Archive for the ‘Geetha Saaram’ Category

ஸ்ரீ சித்தி த்ரய உட்ப்பொருள் -ஸ்ரீ திரு நாங்கூர் உ வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் —

March 13, 2023

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ஸ்லோகம்-
மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸஸ் ததா நிர்ணய
திஸ் ரஸ் சித்தய ஆத்ம ஸம் வித கிலாதீ ஸாந தத்வாஸ்ரய
கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹ ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூந்
யத் க்ரந்த அநு சந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும

ஆகம ப்ராமாண்யம்
மஹா புருஷ நிர்ணயம்
ஆத்ம ஈஸ்வர ஸம் வித் ஸித்திகள்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோஹீ
ஸ்தோத்ர ரத்னம்
ஆகிய கிரந்தங்கள் எந்த ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டதாக ஸ்ரீ பாஷ்ய காரர் அனுசந்திக்கிறாரோ
பரமாச்சார்யராக விளங்கும் அந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கிறோம்

இதில் மஹா புருஷ நிர்ணயம் கிடைக்க வில்லை
ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்துள்ள நியாய தத்வம் யோக ரஹஸ்யம் இவையும் இப்போது கிடைக்கப் பெற வில்லை
ஆகம ப்ராமாண்யம் பகவத் சாஸ்திரமான பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தைப் பஹு முகமாக நிலை நாட்டுகிறது
வேதம் போலவே ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் பிரபல பிரமாணம் என்று பரமாச்சாரியார் மூதலித்துப் பேசுகிறார்

ஸ்ரீ பாஷ்யகாரர் உத்பத்ய சம்பவாதிகரணத்தில் -2-2-8- இதை அடி ஒற்றியே
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம ப்ராமாண்யத்தை ஸ்ரீ வியாஸ சித்தாந்தமாக நிர்ணயித்து அருளுகிறார்
கீதார்த்த ஸங்க்ரஹத்தைத் தழுவியே மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருளை தெரியப் பாரினில் சொன்னார் (இராமானுச நூற்று -68-)
சதுஸ் ஸ்லோஹீ ஸ்தோத்ர ரத்தினங்களை அடி ஒற்றியே கத்யங்களையும் அருளிச் செய்தார்

சித்தி த்ரயத்தை அடியாகக் கொண்டே மஹா ஸித்தாந்த அர்த்த விசேஷங்களை அருளிச் செய்துள்ளார்

ஸித்தி -என்பது தத்வ நிர்ணயத்தைக் குறிக்கும்
ஜீவாத்மா பரமாத்மா பிராமண ஞானம் -இவற்றின் யாதாத்ம ஞானம் -நிர்ணயித்துத்
தருவதால் ஆத்ம ஸித்தி -ஈஸ்வர ஸித்தி -ஸம் வித் ஸித்தி

இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்

பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்

வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –

————-

விருத்த மதயோ அநேகாஸ் சந்தயாத்மா பரமாத்மநோ
அதஸ் தத் பரி ஸூத்தயர்த்தம் ஆத்ம சித்திர் வித்யதே

ஆத்ம பரமாத்மாக்களுடைய தத்வ ஞானம் முக்திக்கு இன்றியமையாத ஸாதனம் என்று
வேதாந்தமும் வேதாந்தம் அறிந்த சான்றோர்களின் நூல்களும் பறை சாற்றுகின்றன
இவ்விரு ஞானத்திலும் புறவாதிகளுடைய துர்வாதங்களை நிரஸித்து தத்துவத்தை உள்ளபடி அறிந்து
உஜ்ஜீவிக்கவே ஆத்ம ஸித்தி செய்யப்படுகிறது என்கிறார் ஆளவந்தார் –

நான் நான் என்று எப்போதும் தனக்குத் தான் தோன்றும் ஆத்ம விஷயத்தில்
தேஹமே ஜீவன் என்றும்
புலன்கள் ஜீவன் என்றும்
மனனே ஜீவன் என்றும்
பிராணனே ஜீவன் என்றும்
புத்தியே ஜீவன் என்றும்
சொல்லும் புற வாதங்களைக் கண்டித்து

ஜீவாத்மா இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும்
ஞான ஆஸ்ரயமாய்
நித்தியமாய்
அணுவாய்
அநேகமாய் இருக்கிறது
இப்படி இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ தந்திரம் அன்று
பரமாத்வுக்கே சேஷமாய் -பரதந்த்ரமாய் -சரீரமாய் இருக்கும்
என்று ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் ஆத்ம ஸித்தியில்

தேஹ இந்திரிய மந ப்ராண தீப்யோ அந்யோ அநந்ய சாதந
நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னஸ் ஸ்வதஸ் ஸூகீ –என்கிற ஸ்லோகத்தால் ஆத்மாவின் யாதாத்ம்ய ஸ்வரூபத்தைச் சொல்லி
மேலே யுக்திகளாலே விளக்கி அருளுகிறார்

இங்கு வ்யாபீ -எல்லா அசேதனப் பொருள்களிலும் இருக்கத் தக்கவன் -அணுவைப் போன்று ஸூஷ்மன் என்று பொருள் உரைத்தார் பாஷ்யகாரர்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -1-1-10-ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டி அருளிச் செய்தபடி
ஜீவாத்மா ஸ்வரூபத்தால் வ்யாபியாக இருப்பவன் என்று பிரமிக்க வேண்டாவே

தைத்ரியம்-அன்ன மய ப்ராண மய மநோ மயங்களுக்கு அவ்வருகே
சரீரம் பிராணன் மனம் இவற்றுக் காட்டிலும் வேறுபட்டு
விஞ்ஞான மய -என்று
வேத புருஷன் ஆத்மாவின் வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறான்

சென்று சென்று பரம் பரமாய்–8-8-5-
என் ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே –8-8-4-என்று ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டியே
ஆளவந்தார் ஆத்ம சித்தியில் நிலை நாட்டி அருளுகிறார்

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப் பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப்பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

யஞ்ஞ மூர்த்தி வாதம் -17 நாள் இரவில் தேவப் பெருமாள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்வப்னத்தில்
ஆளவந்தார் அருளிச் செய்த ஆத்ம ஸித்தி அர்த்தங்களை -மாயாவாத நிரசனங்களை -பிரஸாதித்து அருள
தெளிந்து எழுந்து ஸந்துஷ்டாராக வாத சதஸ்ஸுக்கு எழுந்து அருள
அவரும் இவர் திருவடிகளிலே சரண் அடைய –
அருளாளப் பெருமாள் எம்பருமானார் திருநாமம் சாற்றப்பெற்று
ஸ்ரீ பாஷ்யகாரருடன் நம் தரிசனத்தை நிர்வகித்துப் போந்தார் அன்றோ

இவற்றால் ஆளவந்தாருடையா ஸ்ரீ ஸூக்திகளின் வீறுடைமை நன்கு விளங்கும் –

—————-

ஈஸ்வர ஸித்தியின் உள் பொருள்

வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டும்
வேத வேத்யனான பரம புருஷனை ஒத்துக் கொள்ளாமல்
யகாதி கர்மங்கள் அபூர்வத்தை உண்டு பண்ணி
அதன் வழியாக ஸ்வர்க்காதி பலன்களைப் பெறுகிறார்கள் என்று நிரீஸ்வர வாதம் செய்யும் கர்ம மீமாம்ஸகர்களை நிரஸித்து
பிரளய காலத்தில் அழிந்து கிடந்த எல்லா லோகங்களையும் மறுபடியும் ஸ்ருஷ்டி காலத்தில்
படைத்துக் காத்து அருளும் சர்வேஸ்வரனை ஒருவன் உளன் என்று ஸ்ருதி கூறா நிற்கச் செய்தே
நிரீஸ்வர வாதம் பண்ணும் இவர்களை ஆஸ்திக நாஸ்திகர்கள் என்கிறார்

மேலும்
எவனுடைய திரு ஆராதனமாக யாகாதிகள் ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ
யாகாதிகளால் ஆராதிக்கப்பட்ட எவனுடைய அனுக்ரஹத்தினாலே பலத்தை அவர்கள் அடைகின்றனரோ
அந்தப் பரமன் இல்லாத போது கர்மமும் கர்ம பலனும் ஸித்திக்காது -என்கிறார்

மேலும்
அழிந்து

கிடந்த வஸ்துவுக்கு நாம ரூபங்கள் உண்டாவதற்கு ஒரு விதாதா வேணும்
ஆகவே
ஜகத் ஸ்ருஷ்டவாய்
ஸர்வ கர்ம ஸமாராதனாய்
ஸர்வ பல ப்ரதனான
பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியாலே அவஸ்யம் அங்கீ கரித்தே யாக வேண்டும்
என்று யுக்திகளாலே நிரூபித்து
கருமமும் கர்ம பலனுமாகிய காரணன் தன்னை -என்று
ஆழ்வார் பேணின காரணமான பரம் பொருளை
ஈஸ்வர ஸித்தியிலே நிலை நாட்டி அருளுகிறார் பரமாச்சாரியார்

இதன் இறுதியில்
ஏக ப்ரதான புருஷம் விவாதாத் யாஸிதம் ஜகத்
சேதன அசேதநாத் மத்வாத் ஏக ராஜகதே ஸவத் –என்னும் ஸ்லோகத்தில்
உபய விபூதியிலும் உள்ள ஜீவ ராசிகளும்
அதிகாரி வர்க்கமான வானவர்களும்
ராஜாதி ராஜனான ஸ்ரீ மன் நாராயணனுடைய செங்கோலின் கீழ் இடரின்றி வாழ்கின்றனர்
என்னும் வேதாந்த ஸித்தாந்தத்தை ராஜ ராஷ்ட்ர த்ருஷ்டாந்தத்தாலே விளக்குகிறார்
வேதைக வேத்யன் பரம புருஷன் -என்பதே இவர் திரு உள்ளம்
ஆயினும் வேதார்த்த நிர்ணய ஸஹ காரியான தர்க்கங்களையே ஈஸ்வர ஸித்தியில் முக்யமாகக் காட்டி அருளுகிறார் –

——————

ஸம்வித் ஸித்தியில்
முக்கியமாக கேவல அத்வைத வாதத்தை நிரஸனம் பண்ணி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்துகிறார்
சத்தான -உளதான பொருள் ஒன்றே-அநேகம் இல்லை என்னும் வாதத்தையும்
ஞானம் -அறிவு -ஒன்றே உளது -ஜேயமும் -அறியப்படும் பொருளும் -ஞாதாவும் அறிகிறவனும் -இல்லை -என்னும் வாதத்தையும் கண்டித்து
சித் அசித் ஈஸ்வரன் என்ற தத்வ த்ரயம் -உண்மைப் பொருள்கள் மூன்றுமே உண்டு என்றும்
அப்படியே ஞானம் -ஜேயம் -ஞாதா -மூன்றும் உள்ளது என்றும் நிரூபிக்கிறார் –

மேலும்
ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -5-2-1- ஸ்ருதி வசனத்துக்கு
பரம் பொருளுக்கு குணம் ரூபம் ஐஸ்வர்யம் ஒன்றும் இல்லை என்னும் அபத்தப் பொருளை அத்வைதிகள் உரைத்தனர்
அத்தைத் தகர்த்து
பரம்பொருளான எம்பெருமானுக்கு
நற் குணங்களும்
திவ்ய ரூபங்களும்
வைபவங்களும்
பல பல உண்டு என்று நிரூபிக்கிறார் –

ஸத்யம் ஞானம் அநந்தம் -தைத்ரியம் ஆந -1-2-
விகாரம் அற்று இருப்பதால் ஸத்யமாயும்
ஞானமாகவும்
அளவற்றதாய் இருப்பதால் அநந்தமாயும் –இருக்கும் ப்ரஹ்மம்

பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல கிரியா ச -ஸூவே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் –
ஸ்ருஷ்டித்தல் போன்ற பல செயல்களும் உண்டு என்று அறியப்படுகிறது

கந்தர்வ அப்சரஸஸ் ஸித்தாஸ் சகின்நர மஹோ ரகா
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே
கந்தர்வர்களும் அப்சரஸ் ஸுக்களும் கின்னர்களுடன் மஹா நாகங்களுடன் கூடிய சித்தர்களும்
இவனுடைய குணங்களின் எல்லையை அடைவது இல்லை
ஆகையால் இவன் அநந்தன் என்று சொல்லப்படுகிறான்

இத்யாதி பிராமண வசனங்களால்
எம்பெருமான் எல்லையில்லா நற் குணங்களையும் வைபவங்களை யுடையவன் என்று விளங்குகிறது
இவனே ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
பிரதானனன் -என்கிற பொருளையே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி சொல்கிறது

ஏக முக்யாந்ய கேவலா -என்கிற கோசத்தின் படி ப்ரதானன் -என்பதே ஏக பதார்த்தம்

மேலும்
சோழ மன்னன் ஒருவனே அத்விதீயனாக இப்போதும் உளன் -என்பதற்கு எப்படி
அவனே எல்லா மன்னர்களுக்கும் தலைவன்
அவனுக்கு சமானமாகவும் -அவனைக்காட்டிலும் உயர்ந்தவனாக இப்போதும் மற்றொரு மன்னன் இல்லை போல்
இங்கும் கொள்வது என்று மூதலித்துக் காட்டி அருளுகிறார்

யதா சோழ ந்ரூப ஸம் ராட் அத்விதீயோ அத்ய பூதலே
இதி தத் துல்ய ந்ருபதி –நிவாரண பரம் வசஸ்
ந து தத் ப்ருத்ய தத் புத்ர களத்ராதி நிஷேதகம்
ததா சுரா முர நர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட கோடயஸ்
க்லேச கர்ம விபாகாத்யை ரஸ ப்ருஷ்டஸ்யாகி லே ஸிதுஸ்
ஞாநாதி ஷாட் குண்ய நிதேர சிந்த்ய விபவஸ்ய தா
விஷ்ணோர் விபூதி மஹிம ஸமுத்ரத் ரப்ஸ விப்ருஷஸ் –என்னும் ஸ்லோகங்களால்
அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களும் அதற்கு உட்பட்ட ஸகல தேவாதி சேதனர்களும்
எம்பெருமானுடைய விபூதியில் அடங்கியவை

ஸ்வ தந்திரமான மற்றொரு வஸ்து இல்லை -என்று நிரூபித்து
ப்ரஹ்மாத்ம நாத்மலாபோயம் ப்ரபஞ்சஸ் சித சின்மயஸ்
இதி பிரமீயதே ப்ராஹ்மீ விபூதிர் ந நிஷித்யதே -என்று
அத்விதீய ஸ்ருதியினால் புருஷோத்தமனுடைய விபூதிக்கு ஒருவிதமான இடரும் இல்லை என்று காட்டி அருளுகிறார்

இவ்வண்ணம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளை
ஸம்வித் ஸித்தியில் நிலை நாட்டி அருளுகிறார் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

இத்யாதியான ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளை உட்க் கொண்டு
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி
வசனத்துக்குப் பொருத்தமான பொருளை விளக்கி அருள்கிறார் பரமாச்சாரியார் –

———————————————–—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –ஸ்ரீ கீதா பாஷ்யம் —

February 24, 2023

சூரணை 8- அவதாரிகை –
இது தான் உமக்கு ஒருவருக்குமேயோ – என்னில்
என் அளவே அன்று -சகல லோகங்களிலும் வர்த்திக்கிற சகல சேதனருக்கும் சகல வித பந்துவும் சர்வாதிகனான நீயே –என்கிறார்

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஸ் ச குருர் கரீயான்
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ-৷৷11.43৷৷

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய-
சர்வ லோகங்களிலும் உண்டான ஜங்கம ஸ்தாவராத் மகமான
சகல பதார்த்தங்களுக்கும் உத்பாதகன் ஆனவனே-

த்வமஸ்ய பூஜ்யஸ் –
ஆகையாலே சர்வத்துக்கும் பூஜ்யன் நீ அல்லையோ

ச குருர் கரீயான்-
ஸ்ரேஷ்டனான ஆசார்யனும் நீயே
கீழ் சொன்ன பூஜ்யத்தை பித்ருத்வத் அளவிலே நிற்குமது

இத்தால் –
உத்பாதக பிரம்மா பித்ரோர் கரீயான் ப்ரஹ்மத பிதா -கூரத் ஆழ்வான்-என்று
பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது

ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
பித்ரு மாத்ரு ஸூத பிராத்ரு தார மித்ராத யோபி வா
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –ஆகையாலே
த்வத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும் உனக்கு சத்ருசர் இல்லை என்றால்
அதிகர் இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஒத்தார் மிக்கார் இலையாய -திருவாய் மொழி -2-3-2-இறே

லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ –
ஆகையாலே த்ரிவித சேதனரிலும் காட்டில் ஒப்பில்லாத பிரபாவத்தை உடையவனே –

——–

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர் கரீயாந்.—
ந த்வத் ஸமோஸ்த் யப்யதிக குதோந்யோ–லோக த்ரயேப் யப்ரதிம ப்ரபாவ—৷৷11.43৷৷

த்வம்-நீ,
அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு,
பிதா-தந்தை ஆவாய்,
ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன்,
கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு,–சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு
த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை,
அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்?
லோக த்ரயே அப்ரதிம ப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

ஒப்பற்ற பெருமை யுடையவனே-இந்த அசைவனவும் அசையாதனவும் அடங்கிய உலகுக்கு தந்தை யாகிறாய்
ஆகையாலே இவ்வுலகிற்கு வழி படத் தக்கவனும் ஆகிறாய்
தந்தையை விடச் சிறந்தவனாக ஆச்சார்யரும் ஆகிறாய்
கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் -மூ உலகிலும் கருணை முதலான எந்த குணத்தாலும் உன்னை ஒத்தவன் வேறு ஒருவனும் இல்லை
உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எப்படி இருக்க முடியும்

৷৷11.43৷৷அப்ரிதம ப்ரபாவ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய பிதா அஸி அஸ்ய லோகஸ்ய குருஃ ச அஸி. (சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு )

அதஃ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய கரீயாந் பூஜ்ய தமஃ. ந த்வத் ஸமஃ அஸ்தி அப்யதிகஃ குதஃ அந்யஃ லோக த்ரயே அபி த்வதந்யஃ (கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் )

காருண்யாதிநா கேந அபி குணேந ந த்வத் ஸமஃ அஸ்தி குதஃ அப் யதிகஃ.

யஸ்மாத் த்வஂ ஸர்வஸ்ய பிதா பூஜ்ய தமோ குருஃ ச காருண்யாதி குணைஃ ச ஸர்வாதிகஃ அஸி —

৷৷11.43৷৷த்வயா க்ஷாமணே கரிதேபி க்ஷமேஹமிதி கேந நிஷ்சிதம் மதந்யஃ கஷ்சிதாஷ்ரீயதாமிதி பகவதபிப்ராயமுந்நீய ததுத்தரத்வேந ஹேது பல பாவேந ப்ரவரித்தே ஷ்லோகத்வயே

ப்ரதம ஷ்லோகஸ்தவிஷேஷணாந்யப்ரதிமப்ரபாவத்வோபபாதகாநீத்யபிப்ராயேண’அப்ரதிமப்ரபாவேதி’ ப்ரதமமுக்தம். பிதரிகுருபூஜ்யஷப்தாநாஂ ஸம்பந்தி ஸாபேக்ஷத்வேந லோக ஷப்தஸ்ய ஸர்வத்ராந்வயமாஹ’அஸ்ய லோகஸ்ய பிதாஸீத்யாதிநா’. நிருபாதிகபிதரித்வகுருத்வே பூஜ்யதமத்வ ஹேதுரித்யபிப்ராயேண’அத’ இதி. பூஜ்யத்வே கரீயஸ்த்வமநவச்சிந்நமிதி ஜ்ஞாபநாய ப்ரவரித்தஂ’ந த்வத்ஸமோஸ்தி’ இதி வாக்யஂ வ்யாக்யாஸ்யந் ப்ரயோஜநாதிஷயஸத்த்வால்லோகத்ரயஷப்தஸ்யாத்ராந்வயமாஹ’லோகத்ரயேபி த்வதந்ய’ இதி.

அத்ர லோகத்ரயஷப்தேந கரிதகமகரிதகஂ கரிதகாகரிதகமித்யுக்தலோகத்ரயஂ வா? லோக்யதேநேந ப்ரமாணாந்தராப்ராப்தார்த இதி வ்யுத்பத்த்யா வேதத்ரயஂ வா விவக்ஷிதம்.

ஸாம்யஸ்ய பேதகடிதத்வாத்’ந த்வத்ஸமோஸ்தி’ இத்யநேநைவ அந்யஸ்மிந் பகவத்ஸாம்யநிஷேதலாபாதந்யபதாநர்தக்யஂ இத்யாஷங்காபரிஹாராய’அந்யஸ்த்வத்ஸமோ நாஸ்தி? த்வமேவ தவ ஸமஃ’ இத்யர்தலாபார்தஂ’த்வதந்யஃ’ இத்யுத்தேஷ்யஸமர்பகத்வேநாந்யஷப்தஸ்யாந்வய உக்தஃ. தேந கார்யத்வகர்மவஷ்யத்வாதிநா பகவதந்யத்வேந ப்ரஸித்தாநாஂ விதிஷிவாதீநாஂ “ஹிரண்யகர்பஃ ஸமவர்ததாக்ரே” [றக்ஸஂ.8.7.3.1வா.ஸஂ.20.10.10.14] “

அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதஂ” [யஜுஃ4.6.2]

“யதா தமஸ்தந்ந திவா ந ராத்ரிர்ந ஸந்ந சாஸச்சிவ ஏவ கேவலஃ” [ஷ்வே.உ.4.18] இத்யாதிஷு தத்தத்வாசிஷப்தஷ்ரவணேந? காரணத்வாதிநா பகவத் ஸாம்யாபாதப்ரதீதாவபி

’ஆகாஷஸ்தல்லிங்காத்’ [ப்ர.ஸூ.1.1.22]

’ப்ராணஸ்ததாநுகமாத்’ [ப்ர.ஸூ.1.1.28]

’ஷாஸ்த்ரதரிஷ்ட்யா தூபதேஷோ வாமதேவவத்’ [ப்ரூ.ஸூ.1.1.30]

’ஸாக்ஷாதப்யவிரோதஂ ஜைமிநிஃ’ [ப்ர.ஸூ.1.2.28] இத்யாதி ந்யாயாநுரோதேந

“ஏஷ ஸர்வபூதாந்தராத்மாபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணஃ” [ஸுபாலோ.7]

“ஏகோ ஹ வை நாராயண ஆஸீந்ந ப்ரஹ்மா நேஷாநஃ” [மஹோ.1.1] இத்யாதி ஷ்ருதி ஸித்த ஸர்வாந்தராத்மத்வாபஹதபாப்மத்வாதிவிஷிஷ்டபகவதஸாதாரணதர்மப்ரதிபாதகவாக்யஸ்த

ஹிரண்யகர்பாஜஷிவா-திஷப்தாநாஂ பகவத்பரதயா ந தேஷாஂ பகவத்ஸாம்யகந்தோபீதி லப்யதே.’கேநாபி குணேநேதி’ —

கிமுத ஸகல கல்யாண குணைர் ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வாதிநா சேதி பாவஃ. அநேந ஸாம்யைக்யோத்தீர்ணவ்யக்த்யந்தரத்வபக்ஷா நிரஸ்தா வேதிதவ்யாஃ.

——————-————————————————————————————-
சூரணை -9- அவதாரிகை –
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது –
ஆருடைய ஹ்ருதயத்தாலே என்னில் –ஸ்வ ஹ்ருதயத்தாலே –
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும்
ரிபூணாமபி வத்சலா -யதிவா ராவண ஸ்வயம் -என்கிற அவன் படி பார்த்தால்
இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை

ஆகிலும் பதி வரதை யாய் இருப்பாள் நெடுநாள் வ்யபசரித்து பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் -என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரஷிக்க வேணும் -என்று முன்னே நின்றாள்
வருகை தானே அபராதமாய் அதுக்கு மேலே என்னை ரஷிக்க வேணும் என்கையாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்த்ரீத்வ ஹானியுமாய் இருக்கும் இறே –

அப்படியே இவனும் அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து சரணம் புகுருகையாவது
அபராதத்துக்கு மேல் யெல்லையுமாய்
சேஷத்வ ஹாநியுமாய் இருக்கக் கடவது இறே

ஆனால் சரணம் புகுகிறது என் -ஷாமணம் பண்ணுகிறது என் -என்னில்
தமேவ சரணம் கத -என்று காகத்தோ பாதி புறம்பு புகல் இல்லாமையாலே
சரணம் புகவும் வேணும்
பூர்வ வ்ருத்தத்தை பாரா -பண்ணின இதுவும் அபராதம் என்று பய ஹேது வாகையாலே ஷாமணம் பண்ணவும் வேணும்

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரசாதயே த்வாமஹ மீச மீட்யம்
பிதேவ புத்ரச்ய சகேவ சக்யு பிரியா ப்ரியாயார்ஹசி தேவ சோடும்

தஸ்மாத் –
த்வமேவ -இத்யாதிப் படியே நீயே சகல வித பந்துவும் ஆகையாலே
செய்த குற்றம் பொறுக்கும் போது சகல வித பந்துவுமாக வேணும் போலே காணும்
அது தன்னிலும் பர்த்தா வென்றால் போலே ஒரு முறையேயாய்
ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமே யாய்த்
தலைக் கட்டுகை  அன்றிக்கே -சகல வித பந்துவுமாய் இருக்கையாலே இவனுக்குச் செய்யல் ஆகாதது இல்லை
அவனுக்கு பொறுக்கல் ஆகாததும் இல்லை என்கை –

ப்ரணம்ய –
மானசமான தண்டன் –

ப்ரணிதாய காயம் –
காயிகமான தண்டன்

இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தாத் சித்தம்
ஆக த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்க படி சொல்லிற்று
எதுக்காக வென்னில்

ப்ரசாதயே –
பிரசாதிப்பிக்கைக்காக
ஆரை என்னில்

ஈச மீட்யம் த்வாம் –
சேஷியுமாய் ஸ்துத்யனுமாய் இருந்துள்ள உன்னை

ஆர் என்னில்
அஹம் –
அனன்யார்ஹ சேஷபூதனுமாய் இருந்து வைத்து
அபராதத்தைப் பண்ணிப் போந்து
இன்று வந்து சரணம் புக்க -நான்

ஈசன் -என்கையாலே உடையவன் -என்றபடி –
ஈட்யன் -என்றது -ஸ்துத்யன் -என்றபடி

நினைத்தபடி செய்யப் புக்கால் நிவாரகர் இல்லாமைக்காக உடையவன் என்கிறது
ஸ்துதிக்க வேண்டும் விஷயத்திலே த்வேஷித்துப் போந்தேன்-என்று
தம்முடைய இழவு தோன்ற ஈட்யன் -என்கிறார் –

பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
பிதேவ புத்ரச்ய –
புத்திரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும்

சகேவ சக்யு –
தோழன் செய்த குற்றத்தை தோழன் பொறுக்குமா போலவும்

பிரியா ப்ரியாயா-
ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமா போலேயும்
சந்திரார்ஷ

சோடும்
பொறுக்கைக்கு சர்வ வித பந்துவுமாய் இருக்கையாலே

தேவ அர்ஹசி
தேவரும் அப்படிக்கு அர்ஹர்

————-

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹ மீஸமீட்யம்.–
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷

தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி,
ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன்,
ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே!
பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும்,
ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும்,
ப்ரிய: ப்ரியாயா:-அன்பனை யன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்),
த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்

முன் கூறிய காரணத்தினால் அனைவரையும் நியமிப்பவனும் ஸ்துதிக்கத் தக்கவனுமான உன்னை
நான் வணங்கி உடலை ஒடுக்கி நின்று அருள வேண்டுகிறேன் –
தேவனே -தந்தை மகனுடைய குற்றத்தைப் போலவும் -தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் –
எனக்கு இனியனான நீ உனக்கு இனியவனான என்னுடைய குற்றம் அனைத்தையும் பொறுத்து அருள வேணும்

৷৷11.44৷৷தஸ்மாத் த்வாம் ஈஷம் ஈட்யம் ப்ரணம்ய ப்ரணிதாய ச காயஂ ப்ரஸாதயே.

யதா கரிதாபரா தஸ்ய அபி புத்ரஸ்ய யதா ச ஸக்யுஃ ப்ரணாம பூர்வகம் ப்ரார்திதஃ பிதா ஸகா வா ப்ரஸீததி?

ததா த்வஂ பரம காருணிகஃ ப்ரியஃ ப்ரியாய மே ஸர்வஂ ஸோடும் அர்ஹஸி.

ப்ரணாம பூர்வக ப்ரஸாதயே -(என்பதால் -மன்னிப்பு வேண்டி பிரபத்தி இது -பக்தி ஆரம்ப விரோதி போக்கவோ மோக்ஷ ப்ராப்திக்காகவோ இல்லையே)

৷৷11.44৷৷’தஸ்மாத்’ இதி பூர்வ ஷ்லோகோக்த நிருபாதிக பிதரித்வபூஜ்யதமத்வகுருத்வாதிகஂ ஹேதுத்வேந

பராமரிஷதீத்யபிப்ராயேணாஹ’யஸ்மாத்த்வஂ ஸர்வஸ்ய பிதேத்யாதிநா’.’ப்ரணம்ய’ இதி ப்ரபதநமுச்யதே;

பூர்வோக்தபிதரித்வாதிபராமர்ஷிநா’தஸ்மாத்’ இத்யநேந’அஹம்’ இத்யநேந சாநுகூல்யஸங்கல்பாத்யங்காநி ஸூசிதாநி.

’ப்ரணிதாய காயம்’ இத்யநேந “யத்தி மநஸா த்யாயதி” [யஜுஃ6.9.7]

இத்யுக்தரீத்யா கரண பூர்திஃ ஸூசிதா. ப்ரணம்ய ப்ரஸாதயே ப்ரஸாதார்தஂ ப்ரணமாமீத்யர்தஃ.’ப்ரஸாதயே?

ஸோடும்’ இத்யாப்யாமர்தஸித்தஂ வதந் தரிஷ்டாந்ததார்ஷ்டாந்திகயோஃ ஸாதர்ம்யமுபபாதயதி’யதா கரிதாபராதஸ்யாபீத்யாதிநா’.

——————————————————————————

சூரணை – -13- அவதாரிகை –

கீழ் நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்றே நின்றது –
நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் விரோதி நிவ்ருத்தி இறே –

அவ்வளவும் போறாதே இவருக்கு –
பரம புருஷார்த்த லஷண மோஷ ரூப கைங்கர்ய சித்தியும் வேணுமே

இக் கைங்கர்ய உபயோகியுமாய்
கைங்கர்யததோபாதி ஆதரணீயமுமாய் -பிரிய விஷயமுமாய்-
பிராப்ய பூமியிலும் அனுவர்த்திக்குமவையான பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகளை அபேஷிப்பாராய்
அதுக்கு பூர்வ பாவியாய் இருந்துள்ள அநந்ய பிரயோஜன பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை –
அதினுடைய ஸித்தி அர்த்தமாக –
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்த ஸ்லோக த்ரயத்தையும் முன்னிட்டு
அந்த ஜ்ஞாநத்தையும் உண்டாக்கி அருள வேணும் -என்று அபேஷிக்கிறார் –

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ மம ப்ரிய

தேஷாம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூ க்ருதிநோர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப –ஸ்ரீ கீதை -7-13-என்று சொல்லுகிற
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளில் வைத்துக் கொண்டு

ஜ்ஞாநீ –
ஜ்ஞானி யானவன்

அவன் என் என்னில் –
விசிஷ்யதே –
விசேஷம் உடையவனாக சொல்லப் படுகிறான் –

அவனுக்கு ஏற்றம் ஏது என்னில் –
நித்ய யுக்த ஏக பக்திர்-
இது இறே அவனுக்கு உள்ள ஏற்றம் –

நித்ய யுக்தன் ஆகையாவது –
ஒரு பிரயோஜனதுக்காக என்னைப் பற்றி -அது கைப் பட்ட வாறே அகன்று போகை அன்றிக்கே
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் –

ஏக பக்தி யாவது –
ஒரு பிரயோஜனத்தில் சிநேகத்தைப் பண்ணி –
தத் ஸித்தி அர்த்தமாக என் பக்கலிலும் ஸ்நேஹம் பண்ணுகை அன்றிக்கே –
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் ஆகையாலே
தன் ஸ்நேஹத்திற்கும் என்னையே விஷயம் ஆக்குகை –

ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் –
ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் -ப்ரியோ ஹி-
ஜ்ஞாநிக்கு நான் அத்யரத்தம் பிரியனாய் இருப்பன்
என் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரீதிக்கு பாசுரம் இட ஒண்ணாது
அபிதேய வசன -அர்த்த சப்த

ஸ ச மம ப்ரிய –
அவனும் எனக்கு பிரியனாய் இருப்பன்
தன பக்கல் அவனுக்கு உண்டான ப்ரேமத்தை அத்யர்த்தம் என்று சொல்லி
அவன் இடத்தில் தனக்கு உண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு
அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ தன்னுடைய ப்ரேமம் -என்னில் -அங்கன் அன்று
அவன் தன் அளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி

தன் ப்ரீதி தன் அளவிலேயாய் இருக்கும்
அணு பூதனுக்கு உள்ள அளவேயோ விபுவுக்கும்
குளப்படி கலங்கினால் போல் அன்றே கடல் கலங்குவது –
ஆயிருக்க அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று
அருளிச் செய்கிறான் -தன் வாத்சல்ய அதிசயத்தாலே-

அன்றிக்கே
சர்வ சக்தியான தன்னாலும் அபரிஹார்யமாய் இருக்கையாலே அதுவே கனத்து இருக்கும் என்கிறான் ஆகவுமாம்-
பயா நாம பஹாரியாலும் பரிஹரிக்க ஒண்ணாத பயத்தை விளைப்பிக்குமது ஓன்று இறே
பய நிவ்ருத்திக்கு உடலாமவையே பயத்துக்கு உடலாம்படி இறே அவன் ப்ரேமம் இருப்பது

————

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

தேஷாம் -அந்த நால்வருக்குள்
நித்ய யுக்த-என்னோடே எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -எப்போதும் இருக்க ஆசை கொண்டவனாய்
ஏக பக்திர்–என் ஒருவன் இடம் மட்டுமே ஈடுபாட்டை யுடையவனாய் இருப்பவனாய்
ஜ்ஞாநீ -ஞானியானவன்
விஸிஷ்யதே–சிறப்புறுகிறான்
அஹம் -நான்
ஜ்ஞாநிந-அந்த ஞானிக்கு
அத்யர்தம் ப்ரியோ -சொல்ல ஒண்ணாத அளவுக்கு பிரியனானவன்
ஸ ச -அவனும்
மம ப்ரிய৷—எனக்கு இனியவன்

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வ சக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
என் ஆசையும் உன்னுடைய அதீனம் – என் அவா அறச் சூழ்ந்தாயே –

மாசறு சோதி -மடலூறுதல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் –
பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் –
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -அமரும் காதல் -விலக்காதே –
பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –

நித்ய யுக்தன் சம்சாரத்தில் கிட்டாதே -ஆசைப்படுபவன் -இதுவே போதும் அந்த நிலைக்குப் போக
மிக இனிமை -எனக்கு அவர்கள் போல் இருக்க முடியவில்லையே என்னும் புருஷோத்தமன்
கத்ய த்ரயத்தில் எடுத்துக் காட்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஓன்று –

ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்-என்று மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் தானே வெளியிட்டு அருளினான்

‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]

தன் பெருமையை-12-ஸ்லோகங்களில்
பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் – -13–14-ஸ்லோகங்களில்
இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -15-ஸ்லோகத்தில்
இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும் -16-ஸ்லோகத்தில்
அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று-17-ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்

பிரபுத்தனே ஸ்ரேஷ்டன் இது முதல் மேல் 14 ஸ்லோகங்களும் -இதுவே சொல்ல வந்தது -கீழ் எல்லாம் முன்னுரை

துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
என் நல் நெஞ்சம் தன்னை விலக்க இயலாதே –
சிந்தனையை -பரம ப்ராப்யம் -தவ நெறியை -பிராபகம் -திருமாலை -மிதுனம் உத்தேச்யம் -இதுவே நாலாயிரத்தில் ஸப்த த்ரயம் –
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட ஏக தர்சனாய் -அதிகாரி ஸ்வரூபத்துடன் ப்ராப்ய ப்ராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
தேஷாம் ஞானி -அவர்களுக்குள் இங்கு -கீழ் பஞ்சமி அர்த்தே சஷ்ட்டி இங்கு நிர்த்தாரணே சஷ்ட்டி

அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் –

அத்தனை ப்ரீதி சர்வசக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே -அதனில் பெரிய என் அவா அன்றோ

৷7.17৷৷தேஷாஂ ஜ்ஞாநீ விஷிஷ்யதே, குதஃ நித்ய யுக்த ஏக பக்திஃ இதி ச. (மற்று ஒன்றைக் காணாவே )

தஸ்ய ஹி மதேக ப்ராப்யஸ்ய மயா யோகோ நித்யஃ. இதரயோஸ்து யாவத் ஸ்வாபிலஷித ப்ராப்தி மயா யோகஃ.

ததா ஜ்ஞாநிநோ மயி ஏகஸ்மிந் ஏவ பக்திஃ, இதரயோஃ து ஸ்வாபிலஷிதே தத் ஸாதநத்வேந மயி ச. அதஃ ஸ ஏவ விஷிஷ்யதே.

கிஂ ச ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தம் அஹம் -அத்ர அத்யர்த ஷப்தோ அபிதேய வசநஃ; –ஜ்ஞாநிநஃ அஹஂ யதா ப்ரியஃ

ததா மயா ஸர்வஜ்ஞேந ஸர்வ ஷக்திநா அபி அபிதாதுஂ ந ஷக்யதே இத்யர்தஃ; (அத்தனை ப்ரீதி சர்வ சக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே )

ப்ரியத்வஸ்ய இயத்தா ரஹிதத்வாத். -(அதனில் பெரிய என் அவா அன்றோ )

யதா ஜ்ஞாநிநாம் அக்ரேஸரஸ்ய ப்ரஹ்லாதஸ்ய ‘ஸ த்வாஸக்த மதிஃ க்ருஷ்ணே தேஷ்யமாநோ மஹோரகைஃ. ந விவேதாத்மநோ காத்ரஂ தத் ஸ்மரித் யாஹ்லாதஸஂ ஸ்திதஃ’ (வி0 பு0 1.17.39) இதி ஸஃ அபி ததா ஏவ மம ப்ரியஃ.(அபி அப்ரதானம் )

(அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் -)

৷৷7.17৷৷ஏவஂ பக்தபேத உக்தஃ; தத்ர ப்ரபுத்தஸ்ய ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘தேஷாமிதி’. இமமேவார்தஂ பரஸ்தாதபி வக்ஷ்யதி

‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]

இதி. தேஷாமிதி நிர்தாரணே ஷஷ்டீ. விஷிஷ்யதே ஷ்ரேஷ்டதம இத்யர்தஃ. கிஂ ப்ரஷஂஸாமாத்ரார்தமிதஂ?

இதி ஷங்கதே’குத’ இதி. வைஷிஷ்ட்யஹேதுபரஂ விஷேஷணத்வயமித்யாஹ’நித்யயுக்தஃ

ஏகபக்திரிதி சேதி’.’ஜ்ஞாநிநோ ஹீத்யாதி’ ப்ராபகஸ்ய தஸ்யைவ ப்ராப்யத்வாத்பலதஷாயாமபி. யோகோநுவரித்த இத்யர்தஃ. ஆர்தஸ்யார்தார்திநஷ்சைகாதிகாரித்வநிர்ணயாதிதரயோரிதி த்விவசநம். ஏதேநாத்மார்திநஃ

பலதஷாயாஂ பரமாத்மநோ போக்யதயாநுஸந்தாநஂ நாஸ்தீதி ஸித்தம். ஏகஸ்மிந் பக்திர்யஸ்ய ஸ ஏகபக்திரிதி வ்யதிகரணபஹுவ்ரீஹிஃ. ஏகஷப்தாபிப்ரேதமுபாஸ்யபலயோரபேதஂ தர்ஷயிதுஂ’ஏகஸ்மிந்நேவேத்யவதாரணம்’.’ப்ரியோ ஹி’ இத்யாதிநா

ஹேத்வந்தரமுச்யத இத்யபிப்ராயேணாஹ ‘கிஞ்சேதி’.

அதிஷயிதகாஷ்டாஂ வக்துமாஹ ‘அர்தஷப்தோபிதேயவசந’ இதி.’அத்யர்தமத்யபிதேயம்’;

அபிதேயாதிக்ரமணஂ சாத்ராபிதேயாந்தராத்த்வைலக்ஷண்யம்; தச்சாபிதாதுமஷக்யதேத்யபிப்ராயேணாஹ’ஜ்ஞாநிநோஹமிதி’.

’அபிதாதுமஷக்யஂ’ இத்யஸ்யேஷ்வரவசநத்வாத்தேநாப்யஷக்யமிதி பலிதமித்யபிப்ராயேணோக்தஂ’மயேத்யாதிநா’.

நநு ஸர்வஜ்ஞேந யதஜ்ஞாதஂ ததஸதேவ ஸ்யாத், யத்ர சாஸாவஷக்தஃ, தத்ர சாஸ்யாநீஷ்வரத்வஂ ஸ்யாதித்யத்ராஹ ‘ப்ரியத்வஸ்யேதி’; ககநகுஸுமாதிவதஸத்த்வநிபந்தநமஜ்ஞாநஂ ந தோஷாய; அந்யதா ப்ராந்தத்வப்ரஸங்காத். இயத்தாயா அபாவாதேவ தத்வாசகஃ

ஷப்தோபி நாஸ்தீதி ததப்ரயோகோபி நாஷக்திஹேதுரிதி பாவஃ. ஹிஷப்தத்யோதிதாஂ ப்ரஸித்திமுதாஹரதி

‘யதேதி’.’ஜ்ஞாநிநாமக்ரேஸரஸ்யேத்யநேந’ ஜந்மஸித்தநிரதிஷயஜ்ஞாநவத்த்வஂ பாதகவசநாதிபிர்பிபீஷிகாஸஹஸ்ரைஷ்சாகம்பிதத்வஂ விவக்ஷிதம்.

’கரிஷிர்பூவாசகஃ ஷப்தோ ணஷ்ச நிர்வரிதிவாசகஃ’ [ம.பா.5.70.5] இதி கரிஷ்ணஷப்தேநாத்ர நிர்வரிதிஹேதுத்வாதிகஂ விவக்ஷிதம்.

ப்ரவாஹாநாதிகரிஷ்ணாவதாரகரிதகாலியமர்தநஸூசநஂ வா; பக்ததுஃகாநாஂ கர்ஷணாத்வா கரிஷ்ணஃ;

தீவ்ரதுஃகஹேதுஸத்பாவேபி துஃகாநுபவாபாவோ நிரதிஷயப்ரீத்யந்தரமத்ததயேதி பாவஃ. ஆத்மஜ்ஞாநமபி ததாநீஂ மரிக்யஂ,

கிஂ புநர்கரிஹாதிகல்பஷரீரஜ்ஞாநமித்யாத்மநோ காத்ரமித்யஸ்ய பாவஃ.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ராப்யத்யர்தஷப்தஃ ஸமுச்சயஸாமர்த்யாதர்தஸ்வபாவாச்சாநுஷக்த இத்யபிப்ராயேணாஹ ‘ததைவேதி’. யதாஹஂ த்ரிவிதபரிச்சேதரஹித நிரதிஷயாநந்தஸ்வரூபோநந்தகுணவிபூதி-ர்ஜ்ஞாநிநஃ ப்ரியஸ்ததாயமேக ஏவ ஜ்ஞாநீ மம நிரதிஷயப்ரீதிவிஷய இத்யுக்தஂ பவதி

.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ர நிரதிஷயப்ரீதிஂ குர்வதோபி மஹோதாரஸ்யேஷ்வரஸ்யாபி தத்ப்ரீத்யுபாதிகப்ரீதிகரணாததரிப்திஃ ஸூசிதேதி கேசிதாசார்யாஃ.

————————————————————————–

உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்

உதாராஸ் சர்வ ஏவைதே –
யாவர் சிலர் யாதொன்றை அபேஷிக்கும் இடத்தில்
தேவதாந்தரங்கள் பக்கலாதல்
மனுஷ்யர் பக்கலாதல் -அன்றிக்கே
என் பக்கலிலேயே அபேஷிக்கிறார்கள்
அவர்கள் அத்தனைவரும் உதாரர் –

அவர்களில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ து –
விலஷணன் ஆகிறான் ஜ்ஞானி
அவனுக்கு வை லஷண்யம் என் என்னில்

ஆத்மைவ –
ஜ்ஞானி யானவன் எனக்கு ஆத்மாவே இருப்பவன்
எனக்கு தாரகன் -என்றபடி –
அவதாரணத்தாலே -ஒரு காலத்தில் இவன் தாரகனாய்
காலாந்தரத்தில் மற்றைப்படியாய் இருக்கை அன்றிக்கே
எப்போதும் ஒக்க –சர்வ காலமும் -இவனே தாரகன் என்கிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் -பகவத் ஜ்ஞானம் பிறந்தான் ஒருவன் -உண்ணும் சோறு பருகு நீர் -தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-1-7-என்கிறபடியே
தாரக போஷாக போக்யங்கள் அடைய ஈச்வரனே என்று நினைத்து இருக்கை பிராப்தம் –
ஆயிருக்க இது விபரீதமாய் இருந்ததீ -என்ன –

மே மதம் –
ஆரானும் நினைத்தபடி நினைத்திடுக
முந்துற முன்னம் என் நினைவு இதுவே -என்கிறான் –

ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் –
அநுத்தமாம் கதிம் மாமேவ யுக்தாத்மா ஆஸ்தி தஸ் ச ஹி –
இப்படி ஆஸ்தானம் பண்ண அனுக்தம கதியான என்னை –
அனுக்தமான கதி யாகிறது –
தன்னை ஒழிந்ததாய் -தனக்கு மேலாய் இருப்பது ஓன்று இன்றிக்கே பரம ப்ராப்யனான -என்னையே

யுக்தாத்மா
கூடினவனாய்

ஆஸ்தி தஸ் ச ஹி
இப்படி த்யானம் பண்ணுவான் அவனே இறே
இப்படி ஆஸ்தானம் பண்ணா நிற்கும் -த்யானம் பண்ணா நிற்கும்

৷৷7.18৷৷ஸர்வே ஏவ ஏதே மாம் ஏவ உபாஸதே இதி உதாராஃ வதாந்யாஃ யே மத்தோ யத் கிஞ்சித் அபி கரிஹ்ணந்தி, தே ஹி மம ஸர்வஸ்வதாயிநஃ. (என்னிடம் சிறிதளவு பெற்றுக் கொண்டவர்கள் எனக்கு எல்லாம் கொடுத்தவர்கள் -ஆகிறார்கள் -)

ஜ்ஞாநீ து ஆத்மா ஏவ மே மதஂ ததா யத்தாத்ம தாரணஃ அஹம் இதி மந்யே.–தஸ்மாத் ஏவஂ யஸ்மாத் அயஂ மயா விநா ஆத்ம தாரணாஸஂபாவநயா மாம் ஏவ அநுத்தமஂ ப்ராப்யம் ஆஸ்திதஃ, அதஃ தேந விநா மம அபி ஆத்ம தாரணஂ ந ஸஂபவதி, (அன்று எனக்கு பட்டினி நாளே )

ததோ மம அபி ஆத்மா ஹி ஸஃ.

ந அல்ப ஸஂக்யாஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து

ஸ்வரூப ஐக்யம் சொல்ல வந்தால் மற்ற மூவர் இடம் இல்லாததால் அத்வைதம் ஸித்திக்காதே

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -பற்று இல் -அகத்திலன் -உற்றவன் -நம்மை முற்றுமாகக் கொண்டவன் -நேர் எதிராக இரண்டு வியாக்கியானங்கள் இதுக்கு உண்டே

৷৷7.18৷৷’தேஷாம்’ [7.17] இதி ஷ்லோகஸ்யார்த ஏவ’உதாராஃ’ இத்யநேநாபி தரிடீக்ரியதே. ஜ்ஞாநிநோத்யர்தப்ரியத்வவசநாதந்யேஷாமபி கிஞ்சித்ப்ரியத்வஂ பலிதம்; ததேவ’உதாராஃ ஸர்வே’ இதி பாதேந விஷதீகரிதம். ததேகோபாயத்வஸ்ய ஸாதாரண்யஂ’மாமேவோபாஸத’ இத்யநேந தர்ஷிதம். உதாரஷப்தஸ்யாத்ர மந்தப்ரயோஜநோத்கர்ஷமாத்ரபரத்வவ்யுதாஸாய ப்ரஸித்த்யநுரோதேநாஹ ‘வதாந்யா’ இதி. அர்தித்வேநாவஸ்திதாநாஂ கதஂ வதாந்யத்வஂ? இத்யத்ராஹ ‘யே மத்த’ இதி. ஸகலபலப்ரதத்வலக்ஷணஂ பரமௌதார்யமேவ ஹி மம ஸர்வஸ்வம்; தச்ச ப்ரதிக்ரஹீதரிஸாபேக்ஷஂ ததபாவே கதஂ ஸ்யாதித்யுக்தஂ பவதி.’மதம்’ இதி நபுஂஸகத்வாந்ந ஜ்ஞாநீத்யநேநாந்வயஃ;’மதஃ’ இதி பரோக்தபாடஸ்த்வப்ரஸித்தஃ; தஸ்மாதிதிஷப்தோத்யாஹரிதஃ. அயமர்தஃ த்ரய்யந்தஸித்தாந்தோ பவது வா மா வா; கரிஷ்ணஸித்தாந்தஸ்த்வயமிதி பாவஃ. ஆத்மஷப்தஸ்யாத்ர பஹுப்ரமாணவிருத்தத்வாந்ந தாதாத்ம்யாதிவிஷயத்வம்; ததா ஸதி வ்யதிரேகநிர்தேஷபாதஷ்ச. அதஸ்ததபிப்ரேதமாஹ ‘ததாயத்தேதி’. ஷரீரஂ ப்ரதி தாரகோ ஹ்யாத்மா. ப்ரியத்வாதிஷயப்ரதிபாதநாய ஸாவதாரணோயமாத்மத்வாரோபஃ. அஸ்மிந்நபிமாநமாத்ரஸாரே பவத்ஸித்தாந்தே கிஂ ப்ரமாணமபிமதஂ? இத்யாகாங்க்ஷாயாம்’ஆஸ்திதஃ’ இத்யாதிகமுச்யத இத்யாஹ ‘கஸ்மாதேவமிதி’. ஹிர்ஹேதௌ.’யுக்தாத்மா’ இத்யாஷஂஸாயாஂ க்தஃ; பரமாத்மயோகாஷஂஸாவிஷிஷ்ட ஏவ ஆத்மா யஸ்ய ஸோத்ர யுக்தாத்மா; ததேததபிப்ரேத்யோக்தஂ ‘மயா விநாத்மதாரணாஸம்பாவநயேதி’. மதநுஸந்தாநாபாவே ஸதி அர்தாந்தராநுஸந்தாநப்ரவரித்தேரஸமர்தஸ்வபாவதயேத்யர்தஃ.’மாமேவேதி’ அயுக்ததஷாயாமஸத்த்வமேவ ஹி ஸ்யாதிதி பாவஃ.’மாமேவ’ உபாயபூதமேவ, ந து பலாந்தரலவமித்யர்தஃ.’ப்ராப்யமிதி’ கதிஷப்தோத்ர கந்தவ்யபரஃ. அஸ்த்வேவஂ ததாயத்ததாரணோ யதாப்ரமாணஂ ஜ்ஞாநீ, ததஃ கிமாயாதஂ பகவதஸ்ததாயத்ததாரணத்வஸ்ய? இத்யத்ராஹ’அதஸ்தேந விநேதி’. ஸஹரிதயாநாஂ மதபிப்ராயவிதாஂ சைதத்வ்யக்தமித்யபிப்ராயஃ. ததா ஹி’ந தஸ்யாந்யஃ ப்ரியதரஃ ப்ரதிபுத்தைர்மஹாத்மபிஃ. வித்யதே த்ரிஷு லோகேஷு ததோஸ்ம்யேகாந்திதாஂ கதஃ. நாரதைதத்தி தே ஸத்யஂ வசநஂ ஸமுதாஹரிதம். நாஸ்ய பக்தைஃ ப்ரியதரோ லோகே கஷ்சந வித்யதே’ இதி.’ததோ மமாத்மா ஹி ஸ’ இதி ஆதாரத்வாதிவிஷேஷோ ஹ்யாத்மலக்ஷணமிதி பாவஃ. ஐஷ்வர்யாதிகாமாஃ ஸர்வ ஏவ மத்ஸ்வரூபஸ்யாதிஷயஹேதவஃ. ஜ்ஞாநீ து மம ஸ்வரூபஸத்தாஹேதுரிதி ஸ்வபக்தஸ்துதிபரஃ ஷ்லோகஃ.

—————-————————————————————————————-

பஹூ நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞான வான் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப

பஹூ நாம் ஜந்ம நாமந்தே-
யாவன் ஒருவன் அநேக ஜன்மங்கள் கூடி என்னையே ஆராதித்து ஜன்மாந்தரத்திலே-

ஜ்ஞான வான் –
மதேக விஷய ஜ்ஞானவானாய்

மாம் –
என்னை –

வாஸூ தேவஸ் சர்வமிதி –
சேலேய் கண்ணி யாரும் பெரும் செல்வமும் -திருவாய் மொழி -5-1-9- என்றும்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண – என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-7-1- என்றும் சொல்லுகிறபடியே
த்யஜித்தவை எல்லாம் அவனே -என்றும் சர்வ வித பந்துவுமாக

ப்ரபத்யதே –
யாவன் ஒருவன் பற்றுகிறான் -அத்யவசிக்கிறான் -என்றபடி

ஸ மஹாத்மா –
அவன் அறப் பெரியன்
அவனை ஒப்பார் இல்லை -அவனுக்கு நாமும் ஒப்பு அல்லோம் –
இது ப்ரசம்சையோ என்னில் அன்று உண்மை –
ஹேய பிரதிபடன் ஆகையாலே நமக்கு சம்பந்த ஜ்ஞானம் உண்டாகலாம் –
சம்சார துரிதமாகிற கலக்கம் தட்டாமல் இருக்கையாலே சம்பந்தம் உணர்ந்து இருக்கலாம் –
பக்தனான இவன் அத்தை உணர்ந்து இருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பாக மாட்டோம் –

ஸூ துர்லப –
அங்கன் இருப்பான் ஒருவனை சம்சாரத்திலும் கிடையாது -பரம பதத்திலும் கிடையாது -என்கிறான்
தேசிகரையும் உட்படக் கலக்க வற்றான இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தே
தெளிந்து இருக்கும் அதிகாரியை உபய விபூதியிலும் கிடையாது -என்றபடி –
நாமும் ஆசைப் பட்டே போம் இத்தனை போக்கி இவன் தனை அதிகாரியை
நமக்கும் கூடக் கிடையாது கான் -என்கிறான்

————

ந அல்ப ஸஂக்யா ஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து(அந்தே -ஜென்மத்தின் அந்தம் மரணத்திலா -இல்லை -பிரதிபத்தி வைஷித்யம் -துடிப்பு ஏற்பட பிரதிபந்தகங்கள் ஒழிய வேண்டுமே -அறிவு முதிர முதிர இந்த நிலை வரும்-ஞானீ ஞானவான் ஆகும் முடிவில் என்றவாறு -அவன் இடம் ஓன்று பெற்றுப் போகாமல் அவனே வேண்டும் என்று இருப்பவன் -ப்ராரப்தம் முடிந்து தான் இவனுக்கு பேறு -விளம்ப பலம் -ப்ரபன்னனுக்கு அது இல்லையே )

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-

ப₄ஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல புண்ணியப் பிறப்புகள் கழிந்த பின்
ஞாநவாந் –அறிவு முதிரப் பெற்ற ஞானியானவன்
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-வாஸுதே₃வனே -எனக்குப் பரம பிராப்யமாகவும் பிராபகனாகவும்
தாரகம் போஷகம் போக்யம் முதலாக எல்லாமுமாகவும் இருக்கிறான் என்று எண்ணி
மாம் ப்ரபத்யந்தே |–என்னை சரண் அடைகிறான்
ஸ -அவன்
மஹாத்மா –விசாலமான நெஞ்சை யுடையவன் ஆவான்
ஸுது₃ர்லப₄ ||-இவ்வுலகில் எனக்கு மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

கீழ் சொல்லிய ஞானீ தான் ஞானவான் -அவனது பக்தி முற்றிய நிலை இது-மஹா மனம் படைத்தவன் –

ஸூலபன் -ஐஸ்வர்யார்த்திகள் நிறையே கிடைக்குமே
கைவல்யார்த்திகள் ஸூ ஸூலபன் –
வாழாட் பட்டு வல்லீரேல் -துர்லபன்
ஸூதுர்லப தமம் -அதுக்கும் மேல் அவனே எல்லாம் -அவன் ஆனந்தமே பிரதானம்-மாம் வேத்தி தத்வத கீழ் சொல்லிய நிலை –

திருக்கோளூருக்கு என் ஜீவனத்தையும் கொண்டு போக வேண்டுமோ -முகத்தை கழற்றி வைத்து விட்டுப் போகக் கூடாதோ

எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் –
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர்.
பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் –
வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.-
எல்லா வித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் –
பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும்
“வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே –
கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–

பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே –

அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே
பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ-கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை

பரமமான ப்ராப்யம் பிராபகம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே

மஹாத்மா மஹா மநா -ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே -முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே-என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன் -விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா

கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான்-

৷৷7.19৷৷பஹூநாஂ ஜந்மநாஂ புண்ய ஜந்மநாம் அந்தே (வெறும் ஜென்மங்கள் அல்ல புண்ய ஜென்மங்கள் )

அவஸாநே வாஸுதேவ ஷேஷதைக ரஸஃ அஹஂ(தாரக போக்ய போஷக பல பிரத உபாயம் அவன் –பல கரணம் தானே பக்தி-பண்ணுவதும் அனுபவிப்பதும் தனது தலையில் கொண்டவன்  )

ததா யத்த ஸ்வரூப ஸ்திதி ப்ரவரித்திஃ ச, ஸ ச அஸஂக்யேயைஃ கல்யாண குணைஃ பரதரஃ இதி ஜ்ஞாநவாந் பூத்வா வாஸுதேவ ஏவ மம பரம ப்ராப்யஂ ப்ராபகஂ ச (பரமமான ப்ராப்யம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே )

அந்யதபி யந் மநோரத வர்தி ஸ ஏவ மம் தத் ஸர்வம் இதி மாஂ யோ ப்ரபத்யதே மாம் உபாஸ்தே (ப்ரபத்யே சொல்லி உபாஸ்தே-இவன் பக்தி நிஷ்டன்-ப்ராபகமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவனாகையால் ஸ்வ தந்த்ர ப்ரபன்னன் என்றுமாம் இவன் பக்தி ஸாத்ய பக்தியே )

ஸ மஹாத்மா மஹா மநாஃ (ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே-முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே -என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே -தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன்-விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா -)

ஸுதுர்லபஃ துர் லப தரஃ லோகே.

‘வாஸுதேவஃ ஸர்வம்’ இத்யஸ்ய அயம் ஏவ அர்தஃ.’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ (கீதா 7.17)’ஆஸ்திதஃ ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாஂ கதிம்’ (கீதா 7.18) இதி ப்ரகமாத்.ஜ்ஞாநவாந் ச அயம் உக்த லக்ஷண ஏவ, அஸ்ய ஏவ பூர்வோக்த ஜ்ஞாநித்வாத்.’பூமிராபஃ’ இதி ஆரப்ய அஹங்கார இதீயஂ மே பிந்நா ப்ரகரிதிரஷ்டதா. அபரேயமிதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்৷৷(கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான் )

(பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே -அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே-பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ -கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை -சர்வம் இதி -போக்யாதி -சர்வ உறவும் -ஸர்வ ப்ராப்யம் -)

৷৷7.19৷৷புநரப்யுக்தஜ்ஞாநவத்த்வஸ்யாநேகஜந்மஸாத்யபுண்யபலத்வேந துர்லபதரதயா ஜ்ஞாநிநஃ ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘பஹூநாம்’ இதி ஷ்லோகேந.’யே ஜந்மகோடிபிஃ ஸித்தாஸ்தேஷாமந்தேத்ர ஸஂஸ்திதிஃ’ இதி பகவச்சாஸ்த்ரஂ’ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு’ [பாஂ.கீ.4] இத்யாதிகாஂ ஸ்மரிதிஂ சாநுஸந்ததாந ஆஹ ‘நால்பேதி’.’பஹூநாஂ ஜந்மநாம்’ இத்யத்ர ந தாவத்பஹுஜந்மஸத்பாவமாத்ரஂ விவக்ஷிதம், தஸ்யாத்ராநுபயுக்தத்வாத். ந ச பஹுஜந்மமாத்ரஸ்ய ஜ்ஞாநஹேதுத்வமுச்யதே; ஸர்வேஷாமயத்நதோ ஜ்ஞாநித்வப்ரஸங்காத்; அதஃ’புண்யஜந்மநாஂ’ இதி விஷேஷிதம். ஈதரிஷஜ்ஞாநவத்த்வமேவம்பூதவிஷிஷ்டப்ரபத்தௌ ஹேதுரிதி தர்ஷயிதுஂ, ஜ்ஞாநவதோநேகஜந்மப்ரமவ்யுதாஸாய ச’ஜ்ஞாநவாந் பூத்வேத்யுக்தம்’.’வாஸுதேவஃ ஸர்வம்’ தி ஸாமாநாதிகரண்யஸ்ய பாதாத்யாஸதாதாத்ம்யாதிவிஷயத்வாயோகாச்சரீரஷரீரிபாவாதிநிர்வாஹாதபி ப்ரகரணவிஷேஷஸித்தஸ்யார்தஸ்ய க்ராஹ்யதரத்வாத்’பரமப்ராப்யமித்யாதிகமுக்தம்’. லௌகிகஂ தாரகாதிகமபிப்ரேத்யாஹ’அந்யதபீத்யாதி’.’த்வமேவ மாதா ச பிதா த்வமேவ’ [நா.ஹரி.10]’மாதா பிதா ப்ராதா நிவாஸஃ ஷரணஂ ஸுஹரித்கதிர்நாராயணஃ’ இத்யாதிகமபீஹாபிப்ரேதம். ப்ரபத்தேரத்ரோபாஸநாங்கத்வாதாஹ’மாமுபாஸ்த’ இதி. ஜ்ஞாநிநோபி ஸ்வரூபமஹத்த்வஂ ப்ரமாணவிருத்தம், பங்க்திபாவநத்வாதிமாஹாத்ம்யஂ ஸதபி ப்ரகரிதேநபேக்ஷிதம்; தஸ்மாஜ்ஜ்ஞாநவிஷேஷாதீநமாஹாத்ம்யமிஹ விவக்ஷிதமித்யாஹ’மஹாமநா’ இதி. பலாந்தரபரஸ்யாபி பகவதுபாஸகஸ்ய துர்லபத்வாத்தத்வ்யவச்சேதாய ஸுஷப்த இதி தர்ஷயிதுஂ’துர்லபதர’ இத்யுக்தம்.

‘வாஸுதேவஃ ஸர்வம்’ இதி ஸாமாநாதிகரண்யஸ்ய பராபிமதமர்தஂ ப்ரதிக்ஷிபந் ஸ்வோக்தஂ த்ரடயதி’வாஸுதேவ’ இதி. அத்ர ஹ்யுபக்ரமஃ ப்ராப்யபேதநிபந்தநாதிகாரிபேதபரஃ. ப்ரகரணவிருத்தப்ரகரணாநுபயுக்தோ வார்தஃ ப்ரகரணவிஷேஷஸித்தோபயுக்ததமார்தே ஜாகரூகேநாதரணீய இதி பாவஃ.’ஜ்ஞாநவாந்’ இத்யத்ராபி நிர்விஷேஷாதிஜ்ஞாநஜீவமாத்ரஜ்ஞாநாதிவ்யுதாஸாயாஹ’நிவாஂஷ்சாயமிதி’. உக்தலக்ஷணஃ வாஸுதேவஷேஷதைகரஸஸ்வாத்மவேதீத்யர்தஃ. உக்தலக்ஷணத்வே ஹேதுமாஹ ‘அஸ்யைவ பூர்வோக்தஜ்ஞாநித்வாதிதி”ஜ்ஞாநீ ச பரதர்ஷப!’ [7.16] இதி பூர்வோக்தே ஜ்ஞாநிநி கதமுக்தலக்ஷணத்வஂ? இத்யத்ராஹ’பூமிராப இத்யாரப்யேதி’. யத்வா பூர்வோக்தஜ்ஞாநித்வாதித்யேகபக்தித்வாதிகஂ விவக்ஷிதம்;’பூமிராபஃ’ இத்யாதிநா ஹேத்வந்தரோக்திஃ.’கார்யகாரணோபயாவஸ்தஸ்யேதி’ கார்யத்வகாரணத்வரூபோபயாவஸ்தாவிஷிஷ்டஸ்யேத்யர்தஃ. ஸ்வரூபஸ்தித்யாதிதாததீந்யஂ’மயி ஸர்வஂ’ [7.7]’ரஸோஹம்’ [7.8] இத்யாதிஷு வ்யக்தம். உக்தலக்ஷணத்வஂ நிகமயதி ‘அத’ இதி.’ஸ ஏவேதி’ ‘வாஸுதேவஷேஷதைகரஸோஹம் இத்யாதிநோக்தலக்ஷண ஏவேத்யர்தஃ.

——————————————————

இதி ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
இதி -இப்படி

ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
கீழ்ச் சொன்ன ஸ்லோக த்ரயத்திலும் பிரதிபாதிக்கப் பட்ட ஜ்ஞாநத்தை வுடையனாம் படி
என்னைப் பண்ணி அருள வேணும்
முதல் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு பிரியன் -என்றான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு தாரகன் -என்றான் –
மூன்றாம் ஸ்லோகத்தில் -இவை இரண்டுக்கும் விஷயம் உள்ளது அத்தனை அதிகாரியைக் கிடைக்கில் அன்றோ
முந்துற முன்னம் அவனைக் கிடையாது காண் -என்றான் –

——————————————————————————————–
சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் –

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

ஜ்ஞாநிநஃ ப்ராப்யஂ து தஸ்மாத் அத்யந்த விபக்தம் இத்யாஹ –(கைவல்யம் ஐஸ்வர்யத்தை விட மேம்பட்டது -பகவத் லாபமோ கைவல்யத்தை விடவே மிக வேறுபட்டது-அணு அனுபவம் விட விபு அனுபவம் –எளிதாக -பரமாத்மா அனுபவம் மூன்றாலும் )

৷৷8.22৷৷’மத்தஃ பரதரஂ நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய. மயி ஸர்வமிதஂ ப்ரோதஂ ஸூத்ரே மணி கணா இவ৷৷’ (கீதா 7.7)’மாமேப்யஃ பரமவ்யயம்’ (கீதா 7.13) இத்யாதிநா நிர்திஷ்டஸ்ய யஸ்ய அந்தஃஸ்தாநி ஸர்வாணி பூதாநி யேந ச பரேண புருஷேண ஸர்வம் இதஂ ததஂ ஸ பரபுருஷோ ‘அநந்ய சேதாஃ ஸததம்’ (கீதா 8.14) இதி அநந்யயா பக்த்யா லப்யஃ.

அத ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச ஸாதாரணீம் அர்சிராதிகாஂ கதிம் ஆஹ த்வயோஃ -(இருவகையோருக்கும் பொது–ப்ரபன்னனுக்கு விசாரம் இல்லை -ஆத்ம யாதாத்ம விது -கைவல்யார்த்தியா பஞ்சாக்னி வித்யை மூலம் உபாசகனுக்கா – )

அபி அர்சிராதிகா கதிஃ ஷ்ருதௌ ஷ்ருதா ஸா ச அபுநராவரித்தி லக்ஷணா.-(மீளுதுதாம் ஏதம் இல்லா -வேத ஸித்தம் சொல்லப் போகிறான் )

யதா பஞ்சாக்நி வித்யாயாஂ’தத்ய இத்தஂ விதுஃ (இப்படி அறிந்து உபாசகன் )

யே ச இமே அரண்யே ஷ்ரத்தாஂ தப இத் யுபாஸதே தே அர்சிஷமபி ஸஂபவந்த் யர்சிஷோஹஃ’ (சா0 உ0 5.10.1) இத்யாதௌ அர்சிராதிகயா கத்யா கதஸ்ய பர ப்ரஹ்ம ப்ராப்திஃ அபுநராவரித்திஃ ச உக்தா’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி”ஏதேந ப்ரதிபத்ய மாநா இமஂ மாநவ மாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி.

பஞ்சாக்கினி -ப்ரஹ்மம் ஸர்வ அந்தர்யாமி என்று அறிந்து தான் அவனுக்கு சரீரம் என்று அறிந்து உபாசிக்கிறான் -ஆத்ம உபாசகன் தான் இவன்
ஐந்து ஆஹுதி பார்த்தோம் -தேஹம் விட விலக்ஷணன் -ப்ரஹ்ம சரீரம் என்றும் அறிந்து உபாஸிக்கிறான்
ப்ரஹ்மத்தை அறிந்து -அர்ச்சிராதி கதி வழியாக -ப்ராப்யம் ப்ரஹ்மம்
கைவல்யார்த்திக்கு ப்ராப்யம் கைவல்ய பிராப்தி -கேவல ஸ்வ ஆத்ம உபாசகன் இவன் -ப்ரஹ்மம் ப்ராபகம் மட்டுமே இவனுக்கு –
உபாசனம் போதும் ப்ரஹ்மம் உபாஸிக்க வில்லை யாதோ உபாசனம் ததோ பலம்
பக்தி யோக நிஷ்டனுக்கு ப்ராப்யம் ப்ரஹ்மம்-பரமாத்ம உபாஸகன் -ஆத்ம தர்சனம் முன்னிட்டு -இத்தைப் -படியாகக் கொண்டு -ப்ரஹ்மம் உபாசிக்கிறான் –
அர்ச்சிராதிகதி உண்டு இவனுக்கும்
மூவருக்கும் மீளா கதி -அடையும் இடம் வேறே கைவல்யார்த்திக்கு
ஆளவந்தார் போல் -அக்ஷர யாதாத்ம்யம் விது சொல்லாமல் ஆத்ம யாதாத்ம்யம் விது -ஸ்வாமி அருளிச் செய்கிறார் –

ப்ரஹ்ம உபாசகன் ஆத்ம யாதாத்ம விதுவே என்பதில் சங்கையே இல்லையே
மீது இருவரிலும் -ஆத்ம யாதாத்ம்ய விது -தேஹ விலக்ஷணன் -அறிந்த மட்டும் இல்லாமல் அடியேன் உள்ளான் அறியாமல் கைவல்யார்த்தி இழந்தே போகிறான்-ஞாத்ருத்வத்தை விட சேஷத்வமே பிரதானம் என்று அறிவதே ஆத்ம யாதாத்ம விதுவாகிறான்

ஜிஞ்ஞாசூ -ஞானி போடாமல் தேசிகன் –
நியாய சிந்தாஞ்சனம் -விளக்கி
ப்ரகரணத்தில் பஞ்சாக்கினி வித்யா நிஷ்டனைப் பற்றி பிரஸ்தாபமே இல்லையே
ப்ரக்ருதி வியுக்த ஆத்மஸ்வரூபம் அனுபவிக்க இச்சிப்பவன்
பகவத் சேஷ தைக ரஸம் ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் என்பதால் இவன் இல்லையே
7-14-அவர்கள் ஆசைப்பட்டதையே கொடுக்கிறேன் -எழுவார் விடை கொள்வார் -விட பகவத் லாபார்த்தி விலக்ஷணன் தான்
ப்ரஹ்மம் கொடுப்பவன் என்றே இவன் பற்றுகிறான்
சேஷத்வ ஞானம் பிரயோஜனம் ஸூவ ப்ரயோஜன நிவ்ருத்தி
பஞ்சாக்கினி வித்யா நிஷ்டன் -ஸாதனம் வைத்தே இவனுக்கு பெயர்
கைவல்யார்த்தி ஸாத்யம் வைத்தே இவனுக்கு பெயர்

ஸ்ரீ பாஷ்யம் தெளிவாக உள்ளதே
விரோதம் இல்லை என்று நிரூபிக்கிறார் -நியாய சித்தாஞ்சனத்தில்
பிரஸ்த்துத மாத்திரம் காரணமாக் கொண்டு முடிவுக்கு வரக்கூடாது
பரமாத்மாக ஸூவ ஆத்ம நிஷ்டன் போல் அல்லாமல் -தனது ஆத்மா முக்கியம் -கொடுப்பவராக மட்டுமே கொள்ளுகிறான்
ஆத்ம யாதாத்ம வித் என்பதுக்கு அதுக்கு அனுகுணமாகவே கொள்ள வேண்டும்

யாமுனாச்சார்யர் க்ரந்ததுக்கும் விரோதம் இல்லையே -அக்ஷர யாதாத்ம்யம் -என்கிற வசனத்துக்கு சேர -அருளிச் செய்ய வேண்டும்

பிராட்டி விபுத்வம் அணுத்துவம் தொடங்கி -கைவல்ய விசாரம் -18 வித்யாசங்கள் -யோஜனா பேதங்கள் –பங்குரம் ப்ரோக்தம் அநித்திய மோக்ஷம் -பிள்ளை லோகாச்சார்யார் நித்யம்

அபாவாதிகரணம் –முக்தன் சரீரத்துடன் ப்ரஹ்ம அனுபவமா இல்லையா -இரண்டுமே உண்டு -பாதாரயணர்-கைங்கர்யம் செய்ய
வைகுந்தத்து அமரரும் முனிவரும்-முனிவரும் யோகிகளும் இரண்டு வகையும் உண்டே அங்கே –
குண நிஷ்டர் அசரீர் -கைங்கர்ய நிஷ்டர் சரீரத்வம் உண்டே –

கைவல்யார்த்தி -ஜரா மரண மோஷாயா -தத் க்ரது நியாயம் -சரீரம் இல்லா அனுபவம் -ஸ்தூல சரீரமும் ஸூஷ்ம சரீரமும் தொலைக்க வேண்டுமே -விரஜா நதி தாண்ட வேண்டும்
கைவல்யார்த்திக்கு அர்ச்சிராதி கதி செல்ல இச்சை இல்லையே இவனுக்கு -எந்த மார்க்கத்தில் செல்கிறான் ஸாஸ்த்ரம் சொல்ல வில்லை -எதோ இடத்தில் இருக்கப் போகிறான் -ஏந கே நாபி -எதோ ஒரு வழியில் போகிறான் -எல்லாம் விட்ட -கதி சிந்தனை -ஐஸ்வர்யம் ப்ரஹ்மம் -அர்ச்சிராதி கதி -அனைத்தையும் விட்டான் -அன்றோ -மது வித்யா நிஷ்டன் வசு லோகம் அடைந்து அனுபவித்து மோக்ஷம் அடைவது போல் -கைவல்யார்த்தி சாதனம் செய்து பின்பு ப்ரஹ்மம் அடையலாம் என்பர் தேசிகன் -ஆனால் சாதனம் செய்யும் இடத்தில் இல்லையே –
பாத்ம புராணம் -ஸ்வ ஆத்ம ஆனந்த சுகம்-கேவலம் பரமம் பதம் உத்தம பரமம் பதம் அல்ல -தத் ஸ்தானம் -விரஜைக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் இடையில்
முக்தானாம் கதி அர்வாஜீனம் தாழ்ந்த ஓன்று அன்றோ
சம்சாரத்துக்கும் பரமபதத்துக்கும் நடுவில் -பட்டர் -கீழ் எல்லை சம்சாரம் -விரஜை தாண்டி ஏதோ ஒரு மூலையில் இருக்கிறான் –

இனி மேல் வேறே விஷய விசாரம் –
பிரஜாபதி வாக்கியம் கட உபநிஷத் -இரண்டும் -ப்ரஹ்ம சரீரம் என்று அறிந்து உபாசகன் – என்று கொள்ளாமல் –
ஆத்ம யாதாத்மா வித் பஞ்சாக்கினி வித்யை உபாசகன் பரமாத்மா உபாசகனாகவே இருக்க வேண்டும்
அங்கமாக கொண்ட பரமாத்மா உபாசகனாகக் கொள்ளக் கூடாதே
ப்ராப்யம் இவனுக்கு இதுவே -என்பதைக்காட்ட

உயர்ந்த ஆத்மா உபாசனம் தான் பண்ணுகிறான் -ப்ரஹ்ம உபாசகன் அல்லன்

ஆதி வாஹிகரால் அழைத்துச் சொல்லப்படுவதால் -கேவல ஆத்மா உபாசகன் அல்லன் -இவன் பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்ம உபாசகன் தான் இவன் -கார்யாதிகரணம்-ஸ்ரீ பாஷ்யம் இதுவே விசாரம்

ந ச ப்ரஜாபதி வாக்யாதௌ ஷ்ருதி பரவித்யாங்க பூதாத்ம ப்ராப்தி விஷயா இயம்’தத்ய இத்தஂ விதுஃ’ இதி கதி ஷ்ருதிஃ’யே சேமேரண்யே ஷ்ரத்தாஂ தப இத்யுபாஸதே’ (சா0 உ0 5.10.1) இதி பர வித்யாயாஃ பரித க்ஷ்ருதி வையர்த்யாத்.

பஞ்சாக்நி வித்யாயாஂ ச’இதி து பஞ்சம்யா மாஹுதாவாபஃ புருஷ வசஸோ பவந்தி’ (சா0 உ0 5.9.1) இதி’ரமணீய சரணாஃ கபூய சரணாஃ’ (சா0 உ0 5.10.7) இதி புண்ய பாப ஹேதுகோ மநுஷ்யாதி பாவோ அபாம் ஏவ பூதாந்தர ஸஂஸரிஷ்டாநாம் ஆத்மநஸ்து யத் பரிஷ்வங்க மாத்ரம் இதி சிதசிதோர் விவேகம் அபிதாய’தத்ய இத்தஂ விதுஃ தேர்சிஷமபி ஸஂபவந்தி’ (சா0 உ0 5.10.1)’இமஂ மாநவமாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி விவிக்தே சிதசித் வஸ்துநி த்யாஜ்யதயா ப்ராப்ய தயா ச’தத்ய இத்தஂ விதுஸ்தேர்சிராதிநா கச்சந்தி ந ச புநராவர்தந்தே’ இதி உக்தம் இதி கம்யதே.

ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி’ (சா0 உ0 4.15.5) இதி ப்ரஹ்ம ப்ராப்தி வசநாத் அசித் வியுக்தம் ஆத்ம வஸ்து ப்ரஹ்மாத்மக தயா ப்ரஹ்ம ஷேஷதைகரஸம் இத்யநுஸஂதேயம்.

தத் க்ரது ந்யாயாச்ச பரஷேஷதைகரஸத்வஂ ச’ய ஆத்மநி திஷ்டந் யஸ்யாத்மா ஷரீரம்’ (ஷ0 ப்ரா0 14.6.5.5.30) இத்யாதி  ஷ்ருதி ஸித்தம்.

৷৷8.22৷৷’புருஷஃ ஸஃ’ இதி ஷ்லோகே துஷப்தேநார்தாந்தரத்யோதநாத்’அநந்யயா பக்த்யா’ இத்யஸ்ய ஸாமர்த்யாத்புருஷஷப்தஸ்ய பரமாத்மநி புரிஷயத்வபூர்ணத்வபூர்வஸத்பாவபுருதாநாதிபிர்நிமித்தைஃ “ஸஹஸ்ரஷீர்ஷா புருஷஃ” [றக்ஸஂ.8.4.17.8யஜுஸ்ஸஂ.31.1] இத்யாதிப்ரயோகப்ராசுர்யாத்பரஷப்தேந விஷேஷணாச்ச பூர்வோக்தாத்பலாததிகபலோபதேஷார்தோயஂ ஷ்லோக இத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநிந’ இதி.’விபக்தஂ’ விவேசகைரிதி ஷேஷஃ. விலக்ஷணமிதி வார்தஃ. ககநாத்யந்தஸ்திதாவபி ககநாதேஃ பரத்வாபாவாத்தத்ஸித்த்யர்தஂ’யஸ்ய’ இத்யாதிப்ரஸித்தவந்நிர்தேஷோத்ர பூர்வோக்தபரத்வபர இதி தர்ஷயதி — ‘மத்த’ இதி. அநுவாதபுரோவாதயோரைகார்த்யமிதி பாவஃ. “யஸ்மாத்பரஂ நாபரம்” இத்யாரப்ய “தேநேதஂ பூர்ணஂ புருஷேண ஸர்வம்” [ஷ்வே.உ.3.9] இதி ஷ்ருதிஸ்மாரணாய’யேந ச பரேண புருஷேணேத்யுக்தம்’. பக்தேரநந்யத்வஂ கீதரிஷஂ? இத்யத்ராஹ — ‘அநந்யசேதா’ இதி.

—————

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே-பக்தி ஒன்றாலே முடியும் –

৷৷11.54৷৷வேதைஃ அத்யாபநப்ரவசநாத்யயநஷ்ரவணஜபவிஷயைஃ யாகதாநஹோமதபோபிஃ ச மத்பக்திரஹிதைஃ கேவலைஃ யதாவத் அவஸ்திதஃ அஹஂ த்ரஷ்டுஂ ந ஷக்யஃ. அநந்யயா து பக்த்யா தத்த்வதஃ ஷாஸ்த்ரைஃ ஜ்ஞாதுஂ தத்த்வதஃ ஸாக்ஷாத்கர்துஂ தத்த்வதஃ ப்ரவேஷ்டுஂ ச ஷக்யஃ.

ததா ச ஷ்ருதிஃ’நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந. யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்.’ (கட0 2.23) இதி.

৷৷ 11.54৷৷உத்தரஷ்லோகஸ்யைததுபபாதகதயா ந பௌநருக்த்யமித்யாஷயேந தமவதாரதி — ‘குத இத்யத்ராஹேதி’. வேதாநாஂ ஸ்வரூபேண ஸாதநத்வாப்ரஸக்த்யா தந்நிஷேதோநுபபந்ந இத்யதஸ்ததபிப்ரேதமாஹ’வேதைரத்யாபநப்ரவசநேதி’. தாநேஜ்யாகதநஂ ஹோமஸ்யாப்யுபலக்ஷணமித்யபிப்ரயந்நாஹ’யாகதாநஹோமதபோபிஷ்சேதி’. பக்தித்வாரா ஸாதநத்வஸ்ய “தமேதஂ வேதாநுவசநேந” [பரி.உ.4.4.22] இத்யாதிஷ்ருத்யவகதத்வாத்’மத்பக்திவிரஹிதைரித்யுக்தம்’. ஏவஂவிதஷப்தோ மாநுஷத்வாதிப்ரமாநர்ஹத்வாப்ராகரிதத்வாதிபர இத்யாஹ’யதாவதவஸ்திதோஹமிதி’. ந கேவலஂ ஸாக்ஷாத்காரமாத்ரே ஸாதநத்வேந பக்திரபேக்ஷிதா; கிந்து’ஷுத்தபாவஂ கதோ பக்த்யா ஷாஸ்த்ராத்வேத்மி ஜநார்தநம்’ [ம.பா.5.69.5] இத்யாதிவச்சாஸ்த்ரதோர்தநிர்ணயே ஸாக்ஷாத்காராநந்தரபாவிந்யாஂ ப்ராப்தாவபீத்யபிப்ராயேண’ஜ்ஞாதுஂ”ப்ரவேஷ்டும்’ இத்யுபயஂ பூர்வஷ்லோகாப்ரஸக்தமிஹ ப்ரஸஞ்ஜிதம்.’தத்த்வதஃ’ இத்யேதத்ித்ரஷ்வப்யவிஷேஷாதபேக்ஷிதத்வாச்சாந்விதம். தத்த்வதஃ ப்ரவேஷஃ பரிபூர்ணப்ராப்திஃ? யதாவஸ்திதஸர்வாகாரேணாநுபவ இத்யர்தஃ. தேந வ்யூஹவிபவாதிமாத்ரப்ராப்திவ்யவச்சேதஃ. ஸ்மர்யந்தே ச ஸாக்ஷாந்முக்தைரர்வாஞ்சஃ ப்ராப்திபர்வபேதாஃ — ‘லோகேஷு விஷ்ணோர்நிவஸந்தி கேசித்ஸமீபமரிச்சந்தி ச கேசிதந்யே. அந்யே து ரூபஂ ஸதரிஷஂ பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்தஃ’ இதி.’ஏதத்தி துர்லபதரஂ லோகே ஜந்ம யதீதரிஷம்’ [6.42] இத்யஸ்ய வ்யாக்யாநே யாதவப்ரகாஷைஷ்சோக்தம் — “இதமல்பீயஸீஂ யோகஸித்திஂ கதஸ்ய மரிதஸ்ய பலஂ? யதி ப்ரதமாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? த்யஜதி வா யோகஂ? ஷ்வேதத்வீபே ஜாயதே; பகவத்ஸாலோக்யஂ வா யாதி; யதி ததோப்யதிகாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே; விஷ்ணுபார்ஷதோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பார்ஷதேஷ்வரோ பவதி; யதி ததோப்யதிகாஂ? த்வாரபாலோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பகவதோங்கஸஂவாஹகோ பவதி; யதி ததோப்யதிகாஂ? மந்த்ரிஸ்தாநீயஃ பரிதகைஷ்வர்யயுக்தோ பவதி; யதி பூர்ணாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? பகவத்ஸாயுஜ்யஂ கதோ முக்தஃ பரமைஷ்வர்யயுக்தோ பவதி” இதி வைஷ்ணவேஷு யோகஷாஸ்த்ரேஷு மர்யாதா. ததேதத்ஸர்வமிஹ ஸூசிதஂ பகவதா “அதவா யோகிநாம்” [6.42] இத்யாதீநீதி. ஜ்ஞாநதர்ஷநப்ராப்திஹேதுத்வே பக்தேஃ பர்வபேதாந்நாந்யோந்யாஷ்ரயணாதிதோஷஃ. பூர்வஜந்மஸுகரிதமூலஸாத்த்விகஜநஸஂவாதாதிஜநிதஂ யதாவச்ச்ரவணாநுகுணஂ கிஞ்சிதாநுகூல்யரூபஂ பக்திமாத்ரஂ ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநோத்பத்தௌ ஸஹகாரி பவதி. உத்கடதிதரிக்ஷாகர்பா து பரபக்திஃ ஸாக்ஷாத்காரஹேதுஃ; ஸாக்ஷாத்கரிதே து பரிபூர்ணாநுபவாபிநிவேஷலக்ஷணா பரமபக்திஃ ப்ரவேஷஹேதுரிதி. அத்ர’அநந்யயா’ இதி பதஂ ப்ராகுக்தப்ரக்ரியயா அநந்யப்ரயோஜநயேதி பாவ்யம். அநந்யதேவதாகயேத்யேகே. ஐக்யாநுஸந்தாநவிவக்ஷா து ப்ராகேவ தூஷிதா; ப்ரத்யக்ஷாதிவிருத்தா ச. ததேததகிலமபிப்ரேத்ய ஸங்கரிஹீதம்’ஏகாதஷே ஸ்வமாஹாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம். தத்தமுக்தஂ விதிப்ராப்த்யோர்பக்த்யேகோபாயதா ததா’ [கீ.ஸஂ.15] இதி. பக்திப்ரஷஂஸாபரத்வஷங்காமபாகரோதி — ‘ததா சேதி’. “நாயமாத்மா” இத்யாதௌ “ந பரிதிவ்யாமக்நிஷ்சேதவ்யஃ” [யஜுஃ5.2.7.2] இத்யாதாவிவ கேவலாநாஂ நிஷேதஃ. யச்சப்தாநூதிதோ வரணீயதாஹேதுகுணவிஷேஷோ பக்திரேவேத்யர்தஸ்வபாவாதுபபரிஂஹணபலாச்ச ஸித்தம். அத்ர தநுஷப்தஸ்ய விக்ரஹபரத்வே ஸ்வரூபாதிகஂ தத்பரத்வே ச விக்ரஹாதிகமர்தலப்தம்.

——————–

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

18.54৷৷ப்ரஹ்ம பூதஃ (ஆத்ம தர்சனம் பெற்ற பின்பு )ஆவிர்பூத அபரிச்சிந்ந ஜ்ஞாநைகாகார மச் சேஷதைக ஸ்வபாவாத்ம ஸ்வரூபஃ.’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்.’ (கீதா 7.5) இதி ஹி ஸ்வ ஷேஷதா உக்தா.ப்ரஸந்நாத்மா க்லேஷ கர்மாதிபிஃ (கிலேச கர்மம் விபாகம் ஆசயம் இவற்றால் தீண்டாமல் ப்ரஸன்ன ஆத்மா-இந்த நான்குமே பர பக்திக்குத் தடை )அகலுஷ ஸ்வரூபோ மத் வ்யதிரிக்தஂ ந கஞ்சந பூத விஷேஷஂ ப்ரதி ஷோசதி ந கஞ்சந காங்க்ஷதி; அபி து மத் வ்யதிரிக்தேஷு ஸர்வேஷு பூதேஷு அநாதரணீயதாயாஂ ஸமோ நிகிலஂ வஸ்து ஜாதஂ தரிணவத் மந்யமாநோ மத்பக்திஂ லமதே பராம்.-

மயி -ஸர்வேஷ்வரே -நிகில ஜகதுத்பவ ஸ்திதி ப்ரலயலீலே- நிரஸ்த ஸமஸ்த ஹேய கந்தே- அநவதிக அதிஷய அஸஂக்யேய (குறையற்ற எண்ணிறந்த-ஒவ்வொன்றுமே எல்லை அற்ற -அதிசய )கல்யாண குண கணைகதாநே-(ஏக ஸ்தானம்) -லாவண்ய அமரித ஸாகரே (லாவண்யம்-ஸமுதாய சோபை )-ஷ்ரீமதி- புண்டரீக நயநே (ஸுந்தர்யம் -அவயவ சோபை )(தஸ்ய உதித நாம -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே-கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-)-ஸ்வ ஸ்வாமிநி அத்யர்த ப்ரிய அநுபவ ரூபாஂ பராஂ பக்திஂ லபதே.தத் பலம் ஆஹ —

(எட்டு விசேஷணங்கள்-முதல் ஏழும் குண க்ருத தாஸ்யம் -இறுதியில் ஸ்வாமித்வம் ஸ்வரூப க்ருத தாஸ்யம் பிரதானம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்-காரணத்வ பலம் அடியாக -உபகாரகன் இடம் தானே அன்பு செலுத்த வேண்டும் )

৷৷18.54৷৷ஏவஂ கர்மயோகாதிஸாத்யப்ரத்யகாத்மாநுபவஸ்ய பரபக்த்யதிகாராபாதகத்வமுச்யதே’ப்ரஹ்மபூதஃ’ இதி ஷ்லோகேந. ததபிப்ராயேண பரஷேஷதைகஸ்வபாவத்வஸ்யாப்யாவிர்பாவ உக்தஃ. யோகஸாத்யஂ ப்ரஹ்மாக்யமிஹ ப்ரஹ்மத்வமித்யபிப்ராயேணாபரிச்சிந்நஜ்ஞாநாவிர்பாவோக்திஃ. ஷேஷத்வஸ்ய ஸ்வரூபாநுபந்தித்வஂ ப்ராகேவோக்தமித்யாஹ’இதஸ்த்வந்யாமிதி’.’ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதீ மதுஸூதநஃ’ [வி.த.9.10] இத்யாத்யுக்தபரபக்த்யநர்ஹதாநிவரித்திஃ’ப்ரஸந்நாத்மா’ இத்யுச்யத இத்யாஹ — ‘க்லேஷகர்மாதிபிரகல்மஷஸ்வரூப’ இதி. ஆதிஷப்தேந விபாகாஷயயோர்க்ரஹணஂ? தயோரபி காலுஷ்யரூபத்வாத்;’க்லேஷகர்மவிபாகாஷயைஃ’ [பா.யோ.1.24] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாச்ச. அவித்யாஸ்மிதாதயஃ பஞ்ச க்லேஷாஃ? கர்ம புண்யபாபரூபஂ? ஜாத்யாயுர்போகாஃ விபாகாஃ? ஆஷயாஃ ஸஂஸ்காராஃ.’யஸ்மிந் ஸ்திதோ ந துஃகேந குருணாபி விசால்யதே’ [6.22] இதி ப்ராகுக்தஂ’ந ஷோசதி’ இதி பராமரிஷ்டம். ததா’யஂ லப்த்வா சாபரஂ லாபஂ மந்யதே நாதிகஂ ததஃ’ [6.22],இத்யுக்தஂ’ந காங்க்ஷதி’ இதி ஸ்மாரிதம். அத்ர’ந ப்ரஹரிஷ்யதி’ இதி பாடாந்தரமப்ரஸித்தத்வாதநங்கீகரிதம். தத்ராத்மாநுபவஸுகேந பாஹ்யவைதரிஷ்ண்யஂ தாவஜ்ஜாயதே? பரமாத்மநஸ்து ப்ரத்யகாத்மநோப்யதிகஸுகதயா ஷ்ருதத்வாத்ததநுபுபூஷாஸ்தாயிநீத்யபிப்ராயேண மத்வ்யதிரிக்தஷப்தஃ.,ஷோககாங்க்ஷாநுதயஹேதுஃ’ஸமஃ’ இத்யுச்யதே இத்யபிப்ராயேண — ‘அநாதரணீயதாயாஂ ஸம’ இத்யுக்தம். துல்யாநாதர இத்யர்தஃ. பராவரதத்த்வவிவேகபலமந்யாநாதரஸாம்யஂ வ்யநக்தி — ‘நிகிலமிதி’.’வஸ்துஜாதமித்யநேந’ ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தாநாமேவ மேர்வபேக்ஷயா மாஷஸர்ஷபாதீநாமிவாவாந்தரோத்கர்ஷஸ்யாநாதரயோக்யத்வஂ ஸூசிதம்.’தரிணவதிதி’ — நஹி ரத்நபர்வதமாருருக்ஷோஃ பலாலகூடே ஸங்கஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ர மச்சப்தேந பரபக்த்யுத்பத்திவிவரித்த்யர்ததயா பூர்வத்ர ஷாஸ்த்ராந்தரேஷு ச ப்ரபஞ்சிதாநாமுபாஸநதஷாயாமநுஸந்தேயாநாஂ சாகாராணாமபிப்ரேதத்வமாஹ’மயி ஸர்வேஷ்வர’ இத்யாதிபிஃ.’ஸர்வேஷ்வர’ — இதி ஈஷிதவ்யஸ்ய பத்தஸ்ய கிஂ ததாபூதைஃ ஈஷிதவ்யாந்தரைரிதி பாவஃ.’நிகிலஜகதுத்பவஸ்திதிப்ரலயலீல’ இதி — “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இதி ஹி ஷ்ருதிரிதி பாவஃ. யத்வா கரணகலேவரப்ரதாநாதிபிர்மஹோபகாரகே சதுர்விதஹேதுபூதே தஸ்மிந் திஷ்டதி ஸரிஷ்டிஸஂஹாரகர்மதயைவாவஸ்திதஃ கோந்யஃ ஸமாஷ்ரயணீய இதி பாவஃ.’நிரஸ்தஸமஸ்தஹேயகந்த’ இதி — நஹ்யஸ்மிந்யதாவத்ப்ரதீதே வஸ்த்வந்தரேஷ்விவாவஜ்ஞாவைமுக்யாதிகாரணமஸ்தீதி பாவஃ.’அநவதிகேத்யாதி’ ஏகைககுணப்ரகர்ஷோபி சித்தாகர்ஷகஃ; கிமுதைவஂ ஸம்பூத இதி பாவஃ. யத்தி பரஂ ஸுலபஂ ச ததேவ ஹ்யாஷ்ரயணீயமிதி ஸௌலப்யோபயுக்தகுணாநாமப்யத்ர ஸங்க்ரஹஃ.’லாவண்யாமரிதஸாகர’ இதி ஷுபாஷ்ரய விக்ரஹகுணோபலக்ஷணம்.

‘ஷ்ரீமதீதி’ — ஷ்ரீர்ஹி ஸர்வேஷாமாஷ்ரயணீயா? ஸாப்யேநஂ நித்யமாஷ்ரிதேதி ஹரிதயம். ஷ்ரீயதே ஷ்ரயதே சேதி ஷ்ரீஷப்தோ நிருக்தஃ. மதும்நித்யயோகே. ஷ்ருதிஷ்ச — “ஹ்ரீஷ்ச(ஷ்ரீஷ்ச)தே லக்ஷ்மீஷ்ச பத்ந்யௌ” [யஜுஸ்ஸஂ.31.22] இத்யாதிகா. ஸ்மர்யதே ச — ‘நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோஃ ஷ்ரீரநபாயிநீ. யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்ததைவேயஂ ৷৷’ [வி.பு.1.8.17] இதி. ஏதேநோபாஸ்யத்வப்ராப்யத்வாதிகஂ ஸர்வஂ ஸபத்நீகஸ்யேதி ஜ்ஞாபிதம். ஆமநந்தி ச ரஹஸ்யாம்நாயவித இமமேவார்தஂ — ‘நித்யஸந்நிஹிதஷக்திஃ’ இதி.’புண்டரீகநயந’ இத்யவயவஸௌந்தர்யோபலக்ஷணம். “தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ தஸ்யோதிதி நாம (ஸஃ) ஏஷ ஸர்வேப்யஃ பாப்மப்யஃ உதித உதேதி ஹ வை ஸர்வேப்யஃ பாப்மப்யோ ய ஏவஂ வேத” [சா.உ.1.6.7] இதி ஸர்வபாபவிமோக்ஷகாமஸ்யோபாஸநார்ததயா புண்டரீகாக்ஷத்வமப்யுபதிஷ்டம்.’சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி’ [வா.ரா.3.34.13]’யஂ பஷ்யேந்மதுஸூதநஃ’ இத்யாதிஷு ச தத்வீக்ஷணஸ்ய பாவநதமத்வமுச்யத இதி பாவஃ. பக்த்யுத்பத்த்யாதௌ ஸர்வமிதமேகதஃ? ஸ்வாமித்வஂ சைகதஃ? நசாஸாவேகோநஸர்வஸ்வாமீத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வஸ்வாமிநீதி’.

—————-———————————————————————————————

சூரணை -15
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக
ஸ்வபாவம் மாம் குருஷ்வ

இவை மூன்றும் –பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் –
எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்

த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே -என்று
சாதநாந்தர நிரபேஷமான உபாயத்தை பற்றினவர் -ஆகையாலும்
ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பக்தி தன்னை அன்றிக்கே ஸ்வ பாவத்தை அபேஷிக்கிறார் ஆகையாலும் –
இங்கு பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறது
கைங்கர்ய உபகரண தயா வல்லது
நிரபேஷ உபாய ஸ்வீகாரம் பண்ணினவர் ஆகையாலே
உபாய தயா அல்ல –

அத்தேச விசேஷத்தில் அனுபவம் பரம பக்தி க்ருதமாய் இருக்குமாகில் அதுவே அமையாதோ
பரபக்தி பர ஜ்ஞானங்களும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்க -இதுக்கு ஹேது என் என்னில்
அனுபூதாம்சமே நாள் தோறும் அனுபவித்து போருகிறதாகில் அதுவே அமையும்
தன் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை
அனுபாவ்ய அம்சம் விஞ்சி இருக்கும்
அனுபவார்த்தமாக அபூர்வ தர்சனத்தை ஈஸ்வரன் பண்ணுவிக்கும்
அப்போதே கண்ட போதே மேல் விழுகையும்
அநந்தரம் இதிலே ஜ்ஞானம் சஞ்சரிக்கையும்
பின்பு பெறா விடில் முடியும்படியான தசை பிறக்கையும்
இப்பாகம் அபூர்வ தர்சனத்திலெ உண்டாமாவை ஆகையாலே –
மூன்றையும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபெஷிக்கிறார் –

————————————————————————————————

சூரணை -16-அவதாரிகை

பர பக்த்யாதிகளால் பண்ணும் கைங்கர்ய வேஷத்தை
இரண்டாம் சூரணை யிலே பரக்க அருளிச் செய்து இருக்க –
இங்கும் சொன்னால் புனர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு கைங்கர்ய ருசியை உண்டாக்க வேணும் என்று பிராட்டி திருவடிகளில் சரணம் புக நினைத்து
ஏவம் விதமான கைங்கர்யத்திலே எனக்கு ருசியைத் தந்து அருள வேணும் -என்கைக்காக-
கைங்கர்ய ஸ்வரூபத்தை அருளிச் செய்தார் கீழ் –
இங்கு
ருசி பூர்வகமாகப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்குக்
கைங்கர்யம் தன்னையே அபே ஷிக்கிறார் -ஆகையாலே புநர் உக்தி தோஷம் இல்லை –
பர உபதேசமாக அருளிச் செய்கிறார் அல்லாமையாலே –
தோஷம் இல்லாமையே அன்று குணமாக புத்தி பண்ண தட்டில்லை

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி
கருத பரி பூர்ண
அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித
அசேஷ சேஷை தைகரரூப
நித்ய கிங்கரோ பவாநி

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி கருத –
இப் பர பக்த்யாதிகளாலே பண்ணப் படுமதான

பரி பூர்ண –
அதாவது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
ஒரு போகியாக அனுபவிக்கை –

அநவரத –
அதாவது அவிச்சின்னமாய் இருக்கை –
அதாவது -விஷயாந்தரம் கலசாது இருக்கை –

நித்ய –
யாவதாத்மா பாவியாய் இருக்கை

விசததம –
விசதம் ஆவது -பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமமாவது -பரம பக்தி தசையில் அனுபவம் –

அநந்ய பிரயோஜன –
இவ் வனுபவத்தில் பிறக்கும் ப்ரீதியும் வேண்டா
ப்ரீதி கார்யமான கைங்கர்யமும் வேண்டா -என்னும்படி
தானே ரச்யமாய் இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம் –
அநவதிகமான
அதிசயத்தை உடைத்தான
பகவத் அனுபவத்தை உடைய -நான்

ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித –
அப்படிப் பட்ட அனுபவத்தாலே பிறப்பதாய்
அநவதிக அதிசயத்தை உடைய ப்ரீதி காரிதமாய் –
எல்லா அவஸ்தை களிலும் அனுகூலமாய் இருக்கிற –

அசேஷ சேஷை தைகரரூப –
சகல சேஷ வ்ருத்தி ஒன்றிலும் உண்டான
அபி நிவேசத்தை வடிவாக உடையனாய்க் கொண்டு

நித்ய கிங்கரோ பவாநி –
நித்ய கைங்கர்யத்தை பெற்று
அனுபவிக்கப் பெறுவேனாக வேணும் –
அன்றிக்கே
நித்ய சப்தம் புநரா வ்ருத்தி ரஹீதமான தேசத்தைச் சொல்லி
அதிலே கிங்கரோ பவாநி -என்னவுமாம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவேங்கட நாதர் அருளிய  கீதாசாரத் தாலாட்டு–விளக்கம்: ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

January 22, 2023

ஸ்ரீ  கீதாசாரத் தாலாட்டு–நூலாக்கம்: ஸ்ரீ  திருவேங்கடநாதர்–விளக்கம்: ஸ்ரீ ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ–

 

    தமிழர்கள் அனைவரும் அறிந்தது தாலாட்டு. ஒரு தமிழ்த்தாய் கண்ணன் சொன்ன கீதையை, கண்ணனையே குழந்தையாக்கி தாலாட்டாகப் பாடுகிறாள். அதுவே கீதாச்சாரத் தாலாட்டு.

கீதை இறுதிக்காலத்தில் படிப்பது அல்ல; இருக்கும் காலத்தில் படிக்க வேண்டியது. ஏனெனில், கீதை வாழ்க்கையைக் கவலையின்றி வாழச் சொல்லித்தருகிறது, நம்மை நாம் ஆளச் சொல்லித்தருகிறது, மரணத்திலிருந்து மீளச் சொல்லித்தருகிறது, பிறவி‌ கடைத்தேறச் சொல்லித்தருகிறது.

உலகம் விழிக்கப் பாடிய பாடலைப், பாடினவனை உறங்கச் செய்யப் பாடிய பாடலிது!

படைத்தவன் சொன்ன வழி படித்தவன் நடந்தால் படைத்தவனுக்குப் பாரில் என்ன வேலை?

பாற்கடலில் தான் பாடியதையே கேட்டுப் பள்ளி கொள்ளவேண்டியது தானே!

கண்ணன் கேட்டுத் துயிலும் அத்தாலாட்டை, நாமும் கேட்டுக் கவலையின்றி பள்ளி கொள்வோம்

பரந்தாமன் போல்,சோகம் விட்டு யோக நித்திரையில்!

முகவுரை

தொண்டை நாட்டில் மாதை எனப்படும் திருவாமாத்தூர் என்னும் ஊரின் மன்னனாக விளங்கியவர் இந்நூலாசிரியரான திருவேங்கடநாதர்.இவருக்கு இரு புதல்விகள் இருந்தனர். இவர்களுள் ஒருத்திக்கு மகப்பேறு வாய்க்கப் பெறாமையால் மனம் வருந்தி ஏங்கித் தவித்தாள். அன்பு மகளின் ஏக்கம் காணச் சகியாத திருவேங்கடநாதர், அழகிய கண்ணன் பொம்மை ஒன்றைக் கொடுத்து கிருஷ்ணனையே குழந்தையாக பாவிக்கும்படி கூறினார். அதை தாலாட்டும் பொருட்டு பகவத்கீதையின் ஞான யோகத்தின் ஸாரத்தைத்   தாலாட்டுப் பாடல்களாக ஆக்கிக்கொடுத்தார். அம்மாது, தந்தையின் அருள் வாக்கின்படி பாலகிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி வர சில ஆண்டுகளில் புத்திரப் பேறு வாய்த்தது என்பது வரலாறு.

இக்கீதாசாரத்தாலாட்டு அர்ஜுனனின் ஸந்தேஹத்திற்கு, கிருஷ்ண பரமாத்மா ஸமாதானம் கூறும்விதமாக அமைந்துள்ளது. பந்த மோட்சங்களின் இயல்பு பற்றியும், ஒரு சிலர் ஞானிகளாகவும், ஒரு சிலர் அஞ்ஞானிகளாகவும்  இருப்பது எதனால் என்பது பற்றியும், ஜடம் ஆன உடல் எவ்வாறு கர்மத்தைச் செய்யும், அக்கர்மபலனை எவ்வாறு அனுபவிக்கும் என்பது பற்றியும், ஆன பல ஐயங்கள் குறித்து, மிக ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் கூறுகின்றது. சாமானியரும் ஆத்ம தத்துவத்தை உணருமாறு  எளிதாகக் கூறுவது, இந்நூல்.

சிறப்புப் பாயிரம்

மாதையர் கோன் வேத நவில் வாய் வேங் கடநாதன்

காதை யுறப் பார்த்தனுக்குக் கண்ணனருள் – கீதைக்

கருத்துயர் தாலாட்டாகக் கட்டுரைத்தான் யாரும்

கருத்துயர் தீர்ந்(து) எய்தக் கதி.

திருவாமாத்தூர் என்னும் ஊரின் தலைவனாக வாழ்ந்த, வேதம் பயின்ற வேங்கடநாதன் என்பவர், அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் விரிவாக அருளிய பகவத்கீதையின் உயர்ந்த கருத்துக்களை, அனைவரும் கொடிய பிறவித் துன்பம்  நீங்கி மோக்ஷ கதியை அடையவேண்டும் என்பதற்காக, எளிய தாலாட்டுப் பாடலாக அமைத்துள்ளார்.

இறைவணக்கம்

ஐ வகைப் பொருளும் நான்கு கரணமும் குணங்கள் மூன்றும்

செய் வினை இரண்டும் ஒன்றி யாவரும் திகைப்ப நின்ற

பொய் யிருள் அகல ஞானப் பொருட்கதிர் விரித்த புத்தேள்

கைவளராழிச் செங்கட் கண்ணனைக் கருத்துள் வைப்பாம்.

ஒலி முதலான விஷயங்கள் ஐந்து, காது முதலான அறிவுக் கருவிகள் ஐந்து, வாய் முதலான செயற்கருவிகள் ஐந்து, பிராணன் முதலான வாயுக்கள் ஐந்து என ஐந்து ஐந்து பிரிவுகளான பொருள்களையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு விதமான அகக் கரணங்களையும், சத்துவம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றுவித குணங்களையும், நல்வினை, தீவினை என இருவிதமான செயல்களையும் பற்றிக்கொண்டு, அனைவரும் மயங்கி நிற்கச் செய்யும் மாயையாகிய அஜ்ஞான இருளகல, தத்துவ ஞானம் ஆகிய ஒளிக்கதிர்களைப் பரவச் செய்த தெய்வமான சங்கு, சக்கரம் தாங்கிய திருக்கரங்களையும் சிவந்த விழிகளையும் உடைய ஞானசூரியன் ஆகிய ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைத்து தியானிக்கின்றோம்.

பாடல் : 1

சீராரும் பரமார்த்த தெரிசனத்தை அருள் செய்யப்

பேராரும் தேசிகனாய்ப் பெருமானே வந்தவரோ.

எங்கள் பெருமானே, ஆத்மாவாகிய பரம்பொருளை அர்ஜுனன் காணுமாறு உபதேசித்து அருள, குருமூர்த்தியாக எழுந்தருளி வந்தவர் நீர் தானோ!

உலகம், உயிர், இறைவன், ஆகிய மூன்றின் தத்துவங்களையும் அர்ஜுனன் வாயிலாக எல்லா மனிதர்களுக்கும் உபதேசிக்க வேண்டும் என்று குருவாக பகவானே எழுந்தருளி இருக்கின்றார்.

பாடல் 2:

திருத் தேரில் சாரதியாய்ச் சேர்ந்திருந்தும் கீதையினால்

அருச்சுனனுக்கு மெய்ஞ்ஞான மனைத்தும் உரை செய்தவரோ!

சிறந்ததொரு தேரில் பாகனாய் இருந்தும், கீதா உபதேசமாய் அருச்சுனனுக்கு மெய்ப்பொருள் முழுவதையும் உரைத்தருளியவர்  நீர்தானோ!

குரு உயரமான இருக்கையிலிருந்து உபதேசிப்பதும் சிஷ்யன் கீழே இருந்து கேட்பதும் மரபு. மேலும், வேறு எந்தத் தொழிலும் இல்லாமல், அமைதியான தனிமையான இடத்தில் கற்பிப்பது வழக்கம். தேரில் அர்ஜுனன் எஜமானனாக உயரே இருக்க, கிருஷ்ணன் கீழே தேரோட்டியாக இருந்தவர். இடமோ யுத்தகளம்.அப்படி இருந்தும் அர்ஜுனனுக்கு ஆத்ம தத்துவத்தை பெருங்கருணையோடு உபதேசித்து அருளினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.

பாடல் 3:

செஞ்சமரில் பந்து சனம் சேதமுறும் என்றிறங்கி

அஞ்சிய பார்த்தன் பயமாங் ககற்ற வரு ளால் நோக்கி..

    “அறப்போரில், (தர்மத்திற்கான யுத்தத்தில்)  போரிட வந்திருக்கின்ற உறவினர்கள் அனைவரும் மரணம் அடைவார்களே”, என்று இரக்கம் கொண்டு அச்சமடைந்த அர்ஜுனனது பயத்தை, அப் போர்க்களத்திலேயே நீக்கக் (கருதிய பகவான்) கருணையுடன் பார்த்து.. (உபதேசிக்கத் தொடங்கினார்.)

    உறவினர்களையும் குருமார்களையும் கொல்வதினால் பாபம் வரும், அவர்கள் இறப்பதினால் குலதர்மம் கெடும், சமூகஒழுக்கம் கெடும். இவை ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு மறுமையில் நரகம் கிடைக்கும்; இம்மையிலோ, அதனால் கிடைக்கும் ராஜ்ஜியம் ரத்தம் தோய்ந்ததாக இருக்கும், என்றெல்லாம் சிந்தித்து அர்ஜுனன் பயத்தையும் மனக்கலக்கத்தையும் அடைந்தான். யுத்தம் செய்ய சக்தி அற்றவனாக தேர்த்தட்டில் அமர்ந்தான். தன் மனக்குழப்பம் நீங்க, அறிவு தெளிவுபெற வழிகாட்டுமாறு பகவானிடம் சரண் அடைந்தான். இவ்வாறு குழப்பத்தை அடைந்திருந்த அர்ஜுனனுக்கு, புன்னகையுடன் (” சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி, அறத்தின்படி அவரவர் கடமையைச் செய்பவர் உயர்கதி அடைவார்,” என்று அர்ஜுனன் நிமித்தமாக அனைவருக்கும் சொல்ல விரும்பிய பகவான்) கீதையை அருளிச் செய்கின்றார்.

பாடல் 4:

சுற்றமறில் சோகமெனச் சொல்லினை கற்றறிந்தவன் போல்

கற்றுணர்ந்த பேரதனால் கலங்கார் காண் என்றவரோ.

    கற்றறிந்தவன்போல்,உறவினர் அழிந்துபோனால் துன்பம் – பாபம் – கவலை வருமென்று சொன்னாய், கற்று (மெய்ப்பொருள்) உணந்தவர்கள் மரணத்தைக் குறித்து மனங்கலங்கமாட்டார்கள் என்று அருளியவர் நீர் தானோ!

    அறத்தைக் காப்பது அரசனின் கடமை; சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் நுழைப்பது அறிவீனம். (சொந்த விருப்பு வெறுப்புகளால் பற்றுக் கொண்டு தன் கடமை தவறுதல் பாபம் என்று அறியாமை). கடமை தவறுதல் பாவம். உறவினர்களே தர்மத்திற்கு விரோதமாக, எதிரிகளாக இருந்தால் அவர்களை விலக்குதல் பாபம் ஆகாது என்பது அறிவுடையவர்‌ கருத்து.

மேலும், “உடல் விதியின்படி அழியக்கூடியது, ஆத்மா அழிவில்லாதது; அனைவரும் அழிவற்ற ஆத்மாக்கள்”, என்று கற்றவர்கள் உடலின் அழிவைக் குறித்து வருந்த மாட்டார்கள்.

பாடல் 5: அர்ஜுனனின் கேள்வி

கலங்காரோ இறப்புவரில் கற்றுணர்ந்த பேரேனும்

மலங்காமல் நானிருக்கும் வகை யுரையும் என வினவ..

    கற்றறிந்தவர்கள் மரணம் வந்தாலும் மனம் கலங்க மாட்டார்கள் என்றால், நானும் சோகத்தால் மயங்காமல் இருக்கும் வழியை அருளுங்கள் என்று (அர்ஜுனன்) கேட்க.

பாடல் 6: பிறப்பும் இறப்பும் இல்லை

நீயு நானும் புவி மேல் நிருபர்களும் மெய் யுணர்வால்

ஆயுங்கால் பிறந்திறப்பது ஆர்க்குமிலை என்றவரோ!

    உண்மையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நீயும் நானும் இந்த பூமியிலுள்ள அரசர்களும் மற்ற யாவரும் பிறப்பதும் இறப்பதும்  இல்லை என்று அருளியவர் நீர் தானோ!

பாடல் 7: பிறவி யாருக்கு?

ஈங்கெ வர்க்கும் பிறந்திறப்பது இல்லை யென்றீர் இவ் வுலகில்

நீங்குபவம் யாருக்கிதனை நிச்சயமாகச் சொல்லுமென…

பொருள் :

    இங்கு எவர்க்கும் பிறப்பு, இறப்பு இல்லை என்று சொன்னீர், (எனில்) இந்த உலகத்தில் இறத்தல் பிறத்தல் யாருக்கு என்றிதனை உறுதியாகச் சொல்லுங்கள் என (அர்ஜுனன் கேட்க..)

பாடல் 8: என்றுமுள்ள ஆத்மா நீ

இத் தரையில் பிறந்திறப்பது எடுத்த வுடற் கடுத்த பொறி

நித்தியமாகிய ஆன்மா நின் சொரூபம் என்றவரோ!

    இந்த பூமியில் பிறந்து இறப்பது (கர்மபலனை  அனுபவிப்பதற்காக ஜீவன்) எடுத்த உடம்புக்கு பொருந்திய இயற்கையாகும். நித்தியமான ஆத்மாவே உன்னுடைய சொரூபம் என்று அருளிச் செய்தவர் நீர்தானோ!

    சூக்ஷ்ம உடலோடு கூடிய ஜீவன், தன் புண்ணிய பாபத்தை அனுபவிப்பதற்காக ஸ்தூல உடலை எடுக்கின்றான். அத்தூல உடலுக்குத்தான் பிறப்பும் இறப்பும்; இரு உடல்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மாவே மெய்ப் பொருள். ஆத்மா மேல் கற்பிக்கப்பட்ட தாற்காலிகமான தோற்றமே உடல், தங்கத்தின் மேல் நகைகள் போல. பிறப்பு இறப்பு இல்லாத நித்தியமான ஆத்மாவே நமது யதார்த்த சொரூபம்.

பாடல் 9: நான் யார்?

அங்கம் உயிர் இந்தி(ரி)ய நான் அன்றி வேறு எனைக்  காணேன்

இங்கு யான் வேறுண்டேல் எனக் கரியப் புகலுமென..

    உடல், பிராணன், ஞான, கர்மப் பொறிகள் இவையே நான் என்பதன்றி, வேறு ‘நானைக்’ காண வில்லை. இவ்வுடல் (முதலானவற்றை விட) வேறான ‘நான்’ உண்டு என்றால், அதனை இங்கு நான் அறியும்படி விளக்க வேண்டும் என்று (அர்ஜுனன்) கேட்க..

பொறிகள் = கருவிகள்.

அறிவுப் பொறிகள் (5)= மெய், வாய், கண், மூக்கு, செவி.

செயல் பொறிகள் (5) = கைகள், கால்கள், வாய், மல, ஜல உறுப்புகள்.

பாடல் 10: அறிபவனே நீ!

மெய் யுயிர் இந்தி(ரி)யங்கள் அல்லால் வேறறியேன் என்றவனைப்

பைய அவை யால் அறியப் படானும் நீ என்றவரோ!

    உடல், பிராணன், பொறிகள் இவை அல்லாமல் வேறு அறியேன் என்று அறிந்தவனும், புலன்களால் அறியப்படாதவனும் நீ என்றவரும் நீர்தானோ !

    எந்த அறிவைக் கொண்டு உடல், மனம், பிராணன் இவற்றை நீ அறிகின்றாயோ அந்த அறிவே நீ. கண் முதலான கருவிகளால் ஒரு பொழுதும் புறப் பொருளாக அறியப்பட முடியாதது அது. அப்படி எந்த ஒரு – அறிவு – சைதன்யம் – உயிர் – ஆத்மா – உடலிற்கு வேறாக இருக்கின்றதோ அதுவே உனது (நமது) உண்மையான நான். உடலுக்கு ஆதாரமாக இருப்பது அது. எது இருப்பதனால் உடல் இருக்கின்றதோ எது இல்லையென்றால் உடல் இருக்காதோ, அதுவே ஆத்மா. அதுவே உண்மையில் நான் என்று கருதப்பட வேண்டியது, அறியப்பட வேண்டியது. அது உடலிற்கு வேறான தனித்த சொந்தமான இருப்புடையது. அறிவே வடிவமானது அது.

பாடல் 11: பிறப்பு எதனால்?

தேகம் வேறாகில் அதைச் சேர்ந்தது இவண் ஏதெனவே

சோகமே விளை கருமத் தொடர்ச்சியினால் என்றவரோ!

    “ஆத்மா உடலிற்கு வேரானதென்றால் அது உலை அடைந்தது எதனால் ?” என்று அர்ஜுனன் கேட்க, “துன்பத்தைக் கொடுக்கின்ற வினைப் பயனின் விளைவால்”  என்று அருளியவர் நீர் தானோ!

பாடல் 12: முதல் வினைப் பயன் எப்படி?

தேகம் எடா முன் கருமச் செயல் வருமாறு ஏதெனவே

ஏகமா மரமும் வித்தும் எனும் முறை போல் என்றவரோ!

    உடல் எடுப்பதற்கு முன் முதல் வினைப் பயன் எப்படி வந்தது? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றாகிய மரமும் விதையும் எனும் முறை போல (முதலும் முடிவுமின்றி தொடரும் வட்டச் சுழற்சி) என்று அருளியவர் நீரோ! (ஜீவன் அனாதி என்பது கருத்து)

பாடல் 13: கர்மம் யார் செய்வது?

காயமும் தானும் பிரிதேல் கன்மம் எவர் செய்ததென

தீய உடற் கலதுகன்மச்  செயல் தனக்கே தென்றவரோ!

 உடலும் ஆத்மாவும் வேறு வேறானால் கர்மம் யார் செய்ததென அர்ஜுனன் கேட்க, கர்மச் செயல் கொடிய தேகத்திற்கே அல்லாமல் தனக்கு(ஆத்மாவுக்கு) ஏது? (இல்லை) என்றருளியவர் நீர் தானோ!

பாடல் 14: கர்மபலனை அனுபவிப்பது யார்?

படர் கருமம் உடல் செய்யில் பலம் உறுவது ஆர்க்கெனவே

அடர் பலமும் உடற்கேயாம் அறிவார்க்கே தென்றவரோ!

    பற்பல விதமாக விரிந்து இருக்கின்ற கர்மங்களை உடல் செய்யுமானால் கர்மங்களின் பயன் – புண்ணிய பாவங்கள் – வந்து சேர்வது யார்க்கென அர்ஜுனன் வினவ, இடைவெளி யில்லாமல் மாறிமாறி வருகின்ற பலன்களும் உடலுக்கே ஆகும், அதை அறிபவர்க்கு ஏது? (சாட்சியாயிருக்கு ஆத்மாவுக்கு இல்லை) என்று அருளியவர் நீர்தானோ!

    தூல உடம்பையே நானென்று  அபிமானம் கொள்கின்ற ஸூக்ஷ்ம உடலிலிருக்கின்ற அகங்காரமாகிய ஜீவனே, கர்மங்களைச் செய்கிறான். பிறகு கர்ம பலனை அனுபவிப்பவனும் அவனே.

ஆத்மா இரண்டிற்கும் சாட்சியாக இருக்கின்றது.

பாடல் 15: சொர்க்கநரகம் அனுபவம் யாருக்கு?

வெய்ய வினை உடற்கென்றால் மெய்யிங்கே விழ ஆன்மா

ஐயமற நரக சொர்க்கம் அனுபவிப்பது ஏதெனவே.

    கொடிய வினைப் பயனானது உடலுக்குத் தானென்றால், உடலானது இங்கே பூமியிலேயே (மரண காலத்தில்) விழுந்து விட, ஆன்மாவானது சந்தேகமின்றி நரக, சொர்க்கங்களை அனுபவிப்பது எதனால் என்று அர்ஜுனன் கேட்க!

பாடல் 16: அனுபவிப்பது உண்மை இல்லை

அனுபவமே இலையது வீண் ஆரோபித நிகழ்த்தில்

தனு கரணச் செயல் தனதாய்ச் சார்வது போல் என்றவரோ!

    ஆன்மாவிற்கு சொர்க்க நரகங்களில் அனுபவமே இல்லை. அவ்வாறு இருப்பதாக நினைப்பது பற்றிக் கூறினால், உடல் மற்றும் கை முதலான கருவிகளின் செய்கைகளைத் தன்னுடைய – ஆத்மாவுடைய –  செயலாகக் கருதுவது போலத், தவறான கற்பிதமாகும் என்று அருளியவர் நீர்தானோ!

    ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூக்ஷ்ம உடலே சொர்க்க, நரகங்களை அனுபவிக்கின்றது. ஆத்மா எங்கும் வியாபித்து ஆகாயம் போல் இருப்பது. ஆத்மா தூல, சூக்கும உடல்களுக்கு ஆதாரமாக இருப்பது, இரண்டிற்கும் வேறாக, இருப்பது. ஆத்மாவின் மேல் மாயையினால் உடல்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. கற்பிதமான உடலையே தான் என்றும் அவற்றின் செயல்களை தன்னுடையது என்றும் நினைக்கின்ற ஜீவன், சொர்க்கம் முதலானவைகளையும் “நானே அனுபவிக்கின்றேன்” என்று கருதுகிறான். இது அறியாமை அன்றி உண்மை இல்லை.

பாடல் 17: உடலை நானென நினைப்பதேன் ?

மற்றுடலின் செய்கை தன் மேல் வரு மயக்கம் ஏதெனவே

முற்றுணர்வொன் றில்லாத மோக மென்று சொன்னவரோ!

    ஆத்மாவிற்கு வேறாயுள்ள உடம்பினது செயல்கள் ஆத்மாவாகிய தன்னிடத்தில் வரும் மயக்கத்திற்கு காரணம் என்ன வென்று அர்ஜுனன் கேட்க, பூரண ஆத்ம ஞானம் இல்லாத அஜ்ஞானமே காரணமென்று கூறி யருளிய பகவான் நீர் தானோ!

பாடல்18: அறிவு யாருக்கு?

அறிவு தேகம் தனக்கோ ஆன்மாவிற்கோ எனவே

பிரிவு செயில் அசித்து உடலம் பிரம்மம் அறிவு என்றவரோ!

    அறியும் தன்மை உடலுக்கு உள்ளதா? ஆத்மாவுக்கு உள்ளதா? என அர்ஜுனன் கேட்க,  உடம்பையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, உடம்பு ஜடம் என்றும், பிரம்மம்(ஆத்மா) அறிவு வடிவம் என்றும் அருளியவர் நீர்தானோ!

பாடல் 19: ஜடமான உடல் செயல்படுவது எப்படி?

தேகம் அசித்தாகில் இந்தச் செயல் வருவதே தெனவே

ஏக பரஞ்சோதியின் முன் இருக்கையினால் என்ற வரோ!

    உடம்பு ஜடமானால் இந்த செயல் வருவது எப்படி ? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றாகவும் மேலாகவும் உள்ள சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவின் முன்னிலையில் இருப்பதனால்  உடம்பிற்கு இயங்கும் சக்தி வருகின்றது என்று அருளிய பகவான் நீர்தானோ!

 உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது ஆகவே ஜடமானது, ஆத்மா ஸ்வயம் சைதன்யமானது. ஆத்மாவினுடைய சம்பந்தத்தினாலேயே உடலானது இருப்பையும் இயக்கத்தையும் பெறுகின்றது.

பாடல் 20: அதெப்படி எனில்…

இருக்கினும் அசேதனத்திற்கு இச் செயல் உண்டோ எனவே

உருக்குப் படா காந்தம் முன்னில் ஊசி நிகர் என்ற வரோ!

    சேதனத்தின் முன்னிலையில் இருந்தாலும் ஜடமான உடம்பிற்கு செய்கை எப்படி வரும்? என்று அர்ஜுனன் கேட்க, நெருப்பினால் உருக்கப் படாத காந்தத்தின் முன்னிலையில் ஊசியானது அசைவது போலும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 21: சுகதுக்கம் யாருக்கு?

சொன்ன செயல் உடற்கானால் சுக துக்கம் யார்க்கெனவே

அன்ன சுக துக்கமுந்தான் அவ் வுடற்கே என்றவரோ!

மேற்சொல்லிய செய்கையானது தேகத்திற்கு என்று சொன்னால் இன்பத் துன்பங்கள் அனுபவிப்பது யார்?, என்று விஜயன் கேட்க, அந்த இன்ப துன்பங்களும் உடலுக்கே என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 22: ஜடமான உடலுக்கு எப்படி?

 சேதனமாம் ஆத்மாவைச் சேராத துக்க சுகம்

ஓது சடமாம் உடலை உற்றிடுமோ சொல்லுமென..

    சைதன்ய வடிவமாகிய ஆத்மாவைச் சேராத துன்ப இன்பங்கள், ஜடம் என்று சொல்லப்பட்ட உடலை எப்படிச் சேரும் சொல்லுங்கள் என.. (அர்ஜுனன் கேட்க)

பாடல் 23: இன்ப துன்பம் மனதுக்கு 

பூதம் ஐந்தோடு ஐந்து உயிர்கள் புலன்கள் பத்து மனம் முதல் நான்கு

ஈது இரு மெய் இதில் மனத்துக்கு இன்ப துன்பம் என்றவரோ!

    ஆகாய முதல் ஐந்து பூதங்களும், பிராணன் முதலான ஐந்து வாயுக்களும், ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்களான புலன்கள் பத்தும், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற அகக் கரணங்கள் நான்கும் (24 தத்துவங்கள்) ஆகிய இவை இரண்டு சரீரங்கள் ஆகும். இவற்றுள் மனம் என்ற ஓர் தத்துவமே இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 24: இருவுடல்களுக்கும் காரணம் எது?

இந்த இருவகைத் தனுவிற்கு ஏது ஏது என வினவ

முந்தைய காரணம் அதனால் மூன்றுதனு என்றவரோ!

    இப்பொழுது கூறிய இரண்டு வகையான உடல்களுக்கும் காரணம் எது என்று அர்ஜுனன் கேட்க, இவ் விரண்டு சரீரங்களுக்கும் முதன்மையாய் உள்ள காரணம் அஜ்ஞானம். அதனால் (அந்த காரண சரீரம் ஒன்று இருத்தலால்) மூன்று சரீரங்கள் என்றவரோ!

    பூதங்கள் ஐந்தும் ஒன்றோடு ஒன்று கலந்து தோன்றியது ஸ்தூல சரீரம்(பருவுடல்), கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, பிராணன் 5, அகக்கரணங்கள் 4, ஆக 19 தத்துவங்கள் சேர்ந்தது சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்). அவித்யா காரணசரீரம். இம்மூன்றும் சேர்ந்ததே ஜீவசரீரம். இவற்றுள் மனத்தில் ஆத்மசைதந்யம் பிரதிபிம்பிக்க ஜடமான உடல்கள் சேதனத்தன்மையைப் பெறுகின்றன.

பாடல் 25: மனமும் ஜடம் அல்லவா ?

மனம் அறியும் துக்க சுக வரவென்றீர் அம் மனமும்

வினவில் அசேதனம் அலவோ விரித்தெனக்கு விளம்பும் என.

    வரும் இன்பத் துன்பங்களை மனம் அறிகிறது என்று சொன்னீர் அந்த மனமும் ஆராய்ந்து பார்க்குமிடத்து (மற்ற தத்துவங்கள் போல) ஜடமானது அல்லவா! அப்படிப்பட்ட மனம் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் விதத்தை எனக்கு விளங்கும்படியாக அருளுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 26: ஆன்ம ஸம்பந்தத்தினால்

அம் மனத்தில் ஆன்மா அபேதம் போல் தோன்றுதலால்

விம்மு துக்க சுகத்தை மனம் மேவும் என்று சொன்னவரோ!

    (ஜடமான) அம்மனத்தில் ஆத்மாவானது பிரதிபலித்து வேறுபாடு இல்லாதது போலத் தோன்றுவதால், கலக்கத்தை தருகின்ற துக்கத்தையும் சுகத்தையும் மனமானது அடைகின்றது என்று சொன்ன பகவான் நீர்தானோ!

    ஜடமான மனம் ஆத்மாவின் சம்பந்தத்தினால் சேதனத்துவத்தைப் பெறுகின்றது. தான் அடைந்த சேதனத்துவத்தை உடலுக்குக் கொடுப்பதோடு, உடம்பின் மேல் அபிமானம் கொண்டு, உடம்பையே தான் என்று கருதுவதால், உடம்பின் சுகதுக்கங்களையும் தன்னுடையதாகக் கருதுகின்றது. கண்ணாடியில் ஏற்படுகின்ற பிரதிபிம்பம் அந்த கண்ணாடியைத் தானாகக் கருதி, கண்ணாடியின் நன்மை தீமைகளை தன்னுடையதாகக் கருதுவதுபோன்றது இது.  (அந்த பிரதிபிம்பத்திற்குக் காரணமான நிஜமுகம் கண்ணாடிக்கு வெளியே கண்ணாடிக்கு வேறாக இருக்கின்றது. கண்ணாடியில் ஏற்படும் அழுக்குகள் நிஜ முகத்தை ஒருபொழுதும் பாதிப்பது இல்லை என்பதே விவேகம். இது பின்னர் விவரிக்கப்படும்.)

பாடல் 27: ஆத்மா துக்கப்படுவது ஏன்?

அந்த மனோ துக்கசுகம் அதனிடத்து நில்லாமல்

வந்திலங்கும் ஆன்மாவை மருவிய தென் சொல்லுமென.

    அந்த மனதிற்குரிய இன்ப துன்பங்கள் அதனிடத்திலேயே நின்று விடாமல், அறிவு வடிவாக விளங்குகின்ற ஆத்மாவை வந்து சேர்ந்தது எப்படி என்று சொல்லும் என பகவானை அர்ஜுனன் கேட்க.

பாடல் 28: மனதின் ஸம்பந்தத்தினால்

வெய்ய கனலின் சூடு மேல் வைத்த சட்டியினூடு

உய்யப் புனலூடு வந்தங்கு ஒன்றுதல் போலென்றவரோ!

   கொடிய நெருப்பினிடத்துள்ள வெப்பமானது மேலே வைத்துள்ள சட்டியின் வழியே அதில் ஊற்றி வைத்துள்ள நீரினிடத்தில் வந்து சேர்வதைப் போல, (மனத்திலுள்ள இன்ப துன்பங்கள் அம்மனத்தோடுள்ள ஆத்மாவை) பொருந்தியது என்றவரோ!

பாடல் 29: சித்தும் சடமும் எப்படிச் சேரும்?

சித்தாகும் ஆன்மாவும் ஜடமாகும் சித்தமும் தான்

ஒத்தாங்கு இரண்டும் ஒன்றாய் உற்ற வகை சாற்றுமென.

அறிவு வடிவமாகும் ஆத்மாவும்  ஜடமான மனமும் வேறுபாடு இல்லாதது போல இரண்டும் ஒன்றாய் சேர்ந்த விதத்தை உரைத்தருளும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 30: நெருப்பும் இரும்பும் போல

வல்லிரும்பு கனலுடனே மருவியது போல் மனமும்,

ஒல்லையில் ஆன்மாவுடனே உற்றது காண் என்றவரோ!

    வலிமையான இரும்பு நெருப்புடனே சேர்ந்து (ஒளிபெற்றிருப்பது) போல, மனமும் அனாதியான ஆத்மாவுடனே சேர்ந்து சேதனத்துவம் பெற்றிருக்கின்றது. இதனை அறிவாயாக என்று அருளியவர் நீர்தானோ!

பாடல் 31: ஆத்மா மனதுடன் சேர்ந்தது உண்மையா?

உற்றது எதனால் எனவே உள்ளம் அவிவேகமுறப்

பற்றியதன் மேலுமதன் பண்பு வந்தது என்றவரோ!

   மனதின் தர்மங்களான இன்ப துன்பங்கள்  ஆன்மாவிற்கு இருப்பதாகத் தோன்றுவது எதனால்? என்று அர்ஜுனன் கேட்க,  மனதானது விவேகம் செய்யாமையால் ஆத்மாவாகிய தன்னிடத்தில் மனதின் பண்புகள் தெரிகின்றன என்று அருளிய பகவான் நீர்தானோ!

    நெருப்பு ஒளிபொருந்தியது, குறிப்பிட்ட வடிவம் அற்றது.   இரும்பு வடிவம் உடையது, ஒளியற்றது. இரண்டும் வேறுவேறானவை. ஆனால் நெருப்பும் இரும்பும் சேரும் பொழுது நெருப்பு வடிவம் உடையது போலவும், இரும்பு பிரகாசம் உடையது போலவும் இரண்டின் தன்மைகளும் ஒன்றாகி ஒரே பொருளாகத் தெரிகின்றது. அதுபோல சேதனமான ஆத்மாவும் அவிவேகம் உள்ள மனதும் ஒன்று சேரும் பொழுது, மனது சேதனத் தன்மை உடையதாகவும், ஆத்மா துன்பத்தை அடைந்ததாகவும் இரண்டும் ஒன்றாகித் தெரிகின்றது.

பாடல் 32: இன்ப துன்பங்கள் ஆத்மாவுக்கு இல்லை!

அடுத்த குணம் போமோ பின் ஆன்மாவை விட்டெனவே

எடுத்த செம்பூ நிறம் படிகத்து ஏறுதல் போல் என்றவரோ!

    ஆத்மாவை அடைந்துள்ள இன்ப துன்பங்கள் நீங்கிப் போகுமா? என்று விஜயன் கேட்க, சிவந்த நிறமுடைய பூவின் நிறம் அருகிலுள்ள ஸ்படிக கல்லில் ஏறி தோன்றுவது போல் என்றவரோ!

    சிவந்த பூவும் ஸ்படிக லிங்கமும் அருகருகே இருக்கும் பொழுது வெண்மையான ஸ்படிக லிங்கம் சிவப்பு நிறத்தை அடைந்தது போலத் தோன்றும். அதுபோல, மனதையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்காத பொழுது, ஆத்மா மனதின் இன்ப துன்பத்தை அடைந்து விட்டதாகத் தோன்றுகின்றது. ஆனால் ஸ்படிகமும் ஆத்மாவும் எப்பொழுதும் தன் சொரூபத்திலிருந்து மாற வில்லை என்பதே உண்மை. அதை ஆராய்ந்து அறிந்து கொள்வதே விவேகம் – ஞானம்.

பாடல் 33: ஆசைகள் தோன்றுவது எதனால்?

சுத்த படிகம் போல் சொரூபமாய்த் தானிருக்க

மெத்தவும் ஆசாமலினம் மேவியதென் சொல்லுமென.

தூய்மையான ஸ்படிகம் போல சச்சிதானந்த சொரூபமாய்த் தான்(ஆத்மா) இருக்க மிகுந்த ஆசையாகிய அழுக்கானது தன்னிடத்தில் வந்தது எப்படி ? என்று சொல்லும் என அர்ஜுனன் கேட்க.

பாடல் 34: வாசனையால் வந்தது!

அனாதியாம் வாசனையால் அடைந்தது ஆசாமலினம்

மனோ பந்தம் இருக்கின் முக்தி வாராது என்று உரைத்தவரோ!

    ஆசையானது அனாதியான வாஸனையால் வந்திருப்பது. அதுவே மனதிற்கு பந்தமாம். அது இருக்கும் வரை முக்தியானது ஏற்படாது, என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 35: பந்தம் எது? முக்தி எது?

பந்தமெது முக்தியெது பகுத்துரைக்க வேண்டும் எந்தன்

சிந்தை தெளியவென்று திருத்தாளினை வணங்க.

    பந்தம் என்பது என்ன? முக்தி என்பது என்ன? என்று எனது மனமானது தெளிவாக அறியும்படி, (அவற்றின் இலக்கணங்களை) வேறு பிரித்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டு (பகவானின்) திருவடிகளை வணங்க..

பாடல் 36: பந்தம் இது, முக்தி இது!

தேகாதி தான் எனவே சேர் அபிமானம் பந்தம்

ஆகாத மானம் விடில் அரிய முத்தி என்றவரோ!

    உடல் முதலானவைகள் நான் என்பதாக இருக்கின்ற அபிமானமே – பற்றுதலே – பந்தமாகும். ஆகாத துன்பத்தைத் தருகின்ற அபிமானத்தை விட்டு விட்டால் அதுவே கிடைத்தற்கு அரிதான முக்தி என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 37: அபிமானம் வந்ததெப்படி?

அபிமானம் வருவகையும் ஆங்கது தான் தீர் வகையும்

தபியாமல் நானறியத் தயவாகக் கூறுமென!

    உடல் நானென்ற அபிமானம் வந்து சேருகின்ற வழியையும், அந்தத் தவறான அபிமானம் நீங்குவதற்குரிய வழியையும் இந்த அபிமானத்தால் துன்பம் அடையாமல், (உண்மையை) நான் தெரிந்து கொள்ளக் கருணையோடு வழி கூறுமென அர்ஜுனன் கேட்க..

பாடல் 38: அறியாமையால் வந்ததிது!

மறந்திடும் அஞ்ஞானத்தால் மானம் வந்தது அஜ்ஞானம்

இறந்து விடின் மானமும் போமென்ன உரை செய்தவரோ!

    தனது ஆத்ம வடிவத்தை மறந்த (மறைத்த) அஜ்ஞானத்தினால் அபிமானம் வந்தது. அந்த அஜ்ஞானம் அழிந்து விட்டால் (அதன் காரியமான) உடல் பற்றும் அழிந்து விடும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 39: அறியாமை வருவதும் போவதும் எப்படி?

அந்தமுறை அஜ்ஞானம் அணுகுவதும் போவதுவும்

சந்தயமில்லாது அறியத் தயவாகக் கூறுமென.

    என் ஸ்வரூபத்தை மறைக்கும் விதமாக அஜ்ஞானமானது வந்து சேர்வதும், அழிந்து போவதும் எப்படி என்று ஐயம் இல்லாமல் நான் அறிந்து கொள்ளும்படி கருணையுடன் கூறி அருளுங்கள் என அர்ஜுனன் கேட்க..

பாடல் 40: மெய்யறிவால் போகும்!

அஜ்ஞானம் வந்தது அனாதியது சொல்வதல்ல

மெய் ஞானத்தாலே விடுமென் றுரைத்தவரோ!

    அஜ்ஞானம் ஒரு காரணத்தால் வந்தது என்று சொல்வதற்கில்லை, அது அனாதி யானது. மெய்ப் பொருளைப் பற்றிய மெய் ஞானத்தால் அது நீங்கும் என்று உரைத்தருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 41: சூரியன் முன் இருள் வருமா?

இரவி யெதிர் அடுத்து வந்த இருட்போல அஜ்ஞானம்

வர விதியோ ஜோதி தன் பால் வந்த வகை ஏதெனவே!

    சூரியனின் எதிரில் நெருங்கி வந்த இருள் போல, ஞான சூரியன் ஆகிய என்னிடத்தில் (ஆத்மாவிடத்தில்) அஜ்ஞானமானது வருவதற்கு இயலுமோ? வந்த வகை எப்படி யென்று சொல்லுமென (அர்ஜுனன் கேட்க).

பாடல் 42: ஆனந்த சாகரம் நீ

அந்த அறிவு வந்தால் அஜ்ஞானம் இல்லை அப்பால்

சந்நதமும் ஆனந்த சாகரம் நீ என்றவரோ!

    (இந்த உடல் முதலானவைகளை விட வேறாகிய) ஞானப் பிரகாச வடிவம் நான் என்னும் ஞானம் உனக்கு வந்து விட்டால் அஜ்ஞானமானது உன்னிடத்தில் இல்லாததே ஆகும். அந்த ஞானம் தோன்றிய பிறகு எப்பொழுதும் நீ ஆனந்தக் கடலாய் இருப்பாய் என்று அருளிய பகவான் நீர் தானோ!

    சூரியன் வரும் வரையே இருள் இருக்கும். சூரியன் தோன்றியவுடன் இருள் மறைந்துவிடுவது போல, நான் ஆத்மா என்று அறியாத வரையே அஜ்ஞானம். நான் சச்சிதானந்த ஆத்மா என்று அறிந்து கொண்ட பிறகு அஜ்ஞானம் இல்லை.

பாடல் 43: துக்க சுகம் தீராதது ஏன்?

வேதாந்தத்தால் குருவால் மெய் ஞானம் வந்தவுடன்

தீதான துக்க சுகம் தீராதது ஏதெனவே!

    வேதாந்த நூல்களை கேட்டலாலும் குருவின் உபதேசத்தாலும் மெய் யறிவு வந்தவுடனேயே கொடியதான துன்ப இன்பங்கள் ஒழியாதது எதனால் என்று அர்ஜுனன் கேட்க..

    வேதாந்தம் எனப்படுகின்ற உபநிஷத் முதலான தத்துவ நூல்களை குருமுகமாக கேட்பதன் வாயிலாகவே ஆத்ம ஞானமானது உண்டாகும். அப்படிக் கேட்கின்ற பொழுது புரிந்தாலும், அதனுடைய பலனை அனுபவிக்க முடியாமல் இருப்பது எதனால்? என்பது கேள்வி.

பாடல் 44: அபரோக்ஷ ஞானத்தாலே நீங்கும்!

பற்றறுமோ துக்க சுகம் பரோக்ஷ ஞானத்தாலே

அற்றமாம் அவ் விரண்டும் அபரோக்ஷத்தாலே என்றவரோ!

    பரோக்ஷ ஞானத்தினால் துன்ப இன்பங்கள் வந்து சேருதல் நின்று போய் விடாது, அவ் விரண்டும் அபரோக்ஷ ஞானத்தாலேயே நீங்கும் என்றருளிய பகவான் நீர்தானோ!

    கேள்வி ஞானம் விஷய அறிவாக மட்டும் இருக்கின்ற பொழுது அது பலனைத் தருவது இல்லை. எவ்விதமான தடைகளும் இன்றித் தன்னறிவாக அது புரிந்து கொள்ளப்படுகின்ற பொழுதுதான் பலனைத் தரும்.

பாடல் 45 : பரோக்ஷம் எது ? அபரோக்ஷம் எது ?

பரோக்ஷம் அபரோக்ஷமெது பகுத்துரைக்க வேண்டும் என் தன்

திரோதமாம் புத்தி நன்றாய்த் தெளியும் படிக்கெனவே.

    பரோக் ஷஞானம் என்பது யாது? அபரோக் ஷஞானம் என்பது யாது?  அறியாமையால் மறைக்கப் பட்டுள்ள என்னுடைய அறிவுவானது நன்றாகத் தெளியும்படி பிரித்து கூற வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 46: பரோக்ஷம் இது, அபரோக்ஷம் இது !

பகர்ந்த சத்த ஞானம் பரோக்ஷம் அனுபவத்தான்

அகம் பிரம்மம் எனும் ஞானம் அபரோக்ஷம் என்றவரோ!

    வேதாந்த நூல்களாலும் குருவாலும் சொல்லப்பட்ட ஆத்மா, ப்ரஹ்மம் போன்ற சப்தங்களின் (சொற்களின்) பொருளறிவு பரோக்ஷ ஞானம் ஆகும். தத்துவமசி, அகம் பிரம்மாஸ்மி போன்ற மகா வாக்கியங்களின் விசாரத்தால் (ஆராய்ச்சியால்) உண்டாகும் “நான் பிரம்மமாக இருக்கிறேன்” என்னும் அநுபவ உணர்வு அபரோக்ஷ ஞானம் என்று அருளிய பகவான் நீர் தானோ!

உடலுக்கு வேறாக ஆத்மா இருக்கின்றது என்றும், உலகத்திற்கு வேறாக பிரம்மம் (கடவுள்) இருக்கின்றது என்றும் அறிந்து கொள்வது பரோக்ஷ ஞானம். பிரம்மமே ஆத்மாவாக இருக்கின்றது, ஆத்மாவே நான் என்று அறிந்து கொள்வது அபரோக்ஷ ஞானம்.

பாடல் 47: உடற் பற்று போகாதது ஏன்?

தான் பிரம்மம் என்றறிந்தும் தனுவைத் தான் என்ற புத்தி,

ஏன் போகவில்லை அதை எனக்கறியப் புகலுமென.

    நான் பிரம்மம் என்று அறிந்த பிறகும் உடல் முதலானவைகளை நான் என்று எண்ணும் (தவறான) அறிவு ஏன் நீங்கவில்லை, அது நீங்குவதற்கான காரணத்தை நன்கறியுமாறு தாங்கள் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 48: பயிற்சியினால் நீங்கும்

கேள்வியினால் மனனத்தால் கிளர்ந்த யோகங்களினால்

ஆள் பிரம்மத்து அனுபவம் வந்து அது தீரும் என்றவரோ!

குரு வாயிலாக வேதாந்த நூல்களைக் கேட்பதனாலும், அவற்றின் பொருளைச் சிந்தித்து ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதனாலும், தெளிவாக அறிந்து கொண்ட அந்தத் தத்துவஞானத்திலேயே மனதைத் தொடர்ந்து நிறுத்துவதனாலும் நான் பிரம்மம் என்ற ஞானமானது  மனதில் உறுதிப் படும் பொழுது, பழைய வாஸனையான உடல் நானென்பது நீங்கும்.

பாடல் 49: நான் ஞான வடிவம் ஆக முடியுமா?

ஆதியாம் சித் சொரூபம் ஆகாத தானினிமேல்

சோதி மனனாதியினால் சொரூபமாமோ எனவே!

    முதலில் சித் சொரூபமாக இல்லாத ஆத்மா இனி மேல் கேள்வி, மனனம் முதலானவைகளால் சித் ஸ்வரூபமாக ஆகுமா? என அர்ஜுனன் கேட்க..

பாடல் 50: எப்போதும் ஞான வடிவு தான் நீ

எப்போதும் சின் மயம்  தானெனல் மறந்து தேடுவது

செப்புமிடற்று அணி யிருக்கத் தேடுதல் போல் என்றவரோ.

    எக் காலத்திலும் தான் சித் சொரூபம் தான் என்பதை மறந்து, அதை அடைய வேண்டும் என்று தேடுவது, கழுத்திலேயே நகை இருக்கும் பொழுது அதை மறந்து புறத்தே தேடுதல் போல் என்றவரோ!

பாடல் 51: நான் நானாவேனா?

தேடிய பின் தேக புத்தி தீர்ந்து போய் சித் சொரூபம்

கூடுவனோ யான் என் குறை தீரச் சொல்லுமென.

    கேள்வி, மனனங்களால் (நான் யார்? என்று) ஆராய்ந்த பின்பு, உடல் நான் என்னும் தவறான அறிவு நீங்கிப் போய், அவற்றை அறியும் அறிவே நான் என்று அதை அடைவனோ என் ஐயம் தீர உபதேசியுங்கள் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 52: நானாயிருப்பதில் ஐயமென்ன?

வந்த வுடல் வேறாயும் வாசனையால் தானெனலால்

சந்தயம் என் தன் சொரூபம் தானாதற்கு என்றவரோ!

    வினைப் பயனால் வந்த உடல், தனக்கு வேறாக இருந்தாலும் உடலை நானென்று வாழ்ந்த பழைய வாசனையால், இப்பொழுதும் தான் எனவே தோன்றுகின்றது. வாசனையை நீக்கி, உடலை அறிகின்ற ஆத்மாவே தன் சொரூபம் என்று தானாக நிற்பதில் ஐயம் என்ன?

பாடல் 53: உடல் மயக்கம் நீங்குவது எப்படி?

தனுவைத் தான் எனும் பிரமை சத்த ஞானத்தில் அறாது

அனுபவ மெய்ஞ் ஞானத்தால் அறும் வகை ஏது உரையுமென.

    உடலை நான் என்று நினைக்கும் மயக்கமானது சாஸ்திர விசாரணையால் உண்டான பரோக் ஷஞானத்தால் நீங்காமல், உண்மை அனுபவம் ஆகிய அபரோக்ஷ ஞானத்தால் நீங்குகின்ற விதம் எப்படி சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 54: ஐயமின்றிய அறிவொளியினால் தொலையும்

விளக்கு விளக்கு எனுமதனால் வெய்ய இருள் போய் விடுமோ

துளக்கமிலா விளக்கேற்றில் தொலையுமிருள் என்றவரோ!

    விளக்கு விளக்கு என்று சொல்வதினால் மட்டும் கொடிய இருள் நீங்கி விடுமோ? (நீங்காது). அசைவின்றிய விளக்கேற்றினால் இருளானது நீங்கிப் போகும் (அதுபோல, பிரம்மம் இருக்கின்றது என்ற பரோக்ஷ ஞானத்தினால் மட்டும் தேகம் நான் என்ற அறிவு நீங்காது. அந்த ப்ரம்மமே அறிவு வடிவாக எப்பொழுதும் ஆத்மாவாக(நானாக) விளங்கிக் கொண்டிருக்கிறது என்ற அபரோக்ஷ ஞானத்தினால் தான் உடல் அபிமானமானது நீங்கும்) என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 55: அஞ்ஞானம் எப்போது நீங்கும்?

நெடுங்காலம் ஆன்மாவை நீங்காத அஞ்ஞானம்

விடுங்காலம் எந்நாளோ மெய்ஞ் ஞானத்தால் என்றவரோ!

    அனாதி காலமாய் ஆத்மாவை மறைத்து இருக்கின்ற அஞ்ஞானமானது ஆத்மாவை விட்டு நீங்குவது எப்பொழுது ? என்று அர்ஜுனன் கேட்க, ஆத்மாவைப் பற்றிய மெய்ஞ் ஞானத்தினால் அது விலகும் என்று உபதேசித்து அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 56: மெய்ஞ்ஞானத்தால் நீங்கும்!

அந்தகாரம் குகையில் ஆயிரம் நாள் இருந்தாலும்

செந் தீபம் கண்டவுடன் தீர்வது போல் என்றவரோ!

    இருளானது ஒரு குகையில் பல்லாயிரம் நாட்கள் இருந்தாலும், பிரகாசமான ஒரு விளக்கை ஏற்றியவுடன் மறைந்து போய் விடுவது போல, (அனாதிகாலமாய் ஆத்மாவை மறைத்திருக்கும் அஜ்ஞானமானது சாஸ்திர விசாரத்தால் ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடன் மறைந்து போய் விடும்) என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 59: கர்மம் ஞான ஸாதனமாவது எப்படி?

அஜ்ஞான இருள் துரக்க அறியாத நல்ல கன்மம்

மெய் ஞானம் தனைப்பலிக்கும் விதம் எவ்வாறு என வினவ.

    அஜ்ஞானமாகிய இருளை நீக்குவதற்கு இயலாத நல்ல செய்கையானது, மெய் ஞானத்தை தோற்றுவிக்கும் செயலை எவ்வாறு செய்ய முடியுமென அர்ஜுனன் கேட்க.

பாடல் 60: கர்மம் இரு விதம்

கருமம் இரு வகையாம் காமியம் நிட் காமியமென்று

இரு வகையில் நிட் காமமேது காண் என்றவரோ!

    கர்மமானது காம்யம் என்றும் நிஷ் காம்யம் என்றும் இரு வகையாகும். அவற்றுள் நிஷ்காம்ய கர்மம் (மனத்தூய்மையை கொடுப்பதன் வாயிலாக) ஞானம் தோன்றுவதற்கு காரணமாகுமென அறிவாயாக, என்றருளிய பகவான் நீர்தானோ!

    பந்தத்தை தோற்றுவிக்கின்ற புண்ணிய பாப செய்கைகள் மோட்சத்தை அடைவதற்கு எப்படிக் காரணமாகின்றன? என்று கேட்டால், கர்மம் காம்யம், நிஷ்காம்யம் என்று இரண்டு விதமாக இருக்கின்றது. கர்ம பலனை விரும்பி செயல்களைச் செய்தல் காம்யம். அது பந்த காரணம். கர்ம பலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடமையைச் செய்தல் நிஷ் காம்யம். இறைவனுக்கு செய்யும் தொண்டுணர்வோடு பலனை எதிர்பாராமல் நமது கடமைகளைச் செய்கின்ற பொழுது அது மனத் தூய்மை என்ற உயர்ந்த பலனைக் கொடுக்கும். அது ஆத்ம ஞானத்தை பெறுவதற்கான தகுதி ஆகும். ஆகவே இது மோஷகாரணம்.

(அனைத்து அறன் மனத்துக் கண் மாசிலன் ஆதல். -திருக்குறள் 34)

பாடல் 61: துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

கருமமே காரணமாய்க் கட்டுரைத்தீர் இவ் வுலகை

ஒருவும் வகையை எனக்கு  ஓதென்று அடி பணிய.

    பிறவி வருவதற்கும், பிறவியிலிருந்து விடுபடுவதற்கும் கருமமே சாதனமாக விரித்துரைத்தீர்கள். இவ்வுலகத் துன்பங்களிலிருந்து நான் விலகுகின்ற விதத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று (அர்ஜுனன் பகவானுடைய) திருவடிகளைப் பணிந்து வினவ..

    ஸகாமமாக செய்யும் கர்மம் பிறவி வருவதற்கும் நிஷ்காமமாக (கர்மயோகம்) செய்யும் கர்மம் பிறவியிலிருருந்து விடுபடுவதற்கும் காரணமாக இருக்கின்றது. எவ்விதமாக கர்மத்தைச் செய்தாலும் துன்பம் வருகின்றது. துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பது கேள்வி.

பாடல் 62: இவ்வுலகம் உண்மையல்ல!

இந்திர சாலம் போல இவ்வுலகை நம்மிடத்தில்

தந்திரமாய்த் தோற்றுவித்தோம் சத்தியம் அல என்றவரோ!

    மாய வித்தையினால்  செய்யப்பட்ட பொருட்களைப்போல இந்த உலகை நாம் நம்மிடத்தில் மாயத் தோற்றமாகத் தோற்றுவித்து இருக்கின்றோம். இது உண்மை இல்லை என அருளிய பகவான் நீர்தானோ!

    மாய வித்தை செய்பவனால் தோற்றுவிக்கப்பட்ட பொருள்களை, அவை வெறும் தோற்ற மாத்திரம் உண்மையில் இல்லை என்று புரிந்து கொள்ளுதலே அவற்றை விலக்குதல் ஆகும். அதை போல உலகம் இறைவனின் மாயா சக்தியினால் தோற்ற மாத்திரமாக படைக்கப் பட்டிருக்கிறது, ஆகவே, நிரந்தரமான உண்மை யில்லை என்று புரிந்து கொள்வதே உலகத்திலிருந்து வரும் துன்பங்களிலிருந்து விலகும் வழி ஆகும்.

பாடல் 63: பொய்யானது எப்படி தோன்றும்?

மித்தையெனும் சகத்து நின்பால் விளங்குமோ என வினவ

சுத்தி தனிலே ரசதம் தோன்றுதல் போல் என்றவரோ!

    பொய்யான உலகம், உண்மையான உன்னிடத்தில் தோன்றுமோ? என்று அர்ஜுனன் கேட்க, சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல என்று அருளிய பகவான் நீர் தானோ!

  இல்லாத ஒரு பொருள், இருக்கின்ற ஒன்றின்மேல் இருப்பதுபோல தோன்றுவதற்கு மித்யா என்று பெயர். மணல் வெளியில் இருக்கின்ற சிப்பியின் மேல் சூரிய ஒளிபட்டு வெள்ளி காசு கிடப்பது போலத் தோன்றுகின்றது. அதுபோல, ஒரே உண்மைப் பொருளான பிரம்மத்தின் மேல் மாயையினால் உலகம் இருப்பது போலத் தெரிகின்றது.

பாடல் 64: முன் இருந்ததா இவ் வுலகம்?

அயல் வெள்ளி சுத்தியின் மேல் ஆரோபிதம் கூடும்

இயல் உள்ள சகமும் முன் வேறு இருந்ததும் உண்டெனவே!

    வேறாக தனியே இருக்கும் வெள்ளியானது சிப்பியில் கற்பிதமாகத் தோன்றுகிறது. காரண காரிய ரூபமாக உள்ள இந்த உலகமும் காண்பதற்கு முன் வேறாகத் தனியே இருந்ததும் உண்டா? என அர்ஜுனன் கேட்க.

பாடல் 65: இல்லாததுவும் தோன்றும்!

மன மயக்கம் பிடிக்கில் இல்லா வத்துவும் தோன் றிடும் அதுவோ

கனவில் விண்ணில் தான் பறக்கக் கண்டது போல் என்றவரோ!

    மன மயக்கம் ஏற்படுகின்ற பொழுது இல்லாத பொருளும் கூட இருப்பதாகத் தோன்றும். அது எது போல என்றால், கனவில் ஆகாயத்தில் தான் பறப்பதாக காண்பது போல, என்றருளிய அருளிய பகவான் நீர் தானோ!

    உலகம் பிரம்மத்தின் மேல் கற்பிக்கப்பட்டுள்ளது என்றால், முன்னில்லாத உலகம் கற்பனை மாத்திரமாகத் தோன்ற முடியுமா? என்பது கேள்வி. மாயையினால், மனத்தினால் எதையும் (இல்லாததையும்) கற்பனை பண்ண முடியும் என்பது பதில்.

பாடல் 66: உலகம் விளங்குவது எதனால்?

கனவு போல் பிரபஞ்சம் என்றீர் கண் விழித்தால் கனவு பொய்யாம்

வினவு சகம் தினமும் மெய்யா விளங்குவது என் சொல்லுமென. 

கனவு போல உலகத் தோற்றம் பொய்யானது என்று சொன்னீர்கள். விழித்தவுடன் கனவு மறைந்து விடுகிறது. காணப் படுகின்ற உலகமோ எப்பொழுதும் விளங்குவது ஏன்? என்று அர்ஜுனன் வினவ.

பாடல் 67: மெய்யறிவு வந்தால் மறைந்துவிடும்

மெய்யாக விளங்குவது மெய்ஞானம் வருமளவும்

பொய்யாம்பின் கனவு அது போல்  போதம் வரில் என்றவரோ!

    உலகம் உண்மையான விளங்குவது மெய்யறிவு வரும் வரைதான். மெய் ஞானம் வரும்பொழுது கனவு போல உலகமும் பொய்யாய் மறைந்து விடும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 68: ஞானிகளுக்கும் உலகம் தெரிவது எதனால்?

முன்பு கண்ட கனவு பொய்யாம் முழி சாக்ரம் போல என்றீர்

பின்பு முக்தித் தசை அடைந்தும் பிரபஞ்சம் நிற்ப தேதெனவே.

முன்பு உறக்கத்தில் கண்ட கனவு போல, விழிப்பு நிலையில் தோன்றுகின்ற உலகமும் பொய் என்று சொன்னீர். ஆனால் முக்திநிலை அடைந்த பிறகும் உலகமானது (கனவைப் போல விழித்தவுடன் மறைந்து விடாமல்) தோன்றுவது எதனால் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 69: தோற்றத்தில் இருந்தாலும் பயன்படாது

தெரிந்தவர்க்குத் தோற்றுவது தெத்த படம் போல்வதல்லால்

பரந்த சகம் காரியத்தில் பயன்படாது என்றவரோ!

    மெய்ப் பொருளை அறிந்தவருக்கு உலகம் தோன்றுவது, எரிந்த துணியானது தோன்றுவது போல் அல்லாமல், விரிந்த இந்த உலகமானது விவகாரத்திற்கு பயன்படாது என்று அருளிய பகவான் நீர்தானோ!

    மடித்து வைக்கப்பட்ட துணி நெருப்பில் எரிந்து போனாலும் அப்படியே இருப்பது போல் தோன்றுகின்றது. ஆனால் அது முன்பு போல விவகாரத்திற்குப் பயன்படாது. அதுபோல் ஆத்ம ஞானத்திற்குப்பிறகு உலகம் தோற்றத்தில் இருந்தாலும் ஞானிக்கு அது பயன்படுவது இல்லை. சுகத்தையும் துக்கத்தையும் தருவதாக இருப்பதில்லை.

பாடல் 70: அஜ்ஞான காரியம் உடனே போகாதது ஏன் ?

கர்ம வினை அஜ்ஞானம் கடந்துமதன் காரியம்

புன்மை உறு மெய்யுடனே போகாதது ஏதெனவே.

(ஞானத்தால்) அஜ்ஞானத்தைக் கடந்த பிறகும் அஜ்ஞான காரியமான உடலானது, அஜ்ஞானத்தோடு நீங்கிப் போகாதது எதனால் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 71: சிறிது காலம் இருக்கும்!

வெட்டவிழும் மரம்பசந்து விளங்குதல் போல் சிலகாலம்

நட்டகன்மம் மாய்ந்து மங்கம் நடத்திடுங்காண் என்றவரோ!

    வெட்டிய உடன் கீழே விழுந்த மரமானது சிறிது காலத்திற்கு பசுமையாகவே தோன்றுவது போல, தான் முன்பு செய்த கர்மம் அழிந்து போனாலும் அதன் காரியமாகிய உடல் சிறிது காலம் இயங்கிக் கொண்டிருக்கும் என்று நீ அறிவாயாக என்று அருளிய பகவான் நீர் தானோ!

    வினைகளுக்குக் காரணமான அஜ்ஞானம் ஞானத்தினால் அழிந்து போன பிறகும், தற்போது உள்ள இந்த உடல் தோன்றுவதற்கு காரணமான பிராரத்த வினை மட்டும் அனுபவித்துத்தான் தீரும். ஆகவே, அது இருக்கும் வரை உடலானது இருந்து போகும்.

பாடல் 72: ஆத்மா பலவா?

சென்மம் போய் முக்தியினை சேரச் சிலர் இருக்கத், தொன்மை ஆன்மா பலவோ சொரூபம் பகரும் என.

    முக்தி அடைந்து சிலர் பிறவி விட்டுப் போய்விட, சிலர் பிறவியுடன் இங்கிருப்பதனால், அனாதியான ஆத்மா அநேகமா?  இதன் உண்மையைச் சொல்லும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 73: ஆன்மா ஒருவனே!

பிரம்மமென்றும் ஈசனென்றும் பெருகு பல ஜீவனென்றும்

உரை மயக்கம் அலது ஆன்மா ஒருவனே என்றவரோ!

    நிர் குண பிரம்மம் என்றும் ஸகுண ஈஸ்வரன் என்றும் பல ஜீவன்கள் என்றும் சொல்வது (அறியாமையினால் ஏற்பட்ட) தவறான அறிவே யல்லாமல் ஆத்மா ஒன்று தான் என்பதே உண்மை என்று அருளிய பகவான் நீர் தானோ!

    ஒன்றேயான இரண்டற்ற நிர்குண பிரம்மமே, ஸகுண ஈஸ்வரனாகவும் அறியாமையோடு கூடிய பல ஜீவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

பாடல் 74: பலவாய் தோன்றுவது எதனால்?

ஏகம்தான் ஆன்மா எனும் வகையே மெய்யானால்

ஆகந்தோறும் பலவாய் அமர்ந்ததுமென்னோ சொல்லுமென!

    ஒன்றுதான் ஆத்மா என்பது உண்மையானால் உடல் தோறும் பலவாக ‘நான்’ என்று இருப்பது எதனாலோ?, சொல்லும் என அர்ஜுனன் கேட்க

பாடல் 75: தோன்றுவது பிரதிபிம்பம்

பலகடத்தில் பானு பிம்பம் தோன்றுதல் போல்

தொலைவில் புத்தி தொறும் ஆன்மா தோன்றுதல் காண் என்றவரோ!

    சூரியனின் பிரதி பிம்பமானது பல குடங்களில் உள்ள நீரில் தோன்றுவது போல, முக்தி அடையும்வரை அழிவில்லாமல் இருக்கக்கூடிய மனதில் ஆத்மாவின் பிரதி பிம்பம் தோன்றுகின்றது, அறிவாயாக! என்று அருளிய பகவான் நீர்தானோ!

    சூரியன் ஒன்றுதான். அதன் பிரதிபிம்பம் பல நீர்நிலைகளில் பலவாகத் தோன்றுவது போல, ஆத்மா ஒன்றுதான், அதனுடைய பிரதிபிம்பம் பல மனங்களில் பலவாகத் தோன்றுகின்றது.

பாடல் 76: முக்தி யாருக்கு?

ஆதித்தன் போலான்மா அளவில்புத்தி தொறும்தோன்றில்

சாதிக்கும் முத்தி எவர்தமக்கு அதனைச் சாற்றும் என,

    சூரியன் போல ஆத்மா மனம்தோறும் எண்ணற்ற பிரதி பிம்பமாகத் தோன்றுகின்றது என்றால்,  முக்தி அடைவது யார் ?  அதனைச் சொல்லும் என அர்ஜுனன் வினவ.

பாடல் 77: பந்தமும் முக்தியும் மனதிற்கே!

பந்தம் முக்தி தானுமந்தப் பரந்த புத்தி தனக்கே யாம்

அந்த பிம்பம் தனக்கிலை யென்று அறிவு வரச் சொன்னவரோ.

    பந்தமும் முக்தியும் (விஷயங்களை நோக்கி) விரிந்த மனதிற்குத் தான். அந்த பிரதி பிம்பங்களுக்கு மூலமான  ஆத்மாவாகிய தனக்கு (பந்தமும் முக்தியும்) இல்லை, என்று அர்ஜுனனுக்கு அறிவு ஏற்படும்படி உபதேசித்த பகவான் நீர்தானோ!

    உடலும் மனமும் ஜடமானவை. மனதில் சைதன்யமான ஆத்மாவின் பிரதிபிம்பம் ஏற்பட மனது சேதனத்தன்மை பெறுகின்றது. (சூரிய ஒளிபட்ட கண்ணாடி பிரகாசத்தை அடைவதுபோல) உயிர் பெற்ற மனமானது, ‘உடலை நான்’ என்று நினைக்கின்றபொழுது பந்தத்தையும் ‘ஆத்மா நான்’ என்றறிகின்றபோது முக்தியையும் அடைகிறது. ஆத்மா இரண்டிற்கும் சாக்ஷி மாத்திரமாக இருக்கின்றது. அது பந்தத்தையும் அடைவதில்லை, முக்தியையும் அடைவது இல்லை.

பாடல் 78: பலஜீவன்கள் எதனால்?

பரமேகம் ஆயுமதில் பல சீவர் ஏதெனவே

ஒரு கடலில் பல குமிழி உதிப்பது போல் என்றவரோ!

    பரமாத்மா ஒன்றாக இருந்தாலும் அதனிடத்தில் பல ஜீவர்கள் தோன்றுவது எப்படி? என அர்ஜுனன் வினவ, ஒரு கடலில் பல நீர்க் குமிழிகள் (காற்றினால்) தோன்றுவது போல, (மாயையினால் பல ஜீவர்கள் தோன்றுகின்றனர்) என்றருளிய பகவான் நீதானோ!

பாடல் 79: பேரின்பம் எப்படித் தோன்றும்?

சீவனது தானென்றும் சேரும் பிரம்மமென்றும்

ஆவதுவோ பேரின்பம் ஆங்கதெனக்கு ஓதுமென!

தான் ஜீவன் என்றும் பிரம்மம் அடையத் தக்கது என்றும் இருந்து, பின்னர் ஜீவன் பிரம்மமாக ஆவதுதான் பேரின்பம் என்று சிலர் சொல்வது பற்றி எனக்கு அருளுங்களென அர்ஜுனன் கேட்க,

பாடல் 80: ஒன்றே, இரண்டிலை!

ஏகம் பிரம்மம் இரண்டிலை நீ வேறுமல

சோகமுறும் பேதம் அறில் தோன்றுமின்பம் என்றவரோ!

    பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றுதான், இரண்டு இல்லை, நீ பிரம்மத்திற்கு வேறானவன் இல்லை. துன்பத்தைக் கொடுக்கும் வேறு எனும் தவறான அறிவை விட்டுவிட்டால் பேரின்பமானது தோன்றும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

    பிம்பம் ஒன்றுதான் உண்மைப் பொருள், பிரதி பிம்பம் தோற்ற மாத்திரம். உடலிலும் மனதிலும் தோன்றி யிருக்கும் தற்காலிகமான உயிர்த் தன்மையை உடலோடு இணைத்து, அந்த உடலும் மனமுமே நான் என்று கருதியது அறியாமை. உடலும் மனமும் தானே இயங்கக் கூடியவையல்ல, உடலுக்கு வேறான ஆத்மாவின் சம்பந்தத்தினாலேயே இவை இயக்கம் பெற்றிருக்கின்றன. இதுவரை உடலிலிருந்த நான் என்ற அகங்காரம் வெறும் பிரதிபிம்பம் மாத்திரமே. அதனுடைய உண்மை ஆத்மா. ஆகவே, பிரதிபிம்பம் நானல்ல உண்மையான ஆத்மாவே நான், ஆத்மாவே ப்ரஹ்மம் என்ற ஞானம்  வருகின்ற பொழுது பேரின்பம் தோன்றும். ஆகவே, பிரதிபிம்பம்(ஜீவன்) பிம்பத்தை(பிரம்மத்தை) அடைகின்றது என்பதில்லை; பிரதிபிம்பம் உண்மை இல்லை என்று விடுத்து, பிரம்மமே உண்மை  என்றிருக்கின்ற அத்வைத நிலையே பேரின்பத்தை தரும்.

பாடல் 81: சித் மாத்திரமாக இருக்க முடியுமா?

சீவ பேதம் போமோ சித்தொன்றாமோ எனவே

ஆவல் மனம் அறும் சுழுத்தி அவத்தையில்பார் என்றவரோ!

    ” ஜீவன் நான் (வேறு ப்ரம்மம் வேறு) என்ற அறிவானது நீங்கி இருக்க முடியுமா? ஒன்றேயான சித் மாத்திரமாக நிற்க இயலுமா?” என்று அர்ஜுனன் வினவ, (விழிப்பு நிலையில் விஷயங்களில்) ஆவல் கொண்டு அலைகின்ற மனமானது, ஆழ்ந்த உறக்க நிலையில் (சிதான்மா மாத்திரமாக) இருப்பதைப் பார்ப்பாயா!

    மனதை ஆத்ம தத்துவத்தில் லயமாக்கினால் உறக்கத்தில் போல விழிப்பு நிலையிலும் சிதான்மா மாத்திரமாக இருக்க முடியும் என்பது கருத்து. தூங்காமல் தூங்குவது என்று இதுவே சொல்லப் படுகின்றது.

பாடல் 82:  பூத மயத் தோற்றம் ஏன்?

பேதமல இவ் வுலகம் பிரம்ம மயம் என்றறிந்தும்

பூத மய மாய்த் தோற்றல் போகாதது ஏதெனவே!

    இந்த உலகம் பிரம்மத்திற்கு வேறானதல்ல, பிரம்ம ஸ்வரூபமே என்றறிந்த பின்னரும், பஞ்சபூத வடிவமாகத் தோன்றுதல் மறைந்து போகாது எதனால்? என அர்ஜுனன் கேட்க,

பாடல் 83: கானல் நீர் போல் தெரிகிறது!

கானலை நீரென்றோடிக் கண்டவர்க்குத் தீர்ந்த பின்னும்

வானுலவு நீராகி வயங்குதல் போல் என்றவரோ!

    கானல் தோற்றத்தை நீரென்று கருதி அருகில் சென்று பார்த்தவருக்கு, அது நீரில்லை என்று தெரிந்த பின்னரும், காட்சியில் வானிலிருந்து பொழிந்த மழைநீராகவே தோன்றுவது போல, என்றருளிய பகவான் நீர்தானோ!

    கானல்நீர் உண்மையில்லை என்றறிந்த பின்னும் அங்கு நீர் இருப்பது போல தோற்றம் தெரியத்தான் செய்கின்றது. அறிவில் இல்லை; தோற்றத்தில் இருக்கின்றது. அதைப் போல உலகமும் உண்மையில்லை என்றறிந்த பின்னும் தோற்றத்தில் இருக்கின்றது. (பிரம்மமயமே என்று அறிவில் இருக்கின்றது, தோற்றத்தில் பஞ்சபூத மயமாய் தெரிகின்றது. சூரியன் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை என்பது அறிவு, ஆனால் அனுபவத்தில் தோற்றமும் மறைவும் தெரிகிறது.)

பாடல் 84: மூன்றாயிருத்தல் வேறுபாடில்லையா?

அறிவானும் நல்லறிவும் அறியப் படும் பொருளும்

பிறிவாய் மூன் றாயிருத்தல் பேதமலவோ வெனவே.

    அறிபவனும், நல்ல அறிவும், அறியப்படும் பொருளும் பிரிந்து மூன்றாக இருத்தல் வேறுபாடு இல்லையா? என அர்ஜுனன் கேட்க,

    அறிவு, அறியப்படும் பொருள், அறிவு இந்த மூன்றிற்கும் திரிபுடி என்று பெயர். மூவகை வேறுபாடுகள். ஆத்மாவுக்கு வேறாக ஒன்றுமில்லை என்றால் இவ்வேறுபாடுகள் அனுபவத்தில் இருக்கின்றனவே, என்பது கேள்வி.

பாடல் 85: தோன்றினாலும் உண்மையில்லை!

சொப்பனத்தில் தனித்தொருவன் தோற்றம் வேறு இல்லை யங்கே

கற்பனையாம் பொருளறிவு காண்பவன்போல் என்றவரோ!

    தனியே ஒருவன் உறங்கும்பொழுது கனவில் காணப்படும்பொருள், அறிவு, காண்பவன் மூன்றும் வேறுவேறாகத் தோன்றுவது போலக் கண்டாலும், அவை மனதிற்கு வேறாக இல்லை. (நனவிலும் இம்மூன்றும் வேறுவேறாகத் தோன்றினாலும் உண்மையில் ஆத்மாவிற்கு வேறாக இல்லை) என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 86: பேதங்களை மறப்பது எப்படி?

கற்பனையாம் பேதங்கள் காணாமல் போம் வகையை

விற்பனமாய் நானறிய விளம்புமெனவே வணங்க,

    கற்பனையான இந்த வேறுபாடுகள் தெரியாமல் மறைந்து போகும் முறையை நான் நன்றாக அறிந்து கொள்ளும்படி சொல்லி யருள வேண்டுமென்று அர்ஜுனன் வணங்கிக் கேட்க,

பாடல் 87: யோகத்தால் பேதம் நீங்கும்

துரியமாம் யோகத்தால் தூய மனம் லயமானால்

அரிய மூ வகை விகற்பம் அழியுமென்று சொன்னவரோ.

   நிதித்யாஸனமாகிய தியான யோகப் பயிற்சியினால் துரியமான ஆத்ம தத்துவத்தில் (விருப்பு வெறுப்புகளற்ற) தூய்மையான மனம் லயமானால் இம் மூவகை வேறுபாடுகளும் அழிந்து போகுமென்று அருளிய பகவான் நீர்தானோ!

    நிதித்யாஸனம் என்பது சிரவணத்தில் ஐயமின்றி அறிந்த ஆத்மதத்துவத்தை, தனிமையில் அமர்ந்து இடைவிடாமல் சிந்தித்தல்.

பாடல் 88: ஆத்மா தெரியாததேன்?

சிறந்திருக்கும் ஆன்மாவும் செகமெல்லாம் நிறைந்திருந்தும்

மறைந்தெனக்குத் தோன்றாத வகை யேது சொல்லுமென,

    சச்சிதானந்த வடிவமாய் சிறப்புடன் விளங்கும் ஆத்மா, உலகமெங்கும் பரவியிருந்தாலும் எனது மனதிற்கு இதுநாள்வரை விளங்காமலிருந்த காரணம் என்ன? சொல்லுங்கள் என்று அர்ஜுனன் வினவ,

பாடல் 89: உலகம் மறைத்திருக்கிறது!

சத்துச்சித்தா னந்தம் தாம் மூன்றும் அதனுடனே

ஒத்துற்று நாம உருவம் சகமாகி,

    சச்சிதானந்தம் ஆத்மாவின் சொரூப இலக்கணமாகும். இந்த மூன்றுடனே பெயரும் வடிவமும் சேர்ந்து உலகமாகி (இருக்கின்றது.)

பாடல் 90: நாம ரூபம் மறையத் தெரியும்!

இருக்கையினில் தோன்றாது இவை மூன்றும் பிரமமென

மரிக்கில் வரும் பின்னிரண்டு மரிசகமென்று உரைத்தவரோ!

    (நாமரூபங்களோடு) இருக்கையில் சச்சிதானந்தம் மூன்றும் பிரம்மம் என்று தெரியாது. அழிகின்ற உலகமானது நாமரூபம் மாத்திரம் (என்று குரு வாயிலாக வேதாந்த நூல்களைச்) சிந்தித்து நீக்குகின்றபொழுது தெரியும், என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 91: ஆத்மா அறியப்படும் பொருள் ஆகுமா?

அறிந்து கொள் ஞானத்தாலே ஆன்மாவை என்றுரைத்தீர்

சிறந்தொளிரும் ஆன்மாவும் திருசியமாமோ எனவே.

    ஞானத்தினாலே ஆத்மாவை அறிந்து கொள் என்று சொன்னீர் எங்கும் வியாபித்து அறிவாய் ஒளிரும் ஆத்மாவும் அறியப்படும் பொருள் ஆகுமா? என்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 92: அஜ்ஞானம் விலக ஆத்மா தானே விளங்கும்!

முந்திய ஞானத்தாலே முதிருமஞ்ஞானம் துறக்கில்

சிந்தையில் ஆன்மாச்சுயமாய்த் திகழுமென்று சொன்னவரே.

    முதன்மையான ஆத்மஞானத்தினால் அனாதி காலமாயுள்ள அஜ்ஞானத்தை நீக்கினால், தானே ஒளிரும்  ஆத்மாவானது மனதில் விளங்கும் என்றருளிய பகவான் நீர் தானோ!

பாடல் 93 : முக்தி சுகம் எப்படி இருக்கும்?

இனியமுத்திச் சுகமிருப்பது எப்படி யென்றே வினவ

அனுபவத்திலறி விடயானந்தம் போலென்றவரோ !

இனிமையான முக்தி இன்பமானது எப்படி இருக்கும்? என்று அர்ஜுனன் வினவ, விஷயானந்தம் போல அனுபவத்தில் அறிந்துகொள், என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 94 : மனோ லயம் தான் முக்தியா?

மன லயம் வந்தவரலது மற்றிலரோ முக்தரென

சனகனை போல் சீவன் முக்தர் தாமுமுளர் எனறவரோ!

    மனம் ஒடுங்கி யோகத்தில் இருப்பவர் அல்லாது வேறு யாரும் ஜீவன்முக்தராக இல்லையா ? என அர்ஜுனன் வினவ, ஜனக மஹாராஜனைப் போல (உலக விவகாரம் செய்கின்ற) ஜீவன் முக்தர்களும் உலகில் உள்ளனர் என்ற அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 95 : ஜீவன் முக்தர் லக்ஷணம் யாது?

ஜீவன் முக்தி அடைந்தோர்கள் செயலுமவர் தம் குணமும்

நா வுரைக்கும் வாசகமும் நானறியச் சொல்லுமென.

    ஜீவன் முக்தி அடைந்தவர்களுடைய செயல்களும், அவர்களுடைய நற் குணங்களும், அவர்கள் பேசுகின்ற வார்த்தைகளும் நான் அறிந்து கொள்ளும்படி உபதேசித்தருள வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 96 : அனைத்தும் உடலுக்கு என்றிருப்பார்?

வரும் கருவு பிறப்பினொடு வளர்தல் பருத்தல் குறைதல்

ஒருங்கலும் மெய்க்கு என்றதனைப் ஒறுத்திருப்பார் என்றவரோ!

    வினைப் பயனுக்கு ஏற்ப வரும் கர்ப்பத்தில் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், அழிதல் என்னும் ஆறு மாறுபாடுகளும் உடலுக்கே என்று அதனைப் பற்றாது விலகியிருப்பார் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 97: செயல்கள் அனைத்தும் கரண தர்மங்கள்!

பார்ப்பதுவும் கேட்பதுவும் பகர்வதுவும் செல்வதுவும்

ஏர்ப்பதுவும் கரண தன்மம் எனப் புகல்வார் என்றவரோ!

    பார்த்தலும் கேட்டலும் பேசுவதும் நடப்பதும் வாங்குவதுமான அனைத்தும் ஞான, கர்ம இந்திரியங்களின் செயல்கள் என்று சொல்லுவார் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 98: உணர்ச்சிகள் எல்லாம் மனதின் தர்மங்கள்!

பசி தாகம் உயிர்க்கெனவே பயந்துக்கம் சுகங்காமம்

வசிகோபம் மதிக்கெனவே மகிழ்ந்திருப்பார் என்றவரோ!

பசியும் தாகமும் பிராணனுக்கென்றும், பயம், துக்கம், சுகம், காமம், குற்றமுடைய கோபம் போன்றவை மனதிற்கென்றும், (ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை என்று) எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பார் ஜீவன் முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 99: தாமரை இலை நீர் போல் வாழ்வர்!

வீடும் தாரமும் உறவும் மேவியென்றும் இருந்தாலும்

நீடுந்தாமரை இலை நீர் நிகராவார் என்றவரோ!

    வீடும் மனைவியும் மற்ற உறவுகளும் சேர்ந்து இருந்தாலும் தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் பற்றற்று வாழ்வர் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 100: புளியம்பழமும் ஓடும் போல் வாழ்வர்!

பற்றிடும் காயமும் தானும் பன்னாள் ஒன்றாயினும்

பினுற்ற புளியம் பழமும் ஓடுமொப்பார் என்றவரோ!

    அஞ்ஞான காலத்தில் தானென்று பற்றிடும் உடலும், ஆத்மாவாகிய தானும் பலகாலம் ஒன்றாக சேர்ந்திருந்தாலும், ஞானமடைந்த பின்னர், புளியம்பழமும் அதன் ஓடும் போல பந்தமில்லாமல் வாழ்வர் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 101: ஒட்டாமல் வாழ்வர்!

கூறும் உலகியற்கையுடன் கூடினும் மெய்ஞானம் வந்தோர்

சேறும்பிள்ளைப் பூச்சியும்போல் திரிவர்காண் என்றவரோ!

    மெய்ஞ்ஞானம் உள்ள ஜீவன்முக்தர், பெரியோர்கள் கூறுகின்ற உலக வழக்கத்துடனே சேர்ந்து வாழ்ந்தாலும், சேற்றில் திரிகின்ற பிள்ளைப்பூச்சி போல் ஒட்டாமல் வாழ்வர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 102: கலங்காமல் வாழ்வர்!

ததியூடு கடைந்த வெண்ணெய் தான் மோரில் கிடப்பது போல்

மதியோடு கூடினும் பின் மயங்கார் காண் என்றவரோ.

    தயிரைக் கடைந்து வந்த வெண்ணெய், மோரின் மேல் கலத்தல் இன்றி இருப்பது போல, (ஆத்மா அநாத்ம விவேகம் செய்து ஆத்மாவைப் பிரித்தறிந்த பின்னர், பிராரப்தம் இருக்கும்வரை) மனதோடுகூடி காரியங்களைச் செய்யினும், மனதைத் தான் என்று மயங்க மாட்டார் ஜீவன் முக்தரென அறிந்து கொள்வாயாக, என்றருளிய பகவான் நீர்தானோ‌!

பாடல் 103: புண்ணியரே கண் வளரீர்!

அருச்சுனன் தன் பொருட்டாக அனைவருக்கும் ஞானம் வரப்

பொருந்திய தேசிக வடிவாம் புண்ணியரே கண் வளரீர்!

    அர்ஜுனனின் நிமித்தமாக அனைத்து முமுக்ஷுக்களுக்கும் மெய்ஞ் ஞானம் உண்டாகும் விதமாக (உபநிஷத் தத்துவத்தை) உபதேசிக்க  குரு வடிவாக வந்த புண்ணியரே துயில்வீராக!

பாடல் 104: பேரொளியே கண்வளரீர்!

ஆயர்குல மாதரளவுலோ ரைப் புணர்ந்தும்

தூய பதி னாறு ஆயிரவருடன் தோய்ந்து இருந்தும்,

இடையர் குலப் பெண்கள் பலரோடு சேர்ந்திருந்தும், தூய்மையான பதினாறாயிரம் ராஜகுல மங்கையரோடு கலந்திருந்தும்,

பாடல் :105

பரம முனிவர் முன்னே பரிச்சித்தைத் தீண்டியன்று

பிரம சரி யம் செலுத்தும் பேரொளியே கண் வளரீர்.

    அந்நாளில் (உயிரற்ற குழந்தையாய் இருந்த) பரீக்ஷித்தை, மேலான முனிவர்கள் முன்னிலையில், “நான் நித்ய பிரம்மச்சாரி” என்று சொல்லித் தொட்டு உயிர்கொடுத்த சைதன்ய ஸ்வரூப ஜோதியே கண்ணுறங்கு!

    பகவான் லீலையாய் பல பெண்களோடு இருந்தாலும் ஆத்ம தத்துவத்தை ஒரு நாளும் மறவாமல் இருந்ததே பிரம்மச்சர்யம். உலக விவகாரங்கள் எப்படி இருந்தாலும் ஆத்மா நிர்விகாரம் என்று மனதில் மாறுபடாமல் இருப்பதே முக்திநிலை என்பதை உணர்த்துவதே தாத்பரியம்.

பாடல் 106: கேட்டோர் முக்தி பெறுவர்!

ஆதி மூ லம் விசயற்(கு) ஆதி மறை யின்பொருளை

ஓதி உணர்த்திய இவ் வுண்மையினைக் – காதலுற்றுக்

கற்றோரும் கேட்டோரும் காசினியில் வாழ்ந்து முக்தி

பெற்றோர்கள் முத்தர் பெறும் பேறு!

    அனைத்திற்கும் முதற் பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா  பழமையான வேதத்தின் பொருளை அர்ஜுனனுக்கு உபதேசித்து உணர்த்திய இந்த மெய்ப் பொருள் உண்மையினை, ஆவலுடன் குரு வாயிலாகக் கற்பவர்களும் கேட்பவர்களும், உலகத்தில் ஜீவன் முக்தர்களாய் வாழ்ந்து, முக்தி பெற்றோர்கள் பெரும் பேரான விதேக கைவல்யம் பெறுவார்கள்.

ஸ்ரீ  திருவேங்கட நாதர் அருளிய  ஸ்ரீ  கீதாசாரத் தாலாட்டு முற்றிற்று

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

தமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு–முனைவர் மு.பழனியப்பன்

January 22, 2023

பக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக  உயிர்க்கான நிறைநிலையான பிறவாமையை அடைவது, அறிவுக்கான நிறைநிலையான ஞானத்தை அடைவது என்பன குறிக்கோள்களாக விளங்குகின்றன. தமிழகத்திலும், கேரளத்திலும் கிருஷ்ண பக்தி என்பது கலை சார்ந்த நிலையில் வளர்ந்து வருகிறது. குழந்தையாகக் கண்ணனைப் பாவித்து அவனது ஆடல்களை, ஆட்டுவிப்புகளைப் புகழ்வது, அவனைச் சரணடைவது என்பன கிருஷ்ண பக்தி நூல்களின் பொதுப்பண்புகளாக விளங்குகின்றன.

கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தியாளர் பூந்தானம் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரின் குடும்பப் பெயர் பூந்தானம் என்பதாகும். அதுவே இவர் பெயராகவும் ஆகிவிட்டது. இவர் ஓரளவிற்கு கற்றவர். வேதப்பயிற்சி, இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகளை ஓரளவு பெற்றவர். இவர் எழுதிய மலையாள மொழி சார்ந்த வேதாந்த நூல் ‘‘ஞானப்பானா” என்பதாகும். ஞானத்தைப் பற்றிய பானா (பானை) என்ற கவிவடிவத்தில் எழுதப்பெற்ற நூல் இதுவாகும். இது பூந்தானத்தின் மகன் மறைவின்போது ஏற்பட்ட பற்றற்ற தன்மையின் காரணமாகப் பாடப்பெற்ற நெடும்பாடல் ஆகும். இது முன்னூற்று ஐம்பத்தாறு அடிகளை உடையது. ‘‘உலக வாழ்வு அர்த்தமற்றது. கலிகாலத்தில் மக்கள் இறைசிந்தனையைப் பெருக்கிக்கொள்ளவேண்டும். விஷ்ணு நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும். எவரும் கர்மபலனை அடைந்தே தீரவேண்டும்” போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கிறது. வேதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பனுவல் எழுதப்பெற்றுள்ளது. இந்நூல் மலையாள மொழி சார்ந்தது. அதிகம் வடமொழி கலப்பில்லாத பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் நடை சார்ந்த பனுவலாக இது விளங்குகிறது. பல பாடல்கள் பகுதிகள் தமிழாகவே உள்ளன.

தமிழகத்தில் தோன்றிய வேதாந்த நூல்களுள் ஒன்று கீதாசாரத் தாலாட்டு என்பதாகும். திருவேங்கடநாதர் என்ற தொண்டை நாட்டு மன்னர் எழுதிய நூல் இதுவாகும். தன் மகளுக்குக் குழந்தை பிறக்கவேண்டி இத்தாலாட்டைப் பாடித் தந்ததாகவும். இத்தாலட்டைப் பாடி இவரின் மகள் குழந்தை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நூலும் கர்ம பலன், அதனை அனுபவிக்கும் தன்மை, அதனின்று மீளும் தன்மை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. இது நூற்றி மூன்று கண்ணிகளை உடையது. மொத்தம் இருநூற்று ஆறு அடிகளைக் கொண்டது. தமிழ்க்கவிதை வடிவில் எழுதப்பெற்றுள்ள இந்நூல் பகவத்கீதையின் கருத்துகளை எடுத்துரைப்பதாக உள்ளது. அர்ச்சுணன் எழுப்பும் வினாக்களுக்கு விடை பகரும் நிலையில் கிருஷ்ணர் சொன்ன பதில்களாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.

இவ்விரு நூல்களில் காணப்படும் கருத்துகளை ஒப்பாய்ந்து உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

கீதையே அடிநாதம்

பூந்தானம் எழுதிய ஞானப்பானாவிற்கும், திருவேங்கடநாதர் எழுதிய கீதாச்சாரத்தாலாட்டிற்கும் அடிப்படையாக அமைவது பகவத் கீதையேயாகும். பூந்தானம் ‘‘கீதையும் வேதங்களும் பரந்தாமன் புகழைப் பாடினால் மட்டுமே முக்தி” என்று உரைக்கின்றன (ஞானப்பானா 60) என்று பாடுகிறார்.

‘‘திருத்தேரில் சாரதியாய்ச் சேர்ந்து இருந்தும் கீதையினால்

அருச்சுனற்கு மெய்ஞ்ஞானம் அனைத்தும் உரை செய்தவரோ

செஞ்சமரில் பந்துசனம் சேதம்வரும் என்று இரங்கி

அஞ்சினவன் பயம் தீர்த்தே அமர்செய்யச் சொன்னவரோ’’

(கீதாச்சாரத் தாலாட்டு- 2,3)

என்று திருவேங்கடநாதர் பாடுகிறார். இருவரும் கீதையின் கருத்துகளை உள்வாங்கித் தன் நூல்களைப் படைத்துள்ளனர் என்பது இதன்வழி தெரியவருகிறது.

இறைவன் திருநாமம்

இறைவன் திருநாமமே முக்தி தரும்  என்பதை இரு கவிஞர்களும் காட்டியுள்ளனர்.

பூந்தானம் பல இடங்களில் இறை நாமங்களைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்.

‘‘குருநாதன் துண செய்க சந்ததததம்

திருநாமங்கள் நாவின்மேல் எப்போதும்

பிரியாதே இருக்கணும் நம்முடே

நரஜன்மம் சப்கால மாக்கிடுவன்” (ஞானப்பானா- 1)

என்றும்

‘‘கிருஷ்ணா, கிருஷ்ணா, முகுந்தா, ஜனார்த்தனா

கிருஷ்ணா, கோவிந்தா, ராமா என்னின்ஜினெ

திருநாம சங்கீர்த்தனம் எண்ணியே”  (ஞானப்பானா-28)

என்றும்

இறைவன் நாமத்தை எண்ணிக்கொண்டே இருக்கிறார் பூந்தானம். குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை வணங்குவது, பகவத் விஷயங்களைச் சொற்பொழிவாற்றுவது என்று தன் வாழ்வை இறைமயமாக ஆக்கிக் கொண்டவர் பூந்தானம்.

இறைவனைக் குருவாகக் காண்கிறார் பூந்தானம். திருவேங்கடநாதரும் அதே நிலையைப் பாடுகிறார்.

‘‘சீர் ஆரும் பரமார்த்த தெரிசனத்தை அருள் செய்யப்

பேர்ஆரும் தேசிகனாய்ப்  பெருமாளே வந்தவரோ” (கீதாச்சாரத் தாலட்டு- 1)

இறைவன் தேசிகனாய் அதாவது ஆசிரியனாய் வந்து அருச்சுணருக்குப் பரமார்த்த தரிசனத்தைத் தந்து அருளினார்  என்பதை மேற்காணும் பாடலடிகள் காட்டுகின்றன.

எந்நேரமும் குருநாதன் துணை அருள் செய்யட்டும் என்னும் பூந்தானத்தின் வாக்கும், இறைவனே குருவாக வந்து காட்சி தருவான் என்ற திருவேங்கடநாதர் கூற்றும் இவ்வகையில் ஒன்றிணைகின்றன.

ஆசை மனம்

மனதில் ஏராளமாக ஆசைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவே நிகழ்காலத்தில் நிறைவேறுகின்றன. பல ஆசைகள் முடிவு பெறாமலே, அடையப் பெறாமலே தொக்கி நிற்கின்றன.

ஆசையின் அளவினைப் பற்றி ஞானப்பானா பின்வருமாறு பாடுகிறது.

‘‘பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்

சதமாகில் சகாஸ்கரம் மதி என்னும்

ஆயிரம் பணம் கையில் உன்கும்போல்

ஆயுதமகில் ஆச்சர்யம் என்னுதம்

ஆசையுள்ள பாசம் மதிஞ்சன்னு” (ஞானப்பானா- 38)

ஆசை என்ற கயிறு உள்ளத்தைக் கட்டி வைத்திருக்கிறது. பத்து கிடைத்தால் நூறு கிடைக்குமா என்று எண்ணுகிறது. நூறு கிடைத்தால் ஆயிரம் வந்தால் போதும் என்கிறது. ஆயிரம் வந்தால் அதைவிட அதிகமாக எண்ணுகிறது. இதுவே மனதின் இயல்பாக உள்ளது என்று பூந்தானம் மனவாசையின் அளவை அளக்கிறார்.

இதனைத் திருவேங்கடநாதர், ஆசை என்னும் களங்கம் உள்ளத்தை அழுக்காக்குகிறது என்கிறார்.

‘‘சுத்தபடிகம் போல் சொரூபமாய்த் தான் இருக்க

மெத்தவும் ஆசாமலினம் மேவியது என் சொல்லும் என”

(கீதாச்சாரத்தாலாட்டு- 33)

கலங்கமில்லாத பளிங்கு போல் உள்ள மனத்தை ஆசை என்னும் அழுக்கு பற்றுவது ஏன் என்று அருச்சுணன் கிருஷ்ணரிடம் வினவுகிறான்.

அதற்குக் கிருஷ்ணர்  பின்வருமாறு பதிலுரைக்கிறார்.

‘‘ அநாதியாம் வாசனையால் அடைந்தது ஆசாமலினம்

மனோபந்தம் இருக்கில் முத்தி வாராது என்று உரைத்தவாரே”

(கீதாச்சாரத்தாலாட்டு, – 34)

தொன்று தொட்டு வரும் பழைய கருமங்களின் வாசனையால் ஆசையாகிய களங்கத்தை ஆன்மா பெற்றது. மனதில் ஆசை, பாசம், இன்பம், துன்பம் இருக்குமானால் வீடுபேறு கிடைக்காது என்பது கிருஷ்ணரின் பதில்.

இவற்றின் வழியாக தமிழ் மொழி நூலான கீதாச்சாரத் தாலாட்டும், மலையான மொழிநூலான ‘ஞானப்பானா“ வும் ஆசையின் அளவையும் அதன் இழிவையும் காட்டியுள்ளன. இது ஒப்பிடத்தக்க ஒரு பகுதியாகும்.

உலக உயிர்கள் பிறப்பு

உலகில் பல பிறவிகள் பிறக்கின்றன. அவற்றின் அளவு, தன்மை சொல்ல இயலாத அளவு பெருமை வாய்ந்தது.

‘‘இந்திரஜாலம்போல இவ்வுலகை நம்மிடத்தில்

தந்திரமாத் தோற்றுவித்தோம் சத்தியம் அல என்றவாரோ”

(கீதாச்சாரத்தாலாட்டு, 60)

இந்திர ஜால வித்தை போல இவ்வுலகம் கிருஷ்ணரால் தோற்றுவிக்கப்பெற்றது. ஆனால் இது பொய்யானது. மாயை மிக்கது என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறது கீதாச்சாரத்தாலாட்டு.

உலக உயிர்கள் பற்றியும் பாரத கண்டம் பற்றியும் சிறப்புடன் பல இடங்களில் குறிக்கிறது ஞானப்பானா.

‘‘எத்தனை ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஐன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மரங்களில் நின்னிடும்

எத்தனை ஜன்மம் மரித்து நடன்னதும்

எத்தனை ஜன்மம் பரன்னு நடன்னதும்

எத்தனை ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்

மரத்திய ஜனதில் மும்பே கழிஞ்சதும்” (ஞானப்பானா- 32)

என்று மலம், ஜலம், மண், மரம், பறவை, விலங்கு, பசு போன்றனவாய் முற்காலத்தில் பிறந்து இளைத்தோம் என்கிறார் பூந்தானம்.

மேலும் பாரத கண்டத்தை அவர் நலமான பூமி என்று விவரிக்கிறார். இதனில் பிறப்பதால் சாதாரண மனிதன் புனித ஆன்மாவாக ஏற்றம் பெறுகிறான் என்கிறார்.

‘‘ ………மற்றுள்ள லோகங்கள்

மற்ற பதிமூன்று லோகங்கள்

பதின் மூன்றிலுள்ள ஜனங்கள்

மற்று தீவுகள் ஆறில் உள்ளோரும்

மற்று கண்டங்களில் உள்ளோரும்

மற்று மூனு யுகங்களில் உள்ளோரும்

முக்தி தங்களுக்குச் சாத்யம் அல்லாயாகையால்

கலிகாலத்தில பரத கண்டத்தில்

கலிதடராம் கை வணங்கினு”(ஞானப் பானா – 29)

என்ற பகுதியில் பரதகண்டம் பற்றிப் பூந்தாம் குறிப்பிடுகிறார். உலகங்கள் பதினான்கு என்பது உலக வழக்கு. அவற்றில் பூமி ஆகிய இவ்வொன்று நீங்கினால் பதிமூன்று உலகங்கள். மொத்தத் தீவுகள் ஏழு. அதில் இதனை விடுத்தால் மற்றவை ஆறு. யுகங்கள் நான்கு. அவற்றில் இக்கலியுகம் நீங்கினால் மற்றவை மூன்று யுகங்கள். இந்நிலைப்பாட்டில் பரத கண்டத்தில் உயிர்கள் மட்டுமே ஞானத்தை, இறைபாதத்தை அடைய வழி தெரிந்தவர்கள். ஆகவே இக்காலம் நன்று. இவ்வுலகம் நன்று. இதனில் முக்தி வழி தேடுவோம் என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறார் பூந்தானம்.

கருமம் பற்றிய கருத்துகள்

இந்தப் பூமியில் பிறப்பும் இறப்பும் உயிர்கள் செய்த முன்பிறவி செயல்களால் ஏற்படுகின்றன என்பதை இரு நூல்களும் ஏற்கின்றன. திருவேங்கடநாதர்

‘‘இத்தரையில் பிறந்து இறப்பது எடுத்த உடற்கு அடுத்த பொறி

நித்தியம் ஆகிய ஆன்மா நின் சொரூபம் என்றவாரோ”

(கீதாச்சாரத் தாலாட்டு- 8)

உயிர்கள் முன் பிறவிச் செயலின்படி இத்தரையில் பிறப்பது இறப்பது ஆகியன நடக்கின்றன என்கிறார் திருவேங்கடநாதர்.

கீழ் மேலன்ஜினி மண்டுன்ன ஜீவன்மார்

பூமியினாத்ரே நீடுன்னு கர்மங்கள் (ஞானப்பானா- 18)

என்று இரு பக்தியாளர்களும் முன்வினைக் கரமங்களே இப்பிறவிக்கு உயிர்களை ஆளாக்கியது என்கின்றனர்.

இருவரில் பூந்தானம் மனிதப் பிறவியே மகத்தான பிறவி. இப்பிறவி பிறந்தால் மட்டுமே முக்தி அடைய இயலும். குறிப்பாக இந்தக் கலிகாலத்தில், பதினான்கு உலகங்களில் இந்த உலகு மட்டுமே மோட்சத்திற்கு வழிகாட்டும் உலகம் என்கிறார்.

” யுகம் நாலிலும் நல்ல கலியுகம்

சுகமே தானே முக்தி வருதுவன்” ( ஞானப்பானா- 27)

என்று இக்காலத்தை ஞானத்தின் காலமாகக் காட்டி நம்பிக்கை அளிக்கிறார் பூந்தானம்.

குழந்தை மையம்

ஞானப்பானா, கீதாச்சாரத்தாலாட்டு இரண்டுமே குழந்தைகளை மையமிட்டவை. ஞானப்பானா பூந்தானம் அவர்களால் அவரின் மகன் இறந்த நேரத்தில் பாடப்பட்ட சோகராகம். பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்திய பூந்தானம்  குருவாயூரப்பனை வேண்டி மகன் பெறுகிறார். அம்மகனுக்கு முதல் சோறூட்டல் நிகழ்ச்சி மிகப் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. பலரும் கூடுகின்றனர். குழந்தை ஓர் அறையின் மூலையில் படுத்துகிடக்கிறது. இக்குழந்தை படுத்துக் கிடப்பது தெரியாமல் யாரோ அதன் மீது பெருத்த துணிக்குவியலைப் போட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக அக்குழந்தை மூச்சு திணறி இறக்கிறது. இதனால் சோகம் அடைகிறார் பூந்தானம். அவர் குருவாயூரப்பனை வேண்டிய இப்பிறவி சுகமெல்லாம் பெருமானை அடைவதே என்று சரண் புகுகிறார். இதன் காரணமாக குருவாயுரப்பனே ‘நானே உன் குழந்தை எங்கே உன் மடி” என்று இறங்கி வந்ததாகச் செவிவழிக்கதை கேரளத்தில் விளங்கிவருகிறது. இவ்வகையில் ஞானப்பானா படைக்கப்பெற்றுள்ளது.

திருவேங்கடநாதருக்கு இரு பெண்பிள்ளைகள். ஒரு பெண்ணிற்குக் குழந்தை பிறக்க மற்றொருத்தி குழந்தை இன்றித் தவித்தாள். அவளிடம் ஒரு கண்ணன் உருவைத் தந்தார் திருவேங்கடநாதர். பின்பு அவளுக்காக கண்ணன் மீது ஒரு தாலாட்டைப் பாடினார். அவ்வாறு பாடப்பெற்ற பாடல் கீதாச்சாரத்தாலாட்டு. இத்தாலாட்டினைப் பாடி அப்பெண்மகள் மகன் பெற்றாள் என்பது செவிவழிக்கதை.

குழந்தை கிருஷ்ணனை மையப்படுத்தி குழந்தை கருதி பாடப்பட்ட பாடல்கள் இவையிரண்டும். இப்பொதுமை இந்நூல்களில் பரக்கக் காணப்படுகிறது.

‘‘உன்னிக் கிருஷ்ணன் மனசில் களிக்கும்பால்

உன்னிகள் மது வேணுமோ மக்களே

மித்ரங்கள் நமக்கேத்ரா சிவ சிவா

விஷ்ணுபக்தன் மாரிலே புவனத்தில்” (ஞானப்பானா- 51)

என்று குழந்தை வரம் வேண்டுவோர்க்கு ஆறுதல் தருகிறது ஞானப்பானா.

‘‘அருச்சுனன்தன் பொருட்டாக அனைவருக்கும் ஞானம்வரப்

பொருந்தியதே சிகவடிவாம் புண்ணியரே கண் வளரீர்

பரமமுனிவர் முன்னே பரிச்சித்தைத் தீண்டி அன்று

பிரமசரியம் செலுத்தும் பேர்ஒளியே கண்வளரீர்” (கீதாச்சாரத்தாலாட்டு 103)

என்று தாலட்டு வடிவில் கண்ணனைத் தூங்க வைக்கிறது கீதாச்சாரத் தாலாட்டு . இவ்வாறு கண்ணன் என்னும் குழந்தையை இரு பக்தி நூல்களும் நம்பி அவனடி தொழுகின்றன.

மெய்மை தேடிப் புகுவோம்

இரு  பக்தியாளர்களும் மாயை நீங்கி மெய்மை நோக்கிப் பயணிப்போம் என்ற கொள்கை உடையவர்களாக உள்ளனர்.

‘‘கூடியல்லோ பிறக்குன்னா நீரதும்

கூடியல்லோ மரிக்குன்னா நீரதும்

மத்தியே இங்ஙனே கன்னுன்னா நீரது

மட்சரிக்குன்னது என்தின்னு விர்தா?” ( பூந்தானம், 49)

என்று பிறப்பின் இறப்பின் தனிமையைச் சுட்டுகிறது ஞானப்பானா. நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் கூடிப் பிறக்கவில்லை. ஒன்றாய்க் கூடி இறக்கவும் முடியாது. ஒவ்வொருவரும் இறப்பினைத் தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மத்தியில் நாம் இணைந்திருக்கிறோம். ஏன் மற்றவர்களோடு தேவையின்றிப் போட்டிபோடுகிறீர்கள் என்று மெய்ம்மை நாடுகிறது ஞானப்பானா.

‘‘நீர்போலே போலே உள்ளொரு தேகத்தில்…..

நீர்த்துப் போகும் அதினி பறையாவு” (ஞானப்பானா 35)

என்று மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இறைசிந்தனை அந்தக் குமிழிக்குள் இல்லாமல் போகுமானல் எந்நேரமும் வாழ்க்கை என்னும் நீர்க்குமிழி உடையலாம் என்று பூந்தானம் குறிப்பிடுகிறார்.

இதே உவமையை கீதாச்சாரத்தாலாட்டிலும் காண முடிகிறது.

‘‘ பரம் ஏகம் ஆயும் அதில் பல சீவர் ஏது எனவே

ஒரு கடலில் பல குமிழி உதிப்பதுபோல் என்றவாரோ”

(கீதாச்சாரத்தாலட்டு, 77)

கடலில் காற்றால் பல நீர்க்குமிழிகள் ஏற்படுவதுபோல் பல சீவன்கள் தோன்றுகின்றன என்று இருவரும் மனித வாழ்விற்கு உவமையாக நீர்க்குமிழியைக் கையாண்டுள்ளனர்.

கிடைத்த மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக மாற்றாமல் மனித குலம் அழிகிறதே என்ற மிகவும் வருத்தப்படுகிறார் பூந்தானம்.

‘வித்யா கொண்டு அறியந்தது அறியாதே

வித்வான் எண்டு நடிக்கன்னு சிலர்

குங்குமந்திந்தி வாசம் அறியாதே

குங்குமம் சுமக்கும் கழுதை’ (ஞானப்பானா 43)

என்று மனிதவாழ்வின் இயல்வினைச் சுட்டுகிறானர் பூந்தானம். பூந்தானம் தன் காலத்தவரான நாராயண பட்டாத்திரியிடம் தன் ஞானப்பானாவைக் காட்டி அதனைத் திருத்தம் செய்து தரக் கூறுகிறார். ஆனால் அப்பண்டிதர் பூந்தானம் சரியான கல்வியறிவு அற்றவர் என்பது கருதி அவரைப் புறக்கணிக்கிறார். இது பூந்தானத்தின் மனதில் பெருத்த வருத்தத்தை அளிக்கிறது.

நாராயண பட்டாத்திரி இதே நேரத்தில் நாரயணீயம் என்ற நூலை எழுதி வந்தார். பூந்தானத்தைப் புறக்கணித்த அன்று அவர் நாராயணீயம் சொல்லச் சொல்ல ஒரு சிறுவன் அதனை எழுதிக் கொண்டிருந்தான். அன்றைய முதல் பாடல் முடிந்ததும் ஒரு தவறு உள்ளது என்று அச்சிறுவன் சுட்டிக்காட்டினான். இரண்டாம் பாடல் எழுதிய போது இரண்டு தவறுகள் உள்ளன என்றான் அச்சிறுவன். அவற்றைத் திருத்த முற்பட்டார் பண்டிதர். இவ்வாறு பத்துப் பாடல்கள்தான் அன்று எழுதப்பட்டது. அப்பாடல் ஒவ்வொன்றிலும் அப்பாடல் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் தவறுகள் எழுந்தன. இதன் புதிரை அறிந்து வந்த சிறுவன் குருவாயூரப்பன் என்று எண்ணி அவனிடம் மன்னிப்பு வேண்டி பூந்தானத்தின் பக்திச் சிறப்பை ஏற்றார் பண்டிதர்.

இதன் காரணமாகவே வித்வான் என்று நடிக்கிறார்கள் சிலர் என்று எழுதுகிறார் பூந்தானம்.

மேலும் மனித வாழ்வில் எவ்வளவு நாள் அறிவின்றி இழந்தோம் என்ற கணக்கையும் தருகிறார் பூந்தானம்.

‘‘பத்துமாதம் வயித்தில் கழிஞ்சுபோயி

பத்து பதிரெண்டு உன்னியாய் ஆட்டம் போயி

தன்னிதான்  அறியாதி கழிஞ்சுன்னு” (ஞானப்பானா 33)

என்ற கால விரயம் கவிதையாய் பூந்தானம் வழி வெளிப்படுகிறது. இவ்வாறு இவ்விரு நூல்களும் மெய்ஞ்ஞானம் தேடிப் பயணிக்கின்றன.

பூந்தானம் நாள் என்று மலையாள கும்ப மாதத்தில், அசுவதி நட்சத்திரத்தில் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஞானப்பானா ஓதப்பெறும். மேலும் பூந்தானம் பிறந்த வீட்டில் ஐந்துநாள் இலக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட நாள் ஞானப்பானாவில் பூந்தானத்தால் சுட்டப்பெறுவதால் இந்நாள் பூந்தான நாளாகக் கொண்டாடப்பெறுகிறது.

கீதாச்சாரத்தாலாட்டு கோவிலூர் வேதாந்த மடத்து நூல்களுள் ஒன்றாக இன்றும் பயிலப்பெற்று வருகிறது. வேதாந்த விளக்கங்களை அறிய முற்படும் தொடக்க நிலையாளர்களுக்கு இந்நூல் முதன்முதலாக சொல்லித்தரப்படும். பதினாறு வேதாந்த நூல்களை ஒருங்கிணைத்து வேதாந்த பாடங்கள் கோவிலூர் முத்துராமலிங்கரால் அமைக்கப்பெற்றன.

இவ்வகையில் இவ்விரு நூல்களும் தற்காலத்தில் பக்தி இலக்கியங்களாக இருமொழிகளிலும் அமைந்து விளங்கி வருகின்றன. இப்பிறவி கொண்டு முக்தி அடையும் வேதாந்தநிலையை இவ்விரு நூல்களும் காட்டுகின்றன.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ஸ்வாமி பூந்தானம் அருளிச் செய்த -ஸ்ரீ ஞானப்பான –

January 22, 2023

இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது.

இது ஞான ஊற்று என்பதுதான். ஊற்று என்பதால் இது பானம்-அள்ளிப் பருக வேண்டிய பானம்-ஞான பானம்  மொத்தம் 91 கிருதிகள் இருந்தன

தன்னுடைய மகன் மரணத்தின் சோகத்தைத் தாங்க முடியாமல் குருவாயூரப்பனையே தன் மகனாக நினைச்சுப் பாடியதுதான் இந்த ஞானப்பானம்.

பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்டத்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், “இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.

அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார்.

உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். “நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம்.  கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது  இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது 360 வரிகளைக் கொண்டது. மலையாளத்து பகவத் கீதை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.

46,660 பேர் கூடி இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.

அவர் எழுதிய காப்பியங்கள்:

  • ஞானப் பானா
  • பாஷாகர்ணமிருதம்
  • ஆஞ்சனா ஸ்ரீதரா கிருஷ்ணா
  • அம்பாடி பைதல்
  • ஹரி ஸ்தோத்ரம்
  • ஸப்த ஸ்வர கீர்த்தனம்
  • கான ஸங்கம்
  • நீயத்ரே கோவிந்தா
  • மூலதத்வம்
  • மாயா வாமனம்( தமிழ்)
  • குரு ஸ்துதி
  • த்வாதச நாம கீர்த்தனம்
  • தச அவதார ஸ்தோத்ரம்
  • வாஸுதேவ ஸ்துதி (தமிழ்)
  • அஷ்டாக்ஷர கீர்த்தனம்

மேற்கூறியவை உட்பட ஏறக்குறைய 60 காவியங்கள் பூந்தானம் இயற்றியுள்ளார்.

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும் ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

இந்த வரிகளில் பூந்தானம் இரண்டு பதங்களை கையாண்டு நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறார். ‘மூன்றும் ஒன்றில் அடங்கிவிடுகிறது; அப்பொழுது எதுவுமே இல்லாமல் ஆகிவிடுகிறது’ எங்கிறார் பூந்தானம்.

எந்த மூன்று? எந்த ஒன்று?

ஒன்று என்பது பரமாத்மனைக்குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன்

நமது வேத உபனிஷத்துக்கள் நிறைய ‘மூன்றுகள்’ குறிப்பிட்டுள்ளது.

  • பரமாத்மா ( நிர்குணபிரம்மம், ஸகுண பிரம்மம்), பிரகிருதி( மஹா மாயா, யோக மாயா, லோக மாயா),ஜீவாத்மா
  • மும்மூர்த்திகள்
  • முப்பெரும் தேவிகள்
  • சிருஷ்டி, பாலனம், சம் ஹாரம்
  • பிரகிருதியின் முக்குணங்கள்
  • ஜீவாத்மாவின் அவஸ்தாத்ரயம்
  • ஞாதா, ஞேயம், ஞானம்
  • பூதம், நிகழ்காலம், வருங்காலம்

————————-

பாடல்

கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் –

கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் – அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் – போன ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே – ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் – எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழை மடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் – என்ன செளக்கியமோ என்று கேட்கும் – அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ – மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் – அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்

பனம் என்பது மலையாளத்தில் ஒரு வித தனிப்பட்ட ராகம். நம் ஊர் காவடி சிந்து, நொண்டிச்சிந்து மாதிரி. அந்த ராகத்தில் வார்த்தைகளை நிரப்பி பூந்தானம் எழுதிய காவியம். அவரே பாடியது. ஞானம் தானே அறிவின் முதிர்ச்சி. ஞானப்பனம் பக்தி, ஞானத்தின் ஒரு அற்புத கலவை. சிலர் பான என்பது ஒரு மண் சட்டி பானையை குறிக்கிறது. ஞானம் நிரம்பிய பானை என்பார்கள். உருண்டையாக இருந்தால் லட்டு, வில்லையாக இருந்தால் மைசூர்பாக். மொத்தத்தில் கடலைமாவு சர்க்கரை கலவை தானே.-மலையாள பகவத் கீதை என்றே பெயர் பெற்றது இந்த ஞானப்பானம்.

”பக்தி ஒன்பது வகை. ஸ்ரவணம் (கேட்பது), கீர்த்தனம் (பாடுவது, தனியாகவோ சேர்ந்தோ), விஷ்ணு ஸ்மரணம் (சதா விஷ்ணுவை நினைப்பது, அதை தான் அவர் எப்போதும் செயகிறார்), பாதசேவனம் ( திருவடி தொழல் ), அர்ச்சனம் (நாமங்களால் போற்றுவது) வந்தனம் (பூஜை வழிபாடு) தாஸ்யம் (தன்னை சேவகனாக அர்பணிப்பது) சக்யம் (நண்பனாக பகவானோடு பழகுவது), ஆத்மநிவேதனம் (உள்ளம் உடல் இரண்டோ டும் சரணடைவது). இதில் ரொம்ப சுலபமானது கேட்பது பாடுவது.
பூந்தானம் நாள் என்று மலையாள கும்ப மாதத்தில், அசுவதி நட்சத்திரத்தில் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஞானப்பானா ஓதப்பெறும். மேலும் பூந்தானம் பிறந்த வீட்டில் ஐந்துநாள் இலக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட நாள் ஞானப்பானாவில் பூந்தானத்தால் சுட்டப்பெறுவதால் இந்நாள் பூந்தான நாளாகக் கொண்டாடப்பெறுகிறது.
————-

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

குருநாதன் துணசெய்க ஸந்னதம்

திருநாமங்ஙள் நாவின் மேல் எப்பொழும்

பிரியாதெயிரிக்கேணம்  நம்முடே

நரஜன்மம் ஸபல மாயிடுவான்      (2)

குரு நாதன் துணை செய்யட்டும்
சந்ததம் திரு நாமங்கள் நாவின் மேல் எப்பொழுதும் பிரியாதே இருக்க அருளட்டும்
நமது நர ஜென்மம் ஸபலமாக்கி அருளட்டும் –

திருநாமங்கள் நாவிலிருந்து என்றும் எப்போதும் பிரியாமல் இருக்க நமது மானிடப் பிறவி சாபல்ய மடைய குருநாதன் துணை செய்யட்டும்

——–

கால லீலா–

இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா

இனி நாளேயும்  எந்தென்னறிஞ்ஞிலா

இன்னீக்கண்ட தடிக்கு  வினாசவும்

இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா     (3)

நேற்று வரை என்ன நடக்கும் என்றறியவில்லை

இனி நாளைக்கும் என்னவென்று தெரியவில்லை

இன்றிருக்கும் இவ்வுடலுக்கு அழிவும் இன்ன

நேரத்தில் மரணம் என்றும் அறிவதில்லை

சாஸ்வதமில்லாத இந்த காற்றடைத்த பை பொய்யாக மாறலாமே. ஏதோ ஒரு காரணத்தால் தான் பகவான் நமக்கு முற்பிறவி ஞாபகமோ அடுத்த பிறவி பற்றி ஏதாவதோ தெரியாமல் வைத்திருக்கிறான். நாம் வாழும்வரை நமது இப்போது நடக்கும் வாழ்க்கை பிரச்னையே பெரிய மலைபோல் இருக்கிறதே…” என்கிறார் பூந்தானம். ஒரு நல்ல யோசனை. இப்போது இருக்கிற நேரத்தில் கிருஷ்ணனை கெட்டியாக பிடித்துக்கொள்வோம். அவனிருக்க பயமேன்?

கண்டுகண்டங்ஙிருக்கும் ஜனங்ஙளே

கண்டில்லேன்னு வருத்துன்னதும் பவான்

ரெண்டு நாலு தினம் கொண்டொருத்தனே

தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்     (4)

பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைக் காண முடியாமல் செய்வதும் பகவான் ஓரிரு தினங்களில் ஒருவனைப் பல்லக்கிலேற்றி மன்னனாக்குவதும்  பகவான்

மாளிக முகளேறிய மன்னண்டெ தோளில்

மாறாப்பு கேற்றுன்னதும் பவான் (5-1)

மாடமாளிகை மேல் அமர்ந்திருக்கும்  மன்னனின் தோளில் அழுக்கு மூட்டை ஏற்றுவதும் பகவான் கண்டறிவோர் சிலர் கண்டாலும் அறியாதோர் சிலர்

கண்டுகண்டங்கிரிக்கும் ஜனங்களெ

                                    கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்

                                    ரண்டுநாலு தினம் கொண்டொருத்தனெ

                                    தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்

                                    மாளிகமுகளிலேறிய மன்னன்றெ

                                    தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்–5-1

“ நாம் தினமும் பார்த்துக் கொண்டேயிருக்கின்ற மனிதர்களை, காணாமல் பண்ணுவதும் அந்த பகவான் தான்;இரண்டு நாலு நாட்களில்  நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒருவனை பாடை மேல் படுக்கவைத்து எடுத்துச் செல்ல வைப்பதும் அந்த பகவான் தான்; மாடமாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்ற மன்னனை தோளில் துண்டு போட்டுக்கொண்டு தெருவில் நடக்க வைப்பதும் அந்த பகவான் தான்.”

——-

அதிகார பேதம்

கண்டால் ஒட்டறியுன்னு சிலரிது

கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே      (5-2)

கண்டதொன்னுமே ஸத்தியமில்லென்னது

மும்பே கண்டங்ஙறியுன்னிது சிலர்

மனுஜாதியில்த் தன்னெ பலவிதம்

மனஸ்ஸினு விசேஷமுண்டோர்க்கணம்   (6)

காண்பதேதும் நிஜமல்லஎனக் கண்டறிவோர் சிலர் மானிட ஜாதியில்  இவ்வாறு பலரும் பலவிதம் மனசுக்கு  ஓரோர் குணம் என்பதும் அறிந்திருத்தல் நலமே

பலர்க்கும் அறியேணமென்னிட்டல்லோ

பலஜாதி பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்

கர்மத்தில் அதிகாரி ஜனங்ஙள்கு

கர்ம சாஸ்த்ரங்ஙளுண்டு பலவிதம்       (7)

பலரும் அறிய வேண்டும் என்றுதானே பல வர்ண தர்மங்களைச் சொல்கின்றன சாத்திரங்கள் அவரவர் வர்ண பேதங்கள்  அனுசரித்துபாவிக்கும் மக்களுக்கு கர்ம சாத்திரங்கள் பலவுண்டு பலவிதம்

ஸாங்க்ய ஸாஸ்த்ரங்ஙகள் யோகங்ஙளென்னிவ

சங்க்யயில்லது நில்க்கட்டே ஸர்வவும்  (8-1)

———-

தத்வ விசாரம்

சுழந்நீடுன்ன ஸம்ஸார சக்ரத்தில்

உழன்னீடும் நமுக்கறிஞ்ஞீடுவான்          (8-2)

சாங்கிய சாத்திரங்கள் யோகங்கள் ஆகியவை கணக்கில் அடங்காது இருக்கட்டும் ஒரு புறம் அனைத்தும்சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரத்தில் சுழலும் நம் போன்றோர்  அறிந்து கொள்ள

அறிவுள்ள மஹத்துக்களுக்குண்டொரு

பரமார்த்தம் அருள் செய்திரிக்குன்னு

எளிதாயிட்டு முக்தி  லபிப்பானாய்

செவி தன்னிது கேள்ப்பின் எல்லாவரும்         (9)

ஞானிகளான மகான்கள்  பரம் பொருள் ஒன்றே என்றறிந்து அருளிச் செய்துள்ளனர் எளிதாய் முக்தி கிடைக்க செவி கொடுத்துக் கேட்பீரே அனைவரும்

நம்மெ ஒக்கேயும்  பந்திச்ச  சாதனம்

கர்மம் என்னறியேண்டது முன்பினால்

முன்னில் இக்கண்ட  விஸ்வம்  அசேஷவும்

ஒன்னாய் உள்ளொரு ஜோதிஸ்வரூபமாய்       (10)

நம் அனைவரையும் கட்டி இருப்பது கர்மமே என்றறிய வேண்டும் முன்னால் நாம் காணும் அகிலமெல்லாம் ஒன்றேயான ஒரு ஜோதிஸ்வரூபமே

தோற்றம் என்றால் மறைவு என்பது சொல்லாமல் தெரிவது. உண்டானது எல்லாமே இல்லாததாகிவிடும். நடுவில் சில காலம் மாயையால் சாஸ்வதமாக நிலைத்த்திருப்பது போன்ற பொய் எண்ணத்தை வளர்க்கும். எல்லாமே ஒருநாள் ஜோதி ஸ்வரூபத்தில் கலக்கும். ஆக்கம் அழிவில் நிறைவுறும். அதை தான் மஹா பிரளயம் என்போம். ஒன்று என்றும் அழியாமல் சிறிய தீபமாய் நம்முள் என்றும் இருந்து மற்ற பிறவிகளிலும் நம்மோது தொடரும் அது ஒன்றே சாஸ்வதம். அதுவே ஆத்ம தீபம். சாக்ஷியானது. ஏதோடும் இணையாமல் சேர்ந்து இருப்பது. ஒன்றே பலவாக தோன்றுவது

ஒன்னும் சென்னங்கு தன்னொடு பற்றாதே ஓன்னிலும் சென்னு தானும் வலையாதே
ஒன்னொன்னாயி நினய்க்கும் ஜனங்களுக்கு ஒன்னு கொண்டு அறிவாகுன்ன வஸ்துவாய்
ஒன்னிலும் அறியாத்த ஜனங்களுக்கு ஒன்னு கொண்டும் திரியாத்த வஸ்துவாய்
ஒன்னு போலே ஒண்ணு இல்லாத உள்ளத்தில் ஒன்னாய் உள்ள ஒரு ஜீவ ஸ்வரூபமாய்
ஒன்னிலும் ஒரு பந்தம் இல்லாததாய் நின்னவன் தன்னே விஸ்வம் சமச்சு போலே
மூணும் ஒன்னில் அடங்குன்னு பின்னேயும் ஒன்னும் இல்லைபோல் விஸ்வ மன்னேரத்த

ந தத்ர சூர்யோ பாதி, ந சந்த்ரதாரகம் நேம வித்துதோ பாந்தி குதோயமக்னி தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி

அங்கே சூரியனுமில்லை நிலவுமில்லை நக்ஷத்திரங்களுமில்லை.மின்னலும் வருவதில்லை.ஆனால் ஒளிமயமாக இருக்கிறது.எப்படி? பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் பிரமனுடைய ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது.அங்கு அது மட்டும் தான் ஒளி உமிழ்கிறது;”

பிரம்ம சூத்திரம் ஒன்றாம் அத்தியாயத்தில் இரண்டாவது சூத்திரத்திலேயே பிரம்மன் என்றால் என்ன விளக்கப்பட்டுள்ளது.

————————————-

கர்மம்
ஒன்னு கொண்டு சமச்சொரு விஸ்வத்தில் மூன்னாய் இட்டுள்ள கர்மங்கள் ஓக்கேயும்
புண்ய கர்மங்கள் பாப கர்மங்களும் புண்ய பாபங்கள் மிஸ்ரமாம் கர்மவும்
மூன்னு ஜாதி நிரூ பிச்சு காணும் போன் மூன்னு கொண்டும் தனக்குன்னு ஜீவனே
பொன்னின் சங்கல ஒன்னி பறஞ்சதில் ஒன்னு இரும்பு கொண்டு அன்னத்தேற பேதங்கள்
இரண்டினாலும் எடுத்துக் பணி செய்த சங்கல யல்லோ மிஸ்ரமாம் கர்மாவும்

மூன்னுஜாதி நிரூபிச்சு காணூம்போள்

                                                     மூன்னுகொண்டும் தளைக்குன்னு ஜீவனெ

                                                     பொன்னின்சங்கலையொன்னிப்பறஞ்சதி

                                                     லொன்னிரும்புகொண்டதனெனத்ரபேதங்கள்

                        ரண்டுனாலுமெடுத்து பணிசெய்த

                         சங்கலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்

கர்மங்கள் எதுவாக இருந்தாலும் அவை நம்மை இகலோகத்துடன் பந்திக்கிறது. நாம் பந்தத்திலிருந்து விடுபட முடிவதில்லை.கட்டிப் போடுகின்ற சங்கிலியின் தரத்தில் தான் வேறுபாடு என்கிறர் பூந்தானம்.புண்ணியகர்மங்கள் செய்யும்பொழுது நாம் நல்லது செய்தோம் என்ற திருப்தி ஏற்பட்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ‘நான்’ செய்தேன் என்ற ‘அகந்தை’ ஒளிந்திருக்கிறது பாபார்மங்கள் செய்பவர்களும் நாம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தோம் என்ற மமதையில் மிதக்கிறார்கள். ரஜோகர்மத்தை அடிப்படையாகக் கொண்ட புண்ணிய –பாப கர்மங்களின் பின்னாலும் ‘ மமதாகாரம்’ செயல்படுகிறது.இந்த செயல்கள் எதுவும் ஆத்மா செய்யாததால் ‘நான்; செய்தேன் என்ற மமதாகாரம் வரும்பொழுது அந்த ‘நான்’ ‘நானல்ல’.அது ‘தனுவான நானென்ற எண்ணத்திலிருந்து உதித்த நானாக இருக்கிறது..ஆகவே இந்த கர்மங்கள் நம்மை பௌதிக உடலுடன் பிணைத்து ‘புனரபி மரணம் ,புனரபி ஜனனம்’ என்ற சக்கரச் சுழற்சியில் சிக்க வைக்கிறது.

ஆகவே பூந்தானம் ஒரு சங்கிலி தங்கத்தால் செய்த்தென்றல் இன்னொன்று இரும்பினால் செய்தது; மற்றொன்று உலோகங்களின் கலவையில் செய்தது.எங்கிறார். நிதரிசனமான உண்மை நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பது தான். கிளிக்கு தங்க கூண்டானால் என்ன? இரும்பு கூண்டானால் என்ன? கூண்டு கூண்டு  தான்.கர்மங்கள் பந்தமே-பந்தனமே.

பிரம்மா வாதியாய் ஈச்ச எரும்போளம் கர்ம பந்தன்மார் அன்னது அறிஞ்சாலும்
புவனங்கள் ஸ்ருஷ்டிக்க என்னது புவனாந்த்ய பிரளயம் கழி வோளம்
கர்ம பாசத்தே லம் கிக்க என்னது பிரம்மா வென்னும் எளுதல்ல நிர்ணயம்
திக் பாலன் மாரும் அவ்வண்ணம் ஓரொரு திக்கு தோறும் தளச்சு கிடக்கின்னு
அல்ப கர்மிகளாகிய நாம் எல்லாம் அல்ப காலம் கொண்டோர் ஒரு ஜந்துக்கள்
கர்ப்ப பாத்திரத்தில் புக்கும் புறப்பெட்டும் கர்மம் கொண்டு களிக்குன்னது இங்கனே

——————–

ஜீவ கதி
நரகத்தில் கிடக்குன்ன ஜீவன் போய் துரிதங்களோடு ஒடுங்கி மனஸ்ஸின்டே
பரிபாகவும் வன்னு க்ரமத்தாலே நர ஜாதியில் வன்னு பிறந்திட்டு
ஸூஹ்ருதம் செய்து மேல் போட்டு போயவர் ஸ்வர்க்கத்து இங்கலிருன்னு சுகிக்கின்னு
ஸூஹ்ருதங்களும் ஓக்க ஒடுங்கும் போள் பரிபாகவும் எள்ளோளும் இல்லவர்
பரிச்சோடம் அங்கு இருன்னிட்டு பூமியில் ஜாதராய் துரிதம் செய்து சத்தவர்
வன்னொர துரிதத்தின் பலமாயி பின்னே போய் நரகங்களில் வீழு என்ன
ஸூர லோகத்தில் நின்னஒரு ஜீவன் போய் நர லோகே மஹீ ஸூ ரனாகு என்ன
சண்ட கர்மங்கள் செய்தவன் சாகும் போள் சண்டால குலத்திங்கள் பிறக்குன்னு
அசுரன் மார் சூரன் மார் ஆயிடு என் அமரன் மார் மரங்கள் ஆயிடு என்னு
அஜம் சத்து கஜமாய் பிறக்கு என்னு கஜம் சத்தங்க ஜவுமாய் ஆயிடு என்னு
நரி சத்து நரனாய் பிறக்குன்னு நாறி சத்துடனோர் அரியாய் போகுன்னு
க்ருப கூடாதே பீடிப்பிச்சீடுன்ன ந்ருபன் சத்து கிருமியாய் பிறக்குன்னு
ஈச்ச சத்தொரு பூச்சையாயீடு என்ன ஈஸ்வரன் டே விலாசங்கள் இங்கனே
கீழ் மேல் இங்கனே மண்டுன்ன ஜீவன் மார் பூமி யீன்னத்ற நேடுன்னு ஜீவன் மார்
அங்கனே செய்து நேடி மரிச்சுட னன்ய லோகங்களோர் என்னில்
சென்னிரு என்னு புஜிக்கின்னு ஜீவன் மார் தங்கள் செய்த ஒரு கர்மங்கள் தன் பலம்
ஒடுங்கிடும் அது ஒட்டு நாள் செல்லும் போன் உடனே வன்னு நேடுன்னு பின்னேயும்

தன்டே தன்டே க்ருஹத்திங்கள் நின்னுடன் கொண்டு போன்ன தனம் கொண்டு நாம் எல்லாம்
மற்று எங்கானும் ஒரேடேத்தி ருன்னிட்டு விட்டுடு என்னு பறயும் கணக்கினே

————–

பாரத மஹிமா

கர்மங்களுக்கு விளை பூமியாகிய ஜென்ம தேசம் இப்பூமி அறிஞ்ஞாலும்
கர்ம நாஸம் வருத்தேனம் எங்கிலும் செம்மே மட்டெங்கும் சாதிய நிர்ணயம்
பக்தன் மாருக்கும் முமுஷு ஜனங்களுக்கும் சக்தராகிய விஷயீ ஜனங்களுக்கும்
இச்சி சீடுன்ன டொக்க கொடுத்திடும் விஸ்வ மாதாவு பூமி சிவ சிவ
விஸ்வ நாதன் டே மூல ப்ரக்ருதி தான் ப்ரத்ய ஷேண விள்ங்குன்னு பூமியாய்
அவனீ தல பாலனத்தின் அல்லோ அவதாரங்களும் பல தோற்கும் போள்
அது கொண்டு விசேஷிச்சும் பூ லோகம் பதிநாலிலும் உத்தமம் என்னல்லோ
வேத வாதிகளாய முனிகளும் வேதவும் பஹு மானிச்சு சொல்லென்னு
லவணாம்புதி மத்யே விளங்குன்ன ஜம்பூத்தீவு ஒரு யோஜனை லக்ஷவும்
ஸப்த த்வீபுகள் உண்டதில் எத்தறயும் உத்தமமாம் என்னு வாழ்த்துன்னு பின்னேயும்
பூ பத்மத்தின்னு கர்ணிகையாய் இட்டு பூதரேந்த்ரநதி லல்லோ நில்குன்னு
இதில் ஒன்பது கண்டங்கள் உண்டல்லோ அதிலும் உத்தமம் பாரத பூ தலம்
சம்ம மதராய மா முனி ஸ்ரேஷ்டன் மார் கர்ம க்ஷேத்ரம் என்னல்லோ பற யுன்னு
கர்ம பீஜ மதீன்னு முனக்கேண்டு ப்ரஹ்ம லோகத்தி ரிக்குன்ன வர்களுக்கும்
கர்ம பீஜம் வரட்டி கலஞ்சுடன் ஜென்ம நாஸம் வருத்தேனும் எங்கிலும்
பாரத மாய கண்ட மொழிஞ்சுள்ள பாரில் எங்கும் எளுதல்ல நிர்ணயம்
அத்ற முக்கியமாய் உள்ளதொரு பாரதம் இதி பிரதேசம் என்னெல்லாரும் ஓர்க் கணம்

—————–

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

——————-

கலிகால மஹிமா

இப்பிறவி பிறந்தால் மட்டுமே முக்தி அடைய இயலும். குறிப்பாக இந்தக் கலிகாலத்தில், பதினான்கு உலகங்களில் இந்த உலகு மட்டுமே மோட்சத்திற்கு வழிகாட்டும் உலகம் என்கிறார்.

” யுகம் நாலிலும் நல்ல கலியுகம்

சுகமே தானே முக்தி வருதுவன்” ( ஞானப்பானா- 27)

என்று இக்காலத்தை ஞானத்தின் காலமாகக் காட்டி நம்பிக்கை அளிக்கிறார் பூந்தானம்.

யுகம் நாலிலும் நல்லூ கலியுகம் சுகமேதன்னெ முக்தி வருத்துவான்

கிருஷ்ண கிருஷ்ண முகுந்த ஜனார்த்தன கிருஷ்ண கோவிந்த ராம என்னிங்கனெ

திருநாம ஸங்கீர்த்தன மென்னியே மற்றில்லேதுமே யத்ன மறிஞ்ஞாலும்

அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்

மற்ற பதிமூன்று லோகங்கள்

பதின் மூன்றிலுள்ள ஜனங்கள்

மற்று தீவுகள் ஆறில் உள்ளோரும்

மற்று கண்டங்களில் உள்ளோரும்

மற்று மூனு யுகங்களில் உள்ளோரும்

முக்தி தங்களுக்குச் சாத்யம் அல்லாயாகையால்

கலிகாலத்தில பரத கண்டத்தில்

கலிதடராம் கை வணங்கீடு என்ன ”(ஞானப் பானா – 29)

என்ற பகுதியில் பரதகண்டம் பற்றிப் பூந்தாம் குறிப்பிடுகிறார். உலகங்கள் பதினான்கு என்பது உலக வழக்கு. அவற்றில் பூமி ஆகிய இவ்வொன்று நீங்கினால் பதிமூன்று உலகங்கள். மொத்தத் தீவுகள் ஏழு. அதில் இதனை விடுத்தால் மற்றவை ஆறு. யுகங்கள் நான்கு. அவற்றில் இக்கலியுகம் நீங்கினால் மற்றவை மூன்று யுகங்கள். இந்நிலைப்பாட்டில் பரத கண்டத்தில் உயிர்கள் மட்டுமே ஞானத்தை, இறைபாதத்தை அடைய வழி தெரிந்தவர்கள். ஆகவே இக்காலம் நன்று. இவ்வுலகம் நன்று. இதனில் முக்தி வழி தேடுவோம் என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறார் பூந்தானம்.

அதில் வன்னொரு புல்லாய் இட்டு எங்கிலும் இது காலம் ஜனிச்சு கொண்டீடுவான்
யோக்யத வருந்தீடுவான் தக்கொரு பாக்யம் போராதே போய் அல்லோ தெய்வமே
பாரத கண்டத்து இங்கண் பிறந்த ஒரு மானுஷிற்கும் கலிக்கும் நமஸ்காரம்
என்னெல்லாம் புகழ்ந்தீடு என்னு மற்றுள்ளோர் என்னது என்தின்னு நாம் பறைஞ்ஜீடுன்னு

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

————-

என் திண்டே குறவு

காலம் இன்னம் கலி யுகம் அல்லயோ பாரதமி பிரதேசமும் அல்லயோ
நம்மள் எல்லாரும் நான்மாரும் அல்லயோ செம்மே நன்னாய் நிரூபிப்பன் எல்லாரும்
ஹரி நாமங்கள் இல்லாத போகயோ நரகங்களில் பேடி குறகயோ
நாவு கூடாத ஜென்மம் அது ஆகாயோ நமக்கு இன்னி விநாசம் இல்லாய் கயோ
கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே சுட்டுக் தின்னுன்னு ஜென்மம் பழுதே நாம்

———–

துர்லபமாய மனுஷ்ய ஜென்மம்

‘‘எத்தனை ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஐன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மரங்களில் நின்னிடும்

எத்தனை ஜன்மம் மரித்து நடன்னதும்

எத்தனை ஜன்மம் பரன்னு நடன்னதும்

எத்தனை ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்

மரத்திய ஜனதில் மும்பே கழிஞ்சதும்” (ஞானப்பானா- 32)

என்று மலம், ஜலம், மண், மரம், பறவை, விலங்கு, பசு போன்றனவாய் முற்காலத்தில் பிறந்து இளைத்தோம் என்கிறார் பூந்தானம்.

எத்தனையெத்தனை ஜன்மத்திற்குப் பின் இந்த மனித ஜன்மம் கிடைத்திருக்கிறது? எண்ணற்ற புண்ணிய கர்மங்களின் பலனாக இந்த மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது.எத்தனையோ ஜன்மங்கள் புழுவாகவும் பூச்சியாகவும், புல்லாகவும் மரமாகவும் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து உழன்றபிறகு மனித ஜன்மம் கிடைத்துள்ளது.ணிரிலும் நிலத்திலும் வாழ்ந்து இறந்தும் பிறந்தும் பல ஜன்மங்கள் கழிந்து மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது

இந்த மனித ஜன்மத்திற்கு முன் பசுவாகவும் மற்ற மிருகங்களாகவும் பிறந்தோம் இறந்தோம்.பிறகு தான் மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

மேலும் மனித வாழ்வில் எவ்வளவு நாள் அறிவின்றி இழந்தோம் என்ற கணக்கையும் தருகிறார் பூந்தானம்.

‘‘எத்ரெயும் பணி பெற்று இங்கு மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் வீணது அறிஞ்சாலும்

பத்துமாதம் வயித்தில் கழிஞ்சுபோயி

பத்து பதிரெண்டு உன்னியாய் ஆட்டம் போயி

தன்னிதான்  அறியாதி கழிஞ்சுன்னு” (ஞானப்பானா 33)

என்ற கால விரயம் கவிதையாய் பூந்தானம் வழி வெளிப்படுகிறது.

பத்து மாதம் தாயின் கர்பத்தில் இருந்தோம்; பிறந்தபின் பத்து பன்னீரெண்டு வருடங்கள் ஒன்றும் தெரியாத பால்ய பருவத்தில் –விவேகம் உதிக்காத நிலையில் எது சத்தியம்; எது நசுவரம்; எது நித்தியம் என்று அறியாத நிலையில் ‘ நான்” என்ற அகம்பாவத்துடன் இந்த உலகில் வாழ்ந்து விடுகிறோம்.

இத்ர காலம் இருக்கும் இனி என்னும் ஸத்யமோ நமக்கு ஏதும் ஒன்னில்லல்லோ

‘‘நீர்போலே போலே உள்ளொரு தேகத்தில்…..

நீர்த்துப் போகும் அதினி பறையாவு” (ஞானப்பானா 35)

என்று மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இறைசிந்தனை அந்தக் குமிழிக்குள் இல்லாமல் போகுமானல் எந்நேரமும் வாழ்க்கை என்னும் நீர்க்குமிழி உடையலாம் என்று பூந்தானம் குறிப்பிடுகிறார்

நீர்ப்போள போலெ உள்ளொரு தேஹத்தில்

வீர்ப்பு மாத்ரம் உண்டு இங்ஙனெ காணுன்னு

ஒர்த்து அறியாதே பாடு பெடுன்னேரம்

நேர்த்து பொகுமதென்னே பறயாவூ

அத்ர மாத்ரம் இரிக்குன்ன நேரத்து

கீர்த்தி சீடுன்னதில்ல திருநாமம்

In the body which is like a water bubble,–We see it filled up always,
And when we put efforts without thought,–We can tell that this bubble will only burst.-In this very limited time,-We should be Chanting the Divine Names of Lord

அப்படிப்பட்ட அனித்தியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நேரமாவது பகவன் சொல்லுகின்றோமா? இல்லையே இப்படி நமது கிடைப்பதற்கரிய வாழ்வை வீணாக்கலாமா ?பூன்தானம் அங்கலைக்கிறாற்.

————–

ஸம்ஸார வர்ணனை

ஸ்தானமானங்கள் சொல்லி கலஹிச்சு நாணம் கெட்டு நடக்குன்னுது சிலர்
மத மஞ்சரம் சிந்திச்சு சிந்திச்சு மதி கெட்டு நடக்குன்னிது சிலர்
சஞ்ச லாஷிமார் வீடுகளில் புக்கு குஞ்சிராமனா யாடுன்னுது சிலர்
கோலகங்களில் சேவகராய் இட்டு கோலம் கெட்டி ஜெலியுன்னிது சிலர்
சாந்தி செய்து புலர்த்துவனாய் இட்டு ஸந்த்யா யோலம் நடக்குன்னுது சிலர்
கொஞ்சி கொண்டு வளர்த்த ஒரு பைகலே கஞ்சிக்கு இல்லான்னு வில் குன்னிது சிலர்
அம்மக்கும் புனர் அச்சனும் பார்யைக்கும் உன்மான் போலும் கொடுக்கின்னல்ல சிலர்
அக்னி சாஷியாய் ஒரு பத்னியே ஸ்வப்னத்தில் போலும் காணுன்னுல்ல சில
சத்துக்கள் கண்டு சிஷித்து சொல்லும் போல் சத்ருவே போல் க்ருதிக்கினு சிலர்
வந்திதன்மாரே காணுன்ன நேரத்து நிந்தி சத்ரே பற யுன்னிது சிலர்
காண்க நம்முட ஸம்ஸாரம் கொண்டத்ரே விஸ்வமீ வண்ணம் நில்பு என்னும் சிலர்
ப்ராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு பிரம்மாவும் என்னிக் கொக்காய் என்னும் சிலர்
அர்த்தாசக்கு விருது விளிப்பான் அக்னி ஹோத்ராதி செய்யுன்னுதி சிலர்
ஸ்வர்ணன்கள் நவ ரத்னங்களே கொண்டும் எண்ணம் கூடாதே வில்கின்னுது சிலர்
மத்தேபம் கொண்டு கச்ச வடம் செய்தும் உத்தம துரம் கங்களது கொண்டும்
அத்தரயுமல்ல கப்பல் வெப்பிச்சிட்டு மெத்ர நேடுன்னி தர்த்ரம் சிவ சிவ
வ்ருத்தியும் கெட்டு தூர்த்தராய் எப்பொழுதும் அர்த்தத்தே கொதிச்செத்ர நசிக்குன்னு
அர்த்தமெத்ர வளரே யுண்டாயாலும் த்ருப்தியாகா மனசின் ஒரு காலம்

‘‘பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்

சதமாகில் சகாஸ்கரம் மதி என்னும்

ஆயிரம் பணம் கையில் உன்கும்போல்

ஆயுதமகில் ஆச்சர்யம் என்னுதம்

ஆசையுள்ள பாசம் மதிஞ்சன்னு” (ஞானப்பானா- 38)

ஆசை என்ற கயிறு உள்ளத்தைக் கட்டி வைத்திருக்கிறது. பத்து கிடைத்தால் நூறு கிடைக்குமா என்று எண்ணுகிறது. நூறு கிடைத்தால் ஆயிரம் வந்தால் போதும் என்கிறது. ஆயிரம் வந்தால் அதைவிட அதிகமாக எண்ணுகிறது. இதுவே மனதின் இயல்பாக உள்ளது என்று பூந்தானம் மனவாசையின் அளவை அளக்கிறார்.

வேர் விடாதே கரேறுன்னு மேல்குமேல்
சத்துக்கள் சென்னிலர் அன்னாலாய அர்த்தத்தில் ஸ்வல்ப மாத்ரம் கொடா சில துஷ்டன் மார்
சத்து பன்னேரம் வஸ்திரம் அது போலும் எத்திடா கொண்டு போவான் ஒருத்தருக்கும்
பச்சாதாபம் ஓர் எள்ளளவும் இல்லாத விச்வாஸ பாதகத்தே கருதுன்னு
வித்திலாஸ பற்றுக ஹேதுவாய் சத்யத்தே த்யஜிக்குன்னு சில ரஹோ
சத்யம் என்னது ப்ரஹ்மம் அது தன்னே ஸத்யம் என்னு கருதுன்னு சத்துக்கள்

கிடைத்த மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக மாற்றாமல் மனித குலம் அழிகிறதே என்ற மிகவும் வருத்தப்படுகிறார் பூந்தானம்.

‘வித்யா கொண்டு அறியந்தது அறியாதே

வித்வான் எண்டு நடிக்கன்னு சிலர்

குங்குமந்திந்தி வாசம் அறியாதே

குங்குமம் சுமக்கும் கழுதை’ (ஞானப்பானா 43)

என்று மனிதவாழ்வின் இயல்வினைச் சுட்டுகிறானர்

—————

வைராக்யம்

எண்ணி எண்ணி குறை யுன்னி தாயுசும் மண்டி மண்டி சுரேறுன்னும் மோஹவும்
வன்னு வோணம் கழிஞ்சு விஷு என்னும் வன்னில் எல்லோ திருவாதிர என்னும்
கும்ப மாசத்தில் ஆகுன்னு நம்முட ஜென்ம நக்ஷத்ரம் அஸ்வதி நாள் என்னும்
ஸ்ரார்த்தம் உண்டகோ விருச்சிக மாசத்தில் ஸத்ய என்னும் எழுதல் இனி என்னும்
உன்னி உண்டாயி வேல் பிச்சத்தில் ஒரு உன்னி உண்டாயி கண்டா ஊஞ்ஞான் என்னும்
கோணிக்கல் தன்னேல் யன்ன நிலமினி காண மன்னன் எடுப்பிக்க அரிது என்னும்
இத்தம் ஒரோன்னு சிந்திச் சிரிக்கும் போல் சத்து போகுன்னு பாவம் சிவ சிவ
எந்த நித்ர பரஞ்சு விசேஷிச்சும் சிந்திச் சீடு வினாவோலம் எல்லாரும்
கர்மத்தின் டே வலிப்பவும் ஓரோரோ ஜென்மங்கள் பலதும் கழிஞ்சு என்னதும்

காலம் இன்னு கலி யுக மாயதும் பாரத கண்டத்தின் டே வலிப்பதும்
அதில் வன்னு பிறன்னதும் எத்தனை நாள் பழுதே தன்னே போய ப்ரகாரமும்
ஆயுஸ்ஸிண்டே ப்ரமாணம் இல்லாததும் ஆராக்யத்தோடே இருக்குன்ன அவஸ்தையும்
இன்னு நாம சங்கீர்த்தனம் கொண்டு உடன் வன்னு கூடும் புருஷார்த்தம் என்னதுவும்
இனி யுள்ள நரக பயங்களும் இன்னும் வேண்டும் நிரூபணம் ஓக்கேயும்
எந்தினு வ்ருத காலம் களயுன்னு வைகுண்டத்தின்னு போய் கொல்வின் எல்லாரும்
கூடி யல்ல பிறக்குன்ன நேரத்துக்கு கூடி யல்ல மரிக்குன்ன நேரத்தும்
மத்யே இங்கனே காணுன்ன நேரத்து மத்சரிக்குன்னது எந்தினு நாம் வ்ருத
அர்த்தமோ புருஷார்த்தம் இருக்கவே அர்த்தித்து என்ன கொதிக்குன்னது எந்து நாம்
மத்யான்னர்க்க ப்ரகாஸம் இரிக்கவே கத்யோதத்தையோ மானிச்சு கொள்ளெண்டு

காலமின்னு கலியுக மல்லயோ

பாரத மிப்ப்ரதேசவு மல்லயோ

நம்மளெல்லாம் நரன்மாரு மல்லயோ

செம்மே நன்னாய் நிரூபிப்பினெல்லாரும்

ஹரி நாமங்ஙளில்லாதெ போகயோ

நரகங்ஙளில் பேடி குறகயோ

நாவு கூடாதெ ஜன்ம அதாகயோ

நமுக்கின்னி வினாச மில்லாய்கயோ

கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே

சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதே நாம்

Are we not living in Kali Yuga, in the land of Bharat?-Have we not got a human life?
Is there scarcity for the Names of the Lord?–Are we born without a tongue to chant them?
Have we no fear of the sufferings in hell?–Have we no thought about our end?
Have we any assurance of our next birth?–But, alas! We are wasting our life without concern!!!

‘‘கூடியல்லோ பிறக்குன்னா நீரதும்

கூடியல்லோ மரிக்குன்னா நீரதும்

மத்தியே இங்ஙனே கன்னுன்னா நீரது

மட்சரிக்குன்னது என்தின்னு விர்தா?” ( பூந்தானம், 49)

என்று பிறப்பின் இறப்பின் தனிமையைச் சுட்டுகிறது ஞானப்பானா. நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் கூடிப் பிறக்கவில்லை. ஒன்றாய்க் கூடி இறக்கவும் முடியாது. ஒவ்வொருவரும் இறப்பினைத் தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மத்தியில் நாம் இணைந்திருக்கிறோம். ஏன் மற்றவர்களோடு தேவையின்றிப் போட்டிபோடுகிறீர்கள் என்று மெய்ம்மை நாடுகிறது ஞானப்பானா.

‘உன்னிக் கிருஷ்ணன் மனசில் களிக்கும்பால்

உன்னிகள் மது வேணுமோ மக்களே

மித்ரங்கள் நமக்கேத்ரா சிவ சிவா

விஷ்ணுபக்தன் மாரிலே புவனத்தில்” (ஞானப்பானா- 51)

என்று குழந்தை வரம் வேண்டுவோர்க்கு ஆறுதல் தருகிறது ஞானப்பானா.

————–

நாம ஜபம்

சக்தி கூடாதே நாமங்கள் எப்பொழுதும் பக்தி பூண்டு ஜபிக்கணும் நம்மூடே
ஸித்த காலம் கழி வோள மீ வண்ணம் ஸ்ரத்தை யோடே வஸிக்கே ண மேவரும்
காணா குன்ன சராசர ஜீவியே நாணம் கை விட்டு கூப்பி ஸ்துதிக்கணும்
ஹரி ஷாஸ்ரு பரி ப்ளூதனாயிட்டு பருஷாதிக ளோக்கெ ஸஹிச்சுடன்
ஸஜ் ஜனங்களே காணுன்ன நேரத்து லஜ்ஜ கூடாதே வீணு நமிக்கணும்
பக்தி தன்னில் மூழ்கி சமஜ்ஜுடன் மத்தன போலெ ந்ருத்தம் குதிக்கணம்
பாரில் இங்கனே ஸஞ்சரி சீடும் போல் ப்ராரப்தங்கள் அசேஷம் ஒழிஞ்சிடும்
விதிச்சீடுன்ன கர்மம் ஒடுங்கவும் போல் பதிசீடுன்ன தேஹம் ஒரே டத்து
கொதிச் சிடுன்ன ப்ரஹ்மத்தே கண்டிட்டு குதிச்சீடுன்ன ஜீவனும் அப்போளே
ஸக்தி வேரிட்டு ஸஞ்சரி சீடும் போல் பாத்ரமாயில்ல என்னது கொண்டேதும்
பரிதாபம் மனஸ்ஸில் முழு கேண்ட திரு நாமத்தின் மஹாத்ம்யம் கேட்டாலும்
ஜாதி பார்க்கிலோ ரந்த்யஜனாகிலும் வேதவாதி மஹீ ஸூ ரனாகிலும்
நாவு கூடாதே ஜாதன் மாராகிலும் மூகரே அங்கு ஒழிச்சுள்ள மானுஷர்

எண்ணமற்ற திருநாமம் உள்ளதில்

ஒன்னு மாத்ரம் ஒரிக்கல் ஒரு தினம்

ஸ்வஸ்தன் ஆயிட்டு இருக்கும் போழெங்கிலும்

ஸ்வப்னத்தில் தான் அறியாதெ எங்கிலும்

மற்றொன்னாயி பரிஹஸிச்செங்கிலும்

மற்றொருத்தர்க்கு வேண்டியென்னாகிலும்

ஏது திக்கிலிருக்கிலும் தன்னுடே

நாவு கொண்டிது சொல்லி என்னாகிலும்

அதுமல்லொரு நேரம் ஒரு தினம்

செவி கொண்டிது கேட்டு என்னாகிலும்

ஜன்ம சாபல்யம் அப்போழே வன்னு போய்

ப்ரம்ம ஸாயுஜ்யம் கிட்டீடும் என்னேல்லோ

God’s Names are numerous;–And if any one of those Names,–At least once a day, while sitting quiet at a place,–Or unawares in a dream while sleeping,–Or mocking as something else, or to satisfy some one else;–You utter with your tongue or just hear with your ears,–At that very moment, your life is fulfilled;–And you reach the Supreme abode of Brahman.

ஸ்ரீதர் ஆச்சார்யன் தானும் பரஞ்ஞிது

பாதராயணன் தானும் அருள் செய்து

கீதயும் பரஞ்ஞீடுன்னதிங்ஙனெ

வேதவும் பஹுமாநிச்சு சொல்லுன்னு

அமோதம் பூண்டு சொல்லுவின் நாமங்ஙள்

ஆனந்தம் பூண்டு ப்ரஹ்ம்மத்தில் சேருவான்

மதியுண்டெங்கிலொக்க மதியிது

திருநாமத்தின் மாஹாத்யமாமிது

பிழையாகிலும் பிழ கேடென்னாகிலும்

திருவுள்ளம் அருள்க பகவானே

And so say Sreedhara the great scholar,–And sage Veda Vyasa who wrote the puranas.–Even Bagavad Geetha says the same,–And also so say the Vedas with respect.–So sing God’s holy names easily–And with joy become one with God.–For those aiming at salvation this book is sufficient,–For it sings about greatness of God’s holy names.–With errors or without errors.–Please grant me your grace , Oh my God

பூந்தானம் ‘‘கீதையும் வேதங்களும் பரந்தாமன் புகழைப் பாடினால் மட்டுமே முக்தி” என்று உரைக்கின்றன (ஞானப்பானா 60) என்று பாடுகிறார்.

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ  பூந்தானம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமத்பகவத்கீதா ஸாரம்–ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் ஸ்லோகங்கள்–

December 12, 2022

ஸ்ரீ: எம்பெருமானாரருளிச் செய்த ஸ்ரீ: ஆளவந்தார் தனியன்

யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்

————

ஸ்ரீமத் பகவத் கீதா ஸாரம்:

இங்கும் 32 ஸ்லோகங்கள் -32 பத்ததி பாதுகா சஹஸ்ரம் -32அதிகாரங்கள் ரஹஸ்ய த்ரயம் –

1) ஸ்வ தர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம் ப்ரஹ்ம கீதா ஶாஸ்த்ரே ஸமீரித:

பூர்வ ஷட்கம்:–2)

ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ் க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த் யர்த்தே பூர்வ ஷட்கேந சோதிதே–

மத்யம ஷட்கம்:-3)

மத்யமே பகவத் தத்த்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே
ஜ்ஞாந கர்மாபி நிர்வர்த்யோ பக்தி யோக:ப்ரகீர்த்தித:

அந்திம ஷட்கம்:-4)

ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:

1: அர்ஜுன விஷாத யோகம்:-5)

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபந்ந முத்திஶ்ய ஶாஸ்த்ர அவதரணம் க்ருதம்

2: ஸாங்க்ய யோகம்:6)

நித்யாத்மா ஸங்க கர்மேஹா கோசரா ஸாங்க்ய யோகதீ:
த்விதீயே ஸ்திததீலக்ஷா ப்ரோக்தா தந் மோஹ ஶாந்தயே

3: கர்ம யோகம்:-7)

அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ் யோக்தா த்ருதீயே கர்ம கார்யதா

4: ஜ்ஞான யோகம்:–8)

ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோ கர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

5 – கர்ம ஸந்யாஸ யோகம்: 9)

கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்ம ஜ்ஞாந ப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

6 – அத்யாத்ம யோகம்:–10)

யோகாப்யாஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக ஸாதநம்
யோக ஸித்தி:ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

7 – விஜ்ஞான யோகம்:–11)

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்த பேத:ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

8 – அப்யாஸ யோகம்:-12)

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
வேத்யோபாதேய பாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

9 – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்:-13)

ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்தி ரூப:ப்ரகீர்த்தித:

10 – விபூதி யோகம்:–14)

ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
பக்த்யுத் பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

11 – விஶ்வரூப தர்சனம்:–15)

ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
தத்த முக்தம் விதி ப்ராப்த்யோர் பக்த் யேகோபாயதா ததா

12 – ஸ்ரீ பக்தி யோகம்:–16)

பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் ப்ரகாராஸ்த் வதிப்ரீதிர் பக்தே த்வாதஶ உச்யதே

13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:–17)

தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே

14 – குண த்ரய விபாக யோகம்:–18)

குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே

15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:–19)

அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:

16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:–20)

தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ் தேம்நே ஷோடஶ உச்யதே

17 – ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்:–21)

அஶாஸ்த்ரம்  ஆஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
லக்ஷணம் ஶாஸ்த்ர ஸித்தஸ்ய த்ரிதா ஸப்தத ஶோதிதம்

18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:–22)

ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வ உபாதேயதா அந்திமே
ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே

மேல்- 10 ஸ்லோகங்களால் தேறின கருத்துக்களைத் தொகுத்து அருளிச் செய்கிறான்-

23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

24) பக்தி யோக: பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

26) நிரஸ்த  நிகில அஜ்ஞாந: த்ருஷ்ட்வா ஆத்மாநம் பராநுகம்
ப்ரதி லப்ய பராம் பக்திம் தயா ஏவ ஆப்நோதி தத் பதம்

27) பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீ சேத்   தத் ஏவ அத்யந்தம் அஶ்நுதே

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தத் யாதத்த ஆ த்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேக தீ:

30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

—————-

1) ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான

———–

பூர்வ ஷட்கம்:

2) ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
சம்ஸ்காரம் -பகவத் கைங்கர்ய அர்த்தம் ப்ரீதி அர்த்தம் என்ற எண்ணத்துடன் -த்ரிவித தியாகங்கள் உடன் செய்வதே வைராக்யம்
அதுவே நன்கு ஸம்ஸ்கரிப்பட்ட யோகம்
ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,

யோகம் -சன்னகனம் -சேகரிப்பது உபாயம் த்யானம் சங்கதி யுக்தி -ஐந்து பொருள்கள்
இங்கு உபாயம்

யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,

இங்கு யோகம் த்யானம்
அஷ்டாங்க யோகம் -ஆசனம் பிராணாயாமம் போல்வன இங்கு
படித்து கற்று நினைத்து ஆள் மனதில் பதிய வேண்டுமே

ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.

———

மத்யம ஷட்கம்:
3) மத்யமே பகவத் தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
ஜ்ஞாந கர்மாபி நிர்வர்த்யோ பக்தி யோக:ப்ரகீர்த்தித:

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தி யோக: – பக்தி யோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

பகவத் தத்வம் உள்ள படி அறியவும் பக்தி வேண்டும்
ஞான தர்சன பிராப்தி மூன்று நிலைகளுக்கும் பக்தி வேண்டுமே
இதுவே பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகும்
அறிந்தால் தானே அடைய ஆசை வரும்
ப்ரகீர்த்தித்த -நன்றாக -பக்தன் பெருமை -அங்கங்கள் இவற்றை விவரித்து அருளிச் செய்கிறான் அன்றோ

————

அந்திம ஷட்கம்:
4) ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:

ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
வ்யக்த-பிரக்ருதியில் தோன்றிய பொருள்கள் –
கர்ம: – கர்ம யோகமும்,
தீ: – ஜ்ஞாந யோகமும்,
பக்தி: – பக்தி யோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.
விவேசநம்-பகுத்து அறிவு

த்ரிகம் -பிரித்து
முதல் த்ரிகத்தால் -13-14-15-அத்யாயங்களால் கீழே சொல்லிவற்றின்-தத்வம்- சேஷம்
இரண்டாம் த்ரிகத்தால் -16-17-18- அத்யாயங்களாலால் -கீழே சொல்லிவற்றின்-ஹிதம்- சேஷம்

——–

1: அர்ஜுன விஷாத யோகம்:-5) அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

———

2: ஸாங்க்ய யோகம்:6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

————-

3: கர்ம யோகம்:-7) அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ் யோக்தா த்ருதீயே கர்ம கார்யதா

லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

—————

4: ஜ்ஞான யோகம்:–8) ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோ கர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

————–

5 – கர்ம ஸந்யாஸ யோகம்: 9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்ம ஜ்ஞாந ப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில், உச்யதே – கூறப்படுகிறது.

————–

6 – அத்யாத்ம யோகம்:–10) யோகாப்யாஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக ஸாதநம்
யோக ஸித்தி:ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

—————

7 – விஜ்ஞான யோகம்:
11) ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்த பேத:ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது

—————-

8 – அப்யாஸ யோகம்:

12) ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
வேத்யோபாதேய பாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்மஸ்வரூபத்தை
அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

——————-

9 – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:

13) ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்தி ரூப:ப்ரகீர்த்தித:

ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

—————-

10 – விபூதி யோகம்:

14) ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
பக்த்யுத் பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

————–

11 – விஶ்வரூப தர்சனம்:

15) ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
தத்த முக்தம் விதி ப்ராப்த்யோர் பக்த் யேகோபாயதா ததா

ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா – அவ்வண்ணமே,
விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
உக்தம் – சொல்லப்பட்டது

—————

12 – ஸ்ரீ பக்தி யோகம்:

16) பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் ப்ரகாராஸ்த் வதிப்ரீதிர் பக்தே த்வாதஶ உச்யதே

பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

————-

13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

17) தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே

தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப் படுகிறது

—————.

14 – குண த்ரய விபாக யோகம்:

18) குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே

குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப்படுகிறது.

—————-

15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:

19) அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:

அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டன.

——————

16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:

20) தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ் தேம்நே ஷோடஶ உச்யதே

தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
முன்னிட்டுக்கொண்டு,
ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

————

17 – ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்:

21) அஶாஸ்த்ரம்  ஆஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
லக்ஷணம் ஶாஸ்த்ர ஸித்தஸ்ய த்ரிதா ஸப்தத ஶோதிதம்

க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
(தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

————

18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

22) ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வ உபாதேயதா அந்திமே
ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே

ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

———-

—————

இங்கும் 32 ஸ்லோகங்கள் -32 பத்ததி பாதுகா சஹஸ்ரம் -32அதிகாரங்கள் ரஹஸ்ய த்ரயம் –

இந்த 10 ஸ்லோகங்களால் தேறின கருத்துக்களைத் தொகுத்து அருளிச் செய்கிறான்-

23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.-பல பர்யந்தம் ஸேவை தொண்டு கைங்கர்ய ரூபமாகவே -13 வகைகள் கீழேயே பார்த்தோம் –
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலை நிற்றலே யாகும்.

இந்திரியங்களை மனசில் அடக்கி- -கூர்மம் போல் -ஆத்மா இடமே ஈடுபட்டு -திரும்ப திரும்ப அப்யாஸம் -இதன் ஏற்றமும் தாழ்ந்த அவற்றின் தோஷமும் அறிந்து -முழுவதும் அடங்கினால் தான் ஞான யோகம் கைகூடும் -கரணங்களை முழுவதும் அடக்க இயலாதவனுக்கு கர்மயோகம் -திசை திருப்பி ஆத்மாவையே அனுபவிக்க வேண்டுமே -பரிஶுத்தாத்மநி-நிஷ்க்ருஷ்ட ஆத்ம முக்த நிலை –

————

தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந பர்யுபாஸதே—-
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞே நைவோப ஜுஹ்வதி—৷৷4.25৷৷

ஒரு வகைக் கர்ம யோகிகள் தேவர்களைப் பூஜிப்பதாகிய யாகத்தையே விசேஷமாகச் செய்கிறார்கள் -இங்கு தேவதையின் மூர்த்திக்குச் செய்யும் அர்ச்சனாதிகளை சொன்னவாறு -பர் யுபாஸதே -முக்கரணங்களாலும் செய்வதைச் சொன்னவாறு
மற்ற ஒரு வகைக் கர்ம யோகிகள் ப்ரஹ்மமாய் இருக்கும் அக்னியில் யஜ்ஞ சாதனமான ஹவிஸ்ஸை
யஜ்ஞத்திற்கு உரிய உபகரணமான ஸ்ருக் முதலியவைகளால் ஹோமம் செய்வதிலேயே ஊன்றி இருக்கிறார்கள்

மேலே -13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் –இருவரை பற்றி இங்கு –
திவ்ய மங்கள விக்ரஹம் வைத்து திருவாராதனம் –

ஸ்ரோத்ராதீ நீந்த்ரியாண் யந்யே ஸம்ய மாக்நிஷு ஜுஹ்வதி.—
ஸப்தாதீந் விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி—৷৷4.26৷৷

மற்றும் சில கர்ம யோகிகள் செவி முதலிய இந்திரியங்களை புலன் அடக்கமாகிய அக்னியில் ஹோமம் செய்கிறார்கள் –
வேறு சில கர்ம யோகிகள் சப்தம் முதலான விஷயங்களை இந்திரியங்கள் ஆகிற அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்

ஸர்வாணீந்த்ரிய கர்மாணி ப்ராண கர்மாணி சாபரே.—
ஆத்ம ஸம்ய மயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாந தீபிதே—৷৷4.27৷৷

மற்றும் சில கர்ம யோகிகள் அறிவாகிய விளக்கால் கொளுத்தப் பெற்ற மன வடக்கம் எனும் நெருப்பில்
இந்திரியங்களின் செயல்கள் அனைத்தையும் பிராணங்களின் செயல்கள் அனைத்தையும் ஹோமம் செய்கிறார்கள்

த்ரவ்யயஜ்ஞாஸ் தபோ யஜ்ஞா யோக யஜ்ஞாஸ் ததாபரே—
ஸ்வாத்யாய ஜ்ஞாந யஜ்ஞாஷ் ச யதய ஸம்ஸித வ்ரதா—-৷৷4.28৷৷

முயற்சியும் உறுதியும் உடைய சில கர்ம யோகிகள் நல் வழியில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு
தானம் முதலிய நற் செயல்கள் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
மற்றும் சிலர் உடலை வருந்திச் செய்யும் தவங்கள் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
அது போல் வேறு சிலர் புண்ணிய ஸ்தலம் புண்ணிய தீர்த்தம் முதலியவற்றை அடைதல் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
வேறு சிலர் வேத அத்யயனம் செய்தலாகிய யஜ்ஞங்களைச் செய்பவர்களாவும்
வேறு சிலர் வேதத்தின் பொருளை அறிவதாகிய யஜ்ஞங்களைச் செய்பவர்களாயும் உள்ளனர் –

ஐந்து அதிகாரிகள் இதில் -முயற்சி உள்ளவர்கள் -விடா முயற்சி உத்ஸாகத்துடன் இருந்து -மனம் தளராமல் –

அபாநே ஜுஹ்வதி ப்ராண ப்ராணேபாநம் ததாபரே—
ப்ராணா பாநகதீ ருத்த்வா ப்ராணாயாம பராயணா—-৷৷4.29৷৷

அபரே நியதாஹாரா ப்ராணாந் ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேப்யேதே யஜ்ஞ விதோ யஜ்ஞக்ஷபித கல்மஷா—-৷৷4.30৷৷

ஸர்வேப்யேதே யஜ்ஞ விதோ யஜ்ஞக்ஷபித கல்மஷா—-13 வித கர்ம யோகிகளுக்கும் -3 அத்யாயம் ஆரம்பம் -நீங்கள் யஜ்ஜ்ங்கள் செய்து தேவர்களுக்கு கொடுக்க-அவர்கள் மழை பொழிய -அதனால் பெரும் உபகரணங்களைக் கொண்டு மீண்டும் தேவர்களுக்கு செய்ய வேண்டும்
இந்த சுழற்சி முன்பே சொல்லப்பட்டது -அத்தை இங்கே நினைவு படுத்துகிறான்
அறிந்தவர்கள் என்றாலே அறிந்து கடைப்பிடிப்பவர்கள் என்றே கொள்ள வேண்டும்-இந்த அடிப்படை அனைவருக்கும் பொது –

———

24) பக்தி யோக: பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதி ஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலை நிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

முக் கரணங்களையும் அவன் இடமே ஈடுபடுத்தி-

த்யாநாதி ஆதி -பிராணாயாமம் அர்ச்சனை நாம சங்கீர்த்தனம்

மஹநீய விஷய ப்ரீதியே பக்தி
ஸ்நேஹம் -உயர்ந்தவன் தாழ்ந்தவன் இடம் கொண்ட அன்பு
தசரதன் ராமன் இடம் உள்ள ஸ்நேஹமும் பக்தியும் எனக்கு உண்டு என்றானே திருவடி
செயல்படுதல் -கர்ம -அறிவு -ஞானம் -அன்பு -பக்தி –
த்யானம் அர்ச்சனம் பிரணாமம்-இதி கர்தவ்ய –
அன்பு கலந்த -அநு த்யானம் -சிந்தனைத் தொடர்ச்சி –
காதல் அவா வேட்க்கை அன்பு அபி நிவேசம் -ஸூ ஸூகம் கர்தவ்யம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி
ஷூஸ்திதி-ஆ பிரயாணாதி-பல பர்யந்தம் நிலை நிற்க வேண்டுமே

த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – கர்ம யோகம் செய்ய ஆத்ம பரமாத்ம ஞானமும் உண்டே -வறட்டு த்யானம் இல்லாமல் அன்புடன் செய்ய வேண்டுமே –
பக்திக்கு செயல்பாடுகள் உண்டே -அந்யோன்யம் ஒன்றுக்கு ஓன்று இருக்குமே –

தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் நெய்யும்  கன்னலும் அமுதும் ஓத்தே -ஸர்வ ரஸ –

————

25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

பராராதந ரூபிணாம் – பரம புருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தி யுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.

பக்தி யோகம் ஆத்ம சாஷாத்காரத்துக்கு சாதகம் ஆகுமோ -ஆத்ம தர்சனத்துக்குப் பின்னே தான் –
பக்தி பிறந்து பரமாத்மா ப்ராப்யம் என்றால் -அது பர பக்தி தசை
ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து சேஷத்வ பாரதந்த்ர ஆகாரம் உணர சாமான்யமான பக்தி வேண்டுமே அத்தைச் சொல்கிறது இங்கு
நித்ய நைமித்திக கர்மங்கள் -ஸூர்யாதி அந்தர்யாமி யான பர ப்ரஹ்மம் குறித்தே செய்வதாகவே அனுசந்தானம் –
பரிமித பலம் தானே தேவதாந்த்ரங்கள் தர முடியும் -அல்பம் அஸ்திரம் –
பரன் திறம் அன்றி மற்று தெய்வம் இல்லையே -சரீர பூதர்களே –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
ஸாஷாத் ஸப்தமே அவனையே குறிக்கும் -அக்ர நயன அக்னி -பரம ஐஸ்வர்யம் இந்திரன் –

——————-

26) நிரஸ்த  நிகில அஜ்ஞாந: த்ருஷ்ட்வா ஆத்மாநம் பராநுகம்
ப்ரதி லப்ய பராம் பக்திம் தயா ஏவ ஆப்நோதி தத் பதம்

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதி லப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.

அஞ்ஞானம் விலகி -ஆத்ம தர்சனம் -பர பக்தியாலேயே -அது முதிர்ந்து பர ஞானம் பரம பக்தி நிலை வந்த பின்பே ப்ராப்யம்
உபாசகனுக்கு பர பக்திக்கும் பர ஞானத்துக்கும் நெடு காலம் விளம்பம் உண்டே –
பிரபன்னனுக்கு ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்-அர்ச்சிராதி மார்க்கம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டனுக்கும் இதே போல் ஆகும் –
ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் பூ மணம் ரத்னம் ஒளி போல் -அடியேன் உள்ளான் -உடல் உள்ளான் –

சென்று சென்று பரம் பரமாய் -அன்ன மயம் தொடங்கி மேல் மேல் தாஸ பூத ஸ்வாபாவிக -சேஷ பூதனான இவன் -ஞான ஆனந்த மயன் என்று உணர வேண்டும் -சேஷத்வமே அந்தரங்க ஸ்வரூபம்

———

27) பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

பக்தியோக: – பக்தி யோகமானது,
ததர்த்தீ சேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தை யளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீ சேத் – ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத் கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்ம மாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

பிரதிபத்தி வைசிஷ்யாத் –யதோ உபாசனம் ததோ பலம் -கதி த்ர்ய மூலத்வாத்-

மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்

யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுவை ஆராதித்து நான்முகன் ப்ராப்யம் அடைகிறான் –

தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து ருத்ரன் பதவி பெற்றான்-ப்ரசாதத்தில் இருந்து நான்முகன் கோபத்தில் இருந்து ருத்ரன்

கேவலம் -ஐஸ்வர்ய பகவத் அனுபவம் கலசாமல் ஆத்ம அனுபவம் ஒன்றே -ப்ராப்யமாகவே பகவானைப் பற்றினவன்

—————-

28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீ சேத்   தத் ஏவ அத்யந்தம் அஶ்நுதே

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீ சேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

யாவத் பிராப்தி -அடைவதற்குள் -ஸூ பாஸ்ரயமான திரு மேனி அவர்கள் மனமும் மாறும் படி வைக்கும் அன்றோ -இங்கு புத்தி மாற வேண்டும்
அடையும் வரையில் -தியானம் பண்ணினால் தான் பேறு என்றுமாம் -இங்கு புத்தி ஸ்திரமாக இருக்க வேண்டும் –

——————

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தத் யாதத்த ஆ த்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேக தீ:

பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
தத் யாதத்த ஆ த்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேக தீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

து -கீழ் சொன்னவர்களை விட வியாவ்ருத்தி ஸ்வயம் ப்ரயோஜன பக்தன் -தேவதாந்த்ர பரன் –

ப்ரயோஜனாந்தர பரன் -ஸூய முயற்சியால் பகவத் லாபார்த்தி-அனைவரிலும் ஸ்ரேஷ்டன்
வைப்பும் வாழ்வும் அவனே
தனியேன் வாழ் முதல்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக் கீழ் வாழ்ச்சி
ஊனில் உயிரில் உணர்வில் -அவனே –
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
பத்ரு போகத்தை விலைக்கு உறுப்பு ஆக்க மாட்டான் –
தழுவி முழுசி அணைக்க -முக்கரணங்களாலும் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
கடியேன் கொடியன் நெடிய மால் மாயத்தன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -தத் ஏக தீ -இங்கு

——————-

30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

பகவத் த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தி இந்த்ரிய க்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

போற்றி புகழ்ந்து வருவதையே ஸ்துதி கீர்த்தனை இங்கு
இவை எல்லாம் செய்ததாலேயே சத்தை லப்த ஆத்மா
முக்கரணங்களும் ஈடுபட்டு -ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:-பஞ்ச பிரயாணங்கள்
அத்யவசாயம் புத்தி உறுதி -அபிமானம் அஹங்காரம் சித்தம் நினைக்கும் -மனசின் வியாபாரங்கள்
பஞ்ச பிராணங்கள் –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத சேவகம் –இத்யாதி -பிரகலாதன்
அக்னியில் பிராமணர் களுக்கு -யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் -ஸர்வத்ர சம தர்சனருக்கு எங்கும் -நம் போல்வாருக்காகவே அர்ச்சை பிரதிமாஸூ அப்ரபுத்தர்
பாஹ்ய யோ திரிவனே -எண் திசையும் அறிய இயம்புவேன்
வாசித்தும் எழுதியும் பூசித்தும் போது போக்கினேன் தரித்து இருந்தேன் -திருமழிசை ஆழ்வார்
ராக பிராப்தம் அன்றோ -ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்புமே -சஷுஸ் ஸ்ரவா -கட்ச்செவி
காலும் எழா கண்ண நீரும் எழா -ஆடி ஆடி அகம் கரைந்து –

உயிர் முதலாய் வாழ் முதலாய் மகிழ் முதலாய் கொள்கிறானே -மாயா சிரஸ் -நான் இருக்க பெருமாள் இருக்கிறார் -அறிகிறேன் சத்தயா தாரகம்
அன்று எனக்கு பட்டினி நாளே -செல்கின்றது என் நெஞ்சமே -மனமும் கண்ணும் ஓடி அங்கு அணைந்ததே

——————

31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

நிஜ கர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமை காந்தியான ஜ்ஞாநி) செய்யக் கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

சரம ஸ்லோகார்த்தம்
ப்ரீதியாலேயே தூண்டப்பட்டு-வர்ணாஸ்ரம கர்மங்களை-பக்தி பர்யந்தம் ஆஜ்ஜா ரூபம் -ஆராதன ரூபம் -சிஷ்டாசாரம் – கைங்கர்ய ரூபம் -கர்மம் பரிணாமம் –
வகுத்த ஸ்வாமி -ப்ராப்தம் -செய்கிறான் -ஆசையால் -போஜனத்துக்கு ஷுத்து பசி போல் -உபாயமாக இல்லாமல் -பல அனுபவ யோக்யதா ஆ பாதமாகவே செய்கிறான்

தர்ம ஸ்வரூபம் விட மாட்டான் – பலம் முன்பே விட்டான் உபாய புத்தி விடுகிறான் -பரந்த ரஹஸ்யம் பெரியவாச்சான் பிள்ளை
கிருபை ஜன்யம் என்கிற புத்தி கூடாதே -கிருபையாலேயே தூண்டப்பட்டு செய்கிறான்
பல கரண கருவி உபாயம் -பக்தி என்று நினையான் – தூண்டும் அவனே கொடுக்கிறான் -பல ப்ரதனும் அவனே என்று எண்ணுகிறான்

————

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

நாஸ்திகனாய் இருப்பவனையும் பரம ஏகாந்தியாக்கும் கீதை என்பதே கீதார்த்த சாரம்
அவன் ஆனந்தத்துக்காகவே -ஏகாந்தம் -அத்யந்தம் -முக மலர்த்தியே அனைத்து செயல்களையும் செய்கிறான்
தாஸ்யம் ஏக ஆசை கொண்டவன்
மஹா க்ரம -செங்கண் சிறு சிறிதே விழித்து மேலே மேலே கூட்டிப் போகிறான்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை செய்யப் பெறுவேன் ஆக வேண்டும்
ஸத்வ நிஷ்ட சம் ப்ரதாயம் -பரம்பரா -திரு உள்ளத்துக்கு ஏற்றது -யோக மஹிமை -முமுஷுக்களுக்கு சிறந்த பொக்கிஷம்
நாதனுக்கு நாலாயிரம் அளித்து உள்ளம் கையில் நெல்லிக்கனி போல் ஸ்வரூப ரூப விபூதி குணங்களை கண்டு அவற்றை
மணக்கால் நம்பி மூலம் பெற்ற அர்த்தங்கள் இவையே

——————————-

அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:

1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.

2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.

3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
(ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.

4 1.அவதார ரஹஸ்ய ஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்ம யோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
3. கர்ம யோக ஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.

5 1.கர்ம யோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்ம யோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.

6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.

7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
4.பக்தர்களில் நாலு வகை.
5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.

8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)

9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
(3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.

10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.

11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.

12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.

13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
(4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.

14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.

15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
(அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.

16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
(மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.

17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் மூன்றை யிட்டு மூன்று விதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
(அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.

18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸாஸ்த்ர சார ஸ்லோகங்கள் -பாசுரங்கள் -பேடிகா விபாகம் —

September 29, 2022

ஸ்ரீ பாத்ம புராணம் ஸ்ரீ கீதா மஹாத்ம்யம் சொல்லும்
பார்வதி கீதா மஹாத்ம்யம் ருத்ரனார் இடம் கேட்க
பக்தி வளர இது அறிய வேண்டுமே
சாலப்பல நாள் உகந்து உயிர்கள் காப்பான்

நானே கீதை
முதல் 5 அத்தியாயங்கள் -தலைப் பாகம்
அடுத்த 10 அத்தியாயங்கள் –6-15-கைகள் பாகம்
அடுத்த அத்யாயம் -16-வயிறு பாகம்
அடுத்த 2 அத்தியாயங்கள் -17-18-திருவடி பாகம்
இப்படி 18 அத்யாயம் -கண்ணனே உரு எடுத்தால் போல் ஸ்ரீ கீதை
இனி அவதரிக்க வேண்டாம்-நிம்மிதியாக சயனித்து உள்ளேன்

———-

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த் யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஸ்வ தர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்ம ரூபமாயிருக்கும் கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
இதர விஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தி யொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம் ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதா ஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப் பட்டுள்ளான்.

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில்
பற்று இல்லாத நிலையாலும் பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

விசர்க்கம் இல்லாமல் இருந்தால் நாராயனைக் காட்டிலும் வேறே ஒருவர் சொல்ல இடம் உண்டே
இவன் ஏவ பரம் ப்ரஹ்மம் என்று இங்கு காட்டி அருளுகிறார்

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.

ஜீவாத்ம சாஷாத்காரம் –
யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம் இதர விஷய வைராக்யம் -இவற்றால்
அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

———————————————————

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்ய அவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம்
உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தி யோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் –
பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –

ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே
சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –

————————————————————————

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோ அந்தி மோதித –4-

ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்ம யோகமும்,
தீ: – ஜ்ஞாந யோகமும்,
பக்தி: – பக்தி யோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் — அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –

சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு
பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

—————————————————————-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –1-

கருமமும் ஞானமும் கொண்டு -முதல் ஷட்கத்தின் அர்த்தமும்
எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று -இரண்டாம் ஷட்கத்தின் அர்த்தமும்
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்-சேதன அசேதனங்களில் வேறுபட்ட ப்ரஹ்மம் -மூன்றாம் ஷட்கத்தின் முற்பகுதியின் அர்த்தம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –மூன்றாம் ஷட்கத்தின் பிற்பகுதியின் அர்த்தம் –

—————-

சுத்தி யார் நெஞ்சில் அத் தொல் கரும ஞானத்தால்
அத்தியாது ஒன்றை அறத்துறந்தோர்–பத்தியால்
நண்ணும் பரமனாம் நாரணனே நல் கீதைக்கு
எண்ணும் பொருளாம் இசைந்து –6—-முதல் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற் கூறிய கர்ம ஜ்ஞாந வைராக்யங்களாலே உண்டான) பக்தி யோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பர ப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற் கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

ஞானம் கர்ம நலம் சேர் நிலையதனை
யான மன யோகத்தார் யாய்நது இங்கு -ஊனம் அறத்
தன்னாருயிர் உணரும் தன்மையினை நல் கீதை
முன் ஓர் ஆறு ஒத்தும் ஓதும் முயன்று –7–இரண்டாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச் சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

உள்ளபடி இறையை உற்று எய்த முற்று அறம் சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி –வெள்ள
நடையாடும் யோகத்தை நாதன் அருள் கீதை
இடை ஆறு ஒது ஓதும் எடுத்து –8–மூன்றாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண்ணார் தெளிவில்
வரும் சித் அசித் இறையோன் மாட்சி -யருமை யற
என் நாதன் அன்று தந்த எழில் கீதை வேதாந்தப்
பின்னாறு ஒது ஓதும் பெயர்ந்து –9-நான்காம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம் புரிதலை வேள்வி
யான முத லாறும் அறம் இறைவற்கே -நயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்ம யோகத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்ம யோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித் தம் புத்தியினிற் செம்மை
யலம் புரிவார்க் குற்ற வுயிர் மாட்சி – நலம் புனைந்து
மான யோகத் திறையை மன்னு நிலை காண்பதே
ஞான யோகத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோக முறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம் மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

——————

ஸ்ரீ கீதா -1–ஸ்ரீ அர்ஜுனன் விஷாத யோகம் —

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–5-

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ரா வதரணம் க்ருதம் – கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

வா -சமுச்சயம் -விகல்பம் அன்றோ -குணங்களில் ஆரோபித்து -அவை கார்யம் செய்யாதே –
ஆகவே அவன் இடம் ஆரோபித்து
ஈஸ்வரன் -நியமனம் -ஆகவே ஸர்வேஸ்வர பத பிரயோகம்

இரண்டாம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவற்றை விவரித்து மூன்றாம் அத்யாயம் தொடங்கி ஆறாம் அத்யாயம் வரை
ஆத்ம சாஷாத்காரம் சொல்லி மேல் பரமாத்மா சாஷாத்காரம் ஏழாம் அத்யாயம் தொடங்கி-
அகாரம் -திருமந்திரம் -த்வயம்-சரம ஸ்லோகம் -நம் சம்ப்ரதாயம் 20 சொற்கள் 65 அக்ஷரங்கள் தானே-

உகவை யடைந்த யுறவுடையார் பொரலுற்ற வந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத்தின் அளவில்
உளம் மிக அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கொர்
நகையுடன் உண்மை உரைக்க அமைந்தனன் நாரணனே –2–

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வ தர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப் போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

—————

ஸ்ரீ கீதா -2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —

இந்த அத்யாயம் -11 ஸ்லோகம் வரை முன்னுரை-ஆளவந்தார் -சாஸ்திரம் பிறக்க இந்த முன்னுரை
சோகம் சொல்லும் -முதல் அத்யாயம்-சோகம் போக்கும் மேல் ஸ்லோகங்கள்–வியாசர் –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் –
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —

———————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

————–

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

——————–

உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப்போல்
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –3-

இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்ப துன்பம் முதலானவற்றைப்
பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீர வேண்டிய ஜந்ம மரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
29: ஆத்ம நித்யத்வ ப்ரஸம்ஸை.
30: ஆத்ம நித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமே யொழிய அதர்மமாகாது.
35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு.
(இதுவரையில் அஸ்தான ஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது.
இனி, தர்மவிஷயமான உபதேசம்.)

38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்ப துன்பங்கள் முதலானவற்றில் ஸம புத்தியுடன் போரிட வேண்டும்.
39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பல த்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை
அநுஷ்டிப்பதாகிற கர்ம யோகம் மோக் ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
53: முற்கூறிய கர்ம யோகத்தின் பலம் ஞான யோகம். ஞான யோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்ம ஸாக்ஷாத்காரம்.
54-58: ஸ்தித ப்ரஜ்ஞநிலை எனப்படும் ஜ்ஞான யோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.
59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்ய மங்கள விக்ரஹத்தோடு கூடிய பரம புருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே
அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
69-71: ஞான யோகத்தின் பலமான ஆத்ம தர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்று விதமான அதிகாரிகளும்.
72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

——————-

ஸ்ரீ கீதா  – 3-ஸ்ரீ கர்ம யோகம் –

அசக்த்யா லோக ரஷயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-

லோக ரக்ஷாயை – (ஜ்ஞாந யோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வா ந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்ய வேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

—————-

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வது கரும மென்பதனா – லான்றமைந்து
தன் கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன் கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் – முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞான யோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாபரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

————

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்ம யோகம் ஆத்ம தர்ஶனத்துக்கு நேரே காரணமன்று; நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாந யோகமே அதற்கு நேரே காரணம். இப்படி ஞான யோகமே சிறந்ததாயிருக்க கர்ம யோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.

3-8 எளிதாகச் செய்யத் தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததா யிருக்கை, விடமுடியாததா யிருக்கை முதலான காரணங்களால் கர்ம யோகம் ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்தது.

9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப் படுத்தும்; அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமே யொழிய இவனைக் கட்டுப் படுத்தாது.

17-19 ஆத்ம தர்ஶனம் கைவரப் பெற்ற முக்தனான கைவல்ய நிஷ்டனே வர்ணாஶ்ரம தர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால், அப்படி முக்தனல்லாத நீ கர்ம யோகத்தை அனுஷ்டித்தே ஆத்ம தர்ஶனத்தைப் பெற வேணும்.

20 ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம தர்ஶனத்தைப் பெற்றனர்.

21-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞான யோகாதிகாரியாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்ம யோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.

27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதி குணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும் அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்ம யோகத்தில் ஞானம் கலந்திருக்கையால், ஞான யோகத்தை யிடையிடாமல் அதுவே நேரே ஆத்ம தர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞான யோகத்தை விடத் தாழ்ந்ததல்ல.

31-32 கர்ம யோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.

33-43 எத்தகைய சிறந்த ஞாந யோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும் காம க்ரோதங்களும் ஜ்ஞாந யோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும். அநாதி வாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்ம யோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும். ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய், செயற்கெளியதான கர்ம யோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்மயோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக்கொள்ளத் தக்கது.

————-

ஸ்ரீ கீதா-4—-ஸ்ரீ ஞான யோகம்-(ஸ்ரீ கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )

பிரசங்காத் ஸ்வ ஸ்வபாவ உக்தி-கர்மணோ அகர்ம அஸ்ய ச -பேதா– ஜ்ஞாநஸ்ய மஹாத்ம்யம்–
சதுர்த்தாத்யாய உச்யதே– ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -8–

பிரசங்காத் -நினைவுக்கு வந்தமையால்-உபேஷா அநர்ஹத்வம் -புறக்கணிக்கத் தகாத சங்கதி –
ஸ்வ ஸ்வபாவ உக்தி-அவதார நிலையில் உள்ள தனது ஸ்வ பாவம்
கர்மணோ -கர்ம யோகம்
அகர்மதா -கர்ம யோகத்தில் வேறுபட்ட யோகமான ஞான யோகமே ஆகுதலும்
அஸ்ய ச -இந்தக் கர்ம யோகத்தின்
பேதா-: -உட் பிரிவுகளும்
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் -அதில் அடங்கிய ஞானத்தின் பெருமையும்
சதுர்த்தா3த்4யாய உச்யவத –நான்காம் அத்தியாயத்தில் சொல்லப் படுகின்றன –

ராமானுஜ பாஷ்யம் -இதில் ஆறு விஷயங்களும் அடங்கும் என்பார்-

கர்ம யோகத்தின் பிரமாணிகத்வமும் -கர்ம யோகத்தின் ஸ்வரூபமும் -இந்த நான்குக்குள் நடுங்கும்

அதே கர்ம யோகத்தினுடைய–பரம்பரையா வந்த -மாறுதல் இல்லாத -அதே கர்ம யோகத்தின் -அஸ்யைவ கர்மா யோகஸ்ய ஞான பாகம்

பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையும்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே –5-

நான்காம் அத்யாய சாரம் –
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் -திருவவதார ரகச்யங்களும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்-விட முடியாத கர்மங்கள் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞானத்தை
தம்முள் அடக்கிக் கொண்டு இருப்பதால் ஜ்ஞான யோகமாக பிரசாத்தித்தலையும்-
கிரிசைகள் பன்மை -தேவாத ஆராதனம் -இந்த்ரியங்களை அடக்குதல் -ப்ராணா யாமம் -யாகம் தானம் ஹோமம் தவம்
புண்ய தீர்த்த ஸ்நானம் -புண்ய ஷேத்திர யாத்ரை -வேதம் கற்று கற்பித்தல் போல்வன
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையும் -அழிவற்ற ஆத்மாவின் நல்ல ஸ்வ பாவத்தை அறிந்த அதிகாரியின் மேன்மையையும்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே-வேதத்தால் போற்றப்படும் ஸ்ரீ கண்ணன்
தனது நண்பனுக்கு பாரத போர் அன்று உபதேசித்து அருளினான் –

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

1-அவதார ரஹஸ்யம் (-4-11-)

1-அவதார சத்வத்வம் —
2-அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவத்வம் —
3-சுத்த சத்வ மயத்வஞ்ச –
4–ஸூ இச்சா மாத்ரா நிதானதா
5-தர்ம கிலானோ சமுதயா –
6–சாது சம்ரக்ஷணர்த்ததா —

2-கர்ம யோகத்துக்குள் ஞான யோகம் (12-24)-

12-17- கர்ம யோகத்துக்குள் ஞான ஆகாரம் -பீடிகை ஆறு ஸ்லோகங்கள் –இதில் முதல் நான்கும் ஒரு வகை-கர்ம யோகம் செய்யும் அதிகாரி பற்றியும் –

அடுத்த இரண்டும் கர்ம யோகத்தின் பெருமையை நேரடியாக அருளிச் செய்கிறார்-

ஸ்லோகங்கள் 18-19-20- ஒரு பிரகரணம் -மேல் ஸ்லோகங்கள் 21-22-23- ஒரு பிரகரணம்

24- ஸ்லோகத்தால் -கர்மங்களில் உள்ள அனைத்துமே ப்ரஹ்மாத்மகமே என்கிற ஞானத்தால் –அனைத்தும் ப்ரஹ்ம கார்யம் என்ற எண்ணத்தால் -ஞானாகாரம் என்று பார்க்கலாம் என்கிறார்-

3-அஸ்ய ச -பேதா-13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் –(25-33-)

4-ஜ்ஞாநஸ்ய மஹாத்ம்யம்-(33-42)

————–

ஸ்ரீ கீதா -5—-ஸ்ரீ கர்ம சந்யாச யோகம் —

கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத் விதா
ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -9-

1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு –
விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
4-ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் –
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷ பூதன்-ஒன்றே –

கண்டு எளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
மண்டி யதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
கண்டு அறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே –6-

ஐந்தாம் அத்யாய சாரம் –
கண்டு எளிதாம் கருமம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்து அனுஷ்டிக்க ஸூ லாபமான கர்ம யோகம்
ஞான யோகம் போலே கடினம் இல்லையே கர்ம யோகம் -செய்யச் செய்ய ரஜஸ் தமஸ் குணங்கள் நீங்கி ஆசை த்வேஷம் ஒழிந்து மனம் தெளியும்
மனம் இந்த்ரியங்கள் தம் வசப்பட ஆத்மா சாஷாத்கார ஞானம் உண்டாகும்
உயிர் காட்டக் கடுகுதலும் –ஆத்மாவைக் காட்டுவதற்கு விரைதலும்
மண்டி யதன் படியில்-அந்த கர்மயோக பிரகாரன்களிலே ஈடுபட்டு
மனம் கொள்ளும் வரிசைகளும் -மனத்தில் நினைக்க வேண்டிய பிரகாரங்களும்
கண்டு அறியா உயிரைக் -நேரில் கண்டு அறிய முடியாத ஜீவாத்மாவின் ஸ்வ ரூபத்தை
காணலுற்ற நினைவுகளும் -எங்கும் ஞான ஸ்வரூபமாக பார்க்கும் படியான பற்பக்வம் அடைந்த ஞானங்களும்
வண் துவரேசன் இயம்பினன் -உபதேசித்து அருளினான் –வாசவன் மைந்தனுக்கே -இந்த்ரன் புத்ரனான அர்ஜுனனுக்கு –

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்ம யோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரிய ப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
12 பல த்யாகம் மோக்ஷஹேது.
13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
3. அதற்காக முயல்பவர்கள்
4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது;
இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
20-25 ஸம தர்ஶந நிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

இவை ப்ரக்ருதியின் செயல்களென எண்ணி யிருத்தல்.
4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர்.
இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

————–

ஸ்ரீ கீதா-6— ஸ்ரீ யோக அப்பியாச யோகம் –(ஸ்ரீ அத்யாத்ம யோகம்:)

யோகாப்யாப்ஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக சாதனம்
யோக சித்திஸ் ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட உச்யத –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–10-

1–யோகாப்யாப்ஸ விதி -முறைகள் -6-28-வரை
2–யோகீ சதுர்த்தா –நான்கு வகை யோகீகள் -6-29–6-32-வரை
3-யோக சாதனம் -சாதனங்கள் -அப்பியாசம் -வைராக்யம் இவையே சாதனங்கள் –6-33–6-36
4–யோக சித்திஸ் -தடை வந்தாலும் சித்திக்கும் -6-37-6-46
5–ஸ்வ யோகஸ்ய பாரம்யம் –அடுத்த அத்யாயம் முன்னுரை போலே –
பக்தி யோகமே உயர்ந்தது -46–47-ஸ்லோகங்களில் சொல்லி –
பக்குவம் -ஏற்பட்ட பின்பு -விஷய கௌரவம் மறைத்தே தானே அருளிச் செய்ய வேன்டும் –

யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
யோகின் உபாயமும் யோகுதனால் வரும் பேறுகளும்
யோகு தனில் தன் நிறமுடை யோகு தன் முக்கியமும்
நாகணை யோகி நவின்றனன் முடி வீரனுக்கே –7-

ஆறாம் அத்யாய சாரம் –
பக்தி யோக விளக்கம் உபதேசித்து அருளினான் –

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
10-12 பாஹ்ய உபகரண நியமம்.
13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.

29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
3. அந்தர்யாமியைக் காணுதல்
4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.

33-34 யோக ஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
35-36 யோக ஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ் ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
37-39 யோக மாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

· அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
· ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
· ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

———————————————————————————

ஸ்ரீ கீதா  -7— –ஸ்ரீ பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்த பேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -11-

1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2–ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3–சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க -அவனைப் பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4–பக்த பேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5–ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –

தானின்ற யுண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகு அற்றமையும்
மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
தேனின்ற செங்கழலான் தெளிவித்தான் பார்த்தனுக்கே –8-

ஏழாம் அத்யாய சாரம்
பத்தர்கள் நால்வரில்-ஆர்த்தான் -அர்த்தார்த்தி- ஜிஜ்ஞாஸூ-ஜ்ஞானி
மாயை -பிரகிருதி –

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
3 மோக்ஷ ஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்;
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன்.
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
4 எட்டு விதமான அசேதன ஸமஷ்டிப் பொருளும் பரம புருஷ பர தந்த்ரமானது.
5 அசேதந ப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதந ஸமஷ்டியும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
7 அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக் காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவை போலே,
ராஜஸ தாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும்,
அவ் வப் பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.

II 13-14 பரமபுருஷனைப் பற்றிய முற்கூறிய உண்மை யறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.

III 14 ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.

IV பக்தபேதம்
16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலு வகை பக்தர்கள் பரம புருஷனை ஶரணமடைகின்றனர்.
1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)

V 17-27 ஞானியின் சிறப்பு
17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும்,
எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு
சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு
பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்;
எம்பெருமானுக்கு மிகவினியவன்.
18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்;
ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘
அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான்.
இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
20 ராஜஸ தாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
22 பக்தி ஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து
புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
VI முடிவுரை
28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ,
பரமபுருஷனையோ பெற விரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்த விஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச் சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும்
பொதுவாக அறிய வேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

——————————————————————————————————–

ஸ்ரீ கீதா  – -8—-ஸ்ரீ அப்யாஸ யோகம்:

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம்
வேத்யோ பாதேய பாவா நாம் அஷ்டமே பேத உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-12-

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம் -மூவருக்கும்
வேத்யோ பாதேய பாவா நாம் -அறிய வேண்டியவை பற்ற வேண்டியவை
அஷ்டமே பேத உச்யதே –வேறு பாடுகள் உபதேசிக்கப் படுகின்றன-

ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
பேராது தன் கழல் கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும்
தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

8 அத்யாய சாரம்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும் -மூவகை அதிகாரிகளும் -ஐஸ்வர்ய-கைவல்ய -பகவல்லாப -அதிகாரிகளும்
குறைவு படாது பெற வேண்டும் என்று விரும்பிய அதிகாரிகள் பரிசுத்தமான தம் மனத்தால்
அறிய வேண்டியனவும் -அனுஷ்டிக்க வேண்டியனவும் –

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

1-2 1. கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
2. ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை யாவை?
3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
4. மூவருக்கும் அந்திம ஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் –
‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக் காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந் நினைவுதானே
அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்து விடும்.
7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும்
செய்ய வேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
8-14 அவரவர்க்குரிய அந்திம ஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸன பேதம்.
8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸன முறையும், அதையொட்டி ஏற்படும் அந்திம ஸ்ம்ருதியும்.
14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன்.
ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும்,
பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
23-24 பரமபுருஷ நிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள்
ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத
பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்.
27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய்,
ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள்
அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் –
என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

—————————————————————————-

ஸ்ரீ கீதா  -9—ஸ்ரீ ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —

ஸ்வ மஹாத்ம்யம் -மனுஷ்யத்வே பரத்வஞ்ச -மஹாத்மானம் விசேஷ-
நவமே யோகோ- பக்தி ரூப ப்ரக்ரிதிதா -13-

பக்தி யோகம் 7-அத்யாயம் -அருளிச் செய்து- இதில் நிகமிக்கிறான் -நான்கு விஷயங்கள் –
1-ஸ்வ மஹாத்ம்யம் -மீண்டும் அருளிச் செய்து –9-10–
2-மனுஷ்யத்வே பரத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ
3-அநந்ய பக்தர்களின் ஏற்றம் –
4-பக்தி ரூபம் -ஆக இந்த நான்கும் –
ஸூயாதாத்ம்யம் -கீழே -7-அத்யாயம் -இங்கு மாஹாத்ம்யம் –
ஸ்திதோஸ்மி-சொல்ல வில்லையே -அதனால் மேலும் –

தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையம்
பன்மேனி நன்னினன்பால் பிரியா வன்பர் ஆசைகளும்
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும்
நன்மேனி நாராணன் நரனுக்கு நவின்றனனே–10-

9 அத்யாய சாரம் –
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும் -அல்பமாய் அழிந்து போவதான
தேவ யோனி கொண்ட விண்ணவர் தன் பால் செலுத்தாத பக்தி யோகமும் –

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
2 கர்ம ஜ்ஞான யோகங்களைக் காட்டிலும் பக்தி யோகத்துக்குள்ள சிறப்பு.
3 ஶ்ரத்தை யின்மையால் பக்தி யோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடையாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
4-10 பக்தி யோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
4,5 பரம புருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய்,
படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
8 ஸமஷ்டி வ்யஷ்டி ரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
11,12 ஆஸுர ஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
13 ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
14,15 ஸாதந பக்தி நிஷ்டர்களான உபாஸக ஜ்ஞானிகளின் பெருமை.
16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்ய நிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும்,
அவற்றின் ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த் தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோக க்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும்,
அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
27 பக்தி யோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச்
செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது,
உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

—————————————————————————

ஸ்ரீ கீதா 10–ஸ்ரீ விபூதி அத்யாயம் —

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–14-

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி -கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து
பக்த் யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்
கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –

எல்லையிலாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
எல்லையிலாத விபூதி எலாம் தனதானமையும்
எல்லையில் பக்திதனை எழுவிக்கத் திருவருளால்
எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

10-அத்யாய சாரம் –

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

1-3 தன்னை தேவாதி தேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
12-18 கண்ணனுடைய கல்யாண குணச் சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
12-15 கண்ணன் முன் ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும்,
அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச்
சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் –
அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை
முதலான கல்யாண குணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை
மற்ற பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது
மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
21-39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
39 தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
41 இது வரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்ய விபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி
ப்ரகரணத்தை நிறைவு படுத்தல்.
42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே
என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

———————————————————————————–

ஸ்ரீ கீதா  -11—-ஸ்ரீ விஸ்வ ரூப யோகம் –

ஏகாதசே ஸ்வ யாதாம்ய சாஷாத்கார அவ லோகனம்
தத்தமுக்தம் விதி ப்ராப்த்யோ பக்த்யே கோபா யதா ததா –15-

ஏகாதசே
ஸ்வ யாதாம்ய -பர ப்ரஹ்மம் பற்றி -உண்மை அறிவை அடைய
சாஷாத்கார -விஸ்வரூபம் காண -முக்காலத்தில் -உள்ளவை அனைத்தையும் -பாண்டவர் ஜெயம் -கூட காணப் போகிறான்
அவலோகனம் -கண்களால் -காண திவ்ய சஷூஸ்
தத்தமுக்தம் -கொடுக்கப்பட்டு -32-ஸ்லோகங்கள் வரை இதுவே -மேலே அர்ஜுனன் ஸ்தோத்ர ஸ்லோகங்கள்
விதி ப்ராப்த்யோ -விதி -அறிவதற்கும் -வேதனம் – அடைவதற்கும் -கடைசி நான்கு ஸ்லோகங்கள்
பக்த்யே கோபா யதா ததா –பக்தி ஒன்றே வழியாகும்
உதங்க பிரஸ்னம் -சஞ்சயன் இது ஒன்றே மனசை விட்டு நீங்காமல் இருக்கிறதே –

எல்லாம் தனக்கு உருவாய் இலங்கும் வகை தான் உரைத்துச்
சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
வில்லாளனுக்கு அன்று மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ
நல்லார்கள் காண்பர் என்றும் நவின்றான் நங்கள் நாயகனே –12-

11-அத்யாய சாரம் –
மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ -தன் ஸ்வரூபத்தை காண தெய்விக சஷூஸ் அருளி
-இவ்வாறு தன்னை காண வேறு சாதனம் இல்லையே –

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
உடம்பதனில் – தன் சரீரத்தில்,
கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ண பக்தியையும் காட்டுகிறான்.
4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
5-8 திவ்ய சக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வ ரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
9-13 விஶ்வரூப வர்ணனை.
14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும்
திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

——————————————————————————–

ஸ்ரீ கீதா  -12– ஸ்ரீ பக்தி யோகம்:

பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–16-

1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை —
கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
2-உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் -இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து–12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு -கோதுகுலம் உடைய பாவாய் போலே

தன் கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம்
இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும்
தன் கருமங்கள் அறியாதவற்கு இலகு நிலையும்
தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே –13-

12 அத்யாய சாரம்

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
சொற்களால் நன்றாகக் கூறும்.

1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்?
என்னும் அர்ஜுனனின் கேள்வி.
2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’
என்னும் கண்ணனின் பதில்.
3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லை யாகில் என் கல்யான குணங்களை
அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியை யடையலாம்” என்று கூறல்.
10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால்
விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
11 “பக்தி யோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான
கர்ம யோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றி நிற்பவன் கைக் கொள்ள வேண்டிய குணங்களை விவரித்தல்.
20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
மாட்டிடையா றொத்தின் வகை.

கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு.

முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

———————————————————————-

ஸ்ரீ கீதா -13—ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
ஞானம் பெரு வகையும் ஞானம் ஈன்ற வுயிர்ப்பயனும்
ஊன் நின்றதற்கு அடியும் உயிர் வேறிடும் உள் விரகும்
தேனின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

13 அத்யாய சாரம் –
ஊனின் படியும் -சரீரத்தினுடைய ஸ்வரூபமும்
உயிரின் பிரிவும் -ஜீவாத்மா சாராரத்தைப் பிரிந்து நிற்கும் நிலையையும்
உயிர் வேறிடும் உள் விரகும் -ஆத்மாவை சரீரத்தில் இருந்து வேறுபடக் காண்பதற்கு வேண்டிய மனத்தால் செய்ய வேண்டிய உபாயங்களையும் –

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப் படுவான்.
2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மை யறிவு.
3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப் போவதாகப் ப்ரதிஜ்ஞை.
4 இவ் வறிவு ஸகல ப்ரமாண ஸித்தம்.
5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மை யறிவைச் சுருங்கக் கூறல்.
7-11 ஆத்ம ஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவ ஸ்வரூபத்தின் விளக்கம்.
18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதி குணங்களால் உண்டாகும் இன்ப துன்பங்களில் பற்றே யாகும்.
23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேக ஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்ம ப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

——————————————————————————————-

ஸ்ரீ கீதா  -14—-ஸ்ரீ குண த்ரய விபாக யோகம்:

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

முக்குண சேர்க்கை பிறவி காரணம் -அறிய படிக்கட்டு —
ஆச்சார்ய ஹிருதயம் சொல்லுமே இந்த ஏழையும் -இது சூழல் -ஆதி அந்தம் காண முடியாதே –
7-படிகள் – நிரதிசய ஆனந்தம்-ஸ்ரீ வைகுண்டம் – -அனந்த கிலேச பாஜனம்-சம்சாரம் -கடைசி படிகள்
6-ஞாதவ்ய பஞ்சக ஞான அஞ்ஞானங்கள் -அடுத்த படி -ஞானம் ஏற்பட்டால் ஸ்ரீ வைகுண்டம் -இல்லாவிட்டால் சம்சாரம்
அர்த்த பஞ்சக -ஞானம் வருவதற்கு என்ன வேணும்
5–இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-அதாவது – சத்வா சத்வங்கள் –
சத்வ குணம் இருந்தால் வரும் -ரஜஸ் தமஸ் களால் அஞ்ஞானம் -ஞானான் மோக்ஷம் அன்றோ –
அதற்கு என்ன பண்ணனும் -சத்வ குணம் வளர –
4–ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் -பிறப்பால் -ரஜஸ் தமஸ் -ஜாயமான கால கடாக்ஷம் -இவற்றுக்கு மூலம் –
3-இரு நல்லருள் நல் வினைகள் -கர்மமும் கிருபையும் -என்றபடி -இவற்றுக்கு அடி-
2–கர்மா க்ருபா பீஜம் பொய்ந்நின்ற ஞானம் – -அவித்யா ஸுஹார்த்தங்கள்-அருள் புரிந்த – ஏதன் நிமித்தம்
1 முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -இது தான் கீழ் படிக்கட்டு
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே
ஒண் பொருள் பொருள் அல்லாத என்னாதே நானில்லாத யானும் உளனாவான் என்கிற
சாம்யம் பெறத் தின்று ஊதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும் –
பரமாத்மா அசித் சாம்யம் சம்பந்திப்பவர்களை சாம்யம் ஆக்குவதில் சாம்யம்
சித் அசித் இரண்டும் சொத்து -என்பதில் சாம்யம் -சித் பரமாத்மா ஞானம் சாம்யம் –
பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் —ஜென்மம் -பபம் புண்ணியம் -எதனால் -உதங்க பிரஸ்னம் -உத்திரம் இல்லையே –
கர்மா ஆதி அற்றது -அந்தம் உண்டு –கிருபையால் வெட்டி விட முடியும் –
மேக மண்டலம் -வ்ருஷடி மழையாகி -பயிர் -தானியம் / அன்னம் / புருஷன் /
ரேதஸ் சோணிதம் -கர்ப்பம் -/பூர்வ க்ருத கர்மா தான் நிர்ணயிக்கும் -/
கர்மா –ஜென்ம -அசத்வ குணம் –எதிர் நீச்சல் போட்டு சத்வ குணம் வளர்க்க –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே –
இதை விளக்க இந்த அத்யாயம் -25 ஸ்லோகம் விவரித்து சொல்லி –26-ஸ்லோகம்- திருவடி பற்றி
போக்கிக் கொள் என்கிறான்

முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
முக்குணமே யனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்து அளிப்பும்
முக்குணம் அற்ற பிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே –15-

14-அத்யாய சாரம்

முக்கதி தந்து அளிப்பும்-ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் ஆகிய மூன்று கதிகளையும் அருளி ரஷிக்கும் விதமும் –

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம் ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும்
தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும்
அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருப்பதால் அதன் விளைவுகளே
அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருக்கும் போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல்.
(இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று,
மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி?
என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

————————–——————————————————————————

ஸ்ரீ கீதா-15—ஸ்ரீ புருஷோத்தம யோகம்–

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம்
ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் – இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –
புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் –
பத்தன் முக்தன் நித்யன் -மூவர் புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே
அபுருஷன் -அசித் -வர்க்கம்-
புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் -அவதார ரஹஸ்ய ஞானம் போலே
நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் –
பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

மூ வெட்டினும் மோகம் அடைந்த உயிர்களினும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனக்குத்
தாவிட்டு உலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16-

15 அத்யாய சாரம் –
மூ வெட்டினும் -24 தத்வங்கள் ஆகிய பிரக்ருதியைக் காட்டிலும்
மோகம் அடைந்த உயிர்களினும் -அதில் மோகம் அடைந்து அஜ்ஞானம் பெற்றுள்ள பத்த ஜீவர்களைக் காட்டிலும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும் -திரு அஷ்டாஷர அனுசந்தத்தால் சிறந்த மோஷத்தைப் பெற்ற சிறந்த முக்தர்களைக் காட்டிலும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் -அபஹத பாப்மாதி எட்டு வலிய குணங்களை யுடைய நித்யர்களைக் காட்டிலும்
விசயனக்குத் தாவிட்டு உலகு அளந்தான்
தனை வேறு என்று சாற்றினனே-தன்னை வேறு பட்டவன் -புருஷோத்தமன் -என்று உபதேசித்து அருளினான் –

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும்,
அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
3-4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி,
ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
4 எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று
ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை,
ஆத்ம ஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை,
இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி
ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ய பாப ரூபமான
விலங்குகளாலே வலியக் கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
10 இத் துன்பங்களை யெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே.
இவன் தன் ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே.
இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணை யுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
11 முன் ஶ்லோகங்களின் விளக்கம்.
12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும்,
பூமியின் தாரண ஶக்தியும், சந்திரனின் போஷண ஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும்
இது போல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும்
எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன்
அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன.
எல்லா வேத வாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட
கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷர புருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷர புருஷனாகிற முக்தன்
என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
17 அசித், ஸம்ஸாரி ஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று,
நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தம புருஷன் முற்கூறிய க்ஷராக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதி ஸ்ம்ருதிகளில்
“புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான்.
பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன்.
இதை அறிந்து அறிய வேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும்
செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

———————————————————

ஸ்ரீ கீதா  -16–ஸ்ரீ தேவாஸூர விபாக அத்யாயம் —

தேவாஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் தேமநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-

தேவாஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராய வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்-அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
தேமநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே -வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி -அவனைப் பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் -வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

ஆணை மாறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
கோணை மராத குணச் செல்வா நீ குறிக்கோள் மறையைப்
பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
காண் இதனால் விசயா வென்று கண்ணன் இயம்பினனே –17-

16 அத்யாய சாரம்
கோணை மராத குணச் செல்வா –வக்கிரத் தன்மை கலவாத குணமாகிய செல்வத்தை உடையவனே -இரண்டாவது மா ஸூ ச -அருளினான் –
பேணிய தத்துவமும் -கொண்டாடப்படும் பரதத்வமும்
பிணியற்ற கிரிசைகளும் -பலனில் பற்று வைப்பதாகிய தீங்கு இல்லாத கர்மங்களும்
காண் இதனால் விசயா வென்று -இந்த வேதத்தால் அறிந்து கொள் அர்ஜுனனே என்று உபதேசித்து அருளினான் –

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
1. பயமின்மை,
2. மனத்தின் பரிசுத்தி,
3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்ம ஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
4. நல்ல வழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹா யஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப் பட்டிருத்தல்,
10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கை விடுதல்,
14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
17. விஷயங்களில் பற்றின்மை,
18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கி யிருத்தல்,
20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப் படாமை,
21. (தீயவர்களால்) வெல்ல வொண்ணாமை,
22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
23. (பேராபத்து வந்தாலும்) செய்ய வேண்டியதில் உறுதியாயிருக்கை,
24. (மநோ வாக் காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தி யாகிற அனுஷ்டானத்
தகுதியை உடையவனாயிருக்கை,
25. பிறர் நற் செயல்களைத் தடுக்காமை,
26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.

4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
1. (தார்மிகன் என்னும்) புகழைப் பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
3. அதிகமான கர்வம்,
4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
6. தத்வ விஷயத்திலும், செய்யத் தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.

5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும்,
எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது.
அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
7 1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக் ஷஸாதனமாகவும்
இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.

8 1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது,
ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்ல
2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால் உலகனைத்தும்
காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.

9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய்,
உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு
சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம்
ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளை யுடையவர்களாய், காமாநுபவத்தையே
பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
12 1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
*14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
17 1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)

அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக

யாகம் செய்கிறார்கள்.
18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

————————————————————————-

ஸ்ரீ கீதா  -17-ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்–

அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—21-

சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால் பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் –
இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்

1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -இது தான் கேள்விக்கு பதில் –
2– சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
-சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே -ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய– ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்

மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
மறை பொருந்தும் நிலையின் வன் குணப்படி மூவகையும்
மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையுமம்
மறை யுமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கு –18-

17 அத்யாய சாரம் –
மறை நிலை தன்னை வகுக்கும் -வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம அனுஷ்டானத்தை -மற்றவற்றின் நின்று வேறுபடுத்திக் காட்டுகின்ற –
குறி மூன்றின் மேன்மையுமம் –ஓம் -தத் -சத் -என்ற மூன்று லஷணங்களின் உயர்வும் –

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
5-6 ஶாஸ்த்ர விதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப் பயனையும் விளைப்பதில்லை
என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
7 ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
10 தாமஸ ஆஹார விளக்கம்.
11 ஸாத்விக யாக விளக்கம்.
12 ராஜஸ யாக விளக்கம்.
13 தாமஸ யாக விளக்கம்.
14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
19 தாமஸ தவத்தின் விளக்கம்.
20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
22 தாமஸ தானத்தின் விளக்கம்.
23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டு
என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும்,
மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
மோக்ஷ ஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
28 ஶாஸ்த்ரத்தை யொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம்
“அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

———————————————————————————-

ஸ்ரீ கீதா -18-ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –22-

1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்டச் செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே –18-17-வரை –
2–சத்த்வோ பாதே யதாந்தி மே—சத்வ உபாதேயதா அந்தி மே-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் – சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
-இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ –ஞானம் உள் அடக்கிய கர்மா யோகத்தால் –18-44—18-54-வரை –
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
-18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து -சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –

சத்துவ வீடுடை நல கருமம் தான் உகந்தமையும்
சத்துவம் உள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
சத்துவ நல கிரிசைப் பயனும் சரணாகதியும்
சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

18 அத்யாய சாரம் –
கர்த்ருத்வ மமதை இல்லாமல் பலன் சம்பந்தத்தையும் விட்டு -மூன்று வித த்யாகம்-
பகவத் ஆராதனம் என்றே கருதி வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து -மனம் தெளிந்து -இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடையலாம் –

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
32 தாமஸ புத்தியின் விளக்கம்.
33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
(ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
(இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

(இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது. கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
(கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.
கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

———–

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலே யாகும்.

24) பக்தியோக: பரைகாந்த ப்ரீத்யாத்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.

26) நிரஸ்த நிகிலாஜ்ஞாநோத்ருஷ்ட்வாத்மாநம் பராநுகம்
ப்ரதிலப்ய பராம் பக்திம் தயைவாப்நோதி தத்பதம்

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.

27) பக்தி யோகஸ் ததர்த்தீசேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தையளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீசேத் ததே வாத்யந்தமஶ்நுதே

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததாயத்தாத்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேகதீ:

பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

——————-

30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

——————

31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

————

அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:

1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.

2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.

3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
(ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.

4 1.அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
3. கர்ம யோக ஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.

5 1.கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.

6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.

7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
4.பக்தர்களில் நாலு வகை.
5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.

8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)

9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
(3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.

10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.

11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.

12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.

13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
(4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.

14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.

15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
(அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.

16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
(மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.

17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
(அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.

18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

————————-

ஸ்ரீ கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

————–

ஸ்ரீ எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன்,
அவனிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செய்யும் பரமை காந்திக்கு எம்பெருமான் பரம மோக்ஷத்தை நிர் ஹேதுகமாக அருளுகிறான்;
கர்ம யோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமை காந்திகளை உருவாக்கும் வழிகளே.

ஸ்ரீ கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

——————————————————————-

வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
இன்பக்கடல் அமுது ஆம் என நின்ற விக்கீதை தனை
யன்பர்க்குக் உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஓய்ஹுமவர்
துன்பக் கடலுள் துளங்குகை நீங்கித் துலங்குவரே–20-

பலன் சொல்லி அருளுகிறார் –

——————————————————————————————-

தீதற்ற நல் குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
மாதுற்ற மார்வன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
கோதற்ற நான் மறை மௌலி யின் ஆசிரியன் குறித்தான்
காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

நான் மறை மௌலி யின் ஆசிரியன்-வேதாந்த சாரியார் -என்றபடி –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவத் கீதா மஹாத்ம்யம் —

September 28, 2022

ஓம் பார்தா²ய ப்ரதிபோ³தி⁴தாம் ப⁴க³வதா நாராயணேந ஸ்வயம்|
வ்யாஸேந க்³ரதி²தாம் புராண முநிநா மத்⁴யே மஹா பா⁴ரதம்||
அத்³வைதாம்ருத வர்ஷிணீம் ப⁴க³வதீமஷ்டாத³ஸா² த்⁴யாயிநீமம்ப³|
த்வாமநுஸந்த³தா⁴மி ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³வேஷிணீம்||

பார்தா²ய = பார்த்தனுக்காக
ப⁴க³வதா நாராயணேந = பகவான் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதிபோ³தி⁴தாம் = தானே உபதேசித்தது
புராண முநிநா வ்யாஸேந = பழமையான முனிவர் வியாசரால்
மஹாபா⁴ரதம் மத்⁴யே க்³ரதி²தாம் = மகாபாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப³! ப⁴க³வத்³ கீ³தே! = தாயே! பகவத் கீதே!
அஷ்டாத³ஸ² அத்⁴யாயிநீம் = பதினெட்டு அத்தியாயம் கொண்டவளே!
அத்³வைத அம்ருத வர்ஷிணீம் = அத்வைத அம்ருதத்தை மழையாகப் பொழிபவளே!
ப⁴க³வதீம் = இறைவியே!
ப⁴வத்³வேஷிணீம் = பிறப்பை நீக்குபவளே!
த்வாம் அநுஸந்த³தா⁴மி = உன்னை தியானிக்கிறேன்

—————

நமோऽஸ்துதே வ்யாஸ விஸா²ல பு³த்³தே⁴ பு²ல்லாரவிந்தா³யத பத்ர நேத்ர|
யேந த்வயா பா⁴ரத தைல பூர்ண​: ப்ர ஜ்வாலிதோ ஜ்ஞா²ந மய​: ப்ரதீ³ப​:||

வ்யாஸ = வியாச பகவானே!
விஸா²லபு³த்³தே⁴ = விசாலமான ஞானம்/புத்தி கொண்டவரே!
பு²ல்ல அரவிந்த³ அயத பத்ர நேத்ர = பூத்த தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவரே!
த்வயா = உங்களால்
யேந பா⁴ரத = இந்த மகா பாரதம்
தைல பூர்ண​: = எண்ணை ஊற்றப் பட்டு நிறைந்து உள்ள
ஞா²நமய​: ப்ரதீ³ப​: = ஞானமயமான ஒளி பரப்பும் விளக்கென
ப்ரஜ்வாலித: = ஒளிர்கிறது
தே நம: அஸ்து = உங்களுக்கு வணக்கங்கள்

—————–

ப்ரபந்ந பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே|
ஜ்ஞாந முத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருதது³ஹே நம​:||

ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

—————

வஸுதே³வ ஸுதம் தே³வம் கம்ஸ சாணூர மர்த³நம்|
தே³வகீ பரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரூம்||

வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்

—————

பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா கா³ந்தா⁴ர நீலோத் பலா|
ஸ²ல்ய க்³ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா||
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா து³ர்யோத⁴நா வர்திநீ|
ஸோத்தீர்ணா  க²லு பாண்ட³வை ரணநதீ³ கைவர்தக​: கேஸ²வ​:||

பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

———————-

பாராஸ²ர்ய வச​: ஸரோஜமமலம் கீ³தார்த²க³ந்தோ⁴த்கடம்|
நாநாக்²யாநககேஸரம் ஹரிகதா²ஸம்போ³த⁴நாபோ³தி⁴தம்||
லோகே ஸஜ்ஜநஷட்பதை³ரஹரஹ​: பேபீயமாநம் முதா³|
பூ⁴யாத்³பா⁴ரதபங்கஜம் கலிமலப்ரத்⁴வம்ஸிந​: ஸ்²ரேயஸே||

பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

——————–

மூகம் கரோதி வாசாலம் பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத் க்ருபா தமஹம் வந்தே³ பரமாநந்த³மாத⁴வம்||

யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

—————

கீ³தா ஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴ய ஸோ²காதி³வர்ஜித​: ||

இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய​: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித​: = நீங்கி
விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.

————–

கீ³தாத்⁴யயந ஸீ²லஸ்ய ப்ராணாயாம பரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வ ஜந்ம க்ருதாநி ச||

கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாம பரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வ ஜந்ம க்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை

—————–

மல நிர்மோசநம் பும்ஸாம் ஜல ஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³ கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸார மல நாஸ²நம்||

பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜல ஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மல நிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸார மல நாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

—————–

கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ர விஸ்தரை​:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||

பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத் தாமரையிலிருந்து
யா விநி​:ஸ்ருதா = எது வெளி வந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் பட வேண்டும்
அந்யை​: = வேறு
ஸா²ஸ்த்ர விஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

————–

பா⁴ரதாம்ருத ஸர்வஸ்வம் விஷ்ணோர் வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர் ஜந்ம ந வித்³யதே||

விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி​:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்த பின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

—————–

ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​:|
பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர் போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​: =  கண்ணனே பால் கறப்பவனாம்
பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

—————–

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீ புத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீ புத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீ புத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே

————-

ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³ந ஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி³பி⁴ர் த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் ஸர்வ லோகைக நாத²ம்||

ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாந க³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴ய ஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வ லோகைக நாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்

———————

யம் ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ர மருத​: ஸ்துந்வந்தி தி³வ்யை​: ஸ்தவை:।
வேதை³: ​ஸாங்க³ பத³ க்ரமோபநிஷதை³ர் கா³யந்தி யம் ஸாமகா³​:।।
த்⁴யாநா வஸ்தி²ததத்³ க³தேந மநஸா பஸ்²யந்தி யம் யோகி³நோ।
யஸ்யாந்தம் ந விது³​: ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம​:।।

யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: ​= வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநா வஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³​: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

ஸ்ரீ பகவான் வேத வ்யாஸரே கூறுகிறார் :

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா – (மஹா. பீஷ்ம. 43/1)

ஸ்ரீ கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும்,
மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும்.
கீதை பகவான் பத்மநாபனின் முகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?

————-

ஸ்ரீ கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது.
ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை.
பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது.
ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது.
கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது.
ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.

ஸ்ரீ கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான்.
காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும்.
கீதா பாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே!
முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால்
அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.

ஸ்ரீ கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது.
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதா ஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் – (வராஹபுராணம்)

(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு.
கீதையின் ஞானத்தைக் கைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)

——————–

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம்
என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள்

பகவத் கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது.
பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம்.
ஆக, இதன் கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.
இவைகளில் அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகை எழுநூறு.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து
நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
அந்த நான்கும் முறையே கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்று பெயர் பெறுகின்றன.
இந்த நான்கினுள் ஆரம்ப தசையில் இருப்பது கர்ம யோகமென்றும்,
பிறகு அது ராஜ யோகமாகப் பரிணமிக்கிறதென்றும்,
அதினின்று பக்தி யோகம் ஓங்கிறதென்றும்,
இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது.
நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர்.

அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று
அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன.

அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. இது முதல் ஷ்டகம்.

ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம்.
மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம்

பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு
மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள
பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை.
அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும்
வேறு ஒரு நூல் செய்யக் கிடையாது.
ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

————

தாரோ உவாச:

1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ

நிலமகள்-சொன்னது:

பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

ஸ்ரீ விஷ்ணுர் உவாச:

2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே

ஸ்ரீ விஷ்ணு சொன்னது:

கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும்,
அவனே முக்தன், இவ்வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.

3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்

கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹா பாபமும் தீண்டுவது கிடையாது.
தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.

4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை

கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய
தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.

5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:

தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும்,
நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.

6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி

எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ,
ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.

7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்

கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை.
கீதாஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.

8. கீதா மே பரமா வித்யா ப்ரஹ்ம ரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா

எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது ப்ரஹ்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய்,
அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.

9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமுகதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா

மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள
இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.

10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்

உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ,
அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.

11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா

முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன்
கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.

12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்

மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்கா ஸ்நான பலனை அடைகிறான்.
ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.

13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்

பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திர லோகத்தையடைந்து
அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.

14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே

வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன்
ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.

15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்

கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம்
பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான்.
கீதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.

17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்

கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான்.
மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.

18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே

மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனா யிருப்பானாகில்
அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.

19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.

ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக்
கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.

20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்

இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள்
நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.

21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:

கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு
வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.

22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்

இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள
பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.

ஸூத உவாச:

23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்

ஸூதர் சொன்னது:

கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ
அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.

இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.

————–

கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில்
நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால் தான்
இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1-காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2-குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3-லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4-மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா?
அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5-மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6-டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7-அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8-சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9-ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10-தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11-ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12-மனம்: நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
13-அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
14-கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15-காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16-மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17-நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18-மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.
கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

————

1. விஷாத யோகம்.
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும்
என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்.
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்.
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம்.
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்.
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்.
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்.
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்.
எந் நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்.
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்.
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம்.
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம்.
இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து
எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம்.
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம்.
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம்.
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று
இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால்,
நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே
பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆயன் அன்று ஓதிய வாக்கு –ஸ்ரீ உ வே ஸ்ரீ வத் ஸாங்க தாசன் ஸ்வாமிகள் —

June 15, 2022

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற-மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலாராம் மெய்ஞ் ஞானமில் -ஸ்ரீ நான்முகன் -71-

ஸர்வ உபநிஷதோ காவ தோக்தா கோபால நந்தன
பார்த்தோ வத்ஸ ஸூ தீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் –

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -திருவாய் -4-8-6-

ஸ்ரீ மஹா பாரதம் சம்சார விமோசகம்
அதுவே கோது என்னும்படி ஸ்ரீ கீதை
வேதேஷு பவ்ருஷம் ஸூக்தம் தர்ம ஸாஸ்த்ரே ஷு மாநவம்
பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்

பர ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனான நாராயணனே பரதத்வம்
ப்ரஸாத விஸிஷ்டனான அவனே பரம ஹிதம்
போக்யதா விஸிஷ்டனான அவனே பரம புருஷார்த்தம் -ப்ராப்யம்
கர்மா ஞான பக்திஉபாயங்களாலே அடையப்படும் பரம் பொருள் அவனே

கேஸவ அர்ஜுன ஸம்வாதத்தை உள்ளடக்கிய சஞ்சயன் த்ருதராஷ்டன் ஸம்வாதம்

கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ

ஸ்ரீ கீதா ஸங்க்ரஹம் -ஸ்ரீ ஆளவந்தார்
மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த தாத்பர்ய சந்திரிகை

வில்லை பொகட்டு நின்றதில் இராவணனுக்கும் அர்ஜுனனுக்கும் சாம்யம் உண்டே யாகிலும் -நெடு வாசி உண்டே
அவன் ஓய்ந்தது அசக்தியினால்
இவன் ஓய்ந்தது தர்மத்தில் அதர்ம புத்தியால்
அர்ஜுனனை ரதியாக்கி தன்னை சாரதியாக அமைத்து ஆஸ்ரித வாத்சல்யம் விவஷிதம்
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -அவனுக்காக அம்புகளுக்கு தன்னை இலக்காக்கிக் கொண்டானே –


1–ஸ்ரீ அர்ஜுனன் விஷாத யோகம் —

த்ருதராஷ்ட்ர உவாச–
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ–
மாமகா பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய—-৷৷1.1৷৷

த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = தர்ம க்ஷேத்ரமான குருஷேத்ரத்தில்
ஸமவேதா: = ஒன்றாகக் கூடி
யுயுத்ஸவ: = யுத்தம் செய்ய வந்திருக்கும்
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்கிறார்கள்

————–

2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —

 

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷

ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = ஸர்வேஸ்வரனான நான்
ஜாது = முற்காலத்தில் எப்போதும்
ந = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷

தேஹிநா = உடலை உடையவன்
அஸ்மிந் = இந்த
யதா = அப்படியே
தேஹே = உடல்
கௌமாரம் = குழந்தைப் பருவம்
யௌவநம் = இளமைப் பருவம்
ஜரா = முதுமை பருவம்
ததா = எப்படியோ
தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவதைப் போல
தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்
தத்ர = அது போல
ந = இல்லை
முஹ்யதி = குழப்பம் மயக்கம் அடைவது

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஃ ஸரீரிண–
அநாஸிநோ அப்ரமே யஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத—৷৷2.18৷৷

அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய
இமே = இவை
தே³ஹா = வடிவங்கள்
நித்யஸ்ய = நிரந்தரமான
உக்தா: = சொல்லப் பட்டது
ஸ²ரீரிண:| = வடிவங்களை தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்
அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற
அப்ரமேயஸ்ய = அளவற்ற
தஸ்மாத் = எனவே
யுத்⁴யஸ்வ = போர் செய்
பா⁴ரத = பாரத குல தோன்றலே

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே—৷৷2.20৷৷

ந = இல்லை
ஜாயதே = பிறப்பது
ம்ரியதே = இறப்பது
வா = மாறாக
கதா³சிந் = எப்போதும்
ந = இல்லை
அயம் = அவன்
பூ⁴த்வா = தோன்றிய பின்
ப⁴விதா= நிலைத்து இருத்தல்
வா = மேலும்
ந = இல்லை
பூ⁴ய:| = மறுபடியும்
அஜோ = பிறப்பது இல்லை
நித்ய: = நிரந்தரமான
ஸா²ஸ்²வத = அநாதியான
அயம் = அவன்
புராணோ = பழமையானது
ந = இல்லை
ஹந்யதே = கொல்லப் படுவது
ஹந்யமாநே = கொல்வதும்
ஸ²ரீரே = உடல்

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷

வாஸாம்ஸி – உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.
ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்
யதா = எவ்வாறு
விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ
நவாநி = புதிய
க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது
நரோ = மனிதன்
அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை
ததா = அது போல
ஸ²ரீராணி = உடல்
விஹாய = அனுபவம் தீர்ந்த பின்
ஜீர்ணாந் = பழையது ஆன பின்
அந்யாநி = மற்றது
ஸம்யாதி = அடைகிறது
நவாநி = புதிய
தே³ஹீ = உடலை உடைய அது

உத்பத்தி விநாசம் -அவஸ்தா விசேஷங்கள்
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை -கலியன்
கிழிந்த வஸ்திரம் கைவிடுவது போல் சரீரம் கைவிடுவது –
சீர்யதே இதி சரீரம் -அழிவதையே இயற்கையாகக் கொண்டது

நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷

ந = இல்லை
ஏனம் = இந்த
சி²ந்த³ந்தி = வெட்டினாலும்
ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்
ந = இல்லை
ஏனம் = இந்த
த³ஹதி = எரிதல்
பாவக:| = தீயில்
ந = இல்லை
ச = மேலும்
ஏனம் = இந்த
க்லேத³யந்த்தி = நனைவது
அபா = தண்ணீரில்
ந = இல்லை
ஸோ²ஷயதி = உலர்வது
மாருத: = காற்றில்

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷

அச்சே²த்³யோ = வெட்ட முடியாது
அயம் = அது
அதாஹ்யோ = எரிக்க முடியாது
அயம் = அது
அக்லேத்³யோ = நனைக்க முடியாது
அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நித்ய: = நிரந்தரமான
ஸர்வக³த:= எங்கும் நிறைந்த
ஸ்தா²ணு = உறுதியாக
அலோயம் = நகராத
ஸநாதந: = புராதனமானது

ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.–
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி—৷৷2.38৷৷

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்
அதற்குக் காரணமான
லாபா⁴லாபௌ⁴ = இலாபம் – அ இலாபம்-விரும்பிய பொருள் கிடைப்பதாயும் கிடைக்காமலும்
அதற்குக் காரணமான
ஜயாஜயௌ| = ஜெயம் – அ ஜெயம்
ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு
ததோ = பின்
யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய
யுஜ்யஸ்வ = தயாராவாய்-முயல்வாய்
ஏவம் = இவ்வாறு-இவ்வண்ணமாகப் போர் புரிந்தால்
பாபம் = பாவம்-துன்ப மயமான ஸம்ஸாரத்தை
அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.–
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவாந்—-৷৷2.45৷৷

த்ரை = மூன்று
குண்ய = குணங்களின்
விஷயா = விசேஷ தன்மை பற்றி
வேதா = வேதங்கள்
நிஸ் = விலகி, தாண்டி, ஒட்டாமல்
த்ரை = மூன்று
குண்யோ = குணங்களில் இருந்து
ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா
நிர் = இல்லாமல்
த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை
நித்ய = எப்போதும்
ஸத்த்வ = சத்வ
ஸ்தோ = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்
நிர் = இல்லமால்
யோக = ஆடம்பரங்களில்
க்ஷேம = சுகங்களில்
ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி

யாவாநர்த உதபாநே ஸர்வத ஸம்ப்லுதோதகே.–
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத—৷৷2.46৷৷

யாவாந் = அதுவரை, அந்த அளவு
அர்த = பயன், உபயோகம், தேவை
உத³பாநே = குளம், குட்டை, ஏரி-நீர் நிலையில்
ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்
ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது
தாவாந் = அந்த அளவு
ஸர்வேஷு = அனைத்து
வேதே³ஷு = வேதங்களில்
ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு-வைதிகனுக்கு
விஜாநத: = அறிந்தவனுக்கு (விஞானத் )-அறிவாளியான முமுஷுக்கு

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

கர்மணி = வேலை செய்வதில்-நித்ய நைமித்திக கர்மங்களில் மட்டும்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = ‘பல்’ என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
ஸ்வர்க்காதி பலங்களிலே ஆசை கொள்ளாமல்
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி -மோக்ஷ சாதனா கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில்

ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷

ராக த்வேஷ -எனது அருளாலே ராகமும் த்வேஷங்களும் -ஆசையும் வெறுப்பும்
வியுக்தைஸ்து –நீங்கப் பெற்றவையாய்
ஆத்ம வஸ்யைர் -தனக்கு வசப்பட்டு இருப்பவையான
இந்த்ரியைஸ் -இந்த்ரியங்களால்
விஷயாந் -சப்தாதி விஷயங்களை
சரந்.–கடந்தும் நிற்பவனாய்
விதேயாத்மா -மனத்தை அடக்கியவனான புருஷன்
ப்ரஸாம் -மனத் தெளிவை
அதி கச்சதி–அடைகிறான்

ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷

யத்வத்–எப்படி
ஆபூர்யமாணம் –தானே நிறைந்து இருப்பதாய்
அசல ப்ரதிஷ்டம் -ஒரே நிலையில் இருப்பதான
ஸமுத்ரம் -கடலை
ஆப ப்ரவிஸந்தி .–நதீ ஜலங்கள் பிரவேசிக்கின்றனவோ
தத்வத் -அப்படியே
ஸர்வே காமா -ஸப்தம் முதலான விஷயங்கள் அனைத்தும்
யம் ப்ரவிஸந்தி -எவனைப் பிரவேசிக்கின்றனவோ
ஸ -அவனே
ஸாந்திம் ஆப்நோதி-விஷய அனுபவங்கள் நீங்கப் பெறுகை யாகிற சாந்தியை அடைகிறான்
காமகாமீ ந ஆப்நோதி —ஸப்தம் முதலான விஷயங்களை விரும்பி விகாரம் அடைபவன் சாந்தியை அடைவது இல்லை-

————

3-ஸ்ரீ கர்ம யோகம் –

ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்ம க்ருத்—
கார்யதே ஹ்யவஸ கர்ம ஸர்வ ப்ரகரிதி ஜைர்குணை—৷৷3.5৷৷

ந = இல்லை
ஹி = அதனால்
கஸ்சித் = ஒருவன்
க்ஷணம் = ஒரு நொடி கூட
அபி = இப்போது
ஜாது= ஒருபோதும்
திஷ்டதி = நிலையாக இருத்தல்
அகர்மக்ருத் = காரியம் ஒன்றும் செய்யாமல்
கார்யதே = செயல் என்பது
ஹி = அது
அவஸ: = அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் , கட்டாயமாக , அவசியமாக
கர்ம = செயல்
ஸர்வ: = அனைத்து
ப்ரக்ருதிஜைர் = உயிர்களுக்கும்
குணை: = குணங்களில் இருந்து

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண–
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷

நியதம் = நியமப்படி, ஒழுங்கு முறையாக
குரு = செய்தல்
கர்ம = கர்மங்களை
த்வம் = நீ
கர்ம = செயல்களை
ஜ்யாயோ = சிறப்பாக, உயர்வாக
ஹி = அதனால்
அகர்மண: = செயலன்றி இருப்பது
ஸரீர யாத்ரா = உடலின் போக்கு , உடலின் பயணம்
அபி = இருந்தும்
ச = மேலும்
தே = உன்
ந = இல்லை
ப்ரஸித்த்யேத் = வெற்றி அடைவது
அகர்மண: = செயலன்றி இருந்தால்

கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷

ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –
உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்
அந்தச் சிறந்தவன் அக்கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது

சிஷ்டாச்சரமே ஸ்ரேஷ்டம்
மேலையார் செய்வனகள் கேட்டியேல்
தர்மஞ்ஞய சமய
க்ரியமாணம் ந கஸ்மை சித் யதர்த்தாய பிரகல்ப்யதே அக்ரியாவத் அநர்த்தாய தத்து கர்ம சமாசரேத் –
யே தத்ர ப்ராஹ்மணா ஸம் மர்ஸிந யுக்தா ஆயுக்தா அலூஷா தர்ம காமா ஸ்யு யதா தே தத்ர வர்த்தேரன் ததா தத்ர வர்த்தேதா -வேத
விதிப்படி ஆராய்ச்சியில் வல்லவர்களாய் -ஸாஸ்த்ரஞ்ஞர்கள் -காம க்ரோதாதிகள் அற்றவர்கள் -அறத்தில் விருப்பமுள்ள வைதிகர்கள் -நடக்கிற வழியிலே நீயும் நடப்பாய் –

ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷

பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத்தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –
இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –
அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்

பகவானும் வர்த்த ஏவச கர்மணி -கர்ம அனுஷ்டானம் விடாமல் செய்து காட்டி அருளுகிறான்

ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பர தர்மாத் ஸ்வநுஷ்டிதாத்—
ஸ்வ தர்மே நிதநம் ஸ்ரேய பர தர்மோ பயாவஹ—-৷৷3.35৷৷

இயற்கையில் உரியதாய் இருக்கும் உபாயமான கர்ம யோகம் அங்கங்களில் குறையுடையதாக அனுஷ்ட்டிக்கப் பட்ட போதிலும்
குறைவற அனுஷ்ட்டிக்கப்பட்ட -பிறர்க்கு உரிய -ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
தனக்கு உரிய உபாயமான கர்ம யோகத்தை அனுஷ்டித்துக் கொண்டு-அந்தப் பிறப்பில் பலன் அடையாமல் மரணம் அடைவதும் சிறந்தது –

ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ–
மஹா ஸநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷

பகவான் கூறினான் -நீ கெட்ட விஷய அனுபவ காரணம்-ரஜோ குணத்தால் உண்டாவதாய் –
பெரும் தீனி தின்னும் காமமே யாகும்
இக் காமமே -தடை செய்யப்பட போது -தடை செய்தவர்களைக் குறித்து -பெரும் பாவச் செயல்களையும் புரியும்
கோபமாகப் பரிணமிக்கிறது –இக் காமத்தையே இந்த ஞான யோகத்துக்கு விரோதி என்று தெரிந்து கொள்வாயாக

நம் தரிசனத்தில் காமமும் க்ரோதமும் ஆத்ம தர்மமான ஞானத்தின் பரிணாம விசேஷமே
மஹாஸந ந ஜாது காம காமாநாம் உப போகே ந ஸாம்யதி
ஹவிஷா கிருஷ்ண வர்த்மேவ பூய ஏவாபி வர்த்ததே -பாரதம்
காமிகளின் காமம் அனுபவித்து அடங்காது -விரகிட விரகிட மென்மேலும் எரியும் அக்னி போலே அனுபவிக்க அனுபவிக்க மென்மேலும் வளரும் –

—————-

4—-ஸ்ரீ ஞான யோகம்-(ஸ்ரீ கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )

ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—৷৷4.5৷৷

ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
ஆத்மாநம் மானுஷம் மன்யே
அஹம் வோ பாந்தவ ஜாத -அவதாரத்தில் மெய்ப்பாடு

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய
கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம்
வ்யக்தமேஷ மஹா யோகீ பரமாத்மா ஸநாதன
அநாதி மத்யே நிதநோ மஹத பரமோ மஹான் -யுத்த -பரமேஸ்வரேஸ்வரத் தன்மை பேசப்பட்டதே –

ந பூத சங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந -பாரதம்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம் சமேதோ அஸ்தி ஸம்பவா -வாயு புராணம்
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ
தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய அம்ருதோ ஹிரண்மய
மாயா வபுநம் ஞானம்
மாயயா ஸததம் வேத்தி பிராணி மாம் ச ஸூபா ஸூபம்
பிதா புத்ரேண பித்ரு மான் யோநி யோநவ் -ஸ்ருதி
ஸமஸ்த சக்தி ரூபாணி தத் கரோதி ஜனேஸ்வர
தேவ திர்யங் மனுஷ்யாக்யா சேஷ்டா வாந்தி ஸ்வ லீலயா -ஸ்ரீ விஷ்ணு புராணம்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம தர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்—৷৷4.7৷৷

பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.-தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

பிராமண தூஷகர் பாஹ்யர்
பிரமேய தூஷகர் -குத்ருஷ்டிகள்
த்ரிணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்யா அதோ தர்மாணி தாரயன் -உலகு அளந்து தர்மங்களை நிலை நிறுத்தினான் –
ததா ஆத்மாநம் ஸ்ருஜாம் யஹம் -ஞானீ து ஆத்மைவ மே மதம் -ஞானிகளையே ஆத்மா என்கையாலே ஞானிகளை அவதரிப்பிக்கிறேன் என்கிறான்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆளாயினரே
பீதகவாடைப்பிரானார் பிரம குருவாக வந்து
சாஷாத் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம் தனும் மக்நாத் உத்தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா

தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந—৷৷4.34৷৷

நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை
ஞானிகள் இடம் அறிவாயாக –
ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்காய் இந்நிலத்தில் தோன்றுவதால்
யார்க்கும் அவன் தாளிணையை உண்ணுவதே சால உறும் -ஞான சாரம்

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துளவோ வகுளமோ தோள் இரண்டோ
நான்கும் உளவோ பெருமான் உனக்கு –

ந சலதி நிஜ வர்ண தர்மதோ ய சம மதிராத்ம ஸூ ஹ்ருத் வி பக்ஷ பக்ஷே
ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சி துச்சை ஹித மநஸம் தமவேஹி விஷ்ணு பக்திம்-என்றும்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தாந அந்யஸ் தத் தோஷ காரக -என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணமும்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை யோதி யோதிவித்து ஆதியார் வரும் அந்தணாளர்
வைஷ்ணவ உத்தமர்கள் -ஸா தவ -யுக்த லக்ஷண தர்ம ஸீலா வைஷ்ணவ அக்ரேஸரா
மத் ஸமாஸ்ரயேண ப்ரவ்ருத்தா மன் நாம குண கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸா கோசர தயா
மத் தர்சனேந விநா ஸ்வாத்ம தாரண போஷணாதி கம் அலப மாநா க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மன்வாநா
பிரஸி தில ஸர்வ காத்ரா பவே யுரிதி மத் ஸ்வரூப சேஷ்டித அவ லோகநா லாபாதி தாநேந தேஷாம் பரித்ராணாய
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன்
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் கால் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புள கீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய ஸர்வ தேஹி பி
உன் தாளிணைக்கீழ் வாழ்ச்சி என்று இருப்பவர்கள்-

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

————

5—-ஸ்ரீ கர்ம சந்யாச யோகம் —

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—
ஷுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஸிந—-৷৷5.18৷৷

அறிவாளிகள் கல்வியும் அடக்கமும் உடைய அந்தணர் இடமும் அவை அற்ற அந்தணர் இடமும்
உருவத்தால் சிறிய பசுவின் இடமும் உருவத்தால் பெரிய யானையின் இடமும் –
கொன்று தின்னப்படும் நாயிடமும் அதைக் கொண்டு தின்னும் சண்டாளனிடமும் கூட
ஆத்மா ஒரு படிப் பட்டு இருக்கையாலே சமமாகப் பார்ப்பவர்களாய் இருக்கின்றனர்-

யே ஹி ஸம் ஸ்பர்ஸஜா போகா துக்கயோநய ஏவ தே.—
ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷

குந்தீ புத்திரனே விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் யாவை சில உண்டோ –
அவை துன்பத்திற்கே காரணமாய் இருப்பவை அன்றோ -முதலும் முடிவும் உள்ளவை அன்றோ –
அவற்றின் இயல்வை அறிபவன் அவற்றில் ஈடுபட மாட்டான்

போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்—-
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி—৷৷5.29৷৷

யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக் கொள்பவனும் எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக என்னை அறிந்து சாந்தி அடைகிறான்

—————

6— ஸ்ரீ யோக அப்பியாச யோகம் –(ஸ்ரீ அத்யாத்ம யோகம்:)

உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநம வஸாதயேத்—
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷

விஷயத்தில் பற்று அற்ற மனத்தினால் தன்னை உயர்த்தக் கடவன் –
தன்னைக் கீழே தள்ளக் கடவன் அல்லன் –
விஷயப் பற்று அற்ற மனமே தனக்கு உறவினனாய் இருப்பதாகும் –
விஷயப் பற்று உள்ள மனமே தனக்கு எதிரியாய் இருப்பதாகும்

பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷

எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு
அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில்
தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா
பந்தாய விஷயீ சங்கீ முக்த்யை நிர்விஷயம் மன

 

கைவல்யம் -அளவில் சிற்றின்பம் -விடை கொள்வார் –
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிவை பற்றே
யோகிக்கு நான்கு வகைப்பட்ட ஸாம்ய புத்தி
ஸர்வத்ர சம தர்சன-6-29- -தன்னை அறிந்து மற்ற ஆத்மாக்களும் ஞான ஸ்வரூபத்தில் சாம்யம் -முதல் நிலை
யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வத்ர மயி பஸ்யதி -6-30-
முக்தி நிலையில் விபு வாய் பரமாத்மாவோடு ஒற்றுமை அறிவது -6-31-மூன்றாம் நிலை
நான்காம் நிலை ஸூகம் துக்கம் அற்ற நிலை -6-32-

ஸர்வ பூதஸ்த மாத்மாநம் ஸர்வ பூதாநி சாத்மநி.—
ஈக்ஷதே யோக யுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந—৷৷6.29৷৷

யோக அப்யாஸத்தில் ஈடுபட்ட நெஞ்சை உடையவன் -ப்ரக்ருதி சம்பந்தம் அற்ற -எல்லா ஆத்மாக்களையும்
சமமாகக் காண்பவனாய் -எல்லா ஜீவர்களோடும் சமமான ஸ்வரூபத்தை உடையவனாகத் தன்னையும் –
தன்னோடு சமமான ஸ்வரூபத்தை உடையவர்களாக மற்ற எல்லா ஜீவர்களையும் காண்கிறான் –

யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி—-
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி–৷৷6.30৷৷

எவன் ஒருவன் என்னை எல்லா ஆத்ம வஸ்துக்களிலும் -என் தன்மை இருப்பதை இட்டுக் காண்கிறானோ –
எல்லா ஆத்மாக்களையும் என்னிடம் -அவர்கள் தன்மை விருப்பத்தை இட்டுக் காண்கின்றானோ –
அவனுக்கு நான் காட்சி அளிக்காமல் போவது இல்லை -அவனும் எனக்கு காட்சி அளிக்காமல் போனது இல்லை –

ஸர்வ பூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வ மாஸ்தித—
ஸர்வதா வர்தமாநோபி ஸ யோகீ மயி வர்ததே—৷৷6.31৷৷

யோக தசையில் முன் கூறிய ஒற்றுமையை முன்னிட்டு எல்லா ஜீவர்களிலும் இருக்கும் என்னை –
ஞான சங்கோசம் அற்று இருக்கை யாகிற -ஒற்றுமையை அனுசந்திப்பவனாய் எவன் ஒருவன் காண்கிறானோ
அந்த யோகீ -யோகத்தில் இருந்து எழுந்த நிலையில் -எப்படி இருந்தாலும்
என்னோடு ஒப்புமையை அனுசந்திப்பவனாக வாழ்கிறான் –
அனைவரும் ப்ரஹ்மாவின் சரீரம் இதில் –பரமாத்மா மூலம் வந்த நினைவு மாறாதே -உயர்ந்த நிலை இது –

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோர்ஜுந.—
ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகீ பரமோ மத—৷৷6.32৷৷

அர்ஜுனா எவ்விடத்திலும் ஆத்மாக்கள் முன் கூறிய ஒப்புமையை உடையவர்களாக இருப்பதால்
தன்னிடமும் மற்றவர்கள் இடமும் உள்ள இன்பத்தையும் துன்பத்தையும் எவன் ஒருவன் சமமாகக் காண்கிறானோ
அந்த யோகியானவன் அனைவரிலும் சிறந்தவனாகக் கருதப்படுகிறான் –

அர்ஜுந உவாச
யோயம் யோகஸ் த்வயா ப்ரோக்த ஸாம்யேந மதுஸூதந–.-
ஏதஸ் யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்—৷৷6.33৷৷

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

அர்ஜுனன் கேட்டான் -மது என்னும் அசுரனை அழித்த கண்ணனே -யாதொரு சமதர்சன ரூபமான இந்த யோகம்
உன்னால் உபதேசிக்கப்பட்டதோ-இந்த யோகம் நிலையாக நிற்பதை மனம் நிலை நில்லாமல் இருக்கும்
காரணத்தால் நான் காணவில்லை -ஏன் என்னில் மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் –
வலிமை உடையதாகவும் -அதனாலே கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்
ஸ்திரமான ஸ்தியை நான் காண வில்லையே என்கிறான் –நீ சொல்வது நடக்குமோ –
சஞ்சலம் தானே எங்கும் -எல்லா இடத்திலும் பேதங்கள் பார்க்கிறேன்

ஸ்ரீ பகவாநுவாச-
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ் தஸ்ய வித்யதே.–
நஹி கல்யாண க்ருத்கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி–৷৷6.40৷৷

ஸ்ரீ பகவான் சொன்னார் -குந்தீ புத்திரனே -யோகத்தைத் தொடங்கி அதில் நின்றும் நழுவிய மனிதனுக்கு
பிராகிருத போகங்களிலோ -மோக்ஷ அனுபவத்திலோ -விரும்பியது கிடைக்காமல் இருத்தல் –
விரும்பாததை அடைதல் ஆகிய -விநாசம் ஒரு போதும் ஏற்படாது -அப்படி நல்ல கார்யமான
ஆத்ம சாஷாத்காரத்தைச் செய்யும் ஒருவன் விரும்பாத கதியை அடைய மாட்டான் அன்றோ –

யோகிநாமபி ஸர்வேஷாம் மத் கதேநாந்தராத்மநா—
ஸ்ரத்தாவாந் பஜதே யோ மாம் ஸ மே யுக்த தமோ மத—৷৷6.47৷৷-மேலே அருளிச் செய்யப் போகும் பக்தி யோகத்தை அறிமுகப் படுத்துகிறான்

முன் கூறிய யோகிகளைக் காட்டிலும் தபஸ்விகள் முதலான அனைவரைக் காட்டிலும் என்னிடம் ஈடுபட்டு இருக்கும்
நெஞ்சினால் என்னை அடைவதில் த்வரை உடையவனாய் எவன் என்னை உபாசிக்கிறானோ
அவன் மிக உயர்ந்தவனாக என்னால் எண்ணப் படுகிறான்

—————–

7— –ஸ்ரீ பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —

அத்வேஷம்
ஆபிமுக்யம்
ஆச்சார்ய உபதேசம்
கர்ம அனுஷ்டானம்
ஸித்த ஸூத்தி
சரீர ஆத்ம விவேகம்
கர்மா யோகம்
ஞான யோகம்
ஆத்ம தர்சனம் –இவற்றை கீழ் ஷட்கத்தில் உபதேசித்து அருளி
இதில்
பகவத் பக்தி உபதேசித்து அருளுகிறான்

மஹநீய விஷயே ப்ரீதி பக்தி -பக்தி ரூபமான உபாஸனம்
நாய மாத்மா ப்ரவசநேந லப்ய -ந மேதயா ந பஹுதா ஸ்ருதேந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -கட உபநிஷத்
ஸ்நேஹ பூர்வ தியானமே பக்தி

வேறே ஒருவன் கடைத்தலை நிற்கை அவனுக்கு தேஜோ ஹானி
நின் சாயை அழிவு கண்டாய்

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷

சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் மனம் முதலிய இந்திரியங்களும்
மஹான் அஹங்காரமும் ஆகிய எட்டு விதமாகப் பிரிந்து இருக்கும் பிரகிருதி
என்னுடையதே யாகும் என்று அறிவாயாக -இவை அனைத்தும் என் சரீரமே –

மத்த பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.–
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி கணா இவ৷৷—-7.7৷৷

அர்ஜுனா என்னைக் காட்டிலும் வேறு பட்டு இருப்பவற்றில் ஓன்று கூட மிகவும் மேலானதாக இல்லை –
இந்த எல்லாப் பொருள்களும் நூலில் மணிகள் கோர்க்கப்பட்டு இருப்பது போலே
என் இடத்திலேயே கோர்க்கப்பட்டு இருக்கின்றன

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக்குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷

பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –
புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –
ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்
நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வசக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –

உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |–
ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவாநுத்தமாம் க₃திம் ||—18-

இவர்கள் அனைவருமே வண்மை மிக்கவர்கள் -ஞானியோ என்னில் எனக்குத் தாரகமாகவே இருப்பவன் என்று
என் சித்தாந்தம் -என்னோடு சேர விரும்புகின்ற அவன் என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளான் அன்றோ

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு
விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே
இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ஜரா மரண மோக்ஷாய–மாமாஸ்ரித்ய யதந்தி யே ।–
தே ப்ரஹ்ம தத்விது₃: க்ருத்ஸ்நம்-அத்யாத்மம் கர்மசாகி₂லம் ॥–29-

கிழத்தன்மை மரணம் முதலான ஆறு ஊர்மிகளும் அடியோடு கழிந்து பிரகிருதி சம்பந்தம் அற்ற
ஆத்ம அனுபவ ரூப மோக்ஷம் கிடைப்பதற்காக என்னை அடைந்து எவர்கள் முயற்சி செய்கிறார்களோ –
அவர்கள் ப்ரஹ்மம் எனப்படுவதையும் அத்யாத்மம் எனப்படும் முழுவதையும்
கர்மம் எனப்படுவது அனைத்தையும் அறிய வேண்டும் –

————-

8—-ஸ்ரீ அப்யாஸ யோகம்:

மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலய மஸாஸ்வதம்.–
நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷

மேலான சம்சித்தி ரூபமான என்னை அடைந்தவர்களான மஹாத்மாக்களான ஞானிகள் என்னை அடைந்த பின்
எல்லா துன்பங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பதாய் நிலை நில்லாததான தேகத்தை மறுபடியும் அடைகிறது இல்லை –
மூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –

ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்திநோர்ஜுந.–
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே—৷৷8.16৷৷

அர்ஜுனா ப்ரஹ்மாண்டத்தினுள் இருக்கும் ப்ரஹ்ம லோகம் வரையில் உள்ள எல்லா உலகங்களும்
அழிவை உடையவை குந்தீ புத்திரனே என்னை அடைந்த பின்போ எனில் மறு பிறப்பு இல்லை
ஐஸ்வர்யார்த்தி எங்கு போகிறான் எதனால் திரும்ப வருகிறான் -அழிவுடைய லோகம் போகிறான் –
அதனால் அனுபவமும் அழியும் –
படைக்கப்பட்டு அழிக்கப் படுபவை -ப்ரஹ்ம லோகம் வரை அஸ்திரம் -லீலா விபூதி –
நித்ய சங்கல்பம் அடியாக நித்ய விபூதி -அநந்ய பிரயோஜனர்க்கு
தன்னையே ஓக்க அருள் செய்யும் பரம காருணிகன் அன்றோ –

நைதே ஸருதீ பார்த்த ஜாநந்யோகீ முஹ்யதி கஸ்சந.-
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக யுக்தோ பவார்ஜுந—8.27৷৷

குந்தீ பிள்ளையான அர்ஜுனா இந்த அர்ச்சிராதி தூமாதி மார்க்கங்கள் இரண்டையும் அறிகிற
எந்த ஞானியும் மயங்க மாட்டான்
ஆகையால் தினம் தோறும் அர்ச்சிராதி கதியை சிந்திப்பதாகிற யோகத்தோடு கூடியவனாக ஆவாயாக
எல்லா காலத்திலும் யோகத்துடன் இரு -அர்ச்சிராதி மார்க்க சிந்தனை வேன்டும் என்றவாறு –

—————-

9—ஸ்ரீ ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —

அவஜாநந்தி மாம் மூடா மானுசிம் தநும் ஆஸ்ரிதம்
பரம் பாவம் அஜா நந்தோ மம பூத மஹேஸ்வரம் –9–11–

அவஜாநந்தி = அறியாமல்
மாம் = என்னை
மூடா⁴ = மூடர்கள்
மாநுஷீம்= மனித வடிவில் உள்ள
தநும் = வடிவம்
ஆஸ்²ரிதம் = நினைத்து
பரம் = மேலான
பா⁴வ = இயற்கை
அஜாநந்தோ = அறியாமல்
மம = என்
பூ⁴தமஹேஸ்²வரம் = அனைத்தின் தலைவன்

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருட வ்ரதா-
நமஸ் யந்தஸ்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே৷৷—9.14৷৷

ஸததம் = எப்போதும்
கீர்தயந்தோ = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா: = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே.–
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம்—৷৷9.22৷৷

அநந்யா = வேறு ஒன்றிலும்
சிந்த யந்தோ = மனதை செலுத்தாமல்
மாம் = என்னை
யே = அவர்கள்
ஜநா: = மக்கள்
பர் உபாஸதே = முறையுடன் உபாசித்து
தேஷாம் = அவர்களின்
நித்யா = எப்போதும்
அ பி⁴யுக்தாநாம் = என்னையே நினைத்து, பக்தியுடன்
யோக³ = தேவைகளை
க்ஷேமம் = பாதுகாத்து
வஹாம்ய = பொறுப்பு
அஹம் = நான்

அஹம் ஹி ஸர்வ யஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச.–
ந து மாமபிஜாநந்தி தத்த்வே நாதஸ் ச்யவந்தி தே—৷৷9.24৷৷

அஹம் = நான்
ஹி = நிச்சயமாக
ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும்
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–
ததஹம் பக்த் யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷

பத்ரம் = இலை
புஷ்பம் = பூ
ப²லம் = பழம்
தோயம் = நீர்
யோ = யார்
மே = எனக்கு
ப⁴க்த்யா = பக்தியுடன்
ப்ரயச்ச²தி = அளிக்கிறார்களோ
தத் = அதை
அஹம் = நான்
ப⁴க்த்யுபஹ்ருதம் = பக்தியுடன் தருவதை
அஸ்²நாமி = ஏற்றுக் கொள்கிறேன்
ப்ரயத் ஆத்மந = தெளிந்த மனதுடன்

யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்.–
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்—৷৷9.27৷৷

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல்
த³தா³ஸி = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

ஸமோ = சமமாக
அஹம் = நான்
ஸர்வபூ⁴தேஷு = அனைத்து உயிர்களுக்கும்
ந = ஒருவரும் இல்லை
மே = எனக்கு
த்³வேஷ்யோ = பகைவர்கள்
அஸ்தி ந ப்ரிய: = நண்பர்கள்
யே = எவர்
பஜந்தி = தொழுகிறார்களோ
து = ஆனால்
மாம் = என்னை
பக்த்யா = பக்தியுடன்
மயி = என்னுள் இருக்கிறார்கள்
தே = அப்படி பட்டவர்களில்
தேஷு = அவர்களில்
சா = மேலும்
அபி = நிச்சயமாக
அஹம் = நான்

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக –
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ்வண்ணமாக
நெஞ்சை பழக்பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

நஞ்சீயர் உபாசகருக்குச் சொன்ன கிரமம் அடைய பிரபன்னருக்கு தேஹ யாத்ரா சேஷமாக ரஹஸ்யத்திலே உண்டு
திருமந்திரத்தை இடக்கை பத்துக்கொண்டு என்னுகை கர்மயோகம்
அதனுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுகை ஞான யோகம்
அவ்வர்த்தம் இருக்கை பக்தி யோகம்
பக்தி பரவசராய் எம்பெருமானை நிர்வாஹகன் என்று துணிகை பிரபத்தி

————

10–ஸ்ரீ விபூதி அத்யாயம் —

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த ஸர்வம் ப்ரவர்ததே.–
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ ஸமந்விதா—–৷৷10.8৷৷

நான் எல்லா உலகிற்கும் உத்பத்தி காரணம் ஆகிறேன் -என்னாலேயே பொருள்கள் அனைத்தும் செயல் படுகிறது
என்கிற இந்த என்னுடைய இயல்வான தடை அற்ற செல்வத்தையும் கல்யாண குண யோகத்தையும் அனுசந்தித்தே
தலை சிறந்த ஞானிகள் பேர் அன்புடையவர்களாய் எல்லாக் கல்யாண குணங்களோடும் கூடிய என்னை உபாசிக்கிறார்கள் –

மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷

மச் சித்தா = சித்தத்தை என்பால் நிறுத்தி
மத் கதப்ராணா = பிராணனை என்னில் நிறுத்தி
போ³த⁴யந்த: = போதனைகளை புரிந்து
பரஸ்பரம் = ஒருவருக்கொருவர்
கத²யந்த = பேசிக் கொண்டு
ச = மேலும்
மாம் = என்னைப் பற்றி
நித்யம் = எப்போதும்
துஷ்யந்தி = இன்புற்று இருக்கிறார்களோ
ச = மேலும்
ரமந்தி = மகிழ்கிறார்கள்
ச = மேலும்

தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்.–
ததாமி புத்தி யோகம் தம் யேந மாமுபயாந்தி தே—-৷৷10.10৷৷

தேஷாம் = அவர்களுக்கு
ஸததயுக்தாநாம் = எப்போதும் செயல்பட்டுக் கொண்டு
ப⁴ஜதாம் = பஜனை
ப்ரீதிபூர்வகம் = அன்புடன் என்னை வழிபட்டு
த³தா³மி = நான் தருகிறேன்
பு³த்³தி⁴யோக³ம் = ஞான யோகம்
தம்= அது
யேந = அதனால்
மாம் = என்னிடம்
உபயந்தி = வருபவர்கள்
தே = அவர்கள்

அஹமாத்மா குடாகேஸ ஸர்வ பூதாஸயஸ்தித-
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச —৷৷10.20৷৷

அஹமாத்மா = அஹம் + ஆத்மா = அனைத்தின் உள்ளும்
கு³டா³கேஸ = குடா கேசா (அர்ஜுனா)
ஸர்வ = அனைத்து
பூ⁴தாஸ²= பூதங்களின்
யஸ்தி²த: = அனைத்தின் உள்ளே
அஹமாதி = அஹம் + ஆதி = அவற்றின் தொடக்கம்
ஸ்ச மத்⁴யம் = அவற்றின் மத்தி (நடு )
ச = மேலும்
பூ⁴தாநாமந்த = பூதாநாம் + அந்தம் = அவற்றின் இறுதி
ஏவ ச = நானே

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம் ஸேந ஸ்திதோ ஜகத்—-৷৷10.42৷৷

அத = மேலும்
வா = அது, அதைப் பற்றி,
ப³ஹுன = பலப் பல
ஏதேந = அதன் மூலம்
கிம் = எதற்கு ?
ஜ்ஞாதேந = அறிவு, அறிவது
த்வா = நீ
அ ர்ஜுந = அர்ஜுனா
விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்
அஹம் = நான்
இதம் = இதை
க்ருத்ஸ்நம் = முழுவதும்
ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்
ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து
ஜக³த் = உலகை

————-

11—-ஸ்ரீ விஸ்வ ரூப யோகம் –

ஏவமேதத் யதாத்த த்வமாத்மாநம் பரமேஸ்வர.–
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஸ்வரம் புருஷோத்தம–৷৷11.3৷৷

ஏவம் = அப்படியே
தத் = இருக்கட்டும், உள்ளது
யதா = அது
அத்த = கூறியது
த்வம் = நீ
ஆத்மாநம் = தன்னைப் பற்றி (Self )
பரமேஸ்²வர = பரமேஸ்வர
த்ரஷ்டும் = காணும்படி
இச்சா²மி = இச்சை கொண்டு இருக்கிறேன்
தே = உன்னுடைய
ரூபம் = வடிவை
ஐஸ்வரம் = ஐஸ்வர்யமான, திவ்யமான, மங்களமான
புருஷோத்தம = புருஷ + உத்தமா = மனிதர்களில் உயர்ந்தவனே

ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ–நமோஸ்து தே தேவவர ப்ரஸீத—
விஜ்ஞாது மிச்சாமி பவந்தமாத்யம் -ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்–৷৷11.31৷৷

தேவர்களில் தலை சிறந்தவனே -மிகக் கடுமையான உருவத்தை உடைய தேவரீர் என்ன செய்ய விரும்புகிறீர் –
என்று ஆதி காரணனான தேவரீரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் –
நீர் செய்ய விரும்புவற்றை அறிகிறேன் அல்லேன் -எனக்கு அதைச் சொல்லுவீராக
உமக்கு எனது வணக்கம் உரித்தாகுக -அருள் புரிவீராக

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர் கரீயாந்.—
ந த்வத் ஸமோஸ்த்யப்யதிக குதோந்யோ–லோக த்ரயேப்யப்ரதிமப்ரபாவ—৷৷11.43৷৷

ஒப்பற்ற பெருமை யுடையவனே-இந்த அசைவனவும் அசையாதனவும் அடங்கிய உலகுக்கு தந்தை யாகிறாய்
ஆகையாலே இவ்வுலகிற்கு வழி படத் தக்கவனும் ஆகிறாய்
தந்தையை விடச் சிறந்தவனாக ஆச்சார்யரும் ஆகிறாய்
மூ உலகிலும் கருணை முதலான எந்த குணத்தாலும் உன்னை ஒத்தவன் வேறு ஒருவனும் இல்லை
உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எப்படி இருக்க முடியும்

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹ மீஸமீட்யம்.–
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷

முன் கூறிய காரணத்தினால் அனைவரையும் நியமிப்பவனும் ஸ்துதிக்கத் தக்கவனுமான உன்னை
நான் வணங்கி உடலை ஒடுக்கி நின்று அருள வேண்டுகிறேன் –
தேவனே -தந்தை மகனுடைய குற்றத்தைப் போலவும் -தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் –
எனக்கு இனியனான நீ உனக்கு இனியவனான என்னுடைய குற்றம் அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
அதனாலே -உடம்பை சுருக்கி கை ஏந்தி பிரார்த்திக்கிறேன் —

நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா–.
ஸக்ய ஏவம் விதோ த்ருஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா—৷৷11.53৷৷

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

ஸம்ஸார ஸர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்
கிருஷ்ணேதி வைஷ்ணவம் மசந்த்ரம் ஸ்ருத்வா முக்தோ பவேத் நர

————–

12– ஸ்ரீ பக்தி யோகம்:

ஸ்ரீ பகவாநுவாச-
மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே.–
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா—৷৷12.2৷৷

ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
மயி = என்னில்
ஆவேஷ்ய = முழுவதும் ஆழ்ந்து
மநோ = மனம்
யே = அவர்கள்
மாம்= என்னை
நித்யயுக்தா = எப்போதும் என்னை நினைத்து
உபாஸதே = உபாசனை செய்து
ஸ்ரத்தயா = சிரத்தையுடன்
பரயோ = உயர்ந்த
உபேதாஸ்தே = கூடியவர்களாக
மே யுக்ததமா மதா: =என்னால் யோகிகளில் சிறந்தவர்களாக கொள்ளப் படுவர்

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்—-
பவாமி நசிராத் பார்த்த மய்யா வேஸித சேதஸாம்—৷৷12.7৷৷

தேஷாம் = அவர்களை
அஹம் = நான்
ஸமுத்தர்த = கரை ஏற்றுகிறேன்
ம்ருத்யு = மரணம்
ஸம்ஸார = மாறும், தொடர்ந்து செல்லும்
ஸாகராத் = விழுங்கும், கடல்
பவாமி = நான்
நசிராத் = வேகமாக
பார்த்த = பார்த்தனே
மய்யா = என்னை
அவேஸித = அடைகிறார்களோ
சேதஸாம் = மனதால்

யே து தர்ம்யாம் ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–
ஸ்ரத்ததாநா மத் பரமா பக்தாஸ் தேதீவ மே ப்ரியா—৷12.20৷৷

யே = அவர்கள்
து = மேலும்
தர்ம்யாம்ருத = தர்மம் என்ற அமிர்தத்தை
இதம் = இந்த
யதோக்தம் = இங்கே சொல்லப் பட்ட
பர்யுபாஸதே = பரி + உபாசதே = வழிபட்டு
ஸ்ரத்த தாநா = நம்பிக்கையுடன்
மத்பரமா = என்னையே பரமாகக் கொண்டு
பக்தாஸ் = பக்தர்கள்
தே = அவர்கள்
அதீவ = மிக அதிகமான
மே = அவன்
ப்ரியா: = பிரியமானவன்

———-

சரம ஷட்கம்

கீதா ஸூ கீதா கர்தவ்ய கிம் அந்யகி சாஸ்த்ர சங்க்ரஹி —
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் வினிஸ்ரயா —
ஸ்ரீ கீதை இனிமை -ஸ்ரீ கீதாச்சார்யன் தானே சோதி வாய் திறந்து அருளிச் செய்தது –
இத்தை அறிந்தால் வேறே சாஸ்திரம் அறிவு வேண்டாமே –

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோஅந்தி மோதித –4-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் / அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் அறியாத சோகம் அங்கு -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

——————————————

13—ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

 

ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஸரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே–
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித—-৷৷13.2৷৷

குந்தியின் செல்வனான அர்ஜுனா -வெளியில் காணப்படும் இந்த உடல் க்ஷேத்ரம் என்று சொல்லப் பெறுகிறது –
இந்த சரீரத்தை எனது என்று எவன் அறிகிறானோ அவனை ஷேத்ரஞ்ஞன் என்று
ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றார்கள்

க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ க்ஷேத்ரேஷு பாரத–
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞாநம் யத்தஜ் ஜ்ஞாநம் மதம் மம–৷৷13.3৷৷

க்ஷேத்ரஜ்ஞம் = க்ஷேத்ரம் பற்றிய ஞானம்
சா = மேலும்
அபி = அது அன்றியும்
மாம் = நான்
வித்தி = அறிவாய்
ஸர்வ க்ஷேத்ரேஷு = அனைத்து க்ஷேத்ரங்களிலும்
பாரத = பரத வம்சத்தவனே
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஓர் = க்ஷேத்ரம் மற்றும் அதை அறிபவனும்
ஜ்ஞாநம் = ஞானம்
யத் = அந்த
தஜ் = அது
ஜ்ஞாநம் = ஞானம்
மதம் = கொள்ளப்பட்டது
மம = என்னால்

ஐந்து ஸ்லோகங்களால் -20-குணங்கள் –
1-அமானித்வம் மரியாதை உடன் பெரியோர் இடம் -மானம் உடையவன் மாநி-
கிம் கரோ -பெருமாள் விசுவாமித்திரர் –வயோ வ்ருத்தர் திருவடிகளில் தலையை வைத்து
2-அடம்பித்தவம் தம்பம் இல்லாமை -எல்லாம் அவன் சொத்து தானே
3-அஹிம்சா -பூதங்கள் மேல் வாக்காலும் மனசாலும் கரணங்களாலும்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் தாழ்வான் சம்வாதம் –
மானஸ பாகவத அபசாரம்-யாருக்கும் தெரியாமல் -ராமானுஜர் இடம் சமர்ப்பித்தால் அடையலாம் –
4-ஷாந்தி-கலங்காமல் பொறுத்து –
5-ஆர்ஜவம்-முக்கரணங்கள் நேர்மை –
6-ஆச்சார்ய உபாசனம்-கைங்கர்யம்
7-க்ஷவ்சம் -சுத்தி முக்கரணங்களாலும்-வர்ணாசிரமம் விடாமல் –
8-ஸ்தைர்யம்–கலங்காமல் -உறுதியாக -அசஞ்சலமான பக்தி வேண்டுமே
9-ஆத்ம விநிக்ரஹம் -மனஸ் அடக்கம் –
10–இந்திரியங்கள் ஓடுவதை இழுத்து வைராக்யம் வளர்த்து -சப்தாதிகளில் வைராக்யம்–
11-அஹம் அல்லாத தேகத்தை அஹமாக நினைக்காமல் —
12-ஜன்மா இறப்பு மூப்பு வியாதி துக்க தோஷ தர்சனம்
13–அசக்தி -பற்று அற்ற தன்மை -ஆத்ம விஷயத்தை தவிர வேறு ஒன்றிலும் ஆசை இல்லாமை
14–புத்ரன் தாரம் வீடு இவற்றில் மிகுந்த ஆசை வைக்காமல்-இவை அநித்தியம் –
நித்தியமான உறவு -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவனே
ஆத்ம சிந்தனை பண்ணும் உறவினர்கள் இடமே பற்று வைத்து – கர்ணன் விபீஷணன் வாசி உண்டே –
15–நித்தியமாக சம சித்தம் இஷ்டங்கள் அநிஷ்டங்கள் -ஹர்ஷ கோபம் இல்லாமல்
16–அவன் இடமே அநந்ய அசையாத பக்தி செலுத்தி
17–தனிமையிலே இருக்கும் ஆசை கொண்டு சிந்தனைக்கு ஏற்ற
18–ஜனக் கூட்டங்கள் கண்டாலே ஓடி -பாம்பை கண்டால் போலே
19-ஆத்ம சிந்தனம் ஈடுபாடு
20— தத்வ ஞானம் தியானம் சிந்தனை –
இவையே ஞானம்-மற்றவை எல்லாம் அஞ்ஞானங்கள்

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத–
மத் பக்த ஏதத் விஜ்ஞாய மத் பாவா யோப பத்யதே–৷৷13.19৷৷

இதி = இதுவே
க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்
ததா = அதே போல
ஜ்ஞாநம் = அறிவு
ஜ்ஞேயம் = அறியப்படுவது
ச = மேலும்
உக்தம் = சொல்லப்படுவது
ஸமாஸத:= தொகுத்து கூறினேன்
மத் பக்த = என் பக்தன்
ஏதத் = இந்த
விஜ்ஞாய = அறிந்த பின்
மத்³பா⁴வாய = என் தன்மையை
உபபத்யதே = அடைகிறான்

அநாதி த்வாந் நிர் குணத்வாத் பரமாத்மாயமவ்யய–
ஸரீரஸ்தோபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே–৷৷13.32৷৷

அநாதித்வாந் = தோற்றம் இல்லாமல்
நிர்குணத் வாத் = குணங்கள் இல்லாமல்
பரமாத்மா = பரமாத்மா
அயம் = அவன்
அவ்யய: = மாற்றமில்லாமல்
ஸரீர ஸ்த = சரீரத்தில் நிலை பெற்று இருந்தாலும்
அபி = மேலும்
கௌந்தேய = குந்தி மைந்தனே
ந கரோதி = அவன் செயல் படுவது இல்லை
ந லிப்யதே = பற்று கொள்வதும் இல்லை . அவன் மேல் கறை படிவதும் இல்லை

யதா ஸர்வ கதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே–
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே–৷৷13.33৷৷

யதா = அப்படி
ஸர்வகதம் = எங்கும் இருந்தாலும்
ஸௌக்ஷ்ம்யாத் = சூக்க்ஷுமமாய் இருப்பதால்
ஆ காஸம் = ஆகாசம்
ந பலிப்யதே = கரை படாமல் இருப்பது போல
ஸர்வத்ர = எங்கும்
ஆவஸ்தித = இருப்பினும்
தேஹே = தேகத்தில்
ததா = அதே போல
ஆத்மா = ஆத்மாவும்
ந பலிப்யதே = கரை படிவது இல்லை

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோரேவம் அந்தரம் ஜ்ஞாந சக்ஷுஷா–
பூத ப்ரக்ருதி மோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்–৷৷13.35৷৷

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ = க்ஷேத்ரம் மாறும் க்ஷேத்ரன்ஞன்
எவம் = அப்படியாக
அந்தரம் = வேறுபாடுகளை
ஜ்ஞாந சக்ஷுஷா = ஞானக் கண்ணால் காண்பார்களோ
பூத ப்ரக்ருதி மோக்ஷம் = பிரக்ரிதியில் இருந்து மோக்ஷம் அடைகிறார்கள்
ச = மேலும்
யே = அவர்கள்
விது= அறிகிறார்கள்
யாந்தி = அடைகிறார்கள்
தே = அவர்கள்
பரம் = உயர் நிலையை

————–

14—-ஸ்ரீ குண த்ரய விபாக யோகம்:

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

இதம் ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா–
ஸர்கேபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2৷৷

ஸ்ரீ பகவான் கூறுகிறார் -முன் கூறியதை விட வேறுபட்டதாய் அறிவுகளில் சிறந்ததாக அறிவைப்
பற்றி மறுபடியும் உரைக்கப் போகிறேன் –
எந்த அறிவைப் பெற்று எல்லா முனிவர்களும் இந்த சம்சாரத்துக்கு அப்பால் பட்டதான பேற்றைப் பெற்றனரோ –
சொல்லபோகும் அறிவைப் பெற்று என்னுடைய சாம்யத்தைப் பெற்றவர்
ஸ்ருஷ்ட்டி காலங்களில் பிறக்கவும் மாட்டார்கள் – பிரளய காலங்களில் ஞான சங்கோசாதிகளைப் பெற்று
சிரமப்படவும் மாட்டார்கள் –
உயர்ந்த அர்த்தம் மறுபடியும் சொல்கிறேன் – -மிக வேறு பட்ட உயர்ந்த -இதை அறிந்தே
எல்லா முனிவர்களும் சம்சாரம் தாண்டி ஆத்ம பிராப்தி மோக்ஷம் அடைந்தார்களோ அத்தை உன்னிடம்
அன்பினால் சொல்கிறேன் -முனி மனன சீலர் -இது நானே சொன்னது இல்லை -சர்வே முனிகளும் –

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷

ஸத்த்வாத் = சத்வ குணம்
ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது
ஜ்ஞாநம் = ஞானம்
ரஜஸோ = ரஜோ குணம்
லோப = பேராசை
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ப்ரமாத = மயக்கமும்
மோஹௌ = குழப்பமும்
தமஸோ = தமோ குணத்தின்
பவதோ = ஒன்றாகிறது

அஜ்ஞாநம் = அறிவீனம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்

ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஸ்ம காஞ்சந–
துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி–৷৷14.24৷৷

ஸம துக ஸுக = துக்கத்தையும் இன்பத்தையும் சுகமாக பார்ப்பான்.
ஸ்வஸ்த = தன்னிறைவு கொண்டான்
ஸம லோஷ்டாஸ்ம காஞ்சந: = மண்ணாங் கட்டியையும் தங்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்
துல்ய ப்ரிய அப்ரியோ = மனதிற்கு பிடித்ததையும் பிடிக்காததையும் ஒரே அளவாக பார்ப்பான்
தீர = உறுதியுடன் இருப்பான்
துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி: = நிந்தனையையும் புகழ்ச்சியையும் ஒன்றாகப் ஏற்றுக் கொள்வான்

மாநாபமாநயோஸ் துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–
ஸர்வாரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷

மாநாபமாநயோஸ்துல்ய = மான அவமானங்களை ஒன்றாகக் கருதுவான்
ஸ்துல்யோ = ஒன்றாகக் கருதுவான்
மித்ராரிபக்ஷயோ: = நண்பனுக்கும் பகைவனுக்கும் இடையில்
ஸர்வாரம்பபரித்யாகீ = அனைத்து தொழில் முயற்சிகளையும் விடுத்து
குணாதீத: ஸ உச்யதே = குணங்களை கடந்தவனென்று கூறப்படுகிறான்

—————

15—ஸ்ரீ புருஷோத்தம யோகம்–

13 அத்தியாயத்தில் சரீரம் ஆத்மா ஸ்வரூப ஸ்வ பாவங்கள்
14-அத்தியாயத்தில் முக்குண வசத்தால் ஜீவனைக் கட்டி வைக்கின்றன -கடப்பது எவ்விதம்
தன்னிடம் பக்தி செய்து பரிசுத்த ஆத்மாவை அடைகிறான்
15-அத்தியாயத்தில் –புருஷோத்தம வித்யை உபதேசம்

சம்சார மரம் வெட்ட அஸங்கம்-நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்க்க அவனையே கால் கட்டி அவன் அருளாலேயே பெற வேண்டும் –

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்

மேல் ஐந்து ஸ்லோகங்களால் புருஷோத்தம வித்யை உபதேசம்

யோ மாமேவ ஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத–৷৷15.19৷৷

யோ = எவன் ஒருவன்
மாம் = என்னை
ஏவம்மே = அப்படியாக
அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி
ஜாநாதி = அறிகிறானோ
புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று
ஸ = மேலும்
ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்
பஜதி = வணங்குகிறான்
மாம் = என்னை
ஸர்வ = அனைத்து
பாவேந =நிலைகளிலும்
பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே

இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

இதி = இதுவே
குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத்தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே

—————

16–ஸ்ரீ தேவாஸூர விபாக அத்யாயம் —

தைவ ஸம்பத் உள்ளவனுக்கு 26 குணங்கள் முதல் மூன்று ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறான்
அஹிம்ஸா பிரதமம் புஷ்ப்பம் புஷ்ப்பம் இந்திரிய நிக்ரஹ ஸர்வ பூத தயா புஷ்ப்பம் ஷமா புஷ்ப்பம் விசேஷத
ஞானம் புஷ்ப்பம் தபஸ் புஷ்ப்பம் த்யானம் புஷ்ப்பம் ததை வ ச ஸத்யம் அஷ்டவித புஷ்ப்பம் விஷ்ணோ ப்ரீதி கரம் பவேத்
ஸத்யம் -விகாரம் இன்றி இருப்பவன்

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரமஸுபா நாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

முன் கூறியபடி என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும்
பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் –
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
7- அத்யாயம் ஆஸூரம் பாவம் நால்வர் பற்றி சொன்ன நால்வரையே இங்கும்

 

தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷

ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில்
வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து
இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –
ஆகையால் சாஸ்திரம் பிரமாணம் -ப்ரஹ்மம் உள்ளபடி -தெரிவதற்கும் உபாயம் அனுஷ்ட்டிக்கவும்
சாஸ்த்ர தத்வம் நானே உபாயமும் நானே -கர்மங்களை சாஸ்திரம் படி செய்ய யோக்யதை பெற்று
உயர்ந்த ப்ராப்யமான என்னை அடைவாய்

ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஞா யஸ்தா முல்லங்க்ய வர்த்ததே
ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோகீ மத் பக்தோ அபி ந வைஷ்ணவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

————–

17-ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்–

ஸாஸ்த்ர விஹித கர்மங்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் -மூன்று குணங்களுக் சேர மூன்று விதமாய் இருக்கும் –
அன்ன மயம் ஹி சோம்ய மனம்
ஆகார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தி
ஸாத்விக ஆகாரத்தால் -ரஸம் ரத்தம் -மாம்சம் -மேதஸ் எலும்பு மஜ்ஜை ஸூ க்லம்-ஏழு தாதுக்களும் நிலை பெற்று விளங்கும்

காயிக வாசக மானஸ தபஸ்ஸூக்களை யும் பற்றி அருளிச் செய்கிறான்

தத் -ப்ரஹ்மம்
சத் -உள்ளது
சாது -மங்களம்
ப்ரணவத்துக்கு எல்லாவற்றுக்கும் தொடர்பு உண்டே

ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே–
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த பார்த்த யுஜ்யதே–৷৷17.26৷৷

குந்தீ புத்திரனே சத் என்னும் இச்சொல் இருக்கும் பொருள் என்னும் அர்த்தத்திலும் – நல்ல பொருள் என்னும் அர்த்தத்திலும்
உலகிலும் வேதங்களிலும் வழங்கப்படுகிறது – அவ்வண்ணமே நல்ல லௌகிக கர்மா விஷயங்களிலும்
சத் என்னும் சொல் வழங்கப் படுகிறது
சத் சப்தம் -லோகத்தில் சத் உணவு சத் பிள்ளை இருக்கிறது -சத் நன்றாக இருக்கிறது என்ற அர்த்தமும் உண்டே –
நல்ல லௌகிக கர்மங்களும் சத் சப்தம் சொல்வர் -சத் பிரயோகம் எதற்கு இந்த ஸ்லோகம்

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி ஸதிதி சோச்யதே–
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபி தீயதே–৷৷17.27৷৷

யாகத்திலும் தவத்திலும் தானத்திலும் மூ வர்ணத்தவர்கள் நிலை நிற்பதும் சத் என்று சொல்லப்படுகிறது –
அந்த மூ வர்ணத்தவர்களுக்காகவே ஏற்பட்ட யஜ்ஞம் தானம் முதலான கர்மமும் சத் என்றே சொல்லப்படுகிறது
யஜ்ஜம் தானம் தாபஸ் -சத் சொல்லி செய்கிறார்கள் சத் ஓம் சேர்ந்தே -ஓம் பொது தானே -கர்மத்தை –
லௌகிக பலத்தை ஆசைப்பட்டு ஓம் சத்

அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ் தப்தம் க்ருதம் ச யத்–
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத் ப்ரேத்ய நோ இஹ–৷৷17.28৷৷

குந்தீ புத்திரனே -ஸ்ரத்தை இல்லாமல் செய்யப்படும் யாதொரு ஹோமமும் தானமும் யாதொரு தவமும் அனுஷ்ட்டிக்கப்படுகிறதோ –
அது – அசத் -என்று சொல்லப்படுகிறது – மோக்ஷத்தின் பொருட்டும் ஆவது இல்லை –
இவ்வுலகப் பலங்களின் பொருட்டும் ஆவதில்லை
அஸ்ரத்தையால் -இங்கு தான் இவன் கேள்விக்கு நேராக பதில் -சாஸ்த்ர விதி -இருந்தும் ஸ்ரத்தை இல்லா விடில் பலன் இல்லையே –
இது வரை ஸ்ரத்தையால் பண்ணினாலும் சாஸ்திரம் விதிக்கா விடில் வீண்
ஸ்ரத்தை இல்லா விடில் சத்தாகும் -மோக்ஷம் கொடுக்காது இந்த லோக ஐஸ்வர்யமும் கிடையாது -நோ இஹ -பிரத்ய –

—————-

18-ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

ஸாத்விக ராஜஸ தாமஸ தியாகங்கள்
ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவாலேயே நியமனம்
பராத்து தச் ஸ்ருதே -2-3-40-
ஸாத்விக ராஜஸ தாமஸ புத்திகள்
வர்ணாஸ்ரம தர்மங்கள்

நாராயண ஏக நிஷ்டஸ்ய யாயா சேஷ்டா தத் அர்ச்சனம்
யோ யோ ஜல்பஸ் ஸஜபஸ் தத் த்யானம் யன் நிரீக்ஷணம்
தத் பாதாம்ப்வதுலம் தீர்த்தம் தச் உச்சிஷ்டம் ஸூ பாவனம்
தத் யுக்தி மாத்ரம் மந்த்ர அர்க்யம் தத் ஸ்ப்ருஷ்ட மகிலம் ஸூசி –விஹகேந்த்ர ஸம்ஹிதை

ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்–
ஸ்வபாவ நியதம் கர்ம குர்வந் நாப்நோதி கில்பிஷம்–৷৷18.47৷৷

சரீரத்தோடு கூடிய மனிதனுக்கு இயற்கையில் கை வரக்கூடிய உபாயமாய் இருக்கும் கர்ம யோகம் குறையுடையதாய்
இருந்தாலும் சில காலம் தனக்கு அனுஷ்ட்டிக்கப்பட்ட பிறருக்கு உரிய உபாயமான ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
இயல்பாகவே பொருந்தி இருக்கும் கர்மத்தைச் செய்பவன் பாபத்தை பலமான சம்சாரத்தை அடைய மாட்டான்
வர்ணாஸ்ரமமே கர்ம யோகம் -14-வகை கீழே பார்த்தோம் தீர்த்த யாத்திரை போல்வன -பரிணமித்து பரம பக்தி வரை -உயர்ந்தது
தன் கர்மா உயர்ந்தது -குறைவாக செய்யப் பட்டாலும் இதுவே உயர்ந்தது –
பர தர்மம் ஞான யோகம் -நன்றாக அனுஷ்ட்டிடிக்கப் பட்டத்தை விட -இதுவே பழகியது —

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே–
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா–৷৷18.50৷৷

புத்த்யா விஸூத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச–
ஸப்தாதீந் விஷயாம் ஸ்த்யக்த்வா ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச–৷৷18.51৷৷

விவிக்த ஸேவீ லக்வாஷீ யத வாக் காய மாநஸ–
த்யாந யோக பரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித–৷৷18.52৷

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்–
விமுச்ய நிர்மமஸ் ஸாந்தோ ப்ரஹ்ம பூயாய கல்பதே–৷৷18.53৷৷

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷

குந்தீ புத்திரனே த்யான சித்தியை அடைந்தவன் எந்த உபாயத்தால் ப்ரஹ்மம் எனப்படும்
ஆத்ம ஸ்வரூபத்தை அடைவானோ
அந்த உபாயத்தை சுருக்கமாக என்னிடம் இருந்து கேட்பாயாக -அந்த ப்ரஹ்மம் எத்தகையது என்றால்
த்யான ரூபமான ஞானத்திற்குப் பரம ப்ராப்யமாய் இருப்பது அந்த ப்ரஹ்மமே

ஆத்ம தத்வ விஷயமான உண்மை அறிவோடு கூடியவனாய் – முன் கூறிய சாத்விக த்ருதியாலே
நெஞ்சை விஷயங்களில் இருந்து மீட்டு -சப்த ஸ்பர்ச ரஸ ரூப கந்தங்கள் ஆகிற புலன்களை விட்டு –
விருப்பு வெறுப்புக்களைக் கை விட்டு – த்யான விரோதிகளோடு தொடர்பு இல்லாத ஏகாந்தமான இடத்திலே
இருப்பவனாய் -அளவோடு உண்பவனாய் -மநோ வாக் காயங்களை தியானத்தில் ஈடுபடுத்தினவனாய் –
இறுதி வரையில் தினம் தோறும் த்யான யோகத்தை அனுஷ்டிப்பவனாய் –
ஆத்மா தவிர்ந்த விஷயங்களில் வைராக்கியத்தை வளர்ப்பவனாய் -தேகத்தில் ஆத்மா என்னும் அபிமானத்தையும்
அவ்வபிமானத்தை வளர்க்கும் வாசனா பலத்தையும் -அது காரணமாக வரும் கர்வத்தையும் -பேராசையையும் கோபத்தையும் –
உறவினரையும் கை விட்டு தன்னது அல்லாதது அனைத்திலும் தன்னது என்னும் நினைவு அற்றவனாய் –
ஆத்ம அனுபவத்தையே இனியதாகக் கொண்டவனாய்-த்யான யோகத்தைச் செய்பவன்
ஆத்மாவை உள்ளபடி அனுபவிக்கிறான் –

ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி கண்டவன் கலங்காத மனத்தை உடையவனாய் –
என்னைத் தவிர்ந்த வேறு எப்பொருளைப் பற்றியும் வருந்துவது இல்லை – வேறு ஒன்றை விரும்புவதும் இல்லை –
என்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பிராகிருதப் பொருள்களிலும் பற்று அற்று இருக்கையில் ஒத்தவனாய்
மேலான என் விஷயமான பக்தியை அடைகிறான் –

ஆத்மதியானத்துக்கு -சுருக்கமாக சொல்கிறேன் கேள் —
ஆத்ம சாஷாத்காரம் பற்றி -புத்தி -உண்மையான கலக்கம் அற்ற புத்தி சாத்விக த்ருதி
சப்தாதி விஷயாந்தரங்கள் -விருப்பு வெறுப்பு தொலைத்து -ஏகாந்தமான இடத்தில் -குறைந்த உணவு உண்டு
அடக்கப்பட்ட வாக்கு காயம் மனஸ்-த்யான யோகம் -நித்ய வைராக்யம் கொண்டு அஹங்காரம் பலம் வாசனை –
கர்வம் பேராசை கோபம் உறவுகளை விட்டு-நிர்மம -சாந்தமாக ஆத்மாவே இனியது ப்ரஹ்மம் ஆத்ம அனுபவம் பெறுகிறான் –
என்னை தவிர வேறு ஒன்றில் விருப்பம் இல்லாமல் -சம புத்தி கொண்டு என் பக்தியையும் பெறுகிறான் –
ஆத்ம சாஷாத்காரம் -உண்மை அறிவை பெற்று த்யானம் -பரமாத்மாவுக்கு சரீரம் சேஷ பூதன் நினைக்க நினைக்க -மாறுவான்
ஞான ஆனந்த மயன் விட சேஷத்வமே பிரதானம் -இது முதல் படி -பக்தியில் மூட்டும் –
என் விஷயமான உயர்ந்த பக்தியை அடைகிறான் -மனஸ் கலங்காமல் -என்னையே நினைத்து –
மற்றவை பற்றி நினைக்காமல் விரும்பாமல் -சமமாக ஜீவராசிகளை நினைத்து
எட்டு காரணங்கள்-
1-ஈஸ்வரன் என்று புரிந்து -ஆட்சி செலுத்துபன் அவனே —
2-காரண வஸ்துவை த்யானம் பண்ண சுருதிகள் சொல்லுமே -நிகில ஜகத் உதயலய லீலா –
3-நிரஸ்த நிகில தோஷ அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாண ஏக குணாத்மகம்-
பரம பாவ்யம் பவித்ராணாம் -மங்களங்களுக்கு இருப்பிடம்
4- அனவதிக அதிசய -இதம் பூர்ணம் -சர்வம் பூர்வம் –
5-அழகுக்கு குறை இல்லையே அம்ருத லாவண்ய சாகரம் அன்றோ
6-ஸ்ரீ யபதி -மூவர் ஆளும் உலகமும் மூன்று -நடுவாக வீற்று இருக்கும் நாயகன்
7-புண்டரீக நாயகன் -கீழே லாவண்யம் இங்கு ஸுந்தர்யம்-
அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் -தூது செய் கண்கள் -ஜிதந்தே புண்டரீகாஷா
8-ஸ்வாமி -இந்த காரணங்களால் –
தன்னடையே பரமாத்மா சிந்தனைக்கு கூட்டி செல்லும் -தேகமே எல்லாம் என்ற நினைவு மாறுவது தான் கஷ்டம் —

ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா–৷৷18.61৷৷

வாஸூ தேவன் எல்லா உயிர்களுக்கும் அறிவு உதயமாகும் ஹ்ருதயமாகிற இடத்தில்
ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா உயிர்களையும்
சர்வ ரஜஸ் தமோ குண மயமான மாயையால் அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்
நானே செய்வேன் என்றால் நீ தூண்டுகிறாய் என்று எதனால் சொன்னாய் -ஈஸ்வரன் -நியமிக்கிறவன் –
சர்வ ஜீவ ராசிகளுக்கு ஹிருதய பிரதேசம் -சிந்தனம் உதயம் ஆகும் இடம் -நானே உள்ளேன் —
இருந்து ஞானம் ஸ்மரணம் மறதி மூன்றையும் நானே செலுத்துகிறேன் முன்பே சொன்னேன் —
யந்த்ரம் -பிரகிருதி கார்யமான சரீரம் -அதில் ஏற்றி வைத்த ஆத்மா -மாயா சக்தியால் -முக்குணங்களில் ஈடுபடுத்தி –
முக்குணம் தகுந்த படி நடத்துகிறேன் -எத்தை செய்தாலும் என் ஆட்சியால் -சாமான்ய காரணம் பகவான் தான் –
விசேஷ கார்யம் கர்மா அன்றோ

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே
சோகப் படாதே –சரணாகதி விரிவாக கீழே பார்த்தோம் -என்னை ஒருவனையே பற்று-
சர்வ தடங்கலாக உள்ள எல்லா பாபங்களில் இருந்தும் விடுவிப்பேன் சோகப் படாதே –
பாபங்கள் இருந்ததே என்று தானே சோகப் பட்டு இருக்க வேண்டும் -பக்தி பண்ண -ஆரம்ப விரோதிகள் இருக்குமே
ஆரம்பிக்கவே முடியாதே –அதைக் கண்டு பயந்து சோகம் –
வர்ணாஸ்ரம கர்மங்கள் பண்ணிக் கொண்டே பலன்களை விட்டு -சர்வ தர்ம பல பரித்யாகம் -என்னையே கர்த்தா -ஆராதனாக பற்று -என்றவாறு –

இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந–
ந சாஸூஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷

பரம ரஹஸ்யமாக என்னால் சொல்லப்பட்ட இந்த சாஸ்திரம் உன்னாலே
தவம் செய்யாதவனுக்குச் சொல்லப்படலாகாது
என்னிடமும் உன்னிடமும் பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் சொல்லப்படலாகாது
கேட்பதில் விருப்பம் இல்லாதவனுக்கு சொல்லப்படலாகாது
எவன் ஒருவன் என்னை துவேஷிக்கிறானோ அவனுக்கும் சொல்லப்படலாகாது
தபம் இல்லாதவனுக்கு சொல்லாதே –பக்தி இல்லாதவன் -ஆசை இல்லாதவன் -சொல்லாதே
அஸூயை உள்ளவனுக்கு சொல்லாதே –
திரௌபதி விரிந்த குழல் முடிப்பதே இவனுக்கு லஷ்யம் -அதனால்
ரஹஸ்யம்-ரத்னத்தை- முற்றத்தில் கொட