ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —
(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்
கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்
கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து
(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்
(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்
(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து
(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு
(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து
(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த
(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து
ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து
(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு
ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி
சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி
(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து
(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று
தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி
முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு
(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு
(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி
(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல
(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு
(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்
கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க
மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய
மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி
(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி
(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு
(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண
மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து
(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்
கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து
(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி
(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி
(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து
(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி
(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு
(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து
(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு
(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )
துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று
(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து
(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து
(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து
(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி
(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து
(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்
தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )
(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்
(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு
அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்
(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய
(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற
(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது
(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து
(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே
பொலிக பொலிக பொலிக
—————
ஸ்ரீ பாரதியின் கண்ணனின் அனுபவம்
ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்?
கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே.
நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.
தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.
‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.
இங்கே அமரர்
சங்கம் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.
புலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி.
நிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்!
நலமே நாடில்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.
ண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் –
புகழ்வீர் கண்ணன்
தகைசேர் அமரர்
தொகையோடு அசுரப்
பகைதீர்ப்பதையே.
ஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும்.
நன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி.
தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர்
பார்ப்பார் தவமே.
கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. … (தீராத)1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். … (தீராத)
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; … (தீராத)3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். … (தீராத)4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; – தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். … (தீராத)5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது
பொங்கித் ததும்புநற்
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். … (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? – கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? … (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; – வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; – எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். … (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! – மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் – வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். … (தீராத)
9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; – பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். … (தீராத)
——-
கண்ணன் – என் காதலன் – 2
உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை – ஆதி தாளம்
ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.
நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி – உங்கள்
நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே – என்ன
தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! – அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், – மிகச்
சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . … 1
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் – இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், … 2
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், … 3
எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். … 4
(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? … 5 –
நந்தலாலா — நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா;1பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா — நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா;
ட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா — நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;3
தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா — நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.
ஜீவாத்மாவாகிய உயிர் இறுதியில் பரமாத்மாவான இறைவனை அடைய முழு சரணாகதியே சிறந்த வழி என்று நம்பிய பாரதி,
கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன்-
கரணம் – மனம், தனு – உடல்)என்று முழுவதுமாகத் தம்மை அர்ப்பணிக்கிறார்.
தெய்வத்தின் உதவியின்றி மனித முயற்சியால் மட்டுமே எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது பாரதியின் எண்ணம். ஆகவே
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள் அல்லது நீங்கும் . . . . .(அல்லது – துன்பம்) என்று குறிப்பிடுகிறார்.
மகாபாரதத்தில் திரௌபதி கண்ணனிடம்,
வையகம் காத்திடு வாய் கண்ணா!
மணிவண்ணா என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே – சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி(பாஞ்.சப.299)
என்று முழு சரணாகதி அடைந்த பிறகே அவளுக்குக் கண்ணன் அருள் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பூமணித் தாளினையே கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்(ஆறுதுணை – 4)
‘புண்ணியம்’ என்று அவர் நினைப்பது கல்வியை எனக் கொள்ளலாம்.
கவிதை இயற்றக் கல்வியறிவு தேவை, அந்த அறிவைப் பெற விரும்பும் பாரதி, ஒரு கணப் (விநாடி) பொழுதும் கலைமகளைப் பிரிய விரும்பவில்லை.
கலைமகளிடம் எங்ஙனம் சென்றிருந்தீர் – என
தின்னுயரே! யென்றன் இசையமுதே--என்று கேட்ட பாரதி,
பாதங்கள் போற்று கின்றேன் – என்றன்
பாவ மெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொடு எப்பொழுதும் – என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்-என்று வேண்டுகிறார். ஞானம் வந்து விட்டால் அகந்தை கெடும். எனவே ஞானம் வேண்டுகிறார்.
மந்திரம் சொல்லி புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுவது கலைமகள் பூசை அல்ல என்று கண்டிக்கிற பாரதி,
அவளை முறையாக வழிபடுவது எங்ஙனம் என்று தெளிவுபடுத்துகிறார்.
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் மனத்தில் அறிவுத் தீயை ஏற்றுகிறார். எனவே
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை யிடுவோர்
சாத்தி ரமிவள் பூசனை யன்றாம்--என்று கலைமகளை வழிபடும் விதத்தைக் கண்டிக்கிறார்.
பின் எது தான் முறையான பூசை? இதோ அவரது விளக்கம்:
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொரு ஊரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்(விளக்கம் – இருப்பிடம், மடுத்தல் – மூட்டுதல், அழித்தல்)
ஏடுகளை அடுக்கி வைத்து இன்னமுது படையலிட்டால் அறிவு வளராது, அறியாமை நீங்காது.
அறிவு வளர வீடுகளிலும் வீதிகளிலும் கல்வி முழக்கம் செழிக்க வேண்டும்.
கல்வியில்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமென்று சினந்து கூறுகிறார் பாரதி.
ஊரையும் நாட்டையும் அழிக்கச் சொல்வது அவர் நோக்கமல்ல.
—————-
ஸ்ரீ கிருஷ்ண மங்கள ஸ்லோகம்–
மங்களம் யாதவேந்த்ராய மஹனீய குணாப்தயே
வசுதேவ தனூஜாய வாஸுதேவாய மங்களம்
கிரீடகுண்டல ப்ராஜ தனூ கைர்யன் முகஸ்ரியே
ஸ்ரீ வத்ஸ கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸே சாஸ்து மங்களம்
யாதவ குலத் தோன்றலே, கிருஷ்ணா உமக்கு நமஸ்காரம்.
நல்லறிவு வழங்கும் மகானே நமஸ்காரம்.
வசுதேவரின் மகனாக அவதரித்த வாசுதேவனே நமஸ்காரம்.
கிரீட, குண்டலங்களின் பேரொளியால் துலங்கும் பேரழகனே நமஸ்காரம்.
ஸ்ரீவத்ஸம், கௌஸ்துப மணி போன்ற மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்திருக்கும் கிருஷ்ணா, நமஸ்காரம்.
———-
நீலாம்புத நிகாஸாய வித்யுத் ஸத்ரு ச வாஸஸே
தேவகீ வஸுதேவாப்யாம் ஸம்ஸ்துதாயாஸ்து மங்களம்
தாப்யாம் ஸம்ப்ரார்த்தி தாயாத ப்ராக்ருதார்பகரூபிணே
யஸோதாய க்ருஹம் பித்ரா ப்ரார்பிதாயாஸ்து மங்களம்
நீருண்ட மேகம் போன்ற நிறத்தையுடையவரே,
மின்னல் போன்று ஒளிவீசும் ஆடை தரித்தவரே,
தேவகி-வசுதேவரின் அருந்தவத்தால் அவதரித்து, அவர்களால் போற்றப்பட்ட பரந்தாமா, நமஸ்காரம்.
பிறகு அவர்களிடமிருந்து பிரிந்து, தந்தையார் வசுதேவரால் ஒப்படைக்கப்பட்டு,
யசோதையிடம் பாலகனாக வளர்ந்து வந்த பரம்பொருளே… கிருஷ்ணா, நமஸ்காரம்.
————–
பூதனாஸுபய: பானபேஸலாயா ஸுராரிணே
சகடாஸுர வித்வம்ஸி பாதபத்மாய மங்களம்
யசோதா லோகிதே ஸ்வாஸ்யே விஸ்வரூப ப்ரதர்ஸினே
மாயா மானுஷரூபாய மாதவாயாஸ்து மங்களம்
வஞ்சகமாக வந்த பூதனையின் பாலையும் அவள் உயிரையும் சேர்த்துக் குடித்தவரே,
யாவரையும் மயக்கும் பேரெழில் வாய்ந்தவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
அசுரத் தனங்களை எதிர்ப்பவரே, சகடாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா,
தங்கள் பாதத் தாமரைகளுக்கு நமஸ்காரம்.
சிறு வாய் திறந்து அதில் அண்ட சராசரங்களையும் தன் விஸ்வரூபத்தையும் காட்டி
யசோதையை பிரமிக்கவைத்தவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.
மனித உருக்கொண்டு மங்களம் அருளிய மாதவா… நமஸ்காரம்.
—————-
த்ருணாவர்த்த தனூஜாஸுஹாரிணே ஸுபகாரிணே
வத்ஸா ஸுரப்ரபேத்ரே ச வத்ஸபாலாய மங்களம்
தாமோதராய வீராய யமளார்ஜுன பாதினே
தாத்ராஹ்ருதானாம் வத்ஸானாம் ரூபதர்த்ரேஸ்து மங்களம்
த்ருணாவர்த்தன் என்ற அசுரனைக் கொன்றவரே,
அனைத்து பக்தர்களுக்கும் மங்களங்களை அருள்பவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
இளம் கன்றுகளைக் காப்பதற்காக, அந்தக் கன்றுகளோடு தானும் ஒரு கன்றாக மாறிச் சென்று,
வத்ஸாஸுரனை வதைத்தவரே, மாயவா, நமஸ்காரம்.
தாமோதரனே, பரிசுத்த வீரனே, யமளார்ஜ்ஜுனம் எனும் மரத்தை (அசுரனை) வீழ்த்தியவரே… நமஸ்காரம்.
————
பிரம்மஸ்துதாய க்ருஷ்ணாய காளியபணந்ருத்யதே
தாவாக்னி ரக்ஷிதாஸேஷ கோ கோபாலாய மங்களம்
கோவர்த்தனேச லோத்தர்த்ரே கோபி கிரீடாபி லாஷிணே
அஞ்சல் யாஹ்ருத வஸ்த்ராணாம் ஸுப்ரீதாயாஸ்து மங்களம்
நான்முகனால் துதிக்கப்பட்டவரே, கிருஷ்ணா, காளியன் எனும் பாம்பின் தலைமீது நர்த்தனமாடியவரே, நமஸ்காரம்.
காட்டுத் தீயினின்று எல்லாப் பசுக்களையும் யாதவர்களையும் காப்பாற்றியவரே, கோபாலா, நமஸ்காரம்.
கோவர்த்தன கிரியை எளிதாகத் தூக்கி நின்றவரே, கோபியருடன் விளையாடி மகிழ்வித்தவரே,
அவர்களுக்கு இரு கரங்களாலும் ஆடைகளை அளித்து அவர்கள் பக்தியைப் பாராட்டியவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.
————–
ஸுதர்ஸனாக்ய கந்தர்வ ஸாப மோக்ஷணகாரிணே
சங்கசூட சிரோஹர்த்ரே வ்ருஷபக்னாய மங்களம்
காந்தினீஸுத ஸந்த்ருஷ்ட திவ்யரூபாய ஸௌரிணே
த்ரிவக்ரயா ப்ரார்த்திதாய ஸுந்தராங்காய மங்களம்
சுதர்சனன் என்ற கந்தர்வனின் சாபத்தைப் போக்கியவரே,
சங்கசூடனின் தலையைக் கொய்து எறிந்து வீரத்தை நிரூபித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காளை வடிவமெடுத்து வந்த அசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காந்தினியின் மகனாகிய அக்ரூரரால் போற்றித் துதிக்கப்பட்ட சுந்தர சொரூபரே,
அழகிய நீண்ட கேசத்தைக் கொண்டவரே, த்ரிவக்ரையினால் பிரார்த்திக்கப்பட்டவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.
————
கந்தமால்யாம் பராட்யாய கஜராஜ விமர்த்தினே
சாணூர முஷ்டிகப்ராண ஹாரிணே சாஸ்து மங்களம்
கம்ஸஹந்த்ரே ஜராஸந்த பலமர்த்தன காரிணே
மதுராபுர வாஸாய மஹாதீராய மங்களம்
சந்தனம், மாலை, பட்டுப் பீதாம்பரம் ஆகியவற்றைத் தரித்து அவற்றுக்குப் பெருமை சேர்த்தவரே,
எதிர்த்த குவலாபீடம் எனும் கஜராஜனைக் கொன்றவரே,
சாணூரன், முஷ்டிகன் முதலான துஷ்டர்களின் ஆயுளை முடித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
கம்சனை வதைத்தவரே, ஜராசந்தனின் படையை அழித்தவரே,
மதுரா நகரில் வசித்த புண்ணிய புருஷரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.
————-
முசுகுந்த மஹானந்த தாயினே பரமாத்மனே
ருக்மிணி பரிணேத்ரே ச ஸபலாஸ்து மங்களம்
துவாரகாபுர வாஸாய ஹாரநூபுர தாரிணே
சத்யபாமா ஸமேதாய நரகக்னாய மங்களம்
முசுகுந்த சக்ரவர்த்திக்கு பெரு மகிழ்ச்சி அளித்தவரே, பரமாத்மா, ருக்மிணியைத் துணைவியாக அடைந்தவரே,
பலராமனின் பாசத்துக்கு உரியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
துவாரகா பட்டணத்தில் வசிப்பவரே, ஒளிவீசும் மாலையும் இன்னிசை எழுப்பும் பாத கிண்கிணியும் அணிந்தவரே,
சத்யபாமாவுடன் கூடியவரே, நரகாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.
————–
பாணாசுரகரச் சேத்ரே பூதநாதஸ்துதாயா ச
தர்மாஹுதாய யாகாரத்தம் சர்மதாயாஸ்து மங்களம்
காரயித்ரே ஜராசந்தவதம் பீமேன ராஜ பி:
முக்தைஸ் ஸ்துதாய தத்புத்ர ராஜ்ய தாயாஸ்து மங்களம்
பாணாசுரனின் கைகளை வெட்டி அவனை வீழ்த்தியவரே, பரமேஸ்வரனால் துதிக்கப்பட்டவரே,
யாகத்தில் கலந்து கொள்வதற்காக தர்மரால் அழைக்கப்பட்டவரே,
மங்களங்களைத் தரும் மாதவா, நமஸ்காரம்.
ஜராசந்தனை வதைக்க பீமனுக்கு அருளியவரே,
ஜராசந்தனின் சிறையிலிருந்து விடுதலை பெற்ற மன்னர்களால் வணங்கப்பட்டவரே,
அவனுடைய மகனுக்கே ராஜ்யத்தைத் தந்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.
—————
சைத்யதேஜோ பஹர்த்ரேச பாண்டவப்ரிய காரிணே
குசேலாய மஹாபாக்ய தாயினே தேஸ்து மங்களம்
தேவ்யஷ்டக ஸமேதாயச புத்ர பௌத்ரயுதாயச:
ஷோடஸ ஸ்த்ரீ ஸஹஸ்ரைஸ்து ஸம்யுதாயாஸ்து மங்களம்
சிசுபாலனுடைய பராக்கிரமத்தைப் பறித்தவரே, பாண்டவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவரே,
குசேலருக்கு மகா பாக்யங்களையும் அருளியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
அஷ்டமகிஷிகளுடன் இருப்பவரே, பிள்ளை- பேரன் என்று சந்ததிகளைப் பெற்றவரே,
பதினாயிரம் மனைவியருடன் கூடியிருப்பவரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.
—————-
ஸ்ஸிஷ்டரக்ஷணபர: கருணாம்புராசி:
துஷ்டாஸுராம் ஸந்ருபதீன் விந்க்ருஹ்ய யஸுரான்
கஷ்டாம் தசாம் அபநுதந்தரஸா ப்ருத்வ்யா:
புஷ்டிம் ததாது ஸஹரி: குலதைவதம் ந:
எந்த பகவான் தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கிறாரோ, கருணைக் கடல் எவரோ,
துஷ்டர்களை அழித்து பூமியைப் புனிதப்படுத்துபவர் எவரோ அந்த ஹரி என்ற கிருஷ்ணன்
எங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து, குலம் விளங்கச் செய்யும் குலதெய்வமாக அருளட்டும்!
————————————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –