Archive for the ‘Desihan’ Category

ஸ்ரீ கோதா ஸ்துதி அனுபவம் —

March 14, 2023

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

1-ஸ்ரீ பூர்வாச்சார்யர்களின் ஸூ க்தி நடையை அநு சரித்தல்

முதல் ஸ்லோகம் -ஐந்தாம் ஸ்லோகம் -இவற்றில் காணலாம்

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–ஸ்ரீ குணரத்னகோசம் 3–

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

தேவேந்த்ரனுடைய உத்யான வனத்துக்கு -நந்தனம் -என்ற பெயர் உண்டு -அங்கு கற்பகக் கொடி படரும்
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் குடியாகிற நந்தவனத்தில் தோன்றிய ஆண்டாளும்
தனது திவ்ய ஸூ க்திகள் மூலம் சகல வேதார்த்தங்கள் எல்லாம் விளக்கி அருளுகிறாள்
பெரியாழ்வார் குலம் ஆண்டாள் திருவவதரித்ததால் பெருமை மிக்கு விளங்கியதே
கொடி கொள் கொம்போடே அணைந்து அல்லால் நிற்காதே
எனக்கே தன்னைத் தந்த கற்பகமான எம்பெருமானான பெரிய பெருமாளாகிய கற்பகத் தருவை அணைந்து விளங்கா நிற்கும்

பஞ்சைதே தேவ தரவோ மந்தார பாரிஜாதக சந்தான கல்ப வ்ருஷச் ச பும்ஸி வா ஹரி சந்தனம் -அமர கோசம்
ஐந்து வ்ருக்ஷங்கள் தேவ வ்ருக்ஷங்கள்

ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ கல்ப வ்ருஷ தேந ஸஹ யோகேந -த்ருஸ்யாம் ரமணீயாம் இத்யர்த்த
மானிடவர்க்கு என்று பேச்சுப்பதில் வாழகில்லேன்

ஆக பட்டரை அடி ஒட்டி ஆண்டாளை கற்பக வல்லியாக அருளிச் செய்கிறார் –

———

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌ தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளி தாம்நா
த‌ந்த்ரீநி நாத‌ ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||–5-

அன்ன வயல் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பூ மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு -தனியனைப் பின்பற்றி அருளிச் செய்த ஸ்லோகம்

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகு கால‌மாகக் கொண்டிருக்கும்
என் போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான்
என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக் க‌ம்பிக‌ளின் நாதத்தைப் போல்
ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலே தான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகலிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா -ஸர்வாத்மநா விதேயனாக ஆக்கிக் கொண்டவள் அன்றோ

————————

2- இந்த ஸ்துதி அவதரித்த வரலாற்றை விலக்ஷணமாக அருளிச் செய்தல்

வைதேசிக: ஸ்ருதி கிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌந த்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா|| .2.

“எண்ணிறந்த ஸ்ருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”

ஸ்வாமி மவ்வ்ன வரத்துடன் எழுந்து அருளி இருக்க
ஆண்டாள் திரு வீதிப் புறப்பாட்டில் -வீதியில்
ஏதோ அனுபபத்தி விளைய -அதன் வழியாக எழுந்து அருள முடியாமல்
இவர் விரதத்தை ஸஹஸா விஸர்ஜனம் செய்து அருளி இந்த ஸ்துதியை விஞ்ஞாபிக்க உபக்ரமித்தார் –

—————

3- அநித அஸாதாரணமான கவித் திறமை

இதற்கு எல்லா ஸ்லோகங்களுமே லஷ்யமானாலும்
ஆறாவது பதினாறாவது ஸ்லோகம் அதி அசாதாரணம்

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம் போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.
உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா ) தோன்றுகிறாய்.
சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய்.
திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–.
உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய்.
மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.
ஆறு ஆறுகள்—கோதாவரி, சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா

இதற்கும் மேல் அபி சப்தத்தை ஐந்து தடவை பிரயோகித்து

சோணா அபி துங்க‌ப‌த்ரா-
துங்க‌ப‌த்ரா அபி ஸரஸ்வதீ
ஸ‌ர‌ஸ்வ‌தி அபி விரஜா
விரஜா அபி கோதா –கோதாவரீ
கோதாவரி அபி நர்மதா
என்று இங்கனம் வாக்ய விந்யாஸம் ஸ்வாமிக்கு விவஷிதம்

——–

த்வந் மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித ஸ பீதி ரஸ ப்ரமோதா|
மஞ்ஜு ஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || .16.

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

இந்த ஸ்லோகத்தில் பிரயோகித்த பதங்கள் யாவுமே மங்களகரமாக அமைந்து உள்ளன
விவாஹ காலங்களிலே பூச்சூடுதல் –மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே-
குழாம் கூடி யுண்ணுதல் –ஸ பீதி ரஸ
சந்தோஷமாக அனுபவித்தல் -ப்ரமோதா|-
மங்கள ஒலி மல்குதல் –மஞ்ஜு ஸ்வநா-
இனிய உணவுகளை அனுபவித்தல் –மதுலிஹோ விதது:-
மங்கள வாத்தியங்கள் முழங்குதல் -மங்கள தூர்ய கோஷம்
இவை அனைத்துமே சொல் நடை நயத்தில் அமைந்துள்ள
அழகு அனுபவிக்கத் தக்கது

வஸ்ய வாக்த்வ பிரபாவம் இது

———————-

4- வேதத்தில் உள்ள திறமையைக் காட்டுதல்

வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)

கோதாய்! பூமிப் பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

உமது காதின் பெருமையோ லோக விலக்ஷணம்
அரவிந்தத்தில் மகரந்தம் ஸ்ரவிப்பது ஸஹஜமே
வால்மீகி கோகிலத்தில் சொற்களின் இனிமையை விட கிளி மொழி கோதையின் சொற்களே அது மதுரம் என்கிறார்
ஆசிரியரின் இந்த நிரூபணத்துக்கு வேத பாண்டித்யமே உதவிற்று –

—————-

5- ஆழ்வார்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு ஏற்றம் கூறுதல் –

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)

கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணு சித்தர்) உன்னைப் போலவே
உன் பிரிய தமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ஸ்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.

இவளுக்கு ஸ்த்ரீத்வத்வம் ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே –
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் என்றும்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்றும்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு
அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே -என்றும்
கொங்கை முலைகள் இடர் தீர இத்யாதி
பாசுரங்களால் ஸ ஹ்ருதய ஹ்ருதயங்கம் -விளங்குமே
அநுராக ரீதியில் உள்ள ஆழ்வார்கள் பாசுரங்கள் போல் அன்ரிக்கே இயற்கையாகவே அமைந்த பகவத் அனுபவ ரஸவத்தரம் விளங்குமே

குரவஸ்த்வதீயா:-அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி அன்றோ இவள் -அஞ்சுகின்ற குடி என்றுமாம்

———————-

6-ஆண்டாளுடைய திருக்குறளின் மேன்மை

இது பல பாசுரங்களிலும் பேசப்பட்டு இருந்தாலும் பத்தாவது ஸ்லோகம் மிக விலக்ஷணம்

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)

கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

கர்ணாம்ருதை: ஸ்துதி-புராதன பாதாம் அன்று -வியஸ்த பாடம் அங்கதம் ஆகும்
கர்ணாம்ருத: ஸ்துதி-என்று ஸமஸ்தமாகவே பாடம் கொள்ள வேண்டும்
கர்ணாம்ருத மான ஸ்துதி ஸதஸ் பாடின ஆழ்வார்களைக் காட்டிலும் அதிக அனுக்ரஹம்
பெற்றுத் தந்ததே இவள் சூடிக் களைந்த மாலையின் பயனாகவே-

————-

7-விரோத ஆபாஸம் காட்டுதல்

சோணா தரேபி -10 பாசுரத்தில் விரோத ஆபாஸம் உண்டாய் இருந்தாலும்
அடுத்த பாசுரம் மிக விலக்ஷணம்
மேல் எழப்பார்க்கும் போது விரோதம் உள்ளது போல் தோன்றி
ஆழ்ந்து பார்க்கும் இடத்து விரோதம் காணாமல் பேசுவதே விரோதி ஆபாஸ லஷ்யம்

திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)

அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!

உத்தர -வட திசைக்கும் உத்க்ருஷ்டமாக இருபதுக்கும்
முந்தின பொருளில் விரோதி உத்பாவநமும்
பிந்தின பொருளில் அதற்குப் பரிஹாரமும்

குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி -என்றும்
மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்து -என்றும்
இருந்தாலும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் உள்ள அபி நிவேசத்தாலே தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிறார் என்றபடி –

———————–

8-விலக்ஷணமான உல்லேகம் காட்டி அருளுதல்

ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்ட காலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

ஏகதேசம் தனது திருநாமம் வகிப்பதாலேயே இழந்த தூய்மை பெற்றது என்று சமத்காரமாக அருளிச் செய்துள்ளார் –

—————-

9- ஸாஸ்த்ரார்த்தங்களை விநோதமாகக் காட்டி அருளுதல்

ரங்கேஸ்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதி கத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

அம்மா பூதேவியே! ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

நம்பியைக் காண நம்பிக்கு ஆயிர நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்

எம்பெருமானுக்கு சேஷித்வமும் ஸகல ஜகத் பதித்தவ ப்ரயுக்தமான ஏற்றமும் பிராட்டிக்கு
ஞானீ து ஆத் மைவ மே மதம் -என்பதால் பிராட்டிக்கு ஏற்றமும் உண்டே
ரசிகா -விநோத வார்த்தைகள் இவ்வாறு உண்டே
இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளும் ஸமத்வத்மமும் வேதார்த்த -சாஸ்த்ர -அர்த்தங்களே

————-

10-அதி லலித வாக் விந்யாஸ வைதக்த்யம்

செவிக்கு இனிய செஞ்சொற்கள் அனைத்துமே –

சதமக மணி நீலா சாருகல்ஹார ஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ஸ்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

இது அதி விலக்ஷணம்
நித்தியமாக ஸூ ப்ரபாதத்தில் இந்த ஸ்லோகம் அனுசந்தேயம் –

 

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவடி மாலை -ஸ்ரீ கழல் கோவை -ஸ்ரீ தேசிகர் மஹாத்ம்யம் –ஸ்ரீ துரை ஸ்வாமி ஐயங்கார் —

March 10, 2023

நிரபாய தேசிகாய நிதர்சிதா மிமாம் கமலா ஸஹாய கருணாதி ரோஹணீம்
க்ரம சோதி ருஹ்ய க்ருதி நஸ்ஸ மிந்ததே பரிசுத்த ஸத்வ பரிகர்மிதே பதே

நித்யமான ஆச்சார்யரால் காட்டப் பெற்ற ஸ்ரீ யபதியின் தயையாகிற படியை முறைப்படி ஏறி
க்ருதார்த்தரானவர்கள் ஸுத்த ஸத்வத்தினால் அலங்கரிக்கப்பெற்ற பரம பதத்தில் பிரகாசிக்கிறார்கள்

இப்பிரபந்தம் இரட்டைக் கழல் ஒலியாய் நவ ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது

அந்தமிலா மறை அன்பர் அடியார்க்கும் அடியேன்
அதின் கருத்தை ஆய்ந்து அளித்த ஆழ்வாருக்கும் அடியேன்
செந்தமிழால் அருள் செயலின் அடியார்க்கும் அடியேன்
சிந்தனை செய் தொண்டர்களின் அடியார்க்கும் அடியேன்
எந்தையிடம் சரண நெறி புகுந்தார்க்கும் அடியேன்
சந்தமிகு தமிழ் மறையோன் தேசிகனார்க்கு அடியேன்

ப்ரஸித்த நெடியோன் ஸ்ரீ நிவாஸன்
அருள் நெடுமையே ஸ்ரீ நிவாஸனின் நெடுமை
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பு
கோமின் துழாய் முடி ஆதி யஞ்சோதி குணங்களே
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உப நிஷத் துக்த ஸிந்தும் விமத்னன் க்ரத் நாதி ஸ்வாது காதா லஹநி தசசதீ நிர்கதம் ரத்ன ஜாதம் என்று
எழில் குருகை வரு மாறன் திருவாய் மொழி ஆயிரம் குணம் கொண்டு
தாத்பர்ய ரத்னாவளிக் கோவையை அரங்க நகர் அப்பனுக்கு ரஞ்ச நிதியாக சாத்தி மகிழ்ந்தார்
பேசு உபய வேதாந்த வள்ளலாருக்கு இக்குணக் கழல் கோவையை இட்டு மகிழ்கிறார் இவர்

அந்தணர் அந்தியூர் எல்லையில் நின்ற அனைத்துலகும் –வந்தடையும் வகை அன்பர் அறிந்து அறிவித்தனரே என்று
மெய்யுணர்வு வூட்டி -ஸரணாகதியில் மூட்டி -ஸ்ரீ நிவாஸன் பொன்னடியைப் பூட்டி –
அன்னவன் பொன்னடி யாயிரம் -பாதுகா ஸஹஸ்ரம் -பாடி அருளிய வள்ளல் பெரும் கடலின் திருக் குணக் கோவை 25 பாக்களாகக் கோக்கப்பட்டது

————————

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா விபூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே –2-

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்–3-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே –9-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

தாரக போஷக போக்யமான
விரகு என்று அருளிய பழ மொழிகளில்
ஒன்றே யமையும் வீடு பெற்று உய்ய
பொன் கழல் அடி யாயிரம் பாடியவா –14-

உனையே யலதோர் பரம் உண்டு எனவே
நினையார் கதியே நிகரில் புகழாய்
பணமும் புகழும் மதியா மதியே
குணமே வடிவாய் வந்தாய் சரணம் –15-

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளின் மணியே சரணம் –16-

ஆரா வமுதே யறிவார் யறிவே
தீரா வினை தீர் திருவேங்கடவா
கண்ணே மணியே கருணைக் கடலே
தொண்டர் துணையே முகிலே சரணம் –17-

விண்ணோர் பதமும் வேண்டிற்று இலை யான்
மண்ணோர் புகழும் நாடுவது இலையே
என்நேரமு நின்னிரு தாள் மலரை
பொன்னே என யான் புனையைப் பெறுமோ –18-

வருமோ ருறவே வளரிள வரசே
அருவிலை மணியே வன மத கரியே
அரு கணை இறையே யறவுரு நிலையே
அருமறை குருவே யடியார் உயிரே –19–

உடையவனே நீ கவரா யுடைமை
அடைவது இலாமையால் குறையிலையே
புத்தியில் யுறைபவநீக வரதா
புத்தி யிலாமையால் குறைவிலமே –20-

எட்டும் இரண்டும் அறியா என் தன்
முட்ட இருவினை யறவே யிதமொடு
மன்னிய நல் திரு மந்த்ரப் பொருளை
பொன் அருளால் அருளாய் கற்பகமே –21-

நின் பேர் யறியார் மேயவர் யாவரோ
யுன்னை அறிந்து மறந்திடுவாரோ
நின் தொண்டர்க்கே அன்பு செய்திட
என்னை யாக்கியே யருள் புரிவாயே –22-

குரு புங்கவனே கருணா நிதி நின்
அருளால் அநு பூதி பிறந்ததுவே
திரிகின்ற மனம் திரியாது யுனையே
அறிவால் யடியார் தொழு தேசிகனே –23-

அமலனுக்கு மக்கள் அளித்த பெயரொடும்
கமலை யுகந்த ளித்தவி ருதொடும்
நல்லாருலகம் நல் பதம் எய்திட
பல்லாண்டு இரும் என இசை பாடுவனே –24–

வேங்கட நாதன் அடியார் அடிகளில்
வேங்கடேசன் மயலால் இறைஞ்சிய
சேதுவான கழல் காதல் மாலையை
ஓதும் அன்பர் எழில் பதம் ஏறுவரே –25-

————–

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா வி பூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

உயர்வற உயர் நலம் யுடையோன் -திருவாய் மொழிக்கு எல்லாம் ஸங்க்ரஹம்
மங்கள உபக்ரமம்
உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே –கோல மலர்ப்பாவையின் அன்பின் அன்பு
அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
மயர்வற மதி நலம் பெற்ற -அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவை அனைத்தும் வாஸனையோடே போம்படி
மதி -பகவத் விஷய ஞானமாகிய மதியையும்
நலம் -பக்தி-தலைவன் -ஸமஸ்த இறைவன் -ஸர்வ உபகாரகன்
அகணித குண வித்யா விபூஷணா-அநந்த கல்யாண குண கண மஹோ ததி
அகணித-எண்ணிக்கை இன்மை
வித்யா-வித்யை கல்வி ஞானம் தந்த்ரத் தொழில்
விபூஷணம் -ஆபரணம்
இக பர பலஸா தன தாரகனே –
இகம் -இப் பிறப்பு
பர -உயர்வு பர ப்ரஹ்ம அனுபவம்
பல -பயன்
ஸாதன -உபாயம்
தாரகனே -நடத்துவோன் -தரிப்பவன் -கொடுப்பவன்

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
ஸம்ஸார சேதனர்களை உஜ்ஜீவிக்கவே பகவத் அனுக்ரஹமே வடிவாக வந்தவர்
ஸ்ரீ ராமானுஜர் பகவத் விஷயத்தில் வைத்த ப்ராவண்யமே உருவாக்க ஸ்வாமியாய் திருஅவதாரம்

மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
தெருள் தர நின்ற தெய்வ நாயக -என்று இவரே அருளிச் செய்தபடி அடியவருக்கு மெய்யனால்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
பூதத்தாழ்வாரைப் போல் ஞானத்தமிழ் புரிந்து ஞானச் சுடர் விளக்கு ஏற்றிய பிரான்
ஆச்சார்ய கிருபா மூலமான பகவத் கிருபையால் அருளப் பெற்றவர்
ஸ்ரீ ஹயக்ரீவரின் லாலா ஸூ தாபான லப்த ஸர்வஞ்ஞன்

வித்யா வி பூஷணா
யதிராஜரைப் போல் ஐவரும் வித்யா வாஹினி -உத்பத்தி ஸ்தானம்
யதிராஜரின் பரிபூர்ண கிருபா விசேஷத்துக்குப் பாத்திரமானவர்
அடியார்களுக்கு பரம பாக்யத்தைக் கொடுக்கும் விசுத்த வித்யா விபூஷணம்

அகணித குண
கல்யாண குணங்களே வடிவானவர் -ஸர்வ குண நிதி –

இக பர பல ஸாதன தாரகனே
பக்தர்களே தனக்குத் தாரகமாக யுடையவர்
குருவாய் நின்று திகழ்ந்து மண் மேல் நின்ற நோய்கள் தவிர்ந்தனனே –

அகில புவன ரஷா சாதநாய அவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக் மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தவ் வேத ஸூடா குரவ்மே
பவது பரம பக்தி ஸ்ரீ நிதவ் வேங்கடேச

———————————-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே–2-

தாதை -தகப்பன்
குசிக குல -கௌசிக குலம் -விச்வாமித்ர குலம்
வாரிய ஸூரியின்-அநந்த ஸூரி –
மாதவர் புகழும் வேத மா மூர்த்தி என்ன விளங்கும் அவ் வனந்த ஸூரி ஓதிடாது ஒழிந்த நூல் இங்கு ஒன்றும் இல்லை என்பராம்
தோதை -தோதாரம்மையார்
மணி வயிறு வாய்த்தவனே-தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரனைப் போலவும்
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனைப் போலவும்
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே-ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரர் -விருது பெற்றவர்
அகடி கடநா சாமர்த்தியம் பெற்றவர்
மந்திர -மறை மொழி தானே மந்த்ரம் என்ப
எம்பார் த்வய அனுசந்தானம் செய்ய பட்டர் குழந்தை மனம் வீசப் பெற்றது கண்டு மகிழிந்தாரே உடையவர்
மணம் கமழ் மாலையனே-நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
த்ரி ஜகத்தும் உஜ்ஜீவிக்க பகவான் பிரத்யேகமாக அளித்த பேறே இவர் அவதாரம்

தீப ப்ரதீபமாய் வந்த தேஜஸ் அன்றோ
கண்டா கரேஸ் ஸமஜ நிஷ்டய தாத்ம நேதி -என்று இவரே ஸங்கல்பஸூர்யோதயத்தில் அருளிச் செய்தபடி
மநோ கதம் பஸ்யதி யஸ்ஸ தாத்வம்
மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்ஸம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ
கிம் குர்வதே தஸ்ய கிரோய தார்ஹம்–ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் –

எவன் ஒருவன் ஞானி கள் மனத்தினில் ஹம்ஸம் போல் விளங்கும் தேவரீரை தன் மனத்தில் இருப்பவனாகக்
காண்கின்றானோ அவனுக்கு வாக்குகள் நான் முன்னே நான் முன்னே என்று வந்து ஏவல் புரியுமே –
ஸர்வ வித்யைகளும் இவர் இட்ட வழக்கு ஆகுமே
மந்த்ர உபதேஷ்டாவான பெரிய திருவடி நாயனார் ப்ரஸாதம் அருளப் பெற்றவர்

———————————–

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்-3-

வாழி வியாக்யான முத்திரைக்கை -பிள்ளை யந்தாதி
உன்னித்ர பத்ம ஸூபகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி
வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் -பிள்ளை யந்தாதி
வாதியார் மூலம் அற நாவின் முழக்கொடு விளங்கிய வித்தகன்
செம்பொன் மேனி மாறாத தூப்புல் மாலே
உத்தமநேயா -கண்ணன் கழல் தொழும் உற்றவரையே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்
மற்ற ஒரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் –

—————-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

ஸ்ரீ செல்லப்பிள்ளை -யதிராஜ வீஷா பாத்ரம் -திருநாமம் சூட்டியுகந்தார் -இதுவே யதிராஜ அருட்கலம் -என்கிறார் இங்கு
ஸ்ரீ தெய்வ நாயகன் -கவி தார்க்கிக ஸிம்ஹம் விருத்தி சாற்றி அருளினார்
திருவுடன் வந்த செழு மணி போல்-பகவத் ப்ரீதிக்கு விஷயமானவர்
விச்வாமித்ர பவித்ர குல சோததி கௌஸ்துபன் -என்று அழைக்கப் பெறுபவர்

———————-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

புத்துயிர் அளித்த நாதன் -நாதமுனிகள்
நாதேந முனி நாதேந பவேயம் நாத வாநஹம்
யஸ்ய நைக மிகம் தத்வம் ஹஸ்தா மலகதாம் கதம் –யதிராஜ சப்ததி
ஆரப்பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப்பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனி
காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி -அதிகார ஸங்க்ரஹம்
நாத உபஞ்ஞம ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம்
யாமுநேய பிரபந்தை ஸ்த்ராதும் ஸம்யக்
யதீந்த்ரை ரிதமகிலதம கர்சனம் தர்சனம் ந -ஸ்ரீ தத்வ முக்தா கலாபம்

——————-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
காரணந்து த்யேய
வாரண மலை யுறை பேர் அருளாளன் -கரிகிரி யம்மான் –பேராத அருள் பொழியும் பெருமாள் –
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரான் -பெரிய திருமொழி -4-3-1-
ஹஸ்தீஸ ஸர்வ வஸசாமவஸான ஸீமாம்
த்வாம் ஸர்வ காரண மு சந்தி அநபாய வாஸ -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி
யம்மான் என்றும் திரு மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும் படி கரை புரண்ட
கருணைக் கடலை இவ்வண்ணம் பேசுவீர் தென்ன பாங்கே –மெய் விரத மான்யம்
நித்யா வாஸம் வ்ருஷபமசலம் ஸூந்தராக் யஸ்ய விஷ்ணோ
ப்ரத்யா ஸீதந் ஸபதிவிநமத் பாக தேயம் நதஸ்யா -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்
ஸூத்த ஸத்வ குண மயமானதும் ப்ரணவ ஸ்வரூபமானதுமான ஸ்ரீ ரெங்க திவ்ய விமானத்தில்
சுயமாய் உதித்து விளங்கும் ஜோதியைப் பற்றி மொழியுங்கால்
பெட்டியுள் வைத்த மரகத மணி போல் அவ்விமானத்துள் ஓங்கி பிரகாசிப்பவனும்
சேஷ சயனத்தில் பள்ளி கொண்டு அருளுபவனும்
பாற்கடல் புதல்வியின் ஆருயிர் காதலனுமான
அவ்வாஸூ தேவன் இடமே என் மனம் தாவி ஓடுகிறது -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்

——————-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

தமிழ் வேதத்தை முன்னே சொன்னது
மங்கையர் கோன் என்ற இவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலை கணாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –அதிகார ஸங்க்ரஹம்
குரு மா மணியே –ஆச்சார்ய குண பூர்த்தி யுடையவர்
நம்மாழ்வார் ஆச்சார்ய தத்வம்
யதிராஜர் -ஆச்சார்ய ரஹஸ்யம்
தேசிகன் -ஆச்சார்ய ரத்னம்
மறை விளக்கி மறை புகட்டி மறையின் நீதி ஓதினாய்
மறை விளக்கும் மெய்ப்பொருளை வாரமாக நல்கினாய்
மறை கடைந்து எழில் மணம் மிசைத் தமிழ் இயற்றினாய்
மறை முடிப்பெயர் புனைந்து உதவ நெறி யுணர்த்தினாய்
சிட்டரான தேசு உயர்ந்த தேசிகர்க்கு உயர்ந்து மேல் எட்டு மூன்று மூடறுத்த எந்தை மால் இரக்கமே
என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளே மணியே சரணம்

—————

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

பற் பல் கலை வல்ல பாவலனே
வியாஸர் வால்மீகி போல் இவரும் கவிச் சக்கரவர்த்தி

—————

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே–9–

மறையின் குருத்தின் பொருளையும் -செந்தமிழையும் கூட்டி ஒன்றத் திரித்ததே தேசிக பிரபந்தங்கள்
திருவாய் மொழியின் பத்துப்பத்தின் அர்த்தங்களும் மும்மணிக்கோவையில்
பயின் மதி நீயே வெளியும் நீயே
தாயும் தந்தையும் நீயே
உறவு உற்றதும் நீயே
ஆறு அறமும் நீயே
துணைவன் துய்யனும் நீயே
காரண கற்பகம் நீயே
இறைவன் இன்பனும் நீயே
யானும் எனதும் நீயே
நல்லதாய் வல்லாய் நீயே –என்று குண தசாக வடிவு அடைவு காணலாம்
அடைபவர் தீ வினை மாற்றி அருள் தரும் தூப்பூல் ஐயா-

—————-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

ராமாநுஜப்பிள்ளான் மா தகவால் உண்டான வண்மை
இவருடைய உண்மை ஞானத்தின் திண்மை
மெய்யனைப் போற்றிய மெய்யன்
உண்மைப் பொருளை யுண்மையாகவே காட்டிக் ஸத்ய வாதி
பகவத் ஆச்சார்யர் திருவடிகளிலே மெய்யன்பு கொண்ட மெய்யன்
மெய்யானான தேவ நாதப் பெருமாளின் செல்லப்பிள்ளை
கொடுத்த
மெய்ய நின் வியப்பே -வாதிகளை வென்ற விதத்தின் வியப்பின் ஆழ்மையை அனுபவிக்க வல்லார் யார் –

————————

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

ஸ்ரீ வராஹ நாயனார் திருவாயால் குரு குரு சப்தித்து குருவானவர் -குருபிஸ் கோணார வைர்க் குர் குரை -தசாவதார ஸ்தோத்ரம்
இரண்டு உறையாத நம் ஏனத்தின் இரண்டு உரையான சரம ஸ்லோக பலத்தை நம் ஸ்வாமி காட்டி அருளுகிறார் ரஹஸ்ய சிகாமணியில்
காருண்யாஸ் ஸாஸ்த்ர பாணிநா
ஸ்ரீ யபதிக்கும் யதிபதிக்கும் நடந்த ஸம்வாத மகிமையையும் சாற்றி அருளி உள்ளார்
தஞ்சப் பர கதியைத் தந்து அருளிய தயா நிதி

எல்லாருக்கும் எளிதான ஏற்றத்தாலும்
இனி உரைக்கை மிகையான இரக்கத்தாலும்
சொல்லார்க்கும் அளவாலும் அமைதலாலும்
துணி வரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும்
கண்ணன் உரை முடி சூடி உரைத்தலாலும்
நல்லாருக்கும் தீயாருக்கும் இதுவே நன்றா
நாரணற்கே அடைக்கலமாய் நணுகுவீரே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கு அடிமை ஆகிறேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும்
இவை யறிவார் செயலுடன் என்னிசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே —அபய பிரதான சாரம்

இப் பாசுரத்தில் தேசிகன் ஸித்த ஸாத்ய உபாயமாக அமைந்து இருப்பது காண்க –

——————-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

கடலிப்பியலே-கடலில் இருக்கும் முத்துச் சிப்பியிலே
யொளி நித்திலம் என -ஒளி வீசும் நல் முத்துப் போலே
சிப்பியைப் போல் உள்ள ஜீவாத்மாக்கள் அந்தராத்மா
இருந்தாலும் வியாப்த கத தோஷம் தட்டாத அமலன் -குண மாயா ஸமாவ்ருதா

குடன் மிசை ஒன்றியும் கூடியும் நின்று கொடும் துயரு
முடன் மிசை தோன்றும் உயிரும் உயிர்க்கு இரா இறையும்
கடன் மிசை கண்டவை தானது திரளவை போர்த்த பொன்னூல்
மடன் மிசை வார்த்தை யதன் பொருள் யன்ன வகுத்தனமே -ஸ்ரீ தத்வ த்ரய சுலளகம்

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்த்
துலை ஓன்று இலை என நின்ற துழாய் முடியான் உடம்பாய்
விலை இன்றி நாம் அடியோம் எனும் வேதியர் மெய்ப்பொருளே -அதிகார ஸங்க்ரஹம்

தாரகன் -நியந்தா -சேஷி -சரீராத்மா பாவம் -பிரதான பிரதிதந்தரம்
ஜகத் ஸர்வம் சரீரம் தே

நின் திரு தனக்கு நீ திருவாகி
துய்யனும் நீயே செய்யாள் யுறைதலின்

வஜ்ராயுதம் போல் நா வீறு படைத்த ஸிம்ஹம் –

————————

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

சிறு வேதத்தை-ப்ரணவம் -வேதக்குறள் -ப்ராஹ்மண கோசோஸீ

நின்னால் அன்றி மன்னார் இன்பம்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார்
நின் பால் அன்றி யன்பால் உய்யார்
நின் தனக்கு நிகர் நின்னடி யடைவார் -மும்மணிக்கோவை –

———————-

தாரக போஷக போக்யமான
விரகு என்று அருளிய பழ மொழிகளில்
ஒன்றே யமையும் வீடு பெற்று உய்ய
பொன் கழல் அடி யாயிரம் பாடியவா –14-

முதல் ஆறு பாக்கள் -ஸ்ரீ மான் தனியனுக்கு வியாக்யானம் -இதுவே திருமந்திரம் போல் -தாரகம் -அவதார வைலக்ஷண்ய பெருமையைக் காட்டும்
7-13-பாக்கள் ராமானுஜ தனியனுக்கு வியாக்யானம் -இதுவே த்வயம் போல் -போக்யம் -ஆச்சார்ய அனுக்ரஹ விஷய மஹிமையைக் காட்டும் –
14-21-சீர் ஓன்று தனியனுக்கு வியாக்யானம் -சரம ஸ்லோகம் போல் போஷகம் -ஸ்ரீ ஸூ க்திகளின் மஹிமையைக் காட்டும் –

இவை தத்வ ஹித புருஷார்த்தங்களை நிரூபிப்பத்தில் பிரதான நோக்கு கொண்டவை

பகவான் தாரகத்தில் மேம்பட்டவர்
ஆழ்வார் போஷகத்தில் மேம்பட்டவர்
ஆச்சார்யர்கள் போக்யத்தில் மேம்பட்டவர்

——————–

உனையே யலதோர் பரம் உண்டு எனவே
நினையார் கதியே நிகரில் புகழாய்
பணமும் புகழும் மதியா மதியே
குணமே வடிவாய் வந்தாய் சரணம் –15-

நாதன்-குலதெய்வம் -குல தனம் -அனைத்துமே நீரே
த்வயி ரக்ஷதி ரஷகை கிம் அந் யை
த்வயி ச அரஷதி ரஷகை கிம் அந் யை–காமாஸிகாஷ்டகம்
க்யாதி லாப பூஜா ஸூ விமுகோ வைஷ்ணவே ஜனே
வியன் கலைகள் மொய்த்திடும் நா வீறு படைத்தவர்

——————–

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளின் மணியே சரணம் –16-

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ–கீதை
பிதா த்வம் மாதா தவம் –ஸ்தோத்ர ரத்னம்
தந்தை என நின்ற தனித்திருமாள் -அம்ருதாஸ்வாதினி
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் தந்தையும் நீயே முந்தி நின்று அளித்தலின் -மும்மணிக்கோவை
ஹயக்ரீவன் ஞானப்பாலூட்ட தெய்வ நாயகன் ப்ரேமையுடன் வளர்த்து அருளிய ஸ்வாமி –
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோம் வாழியே

—————

ஆரா வமுதே யறிவார் யறிவே
தீரா வினை தீர் திருவேங்கடவா
கண்ணே மணியே கருணைக் கடலே
தொண்டர் துணையே முகிலே சரணம் –17-

ஏத்தி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தையும் மாற்றினவர்
உணர்ந்தார் தங்கள் கற்பகம்
ஸ்ரீ ரெங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸம்
தமிழ் வேதத்தை இந்த வள்ளலான ஆராவமுதத்தையும்
நாள் வேதப் பண்ணகத்தான -அளவரிய வேதத்தான் வேங்கட வேதியன் -சேர்ந்து அனுபவம்
ஆராவமுதக்கடலையே உண்ட முகில் அன்றோ
கண்ணே மணியே -கண்ணினுள் மணியே -உபாய உபேயம் –
தொண்டர் உகக்கும் துணை அடி வாழியே

பிரபதன ஸூ லபனான் திருவேங்கடமுடையானின்
பத்து திருக்குணங்களையும்
1-ஆச்சார்யர்கள் மூலமாக எளிதில் அடையப்படுபவன்
2-தானாகவே ஆச்சார்யர்கள் இடம் வரும் ஸூலபன்
3-அகடி கடநா ஸமர்த்தன்
4-ஆஸ்ரிதர்களை மகிழ வைப்பதே குறிக்கோலாகக் கார்யங்கள் செய்பவன்
5-ஆபாஸ பந்துக்களை வடஜனம் பண்ணும்படி செய்து அருளுவான்
6-ஆஸ்ரிதர்களுடைய அஹங்கார மமகாரங்களை அபஹரித்து அருளுபவன்
7-தார்யாதி குணங்களை அளிப்பவன்
8-உபய விபூதிகளையும் ஆஸ்ரிதர் இட்ட வழக்காகக் கொண்டு அருளுபவன்
9-ஆஸ்ரிதர் பிரிவை க்ஷண காலமும் ஸஹியாதவன்
10-உபாயமாக இருக்கும் ஸமஸ்த கல்யாண குண பூர்ணன்

முதல் இரண்டு அடிகள் பகவானையும் அடுத்த இரண்டும் ஆச்சார்யரையும் காட்டும் பாசுரங்கள்

இந்த பத்து குணங்களையும் 15-16-17 பாசுரங்கள் காட்டும்
நந்தா விளக்காக திருவவதரித்து
நிகரில் புகழாய் வைபவத்துடன் வாழ்ந்து
தீரா வினை தீர்க்கும் ஸ்வாமியாக திகழ்ந்தவர் அன்றோ

—————

விண்ணோர் பதமும் வேண்டிற்று இலை யான்
மண்ணோர் புகழும் நாடுவது இலையே
என்நேரமு நின்னிரு தாள் மலரை
பொன்னே என யான் புனையைப் பெறுமோ –18-

மதீய சிரஸி த்வத் பாத பத்ம நிவேசமே
அத்ர பரத்ர ஸாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்
யதி சக்ரவர்த்தி பத பத்ம பந்தனம்

நியத புளகி தாங்கீ நிர்ப்பர ஆனந்த பாஷ்பா
கலித நிகில சங்கா கத்கத ஸ்தோத்ர கீதி
அம்ருத லஹரி வர்ணா ஹர்ஷந்தோப பன்னா
விகித நரக பீதி விஷ்ணு பக்திர் விபாதி -ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயம்

இந்த விஷ்ணு பக்தி என்பவள்
எப்பொழுதும் மயிர்க்கூச்சோடு கூடிய சரீரத்தை யுடையவளாயும்
பரிபூர்ண ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டும்
விஷயாந்தர பற்றுக்களை சவாசனமாக அற்றுத் தீர்ந்தவளாயும்
தழு தழுத்த குரலோடு ஸ்தோத்ர ரூபமான நாதத்தை யுடையவளாயும்
அம்ருதப்பெருக்கான வாக்கு சாதுர்யம் யுடையவளாயும்
ஸந்தோஷ பரிவாஹ நர்த்தனம் யுடையவளாயும்
நரக பயம் இல்லாதவளாயும்——–பிரகாசிக்கிறாள் என்றபடி

பெருகிய நலநிலை பெருமையின் மிகுமயல்
உருகிய நிலை மணமுயர் முகிழ் எழும் உடல்
சொருகிய விழி திகழ் சுடர் மதி புகுமிறை
கருகிய வுரு திகழ் கரி கிரி யரியே -ஸ்ரீ வைஷ்ணவ தினசரி

—————————–

வருமோ ருறவே வளரிள வரசே
அருவிலை மணியே வன மத கரியே
அரு கணை இறையே யறவுரு நிலையே
அருமறை குருவே யடியார் உயிரே –19–

வன மத கரி -வனத்தில் எத்தேச்சையாக மதம் கொண்டு திரியும் யானை
மாய வாதக்கவிகளை மாய்த்த வேழம்
இவருக்கு மாதங்கள் ஞான பக்தி வைராக்யங்களே
ஆரணங்களிலே சஞ்சாரம் செய்து விசிஷ்டாத்வைத ப்ரவர்த்தகரானவர்
ஸ்ருதிகள் இவர் இடம் இளைப்பாறலாமே

அரு கணை இறை–அடியார்கள் பக்கல் ஸூ லபனாய் எழுந்து அருளி இருக்கும் பகவானைப் போலே

வருவதோர் உறவு என வளர் இளவரசு என
மருவு நன் மகன் என வன மத கரி என
வரு விலை மணி என வடிவவர் யடைபவர்
அருகு அணை இறைவனை அருகு அணை யுடன் -ஸ்ரீ வைஷ்ணவ தினசரி-

மாசின் மனம் தெளி முனிவர் வகுத்தது எல்லாம் மால் உகந்த ஆசிரியர் வார்த்தைக்கு ஒவ்வாதே
தமிழ் மறை ஈன்ற தாய் ஆழ்வார்
வளர்த்த இதத்தாய் ராமானுஜர்
காதலோடு போற்றிப் பெருமை வளர்க்கச் செய்த தாய் ஸ்வாமி

கிம் விஞ்ஞானை கிம் தபோ தான யஜ்ஜை கிம் வா அந்யை த்வத் பக்தி பரித்யாக தீநை-ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயம்

ஞானம் தபஸ்ஸுக்கள் போன்ற பல இருந்தாலும் பக்தி -ப்ரீதி -ஹீனமாய் இருந்தால் பயன் இல்லையே

பகவத் வந்தனம் ஸ்வாத்யம் குரு வந்தன பூர்வகம்
ஆச்சார்ய தேவோ பவ
தேவம் இவ ஆச்சார்யம் உபா ஸீத
குரு பரம்பரா த்யானம் பூர்வகமாகவே அனைத்தும் செய்தால் தானே பலன் பெறுவோம் –

——————

உடையவனே நீ கவரா யுடைமை
அடைவது இலாமையால் குறையிலையே
புத்தியில் யுறைபவநீக வரதா
புத்தி யிலாமையால் குறைவிலமே –20-

ந தேஹம் ந பிராணன் ந ச ஸூகம் –ஸ்தோத்ர ரத்னம்

—————–

எட்டும் இரண்டும் அறியா என் தன்
முட்ட இருவினை யறவே யிதமொடு
மன்னிய நல் திரு மந்த்ரப் பொருளை
பொன் அருளால் அருளாய் கற்பகமே –21-

இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய நம் ஸமயாசிரியர் சத்திற்கும் தனி நிலை தந்தனரே

எட்டில் ஆறு இரண்டில் ஒன்றில் எங்கும் ஆறு இயம்புவார்

மூன்றில் ஒரு மூன்று மூ விரண்டும் முன் நான்கும் தோன்றத் தோலையும் துயர்

எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து

நீ நற் பதம் தருதலால் கற்பகம் ஆகிறாய் -தம்மையே ஓக்க அருள் செய்யும் கற்பகம் –

——–

நின் பேர் யறியார் மேயவர் யாவரோ
யுன்னை அறிந்து மறந்திடுவாரோ
நின் தொண்டர்க்கே அன்பு செய்திட
என்னை யாக்கியே யருள் புரிவாயே –22-

செம் போன் மேனி மாறாத தூப்புல் மாலே மறவேன் இனி
நின் பதம் ஒன்றிய அன்பரிலும் நேசம் இல்லை

————

குரு புங்கவனே கருணா நிதி நின்
அருளால் அநு பூதி பிறந்ததுவே
திரிகின்ற மனம் திரியாது யுனையே
அறிவால் யடியார் தொழு தேசிகனே–23-

————

அமலனுக்கு மக்கள் அளித்த பெயரொடும்
கமலை யுகந்த ளித்தவி ருதொடும்
நல்லாருலகம் நல் பதம் எய்திட
பல்லாண்டு இரும் என இசை பாடுவனே –24–

ஸ்ரீ ரெங்கநாதன் வேதாந்தாச்சார்யார் என்ற விருதும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் என்ற விருதும்
ஸ்ரீ தெய்வ நாயகன் கவி தார்க்கிக ஸிம்ஹம் என்ற விருதும்

நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மா நகரின் மாறன் மறை வாழ -ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்பூல் வேதாந்த தேசிகனே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

————-

வேங்கட நாதன் அடியார் அடிகளில்
வேங்கடேசன் மயலால் இறைஞ்சிய
சேதுவான கழல் காதல் மாலையை
ஓதும் அன்பர் எழில் பதம் ஏறுவரே –25-

சேதுவான கழல் -அக்கரை சேர்த்து அருளும் திருவடி
திருமகளோடும் ஒரு காலும் பிரியா நாதன்
திண் கழலே சேது வெனச் சேர்கின்றேனே
பக்தி நயநா -பகவானைக் காட்டும் மாலை

அன்பே என்று உபக்ரமித்து
அன்பர் என்று உப ஸம்ஹாரம்
சாந்தி ரஸமுள்ள இவற்றைப் படிப்பவர்
அன்பையே அணிகலமாகக் கொண்ட தேசிகர் கிருபையால் ஸதாசார்ய அனுக்ரஹமும்
ஸத் ஸம்ப்ரதாய ஸித்தியும் பெற்று
ஸ்ரீ யபதியின் அன்புக்குப் பாத்ரமாவார் என்பது திண்ணம் –

————————————–

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.

ஆசார்யன் என்பதும் இதைப் போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானை மேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழி காட்டுபவன் ஆசார்யன்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு தேசிகன் பெயருக்காக உயர்ந்தவர் என்றால்
அவரே
நிகமாந்த தேசிகன் என்றும்
சுவாமி தேசிகன் என்றும் பெயர் கொண்ட தூப்புல் வேதாந்த மஹா தேசிகன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

ஶ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனாகப்பட்டவர்
அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கை யாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரத்ரம கூடிய
புதன் கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹா தேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய் மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வட மறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம் புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

அவர் தமிழில் :
அடைக்கலப்பத்து,
மும்மணிக்கோவை,
நவமணிமாலை,
அதிகார சங்கிரகம்,
ஆகார நியமம்,
அம்ருதரஞ்சனி,
அம்ருதஸ்வாதினி,
அர்த்த பஞ்சகம்,
சரமஸ்லோக சுருக்கு,
த்வய சுருக்கு,
கீதார்த்த சங்கிரகம்,
பரமபத சோபனம்,
பிரபந்த சாரம்,
ஸ்ரீவைஷ்ணவ தினசரி,
திருச்சின்னமாலை,
திருமந்திர சுருக்கு,
உபகார் சங்கிரகம்,
விரோத பரிகாரம்,
பன்னிருநாமம்

வடமொழியில் :
பாதுகா சஹஸ்ரம்,
கோதாஸ்துதி,
யதிராஜ சப்ததி,
வைராக்ய பஞ்சகம்,
அபீதிஸ்தவம்,
ஆதிகாரண சாராவளி,
அஷ்டபுஜ அஷ்டகம்,
பகவத் தியான சோபனம்,
பூஸ்துதி,
சதுஸ்லோகி
பாஷ்யம்,
தசாவதார ஸ்தோத்திரம்,
தயாசதகம்,
வரதராஜ
பஞ்சாசத்,
தெய்வநாயக பஞ்சாசத்,
திவயதேச மங்களாசனம்,
கருட பஞ்சாசத்,
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,
தேசிக மங்களம்,

மணி ப்ரவாளத்தில் :
அம்ருத ரஞ்சனி ரஹஸ்யம்,
அஞ்சலி பிரபாவம்,
ஹஸ்திகிரி மஹாத்ம்யம்,
குரு பரம்பரா சாரம்,
முனி வாகன போகம்,
ஆராதன காரிகா,
ஊசல்பா

ப்ராக்ருதத்தில் :
அச்யுத சதகம்
என பல நூல்களை எழுதியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்ற போது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்க வில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

ஸ்ரீ ரங்கத்தில் ஆழ்வார்களின் விக்ரஹ பூஜை கூடாது அவர்களில் பலர் பிராமணர்களே அல்ல, என்றும் திவ்ய பிரபந்தம் சமஸ்க்ருதம் அல்ல அதை ஓதக்கூடாது”
என்றும் பத்தாம் பசலிகள் சிலர் தடுக்க அனைவருக்கும் ஆழ்வார்கள் பெருமையை எடுத்துரைத்து, திவ்யப்ரபந்தம் வேத சாரம் என்று நிருபித்து இனியும் இம்மாதிரி எதிர்ப்புகள் வரக்கூடாதே என்று முன் யோசனையாக கல்வெட்டுகளில் பதித்து
ராப்பத்து
பகல் பத்து உத்சவ மகிமையை இன்றும் நமக்கு விளங்கச் செய்தவர் நம் தேசிகர்.
ஸ்ரீ ரங்கநாதன் இதனால் மனமுவந்து
‘இனி ஒவ்வொரு நாளும்
இந்த ஆலயத்தில் சுவாமி தேசிகனை நினைவு கூர்ந்து ” ராமானுஜ தயா பாத்ரம்” எனும் தனியனை சொல்லி விட்டு பிறகு திவ்ய ப்ரபந்தம் ஓத வேண்டும்” என்று வழக்கப் படுத்தினார்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப் பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்ட போது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலை ஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணை புரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வ பக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டே வாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

”ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ”
……………………………………

நராயண பலத்தை
பாமரனுக்கும் தெளியவைத்த
13வது ஆழ்வாரே

நிகமாந்த மஹா தேசிகரே !

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிக‌ நூற்ற‌ந்தாதி–

February 24, 2023

ஸ்வாமி தேசிக‌னைப் போற்றி ஸ்ரீந‌யினாராசாரியாரின் சிஷ்ய‌ரான‌ க‌ந்தாடை ம‌ன்ன‌ப்ப‌ங்கார் எழுதிய‌ அற்புத‌மான‌ நூல் ஸ்ரீதேசிக‌ நூற்ற‌ந்தாதி. ஏனோ அவ்வ‌ள‌வாக‌ ப்ர‌ப‌ல‌மாகாத‌ இந்நூலை, ப‌ல‌ அரிய‌ நூல்க‌ளைத் தேடிப்பிடித்து கூடுமான‌ம‌ட்டிலும் விளக்கங்களுடன் வெளியிட்ட‌ அன்றைய திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் 1937ல் ச‌ங்க‌த்தின் இர‌ண்டாவ‌து வெளியீடாக‌ இந்த‌ தேசிக‌ நூற்ற‌ந்தாதியின் மூல‌த்தை ம‌ட்டும் ப‌திப்பித்து வெளியிட்டிருக்கிற‌து.

பின்னும் அந்த‌ நூலுக்குக் கிடைத்த‌ ஆத‌ர‌வினாலும், ஏற்க‌ன‌வே அச்சிட்ட‌ நூல் பிர‌திக‌ள் தீர்ந்து விட்ட‌தாலும், ச‌ங்க‌த்தின் 58வ‌து ப‌திப்பாக‌, பாட‌ல்க‌ளுக்குச் சிறு குறிப்புக‌ளுட‌ன் 1954ல் வெளியிடப் பட்டிருக்கிற‌து.

பின் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின் ஸ்ரீம‌த் ஆண்ட‌வ‌ன், ஸ்ரீம‌த் ப‌ர‌வாக்கோட்டை ஆண்ட‌வ‌ன் அனுக்ர‌ஹ‌ங்க‌ளுட‌ன் திருவேங்க‌ட‌த்தான் திரும‌ன்ற‌ம், பேராசிரிய‌ர் ந‌.சுப்பு ரெட்டியாரைப் ப‌திப்பாசிரிய‌ராக‌வும், இராசிபுர‌ம் திரு மு. இராம‌சாமியை உரையாசிரிய‌ராக‌வும் கொண்டு சுருக்க‌மான‌ உரையுடன் 2002ல் வெளியிட்டுள்ள‌து.

அத‌ன்பின் ம‌துரை ஸ்ரீதேசிக‌ன் ச‌ன்ன‌தி ச‌பையின‌ர் அத‌ன் மூல‌த்தை ம‌ட்டும் 2003ல் திருப்புல்லாணி ஸ்ரீதேசிகன் சந்நிதி சம்ப்ரோக்ஷணத்தின்போது ஸ்ரீமத் ஆண்டவன் திருக்கரங்களால் வெளியிட்ட‌ன‌ர்.

சமீபத்தில், ஸ்ரீபௌண்டரீகபுரம் ஆண்டவன் ஆச்ரமத்திலிருந்து பல தேசிக விஷயமான ஸ்தோத்ரங்களுடன் இந்த நூற்றந்தாதியையும் சேர்த்து விரிவான வ்யாக்யானத்துடன் வெளியிட்டிருக்கின்றனர்.

திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தார் அளித்துள்ள‌ குறிப்புக‌ள் வைண‌வ‌ நூல்க‌ளில் ஆழ‌ங்கால் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்குத் தேனாய் இனிக்கும். புதிய‌வ‌ர்க‌ளுக்கு அங்கு குறிப்பிட்டுள்ள‌ மேற்கோள்க‌ள் அந்நூல்க‌ளைத் தேடிப் ப‌டித்து இன்புற‌ வைக்கும்.

ஸ்ரீதேசிக நூற்றந்தாதி

தனியன்கள்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம். (1)

யஸ்சக்ரேநிகமாந்தார்ய ஸ்துதிம் காதாசதாத்மிகாம்
மன்னப்பங்காரபிக்யந்தம் ஆச்ரயே தேசிகப்ரியம். (2)

வெண்பாத் தனியன்

சீரொன்று தூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

சீர் ஒன்று – சிறப்புப் பொருந்திய; தூப்புல் – தூப்புல் குடியில் அவதரித்த; திருவேங்கடம் உடையான் – வேதாந்த தேசிகர்; பார் ஒன்ற – பூமியில் நிலைத்திருக்கும்படி; சொன்ன – செய்தருளிய; பழமொழியுள்—பழமையான வேத ஸாரமாகிய நூல்களுள்; ஓரொன்றுதானே – ஒவ்வொரு கிரந்தமே; தாரணியில் வாழ்வார்க்கு – இப்பூமியில் வாழும் மனிதர்களுக்கு; வான் – வைகுந்த்த்தை; ஏறப்போம் அளவும் – ஏறியடையும் வரைக்கும்; வாழ்வு – வாழ்வாக; அமையாதோ? – பொருந்தாதோ? (பொருந்தும் என்றபடி)

பழவினைக டாமகலப் பரவாதி சிங்கத்தின்
கழலிணையைத் தன்னெஞ்சிற் கழலாமே எந்நாளும்
தொழுதொழுமன் னப்பங்கார் தூயமலர்த் தாளிணையே
தொழுதெழுநீ நன்னெஞ்சே தொல்வினைகள் தொடராவே

பழவினை – ஊழ்வினை, “அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித், துக்கத் தொழுநோ யெழுபவே – யக்கா, லலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற, பழவினை வந்தடைந்தக்கால்” (நாலடியார், தீவினையச்சம் 3); பரவாதி – புறச்சமயி, “பறந்துபுக் குப்பர வாதிக டுன்னும் படுநரகுன்” (திருநூற்றந்தாதி 51); தொல்வினை – பழவினை, “தொல்வினை தொடர்ந்து தருசூழ் பிறவியென்னும் வல்வினை தொடர்ந்து”(பிரமோத்.பஞ்சா 38); தொடரா – பின்பற்றமாட்டா; தொழுதெழுநீ நன்னெஞ்சே – “அவன், துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே.” (திருவாய்மொழி 1-1-1); “எம்பெருமானுடைய ஆச்ரிதஜந ஸமஸ்த்து;காபநோதந ஸ்வபாவமான திருவடி மலர்களிலே ஸர்வதேச ஸர்வாவஸ்தோசித ஸர்வசேஷ வ்ருத்தியையும் பண்ணி உஜ்ஜீவியென்று தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்.” (ஆறாயிரப்படி); “இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப்பட்டுக் கீழ்நின்ற நிலையைக் குலுக்கி ‘அவன்’ என்று அவ்வருகே போகிறார்; (துயரறு) – ‘துயரறுக்கும்’ என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும்படி; ஸமஸ்தது;காபநோதந ஸ்வபாவமான திருவடிகள்; ஸகலாத்மாக்களுடையவும் து:கத்தைப் போக்குகையே ஸ்வபாவமான திருவடிகள்; ‘துயரறு சுடரடி’ என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி:– “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம்பவதி து:கித:” என்றால் து:க நிவ்ருத்தியும் அவனதாயிருக்குமிறே; இவர் துயரறத்தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. இத்தால், இவர் மயர்வற அவன் துயரற்றபடி. (சுடரடி) – நிரவதிக தேஜோரூபமான திவ்யமங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது. (சுடர்) – பஞ்ச சக்திமயமான புகரைச் சொல்லுகிறது. (அடி) – சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடி களையிறே. ஸ்தநந்தய ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாபோலே, இவரும் ’உன் தேனே மலருந்திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறர். (தொழுது) – நித்யஸம்ஸாரியாய்ப் போந்த இழவெல்லாம் தீரும்படி ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்து, (எழு)- ’அஸந்நேவஸபவதி’ என்னும் நிலைகழிந்து, “ஸந்தமேநம்ததோவிது” என்கிறவர்கள் கோடியிலே எண்ணலாம்படியாக “உஜ்ஜீவிக்கப்பார். அடியிலே தொழாமையால் வந்த ஸங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது-உஜ்ஜிவியென்கிறார், (என்மனனே) – இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ’அருளினன்’ என்று நின்ற வித்தனையிறே முன்பு. இருவர் கூடப் பள்ளியோதி யிருந்தால், அவர்களிலே ஒருவனுக்கு உத்கர்ஷமுண்டானால், மற்றையவன் தனக்கு அவனோடே ஒரு ஸம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாபோல ‘மநஏவமநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ’ என்கிறபடியே நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடே தமக்கு ஒரு ஸம்பந்தத்தை ஆசைப்பட்டு ’என்மனனே’ என்கிருர். …….. ‘தொழுதெழு’ என்கையாலே – ப்ராப்திபலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று. ’என்மனனே’ என் கையாலே பரிசுத்தாந்த: கரணனே அதிகாரியென்னுமிடம் சொல்லிற்று.”-(ஈடு முப்பத்தாறாயிரப்படி) *நல்லைநெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்” -(அறிவுதரும் பெரிய திருமொழி 1-7-9), “சோதியநந்தன். கலியிற் றொழுதெழ நின்றனரே” (தேசிகமாலே, மெய்விரத நன்னிலத்து மேன்மை. 26), ‘நாதமுனிகழலே நாளுந் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே” (தேசிக மாலை, அதிகாரஸங்கிரஹம், 6).

எந்தைமன் னப்பங்கா ரென்றைக்குந் தன்னாமம்
சிந்தைதனில் வைத்திடவே செல்வஞ்சேர் – தந்தையொடு
தாயாகிக் காப்பரிந்தத் தாரணியி லுள்ளாரை
வாயார வாழ்த்து நலம். (3)

(3) எந்தை – எம்ஸ்வாமி; தந்தையொடு தாயாகிக் காப்பர்- “அன்னையாய் அதீதனாய் என்னை யாண்டிடும், தன்மையான்.” (கண்ணிநுண்சிறுத்தாம்பு.4), “மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும், மாலார்வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார், சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய்தந்தையும் அவரே இனி யாவாரே.” (திருவாய்மொழி 5-1-8); தாரணி-பூமி; வாயார வாழ்த்து – “எண்திசையும் அறிய இயம்புகேன், ஒண்தமிழ்ச் சடகோபனருளையே” (கண்ணிநுண் சிறுத் தாம்பு, 7.)

1. சென்னியில் சூடும் மலர்

வேதமுடித் தேசிகனே! வேதியர் குலத்து அரசே!
சாது சனங்களுக்குத் தாவளமே! – போது அமரும்
நின் அடியை என்றும் நினைத்திருப்பார் பாதம் என்தன்
சென்னிதனில் சூடும் மலர். (1)

பொழிப்புரை:- வேதங்களை உனது திருமுடியில் தரித்த அழகனே! அந்த வேதங்களை நாள் தோறும் ஓதிக் கொண்டிருக்கும் அந்தணர்கள் கூட்டத்துக்குத் தங்கும் இடமாக இருப்பவனே! தாமரை மலர் போன்ற உனது திருவடியை என்றும் எண்ணிக்கொண்டு இருக்கின்ற அடியார்களது திருவடியே எனது தலையில் (முடியில்) அணிந்துகொள்ளும் மலராகும்.

நூல்.

(1) எல்லா நூல்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூற வேண்டுவது மரபாதலால், ’வேதமுடி’ என்று தொடங்கினார்.. கம்பநாட்டாழ்வான் இயற்றியருளிய ’ஆழ்வார் நூற்றந்தாதி’ என்கிற ’சடகோபரந்தாதி’, ’வேதத்தின் முன்செல்க’ என்று : தொடங்கி யுள்ளது காண்க. வேதம் – ஆதிநூல். வித்தென்னும் பகுதியடியாகத் தோன்றிய பெயர் என்பர். வித் – ஞானம். இது: பரதகண்டத்து ஆஸ்திகர்களால் கொண்டாடப்பெறும் நூல். இது இருக்கு, எஜுஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவை யுடையது. இது ஞானகாண்ட, கர்மகாண்ட வகையால் ஈச்வரனையும், அவனை உபாஸிக்கும் யஞ்ஞாதிகளையும் கூறும். இதற்கு இராவணன் சந்தமுதலிய வகுத்தான். இது சிக்ஷை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என ஆறு அங்கங்களை யுடையது. இதனைச் சோமுகன் என்னும் அசுரன் திருடிச்செல்லப் பின் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரமனுக்கு: உபதேசித்தனர். இதன் முடிவு உபநிஷத்துக்கள். மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிருட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர்: நியாயவேதாந்தியர் ஈச்வரவாக்கியம் என்பர். கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமன் அதனை இருடிகளுக்கும் அவ்விருடிகள் அதனைத் தம் சீடருக்கும் உபதேசித்தனர் என்பர். – (அபிதான சிந்தாமணி); தேசிகன் – அழகன் (தேசிகம். அழகு) ’வடிவழகார்ந்த வண்தூப்புல் வள்ளல்’-(பிள்ளை யந்தாதி. 20). குரு. “பற்றற்றவன் கொடுக்கும் பண்டமனைத்தினையும் பற்றுதலுந் தேசிகர்க்குப்பாங்கு’-(சைவ. ஆசா.88). ’பூருவா சாரியர்கள் போதமநுட் டாநங்கள், கூறுவார் வார்த்தை களைக் கொண்டுநீர் – தேறி, இருள்தருமா ஞாலத்தே யின்பமுற்று வாழும், தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து’-(உபதேச ரத்தினமாலை. 72) *அருள்பெற்ற, நாதமுனி முதலான நந்நேசிகரையல்லால், பேதை மனமேயுண்டோ பேசு” (உபதேசரத்தின மாலை. 36), “தேசிகர்பால் கேட்ட செழும் பொருளை” (௸. 57), ‘யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்’ -(திருக்குறள். துறவு. 6) “தோனல்லாத வுடம்பை யானென்றும், தன்னோடியைபில்லாத பொருளை எனதென்றுங்கருதி அவற்றின்கட் பற்றுச் செய்வதற். கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் வானோர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகத்தை யெய்தும். மயக்கம் அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதி மொழிகளானும் யோகப்பயிற்சியானும் அவை யானெனதன்மை தெளிந்து, அவற்றின்கட் பற்றை விடுதல்.”) தேசாந்தரி, வணிகன். (3, 4 பிங்கல 3678) தமிழில் தேசிகன்? என்னும் சொல்லுக்கு வணிகன் என்றும், ஆசான் என்றும் இரு பொருள்கள் உள. “தேசிகன் வணிகன் ஆசான்” – (சூடாமணி நிகண்டு) நம் தேசிகனை ஆசான் என்றமட்டில் உணர்வது போதாது. உலகமறிந்த வணிகர்களுக்கெல்லாம் இவன் உயர்ந்த, கொண்டு விலை செய்யும் வணிகன். விலையுள்ள பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவை கிடையாத வேறிடங்களில் கொண்டுபோய் உயர்ந்த விலைக்கு விற்று நல்ல லாபத்தை அடைபவன் வணிகன் என்று உலகம் அறியும். விலையில்லாத (அதாவது யாரும் விலைமதிக்கவும் கொடுக்கவும் முடியாத) பொருள்களை (சாஸ்திரததிவங்களையும் அர்த்தங்களையும்) யாரும் அறியாத (அதாவது வேதசாஸ்திரங்களில் மறைபொருளாகக் கிடந்த) இடங்களில் தேடி வாங்கி (மனத்தில்  கொண்டு) இவைகிடையாது தவிக்கும் இடங்களாகிய சம்ப்ரதாய நிஷ்டர்களுக்கு அவர்களுடைய பக்திச்ரத்தையாகிய விலைக்கு மட்டில் விற்று அவன் த்ரவ்ய லாபம் அடைவதைப்போல் அன்றிக்கே படிப்போரும், கேட்போரும் அனுஷ்டிப்போரும் ஆத்மலாபம் அடையச் செய்வதாக்கும் இவன் விசித்திர வாணிபம் இருந்தபடி. தேசிகன் என்னும் வடமொழிச் சொல்லுக்கு வழி காட்டுபவன் என்பது தாதுப் பொருள். கார்யாகாரியங்களையும் விதி நிஷேதங்களையும் தன்னை அடுத்தவனுக்கு எடுத்துக்கூறி அவனை நல்வழிப்படுத்தி இவ்வுலகிலுள்ள மட்டும் பாபதோஷங்கள் இல்லாத நல்வாழ்வும் பிறகு மோக்ஷபர்யந்தமான நற்கதியும் சித்திக்கும்படி வழிகாட்டுபவன் ஆசான் ஆதலின் அவனுக்குத் தேசிகன் என்பது பெயராயிற்று. பட்டப்பெயராகவோ காரணப் பெயராகவோ மற்றவர்கள் தேசிகன் என்ற சொல்லைத் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொண்டபோதிலும் இச்சொல் இடுகுறிப் பெயராக இவன் ஒருவனுக்கே தமிழ் மொழி வழங்கும் நாடுகளிலும் பிற நாடுகளிலும் அமைந்து கிடக்கும் திறம் ஒன்றே இவனைப் பரமாச்சாரியன் ஆக்கித் தருகிறது. “சீலங் கவர்ந்திடுந் தேசிகர்” என்பது ரஹஸ்ய ஸந்தேசப் பாசுரம் .-(அமிருதரஞ்சனி.15) இதற்கு “சீலங்கவர்ந்திடும்” என்கிற பாட்டாலே ஸதாசார்ய ப்ரஸாதமடியாக தனக்கு வருகிற பரமபுருஷார்த்த லாபத்தை அநுஸந்திக்கிறான். (சீலங்கவர்ந்திடுமென்றது) – ஆத்ம குணங்களையும் ஆசாரத்தையும் அங்கீகரிக்கு மவர்கள் என்றபடி, (தேசிகர் என்றது)- “ஆச்ரிதரை வழியல்லா வழிபோகாதபடி விலக்கி நல்வழி காட்டுகைக்கு நிலவர் என்ற படி..”- (ரஹஸ்ய ஸந்தேச விவரணம்) என்று நம் வேதாந்த குருவே வியாக்கியான மிட்டுள்ளார். ’மருளற்ற தேசிகர் வானுகப் பாலிந்த வையமெல்லா, மிருளற் றிறைவ னிணையடி பூண்டுய வெண்ணுதலாற், றெருளுற்ற செந்தொழிற் செல்வம் பெருகிச் சிறந்தவர்பா லருளுற்ற சிந்தையினுலழி யாவிளக் கேற்றினரே.’ – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 37) ’தெருளார் மறைமுடித் தேசிக னேயெங்க டுப்புற்றேவே.’ – (பிள்ளையந்தாதி 12) ’அருள்தரு மாரண தேசிகனே யெங்க டூப்புற்றேவே.’-(பிள்ளையந்தாதி. 18) வேதியர் — வேதமுணர்ந்தோர்; வேதியர் குலத்தரசே – ’நல்வேதியர்கள் தொழும் திருப்பா தனிராமாநுஜன்” – (இராமாநுச நூற்றந்தாதி. 105); சாதுசனங்களுக்கு – ஸ்ரீவைஷ்ணவர்கட்கு. ” வாதியர் மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச் சாது சனங்க ளடங்க நடுங்கத் தனித்தனியே, யாதி யெனாவகை யாரண தேசிகர் சாற்றினர்நம், போத மருந்திரு மாதுட னின்ற புராணணையே – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 13) “சாது சனம் வாழவென்று சாற்றியநற் ப்ரபந்தசாரம்?-(தேசிகமாலை. பிரபந்தசார சிறப்புத்தனியன், சாதுக்கள். * தம்பிறப்பாற் பயனென்னே சாதுசனங்களிடையே” – (திருவாய்மொழி 3-5-4), “சாதுசனத்தை நலியும்” – (திருவாய்மொழி 3-5-5); தாவளம்- இருப்பிடம் (தெலுங்கு), வசிக்குமிடம். ‘பூவள ருந்திரு மாது புணர்ந்தநம் புண்ணியஞர், தாவள மான தனித் திவஞ் சேர்ந்து தமருடனே’- (தேசிகமாலை. பரமபத சோபானம், 18) ; போது – பூ, மலரும் பருவத்தரும்பு, “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்.” -(திருக்குறள், காமத்துப்பால். பொழுது கண்டிரங்கல். 7); பாதம் – திருவடி, “ அவர் பாதம் வணங்கினற்கு,”; நின்னடியையென்று நினைந்திருப்பார் பாதம் – ‘ எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஒதும் பிறப்பிடை தோறும் எம்மையாளுடையார்களே.’ — (திருவாய்மொழி 3-7-3), “எந்தைபிரான் தனக்கு அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார்தம், அடியாரடியோங்களே.” – (திருவாய்மொழி 3-7-9) ; சென்னி – தலை; மலர் – பூ. (2)

2. நமக்குப் பற்று

மலர்மகள்கோன் தாள் இணையை மன்னி இருப்பார்கள்
சிலர் அவரால் செய்கருமம் என்னாம்? – மலர் அறுசீர்
வேதாந்த தேசிகனை வேறு ஆகாது ஏத்துவார்
பாதாம்புயம் நமக்குப் பற்று. (2)

பொழிப்புரை:– தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது கணவன் திருமாலின் திருவடியைப் பொருந்தி (நினைந்து) இருப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களால் செய்யக்கூடிய காரியம் என்ன இருக்கிறது? ஆனால், குற்றம் நீங்கிய சிறப்பை உடைய வேதாந்த தேசிகனை, தன்னோடு வேறு ஆகாமல், அந்த ஆசாரியரோடு ஒன்றி நின்று போற்றும் அடியார்களது திருவடித் தாமரையே, நமக்குப் பற்றுக்கோடு ஆகும். (தஞ்சமாக) அடைக்கலமாக ஆகும்.

மலர்மகள்கோன் – திருமாமகள் கேள்வன், திருமால்; மன்னி – பொருந்தி; கருமம் – கடமை ; மலம் – அழுக்கு, பற்று, ஆர்வம், செற்றம் முதலியவற்றிற்கும் மலமெனக் கூறுவர்; வேதாந்த தேசிகன் – “எழில் வேதாந்தாரியன்” – (தேசிக மாலை திருச்சின்ன மாலை சிறப்புத்தனியன்), “மின்னுறு நூலமர் வேங்கட நாதனந் தேசிகனே” – (தேசிகமாலை, பன்னிரு நாமம் சிறப்புத்தனியன்), “ சீர்கொண்ட தூப்புற் றிருவேங்க டாரியன்.”- (௸,௸), “ சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை -(தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம். சிறப்புத் தனியன்), * கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்.” (௸,௸), “ சீராரும்‘வேதாந்த தேசிகர்கோன்,”- (தேசிக மாலை, ஆகார நியமம். சிறப்புத்தனியன்), “ ஞானியர்கள், சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே” ‘தூப்புல் வருநிகமாந்தாசிரியன்’-(வாழித்திருநாமம்), “வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம். ‘ -(தேசிக மாலை, அமிருதாசுவாதினி. 37), “சந்தமிகு தமிழ்மறையோன் றுாப்புற் றோன்றும் வேதாந்த குரு.”- (தேசிகமாலை. பிரபந்தசாரம், 18), “ தீதற்ற நற் குணப் பாற்கடற் றாமரைச் செம்மலர்மேன், மாதுற்ற மார்பன் மருவவின் கீதையின் வண்பொருளைக், கோதற்ற நான்மறை மெளலியி னாசிரி யன்குறித்தான், காதற் றுணிவுடை யார் கற்கும் வண்ணங் கருத்துடனே.” – தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம் 21), ’ மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே.”-(தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 28), “பெருவேலியா மெம்பி ரான் பேசுபய வேதாந்த தேசிகன்”-(அழகர்பிள்ளைத் தமிழ். பழிச்சினர்ப்பரவல். 12), “செந்தமிழு மாரியமுந் தேர்ந்த பொதுத் தேசிகனே, யெந்தவிதச் சித்து மியற்ற வல்லாய்.”, “ தேசிக னிதயக் கோயிற் செழுமலர் மிசைவார்”, “செந் தமிழ்ப் புலவரேத்துந் தேசிகப் பெருமான்,” “ மருள்புகாநிலைத் தேசிகன்,” “சருவ சித்தியு மெய்தித் தேசிகன் றன்னையே நிகர், “ “ தேசிக னென்னுமாசான்,”” புவனி போற்று நந் தேசிகன் “-(ஸ்ரீலஸ்ரீ தண்டபாணிசுவாமிகள்) ; “வேறாகா தேத்துவார் – “,” தேவுமற்றறியேன், “ “வேறென்றும் நான் அறியேன்” என்ற நிலையிலுள்ளோர்; பாதாம்புயம் – திருவடித் தாமரை பற்று – அடைக்கலம் * “பற்றுக பற்றற்றான் பற்றினையப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு”-(திருக்குறள். துறவு, 10), “ கட்டப் பொருள்விரித்த காசினியி னான்மறையி, னிட்டப் பொருளியம்பு மின்பொருளைச் – சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கடிருப் பாதாம் புயமடியேன் பற்று. ’, ‘* கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார், பாதார விந்தமலர் பற்று “-(தேசிகமாலை, கீதார்த்தசங்கிரகம், சிறப்புத் தனியன்கள்); நமக்குப்பற்று- ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அனைவருக்குந் தஞ்சமாகும்.

3. என்பால் இருப்பார்.

பற்று ஒன்றும் இன்றிப் பராங்குசனை யேபற்றும்
சித்தம்உடை வேதாந்த தேசிகனை – குற்றம்இல்லா
அன்பால் அடைபவர்க்கு ஆளாகும் அன்பரே
என்பால் இருப்பர் இசைந்து. .3.

(பொழி) எந்தவிதமான உலகப் பற்றும் இல்லாமல், நம்மாழ்வாரையே தஞ்சமாகப் பற்றிக் கொள்கின்ற மனத்தை உடைய வேதாந்த தேசிகனை, குற்றம் இல்லாத அன்போடு அடைகின்ற பக்தர்களுக்கு அடியவர்களாகின்ற அன்பர்களே, என்னிடத்தில் விருப்பத்துடன் தங்கியிருப்பார்கள்.

(3) பற்று – ’ இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு, எல்லையில் அந்நலம், புல்குபற்றற்றே.” -(திருவாய்மொழி 1-2-4), “ அற்றது பற்றெனில், உற்றது வீடுஉயர், செற்றது மன்னுறில், அற்றிறைபற்றே.” –( ௸1-2-5), “புற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன், பற்றிலையாய் அவன் முற்றிலடங்கே.” (௸1-2-6); பராங்குசன் – பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களிற் கூறிய தத்துவார்த்தங்களாற் செருக்கடக்கி அவற்றிற்கு மாவெட்டியென்னுங் கருவிபோல இருக்கும் நம்மாழ்வார். “பாடுவ தெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தாற், றேடுவதெல் லாம்புளிக்கீழ்த் தேசிகனை-ஓடிப்போய்க், காண்ப தெலா நங்கையிரு கண்மணியை யான்விரும்பிப், பூண்பதெலா மாறனடிப் போது.”-(பெருந்தொகை. பொருளியல். 1823), ”தேன ருமகிழ்த் தொடையலு மவுலியுந் திருக்கிளர் குழைக் காதும், கான ருமலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயும், மோன மாகிய வடிவமு மார்பமு முத்திரைத் திருக்கையும், ஞான தேசிகன் சரணதா மரையுமென் னயனம்விட் டகலாவே.”. (௸1824); பராங்குசனையே பற்றும் – பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த, பாமன்னுமாறனடி பணிந் துய்ந்தவன் ”-(இராமாநுச நூற்றந்தாதி. 1) “மாமலர்மன் னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாட் டூமலர் சூடியதொல் லருண் மாறன் றுணயடிக்கீழ், வாழ்வை யுகக்கும்.”-(பிள்ளை யந்தாதி. 1); அன்பாலடைபவர் – ”அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு, அன்பனாய்.”- (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 11); ஆளாகும் அன்பர் – ” என் நம்பிக்கு ஆள், புக்ககாதல் அடிமைப் பய னன்றே ” – (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9), ” நகர்நம்பிக்கு ஆள், உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.” – (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 3) ; என்பால் – என்னிடத்து; இசைந்து – உடன்பட்டு.

ஸ்ரீ பெருமாளின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வான்–ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்–ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம– —

February 24, 2023

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

————

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்

இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று

—–

அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ர சக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -93-

தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு

விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்

விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ

ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப்
பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்

சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது

சமக்ர சக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –

மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்

நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே
பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————-

12 குணங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி

1-தயா -தயா சதகம் -கல்கண்டு போல் திருமலை -ஞானாதிகள் அப்ரயோஜனம் தயை இல்லாமல் –
பிரதானம் இதுவே -ராமானுஜரை விந்தியா மலையில் இருந்து மிதுனமாக அழைத்துச் சென்றார்களே

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது,
தேவாதி ராஜன் –காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து,
மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாயார், “நீர் வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர்.
உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும்
அக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார்.
கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே.
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
இவன் அருளால் பெற்ற ஸாம்யா பத்தி ஸ்வாமிக்கும் உண்டே

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

———-
2-ஷாந்தி ஸகல மனுஷ நயன விஷயதாங்கனாக -பொறுமை யுடன் நமக்காக
காஞ்சி பிரம்மாவால் தொழப்பட்டவர்
ஹஸ்திகிரி
ஹஸ்த திரு நக்ஷத்ரம்
சரஸ்வதி -வேகவதி -பல திவ்ய
திருவெஃகா வேகா சேது
ஒரு ஆஸ்ரிதனான ப்ரம்மனுக்காக
ஹஸ்திகிரி மத்த சேகரன்
அத்திகிரியான்-த்யாகேசன்

————-

3-ஓவ்தார்ய –
ஆர்த்திதார்த்த பரிபால தீக்ஷிதன்
வரம் ததாதி
வரதம் அளிப்பவர்களுக்குள் ஈஸ்வரன்
வரத ஹஸ்தம் இல்லாமல் அபய ஹஸ்தம்
வரதராஜனாகவே பிரசித்தமாக இருக்க ஹஸ்தமும் காட்ட வேண்டுமோ

கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் !
கொள்ள குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ –3-9-5-
திருமங்கை ஆழ்வாருக்கு காட்டிக்கொடுத்த உதார வள்ளல்-மண்ணை அளந்து பொன்னாகி -இஹ லோக ஐஸ்வர்யம்
தன்னையே கொடுக்கும் கற்பகம்
ராமாநுஜரையே அரங்கனுக்கு கொடுத்த உதார குணம்
சேராது உளவோ பெரும் செல்வருக்கு—அரையர் ஸ்துதிக்க -ஸ்த்வயன் -ஸ்தவ ப்ரியன் – ஸ்துதி பிரியன்
ஞானம் வழங்கிய உதாரம் -யஜ்ஞ மூர்த்தி -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பிள்ளை லோகாச்சார்யாராக -இவரே
ஏடு படுத்தச் சொல்லி
——–
4-பிரதிம ஸ்வ பாவம் -மென்மையான -திருமேனியும் -திரு உள்ளவும் மார்த்தவம்
ஞானிகள் பிரிவை அஸஹம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -திரு மூழி க்களத்தில்
ஆலவட்டம் -கைங்கர்யம் -ஆறு வார்த்தை
——-
5-சமதா -பக்தனை எனது அளவாவது
வேறுபாடு மட்டும் அல்ல
தன்னையும் அவர்களுக்கு கீழ்
அஷ்ட வித பக்தி மிலேச்சசன் இடம் இருந்தாலும்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பெயரிலே சாம்யம்
———–
6-ஸுஹார்த்தம்
கிருபை இதன் அடிப்படையால்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம்
முனியே -மனன சீலன் –
உறங்குவான் போல் யோகு செய்து
நாலூரானுக்கும் முக்தி
——–
7-த்ருதி
ஊற்றம் உடையார்
ஆஸ்ரித ரக்ஷணம்
ராமானுஜர் அவதாரம் தொடங்கி உபகார பரம்பரைகள்
நம்மாழ்வார் திரு உள்ளத்திலும் பட அருளி
——
8-பிரசாதம்
பேர் அருளாளன் அருளாத நீர் அருளி வீதி வழியாக ஒரு நாள்
———-
9-ப்ரேம
சேர்த்தி புறப்பாடு பிரசித்தம்
கஜேந்திர ரஷணம் -அகில காரணமத்புத காரணம்
நடாதூர் அம்மாள்
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான்
————
10ஆஜ்ஞா
ஆறு வார்த்தைகள் பிரசித்தம்
ராமானுஜரை ஆக்கி அருளி
ஆளவந்தார் ஆ முதல்வன் கடாக்ஷிக்க சரண் அடையும் பொழுதும் அருளி
விந்திய மலையில் இருந்து காத்து அருளி
ஸந்யாஸ ஆஸ்ரமும் அநந்த ஸரஸ்ஸில் செய்து அருளி
அரங்கனுக்கு அரையர் மூலம் கொடுத்து அருளி
ஸ்ரீவசன பூஷணம் ஏடு படுத்த
ஈட்டை வெளியிட்டு அருளி
————
11-ஆஸ்ரித சுலப
தொட்டாச்சார்யார் ஸேவை பிரசித்தம்
——–
12 கல்யாண
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸுந்தர்யம் லாவண்யம் மிக்கு
ஆதி ராஜ்யம்
திவ்ய மங்கள விக்ரஹம்
நாபி சுழி
வலித்ரயம் உதர பந்தம் பட்டம் கட்டி -தாமோதரன்
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
————-
காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

—————————————————————————————

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.
திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம். -கொடையும் விசேஷம் பேர் அருளாளன் அன்றோ
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.

கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற
இந்த நான்கு திவ்யதேசங்ககளுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.

———————-

ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம

ஹரே அகில ஹேய ப்ரத்ய நீகன்
ராம -கல்யாண ஏக குண நிதி -ஏக ஸ்தானம்
சீதா ராம -மிதுனமே ப்ராப்யம்
ஜய ஜய ராம -பேற்றுக்கு உகப்பானும் அவனே
ஆஸ்ரித நிரஸனம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -போக்யம் பசும் கூட்டம்

ஸத்ய வாக்யனாகி -சத்யம் நேர்மை உறுதி மூன்றும் சேர்ந்தவன் -நம்மையும் அப்படி ஆக்கி அருளுவான் அன்றோ

ஹரே ராம-நன்மை செய்யும் ஸுஹார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி — தாரகம் –வாழ் முதல்
ஜய ராம்-போஷகம் -வளர் முதல்
சீதா ராம -ஸீயாராம் -அயோத்தியில் கோஷம் –பிராகிருத வீட்டுப்பேச்சு -போக்யம்-ஸ்ரீ யபதித்தவம் – -மகிழ் முதல்

ராதே கிருஷ்ணா ராதே ராதே பிருந்தாவனம் இதே போல்-

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் மிதுனமே

திருவுக்கும் திருவாகிய செல்வன்

ஸுர்ய -வீர்ய -பராக்ரமம்
வெளியில் இருந்து தான் கலங்காமல் ஸுர்ய
புகுந்தும் கலங்காமல் பராக்ரமம் சின்னா பின்னம்
தனக்கு விகாரம் இல்லாமல் மற்றவை விகாரம் செய்வது வீரம்
ஜய ஜய மஹா வீரா

ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-

விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –

ஸத்ய வாதி பிரிய வாதி த்ருட வாதி -மே விரதம் -அசைக்க முடியாத திடம்-சரணாகத வாத்சல்யம் -அபய பிரதான சாரம்

ஸத்ய வாதி -ஹரே ராம
பிரிய வாதி -சீதா ராம
த்ருட வாதி-ஜய ஜய ராம

ஸத்ய பாஷா ராகவா பிரிய பாஷா ராகவா மிருது பாஷா ராகவா பூர்வ பாஷா ராகவா மஞ்சு பாஷா ராகவா –
சொல்லின் செல்வன் இவனே கொண்டாடும்படி திருவடி

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-

விபீஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவணஸ்வயம்*

—————-

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
“ஹரிர் ஹரி ஹரிர் ஹரி”என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
“கேசவா”என்று சொல்ல வேண்டும். “கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
“கோவிந்தா”என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
“மாதவா”என்று கூற வேண்டும்.

கஜேந்திர மோக்ஷம் செய்து அருளினை அவதாரம்
துஸ் ஸ்வப்னம் போக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -361-656-ஹரி நாமம்

நாராயணா மணி வண்ணா -ஆர் இடரை நீக்காய்
கபிஸ்தலம்
சென்று நின்று ஆழி தொட்டானை
புண்யோ துஸ் ஸ்வப்ன நாசநா
அஜிதன் -அம்ருத மதனன் –கூர்மம் தங்கி -மோஹினி -அவதாரங்களும் உண்டே

பச்சை வர்ணத்தையும் ஹரி குறிக்கும்
பச்சை வண்ணன் பவள வண்ணன்
கரும் பச்சை
நீல மேக ஸ்யாமளன் -கறுத்தே -முகில் வண்ணன் -பச்சையும் மரகத பச்சை ஆழ்ந்து
ஸம்ஸ்திதா பூஜித -கோவர்த்தன மலையில் இன்றும் எழுந்து அருளி இருக்கிறவன் ஹரி திரு நாமம் -பட்டர்
கோவர்த்தன தாரியும் ஹரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தவன் –

ஓம் பிரணவத்தையே தாங்கும் ஹரி திரு நாமம்-திரு மணத் தூண்கள் ஹரி-த்வய அக்ஷரங்களே –

ரமயதீ ராம –கண்டவர் தம் மனம் வழங்கும் -திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு அறிவோமே

ரூபம் குணம் இரண்டுமே வசீகரிக்கும்
நடத்தை -இன்றும் பாஷ்யகாரர் உத்சவம் நடை அழகை ராமர் பிரகாரத்தில் நடை பெறுமே
ரம்யதி-மகிழ்ச்சி கொடுப்பதில் ஸ்ரேஷ்டம் –
ராம நாமமே ஜென்ம ரஷக மந்த்ரம்

ரம்யதே அஸ்மின் –தோள் கண்டார் தோளே கண்டார் –
பூமா -ஒவ்வொன்றும் –
வேறே எங்கும் போகவோ கேட்கவோ அனுபவிக்கவோ போக முடியாதே
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
அபி ராமம் -நீலோத் புஷ்பம் -ஸரத்கால முழு நிலா -பிருந்தாவனத்தில் பெரிய ஸமூஹம்
குணாபி ராமன் ராமஞ்ச –

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம் -ஹரே ராம் அர்த்தம்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய:
கண்டிதாகில தைத்யாய ராமாயா ஆபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டத ச்’சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணொ…
அச்யுதாநந்த கோவிந்த.நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந்தைவம் கேசவாத்பரம் //
 
சரீரே ஜர்ஜரி பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே
ஒளஷதம் ஜாஹ்நவி தோயம் வைத்யோ .நாரயணோ ஹரி:
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:
இதமேகம் ஸுநிஷ்பநம் த்யேயோ .நாரயணோ ஹரி :
 
காயே.ந வாசா ம.நஸா இந்த்திரியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாரயணாயேதி ஸமர்ப்பயாமி //
 
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீநந்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷ்ம்யதாம் தேவ.நாரயண .நமோஸ்துதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம://
ராம நாமமே தாரக ம்ந்த்ரம். கஷ்டங்களை விலக்குபவர். பீடைகளை ஒழிப்பவர். பயங்களை போக்குபவர். ஸர்வ மங்களங்களையும் தருபவர். ஒரு நாள் ஒரு தரம் சொன்னால் போதும்.

ஹரே ராம
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -ஹரி சொன்னாலே ராம புண்யம் கிட்டும்
ராம ஹரே
கிட்டி அனுபவிக்க போக -ஸம்ஸார உழன்று இருக்க -யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே-அணைவிக்கும் முடித்தே
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

கஷ்டங்களை நீக்கி ஆனந்தம் தருவதே ஹரே ராம்

வேத ஸ்வரூபமே ஸ்ரீ ராமாயணம்-“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே! வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!”

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு.

ராம நாமம் ஒரு வேதமே! ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம் அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான் கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி–(வால்மீகி ராமாயணம் 1.2.36)

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

காலங்களைக் கடந்த பெருமை
லோகங்களைக் கடந்த -கோடி கோடி அண்டங்களிலும் பெருமை பெற்ற ஸ்ரீ ராமாயணம்
கால தேச பரிச்சேதய ரஹிதம்
இரண்டு அரண் ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழி

1. நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச்  சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார் .ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

2. நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான்.
தர்மம் நான்கு வகைப்படும்.

1.சாமானிய தர்மம், 2.சேஷ தர்மம் ,3.விசேஷ தர்மம், 4.விசேஷதர  தர்மம் . இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.
இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது  “விசேஷ தர்மம்”.
இறைவனுக்குத்  தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத்  தொண்டு செய்வதே முதன்மையானது என்று  பாகவத சேஷத்வத்தைக்  காட்டினான் சத்ருக்கனன்.இது “விஷேதர” தர்மம்.

‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா”என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

3. இராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின்  நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது .அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப்  படிக்காமல்,  தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும்.  அத னால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல்,  “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்.

4. 18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்

ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின்  சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும் ,தன்னுடைய  ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம்   பாடம் கேட்டார்.

5. காயத்ரி மந்திரமும்,  ஸ்ரீ ராமாயணமும்.

சகல வேதங்களின் சாரமான  காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு  அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள்  என்ற வகையில்   24 ஆயிரம் ஸ்லோகங்களை வால்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால்,அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

6. ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச்  சொல்வது ராமாயணம். ஒரு வருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்  கொண்டால்  என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச்  சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச்  சொல்லுகின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில்  சிரேஷ்டமானது  ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

7. சீதையின் பெருமையா?ராமனின் பெருமையா?

ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக்  கூறுவதாகச் சொன் னாலும், அது சீதையின் பெருமையை  பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று  மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான்  ரிஷிகள் சொல்லுகின்றார்கள்.ஆழ்வாரும்  தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறையில் இருந் தவளின்  பெருமையைச்  சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.

தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-என்பது திருவாய்மொழி.

தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள்  கருத்து.

8. முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார்.எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம்  வரும்.முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது.
முக்கியமான க்ஷேத்திரமும் கூட.‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவ திஸ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

9. அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும்  வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி.யுத்தங்களால்  வெல்லப்படாத பூமி. மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார் என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமபிரான்  வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின்  அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத் தினுள், சுவர்களில் ஸ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

10. சரயு நதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி  சரயு.
இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.–(பால-ஆற்றுப்படலம் -24) என்று

நதியின் பெருமையை கம்பன் வர்ணிப்பான். சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன.கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை.-இராமரின் அவதாரதினமான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னு மிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.இராமர் இந்த உலக வாழ்வை முடித்துத்  கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

11. தங்கச் சிலைகள்

சீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும் வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதைக்கு, கைகேயி உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

12. பிரணவம் நடந்தது

ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள். இதை விவரிக்க கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும்  பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம் தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ” எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ  என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம” என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.

இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும்  எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத்  தொடர்ந்து ஒரு வராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக்  குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.

13. ஸ்ரீ ராமனும், ஸ்ரீ ராமானுஜரும்

ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே  ஸிதே  பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு”  என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார்   என்பதை இந்த ஸ்லோகம் சொல்லுகின்றது. “மேஷார் த்ராஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.

1.இருவரும் உலகை ரமிக்கச் செய்தவர்கள்.
2.இருவர் பெயரி லும் “ராம” என்ற நாமம் உண்டு.
3.இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4.இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5.இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு  கொண்டவர்கள்.

14. ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்றபோது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது.மேல் நிலைக்குச் செல்வது.இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல் லுவார்.எல்லோரையும் உயரே ஏற்ற ,கீழே இறங்க வேண்டும்.கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான்.

மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல்.அதனால் தானே  இராமன் கட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள்  அழுதார்கள்.

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்- (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

15. ஏழு மராமரம்
இராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி வான் மீகியைப்  பதப்படுத்தியது.  இராமாயணத்தை எழுத வைத்தது.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே- என்பார் கம்பர்.

அது சரி மராமரம் என்பது என்ன? இங்கே மராம் என்பது யா மரம் (ஆச்சா/சாலம்). மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத் தந்துள்ளது.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.

இராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து, ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது, இனி துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.

16. ஏழும் இராமனும் ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.

1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3.இராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படை யெடுத்தான்.
4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5.ஏழு  பிராகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால்  இராமா யணம்   பாடிக்கொண்டிருக்கிறார்.

17. தோல்வியே இல்லை

1.அவன் ஜெயராமன்.
2.ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3.ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4.“ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப் பாடுவார்.
5.‘‘தோலா வீரன்”  என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6.எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

18. ஏன் ராமன் பெயர் இல்லை ? ஒரு அருமையான பாட்டு.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.சரி.

இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?

இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள் பெரியவர்கள்.பட்டாபிஷேகம் என்கின்ற அந்த  கிரீடம் ராமர் தலையில் வைக்கப்பட்டது  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், வெகுஜனங்களின் அபிப்ராயம், மகிழ்ச்சி ஆகிய கிரீடத்தை, அதாவது மக்களின் அபிமானத்தை ராமபிரான் சூட்டிக் கொண்டான்.
ஒவ்வொருவர் இதயத்திலும் ஆட்சி செய்தான்,ராமர் சூடிய கிரீடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள், எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர் இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம்.

19. வேதங்கள் ஏன் ராமனைத் தொடர்ந்தன?

வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள் தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
அதாவது இராமாயணத்தில் தூல வடிவம் ராமன் என்கிற அவதாரம். தன் அவதார  காலம் நிறைவு பெற்றவுடன் ராமன் சரயு நதியில் இறங்கி உடனடியாக வைகுண்டத்திற்குச் செல்லத்  தொடங்க, வேதங்களும் அவனைத் தொடர்ந்து சென்றன. அதைத்தொடர்ந்து முனிவர்களும் மக்களும் ராமன் பின்னால் சென்றார்கள்.இதன் மூலம் பிரமாணமும் பிரமேயமும் (வேதமும் ,வேதப் பொருளும் ஒன்று என்பதை காட்டுகிறார்.

20. குலசேகர ஆழ்வார் வர்ணிக்கும் காட்சி இது

ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அவர் ராமாயணம் பாடவும், அந்த காட்சிகளை அனுபவிக்கவும் விரும்புகிறார்.பகவான், “நீ திருச்சித்ர கூடம் வா, அங்கு இதை அநுபவிக் கலாம்” என, ஆழ்வார் தில்லை திருச்சித்ரகூடத்தில்  (வடக்கேயும் ஒரு சித்ரகூடமுண்டு) இக்காட்சிகளை கண்டு, ராமாயணத்தை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்கிறார். அதில் 10 வது பாசுரம் இது. தன்னுடன் சரா சரங்களை வைகுண்டம் ஏற்றினான் என்று பாடுகிறார்.

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.
இப்பொழுதும் இந்த காட்சியை, நாம் தில்லை திருச்சித்ரகூடத்தில் (சிதம்பரம்) காண முடியும்.

21. ஏன் சித்திரையில் ஸ்ரீராமநவமி?

ஸ்ரீராமநவமி யானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது அவதரித்தான்.

22. வசந்த ருதுவும் ராம நவமியும்பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும் ,  சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான் மார்கழியாகவும் , பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத்  தனிச்  சிறப்பு உண்டு.

23. ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் இராமபிரான் ?

இராமாயணத்தில் பலகாலம் சீதையை ராமன் பிரிந்து இருப்பதாகப் பார்க்கின்றோம். முதலில் காட்டில் சீதையைப் பிரிகின்றான். ராவணன் சீதையை அசோகவனத்தில் சென்று மறைத்து வைக்கிறான். அதற்குப் பிறகு சீதையை மீட்ட பிறகு மறுபடியும் பிரிவு ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால், ஒருமுறை பிருகு மகரிஷியின் பத்தினியை மகாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தால் தலையை துண்டித்து விட்டதாகவும், அதனால் பிருகு மகரிஷி, நீ உன் மனைவியை பிரிந்து துன்பப்படுவாய் என்று சாபம் விட்டதாகவும், முனிவரின் சாபத்தை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டு, உம்முடைய சாபத்தின் பலனை நாம் ராமா வதாரத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்ததாகவும் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

முனிவரின் வாக்கு பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டான். இந்த சாபத்தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.

24. ஸ்ரீராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு “ராம கோடி” என்று பெயர்.
தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம்  எழுதி  பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

25. மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?
அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதி தேவிக்குச்  சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.

எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. “ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், “ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் “ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2X5 2×5 2×5. என்றால் 2X5 =10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்:  சிறப்புப் பாயிரம் 14)

26. யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின்  குணங்கள் பற்றி அழகான தமிழ் பாடல் ஒன்று உண்டு. இராமா யணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6.துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.
27. ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?
ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிடம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

28. இதிகாசம் என்பதன் பொருள் இதுதான்இராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரவி இருக்கக்கூடிய ஒரு உன்னதமான இதிகாசம். இதி என்றால் “இவ்வாறு, இப்படி, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக” என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள்படும். (ஹ) என்பது வலியுறுத்தும் ஓர் அசைச்சொல். தமிழில் இப்படித்தான், இவ்வாறாகத்தான் என்பதில் வரும் ‘தான்’ என்னும் சொல் போல.கடைசி பகுதியாகிய  (ஆஸ) என்பதன் பொருள் “இருந்தது”.

அஸ் என்றால் “இரு” (நிகழ்காலம்), இதன் இறந்தகால வடிவம் ஆஸ. இதிகாசம் என்றால் “இப்படி நடந்தது” என்று பொருள்.அந்த ஆசிரியரே அதிலே ஒரு கதாபாத்திரமாக வருவார். அப்படிப்பட்ட இதி காசங்கள் இரண்டு. ஒன்று. இராமாயணம். இன்னொன்று மகா பாரதம்.வேதத்தில் அர்த்தத்தை தெளிவாக கதை போல் விளக்குவது இந்த இதி காசங்கள். மகாபாரதத்தில் வேத வியாசர் கதைக்குள் வருவார். இராமாயணத்தில் வால்மீகி  முனிவரே வருகிறார். அவர் தான் சீதையை தன் ஆசிர மத்தில் வளர்க்கிறார்.

29. இராமாயணம் முதலில் அரங்கேறியது எப்போது?

இராமாயணதிற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது இராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜ மண்டபத்திலேயே அரங்கேறியது. அதை இராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம்
ஒன்றே மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம்பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட இராமன் தன் சரிதை(கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும்போது அமுதம் கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் இராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

30.வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் இராமாயணம்

வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வேதம் என்ன தான் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இராமாயணத்தைப்  படிக்க வேண்டும் என்பதால்,
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

என்று நம்மாழ்வார் பாடினார். வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ ராமானுஜர்  இராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டு இருந்தார். இராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக்  கொண்டுதான்  ஸ்ரீ பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார்,” படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி  வெள்ளம்  குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்” என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் இராமாயணம் இராமானுஜர் நெஞ்சத்தில் இருக்குமாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.

இப்படி நம்மையும் வழி நடத்தி நல்வழி காட்ட இந்த ராம நவமியில் ஸ்ரீ ராமாயணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ ராமனின் குணங்களைக் கொண்டாடுவோம்.ஸ்ரீ ராம நாமம் ஜெபம் செய்வோம்.உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும் முனைவோம். அது தான் நிஜமான ஸ்ரீ ராமநவமி.

—————-

பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |

ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||

ஒளிரும் தன் கடைக் கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்

சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்

பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்

அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்

பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்

ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்

சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

——————

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வ வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்) 
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதைக் கேட்டாள் 
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான் 
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடனென போவதென தடுத்தனர் சென்று 
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே (ஜகம்) 
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான் 
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான் 
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான் 
வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான் 
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐயன் வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் 
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே 
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
————————————————————————————————————————–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்ய தேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறு மதிநலம் அருளப் பெற்ற திவ்ய ஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.
இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கப் பெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருத யுக முகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரி பதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதச பதயோ தாரயந்த்யுத்தமாங்கை: || என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது.
அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன்
கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.
அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது.
அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக் கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள
தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள்.
அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
வந்தே ஹஸ்தி கிரீசஸ்ய வீதீ சோதக கிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.
அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள்
நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து
திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.
இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி?
ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள்
இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது.
அத்தி யூரான் பபுள்ளை யூர்வான் அணிமணியின்
துத்தீ சேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீ
மறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம்.
இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம்
தேவப்பெருமாளுக்கே.
இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார்.
காலையானதும் எழுந்து விடுகிறார்.
பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி.

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டே

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்துநான்கு சாண் கொண்டது.
வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள்.
த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.
இவையும் இருபத்துநான்கே.
இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக
அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு
இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்,
ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்
தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்;-ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக
இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –

ஸம்ஸாரவாரி நிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தர விம்சதிர் யா |
தாமேவ தத்வ விதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து,
ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா.
தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்து கொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி
ஸ்ரீ வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது
மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள
பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.
இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும்
வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான்.
அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது.
இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால்
இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா.
ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள்.

எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான்.
எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.
இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள்.
அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான்.
யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான்.
ஒன்று யதோக்தகாரி.
இரண்டாவது தேவப் பெருமான்.

ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார்.
ஸ்வாமி தேசிகன் இதை
ஏகம் வேககதீ மத்யே ஹஸ்தி சைலே சத்குச்யதே.
உபாயப் பல பாவேன ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒரு ஸ்லோகத்தை பார்ப்போம்.
இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை.
வ்யாஸஸூத்ரத்துக்கும்
ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார்.

அவரது மற்றொரு ஸ்லோகம் .
தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன்.
அதைப் பொருத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே
ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார்.

முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார்.
இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார்.

மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை.
ஆக அப்பொழுது வணங்க ப்ரஸக்தி இல்லையே.

ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார்.
அந்த ஸ்லோகம் இதோ –

வபூ: ப்ராதுர் வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் |
நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||

—————————

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் மஹாத்ம்யம் —

February 21, 2023
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய “ஸப்ததி ரத்ன மாலிகா’வில் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவன் கிருபையால், ஒரு ச்லோகம் ஸ்புரித்தது.
ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிகசிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : ||-12-
ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் , பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலைபெறவேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
—————-
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் —
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் ||
ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ? அவரது
திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்
———–
அடுத்த ச்லோகத்தில்,
ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் ||
உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத
சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்
இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி
தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு. இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.
———–
கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-
லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : ||
வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்
( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த
ஸம்வாதம் , முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதிசெய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )
—————
ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்
பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் ||
ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து , பாதராயணராகிய
ஸ்ரீ வேத வ்யாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.
————–
தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் ;–
காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் ||
யதிராஜர், வேதங்களாகிற பத்ரவேதியை அடைந்தபோது,
புத்த மதம் நழுவுகிறது ; கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?
—————–
ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.
உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||
பெருமைமிகு திருவரங்கச்செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து, அவரது ஸம்பந்தத்தால்
செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக ! ( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே ( இன்னும் பல )
———–
சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார் ;–
யதி , சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்
ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ்த்ரைவித்யமாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் ||
நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு ுழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சிவாய்த்தான் மண்டபத்துக்குப் போனபோது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,
ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் ) ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.
——————–
இந்தச் சமயத்தில், ஓரிரு வார்த்தைகள்—ஸ்ரீ ராமானுஜ தர்ஸநம் , ஸ்ரீ ராமானுஜ ஸம்ப்ரதாயம் –இவைகளைப் பற்றி
ஸ்ரீ N .S .R ஸ்வாமி என்று போற்றப்படும், ஸ்ரீ உ.வே. ராமாநுஜதாதாசார்யர் சொன்னவை–
நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம்—அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால், ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை;
இன்னும் சொல்வதென்றால், ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள். இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் . ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள். }
——–
ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,தொன்றுதொட்டு இருந்துவரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில், ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.
1. நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||
சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும் சேர்ந்த
குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)
2. தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் ||
ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்) திருவடித் தாமரைகளில்
உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட . மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.
3. பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய ||
அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான ,
பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் ) பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள்,
ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால், இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தியோகியும்,
யோகிஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.
——————
ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள். மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை
தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் , என்று மூன்று படிகளுக்குமேலே –ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால், முதல் ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம், அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக்கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.
இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,ஆசார்யனுடன்
ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
————-
ஸ்ரீ ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும் போது, ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,
யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||
என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.
குருபரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.
ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
———-
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் , பிறகு , பெரிய பிராட்டி, பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆளவந்தார், பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.
————-

ஸ்வாமி தேசிகன்

            வேங்கடமுடையானின் திருமணியின் அம்சம் என்று கொண்டாடும்படி, கச்சியில் புனிதமான தூப்புல் எனும் திவ்யதேசத்தில் விபவஸம்வத்ஸரத்தில் அனந்த ஸூரியின் திருக்குமாரராய் அவதரித்தார். அரங்கநகர் அப்பனால் தனக்கே யுரியதான வேதாந்தாசார்ய பதத்தை அளிக்கப் பெற்றார். நூற்றுக்கணக்கான க்ரந்தங்களை அருளிச் செய்தார். தர்சனத்தையும், திராவிட உபநிஷத்துக்களையும் பல வகையில் காத்தளித்தார். ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்ஜியத்தில் பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டார். உலகம் உய்யும் வழிகளை வகுத்தளித்தார். ஆசார்யோத்தமனாயும், ஸாக்ஷாத் திருவேங்கட முடையானாகவும் திகழ்ந்து நின்றார். இவரது தனியன்கள்;

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ

வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

ராமாநுஜ தயாபாத்ரம் க்ஞான வைராக்ய பூஷணம்

ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்  முதலியன.

இவர் வைபவத்தை விளக்குவது இம்மலர். (Sri Vedanta Desika 7th Centenary Commemoration Volume is referred to here)

 ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ |

 வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி||

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக.

திருவவதாரம்

திருநாமம்: வேங்கடநாதன்

அவதரித்த வருடம்: கலியுகம் 4370 (1268 கி.பி.)

மாதம், திருநக்ஷத்ரம்:  புரட்டாசி,  திருவோணம் (திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம்)

அவதாரஸ்தலம்: காஞ்சிபுரம்,  திருத்தண்கா

கோத்ரம்: விச்வாமித்திர கோத்ரம்

அவதாரம்: திருவேங்கமுடையானின் கண்டம் (மணி) – சங்கல்ப ஸூர்யோதய என்று தன்னுடைய கிரந்தத்தில் கூறியது போல.

பெற்றோர்கள்: அநந்த சூரி, தோத்தாரம்பா

பரமபதம்: சுமார் நூறு வயதிருக்கும் பொழுது, அதாவது  கலியுக வருடம் 4470 (கி.பி. 1368 ல்) ஸ்ரீரங்கத்திலிருந்து பரமபதத்துக்கு எழுந்தருளினார்.

இவர் ஸ்ரீ ரங்கநாதரிடமிருந்து ” வேதாந்தாசார்யர் ” என்கின்ற திருநாமமும், ஸ்ரீ ரங்க நாச்சியாரிடமிருந்து ” கவிதார்க்கிக கேசரீ ” மற்றும் “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்ற திருநாமங்களையும் பெற்றார்.

இவருக்கு “வரதாசாரியார்” என்ற திருநாமம் உடைய ஒரு புதல்வரும், “ப்ரஹ்மதந்திர ஸ்வதந்திரர் ஜீயர்” என்ற ஜீயரும் சிஷ்யர்களாக இருந்தனர்.

கிடாம்பி ஆச்சானின் பேரன் கிடாம்பி அப்புள்ளார், ஸ்ரீ நடாதூர் அம்மாளின் சிஷ்யர்களில் ஒருவர் ஆவார்.

திருவிருத்தம் 3 ல் “அப்புள்” என்பது கருடனை குறிப்பிடும். அப்புள்ளார் என்ற இவருடைய பெயரில் உள்ள வார்த்தைக்கு,  கருடனைப் போன்ற குணங்கள் உடையவர் என்பதாகும். இவர்க்கு “வாதி ஹம்ஸாம்புவாஹர்” என்ற மற்றொரு திருநாமம் உள்ளது. இதற்கு ஹம்சங்களை தோற்கடிக்கக் கூடிய மேகத்தைப் போன்றவர் என்ற பொருளாகும். “ராமானுஜர்” என்பது இவருடைய இயற் பெயராகும்.

இப்படியாகிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருமகனும், சிஷ்யரும்தான் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ வேதாந்தாசார்யர்  ஆவார்.

வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்கு தன்னுடைய மாமா (ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்) உடன் சென்றார்.  வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்குத்  தன்னுடைய மாமா ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாருடன் சென்றார்.  இது பற்றி வேதாந்தாசார்யர் ,  ஸ்ரீ  நடாதூர் அம்மாள்  இவர்  விசிஷ்டாத்வைத  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை  எதிர்க்கும் அனைத்தையும்  அகற்றி நிலை நாட்டுவார் என்று  தன்னை ஆசிர்வதித்ததாக  குறிப்பிடுகிறார்.

அருளிச்செய்த கிரந்தங்கள் –

ஸ்ரீ  நடாதூர் அம்மாள் ஆசிர்வதித்ததுபோல் ஸ்ரீ வேதாந்தாசார்யர்  எண்ணற்ற கிரந்தங்களையும், விசிஷ்டாத்வைதத்தை எதிர்த்த பல தத்துவ ஞானிகளையும், வாதிகளையும் வென்றார்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர்  நூற்றுக்கணக்கான கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ஸம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மணிப்ரவாளம் (ஸம்ஸ்க்ருதமும் தமிழும் கலந்த) போன்ற மொழிகளில் அருளியுள்ளார்.

இவருடைய கிரந்தங்களில் முக்கியமானவை பின்வருமாறு:

  • தாத்பர்ய சந்திரிகை – கீதா பாஷ்யத்தின் வ்யாக்யானம்
  • தத்வதீகை – ஸ்ரீ பாஷ்யத்தின் ஒரு பகுதிக்கு வ்யாக்யானம்
  • ந்யாய சித்தாஞ்சனம் – நம்முடைய சம்பிரதாயத்தின் தத்துவத்தை ஆய்வு செய்யும் நூல்
  • சத தூஷணி- அத்வைத தத்துவத்தை எதிர்த்து வாதிடும் நூல்.
  • அதிகரண  சாராவளி -ஸ்ரீ பாஷ்யத்தின் உட்பிரிவுகளைப் பற்றியது.
  • தத்வ முக்தாகல்பம் – நம்முடைய தத்துவத்தைப் பற்றி விளக்கும் நூல்; “ஸர்வார்த்த ஸித்தி” என்பது இதனுடைய வ்யாக்யானம்.
  • சது:ச்லோகிக்கும், கத்ய த்ரயத்திற்கும் ஸம்ஸ்க்ருதத்தில் பாஷ்யங்கள்.
  • நாடக வடிவில் அமைந்துள்ள ஸங்கல்ப சூர்யோதயம்.
  • தயா சதகம், பாதுகா சஹஸ்ரம், யாதவப்யுதயம், ஹம்ச ஸந்தேசம்.
  • ரஹஸ்யத்ரய ஸாரம், ஸம்ப்ரதாய பரிஸுத்தி , அபயப்ரதான ஸாரம், ஸ்ரீபரமதபங்கம்.
  • முனிவாஹன போஹம் – அமலனாதிபிரானின் வ்யாக்யானம்.
  • ஆகார நியமம் – ஆகார பழக்க வழக்கங்களை பற்றிய தமிழ் நூல்.
  • ஸ்தோத்ரங்கள்- தசாவதார ஸ்தோத்ரம், கோதா ஸ்துதி, ஸ்ரீ ஸ்துதி, யதிராஜ சப்ததி.
  • த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, த்ரமிடோபநிஷத் ஸாரம் – இவை திருவாய்மொழியின் உள்ளர்த்தங்களையும் மேலும் பலவற்றையும் விளக்கும்.

இக்கட்டுரையில் இது வரை கொடுக்கப்பட்டுள்ளவை பெரும்பாலும் புத்தூர் ஸ்வாமி பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள ஒரு மலரை அடிப்படையாக கொண்டதாகும்.

வேதாந்தாசார்யாரும் மற்ற ஆசார்யார்களும்

  • வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசாரியரை பெருமைப்படுத்தும்படியான “லோகாசார்ய பஞ்சாசத்” என்ற அற்புதமான பிரபந்தத்தை அருளிச் செய்துள்ளார். வேதாந்தாசார்யர்  பிள்ளை லோகாசாரியரை விட ஐம்பது வயது இளையவராயினும், இவர் பிள்ளை லோகாசாரியரை போற்றிப் புகழ்வதைப் பற்றி இந்த கிரந்தத்திலிருந்து எளிதில்  புரிந்து கொள்ளலாம்; இந்த கிரந்தத்தை இன்றும் திருநாராயணபுரத்தில் (கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டை) சேவிக்கப்படுகிறது.
  • வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர், “தத்வதீபம்” என்ற தன்னுடைய கிரந்தத்தில் வேதாந்தாசார்யருடைய க்ரந்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
  • ஸ்ரீ மணவாள மாமுனிகள், தனது தத்வத்ரயம் மற்றும் முமுக்ஷுப்படி(பிள்ளை லோகாசார்யார் எழுதிய) வ்யாக்யானங்களில் வேதாந்தாசார்யர்  அருளிய வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார்; மேலும் மணவாள மாமுனிகள், வேதாந்தாசார்யரை அன்புடன் ” அப்யுக்தர்” என்று அழைக்கின்றார்.
  • மணவாள மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகிய ஸ்ரீ எறும்பியப்பா, தனது விலக்ஷணமோக்ஷதிக்நிர்ணயத்தில் வேதாந்தாசார்யரின் “ந்யாய விம்சதி”யை மேற்கோள் காட்டி அதன் சாரார்த்தத்தையும் கொடுத்துள்ளார்.
  • ஸ்வாமி  தொட்டாசார்யர், சோழசிம்மபுரம்  (சோளிங்கர்) , வேதாந்த தேசிகனின் “சத தூஷணி”க்கு “சண்டமாருதம்” என்ற விளக்க உரை எழுதியுள்ளார். அதனால் இவர் ” சண்டமாருதம் தொட்டாசார்யர்” என்று அழைக்கப்பட்டார். இவரை தொடர்ந்து வரும் ஆசார்யர்கள் இன்றும் இப்பெயரை வைத்துக் கொள்கின்றனர்.
  • பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் அவருடைய சிஷ்யர்களும் மற்றும் அவர்களுடைய வம்சத்தில் வந்தவர் அனைவரும் , வேதாந்தாசார்யரிடம் கொண்டுள்ள ஈடுபாடு மிகவும் தெரிந்ததே. திருவிந்தளூரில் வசிக்கும் மற்றும் தெற்கு பகுதியில் உள்ளவர்களும் வேதாந்தாசார்யரின் திருகுமாரராகிய நயினாராசாரியரின் திருநாமத்தைத் தங்களுடைய திருநாமத்துடன் சேர்த்து அழைக்கின்றனர். இது  வேதாந்தாசார்யரின் திருகுமாரரிடம் தங்களுடைய  ஈடுபாட்டைத் தெரியப் படுத்துவதாக உள்ளது.
  • வேதாந்தாசார்யரின் க்ரந்தங்களுக்கு பல்வேறு ஆசார்யர்களும் வித்வான்களும் வ்யாக்யான உரை எழுதியும், மேற்கோள் காட்டியும் உள்ளார்கள்.

இவற்றுள் சில பின்வருமாறு:

  • ஸ்வாமி தொட்டாசார்யரின் சீடராகிய நரசிம்மராஜாசார்ய ஸ்வாமி , “ந்யாய பரிஸுத்தி” என்ற வேதாந்தாசார்யரின் கிரந்தத்திற்கு வ்யாக்யான உரை எழுதியுள்ளார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மைசூர் (மண்டயம்) அனந்தாழ்வான், வேதாந்தாசார்யரின் கிரந்தங்களை தான் அருளிச் செய்தவைகளில் பல இடங்களில் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில்  காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குன்றப்பாக்கம் ஸ்வாமி, தனது “தத்வ-ரத்னாவளி”யில், வேதாந்தாசார்யரை “ஜயதி பகவான் வேதாந்தராயஸ் ஸ தார்க்கிக-கேஸரீ” என்று மிகவும் அன்புடன் அழைத்துள்ளார்.

ஸ்ரீ வேதாந்தாசார்யரும் , தனது  பூர்வாசார்யர்களுக்கும் மற்றும்  அவருடைய காலத்தில் வாழ்ந்த ஆசார்யர்களுக்கும் அபிமான அன்பையும் மதிப்பையும் தந்துள்ளார். இது ” ஸ்ரீ அபீதி-ஸ்தவம்” என்ற ச்லோகத்தின் மூலம் உறுதியாகின்றது. “க்வச ந ரங்கமுக்யே  விபோ! பரஸ்பர ஹிதைஷிணாம் பரிஸரேஷு மாம் வர்த்தய” (ஆண்டவனே!  ஸ்ரீ ரங்கத்தின் நலம் கருதும் அடியார்களுடைய பாத கமலங்களில் அடியேன் என்றும் இருக்க அருள் புரிவீராக).

“பகவத்-த்யான சோபனத்தின்” கடைசி ச்லோகத்தில், ஸ்ரீ வேதாந்தாசார்யர் பல அறிவார்ந்த அறிஞர்களையும், ஸ்ரீரங்கத்தின் கலை ப்ரியர்களையும் மிகவும் உயர்த்திப் பாராட்டியுள்ளார். ஏனென்றால் தன்னுடைய    எண்ணங்கள் தெளிவு பெறவும், எளிய மகிழ்வளிக்கக்கூடிய பாணியை அடைவதற்கும் அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர், ஸ்ரீ ராமாநுஜரிடம் கொண்டுள்ள பக்தி நன்றாக அறிந்ததே. இவரது ந்யாஸ திலகத்தில் “உக்த்ய தனஞ்சய” என்று தொடங்கும் வரிகளில், எம்பெருமானிடம்  அவருடைய கருணனையை மட்டும் அருளுமாறு வேண்டுகிறார். ஏனென்றால்  ஸ்ரீ ராமானுஜருடன் தமக்கு ஏற்பட்ட சம்பந்தத்தால் மோக்ஷம் உறுதியாக கிட்டும் என்று கூறுகிறார், இதிலிருந்து ஸ்ரீ இராமாநுஜரிடம் இவர் கொண்டுள்ள பக்தி புலப்படுகிறது.

இதிலிருந்து ஸ்ரீ வேதாந்தாசாரியரும்   மற்ற அறிஞர்களும் ஒருவருக்கொருவர் மதிப்பும், மரியாதையை, மற்றும் அன்பும் கொண்டு உரையாடல்களை மேற்கொண்டு சுமுகமான ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு வழி வகுத்தனர்.

ஆசார்ய சம்பு

ஸ்ரீ. சத்தியமூர்த்தி ஐயங்கார், குவாலியர் (குவாலியர் ஸ்வாமி) 1967 ல் வெளியிட்ட தனது “A critical appreciation of Sri Vedanta Desika Vis-à-vis the Srivaishnavite World”, என்னும் ஆங்கிலப்  புத்தகத்தில் ஸ்ரீ வேதாந்தாசாரியரைப் பற்றி அறிந்து கொள்ள ஆதாரமான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ளவையுள் அநேகமாக இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

கி.பி. 1717 ஆம் ஆண்டு வாழ்ந்த “கௌசிக கவிதார்க்கிக சிம்ஹ வேதாந்தாசாரியர்”  பெரும் பண்டிதரும் கவிஞரும் ஸம்ஸ்க்ருதத்தில் கவிதையாகவும் உரை நடையாகவும் எழுதிய “வேதாந்தாசார்ய விஜயா” என்றும் “ஆசார்ய சம்பு ” எனவும் அறியப்படும் நூலை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த சம்பூ கிரந்தம் ஒன்று தான் வேதாந்தாசாரின் வைபவத்தை உள்ளபடி உணர்த்தும் நூலாகும். இதில் ஆறு ஸ்தபகங்கள் உள்ளன.

  • முதல் ஸ்தபகத்தில் மங்களா சரணம், க்ரந்த கர்த்தாவின் வம்சாவளி பற்றிய பேச்சு, காஞ்சிபுரியின் வர்ணனை மற்றும் வேதாந்தாசார்யரின் பிதாமஹரான ஸ்ரீ புண்டரீகாக்ஷ யஜ்வாவின் வர்ணனை ஆகியவை உள்ளது.
  • இரண்டாவது ஸ்தபகத்தில், வேதாந்தாசார்யருடைய திருத்தகப்பனாருமான அநந்த சூரி பற்றிய பேச்சு, அவருடைய தாயார் கர்ப்பவதியானது, திருமலை மால் திருமணி அந்த கர்ப்பத்திலே வந்து ஆவேசித்தது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • மூன்றாவது ஸ்தபகத்தில்- வேதாந்தாசார்யருடைய திருவவதாரம், பால்ய வர்ணனம், ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் செய்து வரும் நடாதூரம்மாள் திருமாளிகைக்கு தம்முடைய மாதுலரான கிடாம்பியாப்புள்ளாரோடு சென்று அங்கு அம்மாளுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றது, தக்க காலத்தில் உபநயனம் நடைபெற்று  வேதாத்யானமும், சாஸ்த்ர பாராயணமும் செய்தது, விவாஹம் செய்து  கொண்டது, ஹயக்ரீவ மந்த்ரத்தை ஜபித்தது, வாதிகளை வென்றது, ந்யாய ஸித்தாஞ்ஜநம் முதலிய கிரந்தங்கள் சாதித்தது, கவிதார்க்கிகஸிம்ஹ என்ற விருது பெற்றது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • நான்காவது ஸ்தபகத்தில் காஞ்சி  வைகாசோத்சவத்தில் பங்கு கொள்ளுதல், வரதராஜ பஞ்சாசத் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது, வித்யாரண்ய யதி என்ற அத்வைத ஞானியை வாதத்தில் வென்றது, புரட்டாசி மாதத்தில் திருவேங்கடமுடையானுத்சவத்தில் கலந்து கொண்டது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • ஐந்தாவது ஸ்தபகத்தில் திருவேங்கடயாத்திரை, திருமலையில் தயா சதகமருளிச் செய்தது, வித்யாரண்யர் அழைப்பின் பேரில் விஜயநகரத்தரசின் இராஜ சபையில் வைராக்ய பஞ்சகத்தை அருளிச்செய்தது, வடநாட்டிற்கு சென்று கங்காநதி தீர்த்த யாத்திரை செய்தருளி பின்னர் காஞ்சிபுரம் வந்தது, வித்யாரண்யருக்கும் அக்ஷ்ஷோபிய முனி என்ற த்வைத அறிஞருக்கும் இடையே நடைபெற்ற வாதத்திற்கு மத்யஸ்தாபிப்ராயம் செய்து வைத்தது, பின்னர் ஸ்ரீரங்கநாதனைச் சேவிக்க விரும்பிய வேதாந்தாசார்யர் திருவஹீந்திரபுரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து நிறைய ஸ்தோத்ரங்களையும், கிரந்தங்களையும் இயற்றியது, ஸ்ரீமுஷ்ண யாத்திரை முடித்து பின்னர் கோயில் சேர்ந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
  • ஆறாவது ஸ்தபகத்தில், ஸ்ரீ வேதாந்தாசார்யர் ஸ்ரீரங்கநாதனை சேவித்து பகவத் த்யாந சோபனம் முதலான ஸ்துதிகளருளிச்செய்தது, க்ருஷ்ணமிச்ர என்கிற துர்வாதியோடு பதினெட்டு நாள் வாதயுத்தம் செய்து வெற்றி பெற்றது, வேதாந்தாசார்யர் என்றும் ஸர்வதந்த்ர ஸ்வதந்திரரென்றும் விருதுகள் பெற்றது, கவித்வச் செருக்குடன் வந்த துர்வாதியின் கர்வத்தை அகற்ற பாதுகா ஸஹஸ்ரமருளிச் செய்தது, முகலாயர்கள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டது, தேசத்தின் மேற்கு பகுதியில் சில காலம் தங்கியிருந்து அபீதிஸ்தவத்தை அருளிச்செய்தது, பின்னர் காஞ்சிபுரம் வந்தது, அங்கு ஒரு பாம்பாட்டியின் செருக்கை அடக்க கருட தண்டகமருளிச் செய்தது, பிறகு திருகுமாரர் அவதரித்தது, ரஹஸ்யத்ரயசாரம் அருளிச் செய்தது ஆகியவைகளை கொண்டு இந்த கிரந்தம் முடிவு பெறுகிறது.

ஆசார்ய சம்பு என்ற புகழ் பெற்ற இந்த நூல் ஸமஸ்க்ருத பண்டிதர்கள் மிகவும் விரும்பிப் படிப்பது; பொக்கிஷமான இந்த அறிய நூலை மீண்டும் வெளியிட முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை.

————-

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக.

திருவவதாரம்

திருநாமம்: வேங்கடநாதன்

அவதரித்த வருடம்: கலியுகம் 4370 (1268 கி.பி.)

மாதம், திருநக்ஷத்ரம்:  புரட்டாசி,  திருவோணம் (திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம்)

அவதாரஸ்தலம்: காஞ்சிபுரம்,  திருத்தண்கா

கோத்ரம்: விச்வாமித்திர கோத்ரம்

அவதாரம்: திருவேங்கமுடையானின் கண்டம் (மணி) – சங்கல்ப ஸூர்யோதய என்று தன்னுடைய கிரந்தத்தில் கூறியது போல.

பெற்றோர்கள்: அநந்த சூரி, தோத்தாரம்பா

பரமபதம்: சுமார் நூறு வயதிருக்கும் பொழுது, அதாவது  கலியுக வருடம் 4470 (கி.பி. 1368 ல்) ஸ்ரீரங்கத்திலிருந்து பரமபதத்துக்கு எழுந்தருளினார்.

இவர் ஸ்ரீ ரங்கநாதரிடமிருந்து ” வேதாந்தாசார்யர் ” என்கின்ற திருநாமமும், ஸ்ரீ ரங்க நாச்சியாரிடமிருந்து ” கவிதார்க்கிக கேசரீ ” மற்றும் “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்ற திருநாமங்களையும் பெற்றார்.

இவருக்கு “வரதாசாரியார்” என்ற திருநாமம் உடைய ஒரு புதல்வரும், “ப்ரஹ்மதந்திர ஸ்வதந்திரர் ஜீயர்” என்ற ஜீயரும் சிஷ்யர்களாக இருந்தனர்.

கிடாம்பி ஆச்சானின் பேரன் கிடாம்பி அப்புள்ளார், ஸ்ரீ நடாதூர் அம்மாளின் சிஷ்யர்களில் ஒருவர் ஆவார்.

திருவிருத்தம் 3 ல் “அப்புள்” என்பது கருடனை குறிப்பிடும். அப்புள்ளார் என்ற இவருடைய பெயரில் உள்ள வார்த்தைக்கு,  கருடனைப் போன்ற குணங்கள் உடையவர் என்பதாகும். இவர்க்கு “வாதி ஹம்ஸாம்புவாஹர்” என்ற மற்றொரு திருநாமம் உள்ளது. இதற்கு ஹம்சங்களை தோற்கடிக்கக் கூடிய மேகத்தைப் போன்றவர் என்ற பொருளாகும். “ராமானுஜர்” என்பது இவருடைய இயற் பெயராகும்.

இப்படியாகிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருமகனும், சிஷ்யரும்தான் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ வேதாந்தாசார்யர்  ஆவார்.

வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்கு தன்னுடைய மாமா (ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்) உடன் சென்றார்.  வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்குத்  தன்னுடைய மாமா ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாருடன் சென்றார்.  இது பற்றி வேதாந்தாசார்யர் ,  ஸ்ரீ  நடாதூர் அம்மாள்  இவர்  விசிஷ்டாத்வைத  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை  எதிர்க்கும் அனைத்தையும்  அகற்றி நிலை நாட்டுவார் என்று  தன்னை ஆசிர்வதித்ததாக  குறிப்பிடுகிறார்.

அருளிச்செய்த கிரந்தங்கள் –

ஸ்ரீ  நடாதூர் அம்மாள் ஆசிர்வதித்ததுபோல் ஸ்ரீ வேதாந்தாசார்யர்  எண்ணற்ற கிரந்தங்களையும், விசிஷ்டாத்வைதத்தை எதிர்த்த பல தத்துவ ஞானிகளையும், வாதிகளையும் வென்றார்.

நமது பூர்வாசார்யர்களின் ஞானம் கடலளவு ஆழமானதாக இருந்தது, பராசரா ! அவருக்கு ” ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்” (அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்) என்ற பெயரை நம் தாயாரே (ஸ்ரீ ரங்கநாச்சியார்) சூட்டி இருக்கிறாள் என்றால் அவரது ஞானம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

வேதாந்தாசார்யருக்கு “கவிதார்க்கிக கேசரி” (கவிகளுக்குள்ளே சிங்கம் போன்றவர் ) என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் அவர் க்ருஷ்ணமிச்ரர் என்ற அத்வைதியுடன் 18 நாட்களுக்கு வாதப்போர் புரிந்தார். வேதாந்தசார்யார் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற க்ரந்தத்தையும் எழுதினார், ஒரு ஆணவப் பண்டிதனின் சவாலுக்கு பதிலளிக்க. நம்பெருமாளின் திவ்யபாதுகைகளைப் பற்றிய 1008 வரிகள் கொண்ட க்ரந்தமாகும் இது.

அவருடைய அபீதிஸ்தவத்தில், அவர் நம்பெருமாளிடம் “எம்பெருமானே, நான் ஸ்ரீரங்கத்தில் பரஸ்பர நலம் விரும்பிகளின் திருவடித்தாமரைகளின் கீழ் வாசம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மணவாள மாமுனிகள், எறும்பியப்பா , வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர், சோளசிம்மபுரத்து தொட்டையாசார்யார் (சோளிங்கர்) ஆகியோரெல்லாம் அவரது க்ரந்தங்களை தமது க்ரந்தங்களில் மேற்கோள் காட்டி இருக்கிறார்கள். வேதாந்தாசார்யருக்கு பிள்ளை லோகாசார்யரிடம் மிகுந்த அபிமானம் இருந்தது. இதனை அவர் எழுதிய “லோகாச்சார்ய பஞ்சாஸத்” என்ற நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த க்ரந்தம் திருநாராயணபுரத்தில் (மேலக்கோட்டை, கர்நாடக மாநிலம்) முறையாக அநுஸந்திக்க படுகிறது.

வேதாந்தாசார்யருக்கு ஸ்ரீ ராமானுஜர் மேல் இருந்த பக்தி தெரிந்ததே. ந்யாஸ திலகம் என்ற அவருடைய க்ரந்தத்தில் “உக்த்ய தனஞ்ஜய’ என்ற வரியில் , அவர் பெருமாளிடம் நீர் மோக்ஷம் அளிக்காவிடிலும் ராமானுஜ சம்பந்தத்தால் எனக்கு மோட்சம் நிச்சயம் உண்டு என்று உரைக்கிறார்.

ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||—
நம் பிதாமஹர் (ப்ரஹ்மா) சம்பாதித்த தனம் என்று, ஸ்வாமி தேசிகன் வைராக்ய பஞ்சகத்தில் ,
கடைசியாகச் சொன்னாரல்லவா —இது சம்பந்தமாக,
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி , தன்னுடைய அக்ஷய ஆராதனத்தில்-“தாது” வருஷ ஸ்லோகத்தில்,
தாது : ப்ரக்ருஷ்டோ ஹி வச : ப்ரபஞ்சே
தாதா ப்ரக்ருஷ்டோஹி விஸர்க க்ருத்யே |
தாதூ பமோ வேங்கடநாத வைத்ய :
த நோ து சம் ஸங்கட மோ சநாத் மே ||
அதாவது, ப்ரபஞ்சம் —–இது வாக்யங்களால் ஆன ப்ரபஞ்சம்–இதில்,“தாது”–ப்ரக்ருஷ்டமானது. விஸர்கத்தில் (ஸ்ருஷ்டியில் ),
தாதா எனப்படும் ப்ரஹ்மா சிறந்தவர்—வேங்கடநாதன் என்கிற ஸ்வாமி தேசிகன்,
வைத்யர் —தாதுவுக்கு நிகரானவர்.
அவர், நம்முடைய சங்கடங்களைப் போக்கி, மங்களத்தைக் கொடுப்பாராக —என்கிறார்.
இப்போது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் –
ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
ஆச்சார்யர் க்ருத்யங்கள் நான்கு
1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—
இப்படிப்பட்ட ஆசார்யன். “சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார்.
இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.அதனால் தான்,
உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த
ஆசார்யர்களை,” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” , ” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று
பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .
ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப் போல,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
வ்யாக்யான கர்த்தாக்கள், “நித்ய யோகேதி சாயினே……” என்கிறபடியே,
நித்ய ஸம்பந்திலேயாய் , வேங்கடசா வதாரோயம்…… என்கிற க்ரமத்திலே
பூர்வ ஸ்வபாவத்தில் அலர்மேல் மங்கையாய் நின்று ,
இவ்வவதராத்தில்,“மனுஷயத் வேச மானுஷீ ” என்கிறபடியே குத்ருஷ்டி நிரசநோபயுக்தையான
ஆத்ம வித்யா ரூபையாயும் ,
பக்தி பரம்பரா ரூபையாயும், பிராட்டி நிற்கிறபடியே சொல்லிற்றாயிற்று ”
வேதாந்தார்த்தப் ப்ரதாயினே ஸூக்தி பரம்பரா ரூபையும் என்று,இவர், தமக்கு,
திருவேங்கட முடையான் வேதாந்த தேசிகத்வ பட்டாபிஷேகம் பண்ணின தசையிலும்,
இவர், குத்ருஷ்டிகளை நிரஸித்தபின்பு “கவிதார்கிக ஸிம்ஹம் ” என்று, அருகேயுள்ளார் ஜயகோஷணை இட்ட தசையிலும்,
அவர்கள் இருவரும் களித்து,பூர்வம் நாம் பண்ணின சித்தாந்த பட்டாபிஷேகம் ,ஸப்ரயோஜனமாய்த்தென்று
“வேதாந்த தேசிகன் ” என்றும்,
“ஸர்வதந்த்ர ஸ்வ தந்த்ரர் ” என்றும்,
அவர்கள், தமக்கிட்ட ப்ரஸித்த திருநாமம் பெற்றபோதுமுண்டான“ஜய ஸ்ரீ” யை சொல்லிற்றாகவுமாம்.
அதாவது, பிராட்டி, ஆத்ம வித்யா ரூபையாயும் ,பக்தி பரம்பரா ரூபையாயும் இருப்பதை,இந்த வார்த்தை சொல்கிறது.
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட,வளர்க்க, பிராட்டி , ஆத்மா வித்யையாக இருக்கிறாள்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு முன்பாக “ச்ரியை நம : ”என்று த்யாநித்து விட்டுத்தான் ,
பிறகு,“ஸ்ரீ தராய நம : ” என்று பகவானைத் த்யாநிக்கிறோம்
இப்படியாக, “ஸ்ரீமத்” என்பதற்கு, வ்யாக்யானம் சொல்லப்படுகிறது.
வேங்கடநாதார்யம்—
திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான,ஸௌலப்ய சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல்,
அதையே காரணமாகக் கொண்டு,உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களைத் திருத்திப் பணிகொள்ள ,
பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு, ” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு , ஆசார்ய ரூபராய்அவதரித்து, நின்றபடியைச் சொல்லிற்று. …….
உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||
ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன;
வர்ணாஸ்ரம தர்மங்கள் பழைய நிலைக்கு வந்தன;
பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;
இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.
.
இதையே, திருவரங்கத் தமுதனார், தன்னுடைய இராமாநுச நூற்றந்தாதியில்,
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார்.
” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .
——————
வந்தே வேதாந்த தேசிகம்
ஸ்வாமி தான் அருளிய “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில்,
வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||–என்று அருள்கிறார்.
அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு,சிறியனான என்னை
வேதாந்ததேசிக பீடத்தில் அமர்த்தி,கைகளில் மகர யாழை எடுத்துப் பாடச் செய்வதைப்போல,
இந்த “தயா சதகம்”என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக்கொண்டு துதிக்கச் செய்தான் –என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.
இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச் சூட்டினான்.
திருமலையில் உற்பத்தியானது,திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது.
அரங்கம் என்றால் “ஸபை” தானே.
வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..”
என்று பலகாலம் சொல்லி, வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..
கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில் சென்று
படுகுழியில் விழாமல் இருக்க, நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ —-
காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய , தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது.
இவர்தான் தேசிகன் —வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….அவர்களை, அக்ஷர புருஷர்களாக —
முக்தர்களாக– மாற்றும் ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை
அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால் “வந்தே” என்று,
விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன் ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன்
வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்— இந்த அருமையான தனியனை அருளினார் என்று பார்த்தோம்
வ்யாக்யானத்தை அனுபவித்தோம்
சுருக்கமாகச் சொன்னால்,
ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும் மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி தன்னுடைய உபன்யாஸங்களில், கூறுவார்.
கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற நான்கு திவ்ய தேசங்களையும்,
ஸந்த்யா வந்தன காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்; அதாவது—-
ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்
இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல்கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
இந்தத் தனியன் அவதரித்ததே அங்குதானே என்பார்.
நம் இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சி நகரைக் குறிக்கலாம் ( காஞ்சீபுரம் ) ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல,
வைராக்ய பஞ்சகம் போன்ற பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்
வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—
வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம்
ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே–என்றும் , புகழ்ந்து உரைப்பர்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —அதாவது, பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் பிறருக்கு இவை சேராது.
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.
—————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த சேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

தேசிகப்ரபந்தம்‌–

February 21, 2023

ஸ்ரீமதேராமாநுஜாயாம?
ஸ்ரீமதே வேதாந்த குரவே ௩ம3
தேசிகப்ரபந்தம்‌–https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010283_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf

————
தனியன்கள்‌
பாம்மதந்தார ஸ்வதந்தா ஜீயர்‌ அரளிச்சேய்தது
சாமாறுஜதயாபாதரம்‌ ஜ்ஞாசவைராகயபூஷணம்‌
ஸ்ரீமத்வேங்கடகாதார்யம்‌ வந்ேதேவேதாக்ததேஸ்ிகம்‌. ,
பிள்ளைலோகாசார்யர்‌ ௮ரளிச்சேய்தது
சேரிசைவெண்பா
சீசொன்று தூப்புல்‌ திருவேங்‌ கடமுடையான்‌ 5
. பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ ௨—ஒரொன்று
தானே யமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு %
வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு,
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
1 என்னுயிர்த்‌ தளித்தவரைச்‌ கரணம்‌ புக்க
யானடைவே யவர்குருக்கள்‌ கிரைவணங்டுப்‌ %
பின்னருளால்‌ பெரும்பூதூர்‌ வந்த வள்ளல்‌
பெரியநம்பி யாளவந்தார்‌ மணக்கால்‌ நம்பி *
நன்னெ றியை யவர்க்குரைத்த வுயயக்‌ கொண்டார்‌
நாதமுனி சடகோபன்‌ சேனை நாதன்‌ ஈ
இன்னமுதத்‌ இருமகளென்‌ நிவசை முன்னிட்டு

எம்பெருமான்‌ இிருவடிக ளஎடைகன்‌ றேனே.
* இது இப்பிரபஈதத்தள்ள அதிகாரஸங்கீரஹத்தில்‌ மூன்றாவது
பாசுரம்‌. “அசார்யர்கள்‌ இருவடிகளை பஜித்‌ தப்‌ பின்னர்‌ பகவான்‌ இருவ்டி, களை பதிக்கிறேன்‌” என்னும்‌ சருத்தமைச்துள்ளதால்‌ வயாச்யாகாதிகாரி
இப்பாகரத்தை ப்‌ரப£தத்தின்‌ ப்‌ரதமத்திலுஞ்‌ சேர்த்து. வயாகீயாநத்திந்‌ பஇப்பித்‌ அள்ள தபோல்‌ பஇப்பிச்சலாயிற்று, ்‌
————-
மூதலாவ.து ௮மிர்தசஞ்சதி _. டட
கட்டளைககலித.துறை
38 தம்பர மென்றிரங்‌ இத்தள ராமனந்‌ தந்தருளால்‌ %
உம்பர்‌ தொழுக்திரு மாலுகந்‌ தேற்கு முபாயமொன்றால்‌ %
நம்பிற வித்துயர்‌ மாற்றிய ஞானப்‌ பெருந்தகவோர்‌ *
சம்பிர தாயமொன்‌ நிச்சுதிர்க்‌ குர்நெறி சார்்கனமே,
அக வல
கடலமு தத்தைச்‌ கடைந்து சேர்த்த இருமால்‌ *
ayer pie தே௫ிகரைச்‌ சேர்ந்தோம்‌.
குறள்‌ வெண்பா
முத்திக்‌ கருள்சூட மூன்றைத்‌ தெளிமுன்னம்‌ %
இத்‌இக்கா லேற்கு மிதம்‌.
மூன்றி லொருஞூன்று மூவிரண்டு முக்கான்கும்‌ &
தோன்றத்‌ தொலையுக்‌ அயர்‌.
கேரிசைவெண்பா
உயிரு முடலு (pore Commas ஈ
தயிர்வெண்ணெய்‌ தாரணியோ டுண்டான்‌ 8–பயிரில்‌
களைபோ லச ரரைக்‌ காயந்தான்‌ தன்‌ கையில்‌ *
வளைபோலெம்‌ மாசிரியர்‌ வாக்கு,
ELL on EEC 55 SGD
SWOUAD ANILp GFL OSG. Quam YpHv x
விலையற்ற நன்மணி வெற்பு வெயினில வோகங்கும்‌ % பகல்‌
துலையொத்‌ தனவென்பர்‌. தாய்மறை சூடுந்துழாய்‌ முடியார்க்கு
இலையொத்‌ தனவவன்‌ பாதம்‌ பணிந்தவ ரெண்ணு தற்கே.
சகேரிசைவெண்பா
உத்தி திகழு முரைமூன்றின்‌ மும்மூன்றும்‌ &
சித்த முணாச்‌ தெளிவித்தார்‌ உ–முத்இிதரும்‌ மூல மறையின்‌ முடி.சேர்‌ முகில்வண்ணர்‌ 5
ல மறிவார்‌ இலர்‌,
ak செல
ஒவியுவமைய பவான என்‌
அமிர்‌ தரஞ்ச நி 29
எண்சர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
எனக்குரிய னெனதப.ர மென்பே றென்னாது
இவையனைத்து மிறையில்லா விறைக்க டைச்தோம்‌ 8
தனக்கிணையொன்‌ நில்லாத திருமால்‌ பாதஞ்‌ |
சாதனமும்‌ பயனுமெனச்‌ சலங்கள்‌ தீர்த்தோம்‌ &
உனக்கெதமென்‌ ஜொருபாக னுரைத்த அற்றோம்‌
உத்தமனா மவனுதவி யெல்லால்‌ கண்டோம்‌ *
இனிக்கவரு மவைகவர விகந்தோஞ்‌ சோகம்‌ ப
இமையவரோ டொன்‌ நினிகா மிருக்கு காளே. 8
நேரிசைவெண்பா
ததீதுவங்க ளெல்லார்‌ தகவா லறிவித்து %
முத்தி வழிதந்தார்‌ மொய்கழலே ஈ–௮.த்‌ வத்தில்‌
grips ui மிருகிலத்தி லென்றுசைத்தார்‌ உ.
தாரமுத லோதுவித்தார்‌ தாம்‌, 0
கட்டளைக்கலித்துறை
இருகா ॥சணனென்னுக்‌ தெய்வமுஞ்‌ சித்து மசித்துமென்னும்‌ &
பெருகான்‌ மறைமுடி பேசிய தத்துவ மூன்‌.றிவைகேட்டு %
ஒருகா ளுணர்ந்தவ ர௬ுய்யும்‌ வகையன்றி யொன்றுகவார்‌ %
இருகா லெழுத்தி னிதயங்க ளோதிய வெண்குணசே. 10
எண்‌£ர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்‌
“காரணமா யுயிராகி யனைத்தும்‌ காக்குங்‌
கருணைமுடில்‌ கமலையுட ஸிலங்கு மாறும்‌ &
நாரணனார்‌ வடி.வான வுயிர்க ளெல்லாம்‌
நாம்வென்று நல்லடிமைக்‌ கேற்கு மாறும்‌ %
தாரணிநீர்‌ முதலான மாயை காலந்‌
தினிவானென்‌ நிறையுருவாச்‌ தன்மை தானும்‌ w
கூரணிசர்‌ மடியுடைய குருக்கள்‌ காட்டக்‌ |
குறிப்புடனாங்‌ கண்டவகை கூறி னோமே. 11
நேரிசைவெண்பா
அப்படி நின்ற வமலன்‌ படியெல்லாம்‌ *
இப்படி. யெம்முள்ளத்‌ தெழுதினார்‌ எப்படியும்‌
கரார்‌ சுருதி யொளியா லிருளறீக்கும்‌ *
தாரா பதஇயனையார்‌ தாம்‌, ்‌ 12
80 தேடிகப்ரபந்தம்‌
கட்டளைக்கலித்‌ துறை
செம்பொற்‌ கழலினைச்‌ செய்யா ளமருர்‌ இருவரங்கர்‌ %
அன்பர்க்‌ கடியவ ராயடி சூடிய காமுரைத்தோம்‌ &
இன்பத்‌ தொகையென வெண்ணிய மூன்றி னெழுத்தடைவை *
ஐம்பத்‌ தொருபொரு எாருயிர்ச்‌ காக்கு மமுதெனவே. le
யானறி யுஞ்சுட ராடிநின்‌ றேன்மற்றும்‌ யாதுமல்லேன்‌ &*
வானம ருந்திரு மாலடி யேன்மற்றோர்‌ பற்றுமிலேன்‌ %
தானமு தாமவன்‌ தன்சா ணேசா ணென்றடைந்தேன்‌ ஃ%
மானமி லாவடி மைப்பணி பூண்ட மனத்தினனே. 14
சீலம்‌ கவர்ந்திடுக்‌ தே?கர்‌ தேரின்‌ பெருமையினால்‌ *
தூலங்க என்ன துரிதங்கள்‌ மாய்ந்தன துஞ்சல்தரும்‌ %
கோலம்‌ கழிர்‌இடச்‌ கூறிய காலக்‌ குறித்துகின்றோம்‌ %
மேலிங்கு கரம்பிற வோம்வேலை வண்ணனை மேவு.துமே, 12
வண்மை யுகந்த வருளால்‌ வரந்தரு மாதவனார்‌ %
உண்மை யுணர்ந்தவ ரோதிவிக்‌ இன்ற வுரைவழியே %
இண்மை தருந்தெளி வொன்றால்‌ இணியிருள்‌ நீங்பெகாம்‌ ஈ
தண்மை கழிந்தனந்‌ தத்துவங்‌ காணுக்‌ தாத்தனமே. 1¢
நா.ரா யணன்பர னாமவ னுக்கு கிலையடியோம்‌ x
சோரா தனைத்து மவனுடம்‌ பென்னுஞ்‌ சுருஇகளால்‌ 8
சீரார்‌ பெருந்தகைச்‌ தேக ரெம்மைச்‌ இருத்து தலால்‌ %
தீரா மயலகற்‌ றுந்திறம்‌ பாத்தெளி வுற்றனமே. 17
ஒன்றே புகலென்‌ அுணர்ந்தவர்‌ காட்டத்‌ இருவருளால்‌ &
அன்றே யடைக்கலய்‌ கொண்டகம்‌ மத்தி கரித்திருமால்‌ &
இன்றே யிசையி லிணையடி சேர்ப்பர்‌ இனிப்பிறவோம்‌ %
நன்றே வருவதெல்‌ லாஈமக்‌ குப்பா மொன்றிலதே. [8
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்‌
இறுபயனிற்‌ படியாத தகவோ செம்மைச்‌
சேர்க்கவடைக்‌ கலங்கொண்ட திருமால்‌ தானே &
மறுபிறவி யறுத்தழியா வானில்‌ வைக்கும்‌
மனமேநீ மகிழாதே யிருப்ப தென்சொல்‌ %
உறுவதனச்‌ குரைச்கேனிங்‌ இருந்த சாலம்‌
ஒருபிழையும்‌ புகுதாத வுணர்த்கி வேண்டிப்‌ x
பெறுவதெல்லா மிங்சேராம்‌ பெற்று வாழப்‌
போடி.மை யார்க்கென்‌ றிகழேல்‌ நீயே, 18]
அ௮மிர்தரஞ்சநி 31
EL don SECO F FICO
சாக்கியர்‌ சைனர்கள்‌ சார்வாகர்‌ சாங்கர்‌ சைவர்‌ % மற்றும்‌
தாக்கிய நூல்கள்‌ சிதையத்‌ தனிமறை யின்கருத்தை &
வாக்கிய முப்பதி னால்வகை செய்து வியாகரித்தோம்‌ 5
தேக்கி மனத்தி லிதனைச்‌ இணியிருள்‌ நீங்குமினே. 20
தள்ளத்‌ துணியினுந்‌ தாய்போ லிரங்குக்‌ தனித்தகவால்‌ %
உள்ளத்‌ துறைகின்ற வுத்தமன்‌ தன்மை யுணர்ந்துரைத்தோம்‌ %
மூள்ளொத்த வாஇகள்‌ முன்னே வரின்‌எங்கள்‌ முக்கியர்பால்‌ %
வெள்ள த்‌ இடையில்‌ நரிபோல்‌ விழிக்கனெ.ற விணர்களே. 21
செய்யேல்‌ மறமென்று தேசன்‌ தாதை யவனுரைத்த %
மெய்யே யருள்பொருள்‌ சூடிய வெண்மதி காதலியாம்‌ &
பொய்யே பகைப்புல ளையிரண்‌ டொன்று பொருங்கருவி #
கையே சக்கரக்‌ காவலன்‌ காவ லடைந்தவர்க்கே,. 99
ஆசிரியச்சந்தவிருத்தம்‌
௮ர்தமிலாதிதேவன மிசெயதடைந்தவலைவேலையோதமடையச்‌ ஈ
செந்தமிழ்‌ தால்வகுத்தசறுமாமனிசர்சிறுகைச்சிருங்கைமறைபோல்‌ *
பந்தமெலாமுரைப்ப இதுவென்று தங்களிதயத்தடக்கியடையும்‌ ஈ
ஷூ பந்தமெலாமறுத்தருள்‌ தந்துகந்துபரவும்பொருள்களிவையே. 98
கட்டளைக்கலித்‌ துறை
முக்குண மாயையின்‌ மூவெட்டின்‌ கழ்வரு மூவகையும்‌ 4
இக்குண மின்றி யிலங்யெ காலச்‌ சுழியினமும்‌ *
நற்குண மொன்றுடை காகழு நாரா யண னுடம்பாய்ச்‌ *
சற்குண மற்றவை யென்றுரைத்‌ தாரெங்கள்‌ தேசிகமே, 24
சேரிசைவெண்பா
எனதென்‌ பதுமியா னென்பது மன்றித்‌ %
தனதென்று தன்னையுங்‌ காணா ₹–துனதென்று
மாதவத்தால்‌ மாதவற்கே வன்பரமாய்‌ மாய்ப்ப,கனில்‌ %
கைதவத்தான்‌ கைவளரான்‌ காண்‌. | 25
கட்டளைக்கலித்‌ துறை
பல்வினை வன்கயிற்‌ முல்பந்த முற்றுழல்‌ கின்றனரும்‌ *
ஈல்வினை மூட்டிய காரண னார்பதம்‌ பெற்றவரும்‌ *
தொல்வினை யொன்றுமில்‌ லாச்சோதி வானவ ருஞ்சுருதிச்‌ *
சொல்வீனை யோர்ந்தவர்‌ வரென்‌ ரோதச்‌ சிறர்தனசே, 20
82 தேசிகப்ரபந்தம்‌
தேரிசைவெண்பா
ஆரணங்க ளெல்லா மடிசூடி மேல்நின்ற &
காரணமா யொன்ரும்‌ கலங்காதான்‌–நாரணனே ஈ
நம்மேல்‌ வினைகடியும்‌ நல்வழியில்‌ தானின்று 4
தன்மேனி தர்தருளுர்‌ தான்‌. 21]
கட்டளைக்சலித்துறை
குடல்மிசை யொன்றியுங்‌ கூடியும்‌ நின்ற கொடுந்துயரும்‌ &
உடல்மிசை தோன்று முயிரு முயிர்க்குபி ராமிறையும்‌ x
கடல்மிசை கண்டவை தானத்‌ இரளவை போர்த்தபொன்னூல்‌ *
மடல்மிசை வார்ச்சை யதன்பொரு ளென்ன வகுத்தனமே, 98
திதீதுவந்‌ தன்னில்‌ விரித்ிெடத்‌ தோன்று மிரண்டுதன்னில்‌
பத்தி விலக்கெ பாடண்டர்‌ விகறும்‌ பாசமுழுர்‌ ஈ
எத்திசை யுந்தொழு தேத்திய &ர்த்திய ரெண்டி கையால்‌ *
சுத்த ருரைத்த சுளக மறிந்தவக்‌ தூயவசே. 24)
Ain saror oro du Ca Rut sb S60 ansag gra %
அனைத்து மறிந்தபி னாறும்‌ பயனு மெனவடைக்கோம்‌ 8
மனத்தி லிருந்து மருத்தமு தாகிய மாதவனார்‌ *
நினைத்தன்‌ மனத்தி லரிகாகி நின்றன கீள்கழலே. 30
சேரிசைவெண்பா
ஐதுமூசை கான்கதனி லோங்குமொரு மூன்றினுளளே 8
நீதிகெறி வழுவா நிற்கின்றோம்‌ ௨–போதமரும்‌
பேரா யிரமுந்‌ இருவும்‌ பிரியாத
நா.ரா யணனருளால்‌ நாம்‌. 2]
ஆசிரியவிருத்தம்‌
ஊன்‌ தந்து நிலைநின்ற வுயிருர்‌ தந்தோர்‌
உயிராகி யுள்ளொளியோ-டுறைந்த நாதன்‌ %
தான்தந்த வின்னுபிரை யெனதென்‌ னாமல்‌
நல்லறிவு தந்தகலா நலமுக்‌ தந்து %
தான்‌ தந்த நல்வழியால்‌ தாழ்ந்த வென்னைத்‌
தன்றனக்கே பாமாகத்‌ தானே யெண்ணி &
வான்தந்து மலாடியும்‌ தந்து வானோர்‌
வாழ்ச்சிச7 .மன்னருளால்‌ வரித்திட்‌ டானே. 32
நேரிசை வெண்பா
இருமா லடியிணையைத்‌ இன்சரணா கக்சொண்டு %
இருமா லடி.பிணையே சேர்வார்‌ &–ஒருமால்‌
அமிர்தரஞ்சநி 33
அருளா ஓருளாத வானோர்கள்‌ வாழ்ச்சி 4
யருளால்‌ ஈமக்களித்தா TUG Fl. 28
சுட்டளைக்‌ கலித்துறை
சேர்க்கும்‌ திருமகள்‌ சேர்த்தியில்‌ மன்னுதல்‌ சீர்ப்பெரியோர்க்கு £
ஈர்க்குங்‌ குணக்க ளிலக்காம்‌ வடிவி லினையடியைப்‌ %
பார்க்குஞ்‌ சாணத்திர்‌ பற்றுதல்‌ ஈன்னிலை காம்பெறும்பேறு &
ஏற்கு மவற்றினு ளெல்லாங்‌ களைய வெண்ணினமே. 94
இருமா லடியிணை சேர்ந்து இகழ்ந்த வடிமைபெறத்‌ &
இருகா சணன்சர ண்இுண்சர ணாகத்‌ அணிந்தடைவோர்‌ &
ஒருகா ளுரைக்க வுயிர்தரு: மந்திர மோ தியகாம்‌ x
வருகாள்‌ பழுதற்று வாழும்‌ வகையஇல்‌ மன்னுவமே.
நேரிசை வெண்பா
மத்றோர்பத ற்‌ றின்றி வந்தடைந்தார்க்‌ செல்லாம்‌ %
குற்ற மறியாத கோவலனார்‌ &–மற்றும்‌
வினைவிடுத்‌.து வி்ண்ணவரோ டொன்ற விரைகின்ளுர்‌ %
நினைவுடைத்தாய்‌ நீமனமே நில்லு, 36 ம்‌ qn
கட்டளைக்‌ கலித்துறை
எல்லாத்‌ தருமமு மென்னை பிகழ்க்திடத்‌ தானிகழாது *
எல்லாந்‌ தனதென வெல்லா முகந்தருள்‌ தந்தபிரான்‌ ௪
கல்லார்‌ மதச்களி ரொத்த வினைச்‌ இரள்‌ மாய்ப்பனென்ற 5
சொல்லா லினியொரு காறழ்சோகி யாத்துணி வுற்றனமே. 37
வினைத்‌தரள்‌ மாற்றிய வேதியர்‌ தந்தருள்‌ வாசகத்தால்‌ %
அனைத்து மறிந்தபி னாறும்‌ பயனு மெனவடைச்தோம்‌ %
மனத்தி லிருந்து மருந்தமு தா௫ய மாதவனார்‌ %
நினைத்தல்‌ மனத்தி லரிதாகி நின்றன கீள்கழலே. 38 சந்தவிருத்தம்‌ 1 எட்டிலா றிரண்டிலொன்‌ நிலங்குமா றியம்புவார்‌ £
விட்டவாறு பற்றுமாறு வீடுகண்டு மேவுவார்‌ *
சிட்டரான தேசுயர்ந்த தேிகர்க்‌ குயாந்துமேல்‌ 4
எட்டுமூன்று தேடஅத்த தெர்சைமா லிரக்கமே. 39
அடிவரவு: –தீம்பரம்‌, கடல்‌, முத்தி, மூன்றில்‌, உயிர்‌, அலையற்ற,
உத்திதிகழ்‌, எனக்கு, தத்துவங்கள்‌, திருசாரணன்‌, காரணம்‌, அப்படி,
செம்பொன்‌, யானநியும்‌, சீலங்கவர்க்திடும்‌, வண்மை, கா.சாபணன்‌, ஒன்றே
புகல்‌, சறுபயனில்‌, சாக்கியர்‌, தள்ள, செய்யேல்‌, அந்தமில்‌, முச்குணம்‌,
எனதென்பது, பல்வினை, ஆணம்‌, குடல்மிசை, தத்‌ தவம்‌, வினைத்‌இரள்‌,
இதுமூரை, ஊன்தசது, இருமாலடியிணை, சேர்க்கும்‌, இருமால்‌, மற்றோர்‌,
எல்லாத்தருமம்‌, வினைத்திரள்‌, எட்டில்‌, (பொய்கை)
| மாயாவாத புஜங்க பங்க கருடாயகம?
GC saat திருவடிகளே கரணம்‌,
CTL தீம்‌ 1-க்கு பாகுரம்‌-89
அமிர்தரஞச.நி ஸம்பூர்ணம்‌,
இரண்டாவது
| 9 . ௦ ௮.திகாரஸங்கிரஹம்‌
we OG விஷடய்கி அளை
தனியன்‌
ஸரீஸாக்ஷாத்‌ ஸ்வாமீயேன்கிற
ஸ்ரீவேதாந்த ராமானுஜஸ்வாமி அநளிச்சேய்தது
ஸ்ரீரங்கநாத குரு பாத ஸரோஜ ஹம்ஸம்‌
வேதாந்த தேக பதாம்புஜ ப்ருங்க ராஜம்‌-
ஸ்ரீமச்‌ யதீர்தா சடகோப தயாவலம்பம்‌
வேதாந்த லக்ஷ்மண முனிம்‌ கரணம்‌ ப்ரபத்யே.
எண்‌€ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
$$ பொயகைமுனி பூதத்தார்‌ பேயாழ்‌ வார்தண்‌
பொருகல்வருங்‌ குருசேசன்‌ விட்டு சித்தன்‌ 8
துய்யகுல சேகரனம்‌ பாண நாதன்‌
தொண்டரடிப்‌ பொடிமழிசை வந்த சோஇ ¥
வையமெலா மறைவிளங்க வாள்வே லேந்து
மங்கையர்கோ னென்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌ %
செய்யதமிழ்‌ மாலைகள்காம்‌ தெளிய Cour Bs
தெளியாத மறைநிலங்கள்‌ தெளிகன்‌ ரோமே.
இன்பத்தி லிறைஞ்சுதலி லிசையும்‌ பேற்றில்‌
இகழாத பல்லுறவி லிராக மாற்றில்‌ %
தன்பற்றில்‌ வினைவிலக்கிற்‌ றரசவோக்‌ கத்தில்‌
தத்துவத்தை யுணர்த்துதலில்‌ தன்மை யாக்கில்‌ *
அன்பர்க்கே. பவதரிக்கு மாயனிற்க
௮ருமறைகள்‌ தமிழ்செய்தான்‌ தாளே கொண்டு %
அன்பற்ற மதுரகவி தோன்றக்‌ காட்டும்‌
தொல்வழியே ஈல்வழிகள்‌ அணிவார்‌ கட்கே.
tt என்னுயிர்தர்‌ தளித்தவரைச்‌ சரணம்‌ புக்க
யானடைவே யவர்குருக்கள்‌ நிரை வண்டிப்‌ %
பின்னருளால்‌ பெரும்பூதூர்‌ வந்த வள்ளல்‌

பெரியஈம்பி யாளவந்தார்‌ மணக்கால்‌. நம்பி x
* இத்தனியன்‌ ஸாராஸ்வாகினியிலிருச்தெடுத்‌த சேர்க்கப்பட்ட த.
௮ திகாரஸங்கசரஹம்‌
நன்னெ.றியை யவர்க்குரைத்த வுய்யக்‌ கொண்டார்‌
நாதமுனி ச௪டகோபன்‌ சேனை நாதன்‌ %
இன்னமுதத்‌ இருமகளென்‌ நிவசை முன்னிட்டு
எம்பெருமான்‌ இருவடிக ளடைகன்‌ றேனே.
கட்டளைக்‌ கலித்‌. துறை
ஆரண ஹமூல்வழிச்‌ செவ்வை யழித்இடு மைதுகர்க்கோர்‌ *
வாரண மாயவர்‌ வாதக்‌ கதலிகள்‌ மாயத்தபிரான்‌ %
ஏரணி கீர்த்தி யிராமாறுசமுனி யின்னுளைசேர்‌ &
௪ீ.ரணி சிந்தையி னோம்சர்து யோமினித்‌ தீவினையே,
நீளவந்‌ இன்று விஇவகை யால்நினை வொன்‌ மியநாம்‌ %
மீளவர்‌ இன்னும்‌ வினையுடம்‌ பொன்றி விழுக்அுழலாது %
ஆளவரக்‌ தாரென வென்றருள்‌ தந்தம்‌ விளங்கெசர்‌ ஈ
ஆளவந்‌ தாரடி. யோம்படி யோமி னியல்வழக்கே,
காளம்‌ வலம்புரி யென்னநற்‌ காத லடியவர்க்குச்‌ க
தாளம்‌ வழங்கித்‌ தமிழ்மறை யின்னிசை தந்தவள்ளல்‌ 4
மூளும்‌ தவநெறி மூட்டிய காத முனிகழலே %
நாளும்‌ தொழுதெழு வோம்சமக்‌ கார்நிகர்‌ கானிலத்தே.
$ு ஆளு மடைக்கல மென்றெம்மை யம்புயத்‌ தாள்கணவன்‌ &
தாளிணை சேர்ந்தெமக்‌ கும்மவை தந்த தசவுடையார்‌ %
மூளு மிருட்கள்‌ விளமுயன்‌ மோதிய மான்றினுள்ளம்‌ &
நாளு முகக்கவிங்‌ கேஈமக்‌ கோர்விதி வாய்க்கின்‌றதே,
. [ஏதுழதல்‌ அந்தாதித்தோடை]
34 இருவுடன்‌ வந்த செழுமணி போல்இரு மாலிதயம்‌ 5
மருவிட மென்ன மலாடி சூடும்‌ வகைபெறுநாம்‌ &
கருவுடன்‌ வந்த கடுவினை யாற்றில்‌ விழுந்துழலாது உ
அருவுட னைந்தறி வாரருள்‌ செய்ய வமைந்தனசே.
அமையா விவையென்னு மாசையி னாலறு மூன்றுலூல்‌ %
சுமையான கல்விகள்‌ சூழவந்‌ தாலுந்‌ கொகையிவையென்று %
இமையா விமையவ சேோத்திய வெட்டிரண்‌ டெண்ணிய %& ஈம்‌
சமையா ரியர்‌ சதிர்க்குக்‌ தனிநிலை தந்தனசே,.
நிலைதந்த தாரக னாய்கிய மிக்கு மிறைவனுமாய்‌ *
இலதொன்‌ றிலாவகை யெல்லாம்‌ தனதெனு மெந்தையுமாய்த்‌ &
துலையொன்‌ நிலையென நின்ற துழாய்முடி யானுடம்பாய்‌ &
விலையின்றி காமடி யோமென்று வேதியர்‌ மெய்ப்பொருளே.
0)
10
36 தேதேசிகப்ரபத்தம்‌
பொருளொன்‌ றஜெனநின்ற பூமகள்‌ காத னவனடிசேர்க்து %
௮ருளொன்ற௮ மன்ப னவன்கொ பாய மமைந்தபயன்‌ %
மருளொன்‌ றியவினை வல்விலல்‌ சென்றிவை யைந்தறிவார்‌ &
இருளொன்‌ நிலாவகை யென்மனச்‌ தேற வியம்பினசே,.
தேற விபம்பினர்‌ சித்து மசித்து மிறையமென %
வேறு படும்வியன்‌ தத்துவ மூன்றும்‌ வினையுடம்பில்‌ %
கூறு படுங்கொடு மோகமுக்‌ தானிறை யாங்குறிப்பும்‌ %
மாற நினைந்தரு ளால்மறை தால்தந்த வாதியசே.
வாதியர்‌ மன்னுந்‌ தருக்கச்‌ செருக்ன்‌ மறைகுலையச்‌ *
சாது சனங்க ளஎடங்க நடுங்கத்‌ தனித்தனியே ஈ
ஆதஇயெ னாவகை யாரண தேகர்‌ சாற்றினர்‌ % ஈம்‌
போத மருந்துரு மாதுட னின்2 பு.ராணனையே.
நின்ற புராண னடியிணை யேந்து நெடும்பயனும்‌ *
பொன்றுத லேறிலை யென்றிடப்‌ பொங்கும்‌ பவக்கடலும்‌ %
ன்றிது தஇயதஇி தென்று நவின்‌ றவர்‌ ஈல்லருளால்‌ *
வென்‌2 புலன்களை வீடிடை வேண்டும்‌ பெரும்பயனே.
வேண்டும்‌ பெரும்பயன்‌ வீடென்‌ றறிந்து விதிவகையால்‌ &
நீண்டும்‌ குறுகிய நிற்கு நிலைகளுக்‌ கேற்குமன்பர்‌ %
மூண்டொன்றின்‌ மூல வினைமாயத்‌ துதலின்‌ முகுக்சனடி.
பூண்டன்றி * மற்றோர்‌ புகலொன்‌ நிலையென கின்றனசே.
நின்ற கிலைக்குற நிற்கும்‌ கருமமு கேர்மதியால்‌ %
நன்றென நாடிய ஞானமு நல்குழுட்‌ கண்ணுடையார்‌ &
ஒன்றிய ப த்திய மொன்றுமி லாவிரை வார்க்கு * அருளால்‌
அன்று பயன்தரு மாறு மறிந்தவ ரந்தணரே,
அந்தண .ரந்திய ரெல்லையி ணின்ற வனைத்துலகும்‌ 5
கொந்தவ ரேமூத லாக நுடங்கயெ ஈன்னியசாய்‌ %
வந்தடை. யும்வகை வண்டக வேந்தி வருந்திய % நம்‌
அந்தமி லாதியை யன்ப ரறிந்தறி Ms corr.
அறிவித்‌ தனரன்‌ பரையம்‌ பறையு முபாயமில்லா£ம்‌ &
Zl pall 5 துணியிற்‌ றுணையாம்‌ பரனை வரிக்கும்வகை 4
உறவித்‌ தனையின்றி யொத்தா ரெனஙின்ற வும்பரைநாம்‌ x
49றவித்‌ துயர்செகு வீரென்‌ நிழுக்கும்‌ பிழையறவே.
அ திகாரஸங்கிரஹம்‌ 97
௮/றவே பாமென்‌ நடைக்கலம்‌ வைத்தன ரன்‌அஈம்மைப்‌ *
பெறவே கருதிப்‌ பெருந்தகவுற்ற பிரானடிக்கிழ்‌ 4
உறவே யிவனுயிர்‌ காக்கின்ற வோருபி ௬ண்மையை 5 நி
மறவே லெனகம்‌ மறைமுடி சூடிய மன்னவரே, 19
மன்னவர்‌ விண்ணவர்‌ வானோ ரிறையொன்றும்‌ வான்கருத்தோர்‌ *
அன்னவர்‌ வேள்வி யனைத்து முடித்தன ரன்புடையாரக்கு &
என்ன வாந்தர வென்றும்‌ மத்தி கிரித்திருமால்‌ *
முன்னம்‌ வருந்தி படைக்கலங்‌ கொண்டசம்‌ முக்கியமே, 20
முக்யெ மந்திரங்‌ காட்டிய மூன்றி னிலையுடையார்‌ &
தக்கவை யன்றித்‌ தகாதவை யொன்றும்‌ தமக்கையார்‌ &
இக்கரு மங்க ளெமக்குள வென்னு மிலக்கணத்தால்‌ %
மிக்க வுணர்த்தியர்‌ மேதினி மேவிய விண்ணவரே. 21
விண்ணவர்‌ வேண்டி விலக்கின்‌ றி மேவு மடிமையெல்லாம்‌ $
மண்ணுல கத்தின்‌ ம௫ழ்ந்தடை சன்றனர்‌ வண்டுவரைக்‌ %
கண்ண னடைக்கலம்‌ கொளளக்‌ கடன்கள்‌ சுழற்றிய 5 நம்‌
பண்ண மருந்தமிழ்‌ வேத மறிந்த பகவர்களே. 99
வேத ம விந்த பகவர்‌ use Marae ir x
நாதன்‌ வகுத்த வசைபெரு நாமவ னல்லடியார்க்கு x
ஆகா மிக்க வடிமை யிசைந்தழி யாமறைநால்‌ &
நீதி நிறுத்தி நிலை்குலை யாவகை நின்றனமே.
ம்‌ Gs
நின்றன மன்புடை வானோர்‌ நிலையி னிலமளந்தான்‌ &
நன்றிது தீயதி தென்று நடத்திய நான்மறையால்‌ %
இன்று நமக்க வாதலி லிம்மதி பின்னிலவே
அன்றி * யடிக்கடி யாரிருள்‌ தீர்க்க வடியுளதே. 24
உள தான வல்வினைச்‌ குள்ளம்‌ வெருவி புலகளந்த *
வளர்தா மரையிணை வண்சரககை வரித்தவர்‌ தாம்‌ *
ale sr னெனவெழுவ்‌ கன்மக்‌ துறப்பர்‌ துறந்இடினும்‌ %
இளை தா நிலைசெக வெங்கள்‌ பிரானருள்‌ தேனெழுமே. 25
34 தேனார்‌ கமலச்‌ இருமகள்‌ நாதன்‌ இகழ்ச்துறையும்‌ *
வானா டுகந்தவர்‌ வையத்‌ திருப்பிடம்‌ வன்றருமக்‌ %
கானா ரிமயமுக்‌ கங்கையும்‌ காவிரி யுங்கடலும்‌ %
நானா நகரமும்‌ காகமுங்‌ கூடிய ஈன்னிலமே, 26
38 தேசிகப்ரபந்தம்‌
நன்னில மாமது நற்பக லாமது நன்னிமித்தம்‌ *
என்னனு மாமது யாதா மரங்க ரடியவர்க்கு ஈ
மின்னிலை மேனி விடும்பய ணத்து விலக்கலெதோர்‌ &
கன்னிலை யாநடு காடி வழிக்கு நடைபெறவே.
நடைபெற வங்கிப்‌ பகலொளி நாளுத்த ராயணமாண்டு %
இடைவரு காற்றிர வியிர வின்படு மின்வருணன்‌ %
குடைபுடை வானவர்‌ கோமான்பிச சாபஇ யென்றிவரால்‌ %
இடையிடை போசங்க ளெய்தி யெழிற்பச மேறுவசே.
ஏறி யெழிற்பத மெல்லா வுயிர்க்கு மிசமுகக்கும்‌ &
நாறு துழாயமுடி. நாதனை கண்ணி யடிமையினம்‌ %
கூறு கவர்5த குருக்கள்‌ குழாங்கள்‌ குசைகழற்டூழ்‌ 3
மாறுத லின்றி மகழ்ந்தெழும்‌ போகத்து மன்னுவமே.
ம மன்னு மனைத்துற வாயமருள்‌ மாற்றரு ளாழியுமாய்த்‌ %
கன்னினை வாலனைத்‌ அக்தரித்‌ தோங்கும்‌ தனியிறையாய்‌ &
இன்னமு ததீதமு தாலிரங்‌ குக்இரு காரணனே %
மன்னிய வன்சரண்‌ மற்மோபரற்‌ றின்றி வரிப்பவர்க்கே.
வரிக்கின்ற நன்பன்‌ யாவளை யென்னு மறையதனில்‌ %
விரிக்கன்‌ உ தங்குறி யொன்ளுால்‌ வினையசை யாதலினாம்‌ %
உரைக்கின்ற நன்னெறி யோரும்‌ படிகளி லோர்ந்து & உலகம்‌
தரிக்கன்ற தாரக னார்தக வால்தரிக்‌ கன்றனமே.
தகவால்‌ தரிக்கின்‌.ஐ தன்னடி. யார்களை ச்‌ கன்‌.இறத்தில்‌ 2
மிகவா தரஞ்செய்யு மெய்யருள்‌ வித்தகன்‌ மெய்யுசையின்‌ x
அ௮சவா யறிக்தன சாரண 6S) கெறிகுலைதல்‌ %
உசுவா செனவெங்கள்‌ தேக ருண்மை யுரைத்தனமே.
உண்மை யுரைக்கு மறைகளி லோங்கிய வுத்தமனார்‌ %
வண்மை யளப்பரி காதலின்‌ வந்து கழல்பணிவார்‌ %
தண்மை இடந்திடத்‌ தாமள வென்ன வியப்பிலதாம்‌ %
உண்மை யுரைத்தன ரோரக்‌ தவிர வுயர்ந்தனசே.
உயர்ந்தரங்‌ காவல னல்லார்க்‌ குரிமை துதந்துயிராய்‌ 5
மயர்க்சமை இரந்து மற்றோர்‌ வழியின்றி யடைக்கலமாய்ப்‌ x
பயந்தவன்‌ நாரணன்‌ பாதங்கள்‌ சேர்ந்த பழவடியார்‌ 4
கயந்தகுற்‌ ஹேவலெல்‌ லாகாடு நன்மனு வோதினமே,
அ.திகாரஸங்கிரஹம்‌ 90
ஓ.து மிரண்டை யிசைந்தரு ளாலுத வுர்இருமால்‌ ஈ
பாதமிரண்டுஞ்‌ ச£ாணெனப்‌ பற்றிஈம்‌ பங்கயத்தாள்‌ &
நாதனை ஈண்ணி ஈலந்இிகழ்‌ காட்டி லடிமையெல்லாம்‌ %
கோதி லுணர்த்தி யுடன்கொள்ளு மாறு குறித்தனமே, 95
குறிப்புடன்‌ மேவும்‌ தருமங்க ளின்‌றியக்‌ கோவலனார்‌ &
வெறித.துள வக்கழல்‌ மெய்யா ணென்று விரைந்தடைந்து %
பிறித்த வினைத்இரள்‌ பின்றொட. ராவகை யப்பெரியோர்‌ &
மறிப்புடை மன்னருள்‌ வாசகத்‌ தால்மரு எம்றனமே, 20
மருள ற்ற தே௫கர்‌ வானுகப்‌ பாலிந்த வையமெல்லாம்‌ &
இருளற்‌ றிறையவ னிணையடி பூண்டி.ட வெண்ணுதலால்‌ &
டு தீருளுற்ற செந்தொழிற்‌ செல்வம்‌ பெருடுச்‌ இறந்தவர்பால்‌ &
அருளுற்ற சர்தையி னாலழி யாவிளக்‌ கேற்றினசே. 37
ஏற்றி மனத்தெழில்‌ ஞான விளக்கை யிருளனைத்தும்‌ _
மாற்றி னவர்க்கு % ஒரு கைம்மாறு மாயனுங்‌ காணகில்லான்‌
போற்றி யுகப்பதும்‌ புந்தியிற்‌ கொள்வதும்‌ பொங்குபுகழ்ச்‌ *
சரற்றி வளர்ப்பதுஞ்‌ சற்றல்ல வோழமுன்னம்‌ பெற்றதற்கே, 38
முன்பெற்ற ஞானமு மோகந்‌ துறக்கலு மூன்றுளையில்‌ #
தன்பற்ற தன்மையும்‌ தாழ்க்தவர்க்‌ கய்‌ சனித்தகவும்‌ *
மன்பற்றி நின்ற வகையுரைக்‌ கின்ற மறையவர்பால்‌ *
சின்பற்றி யென்பயன்‌ €றி வோர்க்குவை செப்பினமே. 39
3 செப்பச்‌ செவிக்கமு கென்னத்‌ இகழுஞ்‌ செழுங்குணத்துத்‌ *
தப்பற்‌ றவரக்குத்‌ தாமே யுகந்து தருந்தகவால்‌ &
ஒப்பற்ற நான்மறை யுள்ளக்‌ கருச்தி லுரைத்துரைத்த & |
மூப்பத்‌ இரண்டிவை முத்தமிழ்‌ சேர்ந்ச மொழித்இருவே. 40
எண்‌சர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்‌
13 புருடன்மணி வரமாகப்‌ பொன்று மூலப்‌
பிரகிருதி மறுவாக மான்தண்டாகத்‌ 4
தெருள்மருள்வாள்‌ மல றவாக வாங்கா ரங்கள்‌
சார்ங்கஞ்சங்‌ காக மனச்‌ இகிரியாக &
இருடி.சங்க OF OES FIGS ors
விருபூத மாலைவன மாலை யாகக்‌ ¥
கருடனுரு வாமறையின்‌ பொருளாகங்‌ கண்ணன்‌
கரிரிமே னின்‌ நனைத்துக்‌ காக்கின்‌ ரூனே, ட 41
40 தேததசிகப்ரபதந்தம்‌
4) இராத வருளமுதம்‌ பொதிந்த கோயில்‌
அம்புயக்தோ னயோத்திமன்னா்க்‌ களித்த கோயில்‌ %
தோலாத தனிவீரன்‌ தொழு, கோயில்‌
துணையான வீடணற்குத்‌ துணையாங்‌ கோயில்‌ %
சேராத பயனெல்லாஞ்‌ சேர்க்குங்‌ கோயில்‌
செழுமறையின்‌ முதலெழுத்துச்‌ சேந்த கோயில்‌ %
இராத விளையனைத்துக்‌ திர்க்கும்‌ கோயில்‌
இருவரங்க மெனத்திகழுங்‌ கோயில்‌ தானே. 49
14 கண்ணனடி யிணையெமக்குக்‌ காட்டும்‌ வெற்புக்‌
கடுவினைய ரிருவினையுங்‌ கடியும்‌ வெற்புத்‌ %
இண்ணமிது வீடென்னத்‌ இகழும்‌ வெற்புத்‌
தெளிந்தபெருசக்‌ தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு %
புண்ணியத்தின்‌ புகலிதென்னப்‌ புகழும்‌ வெற்புப்‌
பொன்னுலகல்‌ போகமெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு %
விண்ணவரு மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
.. வேங்கடவெற்‌ பெனவிளங்கும்‌ வேக வெற்பே, 43
௮/அ£ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
14 உத்தம வமர்த்தல மமைத்ததொ செழிற்றனு வுயர்த்த கணையால்‌ *
அ௮த்திறவரக்கன்முடி ப தீதுமொருகொத்தென வுதிர்த்ததிறலோன்‌ %
மத்‌ தற மிகுத்ததயிர்‌ மொய்த்த வெணெய்‌ வைத்ததுணு மத்தனிடமாம்‌ *
அக்கினி பத்தர்வினை தொத்தற வறுக்குமணி யத்திகரியே,. 44
எழு?ர்ச்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
எட்டுமா மூர்த்தி யென்கண்ண னெண்டிக்கு எட்டிறை யெண்பிர இருதி *
எட்டுமாவரைகளீன்றவெண்குணத்தோன்‌எட்டெணுமெண்குணமதியோர்க்கு
எட்டுமா மலபெண்‌ சித்தியெண்‌ பத்தி எட்டு யோசாங்க மெண்செல்வம்‌
எட்டுமா குணமெட்‌ டெட்டெணுங்‌ கலைஎட்டி ரதமேலனவு மெட்டினவே,
எண்சர்ச்கழிகெடிலாசிரியவிரு கச்சம்‌
ஒண்டொடியாள்‌ இருமகளுச்‌ தானு மாகி
யொருநினைவா லீன்றவுயி செல்லா மூய்ய %ஈ
வண்டுவசை ஈகர்வாழ வசுதே வர்க்காய்‌
மன்னவர்க்குத்‌ தேர்ப்பாக னாகி நின்ற %
தண்டுளவ மலர்மார்பன்‌ தானே சொன்ன
தனித்தருமந்‌ தானெமக்காய்த்‌ தன்னை யென்றும்‌ : சண்டுகளிச்‌ தடிசூட விலக்காய்‌ நின்ற
சண்புதையல்‌ விளையாட்டைக்‌ கழிக்கின்‌ னே. 40
asi ran Hasan
மூண்டாலு மறியதனின்‌ முயல வேண்டா
மூன்னமதி லாசைதனை விடுகை இண்மை &
வேண்டாது கரணகெறி வேறோர்‌ கூட்டு
வேண்டிலய னத்திரம்போல்‌ வெள்ு நிற்கும்‌ ஈ
நீண்டாகு நிறைமதியோர்‌ நெறியில்‌ கூடா
நின்றனிமைக்‌ அணையாக வென்றன்‌ பாதம்‌ %
பூண்டாலுன்‌ பிழைகளெல்லாம்‌ பொறுப்பெ னென்று
புண்ணியனார்‌ புகழனைத்தும்‌ புகழு வோமே,
சாதனமு நற்பயனு நானே யாவன்‌
சாதகனு மென்வசமா யென்னைப்‌ பற்றும்‌ %
சாதனமுஞ்‌ சரணகெறி யன்று மக்குச்‌
சாதனங்க ஸிந்நிலைக்கோ ரிடையி னில்லா %
வேதனைசேர்‌ வேறங்க மிதனில்‌ வேண்டா
…. வேறெல்லா நிற்குநிலை கானே நிற்பத்‌ ஈ
தூதனுமா நாசனுமா மென்னைப்‌ பற்றிச்‌
சோசந்தி ரெனவுசைத்தான்‌ சூழ்கின்‌ முனே.
தன்னினைவில்‌ விலக்கன்‌ றித்‌ தன்னை நண்ணார்‌
நினைவனைத்துர்‌ தான்விளை தீதும்‌ விலக்கு நாதன்‌ &
என்னினைவை யிட்பவத்தி லின்று மாற்றி 4
யிணையடிக்க ழடைக்கலமென்‌ றென்னை வைத்து 5
மூன்னினைவால்‌ யான்முயன்ற வினையால்‌ வந்த
முனிவயர்ந்து முத்திசா முன்னே தோன்றி %
நன்னினைவால்‌ நா.மிசையுங்‌ கால மின்றோ ப
நாளையோ வென்றுநகை செப்இன்‌ ரூனே.
கட்டளைக்கலித்துறை
$% பாட்டுக்‌ குரிய பழையவர்‌ மூவரைப்‌ பண்டொருகால்‌ %
மாட்டுக்‌ கருள்தரு மாயன்‌ மலிந்து வருத்துதலால்‌ *
நாட்டுக்‌ இருள்செக நான்மறை யந்தி ஈடைவிளங்க %
வீட்டுக்‌ டைகழிக்‌ கேவெளி காட்டுமிம்‌ மெய்விளக்கே,
ஆசிரியவண்ணவிரு தீதம்‌
13 உறுசகட முடையவொரு காலுற்‌ ௮ணர்க்தன ஈ
உடன்மருத முடையவொரு போதிற்‌ றவழ்க்தன %
உறிதடவு மளவிலுர லுடுற்று நின்றன ஈ
உறுநெறியோர்‌ தருமன்விடு தூதுக்‌ குகந்தன %
6
41
41
48
49
50
49 ்‌. தேேசிகப்ரபச்தம்‌
node Sur முறியபிரு தானத்‌ அவந்தன
மலராமகள்கை வருடமலர்‌ போதல்‌ இவர்சன %
மறுபிறவி யறுமுனிவர்‌ மாலுக்‌ இசைந்தன உ…
மனுமுறையில்‌ வறாவதோர்‌ விமானக்‌ அறைந்தன &
அ௮.றமுடைய விசயனமர்‌ தேரில்‌ இகழ்ந்தன &
அடலு. ரக படமடிய வாடிக்‌ கடிர்தன &%
அனுசமய மறிவரிய தானச்‌ தமர்ரந்தன *
வணிகுருகை நகர்முனிவர்‌ Gras SOLE BOT %
வெறியுடைய துளவமலர்‌ வீறுக்‌ கணிக்தன &
விமுகரியோர்‌ குமானென மேவிச்‌ சறக்கன *
விறலக.ரர்‌ படையடைய வீயத்‌ தொடர்ந்தன &
விடலரிய பெரியபெரு மாள்மெய்ப்‌ பதங்களே.
எண்சர்க்கமிநெடிலா௫ரியவிருக்தம்‌
மறையுளைக்கும்‌ பொருளெல்லா மெய்யென்‌ ஹோர்வார்‌
மன்னியகூர்‌ மதியுடையார்‌ வண்ணா ஊாக்இல்‌ %
கூறையுரைக்க கினைவில்லார்‌ குருக்கள்‌ தம்பால்‌
கோதற்ற மனம்பெற்றார்‌ கொள்வார்‌ கன்மை &
சிறைவளர்க்குஞ்‌ சிலமாந்தர்‌ சங்கே தத்கால்‌
கதையாக இண்மதஇுயோர்‌ தெரிந்த தோரார்‌ &
பொறைநிலத்தில்‌ மிகும்புனிதர்‌ காட்டு மெங்கள்‌
பொன்றருாத நன்னெளியில்‌ புகுது வாரே.
கட்டஜாக்கலி தீதுறை
இதவழி யின்னமு கென்றவ ரின்புலன்‌ வேறிடுவார்‌
இதுவழி யாமல வென்றறி வாடெங்கள்‌ தேசிக %
இதுவழி யெய்துக வென்றுகப்‌ பாலென்‌ பிழைபொறப்பார்‌
இனுவழி யாமறை யோரரு ளால்யா மிசைக்‌ கனமே.
43 எட்டு மிரண்டு மறியாக வெம்மை Wenaiw 9D & 51 x
எட்டவொண்ணாகத விடந்தரு மெங்களம்‌ மாதவனார்‌ %
மூட்ட வினைத்தொள்‌ மாள முயன்றிடு மஞ்சலென்ளார்‌ &
கட்டெழில்‌ வாசகச்‌ தால்கலங்‌ காநிலை பெற்றனமே.
++ வானு எமாகர்க வாக்கும்‌ வருக்க வருகிலைகள்‌ ஆ
தாணுள னாயுகக்‌ குந்த. மிங்கு ஈமக்குளதே &
கூனுள கெஞ்சுக ளாற்குற்ற மெண்ணி பிகழ்க்இடினும்‌ &
சேனுள பாத மலர்த்தரு மாலுக்குக்‌ இத்‌்இக்குமே,
அ௮ம்ருதாஸ்வாதி நி 43
$$ வெள்ளைப்‌ பரிமுகர்‌ தேக ராய்விர காலடியோம்‌ 5
உள்ளத்‌ தெழுகிய தோலையி லிட்டனம்‌ யாமிதற்கென்‌ &
கொள்ளத்‌ அணியினுங்‌ கோகென்‌ நிகழினுங்‌ கூர்மதியிர்‌ &
எள்ளத்‌ தனைய வாதிக மாதென்‌ னெழின்மஇயே, 56
அடிவரவு: “பொய்கை, இன்பத்தில்‌, என்னுபிர்‌, 47 om gre, நீள
வரு, காளம்வலம்‌, ஆளுமடை, இருவுடன்‌, –ப்ருடன்‌, ஆராத, கண்ணன்‌,
உத்தம, எட்டுமாமூர்‌த்தி, ஒண்தொடியாள்‌, மூண்டா லும்‌, சாதனமும்‌,
சன்னினைவில்‌, பாட்டுச்கு, உஐசகடம்‌, வறை, இதுவழி, எட்டும்‌, வானுள,
வெள்ளை. (மூலம்‌) .
மாயாவாத புஜங்க பங்க கருடாயநம?
தேிகர்‌ திருவடிகளே சரணம்‌.
ஆக ப்ரபந்தம்‌ 8-க்கு பாசுரம்‌-95
அதிகாரசங்ெஹம்‌ ஷம்பூர்ணம்‌.

மூன்றாவது
அம்ருதா ஸ்வாதிநி
கட்டளைக்சலித அறை
34 மூலங்‌ ளையென வொன்றிசண்‌ டான மொழியிரண்டும்‌ %
மேலொன்‌ றிலையென நின்றவவ்‌ வித்தகன்‌ தன்னுரையும்‌ %
காலங்‌ கழிவ, தன்‌ முன்னங்‌ கருத்துறக்‌ கண்டிடவே *
ஞாலம்‌ புகழுஈந்‌ தேசிகர்‌ தானம்மை வைத்தனமே, i
எண்சிர்க்கழிகெடிலாசிரியவிருததம்‌
கா.ரணமுங்‌ காவலனு மாக யென்றுங்‌
கமலையுடன்‌ பிரியாத நாத னான %
நா.ரணானுக்‌ கடியேனா னடிமை பூண்ட
நல்லடியார்க்‌ கல்லான்மற்‌ ஜொருவர்க்‌ சல்லேன்‌ %
ஆரணங்கள்‌ கொண்டகமும்‌ பு.றமுங்‌ கண்டால்‌
அறிவாகி யறிவதுமா யறுநான்‌ கன்றிச்‌ %
உரணிந்ச சுடர்போலக்‌ இகழ்ந்து நின்றேன்‌
சிலைவிசயன்‌ தோனையச்‌ சிறுவே தத்தே. ட்‌
கட்டளைக்கலிததுறை
யானென தென்பதொன்‌ நில்லையென்‌ செய்வ தவனையல்லால்‌
ஆன துறிந்திடுக குன்னடி யார்க்கென்னை யாட்படுத்தத்‌ *
தானென்னை நல்கி நடத்துகின்‌ ரூன்தன்‌ னருள்வழியே x
கானுன்னை வீடுசெய்‌ வேனென்று நந்திரு காரணனே. ப
Art CGsHatiou 6 sw
யாதா மிவையனைச்‌ தும்படைத்‌ தேர்து மிறைவனுமாய்க்‌ %
கோதா குணங்க ஞுடன்குறு காத குணத்தனுமாய்‌ &
மாதா பிதாவென மன்னுற வாயக்கதி யென்ன நின்றான்‌ x
போதார்‌ திருவுடன்‌ பொன்னராள்‌ பூத்தரம்‌ புண்ணியனே.
எண்‌்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
இருவிலங்கு கழித்திடரா முடலக்‌ சன்னில்‌
இலங்குஈடு நாடியினா லெம்மை வாங்கி %
ஒருவிலங்கு கெறியில்லா வழியால்‌ மன்னு
மூயர்வானி லேற்றியுயிர்‌ நிலையும்‌ தந்து &
பெருவிலங்கா மருள்‌ தன்னால்‌ தன்னடிக்‌ கீழ்ப்‌
பிரியாத வகைபூணப்‌ பிணைத்துத்‌ # தன்னார்‌
உருவிலங்கு மிசைவிக்கு மும்பர்‌ போகம்‌
உகந்து தருக்‌ இருமாலை புகந்தோ காமே.
உறவையிசைந்‌ இறையில்லா வொளுவர்க்‌ கென்று
மொண்சுடரா யோயொழுத்தி லோங்கி நின்றோம்‌ %
தறவறமுச்‌ தூய்மஇயுக்‌ அயரந்‌ தீர்ப்புக்‌
அய்யவர்கட்‌ கானமைய மி.ரண்டி லுற்றோம்‌ *
அறமுயலு மனைத்துறவா யனைதீது மேந்தும்‌
அ௮ம்புயத்தசாள்‌ கணவனைகா மணுகப்‌ பெற்மோோம்‌ &
பிறவியறுத்‌ தடிசூடி. யடிமை யெல்லாம்‌ |
பிரியாச வமரருடன்‌ பெற்றோ நாமே.
கருமமென ஞானமென வதனாம்‌ சண்ட
வுயிர்கவருங்‌ காதலெனக்‌ கானி லோக்கும்‌ &
அருமறையால்‌ தருநிலையி லிர்கா ளெல்லாம்‌
அடியேனை யலையாத வண்ண மெண்ணிழ்‌ உ
தரும மூடை யாருரைக்க யான றிந்து
தனக்கென்னா வடிமைக்காம்‌ வாழ்க்‌ வேண்டி.ம்‌ 4
இருமகளோ டொருகாலும்‌ பிரியா நான்‌
இண்கமலே சேதுவெனச்‌ சேர்சன்‌ ஜேனே,
வினைவிடுகத்‌து வியன்குண த்‌.கா லெம்மை யாக்க
வெருவுரைகேட்‌ டவைகேட்சு விளம்பி ஞளும்‌ %
தனையனைத்து மடைந்‌ ‘இடத்கா னடைந்து ரின்ற
தன்திருமா அடனிழையம்‌ தனியா காதன்‌ ஈ
அமருதாஸ்வாதிறி
நினைவழிக்கும்‌ வினைவழிக்கு விலக்காய்‌ நிற்கும்‌
நிகரில்லா நெடுங்குணங்கள்‌ நிலைபெறச்‌ ஈ தன்‌
கனைகழத்‌ே மடைக்கலமாக்‌ காட்டு தந்து
கரரணனாக்‌ தன்காவல்‌ சவர்சன்‌ ரூ£ேே.
$% என்னஅயான்‌ செய்கின்றே னென்னா தார்க்கு
இன்னடி.மை தந்தளிப்பா னிமையோர்‌ வாழும்‌ &
பொன்னுலடல்‌ இருவுடனே யமர்ந்த காதன்‌
புனலாரும்‌ பொழிலரங்கர்‌ இகழ மன்னித்‌ &
தன்னகல மகலாத சகவா லோக்கும்‌
தசவுடனே சன்கருமர்‌ தானே யெண்ணி *
cars வடைச்கலங்கொண்‌் டஞ்சல்‌ தநதென்‌
அழலாற சிழலாச வழிக்சின்‌ மூனே.
ஒண்டொடியாள்‌ இருமகளுர்‌ தானு மாகி
யொருகினைவா லின்றவுயி செல்லா மய்ய %
வண்டுவரளை ஈகர்வாம வசுேே வர்க்காய்‌
மன்னவர்க்குத்‌ தேர்ப்பாக னாடு நின்ற *
தண்டுளவ மலர்மார்பன்‌ தானே சொன்ன
தனித்தருமர்‌ தானெமக்காய்ச்‌ சன்னை யென்றும்‌ %
கண்டுகளிச்‌ தடிஞளூட விலக்காய்‌ Sar pe
கண்புதையல்‌ விளையாட்டைக்‌ கழிக்கின்‌ -ருனே.
கட்டளைக்‌ கலித்துறை
அய்ய மனத்தர்‌ துறையணு காத அணையிலியென்‌ &
ஐய மறுத்துன தாணை கடத்த லகற்றினை % நீ
கையமர்‌ சக்கரச்‌ காவல்நீ காக்குந்‌ இருவருளால்‌ %
வைய மளந்ச வடிக்சீழ்‌ அடைக்கலம்‌ வைத்தருளே,
எண்‌€ர்க்கழிநெடிலாசிரியவிரு தீதம்‌
அறியாத விடைச்சியரு மறியம்‌ வண்ணம்‌
அம்புயத்தா ஞுடனக்கா ளவ தரித்த %
குறையாது மில்லாத கோவிந்‌ தாரின்‌
குரைகழற்ே ழடைக்கலமாக்‌ குறிப்பு தந்தாய்‌ %
வெறியாரு மலர்மகளும்‌ நீயும்‌ விண்ணில்‌
விண்ணாவர்க எடி.ரூட. விருக்கு மேன்மை &
குறையாக விளையகற்றி யடிமை கொள்ளக்‌
. க ப்‌ a ரி re குலுகவொரு ஈன்னாள்றி கூறித்‌ டாயே.
45
10
40 தேரிகப்ரபந்தம்‌
தித்துவமுஞ்‌ சாதனழாம்‌ பயனு காட்டு
தாரமுத லிருகான்குர்‌ தன்‌ கருத்தால்‌ &
முத்திவழி காமுயலும்‌ வகையே காண
முகுந்தனிசைந்‌ தருள் செய்த வைந்தா லைந்தும்‌ &
பத்திதனில்‌ படி.வில்லார்‌ பாஞ்‌ சுமத்தப்‌
பார்த்தன்தேர்‌ முன்னேதான்‌ தாழ கின்ற
உத்தமனார்‌ & உத்தமநல்‌ லுரைகா லெட்டும்‌
. உணர்ந்தவர்தா முகந்தெம்மை யுணர்வித்‌ தாரே. 13)
கட்டளைக்‌ கலித்‌. துறை
பரக்கும்‌ புகழ்வரும்‌ பைம்பொருள்‌ வாய்த்‌ இடும்‌ பத்தர்களாய்‌ ஈ
. இசக்கின்‌ றவர்க்கெுை மிந்தா லறமுள தென்றியம்பார்‌ %
காக்குங்‌ கருத்துடைத்‌ தேடுகர்‌ சன்றென ஈம்மை யெண்ணிச்‌ x
சுரக்குஞ்‌ கரபிசகள்‌ போற்சொரி கின்றனர்‌ சொல்லமுதே,. 14
சோகச்‌ தவிர்க்குஞ்‌ சரூ.இப்‌ பொருளொன்று சொல்லுன்றேன்‌ 5
நாகர்‌ தனக்கு மிராக்கதர்க்‌ குக்ஈமக்‌ குஞ்சரணாம்‌ ஈ
ஆகண்‌ டலன்மசக னாகிய வாவலிப்‌ பேரியதோர்‌ %
காகம்‌ பிழைத்திடச்‌ கண்ணழி வேசெய்த காகுத்தனே. 15
எண்சர்க்கழிநெடிலா௫ிரியவிருத்தம்‌
ஒருக்காலே சரணாக வடைஅன்‌ ருர்க்கும்‌
உனக்கடிமை யாகின்றே னென்௫ுன்‌ ருர்க்ரும்‌ %
௮ருக்காதே யனைவர்க்கு மனைவ ராலும்‌
௮ஞ்சேலென்‌ தருள்கொடுப்ப னிதுதா னோறும்‌ %
இருக்காலு மெழில்முனிவர்‌ நினைவி னாலும்‌
இவையறிவார்‌ செயலுடனென்‌ ஸிசைவி னாலும்‌ %
நெருக்காத நீள்விரத மெனக்கொன்‌ றென்னு
கெறியுசைத்தார்‌ கிலையுணர்ந்து நிலைபெற்‌ றோமே, 10
கட்டளைக்‌ கலித்‌ துறை
பொன்னை யிகழ்ந்து விருகங்கள்‌ புல்லிய புல்லுகந்தால்‌ %
மன்ன மெடுப்பதப்‌ பொன்னல தேமன்‌ னுலகனைத்தும்‌ %
தன்னை யடைந்திடத்‌ தானருள்‌ செப்பும்‌ தணிச்சிலையோன்‌ &
பொன்னடி நாமடைந்‌ தோம்புற மாறென்கொல்‌ செய்திடினே, 11
வேதத்‌ இரளில்‌ விதியுணாந்‌ தோர்கள்‌ விரித்துரைர்த & i
காதம்‌ கதியையு ஞானத்‌ தையுங்கரு மங்களையும்‌ ஃ
அம்ருதாஸ்வாதிநி 47
சாதிக்க வல்ல சரணா கஇதனி னின்றகிலை %
ஓதத்‌ தொடக்கு மெழுத்தின்‌ இறத்தி னுணா்மின்களே. 18
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
மூவுலகுக்‌ தன்பிழையைத்‌ தானே சாற்ற |
முனிவர்களுக்‌ தேவர்களு முணிந்த வந்நாள்‌ ¥
தாவரிதா யெங்கும்போய்த்‌ தளர்ந்து வீழ்ந்த
தனிக்காகர்‌ தானிரந்த வுயிர்‌ வழங்கிக்‌ %
காவலினி யெமக்கெங்குங்‌ கடனென்‌ றெண்ணிக்‌
காணநிலை பிலச்சினையன்‌ நிட்ட வள்ளல்‌ *
ஏவல்பய ஸனிரக்கமிதுக்‌ காறென்‌ ரோதும்‌
எழிலுடையா ரிணையடிக்க ழிருப்போ நாமே, 19
கட்டளைக்‌ கலித்‌ துறை
திருத்தம்‌ பெரியவர்‌ சேறாம்‌ துறையில்‌ செறிவிலர்க்கு *
வருத்தங்‌ கழிந்த வழிபரு ளென்றஈம்‌ மண்மகளார்‌ %
கருத்தொன்ற வாதி வராக முரைத்த கதியறிவார்‌ %
பொருத்தர்‌ தளிந்துரைக்‌ கப்பொய்‌ யிலாமதி பெற்றனமே, 210]
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
இடம்பெற்றா ரெல்லாமென்‌ னுடலாய நிற்க
விடாபிறப்பொன்‌ றிவையில்லா வென்னை யன்பால்‌ %
அடம்பற்றா மவனென்று நினைந்தான்‌ யாவன்‌
அவனாவி சரியும்போ தறிவு மாறி %
உடம்பிற்றாு னுபலம்போல்‌ கடக்க நானே
புய்பும்வகை நினைந்துயர்ந்த சதியா லென்றன்‌ %
இடம்பெற்றென்‌ லுடல்வாழ வெடுப்ப னென்ற
வெம்பெருமா னருள்பெற்று மருள்செற்‌ ரோமே, 91
கட்டளைக்‌ கலித்துறை
இரண்டூசை யாதநம்‌ மேன முரைத்த வுரையிரண்டின்‌
இரண்ட பொருள்க டெளிந்தடி சூடினர்‌ இண்ணிருளால்‌
சுருண்டகஞ்‌ ஞானச்‌ சுடசொளி சுற்றும்‌ பரப்பதன்முன்‌
புரண்டது நம்வினை போமிடம்‌ பார்த்தினிப்‌ போமள வே. 22
மலையுங்‌ குலையுமென்‌ றெண்ணியும்‌ வன்பெரும்‌ புண்டிரங்குத்‌ #
தலையும்‌ வெளுத்தபின்‌ னே யஹிய விசைகன்‌ றிலீர்‌ %
அலைபுங்‌ கடல்கொண்ட. வைய மளித்தவன்‌ மெய்யருளே %
நிலையென்று நாடி நிலைநின்ற பொயம்மதி மீக்குமினே, 93
48 கேதேசிகப்ரபதந்தம்‌
சண்ணன்‌ கழல்தொழச்‌ கூப்பிய கையின்‌ பெருமைகன்னை 8
எண்ணங்‌ கடக்க யமுனைத்‌ அறைவர்‌ இயம்புதலால்‌ *
இண்ண மிதுவென்று தேறித்‌ தெளிந்தபின்‌ சின்மதியோர்‌ *
பண்ணும்‌ பணிதஇிகள்‌ பாற்றிப்‌ பழந்தொழில்‌ பற்றினமே, 24
எண்சிர்க்கழிகெடி.லாசிரியவிருதீதம்‌
பொங்குபுன’ லாறுகளிற்‌ புவன மெல்லாம்‌
பொன்கழலா லளச்தவன்தன்‌ தாளால்‌ வந்த %
கங்கையெனு நதஇிபோலக்‌ கடல்க ளேழில்‌
கமலைபிறர்‌ தவனுகர்ச கடலே போலச்‌ &
சங்குகளி லவனேர்‌ ஞ்‌ சங்கே போலத்‌
்‌ தகாரிலவன்‌ தண்டுளவக்‌ தாே போல *
எங்கள்குல பதிகளிவை மேலா மென்றே
யெண்ணியகல்‌ வார்த்தைகள்‌ கா மிசை௫ன்‌ -ரோமே. 25
சிர்ச்கடலின்‌ இரையென்னச்‌ தசவால்‌ மிக்க
தேசிகராய்த்‌ இணியிருளாங்‌ கடலை நீக்கப்‌ *
பாற்கடலோன்‌’ இருவணையாய்‌ நின்று பாரங்‌
சாணாத பவக்கடலைக்‌ உடத்து இன்றான்‌ 4
நீர்க்குமாக்‌ கலமென்ன விரைவ ரின்ப
மெழுந்தழியுங்‌ ரூமிழியென விகந்தொ ழிந்£தோம்‌ %
ஆர்க்கனிநா மென்கடவோ நமக்கு மாசென்‌
கடவாரென்‌ றடைந்தவர்கட்‌ கறிவித்‌ தோமே. 26
+t காசினியில்‌ வரையனைத்துவ்‌ சாயா வண்ணான்‌
கடைந்தெடுக்க செளத்துவ தீன்‌ சாமைக்‌ சொவ்வா %
காசிமுத லாகியஈன்‌ னகரி யெல்லாவ்‌
கார்மேனி யருளாளர்‌ கச்டக்‌ கொவ்வா &
மாசின்மனக்‌ தெளிமுனிவர்‌ வகுத்த தெல்லாம்‌
மாலுகந்த வாரியர்‌ வார்த்தைக்‌ கொவ்வா &
வாசியறிந்‌ இவையுரைத்தோம்‌ வையத்‌ அள்ளீர்‌
வைப்பாக விவைசொண்டு ம௫ூழ்மி னீரே. 211
$ம அந்தமிலாப்‌ பேரின்ப மறிந்த பேர்க்கு
அடியோமை யறிவுடனே யென்றுங்‌ காத்து %
மூந்தைவினை நிரைவழியி லொழுகா தெம்மை
முன்னிலையாக்‌ தேூகர்தம்‌ முன்னே சேர்த்து ட
அம்ருதாஸ்வாதிதறி
மந்திரழு மர்தரத்கின்‌ வழியும்‌ காட்டி
வழிப்படுத்தி வானேற்றி யடிமை கொள்ளக்‌ %
தந்தையென நகின்றதனித்‌ இருமால்‌ தாளில்‌
தலைவைக்தோம்‌ ச௪டகோப னருளி னாலே.
தான்‌ மனக்குத்‌ தன்னாலே தோன்றித்‌ தன்னோ
சொளியணைக்குக குணத்தாலுந தன்னைக்‌ கண்டு ௬
தான்றனக்கென்‌ றறியாத சன்கு ணத்தைக்‌
தன்குணத்தால்‌ தானிழையிக்‌ ரூனே கூட்டி #
ஊன்மருத்துப்‌ புலன்மனமா நாஸ்கா ரங்கள்‌
ஒருமூலப்‌ பிரகருஇ யன்றி நின்ற &.
நான்றனக்குச்‌ தான்றனக்கென்‌ றிசைவு தந்த
நா.ரணனை நான்மறையால்‌ கான்௧ண்‌ டேனே,
கழியாத கருவினையிற்‌ படிந்த ஈம்மைக்‌
காலமிது வென்றொருகால்‌ கரவல்‌ செய்து 4
பழியாத ஈல்வினையிற்‌ படிந்தார்‌ தாளி
பணிவித்துப்‌ பாசங்க ளடைய SERS %
சுழியாத செவ்வழியிற்‌ ௮ணைவ மோடே
தொலையாத பேரின்பர்‌ தரமே லேற்றி %
அழியாத வருளாழிப்‌ பெருமான்‌ செய்டிம்‌
அந்தமிலா வுதவியெல்லா மளப்பா ராசே.
34 நின்னருளால்‌ கஇயன்றி மற்றொன்‌ நில்லேன்‌
நெடுங்காலம்‌ பிழைசெய்த நிலை கழிந்தேன்‌ ஈ
உன்னருராக்‌ இனிதான நிலை யுகந்தேன்‌
உன்௪ரணே சரணென்னுந்‌ துணிவு பூண்டேன்‌ &
மன்னிருளாய்‌ நின்றநிலை யெமக்குச்‌ தீர்த்து
வானவர்தம்‌ வாழ்ச்சகொ வரித்தே னுன்னை &
இன்னருளா லினியெமக்கோர்‌ பாமேற்‌ மூமல்‌
என்‌ இருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே.
கட்டளைச்‌ கலித்‌ துறை
பரவும்‌ மறைகளெல்‌ லாம்பதஞ்‌ சோந்தொன்ற நின்றபிரான்‌ *
இவன்‌ றிரவியின்‌ காலக்‌ தழைத்த வெழிற்படையோன்‌ ஈ
அரவுங்‌ கருடனு மன்புட னேந்அ மடியிரண்டும்‌ 5
கரவெநர்‌ தமக்கரு ளால்கள ராமனக்‌ கந்தனனே,
7
49
28 3 ம்‌
20 கதேசிகப். ரபச்தம்‌
பதினான்குசர்க்கழி நெடிலாகிரியச்‌ சந்தவிருத்தம்‌
3% அலர்க்தவம்புயத்திருந்து தேனருந்தியின்னக
லல்குலாரசைந்தடைந்த ஈடைகொளாததனமெனோ &
ஈலர்தவிர்ச்சகாலதென்கொஞனாவின்வீறிழக்ககால்‌
நாவணங்குகாதர்தந்த நாவின்விீறிழந்ததென்‌ %
சலந்தவிர்கதுவாதசெய்து சாடி யுண்டமுண்டரைச்‌
சருூவிலாரெனக்கனைச்‌ துரைத்தவெ௫இராசர்கம்‌ %
வலந்தருங்கைகாயனார்‌ வளைக்கிசைந்தக£ர்த்தியால்‌
வாரிவாலகாமசென்று மாசில்வாலிவாமியே.
கட்டளைக்‌ சலித் துறை
சடையன்‌ இறலவர்‌ கள்பெரு ஞானச்‌ கடலதனை &
இடையமி மாது கடக்ூனு மீதள வென்றறியார்‌ *
விடையுட னேழன்‌ மடர்ச்தவன்‌ மெய்யருள்‌ பெற்தஈல்லோர்‌
அடைய வறிந்துளைக்‌ கவ்வடி யோழு மறிந்தனமே.
எண்‌ூர்க்கமிநெடிலாடிரியவிருத்தம்‌
பாவளருக்‌ தமிழ்மறையின்‌ பயனே கொண்ட
பாண்பெருமாள்‌ பாடியதோர்‌ பாடல்‌ பத்தில்‌ ஈ
காவலனுங்‌ கணவனுமாய்க்‌ கலந்து நின்ற
காரணனைக்‌ கருத்துறகான்‌ ௪ண்ட பின்பு %
கோவலனுஙக கோமானு மான வந்காள்‌
கு. ரவைபுணர்‌ கோவியா்தங்‌ குறிப்பே கொண்டு *
சேவலுடன்‌ பிரியாத பெடைபோல்‌ சேர்ந்து
இவினையோர்‌ சனிமையெல்லாந்‌ தீர்ந்தோ நாமே.
ஆதிமறை யெனவோகங்கு மரங்ககச்‌ அள்ளே
அருளாருல்‌ கடலைக்கண்‌ டவனென்‌ பாணன்‌ %
ஓஇயதோ ரிருகான்கு மிரண்டு மான
வொருபத்தும்‌ பற்றாக வுணாச்‌ அரைத்கோம்‌ %
நீதியறி யாதநிலை யறிவார்க்‌ கெல்லாம்‌
நிலையிதுவே யென்னுகிலை நாடி. நின்றோம்‌ %
வேதியர்தாம்‌ விரித்‌ துளைக்கும்‌ விளைவுக்‌ செல்லாம்‌
விதையாகு மிதுவென்னு விளம்பி னோமே.
43 காண்பனவு மூரளைப்பனவு மற்றொன்‌ றின்றிக்‌
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்‌ 5
பர்மபதஸோபாதம்‌ 51
பாண்பெருமா எருள்செய்த பாடல்‌ பத்தும்‌
பழமறையின்‌ பொருளென்று பரவு கின்றோம்‌ %
விண்பெரிய விரிஇசைநீர்‌ வையச்‌ துள்ளே
வேதாந்த வாரியனென்‌ நியம்ப நின்றோம்‌
நாண்பெரியோ மல்லோநாம்‌ ஈன்றுகந்‌ தீதும்‌
தமக்குரைப்பா ௬ுளென்று நாடு வோமே, ப 37
அடிவரவு:–மூலம்‌, காரணம்‌, யானென.த, யாதாமிவை, இருவிலங்கு,
உறவை, கருமம்‌, வினைவிடுத, என்ன, ஒண்டொடியாள்‌, தய்யமனச்தர்‌,
அறியாத, தத்‌ தவம்‌, பாக்கும்‌, சோகந்தவிர்க்கும்‌, ஒருக்காலே, பொன்னை,
வேதத்திரள்‌, மூவுலகும்‌, திருத்தம்‌, இடம்பெற்றார்‌. இரண்டு, மலையும்‌,
சண்ணன்‌, பொக்குபுனல்‌, சீர்க்கடல்‌, காசினியில்‌, ௮ச்தமிலா, தான்றனச்கு,
கழியாத, கின்னருளாம்‌, பரவும்‌, ௮அலர்ச்த, சடையன்‌, பாவளரும்‌, அதிமறை,
காண்பனவும்‌,. (௮.௨ற்புள்‌)
மாயாவாத புஜங்க பங்க கருடாயநம$
தேசிகர்‌ இருவடிகளே சாணம்‌,
ஆக ப்ரபந்தம்‌ 9-க்கு பாசரம்‌- 182
அம்ருதாஸ்வாதிறி ஊம்பூர்ணம்‌,

நான்காவது
பரமபதஸோபாதம்‌
aa NT Soe
தனியன்கள்‌
ars s ர
அஹெ_நடிசோஹ்‌ ு மாற வெ,
எண்சர்ச்கழிகெடிலாசிரீயவிருத்தம்‌
தேனேறு தாமரையாள்‌ தஇிருமார்‌ பன்றன்‌
இண்ணருளால்‌ அ௮வனடியில்‌ விவேகம்‌ பெற்று %
கூனேறு பவக்குழியை வெறுத்த தற்பின்‌
கூர்விரத்தி யுடன்வினையின்‌ இரளுக்‌ கஞ்சுக்‌ x
கூனேறு பிறையிறையோன்‌ சாபந்‌ தீர்த்தான்‌
குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு %
வானேறும்‌ வழிப்படிக ளடைவே கண்ட.
வண்புகழ்‌ அப்‌ புல்வள்ள லருள்பெற்‌ ஜோமே,.
கட்டளைக்கலித்துறை
14 அடற்புள்‌ எரசிலு மந்தணர்‌ மாட்டிலும்‌ % இன்னமூதக்‌
கடத்பள்ளி தன்னிலும்‌ காவிரி யுள்ளு முகந்தபிரான்‌ *
52 தேதிகப்ரபத்தம்‌
இடைப்பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெஇவானார்‌ %
மடைப்பள்ளி வந்த மணமெங்கள்‌ வார்த்சையள்‌ மன்னியதே.
கள்ள மனத்துடன்‌ சண்டு முயன்ற சகடுவினையால்‌ %
நள்ளிரு ளாழியி னற்சுவை யைக்தென காடியதோர்‌ &
அள்ளலி னாளும்‌ விழுந்தழி யாவகை யாரணாதால்‌ &
வள்ளல்‌ வழங்கிய வான்படி யான வழியிதுவே.
எண்சீர்க்கழிகெடிலாஇிரியவிருத்தம்‌
அருவுருவா னவையனைத்து மறிவா சேனும்‌
அருங்கலைகள்‌ கற்றுரைக்க வல்லா மேனும்‌ ௪
தருமவழி யழியாமழ்‌ காப்பா பேனுந்‌
தனிமறழையின்‌ தாத்பரியந்‌ தருவா டேனும்‌ %
இருவினையி னொழுக்கத்தா லேவ லோரா
இங்கேராஞ்‌ சிறையிருந்த வின்‌ தீர்க்கும்‌ %
இருமகளார்‌ பிரியாத தேவன்‌ இண்ணமர்‌
தேருதார்‌ இண்படியி லேரா தாயே.
கட்டளைக்‌ கலி.க. துறை
மறுத்தார்‌ இருவுடன்‌ மார்பில்‌ தரிக்சவன்‌ வாசகத்தை &
மறுத்தார்‌ மயக்கமு மற்றத னாலவநத. மாகரகும்‌ *
நிறுத்சார்‌ பவத்தி னெடுகா ஞூழன்றமை கண்டதனால்‌ &
வெறுத்தா ரணகெறி யேவெள்கி யோட விரைவர்களே.
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
வான்பட்ட மன்னிருளில்‌ மயங்கு மாறும்‌
ம AO sr Gem லெனையூமி சென்று வன்றோர்‌. at
ஊண்பட்ட வுடலாழி வினையொ ழிக்கில்‌
ஒருகரையுங்‌ காணாதே யொழுகு மாறும்‌ x
தேன்பட்ட விடம்போலத்‌ இத்இக்‌ இன்ற
சிறுபயனே யுறுபயனென்‌ றமழுந்து மாறும்‌ %
தான்பட்ட படியிந்கேர்‌ தானே கண்டு
தளர்ந்திடுமேல்‌ வளர்க இிடுமேல்‌ தக்க வாறே,
கட்டளைக்‌ கலித்துறை
உலகத்‌ அயர்க்தவ சொன்றும்‌ பயனி லுறுந்‌ அயரும்‌ ஃ
008) ற்‌ படாதவப்‌ போக்‌ கவர்ச்கெழு மம்புபத்தோன்‌ x
கலகத்‌ தொழில்மது கைடப ரால்படுவ்‌ கட்டமெண்ணில்‌ 5
பலகற்ற மெய்யடி யார்படி யாரிக்‌ கடும்பவத்தே,
பரமபதஸேபாதம்‌
எண்சீர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
தீந்திரங்க எளவிலராய்ச்‌ தனத்தால்‌ மிக்க
தார்வேந்தர்‌ கொழவைய மாண்டார்‌ மாண்டார்‌ 5 சந்திரனுஞ்‌ சூரியனும்‌ வீடும்‌ காலந்‌
தா.ரகையின்‌ வடமற்றுத்‌ தனிவா னாகும்‌ % இந்தானு மேறுயர்த்த வீசன்‌ மூனும்‌
ஈரிரண்டு முகத்தானு மில்லா வக்கான்‌ % நந்திருமால்‌ நிலைகண்டார்‌ காக மெல்லாம்‌
நரகென்று ஈற்பதமே நாடு வாரே,
கட்டளைக்‌ கலித்துறை
அறவ மேதுணி வார்துணுக்‌ கற்ற விளந்துணிவோர்‌ உரவில ரா.தலி னாமுயர்ந்‌ தாருட ஜொன்‌ நிநின்றோம்‌ & மறவழி மாற்றியெம்‌ மையஓைத்‌ இர்ந்தவர்‌ மன்னருளால்‌ 5 கறவை யுகநத பிரான்கழல்‌ சூடும்‌ கருத்தினமே,
எண்சீர்க்கதிகெடிலாரரிபவிருத்தம்‌
வந்தனபோல்‌ வருவனவு மந்த மாஇ
மாளாத துயர்தருவல்‌ வினைநெ Guys
கந்தனமா யெண்ணிறந்த கால மெல்லாம்‌
இன்னமுமிப்‌ பவக்குழிக்கே பிமியா வண்ணம்‌ 5
வெந்ததொரு குழவியைகம்‌ குமர னாக்கும்‌
வெறித்துளப வித்தகனார்‌ விதியே கொண்டார்‌ ஃ
பந்தனமா மவையனைதீஅம்‌ பாறு கைக்குப்‌
பழமையின்‌ பதமொன்றே பயிலு வாசே,
கட்டளைக்‌ கலித்துறை
கருமாலை யில்வருங்‌ கட்டக்‌ கழிக்கும்‌ கருத்துடையார்‌ _
ஓருமால்‌ஃபெருகிய யோகன்‌ மூயன்றும தன்றியும்‌ * தருமா லடிபிணை ச்‌ இண்சர ணாகு மெனவரித்தும்‌ ஃ
தீருமா லினியவை தானே யெனத்தக வெண்ணுவசே,
எண்சீர்க்கழிகெடிலாசிரியவிரு த்தம்‌
முன்செய்த வினைத்திரளின்‌ முளைத்த தன்றி
மத்தள்ள முதலறிந்து முளைத்த கூற்றில்‌ x தீன்செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்‌
தழல்சேர்க்ச தூலமெனச்‌ தானே தீர்த்தப்‌ %
53
Mm
54 தேததிகப்ரபத்தம்‌
பின்செய்த வினையில்கினை வொன்றா தொன்றும்‌
பிழைபொறுதகது வேறுளஅ விரகால்‌ மாற்றும்‌ %
என்செய்ய தாமரைக்கட்‌ பெருமா னெண்ண
மெண்ணாதா செட்டிரண்டு மெண்ணா தாசே.
கட்டளைக்‌ கலித்துறை
உறழையிட்ட வாளென வனுள்‌ ஞறைகன்ற யோகிகளை %
கறுமட்‌ டெழிலுற்ற ஈற்றுள வேந்திய காயகனார்‌ &
நிறைமட்‌ டிலாத நெடும்பயன்‌ காட்ட நினைத்து 4 உடலச்‌
சிறைவெட்டி விட்டு வழிப்படுச்‌ அம்வகை செப்புவமே.
எண்சீர்க்கழமிநெடிலாகிரியவிருத்தம்‌
முன்கருவி யிரைந்தும்‌ மனத்தஇழ்‌ கூட்டி
முக்கியமா மருத்திலவை சேர்த்த தெல்லாம்‌ &
நன்குணரு முயிரிற்சேர்த்‌ சைம்பூ தத்தை
நண்ணுவித்துச்‌ தான்தன்பால்‌ வைக்கு காதன்‌ %
ஒன்பதுடன்‌ வாசலிரண்‌ டுடைத்தா யுள்ளே
யொருகோடி அுயர்விளைக்கு மூடம்பா யொன்றும்‌ %
வன்சிறையின்‌ தலைவாசல்‌ இறந்து ஈம்மை
வானேற வழிப்படுத்த மனமுத்‌ முனே.
கட்டளைக்‌ கலித்துறை
தெருளார்‌ பிரம புசத்திறை சேர்ந்திடர்‌ தீர்ந்தவர்‌ காம்‌ %
இருளார்‌ பிரம பு.ரச்சிறை தீர்ந்தபின்‌ வர்தெ௫ர்கொண்டு *
அருளா லமரர்‌ நடக்தவிம்‌ மாயை கடந்ததன்பின்‌ &
சுருளார்‌ பவனர கச்சுழ லாற்றின்‌தன்‌ சூழ்ச்சியிலே.
எண்சீர்க்கழிநெடிலாடிரியவிருத்தம்‌
விழியல்லால்‌ வேலில்லை விண்ணின்‌ மாதர்‌
மேனியல்லால்‌ வில்லில்லை மீன வர்க்கு %
மொழியல்லா லமுதில்லை யென்று முன்னாள்‌
முத்திவழி முணிர்கடைந்த மோகக்‌ தீர்ந்தோம்‌ %
கழியல்லா£்‌ கடலில்லை யென்பார்‌ போலக்‌
காரியமே காரணமென்‌ அுரைப்பார்‌ காட்டும்‌ *
வழியல்லா வழியெல்லாங்‌ கடந்தோ மற்று
வானேறும்‌ வழிகண்டோ மகழ்க்திட்‌ டோமே,
11
பரமபதஸோபாரம்‌
கட்டளைக்‌ கலித்துறை
வன்பற்‌ ௮ுடன்மயல்‌ பூண்டுமற்‌ ரோகதி யாலினகாள்‌ x
என்பெற்‌ றதுபெறுந்‌ தானமு மெத்தனை போதுளதாம்‌ %
ASUS றதந்துணி வாற்றுயர்‌ தீர்க்கும்‌ துழாய்முடியான்‌ &
இன்புற்ற நல்வழி யாலேற்று ஈற்பச மெண்ணுவமே.
எண்சீர்க்கமிநெடிலாசிரியவிருத்தம்‌
பண்டையிரு வினையாத்றிற்‌ படிந்து பாரங்‌
காணாதே யொழுகியமாம்‌ பாக்கி யத்தால்‌ &
வண்டமரு மலர்மாதர்‌ மின்னாய்‌ மன்ன
வைசந்தி மணிவில்லாய்‌ விளங்க வான்சேர்‌ %
கொண்டலருள்‌ மழைபொழிய வந்த தொப்பாய்‌
குளிர்ந்துதெளிர்‌ கழுதாய விரசை யாற்றைக்‌
சண்டணுடக்‌ ௪ கருத்தாலே கடந்து மீளாக்‌
கரைகண்டோர்‌ கதியெல்லாக்‌ ௧இதஇட்‌ டோமே.
கட்டளைக்‌ கலித்துறை
பூவள ருந்திரு மாது புணர்ந்தகம்‌ புண்ணியனார்‌ *
தாவள மான தனித்இவஞ்‌ சோந்து தமருடனே &
காவள ரும்பெரு நான்மறை யோதிய கீதமெல்லாம்‌ %
பாவள ருந்தமிழ்ப்‌ பல்லாண்‌ டிசையுடன்‌ பாடுவமே,
எண்சர்க்கமிகெடிலாசிரியவிருத்தம்‌
அடலுரச மூண்டுமிழ்க்த வருக்கன்‌ போல
வழுக்கடைந்து கழுவியஈம்‌ ஐரளம்‌ போலக்‌ %
கடலொழுகிக்‌ கரைசேர்ந்த கலமே போலக்‌
காட்டுச்தீ கலக்தொழிக்த களிறே போல %
மடல்கவரும்‌ மயல்கழிந்த மாதர்‌ போல
வன்சிறைபோய்‌ மன்னர்பதம்‌ பெற்றார்‌ போல *
உடன்முதலா வுயிர்மறைக்கு மாயை நீங்கி
யுயாந்தபத மேறியணர்ந்‌ தொன்றி னோமே,
மண்ணுலகில்‌ மயல்தீர்ந்து மனக்‌ தளும்பி
மன்னா பயனிகந்து மாலே யன்றிக்‌ 5
கண்ணிலதென்‌ றஞ்சியவன்‌ கழலே பூண்டு
சடுஞ்ை நபோய்ச்‌ கரையேறும்‌ கதியே சென்று *
விண்ணுலூல்‌ வியப்பெல்லாம்‌ விளங்கக்‌ கண்டு
விண்ணவர்த௩ குழாங்களுடன்‌ வேசம்‌ பாடிப்‌
55
16
18
19
56 தேததசிகப்ரபந்தம்‌
பண்ணுலூழ்‌ படியாக விசையாற்‌ பாடும்‌
பல்லாண்டே பல்லாண்டும்‌ பாடு வோமே, ௦0
$% மாளாத வினையனைத்து மாள காம்போய
வானேறி மலாமகளா ரன்பு பூணுந்‌ *
தோளாக மாமணிக்குத்‌ தொண்டு பூண்டுத்‌
தொழுதுகந்து தோத்திரங்கள்‌ பாடி யாடி. &
கேளாத பழமறையின்‌ இதக்‌ கேட்டுக்‌
இடையாத பேரின்பம்‌ பெருக நாளும்‌ *
மீளாத பேோடிமைச்‌ கன்பு பெற்றோம்‌
மேதினியி லிருக்கின்றோம்‌ விகியி னாலே. 21.
அடிவரவு:–அடற்புள்‌, கள்ள, அருவரு, மறுத்தார்‌, வான்பட்ட,
உலகத்து, தந்‌இரங்கள்‌, அறவறமே, வர்தன, கருமாலை, முன்செய்த,
உறையிட்ட, முன்கருவி, தெருளார்‌, விழி, வன்பற்றடன்‌, பண்டை,
பூவளரும்‌, அடலு சம்‌, மண்ணுலூல்‌ மாளாத, (எண்டள)
மாயாவாத புஜங்க பங்க கருடாயம?
தேிகர்‌ இருவடிகளே சரணம்‌,
ஆக ப்ரபந்தம்‌ 4-5; பாசுரம்‌-153
ரமபதஸோபாகதம்‌ ஸம்பூர்ணம்‌.

ஐந்தாவது
UT DSU BS WD

கட்டளைக்‌ கலித்துறை
34 எண்டள வம்புயத்‌ அள்ளிலங்‌ கும்மறு கோணமிசை %
வண்பணி லந்‌இ௫ு ரிவளை வில்வளை வாய்மு£சலம்‌ %
இண்கை யிலங்குசஞ்‌ சர்தக முங்ககை செங்கமலம்‌ 8
எண்படை யேந்திரின்‌ ருனெழி லாழி யிழறையவனே. 1
Us @ mF rsa IC ஈடிலாசிரியவண்ணவிருத்தம்‌
விடுகெறியஞ்சிவிடத்தொடக்கெயவிதியாடைச்‌ துதொழத்தழைச்செழு * விழியருள்‌ தர்‌.அவிலக்கடி ச்களைவிரடிலியம்பிவிலக்சவைத்தனர்‌ *
கொடுவினையென்பதனை த்தினை த்தனைகொணர்தலிகம்ச்சகுணத்தன த்தினர்‌ *
குருகையில்வக்‌ தகொழுப்படகச்கியகுலப இதர்சகு றிப்பில்வைச்சனர்‌ *
கடர சன்புச ழற்றி மற்றொரு கதிபெற மன்பி லெமைப்‌ பொருத்தினர்‌ *
கமலைபுகந்தகடற்கிடைக்கடல்சருணையுடர்ச்த திடர்க்கொருச்கினர்‌ *
LOS லன்றிவ எர்த்த உற்கலை பலபல வொன்றவெ மக்கு ரைத்தனர்‌ * பழமறை பக்தி டைக்கி டைச்சுவர்‌ பாமத மென்றதி டிச்ச பத்தரே, 2
பரமதபங்கம்‌
கட்டளைக்‌ கலித்துறை
போமுரசைக்‌ கும்பொருள்‌ யாமறி யோம்பொரு ளார்மறையில்‌ 4
தாரமுரைக்‌ இன்றன தாமே யறியுக்‌ தரமூடையார்‌ *
ஆமுரைக்‌ கென்றிவை யாய்ச்தெடுச்‌ தாரண மூல்வழியே %
காமுரைக்‌ கும்வகை நல்லரு ளேந்இ ஈவின்றனமே.
& த்து மசித்து மிறையு மெனத்தெளி வுத்றுநின்ற %
தத்துவ மூன்றுர்‌ தனித்தனி காட்டுந்‌ தனிமறையால்‌ *
முத்தி வழிக்கிது மூல மெனத்துணி வார்களையும்‌ %
கத்தி மயக்குங்‌ கதகரை நாங்கடி கன்றனமே.
முத்தின்‌ வடங்க ளெனமுகுந்‌ தன்பூண்ட மூவகையாம்‌ %
சித்தி லருஞ்சுரு இச்செவ்வை மாறிய சிந்தைகளால்‌ &
பதீதி லிரண்டுமெய்க்‌ கப்பகட்‌ டும்பர வாதியர்தம்‌ *
கத்தில்‌ விழுந்தடைர்‌ தவ்வழுச்‌ இன்று சழற்றினமே,
. நாக்யெ லும்வகை ஈம்மை யளி தீதவர்‌ ஈல்லருளால்‌ %
பாக்கிய மேர்இப்‌ பானடி யார்திறம்‌ பார்த்ததற்பின்‌ %
தாக்கயெர்‌ தங்கள்‌ தலைமிசைத்‌ தாக்கித்‌ தனிமறைதான்‌ *
போக்கே மென்றத னிற்பொய்ம்‌ மதங்களைப்‌ போக்குவமே,
இவகை மாழ்றியன்‌ ஜோர்தேரி லாரணம்‌ பாடியநம்‌ *
தேவகி சீர்மக னார்கிறம்‌ பாவருள்‌ சூடியநாம்‌ %
மூவகை யாமறி யாத்தத்‌ அவத்தின்‌ முகமறிவார்‌ %
Bras CUES SSE பார்த்து நடந்தனமே, ‘
வேலைப்‌ புறமகங்‌ காண்பது போல்வேத ஈன்னெறிசேர்‌ %
தாலைப்‌ புறமகங்‌ காண்டலி னுண்ணரி வின்‌றிநின்‌ தீர்‌ &
மாலைப்‌ பெறவழி காட்டிய தேசிகர்‌ வாசகமே *
தலைப்‌ புறத்தி லெழுதுகன்‌ ரோமுள்ளே எழுதுமினே.
இறைநிலை யாம்பவத்‌ இற்சிறு சேனின்ப முண்டுழல்வார்‌ %
மறைரிலை கண்டறி யாமயல்‌ மாற்றிய மன்னருளே &
துறைநிலை பார மெனத்துளவ்‌ காவழு தச்கடலாம்‌ %
இறைநிலை யாமூரைச்‌ தோமெமய்‌ கருக்க ளியம்பினவே.
வெறியார்‌ தளவுடை வித்தகன்‌ தன்மையின்‌ மெய்யறிவார்‌ &
குறியார்‌ நெடியவ ரென்றொரு குற்றம்‌ பிறர்க்குரையார்‌ *
அறியார்‌ இறத்தி லருள்புரிர்‌ தாரணா நன்னெறியால்‌ %
சிறியார்‌ வழிக எழிப்பதுந்‌ திங்ரூ கழிப்பதற்கே,
6
07 (ம்‌
1)
58 | சேதசிகப்ரபந்தம்‌
எண்டர்க்சழிநெடிலாகிரியவிருத்தம்‌
மிண்டுரைக்க விரகுதருச்‌ தருக்கங்‌ கொண்டே
வேண்டுங்கால்‌ வேண்டுவதே விளம்பு இன்ரார்‌ &
சண்டதற்கு விபரீதம்‌ கத்து இன்றார்‌
காணூத கூறைமறையிற்‌ காட்ட கிற்பார்‌ ¥
பண்டொருத்தன்‌ சண்டுரைத்தே னானே யென்னப்‌
பலவகையா லுபாஇகளாரழ்‌ படிந்து விழ்வார்‌ ஈ
கொண்டலொக்கும்‌ திருமேனி மாயச்‌ க.த்தன்‌
குரைகழல்சேர்‌ விதிவசையிழ்‌ கூடா தாசே. 11
கட்டளைக்‌ கலித்துறை
கண்டஅ மெய்யெனிழ்‌ காணு மறையி ல நிவுகண்டோம்‌ %
கண்டக லாத இலஃ&தெனிற்‌ கண்டிலம்‌ குற்றமிதில்‌ *
கண்டது போல்மறை காட்டுவ அுங்கண்ட தொத்ததனால்‌ *
உண்டது கேட்கு மூலோகா யதரின்று மீறுவதே. ‘ 12
. எண்‌€ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
சண்டதனாழ்‌ காணாத தனுமிக்‌ இன்றார்‌
கண்டோருத்த னுரைத்ததனைச்‌ சுவரு இன்றார்‌ %
உண்டுப௫ கெடுமென்றே யுணர்ந்துண்‌ இன்ரார்‌
ஒன்றாலே யொன்றைத்தாஞ்‌ சாதிக்‌ இன்றார்‌ %
பண்டுமூலை யுண்ட.தனால்‌ மூலையண்‌ கின்றார்‌
பார்க்கின்றார்‌ பலால்லாதி தம்மை மற்றும்‌ &%
கண்டுமதி கெட்டநிலை காண இல்லார்‌
காணாச இலதென்னறு கலங்கு வாரே. 13
| கட்டளைக்‌ கலித்‌ துறை
காணா திலதெனும்‌ கல்வியி னாரைக்‌ கடிந்ததற்பின்‌ *
கோணுர்‌ சூதர்க்கங்கள்‌ கொண்டே குழப்பும்‌ பவுதீதர்களில்‌ %
நாணா தனைத்து மிலதென்று நால்வகை யிதன்றென்றும்‌ &
வாணா எறுக்கின்ற மத்திமத்‌ தான்வழி மாற்றுவமே, 14
… எண்சர்ச்சழிநெடிலாசிரியவிருத்தம்‌
மானமிலை மேயமிலை யென்று மற்றோர்‌
வாதநெறி யிலையென்னும்‌ வாது பூண்ட &
தானுமிலை தன்னுரையும்‌ பொருளு மில்லை
தத்துவத்தி னுணர்த்செய மில்லை யென்றும்‌ *
பர்மதபங்கம்‌ 5Y
வானவரு மானவரு மனமும்‌ வெள்க
வளம்பேச மஇகேடன்‌ மத்தி மத்தான்‌ *
தேனகெறி கொண்டனைத்துக்‌ இருடா வண்ணஞ்‌
செழுமஇபோ லெழுமதியால்‌ சேமித்‌ தோமே, . 19
கட்டளைச்‌ கலித்துறை
முற்றுஞ்‌ சகத்தில தென்றே பகட்டிய முட்டரைநாம்‌ *
சுற்றுந்‌ துறந்து துறையில்நின்‌ றேதுக ளாக்கியபின்‌ 5
மற்றொன்‌ நிலது மதிபல வுண்டென்று வஞ்சனையால்‌ 5
shoe துறந்தயோ காசார ளைச்சதிச்‌ சன்றனமே, 16.
எண்டர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
உளக்கதியை நாமுள்ளி யுள்ளச்‌ தேறி
புலகத்தா ௬ுகந்திசைய வுலகுண்‌ டென்றோம்‌ %
இளச்கவரி தாகயெகற்‌ றருக்கஞ்‌ சேர்ந்த
வெழின்மறையி லீசனுட னெம்மைக்‌ கண்டோம்‌ *
விளக்குநிரை போல்மதிகள்‌ வேறாய்‌ வேறொன்‌
றறியாதே விளக்குமென விளம்பு இன்ற %
களக்கருத்தன்‌ கண்ணிரண்டு மழித்தோ காணாக்‌
கரசம்போற்‌ நிரிந்தவனென்‌ கதறு மாறே. 17
கட்டளைக்‌ கலித்துறை
பொருசொன்‌ நிலதென்‌௪ போதமொன்‌ ஐங்கொண்ட பொய்யசைசாம்‌ *
தெருள்சொண்டு தீர்த்சபின்‌ காணவொண்‌ ஞாப்பொரு டேடூகின்ற *
மருள்கொண்ட சூ.துரைக குஞ்செளத்‌ திராந்திசன்‌ வண்ணிச்சைகாம்‌ *
இருள்கொண்ட பாழுங்‌ இணறென்‌ நிகழ்ச்தோட வியம்புவமே, 18
எண்ர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்‌
நிலையில்லாப்‌ பொருள்மதியை விளை தீதுத்‌ தான்சேர்‌
நிறங்கொடுத்துத்‌ தானழியுக்‌ தன்னால்‌ வந்த &
நிலையில்லா மதிதன்னில்‌ நிறத்தைக்‌ காணும்‌
இதுகாணும்‌ பொருள்காண்கை யென்ற நீசன்‌ 4
முலையில்லாத்‌ தாப்கொடுத்த முலைப்பா ஓுண்ணு
முசமில்லா மொழியெனவே மொழிந்த வார்த்தை *
தலையில்லாதீ தாளூரும்‌ கணக்காய்‌ நின்ற
சட்டளைகாங்‌ கண்டின்று காட்டி னோமே, 9
60 தேதிகப்ரபந்தம்‌
கட்டளைக்‌ கலித்துறை
காண்கின்‌ றவனில்லை காட்சியுக்‌ சண்டது முண்டவைதான்‌ ¥ ஏண்கொண்‌ டனவன்‌ நிவற்றிற்‌ குணமு நிலையுமில்லை x | சேண்கசொண்ட சந்ததி யாழ்சேர்ந்து மொன்றென நிற்குமென்ற & கோண்கொண்ட கோளுரை வைடாடி. சன்குறை கூறுவமே, 20
எண்‌்சர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
கும்பிடுவா சாரென்று தேடு இன்றார்‌
குணங்களையுக்‌ தங்களுக்குச்‌ கூறு இன்ளார்‌ +
தம்படியைச்‌ தமர்ச்குரைத்துப்‌ படிவிக்‌ இன்றார்‌
திமகீகினிமேல்‌ வீடென்று சரஇக்‌ இன்ஞுர்‌ % தம்புடவை யுடல்குறித்து நெடிதெண்‌ கின்றார்‌
சந்ததிக்குத்‌ தவம்பலிக்க,ச்‌ தாம்போ இன்றார்‌ % செம்படவர்‌ செய்கன்ற சிற்றி னிப்பைச்‌
சேவகப்பத்‌ அடனேகாஞ்‌ சிதைக்திட்‌ டோமே, 21
கட்டளைச்‌ கலித்துறை
வேதங்கள்‌ மெளலி விளங்க வியாசன்‌ ANS sear ame % பாதங்க ளான பதினாறி லீசன்‌ படிமறைத்துப்‌ x பேதங்க ளில்லையென்‌ ஜோர்பிர மப்பிச்‌ சியம்புகன்ற % போதம்‌ கழிந்தவ னைப்புத்தர்‌ மாட்டுடன்‌ பூட்டுவமே,
எண்சர்ச்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
பிறிவில்லா விருளொன்று பிணக்கொன்‌ நில்லாப்‌
பெருவெயிலை மறைத்துலகம்‌ காட்டு மென்ன %
௮.றிவில்லா வறிவொன்றை யவித்தை மூடி
யகம்புறமென்‌ நிவையனைத்து மமைக்கு மென்பார்‌ % செறிவில்லாப்‌ பு.த்தருடன்‌ சேர்ந்து கெட்டார்‌
சிவனையு மீசனையுஞ்‌ சசைக்கப்‌ பார்த்தார்‌ 3 நெறியில்லா கேர்வழியுக்‌ கானே யானான்‌
கெடுமாலை நாமடைந்து நிலைபெற்‌ Cup,
no bo tw Ce
கட்டளைக்‌ கலித்துறை
சோதனை விட்டொருச்‌ சன்சொல்ல மெபய்யெனச்‌ Gera gens d % சேதனை யற்றவ சென்று சிதைத்தபின்‌ SotalCani * வேதனை செய்கை வேறுமற மென்று விளம்பிவை தே த்‌ ட மாதவ மென்று மயிர்பறிப்‌ பார்மயல்‌ மாற்றுவமே, ௦1
பரமதபங்கம்‌ 61
எண்சிர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்‌
சொன்னார்தாஞ்‌ சொன்னசெல்லார்‌ அறவோ மென்றும்‌
சொன்னதுவே சொன்னதல தாகு மென்றும்‌ 5
இன்னாதுந்‌ இன்னுமது மேக மென்றுஞ்‌
சுறியனுமாம்‌ பெரியனுமாஞ்‌ சவ னென்றும்‌ 4
மன்னாது மன்னுமது மொன்றே யென்றும்‌
வையமெல்லாம்‌ விழுன்ற தென்ன மென்றும்‌ %
தென்னாடும்‌ வடகாடுஞ்‌ சிரிக்கப்‌ பேசுஞ்‌
சினகெறியார்‌ சினமெல்லாஞ்‌ கதைச்சன்‌ Carr. ஒறு
கட்டளைச்‌ கலித்‌ துறை
vert இகமொன்னறு மில்லையென்‌ ருசையைத்‌ தாழுடுப்பார்‌ %
சோகார்த மாகத்‌ துறப்புண்ட பின்றொழில்‌ வைஇகமென்று *
ஏகாந்இி கள்சொன்ன வீசன்‌ படியில்‌ விகற்பமெண்ணும்‌ %
லோகாந்த விணர்தம்‌ வேதாந்த வார்த்தை விலக்குவமே. 26
எண்‌௪ர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
ஒன்றெனவும்‌ பலவெளவுர்‌ தோற்று கின்ற
வுலசெல்லா மொருபிரமச்‌ தானே யாக்கி &
நன்றெனவுக்‌ தீதெனவும்‌ பிரிந்த தெல்லா
நன்றன்று தீதன்றே யென கவின்ருர்‌ 5
கன்றுமலர்‌ பசுவுமல ராக நின்றே
சன்றாடிப்‌ பசுவாகி நின்ற வண்ணம்‌ %
இன்றுமறை மாட்டுக்கோ ரிடைய னான
வேகாந்தி யறிக்திடகா மியம்பி னோமே. 27
கட்டளைக்‌ கலித்துறை
சாயா மறைகளிற்‌ £656 Osos Sie சாற்றுதலால்‌ %
தூயா ரிவரென்று தோன்றகின்‌ ஹேபல சூதுகளால்‌ &
மாயா மதமு மறுசன வாதும்‌ பவுத்தழமுஞ்சேர்‌ %
வையா கரணர்சொல்‌ லும்மறு மாற்றங்கள்‌ மாற்றுவமே, ON
crore te NO pict tu alm & wD
கலகத்திற்‌ கலங்வெருங்‌ காணிக்‌ கெல்லாங்‌
கண்ணாறு ச.திரவழி கட்டு வார்போல்‌ %
உலகத்தில்‌ மறைசேர்ந்த வுளைகள்‌ தன்னால்‌
ஒருபிழையுஞ்‌ சேராம லுபக ரித்தார்‌ %
62 தேசிகப்ரபத்தம்‌
பலகத்தும்‌ பவுத்தரமுத லான பண்டைப்‌
பகற்கள்ளர்‌ பகடழிக்கப்‌ பரவும்‌ பொய்யாம்‌ % சிலகதீதுச்‌ சித்தார்த மறிய இல்லாச்‌
கிறுவரினி மயங்காமற்‌ சேமித்‌ தோமே,
கட்டளைக்‌ கலித்துறை
கண்டத லாதன கட்டுத லாற்கண்டு விட்டதனால்‌ %
பண்டுள தான மறைக்குப்‌ பழமையை மாற்றுதலால்‌ x
கொண்டது மீசனைக்‌ கொள்ளா வகையென்று கூறு தலால்‌ &
சண்டக ராய்கின்ற காணாதர்‌ வாதங்‌ கழற்றுவமே,
எண்‌்சீர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
ஆகமத்தை யனுமான மென்கை யாலும்‌
அழியாத மறையழிக்க நினைக்க லாலும்‌ %
போகமற்ற புலம்போலக்‌ இடைக்கை தானே
புண்ணியர்க்கு வீடென்று புணர்த்த லாலும்‌ %
மாகமொத்த மணிவண்ணன்‌ படியை மாற்றி
மற்றவனுச்‌ கொருபடியை வருத்த லாலும்‌ %
காகமொத்த காணாதன்‌ கண்ணை வாகக்‌
காக்கைக்கா ரென்றலத்தல்‌ காட்டி. னோமே.
கட்டளைக்‌ கலித்துறை
கோதம நூல்களைக்‌ குற்றமில்‌ லாவகை கூட்டலுமாம்‌ %
கோது கழித்தொரு கூற்றிற்‌ குணங்களைக்‌ கொள்ளவுமாம்‌ *
யாது மிகழ்க்தொரு நீதியை யாமே வகுக்கவுமாம்‌ %
வேஇயர்‌ நன்னய வித்தர மென்பது பெய்புளதே,
எண்€ர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்‌
நான்மறைக்குத்‌ துணையாக நல்லோ ரெண்ணும்‌
…. நரலிரண்டி லொன்றான ஈயதால்‌ தன்னில்‌ % கூன்மறைத்தல்‌ கோதுளஅ கழித்தல்‌ மற்றோர்‌
கோணாத கோதில்வழி வகுத்த லன்றி & ஊன்மறைத்த வுயிரொளிபோ லொத்‌.த தொவ்வா
அயரில்லாக்‌ காணாத முரைத்த தெல்லாம்‌ #
வான்மறைக்க மடிக்கோலும்‌ வண்ண மென்றோ
மத்றிதற்கார்‌ மறுமாம்றம்‌ பேசு வாரே,
29
30
பரமதபங்கம்‌” 63
. கட்டளைக்‌ கலித்துறை ‘
FFE ip nem Holo Osan We கான்மழறையில்‌ %
பேசிய நல்வினை யால்பெரும்‌ பாழுக்கு நீரிறைக்கும்‌ &
நிசரை நீ.இிக ளால்கிக மார்தத்தி லூல்வமியே ஈ
மாசில்‌ மனங்கொடுத்‌ தும்மறு மாற்றங்கள்‌ மாற்றுவமே, 34
எண்‌£ர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
கனைகடல்போ லொருடீராஞ்‌ சூத்தி ரத்தைக்‌
கவந்தனையு மிராகுவையும்‌ போலக்‌ கண்டு ¥
Mima Cor tt sen Hanis நிற்கும்‌
நிசர்நிலை கிலைகாடா வண்ண மெண்ணி +
வினைபரவு சைமினியார்‌ வேத நாலை
வேதாக்த நாலுடனே விரகாற்‌ கோத்த %
மூனையுடைய முூழுமதஇகம்‌ முனிவர்‌ சொன்ன
மொழிவழியே வழியென்று மூயன்றிட்‌ டோமே. 35
கட்டளைக்‌ சலித்துறை
முக்குண மாய்நின்ற மூலப்‌ பிரகரு இக்கழியா ஃ
அ௮க்குண மற்ற வருத்துணை மற்றதம்‌ சேனில்லை x
இக்கண.னைப்படி யையைந்து மெண்ணில்முன்‌ முத்தியென்றும்‌ ஈ
பக்கண விணர்‌ பழம்பகட்‌ டைப்பமு தாக்குவமே. 3G
எண்சர்க்கமிநெடிலாசிரியவிருத்தம்‌
ஈசனில னென்பதனா லென்றுஞ்‌ சீவர்‌ |
எங்குமுள ரிலருணர்வை யென்ற வதீதால்‌ *
பாசமென்னும்‌ பிரகிருதி சன்னா லென்றும்‌
பலமுமிலை விடுமிலை யென்னும்‌ பண்பால்‌ &
காசினிநீர்‌ முதலான காரி யங்கள்‌
கச்சபத்தின்‌ சால்கைபோ லென்னுங்‌ கத்தால்‌ ஈ
நாசமில இலைகாணு ஞாலத்‌ அள்ளீர்‌
நாமிசையாச்‌ சாங்யெத்தை நாடு வார்க்கே, 37
கட்டளைச்‌ கலித்துறை
தாவிப்‌ புவனங்கள்‌ தாளிணை சூட்டிய தந்தையுந்துப்‌ %
பூவிற்‌ பிறக்கினும்‌ பூதங்க ளெல்லாம்‌ புணர்த்இடினும்‌
நாவிற்‌ பிரிவின்றி நாமங்கை வாழினும்‌ நான்மறையில்‌ %
பாவித்த தன்றி யுரைப்பது பாறும்‌ ப தர்த்திரளே, 29
04 கேேரிகப்ரபந்தம்‌
எண்சர்ச்கமிநெடிலாடுரியவிருத்தம்‌
கா.ரணனா யுலகளிக்குங்‌ கண்ணன்‌ தேசைக்‌
கண்ணாடி. நிழல்போலக்‌ காண்கை யாலும்‌ 6
தாரணையில்‌ முடிவான சமாக தன்னைத்‌
தனக்கேற்றும்‌ விளக்கென்று தனிக்கை யாலும்‌ &
காரணமா மதுதனக்குப்‌ பயனுஞ்‌ சீவன்‌
கைவலிய நிலையென்று ௪ணிக்கை யாலும்‌ %
கோரணியின்‌ கோலமெனக்‌ கசூறிக்க லாகுங்‌
கோகன கத்‌ தயன்கூறுஞ்‌ சமயக்‌ கூறே.
கட்டளைக்‌ கலித்துறை
சாது ௪னங்களெல்‌ லாஞ்சச்சை யென்னுஞ்சலம்‌ புணர்க்கார்‌ %
கோதம சாபமொன்‌ ரால்கொடுங்‌ கோலங்கள்‌ கொண்டுலகில்‌ &
பூத.பதிக்கடி. யாரென நின்றவன்‌ பொய்யுரையால்‌ %
Cas ua pHs பார்விகற்‌ பங்கள்‌ விலக்குவமே.
எண்சிர்க்கழிநெடிலா௫ரியவிருக்தம்‌
மாதவனே பரனென்னு வையங்‌ காணா
மமுவேந்து மயல்தர்க்க வல்ல தேவன்‌ %
கைதவமொன்‌ அகந்தவரைக்‌ கடிய சாபங்‌
கதுவியனா யஇின்பலத்தைக்‌ கருஇப்‌ பண்டை ¥
வேதநெறி யணுகாத விலங்கு தாவி
வேரூக விரித்துளைத்த விகற்ப மெல்லாம்‌ *
ஓதுவது குத்இரத்துச்‌ சென்று ரைத்தான்‌ %
ஓதாதே யோதஅவிக்கு மொருவன்‌ மூனே.
‘சந்தமலா்‌ மகள் மின்னும்‌ காரார்‌ மேனிக்‌
கருணைமுடல்‌ சண்டச௪ண்கள்‌ மயிலா யாலும்‌ *
அந்தமில்பே ரின்பத்தி லடிய ரோடே
யடிமையென்னும்‌ போகுது மருக்இி வாழக்‌ %
தந்தமதி யிழந்தானார்‌ சமயம்‌ புக்குத்‌
தழல்வழிபோய்த்‌ தடுமாறிக்‌ களர்ந்து விழ்ந்தர்‌ *
சந்தகெறி கோறிவார்‌ சாணஞ்‌ சேர்ந்து
சங்கேதத்‌ தவமுநீர்‌ தவிர்மி னீரே.
கட்டளைக்‌ கலித்துறை
யாதுமி லாதவன்‌ அ௮ும்மெவர்க்‌ குக்கன்றி மபெண்ணியகம்‌ %
மாதவ னாவச னத்தமு அண்ணும்‌ வலம்புரிபோல்‌
பரமதபங்கம்‌
வாதுக ளாலழி யாமறை மெளலியின்‌ வான்பொருளே #
ஓய பஞ்சராத்‌ இரமுக வாரை யொழுக்குவமே,
எண்சீர்க்கயிநெடிலாசிரியவிருத்தம்‌
ஏம பூவலருந்‌ இருவுந்இப்‌ புனிதன்‌ வையம்‌
பொன்னடியா லளநர்திருவர்‌ போற்ற நின்ற %
காவலருங்‌ கலைகளெல்லாக்‌ தன்னை நாட
நாடாத நன்னிதியர்‌ ஈ௩ணுகு நாதன்‌ &
கோவலழயை சிரையளித்த நிரைபோல்‌ வேதங்‌
கோவாகச்‌ கோமானா யதன்பால்‌ சேர்த்துக்‌ *
காவலிஅ ஈல்லுயிருக்‌ சென்று காட்டுங்‌
கார்த்தயுகச்‌ கதஇிசண்டோங்‌ சசைகண்‌ டோமே,
கட்டளைக்‌ சலித்துறை
நமக்கார்‌ துணையென கானென்‌ தறுள்தரு நாரணனார்‌ 4
உமக்கா நிவையென்‌ நடியிணை காட்ட வுணர்ந்தடையும்‌ ஈ
எமக்கோர்‌ பரமினி யில்லா இருவினை மாற்றுதலில்‌ *
தமக்சே பரமென்று தாமுய ருந்தரஞ்‌ சா.ற்‌.றுவமே,
எண்‌்சர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்‌
பலத்திலொரு அவக்கற்ற பதவி காட்டிப்‌
பல்லுயிருர்‌ தடமாறப்‌ பண்ணு கின்ற %
கலிச் கொளின்‌ கடுங்கமுகைக்‌ கத்து மாற்றிக்‌
கண்ணுடையார்‌ சகண்டுரைத்த கதியைச்‌ சொன்னோம்‌ %
வல,த்திலகு மறுவொன்றால்‌ மறுவொன்‌ றில்லா
மாமணியாய்‌ மலர்மாத ரொளியா மந்ரல்‌ ட
நலத்திலொரு நிகரில்லா நாசன்‌ பாதம்‌
ஈல்வழியா மல்வழக்கார்‌ கடத்து வாரே,
எல்லார்க்கு மெளிதான வேற்றத்‌ தாலும்‌
இனியுளைக்கை மிகையான விரக்கத்‌ தாலும்‌ *
சொல்லார்க்கு மளவாலு மமைத லாலுந்‌
அணிவரிதாய்த்‌ துணைதுறக்குஞ்‌ சுகரத்‌ தாலும்‌ %
கல்லார்க்குங்‌ கற்ருர்சொற்‌ கவர்த or giz
கண்ணனுரை முடிசூடி முடித்த லாலும்‌ it
நல்லார்க்குர்‌ தீயார்க்கு மிதுவே நன்றாம்‌
நா.ரணர்க்கே யடைக்கலமாய்‌ நல்கு வீரே,
9
65
43
44
45
41)
47
00 தேதசிகப்ரபந்தம்‌
கட்டளைக்‌ கலித்துறை
பண்டை, மறைக்குப்‌ பகையென கின்ற பாமதங்கள்‌ %
கொண்டவர்‌ கொள்ளும்‌ பயனொன்‌ நிலதெனு& கூர்மதியால்‌ %
வண்டுவ ரைக்கர£ சானநம்‌ மாயனை வானுலடல்‌ *
கண்டு களிப்ப தெனுங்காத லொன்றைக்‌ கருதுவமே. 48
எண்‌£ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்‌
14 கலந்இிசழமும்‌ போகங்கள்‌ கண்டு வெள்இக்‌
காரியமுங்‌ கா.ரணமுங்‌ கடந்து காம்போய்க்‌ ஈ
குலந்இகழுங்‌ குருக்களடி. சூடி. மன்னுவ்‌
GHC na லடியவர்தங்‌ குழாங்கள்‌ கூடி %
வலந்இகழுக்‌ இருமகளு மற்றி டத்தே
மன்னியமண்‌ மகளாரு நீளை யாரும்‌ &
நலக்இகம விற்றிருக்த நாசன்‌ பாத
நமக்கிதுவே முடியென்ன ஈண்ணி னோமே. 49
கட்டளைக்‌ கலித்‌ துறை
மானங்க ளின்றி வகுச்துரைக்‌ இன்ற மதங்களெல்லாம்‌
தானங்க ளன்னு தரும நெறிக்கென்று சாற்றியபின்‌ %
வானக்‌ கவர்ந்து மறைஞாடி சூடிய மாதவத்கோர்‌ %
ஞானங்க ளொன்ற நடக்கின்ற நல்வழி சாடுவமே. 50
தன்னடிக்‌ கமுல கேழையும்‌ வைத்த தனித்இருமால்‌ *
பொன்னடிச்‌ கேற்ன்ற புண்ணியர்‌ கேண்மின்‌ புகலறிவார்‌ &%
முன்னடி பார்த்து மூயலுத லாலவர்‌ சாயையெனப்‌ %
பின்னடி பார்த்து நடந்து பெரும்பக மேற௮ுவமே. 51
எண்‌2 ர்க்கழிகெடிலாகிரியவிருத்தம்‌
வையமெல்லா மிருள்கீக்கும்‌ மணிவி எக்காய .
மன்னியரகான்‌ மறஹைமெளலி மஇயே கொண்டு &
மெய்யல* விளம்பாத வியாசன்‌ சாட்டும்‌
விலக்கில்லா ஈல்வறியே விரைந்து செல்வீர்‌ &
ஓயமத வறுசமயக்‌ குறும்ப அத்தோம்‌
… அணியரங்க ரடியவர்க்கே யடிமை செய்தோம்‌ %
மையகடல்‌ வட்டத்துள்‌ மற்றுந்‌ தோற்றும்‌
வாதியர்தம்‌ வாய்ப்பகட்டை மாற்றி னோமே.
ஜே
co
கோசவமொன்‌ நில்லாத தகவே கொண்ட
கசொண்டலென வந்துலூ லைவர்க்‌ சன்றோர்‌ x
தூ.துவனா யொருகோடி மறைக ளெல்லாந்‌
தாடர்ந்தோடச்‌ தனியோடித்‌ அயற்‌ தீர்த்‌ கர
பரமதபங்கம்‌ 67
மாதவனார்‌ வடகொங்கில்‌ வானி யாற்றின்‌
வண்ணிகைநஈன்‌ னடங்கண்டு LoS) Deg வாழும்‌ $
போதுிவைநாம்‌ பொன்னயிந்தை நகரின்‌ முன்னாள்‌
புணராத ப.ரமதப்போர்‌ பூரித்‌ கோமே.
en
O35
ப.தனா௮௪ர்க்கமிநெடிலா௫ரியச்சந்தவிரு த்தம்‌
13 இகரிமழு வுயர்குக்தம்‌ தண்டங்கு சம்‌ * பொறி
இதறு௪௪ முசவங்கி வாள்வே லமர்ந்ததும்‌ *
தெளிபணில சலைகண்ணி ௪ரங்க செவ்விடிச்‌ &
செழியகதை முசலந்திரி Goes இதழ்க்ததும்‌ ௬
அகிலவுல குகள்கண்டை யாயோ .ரலங்கலி
லடைய % வடை விலிலங்க வாடன்‌ நி நின்றதும்‌ *
அணியுமரு சணையுமல வாமென்ற நின்றடி
யடையுமடி யரையன்பி னாலஞ்ச லென்பதும்‌ %
ம௫ூழுமம ரர்கணங்‌ கள்வானங்‌ கவர்க்திட % |
மலியமசு ரர்கொணர்ந்த மாயம்‌ அறக்ததும்‌ *
வள.சணிம ணிகள்மின்ன வானந்தி கொண்டிட & |
மறைமுறை முறைவணங்க மாறின்றி வென்றதும்‌ % Aur மதியுமிழு ே SES வெண்டிசைக்‌ *
இணிமருள்செ கவுகந்து சேமங்கள்‌ செய்ததும்‌ *
இகழ. வணையாங்கர்‌ தேசென்ன மன்னிய ஈ
இரிசுதரி சனர்செய்ய வீரெண்‌ பயங்களே. 54
அடிவரவு:–எண்டளவம்‌, விடுகெறி, போமுலா, இத்தம்‌, முத்தின்‌,
நாக்கியலும்‌, Faces, வேலைப்புறம்‌, ரைகிலை, வெறியார்‌, மிண்டுரைக்க,
கண்ட, சண்டதளால்‌, காணாகில, மானமிலை, முற்றும்‌, உளக்கதியை,
பொருள்‌, நிலையில்லா, சாண்டுன்றவன்‌, கும்பிடுவார்‌, வேதங்கள்‌, பிறி
வில்லா, சோதனை, சொன்ஞார்‌, ஐகாக்இி, ஏன்றெனவும்‌, சாயாமறை, கல
கத்தில்‌, சண்டதலாகன;, அகமச்தை, கோதமதூல்‌, கான்மறை, ஈசனும்‌,
கனைகடல்‌, முக்குணமாய்‌, ஈசனிலன்‌, தாவிப்புவனங்கள்‌, கா.ரணனாய்‌,
சா .தஜனங்கள்‌, மாசகனே, கர்தமலர்‌, யாதமிலாத, பூவலரும்‌, ஈமக்கார்‌,
பலத்திலொரு, எல்லார்க்கும்‌, பண்டைமறை, கலதந்திகழும்‌, மானங்கள்‌,
தன்னடி.க்£ழ்‌, உையமெல்லாம்‌, கோதவம்‌, தூரி (வாழி)
மாயாவாச புஜங்க பங்க கருடாய நம
தே௫ிகர்‌ திருவடிகளே சரணம்‌.
ஆக ப்ரபந்தம்‌ 5-க்கு பாசு.ரம்‌-201
Hon SUB SL OV WD Lyf or Lh,
ஆ ரூ வ Sl
அதீ திகிரிமஹாத்மியம்‌
அணைய ஆட்பட eee
தனியன்கள்‌
சேரிசைவெண்பா
ம்‌ வாழி யருளாளர்‌ வாழியணி யத்இகரி ஃ£
வாழி யெதிராசன்‌ வாசகத்தோர்‌ &-வாழி
சரணா கதியென்னுஞ்‌ சார்வுடன்‌ மற்றொன்றை %
௮.ரணாகக்‌ கொள்ளாதா ன்பு. 1
எண்‌*சர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
எண்டிசையுங்‌ கடலேழு மலைக ளேழும்‌
ஈமேழு வையகமும்‌ படைத்தி லங்கும்‌ &
புண்டரிகத்‌ தயன்புணர்த்த பெரிய வேள்விப்‌
புனிதஈறும்‌ போக்கெத்தை யுகந்து வந்து &
தொண்டையெனு மண்டலத்தி னடுவிற்‌ பாரில்‌
தூகிலமெய்‌ விரதத்‌இற்‌ ரோன்றி நின்ற %
கொண்டலருட்‌ கூுணமேகாக்‌ கூறு கின்றோங்‌
கூர்மதியீர்‌ குறிப்பாகக்‌ கொண்மி னீரே,
be
செந்தொடையாய்வந்த ஒருசார்‌ வேற்றொலி வெண்டுறை
வம்மின்‌ புலவி சருளாளப்‌ பெருமாளென்றுமருளாழி [ண்ட %
௮ம்மானென்றுந்‌ உ இருமகளைப்‌ பெற்றுமெனெஞ்சகல்‌ கோயில்‌ கொ
பேரருளாளசென்றும்‌ % வியப்பா விருதூதும்படிகரைடரண்ட
கருணைக்கடலையெவ்வண்ணம்‌ பேசுவிரீதென்னபாங்கே, 3
கட்டளைக்‌ கலித்துறை
ஒன்றே புகலென்‌ அணர்ந்தவர்‌ காட்டத்‌ திருவருளால்‌ *
௮ன்றே யடைக்கலங்‌ கொண்டகம்‌ மத்தி கிரிதீதிருமால்‌ &
இன்றே யிசையி னிணையடி சேர்ப்ப ரினிப்பிறவோம்‌ &
நன்ே வருவதெல்‌ லாஈமக்‌ குப்பர மொன்றிலதே, 4
வம்பவிழ்‌ போதமர்‌ மாத ருகந்தவம்‌ மாரிதியைத்‌ %
தன்பல மேகொண்டு காணக்‌ கருகிய சாமரையோன்‌ 5
முன்பல குற்றத்து வல்வினை மொய்க்க மூ௫ழ்மதியாய்‌ உ “
அம்புலி வேண்டிய பாலனைப்‌ போல வழுதனனே, 9
அ த்இிகிரிம ஹா த்மியம்‌ 69
அடங்காக்‌ கரணக்க ளைந்துட னாறு மடக்கிமுன்னம்‌ *
நெடுங்கால மிந்நில மேநில யாய்ப்பூண்டு நீடுறைவான்‌ %
சடங்காற்‌ பெரிய தவங்கள்செய்‌ தேனென்ன தின்மையிதென்‌ %
றிடங்காத்‌ இருந்த திசைமுகன்‌ தன்னை யிகம்ந்சனனே. 6
எண்€ர்க்கழிரெடிலாசிரியவிரு த்தம்‌
விண்ணுலடூல்‌ வீற்றிருந்த மேன்மை யாலும்‌
வேதங்க ளீரிரண்டும்‌ விரித்த லாலும்‌ ஈ
சண்ணனைரான்‌ கருத்துறவே காண்பெ னென்னகச்‌
காணாமல்‌ விலக்கியதன்‌ வினையைக்‌ காணா %
எண்ணியநற்‌ புவனங்க ளேழு மாறும்‌
இருமூன்று தீவமுமெட்‌ டி டமும்‌ விட்டுப்‌ *
பண்ணியகல்‌ விரதமெல்லாம்‌ பலிக்கு மென்று
பாரதத்தைப்‌ பங்கயத்தோன்‌ படிர்திட்‌ டானே. 7
௮ுசர்க்கழிநெடிலாசிரியச்சந்தவிருத்தம்‌
எத்‌இசை நிலனு மெய்தி யருந்தவஞ்‌ செய்த வந்காள்‌ 5
esau Arse, செல்வா யென்றதோ ருரையின்‌ சார்வால்‌ ஈ
௮.த்‌ இசை சென்ற ழைத்தங்‌ கமரில்‌ லெடுப்பான்‌ தன்னை &
உத்தர வேதி செய்யென்‌ அரையணங்‌ இறையு சைத்தான்‌. 8
அுசர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்‌
உத்தம வமர்த்தல மமைத்ததொ ரெழில்தனு வுயர்த்‌ச கணையால்‌ *
அத்திற வரச்சன்முடி. பத்‌.தமொரு கொத்தென வுதிர்த்த இிறலோன்‌ * மத்‌.துற மிகுத்ததபிர்‌ மொய்த்த வெணெய்‌ வைசத்ததணு மச்தனிடமாம்‌ * அத்திகிரி பத்தர்வினை தொத்தற வறுக்குமணி யத்தி சரியே, 9
எண்சீர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்‌
இண்மணிகள்‌ பொன்னுடனே சேர்த லாலுஞ்‌
சிதையாத நூல்வழியிற்‌ சேர்த்இி யாலும்‌ %
வண்மையெழு மீரிரண்டு வண்ணத்‌ தாலும்‌
வானவர்க்கும்‌ வியப்பான வகுப்பி னாலும்‌ %
உண்மையுடை வாசியொளி யோசை யாலு
மொருகாது மழியாத வழட னாலும்‌ 5
மண்மகளார*க்‌ கலங்கார மென்ன மன்னு
மதிட்சச்சி ஈகர்கண்டு மடழ்க்திட்‌ டானே, 10
70 தேதிகப்ரபதந்தம்‌
காமங்கள்‌ பலகொண்ட வேதங்‌ கொண்டு
கைதவமே செய்வார்க்குச்‌ காணகுல்லாப்‌ %
பூமங்கை கேள்வனைகாக்‌ கண்டு போற்றப்‌
புண்ணியத்தி ணிகரில்லா விரதம்‌ பூண்டேன்‌ &
காமங்கள்‌ கழிவதன்முன்‌ ௪டக்கெ னப்போய்த்‌
தன்னாஜ்றிற்‌ மனியிருக்து தவஞ்செய்‌ Barn +
நாமங்கை வக்இடநீ யழைப்பா யென்று
நன்மகனை கான்முகன்றா னவின்்‌றிட்‌ டானே. 11
பன்னிரு€ர்க்கழிநெடிலாசிரியச்சம்‌ சவிரு த்தம்‌
அன்னவடி வாளசையு மன்னசடை யாளுயரு மன்னவ. சேறிவருவா *
ளத்தனய னத்தனய னுத்திதனை யத்திதென வுத்தி புரியாள்‌ *
சன்னடைவி டாஈடமி தென்னஈட வாஈடுவுள்‌ ஈண்ணுகுட கேறியிழிவாள்‌ *
ஈற்பதிக எற்பதிகள்‌ கற்புரள வற்புதம ருக்கதியி னால்‌ *
கன்னடைவி டாவிடமி ஓுன்னதி ருவிகட மன்னுடிரி கூடமிடியக்‌ *
கட்டவிடை யிற்றுவிழ முற்றும்விழி யூற்றடைய விட்ட GG p *
அன்னஈய சீரயனி தென்னென விழாவமார்‌ மன்னுமதி யேறிமஇழ *
வச்சுச னணைத்தனுவி லச்திசை வரகச்சசைய வற்றணுஇ னாள்‌. 12
கேரிசைவெண்பா
அன்று நயந்த வயமேச மாவேள்வி %
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய்க்‌ *-கன்‌ ஜிவர
ஆகி யயனுக்‌ கருள்செய்‌ தணையானான்‌ 3
தாதை யாவணையான்‌ தான்‌. [2
கட்டளைக்‌ கலித்துறை
துணியில்‌ மன்னி யயனார்‌ தனித்தவங்‌ காத்தபிரான்‌ ௨
கருணை யெனுங்கட லாடிதக்‌ தஇருவணை சண்டகர்பின்‌ ௨
இரணச கெண்ணிய சித்திர குத்தன்‌ தெரித்தூவைம்ந &
கருணையி லேறிய சூழ்வினை முற்றும்‌ அறந்சனமே. 14
சுகலேச மெண்ணிய சூழ்வினை தீர்க்கக்‌ துணிந்தயனார்‌ &
அசலாக வன்புடன்‌ கொண்ட வய