Archive for the ‘Manna vaallla Maa munikall’ Category

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் -சொல்லுவோம் இராமானுசன் திரு நாமங்களே -ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 28, 2022

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் -நம்மாழ்வார் நம் இராமானுசன் -நம் மணவாள மா முனிகள்
மூவரும் திருவாவதரித்தது ஆழ்வார் திருநகரியிலேயே –

அஷ்டதிக் கஜங்கள் எண்மர்-
1- அழகிய வரதர் எனப்படும் ராமானுஜ ஜீயர் எனப்படும் வானமா மலை ஜீயர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் பிரியாது அடிமை செய்து போருவர்
2-பட்டர் பிரான் ஜீயர் -பூர்வாஸ்ரமத்தில் கோவிந்த தாஸப்பர் -எம்பாரைப் போல் பதச்சாயை –
3-திருவேங்கட ராமானுஜ ஜீயர்
4-கோயில் அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டானைப் போல் பாதுகா ஸ்தாநீயர்
5-பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -ஆழ்வானைப் போல் உஸாத் துணை
6- எறும்பி அப்பா -எம்பெருமானாருக்கு வடுக நம்பி போல் தேவு மற்று அறியாத அத்யந்த அபிமதர்
7-அப்பிள்ளை -உறங்கா வல்லி போல் மடத்தின் ஸர்வ பரங்களையும் நடத்திக் கொண்டே போருவர்
8-அப்பிள்ளார்

இவர்களைத் தவிர நவ ரத்ன சிஷ்யர்களும் உண்டு
1-சேனை முதலியாண்டான் நாயனார்
2-சடகோப தாஸரான நாலூர் சிற்றாத்தான்
3-கந்தாடை போரேற்று நாயனார்
4-ஏட்டூர் சிங்கராசார்யர்
5-கந்தாடை அண்ணப்பன்
6-கந்தாடை திருக்கோபுரத்து நாயனார்
7-கந்தாடை நாரணப்பை
8-கந்தாடை தோழப் பரப்பை
9-கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள்

இவரது பூர்வாஸ்ரமத்து திருக்குமாரர் -ராமானுஜாச்சார்யர்
திருப்பேரர் ஜீயர் நாயனார் -இவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான் போல் அத்ய ஆதரணீயர் –

ஸ்ரீ மான் ஸூ ந்தர ஜாமாத்ரு முனி பர்யாய பாஷ்ய க்ருத்
பாஷ்யம் வ்யாகுர்வதஸ் தஸ்ய ஸ்ரோத்ரு கோடவ் மம அந்வய -என்கிறபடியே
புனர் அவதாரமான பெரிய ஜீயர் பூ ப்ரதக்ஷிணம் பண்ணி அநேக ஸ்தலங்கள் ஜீரண உத்தாரணம் பண்ணி அருளினார்
பரமத நிரசன ஸ்வமத ஸ்தாபனம் பண்ணி அருளினார்
சர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கும் மோக்ஷம் சாதித்து அருளினார்

ஈடு காலஷேபம்-இது ஸ்ருதி ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை
இது கீதா பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ரக்ரியை -இது ஸ்ரீ இராமாயண பிரகிரியை
இது மஹா பாரத ப்ரக்ரியை -இது ஸ்ரீ விஷ்ணு புராண பிரகிரியை -இது ஸ்ரீ மத் பாகவத பிரகிரியை
இது பதார்த்தம் -இது வாக்யார்த்தம் -இது மஹா வாக்யார்த்தம் -இது வ்யங்க்யார்த்தம் -என்று
அற்புதமாய் விசத வாக் சிகாமணி என்கிற தமது விருது நிறம் பெரும்படியும்
சர்வஞ்ஞ ஸார்வ பவ்மர் என்கிற பட்டம் பொலியவும் பிரவசனம் செய்து அருளினார்

ஆழ்வார் துவலில் மா மணி மாடம் -திருவாய் மொழியிலே தமது பெருமைகளை தாமே வெளியிட்டு அருளினால் போல்
இவரும் ஆர்த்தி பிரபந்தத்தில் வெளியிட்டு அருளுகிறார்

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

இதுவே நமக்கு நித்ய அனுசந்தேயம்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்று ஆண்டு இரும் –

இவரது ஸாத்விக பாவம்
இவரது பெருமையைப் பொறாத சிலர் மடத்தில் நெருப்பு வைக்க
ஆதி சேஷ ரூபம் கொண்டு இவர் வெளியேற
அந்நாட்டு மன்னன் இதை அறிந்து அவர்களைத் தண்டிக்க முற்பட
பிராட்டி ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளியது போல் பரம கிருபையால் வாத்சல்யத்தாலும் அவர்களை ரக்ஷித்து அருளினார்
தேவீ லஷ்மீர் பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -என்று கொண்டாடும் படி அன்றோ இவர் ஸாத்விக பாவ வைபவம் –

————-

சொல்லுவோம் ஸ்ரீ ராமானுஜன் திரு நாமங்களே-

தஸ்மை ராமாநுஜார்ய நம பரம யோகிநே
யஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அசீச மத்

பெரிய திருமுடி அடைவு எம்பெருமானாருடைய திருநாமங்கள் அடைவு காட்டப்பட்டுள்ளது –

1-இளையாழ்வார்
பிங்கள வருஷம் சித்திரை திருவாதிரை திரு அவதாரம் பண்ணின காலத்தில் மாதுலர் சாற்றினை முதல் திரு நாமம்

ஆளவந்தார் ஆம் முதல்வன் என்று கடாக்ஷித்து அருளினார்
யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம் கதி பெற்றுடைய ராமானுஜன்
ஆளவந்தார் திருவடிகளையே விசேஷ தனமாக கதியாக நிதியாகக் கொண்டார்

2-இராமனுஜன்
பெரிய நம்பிகள் மூலமாகப் பெற்ற தாஸ்ய திருநாமம்
பஞ்ச ஆச்சார்யர்கள் -பெரிய நம்பி பெரிய திருமலை நம்பி -திருக்கோஷ்டியூர் நம்பி -திருமாலை ஆண்டான் -ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் –
இவர்கள் அனைவரும் இவருக்கு ஐந்து திருநாமங்கள் சாற்றி அருளினார்கள் –

3- யதிராஜர் –
திருவனந்த ஸரஸ்ஸிலே நீராடி ஆஸ்ரம ஸன்யாஸ ஸ்வீ காரம் பண்ணி அருள தேவப்பெருமாள் அவருக்கு சாற்றிய திரு நாமம் யதிராஜர் –

4- உடையவர் –
தென் அத்தியூரர் கழல் இணை அடிக்கீழ் பூண்ட அன்பாளனை
தன்னிடம் சேர்த்து தன்னையும் தனது சர்வத்தையும் கொடுத்து அருளி உடையவர் என்ற திருநாமம் சாற்றி அருளினார்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்-

5-லஷ்மண முனி
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சாத்தி அருளிய திரு நாமம்
திரு மிடற்று ஆசைக்காக வேண்டிய உபசாரங்கள் எல்லாம் பண்ணுவாராம்
லஷ்மண லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மி –

6- எம்பெருமானார்
திருக்கோஷ்டியூர் நம்பிகள் சாத்தி அருளிய திருநாமம்
எம்பெருமான் காருணீகர் இவரோ பரம காருணீகர் -அவனிலும் அதிசயித்தது அன்றோ
காரேய் கருணை இராமானுச இக்கடல் இடத்தில் ஆறே அறிபவர் நின் அருளின் தன்மை

7-சடகோபன் பொன்னடி
திருமாலை ஆண்டான் சாத்தி அருளிய திருநாமம்
ஆழ்வார் திரு உள்ளக் கருத்துப்படி வியாக்யானம் காட்டி அருளியதால் பெற்ற திரு நாமம்
ஆழ்வார் திருநகரியில் இன்றும் ஆழ்வார் திருப்பாதுகைக்கு இராமானுசன் என்றே பெயர் -மற்ற இடங்களில் தான் மதுரகவி –

8-கோயில் அண்ணர்
படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -ஆவதற்காக
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களை உபதேசித்து அருளிய பொழுது
பெரிய திருமலை நம்பி சாத்தி அருளிய திரு நாமம்
ஆண்டாள் பாரித்த படி அழகருக்கு நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் சமர்ப்பித்ததற்கு உக்காந்து நாச்சியார் அழைத்த திருநாமம்

9- தேசிகேந்த்ரன்
திருவேங்கடமுடையான் சாத்தி அருளிய திருநாமம்
அப்பனுக்கும் சங்கு ஆழி கொடுத்தவர் அன்றோ
தேசிகனான பகவானுக்கும் தேசிகர் -தேசிகோ தேசிகா நாம் –

10- பூத புரீசர்
ஆதிகேசவப்பெருமாள் சாத்க்தி அருளிய திரு நாம கரணம்

11- பாஷ்யகாரர்
சாரதா தேவி உகந்து சாத்தி அருளிய திரு நாம கரணம்

12-ஸ்வாமி தகப்பன்
உலகுக்கு எல்லாம் தகப்பனாக செல்வப்பிள்ளை -தனக்கு ஸ்வாமியை தகப்பனாக அபிமானித்து சாத்தி அருளிய திருநாம கரணம்

13-ஸ்வாமி
ஸ்ரீ வைஷ்ணவ வாமன க்ஷேத்ர -திருக்குறுங்குடி நம்பி சாத்தி அருளிய திரு நாம கரணம்

————-

ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம்

லஷ்மீ நாத ஸமா ரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

ஸ ச ஆச்சார்யவம் சோ ஜேய ஆச்சார்யாணாம் அசவ் அசவ் இதி ஆபகவத்த -ரஹஸ்ய ஆம்நாய ஸ்ருதி
ஆரோஹண அவரோஹண கிரமங்களாலும் அனுசந்திக்கப்பட வேண்டும் –
சரம ஆச்சார்யர் -அத ஏவ பரமாச்சாரியார் -ஸ்ரீ மணவாள மா முனிகள்
பரம ச அசவ் ஆச்சார்ய -பரமாச்சார்ய என்றும்
பரமஸ் யாபி ஆச்சார்ய பரமாச்சார்ய -என்றும் பொருள் கொள்ளத் தகும் –
நம் பூர்வாச்சார்ய பரம்பரை மண்டலாகாரமாக அன்றோ அமைந்துள்ளது –

ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் வைபவம் ஸூ ப்ரஸித்தம் –
நம்பெருமாள் எந்தப் புறப்பாட்டிலும் மா முனிகள் ஈடு கால ஷேபம் செய்து அருளிய பெரிய திரு மண்டபத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாவரும் அறிந்ததே –
பரமாச்சார்யருக்கு தனது சேஷ பீடத்தையும் பஹு மணமாகப் பிரஸாதித்து அருளினான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வன் –

பரோ மா யஸ்மாத் ஸ பரம –
ஆனித்திருமூல ஸ்ரீ சைல வைபவம் நாடும் நகரமும் நன்கு அறியக் கொண்டாடுவதும்
பிரதி ஸம்வத்ஸரம் மாசி சுக்ல துவாதசி இவரது திரு அத்யயனத்தை மிகவும் கோலா ஹலமாகத் திருவரங்கத்தில் நடப்பதும் ஸூ ப்ரஸித்தம்
விஷ்ணு பரம சேஷீ -இவரை தனக்கு சேஷீயாகக் கொண்டானே

————-

ஆசினோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரே ஸ்தா பயத் அபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆச்சார்ய உச்யதே

கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் குரு ஸப்த தன் நிரோதக-அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே

ஆச்சார்யன் ப்ரஹ்ம வித்ய உபதேஷ்டா
குரு வேத அத்யாபகன்
ஸ்ரீ நாரத பகவான் -ஸ்வாத் யாய நிரதம்–வாக்விதாம் வரம் -முனி புங்கவம் –
நேரே ஆச்சார்யன் என்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்தவனை -ஸ்ரீ வசன பூஷணம் -315-
திருமந்த்ரத்தைச் சொன்னது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லக்ஷணம் –

ஜீவ பர ஸம்பந்த பிரகாசம் இறே திருமந்திரம்
அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம் உவ்வானவர் அடிமை என்று உரைத்தார் -ப்ரமேய சாரம்
அம்பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க ஸம்பந்தம் காட்டும் அவன் அன்றோ ஆச்சர்யம் -ஸப்த காதலி

பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச புண்டரீக ச புண்ய க்ருத் ஆச்சார்யவத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -புராண வசனம்
ஆச்சார்யாத் ஹைவ வித்யா விதிதா ஸாதிஷ்டம் பிராபத் -என்றும்
ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்றும் வேதாந்த வாக்கியங்கள்

தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆச்சார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் -439-

நாராயணோ அபி விக்ருதிம் குர்யாத் குரோ ப்ரச்யுதஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவி ந தோஷ யதி -புராண வாக்கியம்

இத்தையொழிய பகவத் விஷயம் துர்லபம் -ஸ்ரீ வசன பூஷணம் -440-
அநாதி ஸித்தமாய் இருக்கச் செய்தேயும் ஆச்சார்யன் உணர்த்துவதற்கு முன்பு அஸத் கல்பமாய் –

அவன் உணர்த்தின பின்பே கார்யகரமாகக் கடவதாய் இருக்குமது –
உஜ்ஜீவன உபதாய கதாவச்சேதகம் ஸம்பந்த ஞானம் -தத் ஹேதுத்வம் ஆச்சார்யனுக்கு என்றபடி –
உஜ்ஜீவனம் மோக்ஷம் -தத் உபதாயகம் ஞாயமான பகவத் சம்பந்தம் -தத் அவச்சேதகம் -ஞாயமானத்வம் –
தத் அவச்சின்ன -தத் விசிஷ்ட-பகவத் ஸம்பந்தம் மோக்ஷ ஹேது என்றபடி -சம்பந்த ஞானம் அவஸ்யகம் என்றபடி –
ஸம்பந்தம் ஆச்சார்யனாலே என்றபடி
பகவல் லாபம் சேர்ப்பாராலே என்று இருக்கிறாள் -1-4-8- ஈடு –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -45-

ஏகாந்தீ வியபதேஷ்டவ்ய நைவ க்ரம குலாதிபி
விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய தஸ்ய ஸர்வம் பி ச ஏவ ஹி

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்று உபகாரகரான திருவாய் மொழிப்பிள்ளை ஸம்பந்தம்
யதீந்த்ர ப்ரவணம் -உத்தாரகரான எம்பெருமானார் சம்பந்தம்
அபிமான துங்கர் செல்வர் அன்றோ மா முனிகள் தீ பக்த்யாதி குணார்ணவம் -ஆச்சார்ய லக்ஷண பூர்த்தி கூறப்பட்டது
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் -மா முனிகள் ஸம்பந்தம் பெரும் பேறாக மதித்து வணக்கம் செலுத்துகிறான் –

ஸ்ரீ சைல பூர்ணர்-பெரிய திருமலை நம்பி -தயைக்குப் பாத்திரமான எம்பெருமானார் யதீந்த்ரர் இஇராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் பெற்றார்
ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப்பிள்ளை தயைக்குப் பாத்ரமான மணவாள மா முனிகள் -யதீந்த்ர பிரவணர்-தீர்த்தங்கள் ஆயிரமும் பெற்றவர்
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ண அரண்கள் அன்றோ –

யதீந்த்ரர் தாம் அவதரித்த பூதபுரியைத் துறந்து திருவரங்கத்துக்கு எழுந்து அருளி ஸம்ப்ரதாய பரிரக்ஷணம் பண்ணி அருளினார்
யதீந்த்ர பிரவணரும் தாம் அவதரித்த உறை கோயிலான திருக்குருகூரை விட்டு
காவேரி நடுவுப்பாட்டுக் கருமணியைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்
ஸ்ருதி சக்கரத்தையும் திராவிட வேத சக்கரத்தையும் பெருகப் பண்ணிக் கொண்டு போந்தார்

யதீந்த்ரர் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தர்
யதீந்த்ர பிரவணர்-அனைத்து உலகும் வாழப்பிறந்தவர எதிராசா மா முனிகள் என்னும் பொருள் சுரந்தார் –
அவர் நாராயண வைபவ ப்ரகாசகர் -இவர் ராமானுஜ வைபவ ப்ரகாசகர் –

நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அந்த அவதாரங்கள் போலே யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவணரும்

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் –

ஆழ்வாருக்கு மதுரகவிகளிலும் சிரமமான திருவடிகள் இராமானுசன் ஆனால் போலே
ராமானுஜருக்கு ஆழ்வான் ஆண்டான் முதலானாரிலும் யதீந்த்ர பிரவணர் இறே சரமமான திருவடிகள் –
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியன் ஸகல வேத சாரம் போல் நித்ய அனுசந்தேயம்

இப்படி வைபவசாலியாய் எழுந்து அருளி உள்ள மா முனிகள் திருவடிகளே தாரக போஷக போக்யங்களாகக் கொண்ட
நம் வானமா மலை ஜீயர் -கோயில் அண்ணன் -கோயில் அப்பன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் சம்பந்திகளாகி நாம் உஜ்ஜீவிப்போம் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மா முனிகள் கண்ட வேதாந்த சார நிஷ்கர்ஷம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 27, 2022

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் முதலாக -ஸ்ரீ எம்பெருமானார் நடுவாக -ஸ்ரீ மா முனிகள் ஈறாக -பூர்வாச்சார்ய குரு பரம்பரை
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் திருமந்திரத்தை ஸ்வ அம்ச பூதனான நரனுக்கு நாராயணன் பிரகாசிப்பித்தான்
அவனே த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பிராட்டிக்கு பிரகாசிப்பித்தான்
அவனே சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனனுக்குப் பிரகாசிப்பித்தான்

அவனே தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியிலே கோயில் கொண்டு

தெளி விசும்பு திருநாட்டை விடத் திரு உள்ளம் உகந்து பெரிய பெருமாளாய்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனான திருமேனியோடே கூடியவனாய்

ரஹஸ்ய த்ரயத்தையும் ஒரு சேர ஸ்வ மஹிஷியான பெரிய பிராட்டியாராம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேஸிக்க
தத் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரையாக நம் அளவும் ரஹஸ்ய த்ரயம் வர பிராப்தம் ஆகிறது –

இவ்வர்த்தம்
புனரபி ச ஏவ பகவான் ஸ்ரீ ரெங்கநாத ஸ்வ மஹிஷீ விஷ்வக்ஸேனஸ்ரீ பராங்குச நாத யமுனா ப்ரப்ருதி பூர்வாச்சார்ய முகேந
ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்த நிஷ்ணா தேஷு ஸூத்தம் ரஹஸ்ய த்ரய ஸம்ப்ரதாயம் அவதாரயாமாஸ -ரஹஸ்ய த்ரய மீமாம்ஸ பாஷ்யத்தில் வியக்தம் –
நாயக ரத்னம் போல் எம்பெருமானார் ஸோபா வஹாராக பிரகாசிக்கிறார்

அமுநா தபநாதி ஸாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகி ஸ்ரீ -தேசிகன் திருவாக்கு

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி ஜத்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்திமாபு பூர்வார் திருவாக்கு –

இந்தப்பரம்பரையில் சரம ஆச்சார்யர் மா முனிகள்-பெரிய ஜீயர் -ஈட்டுப் பெருக்கர் -விசத வாக் ஸிகா மணி –

ஈடு கால ஷேபம் பெரிய பெருமாளுக்கு அருளினார் அன்றோ –
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றார் அன்றோ-

மாநா தீநா மேய ஸித்தி -என்பர் பெரியோர் –
நம் தர்சனத்துக்கு பிரமாணங்கள் மூன்று -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -ஸப்தம்
ஸப்த பிரமாணமும் ஸ்ருதி ஸ்ம்ருதி மீமாம்ஸை கள் என்று மூன்று வகைப்படும் –
வேதத்தில் பூர்வபாகம் வேதம் என்றும் உத்தரபாகம் உபநிஷத் என்றும் ரஹஸ்ய த்ரயம் வேதாந்த ஸாரம் என்றும் கூறப்படும்
அந்த வேதாந்த சார நிஷ்கர்ஷம் பற்றிப் பார்ப்போம்-

—————-

அசாரம்-அல்ப ஸாரம்- ச ஸாரம் – சார தரம் த்யஜேத்
பஜேத் சார தமம் ஸாஸ்த்ரே ரத்நாகர இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீஷிதீயோபாத்த வசனம் ப்ராமண பாவத்தை வஹிக்கும் –
சமுத்திரத்தில் அடங்கியுள்ள அசாராதி சதுஷ்ட்யம் த்யாஜ்யம்
சார தமம் பஞ்சமம் அம்ருதம் உபாதேயம்

ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் -சார நிஷ்கர்ஷ அதிகாரத்தில் -தேசிகன் இந்த ஸ்லோக அர்த்த விவரணம் செய்து அருளுகிறார் –
பாஹ்ய குத்ருஷ்டி ஸாஸ்த்ரங்கள் -அசாரம்
வேத பூர்வ பாக ஐஹிக பல -தத் சாதன ப்ரதிபாதிக பாகம் அல்ப ஸாரம்
ஆமுஷ்மிக பல தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் ஸாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் சார தமம் -இதுவே விவேகிக்கு உபாதேயம்-

அதிகாரம்-2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –

ஸ்ருதி பத விபரீதம் ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
பிரகிருதி புருஷ போக பிராபக அம்ச ந பத்ய
தத் இஹ விபூத குப்தம் ம்ருத்யுபீதா விசின்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே உத்தமம் சாரமார்யா —

(வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும்
விஷத்துக்குச் சமமானவை. வேதங்களிலும்,இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும். ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு
அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில், உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,முன்பு ஆசார்யர்களால்
காப்பாற்றப்பட்டு வருகிறதுமான , மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்யத்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.)

இந்த ரஹஸ்ய த்ரயத்தில் திரு மந்த்ரம் சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம்-என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாய் இருக்கையாலும்
சரம ஸ்லோகம் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே
அவலம்பிக்க சர்வ உபாய பல சித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும்
த்வயம் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒரு கால் உச்சரித்தவனை சர்வ பிரகாரத்தாலும்
க்ருத க்ருத்யனாக்க வல்ல வைபவத்தை யுடைத்தாய் இருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுஷூ வுக்கு ஆதரணீயம் –
(ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீதஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–)

அசாரம் அல்பசாரம் ச சாரம் சாரதரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே -ஸ்தரம் -ரத்னாகர இவாம்ருதம் —

பரம புருஷார்த்தமும் தத் உபாயமும் பிரத்யஷாதி பிரமாணங்களால் அறிய ஒண்ணாத படியாலே இவற்றுக்கு
சாஸ்த்ராத் வேதின ஜனார்த்தனம் -என்றும் –
தஸ்மாத் சாஸ்திரம் பிரமாண்யம் கார்ய அகார்ய வ்யவச்திதௌ-என்றும்
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாத பரம் ப்ரஹ்மாதி கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே சப்தமே பிரமாணம் –

(*சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது -சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம் தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது– ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்)

அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்–

அவ்விடத்தில்
அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்னா
யத் சார பூதம் ததுபாததீத ஹம்சோ யதோ ஷீரம் இவ அம்புமிச்ரம் -உத்தவ கீதையிலிருந்து -3–10 -என்கிற ஸ்லோகத்தாலே
சார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக சாரத்தை விஷயீ கரிக்கிற சார தம சப்தம் உபாதேயம் —
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அத்யந்த அசாரங்கள் ஆகையாலே அனுபாதேயங்கள்
வேதத்தில் பூர்வ பாகத்தில் ஐஹிக பல சாதனமான பிரதிபாதகமான பிரதேசம் அத்யல்ப சாரமாகையாலே அநுபாதேயம் –
ஆமுஷ்கிக பல பிரதிபாதிக அம்சம் ஐஹிக பலத்தில் காட்டில் அதிசய பலத்தை யுடைத்தாகையாலே
சிலருக்கு சாரம் என்னவாய் இருந்ததே யாகிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டம் ஆகையாலே அநுபாதேயம்
ஆத்ம தத் ப்ராப்தி தத் சாதன மாத்ரத்தை பிரதிபாதிக்கும் அம்சமும் சார தரமாய் இருந்ததே யாகிலும்
அதிலும் அத்யந்த அதிசயிதமான பரமாத்மா அனுபவ சாபேஷருக்கு அநுபாதேயம்
பரமாத்ம தத் ப்ராப்தி தத் உபாயங்களை வெளியிடும் பிரதேசம் சார தமம் ஆகையாலே விவேகிக்கு உபாதேயம் –

(துக்க மூலத்வாதி தோஷம் –7
1.அல்பத்வம் —தர்ம,அர்த்த, காம ,மோக்ஷங்கள் அல்பம்;பகவானையே ஆச்ரயிக்கும்போது ,இவை அல்பமே
ஜடாயு, கேட்காமலேயே ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்தது ( மோக்ஷம் என்பது பகவானின் திருவடியை அடைதல் ) ஜடாயு மோக்ஷத்தையும் கேட்கவில்லை.
2. அஸ்திரத்வம் —ஸம்ஸாரத்தில் உழலும்போது, புண்ய, பாவ அஸ்த்ரங்கள் — கர்மவினை என்கிற சாக்கில், நம்மீது அஸ்த்ரமாகப் பாயும்.
3. துக்கமூலத்வம் —-ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடைவதற்கு முன்பாக
அந்த முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்க மிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் –அந்த விஷயத்தை இழக்கிறபோது ஏற்படும் துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம் —ப்ரக்ருதி ஸம்பந்தமான துக்கம்
7. ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தத்வம் —-பகவானின் திருவடியை அடைய தடையாக இருப்பது —எல்லாமே துக்கம்)

(ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்)

அவ் வம்சத்திலும்
பிரதான ப்ரதி தந்த்ரங்களான தத்வ ஹிதங்களுடைய சங்க்ரஹம் ஆகையாலே -மிகவும் சார தம –
உபாதேயமாய் இருக்கும் ரகஸ்ய த்ரயங்கள் -ஆகையாலே
பஹூப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர
சர்வதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத-மஹாபாரதம்—சாந்தி பர்வ-176-66 -என்கிறபடியே
ரகஸ்ய த்ரயம் முமுஷூ வான இவ்வாத்மாவுக்கு உபாதேயமாகக் கடவது
ஷட்பத -தேனீ போலே –

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —

அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்

சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-

சேஷத்வ ஸ்வரூப அநு வ்ருத்தி -பகவத் பாகவத பர்யந்த கைங்கர்யம் —
ஆஸ்ரிதர்கள் இடம் வாத்ஸல்ய அதிசயம் கொண்ட கீதாச்சார்யன் ஆப்த தம வசனம்
பகவானே வக்தா -வக்த்ரு வை லக்ஷணம் உண்டே-கிருபையின் பரிவாஹ ரூப வசனம் -விஸ்வசநீயம்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கும் திருமந்திரம்
ஸக்ருத் உச்சாரண மாத்ரத்தால் சம்சாரம் தாண்டுவித்து கால ஷேப அர்த்தமாக உள்ள த்வயம்
மஹா விசுவாசம் உண்டு பண்ணும் சரம ஸ்லோகம் –ஆகிய மூன்றுமே அனுசந்தேயம் என்றதாயிற்று –
இவற்றை அனுஷ்டான பர்யந்தமாக கொண்ட ஞானவான் துர்லபம் –
அப்படிப்பட்டவனும் அவனது பரிஜனங்களும் நமக்கு நாதர்கள்-என்றவாறு –

——————————————————————–

ஆயினும் ஆராய்ந்தால் அசார பதத்துக்கு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ர பரத்வம் கொள்ளுகை உசிதம் அன்று என விளங்கும்
பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வமே இல்லையே அன்றோ
அலௌகிக பலத்தையும் தத் சாதநாதி களையும் ப்ரதிபாதிக்குமது அன்றோ ஸாஸ்த்ரம் –
சாஸநாத் ஸாஸ்த்ரம் இறே
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யாஸ் ச காஸ் ச குத்ருஷ்ட்யா
ஸர்வாஸ்தா நிஷ் பலா ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா -என்று இறே மநு பகவான் அருளிச் செய்தார்
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி -என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷித்தம்
இவ்விடத்தில் பர ஸப்தம் உத்க்ருஷ்ட பரம் அன்று -பர ஸப்தம் அந்நிய வாஸி எனக்கொள்ள வேண்டும் –
வேத பின்னத்துக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷேதிக்கப் படுகிறது –

த்யாஜ்ய உபாதேய விபாகம் ஏக அவயவியிலே அன்றோ செய்யப்படுகிறது -சமுத்திரம் -த்ருஷ்டாந்தம் –

இனி வாஸ்த்வ அர்த்தம் பார்ப்போம்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய ப்ரதிபாதக பாகம் அசாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் அல்ப ஸாரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன பக்தி ப்ரதிபாதிக பாகம் ஸாரம்
பகவத் அனுபவ பரீவாஹ ஸ்வார்த்த கைங்கர்ய தத் சாதன பூதாத்ம சமர்ப்பண ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரார்த்த கைங்கர்ய தத் சாதன ஸித்த உபாய ப்ரதிபாதக பாகம் சார தமம்
என்றே வாஸ்தவார்த்தம்
ஆக
வேதாந்த பின்னமாய் -சாரத்வேந ப்ரபலமாய் -சார தமமுமான ஸாஸ்த்ரமாம் ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸாரம் எனத் தேறியது –

————

இனி மா முனிகள் கண்ட இதனுடைய நிஷ்கர்ஷத்தை நிரூபிக்கிறோம் –

வைதிகர்கள் வேதார்த்தங்களை நிர்வஹிக்கும் கட்டளைகள் வெவ்வேறு பட்டு இருக்கும் -எங்கனே என்னில்
வேதம் ஜ்யோதிஷ்டோமாதி கர்மங்களைப் பிரதானமாகத் தெரிவிக்கிறது
வேதாந்த விஷயமான ப்ரஹ்மம் ஜீவ பின்னமானதோர் தத்வம் அல்ல
யுகாதி கர்மங்களை செய்கிற ஜீவாத்மாவையே வேதாந்தங்கள் கொண்டாடுகின்றன –
ஆக கர்மபரம் வேதம் -கர்ம கர்த்ரு ஜீவ ப்ரஸம்ஸா பரம் வேதாந்தம் -என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் சில வைதிகர்கள் –

வேதாந்தம் பக்தி ப்ரபத்திகளான பற்பல உபாயங்களை ப்ரதிபாதிக்கிறது –
நாநா ஸப்தாதி பேதாத்
விகல்ப
அவி ஸிஷ்ட பலத்வாத் -என்று இறே ஸூத்ர காரர் அருளிச் செய்தார் –
ரஹஸ்ய த்ரயமும் வேதாந்தத்தில் அடங்கியதே-பின்ன ஸாஸ்த்ரம் அல்ல –
பூர்வ பாகமான வேதத்தில் சொல்லப்பட்ட கர்மம் பகவத் கைங்கர்ய ரூபமாகும்
அதுவும் ஸ்வார்த்தம் -நம் ஆனந்ததுக்கு உறுப்பாகச் செய்யப்படுமது
பக்தியும் ப்ரபத்தியும் பகவத் ப்ராப்தி உபாயங்கள் -அதாவது பகவத் ப்ரஸாத ஜனகங்கள்
நம்முடைய பக்தி ப்ரபத்திகளாலே பகவானுக்கு அருள் பிறக்கிறதாகையாலே பகவத் ப்ரஸாதம் ஸ ஹேதுகம் என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவார் சில வைதிகர்கள் –

ஸித்த உபாய பூதன் ஸர்வேஸ்வரன்
அவன் ஸஹாயாந்தர நிரபேஷ உபாய பூதன்
இவன் பண்ணும் பக்தி ப்ரபத்திகள் -தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஸம் -என்கிறபடி பகவத் ப்ரஸாத ஜன்யங்கள்
அவன் அருளாலே விளைந்தவை
பல பூதங்கள் உபாயம் அல்ல என்றபடி
ஆத்ம புத்தே ப்ரகாஸ யஸ்மாத் ஸ ஆத்ம புத்தி ப்ரகாஸ
தத் விஷய புத்தி ஸ்புரணஸ்ய தத் அநு க்ரஹாயத் தத்வாத் -என்ற ஸ்ரீ ரெங்க ராஜ முனி பாஷ்யம் காணத் தக்கது –
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் அதுவும் அவனது இன்னருளே –
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே -என்ற ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் திருவாக்கும் –
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -என்ற ஆள வந்தார் திருவாக்கும்
வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே சரணமிதி வஸோ அபி மே நோதியாத் -என்ற ஆழ்வான் திருவாக்கும் இவ்விடம் அநுசந்தேயங்கள்

ஆக பக்தி ப்ரபத்திகள் ஈஸ்வர கிருபா பலம் எனத் தேறியது –
பூர்வ பாக யுக்த கர்மம் பகவத் கைங்கர்ய ரூபம் -அதுவும் பரார்த்தமே -அவன் முக மலர்த்திக்கு உறுப்பானது –
உத்தர பாக யுக்த பக்தி ப்ராப்ய ருசி ஆகலாம் -பிரபத்தி ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ரூபமாகலாம்
ப்ரஸாத விசிஷ்டனே உபாய பூதன் -அவன் ப்ரஸாதம் நிர் ஹேதுகம் –
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமுமே என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் பரம வைதிகரான நம் பூர்வர்கள் –

இவ்வர்த்த நிஷ்கர்ஷம் வேதாந்த சார லப்தம்
வேத பூர்வ பாகத்தில் ப்ரதிபாதிதமான கர்மங்களுடைய யாதாத்ம்யம் -வாஸ்த்வ ரூபம் -பகவத் கைங்கர்யத்வம் ஆகும் –
வேதாந்த ப்ரதிபாத்யமான பக்தியினுடைய உண்மை நிலை ப்ராப்ய ருசித்வம் -அதாவது
பகவத் அனுபவ கைங்கர்யங்கள் விஷயமான ப்ரீதி ரூபமாய் இருக்கை –
வேதாந்த ப்ரதிபாத்ய ப்ரபத்தியினுடைய உண்மையான ஆகாரம் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்வம் -அதாவது
ஜீவாத்மாவின் இயல்பான நிலையான பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை விஷயமாக யுடைய ஞானமாய் இருக்கை –
இவையும் இவ்வதிகாரிக்கு ப்ராப்யமான பகவத் கைங்கர்யத்தினுடைய பாராரத்வம் முதலானவையும் வேதாந்த சார வேத்யங்கள் ஆகும்
அதாவது ரஹஸ்ய த்ரய வேத்யம் என்றபடி –

———-

இவ்வர்த்தத்தை சில உதாஹரணங்களாலே விளக்குகிறார்
1-கட படாதி பேதம் ப்ரத்யக்ஷ ஸித்தம்
அப்ராப்தே ஹி ஸாஸ்த்ரம் அர்த்தவத் -என்கிற நியாயத்தாலே பேதம் வேதாந்த வேத்யம் அன்று
ஜீவ பரா பேதமே வேதாந்தார்த்தம் என்பர் ம்ருஷ வாதிகள்
இக்கூற்றுக்கு சமாதானம் அருளிச் செய்கிறார் தத்வ சாரத்தில் நடாதூர் அம்மாள் என்று ஸூ ப்ரஸித்தரான வாத்ஸ்ய வரதாச்சார்யர் ஸ்வாமிகள்
ப்ரத்யஷாதி தரஸ்து ஸாஸ்த்ர விஷய பேத த்வதத் வைதவத்-என்று
அதாவது
ப்ரத்யக்ஷ ஸித்த பேதம் ஸ்வ தந்த்ர பேதம்
பொருள்கள் பகவத் சேஷம் யுடையவை என்று அறியப்படாதே ஸ்வ தந்த்ரங்களாகவே அறியப்படுமவையாய் இருக்கும்-
இது ப்ரத்யக்ஷ ஸித்தம்
இனி ஸாஸ்த்ர ஏக வேத்யமான அர்த்தம் என்ன வென்றால்
இவை எல்லாம் பகவத் விபூதிகள் -பகவத் பரதந்த்ரங்கள் -பகவானுக்கு சொத்தாய் இருக்குமவை என்பதேயாம்
ஆக பிரத்யஷத்தால் இவற்றின் ஸ்வா தந்தர்யம் ஞானமானாலும் ஸாஸ்த்ரம் கொண்டே இவற்றினுடைய பாரதந்தர்யம் ஆகிற ஸ்வரூப யாதாத்ம்யம் அறியப்படுமா போலேயும்

2- கட படாதி ஸப்தங்கள் -வ்யுத்புத்தி நிகண்டு ப்ரப்ருதிகளாலே குடம் வஸ்திரம் முதலான வஸ்துக்களுக்கு மாத்ரம் வாசகங்களாகத் தோற்றுகின்றன
ஆயினும் ஸகல ஸப்தங்களும் பகவத் பர்யந்தமாகச் சொல்லி அல்லது நில்லாது என்னும் அர்த்தம்
வஸஸாம் வாஸ்யம் உத்தமம் -இத்யாதி ஸாஸ்த்ரம் கொண்டே அறிய வேணும் –
அது போலவும்
பக்தி ப்ரபத்திகள் உபாயம் இத்யாத் யர்த்தங்கள் வேதாந்தங்களைக் கொண்டு நாம் அறிந்து இருந்தாலும் பக்தி ப்ரபத்திகளின் யல்பான ஸ்வரூபத்தை வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரயம் கொண்டே அறிய வேணும் என்றபடி –


கர்ம ப்ராதான்ய வாதிகள் வேத பூர்வ பாக அர்த்த நிஷ்டர்கள்
அவர்களை -பக்தி ப்ரபத்திகள் உபாயம் -ஸ்வார்த்த கைங்கர்யம்புருஷார்த்தம் -என்று சொல்லி வேதாந்த வித்துக்கள் கண்டித்தார்கள்
அந்த வேதாந்திகளையும் பக்தி ப்ரபத்திகள் அதிகாரி விசேஷணங்கள் -பகவத் கிருபா பல பூதங்கள் -பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்று
சொல்லி வேதாந்த சார நிஷ்டர்கள் கண்டிக்கிறார்கள்
ஆக வேதாந்தங்களைக் காட்டிலும் பின்னமாயும் உயர்ந்ததாயும் -உள்ள வேதாந்த ஸாரமான ரஹஸ்ய த்ரயம்
பரார்த்த கைங்கர்யம் பலம்
பக்தி ப்ரபத்திகள் பகவத் ப்ரஸாத பலம் -என்று செய்யும் நிஷ்கர்ஷமே வேதாந்த சார நிஷ்கர்ஷம்
இவ்வர்த்தமே பஞ்சமம் சார தமம்
இதுவும் இதற்கு ப்ரதிபாதிக வேதாந்த ஸாரமுமே உபாதேயம் என்றதாயிற்று –

அர்த்த தத்வம் இப்படி இருக்க -ஸ்ருதி பத விபரீதம் -என்று தேசிகன் அருளிச் செய்ய ஹேது என் என்ன
வீத ராக வ்யதிரிக்தாநாம் கர்மணி அஸ்ரத்தா நிவாரணர்த்தம் அன்வாருஹ்ய வாத -என்கிறபடியே
சில அதிகாரிகளுக்கு கர்மங்களில் அஸ்ரத்தையைத் தடுக்க ஜைமினி
ப்ரஹ்ம ஸாஸ்த்ரத்தை கர்ம ஸாஸ்த்ர சேஷமாக வர்ணித்தது எப்படி அன்வாருஹ்ய வாதமோ
அப்படியே ஆத்ம யாதாத்ம்ய ஞான விரஹிகளுக்கு ஸாத்ய உபாய ஸாஸ்த்ரத்தில் அஸ்ரத்தையைத் தடுக்க
ஸித்த உபாய ஸாஸ்த்ரம் -ரஹஸ்ய த்ரயம் -அதிரிக்தமாய் இருக்கச் செய்தேயும்
சாதன பக்தி பிரபத்தி ஸாஸ்த்ர ரூப வேதாந்தங்களில் அந்தர்பூதம் என்று அன்வாருஹ்ய வாதமாக அருளிச் செய்தார் தேசிகன் என்று கொள்ள வேண்டும்

இங்கே
விஷய சார பாகோ அயம் வேதாந்தாத் பர இஷ்யதே
பரத்வம் சார ஸாஸ்த்ரஸ்ய ஹி அஸாரம் இதி மாநத -இத்யாதி வசனங்களை அனுசந்திப்பது –
இதனால் தேறிய பொருளாவது
வேதத்தை வேதாந்த அனுகுணம் நயனம் செய்யுமா போலே
வேதாந்தத்தை வேதாந்த சார அனுகுணம் நயனம் பண்ண வேணும் என்று
ஆகையால் சாரீரக ஸாஸ்த்ர அனுகுணம் ரஹஸ்ய த்ரய நயனம் என்கை உசிதம் அன்று
ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீரக பாஷ்யாதி நயனம் உசிதம் என்றதாயிற்று
ரஹஸ்ய த்ரய ப்ரஸ்தானம் சார தமம் ஆகையாலே என்றபடி –


ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண பாஞ்சராத்ர ரூப ஸகல சாஸ்த்ரார்த்த நிர்ணாயகம் சாரீரகம் என்று கூறவும் முடியாது
ஸ்ருத்யர்த்த நிர்ணாயகம் சாரீரகம் ஆயினும் ஸ்ம்ருதி யாதி யர்த்தம் சாரீரகம் என்ன ஒண்ணாது
வேத வியாசர் ஓர் அதிகரணத்தில் ஸ்ருதி அர்த்தங்களில் ஓர் அர்த்தத்தை நியாய மார்க ஸஞ்சாரம் செய்து அறுதியிட்டு அதற்கு ஸம்வாத பிரமாணமாக
ஸ்ம்ருதேஸ் ச
ஸ்மரந்தி ச-என்று ஸ்ம்ருதி யாதிகளை உதாஹரிக்கிறார்
ஸுத்ரீ தர்க்கா ப்ரதிஷ்டா -என்ற தேசிகன் திருவாக்கையும்
த்வயம் கலு தர்க்க ஜாதம் ஸ்ருதி விருத்தம் அவிருத்தம் சேதி -தேந தர்க்கா ப்ரதிஷ்டா வசனம் -என்றும்
ஆர்ஷம் தர்மோபதே சஞ்ச இத்யாதி பிரகாரேண வேத விருத்த தர்க்க விஷய தயா யோஜ்யம்
ந புந வேத இதி கர்த்தவ்யதா ரூப தர்க்க விஷயம் -என்ற தேசிகன் திருக்குமாரர் திரு வாக்கையும் இங்கே அனுசந்திப்பது –
அதீத சாகார்த்த நிர்ணா யகம் நியாயம்
அந தீத சாகார்த்த நிர்ணா யகம் ஸ்ம்ருதியாதி என்று இறே நிஷ் கர்ஷம்
ஸ்ருதியிலும் சார்வத்ரிகமாக நியாய சஞ்சாரம் இல்லை
அஸ்பஷ்ட ஸ்தல மாத்ரத்திலே இறே நியாய சஞ்சாரம்
நியாய நிரபேஷமாக ஸித்தம் -என்ற ரஹஸ்ய த்ரய சார பரிகர விபாகாதிகார வாக்கியத்தையும் காணலாம்
ஸ்ருதிகளில் போலே ஸ்ம்ருதிகளிலும் நியாய ஸஞ்சாரம் கொண்டால் உப ப்ரும்ஹ்ய உப ப்ரும்ஹண பேதமே அற்றுப் போம்
நியாயங்களைக் கற்றுத் தெளிந்த ஸ்ரீ மைத்ரேயன் ஸ்ரீ பராசர பகவானைக் கிட்டினார் புராண ஸ்ரவணம் செய்ய என்று இறே ஸ்ரீவிஷ்ணு புராண உபக்ரமம் –
பாஷ்யகாரர்

இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவர் -என்று நாயனாரும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -என்று தேசிகனும் அருளிச் செய்தவை அனுசந்தேயம்
அருளிச் செயல்களைக் கொண்டு அன்றோ சரீரக அர்த்த நிர்ணயம் என்று அருளிச் செய்யப்பட்டது
சாரீரகத்தைக் கொண்டு அருளிச் செயல் அர்த்தங்களை அறுதியிடுவது என்று அருளிச் செய்திலரே
ஆகையால் உப ப்ரும்ஹணங்களுக்கு சாரீரக நியாய அபேக்ஷை பொருந்தாது

ஆக வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீர காதி நயநம் கார்யம் என்றதாயிற்று

ஆக வேதாந்த சாரீரகாதி ப்ரதிபாத்ய பக்தி ப்ரபத்திகள் பலம்
ப்ரஹ்மம் ஒன்றே உபாயம்
பூர்வ பாக உதித கர்மம் பரார்த்த கைங்கர்ய ரூபம் -என்று
வேதாந்த சார நிஷ் கர்ஷம் -என்றதாயிற்று

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ வர வர முனி உத்தர தினசர்யா–ஸ்லோகம் 1-14–ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது – ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி உரை —

May 25, 2022

இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் |
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||

பதவுரை:

இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே,

ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற,

ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான,

உதிதை: – பேச்சுக்களாலே,

யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை,

ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற,

வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே,

சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற,

இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது,

நிரத்யயம் – நித்யமான,

ப்ரஸாதம் – தெளிவை,

ஏதி – அடைகிறது.

கருத்துரை:

இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த

தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற

மணவாளமாமுனிகளொருவரையே நினைத்துக்கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து,

முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா.

‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதிநூலால் மகிழ்விக்கும்

மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று.

பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட,

ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி.

இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச்சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று

மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது

எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ளவேணும்.

தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும்

ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார்.

கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹாபுருஷர்கள்.

‘ப்ரஹர்ஷயந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக் குறிக்கும், ‘

ப்ர’ என்று உபஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும்

ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதேயன்றி அந்த ஸந்தோஷத்தைக்கொண்டு

மாமுனிகள் வேறொருபயனை ஸாதித்துக்கொள்ள நினைக்கவில்லையென்பதை அறிவிப்பதற்காகவே என்க.

வரவரமுநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான

ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக் காட்டிலும்

எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம்மணவாளமாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும்.

எம்பெருமானை நினைப்பவரைவிட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர்.

இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது.

ஸ்ருதிமதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம்.

ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும்.

இந்த யதிராஜவிம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும்

தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாபகாரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி,

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும்,

ஆத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டுபண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும்,

‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும்  ஏற்குமென்க.

மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி

மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க.

(யதிராஜவிம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்திப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.

————-

அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் |
வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் ||-2-

பதவுரை:

அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு,

கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான,

ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய,

கோஷ்டீம் – ஸமூஹத்தை,

அதிஷ்டாய – அடைந்திருந்து,

வாக்யாலங்க்ருதிவாக்யாநி – ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்திலுள்ள வாக்யங்களை,

வ்யாக்யாதாரம் – விவரித்துரைக்கும் தன்மையரான,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை:

இதுவரையில் க்ரந்தநிர்மாணமாகிய ஸ்வாத்யாயத்தை அருளிச்செய்து,

இனி ஸ்வாத்யாயத்தில் மற்றொருவகையான பூர்வாசார்யக்ரந்த வ்யாக்யானத்தை அருளிச்செய்கிறார்.

கரிஷ்டா – அத்யந்தம் குரவ: கரிஷ்டா: – உயர்ந்த ஆசார்யர்கள் என்றபடி.

இவர்களுக்கு அடைமொழி – ஸுமேத ஸ: என்பது. ஒருதடவை சொல்லும்போதே பொருளை நன்றாக அறிதலும்,

அறிந்த பொருளை மறவாதிருத்தலும், மேதா எனப்படும்.

ஸுமேத ஸ: நல்ல மேதையை உடையவர்களை, இங்ஙனம் நல்ல மேதாவிகளாய் கரிஷ்டர்களானவர் யார் என்றால் –

கோயில் கந்தாடையண்ணன், வானமாமலை ஜீயர் முதலிய அஷ்டதிக் கஜாசார்யர்களேயாவர்.

இதுவரையில் யோகத்தில் ரஹஸ்யமாக எம்பெருமானாரை அநுபவித்தவர்,

அதைவிட்டு ஸிஷ்யர்கள் இருக்கும் கோஷ்டியில் சேர்ந்து அவர்களுக்கு

ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்தை விவரித்தருளிச்செய்கிறார் மாமுனிகள்.

அன்னவரை வணங்குகிறேனென்றாராயிற்றிதனால்.

வசநபூஷணம் – ரத்நங்களை நிறைய வைத்துப் பதித்துச் செய்த பூஷணத்தை (அணிகலனை) ரத்நபூஷணம் என்று சொல்லுமாப்போலே, பூர்வாச்சார்யர்களுடைய வசநங்களை (சொற்களை) நிறைய இட்டுப் (தமது சொற்களைக் குறைய இட்டு) படிப்பவர்களுக்கு

ப்ரகாஸத்தையுண்டாக்குமதாகப் பிள்ளைலோகாச்சார்யரால் அருளிச்செய்யப்பட்ட க்ரந்தம் வசநபூஷணமென்று சொல்லப்படுகிறது.

அது பரமகம்பீரமாகையால் அதன் பொருள் விளங்கும்படி மாமுனிகள் வ்யாக்யானம் செய்தருளுகிறார்.

வ்யாக்யானமாவது – பதங்களைப்பிரித்துக்காட்டுதல். பொருள் விளங்காத பதங்களுக்குப் பொருள் கூறுதல்,

தொகைச்சொற்களை இன்ன தொகையென்று தெரிந்து கொள்வதற்காக அதற்கேற்றபடி பிரித்துக்கூறுதல்,

வாக்கியங்களிலுள்ள பதங்களில் எந்தப் பதம் எந்தப்பதத்தோடு பொருள் வகையில் பொருந்துமோ

அப்படிப்பட்ட பொருத்தம் காட்டுதல், ஏதாவது கேள்வி எழுந்தால் அதற்கு விடை கூறுதல் ஆகிய இவ்வைந்து வகைகளையுடையதாகும்.

‘ஸுமேத ஸ: கரிஷ்டா:’ என்று சொல்லப்பட்ட கோயில்லண்ணன் முதலியவர்களுக்கும் அறியமுடியாத வசநபூஷணத்தின்

பொருளை மணவாளமாமுனிகள் விவரிக்கிறாரென்றதனால், ஸ்ரீவசநபூஷணநூலின் பொருளாழமுடைமையும்,

மாமுனிகளின் மேதாவிலாஸமும் அறியப்படுகின்றன. எல்லாவகையான வேதங்கள் ஸ்ம்ருதிகள்

இதிஹாஸங்கள் புராணங்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள், திவ்யப்ரபந்தங்கள் ஆகியவற்றின் ஸாரமான பொருள்களெல்லாம்

ஸ்ரீவசநபூஷண க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ளதனால், இந்த ஒரு நூலை விவரித்துச்சொன்னால்

அந்நூல்களெல்லாவற்றையும் சொன்னதாக ஆகுமாகையால் இந்நூலை விவரித்து

எல்லாவிதமான ஸ்வாத்யாயத்தையும் அநுஷ்டித்தாராயிற்று மாமுனிகள் என்க.

—————-

ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: |
ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3)

பதவுரை:

தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு,

ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய,

ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை,

ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு),

க்ருத்வா – செய்து,

ஸுபை: – கேட்பாருக்கு நன்மை பயக்குமவையான,

ஸ்வை:ஆலாபை: – தம்மிஷ்டப்படியே பேசும் ஸுலபமான பேச்சுக்களாலே,

ஸ்ரோத்ரூந் – கேட்போரை,

நந்தயந்தம் – மகிழ்வித்துக்கொண்டிருக்கிற,

தம் – அம்மாமுநிகளை,

நமாமி-வணங்குகிறேன்.

கருத்துரை:

‘ஆர்வசனபூடணத்தின் ஆழ்பொருளல்லாமறிவார் ? ஆர் அது சொல் நேரில் அநுட்டிப்பார்’ (உபதேச. 55) என்கிறபடியே

அறிவதற்கும், அறிந்தபடியே அநுஷ்டிக்கைக்கும் முடியாத ஸ்ரீவசநபூஷணார்த்தங்களை ஸிஷ்யர்களுக்கு

உபதேசிக்கும்போது எவ்வளவு எளிய நடையில் உபதேசித்தாலும், அர்த்தத்தின் அருமைக்கு ஏற்றபடி

அவ்வுபதேசமும் அரிய நடையாகவே தோன்றும்.

ஸாயம்ஸந்த்யாவந்தநமும் பெருமாள் திருவாராதநமும் முற்றுப்பெற்ற பின்பு இப்போழுது செய்யும் ப்ரவசநம்

தன்னிச்சைப்படி தானாகவே வரும் எளிய பேச்சாகவே இருக்கும். இதுவே ஸ்வைராலாபம் எனப்படும்.

ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மிகமிக எளிமையான பேச்சுக்கு ஸ்வைராலாபம் என்று பெயர்.

இத்தகைய பேச்சுக்களாலே முன்பு ஸ்ரீவசநபூஷணம் கேட்ட  தம் ஸிஷ்யர்களையே மகிழ்விக்கிறார் மாமுனிகள் என்க.

இங்கு ‘ஹரி:’ என்றது பூர்வதிநசர்யையில் பதினேழாம் ஸ்லோகத்தில் ப்ரச்தாவிக்கப்பட்ட ‘ரங்கநிதி’ என்ற

தம் திருவாராதநபெருமாளாகிய அரங்கநகரப்பனையேயாகும்.

ஹரி: என்றதற்கு ஆஸ்ரிதருடைய விரோதியைப் போக்குமவனென்றும்,

எல்லா தேவதைகளையும் நியமிப்பவன் (அடக்கியாள்பவன்) என்றும் பொருள்.

பூர்வதிநசர்யையில் ‘அத ரங்கநிதிம்’ (17) என்று காலையாராதநமும், ‘

ஆராத்யஸ்ரீநிதிம்’ (29) என்று பகலாராதநமும்,

இந்த ஸ்லோகத்தில் மாலையாராதநமுமாகிய மூன்று வேளைத் திருவாராதநங்களும் கூறப்பட்டது காணத்தக்கது.

———–

தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ |
விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே || (4)

ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே |
ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே || (5)

பதவுரை:

தத: – அதன்பிறகு,

தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய்,

விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், மழமழப்பானதும், பருமனானதுமான பஞ்சுமெத்தையினால் விளங்குகின்ற தாய்,

ஸமக்ரஸௌரப உத்கார நிரந்தர திகந்தரே – நிறைந்த, பெருமாள் சாத்திக்களைந்த மாலைகளின் நறுமணத்தின் ப்ரவாஹத்தினால் சூழப்பட்ட நான்கு திக்குகளையுமுடையதாய்,

ஸோபதாநே – சாய்ந்து கொள்வதற்கேற்ற தலையணைகளை உடையதாயுமிருக்கிற,

கநகபர்யங்கே – தங்கத்தாலான மஞ்சத்தில்,

ஸுகுமாரே – மிகவும் மெத்தென்றிருக்கிற,

வரஆஸநே – (த்யானத்துக்கு உரியதாய்) உயர்ந்த தர்ப்பம் மான்தோல் துணிகளையிட்டுச் செய்யப்பட்ட ஆஸநத்தில்,

ஸுகஆஸீநம்-(த்யானத்திற்கு தடையில்லாதபடி) ஸுகமாக உட்கார்ந்திருக்கிற,

தம்-அந்த மணவாளமாமுநிகளை,

சிந்தயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை:

ஸகலஸாஸ்த்ரார்த்தங்களுக்கும் நோக்கான பஞ்சமோபாயத்தின் (எம்பெருமானாரே மோக்ஷோபாயம் என்பதின்)

பெருமையை உள்ளடக்கியிருக்கும் தமது இனிய எளிய பேச்சுக்களாலேயே ஸிஷ்யர்களை மகிழ்வித்தபின்பு,

அவ்வெம்பெருமானாரை த்யாநம் செய்வதற்கு உறுப்பாக மாமுனிகள் ஸ்வர்ணமயமான கட்டிலில்

ஆஸநத்தில் எழுந்தருளியிருக்கும் அழகை, தாம் ஸதா த்யாநம் செய்வதாக இந்த ஸ்லோகத்தினால் தெரிவிக்கிறார்.

தாமே ஆசைப்பட்டு மஞ்சத்தில், அதிலும் ஸ்வர்ண மஞ்சத்தில் உட்காருதல், ஸந்யாஸிகட்கு ஸாஸ்த்ரத்தில்

மறுக்கப்பட்டிருந்தாலும் ஸிஷ்யர்களுடைய வேண்டுகோளுக்கிரங்கி, அவர்கள் செய்வித்திட்ட

ஸ்வர்ணமஞ்சத்தில் வீற்றிருப்பது மறுக்கப்படவில்லையென்பது கருதத்தக்கது.

‘பொன் வெள்ளி வெண்கலம் செம்பு கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உண்பதினால்

ஸந்யாஸிக்கு பாபம் ஏற்படாது. அப்பாத்திரங்களைப் பிறரிடம் கேட்டுத் தானமாக வாங்கினால் தான்

பாபம் உண்டாகும்’ என்று மேதாதிதி கூறியதை நோக்கினால்,

உண்ணும் கலத்தைச் சொன்னது கட்டிலுக்கும் உபலக்ஷணமாய், பொன்னால் செய்த கட்டிலை

கேட்டுப் பெற்றுக் கொள்ளாமல், ஸிஷ்யர்கள் பொன்கட்டிலை இட்டு அதில் வீற்றிருக்கும்படி ப்ரார்த்தித்தால்

அதன் மீது வீற்றிருப்பது குற்றத்தின்பாற்படாதென்று கொள்ளல்தகும்.

பொன்னின் மீதோ கட்டிலின் மீதோ தமக்குள்ள ஆசையைத் தடுக்கமுடியுமே தவிர,

மிகமிக உயர்ந்தவர்களான ஸிஷ்யர்களின் வேண்டுகோளைத் தடுக்கமுடியாதிறே எப்படிப்பட்ட ஸந்யாஸிகளுக்கும்.

ஆக பொன் கட்டிலை இவர் உபயோகிப்பது தவறன்றென்க.

———–

உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம்
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் |
அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ
திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6

பதவுரை:

தயாளு:‍‍‍‍‍‍‍‍ – கருணை புரியுந்தன்மையராய்,

தேசிகேந்த்ர: – ‍ ஆசார்யர்களில் உயர்ந்தவரான,

ரம்யஜாமாத்ருயோகீ ‍- அழகிய மணவாளமாமுனிகள்,

உந்மீலத்பத்ம கர்ப்பத்யுதிதலம் ‍- மலர்ந்து கொண்டேயிருக்கிற தாமரைமலரின் உட்புறத்தின்

(சிவந்த) காந்தி போன்ற காந்தியையுடைய அடிப்பகுதியை (உள்ளங்காலை)யுடையதும்,

உபரிமேற்பகுதியில்,

க்ஷீரசங்காத கௌரம் ‍- பாலின் திரட்சி போல் வெளுத்ததும்,

ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுரநகமணி த்யோத வித்யோதமாநம் ‍- பௌர்ணமீ சந்த்ரனுடைய காந்தி போன்ற

(வெளுத்த) காந்தியால் நிறைந்த அழகிய நகங்களின் காந்தியினால் விளங்காநிற்பதும்,

அங்குளி அக்ரேஷு ‍- நகங்களின் நுனிப்பகுதிகளில், கிஞ்சித் நதம் ‍- சிறிது வளையையுடையதும்,

அதிம்ருதுலம் ‍- மிகவும் மெத்தென்றிருப்பதும்,

திவ்யம் ‍- அப்ராக்ருதமானதும்,

தத் ‍- மிகச்சிறந்ததுமான,

பாதயுக்மம் ‍- (தமது) திருவடியிணையை,

மே சிரசி ‍- அடியேனுடைய தலையில்,

திசது ‍- வைத்தருளவேணும்.

கருத்துரை:

இந்த ச்லோகம் முதலான ஆறு ச்லோகங்கள் சிஷ்யர்களின் ஸ்தோத்ர ரூபமாக அமைந்திருக்கின்றன.

இம்முதல் ச்லோகத்தில் ஒரு சிஷ்யர் தமது சிரஸிற்கு அணிகலனாக மணவாளமாமுனிகள்

தம் திருவடியிணையை வைத்தருளவேணுமென்று வேண்டுகிறார்.

தயாளு: ‍ தயைபுரிவதை இயற்கையாகக் கொண்டவர்.

பிறர் தமக்கு அடிமை செய்தால் அதுகாரணமாக தயையுண்டாகப் பெறும் பிற ஆசார்யர்களைப் போலல்லாமல்,

இயற்கையாகவே அனைவரிடத்திலும் தயை புரியும் எம்பெருமானாரைப் போன்றவர் இம்மாமுனிகள் என்றபடி.

திசதி ‍ உபதிசதி இதி தேசிக: ‍ சாஸ்த்ரார்த்தங்களை உபதேசிப்பவர் தேசிகரெனப்படுகிறார்.

தேசிகாநாம் இந்த்ர: ‍ தேசிகேந்த்ர: ஆசார்யர்களாகிற தேசிகர்கட்குத் தலைவரென்றபடி.

ஆசார்யர்கட்குத் தலைவராகையாவது ‍ ஆசார்யர்களுக்கு இருக்க வேண்டிய அறிவு, அறிவுக்குத்தக்க அநுஷ்டானம்,

தயை முதலிய குணங்களால் நிறைந்தவராயிருக்கை.

மணவாளமாமுனிகளின் திருவடிகளின் அடிப்புறம் தாமரைமலர் போல் சிவந்ததும், நகங்கள் நிலவைப்போல் வெளுத்தும்

விரல்களின் நுனிகள் கொஞ்சம் வளைந்தும், பொதுவாகத் திருவடி முழுவதும் மிகவும் மெத்தென்றும்

பால்போல் வெளுத்தும் இருக்கின்றனவாம்.

மாமுனிகள் ஆதிசேஷாவதாரமாகையால், அவர் திருவடியிணையை அப்ராக்ருதம்

(பரமபதத்தில் உள்ளதொரு உயர்ந்ததான பொருள்) என்றார்.

இவ்வுலகிலுள்ள சம்சாரிகளின் பாதங்கள் போல் தாழ்ந்தவையல்ல என்றபடி.

கீழ்த் திருவடிகளுக்கு ‘உந்மீலத்பத்மகர்ப்ப’ என்று தொடங்கிச் சொன்ன அழகுகளெல்லாம்

உத்தம புருஷனுக்கு இருக்கவேண்டிய உத்தம லக்ஷணங்களாகும்.

இத்தகைய சிறப்பத்தனையும் பெற்றுத் தமக்கு வகுத்ததுமான திருவடிகளை வைத்தருளவேணுமென்று

ஒரு சிஷ்யர் மாமுனிகளை ப்ரார்த்தித்தாராயிற்று.

இதனால் பகவத்பக்தரான ஆழ்வார் ‘நின்செம்மாபாதபற்புத்(பத்மத்தை) தலைசேர்த்து’ என்று எம்பெருமானை வேண்டினார்.

ஆசார்ய பக்தரான ஒரு சிஷ்யர் ‘பாதயுக்ம சிரசி திசதுமே’ என்று ஆசார்யரான மாமுனிகளை வேண்டுகிறார்.

மாமுனிகள் தமது திருவடியிணையை அடியேன் முடியில் வைத்தருளட்டும்’ என்று படர்க்கையாக இருந்தாலும்,

‘மாமுனிகளே! தேவரீர் திருவடிகளை அடியேனுடைய சிரஸில் வைத்தருளவேணும்’ என்று முன்னிலைப்படுத்தி

ப்ரார்த்திப்பதிலேயே இதற்கு நோக்கு. இவ்விஷயம் மேலுள்ள பல ச்லோகங்களால் விளக்கமுறும்.

—————-

த்வம் மே பந்து  ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா  தேஸிகஸ் த்வம் 
வி த்யா  வ்ருத்தம் ஸுக்ருதமதுலம்  வித்தமப்யுத்தமம் த்வம்| 
ஆத்மா ஶேஷீ  பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா  த்வம்  
யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்||-7-

பதவுரை:

ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே

த்வம் – தேவரீர் அடியேனுக்கு,

பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் .

த்வம்  ஜநக: அஸி – கல்வி கற்பிப்பதனாலே நன்மையைத் தேடும் தமப்பனார் ஆகிறீர்,

த்வம்  ஸகா  அஸி-(1)ஆபத்தில் உதவும் தோழராகிறீர் , (2)பகவதநுபவ  காலத்தில் துணைவர் ஆகிறீர்:

த்வம்  தேஸிக : அஸி – அறியாதவற்றை அறிவிக்கும் ஆசார்யன் ஆகிறீர்,

த்வம் வித்யா அஸி – அவ்வாசார்யார்கள் உபதேஸித்த தாய்போல் காக்கும் வித்யை ஆகிறீர்.

த்வம் வ்ருத்தம் அஸி – முன்பு கூறிய வித்யையின் | பலனாய நன்மையைத்தரும் நன்னடத்தை ஆகிறீர்.

த்வம்  அதுலம் ஸுக்ருதம் அஸி – (இதுவரையில் கூறிய உறவினர் முதலியோரின்  லாபத்துக்கும்,

மேல் சொல்லப்படும் செல்வம் முதலியவற்றின் லாபத்துக்கும் காரணமான) ஒப்பற்ற புண்யமாக ஆகிறீர்.

த்வம் உத்தமம் ஸித்தம் அஸி – (ஈட்டும்போதும் காப்பாற்றும் போதும் துன்பத்தைத் தரும்  அழியும் செல்வம்  போலல்லாமல்)

அழியாத உத்தம செல்வமாக  ஆகிறீர்,

த்வம் ஆத்மா அஸி – முற்கூரிய அனைத்தையும்  தனக்காக  ஏற்றுக்கொள்ளும் ஆத்மாவாக  ஆகிறீர்,

த்வம் ஶேஷீ பவஸி – முற்கூறப்பட்ட ஆத்மாவையும் அடிமைகொள்ளும் தலைவராக  ஆகிறீர்.

ஹே பகவந் –  அறிவு ஆற்றல் முதலிய குணங்களை மிகக்கெண்ட மாமுனிகளே,

த்வம் ஆந்தரஶ்ஶாஸிதா அஸி – (1)உள்புகுந்து நியமிக்கும் பரமாத்வாக ஆகிறீர், (2)’அந்தர‘ எனப்பட்டபடி பரமாத்மாவையும் நியமிக்கும் ஆந்தரரான ஜ்ஞாநியாக ஆகிறீர்,

யத்வா – இப்படிப் பலவாராகச் சொல்லிப் பயனென்?

ஆத்மஅநுரூபம் – விரோதியைப் போக்குதல், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யங்களாகிய விரும்பியவற்றைத் தருதல் முதலாக)

ஜீவாத்ம ஸ்வரூபத்துக்குத் தக்கதாக, யத்யத் பவதி- எது எது  உள்ளதோ, தத்(ஸர்வம்) அஸி-அது எல்லாமுமாகவும் ஆகிறீர்.

கருத்துரை :

பத்நாதி இதி  பந்து – நம்மை  விடாமல் நாம் துன்புற்றபோது  துன்புற்றும், இன்புற்றபோது இன்புற்றும்

கூடவே  இருக்கும் உறவினன் என்றபடி. ஸகா  தோழன்.

நாம் துயருற்றபோது துயரைப் போக்குமவராய் பகவதநுபவம் பண்ணும்போதும்,

‘போதயந்த பரஸ்பரம்‘  (கீதை 10- 9) என்று ஒருவருக்கொருவர் பகவத் குணங்களைச் சொல்லுவதற்கும்

கேட்பதற்கும் உறுப்பான துணைவர் என்றபடி, ஆத்மா – தான் என்பது அதன் கருத்து

‘தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் ‘ திருவாய்மொழி 3 – 6- 9) என்று ஆழ்வார் ‘

நான்‘ அன்று சொல்லவேண்டிய இடத்தில் ‘தான்‘ என்றாரிரே.

இதனால் ‘தவம்‘ ஆத்மா அஸி‘ – என்பதற்கு ‘தேவரீர் நானாக ஆகிறீர்‘ என்பது பொருளாகத்தகும்.

மேலும் ‘ஸேஷி பவஸி, ஆந்தரஸாசிதா பவஸி ‘ என்பவற்றிற்கு –

என்னயடிமை கொள்ளுமவரும் என்னையுட்புகுந்து  நியமிப்பவரும் (பரமாத்வாகவும்) தேவரீரே ஆகிறீர் என்பது பொருள்.

‘ஆந்தர: ஸாஸிதா‘ என்பதற்கு பதவுரையில் கூறிய இரண்டு பொருள்களுக்கும்.

(1) ஆந்தர: என்பதற்கு அந்தரேபவ : மனத்தில் இருக்கும் பரமாத்மா என்று முதற்பொருள்,

(2) ‘ஆதமந: அந்தர: (ப்ருஹ . உப  5 -7 – 22) என்றவிடத்தில்

அந்தர: என்பதற்கு (ஆத்மாவுக்கு) உள்ளிருக்கும் பரமாத்மா என்று பொருள் கூறப்பட்டுள்ளபடியினால்,

அந்தரஸ்யா அயம் உள்ளிருக்கும் பரமாத்மாவின் உள்ளும் இருந்து அப்பறமாதவை நியமிக்கும் ஜ்ஞானி‘ என்பது இரண்டாம் பொருள்.

‘ஜ்ஞாநீது ஆத்மைவ மே  மதம்‘ (கீதை 7 – 18) (ஜ்ஞாநியோ என்றால் எனக்கு ஆத்மா என்பதே என் கருத்தாகும்)

என்று எம்பெருமான் ஜ்ஞாநியை தனக்குள்ளிருந்து தன்னையும் நியமிப்பவனாக அருளிச்செய்தது இதற்கு பிரமாணமாகும்.

யத்வா = இது முன்பு தனித்தனியே சொன்னவற்றையெல்லாம் தவிர்க்கிறது.

இப்படி ஒவ்வொன்றாக இருத்தலைச் சொல்லி கொண்டுபோனால் நூல்விரிவுபடுமென்பதனால்.

ஆத்மாவுக்குத் தகுந்ததாக உலகில் சுருக்கமாகச் சொல்லி முடித்தருளியபடி.

(இந்த ஸ்லோகத்தில் ‘தவம் ஆத்மா அஸி  – (தேவரீர் அடியேனாக ஆகிறீர்) என்று இவர்

தமக்கு மாமுநிகளோடு அருளிச்செய்த ஒற்றுமை ஜீவாத்மாக்களைனவரும் ஒன்றே‘ என்று பக்ஷத்தாலல்ல;

சேஷ சேஷி பாவத்தாலும், நியந்த்ருதியாம்யபாவத்தாலுமே என்பது

‘மேலே ஸேஷீ  பவஸி, ஆந்தர : ஸாஸிதா பவஸி‘ என்றருளிச்செய்வதிலிருந்து ஸ்பஷ்டமாகிறது.

இவ்வொற்றுமை தமக்குப் பரமாத்மாவோடு உள்ளமை ஸாஸ்த்ர ஸித்தமாகையாலும்

‘பீதவாடைபிரானார் பிரமகுருவாகி வந்து‘ (பெரியாழ். திரு. 5 – 2- 8) என்கிறபடியே

மாமுனிகள் பரமாத்மாவின் அவதாரமாகையாலும்;

இவர் தமக்கு அம்மாமுநிகளோடு ஒற்றுமை கூறினாரென்று கருத்தாகும்.)

————-

அக்ரே  பஸ்சாது பரி பரிதோ  பூதலம் பார்ஸ்வதோ  மே 
மௌலௌ  வக்த்ரே  வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச| 
பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே 
நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்||-8-

பதவுரை :

ஹேவரவரமுநே! –  வாரீர் மணவாளமாமுநிகளே,

தே  – தேவரீருடைய ,

திவ்யம் – ஆச்சர்யகரமான,

அங்ரித்வயம் – திருவடியிணயை,

அக்ரே – எதிரிலும்,

பஸ்சாத் – பின்புறத்திலும்,

பூதலம் பரித: – பூமியின் நான்கு பக்கங்களிலும்,

மே  பார்வஸ்வத: – அடியேனுடைய இரு பக்கக்கங்களிலும்,

மௌ லௌ – தலையிலும்,

வக்த்ரே – முகத்திலும்,

கிலே வபுக்ஷி – உடலில்லுள்ள  எல்லா உறுப்புக்களிலும்,

மாநஸ  அம்போருஹே  ச – ஹ்ருதய கமலத்திலும்,

பஸ்யந் பஸ்யந் (இடையறாத நினைவின் மிகுதியாலே) எப்போதும் ஸ்பஷ்டமாகப் பார்த்துக்கொண்டே,

அம்ருத ஜலதௌ – இறப்பவனைப்  பிழைப்பூட்டும் அமுதக்கடலில்,

மஜ்ஜந்  – முழ்குமவனாய்  கொண்டு,

பவாப்திம் நிஸ்தரேயம் – பிறவிக்கடலைத் தாண்ட விரும்புகிறேன்.

கருத்துரை:

“குருபாதாம்புஜம் த்யாயேத் குரோரந்யம் நபாவாயேத்” – (ப்ரபஞ்சஸாரம்)

[ஆசார்யனுடைய திருவடித்தாமரைகளை த்யாநிக்க வேண்டும். ஆசார்யனைத் தவிர வேறொருவனை நினைத்தல் கூடாது.]

என்ற ப்ரமாணம்  இங்கு நினைக்கத்தக்கது, ஒரு கடலில் மூழ்கிக் கொண்டே மற்றொரு கடலைத்  தாண்டவிரும்பவது ஆச்சர்யமுண்டாக்கலாம், ஆசார்யனுடைய ஆச்சர்யகரமான திருவடிகளை த்யானம் செய்துகொண்டே இருக்கிற

பாவநாப்ரகர்ஷத்தின் மஹிமையினியால் எல்லாம் ஸித்திக்குமாகையால், இதில் பொருந்தாமை ஏதுமில்லை

என்கிறார் ஆசார்ய பக்தாக்ரேஸராகிய திருமழிசை அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி (வ்யாக்யாதா).

‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம்  ஸிரஸி  க்ருதம்  த்யாத்வா

அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘

(எம்பெருமானால் தன்னுடைய பரமபோக்யமான திருவடித்தாமரைகளை தன தலையில் வைக்கப்பட்டதாக

த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக்கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு

ஸுகமாக இருக்கக்கடவன்) என்று ஸ்ரீ வைகுண்டத்யத்தில் எம்பெருமானார் எம்பெருமான் விஷயத்தில்

அருளிச்செய்ததை இவர் இங்கு ஆசார்யரான மாமுனிகள் விஷயத்தில் அருளிச்செய்தார்.

————

கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம்
து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: |
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத்
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்||–9-

பதவுரை:

ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!,

ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா,

கர்ம அதீநே – முன்செய்த முழுவினையால் உண்டான,

வபுக்ஷி – தனது தேஹத்தில்,

ஆத்மபாவம் – ஆத்மாவின் தன்மையை,

கல்பயந் – ஏறிட்டு,

குமதி: – திரிபுணர்ச்சியுடையவனாய்க் கொண்டும்,

து: கே மக்ந: – ஸம்சாரது: க (ஸாகர) த்தில் மூழ்கியவனாய்க்கொண்டும்,

கிம் – எதற்காக

தூயதே – வருந்திகிறான்,

இதி (மத்வா) – என்று தேவரீர் நினைத்தருளி,

(அடியேன்) ஸர்வம் – முற்கூறிய திரிபுணர்ச்சி ஸம்ஸாரதுக்கம் முதலிய எல்லாவற்றையும்,

த்யக்த்வா – விட்டொழிந்து,

ஸம்ப்ரதி – இப்பொழுதே,

தவதிவ்யம் பதயுகம் ப்ராப்தும் – தேவரீருடைய மிகவும் அழகிய திருவடியிணையை அடைவதற்கு உறுப்பாக,

த்வத் ப்ரஸாதாத் – தேவரீருடைய (இயற்கையான) அனுக்ரஹத்தினாலே,

மே – அடியேனுக்கு,

ஸுப்ரபாதம் – (தேவரீர் திருவடிகளை அநுபவிப்பதென்னும் பகல்வேளைக்கு ஆரம்பமாகிற) நல்ல விடிவை,

தேஹி – தந்தருளவேணும்.

கருத்துரை:

‘கர்மாதீநே’ என்று, தொடங்கி, ‘தூயதே ஜந்துரேஷ:’ என்பதிறுதியாக முன்னிரண்டடிகளும்,

மாமுநிகள் தமது சிஷ்யனைப் பற்றி நினைக்கவேண்டிய நினைப்பின் அநுவாதமாகும்

‘இதி’ என்பதற்கு பிறகு ‘மத்வா’ என்றொரு பதத்தைக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.

தேவரீர் திருவடிகளை அனுபவிக்கமுடியாமல் கழிந்த காலம் ப்ரளயராத்ரி

இனிமேல் அவ்வனுபவத்தைப் பெறப்போகும் காலம் பகல் போன்றது.

அதற்கு முற்பட்டதகிய நல்ல விடியற்காலத்தை, தேவரீருக்குண்டான் இயற்கையான க்ருபையாலே

கற்பித்தருள வேணுமென்றாயிற்று இதனால்.

————-

யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே
யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே|
யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே
ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ||-10-

பதவுரை:

ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!

மம – முன்செய்த வினைக்கு வசப்பட்ட அடியேனுடைய அறிவானது,

ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,

ஸா வ்ருத்தி: – அந்தந்த அறிவெல்லாம்,

தே – நினைத்தவுடனே மகிழ்ச்சியூட்டுகிற தேவரீருடைய,

ஸம்ஸ்ம்ருதி: – நல்ல நினைவினுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்,

ஹே விபோ – வாரீர் ஸ்வாமியே! ,

மே – அடியேனுக்கு,

யா: யா: ஜல்ப: – எந்தெந்த வார்த்தையானது,

ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,

ஸ: – அவ்வார்த்தையனைத்தும்,

தே – புகழத்தக்க தேவரீரைப் பற்றியதான,

ஜல்ப: – வார்த்தையுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்.

ஹே பகவந் ! – அறிவாற்றர்களால் மிக்கவரே,

மம – அடியேனுடைய,

வபுக்ஷி – ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்கும் சரீரத்தில்,

யா யா சேஷ்டா – அச்செயலெல்லாம்,

தே – வணங்கத்தக்க தேவரீரைப் பற்றியதான,

வந்தநம் – வணக்கவுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்,

ஸர்வம் – இதுவரையில் சொல்லியும் சொல்லாததும் போந்த, (அடியேனுடைய வினையடியாக உண்டாகத்தக்க) செயல்களெல்லாம்,

தே – தேவரீருடைய,

ஸம்யக் ஆராதநம் – ப்ரீதிக்குக் காரணமான நல்ல ஆராதநரூபமாகவே,

பூயாத் – உண்டாகவேணும்.

கருத்துரை:

அடியேனுக்கு, முன்செய்ததீவினையின் பயனாக மனத்தில் உண்டாகும் தீயஎண்ணெங்களெல்லாம்

தேவரீரருளால் மாறி தேவரீரைப் பற்றிய த்யாநமாகவே உண்டாகவேணும்,

வாயில் வரும் தீயபேச்சுக்களெல்லாம் மாறி தேவரீருடைய நாமஸந்கீர்த்தனமாகவே உண்டாகவேணும்.

உடலில் உண்டாகும் தீய செயல்களெல்லாம் மாறி தேவரீரைபற்றிய வணக்கமாகவே உண்டாகவேணும்

என்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

‘ஜாயதாம்’ என்பதனை ஒவ்வொறு வாக்கியத்திலும் இரண்டு தடவை திருப்பிப் பொருள் உரைக்கப்பட்டது.

‘ஜாயதாம்’ என்பது லோட் ப்ரத்யயாந்தமான சப்தம். அதற்குப் பலபொருள்கள் உள்ளன.

இங்கு முதலில் அர்ஹம் – தகுதியென்ற பொருளிலும்,

பின்பு வேண்டுகோள் என்ற பொருளிலும் அச்சொல் ஆளப்பட்டமை பதவுரையில் கூறியது கொண்டு அறிதல் தகும்.

இங்ஙனமன்றி (ஜாயதாம் என்பதை ஆவ்ருத்தி செய்யாமலேயே) அடியேன் மனத்தினிலுண்டாகும் ஜ்ஞாநமெல்லாம்

தேவரீர் நினைவாகவும், வாயில் வரும் சொற்களெல்லாம் தேவரீர் நாமஸங்கீர்த்தனமகவும்,

தேஹத்தில் தோன்றும் செயல்களெல்லாம் தேவரீர் திருவாராதநமாகவும் உண்டாகவேணும் – என்றும் பொருள் தகும்.

—————-

அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை:
அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை:|
நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை:
வரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11

பதவுரை:

மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு,

அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும்,

அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு இலக்காகையாகிற கடைசியான மோக்ஷோபாயத்தில் மிகவும் நிலைநின்றவர்களும்,

அதிகத பரம அர்த்தை: – பூரணமாக அடையப்பட்ட ஆச்சார்ய கைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தை (எல்லையான பலனை) உடையவர்களும்,

அர்த்த காம அநபேக்ஷை: – மற்ற உபாயத்தையும் மற்ற பலனையும் விரும்பாதவர்களும், அல்லது செல்வத்தையும் காமபோகத்தையும் விரும்பாதவர்களும்,

நிகிலஜநஸுஹ்ருத்பி: வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் இவ்விருவருமில்லாத நடுவர்கள் ஆகிய எல்லா மனிதர்களிடமும் நன்மையைத்தேடும் நல்லமனமுடையவர்களும்,

நிர்ஜிதக்ரோதலோபை: – கோபத்தையும் உலபித்தனத்தையும் நன்றாக வென்றவர்களுமான,

வரவரமுநிப்ருத்யை: மணவாளமாமுநிகளின் அந்தரங்க சிஷ்யர்களான கோயில் கந்தாடை அண்ணன், வானமாமலை ஜீயர் முதலியவர்களோடு, நித்யயோக: (திருவடிகளைத் தாங்கும் பஞ்சுமெத்தை, திருவடி இரேகை ஆகியவற்றிற்குப் போல்) நித்தியமான ஸம்பந்தமானது,

அஸ்து – உண்டாகவேணும்.

கருத்துரை:

இதுவரையில் மதம், மானம், பொன்னாசை, பெண்ணாசை, கோபம், உலோபம் முதலிய தீயகுணங்களே

நிறையப்பெற்ற நீசஜநங்களோடு இடைவிடாமல் பழகிப்போந்த தமுக்கு, இக்குற்றங்களில் ஏதுமின்றியே,

ஆசார்யகைங்கர்யம், அதற்கு உபாயமாக ஆசார்யனையே பற்றுதல், அனைவரிடத்திலும் நல்லெண்ணம் தொடக்கமான

நற்குணங்களே மல்கியிருக்கபெற்ற மணவாளமாமுநிகளின் சிஷ்யர்களோடு

நித்யசம்பந்தம் (நீங்காத தொடர்பு) உண்டாகவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாயிற்று.

—————–

இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்|
ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்||–12-

பதவுரை:

இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே,

ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால்,

ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய,

ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை,

ப்ரேம ஆர்த்ரயா – ப்ரீதியினால் குளிர்ந்திருக்கிற,

த்ருஷ்ட்யா – திருக்கண்ணோக்கத்திலே,

ஸிஞ்சந்தம் – குளிரச்செய்துகொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

சிந்தயாமி – எப்போதும் த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை:

இதுவரையில் ஆசார்யரான மணவாளமாமுனிகளைப் பற்றி திநசர்யை என்னும் ஸ்தோத்ரக்ரந்தம் இயற்றி அனுபவிக்கப்பட்டது,

இனி ஸ்தோத்ரத்தினால் உண்டான ப்ரீதியையுடைய மணவாளமாமுனிகளை அனுபவிக்கிறார் எறும்பியப்பா.

இதி என்பது இவ்வாறாக என்றபடி, முற்கூறிய ஆறு ஸ்லோகங்களிலுள்ள பொருளின்படியே என்று கருத்து.

அவற்றில் ‘தவம் மே பந்து:’ (7) என்று தொடங்கி ‘யாயா வ்ருத்தி’ (10) என்பதீறாக உள்ள நான்கு ஸ்லோகங்கள்

இவர் அருளிய வரவரமுநி சதகத்திலும் படிக்கப்பட்டுள்ளன.

‘உந்மீலபத்ம’ (6) என்ற இவற்றின் முன் ஸ்லோகமும், ‘

அபகதமதமாநை’ என்ற பின் ஸ்லோகமும் இவற்றோடு படிக்கப்பட்டு வருவதானாலும்,

இவ்விரண்டினை வேறொருவர் இயற்றியதாக யாரும் இருகாறும் கூறாமையாலும்,

இவ்விரண்டும் அன்நாங்கினோடு ஒப்ப எறும்பியப்பாவே அருளிசெய்தாரென்று கொள்ளுதல் பொருந்தும்.

இவ்வாறு ஸ்லோகங்களுக்குள்ளே ‘திவ்யம் தத்பாதயுக்மம் திஸது’ (6),

‘தவபதயுகம்தேஹி’ (9), ‘அங்க்ரித்வயம் பஸ்யந் பஸ்யந்’ (8) என்று மூன்று ஸ்லோகங்களில்

மாமுனிகள் தம் திருவடிகளைத் தலைமேலே வைத்தருளவேணுமென்றும்

அவற்றை இப்போதும் சேவிக்கவெண்டுமென்றும் பிரார்த்தனை உள்ளடிங்கியிருப்பது பொருந்துமென்று

கொண்டு இந்த ஆறு ஸ்லோகங்களும் அஷ்டதிக்கஜாசார்யர்களில் கோயிலண்ணன், வானமாமலை ஜீயர் இவர்களைவிட்டு

இவ்வெறும்பியாப்பா, திருவேங்கட ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணா,

அப்பிள்ளை, அப்புள்ளாராகிய இவ்வறுவரால் (ஒவ்வுருவர் ஒன்றாக) அநுஸந்திக்கப்பட்டனவென்று கொள்ளுதல் தகும்.

கோயில்கந்தாடைஅண்ணன் ஸதா மாமுநிகளைத் தாங்கும் பாதுகையாகவும்,

வானமாமலை திருவடிகளை விடாத ரேகையாகவும் பிரஸித்தர்களாகையால்

எப்போதும் திருவடிகளைப் பிரியாத இவ்விருவரும் மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரிக்கவேண்டுமேன்றும்

அவற்றை எப்போதும் ஸேவிக்கவேண்டுமேன்றும் ஆசைப்படார்களே என்கிறார், அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி.

எறும்பியப்பா அருளிச்செய்த இவ்வாறு ஸ்லோகங்களில் ஒன்று இவர் அநுஸந்தித்ததாகவும்,

மற்ற ஐந்தும் இவரிடம் உள்ள கௌரவத்தினாலும் ஸ்லோகங்களின் இனிமையாலும் மற்ற ஐவரும் அநுஸந்தித்ததாகவும் கொள்க.

————–

அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|
ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||-13-

பதவுரை:

அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு,

ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை

அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு,

ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில்,

சேத: க்ருத்வா – தமது திருவுள்ளத்தைச் செலுத்தி (அதை தியானம் செய்து) பிறகு,

ஸயநீயம் – படுக்கையை,

பரிஷ்க்ருத்ய – அலங்கரித்து,

ஸயானம் – கண்வளர்கின்ற,

தம் – அந்த மணவாளமாமுநிகளை

ஸம்ஸ்மராமி – த்யானம் செய்கிறேன்.

கருத்துரை:

‘க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே’ – என்றதனால் இரவில் செய்யவேண்டிய பகவத்த்யாநமாகிய யோகம் என்று கூறப்பட்டது.

‘தத: கநக பர்யங்கே’ (4) என்று முன்பு கூறப்பட்ட பகவத்த்யாநத்துக்கு உரிய ஆசனத்தை விட்டு எழுந்திருந்து,

ஸ்தோத்ரம் செய்த சிஷ்யர்களை கடாக்ஷித்து அவர்களை விடைகொடுத்தனுப்பிவிட்டு,

படுக்கைக்கு அலங்காரமாக பகவானை த்யானம் செய்துகொண்டே திருக்கண்வளருகிறார் மாமுனிகள்.

அத்தகைய மாமுனிகளைத் தாம் த்யானம் செய்கிறார் இவ்வெறும்பியப்பா.

(மாமுனிகள் தாம் திருவனந்தாழ்வானுடைய திருவவதாரமாகையாலே அப்ராக்ருமான அவருடைய

திருமேனியழகு திருக்கண் வளருங்காலத்தில் இரட்டிதிருக்குமாகையால் த்யானம்

செய்துகொண்டே யிருக்கத் தடையில்லையிரே. மாமுனிகளுக்கு ஸுபாஸ்ரயம் எம்பெருமானுடைய திருமேனி,

இவருக்கு ஸுபாஸ்ரயம் மாமுனிகளுடைய திருமேனி என்க.

யதீந்த்ரப்ரவணாரான மாமுனிகள் எம்பெருமானை த்யாநிப்பது யதீந்த்ரரான

எம்பெருமானாருடைய திருவுள்ள உகப்புக்காக என்றும் சௌம்யஜாமாத்ருயோகீந்த்ரரை (மாமுனிகளை) த்யானம் செய்வது,

தம்மை மணவாளமாமுனிகளின் நிர்பந்தமாக நியமித்தருளிய இவர்தம் திருவாரதனப்பெருமாளாகிய

சக்ரவர்த்தித்திருமகனாரின் திருவுள்ளவுகப்புக்காக என்றும் கொள்ளலாம்.

சக்ரவர்த்தித்திருமகனாரின் நியமனம் யதீந்த்ரப்ரவணப்ரபாவத்திலும் இவரருளிய வரவரமுநி சதகத்திலும் காணத்தக்கது.

—————

திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:|
பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||-14-

பதவுரை:

இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி

‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும்,

‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை

தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை,

நித்யம் – தினந்தோறும் (இரவும், பகலும்)

பக்த்யா அநுத்யாத்யாயந் – பக்தியோடு தொடர்ந்து அநுசந்திக்கிற மனிதன்,

பரமம் பதம் – இனி இதுக்குமேலில்லை என்னும்படி மிகவுயர்ந்த ஸ்ரீவைகுண்டலோகத்தை,

பராப்நோதி – அடைகிறான்.

கருத்துரை:

முடிவில் திநசர்யை என்ற இந்த கிரந்தந்தை அனநுசந்தித்தால் உண்டாகும் பிரயோஜனத்தை

அருளிச்செய்கிறார் இந்த ஸ்லோகத்தினால்

பூர்வதினசர்யையில் முதலில் பதின்மூன்றாம் ஸ்லோகம் வரையில் உபோத்காதமென்று முன்னமே சொல்லப்பட்டது.

அதில் 14வது ஸ்லோகம் முதற்கொண்டு இவ்வுத்தர திநசர்யையில் 13ம்ஸ்லோக வரையிலுமே

வரவர முநி திநசர்யை என்று என்ற நூலாகக்கொள்ளபட்டது.

‘திவ்யாம்’ என்பதற்கு திவ்யமான (மிகவுயர்ந்த) பாஞ்சராத்ராகமம் முதலிய ஸாஸ்த்ர ஸித்தங்களான

அநுஷ்டானங்களைக்கூறும் நூல் என்னும் பொருளேயன்றி

திவ்யமான – பரமபதத்திய என்று பொருள் கொண்டு, இவ்வுலகில் நடைபெறாதவையாய் பரமபதத்தில் மட்டும்

நடைபெருமவைகளான பாஞ்சசாலிக (ஐந்து காலங்களில் செய்யவேண்டிய) அநுஷ்டானங்களை

தெரிவிப்பதான நூல் என்னும் பொருளும் கொள்ளலாம்.

இந்த அநுஷ்டானங்கள் மிகவும் துர்லபங்களென்றவாறு பரமைகாந்திகளுடைய இவ்வநுஷ்டான ரூபமான தர்மமானது

க்ருதயுகத்தில் பூரணமாகவே (குறைவின்றியே) நடக்கும்.

த்ரேதத்வாபர யுகங்களில் சிறிது சிறிதாய் குறையும்; கலியுகத்தில் இருக்குமோ இராதோ தெரியவில்லை என்று

பரத்வாஜபரிஸிஷ்டத்தில் கூறியது கொண்டு இதன் அருமை விளங்கும்.

மேலும் பற்பல ஆசைகளோடு சேர்ந்த அறிவையுடையவர்களும் அது காரணமாக

பற்பல தேவதைகளை அராதிப்பவர்களுமான மனிதர்கள், கலியுகத்தில் திருமாலொருவனையே

தெய்வமாக கொள்ளும் இந்த தர்மத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அறிவு படைத்த வித்வான்களாயிருப்பர். எம்பெருமானைபற்றியதான இவ்வுயர்ந்த நெறியை அறிந்துவைத்தும்,

கலியின் கொடுமையினால், மோகமடைந்து, இதனை அறிவதற்கு முன்புள்ள தங்களது தீயநெறியை

விட்டொழிக்க வல்லவராகமாட்டார். கலியிலும் கூட சிலவிடத்தில் ஒரு சிலர் எம்பெருமனொருவனையே

பற்றுமவர்கள் உண்டாக போகிறார்கள். அனால் கேட்ட நோக்கமுடைய புறச்சமயிகள் தங்களுடைய

கெட்டயுக்திகளாலே அவர்களையும் மயக்கிவிட போகிறார்கள் என்று அதே நூலிலுள்ளும் காணத்தக்கது.

நித்யானுஷ்டானத்தை குறிக்கும் திநசர்யா சப்தம், இலக்கணையினால் ஆராதிக்கப்படுகின்ற எம்பெருமானிடத்திலும்,

ஆராதிக்கின்ற மணவாளமாமுனிகளிடத்திலும், ஆராதனரூபமான இவ்வனுஷ்டானங்கள் விஷயத்திலும்

அளவிறந்த பக்தியோடு கூடியவனாய் இந்த க்ரந்தத்தை எப்போதும் அனுசந்திக்க வேண்டுமென்றபடி

பரமபதம் – உயர்ந்த ஸ்தானமாகிய நித்யவிபூதி. ‘அண்டங்களுக்கும் அவற்றுக்கும் மேலுள்ள மஹதாதிகளுக்கும்

மேலே உள்ள தம்மில் மிக்கதில்லையான மிகஉயர்ந்த லோகங்கள்’ என்று குலாவப்பட்ட ஸ்ரீவைகுண்டலோகமென்றபடி,

ப்ரோப்நோதி – ப்ரகர்ஷேண ஆப்நோதி நன்றாக அடைகிறான்.

அதாவது – பகவான், நித்யஸூரிகள், முக்தர்கள் என்கிற மூவர்களும் கைங்கர்யம் செய்கையாகிற

மூவகைப்பயன்களும் ஸித்திப்பதற்குத் தடையற்ற ஸ்தானத்தை ஆசார்ய பர்யந்த கைங்கர்யமாகிற

பிரகர்ஷத்தோடு பெருமையோடு அடைகிறான் என்பது தேர்ந்த கருத்து.

‘இவ்வைந்து காலங்களில் செய்யத்தக்க பகவதாராதனரூபமான கர்மத்துக்கு

மோக்ஷத்தைக் குறித்து நேரே உபாயமாகை – ஒன்றன்பின் ஒன்றாய் இடையறாது வருகின்ற

அனுஷ்டான காலங்களையறிந்து, அவ்வைந்து வகைப்பட்ட அனுஷ்டானங்களைச் செய்ய வல்லமை படைத்த

அறிவில் மிக்கவர்கள் தமது நூறாவது பிராயம் முடிவு பெற்றவுடனே விரைவாக பரமபதம் அடைகிறார்கள்’ என்று லக்ஷ்மீ தந்த்ரத்திலும்,

‘எல்லா மோக்ஷோபயங்களையும் அடியோடு விட்டு விட்டு, இவ்வைந்து அனுஷ்டானங்களையும்

ஒழுங்காகச் செய்யுமவர்கள் ஒன்றோடொன்று சேர்ந்தேயிருக்கிற கர்மஜ்ஞாநபக்திகளாகிற

உபாயத்தினின்றும் விடுபட்டவர்களாய்க்கொண்டு எம்பெருமானைப் பரமபதம் சென்று

அடைகிறார்கள்’ என்று சாண்டில்ய ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டுள்ளமை உண்மைதான்.

அனாலும் பரத்வாஜர் முதலிய பெரியோர்கள் எம்பெருமானாகிற ஸித்தோபாயத்தில் ஊன்றியவர்கள்

பலரூபமாகவே (பகவத்கைங்கர்யரூபமாகவே) செய்ய வேண்டுமென்று கூறியுள்ளபடியாலே இதுவே ஏற்கத்தக்கதாகும்.

ப்ரபந்நன் செய்யத்தக்க தர்மங்களைச் சொல்லிக் கொண்டு வந்து,

‘முதலில் அபிகமநம் செய்து, பகவதாராதனத்துக்கு வேண்டிய வஸ்துக்களை சேகரித்தலாகிற உபாதாநம் செய்து,

பின்பு பகவானை ஆராதித்தலாகிற இஜ்யையை அனுஷ்டித்து, நல்ல க்ரந்தங்களைப் படித்தலாகிய

ஸ்வாத்யாயத்தைச் செய்து, கடைசியில் பகவானைத் த்யானம் செய்தலாகிய யோகத்தைச் செய்பவனாய்க் கொண்டு

இங்ஙனம் இவ்வைந்து காலங்களையும் மகிழ்ச்சியுடன் கழிக்கக் கடவன்’ என்றதனால் மகிழ்ச்சியுள்ளது

பலாநுபவ வேளையாகையாலே, இவ்வைந்தினையும் உபாயமாகவல்லாமல்

பலரூபமாகவே செய்யவேணுமென்பது கருதபட்டதென்று திடமாகக்கொள்ளலாம்.

‘கர்மஜ்ஞாநபக்தி பிரபதத்திகளாகிற இந்நான்கினையும் மோக்ஷோபாயமாக அனுஷ்டியாமல் விட்டு விட்டு,

பலத்திலும் இந்நான்கினிலும் என்னுடையவை என்ற பற்று அற்றவனாய்க்கொண்டு

இப்பாஞ்சகாலிகமான அனுஷ்டானங்கள் பரமாத்மாவின் சந்தோஷமே பிரயோஜனமாகக் கொண்ட

கைங்கர்யரூபமாகச் செய்யவேண்டும்’ என்று பராஸர முனிவர் பணித்ததும் இங்கு நினைக்கத் தகும்.

———-

ஸ்ரீதேவராஜகுரு என்னும் எறும்பியப்பா அருளிச்செய்த ஸ்ரீ வரவரமுநி திநசர்யையும்,

அதற்கு வாதூலவீரராகவகுரு என்னும் திருமழிசை அண்ணவப்பய்யங்கார்ஸ்வாமி பணித்தருளிய

சம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தி.அ .கிருஷ்ணமாசார்ய தாசன் எழுதிய தமிழுரையும் முற்றுப்பெற்றன.

————–

முடிவுரை

ஸ்ரீவரவரமுநி திநசர்யை என்னும் இந்நூல்

பூர்வதிநசர்யை,

மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி ,

உத்தர திநசர்யை என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதென்று முன்னுரையிலேயே விண்ணப்பிக்கப்பட்டது.

இரண்டு திநசர்யைகளுக்கும் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமி அருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானம் மட்டுமே அச்சில் உள்ளது.

யதிராஜ விம்சதிக்கோவெனில் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தோடு

ஸுத்தஸத்த்வம் தொட்டையசார்ய ஸ்வாமியும்,

பிள்ளைலோகச்சர்ய ஜீயர் ஸ்வாமியும் பணித்த மணிப்ரவாள வ்யாக்யாநங்களும் ஒருஸம்புடமாக அச்ச்சடிக்கபட்டுள்ளன.

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வர வர முனி பூர்வ தினசர்யா–ஸ்லோகம் 14- 32–ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது – ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி உரை —

May 25, 2022

பரேத்யுபஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14)

பதவுரை:-

பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில்,

யாமிந்யா – இரவினுடைய,

பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது,

ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்)

ப்ரபுத்ய – தூக்கம் விழித்து,

பராம் – உயர்ந்த,

குரு பரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை,

ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…

எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு

ஸர்வ தர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும்,

நித்ய கர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ

பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து,

பரமகாருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத்கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும்,

‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும்,

ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார்.

ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது –

பங்க்திபாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத்தக்கது.

மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது;

குருபரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க.

இங்கு குருபரம்பரை என்பது –

பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும்,

ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும். (14)

——————-

த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் |
பர வ்யூஹாதிகாந் பத்யுப்ரகாராந் ப்ரணிதாய  || (15)

பதவுரை:-

தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய,

ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும்,

த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து,

பர வ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான,

பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய,

ப்ரகாராந் – ஐந்து நிலைகளை,

ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…

கருத்துரை:-

ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன –

ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை,

அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை,

அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.

திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே

முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும்,

இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை –

த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும்,

கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும்

இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்மஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது.

எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன

(1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை;

(2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை;

(3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை;

(4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை;

(5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும்.

இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு.

பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க.

இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள்

பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று. (15)

——————-

ததப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீக்ரியா: |
யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா || (16)

பதவுரை:-

தத: – அதற்குப்பின்பு,

ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில்,

ஸ்நாத்வா – நீராடி,

பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய,

க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை,

யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட,

சேதஸா – மனஸ்ஸுடன்,

க்ருத்வா – செய்து.

கருத்துரை:-

ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும்.

இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும்.

இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும்.

முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம்.

ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘

எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள

எம்பெருமானுடைய திருமுகமலர்ச்சிக்காகவே நித்யநைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால்,

மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது. (16)

—————–

அத ரங்கநிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோதயித்வா பதத்வயம் || (17)

பதவுரை:-

அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு,

நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய்,

ப்ரபும் – ஸ்வாமியான,

ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை,

ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து,

ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான,

தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை,

சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு)

சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).

கருத்துரை:-

சாண்டிலஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது.

‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண்காப்புகளையணிந்து,

கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப்பொழுதுகளிலும்,

தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும்

மந்த்ரங்களை ஜபித்துக்கொண்டேயிருந்து

அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதிவசநம்.

இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல்தகும்.

இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும்,

தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும்.

பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய

உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க… (17)

——————-

ததஸ்தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாதமதுரஸ்மிதம் || (18)

பதவுரை:-

தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு,

தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய்,

ப்ராங்முகம் – கிழக்கு முகமாக,

ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக),

ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும்,

ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…

கருத்துரை:-

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷணவகையால் கொள்க;

அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்தபிறகு,

சோம்பலில்லாதவனாய்க்கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள்

அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன்,

தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்கவேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது.

இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில்

ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்;

மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க. மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால்,

அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே.

நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று

சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது. (18)

——————-

ப்ருத்யைப்ரியஹிதைகாக்ரைப்ரேமபூர்வமுபாஸிதம் |
தத்ப்ரார்த்தநாநுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே || (19)

பதவுரை:-

ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய,

ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே,

ப்ரேமபூர்வம் – அன்போடுகூட,

உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு,

தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்),

மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு,

ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை,

ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…

கருத்துரை:-

முன்கூறியபடியே பெருமாள் ஸந்நிதியில் உள்ள கம்பத்தின் கீழ்ப்பகுதியில் மாமுனிகள் எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில்,

அந்தரங்க ஸிஷ்யர்கள் பெருமாள் திருவாராதனத்திற்கு வேண்டியதாய் ஸாஸ்த்ர விரோதமில்லாத

அரிசி, பருப்பு, பழம், பால், தயிர், கறியமுது முதலிய வஸ்துக்களை பக்தியுடன் கொண்டுவந்து எதிரில் ஸமர்ப்பித்துப்

பணிவிடை செய்ய அவற்றை அவர் அங்கீகரித்தருளினார்.

‘மாடாபத்யம் யதி: குர்யாத் விஷ்ணுதர்மாபிவ்ருத்தயே’ [யதியானவர் வைஷ்ணவமான தர்மங்களை

(பஞ்சஸம்ஸ்காரம், உபயவேதாந்த ரஹஸ்யக்ரந்த ப்ரவசநம், அவற்றில் கூறியபடி ஸிஷ்யர்களை அநுஷ்டிக்கச் செய்தல் தொடக்கமானவற்றை) மேன்மேலும் வளர்ப்பதற்காக, மடத்தின் அதிபதியாயிருத்தலை ஏற்றுக்கொள்ளக் கடவர்] என்று

பராஸரஸம்ஹிதையிலுள்ளபடியே மாமுனிகள் மடாதிபதியாக அழகியமணவாளனாலே நியமிக்கப்பட்டாராகையாலே

கோயில் கந்தாடையண்ணன் முதலிய பல மஹான்கள் அவருக்கு ஸிஷ்யர்களாகி, வைஷ்ணவ ததீயாராதனம் நடக்கும்

அம்மடத்தில் பெருமாள் திருவாராதனத்திற்கு உதவும்படி வஸ்துக்களை ஸமர்ப்பிப்பதும்

மாமுனிகள் அவற்றை அங்கீகரிப்பதும் யுக்தமேயாகுமென்க.

முற்கூறப்பட்ட ஸிஷ்யர் பெருமக்கள் மாமுனிகள் ஸந்நிதியில், புதிதாக வந்து முதல்நாள் சேர்ந்த தமக்கு

(எறும்பியப்பாவான தமக்கு) பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளும்படி ப்ரார்த்தித்தார்களாம்.

அவர்கள் மிகவும் வேண்டியவர்களாகையால் அவர்கள் செய்த ப்ரார்த்தனையைத் தட்டாமல் மாமுனிகள் அப்படியே செய்தாராம்.

அதனைக் குறிப்பிடுகிறார். பின்னிரண்டடிகளில்

‘ஒரு வருஷகாலம் ஆசார்யனை உபாஸிக்கவேண்டுமென்றும், அப்படியுபாஸித்த ஸிஷ்யனுக்கே ஆசார்யன் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்யவேண்டுமென்றும் சாஸ்த்ரம் கட்டளையிடாநிற்கவும்,

மாமுனிகள் அப்பாவிற்கு வந்த மறுநாளே செய்தது குற்றத்தின் பாற்படாது;

அந்தரங்கஸிஷ்யர்களின் ப்ரார்த்தனை – அந்த சாஸ்த்ரத்தைவிட பலமுடையதாகையாலென்க.

பெருமாள் திருவாராதநம் முடிந்த பிறகு இப்பஞ்சஸம்ஸ்காரங்கள் நடைபெற்ற விஷயம்

‘ஆசார்யன் நன்னாளில் காலையில் நீராடி எம்பெருமானுக்கு முறைப்படி திருவாராதனம் செய்து,

தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே

பஞ்சஸம்ஸ்காரங்களையும் செய்யக்கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும்.

அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவபூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும்,

அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால்

இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும்,

புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண்காப்புக்களை அணிதலும்,

ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன.

ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதிபெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம்.

ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல். (19)

———————-

அனுகம்பா பரீவாஹைஅபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20

பதவுரை:-

அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால்,

அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக,

தீர்க்கம் – வெகுநேரம்,

ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற,

மம – அடியேனுக்கு,

திவ்யம் – மிகவும் உயர்ந்த,

பதத்வயம் – திருவடியிணையை,

தத்வா – தலையில் வைத்து.

கருத்துரை:-

மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக்கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து

பக்திப்பெருக்கினால் அப்படியே வெகுநேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார்.

ஒருவன் துன்பத்தால் நடுங்காநிற்க, அதுகண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது.

தயையென்பது இதன்பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமரகோஸம் காணத்தக்கது.

‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும்

அது பத்து அஸ்வமேதயாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும்.

பத்துத் தடவைகள் அஸ்வமேதயாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்கபோகத்தை அநுபவித்துவிட்டு

மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால்

பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது.

பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக்குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத்

தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை.

திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி.

ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட,

மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்யஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசநபூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத்தக்கது. (20)

——————

ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21

பதவுரை:-

ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி

பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக,

மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை,

ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற,

வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை,

வந்தே – வணங்குகிறேன்.

கருத்துரை:-

மணவாளமாமுனிகள் – தாம் ஸிஷ்யர்களுக்குச் செய்யும் த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாக நினைப்பது

உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் திருந்தி பகவந் மங்களாஸாஸநம் செய்வதொன்றையே.

அப்படி அவர் நினைத்தால்தான் அவர் செய்யும் உபதேஸம் தூய்மையுடையதாகும்.

ஆகையால் அங்ஙனமே அவர் நினைத்துத் தமக்கு த்வயமந்த்ரத்தை ஸுத்தோபதேஸமாகும்படி

உபதேஸித்தாரென்று இதனால் தெரிவித்தாராயிற்று.

முற்கூறியபடி நினையாமல்,

(1) பணம், பணிவிடைகள் முதலிய உலகில் காணும் பலனையோ,

(2) ஸிஷ்யன் மோக்ஷம் பெறுதலையோ,

(3) தான் ஒரு ஸிஷ்யனைத் திருத்தி அதனால் பகவானுக்குச் செய்யும் கைங்கர்யத்தையோ,

(4) தன்னுடைய தனிமை தீரும்படி தன்னோடு ஸிஷ்யன் கூடியிருக்கையாகிற ஸஹவாஸத்தையோ பலனாக நினைத்து த்வயத்தை உபதேஸித்தால், அவ்வுபதேஸத்திற்கு தூய்மை குறையுமென்று ஸூசிப்பித்தபடி இது.

இங்கு – ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள்களில் தேஹயாத்ரைக்கு பணமோ பணிவிடையோ தேவைப்படாதா?

ஸிஷ்யன் மோக்ஷம் பெறவேண்டாமா? இங்கிருக்கும் நாள்களில் ஆசார்யன் பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டாமா?

நல்ல ஸிஷ்யனோடு ஸஹவாஸம் ஆசார்யனுக்கு வாய்க்கவேண்டாமா? இவையெல்லாம் நல்லவையேயன்றித் தீயனவல்லவே?

இவற்றைப் பயனாகக்கருதி ஆசார்யன் செய்யும் த்வயோபதேஸம் தூய்மை குன்றப்பெறுவது எப்படி? என்று ஒரு கேள்வி எழுவது இயற்கையே.

அதற்கு – ஆசார்யன் விஷயத்தில் ஸிஷ்யனுக்கு உள்ள ஷேஷத்வம்(அடிமையாந்தன்மை) ஏதோ இயன்ற வரையில்

சிறிது தநம் ஸமர்ப்பித்துப் பணிவிடை செய்தாலன்றி நிலைபெறாதென்று நினைக்கும் ஸிஷ்யனது நினைவால் முதற்பயன் ஸித்திக்கும்.

யாராவது ஒருவன் மோக்ஷம் பெற்று நம்மிடம் வருவானா என்று நினைத்து அதற்கு உறுப்பாக ஒரு ஸிஷ்யனை

ஓராசார்யனோடு சேர்த்து த்வயோபதேஸம் பெற்றவனாக ஆக்கிய எம்பெருமானுடைய நினைவாலே ஸிஷ்யனுக்கு மோக்ஷம் ஸித்திக்கும்.

‘இவன் (நம்ஸிஷ்யன்) நல்ல உபதேஸங்களைச் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு ஆளாம்படி ஒரு ஸிஷ்யனைத் திருத்துவது பகவான் திருவுள்ளத்திற்கு மிகவும் உகப்பாகையாலே இது பகவத் கைங்கர்யமன்றோ?’ என்று நினைத்திருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே, ஆசார்யனுக்கு பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும்.

வெகுகாலமாக ‘யான், எனது’ என்னும் அஹங்கார மமகாரங்களாலே ஸத்தையை இழந்து கிடந்த நம்மை ஹிதோபதேஸம் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு உரியவனாக்கிய மஹோபகாரகனை நாம் ஒரு நாளும் விட்டுப் பிரியக்கூடாதென்று நினைத்திருக்கும் ஸிஷ்யனது க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும்.

ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும்

இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து,

ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே

தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று.

இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்;

நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க.

குருபரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்கவேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால்

‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய

அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்யபரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று,

அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில்,

எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது,

இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று,

எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல்

ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று.

இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில்

ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது. (21)

——————-

ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22

பதவுரை:-

தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு,

ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய்,

புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய்,

புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை,

த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,

நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி,

விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.

கருத்துரை:-

இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக்காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்கநகரத்திற்கு அடைமொழியாயிற்று.

ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை.

பின்னையோவென்னில்

எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே

வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமைவாய்க்கப்பெற்றது அரங்கநகரமென்பது இவ்வடைமொழிக்குக் கருத்து.

‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’

(எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்யமண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றைவிட அதிகமான

ஆசையைப்பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

இக்கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும்.

நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக –

பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும்.

இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப்

பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும்.

(1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரகமநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷ

ஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால்

அப்பெருமானுக்கு உண்டான ஜகத்காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது.

(2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது இரண்டாவது வ்யுத்பத்தி.

ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதயகுகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால்

அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது.

(3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால்,

கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லா வபேக்ஷிதங்களையும்

தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது.

இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம்.

ஆதிஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர்.

ஸ்ரீரங்கமங்களமாய் புருஷஸப்தவாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது

எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது.

‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி. ஒருமனிதனைவிட்டு நீங்காதது

அவனுடைய நிழலேயன்றி வேறொன்றில்லையென்பர் உலகோர்.

நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும்.

மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.

இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது. (22)

—————-

மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்தப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23

பதவுரை:-

ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும்,

மஹதி – மிகப்பரந்ததுமான,

த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில்,

சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற,

கோபுரம் – கோபுரத்தை,

ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி,

ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி)

அந்த: – கோவிலுக்குள்ளே,

ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற,

தம் – அந்த மணவாள மாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள்.

ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்தமாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான

ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி

இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும். இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன.

சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது. தெண்டன்

ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும்,

ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது. (23)

—————–

தேவீ கோதா யதிபதிஸடத்வேஷிணௌரங்கஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷபஸ்ரீநிதிஸ் ஸிந்துகந்யா |
பூமாநீளா குருஜநவ்ருதபுருஷச்சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 24

பதவுரை:-

தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,

யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார்,

ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம்,

ஸேநாநாத: – ஸேனைமுதலியார்,

விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார்,

ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன்,

ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார்,

பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ:

 – பரமபதநாதன்,

இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில்,

வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை,

நித்யம் – தினந்தோறும்,

ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில்

ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார்

இவர்களையும், பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான

ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது,

ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக

எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார். ஏன்?

அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால்

அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு

இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப்பற்றி இங்குக் குறிப்பிடவில்லை.

எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்;

இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க.

‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும்

பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி,

மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார்

தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது.

ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும்,

அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த

பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும்.

ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள்.

ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குருஜநஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும்

தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று. (24)

——————–

மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25

பதவுரை:-

தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில்,

மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை,

யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி,

க்ருத்வா – செய்துவிட்டு ,

தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து,

விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி,

ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள்,

ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)

கருத்துரை:-

மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத்

தாம் ஒரு பலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால்,

‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார்.

மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும்,

அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும்

மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘

யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார்.

‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று

ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘

ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது

ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி

ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும்.

‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது,

அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம்

முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க. (25)

—————-

அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் || 26

பதவுரை:-

அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு,

ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், 

ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான,

மண்டபே – மண்டபத்தில்,

தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்

பிள்ளையுடைய திருவடித்தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற,

(மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)

கருத்துரை:-

தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி

அதில் சித்ரவுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள்.

அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க.

‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில். இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது –

பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து

சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும்.

மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ?

அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது.

இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது.

அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிச்சாயையின் நடுவில் (தம்மைப்போல்)

எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள்.

இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’

(திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம்மாமுனிகளை வணங்குகிறேன்)

என்றதனோடு அந்வயம் கொள்ளவேண்டும். (26)

————-

தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் || 27

பதவுரை:-

ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்)

ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான,

திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய,

ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய,

தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை,

ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக,

வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற,

தம் – அம்மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

திவ்யப்ரபந்தங்கள் ஸரீரஸம்பந்தரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம்

‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்

பொல்லா வருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100)

‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11)

முதலிய பலஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும்.

முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது

மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும்.

சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும்.

மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும்.

ஆக, ரஹஸ்யத்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே

ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும்.

இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ரப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால்,

அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின்

ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது.

ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும்.

ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத்தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி.

நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரேயாகையால், அதற்காக அடையத்தக்க (ப்ராப்யரான)

வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்றவேணுமென்பது

ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும்.

இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார்.

இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாளமாமுனிகளுக்குத் தலையல்லால்

கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க. (27)

————-

ததஸ்வசரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநைரர்த்திநஸ்தீர்த்தைபாவயந்தம் பஜாமி தம் || 28

பதவுரை:-

தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு,

ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும்,

பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய,

தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால்,

அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை,

பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால்

தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து

அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால்.

எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து

தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது.

ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும்.

மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு

நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க.

‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால்

ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது.

ஸ்ரீபாததீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற

ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத்தக்கது.

சிலர் ஸ்ரீபாததீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள்.

‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்தபாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’

என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்தபாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக

இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும்.

ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால்

அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை.

பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை

அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்யப்ரபந்தஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு

இதில் ஸ்ரீபாததீர்த்தபாநத்தை கூறினாராயிற்று.

முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர்,

இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்;

வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க. (28)

—————

ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய  |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் || 29

பதவுரை:-

பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு),

ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை,

ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து,

அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை,

விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை,

ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து)

பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற

தம் – அந்த மாமுனிகளை,

பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை:-

ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி,

“இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும்

எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும்.

பதிவிரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும்,

ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும்

எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று

சாண்டில்யஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி.

அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற

பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும்.

‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்

கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும்,

பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு.

சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து

ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும்.

பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல்

(உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும்.

ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும்

நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே

உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது.

‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே)

மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது.

‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும்

நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத்தூய்மையை உண்டாக்குமதும்

பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை

மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தியடையச் செய்தார்.

பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில்

குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும்.

மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது,

‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற

ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து,

இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி.

பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன்.

முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ?

என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை,

தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி.

ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது –

அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும். (29)

————–

ததசேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே || 30

பதவுரை:-

தத: – அமுதுசெய்த பிறகு,

புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய,

புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில்,

சேத: – தமது மநஸ்ஸை,

ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து,

உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி,

உபஹ்வரே – தனியடத்தில்,

உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன்

என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.

கருத்துரை:-

அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று

ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார்.

யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க.

யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை,

அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும்.

‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான்.

எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும்.

அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால்

திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க.

‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று

தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்,

ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை)

சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்

‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள

பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க.

புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷஸப்தம் பரமபுருஷனாகிய

விஷ்ணுவைக் குறிக்குமதாகும்.

யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்மத்யாநத்தைத் தெரிவிக்கிறது. (30)

————–

அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி || 31

பதவுரை:-

அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும்,

அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும்,

ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும்,

அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும்,

ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான,

அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே,

உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை,

நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு, 

நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

‘அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில்

முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும்,

அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு

யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது.

மூக்கின் நுனியை இருகண்களாலும் பார்த்துக்கொண்டு யோகம் செய்யவேண்டுமென்று தர்ம

ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும்,

பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய)

யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று

கூறுகிறபடியினால், ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை

எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க. (31)

—————-

ததஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் || 32

பதவுரை:-

தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு,

தஸ்மிந் – முற்கூறிய,

ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில்,

நிமக்நம் – மூழ்கியதாய்,

நிப்ருதம் – அசையாது நிற்கிற,

மந: – தனது மனத்தை,

யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக,

கர்த்தும் – செய்வதற்கு,

யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள்.

அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை

மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும்

மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால்,

எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை

‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி.

ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும்,

அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்யமங்களவிக்ரஹமாகும்.

இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து

அவரை வணங்கினால், தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி

‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வர வர முனி தினசர்யா–பூர்வ தினசர்யையின் முன்னுரைப் பகுதி –ஸ்லோகம் 1-13—ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது – ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி உரை —

May 24, 2022

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன்

ஸௌம்யஜாமத்ருயோகீந்த்ரசரணாம்புஜஷட்பதம் |
தேவராஜகுரும் வந்தே திவ்யஜ்ஞாநப்ரதம் ஶுபம் ||

ஸௌம்யஜாமத்ருயோகீந்த்ர – அழகியமணவாளமாமுனிகளின்,

சரணாம்புஜஷட்பதம் – திருவடித்தாமரைகளில் வண்டுபோல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,

திவ்யஜ்ஞாநப்ரதம் – (தம்மையண்டினவர்க்கு) உயர்ந்த ப்ரஹ்மஜ்ஞாநத்தை அளிப்பவரும்,

ஶுபம் – அறிவினாலும், அநுஷ்டாநத்தாலும் ஶோபிப்பவருமான,

தேவராஜகுரும் – தேவராஜகுரு என்ற எறும்பியப்பாவை,

வந்தே – வணங்கித் துதிக்கிறேன்.


ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்னும் நல்லநூலை இயற்றிய ஸ்ரீ தேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற

எறும்பியப்பா மிகப்பெரிய வித்வானும் கவியுமாவார்.

இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள்  எண்மரில் ஒருவர்.

ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இப்பெரியவர் அவர் விஷயமாக

வரவரமுநி காவ்யம்,

வரவரமுநிசம்பூ,

வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார்.

இவருடைய மற்றுள்ள பெருமைகளைப் பிள்ளைலோகார்ய ஜீயர் அருளிய யதீந்த்ரப்ரவண ப்ரபாவம் என்னும் நூலில் பரக்கக் காணலாம்.

கி.பி.1370 முதல் கி.பி.1443 வரையில் வாழ்ந்தருளிய மணவாள மாமுனிகளின் காலமே இவருடைய வாழ்ச்சிக்காலமாகும்.

இவர் மணவாள மாமுனிகளின் நித்யாநுஷ்டானங்களைப்பற்றி ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்ற நூலினையும் இயற்றியுள்ளர்.

இந்நூல் முன்று பிரிவுகளைகொண்டது. பூர்வதிநசர்யை, யதிராஜவிம்ஶதி, உத்தரதிநசர்யை என்பன அப்பிரிவுகள்.

ஒருநாளின் முற்பகுதியின் அநுஷ்டாநத்தையும், பிற்பகுதியின் அநுஷ்டாநத்தையும் முறையே தெரிவிப்பன பூர்வதிநசர்யையும், உத்தரதிநசர்யயும் ஆகும்.

எம்பெருமானாரைப்பற்றி த்யாநித்துத் துதிப்பதும் மணவாளமாமுனிகளின் அநுஷ்டாநத்தில் சேர்ந்ததாகையால்

பெரியோர்கள் மணவாளமாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக அருளிச்செய்த யதிராஜவிம்ஶதியையும்

பூர்வோத்தர திநசர்யைகளின் இடையில் சேர்த்தருளினர்.

இம்முன்று பகுதிகளைக்கொண்ட ஸ்ரீ வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு

ஏறக்குறைய 260 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தருளிய ‘வாதூலவீரராகவஸூரி’ என்ற

திருமழிசை அண்ணாவப்பங்கார்ஸ்வாமி பணித்தருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவித் தமிழில் ஓருரை எழுதப்படுகிறது.

ஸ்ரீ வரவரமுநிதாஸரென்னும் மறுபெயரையுடைய தேவராஜகுருவாகிய எறும்பியப்பா ‘குரு என்பவர்

ஸாக்ஷாத் நாராயணாவதாரமாகையால் அவருடைய திருநாமத்தை எப்போதும் ஜபிக்கவேண்டும்.

அவருக்கு வசப்பட்டு வாழவேண்டும். அவரிடத்தில் பக்தியைச் செலுத்தவேண்டும்.

அவருடைய அன்புக்கிலக்கானவற்றில் அன்பு காட்டவேண்டும். அவருக்கு ஒரு வருத்தம் நேரிட்டால் மிகவும் வருந்தவேண்டும்.

அவருடைய திருநாமத்தையும், குணங்களையும் த்யாநம் செய்து மகிழவேண்டும்.

தேவதையினிடம் பக்தன் போன்றும், அரசனிடம் வேலையாள்போன்றும்,

ஆசார்யனிடத்தில் ஶிஷ்யன் விநயத்தோடு கூடியவனாய்ப் பணிவிடை செய்யவேண்டும்.

நாம் ஆசார்யனுக்கு தாஸர்கள் என்று பெருமைப்படுதலும், ஆசார்யனைப் பின்செல்லுதலும்

அவருடைய குணங்களைப் பிறர் சொல்லக்கேட்டலும், தானே சொல்லுதலும், நினைத்தலும்

ஶிஷ்யன் செய்யத்தக்க செயல்கள்’ (?) என்றுள்ள உயர்ந்த ஶிஷ்யனைப்பற்றிய ஶாஸ்த்ர வாக்யங்களை அறிந்தவராகையாலும்,

எல்லையற்ற ஆசார்யபக்தியின் பெருமையாலும், தம்முடைய ஆசார்யராகிய பரமபூஜ்யரான மணவாளமாமுனிகளைப்பற்றி

சதகம், காவ்யம், சம்பூ முதலிய க்ரந்தங்களைத் தாம் இயற்றியிருந்தபோதிலும்

அவற்றால் த்ருப்தியடையாமல் ‘குருவின் நித்யாநுஷ்டாநங்களையும் வருணிக்கவேண்டும்’ (?) என்ற ஶாஸ்த்ரத்தினால்

தூண்டப்பெற்ற அதிகமான பற்றையுடையவராய்க் கொண்டு அம்மணவாளமாமுனிகளையே இலக்காகப் பெற்ற

திநசர்யை (நாள்தோறுமுண்டான அநுஷ்டாநத்தைப்பற்றிய நூல்) என்ற க்ரந்தத்தை இயற்றத்தொடங்கி,

செய்யப்போகும் க்ரந்தம் இடையூறேதுமின்றி முடிவு பெறுவதற்காக, தமது ஆசார்யபக்தியென்னும் பெரிய தகுதிக்கேற்ப,

ஆசார்ய நமஸ்காரரூபமான மங்களத்தைச் செய்தருளுகிறார். ‘அங்கே கவேர’ என்று ஶ்லோகத்தினால்.

இத்திநசர்யை என்ற நூல் ஜ்ஞாநம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய நற்குணங்களனைத்தும் நிறையப்பெற்றுப்

பங்க்திபாவநரான (ஒரு கோஷ்டியை முழுவதும் பரிஶுத்தமாக்கும் பெருமையையுடையரான) மணவாளமாமுனிகளைப் பற்றியதாதலால்,

தானும் பங்க்திபாவநமாய்க்கொண்டு ஶுத்தமான ஸத்த்வகுணத்தில் நிலைபெற்ற பரமவைதிக ஸ்ரீ வைஷ்ணவர்களால்

அநுயாக ஸமயத்தில் (கோஷ்டியாக இருந்து பகவத் ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும் ததீயாராதன ஸமயத்தில்) முதன்முதலில்

அநுஸந்திக்கப்பட்டு வருகின்றமை ஸம்ப்ரதாயஸித்தமாக உள்ளது.

ஒருபெரிய ததீயாராதன கோஷ்டியில் நல்லறிவும் நன்னடத்தையும் இல்லாத ஒருசிலர் இருந்தால்

அக்கோஷ்டியின் தூய்மை கெடுவதற்கு ப்ரஸக்தியுள்ளமையால், அத்தூய்மையின்மையைப் போக்கித் தூய்மையை

அதிகமாக்கவல்ல பெருமயைப்பெற்றவர் பங்க்திபாவநரான மணவாளமாமுனிகள்,

அவரைப் பற்றி இந்தத் திநசர்யையும் பங்க்திபாவநமென்பது பெரியோர்களின் துணிபு.

அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே |
ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வரவரம் முநிம்||–1-

துங்கே – மிகவும் உயர்ந்த,
புவந மங்களே – உலகோரின் மங்களங்களுக்கு (எல்லாவகையான நன்மைகளுக்கும்) காரணமான,
கவேர கந்யாயா – அங்கே – காவேரி நதியின் மடியில் (நடுவில்) இருக்கும்,
ரங்கே தாம்நி – திருவரங்கமென்னும் திருப்பதியில்,
ஸுக, ஆஸீநம் – ஸுகமாக (உபத்ரவமேதுமில்லாமல்) எழுந்தருளியிருப்பவரும்,
வரவரம் – (உருவம், ஔதார்யம், நீர்மை முதலியவற்றால் அழ்கிய மணவாளப் பெருமாளை ஒத்திருக்கையால்) அழகியமணவாளர் என்ற திருநாமத்தை தரித்திருப்பவரும்,
முநிம் – ஆசார்யனே ஶேஷியென்ற உண்மையை மநநம் செய்பவருமாகிய மணவாளமாமுனிகளை,
வந்தே – வணங்கித் துதிக்கின்றேன்.

“மகி ஸமர்ப்பணே” (கதௌ) என்னும் தாதுவடியாகப் பிறந்த மங்களம் என்னும் சொல்

கம்யம் (அடையப்படும் பயன்) என்ற பொருளையும், இலக்கணையினால் அதற்கு ஸாதனமான உபாயத்தையும் காட்டுகிறது.

இது “கவேர கந்யாயா: அங்கே” என்றவிடத்திலும், “ரங்கேதாம்நி” என்கிறவிடத்திலும் பொருந்துகிறது.

இரண்டும் நமக்கு அடையப்படும் பயனாகவும் மற்றுமுள்ள பயன்களுக்கு உபாயமாகவும் ஆகக் குறையில்லையல்லவா?

‘ரங்கம்’ என்ற சொல் எம்பெருமானுக்கு  ப்ரீதியை உண்டாக்குமிடம் என்னும் பொருளைத் தரும்.

‘ஸுகாஸீநம்’ என்பதனால், மணவாளமாமுனிகளின் அவதாரத்திற்குப் பின்பு துலுக்கர் முதலியோரால்

ஸ்ரீரங்கத்திற்கு எவ்வகையான உபத்ரவமுமில்லை என்பது ஸூசிப்பிக்கப்பட்டது.

எம்பெருமானார் காலத்தில் சைவர்களாலும்,

பிள்ளைலோகாசார்யார், வேதாந்ததேசிகர் ஆகியவர் காலத்தில் துலுக்கர்களாலும் உபத்ரவம் நேர்ந்ததுபோல்

மாமுனிகள் காலத்தில் யாராலும் எந்த உபத்ரவமும் உண்டாகவில்லை என்றபடி.

‘வதி – அபிவாதந ஸ்துத்யோ’ என்று தாதுவடிவாகப் பிறந்த ‘வந்தே’ என்னும் வினைச்சொல்,

உடலால் தரையில் விழுந்து வணங்குதலையும், வாயினால் துதித்தலையும் நேராகக் குறிப்பிட்டு,

இவ்விரண்டும் மணவாளமாமுனிகளைப் பற்றிய நினைவில்லாமல் நடவாதாகையால்,

பொருளாற்றலால் நினைத்தலையும் குறிப்பிட்டு, காயிக வாசிக மாநஸிகங்களான மூவகை மங்களங்களையும் தெரிவிப்பதாகும்.

—————————

அவ. – இங்ஙனம் மங்களம் செய்தபிறகு, தம்முடைய ஆசார்யரான மணவாளமாமுனிகள்

தம்திறத்தில் அருள்புரிந்த வகையைக் கூறுமவராய்,

அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கேட்பதும் அவரை ஸேவிப்பதும் அவரை துதிப்பதுமாகியவை தமக்குப் புருஷார்த்தமென்றும்

ஸம்ஸார துக்கத்தைப் போக்குமதென்றும் கூறுமவராய்க் கொண்டு,

‘ஆசார்யர்களை அவர்களெதிரில் துதிக்கவேண்டும்’ என்று சொல்லுகிறபடியே நேராக ஆசார்யராகிய மாமுனிகளைத் துதிப்பவராய்க் கொண்டு

தாம் செய்ய நினைத்த திநசர்யையின் பொருளைச் சுருங்கக்கூறுகிறார் –

‘மயி ப்ரவிஶதி’ என்று தொடங்கி ‘அநாஸ்பதம்’ (ஶ்லோகம் – 13) என்பதீறாக.

மயி ப்ரவிஶதி ஸ்ரீமந் மந்திரம் ரங்கஶாயிந: |
பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: ||–2-

பதவுரை: –

ஸ்ரீமந் – கைங்கர்யமாகிய செல்வம் மிகப்பெற்ற மணவாளமாமுனிகளே!
ரங்கஶாயிந: – ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளிய பெரியபெருமாளுடைய,
மந்திரம் – கோயிலைக் குறித்து,
மயி – அடியேன்,
ப்ரவிஶதி ஸதி – சென்று புகும் போது,
பத்யு: – ஜகத்பதியான பெரியபெருமாளுடைய,
பதஅம்புஜம் – தாமரை மலர் போன்ற திருவடிகளை,
த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,
அவிதூரத: – அருகில்,
ஆயாந்தம் – எழுந்தருளிக் கொண்டிருக்கிறவராயும்.

(இதற்கு 12ம் ஶ்லோகத்தில் உள்ள ‘த்வாமேவ’ என்பதனோடு அந்வயம்.

இப்படியே மேலுள்ள ஶ்லோகங்களிலும் அந்வயம் கொள்ளத்தக்கது)

கருத்துரை :- ‘ஸ்ரீமந்’ என்று பிரிக்காமல் ‘ஸ்ரீமத்’ என்று பிரித்து, இதனை மந்திரத்திற்கு அடைமொழியாகவும் ஆக்கலாம்.

அப்போது செல்வமாகிற பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்கு மிகவும் உரிய இடம் ஸ்ரீரங்கநாதன் கோவில் என்பது பொருளாகும்.

முதன்முதலில், முக்கியமான மாமுனிகளிடம் பராமுகமாயிருத்தலென்ற தோஷமுள்ளமையினால் அவரை ஸேவிக்க நினையாமல்,

அவ்வளவு முக்கியரல்லாத பெருமாளை ஸேவிப்பதற்காக அடியேன் கோவிலுக்குள் ப்ரவேஶிக்கும் போது,

எதிர்பாராமல் அடியேனுக்கு அருகிலேயே மாமுனிகள் பெருமாளை திருவடி தொழுவதற்காக எழுந்தருளி நின்றார்.

இது அடியேனுடைய பெரிய லாபமென்கிறார்

இதனால். ‘ ஆசார்யகடாக்ஷ வைபவத்தினால், முன்பு அவரிடம் பராமுகமாயிருந்ததற்குக் காரணமான பாவம் தொலைந்ததென்று,

‘நான் கோவிலுக்குள் புகும்போது மாமுனிகள் என் அருகிலே வந்துகொண்டிருக்கிறார்’ என்பதனால் குறிப்பாகக் காட்டப்பட்டதாயிற்று.

பகவானை விட ஆசார்யர் மிகவும் உயர்ந்தவராகையால் அவனை வணங்கச்சென்றபோது ஆசார்யர் எதிர்பட்டமை,

விறகு வெட்டி வயிறு வளர்ப்பவன் விறகு தேடிச்செலும்போது வழியில் எதிர்பாராமல் நிதி கிடைத்தது போலிருந்ததென்று இங்குக் கருத்துக்கூறுவர் உரையாசிரியர்.

எம்பெருமானார் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம்.

அதற்கு அவர் திருவடிகளே உபாயமென்று நினைத்த ஆசார்யநிஷ்டரான மாமுனிகள் கோவிலுக்குள் சென்று

பெரிய பெருமாளைத் தொழுவது – பெருமாளுக்கு மங்களாஶாஸநம் செய்வதற்காகவேயன்றி,

ஸித்தோபயமான பெருமாளைத் தம்முடைய புருஷார்த்தத்திற்கு உபாயமாகப் பற்றுதலாகிய ப்ரபத்தி செய்வதற்காக அன்று.

‘ தேவதாந்தரங்களையும் ஶப்தாதி விஷயங்களையும் உபாய பக்தியையும் உபாயமான எம்பெருமானையும் ஸமானமாக எண்ணியவனாய்,

‘எம்பெருமான் நமக்கு ஸ்வாமி (அவனை ஸ்வயம்ப்ரயோஜநமாக ஸேவித்து மங்களாஶாஸநம் செய்யவேணும்)

என்று நினைப்பவன் பரமைகாந்தி’ என்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே, மாமுனிகள் அத்தகைய பரமைகாந்தியாகையால் என்க. (2).

—————

ஸுதாநிதிமிவ ஸ்வைர ஸ்வீக்ருதோதக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||-3-

பதவுரை :-

ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ர விக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,

ஸுதாநிதி மிவ (ஸ்திதம்) – திருப்பாற்கடல் போல் வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும்,

ப்ரஸந்ந அர்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் – (கண்கூசாமல் காணும்படியாகத்) தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் ஸூர்யன் (ஒருவன் இருப்பானாகில் அவன்) போன்ற காந்தியினால் சூழப்பட்டவருமாகிய …

கருத்துரை :- ‘ ஆசார்யருடைய திருமேனியை, திருவடி முதலாகத் திருமுடியீறாக, ஶிஷ்யன் த்யானிக்கவேண்டும்’ என்றும்,

‘ ஶிஷ்யன் ஆசார்யன் திருமேனியை ஸேவிப்பதில் பற்றுடையவனாக இருக்கவேண்டும்’ என்றுமுள்ள வசனத்தின்படி

ஆசார்யன் திருமேனியை வருணிக்கிறார் எறும்பியப்பா.

மாமுனிகள் வெள்ளைவெளேரென்ற திருமேனியையுடைய திருவநந்தாழ்வானுடைய அவதாரமாகையாலே

தம்மிஷ்டப்படி தாமே ஏற்றுக்கொண்ட திருப்பாற்கடலுக்குக் காந்தி அதிகமாக இல்லாமையால்,

மேலும் காந்தியையுடைய ஸூரியனை மாமுனிகளுக்கு உபமானமாக்கினார்.

ஸூரியனுடைய காந்தி உக்ரமாகவும் உஷ்ணமாகவும் உள்ளதனால் அதனை நீக்க, ஸூரியனுக்கு ‘ப்ரஸந்ந’ என்ற விஶேஷணமிட்டார். ‘

தெளிந்தும், குளிர்ந்துமிருக்கிற’ என்பது அதன் பொருள். அப்படி ஒரு ஸூரியன் உண்டானால்

அவனுடைய ஒளிபோன்ற ஒளியால் சூழப்பட்டவர் மாமுனிகள் என்று

அபூதோபமையாக (இல்பொருளுவமையாக) ஸூரியனைக் கூறியபடியாம் இது. (3)

——————-

பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியௌ |
விந்யஸ்யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே ||

பதவுரை:-

பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும்,

பவத் – தேவரீருக்கு,

ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் திருத்தம்பியாரையும்,

பாணி பத்மாப்யாம் – தாமரை மலர் போன்ற திருக்கைகளால்,

பரிக்ருஹ்ய – நன்றாகப் பிடித்துக் கொண்டு,

ம்ருதுளௌ – ம்ருதுவான,

அங்க்ரீ – திருவடிகளை,

மேதிநீதலே – பூதலத்தில்,

ஸனை: – மெல்ல, மெல்ல,

விந்யஸ்யந்தம் – வைத்து நடப்பவராகிய…

கருத்துரை:-   தமதருகில் மாமுனிகள் வருகிறபடியைச் சிறப்பிக்கிறார் இதனால்.

ஆசார்யனே சேஷி என்ற ஜ்ஞாநமும், அவரே உபாயமென்ற உறுதிப்பாடும், அவ்வுபாயத்தினால் பெற்ற ஆசார்ய கைங்கர்யமும்,

இம்மூன்றுக்கும் தகுதியான அநுஷ்டாநமும் உள்ளமையினால்

மணவாளமாமுனிகளுக்குக் கோயிலண்ணனான வரதநாரயணகுருவும்,

அவர் தம்பியரான ஸ்ரீநிவாஸகுருவும் அன்புக்கிலக்காயினர் என்றபடி.

தூய்மையாலும், அழகாலும் மாமுனிகளின் திருக்கண்கள் தாமரை மலர் போன்றனவாயின.

(பரிக்ருஹ்ய) நன்றாகப் பிடித்துக்கொள்ளுதலாவது – மனத்தில் அன்போடு கூடிக் கைகளினால் பிடித்துக்கொள்ளுதலேயாகும்.

அதாவது – தாம் பெரியவரென்றும் ஸிஷ்யர்கள் சிரியவர்களென்றும் நினையாமல் ஸௌஸீயல்யாதிஸயத்தோடு பிடித்துக்கொள்ளுதல்.

இரண்டுத் திருக்கைகளாலும் ஸிஷ்யர்களைப் பிடித்துக்கொண்டால் த்ரிதண்டத்தை தரிக்க முடியாதல்லவா ?

எப்போதும் ஸந்யாஸிகள் த்ரிதண்டத்தை தரிக்கவேண்டுமே.

ஸ்ரீபாஞ்சராத்ர – தத்வஸார ஸம்ஹிதையில்

‘த்ரிதண்டமெனும் பெயர் பெற்ற விஷ்ணுவினுருவத்தை யத்யானவர் எப்போதும் தரிக்கக்கடவர்’ என்றும்,

விஷ்ணு ஸ்ம்ருதியில் ‘யஜ்ஞோபவீதம், த்ரிதண்டம், கமண்டலு ஜலபவித்ரம் கௌபீநம் அரைநாண் என்னுமிவற்றை

யதியானவர் ஆயுளுள்ளவரையில் விடாமல் தரிக்கக்கடவர்’ என்றும் கூறப்பட்டுள்ளதல்லவா? என்று எங்கு ஒரு கேள்வி எழுகின்றது.

இதற்கு விடை வருமாறு. ஜ்ஞானபூர்த்தியையுடைய ஸந்யாஸி விஷயத்திலே –

ஒரு காரணவிஸேஷத்தினால் ஏதோவொரு ஸமயத்தில் த்ரிதண்டமில்லாமலிருப்பினும் தோஷமில்லை.

‘த்யானம், நன்னடத்தை கேள்வியறிவு இயற்கையறிவு யதிதர்மமாகிற வைராக்யம் உலகையடக்குமாற்றல் ஆகிய

இவை எந்த ஸந்யாஸியினிடத்தில் உள்ளனவோ அவனுக்கு த்ரிதண்டம் முதலிய மாத்ரைகளினால் பரிகரங்களினால்

ஆகவேண்டிய பயனேதுமில்லை’ என்று க்ரதுவின் வசநம் இங்குக் காணத்தக்கது.

மேலும் கோயிலுக்குச் செல்வது எம்பெருமானை ஸாஷ்டாங்கமாகத் தடிபோல் கீழே படுத்து வணங்குவதற்காகவே யாகையால்,

தடிபோல் உடலைத் தரையில் படுக்கவைத்து இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் நீட்டி, நீட்டிய இரண்டு கைகளையும்

கூப்பிச்செய்யும் நமஸ்காரமே தண்டவத் ப்ரணாமமாகையால், இப்படிப்பட்ட ப்ரணாமத்தை, த்ரிதண்டத்தைக் கையிலேந்திக் கொண்டு செய்யமுடியாதாகையால் கோயிலுக்குச்செல்லும்போது த்ரிதண்டம் தரியாவிட்டால் குற்றமேதுமில்லை.

இரண்டு கைகளின் நடுவே ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் கைகளைக் கூப்பிக்கொண்டு தண்டனிடும்போது

த்ரிதண்டத்தைத் தரிக்கமுடியாதல்லவா ? என்பதே அக்கேள்விக்கு விடையாகும்.

ஆக, த்ரிதண்டமில்லாமல் ஸந்யாஸி இருக்கக்கூடாதென்ற விதி, பொது விதியேயாகையால்

அது தண்டவத் ப்ரணாமாதி காலங்களில் தவிர மற்ற சமயங்களைப் பற்றியதேயாகும் என்றபடி.

(மேதிநீதலே அங்க்ரீ விந்யஸ்யந்தம்) இங்கு பூமிதலே என்னாமல் மேதிநீதலே என்று பூமியை மேதிநீ என்று குறிப்பிட்டருளியது –

திருமால் மதுகைடபர்களைக் கொல்லும்போது அவர்கள் உடலிலிருந்த மேதஸ்ஸு (கொழுப்பு) பட்டதன் காரணமாக

பூமிக்கு மேதிநீ என்று பெயருண்டானமையால், அவர்களின் கொழுப்பினால் பூசப்பட்டு தூய்மையிழந்த

மேதிநீயானது (பூமியானது) இப்போது மாமுனிகளின் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்றுத் தூய்மை மிகப்பெற்றதென்று தெரிவிக்கைக்காகவாகும்.

‘நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே’ (பெரியாழ் திரு 4-4-6) என்று பகவத்பக்தர்களின் பாததூளிபடுதலை இவ்வுலகம் செய்த பாக்யத்தின் பயனாக அருளிச்செய்தாரிறே பெரியாழ்வார். (4)

—————-

ஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலம்பரம் |
ஆபீந விபுலோரஸ்கம் ஆஜாநு புஜபூஷணம் ||–5-

பதவுரை:-

ஆம்லாந கோமல ஆகாரம் – வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும்,

ஆதாம்ர விமல அம்பரம் – மிகச் சிவந்து ஸுத்தமான (காஷாய) வஸ்த்ரமணிந்தவரும்,

ஆபீந விபுல உரஸ்கம் – உயர்ந்த (முன்னுக்குவந்த) விஸாலமான திருமார்பையுடையவரும்,

ஆஜாநு புஜபூஷணம் – முழ்ந்தாள் வரையில் நீண்டு, திருமேனிக்கு ஆபரணம் போன்ற திருக்கைகளை யுடையவருமாகிய…

கருத்துரை:-

திருவடியழகை அநுபவித்துவிட்டு, இனித் திருமேனியின் மென்மையையும்,

ஸந்யாஸாஸ்ரமத்திற்குத் தக்க, திருப்பரிவட்டத்தின் இனிமையையும்,

மற்றுமுள்ள அவயவங்களின் அழகையும் அநுபவிக்கிறார் இதனால்.

(அம்லாந:) – வாடாக்குறிஞ்சிமலர். அது காட்டுவாகை மலர் முதலியவற்றைவிட மெத்தென்றிருக்குமாம்.

அம்லாந கோமலாகாரம் என்றதனால் – முன் ஸ்லோகத்தில் கூறியபடி திருவடிகள் மட்டும் ம்ருதுவானவையல்ல.

திருமேனியே மெத்தென்றிருக்கும் என்று காட்டியபடி.

திருவநந்தாழ்வானேயன்றோ மாமுநிகள்.

சிலர் அம்லான பதத்திற்கு, காட்டுவாகைமலர் என்று பொருள் கூறினர்.

வஸ்த்ரத்திற்குச் சிவப்பு நிறம் துறவறத்திற்கேற்பக் காவிக்கல்லினால் ஏற்றப்பட்டது.

திருப்பாற்கடல்போல் வெள்ளைவெளேரென்ற திருமேனிக்கு, சிவப்பு நிறக்காஷாயத்தினால் உண்டான பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்ற (பரபாக) ஸோபை, திருபாற்கடலுக்கு அதன்கண் உள்ள பவழங்களால் உண்டான ஸோபை போன்றுள்ளமை குறிப்பாகக் காட்டப்பட்டது.

(ஆபீநவிபுலோரஸ்கம்) திருமார்பு உயர்ந்தும் விஸாலமாகவும் இருத்தல் உத்தமபுருஷலக்ஷணமாகும்.

(ஆஜாநுபுஜபூஷணம்) இங்கு திருக்கைகள் முழந்தாளளவும் நீண்டுள்ளமை கூறியது உண்மையுரையாகும்.

அதனால் ஸிஷ்யர்களைக் கைகளால் பிடித்துக்கொண்டு நடந்தருளும்போது

முழந்தாளளவும் நீண்டதாகத் தென்படாவிட்டாலும் குறையில்லை என்க. அ

ல்லது ஸிஷ்யர்களைப் பிடித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஸ்ரமமாக இருக்குமே என்று நினைத்து

இடையிடையில் கைகளைத் தொங்கவிடவும் கூடுமாகையால்,

அச்சமயத்தில் கைகள் முழந்தாளளவும் நீண்டிருத்தல் தென்படுதலால்

அது தன்னை இதனால் கூறினாரென்றலும் பொருந்தும். (5)

——————

ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவள த்விஷா |
சோபிதம் யக்யஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா ||-6-

பதவுரை: 

ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவள த்விஷா – தாமரைத் தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும்,

நாபி பிம்ப ஸநாபிநா – வட்ட வடிவமான நாபியின் ஸமான தேசத்தையுடையதுமான (=நாபிதேசம் வரையில் தொங்குகின்றதுமான)

யஜ்ஞஸூத்ரேண – யஜ்ஞோபவீதத்தினால்.

சோபிதம் – விளங்குமவருமாகிய

கருத்துரை:

திருமார்பிலுள்ள யஜ்ஞோபவீதத்தை வருணிக்கிறார் இதனால்.

‘புத்தம் புதிய நூல்களால் நிருமிக்கப்பட்டதும் வெண்மை நிறமுள்ளதுமான பூணூலை அணிய வேண்டும்’ என்ற தத்தாத்ரேயரின் வசனம் இங்கு நினைக்கத்தகும்.

மேதாதிதியும் ‘ஸந்யாஸிகளுக்கு யஜ்ஞோபவீதமும் பற்களும் ஜலபவித்ரமும் ஆகிய இம்மூன்றும் எப்போதும் வெண்மையாக இருக்கக்கடவன’ என்று பணித்தார்.

‘உபவீதம் ப்ரஹ்மஸூத்ரம் ஸூத்ரம் யஜ்ஞோபவீதம், யஜ்ஞஸூத்ரம் தேவலக்ஷ்யம் என்ற ஆறும் பூணூலின் பெயர்கள்’ என்றார்கள் மஹரிஷிகள்.

‘யன்ஜ்ஞஸூத்ரேண’ என்ற ஒருமையினால் ஸந்யாஸிகளுக்கு மூன்றுவடம் கொண்ட ஒரு பூணூல்தான் என்பது குறிக்கப்படுகிறது.

‘ஸந்யாஸிக்கு ஒரே பூணூல்,

ப்ரஹ்மசாரிக்கு மான்தோலுடன் கூடிய ஒரே பூணூல்,

க்ருஹஸ்தனுக்கும் வானப்ரஸ்தனுக்கும் (=முதுமையில் மனைவியுடன் வனம் சென்று சேர்ந்து தவம் செய்யுமவனுக்கும்) உத்தரீயத்துக்காக அணியப்படும் ஒரு பூணூலுடன் சேர்ந்து இரண்டு பூணூல்கள் – அதாவது ‘மூன்று’ என்று வ்யாஸரும் பரத்வாஜரும் அறுதியிட்டனர்.

இங்கு ஸந்யாஸிக்கு ஒரே பூணூல் என்றது – ஒரு ஒற்றை வடத்துடன் கூடிய – மூன்று வடங்கொண்ட ஒரே பூணூல் என்றபடி.

‘நாபிக்கு மேல் பூணூல் தரித்தவனுக்கு ஆயுள் குறையும், நாபியின் கீழ் தொங்கும்படி தரித்தவனுக்கு தவம் அழியும்.

ஆகவே நாபியளவாகவே பூணூலணியக்கடவன் என்று மஹரிஷிகள் கூறியதை இங்கு நினைக்கத்தக்கதாகும். (6)

————-

அம்போஜ பீஜ மாலாபிஅபிஜாதபுஜாந்தரம்|
ஊர்த்வபுண்ட்ரைருபஸ்லிஷ்டம் உசிதஸ்தாநலக்ஷணை:||-7-

பதவுரை :-

அம்போஜ பீஜ மாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால்,

அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும்,

உசித ஸ்தாந லக்ஷணை: – சாஸ்திரம் விதித்ததற்கு ஏற்ற – வயிறு முதலிய இடங்களென்ன, இடைவெளியோடு கூடியுள்ளமை முதலிய லக்ஷணங்களென்ன இவற்றையுடைய,

ஊர்த்வபுண்ட்ரை: – ஊர்த்வபுண்ட்ரங்களுடன் (கீழிருந்து மேல் நோக்கி இடப்படும் திருமண்காப்புகளுடன்)

உபஸ்லிஷ்டம் – பொருந்தப் பெற்றவருமாகிய…

கருத்துரை:-

திருமார்பு அதற்கு இருவருகுமுள்ள புஜங்கள் பூணூல் நாபியாகியவற்றை வருணித்தபின்பு,

திருமார்பு முதலியவற்றோடு தொடர்பு கொண்ட தாமரைமணிமாலையையும் திருமண்காப்புகளையும் வருணிக்கிறார் இதனால்.

“ஸுத்தமான தாமரை மணிமாலையையும், தோள்களில் ஒற்றிக்கொள்ளப்பட்டு அலங்காரமான சங்கு சக்கரப்பொறிகளையும்,

விஷ்ணுவின் பெயர்களிலாவது விஷ்ணு பக்தர்களின் பெயர்களிலாவது ஏதோ ஒன்றையும் தரிக்க வேண்டும்’ என்று பரத்வாஜரும்,

“பூணூலையும், குடுமியையும், திருமண்காப்புகளையும், தாமரை மணிமாலையையும், பட்டு வஸ்த்ரத்தையும், அந்தணன் தரிக்க வேண்டும்’ என்ற பராசரரும் பணித்தருளியவற்றை இங்கு அனுஸந்தித்தல் தகும்.

‘மாலாபி:’ என்ற பஹுவசநத்தினால் தாமரைமணி மாலையோடு, துளஸீ மணிமாலையையும் பட்டினால் செய்யப்பட்ட பலநிறமுள்ள பவித்ரமாலைகளையும் கொள்க. ‘

கருந்துளஸிக் கட்டையினால் செய்த மணிமாலையையும், பட்டுப்பவித்ரங்களையும், தாமரை மணிமாலையையும் எம்பெருமானுக்கு அணிவித்து, அவன் ப்ரஸாதமாகிய இம்மூன்றையும் தரிக்கவேண்டும்’ என்றுள்ள ப்ராஹ்ம புராண வசநம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

திருமண்காப்பைப் பற்றி, ஸ்ரீபாஞ்சராத்ர – பராஸர ஸம்ஹிதையில் ‘மூக்கின் அடிப்பகுதியில் (புருவ நடுவின் கீழுள்ள மூக்குப்பகுதியில்) ஒரு விரலகலமுள்ள பாதமும்,

நெற்றியின் நடுவில் ஒன்றரை விரல் அகலமுள்ள இடைவெளிப்பகுதியும் இருபக்கங்களிலுமுள்ள கோடுகள் ஒருவிரல் அகலமுடையதுமாக – ஊர்த்வபுண்ட்ரத்தை (கீழிலிருந்து மேலுக்குச் செல்லும் நெற்றிக்குறியை) அந்தணன் தரிக்கவேண்டும்’ என்றுள்ளது.

பாத்மபுராணத்தில் ‘மூக்கின் அடிப்பகுதியிலிருந்து தொடங்கி நெற்றியின் முடிவளவாக ஊர்த்வபுண்ட்ரமிட வேண்டும்.

புருவத்தின் நடுப்பகுதி தொடங்கி நெற்றியின் இறுதிவரையில் இடப்படும் இரண்டு கோடுகளின் நடுவில் இடைவெளியை அமைக்க வேண்டும்.

அவ்விடைவெளி இரண்டு விரலகலமுடையதாகவும், இருகோடுகள் ஒரு விரலகமுடையதாகவும் இருக்கவேண்டும்’ என்று காண்கிறது.

‘விஷ்ணுக்ஷேத்ரத்திலிருந்து வெண்மைநிறமுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டுவந்து,

அதைத் திருவஷ்டாக்ஷரமஹாமந்த்ரத்தினால் அபிமந்த்ரித்து,

அம்மண்ணினால் நெற்றி முதலிய அவயங்களில் கேஸவாதி நாமங்களுக்குத் தக்கபடி

(பன்னிரண்டு) ஊர்த்வபுண்ட்ரங்களை தரிக்கவேண்டும்’ என்ற பராஸர ஸ்ம்ருதியில் குறிக்கப்பட்டுள்ளது.

ஊர்த்வ புண்ட்ரங்களை எறும்பியப்பா இங்குக் கூறியது ஸ்ரீசூர்ணத்திற்கும் உபலக்ஷணம்; ‘

ஊர்த்வபுண்ட்ரத்தின் இடைவெளியில் ஸ்ரீதேவிக்கு அபிமதமான (இஷ்டமான) மஞ்சளால் செய்யப்பட்ட

ஸ்ரீசூர்ணத்தைத் தரிக்கவேண்டும்’ என்று பராஸரர் பணித்தமையால் என்க. (7)

——————-

காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா|
கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்தமூலாவலம்பிநா||–8-

பதவுரை:-

காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய்,

ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற,

கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால்,

மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய….

கருத்துரை:-

ஊர்த்வபுண்ட்ரத்தோடு பொருந்திய தோள்களும் அவற்றில் தரிக்கப்பட்ட பட்டுவஸ்த்ரமும் நினைவுக்கு வரவே அவற்றையும் வருணிக்கிறார் இதனால்.

பட்டு வஸ்த்ரத்தை உத்தரீயமாக அணிந்திருத்தல் இங்குக் கூறப்படுகிறது.

ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்த்தன், வாநப்ரஸ்தன், ஸ்ந்யாஸி எனப்படுகிற நான்கு ஆஸ்ரமங்களிலுள்ள எல்லா ப்ராஹ்மணர்களுக்கும் பொதுவாக பட்டு வஸ்திரமணிதல் விதிக்கப்பட்டுள்ளது.

பராஸரர் ‘யஜ்ஞோபவீதம் குடுமி ஊர்த்வபுண்ட்ரம் தாமரைமணிமாலை பட்டுவஸ்த்ரமென்னுமிவற்றை ப்ராஹ்மணன் எப்போதும் தரிக்கக்கடவன்’ என்று கூறியது காண்க.

இந்த ப்ரகரணத்தில் ‘உத்தரீயத்தை அணியக்கூடாது’ என்று விலக்கியிருப்பது – அவைஷ்ணவ (வைஷ்ணவரல்லாத) ஸந்யாஸியைப் பற்றியதேயன்றி வைஷ்ணவ ஸந்யாஸியைப் பற்றியதன்றென்று கொள்ளத்தக்கது.

இது தெருவில் எழுந்தருளிக் கொண்டிருக்கிற மாமுநிகளைப் பற்றி வருணிக்கிற ஸ்லோகமாகையால் உத்தரீயம் தோளிலணிந்திருப்பது குற்றத்தின்பாற்படாது.

‘ப்ரதக்ஷிணம் பண்ணும்போதும், தண்டனிடும்போதும், தேவபூஜை செய்யும் போதும், ஹோமம் பண்ணும் போதும், பெருமாளையும் ஆசார்யனையும் ஸேவிக்கும் போதும் தோளில் உத்தரீயம் அணிதல் ஆகாது’ என்றே சாண்டில்யர் கூறியுள்ளதனால் என்க.

இங்குக் குறிப்பிட்ட பட்டுஉத்தரீயம் காஷாய வர்ணமுடையதென்று கொள்க; ஸந்யாஸிகளுக்கு அதுவே நியாயமுடையதாகையாலே. (8)

—————-

மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்ததஸ்புரிதாதரம், |
ததர்த்த தத்த்வநித்யாநஸந்நத்தபுலகோத்கமம் ||-9-

பதவுரை:-

மந்த்ரரத்ந அநுஸந்தாந ஸந்தத ஸ்புரித அதரம் – மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதே அசைகிற உதட்டையுடையவரும்,

ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலக உத்கமம் – அந்த த்வய மந்த்ரத்தின் அர்த்தத்திலுள்ள உண்மை நிலையை நன்றாக த்யாநம் செய்வதனால் உண்டான மயிர்க்கூச்செறிதலையுடையவருமாகிய….

கருத்துரை:-

இதனால் அதர ஸொபையை வருணிக்கிறார். அதரம்-உதடு.

‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்பது த்வயமந்த்ரம்.

இது திருமந்த்ரமாகிய ‘ஒம் நமோ நாராயணாய’ என்ற மூலமந்த்ரத்தைவிட உயர்ந்ததாகையால் மந்த்ரரத்நமெனப்படுகிறது.

மூலமந்த்ரம் மந்த்ரராஜமென்றும், இது மந்த்ரரத்நம் என்றும் ப்ரஸித்தமாகியுள்ளது.

மந்த்ர ரத்நமென்றால் மந்த்ரங்களுக்குள்ளே மிகவும் ஸ்ரேஷ்டமானது என்றபடியாம்.

‘மந்த்ரங்களுக்குள்ளே பரமமான மந்த்ரம் இது. குஹ்ய(ரஹஸ்ய)ங்களுக்குள்ளே பரமமான குஹ்யம் இது.

வெகு விரைவிலேயே ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது இது.

திருமந்த்ரத்தில் உண்டான எல்லா விதமான ஸந்தேஹங்களையும் தீர்ப்பது இது.

எல்லாப் பாபங்களையும் போக்கவல்லதுமாகும் இது.

இந்த ஸரணாகதி மந்த்ரம் எல்லாச் செல்வங்களையும், எல்லா நன்மைகளையும் உண்டாக்குமது’ என்று நாரதருக்கு பராஸர முனிவரால் கூறப்பட்டுள்ளது காணத்தக்கது.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கருதியே இது மந்த்ரரத்நமெனப்பட்டது.

அநுஸந்தானமாவது மெல்ல உச்சரித்தலாகும். த்வயத்தை உச்சரிப்பதனால் எப்போதும் உதடு அசைகிறதென்றபடி.

‘தேஹம் விழும் வரையில் த்வயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும்’ என்பது பராஸரின் வசனம்.

அநுஸந்தானமென்று – மெல்ல உச்சரிக்கின்றமை கூறப்படுவதனால் ‘மந்த்ரத்தைப் பிறர் காதில் விழாதபடி உச்சரித்து ரக்ஷிக்கவேண்டும்’ என்ற ஸாஸ்த்ரார்த்தம் மாமுனிகளால் அநுஷ்டிக்கப்பட்டமை ஸூசிப்பிக்கப்பட்டது.

த்வயத்தை அர்த்தாநுஸந்தானமில்லாமல் மூலமாத்ரமாக உச்சரிப்பது உயர்ந்த அதிகாரிகளுக்கு தகாமையினால் மாமுனிகள் அதன் அர்த்தங்களையும் அநுஸந்திப்பதை இனிக்கூறுகிறார்.

த்வயத்தின் அர்த்தமாவது பிராட்டியும், எம்பெருமானும். பிராட்டியுடன் கூடிய எம்பெருமானைத் தஞ்சமாகப் பற்றுதலுமாம்.

அவற்றின் தத்துவமாவது – பிராட்டியின் புருஷகார பாவமும், அவளால் தலையெடுக்கப்பட்ட வாத்ஸல்யம் முதலிய குணங்களும்,

அக் குணங்களோடு கூடிய ஸித்தோபாயமான நாராயணனும், அவனுடைய திருமேனியும் அதைத் தெரிவிக்கிற திருவடிகளும் ஆகியவை.

நித்யாநமாவது – நிதராம் த்யாநம் என்றபடி.

அதாவது பாவநாப்ரகர்ஷம் என்று சொல்லப்படுகிற – இடைவிடாமல் நினைத்துக் கொண்டேயிருத்தல் ஆகும்.

முற்கூறிய அர்த்த தத்துவங்களை இடைவிடாமல் நினைத்தால் பகவத் பக்தர்களுக்கு ஆஸ்சர்யத்தினாலும் ஸந்தோஷத்தினாலும்

மயிர்கூச்செரிதல் உண்டாவது இயற்கையாகையால், அது மாமுனிகளுக்கு உண்டாகின்றமை இதில் கூறப்பட்டது.

த்வயத்தையும் அதன் அர்த்தங்களையும் நினைத்தலே ப்ரபத்தியாகையால், அப்ரபத்தியை ஒருதடவை மட்டுமே அநுஷ்டிக்க வேண்டியிருத்தலால், இடைவிடாமல் அநுஷ்டித்தமை சொல்லப்படுதல் பொருந்தாதே என்று கேட்கவேண்டா.

மோக்ஷார்த்தமாகப் ப்ரபத்தியை அநுஷ்டித்தல் ஒருதடவையேயாகிலும், நற்போது போக்குவதற்காகவும்,

அநுபவித்து மகிழ்வதற்காகவும் இடைவிடாமல் அவ்வர்த்தத்தின் தத்துவங்களை நினைத்தல் கூடுமென்க.

முற் கூறிய படியேயன்றி ‘ததர்த்த தத்த்வ நித்யாநம்’ என்பதற்கு வேறுபடியாகவும் கருத்துக்கூறுவர்.

‘விஷ்ணு: ஸேஷீ ததீய: ஸுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீஸடாரி:, ஸ்ரீமாந் ராமாநுஜார்ய பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் |

தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத், ஸேஷம் ஸ்ரீமத் குரூனாம் குல மிதமகிலம் தஸ்ய நாதஸ்ய ஸேஷ: ||

[விஷ்ணுவானவர் ஸேஷி (நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு உகக்கும் தலைவர்).

நற்குணங்களுக்கு இருப்பிடமாகிய அப்பெருமானுடைய திருமேனியே ஸ்ரீஸடாரி என்னும் நம்மாழ்வார்,

அவருடைய திருவடித்தாமரையிணையாக ஸ்ரீமத் ராமாநுஜாசார்யராகிய எம்பெருமானார் விளங்குகிறார்.

குரு: என்ற பதம் அவ்விராமாநுசரிடத்தில் நிறைபொருளுடையதாய் விளங்குகிறது.

வேறு யாரிடத்திலும் விளங்குவதில்லை. ஆகையால் அவ்விராமாநுசருக்கு முன்பும், பின்புமுள்ள மற்ற குருக்களுடைய ஸமூஹம் அனைத்தும் அவ்விராமாநுச முனிவருக்கு ஸேஷமானது.] என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்தபடியே,

பகவத் ராமாநுஜாச்சார்யரே த்வயத்தில் உள்ள ‘ஸ்ரீமந்நாராயண்சரணௌ’ என்ற சரண்ஸப்தார்த்தம். அதுவே ததர்த்த தத்த்வம்.

அதாவது ஸ்ரீமந்நாராயணனுடைய – நாம் காண்கிற திருவடி ஸ்ரீமந்நாராயணனுடைய சரணங்களல்ல;

பின்னையோவெனில் பகவத் ராமாநுஜரே ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகள் என்பது த்வயமந்த்ரார்த்தத்தின் உண்மைநிலை என்றபடி.

யதீந்த்ரப்ரவணரான (பகவத் ராமாநுஜ பக்தராகிய) மணவாள மாமுனிகளுக்கு ராமாநுஜரென்னும்

ஸ்ரீமந் நாராயண சரணங்களை இடைவிடாமல் த்யானித்தலே முக்கியமாகையால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வத்தை விட

இந்த த்வயார்த்த தத்த்வமே இங்கு எறும்பியப்பாவால் அருளிச்செய்யப்பட்டதென்கை யுக்தமாகும்.

த்வயார்த்த தத்த்வ த்யானத்தினால் மயிர்க்கூர்ச்செறியபெற்ற தேவரீரையே இடைவிடாமல்

கண்ணாரக்காணக்கடவேன் (12ம் ஸ்லோகம்) என்கையால், ‘எம்பெருமானுடைய குணங்களாலே

ஆவேஸிக்கப்பட்டு எம்பெருமான் குணங்களையே த்யானித்து

அதனால் ஆனந்தக் கண்ணீருடனும் மயிர்க்கூச் செறியப்பெற்ற திருமேனியுடனும் விளங்கும் பக்தனானவன்

உடலெடுத்த அனைவராலும் எப்போதும் காணத்தக்கவனாகிறான்’ என்று விஷ்ணு தத்த்வ க்ரந்தத்தில் கூறியபடியே

மணவாளமாமுனிகளைக் கண்ணாரக்காண் எறும்பியப்பா ஆசைப்பட்டபடி இது. (9)

————

ஸ்மயமாநமுகாம்போஜம் தயமாநத்ருகஞ்சலம் |
மயி ப்ரஸாதப்ரவணம் மதுரோதாரபாஷணம் ||-10-

பதவுரை:-

ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும்,

தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும்,

மயி – இத்தனை நாள்கள் தம்திறத்தில் பாராமுகம் காட்டியிருந்த அடியேனிடத்தில், 

ப்ரஸாத ப்ரவணம் – அருள்புரிவதில் பற்றுடையவராய்,

மதுர உதார பாஷணம் – செவிக்கினியதாய் ஆழ்ந்த பொருள்களைக் கொண்ட வார்த்தைகளையுடையவருமாகிய….

கருத்துரை:-

அதரத்தில் குடிகொண்ட மந்தஹாஸத்தையும் அதனுடன் கூடிய கடைக்கண் பார்வையையும்

அவ்விரண்டோடு ஒற்றுமை கொண்ட அமுதமொழிகளையும் அம்மூன்றினாலும்

ஊகிக்கத்தக்க – அவர் தம்மிடம் புரியும் அநுக்ரஹத்தையும் வருணிக்கிறார்.

இது தன்னால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வ த்யாநத்தின் தொடர்ச்சியால் தமக்கு மோக்ஷலாபம் உண்டாகிவிட்டதாக நினைத்துத்

தமது விருப்பம் நிறைவேறிய ஸந்தோஷத்தினால் ஸதா மந்தஹாஸமுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

அதுவேயன்றி இம்மந்தஹாஸத்தை – மேற்கூறப்படும் மதுரவார்த்தைக்கும் பூர்வாங்கமாகவும் கூறலாம்;

ஸந்தோஷத்தை புன்சிரிப்பினால் தெரிவித்துப் பின்பல்லவோ மஹான்கள் மதுரமாக பேசுவது.

இனி, தயையாவது பிறர் துன்பங்கண்டு இரங்குதல்.

‘நாம் இங்ஙனம் த்வயார்த்த தத்வத்யானத்தினால் அடையும் இன்பம் இவ்வுலகோர்க்குக் கிடைக்கவில்லையே,

ஐயோ இவர்கள் ஸம்ஸாரத்தில் உழல்கின்றார்களே’ என்று உலகோர் துன்பங்கண்டு மாமுனிகள் துன்பப்படுகிறாரென்க.

இதுவேயன்றி, மேற்கூறப்படுகின்ற மதுரபாஷணத்திற்கும் இத்தகைய காரணமாகலாம்;

தயையோடல்லவா ஆசார்யர்கள் ஸிஷ்யர்களோடு மதுரமாகப் பேசுவது.

இந்த ஸந்தோஷமும் தயையும் மிகவும் முக்யமான தருமங்களாகும்.

‘ஸத்யம் ஸுத்தி தயை மனங்கலங்காமை பொறுமை ஸந்தோஷம் இவை அனைவர்க்கும் அவசியமாக இருக்க வேண்டிய தருமங்கள்’ என்றுள்ள பரத்வாஜ பரிசிஷ்ட வசநம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

‘மயி ப்ரஸாத ப்ரவணம்’ என்பதற்கு – ‘அடியேனுக்கு அருள் செய்வதில் பற்றுடையவர்’ என்று முற்கூறிய பொருளேயன்றி,

‘அடியேன் முன்பு பராமுகமாக இருந்ததனால் உண்டான மனக்கலக்கம் நீங்கப்பெற்று,

அதற்கு நேர் முரணாக மனம் தெளிந்திருக்குமிருப்பில் பற்றுடையவராயினர் என்ற பொருளும் கூறலாகும்.

மதுரமாகவும், அர்த்தகாம்பீரியமுடையதாகவும் பேச வேண்டும்.

‘மதுரமான – செவிக்கினிய வார்த்தையைப் பேச வேண்டும்’ என்று மேதாதிதியும்,

‘ஆழ்ந்த பொருளோடு கூடிய பேச்சுக்களையே பேச வேண்டும்’ என்று சாண்டில்யரும் கூறியது காண்க.

இங்கே பேச்சுக்கு ஆழ்ந்த பொருளுடைமையாவது – எந்த வார்த்தை பேசினாலும் முற்கூறிய த்வயத்தின்

ஆழ்ந்த கருத்திலேயே நோக்குடைமையாகும். (10)

————-

ஆத்மலாபாத் ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||-11-

பதவுரை:-

ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட,

அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும்,

பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை,

இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால்,

அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய்,

இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை),

அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள்கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக்கொள்வதற்கென்று,

ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….

கருத்துரை:-

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட மந்தஹாஸம், கருணை பொங்கிய கண்ணிணை, மதுரமான வார்த்தை ஆகியவற்றால் அடியேன் ஊகிக்கிறேன் – அடியேனுக்கருள் செய்வதற்காகவே அடியேன் வரும் ஸமயத்தை நிஸ்சயித்து அடியேன் கோவிலுக்குச் செல்லும்போது எழுந்தருளினார்;

அவருடன் அடியேனுக்கு நேர்ந்த சேர்த்தி தானாகவே நேர்ந்ததன்று – என்பதாக – என்று கூறுகிறார் இதனால்.

ஜந – பிறந்தவன், அகிஞ்சந – குணமில்லாதவன், இமம் – (அயம்) (ஸ்வரத்தைக் கொண்டு பொருள் கொள்க) – குற்றமனைத்துக்கும் கொள்கலமானவன்.

இவற்றால் – உலகத்தில் பூமிபாரமாகவும் உண்டிக்கும் கேடாகவும் பிறந்தது மட்டுமேயன்றி பிறப்புக்குப் பயனாகக் குற்றம் நீக்குதலும் குணம் பெருக்குதலுமின்றிக் கெட்டுப்போனவன் அடியேன் என்று தம்மை இகழ்ந்தார் எறும்பியப்பா என்க.

இத்தகையவனையும் விடாமல் காக்கவந்த மாமுனிகளின் மஹக்ருபை என்னே என்று வியக்கிறார் இதனால்.

ப்ராப்தமிவ – இங்கு ‘இவ’ என்பது உவமையைக் குறிப்பதன்று – ஊகையைக் குறிப்பதாகும்.

ஊகை – (உத்ப்ரேக்ஷை) – கருத்துரையில் கூறப்பட்டது.(11)

——————

பவந்தமேவ நீரந்த்ரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா |    
முநே வரவர ஸ்வாமிந் முஹுஸ்த்வாமேவ கீர்த்தயந் || 12

த்வதந்யவிஷயஸ்பர்ஸவிமுகைரகிலேந்த்ரியை: |
பவேயம் பவது:க்காநாம் அஸஹ்யாநாமநாஸ்பதம் || 13

பதவுரை:-

ஸ்வாமிந் வரவர – தேவரீருடைய ஸொத்தான அடியேனிடத்தில், தாமே அபிமாநம் செலுத்தும் ஸ்வாமித்வத்தையுடைய மணவாளமாமுனிகளே!

முநே – அடியேனை ஏற்றுக்கொள்ளத்தக்க உபாயத்தை மனனம் செய்யும் மஹாநுபாவரே!

பவந்தமேவ – திருமேனியழகு நீர்மை எளிமை முதலிய குணங்களால் பூர்ணரான தேவரீரையே,

நீரந்த்ரம் – இடைவிடாமல்,

பஸ்யந் – கண்டுகொண்டும்,

வஸ்யேந் சேதஸா – (தேவரீரின்னருளால் அடியேனுக்கு) வசப்பட்ட மநஸ்ஸுடன்,

த்வாமேவ – ஸ்தோத்ரம் செய்யத்தக்க தேவரீரையே,

முஹூ – அடிக்கடி, 

கீர்த்தயந் – ஸ்தோத்ரம் செய்துகொண்டும், (அஹம் – அடியேன்) (12)

த்வத் அந்ய விஷய ஸ்பர்ஸ விமுகை – தேவரீரைவிட வேறாகிய ஸப்தாதி விஷயங்களைத் தொடுவதில் பராமுகமான (பகைமைபூண்ட),

அகில இந்த்ரியை – கண், மூக்கு முதலிய ஜ்ஞாநேந்த்ரியங்களென்ன, வாக்கு முதலான கருமேந்த்ரியங்களென்ன, இவற்றாலே

அஸஹ்யாநாம் – பொறுக்கமுடியாத,

பவது:க்காநாம் – பிறவியினாலுண்டாகும் து:க்கங்களுக்கு,

அநாஸ்பதம் – இருப்பிடமாகாதவனாக, பவேயம் – ஆகக்கடவேன். (13)

கருத்துரை:-

ஆசார்யனை இடைவிடாமல் கண்ணால் ஸேவித்துக்கொண்டும் வாயால் துதிசெய்து கொண்டும்

மற்றுமுள்ள இந்த்ரியங்களுக்கும் ஆசார்யனையே விஷயமாக்கிக் கொண்டுமிருப்பதனால்

தாம் மோக்ஷத்திற்கே தகுதிபெற்று,

இதுவரையில் இந்த்ரியங்களனைத்தும் உலகிலுள்ள ஸப்தாதி நீசவிஷயங்களையே இலக்காகிக் கொண்டிருந்ததனால்

தமக்கு ஏற்பட்டிருந்த ஸம்ஸாரது:க்கம் இனி மேல் நேராதிருக்க வேணுமென்று மாமுனிகளை ப்ரார்த்திக்கிறார் இவற்றால்.

இங்கு பஸ்யந் கீர்த்தயந் என்ற இரண்டிடங்களிலும் உள்ள ஸத்ரு ப்ரத்யயம் காரணப் பொருளதாகையால்,

காண்பதனாலும் துதிப்பதனாலும் – என்று முறையே பொருள் கொள்க.

இவற்றிற்கு அடுத்த ஸ்லோகத்திலுள்ள ‘பவது:க்காநாம் அநாஸ்பதம் பவேயம்’ என்பதனோடு அந்வயம்.

பவேயம் – என்றதில் லோட்ப்ரத்யயத்திற்கு ப்ரார்த்தனை பொருளாகையால்,

தேவரீரையே கண்டுகொண்டிருப்பதனாலும், ஸ்தோத்ரம் செய்து கொண்டிருப்பதனாலும்

மற்ற ஸப்தாதி விஷயங்களை விட்டு தேவரீரையே இலக்காகப் பெற்ற மற்றுமுள்ள எல்லா இந்த்ரியங்களையும் உடையேனாகையாலும்

மோக்ஷம் பெறுவதற்கே உரியேனாகி – அடியேன் ஸம்ஸார து:க்கங்களுக்கு ஒருநாளும் ஆளாகாதபடி

தேவரீர் க்ருபை செய்யவேணுமென்று ப்ரார்த்தித்தபடி இது.

ஆசார்யனைக் காண்பதனாலும், துதிப்பதனாலும் எம்பெருமான் திருவுள்ளத்தில் ப்ரீதியுண்டாய்,

அதனால் ஸிஷ்யன் மோக்ஷம் பெறுகிறானாகையாலே, ஸிஷ்யன் ஸம்ஸார து:க்கத்திற்கு ஆளாகாமலிருப்பதற்கு

ஆசார்ய தரிசனமும் ஆசாரிய ஸ்தோத்ரமும் பரம்பரயா காரணமென்று கொள்ளத்தக்கது.

தம்முடைய எல்லா இந்த்ரியங்களுக்கும் மற்ற ஸப்தாதி விஷயங்களில் பராங்முகத்வம் (பகைமை பூணுதல்) கூறப்பட்டது கொண்டு,

அவற்றுக்கு மணவாளமாமுனிகளையே இலக்காகவுடைமையை (ப்ரார்த்திப்பதாக) ஊகித்தறிதல் தகும்;

இந்த்ரியங்கள் குர்வத்ரூபங்கள் (ஏதாவது தமக்குத் தக்கதொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்குந் தன்மையுடையவைகள்)

ஆகையால் ஸப்தாதி விஷயங்களில் பராமுகமான இந்த்ரியங்களுக்கு மணவாளமாமுனிகளையே விஷயமாக (இலக்காக)வுடைமை

அவசியமாகையால் இந்த்ரியங்கள் ஏதாவதொரு விஷயத்தைப் பற்றாமல் வெறுமனே இராவன்றோ?

ஆக – இவ்விரண்டாலும், மாமுனிகளே! அடியேனுடைய எல்லாவிந்த்ரியங்களும் தேவரீரையே இலக்காகக் கொண்டு

அடியேன் மோக்ஷத்திற்குத் தகுதி பெற வேண்டும். நீசமான ஸப்தாதிகளை விஷயமாகக் கொள்ளாமையினால்

பிறவித் துன்பத்திற்கு ஆளாகாமலிருக்க வேண்டும். இங்ஙனமிருக்கும்படி தேவரீர் அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று.

கண், காது, கை, கால் முதலிய ஜ்ஞாநேந்த்ரிய கர்மேந்த்ரியங்களனைத்தையும் பகவத் பாகவதாசார்ய கைங்கர்யங்களிலேயே உபயோகிக்க வேண்டும். லௌகீக நீச விஷயங்களில் செலுத்தக்கூடாதென்பது சாண்டில்யஸ்ம்ருதி, பரத்வாஜ பரிசிஷ்டம் முதலிய தர்மசாஸ்த்ர க்ரந்தங்களில் பரக்கக்கூறப்பட்டுள்ளது. விரிப்பிற்பெருகுமென்று விடப்பட்டது.

இதுவரையில் இந்த வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு உபோத்காதமாகும். உபோத்காதம் = முன்னுரை.

இதுதன்னில் மேலே சொல்லப்போகிற ஐந்து காலங்களில் செய்ய வேண்டிய

அபிகமநம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து அம்ஸங்களில் – இஜ்யை தவிர்ந்த

மற்ற நான்கும் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

அபிகமநமாவது எம்பெருமானை ஸேவிப்பதற்காக எதிர்கொண்டு செல்வது.

இது ‘பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தம்’ (2) என்று ஜகத்பதியான அழகியமணவாளனை ஸேவிக்கக் கோயிலுக்கு மாமுநிகள் செல்லுவது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

உபாதாநமாவது – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தல்.

இது ‘ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யத் நாஸ்தீதி நிஸ்சயாத் – இமம் ஜநம் அங்கீகர்த்துமிவ ப்ராப்தம்’ (11) என்று

பரமாத்மாவுக்கு – ஜீவாத்மாவைத் தொண்டனாக்கி அவனைப்பெறுதலே ப்ரயோஜநமென்று அறுதியிட்டு,

அதற்காக மாமுநிகள் தம்மை ஏற்றுக்கொள்வதற்கு எழுந்தருளல் கூறப்பட்டதனால்,

மாமுனிகள் எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய எறும்பியப்பாவை ஸ்வீகரிப்பதாகிற உபாதாநம் ஸூசிப்பிக்கப்பட்டது.

ஸ்வாத்யாயமாவது – வேத மந்த்ரங்களை ஒதுதல்.

இது ‘மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம்’ (9) என்று – வேத மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை

மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதசைகிற அதரத்தையுடைமை கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

யோகமென்பது பகவத் விஷயத்தைப் பற்றிய த்யானமாகும்.

இது ‘ததர்த்த தத்வ நித்யாந ஸந்நத்த புலகோத்கமம்’ (9) என்று அந்த த்வயமந்திரத்தின் உண்மைப் பொருளாகிய

பிராட்டி பெருமாள் முதலிய பொருளையாவது, பகவத் ராமாநுஜமுநிகளையாவது த்யானம் செய்வது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

இங்ஙனம் முற்கூறிய ஐந்தில் நான்கு அம்ஸங்கள் குறிக்கப்பட்டனவாகக் கொள்க.

ஆக, இவ்வுபோத்காதம் மேலுள்ள நூலுக்குச் சுருக்கமாக அமைந்ததென்க. ‘

எம்பெருமானை எதிர்கொண்டும் எம்பெருமானை ஆராதிப்பதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்தும்,

ஆராதனம் செய்தும், வேத மந்த்ராத்யயனம் செய்தும், வேத மந்த்ரார்த்தத்தை த்யானம் செய்தும்

இப்படிப்பட்ட ஐந்து அம்ஸங்களினால் போதை நற்போதாகப் போக்கவேண்டும்’ என்று பரத்வாஜ முனிவர் பணித்தது காணத்தக்கது.

பூர்வ தினசர்யையின் முன்னுரைப் பகுதி நிறைவு பெற்றது.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

March 28, 2022

இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும்
அன்பராய் அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –

தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே –

தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –

விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –

—————————————————————————————————————

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-

எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்ய பித்ஸ் யஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –

அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி –என்றும்
கிமேதந நிர் தோஷ க இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –

இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ

இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ

மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ

அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ

அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு

சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் கருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –

தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –

ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –

———————————————————————–

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

தனு -சரீரம்

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————————————

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-

த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக

தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –

அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

——————————————————————

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

எம்பெருமானார் தம் பிரான் என்னுமவரை
நம்பெருமாள் தாம் உகந்து நாள் தோறும் -தம் பரமாய்
ஏறிட்டுக் கொண்டு அளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கைவிடார் -1-

பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குரவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ -நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –2-

ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர்காள்
ஸூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர் –3-

தென்னரங்கர் தேவியே ஸ்ரீ ரேங்கர் நாயகியே
மன்னுயிர்கட்க்கு எல்லாம் மாதாவே -என்னை யினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலுங்காமல்
அவ்வுலகில் வாங்கி அருள் –4-

ஸ்ரீ ரெங்க நாயகியே தென்னரங்கன் தேவியே
நாரங்கட்க்கு எல்லாம் நல் தாயே -மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எண்ணிட தீராதது என் –5-

இந்த உடம்போடு இனி இறுக்கப் போகாதது தான்
செங்கமலத் தாள்கள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருப்பாயே இங்கு –6-

இந்த உடம்போடு இரு வினையால் இவ்வளவும்
உந்தனடி சேராது உழன்றேனே -அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி –7-

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

March 25, 2022

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமத் வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நவதிருப்பதி / ஸ்ரீ திவ்ய தேசங்களில் ஊர் வகைகள் —

March 5, 2022

ஸ்ரீ ஆழ்வார் திருநகரி

உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே
எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-சூரணை -161-

அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று
திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,
திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்-

(உயர் திண் அணை ஓன்று -நான்குமே பரத்வத்பரம் –
பரத்வே பரம் -விபவாயாம் பரம் -மோக்ஷ ப்ரத பரம்–அர்ச்சாயாம் பரத்வம் -)

——-

ஸ்ரீ திரு தொலை வில்லி மங்கலம் -இரட்டை திருப்பதி

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னால் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

———

திருக்கோளூர்

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை

————

திரு தென் திருப்பேரை

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-

மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

———–

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-

நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

—————————–

திருக்குளந்தை மாயக்கூத்தன்

சாதரரை பரிசு அழிக்கும் சேஷ்ட்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் –சூரணை -172-
அதாவது-
பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி
ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்
மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –
மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று
கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

————

திருப் புளிங்குடி திரு வரகுண மங்கை ஸ்ரீ வைகுண்டம் பாக த்வரை

போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் — சூரணை -177-
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன
புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று-9-2-4–என்று
கிடப்பது இருப்பது நிற்பதான –
திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை –

——————–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-சூரணை -165-
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-
மகா நகரான தென் திரு பேரையில் –

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-
நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்-சூரணை -176-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை

தென்னகரிலே–திரு வல்ல வாழ்
நன்னகரிலே–திரு விண்ணகரம்
அவ்வூர் -தொலைவில்லி மங்கலம் -இரட்டைத் திருப்பதி
புகுமூரிலே–திருக்கோளூர்
மகா நகர் – தென் திரு பேரையில் –
நீண் நகரிலே-திரு வாறன் விளை –
புகழுமூர் -குட்ட நாட்டுத் திருப்புலியூர்

————————————

புண்டரீகம் -செந்தாமரையா வெண் தாமரையா சங்கை வருமே
புண்டரீக மலர் அதன் மேல் புவனா எல்லாம் படைத்தவனே -பெருமாள் -8-2-

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் -திருவாய் -5-10-8-
செந்தாமரையே என்பது தெளிவு

தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ்
புண்டரீகம் சிதாம் போஜம் இறே –
ஸம் ரக்த நயநா கோரா போல் எரி விழியாய் இருக்கை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன தவளமான கண்கள் இருந்தபடி என் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்பதால்
வெண் தாமரை திருக் கண்களில் செவ்வரி இருப்பதை அறியலாம்

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷீணீ
புண்டரீக தளம் அமலாய தேஷண

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கீதா சாம்யமும் ஸ்ரீ திருவாய் மொழியின் ஏற்றமும்-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்—சூரணை-189-190-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்

February 27, 2022

சூரணை-189-

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார் -மேல் –
(மேலே ஸ்ரீ கீதா சாம்யமும் இதன் ஏற்றமும் அருளிச் செய்கிறார் -மேல் ஐந்து ஸூத்ரங்களால்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருளினான் ஸ்ரீ கீதாச்சார்யர்
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
திருக்குருகூர் ஞானப்பிரான் சந்நிதியும் பிரதானம் -)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை
நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் ..

அதாவது
மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே
பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –
தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –
ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –

நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசத தமாக அனுபவித்து –
என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று
பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –
என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–திருவாய் -4-10-9-என்று
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை
உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை
குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –
அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்ம தியா குலம்
பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –
அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –
நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம்
சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து
யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே
லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –
பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –
நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று
சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –
ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –

தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –
பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண
அநாசின அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்
நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ்
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,
வாசாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வ –
பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –
அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா–7-4-
அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-5-என்கிற படியே
சேதன அசேதன சரீரியாய் –
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசே ர்ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- -என்றும்
சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும் —

6 -சௌலப்ய –
தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின-8-11- –என்றும்
பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –
சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று
அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ –
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 -இந்திரிய பல–
யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித
இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று
இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –
அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும்
மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

11 -கரண நியமன –
தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர
வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –
சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும்
கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –
சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று
ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 -தேவாசுர விபாக –
த்வௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று
தேவாசுர விபாகத்தையும்

14 -விபூதி யோக –
ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும்
ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21- -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சன –
பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச தீப்தான் 11-15-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தி –
மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று
அங்க சஹிதையான பக்தியையும்-
(உபாய – சாதன -உபாசனை -பக்தி இது–என் விஷயமாக ஆறு தடவை சொல்கிறான் -)

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா
மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று
அங்கத்வேனவும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூ ச -18-66- –
ஸ்வதந்த்ரவேனும் –
இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்-

(ரஹஸ்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீதா பாஷ்யம் வேதாந்த அர்த்தம் சொல்ல வந்ததால் –
அங்க பிரபத்தி தான் இரண்டுமே )

இவரும்
1-2 -3–ஜீவ பர பேதமும்/ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –
பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்
ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,
( அடியேன் உத்தம புருஷன் இதனால் ஜீவ பரஸ்பர பேதம் -அடிமைத்தனம் அறிந்த அறியாத என்றும் பேதமும் உண்டே )
சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று
ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம்
ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்
மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும்
சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய்
நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே
அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய
நியந்தருத்வத்தையும்-

6 -அவனுடைய சௌலப்யத்தையும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும்
ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான
அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும்
பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று
அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-
(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 -அஹங்கார தோஷத்தையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவேயாக சொல்லுகையாலே -அஹங்கார தோஷத்தையும்-

9 -இந்திரிய பலத்தையும்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று
இந்திரிய பலத்தையும்-

10 -மனோ பிரதான்யத்தையும்
மனத்தை வலித்து -5-1-4-என்று
மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும்
உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று
கரண நியமனத்தையும்-( மத் பர அவன் இறை உள்ளில் ஒடுங்கு இவர் )

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே
ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்
இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே
ஜிஜ்ஞாசுவான கேவலன் –
குணம் கொள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே
ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 -தேவ அசுர விபாகத்தையும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,
நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று
தேவ அசுர விபாகத்தையும்-

14 -விபூதி யோகத்தையும்
புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –
நல் குரவும்-6-3-1- -என்றும் –
மாயா வாமனன்-7-8-1- -என்றும் –
இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தியையும்
வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –
மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன்
தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –
மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும் –

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று
அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே –
பக்தி அங்கத் வேனவும் –
மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் –
சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்
ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு
மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –
19-அவதார ரஹச்ய வைபவம்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –

20-ஸ்வ ஆராதன்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன -9-26– என்றார் போலே –
பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன
அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –

21-கர்ம யோகம் தொடங்கி ஆச்சார்ய அபிமானம் பர்யந்தம் உபதேசம்
தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –
சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது –

———————————-

சூரணை -190-

ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் .
அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் …
பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் ..
(பிரபந்த உதய ஹேது வைலக்ஷண்யம் அடுத்ததில் -191-
உபக்ரம உபஸம்ஹார ப்ரக்ரியை வைலக்ஷண்யம் -192-
ப்ரதிபாத்ய அர்த்த வைலக்ஷண்யம் -193 —-கீழே-189- ப்ரதிபாத்ய அர்த்த சாம்யம் பார்த்தோம்
ப்ராமாண்ய உதகர்ஷ வைலக்ஷண்யம் -194- )

அது தத்வ உபதேசம்
இது தத்வ தர்சி வசனம்-

அதாவது
அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –
தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –
தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..(ஞானம் இச்சா ஜிஜ்ஞாஸூ )

இப் பிரபந்தம் –
தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று
ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த
தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..
அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும்
மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசம்சை போலே
இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..
(ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ஐதிக்யம் )

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று
இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,
இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-