இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி –
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –
ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.
—————
நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
—————-
இரணியன் வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழு-இவரே மேட்டு அழகிய சிங்கர் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் கம்பநாற்றத்தாழ்வானுக்கு தீர்த்த பரிவட்டம் பிரசாய்த்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து -நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –
—————————————–
சிறப்புப் பாயிரம்
தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.
தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்
அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-
மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-
மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ
திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷
எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
—————-
ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.
பாரணம் -பாரணா பாராயணம் -உணவு திருப்தி படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ
————–
‘நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே.
——————–
நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.
————–
தற்சிறப்புப் பாசுரம்
மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.
————–
நூல்
வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-
உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே பர் அடியிலே காட்டி அருளினார் அன்றோ
————
சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-
ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விலக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விலக்காயும் என்றுமாம்
ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-
———
பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-
நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கு நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்
———
தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-
தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்
ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்
வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்
வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது
இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-
———–
மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-
குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக்கடலிலே ஆடுவதே யாகும்
———–
தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-
த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்
———–
கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-
நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –
———
தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-
அத்தி கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளே -என்றவாறு –
———-
ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–
பனுவல் -ஆகமம் -கல்வி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் –
———
செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–
செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே
———-
ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-
ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப்பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்-ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்
———
இயல் இடம் கூறல்
இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-
ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத்துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –
———
உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-
இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்
———
அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-
நிலத்தேவர் பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவும் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –
———
பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–
வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்
———-
கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–
நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு
————
நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-
பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-
———-
சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–
திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ
நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்
————-
சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-
கல் படிக்கற்கள் என்றபடி
ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-
நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–
மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து அடைந்தவர் பெரும் பேற்றை அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்
செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்
மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-
பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித்தாய் தாயாருக்குச் சொல்வது
————
பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –
சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-
குறிஞ்சி திணை -அகத்துறை
இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –
திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-
———–
மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–
பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்
விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்
தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்
————
போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-
ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாதித்த திரிவதே வேண்டும் என்கிறார் –
———–
சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–
ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-
———–
தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-
திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –
———–
விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-
ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம் கார்யம் இல்லை -இனி எமக்கு ஏது பிறவித் துயர்-
————
பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்
கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–
விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –
————
கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–
மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே
———–
என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–
தன் முடியால் அவன் தாளிணைக்கீழ் -நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்
திருச் சங்கணித்துறை க்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ
———–
சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–
பாரதந்தர்ய ஞான சித்தியை -காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –
————
மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-
தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிராசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –
————-
செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–
திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்
————-
உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–
முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே
————–
அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–
மற வாதியர் முதல் மகரக்குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்
———-
சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–
சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-
இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்
————
பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்
தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–
கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-
————-
துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–
அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –
————-
மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –
கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–
ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை
———–
பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–
தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தனை
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி
———-
காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–
ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-
———–
மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–
பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று
நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பைசுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ
———–
பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்
பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–
———
மருங்கு அணைதல் –
வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–
கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்
———
கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–
சின வாரணம் -மத யானை
துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –
———–
சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–
ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –
————
தோழி இரங்கல் –
அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–
முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம்புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –
இச்சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –
ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –
சிப்பி உலகோர் -அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்
————
தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –
புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–
காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக்கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்
—————
செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –
சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–
ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
பவரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப்புலவர்களை வென்று ஆட் கொண்டாரே
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் குத்தையும் வினையாவி தீர்த்தேன் -நான்முகன் -91-
————-
இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–
பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளை போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்
————
அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–
குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்
————–
பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–
காமம் வெகுளி மயக்கம் -முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –
———–
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–
திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே
———–
தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்
அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–
ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்
———
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–
வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்
————
பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–
ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-
———-
மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது
மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–
மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –
———–
பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –
————-
நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–
உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குக்கப்படலாம் -36-போல் இதுவும் –
————
இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–
உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-
————–
ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–
இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ
————
தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –
கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–
தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-
————-
தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–
தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -உபநிஷத்துக்கள்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம் ப்ரார்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்
————-
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–
தெய்விகக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட -வி தொழில் பெயர் விகுதி
————
சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–
குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்
————-
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–
ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்
————-
விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்
விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–
—————
உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –
பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–
சரவாதம் பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு
————-
பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –
தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–
விரஹ தானத்தால் மேகக்கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக்களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –
—————-
பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –
மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–
தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை
————
மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –
தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–
மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –
————-
பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–
பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம்
————-
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–
கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ
————
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–
மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம் –
————–
தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்
வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–
முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –
————–
ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–
க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்
————–
அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–
அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ
———-
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–
ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்து -பாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே-
———–
பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–
ஆழ்வார் 11 அவதாரம் -தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –
———–
குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–
அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்
———–
தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது
இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–
கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை
————
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–
திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வழிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்
————
குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–
குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்
————-
தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–
என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –
———–
நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–
தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்
————-
தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –
கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–
பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த -கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்
———–
கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–
குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே
————–
பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்
விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–
தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-
———–
தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –
புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–
முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்
திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு பூனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –
———-
பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–
தினை -மிகச் சிறிய -பனை -மிகப் பெரிய
கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ
————
பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–
ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத்த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் -பிள்ளை அந்தாதி –
————
பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்
பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–
————-
தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–
கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-
————–
இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –
அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–
கரும்பு போல் இனியது என்னாமல்
ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்
————-
அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–
—————
தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–
அருளிச் செய்சல்களைக் காத்தாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ
————
தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்
உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–
திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் செனறாக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும் தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ
———–
பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–
புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்
————
இதுவும் அது
வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–
———–
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–
திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்
—————-
மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–
மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்
——–
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே
மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் -முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப்பிரபந்தம் என்றபடி
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்