Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

January 15, 2023

இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி –
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்

—————-

இரணியன்  வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழு-இவரே மேட்டு அழகிய சிங்கர் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் கம்பநாற்றத்தாழ்வானுக்கு தீர்த்த பரிவட்டம் பிரசாய்த்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து -நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –

—————————————–

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்

அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-

மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-

மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ

திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

பாரணம் -பாரணா பாராயணம் -உணவு திருப்தி படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ

————–

‘நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே.

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே பர் அடியிலே காட்டி அருளினார் அன்றோ

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விலக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விலக்காயும் என்றுமாம்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கு நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்
ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்

வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்

வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது

இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக்கடலிலே ஆடுவதே யாகும்

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

அத்தி கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளே -என்றவாறு –

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

பனுவல் -ஆகமம் -கல்வி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் –

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப்பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்-ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்

———

இயல் இடம் கூறல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத்துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

நிலத்தேவர் பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவும் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ

நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

கல் படிக்கற்கள் என்றபடி
ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-

நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–

மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து அடைந்தவர் பெரும் பேற்றை அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித்தாய் தாயாருக்குச் சொல்வது

————

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

குறிஞ்சி திணை -அகத்துறை
இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –

திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்

விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்

தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாதித்த திரிவதே வேண்டும் என்கிறார் –

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-

———–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம் கார்யம் இல்லை -இனி எமக்கு ஏது பிறவித் துயர்-

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

தன் முடியால் அவன் தாளிணைக்கீழ் -நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்
திருச் சங்கணித்துறை க்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

பாரதந்தர்ய ஞான சித்தியை -காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிராசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

மற வாதியர் முதல் மகரக்குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-

இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்

————

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தனை
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று
நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பைசுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ

———–

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

———

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

சின வாரணம் -மத யானை
துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம்புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –
இச்சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –
ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –
சிப்பி உலகோர் -அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்

————

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக்கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்

—————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
பவரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப்புலவர்களை வென்று ஆட் கொண்டாரே
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் குத்தையும் வினையாவி தீர்த்தேன் -நான்முகன் -91-

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளை போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

காமம் வெகுளி மயக்கம் -முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே

———–

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-

———-

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குக்கப்படலாம் -36-போல் இதுவும் –

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ

————

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -உபநிஷத்துக்கள்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம் ப்ரார்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

தெய்விகக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட -வி தொழில் பெயர் விகுதி

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்

————-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

—————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சரவாதம் பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு

————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

விரஹ தானத்தால் மேகக்கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக்களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –

—————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம் 

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம் –

————–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்

————–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்து -பாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே-

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

ஆழ்வார் 11 அவதாரம் -தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்

———–

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வழிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –

———–

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்

————-

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த -கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே

————–

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்

திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு பூனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

தினை -மிகச் சிறிய -பனை -மிகப் பெரிய
கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத்த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் -பிள்ளை அந்தாதி –

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

————–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

கரும்பு போல் இனியது என்னாமல்
ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

அருளிச் செய்சல்களைக் காத்தாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ

————

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் செனறாக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும்  தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ

———–

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்

————

இதுவும் அது

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் -முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப்பிரபந்தம் என்றபடி

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்துதி —

September 4, 2022

ஸ்ரீமத் பாகவதம்–

கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷூ சபூரிசா
தாம்ரபர்ணீ நதீ யத்ர கிருதமாலா பயகி தீ
காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகா நதீ –ஸ்ரீமத் பாகவதம்–என்று மகரிஷி அருளிச் செய்தான் –

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்

எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள்,

எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார்.

அப்பொழுது ஸாதிக்கிறார்:

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

“அரசே! ஸத்ய யுகம் மற்றும் பிற யுகங்களின் வாசிகள் இந்தக் கலியுகத்தில் பிறவியெடுக்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
ஏனெனில் இந்த யுகத்தில் நாராயணின் பக்தர்கள் பலர் இருப்பார்கள்.
இவர்கள் பல்வேறு இடங்களில் தோன்றி ஹரியிடம் அளவில்லா பக்தி கொண்டிருப்பார்கள்.
வேந்தே! இவர்கள் பலவிடங்களில் தோன்றினாலும் குறிப்பாக வளங்கள் நிறைந்த த்ராவிட தேசத்தில் பாய்ந்தோடும் புண்ய நதிகளான
தாம்ரபர்ணி,
க்ருதமாலா,
பயஸ்வினி,
மிகவும் புண்யம் வாய்ந்த காவேரி,–கங்கையின் புனிதமாய காவிரி 

பிரதீசி,
மஹாநதி ஆகிய நதிகளின் கரைகளிலும்
மற்றும் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் கரைகளிலும் அநேகமான பேர்கள் தோன்றுவார்கள்.
அப்புண்ய நதிகளின் தீர்த்தத்தைப் பருகுபவர்கள்
வாசுதேவனின் பரம பக்தர்களாக இருப்பார்கள்” என்று தலைக் கட்டுகிறார்.

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

————-

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள்–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள்

ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்வாமிகள்

ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள்

———————–

ஸ்ரீ ப்ரஹ்ம ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய் போகாமே சர்வாதிகரமாம் படி த்ராமிடியான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் -என்கிற பக்தியாலே வாசிகமாக்கி
மரங்களும் இரங்கும் வகை என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உபாதானம் ஆழ்வார் ஆகையாலும் அவர் திருவடிகளிலே விழுகிறார்

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே கிருஷ்ண வித்தராய் இருக்கும் படியையும் நினைந்தது ஆழ்வார் திருவடிகளில் சரணம் புகுகிறார்

—————————————————————————————————————————————–

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா —ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -5-

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெறுகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அசூத்திகளையும் மதியாதே பால்ய தசையில் ஆதரித்து வளர்த்து
பக்வனானால் பின்பு ப்ருஷ பாஷணம் பண்ணினாலும் அவற்றைப் பொறுத்து
அகல இசையாதே
இவன் பிரியத்தையே வேண்டி இருக்கும் மாதாவைப் போலே உபகாரராய் இருக்கை –

பிதா –
அவன் பாத்ர மாத்ரம் என்னும்படி உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹிதைஷியான பிதா பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
கரியான் ப்ரஹ்மத பிதா –

யுவதயஸ் –
இவ் விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே
நெஞ்சுக்கு இனியராய் இருக்கை –

தனயா-
அவர்களுடைய யௌவனத்தை அழிய மாறி பெற்றவராய்
பால்யத்தில் ஸூக கரராய்
பக்வ தசையில் ரஷகராய்
நிரய நிஸ்தாரகரான புத்ரர் பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை

விபூதிஸ் –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமம் ஆகையாலே
இவை எல்லா வற்றையும் நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யராய் இருக்குமவர் -என்கை –

சர்வம்-
அனுக்தமான சர்வ ஐஹிகங்களுமாய் இருக்கை –
அதாவது மோஷ உபாயமும்
முக்த ப்ராப்யமும் –

யதேவ —
அவதாரணத்தால்-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -என்று இருக்கும் ஆழ்வார் நினைவுக்கே –

நியமேன –
என்றும் ஒக்க –
அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும்
புறம்பு போகக் கடவது அன்றிக்கே இருக்கை –

மத் அந்வயாநாம் –
வித்யயா ஜன்மனா வா -என்ற உபய சந்தான ஜாதர்க்கு –

ஆத்யஸ்ய ந –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர் -என்கை –

குல பதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷியும் அவரே –

வகுளாபிராமம் –
திரு மகிழ் மாலையால் அலங்க்ருதமாய் உள்ளத்தை
இத்தால் -திருவடிகளில் பரிமளத்தால் வந்த போக்யதையை சொல்லுகிறது
திருத் துழாயால் அலங்க்ருதமான பகவத் சரணார விந்தங்களை வ்யாவர்த்திக்கிறது –
நல்லடி மேலணி நாறு துழாய் –

ஸ்ரீ மத் –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் நித்ய சம்யுக்தமாயிருக்கை
அந்தரீஷகத ஸ்ரீ மான்
ச து நாகவரஸ் ஸ்ரீ மான்
என்று பகவத் ப்ரத்யா சத்தியை ஐஸ்வர் யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு ஊற்றான ஐஸ்வர் யத்தை யுடையவர் என்னவுமாம் –

தத் அங்க்ரி யுகளம் –
அது என்னுமது ஒழிய பேசி முடிய ஒண்ணாது -என்கை

யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை   யுடைத்தாய் இருக்கை –

ப்ரணமாமி மூர்த்நா —
ஆழ்வார் உடைய படிகளை நினைத்தவாறே
நம-என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளில் தலையை சேர்க்கிறார் –

கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது ஆயிற்று –
முமுஷூவுக்கு உபகாரகர் சேஷித்வ பிரதிபத்தி விஷய பூதரும் ஸ்துத்யரும் என்னும் இடம் சொல்லுகிறது
ஒருவனுக்கு சேஷிகள் இருவராம்படி எங்கனே என்னில் –
க்ருதி சேஷித்வம் யாகாதிகளுக்கும் புரோடாசாதிகளுக்கும் உண்டாமா போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்-பாகவதர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை –
அதவா –
ஈஸ்வரன் நிருபாதிக சேஷியாய் -தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையால் பாகவத சேஷத்வம் ஒவ்பாதிகம்  -என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான பக்த்யாதிகள் பிதா மஹோபாத்த தனம் –என்கைக்காக
முதலிலே பெரிய முதலியாருடைய ஜ்ஞான பக்திகள் உடைய ஆதிக்யம் சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே –இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தாநுமதம் -என்கிறது –
அஞ்சாம் ஸ்லோகத்தாலே இந்த ஜ்ஞானம் இவர்க்கு ஆழ்வாரால் வந்தது என்கை –

அக்ர்யம் யதீந்திர சிஷ்யாணாம் ஆதயம் வேதாந்த வேதி நாம் -என்று ஆழ்வான் அக்ர கண்யர் ஆகையாலே –அஸ்மத் குரோர் என்றார் –
அப்படிப் பட்ட பாரதந்த்ர்யத்தை -இவ் வாத்ம வஸ்து அவர்க்கு சேஷம் ஆகில் அவருடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –
ஏவம் வித ஸ்வரூபர் ஆகையால் உடையவரும் -ஒரு மகள் தன்னை யுடையேன் -என்றார்
இப்படி ஸ்வாச்சார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யத்தாலும்
நான் பெற்ற யோகம் நாலூரானும் பெற வேணும் -என்று பிரார்திக்கையாலும்
சிஷ்யாச்சார்யா க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் ஆழ்வான் -என்றார்கள்
ஆச்சார்யா வர்வ விபவச்ய ச சிஷ்யஸ் வ்ருத்தேஸ் சீமேதி தேசிகவரை பரிதுஷ்யமாணம்-என்னக் கடவது இறே –
அத்தைப் பற்ற உடையவரும் –யத் சம்பந்தாத் –என்று பிரார்த்தித்து அருளினார்
நூற்றந்தாதியிலும் மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அடியாக விரும்பி அருளினார்
மற்றையரான இவ்வருகில் உள்ளாறும் அல்லா வழியைக் கடப்பது அவர்களாலே இறே
அவர்கள் தான் –யோ நித்யம் -த்ரைவித்யாதிகள் அடியாக அடியுடையராய் இருப்பார்கள்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
ராமானுஜ அங்க்ரி சரணஸ்மி இத்யாதி
மதுரகவிகள் அடிப்பாட்டில் நடக்கிற க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர்கள் ஆழ்வார் அடியாய் இருப்பார்கள்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதி -இத்யாதி
ஆரியர்காள் கூறும் -என்கிற எழுபத்து நான்கு முதலிகளும் உடையவர் அடியான ஆசார்யத்வம்
அதில் முக்கியம் ஆழ்வார் சம்பந்தம் –
பட்டர் அடியாக இறே அஷ்ட ஸ்லோகீ முகேன ரஹச்ய த்ரய அர்த்த சம்பந்தம் –
திருவாய்மொழியும் அடியாய் இருக்கும்
ஒன்பதினாயிரம் பன்னீராயிரத்தில் பர்யவசித்தது
பெரிய பட்டர் உடைய பிரசிஷ்யரான நம்பிள்ளை திருவடிகளிலே இறே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் ஆஸ்ரயித்தது
அவரும் ராமானுஜ நாமா விறே
அஷ்டாஷர தீபிகை அவர் அடியாக இருக்கும்
நம்பிள்ளை குமாரரும் ராமானுஜன் இறே
அவரும் சார சங்க்ரஹம் அருளிச் செய்து அருளினார்
தத் வம்ச்யரும் கோயில் யுடையவருக்கு சிறிது கைங்கர்யங்களும் செய்தார்கள்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை குமாரரான பிள்ளை லோகாச்சார்யரும்
வகுள பூஷண சாஸ்திர சாரமான ஸ்ரீ வசன பூஷ்ணாதி ரகஸ்ய பிரபந்த கர்த்தாவாய்
தம்முடைய பிரதான சிஷ்யரான – கூர குலோத்தம தாசர் -என்று திரு நாமம் சாத்தினார்
என்னாரியனுக்காக எம்பெருமானாருக்காக -என்று இறே அக் கோஷ்டியில் பரிமாற்றம் இருப்பது –

—————

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெற மாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 1-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுள மாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன் மற்ற அரசு தானே
இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்–மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே

யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –3-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 2-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருண ரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்திகள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சார தமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சார தமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ரிஷிம் ஜூஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சஹஸ்ர சாகரம் ய அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1-6-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3

ய–யார் ஒரு நம்மாழ்வார்
சஹஸ்ர சாகரம் ய த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்-ஆயிரம் பாசுரங்களுடைய தமிழாலாகிய ஸ்ரீ திருவாய் மொழி
ஆகிற உப நிஷத்தை –ஒவ் ஒரு பாசுரமும் ஒரு சாகை தானே –
அத்ராஷீத் -சாஷாத்கரித்தாரோ-ஸ்ரீ எம்பெருமான் இவரைக் கொண்டு பிரவர்த்திப்பித்தான் என்றவாறு
இத்தால் ஸ்ரீ திருவாய் மொழியின் பிரவாஹதோ நித்யத்வம் காட்டப்படுகிறது
தம் -அப்படிப்பட்டவராய்
உதிதம் -உரு எடுத்து வந்த
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவ
ஸ்திதம்–ஸ்ரீ எம்பெருமான் திறத்து காதலின் உண்மை போன்றவரான
ரிஷிம் ஜூஷாமஹே –ஸ்ரீ நம்மாழ்வாரை சேவிக்கிறோம் –

எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான-திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை  சாஷாத்கரித்தாரோ,ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

இத்தால் ஸ்ரீ பட்டருக்கு
ஸ்ரீ நம்மாழ்வார் இடத்திலும்
ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் அமைந்துள்ள
அத்புதமான பக்தி வை லக்ஷண்யம் அழகிதாகப் புலப்படும் –

யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4-

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அக விருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப் பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே” –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர் ஸ்ரீ நம்மாழ்வார்!

—————

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில்
இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தில் உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—2-

1–இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு -ஆழ்வார் பெற்ற இன்பம் இவருக்கு நம்பி என்றக்கால்
2–இறைஞ்சுதல்- இல் -அவரையே இறைஞ்சி -ரக்ஷகன் உபாய உபேயம் தேவு மற்று அறியேன் -மேவினேன் அவர் பொன்னடி மெய்மையே
மால் தனில் வேறு தெய்வம் உளதோ-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்றார் அவர்
3–இசையும் பேற்றில் –விரும்பி அடையும் புருஷார்த்தம் -தேவ பிரானுடை கரிய கோல திரு உருக் காண்பன் நான் -அவர் காண வாராய் என்று கதற
-பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியவனாய் -அடியேன் பெற்ற நன்மையே இது –
4–இகழாத பல் உறவு இல் பழித்தல் -நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -புன்மையாக் கருதுவர் ஆதலால் —
இகழ்வதே பற்றாசாக -பல் உருவு -அன்னையாய் அத்தனையாய் –என்னை ஆளுடைய நம்பி
5—இராகம் மாற்றில் –பற்று -தன் பக்கம் திருப்பி -மற்றை நம் காமங்கள் மாற்று –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னர்
மாதரார் வலையில் பட்டு அழுந்துவேனை –தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அவன் –
6–தன் பற்றில் –ப்ரீதி கார்ய கைங்கர்யம் -கைவல்யம் குழியில் பற்று அற்று விழக் கூடாதே –
இறை பற்றி அற்றதில் பற்று அறுத்து – இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் பாட அருளி –
7–வினை விலக்கில்-காரி மாறப் பிரான் –கண்டு கொண்டு–
கண்டார் பின்பு கொண்டார் -கொண்ட வாறே -பண்டை வல்வினை -பாற்றி அருளினான் –
8–தகவோக்கத்தில் -ஓங்குதல் ஒக்கம்- வீங்குதல் வீக்கம் போலே- தகவினால் –
அரு மறை பொருளை அருளினான் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
9–தத்துவத்தில் உணர்த்துதலில் –மிக்க வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடினான் -நெஞ்சினுள் நிறுத்தினான் –
10–தன்மை யாக்கில் –மரங்களும் இரங்கும் வகை -ஊரும் நாடும் பேரும் பாடும் படி -ஆக்கி அருளினான் –
ஆக பத்து உபகாரங்கள் –

——–

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே–யதிராஜ சப்ததி 

திரு மேனி மட்டும் இல்லை ஸ்ரீ ஸூக்திகளும் மகிழம் பூ மணக்கும் படி வெள்ளம் இட்டு வர வேதங்கள் ஒய்வு எடுத்து கொண்டபடி ஆயின –
அப்படிப் பட்ட நம் ஆழ்வாரை நாம் உபாசிப்போம்-

யஸ்ய சாரஸ்வதம் -வாக் தேவதா –
ஸ்ரோதோ -பிரவாஹம்
வகுளா மோத வாசிதம் -வகுளம் ஆமோத வாசித்தம்-மகிழம் பூ பரிமளம் நாள் கமழ் -மகிழ் மாலை மார்பினன் –
அஸ்மாத் குல தனம் போக்யம் – வண் குருகூர் நகரான
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் –அலம் போதுமானவை –விஸ்ரமம் ஒய்வு -தத்வ ஹித புருஷார்த்தம் -ஆழ்வார் நன்றாக வெளியிட சுருதிகள் ஒய்வு எடுத்தனவாம் –
சடாரிம் தமுபாஸ்மஹே -ப்ரீதி பூர்வகமாக த்யானம் செய்து அனுதியானம் உபாசனம் –

————-

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும்
அடியோமை அறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
வழிப் படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில்
தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே–அம்ருதாஸ்வாதினி – 28

“எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் மோக்ஷமென்னும் ஸாதனத்திற்குத் தகுதியாயுள்ள நம்மைக் காத்து,
ஸ்திரமான தர்ம பூத ஞானத்தைக் கொடுத்து எம்பெருமான் நம்மை ரஷித்தருளுகிறான்.
மேலும் அநாதியான கர்ம ஸம்பந்தத்தில் நம்மை அழுத்தாமல் நம்மைக் கரை சேர்ப்பதற்குப் ப்ரதானமான ஸ்தானத்தில் நிற்கின்ற
ஆசார்யர்களிடம் ஒரு ஸம்பந்தத்தை உண்டு பண்ணி, திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் அந்த மந்திரத்தில் சொல்லப்படும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும்
அவ்வாசார்யன் மூலமாக நமக்கு உபதேஸித்தருளி அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படி ஓர் தெளிவை ஏற்படுத்தி, நம்மை பரம பதத்தில் கொண்டு சேர்க்கிறான். பின்பு அங்கே நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான்.
இப்படி பலவிதமான மஹா உபகாரங்கள் செய்ய முற்படும் நிகரற்ற எம்பெருமான் நமக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் நிற்கின்றான்.
அப்பெருமானின் திருவடிகளில் நம்மாழ்வாருடைய அனுகிரஹத்தாலே தலை வணங்கப் பெற்றோம்.” என்று ஸாதிக்கிறார்.

—————-

த்ரமிடோபநிஷந்நிவேஶஶூந்யாந்‌
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்‌ |
த்ருவமாவிஶதி ஸ்ம பாதுகாத்மா
ஶடகோப ஸ்வயமேவ மாநநீய: ॥ –ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸமாக்யாபத்ததி – 2

“எல்லாராலும் போற்றப்படுகின்ற ஸ்வாமி நம்மாழ்வார் அனைவரும் பெருமாளை அடைந்து உஜ்ஜீவிக்கவேண்டுமென்று
திருவுள்ளங்கொண்டு திருவாய்மொழியைத் தந்தருளினார்.
இருப்பினும் பலர் அத்திருவாய்மொழியைக் கற்று உபாஸிப்பதில்லை.
அப்படி கற்காதவர்களும் பெருமாளை அடைவதற்காக ஆழ்வார் தாமே பாதுகையாக அவதரித்து
அனைவரின் ஸிரஸ்ஸிலும் ஸ்ரீசடாரியாக ஸாதிக்கப்பெற்று,
அந்த ஸம்பந்தம் மூலமாக திவ்ய தம்பதிகளின் அநுகிரஹத்திற்குப் பாங்காக அனைவரையும் மாற்றியருளினார்.” என்று
ஆழ்வாரின் அருளிச்செயல்களை அறியாதவர்களும் உய்ய வேண்டுமென்று
அவர் ஸ்ரீசடாரியாகத் திருவவதரித்த வைபவத்தை நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.

——————

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5-

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன
ஸ்ரிய பத்யு பிரசாதேன –
திருமால் திருவருளால் –
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
பெரும் கேழலார் -ஒருங்கே -எங்கும் பக்க நோக்கம் அறியாமல் அன்றோ ஆழ்வார் மேலே –
பெரும் கண் புண்டரீகம் பிறழ வைத்து அருளினார்
பண்டை நாள் -உன் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் பெற்றவர் அன்றோ

ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும்-
அர்ச்சிராதி கதியையும் அன்றோ காட்டி அருளுகிறார்-ஞான பக்தி வைராக்யம் தானே சம்பத்து

ப்ரபன்ன ஜன கூடஸ்தம் –
பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசர்யா போதாய நாதிகள்-
பிரபன்ன ஜன கூடஸ்தர்-மாதா பிதா இத்யாதி –
பராங்குச பரகால யதிவராதிகள் –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி

ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் –
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் –

ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

—————

சடகோப முநிம் வந்தே
சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம்
திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6-

சடகோப முநிம் வந்தே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன்

சடாநாம் புத்தி தூஷகம் –
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் –
தீ மனத்தவர்களுடைய தீ மனத்தை கெடுத்து

அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும்
அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து உய்யப் புகும் ஆறு உபதேசம்
கரை ஏற்றுமவனுக்கும் நாலு ஆரும் அறிவிப்பார்

திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம் –
ஸ்ரீ திருப் புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை தொழுகிறேன் -என்கை-

குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

—————–

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் |
ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7-

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம் ஆழ்வாரை –

யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா –
யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை
தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ
அந்த ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன் –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பெய்தற்கு அருளினார் –
ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர –பரம ஸ்வ ராட் –அவனே அவனும் அவனும் அவனும்
சதேவ சோம்ய ஏகமேய அத்விதீயம் – வேர் முதலாய் வித்தாய் -த்ரிவித காரணம் –

“உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம்மாழ்வாரை, யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் வேதத்தின்
உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ –
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகின்றேன்”

—————

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா-
தம்மை வணங்குமவர்களுடைய
ஹ்ருதயம் ஆகிற
சுவரிலே
பக்தியாகிற சித்திரத்தை எழுதும்
கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து

பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா-
சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய/-பாவ + அஹி-சம்சார பாம்பு –
வீர்யத்தைத் தணிக்கும் விஷயத்தில்
விஷ வைத்தியனுடைய-நரேந்திர -விஷ வைத்தியன்-மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்

பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற
ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல-கைரவம் -ஆம்பல்
அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற –

சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –
ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருக் கைத் தல முத்ரையானது-உபதேச முத்திரை
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து அருள வேணும் —

ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை வர்ணிக்கும் ஸ்லோகம்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாது
பக்த ஜனங்களின் பக்தியை ஊட்ட வல்லதாயும்
சம்சார ஸ்ப்ருஹதையை அறுக்க வல்லதாயும்
பிரபன்னர்களைப் பரமானந்த பரவசராக்க வல்லதாயும்–இரா நின்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஸ்ரீ ஹஸ்த முத்தரை யானது
நம்முடைய அகவிருளை அகற்ற வேணும் -என்றார் ஆயிற்று –

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

————

ஸ்லோகம் 9 (சில கோயில்களில் இந்த 9வது ஸ்லோகத்தையும் பெரியோர்கள் ஸேவிப்பர்)

வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச்சடகோப பதத்வயம் |
அஸ்மத்குல தனம் போக்யுமஸ்து மே மூர்த்நி பூஷணம் | |

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும்
பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது
எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக-

——————–

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –

ஶ்ரீமாத⁴வ அங்க்⁴ரி ஜலஜத்³வய நித்யஸேவா ப்ரேம ஆவில ஆஶய பராங்குஶ பாத³ ப⁴க்தம் – அழகு பொலிந்த எம்பெருமானது
திருவடித்தாமரையிணைகளை நிச்சலும் தொழுகையினாலுண்டான ப்ரேமத்தினால் கலங்கின திருவுள்ளமுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளிலே அன்பு பூண்டவரும்,
ஆத்ம பத³ ஆஶ்ரிதாநாம் – தமது திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு,
காமாதி³ தோ³ஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிப்பவரும்,
யதிபதிம் – யதிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – எம்பெருமானாரை,
மூர்த்⁴நா ப்ரணமாமி – தலையால் வணங்குகின்றேன்.

இதில் முதல் ஶ்லோகத்தால், தொடங்கிய ஸ்தோத்ரம் நன்கு நிறைவேறும் பொருட்டு
ஆசார்யாபிவாதநரூபமான மங்களம் செய்யப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞாநபூர்த்தியும்,
இரண்டாவது ஶ்லோகத்தில் அவருடைய அநுஷ்டாநபூர்த்தியும் பேசப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் திருவின் மணாளனான எம்பெருமனுடைய திருவடித்தாமரை யிணையில் செய்யத்தக்க
நித்யகைங்கர்யத்தில் உள்ள ப்ரேமத்தினாலே கலங்கின திருவுள்ளத்தையுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளில் மிகுந்த பக்தியை யுடையவரும்,
தமது திருவடிகளை அடைந்தவர்களுடைய காமம் முதளான தோஷங்களைப் போக்கடிப்பவரும்,
யதிகளின் தலைவருமான எம்பெருமானாரைத் தலையால் வணங்குகிறேன் என்கிறார்.

ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குS பதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் |
ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே||–2-

ஶ்ரீரங்க³ராஜ சரண அம்பு³ஜ ராஜஹம்ஸம் – ஶ்ரீரங்கநாதனுடைய திருவடியாகிற தாமரையிலே ராஜஹம்ஸம் போன்று ஊன்றியிருப்பவரும்,
ஶ்ரீமத் பராங்குஶ பதா³ம்பு³ஜ ப்⁴ருʼங்க³ராஜம் – நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரைகளிலே வண்டுபோல் அமர்ந்திருப்பவரும்,
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுக² அப்³ஜமித்ரம் – பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற
தாமரைப் பூக்களை விகாஸப் படுத்துவதில் ஸூர்யன் போன்றவரும்,
ஶ்ரீவத்ஸ சிஹ்ந ஶரணம் – கூரத்தாழ்வானுக்குத் தஞ்சமாயிருப்பவரும் (அல்லது) கூரத்தாழ்வானைத் திருவடிகளாக வுடையவருமான,
யதிராஜம் – எம்பெருமானாரை,
ஈடே³ – துதிக்கின்றேன்.

இரண்டாவது ஶ்லோகத்தில் பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகளில் விளையாடும் உயர்ந்த அன்னப் பறவை போன்றவரும்,
நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளில் பொருந்திய வண்டு போன்றவரும்,
பெரியாழ்வார் மற்றும் பரகாலரான திருமங்கையாழ்வார் ஆகியோரின் முகத்தாமரையை மலரச் செய்யும் ஸூர்யன் போன்றவரும்,
ஆழ்வானுக்கு உபாயமாக விருப்பவருமான யதிராஜரைத் தொழுகிறேன் என்கிறார்.

மேலே மூன்று ஶ்லோகங்களாலே ப்ராப்ய ப்ரார்த்தனை செய்கிறார்.

————-

ஸ்ரீ சடகோப வாங்மயமான( தனியன் ) சதுர் வேதத்துக்கும் ஷட் அங்கங்களை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின
திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தை பல காலும் (மாசம் தோறும் ) ஆதரிக்குமவர்களை
மங்களா சாசனம் பண்ணு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த –  வீறுடைய
கார்த்திகையில்  கார்த்திகை  நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து —-9-

அங்காநி
ஷட் த்ரவிட வேத சதுஷ்டஸ்ய கர்த்தும்
சடாரி கலி தத்த
யத் ஆவிர்பூத புவி
கார்த்திகை கிருத்திகாஸூ
தத் வைபவ பத பத்மம் உபைதி
சேதச

மாறன் பணித்த தமிழ் மறைக்கு-
சமஸ்க்ருத வேதம் போலே-தான் தோன்றியாய் -அடி யற்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே அவதரித்த ஏற்றம் உண்டு இறே-திருவாய் மொழிக்கு –
வேத ப்ராசாதேசாதா சீத -என்னுமா போலே  –
(ஸ்வ மஹிமையால் தானே தன்னை ப்ரதிஷ்டை செய்தாலும் தாய் தந்தை தேர்ந்து எடுத்து
தொல்லை இன்பம் அருளுவான் இங்கேயே –
ம்ருத் கடம் வேதம் – போல் அன்றே -பொன் கடம் இவர் வாயனவாறே
எம்பெருமான் -பெருமாள் சக்ரவர்த்தி திருமகனாக அவதரிக்க வந்தால் போல் –
வேத புருஷன் -வால்மீகி க்கு பிள்ளை என்று பின் வந்தான் )

தமிழ் மறை -என்கையாலே
திராவிட ரூபமான வேதம் -என்கை –
ததும்  ஹ த்ரீன் கிரி ரூபா ந விஜ்ஞாதா ந சதர்சயாம் சகாயா தேஷாங்ம் ஹேயாகை கஸ்மான்
முஷ்டிநா ஆததே சஹோவாச பரத்வாஜே த்ர்யா மந்த்ர்ய வேதா வா  ஏதே
அநந்தா வை வேதோ -( காடகம் )-என்றும்
நமோ வாசே யசோதிதா யாசா நுதிதா தஸ்யை வாசே –
ஸ்வ சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தி  -என்றும்
த்ராவிடீம்  ப்ரஹ்ம சம்ஹிதாம் ( பராங்குச அஷ்டகம் ) -என்றும்
அருளிச் செய்தார் இறே பட்டர் –
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பித்ததே ஹேதுவாக கொண்டு
இவராலே ப்ரநீதமானதாகச் சொல்லக் கடவது –

(எம்பெருமானார் தர்சனம் என்று பெயர் இட்டு -வளர்த்த செயலுக்காக போல்
இவர் நாவில் அமர்ந்து பாடுவித்தான் –
அநாதி -இவையும் வேதம் போல் -)

மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த –
இப்படி இவராலே உண்டான திராவிட வேத சதுஷ்ட்யத்துக்கும்
ஸ்வ ஸூக்திகளான ஷட் பிரபந்தங்களை அருளிச் செய்யும் படி அவதரித்து அருளினார் இறே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
திரு விருத்தம் முதலான நம் ஆழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்
பெரிய திரு மொழி முதலான திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்கள் ஆறும் அங்கங்களாக இறே இருப்பது
அது திராவிட வேதம் ஆனால்
இதுவும் திராவிட ரூபமான அங்கங்கள் என்னக் குறை இல்லை இறே –
திருவாய் மொழியினுடைய வேதத்வத்தையும்
இதனுடைய அங்கத்வத்தையும் ஆச்சார்ய ஹிருதயத்தில் பரக்க உபபாதித்து அருளினார் இறே –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-ஆச்சார்ய ஹிருதயம்-43-
இதுக்கு 17 வகைகளில் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பாசுர ஒற்றுமைகள்
காட்டி அருளுகிறார் மா முனிகள்
மாசறு சோதி -இரண்டு பாசுரங்களில் நம்மாழ்வார் –
இவர் இரண்டு பிரபந்தங்கள் –
ஓ ஓ உலகின் இயல்பே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி -நம்மாழ்வார்
மை நின்ற -பெற்ற தாய் இருக்க -பத்து பிபாசுரம் விரித்து காட்டி
இப்படி அங்கி அங்கம் பாவம் – )

வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் –
இப்படியான ஏற்றத்தை யுடைத்தான-வேத வேதாங்க தத்வ ஜ்ஞானரான இவர் அவதரிக்கையாலே
அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டிலும் வீறு உடையதாய் யாய்த்து
கார்த்திகையில் கார்த்திகை தான் இருப்பது –
(அனைத்து ஆழ்வார்கள் திருவடி நிலை இவரே -அவரது அருளிச் செயல்கள் அனைத்தும் அறிந்தவர் இவரே )

இவர் தாம் ஸ்ரீ பராங்குச பரகாலாதிகள் என்னும் படி இறே பிரசித்தராய்ப் போருகிறது –
(கிருத்திகா பிரதமம் விசாகே உத்தமம் -வேதமும் இவர்களைச் சேர்த்தே சொல்லும் )
தாமும் -உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-4-9-6 -என்று இறே அருளிச் செய்தது –
அது போலே யாய்த்து திரு நஷத்ரம் –
அதுக்கு மேலே
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடும் -தன்னேற்றம் உண்டே இவருக்கு –

இப்படி இவர் அடியாக யுண்டான அதிசயத்தை யுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்-
இந் நாள்கள் இடையில்-இதுவும் ஒரு மதி நிறைந்த நந்நாள்-(திருப்பாவை -1-)உண்டாவதே என்று
இதன் வைபவத்தை   இடைவிடாமல்  அனுசந்தித்து
இதிலே அத்ய அபி நிவேசத்தைப் பண்ணி போந்து அருளுவார்கள் –
அவர்கள் ஆகிறார் -குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுசன்- (ராமானுச 2 )-போல்வார்   –

அவர்கள் உடைய –
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து –
அவர்கள் நமக்கு சேஷிகள் ஆகையால்
ஸ்வரூப பிராப்தமாய் -நிரதிசய போக்யமான திருவடிகளை –
போந்தது என்நெஞ்சு (ராமானுச -100)-என்னும் படி அதிலே அதி ப்ரவணமாய் போருகிற மனஸே
அச் செவ்வி மாறாமல் நித்யமாய்ச் செல்ல வேண்டும் என்று
மங்களா சாசனம் பண்ணி உன் ஸ்வரூபம் பெறப் பார்
இன்புறும் தொண்டர் செவ்வடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே( பெருமாள் 2-4-சேவடி -பாட பேதம் )-என்னக் கடவது இறே
வாய்க்கை -பொருந்துகை –

மலர்த் தாள்கள் –
மலர் போன்ற திருவடிகள் –
இத்தால் –
ஆச்சர்ய பாரதந்த்ரத்துக்கு அனுகூல வ்ருத்தி  செய்து போருகை ஸ்வரூபம் என்றது ஆயத்து –

இந்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு நஷத்ரத்தை
ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் என்று திரு நாமத்தை யுடையராய்
சதிருடைய தமிழ் விரகராய்-
அருளிச் செயல் நாலாயிரம் பாட்டுக்கும் அர்த்த உபதேசம் பண்ணுமவராய்
போருகிற லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளையும்
தத் வம்ச்யரும் மிகவும் பரிபாலித்து போருவர்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

ஸ்ரீ பிள்ளை ஆதரிக்கிறது ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் பிராவண்யத்தாலே   –
தத் வம்ச்யர் ஆதரிக்கிறது ஸ்ரீ பிள்ளையினுடைய திரு நஷத்ரமும் அது என்றாக வேணும் –

(அனந்தாழ்வான் சிஷ்யர் மதுரகவி தாசர் –
மாத பெயரும் நக்ஷத்ரமும் சேர்ந்தே இருப்பது கார்த்திகையில் கார்த்திகையும் -சித்திரையில் சித்ரையும் தானே )

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

———————————————

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராய் யுடையராய் –
வேதாந்த அர்த்தங்களை எல்லாம் திருவாய் மொழி முகேன பிரகாசிப்பித்தது அருளி
ஸ்ரீ திரு நகரிக்கு நாதராய் இருந்துள்ள ஸ்ரீ நம்மாழ்வார்
திருவவதரித்து அருளின திரு விசாக திரு நஷத்ரத்தின்  வைபவத்தை
பூமியில் உண்டானவர்கள் எல்லாரும் அறியும்படி பிரசித்தமாக அருளிச் செய்கிறோம் -என்கிறார் –

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்  —14-

ஆழ்வார் ஆதி நாதன் தேவஸ்தானம் உபயமாக இருந்தாலும் இவருக்கே-
பெரியவருக்கே – விட்டுக் கொடுத்து அருளினான் –
ஏரார்ந்து -விசாகம் -வைகாசி -விசேஷணமாகக் கொண்டு வியாக்யானம் –

ஆஸ் யாமி
சாரு தர மாதவ மாச
விசாக நக்ஷத்ரம் -ராதா -அடுத்து அனு ராதா அனுஷம்
ஆவநி ஜன போதனாய
த்ருஷ்டும் த்ரயம் திராவிட
குருகேஸ்வரஸ் யஸ்ய
திவ்ய அவதார
சத்ய வாச

ஏரார் இத்யாதியால் –
கீழ் அடங்கலும் மாசங்கள் விச்சேதியாமல் அடைவே அருளிச் செய்து போந்தவர்
இப்போது பங்குனி மாசத்தில் ஆழ்வார்கள் அவதரணம் இல்லாமையாலும்
சித்திரை மாசத்திலே ஸ்ரீ மதுரகவிகள் ஆழ்வார் யுடையவும் ஸ்ரீ எம்பெருமானாருடையவும்
அவதாரம் உண்டே யாகிலும் ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் உடைய அவதார க்ரமத்தை அருளிச் செய்யப்
புகுமவர் ஆகையாலும் அவற்றை விட்டு வைத்து –
ஏரார் வைகாசி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

(முதல் -20- பாசுரங்கள் பிரதம பர்வ ஆழ்வார் -20-29 -சரம பர்வத்தில் உள்ள
ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் -எம்பெருமானார் -என்று முன்பே பேடிகா விபாகம் பார்த்தோம் )

(ராமானுஜ நூற்று அந்தாதியிலும் பேர் ஊர் சொல்லாத ஆழ்வார்கள் சொன்னபின்பு
ஆழ்வார்கள் -ரீதி மாற்றம் -அங்கும் உண்டே திருப்பாண் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாருக்கு முன்னே
ஆச்சார்ய ஹ்ருதயம் -குணங்கள் -கோயில்-வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் –
திரு மலை -வாத்சல்யம் -நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம் உஜ்வலம் –
உபய பிரதானம் பரே சப்தம் பொலியும்
பர வ்யூஹ விபவ
வ்யூஹம் -கோயில்
திருமலை -அந்தர்யாமி
விபவம்-திருக்குறுங்குடி விபவ லாவண்யம் -வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம்
பின்பு வான மா மலை தொடங்கி அர்ச்சை இந்த க்ரமம் – )

ஏரார் வைகாசி –
வைகாசி ஏரார்ந்து இருக்கை யாவது-மாதவ மாசம் ஆகையாலே புஷ்ப சமயமான அழகை யுடைத்தாகை –
திருவவதரித்து அருளின தேசம்  -கொத்தலர் பொழிலையும் குயில் நின்றார் பொழிலையும்
யுடைத்தாய் இருக்குமா போலே யாய்த்து –

ஏரார் வைகாசி விசாகம் –
என்று ஏராருகை விசாகத்துக்கு விசேஷணமாய்  ஆக்கவுமாம் –
அப்போது திரு விசாகத் திருநாள் என்னும் படி இறே இதன் அலங்கார அதிசயம் இருப்பது –
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பாலும் பழமுமாக அமுது செய்து
பரிபாலநீயமான திவசமாய் இருக்கை –
அதாவது -பால் மாங்காய் அமுது செய்யப் பண்ணுகை –
(பால் மாங்காய் உத்சவம் கார்ப்பங்காடில் இன்றும் விசேஷம்
இல்லத்தில் விசாகம் தோறும் -செய்து அருள வேணும் )

இப்படியான இதனுடைய ஏற்றத்தை –
பாரோர் அறியப் பகர்கின்றேன் —
இருந்ததே குடியாக எல்லாரும் இவருடைய ஜன்மமான வைகாசி விசாகத்தை அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லா நின்றேன் –
இத்தை ஒருவர் அபேஷித்து இருப்பார் இல்லாது இருக்கவும்
இவருடைய அபி நிவேச அதிசயம் பேசுவிக்கப் பேசுகிறபடி –

இனி இதுக்கு எல்லாம் அடி இன்னது என்கிறது –
சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
சீராரும் வேதம்-
வேதத்துக்கு சீரார்ந்து இருக்கை யாவது
அபௌருஷேயத்வாதிகளால்  வந்த பிராமண்ய ஸ்ரீயை யுடைத்தாகை-
சுடர் மிகு சுருதி -என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
ஸ்ரீ யபதியாய்-பர ப்ரஹ்ம வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப ரூப குணங்களை
உபபாதிப்பதான உத்தர பாகத்தை யாகவுமாம் –
யஸ்ருதே ருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா -( பராங்குச அஷ்டகம் )-என்னக் கடவது இறே –

வேதம் தமிழ் செய்த –
வேதம் தமிழ் செய்கை யாவது –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -(ராமானுஜ -18)-என்கிறபடியே
வேதமானால் அதிக்ருதாதி காரமாய் இருக்கும் ஆகையால்
அகில சேதனர்க்கும் அப்யசித்து உஜ்ஜீவிக்கை அரிது என்று
சர்வாதிகாரமாய்-சர்வ உபஜீவ்யமாய் இருக்கும் படி -திராவிட பாஷா ரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீ கரித்து அருளிச் செய்தார் -என்கை –

(மேகம் பெருகின சமுத்ராம்பு போல் நூல் கடல் -பருகி சர்வருக்கு உப ஜீவ்யம் )
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த  மாறன் சடகோபன்-(கண்ணி நுண் தனியன் ) -என்றும்
அருமறைகள் அந்தாதி செய்தான் -(திருவாய் தனியன் )-என்றும் சொல்லக் கடவது இறே –

மெய்யன் –
அருளிச் செய்தது எல்லாம் வேதார்த்தம் என்கைக்கு அடியான ஆப்தி இருக்கும் படி

எழில் குருகை நாதன் –
குருகூர்ச் சடகோபன் -என்னுமா போலே-இதுக்கு எல்லாம் அடி அவ் ஊரில் பிறப்பாய்த்து –
அவ் ஊரில் ஆதிப் பிரானான ஸ்ரீ ஆதி நாதனும் உண்டாய் இருக்கவும்
இவருடைய நாதத்வம் ஆய்த்து நடந்து செல்கிறது –
உபய பிரதானமான ஆகாரம் உண்டாய் இருக்கவும் இவருடைய நாதத்வத்தை யாய்த்து அவன் நடத்தின படி –
(ராஸக்ரீடையில் கண்ணனுக்கும் கோபிகளுக்கும் ஏற்றம் போல் இங்கும் உபயமாக இருந்தாலும் அவன் சங்கல்பம் இப்படியே )
நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூவுலகும் தரும் ஒரு நாயகம்-( 3-10-11) -என்று தாமே அருளிச் செய்தார் இறே –

எழில் குருகை –
நகர அலங்காரங்களை யுடைத்தாய் இருக்கை –
அதாவது
குன்றம் போல் மணி மாடங்களையும்-4-1-10
மாடலர் பொழில் களையும்  -3-4-
சேரத் தடங்களையும் -1-2-11
ஏர் வளங்களையும் –
யுடைத்தாய் இருக்கும் -என்கை –
கட்டெழில் தென் குருகூர்-6-6-11 என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
ஜகதாபரணரான வகுளாபரணர் திரு வவதரிக்கையாலே வந்த அழகாகவுமாம் –

அன்றிக்கே –
எழில் -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணமாய்
ஜ்ஞான பக்திகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்களால் வந்த அழகைச் சொல்லிற்றாகவுமாம் –
(ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரம் -ஆத்ம பூஷணங்கள் -சூடகமே இத்யாதிகள் )

எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்க வல்லவர் திருவவதரித்த நாள் –
(ஸ்வேத தீப வாசிகளும் -அன்றோ -பொலிக பொலிக பொலிக -அவர்கள் ஸம்ருதியைக் கண்டு -)
சம்சாரத்தின் இடையில் தத் உத்தாரகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தால் போலே யாய்த்து
இந் நாள்களின் இடையில்-இந்நாள் நமக்கு நேர்பட்டதும்-

(திருவாய் மொழிப் பிள்ளையும் வைகாசி விசாகம் -ஆகவே இத்தாலும் சீர்மை உண்டே )

ஆகையால் இந்த பரம ரஹஸ்யத்தை-பாரோர் அறியப் பகர்கின்றேன் -என்று
தம்முடைய பரம கிருபையினாலே வெளியிட்டு அருளினார் ஆய்த்து –

——————————————–

திரு வழுதி வள நாடன் -சிற்று அரசர் -அகஸ்தியர் போல்வாரை சந்தித்து –
துந்து மாறன் அரக்கனை வென்று அந்த அரசை ஆண்டவர்
இவர் திருக்குமாரர் -சக்ர பாணி
இவர் திருக்குமாரர்-அச்சுதர்
இவர் திருக்குமாரர்-பொற்காரியார்
இவர் திருக்குமாரர்-காரி
உடைய நங்கை -திரு வாழ் மார்பன் திருக்குமாரி
திருக்குறுங்குடி நம்பி -பிரார்த்தித்து -நம்மைப் போல் பிரதிமை இல்லை -நாமே வந்து பிறப்போம்
ப்ரமாதி வருஷம் -43 நாள் வெள்ளிக்கிழமை -கடக லக்கினம் திரு அவதாரம்
மாறி இருந்ததால் காரி மாறன்
சட வாயுவை கோபித்து -காலால் உதைத்து சடகோபர் சிறப்புப் பெயர்
புத்தி தூஷகம் -சடஜித்

கீழே பிரஸ்துதமான
1-ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
2-அவதரித்த தேச
3-காலங்களுடையவும்
4-அவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் யுடையவும்
அப்ரதிம வைபவத்தை ஸ்வ கதமாகப் பேசி அனுபவிக்கிறார் –

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு  ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் –15-

தாரம் கிம் அஸ்தி வத
மாதவ மாதம்
ராதா துல்யம் கிம் அஸ்தி
கிம் அஸ்தி சடகோப சமண ஏக
கிம் திராவிட பிரபந்த சம
கிம் பட்டணம் குருகையா சமம் அஸ்தி லோகே

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்-
ஸ்ரீ சர்வேஸ்வரனும் அவன் விபூதியும் ஸ்ம்ருதமாம் படி
மங்களா சாசனம் பண்ணப் பிறந்த திரு விசாகத் திரு நாளுக்கு ஒப்பாவது ஒரு நாள் உண்டோ –
(பொலிக பொலிக பொலிக–கண்டோம் கண்டோம் கண்டோம் )

நீ பிறந்த திரு நந்நாள் -(பெரியாழ்வார் )-என்னும் படியான அந்நாளும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மமான இவர் அவதரித்த-இந்நாளுக்கு ஒப்பாக வற்றோ –
அங்கு அவன் பிறவியில் அக்ரூராதிகளான நால்வர் இருவர் இறே அனுகூலராய்த் திருந்தினது –
(விதுரர் மாலாகாரர் இத்யாதிகள் தானே பரம பாகவதர்கள் அங்கு
கிருஷ்ணா த்ருஷ்ணா -ஈடுபாடு -அவனுடைய என்றும் அவன் இடத்தில் என்றும் -)
இங்கு -தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று தொடங்கி-
ஷிபாமி -என்று அவன் கை விட்ட வர்களையும்
நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்னும்படி
இவர்களுக்கு அபி நிவேசத்தை யுண்டாக்கும் படி திரு வவதரித்த திவசம் இறே இது –
(நன்மையால் மிக்க நான் மறையார்கள் கை விட்டதே காரணமாக் கைக் கொண்டு அருளுபவர் அன்றோ இவர் )

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் –
அவதாரமே தொடங்கி –
சடா நாம் புத்தி தூஷகராய் – ஸூ ஜ்ஞான கன பூரணராய் –
இருக்கிற இவருடைய ஜ்ஞான வைபவத்துக்கு சத்ருசம் ஆவர்களை சர்வ லோகத்திலும் தேடிப் பார்த்தாலும்
ஓர் ஒருவரைக் கேட்டோமோ –
(சேமம் குருகையோ இத்யாதி
அஞ்ஞர்-ஞானாதிகர் பக்தி பரவசர் -கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறு அறிவிப்பவர் அன்றோ )

அன்ன பாநாதிகள் என்ன -(சம்சாரிகள்)
பக்வ -பலாதிகள் என்ன -(ரிஷிகள் முமுஷுக்கள் )
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்ன (நித்ய முக்தர்கள் )
இவற்றாலே தாரகாதிகளாம் படி இருக்கிற சம்சாரிகள் -தொடக்கமானார்
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி –என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும் –
விண்ணுளாரிலும் சீரியராய் இருக்கிற இவருக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே –

நித்ய ஸூரிகள் ஒழிந்த மற்றையார்க்கு பல சாதன தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும் படியாக இருக்கும் –
ஆச்சார்ய ஹிருதயத்திலே நாயனார் அருளிச் செய்தார் இறே –

அங்கன் இன்றிக்கே –
நித்ய ஸூரிகளுக்கு தெளி விசும்பு திரு நாடு என்னும் படி பகவத் அனுபவத்துக்கு பாங்காய் இறே அத்தேசம் இருப்பது –
இது -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -என்னும்படி –
(இங்கே கலங்குவாரும் கலங்கச் செய்வாரும் உண்டே
சுமுகன் -இத்யாதி விருத்தாந்தங்கள்
ஈட்டில் -சிவிகனைப் போல் வார்த்தை செய்த வினதை சிறுவன் -ஜெட்கா வண்டி காரன் -auto ஓட்டுவேன்
வார்த்தை இந்தக்காலம் போல் சொன்ன வார்த்தை -சிவிகை -எழுந்து அருள பண்ணும் வாஹனம் அன்று )
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையாய் இறே இருப்பது –
இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருப்பார் இவர் ஒருவருமே இறே உள்ளது –
ஆகை இறே ஸூ துர்லபமும் ஆய்த்து-
(வாஸூ தேவ ஸர்வம் இதி மஹாத்மா ஸூ துர்லபம் )

மாறுளதோ இம் மண்ணின் மிசை-6-4- என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-4-5- -என்றும் –
உபய விபூதியிலும் தமக்கு ஒப்பாவார் இல்லாமையை தம் திரு வாக்காலே அருளிச் செய்தார் இறே
இப்படி ஸ்ரீ சடகோபன் என்றால் எல்லார்க்கும் தலை மேலாராய்-
நாடடங்க கை அடங்கும்படி

மஹாத்மாவான இவர் அவதரித்த இம் மகா நஷத்ரத்துக்கும்
இவர்க்கு ஒப்பு இல்லா விட்டால்
இவருடைய வாங்மயமான திருவாய் மொழிக்கும்
இவர் திருவவதரித்த தேசத்துக்கும் ஒப்புத் தான் உண்டோ என்ன –
அதுவும் இல்லை -என்கிறார் –

உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு-
திருமாலால் அருளப் பெற்றவராய்- ( 8-8-11)
திருமாலவன் கவி -(8-4-8-)யான இவர் –
சுழி பட்டோடும்-(8-10-5-) -என்னும்படியான அனுபவ பரிவாஹத்தாலே
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -என்ன வேண்டும்படி
இவருடைய பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த திருவாய் மொழிக்கு –
தர்ம வீர்ய ஜ்ஞாநாதிகள் அடியாக யுண்டான ஹர்ஷ வசனங்களில்
அருளிச் செயலில் சாரமாய் இருக்கிற இதுக்கு ஒப்பாக வற்றோ –
(அவா உபாத்யாயர் -இவருடைய ஸ்ரீ – மைத்ரேய பகவான் அவா -பாவின் இன்னிசை பாடித் திரிவேனே )

இத்தை ஒழிந்தவை எல்லாம் கடலோசையோபாதி என்னக் கடவது இறே –
ஆகையாலே -அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் (கண்ணி நுண் )-என்னும்படி
இவர் அருளாலே திருவவதரித்த இது அ சத்ருசமாய் இருக்கும் என்றபடி —

தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
ஆழ்வாருக்கு ஒப்பு ஒருவரும் உபய விபூதியிலும் இல்லாதாப் போலே
இவ் ஊருக்கு ஒப்பாவது ஓர் ஊரும் இல்லை என்கை –
(இங்கு எச்சிலை வாரி உண்ட நாய்க்கும் அன்றோ பேறு கிட்டியது —
அவனை மகுடம் சாய்க்கும் வல்ல ஞானக் கடலே இந்த பேய்க்கும் அளிக்கலாகாதோ )
பதினெண் பூமியிலும் தேடித் பார்த்தாலும் திருக் குருகை வளம்பதிக்கு ஒப்பாவது ஒரு ஊர் உண்டோ –
உண்டாகில்-திருநாடு வாழி தென் குருகை வாழி -(இயல் சாத்து )-என்று அவன் நாட்டை ஒப்புச் சொல்லும் இத்தனை –
திரு நகரிக்கு ஒப்பாவது யுண்டோ வுலகில் –என்னக் கடவது இறே –
ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வைஷம்யம் வாசா மகோசரம் -என்று இறே அருளிச் செய்தது –
(கண்ணன் வியாசர் ஆழ்வார் -ஆறு -ஊர் -துறை -ஒன்பது விஷயங்கள் -நாயனார் )

தென் குருகை –
சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் –
நல்லார் பலர் வாழும் குருகூர் (8-2-11)-என்றும் –
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் (3-1-11)-என்றும் -சொல்லும்படி –
பெரிய வண் குருக்கூரான ஸ்ரீ நகரி இறே –
அன்றிக்கே
தெற்குத் திக்கிலே யுண்டானது என்னவுமாம் –

இத்தால் –
திரு நஷத்த்ரத்தினுடையவும் –
திருவவதரித்த ஆழ்வார் யுடையவும் –
திருவாய் மொழியினுடையவும் –
திரு நகரியினுடையவும் –
உபமான ராஹித்யத்தால் வந்த ஆதிக்யத்தை உபபாதித்து அருளினார் ஆய்த்து –

இந்த விசாக நஷத்ரம் தான்
ராஜர்ஷிகளான இஷ்வாகுகளுடைய ருஷம் என்று இஷ்வாகு வம்ச பிரபாவஞ்ஞாராலே விவஷிதம் ஆகையாலும்
ருஷீம் ஜுஷாமஹே -என்னும் படி இவ் வாழ்வாருக்கும் அதுவே ஜன்ம நஷத்ரம் ஆய்த்து –

(சக்ரவர்த்தி திரு மகனே அருளிச் செய்தது -யுத்த காண்டம்
உத்தர பல்குணி -கிளம்பி -ஐந்து நாள் பிரயாணம் -பின்பு விசாகம் வருமே
யுத்த 4-49-/50–ராஜ ரிஷி திரிசங்கு ராஜ ரிஷி -இவர் வம்சம் -மஹாத்மநாம் நக்ஷத்ரம் விசாகே
உபத்திரம் இல்லாத விசாகம் நம் குலத்துக்கு -தொடங்குவோம் வெல்வோம் என்று அருளிச் செய்கிறார் –
திருவாய் மொழிப்பிள்ளையும் விசாகம் திரு அவதாரம்
பங்குனி விசாகம் -காஞ்சி விசாகம்
தை விசாகம் -வேளுக்குடி வரதாச்சார்யர் )

(திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. –9784.-
ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.
போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.)

—————

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—திருவாய் மொழி நூற்றந்தாதி -1-

வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் பண்புடனே பாடி யருள் பத்து——2-

மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம்—4-

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-

ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –7-

நாடறிய ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –9-

திறமாகப் பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-

அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் செறிவாரை நோக்கும் திணிந்து –11-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன் —-12-

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ —-14-

சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க வன்மை யடைந்தான் கேசவன்—16-

மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று நெஞ்சே அணை—17-

மிக மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு—-18-

வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள் முன் செலுத்துவோம் எம்முடி—-20-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்—-21-

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன் இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-எனக்கு என்று தன்மையீ பாவத்தில் மா முனிகள் இத்தை அருளிச் செய்கிறார் –

வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன் பூங்கழலை நெஞ்சே புகழ்—23-

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —24-

அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும்
மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-

இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று—-26-

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில் ஆளாகார் சன்மம் முடியா——27-

ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—28-

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர் மன்னருளால் மாறும் சன்மம்–29-

நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்—-30-

மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் –31-

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் குருகூரில் வந்துதித்த கோ —32-

கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன் வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் —33

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன் பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து மேல் விழுந்தான் மையல் தனின் வீறு—-34-

தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான் சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்—-36-

சால வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு—-37-

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே நம் தமக்குப் பேறாக நண்ணு —38-

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று—39-

நன்றாக மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை—40-

மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே மாறன் பொலிந்து —–41-

உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு—42-

ஏசறவே மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ—-44-

உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன் கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

திடமாக வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

சாற்றுகின்றேன் இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47-

தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான் மாசறு சீர் மாறன் எம்மான் —48-

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய் தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு பின் பிறக்க வேண்டா பிற—49-

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் —51-

உன்னுடனே கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன் ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

ஆராத காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை ஒதிடவே யுய்யும் யுலகு—59-

மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என குன்றி விடுமே பவக் கங்குல்—61-

என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன் அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

ஊழிலவை தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல் பன்னுவரே நல்லது கற்பார்——64-

உற்று உணர்ந்து மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல் பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

தூ மனத்தால் நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

நன்று கவி பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன் பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் —69-

துன்பமறக் கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-

யாவையும் தானாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-

எங்கும் பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

பாரும் எனத் தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல் மானிடவரைச் சார்ந்து மாய்—74-

தூய புகழ் உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் அற்ற பொழுதானது எல்லியாம்–75-

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-

பொருந்தக் கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர் கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான் காரி மாறன் தன் கருத்து —78-

நிறமாக அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர் இந்நிலையை யோரு நெடிதா –79-

அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது கொல்லை நிலமான நிலை கொண்டு –80-

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

நீ செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

பேர் உறவைக் காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம்மனத்து மை–83-

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

பின்னை யவன் தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள் உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-

மருவுகின்ற இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

அறப் பதறிப் செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் மையலினால் செய்வது அறியாமல்—88-

ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் தாரானோ நம்தமக்குத் தாள் –90-

மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

இன்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

சோராமல் கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும் கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

மண்ணவர்க்குத் தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள்–95-

இரு விசும்பில் இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-

வாஞ்சை தனில் விஞ்சுதலைக் கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட திண் திறல் மாறன் நம் திரு—97-

நீ இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி –99-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

———

வ்ருஷ பேது விஸாகாயாம் குருகா புரி காரி ஜம்
பாண்ட்ய தேச கலோர் ஆதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே

————————————————————————————–———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்–

June 13, 2022

உண்டோ வைகாசி விகாசத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு ஒருவர் உண்டோ
திருவாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்குமூர் –

இன்று முதல் ஸ்ரீநம்மாழ்வார்
திரு அவதார உத்சவம்🙏

இன்று முதல்
ஸ்ரீ பார்த்தசாரதி வசந்த உத்சவம்

ஏழு நாள்கள் உத்சவம்
கடைசி நாளில் வாஸூ தேவ புரம் எழுந்து அருளுகிறார் 🙏

———-

ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்

திரு முளைச் சாற்று ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து
மாலை விருச்சிக லக்கினத்தில் 4.30-மணிக்கு மேல் 5-30-மணிக்குள் தேங்காய் சாற்றுதல்
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் தங்க தோளுக்கு இனியான் –

முதல் உத்சவம் –
காலை 7.00 மணிக்கு மேல் 8-30 மணிக்குள் மிதுன லக்கினத்தில் துவஜாரோஹணம்
ஸ்ரீ அஹோபில மடத்தில் விடாயாற்று மண்டகப்படியும்
ஸ்ரீ திருக்குறுங்குடி மடத்தில் மண்டகப்படி -திரு மஞ்சனம் கோஷ்ட்டி

மாலை 6-00 மணிக்கு இந்திர விமானம்
உபாயம் -ஸ்ரீ அஹோபில மட ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

இரண்டாம் உத்சவம் –
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
மாலை 6.00 மணிக்கு புஷ்ப்ப பல்லாக்கு
அலங்கார உபாயம் -ஸ்ரீ மத் ஆத்தான் வடக்கு திருமாளிகை ஆதீன சிஷ்யர்
திரு விழா உபயம் -திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

மூன்றாம் உத்சவம்
காலை 6-30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ வான மா மலை மடத்தில் விடாயாற்று
கிளி குறட்டில் திரு மஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணி புன்னை மர வாஹனம்

நான்காம் உத்சவம்
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
கிளி குறட்டில் திரு மஞ்சனம்
மாலை 6.00 மணிக்கு -தங்கத் திருப்புளி வாஹனம்
உபயம் -ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

ஐந்தாம் திரு நாள்
ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் மங்களா ஸாஸனம் -பூப்பந்தல் மண்டபம்
ஸ்ரீ நவ திருப்பதி எம்பெருமான்கள்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
ஸ்ரீ உத்திராதி மண்டபத்தில் விடாயாற்று பந்தல் மண்டபக் குறட்டில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
இரவு ஒன்பது கருட ஸேவை
ஸ்ரீ கள்ளபிரான்
ஸ்ரீ காய்ச்சின வேந்தன்
ஸ்ரீ அரவிந்த லோசனன்-ஸ்ரீ தேவர் பிரான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
ஸ்ரீ எம் இடர் கடிவான்
ஸ்ரீ மாயக்கூத்தன்
ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்

ஸ்ரீ நம்மாழ்வார் ஹம்ஸ வாஹனம்

ஆறாம் நாள்
மாலை தண்டியலில் திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ பராங்குச மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை 6.30 மணிக்கு திருவீதிப்புறப்பாடி
ஸ்ரீ உடையவர் சந்நிதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் எழுந்து அருளி
சேர்த்தி திருமஞ்சனம்
மாலை திரு வீதிப்புறப்பாடு -வெள்ளி சந்த்ர பிரபை
உபயம் -ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ ஆதி நாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா

எட்டாம் நாள்
காலை 7.00 மணிக்கு ஸ்ரீ அப்பன் சந்நிதிக்கு எழுந்து அருளி
மாலை ஸ்ரீ தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்
இரவு கோயிலுக்கு எழுந்து அருளுதல்
8.00 மணிக்கு குதிரை வாஹனம்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

ஒன்பதாம் நாள்
ஸ்ரீ கோரதம் காலை 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதிக்கு எழுந்து அருளி மங்களா சாசனம் கோஷ்ட்டி
உபயம்-ஸ்ரீ ஆத்தான் கீழத் திரு மாளிகை ஸ்வாமிகள்
மாலை 45.00 மணிக்கு உத்திராதி மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்

பத்தாம் நாள் -ஸ்ரீ திரு விசாகம் ஸ்ரீ திரு நக்ஷத்ர திரு நாள்
காலை மாட வீதிப்புறப்பாடு
ஸ்ரீ சிங்கப்பெருமாள் சந்நிதியில் திருமஞ்சனம்
ஸ்ரீ தாமிர பரணி நதியில் தீர்த்த வாரி
சந்நிதிக்கு எழுந்து அருளி அட்ச்சதை ஆசீர்வாதம்
பெரிய சந்நிதிக்கு எழுந்து அருளி கோஷ்ட்டி தீர்த்த விநியோகம்
மாலை 6.00 மணிக்கு வெட்டி வேர் சப்பரம் -வெள்ளி தோளுக்கு இனியான்
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ உடையவர் கோஷ்ட்டியுடன்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

அடுத்து ஐந்து நாள்கள் விடாயாற்று உத்சவம்
அதில் முதல் நாள் ஸ்ரீ மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி கந்தப்பொடி உத்சவம் -திருமஞ்சனம் -கோஷ்ட்டி –
நான்காம் நாள் -ஸ்ரீ அஹோபில மேடம்
ஐந்தாம் நாள் -ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமம்

————-

நம்மாழ்வார் வைபவம்.
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ——பெரியமுதலியார்🙏

ஸ்ரீமதே சடகோபாய நம:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||🙏

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு

அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது ..
(கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை.

இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி *என்றார் ஆழ்வாரும்.

இனி *
கோதிலவாம்…. என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி. . .🙏🙏🙏🙏

———–

பெருமாள் திருமொழி…

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி Object
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே.. 🙏

இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான்
ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து
தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க
ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து,
அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்.
அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை புல் பூண்டு முதலிய அஃறிணை உயிர்களும்
அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு
எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த
எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே
அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர்அளித்தனர். .🙏🙏


நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபூதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

* தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.

இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகாரிகள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏🙏🙏🙏


இரண்டாம்-பத்து…..

கீழ்த்
திருவாய் மொழியில்..

நிஷ்கர்ஷிக்கப் பெற்ற பேற்றை பெறுவதற்கு திருமால் இரும் சோலையை ஆஸ்ரயிக்கிறார்
என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
அத்தை எம்பெருமானார் மேலும் இனிமை படுத்தி -அருளிச் செய்வர்
கீழ் ஒல்லை ஒல்லை -காலக் கழிவு செய்யேல் -என்று பகவத் கைங்கர்யத்தில் தமக்கு உண்டான பதற்றத்தை வெளியிட்டு அருள
அத்தைக் கண்ட எம்பெருமான் இவள் இந்த சரீரத்துடன் கைங்கர்யம் செய்ய துடிக்கிறார் என்று எண்ணி
அதற்கு ஏகாந்தமான ஸ்தலம் இந்நிலத்தில் ஏது என்று கடாஷித்து வருகையில்
வளரிளம் பொழில் சூழ் மாலிரும் சோலை யைக் கண்டு
ஆழ்வீர் உமக்கு முகம் தருகைக்கு இங்கே வந்து நின்றோம்
நீர் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கலாம் –
என்று தென் திருமலையைக் காட்டிக் கொடுத்து அருள
ஆழ்வாரும் அதை அனுசந்தித்து
எம்பெருமான் உபேயன் ஆனால் அவன் எழுந்து அருளி இருக்கும் இடமும் உபேயம் தானே
ஆகவே திருமலையோடு
அதனோடு சேர்ந்த தொரு மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போவோம்என்கிற அத்யாவசாயத்தோடு*
வாசி அற நமக்குஎல்லாம் பிராப்யமே -என்று கொண்டு அனுபவித்து இனியர் ஆகிறார் …..
என்று காட்டி அருளினார்…

வாயும் திரையுகளும்….
க்ஷணம் காலம் விச்லேஷம் பொறுக்க முடியாதவன் …

திண்ணன் வீடு..
மனுஷ்ய சஜாதீயனாய் திருவவதரிக்கச் செய்தே பரத்வம் பொழிய நிற்பவன்…

ஊனில்வாழ்உயிர்
மதுர பதார்த்தங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்தால் போல் போக்யன்….

ஆடி ஆடி அகங்குழைந்து…

ஆஸ்ரிதர்களின் துயர் தீர்க்கும் தன்மையன்…

அந்தாமத்தன்பு…
ஆஸ்ரிதர் உடன் சம்ச்லேஷித்து அத்தாலே ப்ரீதன் ஆனவன்….

வைகுந்தா…..
ஆஸ்ரிதர்கள் நம்மை விட்டால் ஏன் செய்வோம் அதி சங்கை தீர்த்தது…

கேசவன் தமர்….
ஆஸ்ரிதர் உடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் விஷயீ காரம் உண்டே…

அணைவது அரவணை மேல்…
மோஷம் அளிப்பவன்

எம்மா வீடு…
கைங்கர்ய பிரதிசம்பந்தி என்றது….
கிளரொளிஇளமை..
அழகிய திருப்பதியை உடையவன்….. …..
என்று அருளிச் செய்கிறார்….

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி) 🙏🙏🙏🙏


மூன்றாம் பத்து -முதல் திருவாய்மொழி –

முடிச்சோதியாய்….

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்:
இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்
களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான
பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.

பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன் என்று
அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை என்றார் ….
கீழில் திருவாய்மொழியில்:
அக்குணாதிக- அக் குணங்கள் நிறைந்திருக்கின்ற நற்குணக்கடலான – விஷயம் தன்னில்
ஓர் அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற –படியைச் சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின்,
கீழ் கர்மங் காரணமாக வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்;
இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி,
விஷய வைலக்ஷண்யமாயிருக்கும்.
நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது.

ஆங்கார வாரம் அது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி *யாங்காண
வல்லமே யல்லமே*
மா மலரான் வார் சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து

ஸ்வரூப அனுபந்தியாய் – -ஸம்சயமாகையாலே
சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ –
ஆகவே இந்த அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றே-இது? ஆதலின், முரணாகாது.

கீழே திருவாய்மொழியில், திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர்,
வடமாமலையுச்சியை*’ என்னுமாறு போன்று, திருமலையில்-
(ஏக தேசம் )– ஒரு பகுதி என்னலாம்படியாய்,
கற்பகத்தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய
ஸௌந்தர்யத்தை – அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
அனுபவிக்கிறவர், வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் –
ஸ்வ யத்னத்தால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும்,
அவன் தானே கொடுவந்து காட்டுமன்று –
ஜென்ம வ்ருத்தாதிகளால்
குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும்-அனுசந்தித்து விஸ்மிதராகிறார் –ஈடு..


ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி.

மஹோபநிஷத்தில் ஓதினகட்டளையிலே, பிரமன் சிவன் முதலான ஸகலப்ரபஞ்சங்கட்கும் காரணனான நாராயணனே பரதெய்வமென்று இப்பரபந்தத்தின் முதற்பாட்டில் பிரதிஜ்ஞை பண்ணி, ஸ்ருதி ஸ்மருதி இதிஹாஸம் முதலியவற்றாலும் தக்க நியாயங்களாலும் ச்ரியபதித்வம் முதலிய சின்னங்களாலும் அதை நெடுக உபபாதித்துக் கொண்டுவந்து, அடியில் பண்ணின பிரதிஜ்ஞைக்குத் தகுதியாக ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை நாட்டித்தலைக்கட்டுகிறார். ஆகவே, தேவதாந்தரங்களினிடத்து உண்டாகக்கூடிய பரத்வப்ரமத்தைத் தவிர்த்து ஸ்ரீமந்நாராயண னிடத்திலேயே பரத்வத்தை ஸ்தாபிப்பதே இப்பிரபந்தத்தின் முழுநோக்கு என்று அறியப்பட்டதாகும்….🙏

இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்…

இப்பாட்டும் மேற்பாட்டும் சாத்துப்பாசுரங்கள்,

ஏன்றேனடிமை – அடிமையென்றால் மருந்துபோலே முகம்சுளிக்கும்படியிராதே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி“ என்ற இளையபெருமாளைப்போலே உத்ஸாஹங்கொண்டு பாரிப்பவனாயினேன் என்கை.

இப்படியாகவே, அடிமைக்கு விரோதியாயிருந்த தாபத்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேனென்கிறார்

இழிந்தேன் பிறப்பிடும்பை என்பதனால் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே“ என்றார்போலே பரமபதம் ஸித்தம் என்கிற உறுதியினால் இங்ஙனே யருளிச்செய்கிறார்.

அன்றியே “வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்“ என்றார்போலே தாமிருக்குமிடத்தையே பரமபதமாக அத்யவஸித்து அருளிச் செய்கிறாராகவுமாம்.

அமரர்க்கு அமராமை ஆன்றேன் – பிரமன் முதலிய தேவர்களும் என்னைக் கண்டால் கூசி அகலவேண்டும்படி பெரும்பதம் பெற்றேனென்கை.

(கடனாமித்தியாதி) கடன்பட்டதானது எப்படி அவசியம் தீர்த்தேயாக வேண்டுமோ அப்படி பண்ணின புண்ணியங்களுக்கு அவசியம் பலன் அநுபவித்தே தீரவேண்டுமிடமான ஸ்வர்க்கலோகம் “கடன்நாடு* எனப் படுகிறது.

புண்யபலன்களை யநுபவிக்குமிடமான சுவர்க்கத்தையும் புண்ணியம் திரட்டுமிடமான பூலோகத்தையும் வெறுத்து அனைத்துக்கும் மேற்பட்ட இடமாகிய திருநாட்டைச் சேர்வதற்குப் பாங்காகப் பரமபக்தி நிரம்பப் பெற்றேனென்றாராயிற்று.

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் வைபவம்……. 🙏

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள் அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.
இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய் போக்யமுமாய் ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே,
மாற்றங்களாய்ந்து கொண்டு(6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் என்கிறார். அதாவதுதிருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம். * தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள்

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்று * பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழர் இசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.”

இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய்* இருக்கும்.

இதனை ஆழ்வார் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்….

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும் மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும் வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தெனா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே. (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி
🙏🙏🙏🙏
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்திசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் –5-2-1-
ஸ்ரீ வைஷ்ணவ சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் இத் திருவாய் மொழியில்
சம்சாரம் பரம பதம் வாசி இன்றி ஒன்றும் தேவும் உபதேசத்தால் திருந்தின படி
ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ செய் கண்டு உகக்க நித்ய சூரிகள் இங்கே வர அவர்களுக்கு மங்களா சாசனம் என்பர் –
இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண லோகாந்தரத்தில் நின்றும் வந்தவர்கட்கு மங்களா சாசனம் என்பதும் ஒரு நிர்வாஹம்
*அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும் காண* லோக -த்வீபாந்தரங்களில் -நின்றும் போந்த குழாங்களைக் கண்டு காப்பிட்டு.–நாயனார் –

————

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம்.

உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் ….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில்* அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா* என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கண்வளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)
🙏🙏🙏🙏
வைகல் பூங்கழிவாய்………

.ஆழ்வார் நான்கு திருவாய் மொழிகளிலும் சரணாகதி பண்ணியும் பலிக்காதது
நமது பாக்யமே
மேலும் மேலும் திருவாய் மொழி கிடைக்கப் பெற்றோமே
உலகத்தை வாழ்விக்க திரு உள்ளம் பற்றியே சரணாகதியை நிஷ்பலமாக்கினான் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைபெய்துவனே -என்றும்
உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
பலகாலும் கதறி எம்பெருமான் பக்கலில் கடுக சேரப் பாரித்த ஆழ்வார்
திரு வண் வண்டூர் சந்நிதி பண்ணி இருக்கும் படியை நோக்கி
தாம் அங்கே சென்று சேர மாட்டாத தம் தசையை
அவ் வெம்பெருமானுக்கு தெரிவிக்கும்படி தூது விடுகிறார் –

அஞ்சிறைய மட நாராய்-வ்யூஹ நிலையில் தூது
இத்திரு வாய் மொழி வைகல் பூங்கழிவாய் – விபவத்தில் தூது
பொன்னுலகு ஆளீரோ– பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
எம் கானல் அகம் கழிவாய் -அர்ச்சாவதார தூது –

தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
*மறப்பித்த
க்ஷமா தீக்ஷா ஸாரச்ய சௌந்தர்யங்களை
யுணர்த்தும்*
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம்–

இத் திருவாய் மொழி விபவத்தில் தூது என்பதை
வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு -மணவாள மா முனி அருளிச் செய்கிறார்
திரு வண் வண்டூரில் தூது ஆனால் அர்ச்சாவதார தூது ஆகாதோ என்னில்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-10 பாசுரம்
அமைந்து இருக்கும் படியை- நோக்கி
அர்ச்சாவதார தூது வேறு ஒரு பதிகம் இருப்பதையும் நோக்கி
பூர்வர்கள் இவ்வாறு வகையிட்டு அருளினார்கள் –
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் உத்சவம்-7………………

.உண்ணிலாவிய ஐவரால்………….

ஸ்ரீ கீதாசார்யன்…….

தைவி ஹ்யேஷா குணமயீ மமமாயா துரத்யயா —மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-
இந்த திருமுக பாசுரத்தில் நம்பிக்கையால் பெரிய பிராட்டியார் முன்னாக மாயாப்பிறவி மயர்வருத்து
நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற திருவேங்கடமுடையான் திருவடிகளில் ஆர்த்தராய் சரணம் புகுந்தார்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முன்பே தேவர்கள் சரணாகதி பண்ணினதால் பெருமாள் அது பலிக்க வில்லை
ஆழ்வாருக்கு முன்பே சிலர் சரணா கதி பண்ணி இருப்பார் போலும்-அதனால் பலன் அளிக்க எம்பெருமான் தாழ்த்தான்…..
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பத்தலைச் சிறப்பப்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி……..– –
முனிவர்கள் கூடி யதோ வாஸோ நிவர்த்தந்தே -திரும்பி வந்தன
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் செவ்வனே பேச வல்ல திவ்ய பிரபந்தம் திரு வவதரிக்க வேணும் -என்று பிரார்த்திக்க
திருவவதரித்த பின்பு
எம்பெருமானுக்கு மேலும் இன்னம் குணங்களும் விபூதிகளும் உண்டாக வேணும் -என்று நினைத்தார்களாம்
இத்தையே எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் –
அவனுடைய குண விபூதிகள் எல்லாம் கபளீ கரிக்கப் பட்டுவிட்டன – –
ஆக திருவாய்மொழி பாடி தலைக் கட்டி முடிக்க ஆழ்வாரை இன்னம் வைத்தான் ஆயிற்று
முன்னமே பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று -வயிறு எரிந்தார்
இன்னம் அகற்றுமவற்றின் நடுவே இருத்தித் துடிக்க வைப்பது தருமமோ என்கிறார்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்-என்கிறார் இதில் ஆறாம் பாட்டால் –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்பதிலும்
மாற்றம் உள -என்பதிலும்
இரண்டு திரு மொழியாலும் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வார்
இத் திருவாய் மொழியை விவரியா நிற்பர்-
முடியானே-யில் கரணங்களை உடைய இவருக்கு
இந்த்ரிய வச்யத்தை உண்டு என்னும் இடம்
கீழோடு விருத்தம் அன்றோ என்னில்,
அசல் அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்
தாம்தாம் அகம் பரிஹரியாது இருப்பார் இல்லை இ றே…
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் சர்ப்பம் என்று புத்தி பண்ணி பிரமிக்கக் கடவதே இருக்கும் இ றே.
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடு இருக்கிற படியைக் கண்டார்..
நாட்டார் அடைய இந்த்ரிய வச்யராய் கிடந்து நோவு படுவதைக் கண்டார்.
இது நம்மளவில் வரில் செய்வது என்-என்று அஞ்சிக் கூப்பிடுகிறார் -ஈடு ஸ்ரீ ஸூக்திகள்-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இரு நிலம் கை துழாவி இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே –7-2-1-
[

கீழே ஆறாம் பத்தின் ஏற்றுத் திருவாய் மொழியில் பெரிய பிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கார்
எம்பெருமான் திருவடிகளில் நிற்கக் கண்டிலர்
மிக்க ஆர்த்தி உடன் புலியின் வாயில் அகப்பட்டால் போலே சப்தாதி விஷயங்களை நலிவதை வெளி இட்டார் கீழ் திருவாய் மொழியில்
இவர் ஆர்த்தியை அறியாதவன் அல்லன் எம்பெருமான்
நாலு நாள் நோவு பட்டாராகில் படுகிறார்
இவர் திவ்ய பிரபந்தம் கொண்டு நாட்டைத் திருத்தப் பார்த்தான்
இக்கோடு உலகில் இருப்பு நமக்கு பொருந்த வில்லையே
இந்நிலத்தில் இருப்பு பொருந்துவார் பலர் உண்டே அவர்களைக் கொண்டு திருத்தலாகாதா
இருப்பு பொருந்தாதாரைக் கொண்டே கார்யம் செய்ய திரு உள்ளம் பற்றினான்
இத்தால் நிலை கலங்கின ஆழ்வார் தாமான தன்மை இழந்தார்
திருத் தாயார் பாசுரமாக செல்கிறது இத் திருவாய்மொழி
திருத்தாயார் இவளை ஸ்ரீ ரெங்கநாதர் திருவடிகளிலே இட்டு வைத்துக் கொண்டு இருந்து -இவள்
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்செறிவது
அதுவும் மாட்டாது ஒழிவது
ச்ப்தையாய் இருப்பது
முதலியவற்றை ஒவ் ஒன்றாக எடுத்துச் சொல்லி
இவள் திறத்தில் நீர் என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறீர்
என்று கேட்கும் படியாக செல்கிறது –

நம்பிள்ளை ஈடு -திருத் தாயாரும் சர்வ பரங்களையும் அவர் தலையிலே பொகட்டு
பெண் பிள்ளையை திரு மணத் தூணுக்குள்ளே இட்டு
அவருடைய அசரண்ய சரண்யத்வாதி குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
ஒரு கால நியதி யாதல்
ஒரு தேச நியதி யாதல்
அதிகாரி நியதி யாதல் அன்றிக்கே
சர்வ சமாஸ்ரயணீயராய் இருக்கிற படியை அனுசந்தித்து
தன் பெண் பிள்ளையினுடைய தசையை திரு உள்ளத்திலே
படுத்துகிறாள் இத் திருவாய் மொழியாலே

பட்டர் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யும் போதெல்லாம்
ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே
அவருடைய பாவ வ்ருத்தியும் இன்றிக்கே
இருக்கிற நாம் என் சொல்கிறோம்
என்று திரு முடியிலே கையை வைத்துக் கொண்டு இருப்பர் –


ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம் இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள்* தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் *எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்*
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)-என்று ஸங்க்ரஹித்தார்.

இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி….

இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள்.

* ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * ….

இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய்,

இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

*புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம்* வகுளதரதாமேத்ய ஸ புந: |
*உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||*

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும். இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் (65) என்று காட்டியருளினார் ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார் …..

ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை
ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம்
விம்ஶதிர் வக்தி ஸாக்ரா ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார். இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசகத்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள் அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது….


திருவாய்மொழி எட்டாம் பத்து…….
அடியேனுள்ளான் உடலுள்ளான்……

ஸ்வாமி ராமானுசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

ஸ்வாமியின் கோஷ்டியில் ஒரு கேள்வி எழுந்தது. ஆத்மா ஆனந்தம் ஞானம் இவ்விரண்டின் இருப்பிடமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டது என்றும் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு அடையாளங்களினுள்ளும் ஆத்மாவுக்குப் ப்ரதானமானது எது?

இக்கேள்விக்கு விடையைத் தாம் நன்கறிந்திருப்பினும் இணையற்ற ஞானவிலாசமுள்ள தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலமே இதை நிர்ணயிக்கத் திருவுள்ளம்பற்றிய எம்பெருமானார் இக்கேள்விக்கான விடைக்கு நம்பிகளின் அபார வாக் வைபவம் தேவை எனக்கருதினார். தமது மேன்மை மிக்க சீடர் கூரத்தாழ்வானைக் காலம் கருதி நம்பிகளிடம் இக்கேள்வியை விசாரிக்க அனுப்பினார்.

ஆழ்வானும் காலம் கருதி இக்கேள்வியை எழுப்ப நினைந்தபோது ஆறுமாசங்கள் கழிந்து, நம்பிகள், அடியேனுள்ளான் உடனுள்ளான் என்று சுருக்கமாக விடை தந்தார். இது திருவாய்மொழி எட்டாம் பத்து, எட்டாம் திருவாய்மொழியில் இரண்டாவது பாசுரத்தின் ஒரு பகுதியாகும்

ஆத்மாவுக்கான அடையாளங்களில் அது ஈச்வரனுக்கு சேஷப்பட்டிருப்பதே ப்ரதான அடையாளம் என்கிற அபிப்ராயத்தை இது உணர்த்தும். இது நம்பிகள் கூறியதில் அடியேன் என்கிற சொல்லினால் பெறப்படும் பொருளாகும்.

திரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்… 🙏🙏
[4:21 PM, 6/10/2022] +91 72995 10125: பாகவதசேஷத்வம்
அம்மணியாழ்வான் என்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பட்டரிடத்து தண்டன் சமர்ப்பித்து கேட்கின்றார் ‘அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு அர்த்தம் பிரஸாதித்தருள வேணும்’ என்று!. பட்டர் ‘நெடுமாற்கடிமை’ என்ற பாசுரத்திற்கு அர்த்தம் கூறுகின்றார். மேலும், ”எம்பெருமானைப் பற்றி மட்டும் அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு அரைவயிறு மட்டும் நிரம்பியது போன்றதாகும். அவனது அடியார்களையும் அவர்களது வைபவங்களையும் உணர்ந்து அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு முழுவயிறும் நிரம்பியது போன்றதாகும்’ என்று பரம பாகவதோத்மர்களின் சிறப்பினைப் பற்றி விளக்குகின்றார்.
ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே சப்தஜாலவத் !
ஸித்தே ததீயஸேஷத்வே ஸர்வாதாஸ் ஸம்பவந்திஹி !!
ஆலம் விதையில் ஆலமரம் போலவும், ப்ரணவத்தில் எல்லா சப்தங்கள் போலவும் பாகவத சேஷத்வம்
ஸித்திக்குமாயின் (அதில் அடங்கிய) எல்லாப் பொருள்களும் கிடைத்தனவாகின்றன.🙏🙏
நெடுமாற்கடிமை…….. ……
பகவத் கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல்,
அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை நெடுமாற்க்கடிமை (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார்.
இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது
தனிமாத் தெய்வமான எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே
அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள்
(ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி)
அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே
(ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்)
கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
* (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்க வேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.🙏🙏🙏🙏


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே P.B.A- ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -91-100–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 31, 2022

அவதாரிகை

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்
அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை
அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன

ஆஸ்ரித வ்யாமுக்தனாய்

ஆபத் சகனாய்

ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –

இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

வார் கடா அருவி -8–4-

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலை  யல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை
கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு
அமுத செய்த க்ருத்ரிமனானவனை

இத்தால்
இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப்

பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல்
பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –

(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்
மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்
அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற
பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய

பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்

இத்தால்
தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கை

அடியேன் நெஞ்சம் பேணலதே –
இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு
வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது

அறத்தொடு நிலை

தொடு உண்ட கள்வன் -என்கையாலே
புணர்ச்சி தோற்றிற்று

வையம் இத்யாதியாலே –
நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )

மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இங்கே கிடந்தது -காலம் நெடிதாகா நின்றது குறுகா நின்றது என்று
ஆழங்கால் பட்டுக்கிடவாதே நாங்கள் கண்டீரே
புறம்புள்ள விஷயங்களாலே தரித்துக் காலம் நெடுகுதல் குறுகுதல் செய்யாதே ஸூகித்து இருக்கிறோம்
அப்படியே நீரும் பகவத் விஷயத்தில் நின்றும் மாறி நெஞ்சைப் புறம்பே வைக்கைக்குப் பார்த்தாலோ என்ன
அப்படிச் செய்யலாயிற்றே அதுக்கு ஈடாய் இருபத்தொரு நெஞ்சைப் பெற்றோமாகில்
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஓன்று அறியாது என்கிறார்
என் நெஞ்சு தன்னைப் புறம்பே வைக்கலாயிற்று இறே அவன் நவநீத ஸுர்யம் பண்ணானாகில்

வியாக்யானம்

சுருந்குறி வெண்ணெய்
கள்ளக் கயிறு உருவி வைத்த உறி யாயிற்று

வெண்ணெய் தொடு வுண்ட
வைத்த குறி அழியாமே வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த

கள்வனை
களவு தன்னை யாயிற்று களவு கண்டது ஆகிறது –

———————————————————————

அவதாரிகை

இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன்
நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ
தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க

வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க

உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே

சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று
அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்

இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-

பதவுரை

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்–தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள் தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

வியாக்யானம்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று
உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய
சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே
பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே
பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து

நின்னை
நிரதிசய போக்ய பூதனான உன்னை

விண்ணோர்
விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்

தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது
தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து
அத்தாலே
உத்தரம் தீர மா ஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்

(வடக்குக்கரை அடைந்து -கிழக்குக்கரை இல்லாமல் -லங்கைக்கு வடக்கு தானே –
கால் பூமியிலே படாமல் இருந்தான் விபீஷணன் அங்கு
பொருந்தாமல் இருந்தான் -)

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக
நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –

போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து

வைகல் மாலையும் காலையுமே –
அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றார் கீழே
அளவுடைய அதிகாரி புருஷர்களாக தேவர்களுக்கு இதுவும் இன்றி ஒழிவதே என்கிறார்
என் தான்
அவர்களுக்கு வந்த குறை என் என்னில்
நாம் எல்லாவற்றையும் அழிய மாறிப் பெறக் கடவத்தையும் அழிவுக்கு இட்டு

வேறே சில ப்ரயோஜனங்களைக் கொள்ளா நின்றார்கள் இறே -என்கிறார் –

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்
விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று

வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்
இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய்
ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்

நீணகர்
பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்

நீள் எரி
பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை
சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே

வைகலும்
எப்போதும்

தொழுவர்
இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே

நீள் நகருக்கு விசேஷணம்

பேணல் இத்யாதி
உன் விபூதியைப் பேணவும்
உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற
முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி
இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே
உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே
ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை

வைகல் மாலையும் காலையுமே –
சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –

———————————————

அவதாரிகை

இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்

அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து
பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று

அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –

பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-

பதவுரை

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு-

(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.

வியாக்யானம்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி
ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்

மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க
லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்

அன்ன கண்டும்
அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்

காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான
ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி
அவன் உபதேசத்தில் அவகாஹித்து

கண் போது செய்து
பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து

மாலை நல் நாவில் கொள்ளார்
ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்

நினையார் அவன் மைப்படியே –
அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்
இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தேவர்கள் தான் ஓர் அபிமான விசேஷத்தாலே இருக்கிறார்கள்
அல்லாதாரோ தான் பகவத் போஜனம் பண்ணுகிறார்களோ
அவர் இவர் என்று விசேஷிக்கிறது என்
எல்லார்க்கும் புறம்பே யன்றோ போது போக்கு என்கிறார்

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது
அந்த ராத்திரி ஆதித்யனை மேலிடுவதாய் இருக்கிற இத்தைக் கண்டு வைத்து

நந்தத்த யுதித ஆதித்யே -அயோத்யா -105-24
விடிந்தவாறே அபிமத விஷயங்களை புஜிக்கும் படி உபகரணங்களைத் தேடுகைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்

நந்தத்த யஸ்தமிதே ரவவ்
அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதபடி அவ்விஷயங்களை புஜிக்கும்படியான காலம் வந்தது என்று களிப்பார்கள்

ஆத்மந இத்யாதி
பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்
சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்
சாவக்கடவராய் இருக்கிறவர்கள்
காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன்
அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே
மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்
நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறே

அன்ன கண்டும்
அப்படியைக் கண்டு வைத்தும்
பகவத் விஷயம் ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் அல்லாமையாலே தான் அறியாது ஒழிகிறார்கள்
இத்தினுடைய அவஸ்தையை ப்ரத்யஷியா நிற்கச் செய்தேயும் நெஞ்சில் படாது ஒழிவதே

காலை
ஸத்வ உத்தரமான காலத்திலே

நன் ஞானத்
ஞானம் ஆகிறது பகவத் விஷயத்தைப் பற்றி யல்லது நில்லாது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -( முதல் திரு -67 ) என்னக் கடவது இறே
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-87 )
வித்யா அன்யா சில்ப நை புணம் –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-41 )
புறம்பே ஒன்றைக் கற்றத் தோடு
துன்னம் பெய்யக் -கந்தை தைக்க -கற்றத்தோடு வாசி இல்லை இறே

துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில்
பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய்
நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24-

என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்–

————————-

அவதாரிகை

மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர்
நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக
விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–

பதவுரை

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மை யுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்து மீண்டு) ஊர் வந்து சேர்ந்த
(கண் தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

வியாக்யானம்

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்

வைதிகரே
நீல தோயத -தைத்ரியம் என்றும்
யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும்
திரு வடிவையும் திருக்கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே

மெய்ப்படியால்
கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே
மெய்யாகக் கண்டபடியாலே

உன் திருவடிச் சூடும் தகைமையினார்
பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை
சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்

எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க

கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்

அப்படி யானும் சொன்னேன்
அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்

அடியேன்
சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்

மற்று யாது என்பனே —
அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
துர்மானத்தாலே இழப்பாரும்
அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பார்கள் என்றீர்
உமக்கு குறையில்லையே என்ன
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாய்
முன்னடி தோற்றாதபடி மயர்வற மதிநலம் அருளினாயே
பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளிற்று
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்
வள வேழ் உலகில் படியே அயோக்யதா அனுசந்தானத்தாலே -1-5- ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்

அடியேன் மற்று யாது என்பனே
உனக்கே அடிமைப்பட்ட நான்
என்முன் சொல்லிச் சொல்லும் நான்
நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –

————-

அவதாரிகை

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்
கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன

அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை -10-8-

பதவுரை

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம் –
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில்
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால்
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய்
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

வியாக்யானம்

யாதானும்
முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை
ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை

ஓர் ஆக்கையில்
பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை

ஆக்கை என்று
சரீரத்தைச் சொல்லுகையாலே
பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை

புக்கு
சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது

அங்கு ஆப்புண்டும்
அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி
போக ஆயதநத்வாதிகளாலே ஸக்தனாயும்

ஆப்பு அவிழ்ந்தும்
இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –

மூதாவியில் தடுமாறும்
இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்
ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று
ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று
ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்

உயிர்
ஜீவனானது
முன்னமே –
இப்பிரக்ருதி ஸம்பந்தம் -அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்

அதனால்
இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான
இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை

நல் வீடு செய்யும்
நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான

மாதாவினைப் பிதுவை
பிரிய பரனுமாய்
ஹித பரனுமாய் உள்ளவனை

வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்

திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை
வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே
பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189-
மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்
அதாவது
ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்
சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி

வணங்குவனே –
ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்

கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –

(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பக்தி பாரவஸ்யத்தாலே யாதல்
அயோக்யதா அநு சந்தானத்தாலே யாதல்
ஏதேனும் ஒருபடி கண்ணழிவு சொல்லிக் கை வாங்காமே
தன் பக்கலிலே ப்ராவண்ய அதிசயத்தை யுடையேனுமாய்
இதர விஷயங்களில் அருசி யுடையனுமாம் படி பண்ணின
மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார்

இவ்விடத்தில் உருத்தோறும் குறியாக ஜீயர் அருளிச் செய்வதொரு வார்த்தை யுண்டு
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அங்கே ராமானுஜ தாசர் என்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன
நம்பெருமாளைப் பிரிந்த சோகத்தால் செவி சீ பாய்ந்து இருக்கையாலே நான் ஒன்றுக்கும் ஷமன் அல்லேன்
ஜீயர் நீர் சொல்லும் என்று அருளிச் செய்ய

ஜீயர் அருளிச் செய்து கொடு போகா நிற்க
வளவன் பல்லவதரையர் என்று திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை யுடையார் ஒருவரும் அதை அனுசந்தித்திக் கொண்டு போந்தாராய்
அவர் இப்பாட்டு அளவிலே வந்தவாறே கண்ணும் கண்ண நீருமாய் புள கீக்ருத காத்ரருமாய் இருக்கிற இத்தைக் கண்டு
இப்பாட்டில் வார்த்தை சொல்லுவது இனி
ப்ரசங்க மாத்திரத்திலே வித்தரானீர் இது என் என்ன

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே
எம்பெருமான் திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார்
அத்தை இப்போது ஸ்மரித்தேன்-என்ன

அவர் இதுக்கு ஏதேனும் வார்த்தை அருளிச் செய்தது உண்டோ என்ன

எனக்கு அவை போகாது -இப்பாசுரத்தை நினைத்து இருப்பன் -என்றாராம்
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று இப்பாட்டை ஐந்தாறு நாழிகைப் போது கொண்டாடினாராம் –

வியாக்யானம்

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு
ஏதேனும் ஒரு சரீரத்தே பிரவேசித்து
அறவும் தண்ணிய ஸூகர ஜென்மத்தில் ஜனித்தாலும்
மமாயம் தேஹ -என்று கொண்டு
அதிலே அபிமானித்து
அங்கே உண்டானவற்றோடே சில ஸம்பந்த விசேஷங்களும் உண்டாய்
அவற்றை விட மாட்டாதேயுமாய்ப் போறா நிற்குமாயிற்று

ஆக்கை என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது

புக்கு
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வத உள்ளது அன்று -கர்ம நிபந்தனம் என்கை

அங்கு ஆப்புண்டும்
கர்ம வாஸனையாலே ருசி வாசனையாய்
அதிலே பத்தனாய் இருக்கும்
இது தண்ணிது என்று அறியா நிற்கச் செய்தேயும்
இத்தை விடில் செய்வது என் -என்று துணுக்குத்

——————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

முமுஷுக்களான சிலர்
சம்சரண நிவர்த்தகன் படியையும்
எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன
தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று

நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –

வியாக்யானம்

ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு

அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே –
ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்

அதுக்கும் மேலே
மூதாவியில் உயிர்
அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால்
இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால்
அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்

முன்னமே
யாவதாத்ம உபக்ரமாயே

அதனால்
ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்
நியமபூர்வ ப்ரவ்ருத்தியை
விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்

நல் வீடு
நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான

மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11-ஜகன் மாதாவை

வணங்குவனே –
பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்

தத் அநந்தரமே
பிதுவை திரு மாலை வணங்குவனே –
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று
முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை
தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்
தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும்
அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –

————————————

அவதாரிகை

இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க
நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே
இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று
இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே
நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை
உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

பதவுரை

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின்மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-

வியாக்யானம்

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது
தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி

மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி
பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே

அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி

அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி

பல பல என்ற
வீப்சையாலே அந்த தேவ ஜாதிகளுடைய
ஸ்வரூப பேதத்தையும்
அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது

நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்
ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே
இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்
ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார்
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே
இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –

அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே
கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக

நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே

இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –

வியாக்யானம்

நாம் இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன
வணங்கும் இத்யாதி
ரஜஸ் தமஸ்ஸூக்களை உடையவர்களாய் இறே புருஷர்கள் இருப்பது
அவ்வவ குண அனுகுணமாக ருசி பிறந்தால் அவ்வளவிலே ராஜஸராயும்

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்
தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
உன் போல்வாரையும்
உன் ஸமர் அல்லாரையும் இல்லாத

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு
அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்
எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –

———

அவதாரிகை

நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர்
இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக
அத்தைக் கண்டவர்
அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு

அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –

(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-

பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-

பதவுரை

எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள்கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம் -தேவர்கள் கூட்டம்–

தொழுவதும் வணங்குவதையும்–

சூழ்வதும் (பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்

உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)

வியாக்யானம்

எழுவதும்
உத்பன்னமான பிரகாரத்தையும்
மீண்டே படுவதும்
உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்

இங்கு பட்டு என்று
முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது

கண்டு கண்டு எள்கல் அல்லால்
இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும்
பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய

இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது
நித்ய அஞ்சலி பந்தத்தையும்
கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற

தொல்லை மாலைக்
இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை

மால் என்று
பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ

பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –

——————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

கண் உறங்கிற்றோ
பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக
தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க
அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம் –

எழுவதும்
ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்

மீண்டே
உதய கார்யம் கழிந்தவாறே

படுவதும்
அஸ்தமிப்பதும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்

கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே
இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற
ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்

இமையோர்க்கு விசேஷணம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பது

தொல்லை மாலை
அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்
ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால்
ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு
ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி

கண்ணார
யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்

திவ்ய விக்ரஹங்களில்
தொழுவதும் -அடிமை செய்வதும்
நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே -ஸ்ரீ கீதை -11-40-

சூழ்வதும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12-
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு

கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
கண்கள் துஞ்சுதல் உண்டோ
அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-

————–

அவதாரிகை

இப்படி அனுபாவ்யனான ஈஸ்வரனுடைய-1- மேன்மையிலும் -2-நீர்மையிலும் உண்டான

போக்யதை பரிச்சேதிக்க அரிது என்கிறார்

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –

பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் –
துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் –
கெடுமிடராய-10-2-

பதவுரை

துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்-ஸநகாதி முனிவர்கள் -ப்ரஹ்ம ஏக பாவனை
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபட நிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற -சுருக்கம் அற்ற -பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழி சொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்–ஞான சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.

செவ்வே நெஞ்சால்-திருட்டுக்கு உண்மையான -யதார்த்த ஆழ்ந்த ஞானம் கொண்ட நெஞ்சு-யோ வேத்தி தத்வதக

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
முடிவில்லாத மனனத்தை யுடைய ஸநகாதிகளும்

அல்லாதவரும்
ஸ்வ அதிகார தத் பரரான ப்ரஹ்மாதிகளும்

தொடர நின்ற
தந்தாமுடைய அபிமத ஸித்தி யர்த்தமாக அனுவர்த்திக்க
அவர்களுக்குப் புருஷார்த்த ப்ரதனாய் நின்ற

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
குன்றாது இருக்கிற சரீர ஸம்பந்த நிபந்தனை துக்கத்தைப் போக்குமவன்
சரீர ஸம்பந்தம் அறுக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வா பாவிக வேஷம்
அல்லாத புருஷார்த்தங்களை அபேக்ஷைக்கு ஈடாகக் கொடுக்கும் என்றபடி

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபரிச்சின்ன ப்ரகாஸ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கும்
தன்னோடு சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்யந்த விலக்ஷணமாய்
த்ரிவித (கால தேச வஸ்து )பரிச்சேத ரஹிதமான ஸ்வரூபத்தை யுடையவன்

இவ் விடத்தில் மூர்த்தி என்று
ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ஸ்வாமித்வம் ஆகவுமாம்

(தன் சார்வு இல்லாத மூர்த்தி
தனி மூர்த்தி
பெரு மூர்த்தி)

தன் சால்வு -என்றபாடமாய்
தன்மை இல்லாத என்றுமாம்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
இப்படி பெரியனானவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதமானது
நேரே நெஞ்சால் பரிச்சேதித்து நினைக்கை அரிது

அவ் வாச்சர்யம் ஏது என்னில்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
வெண்ணெயை அமுது செய்தான் என்று சொல்லப்பட்ட அபக்ருஷ்ட வசனம்
இவ் வபதானத்திலும்
இவ் வபதான ப்ரஸம்ஸியான வசன ஸாரஸ்யம் தான் பரிச்சேதிக்க அரிது என்று கருத்து –

(அவனது சீற்றமும் அருள் தானே
எந்த குணமும் எந்த சேஷதீதமும் அவன் இடம் இருப்பது ஸ்ரேஷ்டம்)

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் என்றீர்
பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்குக் கண் உறக்கம் இல்லை என்றீர்
இப்படி கிடந்தது அலமாவாதே உம்முடைய பாழி யன்றோ கிருஷ்ண அவதாரம்
நவநீத ஸுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுமவர் அன்றோ நீர்
ஆனபின்பு அத்தை அனுசந்திக்கப் பார்த்தாலோ என்ன
அல்லா இடங்களில் கரை மேலே யாகிலும் போகலாம்
இதில் இழிய என்றால் நினைக்கவும் போகாது
அதில் இழிவதில் கை வாங்கி இருக்கையை நன்று என்கிறார் –

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
ஸம்ஸாரிகள் ஸப்தாதி விஷயங்களிலே உணர்ந்து இருக்குமா போலே
ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் உணர்த்தியை உடையவர்களாய்
தமோ குண அபி பூதர் இன்றிக்கே இறே ஸநகாதிகள் இருப்பது
யா நிசா –ஸ்ரீ கீதை -2-69-
இவர்கள் தங்களை ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கைக்கு உடலாக உண்டாக்கி இருக்கச் செய்தேயும்
ஜன்மாந்தரத்தில் ஸூ ஹ்ருதத்தாலே ஸம்ஸாரத்தில் விரக்தராய் முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு
இவர்கள் இதுக்கு ஆள் அல்லர்
இதுக்கு புறம்பே ஆள் தேடிக்கொள்ள வேணும் -என்னும்படி இருந்தவர்கள் இறே

அல்லாதவரும்
ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே
கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இ ப்ரஹ்மாதிகள் இருப்பது

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஒருகாலும் சுருங்கக் கடவது அன்றிக்கே முடிவு காண ஒண்ணாத படியாய்
அனாதையாய் வருகிற ஜென்ம பரம்பரையால் உண்டான இடரைத் தவிர்த்துக் கொள்ளுகைக்காக
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
இவ்வகண்ட காலத்தில் சிஷ்ய குரு பரம்பரா விச்சேதம் இல்லாமலே சாதன பக்தி யதிக்ருதரான ஸர்வரும்

அல்லாதவரும்
அப்படியே ஸாத்ய பக்தி க்ருதரான ஸர்வரும்

மற்றும் ஸ்ரோத ஸ்மார்த்த கர்மாதி க்ருதரும்

தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஸம்ஸாரி ஆத்மாவைத் தொடர்ந்து நின்ற எண்ணப்படாத ஜன்ம பரம்பரைகளால் வந்த ஜரா மரணாதி துக்க பரம்பரையைக்

கடிவான்
நிச்சேஷமாக நிவர்த்திக்குமவன்

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
நித்ய ஸூரிகளுக்கும் ஸ்வ விக்ரஹங்களால் தன் விக்ரஹங்களுக்குச் சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி
அத்விதீயமான ஸ்வ பாவமுள்ள திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
அப்படியே அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுமுடையவன்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வம் -ஸ்வேதாஸ்வரம்
மயே த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ஸ சதாசனம் -ஸ்ரீ கீதை -9-10-
ப்ரக்ருதிக்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-39-இத்யாதிகளில்
சொல்லப்பட்ட அவனுடைய ப்ரக்ருதி ஸ்வரூபாதிகள் தான் வாங் து மனஸ் பரிச்சேத்யமோ

நெஞ்சால் தான் இவ்வளவு என்று எண்ணப் போமோ
இனி அவன் ஸ்வரூபாதிகளையோ இவ்வளவு என்று எண்ணுவது
மூடர்காள் ஸ்ருதிகளாலும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம் என்னப்பட்ட
அவன் ஆனந்தாதிகளில் நாம் அபரிச்சிந்ததையைச் சொல்ல வேணுமோ

வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
அவனுடைய ஒரு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு போதில் வெண்ணெய் யூண் தான் தத் காலகத்தில் சொன்ன ஹிதச் சொற்கள் தான்
பக்தர் நெஞ்சால் தான் நினைத்துத் தரிக்கப் போமோ
ஒவ்வொன்றில் -எண்ணானாய் என்னானாய் -திருநெடும் -10-என்று உருகினீராய் நீ மக்நராய்க் போக வேண்டாவோ -என்கிறார் –

——————-

அவதாரிகை

போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்
ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன
பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே

ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-

பதவுரை

ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) -பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் -வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.

வியாக்யானம்

ஈனச் சொல்லாயினுமாக
நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக
அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு

ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை
இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –

எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்
எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து
அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்

இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்
அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய

செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்

(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)

அல்லாதவர்க்கும்
அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்

மற்று எல்லா யவர்க்கும்
இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்

ஞானப் பிரானை யல்லால் இல்லை
ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே
உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை

நான் கண்ட நல்லதுவே –
நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்துக் கிடப்புதீர் என்று அறிகிறிலோம் -உம்மை விஸ்வஸிக்கப் போகிறது இல்லை
அத்ய ராஜ குலஸ் யாஸ்ய த்வததீனம் ஹி ஜீவிதம் புத்ர வ்யாதிர் நதே கச்சித் சரீரம் பரி பாததே -அயோத்யா -87-9-
ரஸவாதம் கீழ் போனால் போலே பரதாழ்வான் மோஹித்துக் கிடக்கத் திருத்தாய்மார் சொல்லுகிறார்கள் –
படைவீடாக உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்க இருக்கிறது
சக்கரவர்த்தியும் துஞ்சினான்
பெருமாள் காடேறப் போனார்
நீ இருந்தாய் என்று அன்றோ நாங்கள் இருப்பது
உன் முகத்தில் பையாப்புக் கண்டால் மீளுவர் என்னும் நசையாலே யன்றோ ஜீவித்துக் கிடக்கிறது
நீ இல்லை என்று அறிந்தால் இத் திக்கு என்று நோக்குவதோ
புத்ரேத்யாதி அபி வ்ருஷா -அயோத்யா -59-4-என்கிறபடியே படை வீட்டில் சுத்தாவரங்களும் கூட நோவு ஒன்றாய் இருக்கச் செய்தே
பிள்ளாய் உனக்கு நோவு என் என்று கேட்க வேண்டும்படி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி
இப்படி ஸத் ப்ரக்ருதிகளாய் இருக்கையாலே இன்ன போது மொஹிப்பார் என்று தெரிகிறது இல்லை
ஸுலப்ய குணத்தை உபதேசிக்கப் புக்கு எத்திறம் என்று மோஹித்துக் கிடக்குமவர் இறே இவர்
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்கப் புக்கால் பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
(அத்தை இத்தை பரத்வத்தை ஸுலப்யத்தை ) ப்ரசங்கித்து சிதிலராய்க் கிடப்பர்
அத்தைக்கு கூரத்தாழ்வான் கண்டு -மஹா பாஷ்யம் கற்று சதுரஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே
பகவத் குண ப்ரசங்கத்திலே சிதிலராம்படி பிறந்த உம்முடைய ஜென்மம் ஒரு ஜென்மமே -என்று கொண்டாடினான்
ஆழ்வான் வீராணத்தில் ஒரு பெண் பிள்ளையை குடங்காலிட்டு
கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி -3-7-1- என்று சந்தையிட்டு மேலடி தோற்றாமல் மோஹித்தாராம்
இப்படிப்பட்டவர் இறே தன்னை வன்னெஞ்சராகச் சொல்லுகிறார்-
ஸ்வாமிகள் திருமழிசை தாஸரும் நஞ்சீயருமாகத் திருவாய் மொழி ஓதா நிற்க

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவனே
அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும்
அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை
அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை
இது என் ஸித்தாந்தம் என்கிறார் –

—————————–

அவதாரிகை

இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி(கேட்டு அருளாய் )
தத் விஷயத்திலும்
ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும்
தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு
இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம்
தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-

பதவுரை

நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல கொடியவையாய் போக்க முடியாதவையான அரியதான  ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான  கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுத்தமாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.)

வியாக்யானம்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு
ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்

அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்-

திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற
பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்

இத்தால் -ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்
வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும்
ஜென்ம தேச பூர்த்தியையும்

வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே
பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்று

விண்ணப்பம் செய்த
என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே
பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று –

சொல்லார் தொடையில்
என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே
இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று -கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடி

இந்நூறும்
என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய்
பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –

வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்

அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற
கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான
புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய்
அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் எழுந்தார்கள்

பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்

பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்
இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்
உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன
அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம்
நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்

வியாக்யானம்

நல்லார் நவில்
லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை
ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்
ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்

தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி
இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது
நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப்போகாது
இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்

திருமால் இத்யாதி
அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்

ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்

விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று

சொல்லார் தொடையல்
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா
பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில்
ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்

இந்நூறும்
பாரதம் போலே பரந்து இருத்தல்
ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை

வல்லார் அழுந்தார்
பலத்தை முற்படச் சொல்லுகிறார்

அது எங்கே என்னில்
பிறப்பாம்
ஜென்மம் ஆகிற

பொல்லா
ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -81-90–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 2, 2022

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ்வஸிப்பிக்க வேணும் என்று பரிவரானவர்கள்
தங்கள் பிரிவின் கனத்தாலே முகாந்தரங்களாலே இவர் ஆர்த்தியை
சமிப்பிக்க வேணும் என்று உத்யோகித்து
இவர் பிரகிருதி அறிந்தவர் இவ்வார்த்தி சமிக்கும் ப்ரகாரங்களிலே இழியாதே
ப்ரகாராந்தரங்களிலே இழிந்து என்ன கார்யம் செய்கிறார் என்று
தம்மிலே வெறுத்து உரைத்த பாசுரத்தை

தலைவி தளர்த்தி கண்டு தாயார் முதலானார் வெறி யாடலுற
தலைவி நினைவு அறிந்த பாங்கி வெறி விலக்க லுற்ற
அவர்கள் கேட்கும்படி தன்னில் உரைத்த பாசுரத்தாலே (முன்னிலை படர்க்கை )
அருளிச் செய்கிறார் –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81

பாசுரம் -81–உறுகின்ற கன்மங்கள் மேலன-
துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –
வீடுமின் முற்றவும் -1-2-

பதவுரை

ஓர்ப்பு இலர் ஆண்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
கூறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப் பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹத் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகறிவளவாகா நின்றது.

வியாக்யானம்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
இவள் நோயின் தன்மை ஆராயாதே உற்று நடத்துகிற வெறியாட்டு
முதலான கருமங்கள் மேன் மேலுண்டாகா நின்றன

இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெறுகிற அளவிலே தாயாருடம்பு நொந்து பெற்றவராகக் கூடும்
வருந்திப் பெற்றார்கள் ஆகில் இவள் பிழைக்கும் வழியிலே முயலுவர் இறே
பிழைக்கும் வழி இல்லை இறே

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
திருத் துழாயைக் குழல் இடத்திலே நிரம்பச் சூட்டு கிறிலர்

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
பழையதான பெரிய திருமலையிலே கொண்டு போகைக்கும்
விரகு பண்ணு கிறிலர்

ஆட்டுதல் –
அங்கே நடையாடப் பண்ணுதல்

சூழ்தல் –
விரகு செய்தல்
அன்றியே –
திரளுதல் ஆகவுமாம்

இறுகின்ற தாலிவாளகம்
இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –

மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –

மெய் நொந்து பெறார் கோல்
என்று அந்வயம்

இத்தால்
பிரிவின் கனத்தாலே நிரூபியாமல் பிரகாராந்தரத்தாலே இவள் ஆர்த்தியைப்
பரிஹரிக்கத் தேடா நின்றார்கள்
பகவத் ப்ரஸாதமும்
தேச வாஸமுமே பரிஹாரமாய் இருக்க
அது செய்யாமையாலே சத்தையும் குலையும்படி சைதில்யமே விஞ்சா நின்றது –
இவர் அருமை அறிந்து வருந்திக் கிட்டினவர்கள் அல்லரோ இவர்கள் என்று
ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரமாய் இருக்கிறது

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இருள் போய் முடுகி
இவளும் மோஹித்துக் கிடக்க
இவள் அவஸாதத்தைக் காணா நிற்கச் செய்தேயும்
பந்து வர்க்கத்தில் உள்ளார்
க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் என்று ஆறி இருக்க
அத்தைக் கண்டு
இவளுடைய அவஸாதம் இருந்தபடி இது
ஸ்லாக்யதை இருந்தபடி இது
இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு இவளை
நேர் கொடு நேரே பெற்றவர்கள் அன்றோ என்று
இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம் –

உறுகின்ற-இத்யாதி
இவர்கள் நிரூபிக்கட் கடவதொரு கார்யம் இல்லையோ
என்கிறாள்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
மேல் வரக் கடவதானவை வர்த்தமானம் போலே இருக்க
வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஒரக் கடவர்கள் அன்றிக்கே

இவளைப் பெறுகின்ற தாயர்
இவளை பெற்ற தாயார்களுக்கு எப்போதும் ஓக்க வயிறு எரிந்த படியேயாய்
இருக்க வேண்டாவோ
ஒரு லாப அலாபங்கள் வேணுமோ
இவள் தானாகவே அமையாதோ

மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது
வளர்த்துக் கொண்டது அத்தனையோ

என் தான்
இப்படிச் சொல்லுகைக்கு இவர்கள் செய்யாதது என் என்ன

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்னும் அளவு போயிற்று
கடக்க நின்று வீசும் அளவு போராதே
அது தன்னையே கொடு வந்து குழலிலே நிரம்பத் துற்க வேண்டும்படி யாயிற்று தசை முறுகின படி

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர் இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே –
இக்குடிக்குப் பழையதாகச் செய்து போரும் பரிகாரத்தையும் செய்கிறிளர்கள்

வேங்கட மாட்டவும்
கல்லும் காடுமாய் இருக்கிறதடைய ஒரு தடாகம் போலே யாயிற்று
இவளுக்குத் தோற்றுகிறது

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி -மோக்ஷ தர்மம் –4-50-

————

அவதாரிகை

இப்படி அனுபவ அலாபத்தாலே சிதிலரானவர்
தம்மை பிரதம அங்கீ காரம் பண்ணின ஈஸ்வர கடாக்ஷம் தான்
நமக்குத் பரிதாப ஹேதுவான ப்ரகாரத்தை நாயகனான ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண்களைக் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே
அவை தானே பரிதபிப்பிக்கிற பிரகாரத்தை
நாயகி தோழியர்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82-

பாசுரம் -82–எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-
துறையடைவு–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —
உருகுமால் நெஞ்சு -9–6-

பதவுரை

எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதயமலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறக்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னும்) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம்போன்றவர்களுக்கும்-
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
முன்னம் தோன்றா நின்றன -உருவ வெளிப்பாடு
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.

எம்போலியர்க்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த
சிவப்பாலும்
ஒவ்ஷ்ண் யத்தாலும் அக்னி ஸ்வபாவத்தைக் கொள்ளுவதாய்
உதய தசையில் ராகத்தை யுடைத்தான ஆதித்யனுடைய இரண்டு வடிவு
ஏக காலத்திலே ஸஹ சரிதமாய்
உதயகிரி இடத்திலே பரம்புகிறது என்னலாம் படியான ரூபத்தை யுடையன ஆயின

எம்பெருமான் கண்கள்
அடியிலே என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்வாமியினுடைய திருக்கண்கள்

மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே
அந்த ஆதித்ய ரூபங்களுக்குள்ளே காயத்ரீ பூதமான அர்க்ய ஸக்தியாலே
ஜ்வலித்துக் கொண்டு தோற்றின சிவந்த அக்னியில் ஆதித்யனுக்கு பாதகராய் வந்து
நாங்களே மீண்டு விழும்படியான மந்தே ஹாதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளைப் போலே
(மந்தேஹர் ராக்ஷசர் -அசூரத் தன்மை உள்ளவர் )

எம்போலியர்க்கும் விரிவ
ஆனுகூல்யம் யுடையவராய்
அபலைகளான நம் போல்வாருக்கும்
தாஹகங்களாய்க் கொண்டு பரம்பா நின்றன

சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி –7-1-9-என்கிறபடியே
இந்தக் கண்ணோ லோகத்தை எல்லாம் வெளிச் செறிப்பித்து ரஷித்தது
இப்படி பாதகங்களான இவற்றுக்கு அந்த ரக்ஷகத்வம் உண்டான படி என் -சொல்லீர் என்று
தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைத்தாள் யாயிற்று –

இத்தால்

ஜிதம் தே புண்டரீகாக்ஷ -என்கிறபடியே
பிரதமத்திலே சேஷித்வத்தைப் பிறப்பித்த ஸ்வாமி கடாஷமானது
அனுபவத்தைக் கொடாமையாலே
பிரதிகூல விஷயத்தில் பரிதாப ஹேதுவாமோபாதி
அனுகூலரான நமக்கும் ஆர்த்தி ஜனகமாகா நின்றன
இது லோகத்துக்கு ரக்ஷகமான படி எங்கனே என்று
ஸூஹ்ருத்துக்களுக்கு (பாகவத உத்தமர்களுக்கு ) நொந்து உரைத்தார் ஆயிற்று

விளரி என்று
வெளுப்பாய்
வெளிச் செறிப்பிக்கிற முகத்தாலே
ரக்ஷணத்தைச் சொல்லிற்று ஆயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
ஆதித்ய உதய விரோதி மந்தேஹர் மேல் பிரயோகித்த படியால்
அத்தால் உத்பூத சக்திக ஆதித்யனால் உத்பூத ப்ரஜ்வவநாத்ய குணாக்னியில் விழுந்து
நசிக்கிற அசூரரைப் போலே என்னைப் பார்ப்பது
என்னைப் போன்ற வரீலுமாய்

இதுவோ வையமுற்றும் விளரியதே –விரிவ சொல்லீர்
இந்தத் த்ருஷ்ட்டி பூமி எங்கும் பரவா நின்றது
இதுக்கு என்ன உபாயம் சொல்லீர் என்று தன் தோழிமார்களைக் கேட்க்கிறாள்

மீண்டவற்றுன் என்றது
கச்ச அநு ஜாநாமி ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த–யுத்த -59-144-என்று
பெருமாள் அருளிச் செய்தும்
மூல பலத்தோடு வந்த ராவணாதி விஷயம் ஆகவுமாம் –

————–

அவதாரிகை

இப்படி இவருடைய சைத்திலயத்தைக் கண்ட பரிவர்
ஆஸந்நமான பாதக சந்நிதி இருந்தபடியால் இவர் தரித்து இருக்க அரிதாய் இருந்தது
என்று வெறுத்து உரைத்த பாசுரத்தை
நாயகன் பிரிவாற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
இனி இவளுக்கு இருக்கை அரிது என்று இரங்கி உரைத்த
தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –

பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-
துறையடைவு-அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –
உண்ணிலாய ஐவரால் -7–1-

பதவுரை

விளரி–விளரியென்னும் இசையையுடைய-உச்ச ஸ்வர கண்ட த்வநி
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு
மெல் ஆவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ் வன்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காள மேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தி யெடுத்தெடுத்துக் கூறி வாய் பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.

முன்றில் பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்
முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு

வியாக்யானம்

விளரிக் குரலன்றில்
விளரியாகிற ஸ்வரத்தை யுடைத்தாய் இருக்கிற குரலை யுடைய அன்றிலானது

குரல்
துத்தம்
கைக்கிளை
உழை
இனி
விளரி
தாரம் -என்று
ஷட்ஜ
ருஷப
காந்தார
மத்யம
பஞ்சம
தைவத
நிஷாதங்கள்
ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே
ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது

விளரி என்று
ஒரு பண் என்றும் சொல்வர்

மென் பெடை மேகின்ற
புணர்ச்சியிலே துவண்டு மெல்லிதான பேடையோடே மேவிப் போருகிற

முன்றிற் பெண்ணை
முற்றத்திலே பனையிலே

முளரிக் குரம்பை யிதுயிதுவாக
முள்ளை அரிந்து செய்யப்பட்ட இந்தக் கூடு இவ் வன்றிலுக்கு இருப்பிடமாக-

முளரிக் குரம்பை என்று
தாமரையாலே செய்த கூடு என்னிலுமாம்

முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும்
இதினுடைய ஆர்த்தி ஸ்வரத்தாலே ஸ்மரித்து
ஸ்யாமளமாய்
ஸ்ரம ஹரமாய் இருக்கிற காள மேகம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய
ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை
பல ஹானியாலே வருந்தி
எடுத்து எடுத்து
அக்ரமாகச் சொல்லும்படியான

மெல்லாவியும்
மெலிந்து
சென்று அற்ற பிராணனும்

நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்

எல்லாம் தளரிற் கொலோ
ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ

அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே
இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்

அறிகிறிலேன் -என்கையாலே
முடியவுமாம்
அவனைப் பெற்று ஆஸ்வஸிக்கவுமாம் என்று கருத்து

இத்தால்
தாம் இருக்கிற தேசத்திலே ஆசன்னமாக போக ப்ரஸக்தரானாரைக் கண்டு
தம்முடைய போக அலாபத்தாலே அது ஸ்மாரகமாக
ஆர்த்தி விஞ்சி பிரலாபிக்கிற பிரகாரத்தைக் கண்டவர்கள்
இவருக்கு போக சித்தி இல்லாத அளவிலே இவர் முடிந்து பிழைக்கும் அத்தனையோ
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அசிவதாரிகை

உரு வெளிப்பட்டாலே நோவு படா நிர்க்கச் செய்தே
அதுக்கும் மேலே வாசலிலே ஒரு பனையாய்
அப்பனையிலே தங்கிற்று ஓர் அன்றிலாய்
அது தான் வாய் அலகைக் பேடையோடே கோத்துக் கொண்டு இருக்கிறவித்தை
நெகிழ்த்தவாறே கூப்பிடக் கடவதாய்
அதனுடைய த்வனியிலே மோஹித்துக் கிடக்க
அத்தைக் கண்டு
இத்தினுடைய த்வனி இருக்கிற படி இது
இவளுடைய ஆற்றாமை இருக்கிற படி இது
இவளுடைய மார்த்வம் இருக்கிற படி இது
இவளுடைய ஸைதில்யம் இருக்கிற படி இது
இது எல்லாம் இருந்த படியாலே இவள் அபிமானதாம் கை புகுந்து ப்ரீதையாய் இருக்கக்
காண மாட்டோம் ஆகாதே என்று இங்கனே
திருத்தாயார் வார்த்தையாய் இருக்கிறது

பட்டர் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க
நஞ்சீயர் ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்குப் போலியாக அருளிச் செய்யலாம்
இடம் உண்டோ என்று கேட்க
இளைய பெருமாள் பிராட்டியைக் கொண்டு போய் விட்டுப் போந்த அநந்தரம்
அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட வால்மீகி பகவானுக்கு இத்திருத்தாயார் படி யுண்டு
என்று அருளிச் செய்தார் –

வியாக்யானம் –

விளரிக் குரலன்றில்
விளரி என்று
உச்சமான த்வனிக்குப் பேர்
உயர்ந்த த்வனியை யுடைத்தாம் படி காரியப்பாடு அறக் கூப்பிடுகிற அன்றிலினுடைய

மென்பெடை
கலக்கும் போது பூத் தொடுமா போலே தொட வேண்டும்படி யாயிற்று மார்தவம்
இம்மார்த்வத்திலே விரஹமும் ஆனால் பாடாற்றப் போகாது இறே

மேகின்ற
மேவா நிற்கிற
நித்ய ஸம்ஸ்லேஷமாய்ச் செல்லா நிற்கும் இறே
அந பாயினிக்கு ஸ்மாரகமாய் இருந்தபடி

முன்றிற் பெண்ணை
முற்றில் என்று முற்றத்துக்குப் பெயர்
வாசலுக்கும் பேர்

முற்றில் பனை நடலாமோ என்று இவ்விடத்தை நிர்வஹியா நிற்க
வங்கி புரத்து நம்பியைச் சிலர் கேட்க
அதுவோ -இவள் கார்யம் தளிரும் முறியுமாய்ச் செல்லுகிறது என்று பணித்தார்

மூன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற அன்றிலின்
கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ -பெரிய திருமொழி –11-2-1-

அவரை வரப் பண்ணுவார் ஆரோ -என்றபடி –
அல்லது பிரிப்பன பிரித்துக் கூட்டுவது கூட்டித் திரிகின்றாள் அன்றே இவள்

முளரிக் குரம்பை
இத்தினுடைய ஸுகுமார்யத்துக்கு ஈடாகத் தாமரை இதழ்களையும் பூக்களையும் கொண்டு
வந்து கூடாகப் பண்ணி வைக்கும் இறே
அந்நிலத்தில் உள்ளவையாய் இருக்கும் இறே

அன்றிக்கே
முளரி என்று முள்ளாய்
முள்ளாலே செய்த கூடு என்னவுமாம்
முளரி என்று நெருப்புக்கு துடைப்பத்துக்கும் பேராகையாலே
இன்னெருப்பான கூடு இதுவாக
திருத்தாயார் பாசுரமாகையாலே சேரும் இறே

முளரிக் குரம்பை என்று

யிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே

—————–

அவதாரிகை

இப்படி பரிவரும் வெறுக்கும் படி ஆர்த்தரான இவர்
போக்ய பூதனான ஸர்வேஸ்வரனைக் காண ஆசைப்பட்டுத்
தம்மிலே அவனை நோக்கி ப்ரலாபித்த ப்ரகாரத்தை
நாயகியானவள் நாயகனான ஸர்வேஸ்வரனைப் புறம்பே திரளிடை யாகிலும்
காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-

பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-
துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்–
மையார் கருங்கண்ணி -9–4-

பதவுரை

மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல
நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்ல புருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்-உத்ஸவங்களிலும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.

காண்பானவாவுவன் நான்-காண்பான் அவாவுவன் நான்

வியாக்யானம்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
விலக்ஷணை களான நாரீ ஸமூஹங்களானவை திரண்ட திரட்சி யுள்ளும்

குழாங்கள் குழிய குழு-என்கையாலே
அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்

அங்கங்கெல்லாம்
அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
போக்யத்வ
ரக்ஷகத்வங்களுக்கு
ஸூசகமாய்
கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய்
ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும்
அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும்
கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்

வந்து காண்கைக்குக் கால்நடை தாராத நான்

(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இவருக்கு
காரார் காணும் அளவு போய் -ஆடல்மா குதிரையில் கானால் விடேன் என்றவர் திருமங்கை ஆழ்வார்)

மைய வண்ணா
ஆசை யற்று இருக்க ஒட்டாத வடிவழகை யுடையவன்

மணியே
துர்லபன் என்று மீள ஒண்ணாத படி முடிந்து ஆளவானவனே

முத்தமே
நீர்மை இல்லை என்று தவிர வேண்டாதபடி முழு நீர்மை யுடைய ஸூத்த ஸ்வ பாவனே

என் தன் மாணிக்கமே
பிரகாஸ குண அதிசயத்தாலே என்னை உன் அநு ராகத்திலே
அகப்படுத்திக் கொண்டவனே -என்று
அவன் ஸ்வ பாவங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆயிற்று

இந்தக் கிளவி
மள்ளர் குளீஇய விழவினானும் மகளிர் தலீஇய நுணங்கை யானும் யாண்டும்
காணேன் மாண் தக்கோனை -என்று அகத் தமிழிலும் சொல்லப் பட்டது-(குறுந்தொகை பாடல் )

இத்தால்
நமக்கு போக்ய பூதனான கிருஷ்ணனை
கோபீ ஜன மத்யத்திலும்
வித்வ ஜ்ஜன மயத்தை யுடைத்தான யாகாதி மஹா உத்ஸவத்திலும்
அசாதாரண சிஹ்னங்களோடே அனுபவிக்க ஆசைப்பட்டமை சொன்னார் ஆயிற்று

அன்றிக்கே
பாரதந்தர்ய காஷ்டா நிஷ்டரான பிரபத்தி நிஷ்டர் ஸமூஹத்திலும்
கர்ம கலாபாதி ப்ரவ்ருத்தி சீலரான கைங்கர்ய நிஷ்டர் ஸமூஹத்திலும் காண ஆசைப்பட்டார் ஆகவுமாம்

(கர்மமும் கைங்கர்யத்தில் புகும்)

அன்றியே
இரண்டும் ப்ராப்ய தசையிலேயாய்
வைகுண்டே து பர லோகே –பக்தைர் பாகவதை ஸஹ -லிங்க புராணம் என்றும்
அமரரும் முனிவரும் -திருவாய் -10-9-9-என்றும்
சொல்லுகிறபடியே
குண பரதந்த்ரரும் கைங்கர்ய வ்ருத்தி சீலருமான ஸூரி சங்கங்களைச்
சொல்லிற்று ஆகவுமாம்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

மோஹத்துக்கு அநந்தரம் அரதியாய்
ஓர் இடத்திலே தரியாதே பகவத் அலாபத்தாலே அங்கேயிங்கே தடுமாறிக்
கூப்பிட்டுக் கொண்டு திரிகிற படியைச் சொல்லுகிறது

க்வசித் உத் பிரமதே வேகாத் க்வசித் விப்ரமதே பலாத் க்வசின்மாந்த இவாபாதி
காந்தான் வேஷண தத் பர -ஆரண்ய –50-36-

வியாக்யானம்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
தையல் நல்லோர்கள் உண்டு ஸ்த்ரீ ரத்னங்கள்

குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
திரளாகத் திரண்ட திரள்களிலும்
பெண்கள் திரளைக் கண்டவாறே
திருக்குரவை என்று இருப்பார் ஆயிற்று இவர்

ஐய நல்லார்கள்
அறிவோர் அரும் தவத்தோர் ஐயர் என்று பண்டித வாசகங்கள்
ஐய நல்லோர்கள் உண்டு -பண்டிதராய் நல்லவராய் இருக்குமவர்கள்
அவர்களுடைய

குழிய விழவினும்
தீர்க ஸத்ரங்கள்
மற்றை யவற்றுக்காகத் திரள இருக்கிற படி இறே
அவற்றிலும் ஸ்ரீ தாண்ட காரண்யத்தில் ரிஷிகள் திரள் போலே இருக்கிற வற்றிலும்

ஸமாஜேஜூ மஹத் ஸூ ச -அயோத்யா –57-13 என்னுமா போலே

அங்கங்கெல்லாம்
அவற்றோடு போலியான இடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும்காண்பானவாவுவன் நான்
திருவாழி இன்றிக்கே மனிச்சேயான அவதாரத்தோடு
அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசியற
திவ்ய ஆயுதங்களோடே காண ஆசைப்பட்டு ஆயிற்று இவர் இருப்பது

ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு அன்றோ மறைப்பது
எனக்குக் காண தட்டென் என்று இருப்பார் ஆயிற்று

ஜா நாதும் அவதாரம் தே காம் சோயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13
ஸத் ப்ரக்ருதியானவன்
தேனைவ ரூபேண சதுர் புஜேந -ஸ்ரீ கீதை -11-45- என்றான் இறே

அவாவுவன் நான்
ஆசைக்காக கண் உண்டோ
காண வேணும் என்று ஆசைப்படும் இத்தனை போக்கிக் காண அரிது என்று அறிய மாட்டேன்
காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டார் யாரோ என்ன

மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே
விஷய தோஷம் இறே இதுக்கடி என்கிறார்
நற் சரக்கை இழந்தார் ஆறி இருப்பார்களோ

மைய வண்ணா
கண்டார் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே குளிர்ந்து இருக்கிற படி

மணியே
அப்படியே இருக்கச் செய்தே முடிந்து ஆளலாய் இருக்கிறது

முத்தமே
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி யாய் இருக்கை

என் தன் மாணிக்கமே
பெரு விலையனாய் இருக்கை –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் தன் கணவனைக் காணாமல் பொறுக்க மாட்டாத நாயகியாய்
கோப ஸ்த்ரீ சங்க ஸேவ்யனான கண்ணனாயும் –
அத்வர்ய் வாதிகளோடு மஹா சாவாத்யரோத் சாயாதிக்ருதனான சக்ரவர்த்தி திருமகனாயும்
திவ்ய அப்சரஸ் சங்க திவ்ய ஸூரி சங்க பரிசரண விஷய பரமபத நிலயனாயும்
மற்றும் அங்கங்காக தத் தத் சங்க சேவ்யனாயும்
காண அவாவைப் பெற்று
அவனில் தன் ப்ரீத்யபி வ்யஞ்ஜகமான திரு நாமங்களை உரக்கச் சொல்லி
விமுக்த லஜ்ஜையாய்க் கூப்பிடுகிறார் இதில்

வியாக்யானம் –

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
நல் ஸ்த்ரீகள் கூட்டமாய்க் கூடின கூட்டத்திலும்

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
ஸத் புருஷர்களாய்க் கூடிச் செய்யும் உத்ஸவங்களிலும்

அங்கங்கெல்லாம்
இப்படியாக அங்கங்காக உள்ள சங்கங்களில் எல்லாம்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
திருக்கைத் தலங்களுக்கு அழகு பெறுத்தும் அழகுள்ள திருவாழி ஆழ்வானோடும்
திருச்சங்கு ஆழ்வானோடும் காண வேணும் என்று மிக்க அவனைப் பெற்ற நான்

மைய வண்ணா
கரு வளர் மேனியாய்க் கண்ணுக்கு இட்டுக் கொள்ளவான மை போன்றவனே

மணியே
ஸ்வாதீன நீல ரத்னம் போன்றவனே

முத்தமே
கருணை யாகிற தெளி நீரால் அதிசயித்து எங்களை வெள்ளுயிராக்க வல்லவனே

என் தன் மாணிக்கமே
எனக்கு ஸர்வதோமுக நிரதிசய அதிசய நாயகனே
என்று ஸ்வயமேவ புலம்புகிறார் —

—————-

அவதாரிகை

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க
அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே
ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை
மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –
துறையடைவு-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –
எம்மா வீடு -2-9-

பதவுரை

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம் போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணி பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன் போன்ற ஒளியையுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமான உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம்
அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே
அன்றியே
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்

குரங்குதலாவது வளைதலாய்
உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி

உலகு அளந்த மாணிக்கமே
உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி
உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே

என் மரகதமே
அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –

அடியேன் அடி யாவி
சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது

யடைக்கலமே
உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ
ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று

இத்தால்
மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது

(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)

விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு
நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு பிராட்டி வார்த்தை யாதல்
அன்றிக்கே
அவள் தசையை அனுசந்தித்த திருத்தாயார் வார்த்தை யாதல் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து
குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே
பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே

அன்றிக்கே
குரங்கு என்று
விலங்குதலாய்
அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்
அப்போது
எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்

இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
இருளோடே வந்து சந்தித்து
மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –
என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று
எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது
குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –
ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி

இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படி

உலகு அளந்த மாணிக்கமே

ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று
தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே
காடும் மலையான இந்த பூமியை அளந்தது
ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்

மாணிக்கமே
பெறு விலையன் என்கை
தன்னைப் பாராதே அழிய மாறின படி

என் மரகதமே
உடம்பிலே அணைத்தால்
ஸ்ரம ஹரமாய் இருக்கை

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
முதலிலே ஸ்லாக்யமாய்
உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே

அடியேன்
போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்

அடி யாவி
தலைமகள் வார்த்தை யானபோது
உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும்
வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும்
சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை

திருத்தாயார் வார்த்தையான போது
அடியேன் அடி
நாய்க்குட்டி என்னுமா போலே

யடைக்கலமே-
இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே
இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி

பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது
ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம்
என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி
தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது

அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-

உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே

ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே
பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே
அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று
ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே
உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று
அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால்
அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு
மாணிக்கத்தைக் கைக்கொண்டு

குரங்கு எறிவு ஒத்து
குரங்கு எறிந்தால் போலே

இருளோடு முட்டி
முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்

ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே
இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்

மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்

உலகு அளந்த மாணிக்கமே
அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே

என் மரகதமே
நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய்
மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே

அடி யாவி
உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்

அடியேன்
யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்

அதுக்கும் மேலே
உன் யடைக்கலமே
த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு பாடவோ –

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர்
ஆபத் சகன் அல்லாமையும்
ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும்
உதவாது ஒழிகிறானோ
இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று
நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-

பாசுரம் -86-அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர் –
துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –
வள வேழ்வுலகு -1-5-

பதவுரை

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக் கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந் நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை

(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)

இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது

அரனுக்கு நீக்கிவை -என்கையாலே
ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும்
விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை

படைக்கலம் -ஆயுதம்

(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-காலன் -ஆபரணம் என்றுமாம்)

நீக்கி ஏந்தி என்று சொல்லாய்
இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று
பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத்
தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை

எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –
இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ
அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ
எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று

இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எத்தனையேனும் இருள் வந்து மேலிட்டு பாதகமானாலும் அத்தலையில் ஒரு குறை சொல்ல
ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும் படி –

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு
சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது
நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற
படியைப் பற்றச் சொன்னது அத்தனை

கமலத்தல ரயன்
அவ்வளவு அன்றிக்கே
ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
லோக குருவுமாய்
பிதாவுமானவன்
தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன்
இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்

அயன் சென்னி என்னும் முடைக்கலம்
ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று

பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி
கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது

முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்
கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும்
ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன்
அவனுடைய

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள
பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு
ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்மஹத்தியைப் போக்கினவனை

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை
திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே
பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே
ஒளி விகஸநத்தை யுள்ளவனை

எம்மானை
இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை

என் சொல்லிப் புலம்புவனே –
எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

———

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்த ஸ்வரத்தைக் கேட்ட
ஸூஹ்ருத்துக்கள் இவருடைய ஆர்த்தியின் மேலே லௌகிக வியாபாரங்கள்
ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை நலிகிற படியைக் கண்டு
இப்படி லோக உபக்ரோசம் பிறக்கும் படி ஸ்மாரகங்கள் நலிவதே என்ற
ஈஸ்வரனை நோக்கி யுட் கொண்டு
வெறுத்து உரைத்த பாசுரத்தை
அன்றிலுக்கும் ஆழிக்கும் ஆற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
தோழி கிளர்ந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலம்பும் கனகுரல் போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-

பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பதவுரை

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையை யுடைய கருடப் பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக் கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி –
இத் திருவினை–திருமகள் போன்ற இப் பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
தன்னில் தான் புகுந்து வாய் அலகைக் கொடுத்து
அது உறக்கத்திலே நெகிழ்ந்தவாறே
விஸ்லேஷ ஆர்த்தி பிறந்து புலம்பும்படியான பிளந்த வாயையும்
கனத்த குரலையும் யுடைய அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்கு உள்ளே புகுரப் பாய்ந்து அலைகிற கம்பீர த்வநியை யுடைத்தாய்
ஆலிங்கநம் பண்ணுவாரைப் போலே சூழ்ந்த திரைக்கையை யுடைத்தான ஸமுத்ரமும்

ஆங்கவை
அந்த அவைகள்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உன்னுடைய பிரபலமான பெரிய திருவடியினுடைய ஆஸ்ரித ஸம் ரக்ஷணத்தில்
உதவியாகிற நலத்தைப் பாடின இதுவே குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் கூப்பிடும்படி யாக இவ்வன்றிலும் ஆழியும் செய்யக் கடவதோ

திருமால்
திருமாலே என்று தன்னிலே முன்னிலையாகச் சொல்லுகிறாள்
நீயும் ஒருத்திக்கு நல்லையாய் அன்றோ இருக்கிறாய்
அவள் என் நினைக்கும் என்று கருத்து

இத் திருவினையே
அத் திருவுக்கு நிழல் என்றாகிலும்
இவளைப் பார்க்க வேண்டாவோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று —

இத்தால்

சிறியாரோடு பெரியாரோடு (அன்றிலும் கடலும் )வாசியற போக அர்த்தமான
பரஸ்பர ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே சோக ஹர்ஷங்கள் யுண்டாய்க் கொண்டு
நடக்கிற படியைக் கண்டு
தமக்கு ஈஸ்வரனோடு போகம் சித்திக்கைக்கு ஈடான பரிகரம் (பெரிய திருவடி )அவனுக்கு உண்டாய் இருக்க
நமக்கு இழக்க வேண்டுவது இல்லை இறே என்கிற
ஸந்தோஷமே குற்றமாக
இந்த ஸ்மாரகங்கள் இவரை நலியும் படியாவதே என்று ஸூஹ்ருத பூதர்
ஈஸ்வரனைக் குறித்துத் தம்மிலே வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அனுகூல பதார்த்தங்களும் பிரதிகூலமாய் இவள் நோவு பட அத்தாலே
இவளையும் உம்மையும் நாட்டார் பழி சொல்லும்படியான செயல்களை
நீர் பண்ணுவதே என்று திருத்தாயார் சொல்லுகிறாள் –

வியாக்யானம் —

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் செறிந்த த்வனியை யுடைத்தாய்
பிரிந்து தனி இருப்பாரே இரு துண்டமாக விடுகிற வாயையுடைய அன்றில்களும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழியிலே வரப் பாயா நிற்பதாய்
ஊமைக் கூறான த்வனியை யுடைத்தாய் பரந்த திரைகளை யுடைய கடலும்

ஆங்கவை
பிரிந்து இருப்பார்க்கு மேடும் பாதகங்களும்
சேக்கழுத்தில் மணி ஓசை என்ன
தென்றல் என்ன
சந்த்ர உதயம் என்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்று ஆதல்
கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லி ற்று ஆதல்
இவை பாதகம் ஆகா நின்றன

என்ன குற்றம் செய்தாள் என்று
இவை பாதகம் ஆகிறது

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கு அசாதாரணமாய்
பலத்தை யுடைத்தாய்
கருடோ வாருணம் ச்சத்ரம் ததைவ மணி பர்வதம் ஸா பர்யாஞ்ச ஹ்ருஷீ கேசம்
லீலையைவ வஹந்யயவ் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-30-1 )என்கிறபடியே
தாரண சாமர்த்தியத்தை யுடையனான பெரிய திருவடியின் நலம் உண்டு
த்வத் அங்கரி ஸம் மர்த்த கிணாங்க ஸோபிநா -ஸ்தோத்ர ரத்னம் –41- என்கிறபடியே
அவன் அடிமை செய்து தழும்பு சுமந்தால் போலே ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத்
தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு அவனைப் பாடின
இது குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாகக்
கை எடுத்துப் பழி சொல்லும்படி பண்ணுவதே

திருமால்
நீர் ப்ரணயிகள் இல்லீராய்த் தான் இப்படிச் செய்கிறீரோ

இத்திருவினையே
உம்மை ஆசைப்பட்ட அளவில் குறைந்தாளோ அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்ட இவள்
ராவணாதிகள் பெருமாளை பழி சொல்ல ராக்ஷஸிகள் தன்னை நெருக்க
இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ இவள்
அன்றில்
கடலோசை
தொடக்கமானவை நலிய அத்தால் நோவு படா நின்றாள் என்று
நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு இருப்பதே
உம்முடைய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை அன்றோ என்றபடி –

ஸ்வாபதேசம்

இத்தால்
அத்தலையாலே வரக்கண்டு ஆறி இருக்குமது அன்றிக்கே இவள் க்ரம பிராப்தி பற்றாமை பதறி மேல் விழ
நீர் தாழ்த்தீராய் இருக்கும் இது உமக்கு குறை அன்றோ என்று
இவர் தசையை அனுசந்தித்தவர்கள் பாசுரமாய் இருக்கிறது

ந மே பக்த பிரணஸ்யதி -ஸ்ரீ கீதை -9-31-
மறந்தீரோ என்கிறாள்

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி உன் பிரிவு பொறாமல் உன்னைப் புலம்பும் இத்திருவினை
அன்றிலும் ஆழியும் பாதிப்பதும்
உன்னைப் பாடுமது குற்றமாக வையம் எல்லாம் இவளைப் பழி சொல்லுமத்தும்
செய்வதே திருமால் என்று சொல்லும்
தாயாராய் அருளிச் செய்கிறார் இதில் —

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
உன்னைப்பிரிந்து தனி இருப்பாரே இரு பிளவாக்கும் சஞ்சுவையும்
அத்தால் சிலம்புவதும் கணைப்பதும் உள்ள அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்குள் புகுரப் பாய்ந்து அதில் உள்ள பதார்த்தங்களை அலப்பும் போது
கனைத்துக் கொண்டும்
பெரும் குரல் செய்து கொண்டும் ஒன்றுக்கு ஓன்று ஆஸ்லேஷித்துக் கொண்டு
வருகிற திரைகளை யுள்ள கடலும்

ஆங்கவை
ஏவம் பூதமாயுள்ள
புலம்புறு மணி
தென்றல்
முல்லை
மல்லிகை –(திருவாய் –9-9-1–9-9-2)முதலானவையும்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கே சேஷமும்
பலவத்தரமுமான
பசி ராஜனுக்குள்ள நன்மையைப் பாடின இதுவே ஒரு தப்பாக்கி

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் இவளை பழி சொல்லும்படி செய்வைத்து உனக்குத் தகுமோ

திருமால்
நீர் தெருவில் மால் செய்யுமதுக்கும்
இவளை பிரிந்து இங்கனே பாதிப்பத்துக்கும் என்ன சேர்த்தி யுண்டு

இத்திருவினையே
அத்திருவுக்கு இவள் அன்றோ ஸ்தந பாஹ் வாதிகளாய் விளங்கினவள்
உம்முடைய ரசிகதைக்கு இது கொத்தை காண் என்கிறாள் –

—————

இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர்
பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க
அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை
நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-

பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –
துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –
புகழும் நல் ஒருவன் -3-4-

பதவுரை

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அ மேருவில் செம் சடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்

பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே
ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி

அம் மேருவில் செஞ்சுடரோன்
அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்

மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை

அன்ன கண்டும்

அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே
அக்ரமமாகச் சொல்லும்படியான

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு
அத்விதீயமாய்
சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு

எங்கே வரும் தீ வினையே –
விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று

ஏவம் ஹவா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று
அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது

ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே
பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று

கிளவியிலும்
நாயகன் ஈஸ்வரனாகையாலே
நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான
தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே
இத்தைப் பழி சொல்லும்படியாகப் பெற்ற நமக்கு குறை யுண்டோ என்கிறார்
இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
ஸர்வதா ஸத்ருசமாய் இருபத்தொரு வஸ்து இல்லாத படி இருக்கிற ஸர்வேஸ்வரன்
திரு மேனிக்குச் சேர்ந்து இருபதொரு உபமானத்தைக் கண்டால்
உபமான ரஹிதமான வஸ்துவுக்குக் கதிர் பொறுக்கி யாகிலும் இங்கனே
ஒரு உபமானம் உண்டாகப் பெற்றோம் என்று இது
ஆஸ்வாஸ ஹேது யன்றியே –
அவ்வுபமேயம் தன்னையே பெற வேணும் என்ற விடாய் பிறந்த நமக்கு
இனி ஒரு குறை யுண்டோ என்றது ஆதல்

அன்றிக்கே
அவனுடைய ஜெகதாகாரதையை அநு சந்தித்தால் அவ்வளவில் பர்யவசியாதே
அவனுடைய அசாதாரண விக்ரஹத்தைக் காண வேணும் என்னும் அபேக்ஷை
பிறக்கும் படியான எனக்கு ஒரு குறை யுண்டோ என்னுதல்

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
ஸ்ரீ யபதியினுடைய வடிவோடு ஒத்து இரா நின்றது மேருவானது
வளர்த்தியாலும்
புகாராலும்

அம்மேருவில் செஞ்சுடரோன்
அம் மேருவில் ஸஞ்சரியா நிற்கிற ஆதித்யன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
வடிவார் சோதி வளைத்து உறையும் சுடர் ஆழியும் -( திருப்பல்லாண்டு -2-)என்றபடியே
அவர் திருக்கையில் திருவாழியைப் போலே இருக்கும்

அன்ன கண்டும்
இப்படி அவனுக்குப் போலியானவற்றைக் கண்டு வைத்தும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ யபதியுடைய அந்த மேரு ஒக்கும் திருமேனியையும்
வலக்கை யாழி இடக்கைச் சங்கம் –(திருவாய் -6-4-9 ) என்கிறபடியே
அவ்வாசாதாரண சிஹ்னத்தையும் காணவென்று ஆசைப்பட்டுப் பிதற்றா

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே –

————–

அவதாரிகை

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும்
பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய்
ஸூலபனான இவனை
என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்

இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

பாசுரம் –89–தீ வினைக்கு அரு நஞ்சை –
துறையடைவு-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —
அங்கும் இங்கும் -8-3-

பதவுரை

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
கொடிதாய்
துக்கத்தை விளைப்பதான
துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை

ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல

அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்

நல் வினைக்கின்ன முதத்தினை
ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு
நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை

பூவினை மேவிய தேவி மணாளனை
அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்
நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை

(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபனம் பட்டர்)

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே
சிறுமை என்று இகழாதே பசுக்களை மேக்கப் கடவனாய்
அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை

அன்றுலகீரடியால் தாவின வேற்றை
இப்படி இனியனானாலும்
தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில்
தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை

எம்மானை
கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை

எஞ்ஜான்று தலைப் பெய்வனே –
இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை
அது எக்காலம் என்றதாயிற்று –

———————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளில் காட்டில் வ்யவ்ருத்தராகப் பெற்றோம்
இனி அவனைப் பெற்று அனுபவிக்கிறவர்களோடே ஸஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார்

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமான துஷ் கர்மங்களுக்கு
ஆற்ற ஒண்ணாத நஞ்சாய் யுள்ளவனை

நல் வினைக்கு
பலாபி சந்தி ரஹிதமான
இன்ன முதத்தினை

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக
நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான
விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்
நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று
பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று
ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க

இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்

இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்

தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப் பெய்த வாக்கைக்கு நோற்ற விம் மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-

பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –
துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –
குரவை ஆய்ச்சியர் -6–4–

பதவுரை

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப் பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக்குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்
காண்தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

வியாக்யானம்

தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று
சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி
திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு
உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்

(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்
தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய்
ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்
கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று
நடத்தித் தாராதே நிற்கிற படியையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின
திருவாழியை யுடைய
என் ஸ்வாமி யானவனே

தொல்லை யூழி சுருங்கலதே –
விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும்
பரிகரம் தேட வேண்டாமையாலும்
பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால்
முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு
வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப் பெய்வன் -என்று இறே கீழ் நின்றது
என்றாகில் என்
பகவத் விஷயத்தில் ஸ்பர்சம் பலத்தோடு சம்பந்திப்பித்து விடும் என்று
விஸ்வஸித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன
அப்படி செய்யலாயிற்று இறே ஸம்ஸாரிகளைப் போலே நிரபேஷனானேனாகில் –
எனக்கு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண அரிதாகா நின்றது என்கிறார்

இப் பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
உன் திருவடிகளை ஸமாஸ்ரயிக்கைக்கு ஈடாய் இருபத்தொரு

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம் —

இதில் இங்கனே அந்வயம்
உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த
யான்
தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
தொல்லை யூழி சுருங்கலதே –என்று

உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது

இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்

பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று
தொடங்கி அருளிச் செய்தபடி
ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ
பர
ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்

உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய்
உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி

இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று
உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது
ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத
நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்

இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்
ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி
பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி

இம்மூன்றையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே
என்னை ஆண்டு கொண்டவனே

தொல்லை யூழி சுருங்கலதே
உன்னையே அனுபவித்தும்
உனக்கே அடிமை செய்தும்
கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே
ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று
இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -71-80–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 30, 2022

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவர் தம்முடைய ப்ராவண்ய அதிசயத்தாலே
பல வை லக்ஷண்யத்தின் பெருமையை அனுசந்தித்து
வார்த்தை சொன்னபடியைக் கேட்ட பரிவுடையார்
இவர் ப்ராப்ய ப்ராவண்யத்தாலே சொன்ன பாசுரம் என்று அறியாதே

சாதநந்தர நிஷ்டரைப் போலே உபாஸ்ய வேஷத்தைப் போற்றி விடுகிறாராக நினைத்துப்
பரிவாலே நியமித்த பாசுரத்தைத்
தம்முடைய ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ் கரித்து
இவர்கள் நெஞ்சு அறியாமல் ஆரோபித்துச் சொல்லுகிறார்கள் என்று அருளிச் செய்து
அந்த ஸூஹ்ருத்துக்களை விட்டுப் பரிவரைத் தெளிவிக்கும் பாசுரத்தை

தலைவன் அடியான தலைவி தன் ஆர்த்தியை ஊரார் முதலான குறியாலே அறிந்து
அன்னை முனிந்த பாசுரத்தைத் தோழிமார்க்கு யுரைத்து
அவர்களால் தெளிவித்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71-

பாசுரம் -71-ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் –
செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –
எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று
(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி)
சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு
இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
மஹா கல்பமான காலங்களுக்கு நிர்வாஹகானாய்
(பூத பவ்ய பவத் பிரபு -காலங்களில் உள்ள வஸ்துக்களுக்கு பிரபு அங்கும் )
கால அவசாநத்திலே ஸப்த லோக உப லஷிதமான ஸமஸ்த ஜகத்தையும்
பசியர் உண்டால் போலே அமுது செய்ததுவே பற்றாசாக
திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் என்று சொல்லிற்றிலோம்

பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாப் பழத்தைக் கண்டு அதின் நிறம் ஆழியின் நிறம் என்று சொன்னேனுக்கு

அக்தே கொண்டு
அந்தச் சொல்லிலே பொருள் கொண்டு

அன்னை
எனக்கு பிரியம் செய்து போந்த தாயானவள்

நாழி வளோ வென்னும்
இவள் தன்னிலே நடத்தும் ஸ்வ தந்தரையாய் இரா நின்றாள் என்னும்

நாழ்-என்று
மேனாணிப்பு
நறு வட்டாணித்தனம் என்றும் சொல்லுவார்

ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
காளாம் பழ வண்ணத்துக்குக் கடலை ஒப்புச் சொன்ன போதே
எல்லாவற்றையும் தனக்குள்ளே அடங்கின ஈஸ்வரன் நிறத்தைச் சொல்லிற்று
என்னா நின்றாள்

தோழிகளோ உரையீர்
என் நினைவு அறிந்து பரிமாறிப் போந்த நீங்கள்
நான் சொன்ன வார்த்தையின் உட்பாடு சொல்ல வேணும்

தோழிகள் -என்ற
பன்மையாலே பலரும் சொல்லித் தெரிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே –
உள் ஓன்று வைத்துச் சொல்ல அறியாத எம்மைப் பெற்ற தாயானவள்
சூழ்ந்து ஏறிட்டுச் சொல்லுகிறவற்றை உரையீர் என்று
இதற்கு மறுமாற்றம் சொல்லுகிறீலீர் -என்றுமாம்

இத்தால்

களாம் பழ வண்ணம் ஆழி போலும் -என்கையாலே
பல வேஷம் அபரிச்சின்னம் என்று
ஸூசிப்பித்ததாயிற்று

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் -என்கையாலே
உபாஸ்யமான காரண வேஷம் சொல்லிற்றிலோம் என்றபடி

நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-என்கையாலே
பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தமான ஸ்வா தந்தர்யத்தை
ஏறிட்டமை சொன்னபடி
(குகன் குகை பரிகரங்கள் சங்கித்தால் போல் )

தோழிகளோ உரையீர் -என்கையாலே
ஸ்வரூப விரோதி சங்கை பிறந்தால்
நெஞ்சு அறிவாரை இட்டுத் தெளிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்கையாலே
பரிவுடையாரானார் ஸ்வரூபத்துக்கு எங்கே விரோதம் வருகிறதோ என்று
ஏறிட்டு சங்கிப்பர் என்றதாயிற்று —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
களவிலே புணர்ந்து பிரிந்த தலைமகன்
இவள் ஆற்றாமையைப் பரிஹரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில்
தன் நிறத்தோடு போலியான பழங்களைச் -பலங்களைச் –
சிலர் விற்பார்களாகப் பண்ண
இவளும் அத்தைக் கண்டு தரிக்க
அத்தைத் தாயார் அறிந்து நிஷேதித்துச் செய்கிற மிகையைத்
தலைமகள் தோழிமார்க்குச் சொல்லுகிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே
கால உபலஷித ஸகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய்
இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன்
குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு
வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்
இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு
அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு
உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே
சேதனரானார் பேசாது இரார்கள் இறே
இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது
குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே

பழம் கண்டு
புரோ வர்த்தியான பதார்த்தங்களை
கடமாகில் கடம் என்றும்
படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே
பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாம் பழ வண்ணமானது –

அக்தே கொண்டு அன்னை

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
ஸர்வ கல்ப நிர்வாஹகனாய்
லோகங்கள் ஏழையும் ஸ்வ முகம் கொண்டு தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான்
என்று சொல்லேன் அல்லேன்

பழம் கண்டு
களாம் பழத்தைக் கண்டு

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
இக் களாம் பழத்தின் வண்ணம் கருங்கடல் போன்றது என்ற அளவே சொன்ன எனக்கு

அக்தே கொண்டு அன்னை
அவ்வளவே கொண்டு எனக்குத் தாயானவள்

நாழி வளோ வென்னும்
நாழ்-என்று நிறம் உடைமை
அத்தாலே ஏற்றத்தைச் சொல்லுகிறது
இவள் எங்களில் ஏற்றம் பெற்றவளோ என்னா நின்றாள்
நான் என்ன குற்றம் செய்தேனாய் இவள் என்னைப் பொடியுமது

இவ்வளவு அன்றிக்கே
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
இந்தப் பெண் இந்நிலத்தோடு கூடியவற்றை எல்லாம் உண்டவனுடைய
வர்ணத்தைச் சொல்லிற்று என்னா நின்றாள்
நான் அங்கனே சொன்னேனோ

தோழிகளோ உரையீர்
ஓ தோழிகாள் -என் அன்னைக்கு உன் மகள் அங்கனே சொல்லவில்லை
என்று சொல்லா நின்றாளே

அவளை நீ தூற்றாதே கொள் —
என்னுங்கோள்-

எம்மை யம்மனை சூழ் கின்றவே
என்னை மனைப்பாம்பு போலே நான் போன போன இடம் எங்கும் தான்
சூழ்ந்து கொண்டாடியும்
தூற்றியும்
என்னைக் கொல்லா நின்றாள்

ஓ தோழி காள்
என்று இலம் என்றேர்க்கு
என்கிற பஹு வசனம்
இங்கனே தரிப்பாரைக் கூட்டிக் கொண்டுமாம் –

———-

அவதாரிகை

இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு
அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும்
பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து
அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை
இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த
தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-

பாசுரம் -72-சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –
சீலமில்லாச் சிறியன் -4-7

பதவுரை

சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–பிளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும் இல்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனி நிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?

வியாக்யானம்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
சூழ்ந்து நிற்கிற ராத்ரியின் நீண்ட இருளினுடைய கறுத்த செறிவைப் பிளவா நிற்கிற
அழகிய பாலசந்த்ரனும் என்னைக் கீளுக

திணும்பு -என்று செறிவு

பிள்ளையும் என்று
இருளை போக்குகையாலே உபகாரகமான இதுவும்
ப்ரகாசத்தாலே நலிகிறமை சொல்லுகிறது

துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –

மாமைக்கின்று வாழ்கின்றவாறு
ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்

இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று
இதுவும் போழ்க

வாலிமையாவது
சீர்மையாய்
கனத்தைச் சொல்லுகிறது

அன்றியே
பிறையின் வெளுப்பு ஆகவுமாம்

இத்தால்
போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே
ராத்திரி வந்து இருளாய் நலிய
இத்தாலே வந்த நலிவைப் போக்கித் தந்து நம்மை ரக்ஷிப்பாரோ என்று இருக்கிற அளவிலே
சந்திரன் வந்து தோற்றினான்

இவ்விடத்தில் அமுதனார் ஒரு கதை சொல்லுவார்
ஒரு ஸாது ப்ராஹ்மணன் காட்டிலே தனியே வழி போனானாய் அங்கே ஒரு பசு தொடர்ந்து வந்ததாய்
ஒரு மரத்திலே ஏறி இருந்து
இத்தாலே வந்த நலிவைப் போக்கி நம்மை ரக்ஷிப்பாரோ என்கிற சமயத்திலே
ஒரு புலி வந்து தோற்றி பசுவையும் கொன்று அதனுடைய ரத்தத்தையும் பானம் பண்ணி
இவன் முன்னே வந்து தண்டையை முறிக்கு இட்டு இருந்ததாய்
அந்தபசுவே யாகில் ஒருபடி பிராண ரக்ஷணம் பண்ணிப் போகலாயிற்று
இனி இத்தை நம் சத்தையை நோக்குகை என்றதொரு பொருள் இல்லையாகாதே என்றான்
அது போலே இறே இங்கும் –

வியாக்யானம்
சூழ்கின்ற
பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஓக்க தானே வந்து சூழ்ந்தது
ஓர் இடத்திலே இதுவாய்
மற்ற ஒரு இடத்திலே ஒதுங்க நிழல் உன்படாம்படி இருக்கை அன்றிக்கே

கங்குல் சுருங்காவிருளின்
ராத்ரியினுடைய சுருங்காது இருள்
இன்னதனைப் போது இருள் செறிந்து வரக்கடவது
இன்னதனைப் போது சுருங்கி வரக்கடவது
என்ற ஒரு மரியாதை உண்டு இறே
அது இன்றிக்கே இரா நின்றது

கருந்திணிம்பை
கறுத்த நிறத்தை யுடைய
திணிம்பை என்று ஒரு சொல்லாய்
ஆத்தாள் திண்மையைச் சொல்லுகிறது
இருளினுடைய புற இதழைக் கழித்து
அகவாயில் திண்மையான வயிரத்தைச் சேரப் பிடித்தால் போலே இருக்கிறது

போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
அவ்விருளைப் போழ்ந்து கொண்டு -பேதித்துக் கொண்டு -தோற்றுகிற சந்திரனும்
தனக்குப் புறம்பு பாத்யம் இல்லாத படியாலே
நம்மையே பாதித்திடுக

போழ்கின்ற
ஸஹஜ ஸாத்ரவத்தாலே அவன் ஸந்நிதியாலே இது போழ்கின்றது ஓன்று அன்றியிலே
கை தொட்டு அழிக்கிறாப் போலே யாயிற்று
இருளினுடைய திண்மையும்
சந்திரனுடைய பருவம் நிரம்பாமையும்

திங்களம் பிள்ளையும்
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
முந்துற அநுகூலரைப் போலே தோற்றிப்

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
தனிமைப் பட்டேனான என்னுடைய

மாமைக்கின்று வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று
உடலுக்கு இன்றாக இப்பிறையால் பிளக்கப்படும் இதுவோ வாழ்கின்றபிரகாரம்
என் உடலுக்கு உலகள நிறத்தையும் கெடுத்து
அத்தையே பிளந்து விடவும் தோன்றிற்று

வாலியதே
இந்தப் பிறையானது இதுக்கே வந்ததாய்
நிராதாரமாகத் தொங்குமதாய்
தன் மிக்க வெளுப்போடும் சீர்மையோடும் ஆவிர்பவித்தது
இதுக்கு எங்கே ஒதுங்குவேன் என்கிறாள் –

————

அவதாரிகை

இப்படி விஷய வைலக்ஷண்ய ஞானம் மிகவும் நடக்க
அனுபவ யோக்ய காலத்தில் போக ஸித்தி இல்லாமையாலே
பிறந்த தளர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
நொந்து உரைத்த பாசுரத்தை

(இருள் -அனுபவம் பெறாமல் நலிய அதுக்கும் மேல் ஸ்வரூப
ஞானம் -நிலவு போல் -அறிவு பெற்றாலும் -பக்தி முத்த -அனுபவம் பெறாமல் –
இப்படி வைலக்ஷண்யம் அறிந்தாலும் -இழந்து தவிக்கிறோம் -என்று
மேலும் துன்பம் பட்டத்தைக் கீழே பார்த்தோம் )

நிலவு விஞ்சும்படியான மாலைக்கு ஆற்றாத் தலைவி தளர்த்தி கண்டு
இரங்கின பாங்கி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-

பாசுரம் -73 வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும் –
துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –
வேய் மரு தோள் இணை -10 -3 –

பதவுரை

விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
மிகவும் வெளுத்த நிலவை லோகம் நிறைய சுரவா நிற்பதாய்
வெள்ளைத் திங்கள் என்று சொல்லப்படுவதான
விண்ணில் பால் பசுவினுடைய சுரப்பு முதிரா நிற்கிற மாலையிலே

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான்
இத் திங்கள் ஒளியை விழுங்குவதான ஆதித்ய மண்டலம் போலே ஒளியை உடைத்தாய்
ஆஸ்ரித விரோதி நிரசன ஸீலமாய்
யுத்த காலத்தில் பரிகரமாக திருவாழியை யுடையனாய்த்
தன்னைப் பற்றினார்க்கு உபகாரகனானவன்

பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
லோகம் ஏழையும் ரக்ஷிக்கிற அமைவு யுடைமையின் பெருமையாகக் கூடும் இறே

தமியாட்டி தளர்ந்ததுவே
தாம் வாராமையாலே தனிமையை உடையளான இவள் தளர்ந்தது
என்று நொந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
அனுபவ யோக்ய காலத்திலே அநுபாவ்ய விஷய வைலக்ஷண்யம் அடியாக
ஞான பிரகாசம் அதிசயித்து நடக்க
அனுபவ ப்ரதாநம் பண்ணாமையாலே
ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வமும் அகிஞ்சித் கரமாம் படி இருந்ததீ என்று
ஸூஹ்ருத்துக்கள் சங்கித்து உரைத்தாராயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நிலாவும் போய் முறுக நின்று பாதகமாய்
அத்தாலே இவளும் நோவுபட்டு மோஹித்துக் கிடைக்க இத்தைக் கண்ட திருத்தாயார்
தர்ம ஹாநி கிடீர் -என்று கூப்பிடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

ரக்ஷகத்வ ஸ்வபாவமாமதோ
இதோ வெண் திங்களாகிற ஸூரபி பால் வெண் நிலாவாகிற முதிர்ந்த பாலை
எங்கும் சுரக்கப் பண்ணுகையாலும்
இந்த முதிர்ந்த மாலையாலும் தனியாட்டி தளர்ந்ததுவே
தம் பொழில் ஏழையும் ரக்ஷகத்வ ஸ்வ பாவமாய் என்னை நலியா நின்றான் என்று
தளருகிற தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
வெண் திங்கள் என்னும் விண் சுரபி
உலகார வாழ் வெண்ணிலவு என்ற முதிர்ந்த பால் சுரக்கும் முதிர் மாலை
என்று அந்வயம்
முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது
லோகங்கள் எல்லாம் நிறையும்படி
வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று
முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
பரிதி வட்டம் -ஆதித்ய மண்டலம்
தேஜஸ்ஸில் அத்தைப் போன்றதாய்
யுத்தத்தில் அசூரரைத் தொடருமதான திருவாழியால் அவர்களை நிரசித்தும்
கையும் திருவாழியுமான அழகை நமக்கு காட்டியும்
உபகரிக்கிறவனுடைய விஹாரணா ராமமான ஸப்த லோகங்களுக்கும்
ரக்ஷகனானவனுடைய சால்பு ரக்ஷண சாமர்த்தியம்
அதின் தகைமை -அதனுடைய விஜ்ரும்பணம்

கொலோ
ஆமதோ

தமியாட்டி தளர்ந்ததுவே
தம்மால் தனிப்பட்டவள் அத்யாவசந்நை யாமதுவே
ஜகாத் ரக்ஷண விஜ்ரும்பணம் ஆமதோ –

———-

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவரை ஆஸ்வஸிப்பித்தாக ஈஸ்வரன் தன் கிருபையாலே
சேஷித்வ
போக்யத்வங்களினுடைய
மிகுதியைப் பிரகாசிப்பிக்க

ஆஸ்வஸ்தரான ப்ரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாயோடே
சீலித்த (ஸஹ வாஸம் பண்ணிய )தென்றல் உலாவுகிற படியைக் கண்டு
ஆஸ்வஸ்த்தையாய்
நாயகி தோழிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –திரைப்பாயல் பாட பேதம்

பாயில் -ஷீராப்தி யாகிற படுக்கையிலே —
மறிதர -கீழ் மேலாக-
பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்-
துறையடைவு–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம் என்றும்
தென்றல் வருகிறதே -அவன் வரவில்லை -என்று வருந்த
தோழி திரு மேனி ஸ்பர்சம் முகந்து வருவதால்
அருகில் வந்து கொண்டு இருக்கிறார் -அறியலாம் –
தோழி அவன் வருகைக்கு அறிகுறி என்பதாகவும் கொள்ளலாம்
செய்ய தாமரை -3 -6 –

பதவுரை

தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி
பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.

வியாக்யானம்

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே கொந்தளித்து விழுவது எழுவதாய்
பரஸ்பர ஹானியாலே முறிந்தும் வருகிற திரைக் கிளப்பத்தை யுடைத்தான
ஷீரார்ணவத்தில் படுக்கையிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
ஸ்ரீ மத்தாய்
அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்

அழகிய
நெடும் கண் என்றுமாம்

அறிவுற்றும்
அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே
அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்

வையம் விழுங்கியும்
ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே
திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
ஆஸ்ரித ரானவர்களை -அந்தர் வர்க்கமான இந்த்ராதிகள் பசிக் கோபத்தாலே
வர்ஷாதிகளாலே நலியும் அளவிலே
பெரிய மலையை உயர மறித்துக் குடையாக்குகைக்காக இடந்து எடுத்த மஹா உபகாரகனுடைய

முடி சூடு துழாய்
இந்திரன் கோவிந்த அபிஷேகம் பண்ணின திரு முடியிலே
சாத்தின திருத்துழாயை

அளைந்து உண் சிறு பசுந்தென்றல்
தழுவி
முழுசி
அனுபவித்த மந்தமான புதிய தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே
ஐயோ வந்து உலவா நின்றது என்று
தன்னுடைய சந்தோஷத்தைத் தோழிக்கு உரைத்தாளாயிற்று

அன்னோ -என்ற பாடமாய்
உலவா நின்றதீ என்றுமாம்

இவ் விடத்தில் தென்றல் உலாவுதலை உகந்து உரைத்தது
தலைவனான ஈஸ்வரன் ஆசன்னனானான் என்கிற அபிப்ராயத்தாலே

இத்தால்
தன்னோட்டை ஸம்ஸ்லேஷ ஸூகத்தாலே பெரும் கடல் கிளர்ந்தால் போலே
தான் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தின் நீர்மையை யுடையரானவர்கள் அனுபவிக்கும் படி
தன்னை ஸர்வ ஸ்வ தானம் பண்ணி ஜகத்துக்கு ஸர்வ பிரகார ரக்ஷகனாய்
ஆபத் சகனாய்
விரோதி நிவர்த்தன சீலனான
கிருஷ்ணனுடைய நிரவதிக
சேஷித்வ
போக்யத்வங்களானவை
அவனுடைய தாக்ஷிண்ய அதிசயத்தாலே பிரகாசியா நின்றது என்று
ஆஸ்வஸ் தராய் ஸூஹ்ருத்துக்களுக்கு அருளிச் செய்தார் ஆயிற்று

(சிறு பசும் தென்றல் தழுவி முழுசி -தாக்ஷிண்ய அதிசயம் )

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஒரு தென்றல் வந்து உலாவிற்று ஆயிற்று
அத்தென்றல் வந்தது -அவனை வரக்கண்டிலோம் என்று தலைமகள் தளர்ந்தாள்
அத்தைக்கண்ட தோழியானவள்
வெறும் தென்றல் என்று இருந்தாயோ
மாளிகைச் சாந்து நாறி இரா நின்றாள் ராஜபுத்ரன் வர அணித்து என்று இருக்க வேண்டாவோ
இது அவன் நல் வரவுக்கு ஸூசகம் காண்
நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வஸிப்பிக்கிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும்
தளர்ந்து பெரும் திரையாக எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற திரைகளை யுடைத்தானா படுக்கையிலே
இவன் ஸர்வேஸ்வரன் என்று ஐஸ்வர்யத்தைக் கோள் சொல்லிக் கொடுப்பதாய்
பரப்புக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும்
ஜகத் ரக்ஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு கண் வளர்ந்ததும்

அறிவுற்றும்
பிரளயம் வந்து நலியப் புக்கவாறே
இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக நாம் வந்து கிடக்கச் செய்தே
இவற்றை நோவு பட விட்டு இருக்கையாவது என் என்று உணர்ந்து அருளியும்

வையம் விழுங்கியும்
பிரளய ஆபத்திலே நோவு படாதபடி பூமியை எடுத்து திருவயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே ஒரூராக நோவு படப்புக்கால்
வந்து நோக்கும் படியைச் சொல்லுகிறது
கோவர்த்தனம் ஆகிற மஹா கிரியை நின்ற நிலையிலே கிளம்பும்படி
கீழது மேலதாம் படி பேர்த்து எடுத்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே
தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -திருவாய் -4-2-1- என்று
அவன் இருந்தாலும்
கிருஷ்ணாதி சிரஸா ஸ்வயம் -என்று அவன் இருக்கும்படியாலே
இவள் அத்தைச் சொல்லுகிறாள்
அவன் திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயைப் புக்கு உழறி
அதிலே வாஸனை பண்ணி நடுவு ஒன்றிலே தங்காதே
கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலவுகிறது
இனி உனக்கு சோகிக்கைக்கு அவகாசம் உண்டோ

அவன் முடி சூடு துழாய் என்ன அமைந்து இருக்க
கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்குக் கருத்து என் என்னில்
அவன் ஆஸ்ரித அர்த்தமாக வியாபாரித்த இடம் எங்கும் புக்கு
ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை

இத்தால்
அவன் ஆஸ்ரித அர்த்தமாகாது திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பொடியையும்
பிரளய ஆபத்திலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கின இம் மஹா உபகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின பொடியையும்
ஆக இக்குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்த்தர் ஆஸ் வஸி ப்பிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக குண ஞானத்தாலே ஜீவித்த படியைச் சொல்லுகிறது

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி இவருடைய ஜகத் ரக்ஷணமும் ஜகத் ஆஹ்லாதனமும்
ஸ்வா தந்தர்ய அசஹை களானவர்களுடைய வதனே யாமதோ என்று
மோஹங்கதையான தன்மைகளை ஆஸ்வஸிப்பிக்க
இவளின் பரம பிரணயியான சர்வ ரக்ஷகன் திரு அபிஷேகத்தில் சாத்தின
திருத்துளாய்ப் பரிமள மயமான தென்றலை இவன் மேலே ப்ரஸவிப்பித்தான்
அத்தால் ஆஸ்வஸ் தையான நாயகி பாவம் பெற்றாராய்
அவள் தன் தோழிக்கு உரைத்த பாசுரத்தால் தாம் அதுக்கு ஆச்சர்யப்படுகிறார்

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
ஒன்றுக்கு ஓன்று கொந்தளித்து விழுந்தும்
புரளுமதாய் முறுகளைப் பெற்றும் மேல் வருகிற திரைப்பாயனுள்ள ஆழ் கடலிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
திருவும் தாமும் தீர்க்க லோசனாத்மக யோக நித்திரை செய்தும்

அறிவுற்றும்
மத்யே வந்தவர்களைக் கடாக்ஷிக்கக் கண் விழித்தும்

வையம் விழுங்கியும்
மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
மஹத்தான கோவர்த்தனத்தை விஜ்ரும்பணத்தால் விஜ்ரும்பித்து
மேற்புறம் உட் படும்படி நிலத்தோடு ஒட்டு விடுவித்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண்
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயில் விளையாடி
தத்கத கந்த மகரந்த ஆஸ்வாதீ யானதாய்

சிறு பசுந்தென்றல்
சிறுகச் சிறுக வருகிற குளிர்ந்த தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே –
இப்போதாக ஸஞ்சரியா நின்றபடி என்று
ஆஸ்வஸிக்கிறார் –

———–

இவருடைய ஆஸ்வாஸ அதிசயம் கண்ட அன்புடையார்
இவர் திவ்யராய் இருக்கிறாரோ
இந்த விபூதியிலே இவ்வதிசயத்தைப் பெற்றவரோ என்று
விஸ்மிதராய்ச் சொன்ன பாசுரத்தை
தலைவன் பாங்கியுடன் தலைவியை எதிர்ப்பட்டு வியந்து உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –

பாசுரம் -75-உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –
துறையடைவு-தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் –
சன்மம் பல பல -3 -10 –

பதவுரை

உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற-இந்திரியங்களுக்கு விஷயமாக
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேஸ்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோமோ
வையமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?

வியாக்யானம்
உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
குழை யளவும் சென்று மீளுகையாலே உலாவா நிற்பதாய்
கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை
என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே
உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற
கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான்
குனி சங்கைக் கீழ்ப்படுத்தி மேலே போய்த் தன் வெறி நாற்றத்தை யுடைத்தான
திரைக் கிளப்பத்தை யுடைய கடலை அழகிய படுக்கையாக யுடைய
ஸ்வாமி யானவனுடைய

வேலை -என்று
கரை யாகவுமாம்
(அலை யுடைய கடல் என்றும் கரையை யுடைய கடல் என்றும் )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ
சேஷத்வ பாரதந்தர்யங்களை வடிவாக யுடையவர்கள்
நித்ய வாஸம் பண்ணுகிற அழிவற்ற தேசமோ

வையமோ
அவனுடைய லீலா விபூதியோ

வையம் என்று
விபூதிக்கு உப லக்ஷணம்

நும் நிலை இடமே
உங்களுடைய வாஸஸ்தானமானது

வைலக்ஷண்யத்தைப் பார்த்தால் நித்ய விபூதி என்னலாய் இரா நின்றது
இங்கே காண்கையாலே இந்த விபூதி என்னலாய் இரா நின்றது என்கை –

இத்தால்
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற
வெஞ்சிலை வாள் முகத்தீர் -என்கையாலே
நித்ய விகாஸ ப்ரவ்ருத்தி ஸீலமாய் (சென்று சென்று பரம் பரமாய் -அறிந்து அறிந்து தேறித் தேறி )
சீதள ஸ்வபாவமாய்
பிரகாசத்தையும்
கூர்மையையும் உடைத்தாய் இருக்கும்
ஞானம் என்றபடி

எம்மா வீடு -திருவாய் 2-9-இத்யாதியாலே
இந்த ஞானத்தை அன்புடையார் நெஞ்சிலே அவகாடமாம்படி ப்ரதிபாதிக்கும் அளவில்
ப்ரூ விஷேபாதியான முக விகாஸத்தை ஸூ சிப்பிக்கிறது

(வீடு வேண்டாம்-மா வீடு-கைவல்யம் வேண்டாம்-எம்மா வீடும் வேண்டாம் –
ப்ரூவம் அழுத்தி திருத்தமாக சொல்வாரே
நின் செம் பாத பற்ப்பு ஒல்லை தலை மேல் சேர்க்கவே வேண்டும் -அடியேன் வேண்டுவது இதே
திருவடித் தாமரை தரித்து கைங்கர்யம்
என் நெஞ்சுள் நிறுத்தினான் -ஆழமாக காட்டி அருளினார் அன்றோ )

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் -என்கையாலே
சேஷத்வ நிரூபித ஸ்வபாவரான ஸூத்த ஸ்வபாவரைக் கீழ்ப்படுத்தி
தன்னுடைய தவ்ராத்ம்யமமே (துராத்மாவின் ஸ்வபாவமே ) கந்திக்கும்படியான
மேல் எழுச்சியை யுடைய ஸம்ஸார சாகரத்தை
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தத்தாலே கைவிடாமல் நினைக்கிற ஸ்வாமியான என்று
லீலா விபூதி யோகம் சொன்னபடி

(நாரங்களுக்கு அயனம் -கைவிடாமல் இங்கே வந்து கண் வளருபவன் அன்றோ
அம்மான் -ஸ்வாமி )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும்
இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று
அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒருவகை யாதல்
இயற்கையிலே ஐயமாதல்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை
உலாகின்ற கெண்டை போலே யாயிற்றுக் கண்களின் மௌக்த்யம் இருக்கிற படி

யொளியம்பு
இவன் பார்த்த போதே பாராதே —

எம்மாவியை யூடுருவக்

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
ப்ரஹ்ம வித் அக்ர கண்யர்கள் இவருடைய ப்ரபாவத்தைத் தங்கள் பார்வையால்
முகந்து கொண்டு ஸந்துஷ்டார்களாய்
ஸேவித்துப் பரிமண்ட விதராய் நிற்க
அவர்களைக் கடாக்ஷித்து இன்னபடியாக அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை
ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல
ஒள்ளிய அம்பாயும்
ஒள்ளிய கெண்டையாயுமுள்ள கண்களைக் கொண்டே அவர்களைத் திரஸ்கரிக்க வுமானது கொண்டு
ஒளி பெற்ற முகங்களை யுடையவர்களே

கிஞ்ச

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
வேலையில் -கரையிலே
குனிந்து இருக்கும் சங்குகளை
புணரி -ஆஸ்வேஷிப்பித்தும் இடறியும் உலாவும் அவைகளால்
அழகிய பாற்கடலில் பள்ளிகொள்ளும் அஸ்மத் ஸ்வாமிக்கு அடிமைப் பட்டவர்காள்

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –
உங்களுடைய ஞான வைஸத்யத்தை அப்பார்வையுள்ள முகத்தால் கண்டோம்
உங்கள் இருப்பிடமே கேட்க்கிறோம்
ஸ்வரூபவ யாதாத்ம்ய ஞானம் நிலையாகி நிற்கும்படியான அவ்வைகுந்தமேயோ
இவ்வையம் தானேயோ
சொல்லுங்கோள் விருப்புற்றுக் கேட்க்கிறேன் என்றபடி –

——————————–

அவதாரிகை

இப்படியான பின்புடையாரும் ஆச்சர்யப்படும்படியான ஞான வைலக்ஷண்யத்தை யுடையவர்
இதுக்கு அநுரூபமான பகவத் அனுபவம் ஸித்தியாமையாலே
தமக்கு உண்டான ப்ரகாஸமும் ( ஞானம் மதி சந்திரன் ) ப்ரதிகூலமான பிரகாரத்தை
தலைவனான ஸர்வேஸ்வரனுடைய திருத்துழாய் மாலையிலே நசை பண்ணி
சிதிலமான நெஞ்சைக் குறித்து சந்திரனுடைய விகாஸத்துக்கு ஆற்றாளாய்த்
தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 –வடம் போதில் -பாட பேதம்

பாசுரம் -76 – இடம் போய் விரிந்து இவ்வுலகு அளந்தான் –
துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —
ஓராயிரமாய் -9 -3-

பதவுரை

இடம்போய் விரிந்து–எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான்–இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர்–அழகு நிறைந்த
தண்–குளிர்ந்த
துழாய்போது வடம்–திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும்-வருந்துகிற
மட நெஞ்சமே–பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது–சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க–குவிய
மேல் ஆம்பல்–புல்லிய ஆம்பலை
அலர்விக்கும்–அலரச் செய்கிற
வெள் திங்கள்–வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது–நமது வெளுத்த வளைகளைக் கழலச்
செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே–ஓர் ஆச்சரியமோ?

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் யுள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி
இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய வெற்றி அழகாலே புனையப்பட்ட
செவ்வித் திருத்துழாயினுடைய தொடையு ண்ட பூந்தாரிலே
சிதிலமாய்
பற்றிற்று விடமாட்டாமல் ஈடுபடா நிற்கிற நெஞ்சமே

வடம் -என்று தொடை

நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே –
வியன் தாமரையின் தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்கள்
நாங்கள் வெண் வளைக்கே விடம் போலே விரிதல் இது வியப்பே
என்று அந்வயம்

பெரிய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தாமரையினுடைய இடமுடைத்தான பூவானது
மொட்டிக்கும்படி அல்பமான ஆம்பலை அலர்விக்கும் வெளுத்த சந்த்ரனானவன்
நம்முடைய வெளுத்த வளைக்கு விஷம் போலே பரம்புகிற இது ஆச்சர்யமோ என்று
நெஞ்சைக் குறித்து இரங்கி உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஸர்வ ஸூலபனாய்
ஸூ சீலனான
ஸர்வேஸ்வரனுடைய
சேஷித்வ போக்யத்வாதி குண உன்மேஷத்திலே ஈடுபட்ட திரு உள்ளத்தைக் குறித்து
நிரதிசயமான போக்ய விகாஸத்தை ஸங்கோசிப்பித்து
அர்வா சீத விகாஸம் பண்ணிப் போருகிற இந்தப் ப்ரகாஸ விகாஸமானது
நம்முடைய கையில் ஸூத்த ஸ்வ பாவமான மினுக்கத்தையும் குலைப்பதாக ப்ரசரிக்கிற
இது ஆச்சர்யமோ
என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை சந்த்ர உதயத்திலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து
இச்சந்திரனுக்கு இங்கனே எளிய செயல் செய்கை ஸ்வபாவம் காண்
இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வஸி ப்பிக்கிறாள்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து
பள்ளமுள்ள இடம் எங்கும் போய் வெள்ளம் பரக்குமா போலே
அவகாசமுள்ள இடம் எங்கும் பரந்து

இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்

இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய
எழிலார் தண் துழாய் யுண்டு
இதுக்கு எல்லாமாக முதலியாய் இட்டமாவை அவன் திருமேனியிலே ஸ்பர்சத்தாலே
அழகியதாய்க் குளிர்ந்து இருந்துள்ள திருத்துழாய்

வடம் போதினையும் மட நெஞ்சமே
வடமாகிற பூவை இச்சித்துப் பெறாமல் சிதிலமாய் இருக்கிற திருத்துழாய் மாலையில்
செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே தளரா நிற்பதாய்
அதில் அருமை சொன்னால் கொள்ளாதே பற்றிற்று விடாதே கிடக்கிற நெஞ்சே

நங்கள் இத்யாதி
நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ

வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
தம் தாமுக்கு பிராப்தி யுள்ள இடங்களிலே நலிகை முறைமை இறே
தானும் வெண் திங்களாய்
இதுவும் வெள் வளையாகையினாலே
நிறத்தில் ஸாம்யம் கொண்டு நலியலாம் இறே

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும்
வாசி அறியாதார் என் செய்யார்
விஸ்மய நீயமாய் இருந்துள்ள தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கும்படியாகவும்
ஷூத்ரமாய்ப் புல்லிதான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணும்படியான

வெண் திங்களே –
வெள் வளைக்கே விடம் போல் வருமிது வியப்பே

ஸ்வாபதேசம்
இத்தால்
திரு வுலகு அளந்து அருளின போது சாத்தின அச்செவ்வி மாலை
இப்போது பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே
அநுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமான படியைச் சொல்லுகிறது

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படியுள்ள ப்ரஹ்ம வித்துக்களில் இவருடைய பரிவால் வந்த ஸ்மரணம்
பிரிவாற்றாத் தலைமகள் ஆக்க
அப்போதே இவள் வளை கழலப் பண்ணும் வெண் திங்கள் உதிக்க
அத்தைக் கண்ட இவருடைய நெஞ்சு ஐயோ என்று சோகிக்க
அப்போதில் நையும் நீ வெண் திங்கள் நம் வளை கழலப் பண்ணுமத்துக்கு
ஆச்சர்யப்படவும் சோகிக்கவும் வேண்டா

அவன் அல்ப விகாசகனும் அதிக சங்கோசகனும் காண் என்று
விஷம் பரந்தால் போல் வியாபிக்கும் நிலவுக்குத் தளர்ந்தவளாய்த் தன் நெஞ்சுக்கு
அருளிச் செய்கிறாள் இதில்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் உள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்ட
அவனுடைய விபூதி த்வய ஆதி ராஜ்ய அர்ஹமான செவ்வித் திருத்துழாய்த் திருமாலைக்கு
அழகு பெறுத்தும் குஸூ மங்களில் பாடிய ஆசைப்பட்டு
அது கிடையாமையாலே நைந்து இருக்கிற எனக்கு பவ்யமான நெஞ்சமே
அவன் துஸ் ஸ்வ பாவத்தைக் கேளாய்

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே –
இந்த வெளுத்த சந்த்ரனான இவன்
விஸ்மய நீயமும் விசாலமுமான தடாகங்களில் யுள்ள கமலங்கள் எல்லாம் முகிளிதமாம் படி
அதி ம்ருதுவும் அதி அல்பமுமான ஆம்பல்களை விகசிப்பிக்குமவன் அன்றோ

ஏவம் பூதன்
நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
நம்முடைய வளைகள் கழலுமதுக்குத் தன் நிலவால் விஷம் போலே
விஸ்த்ருதனாமது இது நமக்கு ஓர் விஸ்மயமோ

ஆளும் பரமன் -திருவாய் -3-7-2-என்றும்
அளிக்கும் பரமன் -திருவாய் -3-7-6-என்றும்
பேர் பெற்ற நம் இறைவன் நமக்குத் தன் எழிலார் தண் துழாய் வடத்தைத் தந்தால்
நாம் நையோமே
அப்போது நம் வளை கழலப் பண்ண வல்லவன் அல்லனே என்கிறாள் —

————————-

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தமக்கு அனுபவ யோக்ய காலம் சந்நிஹிதமாய்க் கொண்டு
போக்ய விஷயத்தை ஸ்மரிப்பித்து பாதகமான பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-

பாசுரம் -77–திங்கள் அம் பிள்ளை புலம்ப –
துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-

பதவுரை

திங்கள்–பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை–அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப–(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட–சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய
செங்கோள்மையை யுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்–செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி–அடைந்து
நின்று–(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
எள்கு–வருந்துகிற
புல்மாலை–சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை–தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம் செய்த–கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்–நமது தேவாதி தேவனான தலைவனது
துழாய்–திருத்துழாயை
துணை ஆ–தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்களை மாமை கொள்வான்–நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது–எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்பிற்று என்னும் படியாக
சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே
சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது
என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்
இப்படி இழந்து கிலேசிக்க வேண்டாதபடி தெற்குத் திக்கு இடத்திலேயான லங்கையிலே
சத்ருக்களை ச புத்ர பவ்த்ர பாந்தவமாம் படி கொன்று கொடிய களத்தைப் பண்ணின வெற்றியாலே
ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களுக்குக் குடி இருப்புக் கொடுத்த மஹா உபகாரத்தாலே
பெண் பிறந்த நமக்கு விஸ்வஸித்துப் பற்றலாம் படியானவருடைய

துழாய் துணையா
வெற்றி மாலையான திருத்துழாய் நமக்கு ஸ்மரிப்பிக்கிற முகத்தாலே
நலிகைக்குத் துணையாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
நம்முடைய மாமை நிறத்தை அபஹரித்துக் கொள்ளுவதாக வந்து தோன்றி தன்
தைன்ய பிரகாரத்தாலே நலியா நின்றது என்று ஆற்றாது உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
தமக்கு உண்டான ஞான ப்ரகாஸமும் (திங்கள் அம் பிள்ளை )ப்ரலாப பர்யவசாயியாம் படி
அநுராக உத்தரமான மஹா விவேகமும் (ஸூர்யன் )குலைந்து
அநுபாவ்ய விஷயமான ராகம் விஞ்சும்படியான அவஸ்தா விசேஷமானது
அநந்யார்ஹர் ஆனவருக்கு அதிசயித விரோதிகளை அழித்துக் கொடுக்கும்
சர்வாதிகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக போக்யதா ஸஹ சரிதமாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூப விபர் யாசத்தைப் பிறப்பித்து ஈடுபடுத்தா நின்றது என்று
தம்முடைய ஆர்த்தியை அருளிச் செய்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஸந்த்யையிலே நோவு படுகிறாள் ஒரு தலை மகள்
வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
மஹதா தபஸா -ஆரண்ய -66-13- என்கிறபடியே
வருந்திப் பெற்ற பிள்ளை இறே

புலம்பத்
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே
விம்மல் பொருமலாய் இருக்கும் கடலோசை ஆதல்
அக்காலத்திலே பக்ஷிகளுடைய ஆரவாரமாதல் இறே

தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
தன்னுடைய ஆஜ்ஞா ப்ரதானனான ராஜாவானவன் பட்ட யுத்த பூமியைப் பற்றி நின்று
ஈடுபடுகிற புல்லிய மாலை
ருதிர வெள்ளத்தாலே சிவந்த பூமியைப் போலே இருக்கும் இறே அப்போதை ஆகாசம்
ராவணன் பட்ட களத்திலே மந்தோதரி கூப்பிட்டால் போலவும்
வாலி பட்ட களத்திலே தாரை அங்கதப் பெருமாளைக் கொண்டு நின்று கூப்பிட்டால் போலவும் ஆயிற்று
ஆதித்யனை இழந்த அந்த ஸந்த்யையும் அப்பிரதேசத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிற படி

பகல் கண்டேன் -இரண்டாம் திரு -31-என்கிற
வஸ்துவை இழந்து இறே இவள் நோவு படுகிறது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச தேசமான தெற்குத் திக்கில்
அறிவுடையார் நடையாடாத லங்கையை வெவ்விய களமாம் படி
ஸ்மசாந கல்பமாம்படி பண்ணின

நம் விண்ணோர் பிரானார்
ராவண வத அநந்தரம்
பவான் நாராயணோ தேவ -யுத்த -120-13-என்று
ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற

துழாய் துணையா
அவர் தோளில் மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்ட
இதுவே பரிகாரமாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே இது
நம் இழவுக்குக் கூப்பிடுகிறதாய் இருக்கிறது

நங்களை மாமை கொள்வான்
நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ
தன் இழவும் கூப்பிடும் கிடக்கச் செய்தே
பண்டே குறைபட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்குப் பாரிகிற படியாய் இருந்ததீ –

ஸ்வா பதேசம்
கீழ்
திரு அளந்து அருளினை பொது இட்ட மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக்
கிடையாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று
இதில்
ராவண வத அநந்தரம் இட்ட வெற்றி மாயையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக் கிடையாமை
நோவு படுகிறபடியைச் சொல்லுகிறது

—————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை
இதுக்கு மேல் மாலை வந்து தோன்றி நலிய
அம்மாலைக்கு ஆற்றாத் தலைமகளாய் நலிவு படுகிறாள் இதில்

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
மாலைக்கு அரசு ஆதித்யன் சாயம் ஸந்த்யையிலே திங்களாகிற இளம் பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தால் கோஷிக்கவே
தனக்கு அரசாய்ச் சிவந்த கிரண தண்டங்களை ப்ரவர்த்திப்பித்த
ஆதித்யன் ஹதன் -என்னும்படி அஸ்தமித்த இடமான
செங்களம் -ரக்தமயமான களம் -யுத்த பூமி
அதிலே தான் நின்று எள்கு -துக்கத்தால் ஈடுபடுகிறது கண்டு

புன்மாலை
புன்னிய -ஏழைத்தனம் பெற்று
மாலை -ஸந்த்யையானது
வந்து தோன்றி நலிகின்றது
என்று அந்வயம்

அது தனக்குத் துணை கூட்டிக் கொண்டு நலிகிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்
தெற்கில் உள்ள லங்கா த்வார அங்க கணத்தை வெவ்விய போர்க்களமாக்கி
தன் விரோதிகளை நிரசித்த நம் ஸ்வாமியாய்
இந்த்ராதிகளான விண்ணோர்க்குக் குடி இருப்பைத் தந்து உபகரித்தவனுடைய
துழாய் மாலையை அவனால் வரப் பெற ஆசைப்பட்டாள் என்பதே
தனக்குத் துணையாகக் கொண்டு நல் நிறத்தை அபஹரிப்பதாய் வந்து நமக்கு
எதிர்ப்பட்டு நம்மை நலியா நின்றது

வந்து தோன்றி நலிகின்றதே
புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி
பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர்
திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று ஆயிற்று
தன் தைன்ய பிரகாச நத்தாலே நலிகிறது என்பாரும் உண்டு –

———————

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவ்வாழ்வாருடைய –
விரோதி நிரசன ஸ்வபாவங்கள் உண்டாகச் செய்தே
நம்முடைய பிரதிபந்தகங்கள் போய் அவனுடைய போக்யதையை அனுபவிக்கப் பெறாமல்
(இவ்வாழ்வாருடைய )திரு உள்ளம் தளும்பி
அத்தாலே கிலேசித்த பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் சக்தனாய் இருக்கக் கிட்டப் பெறாமையாலே
நெஞ்சு அழிந்து இரங்கின நாயகி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – 78-

பாசுரம் –78-நலியும் நரகனை வீட்டிற்றும் –
துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –
இன்பம் பயக்க-7-10-

பதவுரை

(எமது நாயகனார்)
நலியும் நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண் தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக் காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரை போல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தை யுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப் பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதை நெஞ்சு
தந்து போயின–(தான் எம்மை விட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்து விட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.

வியாக்யானம்

நலியும் நரகனை வீட்டிற்றும்
மேலிட்டு நலிந்து வருகிற நரகா ஸூரனை ஸத்யபாமைப் பிராட்டி வார்த்தைக்காக
விழப் பண்ணினதும்

வாணனை திண் தோள் துணித்த வலியும்
உஷையையும் அநிருத்தரையும் கொண்டு போய் இருக்கைக்காக பாணனுடைய
யுத்த ஆகாங்ஷியான திண்ணிய ஆயிரம் தோளையும் அறுத்து விழவிட்ட
ஆயுத பலமும்

பெருமையும்
அந்த பாண யுத்தத்தில் ஈஸ்வர அபிமானியான ருத்ரனை முதுகு புறம் கொண்ட
சர்வேஸ்வரத்வமும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
வேதங்கள் அகப்பட எல்லை காண மாட்டாத இக்குணங்கள்
அல்ப ஞானனான நான் சொல்லும்படியான நீர்மையை யுடையது அல்ல

மைவரை போல் பொலியும் உருவில் பிரானார்
அஞ்சன கிரி போலே வளர்ந்த வடிவை யுடையராய் இருக்கிற உபகாரகர் ஆனவர்

புனை பூம் துழாய் மலர்க்கே
வெற்றிக்கும்
அழகுக்கும்
சூட்டின அழகிய திருத் துழாய்த் தாருக்காக

மெலியும் மட நெஞ்சினார்
ஈடுபட்டு பற்றிற்று விட மாட்டாத நெஞ்சினாரானவர்

தந்து போயின வேதனையே –
அத் தார் நசையாலே நம்மை விட்டுப் போகிற போது
நமக்குத் தந்து போனவை கிலேசங்களாய் இருந்தன விறே
என்று
அழிந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஈஸ்வரனுடைய விரோதி நிரசன சக்தி
அபரிச்சிந்னையாய் இருக்கச் செய்தேயும்
அநுபவ ஸித்தி பிறவாத அளவிலே
அதிசயித போக்யதை ஆர்த்தியைப் பிறப்பிக்கும்
என்றதாயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு
நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம் –

நலியும் நரகனை
ஸர்வேஸ்வரன் பரிக்ரஹிகைக்கு யோக்யர்களாய் இருக்கிறவர்களைக் கொண்டு வந்து சிறை செய்தான் இறே

நலியும்
அந் நலிவு தம்மதாய் இருந்தபடி

வீட்டிற்றும்
வீழ்த்ததுவும் -முடித்ததுவும்

வாணனை திண் தோள் துணித்த வலியும் பெருமையும்
உஷையையும் அநிருத்த ஆழ்வானையும் சேர ஒட்டாதே சிறை செய்த

வாணனை திண் தோள்
தேவதாந்த்ர சமாஸ்ரயணத்தைப் பண்ணி
பகவத் சமாஸ்ரயணத்தைப் பண்ணினாரைப் போலே திண்ணிய தோளை யுடையனாக நினைத்து இருந்தான்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன்
நபி பேதிரு தச்சந -தைத்ரியம் -ஆனந்த -2-7-
ஏஷ ஹ்யேவ ஆனந்த யாதி இறே

அத்தால் வந்த தைர்யத்தாலே தான் புத்தி பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே

துணித்த வலியும் பெருமையும்
அவன் திண்ணிய தோளைத் துணித்த வலியும் பெருமையும் என்னுதல்
வலியின் பெருமை என்னுதல்

மிடுக்கும் மேன்மையும்
அன்றிக்கே
வழியினுடைய பெருமையும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
நாம் இப்போது இருந்து சொல்லும் அளவோ

நீர்த்தல்ல

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

திவ்ய ஆயுதாதிகளை நமக்கு அனுபாவ்யமாக்கி உபகரிக்குமவரால்
தம் அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அநு குணமாகச் சாத்திக் கொள்ளப்பட்ட
அழகிய திருத்துழாய் மாலையில் உள்ள குஸூ மங்களுக்கே ஆசைப்பட்டு
கிலேசிக்கும் எனக்கு பவ்யமான பெருமையுள்ள மனஸ்ஸாகிறவர் தாம் என்னை விட்டு
அவன் இடத்தில் போம் போது தந்து போன வேதனை இது என்று அறியுங்கோள்
என்கிறாளாய் அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி ஆர்த்தி அதிசயத்தாலே ஈடுபட்டவர்
இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷனர் ஆவர்கள்
இறே என்று தம்முடைய இழவை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79

பாசுரம் –79-வேதனை வெண் பூரி நூலனை –
துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –
மொய்ம்மாம் பூம் பொழில் –3 –5-

பதவுரை

வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூலனை–சுத்தமான யஜ்ஜோபவீத முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

வியாக்யானம்

வேதனை
வேதங்களால் சொல்லப் படுமவனை

வெண் புரி நூலனை
வைதிக புருஷன் என்கைக்கு அடையாளமான
ஸூத்த யஜ்ஜோபவீதத்தை யுடையவனை

விண்ணோர் பரவ நின்ற நாதனை
வேத ப்ரதிபாத்யர்களான அல்லாத தேவதைகள்
தம் தாமுடைய பத ஸித்திக்காக ஸ்தோத்ரங்களைப் பண்ண
அவர்களுக்கு அபிமத பல ப்ரதாநம் பண்ணி
அவர்களுக்கு ஸ்வாமியாய் நின்றவனை

ஞாலம் விழுங்கும் அநாதனை
அத் தேவதைகளோடு
அவர்களுக்கு இருப்பிடமான ஜகத்தோடு
வாசியற பிரளயம் கொள்ளாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
தன்னை நோக்குகைக்கு ஒருவர் வேண்டாதவனை

ஞாலந்தத்தும் பாதனைப்
அந்த ஜகத்துக்குத் தானே சேஷி என்னும் இடம் தோற்றத்
தன் கீழே ஆக்கிக் கொள்ளும் திருவடிகளை யுடையவனை

பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்
ஜகத்துக்குப் பின்னையும் இடையூறு வந்தால்
ரக்ஷிக்க வேணும் என்று திருப்பாற்கடலிலே
பிரிய ஒண்ணாத போகத்தை யுடைய திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளும் சீதள ஸ்வ பாவம் உள்ளவனை

சீதனையே
அந்நிய விமுகராய்க் கொண்டு
(வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்

விண்ணுளாரிலும் சீரியரே –
நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்

இவ்விடத்தில் சீதன் என்றது
தாப ஆர்த்தோ ஜல சாயிநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று
அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

————-

அவதாரிகை

இப்படி அனுபவ அபி நிவேசம் பிறந்தவர்
அதுக்கு ஈடாக அனுபவிக்கப் பெறாமையாலே தம்முடைய விவேக பிரகாசம் குலைந்து
மோஹ அந்தகாரம் மேல் இடுகிறபடியை
பிரிவாற்றாது பொழுதொடு புலம்பின தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

பாசுரம் –80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் –
துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –
முடிச் சோதியாய் -3–1-

பதவுரை

சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது

வியாக்யானம்
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு
அழகிய ராஜ்யத்தைப் பண்ணி
தன்னுடைய அபங்குரையான ஆஜ்ஜையைச் சில காலம் நடத்திக் கழிந்து போன பூமியில்
ராஜாக்களோடு ஒத்தது என்னலாம் படி
ஆதித்யனானவன் பகல் எல்லாம் ப்ரதா போத்தரனாய் நடத்தி அஸ்தமித்தான்

பாரளந்த பேரரசே
ரக்ஷணீயமான பூமிக்கு அந்நிய அபிமானத்தைக் கழித்து
உன் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்ட பெரிய ஸ்வாமி யானவனே

எம் விசும்பரசே
அந்நிய அபிமான ப்ரஸங்கம் இல்லாத நித்ய விபூதிக்கு ஸ்வாமி யானால் போலே
எங்களையும் அநந்யார்ஹ மாக ஆண்டு கொண்டவனே

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
இப்படி அநந்யார்ஹதை ஒத்து இருக்க
அவர்களைப் போலே அனுபவம் பெறாதபடி எங்களை நீக்கி
வஞ்சித்து வைத்தமைக்கு அத்விதீய நாயகன் ஆனவனே

அருளாய்
இப்படி நீங்கி இராதபடி கிருபை பண்ணி அருள வேணும்

இருளாய் வந்து உறுகின்றதே –
தனித்து இருக்கில் இருளின் கையிலே அகப்படும் அத்தனை
ஆகையால் அருள வேணும் என்றதாயிற்று

இத்தால்
ஆதித்ய ப்ரகாஸம் என்னலாம்படி ஸர்வ லோகத்தையும் வெளிச் சிறப்பிக்கிற
தம்முடைய விவேகம் அனுபவ அலாபத்தாலே குலைந்து
மோஹ அந்தகாரமும் மேலிடுகையாலே
ஸமஸ்த விபூதி ரக்ஷகனாய் நம்மைக் காரியப்பட்டாலே
பிரித்து வைத்து இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய கிருபையை
இவ் வஸ்தைக்கு ரக்ஷகம் என்று அறுதியிட்டு
இரங்க வேணும் என்று அபேக்ஷித்தார் ஆயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஆதித்யனும் போய் அஸ்தமித்து
இருளும் வந்து
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி சார்த்தையாய் இருக்கிறது –

வியாக்யானம்

சீரரசாண்டு
குணமாக ஆண்டு
தர்ம புத்ரன் ராஜ்ஜியம் பண்ணா விடில் நாங்கள் ராஜ்யத்திலே இரோம் என்று
அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடே புறப்பட்டுப் போனார்கள் இறே
அப்படியே சீரியதாக ராஜ்யத்தை நடத்தில்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
அது தான் அல்ப காலத்தோடே

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விபூதியில் தம் இருப்பைத் தாம் அசஹமாநராய்
வைத்தவனையே நிவர்த்திப்பாய் என்ற அபிப்ராயத்தால்
இருளுக்கு அஞ்சின நாயகியாய்
அருளாய் என்று பிரார்திக்கிறார் இதில்

வியாக்யானம்

சீரரசாண்டு
இந்த லோகமான பூமி எல்லாவற்றையும்
ராஜ்ய ஆஜ்ஞக ராஜாவாய் அனுபவித்தவனாய்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
தன் ஆஜ்ஜையைச் சில நாள் நடத்தி

கழிந்த பார் அரசு ஒத்து
கழிந்து போன பூபரோடு ஒத்தவளாய்

மறைந்தது ஞாயிறு
மறைந்தான் ஆதித்யன்

பாரளந்த பேரரசே
இந்தப்பூமியை எல்லாம் ஓர் அடியால் அளந்து கொண்ட மஹா பிரபுவானவனே

எம் விசும்பரசே
எங்களதான தெளி விசும்புக்கு அரசானவனே
அங்காகவே இருப்பதான எங்கள் பதின்மரையும் சில நாள் அங்கு இராதபடி விலக்கி
எங்களை வஞ்சிப்பதற்கு அத்விதீய பிரபு ஆனவனே

அருளாய்
அங்காக நான் வந்து இருப்பதாக அருளிச் செய்யாய்

இங்கு உமக்கு என்ன பாதகம் என்ன
இருளாய் வந்து உறுகின்றதே –
அஞ்ஞான அந்தகாரமே எவரிலும் வந்து திணுங்கி எல்லாரையும் பாதியா நின்றது

ஆர் தான் இந்த ப்ரபந்ந அதிகாரிகள்
இவர்களுக்கு அனுபவ காரகமான இந்த பிரபந்தங்களை இங்கனே வைத்து
தேவரீர் ப்ரவர்த்திப்பத்துக்கு என்ன பலம்
ஆகையால் என்னை அங்கு வாங்கு என்றபடி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மாறன் பாப்பாவினம்-ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் —

April 30, 2022

ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வாரை ‘வேதம் தமிழ்ப்படுத்த மாறன்’ எனப் போற்றுவது வழக்கம்.
இந்த முறையில் இந்த மாறன் பெயரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் சில நூல்களை இயற்றியுள்ளார்.

மாறன் அலங்காரம் [1], (அணி)
மாறன் அகப்பொருள் [2],(பொருள்)
மாறன் பாப்பாவினம்,(யாப்பு)-என்னும் இலக்கண நூல்களும்,
திருக்குருகை மான்மியம் என்னும் இலக்கியமும் இவரால் செய்யப்பட்டவை. [3]

நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியமும்
(நம்பெருமாள் என்பது திருவரங்கப் பெருமான்) இவரால் பாடப்பட்டுள்ளது. [4]

குருகைப்பிரான் என்னும் பெயர் நம்மாழ்வாரைக் குறிக்கும்.
இவரது குருகைப் பெருமாள் என்னும் பெயர் குருகைப்பிரான் என்னும் பெயரோடு தொடர்புடையது.

பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது.
இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் (பா + பாவினம்) என்னும் பெயர் ஏற்பட்டது.
இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது.
மாறனலங்காரம் (அணி),
மாறன் அகப்பொருள் (பொருள்) ஆகிய நூல்களை இயற்றிய
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரே இதனையும் இயற்றினார் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
எனினும் இதனைக் காரி இரத்தின கவிராயர் என்பவர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது[1].
நூலாசிரியரின் ஏனைய இரண்டு நூல்களைப் போலவே இதுவும் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது.
இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் சமயப் பரப்புரைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு,
வைணவத்தின் பெருமை கூறும் இந்நூல் சான்றாக விளங்குகிறது.

இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து
அவற்றுக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்தது இந்நூல்.

வெண்பா,
ஆசிரியப்பா,
கலிப்பா,
வஞ்சிப்பா
என்னும் பாவகைகள் நான்கு,

வெண்பாவினம்,
ஆசிரியப்பாவினம்,
கலிப்பாவினம்,
வஞ்சிப்பாவினம் என்னும் அவற்றின் பாவினங்கள் நான்கு என்பவற்றுடன்
மருட்பாவுக்குமாக 135 எடுத்துக்காட்டுப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து பரிபாடல்களையும் சேர்த்து மொத்தம் 140 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
ஒவ்வொரு எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் பின்னர் அது பற்றிய விபரங்களைக் கொடுத்து
அவற்றின் இலக்கணத்தைக் கூறுவது இந்நூலின் சிறப்பு ஆகும்[2].

6.2 இலக்கணம்
வைணவப் புலவர்கள் இலக்கணம் எழுதித் தமிழ் இலக்கிய உலகத்தோடு இலக்கண உலகத்தையும் வளப்படுத்தியுள்ளனர்.
ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருப்பதிக்கோவை, மாறன் பாப்பாவினம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

6.2.1 மாறன் அலங்காரம்
மாறன் அலங்காரம் செய்யுள் அணி வகை பற்றி விரித்துரைக்கின்றது.
மேற்கோள்களாகத் தம் வழிபடு தெய்வத்தோடு தொடர்புடைய செய்யுள்களைக் காட்டுவதன் மூலம்
சமயப் பணியோடு தமிழ்ப்பணியும் செய்துள்ள பாங்கை அறிய முடிகின்றது.
இந்நூலின் உரை ஆசிரியர் பேரை காரி ரத்தினக் கவிராயர்.

கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணி ஞானம், சென்னிக்கு (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல்,
இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு கடவுளாகக் காட்டுகிறது, இந்நூல்.

6.2.2 மாறன் அகப்பொருள்
மாறன் அகப்பொருள் என்பது தமிழ் அகப்பொருள் இலக்கண நூல்களுள் வைணவரால் இயற்றப்பட்ட நூல்.
ஆசிரியரின் இயற்பெயர் சடையன். வழக்கப்படி மன்னர் அல்லது வள்ளல் முன்பு நூல் அரங்கேற்றம் செய்யப்படும்
இந்த முறையை மாற்றி, இந்நூல் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி சீனிவாச அய்யர் முன்பு
கி.பி. 1522-இல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வழி இலக்கண நூலில் மேற்கோள் வடிவத்தில் சமயம் இடம்பெறத் தொடங்கிய முறையை அறிகின்றோம்.
எனவே சமயம் சார்ந்த ஒருவர் முன்பு அரங்கேறுவது அவசியமாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்.

இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக் கோவை ஆகும்.

6.2.3 மாறன் பாப்பாவினம்
பாவும், பா இனமும் பற்றிய நூல் ஆதலின் பாப்பாவினம் (பா+பாஇனம்) எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் உள்ள பாடல்கள் வைணவ சமயத்தின் பெருமையைப் பறை சாற்றுபவை; சமய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.

இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும்
என்பதற்குச் சான்றாக – ஆவணமாக – இந்நூலில் உள்ள 140 பாடல்கள் அமைந்துள்ளன.

6.2.4 திருப்பதிக் கோவை
திருவரங்கத்தமுதனார் பாடியுள்ள திருப்பதிக் கோவை வைணவத் திருத்தலங்களான 108 திவ்விய
தேசங்களை 40 கண்ணிகளில் தொகுத்துக் காட்டுகின்றது.

அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும், சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், ….
வேதம் உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார் பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.

• மும்மணிக் கோவை
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் நம்மாழ்வார் மும்மணிக் கோவை இயற்றியுள்ளார்.
வேதாந்த தேசிகர் ஒரு மும்மணிக்கோவை அருளியுள்ளார்.

மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன்
சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன்
வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

மறன் பாப்பாவினம்-பா.குப்புசமி-உதவிப்பேராசிரியர்
தமிழ்ப்பிரிவு-தொலைதூரக் கல்வி இயக்ககம்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கணத்தை ஐந்து பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவற்றுள் யாப்பிலக்கணமும் ஒன்று.
பிற இலக்கணம் போன்று யாப்பிலக்கண நூல் தமிழில் அவ்வளவாகத் தோன்றவில்லை
தொல்காப்பியர் செய்யுளியலில் தொடங்கிவைத்த யாப்பிலக்கணம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி என்று
தனி இலக்கண நூல்கலாக உருவானது. பின்னர் வந்த பாட்டியல் நூல்கள் சில யாப்பிலக்கணத்தைக் கூறியுள்ளன.
அதன் பிறகு எந்த இலக்கணமும் யாப்புக்குத் தோன்றவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின் 16 ஆம் நூற்றாண்டில் மாறன் பாப்பாவினம் என்ற நூல் தோன்றியது.
இந்நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இதை இயற்றியவர் திருக்குருகை பெருமாள் கவிராயராவார்.
திருக்குருகை பெருமாள் என்பது நம்மாழ்வாருடைய வேறு பெயர்களுள் ஒன்று அவர் மீதுள்ள பற்றினால்
சடையன் என்ற தனது இயற்பெயரை திருக்குருகை பெருமாள் என்று மாற்றிக்கொண்டார்.

அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்புக்கு ‘மாறன் பாப்பாவினம்’ அமைந்துள்ளது.
இலக்கணம் கூறாமல் அதற்கான சான்றிலக்கியங்கள் மட்டும் கோவையாகக் கூறப்பட்டுள்ளன.
யாப்பிலக்கணம் கூறும் வரிசப்படி இப்பாடல்களின் வரிசைமுறை அமைந்துள்ளன.
இந்நூலில் யாப்புக்கு மட்டுமின்றி அகம், புறம், அணியிலக்கணங்களும் சான்று பாடல்கள் ஆங்காங்கு கிடைக்கின்றன.

140 செய்யுள்களைக்கொண்டுள்ள இந்நூல் தொல்காப்பியரது செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.
யாப்பருங்கலம் யாப்பருங்கல விருத்தி குறிப்புகளையும் ஆங்காங்கு தருகிறர் ஆசிரியர்.
பரிபாடலுக்குத் தொல்காப்பியம் மட்டுமே இலக்கணம் கூறியுள்ள நிலையில்
இந்நூலாசிரியர் பரிபாடலுக்கு 5 பாடல்கலைச் சான்றாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் ஒரு முழுமையான வைணவ இலக்கியம்
எனவே பின் வந்த இலக்கணிகள் இந்நூல் பாடல்களையே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.
இந்நூலைப் பயின்ற சைவ சமயத்தினர், சைவத்திலும் இப்படியொரு சான்றிலக்கியம் வேண்டுமென எண்ணி
குமர குருபரரின் துணை கொண்டு ‘சிதம்பரச் செய்யுட்கோவை’ என்ற நூலை உருவாக்கியுள்ளார்.
இதேபோல் தற்காலத்தில் இந்நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ சமய கருத்துக்களை வெளிப்படுத்தும்
விதமாக ‘அரங்கன் செய்யுள் அமுதம்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார் கவிஞர் சக்தி சரணன் அவர்கள்.

நூல் பொருள்
மறன் என்ற சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும் இந்த நூலில் திருமாலைப்பற்றியும் நம்மாழ்வாரைப்பற்றியும் பாடல்கள் அமைந்துள்ளன.
நம்மாழ்வாரைப்பற்றிய படல்கள் மிகுதியாக அமைந்துள்ளதால் இந்நூல் ‘மாறன் பாப்பாவினம்’ என்று பெயர் பெற்றுள்ளது.
முன்பு கூறியது போன்று இது யாப்பிலக்கணச் சான்றிலக்கியம் என்பதால்
நான்கு வகை பாக்களுக்கும் பாவினங்களுக்கும் சான்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாப்பாவினம் என்ற பெயரை வைத்துள்ளனர்.
இந்த நூலில் நம்மாழ்வாரது முதன்மைச் சீடரான மதுரகவியாழ்வாரைப் பற்றியும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்த இந்நூல் சிறந்த பக்தி நூலாகவும் சிறந்த இலக்கியச் சுவை மிகுந்த நூலாகவும் அமைந்துள்ளது.

இலக்கணச் சான்று
இந்த நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக இயற்றப்பட்டிருப்பினும் இதில் அமைந்துள்ள பாடல்கள்
அகத்திணைக்கும்,
புறத்திணைக்கும்,
அணியிலக்கணத்துக்கும் கூட சான்றுகளாக அமைந்துள்ளன.
இக்கூற்றினை நிறுவும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
இனி இந்த மூன்று இலக்கணங்களுக்கும் ஒவ்வொரு சான்று பாடல்களையும்
அவை அவ்விலக்கணப்படி அமைந்துள்ள பாங்கினையும் ஆராயலாம்.

அகப் பொருள்
இந்த நூலில் வரும் 42 ஆம் பாடல் அகத்திணை களவியலில் வரும் பகற்குறி தொடர்பானதாக அமைந்துள்ளது.
துறை ‘வருத்தம் கூறி வரைவு கடாதல்’ என்பதாகும். பாடல் வருமாறு,

காமரு பல்மரம் கஞலிய பொதும்பர்
மாமரப் பணையின் மதுகரம் இழைத்த
முதிர்நறுந் தேறல் நொதுமலர் முன்னுபு
கொளத்தகு மரபின் குன்ற வான!
வரைதலின் வரையாது ஒழுகலின் இருவிரும்
மாறுபட்டு ஒழுகிய மதியினிர் ஆதலின்
திருமகிழ் மாறன் திருவருட்கு இலக்காய்
ஒழுகா மதியின் மறுகுவல் யானே.

இப்பாடல் நேரிசை ஆசிரியப்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இப்பாடல் அகத்திணையில் அமைந்துள்ளது. தலைவனிடம் தலைவியை மணக்கும்படி தோழி கூறுவதாக அமைந்துள்ளது.
தலைவியோடு பொருந்தாத மனம் கொண்டால் மட்டுமே திருமணத்தைத் தள்ளிப் போடமுடியும்
எனவே அத்தகு மனத்தினை ஒரு உவமை மூலம் விளக்குகிறார் கவிஞர்.
மாறனது அருளுக்கு ஆட்படாத உள்ளத்தினை எடுத்துக் காட்டுகிறார்.
உள்ளுறை உவமமும் இப்பாடலில் பயின்று வந்துள்ளது.
தேனீக்கள் தேடித் தொகுத்த தேனைப் பிறர் கவர்ந்து கொள்வது போல தலைவியை நீ மணக்காது விட்டுவிட்டால்
அவளது தாய்தந்தையர் பிறருக்குத் திருமணம் செய்யக்கூடும் என்பதை உள்ளுறை உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

புறப் பொருள்
இந்நூலில் வரும் 18 ஆம் பாடல் புறத்திணையில் வஞ்சித்திணையைச் சார்ந்த பாடலாகும்.
துறை மாறாயம் பெற்ற நெடுமொழி ஆகும். பாடலடிகள் வருமாறு,

நாராய ணாய நம என்றே நாவீறன்
ஓரா யிரம் என்று உரைத்த கவிப் பாவமுதம்
ஆராய் பவர்க்கடிமை ஆகினேன். வாரான் இங்கு
என்பால் ஒருநாள் யமன்.

இப்பாடல் இன்னிசை வெண்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இன்னிசை வெண்பா நான்கடியில் அமைந்து மூன்றாம் அடியில் தனிச்சொல் பெற்று வரவேண்டும் என்பது இலக்கணம்.
இந்த இலக்கணம் பொருந்தி இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் புறத்திணைக்குரிய வஞ்சித்திணைக்கும் உதாரணப்பாடலாக அமைந்துள்ளது.
இதனை ‘மாறாயம் பெற்ற நெடுமொழி’ என்ற துறையின் மூலமாக தொல்காப்பியம் விளக்குகிறது.
இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் முழுமையும் திருமாலின் புகழைப் பாடக்கூடிய நெடுமொழிப் பாடலாக அமைந்து
தொல்காப்பியர் சுட்டிய புறத்துறையோடு பொருந்துமாறு அமைந்துள்ளது.

நாரயணாய நம என்று ஓராயிரம் முறை மாறன் பாடிய சொற்களை ஆராய்பவர்க்கு அடிமையானேன்
அதனால் உயிரைக் கொள்ளக்கூடிய யமன் என்னிடத்தில் ஒருநாளும் வரமாட்டான் என்பது பொருள்.

திருமாலைப் பாடிய நம்மாழ்வாரது பாடல்களுக்கே அவ்வளவு வலிமை என்றால்
திருமாலது வலிமையை உய்த்துணர முடியாது என்பதை விளக்குமாறு இப்பாடல் அமைந்துள்ளது.

இதே போன்று காஞ்சித்திணையில் அமைந்த மற்றொரு புறத்திணைப்பாடல் வருமாறு,

பெருநூல் பிறபல கற்பதின் மாறன்
ஒருநூல் கற்பது ஊதியம் உயிர்க்கே

இப்பாடல் குறள் வெண்பாவுக்கு இனமான குறள்வெண்செந்துறைக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
குறள் வெண்பாவுக்குரிய இலக்கணம் பொருந்தி இரண்டு அடியும் நான்கு சீர்களாக வரவேண்டும் என்பது
குறள் வெண்செந்துறைக்குரிய இலக்கணமாகும். அவ்விலக்கணம் இப்பாடலில் நன்கு பொருந்தியுள்ளது.
காஞ்சித்திணையில் அமைந்த இப்பாடல் முதுமொழிக்காஞ்சி என்னும் துறையில் பொருந்துமாறு பாடப்பட்டுள்ளது.

பெரிய பெரிய நூல்கள் பலவற்றைக் கற்பதைக் காட்டிலும்
நம்மாழ்வார் அருளிய ஒருநூலைக் கற்பதே உயிருக்கு மேன்மைதருவது என்ற பொருள்பட இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

அணி
இந்நூலில் வரும் 25 ஆம் பாடல் அணியிலக்கணம் பொருந்திய பாடலாகும்.
சொல்பின்வரு நிலையணியில் அமைந்த அப்பாடல் வருமாறு,

மாதங்கம் மூலமெனும் வண்குருடர் மால்வரைஓர்
மாதங்கம் அஞ்ச வருபோழ்துஇம் – மாதுஅங்கம்
மாதங்குஅவ் வாகுவல யத்தணைத்து வல்விரைந்துஅம்
மாதங்கம் வெண்றான்ஓர் மன்.

இப்பாடல் இருகுறள் நேரிசைவெண்பாவுக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு குறள் வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்று வருவதைப்போல இந்த யாப்பு அமைந்திருக்கும்;
இடையில் தனிச்சொல் பெற்றுவரும் என்பது யாப்பிலக்கணம் கூறும் விளக்கம்.
இந்த விளக்கத்துக்கேற்ப இப்பாடல் அமையப்பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி அணியிலக்கணத்துக்குரிய எடுத்துக்காட்டாகவும் இப்பாடல் அமைந்துள்ளது.

இதில் ‘மாதங்கம்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளில் வந்தமையால் இது சொல்பின்வரு நிலையணியாகும்.
இப்பாடலின் முதல் அடியில் திருமால் புகழ் பேசப்படுகிறது.
அதாவது ‘கஜேந்திரன் ஆதிமூலமே என அழைத்த குருகூரில் வாழும் திருமாலினது மலையிலே’ என்ற பொருள்பட பாடல் அமைந்துள்ளது.
அதன்பின் வரக்கூடிய அடிகளில் அகத்துறையில் வரும் பொருள் பிரிவு எனும் பகுதிக்குள் அடங்கக்கூடிய
தலைவன் தலைவியை மணக்க பொருள் ஈட்டச் செல்லும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு
அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்பிலக்கணத்துக்கு மாறன் பாப்பவினம் என்ற இந்த நூல்
யாப்பிலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இந்த நூலின் சிறப்பு இதில் இயற்றப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றிலும் வைணவம் சார்ந்த கருத்துக்களும்;
திருமால், நம்மாழ்வாரது புகழும் பாடப்பட்டுள்ளமையாகும்.
பின்வந்த யாப்பு சான்றிலக்கிய நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்த நூல் அமைந்துள்ளது.
இந்த நூலில் யாப்புக்குச் சான்றுகள் அமைந்துள்ளது மட்டுமின்றி அகப்பொருள், புறப்பொருள், அணியிலக்கணம்
போன்றவற்றுக்கும் சான்றுகள் அடங்கியுள்ளன என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது.

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–நான்காவது எச்சவியலுரை–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

300.மொழிந்ததைமொழிதன்மாறுபடுபொருண்மொழி
பிரிபொருட்சொற்றொடர்கவர்படுபொருண்மொழி
நிரனிரைவழுவேயதிவழுச்சொல்வழுச்
சந்திவழுவொடுசெய்யுள்வழுவென
வந்தவொன்பதுமொருவழிக்கடிவழுவே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின் எஞ்சி நின்ற வழுவணி யுணர்த்தினமையான் எச்சவியலென்னும் பெயர்த்து,
ஆயினித் தலைச்சூத்திர மென்னுதலிற்றோவெனின் முன்னரோதப்பட்ட வணிபெறுஞ் செய்யுள்கட்குப்
பொருந்தாத வழுக்களு ளொருவழிக் கடியப்பட்ட வழுக்களைத் தொகுத்துணர்-ற்று.

(இ-ள்) மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்டுத் தொன்றுதொட்டுவந்த
வொன்பதுஞ் செய்யுளகத்துவருமெனி லோரிடங்களிற் களையப்பட்ட வழுவா மென்றவாறு.

வழி – இடம். ஓரிடங்களிற் களையப்படுமெனவே சிலவிடங்களில் வழுவமைதியாகக் களையப்படாதென்பதூஉ மாயிற்று.
அவையெல்லாம் மேற்காட்டுதும்.

301.அவற்றுள்,
பழியறவொருபொருண்மொழிபரியாய
மொழியொடுதொடர்வதுமொழிந்ததைமொழிதல்.
(எ-ன்) வைத்தமுறையானே மொழிந்ததைமொழிதலென்னும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனந் தொகுத்துக்கூறப்பட்ட வொன்பதுள், மொழிந்ததை மொழிதலென்னும்வழு ஒரு
பொருளைக்காட்டு நிலைமொழியப்பொருளைக் காட்டும் பரியாயமொழியொடுதொடர்வதா மென்றவாறு.

* 309-ம் சூத்திரத்திலும், நிரனிரையென இடையின ரகரவைகார ஈறான பாடங்கொண்டு நிரை – கூட்டமென வுரையெழுதப்பட்டிருக்கிறது.

உடுத்தாரகைபோன்றொளிர்மலர்ப்புன்னாகத்
தடுத்தாள்விழிகடுத்தானன்பா–நடுத்தா
னிலையென்பதாகுமிணைமேருவாகு
முலையென்பனதேமொழி. (813)
இது மொழிந்ததைமொழிதல்.

இதனுள், உடுத்தாரகைபோன்றொளிர்மலர் என்றதனா லவ்வாறாதல் காண்க.
நடு – இடை. தேம் – தேன். அஃதேற் சொற்பின்வருநிலையும் பொருட்பின்வருநிலையும் சொற்பொருட்பின்வருநிலையு
மவ்வா றல்லவோவெனின் அற்றன்று, அவற்றிற்குப் பொருள் வேறென்க. என்னையெனின்,
சொற்பின்வருநிலையென்பது மொழிந்தசொல்லே வரினும் பொருள் வேறுபடும்.
அது “மானைப் பொருகயற்கண் மானைப் புவனமட, மானைக் கமல மலர்மானை – மானை” என்பதனா லறிக.
பொருட் பின்வருநிலையென்பது மொழிந்தபொருளேமொழியினும் சொல் வேறு படப் பொரு ளொன்றாவதோ ரலங்காரம்.
அது “மாய்த்தேன் செனனம் வதைத்தேனென் வல்வினையைத், தேய்த்தேனறிவின் சிறுமையினை” என்பன.
சொற்பொருட்பின்வருநிலையென்பது சொல்லும் பொருளும் பெயர்த்து வேறுவேறாகிச் சொல்லொன்றாய் வருவது.
அது “மாதர்மாதர்கூர் வாளம ருண்கண்மா னிலத்து, மாதர் மாதர்கூர் வண்டிமிரளியதா மரைப்பூ, மாதர் மாதர்கூர்” என வரும்.

302.அதுவே,
சிறப்பினும்விரைவினுஞ்சிதைவின்றாகும்
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙன மொருபொருண்மேற் பலசொல்வருதல் சிறப்பின்கண்ணும் விரைவின்கண்ணும்
வருமெனி லிலக்கணவழுவின்றா மென்றவாறு. என்னை “ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ” என்பதனா லறிக.

மீமிசைத்தாய்த்தோன்றுமழல்வெண்மதிவந்தாலிறைவா
யாமிசைப்பதொன்றுளதாயெய்யேமாற்–பூமிசைவாழ்
பொன்னங்கொடிநோய்புடைபெயர்போழ்துற்றுணர்ந்த
நின்னன்பிதுவானினைந்து. (814)

இது சிறப்பின்கண் ணொருபொருட்பன்மொழி வந்தது.
கள்ளர் கள்ளர் பாம்புபாம்பு தீத்தீத்தீ போபோபோ விரைவின்கண் இரண்டும் மூன்று மொருபொருட்கு வந்தன. என்னை?
“அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொ, லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்” என்பதனா லறிக.
பொருணிலை, விரைவு வெகுளி யுவகை யச்ச மவல மென்னு மைந்துபொருண்மைக்கண்ணும் வருமெனினும் இவை விரைவு.

303.பகர்ந்தமுன்மொழிப்பொருளொடுமுரண்பான்மையிற்
புகன்றிடுமதுவேமாறுபடுபொருண்மொழி.
(எ-ன்) மாறுபடுபொருண்மொழியாமாறுணர் – ற்று.

(இ-ள்) முன்னர்மொழிந்தமொழிப்பொருளொடு மதன்பின்னர் வருமொழிப்பொருள்மாறுபடுபகுதியையுடைத்தாகக் கூறுமது
மாறுபடு பொருண்மொழியா மென்றவாறு. பின்னர்வரு மொழிப்பொருளென்பது எதிர்மறையெச்சம்.

முற்றவுரைத்தமுதுவேதநுட்பமெல்லாங்
கற்றுணர்ந்துமெய்ஞ்ஞானங்கைக்கொண்டீர்–தெற்றெனவே
தத்துவங்கண்மூன்றினையுஞ்சந்தயந்தீரீரினிமே
னித்தமநித்தந்தெளியீர்நீர். (815)
இது மாறுபடுபொருண்மொழி. என்னை? இதனுள், ‘முதுவேத நுட்பமெல்லாங் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானங் கைக்கொண்டீர்’ என்று கூறி,
‘தெற்றெனவே தத்துவங்கண்மூன்றினையுஞ் சந்தயந்தீரீர்’ என்றதனான் மாறுபடுபொருண்மொழியாயிற்று.
தெற்றென – தெளிய. தத்துவங்கண் மூன்றென்பன – சித் தசித் தீச்சுரம்.

304.அச்சமுங்காமமுமகமிகினுரித்தே.
(எ-ன்) இதுவு மெய்தியதிகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அச்ச மகத்து மிகினுங் காம மகத்து மிகினு மவ்வா றுரைக்கப்படு மென்றவாறு. அகம் – உள்ளம். காமம் – விருப்பம்.

வாசமலர்மெல்லணைமேல்வைத்தாலுமண்டழல்போற்
கூசுமலர்ச்சிற்றடிக்குக்கொற்றவா–நேசமது (439)

நெஞ்சத்தடங்காதநேரிழைநின்னோடுவரிற்
கஞ்சத்தடங்காண்கடம். (816)
இது காமமிகுதியான்வந்த மாறுபடுபொருண்மொழி. அச்ச மிகுதியான்வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

305.உரியசொற்பலபொருளொன்றினொன்றாதன
பிரிபொருட்சொற்றொடரெனும்பெயருடைத்தே.
(எ-ன்) முறையானே பிரிபொருட்சொற்றொடரெனும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்துப் புலவனாற்சேர்த்தற்குரிய பலசொற்களினது பலபொருள்களு மொன்றினோடொன்று
பொருந்தாதனவாகச் சொல்லப்பட்டது பிரிபொருட்சொற்றொடரெனும் பெயரினையுடைத் தென்றவாறு.

எனவே வேறுவேறுநோக்கப் பொருளுடையனவாய்க் கூட்டிநோக்க வொருபொருளாக வுரைக்கப்படா தென்றவாறு.
இதனுள் ஒன்றென்பது சொல்லெச்சம்.

கங்கைக்குக்கன்னிநெடுங்காதங்கஞ்சமலர்
மங்கைக்குமாயோன்மணவாள–னங்கைக்கு
ளெட்டாவுறுப்புடலுள்யாதுமிலைக்காமனெனப்
பட்டானிரதிபதி. (817)
இது பிரிபொருட்சொற்றொடர். இதனுள், பலசொல்லுந் தனித் தனிநோக்கப் பொருளுடைத்தாய்க் கூட்டி
நோக்கப் பொருளன்றாதல் கண்டுகொள்க.

306.அதுவே,
கள்ளுண்மாந்தர்பித்தரிற்கடிவரையில.
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) முன்மொழிந்த பிரிபொருட்சொற்றொடர் கள்ளுண்டு களித்தமாந்தராற் கூறுமிடத்தினும் பித்தினான்
மயங்கப்பட்டார் கூறுமிடத்தினும் வழுவென்றுநீக்கப்படா தென்றவாறு.

கள்ளிதனிற்பிறந்தகள்ளிற்கடுந்தேறல்
வள்ளிதனைப்பெற்றபுளிமாந்தேறல்–வெள்ளிமலை
பெற்றபதிவானோர்பெருமான்புரந்தபதி
புற்றரவின்பிள்ளைபுதன். (816)
இது கள்ளுண்டுமயங்கினான்மொழிந்தது. பித்தர் கூறுவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வரையிலவென்னாது கடிவரையிலவென்றதனால், பிள்ளைமையான்மொழியுங்காலு மாம்.
அஃதே லிக்குற்றங்களெல்லாஞ் செய்யுணோக்கிவருவனவாதலாற் செய்யுட் கிலக்கணங்கூறு நூலினுளன்றே யுணர்த்துவது ;
ஈண்டுரைத்தல் பிறிதெடுத்துரைத்த லென்னுங் குற்றமாமெனின்,
நன்றுசொன்னாய் ! அச்செய்யுளென்பன சட்டகம் அலங்காரமென இரண்டாம் ; அவற்றுள் அலங்காரமென்பன
அச்சட்டகத்தைப் பொலிவுசெய்வனவாமாதலாற் செய்யுட்குப் பொலிவழிவு செய்வன வீண்டு முற்கூறி யதன்
பின்ன ரொழிபிற் செய்யுட்குப் பொலிவு செய்வன செய்யுட்குவாராமற் புணர்க்கவென வீண்டுரைக்கப்பட்டதாதலாற்
பிறிதெடுத்துரைத்தலென்னுங் குற்றமாகாதென் றறிக.

307.உவர்ப்பறத்துணிந்தொருபொருள்குறித்துரைத்தசொற்
கவர்த்திருபொருட்குறல்கவர்படுபொருண்மொழி.
(எ-ன்) வைத்தமுறையானே கவர்படுபொருண்மொழியாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைக் குற்றமறத்தெளிந் துட்கொண்டுரைத்த சொற்குப் பொருள் கவர்த்துப் பிறிதுமொருபொருளைக்
காட்டுவதாகி யிரண்டுபொருளைக் காட்டுதல் கவர்படுபொருண்மொழியென்னும் வழுவா மென்றவாறு.

பற்றற்றிடுதிடத்தாற்பற்றியதேபற்றியயன்
மற்றொன்றுதன்னைமதியாதாங்–கொற்றமிகும்
வேல்விட்டெறிந்தனையவெய்யவிழிநோக்கத்தாய்
மால்விட்டுநீங்கார்மனம் (819)
இது கவர்படுபொருண்மொழி.

இதனுள், மால்விட்டுநீங்கார்மனம் என்பது ஸ்ரீமந் நாராயணன் விட்டுநீங்காதார் மனமெனவும் பித்துவீட்டுநீங்காதார்
மனமெனவும் முதலே தெளிந்து கொண்டுரைத்த பொருளைக்காட்டுவதுடனிருபொருட்குக் கவர்த்தவாறு காண்க.
பத்தர்மேற்சொல்லுங்காற் பற்றற்றிடுதிடத்தா லென்பது அய னரன் மண் பெண் பொன் னென்னு மாசைகளைவிட்டு
நீங்கிய வுண்மைஞானத்தால் என்பதாம். பற்றியதேபற்றி என்பது அந்தரியாமியாகநின்ற அவனது
சொரூபரூபகுணவிபூதியையுட் கொண்டு அதுவே தியானமாக என்பதாம்.
அயல் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது அவைநாலுமேயன்றி வேறொன்றினையு முட்கொள்ளாதா மென்றவாறு.
பித்தர்மேற்சொல்லுங்கால், பற்றியதேபற்றி யயன் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது சான்றோர் தெருட்டத்
தெருளுறாது தான்பற்றியதே பற்றிக்கொண்டு உண்மையாக வொன்றினையும் பற்றாததாம் என நின்று கவர்த்தது காண்க.

308.வசைபொருந்தாவழிவரினதுமரபே.
(எ-ன்) மேற்சொன்ன கவர்படுபொருண்மொழி வழுவல்லவா மிட முணர்-ற்று.

(இ-ள்) அக் கவர்படுபொருண்மொழி குற்றம்பொருந்தாவிடத்துப் பொதுப்படவுரைப்பின் வழுவன்று, இலக்கணமா மென்றவாறு.

பரப்பமர்கண்ணாட்கிடும்பைபாலிக்குமென்றே
னிரப்பிடும்பையார்க்கெதிர்சென்றீயா–நிரப்பே
பெருநிரப்பென்கின்றாய்பெருமானேயெண்ணி
யிருநிதிக்குப்போவேனெனல். (820)
இதனுள் எனல் என்னும் அல்லீற்றுவியங்கோள், விதியும் விலக்குமாக நின்றும் வழுவன்றாயிற்று. என்னை?
யா னவ்வண்ணங்கூறவு நீ யதனையுட்கொள்ளாயாகிக் கூறாநின்றாய் ; நினது திருவுள்ள மதுவேயானா லிரண்டையு மனத்தா
லெண்ணித் துணிந்தென்னுடனே பொருண் மேற்செல்வேனென்று கூறாதொழிவாயாக வெனவும்,
அதுவல்லது செல்லத் துணிந்தாயெனில் எம்பெருமானே ! இறைவியோடும் நின்செலவை நீயே
சென் றியான் பொருண்மேற்செல்வேனென்று கூறுவாயாகவெனவும் இரண்டாய கவர்படுபொருண்மொழி
விதியினும் விலக்கினுங் குற்றமல்லவாயிற்று. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நின்செலவை நீயேகூறென்றல்.

309.முன்னரெண்ணிற்குமொழிமாற்றிக்கொளப்
பின்னரெண்ணிரல்பிறழ்வதுநிரனிரைவழு.
(எ-ன்) வைத்தமுறையே நிரனிரைவழுவாமாறுணர் – ற்று.

(இ-ள்) செய்யுளகத்து முன்னரெண்ணப்பட்ட பெயர்வினைகளான முறைக்கு மொழிமாற்றிக்கொள்ளும்படிக் கதன்
பின்னரெண்ணப் பட்டுவரும் பெயர்வினைகள் முறைபிறழவைக்கப்படுமது நிரனிரைவழுவா மென்றவாறு.
பெயர்வினையென்பது சொல்லெச்சம். நிரல் – முறை. நிரை – கூட்டம். பிறழ்தல் – தானமாறாடுதல்.

கலவமயில்சாபங்கழுநீர்குமுத
மிலவநுதல்சாயலிதழ்வா–யுலவுவிழி
நண்பாபொனங்கொடிதானண்ணுமிடநாவீறன்
பண்பார்துடரியிலோர்பால். (821)
என வரும். இதனுள், மயில் சாபங் கழுநீர் குமுதமென முதலே யெண்ணப்பட்ட பெயர்முறைக்குப் பின்னர்
இயல் நுதல் நோக்கம் வாய் என்னாது, நுதல் சாயல் வாய் நோக்க மென முறைபிறழவைத்தமையால்நிரனிரைவழுவாயிற்று.

310. உய்த்துணரிடமெனிலுரிமையுடைத்தே.
(எ-ன்) அம்முறைபிறழ்ச்சி யாமாறுணர் – ற்று.

(இ-ள்) அங்ஙனஞ் சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சி உய்த்துக் கொண்டுணரப்படுந்தானமாகில் வழுவன்றென்று
கொள்ளு மிலக்கண முறைமையுடைத் தென்றவாறு.

அங்ஙனஞ்சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சியென்பது அதிகார நோக்கத்தா லெச்சமாக விரிந்தது.

மந்தன்கதிர்மழைக்கோள்வானோர்குருமேதை
யிந்துநிலமகன்பாம்பென்பவற்றுட்–பைந்தொடியாய்
தேறுமிடைநான்குந்தெரிசுபக்கோளேனையவாய்க்
கூறியவைபாவக்கோள். (822)
என வரும். இதனுள், உய்த்துணர்ந்துகொள்ளப் பிழையாமல் வைத்தவிடமாவன : மந்தன்முதலாகப் பாம்பீறாக வடைவேயெண்ணி,
மழைக்கோள் வானோர்குரு மேதை யிந்து வென்னு மிடைப்பட்ட நான்குஞ் சுபக்கோளென்றும், மந்தன் கதிர் நிலமகன் பாம்பு
என முதலினு மீற்றினுநின்ற நான்கும் பாவக்கோளென்று முய்த்துணரவைத்தவாறு கண்டுகொள்க. பாம்பு – சாதியேகவசனம்.

311.நசைதீர்யதிவழுநாடுகிலோசை
யிசைதரநிகழாதிழுக்குவதாகும்.
(எ-ன்) முறையே யதிவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) விரும்பப்படாத யதிவழுவென்பதனை யாராயுங்காலத்துச் செய்யுட்கமைத்த புணர்ச்சி
யிசைபொருந்துவதாய்நடவாது மரபு வழுவுவதா மென்றவாறு.

பார்க்கும்பொழுதுநிலம்பார்த்துப்பார்வையையா
நீக்கும்பொழுதுநிலம்பாரா–நோக்கு
வடைவடைவேவந்தவவற்றுண்முதனோக்கந்
தடையறயாம்வாழ்வதற்கோர்சார்பு. (823)
இதனுள், நோக்கடைவடைவேவந்தவென்புழி நோக்குவடைவடைவே வந்த வெனச் சொற்கூடா தறுத்திசைத்து வழுவாயிற்று.

312.அதுவே,
வழுவின்றாமெனல்வகையுளிக்காகும்.
(எ-ன்) மேலெய்திய திகந்து படாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙனம் வரப்பட்ட யதிவழு வழுவில்லையென்று சொல்லப்படுவது வகையுளியாகச்
சேர்த்துக்கொள்ளுமிடத்துக் குற்றமில்லையா மென்றவாறு.

வாளிவேல்சேலாமதர்நோக்கமேருமுலை
வேளினடல்விற்போன்மிளிருநுத–லாளிநிகர்
காவலவனாற்றலதுகாய்ந்தகனிவாய்பவளம்
யாவருணர்வுட்காதிவட்கு. (824)
இதனுள் வகையுளிசேர்த்தேகொள்ளக் குற்றமின்றாயிற்று. துறை குறிவழிச்சென்றபாங்கன் றலைவனைவியத்தல்.

313.திணைமுதலாகச்செப்பியவழுவினொன்
றணைதருமாயினுமதுசொல்வழுவே.
(எ-ன்) முறையே சொல்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) திணைமுதலாகச் சொல்லப்பட்ட சொல்வழுவேழினுள், பலவேயன்றி யொருவழுச்
செய்யுளகத்துப்பொருந்துமாயினு மது சொல் வழுவா மென்றவாறு.

அருட்குணத்துக்கூடாதென்றாய்ந்துரைத்தபின்னும்
பொருட்ககல்வலென்றேபுகன்றீர்–மருட்கைமிகுங்
கொன்னுனைவேல்போன்றவிழிக்கோதைபொருட்டாற்குறித்திங்
கென்னுனையான்சொல்வேனினி. (825)
இதனுள், புகன்றீரெனற் வுபசாரப்பன்மைக் கென்னுமையான் சொல்வே னென்னாது என்னுனையான்
சொல்வே னென்றதனாற் பால் வழுவாயிற்று.

314.மரூஉக்கட்டுரைச்சொலின்வழுவின்றதுவே.
(எ-ன்) சிறுபான்மை கடியப்படாதென்ப துணர் – ற்று.

(இ-ள்) அச்சொல்வழு மரூஉமொழியாய்வருங் கட்டுரைச் சொல்லோடுங் கூடிவருமெனின் வழுவில்லையா மென்றவாறு.

மன்றல்கமழுமலைநாட்டும்வண்டமிழ்தேர்
நன்றிபயில்பாண்டிநாட்டகத்தும்–வென்றிபயில்
சோணாட்டகத்துந்துயின்மாயனைத்துதிப்பார்
காணார்பிறவிக்கடல். (826)
இதனுள், மலையமானாடென்பது மலைநாடென்றும், பாண்டியனா டென்பது பாண்டிநாடென்றும்,
சோழனாடென்பது சோணாடென்றும் மருவா யடிப்படவந்த வழக்காற்றால்வந்து வழுவின்றாயிற்று. துறை- கடவுள்வாழ்த்து.

315.ஆற்றல்சாலெழுத்தினுளமைத்தசந்தியின்வகை
மாற்றமதுறவழுவுதல்சந்திவழுவே.
(எ-ன்) வைத்தமுறையானே சந்திவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) பெருமையொடுகூடிய வெழுத்திலக்கணத்தினுள் விதிக்கப்பட்ட சந்திகளின்கூறுபாடு நூல்கூறிய
கூறுபாட்டான்வாராது செய்யுளகத்து வழுவுதல் சந்திவழு வென்னுங் குற்றமா மென்றவாறு.

பொய்யில்பொருண்மேற்புரிந்தினிநீபோகிலிவண்
மெய்யிலெழினலமும்வேறுபோந்–தொய்யிலுறாத்
தோள்பைங்கழையெனலாந்தொல்கவின்போகத்துயில்போம்
வாள்கண்ணிணைக்கெழுதாண்மை. (827)

இதனுள் வாள்போன்றகண்ணிணை வாட்கண்ணிணையென
“லள வேற் றுமையிற் றடவு மல்வழி, யவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்” என்னுஞ் சூத்திரத்தான்,
ளகாரம் டகாரமாக மெய்பிறிதாகமுடியற்பால வழி வாள்கண்ணிணையென வியல்பாய்முடிந்தமையாற் சந்திவழுவாயிற்று.

316.ஐயெனுருபுதொகினஃதியல்பாம்.
(எ-ன்) அத்திரிபு திரியாது இயல்பாமிட முணர்-ற்று.

(இ-ள்) இரண்டாம் வேற்றுமைதொக்கபுணர்ச்சியில் வல்லெழுத்து முதன்மொழிவந்துழித் திரியா தியல்பாய்முடியவும்பெறு மென்றவாறு.

அஞ்சொன்மடவாயரங்கத்தமுதமெனு
மஞ்சனையசெவ்விமழைவண்ணன்–கஞ்சமலர்த்
தாள்கண்டார்மாரன்றனக்கிலக்கானாற்றுளபத்
தோள்கண்டாரென்படார்சொல். (828)
இதனுள், தாள்கண்டார் தோள்கண்டாரென “இயற்கை மருங்கி னியற்கை தோன்றலு, மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்”
என்பதனா லியல்பாய்முடிந்தன. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை….

317.பழுதறப்பகர்ந்தபாட்டினதியல்பு
வழுவுதல்செய்யுள்வழுவெனமொழிப.
(எ-ன்) செய்யுள்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அகத்தியன்முதலோர் செய்யுளியலுட் குற்றமறப்பகர்ந்த செய்யுளிலக்கணத்தோடுகூடாது வழுவும்
பகுதியாய்வருதல் செய்யுள் வழுவென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

முல்லைவெண்ணகைமொய்குழனுமர்வாழ்
மல்லன்மால்வரைக்கெமர்வரைநல்வினையாற்
கூடலருண்மங்கையரைக்கூடிப்பிரிந்துவருந்
தாடவர்க்குவேள்போன்றணித்து. (829)

இஃது ஆசிரிய முதல்வந்து வெண்பாவாய் முடிந்தது. அவ்வாறு முடிதற் கோத்திலாமையால் வழுவாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – இடமணித்துக்கூறி வற்புறுத்தல்.

318.தவமுறுபவரவர்போலுணர்சாற்றலு
ணவமுறப்புனைசெயுணடைநவையிலவே.
(எ-ன்) மேற்சொல்லப்பட்ட செய்யுள்வழுச் சிறுபான்மை யொரோவிடங்களுள் வருவன வுளவாமென்று வழுவமைப்புணர்-ற்று.

(இ-ள்) தவசரிதையெய்துமிருடிகளும் அவர்போல்வாருமாகிய முற்றவுணர்ந்த மூதறிவுடைப் புலவோரா னவமாகப்
பாடப்படுவனவாஞ் செய்யுணடை யாசிரியரால் நீக்கப்படுங் குற்றமில்லையா மென்றவாறு.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராதொருநாளும்வல்வினைதான்
சாரானொருதலையாய்த்தண்டதான்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு. (830)
இது சவலைவெண்பாட்டு ; என்னை? இதனுள் முதலே காசு நாள் மலர் பிறப்பு என்னும் வாய்பாட்டாலிறாது
மூவசைச்சீராயிற்ற குறள்வெண்பாவா யதன்பின்னரும் பிறப்பென்னும்வாய்பாட்டாலிற்ற குறள்வெண்பாவாய்த்
தனிச்சொலின்றிமுடிந்தமையா லென வறிக. இதற்கு முன்னோர்கூறியசூத்திரம் யாதோவெனின்
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவர லில்லது சவலைவெண் பாட்டே” என்பதென வுணர்க.
அன்றியும், “அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய், நட்டாலு நண்பல்லார் நண்பல்லர்,
கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு, சுட்டாலும் வெண்மை தரும்” என்னுஞ் செய்யுளானு முணர்க.

எனவே மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் பொதுவகையான்
வழுவெனக்கூறியவற்றைத் தனித் தனி விதிச்சூத்திரத்தா னிவ்வாறுவரின் வழுவென விதித்துச்
சிறப்புவிதியா னிவ்வாறுவரின் வழுவமைதியா மென்றவாறாயிற்று.

319.உலகிடங்காலங்கலையேநியாய
மாகமமலைவென்றாறொருவகையுள.

(எ-ன்) இதுவு மொருவகை வழுவாமா றுணர் – ற்று.

(இ-ள்) உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியாயமலைவு மாகமமலைவு மென்று
கூறப்படுவனவா மொருவகைமலைவு மாறுளவா மென்றவாறு.

ஏகார மீற்றசை. மலைவென்பதனை யிறுதிவிளக்காக வெங்கு மொட்டுக. மலைவென்பது மாறுபடுதல்.
எனவே யவையு மொரு வகைவழுவாயிற்று. அஃதேல் ஒழிந்த வழுவுணர்த்துமாறெடுத்த தொகைச்சூத்திரத்து ளொருவகைப்படப்
பதினைந்தெனக்கூறாது இரு வகைத்தாகப் பிரித்துக்கூறியவா றென்னையோவெனின் முன்னரொன்பதுங் குற்றமாதல்
பெரும்பான்மையாய்ச் சிறுபான்மை யொரோவிடத்துக் குணமாதலுமுடையவென்றுரைக்கப்படும் ;
பின்னராறும் ஒருதலையாகவே குற்றமாய்ப் பொருந்துமிடத்துப் புனைந்துரைவகையா னன்புலவராற்
சிறுபான்மை மொழியப்படுமென்ப தறிவித்தற்குக்கூறியவா றெனவுணர்க.

320.ஒழுக்கநடையேயுலகமதாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உலகமலைவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அவ்வாறனுள், பெரியோரா லெடுத்துவழங்கு மொழுக்க நடையே யுலகமென்றுகூறப்படுவதா மென்றவாறு.

எனவே உலகமென்பது மக்கண்மேலு நிலத்தின்மேலு மொழுக்கத் தின்மேலு நிற்கும் பலபொருளொரு
சொல்லாதலா னிவ்விடத் தொழுக்கத்தையேகோடற் குலகென் றெடுக்கப்பட்டது. அவ்வொழுக்க மெல்லாரும்
அறிவுறக்கிடந்தமையா னின்னதென் றெடுத்துரைக்கவேண்டுவ தில்லை.
அது மலைதலென்பது உலகத்தொழுகலாற்றோடு மாறுபட்ட வொழுக்கநிகழ்வதாகக் கூறுதல்.

பூமிநடுநின்றுபுணரியேழுந்தாவி
நேமிவரைதனினேர்நின்றமரர்–கோமகிழ்வுற்
றாண்டதுறக்கமதைப்பார்த்தவனிபோதுமென
மீண்டவனிவ்வேந்தர்க்குவேந்து. (831)
என வரும். இதனுள் ஒருதீவினுள்வேந்த னெழுதீவையு மெழுகடலையு மேழ்பூமியையுங் கடக்கப் பாய்ந்து,
சக்கரவாளகிரியி னிமிர்ந்துநின்று, தேவர்கோனாகிய விந்திரன் களித் தாண்டிருக்குந் தேவலோகத்தையெட்டிப் பார்த்துத்
தனக்குப் பூலோகமொன்றுமாண்டிருப்பதேபோதுமென மீண்டுவந்தவனாகு மிந்த வேந்தர்க்குவேந்த னென்று
மாறுபடக்கூறினமையா னுலகமலைவாயிற்று.

321. இடமதுமலைநாடியாறெனமூன்றே.
(எ-ன்) வைத்தமுறையானே இடமென்பதனை விரித்துணர்- ற்று.

(இ-ள்) இடமென வொன்றாய்நின்றவது மலையும் நாடும் யாறுமென மூன்றா மென்றவாறு.

மலையென்பன : பொதியமு மிமயமு முதலாயின. நாடென்பன : பதினெண்பாடைக்குமுரிய நிலங்கள்.
யாறென்பன : கங்கையும் பொருநையுங் காவிரியு முதலாயின. இவற்றுள் ஒன்றினுளுரியவாகச்சொன்ன பொருள்
பிறிதொன்றனுளுரியவாகச் சொல்லுதல் வழுவாம். அவை,

காரகிலும்பொன்னுங்கவின்செய்மலயத்தினிற்பெண்
ணாரமுதின்மெல்லடிகட்கையனே–பார்பரலாய்ச்
செந்தழல்பாரித்தகடஞ்செப்பினசும்பூரிமயச்
சந்தனச்சோலைத்தடமாந்தான். (832)
எனவும்,

பருவமாமழையுகுபஃறுளிதிரண்டுநீ
ரருவிபாடிமிழ்வளனமர்சிலம்பாநின்
னறைகழல்பணிந்தெழுகலிங்கத்தரசர்
திறைதருகலினத்திரள்வாம்பரிகளு
மாளுவராரியர்மராட்டர்சோனகரெமை
யாளுகவெனத்தாழ்ந்தருள்கடாக்களிற்றுட
னறக்கழிவினராயருஞ்சமத்தெதிர்ந்து
புறக்கொடைபுரிந்தோர்புரந்தநன்னகர்களுங்
கங்கையுள்வலம்புரிகான்றவெண்டரளமுந்
துங்கவண்பொருநைத்துறையுண்மாமணிகளு
மெண்ணிலாதளிப்பினுமிடைவிலையலவாற்
பெண்ணியல்பெருக்கியபேரமுதாமெனத்
திருமகளாமெனச்சிறந்தவள்
வருமுலைக்கெவனீவிலைவழங்குவதே. (833)

எனவும் வரும். இவற்றுள், இமயத்திற்குரியன பொதியிலகத்துளவாகவும் பொதியிலகத்துளவானவை
யிமயத்துளவாகவும்புணர்த்து மலையிட மலைவாயிற்று.
தண்பொருநைக்குரியன கங்கையொடுபுணர்த்துங் கங்கைக்குரியன தண்பொருநையொடுபுணர்த்து மாற்றிடமலைவாயிற்று.
மாளுவ மாரியமுதலாயினவற்றிற்குரிய கலிங்கத்தொடுபுணர்த்துங் கலிங்கத்திற்குரிய மாளுவ மாரிய
முதலியவற்றொடு புணர்த்தும் நாட்டிட மலைவாயிற்று.

322.சிறுபொழுதொடுபெரும்பொழுதெனக்கால
மறுவகைத்தாமெனவறைந்தனர்புலவர்
(எ-ன்) காலமாமாறு மதன்பகுதியு முணர்-ற்று.

(இ-ள்) காலம், சிறுபொழுதுடன் பெரும்பொழுதென இரண்டு கூறா யொரோவொன்றறுவகைத்தா மென்றுஆசிரியர்கூறினா ரென்றவாறு.

அவற்றுள், சிறுபொழுது : விடியல் உச்சி எற்பாடு மாலை யாமம் வைகறை என ஆறு. பெரும்பொழுது :
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என ஆறுமாம். அவற்றொடு மலைதலாவது :
ஒன்றற்குரிய பூவும் புள்ளும் பொழுதும் தொழிலும் வேறொன்றிற்குரியவாகப் புணர்த்துரைப்பது.

உம்மையினிரந்தோர்க்கொன்றீயாதோ
ரிம்மையின்வறுமையென்பவற்றினுக்கிடமென
விரப்பவராயிலமெனவிசைத்ததற்கெதிர்
புரப்பவரிலமெனப்புகலும்வெவ்வுரையினு
நிரப்பெவனெனநிகழ்த்துதனிமித்தமதாய்க்
கரப்புரையிஃதெனக்கலுழ்ந்தகண்ணீரினைத்
தடுப்பவர்போற்றுயிலையுந்தடுத்திருகையி
னெடுத்தணைத்தினையலென்றெனையும்வற்புறுத்திப்
போர்வேலவர்தாம்போமுனங்குறித்த
கார்காலத்தினிற்கார்வருமாலையிற்
குயிற்குலங்காமாகூகூவெனுநிலை
வெயிற்குலமெனவிருள்வெருளவெண்ணிலவெழப்
புரவலர்முகம்போற்பொற்புமிக்கதுவா
யிரவலர்தாமரையேமநன்மலரே
நின்னிற்பிரியலன்பிரியினாற்றலனெனு
மன்னர்பொய்ம்மொழியினுமடங்கலுமடங்கலுஞ்
சுடுஞ்சுடுந்தொடர்ந்துமன்னுயிரை
யடுங்கொடுமையவெனுமவரறிவிலரே. (834)
என வரும். இதனுள். வேனிற்காலத்திற்குரியகுயிலைக் கார்காலத்துடன் புணர்த்தும்,
பகன்மலர்தாமரையை இரவுமலர்ந்ததாகப் புணர்த்தும், பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுமாகிய விரண்டுகாலமு மலைவாயிற்று.

323.பொருளுமின்பமும்புணர்பொருட்டாகியநூ
லருளுமெண்ணான்கிரட்டியகலையதுவே.
(எ-ன்) பொதுவகையாற் கலைக ளின்னதுக்குங்கருவியாய்த் தோன்றுமென்பதூஉ மவற்றது தொகையு முணர்-ற்று.

(இ-ள்) கலையென்றுசொல்லப்பட்டவது பொருளு மின்பமு மெய்துதற்கே துவாய வேதமுதலியநூல்களுட் கூறப்பட்ட வறுபத்து நாலா மென்றவாறு.

ஏகார மீற்றசை. அவற்றொடுமலைதலாவது அவ்வந்நூல்களுட் கூறியபடிகூறாது பிறழக்கூறுதல்.

நாணமில்செய்கைநாடகக்கணிகையர்
மாண்மரபினிலொருவனிதைதன்மைந்தர்க்
குற்றவெண்ணிரண்டுடனோங்கியவுருவம்
பெற்றவந்நிலைத்தண்டியம்பிடித்தனளா
யாடலும்பாடலுமமைவிலன்கொளுத்த
நீடலிலயணமொன்றினினிரப்பினளாய்ப்
படிபுரந்தருளும்பார்த்திபன்முன்னர்க்
கடியரங்கேற்றியகாலையிற்பிண்டியிற்
யிணையலுங்களையாள்பிணையலிற்பிண்டியு
மணைதரல்களையாதாடலுந்தாள
மெய்யிற்பயிலவுமேதகவுடையிசை
கையிற்பயிலவுங்காலியல்பயிலவு
நடித்தனணடத்துடனாதமுமுன்னூல்
வடித்திடுபான்மையின்மலைத்திடநடத்தின
ளாடல்சான்றோரவருடன்
பாடல்சான்றோர்பயிலவைக்களத்தே. (835)

இதனுள், ஐயாண்டிற் றண்டியம்பிடித்து ஏழாண்டியற்றிப் பன்னீராண்டினி லவையரங்கேறினாளொன்னாது
மைந்தர்க் கிந்திரியகலின முறுவதென்றுவிசாரிக்கப்பட்ட பதினாறாமாண்டிற் றண்டியம்பிடித்து
ஆடலும் பாடலு முற்றக்கல்லா வாசானுட னவை யோரயணத்தின் முற்றக்கற்றனளாய்க் கடியரங்கேறின ளெனவுங்
கூறியதன்மேல் ஒற்றை யிற்செய்த கைத்தொழி லிரட்டையிற்புகாமலு மிரட்டையிற்செய்த கைத்தொழி லொற்றையிற்புகாமலுங்
கைத்தொழில்காட்டாது மலையக் காட்டினா ளெனவும், இசையை மெய்யினு மிபலைக் கையினுந் தாளத்தைப் பாதத்தினுங் காட்டாது
மயங்க நடித்தனளெனவும், அவடானே பின்னொருநாள் நாதமும் நூல்சொன்னபடிநடத்தாது
பிறழநடத்தின ளெனவுங் கூறினமையானுங் கலைமலைவாயிற்று. கலையென்பது வித்தை.
இசையைப் பிறழநடத்தினாளென்பது நின்றநரம்பிற் கைந்தாவது கிளையாதலா னதனைப் பகையென்றும்,
ஆறாவது பகையாதலா னதனைக் கிளையென்றும், நான்காவது நட்பாதலா னதனை யிணையென்றும்
இரண்டாவதனைத் தொடுத்தல். என்னை?
“ஐந்தா நரம்பிற் பகைவிரவா தாறாகி, வந்த கிளைகொள்ள நான்காகி – முந்தை, யிணைகொண்ட யாழெழுவு
மேந்திழைதன் னாவித், துணைவன் புகழே தொடுத்து” எனத் தொண்டி எச்சவியலிற் கூறியவதனா லறிக.
அஃதேல் இந்நூலுட்கூறிய தொனிக்குத் தெண்டிகூறிய வுதாரணமே யுதாரணமாகக்காட்டியவா றென்னையெனின்
இந்நூற் கது முதனூலாயதாற் காட்டியதென வுணர்க. அவடானே பின்னொருநா ளென்பது சொல்லெச்சம்.
அஃதன்றித் தோரியமடந்தை யவளாடியவவைக்களத் தங்ஙனம் பாடினா ளெனினு மாம்.
தோரிய மடந்தையாவாள் ஆடிச்செலவைத்தவளா யங்ஙன மாடினவள்காலுக்குப் பாடினவள்.

324.அளவையினாயபல்பொருட்கமைவினைத்திற
முளமுறமதித்துரைப்பதுவேநியாயம்.
(எ-ன்) நியாயமாமாறுணர் – ற்று.

(இ-ள்) ஒரோகாரணங்களா லுலகத்துண்டாயபொருள்கட் கமைக்கப் பட்ட வினையினது கூறுபாட்டைக் காட்சி
முதலாய நால்வகையளவைகளாற் குறித்துக் கேட்டோருள்ளத்துறும்படி யுரைப்பது நியாயமா மென்றவாறு.

அவை யறுவகைப்பட்ட சமயங்களோடுங்கூடிய வுலகத்துப்பொருள் களினது தோற்றமு மழிவு மின்னவகையவென்று கூறுதல்.
அவற்றை யவரவர்கூறியவாறு கூறாது மாறுபாடாக வுரைத்தல் மலைதலேயாம். அது,

அன்றாலிலைத்துயின்றவச்சுதனையல்லாது
பொன்றாப்பொருளெப்புவியிலுள்ள–தென்றான்
றனதகத்தாயெவ்வுலகுந்தானடக்கிக்கொண்ட
புனலகத்தாய்நீந்தம்புயன். (836)
என வரும். இதனுள், ஆதிப்பிரமகற்பாந்தத்திற் சகலகடவுளருஞ் சகலான் மாக்களுமழியச் சகலான்மக்களையு மகிலாண்ட
கோடிகளையுந் திருவுதரத்தடக்கி யழிவிலாதிருந்தது ஸ்ரீ மந்நாராயணனென்று மார்க்கண்ட னுரைத்தா னெனற்பாலதனைப்
புனலகத்தாய்நீந்தும் பிரமாவுரைத்தா னென்றமையான் நியாயமலைவாயிற்று.
அச்சுதன்- அழிவிலாதான். அக்காலத்துப் புனலகத்தாய் நீந்திக் கண்டது மார்க்கண்டன். ஒழிந்தனவு மிவ்வாறே யொட்டிக்கொள்க.

325.அறம்பகர்மனுமுதலாயினவாகமம்.
(எ-ன்) ஆகமமாமாறுணர் – ற்று.

(இ-ள்) அறத்தினதுமார்க்கத்தைக்கூறாநின்ற மனுமுதலாய பதினெண் வகை யறநூலுமே யாகமமா மென்றவாறு.

அவற்றொடு மலைவாவது : இன்னா ரின்னதுசெய்த லற மென்று விதிக்கப்பட்ட விதியிற் பிறழவருவது. அது,

ஓட்டினொடும்பொன்னையொருநிலையாயுட்கோடல்
வீட்டினதின்பத்தைமிகவிரும்ப–லேட்டிருண்மென்
கூந்தலாரின்பமதுட்கொள்ளாமையில்லறத்திற்
றோய்ந்துளார்க்குண்டாஞ்சுகம். (837)
எனவரும். இதனுள், துறவறம்பூண்டார்தொழிலை யில்லறம் புரிந்தாரோடு புணர்த்தமையா னாகமமலைவாயிற்று.

326.நாவலர்நாடகவழக்கினுணயந்து
மூவிருமலைவுமொழிவதற்குரிய.
(எ-ன்) எய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) மேற்கூறிய வாறுவகைவழுவு நாடகவழக்கத்தாற் கூறுங்கால் நாவலர்க்குரியவாகக் கொள்வதா மென்றவாறு.
நாடகவழக்கென்பது “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” எனத்
தொல்காப்பியத்துரைக்கப் பட்ட மூன்றனுள்ளு முதல்வழக்கு. அஃதாவது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
புனைந்தவுரையாய்த் தோன்றுவது. என அவ்வாறு புகழ்ச்சியிடத்து நீக்கப்படாவலங்காரமாயே வரு மென்பதாம். அவை வருமாறு :-

மேலைமலையிற்புகுதுமாதவனைநிற்றியென
மீளவருவித்துலகின்வாய்
மாலைமதியத்தினுடனோடநியமிப்பனுரு
மாறிவருவிப்பனிமையோ
ராலையநிலத்திடுவன்வேலைவலயத்தையவ
ணாகவுமமைப்பனழகார்
சோலைமலையிற்குடி கொளாதியைநிகர்த்ததொரு
சோதியைவிதிப்பனெளிதே. (838)
இதனுள், சம்பிரதமாதலி னுலகமலைவுப்பொருள்வந்தும் அலங்கார வழுவின்மையாயிற்று. இந்திரசாலமென்பது மிது.

காழகிற்பொழிலுஞ்சந்தனப்பொழிலுங்
கமழ்நறுஞ்சண்பகப்பொழிலுங்
கோழரைக்கமுகுநாளிகேரமும்பொற்
கோங்கும்வேங்கையுமலர்க்குருந்து
மாழையஞ்சுளைமுட்புறக்கனிப்பலவு
மாவுநாகமும்பணைமருதுந்
தாழையுமகிழும்வாழையுங்கரும்புந்
தனித்தனிதழைத்ததெம்மருங்கும். (839)
இது தண்பொருநையுண் மலையிரண்டிற்கும் பிறநிலங்கட்குமுரிய அகிலுஞ் சந்தனமுங் கோங்கும் வேங்கையுங் குருந்தும்
புன்னையும் வந்திட மலைவாயும் புகழ்ச்சியிடத்துப் பொருந்தின அலங்காரமாயிற்று.

காவியங்கண்ணியர்காலையின்மலர்கொய
வாவியுட்குறுகலும்வதனமண்டலத்தினை
மதியெனச்செழுந்தாமரைமலர்குவிதரப்
புதியதண்புனல்படிந்திடப்புகுமாலையி
லாடவர்முகத்தையுமருணோதயமென
வேடவிழாம்பலினத்தொடுமுகிழ்க்கும்
பாடல்சான்மருதப்பார்த்திபர்தலைவ
பொழுதுமாறுதனின்புலக்கருப்பொருட்கு
முழுதுமுண்மையதான்மொழிபலகிளைத்தெவன்
புலந்தெவன்பொதுவுணின்மார்வங்
கலந்தெவன்றீண்டலெங்காமர்மெல்லணையே. (840)
இதனுள் மாலையிற்குவியுங் கமலங் காலையிற் குவிந்ததாகவும், காலையிற் குவியும் ஆம்பல் மாலையிற்
குவிந்ததாகவுங்கூறியது காலமலை வாயினும் புனைந்துரைவகையா னலங்காரமாயிற்று.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – பள்ளியிடத்தூடல்.

வெயினுழைந்தறியாப்பணைமரச்செறிவுள்
வெறிவரிவண்டினமிரைத்துப்
பயின்முகையவிழ்ந்துபனிற்றுதெண்ணறவைப்
பருவமாமழைப்பெயலெனவே
குயிலடங்கலுந்தாம்பொதும்பருளொளிப்பக்
குறிப்பொடும்வெளிப்படவிருந்து
மயிலடங்கலுந்தாமகவலுங்களிப்ப
வருந்தனீமதர்மழைக்கண்ணாய். (841)
இதனுள், கார்க்குரியன வேனிற்குப்புணர்த்தும் புனைந்துரை வகையா னலங்காரமாயிற்று.

செறியுமிற்றொறும்புனன்மலர்முதலியசிறப்பின்
குறியமந்திரத்தமைந்துளவுறுப்பினிற்கொடுபோழ்
தறிவிழந்தவைமுறைதடுமாறினுமவையே
நெறியவாயிறையுட்கொளநிறைக்குநன்னீரார். (842)
இது கலைமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

வண்டுலவுந்தண்டுளபப்பெம்மானேயனைத்துயிர்க்கும்வசதியாய
வண்டரண்டபகிரண்டமகத்தடக்குமுழுமுதனீயாயிற்றென்றாற்
பண்டுலகமனைத்தையுமோரடலெயிற்றாலிடந்தளந்தபான்மையல்லா
துண்டுமிழ்ந்தபடியயல்கண்டிருந்தவராரெவணிருந்தன்றுண்டவாறே (843)
இது நியாயமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

*இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்
றிடங்கொள்புல்லறிவினரேனுஞ்
சிறந்தவந்நகரத்தினியொருபிறவி
சிறக்கவிங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதே
பிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுக்
கழலகத்தமைப்பரக்கணத்தே. (844)
இஃது ஆகமமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

327.ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன்முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே.
இச்சூத்திரம் இந்நூலுளுரைத்த விலக்கணமனைத்துந் தொகுத்திவ்வணி யிலக்கணத்திற்குப் பிறவாறு
வருவனவுளவெனினு மவற்றையுந் தழீஇக்கொள்க வெனப் புறநடையுணர்த்துகின்றது.

* இச்செய்யுள் பின்வருமாறு குருகாமான்மியத்துக் காணப்படுகிறது.

“இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்றிடங்கொள்புல்லறிவினோரெனினுஞ்
சிறந்தபேரறிவின்மேலொருசெனனஞ்செறிகவாங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதேபிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுமழலகத்தமைப்பனக்கணக்கே.”

இதன்பொழிப்பு ; செய்யுளெனத் தொகையானொன்றாயதனை வெண்பா வாசிரியமெனப் பகுத்த விருவகையினின்றுங்
கலி வஞ்சி மருட்பா பரிபாட லென்னு நான்கினொடு மாறென விரித் தவற்றைத் தெளியும்படிக்குப் பொருள்பெறும்
நான்கென்றுபகுத்த முத்தகங் குளகந் தொகை தொடர்நிலையென்னுஞ் செய்யுண்மரபும்,
வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு மூன்றுபாகமும், அவற்றொடும்பயில்வதான இன்பம் தெளிவு செறிவு சமனிலை
இன்னிசை உதாரம் வலி காந்தம் உய்த்தலில் பொருண்மை சமாதி யெனக்கூறப்பட்ட பத்துவகைக்குணமும்,
தன்மை முதற் பாவிகமீறாக வறுபத்துநாலென்னு மெண்ணையுடைய பொருளலங்காரமும்,
அடியினானுஞ் சொல்லினானு மெழுத்தினானு மடுக்கப்பட்டனவாகி முற்றுப்பெறவகுத்த மூன்றுவகை மடக்கலங்காரமும்,
வல்லின மெல்லின மிடையினமென்னு மூவினப்பாடன்முதலாக முறையினோடும் பொருந்திய விருபத்தாறின்மேலு மாறுகூட்டி
முப்பத்திரண்டென விழுமிதாய சித்திரக்கவிகளும் விரித்தபின்னர்க் குறையாய்நின்றனவாய வழுவும்,
வழுவமைதியு மிவையிவையென விரண்டுகூறாக்கிக்கூறிய பதினைந்தினொடு மணியிலக்கணநிரம்பாம லொழிந்தனவாய்
வருவனவுள வெனினு மவற்றையு மிவற்றினகத்தகப்படத் தழீஇக்கோடல் கற்றறிந்த வுத்தமர்கடனா மென்றவாறு.

அஃதேல் முற்கூறியனவல்லவோ மீண்டுங்கூறிற்று ; புனருத்தியாம் பிறவெனின், ஆகாது ; தொகுத்துமுடித்தலென்பது
தந்திரவுத்தியாகலா னிவ்வாறுரைக்கப்பட்டதென்றறிக. அஃதாக, “குறித்துரையெழுத்தொடு கூற்றவை செய்யுளி” னென்ற
முறையானே எழுத்து மொழி யடி யென்னா தீண்டு அடி மொழி யெழுத்தென்று முறைபிறழக்கூறியவா றென்னையெனின்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றென்னு முத்தி வகையான் அடிமடக்கென்பதும் சொன்மடக்கென்பதும் எழுத்தின்
கூட்டமென்ப தறிவித்தற்கும் ஓரெழுத்தானும் ஓரினத்தானும் வருவனவு மதன்பாற்படுமென்றற்கும் என்க.
நிரோட்டிய மோட்டியமுதலாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் நோக்கியாராயுங்காற் பெரும்பான்மையும்
எழுத்தின்பாற்படுமாயினு மவை வேறுவேறு சிறப்புப்பெயருடையவா யுலகி னுண்டாக்குகின்றனவாகலாற்
சொல்லின்முடியுமிலக்கணத்தா னவ்வாறு சொல்லப்பட்டது. சொல்லின்முடியுமிலக்கணந்தான்
யாதோவெனின் ஒப்பினாகியபெயருங் காரணமாகியபெயருங் குறித்துரைக்கப் படுதலா னவற்றினானே யுணர்ந்துகொள்க.

அஃதேல் மாலை மாற்றுஞ் சுழிகுளமும் சருப்பதோபத்திரமுங் கோமூத்திரியுமென நான்குமேயன்றே
யாண்டாசிரியனால் வடநூலு ளுரைக்கப்பட்டன.
ஒழிந்த மிறைக்கவி யீண்டுரைத்தல் மிகை படக்கூறிற்றாம்பிறவெனின், ஆகா ;
ஒழிந்தன ஒன்றினமுடித்த றன்னின முடித்தலென்னுந் தந்திரவுத்தியானுரைக்கப்பட்டது.
அல்லதூஉம், வடமொழிமுதனூலாதலாற் றனக்கொருவிகற்பம்படக் கூறுதலிலக்கணமென்பது ;
“முன்னோர்நூலின் முடிபொருங்கொத்துப், பின்னோன்வேண்டும்விகற்பங்கூறி, யழியாமரபினதுவழி நூலாகும்” என்பவாகலின்.

எச்சவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.
மாறனலங்காரம் முற்றும்.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

April 30, 2022

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.
https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

ஒரு தனித் திகிரியி னிரு விசும்பொழுக்கத்
தொருஞான்றொரு பகலொடியா வுழப்பிற்

(இருவிசும்பொழுக்கத்து) பெருமையை யுடைய ஆகாச வீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொரு கணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்

பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மத நால்வாய்க் கரியுரிமுக்கட்
செம்மல்

(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தை யெல்லையாக வுடைய நிலத்தின்
கண் ணுயர் திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு

(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாத பாகனையுடைய தேரின் மீதே

(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினை யுடைய பெரிய கையினையும், பெருகாது சிறுகாது
தம்மி லொத்த புழையொடு கூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப் போலச் சிவந்து,

இருகணு மிமையாத் தேவர்க
ளொருபோழ்தகலா தொரு வழிப்பட நின்
றிருகையுங் கூப்பி முப்போதினுமிறைஞ்ச
நான்முக முதல்வனினசைஇய நல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்

முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த

முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொரு
நெறிப்பட விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய,
நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய
கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற மூன்றுபாலுந் தம்மாலாய
பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப, விரண்டுபக்கமு மின்போன்றதொரு
மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு மொருகூறுபாடெய்த
விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்மாறுபாட்டைக்கெடுத்து
மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந் தங்கப்பட்ட
சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு
நல்வினை தீவினை யென்னு மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை
யித்தன்மைத்தென நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர்
சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்
பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு,
உலகின்கண்ணுள்ள இனியவுயிர்க ளஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த
நமன்றிக்கி லெழுந்த கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டது
விளங்கும்படிக் குத்தர கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத்
தேனையொழுக்கு நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய
மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து, பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய
ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு, பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது
திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும்,
அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற திருப்பவளத்தினைத் திறந்து,
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக,
ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை
கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச் சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு
முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரிய
செயலொடு முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரிய
பிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே ! ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே !
அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத்
திருவுளமகிழ்ந் தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக்
கருணை புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.

ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி.

பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது.

பிணர் – சற்சரைவடிவு.

செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு.

நசைஇய – விரும்பப்பட்டன.

முழுநலம் – பேரானந்தம்.

தெற்றென – தெளிய.

பிறழாது – மாறாடாது.

ஒருங்கு – ஒக்க.

ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை.

முற்குணம் – சாத்துவிககுணம்.

நாலாங்கடவுள் – இந்திரன்.

அமைத்த – விதித்த.

இறும்பூது – ஆச்சரியம்.

உளர்தல் – குடைதல்.

அவிழ்த்தல் – ஒழுக்குதல்.

நலம் – ஆனந்தம்.

நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.

உறுபொருளைந்துடன் என்பது
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் – தொக்கியலு,
மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை.
எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடை
யூர்தியின் முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழுகடற்புவனத்
தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல் மூவுலகமுமளந்தவனிரு
செவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும் பிணிதவிர்த்தருள் ஞானபூரண!
நாவீற!
குருகாபுரிவரோதய!
எதிராசனையாண்ட விருசரணாம்புயத் தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற்
கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே
எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான் பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு–ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு

அலங்காரமென்பது செய்யுளுக்கு அழகுசெய்யும் லக்ஷணங்களைக் கூறும் சாஸ்திரம்.
இவ்வலங்கார சாஸ்திரத்தை வடமொழியாளர் மிகவும் விரும்பிக் கற்பர்.
இந்தச் சாஸ்திரத்தின்பெருமை அக்நிபுராணத்திற் பேசப்பட்டுள்ளது.
வாமநசூத்திரம், காவ்யாதர்சம், ஸரஸ்வதீகண்டா பரணம், காவ்யப்ரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸமஞ்சரி,
ஸாஹித்ய தர்ப்பணம், ப்ரதாபருத்ரீயம், அலங்கார கௌஸ்துபம், சந்திராலோகம், குவலயானந்தம்,
சடவைரிவைபவதிவாகரம் (இது நம்மாழ்வார் விஷயமான வடமொழி மாறனலங்காரம்)
முதலிய நூற்றுக்கணக்கான வடமொழி நூல்கள் அலங்காரத்தைப் பற்றிச் சொல்பவைகள்.

தமிழில் முதன்முதல் அணியைப் பற்றித் தெரிவிக்கும் நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியர் கூறுவது உவமை ஒன்றுதான்.
அவர் அகத்திணையியலில் ஏனையுவமம் உள்ளுறையுவம மிவைகளை விளக்கி உவமவியலில் உவமத்தைத்
தொழில், பயன், வடிவு, வண்ணம் எனப் பிரித்து விரித்தெழுதியிருக்கிறார்.
தொல்காப்பியர் காலத்து உவமையொன்றே அணியாகக் கருதப்பட்டது.
பிற்காலத்தார் அதிலிருந்து பல அணிகள் கற்பித்துக் கொண்டனர்.

நச்சினார்க்கினியரும் உவமமொன்றனையே அணியாகக் கருதினர்.
இவர் தம் காலத்திற் பல அணிவிகற்ப வேறுபாடுகளுடன் வெளிவந்த ஒரு அணி நூலைத்
தமது தொல்காப்பிய வுரையிற் குறைகூறுகின்றனர்.
இவர் உவமவிகற்பங்களுக்கு எடுத்துக்காட்டிய உதாரணச் செய்யுள்கள் சில,
தண்டியலங்காரவுரையில் வேற்றுமையணி, தற்குறிப்பேற்றவணி முதலியவைகளுக்குதாரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
நிரனிறை, சமம் முதலியவற்றை உவமத்தின் விகற்பமாயே கொண்டார் நச்சினார்க்கினியர்.
இப்படி உவமமே பலவணிகளினுற்பத்திக்குங் காரணமாயிருந்தது என்பதை வடமொழியாளரும் சம்மதிக்கின்றனர்.

அப்பையதீக்ஷிதர் தாமெழுதிய சித்திரமீமாம்ஸை யென்னுங் கிரந்தத்தில் இவ்விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அச்சுலோகம் வருமாறு :-
இதன் மொழிபெயர்ப்பு,

“உவமையென்னுந்தவலருங்கூத்தி
பல்வகைக்கோலம்பாங்குறப்புனைந்து
காப்பியவரங்கிற்கவினுறத்தோன்றி
யாப்பறிபுலவரிதய நீப்பறுமகிழ்ச்சிபூப்பநடிக்குமே” என்பதாம்.

இவ்வணியிலக்கணமானது தொல்காப்பியத்திற் பொருளதிகாரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில், தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்றுபாகமாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது.
“எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடிச், செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு, முந்துநூல்கண்டுமுறைப்படவெண்ணி”
என்னும் தொல்காப்பியப் பனம்பாரர் பாயிரத்தால்,
தொல்காப்பியத்திற்கு முதனூலும் இப்பாகுபாடே கொண்டிருந்ததெனத் தெரிகிறது.
இறையனாரகப் பொருளுரையை யுற்றுநோக்கும்போது, ‘யாப்பு’ , தனியுறுப்பாகக் கருதப்பட்டு,
தமிழிலக்கணம் நான்கு பிரிவாகக் கருதப்பட்டதென்று தோன்றுகிறது.
அதன்பின்புதான் ‘அணி’ தனியுறுப்பாகக்கொள்ளப்பட்டு, தமிழிலக்கணம்,
எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென ஐந்து பிரிவுடையதாக வகுக்கப்பட்டது.
இவ்வைந்திலக்கணமும் ஒருங்கே கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல்விளக்கம், முத்துவீரியம் என்பனவாம்.
இவை ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கிரமத்தில் அணியிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
வீரசோழிய அணிகளுக்கு முதனூல் ஆசார்யதண்டியியற்றிய வடமொழிக் காவ்யாதர்சம்.
இலக்கணவிளக்க முதலிய மற்ற இலக்கணங்களின் அணியிலக்கணங்களுக்கு முதனூல்,
தமிழ்த் தண்டியலங்காரமும் அதன் உரைகளுமாம்.

தனியாய் அணியிலக்கணமாத்திரங்கூறும் நூல்கள்
அணியியல் அல்லது அணிநூல், தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன.
இவற்றுள் அணிநூலைப் பற்றி விசாரிப்போம்.
யாப்பருங்கலவிருத்தியில் “உருவகமாதிவிரவியலீறாவரும். . . . அலங்காரமென்பது அணியியலாதலின்” என்று
கூறியிருப்பது தண்டியலங்கார அணிமுறைவைப் புக்குப் பொருத்தமில்லாததால் வேறு அணிநூலைக் குறித்ததாக வேண்டும்.

நேமிநாதவிருத்தியில்,
“புனையுறுசெய்யுட்பொருளையொருவழி, வினைநின்று விளக்கினது விளக்கெனப்படுமே”
“முதலிடைகடையென மூவகையான” என்பன அணியியல் ஆகலின் என்றுள்ளது.
இதில் இரண்டு சூத்திரத்தாற் குறித்த விளக்கணி தமிழ்த் தண்டியலங்காரத்தில்,
தீபக மென்றபெயரால் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டிருக்கிறது.
ஆதலால் இவ்விருத்திகாரர் குறித்த அணியியல் என்னும் நூல் தண்டியலங்காரத்தினும் வேறாகவேண்டும்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியவுரையில்
“இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளுஞ்
சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென
இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர்” எனக்கூறி அவ்வணி நூலுக்குத் தமது சம்மதமின்மையையும் தெரிவிக்கிறார்.
இவ்வாக்கியத்திலுள்ள விஷயம் வடமொழியிலிருந்து பெயர்த்த தண்டியலங்காரத்தைக் குறிக்காது
வேறு அணிநூலையே குறித்ததாக வேண்டும்.

பரிமேலழகர் பக்ஷாந்தரமாய்க்கூறும் நுவலாநுவற்சி, ஒட்டு என்னும் பரியாயப் பெயர்கள் முறையே
வீரசோழியத்திலும் தண்டியலங்காரத்திலும் காணப்பட்டபோதிலும் அவர் தன்மதமாகக்கூறிய
பிறிதுமொழிதல் என்பது அணிநூலுட் கண்டதாகவிருந்தாலு மிருக்கலாம்.

இப்படியே வீரசோழியம், தண்டியலங்காரங்களுட் காணப்படாத சில அணிகளின் பரியாயப் பெயர் இவருரையிற் காணப்படுகின்றன.
இன்னோரன்ன காரணங்களால், தண்டியலங்காரத்தினும் வேறாய அணிநூல் அல்லது
அணியிய லென்ற நூலொன்று இருந்து விழுந்திருக்க வேண்டுமென் றேற்படுகிறது.

ஆனால், தண்டியலங்காரத்திற்கே அணியியலென்னும் பெயர் இருந்திருக்கிறது.
அணியியலென்றபெயருடன் அடியார்க்குநல்லாரும், மாறனலங்காரவுரையாசிரியரும் (மா-அ-சூத் 25-ன் கீழ்)
எடுத்துக்காட்டி யிருக்கிறமுறையே சூத்திரம் இரண்டு மொன்றும் தண்டியலங்காரத்துட் காணப்படுகின்றன.
இத் தண்டியலங்காரச் சூத்திரங்கள் அணியியலென்னும் நூலிலிருந்து முன்னோர் மொழியாக
எடுத்துத் தண்டியலங்காரத்துட் சேர்க்கப்பட்டிருக்கலாமென்று கருதுவதற்கு இடங்கொடுக்கின்றன.

இனி, ‘மாறனலங்காரம்’ என்பதைப் பற்றி விசாரிப்போம்.
மாறன் என்பது பாண்டியரைக் குறிக்கிற பழம் பொதுப்பெயர்களுள் ஒன்று ;
இங்கு ஆழ்வார்களுட்சிறந்த நம்மாழ்வாரைக் குறிக்கிறது.
இவர் பாண்டியரது அரசாட்சிக்குட்பட்ட பொருநையாற்றின் அடைகரையாகிய திருவழுதி வளநாட்டுக்குரிய சிற்றரசர்.
மாறன், காரிமாறன், சடகோபன், திருவழுதி வளநாடன், பொருநற் (தாம்ரபர்ணி) சேர்ப்பன்,
பொருநற்சங்கணித்துறைவன், மகிழ்மாலைமார்பினன் முதலான பெயர்கள்
இயல்பாயும், காரணம்பற்றியும் இவருக்கு வழங்கி வந்தனவென்று திருவாய்மொழியால் தெரிகிறது.

இவர் பிறந்தபொழுதே தொடங்கித் திருமாலினிடத்து விசேஷபக்தியுடையராய்
உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் தண்ணனேயென் றத்யவசித்துத்
ததேக த்யானபரராயிருந்து நான்கு வேதங்களையும்
திருவிருத்தம் திருவாசிரியம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி என்னும் நான்கு தமிழ்ப்பிரபந்தங்களாக
லோகோஜ்ஜீவநார்த்தமாக வெளியிட்டருளினர்.
இவரை அக்காலத்திலிருந்த மதுரகவி முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
பிற்காலத்து வந்த நாதமுனி, யாமுநாசார்யர், ராமாநுஜர் முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
ஆசார்யராக மதித்து நேரிலும் விக்ரகரூபமா யெழுந்தருளப் பண்ணியும்
ஆழ்வார்களுட் டலைமையானவராய்க்கொண்டு ஆராதித்து வந்தனர்.

வடநாட்டிலும் துளசீதாசர் முதலானோரால், பாராட்டிப் பூசிக்கப்பட்டார் இவ்வாழ்வாரெனின்,
இவரைப் பற்றி நாம் அதிகமாயெழுத வேண்டியதில்லை.
இந்நூலாசிரியர் இவ்வாழ்வாரிடத்து ஏழாட்காலும் பழிப்பிலாத் தொண்டு பூண்டு
மறந்தும் புறந்தொழாதவமிசத்துட்பிறந்த வைணவமதாபிமானமுள்ளவரான படியினாலே,
தண்டியலங்கார முதலிய நூல்கள் அரசர் முதலியவர்களைப் பற்றிக்கூறி
லௌகிக திருஷ்டாந்தங்களுடையனவாயிருப்பது கொண்டு, தா மிந்த அலங்கார நூலையியற்றி
இதை ஆழ்வார்க்குச் சமர்ப்பித்து உதாரணங்களை
ஆழ்வார் விஷயமாகவும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும் வைஷ்ணவபரமாய்ச் செய்து சேர்த்தருளிக்
‘காரிதந்தருள் கலைக்கடலியற் பெயர்புனைந்து’ (மா-அலங். பா)
‘திருமகிழ்ப்பரமதேசிகன் பெயரால்’ (மா-அகப்) இந்நூலை வெளியிட்டருளினர்.
ஆகவே மகிழ்மாறன் அல்லது நம்மாழ்வாரை நாயகனாகக் கொண்ட அலங்கார சாஸ்திரமாகுமிது.

வடமொழியிலும் நம்மாழ்வார் விஷயமான ஒரு அலங்கார சாஸ்திரம் ‘சடவைரிவைபவதிவாகரம்’ என்ற பெயருடன்
குவலயாநந்தத்தை யநுசரித்ததாய் விளங்குகிறது.
கூடிய சீக்கிரம் அச்சில்வரும் இத் தமிழணி நூல், பாயிர இலக்கணத்தை முதலிற் பெற்று,
அது தவிரப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு பகுப்புடையதாயிருக்கிறது.

இந்நூற் பொதுப்பாயிரத்துள் “வெள்ளையினகவலின் விளம்பலு மரபே” என்றபடி
இந்நூலாசிரியர் பொதுவியலைமாத்திரம் வெண்பாவா லமைத்திருக்கிறார்.
அகவலின் வெள்ளையினறைக வென்ற முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தாற் பின் பிலக்கண நூல்செய்தோர்
இலக்கணங்களைக் கூறியதுபோலவும், சிலப்பதிகாரத்திற் சிலகாதைகள் பாவினங்களாற் பாடியது போலவும்
இவரும் முதலியலை வெண்பாவாலும் மற்றவற்றை நூற்பாவாலும் கூறினர்.

தண்டியலங்காரத்தில் மேற்கூறிய நான்கியலுக்கும் சேர்ந்த சூத்திரங்கள் 125 தான்.
தண்டியலங்கார உதாரணச் செய்யுள்களிலும் மாறனலங்கார உதாரணச் செய்யுள்கள் மிகவு மதிகம்.
ஆகவே தண்டியலங்காரத்தினும் மாறனலங்காரம் மிக்க விரிவுடையது.
தண்டியலங்காரம் காவ்யாதர்சத்தைப் பின்பற்றின மொழிபெயர்ப்பு.
மாறனலங்காரம், தொல்காப்பிய முதலியவற்றின் கருத்துக்களையும்,
“முதுமொழித்தண்டி முதனூலணியையும், புதுமொழிப் புலவர்புணர்த்தியலணியையும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையும், மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும்,
சதுர்பெற விரண்டிடந்தழீஇய சார்பென”விளங்குகிறது.
ஆயினும், இது தண்டியலங்காரத்தின் வழி நூலாகும்.

இதனுரையில் வடமொழித் தண்டியாசிரியரை யபூர்வமா யோரோரிடத்தும்,
தமிழ்த் தண்டியாசிரியரை அடிக்கடி பல இடங்களிலும் சுட்டியிருக்கிறார்.
இந் நூலாசிரியர் சிலஇடங்களிற் சிலநியாயம்பற்றிச் சிறிது வேறுபடுவதுமுண்டு.
எடுத்துரைப்பிற் பெருகுமாதலால் 84ம் சூத்திரவுரை முதலிய இடங்களிற் கண்டுகொள்க.

தண்டியலங்காரத்துட்கூறிய பொருளணிகளின்றொகை 35.
இந் நூலுட்கூறிய அணிகளின்றொகை 64.
இந்நூலார், தண்டியாசிரியர்கூறிய நுட்பமென்னுமலங்காரம் பரிகரத்துளடங்குதலா லதைக் குறைத்தார்.
சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத்திணையியலிலுங் கூறியுள்ளவும்
மற்ற அணிநூல்களுட் கூறப்படாதனவுமாகிய பூட்டுவில், இறைச்சிப் பொருள்கோள், பொருண்மொழியென்னும் மூன்றையும்
செய்யுட்கணி செய்தலால் அணியுட் சேர்த்துமிகுத்தார்.
வகைமுதலடுக்கு, இணையெதுகை, உபாயம், உறுசுவை, புகழ்வதினிகழ்த லென்னுமைந்தும் அழகெய்துவதா யிருத்தலின்,
இலக்கியங்கண்டதற் கிலக்கணமியம்புதலாயிவற்றையு மிகுத்தார்.
தண்டியாசிரியர் உவமவிரியுட்சேர்த்தும், ஏனையாசிரியர் வேறுவேறாகப் புணர்த்துமிருக்கிற ஐயம்,
தெரிதருதேற்றம், பொதுநீங்குவமை என்பவற்றுள் ஐயத்தையும், தெரிதருதேற்றத்தையும்,
ஏனையாசிரியர்மதமுடன்பட்டுப் பிறிதோரணியாக்கியும், பொதுநீங்குவமையைத் தண்டியாசிரியர் மதம்பற்றி யுவமையுட்புணர்த்தும்,
தன்கோட் கூறலென்னுமுத்தியானும், தன்குறியிடுதலென்னுமுத்தியானும், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி முடிக்கும் வழி
நூலிலக்கணம்பற்றியும் இவ்வாறெல்லாம் முடித்தார்.
இவ்வாறு சூக்குமமாய்க் காணப்படும் வேறுபாடுகளுக்கெல்லாம் மேற்கண்டபடியே கொள்ளவேண்டும்.

தண்டியாசிரியர் ஒரே சூத்திரத்திற் பன்னிரண்டு சித்திரகவிகளுக்குப் பெயர்மாத்திரங் கூறிச்செல்ல,
இந்நூலார் முப்பத்திரண்டு சித்திரகவிகள் கூறி அவற்றுக்கு இலக்கணமுங் கூறிச்செல்கிறார்.
‘தேவா’ ‘மாதவனே’ ‘தண்மதி’ ‘சேடுறு’ என்றுதொடங்குகிற சக்கரபெந்தச் செய்யுள்களில்
‘திருமலை’, ‘தென்குருகூர்’, ‘வடமலையப்பன்’, ‘சீராமராமசெயம்’, ‘தருமமேகைதரும்’ என்பவைகளும்
இரதபெந்தத்தில் ‘நாராயணாயநம’, என்பதும் காதைகரப்பிற்
‘கொல்லான்புலாலைமறுத்தானை’ என்னுங் குறளும் அழகாயமைக்கப் பட்டுள்ளன.

தண்டியலங்காரவாசிரியர் தாமே மூலமும் உதாரணமுங் காட்டினாற் போல,
இந்நூலாசிரியர் தாமே உதாரணச் செய்யுள்களும் செய்தமைத்தாரென்று தோன்றுகிறது.
“இந்நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றாரோவெனின்” என்று உரையில்வருவது கொண்டும்
பிற ஆதாரங்கொண்டு மிவ்வாறு ஊகிக்கவேண்டியதாயிருக்கிறது.
இந்நூலிற் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, குறள், நாலடி, சிந்தாமணி,
சிலப்பதிகாரம், வெண்பாமாலை, யாப்பருங்கலம், திருவாய்மொழி முதலிய பழைய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இந்நூலாசிரியர் செய்தருளிய திருக்குருகாமான்மியம், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன்கிளவிமணி மாலை,
இந்நூலுரையாசிரியர் செய்தருளியதாக நினைக்கப்படுகிற மாறன் பாப்பாவினம் முதலிய வைணவ நூல்களிலிருந்தும்
அடிக்கடி மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
திருப்பதிக்கலம்பகம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்நூலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
மற்றைய உதாரணச் செய்யுள்களெல்லாம் நம்மாழ்வார் விஷயமாகவும், திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும்
வெண்பா முதலிய பாப்பாவினங்களிற் பெரும்பாலும் அகப்பொருட்டுறைகளமையப் பெற்றனவாய்
நூலாசிரியராற் செய்யப்பெற்றுச் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வுதாரணங்களெல்லாம் கற்பனைக் களஞ்சியமாய்ச் சொற்சுவை பொருட்சுவை நிரம்பி அழகாயிருக்கின்றன.
பெரும்பாலும் உதாரணச் செய்யுள்களுக்குத் திணையும் துறையும் கூறப்பட்டிருக்கின்றன.
சில உதாரணங்களுக்குப் பொழிப்புரையும், சிலவுதாரணங்களுக்குக் குறிப்புரையும் கூறப்பட்டுள்ளன.
நன்னூலின் ஆரம்பத்துட் கூறியிருப்பதுபோல இந்நூலிலும் ஆரம்பத்திற் பொதுப்பாயிரத்திலக்கணம்
மிக விரிவாயும் தெளிவாயுங் கூறப்பட்டிருக்கிறது.

இத் தமிழணி நூலின் பொருளடக்கத்தையும் பெருமையையும் பின்வரும் நூற்பாவானும், வெண்பாவானும் ஒருவா றறிந்துகொள்க.

ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன் முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே”
வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே
யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்–தோய்ந்துளதாற்
காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க
வேண்டுமோவீங்கிதற்குமேல்”

சுமார் நூறுவருஷங்களுக்குமுன் ‘கர்னல் மெக்கன்ஸி’ துரையவர்களால் மிக்க திரவியச் செலவு செய்து சேர்க்கப்
பெற்று இப்போது துரைத்தனத்தா ரிடமிருக்கும் சென்னை இராஜாங்கப் புத்தக சாலையில்
இந்நூலின் காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றிருப்பது, சில பெரியோர்களுக்குத் தெரிந்த விஷயம்.
கிரந்தமந்தணகூடம் (Tamil Museum) என்ற பெயர் வைத்துக்கொண்டு அநேக சாஸ்திரங்களை வெளியிடப்போவதாய்
முன்னுக்கு வந்த S. சாமுவேல்பிள்ளை என்பவர், சுமார் 55-வருடத்துக்குமுன்,
தா மச்சிட்ட ‘தொல்காப்பிய நன்னூல் ஐககண்ட்ய’ புஸ்தகத்தில் இந்நூலைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளார்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரவர்களும்,
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ செல்வக்கேசவராய முதலியாரவர்களும் தாங்களியற்றிய தமிழ்ப் பாஷை விஷயமான நூல்களில்
இந்நூலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சென்னையில் வசித்த வைணவ வித்வான்களாகிய மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ இராஜகோபால பிள்ளையவர்கள் முதலியோர்
இந்நூலை அச்சிட எண்ணிப் பொருண்முட்டுப்பாட்டால் நின்றுவிட்டனர்.
முதன் முதல் வெளியான செந்தமிழ்ப் பகுதியினின்று, காலஞ்சென்ற ஸ்ரீமாந்.பாண்டித்துரைத் தேவரவர்களும்,
முன்பு செந்தமிழ்ப் பத்திராசிரியராயிருந்த ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்களும்
இந்நூலை அச்சிடுவதைச் சங்கத்தின் முதனோக்கங்களுளொன்றாகக் கொண்டிருந்தன ரென்பது தெரிகிறது.
எக் காரணங்களாலோ அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.
இத்தகைய அரிய நூல்களை யச்சிட்டுத் தமிழகத்திற் குபகரித்து வரும் தமிழ்ச்சங்கத்தார்க்குத்
தமிழபிமானிகள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நூலாசிரியர்

பெயர்:- இவ் வரிய பெரிய நூலை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்.
திருக்குருகைப்பெருமாள் என்றால், திருக்குருகை யென்னும் ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று பொருள்.
“திருக்குருகைப்பெருமாள் தன் திருவடிகள் வாழியே” என்பது அஷ்டகஜம் அப்பிள்ளை அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான
வாழித்திருநாமம். இந்நூலாசிரியர் நம்மாழ்வாருடைய ஆஸ்தான கவிரா யராதலால் அவருக்குத்
திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்று பெயராயிற்று.
இவருக்குச் ‘சடையன்’ என்னும் இயற்பெயருமுண்டு. ‘சடகோபன்’ என்பது சடையன் எனத் திரிந்ததுபோலும்.

தகப்பனார் :- இவருடைய தகப்பனார் பெயரும் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’ என்பதேயாம்.

ஜாதி :- வேளாளர். ‘சீரகத்தார்வணிகன்’ என்று பாயிரத்திலிருப்பதை நோக்க வேளாளரும்
ஒருவகை வைசியவகுப்பிற் சேர்ந்தவரென்பது வெளியாகின்றது.
ஆழ்வார்திருநகரிக்கோயிற் சத்தாவரண உத்ஸவங்களிற் படிக்க வேண்டிய ‘திருப்பணிமாலை’ படிப்பவருக்கு
ஏற்பட்ட சுதந்தரங்களைத் தெரிவிக்கும் கோயிற்கணக்கில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்றிருக்கிறது.
அந்தச் சுதந்தரங்களை இப்போது வத்தராயிருப்பு ஆழ்வாரப்பபிள்ளை என்பவர் பெற்றுவருகிறது கொண்டு
இந் நூலாசிரியர் இவரின் முன்னோராயிருக்கலாமென்று சிலர் நினைக்கின்றனர்.
ஆழ்வாரப்ப பிள்ளையின்பந்துவாகிய அமிர்தகவிராயரின் வம்சத்தில் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’கள் சிலரிருந்திருக்கின்றனர்.
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள திருவரங்கத்தந்தாதியின் பழையவுரை யெழுதி வைத்தவர்
திருக்குருகைப்பெருமாள் கவிராயர். இவர் இந்நூலாசிரியரல்லர்.
இவர் மாறன்கோவை இயற்றிய வேங்கடத்துறைவான் கவிராயர் வம்சத்தவராயிருக்க வேண்டும்.
இப் பெயரினர் ‘O.K.S.’ என்ற நவீனக்குறியால் வழங்கப்படுகிற திருநெல்வேலி ஜில்லா
வைணவ வேளாள வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரிகிறது.

ஊர் :- திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி. இவற்றிற்குப் பிரமாணம் :-

“பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமாளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்திருக்குருகைப்பெருமாள்கவிராயன்
அருட்குணத்துடன்வளர்சடையன்பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”–(மாறனலங்காரப்பாயிரம்)

“குருகையம்பதித்திருக்குருகைப்பெருமாள்
பொருவில்பேரன்புடன்புரந்தருள்புதல்வன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகேசன்
திருக்குருகைப்பெருமாள்கவிராசன்
அருட்குணத்தவர்புகழ்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”(மாறனகப்பொருட்பாயிரம்)

“இருக்குமுதற்பனுவலினாலியற்றமிழ்தேர்நாவீறனென்னுமேன்மை
யருட்புயலைப்புகழ்புலமைத்திருக்குருகைப்பெருமாள்பேரன்புகூருந்
தருக்குலவும்பொழிற்குருகாபுரிவணிகன்சடையனிதைத்தமிழாற்சாற்றித்
திருக்குருகைப்பெருமாள்வண்கவிராசனெனப்புனைபேர்சிறந்ததொன்றே”(திருக்குருகாமான்மியப்பதிகம்)
முதலியன.

மதம் :- வைணவம்.
இவர் ‘மணவாளமாமுனி’ முதலிய தென்கலை ஆசார்யசிரேஷ்டர்களை அலங்கார நூலின் மத்தியில் வணங்கியிருப்பதாலும்,
ஸ்ரீநிவாசஜீயர் என்னும் தென்கலை ஆசார்யபுருஷரது சிஷ்யராதலாலும், தென்கலை வகுப்பைச் சேர்ந்தவர்.

ஞாநாசிரியர் :- இந் நூலாசிரியருக்குப் பஞ்சஸம்ஸ்காரமென்னும் தீக்ஷை முதலிய செய்து வைத்த ஞாநாசிரியர்
‘ஸ்ரீநிவாஸஜீயர்’ என்பது ‘சிற்குணச் சீநி வாதனின் னருளா, னற்பொருண் மூன்றையும் நலனுற வுணர்வோன்’ என்னும்
மாறனலங்காரப் பாயிரத்தாலும்,
‘சிற்குணத் திருமலைச்சீநிவாதன், பொற்புடைத் திருவடி போற்றிய புனிதன்’ என்னும் மாறனகப் பொருட்பாயிரத்தாலும் தெரிகிறது.
அன்றியும், மாறனலங்காரத்துள்ளே இவ் வாசிரியரைச் சில இடங்களில் வாழ்த்தியிருக்கிறார். அச்செய்யுள்கள் வருமாறு :-

“முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து”(காபாலிகாந்தியகுளகம், குரவன் வாழ்த்து)

“முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான்”(திணை : வாகை, துறை : தாபதவாகை)

இவ்வாசிரியர், ஸ்ரீமணவாளமாமுநிகளின் ஆசிரியர் திருவாய்மொழிப் பிள்ளையால் ஸ்தாபிக்கப்பெற்ற
திருநகரி உடையவர் (ராமாநுஜர்) ஸந்நிதி எம்பெருமானார் ஜீயர்மடாதீந பரம்பரையில் 8 (?)வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்தவர் ;
திருப்பதி மடத்திலிருந் தெழுந்தருளியவர். (மேற்குறித்த பிரமாணங்களை நோக்குக)
இவர் திருப்பதியிலிருந் தெழுந்தருளும்போது கொண்டுவந்த, ஸ்ரீநிவாஸன் படத்திற்கு
நாளிது வரை நித்தியபூஜையும் உத்ஸவமும் நடத்திவருகிறார்கள்.
இந்த ஜீயர், தாம் வீற்றிருந்த மடத்தைச் சார்ந்த உடையவர் ஸந்நிதியை ஜீர்ணோத்தாரணஞ் செய்தாரென்பது,
பின்வரும் ஆழ்வார் திருநகரித் திருப்பணிமாலைச் செய்யுளால் விளங்கும்.

“இவர்ந்தபூதூ ரெதிராசன்கோயிலை
யுவந்தனைத்தழகுங்கண்டுலகினோங்கினான்
சிவந்தபங்கயமுகன்சீநிவாசமா
தவன்றிரிகோற்கோன்மாதவர்கிரீடமே”
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலைப் புத்தக அட்டவணையில் இவர் ஸ்ரீநிவாஸாசார்யர் என்றெழுதியிருக்கிறது.
இந்த ஜீயர் சுவாமி, உபயவேதாந்த ப்ரவர்த்தகராய்த் திக்குவிஜயம் செய்து வாக்மியாயிருந்தாரென்று சொல்லப்படுகிறது.

இந்நூலாசிரியர் செய்த வேறு நூல்கள் :-
1. மாறனகப்பொருளும் அதன் உதாரணம் நூற்றெட்டுத் திருப்பதிக்கோவையும்.
2. திருக்குருகாமான்மியம்.
3. நம்பெருமாள் மும்மணிக்கோவை.
4. மாறன் கிளவிமணிமாலை முதலியன.
இவற்றில் முன்னையதைத் தவிர மற்றைய நூல்களெல்லாம் மாறனலங்காரத்தில் உதாரணமாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.*

காலம் :- இந்நூலால் இவர்காலம் இன்னதென்று தெரியாமற்போன போதிலும்,
இவர் செய்த மற்றொரு நூலாகிய திருக்குருகாமான்மியம் அரங்கேற்றிய காலம் அதிற் குறிக்கப்பட்டிருப்பதால்
அதிலிருந்து இவர்கால மின்னதென் றேற்படுகிறது. அச்செய்யுள் வருமாறு :-

அறந்திகழாண்டவையெழுநூற்றிருபான்மூன்றி
லணிகிளர்கார்த்திகைமாதமெட்டில்வாழ்வு
சிறந்திடுதிங்களினாளுத்தரத்திலேகா
தெசியின்மகரமுகூர்த்தந்திருந்தமுற்றத்
துறந்தவரெண்மகிழ்மாறர்திருமுன்னாதிச்
சுருதியுடன்மிருதியுஞ்சொற்றமிழின்வாய்மை
பிறந்தபெருங்காப்பியமுந்தெரிந்தோர்கேட்கும்
பெற்றியுடனரங்கேற்றப்பெற்றதன்றே”
இதிற் குறிப்பிட்டுள்ள வருஷம் கொல்லம் ஆண்டு. கொல்லமாண்டு 723-வது
எனவே, இப்போது 1090 நடப்பதால், 365 வருஷங்களுக்கு முன் இவர் இருந்தாரென்றேற்படுகிறது.
குருகாமான்மியத்திலிருந்து இந்நூலுக்கு உதாரணமெடுத்திருப்பதால் இந்நூல் பின்னாற்செய்யப் பெற்றதென்று வைத்துக் கொள்வோம்.
ஆகவே ஏறக்குறைய 360-வருஷங்களுக்குமுன் இந்நூலியற்றப் பெற்றதென்பது ஏற்புடையதாகும்.
ஜீயர்காலம் நிர்ணயிக்கப் புகுமிடத்தும் இக்காலவரையறை சரியாயேற்படுகிறது.
உரையாசிரியர் காலமும் இதுவேயாகும்.
இதுபற்றியேதான் ‘செந்தமிழில்’ இரண்டுமூன்றிடங்களில், உரையாசிரியராகிய இரத்திந கவிராயர் பிரஸ்தாபம்
வருமிடத்து ஸ்ரீ.உ.வே.இராகவையங்காரவர்கள் ‘350-வருஷங்களுக்குமுன்னிருந்த’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவர்பெருமை :- இவர் பாலியத்திலேயே நிகண்டு, இலக்கணம், இராமாயணம், சங்கநூல்கள், பழையவுரைகள்
இவற்றை ஐயந்திரிபறக் கற்றுச் சிறந்த வித்வானாகிய தமது தகப்பனாரிடம் கற்று வல்லுநராய்,
மாணாக்கர்க்குப் பாடமோதியும், பழைய நூல்களைத் தேடித் தொகுத்து வைத்துக் ‘கல்விக்களஞ்சிய’மொன் றேற்படுத்தியும்,
பொருட்டொடர் நவம்புணர்புலமையோன் (மா-அக & அல) என்றபடி புதுவகையான பெருங்காப்பியம் சிறுகாப்பிய முதலான
நூல்களியற்றியும், தங்காலத்து வித்வான்களுடன் வாதஞ்செய்தும், அரசராற் சன்மானிக்கப்பெற்றும் தமிழை விருத்திசெய்து
சிறந்த வீரவைணவப் புலவராய் வீற்றிருந்தார். இவர் விஷயமாய் அபியுக்தரருளிய பின்வருஞ் செய்யுளையும் நோக்குக.

“நேற்றுப்பிறந்துவரும்பாவியானநிலாநெருப்புக்
காற்றும்படிதொங்கறந்திலனேயருங்கூடற்சங்கந்
தோற்றும்படிசொன்னசொன்னாற்பத்தொன்பதையைம்பதென்று
சாற்றுந்திருக்குருகைப்பெருமாணஞ்சடைக்குட்டியே”

———

இந்நூலுரையாசிரியர்

இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரையருளிச் செய்தவர் தென்றிருப்பேரைப் பதியிற்பிறந்த காரிரத்நகவிராயர் என்பவரே.
தென்றிருப் பேரையென்னும் பாடல் பெற்ற திவ்யதேசம் ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே மூன்றுமைல் தூரத்துள்ளது.
இவர், திருக்குருகைப் பெருமாள்கவிராயர் அநேகமாணாக்கர்க்குப் பாடமோதிக்கொண்டு சிறந்த வித்வானாயிருப்பதைக்
கேள்வியுற்று அவரிடம் படிக்க ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அவரிடம் கல்விகற்றுச் சிறந்தவித்வானானார்.
செந்தமிழ்ப் பத்திரிகையில் இவரைக் குறிக்கநேரும்போதெல்லாம் இவர் பெயரை இரத்திநகவிராயரென்றே குறித்திருக்கிறது.
ஆனால் உற்று நோக்கும்போது இவரது இயற்பெயர் ‘காரிரத்நகவிராய’ ரென்பதென்று தெரிகிறது.
‘காரிரத்நம்’ என்பது ஆழ்வார்திருநாமம். காரிராசன் பெற்ற இரத்திநம் போன்ற புதல்வன் என்பது இதன்பொருள்.
‘காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்து’ (மா. அல) ‘காரிமாறன் சடகோபன்’ (திருவாய்)
‘காரி.. . . . . . . .ரத்நம்’ (மாறன்கோவை) முதலியவற்றையும் நோக்குக.
இவருரை மிகவுஞ்சிறந்ததோருரை. இவ்வுரையின்றேல் இந்நூலின்பெருமை வெளிப்படாது.
சங்க நூல்கள் பிற சான்றோர் நூல்கள் முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார்.
சில உதாரணச் செய்யுள்களிலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றை அழகாய் விளக்குகிறார்.
சில உதாரணச் செய்யுளுக்குக் குறிப்புரையும் சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கூறுகிறார்.
இவர் வேண்டுமிடங்களில் தண்டிமதம், தொல்காப்பியர் போன்ற பிற நூலாரின் கருத்து முதலியவற்றையெடுத்துக் கூறித்
தக்கசமாதானங் கூறுகிறார். உதாரணச்செய்யுள்களைச் சூத்திரப் பொருளோடு அழகாய்ப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
இவர் காலம் முன்னே கூறப்பட்டது.

இவர்செய்த வேறு நூல்கள் :-
தொல்காப்பிய நுண்பொருண்மாலை,
பரிமேலழகருரை நுண்பொருண்மாலை (இது செந்தமிழில் வெளிவந்துளது),
ஆசிரியர் செய்த நம்பெருமாள் மும்மணிக்கோவைக்கு விருத்தியுரை,
மாறன்பாப்பாவினம் முதலியன.

இவருக்குக் கோயிலில் ‘வாகனமாலை’ படிப்பதற்காக அக்காலத் தரசன் சிறந்த மானியங்கள் விட்டிருந்தான்.
அவற்றை இன்னமும் இவர்சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள்.
இவரைப்போலவே இவர் வமிசத்தோரும் சிறந்த வித்வான்களாயும் வைணவர்களாயுமிருந்து தமிழையபி விருத்தி செய்தார்கள்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரம்ம ஸ்ரீ மஹாமஹோபாத்யாய சாமிநாதையரவர்கள்,
ஸ்ரீ-உ வே.ரா.இராகவையங்காரவர்கள் முதலியோருக்கு அரும்பெறற்றமிழ் நூல்களருளிய குடும்பம் இதுவே.
இக்குடும்பத்தினர் ஏடுகளே திருக்கோவையாருரையாசிரியர் பேராசிரியரென்றும்,
அச்சிட்ட தொல்காப்பியச்செய்யுளியலுரை முதலியவை பேராசிரியரது ; நச்சினார்க்கினியரதன் றென்றும்,
பரிபாடலுரையாசிரியர் பரிமேலழகர் என்றும் அறியுமாறு அருமையான பல விஷயங்களைத் தெரிவித்தன.
இக்குடும்பத்தார் காப்பாற்றி வைத்த ஏடுகளின் பெருமை பிரம்ம ஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள்
ஸ்ரீ.உ.வே.ராகவையங்காரவர்கள் முதலியோருக்கே தெரியும்.
இவ்வமிசத்தவர் வைணவபரமாய் எத்துணையோ தமிழ்நூல்கள் செய்திருக்கிறார்கள். தமிழுரை செய்திருக்கிறார்கள்.
வடமலையப்ப அரசரின் ஸமஸ்தானவித்வான் சிறியகாரிரத்நகவிராயர் இவ்வம்சத்தவர்.
சாபா நுக்ரகசக்தியுடன் கவிபாடத் தகுந்த புலவர் இவ்வம்சத்தி லநேகரிருந்திருக்கின்றனர்.
குமரகுருபர சுவாமிகள் வம்சபரம்பரையோரில் ஆழ்வார் திருநகரிக்கிளையினர் அநேகர் இவ்வம்சத்தாரிடம்
பாடங்கேட்டிருக்கிறார்களென்று தெரிகிறது.
இம்மாறனலங்கார உரையாசிரியர் விஷயமான சிறப்புப் பாயிரச் செய்யுளையெடுத்துக் காட்டி இதனுடன் நிறுத்துகிறேன்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்நகவிராயன் பேரைவரோதயனே.

A.M. சடகோபராமாநுஜாசார்யன்
(நேஷநல்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்,
திருச்சிராப்பள்ளி.)
25-5-1913.

—————

மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்.

——-

1. நான்காரச்சக்கரபெந்தம்

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா.

இது, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று
அடுத்த ஆரின்வழி நடுவடைந்து முதலடிமுற்றி,
மறித்தும் நடுவுநின்று அவ்வாரின்வழி திரும்பி யிடஞ்சென்று
அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடிமுற்றி,
அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளுஞ்சென்று முற்றியவாறு காண்க.

———-

2. இதுவும் நான்காரச்சக்கரபெந்தம்

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது.

இது, மேலாரின்முனைதொடங்கியிறங்கிக் கீழாரின்முனையிறுதி சென்று முதலடி முற்றி,
இடப்பக்கத்து ஆரின்முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிசென்று தனிச்சொல்லகப்பட விரண்டாமடி முற்றி,
மறித்தும் அம்முனைநின்ற துகரந்தொடங்கி வட்டைவழியே யிடஞ்சுற்றி மூன்றாமடியும் நான்காமடியுஞ்சென்று,
தொடங்கிய துகரத்தை மறித்துங் கொண்டுமுற்றிக் குறட்டினிடமே திருமலை யென நின்றவாறு காண்க.
ஓகார அளபெடை யறிகுறியொழியநின்றது.

——————-

3. ஆறாரச்சக்கரபெந்தம்

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே.

இது, இடப்பக்கத்தாரின் முனைநின்றுதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஓரடிமுற்றி,
அடுத்த கீழாரின்முனைநின்று மேலாரின