ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
திருவாய்மொழி நாராயணனுக்கே
பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.
“வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும் வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார். ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.
கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.
முதலில் நாராயணன்
திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.
முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார். ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும். ‘வண்புகழ் நாரணன்’ (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.
இடையில் நாராயணன்
திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும் குறிக்கும்.
கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும், திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியில் நாராயணன்
‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.
மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.
——————
த்வாதஸ ஊர்த்வ புண்ட்ரங்களுக்கும் இப் பன்னிரண்டு திரு நாமங்களும் ௮நுஸந்திக்கப்படுகின்றன,
புருஷோத்தமனுடைய அம்ஸ சாரத்தைப் பெற்ற த்வாதச ஆதித்யர்களுக்கும் இப் பன்னிரு நாமங்களே கூட்டப் பெற்றிருக்கின்றன.
எம்பெருமானுக்குப் பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள் உள்ளனவென்பது
ஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ் புராண பாஞ்சராத்ர ஸரஸ்த்ரங்களில் கோஷிக்கப்படுகின்றது.
இவ்வைந்து அவஸ்தைகளும் இப் பன்னிரு நாமங்களிலும் அநுஸந்திக்கப் படுகின் றன.
மாலரி கேசவன் நாரணன் மாதவன் கோவிந்தன் வைகுந்தன்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்கையாலே “
கேசவன் நாராயணன், மாதவன் கோவிந்தன் ” என்னுமிந்த நான்கு திருநாமங்களும்
ஸ்ரீவைகுண்ட நாதனாய் எழுந்தருளியிருக்கும் பராவஸ்தையைக் குறிக்கின்றன வென்பது விளங்குகிறது,
“விஷ்ணு” எனும் அடுத்த திரு நாமம் அநிருத்த நாரரயணனாகிய வியூஹத்தைக் குறிப்பதன் மூலம்
மற்ற வியூஹங்களையும் உணர்த்துகிறது.
மது ஸூதன்ன்’ என்பதும் அந்த வியூஹ மூர்த்தியின் சேஷ்டிதத்தைச் சொல்லுகிறது.
“திரிவிக்ரமன். வாமனன். தாமோதரன் என்னும் திரு நாமங்கள் விபவாவதாரங்களைச் சொல்லுகின்றன.
ஸ்ரீதரன்” என்னும் திருநாமம் அவ் விபவ அவதாரங்களிலும் பகவான் பிராட்டியுடனேயே
அவதரிக் கிறானென்று காட்டுகிறது.
“ஹ்ருஷீகேசன்’ என்னும் திரு நாமம் அந்தர்யாமியாய் நின்று இந்திரியங்களை நியமிக்கும் இருப்பை உரைக்கிறது.
‘ஸ்ரீதரன்” , எல்லாத் திரு நாமங்களும் திருமலை முதலிய திவ்ய ஷேத்ரங்களில் எழுந்து யிருக்கும்
ஸ்ரீநிவாஸன் முதலிய அர்ச்சா மூர்த்திகளையும் உணர்த்துகின் றன.
“பத்மாபன்’ என்று இவ் வவதாரங்களுக்கெல்லாம் மூல அவதாரமான க்ஷீராப்தி நாதனைப் பேசுகிறது. ,
ஆக, இப்படி ஐந்து அவஸ்தைகளும் இந் நாமங்களில் அநுபவிக்கப்படுகின்றன.
————
இனி இத் திருநாமங்களின் அர்த் தங்களைச் சிந்திப்போம்.
(கேசவன் )
ககாரத்தினால் சொல்லப் படும் பிரமனையும்,
“ஈசன்? என்று பெயர் பெற்ற சிவனையும் உண்டாக்கினவன்,
“க இதி ப்,ரஹ்மணோ நாம ஈஸ்வர அஹம் ஸர்வ தே,ஹிநாம் | .
ஆவாம் தவாங்கே, ஸம்பூதெள தஸ்மாத் கேஸவ நாமவார் ||”
[‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப் பெயர்;
தேஹத்தில் அபிமான முள்ள எல்லாருக்கும் நான் ஈசன்;
ப்ரஹ்ம ருத்ரர்களாகிய நாங்கள் இருவரும் உன்னுடைய சரீரத்தனின்றும் பிறந்தோம்;
ஆகையால் நீ கேசவன் என்னும் திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்.
என்று ஹரிவம்சத்தில் பேச நின்ற சிவனாலும் பேசப்பட்டது.
-‘நாராயணாத், ப்,ரஹ்மா ஜாயதே। நாராயணாத், ருத்ரோ ஜாயதே|”
நாராயணனிடமிருந்து பிரமன் பிறக்கிறான்:
நாராயணனிடமிருந்து ருத்திரன் உண்டாகிறான்.
என்பது முதலான வேதவாக்கியங்களையும்.
மற்ற ப்ரமாணங்களையும்,
“தெய்வ நான்முகக்கொழுமுளை ஈன்று முக்கணீசனொடு தேவு பல (–முதலிய ஆழ்வார் அருளிச்செயல்களையும்
இவ்விடத்தில் அநுஸந்திப்பது.
(கேசவன் )
பிரமனையும் சிவனையும் தன் வசத்தில் வைத்திருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
‘நாராயணாத் ப்ரஜா யந்தே।| நாராயணாத் ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।’்
பிரமன் முதலிய எல்லாரும் நாராயணனிடமீருந்து உண்டாகிறார்கள்:
நாராயணனால் வாழ்கிறார்கள்:
நாராயணனிடமே லயமடைரார்கள். என்று சொல்லிற்று
சுடர்மிகு சுருதியும்,
“கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்(து) ஏத்துவரே.”’ _என்றும்,
“நெற்றியுள் நின்றென்னையாளும் நிறைமலர்ப் பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்” என்றும் ஆழ்வார் அருளிச் செய்தார்.
“விண்ணோர் தலைவா கேசவா” என்று நம்மாழ்வார் இத் திரு நாமத்துக்குப் பொருள்ள உரைத்தார்,
“கேசவா புருடோத்தமா” என்றார் பெரியாழ்வாரும்.
உத்க்ருஷ்ட புருஷர்களான ப்ரஹ்ம ருத்ரர்களைக் காட்டிலும் மேலானவன் என்றபடி.
(கேசவன் )
சோதி மயமான ஸூர்யன் முதலியவைகளின் கரணங்கள் கேச ஸப்தத்தினால் சொல்லப்படுகின் றன,
அவைகளைத் தன் வசக்தில் கொண்டிருக்கையால் கேசவன் எனப்படுவதாகவும் கொள்ளலாம்.
“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: |
ஸர்வஜ்ஞா: கேஸவம் தஸ்மாந் மம ஹார்த்,விஜஸத்தமா:।’”
உலகில் பிரகாசிக்கும் என்னுடைய கிரணங்கள் கேசமெனப்படுகின் றன.
ஆகையால் எல்லாமறிந்த ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்கள் என்னைக் கேசவனென்று சொல்லுகிறார்கள்.
என்று மஹாபாரதத்தில் சொல்லப்பட்டது .
கோவிந்த நாம வியாக்கி யானத்தில் எடுக்கப்பட்டவையான ” தத்ர ஸூர்யோ பாதி” முதலிய ப்ரமாணங்களை இங்கும் அநுஸந்திப்பது.
“திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை ‘ என்று ஆழ்வார் இவ் வர்த்தத்தை உணர்த்தினர்.
(கேசவன் )
“கேயாாத், வோ அந்யதரஸ்யாம்” பூ மநிந்த; ப,வந்தி மதுபளத,ய: ‘ என்கிற வியாகரண விதிகளின் படி
கேயாப்தத்தின்மேல் வ:’ என்னும் ப்ரத்யயம் வந்து “ப்ரஸஸ்த கேஸ வான்’
( புகழ்ப் பெற்ற கேசங்களை உடையவன் ) என்னும் பொருளைத் தருகிறது.
அதாவது: “ய ஏஷ அந்த ராதித்யே ஹிரண்மய: புருஷோ த்,ருங்யதே ஹிரண்ய ஸ்ம்ருர் ஹிரண்ய கேஸ ;”
ஸூர்யனுக்கு நடுவில் யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன் விளங்குகிறானோ,
அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும்.கேசங்களையும் உடையவன்.
என்று வேதத்தாலும் புகழப் பெற்ற மயிர் முடிகளை உடைய வன் என்று பொருள்.
“கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்
உள்கொண்ட நீல நன்னூல் தழைகொல்? அன்று
மாயன்குழல் விள்கின்ற பூ்ம் தண் துழாய் விரைகால்
வந்தென்னுயிரைக் கொள்கின்றவாறறியீர் அன்னைமீர் கழறா நிற்றீரே.” என்றும்.
“முன்னமுகத்தணியார் மொய்குழல்கள் ‘ என்றும்,
“சுருண் டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்” என்றும் –
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ”’ என்றும்,
“குழலழகர்” என்றும் ஆழ்வார்கள் இக் கேச லெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்.
(கேசவன் )
இத்தால் சிக்குத்தலையரான இதர தெய்வங்களிற் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லப்படுகிறது.”
“பிங்கள ஜடோ தே,வ:’ என்றும்,
“ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ” என்றும் சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ரர்கள் மயிர் போலே யன் றிக்கே,
* நீல குஞ்சத மூர்த் த,ஜம் *,
* குழலிருண்டு சுருண்டு ‘ என்கிறபடியே
கண்டவர்கள் கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ஸ்யாமளமா யிருக்கை”என்று
மை வண்ண நறுங்குஞ்சி வியாக்க்யானத்தில் கலி த்வம்ஸநாசார்யர் அருளிச் செய்தது
இங்கு அநுஸந்திக்கத் தக்கது.
“நரகே பஸ்யமாநஸ்து யமேந பரிபாவஷித: |
கிம் த்வயா நார்ச்சிதோ தே,வ: கேஸவ: க்லேஸ நாஸந : ||”
நரகத்தில் வேதனையை அனுபவிக்கும் ஒரு மனிதன்
“அடே! உன்னால் கிலேசங்களை யெல்லாம் போக்கும் சேசவன் ஏன் அர்ச்சிக்கப்படவில்லை?” என்று
யமனால் கேட்கப் பட்டான். –என்று புராணம் சொல்லிற்று.
கேஸவ: க்லேஸமநாமரந: ‘ என்றதின் தாத்பர்யத்தை.
“தாப த்ரயாதுரரோடு விரஹதாபதுரரோடு வாசியற ஸர்வருக்கும் ஸ்ரமஹரமாம்படி
காண் திருக்குழலின் பரிமளம் மிகுந்தபடி;
*கேமரவ: க்லேஸ நாஸநா சமா:”? என்னக் கடவதிறே ;.
த்ருஷ்டி மாத்ர ப்ரியமாயிருக்கை யன்றிக்கே நெஞ்சில் ஸ்ரமமெல்லாம் போம்படி காண்
திருக்குழலின் பரிமளம் மிகுந்து இருக்கும்படி ” என்று
பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை மை வண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில் அருளிச் செய்தார்.
(கேசவன் )
கேசி என்னாம் அஸுரனைக் கொன்ற க்ருஷ்ணன் என்றும் பொருள் கொள்ளலாம்.
“யஸ்மாத் த்வயைவ துஷ்டாத்மா ஹத; கேஸவ ஐநார்த்தந ; |
தஸ்மாத் கேஸவ நாமா தவம் லோகே க்ஹவாதிம் கமிஷ்யஸி।”’
ஜனார்த்தனனே! ( உன்னைக் கொல்ல வேணுமென்னும் ) கெட்ட எண்ணத்துடன் வந்த கேசி
உன்னாலேயே கொல்லப் பட்டானாகையால் நீ உலகில் கேசவன் என்னும் திருநாமத்தால் கீர்த்தி பெறுவாய்.
என்று நாரதரால் ஸ்ரீவிஷ்ணு புரரணத்தில் இப்பொருள் பேசப்பட்டது.
கேஸவம் கேஸி ஹந்தாரம்” என்றும் மற்றோரிடத்தில் இவ்வர்த்தம் சொல்லப்பட்ட து. –
கேஸவ: கேஸி ஹந்தா ”’ என்று இப் பொருள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் ஆதரிக்கப்பட்டது
“கண்ணன் கேசவன்” என்றும், `
” நாராயணன் மூர்த்தி கேசவன்” என்றும்
ஆழ்வார்களாலும் இவ் வர்த்தம் அறு ஸந்திக்கப்பட்டது.
இப்படிப் பொருள் கொள்ளும் போது எம்பெருமானுடைய விரோதி , நிரஸன ஸீலத்வம் தோற்றுகிறது.
கண்ணன் கேசவன் நம்பி’ :
கேசவ நம்பீ உன்னைக் காது குத்த”
“கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னுமிப் பேறு எனக்கு அருள் கண்டாய்” என்று
இத் திருநாமத்தின் குண பூர்த்தியை அனுஸந்தித்தார்கள்.
“கேஸவ ; க்லேஸ நாஸநா -மஹா லோகே த்வை ரூப்யேண ஸ்திதெள ஸ்தித: |
மதுராக்,யே மஹாஷேத்ரே வாராணஸ்யாமபி த்விஜ ॥”’
விப்ரரே! கிலேசங்களைப் போக்கடிக்கும் குழலழகையுடைய பெருமான்.
மதுரை என்னும் மஹா ஷேத்திரத்திலும்
வாராணஸி எனப்படும் காசியிலும்
பூமியில் கோயில் கொண் டெழுந்தருளியிருக்கிறான்..] என்னும் ப்ரமாணத்தைக் காட்டி.
பட்டர் இத் திருநாமத்தை அர்ச்சாவதார பரமாக வியாக்கியானம் செய்தருளினார்.
இப்படிப் பர விபவ அர்ச்சாவதாரங்களைக் குறிக்கக் கூடியதே யாகிலும்
கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்?’ என்று நம்மாழ்வார் அருளிச் செய்கையால்.
இத் திருநாமத்துக்குப் பராவஸ்தை யைக் குறிக்கும் பொருளே இங்கு முக்கியார்த்தமாகக் கடவது.
——————
கேசவன் என்னும் திருநாமத்தினால் பிரம ருத்திரர் களுக்கும் உத்பாதகன் என் று உரைக்கப்பட்ட து.
இப்படிப் பட்டவன் யார் என்னும்,கேள்வி எழ.
‘நாராயணன்’ என்று வேதாந்த ஸித்தமான அஸாதாரணமான திருநாமத்தைப் படிக்கிறது.
இத் திருநாமத்தை வேதங்களும். இதிஹாஸ புராணங்களும் ஆழ்வார்களும் மிகவும் ஆதரித்துப் போந் தார்களென்பது ஸுப்ரஸித்தம்.
இதிலுள்ள ணகாரமான து வேறெந்த தெய்வத்திற்கும் இத் திரு நாமம் பொருந்தா தென்பதைக் காட்டுகிறது.
இத் திருநாமத்தின் அர்த்தங்களோ ஆயிரம் நாவுடடைத்த ஆதிசேஷனாலும் அளவிட்டுச் சொல்லமுடியாதவை.
நாராயணனுடைய பெருமையை அறிந்தாலும் அறியலாம்;
நாராயண நாமத்தினுடைய அர்த்த, வைபவத்தை எவராலும் அறியமுடியாது.
பரம காருணிகர்களும் ஸர்வஜ்ஞ ஸார்வ பெனமர்களுமான நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும்
இத் திருநாமத்தின் பொருளைப் பலவிடங்களில் பேசியிருக்கிறார்கள்.
அந்த ஸ்ரீஸக்திகளைத் துணையாகக் கொண்டு நாமும் இத் திரு நாமத்தின் பொருட் பெருமையை
இயன்ற வரையில் அநுபவிக்க முற்படுவோம்.
“ ரிங்-க்ஷயே ”’ என்று தாதுவாகையாலே. ‘ர’ என்னும் எழுத்து க்ஷயித்துப்போகும் பதரர்த்தங்களைக் குறிக்கிறது. ந’ என்னும் எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: என்று நித்யமாய் விளங்கும் வஸ்துவைக் குறிக்கிறது. *“நராணாம் ஸமூஹ: நார: என் கிறபடியே “- நர என்னும் பதம் இப்படிப்பட்ட நித்யவஸ்துக்களின் ஸமூஹத்தைக் குறிக்கிறது. ‘நாரா:’ என்னும் பன்மையால் அப்படிப்பட்ட நித்ய வஸ்துக்களின் ஸமூஹங்கள் பல உள என்று உணர்த்தப் படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்ய வஸ் துக்களின் ஸமூஹங்கள் எவை என்பதைப் பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ், யாத்ம குணங்களும், குண ப்ரகாஸ்கமான திவ்யமங்கள விக்ரஹங்களும். விக்ரஹ குணமான ஸெளந்தர்யாதிகளும். அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீடமகுடாதி திவ்யா பரணங்களும், அவ்வா பரணங்களோடு விகல்பிக்கலாம்படியான சங்க,சக்ராதி திவ்யாயுதங்களும், இத்தனையும் காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்து அனுபவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும், அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்த கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான ஸூரி ஸங்க,மும், அவர்களோபாதி போய் அடிமை செய்கிற ( அவர்களுக்கு அடிமை செய்கைக்குப் பரிகரமான சத்ர சாமராதி,பரிச்ச- அவ்வடிமைக்கு வர்த்த,கமாய் பஞ்சோபனிஷந் மயமான குண த்ரயாத்மிகையான மூலப்ரக்ருதியும், புருஷ சமஷ்டியும், அஹோ ராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும். ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும். தத் கார்யமான அண்டங்களும். அண்டாரந்தர்வர்த்திகளான சதுர் வித பூதங்களும் .
பஞ்சோபனிஷஹ மயமாகையாலே பரமபதமும் மஹாத்மகமாயிருக்கும்; குணத்ரய த்யிகையாகையாலே மூலப்ரக்ருதியும் ஸமூஹுத்மகையாயிருக்கும் அஹோராத் ராதி,விபாகங்கள் காலமும் ஸமூஹாத்மகமாயிருக்கும்” என்று பரந்த ரஹஸ்யத்தில் பரகக அருளிச்செய்தார்.
அடுத்தபடியாகவுள்ள அயந சப்தம் பல பொருள்களை உடையது. அவைகளில் இருப்பிடம் ‘ என்பதும் ஒன்று. அயநம் யஸ்ய ஸூ;-—நாராயண:” [நித்ய பதரர்த்த ஸமூஹங்களாகிற நாரங்கள் எவனுக்கு இருப்பிடமோ. அவன் நாராயணன் ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு பொருள் ஏற்படுகிறது. இத்தால் இவன் எல்லாப் பதார்த்தங்களையும் : உடல் மிசை உயிரெனக்கரந்தெங்கும் பரந்துளன் ‘. என்று சொல்லப்பட்டதாகிறது.
“சேதநாசேதநம் ஸர்வம் விஷ்ணோர் யத், வ்யதிரிச்யதே |
நாரம் தத,யநஞ்சேத,ம் யஸ்ய நாராயணஸ்து ஸ: ॥”
விஷ்ணுவைக் காட்டிலும் வேறுபட்டதான எல்லாச் சேதநா சேதனங்களும் நார சப்தத்தால் சொல்லப்படுகின்றன.
அது எவனுக்கு இருப்பிடமாயுள்ளதோ அப்பரமாத்மா நாராயணன் எனப்படுகிறான்.–என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம் சொல்லிற்று.
இந்த பஹுவ்ரீஹி ஸமாஸப் பொருளில் அந்தர் வ்யாப்தியும், அடுத்தபடியாகச் சொல்லப்படும்
தச்புருஷ ஸமாஸப் பொருளில் பஹிர் வ்யாப்தியு
உணர்த்தப் படுகின்றன என்று ஆசார்யர்கள் அருளிச் செய்வர்.
“யச்ச கிஞ்சித் ஜக,த்யஸ்மிர் த்,ருங்யதே ங்ரூயதே$பி வா |
அந்தர் ப,ஹிம்ச தத் ஸர்வம், வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: |” [
இவ்வுலகில் காண்பனவும். கேட்பனவுமான எல்லா வஸ்துக் களிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்–என்று பண்டை மறையிலும்,
“ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்! ‘ என்று தமிழ் வேதத்திலும்
இவ்வர்த்தம் சொல்லப்பட்ட.து.
இப்பொருளில் எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம் சொல்லப்படுகிறது.
“நாராணாம் அயநம் ய: ஸ:”
நித்யபதளர்த்த, ஸமூஹங்க ளாகிற நாரங்களுக்கு எவனொருவன் இருப்பிடமாயிருக்கிறானோ
அவன் நாராயணன் – என்ற தத்புருஜ ஸமாஸத்தின் படியும் பொருள் கொள்ளலாம்.
இத்தால் எல்லா வஸ்துக் களையும் நாராயணன் தரிக்கிறான் என்று சொல்லப்படுகிறது, ^”
நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: ” [63-62]
நார சப்தத்தனால் சொல்லப்படும் நித்யவஸ்துஸமுஹங் களுக்கு இருப்பிடமாயிருப்பதால் நரராபணனெனப்படு கிறான்-
என்று இவ்வர்த்தம் பாரதம் உத்யோக பர்வத்தில் உரைக்கப்பட்ட து.
நார சப்சத்துக்கு மற்றொரு வகையாகவும் பொருளுரைப்பதுண்டு.
நார:’ என்று ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும் சிறிதும் விகாரம் அற்றவனான பரமபுருஷன் சொல்லப்படுகிறான்.
*நராத் ஜாதாநி ‘ என்கிறப்டியே புருஷோத்தமனிடமிருந்து உண்டானவை நாரங்க ளெனப்படுகின்றன.
அவைகளை இருப்பிடமாக உடைத்தா யிருக்கையா லும், அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை யாலும்
நாராயணனெனப்படுகிறான் என்று
முன் போலவே இருவகையாகவும் பொருள். ““நராஜ்ஜாதாநி தத்த்வாதி நாராணீதி ததோ விது, |
தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: |!”
நரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை நாரங்களென் று அறிகின்றார்கள்.
அவைகளையே இருப்பிடமா யுடையவனாயிருப்பதால் அவன் நாராயணனெனப்படுகிறான்–
என்று இவ்வர்த்தம் ஹரி வம்சத்திலும் சொல்லப்பட்டது,
இவ்வர்த்தத்தை “யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்” என்று நம்மாழ்வார் அருளி செய்தார்.
° நார பதத்தில் சொல்லப்பட்ட அநந்தமான வஸ்த்துக்களில் சிலவற்றைச் சிற்சில விடங்களில் எடுத்து ஆழ்வார்கள் நாராயண சப்தத்துக்கு வியாக்யானம் செய்து அருளி இருக்கிறார்கள்.
நார சப்த்த்துக்கு அநந்த கல்யாண குணங்களையும் பொருளாகக் கொண்டு
“: ஈறில வண் புகழ் நாரணன் ” என்றும்
` வாழ் புகழ் நாரணன்” என்றும் நம்மாழ்வாரும்.
நல முடை நாரணன் என்று பெரியாழ்வாரும்,
நலந்திகழ் நாரணன்” என்று குலசேகராழ்வாரும் செய்தருளினார்கள்.
நார சப்தத்.துக்கு திவ்ய மங்கள விக்ரஹத்தையும் அதன் குணங்களையும் பொருளாகக் கொண்டு.
“ காராயின காளநன் மேனியினன் நாராயணன் ” என்று . நம்மாழ்வாரும்.
“‘ கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான் நாராயணனே ” என்றும்,
` நாற்றத்துழாய் முடி நாராயணன்” என்றும் ஆண்டாளும் அருளிச் செய்தனர்.
திவ்யா பரணங்களை நார சப்தத்தக்குப் பொருளாகக் கொண்டு
“உடையார்ந்த வாடையன் கண்டிகையன் உடைநாணினன்
புடையார் பொன்னூலினன் பொன்முடியன் மற்றும்
பல்கலன் நடையாவுடைத் திருநாரணன்” என்று நம்மாழ்வார் அருளினார்.
“லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்” என்று ஆச்சான் பிள்ளையால் அருளிச் செய்யப்பட்
பிராட்டிமார் களை நார சப்தத்துக்குப் பொருளாகக்கொண்டு “
செல்வ நாரணன் என்று நம்மாழ்வார் அருளிச் செய்தார்.
விண்ணோர் நாயகன் நாராயணன் ” என்று வேதம் தமிழ் செய்த மாறன்
நார சப்தத்துக்கு நித்ய முக்தர்களைப் பொருளாக அருளிச் செய்தார்.
நாரசப்தத்துக்குச் சேதனர்களைப் பொருளாகக் கொண்டு “`
எண் பெருக்கந்நலத் தொண் பொருள் ஈறில வண்புகழ் நாரணன் ” என்றும்,
“’ எம்பிரான் எம்மான் நாராயணன் ” என்றும் சடகோபனும், =
`” நம்மை யுடையவன் நாராயணன் ” என்றும்.
“’ என்னை நலங்கொண்ட நாரணற்கு?” என்றும் ஆண்டாளும்
நாராயணன் என்னை யாளி ” என்று திருமழிசைப் பிரானும் அருளிச்செய்தனர்.
நாரசப்தத்துக்கு உபயவிபூ,தியையும் பொருளாகக்கொண்டு
“நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் “என்று நம்மா ழ்வாரும்.
” நாயகன் நாரணன்” என்று பெரியாழ்வாரும் அருளிச் செய்தனர். .
( நாராயணன் )
நரனாகிற பெருமானால் படைக்கப்பட்ட ஜலத்தை நார சப்தத்திற்குப் பொருளாகக் கொண்டு
அதை இருப்பிடமாகக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்,
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: |
தா யத,ஸ்யாயந௩ம் பூர்வம் தேந நாராயண: ஸ்ம்ருத: |”
நரனாகிற ஸர்வேஸ்வரனால் படைக்கப்பட்ட ஜலம் “நாரம் ‘ எனப்படுகிறது.
அது ஆதி காலத்தில் இவனுக்கு இருப்பிடமாயிருக்கையால் இவன் நாராயணனெனப்படுகிறான். ] என்று
மநுஸ்ம்ருதியிலும், விஷ்ணுபுராணத்திலம் உரைக்கப் பட்டது.
இவ்வர்த்தம் “” நடுக்கடலுள் துயின்ற நரராயணனே!”’ என்று ஆழ்வராரலும்.
“ ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந; ‘”
இவனே பாற்கடலில் பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்
என்று புராணத்திலும் பேசப்பட்டது.
“ஸ்ருஷ்ட்வா நாரம் தோயமந்த:ஸ்தி,தோஹம் =, யேரு ஸ்யாந்மே நாம நாராயணேதி”’ [நார சப்தத்தனால் சொல்லப்படும் ஜலத்தை ஸ்ருஷ்டி செய்து அகனுள் நான் வசித்தபடியால் எனக்கு நாராயண னென்னும் நாமம் ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹ புராணத் தில் பகவானாலும் இவ்வர்த்தம் ஆதரிக்கப்பட்டது.
(நாரா யணன்) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள சேதனாசேதனங்களைப் பொருளாகக் கொண்டு. ப்ரளய காலத்தில் அவைகளுக்குச் சேருமிடமாயுள்ளவன் என்றும் பொருள்கொள்ளலாம். = “” ஞாலமுற்றுமுண்டாலிலைத் துயில் நாராயணனுக்கு ” என்று பெரியாழ்வாரும், ** ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாராயணனே! ” என்றும். “ஞாலமுண்டாய்! ஞானமூர்த்தி! நாராயணா!” என்றும் நம்மாழ்வாரும் இவ் வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள். இத்தால் ஸர்வ ஸம்ஹர்த்ருத்வமும் சொல்லப்பட்ட தாயிற்று.
(நாராயணன்) * நர’ சப்தத்தினால் அழிவற்ற ஸ்வரூபத்தையுடைய ஆத்மா சொல்லப்படுகிறது ; நாரசப்தம் ஆத்ம ஸமூஹுத்தைச் சொல்லுகிறது. அயநசப்தம் : இண் க,தெள ‘ : அய-க,தெள ‘ என்னும் தாதுக்கள் ஒன் றிலிருந்து உண்டானதாகையாலே போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும், போய்ச் சேரும் வழியான உபாயத்தையும் குறிக்கும்
ஆக “நாராயணன் ‘. என்று சேதன வர்க்கத்திற்கு
மோக்ஷப்ராப்யமாகவும்,
மோக்ஷ உபாயமாகவும் இருப்பவன் என்று பொருள்படு கிறது.
இவ்வர்த்தம் “நாரஸ் த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித:
க,திராலம்ப;ம் தஸ்ய தேக நாராயண: ஸ்ம்ருத: || ”
நாரமென்று சேதனருடைய ஸமூஹம் சொல்லப் படுகிறது.
அச்சேதன சமூகத்துக்கு உபாயமும் உபேயமுமாயும் இருப்பதால் நாராயணனென் று சொல்லப்படுகிறான். ] என்றும்.
“நரரோ நராணாம் ஸங்கா தஸ் தஸ்யாஹமயநம் க,தி:।
தேநாஸ்மி முநிபிர் நித்யம் நாராயண இத்ரித: || ”
நரர்களின் கூட்டம் நாரமெனப்படுகிறது.
அதற்கு நான் ப்ராப்யமாகவும். ப்ராபகமாகவும் இருக்கிறேனாகையால் முனிவர்களால்
எப்போதும் நான் நாராயணன் என்று சொல்லப்படுகிறேன்.] என்றும் ।
“ ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! |
தேஷாமயநபூ,தத்வாந் நாராயண இஹோச்யதே |
தஸ்மாந் நாராயணம் பந்தும் மாதரம் பிதரம் குரும் |
நிவாஸம் சரணம் சாஹார் வேத,வேதராந்த பாரகத : |
நார சப்தத்தனால் ஜீவ ஸமூஹம் பெரியோர்களால் சொல்லப் படுகிறது.
அவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாகிற அயன மாயிருப்பதால் நாராயணன் என இங்கு சொல்லப்படுகிறான் .
ஆகையால் நாராயணனை
பந்து வாகவும்.
தாயாகவும்.
தந்தை யாகவும்.
ஆச்சார்யனாகவும்
இருப்பிடமாகவும்
வேத வேதார்தங்களைக் கரை கண்டவர்கள் சொல்லு கிறார்கள்–
என்றும் சாஸ்திரங்களில் இவ்வர்த்தம் வெகு விரிவாக உபதேசிக்கப்பட்டது.
“ நாராயணனே நமக்கே பறை தருவான் ” என்று ஆண்டாளும்,
‘வீடாக்கும் மெய்ப் பொருள் தான்……நாராயணன் ” என்றும்,
நாராயணன் என்னை யாளி நரகத்தில் சேராமல் காக்கும் திருமால் தன் ”’ என்றும் திருமழிசைப் பிரானும்
இவ் வர்த்தத்தை நாராயண சப்தத்தக்குப் பொருளாக அநுஸந்தித்தார்கள்.
“நாரணம் கதிர் நாராயண:”’
நாராயணனே மோக்ஷத்தில் அடையப் படுமவனும், அடைவதற்கு வழியுமாவான்.
என்று வேதமும் இவ்வர்ததத்தை உத்கோஷித்தது. (நாராயணன்)
° நர: என்று அழிவற்றவனான எம்பெருமானையும் குறிக்கும் என்று முன்னரே சொல்லப்பட்ட து.
“ ஜந்ஹார் நாராயணோ நர: ” என்று அவனுடைய நாமமாக வும் படிக்கப்பட்ட து.
`” நரஸ்யே இமே- நாரா: ” (சேர்ந்தவர்கள் நாரங்கள்] என்கிற வ்யுத்பத்தியின் படி
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் [ஞானி எனக்கும் ஆத்மாவாயிருப்பவனென்று என் ஸித்தாந்தம்]
என்று எம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச் சொல்லுகிறது.
“நாரா அயநம் யஸ்ய ஸ; ” என்று தன்னடியார்களையே தனக்குப் பரம ப்ராப்யமாகக் கொண்டு இருக்குமவன் என்று பொருள் படுகிறது. –
‘ நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் “என்றும்.
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா!” என்றும் பெரியாழ்வாரும்;
* அற்புதன் நாராயணன் …நிற்பது மேவி இருப்பதென் நெஞ்சகம் ” என்று நம்மாழ்வாரும்
இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள்.
“நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணனே! ” என்று:
மோக்ஷ உபாயத்வம்.
ஸர்வ வ்யாபகத்வம்,
ஸர்வ தரரகத்வம் முதலிய குணங்களை
நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்தருளிய திருமழிசையாழ்வார்.
நீ என்னை யன்றி இலை’” என்று பக்தரைத் தாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்,
“நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா” என்னுமிடத்துக்கு வியாக்கயானம் செய்தருளிய
பரம ரஸிகரான திருவாய்மொழிப்பிள்ளை
“* இவருடைய நாராயண சப்தார்த் தம் இப்படிப் போலே காணும் இருப்பது ” என்று அருளிச் செய்தார்
( நாராயணன் )
நரர்கள் என்று ஒருவிதமான குறைவு மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச் சொல்லுகிறது.
நாரம் என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸ ஸ்தானத்தைச் சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கையாலே *
நாராயணன் ‘ எனப்படுவதாகவும் கொள்ளலாம்.
“திருக்கோட்டியூர் மன்னு நாரணன் ” என்றும்,
“ தென்திரை சூழ் திருப்பேர்க் கிடந்த திரு நாரணா!” என்றும் பெரியாழ்வார் இவ்வர்த்தத்தை உணர்த்தினார்.
“ நர ஸம்பந்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: |
நயத்யலெவிஜ்ஞா௩ம் நாமாயத்யகிலம் தம: ॥
ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத் |
நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா சேதநாத்மகா: ||
நபிதவ்யதயா நாரா தரார்யபோஷ்யதயா ததர |
நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ் ததா ॥
அயதே நிதிலாக் நாராந் வ்யாப்நோதி க்ரியயா ததா |
நாராம்சாப்யாயநம் தஸ்ய தைஸ்தத்,பாவநிரூபணாத் ॥
நாராணாமயநம் வாஸஸ் தே ச தஸ்யாயநம் ஸதா |
பரமா ச க,திஸ்தேஷாம் நாராணாமாத்மநாம் ஸதா |
ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ச ।
அதோ நாராயணோ நாம ஹேதுபிர் தர்மமித: பர: ॥ ”’
நரனுடன் ஸம்பந்தம் பெற்றவைகள் நாரங்கள்.
புருஷோத் தமனே நரன் எனப்படுகிறான்.
தன்னைப் பற்றிய எல்லா அறிவையும் அடைவிக்கிறான் ஆகையா லும்,
எல்லா இருளையும் போக்கடிக்கறானாகையா லும்.
எங்கும் விகாரமற்றவனாயிருப்ப தாலும்,
ஸர்வேஸ்வரனான அப்பரமபுருஷன் நரனெனட்படுகிறான்.
நரனாகிய அப்பெருமானுடன் ஸம்பந்தம் பெற்றிருக்கும் எல்லாச் சேதநாசேதநங்களும்,அவனால்
ஆளப்படுகையா லும்,
தரிக்கப்படுகையாலும்.
போஷிக்கப்படுகையா லும்,
நியமிக் கப்படுகையா லும்,
ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும்.
வியாபிக்கப் படுவதாலும்.
தாங்கப்படுகையா லும்
நாரங்களாகின் றன.
எல்லா நாரங்களையும் (ஸ்வரூபத்தால்) அடைவதாலும்,
முற்கூறிய செய்கைகளால் வியாபிப்பதாலும்.
அவைகளை யிட்டே அவனை நிரூபிக்க வேண்டியிருக்கையாலும்
நாரங்கள் அப்புருஷோத்தமனுக்கு அயநமாகின் றன.
இவன் நாரங் களுக்கு இருப்பிடமாயிருக்கிறான்:
அவைகளும் எப்போதும் இவனுக்கு இருப்பிடமாயுள்ளன.
நார ஸமூஹங்களான ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவும், இவன் விளங்குகிறான்.
ஜலமும் நார சப்தத்தால் சொல்லப் படுகிறது.
அதுவும் இவனுக்கு இருப்பிடமாயிருக்கிறது,
ஆகையால், இக் காரணங்களால் நாராயணன் என்னும் திருநாமம் மேலானதென்று காட்டப்படட்டது.
என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில், ( 52-50,…65 )
நரன், நாரம், நாராயணன் என்னும் பதங்கள் வெகு விரிவாக விவரிக்கப்பட்ட தும் இவ்விடத்தில் அநுஸந்திக்கத்தக்கது.
“நாராயணன் ‘ என்று ஸர்வேஸ்வரன் உபய விபூ,தி நிர்வாகஹனாய் ஸ்ரீவைகுண்ட்த்தில் எழுந்தருளியிருக்கும் இருப்பைச் சொல்லிற்று.
———————-
அப்படியிருக்குமவன் ப்ரஹ்மசாரி நாராயணனல்ல, ஸ்ரீமந் நாராயணனே என்னுமத்தைச் சொல்லுகிறது
மாதவன் ‘ என்னும் திருநாமம்.
சிவ புராணத்திலும். “வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம் |
ஆஸ்தே விஷ்ணுர் சந்த்யாத்மா ப,க்தைர் பாக,வதை: ஸஹ”
வைகுண்டமென்னும் மேலான உலகத்தில், உலகிற்கெல்லாம் ஸ்வாமியும், எண்ண முடியாத
ஸ்வரூபத்தை யுடையவனுமான பகவான் விஷ்ணு, ஸ்ரீதேவியுடன் கூடியவன்,
குண நிஷ்டர்களான பக்தர்களுடனும், கைங்கர்ய நிஷ்டர்களான பாகவதர்களுடனும் எழுந்தருளியிருக்கிறான்–என்று சொல்லப்பட்ட தன்றோ.
(மாதவன்)
(மா’ என்னும் பதம் ஸ்ரீதேவியைச் சொல்லுகிறது.
தவ:’என்னும் சொல் “நாதன்” என்னும் “பொருளை யுடையது.
“மாயா: தவ: மாதவ: ‘ என்கிறபடியே. மாதவன் என்னும் திருநாமம் லக்ஷ்மீ நாதன்’ என்னும் அர்த்தத்தை உடையது.
“மானேய் நோக்கி ம்டவாளை மார்பில் கொண்டாய் மாதவா! ”என்று
நம்மாழ்வார் இப் பொருளை மாதவ சப்தரர்த்தமாக அருளிச் செய்தார்.
இத் திருநாமம் பகவான் பரம பதத்தில் பெரிய பிராட்டியாருடன் எழுந்தருளி யிருப்பதைக் குறிக்கிறது என்பர் .
,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும், –
மா மாயன் மாதவன் வைகுந்தன் ” என்றும்,
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே ” என்றும் ஆண்டாளும், :
கேசவன் நாரணன் மாதவன் கோவிந்தன் வைகுந்தன்” என்றும்,
“ வடிவுடை மாதவன் வைகுந்தம் ” என்றும் நம்மாழ்வாரும் அருளிச் செய்தனர்.
பெரிய பிராட்டியார் எல்லா தசைகளிலும் எம்பெருமானை விட்டுப் பிரியாமலிருப்பவராகையாலே.
எம் பெருமானையும் இப் பிராட்டியை யிட்டு நிரூபிக்க வேண்டு மென்று இத் திருநாமம் உணர்த்துகிறது.
“ ஹ்ரீஸ்ச தே’ லக்ஷ்மீஸ் ச பத்ந் யெள ” என்று வேதமும் பரம புருஷனைப் பிராட்டியை யிட்டு நிரூபித்தது.
“ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: | க,ச்ச,த்,வமேநம் நாரணம் மாரண்யம் புருஷர்ஷபா : |”
பருஷ ஸ்ரேஷ்டர்களே! எல்லா வுலகுக்கும் லக்ஷ்மீநாதனே தாயாகவும். தந்தையாகவும் விளங்குகிறான்; (
ஆகையால்) இந்த மாதவனை சரணமடையுங்கள்.] என்று
புருஷகார பூதகையான பிராட்டிபுடன் கூடிய நாராயணனே நமக்கு உபாயமாகவும், ஸ்வாமியாகவும் ஆகிறான் என்று பாரதத்தில் பேசப் பட்டது.
“ கடிவார் தீய வினைகள் கொடியாருமள வைக்கண்
கொடியா அடுபுள் உயர்த்த வடிவார் மாதவனாரே ” என்று
ஆழ்வாரும் மாதவனே உபாயமாகிறானென்று உணர்த்தினார்.
“ மாதவன் பூதங்கள் ” என்றும்.
`” மாதவனோடு வைகுந்தம் புக்கருப்பாரே ” என்றும்
மாதவனே ஸர்வ ஸேஷியாகவும். மோக்ஷ ப்ராப்யனாகவும் ஆகிறானென்று அருளிச்செய்தார்கள்.
ஸர்வேஸ்வரன் ஜகத் காரணமாம் போ தும். பிராட்டிக்கு ப்ரேரகத்வ ருபமான அந்வயம் உண்டென்பதை
ஆளவந்தார், ஆழ்வான். பட்டர் முதலானோர் தம் ஸ்தோத்ரங்களில் அருளிச் செய்தனர்.
பெரியவாச்சான்பிள்ளையும், அவருடைய திருக் குமாரரான நாயனாராச்சான் பிள்ளையும் அருளிச் செய்தது:
ச்லோஹ வியாக்கியானங்களிலும் இவ்விஷயம் விவரிக்கப் பட்ட து
எம்பெருமான் சேதனர்களுடைய ஹ்ருதய கமலத்தில் பிராட்டியுடன் கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென்பது
“ஸர்வ பூ,தஹ்ருத,ப்ஜஸ்த; “என்று ப்ராஹ்ம புராணத்திலும்,
“மார்வ மென்பதோர் கோயிலமைத்து மாதவனென்னும் தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும்
பேசப் பட்ட ச, வ்யூஹ விபவார்ச்சாவதாரங்களிலும் இவளுடன் கூடியவனாகவே எம்பெருமான்
விளங்குகிறானென்பது ஸகல ப்ரமாண ஸித்தம்.
(மாதவன்) ” என்று
புருஷஹோத்தமனை அடைவதற்கு ஸாதனமான பர வித்யை சொல்லப் படுவதாகவும்
அந்த வித்யைக்கு ப்ரவர்த்தகனாகையால் இவன் மாதவ னெனப் படுகரொனென் றும் கொள்ளலாம்.
“மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ பவாந |
தஸ்மாந் மாதவ நாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்,தி,த: | “` ‘
என்று ஹரியை ப்ரதிபாதிக்கும் வித்யை சொல்லப் படுகிறது.
அதற்கு ஸ்வாமியாயிருப்பதால் நீர் மாதவ னென்று சொல்லப்படுகதிறீர்.
* தவன் ‘ என்றும் ஸ்வாமியென் னும் பொருளையுடையது. -என்று இவ் வர்த்தம் ஹரி வம்ஸத்தில் ஆதரிக்கப் பட்டது.
“மளநாத் த்யாகாச் ச யோகாச்ச வித்,தி, பாரத மாதவம் ”’
பரதகுலத்துதித்தவனே! மெளநத்தினாலும். தியானத்தி னலும். யோகத்தினாலும் மாதவனென்று அறிவாயாக. |
என்று வியாஸர் சொல்லியபடியும் மாதவநாமத்திற்குப் பொருள், கொள்ளலாம்.
“மது,வித்வா 5வபே த்,யத்வாத்,வா”
மது வித்யையினால் அறியப்படுமவனகையாலே மாதவ னெனப்படுகிறான் -என்றும் சங்கரர் பொருளுரைத்தார். “
மது,குலே ஜாதத்வாந் மாத,வ: ”
மது குலத்தில் பிறந்தவ னாகையாலே மாதவனாகிறான் ] என்றும் பொருள்கொண்டனர்.
“மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:”
என்று லக்ஷ்மியும். “தீ; ‘ என்று ஸரஸ்வதியும் சொல்லப் படுகின்றனர்.
அவர்களை ரக்ஷிக்கிறானாகையால் மாதவனா கிறான்-என்றும் சங்கரர் பொருள் கொண்டார்.
இப்படிப் பல பொருள்களை உடையதாயிருந்த போதிலும், எல்லா ஆழ்வார்களாலும் .ஆதரிக்கப்பட்டதான
லக்ஷ்மீநாதன் என்னும் பொருளே இவ்விடத்திற்குப் பொருளாகக் கடவது.
—————-
இப்படி
அச்யுதனாகவும்,
கோவிந்தனாகவும்,
கேசவனாகவும்,
நாராயணனென்னும் அஸாதாரணமான திருநாமத்தை உடையவனாகவும்,
பிராட்டியுடன் கூடியவனாகவும்
எழுந்தருளியிருக்கிறவன் ஸர்வேஸ்வரன் என்று இது வரையில் கூறப்பட்டது.
—————
இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனாக இவன் எழுந்தருளியிருக்கிறான் என்னுமிடத்துக்கு
ப்ரமாண மென்ன? என்ற ப்ரஸ்னம் பிறக்க,
வேத வாக்கியங்களே இவ் விஷயத்தில் ப்ரமாணம் என்று சொல்லுறது
கோவிந்தன் என்னும் திருநாமம்,
கோ சப்,தத்தினால் வேத வாக்கியங்களைச் சொல்லுகிறதாகையால்
வேதத்தால் ப்ரதிபாதிக்கப் படுமவன் என்று கோவிந்த நாமத்திற்குப் டொருள் ஏற்படுகிறது.
இவன் அடியவர்களை நழுவவிடாத அச்யுத என்னுமதுக்கு ப்ரமாணம்
* மமாங்வதம் மபிவமச்யுதம் நாரா யணம் ” என்னும் நாராயணா நுவாகம்.
த்ரிவித,பரிச்சேத , மற்றவனாகவும், அளவற்ற ரூப குண விபங்களையுடையவனாகவுமுள்ள
அநந்தன் என்பதற்கு
ˆ” ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்,ரஹ்ம”
“யதே,கமவ்யக்தமநந்தரூபம்” –
அநந்தமவ்யயம் கவிம் ஸமுத்,ரேந்தம்”
முதலான தைத்திர்ய உப நிஷத் வாக்யங்களும்.
‘*அநந்தணங்சாத்மா விஸ்வ ரூபோ ஹ்யகர்த்தா” என்னும்
வேதாமவதர வாக்கியமும் ப்ரமாணமாகின்றன.
இப் பரம புருஷனே பல அவதாரங்களெடுதக்து. தாழ்ந்தோ ருடன் ஒரு நீராகக் கலந்து பரிமாறும் கோவிந்தனாகிறான் என்பதற்கு ப்ரமாணம் —
அஜாயமாநோ பஹுதா விஜா- யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்’”
பிறப்பில்லாத புருஷோத்தமன் பலபடியாகப் பிறக்கிறான்.
புத்திமான்களில் சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின் ரஹஸ்யத்தை அறிதிறார்கள்.
“யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத் | ஸ உ ஸ்ரேயோாந் பவதி ஜாயமாந ! தம் தீ,ராஸ: கவய உந்நயந்தி |”
யெளவனத்தை உடையவனாகவும், அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும். (நித்ய ஸூரிகளால்) கூறப் பட்டவனாகவும் அப்பரமபுருஷன் தோன்றினான்.
அவன் பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான். அவனை ஞானிகளான கவிகள் அறிகிறார்கள்.
“பிதா புத்ரேண பித்ருமாக் யோநியோநெள ஈந வேத,விந்மநுதே தம் ப்ருஹந்தம் ‘
ஸர்வலோக பிதாவான புருஷோத்தமன், ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னால் பிறப்பிக்கப்பட்ட
ஒருவனைப் பிதாவாகக் கொண்டு பிறக்கிறான்.
வேதத்தை அறியாதவன் அவனுடைய பெருமையை அறியமாட்டான்-முதலியவை.
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்மும் உத்பாதகனாய், புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன் இவனே என்பதை
“நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே | நாராயணாத் ருத்;ரோ ஜாயதே?
நாராயணன் இடமிருந்து பிரமன் பிறக்கிறான். நாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான்.
‘ஹிரண்யகேஸ ரு:”
ஸுவர்ணம்’ போன்று அழகிய திருக் குழல் கற்றைகளை உடையவன்] முகலிய வேதா வாக்கியங்கள் உத் கோஷித்தன.
இவன் நாராயண முகேந எழுந்தருளியிருக்கும் இருப்பும், =
`” விஸ்வம் நாராயணம் ” என்று தொடங்கி
“ நரராயண பரம் ப்,ரஹ்ம தத்வம் நாராயண: பர: | நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண: பர:।
யச்ச கிஞ்சிஜ் ஜக,த் யஸ்மிந் த்ருஸ்ய்தே ஸ்ரூயதே5பி வா। அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ ”
என்று நாராயண அனுவாகத்திலும்,
“ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ” முதலிய வாக்கியங்களால் மஹோபநிஷத்திலும்.
“ சாக்ஷாங்ச த்ரஷ்ட. வ்யஞ்ச நாராயண:।ஸ்ரோத்ரஞ்ச ஸ்மரோதவ்யஞ்ச நாராயண:” என்று தொடங்கி, —
ஸ்ருங்ச ப்ரதி,மமஸ் ச ஸர்வம் ஈாராயண:”‘ என்று ஸுபாலோபனிஷத்திலும்.
“ஏஷ ஸர்வ பூதாந்த- ராத்மா…….. ஏகோ நாராயண: ” என்று அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும்.
மற்றுமுள்ள நாராயண உபனிஷத் முதலியவைகளிலும் கோஷிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான் பிராட்டியுடன் கூடவே எழுந்தருளியிருக்கிறான் என்பது, ^°
ஹ்ரீஸ் ச தே லக்ஷ்மீஸ் ச பத்ந்யெள ”
உனக்கு ஸ்ரீ பூமிதேவிகள் பத்னிகள்.
“’ அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்ந்யா ”
இப் பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும், விஷ்ணு வுக்குப் பத்தினியாகவும் இருக்கிறாள்.
“ஸ்ரத்,த,யா தேவோ தேவத்வம் அஸ் நுதே’”
ஸ்ரீ என்னும் சப்தத்தினால் சொல்லப்படும் பிராட்டியினா லேயே ஈஸ்வரன் ஈஸ்வரத் தன்மையை அடைகிறான்.
“ஆநீதவாதம் ஸ்வத,யா ததே,கம்?’
ஒன்றுமில்லாத ப்ரளய காலத்தில் ஸ்வதா சப்தத்தினால் சொல்லப்படும் பிராட்டியுடன் கூடிய பகவான் ஒருவனே இருந்தான்
முதலிய ஸ்ருதி வாக்கியங்களில் கோஷிக்கப்டட்டது.
அச்யுதா என்றும் .“அநந்தன்’ என்றும் புருஷோத்தமனுடைய பரத்வம் பேசப்பட்டது.
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால் அணுக முடியுமோ என்று அடியவர் அஞ்சாமைக்காக.
*இடக் கையும் வலக் கையுமறியாத ஆயர்களோடும். பகுத்தறிவற்ற பசுக்களோடும் ஒரு நீராகக் கலந்து
பரிமாறுமவன்’ என்னும் பொருளை யுடைய கோவிந்த நாமம் சொல்லப் படுகிறது.
“அச்சுதா! அமரரேறே!’ என்று அச்யுக அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த தொண்டரடிப் பொடியாழ்வாரும்.
“ஆயர்தம் கொழுந்கதே!” என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த் தத்தை அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன் )
“ காவ: விந்த,தி ” [ பசுக்களை அடைகிறான் ] என்ற வ்யுத்பத்தி யின்படியே,
நித்ய ஸூரிகளின் நாதனாயிருக்குமிருப்பில் பொருந்தாமல் அறிவற்றவைகளான பசுக்களை
அடைவதற்காக கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்தவன்.,
“அஹம் கிலேந்த்,ரோ தேவாநாம் த்வம் க,வாமிந்த்தாம் க,த:।
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம் ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம் ||.”
நான் தேவர்களுக்கெல்லாம் இந்திரனாயிருக்கிறேன்.
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும் தன்மையைத் தானாகவே அடைந்தாய்.
ஆகையால் இவ்வுலகில் கோவிந்தன் என்று எல்லாரும் எப்போதும் உன்னைத் துதிப்பார்கள்–
என்று ஹரி வம்சத்தில் கோவர்த்தன தாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன் துதித்தானன்றோ.
கோ விந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப் புகலிடம் என்றும் பொருள் கொள்ளலாம்.
“சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக்கன்றே!” என்றும்
“பட்டி மேய்ந்தோர் காரேறு பல. தேவற்கோர் கீழ்க்கன்றாய் ” என்றும்
அருளிச் செய்யும்படி. யன்றோ இவன் பசுக்களுடன் புரையறக் கலக்கும்படி.
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள் அடிக்கடி வாய் வெருவுவர்கள்.
“கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள் இக் குணத்தையே தனக்கு ப்ராண பாரமாகக் கொண்டிருந்தாள்.
“கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியும் ஆகப்பெற்றான்
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக்கேச்சுக்கொலோ”-என்றும்,
“இக் கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந்தற்கு ஓர்குற்றேவல் இம்மைப்பிறவி செய்யாதே
இனிப் போய்ச்செய்யும் தவம் தான் என்” என் றும்,
“கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா” என்றும்.
சொல்லும்படி யன்றோ
கோதைப் பிராட்டிக்குக் கோவிந்கனிடமுள்ள காதல்.
“கூட்டிலிருந் து கிளியெப்போ தும் கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும் ” என்று
இவளுடைய கிளியும் இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது.
நம்மாழ்வாரும் “கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்றென்றே குனித்து” என்று
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப் படுத்தினார்.
““கோவிந்தே,தி யதரக்ரந்த,த் க்ருஷ்ணா மாம் தூ,ரவாஸிநம் |
ருணம் ப்ரவ்ருத்,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥’*
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என் று த்ரெளடதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த
கடன் போல் என் மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று. அச்யுதாதி நாமங் களையும் அவள் உச்சரித்தருந்த போதிலும்
பகவானுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே.
இத் திருநாமத்தன் பெருமையைப் பன்னியுரைக்குங்கால் பாரதமாம்.
(கோவிந்தன் )
கோ ஸப்தம் பூமியையும் குறிக்கு மாகையால்
*கோம் விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில் நின்றும் குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்.
‘மஹா வராஹோ கோவிந்த,: “என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும் இவ்வர்த்தம் ஆதரிக்கப்பட்டது .
“நஷ்டாம் வை தரணீம் பூர்வமவிந்த;ம் வை கு,ஹாசு,தாம் |
கேவிந்த, இதி தேநாஹம் தே,வைர் வாக்,பிரபிஷடுத: | ‘
பாதாளத்தில் ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன் னொரு காலத்தில் நான் தேடி யடைந்கதேனாகையால்.
தேவர்களால் கோவிந்தன் என்று ஸ்தோத்ரம் செய்யப் பெற்றேன்.
என்று பாரதத்தில் மோஷ தர்மத்தில் பகவானாலேயே சொல்லப்பட்டது.
இத்தால் ஆபத்துக் காலத்தில். ரக்ஷ்ய வஸ்தவின் அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து.
தன் பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும் கொண்டு ரக்ஷிக்கும் பெருங்குணம் பேசப்படுகிறது.
“உத்,த்,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! நூறு கைகளை உடையவனும், அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்
எடுக்கப்பட்டவளாய் இருக்கிறாய். என்று பண்டை மறையிலும்,
“ஈனச் சொல்லாயினுமாக எறிதிரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் இடந்தபிரான் இருங்கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லா தவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும்
ஞானப்பிரானையல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே’
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்
கோலவராகமொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!” —என்றும்,
° பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன் றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே” _ என்றும்
தமிழ் மறைகளிலும் இப்பெருமானின் பெருமைகள் பேசுப் பட்டனவன்றோ.
“’கெளரேவைஷா தத;ா வாணீ தாம் ச யத், விந்த,தே ப,வார் |
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்,யதே ப,வாந்
கோ சப்தமான து :’கெள:’ என்று சொல்லப்படுகிறது.
வார்த்தை களையெல்லாம் நீரே அடைவதால் நீர் கோவிந்தனென்று முனிவர்களால் சொல்லப்படுகிறீர்.
என்கிற நிர்வசன த்தின் படியே ஸர்வமாப்,த,வாச்யன் என்றும் இத் திருநாமத்துக்குப் பொருள் கொள்ளலாம்.
“சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப் படும் பொருளும் நீ” என்று திருமழிசையாழ்வார் இல்வர்த்தத்தை அறுஸந்தித்தார்.
(கோவிந்தன் )
கோசப்தம் வேத வாக்கியங்களைக் குறிப்பதாகக் கொண்டு வேதத்தினால் சொல்லப்படுமவன் என்றும்
பொருள்கொள்ளலாம்.
அச்சம்… ஏற்றுவான் அச்சுதன் அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்
நச்சராவணைக் கிடந்த நாதன் ” என்று
அச்சுதன். அந்தன் என்னும் திருநாமங்களுக்கு அர்த்தம் செய்த திருமழிசை யாழ்வார் -‘
வேத கதனே ”’ என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்.
(கோவிந்தன் )
எந்த தேவதையைக் குறித்து ஸ்தோத்ரம் செய்தாலும் அவை இவனையே அடைவதால்
கோவிந்தன் எனப்படுவதாகவும் கொள்ளலாம்.
“ நும்இன் கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வமேத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே என்றார் நம்மாழ்வார்.
(கோவிந்தன்)
கோ சப்தம் ஒளியைக் குறிப்பதால் பரஞ்சோதியாய் இருப்பவன் என்றும் பொருள் கொள்ள லாம்.
நம்மாழ்வாரும் “பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதியின் மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே ” என்று
இப் பொருளை அதுஸந்தித் தருளினார்.
“நாராயண பரோ ஜ்யோதி:” என்றும்.
** பரம் ஜ்யோதி ருப ஸம்பத்,ய ” என்றும்.
ˆ” ஆதித்ய வர்ணம் ” என்றும்,
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம் நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்,நி: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமித,ம் ॥”
அப் பரம புருஷனுக்கு முன் ஸூர்யனும் பிரகாசிப்பதில்லை;
சந்திரனும், நக்ஷத்திரங்களும். இந்த மின்னல்களும் பிரகாசிக்கிறதில்லை.
அக்னியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
ஒளிவிடும் அவனை அநுஸந்தித்தே எல்லாம் ஓளிவிடுகின் றன.
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம் பிரகாசிக்கின்றன.என்றும் வேதங்களிலும்
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத், யுகவது,த்தி,தா |
யதி, ஸத்,ருமீ ஸா ஸ்யாத், பாஸஸ் தஸ்ய மஹாத்மந:।॥”
ஆகாயத்தில், ஒரே ஸமயத்தில் ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில். அவ்வொளி
அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம். என்று கீதையிலும் ஒதப் பட்ட தன்றோ.
அந்த கோவிந்தநாமதீதால் ஸெளலப்யகு,ணப்ரகாபகமான கிருஷ்ணாவதாரம் அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம் பேசப்படுகிறது. ஆகையால் புநருக்தியில்லை,
—————
ஆக, கேசவன் முதலான நான்கு திருநாமங்களால் பரத்வம் பேசப்பட்டது.
இனி விஷ்ணு என்னும் திரு நாமத்தினால் நான்காவது வியூஹமான அநிருத்த மூர்த்தி சொல்லப்படுகிறார்.
இவ் விடத்தில் “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹ!ரார்த்தஹமாகவும்.
ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, மாகவும்,
உபாஸக அனுக்ரஹ மர்த்தமாகவும்.
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த ருபேண நிற்கும் நிலை.
பரத்வத்தில் ஜ்ஞாநாதிகளாறும் பூர்ணமாயிருக்கும்.
வ்யூஹத்தில்-முற்று இரட்டை குணங்கள் ப்ரகடமாயிருக்கும்,
அதில் ஸங்கர்ஷணர் ஜ்ஞாந பலங்கள் இரண்டோடும் கூடி
ஜீவ தத்வத்கை அதிஷ்டி,த்து,
அத்தை ப்ரக்ருதியில் நின்றும் பிரிக்கும் அவஸ்தையையும் பஜித்து,
ஸரஸ்த்ர ப்ரவர்த்தன பண்ணக் கடவராயிருப்பர்.
பிரத்யும்நர் ஐஸ்வர்ய வீர்யங்களோடும் கூடி
மநஸ் தத்வத்தை அதிஷ்டி,த்து.
தர்ம உபதேசத்தையும்.
மநுஷ்யாதி தொடக்கமான வர்க்க, ஸ்ருஷ்டியையும் பண்ணக் கடவராயிருப்பர்.
அநிருத்தர்; சக்தி தேஜஸ்ஸுக்கள் இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்,
தத்வ ஜ்ஞாந ப்ரதானத்துக்கும்
கால ஸ்ருஷ்டிக்கும், கடவராயிருப்பர். ” என்று
பிள்ளைலோகா சார்யர் தத்வ த்ரய த்தில் அருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் அநு ஸந்திக்கத்தக்கவை,
விஷ்ணு சப்தத்தால் சொல்லப்படுகிறவர் அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்:
“த்ரிபாதூர்த்,வ உதைதத் புருஷ: பாதேர ஸ்யேஹாப,வாத் புந;!
ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸா முகா அபி, |”
பரமபதத்திலுள்ள பரமபுருஷன் மூன்று உருவங்களை உடையவராய் ஸங்கல்பித்தார்.
பரமபத நாதனுடைய ஒரு அவதாரமான அநிருத்தர் மறுபடியும் இங்கு அவதரித்தார்.
அதன் பிறகு ஸர்வ விதமான சேதனர்களையும் ரஷிப்பதற்காக இவ் வுலகையெல்லாம் (
அவதாரம் செய்தவன் மூலம்) வியாபித்தார்.] என்று புருஷ ஸூக்தத்தில் அநிருத்தரைக் குறித்து விஷ்ணுசப்தார்த்தம் அநுஸந்திக்கப்பட்டது.
மேலும், அநிருத்தரே ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு . இடையில் பத்ம நாபராகிய விஷ்ணுவாக அவதரித்தார் என்று சாஸ்த்ரங்கள் சொல்லுகையாலும்.
கார்ய வாசி சப்தம் காரணமாகச் சொல்லுமாகையாலும், “பத்மநாபர்’ என்று ப்ரதமாவதாரமான விஷஸ்ணுவைத் தனியே இங்கு எடுக்கையாலும்
இங்கு விஷ்ணுசப்தம் அநிருத்த நாராயணனைச் சொல்லக்கடவது.
மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிருத்தரை எடுத்த துக்குக் கருத்தென்னெனில்:
“பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ் ததைவ ச |
ஷட்த்ரிம்மமத்ஸங்க்,யாஸங்க்,யா தா: ப்ராத,ந்யே கணேங்வர |!
ஷட்த்ரிம்ப்த்,பே,த,பி,ந்காஸ்தே பத்மநாபாதி,கா: ஸுரா: |
ஸமுத்பந்நா தீ,பாத், 8,பா இவேங்வரா: |”
விஷ்வக்ஸேநரே! பத்மநாபன் முதலிய முக்கியமான விபவா வதாரங்கள் முப்பத்தாறாகும்.
இப்படி பத்மநாபன் முதலிய முப்பத்தாறு விபவமூர்த்திகளும். விளக்கிலிருந்து உண்டான
விளக்குகள்போல் அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித் தார்கள். என்று விஷ்வக்ஸேந ஸம் ஹிதையில் சொல்லிய படியே,
பின் சொல்லப் போகும் பத்மநாபன் , திரிவிக்கிரமன் , வாமனன். தாமோதரன் என்னும் மூர்த்திகளுக்கு மூல மூர்த்தி
அநிருத்தரேயாகையால் அவரை இங்கு எடுக்கிறது. நிற்க;
விஷ்ணு பதத்தின் பொருளை இனி விவரிட்மோம்.
“ததோ விஷ்வங் வ்யக்ராமத் ” என்று அவதாரத்தினால் வியாபித்திருப்பதை ,
விஷ்ணு சப்தார்த்தமாகப் புருஷ ஸூக்தத்தில் பேசப்பட்டது,
“வ்யாப்ய ஸர்வாநிமாக் லோகாந் ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ:
ததமச விஷ்ணுநாமாஸி விமோர் தளாதோ: ப்ரவேமுநாத் |!”
கேசவனாகிற தேவரீர் இந்த எல்லா உலகங்களையும் எங்கும் வியாபித்து நிற்கிறீர்;
ஆகையால் விஷ்ணுவென்னும் திரு நாமத்தை யுடையவராய் விளங்குகிறீர் ‘
விம’ என்னும் தாது ப்ரவேசித்தல் என்னும் பொருளை யுடைத்தாயிருப்பதால். என்று
ஸ்ரீவராஹபுராணத்தில் சொல்லப்பட்டபடியே எங்கும் தன் ஸ்வரூபத்தால் வியாபித்து நிற்பவன் விஷ்ணு வென்றும் பொருள் கொள்ளலாம்.
“யஸ்மாத், விஷ்டமித,ம் விஸ்வம் தஸ்ய முக்த்யா மஹாத்மர: |
தஸ்மாத் ஸ ப்ரோச்யதே விஷ்ணுர் விமேர் த,௱தோ: ப்ரவேமாநாத் ||”
மஹாத்மாவான அப் பரம புருஷனுடைய சக்தியினால் இவ் வுலகமெல்லாம் வியாபிக்கப்பட்டிருப்பதால்
அவன் விஷ்ணு வெனப்படுகீறான்;
விம ‘ என்னும் தாது வியாபித்தலைச் சொல்லுவதால்–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், ஆதித்ய புராணத்திலும் சொல்லியபடியே
சக்தியினால் எல்லா வஸ்துக்களையும் வியாபித்திருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
“வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா |
ஸம்ஸாரவேமுநாத் பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥
பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியானது ஆகாயம் முழுவதும் வியாபித்து நிற்கிறது.
இப்படி இவ் வுலகம் முழுவதும் வியாபித்து நிற்பதால் நான் விஷ்ணு வென்று சொல்லப்படுகிறேன்.–என்று மஹாபாரதத்தில் சொல்லியபடியே ஸர்வ வ்யாபினியான விக்ரஹ காந்தியை உடையவன் என்றும் விண்ணுசப்தத்துக்குப் பொருள் கொள்ளலாம்.
* யதள ஸர்வக,தோ விஷ்ணு: ”
விஷ்ணு வானவர் எப்படி ஸர்வ வியாபியாயிருக்கிறோரோ….] என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் சொல்லியபடியே
விக்ரஹத்தாலே எங்கும் வியாபித்து நிற்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
இவ் வர்த்தங்களெல்லாம்
” ‘ விஷ்ணுர் விக்ரமணாத் தேவ: “‘ என்று பாரதம் உத்யோக பர்வத்தில் உணர்த்தப்பட்டது.
இப்படி இவன் எல்லாவற்றையும் வியாபித்து விளங்குவதால் எல்லாம் இவனே என்று சொல்லலாம்படி யிருக்கறானென்பதை
“ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் பு,வநாநி விஷ்ணுர் வநாநி விஷ்ணுர் கி,ரயோ தி,மமமச |
ஈத்,ய: ஸமுத்,ராமங்ச ஸ ஏவ ஸர்வம் யத,ஸ்தி யந்காஸ்தி விப்ரவர்ய ॥”’
விப்ரஸ்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும் விஸ்ணுவே;
புவனங்களும் விஷ்ணுவே;
வனங்களும் விஷ்ணுவே:
மலைகளும். திக்குகளும், நதிகளும். ஸழுத்ரங்களும், “ இருக்கிறது என்று
எப்போதும் சொல்லப்படும் ஜீவ தத்வமும்.
இல்லை என்னும் வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும் ஆகிய எல்லாம்
அந்த பகவான் விஷ்ணுவே. என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் உத்கோஷித்தது.
“ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்,விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமறஹே ”
விஷ்ணுவே! உன்னுடைய திருநாமத்தை அறியும் நாங்கள். உன்னுடையது போன்ற தேஜஸ்ஸையும்
தெளிவான ஞானத்தையும் அடைகிறோம். என்று ருக்வேதத்திலும்
தத், விஷ்ணோ: பரமம் பத, என்றும்.
`” விஷ்ணோர் யத்’பரமம் பத,ம்” என்றும்,
“ மம ம்நோ விஷ்ணுருருக்ரம: ” என்றும்,
பரமே மத்,வஉத்ஸ.:”’
வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ருத தரைகள் பொழிகின்றன.– என்றும்,
மற்றும் பல பலவேத வாக்கியங்களிலும் இத் திரு நாமம் மிகவும் ஆதரிக்கப்பட்டது .
“தஸ்மாத், விராட் ,ஜாயத”
அந்த அநிருத்த நாராயணனிட யிருந்து பிரமன் உண்டானான். ] என்றும்
ஐகந் நாதோ ப்,ரஹ்மாணமஸ்ருஜத் புக: ।”’
நான்காவது மூர்த்தியான பிரமனை ஸ்ருஷ்டித்தார்–என்றும்
ஸம்ஹிதையிலும் சொல்லப்பட்டடடியே
பிரமனைப் பிறப்பித்தவரான அநிருத்த மூர்த்தி விஷ்ணு சப்தத்தால் சொல்லப்பட்டார்,
————-
அடுத்த படியாக, அப் பிரமனைப் பிறப்பிக்குமளவே யன்று.
அவனுக்குத் துன்பம் வந்த போது அதைப் போக் கடிப்பவனும் இவனே என்று உணர்த்துகிறது
மதுஸூதன்” என்னும் திருநாமம்.
கேசவன் என்று தொடங்கி கோவிந்தன் என்பது வரை பரத்வம் பேசப்பட்டது.
விஷ்ணுவென்று வியூஹம் உணர்த்தப்பட்டது.
மதுஸூதனன் என்னும் இத் திருநாமம் தொடங்கி விபவாவதாரம் விவரிக்கப்படுகிறது. .
*’ யோ வித,த,தி பூர்வம் யோ வை வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ”
எவனொருவன் பிரமனை முதலில் பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறானோ என்று
வேதத்தில் சொல்லியபடியே ஸர்வேஸ்வரன் வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தருளினான்.
நான்கு சிசு ரூபமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும், மது.கைடபன் என்னும் இரு அஸூரர்கள்
பிரமனிட மிருந்து பறித்துக் கொண்டு போய், ரஸா தலத்தில் ஒளித்து வைத்தனர்.
வேதங்களை இழந்த அப் பிரமனும், “ கண்ணிழந் தேன். தனமிழந்தேன் ‘ என்று கேசவனை நோக்கிக் கதறினான்.
இக் கூக்குரலைக் கேட்ட கருணா வள்ளலான அப்பெருமானும் ஹயக்ரீவாவதாரம் செய்து
மது கைடபர்களை ஸம்ஹரித்துப் பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான்
இப்படி ப்ரதம ஜனான (முதலில் பிறந்தவனான ) பிரமனுக்குச் செய்த உபகாரமாகையாலே
இது அவதாரங்களுள் முதலில் அநு ஸந்திக்கப்படுகிறது.
( மதுஸூதனன் )
மதுவென்னும் அஸாரனைக் கொன் றவன்.
“கர்ணமிங்ரோத்,ப,வம் சாபி , மஹாஸுரம் |
ப்ரஹ்மணோபசிதிம் குர்வங் ஜக, புருஷோத்தம: |
தஸ்ய தாத இத்யாஹு: |”
பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும் பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப் புருஷோத்தமன் கொன்றான்.
குழந்தாய்! அவனைக் கொன்றதாலேயே., தேவர்கள். அஸூரர்கள், மனிதர்கள். ரிஷிகள் ஆகிய யாவரும் ஐநார்தனனை மதுஸதனனென்று சொல்லு கிறார்கள்.] என்று மஹாபாரதத்தில் இந்த நாமத்தின் பொருள் உரைக்கப்பட்டது .
“த,த்ருமாதேரவிந்த,ஸ்தழம் ப்,ரஹ்மாணமமிதப்ரப,ம் |
ஸ்ருஐஜந்தம் ப்ரத,மம் வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள |
ததோ விக்,ரஹிணஸ்தாம்ஸ் த த்ருஷ்ட்வா தாவஸுரோத்தமெள |
வேதஞ்ஜக்,ருஹதூ ராஜம் ப்,ரஹ்மண: பங்யதஸ் ததா ॥
அத, தெள தளநவங்ரேஷ்டெள க்,ருஹீத்வா தாந் ஸ௩ராதநார் |
ரஸாம் விவிமதுஸ் தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள ||
ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்,ரஹ்மா கங்மலமாவியத் |
ததோ வச௩மீமா௩ம் ப்ராஹ வேதைர் விநாக்ருத: ॥
ப்,ரஹ்மா:-வேத;ா மே பரமம் சக்ஷார் வேதா மே பரமம் தம்।
வேதா மே பரமம் வேத; மே ப்,ரஹ்ம சோத்தமம் |
மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்,யாம் ப,லாதி,த: |
அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள் விவர்ஜிதா: ||
வேதே, ஹ்ருதே5ஹம் கம் குர்யாம் லோகாந் வை ஸ்ரஷ்டுமுத்,யத: |
அஹோ பத மஹத், து, க்சும் வேத;ாமமாஜம் மம |
ப்ராப்தம் துநோதி ஹ்ருதயம் தீவ்ரரேர காமயஸ்த்வயம் |
கோ ஹி மோகார்ணவே மக்,நம் மாமிஹாத்,ய ஸமுத்.த,ரேத்।
இத்யேவம் ப,௱ாவுமாணஸ்ய ப்,ரஹ்மணோ ந்ருபஸத்தம |
ஹரிஸ்தோத்ரார்த்தமுத்;,பூ,தா புத்,திர் புத்திமதாம் வர॥
ததோ ஐகெள பரம் ஜப்யம் ப்ராஞ்ஜலி: ப்ரக்,ரஹம் ப்ரபு,:॥| ஏதஸ்மிந்நந்தரே ராஜ் தேவேர ஹயமபிரோத,ர:। ஐக்,ராஹ வேதளநகலொந் ரஸாதலக,தாந் ஹரி: ॥
ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர் தத: ஸ்வாம் ப்ரக்ருதிம் யயெள ॥
ததஸ்தயோர் வதே,நா மரு வேதாபஹரணேந ச |
போ காபநயநம் சக்ரே ப், ஹ்மண: புருஷோத்தம: || ””
மது கைடடன் என்னும் அஸுரர்கள் அளவற்ற ஒளியை யுடையவனும். தாமரைமலரில் வீற்றிருப்பவனும்,
அழகிய உருவையுடைய நான்கு வேதங்களையும் முதன்முதலில் ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப் பார்த்தனர்
சரீரத்துடன் கூடிய அவ் வேதங்களைக் கண்ட அந்த அஸூரர்கள் பிரமன் கண்டு கொண்டிருக்கும் போதே அவைகளை எடுத்துக் கொண்டனர்.
பிறகு அவ் வஸூர ஸ்ரேஷ்டர்கள் பழமை யான அவ்வேதங்களை எடுத்துக் கொண்டு.
நீர் நிறைந்த கடலினுள்ளிருக்கும் ரஸாதலத்தினுள் விரைவில் நுழைந்தனர்.
இப்படி வேதங்கள் கவரப்பட்டபின் பிரமனைத் துக்கம் பீடித்தது.
அதன் பின் வேதங்களை இழந்த நான்முகன் ஈஸ்வரனைக் குறித்துப் பின்வருமாறு உரைத்தனன் -—
“வேதங்களே எனக்கு மேலான கண்; வேதங்களே எனக்கு மேலான தனம். வேதங்களே எனக்கு மேலான ஓளி.
எனக்குப் பெருமையைக் கொடுப்பவைகளில் வேதங்களே சிறந்தவை.
அஸூரர்களுடைய பலத்தினால் என்னுடைய வேதங்களெல்லாம் இங்கிருந்து பறிக்கப்பட்டன.
வேத மற்றவையான இவ்வுலகங்கள் இருள் சூழ்ந்தவையாயின.
லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான் வேதமில்லாமல் என்ன செய்வேன் ?
வேதங்கள் நசித்ததினால் எனக்குப் பெருந்துன்பம் ` வந்தடைந்துவிட்டது..
தீவிர சோகமான இந்த வியாதி : என் மனத்தைத் துன்புறுத்துகிறது.
இத் துன்பக்கடலில் முழுகும் என்னை யார்தான் | கரையேற்ற முடியும் ?”
என்று இம்மாதிரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி ருக்கும்போது
‘ ஹரியை ஸ்தோத்ரம் செய்யவேண்டுமென் னும் புத்தி அவருக்கு உண்டாயிற்று.
அதன் பிறகு ப நின்று, மிகச் சிறந்த இந்த ஸ்தோத்ரத்தைப் பாடினார்………
இதற்கிடையில் பகவான் ஹரி குதிரை போன்ற முகத்தையுடைய ஹயக்ரீவராய் அவதரித்து, .
ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை யும் எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம் கொடுத்தருளினார்.
அதன்பின் பிரமன் தன் இயற்கை நிலையை அடைந்தனன்.
இப்படி அந்த அஸூரர்களைக் கொன்றும். வேதங்களை மீட்டுக்கொணர்ந்தும்
ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப் புருஷோத்தமன் போக்கடித்தான்.] என்று
மஹாபாரதத் தில் இந்த விருத்தாந்தம் விவரிக்கப்பட்ட து.
“ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரூப்யதரர்ப்பம் |
ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || ”
மது `கைடபர்களுடைய கொழுப்பைக் குலைத்தது போல், வாழைத் தண்டு, கதையின் வெளிப்புறமான கரப,ப்ரதேசம்;
யானைத் துதிக்கை ஆகிய இவைகளின் அழகுச் செருக்கையும் அடக்கி, –
அந்த கர்வத்தினால் பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை
உபமான மாகச் சொல்லுவோம்] என்று பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்த வத்திலும். ‘
“யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள ”
மது கைட்பர்களாகிய துஷ்டப் புழுக்களைப் பிசைந்து கொன்றவை களான இத் திருத்துடைகள்] என்று
ஆழ்வான் ஸூந்தர பாஹுஸ்தவத்திலும் அருளிச்செய்தபடியே
மது கைடபர் கள் பகவானால் தொடையினால் இறுக்கிக் கொல்லப்பட்டனர் என்பது பிரஸித்தம்.
” காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மாமணிகள்
ஏய்ந்த பணக்குதிர்மேல் வெவ்வுயிர்ப்ப-—
வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்க்திறுதியாங்கு ” [மூன் திருவ 68] என்று
எம்பெருமானுடைய . திவ்ய வாஸத்தாலேயே மதுகைடபர்கள் மாண்டனர் என்று
பேயாழ்வார் அருளிச்செய்தார்,
அன் றிக்கே.
எம்பெருமான். ஆயாஸம் சிறிதுமின் றி அவர்களை முடித்தபடியைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்.
இந்த மது கைடபர்கள் பிரமனுடைய கர்மாநுபவத்தின் பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர்.
ரஜஸ் தமோ குணங்களே வடிவெடுத்தவர்கள் இவர்களென் று பாஞ்சராத்ர சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட து.
பிறக்கும் போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக் குறித்துத் தாங்கள் சொல்லுகிறார்களோ
அவர்களாலேயே சாவு நேர வேண்டுமென்ற வரத்தைப் பெற்றனர்.
வேதங் களுடன் கூடிய ப்ரஹ்மாவைக் கண்டு வேதங்களைக் கவர்ந்து ரஸாதலத்தில் ஜநித்தனர். .
பிரமனால் ஸ்தோத்ரம்: செய்யப் பட்ட பகவான் ஹயக்ரீவாவதாரம் செய்து ஓர் இனிய இசையைப் பாட. அவ்வொலியைக் கேட்ட அவ்வஸுரர்கள்
வேதத்தை வைத்து விட்டு ஒலி வரும் வழியில் சென்றனர்.
பகவான் மற்றொரு வழியாகச் சென்று வேதங்களை மீட்டுப் பிரமனிடம் கொடுத்தருளினான்.
வேதங்களைக் காணாத அவ் வஸுரர்கள் பாற்கடலில் பையத் துயின்ற பரமனைக் கண்டு
அவனுடன் நெடுங்காலம் போர் செய்தனர்.
பல பல காலம் போர் செய்தும் சோர்வடையாத திருமாலைக் கண்டு மனமுவந்து.
“ நீ வேண்டும் வரத்தைக் கேள்” என்றார்கள் அவ் வஸுரர்கள்.
* உங்களை நான் கொல்லவேணும் ” என்னும் வரத்தை மாயாவியான அம்மாதவன் தன்னால் படைக்கப் பட்.டவர்களான அவர்களிடம் வேண்டினான்.
அவர்களும் ௮தற்கு இசைந்தவளவில், “ உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தைக் கொள்ளுங்கள்” என் று பரம புருஷன் உரைத்தான்,
* ஒருவரும் சாகாத இடத்தில் நாங்கள் சாக வேண்டும்” என்று அவர்கள் வரம் வேண்டினார்கள்.
புருஷோத்தமனும் திருத் தொடைகளால் அவர்களை இறுக்கிக்கொன்றான் என்று
இம் மாதிரியாக சாஸ்த்ரங்கள் இவ்விருத்தாந்தை விவரிக்கின் றன.
*மது,ஸூத,னன்’ என்னுமித் திருநாமத்தில் மதுவைச் சொன் னது ,கைடபனுக்கும் உபலக்ஷணம்.
* கைடபாரி ‘ என்றும் எம்பெருமானுக்கு ஒரு திருநாமம் வழங்கி வருகிறது.
இனி, மதுஸூதனன் என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும் சில பொருள்களை விவரிப்போம்.
(மதுஸுதனன்)
மது,” என்று “ பிப்பலம் ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப் பொருள்களான அசேதன தத்வத்தையும்.
ஆநந்த,ஸ்வரூபியும், பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல் இனியவனுமான சேதன தத்வத்தையும் சொல்லுகிறது.
‘ஸூதனன்” என்னும் பதம் தன் வசத்திற்கு அழைத்துச் செல்பவன் என்னும் பொருளை உடையது.
ஆக, ஸர்வ தத்வங்களையும் அழைத்துச் செல்பவன் மதுஸூதனன் என்றதாயிற்று.
“ ஸர்வ தத்வநயநாச்சைவ மதுஹா மதுஸூதந: ”
எல்லாத் தத்துவங்களையும் அழைத்துச் செல்வதாலும் பகவான் மதுஸூதனனாகிறான்.
என்று சாஸ்திரம் இப்பொருளை ஆதரித்தது,
* மது, ஸூத,னன் ‘ என்பது ஸகல தத்வங்களாகிற குதிரைகளைத் தூண்டுபவன் என்றும் பொருள்படும். “
மதுரிந்த்,ரியநாமா ஸ ததோ மதுநிஷூதந: ”’ [
மது,’ என்று இனியவைகளான இந்திரியங்கள் சொல்லப் படுகின் றன.
அவைகளை அடக்குமவனாகையாலே இப் பெரு மான் மதுஸூதனனாகிறான்.என்றும்
மதுஸூதந சப்தார்த் தம் விவரிக்கப்பட்ட து.
ஆக, இப்பொருள்களால் விரோதி நிரஸன ஸீலன் மதுஸூதனன் என்றதாயிற்று.
“ கொடு யேனிடர் முற்றவும் மாய்த்தவம்மான் மதுஸூதவம்மான்”என்று இவ்வர்ததத்தை ஆழ்வார் அருளிச்செய்தார்.
இந்த விரோதி, நிரஸனலத்வமாகிற பெருங்குணத்துக்குத் தோற்று
“ மது ஸூதனென்னம்மான் தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே ‘* என்றும்,
வள்ளலே ! மதுஸூதனா ! “” என்றும்.
“ மதுஸூதனை யன்றி மற்றிலேன் ” என்றும். °
வைத்த மா நிதியாம் மதுஸூதனையே அலற்றி” என்றும், நம்மாழ்வார் தம்மை எழுதிக் கொடுத்தார்
————
மதுஸூதனன் என்று. பிரமனுக்குச் செய்த உபகாரத்தைப் பேசிற்று,
அடுத்தபடியாக, திரிவிக்கிரமன் என்று
இவ் வுலகுக்கெல்லாம் அபேஷா நிரபேக்ஷமாகத் தன்னைக் கொடுத்தபடியைப் பேசுகிறது.
மஹாபலி என்பானோர் அஸுரன் தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனை யுள்ளிட்ட மூவுலகையும் ஜயித்துத் தன் வசப்படுத்திக்கொண்டான்.
இந்திரன் முதலிய தேவர்கள் எம்பெருமானிடம் சென்று முறையிட. அப்பெருமானும்
காஸ்யபருக்கும் அதிதிக்கும் புத்திரனான வாமனனாய்ப் பிறந்து மஹாபலி யாகம் செய்கையில்
அவனிடம் மூவடி மண்ணை யாசித்துப் பெற்று, திரிவிக்ரமனாக வளர்ந்து,
ஈரடியால் உலகங்களையெல்லாம் அளந்து, மூன்றாவதடியை மாவலியின் தலையில் வைத்து,
பாதாள லோகத்தில் அவனுக்கும் பெருமையை உண்டாக்கி வைத்தான் என்னும் விருத்தாந்தம்
ஸர்வ லோக ப்ரஸித்தமானது.
இப்படி, ப்ரயோஜநாந்தர பரனான இந்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு வாசியற-ஸர்வரையும் ரக்ஷித்த அவதாரமாகையாலும், ,
உறங்குகிற ப்ரஜையைத் தடவிக் கொண்டு கிடக்கும் தாயைப்போலே,
உலகங்களையெல்லா।ம் தன் திருவடிகளாலே அபேக்ஷா நிரபேஷமாகத் தடவிக் கொடுத்த பெருமையை உடையதாகையா லும்.
பரத்வமும், ஸெளலப்யமும் ஒருங்கே ஒளிவிடுகின்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும்,
அடியார்க்காகத் தன்னை அழிய மாறியும் அளிக்கும் அருங் குணத்தை அறிவிப்பதாகையாலும்.
வேதங்களோடு. இதிஹாஸ புராணங்களோடு. ஆழ்வார்களோடு வாசி யற எல்லாரும் இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள். .
“ இதம் விஷ்ணுர் விசக்ரமே ”
“ த்ரீணி பத; விசக்ரமே ” –
“ விசக்ரமே ப்ருதி,வீமேஷ ஏதாம் கத்ராய விஷ்ணு: ” .
மூவடி மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம் அளந்தான் விஷ்ணு]:
“த்ரிர் தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”’ “
ம் நோ விஷ்ணுருருக்ரம:
பெரிய அடிவைப்புகளை யுடைய விஷ்ணு வானவன் நமக்கு மங்களத்தைத் தருவானாக,
“ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே ”
விஷ்ணுவினால் அளக்கப் பட்ட பூ தேவீயே] என்று பல பல விடங்களில் பண்டை மறை வாய் வெருவிற்று.
“கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றோர்
எண்தானுமின்றியே வந்தியலுமாறு
உண்டான் உலகேழும் ஓர் மூவடி கொண்டானைக்
கண்டு கொண்டனை நீயுமே ” என்றும்.
“அடியை மூன்றை யிரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும்
மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியுமாறவை கேட்குந்தோறுமென் நெஞ்சம் நின்றனக்கே கரைந்துகும்
கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல் கூடுவதே ?”” என்றும்.
“பாயோரடி வைத்த தன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோரடியால் எல்லா வுலகும் தடவந்த மாயோன்
உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் .
தீயோடுடன் சேர் மெழுகாயுலகில் திரிவேனோ ?” என்றும்,
“ உலகமெல்லாம் தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே ? ” என்றும்,
`” தாவி வையம் கொண்ட எந்தாய்! ” என்றும்,
“பாமரு மூவுலகுமளந்த பற்ப பாதாவோ !’”’ என்றும்
நம்மாழ்வார் பிராட.டிமார் தொட்டாலும் சிவக்கும் திருவடி களைக் கொண்டு காடுமோடெல்லாமளந்த
இந் நீர்மையிலே உருகா நிற்பர்,
என்னிது மாயம் — வண்ணமே கொண்டளவாய் என்ற மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும்,
^” ஒருப்படுத் திடுமின் இவளை உலகளந்தானிடைக்கே ”’ என்றும், பெரியாழ்வாரும்,
“ ஓங்கி உலகளந்த உத்தமன் ” என்றும்.
“ தேச முன்னளந்தவன் திரிவிக்கரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் ” என்றும்
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லாவுலகும் அளந்து கொண்ட எம் பெருமான் ‘* என்றும், “
மாணியுருவாயுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும் ‘” என்றும் ஆழ்வார் திருமகளாரும்
இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர்.
“ஏக: ப்ராஸீஸரத் பாதமேக: ப்ராச்க்ஷளந்முத |
அபரோப்யதரந்மூர்த் கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம் ॥ ””
ஒருவன் திருவடியை நீட்டினான்;
(பிரமனாகிய) மற்றொரு வன் மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான்.
(சிவனாகிய) வேறு ஓருவனும் களிப்புடன் அந்நீரைத் தலையிலே தரித்தான்.
இவர்களில் எவன் பெரியவன் என்பதை நினைத்துப் பாருங்கள்- என்கிறபடியே
பரம் பொருள் யாரென்பதை நிலை நாட்டித் தருவதன்றோ இவ்வவதாரம்.
( திரிவிக்ரமன் )
த்ரயோ விக்ரமாஸ் த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”’
[மூவுலகங்களையும் அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய வன் | என்றும். –
த்ரயோ லோகா: க்ராந்தா யே ?’
மூன்று உலகங்களும் எவனால் கடக்கப்பட்டனவோ ௮வன் ] என்றும் பொருள் கொள்ளலாம். –
த்ரீணி பத; விசக்ரமே ‘* என்றது வேதம்.
“ த்ரிரித்யேவம் த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்த்ரித, ஸர்வாந் த்ரிக்ரமோ$ஸி ஜநார்த்தந।”
(*மூவுலகங்களும் முனிவர்களால் சொல்லப் படுகின் றன. ஓ ஜநார்த்தனனே! அவையெல்லாவற்றையும் மூன் றடிகளால் தாவியபடியால் நீ திரிவிக்கரமன் ஆனாய் ]
என்று ஹரி வம்ஸத்தில் சொல்லப்பட்ட து.
“பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம் பூர் நரேங்வர।
அந்தரிக்ஷம் த்,விதீயேக த்,யெளஸ் த்ருத்யேந ஸத்தம |
”’இவ்வுலகம் ஒரு அடி வைப்பினால் அளக்கப்பட்டது.
இரண் டாவது அடிவைப்பினால் அந்தரிஷமும்
மூன்றாவதடியால் தேவலோகங்களும் அளக்கப்பட்டன.] என்று
நாரஸிம்ஹ புராணத்திலும் சொல்லப்பட்ட து.
முதலடியினால் ழுலகங்க ளெல்லாவற்றையும்.
இரண்டாவதடியினால் மேலுலகங்க ளெல்லாவற்றையும்,
மூன்றாவதடியினால் மஹாபலியின் ஸிரஸ்ஸையும் அளந்தவன் என்றும் கொள்ளலாம்.
“த்ரிரித்யேவம் த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந் த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”’
த்ரி’ என்னும் பதத்தினால் மூன்று வேதங்களும் முனிவர் களால் சொல்லப்படுகின்றன.
அவை யெல்லாவற்றையும் வியாபித்திருப்பதால் திரிவிக்கரமனெனப்படுகிறாய். | என்று
சொல்லப்பட்டபடியும் பொருள் கொள்ளலாம்.
வேதங்களால் மிகவும் ஆதரிக்கப்பட்டதாகையாலும்,
பரத்வத்தையும். ஸெளலப்யத்தையும் ஒருங்கே காட்டுவ தாகையாலும்.
எல்லார் தலையிலும் ஓக்கத் திருவடியை வைத்த பெருங்குணத்தைப் பேசுவதாகையாலும்
திரிவிக்ரமாவதாரம் முதலில் அதுபவிக்கப்பட்டது.
————-
அடுத்த படியாக இத் திரிவிக்ரம மூர்த்திக்கும் காரண பூதமான வாமன மூர்த்தியின் பெருமை பேசப்படுகிறது,
“த்ரஷ்ட்ரூக் ஸ்வகாந்த்யா வாமாநி ஸுகரி நயதி’
காண்ப வர்களைத் தன் ஓளியால் ஸுகமுள்ளவர்களாகச் செய்கிறான் என்று வாமன சப்தத்துக்குப் பொருள். “
ஸர்வாணி வாமாநி நயதி “ˆ [எல்லாரையும் ஸுகமுடையவர்களாகச் செய்கிறான்.] என் று
சாந்தோக்ய உபனிஷத் இவ்வர்த்தத்தை ஆதரித்தது,
“ கொள்ள மாளா இன்பவெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளலேயோ!
வையங்கெண்ட வாமனாவோ!” என்று வேதம் தமிழ் செய்த மாறனும் வாமன சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்.
“ வாமஸ் ஸுந்தர மூர்த்யோ:” என்கிற படியே
மிகுந்த வடிவழகையுடையவன் என் றும் பொருள் கொள்ளலாம்.
இவ்விரண்டு பொருள்களாலும் அவன் அலௌகிக ஆகர்ஜஹகமான வடிவழகையுடையவன் என்ற தாயிற்று.
கடலைக் குளப்படியிலே அடக்கினாப்போலே, உலகளந்த திரிவிக்ரம மூர்த்தியின் ஸெளந்தர்யமெல்லாம்
இச் சிறிய உருவில் வெள்ளமிடுமாகையாலே இப்பெருமானின் அழகு பேச வொண்ணாததாயிருக்கும்.
அவாங்மநஸ கோசரமான இவ்வழகிலே வேதமும். புராணங்களும். ஆழ்வார்களும் ஆழங்காற்படுவர்கள்.
“ ஸர்வாணி வாமாமி நயதி ”’ என்றது வேதம்,
ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத் ருக் ”
திவ்யமான சரீரத்தையுடையவன் வாமனன்.என்று புராணம் பேசிற்று.
“மரயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதிச்செவ்வாய் முகிழதா
சாயல் சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே?’ என்றும்,
“ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்கம்” என்றும்,
°” வாமனன் என் மரதக வண்ணன் தாமரைக் கண்ணினன் காமனைப் பயந்தாய் !” என்றும்
“ மாண் குறள் கோல வடிவு காட்டி ” என்றும்.
“ குரை கழல்கள் நீட்டி மண்கொண்ட கோல வாமனா” என்றும் நம்மாழ்வாரும்,
“சத்திரமேந்தித் தனியொரு மாணியாய் உத்தரவேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் ”’ என்றும்,
“காமர் தாதை கருதலர் சிங்கம் காணவினிய கருங்குழல் குட்டன் வாமனன்
“ கொண்ட கோலக் குறளுரு ” என்று: ஆண்டாளும்
வேதம் புகழ்ந்த இவ்வடிவழகிலே மயங்கினார்கள்.’
(வாமனன் )
இப்படி வடிவழகாலே பிறரை உகப்பிப்பதோடன்றியில் குணங்களாலும் பிறரை ஆநந்திப்பிப்பவன் என்றும் பொருள். கொள்ளலாம்.
“மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் செறிய சக்கரக்கையனே!” _என்றும்,
“ மதியினால் குறுள்மாணாய் உலரகு அளந்த கள்வற்கு” என்றும்,
“வாட்டமில் புகழ் வாமனனை” என்றும்,
** வன்மாவைய மளந்க எம் வாமனா!” என்றும்,
“ஞாலங்கொள்வான் குறளாகிய் வஞ்சனே!” என்றும்.
“கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே!” ‘என்றும்
அந்ய ப்ரயோஜனர்களுக்காகவும் தன்னை அழியமாறி அளிக்கும் அருங்குணத்தில் ஆழ்வார்கள் ஆழங்காற்ப்ட்டார்கள்
(வாமனன்)
“ வடிவழகைச்சொல்லுகிறதென் னுதல்;
நன்மை களைத் தருமவனென்னுதல் ” என்று நம்பிள்ளை ஈட்டில் (2-27-6) அருளிச்செய்தபடியே,
வாம சப்தத்தாலே ஸுக,ப்ரத, மான்:
வஸ்துக்களைச் சொல்லி வாமனன் ‘ என்று அவைகளைத் தருமவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
“மருவித் தொழும் ‘மனமே தந்தாய் வல்லை காண என் வாமனனே என்று இவ் வர் த்தத்தை அருளிச்செய்தார்.
(வாமனன்)
ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை அளித்தும்.
மஹாபலிக்குப் பாதாளத்திலே நிலையான ஸாம் ராஜ்யத்தைக் கொடுத்தும்,
உலகிலுள்ள: எல்லாச் சேதனர்கள் தலையிலும் தன் திருவடிகளை வைத்தும், –
இப்படி எல்லாருக்கும் ஸுகத்தைத் தந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
* வாமனன் ‘ என்னும் திருநாமத்துக்குச் சிறிய உருவை உடையவன் என்றும் பொருளுண்டு என்பது பிரஸித்தம்.
இதையே எல்லா ஆழ்வார்களும் குறளுரு என்று அருளிச்செய்தனர்.
(வாமனன்) .
‘ மத்யே வாமந மாஸீநம் விங்வே தே,வா உபாஸதே ‘
ஸர்வ சேதனர்களின் ஹ்ருதயத்திலும் வீற்றிருக்கும் வாமனனை ( எல்லா தேவர் களும் உபாஸிக்கிறார்கள்.]
என்று வேதத்தில் சொல்லிய படியே ஹ்ருதய கமலத்தில் அங்குஷ்ட மாத்ரனாயெழுந்தருளி யிருக்கும்
பெருமான் வாமன சப்தத்தால் சொல்லப்படுவ தாகவும் கொள்ளலாம்.
“வாமனன் நிற்பது மேவியிருப்ப என்று ஆழ்வார் இவ் வர்த்தத்தை என் நெஞ்சகம் என்று உணர்த்தினார்.
—————-
ஆக: இப்படி வாமனாவதாரத்தைச் சொன்னபின் இப்படி ப்ரஹ்மசாரியாய் அவதரித்த அவதாரத்திலும்
பிராட்டியை விட்டுப் பிரியாமல் மார்பிலே தரித்திருப்பவன் என்று உரைக்கிறது
* ஸ்ரீ தரன் . என்னும் திருநாமம்.
“ வாமனனே மாதவா ˆ” என்று ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை அருளிச்செய்கார்.
“க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம் வதூ,ம் வக்ஷ:ஸ்த,லாலயாம்”
திருமார்பிலே கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால் மறைத்துக் கொண்டு வந்தான்
என்கிற படியே. மஹாபலியின் யாக சாலைக்கு எழுந்தருளிய போதும். திருமார்பிலிருந்த பிராட்டியை
மான் தோலினால் மறைத்துக்கொண்டு வந்தான் வாமனன் என்று ப்ரஸித்தமிறே.
“ஏவம் ஜகத்ஸ்வாம் தேவதே,வோ ஜரார்தந: |
அவதாரம் கரோத்யேஷா தத்ர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! .
ராக,வத்வே ப,வத் ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி |
அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.அநபாயிநீ ॥
தேவத்வே தே,வதே,ஹயம் மறுஷ்யத்வே ச மாநுஷீ |
விஷ்ணோர் தே,ஹா நுரூபாம் வை கரோத்யேஷாத் மநஸ்த நும்।।”
தேவ தேவனாயே பகவான் அவதாரம் செய்யும்போது, இந்த ஸ்ரீதேவியும் அவனுக்குத் துணையாகத் தோன்று கிறாள்.
எம்பெருமான் ராகவனாய் அவதரித்த போது இவள் ஸீதை யானாள்.
அவன் கிருஷ்ணனாய்ப். பிறந்தபோது இவள் ருக்மிணியானாள்.
மற்ற அவதாரங்களிலும் இவள் விஷ்ணுவை விட்டுப் பிரியாதவளாயிருக்கிறாள்.
அவன் தேவனாகும் போது தேவ தேஹத்தைக் கொண்டவளாயும்
மனிதனாகப் பிறக்கும் போது மனித வுருவம் கொண்டவளாயும்,
இப்படி விஷ்ணு வினுடைய தேஹத்திற்குப் பொருந்தியதாகத் தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹத்தைச் செய்து கொள்ளுகிறா பிராட்டி.என்று
விஷ்ணு புராணத்தில் உரைக்கப்பட்டது இங்கு உணரத்தக்கது.
“தாம் ரத்நமிவ அர்ச்சிஷம் புஷ்பமிவ ஸூரபிம் இந்துரிவ சந்த் ரிகாம் அம்ருதமிவ ஸ்வாதுதாம்
ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதர :।
“ஹி ஹாது மியம் மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”’ ரத்னம் ஒளியை தரிப்பது போலவும்,பூ மணத்தை தரிப்பது போலவும் சந்திரன் தன் ஒளியை தரிப்பது போலவும்,
அம்ருதம் இனிமையை தரிப்பது போலவும், அந்த ஸ்ரீதேவியை இயற்கையான ஸம்பந்தத்தினால்
தரிக்கிறனாகையால் ஸ்ரீதரனாகிறான்.
“மனத்தை ஜயித்தவர்களைக் கீர்த்தி வீட்டுப் பிரிய வொண்ணாமல் விளங்குவது போல்
இப் பிராட்டியும் ` இப் பெருமானை விட்டுப் பிரியவல்லளல்லள் ” என்று சொல்லப்பட்ட து.
என் று ஆசார்யாக்ரேஸரரான பராசர பட்டர். வியாக்க்யானம் செய்தருளினார்.
(ஸ்ரீதரன்)
‘ ஸ்ரீ் என்று பெரிய பிராட்டியார் சொல்லப்படுகிறார்.
அவரைத் தரிப்பவனாகையால் புருஷோத்தமனும் ஸ்ரீதரன் எனப்படுகிறான்.
பகவானுக்கு நாராயண நாமம் அஸாதாரணமாய் விளங்குவது போல்
பிராட்டிக்கும் ‘ ஸ்ரீ: ‘ என்னும் இத்திரு நாமம் அஸாதராரணமாயிருக்கிறது.
“ ஸ்ரீரித்யேவ ச நாமதே பகதி ப்ரூம: கதம் த்வாம் வயம் ‘”
பெரியபிராட்டியே! உமக்கு *ஸ்ரீ:’ என்பது திருநாமம். உம் டெருமையை ஈாங்கள் எப்படிச் சொல்லுவோம்]
என்றாரன்றோே ஆள வந்தார்.
நாராயண நாமத்தைப்போல் இத் திருநாமமும் பல பொருள்களை உடையது.
அவைகளை இனி விவரிப்போம்.
” மிங்-ஸேவாயாம் ” என்கிற தாதுவிலிருந்து இந்த ஸ்ரீப்தம் உண்டான்தாகக்கொண்டால்.
* (அகில சேதனர் களாலும் ) ஆஸ்ரயிக்கப்படுகிறாள் ”’ என்றும் “
(எம்பெருமானை) ஆஸ்ரயித்திருக்கிறாள் ” என்றும் இரு பொருள்கள் ஏற்படும்.
°” ய்ரூ-விஸ்தாரே ” என்னும் தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம் தோன் றியதாகக் கொண்டால்,
“(அடியார்களுடைய குணங்களை) விருத்தி யடையச் செய்கிறாள் ” என்றும்,
“(தன் குணங்களாலும் விக்,ரஹங்களா லும் உலகை யெல்லாம்)வியாபித்திருக் கிறாள்” என்றும் பொருள்படும்;
“’ங்ரு-ஹிம்ஸாயாம்” என்கிற தாதவிலே ஸ்ரீ சப்தம் நிஷ்பந்கமாகிறதென் றுகொண்டால், ”
” (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்) போக்கடிப்ப வள் ” என்று ஸ்ரீசப்தத்துக்குப் பொருளாகும்
“ஸ்ரு- ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம் உண்டாகிற தென் று கொண்டால்
^ (அடியார்களுடைய முறையீடுகளைக்) கேட்டவள் ^ என்றும்,
^” அவைகளை எம்பெருமானைக் கேட்பிப்பவள் ” என்றும் பொருள்படும்.
இப் பொருள்களெல்லாம்
“” மருணாதி நிகிலாந் தேஷாம் ங்ரூணாதி = குணைர் ஜகத் |
ஸ்ரீயதே சாகிலேர் நித்யம் ஸ்ரயதே ச பரம் ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம் ங்ருணதீமபி ||”
சேதனர்களுடடய எல்லாப் பாவங்களையும் போக்கடிக்கிறாள் ;
உலகம் முழுவதையும் குணங்களால் வியா பிக்கிறாள்;
எல்லாச் சேதனர்களாலும் எப்போதும் ஆஸ்ரயிக்கப்படுகிறாள்
பரம ப்ராப்யமான பரம புருஷனை ஸர்வ காலமும் ஆஸ்ர யித்திருக்றொள்;
(௭ம்பெருமானை) ஆஸ்ரயித்திருப்பவளா கவும், (மற்றவர்களால்) ஆஸ்ரயிக்கப்படுபவளாகவும்.
(சேதனர் களின் குறைகளைக்) கேட்பவளாகவும்,- எம்பெருமானை அக்குறைகளைக் கேட்பிப்பவளாகவும்
இவளை அறிகிறார்கள் – என்று பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில் பேசப்பட்டன,
“ அதில சேதனர்க்கும் ஆஸ்ரயணீயையாய். தான் அவனை ஆஸ்ரயித்து லப்,த.ஸ்வரூடையாய்,
ஆஸ்ரித குணங்களை விஸ்தரிப்பித்து, ஆஸ்ரித யோக்திகளை வளர்த்து ,
இவர்களை அங்கீகரிக்கைக் கனுகுணமான வாகாரங்களை அவனுக்கு காட்டி அருளுதல்
முதலான ஆகாரங்கள்
புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேஷிதங்களாகையாலே, .
இந்த நிருக்திகளெல்லா த்தையும். ஸ்ரீயப்தத்துக்கு அர் த்தமாகஆசார்யர்கள் அனு சந்திப்பார்கள் ” என்று
(அழகியமணவாளப்பெருமாள்) நாயனாராச்சான் பிள்ளை சதுஸ் லோக வியாக்கியானத்திலே அருளிச் செய்தார்.
இவருடைய திருத் தமப்பனாரான பெரியவாச்சான் பிள்ளை பிராட்டி இச் சேதனனுடைய குறைகளைக் கேட்கும் ப்ரகாரத் தையும்,
எம்பெருமானைக் கேட்பிக்கும் ப்ரகாரத்தையும், பரந்த ரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச் செய்தார்.
ஸ்ரீஸூக்திகள் பின்வருமாறு: —
“ ஸ்ருணாதி’ என் று கேட்குமென்கையாலே சேநரோடுண்டான பந்த கார்யத்தைச் சொல்லுகிறது.
*ஸ்ராவயதி ‘ என் று கேட்பீயாநிற்கும் என்கையாலே ஈஸ்வர னோடுண்டான பந்த கார்யத்தைச் சொல்லுகிறது.
அதாவது:- “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜனனியான தேவரீர் திருவடிகளொழுியப் புகலில்லை;
இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரக்ஷித்தல், அவனுக்கு , ஸ்வாதந்தர்ய பாத்ரமாய்
நாசத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி அநந்ய க,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து
ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பரம்’ என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும்;
அதுக்கு மேலே வெந்நீருக்குக் குளிர் நீர்போலே, நிரங்குச ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: பாவகோபமம்” என்கிறபடியே
அநபி,ப,வநீயனான ஈஸ்வரனைச் தன்னுடைய போக்யதா தியயத்தாலே பதமாக்கி:
நாயன்தே! இச் சேதனனை அங்கீகரித்தருளீர் ‘ என்னும்; :
ஆவதென்? ^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா ‘ என்று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான ஸாஸ்த்ர மர்யாதையை அதிலங்கி,த்து
நம் நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவனல் லனோ ?
இவனை யங்கீகரிக்கையாவதென் ? ‘ எள்னும் ஈஸ்வரன் *
அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு இல்க்காக்கி ரக்ஷித்கருளீர் ‘ என்னும் பிராட்டி; ‘
பொறையை நோக்குகைக்காக ஸாஸ்த்ர மர்யாதையைக் குட நீர்வழியவோ?” என்னும் ஈஸ்வரன்; ”
சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வபாவிகமான க்ஷமா தத்வத்தைக் குடநீர் வழியவோ?’ என்னும் பிராட்டி; :
ஷமையை நோக்கில், சாஸ்த்ர மர்யாதை குலையும்;
சாஸ்த்ர மர்யாகையை, நோக்கினால் க்ஷமா தத்வம் குலையும்;
இரண்டும் குலையாதொழிய வேண்டும்; செய்யவடுப்பதென்?’ என்னும் ஈஸ்வரன்; “
கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால் அத்தனையே; அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் :
அப்படியே செய்தருளீர் ‘ என்னும் பிராட்டி; :
இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழியுண்டாமாகில் நமக்குப் பொல் லாதோ?
சொல்லிக் காண்! ‘ என்னும் ஈஸ்வரன்; :
ஆனால். சாஸ்தர மர்யாதையை விமுகர் விஷயமாக்குவது:
உம்முடைய ஷமையை அபிமுகன் விஷயமாக்குவது;
இரண்டும் ஜீவித்த தாயறும் ` என்னும் விஷயவிபாக;ம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி;
அத்தைக் கேட்டு : அழகிய விபாக;ம்!’ என்று இச்சேதனனை அங்கீகரித்தருளும் ஈஸ்வரன்;
ஆக, இப்படி ஸாபராத,ஜந்துவை ஈஸ்வரன் அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்தருளுகையும்.
” இப்படிப் பிராட்டியால் புருஷ காரம் செய்யப்பெற்ற சேதனனையே ‘ ஸர்வேஸ்வரன் அங்கிகரிக்கிறான் என்பதை
“என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன்? என் சிரீதரனே!” ` என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார்-
“மாதவன் ‘ என்று
எம்பெருமான் வைகுண்டத்தில் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் இருப்பைச் சொல்லிற்று.
‘ஸ்ரீ தரன்’ என்று
அவதாரம் செய்யும் போதும் அவளைத் தரித்திருககிறான் என்கிறது.
ஆகையால் புநருக்தி தோஷம் இல்லை..
த்வயத்தில் போல் உபாயத்வ உபேயாத்வ இரண்டு ஆகாரங்களும் உண்டு என்று காட்டவே இந்த இரண்டு திரு நாமங்களும்
“—————
இப்படிப் பராவஸ்தையையும்,
வியூஹ விபவாவதாரங் களையும் அநுபவித்த பிறகு,
* ஹ்ருஷீ கேஸன் ‘ என்று
ஸர்வேஸ்வரன் மனுஷ்யர்களுடைய ஹ்ருதயத்தில் அந்தர் யாமியாய் நின்று இந்திரியங்களை நியமித்துக் கொண்டு
வீற்றிருக்கும் இருப்பு அநுபவிக்கப்படுகிறது.
ஸ்ரீதரன் என்ற திருநாமத்திற்குப்பின் படிக்கையாலே
இந்த அந்தர்யாம்யவஸ்தையிலும் எம்பெருமான் பிராட்டியுடன் கூடியவனாகவே
எழுந்தருளி யிருக்கிறான் என்பது தோற்றுகிறது.
“ஹ்ருஷீ காணீந்த்ரியாண்யாஹுஸ் தேஷாமீமோ யதோ பூவாந் |
ஹ்ருஷீகேமுஸ் ததோ விஷ்ணு: க்யாதோ தேவேஷு கேஸவ: ॥’
ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச் சொல்லுகிறார்கள்;
அவ்விந்திரியங்களை நியமிப்பவராயிருப்பதால். விஷ்ணு கேசவன் என்னும் திருநாமங்களையுடைய நீர்
தேவர்களுள் * ஹ்ருஷீகேசன் எனப்படுகுகிறீர்.
என்று ஹரிவம்சத்தில் ஹ்ருஷீகேச சப்தார்த்தம் சொல்லப்பட்ட து.
( ஹ்ருஷீ கேசன் )
ஹ்ருஷீகேச சப்தத்தினால் பத்து இந்திரியங்களாகிய தலைகளைக் கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்: சொல்லப்படுகிறது,
அந்த ராவணனை தன்னைப் பற்றின அறிவாகிய அம்பை ஏவிக் கொல்லுமவனாகையாலே
இப்பெருமான் ஹ்ருஷீகேசனெனப்படுகிறான்.
“தஸ ,இந்த்,ரியாஙகம் கேரம் யோ மநோரஜநீசரம் |
விவேகமாரஜாலேந மமம் நயதி யோகிநாம் | ”’
யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய மனஸ்ஸாகிற பயங்கர ராஷஸனை.
தன்னைப் பற்றிய அறிவாகிய அம்புக் கூட்டங்களால் அடக்குகிறான்- என்று சொல்லப்பட்ட தன்றோ.
“இருடீகேசன் எம்பிரான் இலங்கை யரக்கர் குலம் முருடுதீர்த்த பிரான் எம்மான்” _என்று
நம்மாழ்வார் இவ்வர்த்தத்தை உணர்த்தினார். “
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண் டக்குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு ‘
என்று பெரியாழ்வாரும் இதைப் பாசுரமிட்டருளினார்.
*இருடீகேசன் என்னும் இத் திரு நாமத்தினாலும் விரோதி நிரஸந ஸீலத்வம் சொல்லப்படுகிறது.
“ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட இருடீகேசா”என் று பெரியாழ்வார் இக்குணத்தைப் பேசினார்.
(ஹ்ருஷீகேசன்)
தன்னைக் கண்டவர்களுடைய இர்திரியங்களை வசப்படுத்துமவன்.
ரூப ஒவ்தார்ய குணை: பும்ஸாம் த்,ருஷ்டி சித்த அபஹாரிணம் “”
தன்னுடைய ரூபம், வண்மை, குணங்கள் முதலியவற்றால் ஆண் பிள்ளைகளுடைய கண்ணையும். மனத்தையும்
அபஹரிக்குமவன்- என்று சொல்லப் பட்டதன்றோ. ‘
முடியானே ” என்னும் திருவாய்மொழியில் நம்மாழ்வார் :-:
நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே” என்றும், ‘*
வஞ்சனே! என்னுமெப்போதுமென் வாசகமே ‘” என் றும். “
தாயவனே! என்று தடவும் என் கைகளே ” என்றும்.
“உன்னை மெய் கொள்ளக் காண விரும்புமென் கண்களே ” என்றும். :
‘பண் கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத்
திண் கொள்ள ஒர்க்கும் கடந்தென் செவிகளே ” என்றும்
தம்முடைய இர்திரியங்கள் ஒவ்வொன்றும் எல்லா இந்திரியங்களின் அ.நுபவத்தையும் ஆசைப்பட்டு
எம்பெரு மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த ரன்றோ.
” நாக்கு நின்னை யல்லாலறியாது ” ,
“கண்டு நானுன்னை உகக்க ”
“ வேறொருவரோடென் மனம் பற்றாது ^”
“என்னப்பா என்னிருடீகேசா ” என்று
தம்முடைய இந்திரி யங்களெல்லாம் எம்பெருமான் பக்கல் ஈடுபட்டபடியைப் பெரியாழ்வாரும் பேசியருளினார்.
தன்னுடைய அவயவ சோபை யாலும். ஆபரண சோபையா லும் பிறருடைய இந்திரியங்களை வசப்படுத்துகிறான் -என்று பெரியாழ்வாரும்
“மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய்
பின்னல் துலங்குமரசிலையும் பீதகச்சிற்றுடையொடும்
மின்னில் பொலிந்ததோர் கார்முகில்போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடை’ நடவானோ ”” என்று அருளிச்செய்தார்,
“இருடீகேசன் வலிசெய்ய முத்தன்ன வெண்முறுவல்
செய்ய வாயும் முலையும் அழகழிந்தேன் யான்” என்று ஆண்டாளும்
தன்னுடைய இர்திரியங்களெல்லாம் இருடீ கேசனிட்ட வழக்காயிருக்கின்றன என்று அருளிச்செய்தாள்.
இப்படி எம்பெருமான் ஹ்ருதய கமலத்திலே திவ்ய மங்கள விக்ரஹத்துடன் அந்தர்யாமியாய்
எழுந்கருளியிருக் கிறான் என்னுமிடத்தை
“ வெள்ளைச் சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக்கண்ணனென் நெஞ்சினூடே
புள்ளைக்கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்? “என்றும்
“கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்றொழிந்தன கொல் ஏ பாவம்!-—வெல்ல
நெடியான் நிறம். கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனதுள்ளத்தகம் ?’ _— என்றும் நம்மாழ்வாரும்.
“நிற்பதும் ஒர் வெற்பகத்(து) இருப்பதுவும் விண் கிடப்பதும்
நற்பெரும் திரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்
அற்புதன் அநந்த சயனன் ஆதிபூதன் மாதவன்
இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே ”’ என்று திருமழிசைப்பிரானும்,
“வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவசைகள் இகழ்ந்திட்டென்பால் இடவகை கொண்டனையே” என்றும்,
“அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்தென் மனந்தன்னுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய் எம்பிரான்!” என்றும் பெரியாழ்வாரும் அருளிச்செய்தார்.
வேதமும் “நீல தோயத மத் யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா” முதலான விடங்களில் இவ்விஷயத்தைச் சொல்லிற்று.
“ லாபஸ்தேஷாம் ஜயஸ்தேஷாம் குதஸ்தேஷாம் பராபவ: |
யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ””
எவர்சளுடைய ஹ்ருதயத்தில் காயாம் பூ வண்ணனான பெருமான் நன்கு பொருந்தி யிருக்கிறானோ,
அவர்களுக்கே லாபமும் ஜயமும் உண்டாம்;
அவர்களை அவமானம் அணுகாதே என்று ருஷி களும் இவ்விஷயத்தைச் சொன்னார்கள்
“நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க வழியிலே பிள்ளானைக் கண்டு.
‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வ்யாப் தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும் உண்டோ?’ என்று. பிள்ளானைக் கேட்க.
பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்திய।யிருக்கும்;
ஆகிலும், எம்பார் ஒருநாள். உபாஸக அநுக்ரஹ ஸஹார்த்தமாக ஆஸ்ரிதருடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்? என்று அருளிச்செய்யக்கேட்டேன்? என்று பணித்தான் ‘
என்று ஈட்டில் எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும். இவ்விடத்தில். அனுஸந்திக்கத் தக்கது.
பிள்ளைலோகாசார்யரும் “அந்தர்யாமித்வமாவது: அந்த:ப்ரவிஸ்ய நியந்தா வாயிருக்கை.
ஸ்வர்க்காதி ப்ரவேசாதி, ஸர்வாவஸ்தைகளிலும், ஸகல சேதநர்க்கும் துணையாய். அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே
ஸூ பாஸ்ரயமான திருமேனியோடே ‘கூடிக்கொண்டு அவர் களுக்கு த்யேயனாகைக்காகவும்,
அவர்களை ரக்ஷிக்கைக்காகவும் -அந்தர் பூதனாய் கொண்டு ஹ்ருதய கமலத்திலே எழுந்தருளி யிருக்கும் இருப்பு.” என்று
தத்வ த்ரயத்தில் அருளிச் செய்தார்.
(ஹ்ருஷீகேசன்)
` ஹ்ருஷ் ” என்னும் தாது அனந்தத்தைக் குறிக்கும்.
௧” என்னும் பதம் ‘ஸுகம்’ என்னும் பொருளையுடையது.
கம் ப்ரஹ்ம ‘ என்ற வேதவாக்யம் காண்க,
ஸம் என்னும் பதம் ஐஸ்வர்யத்தை உடையவன் என்று பொருள்படுகிறது.
ஆக, ஹ்ருஷீகேசன் ‘ என்னும் திருநாமத்தால், ஹர்ஷத்தையும், ஸெளக்யத்தையும், ஐச்வர் யத்தையும்
உடையவன் என்று சொல்லப்பட்டதரகிறது,
“ ஹர்ஷாத் ஸெளக்,யாத் ஸுகைஹ்வர்யாத் ஹ்ருஷீகேமத்வமங்நுதே ‘
ஹர்ஷத்தையும். ஸெளக்யத்தையும், ஸுகமான ஐஸ்வர்யத் தையும் உடைத்தாயிருக்கையால்
ஹ்ருஷீகேசனாயிருக்கும் தன்மையை அடைகிறாய்.
என்று இவ்வர்த்தம் புராணங்களில் பேசப்பட்டது.
“ஸூர்யாசந்த்,ரமஸோ: மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:।
பேளதயந் ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்॥
பேதநாத் ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம் பவேத் ।
அக்நீஷோமக்ருதைரேவம் கர்மபி,: பாண்டு,நந்தந ॥
ஹ்ருஷ்கேஸ மோ ஹமீமமா நேர வரதே, லோகபாவந: ||
கேசங்கள் எனப்படும் ஸூர்ய சந்திர கிரணங்களால் நான் உலகிலுள்ளவர்களை யெல்வாம் எழுப்பிக் கொண்டும்
தூங்கச் செய்து கொண்டும் வீளங்குகிறேன். இப்படி எழுப்புவதி னாலும், தூங்கச்செய்வதா லும்
உலகிற்கு ஹர்ஷம் உண்டாகும். பாண்டவ !
ஸூர்ய சந்திரர்களைக் கொண்டு செய்யப்படும் -இக்கருமங்களால், ஈஸ்வரனும். வரமளிப்பவனும்,
லோக பாவனனுமான நான் ஹ்ருஷீ கேசன் எனப்படுகிறேன். என்று மோக்ஷதர்மத்தில்
ஹ்ருஷீகேச சப்தத்தின் மற்றொரு பொருள் விவரிக்கப்பட்டது.
* ஸூர்யரங்மிர் ஹரிகேஸ : புரஸ்தாத் ”
ஸுூர்ய கிரணமானது பகவான் ஹரியீன் கேச மெனப்படுகிற. து] என்று வேதமும் இவ்வர்த்தத்தை உணர்த்திற்று.
” கேஸ ‘ சப்தத்தினால் எம்பெருமானுடைய திருக்குழல்கற்றை சொல்லப்படுவதாகக்கொண்டு.
கண்டவர்களுக்கு ஹர்ஷத் தைக்கொடுக்கும் மயிர்முடியை உடையவன் என்றும் ஹ்ருஷீ கேச சப்தத்திற்குப் பொருள் கொள்ளலாம்.
கேசவன் என்னும் திருநாமத்திற்கும், இப்படி ஒரு பொருள் உரைக்கப் பட்டது.
அங்கு அநுஸந் திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும் படிப்பது.
இப்படிப் பலபொருள்களை உடையதேயானாலும். *அந்தர்யாயியாய் இந்திரியங்களை நியமித்திக் கொண்டு எழுந்தருளியிருக்குமவன் ‘ என்னும் பொருளே இங்கு முக்ய மாகக் கடவது.
————–
இம் மாதிரியாக விபவ மூர்த்திகளையும்.
அந்தர்யாம் யவதாரத்தையும் அதுபவித்த பிறகு.
இம்மூர்த்திகளுக்கெல்லாம் மூலாவதாரமாய் விளங்குபவனும்,
பத்மநாபன் என்னும் திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்தி நாதனை அனு ஸந்திக்கிறது
பத்மநாபன் என்னும் திருநாமம்.
இங்கு சில விஷயங்களை அறியவேண்டும்.
அநிருத்த நாராயணனே பிரமனைப் பிறப்பித்தவனென்றும்.
எல்லா அவதாரங்களுக்கும் மூலமூர்த்தி யென்றும் சொல்லும் ப்ரமாணங்கள் முன்பே காட்டப்பட்டன.
பத்ம நாபன் என் னும் பெயரிலிருந்து ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில் படிக்கப்படும்
இவ் விஷ்ணு மூர்த்தியே பிரமனைப் படைத்தவரென்று தோற்றுகிறது.
“ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷரார்ணவ நிகேதந 😐
நாக பர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாகதோ மதுராம் புரீம்॥’
என்று திருப் பாற் கடலில் துயிலும் பெருமானே கிருஷ்ணன் முதலிய அவதார மூர்த்திகளுக்கு
மூல பூதர் என்றும் சொல்லப்படுகிறது.
இவை எப்படிப் பொருந்தும் எனில்:
அநிருத்தனிடமிருந்து ஷீராப்தி நாதன் தோன்றுகிறான் என்றும்
அவரிடமிருந்து மற்ற அவதாரங்கள் எற்படுகின்றன என்றும் கொண்டால்
அவதார மூர்த்திகளுக்கு அநிருத்தரையும்.
திருப்பாற்கடல் நாதனையும் மூல மூர்த்தியாகச் சொல்லலாம்.
“ பத்ம நாபாதிகா: ஸர்வே….அநிருத்,தாத் ஸமுத்பந்நா பாத், இவேஸ்வரா:” என்று
முன் எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும் இது பொருந்தும்.
மஹா ப்ரளயத்தில் .அநிருத்தரும்.
நைமித்திக ப்ரளயத்தில் க்ஷீராப்தி நாதனும் பிரமனைப் பிறப்பிப்பதாகக் கொள்ளலாம்.
அன்றிக்கே
தர்ம்யைக்யத்தாலே இருவரையும் ப்ரஹ்மோத்பா தகர்களாகக் கூறுவதாகவும் கூறலாம்,
புருஷ ஸூக்தத்திலும், *பாதேள5ஸ்ய” என்று அநிருத்தரை எடுத்து. :
இஹாபவாத்புக:” [இங்கு மறுபடியும் அவதரித்தார்] என்று அவருடைய அவதார பூ,தரான ஷீராப்தி நாதனைச் சொல்லுவதாகவும்,
“ததோ விஷ்வங் வ்யக்ராமத்’ என்று அவருடைய அவதார வ்யாப்தியைச் சொல்லுவதாகவும்,
* தஸ்மாத் விராட,ஜாயத’ என்று
அந்த ஷீராப்தி நாதனிடமிருந்தே பிரமன் பிறந்தான் என்று சொல்லுவதாகவும் பொருள் கொள்ளலாம்.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் பத்மநாபே அமரப்ரபு,:’ என்று
வ்யூஹத்தில் நான்காவதான அநிருத்தரைக் குறித்தும்,
பத்மநாப; ப்ரஜாபதி: ‘ என்று முதல் அவதாரமான விஷ்ணுவைக் குறித்தும்
பத்மநாப சப்தம் ப்ரயோகிக்கப் பட்டிருப்பதையும்,
பத்மநாப: ப்ரஜாபதி: ‘ , என்ற விடத்தில் பாஷ்யத்தில்
நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயம் சைதத் த்ஸஏஷ்டவ்யம் ”
இந்த ப்ரஹ்ம ஸ்ருஷ்டி நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும் |
என்று பட்டர் அருளிச் செய்ததையும் இங்கு அதுஸந்திப்பது.
இனி இப்பத்மநாப சப்தார்த்தை விவரிப்டோம்.
(பத்மநாபன்) =
“” ஸர்வ ஜகத் காரணம் யஸ்ய ஸ:””
எல்லா ஜகத்துக்கும் காரணமான “பத்மத்தை . நாபியில் உடையவன் எவனோ அவன்.
என்று சங்கர பாஷ்யத்தில். பொருளுரைக்கப்பட்டது . ”
பாமரு மூவுலகும் படைத்த பற்பநாபாவோ!” என்று ஆழ்வாரும். –
* ஊழிமுதல்வன்…….. பாழியந்தோளுடைய பற்பநாபன் ” என்று ஆண்டாளும்
பத்மநாப சப்தத்திற்கு அர்த்தம் பண்ணினார்கள்.
“ தாதோத் தார: ஸம்விமரதி பஞ்சவர்ஷமாதாநி து ”
(பத்ம ஸம்பவனான ) பிரமன் (தாமரைக் கொடியில் ) மேல் நோக்கியவனாய் ஐநூறு வருஷங்கள் நுழைந்கான்.-என்றும்
“ தர்த்துர் நாப்,யாம் புஷ்கரம் ப்ராதுர்பவதி”
ஸர்வ லோகத்தை தரிப்பவனான நாராயணனுடைய நாபியில் தாமரை உண்டாயிற்று.] என்றும்,
^ அஜஸ்ய நாபாவத்,யேகமர்ப்பிதம் ”
பிறப்பிலி யான பெருமானின் நாபியில் ஒரு ( தாமரை ) தோற்றுவிக்கப்பட்டது.] என்றும்,
‘யந் நாபி பத்மநாப,வந்மஹாத்மா ப்ரஜாதிபர் விஸ்வஸ்ருட், விஸ்வரூப:”
உலகை உருவ மாகச் கொண்டவனும், உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமன்
எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன்நினானோ ….] என்றும்
மஹா உப நிஷத்திலும், “ ப்ரஹ்ம வை ப்,ரஹ்மாணம் புஷ்கரே$ஸ்ருஜத்”
ப்ரஹ்மம் பிரமனைத் தாமரையில் தோற்று வித்தது என்றும்
அதர்வண வேதத்திலும், “ ஸ ப்ரஜாபதி ரேக: புஷ்கரபர்ணே ஸம்ப,வத்””
அந்தப் பிரமன் ஒருவனே (எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில் தோன் நினான்– என்றும்
பல வாக்கியங்களால் வேதத்திலும்
“யத் தத் பத்மமபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயத |
` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: இத்யவதரர்யதாம் |
ஸரிவாத் ஸ்கந்தஸ் ஸ்ம்பபபூவ ஏதத் ஸ்ருஷ்டி சதுஷ்டயம் (|
(பகவானுடைய’ உந்தியிலிருந்து) யாதொரு தாமரை முன் உண்டாயிற்றோே அதில் பிரமன் பிறந்தான்,
பிரமனிட மிருந்தே-சிவன் பிறந்தானென்று அறியத்தக்கது.
சிவனிட மிருந்து ஸ்கந்தன் உண்டானான்.
இது (முதலில் ஏற்பட்ட) நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும்
“கதாசித் தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்,யாம் காமாத,ஜாயத |
திவ்யமஷ்டதனம் பூரி பங்கஜம் பார்த்தி,வம் மஹத் ॥
யஸ்ய ஹேமம திவ்யா கர்ணிகா மேருருச்யதே |”
அப் பெருமான் ஒரு ஸமயம் யோக நித்திரை செய்து கொண்டிருக்கும் போது. அவனுடைய ஸங்கல்பத்தினால்
அவனுடைய திருநாபியில், எட்டு தளத்தையுடையதும், ப்ருதிவி ஸம்பந்த முள்ளதும், மிகப்டெரியதும் அழகியதுமான தாமரை உண்டாயிற்று.
அதனுடைய ஸுவர்ண மயமான அழகிய கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்படுகிற து. என்று
பாத்ம புராணத்திலும் சொல்லட்பட்ட து.
“’நாவியுள் நற்கமல நான்முகனுக் கொருகால் தம்மனையானவனே!” என்று பெரியாழ்வாரும்.
நாட்டைப் படையென்றயன் முதலாத் தந்த நளிர் மாமலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே ” என்று ஆண்டாளும்
தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே!” என்று குலசேகராழ்வாரும்,
“போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏறதூர்தி என்று
வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை
மற்றுரைக்கிலே ” -—என்று திருமழிசைப்பிரானும்.
** அயனைப் படைத்ததோர் எழில் உந்தி ” என்று திருப்பாணாழ்வாரும்.
‘ அங்கமலத்தயன் ” என்றும். “்
ஒருவனை உந்திபூமேல் ஓங்குவித்து” என்றும், திருமங்கைமன்னனும்.
“செய்ய மறையான் நின் உந்தியான்” என் றும்,
“நான்முகற்குப் பூமேல் பகரமறை பயந்த பண்பன் ` என்றும் பொய்கைப்பிரானும். —
இரும் தண் கமலத் திரு மலரினுள்ளே திருந்து திசைமுகனைத் தந்தாய்” என்று பூதத் தாழ்வாரும்.
“அலரெடுத்த உந்தியான்”என் று பேயாழ்வாரும்,
“’ ஒரு தானாகித் தெய்வ நான்முகக் கொழுமுளை ஈன்று
முக் கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம் விளைத்த
உந்தி மாயக்கடவுள் மாமுதலடியே”’ என்று நம்மாழ்வாரும்
எம் பெருமான் ஸர்வ ஜகத் காரணமான பத்மத்தை நாபியிலே கொண்டு விளங்குவதை அநுபவித்தார்கள்.
“’அஜநிஷ்ட ச கஸ்ய நாபே,:”
எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம் உண்டாயிற்று] என்றார் ஆளவந்தாரும்.
“த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமிதமத்,வைதமதி,கம் த்ரிகாத,ஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்காந் விகடயர் |
நாபீ பத்,மோ ப்ரூபங்கீ,பரவதி,தி ஸித்,த,ாந்தயதி ந: |”
மும்மூர்த்திகளும் ஸமர்’ மூவரும் ஒன்றே “மூன்றைக் காட்டிலும் வேறுபட்டது பரதத்வம் ‘ என்னும்
விதண்டா வாதங்களைப் போக்கடிப்பதாய்,
பிரம ருத்திரர்களுக்கு முதற்கிழங்கரயிருப்பதுமான பெரியபெருமாளுடைய திருநாபிக்கமலமான து
அவனையொழிந்த மற்றவையெல்லாம் அவனுடைய புருவ நெரிப்புக்கு வசப்பட்டவை என்று நமக்கு முடிவுகட்டித் தருகின் றது.
என்று பட்டர் அருளிச் செய்தபடியே பரத்வ நிர்த்தாரணம் செய்துதரும் திருநாமமன்றோ இது.
(பத்மநாபன்)
” பத்மமிவ நாபி: யஸ்ய ஸ:””
தாமரை போன்ற உந்தியை உடையவன் | என் றும் பொருள் கொள்ளலாம்.
“ ஹ்ருத்பத்மஸ்ய நாபெள மத்,யே ப்ரகாமாமாஈத்வாத் வா பத்மநாப;””’
ஹ்ருதய கமலத்தின் ஈடுவில் பிரகாசிப்பதால் பத்மநாபனாகிறான்.. என்றும் சங்கரர் பொருள் கெண்டார்.
இப்படி ஸகலாவதார மூல மூர்த்தியான பத்மநாபாவதாரம் அநுபவிக்கப்பட்டது.
————–
அடுத்தபடியாக அப் பெருமானுடைய முக்யாவதாரமாகிய க்ருஷணாவதாரம் தாமோதர நாமம் அநுபவிக்கப்படுகிறது.
“பத்மநாபன் என்னும் திருநாமத்தினால் அவதாரத்திலும் பரத்வம் பொலிய நிற்பவனென்று காட்டப்பட்டது.
தாமோதரன்’ என்று ஓரிடைச்சிக்குக் கட்டவும் அடிக்கவுமாம்படி நின்ற ஸெளலப், யத்தின் எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது.
* தாம” என்று விந்-16 கயிற்றுக்குப் பெயராகையால் கயிற்றை வயிற்றிலுடையவன் என்று
தாமோதர நாமத்திற்குப் பொருளாகிறது.
“ தயோர் மத்,யக,தம் பத்த,ம் த௱ம்நா கடம் தயோத;ரே |
ததங்ச தமோத,ரதாம் ஸ யயெள தாமப,ந்த நாத் |!”
அந்த யசோதையால் வயிற்றில் கயிற்றினாலே கட்டப் பட்டவனாய் அம்மரங்களினிடையில் சென்றான்.
கயிற்றால் கட்டப்பட்டதால் தாமோதரனாயிருக்கும் தன்மையை அடைந்தான் என்று சாஸ்த்ரம் சொல்லிற்று,
“தாம்கா சைவோத;ரே பத்,த்,வா ப்ரத்யப,த்,நாதுலூகலே”
கயிற்றால் வயிற்றில் கட்டி உரலில் பிடித்துக் கட்டினாள்-என்று விஷ்ணு புராணத்திலும் இத்திருநாமம் விவரிக்கப் பட்டது.
ஸர்வ ஸ்மாத் பரன் ஓரிடைச்சியின் கையிலே கட்டுண்டு கிடந்ததைக்கண்டு
“‘எத்திறம்! உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே” என்று நம்மாழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார்
“கண்ணிநுண் சிறுத்தாம்பி னால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்’” என்று மதுரகவிகளும்.
“கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ ” என்று திருமங்கையாழ்வாரும்
இந்நீர்மையிலே ஈடுபட்டனர்.
“தாமாநி பந்தி யஸ்யோத,ராந்தரே | தேர தமோத,ரோ ; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித:
தாம சப்தத்தினால் சொல்லப்படும் லோகத்திலுள்ள நாம ரூபங்களெல்லாம் ( பிரளயகாலத்தில் )
அவனுடைய வயிற்றினுள் விளங்குகிறபடியால் ஸ்ரீதரன் தாமோதரனாகிறான்.
என்று புராணத்தில் சொல்லியபடியும் பொருள் கொள்ளலாம்.
“‘ தாமோதரனைத் தனி முதல்வனை ஞால முண்டவனை ” என்று நம்மாழ்வார் இவ்வர்த்தத்தை உணர்த்தினார்.
“தமாதி, ஸாதநேந உதாரா உத்க்ருஷ்டா மதிர்யா தயா இதி தமோதர ;,:’
தமம் முதலிய ஸாதனங்களால் உதாரமாய் ( உயர்ந்ததாய் ) விளங்கும் புத்தி தமோதரா ‘ எனப்படும்.
அந்த புத்தியால் அறியப்படு மவன் தாமோதரன் . என்றும் சங்கரர் பொருள் உரைத்தார்.
“தாமாத், தமோதரம் விது;
தாமோதரனை தாமத்தினால் அறிகிறார்கள் என்ற பகவத் வசனம் இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணம்.
“ தேலாநாம் ஸூகமும் ஸித்வாத் த;மாத், தமோதரம் விது; “` தேவர்களுக்கு ஸுகமானவற்றை உபதேசிப்பதாலும்.
கயிற்றினால் கட்டப்பட்டகாலும் தாமோதரனென்று அறிகிறார்கள்.
என்ற ப்ரமாண த்தின் படியும் பொருள் சொள்ளலாம்.
ஆக. இப்பன்னிரு நாமங்களின் பொருளும் விவரிக்கப் பட்டதாயிற்று.
வாஸுதேவன் முதலான நான்கு வியூஹ மூர்த்திகளினின்றும்
மூன்று மூன்று மூர்த்திகளாகத் தோன்றிய கேசவாதி மூர்த்யந்தரங்களுள்ளதாகவும்,
இவர்கள் நெற்றி முகலிய அவயவங்களில் நின்று கொண்டு சரிரத்தை ரக்ஷிக்கறார்களென்றும்.
தியானிப்பவர்களுடைய தாபங்களைப் போக்கடிக்கிறார்களென்றும்
பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டது.
இக் கேசவாதி நாமங் கள் அவர்களைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்.
———————————–
தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை
————
கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4
கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3
கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1
கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3
கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2
கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3
கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1
கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3
கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1
கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4
————-
நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4
நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4
நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2
நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4
நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1
நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2
நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1
நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2
நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4
—————
மாதவ (1)
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1
மாதவம் (1)
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3
மாதவர் (1)
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3
மாதவன் (20)
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/3,4
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/1,2
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் – நாலாயி:2220/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/2
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
மாதவன் என்று என்று – நாலாயி:3941/1
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் – நாலாயி:3983/1
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4
மாதவன்-தன் (3)
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2
மாதவன்-பால் (1)
மாதவன்-பால் சடகோபன் – நாலாயி:2964/1
மாதவனாரே (1)
வடிவு ஆர் மாதவனாரே – நாலாயி:2963/4
மாதவனே (9)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா – நாலாயி:1036/2,3
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் – நாலாயி:2831/1,2
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
வாயான் மாதவனே – நாலாயி:3940/4
மாதவனை (9)
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை – நாலாயி:503/1
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் – நாலாயி:2387/3
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் – நாலாயி:2446/2
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/3,4
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1
மாதவனோடு (1)
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4
மாதவா (8)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் – நாலாயி:433/1
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/1,2
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/2,3
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/2,3
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1
————
கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1
கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1
கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3
கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1
கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1
கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1
கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3
கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1
கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1
கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4
கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1
கோவியர் (1)
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3
கோவினார் (1)
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2
கோவினை (5)
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/1,2
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2
கோவே (22)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/1,2
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/3,4
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4
கோவை (14)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/2,3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3
——–
விட்டுசித்தர் (2)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/3
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2
விட்டுசித்தன் (30)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை – நாலாயி:63/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் – நாலாயி:96/3
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த – நாலாயி:127/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/2
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/3
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/3,4
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே – நாலாயி:473/1
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/2
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/2
விட்டுசித்தன்-தன் (1)
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/3,4
விட்டுவே (2)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4
———–
மதுசூத (2)
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2
மதுசூதற்கு (1)
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3
மதுசூதன் (8)
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/3,4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3
மதுசூதன்-தன்னை (1)
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2
மதுசூதனன் (5)
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4
மதுசூதனன்-தன்னை (1)
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3
மதுசூதனனே (2)
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4
மதுசூதனனை (2)
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
மதுசூதனா (2)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1
மதுசூதனே (2)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3
மதுசூதனை (2)
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1
மதுசூதனையே (1)
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1
மதுசூதா (5)
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/1,2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/3,4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1
————–
திரிவிக்கிரமன் (5)
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1
திரிவிக்கிரமனையே (1)
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4
திரிவிக்கிரமா (1)
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3
———-
வாமன் (3)
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/2,3
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் – நாலாயி:2693/1
வாமன (2)
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1
வாமனன் (13)
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/2,3
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/1,2
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/3
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4
வாமனனாய் (2)
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4
வாமனனார் (1)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/1,2
வாமனனே (4)
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா – நாலாயி:3256/2
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1
வாமனனை (2)
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1
வாமனா (4)
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/1,2
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் – நாலாயி:3715/1
வாமனாவோ (1)
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2
—————
சீதனையே (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/4
சிதை_மணாளனை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4
சீதை_மணாளா (1)
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2
மாதவன் (1)
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
சீரன் (1)
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
சீராமா (2)
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
சீராளா (1)
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/3
சீரான் (2)
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/4
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/3,4
சீரானை (3)
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4
————–
இருடீகேசன் (6)
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ – நாலாயி:88/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1
இருடீகேசன்-தனக்கு (1)
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3
இருடீகேசனுக்கு (1)
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4
இருடீகேசனே (1)
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4
இருடீகேசா (3)
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4
————-
நாபனுக்கு (1)
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4
நாபி (1)
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3
நாபியான் (1)
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
பற்பநாபன் (4)
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1
பற்பநாபனையே (1)
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4
பற்பநாபனோடும் (1)
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/1,2
பற்பநாபா (3)
பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1
பற்பபாதன் (1)
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4
பற்பபாதா (1)
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2
———
தாம்பால் (4)
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/2,3
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக – நாலாயி:2602/1
தாம்பினால் (2)
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/2,3
தாம்பு (1)
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2
தாம்புகளால் (1)
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/3,4
தாம்பே (1)
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு – நாலாயி:2103/4
தாமோதரற்கு (1)
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2
தாமோதரன் (6)
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/2
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் – நாலாயி:570/1
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/3,4
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் – நாலாயி:3924/1
தாமோதரன்-தன் (1)
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:169/4
தாமோதரனாய் (1)
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2
தாமோதரனார் (1)
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/1,2
தாமோதரனே (1)
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4
தாமோதரனை (3)
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் – நாலாயி:242/1
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/4,5
தாமோதரனை தனிமுதல்வனை ஞாலம் உண்டவனை – நாலாயி:3086/1
தாமோதரா (8)
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா – நாலாயி:463/2
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2
———–
(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–பெரிய திருவந்தாதி-65-
———————————————