் உள்ளார்கட்க்கு கிட்டலாம் படி
அணித்தாகப் பள்ளி கொண்டு அருளுகிற பரம புருஷனே

அநந்த ஸாயித்வத்தாலே உன்னுடைய ஸர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
உபாய உபேயத்வங்களையும் பிரகாசித்தவன் என்கை

இத்தால்
வ்யூஹ குணங்களும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு என்கை –

(மூர்த்தி -இங்கு உபாய உபேய இவற்றை பிரகாசித்து அருளினவன் என்றவாறு
வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் இங்கு )

உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
லோகமாக ஆத்ம ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக சேதனர்க்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுக்க வேணும் என்று
நினைத்து அந்த ஸ்ருஷ்டிக்கு உனக்கு உபகரண பூதனான சதுர்முகனை
திரு நாபி கமலத்திலே ஸ்ருஷ்டித்தாய் –

வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஜகத்தில் உண்டான மனுஷ்யரை அஸ்த்திரர் என்று நினைத்து
அவர்களுடைய நித்ய ஸம்ஹாரத்துக்கு
உனக்கு உபகரண பூதனான மிருத்யுவையும் கூடவே ஸ்ருஷ்ட்டித்தாய் –
(சதத பரிணாம பூமி தானே இது )

இத்தால்
உன்னாலே உண்டாக்கப் பட்டவற்றை நீயே போக்கும் இடத்தில்
உனக்கு அருமை இல்லை என்கை

ஐய
மாதா பிதா பிராதா (ஸூபால உபநிஷத் )-என்கிறபடியே
எனக்கு நிருபாதிக பந்து ஆனவனே

இனி என்னைக் காக்க வேண்டும்
நான் உன் அபிமானத்திலே ஒதுங்கின பின்பு
கைம்முதல் அற்ற என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
திருப்பாற் கடலிலே வந்து கிட்ட மாட்டாத என் போல்வாருக்காக அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

————

சர்வ அந்தர்யாமியான நீ என்னை ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணோடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 -6-

பதவுரை

மண்ணொடு–பூமியும்
நீரும்– ஜலமும்
எரியும்–தேஜஸ்ஸும்
காலும்–வாயுவும்
ஆகாசமும்–ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)இவை காரணம்
மேல் கார்யம் -மற்றும் ஆகி நின்றாய்–மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
ஆகி நின்றாய்-பிரகார பிரகாரி நிபந்தமான சமாநாதி கரண்யம்
அண்ணலே–ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை–இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால–மிகவும்
கொடுமைகள்–கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்–பண்ணுவர்கள்;
(அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.)
எண்ணலாம் போதே–அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்–உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்–அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை–அடியேனை
நீ–நீ
குறிக் கொண்டு–திருவுள்ளத்தில் கொண்டு
என்றும்–எப்போதும்
காக்க வேண்டும்–காத்தருள வேணும்-

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
ஐயோ என்னும் இரக்கம் இல்லாத யமபடர் தண்டிக்கும் போது
ஆஸ்ரயங்கள் பொறுக்கும் அளவு அன்றிக்கே
மிகவும் க்ரூரங்களைப் பண்ணா நிற்பர்கள்
கிருபாவானான நீ இத்தைப் பரிஹரித்து அருள வேணும் -என்கை

மண்ணோடு நீரும் எரியும் காலும்
ஒன்றுக்கு ஓன்று காரணமாய் நின்ற பூத பஞ்சகங்களும்

மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
தன் மாத்திரைகளும்
இந்திரியங்களும்
மஹத் அஹங்காரங்களும்
இவை எல்லாத்துக்கும் காரணமான மூல ப்ரக்ருதியும்
தத் கதரான ஜீவ சமஷ்டியும்
இவற்றையும் நினைக்கிறது
மற்றும் -என்று

ஆக
இவற்றையுடைய உன்னோடே சமாந அதிகரித்துச் சொல்லலாம் படி
இவற்றுக்குள் அந்தர் யாத்மாவாய் நின்றாய்

இத்தால்
அந்தர் யாமியும் பெரிய பெருமாளே என்கை –

எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன்
கரணங்கள் வச வர்த்திகளாய்
அனுசந்தானத்துக்கு சக்தி உள்ள போதே மங்களா ஸாஸன விஷய பூதனான
யுன்னுடைய ப்ராப்ய வாசகங்களாய்
மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவு அழகுக்கும் வாசகங்களான திரு நாமங்களை
வாசகமாக்கி மங்களா ஸாஸனம் பண்ணினேன்

என்னைக் குறிக் கொண்டு என்றும் அண்ணலே நீ என்னை காக்க வேண்டும்
இப்படிப்பட்டவன் என்று என்னைத் திரு உள்ளம் பற்றி அருளி
எல்லாக் காலத்திலும்
இதினுடைய இழவு தன்னதாம் படி ஸ்வாமியான நீ
உன் கை பார்த்து இருக்கிற என்னை ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அந்தர்யாமித்வத்தில் இழிய மாட்டாதவர்களுக்கு அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

———–

வேதைக சமைதி கம்யனாய் சர்வாதிகனான நீ
எனக்கு அபய பிரதானம் பண்ணி அருள வேணும் என்கிறார் –

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே ஏழ் உலகும் உடையாய் என்னப்பா
வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே – 4-10- 7-

பதவுரை

செம் சொல்–ருஜுவான சொற்களை யுடைய
மறை–வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற–அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்–நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே–தலைவனுமானவனே!
எம்மானே–எம்பெருமானே!
எஞ்சல் இல்–குறை வற்ற
இன்–பரம போக்யமான
என்னுடை அமுதே–எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்–உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே!
என் அப்பா–எனக்கு உபகாரகனானவனே!
தேவர்கள் நாயகனே எம்மானே நித்ய விபூதி நாயகனாய் இருந்து எனக்கு உபகாரகன்
ஏழ் உலகும் உடையாய் என் அப்பா -லீலா விபூதி நாயகனாய் இருந்து எனக்கு உபகாரகன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!;
வஞ்சம்–வஞ்சனை பொருந்திய
உருவின்–ரூபத்தை யுடையவரான
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
என்னை–அடியேனை
வலிந்து–பலாத்கரித்து
நலிந்து–ஹிம்ஸித்துக் கொண்டு
பற்றும் போது–பிடிக்கும் போது
அஞ்சல் என்று ‘அஞ்ச வேண்டா’ என்று என்னை காக்க வேண்டும்-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற
யதா பூத வாதியாய்
பாஹ்ய குத்ருஷ்டிகளான ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு ஸ்வார்த்தங்களைப் பிரகாஸியாத
வேதத்துக்குப் பிரதான அர்த்தமாய்
ஸர்வே வேதா யத்ரை கம்ப வந்தி
ஸர்வே வேதா யத்ரை பதம் ஆமநந்தி
வேதைஸ் ஸர்வைர் அஹ மேவ வேத்ய –என்னக் கடவது இறே

தேவர்கள் நாயகனே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே
ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்னவுமாம்

எம்மானே
உன்னுடைய வேதைக சமதி கம்யத் வத்தையும்
ஸர்வ நிர்வாஹகத்வத்தையும் காட்டி
என்னை அடிமை கொண்டவனே

எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே
நாஸ ரஹிதமாய்
போக்யமுமான அம்ருதம் போலே
எனக்கு நித்ய நிரதிஸய போக்யனாவனே

ஏழ் உலகும் உடையாய்
பதிம் விஸ்வஸ்ய -என்கிறபடியே
ஸர்வ லோக ஈஸ்வரேஸ்வரன் ஆனவனே

என்னப்பா
எனக்கு இவ் வர்த்தங்களையும்
ப்ரமாணங்களையும் உபகரித்தவனே
எனக்கு நிருபாதிக பந்து என்றுமாம்

வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
வரவு தெரியாதபடி வருமவர்களாய்
எமனுக்குப் பரதந்த்ரராய் இருக்கிற படர் பலாத்கரித்து ப்ரஹரித்து என்னைப் பிடிக்கும் அளவிலே

அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து
அத்தசையில்
மாஸூச என்று ரஷித்து அருள வேணும்

அரவணை பள்ளியானே
எனக்கு அபய பிரதானம் பண்ணி அருளுகைக்காகவே
கோயிலிலே சாய்ந்து அருளினவனே –

———–

பரமபதத்தின் நின்றும் போந்து கிருஷ்ணனாய் அவதரித்த நீ
என்னை ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 8-

பதவுரை

வான் ஏய்–பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற
வானவர் தங்கள்–நித்ய முக்தர்களுக்கு
ஈசா–தலைவனே!
மதுரை–திரு வட மதுரையில்
பிறந்த–அவதரித்த
மா மாயனே–மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே!
என் ஆனாய்–(பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
நான்–அடியேன்
உன் மாயம்–உன் மாயைகளில்
ஏது ஒன்றும்–யாதொன்றையும்
அறியேன்–அறிய மாட்டேன்;
நமன் தமர்–யம கிங்கரர்கள்
பற்றி–(என்னைப்) பிடித்து
நலிந்திட்டு–(இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,)
இந்த ஊன் புகு என்று–‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று
மோதும் போது–அடிக்கும் போது
அங்கு–அவ் விடத்தில்
உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;
நீ என்னை காக்க வேண்டும்–

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன்
உனக்குப் பரிந்து அல்லது நிற்க மாட்டாத நான்
உன்னுடைய ஆச்சர்யாவஹமான குணங்களை ஒன்றும் அறியேன்
உன்னுடைய சங்கல்பங்களை என்றுமாம்

நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புக என்று மோதும் போது
யமபடர் முற்பட இந்த ஸரீரத்தோடே பிடித்து
ஹிம்சித்து இத்தை விடுவித்து
யாதநா ஸரீரத்தை யுண்டாக்கி
அத்தைக் காட்டி
நீ இந்த ஸரீரத்திலே பிரவேசீ -என்று நிர்பந்திக்க
இவன் அதில் புக இசையாமையாலே கண்ணற்று ப்ரஹரிக்கிற ஸமயத்திலே

அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
ஆபத் விமோசகனான யுன்னை
ஒரு பிரகாரத்தாலும் ரக்ஷகனாக நினைக்க மாட்டேன் –

வானேய் வானவர் தங்கள் ஈசா
பரமபதத்தில் பொருந்தி வர்த்திக்கிற
நித்ய முக்தருக்கு நியாந்தா வானவனே

மதுரைப் பிறந்த மா மாயனே
அது உண்டது உருக் காட்டாமையாலே
முமுஷு ஸா பேஷனாய் ஸ்ரீ மத் மதுரையிலே வந்து திரு அவதரித்து
அத்ய ஆச்சார்யா வஹமான குண சேஷ்டிதங்களை பிரகாசிப்பித்தவனே

என் ஆனாய்
ஆனை தன் பலத்தை அறியாதே
பாகனுக்கு வச வர்த்தியாமாம் போலே
என் மங்களா ஸாஸன ஸூத்ர வ ஸீ க்ருதனானவனே

நீ என்னைக் காக்க வேண்டும்
ரஷ்ய ரக்ஷக பாவத்தை ப்ரேமத்தால் நான் மாறாடி பிரதிபத்தி பண்ணிலும்
நீயே ரக்ஷகனாக வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அந்த கிருஷ்ண அவதாரத்தில் உதவாதாருக்கும்
உதவுகைக்கு அன்றோ நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

———–

அந்த கிருஷ்ண விருத்தாந்தம் பின்னாட்டி
(மதுரைப் பிறந்த மா மாயன் கீழே )
அந்த கிருஷ்ண குணங்களைப் பெரிய பெருமாள் பக்கலிலே மீளவும் அனுசந்திக்கிறார் –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –

பதவுரை

குன்று–கோவர்த்தந மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரஷித்தருளின
ஆயா–ஆயனே (கோபாலானே!)
கோ நிரை–மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே–மேய்த்தருளினவனே!
எம்மானே–எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அன்று முதல்–(உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி
இன்று அறுதி ஆக–இன்றளவாக
ஆகி–ஸர்வ காரண பூதனான உன்னுடைய
அம் சோதி–விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை
மறந்து அறியேன்–(அடியேன்) மறந்ததில்லை
திவ்ய மங்கள விக்ரஹ அழகைக் காட்டியே ஆழ்வார்களை விஷயீ கரித்தான் அன்றோ –
நன்றும் கொடிய–மிக்க பொறுமை பொருந்திய
நமன் தமர்கள்–யம கிங்காரர்கள்
என்னை–என்னை
நலிந்து–ஹிம்ஸித்து
வலிந்து–பலாத்கரித்து
பற்றும் போது அன்று–பிடிக்கும் அத் தருணத்தில்
அங்கு–அவ் விடத்தில்
நீ என்னைக் காக்க வேண்டும்-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா
இந்திரனால் பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை ரக்ஷகமாகச் சொன்ன
மலையை எடுத்துக் கவித்து ரஷித்த கிருஷ்ணனே

கோநிரை மேய்த்தவனே எம்மானே
தன்னுடைய ரக்ஷணத்து விலக்காமையை யுடைய பசுக்களை ரக்ஷித்து
அத்தாலே
உன்னுடைய ஸ்வாமித்வத்தை பிரகாசிப்பித்தவனே

அன்று முதல் இன்று அறுதியா
நீ மயர்வற மதி நலம் அருளின அன்று முதல் இன்று அளவாக என்னுதல்
கருவரங்கத்து உட் கிடந்து கை தொழுத அன்று முதல் என்னுதல்
ஞானம் பிறந்த பின்பு கீழும் ஒரு போகியாய்த் தோற்றுகையாலே
மயர்வற மதி நலம் அருளின அன்று முதல் என்னுதல்

ஆதியம் சோதி மறந்து அறியேன்
காரணமாய் வி லக்ஷணமான விக்ரஹம் என்னுதல்
காரணத்வ ரக்ஷகத்வங்கள் என்னுதல்
இவற்றில் எனக்கு விஸ்ம்ருதி இல்லை என்கை –

நன்றும் கொடிய நமன் தமர்கள்
நல்ல நெருப்பு என்னுமா போலே
நன்றும் கொடிய-என்று
க்ரூரத்தின் மிகுதி சொல்லுகிறது

நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
உனக்குப் பரிந்து அல்லது நிற்க மாட்டாத என்னை
அவர்கள் பலத்தாலே பாதித்துப் பிடிக்கும் போது

அன்று அங்கு நீ
அக்காலத்திலேயே
அவ்விடத்திலேயே
ரக்ஷகனான நீ
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் (திருமங்கை )-என்ற நீ

என்னை காக்க வேண்டும்
மங்களா ஸாஸனம் விச்சேதம் வரும் என்று அஞ்சுகிற என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவிணைப் பள்ளியானே
மங்களா சாசன விரோதியைப் போக்கி
மங்களா ஸாஸனம் பண்ணுவித்துக் கொள்ளுகைக்காகக் கோயிலிலே
திருவனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

இது எல்லாம்
சரம சதுர்த்தியிலே
திரு மந்திரத்திலே காணலாம் இறே –

(நாராயணாயா -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி
அதுக்கு உண்டான விரோதிகளைப் போக்கியது நமஸ்சில் சொல்லிற்றே
கீழே லுப்த சதுர்த்தி தாத்தார்த்த சதுர்த்தி )

———–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 -10-

பதவுரை

மாயவனை–ஆச்சரிய சக்தி யுடையவனும்
மதுசூதனனை–மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை–பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள்–வைதிகர்கள்
ஏத்தும்–துதிக்கப்படுமவனும்
ஆயர்கள் ஏற்றினை–இடையர்களுக்குத் தலைவனும்-ஏறு மேனாணிப்பு
அச்சுதனை–(அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும்
அரங்கத்து–கோயிலில்
அரவு அணை–சேஷ சயநத்தில்
பள்ளியானை–கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி
வேயர்–தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும்
புகழ்–புகழப் பட்டவரும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மன்- நிர்வாஹருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையான
பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
தூய மனத்தனர் ஆகி–நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு
ப்ராப்யாந்தர ப்ராபகாந்த்ர விருப்பு இல்லாத தூய்மை
வல்லார் தாம்–ஓத வல்லார்கள்
தூய மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு
ஆளர்–அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.)–

மாயவனை
ஆச்சர்ய சக்தி யுக்தனை

மதுசூதனனை
மங்களா ஸாஸன விரோதிகளை
மதுவாகிற அஸூரனை நிரஸித்தால் போலே நிரஸிக்குமவனை

மாதவனை
அதுக்க்கடியாக ஸ்ரீ யபதியானவனை

மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை
வேத தாத்பர்யம் கைப்பட்டு இருக்குமவர்களுடைய மங்களா ஸாஸனத்துக்கு
விஷய பூதனான கிருஷ்ணனை
கோப குலத்தின் நடுவே மேனாணித்து இருக்குமவனை-

அச்சுதனை
இப்படி மங்களா ஸாஸன பரரை ஒரு நாளும் நழுவ விடாதவனை

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
மங்களா ஸாஸனத்துக்கு விஷய பூதனாய்க் கொண்டு
கோயிலிலே தன் ஸுகுமார்யத்துக்குத் தகுதியாக
திரு வனந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனை

வேயர் புகழ்
வேயர்–குடிப் பெயர்
இந்த கோத்ரஜர் எல்லாரும் தங்கள் வம்சத்தில் இவர் வந்து அவதரிக்கப் பெறுகையாலே
க்ருதராத்ரயாய் புகழா நிற்பர்களாய்த்து –

விட்டு சித்தன் வில்லி புத்தூர் மன்
திருமாளிகைக்கு நிர்வாஹகராய்
பெரிய பெருமாளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து மங்களா சாசனம் பண்ணும் பெரியாழ்வார்

சொன்ன மாலை பத்தும்
மங்களா ஸாஸன விரோதி நிவ்ருத்தியை பிரார்த்தித்து அருளிச் செய்த
வாஸிகமான திரு மாலையை
அநந்ய ப்ரயோஜனராய்
அநந்ய ஸாதநராய்
மங்களா ஸாஸன பரராய்
அப்யஸிக்க வல்லார்

தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே
நிர்த்துஷ்டமான நீல மணி போலே இருக்கிற திருமேனியை யுடைய பெரிய பெருமாளுக்கு
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
மங்களா ஸாஸன ரூப கைங்கர்யங்களைப் பண்ணப் பெறுவர்கள் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-9–மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-

August 4, 2021

கீழில் திருமொழியில்
திருவாளன் திருப்பதி -என்றும்
உருவுருவே கொடுத்தான் -என்றும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து -என்றும்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் கிடந்தான் -என்றும்
கரிக்கட்டையான மருமகன் சந்ததிக்கும்
அதுக்கு யோக்யரான மைத்துனன்மார்க்கும் ப்ராணன்களைக் கொடுப்பதிலும்

ஸங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தில் நடக்கிற
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார மோக்ஷ பிரதத்வ அந்தர் யாமித்வந்தங்களிலும்

ஒருவனை ஆத்ம குணம் பிறப்பிக்கை அரிது என்னும் இடத்தை
இத் திரு மொழியாலே அருளிச் செய்கிறார் –

————

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

பதவுரை

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் -பரதாழ்வானுக்கு திருவடி நிலைகளை மீண்டு எழுந்து அருள
மிகவும் நம்புவதற்காக அடையாளமாக கொடுத்து அருளி
வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி -ராவணாதிகளை நிரசித்து விபீஷணனுக்கு அரசை அருளி
வந்து உலகாண்ட திருமால் கோயில்-ஸ்ரீ யபதி -ரத்ன மயமான பீடம்
உருவுடைய -அழகை யுடைய
மலர் நீலம்-நீல மலர் -கரு நெய்தல் மலர்
திருவடி தன் திரு உருவமும் -பெரிய திருமாலின் திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று- -இரண்டையும் பிரகாசித்து-மைய கண்ணாள்
மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே -காற்று அசைக்க
ஒன்பது ராமர் சந்நிதிகள் உண்டே
நம்பெருமாளே ராமர் தானே

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்
பரதாழ்வான் -ப்ராதுஸ் சிஷ்யஸ்ய தாஸஸ்ய -என்று
தனக்கும் அவருக்கும் உண்டான சம்பந்த விசேஷங்களைச் சொல்லிக் கொண்டு செல்லச் செய்தேயும்
இவர் தம்பி என்கிறாரே பாக வாசி அறிந்தவர் ஆகையாலே

இவள் மீள வேணும் என்று ஸ்ரீ பாதத்தில் விழுந்து நிர்பந்தித்தவாறே

நாம் மீண்டால் உமக்கு பிரயோஜனம் என் என்ன

தேவரீர் திரு அபிஷேகம் செய்து ஸ்வதந்திரராகவும் நான் பரதந்த்ரனாகவும் அபேக்ஷை என்ன –
ஐயர் உமக்கு அன்றோ ராஜ்ஜியம் தந்து போனார் என்ன

ராஜ்ய ஸ்வதந்த்ரயம் தேவரீரது அன்றோ என்ன

வீர போக்யை யன்றோ வஸூந்தரை -அதுக்கு ராஜ குல ஜாதத்வம் அன்றோ வேண்டுவது என்ன

என்னை இங்கனே அழைக்கிறது என்-ஐயர் காலம் என்னை தம்பி தம்பி என்று அழைத்து
நான் அபேக்ஷித்ததும் எனக்கு வேண்டுவதும் செய்து அன்றோ போந்தது
இன்று தம்பி அல்லேனோ -பழைய சம்பந்தம் -ரோதனம் -போய்த்தோ என்ன

அது என் -தம்பியாகில் தமயன் சொன்னது செய்யும் என்ன

நான் கூற்றுக்கு ஸ்வதந்திரனோ -சிஷ்யன் என்ன

ஆனால் ஆச்சார்யன் சொன்னத்தைச் செய்யும் என்ன

அது தனக்கு கிரய விக்ரய அர்ஹனோ -தாஸன் அன்றோ என்ன

ஆனால் ஸ்வாமி சொன்னதைச் செய்யும் என்ன

இந் நிர்பந்தங்களால் ஸ்வாதந்தர்யம் மிகும் அத்தனை காணும் என்று நிருத்தரனாய்
செய்ய அடுப்பது என் என்ன

இவனுக்கு என் செய்வோம்
ந ச ஸீதா ந ச அஹம்
ஸீதாம் உவாஸ –என்றானாய் இட்டு ஒன்றைச் செய்கிறோம் அன்றே என்று திரு உள்ளம் பிசகி
வாரீர் நீர் தாம் பாரதந்தர்யம் அபேக்ஷை என்றும்
செய்ய அடுப்பது என் என்றும் கேட்டீரே
நமக்காகவும் போய் அபிஷேகத்தைச் செய்யும் என்ன

அது திரு உள்ளமாகில் திருவடி நிலைகளாலே என்னை அபிஷேகம் செய்து அருளும் மீண்டு -என்று
தம்முடைய கிலேசத்தை முன்னிட்டு கிருபை செய்து அருள வேணும் என்ன

கிருபையால் செய்தேனாகில் உம்முடைய பிரார்த்தனை ஸ்வாதந்தர்யமாகும் காணும் என்ன

தேவரீருடைய ஸ்வாதந்தர்யத்தாலே அடியேனை இங்கே தானாகிலும் பரதந்த்ரனன் ஆக்கும் என்ன

அங்குப் போனாலும் அபேக்ஷை இதுவாகில் அத்தை இங்கேயே பெறும் என்று கொடுத்து அருளி
நாம் வந்த போது காணும் ஐயரும் ஆச்சியும் சொன்ன நாள் கழித்தால் வருமோ என்று இரும் என்ன

அது தன்னை விஸ்வசிக்கும் படி என் என்ன

இத்தை விஸ்வசியும் என்று திருவடி நிலைகளைக் கொடுத்து அருளி
தம்பியார் போகீர் -என்ற குணங்களிலே அறிவு பிறந்தார் நெஞ்சு உளுக்கி
அடி நிலை ஈந்தான் -என்றவர் தாமே
மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-என்கையாலே
இது நெடு வாசி தோன்றும் இறே

அல்ப த்ரவ்யத்துக்காக பஹு த்ரவ்யத்தைப் பணயம் வைப்பாரைப் போலே இறே
வான் பணையம் என்றது

இவர் தாம் அவர் பக்கலில் கொண்ட அல்ப த்ரவ்யம் தான் என் என்னில்
இப்போது உத்யோக பங்கம் பண்ணாமல் இசைந்து மீளும் அளவே இறே
விள்கை விள்ளாமை விரும்புகைக்கு பிரகாசம்
இரண்டும் இரண்டு தம்பிமார் பக்கலிலும் காணலாம் –

இவர் தமக்கு உத்யோகம் தான் என் என்னில்
வானோர் வாழ
தேவர்கள் தங்கள் அபிசந்தி பெரும்படியாக

செரு உடைய திசைக் கருமம் திருத்தி
தெற்கு நோக்கி அடி இட்ட போதே -பூசல் பூசல் -என்று எதிரே வந்த துர் வர்க்கம் எல்லாத்தையும்
தர்ம ரூபேண ராவண வத பர்யந்தமாக நிரஸித்து
நாட்டில் யுத்தம் செய்வார்க்கு எல்லாம் இவ் வியாபாம்ர அமாத்ருகையாம் படி இறே திருத்தின படி –

வந்து உலகாண்ட திருமால் கோயில்
ஸ்ரீ பரதாழ்வான் முதலானோர் கிலேசங்கள் எல்லாம் போம்படி
திரு அயோத்யையிலே மீண்டு எழுந்து அருளி
நாய்ச்சியாரோடே கூடித் திரு அபிஷேகம் செய்து
லோகத்தில் ஸங்கல்ப நிபந்தநமான பாத்ய பாதகங்களும்
விஸ்லேஷத்தில் வாட்டமும் தீர்த்து தேறி
ரமிக்கும் படி தர்ம ரூபேண தாமும் ஆசரித்து லோகத்தையும் நியாயத்திலே ரக்ஷித்து

பின்பு உள்ளார் இழவாத படி யாகவும்
ஸ்ரீ ரெங்கராஜர் நித்ய வாஸம் செய்கிற வூர் கோயில் –

திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
அவனுடைய விக்ரஹ வை லக்ஷண்யத்தையும்
அவளுடைய காருண்ய கடாக்ஷத்தையும்

உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே
உபமான த்வாரா நன்றான நீல மலரானது காட்டி
காற்று அசைக்கச் சலியாத ஒளியை யுடைத்தான திருவரங்கம்


அசையாதல்
நிஷேதமாதல்

இத்தால்
ஸ்ரீ மன் நாராயணன் என்கிற அர்த்த விசேஷத்தைக் காட்டுகிறது
திருமங்கை மலர் கண்-என்று நித்ய புருஷார்த்தத்தைக் காட்டுகிறது
திருவடி தன் திரு உரு-என்று திருவடிகளைக் காட்டுகிறது

உருவுடைய மலர் நீலம் -என்று
ஆத்ம குணத்தின் கீழே யான தேஹ குணத்தையும்
ஸுவ் மனஸ் யத்தையும் உடையராய் இவ் வர்த்த நிஷ்டராய் இருக்கும் ஆச்சார்யர்களைக் காட்டுகிறது

காற்றாட்டச் சலியா -என்கையாலே
ஸ்பர்ச இந்த்ரிய பிரதானமான விஷயங்கள் சலிப்பித்தாலும்
சலியாத தேஜஸ்ஸை யுடையராய் இறே அங்கு உள்ளார் இருப்பது

கீழே மன்றூடு தென்றல் உலா -என்ற இடத்தில்
திரு மதிளுக்குள் அன்றிக்கே புறம்பு இருப்பாரையும் தென்றல் நலியாது
அவர்களும் அநாதர மதிளுக்குள்ளே இருக்கையாலே –

——

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-

பதவுரை

தன்னடியார் திறத்தகத்து -தனக்கு அடிமைப்பட்டவர்கள் மேல்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்-லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -என்பவளும் கூட
குற்றம் சொல்பவள் அன்றே -மென்மை மிக்க புருஷகார பூதை –
என்னடியார் அது செய்யார் -செய்ய மாட்டார்கள்
அது என்று –பேர் சொல்லவும் கூசும்படியான குற்றங்கள்
பேதை பாலகன் அது ஆகும் -யவ்வனம் சொல்லக் கூசி -அதே போல்
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்–கவனக் குறைவால் செய்து இருந்தாலும் –நல்லத்தை நினைத்தே செய்து இருப்பார்
ரக்ஷிக்க நாம் உள்ளோம் என்று அறிந்த சேஷ பூதர் அன்றோ -பொறுக்க நாம் உள்ளோம் என்று
பிராமாதிகமாக செய்தாரேலும் நல்லதே செய்வார் ஆவார்
எனக்கு அது போக்யம் -உதாசீன யுக்திகளை சொல்லி அவளுக்கு பதில் -மறுதலித்து வாயைத் திறந்து சொல்லுவார்
நினைத்து இருப்பர் இல்லாமல் என்பர் -வெட்டிப் பேசுவது யாவரும் அறியும்படி
மன்னுடைய விபீடணர்க்காய் -கைங்கர்ய செல்வமுடைய விபீஷண ஆழ்வானுக்காக
மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த-கடாஷித்திக் கொண்டே இருந்து
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே-இந்தக் குணம் அறிந்தவர்கள் வேறே யாருக்கு ஆள் ஆவார் –

தன்னடியார் -இத்யாதி-
இப்பாட்டை -சென்னி யோங்கு பாசுரத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநித்த
பிரக்ரியைக்கு இணங்க இங்கும் ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யாநித்து அருளுகிறார்-

பிராட்டி சிதகுரைத்தாலும் –
குணத்தை தோஷமாக பிரமித்தாயோ -என்று இறே அவன் பாசுரம்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித பஷ பாத அதிசயம் சொல்லுகிறது
இருவரும் -இசலி -ஸ்பர்த்தித்து -ஆஸ்ரிதரை நோக்கும்படி சொல்லுகிறது –
என் அடியார் அது செய்யார் -என்பதிலும் -சிதகுரைக்கும் -என்கிறது இறே உத்தேச்யம்
கைக் கொள்ளுகைக்கு சொல்லும் வார்த்தை போல் அன்றிக்கே கை விடாமைக்கு சொல்லும் வார்த்தை

அடியார் -என்று ஸ்வா தந்த்ரய நிவர்த்தி
தன்னடியார் -என்று அந்ய சேஷ நிவர்த்தி

அடியார் என்பது சேஷியும் உபாயமும் உபேயமும் தானாக பற்றினவர்களை –

அடியார் -என்று நிரூபகம் இவர்களுக்கு -குல சரண கோத்ராதிகள் நிரூபகம் மற்றையார்க்கு
ஒவ்பாதிகமுமாய் அநித்யமுமாய் இருக்கும் அது –
நிருபாதிகமுமாய் நித்யமுமாய் இருக்கும் இது
பல சதுப் பேதிமார் -என்று நிரூபகம் அவர்களுக்கு
திரு நாரணன் தொண்டர் -என்று இறே இவர்களுக்கு நிரூபகம்

ஒரு மிதுனம் சேஷி ஆனால் –
தம் அடியார் என்ன வேண்டாவோ என்னில் –
தன் என்கிறதுக்கு உள்ளே தானும் அந்தர்பூதை ஆகையாலே
அவன் ஸ்வரூப ரூப குண விபூதி இத்தனையும் இவள் தோயல் வாசி இறே என்னுதல் –
அடியார் -என்பதுக்கு உள்ளே அடிமையில் அந்தர்பாவம் தனக்கும் உண்டாகையாலே என்னுதல் –

இத்தால்-நார கோடி கடிதை என்கை-
மித்ர பாவேன -என்றும் –
உகந்த தோழன் -என்றும் –
அவன் நினைவு ஆகையாலே அவன் முன்னே -நம் அடியார் -என்ன மாட்டாளே
தானும் -மித்ர மௌபிகம் -என்றாலே -அத்தாலே என்னுதல் –

அடியார் -என்ற பஹூ வசனம் –
ஊர் இரண்டிட்டவாறே அடியாரும் இரண்டிட்டதே
மேலாத் தேவர்களும் -நிலத் தேவரும் -என்று இந் நிலத் தேவர் விஷயமாக இறே சிதகுரைப்பது
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது
இருள் தெரிந்து நோக்கின அடியார் விஷயம் இறே இது –

திறத்தகத்து –
அவர் விஷயமாக

தாமரையாள் ஆகிலும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிலும்
அபி சப்தம் –
ஆஸ்ரித விச்லேஷம் பொறுக்க மாட்டாத மார்த்த்வ பரம்
தன்னடியார் -என்னும்படி காட்டிக் கொடுக்கையாலும் சொல்லக் கூடாது
வெந்நீரை குளிர் நீராக ஆக்கும் அத்தனை அல்லது தான் சுடக் கூடாது இறே –
அப்படியே இவள் சிதைகுரைக்கக் கூடுமோ –

தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வன் -என்று
தான் சத்தை பெற இறே அவள் அனுபவிப்பது
இப்படி சத்தை பெரும்படியான போகத்திலே -புருஷகாரமாம் போது தெளிவு உண்டாக வேணும்
அப்போது பிரணயித்வதுக்கு நமஸ்காரம் இறே

அனால் புருஷகாரமும் போகமும் சேரும்படி என் என்னில் –
இவளைப் போலே அவன் தானும் -பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்று
இவள் விஷயத்தில் பிரேமம் கனத்து இருக்கும்
இருவருக்கும் உண்டான ப்ரேமம் இவர்கள் பாசுரத்தில் தெரியும் இறே

ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும் ஒருதலை
இறையும் அகலகில்லேன் -என்னும் ஒரு தலை
அவன் விஸ்வரூபம் எல்லாம் கொண்டு இவளை அனுபவிக்க இழிந்தாலும்
தன் குண ரூப சேஷ்டிதங்களாலே குமிழ் நீருண்ணப் பண்ணும்

இவ் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக -உனக்கு என் செய்கேன் -என்று
ஓன்று கொடுத்து அல்லது தரிக்க மாட்டாத அளவிலே –
நாம் இவன் பக்கலிலே ஓன்று கொள்ளாத போது இவன் முடியும் -என்று பார்த்து
அவன் -உனக்கு வேண்டுவது என் -என்ற அளவிலே சேதனர் அபராதத்தை பொறுக்க வேணும் -என்ன
தன் ஸ்வா தந்த்ர்யத்தையும் -இவர்கள் அபராதத்தையும் —சாஸ்திரத்தையும் —மறந்து பொறுத்தேன் -என்ன-

இவன் பொறுத்தது நமக்காகவா -இவர்களுக்காகவா –நம் போகத்துக்காகவா -என்று
ஆராய்க்கைகாக சிதகுரைக்க தொடங்கினாள் ஆனால்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவன்
நீ சிதகுரைக்க கூடாதப் போலே அவர்கள் செய்யவும் கூடாது
சாஷி உண்டு என்னிலும் அவர்கள் செய்யக் கூடாது- உன் பிரமமாம் இத்தனை

என் அடியார் அது செய்யார் –
ஸ்வதந்தரும் அந்ய சேஷ பூதரும் செய்யும் அத்தை என் அடியார்களும் செய்வார்களோ
செய்தார்கள் என்று நிர்பந்த்தாய் ஆகில் –
அவர்கள் என் அடியார் ஆகிறார் -உன் அடியார் அன்றே- நீ செல்ல நில்லு

அது செய்யார்
ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் -பின்பு அவன் மன்றாடும்
அன்று இன்னாதான செய் சிசுபாலன் -என்றால் போலேயும்
இவள் சிதகுரைக்கும் -என்றால் போலேயும்
ஸ்ரீ ஈஸ்வரனும் -அது செய்யார் -என்று அதன் பேர் சொல்ல கூசின படி

செய்தாரேல் நன்று செய்தார் –
நாம் உண்டு -என்றும்
ஒரு பிரமாணம் உண்டு -என்றும் –
நாம் பொறுப்போம் -என்றும்
நினைத்து செய்தார்கள் ஆகில் அழகிதாக செய்தார்கள்
ஒரு தர்ம அதர்மமும் பர லோகமும் இல்லை என்று செய்தார்கள் அன்றே
ப்ராமாதிகதுக்கு நாம் உளோம் -என்று அன்றே செய்தது
அதாவது
மடல் எடுக்கையும் காமன் காலில் விழுகையும்
செய்யும் கிரிசைகள் இத்யாதி

என்பர்
நாம் நெஞ்சாலே பொறுத்து இவளுக்கு முகம் கொடுத்துக் கேட்கில்
இவள் இன்னமும் குறை சொல்லக் கூடும் -என்று வாய் திறந்து அருளி செய்வர் போலும் –
ஓம் காண் போ என்றால் போலே உதாசீன உக்தி

மன்னுடைய விபீடணருக்காய்
கீழ் அருளிச் செய்த அர்த்தத்தை மூதலிக்கிறார்-
ஐஸ்வர்யம் மாறாத ஸ்ரீ விபீஷணர்க்காக ஸ்ரீ பிராட்டியையும் விட்டுப் பற்ற
வேண்டும்படியான ஸ்ரீ மகாராஜரையும் விட்டு
விபீடணற்கு வேறாக நல்லானை -என்னும்படி இறே ஸ்ரீ விபீஷண பஷ பாதம்
ஆகையால் சேர்க்கைக்கு ஈடான பாசுரம் கேட்கும் இத்தனை ஒழிய பிரிப்பார் பாசுரம் கேளான் -என்கிறது

குற்றம் உண்டு என்ற ஸ்ரீ மகா ராஜரையும்
குற்றம் இல்லை -என்ற ஸ்ரீ திருவடி ஸ்ரீ இளைய பெருமாளையும்- பூர்வ பஷம் ஆக்கி –
குற்றம் உண்டு நான் கொள்ளக் கடவன் -என்றார் இறே ஸ்ரீ பெருமாள் –

சிதகுரைக்கும் -என்றது ஸ்ரீ மகாராஜர் கோடி
என் அடியார் அது செய்யார் -என்றது ஸ்ரீ திருவடி -ஸ்ரீ இளைய பெருமாள் கோடி
சிதகுரைக்கை -புருஷகார க்ர்த்யம்
அடியார் அது செய்யார் -என்றது சரணாகத க்ர்த்யம்
நன்று செய்தார் -என்றது சரண்ய க்ர்த்யம்

மதிள் இலங்கை திசை நோக்கி –
ஸ்ரீ விபீஷணனையும்
இலங்கையும்
மதிளையும்
அத் திக்கையும்–நோக்கி இறே கண் வளர்ந்து அருளுகிறது

மலர்க் கண் –
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி -நீண்டது இறே
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரை கண்டவாறே

என்னுடைய திருவரங்கர்க்கு
இச் செயலுக்கு தோற்று அடிமை புக்கு எழுதிக் கொடுக்கிறார்

மற்று ஒருவர்க்கு ஆளாவாரே
மற்று ஒன்றினை காணா -என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருத்தர்க்கு ஆளாவாரோ

ஆகையால் சிதகுரைத்தார் ஸ்ரீ ரெங்க நாயகியாரும்
நன்று செய்தார் -என்று மன்றாடினார் ஸ்ரீ பெரிய பெருமாளாயும்-இருந்தது இறே
அன்றே தந்தையும் தாயும் ஆவார் -ஸ்ரீ திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி உளார் தாமே இறே
ஆளாவாரே
ஆட்கொள்வான் அமருமூர் அணி அரங்கம் -என்று ஆட்கொள்வார் ஸ்ரீ பெரிய பெருமாள் இறே
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா –

(சேஷத்வம் அதிசயகரத்வம்
பாரதந்தர்யம் -அவனுக்கு அடங்கி அவன் அதீனமாக இருப்பது
அதீனத்தில் இருக்காமல் அதிசயம் தேடலாம்
அரசனுக்கு பிரஜை -முதலாளிக்கு தொழிலாளி அதிசயம் சேர்க்க வேண்டாமே
அடியார் -ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
தன்னடியார் -அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி
அடியார் சொல் சேஷத்வம் தானே சொல்லும் -பாரதந்தர்யம் குறிக்காதே என்னில்
பாரதந்தர்யம் புரிந்தால் தான் சேஷத்வம் விளங்கும்
இது பிராப்த விஷயத்தில்-லௌகிக விஷயம் போல் அல்லவே )

தன்னடியார் –இத்யாதி
பெரிய பெருமாளும் ஸ்ரீ ரெங்க நாயகியாருமாக இசலி
ஆஸ்ரிதரை ரக்ஷிக்கிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

தன்னடியார் –இத்யாதி
அடியார் என்றது
கர்ம பல பிரதான ஸ்வத் வத்தால் வந்த ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தியையும்
(கர்ம பலத்துக்காகக் கொடுக்கப் பட்ட சரீரம் அடியாகவே ஆத்மா செயல் பட வேண்டுமே
இத்தாலேயே ஸ்வா தந்தர்யம் போகுமே )
அகரணே ப்ரத்யவாய பரிஹார தர்மத்தால் வந்த ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தியையும் உடையவர்களை –
(செய்யாமல் விட்டால் குற்றம் வருமே என்று பண்ணும் கர்மங்கள் -எனவே ஸ்வ தந்தர்யமாக செய்ய வில்லையே )

ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பாரதந்தர்யம் அன்றோ -சேஷத்வம் ஆமோ என்னில்
அது (ஸ்வ ஸ்வா தந்தர்ய) நிவ்ருத்தம் ஆனால் அன்றோ அது (சேஷத்வம் )தான் தோன்றுவது
தோன்றுகையாலே அடியார் என்கிறார்

(சேஷ கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
சேஷி கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
உபய கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
இதர கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
நான்கு வகை சேஷத்வம்
முன்பி வந்து நிற்ப -என் இச்சை -முகப்பே கூவி பணி கொள்வது அவன் இச்சை
அருளப்பாடு தான் முகப்பே கூவி பணி கொள்வது
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது சேஷி கதம்)

இனி தன்னடியார் -என்று
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லுகிறது
அந்ய சேஷத்வத்துக்கு உதயம் எங்கே என்னில்

கீழ் (லுப்த-தாதர்த்த )சதுர்த்தியில் கழிந்தது காம நாதிகாரத்தால் வந்த அந்ய சேஷத்வமும்
காம்ய விதியால் (பக்தி -சாதனாந்தரம் )வந்த ஸ்வ ஸ்வாதந்தர்யமும் இறே மிகவும் கழிந்து தோன்றுவது

(பரமாத்வாவுக்கு ஜீவன் அடிமை சொல்லி மற்றவருக்கு அடிமை அல்ல -அந்ய சேஷத்வம் கழிந்ததே
அவனையே உபாயமாகக் கொண்டதால் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் கழிந்ததே
ஈஸ்வர ப்ரீதி -அதிருஷ்ட -பல சாதனம் -)

அந்த அந்ய சேஷத்வம் கழிவதும் வர்ணாஸ்ரம தர்மத்தில் நிலை நின்றவர்களுக்கே இறே உள்ளது
(பகவத் ஆஜ்ஜா -இருப்பதால் செய்து -பலம் எதிர்பார்க்காமல் கைங்கர்ய ரூபமாக செய்ய வேண்டுமே )

இவர்களுக்கு (ரிஷிகளுக்கு ) ஸ்வ ஸ்வாதந்தர்ய கர்ப்பம் உண்டாகையாலே
தேஹ உபாதியும் கர்ம உபாதியும் வைதம் யாகையாலே கழியாது –

இப் பத விவரணத்திலே (நமஸ் தான் விவரணம் ) போகிற அதிகாரிக்கு இது (காம்ய விதி )தானும் அந்ய சேஷத்வமாய்
உகாரத்திலே ஸ்த்தான பிராமண பிரதானமான அவதாரணத்தாலே கழியக் கடவது
(பரமாத்வுக்கே சேஷ பூதன் -உகாரம் ஏவ அர்த்தம் )

இவ் வகார ஸப்த வாஸ்யனுடைய சேஷித்வம் இளைப்பாறுகிற அவதாரணை –
(உகாரம் -எல்லாருக்கும் அவன் ஒருவனே சேஷி )
அபர சேஷித்வத்தையும் அதிக சேஷித்வ சங்கையையும் அறுக்கிறது

சர்வாதிகனுக்கு சேஷம் என்ற போதே அர்த்த பலத்தாலே கழிந்தது
(உகாரம் இல்லா விட்டாலும் அர்த்த பலத்தால் கிட்டும்
அனைவரைக் காட்டிலிலும் உயர்ந்தவனுக்கு சேஷம் என்றதும்
வேறே ஒருவருக்கு சேஷம் அல்ல என்று தேறும்)

உகாரம் லஷ்மீ வாசகம் என்றாலும் நிரூபக நிரூப்யங்கள் மறி படாது (மாறி விடாது )
(அகாரம் அவன் உகாரம் பிராட்டி மகாரம் -ஓங்காரத்தால் -மிதுனத்துக்கு சேஷ பூதன்
ஜீவனுக்கு சேஷத்வம் -நிரூபகம் மாறாதே
இருவருக்கும் நிரூப்யம் -அதுவும் மாறாதே )

பட்டர் பிரிய அருளிச் செய்தார் என் என்னில்
அவன் தன்னைப் போலே இவளும் ஆச்சார்ய பதத்தை ஆசைப்பட்டாள் இறே லஷ்மி தந்த்ராதிகளிலே
அத்தாலே அது சேரும்

இது தன்னை ப்ரமேய சாரத்தில் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
அவ் வானவர்க்கு- என்று விளங்க அருளிச் செய்தார் இறே

(அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –பிரமேய சாரம்-1-)

(இனி மூன்றாவதாக உகாரம் அசித்தை சொல்லும் )
இது தான் அசித் வாசகமுமாம்
ஸ்தான பிராமண ஸித்த மாகையாலே
இவை எல்லாம் இவ்வுகாரத்திலே உண்டானாலும்
இவை எல்லாத்தாலும்
இவ் வந்ய சேஷத்வ நிவ்ருத்தியே பிரதானம்
(இது தானே -தன்னடியார்- என்கிறது )

(அகாரத்துக்கு சேஷமாகவே ஜீவர்கள்
அகாரத்துக்கே சேஷ பூதன் –
இரண்டுமே வேண்டுமே )

சர்வாதிகனுக்கு சேஷம் என்றதும்
விசேஷ்ய பர்யந்த அபிதானத்தால் வந்த ஆதிக்யமும்
தேவத அந்த்ரயாமித்வத்தால் வந்த ஆதிக்யமும்
பிராப்தம் அல்லாத ஸர்வ ஸப்தத்திலே (ஜீவர்கள் சப்தம் இல்லா விட்டாலும் ) தோற்றுகையாலும்
முமுஷுக்களுக்கு அநு பாஸ்யங்கள் ஆகையாலும் -அவதாரணையோடே சேராது
ஆகையால் அந்ய சேஷத்வ நிவ்ருத்தியே பிரதானம்

ஓவ்பாதிகமான விஹித தர்மத்தில் நிற்கிறவன்
(உபாதி தேகம் -பிறப்புக்குத் தக்க வர்ணாஸ்ரமம் வ்யாஸ பராசராதிகள் சாஸ்திரத்தில் நோக்கு )
அத்யந்த ஓவ்பாதிகமான காம்ய தர்மத்தில் நிற்கிறவர்களை
(அத்யந்த உபாதி தேகம் ஆசை இரண்டும் உள்ள அத்ரி போல்வார் -பிரஜாபதி ஆக ஆசை கொண்டவர் -போல்வார் )
ஆதரிக்கிறது ஒவ்பசாரிகம் (அப்ரதானம் )
அகரேண ப்ரத்யவாயம் இல்லை
(ஆகவே நம் பூர்வர்கள் இவர்களை ஆதரிக்க வில்லை )

அவர்கள் தான் ஸத்யாதி தபஸ்ஸூக்களைச் செய்யும் காலத்திலே இவர்கள் ஆதரிக்கும்படி கோலிச் செய்கையாலே
அவர்கள் புண்ய பல பூர்த்தி இவர்கள் ஆதரமாய் இருக்கும்
(ஸத்யாதி -சத்யம் ஆர்ஜவம் தானம் போல்
கள்வா -வரம் கேட்டு பெற்றான் ருத்ரன் -பேரனைப் பார்த்து தாத்தா கேட்பதோ
ஆதரிக்க பிரார்தித்ததால் பெற்ற பெருமை போல் )
வசிஷ்ட வாக்காலே ப்ரஹ்ம ரிஷி என்ன வேண்டிற்று இறே
(இதே போல் முமுஷுக்கள் ஆதரித்தால் தான் இவர்களுக்கு இதில் பூர்த்தி வரும் )

அகரேண ப்ரத்யவாய தர்மங்களிலே
ஓரோ ப்ரதேசங்களிலே
அர்த்த க்ஷேத்ர பஸ்வாதிகளைப் பலமாக விதித்ததும்
ப்ரரோசகமாம் இத்தனை
(இவை பலத்துக்கு சாதனம் அல்ல -ஆஜ்ஜா கைங்கர்யம் -தூண்டிச் செய்ய வைக்க சொன்னவை
பகவத் ஆஜ்ஜா பகவத் கைங்கர்ய ரூபமாக தானே செய்கிறோம் )

இவை எல்லாம் கண்டு நீக்கினால் இறே
அந்ய சேஷத்வம் அற்றதாவது

சேஷியும்
உபாயமும்
உபேயமும்
(மூன்றுமே )
தானாகப் பற்றினவர்களுக்கு
மந் -என்கிற பதத்தில்
தன்னடியார் என்று நிரூபகம்

(மன்னுடைய விபீஷணர்க்காக -என்று கொண்டால் இது பொருந்தும்
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் -செல்வம் உடைய
மந்-மன்-என்று இருக்க வேண்டும் )

———–

கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9 3-

பதவுரை

கருளுடைய பொழில் -பார்த்தவர் மதி மயங்கப் பண்ணும் சோலைகள்
மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்-விரோதி நிராசனம் -பிளம்பர் நம்பி மூத்த பிரான்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்-நிரசித்து -அறிவுடையார் ஸ்தோத்ரம் பண்ணும் ஒலியைக் கேட்டான்
இருளகற்றும் -அந்தகாரம் போக்கு
எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து -அர்ச்சிராதி கதி -ஆதித்ய மண்டலம் வழியாக
ஏணி வாங்கி-உபாய பாவம் நிவர்ப்பித்து
அருள் கொடுத்திட்டு -மறுபடியும் மடீலாமைக்கும் கைங்கர்யம் வர்த்திப்பிக்கவும் அருளுபவன்
அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே –

கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும்
இருண்ட தழையை யுடைத்தான மருதும்
அதி கோபத்தை யுடைத்தான குவலயா பீடமும்
கொடுமைக்கு விசேஷணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடி கொடியனான பிரலம்பாஸூரனும்

கடிய மாவும்
ஓர் உயிராய் இருக்கிறவனை முடிக்க வந்த குதிரையும்

உருளுடைய சகடரையும் மல்லரையும்
தன்னையே சொல்ல அமையும்

உடைய விட்டோசை கேட்டான்
இவர்கள் எல்லாரையும் நிரசிக்கும் படியான நல் விரகை இட்டு நிரஸித்து
ஜகத்தை ரக்ஷித்து
விரோதி நிரசன சீலன் என்று
சாதுக்கள் ஸ்தோத்ரம் செய்கிற ப்ரஸித்தியைக் கேட்டான்

ஒரு சொல்லாலே உடைய விட்டான் என்ற
அநாயாஸ்த்வம் பாரீர் –

இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
திமிர ஹரமான கிரணங்களை வீசும் சக்தியை யுடைய ஆதித்யன் பிரபா மண்டலத்தூடே
ஆச்சார்ய பர தந்த்ரருமாய்
முமுஷுக்களுமான ஆர்த்த ப்ரபன்னரை
ஆச்சார்ய உபதேச கம்ய மார்க்கம் வழியே
ஏற்றி வைத்து ஏணி -என்கையாலே
அன்னதோர் இல்லியூனூடு போய் (பெரிய திருமடல் )-என்று
நிஷேதித்த ஸ்வயம் சக்தியையும் நிஷேதிக்கிறது

அன்றிக்கே
உபதேச நிரபேஷ ஞானம் உடையார்
இவர் அபிமானத்தாலே இரண்டு அருகும் சில விளக்கு ஏற்றினால் போலே
கதிரவர் அவரவர் கை நிறை காட்டினார் (திருவாய்-10-9- )-என்கிறபடியே
துவாதச ஆதித்யர்களும் தாழ்ந்து அங்கீ கரிக்கப் போன வழி
இவர் உபதேச ஸா பேஷராய்
இவர் அபிமானத்தில் ஒதுங்கி
அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் உடையவர்களுக்கும் கொடுக்கும் என்னவுமாம் –

வைத்து
சூழ்ந்து இருந்து ஏத்த வைத்து என்றும்
அடியாரோடே இருக்க வைத்து -என்றாலும்
ப்ராப்ய கௌரவத்தாலே உபகார ஸ்ம்ருதி தலையெடுத்து
இத்தை உபகரித்தவனைக் காண வேணும் என்னும் ஸ்ரத்தை உண்டாய்த்தாகில்
இப் பிராப்யத்துக்கு பூர்வ பாவி தானாகையாலே தன்னைக் காட்டுதல்
அவரோஹத்தில் பரம குருவைக் காட்டுதல்
சரம உபகாரகனான இவன் தன்னை (ஆச்சார்யனை) அங்கே அழைத்துக் காட்டுதல் செய்தால் இறே
நித்ய ஸங்கல்பத்தால் வந்த அபுநா வ்ருத்தி தான் கூடுவது

இவன் ஏறின ஏணியை அங்கே வாங்கி காட்டியாகிலும் இவனை ரமிப்பிக்க வேணும் இறே
(கீழே ஏணி என்று தனது உபாய பாவம் -இங்கு ஏணியான இவனுடைய ஆச்சார்யனை என்றவாறு )
பிணை கொடுக்கிலும் போத ஒட்டாரே -என்னா நின்றது இறே
அத்ர பரத்ர சாபி

அருள் கொடுத்திட்டு
அங்கே ஏறுகைக்கும்
இங்கே மீளாமைக்குமாய் இறே
அவன் கொடுத்த அருள் தான் இருப்பது

இட்டு
தன் முகோல்லாஸத்தாலே ஜீவனம் இட்டு

அடியவரை ஆள் கொள்வான்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே
அடிமைக்கு இசைவதே என்ற ஒன்றையுமே நினைத்து இறே
கால தத்வம் உள்ளதனையும் அடிமை கொள்வதுவும்
(இசைவித்து உன் தாளிணைக் கீழ் வைக்கும் அம்மான் அன்றோ
இசைவது மட்டுமே நம் கர்தவ்யம் )

அமருமூர் அணி அரங்கமே
இவ் வடிமைக்கு இசைவாரை இன்னமும் கிடைக்குமோ என்று இறே
இங்கே அமர்ந்தமை தோன்றக் கண் வளர்ந்து அருளுகிறது

உபதேச கம்ய ஞான அனுஷ்டானங்களை யுடைய நம் பூர்வாச்சார்யர்கள் இறே
அவ் வூருக்கு ஆபரணம் ஆவார் –

———-

ஸ்ரீ மத் த்வாரகையிலே பெண் பிறந்தாருக்கு முகம் கொடுத்த பிரகாரத்தை அனுசந்திக்கிறார்

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

பதவுரை

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய படைவீட்டில் -கோப கன்னிகள் -கைங்கர்யம் செய்ய
துவரை என்னும் அதில் –
நாயகராகி -ஸ்வாமியாக
வீற்று இருந்த மணவாளர் -பெருமை தோற்ற வீற்று இருந்த
மன்னு கோயில்-தீர்த்த பிரசாதம் பண்ணி போகாமல் நித்யவாஸம்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்-திரு நாபி கமலம் போல் பாவித்து
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் -கர்வத்துடன் இருந்து
புனல் அரங்கமே -நீர் வளப்பம் மிக்க திருவரங்கம் –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய
நரகாசூரன் சேர்த்த ராஜ கன்யைகளைப் பாணி கிரஹணம் செய்து
அவர்கள் இஷ்ட அநு வர்த்தகம் செய்ய

துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
ஸ்ரீ மத் துவாரகை என்னும் பிரசித்தியை யுடைய
அதிலே இவர்கள் எல்லாரும் தனித்தனியே
என்னை ஒழிய அறியான் என்னை ஒழிய அறியான் -என்னும்படி வேறுபாடு தோன்ற
அவர்கள் இஷ்ட அனுவர்த்தனம் செய்து மணவாளராய் இருந்த
அழகிய மணவாள பெருமாள் நித்ய வாஸம் செய்கிற கோயில் –

புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
அப்போது அலர்ந்த செவ்வித் பொற்றாமரை
ஜகத் காரண வஸ்துவினுடைய திரு வயிற்றில் பொற்றாமரைப் பூப் போலே

பொது நாயகம் பாவித்து
தன்னை சர்வ சேஷியாக நினைத்து –

இறுமாந்து
கர்வித்து

பொன் சாய்க்கும் புனல் அரங்கமே
அதன் பொன்னிறத்தைத் தன நிறத்தாலே தள்ளும்படியான ஜல ஸம்ருத்தி மாறாத
திருவரங்கமே மணவாளர் மன்னு கோயில்

இத்தால்
பகவத் ஸுவ் மனஸ்யத்திலும்
ததீய ஸுவ் மனஸ்யத்துக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது

பதினாறாம் ஆயிரவர் தேவிமார்–பொது நாயகம் பாவித்து இறுமாந்து–பணி செய்ய-என்று
கீழே அந்வயிக்கவுமாம்

————-

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –

பதவுரை

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்  அரு வரைகளாய்-ஐந்துக்கள் -கங்கை –
அகாதமாய் கங்கை ஒப்புக்களிடமான சமுத்திரம்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்-இங்கும் ஐந்து விஷயங்கள் –
தக்ஷிணை முகமாக பலம் அருளும் அசாதாரண விக்ரஹ விசிஷ்டனான தானும்
சேமமுடை நாரதனார்   -ப்ரஹ்ம பாவனை நிஷ்டை யாகிய ரக்ஷை யுடைய நாரதர்
சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்-வணங்கப்பட்ட வாசஸ்தானம்
பூ மருவிப் புள்ளினங்கள் -ஹம்ஸங்கள் நீர்ப்பூவில் பொருந்தி இருந்து
புள்ளரையன் புகழ் குழறும் -தங்கள் ஜாதிக்கு ராஜாவான கீர்த்தியை அனஷர ரஸமாக பேசும்
புனல் அரங்கமே–நீர் வளம் மிக்க

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்
தக்கணையாய் தானும் ஆனான் சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்

ஸர்வஞ்ஞனான ஸ்ரீ நாரதன்
ப்ரஹ்ம ஈஸா நாதிகள் முதலானோரை தத்வ நிர்ணய ஸா பேஷனாய் அனுவர்த்தித்துக் கேட்க்கும் அளவில்

பெரியனாய் தனிகனாய் இருப்பான் ஒருவனே தத்துவமாக வேணும் என்ன

இந்த ருசியும் கங்கா ஸ்நானம் ஸூத்தனாய் நமக்கு இது விளங்கும் படி என் என்று நிற்கும் அளவில்

கங்கைக்குள்ளே ஆகாஸ அவகாஸம் அறும் படி பெரியதோர் கூர்மம் வந்து தோன்ற

அத்தைக்கு கண்டு ஆச்சர்யப்பட்டு
ப்ருஹத்யோஸி தந்யோஸி -என்று நமஸ்கரிக்க

நீ இங்கன் சொல்லுகிறது என்
இவை எல்லாம் உள்ளது என்னைத் தரிக்கும் கங்கைக்கு என்ன
கங்கையும் தன்னுடைய பிரவாகத்தை ஸஹிக்கிற சமுத்ரத்தைக் காட்ட
ஸமுத்ரம் தன்னைத் தரிக்கிற பூமியைக் காட்ட
பூமியும் ஆதாரமான பர்வதங்களைக் காட்ட
அவையும் சிரேஷ்டமான ப்ரஹ்மாவைக் காட்ட
அவனும் தனக்கு இப்பத்தைக் கொடுத்த வேதத்தைக் காட்ட

வேதமும் யாகங்களைக் காட்ட
அந்த யாகமும் தக்ஷிணையைக் காட்ட
இவை எல்லாவற்றிலும் தான் பிரகாரியாய் நின்று அசாதாரண விக்ரஹ யுகதனுமானவன் இப்படி
உபரி உபரி நாரதன் சென்று ஸ்தோத்ரம் பண்ணக்
கண் வளர்ந்து அருளின சேமமுடைய கோயில்

சேமம் -ரக்ஷை

——–

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 -6-

மைத்துனன்மார் காதலியை -அபிமதையான திரௌபதியை
மயிர் முடிப்பித்து அவர்களையே  மன்னராக்கி-பாண்டவர்களையே அரசர்களாக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட -அபிமன்யுவின் மனைவியான உத்தரை
பிள்ளை பரிக்ஷித்தை திருவடிகளால் ஸ்பரிசித்து
உயிர் ஆளன் உறையும் கோயில்–அனைவருக்கும் ஸ்வாமி
பத்தர்களும்
பகவர்களும் -சன்யாசிகளும்
பழ மொழி வாய்  முனிவர்களும் -அனாதையாய் உள்ள வேதம் –
வாய்  முனிவர்களும்-வாக்கில் உள்ள ரிஷிகளும்
பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி -அஞ்சலி பண்ணி சாஷ்டாங்க பிராணாமம் செய்து
திசை விளக்காய் நின்ற திருவரங்கமே

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து
மைத்துனன்மாருடைய காதலியான திரௌபதியை
அவள் ப்ரதிஜ்ஜையைத் தலைக்கட்டி
மயிர் முடிப்பித்து

அவர்களையே மன்னராக்கி
அந்தப் பாண்டவர்களையே அவளுக்காக ராஜ்ய ப்ராப்தராம் படி பண்ணி

உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட
உத்தரை யுடைய புத்ரனையும் பிராணன் உண்டாம்படி உஜ்ஜீவிப்பித்து

உயிர் ஆளன் உறையும் கோயில்
ஆத்மாக்களை ஆண்டு போருகிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற கோயில்

பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும்
நிருபாதிக ஸ்நேஹிதிகளும்
த்ரி தண்டிகளான ஸந்யாஸிகளும்
வேத பாராயண பரராய் மனன சீலரான ரிஷிகளும்

பரந்த நாடும்
பரப்பை யுடைத்தான தேசங்களில் உள்ளவர்களும்

சித்தர்களும்
ஆனந்த நிர்ப்பரரான நித்ய முக்தரும்

சித்தர் என்று
முமுஷுக்களை சொல்லவுமாம்
(நிலத் தேவர் விண்ணுள்ளாரிலும் சீரியர் அன்றோ )

தொழுது இறைஞ்சி
பக்தாஞ்சலி புடாஹ்ருஷ்டா நம இத்யே வாதிந -என்று
அஞ்சலி பூர்வகமாக ப்ரணாமத்தைப் பண்ண

திசை விளக்காய் நின்ற திருவரங்கமே
திக்குக்கள் தோறும் பிரகாசகமான கோயில் என்னுதல்
சேதனருக்கு ஞான பிரகாசகம் (ப்ரணவாகார விமானமன்றோ )என்னுதல்
இது வாய்த்து உயிராளன் உறையும் கோயில் –

—————————-

மஹா பலியைச் செருக்கு வாட்டினவன் நித்ய வாஸம் பண்ணுகிறவன் இடம் கோயில் என்கிறார் –

குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –

குறள் பிரமசாரியாய்  மாவலியை -வாமனனாக சென்று
குறும்பதக்கி -செருக்கை அடக்கி
அரசு வாங்கி-ராஜ்யத்தை நீர் ஏற்று வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து -க்ஷண காலத்தில் பாதாளத்தை இருப்பிடமாக கொடுத்து அருளி
வைகுந்தம் கலவிருக்கை போல் இவனுக்கு இது கொடுத்து அருளி
உகந்த வெம்மான் கோயில்-ஸ்வாமியானவன் நித்யவாஸம் செய்யும் கோயில்
எறிப்புடைய -மிக்க ஒளியை உடைய
மணி வரைமேல் -நீல பர்வதத்தின் மேலே
இள நாயிறு -பால ஸூர்யன்
எழுந்தால் போல் -உதித்தால் போல்
அரவணையின் வாய்ச் சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் -ஆதிசேஷன் –
விட்டு எறிக்கும் திருவரங்கமே-மிகவும் விளங்கா நிற்கும் கோயில்

குறள் பிரமசாரியாய்
நாட்டில் குறள் வளர்ந்து அருளினை இடம் என்னும்படி வாமன ப்ரஹ்மசாரியாய்

மாவலியை குறும்பதக்கி
இந்த்ரனதான ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட மஹா பலியுடைய குரும்பை அடக்கி

அரசு வாங்கி இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
அவன் தானே வரும்படி விரகிட்டு அல்ப காலத்திலே ராஜ்யத்தை வாங்கி
இந்த்ரனுக்குக் கொடுத்து அவனுக்குப் பாதாளத்தைச் சிறை இருப்பாகக் கொடுத்து விரோதியை ஜெயிக்கையாலே
உகந்த என் ஸ்வாமியானவன் நித்ய வாஸம் பண்ணுகிற கோயில்

கலவிருக்கை
கலந்த இருக்கை
மனஸ்ஸூக்குப் பொருந்தின இடம் என்றபடி –

எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல்
கிரணங்களை யுடைய ஸ்படிக ரத்ன கிரியின் மேலே தருணாதித்யன் உதித்துத் தோற்றுமா போலே
(நீல ரத்னம்-மா முனிகள் இங்கு ஸ்படிக ரத்னம் -ஆதிசேஷன் வெளுத்த ஒளி மிக்க திவ்ய ரூபம் என்றபடி 0

அரவணையின் வாய்ச் சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே
பெரிய பெருமாளுக்குப் படுக்கையான திரு அனந்தாழ்வானுடைய அழகிய பணா மண்டலங்களின் மேலே
அதி ப்ரகாஸமான மாணிக்ய ப்ரபை பிரகாஸியா நின்றுள்ள திருவரங்கமே எம்மான் கோயில்
சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி -என்னக் கடவது இறே–

———

ஆஸ்ரித விரோதி நிரசன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே -4- 9-8 –

உரம் பற்றி -தேவர்கள் இடம் பெற்ற வர பலமுடைய
இரணியனை
உகிர் நுதியால் -உகிரின் கூர்மையாலே
ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்-மாறுபாடு உருவும் படியாக முடி
சிரம் பற்றி -தலையைப்பிடித்து
முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான்-ஆரவாரம் செய்த
கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் – -செழிப்பு உடைத்தான தாமரைப்பூ
உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட—திருவிக்ரமானது திருவடிகளை போலவே கிளர வளர்ந்து பிரகாசிக்க
வரம் புற்ற -வரம்பு சேர்ந்து விளைந்து நிற்பதாய்
கதிர் செந்நெல் -கதிர்களை யுடைத்தான செந்நெல்
தாள் சாய்த்து தலை வணங்கும் –தாளை சாய்த்து அடியவர்கள் போல் வணங்கி
தண் அரங்கமே –குளிர்ந்த திருவரங்கத்தில் வளப்பம் சொன்னவாறு

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்-
ஸ்வர்ண மயமான தேஹத்தை யுடையவனாகையாலே ஹிரண்யன் என்ற பேரை யுடையவனை
அவன் பதையாதபடி மார்வை அமுக்கித் திரு உகுரின் அக்ரத்தாலே-
திரு உகிருக்கு இறையாகப் பெறுகையாலே அழகிதான மார்பிலே அவன் உளையும் படி யூன்றி

சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்-
அவன் தலை அபிஷேகத்தோடே நெரியும்படியாகப் பிடித்துக்
கண்கள் பிதுங்கிப் புறப்படும்படியாகவும்
வாய் விட்டுக் கூப்பிடும்படியாகவும்
கிழித்துப் பொகட்டவன் நித்ய வாஸம் பண்ணுகிறவன் கோயில்

தெழித்தல் -ஆர்ப்பரவம் செய்கை என்னவுமாம்

உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
நில வுரத்தாலே வயல்களில் யுண்டான தாமரைப்பூ வானது
திரு உலகு அளந்து அருளின போது எடுத்த திருவடிகள் போலே வளர்ந்து தோற்ற

வரமபுற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே
வரப்பிலே கதிர் கனத்தாலே சாய்ந்த செந் நெல் கதிரானது
அத் திருவடிகளுக்குத் தோற்று
நிர்மமரான வர்களுடைய ப்ரஹ்வீ பாவத்தைக் காட்டா நின்றுள்ள ஸ்ரமஹரமான கோயில் –

இத்தால்
கருந்தரையில் ஆச்சார்யனுடைய ஞான அனுஷ்டானங்களாலே (உரம் பெற்ற )
ஊர்த்தவ கதியைப் பிராபித்த
சிஷ்யனுடைய ஸுவ் மனஸ் யத்தை ( மலர்க் கமலம்–உயர்ந்து காட்ட )

அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களை
நிஷேதித்த திருவடிகளுக்குப் போலியாகக் கண்டு ( உலகு அளந்த சேவடி போல் )
அஹம் அன்ன பூதராய் இருக்கச் செய்தேயும்
அதிகார அனுகுண பிராமண வியவசாயம் கடவாமல் (வரம் புற்ற கதிர் செந்நெல் )
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர்களைக் காட்டுகிறது ( தாள் சாய்த்து தலை வணங்கும்)

(ஜடவத் பரதந்த்ரராய் இருக்கச் செய்தேயும்
சேதனராய் இருக்கும் இருப்பு பிரயோஜனம் –
அஹம் அன்னம் –அஹம் அந்நாத
படி போல் இருந்து பவள வாய் காண வேண்டுமே )

———-

எல்லா அவதாரங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்
இது அனைத்து அவதாரங்களும் விசேஷணம்
மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய்
கண்ணனாய் கல்கியாய்
முடிப்பான் -அசுர ராக்ஷஸாதிகளை முடிக்கவே அவதாரம் எடுத்து அருளியவன்
கோயில்-நித்ய வாசம் செய்யும் திவ்ய தேசம்
சேவலோடு பெடை அன்னம் -புருஷ ஹம்சம் பெண் அம்சத்துடன்
செங்கமல மலர் ஏறி யூசலாடி-
பூவணை மேல் துதைந்து-புஷ்ப்ப சயனத்தில் விளையாடி
எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே-நீர் வளப்பம் சொன்னவாறு

தேவுடைய
த்யோதமாந குணங்களை யுடையவனாய்
ஆபத் ரக்ஷகங்களுமான

மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய்
மத்ஸ்யாதி அநேக அவதாரங்களைப் பண்ணி

1-(மீனமாய் )பிரளயத்தை வற்றுவித்து
2-(யாமையாய்)ஜகத்தைத் தரித்து
3-(ஏனமாய்)பிரளயத்தின் நின்றும் ஜகத்தை எடுத்து
4-(அரியாய்)ஆஸ்ரிதனுடைய ஆபத்திலே தோற்றி
5-(குறளாய்)தன்னுடைமை பெறுகைக்கு இரப்பாளனாய்

மூவுருவில் ராமனாய்
6-ஷத்ரிய குலங்களை அறுத்துப் பொகட்டு
7-லங்கையை தஹித்து
8-கிருஷ்ணனுக்குப் பரிவனாய்

9-(கண்ணனாய்)பாண்டவ சாரதியாய்
10-(கல்கியாய் )ஜகத் ஸம்ஹாரத்தைப் பண்ணினவன்

முடிப்பான் கோயில்
அவ் வவதாரங்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இழக்க வேண்டாத படி
நித்ய வாஸம் பண்ணுகிற கோயில் –

சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
சிவந்த தாமரைப் பூவின் மேலே அன்னமானது பேடையோடே கூடிச் செருக்குக்குப் போக்கு வீடாகக்
காற்று அடித்து அசைந்த பூக்களின் மேலே இருந்து ஊசலாட

பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே
அந்தப் பூப் படுக்கைகளின் நின்றும் அவற்றினுடைய ஸஞ்சாரத்தாலே கிளம்பின
சிவந்த சுண்ணங்களிலே அவகாஹித்து
லீலா ரஸம் அனுபவிக்கும் படி ஜல ஸம்ருத்தியை யுடைய திருவரங்கம் –

இத்தால்
சார க்ராஹிகளாய் (அன்னம்)
ஸூத்த ஸ்வ பாவருமான
ஸிஷ்ய ஆச்சார்யர்கள்
ஸுவ் மனஸ்யத்தோடே
ராகோத்தரராய் வர்த்திக்கும் படியைக் காட்டுகிறது –

(சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும்
ராகம் -பக்தி வண்ணம் சிகப்பு )

———-

செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன் செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன் ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9- 10-

செரு ஆளும் புள் ஆளன் -தானே போர் செய்ய வல்ல பெரிய திருவடியை ஆளுமாவான் -நித்ய விபூதி ஆள்பவன்
மண் ஆளன் -லீலா விபூதி ஆளுபவன்
செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் -ஒப்பற்ற கொற்ற ஒள் வாள்
மறை யாளன் -வேதங்களை அலுமவன்
ஓடாத படை ஆளன் –
விழுக்கை ஆளன்-சீர்மையுடன் கூடிய திருக்கை -அஃலம் புரிந்த தடக்கை
இரவாளன் பகலாளன் என்னை ஆளன்
ஏழுலகப் பெரும் புரவாளன்-நல்ல ஷேத்ரங்களை ஆளுபவன்
திருவாளன் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கு
இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே -ஆனந்தமாக திருக்கண் வளருபவன் –

செரு ஆளும் புள் ஆளன்
விரோதி நிரசன ஸ்வ பாவனான பெரிய திருவடியைத் தன்
திரு உள்ளத்தின் படியே நடத்துமவன் –

மண் ஆளன்
பெரிய திருவடி தோள் இருப்பைக் காட்டி
பூமியை எழுதிக் கொண்டவன்

செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன்
யுத்த உன்முகமாய்
நாந்தகம் என்னும் திரு நாமத்தை யுடைத்தாய்
அத்விதீயமான வாளைத் திருக்கையில்
சரியாமல் பிடிக்க வல்லவன்

மறை யாளன்
வேதத்தினுடைய ஸ்வரூபாதிகளையும்
நித்யத்வத்தையும்
தன் புத்தி யதீனமாய் யுடையவனுமாய்
வேதைஸ் ச சர்வைர் அஹ மேவ வேத்ய -என்கிறபடியே
வேதைக சமதி கம்யன் யானவன் –

ஓடாத படை ஆளன்
வளையாத அல்லாத ஆயுதங்களை யுடையவன்
ஓடுதல் -கெடுதல்
அன்றிக்கே
நாட்டில் நடையாடாத ஆயுதம் என்னவுமாம்

விழுக்கை ஆளன்
சீர்மையை யுடையவன்
விழுக்கை -நீக்குதல் என்றுமாம்
அத்தால் -சத்ருக்களை ஓட்ட வல்லன் என்கை –

இரவாளன் பகலாளன்
அஹோ ராத்ர உப லஷிதமான காலத்துக்கு நிர்வாஹகனானவன்

என்னை ஆளன்
என்னை அநந்யார்ஹன் ஆக்கி ஆண்டு கொடு போருகிறவன்

ஏழுலகப் பெரும் புரவாளன்
உபய விபூதியையும்
அங்கு ஆதும் சோராமல் ஆளுமவன்

ஏழு உலகு
த்ரிவித சேதனரும்
சதுர்வித ப்ரக்ருதியையும்

புரவு
வரிசையும் தரங்கட்டும்

திருவாளன்
இவை எல்லாத்துக்கும் ஹேதுவாகப் பெரிய பிராட்டிக்கு வல்லபனானவன்
திருவாலே ஆளப்பட்டவன் என்னுதல்
திருவை ஆளுமவன் என்னுதல்
(நாராயணன் விஷ்ணு சித்தன் போல் இரண்டு சமாசங்களும் இதுக்கும் )

இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே
பெரிய பெருமாள் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் உடன் கூடி
ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பாங்கான தேசம் என்று உகந்து
கண் வளர்ந்து அருளுகிற இடம் கோயில் –

———-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11-

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான -பெரிய துதிக்கை யுடைய ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய துக்கம் நீக்கினவனாய்
கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற
திருவரந்தத் திருப்பதியின் மேல்-க்ஷேத்ரம் விஷயமாக
மெய்நாவன் -வாக் ஸூத்தி
மெய்யடியான் -காய ஸூ த்தி -மங்களா ஸாஸன பரர்
விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்-பேசும் சக்தர்
எஞ்ஞான்றும்   எம்பெருமான் இணை அடிக் கீழ் -ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகள்
இணை பிரியாது இருப்பர் தாமே-அடியார் குழாங்களுடன் திருவடிகளைப் பிரியாமல் அடிமை செய்யப் பெறுவர் –

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படைவுடையான் கருதும் கோயில்
கையை யுடைய நாகம் உண்டு ஸ்ரீ கஜேந்திரன்
அவனுடைய துதிக்கை முழுத்தும் படியான ஆபத்தை ஸவாஸனமாகப் போக்கினவன்
விரோதி நிரசன பரிகரமான திருவாழி யாழி ஆயுதத்தோடே உகந்து வர்த்திக்கிற கோயிலான

ஆனைக்கும் தனக்குத் தக்க வாதம் -என்னுமா போலே
வடிவின் கனத்துக்குத் தக்கபடி இறே துக்கத்தின் கணம் இருப்பது
ஆனை யின் துயரம் -என்றார் இறே

ஆனைக்கு வாசகங்கள் பலவும் உண்டாய் இருக்க
கைந் நாகத்து இடர் என்றது
கைம்மா துன்பம் என்கிறபடியே
துதிக்கை முழுத்தின ஆபத்து என்று தோற்றுகைக்காக

அதாவது
நெடுங்காலம் வர்ஷ அபாவத்தாலே வரண்டு லோகத்திலே ஒரு பூக் காணக் கிடையாத படி யாகையாலே
எங்கே ஒரு திருப்பள்ளித் தாமம் கிடைக்குமோ என்று தடுமாறா நிற்க
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை-என்கிறபடியே
தூரத்தில் குளிர்ந்த சோலையும் பூத்த பொய்கையுமாய்த் தோற்றக் கண்டு
பெரிய அபி நிவேசத்தோடே ஓடிச் சென்று உள்ளே துஷ்ட ஸத்வம் கிடக்கிறது என்று அறியாமல்
பொய்கையிலே இழிந்து பூவை வாரிப் பரித்து கரையிலே ஏறத் தேடுகிற அளவிலே முதலை வந்து காலைப் பிடிக்க

ஒரு நீர்ப் புழு நிமித்தமாக ஈஸ்வரனை அழைக்க வேணுமோ நாமே தள்ளிப் போகிறோம்
என்று போகப் பார்த்த அளவிலே
பிடித்த முதலை பிரபலமாகையாலே
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஜ தே ஜலே -என்கிறபடியே
இங்கனம் ஆயிரம் தேவ ஸம்வத்ஸரம் சென்ற அளவிலே
முதலைக்குத் தன்னிலும் ஆகையால் அபிமத லாபத்தாலும்
முழு வலி முதலை என்கிறபடியே பலம் அபி வ்ருத்தமாய்
ஆனைக்கு தன்னிலம் இல்லாமையாலும் அபிமத அலாபத்தாலும் –
பலம் ஷீணம் ஆகையாலே துதிக்கை முழுத்தும்படி ஆய்த்து இறே –

இப்படி ஆனவாறே தன்னால் செயல் அற்று மனசா சித்த யத்தரிம் -என்கிறபடியே
சர்வேச்வரனையே ரஷகனாக அனுசந்தித்து –
நாராயணா ஒ ஒ மணிவண்ணா நாகணையாய் -வாராய் -என்ன
இந்த ஆர்த்த த்வனி செவிப்பட்டவாறே -அதந்த்ரித்த சமூபதி பிரஹிதஹச்தம்-இத்யாதிப் படியே
பகவதஸ் த்வராய நம – என்று அறிவுடையார் ஈடுபடும் படி பெரிய த்வரையோடே மடுக் கரையிலே வந்து –
ஆனையை ஒரு கையாலும் -முதலையை ஒரு கையாலும் எடுத்து அணைத்து கொண்டு -கரையில் ஏறி –
கையில் திருவாழி யாலே முதலையின் வாயைப் பிளந்து விடுவித்து -சாத்தி அருளின திரு பட்டத் தலையை சுருட்டி
திருப் பவளத்திலே வைத்து அதனுடைய புண் வாயை வேது கொண்டு -நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம்
தீரும்படி திருக் கையாலே குளிர ஸ்பர்சித்து-திருக் கண்களாலே குளிரக் கடாஷித்து அதன் கையில் பூவைத் திருவடிகளில்
இடுவித்துக் கொண்டு அதனுடைய துக்கத்தை போக்கின படியைச் சொல்லுகிறது –
இடர் கடிந்த -என்று –

கனல் ஆழிப் படையுடையான் –
ஜ்வலியா நின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் –
இடர் கடிந்த கனல் ஆழிப் படையுடையான் –என்கையாலே கையும் திரு ஆழியுமாக கொண்டு வந்து
தோற்றி ஆய்த்து முதலையை விடுவித்ததும் ஆனையை ரஷித்ததும் –
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய் – தோன்றினையே
என்று அறிவுடையார் ஈடுபடும்படி இறே அப்போது அவன் வந்து தோன்றினபடி

கருதும் கோயில் –
ஸ்ரீ பரம பதம் ஸ்ரீ ஷீராப்தி தொடக்கமான ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் காட்டில்
ஆஸ்ரிதரை அனுபவிப்பிக்கைக்கும்
ரஷிக்கைக்கும் உடலான ஸ்தலம் என்று விரும்பி வர்த்திக்கும் ஸ்ரீ கோயில்

தென்னாடும் வட நாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
ஸகல லோகங்களில் உள்ளாரும் பெரிய பெருமாள் குணங்களுக்குத் தோற்று நிர்மமராய்த் தொழும் படி விஷயமாய்
திருவரங்கம் என்கிற திரு நாமத்தை யுடைத்தாய்
நித்ய அபிமதமான தேசம் என்கிறது –

மெய்நாவன்
விப்ர லம்ப கரர் அன்று என்கை
யதார்த்தவாதி என்று ஆப்திக்கு உடலாக அருளிச் செய்கிறார்

மெய்யடியான்
ப்ரயோஜனாந்தர பரர் அன்றிக்கே
அநந்ய ப்ரயோஜனராய்
அநந்ய ஸாதநாராய
மங்களா சாஸனமே யாத்ரையாம் படியான
தாஸ்ய பூர்த்தியை யுடையவர்

விட்டு சித்தன்
திரு உள்ளத்துக்குள்ளே அவனை வைத்து நோக்குமவர்

விரித்த தமிழ் உரைக்க வல்லார்
மங்களா ஸாஸன புருஷார்த்தம் விசதமாம் படி சர்வாதிகாரமாக திராவிட பாஷையாலே
விஸ்திருதமாக்கின இந்தத் திருமொழியை அப்யஸிக்க வல்லவர்கள்

எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே
எல்லாக் காலத்திலும் எங்களுக்கு சேஷியான ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான
திருவடிகளின் கீழே விஸ்லேஷ ரஹிதராய் தங்களில் ஒரு நினைவாய் இருப்பர்
பரமாத்மாவை சூழ்ந்து இருந்து ஏத்துவார் என்னக் கடவது இறே

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-8–மாதவத்தோன் புத்திரன் போய்–

August 2, 2021

கீழே
வடதிசை மதுரை என்றும்
சாளக்கிராமம் என்றும்
வைகுந்தம் என்றும்
(விபத்தையும் ) பரத்வத்தையும் அர்ச்சாவதாரத்தையும் சொல்லிற்று
அவை மூன்றும்
அஞ்சுக்கும் உப லக்ஷணம்

இவை இத்தனையும் சேர யுள்ளது பெரிய பெருமாள் பக்கலிலே
விண்ணோர் முதல் -என்றும்
கடல் இடம் கொண்ட -என்றும்
கட்கிலீ -என்றும்
காகுத்தா கண்ணனே -என்றும்
திருவரங்கத்தாய் -என்றும்

ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
திருப்பதிகள் எல்லாம்
பெரிய பெருமாளுக்கு பகல் இருக்கை இறே

உபய விபூதியிலும் நடக்கும் செங்கோலும் தனி ஆணையும் பெரிய பெருமாளது இறே
பொங்கோதம்
ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருக்கிறாரும் பெரிய பெருமாள் இறே

பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் -என்று
கோயிலில் இறே திரு உள்ளம் பொருந்தி இருப்பது –

அரங்கம் ஆளி விண்ணாளி ( திருமங்கை )
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றாரும் ( திருமங்கை ) பெரிய பெருமாள் இறே

துவரை யதனில் மணவாளராக வீற்று இருந்தாரும் இவரே

அயோத்தி எம் அரசே -என்று
திரு அயோத்யையிலே திருவாராதனம் கொண்டு அருளினாரும் பெரிய பெருமாளே இறே

அந்தணர் தம் சிந்தையாலும் அரங்கம் மேய அந்தணன் (திரு நெடும் தாண்டகம் )இறே

அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளுகிறதும்
வன் பெரு வானகம் முதலானவை எல்லாம் உஜ்ஜீவிக்கவே இறே

ஆகிலும் இரண்டு பிரதானம்
தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் -என்று
ஆஸ்ரிதர் யாம்ய மார்க்கத்தில் போகாமையும்
ஆஸ்ரிதனான விபீஷணனைக் கடாக்ஷித்தும் இறே

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை
வதரி இட வகையாக வைகுந்தன் புகழாத் திருக் கண்டம் கடி நகரிலே
இருந்து அரசு ஆண்டாரும் பெரிய பெருமாளே இறே

எங்கும் பெரிய பெருமாளே யாகிலும்
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடம் -என்கிறார் -(இதில் )

———

அவன் ஆச்சார்ய வரணம் செய்து ஓதின பிரகாரத்தை அனுசந்திக்கிறார்

மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8- 1-

பதவுரை

மறி–அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய்–கடலிற் புகுந்து
மாண்டானை–முதலை வாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரன்–மஹா தபஸ்வியான ஸாந்தீபிநியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா–(ஸாந்தீபிநி தன்னை) அத்யயனம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக
உரு உருவே–(அப் புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக
கொடுத்தான்–(கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதியாவது;
தோதவத்தி–பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும்
தூய் மறையோர்–நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
துறை–காவேரித் துறைகளில்
படிய–அவகாஹிக்க (அதனால்)
எங்கும்–அக் காவேரி முழுதும்
துளும்பி–அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைய)
போதில்–(அந்தப்) பூக்களில்
வைத்த–இரா நின்றுள்ள
தேன்–தேனானது
சொரியும்–பெருகப் பெற்ற
புனல்–நீரை யுடைய
அரங்கம் என்பது–திருவாங்கமென்னுந் திருப்பதியாம்–

மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா
மஹா தபஸ்ஸைப் பண்ணின ஸாந்தீபனி புத்ரன்
மறி கடலிலே போய் முடிந்தவனை
மா தவத்தோன் ஓதுவித்ததுக்கு குரு தக்ஷிணையாக

வுருவுருவே கொடுத்தானூர்
பூர்வ மேவ யுண்டான அவயவம்
கால பரிணாமம் நடக்கிற தேசத்திலே அது இல்லாதபடி செய்த இது -என்ன ஆச்சார்யம் தான்

இப்படிக் கொடுத்தவன் நித்ய வாஸம் செய்கிற வூர்

தோதவத்தி
ஸ்நானமாடி தோய்த்து உலர்ந்தது
பட்டுப்படி -பருத்திப்படி -என்கிறவற்றிலும் காட்டில் இது இறே
ப்ராஹ்மணருக்கு யோக்யமாய் இறே இருப்பது

தூய் மறையோர்
வேதாந்தத்துக்கு வியாஸ பதம் செலுத்த வல்லவர்கள்

மறைக்குத் தூய்மையாவது
நித்ய
நிர்தோஷ
ஸ்வயம் ப்ரகாஸ
அபவ்ருஷேய
ஏகார்த்த நிர்ணாயகமாய்
அத்யந்த ரஹஸ்யமாய் இருக்கை

இதில்
பரஸ்பர தோஷ பரிஹாரம் செய்ய வல்லவருமாய்
தன் நிஷ்டருமாய் இருக்கும்
ஆழ்வான் போல்வார்
தூய மறையோர் ஆவார் –

துறை படிய துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே
எவ் வுலகத்து எவ் வவையிலும் ஓதுவார் ஓத்தான
அநந்த வேதங்களும் சொல்லுகிற
சின்னமும் திரு நாமமும் இவள் வாயனவாயத் திருந்தின பிரகாரம் அறிந்து
தொன்மையூர் அரங்கமே -என்னும் ஆசை யுடையார்
அங்கே நித்ய வாஸம் பண்ணி

கங்கையில் புனிதமான தெளிவிலாக் கலங்கல் திரு முகத் துறை படியத் துளும்பின ஜலம்
தாமரைத்தாள் முதலானவற்றை அலைக்க
பக்வமான பூக்கள் அவ் வலைச்சலாலே மலர்ந்து மது வெள்ளத்தை விட
பரந்த தேனே நிரூபகமான படியே
புனல் சூழ்ந்த திருவரங்கம் என்னும் ப்ரஸித்தியால்
பெரிய பெருமாளுக்கும் அபிமதமான ஏற்றத்தை யுடைத்தாய்
ரெங்கம் ரெங்கம் இதி ப்ரூயாத் -என்னும் படியே இறே
உரு வுருவே கொடுத்தானூர் இருப்பது –

இந் நேரை மிகவும் அறிந்த நம் ஆச்சார்யர்கள்
வணங்கும் பல துறை ஒரு துறையாக்கித்
தங்கள் அனுஷ்ட்டிக்க
இவர்களுடைய குணம் தேங்கி
எங்கும் பரந்து
ஸூ மநாக்களை
அஞ்ஞாத ஞாபன சா பேஷராக்கித்
தங்கள் பக்கலிலே அஞ்ஞாத ஞாபன சா பேஷ ப்ரார்தனையோடே வந்து
ப்ரஸ்னம் பண்ணும் படி இருப்பார்க்கு இறே
ஸம்ஸ்க்ருத திராவிட வேதங்களில்
நேர் கொடு நேர் பரஸ்பர விரோத பரிஹாரம் செய்ய வல்லராவது என்கிறது இத்தால் –

————

வைதிக புத்ர நயன ஆச்சர்யத்தை அருளிச் செய்கிறார்
கீழ்ச் சொன்ன ஆச்சர்யம் போல் அன்று இறே இது

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

பதவுரை

பிறப்பு அகத்தே–ஸூதிகா க்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த–இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்–புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்-ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து–(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து–மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த–(இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்–சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்– திருப்பதியாவது:
மறை–வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பெரும் தீ–சிறந்த (மூன்று) அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்–(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
வரு–(தம்தம் திருமாளிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை–அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்–ஆதரித்துப் வோருமவர்களும்
சிறப்பு உடைய–(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான
மறையவர்–வைதிகர்கள்
வாழ்–வாழப்பெற்ற
திரு அரங்கம் என்பதுவே–

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த
கிருஷ்ணனை ஆஸ்ரயித்த வைதிகன் என்று இருப்பான் ப்ராஹ்மணனுடைய ஸ்த்ரீ
ஸூதிகா க்ருஹத்திலே பிரசவிக்க பிரசவிக்க

நாய்ச்சியார்
பிராகிருத அப்ராக்ருத சக்தி பரிணாமம் காண வேணும் என்றும்
கிருஷ்ணன் விக்ரஹத்தை அங்கே காண வேணும் என்றும்
நசையாலே
ஸூதிகா க்ருஹத்திலே கிடவாதபடி
தங்கள் ஸங்கல்பத்தாலே பெறப் பெறக் கொண்டு போய் அங்கே இட்டு வைக்க

அது அறியாதே
அவளும் சோஹார்த்தையாய்ப்
பின்னையும் தன ப்ரஸவ காலத்திலே பர்த்தாவைப் பார்த்து
என் பிள்ளைகள் எல்லாரும் இங்கனே போவான் என் -என்று கிலேசித்துக் கேட்ட அளவிலே

அவனும் கிருஷ்ணன் இடம் சென்று இச் செய்திகளை அறிவித்து
என் ப்ராஹ்மணி ப்ரஸவிக்கக் காலமாய்த்து –
இனி யாகிலும் இப்பிள்ளையை ரஷித்துத் தர வேணும் என்ன

கிருஷ்ணனும் ஏகாஹ தீஷையிலே மாத்த்யாந்திக ஸ்வநத்திலே இருக்கிறவர் எழுந்து இராமல்
நான் போகிறேன் -என்று அர்ஜுனன் போய்
ஸூதிகா க்ருஹத்தைச் சூழச் சரக் கூட்டம் கட்டி நிற்க

அவள் பிரசவித்த பிள்ளை ஆகாசத்தில் கதறிக் கொண்டு போக
ப்ராஹ்மணன் அர்ஜுனனைப் பிடித்து -ஷத்ரிய அதமா -என்று
கிருஷ்ணன் பக்கலிலே இவனைக் கொண்டு போய் காட்டின அளவிலே

இவனை விடு
நான் உனது அபேக்ஷித்தத்தைச் செய்கிறேன் என்ன
அவன் இசையாத படியாலே -எல்லாரையும் கூடக் கொண்டு போய் விரஜைக்கு இக்கரையில் நிறுத்தி

அக்கரையில் போய் அங்கு திரு ஓலக்கம் குறையாமல் இருக்க
பிள்ளைகள் கிடந்த இடத்தே
இட்டு வைத்தவன் எடுத்துக் கொண்டு போகுமா போலே கொண்டு போந்து
ப்ராஹ்மணன் வாசலிலே
இவன் கண்ட வுருப்படியே காட்டிக் கொடுத்து நீக்கி விட்டான் இறே
மாதத் யந்தி னத்துக்கு முன்பே
அது தானும் மிகை இறே அத்யல்ப காலம் என்கையாலே
இத்தை
ஸத்வ தநு- என்னாதே –
ந அகாரணாத் -கேவலம் தர்ம த்ராணாய -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-51 )-என்றார்கள் இறே

உறைப்பனூர்
தேச கால அதிகாரி நியதி இன்றியிலே
நித்ய வாஸம் செய்கிற வூர்

மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார்
மறைத்தீ -பெரும் தீ
காம்ய யஜ்ஞமும் –
நித்ய யஜ்ஞமும்

காம்ய யஜ்ஞத்துக்கு
த்வீ பரார்த்த காலம் ப்ரஹ்மாவாய் இருந்து ஜீவிக்கை

நித்ய யஜ்ஞத்துக்கு வளர்த்தி யாவது
ஸங்கல்ப நிபந்தமான வர்ண பாரதந்தர்யத்தோடே
அகரணே ப்ரத்யவாய பரிஹாரம்
பிரயோஜனம் என்று இருக்கை

இவற்றுக்கு சாஷாத் பிரயோஜனம்
காம்ய தர்மத்தை விட்டு வர்ண தர்மத்தில் நிற்கையும்
வர்ண தர்மத்தை த்யஜித்து
வெண்ணெய் யுண்ட வாயனான இன்னமுதான பெரிய பெருமாளை உபாய நிரபேஷமாகப் பற்றி
மற்ற ஒன்றினைக் காணாது இருக்கையும் –

வரு விருந்தை அளித்து இருப்பார்
இப்படி ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே கரை ஏறினார்கள் உளர் ஆகில் -அவர்களுக்கும்
இந்த நிரதிசய புருஷார்த்தம் உபதேச கம்ய ஞானத்தாலே ஸித்தித்த பாகவதர்க்கும்
கைங்கர்ய பரராய் தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளி வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை
ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணியும்

இவர்கள் அமுது செய்வதற்கு முன்னே வேறே சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூப அனுரூபமாக அங்கே அமுது செய்யும் படி அருளிச் செய்ய வேணும் என்று பிரார்த்தித்தால்
தங்கள் இழவு பாராதே
பர ஸம்ருத்தியே பிரயோஜனம் என்று இருக்கையும்

இழவு தோன்றித்தாகில்
தாங்களும் அவர்களோடே சென்று அங்கே அமுது செய்கையும்
இங்குச் சமைந்த வற்றையும் அங்கு கொண்டு போய் அமுது செய்கையும்

வந்து மேயும் குருகினங்கள் போல் அன்றிக்கே
அபேக்ஷித்து அழைத்தால்
வரு விருந்தான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக
நியதமான பதார்த்தங்களில் அவர்கள் அபிமதமான பதார்த்தங்கள் தமக்கு அரிதாய்த்தாகில்
வருந்தியும் தேடி அமுது செய்யப் பண்ணி இருப்பார் –

பாகவத் சேஷத்வ ஸீமை அன்றோ ஸ்வரூபம்
அப்போது அவர்கள் அபிமதத்தில் தமக்கு ஸக்யமானவையும் உபகரிக்க வேண்டாவோ
ரஹஸ்ய ரூபேணவும் என்னில்
இவர்கள் உபகரித்தாலும் அவர்கள் அங்கீ கரியாமையால் இவர்கள் உபகரிக்க விரகில்லை

பகவத் விஷயத்தில் பிரார்த்தனை போல் பிரார்த்தித்திக் கொடுத்தால் அவர்கள் அங்கீ கரியாமை என் என்னில்
பகவத் விஷயத்திலும் போக்ய பூர்வகமான போக்த்ருத்வம் இறே சேதனர்க்கு உள்ளது
போக்த்ருத்வம் முந்துமாகில் முகோலாஸ ப்ராப்யம் ஸித்தியாமையால் ஸ்வரூப நாஸமும் வரும் இறே
ஆகையால் இங்கும் அவர்கள் கொடுத்தாலும் அவர்கள் ஆதரியார்
( அஹம் அன்னம் முதலில் பின்பே அஹம் அந்நாத -படியாய் கிடந்தது பவள வாய் காண வேண்டுமே )

உபய அநு ராகமான மதீயத்வம் உண்டாகையாலே
இவ் வர்த்தத்தை அறிந்தவர்கள் உபகரிப்பதும் செய்யார்கள் –
உபகரிக்கில் உபய அநுராகம் இல்லாத பதார்த்தங்களை அவர்கள் விரும்பினார்களாகில் அவற்றை உபகரிக்கும் அத்தனை
இந் நேர் அறியாதார் செய்து போகிறதை அறிந்தவர் செய்யார் இறே

இவ்விடத்தில் நம்பிள்ளை அரக்கறைச் சூடிக்கு அருளிச் செய்த வார்த்தை
சந்மர்யாதா அதி வர்தநமோ என்னில்
அதுவும் லோக அபவாத பீதி பரிஹார அர்த்த மாகவும்
லோக ஸங்க்ரஹதயா கர்த்தவ்யமாகவும் அன்றிக்கே
மங்கள ரூபேண
ஷேத்ராணி மித்ராணி-இத்யாதி ஸர்வே பவந்தி பிரதிகூல ரூபா
இதில் உபய அநுராகம் இல்லை —
நல்ல புதல்வர் படியே (ஞான சாரம் -இவை அனைத்தும் அல்லல் )
இவ்வதிகாரிக்கு தேஹ தாரண ஸுவ்ஷ்ட்டவ மாத்ரமே பொறுப்பது –

சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பு -என்கிற
சிறப்பை யுடையவர்கள் என்னுதல்

இது தன்னைத் தங்கள் பக்கலிலே ஞான அனுஷ்டான ஸா பேஷராய்
நித்ய சேவை செய்து போரும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பக்கலிலே இவ்வர்த்தத்தை அனுசந்தித்து

உடையவர் திருக் குருகைப் பிரான் பிள்ளானையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

பெரிய நம்பி முதலானோர் உடையவரைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

நஞ்சீயர் நம்பிள்ளையைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

பெரிய வடக்கில் திருவீதிப் பிள்ளை தம் திரு மகனான லோகாச்சார்யாரைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

வளர்த்ததனால் பயன் பெற்றுச் சிறப்புடைய மறையவர் வாழ் என்னுதல்

இவை எல்லாமாகிலும்
சிறப்புடைய மறையவர் என்கிறது
கலியும் கெடும் என்கிற விஷயத்தைக் கண்டு கொண்டவர்களையே இறே

வாழ்
நல்லோர்கள் வாழ் நளிர் அரங்கம் -என்று இறே
கோயிலிலே வாழ்வு இருப்பது

திரு வரங்கம்
மண்ணில் பரிமளமாயும் இருக்கிற பிராட்டிமார்
நித்ய வாஸம் பண்ணுவதும் இங்கேயே இறே

என்பதுவே
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண பிரசித்தமே அன்றிக்கே
ஆழ்வார்கள் எல்லாரும்
திரு மகளாரும்
ப்ராப்யமாக விரும்பி அருளிச் செய்த ப்ரஸித்தி இறே முக்யம்
(பதின்மர் பாடும் கோயில் என்பதே பிரதானம் )

தர்மஞ்ச ஸமய பிரமாணம் வேதாஸ் ஸ

திருவரங்கம் என்பதுவே உறைத்திட்ட வுறைப்பனூர் –

———–

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உரு மகத்து வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8-3-

பதவுரை

மருமகன் தன்–மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை–புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு–மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்–மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு–சரீரமானது
மகத்து–(பாரத யுத்தமாகிற) நரமேதத்திலே-அஸ்வ மேதம் போல் இது நர மேத யாகம்
வீழாமே–விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்–ஆசார்ய ரூபியாய்
(ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்–ரக்ஷித்தருளிய கண்ண பிரானுடைய
ஊர்–திருப்பதி யாவது:
செம் கமலம்–செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்–(பெரிய பெருமாளுடைய) திரு முகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை–நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்–திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று–(ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்-நீர்வளத்தையுடைய
புனல்–நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது–

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு
உத்தரை தன் சிறுவனான மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு

தன் என்று
அவனுடைய விருப்பத்தைக் காட்டுகிறது

மைத்துனன் மார் உரு மகத்து வீழாமே
1-திரௌபதியினுடைய ஸஹ தர்ம பதி விரத அக்னியாலும்
2-சரணாகதை யுடைய பரிபவத்தில் லஜ்ஜை அசக்தி கண்டு இருந்த தந்தாமுடைய சக்தி லஜ்ஜா அபாவத்தாலும்
3-நியாய நிஷ்டூர (எதிரான )தர்மத்தை முக்கியமாக நினைத்து இருந்த பிரமத்தாலும்
4-ருணம் ப்ரவர்த்த மிவ -என்ற கிருஷ்ண அபிப்ராயத்தாலும்
கரிக் கட்டை போலே அழிந்து சரணாகதைக்காகக் கொடுத்த சரீரங்களைப்
பின்னையும் மகத்து என்கிற சப்தம்-
மகத்தாய்
மஹத்தான யுத்தத்தில்
மடிந்து போகாமல் என்னுதல்

மகம் என்று
யஜ்ஞமாய்
யுத்தம் நரமேத யஜ்ஞமாய்
அதிலே கொலை யுண்ணாமல் என்னுதல்

பிரகரண ஒவ்சித்யங்களாலே சப்தங்கள்
விரிந்தும்
சுருங்கியும் வரும் இறே

குருமுகமாய்க் காத்தானூர்
கீத உபநிஷத் ஆச்சார்யனாய்
அஞ்ஞாத ஞானம் செய்து கொண்டு போருவது
அதில் முதிர்ச்சி தோன்ற விபூதி அத்யாய விஸ்வரூபம் காட்டுவது
அதுவும் போராமல் -மாம் -அஹம் -என்று தன்னைக் காட்டுவது
வ்ரஜ -த்வா-மாஸூச -என்று தெளிவித்து
தவ வசனம் கரிஷ்யே -என்பித்து
ஈஸ்வரனான தான் இவர்களை சிஷ்ய வர்க்கமாக்கித்
தான் முகஸ்த்தனாய் (முன்னே நிற்பவனாய் )-குருவாய் ரஷித்தான் -என்னும் இடம்

அபாண்டவஸ்ய என்ன
ஏவுக்கும் இலக்குக்கும் (அம்புக்கும் கர்ப்பத்துக்கும் ) நடுவே-யாதவஸ்ய -என்பது
பாலப் பிராயத்தே அருள் செய்வது
என்னுடைய பஞ்ச வ்ருத்தி பிராணன் -என்றவை
முதலாக ரக்ஷித்தான் என்னும் இடம் பிரசித்தம் இறே

இப்படி இருக்கிறவன்
நித்ய வாஸம் செய்கிற வூர் –

திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
திரு முகத்துக்கு சத்ருசம் செங்கமலமாய்
திரு நிறத்துக்கு ஸத்ருசம் கருங்குவளையாய்

பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே
ஒன்றோடு ஓன்று பொருந்தி ப்ரபைகள் பிரதி பிம்பிக்கும் படி அலரா நின்ற புனலாலே
சூழப்பட்ட திருவரங்கம் என்பது –
காத்தானூர்

இத்தால்
கண்ணன் கோள் இழை வாண் முகத்தே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும்
உருவொத்தன நீலங்களே -என்று
சமுதாய சோபைக்குத் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் காட்டுகிறது –
(நீல மேனி ஐயோ சமுதாய சோபை )

————

இவ்வளவேயோ -பித்ரு வசன பரிபாலனம் செய்த அருமை என்கிறார் –

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

பதவுரை

கூன்–கூனைவுடைய
தொழுத்தை–அடியாட்டி -வேலைக்காரி யாகிய மந்தரை யானவள்
சிதகு–(ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப–சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்–மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்–வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு–கடினமான சொல்லைக் கேட்டு
ராமன் திரு முகம் பார்த்த பின்பு இவள் பேசியதால் இது கூனியை விட கடிய சொல்
ஈன்று எடுத்து தாயாரையும்–(தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய–கைவிட்டு
தொழத்தை–அடிமைப் பெண்
தாயார்–பூஜையிற்பன்மை
கண்டகர்–முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி–காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை–(முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்–நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்–தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை–சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது–

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
அவள் சரீரம் கோணினால் போலே காணும்
தொழும்பியுடைய நெஞ்சில் கோணுதலும் தோன்றச் சிதகுரைத்த படி

சிதகாவது
அவள் குணாதிகையாய் வார்த்தை சொல்லி சம்பாவிக்க-
அவள் சம்பாவனையும் சிதறி
அவள் வார்த்தையும் சிதையும்படியான
துர் உக்திகளைச் சொல்லுகை இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்
கான்று ஓடுத்த நெறி போனதாம் –

கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
வாடின சராசரங்களை ஒழியக் கான்று ஓடுத்த நெறி போனதாம் –
இதுக்கு எல்லாம் அடி
கண்டகரை களைகை இறே

விரோதி நிரஸனம் ஒரு தலையானால்
தோஷா குணாகுணா தோஷா -என்கிறபடியே
தோஷ குணங்கள் மாற்றும்படியாய் இறே இருப்பது –
(மாதா சொல் மாறாத -சராசரங்களை விட்டுப் பிரிந்த தோஷமும்
குணமாகுமே இவர் கண்டகரைக் களைய போனதாலே )

கான் தொடுத்த
இடை வெளி அறச் செறிந்த காடு

கண்டகர்
ஆஸ்ரித விரோதிகள்

நெறி போகி களைந்தானூர்

ஏவம் பிரகார பூதனானவன்
நித்ய வாஸம் செய்கிற தேசம்

தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே
தேன் மாறாத மலர்களால் அலங்க்ருதமான சோலை என்னுதல்
வண்டுகள் மது பானம் செய்து களித்து வார்த்தைக்கும் சோலை என்னுதல்

கோல் தேன் பாய்ந்து ஒழுகும் -என்னுமா போலே கொம்பிலே தேன் என்னுதல்
சோலைத் திருவரங்கம் கண்டகரை களைந் தானூர்

இத்தால்
ஸர்வ ரஸ ஸர்வ கந்த என்கிற பெரிய பெருமாளுக்கு
ஸர்வ ரஸ ஸர்வ கந்த விகாஸ ஸூ மநாக்களாய் ஸூரிகளும்
செண்பகமாய் நிற்கும் முமுஷுக்களும்
ஸ்த்தாவர ரூபேண நின்று
அடிமை செய்வார்கள் என்று காட்டுகிறது –

(அணைய புணைய ஊர பெரியோரும் பெருமக்களும்
பிரார்த்தித்து பரிக்ரஹித்து வாழ்வார்கள் அன்றோ )

————-

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

பதவுரை

குரவு–குரவ மரங்களானவை
அரும்ப–அரும்பு விடா நிற்க
கோங்கு–கோங்கு மரங்களானவை
அலரா–அலரா நிற்க.
குயில்–குயில்களானவை
கூவும்–(களித்துக்) கூவும் படியான
குளிர் பொழில் சூழ்–குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது–திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு–பெருமை பொருந்திய
அவை வரங்களை
பற்றி–பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய–(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை–இராவணனுடைய
உரு–உடலானது
மங்க–சிந்ந பிந்நமாம்படி
பொருது அழித்து–போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை–இந்த லோகத்தை
கண் பெறுத்தான்–காத்தருளினவனும்
என்–எனக்குத் தலைவனும்
திருமால்–ஸ்ரீய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்–சேருமிடாகிய
ஊர்–திருப்பதியாம்-

பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
ப்ரஹ்ம ஈஸா நாதிகளாலே பெற்ற வரங்களைத் தனக்குத் தஞ்சமாகப் பற்றி
இவ் வரங்கள் உள்ளதனையும் நமக்கு பிழை வாராது என்று
தான் தேவர் ரிஷிகளுக்கு எல்லாம் பிழைகளே செய்து வரும் ராவணனை

ரமயதீதி ராம -என்கிறவருக்குப் பிரதியான ராவணனை
(ராவணோ லோக ராவணா -என்கிறபடி )

பிழக்கு -பிழை

உருவரங்க பொருது அழித்து
அவனுக்கு ரூப ஹானியாக
அவன் புத்ர மித்ரர்களில் யுத்த உன்முகர் ஆனவர்களை எல்லாம் அழித்தவன்

ச சால சாபஞ்ச முமோச வீர -என்னும்படி
வெறும் கை வீரனாக்கி
இப்போதாகிலும் சொன்னது செய்தானாமோ என்னும் நசையாலே
போய் வா என்றது
ரூப ஹாநியாய்த்து போனால் போலே வாராமையாலே இறே

உருவரங்க
அரங்க -என்றது
கழிய என்றபடி

ஆனாலும் வரச் சொல்ல வந்தவனோடு பொருகையும்
கொல்லுகையும்
தவறுதல் உண்டானாலும்
கர்தவ்யமோ என்னில்

இவன் சேவகக் கோழை யாலே விஜய ஸா பேஷனாய் வர மாட்டான் –
பெருமாளுக்கும் இவனைக் கொல்லுகை குண பாவம் அன்று –
ஆனால் கூடின படி என் என்னில்

பெரிய கோபத்தோடே வந்து
கொன்று போ என்று சலிப்பித்துப் போக விட்டு
விஜயத்தோடே நிற்க
அவரைக் கால் கட்டின பின் உதறிப் போந்தது இறே உள்ளது

இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
அஞ்சினோம் என்று இவ் விலங்கையில் உள்ளாருக்கு
ஒரு ரக்ஷகனைக் கொடுத்தவன் என்னுதல்

எல்லா லோகத்துக்கு உண்டான விரோதியைப் போக்கித்
தன்னை உண்டாக்கிக்
கண் பெறுத்து வித்தானூர்

கண் இல்லை இறே தன்னைப் பாராதார்க்கு
யஸ் ச ராமம் ந பஸ்யேத்–தன்னைப் பாராதார்க்கு
கண்கள் வச வர்த்தி யாகாதாப் போலே
தன்னைப் பார்த்தார்க்கும் கண்கள் வச வர்த்தி ஆகாது இறே

பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹரிணாம்
இவ் விளைப்பாறி கண் வளருகிறவனூர்

குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே
குரவு கோங்கு முதலான வ்ருக்ஷங்கள் புஷ்பிதங்களாகவும்
குயில் வண்டுகளை அழைத்துக் கூவும் படியாகவும்
வண்டுகள் முகத்தில் ஒழியப் பூ அலராது இறே

குளிர்த்தியை யுடைத்தான சோலையாலே சூழப்பட்ட திருவரங்கம் என்று
பரம பதத்திலும் –
வ்யூஹ -விபவங்களிலும் –
மற்றும் உகந்து அருளினை நிலங்களிலும் –
எல்லா ஸாஸ்திரங்களிலும் ப்ரஸித்தம் என்கையாலே –
என்பதுவே என்கிறார் –

என் திரு மால் சேர்விடமே
என் திருமால் என்று
வஸ்து நிர்தேஸித்தால் போலே
அவனுக்குச் சேர்விடம் ஆவதும் இதுவே
என்று நிர்தேஸிக்கிறார்

இவர் நிர்தேஸித்த இடத்தில் விரும்பி கண் வளருகையாலும்
என் திருமால் என்கிறார்

இவ்வுலகினைக் கண் பெறுத்தானான
என் திருமால் சேர்விடமான வூர்
திருவரங்கம் என்பதுவே

இத்தால்
முமுஷுக்களும்
ஸூரிகளும்
ஸ்த்தாவர ரூபிகளாய் நின்று -(குருவு அரும்ப கொங்கு அலற )
பெருமாளை ஸேவிக்கப் பெற்றோம் என்கிற ஸுமநஸ்யத்தை
மதுர பாஷிகளான நம் ஆச்சார்யர்கள் (குயில் கூவும்)
அக்கரை நோக்கின ஆர்த்த ப்ரபன்னரை அழைத்துக் காட்டி
இந்த ஸூ மனாக்களோடே சேர்த்து
திருப்தியை விழைப்பித்து (குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே )
தாங்களும் உகந்து
வர்த்திக்கும் தேஸம் என்று காட்டுகிறது –

———–

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-

பதவுரை

கீழலகில்–பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை–அஸுரர்களை
கிழக்க இருந்து–அடக்கிடந்து
கிளராமே–கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய–அவ் வசுரர்களுடைய
கரு–கர்ப்பந்தமாக
அழித்த–அழித்தருளினதாலும்
அழிப்பன்–சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது:
யாழ்–(வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை–இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்–வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு–(மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி–உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி–(அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து–உடம்படங்கலும் அணிந்து கொண்டு
அந்தக் களிப்பிலே
ஆளம் வைக்கும்–தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்–திருவரங்கம்–

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
மேல் உலகில் தேவர்களுக்காக
கீழ் உலகில் வர்த்திக்கிற அஸூரர்களை நிரஸிக்க

அடிக் கெடாமல் வந்தபடியாலே
திருவாழி ஆழ்வானை ஏவி
அவர்களுடைய கருக்குலைய அறுத்துப் பொகட்டு அழித்த ஸர்வேஸ்வரன்
நித்ய வாஸம் செய்கிற தேசம்

தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே
தாழை மடலுக்குள் நெருங்க முழுசி
அப் பூவில் உண்டான வெள்ளைச் சுண்ணம் அணிந்த உடம்போடு கர்வித்து
யாழ் நரம்பில் கிளம்பின த்வனியாலே வந்த இசை போலே
வண்டினங்களானவை ஆளத்தி வைக்கும்படி
தாழை முதலான சோலையை யுடைத்தான திருவரங்கம்
கருவழித்த வழிப்பனூர்

இத்தால்
தூரத் கந்திகளாய் -(தாழை – தூரமாக இருந்தாலும் மணம் கமழும் அன்றோ )
ஸூத்த ஸ்வபாவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய (தவள வண்ண பொடி )
ஸ்ரீ பாத ரேணுவை
ப்ரபன்னரானவர்கள் (வண்டினங்கள்)
சிரஸா வஹித்து
தர்ஸனத்தர் சீரை அறிந்து ஆனந்த நிர்பரர்கள் ஆவர்கள் என்று காட்டுகிறது –

————-

கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ் தெறிய
பிழக்கு உடைய வசுரர்களை பிணம் படுத்த பெருமானூர்
தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வாய் ஈர்த்து கொண்டு
தெழிப் படைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – 4-8 -7-

பதவுரை

கொழுப்பு உடைய–கொழுப்பை யுடையதும்
செழு–செழுமை தங்கியதுமான
குருதி–ரத்தமானது
கொழித்து–ஊற்று மாறாமல் கிளர்ந்து
இழிந்து–நிலத்தில் பரவி
குமிழ்ந்து–குமிழி கிளம்பி
பிழக்கு உடைய–(பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற
அசுரர்களை–அஸுரர்களை
பிணம் படுத்த–பிணமாக்கி யருளின
பெருமான்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியானது:
தழுப்பு அரிய–(ஒருவரிருவரால்) தழுவ முடியாத
சந்தனங்கள்–சந்தந மரங்களை
தடவரைவாய்–பெரியமலைகளினின்று
ஈர்த்துக் கொண்டு–(வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து
(இவற்றைத் திருவுள்ளம் பற்ற வேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி)
தெழிப்பு உடைய–இரைச்சலை யுடைய
காவிரி-திருக்காவேரி நதியானது
அடி தொழும்–(எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற
சீர்–சீர்மையைப் பெற்ற
அரங்கம்–திருவரங்க நகராம்–

கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ் தெறிய பிழக்கு உடைய வசுரர்களை
நிணம் (மாம்சம் )கொழுத்து செருக்கும் படியாக இறே ஊட்டி இட்டால் போலே
சரீரங்களை வர பல புஜ பலங்களாலே வளர்த்துப்
பிழை செய்து பொருகிற மலை போல் இருக்கிற அஸூரர்களுடைய சரீரங்களை
பிள எழ விட்ட கூட்டம் (பெரிய திருமொழி -11 -துவாதச நாம திரு மொழி ) -என்னும் படி
குத்திப் பிளக்க ஊற்று மாறாமல்
ரத்தம் கிளம்பி நிலத்திலே இழிந்து குமிழி எழக் குதித்து அலை எறியும்படி –

பிணம் படுத்த பெருமானூர்
பிணமாக்கின சர்வேஸ்வரன் நித்ய வாஸம் செய்கிற தேசம் –

தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வா ஈர்த்து கொண்டு
நால்வர் இருவர் தழுவினாலும் கைக்கு அடங்காத படி இடமுடைத்தான மலை மேலே நின்று வளர்ந்த
சந்தன மரங்களை வேர் பறிய வகழ்ந்து ஈர்த்துக் கொண்டு

தெழிப் படைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே
இது பெரிய பெருமாளுக்கு சாத்துப்படியாம் –என்று தெளிந்து காவேரியானது வந்து
திருவடிகளிலே சமர்ப்பித்துத் தொழா நிற்கும்படி சீரிதான திருவரங்கம் என்கிறார்

இத்தால்
அங்கு வர்த்திப்பார் எல்லாம் நல்ல பதார்த்தம் கண்டால்
பெரிய பெருமாள் திருவடிகளிலே நிருபாதிகமாக ஸமர்ப்பித்துத்
திருவடி தொழுவார்கள் என்கிறது –

————–

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

பதவுரை

வல் எயிறு கேழலும் ஆய்–வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும்,
வாள் எயிறு சீயமும் ஆய்–ஒளியை யுடைய பற்களை யுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும்
எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்–ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியாவது
இரு சிறை வண்டு–பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம் போது–அந்திப் பொழுதிலே
எம்பெருமான் குணம் பாடி–பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு
மல்லிகை வெண் சங்கு ஊதும்–மாலைப்பூவான மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும்
மதிள்–திருமதிள்களை யுடையதுமான
அரங்கம் என்பது-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
வலிய எயிறுகளை யுடைய ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரஸிம்ஹமுமாய்

எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
முழுகி எல்லை காண ஓண்ணாமல் பாதாள கதையான பூமியையும்
பிராதி கூல்யத்துக்கு எல்லை காண ஒண்ணாத படியான பாகவத அபசாரத்தையும்
(தவத்துக்கு எல்லை இல்லை மா முனிகள் வியாக்யானம் )
விளைத்துக் கொண்ட ஹிரண்யனை
கொம்பாலும்
திரு உகிராலும்
இடந்தானூர்

எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே
சந்த்யா காலமான ராத்ரியிலே முகிளி தமான மல்லிகைப் பூக்களின் மேல் இருந்து
மது பாநம் பண்ணும் பெரிய சிறகை யுடைத்தான வண்டுகளின் த்வனி
தூய்தாக வெளுத்த சங்கத்தை ஊதினாலே போலே இருப்பதான
கொடி படர்ந்த சோலைகளாலும் திரு மதிள்களாலும் சூழப்பட்ட
திருவரங்கம் அவுணனையும் இடத்தானூர்

பெரிய பெருமாளுடைய திவ்ய குணங்களைப் பாடி ஊதினால் போலே இறே
கர்வத்தாலே மேலே பறப்பது
பூவின் மேலே வண்டுகள் வருவதாய் இருப்பது

இத்தால்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கும்
ஆர்த்த ப்ரபன்னருக்கும் உண்டான சம்பந்த ப்ராதான்ய
ப்ரகாசத்தைக் காட்டுகிறது

அன்றிக்கே
ஷட் பத நிஷ்டராய் பகவத் குணங்களுக்குப் போக்கு விடுமவர்களுக்கும்
ஸூத்த ஸ்வபாவரான ஸூ மநாக்களுக்கும் உண்டான சேர்த்தி சொல்லுகிறது –

————-

அநேக த்ருஷ்டாந்தம் இட்டுச் சொல்ல வேண்டும்படியான
விக்ரஹ வை லக்ஷண்யத்தை யுடையனாய்
ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –
பரத்வாதிகளை உபமான த்வாரா கோயிலிலே அருளிச் செய்கிறார் –

(மேகம் -பரத்வம்
குவளை -அலர்வது உள்ளம் அந்தர்யாமி
கடல் வ்யூஹம்
மயில் -விபவம் )

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்றூடு தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே -4- 8-9 –

பதவுரை

குன்று ஆடு–மலையினுச்சியிற் சார்ந்த
கொழு முகில் போல்–நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்–கரு நெய்தல் பூப்போலவும்
குரை–ஒலி செய்யா நின்ற
கடல்போல்–கடல் போலவும்
நின்று ஆடு–(களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள
மயில் கணம் போல்–மயில்களின் திரள் போலவும் (இரா நின்ற)
நிறம் உடைய–வடிவழகை யுடையவனான
நெடுமால்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தென்றல்–தென்றல் காற்றானது
குன்று–(மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு–சோலைகளினிடையிலே
அழைத்து–அழைத்து
(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு)
கொடி இடையார்–கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய
முலை–(கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி–வியாபித்து
(அந்தப் பரிமளத்துடனே)
மன்றூடு–நாற் சந்திகளினூடே
உலாம்–உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது-

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல்
பர்வத அக்ரத்திலே மிகவும் நீர் கொண்டு எழுந்து ஸஞ்சரிக்கிற மேகம் போலேயும்
அப்போது அலர்ந்த குவளைகள் போலவும்
மிக்க ஆரவாரத்தை யுடைத்தான கடல் போலவும்
வர்ஷாவில் ஸஞ்சரிக்கிற நின்று ஆடுகிற மயில் திரள் போலவும்

நிறமுடைய நெடுமாலூர்
திரு நிறத்தையும்
மிக்க வியாமோஹத்தையும்
உடைய பெரிய பெருமாள் நித்ய வாஸம் செய்கிற வூர்

குன்றாடு பொழில் நுழைந்து
மலய பர்வத்தில் பொழில்களூடே நுழைந்து
அங்குத்தைப் பரிமளத்தைக் கொடு போந்து

கொடி இடையார் முலை அணவி
வல்லி ஜாதக் கொடி போலே இருக்கிற இடையை யுடைய ஸ்த்ரீகளுடைய முலைகளில்
அங்கராக பரிமளத்தை அளைந்து கொண்டு போந்து

மன்றூடு தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே
இளம் தென்றல் பசும் கொழுந்தானது உள் புகப் பெறாமல் மன்றிலே நின்று தடுமாறி உலவா நின்றது
இதன் வரவு பார்த்துப் படுக்கை படுப்பார் இல்லை இறே அவ்வூரிலே

பற்றிலார் பற்ற
அற்ற பற்றர் சுற்றி வாழுமூர் இறே

இது புறம்பே நின்று உலாவுமது ஒழியச் செய்யலாவது இல்லை இறே
பெரிய பெருமாள் ஆஜ்ஜை நடமாடுகிற வூரிலே காமன் ஆஜ்ஜை நடையாடாதே
இது புகுராமைக்கு இறே மங்களா ஸாஸன பரர் திரு மதிள் இட்டது
உள்ளிருப்பார் மங்களா ஸாஸன பரரே இறே
கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணா என்று இறே அவர்கள் இருப்பது –

———–

நிகமத்தில் இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ பெரிய பெருமாளை ஏத்தும் அவர்கள்
விஷயத்தில் தமக்கு உண்டான சேஷத்வ பிரதிபத்தியை அருளிச் செய்கிறார்

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –

பதவுரை

பருவரங்கள் அளை பற்றி–பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை–யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை
செரு–யுத்தத்திலே
அரங்க–ஒழியும்படி
பொருது–போர் செய்து
அழித்த–ஒழித்தருளின
திருவாளன்–(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்–(திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்த
திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு–(பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய
தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை–(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத்
(திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
ஏத்தவல்லார்–துதிக்க வல்லவர்களுக்கு
அடியோம்–அடிமை செய்யக்கடவோம்–

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
ப்ரஹ்ம ஈஸா நாதிகள் பக்கல் மேல் எழச் சில வரங்களைப் பெற்று
அது தான் விசேஷண பர்யந்தம் என்று அறியாதே
அத்தாலே தானும் தன் பரிகரமும் பெரிய கர்வத்தோடே யுத்த உன்முகனாய் வந்தவனை

செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
யுத்த நியாயம் நடத்த மாட்டாத படி அவனைச் சலிப்பித்து போ வா என்று அழைத்த
வீர ஸ்ரீ யை யுடையவன் நித்ய வாஸம் செய்கிறவூர்

கண்டகரை களைந்தானூர்
நம் சேவகனார் மருவிய மதிள் திருவரங்கம் பெரிய கோயில் (திருமாலை -11) என்கிற திருப்பதி மேல்
பத்துப் பாட்டும் திருவரங்கம் வருகையாலே

திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
விட்டு சித்தன் விரித்த–திருவரங்க தமிழ்மாலை-கொண்டு

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே
விரோதி நிரசன சீலராய் இருக்கிற பெரிய பெருமாளை ஏத்த வல்லார்
இவர் தம்மைப் போலே மங்களா ஸாஸன பரராய்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி ஏத்த வல்லாருக்கு
அடியோமே என்கிறார்

இவருடைய பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -முதலாயன உள்ளது எல்லாம் இது இறே
நானும் உனக்குப் பழ அடியேன் -என்ற இடத்தில் பெறாத குறை தீர
எம் தம்மை விற்கவும் பெறுவார்களே -என்ற இடத்தில்
சேஷத்வம் தோன்றாதே பாரதந்தர்யத்தாலும்
ஸந்தோஷம் விளையாதே
பாகவத சேஷத்வம் தோன்ற ஏத்த வல்லாருக்கு அடியோமே -என்று
அருளிச் செய்தது இங்கே இறே

இருவரங்கம் எரித்தான் என்றது -மது கைடபர்களை
அது என்
அவர்கள் திரு அநந்தாழ்வானுடைய வெய்ய யுயிர்ப்பிலே அன்றோ எரிந்தது என்னில்
ராமஸ்ய தஷினோ பாஹு -என்றும்
தடித்த என் தாசாரதி – என்றும் உள்ள இடங்களில்
சாமானாதி கரண்யம் சேராமையால் ஸாயுஜ்ய பரர் (ஸமான யுக போகம் உடையவர் )
கருதும் இடம் பொருதது காண் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

அன்றிக்கே
சாணூர முஷ்டிகர் என்னுதல்
ஆனால் அவர்களை வெண் கலப்பை போலே நெருக்கித் தூக்கிப் பொகட்டான்
என்னா நின்றதீ என்னில்
அவர்கள்
தம் தம்முடைய அகங்கார அக்னியாலும்
மீட்சியில் கம்ஸ பய அக்னியாலும்
இவன் தன்னைக் கண்ட போதே குவலாய பீட நிரசன பய அக்னியால் எரிந்தார்கள் என்னலாம் –

வெறிய வவர் வயிறு அழல நின்ற பெருமான் (பெரிய திருமொழி -5-10-9 )-என்னக் கடவது இறே
ந ப்ரஹ்ம ந ஈஸா ந -என்கையாலே
அவர்களுக்கு முன்பு சொன்ன அக்னிகளும்
நிபந்தமான கால அக்னி அழியாத வ்யக்திகளிலும் தோன்றிச் சுடுகையாலே
சுடு தடி சுட்டால் போலே இருவரங்கம் எரித்தான் என்கிறார்

ஏத்த வல்லார் அடியோமே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-7–தங்கையை மூக்கும் தமையனை தலையும்–

August 1, 2021

கீழில் திரு மொழியிலே
நாரணன் தன் நாமங்களான திரு நாம ப்ரபாவத்தைப் பல பிரகாரமாக அருளிச் செய்தார்

அத்திரு நாமங்கள் தானும்
ஸ்வரூப
ரூப
குணங்களுக்கு –வாசகம் ஆனாலும்
உகந்து அருளின நிலங்களில் அல்லது குண ப்ரகாஸம் இல்லாமையாலே
திரு நாமங்களை அங்கே சேர்த்து அனுபவிக்கிறார் –

அங்குச் சேர்த்த பிரகாரம் தான் என் என்னில்
வடதிசை மதுரை -என்று தொடங்கி
உகந்து அருளின நிலங்கள் எல்லாத்தையும் எடுத்துத்
திரு அயோத்தியைப் பிரதானம் ஆக்கி
அதிலே இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
திருக் கண்டங்கடி நகர் என்கிறார்

(வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய  தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-9 )

கீழே
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் (4-2-2 )-என்றது
பின்னாட்டித்
தங்கையை மூக்கும் -என்கிறார்

நந்தன் மதலையைக் காகுத்தனை -என்றது
முடியப் பின்னாட்டிப் போருகிற படி
இதில் காகுத்தனை முன்னதாக அனுசந்திக்கிறார் –

————

இரண்டு அவதாரத்திலே ஊற்றமாக
பல காலும் புருஷோத்தமன் என்று மனுஷ்யத்வே பரத்வத்தை அருளிச் செய்கிறார்
புருஷோத்தம வித்யை என்றும் உண்டு இறே
(அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை இடண்டாலும் உபாசித்தில் அதுவே அவனுக்கு கடைசி பிறவி
சரீர அவசா னத்தில் முக்தி பிரபன்னனுக்கு போல் உபாசகனுக்கும் இந்த இரண்டு ஞானமும் கொடுக்கும் )
நந்தன் மாதலை காகுத்தன்
புருஷோத்தம வித்யை கீதையில் 15 அத்யாயம்

தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே -4 -7-1 –

பதவுரை

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே–கங்கை கங்கை என்ற சப்த்தத்தைச் சொல்லுவதனால்
என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும்.
கங்கை காயத்ரி கீதா கோவிந்தன் -நான்கு க காரம் பாவனம்
கடு வினை–கடுமையான பாவங்களை
களைந்திட கிற்கும்–ஒழிக்க வல்ல சாமர்த்தியம் கொண்ட
கரை மேல்–கரையிலே
கை தொழ நின்ற–(பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற
கண்டம் என்றும்–‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய
கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,
தங்கையை–(இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய
மூக்கும்–மூக்கையும்
தமையனை–அவளுடைய தமையனான ராவணனுடைய
தலையும்–தலையையும்
எங்கும்–நாட்டெங்கும்
தன் புகழ்–தன்னுடைய கீர்த்தியே யாம்படி
இருந்து–பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து
அரசு ஆண்ட–ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும்
எம்–எமக்குத் தலைவனுமான
தாசரதி–இராமபிரானுமாகிய
எம் புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
ஆத்மாநாம் மானுஷ்ய மன்ய -உங்களில் ஒருவன் என்று கொண்டாடியது போல் எம் தாசாரதி
எமது இருக்கை–வாஸஸ்தாநமாம்–

தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
தோளும் தலையும் இழக்கும் படி கார்யம் பார்க்கும் வல்லாளன் தங்கை இறே
தன் மூக்கும் தமையன் தலையும் இழக்கும் படி கார்யம் பார்த்தவள் இவள் தானும் இறே
விஷய பாரவஸ்யம் தான் என் செய்யாது தான்

(உலக இன்பம் விஷயாந்தரம்
இவள் பெருமாள் -விஷயம் -மேல் ஈடுபட்டாலும் மூக்கும் காதும் இழந்தாள்
விஷய பாரவஸ்யம் -மடல் எடுக்கப் பண்ணுமே -திருமங்கை ஆழ்வாருக்கும் உண்டே
சூர்பணகையும்-திருமங்கை ஆழ்வார்
அடையும் முறை வாசி உண்டே
பிராட்டியை முன்னிட்டே பிரார்த்தாலும்
வழி அல்லா வழி -துடிப்பால் சென்றார்
அது இல்லையே இவளுக்கு )

தாசரதி போய் எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
ராவண வத அநந்தரம் ப்ரஹ்ம ஈஸாநா திகள் வந்து
பவான் நாராயணோதி தேவ என்ன
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் -என்று
பொருந்தாமை தோற்ற வார்த்தை அருளிச் செய்தார் இறே

அத்தையும்
பின்பு விளைந்த காரியங்களையும் பற்றத் திரு அயோத்தியை நோக்கி மீண்டு எழுந்து அருளித்
திரு அபிஷேகம் செய்து எல்லாரையும் உகப்பித்து தர்ம சமஸ்தானம் செய்து
ரமயதீதி ராம -என்னும் படி
எங்கும் தம் புகழ் ஆக்கி ராஜ்யத்தை ஈர் அரசு தவிர்த்து
நெடு நாள் ஆண்டு
தேவ தூதன் வந்து வீசு வில் இடும்படி திரு உள்ளம் பொருந்து எழுந்து இருந்து அருளி
இருந்தது எல்லாம் தம் பேறாக நினைத்து
எம் தாசரதி போய் இருந்து அரசாண்ட என்கிறார்

எம் புருடோத்தமன் இருக்கை
தாசாரதியான எம் புருடோத்தமன்
இங்குப் போலே கால பரிகணநை இன்றிக்கே நித்ய வாஸம் செய்கிற தேசம் –

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும் கங்கையின் கரை மேல்
யாதோர் இடத்திலே யாவன் ஒருவன் கங்கா ஸ்நானம் செய்கிறவனாக நினைத்து
கங்கை கங்கை என்று ஸ்நானம் செய்ய
பூர்வாகத்தில் நின்றும் பிரிப்பட்டுப் போந்தவற்றில் ஆஸன்ன அனுபவ யோக்யமான
கொடிய பாபங்களை எல்லாம் போக்கி ரக்ஷிக்க வல்ல கங்கையின் கரை மேல்

கை தொழ நின்ற –
கங்கை முதலான தீர்த்த தேவதைகளும்
கங்கா ஸ்நானம் செய்தவர்களும்
மற்றும் உண்டான லோக விசேஷங்களில் ருசி பிறந்தவர்களும்
கை தொழ நின்ற

கை தொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே
எல்லாரும் கங்கையின் கரை மேல் சென்று கை தொழும்படி இருந்த புருஷோத்தமனிலும் காட்டிலும்
நிலை நின்ற புருஷார்த்தம் திருக்கண்டங்கடி நகர் என்கிறார் –

அன்றிக்கே
கங்கை தான் எல்லாருடைய பாபங்களையும் போக்கும்
கங்கை முதலான தீர்த்தங்கள் தான் எல்லாருடைய பாபங்களையும் தாம் தாம் ஏறிட்டுக் கொண்டு
போக்குமது ஒழியத் தானாகப் போக்க மாட்டாது என்றும்
தாம் தாம் ஏறிட்டுக் கொண்ட பாபங்கள் போய் பாவநமாவது
விஷ்ணு பக்தாநாம் பாத ப்ரஷாள நோதகம் -என்கிறபடியே
அவ்வோ தீர்த்தங்களிலே ஸ்ரீ பாதம் விளக்கினால் அவை ஸூத்தமாம் என்கிற அர்த்தம்
பல இடங்களிலும் காணலாம்

ஆகையால்
கண்டம் என்னும் கடி நகர் தானே
கங்கை கங்கை என்கிற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும் -என்னவுமாம் –

வடுக நம்பி உடையவர் தீர்த்தத்தாலே
கீழ் நாட்டில் ஷாமம் தீர்த்த வார்த்தையை இவ்விடத்தே ஸ்மரிப்பது

அன்றிக்கே
ஸத்வாரமான மாத்ரமே அன்றிக்கே அத்வாரமாகத் திருக் கண்டங்கடி நகர் தானே
கடுவினை களைந்திட கிற்கும்-என்கிறதே இறே
முக்யமும் பிராப்தமும்
(கங்கையை விட திவ்ய தேசத்துக்கு ஏற்றம் என்றவாறு
இதுவே இப் பதிகத்துக்கு முக்யமும்-வகுத்ததும் ஆகும் )

மோக்ஷயிஷ்யாமி -என்று பாபத்தைப் போக்குகிறேன் -என்றது போலேயோ
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்றது
உண்ணாது வெங்கூற்றம் ஓவாது பாவங்கள் சேரா -(பெரிய திருமொழி -7-4 )

கங்கை கங்கை என்ற
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற
எம் புருடோத்தமன் இருக்கை
கண்டம் என்னும் கடிநகர்
வாசகத்தாலே
கடு வினை களைந்திட கிற்கும்
என்று அந்வயம் –

————-

சலம் பொதி உடம்பில் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவு மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4-7-2 –

பதவுரை

நலம் திகழ்–(எம்பெருமானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை வஹிக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற
ஜடையன்–ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய
முடி–தலையில் (அணியப் பெற்றுள்ள)
கொன்றை மலரும்–(செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்
நாரணன்–(அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய
பாதத் துழாயும்–திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்
கலந்து–சேர்ந்து
இழி–ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற
புனலால்–ஜலத்தினால்
புகர் படு–விளங்கா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்
சலம்–ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிருக்கிற
உடம்பின்–வடிவை யுடைய
சந்திரன்–சந்திரனும்
தழல்–நெருப்பை
உமிழ்–உமிழா நின்றுள்ள
பேழ்–பெரிய
வாய்–கிரணங்களை யுடையவனாய்
வெம்–வெம்மையே இயல்வாக வுடையவான
கதிர்–ஸூர்யனும்
அஞ்ச–அஞ்சும்படியாக
மலர்ந்து எழுந்து–மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து
அணவு–(அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின
மணி வண்ணன் உருவின்–(நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமன்
வாழ்வு–வாழுமிடம்–அவனுக்கும் இதுவே ப்ராப்ய ஸ்தானம்

சலம் பொதி உடம்பில்
அம்ருத கிரணன் ஆகையாலே
ஜல மயமான சரீரத்தை யுடைய சந்திரன்

அழல் உமிழ் பேழ் வாய் சந்திரன்
அக்னியை உமிழா நின்ற கிரணமாகிற பெரிய வாயை யுடையனுமாய் பிரபாவானான தானும்

வெங்கதிர் அஞ்ச
வெம்மை யுடையவனாய் இருக்கிற ஆதித்யனும் தாழ

மலர்ந்து
ஒரு திருவடிகளைப் படிக்கு அளவாக விரித்து

எழுந்து அணவு
ஒரு திருவடிகள் மேலே கிளர்ந்து
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் குலையும் அளவும் எழா நிற்குமாய்த்து –

(கீலோகம் அளந்து அந்நிய சேஷத்வம் களைந்து
மேலோகம் அளந்து ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் களைந்து )

மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நீல ரத்னம் போன்ற வடிவு அழகையும்
பதறி அளந்த வியாமோஹத்தையும்
யுடைய புருஷோத்தமனுக்கு ப்ராப்யமான தேசம்

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
தீர்த்தத்தை தரிக்கையாலே -நலம் திகழ் சடையான்-என்கிறது
அவன் தலையில் கொன்றையும்
இவனுக்கு சரீரியும்
சேஷியுமான நாராயணன் திருவடிகளில் ப்ரஹ்மா சாத்தின திருத்துழாயும்

கலந்து இழி புனலால்
இரண்டும் கூடி பூமியிலே தாழ்ந்து வருகிற புனலால்

புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே
தேவதாந்த்ர பரரும்
பகவத் பரரோடு கூடினால்
தாஸோஹம் என்று விளங்குவர்கள் என்று காட்டுகிறது
(ஸ அஹம் ஸோஹம் போய் தாஸோஹம் ஆவார்கள் )

சந்திரன் வெங்கதிர் அஞ்ச என்றது
திருச் சிலம்புக்குக் கீழ் தாழ்கை யாலே –

———-

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்து அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
சது முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-3 –

பதவுரை
(எம் பெருமானுடைய திருவடியை விளக்குகிற போது.)
சதுமுகன் கையில்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும்
சதுப்புயன் தாளில்–சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு)
சங்கரன் சடையினில்–சிவபெருமானுடைய ஜடையிலும்
தங்கி–தங்கி,
கதிர்–ஒளியுடையனவும்
மணி–ரத்னங்களை
கொண்டு–கொழித்துக் கொண்டு
இழி–இழிகிற
புனல்–தீர்த்தத்தை யுடைய
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்;
அங்கு–உலகமளந்த அப்போது,
அதிர் முகம் உடைய–முழங்கா நின்ற முகத்தை யுடைய
வலம் புரி–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை
குமிழ்த்தி–திருப் பவளத்தில் வைத்து ஊதியும்
அழலுமிழ்–நெருப்பை வீசா நின்றுள்ள
ஆழி கொண்டு எறிந்து–திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும்,
எதிர் முகம்–(போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய
அசுரர்–அஸுரர்களுடைய
தலைகளை–தலைகளை
இடறும்–உருட்டி யருளின
எம் புருடோத்தான் இருக்கை–எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும்–

அதிர் முகம் உடைய வலம்புரி
அதிர் குரல் சங்கம் -என்கிறபடியே
வலம் புரிக்கு அதிருகை ஸ்வபாவமாய் இருக்கும் இறே

குமிழ்த்து
ஊதி
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்து (பெரியாழ்வார் -3-6 )-என்னுமா போலே

அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து
திருக் கையில் இருந்து கருதும் இடம் பொருதும் இறே விரோதி நிரஸனம் செய்வது

அங்கு எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
விரோதி நிரஸனம் செய்த பின் –
எம் புருடோத்தமன் இருக்கை-என்கிறார் –

சது முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
நான்முகன் கையில்
நால் தோள் அமுதின் திருவடிகளில்
சங்கரன் தலையில் தங்கி –

கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே
மிக்க ப்ரகாஸத்தை யுடைத்தாய் இருக்கிற ரத்நாதிகளை இரு கரையும் வீசி
எறிந்து கொண்டு இழிகிற புனலை யுடைத்தான
கங்கைக் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர்

அங்கு என்றது
பாரத சமர விபரீதரை –

———–

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுர நணுக நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
கமைஉடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே -4 -7-4 –

பதவுரை

இமவந்தம் தொடங்கி–இமய மலையின் உச்சி முதற் கொண்டு
இரு கடல் அளவும்–பெரிய கடல் வரைக்கும்
இரு கரை–இரண்டு கரைகளிலுமுள்ள
இரைத்து–ஆரவாரித்துக் கொண்டு
ஆட–நீராட
கமை உடை பெருமை–(அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய
கங்கையின் கரை மேல்–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடிநகர்;
இமையவர்–(இந்திரன் முதலிய) தேவர்கள்
இறுமாந்து இருந்து–அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து
அரசு ஆள–ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும்,
ஏற்று வந்த எதிர் பொரு சேனை–துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது
நமபுரம்- யமலோகத்தை
நணுக–கிட்டுகைக்காகவும்
நாந்தகம்–நந்தகமென்னும் வாளை
விசிறும்–வீசா நிற்குமவனும்
நம்–நமக்குத் தலைவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
நகர்–நகரமாகும்–

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
தேவர்கள் எல்லாம் தங்கள் ஜெயித்தார்களாக கர்வித்துத் தம் தாம் ஆசனங்கள் குலையாமல் இருந்து
தத் தத் பதங்களைத் தம் தம் ஸ்வம்மாக நினைத்து
ஸ அவதியான தத் தத் போக மாத்ரம் ஒழியத் தாம் தாம் அபிமானித்து
நிருபாதிக சேஷித்வ சங்கல்ப நிரங்குச ஸ்வா தந்தர்ய ஹேதுத்வம் முதலான குணங்களோடே
ஸ்ரீ யபதியாக பாவித்தார்கள் –

இவர்களுக்கு ஜென்ம சத்ருக்களாய் இவர்கள் ஈஸ்வரன் கொடுத்த போகத்தை புஜிக்கிறார்கள் என்று
காண மாட்டாமல் அஸஹமானரான அஸூரர்கள் அவர்களை நலியாமல்
தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கச் செய்தேயும்
தன் மேலும் வெல்லலாம் என்று வந்து யுத்த உன்முகரானவர்களுடைய கூட்டுக்கட்டு எல்லாம்

நம புர நணுக
அதர்ம பலம் புஜிப்பிக்கிற தர்ம ராஜனுடைய
ராஜ்யத்திலே சேர

நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
திருக் கையில் வாளை அசைத்து வீசா நின்ற

விசுறும் -என்ற
வர்த்த மானத்தாலே எதிர் பொரு சேனை போயிருக்கச் செய்தேயும்
இன்னமும் எதிர் பொர வருவார் உண்டோ என்று யுத்த உன்முகனாய் நின்று வீசுகையாலே
எம் புருடோத்தமன் என்கிறார் ஆதல்
அவன் நித்ய வாஸம் செய்கிற நம்மூர் என்னுதல்

இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
ஹிமவானுடைய உச்சி முதலாக மகத்தான ஸமுத்ரம் முடிவாக இரண்டு கரையில் உண்டான
லோகத்தில் உள்ளார் எல்லாம்
தம் தாமுடைய அபிமத ஸித்திக்கு ஜல ஸம்ருத்தி பெற்றோம் என்று
ஸ ஸம் ப்ரஹ்ம ந்ருத்தம் செய்யும்படியாக

கமை உடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே
க்ஷமையால் வந்த பெருமையை யுடைத்தான கங்கையின் கரை மேல்
அதாவது
இரு கரையும் கடந்து அழித்து அடைவு கெடப் பெருகாமல் அமைவு தோன்றத்
தெளிந்து குளிர்ந்து பெருகுகை இறே பெருமை –

அமைவு -சமைவு என்ற போது
சைதன்ய விவசாயத்தைக் காட்டும்

கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர் நம்மூர் –

———-

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-

பதவுரை

எழுமையும்–ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட–சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம்–பாவங்களை யெல்லாம்
இறைப் பொழுது அளவினில்–க்ஷண காலத்துக்குள்ளே
கழுவிடும்–போக்கி விடும்படியான
பெருமை–பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்;
கண்டம் என்னும் கடி நகர்;
உழுவது ஓர் படையும்–உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும்
உலக்கையும்–உலக்கையையும்
வில்லும்–ஸ்ரீசார்ங்கத்தையும்
ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியும்–திரு வாழியையும்
சங்கும–ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும்
மழுவொடு–கோடாலியையும்
வாளும்–நந்தக வாளையும்
படைக்கலம் உடைய–ஆயுதமாக வுடையவனும்
மால்–ஸர்வேச்வரனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளியிருக்குமிடம்–

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும்
படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
கலப்பை முதலாக ஸாதாரண அசாதாரண ரூபத்தால் அநேகம் ஆயிரம் திவ்ய ஆயுதங்களை
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக யுடையனாய் –
அது தானே பெருமையாக இருக்கிற புருஷோத்தமனுக்கு ப்ராப்ய ஸ்தலம்

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம் கழுவிடும் பெருமைக்
கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
பூர்வ ஆகத்தில் பிரி பட்டு ஏழு ஜென்மம் முடிவான ப்ராரப்தம் எல்லாம் கூட்டியிட்ட தொகையில்
புண்ய அம்சத்தை நீக்கி பாப அம்சம் எல்லாம் ஸ்நாந வ்யாஜத்தாலே
அல்ப காலத்திலே கழுவிடும் பெருமை கங்கைக்கு உண்டாவது –

ஸ்வ தோஷ தர்சனம் செய்து
தோஷ நிவ்ருத்தி ஸாபேஷனாய் தர்ம ஸபையிலே அறிவித்து
அவர்கள் விதிக்கச் சென்று
திருக் கண்டங்கடி நகர் துறையாலே பூர்வ தோஷமும் நிவர்த்தமாம் என்னுமது அறிந்து
பாப விமோசன ப்ரார்தனையோடே கூடினால் இறே விமோசனம் பிறப்பது –
(இதனால் தான் ஸ்நாந வியாஜ்யம் என்கிறார் )

கழுவிடும்
கழுவி ஸூத்தனாக்கி விடும் –

————–

தலைப் பெய்து குமிறி சலம் பொதி மேகம் சல சல பொழிநதிடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-6-

பதவுரை

அரு தவம் முனிவர்–அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள்
அலைப்பு உடை–அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள)
திரை வாய்–அலையிலே
அவபிரதம் குடைந்து ஆட–அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்)
கலப்பைகள் கொழிக்கும்–(யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற
கங்கையின் கரை மேல்
கண்டம் என்னும் கடி நகர் ;
சலம்–(கடலிலுள்ள) ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிரா நின்ற
மேகம்–மேகங்களானவை
தலைப்பெய்து–திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி–கர்ஜனை பண்ணி
சலசல பொழிந்திட–சள சள வென்று மழை பொழிய
கண்டு–(அதைக்) கண்டு
மலை–கோவர்த்தன மலையாகிற
பெருங் குடையால்–பெரிய குடையாலே
மறைத்தவன்–(அம்மழையைத்) தடுத்தருளினவனும்
மதுரை–திரு வடமதுரையில்
மால்–விருப்பமுடையவனுமான
புருடோத்தமன்–ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளி யிருக்குமிடம்–

தலைப் பெய்து குமிறி சலம் பொதி
சலம் பொதி -தலைப் பெய்து குமிறி-
இந்திரன் ஏவல் படியே ஸமுத்ரம் தரையாம் படி ஜலத்தை எல்லாம்
தன் வயிற்றிலே பொதிந்து கொண்டு
திருவாய்ப்பாடியிலே தலைப்பட்டு இடித்து முழங்கிச்

மேகம் சல சல பொழிந்திடக்
சல சல எனக் குடத்திட்டுச் சொரிந்தால் போலே சொரிந்திட
சலசலப்பு -அநுகார த்வனி

கண்டு
மேகங்களினுடைய மிகையையும்
திருவாய்ப்பாடியில் உள்ளார் எளிமையையும் கண்டு

மலைப் பெரும் குடையால் மறைத்தவன்
மலையாகிய பெரிய குடையாலே
ஒரு துளி ஒரு கல்லு ஒரு இடி என்றவையும்
ஒருவர் மேல் விழாமல் மறைத்தவன்

மதுரை மால்
அவதரித்த இடத்தில் வ்யாமோஹம் இறே
விரோதி நிவ்ருத்தியும்
நிகள பந்த நிவ்ருத்தியும்
உக்ரசேனனை அபிஷேகம் செய்வித்ததும் முதலானவை எல்லாம் –

புருடோத்தமன் வாழ்வு
அவனுக்கு நிரதிசய போக்யமான தேஸம்

அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கங்கை அலைகிற திரை வாயிலே தீஷா நிபந்தனமாக அரிய தபஸ்ஸூக்களை செய்து
வாங் நியதியும் செய்து
யாகாதிகளையும் மந்த்ர க்ரியா த்ரவ்ய லோபங்கள் வாராமல் செய்து
அவ ப்ருத ஸ்நானமும் யுக்த லக்ஷணத்திலே செய்த அநந்தரம்

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
பெருக்காறாய் யாக சாலையில் உண்டான கலப்பை முதலான யுபகரணங்களை எல்லாம்
எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற கங்கையின் கரை மேல் –

————–

தேவ ஸ்த்ரீகளுடைய அங்க ராக அலங்க்ருதமாய் வருகிறது
கங்கை என்று வர்ணிக்கிறார் –

வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி
மல் பொருது எழப் பாய்ந்த அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே – 4-7- 7-

பதவுரை

அற்புதம் உடைய–ஆச்சர்யமான
ஐராவதம்–‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய
மதமும்–மத நீரும்,
அவர்–அத் தேவர்கள் (விரும்பத் தக்க)
இள படியர்–இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த)
கற்பகம் மலரும்–(அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும்
கலந்து–ஒன்று சேர்ந்து
இழீ–இழியா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்
வில் பிடித்து இறுத்து–(கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து.
(இங்கு உள்ள புருஷோத்தமனும் கையில் வில் பிடித்து சேவை )
வேழத்தை–(குவலயாபீடம் என்ற ) யானையை
முறுக்கி–பங்கப்படுத்தியும்
மேல் இருந்தவன்–(அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய
தலை–தலையை
சாடி–சிதறப் புடைத்தும்
மல்–(சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு
பொருது–போர் செய்தும்
அரயைனை–உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை
எழப் பாய்ந்து உதைத்த–அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான
என் புருஷோத்தமன் வாழ்க–
(மூன்று பொருள்கள் இங்கு இழியவும் மூன்று சேஷ்டிதங்கள் அங்கு கண்ணன் செய்ததும்
இவருக்கு மங்களா சாசனத்துக்கு உத்தேச்யம் )

வில் பிடித்து இறுத்து
கம்சன் பரீஷார்த்தமாக இட்ட வில்லை நடுவே பிடித்து முறித்து

வேழத்தை முறுக்கி
குவலயா பீடத்தைக் கொம்பை முறித்துச் சலிப்பித்துக் கொன்று

மேல் இருந்தவன் தலை சாடி
ஆனை கொம்பு இழந்து விழுந்த பின்பும்
சிஷா பலத்தாலே விழாதபடி நடத்த வல்ல பாகனை திருக் கையால்
ஒரு கொம்பாலே தலை சிதறச் சாடி

மல் பொருது
முற்ற வெளியில் நின்ற மல்லரை யுத்தம் செய்து
நெரித்து வெண் கலப்பைப் போலே தூக்கி எறிந்து

எழப் பாய்ந்த அரையனை உதைத்த
எத்தனையேனும் உயர ஏறினது எல்லாம் தனக்கு அரணாம் என்று இருந்த கம்சனை
மஞ்ச ஸ்தலத்திலே இருந்த கம்சன் தலைக்கே மேலே அநேகம் தூரம் எழப் பாய்ந்து
அவன் தலையை இடது திருவடிகளால் உதைத்துக் கொன்ற

மால் புருடோத்தமன் வாழ்வு
வ்யாமோஹத்தாலே உக்ரசேனனை அபிஷேகம் செய்வித்த பின்பு இறே
புருஷோத்தமன் ஆய்த்து

அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் கற்பக மலரும் கலந்து
இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே
இந்திரனுக்கு நித்ய அபூர்வ புருஷார்த்தமான ஐராவதத்தின் மத ஜலமும்
ஸ்வர்க்க காமரான தேவர்களுக்கு அத்யந்த அபிமதைகளுமாய்
அப் பதம் உள்ள அளவும் யவ்வனம் குலையாத தேவ ஸ்த்ரீகள் முலைகளில் அணிந்த சாந்தும்
அவர்கள் குழலிலே சொருகின கற்பக மலரும்
கலந்து இழி கங்கை –

—————–

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –

பதவுரை

நெடியன–நீண்டவையா யிரா நின்றுள்ள
யூபம்–(பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக–திரள் திரளாக
நிரந்தரம்–இடை விடாமல்
ஒழுங்கு விட்டு–நெடுக ஓடா நிற்பதும்
இரண்டு கரை புரை -இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து
வேள்வி புகை கமழ்–யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான
கங்கை–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடி நகர்;
திரை பொரு–அலை யெறியா நின்றுள்ள
கடல் சூழ்–கடலால் சூழப் பெற்ற
திண் மதிள்–திண்மையான மதிள்களை யுடைய
துவரை–த்வாரகைக்கு
வேந்து–தலைவனும்
தன்–தன்னுடைய
மைத்துனன் மார்க்கு–மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு
ஆய்–பக்ஷபாதியாய் நின்று
அரசனை அவிய–துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து
அரசினை–ராஜ்யத்தை-அரசை -இன் சாரியை
அருளும்–(அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும்
அரி–(ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாள்
அமர்வு–பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம்–

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து
பொரு திரை கடல் சூழ்கையாலே ஜல துர்க்கமும்
அதுக்கு உள்ளே திண்ணிதாக யுண்டான கிரி துர்க்கமும் சூழப்பட்ட -என்னுதல்

அன்றிக்கே
செய் குன்றம் போன்ற கற்பார் மதிள் என்னுதல்

இப்படி இருக்கிற ஸ்ரீ மத் துவாரகைக்கு நிர்வாஹகராய்
ஈர் அரசு தவிர்த்து விட்டு விளங்க இருந்தவன் –

தன் மைத்துனன் மார்க்காய்
திரௌபதியினுடைய ப்ரீதியிலே நின்று
மைத்துனன் மார்க்காய்-என்கிறார்

அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு-
வந அக்னி மஹா வர்ஷத்திலே அவியுமா போலே
மிகை விருதூதி வாய் மாறி வந்த ப்ரதி பக்ஷத்தை நிரஸித்து
பாண்டவாதிகளுக்கு அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு

வேத வாத ரதராய் ஸப்த மாத்ரத்திலே நிற்பாருக்கும்
வேத வேதாந்த நிகமன தத்வ தர்சிகளாய் பரஸ்பர விரோத ஸமாதான ஸா பேஷராய் இருப்பார்க்கும்
பிரணவ உச்சாரணத்துக்குப் பூர்வ பாவியாயும்
பிரணவ ஸப்த வாச்யனாயும் இறே
ஹரி என்றால் தோற்றுவது
(இருவருமே ஹரி என்றே முதலில் சொல்லுவார் -ஹரி என்றாலே பிரணவமே என்றவாறு )

புருஷோத்தமன் என்றால்
பிரதம அக்ஷர (அகார )விவரண நாராயண பதத்தில்
அசாதாரண குண விசிஷ்டனாய்
வாஸ்ய பிரதானனாயத் தோற்றும்

ஸத்
ப்ரஹ்ம
(ஆத்மா )
இத்யாதிகளில் (போன்ற பொதுச்சொற்கள் )
பஸ்வதி கரண நியாயத்தாலே அது தான் சேராது

(பசு -நாலு கால் பிராணி -ஆடு சாமான்ய விசேஷ நியாயம் போல் அல்ல
ஹரி சாமான்யம் புருஷோத்தமன் விசேஷம் அல்ல
இரண்டுமே அவன் ஒருவனையே குறிக்கும் )

அமர்வு
இதுக்கு அவ்வருகு அவனுக்கு
அபிமதமும்
பிராப்தமுமாய் இருப்பது இல்லை இறே

நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு
நிரை நிரையாக ஒழுங்கு பட நாட்டப்பட்டு
நெடிதான யூபங்களும் செய்கிற யாகத்தில் ஹோம தூ மங்களும்

இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே
இரு கரை குறிக்க ஒண்ணாத படி ஒரு கோவையாய்த் தோற்றுகிற கங்கையின் கரை மேல்

—————-

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகை யுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலைப் பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-9 –

பதவுரை

தட வரை–(மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை
அதிர–சலிக்கும் படியாகவும்
காணி–பூமியானது
விண்டு இடிய–பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
தலைப் பற்றி–(மரங்களினுடைய) தலை யளவுஞ் செல்லக் கிளம்பி
கரை–கரையிலுள்ள
மரம்–மரங்களை
சாடி–மோதி முறித்தும்
இடம் உடை–இடமுடையத்தான் (விசாலமான)
கடல்–(ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட
கலங்க–கலக்கும்படி
கடுத்து–வேகங்கொண்டு
இழி–இழியா நின்றுள்ள
களித்திழி-பாட பேதம்
கங்கை–கங்கா தீரத்திலுள்ள
கண்டம் என்னும் படி நகர்;
(யதா காஷ்டஞ்ச காஷ்டஞ்ச -கட்டைகள் -மரம் பிரிந்து வருவது போல் பிறவிகள் தோறும்
சுற்றத்தார் மாறும் -இந்த மரங்களை வைத்தே ஸம்ப்ரதாயார்த்தம் சொல்லுவார்கள் )
வட திசை–வடக்கிலுள்ள
மதுரை–ஸ்ரீ மதுரையும்
சாளக்கிராமம்–ஸ்ரீ ஸாளக்ராமமும்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டமும்
துவரை–ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி–திருவயோத்தையும்
இடம் உடை–இடமுடைத்தான (விசாலமான)
வதரி–ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை
இடவகை உடைய–வாஸஸ்தானமாக வுடையனான
எம் புருடோத்தமன் இருக்கை-

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி இடமுடை வதரி
இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
உத்தர மதுரை தொடக்கமாக அநேகம் திருப்பதிகள் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
திரு உள்ளம் பொருந்து வர்த்திக்கும் திருப்பதி

தடவரை அதிர தரணி விண்டிடிய
இடமுடைத்தான ஹிமவான் ஒரு சிறு கல் போலே அதிர்ந்து சலிக்கும் படி அதன் மேல் குதித்து
அதில் நின்றும் போந்து
பூமி ஆழ்ந்திட இடம் கொண்டு தளம் இடியும்படி குதித்து

தலை பற்றி கரை மரம் சாடி
நடு நின்ற மரங்களின் தலையிலே மணல் ஏறக் கிளம்பி
கரை நின்ற மரங்களும் வேரோடு சாய்ந்து ஒழுகும் படி தள்ளி

கடலினை கலங்க
ஒன்றாலும் கலங்காத (அஷோப்யமான )சமுத்திரமும் கலங்கும்படி

களித்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
தரணி விந்து இடியக் குதித்த வேகம் அடங்காமல்
குதியா நின்ற கங்கையின் கரை மேல் –

————

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-

பதவுரை

கான்–நறு நாற்றம் கமழா நின்றுள்ள
தட–பெரிய
பொழில்–சோலைகளினால்
சூழ்–சூழப் பெற்ற
கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர் ;
மூன்று எழுத்ததனை–அகார, உகார, மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை
மூன்று எழுத்தனால்– (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷரமான பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே
நிருக்தம்’-வேத சொற்களுக்கு அர்த்தம் சொல்லும் நூலுக்கு மூன்று எழுத்து என்றபடி
மூன்று எழுத்து ஆக்கி–(மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து
மூன்று எழுத்தை–(அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை)
ஏன்று கொண்டிருப்பார்க்கு–(தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில்
இரக்கம் நன்கு உடைய–சிறந்த கருணையை யுடையவனும்-தனது பேறாக கொண்டு தயை பண்ணுபவன் -இரக்கமே உபாயம்- இனிமை புருஷார்த்தம்
மூன்று அடி நிமிர்த்து–அந்த பிரணவத்தை நம பதத்தோடும் நாராயண பதத்தோடும் நாராயண பதத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி)
மூன்றினில்–(அந்த) மூன்று பதங்களிலும்
தோன்றி–(ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து.
மூன்றினில்–அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக
மூன்று உரு ஆனான்–(காணும்) சேஷித்வம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான
எம் புருடோத்தமன் இருக்கை–

மூன்று எழுத்து அதனை
அகார பிரதானமாய் இருக்கிற பிரணவத்தை

மூன்று எழுத்து அதனால்
நிருத்தம் என்கிற ப்ரக்ரியையாலே

மூன்று எழுத்தாக்கி
அகார உகார மகார என்கிற மூன்று எழுத்துக்கள் ஆக்கி

மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார்க்கு
அகார வாஸ்யனே உத்தேச்யன் என்று பிரதிபத்தி பண்ணி இருப்பார்க்கு

இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
இவர்கள் அளவிலே தன் பேறாக கிருபை பண்ண வல்லனாய்
எனக்கு ஸ்வாமியான
அந்தப் புருஷோத்தமன் நித்ய வாஸம் செய்கிற தேசம்

மூன்றடி நிமிர்த்து
இத்தைப் பிராணவத்தோடே மூன்று பதமாக விவரித்து

மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
அந்தப் பத த்ரயத்திலும் தோற்றின
அநந்யார்ஹ சேஷத்வ
அநந்ய சரண்யத்வ
அநந்ய போக்யத்வங்களாய்த் தோன்றின அர்த்தங்கள்
மூன்றுக்கும் பிரதி சம்பந்தியாய்

சேஷித்வ
சரண்யத்வ
போக்த்ருத்வ
ப்ரகாசங்களான மூன்று உரு ஆனான் என்னுதல்

அன்றிக்கே
மூன்றில் பிரதி சம்பந்தியாய்த் தோன்றின மூன்றிலும் காட்டில்
மேன்மையும் நீர்மையும் வடிவு அழகுமான
ஸ்வரூபேண மூன்று உரு ஆனான்
(மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் -பசும் கூட்டம் )

ஆனாலும் அவன் தன்னுடைய மேன்மையைக் காட்டில் அவனுடைய நீர்மையும் குண பரமாம் அத்தனை இறே
சேதன பரமாய் இருக்கிற மூன்றில் ஸாஷாத் ஸ்வரூபேண
தேவும் தன்னையும் (2-7-4 )மூன்று உரு ஆனான்
(கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் –தேவு -ஐஸ்வர்யம் தன்னையும் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஈடு )

கான்றடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
கான் என்று கடல் கரைக் கழிக்கும் பேர்
நீரோடு காலுக்கும் பேர்
இவ்வளவு இறே கங்கைக்கு உள்ளது
பாப விமோசனம் கடி நகரிலே

(கங்கை வெறும் 60000 பாப விமோசனம் அக்காலத்தில்
அனைவர் பாபங்கள் -அனைத்து காலங்களிலும் -போக்கவே இங்கே எழுந்து அருளி உள்ளான் )

நீரோடு கால்களாலும்
தடாகங்களாலும்
திருச் சோலைகளாலும்
சூழப் பட்ட திருக்கண்டங்கடி நகர் எம் புருடோத்தமன் இருக்கை –

————

நிகமத்தில் இத்திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்-

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கிய வன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4- 7-11 –

பதவுரை

பொங்கு–நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும்
ஒலி–கோஷத்தை உடையதுமான
கங்கை கரை–கங்கைக் கரையிலுள்ளதும்
மலி–எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான.
கண்டத்து–திருக் கண்டங் கடி நகரில்
புருடோத்தமன்–புருஷோத்தப் பெருமானுடைய
அடி மேல்–திருவடிகளில்,
வெம்கலி நலியா–கொடிய கலியினால் நலியப் பெறாத-விபரீத ஞானம் இல்லாத என்றபடி
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விருப்புற்ற–ஆசைப் படல்
தங்கிய அன்பால்–நிலை நின்ற பக்தியினால்
செய்–அருளிச் செய்த-பாடியது மட்டும் இல்லாமல் அனுஷ்டான பர்யந்தமாக செய்தாரே
தமிழ் மாலை
தங்கிய–நிலை நின்றிருக்கப் பெற்ற
நா உடையார்க்கு–நாக்கை உடையவர்களுக்கு
கங்கையில்–கங்கா நதியில்
குளித்து–நீராடி
திருமால்–ஸ்ரீயபதியினுடைய
இணை–ஒன்றொடொன்றொத்த
கழல் கீழே–திருவடிகளின் கீழே
இருந்த கணக்கு ஆம்–நிரந்தர ஸேவை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும்–
அவன் திரு உள்ளம் உகப்பானே ஆகவே ஒக்கும்

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
மிகவும் பெரிய ஆரவாரத்தோடே கிளம்பி வருகிற கங்கையினுடைய
உயர்ந்த கரை மேலேயாய் இருக்கிற திருக்கண்டங்கடி நகரிலே நித்ய வாஸம் செய்வானாய் இருக்கிற
புருஷோத்தமன் திருவடிகளின் மேலே

வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன்
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே (திருவாய் -5-2-11 )-என்னுமா போலே
வெவ்விதான கழியும் நலியாதபடியான திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

வெங்கலி
பிராகிருத ஸ்ருஷ்டியில் க்ருத யுகாதிகளில் முடிவில் வருகிற கலி யுகத்தில்
வெம்மை இல்லை போலே காணும்
வெம்மை யுள்ளது பர்வ க்ரமமாக இறே

விட்டு சித்தன்
இதுவும் ஒரு ஸமாஸ த்வயம்

விருப்புற்று
அத்யந்தம் ப்ரீதியின் மேலே

தங்கியவன் பால்
நிலை நின்ற பக்தி பாரவஸ்யத்தாலே

செய் தமிழ் மாலை
செய்யப்பட தமிழ் மாலை

சொன்ன மாலை என்னாமல்
செய்த -என்கையாலே
அனுஷ்டான பர்யந்தமாகச் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை

தங்கிய நா வுடையார்க்கு
மந பூர்வ வாக் உத்தர -என்னாத நா யுடையாருக்கு
நான் தான் வேண்டா என்றாலும்
என் வாய் அவனை அல்லது வாழ்த்தாது (முதல் திருவந்தாதி -11)-என்பார்க்கு

கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே
கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே இருந்த கணக்காமே

1-தேசாந்தர
2-த்வீபாந்தரங்களிலே இருந்ததார்க்கும்
3-உபரிதன பாதாள லோகங்களில் இருந்ததார்க்கும்
4-நித்ய விபூதியில் இருந்து தங்கிய நா யுடையார்க்கும்
5-சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற இவர் தம்மைப் போலே -இவர் அபிமானத்திலே ஒதுங்க வல்லாருக்கும்
அவன் திருவடிகளின் கீழே இருந்து மங்களா ஸாஸனம் பண்ணின இவர் நேர் ப்ரயோஜனத்தில் ஒக்கும் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-6–காசும் கரை வுடை கூறைக்கும்–

July 31, 2021

நாவ காரியத்திலே (4-4 )
ப்ராப்ய அநு ரூபமான பக்தியோடே திரு நாம விசேஷங்களை ஓர் ஆச்சார்ய முகத்தால் அறிகை அன்றிக்கே
தம் தாமுடைய தர்ம வீர்ய ஞானத்தாலே பிறந்த வெளிச் சிறப்பு கொண்டு
திரு நாமங்களை ஒரு போகியாகச் சொல்லி நிர்ணயித்துப் பரிகணித்து ஊர்த்வ கதியிலே பர்வ க்ரமமாய்ப் போய்
ஒரு நிபுண ஆச்சார்யர் முகத்தாலே அடிமைத் தொழிலிலே திரு நாமங்களைச் சொல்லி மூளாத அளவே அன்றிக்கே
நின்ற நிலை தெரியாமல் நிற்க நிலை இன்றி ஏறின வழியே மீளுவாரைப் போல் அன்றிக்கே
ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் தன்னாலே ஏறி நிபுண ஆச்சார்யரைக் கிட்டி அடிமைத் தொழிலிலே மூண்டு மூண்டு
திரு நாம வாசி அறிதல்
உபதேச கம்ய ஞானத்தாலே இவர்களுடைய சரமத்தைப் பிரதமம் ஆக்கி
அடிமையாய்த் திரு நாமம் சொல்லுவாரையும் அடைவிலே அருளிச் செய்தார் –

இவ் வடைவிலே திரு நாமம் சொல்ல வல்லார்
செத்துப் போவதோர் போதை இப்போது இப்போது என்று நினைத்து
பக்தி பாரவஸ்யத்தாலும்
கைங்கர்யம் தேச கால அவஸ்தா ரூபமாகச் செய்யும் அடைவு அறிந்து செய்து போருமவர்கள்
சரீர அவசானத்திலே பெரும் பேற்றை ஆசை வாயிலே (4-5 ) அருளிச் செய்தார் –

இப்படி திரு நாமம் சொல்லும் அடைவு அறியாதவர்களும்
ஒரு வழியே அறிவிப்பதாகவும்
தம் அபிமானத்திலே சேர்ப்பதாகவும்
திரு உள்ளம் பற்றி அருளி

நெஞ்சு இளகி இருப்பாரும்
பாரதந்தர்யத்திலே ஒருபடிப்பட்டு இருப்பாரும் ஸ்த்ரீகள் ஆகையாலே
ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யம் அர்ஹதி -ஸ்திரீகளுக்கு ஒரு காலும் ஸ்வாதந்தர்யம் இல்லை

கன்யகையான போது மாதா பிதாக்கள் கீழ் நின்றும்
பின்பு பர்தாவின் கீழ் நின்றும்
பர்தா பாணி கிரஹண சமயத்தில் ப்ரதிஜ்ஜை குலைந்தாலும் தான் படி கடவாமல் நடந்தும்
அவன் தர்மத்தில் ஓருப்பட்ட போது தான் ஸஹ தர்ம ஸாரியுமாய்
அவனுடைய நியதி அநியதங்களைப் பாராமல் பாதி வ்ரத்தையாலே அத்யந்த பரதந்த்யையுமாய்
இவனுடைய வியோகத்தில் புத்ராதிகள் கீழ் ஒதுங்கியும்
அது இல்லையாகில் பின்னையும் மாதா பிதாக்கள் ஞாநி வர்க்க சம்பந்திகள்
இல்லையாகில் லோக அபவாதத்தின் கீழ் ஒதுங்கியும் போருகையாலே

பித்ராதிகளையும் காட்டில் மாத்ரு வர்க்கத்துக்கு புத்ராதிகளைத் திரு நாமம் சாத்தினால்
நிரய நிஸ்தாரகமான அநிஷ்ட நிவ்ருத்தி
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-என்று
முற்பட இவர்களுக்குக் கண் அழிவு அற சித்திக்கும் என்று திரு நாம ப்ரபாவத்தை
இதர சம்பந்த ரஹிதமாக்கி வைதமாக அருளிச் செய்கிறார் –

—————–

ஆபாசமான பேர்களை நச்சி நீங்கள் பெற்ற பிள்ளைகளை இதரர் பேரிட்டு
நரகாத்மாவாய்ப் போகாதே
எல்லாரையும் பெற்றவர்களை பெற்றவன் பேர் இட்டால்
யம அவஸ்யதை தவிரும்
பின்னையும் ஊர்த்வ கதியைப் பிராபிக்கவுமாம்
என்று உபதேசிக்கிறார்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

பதவுரை

காசுக்கு–ஒரு காசுக்காகவும்
கறை உடை–(தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய
கூறைக்கும்–வஸ்திரத்துக்காகவும்
ஓர் கற்றைக்கும்–ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான)
ஆசையினால்–ஆசையாலே
பேர்–(ஷூத்ர பேர் பிள்ளைகளுக்கு) இடுகிற
ஆதர்காள்–அறிவு கெட்டவர்களே!
நீங்கள்
கேசவன்–கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும்
நாயகன்–ஸர்வ சேஷியுமான
நாரணன்–நாராணனுடைய
பேர்–திரு நாமங்களை
இட்டு–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
தேனித்து இருமின்–மகிழ்ச்சி கொண்டிருங்கள்
(அப்படி நாமகரணஞ் செய்தால்)
தம் மன்னை–அப் பிள்ளைகளுடைய) தாய்மார்
நரகம் புகார்–துர்க் கதியை அடைய மாட்டார்கள்–
மாதாவைச் சொன்னது பிதாவுக்கு உப லக்ஷணம்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால்
நாலு இரண்டு காசு கிடைக்கும் என்றும்
ஒரு தலைக்கு அறைச்சீரை கிடைக்கும் என்றும்
அங்கே பின்னையும்
ஒரு கோட்டை நெல் -ஒரு கட்டுக் கற்றை -ஒரு பொய்த்தரவும் கிடைக்கும் என்றும் ஸ்ரத்தையாலே

அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
அங்கு அவத்தப் பேர்-என்று ஸமஸ்த பதமான போது
மிகவும் பொல்லாப் பேர் அளவில் நிற்கும்

அங்கு என்றும்
அவத்தம் என்றும் பதமான போது
அங்கு என்று வஸ்துக்கள் விலகிப் போம் இடங்களிலே வசிக்குமவர்களைக் காட்டும்
அவத்தம் என்று அங்கு உள்ளவர்களும் பேர் சொல்லக் கூசும் படியான துர் நாமங்களைக் காட்டும்

ஆதர்காள்
அறிவு கேடர்காள்

கேசவன் பேரிட்டு
சர்வ காரண பூதனாய்
கிலேச நாசகனாய் இருக்கிறவனுடைய
பேரிட்டு -கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித்து இருமின்
நீங்கள் அப் பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து
ஸந்தோஷத்தோடே இருங்கோள்
தேனித்து -ஸ்நேஹித்து

நாயகன்
நாயகன் -சர்வ சேஷீ

நாரணன்
ஸமஸ்த கல்யாண குணாத்மகன்

தம் மன்னை
தம் மன்னை-தன் அன்னை

நரகம் புகாள்
பிள்ளைக்கு நாராயணன் என்று பேரானால் அவனைப் பெற்றவளுக்கு எங்கனே யம வஸ்யதை கூடுவது
பிள்ளை பெற்று நாராயணன் என்று பேர் இட்டது வஸ்யதை கூடுகைக்கோ

அன்றிக்கே
தம்மன்னை என்று
நாராயணனுடைய மனையில் உள்ளார் நாராயணன் என்று அழைக்கையாலே
இப்படி அழைத்தவர்கள் எல்லாருக்கும் யம வஸ்யதை இல்லை
ஆகையால் நரகம் புகார்கள் என்று சொல்லி விரித்ததாகவுமாம் -(புகார்கள் )

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்
நங்கைகாள் -என்னுமா போலே –

———–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 -2-

பதவுரை

அங்கு–அந்த நீசரிடத்தில்
ஒரு கூறை–ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)
அரைக்கு உடுப்பதன் ஆசையால்–அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்
மங்கிய–கெட்டுக் கிடக்கிற
மானிட சாதி பேர் இடும்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற
ஆதர்காள்–குருடர்களே!
நங்கைகாள்–சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே!
(நீங்கள் உங்கள் பிள்ளையை)
செம் கண் நெடு மால்–புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே!
சிரீதரா–ஸ்ரீதரனே!
அழைத்தக்கால்–அழைத்தீர்களாகில்
நாரணன்–நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை–தாயானவள்
நரகம் புகார்–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
அங்கு என்று
ஸூ தூரஸ்தர் வர்த்திக்கிற தேசத்தைக் காட்டுகிறது

ஒரு கூறை என்று
ஹேயமாய்
கொள் கொடைக்கு ஆற்றிப் போராது-மாற்றப் போகாது – என்கிறது
ஓன்று என்று
மேல் புடைவையும் தலைச் சீரையும் புறம்பே தேட வேணும் என்கிறது

ஆசையால்
இவனுக்கு ஆசையும்
அவனுக்கு நிராசையுமாய் இறே இருப்பது

மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
ஹேயராய்ச் செத்துப் போனவர்களுடைய
உங்களை ஆண்டார்
அப்பாண்டார்
ஜளி பிளி -ஐளி பிளி-என்றால் போலே சில பேர்களை இட்டுச் சென்றால் ஆகிலும் சில தருமோ என்று பேர் இடும் அல்பர்கள் –

செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
இப்படி பேர் இட்டு அழைத்தக்கால்

நங்கைகாள்
ஸ்த்ரீ பிராயம் இதரஞ் ஜகத்
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர் -என்று எல்லாரையும் ஸ்த்ரீகளாகச் சொல்லுகையாலே
நங்கைகாள் என்கிறார்
(அவன் ஒருவனே புருஷோத்தமன் -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே )

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
நாராயணன் தாயார் நரகம் புகாள்-

————

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே
நச்சுமின் நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 3-

பதவுரை

எச்சம் பொலிந்தீர்காள்–ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!
உச்சியில்–உச்சியில் (தடவத் தக்க)
எண்ணெயும்–
சுட்டியும்–(நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்
வளையும்–(கையில் அணியத் தக்க) வளையையும்
உகந்து–விரும்பி
என் செய்வான் ஏதுக்காக
பிறர்–(எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய
பேர்–பெயர்களை
இட்டீர்–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்?
பிச்சை புக்க ஆகிலும்–பிச்சை யெடுத்து ஜீவித்தாலும்
எம்பிரான் திரு நாமமே–எம்பெருமானுடைய திரு நாமத்தையே
நச்சுமின்–விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்)
நாரணன் –இத்யாதி பூர்வவத்–

உச்சியில் எண்ணெயும்
பேர் இட்டாலும் பிள்ளை தலைக்குத் துளி எண்ணெய் கிடைக்கும் அத்தனை அல்லது
(பேர் )இட்டவர்கள் தலைக்குக் கிடையாது இறே

சுட்டியும் வளையும் உகந்து
உங்கள் உகப்பு இறே

எச்சம் பொலிந்தீர்காள்
எச்சம் பிள்ளை
பிள்ளை பெற்று இருவர் பலராய் பொலிந்தீர்காள்
நாஸி -ஆத்மாவை புத்ர நாமாஸி –

என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
1-இந்தப் பிள்ளையை முழுக்க ரஷித்துத் தலைக்கட்ட வல்லர் என்றோ
2-உங்கள் மிடி -வறுமை -தீர்க்க வல்லர் என்றோ
3-அவர்கள் தங்கள் மிடி-வறுமை – தீர்ந்து நின்றது கண்டோ
4-லோக அபவாதம் தீரும் என்றோ
5-நிரய நிஸ்தாரகர் என்றோ

பிறர் என்று
உறவு அறுத்து வைத்தார் இறே

பிச்சை புக்காகிலும்
ஒரு ப்ராஹ்மணன் தன் பிள்ளையைப் பேர் இடுகின்ற ஸமயத்தில்
ஐஸ்வர்யம் தர வல்லான் ஒருவன் பேர் இட வேணும் என்ன
வைஸ்ரவணன் பேரை இடு என்ற அளவிலே
ஜளி பிளி -என்று இட்டு அழைத்து உஜ்ஜீவிப்பதில்
நாராயணன் என்கிற திரு நாமத்தைச் சாத்தி பிக்ஷை புக்கு ஜீவிக்கிறேன் என்றான் என்று
( நாலூர் ) பிள்ளை அருளிச் செய்வர் என்று ( நாலூர் )ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
இதரர் பேர் இடுவதில் எனக்கு ஸ்வாமியானவன் திரு நாமத்தை பக்தியோடே சாத்தி அழையுங்கோள்
வர்ணாஸ்ரம தர்மம் வைதமானவோ பாதி
இதுவும் வைதமாக இடுங்கோள்

ஆகிலும் என்பான் என் என்னில்
வர்ணாஸ்ரம தர்மிகளுக்கு
ஜன்மாந்தர ஸித்தமான புண்ய பாப பலங்களை புஜிக்க விதித்தவோ பாதி
உங்களுக்கும் அந் நேர் வரும்

அது போராதாகில் பிச்சை எடுத்தாவது எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
(பிராணன் பரித்யஜ்ய அரியை காக்க வேண்டும்
பிராணனை விட்டாவது இல்லாமல் விட்டே காக்க வேண்டும்
அதே போல் பிச்சை எடுத்து அவன் பெயரை வைக்க விதியாகவே கொள்ள வேண்டும் )

————–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-

பதவுரை

மானிட சாதியில்–மநுஷ்ய ஜாதியில்
தோன்றிற்று–உண்டான
ஓர் மானிட சாதியை–ஒரு மநுஷ்ய ஜந்துவை
மானிட சாதியின் பேர் இட்டால்–(கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால்
மறுமைக்கு இல்லை–அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம்,
வான் உடை–பரம பதத்தை (விபூதியாக) உடைய
மாதவா–ஸ்ரீயபதியே
கோவிந்தா–கோவிந்தனே!
என்று அழைத்தக்கால்–என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால்,
நானுடை நாராணன்–எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்த
மனுஷ்ய ஜென்மத்தை

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மனுஷ்ய ஜென்மத்தின் பேர் இட்டால்
மறுமைக்கு என்ன பிரயோஜனம் உண்டு
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டாம் –

வானுடை மாதவா
நித்ய விபூதியை யுடைய ஸ்ரீ மானே

கோவிந்தா என்று அழைத்தக்கால்
லீலா விபூதியை விரும்பி ரக்ஷிக்கிற
கோவிந்தா என்று அழைத்தக்கால்

நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள்
அஹம் அர்த்தோ நசே தாத்மா -என்கிறபடியே
அஹம் அர்த்தத்தை யுடையனான நாராயணன் என்று
பரம சேதனன் பேர் இட்ட சேதனனைக் காட்டுகிறது

(ஸ்ரீ பாஷ்யம்
அஹம் அர்த்தம் -ஆத்மா
அந்தக்கரணம் அத்வைதி பக்ஷம்
அப்படி இருந்தால் ப்ரத்யக்த்வம் வராதே
தனக்குத் தானே ஒளி விடும் தன்மையே வராதே
பராக் ப்ருத்யக் வேறு படுத்த வேண்டுமே
ஞானமும் ஆத்மா ஞானம் உடையவனும் ஆத்மா
என்னை யுடையவன் ஆத்மா )

நம் அன்னை நரகம் புகாள்
தம் அன்னை நரகம் புகாள்-

————

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 -6-5 –

பதவுரை

மலம் உடை–மலத்தை யுடையதும்
ஊத்தையில்–ஹேயமுமான சரீரத்தில் நின்றும்
தோன்றிற்று ஓர்–தோன்றினதொரு
மலம் ஊத்தையை–(தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை
அதனால் இம்மையிலே சில அல்ப பலன் கிடைத்தாலும்,
மறுமைக்கு–அத்ருஷ்ட பலத்துக்கு
இல்லை–ஒருவழியு மில்லையாம்:
குலம் உடை–நற்குலத்திற் பிறந்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்–கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால்.
மலம் உடை–(கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும்
ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய
பேர்–பெயரை
இட்டால்–இட்டு அழைத்தால்,
நலம் உடை–(தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய
நாரணன்–எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலத்தை யுடைத்தான மலத்திலே தோன்றின மல ஊத்தையை

மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மலமுடை மலத்தின் பேர் இட்டால்
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டு

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
கோப குலத்திலே பிறந்து
கோவிந்த அபிஷேகம் செய்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்

ராஜ குலத்தில் அவதரிக்கிலும் கோப குலம் இறே பிரதானம் ஆவது
கறையினார் -என்னக் கடவது இறே

நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
கோவிந்தன் பேர் இட்ட
கோவிந்தன் பக்கலிலே ஸ்நேஹத்தை யுடையளான
அந்த
நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-

————-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-6 –

பதவுரை

நாடும்–குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும்
அறிய–(இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
நாடு மானிடர் பேர் இட்டு–(ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி–அவர்களோடு கூடி
அழுங்கி–ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து–(அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே–தவறிப் போகாமல்,
சாடு–‘சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்த–உதைத்தருளின
தலைவா–பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று–‘தாமோதரனே! என்றும்
நாடுமின்–வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்;
(இங்ஙனேயாகில்,)
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
நாடு என்று அஞ்ஞரை
நகர் என்று நாகரீகராய் ஞாதாக்களைக் காட்டும்
இவர்கள் எல்லாரும் அசாரம் என்று அறிந்து நெகிழச் செய்தேயும்
அத்தை மதியாமை ஹேய மனுஷ்யர் பேர் இட்டு

கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
அவர்களோடே கூடி
அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து
அவர்கள் விழுந்த குழியில் விழுந்து
அவர்கள் அறிவு கற்பிக்கும் படி தவற வர்த்தியாதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
பிள்ளையைப் பேர் இட்டு
இதுவே நமக்கு ஊற்றம் என்று

நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6-7-

பதவுரை

மண்ணில் பிறந்து–மண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும்–பின்பு மண்ணாய் விடுகிற
மானிடர்–அல்ப மநுஷர்களுடைய
பேர் இட்டு–பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு–ஆமுஷ்மிக பலத்தில்
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்–ஒரு விசாரமற்றிருக்கிற
ஏழை மனிசர்காள்–அறிவற்ற மனுஷ்யர்களை!
கண்ணுக்கு–கண்ணால் காண்கைக்கு
இனிய –போக்யனாயும்
கரு முகில்–காள மேகம் போன்ற
கண்ணன்–நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய
நாமமே–திரு நாமத்தையே
நண்ணுமின் நாரணன்–விரும்பி யிடுங்கள்
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

மண்ணில் பிறந்து
தேஹ உபாதானமான பஞ்ச பூதங்களிலும்
பிராஸுர்யமாகத் தோற்றுவது பூமி அம்சம் ஆகையால்
சாரீரத்தை மண் என்கிறது –
அதிலே
பார்த்திவமான ரேதஸ்ஸூ மூலமாகப் பிறக்கையாலே மண்ணில் பிறந்தேன் என்கிறது

மண்ணாகும்
சரீர அவசானத்திலே பின்னையும் மண்ணாகவே போகிற

மானிடப் பேர் இட்டு
அம் மானிடப் பேர் இட்டு

அங்கு எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
அவர்கள் இடத்திலே கூடி
த்ருஷ்ட அத்ருஷ்டங்களில் விளைவது ஒன்றும் அறியாமல்
நிர்பரராய் இருக்கும் சபல பாவத்தையும் உடைய மநுஷ்யர்காள்

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின்
காண்கை தானே ப்ரயோஜனமாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை உங்கள் பிள்ளைகளுக்கு இட்டு
உங்கள் பிள்ளையைச் சேர்ந்து போருங்கோள் –

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————-

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-

பதவுரை

நம்பி பிம்பி என்று–நம்பி என்றும் பிம்பி என்றும்
நாட்டு மானிடப் பேரிட்டால்–க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை
(உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்
நம்பும் பின்பும் எல்லாம்–‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம்
நாலு நாளில்–நாலு நாளைக்குள்
அழுங்கிப்போம் அழிந்துபோம்;
செம் பெருந் தாமரை–சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற
கண்ணன்–திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய
பேர் இட்டு–திரு நாமத்தை இட்டு
அழைத்தக்கால்–அழைத்தால்
நம்பிகாள்–(அறிவினால்) குறைவற்றவர்களே!
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
ஐஸ்வர்யத்தால் பூரணமாய் இருக்கிறவர்கள் பேரை எங்கள் பிள்ளைக்கு இட்டு
நாங்கள் அவர்கள் பக்கலிலே ஜீவனத்தை வாங்கி ஜீவித்தால் என்ன பொல்லாங்கு உண்டு
நரக ஹேதுக்களான கார்யம் செய்யில் அன்றோ நரகம் வருவது என்று சம்சாரிகள் அபிப்ராயமாக

நான் நிஷேதித்த பின்பு செய்வி கோளாகில் அநர்த்த பரம்பரைகள் ஆகும் என்ன

நீர் நிஷேதிப்பதற்கு முன்னே நாங்கள் அறியாத தனத்தால் இட்ட பேரை
என் செய்வான் பிறர் பேர் இட்டீர் -என்று நிஷேதித்தால்
நாங்கள் ஜீவிக்கும் படி என்
இனிமேல் தவிர்க்கும் அத்தனை அன்றோ -என்ன

அது ஒண்ணாது –
பிக்ஷை புக்காகிலும் ஜீவியுங்கோள்
இட்ட பேரை மாற்றி எம்பெருமான் திரு நாமத்தை இடுவதாக ஸ்ரத்தை பண்ணுங்கோள் -என்ன

இது தன்னையும் மாற்ற வேணும் என்றால் செய்வது என் என்ன

நிஷேத அபாவ ஸ்திதியில் அவதாரணையை பிரயோகித்து
தேவ தத்த நாமம் -ஆஸ்ரம பேதங்களாலும்
தீஷா பேதங்களாலும்
ஐஸ்வர்ய பேதங்களாலும்
ஜாதி வியக்தி நாமங்கள் பேதித்தமையைக் காட்டி
அவதாரணையைத் தெளிவித்தவர் ஆகையால்
நம்பி பிம்பி என்று நிஷேதிக்கிறார் –

(சர்வம் வாக்கியம் ஸாவதாரண்யம்
எம் அன்னை தளிகை பண்ணும் உள்ளில் இருக்கிறாள் என்றால் அங்கேயே இருக்கிறாள் சொல் இல்லா விட்டாலும்
தளிகை பண்ணும் உள்ளில் இருப்பது அவள் வரவேற்பு அறையில் இருக்கிறாள் என்ற மாற்ற கருத்து வரும் வரை
அதே போல் இங்கும் செந்தாமரைக் கண்ணன் பேரையே இட்டு என்றே இங்கும் கொள்ள வேண்டும்
சுருதி தேவ தத்தன் என்றே பல இடங்களிலும் உண்டே
ஆஸ்ரமம் மாற பேர் மாறும்
நாமும் இராமானுஜ தாசன் பேர் மாற்றிக் கொள்கிறோம்
தீஷா எஜமானனுக்கு பெயர் மாறுமே
பெரிய பண்ணையார் சின்ன பண்ணையார் ஐஸ்வர்ய பேதத்தாலும் மாறும்
ஆகவே இங்கும் பெயரை மாற்றியே ஆக வேண்டும் )

நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
பிம்புக்கு ஒரு பொருள் உண்டாய்த்தாகில் ஆய்த்து நம்பிக்கு ஒரு பொருள் உண்டாவது
உங்கள் அபிப்ராயத்தால் பிம்புக்கு ஒரு பொருள் உண்டாகிலும்
யோக ரூடிப் பேரும் நீங்கள் நினைத்த நம்பில் செல்லாது
(பங்க ஜ-சேற்றில் பிறந்த -தாமரை ரூடி யவ்வ்கிகம் நாய்க்குடையும் சேற்றிலே பிறந்ததே )
பிரபஞ்ச அவலம்ப நியாயத்தாலே சென்றாலும் அந் நியாயம் தன்னாலே நாலு நாளிலே அது நழுவிப் போகும்
நாட்டு மானிடம் -என்னும் அளவே நிலை நிற்பது
நாட்டு மானிடத்தை நம்பி பிம்பி என்னுமிவை நிலை நில்லாது இடாதே கொள்ளுங்கோள் –

செம் பெரும் தாமரைக் கண்ணன்
தாமரை போராமையாலே
செம் பெரும் -கண்ணன் என்கிறார்

பேரிட்டு அழைத்தக்கால்
இப்படிக்கு ஒத்த வனுடைய திரு நாமத்தைச் சாத்தி அழையுங்கோள்

அழைத்தக்கால்
இத்தை நிஷேதிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்ற அளவிலே

இங்கன் எல்லாத்தையும் நிஷேதிக்கிறது என்
மாதா பிதாக்கள் இட்ட பேரை வைத்தால் யம வஸ்யத்தை வருமோ -என்ன
வைதிக மார்க்கத்தில் கர்ம ஸ்ரேஷ்டரானவர்கள் வந்து ப்ரத்ய வஸ்திதராய்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ -என்னா நின்றதீ என்ன

நம்பிகாள்
என்று நீங்கள் பூர்ணர் என்கிறார்
அதுக்கடி விஹித கர்மம் ஜென்மத்தில் மூட்டும்
ஜன்மத்துக்கு உஜ்ஜீவனம் பூர்வ பூர்வ ஜென்மங்களில் ஆர்ஜனத்திலேயாய் இருக்கும்
அத்தைப் பற்றி வரும் வாசனையாலே ஆர்ஜனம் கூடுதல்
பிரரோசக வாக்யங்களாலே ஆர்ஜனம் கூடுதல் செய்தால்
யம வஸ்யதை வரவும் கூடும் இறே

அவ்வளவே அன்றிக்கே
நான்ய தஸ்தீதி வாதிந (கீதை -2)-என்று இறே நீங்கள் தான் இருப்பது
மேலில் நிஷேதம் பாராமே —

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-9 –

பதவுரை

ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்–அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே
உங்கள் மூத்திரப் பிள்ளையை–உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு
என் முகில் வண்ணன் பேர் இட்டு–எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான
எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி
(அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று)
கோத்து குழைத்து–(அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து
(அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக)
குணாலம் ஆடி–குணாலைக் கூத்தாடிக் கொண்டு
திரிமின்–திரியுங்கள்
(இப்படியாகில்)
நாத்தகு நாரணன்–நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகாள்–

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்
துர் கந்த நிஷித்தச் சேறாய் இருபத்தொரு அங்கணக் குழியிலே
ஸூ கந்தமாய்
ஸூத்தமாய்
போக்யமாய்
தாவள்யமாய்
நிரய நிஸ்தாரகமாய்
மண ரஹிதமாய்ப்
ப்ராப்தமாய்
ஸகல லோக ஸங்க்ரஹமாய்
இருப்பதொரு அம்ருதம்
அதிலே பாய்ந்தால் போலே இருப்பது ஓன்று இறே

உங்கள் மூத்திரப் பிள்ளையை
உங்கள் ஸூக்ல ஸோணித பரிணாமமாய்
அஸூத்தாஸ் பதமான கர்ப்ப கோளகையில் நின்றும்
ஜல நிர் கமந யோநி ஜாதமான பிள்ளையை

என் முகில் வண்ணன் பேரிட்டு
என்னுடையவன் என்னும்படி தன்னை எனக்கு அமைத்து வைத்து
என்னாலே தனக்கு ரக்ஷையாம் படி இருக்கிற
ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற முகில் வண்ணன் திரு நாமத்தைச் சாத்தி

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ –
எங்கள் குழுவினால் புகுதல் ஒட்டோம் -என்றது
எங்கள் அபிமானத்தில் புகுராமையால் அன்றோ

எங்களை அபிமானித்தவன் திரு நாமத்தைச் சாத்தின நீங்கள்
எங்களோடு பகவன் திரு நாமம் சொல்லும்படி இயல் கோத்துக்
குழைத்து
உங்கள் நெஞ்சை எங்களோடு கூட்டிக்
கோர்வை விடாமல் குணலைக் கூத்தாடி
எங்களை யுடையவர்களோடே திரியுங்கோள்

நாத் தகும்
உங்கள் நா உங்களுக்குத் தகுதியாம்

அந்ய சேஷத்வமும் துர் போஜனமும் தவிர்ந்தால்
பகவச் சேஷத்வமும் தீர்த்த ப்ரஸாதங்கள் ஜீவனம் ஆகையும் கூடும்

நாப் படைத்த பிரயோஜனமும் பெற்றி கோளாவுதி கோள்

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

———-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – 4-6- 10-

பதவுரை

சீர்–கல்யாண குணங்களை
அணி–ஆபரணமாக வுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய
திரு நாமமே–திருநாமத்தையே
இட–(தம் பிள்ளைகளுக்கு இடும்படி)
தேற்றிய–உபதேசித்தருளினவரும்
வீரம் அணி–(இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும்
தொல் புகழ்–சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–விரிவாக அருளிச் செய்தமையும்
ஓர் அணி–(கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும்
ஒண் தமிழ்–அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள
ஒன்பதோடு ஒன்றும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
ஒன்பதில் விரோதி நிரஸனம் -ஒன்றில் இஷ்ட பிராப்தி
வல்லவர்–ஓத வல்லவர்
பேர் அணி–பெரியதும் அழகியதுமான
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்தில்
என்றும்–எந்நாளும்
பேரணி இருப்பர்–(எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர்–

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
சீரணி
குணங்களை ஆபரணமாக யுடையவன் என்னுதல்
குணங்கள் புறம்பு ஓர் வியக்தியில் கிடவாமையாலே
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமானவன் என்னுதல்

மால்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் வந்தால்
வ்யாமோஹத்தை யுடையவன்

திரு நாமமே இடத் தேற்றிய
இதர நாமங்களை மாற்றி
நாரணன் தன் நாமங்களையே தாம் தாம் பெற்ற பிள்ளைகளுக்குச் சாத்தும் படியாகப்
பல ஹேதுக்களாலும் தெரிவித்த

வீரணி தொல் புகழ் விட்டு சித்தன்
வீரப்பாட்டை ஆபரணமாக யுடையருமாய்
ஸூரிகளைப் போலே அநாதி ஸித்த மங்களா ஸாஸனப் புகழையும்
விஷ்ணு சித்தர் என்கிற திரு நாமத்தையும் யுடைய ஆழ்வார்

விரித்த
பகவத் அனுபவ பிரகாரத்தைத் திருப்பல்லாண்டு தொடங்கி
இவ்வளவும்
அந்யாபதேசத்தாலும்
ஸ்வா பதேசத்தாலும்
ஜகத்தில் உள்ளார்க்கு எல்லாம்
அத்விதீய ஆபரணமாக

ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றாக விரித்து உரைத்த இப் பத்துப் பாட்டையும்
ஸ அபிப்ராயமாக வல்லார்

அதாவது
மலை எடுக்கவும் –
கடலைச் சிறாங்கிக்கவும் வல்லார் என்கிற அளவேயும் அன்று இறே
இவர் திரு உள்ளத்தில் கருத்து அறிகை

அதாவது
இப் பிள்ளைகளுக்கு இட்ட திரு நாமம் விசேஷண பர்யந்தமோ விசேஷ பர்யந்தமோ என்று விகல்ப்பித்தால்
அசாதாரண நாமம் விசேஷணத்தில் நில்லாதாப் போலே
அசித் விசிஷ்ட ஜீவாந்தர்யாமி அளவிலும் நில்லாது

இது அறியும் போது
ஆச்சார்ய சேவையாலே வந்த வ்யுத்பத்தி அனுஷ்டான அபிமானங்களும் வேணும்

இவற்றில்
உத்தேஸ்யமுமாய்
ஸூலபமுமாயும் இறே இருப்பது இவர் அபி மானம்
இத்தை இறே வல்லார் என்கிறது

இப் பிரதிபத்தி யுடையவன் இட்டது இறே திரு நாமம் ஆவதும்
இத் திரு நாமமே யாகிலும் புத்ராதிகள் இடை ஈடனானால் அத் திரு நாமம் ஆகாது இறே

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே
அவனுக்கு அசாதாரணமான திரு நாமங்களைத் தங்களுக்கு ஆபரணமாகக் கொண்டு
ஸூரிகள் வர்த்திக்கிற தேசத்திலே என்றும் விரும்பி மங்களா ஸாஸன பரராய் வர்த்திக்கப் பெறுவர்

வீரணி -என்றது ஜிதேந்த்ரியத்வம்
அதாவது
பிராகிருத விஷயம் போலே அப்ராக்ருத விஷய ஸுந்தர்யத்தையும் ஜெயிக்க வல்லராய் இருக்கை

தம் தாம் பிள்ளைகளை ஆழ்வார்கள் அருளிச் செய்யப் பெற்றோம் என்கிற
அபிமானத்தோடே திரு நாமம் சாத்தினவர்கள் –
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா -என்றதை
விஸ்வஸித்து
நரக பீதி தவிர்ந்த அளவன்றிக்கே
இவர் அபிமானத்தாலே பரமபதமும் பெறுவர்கள் என்கிறது –

இது அன்றோ மேல் படி –
ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட இதுவும் வேண்டுமே
அவனையும் தாண்டி ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டுமே
(பெரியாழ்வார் அருளிச் செய்த படியே நின்று அவர் அபிமானத்தில் ஒதுங்கி பேறு நிச்சயமாகப் பெறலாமே )

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.