Archive for the ‘Krishnan kathai amutham’ Category

ஸ்ரீ கேசவ நாம -வை லக்ஷண்யம் —

March 1, 2022

(புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:)
(இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:)

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி
எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல
அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது

“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”.
(இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் –
வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு.
பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும்.
சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும்.
கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.

அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர்.
ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
“கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்”

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார்.
க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்).
நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம்.
இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன்.
அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான்.
ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது.
ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க,
அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம்.
பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார்.
பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார்.
நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார்
(வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்…).
திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார்.

வாழி கேசவா!!!

நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவ ப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

———-

திவ்யப்ப்ரபந்தம் 3776 ஆக இருப்பினும் 4000 பாசுரமாக கணக்கில் கொள்வது எப்படி?

“இலங்கெழு கூற்றிருக்ககையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றிலிருநூற்றிருபத்தே ழீந்தான் வாழியே “
என்னும் அப்பிள்ளையருளிய வாழித்திருநாமத்தைப் பின்பற்றி திருமடல்களில் ஈரடி கொண்ட கண்ணிகளை
ஒரு பாட்டாகக்கொண்டு சிறிய திருமடல் 77 1/2 பாட்டாகவும்,
பெரியதிருமடல் 148 1/2 பாட்டாகவும் கொண்டு மூன்றாமாயிரத்தில் மொத்தப் பாசுரங்கள் 817 என்று கொண்டு
சில பதிப்புகளில் திருவாய்மொழியோடு சேர்த்து திவ்யப்ரபந்தம் நாலாயிரம் பாட்டாகக் கணக்கிடப்பட்டது.

“சிறியமடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும் சீர்பெரியமடல்தனிற் பாட்டெழுபத்தெட்டும் (தேசிகப்ரபந்தம் 389) என்னும்
பிரபந்த பாட்டில் உள்ளபடி சிறியமடலை 40 பாட்டாகவும்
பெரிய திருமடலை 78 பாட்டாகவும் கொண்டு
மூன்றாமாயிரம் 709 பாசுரங்களாகவும்
திருவாய்மொழியையும் இராமானுஜ நூற்றாந்தாதி 108 பாட்டையும் சேர்த்து 4000 பாசுரங்களாக கணக்கிடப்படுகிறது.

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———

கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –

கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –

கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –

(அவருக்கும் ஒரு அவயவம்-குழலுக்கு- இவளுக்கும் ஓர் அவயவம் -கண்ணி-சொல்லி )

————–

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –

ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-

இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –

—————

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

—————

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரிலே பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்

(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)

——————

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

கேசவன் பேர் இட்டு –
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவாம் கே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
கேசவ க்லேச நாசன -என்கிறபடியே
க்லேச நாசனாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை இட்டு –
கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித் திருமினோ –
நீங்கள் அந்த பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து சந்தோஷத்தோடு இருங்கள்
தேனித்து இருக்கை யாவது -இனியராய் இருக்கை

நாயகன் நாரணன்
நாயகன் -என்றது – சர்வ சேஷி -என்றபடி
நாரணன் -என்றது -சமஸ்த கல்யாண குணாத்மகன்-என்றபடி

இத்தால் –
ஆஸ்ரிதரத்தை ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியையும்
குண யோகத்தையும் உடையவன் என்கை

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்

——————

கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார்.
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.

————-

பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மை தனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–திருவாய்மொழி நூற்றந்தாதி-16-

வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

——————-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே –2-7-1-

நம்முடைய வாழ்வு -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ -வி லஷணமாக உள்ளது -கேசவன் தமர் என்னும்படியான சிறப்பு பெற்றார்கள்
சர்வேஸ்வரன் -கண் அழகால் என்னை ஈடுபடுத்திக் கொண்டு
வடிவு அழகாய் முடூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ கரித்த மகா உபாகாரகன் நாராயணனாலே மா சதிர் பெற்றோம்
கேசவன் -கேசாபாசம்/கேசி நிரசித்தவன் /பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன் –

—————–

கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி ஹந்தாவான -கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
கீழில் திருவாய் மொழியிற் -நல்குரவும்”-சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும்,
இத் திருவாய் மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும்
அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறது” என்று சொல்லுவர்.
அன்றிக்கே,
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”–மஹாபாரதம் சபாபர். 38 : 23.
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

————–

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

————

மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:3688/1

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மால் –
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவாய் உடையவன்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிடச் செய்த வியாமோஹம்

அரி –
விரோதிகளை அழிக்கும் தன்மையன்-விரோதி -நிரசன சீலன் –

கேசவன்
காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் மீள ஒண்ணாத பிரசஸ்த கேசன் –
செறிந்த நீண்ட மயிர் முடியை உடையவன்

நாரணன் –
ஆஸ்ரித வத்சலன் -அடியார்கள் இடத்தில் அன்பை உடையவன்

சீ மாதவன் –
அதற்கு அடியான ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆனவன்

கோவிந்தன்
அவளுடைய சேர்த்தியாலே ஆஸ்ரிதற்கு அடியார்கட்கு கையாளாய் இருக்குமவன்

வைகுந்தன்
இவற்றுக்கு எல்லாம் அடியான மேன்மையை உடையவன்

என்று என்று
நிரந்தரமாக -எப்பொழுதும்

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

————–

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –
மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
இந்த உடலின் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேண்டும் அன்றோ
நாம் சர்வேஸ்வரன் திருவடிகளைப் பற்றியது –
அதற்கு மேலே நம்மை அவன் அடிமையும் கொண்டானே கண்டாயே
வாக்கினாலாய அடிமை அன்றோ கொண்டது -பாட்டாய பல பாடுதல் –

கேசவன் எம்பெருமானை –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரனை -என்றது
கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி
நம்முடைய சேஷத்வத்தை -அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி
நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –
அன்றிக்கே –
பிரசஸ்த கேசன் -நீண்ட மயிரை உடையவன் தன் அழகினைக் காட்டி
நம்மை அடிமை கொண்டவன் -என்றுமாம் –

பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
நாம் அடிமை செய்ய-பிராப்தி பந்தகமாய் -அடைவதற்குத் தடைகளாய்-அநாதி கால ஆர்ஜிதமான –
பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள் எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –
இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண
கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கேசவனாகிய மருத்துவனை –
இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலாய் இருக்கும் அன்றோ –

————-

கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது
மருதரும் வசுக்களும் அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள்

கிளர் ஓளி மணி முடி
மிக்க ஒளியை யுடைய ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேயம்
வ்யூஹ விபவங்கள் அளவு அன்றிக்கே திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகையாலே நீர்மையிலே தோற்று
சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

————-

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –

————-

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
ப்ரஸித்த நாமம் ஆதல்

—————

கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு

பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –

————–

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு –
ஆழியம் கை பேராயர்க்கு ஆட்பட்டார்க்கு அடிமை —
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள்-
புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளே-ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தையும் காட்டும் திரு நாமம்

நாராயணன் மூர்த்தி கேசவன் –
வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

————–

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

———————–

தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

——————-

தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

——————

கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

———————

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

————–

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவனோடி வளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
கேசவனோடே –ப்ரசஸ்த கேஸனானவனோடே
இவளை -பருவத்து அளவே அன்றியே பரிபாகம் மிக்க இவள்
இவள் பிறங்கு இரும் கூந்தலானாலும் -இவள் சொல்லுவது
மயிரும் முடி கூடிற்று இல –என்று இறே

கேசவன் -இத்யாதி –
ஆன பின்பு -பிரசஸ்த கேசவனோடே-
அவ் வை லக்ஷண்யத்தில் எடுப்புண்டு பின் பற்றித் திரிகிற இவளை –

————

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – 3-3 2-

(கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரம் -குலசேகரப்பெருமாள் )

நித்ய வாசம் பண்ணுகிற ஸௌசீல்ய குணயுக்தனாய்-
ஆஸ்ரித விரோதிகளை -மதுவை – நிரசித்தால் போலே நிரசித்து பொகடுமவனாய் –
அவர்களுக்கும் அனுபாவ்யமாம்படி பிரசஸ்தமான திருக் குழலை உடையனாய் இருக்கிறவனே

பிரபத்தி மார்க்க பிரகாசகமான
தெற்கு திக்கு முதலான எல்லாத் திக்கு களுக்கும் ப்ரதாநமான கோயிலிலே நித்ய வாஸம் செய்கையாலே
ஆஸ்ரிதருக்கு ஸூ லபனாய்
விரோதி நிரசன சீலனுமாய்
ப்ரசஸ்த கேஸ ப்ரதானனுமாய் –இருக்கிறவனே

——————–

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் -3 -3-8 –

கேசவா
ப்ரம்மா ஈஸா நாதிகளுக்கு காரணமாகை அன்றிக்கே
இப் பழிச் சொல்லுக்கு நீ காரணம் ஆவதே –
(அகில காரணம் அத்புத காரணம் அன்றோ )

பிரம ருத்ரர்களுக்கு காரண பூதன் ஆகையாலே -கேசவன் -என்னும்
திருநாமத்தை உடையவனே –

—————

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3

பேசவும் தெரியாத பெண்மை என் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுருகின்றாளே – 3-7 -7-

கேசவா என்றும்
பிரசச்த கேச வனானவனே-என்றும்

கேசவா என்றும்
விரோதி நிரசன சீலன் என்னுதல்
ப்ரசஸ்த கேசன் என்னுதல்

கேடிலீ என்றும் –
உன்னால் அல்லது செல்லாதவர்களை ஒரு நாளும் கை விடாதவனே -என்றும்

————–

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

—————

கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

—————-

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து –

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

——————–

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———–

பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்
கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

—————

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் –
ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்;
எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்;
நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

—————

கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது
ப்ரஹ்ம ஹத்யைக்கு -பிராயச்சித்தமாக -கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு பிராயச்சித்தம் -கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –
இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –
ப்ராயச்சித்தமும் -கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன

கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல
விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
ராவணன் ஒருவனும் பிரதிகூல்யம் -தீ வினை செய்ய ராக்ஷஸ ஜாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே
எல்லாம்-
அனுபவிக்க கடவனவும்
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்
எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
என்ன –
கார்யத்தில் வந்தால் -அர்த்தக்ரியா காரியாயே – அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின்
யுக்தி -வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –

இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
பிரசஸ்த கேசனாய் -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-சம்சார துரிதங்கள் –
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் நிர்வாஹகன் -தலைவனே என்ன
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே

————-

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

கேசனே —
கேசவ சப்தமாய் கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்
இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

————

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின
நாசம் -துக்கம்
வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்
இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி
நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –
பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இ றே

எம் ஈசனே –
என் நாதனே
விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

January 5, 2022

ஸ்ரீ யதிராஜருக்கும் யதுகுல திலகமான ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள
ஸாம்யத்தை சாடுக்தியான ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய –ஸ்ரீ யதிராஜ சப்ததி—13-ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –
கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால்
யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் -பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-
பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-

ஸ்ரீ பார்த்த சாரதியே தானே இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ
சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூ க்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

———-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்

1-ஸூர்யத்வாத் –
2-ஸூசிதத்வாத் –
3-அபஹ்ருதி கரணாத் –
4-கோகுல உத்தாரகத்வாத்
5-பத்தத் வாத்
6-ஸாஸ்த்ர தத்வாத்
7-ஜன ஸஹ யோ கச்ச
8-லஷ்மீ பதித் வாத் –
9-நீலத் வாத்
10-நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்
11-அந்த தச்சா வதாராத்
12-ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்
கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஸூர்யத்வாத் –

தத் அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

கலயாமி கலி த்வம்ஸம் கவிம் லோக திவாகரம் –5-2-1-

——-

ஸூசிதத்வாத் –

அவதாரம் அசரீரி வாக்கு –

கலியும் கெடும் கண்டு கொண்மின்

கண்ணன் கம்ச வதம்
கலியன் கலி புருஷ வதம்

———

அபஹ்ருதி கரணாத் -பட்டர் மங்களா ஸாஸனம் கலியன் திருட்டுக்கு
மணி கொடுத்த பெருமாள் ஸூசிக்கும்படி காஞ்சியில் திருமங்கை சேவை மணி கையில்

வெண்ணெய் பெண்களை களவு கண்ணன்
கோயில் பிரகார மண்டபாதி நிர்மாண அர்த்தத்துக்காக கலியன் பல பல களவுகள் ப்ரஸித்தம்

வீரனாக முன்
விநயனாக பின்
இன்றும் வேடுபரி உத்சவத்தில் சேவிக்கிறோமே

————

கோகுல உத்தாரகத்வாத்

ஆயர்பாடிக்கு அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கு

இவரும்
ந்ருபசு
வ்ருத்தயா பசுர் நரவபு
ஞாநேந ஹீந பசுபிஸ் ஸமாந
நம்மை உத்தரிக்கவே இவரது அவதாரம்

———

பத்தத் வாத்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான்
இவரும் அரசனால் சிறையில் வைக்கப்பட்டார்

———-

ஸாஸ்த்ர தத்வாத்

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –
கீதாச்சார்யன்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லமுதம்
தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம்
பர சமயப் பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம்

————-

ஜன ஸஹ யோ கச்ச

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
வாரணம் ஆயிரம் சூழ வலம்

நீர் மேல் நடப்பான்
நிழலில் ஒதுங்குவான்
தாளூதுவான்
தோலா வழக்கன்

———

லஷ்மீ பதித் வாத் –

ஸுமங்களா -குமுதவல்லி நாச்சியார் இயல் பெயர்
மாப்பிள்ளை மிடுக்குடன் அண்ணன் கோயிலுக்கு எழுந்து அருளுவார்
நீசனை–நீலனை சந்தித்து பாகவத ஸ்ரேஷ்டர் ஆக்குவாய் -சாபம்
குமுத வல்லி வஸ்திரம் தலைப்பாகையாக சூட்டிக்கொண்டு மஞ்சக்குழி உத்ஸவம் திருமஞ்சனம் -சென்னிக்கு அணி

ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பதி என்றும் இவரைக் கொள்ளலாம்
மற்று எல்லாம் பேச்சிலும் உன் அடியார்க்கு அடிமை என்றார் அன்றோ –

———-

நீலத் வாத்

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட

தண் தமிழ் செய்த நீலன் தனக்கு

——–

நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்

கலியனும் இது போல் பல அநீதி சேஷ்டிதங்கள் ப்ரஸித்தம்

விமோஹநே வல்லவ கேஹி நீநாம் ந ப்ரஹ்ம சர்யம் பிபதே ததீயம் ஸம்பத்ஸ்யதே
பாலக ஜீவநம் தத் ஸத்யேன யேநைவ ஸதாம் சமஷம் –யாதவா ப்யுதம் -4-64-

யதி மே ப்ரஹ்ம சர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயிதிஷ்டதி அவ்யா ஹதம் மமைஸ்வர்யம் தேந ஜீவது பாகை

ப்ரஹ்ம சர்யம் ஸத்யம் வழுவாதனானால் உயிர் பெற்று எழுக என்றதும் கரிக்கட்டை போல் இருந்த பரிஷீத் எழுந்தான்

ஜித பாஹ்ய ஜிநாதி மணி ப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரெங்கபுரே மணி மண்டபவ பிரகாரணன் விததே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

——–

அந்த தச்சா வதாராத்

கடைக்குட்டி அவதாரங்கள் இரண்டும்
இருவரும் சரம அவதார பூதர் இப்பொழுது –
கல்கி இன்னும் அவதரிக்க வில்லையே

———

ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய

அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
ஒன்றலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி

———–

கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே ஸாம்யம் காட்டப் பட்டது

—————-

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத கலியன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

October 30, 2021

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமங்கள்–

August 30, 2021

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி

தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்

வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன்

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே

நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –

மன்னு வடமதுரை மைந்தனே –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –

மாலாய்ப் பிறந்த நம்பி

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை

நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்

வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே

அல்லிக் கமலக் கண்ணனை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்

வல்வினை தீர்க்கும் கண்ணனை

என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே

அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே

மாயக் கூத்தா வாமனா கொண்டால் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –

பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ

வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்

தேவக் கோலப் பிரான்

பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு

சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே

கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-

கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர்

பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –

மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு

கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா

பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்

காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்

காளியன் மேல் நடமாடிய கூத்தனார்

பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை

விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –

கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா

யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை

இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை

கோ நிரை மேய்த்தவனே எம்மானே

பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்

ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –

ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –

மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா

பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனை

இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்

கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –

குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –

வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன்-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன்

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன்-

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதியிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை

கரும் சிறுக்கன் குழலூதின போது

நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப-

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில் குழல்-

அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை-

குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே-

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்-

குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னை –எம்மானை-

குடமாடுவார் –தேவ தேவ பிரான்

குடமாடி உலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன்

குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வாணா

சாளக்ராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்-

ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனை-

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு பேய்ச்சி பாலையுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை

ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை

தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை

ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன்

கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்

வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கழ வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கள்வா

மாயோனே ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

ஆய்ச்சி யாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தவப்பன்

மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன்

கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே

கால நேமி காலனே

மா பிளந்த கைத்தலத்த கண்ணன்

கடம் கலந்தவன் கரி மருப்பொசித்து–நடம் பயின்ற நாதனே

கொம்பு ஒசித்து உகந்த வுத்தமா துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத —

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன்

புள் வாய் பிளந்து எருதடர்த்த எந்தை –

கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை-

மல்லடர்ந்த்த மல்லா –

புள் வாய் பிளந்த புனிதா-

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை மாலை –

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே

ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான்

கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்

தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி

நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா

அன்று பாரதப்போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன்

நப்பின்னை தன் திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனுமானவனே

பின்னை மணாளனை

ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை

பின்னை தன காதலன்

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா

எருத்து இறுத்த நல்லாயர் ஏறு

எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே

அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே

பின்னை தோள் மணந்த பேராயா

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்

தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன்

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் எறிது வரை எல்லாரும் சூழச் சின்காசனத்தே இருந்தானை

பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர்

————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் பற்றிய விசேஷ விஷயங்கள்
1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -5235-வருஷங்களுக்கு முன்
2-பிறந்த நாள் -18th ஜுலை -3228-கி .மு –
3-பிறந்த மாதம் -ஆவணி -( ஸ்ரவணம் )
4-பிறந்த திதி -அஷ்டமி
5- பிறந்த நக்ஷத்ரம் -ரோஹிணி

6-பிறந்த கிழமை -புதன் கிழமை
7- பிறந்த நேரம் -இரவு 00-00 A M –
8- இங்கு இருந்து அருளியது –125 வருஷங்கள் -8 மாதங்கள் -7 நாள்கள்
9- தன்னுடை ஜோதிக்கு எழுந்து அருளிய நாள் -18th February 3102 கி மு
10-குருஷேத்ரா யுத்தம் -இவரது 89 -திரு நக்ஷத்திரத்தில்

11-மஹாபாரத யுத்தம் முடிந்து மேல் 36 திருநக்ஷத்ரங்கள் இங்கே இருந்து அருளி உள்ளார்
12-குருஷேத்ர யுத்தம் தொடக்கம் மிருகசீர்ஷ ஏகாதசி -3139 கி மு –8th Dec -முடிவு -25 th Dec
13-சூர்ய கிரஹணம் –21 st Dec -ஜெயத்ரன் முடிவு
14- பீஷ்மர் உயிர் நீத்தது -முதல் உத்தராயண ஏகாதசி -2nd -Feb –3138 கி மு

15-ஸ்ரீ வடமதுரை தேவகி வஸூதேவ புத்ரன்
16-ஸ்ரீ ஜெகன்நாத் -ஒரிசா
17-ஸ்ரீ நாதன் ராஜஸ்தான்
18-ஸ்ரீ துவாரகா தீசன் -குஜராத்
19-ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணன் கர்நாடக
20-ஸ்ரீ குருவாயூரப்பன் -கேரளா

21-ஸ்ரீ நந்தன் மதலை யசோதை இளஞ்சிங்கம் கோபீ வல்லபன் -திருவாய்ப்பாடி
22-நம்பி மூத்த பிரானின் தம்பி சுபத்ரா -தங்கை
23–ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ சத்யபாமா பிராட்டி -ஸ்ரீ ஜாம்பவதி பிராட்டி -ஸ்ரீ காளிநிதி பிராட்டி –
ஸ்ரீ மித்ரவிந்தா பிராட்டி -ஸ்ரீ நக்நஜிதி பிராட்டி -ஸ்ரீ பத்ரா பிராட்டி -ஸ்ரீ லஷ்மணா பிராட்டி அஷ்ட திவ்ய மஹிஷிகள்

24) சாணூர -கம்ச -சிசுபால -தந்த்ரவத்ரன் -நால்வர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்

25- ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு ஒன்பதாவது திரு நக்ஷத்திரத்தில் –சென்று 20 மாதங்கள் அங்கேயே எழுந்து அருளி இருந்தான்
26-பின்பு வடமதுரை சென்று கம்சவதம் முடித்து தாய் தந்தை கால் விலங்கு விடுவித்து அருளினான்
27-ஸ்ரீ துவாரகா நிர்மாணம்
28-ஸ்ரீ சாந்தீபினி இடம் ஆய கலைகள் 60 தனது -16-18-திருநக்ஷத்ரத்தில் கற்றான்

——–

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் -ஸ்ரீ கீதா சாரமே இதுவே –

யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்–9-27-

கௌந்தேய-குந்தி மகனே!
யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ,
யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ,
யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ,
யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ,
யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ,
தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.

நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும்,
எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்–18-56-

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ–18-57-

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய,
மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை,
பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள்,
மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும்.
இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது.
சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான்.
அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது-
பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது.
ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.

புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது.
எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்
அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத்
தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய
தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன்
கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டு பண்ணும் கானமோ
மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது.
பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான்.
இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.

உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல,
பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.

பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:–18-66

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:–18-68-

ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி,
இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை),
மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ,
மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான்,
அஸம்ஸய:-ஐயமில்லை.

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.

————

காயேன வாசா மனஸேந்த்ரியைா் – வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll

சரீரத்தாலோ,வாக்காலோ,மனத்தாலோ,கருமேந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ,
இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கின்றேனோ
அது எல்லாவற்றையும் பரம புருஷனாகிிய நாராயணனுக்கே என்று ஸமா்ப்பிக்கிறேன்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரப்படி –ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை —

August 11, 2021

ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

தந்தை தளை கழலத் தோன்றி
பிறந்தவாறும் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
பிறந்த மாயா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான்
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன்
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –

———

ஸ்ரீ கிருஷ்ணன் போய் ஆய்ப்பாடி புக்கதும்

போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –

————-

அல்லிக் கமலக் கண்ணனை –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -தாமோதரனைத் தனி முதல்வனை
ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை
எங்கும் உளன் கண்ணன் –
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்டவன் கண்டீர்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
வல்வினை தீர்க்கும் கண்ணனை
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை
கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
பிறந்தவாறும் –மாயங்களும் எனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச் சிறந்த வான் சுடரே –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு –
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவானே
என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –
மாயக் கூத்தா வாமனா கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா
பிறந்த மாயா –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன்
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
கதையும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற நாதனை ஞாலம் விளங்கும்
நாதனை ஞாலம் தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை –
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த சொல்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல-1-3-2-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-

—————————-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

(ஸ்ரீ கொல்லா மாக்கோல் — ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்–

May 6, 2021

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்!
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா;
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே–திருவாய்மொழி -3-2-3-

கொல்லா–கொல்லுகைக்குக் கருவி யல்லாமல்
மா–குதிரையை நடத்துவதான
கோல்–சாட்டையே கருவியாக
கொலை செய்து–(எதிரிகளை) முடித்து
பாரதம் போர்–பாரத யுத்தத்தில்
எல்லார் சேனையும்–(பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும்
இரு நிலத்து–இப் பெரிய பூமியில்
அவித்த–தொலைத்த
எந்தாய்–ஸ்வாமியே!
பொல்லா–துன்பங்களுக்குக் காரணமான
ஆக்கையின்–சரீரத்தினுடைய
புணர்வினை–சம்பந்தத்தை
அறுக்கல் அறா–அறுக்க எண்ணினாலும் அது அறு படாது:
யான்–(இதிலே அகப்பட்ட) நான்
உன்னை–(ஸர்வ சக்தனான) உன்னை
சார்வது–கிட்டுவதாகிய
ஓர் சூழ்ச்சி–ஒரு உபாயத்தை
சொல்லாய்–சொல்லி யருள்-

கண்ணபிரானது திருக்கையில் ஒரு கோல் இருந்தது; அதுதான் துரியோதனாதியரைக் கொலை செய்யக் கருவியாயிருந்தது,
அதனை ஆழ்வார் இங்குக் “கொல்லாமாக் கோல்” என்கிறார்.
கொல்லுகைக்குக் கருவியாக அல்லாமல் குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலை செய்ததாக அருளிச் செய்கின்றார்.
கண்ணபிரானது கையிலிருந்த கோல் எதிரிகளின் கொலைக்கு உபகரணமன்றியே
குதிரையை நடத்துகிற கோலாகவே யிருந்ததென்று இங்கு ஆழ்வார் அருளிச் செய்தாராயிற்று.

கொல்லா மாக்கோல் கொலை செய்து –
துரியோதனனும் அருச்சுனனுமாக, கிருஷ்ணன் பள்ளிகொண்டிருந்த காலத்தில் படைத்துணை வேண்டி வந்து,
துரியோதனன் திருமுடிப் பக்கத்தே யிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலே யிருந்தான்;
பள்ளி யுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன,
‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று,
அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன,
‘படைத்துணை வேண்டி வந்தோம்,’ என்ன,
‘ஆகில், நாராயண கோபாலர்களை ஒருவர் கொள்ளுவது; என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, –
அசேதனக்கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப் போன்று துரியோதனன் அவர்களைக் கொண்டு போக,
வீடுமன் முதலியோர் கேட்டுத் ‘தப்புச் செய்தாய்! இனி, கிருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக்கொண்டு வாராய்!’ என்ன,
அவனும் வந்து, ‘நீ ஆயுதம் எடாதொழிய வேணும்,’ என்ன,
‘அப்படியே யாகிறது’ என்று சொல்லி விட்டு, கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக் கொண்டு முடித்துப் போகட்டான்.

———

நம் அழகனின் கையில் விதம்விதமான கோல்கள்- செங்கோல் முதற்கொண்டு பலவிதமான கோல்கள் உள்ளனவே
என ஒரு புலவரின் கற்பனை எழுகிறது; அழகான கவிதை ஒன்று விரிகிறது;
படிப்போர் உள்ளம் பரவசத்தில் புள்ளெனச் சிறகடிக்கின்றது.

கடலாகிய ஆடையை உடுத்த உலகினைக் காவல் பூண்டு அரசிளங்கோமகன் இராமனாகிக் கையிலெடுத்த செங்கோல் ஒன்று!

இலங்கை மாநகரில் சூரியன் இராவணனுக்கு அஞ்சி வாழ்ந்தானாம்; அழகர் இராமாவதாரம் எடுத்தபோழ்தில்,
இராவணனை வதம்செய்து, சூரியனை அச்சமின்றி இயங்கச் செய்தார்.
ஆகவே அவனுடைய ஏழுபரிதிகள் (குரகதம்) பூட்டிய தேரை அஞ்சாது செலுத்தும்வகையில் அவன்,
குதிரைகளைத் தூண்டும் ஒரு முட்கோல் இரண்டாவது கோலாயிற்று.

ஐராவதம் எனும் யானையைச் செலுத்துபவனாகிய தேவேந்திரனை அவன் அடைபட்டிருந்த சிறையினின்று விடுதலை செய்வதற்காக
அச்சிறையின் கபாடங்களை (கதவுகளை) திறக்கும் திறவுகோல் மூன்றாவது கோல்!
இந்திரனைச் சிறைவீடு செய்தவர் அழகர்.

தேனொழுகும் (நறவொழுகு) செந்தாமரையில் வீற்றிருப்பவள் கமலமகளான திருமகள்.
அவள் தனது கண்களுக்குத் தீட்டி அழகு செய்துகொள்ளும் அஞ்சனத்தைத் தீட்டும் அஞ்சனக்கோல் அழகரின் நான்காம்கோல்.

பிலம் எனும் பாதாளத்தில் வீழ்ந்து வழக்கொழிந்துபோன வேதங்களை, நான்மறைகளைத் திரும்ப
நடமாடவிடுத்த ஊன்றுகோல் இன்னொருகோல்.

மறைந்துகிடந்த நான்மறைகள் அழகர் அருளால் விளக்கம் பெற்றன என்பது உட்கருத்து.
இது ஐந்தாம்கோல்.

கள்வனான இராவணன் சீதையைத் திருடிச்சென்றான். அவனுடைய பத்து தலைகளையும் தாக்கி வீழ்த்திய
தண்டிக்கும் கோல் ஒப்பற்ற – நிகரற்ற, வலிமை பொருந்திய -ஆறாவதுகோல்.

இவ்வாறு பலவிதமான கோல்களைக் கைக்கொண்டு பூஞ்சோலைகள் நிரம்பிய இடபகிரியெனும் அழகர்மலையில் இருப்பவனே!
செங்கீரையாடியருளுக! தேவருக்கும், தாமரைமலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் நாயகனே!
செங்கீரையாடியருளுக! எனப்பாடல் அமைகின்றது.

குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங் கோமக னெடுத்த செங்கோல்
கோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ் குரகதந் தூண்டுமுட்கோல்
கரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட கடுஞ்சிறை கிடந்தகூடக் கபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு
கமலமகள் விழியினுளவாய் உரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்
பிலத்துள்வீழ் நான்மறைக்கும் ஊன்றுகோ லாக
முடி பத்துடைய கள்வன்மே லொருகோ லெடுத்து
முகிலைத் திரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்ற முகில்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன் செங்கீரை யாடியருளே.
(அழகர் பிள்ளைத் தமிழ்- செங்கீரைப் பருவம்:- கவி காளருத்திரர் இயற்றியது)

இப்பாடலில் ‘கோல்’ எனும் சொல்லைப் பலபொருட்களில் எடுத்தாண்டு வியக்கத்தக்க முறையில்
பலவித நயங்களையும் தொன்மங்களையும் இணைத்துப் பாடியுள்ளது ரசிக்கத்தக்கது.
பிள்ளைத்தமிழ் நூல்களின் இனிமைக்கு இத்தகைய யாப்புகளும் ஒரு காரணமாகும்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தர் அருளிச் செய்த கீர்த்தனைகள் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–என்று போற்றப்படுகின்றது
1650 குண்டூர் அருகில் காஜா கிராமத்தில் தோன்றியவர்

12 தரங்கங்கள் கொண்டு இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன. இதன் அமைப்பின் படி ஒவ்வொரு தரங்கத்திலும்
பல சுலோகங்களும் அவற்றையடுத்து கீதங்கள், என்ற கீர்த்தனைகளும் தொடர்ச்சிக்காக சில வசனப்பகுதிகளும் வருகின்றன.
இது ஸமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல், பாகவதத்தின் தசமஸ்கந்தத்தின் 1 முதல் 58 வரையிலுள்ள
அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணன் பிறப்பிலிருந்து ருக்மிணி கல்யாணம் முடிய கண்ணனது கதையை
தேனென இனிக்கும் இன்னிசைப் பாடல்களாக தந்திருக்கிறார் நாராயண தீர்த்தர்.

தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து
மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது.
மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில்
அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றிப் பாடிய பில்வமங்களர் எனும் மகான், இடைச் சிறுவனான கிருஷ்ணனைப் பற்றிய
இன்னொரு அழகிய காட்சியைக் கண் முன் நிறுத்துகிறார்:
சூரியன் அஸ்தமிக்கும் பொன் மாலைப் பொழுது. இடையர்கள் எல்லாரும் மேய்ச்சலிலிருந்து திரும்புகின்றனர்.
மாடுகள் எல்லாம் வயிறு நிரம்பிய ஆனந்தத்தில் மடிகனத்து நிற்க, கன்றுகள் தாய்ப் பசுக்களின் மடியை அருந்தும் ஆசையில் துள்ள,
அவர்கள் தம் வீடுகளை அடைகின்றனர். அவரவர்கள் வீட்டுத் தொழுவங்களில் மாடுகன்றுகளைக் கட்டுகின்றனர்.
தன்னைத் தொடர்ந்துவரும் நூற்றுக் கணக்கான இடைச் சிறுவர்களுக்கெல்லாம் (கோபால-பாலக-சதை) தலைவன் நமது கிருஷ்ண சந்திரன்.
அவனும் வீடுவீடாகப்போய் பசுக்களைக்கட்ட உதவுகிறான் (பசுபந்தனார்த்தம்). பின் என்ன?
அவற்றின் பாலையும் அதனைத் தோய்த்த தயிரையும், அதிலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெயையும் வீடுவீடாகப்புகுந்து தின்றவனாயிற்றே!
தானும் இந்தச் சிறு உதவிகளைச் செய்யலாமே எனச் செய்கிறான் குழந்தை! ஏழெட்டு வயது இளம்பிள்ளை!
பசுக்கூட்டங்களினிடையே கன்றுகளுடன் விளையாடியபடி நடந்துவந்ததனால் அவற்றின் குளம்படிகள் எழுப்பிய
அத்தனை புழுதியும் (கோதூலி)இவன்மேல் அப்பிக்கிடக்கின்றது. ஏற்கெனவே கருமைநிறம் கொண்ட கடல்வண்ணன்.
இப்போது புழுதியும் அப்பிப் பார்க்க எப்படி இருந்தானாம்? அழுக்காகவா? இல்லவே இல்லை!
அதுவும் ஒரு அழகாக, அவனுக்கே அமைந்த சிறப்பாகப் பொலிகிறானம் இந்தக்குட்டன்!-
இது அவன் பூண்டுள்ள மாடுமேய்க்கும் அலங்காரம்- கோபவேஷம்!

கோதூலி- தூஸரித- கோமல- கோபவேஷம்
கோபால-பாலகசதை-ரனுகம்யமானம்
ஸாயந்தனே ப்ரதிக்ருஹம் பசுபந்தனார்த்தம்
கச்சந்த- மச்யுதசிசும் ப்ரணதோஸ்மி நித்யம்–(ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.44)

அட! இந்த இளம்பிள்ளை மாட்டையெல்லாம் தொழுவில்கட்டி, இவ்வளவு பொறுப்பாக இருக்கிறானே எனவெல்லாம்
எண்ணிக் கொண்டுவிட வேண்டாம்! இவன், இந்தக் கள்ளக்கிருஷ்ணன் தனது விளையாட்டுகளை இன்னும்
விட்டொழித்தபாடில்லை எனத்தான் தென்படுகின்றது!

ஒரு இடைப்பெண்ணின் வீட்டில் நுழைந்து தனது வெண்ணெய்த்திருட்டினை நடத்திக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.
அவளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டும் விட்டான். அவளிடம் குட்டனின் உரையாடலைக் கேட்போமா?
பெண்: குழந்தாய்! நீ யாரப்பா?
கிருஷ்ணன்: நான் பலராமனுடைய தம்பி.
பெண்: உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?
கிருஷ்ணன்: என்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
பெண்: அப்படியானால் வெண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் எதற்காகக் கையை விட்டாயாம்?
கிருஷ்ணன்: தாயே! எனது ஒரு கன்றுக்குட்டியைத் தேடுவதற்காகக் கையை
வைத்தேன். உடனே கோபித்துக் கொள்ளாதீர்கள்!

கஸ்த்வம் பாலா பலானுஜ: கிமிஹ தே
மன்மந்திராசங்கயா
யுக்தம் தந்நவநீத- பாத்ரவிவரே
ஹஸ்தம் கிமர்த்தம் ந்யஸே:
மாத: கஞ்சன வத்ஸகம் ம்ருகயிதும்
மாகா விஷாதம் க்ஷணா-
தித்யேவம் வரவல்லவீ-ப்ரதிவச:
க்ருஷ்ணஸ்ய புஷ்ணாது ந: (ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.81)

———

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம் ப்ரயாகே
காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே
திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே
ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே
ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே
யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே
வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே
ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே
ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே
ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம்
தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம்
யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா
பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே
ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண
தத் காரனே ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே
சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே–இது ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிச்ச தரங்கம்–

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயாகே காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே –
அலஹாபாத் பக்கத்துல ப்ரயாகை இருக்கு. திரிவேணி சங்கமம். இவர் நாராயண தீர்த்தர் சொல்றார்,
ராம கிருஷ்ண கோவிந்த அப்படீன்ன்னு இந்த மூணு நாமங்கள் இருக்கே இதோட சேர்க்கையே சர்வோத்தம ப்ரயாகை.
இதுல ஆனந்தமா எப்ப வேணும்னாலும் ஸ்னானம் பண்ணுவோம் அப்படீங்கறார்.

திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே –
இந்த ஸ்னானம் பண்றதுக்கு தேசமா, காலமோ, திக்கோ எதுவும் condition கிடையாது.
எப்ப வேணும்னா, எங்க வேணும்னா, எப்படி வேணும்னா இந்த ராம கிருஷ்ண கோவிந்த அப்படீங்கற நாமங்களை ஜபிக்கலாம்.
ஸர்வ சுலபே – எல்லாருக்கும் சுலபமானது, இதுக்கு பண்டிதனான இருக்கணும், ஆணாக இருக்கணும், பெண்ணாக இருக்கணும்
எந்த condition-ணும் கிடையாது. நாக்கு இருந்தா போதும் இந்த நாமங்களை ஜபிக்கலாம்.
ஒரு நதினா கடல்ல போய் சேருமே, அதுமாதிரி இந்த த்ரிவேணி சங்கமம் எங்க கூட்டிண்டு போகும்னா,

ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே –
ஸத்குருவுடைய க்ருபா ஸமுத்ரம் அப்படீங்கற அந்த சங்கத்துல கொண்டு விட்டுடும் அப்படீங்கறார்.

ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே –
ராம-ங்கற நாமம் தான் கங்கை,
கிருஷ்ண-ங்கற நாமம்தான் யமுனை
கோவிந்த நாம சரஸ்வதி ப்ரதீதே – கோவிந்த நாமம் தான் சரஸ்வதி, இந்த மூணும் சேர்ந்த ப்ரயாகை இது

யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே –
ஒரு ஜலம்ன்னா ஹம்ஸங்கள் இருக்கணும் இல்லையா,
இங்க இந்த நாமத்துல பரம ஹம்சர்களுடைய மனம் குதூகலிக்கறது.

வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே –
ஒரு நதியின்னா அதுல அலைகள் இருக்கும், வாகீச ர்னா ப்ரம்மா, விஷ்ணு ருத்ரர் இவாள் இந்த நாமங்களை ஜபிக்கறா.
அந்த அழகான அலைகள் தான் இந்த ப்ரயாகைல இருக்கு.

ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே –
இந்த உலகம், மேல் உலகம் இங்க இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் இந்த நாம ஜபம் பூர்த்தி பண்ணும்.

நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே –
இந்த உலக ஆசைகள் மட்டும் அல்ல, நித்யானந்தமான மோக்ஷ லாபத்தையும் கொடுக்கும்.

ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே –
ருக் யஜு சாமம் என்கின்ற வேதங்களின் சாகையிலும் இருக்கு, மூலத்திலும் இருக்கு.
வேதங்களுக்கு மூலமே இந்த நாமங்கள் தான் என்கிறார்.

ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே –
ராகம், லோபம், ஸந்தாபம் இதெல்லாம் போக்கக் கூடிய மஹா மந்த்ரம்.

ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே –
இந்த நாமங்களை ஜபிக்கறதுக்கு ஒருத்தன் ஸ்னானம் பண்ணியிருக்கணும், சந்தியாவந்தனம் பண்ணியிருக்கணும்,
ஜபங்கள் பண்ணியிருக்கணும், ஹோமங்கள் பண்ணியிருக்கணும், தர்ப்பணம் பண்ணியிருக்கணும்
என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,

ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே –
இது அகண்டமான பேரானந்தத்தை கொடுக்கும். அந்த பேரானந்தம் குறையவோ, அதிகமோ ஆகாத ஒரு சந்தோஷம்.
எந்த ஒரு சந்தோஷம் ஆனாலும் அது குறையும், ஜாஸ்தி ஆகும். அப்படி ஆகாத சுகம்,
இந்த நாம ஜபம் கொடுக்கக்கூடிய இந்த ஆனந்தம், அப்படியே இருக்கும். infinite அகண்டமான ஒரு சுகத்தை கொடுக்க கூடியது.

ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம் –
மனசுல இந்த நாமங்களை ஸ்மரணம் பண்றது தான் மானசீகமான ஸ்னானம்.
வாசனிகம் கீர்த்தனம் – வாயால பண்ணக் கூடிய கீர்த்தனம் தான் இந்த வாய்க்கு ஸ்னானம்,

தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம் –
இந்த ராம கிருஷ்ண கோவிந்த நாமங்களை பாடிண்டு அதுக்கு நர்த்தனம் ஆடறது தான் உடம்புக்கு பண்ணக் கூடிய ஒரு ஸ்னானம்
இப்படி உடம்பு, மனசு, வாக்கு இப்படி எல்லாத்தையும் தூய்மை படுத்தக்கூடியது.

யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா –
இந்த நாம ஜபம் பண்றதுக்கு நீங்கள் யாகம், யோகம், மூச்சை அடக்கித்தான் நாம ஜபம் பண்ணணும் அப்படியெல்லாம் கிடையாது.
ராகம், பகவான் கிட்ட பக்தி இருக்கணும், ராகம் இருக்கணும், போகம், த்யாகம் இல்ல நீங்க பகவானுக்காக தியாகம் பண்ணணும்,
எதுவுமே எதிர் பார்க்காமல்.

பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே –
இந்த நாம ஜபம் பண்ணிண்டே இருந்தாலே பக்தியும் வரும், விரக்தியும் வரும், ஞானமும் வரும்,
முக்தியையும் கொடுக்கும்

ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண தத் காரனே –
ப்ரஹ்ம வித்யை கொடுக்கும், கோரமான சம்சாரத்தை தாண்ட வைக்கும்.

ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே –
கடுமையான பாபங்கள் என்ற இருட்டிற்கு இது ஸூர்ய மண்டலத்தை போன்ற வெளிச்சத்தை கொண்டு வந்து,
பாபங்கள் எல்லாத்தையும் போக்கிடும்.

சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே –
நாராயண தீர்த்தர் சொல்றார் – தூய்மைப் படுத்தக் கூடிய எல்லா தீர்த்தங்களிலும்,
இந்த ராம கிருஷ்ண கோவிந்த என்ற இந்த சர்வோத்தம ப்ரயாகை தான் தீர்த்த ராஜா –
இப்படி நாம பக்திக்கு ஒரு அற்புதமான ஒரு கீர்த்தனை.

————–

பில்வ மங்களரின் ஒரு அழகிய ஸ்லோகம் இது போலவே ஒரு நிகழ்வை யசோதை-கிருஷ்ணனிடையே நிகழும் உரையாடலாக்கி,
படிக்கும் நம்மைப் புன்னகைபுரிந்து சிலிர்க்க வைக்கிறது.
யசோதை சொல்கிறாள்: “கிருஷ்ணா! உன் அண்ணன் பலராமன் யமுனையாற்றின் மணல் குன்றுகளிடையே விளையாடப் போயிருக்கிறான்;
உனக்கு நான் பொற்கிண்ணத்தில் பால் வைத்திருக்கிறேன் பார்!
அவன் திரும்பிவருவதற்குள் நீ அதனை சமர்த்தாகக் குடித்து விடவேண்டும். தெரியுமா?”
கிருஷ்ணன், “ஏனம்மா?” எனக்கேட்க, யசோதை சொல்கிறாள்:
“அப்போதுதான் உனக்கு குடுமி வளரும் (சிகா வர்த்திஷ்யதே).”
குழந்தை கிருஷ்ணன் பாவம், நம்பி விடுகிறான்.
கிண்ணத்துப்பாலை ஒரே மூச்சில் பாதி குடித்துவிட்டு, தனது குட்டிக் குடுமியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு ,
“அடடா, இத்தனை வளர்ந்துவிட்டதா?” என மகிழ்ச்சி கொள்ளுகிறானாம்.
நாமும் இந்த ஸ்லோகத்தைப் படித்து மகிழ்கிறோம்.

காளிந்தீ- புலினோதரேஷு முஸலீ
யாவத்கத: கேலிதும்
தாவத்கார்ப்பரிகம் பய: பிப ஹரே
வர்த்திஷ்யதே தே சிகா
இத்தம் பாலதயா ப்ரதாரணபரா:
ச்ருத்வா யசோதா-கிர:
பாயாந்ந: ஸ்வசிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித:
க்ஷீரேர்த்தபீதே ஹரி:
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- 2.60)

நம்பி மூத்த பிரான் யமுனை கரை மணலில் விளையாட பால கிருஷ்ணனை
பால் அருந்தினால் கேசம் வளரும் என்றாள் யசோதை
பாதி குடித்து கேசம் தொட்டு பார்த்து வளர்ந்ததே அம்மா என்று மகிழ்ந்து அருளிச் செய்தான் –
அந்த ஹர்ஷமே நம்மை ரஷிக்கும்-

இளம் குழந்தைகள் அன்னை சொல்வது அத்தனையையும் நம்பி விடுகின்றனர்.
ஆகவே கதைகள் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிதாகிவிடுகின்றது!

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ உத்தவ கீதை – அத்தியாயம் – 4

March 23, 2021

இவ்வுலக, மேலுலக இன்ப அனுபவ பயனின்மையை நிரூபித்தல்

ஶ்ரீ பகவான் உவாச

மயோதி3தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4ஸ்ரிய |
வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1

ஶ்ரீபகவான் கூறினார்

என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து.
வேதம், ஸ்ம்ருதி, ஆகம, புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க வேண்டும்.
உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும்.
இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய முழு நம்பிக்கையை குறிக்கின்றது
ஸமாசரேத் – நன்கு செய்வாயாக
அகாமாத்மா – நிஷ்காமபாவம்
வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும் செய்ய வேண்டும்.

————

அன்வீக்ஷேத விஶுத்3தா4த்மா தே3ஹினாம் விஷயாத்ம்னாம் |
கு3ணேஷு தத்த்வத்யானேன ஸர்வாரம்ப4விபர்ய்யம் || 2

அன்விக்ஷேத – கவனமாக சிந்தித்துப் பார்
விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை அடைந்தவனாக
உலக சுகங்களில் ஈடுபாடுள்ள மனிதர்களின் செயல்களே இறுதி லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
வெளிப் பார்வைக்கு சுகத்தை அடைந்திருந்தாலும், மனதளவில் விபரீதமான பலன்களையே அடைந்திருப்பார்கள்
என்று கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டு அனாத்மா விஷய, சுகங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

———–

ஸுப்தஸ்ய விஷயாலோகோ த்4யாயதோ வா மனோரத2: |
நானாத்மகத்வாத்3 விப2லஸ்ததா2 பே4தா3த்மதீ4ர்கு3ணை || 3

மனோரத2 – பகற்கனவு
உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும்
இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற கற்பனைகளில்
கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள் தான் கொடுக்கின்றது. எனவே எண்ணங்கள் தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது,
பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஸுப்தஸ்ய விஷயாலோகஹ – தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்
த்4யாயதோ வா மனோரதஹ விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்
நானாத்மகத்வாத்3 மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;
விபலஹ பொய்யானவை
ததா3 அவ்விதம்
கு3ணைஹி‘ இந்திரியங்களால்
பேதாத்மதீஹி பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல, உண்மையானதல்ல

————–

நிவிருத்தம் கர்ம ஸேவேத ப்ரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத் |
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோத3னாம் || 4

ஒருவனுக்கு மேலான அறிவை அடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் அதற்கேற்ற மனநிலையை அடைய வேண்டும்.
உலகத்தில் போகம் தரும் விஷயங்களிலோ, பொருட்களிலோ வைராக்கியம் வந்திருக்க வேண்டும். ’
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தஹ – பரம்பொருளை புரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவன் அதையடைய தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்
ப்ரவ்ருத்தம் கர்ம நம்மை கர்த்தாவாக வைத்திருக்கும் உலக சம்பந்தபட்ட செயல்களையெல்லாம்
த்யஜேத் விட்டுவிடு, துறந்துவிட்டு
நிவிருத்தம் கர்ம ஸேவேத ஆன்மீக மேன்மைக்கான செயல்களையே செய்ய வேண்டும். உபாஸனை, ஜபம், தியானம் போன்ற செயல்களை செய்வாயாக.
சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும்போது சிறிது பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பகவானை முழுமையாக நம்பி அவரிடத்தில் நிலைபெற்றிட வேண்டும்.
மத்பரஹ அவர் என்னைப் பாதுகாப்பார் என்று நம்பிக்கையுடன் அவரை சரணடைந்திட வேண்டும்.
ந ஆத்3ரியேத் கர்மசோத3னாம் வேதத்தில், கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே.

——————

யமானபீக்ஷணம் ஸேவேத நியமான்மாத்பர: க்வசித் |
மத3பி4க்ஞம் கு3ரும் ஶாந்தமுபாஸீத மதா3த்மகம் || 5

யமஹ – விலக்குதல்
நியமஹ – பின்பற்றுதல்
நியமம் – தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர ப்ரணிதானம்
க்ரியாயோகம் – தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வரப்ரணிதானம்
யமம் – அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரி3ரஹம்

யமத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நியமங்களை முடிந்தவரையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஶாந்தம் – மனவமைதி அடைந்தவரும்,
மத்3 அபி4க்3ஞம் – என்னைப்பற்றிய அறிவை அடைந்தவரும்
மத்3 ஆத்மகம் – என்னைப்பற்றிய அறிவில் நிலைத்தவரான குருவை நாடி
உபாஸீத் – சேவை செய்து அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

————

அமான்யமத்ஸரோ த்3வேஷ நிர்மோ த்3ருட4ஸௌஹ்ருத3: |
அஸத்வரோsர்த2ஜிக்3ஞாஸுரநஸூயுரமோக4வாக் || 6 ||

வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.

1. அமானி கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)

2. அமத்ஸரஹ பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு ஒப்பிட்டூ பார்ப்பதால் வருவது பொறாமை.
தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை வருகின்றது.

3. த3தஹ திற்மையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பவன்.
எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமையுடையவன்

4. நிர்மமஹ மமகாரம் இல்லாதிருப்பவன்

5. த்3ருட4ஸௌஹ்ருத3: – எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன் (ஸௌஹிருத)

6. அஸத்வரஹ நிதானமாக செயல்படுபவன்; அவசரஅவசரமாக எதையும் செய்யாதவன்

7. அர்த2ஜிக்3ஞாஸு வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்

8. அனஸூயு: எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்

9. அமோக4வாக் பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்,

————-

ஜாயாபத்ய க்3ருஹக்ஷேத்ர ஸ்வஜன த்3ரவிணாதி3ஷு |
உதா3ஸீன: ஸம்ம் பஶ்யன் ஸர்வேஷ்வர்த2மிவாத்மன: || 7 ||

மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக பற்றுடன் இருக்கக்கூடாது.
இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும்.
தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும் சமநோக்குடன் இருக்க வேண்டும்.

————-

விலக்ஷண ஸ்தூலஸூக்ஷ்மாத்3 தே3ஹாதா3த்மேக்ஷிதா ஸ்வத்3ருக் |
யதா2க்3நிர்தா3ருணோ தா3ஹ்யாத்3 தா3ஹகோsன்ய: ப்ரகாஶக: || 8 ||

இதில் ஆத்ம-அனாத்ம விவேகத்தை கூறுகின்றார். நான் என்ற சொல்லினுடைய உண்மையான அர்த்தம் என்ன,
அது எதைக் குறிக்கின்றது என்று விசாரம் செய்ய வேண்டும். பொதுவாக நாம் இந்த சொல்லுக்கு உண்மைப் பொருளையும்,
உண்மையற்ற பொருளையும் சேர்த்துப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் பிரித்து உண்மையற்ற பொருளை நீக்க வேண்டும்.
அவைகள் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களே. இது எப்பொழுதும் நம் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஆனால் நம் அனுபவமும், அபிமானமும் உண்மையற்ற விஷயத்தில்தான் இருக்கின்றது.
இந்த உடலுக்கு வருகின்ற அனுபவங்கள் நம்மை பாதிப்பால்தான் இதில் நாம் அபிமானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியலாம்.

பகவான் த்3ருக்-த்3ருஷ்யம் (அறிபவன்-அறியப்படும் பொருள்) என்ற முறையை பயன்படுத்தி ஆத்ம-அனாத்மாவை விளக்குகின்றார்.
அறிபவனும், அறியப்படும் பொருளும் வேறாகத்தான் இருக்க வேண்டும். இதை நம் உடலிலிருந்து ஆரம்பித்து விசாரம் செய்ய வேண்டும்.
ஸ்தூல, சூட்சும சரீரங்களிலிருந்து ஆத்மா வேறாக இருக்கின்றது. நாம் இந்த ஸ்தூல உடலையும் அனுபவிக்கின்றோம்.
கனவுலகில் நம்மை நாமே அனுபவிக்கின்றோம். இவையிரண்டையும் நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விலக்ஷணஹ வேறுபடுகின்றது.
ஈக்ஷிதா பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3ருக் தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை,
அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை சரியாக புரிந்துகொண்டால் உடலுக்கும், மனதுக்கும் வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுக-துக்கங்கள் நம்மை பாதிக்காது.

நெருப்புக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று வெளிச்சம் மற்றொன்று உஷ்ணமாகும்.
மரக்கட்டையை எரிக்கும் நெருப்பு அதற்கும் வேறானது.
வெளிச்சத்தினால் காட்டிக் கொடுக்கப்படும் பொருட்களிலிருந்து வேறானதாக இருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து வேறானது. அதேபோல இந்த சரீரத்தை விளக்கும் ஆத்மாவானது
அதற்கும் வேறானது என்பதை அக்னி உதாரணத்தோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

—————

நிரோதோ4த்பத்த்யணு ப்3ருஹன் நானாத்வம் தத்க்ருதான் கு3ணான் |
அந்த:பிரவிஷ்ட ஆத4த்த ஏவம் தே3ஹகு3ணான் பர: || 9 ||

உபாதி – எது தன்னுடைய குணத்தை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கிறதோ அதற்கு உபாதி என்று பெயர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் நம் உடலும், மனமும் அதனுடைய தர்மத்தை பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருப்பதால்
இவைகள் ஆத்மாவின் உபாதிகள் என்று அறிந்து கொள்ளலாம்;.

நிரோத4ம் – அணைந்து விடுதல்
உத்பத்தி – தோன்றுகின்றது, உற்பத்தியாகின்றது.
அணு – சிறியதாக ,இருக்கின்றது
ப்4ருஹ – மிகப்பெரியதாக இருக்கின்றது
நானாத்வம் – விதவிதமான நெருப்புக்கள்
தத்க்ருதான் கு4ணான் – இந்த குணங்களெல்லாம் நெருப்பு எதை எரிக்கின்றதோ அதன் அடிப்படையில் கூறப்படுகின்றது.
ஆத4த்த – எடுத்து கொள்கிறது
அந்த:பிரவிஷ்ட – எதை எரிக்கின்றதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறது.
தே2ஹ கு3ணான் பரஹ ஆத4த்த – அனைத்து தேகத்தின் குணங்கள் மேலாத ஆத்மாவில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
எந்தெந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதோ அந்தந்த சரீரத்தின் குணங்களை பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

——————-

யோsஸௌ கு3ணைர்விரசிதோ+ தே3ஹோsயம் புருஷஸ்ய ஹி |
ஸம்ஸாரஸ் தன்னிப3ந்தோ4யம் பும்ஸோ வித்3யாச்சி2தா3த்மன: || 10 ||

பும்ஸஹ தே3ஹ – இந்த ஜீவனுடைய உடலானது
புருஷஸ்ய குணைஹி விரசிதஹ – பகவானுடைய மாயையினுடைய முக்குணங்களின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ச ஸம்ஸாரஹ தன்னிபந்தஹ – சம்சாரம் என்பது மூன்று உடலை நான் என்று அத்யாஸம் செய்யும்போது தோன்றுவது
யஹ அஸௌ – யாரொருவன் இதை புரிந்து கொள்கிறானோ அவனது
ஆத்மனஹ சி2த் வித்3யா – ஆத்மஞானமானது இந்த சம்சாரத்தை நீக்க உதவுகின்றது.

—————–

தஸ்மாஜ்ஜிக்3ஞாஸயாத்மானமாத்மஸ்த2ம் கேவலம் பரம் |
ஸங்க3ம்ய நிரஸேதே3தத்3வஸ்துபு3த்3தி4ம் யதா2க்ரமம் || 11 ||

தஸ்மாத் – ஆகவே ஆத்மஞானம் சம்சாரத்தை நீக்குகின்றது
ஜிக்ஞாஸயா – விசாரம்; விசாரத்தின் மூலமாக (சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்)
ஆத்மஸ்தம் – இந்த உடலுக்குள் இருக்கின்ற
கேவலம் – இரண்டற்றதான
ஆத்மானம் – ஆத்மஸ்வரூபத்தை
ஸங்க3ம ய – புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு
பரம் – அழியாத, மேலான
ஏதத்3 வஸ்து பு3த்3தி4ம் – இந்த உடலே நானென்று நினைக்கின்ற எண்ணத்தை
நிரஸேத்3 – நீக்கிவிட வேண்டும்.
யதா2க்ரமம் – இந்த நிலையை படிபடியாக அடைய வேண்டும்

இதை பஞ்சகோச முறையில் செய்யும்போது முதலில் அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து
ஆனந்தமய கோசத்திற்கு படிப்படியாக செல்ல வேண்டும்.

————–

ஆசார்யோsரணிராத்3ய: ஸ்யாத3ந்தேவாஸ்யுத்தராரணி: |
தத்ஸந்தா4னம் ப்ரவசனம் வித்3யாஸந்தி4: ஸுகா2வஹ: || 12 ||

ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3யஹ ஸ்யாத் – அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும் அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி – மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம் குரு உபதேசம் செய்தல்
வித்3யாஸந்தி4ஹி – ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2வஹ இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் கொடுக்கின்றது

—————-

வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3த4பு4த்3தி4ர்து4னோதி மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் |
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய யதா3த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2க்3னி: || 13 ||

இதில் ஆத்மஞான்த்தின் பலன் கூறப்படுகின்றது

வைஶாரதீ – திறமைமிக்க குரு-சிஷ்யன் இவர்களுடைய சேர்க்கையால் அடையப்படுகின்ற
அதி விஶுத்3த4 பு3த்3தி4ஹி – மிகமிக தூய்மையான இந்த ஆத்மஞானம்
மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் து4னோதி – நம்மிடத்தில் இருக்கும் முக்குணங்களினால் தோன்றும் மோகத்தையும், தவறாத அறிவையும் அழித்துவிட்டு.
அஸமித்3 யதா2க்3னி: – எப்படி அக்னி
யதா3த்மம் – அனைத்தையும் எரித்துவிட்டு
ஸ்வயம் ச ஶாம்யத் – எரிப்பதற்கு விறகில்லாமல் தானும் அடங்கிவிடுகின்றதோ
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறது.

—————

அதை2ஷாம் கர்மகர்த்ரூணாம் போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: |
நானாத்வமத2 நித்யத்வம் லோககாலாக3மாத்மனாம் || 14 ||

அத2 ஏஷாம் – இப்போது பூர்வமீமாம்ஸ மதத்தின் கருத்துக்களைப் பார்ப்போமாக
கர்மகர்த்ரூணாம் – கர்மத்தை செய்பவர்கள் எல்லோரும்
போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: – இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்ற ஜீவர்களும்
நானாத்வமத2 – பலவிதமாகவும், வேற்றுமையுடையவராகவும்
நித்யத்வம் – தனித்தனியாக நிலையான கர்த்தாவாக இருக்கிறார்கள்
லோக – – இந்த உலகம்
கால – காலம் என்கின்ற தத்துவம்
ஆக3ம – கர்மத்தை போதிக்கின்ற சாஸ்திரம்
ஆத்மனாம் – இவை மூன்றும் நிலையானவைகள் என்பது அவர்களது கருத்து.

——————-

மன்யஸே ஸர்வபா3வானாம் ஸம்ஸ்தா2 ஹ்யௌத்பத்திகீ யதா2 |
தத்ததா2க்ருதிபே4தே3ன ஜாயதே பி4த்3யதே ச தீ4: || 15 ||

மன்யஸே – இவ்வாறு நீ கருதினால்
ஸர்வபா3வானாம் – நாம் அனுபவிக்கக்கூடிய அனைத்து பொருட்களும்
யதா2 ஔத்பத்தி ஸம்ஸ்தா2 – பிரவாக நித்யத்வமாக இருக்கின்றது
(ஓடும் நதி பிரவாக சத்யத்வத்திற்கு உதாரணமாகும். மாறீக்கொண்டே தொடர்ந்து இருப்பது பிரவாக நித்யம்.
இதை கிரகிக்கின்ற நம் மனதில் தோன்றுகின்ற எண்ணங்களும் பிரவாக சத்யம்.

தத் தத்2 ஆக்ருதி பே4த3ம் – நாம் பார்க்கும் பொருட்களின் உருவத்தின் அடிப்படையில்
ஜாயதே தீ4: – எண்ணங்கள் தோன்றுகிறது
பி4த்3யதே – இந்த எண்ணங்களும் வேறுபடுகின்றன

————-

ஏவமப்யங்க3 ஸர்வேஷாம் தே3ஹினாம் தே3ஹயோக3த: |
காலாவயவத: ஸந்தி பா4வா ஜன்மாத3யோsஸக்ருத் || 16 ||

அங்க3 இவ்வாறு கருதுபவர்களே!
ஏவம் அபி இப்படியொரு கருத்தை வைத்திருந்தால் அவையெல்லாம் தவறாகும்
ஸர்வேஷாம் எல்லா ஜீவர்களுக்கும்
தே3ஹினாம் தே3ஹயோக3த: உடலினுடைய சேர்க்கை தவிர்க்க முடியாததாக ,இருப்பதனால்
கால அவயவதஹ காலம் ஒரு உறுப்பாக ,இருப்பதனாலும்
ஜன்மாத3யஹ பா4வா ஸந்தி – பிறப்பு-இறப்பு போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.
அஸக்ருத் – எனவே மீண்டும் மீண்டும் ஏற்படும். சம்சார சுழலில்தான் இருப்பாய்.

————

அத்ராபி கர்மணாம் கர்துரஸ்தாதந்த்ர்யம் ச ல்க்ஷயதே |
போ4க்துஶ்ச து3: க2ஸுக2யோ: கோ ந்வர்தோ2 விவஶம் ப4ஜேத் || 17 ||

மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
துயரத்தில்தான் அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம்.
எனவே இதிலிருந்து மேலானதாக இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம்.
இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.

———-

ந தே3ஹினாம் ஸுக2ம் கிஞ்சித் வித்3யதே விது3ஷாமபி |
ததா2 ச து3க2ம் மூடா4னாம் வ்ருதா2ஹங்கரணம் பரம் || 18 ||

இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை அடைந்தவனாலும் சுகம் என்பது சிறீதளவு கூட காணப்படவில்லை.
அதுபோல அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்க;ப்படுகிறார்கள் என்பதும் இல்லை.
அதிக அறிவு, புகழ், செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற
இந்த அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.

————

யதி3 ப்ராப்திம் விகா4தம் ச ஜானந்தி ஸுக2து3:க2யோ: | S
தேSப்யத்3தா4 ந விது3ர்யோக3ம் ம்ருத்யுர்ன ப்ரப4வேத்3 யதா2 || 19

ஒருவேளை இன்பங்களை மட்டும் அனுபவிக்கும் நிலையை அடைந்தாலும் துக்கத்தை தவிர்க்கின்ற நிலையை
அடைந்தாலும் அவர்களும் கண்டிப்பாக எப்படி மரணத்தை நீக்குகின்ற உபாயத்தை அறியமாட்டார்கள்

————–

கோ ந்வர்த2: ஸுக2யத்யேனம் காமோ வா ம்ருத்யுரந்திதே |
ஆகா4தம் நீயமானஸ்ய வத்4யஸ்யேவ ந துஷ்டித3: || 20 ||

மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிக்கு எந்தப் பொருள்தான் சுகத்தைக் கொடுக்கும்.
எந்த ஆசை நிறைவேறினாலும் முழுமனநிறைவைக் கொடுக்கமுடியும். அதேபோல மரணம் தன் பின்னாலேயே
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தப் பொருள்தான் சுகத்தை கொடுக்கமுடியும்.

—————

ஶ்ருதம் ச த்3ருஷ்டவத்3 து3ஷ்டம் ஸ்பர்தா4ஸூயாத்யாவ்யயை: |
ப3ஹ்வந்தராயகாமத்வாத் க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் || 21 ||

ஶ்ருதம் ச சாஸ்திரங்கள் மூலம் அறியப்பட்ட சொர்க்கம் போன்ற பரலோகத்திலும்
த்3ருஷ்டவத்3 நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த மனிதலோகத்தைப் போல
ஸ்பர்த்4 போட்டி
அஸூய பொறாமை
அத்ய அழிவுக்குட்பட்டது
அவ்யயை: தேய்ந்துகொண்டே போகுதல்
து3ஷ்டம் போன்ற குறையுடன் கூடியதாகத்தான் இருக்கிறது
ப3ஹ்வந்தராய காமத்வாத் பல தடைகளுக்கு அப்பால்தான் இன்பங்களை அடைய முடியும்.
நம் அறியாமையினால் இழப்புத்தான் அதிகம், கிடைக்கிறது.
சுகம் கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அப்படி பலன் கிடைக்காமல் போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது

———

இனி(22-26) பரலோக பலன்கள் அனைத்தும் நிலையற்றது என்று விளக்கப்படுகிறது.

அந்தராயைரவிஹதோ யதி3 த4ர்ம: ஸ்வனுஷ்டி2த: |
தேனாபி நிர்ஜிதம் ஸ்தா3னம் யதா2 க3ச்ச2தி தச்ச்2ருணு || 22 ||

அந்தராயை – தடைகள்
ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம் தருகின்ற
மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை அவன் எவ்விதம் அடைகிறான், எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.

———–

இஷ்டவேஹ தே3வதா யக்2ஞை: ஸ்வர்லோகம் யாதி யாக்3ஞிக: |
பு4ஞ்ஜீத தே3வ்வத்தத்ர போ4கா3ன் தி3வ்யான் நிஜார்ஜிதாத் || 23 ||

விதவிதமான வேள்விளைச் செய்து அதற்குரிய தேவதைகளை பூஜித்து இன்பம் கொடுக்கும் லோகங்களுக்கு செல்கிறான்.
அந்த தேவதை அடைந்ததைப் போல போகங்களை அனுபவிக்கின்றான்.

————–

ஸ்வபுண்யோபசிதே ஶுப்ரே விமான உபகீ3யதே |
க3ந்த4ர்வைர்விஹரன் மத்4யே தே3வீனாம் ஹ்ருத்3யவேஷத்3ருக் || 24 ||

ஹ்ருத்3யவேஷத்3ருக் மனதை கவர்கின்ற ஆடை அணிகலன்களுடன் கூடியவனாக இருக்கும் இவன்
ஸ்வபுண்ய உபசிதே அவனுடைய புண்ணியத்திற்கேற்ப
ஶுப்ரே விமான அழகிய விமானத்தில்
தே3வீனாம் மத்4யே விஹரன் தேவலோக பெண்களுடன் கூடிக் குலாவுகின்றான்
க3ந்த4ர்வ உபகீ3யதே கந்தர்வர்களால் புகழப்படுகிறான், புகழ்ந்துப் பாடப்படுகிறான்

———–

ஸ்த்ரீபி4: காமக3யானேன கிங்கினீஜாலமாலினா |
க்ரீட3ன் ந வேதா3த்மபாதம் ஸுராக்ரீடேஷு நிர்வ்ருத: || 25 ||

தேவலோக பெண்களுடன், விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியதும், விதவிதமான மணிமாலைகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்துகொண்டு இன்பமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் போது
தேவலோக இன்பங்களில் மூழ்கியிருக்கின்ற அவன் தன்னுடைய வீழ்ச்சியை அறியமாட்டான்.
அவனிடம் இருக்கின்ற புண்ணியம் அழிந்து கொண்டிருப்பதை அறியமாட்டான்.

———-

தாவத் ப்ரமோத3தே ஸ்வர்கே3 யாவத் புண்யம் ஸமாப்யதே |
க்ஷீணபுண்ய: பதத்யர்வாக3நிச்ச2ன் காலசாலித: || 26 ||

எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான்.
புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.

————-

யத்3யத4ர்மரத: ஸங்கா3த3ஸதாம் வாஜிதேந்த்3ரிய: |
காமாத்மா க்ருபணோ லுப்3த4: ஸ்த்ரைணோ பூதவிஹிம்ஸக: || 27 ||

பஶூனவிதி3னாSSலப்4ய ப்ரேதபூ4தக3ணான் யஜன் |
நரகாநவஸோ ஜ்ந்துர் க3த்வா யாத்யுல்ப3ணம் தம: || 28 ||

ஒருவேளை அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன், அதர்மத்தை செய்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
நட்பினால் தன்னுடைய புலன்களை வசப்படுத்தாதவனாக இருப்பவன், ஆசைவயப்பட்டவன்,

க்ருபணஹ தானம் செய்யாதவன் (லோபி, கஞ்சன்)
லுப்3த4ஹ பேராசைக்காரன், மற்றவர்களுடைய செல்வத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன்
ஸ்த்ரைணஹ உடலின்பத்திலே ஆசையுள்ளவன்
பூதவிஹிம்ஸக:ஹ எல்லா உயிரினங்களையும் வேண்டுமென்றே இம்சிப்பவன்

உயிரினங்களை பலியிட்டு செய்கின்ற யாகங்களை செய்பவன், துஷ்ட தேவதைகளை வழிபடுபவன்,
இப்படிப்பட்ட குணங்களுடன் அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன் தன் வசமின்றி நரகத்தை,
அடர்ந்த இருளால் சூழப்பட்ட லோகங்களை அடைகிறான்.

————

லோகானாம் லோகபாலானாம் மத்3ப4யம் கல்பஜீவினாம் |
ப்3ரஹ்மணோSபி ப4யம் மத்தோ த்3விபரார்த4பராயுஷ: || 29 ||

பிறகு துயரத்தை பலனாக உடைய கர்மங்களை செய்து உடலின் துணைக்கொண்டு அதன் பலனாக
மீண்டும் உடலை அடைகின்றார்கள். அழிந்து போகும் இயல்புடைய உடலினால் என்ன சுகத்தை கொடுக்கமுடியும்!

—————-

கர்மாணி து3:கோ2த2ர்காணி குர்வன் தே3ஹேன தை: புன: |
தே3ஹமாப4ஜதே தத்ர கிம் ஸுக2ம் மர்த்யத4ர்மிண: || 30 ||

பூர்வமீமாம்சகர்களால் குறிக்கப்படும் மோட்சம் சம்சாரம்தான். எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவதைகளும்
உலகத்தை பரிபாலிக்கின்ற தேவதைகளும் ஒரு கல்பகாலம்தான் வாழ்வார்கள்.
அவர்களும் என்னிடத்தில்(பகவான் கிருஷ்ணனிடத்தில்) பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரம்மதேவனும் என்னிடத்தில் பயம் கொண்டுதான் இருக்கிறார். இவரது ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

————

கு3ணா ஸ்ருஜந்தி கர்மாணி கு3ணோSனுஸ்ருஜதே கு3ணான் |
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தோ பு4ங்க்தே கர்மப2லாந்யஸௌ || 31 ||

கு3ணாஹா – உடலும், மனமும் (ஸ்தூல, சூட்சும சரீரங்கள்)
ஸ்ருஜந்தி கர்மாணி – செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
கு3ணோ அனுஸ்ருஜதே கு3ணான் – சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று குணங்கள்தான் உடலையும், மனதையும் செயலில் ஈடுபட தூண்டுகின்றது.
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தஹ – இந்த ஜீவன் முக்குணங்களோடு கூடியிருக்கின்றன
அஸௌ கர்மப2லான் பு4ங்க்தே – அதனால் ஜீவன் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.

மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு.
மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம்.
மோட்சம் என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் இருப்பதுதான் மோட்சம்.
நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல.

————–

யாவத் ஸ்யாத்3 கு3ணவைஷம்யம் தாவன்நானாத்வமாத்மன: |
நானாத்வமாத்மனோ யாவத் பாரத்ந்த்ர்யம் ததை3வ ஹி || 32 ||

எப்பொழுது குணங்களின் வேற்றுமைகள் இருக்கின்றதோ அப்பொழுது விதவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்கள்.
பலவிதமான ஸூட்சும சரீரங்கள் தோன்றுகின்றன. எப்பொழுது பலவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்களோ
அப்போது பிறர் வசத்திற்கு அடிமையாகவே சென்று விடூகிறார்கள்.

————–

யாவத்3ஸ்யாஸ்வதந்த்ரத்வம் தாவதீ3ஶ்வரதோ ப4யம் |
ய ஏதத் ஸமுபாஸீரம்ஸ் தே முஹ்யந்தி ஶுசார்பிதா: || 33 ||

ஜீவனுக்கு எதுவரை ஒன்றை சார்ந்திருத்தல் என்ற நிலை இருக்கின்றதோ, அதாவது சுதந்திரம் இல்லாமல்
குணங்களுக்கு வசப்பட்ட நிலையில் இருக்கின்றானோ, அதுவரை இறைவனிடத்தில் பயம் இருக்கவே செய்யும்.
பகவானிடம் பயம் நீங்க பிரார்த்திப்போம். ஆனால் இந்த நிலையில் அவரிடத்திலே பயம் ஏற்படும்.
எவனொருவன் பூர்வமீமாம்ஸ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, குணங்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்களோ
அவர்கள் மோகத்தில் வீழ்ந்து விடுவார்கள். சோகத்திலும் மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

————-

கால ஆத்மாSSக3மோ லோக: ஸ்வபா4வோ த4ர்ம ஏவ ச |
இதி மாம் ப3ஹுதா4 ப்ராஹுர் கு3ணவ்யதிகரே ஸதி || 34 ||

குண மாற்றத்தினால் இந்த ஸ்ருஷ்டியானது இயங்கிக் கொண்டிருக்கும் போது இறைவனான என்னையே பலவாக பார்க்கின்றார்கள்.
காலமாகவும், அனைத்து ஜீவாத்மாகவும், வேத சாஸ்திரங்களாகவும், அனைத்து உலகமாகவும், ஒவ்வொரு பொருளிலிருக்கும்
பொதுவான தன்மையாகவும், சக்தியாகவும், மேலும் பாவ-புண்ணியங்களாகவும் நானே இருக்கின்றேன் என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.

————-

உத்3த4வ உவாச:
கு3ணேஷு வர்தமானோSபி தே3ஹஜேஷ்வனபாவ்ருத: |
கு3ணைர்ன ப3த்3த்4யதே தே3ஹீ ப3த்3த்4யதே வா கத2ம் விபோ4 || 35 ||

உத்தவர் கேட்கிறார்:
விபோ4 பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3ணேஷு வர்தமான அபி உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து கொண்டிருந்த போதிலும்
அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல், உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல் இருக்கின்றான்?
மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?

————–

கத2ம் வர்தேத விஹரேத் கைர்வா ஞாயேத லக்ஷணை: |
கிம் பு4ஞ்ஜீதோத விஸ்ருஜேச்ச2யீதஸீத யாதி || 36 ||

முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை அறிந்து கொள்ள முடியும்?
எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான்?
கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?

————-

ஏதத்3ச்யுத மே ப்3ரூஹி ப்ரஶ்னம் ப்ரஶ்தவிதா3ம் வா |
நித்யமுக்தோ நித்யப3த்3த4 ஏக ஏவேதி மே ப்4ரம: || 37 ||

அச்சுதா! இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லுங்கள்.
கேட்கப்படுகின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதில் சிறந்தவரே!
ஒரே ஜீவன் எப்படி முக்தனாகவும், சம்சாரியாகவும் இருக்க முடியும்? இதுவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்–ஸ்ரீ மத் பாகவத ஸப்தாஹம் —

November 30, 2020

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்–

ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய ..

ஜந்மாத்யஸ்ய யதோன்வயா திதரத ச்சார்தேஷ் ஸ்வபிந்ஞ: ஸ்வராட்
தேநே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதிகவயே முஹ்யந்தி யத்ஷூரய:
தேஜோ வாரி ம்ருதாம் யதா விநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
தாம்நா ஸ்வேத ஸதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி

தர்ம ப்ரோஜ்ஜித கைதவோ த்ர பரமோ நிர்மத்ஸராநாம் ஸதாம்
வேத்யம் வாஸ்தவ மத்ர வஸ்து ஸிவதம் தாபத்ர யோன்மூலனம்
ஸ்ரீமத் பாகவதே மஹா முனிக்ருதே கிம் வா பரைரீஸ்வர:
ஸத்யோ ஹ்ருத் ய வ்ருத்யதே (அ)த்ரக்ருதிபி: ஶூஶ்ரூஷிபி ஸ்தத்க்ஷ்ணாத்

நிகம கல்பதோர் களிதம் பலம் ஸுகமுகா தம்ருத த்ரவஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா:

யம் பிரவ்ரஜந்த மநுபேத மபேத க்ருத்யம் த்வைபாயனோ விரஹகாதர ஆஜுஹாவ
புத்ரேதி தன்மய தயா தரவோ பிநேது ஸ்தம் சர்வ பூதஹ்ருதயம் முநிமானதோஸ்மி!!

ய:ஸ்வாது பாவ மகில ஸ்ருதிசாரம் ஏகமத்யாத்ம தீப மதி திதீர்ஷதாம் தமோந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயா(ஆ)ஹ புராண குஹ்யம் தம் வ்யாஸ ஶூநும் உபயாமி குரூம் முனீநாம்

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்

கிருஷ்ணாய வாசு தேவாய தேவகி நந்தநாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

நம: பங்கஜ நாபாய நம : பங்கஜ மாலினே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே

ஸ்ரீமத் பாகவதாக்யோ யம் பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி
ஸ்வீக்ருதோ ஸி மயாநாத முக்தை யர்தம் பவசாகரே

யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதி கஸு மதுரம் முக்தி பாஜாம் நிவாஸோ
பக்தாநாம் காம வர்ஷத்யுதரு கிஸலயம் நாததே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நிஸ்ஸேஷ தாபான் பிரதிஷது பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீ

நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப ப்ரநாஸநம்
ப்ரணாமோ துக்க ஸமனஸ் தம் நமாமி ஹரிம் பரம்!!

————-

க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் .
க்ருʼஷ்ணம்ʼ த்³வைபாயனம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ப்ருʼதா²ஸுதம்

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம்
ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: ஸ்ரீமத் பாகவதம்,

வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட
அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம்,
ஸ்ரீ ஸூக தேவரின் (’ஸ்ரீ ஸூக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால்,
மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது.

த்வதீ³யம்ʼ வஸ்து கோ³விந்த³ துப்⁴யமேவ ஸமர்பயே .
தேன த்வத³ங்க்⁴ரிகமலே ரதிம்ʼ மே யச்ச² ஶாஶ்வதீம்

——————

ஸ்ரீ வேத வியாசர் அனைத்து வேத புராணங்களையும் அருளிச் செய்த பின்பும் திரு உள்ளம் சோகமாய் இருக்கக் கண்ட ஸ்ரீ நாரதர்
நான்கு ஸ்லோகங்களால்-2.9.33-36- வேத சாரங்களை அருளிச் செய்து
ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியே முழுவதுமாக ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்யச் சொல்ல பிறந்த கிரந்தம்

ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் -ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ பாதாரயனர் -உடைய திருக் குமாரார்
ஸ்ரீ ஸூகர் ஸ்ரீ பரிஷித்துக்கு அருளிச் செய்த ஸ்ரீ மத் பாகவதம்

யாவன் அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –2-9-33-

யாவன்-எங்கும் பரந்து உள்ள
அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –
நிர்ஹேதுக அனுக்ரஹத்தால் அறியக் கடவீர்

அஹம் ஏவ சம் ஏவ அக்ரே நான்யத் யத் சத் அசத் பரம் பஸ்சத் அஹம் யத் ஏதக் ச யோ அவசிஸ்யேத சோஸ்மை அஹம் –34-

ருதே அர்த்தம் எது பிரதியேத ந பிரதியேத ச ஆத்மனி தத் வித்யாத் ஆத்மனோ மயாம் யத அபாஷஹ யத தமஸ்–35-

ப்ரஹ்மாத்மகம் இல்லா ஓன்று இல்லை -இருப்பது போல் -தமஸாகவே தோன்றும்

யதா மஹந்தி பூதாநி பூதேஸூ உச்ச அவஸேஸூ அனுப் பிரவிஸ்தானி அப் பிரவிஸ்தானி ததா தேசு ந தேசு அஹம் -36
உள்ளே உறைந்து நியமிக்கிறேன் -வியாப்த கத தோஷம் தட்டாமல்

ஸ்ரீ வாஸூ தேவன் இந்த நான்கு ஸ்லோகங்களையே விவரித்து ஸ்ரீ மத் பாகவாதமாக-வேத சாரமாக
ஸ்ரீ கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை விவரித்து
கிருஷ்ண ஸ்வ தமோபகதே தர்ம ஞான திபீ ஸஹ கலவ் நஸ்தத் ரசம் ஏச புராணர்கோ துணோதித்

ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதி எழுந்து அருள -தமஸில் ஆழ்ந்த உலகம் ஸ்ரீ மத் பாகவத புராணம்
மூலமாகவே கலியில் நாம் ஒளி பெறுகிறோம்

—-

ஸ்ரீ மத் பாகவதம்
12 ஸ்கந்தங்கள்
335 அத்தியாயங்கள்
18000 ஸ்லோகங்கள்

ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம் –
ஸ்ரீ பத்ம புராணம் ஆறு அத்தியாயங்கள் –

முதல் நாள் –
ஸ்கந்தம் -3 -அத்யாயம் -22 -வரை -ஸ்ரீ மனு ஸ்ரீ கர்தம ஸம்வாதம் வரை –

பாகவதம் என்றால் என்ன? —பகவானின் தன்மைகள் —பாகவதத்தின் பெருமை —பாகவதத்தை வியாசர் ஏன் இயற்றினார்? —பரீக்ஷித் என்பவர் யார்? சுக பிரம்மம் வருகை —பாகவத சாரம் —வராக அவதாரம்

இரண்டாம் நாள் –
ஸ்கந்தம் -3 -அத்யாயம் -23-தொடங்கி
ஸ்கந்தம் -5- அத்யாயம் -14-ஸ்ரீ ஜட பரதர் சரித்ரம் வரை

துருவன் -(4-8-8-)பிரகலாதன் சரித்திரம்

4-8-8-

மூன்றாம் நாள்
ஸ்கந்தம் -5- அத்யாயம் -15 -தொடங்கி
ஸ்கந்தம் -7- அத்யாயம் -15- வரை -ஸ்ரீ நரஸிம்ஹ திரு அவதாரம் வரை

நான்காம் நாள்
ஸ்கந்தம் -8 அத்யாயம் -1- தொடங்கி
ஸ்கந்தம் -10–அத்யாயம் -3-வரை -ஸ்ரீ கிருஷ்ண ஜனனம் வரை

ஐந்தாம் நாள்
ஸ்கந்தம் -10-அத்யாயம் -4- தொடங்கி
ஸ்கந்தம் -10- அத்யாயம் -54- ஸ்ரீ ருக்மிணி தேவி திருக்கல்யாணம் வரை

ஆறாம் நாள்
ஸ்கந்தம் -10- அத்யாயம் -55-தொடங்கி
ஸ்கந்தம் -11-அத்யாயம் -13-ஸ்ரீ ஹம்ஸ உபதேசம் வரை –

ஏழாம் நாள்
ஸ்கந்தம் -11-அத்யாயம் -14- தொடங்கி
ஸ்கந்தம் -12-அத்யாயம் -13 -ஸ்ரீ மத் பாகவத ஸமாப்தம்

———

ஆலயம் -மனம் லயம் அடையும் இடம் -உத்தரா உத்தமம் -உத்த தமம் -உத்தரம் -பகவானையும் பாகவதகனையும் சுமந்த திரு வயிறு கொண்டவள் –
பரி ஈஷதே -எங்கே என்று சுற்றிப் சுற்றிப் பார்த்ததால் பரீக்ஷித் -காரணப் பெயர்-இயல் பெயர் -விஷ்ணு ராதம் -கண்ணனால் கொடுக்கப்பட்ட பரிசு
————

சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்சோ மன்வந்தராணி ச வம்சய அனுசரிதச் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் –மத்ஸ்ய புராணம்

வைஷ்ணவம் நாரதீயஞ்ச ததா பாகவதம் ஸூபம் கருடாஞ்ச ததா பத்மம் வராஹம் ஸூப தர்சனே சாத்விகானி புராணி
விஜ்நேயனி ஸூபாநீவை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்தம் மார்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ராஜசானி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் ததா லைங்கம் சிவம் ஸ்கந்தம் ததைவ ச அக்னேயம் ச சதேதானி தமஸானி நிபோதமே

யத்ர அதிக்ருத்ய காயத்ரீம் வர்ணயதே தர்ம விஸ்தாரா வ்ருத்தாஸூர வதோ பேதேம் தத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ ததியாத் தேம ஸிம்ஹாஸ மன்விதம் ப்ரவ் க்ஷ தபத்யம் பவுர்ணமாஸ்யாம் ச யதி பரமாம் கதிம்
அஷ்டாக்ஷ சஹஸ்ராணி புராணம் ப்ரகீர்திதம் -மத்ஸ்ய புராண ஸ்லோகம் –53-20-22-
யாவன் ஒருவன் உயர்ந்த வேதாந்த கருத்துக்களை அளிக்கும் ஸ்ரீ மத் பாகவதம் எழுதி பொன்னால் செய்த
சிம்ஹாசனத்தில் வைத்து பத்ர–ஆவணி – மாச பவுர்ணமி அன்று தானமாக அளிக்கிறார்களோ அவர்கள் பரம கதி அடைகிறார்கள்

அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூ த் ராணாம் பரதர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ் வேதார்த்த பரிபிரும்ஹத புராணம்
சாம ரூபா சாஷாத் பகவதோதித துவாதச ஸ்கந்த யுக்தோயம் சதா விச்சேத சம்யுத கிரந்த
அஷ்டாதச சஹஸ்ர ஸ்ரீ மத் பாகவாதபிதம் –கருட புராணம் -ஹரி பக்த விலாசம் –10-394-395-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விவரணம் -மஹா பாரத சாரம் -காயத்ரி பாஷ்யம் -வேத விவரணம் –
புராண ஸ்ரேஷ்டம் –12 ஸ்கந்தங்கள் –100 அதிகாரங்கள் –18000 ஸ்லோகங்கள்

பதவ் யதியவ் பிரதம த்வித்யவ் த்ரிதியதுர்யவ் கதிதவ் யதுரு நாபிஸ் தத பஞ்சம ஏவ சாஸ்தோ புஜாந்தரம்
தோரயுக லம் யதன்யவ் முகாரவிந்தம் தசமம் பிரபுல்லம்
ஏகாதஸவ் யஸ்ய லலத பதகம் சிரோ பி யத் துவாதச ஏவ பதி தமதி தேவம் கருண நிதானம் தமல வர்ணம்
சுஹித வதரம் அபரஸம்ஸார சமுத்ர சேதும் பஜ மே ஹே பாகவத ஸ்வரூபம்

முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருப்பாதங்கள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்-ஊரு
ஐந்தாவது -திரு நாபி
ஆறாவது -திரு மார்பு – புஜாந்தரம்
ஏழாவதும் எட்டாவதும் -திருக்கைகள் -தோர் யுகலம்
ஒன்பதாவது -திருக்கண்டம்
பத்தாவது திரு முகாரவிந்தம்
பதினொன்றாவது -லலாட பதக்கம்
பன்னிரண்டாவது சிரஸ்ஸூ

————–

அஹம் வேத்மி சுகோ வேத்தி வ்யாசோ வேத்தி வ
பக்த்யா பாகவதம் க்ரஹ்யம் ந புத்தியா ந ச திகய –சிவன் சொல்வது -பக்தி ஒன்றாலே பாகவதம் அறியலாம்

ஸ்வயம்புர் நாரத சம்பூ குமாரவ் கபிலோ மனு ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம்

நாரதர் சம்பு வையாஸகிர் என்னும் சுகதேவர் -ஸ்ரீ பிருந்தாவன் மதுர ரசம் அனுபவித்தவர்
சுகதேவரே பிராட்டி கையில் கிளி-

நாரதர் சிவன் கோபி ஸ்வரூபம் பெற்றவர்கள்

———

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-12- —

November 29, 2020

அத்யாயம் -1-யது குல வம்சர் இழிவு நிலை
அத்யாயம் -2-யுத்த காலத்தில் நம்பிக்கை அத்யாயம் –
அத்யாயம் -3-ஸ்ரீ பூமாதேவியின் ஸ்தோத்ரம் -கலியுக தோஷங்களும் பரிகாரங்களும்
அத்யாயம் -4-பிரளய வகைகள்
அத்யாயம் -5-ஸ்ரீ பரீக்ஷித் மஹாராஜருக்கு சரம உபதேசங்கள்

அத்யாயம் -6-ஸ்ரீ பரீக்ஷித் மஹாராஜர் மோக்ஷம் -வேத உபதேசம்
அத்யாயம் -7-சம்ஹிதா வகைகளும் புராணங்களுள் உள்ள பத்து விஷயங்களும்
அத்யாயம் -8-ஸ்ரீ மார்க்கண்டேயரின் வைராக்ய சீர்மை -அவரது ஸ்ரீ நர நாராயணர்களுக்கு பிரார்தனை
அத்யாயம் -9-ஸ்ரீ மார்கண்டேயருக்கு ஸ்ரீ பரப்ரஹ்ம மஹிமை காட்டுதல்
அத்யாயம் -10-ஸ்ரீ சிவன் ஸ்ரீ மார்கண்டேயருக்கு உபதேசம்

அத்யாயம் -11-ஸ்ரீ மஹா விஷ்ணுவின் விசேஷணங்கள்-சூர்ய கதி மூலம் மாசங்களின் அடைவுகள்
அத்யாயம் -12-ஸ்ரீ மத் பாகவதத்தில் உள்ளவற்றின் தொகுப்பு
அத்யாயம் -13-ஸ்ரீ மத் பாகவதத்தில் மஹிமை

—————-

ஸ்கந்தம் 12 – அத்தியாயம் 1-ல் 41 ஸ்லோகங்கள் உள்ளன.

12:02 கலியுகத்தின் தீமைகளை விளக்குகிறார். கலியுகத்தின் அழிவில் பகவான் கல்கி அவதாரம் எடுத்து
தீயவர்களை அழிப்பார் என கூறுகிறார். மொத்தம் 44 ஸ்லோகங்கள் உள்ளன.

12:03 மொத்தம் 52 ஸ்லோகங்கள்.
கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே
மோக்ஷம் கிட்டும் என விளக்கப்படுகிறது. முத்ன்முதலில் ஸத்ய யுகம் இருந்தது.
அப்போது மக்கள் இரக்க குணத்தோடும், அமைதியாகவும், நட்பாகவும் இருந்தனர்.
கலியுகத்தின் மக்களின் இழிந்த நிலையை விரிவாக விளக்குகிறார்.

12:04-ல் நாலு விதமான் அழிவுகள் (பிரளயங்கள்) சொல்லப்படுகின்றன.
நைமித்திக பிரளயம், ப்ராக்ரித்கா, அத்யாந்திகா பிரளயங்கள் விளக்கப்படுகின்றன. மொத்தம் 43 ஸ்லோகங்கள்.

12:05 மொத்தம் 13 ஸ்லோகங்கள். பரீக்ஷித் மஹாராஜாவின் மரணம் குறித்த பயங்களை போக்குகிறார்.

12:06 ஒரு ப்ராஹ்மணனின் உருவத்தில் வந்த தக்ஷக என்ற பாம்பு பரீக்ஷித் மஹாராஜாவை கடிக்க
அவர் இவ்வுலகம் நீத்து வைகுந்தம் போகிறார்.
பரீக்ஷித்தின் மகனான ஜெயமேஜெயன் என்ற அரசனுக்கு பாம்புகள் மீது கோபம் வர,
ஒரு யாகம் செய்து எல்லா பாம்புகளையும் அழிக்கிறார். இந்திரனின் பாதுகாப்பில் இருந்த தக்ஷகனும்
யாகத்தின் அக்னியில் விழ வரும் போது, ஆங்கீரஸ ரிஷியின் மகனான ப்ரஹஸ்பதி குறுக்கிட்டு,
தக்ஷகனுக்கு உயிர் அளிக்கிறார். மொத்தம் 80 ஸ்லோகங்கள்.

12:07-ல் ஸ்ரீ ஸூத கோஸ்வாமி அதர்வண வேதம், அதன் பிரிவுகள், புராணங்கள்
குறித்து விளக்குகிறார். மொத்தம் 25 ஸ்லோகங்கள்.

12:08-ல் ஸ்ரீ மார்க்கண்டேய ரிஷியைப் பற்றி சொல்லுகிறது. மொத்தம் 49 ஸ்லோகங்கள்.

12:09-ல் ஸ்ரீ மார்க்கண்டேய ரிஷியைப் பற்றி மேலும் சொல்லுகிறது. மொத்தம் 34 ஸ்லோகங்கள்.

12:10-ல் ஸ்ரீ மார்க்கண்டேய ரிஷி ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதியிடமிருந்து ஆசிகள் பெற்றது விளக்கப்படுகிறது.
மொத்தம் 42 ஸ்லோகங்கள்.

12-11-ல் ஸ்ரீ மஹாபுருஷன் (ஸ்ரீ பகவான்) குறித்து விளக்கப்படுகிறது.
ஸ்ரீ ஸுரிய பகவான் ரூபத்தில் அவரது 6 குணங்களை சொல்லப்படுகிறது. 50 ஸ்லோகங்கள்.

12:12-ல் ஸ்ரீமத் பாகவத புராணம், ஸ்ரீ பகவானின் லீலைகள் மீண்டும் சுருக்கமாக சொல்லப்படுகின்றன.
மொத்தம் 69 ஸ்லோகங்கள்.

—————-

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம்
ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: ஸ்ரீமத் பாகவதம்,

வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட
அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம்,
ஸ்ரீ ஸூக தேவரின் (’ஸ்ரீ ஸூக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால்,
மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது.

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-12–அத்யாயம் -13–ஸ்ரீ மத் பாகவதத்தில் மஹிமை

November 29, 2020

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம்
ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: ஸ்ரீமத் பாகவதம்,

வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட
அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம்,
ஸ்ரீ ஸூக தேவரின் (’ஸ்ரீ ஸூக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால்,
மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது.

த்வதீ³யம்ʼ வஸ்து கோ³விந்த³ துப்⁴யமேவ ஸமர்பயே .
தேன த்வத³ங்க்⁴ரிகமலே ரதிம்ʼ மே யச்ச² ஶாஶ்வதீம் ..

——–

ஸூத உவாச
யம்ʼ ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ரமருத꞉ ஸ்துன்வந்தி தி³வ்யை꞉ ஸ்தவை꞉
வேதை³꞉ ஸாங்க³பத³க்ரமோபநிஷதை³ர்கா³யந்தி யம்ʼ ஸாமகா³꞉ .
த்⁴யானாவஸ்தி²ததத்³க³தேன மனஸா பஶ்யந்தி யம்ʼ யோகி³னோ
யஸ்யாந்தம்ʼ ந விது³꞉ ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம꞉ .. 1..

ப்ருʼஷ்டே² ப்⁴ராம்யத³மந்த³மந்த³ரகி³ரிக்³ராவாக்³ரகண்டூ³யனாத்
நித்³ராலோ꞉ கமடா²க்ருʼதேர்ப⁴க³வத꞉ ஶ்வாஸானிலா꞉ பாந்து வ꞉ .
யத்ஸம்ʼஸ்காரகலானுவர்தனவஶாத்³வேலானிபே⁴னாம்ப⁴ஸாம்ʼ
யாதாயாதமதந்த்³ரிதம்ʼ ஜலநிதே⁴ர்நாத்³யாபி விஶ்ராம்யதி .. 2..

புராணஸங்க்²யாஸம்பூ⁴திமஸ்ய வாச்யப்ரயோஜனே .
தா³னம்ʼ தா³னஸ்ய மாஹாத்ம்யம்ʼ பாடா²தே³ஶ்ச நிபோ³த⁴த .. 3..
ப்³ராஹ்மம்ʼ த³ஶஸஹஸ்ராணி பாத்³மம்ʼ பஞ்சோனஷஷ்டி ச .
ஶ்ரீவைஷ்ணவம்ʼ த்ரயோவிம்ʼஶச்சதுர்விம்ʼஶதி ஶைவகம் .. 4..

த³ஶாஷ்டௌ ஶ்ரீபா⁴க³வதம்ʼ நாரத³ம்ʼ பஞ்சவிம்ʼஶதி꞉ .
மார்கண்ட³ம்ʼ நவ வாஹ்னம்ʼ ச த³ஶபஞ்ச சது꞉ஶதம் .. 5..

சதுர்த³ஶ ப⁴விஷ்யம்ʼ ஸ்யாத்ததா² பஞ்சஶதானி ச .
த³ஶாஷ்டௌ ப்³ரஹ்மவைவர்தம்ʼ லைங்க³மேகாத³ஶைவ து .. 6..

சதுர்விம்ʼஶதி வாராஹமேகாஶீதிஸஹஸ்ரகம் .
ஸ்காந்த³ம்ʼ ஶதம்ʼ ததா² சைகம்ʼ வாமனம்ʼ த³ஶ கீர்திதம் .. 7..

கௌர்மம்ʼ ஸப்தத³ஶாக்²யாதம்ʼ மாத்ஸ்யம்ʼ தத்து சதுர்த³ஶ .
ஏகோனவிம்ʼஶத்ஸௌபர்ணம்ʼ ப்³ரஹ்மாண்ட³ம்ʼ த்³வாத³ஶைவ து .. 8..

ஏவம்ʼ புராணஸந்தோ³ஹஶ்சதுர்லக்ஷ உதா³ஹ்ருʼத꞉ .
தத்ராஷ்டாத³ஶஸாஹஸ்ரம்ʼ ஶ்ரீபா⁴க³வதமிஷ்யதே .. 9..

இத³ம்ʼ ப⁴க³வதா பூர்வம்ʼ ப்³ரஹ்மணே நாபி⁴பங்கஜே .
ஸ்தி²தாய ப⁴வபீ⁴தாய காருண்யாத்ஸம்ப்ரகாஶிதம் .. 10..

ஆதி³மத்⁴யாவஸானேஷு வைராக்³யாக்²யானஸம்ʼயுதம் .
ஹரிலீலாகதா²வ்ராதா ம்ருʼதானந்தி³தஸத்ஸுரம் .. 11..

ஸர்வவேதா³ந்தஸாரம்ʼ யத்³ப்³ரஹ்மாத்மைகத்வலக்ஷணம் .
வஸ்த்வத்³விதீயம்ʼ தந்நிஷ்ட²ம்ʼ கைவல்யைகப்ரயோஜனம் .. 12..

ப்ரௌஷ்ட²பத்³யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஹேமஸிம்ʼஹஸமன்விதம் .
த³தா³தி யோ பா⁴க³வதம்ʼ ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 13..

ராஜந்தே தாவத³ன்யானி புராணானி ஸதாம்ʼ க³ணே .
யாவன்ன த்³ருʼஶ்யதே ஸாக்ஷாத்ஶ்ரீமத்³பா⁴க³வதம்ʼ பரம் .. 14..

(யாவத்³பா⁴க³வதம்ʼ நைவ ஶ்ரூயதே(அ)ம்ருʼதஸாக³ரம்ʼ)
ஸர்வவேதா³ந்தஸாரம்ʼ ஹி ஶ்ரீபா⁴க³வதமிஷ்யதே .
தத்³ரஸாம்ருʼதத்ருʼப்தஸ்ய நான்யத்ர ஸ்யாத்³ரதி꞉ க்வசித் .. 15..

நிம்னகா³னாம்ʼ யதா² க³ங்கா³ தே³வாநாமச்யுதோ யதா² .
வைஷ்ணவானாம்ʼ யதா² ஶம்பு⁴꞉ புராணாநாமித³ம்ʼ ததா² .. 16..

க்ஷேத்ராணாம்ʼ சைவ ஸர்வேஷாம்ʼ யதா² காஶீ ஹ்யனுத்தமா .
ததா² புராணவ்ராதானாம்ʼ ஶ்ரீமத்³பா⁴க³வதம்ʼ த்³விஜா꞉ .. 17..

ஶ்ரீமத்³பா⁴க³வதம்ʼ புராணமமலம்ʼ யத்³வைஷ்ணவானாம்ʼ ப்ரியம்ʼ
யஸ்மின் பாரமஹம்ʼஸ்யமேகமமலம்ʼ ஜ்ஞானம்ʼ பரம்ʼ கீ³யதே .
தத்ர ஜ்ஞானவிராக³ப⁴க்திஸஹிதம்ʼ நைஷ்கர்ம்யமாவிஸ்க்ருʼதம்ʼ
தச்ச்²ருʼண்வன்விபட²ன்விசாரணபரோ ப⁴க்த்யா விமுச்யேன்னர꞉ .. 18..

கஸ்மை யேன விபா⁴ஸிதோ(அ)யமதுலோ ஜ்ஞானப்ரதீ³ப꞉ புரா
தத்³ரூபேண ச நாரதா³ய முனயே க்ருʼஷ்ணாய தத்³ரூபிணா .
யோகீ³ந்த்³ராய ததா³த்மநாத² ப⁴க³வத்³ராதாய காருண்யத꞉
தச்சு²த்³த⁴ம்ʼ விமலம்ʼ விஶோகமம்ருʼதம்ʼ ஸத்யம்ʼ பரம்ʼ தீ⁴மஹி .. 19..

நமஸ்தஸ்மை ப⁴க³வதே வாஸுதே³வாய ஸாக்ஷிணே .
ய இத³ம்ʼ க்ருʼபயா கஸ்மை வ்யாசசக்ஷே முமுக்ஷவே .. 20..

யோகீ³ந்த்³ராய நமஸ்தஸ்மை ஶுகாய ப்³ரஹ்மரூபிணே .
ஸம்ʼஸாரஸர்பத³ஷ்டம்ʼ யோ விஷ்ணுராதமமூமுசத் .. 21..

ப⁴வே ப⁴வே யதா² ப⁴க்தி꞉ பாத³யோஸ்தவ ஜாயதே .
ததா² குருஷ்வ தே³வேஶ நாத²ஸ்த்வம்ʼ நோ யத꞉ ப்ரபோ⁴ .. 22..

நாமஸங்கீர்தனம்ʼ யஸ்ய ஸர்வபாபப்ரணாஶனம் .
ப்ரணாமோ து³꞉க²ஶமனஸ்தம்ʼ நமாமி ஹரிம்ʼ பரம் .. 23..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே வையாஸக்யாமஷ்டாத³ஶஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ த்³வாத³ஶஸ்கந்தே⁴ த்ரயோத³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 13..

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –