ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ-வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
————
பிறவிக் கடலைக் கடத்து விக்கும் நாவாய் ஸ்ரீ ந்யாஸ த்ரயீ!!
ந்யாஸ தசகம் ந்யாஸ விம்சதி ந்யாஸ திலகம் -ந்யாஸ த்ரய ஸ்தோத்திரங்கள்-
28 -ஸ்லோகங்களுக்குள் இது ஒன்றுக்கும் மட்டும் ஸ்வாமி தேசிகன் வியாக்யானமும் அருளிச் செய்து இதன் முக்யத்வத்தை காட்டி அருளுகிறார் –
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் “உப கோசலன்” கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது.
சத்வஸ்தம் சத்ய வாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-
சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்ய வாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூயாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப்தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்
ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
ஆசார்ய லக்ஷணங்கள்
- ஸத் ஸம்ப்ரதாயே – ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி, வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
- ஸ்திர தியம் – சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
- அநகம் – ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
- ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
- ப்ரும்ஹ நிஷ்டம் – எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
- ஸத்வஸ்த்தம் – ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
- ஸத்ய வாசம் – ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
- ஸமய நியதயா ஸாது வ்ருத்யா – காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
- டம்ப அஸூயாதி முக்தம் – தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
- ஜித விஷயி கணம் – இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
- தீர்க்க பந்தும் – இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
- தயாளும் – மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
- ஸாஸிதாரம் – தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
- ஸ்வபர ஹிதபரம் – ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
- ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத் குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை –
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
6–சத்ய வாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை -சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
10–ஜித விஷயி கணம்
11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
14—ஸ்வ பர ஹித பரம்
தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்14-லக்ஷணங்கள்
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் – சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்
அநகம்–
அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை
ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு
தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்
தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே
ஆக இந்த குணங்களுடைய ஆசார்யனை ஸிஷ்யன் அணுக வேண்டும். இத்தகைய ஆசார்ய–ஸிஷ்ய சம்பந்தம் கர்மாதீனமாய் ஏற்படுவதல்ல. பூர்வ புண்ய பலத்தால் மட்டுமே கிட்டும்.
——————
இத்தகைய ஆசார்யனை பகவானைப் போல உபாஸிக்க வேணும் என்றும் அதற்கான காரணங்களையும் 2ம் ஶ்லோகத்தில் சொல்கிறார்.
ஸாக்ஷாத் நாராயணனே ஆசார்யனாய் அவதாரம் செய்கிறார் என்கிறது ஸாஸ்த்ரம். பக்தி, ஸ்தோத்ரம், கைங்கர்யம் ஆகியவற்றால் ஆசார்யனை அதிதேஶ்யம் செய்ய வேண்டும். இப்படி ஆசார்யனை உயர்ந்த ஸ்தானத்தில் இருத்துவதன் காரணங்களைப் பட்டியலிடுகிறார் ஸ்வாமி.
ஆசார்யன் செய்யும் உபகாரங்களுக்கு ப்ரத்யுபகாரம் ஸிஷ்யனால் செய்யவே முடியாது
அஞ்ஞான த்வாந்த ரோதாத் அக பரிஹரணாத் ஆத்ம சாம்யா வஹத்வாத்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம ப்ரத கரிமதயா திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்
நிஷ் ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யான் நியதி ரஸதயா நித்ய சேஷித்வ யோகாத்
ஆச்சார்ய சத் ப்ரப் ரத யுபகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய–2-
அஞ்ஞான த்வாந்த ரோதாத் -அறிவின்மை என்னும் அருளை அகற்றுவதாலும்
அக பரிஹரணாத் -கீழ் ஸ்லோகத்தில் காட்டிய பாபம் துக்கம் வியசனம் -மூன்று விதமான அகத்தை நீக்குவதாலும்
ஆத்ம சாம்யா வஹத்வாத்–பிறரையும் தன்னைப் போலவே ஆக்குவதாலும்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம -மறு பிறவியைத் தீர்க்கும் வித்யா ஜென்மத்தை
ப்ரத -கொடுத்து அருளுபவர் என்கிற
கரிமதயா -பெருமையாலும்
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்–ஞானக் கண்ணின் மஹிமையாலும்
நிஷ் ப்ரத்யூஹா ஆந்ரு சம்ஸ்யான் -ஆந்ரு சம்ஸ்யம் -பிறருக்குத் தீங்கு செய்யாது இருப்பதையே தடை இன்றி நடத்தப்படுவதாலும்
நியதி ரஸ தயா -என்றும் மாறாத சுவை பொருந்தியதாலும்
நித்ய சேஷித்வ யோகாத்-ஒழிக்க முடியாத சேஷித்வம் கூடி இருப்பதாலும்
ஆச்சார்ய –ஆச்சார்யன்
சத் -ஸத்துக்களால்
அப்ரத் யுபகரண தியா -அவன் செய்து அருளும் உபகாரத்துக்கு சத்ருசமாக செய்ய ப்ரத்யுபகாரம் செய்ய முடியாது என்ற எண்ணம் கொண்டவனும்
தேவவத் -தேவனைப் போல்
ஸ்யாத் உபாஸ்ய-உபாஸிக்கத் தக்கவனாக இருக்க வேணும் -உபாஸிக்க வேணும் என்றபடி –
சிஷ்யன் ஆச்சார்யரையே பகவானாக கொள்ள வேண்டிய -8-காரணங்களை அருளிச் செய்கிறார் இதில் –
பிரதியுபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே
- அஞானம் என்ற இருட்டைப் போக்கி தத்வ, ஹித, புருஷார்த்தம் என்ற ஆத்ம ஞானத்தை அளிப்பவர் ஆசார்யன்.
- ஶரணாகதி என்ற அனுஷ்டானத்தைச் செய்வித்து நம் பாவங்களனைத்தையும் அழித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர்.
- ஞானம், குணம், அனுஷ்டானம் ஆகியவற்றை அளித்து தனக்குச் சமானமாக சிஷ்யனை ஆக்குகிறார்ஆசார்யன். எம்பெருமான் முக்தாத்மாவுக்கு ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் அளிப்பது போல்.
- ஸாலோக்யம் – முக்தனை ஶ்ரீ வைகுண்டலோகத்துக்கு வரவழைத்தல்.
- ஸாமீப்யம் – அத்தனை பரும்ஹாண்டமான ஶ்ரீவைகுண்ட லோகத்தில் அவனுக்கு ஸமீபத்தில் நம்மை இருக்கச் செய்தல்
- ஸாரூப்யம் – அவனைப்போல அப்ராக்ருதமான ரூபத்தை நமக்குத் தருவது.
- ஸாயுஜ்யம் – இதற்கு மேலே தனக்குச் சமமான ப்ரும்ஹானந்தத்தை நமக்குத் தருவது
- “தன்னோடொக்கத் தன் தாளிணைக்கீழ் வைக்கும் அப்பன்” என்கிறார் ஆழ்வார்.
- வித்யா ஜன்மம் அளித்து ஆத்ம போஷணம் செய்து புதுப்பிறவி தந்து இந்த ஸம்ஸார பந்தம் தொடராது காப்பவர் ஆசார்யன். பிதாவாகிய ஆசார்யன், மந்த்ரமாகிய மாதாவினால் ஞானமாகிய புதுப் பிறவியைக் கொடுத்து சிஷ்யனை கடைத்தேறச் செய்கிறார்.
- எம்பெருமானின் திவ்ய த்ருஷ்டியைப் போல ஆசார்யனும் சிஷ்யனைக் குளிரக் கடாக்ஷித்து அனுக்ரஹிக்கிறார். (ஆளவந்தார் கடாக்ஷம் உடையவர் மேல் படிந்தாற்போல. நடாதூரம்மாள் கடாக்ஷம் ஸ்வாமி தேஶிகன் மேல் விழுந்தாற்போல.)
- எம்பெருமான் கருணை எல்லோரிடமும் தடையின்றி செல்வதுபோல் ஆசார்யனின் கருணையும் சிஷ்யனிடம் எல்லையின்றி சுரக்கின்றது.
- எம்பெருமான் அடியார்களுக்கு என்றும் தெவிட்டாத அமுதமாய் இருப்பது போல் ஆசார்யனும் சிஷ்யர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை அளிக்கிறார்.
- எம்பெருமானைப் போல ஆசார்யனும் நித்ய ஸ்வாமி யாக உள்ளார் தன் சிஷ்யர்களுக்கு. எம்பெருமானுக்குள்ள ஜீவ சம்பந்தமும் ஆசார்யனுக்குள்ள சிஷ்ய சம்பந்தமும் ஒழிக்க ஒழியாது. இத்தகைய உயர்ந்த ஆசார்யனுக்கு ஸ்வரூபமாக, போக்யமாக, பாக்யமாக கைங்கர்யம் செய்வதே ப்ரத்யுபகாரமாக அமையும்.
- ஆச்சார்ய தேவோ பவ -ஸ்ருதி
மயர்வற மதிநலம் அருளுபவர் -நிர்ஹேதுகமாக அஞ்ஞான கந்தமே இல்லாதபடி -அறியாக் காலத்துள்ளே -அறியாதது அறிவித்த அத்தன்
நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தாதி நடை விளங்கவே
வேதம் அரண்மனைக்கு விளக்கு போன்ற அருளிச் செயல்கள்
ஸாஸ்த்ர பாணிநா ஸ்வயமேவ வந்து அவதரிக்கிறான் அன்றோ
பாபம் பிரஞ்ஞாம் நாசயதி -அஞ்ஞானத்துக்கு மூல காரணம் தொல்லைப் பழ வினையே -அவற்றை முதலறித்து
தாப த்ரயங்களைப் போக்கி அருளி -செடியாய வல் வினைகளைத் தீர்க்கும் திருமால் போலவே பண்டை வல்வினை பாற்றி அருளுகிறாரே ஆச்சார்யர்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் அன்றோ
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
————————————-
சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவித் அபிமதம் தத்த்வத சிக்ஷணீய –3-
சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்கமாக தண்டன் இடும் பழக்கம் யுடையவனாயும்
ப்ரஸ்ன கால ப்ரதீஷ-ஆச்சார்யன் இடம் தக்க காலம் எதிர்பார்த்து கேள்வி கேட்டு சங்கைகளைப் போக்கிக் கொள்பவனாயும்
சாந்தோ -மனத்தை அடக்கி வைப்பவனாயும்
தாந்தோ -வெளி இந்திரியங்களை அடக்கி வைப்பவனாயும்
அநஸூயு -பொறாமை இல்லாதவனாயும்
சரணமுபகத -ஆனு கூல்ய சங்கல்பாதி ஐந்து அங்கங்களோடே கூடிய விதிப்படி ஆச்சார்யன் இடம் சரணாகதி செய்பவனாயும்
சாஸ்த்ர விசுவாஸ சாலீ–ஸாஸ்த்ரங்களிலே விஸ்வாஸம் கொண்டவனாயும்
ப்ராப்த பரீஷாம் -ஒரு வருஷமா ஆறு மாதங்களோ தக்கபடி ஆச்சார்யனால் பரீக்ஷிக்கப் பட்டவனாயும்
க்ருதவித் -நன்றி யுடையவனாயும்
ஆகிய
சிஷ்ய-சிஷ்யன்
அபிமதம் தத்த்வத –தத்வ அர்த்தங்களில் விரும்பியதை -இஷ்டப்பட்டவற்றை
சிக்ஷணீய -உபதேசிக்கத் தக்கவன்
அல்லது அபிமதமாம்படி இருக்கும் படி தத்வார்த்தங்களைப் போதிக்கத் தகுந்தவன் –
சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —
சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம் -அடி பணிந்து போக்கற்ற நிலையை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன் போன்றவனே நல்ல சீடன்
இத்தகைய ஆசார்யனை வந்தடையும் சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களாக 14 அம்சங்களை சொல்கிறார் ஸ்வாமி தேஶிகன் இந்த 3ம் ஶ்லோகத்தில்.
- ஸத் புத்தி – நல்ல ஸ்திர புத்தி உள்ளவனாக சிஷ்யன் இருக்க வேண்டும்.
- ஸாது ஸேவீ – பெரியோர்களை மதிப்பவனாயும், பாகவதர்களோடு பழகும் தன்மை உடையவனாயும் இருக்க வேண்டும். (க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் ஆசார்யனைப் பணிந்து உபதேசம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தினார்)
- ஸமுசித சரித: – ஸாஸ்த்ரத்தை யொட்டிய கால தேச வர்த்தமானத்தை அனுசரித்த அனுஷ்டானமும், நல்லொழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்.
- தத்வ போதாபிலாஷி – தத்வ, ஹித, புருஷார்த்த ஞானத்தை அறியும் ஆசையுடையவனாயிருக்க வேண்டும். தர்மங்களை அறிந்து விசாரம் செய்யும் விருப்பம் (உத்காட இச்சா) உடையவனாயிருக்க வேணும்.
- ஸுஸ்ரூஷு – ஆசார்யனுக்குப் பணிவிடை செய்யுமுகத்தான் அவரிடம் உபதேசங்களைப் பெற வேண்டும்.
- த்யக்த மான: – “தான்” எனும் அஹங்காரம் அற்றவனாயிருத்தல். ஞானத்திலும், செல்வத்திலும், வயதிலும் ராமானுஜரை விட உயர்ந்த வராயிருந்த போதும் தன் சிஷ்ய பாவத்தைச் சற்றும் என்றும் மாற்றிக் கொள்ளாத முக்குறும்பறுத்த கூரத்தாழ்வானே சிஷ்ய லக்ஷணத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாவார்.
- ப்ரணி பதந பர – கீழே விழுந்து ஆசார்யனை வணங்குபவனாக ஸிஷ்யன் இருக்க வேண்டும். த்ரிகரணத்தால் சங்கோசமின்றி காலக்ஷேபம் கேட்கும் முன்பும் பின்பும் ஆசார்யனை ஸேவிக்க வேண்டும்.
- ப்ரஶ்ன கால ப்ரதீக்ஷ: – தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசார்யனிடம் உசிதமான காலத்தை எதிர்நோக்கிக் கேட்டுத் தெளிய வேணும்.
- ஶாந்த: – சஞ்சலங்களைத் தவிர்த்து மனதை அடக்கியவனாக இருக்க வேணும்.
- தாந்த: – புற இந்த்ரியங்களை தறி கெட்டுப் போகாமல் அடக்கியவனாயிருக்க வேண்டும். லௌகீக விஷயங்களில் அதிகம் ஈடுபடும்போது வித்தை கற்பதற்கு விருத்தம் ஏற்படும்.
- அஸூய: – பிறருடைய பெருமையில் பொறாமையும் அதன் மூலம் போட்டியும் ஏற்படக் கூடாது. அவர்களின் குணங்களில் தோஷம் கற்பிக்காதிருக்க வேணும்.
- ஶரணம் உபகத: – ஆசார்யனைத் தேடிப் போய் சிஷ்யன் பணிய வேணும். ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஶரணாகதி செய்து உபதேசம் கேட்க வேணும்.
- ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலி – ஆசார்யனிடமும் அவர் உபதேசிக்கும் ஶாஸ்த்ர விஷயங்களிலும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். “ஆயிரம் மாதா பிதாக்கள் சேர்ந்தாலும் ஶாஸ்த்ரம் போன்று ஹிதம் சொல்வதற்குச் சமானமாகாது” என்கிறார் பகவத் ராமானுஜர். ஆசார்யன் செய்யும் ஹிதோபதேசம் பின்னால் தான் சிஷ்யனுக்கு நன்கு புரியும்.
- ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் – ஆசார்யன் செய்யும் பரீக்ஷைக்குட்பட்டு சிஷ்யனாக வேணும்.
- க்ருத விது – இவ்விதமாக சிஷ்யனாகிய பின் ஆசார்ய பக்தியுடன் நன்றி மறவாதிருக்கவேணும். க்ருதஞையுடனிருந்தால்தான் ஆசார்ய உபதேசங்கள் மனதில் நிலைக்கும்.
இத்தகைய நல்ல குணவானாகிய சிஷ்யனுக்கு வஞ்சனையின்றி ஆசார்யன் ஸம்ப்ரதாய விஷயங்களை உபதேசிப்பார்.
(1/4 பாகம் உபதேசம், 1/4 பாகம் தானே படிப்பதால், 1/4 பாகம் வாத உரையாடல்களால், 1/4 பாகம் காலக்ரமேண சிஷ்யன் தெரிந்து கொள்வான்)
ஸ்வ அதீந அசேஷா சத்தா ஸ்திதி யத்ன பலம் வித்தி லஷ்மீ சமேகம்
ப்ராப்யம் நாந்யம் ப்ரதீயா ந ச சரணதயா கஞ்சி தந்யம் வ்ருணீயா
ஏதஸ்மா தேவ பும்ஸாம் பயமிதரதபி ப்ரேஷ்யா மோஜ்ஜீஸ் ததாஜ்ஞாம்
இத்யே காந்தோபதேச ப்ரதமமிஹ குரோர் ஏக சித்தேன தார்ய —4-
இஹ -இந்த சந்தர்ப்பத்தில்
ப்ரதமம் -முதன் முதலிலே
ஸ்வ அதீந –தனக்கு அதீனமான
அசேஷ-ஸகல வஸ்துக்களுடையவும்
சத்தா -இருப்பு
ஸ்திதி -அநேக காலம் தொடர்தல்
யத்ன -பிரயத்தனம் செய்தல்
பலம் -இவற்றின் பலன்களையும் யுடையவனாய்
லஷ்மீஸம் -ஸ்ரீமன் நாராயணனை
ஏகம் -முக்யமாகவும் -ஏகமேவம் அத்விதீய ப்ரஹ்மம் -முதல்வன் -ஒப்பில்லா அப்பன் -என்று
வித்தி -அறியக் கடவாய்
அந்யம்-வேறு ஒருவனை
ப்ராப்யம் -நாம் அடையத் தக்கவனாக
ப்ரதீயா ந -கருதாதீர் -நம்பாதீர்
அந்யம் கம்சித் -வேறு ஒருவனையும் ஒரு பொருளையும்
சரணதயா -சரணமாக
ந வ்ருணீயா-வரிக்காதீர் -வேண்டாதீர்
பும்ஸாம்–ஜீவ ராசிகளுக்கு
பயம் -அச்சமும்
இதரதபி-மற்றதும்-அதாவது நற் கதியும்
ஏதஸ்மா தேவ -இவன் இடமிருந்தே ஏற்படுகிறது என்று
ப்ரேஷ்ய–கண்டு அறிந்து
ததாஜ்ஞாம்-அவனது கட்டளையை
மோஜ்ஜீஸ் -கை விடாதீர்
இதி -இவ்விதமான
குரோர்-குருவின்
ஏகாந்தோபதேச –ஏகாந்தத்தில் செய்யப்பட உபதேசம் -ப்ரஹ்மம் ஒருவனே ப்ராப்யம் என்றும் ப்ராபகம் என்ற உபதேசம்
ஏக சித்தேன -ஊற்றமுள்ள -ஊன்றிய மனத்தால்
தார்ய -தரிக்கத் தக்கது
மோக்ஷத்தை விரும்பித் தன்னை வந்தடைந்த சிஷ்யனுக்கு ஆசார்யன் செய்யும் உபதேசம் பற்றி இந்த ஶ்லோகம் சொல்கிறது.
ஆசார்யன் செய்யும் ரஹஸ்ய ஏகாந்த உபதேசமாகும் இது. மிக ஶ்ரேஷ்டமான திரு அஷ்டாக்ஷரம் த்வயம் சரமஶ்லோகம் ஆகியவற்றின் ஸாரமான அர்த்த விசேஷங்களை உபதேசிக்கிறார்.
(18 முறை நடந்து திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் கேட்டறிந்தார் இந்த அர்த்தங்களை)
இந்த திருமந்த்ரார்த்தங்கள் நம் ஆத்மாவைக் காட்டித் தருபவை. பெரிய உருவைக் காட்டும் சிறிய கண்ணாடி என்கிறார் ஸ்வாமி தேஶிகன் இதனை. பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்வதே இந்த திருமந்த்ரம். இதனை ஆத்ம யாத்ரை என்பர் தேக யாத்ரை என்பது தேக வளர்ச்சி. ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்வது திருமந்த்ரத்தாலேதான். ஆக ஆசார்யன் செய்யும் இந்த முதல் உபதேசம் பிறந்த சிஸுவுக்கு ப்பாலூட்டுவதற்கொப்பாகும்.
முதலில் ஶ்ரீய:பதியைத் தெரிந்துகொள்.
ரஸிப்பதும் ஸந்தோஷிப்பதும் கிளிக்கு அனுபவமாகாது. ராஜா ஸந்தோஷித்து அனுபவிக்கிறான். இந்த லீலா ரசம் தான் பகவான் அனுபவிப்பது ஜீவன்களிடம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
ஸ்வதந்த்ரனாயில்லாமல் சூழ்நிலை தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நமக்கே உரிய எம்பெருமானுக்கு கீழ்படிந்திருப்பது நம் ஸ்வரூபத்துக்கு ஏற்புடையதாயிருக்கும். “எருது பரதேசம் போவதுபோல்” என்கிறார் ஸ்வாமி. இதர தேவதைகளை அடைந்தால் எருது படும் கஷ்டம் போன்று நாமும் உழலவேண்டியது புரியும்.
மூன்றாம் விஷயம் – நச ஶரணதயா – அவனை அடைவதை லக்ஷ்யமாய்க் கொண்டால் அவனே உபாயமாயிருந்து அவனை அடையச் செய்கிறான். வேறு தெய்வங்களை நாடவேண்டாம்.
சுகம்/துக்கம் லாபம்/நஷ்டம் பயம்/அபயம் எல்லாம் தருபவன் அவனே. ஆபத்தைத் தருகின்ற அவனே அபயத்தையும் தருகிறான் “பயக்ருத் பயநாஶன:”
ஆசார்யன் செய்யும் இந்த உபதேசங்களில் ஒன்றிய மனத்தனாய் பசுமரத்தாணிபோல சிஷ்யன் இவற்றைப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
மோஷ உபாயார்ஹ தைவம் பவதி பவ ப்ருதாம் கஸ்யசித் க்வாபி காலே
தத்வத் பக்தி ப்ரபத்யோரதி க்ருதி நியமஸ் தாத்ருஸா ஸ்யாந் நியத்யா
சக்தா சக்தாதி தத்தத் புருஷ விஷயத ஸ்தாப்யதே தத் வ்யவஸ்தா
யச்சாஹூஸ் தத் விகல்ப சம இதி கதிஸித் தத் பல ஸ்யா விசேஷாத் –5-
பவ ப்ருதாம்–ஸம்ஸாரிகளுக்குள்
கஸ்யசித்-ஒருவனுக்கு
க்வாபி காலே-ஒரு காலத்தில்
ஏவம் -கீழ் ஸ்லோக உபதேசம் பெற்ற பலனாக
மோஷ உபாயார்ஹ -மோக்ஷ உபாயத்தில் அதிகாரம்
பவதி-ஏற்படுகிறது
தாத்ருஸா-அப்படிப்பட்ட
நியத்யா-தைவ வசத்தால்
தத்வத் -அதைப் போலவே
அதாவது -அநேக கோடி ஜீவ ராசிகளில் ஒருவனுக்கு ஒரு காலத்தில் மோக்ஷ உபாய அதிகாரம் ஏற்பட்டது போலவே
பக்தி ப்ரபத்யோ-பக்தி ப்ரபத்திகளில்
அதி க்ருதி நியமஸ் -அதிகார வ்யவஸ்தை
அதாவது இன்னானுக்கு இன்னது தான் என்ற ஏற்பாடு உண்டாகக் கூடும்
தத் வ்யவஸ்தா-அந்த வியவஸ்தை -சக்தி உள்ளவன் என்றும் சக்தி அற்றவன் என்றும் இது முதலான அந்த அந்த புருஷர்களின் விஷயமாக
ஸ்தாப்யதே –நிலை நிறுத்தப் படுகிறது
கதிஸித்-சிலர்
தத் விகல்ப-அவ்விரண்டில் ஓன்று என்றது
சம-மேன்மை தாழ்மை இல்லாதது
இதி- என்று
யஹூஸ் யத் -சொல்லுகின்றனர் -என்பது யாது ஓன்று உண்டோ
தத் -அது
பல ஸ்யா விசேஷாத் -பலனில் வித்யாஸம் இல்லாதது கொண்டு என்று அறிய வேண்டும் –
முமுஷு –இச்சை -காயசித் -சிலருக்கு சில வேளைகளில் ஆச்சார்யர் இடம் உபதேசம் பெற -கஸ்யசித் க்வாபி காலே –
பஹு நாம் சன்மானம் –ஞானவான் மாம் ப்ரபத்யே -ஸ்ரீ கீதா
பக்தி பிரபத்தி இரண்டு உபாயங்களை வேறே வேறே அதிகாரிகளுக்கு
மநோ நிக்ரஹம் -ஞான வைராக்யாதி ஸாமக்ரியைகள் நிறைய பெற்ற வ்யாஸாதிகளுக்கு பக்தி
அதி அசக்தர்களான நம் போல்வாருக்கு சரணாகதி -ப்ரபத்தியே உபாயம்
இரண்டு உபாயங்களுக்கும் பலம் துல்யம் ஒன்றே என்றவாறு –
இதுவரை ஆசார்யன் அளித்த உபதேசத்தால் நல்ல ஞானமடைந்த சிஷ்யனுக்கு பக்தி, ப்ரபத்தி என்ற இரு உபாயங்களின் தன்மைகளை ஆசார்யன் எடுத்துக்கூறுகிறார் இதில்.
ஶ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய முக்யமான கார்யம்
ஶரணாகதி. அடுத்த ஜன்மம் இல்லை என்ற கதி. மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி இந்த உபதேசம் மூலம் கிடைக்கிறது. இத்தகுதி எல்லார்க்கும் கிடைப்பதில்லை.கர்ம பலனே இதற்கு மூல காரணம்.ஞானம், சக்தி, சாஸ்த்ர அனுமதி இருந்தால் இத்தகுதி பூர்த்தி யாகும். பக்தியோகம் செய்வதற்கான ஞானமும் சக்தியும் நமக்கில்லை. அது கடின உபாயம். ஶரணாகதி சுலபமானது.
மற்ற விவஸ்தைகள் தேவைப்படாமையே இதன் சிறப்பு. ஆனால் அடையப் போகும் பலன் இரண்டுக்கும் சமம்.
- ஸம்ஸாரிகளுள் யாரோ ஒருவர்க்கு மட்டுமே மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி கிடைக்கும்.
- பக்தி/ப்ரபத்தி என்ற இரண்டு அனுஷ்டானங்களால் தான் மோக்ஷம் பெற முடியும். இதில் ஞானம்,சக்தி,சாஸ்த்ர அனுமதி,விளம்ப ஸஹிப்பு (மோக்ஷம் பெற ஏற்படும் கால தாமதம்) இவற்றுடன் செய்வது பக்தி யோகம். பாபங்கள் (ஸஞ்சித, ப்ராரப்த) முற்றிலும் ஒழிந்த பின்பே மோக்ஷம் சித்திக்கும். அஞ்ஞாத ஸுஹ்ருதத்தால் நிகழ்வது ஶரணாகதி. இந்த பிறவி முடிவில் மோக்ஷம் கிடைக்கும்
- இந்த இரு அனுஷ்டானங்களும் குரு, லகு விகல்பமுடையதாயிருப்பதால் லகு உபாயத்தையே எல்லாரும் செய்வர். ஆனால் பலன் இரண்டுக்கும் சமம்.ஒருவர் இந்த இரண்டையும் அனுஷ்டிக்க சாஸ்த்ரம் அனுமதிக்காது. பக்தி யோகம் தைல தாரை போல இடையீடற்ற த்யானம் செய்யச் சொல்கிறது. க்ருத தாரை போல அல்ல. பஹிரங்க அங்கங்கள் உண்டு. ஶக்தனே இதனைச் செய்யமுடியும். ப்ரபத்தி அஶக்தனுக்கு. இது ஐந்து அங்கங்கள் கொண்ட க்ஷண கால அனுஷ்டானம். ஆக இரண்டின் ஸவரூபங்களும் இரு த்ருவங்களாய் நிலைப்படுகின்றன. திருக்குருகைக் காவலப்பன் பக்தியோகம் செய்து கண்ணனை சாக்ஷாத் கரித்தார். இந்த பக்தி யோகிகளுக்கு பக்தியும், ஞானமும் பிறவி தோறும் தொடரும். ஆனால் நாதமுனிகள், நம்மாழ்வார் கால விளம்பத்தைப் பொறுக்க வில்லை. த்யான ருசியுள்ளவர்களுக்கு விளம்பம் ஒரு பொருட்டல்ல. ஆக மேற்கூறிய நான்கு தகுதியுடையவர் பக்தியோகம் செய்வர். இவற்றில் எதுவுமில்லாதவர் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறார்.
- இப்படி வித்யாசமிருப்பினும் பலன் சமமானது. பரத்தில் இருவருக்கும் அனுபவம் ஒன்றே. பக்தி யோகனுக்கு இகத்தில் பகவதனுபவம் அதிகம். ஶரணாகதனுக்கு பகவதனுபவம் இங்கே குறைவு.
“நாள் இழவு (நஷ்டம்) அன்றி பொருள் இழவு இல்லை” என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
———————
சாநுக்ரோசே சமர்த்தே ப்ரபதநம் ருஷிபி ஸ்மர்த்யே அபீஷ்ட ஸித்த்யை
லோகே அப்யேதத் பிரசித்தம் ந ச விமதிரிஹ ப்ரேஷ்யதே க்வாபி தந்த்ரே
தஸ்மாத் கைமுத்ய சித்தம் பகவதி து பர ந்யாச வித்யா நுபாவம்
தர்ம ஸ்தேயாஸ்ச பூர்வே ஸ்வ க்ருதிஷூ பஹுதா ஸ்தாப யாஞ்சக் ருரேவம் —6-
அபீஷ்ட ஸித்த்யை–இஷ்டம் பெறுவதற்கு
சாநுக்ரோசே -தயை யுள்ள
சமர்த்தே -வல்லவன் இடத்திலே
ப்ரபதநம் -அடைக்கலம் புகுதல்
ருஷிபி ஸ்மர்த்யே -ரிஷிகளால் விதிக்கப்படுகிறது
ஏதத் -இவ் விஷயம்
லோகே பிரசித்தம் -உலக நடத்தைகளிலும் ப்ரஸித்தமானது
இஹ -இவ் விஷயத்தில்
விமதிர் -அபிப்ராய பேதமானது
க்வாபி தந்த்ரே-ஒரு சாஸ்திரத்திலும்
ந ப்ரேஷ்யதே -காணப்படுகிறது இல்லை
தஸ்மாத் –ஆதலால்
கைமுத்ய சித்தம் -கை முத்யம் நியாயத்தால் ஸித்தமான
பர ந்யாச வித்யா நுபாவம்-பர ந்யாஸம் என்னும் வித்யையின் மஹிமையை
தர்ம ஸ்தேயாஸ்–தர்மங்களை நிர்ண யிக்கிறவர்களான
பூர்வே –ஆளவந்தார் முதலான முன்னோர்
ஏவம் -முன் கூறியபடியே
ஸ்வ க்ருதிஷூ -தாங்கள் அருளிச் செய்த நூல்களிலே
ஸ்தாப யாஞ்சக்ருர் -விசாரித்து முடிவு செய்துள்ளனர்
ஸ்ம்ருதிகளும் சரணாகதி மூலம் சுக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் காகாசூரன் போன்றோர் பயன் அடைந்ததை சொல்லுமே —
பலரும் பல பலன்களுக்கு சரணாகதி செய்தமை ஸ்ம்ருதிகள் சொல்லும் -கைமுதிக நியாயத்தால் அவனை அடைய சரணாகதி உதவுமே –
பரம காருணிகன் சர்வ சக்தன் தன்னையே ஓக்க அருள் செய்வான் சரணாகதர்களுக்கு என்பதை பூர்வர்கள் பலரும் காட்டி அருளி உள்ளார்கள் –
லகு உபாயமான பிரதிபத்திக்கும் அதே உயர்ந்த பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் யுக்திகள் காட்டி அருளுகிறார்
வானரம் புலி மனுஷ்ய வ்ருத்தாந்தம் -காகாசூரன் -விபீஷணன் –திரௌபதி -சுமுகன் -கஜேந்திரன் –திரிசங்கு –
சுனஸ்ஸேபன்-ரிஷி குமாரன் யாக பசுவாக விற்கப்பட விச்வாமித்ரரை சரண் அடைய தபோ மந்த்ர பலத்தால் ரக்ஷித்து அருளினார் –
சாதாரண ஜனங்கள் இடமே சரணாகத ரக்ஷணம் காணும் இடத்தில் கைமுதிக நியாயத்தால் பகவான் விஷயத்திலே ஸித்தம் அன்றோ என்கிறார் –
ஆகவே மஹா விஸ்வாசமே வேண்டியது -என்கிறார் –
ப்ரபத்தியின் பெருமையையும்,உயர்வையும் காட்டும் ஶ்லோகம் இது.
- கருணையும், சக்தியும் உடையவனிடம் ப்ரபத்தி செய்தால் பலன் கிடைக்கும் என வால்மீகி, வ்யாசர் போன்ற ரிஷிகள் தங்கள் ஸுக்திகளில் சொல்லி யுள்ளனர். லௌகீகமான கார்யம் நிறைவேற ஓரளவு சக்தியும், கருணையும் கொண்ட மனிதனை நம்புகிற நாம் ஸர்வ ஶக்தனாகிய எம்பெருமான் கட்டாயம் பலனளிப்பான் என நம்ப வேணும். லக்ஷ்மணன், பரதன், தண்டகாரண்ய ரிஷிகள், சுக்ரீவன், விபீஷணன், த்ரௌபதி, பாண்டவ ஶரணாதிகள் போன்றவை இதிகாச ப்ரசித்தமானவை.
- சக்தியுள்ளவனின் உதவியை கார்ய சித்திக்கு நாடுவது உலக நியதி. ஸாஸ்த்ரங்களும் இதனைத் தடுக்க வில்லை. பரீக்ஷித் நகர் சோதனையில் கலிபுருஷன் பசு ஒன்றை ஹிம்ஸிக்க அவனை வெட்டக்கை ஓங்க, கலி செய்த ஶரணாகதியை ஏற்று அபயம் அளித்து தன் நாட்டை விட்டு ஓடும் படி செய்ததாக வரலாறு. கீதோபதேசம் கேட்ட அர்ஜுனனின் பேரனுக்கே ஶரணாகதி செய்தவனிடம் கருணை யிருக்கும் போது எம்பெருமான் விஷயத்தில் சந்தேகமே வேண்டாம்.
- ஆக இந்த ஶரணாகதி என்ற ப்ரம்ஹ வித்தையை, தர்ம நிர்ணயம் செய்யும் ஆழ்வார் ஆசார்யர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆக இந்த அனுஷ்டானம் பூர்வாசார்யர்கள் ஸ்தாபித்த பரம தர்மமாகும்.
————————
சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ நநு விதி விஷயே நிர்விசங்கோ அதிகாரீ
விச்வாஸஸ் யாங்க பாவே புநரிஹ விதுஷா கிம் மஹத்வம் ப்ரஸாத்யம்
மைவம் கோராபராதை சபதி குரு பலே ந்யாஸ மாத்ரேண லப்யே
சங்கா பார்ஷ்ணி க்ரஹார்ஹா சமயிதுமுஸிதா ஹேது பிஸ் தத் ததர்ஹை –7-
சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ –ஸாஸ்த்ரம் பிரமாணம் ஆகும் முறையை நன்கு அறிந்த
அதிகாரீ-ப்ரபந்ந அதிகாரியானவன்
விதி விஷயே -சரணாகதியை விதித்ததில்
நிர்விசங்கோ நநு–ஸந்தேஹம் இல்லாதவன் அல்லவா
புநரிஹ–புநர் இஹ -பின்னேயும் இந்த சரணாகதியில்
விஸ்வாஸஸ்ய -மஹா விஸ்வாசம்
யங்க பாவே -அங்க பாவமாக இருக்கையிலே
விதுஷா -தெரிந்தவனால்
மஹத்வம் ப்ரஸாத்யம்–மஹத் பெரியது என்ற விசேஷணத்தால் ஸாதிக்கக் கூடியது –
கிம் -எது
மைவம் –அப்படி அல்ல
கோராபராதை -அதிகம் குற்றம் செய்தவர்களால்
ந்யாஸ மாத்ரேண-சரணாகதியை மாத்ரமே கொண்டு
சபதி -தத் க்ஷணத்தில்
குரு பலே -பெரியதொரு பலன்
லப்யே–அடையப்பட இருக்கையிலே
பார்ஷ்ணி க்ரஹார்ஹா –பின் தொடரக் கூடிய
சங்கா -ஸந்தேஹம்
தத் ததர்ஹை -அவ்வவற்றுக்கு ஏற்ற
ஹேது பிஸ் –ஹேதுக்களால்
சமயிதும் உஸிதா -போக்கப் படுவதற்குத் தக்கது
மஹா விஸ்வாஸம்-முக்கிய அங்கம் –செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமை – நம் பாபங்கள் தண்மை அதிசயம்
பேற்றின் பலன் -மூன்றையும் பார்த்தால் மஹா விஸ்வாசத்தின் அருமை அறியலாம் –
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே அடைய முடியும்
பகவத் குணக் கடலிலே ஆழ்ந்து மஹா விஸ்வாஸம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே
விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி.–இத்யாதி ஸ்லோகத்தால் பிராட்டி ராவணனுக்கும் உபதேசம்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய –மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தானே அருளிச் செய்தானே அன்றோ –
மஹா விஶ்வாஸத்தின் அவஶ்யத்தைச் சொல்கிறது இந்த ஶ்லோகம்.
முதல் இரு வரிகள் கேள்விகளாகின்றன. அதாவது சாஸ்த்ரங்களை நம்புகின்றவனாக இருப்பவன் அது விதிக்கும் காரியங்களைச் செய்யத் தயங்க மாட்டான் என்னும் போது அவனுக்கு விஶ்வாஸம் இருக்கிறது என உணரலாம்.
அடுத்த இரு வரிகள் க்ஷண கால அனுஷ்டானமாகிய ப்ரபத்தி அளிக்கும் மிகப் பெரிய பலனில் சந்தேகம் ஏற்படக் கூடியதைத் தவிர்க்க ப்ரபன்னனுக்கு மஹா விஶ்வாசம் எம்பெருமானிடம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.–ப்ரபத்தியின் முக்ய அங்கமாக இந்த மஹா விஶ்வாசம் உள்ளது.
இருகையையம் விட்டுக் கதறிய த்ரௌபதியையும், எல்லாம் விட்டு வந்த விபீஷணனையும் காப்பாற்றியது எம்பெருமானிடம் அவர்கள் கொண்ட மஹா விஶ்வாஸமே. மாபெரும் நம்பிக்கை என்பதால் இதனைத் தனியான அங்கமாய்ச் சொல்லியுள்ளது.
பாத்ரமறிந்து மோக்ஷ பலனைத் தருவதில்லை எம்பெருமான். இப்போதாவது என்னைச் சரணடைந்தானே என்ற கருணையால் உந்தப்பட்டு எம்பெருமான் செய்யும் பரம அனுக்ரஹ பலன்.
ஒரேஒருநாள் ஸீதாபிராட்டி ராக்ஷஸிகளிடம் பட்ட அவஸ்தையைப்பார்த்த ஹனுமன் அவர்களைக் கொல்ல முற்படும்போது 10 மாதமாக தன்னை ஹிம்ஸித்த அவர்களுக்கு கருணை கூர்ந்து அபயமளிக்க வில்லையா பிராட்டி! ஆனாலும் கோர பேரபராதங்கள் செய்த நமக்கு இந்த சிறிய க்ஷண கால ப்ரபத்தி மோக்ஷத்தை அளிக்குமா என்ற சந்தேகமானது செய்ய விடாமல் பின்னே இழுக்கும்.
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஸர்வ ஶக்தனான எம்பெருமான் தன் அபார கருணையாலே இதனைச் செய்கிறான். இந்த விஷயங்களை ஆசார்யன் மூலம் நன்கு தெளிதல் வேண்டும்.
————————–
ந இஹ அபிக்ராந்தி நாஸோ ந ஸ விஹதிரிஹ ப்ரத்யவாயோ பவேதிதி
உக்தம் கைமுத்ய நீத்யா ப்ரபதந விஷயே யோஷிதம் சாஸ்த்ர வித்பி
தஸ்மாத் க்ஷேத்ரே ததர்ஹே ஸூவிதத சமயைர் தேசிகை சம்ய குப்தம்
மந்த்ராக்யம் முக்தி பீஜம் பரிணதி வசத கல்பதே ஸத்பலாய–8-
இஹ –இந்த கர்ம யோகத்தில்
அபி க்ராந்தி –ஆரம்பத்துக்கு
நாஸோ ந -பயன் தராமல் வீணாகப் போவது இல்லை
விஹதி மதி -முடிவதற்கு முன்பு தடை பட்டு நின்று போய் விட்டால்
ப்ரத்யவாயோ -பெரும் குற்றமும்
ந பவேதிதி-உண்டாகாது
இதி -இவ்வாறு
யுக்தம் -கர்ம யோகத்தில் சொன்னது
ஸாஸ்த்ர வித்பி –சாஸ்திரம் அறிந்தவர்களால்
ப்ரபதந விஷயே-சரணாகதியின் விஷயத்தில்
கைமுத்ய நீத்யா –கை முதிதம் நியாயத்தைக் கொண்டு
யோஷிதம் –இணைக்கப் பட்டது
தஸ்மாத் –ஆதலால்
ஸூவிதத சமயைர்–காலம் அறிந்த
தேசிகை–ஆச்சார்யர்களால்
ததர்ஹே–அதற்குத் தகுந்த
க்ஷேத்ரே –பூமியில் இடத்தில் -அதாவது குணம் நிறைந்த சிஷ்யன் இடத்தில்
சம்யக்-நன்றாக
உப்தம்-விதைக்கப்பட்ட
மந்த்ராக்யம் –மந்த்ரம் என்னும்
முக்தி பீஜம் –முக்தியின் விதை
பரிணதி வசத -முதிர்ச்சி அடைவதால்
கல்பதே ஸத் பலாய-நல்ல பழம் கொடுக்க ஏற்படுகிறது
பிரபத்தி அங்கங்களை ஆச்சார்யர் உபதேசம் மூலம் -உணர்ந்து -மஹா விஸ்வாஸம் அடைய வேண்டுமே –
ரஹஸ்ய த்ரய ஞானம் -ஆச்சார்யர் மூலம் பெற்று -ஸ்ரீமன் நாராயணனே அசேஷ ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமி -நியாம்யன்–
அவனே பரம ப்ராப்யம் –அவனே பிராபகம்-சாஸ்திரங்கள் அவனது ஆஜ்ஞா ரூபம் -விதி நிஷேதங்களை மாறாமல் இருக்க வேண்டுமே –
பகவத் திரு நாம சங்கீர்த்தனம் -பிரபத்தி மந்த்ர உச்சாரணம் –போன்றவை பிரபத்தியிலே மூட்டி அதன் மூலமாக பயன் தர வல்லது
எனவே பிரபத்தி அனுஷ்ட்டிக்க வேண்டியது அவஸ்யமே என்றதாயிற்று –
மந்த்ர ஜபமும்,நாம ஸங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் மூலமே மோக்ஷம் தர வல்லவை என்பதனை இந்த ஶ்லோகம் வலி யுறுத்துகிறது.
பக்தி யோகத்தையும், ப்ரபத்தியையும் ஶாஸ்த்ரங்கள் ஒத்துக் கொண்டுள்ளன. இவை இரண்டும் முடியாத போது மந்த்ர, நாம கீர்த்தனங்கள் செய்ய வேதம் அனுமதிக்கிறது. தன்வசமின்றி“ஹரி” என்ற நாமத்தை ஒருவன் சொன்னால் பாபம் விலகும். காட்டில் ம்ருகங்களிடையே அகப்பட்ட ஒருவன் சிம்ஹ கர்ஜனை கேட்ட மாத்ரத்தில் அவற்றினிடமிருந்து தப்பி விடுபடுவது போல “ஹரி” ஸப்தம் கேட்டால் – சொன்னால் போதும். பாபங்கள் விலகும் என்கிறது சாஸ்த்ரம்.
இன்றைய கால கட்டத்தில் பக்தி யோகம் செய்வதற்கான ஞானம், ஶக்தி நமக்கு கிடையாது. ப்ரபத்திக்கும் முக்ய தேவை “மஹா விஶ்வாஸம்”.
ஸர்வ ஶக்தனும், பரம காருணிகனுமாகிய எம்பெருமான் என்றும் இதற்கு அடிமையானவன். தான் பெண் என்பதையும், தன் நிலைமையையும், தன்னைச் சுற்றி யிருந்த பெரியோர்களையும் தள்ளி வைத்தது த்ரௌபதியின் மஹாவிஶ்வாஸம். இத் துணை கடினமாகப் பெறும் மஹா விஶ்வாசத்தை விட மந்த்ர ஜபம் ஸுலபம். ஆனால் இது ஸாக்ஷாத்தாக பலனைத் தராது.
பகவான் கீதையில் மோக்ஷம் பெற கர்ம, ஞான, பக்தி யோகம் செய்பவன் பாதியில் விட்டானே யாகிலும் பாபமாகாது. பலன்தராமல் போகாது. ஜன்ம வாசனை தொடரச் செய்து பலனளிக்கும். வீண் போகாது என்கிறான்.
ஆக ப்ரபத்தி விஷயத்திலும் இதே போன்ற பெருமை இருப்பதை ஸாஸ்த்ரங்கள் கூறுவதைப் பெரியோர்கள் ஸ்தாபிக்கின்றனர்.
உழவுத்தொழிலில் தேர்ந்த உழவன் நல்ல விளை நிலத்தில், தேர்ந்த விதை யிட்டு வளர்த்த மரம் நல்ல பழங்களைத் தரும். விதை நேராகப் பழமாகாது. ஆனால் விதை பரிணாமத்தால் பழமாகிறது.
அது போல தேர்ந்த ஆசார்யன் ஸத் ஸிஷ்யனுக்குச் செய்யும் மந்த்ரோபதேசம் அவனுக்கு ஶ்ரத்தை உண்டாக்கிய மஹா விஶ்வாஸத்தால் மோக்ஷ பலனைப் பெறச்செய்யும். ஆக மந்த்ரத்தைத் தானே உச்சாடனம் செய்து மோக்ஷம் பெற இயலாது என்று உணர வேண்டும்.
- இஹ அபிக்ராந்தி நாஶந– கர்ம யோகத்தில் தொடக்கம் வீணாவதில்லை.
- இஹ விதி ப்ரத்யயாயச நபவேத் — கர்ம யோகம் நடுவில் தடைப்பட்டாலும் பாபம் ஏற்படாது.
- இதி உக்தம் — என கீதை சொல்கிறது.
- ப்ரபதன விஷயே சாஸ்த்ர வித்பி:யோஜிதம் — ப்ரபத்தி விஷயத்திலும் இதேபோல் ஸாஸ்த்ரமறிந்த பெரியோர்களால் பொருத்திப் பேசப்பட்டுள்ளது.
- தஸ்மாததர்ஹே — ஆக அந்த உபதேசத்துக்கேற்ப
- க்ஷேத்ரே ஸுவிதித ஸமயே —- சேதனனாகிய நிலத்தில் விதைக்கும் காலத்தை நன்கறிந்த
- தேஶிகை ஸம்ய குப்தம்—- ஆசார்யர்களால் நன்கு விதைக்கப்பட்ட
- மந்த்ராக்யம் முக்தி பீஜம் — ப்ரபத்தி மந்த்ரமாகிய மோக்ஷ விதை
- பரிணதி வஶத:— பக்குவமடைந்து
- கல்பதே ஸத்பலாய– மோக்ஷமாகிய சிறந்த பலனைத்தர வல்லதாகிறது.
———————–
ந்யாஸ ப்ரோக்தோ அதிரிக்தம் தப இதி கதித ஸ்வத் வரஸ் சாஸ்ய கர்த்தா
அஹிர்புத்ந்யோ அப்யன்வவா தீத கணி திவிஷதாம் உத்தமம் குஹ்ய மேதத்
சாஷான் மோஷாய சாஸவ் ஸ்ருத இஹ து முதா பாத சங்கா குணாட்யே
தன்நிஷ்டோ ஹ்யந்ய நிஷ்டான் ப்ரபுரதி ஸயிதும் கோடி கோட்யம் சதோ அபி –9-
ந்யாஸ –பர ந்யாஸம் சரணாகதி
அதிரிக்தம்-மற்ற எல்லாவற்றாலும் உயர்ந்ததான
தப இதி-தபஸ் இது என்று
ப்ரோக்தோ –கூறப் பட்டது
அஸ்ய கர்த்தா–இத்தைச் செய்தவன்
ஸ்வத் வரஸ் –நல்ல யாகங்களைச் செய்தவன் ஆகிறான்
இதி -என்று
கதித -உரைக்கப் பட்டு இருக்கிறான்
அஹிர்புத்ந்யோ –ருத்ரனும்
யன்வவா தீத் -இதைத் தொடர்ந்து பேசினான்
ஏதத் -இந்த சரணாகதி
திவிஷதாம்–தேவர்களுடைய
உத்தமம் குஹ்யம் –உத்தமமான ரஹஸ்யமாக
அகணி –மதித்து உரைக்கப் பட்டது
அசவ்-இது
ஸாஷாத் –நேராகவே -மற்ற ஒன்றை இடையிடாமலேயே
மோஷாய –மோக்ஷத்துக்குக் காரணமாக
ஸ்ருத –வேதங்களில் கூறப்பட்டது
து -இதுக்கு விபரீதமாக
குணாட்யே-நற் குணம் வாய்ந்த
இஹ –இந்த சரணாகதி விஷயத்தில்
பாத சங்கா -விரோதத்தை சங்கிப்பது
முதா –வீண்
ஹி -ஏன் எனில்
தன் நிஷ்டோ –இந்த சரணாகதியைக் கைப் பற்றினவன்
யந்ய நிஷ்டான் –மற்ற உபாயங்களை ஸ்வீ கரித்தவர்களை
கோடி கோட்யம் சதோ அபி -கோடியிலும் கோடி பங்கைக் கொண்டு
அதி ஸயிதும் –மீறி இருக்க
ப்ரபு -சக்தி யுள்ளவன் ஆகிறான் –
பிரபத்தி சர்வாதிகாரம் -தபஸுக்களில் சிறந்ததாக ஸ்ருதி சொல்லுமே –
பிரபன்னன் சிறந்த யாகம் செய்தவனாக கருதப்படுகிறான் -குஹ்ய தமமான உபாயம்
தஸ்மாத் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அத்ரிக்தம் ஆஹு–தைத்ரியம்
சமிதி சாதனகா தீனம் யஜ்ஜானாம் .ந்யாஸம் ஆத்மனா நமஸாயோ கரோத் தேவ ஸ சவ்தவாரா –அஹிர்புத்ன்ய சம்ஹிதை
யதாத்வை மஹோபநிஷதம் தேவானாம் குஹ்யம் –தைத்ரியம்
ஓம் இத் யாத்மாநம் யுஞ்ஜீத -என்பதால் இது சர்வாதிகாரம் ஆகாதே
அநாதிகாரிகளுக்கு ப்ரணவ உச்சாரணம் கூடாதாயினும் ஆகமத்தில் விதிக்கப்பட்ட த்வய மந்த்ரத்தைக் கொண்டு
சரணாகதி பிரயோகம் சர்வாதிகாரமே யாகும்
ஸ்வ தந்திரமாக மோக்ஷம் தர வல்லதே-பக்தி யோக நிஷ்டனை விட மிகவும் உயர்ந்து -மிகுந்த கௌரவம் வாய்ந்தவன் என்றதாகும்-
ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாவதை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.
- ந்யாஸம் அதிரிக்தமான தபஸ். இதற்குச் சமமான அனுஷ்டானம் ஏதுமில்லை. ஒருவன் செய்த ஶரணாகதி பல யாகங்கள் செய்ததற்குச் சமம்.
- சமித் ஸ்தானத்தில் நம: என்ற சொல்லை வைத்துச் செய்வதாக அர்த்தம். ந்யாஸம் அனுஷ்டித்த கர்த்தா நல்ல யாகங்கள் (அஶ்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்கள்) செய்ததற்குச் சமம். இதையே “ஸ்வத்வர:” என்ற சொல் குறிக்கிறது. “செய்த வேள்வியர்” என்கிறார் ஆழ்வார்.
- அஹிர்புத்ஞ ஸம்ஹிதையில் சிவன் ந்யாஸத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சக்கரத்தாழ்வார் பெருமையைப் பேசுகிறார்.
- தேவர்களுக்கு மிக உயர்ந்த ரஹஸ்யம் இது. இந்த ஶரணாகதி நமக்கும் கிடைத்துள்ளது. இதுவே அல்ப பலனிலிருந்து மிகப் பெரிய பலனாகிய மோக்ஷம் வரை உபாயமாகிறது என வேதம் சொல்கிறது.
“முமுக்ஷு:ஶரணம் ப்ரபத்யே” என்பது வேத மந்த்ரம். ந்யாஸம் சாக்ஷாத் மோக்ஷோபாயம். பரம்பரையானதல்ல. கர்ம யோகம் செய்தால் மோக்ஷம் ஸாக்ஷாத்தாகக் கிடைக்காது. ஞான, பக்தியோகம் செய்த பின்பே மோக்ஷம். ஆனால் ஶரணாகதி செய்த ஒருவனுக்கு எம்பெருமானின் அபரிமிதமான
ஔதார்ய காருண்ய குண விஸேஷத்தால் மோக்ஷம் உறுதி யாகிறது.
கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் சொல்வதுபோல் இத்தனை உயர்ந்த மோக்ஷத்தைக் கொடுத்த பின்பும் கொடுத்தது போதாது என எண்ணுபவன் எம்பெருமான்.
ஆக மற்றைய கர்ம ஞான பக்தி யோகத்தை செய்பவரைவிட கோடி கோடி மடங்கு உயர்ந்தவன் ப்ரபன்னன். இவ்விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தன் தேவநாயக பஞ்சாஸத் ஸ்தோத்ரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
“நிஷ் கிஞ்சநத்வ தநிநா விபுதேஶயேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ் தவ பாத பத்மே
நாநா வித ப்ரதித யோக விசேஷ தந்யா:
நார்ஹந்தி தஸ்ய ஶத கோடி தமாம்ஶ கக்ஷ்யாம்” (47)
நிஷ் கிம் சனத்தவ தனிநா விபூதேஸ யேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ்த்வ பாத பத்மே
நாநா வித ப்ரதிஹ யோக விசேஷ தன்யா
ந அர்ஹந்தி தஸ்ய சத கோடி தம அம்ச கக்ஷியாம் -47-
சத் தஹர வித்யாதிகள் உபாசகர்களுக்கு -இதில் அசக்தர்களுக்கு அவர்களது ஆகிஞ்சன்யமே
பச்சையாகக் கொண்டு ப்ரபன்னராக்கி மஹா விசுவாசமும் அருளி இவர்களில்
கோடியில் ஒரு அம்சத்துக்கும் அன்றோ பக்தி யோக நிஷ்டர்களை ஆகும் படி உயர்த்தி அருளிச் செய்கிறாய்
————————–
நாநா சப்தாதி பேதாதிதி து கதயதா ஸூத்ர காரேண சம்யக்
ந்யாஸ உபாஸே விபக்தே யஜந ஹவ நவச் சப்த பேதாத பாக்தாத்
ஆக்யா ரூபாதி பேத ஸ்ருத இதர சம கிம் ஸ பின்ன அதிகார
ஸீக்ர ப்ராப்த்யாதிபி ஸ்யாஜ்ஜ குரிதி ஸ மதூபாச நாசவ் வ்வஸ்தாம் —10-
சப்தாதி பேதாத் -பரமாத்மாவின் விசேஷங்களைக் கூறும் -ஸத் -பூமா -ஜகத் காரணன் -அபஹத பாப்மா -போன்ற சொற்கள் வெவ்வேறாக இருப்பதால்
நாநா –ஸத் வித்யா தஹர வித்யா முதலான ப்ரஹ்ம வித்யைகளும் வெவ்வேறு
இதி -என்று
கதயதா –சொல்லுகின்ற
ஸூத்ர காரேண –ப்ரஹ்ம ஸூத்ர காரரால்
ந்யாஸ உபாஸே–சரணாகதியும் பக்தி யோகமும்
யஜந ஹவந வத் –யாகத்தைக் கூறும் இடத்தில் யஜனம் என்றும் ஹவனம் என்றும் தானம் என்றும் இவை போன்ற
அபாக்தாத்–ஒவபசாரிகம் அல்லாத -அதாவது வெளிப் பொருளைக் காட்டிலும் வேறான உட் பொருளைக் கொள்ளாத
ஸப்த பேதாத் -சொற்களின் வேற்றுமையால்
ஸம்யக் –நன்றாகவே -அதாவது யாதொரு சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல்
விபக்தே பிரிக்கப் பட்டு இருக்கின்றன
ஆக்யா ரூபாதி பேத –ஆக்யா ந்யாஸ வித்யா எனப் பெயரிலும்
ரூப –பரம காருணிகன் ஆகையாலே நிர்ஹேதுகமாக ரக்ஷிப்பவன் என்ற ரூபத்தாலும்
ஆதி -அங்கங்கள் ப்ரகரணங்கள் இவற்றாலும்
பேத -வேற்றுமையானது
இதர சம-மற்ற வித்யைகளுக்கு ஒப்பாகவே
ஸ்ருத –இங்கும் கூறப்படுகின்றது
கிஞ்ச -இன்னமும்
ஸீக்ர ப்ராப்த்யாதிபி –சீக்கிரம் பயன் அளிக்கும் முதலான வற்றால்
பின்ன அதிகார-அதிகாரம் வேறு பட்டதகாக
ஸ்யாத் –இருக்கலாம்
இதிச–இவ்விதமே
மதூபாச நாதள –மது வித்யை முதலான இடத்திலும்
வ்யவஸ்தாம் —நிபந்தனையை
ஜகு–சொன்னார்கள் –
பக்தி பிரபத்தி -இரண்டும் மோக்ஷ உபாயங்கள் –
பிரபத்திக்கு -பக்திக்கு அங்கமாகவும் -சாஷாத் உபாயமாகவும் -இரண்டு ஆகாரங்கள் உண்டே
பக்திக்கு அங்கங்கள் -வர்ணாஸ்ரம கர்ம ஞான யோகங்கள்
பிரபதிக்கு அங்கமாக ஆநு கூல்ய சங்கல்பம் -கார்ப்பண்யம் -மஹா விசுவாசம் போன்றவைகள் உண்டே –
பக்திக்கும் பிரபத்திக்கும் தேவையானவைகளை வேறே வேறே -மோக்ஷம் அடையும் கால விளம்பத்திலும் வாசி உண்டே –
சர்வ லோக சரண்யன் -ஸர்வஸ்ய சரணம் ஸூஹ்ருத் –
சரணாகதி -ஆறாவது அங்கம் -பக்திக்கு அஷ்டாங்கங்களில் சமாதி எட்டாவது அங்கம் போலவே –
அநு கூல்ய சங்கல்பமே ஒரு அங்கம் -செய்ய உறுதி கொண்டாலே செய்து முடிப்போம் -பிராயச்சித்த பிரபத்தி -என்பது அங்கங்களில் பிரபத்தி
பண்ணிய பின்பு குறைகள் வந்தால் போக்கிக் கொள்ள என்பர் -பிரபத்தி செய்த அதிகாரி குற்றம் தானாகவே செய்ய மாட்டான்
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பதால் இவனை அறியாமல் செய்ய நேர்ந்தால் -அதற்காக இந்த பிராயச்சித்த பிரபத்தி –
ப்ரஹ்மாஸ்திரம் போலே -மீண்டும் ஒரே பலனுக்காக பண்ணினால் தான் -குறை வரும் –
ப்ரஹ்ம ஸூத்ரத்தில் -ஸப்தாதி பேத அதிகரணத்தில் –நாநா ஸப்தாதி பேதாத் -ஸூத்ரம் உண்டே
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாமே சேர்ந்து ஒரே வித்யையா வெவ்வேறா என்கிற சங்கை வர அத்தை நீக்குகிறது –
ஒரே பொருளைக் கூறும் பர்யாய பதங்கள்
வேத உபாஸீத போன்ற பதங்களால் விதிக்கப்பட்ட பொருள் ஒன்றே யாகும்
பர்யாய பதங்களாயினும் உபாசிக்கப்பட வேண்டிய ப்ரஹ்ம குணங்கள் -அபஹத பாப்மத்வாதி குணங்கள் -காரணத்வம்
போன்றவை வெவ்வேறே வானபடியால் வித்யைகளும் வெவ்வேறெவே
விசேஷணம் வேறுபாட்டால் விசேஷ்யமும் வேறுபாடும் என்கிற நியாயத்தால் –
கீதையிலும் பக்தி யோகத்தை பஜஸ்வ மாம் என்றும் ப்ரபத்தியை சரணம் வ்ரஜ என்று விதித்து உள்ளானே
பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மாதிகள் -பிரபத்திக்குக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் அங்கங்கள் என்ற வாசியும் உண்டே
ஆகவே இந்த ஸூத்ரம் பக்தியையும் ப்ரபத்தியையும் கூறுவதாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ பாஷ்யத்தில் பிரபத்தியை விளக்க வில்லையே –
ப்ரபத்தி தனிப்பட்ட உபாயமாவதைப் பற்றிக் கூறும் ஶ்லோகம் இது. இது ஸ்ரீபாஷ்ய விஷயமான ஶ்லோகம். ஞான ஶப்தாதி பேதாதி கரணத்திலிருந்து ஸ்வாமி விஷயங்களைக் காட்டி யுள்ளார்.
எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் இரண்டிலும் பக்தி யோகமே ப்ராதான்யமாய்ப் பேசப் படுகின்றன. ந்யாஸம் பற்றிய விவரணமில்லையே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சூத்ரகாரராகிய வ்யாசர் இதற்குச் சமாதானம் சொல்கிறார்
“நாநா ஶப்தாதி பேதாத்” என்பது சூத்ரம். வேதத்தில் யாகம், ஹோமம், தானம் இவை பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது.
உதாரணமாக அஶ்வமேதம், ஸோம யாகம் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனி தேவதை, ரூபம், த்ரவ்யம் உள்ளன. ஹோமம் என்றால் அந்த தேவதைக்கு அக்னி மூலம் நெய் ஆஹூதி செய்ய வேண்டும். எனதல்ல என்ற எண்ணத்துடன் பிறருக்கு ஸமர்ப்பணம் செய்வதில் தானம் பூர்த்தியாகும்.
ஆக இவை ஒவ்வொன்றுக்கும் அந்த வினையைச் (அனுஷ்டானத்தை)
செய்யும் போது ஶப்தங்கள் வேறுபடுகின்றன. ‘யஜேத்’ என்பது யாகத்துக்கும், ‘ஜுஹ்யாத்’ என்பது ஹோமத்துக்கும், ‘தத்யாத்’ என்பது தானத்துக்கும் ஶப்தங்களாகின்றன. ஶப்தத்தையிட்டு பலன் கிடைக்கிறது.
ஸந்த்யாவந்தனம் என்பது அர்க்யம், காயத்ரி, உபஸ்தானம் அடங்கிய ஒரே அனுஷ்டானம். அதேபோல திருவாராதனம் என்பது மந்த்ராசனம், திருமஞ்சனம், அலங்காரம், ஸமர்ப்பணம், நிவேதனம் அடங்கிய ஒரே அனுஷ்டானம்.பக்தி யோகம் செய்பவன் 32 ப்ரும்ஹ வித்தையில் ஏதாவது ஒன்றைப் பற்றி த்யானம் செய்யலாம்.
மது வித்யா, சாண்டில்ய வித்யா, தகர வித்யா என்பன போன்ற 32 வித்யைகளில் 32 வதாக “ந்யாஸ வித்யை” சொல்லப்படுகிறது. மேற் சொன்ன வித்யைகளில் ரூபம், குணம் வேறு பட்டாலும் ஶப்த வேறுபாடில்லை. உபாஸனம் (த்யானம்/வேதனம்) தான் செய்ய வேண்டும். ஶரணாகதியில் “ஓமித் யாத்மீய உஞ்சீத்” என விதிக்கிற ஶப்தம் வித்யாசமாயுள்ளது. யாகத்தில் ஞான பாகமும், ஹோமத்தில் அனுஷ்டானமும் முக்யமாவது போல் “எனதல்ல” என்ற த்யாகம் எண்ணம் வந்தால்தான் தானம் பூர்த்தியாகும். இந்த ந்யாஸ வித்யைக்கு காருண்ய குணவானாகிய பகவான் ரூபமாயிருந்து கோரின காலத்தில் பலனைத் தருகிறான்.
பக்தியோகம் செய்ய முடியாமையே இதற்கு முக்ய தகுதி. 15 விதமான அதிகாரி (தகுதி) பேதம் ந்யாஸத்துக்குச் சொல்லப் பட்டுள்ளது. மது வித்யை செய்பவன் சூர்யனை உபாஸித்து தேவ லோகத்தில் அஷ்ட வஸுக்களில் ஒருவராக 10யுகங்களிருந்து பின் மோக்ஷமடைவான் என்று சொல்லப்படுகிறது. தகர வித்யா நிஷ்டனுக்கு இதைவிட சீக்ர மோக்ஷம் என்கிறது.
ஆக ந்யாஸம் — உபாஸனம் இரண்டும் வேறு. இரண்டுக்கும் ஸப்தம் ‘ரூபம், பலன், தகுதி வேறானவை.
கீதா பாஷ்யத்தில் பக்திக்கு ப்ரபத்தி ஒரு அங்கம் என்று குறிப்பிட்டாலும், ப்ரபத்தி ஸ்வதந்த்ரமாக மோக்ஷம் தர வல்லது. ஸ்ரீபாஷ்யகாரர் கத்யத்தில் ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாகும் என்று வெளிப்படையாகவே விளக்கி யுள்ளார்.
—————–
யத் கிஞ்சித் ரக்ஷணீயம் ததவந நிபுணே ந்யஸ்தோ அகிஞ்ச நஸ்ய
ப்ரஸ்பஷ்டம் லோக த்ருஷ்ட்யா அப்யவகமித இஹ ப்ரார்த்தநாத் யங்க யோக
தஸ்மாத் கர்மாங்க கத்வம் வ்யபநயதி பரா பேஷணாபாவ வாத
சாங்கே த்வஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத ஷட்விதத் வோபசார–11-
யத் கிஞ்சித் –யாது ஒரு வஸ்து
ரக்ஷணீயம் –ரஷிக்கத் தக்கதோ
தத் -அதை
அவந நிபுணே -ரக்ஷிக்க சக்தி யுள்ளவன் இடத்தில்
ந்யஸ்தோ -அடைக்கலமாய்க் கொடுக்கின்ற
அகிஞ்ச நஸ்ய–ஏழைக்கு
ப்ரார்த்தநாதி -பிரார்த்தனை முதலான
அங்க -அங்கங்களின்
யோக -சேர்க்கை
இஹ–இந்த சரணாகதி விஷயத்தில்
லோக த்ருஷ்ட்யா –உலக வழக்கத்தாலும்
அவகமித–அறிவிக்கப் பட்டது
தஸ்மாத்–ஆதலால்
பரா பேஷணாபாவ வாத-மற்ற ஒன்றை அபேக்ஷிப்பது இல்லை என்று கூறுவது
கர்மாங்க கத்வம் –கர்மங்களை அங்கமாகக் கொண்டு இருப்பதை
வ்யபநயதி –விலக்குகின்றது
து -ஆனால்
சாங்கே-அங்கங்களோடு கூடின ப்ரபத்தியில்
அஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத –அஷ்டாங்க யோகம் என்று சொல்லுவது போலே
ஷட்விதத் வோபசார–ஆறு விதம் என்று கூறியது
ஒவபசாரிகம் -அதாவது கௌவணப் பொருளாகும் –
தத் ஏக உபாய தாயாஞ்ச பிரபத்தி –
பிரபத்தே க்வசித் அப் யேவம் பர அபேஷா ந வித்யதே
வர்ணாஸ்ரம தர்மங்களை அபேக்ஷிப்பது இல்லை என்றவாறு
ஆனால் ஷட் விதா சரணாகதி -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -அங்கங்கள் ஐந்தும் அங்கியான ப்ரபத்தியும் சேர்த்துச் சொன்னவாறு
அஷ்டாங்க யோகத்திலும் யமம் -நியமம் -ஆஸனம் -ப்ராணாயாமம் -ப்ரத்யாஹாரம் -த்யானம் -தாரணா ஆகிய
ஏழு அங்கங்களுடன் சேர்த்து சமாதி என்கிற அங்கியையும் சேர்த்தே சொன்னால் போலவே இங்கும் –
நியாஸ பஞ்சாங்க ஸம் யுத -என்றும் உண்டே
ஐந்து அங்கங்களாவன
1-ஆனுகூல்ய சங்கல்பம்
2-பிரதிகூல்ய வர்ஜனம்
3-ரஷித்தே தீருவான் என்கிற மஹா விச்வாஸம்
4-நீயே ரக்ஷிக்க வேணும் என்கிற பிரார்த்தனை
5-அநந்ய கதித்வம் –
ப்ரபத்திக்கு அங்கங்களுடைமை பற்றி விளக்கும் ஶ்லோகம் இது.
சாதாரண லௌகீக பலன்களைப் பெறவே பல ப்ரார்த்தனைகளை முன் வைக்கும் போது மிக உயர்ந்த மோக்ஷ பலனைத் தர வல்ல ப்ரபத்திக்கு அங்கங்கள் அவஶ்யம் என்கிறார் ஸ்வாமி.
பக்தி யோகத்துக்கு ஶரணாகதி அங்கமாயிருக்கும் என்று கீதா பாஷ்யத்தில் சொல்கிறார் உடையவர் .த்யானம் நல்ல விதமாய் நடைபெற ஶரணாகதி அங்கமாகிறது இது “அங்க ஶரணாகதி” எனப்படும். சகல பலன்களையும் தரவல்லது ஶரணாகதி என்கிறார் உடையவர் கத்யத்ரயத்தில். வேதம், இதிகாச புராணங்கள், ப்ரும்ஹ சூத்ரம், பகவத்கீதை ஆகியவற்றுள் சொல்லப்பட்டுள்ள தர்மமே ஶரணாகதி.
அங்கங்கள் பற்றி எழும்3சந்தேகங்களுக்கு ஸ்வாமி ஸமாதானம் சொல்கிறார்.
2. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையில்லை என்கிறார்களே?
ஆத்மா, அதன் ரக்ஷணம், அதன் பலன் மூன்றையும் ஒப்படைத்தல் அங்கியாகிறது.இதனையே ஆறு விதம் கொண்ட ஶரணாகதி என்று ஆசார்யர்கள் விளக்கி யுள்ளனர்.
பஞ்சாப் யங்காந்யபிஜ்ஞா ப்ரணிஜகுரவிநா பாவ பாஞ்ஜி ப்ரபத்தே
கைஸ்சித் சம்பா விதத்வம் யதிஹ நிகதிதம் தத் ப்ரபத்த் யுத்தரம் ஸ்யாத்
அங்கேஷ் வங்கித்வ வாத பல கதநமிஹ த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ
ப்ராஸஸ் த்யம் தத்ர தத்ர ப்ரணிதததி தத சர்வ வாக்யைக கண்ட்யம் –12-
யபிஜ்ஞா -வித்வான்கள்
பஞ்சாப் யங்காந்–ஆனுகூல்யாதி ஐந்து அங்கங்களையும்
ப்ரபத்தே–ப்ரபத்திக்கு
அவிநா பாவ பாஞ்ஜி –விட்டுப் பிரியாமல் இருப்பதாக -அவஸ்யம் இருக்க வேண்டியவைகளாக
ப்ரணிஜகுர் -கூறினார்கள்
யதிஹ-யாது ஓன்று இந்த ஐந்து அங்கங்களுக்குள்
கைஸ்சித் –சில அங்கங்களால்
சம்பா விதத்வம் –தன்னடையாகவே நேர்ந்தமை -அதாவது அவஸ்யம் இல்லாமல் தானாகவே நேரக் கூடியவையாய் இருக்கை
நிகதிதம் -சொல்லப் பட்டதோ
தத் –அது
ப்ரபத்த் யுத்தரம் -பிரபத்திக்குப் பின்
ஸ்யாத்-இருக்கக் கூடும்
இஹ -இந்த சரணாகதியில்
அங்கேஷு –அங்கங்களில் சிலவற்றை
வங்கித்வ வாத–அங்கியாகக் கூறியதும்
பல கதநம் -சில அங்கங்களாலே மோக்ஷம் பலம் என்பதையும்
த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ–ஐந்தில் இரண்டு மூன்று மாத்ரம் கூறியதும்
தத்ர தத்ர-அந்த அந்த அங்கங்களில்
ப்ராஸஸ் த்யம் –மேன்மையை பெருமையை
ப்ரணிதததி –பொருளாகக் கொண்டன
தத –ஆதலால்
சர்வ வாக்ய ஏக கண்ட்யம் –எல்லா வாக்யங்களுக்கும் ஒற்றுமை உண்டு
அங்கங்கள்,அங்கி இவற்றில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றின் தீர்வும் இதிலடங்கும்.
அங்கங்களின் நிறை -குறை ப்ரபத்தியின் பலனை பாதிக்காது ஆனால் நம் ஸ்வரூபத்துக்கேற்ப இவைகளை கைக் கொள்ளுதல் அவஶ்யம்.
ரஷாபேஷா ஸ்வசாஹ்ய ப்ரணயவதி பர ந்யாஸ ஆஜ்ஞாதி தஷே
த்ருஷ்டா நாத்ர பிரபத்தி வ்யவஹ்ருதிரிஹ தந் மேளநே லக்ஷணம் ஸ்யாத்
கேஹாகத்யாதி மாத்ரே நிபதது சரணா கத்ய பிக்யோ பசாராத்
யத்வா அநேகார்த்த பாவாத் பவதி ஹி விவித பாலநீ யத்வ ஹேது –13-
ஸ்வ–தனக்கு
சாஹ்ய –ஸஹாயம் செய்ய வேணும் என்று
ப்ரணயவதி –யாசிப்பவன் இடத்தில்
ரஷா அபேஷா -ரக்ஷிக்க வேணும் என்று வேண்டுவது இருக்கிறது
ஆஜ்ஞாதி தஷே–ஏவல் செய்யும் ஊழியக் காரனிடம்
பர ந்யாஸ -பர ந்யாஸம் என்ற சொல் இருக்கிறது
அத்ர–இவ் விரண்டிலும் தனித் தனியே
பிரபத்தி வ்யவஹ்ருதி–பிரபத்தி என்ற சொல்
ந த்ருஷ்டா –காணப் பட வில்லை
இஹ -இப் பிரபத்தி விஷயத்தில்
தந் மேளநேம் -அந்த ரஷா அபேக்ஷை -பர ந்யாஸம் இவ் விரண்டின் சேர்க்கை
லக்ஷணம் ஸ்யாத்-இலஷணையால் இருக்கலாம்
சரணா கத்ய பிக்யோ -சரணாகதி என்ற பெயர்
கேஹாகத்யாதி மாத்ரே –வீட்டுக்கு வருவது முதலான பொருளில் மாத்ரம்
உபசாராத்-முக்யப் பொருள் அல்லாத இலக்ஷணைப் பொருளாகவே
நிபதது –ஏற்படக் கூடும்
யத்வா –அல்லது
அநேகார்த்த பாவாத் –சரணம் என்ற சொல்லுக்கு அநேகப் பொருள் உண்டு ஆகையாலே
பாலநீ யத்வ ஹேது-ரக்ஷிக்கப்பட வேண்டியதற்குக் காரணம்
பவதி ஹி விவித -பலவிதமாக இருக்கின்றது –
அநந்யார்ஹம் முக்கியம் –ந்யாஸம் -சரணாகதி -மஹா விச்வாஸம்
சரணம் -வீடு ரக்ஷிப்பவன்
சரணாலயம் -பர ந்யாஸம் செய்தவனை ரக்ஷிக்க வேண்டியது போலவே
வீடு என்ற பொருளிலும் வீட்டுக்கு வந்தவரை ரக்ஷிக்க வேண்டும் என்றவாறு
ப்ரபத்தியின் லக்ஷணத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்தும் ஶ்லோகம் இது.
காயத்ரி மந்த்ரோபதேஸம், சந்த்யாவந்தனம் முதலான அனுஷ்டானங்களால் தேஜஸ்வி யாகிறான். இதேபோல ஸமாஶ்ரயேணம், பரந்யாஸம் என்னும் அனுஷ்டானங்களும் மிகுந்த கவுரவம் உடையன. இந்த அனுஷ்டானங்கள் எம்பெருமானுக்கு தாஸன் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
இதில் ப்ரார்த்தனை+ஆத்ம ரக்ஷணம் இரண்டும் அடங்கும். இவை தனித்தனியே ஶரணாகதி யாகாது. பரஸ்பர உபகாரம் தானே நட்பின் லக்ஷணம். பொறுப்பை நாம் முழுதுமாய் விடவேண்டும்.
“இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போல”– என்ற த்ரௌபதி ஶரணாகதி வேறு கதியில்லாத, கைமுதலில்லாத ஶரணாகதி. ப்ரார்த்தனையை முன்னிட்டுச் செய்வது.
“ஶரணம்”– என்றால் உபாயம், ரக்ஷகன், வீடு என்று பொருள்.
அர்ச்சையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் செல்வதே பர ந்யாசம் என்று சொல்வது உபசார வழக்காகும்.
“பத்தாஞ்சலி புடம்”–அஞ்சலியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
“தீனம்” –தளர்ச்சியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
“யாசந்தம்” –மிடுக்குடன் வந்து ப்ரார்த்திப்பவனையும் ரக்ஷிப்பேன்.
“ஶரணாகதம்” –என்னிடத்துக்கு வந்தவனை ரக்ஷிப்பேன்.
“நஹன் யாது ஸ்யாது ஶத்ரும் பரந்தம்”— அழிக்கும் குணமுள்ள
ஶத்ருவாயினும் காப்பேன் – என்று வால்மீகி ராமபிரானின் திருவுள்ளத்தைக் காட்டுகிறார்.இதனை உதாரணங்களுடன் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் விஸ்தரித்துள்ளார்.
ஆக எப்படிப்பட்ட ஶரணாகதிக்கும் ரக்ஷணம் உண்டு. எத் திசையும் உழன்றோடிய காகம் ராமன் திருவடி அடைந்ததும், பெண் புறாவைப் பிடித்த வேடன் ஆண் புறா இருந்த மரத்தை அடைந்ததும் முழுமையான ஶரணாகதி யாகாவிடினும் காப்பவனின் இடத்தை அடைந்ததே ஶரணாகதியாகிறது. இதை உபசார வழக்கமாகக் கொள்ளலாம்.
மோக்ஷத்துக்கான ஶரணாகதி என்பது ஶாஸ்த்ர ரீதியாக ப்ரார்த்தித்து ஆத்ம ரக்ஷணப் பொறுப்பை எம்பெருமானிடம் ஸமர்ப்பித்தலே ஆகும்.
——————
ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம நுகதம் யாவதர்த்தம் முமுஷோ
தத்வ ஜ்ஞான நாத்மகம் தத் ப்ரதமமத விதே ஸ்யாதுபாயே ஸமேதம்
கைங்கர்யாக்யே புமர்த்தே அப்யநுஷஜதி ததப்யர்த்தநா ஹேது பாவாத்
ஸ்வாபீஷ்டா நந்ய ஸாத்யாவதிரிஹ து பர ந்யாஸ பாகோ அங்கி பூத –14-
முமுஷோ–முமுஷுவுக்கு
ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம் -தன்னையும் தன்னைச் சேர்ந்த பொருள்களையும் பரமாத்மாவிடம் ஒப்படைப்பது
யாவதர்த்தம் -எவ்வளவு பொருள்கள் உண்டோ அவ்வளவிலும்
அநுகதம் -தொடர்ந்து நிற்கும்
தத் -இந்த கார்யமானது
ப்ரதமம் -முதன் முதலில்
விதே-உபாயத்தை விதிக்கின்ற வசந ஸ்வ பாவத்தாலே
உபாயே–மோக்ஷ உபாயத்திலே
ஸமேதம்-சேர்ந்ததாக
ஸ்யாத் -இருக்கும்
ததபி -மேலும்
யர்த்தநா ஹேது பாவாத்–முமுஷுவால் செய்யப் பட்ட பிரார்த்தனையின் காரணமாக
கைங்கர்யாக்யே-பகவத் கைங்கர்யம் என்ற
புமர்த்தே அபி -புருஷார்த்தத்திலும் -பலனிலும்
யநுஷஜதி –தொடர்கின்றது
இஹ -இந்த பிரபத்தி விஷயத்தில்
அங்கி பூத –அங்கியாக இருக்கின்ற
பர ந்யாஸ பாகோ -பர ந்யாஸம் என்ற அம்சம்
ஸ்வாபீஷ்டா நந்யஸா த்யாவதி–தன்னால் விரும்பப்பட்டது -மற்ற ஒன்றால் சாதிக்க முடியாதது எவ்வளவோ அவ்வளவில் நிற்கும் –
ஸ்வரூப சமர்ப்பணம் -யானும் நீ என் உடைமையும் நீயே – பர சமர்ப்பணம் பல சமர்ப்பணம் –ப்ரீதி காரித கைங்கர்யமே -பரம புருஷார்த்தம் என்ற நினைவு –
நம் புத்திரர் பார்யையாதிகள் உடன் சேர்ந்தே சமர்ப்பணமோ என்னில் இவர்களும் நம் சொத்து இல்லையே -எல்லாம் அவனது அன்றோ
கீழ் எல்லாம் புபுஷு முமுஷு இருவருக்கும் பொதுவான பிரபத்தி
இதில் முமுஷு -அதிலும் அநந்யார்ஹ சேஷ பூதரானவருக்கு
யானும் நீயே என்னுடைமையும் நீயே என்று இருப்பவர்களுக்கு
தத்வ ஞானம் ஏற்பட்டு அதனாலேயே இந்த எண்ணம் உபாயத்திலும் புருஷார்த்தத்திலும் சேர்ந்தே இருக்குமே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அவனது ஆனந்தத்துக்காகவே இருப்பார்களே
ஸேஷத்வ ஞானம் எல்லா நிலைகளிலும் தொடர வேண்டியதின் அவ ஶ்யத்தை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.
ஒருவன் ப்ரபத்திக்கு முன்பும், ப்ரபத்தி அனுஷ்டிக்கும் போதும்,
ப்ரபத்திக்குப் பின்னும் எம்பெருமானுக்கு ஸேஷன் என்ற ஞானத்துடனிருக்க வேணும். இந்த ஞானம் மனதில் தோன்றும் ஒரு சிந்தனை.
ஆத்ம ஸ்வரூபம்+ஆத்மீயம் (தன்னைச் சேர்ந்த எல்லாவற்றையும்) எம்பெருமானுக்கு உடைமையாக்கி ஒப்படைப்பதை “யானும் நீயே என்னுடைமையும் நீயே” என்கிறார் நம்மாழ்வார்.
தாஸன் என்று நினைப்பது முதல் நிலை. இந்த ஞானத்துடன் ஆத்மாவை ஒப்படைக்கவேண்டும். இந்த தத்வ ஞானம் வந்த காலத்திலும், உபாய அனுஷ்டான காலத்திலும், பல (phala) அனுபவ காலத்திலும் ஆத்மா எம்பெருமானுக்கு தாஸன் என்ற எண்ணத்துடன் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்க வேணும். உபாய காலத்தில் மட்டுமே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதுவே பரந்யாஸம்.
“அஸேஷ ஸேஷதைக ரதிரூப” என்று கத்யத்தில் இதனை உடையவர் குறிப்பிடுகிறார். இதுவே அங்கியான பர ந்யாஸம் எனப்படுகிறது.
—————–
ந்யாஸா தேசேஷூ தர்ம த்யஜந வசநதோ அகிஞ்ச நாதிக்ரி யோக்தா
கார்ப்பண்யம் வா அங்க முக்தம் பஜநவதிதரா பேஷணம் வா அப்யபோடம்
துஸ் சா தேச் சோத்யமவ் வா க்வசிது பசமிதா வந்ய சம்மேளந வா
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்தஸ் ததிஹ ந விஹதோ தர்ம ஆஜ்ஞாதி சித்த –15-
ந்யாஸா தேசேஷூ –சரணாகதியை விதிக்கும் இடங்களில்
தர்ம த்யஜந வசநதோ –ஸர்வ தர்மங்களை விடச் சொல்லி இருப்பதால்
அகிஞ்ச நாதிக்ரியா -வேறு வழி இல்லாதவன் இதுக்கு அதிகாரி என்பது
யுக்தா-சொல்லப்பட்டது
வா -அல்லது
கார்ப்பண்யம் –கார்ப்பண்யம் என்ற அதாவது வேறு போக்கற்று இருக்கும் நிலையை நினைப்பது –
கர்வம் இல்லாமை முதலான பகவத் கிருபை தன் மேல் உண்டாகும் படி செய்கிற கார்யம்
அங்க முக்தம் -அங்கமாகச் சொல்லப்பட்டது
வா -அல்லது
பஜநவத் -பக்தி யோகத்தைப் போலே
இதரா பேஷணம் –வர்ணாஸ்ரம தர்மாதிகளை அங்கமாக அபேக்ஷித்து இருத்தல்
அப்யபோடம்-விலக்கப் பட்டது
வா -அல்லது
க்வசித் -பேராசை கொண்டு -அஸக்யமான விஷயத்தில் முயலுகின்றவன் இடத்தில்
துஸ்சாதேச் சோத்யமவ் –அஸக்யமானத்தில் ஆசையும் முயற்சியும்
உப சமிதவ்–தடுக்கப்பட்டன
வா -அல்லது
அந்ய சம்மேளந –பிரபத்திக்கு அங்கம் அல்லாதவற்றை பிரபத்திற்கு கைக்கொண்டால்
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய -நம்பிக்கை குறைந்து மற்றவற்றைக் கூட்டினால் தானே விலகிவிடும் என்பது
உக்தஸ் –உரைக்கப் பட்டது
தத் -தர்மங்களை விடுவது பிரபத்திக்கு அங்கம் இல்லாததாலும்
தர்மங்களை பிரபத்திக்கு அங்கமாகக் கூறாமையாலும்
ஆஜ்ஞாதி சித்த –ஆஜ்ஜையாலும் அநுஜ்ஜை யாலும் ஏற்பட்ட
தர்ம -தர்மம்
இஹ ந விஹதோ –இந்தப் பிரபத்தியில் விலக்கப்பட வில்லை –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -வர்ணாஸ்ரம தர்மங்களை விடக் கூடாதே -பக்தியில் அசக்தனுக்கு இது -என்றவாறு
இதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
அகிஞ்சனனாய் -வேறு உபாயந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தன் இல்லாமல் இருக்க வேண்டுமே
பரித்யஜ்ய -கார்ப்பண்யம் சொல்லப்பட்டது
கார்ப்பண்யமாவது -ஆகிஞ்சனயாதிகளுடைய அனுசந்தானமாதல்
அது அடியாக வந்த கர்வ ஹானியாதல்
கிருபா ஜனக க்ருபண வ்ருத்தியாதல்
கைங்கர்ய புத்தியாக வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்யவே வேண்டும்
மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னம் அதில் ஆசை தனை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயன் அஸ்திரம் போல் வெள்கி நிற்கும்
நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின்றனிமை துணையாக என் தன் பாதம்
பூண்டால் யுன் பிழைகள் எல்லாம் பொறுப்பேன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழுவோமே
எல்லாவற்றையும் செய்ய வல்ல எம்பெருமானிடம் ஆத்ம ரக்ஷணமப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவனிடம் எல்லா தர்மங்களையும் விட்டுவிடும்படி சரம ஶ்லோகம் கூறுவதன் விளக்கமே இந்த ஶ்லோகம்.
“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” – என்ற வசனம் 6 விதமான அர்த்தங்களை அளிக்கிறது என்கிறார் ஸ்வாமி.
முதல் அர்த்தம்– அகிஞ்சனாதிக்ரியோக்தா– கர்ம, ஞான, பக்தி யோக தர்மங்களைச் செய்ய முடியாத அகிஞ்சனன்.
2ம் அர்த்தம் – கார்பண்யம் வாங்கமுக்தம்–கைமுதலில்லாத் தன்மையை அநுஸந்தித்துக் கொண்டு எம்பெருமானின் கருணையை ப்ரார்த்திப்பது.
3ம் அர்த்தம் – பஜனவத– பக்தி யோகத்துக்குள்ள தானம்,தபஸ் போன்ற வெளி அங் கங்கள் ப்ரபத்திக்கு வேண்டாம்.
4ம் அர்த்தம் -துஸ்ஸாத் இச்சாத்– செய்ய முடியாத பக்தி யோகத்தைச் செய்ய முற்படும் ஆசையை விடவேண்டும்
5ம் அர்த்தம் – உத்யமௌ–செய்ய முடியாத பக்தி யோகத்தைச் செய்யும் ப்ரயத்னத்தையும் அடியோடு விட்டுவிட வேணும்.
6ம் அர்த்தம் – ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்த—ப்ரபத்தி செய்யும் போது அதில் நம்பிக்கை குறைந்து வேறு உபாயத்தை நாடினால் ப்ரஹமாஸ்த்ரத்துக்கு வேறு அஸ்த்ர ப்ரயோகம் ஒவ்வாதது போல ப்ரபத்தியும் செயலிழக்கும்.
இதற்கான அதிகாரஸங்க்ரஹ பாசுரம் –
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு* வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி நிற்கும்*
நீண்டாகும் நிறை மதியோர் நெறியில் கூடா* நின் தனிமை துணையாக எந்தன் பாதம் பூண்டால்*
உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே” (அதிகார ஸங் 47)
ஆதேஷ்டும் ஸ்வ ப்ரபத்திம் தத் அநு குண குணாத் யந்விதம் ஸ்வம் முகுந்தோ
மாமித் யுகத்வைக சப்தம் வததி ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் ப்ராப்ய ப்ராப கைக்யம் சகல பல ததாம் ந்யாஸதோ அந்யாந பேஷாம்
ப்ராதான் யாத்யம் ஸ கிஞ்சித் ப்ரதயதி ஸ பரம் ஸ்ரீ ஸகே முக்த்யுபாயே –16-
முகுந்த-ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்வ ப்ரபத்திம்-தன்னிடம் சரண் அடைவதை
ஆதேஷ்டும் -விதிப்பதற்காக
தத் அநு குண -அதற்கு ஏற்ற
குணாத் யந்விதம் -நற் குணங்கள் முதலியவற்றோடு கூடி இருக்கிற
ஸ்வம் -தன்னை
மாம் இதி -என்னை என்று
யுக்த்வா -சொல்லி
ஏக சப்தம் வததி -ஒருவனை என்ற சொல்லையும் பேசுகிறான்
ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் -ஆதலால்
விதிக்குத் தக்க பொருள் கொள்ள வேண்டி இருப்பதால்
தத்ர -அந்த ஏக ஸப்தத்தால்
தாத்பர்யம் -கருத்து
ஊஹ்யம் -ஊஹிக்கத் தக்கது
ஸ -அந்த ஏக ஸப்தமானது
முக்த்யுபாயே -முக்திக்கு உபாயமாக இருக்கிற
ஸ்ரீ ஸகே பரம் -எம்பெருமான் இடத்தில் மாத்ரம்
தத் -அப்படிப்பட்ட வேதாந்த ஸாஸ்த்ரங்களில் -அங்காங்கு ப்ரஸித்தமான என்றபடி
ப்ராப்ய ப்ராப கைக்யம் -உபாய உபேயம் ஒருவனே என்பதையும்
சகல பல ததாம் -ஸமஸ்த பல ப்ரதாதாவும் ஒருவனே என்பதையும்
ந்யாஸதோ அந்யாந பேஷாம்–சரணாகதியைத் தவிர்ந்த வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத தன்மையையும்
ப்ராதான் யாத்யம் ஸ –முக்கியமாக இருப்பது முதலான
கிஞ்சித் ப்ரதயதி ஸ -சிலவற்றையும் வெளிப்படுத்து கின்றது
ஏகம்-அவன் ஒருவனே சித்த உபாயம் -பிரபத்தியும் அவனே செய்விக்கிறான் என்ற எண்ணம் வேண்டும்
அப்படி இல்லை யாகில் பிரபத்தியும் சாதன உபாயங்களிலே சேரும்
இத்தால் பிரபத்தியும் உபாயம் அன்று என்றதாயிற்று
பகவான் இடம் நம்மிடத்தில் அனுக்ரஹ புத்தி உண்டாக பிரபத்தி தேவை -அதிகாரி விசேஷணம் மாத்ரமே
நிர் விசேஷ ப்ரஹ்மம் அத்வைத மதமும் நிரஸனம்
சரம ஶ்லோகத்தின் முற்பகுதி அனுவாதம் (நம் நிலைமையை எடுத்துச் சொல்கிறது) பின்பகுதி (விதிக்கிறது) கட்டளையாகிறது..
——————
ஸ்வா பீஷ்ட ப்ராப்தி ஹேது ஸ்வயமிஹ புருஷை ஸ்வீக்ருத ஸ்யாத் உபாய
சாஸ்த்ரே லோகே ஸ சித்த ஸ புந ருபயதா சித்த ஸாத்ய ப்ரபேதாத்
சித்த உபாயஸ்து முக்தவ் நிரவதிக தய ஸ்ரீ சக சர்வ சக்தி
ஸாத்ய உபாயஸ்து பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் தத்வ ஸீகார ஸித்த்யை–17-
இஹ –இந்தப் பிரபஞ்சத்திலே
சாஸ்த்ரே–ஸாஸ்த்ரத்திலும்
லோகே ஸ-உலக நடப்பிலும்
சித்த -பழக்கத்தில் இருந்து வருகிறதும்
புருஷை-ஜனங்களாலே
ஸ்வயம் -தானாகவே -பிறர் தூண்டுதல் இல்லாமலேயே
ஸ்வீக்ருத-அங்கீ கரிக்கப் பட்டதுமான
ஸ்வா பீஷ்ட –தனது விருப்பத்தை
ப்ராப்தி-பெறுவதற்கு
ஹேது -காரணம் எதுவோ அதுவே
உபாய-உபாயம் என்று பெயர் பெற்றதாக
ஸ்யாத் –இருக்க வேண்டும்
ஸபுந-அவ்வுபாயம் பின்னேயும்
சித்த ஸாத்ய ப்ரபேதாத்-உபயதயா -ஸித்த ஸாத்ய என்னும் இரண்டு பிரிவால் -இரண்டு விதமாக
முக்தவ்-மோக்ஷ விஷயத்தில்
சித்த உபாயஸ்து –ஸித்த உபாயமானவன்
நிரவதிக தய -அளவில்லாக கருணை கொண்ட
ஸ்ரீ சக சர்வ சக்தி–ஸர்வ வல்லமை யுள்ள ஸ்ரீ மன் நாராயணனே
ஸாத்ய உபாயஸ்து –ஸாத்ய உபாயமோ என்னில்
தத் வஸீகார ஸித்த்யை–அந்த எம்பெருமானை வசமாக்குவதன் பொருட்டு ஏற்பட்டவையான
பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் -பக்தி என்பதும் சரணாகதி என்பதும் தனிப்பட்டவையே -வெவ்வேறானவையே –
உபாயம் என்றால் என்ன?அதன் வகைகள் என்ன?அதனை ஏன் செய்ய வேண்டும் என்பதை இதில் விவரிக்கிறார் ஸ்வாமி.
————–
அத்யந்த அகிஞ்சன அஹம் த்வதப சரணத சந்நி வ்ருத்தோத்ய நாத
த்வத் சேவை காந்த தீ ஸ்யாம் த்வமஸி சரணமித் யத்ய வஸ்யாமி காடம்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் த்வயி நிஹிதபரோ அஸ்ம் யேவமித்யர்ப்பி தாத்மா
யஸ்மை ஸ ந்யஸ்த பார சக்ருதத து சதா ந ப்ரயஸ்யேத் ததர்த்தம்–18–
நாத-ஓ நாதனே
அத்ய-இப்போது
அஹம்-நான்
அத்யந்த அகிஞ்சன -மிகவும் புகல் ஒன்றும் இல்லாதவன்
த்வத் அப சரணத -உனக்கு விரோதம் செய்வதில் இருந்து
சந்நிவ்ருத்த-ஒழிந்தவன்
த்வத் சேவை காந்த தீ -உனக்குப் பிரியம் செய்வதிலேயே நோக்கம் உள்ளவனாக
ஸ்யாம் –இருக்கிறேன்
த்வம் சரணம் அஸி -நீயே உபாயமாக இருக்கிறாய்
இதி யத்ய வஸ்யாமி காடம்-என்று தீர்மானமாக அறுதி இடுகிறேன்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் -நீயே அடியேனை ரக்ஷிப்பவனாக இருக்க வேண்டும்
த்வயி நிஹித பரோ –உன்னிடத்திலேயே சுமையை ஒப்படைத்தவனாக
அஸ்மி –இருக்கிறேன்
ஏவம் இதி -இவ் வண்ணமாக
யர்ப்பி தாத்மா-தன்னை ஒப்புக் கொடுத்தவனான
ஸ –அந்த சரணாகதன்
யஸ்மை –எந்தப் பிரயோஜனத்தின் பொருட்டு
ந்யஸ்த பார –தனது பாரத்தைப் ஒப்புவித்தானோ
ததர்த்தம்-அதற்காக
அத -அதற்குப் பின்
சதா –எக் காலத்திலும் -பயன் பெறும் அளவும் என்றபடி
ந ப்ரயஸ்யேத் –பிரயாசப் படக் கூடியவன் அல்லன்-
ஐந்து அங்கங்களையும் சேரப் பிடித்து அருளிச் செய்கிறார் இதில்
1–கார்ப்பண்யம் –அகிஞ்சன்யன் என்ற எண்ணம் -சரணாகதியை தவிர வேறே உபாயாந்தரங்களில் சக்தன் இல்லாதவன் – பிராப்தி இல்லாதவன்
2–பிரதி கூல்ய வர்ஜனம் -திரு உள்ளம் சேராதவற்றை செய்யாமல் இருக்க வேண்டுமே
3—ஆனுகூல்ய சங்கல்பம் –திரு உள்ளம் உகந்த கைங்கர்யங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமே
4—மஹா விச்வாஸம் –அவனே ரக்ஷகன் -களை கண் மற்று இலேன் -என்னும் உறுதி வேண்டுமே
5—கோப்த்ருத்வ வர்ணம் –நீயே ரஷித்து அருள வேண்டும் என்று ஸ்வீ கரிக்க வேண்டுமே
6—ஆத்ம சமர்ப்பணம் –இதுவே சரணாகதி -மோக்ஷ பலனுக்காக ஒரே தடவை தான் பண்ண வேண்டும் –
பக்தி யோகம் போலே அன்று –
ஸக்ருத் -ஒரு தடவை பர ந்யாஸம் செய்தவன் என்றதால்-பக்தி யோகம் போல் ஆவ்ருத்தி அனுஷ்டானம் இல்லை என்றதாயிற்று
தைத்ரிய உபநிஷத் -தஸ்யை வம் விதுஷ -என்று தொடங்கி புருஷ வித்யையிலே ப்ரபன்னனை யாக ரூபியாகக் காட்டி
யாகத்துக்கு உரிய அங்கங்கள் எல்லாம் இவன் சரீரம் ஜீவன் வாக்கு மார்பு முதலிய அங்கங்களாக நிரூபித்து
ஆயுஷ் காலம் தீக்ஷையாகவும்
மரணம் அவப்ருதம் -யாக பூர்த்தியாகவும் நிரூபித்து உள்ளது –
இந்த ஸ்லோகத்தில் ஆத்ம நிக்ஷேபத்தை அங்கியாகக் கூறி
இனி இவன் நிர்பயன் நிர்பரன்-என்று அருளிச் செய்கிறார்-
ஆறு அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை ஒரு முறை செய்த பின் ப்ரபன்னன் செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை என இதில் வலியுறுத்துகிறார் ஸ்வாமி.
- அடியேன் வேறு உபாயத்தைச் செய்யும் சக்தியற்றவன். இதுவே கார்ப்பண்யம் என்னும் அங்கம் .
- உன் திருவுள்ளம் உகக்காத செயலில் ஈடுபடமாட்டேன்.(ப்ராதிகூல்ய வர்ஜனம்)
- உன் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யத்தில் ஈடுபடுவேன் (ஆநுகூல்ய ஸங்கல்பம்)
- நீயே என்னைக் காப்பாய் என்ற முழு நம்பிக்கையுடனுள்ளேன்.(மஹா விஶ்வாஸம்)
- நீயே எனக்கு உபாயமாக இருந்து காக்கவேண்டும் (கோப்த்ருத்வ வரணம்)
த்யக்த்வ உபாய அநபாயா நபி பரம ஜஹன் மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்
ப்ராயச் சித்தம் ஸ யோக்யம் விகத ருணததிர் த்வந்த்வ வாத்யாம் திதிஷூ
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணான் சத் ஸம்ருத்திம் ஸ யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ் தஸ்ய யத்வாஸ் அப்த வர்க்காத் –19-
உபாயாந் –மோக்ஷ உபாயத்தையும் -நித்ய நைமித்திகங்களையும் ஒழிந்த காம்ய தர்மங்களையும்
அபாயா நபி –பகவத் நிக்ரஹ ஹேதுக்களான அபராதங்களையும்
த்யக்த்வ -விட்டு
பரம் -பிரபத்திக்குப் பின்
மத்யமாம்-முன் சொன்ன உபாயங்களில் சேராத நடுத்தரமான
ஸ்வார்ஹ வ்ருத்திம்-நித்ய கர்ம ரூபமாயும் அதே போல் விட முடியாத நைமித்திக கர்ம ரூபமாயும் இருக்கிற தனது நிலைமைக்கு ஏற்ற செயலையும்
யோக்யம்-ப்ரபன்னனுக்கு உரியதான
ப்ராயச்சித் தம்ஸ புன பிரபத்தி ரூபமான ப்ராயச்சித்தத்யையும்
அஜஹத் -விடாதவனாய்
விகத ருணததிர் -தேவக் கடன் பித்ரு கடன் ரிஷி கடன் -போன்ற கடன்களில் துவக்கு அற்றவனாய்
த்வந்த்வ வாத்யாம் –சீத உஷ்ணம் ஸூக துக்கம் போன்ற த்வந்தங்கள் என்னும் சுழல் காற்றை –
அத்தால் உண்டாகும் பீடையை என்றபடி
திதிஷூ-பொறுத்தவனாய்
அநந்யஸ்-எம்பெருமானை விட்டு மாற்றத்தில் துவக்கு அற்றவனாய்
பரிசரண குணான்-பகவத் கைங்கர்யத்துக்குத் தேவையான கருவிகளை -அதாவது
சந்தனம் -புஷ்பம் முதலிய உப கரணங்களையும்
மற்றும் பல தியாகம் சங்க தியாகம் முதலியவற்றையும்
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் –பகவத் பக்தி -அதற்கு ஏற்ற அறிவு இவற்றின் வளருதலையும்
யுக்தாம்-தனது நிலைக்கு அனுகுணமான
சத் ஸம்ருத்திம் ஸ -சான்றோர்களின் சிறப்பையும்
யாசேத் -அபேக்ஷிக்கக் கடவன்
ததபி-அந்த யாசனையும்
பகவதஸ்-பகவானிடம் இருந்தோ
யத்வாஸ்-அல்லது
தஸ்ய -அந்த பகவானுடைய
ஆப்த வர்க்காத்-பக்தர்களிடம் இருந்தோ
ஸ்யாத் –இருக்க வேணும் –
பிரபன்னன் லோக யாத்திரை இருக்கும் விதம் பற்றி அருளிச் செய்கிறார் இதில் –
1—ஸ்வாரத்தமாக எத்தையும் செய்யாமல் இருக்க வேண்டுமே
2—சாஸ்த்ர ஆஜ்ஜை படியே -க்ருத்ய கரணங்கள் -அக்ருத்ய அகரணங்கள் -செய்து வாழ வேண்டும் –
3—நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம கர்மங்களை செய்தும் காம்ய கர்மாக்களை செய்யாமலும் இருக்க வேண்டுமே
4—பிராமாதிகமாக செய்த தவறுகளுக்கு பிராயச்சித்த பிரபத்தி செய்ய வேண்டும் –
5—சரணாகதனுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் தீரும் -பிரபத்தி தானே சிறந்த தபஸ் -பகவத் ஆராதனம் ஒன்றே குறிக்கோள்
வேத அத்யயனத்தால் ரிஷிகள் கடன் தீரும்
யாகாதிகளால் தேவக்கடன் தீரும்
சந்ததி வ்ருத்தியால் பித்ரு கடன் தீரும்
இவை தீர்ந்த பின்பே உபாசகன் மோக்ஷ மார்க்கத்தில் ஈடுபட வேண்டும்
ப்ரபன்னனுக்கு இந்த தேவை இல்லை –
ஶரணாகதி செய்து முடித்தபின் ஒருவனது அனுஷ்டானங்களை விவரிக்கும் ஶ்லோகம் இது.
——————–
ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷ் வநக குருஜந ப்ரக்ரியா நேமி வ்ருத்தி
ஸ்வார்ஹா நுஜ்ஞாத சேவா விதிஷூ ஸ ஸகேந யாவதிஷ்டம் ப்ரவ்ருத்த
கர்ம பிராரப்த கார்யம் ப்ரபதந மஹிம த்வஸ்த சேஷம் த்விரூபம்பு
க்த்வா ஸ்வாபீஷ்ட காலே விசதி பகவத பாத மூலம் ப்ரபந்ந –20-
ப்ரபந்ந–ப்ரபன்னன்
ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷு -ஆஜ்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்
அநக-குற்றம் அற்ற
குருஜந ப்ரக்ரியா -பெரியோர்களின் அனுஷ்டானத்தை
நேமி வ்ருத்தி-வண்டி வட்டை போல் தொடர்ந்து செல்லுபவனாய்
ஸ்வார்ஹ-தனக்கு உரிய -ப்ரபந்ந நிலைக்கு ஏற்றதான
அநுஜ்ஞாத சேவா –அநுஜ்ஞா கைங்கர்யங்களுடைய
விதிஷூ -அனுஷ்டானம் செய்யும் முறைகளில்
ஸகேந –சக்தி இருக்குமாகில்
யாவதிஷ்டம் -இஷ்டத்தை அனுசரித்து
ப்ரவ்ருத்த–ஊக்கம் கொண்டவனாய்
த்விரூபம்-புண்யம் பாபம் என்ற இரு வகையான
ப்ரபதந மஹிம-ப்ரபத்தியின் மஹிமையால்
த்வஸ்த சேஷம் -அழிந்தது போக மீதியான
கர்ம பிராரப்த கார்யம் -பயன் கொடுக்காத தொடங்கிய செய் வினையை
புக்த்வா -அனுபவித்து
ஸ்வாபீஷ்ட காலே –தான் விரும்பிய காலத்திலேயே
விசதி பகவத பாத மூலம் -பகவானுடைய திருவடி நிழலில் புகுகிறான்
பிரபன்னன் சுக துக்கங்களை சமமாக கொண்டு -த்ரிவித தியாகங்கள் -நினைவுடன் பகவத் ஆராதனை ரூபமாக கர்மங்களை செய்து கொண்டு இருப்பான்
தனக்கு பக்தி ஞான வைராக்யங்கள் வளருவதற்கு மட்டுமே பிரார்திப்பான் –
விஷ்வக் சேனர் பெரிய திருவடி திரு வந்த ஆழ்வான் -ஆச்சார்ய குரு பரம்பரை இவர்களை மட்டுமே வணங்கக் கடவன்
பாகவதர் ஸம்ருத்திக்கும் பகவத் ஆராதனை உபகரணங்கள் ஸம்ருத்திக்கும் பிரார்த்திக்கக் கடவன்
1-வர்ணாஸ்ரம கர்மங்களை விடாமல் அனுசந்திக்கக் கடவன் –
2–திவ்ய தேசங்களில் சாத்துப்பொடி புஷ்பங்கள் சமர்ப்பித்து -உத்ஸவாதிகளை நடத்திக் கண்டு களிக்கக் கடவன் –
ப்ரபன்னன் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுவதை இந்த ஶ்லோகம் சொல்கிறது.
————–
ஸ்ருத்யா ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ ஸ்வயமிஹ பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ சித்தாம்
ஸ்வாதந்தர்யே பாரதந்தர்யே அப்யநிதர கதிபி சத் பிராஸ்தீய மாநாம்
வேதாந்த சார்ய இத்தம் விவித குரு ஜன க்ரந்த சம்வாத வத்யா
விம்சத்யா ந்யாஸ வித்யாம் வ்யவ் ருணத ஸூதியாம் ஸ்ரேயஸே வேங்கடேச–21-
வேதாந்த சார்ய -வேதாந்த சார்யன் என்ற விருது பெற்ற
வேங்கடேச-வேங்கட நாதன் என்ற கவி
ஸ்ருத்யா –ஸ்ருதியாலும்
ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ –ஸ்ம்ருதி இதிஹாச புராண ஆகமாதிகளாலும்
ஸ்வயமிஹ – நேராகவே நின்று சொன்ன இவ்விஷயமான
பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ -பகவானே அருளிச் செய்த வாக்யத் தொகுதிகளாலும்
சித்தாம்–தீர்மானிக்கப் பெற்ற
ஸ்வாதந்தர்யே -மோக்ஷத்துக்கு தனியே உபாயமாக இருப்பதிலும்
பாரதந்தர்யே -மற்ற ஒன்றில் உள்ளடங்கி இருப்பதிலும்
அநிதர கதிபி -வேறு கதி இல்லாத
சத் –சத்துக்களால்
பிராஸ்தீய மாநாம்-ப்ரகாசப் படுத்தப் பட்டதுமான
ந்யாஸ வித்யாம் –சரணாகதி வித்யையை
இத்தம் விவித -கீழில் சொன்னபடி நாநா விதமான
குரு ஜன க்ரந்த –ஆச்சார்யர்களுடைய ஸ்தோத்ர ரத்னம் கத்ய த்ரயம் முதலான கிரந்தங்களோடே
சம்வாத வத்யா-ஒற்றுமை வாய்ந்த
விம்சத்யா -இந்த 20 ஸ்லோகம் அடங்கிய ந்யாஸ விம்சதி நூலால்
ஸூதியாம்-நற் புத்திக் காரர்களுக்கு
வ்யவ் ருணத ஸ்ரேயஸே -நன்மை யுண்டாகும் பொருட்டு விளக்கினார் –
இஹ, பர சுகங்களை அளிக்கவல்லது இந்த ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரம் என்கிறார் ஸ்வாமி.
வேதத்தாலும் (ஶ்ருத்ய), ஸ்ம்ருதி (ஸ்ம்ருதி ஆதிபி:ச) யாலும், எம்பெருமான் வாக்காலும் (ஸ்வயம் பகவத் வாக்ய வர்க்கை:ச) ந்யாஸத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இவை மிக ஶ்ரேஷ்டமான ப்ரமாணங்கள்.
வேதாந்தாசார்யன் என முடிசூடிய ஸ்வாமி தேஶிகன்
பூர்வாசார்யர்கள் ப்ரபத்தி பற்றி
சொல்லிய விஷயங்களைத் தழுவிய இந்த
ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரத்தை நமக்காக அருளியுள்ளார்.
(அஶரண்ய ஶரண்யாம் அனன்ய ஶரண: – பாஷ்யகாரர்)
சம்சார வர்த்த வேக பிரசமந ஸூ பத்ருக் தேசிக ப்ரேஷிதோ அஹம்
ஸந்த்யக்தோ அந்யை ரூபாயைர நுஸித சரி தேஷ் வத்ய சாந்தாபிஸந்தி
நி சங்கஸ் தத்வ த்ருஷ்ட்யா நிரவதிகதயம் ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் த்வாம்
ந்யஸ்த த்வத் பாத பத்மே வரத நிஜ பரம் நிர்பரோ நிர்பயோஸ்மி–22-
ஹே வரத–ஓ வரதனே
அஹம்-அடியேன்
சம்சார ஆவர்த்த வேக –சம்சாரம் என்னும் நீர்ச் சுழலின் வேகத்தை
பிரசமந –அடக்குகின்ற
ஸூ பத்ருக் -ஷேம காரமான கடாக்ஷம் அருளுபவர்களான
நற் கதிக்கு மூல காரணமான கடாக்ஷம் பெற்றவனாய்
தேசிக ப்ரேஷிதோ –ஆச்சார்யர்களால் கடாக்ஷித்து அனுக்ரஹம் பெற்றவனாய்
அந்யைர் உபாயைர் –மற்ற உபாயங்களாலே
ஸந் த்யக்த-நன்றாக விடப்பட்டவனாய்
அநுஸித சரி தேஷு -தகுதி அற்றவைகளான நடத்தைகளால் -அதாவது நிஷித்த காம்ய கர்மங்களில்
சாந்தாபிஸந்தி–கருத்து ஒழிந்தவனாய்
அத்ய –இப்போது -இந்த நிலையில்
தத்வ த்ருஷ்ட்யா–தத்வ ஞானத்தால்
நிஸ் சங்கஸ் -சந்தேகம் அற்றவனாய்
நிரவதிக தயம் –அளவில்லாக் கருணை கொண்ட
த்வாம்-உன்னை
ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் -ரக்ஷிப்பவனாக அடைந்து -அதாவது -என்னை ரக்ஷிக்கக் கடவாய் என்று பிரார்த்தித்து
த்வத் பாத பத்மே -உனது திருவடித் தாமரையில்
நிஜ பரம் ந்யஸ்த -எனது பாரத்தை அடைக்கலம் செய்து
நிர்பரோ நிர்பயோஸ்மி–சுமை கழிந்தவனாய் பயம் அற்றவனாகவும் இருக்கிறேன்
தம்முடைய ஆச்சார்யர் கிருபையால் -தாம் பெற்ற ஞானம் -பக்தி யோகத்தில் சக்தன் அல்லன் -பிரபத்தி ஒன்றே உபாயம்
ஒரு தடவை மட்டுமே பண்ண வேண்டும் -என்றும் -பிரபத்தியின் மகிமைகளையும் அறிந்தமையையும் –
பெரிய பிராட்டியார் பேர் அருளாளன் இடம் சரண் அடைந்தமையையும் -நிர்ப்பரராய் கைங்கர்யங்களிலே கால ஷேபம் செய்து
நிரதிசய ஆனந்தம் இங்கேயே இந்த சரீரத்துடன் பெற்றதை அருளிச் செய்து நிகமிக்கிறார் –
தம்முடைய அனுஷ்டானத்தையே த்ருஷ்டாந்தம் ஆக்கி நிகமிக்கிறார்
இங்கு மிகச் சுருக்கமாக அருளிச் செய்து
ரஹஸ்ய த்ர்ய சாரத்தில் -அர்த்த அனுசந்தான பாகம் என்ற முதல் பாதத்தில் உபோத்கார அதிகாரம் முதல்
ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் வரை -22அதிகாரங்களால் விரிவாக அருளிச் செய்துள்ளார்
அங்கு விலக்கியவற்றையும் ஒரு ஸ்லோகத்தால் சுருக்கி அருளிச் செய்துள்ளார் –
ஏறி எழில் பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி அடிமையில் நம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே —
அவிஸ்ராந்த ஸ்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா
மம ஆவிர்பூயா ஸூ மனஸி முனி சித்தாத்தி ஸூ லபா
மது ஷீர நியாய ஸ்வ குண விபவ ஆசஜ்ஜன கநத்
மஹாநந்த ப்ரஹ்ம அனுபவ பரிவாஹா பஹூ விதா —
ப்ரபன்னன் அனுஸந்திக்க வேண்டிய முறையை ஸ்வாமி அனுஸந்தானம் செய்து காட்டும் ஶ்லோகம் இது.
ஹே பேரருளாளப் பெருமானே!
இந்த ஸம்சாரம் என்ற நீர்சுழலின் வேகத்தைத் தடுக்கவல்ல (ஸம்ஸார வர்த்தக வேக ப்ரஶமன)
ஆசார்யனின் நல்ல கடாக்ஷத்தைப் பெற்றவனாக (ஶுப த்ருக் தேசிக ப்ரேக்ஷித:)
பிற உபாயங்களிலிருந்து விடுபட்ட வனாக (அந்யை: உபாயை: ஸந்த்யக்த:)
தகாத செயல்களில் ஈடுபடாத வனாக (அனுசித சரிதேஷு ஶாந்தாபிஶந்தி:)
பூர்ண விஶ்வாஸத்துடன் தத்வ ஞானத்தால் சந்தேகமின்றி (தத்வ த்ருஷ்ட்யா நிஶ்ஶங்க)
எல்லையற்ற கருணைக்கடலான உன்னை உபாயமாக ப்ரார்த்தித்து
(நிரவதிக தயம் த்வாம் ஸம்ரக்ஷகம் ப்ரார்த்தய)
உன் திருவடித் தாமரையில் என்பரத்தை ஒப்படைத்துவிட்டு
பொறுப்பும் பயமும் நீங்கியவனாக இருக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
(த்வத் பாத பத்மே வரத நிஜபரம் நிர்பரோ நிர்பயோஸ்மி)
மேற்கூறிய விஷயங்களை மோக்ஷத்தை விரும்பும் சேதனர்களாகிய நாம் அநுஸந்தானம் செய்ய வேண்டும் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.
இதி ந்யாஸ விம்சதி சம்பூர்ணம்
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –