ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம்
ஸ்ரீ உத்தம நம்பி பரம்பரைக்கு கூடஸ்தர் ஸ்ரீ பெரிய திருவடி ஐயன் உத்தம நம்ப ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருப்பேரானார்
ஸ்ரீ பெரியாழ்வார் முதல் 90 தலைமுறையில் இருந்த உத்தம நம்பிகளின் வைபவம் காணப்படுகிறது
பெரியாழ்வார் தம்முடைய திரு மகளாரான ஆண்டாளை ஸ்ரீ ரெங்கநாதனுக்கு பாணி கிரஹணம் பண்ணிக் கொடுத்து
ஸ்ரீ ராமாண்டார் என்னும் திருக்குமாரரும் தாமுமாக அவளை திரு ஆபாரணங்கள் முதலிய வரிசைகளுடன் ஸ்ரீ கோயிலிலே கொண்டு விட
அவள் பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமாக –பெரிய பெருமாள் திரு உள்ளம் உகந்து அவளது ஐயரான பெரியாழ்வாரை ஐயன் என்றும்
அவரது திருக் குமாரரான ராமாண்டானை பிள்ளை ஐயன் என்றும் அருளப்பாடிட்டு அழைத்து தீர்த்தம் பறியாட்டங்களை ப்ரஸாதித்து அருளி
தம்முடைய ஆதீனங்களை நிர்வஹித்துக் கொண்டு சொத்துக்களுக்கு எல்லாம் கருட முத்ரை இடச்சொல்லி ஸ்ரீ ரெங்கத்திலேயே நித்ய வாஸம் பண்ணும்படி நியமித்து அருளினார் –
பெரியாழ்வார் பெரிய திருவடி நாயனார் குலத்திலே முகுந்த பட்டருக்கு திருக்குமாரராக
கலி பிறந்த 46 மேல் செல்லா நின்ற க்ரோதன நாம ஸம்வத்சரத்திலே -ஆனி மாஸம் -9 தேதி ஸ்வாதி திரு நக்ஷரத்திலே திரு அவதரித்தார்
கலி -105-ஸம்வத்ஸரத்தில் -அரங்கன் ஆண்டாள் திருக்கல்யாணம் -அதுக்கு எழுந்து அருளப் பண்ணி வந்த
பெரிய திருவடியும் ஆண்டாளும் அரங்கனுக்கு சேர்ந்தே இன்றும் ஸேவை ஸாதித்து அருளுகிறார்
ஆகவே தான் கருட முத்ரை இலச்சினை செய்ய அரங்கன் அருளிச் செய்தார்
இன்றும் கோயில் கருவூல அறைக்கும் திரு ஆபரண பெட்டிகளுக்கும் உத்தம நம்பியை முத்ர அதிகாரியாக்கி கருட முத்ரையே வைக்கப்படுகிறது
பெரியாழ்வார் திருக்குமாரரான ராமாண்டரான பிள்ளை ஐயன் அவர்களின் திருக்குமாரர் பெரிய திருவடி ஐயன் –
இவரைப் பெருமாள் உத்தம நம்பிள்ளை என்று அருளப்பாடிட்டு அழைத்தார்
பிள்ளை ஐயன் திருக்குமாரரான உத்தம நம்பிள்ளைக்கு -பிள்ளை ஐயன் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
அவரது திரு மாளிகை ஐயன் திருமாளிகை என்று வழங்கப்பட்டு வருகிறது –
———————————
வம்ஸ பரம்பரை
1-பெரியாழ்வார் -ஐயன் -110 வருஷங்கள்
2-ராமாண்டார் -பிள்ளை ஐயன் -70 வருஷங்கள்
3-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பிள்ளை -(1)-பிள்ளை ஐயன் உத்தம நம்பி-60 வருஷங்கள்
4-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்களுக்கு 4 மாதங்களும் 16 நாள்களும்
5-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(2)-65-வருஷங்கள்
6-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்கள்
7-பெரிய ஐயன் உத்தம நம்பி -(1)-40 வருஷங்கள் 2 மாதங்கள் -14 நாள்கள்
8-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(3)-50 வருஷங்கள்
9-சின்ன ஐயன் உத்தம நம்பி -(1)-69- வருஷங்கள்
10-அநந்த ஐயன் உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்
11-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
12-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(1)-70-வருஷங்கள்
13- வரதராஜ உத்தம நம்பி -(1)-60 வருஷங்கள் -1 மாதம் -15-நாள்கள்
14-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(3)-60-வருஷங்கள்
15-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்
16-பெரிய ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
17-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-99-வருஷங்கள்
18-அநந்த ஐயன் உத்தம நம்பி -(2)-70-வருஷங்கள்
19-ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்
20-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(3)-56-வருஷங்கள் -3 மாதங்கள் -3 நாள்கள்
21-வரதராஜ உத்தம நம்பி -(2)-57-வருஷங்கள்
22-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி -(2)-67-வருஷங்கள்
23-அநந்த ஐயன் உத்தம நம்பி -(3)-62-வருஷங்கள்
24-சின்ன ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்
25-திருமலை நாத உத்தம நம்பி -(1)-65-வருஷங்கள்
26-முத்து ஐயன் உத்தம நம்பி என்கிற ரெங்கராஜ உத்தம நம்பி -(2)56-வருஷங்கள்
27-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி -(1)-70 வருஷங்கள்
28-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி -(3)-66-வருஷங்கள்
29-வரதராஜ உத்தம நம்பி -(3)-59 வருஷங்கள் -ஐந்து மாதங்கள் 4 நாள்கள்
30-அநந்த ஐயன் உத்தம நம்பி -(4)-55 வருஷங்கள்
31-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(3)-65 வருஷங்கள்
32-பெரிய பெருமாள் உத்தம நம்பி -70 வருஷங்கள் -9 மாதங்கள் -25 நாள்கள்
33-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(4)-60 வருஷங்கள்
34-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(4)-61 வர்ஷன்கள் -7 மாதங்கள் -1 நாள்
35-ரகுநாத உத்தம நம்பி -(1)-55 வருஷங்கள் -3 மாதங்கள் -12 நாள்கள்
36-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி -(1)-53 வருஷங்கள் -2 மாதங்கள்
37-அனந்த ஐயன் உத்தம நம்பி -5-60 வருஷங்கள்
38-வரதராஜ உத்தம நம்பி–(4-)49 வருஷங்கள்
39- ஸ்ரீ ரெங்க உத்தம நம்பி -61- வருஷங்கள் -3 மாதங்கள் -9 நாள்கள்
40-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி -(1)-61 வருஷங்கள்
41-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி -(1)-57 வருஷங்கள் -2 மாதங்கள் -8 நாள்கள்
42-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (5)–30 வருஷங்கள்
43-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (5)–44 வருஷங்கள்
44-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி (4)–30 வருஷங்கள் 3 மாதங்கள் 3 நாள்கள்
45-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி (4)-40 வருஷங்கள்
46-குமார வரதராஜ ஐயன் உத்தம நம்பி (5)-50 வருஷங்கள் -9 மாதங்கள் –
47-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (2 )-49 வருஷங்கள்
48-ரெங்கநாத உத்தம நம்பி (5)–59 வருஷங்கள்
49-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (2)-42 வருஷங்கள் -6 மாதங்கள் -9 நாள்கள்
50-பெருமாள் ஐயன் உத்தம நம்பி -58 வருஷங்கள் -3 மாதங்கள் -13 நாள்கள்
51-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (6) –47 வருஷங்கள் -2 மாதங்கள் -5 நாள்கள்
52-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (@) 49 வருஷங்கள்
53-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி (5) 56 வருஷங்கள் நான்கு மாதங்கள் 7 நாள்கள்
54-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (3) 57 வருஷங்கள்
55-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (6)-37 வருஷங்கள் 10 மாதங்கள்
56-திருவடி ஐயன் உத்தம நம்பி -62 வருஷங்கள்
57-சொல் நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (7)-53 வருஷம் -237 நாள்கள்
58-சின்ன ஐயன் உத்தம நம்பி (3)-37 வருஷங்கள்
59-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (7)-49 வருஷங்கள்
60-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (4) 61 வருஷங்கள் 2 மாதங்கள் 3 நாள்கள் –
61-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (3) 55 வருஷங்கள்
62-ரகுநாத உத்தம நம்பி (2) 38 வருஷங்கள்
63-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (8) 50 வருஷங்கள்
64-கோவிந்த ஐயன் உத்தம நம்பி -39 வருஷங்கள்
65-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி (2) 66 வருஷங்கள் 3 மாதங்கள் 7 நாள்கள்
66-வரதராஜ உத்தம நம்பி (6)–59 வருஷங்கள்
67-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி (9) 50 வருஷங்கள்
68-அநந்த ஐயன் உத்தம நம்பி (6) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 10 நாள்கள்
69-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (3) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 17 நாள்கள்
70-பெரிய ஐயன் உத்தம நம்பி (3)60 வருஷங்கள்
71-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (10)-52 வருஷங்கள்
72-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (5)63 வருஷங்கள்
73-பெரிய ஐயன் உத்தம நம்பி (5) 67 வருஷங்கள் 1 மாதம் 1 நாள்
74-மஹா கவி ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (4)-கருட வாஹந பண்டிதர் -கவி வைத்ய புரந்தரர் -69 வருஷங்கள்
75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (1)43 வருஷங்கள்
76-வரதாச்சார்ய உத்தம நம்பி –40 வருஷங்கள்
77-ராமாநுஜர்சார்ய உத்தம நம்பி -53 வருஷங்கள் இ மாதம் 7 நாள்கள்
78-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (1)-31 வருஷங்கள்
79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ண ராய உத்தம நம்பி –79 வருஷங்கள்
80-வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி(2) -68 வருஷங்கள்
81-ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி -72 வருஷங்கள்
82-திருமலை நாத உத்தம நம்பி (2) 67 வருஷங்கள்
83-குடல் சாரவாளா நாயனார் என்கிற சின்ன க்ருஷ்ணராய உத்தம நம்பி –52 வருஷங்கள் 1 மாதம் 8 நாள்கள்
84-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (6) 53 வருஷங்கள்
85-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்கராஜா உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்
86-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்
87-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (8) 45 வருஷங்கள் 7 மாதங்கள்
88-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (3)
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (3) 18 வருஷங்கள்
90-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -ஸ்வீ காரம்
91- உத்தம நம்பி ஸ்ரீ நிவாசார்யர்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யர்
93-உத்தம நம்பி தாதாச்சாரியர்
94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்
——————-
இவர்கள் செய்து அருளின கைங்கர்யங்கள்-
3-முதல் முதலாக ஸ்ரீ ரெங்க ஸ்ரீ நிர்வாஹம்
4- தேவராஜ மஹா ராஜர் மூலமாய் -முத்துக்குடை தங்க ஸிம்ஹாஸனம் போன்றவை சமர்ப்பித்தார்
11- நவரத்ன அங்கி சமர்ப்பித்தார்
13– நவரத்ன கிரீடம் சமர்ப்பித்தார்
15- தங்க வட்டில்கள் சமர்ப்பித்தார்
21- வெள்ளிக்குடம் சமர்ப்பித்தார்
27- கோபுர மண்டப பிரகார ஜீரண உத்தாரணம் பண்ணினார்
28- ஸ்தலத்துக்கு வந்த இடையூறுகளைத் தீர்த்தார்
35-த்வஜ ஆரோஹண மண்டப ஜீரண உத்தாரணம் பண்ணினார்
39- திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
47-திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
54- பெருமாள் உபய நாச்சிமார்களுக்கு தங்கக் கவசங்கள் கிரீடங்கள் சமர்ப்பித்தார்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கும் கவசம் கிரீடம் சமர்ப்பித்தார்
57-இவர் காலத்தில் தேசாதிபதியான பிரபு ஸ்ரீ ரெங்க நாச்சியாரைத் திரு வீதி எழுந்து அருளப் பண்ணி உத்சவம் நடத்த வேணும் என்று சொல்ல
இவர் கூடாது என்ன
பிரபுவும் அப்படியே நடத்த வேணும் என்று பலவந்தம் பண்ண
கழுத்தை அறுத்துக் கொண்டார்
உடனே தாயார் அர்ச்சக முகேந ஆவேசமாகி தமக்கு விருப்பம் இல்லாமையை அறிவித்து தடை செய்தாள்
நாச்சியாரால் இவரது சொல் நிலை நாட்டப்பட்டது படியே இவருக்கு இது பட்டப்பெயர் ஆயிற்று
63- நாச்சியார் கோயில் சந்தன மண்டபம் முதலியவற்றை ஜீரண உத்தாரணம் பண்ணினார்
64- பெருமாள் சந்நிதி வாசலுக்கும் அதற்கு உட்பட்ட திரு அணுக்கன் திரு வாசலுக்கும் தங்கம் பூசவித்தார்
70-ஆதி சேக்ஷனுடைய சிரஸ் ஸூ க்களுக்கு தங்கக் கவசம் சமர்ப்பித்தார்
74- கருட வாஹந பண்டிதர்
இவர் ஸ்ரீ ராமானுஜர் காலத்தவர்
ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி இவர் திரு நாமம்
இவர் சிறந்த கவியாய் இருந்ததால் ஸ்ரீ நிவாஸ மஹா கவி என்றும்
சிறந்த வைத்தியராயும் இருந்ததால் கவி வைத்ய புரந்தரர் என்றும் சொல்லப் படுபவர்
உடையவரை பெரிய பெருமாள் நியமனப்படி எதிர்கொண்டு அழைத்து -வரிசைகளை சமர்ப்பித்தார்
அவருக்கு அந்தரங்க கைங்கர்ய பரராயும் இருந்தார்
இவரையே பெரிய பெருமாள் பெரிய அவஸர அக்கார அடிசிலை கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு கொண்டு கொடுக்க நியமித்து அருள
அதில் இரண்டு திரளை ஸ்வீ கரித்து ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப்பிள்ளையும் அவதரித்தார்கள்
முதலியாண்டான் தத்தியானத்துடன் நாவல் பழம் சமர்ப்பிக்க -இவரைக் கொண்டே தன்வந்திரி சாந்நித்தியை ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்
இவரே திவ்ய ஸூரி சரிதம் பிரசாதித்து அருளினார்
75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
கருட வாகன பண்டிதருக்குப் பின்பு ஸ்ரீ ரெங்க ஸ்ரீ கார்யம் நிர்வஹித்தவர்-உடையவர் திரு நாட்டுக்கு எழுந்து அருளியது இவர் காலத்திலேயே –
உடையவர் இருக்கும் பொழுதே கருட வாஹந பண்டிதர் திரு நாட்டுக்கு எழுந்து அருளி விட்டார்
ஆகவே திவ்ய ஸூரி சரிதம் உடையவர் திரு நாட்டை அலங்கரித்தது பற்றிக் குறிப்பிட வில்லை
உடையவரின் சரம கைங்கர்யங்களை செய்தவர் இவரே
79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற கிருஷ்ண ராயர் உத்தம நம்பி
இவர் காலத்துக்கு முன் கி பி 1310 ல் மாலிக் கபூர் படை எடுத்து ஸ்ரீ ரெங்கத்தைப் பாழ் படுத்தினான் –
செஞ்சி ராஜா கொப்பண உடையார் திருமலையில் இருந்து எழுந்து அருளப்பண்ணி செஞ்சியிலேயே பூஜை பண்ணிக் கொண்டு இருந்தார்
கிபி 1371ல் இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜயநகர ராஜாவைக் கொண்டு துலுக்கப் படையை ஜெயித்து விரட்டிவிட்டு
விஜய நகர இரண்டாம் அரசரான புக்க ராயர் -அவரது குமாரரான ஹரிஹராயர் இருவரையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அழைத்து வந்தார்
செஞ்சி ராஜா கொப்பண உடையாரும் இவருக்கு உதவியாய் இருந்து துலுக்கர்களை வென்று பெருமாளை ஸ்ரீ ரெங்கத்துக்கு எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு வந்தார்
புக்கராயர் காலத்தில் கன்யாகுமரி வரை ராஜ்ஜியம் பரவி இருந்தது
சோழ பாண்டிய மன்னர்கள் இவருக்குக் கப்பம் செலுத்தி வந்தார்கள்
இந்த கிருஷ்ண ராய உத்தம நம்பியால் மேல் உள்ள அரசர்களால் தாராதத்தமாக 17000 பொன் தானம் பெற்று கோயிலுக்கு 106 கிராமங்கள் வாங்கப் பட்டன
மேலும் சகாப்தம் 1304-கிபி 1382-மேல் -ருதி ரோத்காரி வருஷம் முதல் ஈஸ்வர வருஷம் வரையில்
ஹரிஹர ராயர் மஹா ராயர் -விருப்பண உடையார் -கொப்பண உடையார் -முத்தய்ய தென்நாயகர் -தம்மண்ண உடையார் -பிரதானி சோமப்பர் -காரியத்துக்கு கடவ அண்ணார்
முதலானார்கள் இடம் 5000பொன் வாங்கி அதன் மூலம் 13 க்ராமங்கள் வாங்கப்பட்டன –
சகாப்தம் 1207-கிபி 1375-ல் திருவானைக் காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் எல்லைக் சண்டை உண்டாகி -விஜய நகர மன்னர் அறிந்து அவர் தம் குருவான வ்யாஸ உடையார் முதலானவர்களை மத்தியஸ்தம் பண்ண அனுப்பினார்
பெருமாளுக்கு ஸ்தான அதிபதியான உத்தம நம்பி ஈரப்பாவாடை உடுத்தி கையில் மழு ஏந்தி கண்ணைக் கட்டிக்கொண்டு எந்த வழி போகிறாரோ அந்த வழியே பெருமாளும் எழுந்து அருள வேண்டியது என்று மத்யஸ்த்தர்கள் நிச்சயித்தார்கள் –
திருவானைக்காவலாரும் அதை சம்மதிக்க அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு எல்லை ஓடியதால்
இவருக்கு எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
தான் எல்லை ஓடி நின்ற இடத்தில் 16 கால் மண்டபமும் இரண்டொரு சிறு மண்டபங்களும் இவர் கட்டி வைத்தார்
பெருமாள் நாச்சிமார்களுடைய ஒவ்வொரு உத்சவத்தின் கடைசி நாளில் இன்றைக்கும் திருத்தாழ்வாரை தாசர் விண்ணப்பம் செய்யும் திருப்பணிப்பு மாலையில் உத்தம நம்பிக்க ஏற்பட்ட
மல்ல நிலையிட்ட தோள் அரங்கேசர் மதிளுள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போல் அல்ல -நீதி தன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தம நம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கும் எட்டு எழுத்தே –என்ற பாசுரத்தில்
எல்லை நிலை இடுகைக்கு ஆதாரமாய் இருந்த அஷ்டாக்ஷரத்தின் சிறப்பும்
59 வது உத்தம நம்பி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அனுக்ரஹத்தால் தம்முடைய சொல்லை நிலையிட்ட விவரமும் தெரிகிறது
இப்போது உள்ள ஸ்ரீனிவாச நகர் பள்ளிக்கூடமே முன்பு 16 கால் மண்டபமாக இருந்த இடம் –
பங்குனி 8 நாள் எல்லைக்கரை நம்பெருமாள் எழுந்து அருளும் போது
இப்போதும் அங்கே வெறும் தரையில் உத்தம நம்பி ஐயங்கார் வ்யாஸ ராய மடத்தார் முதலானோர் பெற்றுக் கொள்கிறார்கள் –
இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜய நகர அரசர் புக்க உடையார் உதவியுடன் துலா புருஷ மண்டபம் கட்டி வைத்தார்
ஹரிகர ராயர் விருப்பண்ண உடையார் துலா புருஷன் ஏறிக் கொடுத்த பொன்னைக் கொண்டு ரெங்க விமானத்தைப் பொன் மேய்ந்தார்
நம்பெருமாளும் அப்போது செஞ்சியில் இருந்து எழுந்து அருளினார்
விருப்பண்ண ராயர் பெயரில் சித்திரை திரு நாள் நடத்து வைத்து ரேவதியின் திருத்தேர் -செய்ததும் இந்த உத்தம நம்பியே
துலுக்கர் கலஹத்தில் யானை ஏற்று மண்டபம் ஜீரணமாக இந்த உத்தம நம்பி ஜீரண உதாரணம் பண்ணி வைத்தார்
யானை மேல் வைக்கப்படும் பூ மாங்குத்தி -என்ற புஷ்ப அங்குசம் உபஹார ஸ்ம்ருதியாக வாஹந புறப்பாடுக்குப் பின் இன்றும் உத்தம நம்பி பரம்பரையில் உள்ளாருக்கு அனுக்ரஹிக்கப் படுகிறது
இவர் ஹரிஹர ராயர் பேரால் திருப்பள்ளிக்கட்டில் என்னும் திவ்ய ஸிம்ஹாஸனம் சமர்ப்பித்தார்
இப்போதும் திருக் கார்த்திகை அன்று திருமுகப் பட்டயம் செல்லுகையில் –நாம் –ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டிலின் மேல் வீற்று இருந்து -என்றே பெருமாள் அருளிச் செய்கிறார்
இவர் கைங்கர்யங்களைப் பண்ணிக்கொண்டு 99 வருஷங்கள் இருந்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
—————
80- வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பியின் திருக்குமாரர்
சகாப்தம் -1329-கிபி 1406 மேல் ஸர்வஜித்து வருஷம் முதல் பிரமோதூத வருஷம் வரையில்
44 வருஷங்களில் நான்கு தடவை விஜய நகரம் சென்று பெருமாளுக்கு திருவிடையாட்ட கிராமங்கள் வாங்க -18000 பொண்ணுக்கு 101 கிராமங்கள் வாங்கினார்
இவர் காலத்தில் பெரிய ஜீயர் -மணவாள மா முனிகள் சன்யாசித்து கோயிலுக்கு எழுந்து அருள
பெருமாள் நியமனப்படி பல்லவ ராயன் மடத்தில் எழுந்து அருளப் பண்ணினார்
இவர் ஜீயருடைய வெள்ளை திருமேனியை தரிசித்து தேற மாட்டாமல் பெருமாளை சேவித்துப் பரவசராய் இருக்க
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் அணையான் திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி
இவர் கிடீர் ஜீயராக அவதரித்து அருளினார் – அவர் வண்ணம் வெளுப்பு என்று விஸ் வசித்து இரும் என்று அருளிச் செய்தார்
இவரும் பீத பீதராய் கோயில் அன்னான் உடன் ஜீயர் இடம் சென்று தெண்டம் சமர்ப்பித்துப் பிரார்த்திக்க
அப்பொழுது சாதித்த சேவை இன்றும் ஒரு கம்பத்தில் மேற்கு முகமாக சித்திர ரூபமாகவும் இரண்டு பக்கமும் உத்தம நம்பியும் கோயில் அண்ணனும் எழுந்து அருளி உள்ளார்கள்
ஜீயரின் நியமனம் படி அண்ணனுக்கு ஆச்சார்ய புருஷ வரிசையாக பெரிய நம்பிக்குப் பிறகு தீர்த்தமும் -கந்தாடை அண்ணன் என்ற அருளப்பாடும் உத்தம நம்பியால் ஏற்பட்டது
திருக்கார்த்திகை அன்று ஆழ்வாருக்கு திருமுகப்பட்டயம் கொண்டு போகும் தழை யிடுவார் கைங்கர்யம் -தம்முடையதாய் இருந்ததை உத்தம நம்பி அண்ணனுக்கு கொடுத்தார்
பூர்வம் வல்லப தேவன் கட்டி வைத்த வெளி ஆண்டாள் சந்நிதியையு ம் -தம்முடையதாய் இருந்ததை -அண்ணனுக்கு கொடுத்தார்
இன்றும் அண்ணன் வம்சத்திலேயே இருந்து வருகிறது –
சகாப்தம் 1354-கிபி 1432-பரிதாபி வருஷம் -அனுமந்த தேவர் கோயில் -திருப்பாண் ஆழ்வார் உள்ள வீர ஹனுமான் கோயில் தக்ஷிண சமுத்ராதிபதி தென்நாயகன் கைங்கர்யமாக கட்டி வைத்தார்
கிபி 1434-திருவானைக்காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் இடையில் மதிள் கட்டி வைத்தார்
இந்த உத்தம நம்பி காலம் வரையில் வசந்த உத்சவம் திருக்கைவேரிக்கரையிலே நடந்து வந்தது
ஒரு வைகாசியில் வெள்ள ப்ரவாஹத்தால் இது நடவாமல் போக கோயிலுக்கு உள்ளே ஒரு பெரிய குளம் வெட்டி -கெடாக் குழி – அதில் மய்ய மண்டபம் சுற்று மண்டபம் பெரிய மண்டபமும் போடுவித்து
இப்பொழுதும் அந்த வம்சத்தார் கைங்கர்யமாகவே நடைபெற்று வருகிறது
இவர் 68 திரு நக்ஷத்திரங்கள் எழுந்து அருளி இருந்தார்
தம்முடைய தம்பிக்கு சக்ர ராயர் பட்டப்பெயர் வாங்கிக் கொடுத்து தனியாக அவருக்கு ஆதீனம் மரியாதை ஏற்படுத்தினார்
————-
பூ சக்ர ராயர்
சக்ர ராயருடைய பாண்டித்யத்துக்கு ஏற்க பூ மண்டலத்துக்கே ராயர் என்னும் படி பூ சக்ர ராயர் என்று முடி சூட்டி ஸ்ரீ ரெங்கத்தில் தனி ஆதீனமும் உண்டாக்கினார் அரசர்
பிள்ளை ஐயன் என்ற பேராய இருந்த உத்தம நம்பி கோசம் இவர் காலத்துக்குப் பின்னர் இரண்டாக்கப் பிரிந்து பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -என்று தேவ ஸ்தான கணக்குகளில் முறை வீதம் இரண்டாக இன்றைக்கும் எழுதப்படுகிறது –
சகாப்தம் 1337-கிபி 1415-மன்மத வருஷத்தில் -பெரிய திரு மண்டபத்தில் -கருட மண்டபத்தில் -கருடன் கலஹத்தில் பின்னமான படியால்
அழகிய மணவாளன் திரு மண்டபத்தில் சந்நிதி கருடனை ஏறி அருளப் பண்ணினார்
மன்மத வருஷே ஜ்யேஷ்ட்ட்டே ரவி வாரசே ரேவதீ தாரே
ஸ்ரீ சக்ர ராய விபுநா ஸ்ரீ மான் கருட ப்ரதிஷ்டிதோ பூத்யை -என்று தர்மவர்மா திரு வீதியிலே இந்த வ்ருத்தாந்தம் சிலா லிகிதம் பண்ணப்பட்டது –
பூர்வம் சோழன் ப்ரதிஷ்டையான சக்ரவர்த்தி திரு மகனையும் ஜீரண உத்தாரணம் பண்ணி வைத்து
அதிலே உள்ளாண்டாள் நாச்சியார் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் – ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்-
————
திம்மணார்யர்
இவரும் வழி யடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பிக்கு திருத்தம்பி
இவர் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஸ்ரீ ராமானுஜ பீடமான ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் பட்டத்தில் எழுந்து அருளி இருந்தார் –
————
51- ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி
இவர் நிர்வஹித்த காலத்தில் பங்குனி ஆதி ப்ரஹ்ம உத்சவம் 3 நாள் ஜீயர் புரத்துக்குப் போக வர குதிரை வாஹனம் ஏற்பட்டு இருந்தது
மழை பெய்ததால் மேல் உத்தர வீதியில் உத்தம நம்பி திருமாளிகையிலே நம் பெருமாள் எழுந்து அருளி இருந்தார்
ஆ வ்ருஷ்டி பாத விரதே -மழை ஓயும் வரையிலே –
இனி தூர புறப்பாட்டுக்கு வாஹனம் கூடாது என்றும் பல்லக்கு தான் உசிதம் என்றும் ஏற்பாடு செய்தார்
இவரே நான்கு பக்கங்களிலும் நான்கு நூற்று கால் மண்டபங்களைக் கட்டி வைத்தார்
அக்னி மூலையிலே ஸ்ரீ பண்டாரம் -நைருதியில் கொட்டாரம் -வாயுவில் முதல் ஆழ்வார் வாஸூ தேவன் சந்நிதி -ஈஸான்யத்தில் ராமர் சந்நிதி கட்டப் பட்டன
இந்தக் கைங்கர்யத்தை பெரிதும் உகந்து -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று அவருக்குப் பட்டப்பெயரும் அருளினார்
அத்யயன உத்சவ மேலப்படி மரியாதை உத்தம நம்பிக்கு நடக்கையில் இந்த அருளப்பாடு வழங்குகிறது
இவ்வாறு பல கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு 72 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
———–
82- திருமலை நாத உத்தம நம்பி
இவர் லஷ்மீ காவ்யம் அருளிச் செய்துள்ளார்
பெரிய திரு மண்டபத்துக்கு கிழக்கே கிளி மண்டபம் என்னும் நூற்றுக் கால் மண்டபம்
இவரது முன்னோர் 81 உத்தம நம்பி தொடங்கியதை பூர்த்தி செய்தவராவார் –
இதில் ஜ்யேஷ்டாபிஷேகமும் ஸஹஸ்ர கலச அபிஷேகமும் -பகிரங்கமாக நடைபெற்று வந்தது
இப்பொழுது பரம ஏகாந்தமாய் விமான ப்ரதக்ஷிணத்தில் நடைபெறுகிறது
ப்ரஹ்ம உத்சவம் 8 திரு நாள் எல்லைத்த திருநாளாகவே நடைபெறுகிறது
இவர் 37 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார் –
————–
83-குடல் சார வாளா நாயனார் என்கிற சின்ன கிருஷ்ண ராய உத்தம நம்பி
இவர் கோயில் நிர்வகிக்கும் பொழுது கர்ணாடக நாயகர்கள் மதுரையில் அரசாண்டு இருந்தார்கள்
1534-ஜய வருஷத்தில் ஷாமம் வரவே கோயில் திருக்கொட்டாரத்தில் இருக்கும் நெல்லைக்கு கொடுக்க கேட்டார்கள்
உத்தம நம்பி -அரங்கன் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது என்று ஹிதம் சொல்லியும் நாயகர் பலவந்தம் பண்ணினார்
நீர் கூடை பிடித்தால் நான் மரக்கால் பிடித்து அளக்கிறேன் என்று சொல்லி
முதல் மரக்காலுக்கு திருவரங்கம் என்று அளந்து மறு மரக்காலுக்கு -பெரிய கோயில் -என்று சொல்லி
தம் குடலை அளந்து பிராண தியாகம் பண்ணினார்
ராஜாவும் வெளியே வந்து -குடல் சாரா வாளா நாயனார் -என்ற பட்டம் சூட்டினார்
அது முதல் வேறே காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நிஷ்கர்ஷம் ஆயிற்று
த்ரவ்யம் அளக்கும் பொழுதும் திருவரங்கம் -பெரிய கோயில் -மூன்று என்று சொல்லியே அளக்கும் வழக்கமும் வந்தது
கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்த செங்கமல வல்லித்தாயார் -தான்ய லஷ்மி எழுந்து அருளி இருக்கும் திரு மதிள் கட்டினார்
இவர் 32 திருநக்ஷத்ரம் 1 மாதம் 8 நாள்களுக்குப் பின் திருநாட்டை அலங்கரித்தார் –
——————
86- ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
கிபி 1662-1692- வரை ஆண்ட நாயக்கர்களின் ஏழாமவரான கர்ணாடக ஷோக்கா நாத நாயகர் பெருமாள் உத்சவங்களுக்காக பல கிராமங்களை சமர்ப்பித்து தம்மை ஆசீர்வதிக்க சாசனம் இவருக்கு தெலுங்கில் எழுதிக் கொடுத்தாட்ர்
————
88- ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் காலத்தில் ஸ்ரீ ரெங்கம் மஹாராஷ்டிரர்களுக்கு அதீனமாயிற்று -திருச்சியில் முராரிராவ் நீதி செலுத்தி வந்தார்
கிபி 1748க்கு மேல் திருச்சிராப்பள்ளி நவாப் ஷீரஸ்வதீன் தேவுல்லா மஹம் மதலிகான் பஹதூர் வசமாயிற்று
———–
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
இவர் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பியின் திருக்குமாரர் –
இவர் நிர்வாகத்துக்கு வரும் பொழுது அதி பால்யமாய் இருந்தார்
அப்போது அமீர் முறாம் பகதூர் நவாப் நிர்வாகத்துக்கு ஒரு அமுல்தாரனையும் நியமித்தார்
18 திரு நக்ஷத்ரத்திலேயே இவர் ஆச்சார்யர் திருவடி சேர ஸ்வீ காரம் மூலம் 90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி நிர்வாஹத்துக்கு வர
அப்பொழுது ஆங்கிலேயர் வசமாயிற்று
இவர் நிர்வாகத்துக்கு வந்த பின்னர் அவருடைய தாயாதியான சக்ரராய ஸ்ரீ ரெங்க ராஜருக்கும் விவாதம் உண்டாகி நியாய ஸ்தலம் போக வேண்டிற்று
அதுக்கும் மேலே 1830க்கு மேல் உத்தம நம்பி திரு மாளிகையில் தீப்பற்றி ஓரந்தங்களும் சொத்துக்களை பற்றிய ஆவணங்களும் எரிந்து போயின
இவ்வாறு பல காணி பூமி சந்நிதி மிராசுகளை இழக்க வேண்டிற்று
இவ்விதமாக குடும்பம் சோர்வுற்றது
1842 வரை சர்க்கார் நிர்வாகத்திலே கோயில் இருக்க பரம்பரை தர்மகர்த்தாவாக 90 உத்தம நம்பி நியமிக்கப் பட்டார்
1859 திரு நாடு எழுந்து அருளினார்
90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பிக்கு ஐந்து திருக் குமாரர்கள்
ஜ்யேஷ்டர் சிங்கு ஐயங்கார்
இவர் சந்ததி விருத்தி யாகவில்லை
இவர் தம்பி உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர் -உத்தம நம்பி ரெங்க ஸ்வாமி ஐயங்கார் சந்ததியார்களே இப்பொழுது உள்ளார்கள்
91-உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர்–1872 திருநாடு அலங்கரித்தார்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -67 திரு நக்ஷத்திரங்கள்
92-உத்தம நம்பி தாத்தாச்சாரியார் -61 திரு நக்ஷத்திரங்கள்
94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்
1898-கார்த்திகை பூரம் ஜனனம்
93-உத்தம நம்பி தாதாச்சார்யருக்கு சந்ததி இல்லாமையால் இவர் 1903 ஸ்வீ காரம்
தர்ம கர்த்தாவாக ஆறு தடவை 1924 முதல் 1949 வரை இருந்தார்
இவர் திருத்தமையானாரான ஸ்ரீ நரஸிம்ஹா சார்யர் இந்த வம்சப் ப்ரபாவம் அருளிச் செய்துள்ளார்
அத்யயன உத்சவம் இராப்பத்தில் மேலப்படியில் -உத்தம நம்பிள்ளை -பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று
அருளப்பாடு சாதித்து தொங்கு பட்டு பரிவட்டம் சாதிக்கப்படுகிறது
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உத்தம நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.