Archive for the ‘Boothath Aalvaar’ Category

ஸ்ரீ ஆழ்வார்களும் மங்களா சாசன திவ்ய தேசங்களும் –

October 23, 2021

ஸ்ரீ பொய்கையாழ்வார் ஸ்ரீ காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலில்(திருவெக்கா)
உள்ள பொய்கையில்(குளம்)அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – திருவோணம்
திவ்விய ப்ரபந்தம் – முதல் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய பாஞ்சச்சன்னியத்தின் அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பொய்கையாழ்வார் பாடி திவ்ய தேசங்கள்-6

திருவரங்கம்
திருக்கோவலூர்
திருவெஃகா
திருவேங்கடம்
திருப்பாற்கடல்
திருபரமபதம்

—————-

ஸ்ரீ பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த ஸ்ரீ மாமல்லபுரத்தில் உள்ள
ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயில் அருகில் அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – அவிட்டம்
திவ்விய ப்ரபந்தம் – இரண்டாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின்(கதை)அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பூதத்தாழ்வார் பாடி திவ்ய தேசங்கள் – 13

திருவரங்கம்
திருக்குடந்தை
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருக்கோவலூர்
திருக்கச்சி
திருப்பாடகம்
திருநீர்மலை
திருகடல்மல்லை
திருவேங்கடம்
திருதண்கால்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்

————–

ஸ்ரீ பேயாழ்வார் சென்னையில் உள்ள ஸ்ரீ திருமயிலையில்(மயிலாப்பூர்) அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – சதயம்
திவ்விய ப்ரபந்தம் – மூன்றாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய நாந்தகம்(வாள்)அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பேயாழ்வார் பாடிய திவ்யதேசங்கள் – 15

திருவரங்கம்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கச்சி
அஷ்டபுயகரம்
திருவேளுக்கை
திருப்பாடகம்
திருவெஃகா
திருவல்லிக்கேணி
திருக்கடிகை
திருவேங்கடம்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்
திருபரமபதம்

—————–

ஸ்ரீ திருமழிசையாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார்.
இவர் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் அவதரித்தவர்.

மாதம் – தை
நட்சத்திரம் – மகம்
திவ்விய ப்ரபந்தம் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்.

இவர் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.

ஸ்ரீ திருமழிசையில் பார்கவர் என்பவர் யாகம் புரிகையில் அவரது மனைவி கனகாங்கிக்கு தலை,கை,கால் உள்ளிட்ட
உறுப்புகளின்றி ஓர் பிண்டமாக அவதரித்தார்.
இதனால் மனம் வருந்தி பெற்றோர், பிண்டத்தை ஒரு பிரம்புதூற்றின் அடியில் விட்டுச் சென்றனர்.
பின்னர் திருமகளின் அருளால், எல்லா அவயவங்கள் பெற்று ஒரு குழந்தையானார்.
பின்னர், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க போனவிடத்தில் குழந்தை அழுகுரலைக் கேட்டு,
அதை எடுத்துக்கொண்டு வந்து தமது மனைவி, பங்கயச்செல்வியுடன் சேர்ந்து வளர்த்தார்.
அக்குழந்தைக்கு, பசி, துக்கமின்றி இருந்தும் உடல் சிறிதும் தளரவில்லை.

இந்த ஆச்சர்யத்தை கேள்வியுற்று அருகில் இருந்த சிற்றூரில் இருந்து வந்த வயதான தம்பதியர் பால் கொடுத்தனர்.
அவர்களின் அன்பின் மிகுதியால் குழந்தை பால் குடிக்கத் தொடங்கியது.
சிறிதுகாலம் கழித்து, தனக்கு பால் கொடுத்த தம்பதியருக்கு கைம்மாறு பொருட்டு,
தனக்கு கொடுத்தப் பாலில் மீதியை உண்ணுமாறு செய்தார்.
அவ்வாறு உண்டபின் அவர்களுக்கு இளமை திரும்பியது.
அவர்களுக்கு ஸ்ரீ கணிகண்ணன் என்ற குழந்தை பிறந்தது.
ஸ்ரீ கணிகண்ணன் பின்னர் ஸ்ரீ திருமழிசையாழ்வார் சீடரானார்.

இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை,இவரே பாடினார்-

சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்

இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி
பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு.

ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாளும்
தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்காவில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார்.
அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகப்பலதாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார்.
கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட இயலாமையை நீக்குமாறு கேட்க,
ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார்.பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத
அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான்.
அவள் ஆழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல
ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல,
‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன்,
கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, ஸ்ரீ யதொக்தகாரி பெருமானிடம்-

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்–என்று பாடினார்.

பெருமானும் அவ்வாறு சென்றார்.அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு,
அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன்,
தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார்.
ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.–என்று வேண்ட திருமாலும் திரும்பினார்.

ஸ்ரீ ஆழ்வார் சொன்னபடி செய்தமையால்,
பெருமானுக்கு “ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர் பெற்றார்.

ஸ்ரீ திருக்குடந்தையில் ஸ்ரீ திருமழிசையாழ்வார்
ஸ்ரீ கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார்.பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்தார்.
அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர்.
இதைப் புரிந்துக்கொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.அதன்பின்,பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர்.
ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார்.
”கிருஷ்ணனாம் வ்ரீஹிணாம்நகநிர்பிந்நம்“
என்ற ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.

ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர்.
யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருங்கயைப் பொறுக்கவில்லை.
இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்கு காட்டுமாறு பாடினார்-

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்
சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே

பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்கு தன்னைக் காட்டினார்.

ஸ்ரீ ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருச்சந்த விருத்தம்-61)

இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஸ்ரீ ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க,
பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.அவர் சொன்னதை தட்டாமல், பெருமான் அப்படியே இருந்தார்.
இக்கோலத்தை இன்றும் இக்கோயிலில் சேவிக்கலாம்.

பிறப் பெயர்கள்
ஸ்ரீ பக்திசாரர்
ஸ்ரீ உறையில் இடாதவர் – வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)
ஸ்ரீ திருமழிசைபிரான்
இவர் நிறைய திவ்யபிரபந்தங்கள் எழுதிக் காவிரியில் விட்டார்.
அவற்றுள் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்தவிருத்தமும் திரும்ப வந்தது

———–

ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.இவர் தூத்துக்குடி மாவட்டம்,
ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

மாதம் – சித்திரை
நட்சத்திரம் – சித்திரை
திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான ஸ்ரீ கருடனின் அம்சமாக அவதரித்தார்.

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு ஸ்ரீ நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீ மதுரகவிகள், ஸ்ரீ நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால்,
பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு,
பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார்.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.
அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணி கொண்டு ஸ்ரீ மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று
ஸ்ரீ நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,திருநகரிப்பெருமாள் வந்தார்,
திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்”
என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல்,
விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.
பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)

என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது.
நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக
நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரே பாடலை எழுதினர்.
இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி
அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்.
அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால்,
பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும்.
ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில் இருந்து தவறினால்,
சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால்,
அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.

—————-

ஸ்ரீ நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீ திருக்குறுங்குடி (ஸ்ரீ ஆழ்வார் திருநகரி) என்னும் ஊரில் அவதரித்தார்.
ஸ்ரீ நம்மாழ்வார், ஆழ்வார்களுக்கு தலைவராய் கொண்டாடப்படுபவர். அவர் அவயவி என்றுப் போற்றப்படுவர்.
அதாவது, மற்றைய ஆழ்வார்களை உடலாக எடுத்துக்கொண்டால், நம்மாழ்வார் அவர்களுக்கு ஆத்மா அவர்.

மாதம் – வைகாசி
நட்சத்திரம் – விசாகம்

திவ்வியப்பிரபந்தம் – திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி.

காரியார், உடையநங்கை ஆகியோருக்கு இன்றைய கேரளாவில் உள்ள ஸ்ரீ திருவண்பரிசாரத்தில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின் அவர்கள் ஸ்ரீ திருக்குறுங்குடி திரும்பினர். தங்களுக்கு குழந்தை வேண்டி இருவரும் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியிடத்தில் பிரார்த்திக்க,
அவரும் அர்ச்சகர் முகமா “நாமே வந்து அவதரிக்கிறோம்” என்று சொன்னார்.

அவ்வாறே விஷ்வக்சேனர் அம்சமாக வைகாசி மாதம், சுக்ல பக்ஷம், பௌர்ணமி திதியில், விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார்.
அவருக்கு துணையாக ஆதிசேஷனும் திருப்புளி ஆழ்வாராக(புளிய மரம்) அவதரித்தார்.பொலிந்து நின்ற பிரான் சன்னதி
குழந்தையை எடுத்துச்சென்று மாறன் என்றுப் பெயரிட்டனர். பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால்
பெற்றோர் இவருக்கு “மாறன்” என்றுப் பெயரிட்டனர்.

மாறன் கோயிலில் உள்ள புளியமரத்தில் சென்று அமர்ந்துவிட்டார். யாரிடமும் பேசாமல், எதுவும் உண்ணாமல்,
கண்களை மூடிக்கொண்டு த்யானத்தில் 16 வருடம் இருந்தார். பின்னர் மதுரகவி ஆழ்வார் வந்தபின் தான் நம்மாழ்வார் கண் திறந்தார்.

கலி பிறந்த 43வது நாளில் அவதரித்தவர்.

நம்மாழ்வார் வடமொழி வேதங்களை தமிழ் படுத்தியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று போற்றபடுகிறார்.
அவர் பாடியப் பாசுரங்களில், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி முறையே
ரிக், யஜுர், அதர்வண,சாமவேத சாரங்களாகும்.
திருவாய்மொழி – 1102 பாசுரங்கள்
திருவிருத்தம் – 100 பாசுரங்கள்
திருவாசிரியம் – 7 பாசுரங்கள்
பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள்

கம்பர் திருவரங்கத்தில் கம்பராமாயணத்தை அரங்கேற்ற சென்ற போது, அரங்கநாதன் “நம்மாழ்வாரை பாடினியோ”
என்று கேட்க கம்பர் நம்மாழ்வாரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டே “சடகோபர் அந்தாதி” இயற்றினார் .

பாடிய திவ்யதேசங்கள்

ஸ்ரீ நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசங்கள் மொத்தம் 37

திருவரங்கம்
திருப்பேர்நகர்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கண்ணபுரம்
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருவெக்கா
திருவயோத்தி
திருவடமதுரை
திருத்வாரகை
திருவேங்கடம்
திருநாவாய்
திருக்காட்கரை
திருமூழிக்களம்
திருவல்லவாழ்
திருக்கடித்தானம்
திருசெங்க்குன்றூர்
திருப்புலியூர்
திருவாறன்வினை
திருவண்வண்டூர்
திருவனந்தபுரம்
திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
திருக்குறுங்குடி
திருச்சிரீவரமங்கை
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருப்புளிங்குடி
திருத்தொலைவில்லிமங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
தென்திருப்பேரை
திருக்குருகூர்
திருமாலிரும்சோலை
திருமோகூர்
திருப்பாற்கடல்
திருப்பரமபதம்

பிற பெயர்கள் –கீழ் உள்ளவை, நம்மாழ்வாரின் பிற பெயர்கள்.
சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

February 16, 2021

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —-இரண்டாம் திருவந்தாதி -24-

(உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -ஸ்வரூப பரம் போல் இதுவும் அவன் கண்டாய் என்று விளக்கிக் காட்டி அருளுகிறார்)
இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ -அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

———————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –முதல் திருவந்தாதி–99-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன்
திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான்
ஏது என்னில்
விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் –

ஆன பின்பு -நெஞ்சே
நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு
திரு உள்ளம் பயப்பட

நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ
விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் –என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
நாம் பிரபன்னரான அன்றைக்கு தஞ்சமாக
அவன் ஒருவன் உளன் கண்டாயே –

நெஞ்சே
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தாத்வயி ஜீவத்யபி பிரபோ –
நீயும் உளையாய் இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க் காண் –

பிரபோ –
நீயும் என்னைப் போல் ஒரு ஸ்த்ரீயாதல்
புருஷோத்தமன் அன்றிக்கே ஒழிதல் செய்தாயோ நான் எளிமைப் பட –
இல்லாதவனானவனை உளன் என்கிறதன்று-
அவனுடைய சத்தை நம்முடைய ரஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும்-
நாம் பிரபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்று
நம்மை அஞ்சி இறே
கழுத்திலே சுருக்கி இட்டுக் கொள்ளுமன்று
அறுத்து விடு கிடாய் என்று அறிவுடையவனுக்குச் சொல்லி வைக்குமா போலே –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நமக்கு உளன் என்னப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
இவ்வர்த்தத்தில் உன்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் –
அவனுடைய வண்மை ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது
பர சம்ருத் ஏக பிரயோஜனனாய் -நம்முடைய ரஷணம் ஸ்வ பிரயோஜனமாய்க் கொண்டு –

என்றும் உளன் கண்டாய்
அசந்நேவ ச பவதி -என்றவனோடு
சந்தமேனம் ததோ விதது -என்றவனோடு
வாசி இல்லை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்
பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன் என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத் தடுக்காதார் நெஞ்சை
வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்
என்றும் உளனானமை காட்டுகிறார் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
திருப்பாற் கடலில் சாய்ந்தவனும்
திருமலையிலே நின்றவனும்
நம்முடைய ஹ்ருதயத்திலே உளனாக புத்தி பண்ணு
அவ்வோ இடங்களிலே இங்குற்றைக்கு வருகைக்காக நின்ற நிலை யாய்த்து
அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம் என்று இரு

அணைப்பார் கருத்தனாவான் -நான்முகன் -திரு -36-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

அணைப்பார் கருத்தானாவான்–அன்புடைய ஆஸ்ரிதர் நெஞ்சில் புகுந்தவன் ஆவதற்காகவே –
அவனுடையவர் அந்தரங்கம் புகுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டே திவ்ய தேசங்களில் சந்நிஹிதன் ஆகிறான்-

உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
இடவகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி -5–4-10-என்னுமா போலே –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –

————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நாட்டில் பெரியவராய் இருக்கிறவர்களும் தங்களுக்கு ஏற ஷேத்ரஞ்ஞராய் இருக்கிற படி அறிந்து இருக்கச் செய்தே-
ஈஸ்வரர்களாகப் பிரமிக்கிற படி கண்டு திரு உள்ளம் பயப்பட –
நாம் கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் என்கிறது –
புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் –நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

உளன் கண்டாய் –
இலனானவனை உளன் என்கிறது அன்று –
அவனுடைய சத்தை நம்முடைய ரக்ஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும் –
நாம் பிரதிபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்றி -நம்மை அஞ்சி
பித்தத்தாலே மோஹித்து கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டேன் ஆகில் அறுத்து விழ விடு கிடாய் என்று
அறிவுடையார்க்குச் சொல்லி வைக்குமா போலே

நன்னெஞ்சே –
எம்பெருமான் நமக்கு உளன் என்று சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
அவனுடைய உண்மை ஸூ ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனனாய் இருக்கை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் ஒரு நாள் உளன் என்று இருக்கில் -பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்கும் –
தான் புகுரப் புக்கால் விலக்காதவர்களுடைய ஹிருதயம் விட்டுப் போக அறியான் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்-உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —-
திருப் பாற் கடலில் கிடக்கிறதும்
திருமலையில் நிற்கிறதும்
தம்முடைய ஹ்ருதயத்தில் புகுருகைக்கு அவகாசம் பார்த்து என்று அறி –

உளன் கண்டாய் –
பிறருக்கு உபதேசிக்கிறவர் –எம்பெருமான் உளன் என்று இருக்கிறார் அல்லர்
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –

நன்னெஞ்சே –
இவ்வர்த்தத்தில் என்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் -தன் பேறாக உபகரிக்கை -என்றும்
அசன்னேவ ச பவதி -ஆனவன்றோடு–சந்தமேனம் ததோ விது–ஆனவன்றோடு வாசி இல்லை –

உள்ளுவார்–
புகுர சம்வத்திப்பார்

உள்ளத்து உளன் –
இடவகைகள் இகழ்ந்திட்டு -வெள்ளம் இத்யாதி -என்றும் உளனானமை காட்டுகிறார் –
அணைப்பார் கருத்தானாவான் —

——————-

திவ்யார்த்த தீபிகை —

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான் காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான் காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன் காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத் தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

———————————————————————————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
அவதாரிகை –

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன்
என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு
நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
பண்டு உளன் அன்றிக்கே
இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அசந்நேவ ஸ பவதி -யாய் இருந்தான் –
நாம் நமக்கு இல்லை என்று அஞ்ச வேண்டாம்
அவன் நமக்கு உண்டு கிடாய் -என்கிறார்

நாம் நம்முடைய விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுகைக்கு உளோம் ஆனாப் போலே யாய்த்து –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி –

அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது -என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
அவனுடைய உண்மையைப் பலமாக்கு –

நன்னெஞ்சே –
அத்வேஷம் உண்டான பின்பு இறே-அவன் உண்டாய்த்து –
அத்வேஷமும் உண்டாய் –
நீயும் உளாயானாய்-
இப்போது இறே சந்தமேனம் ஆய்த்தது –

உத்தமன்-
நம் பேறு தன் பேறாகக் கொண்டு உளன் கிடாய் –
நம்முடைய ரஷணம் பிரயோஜனமாய்க் கிடாய் அவன் இருப்பது –
அல்லாதார்க்கு அழியச் செய்து கொள்ளுகை ஸ்வ பாவம் ஆனால் போலே
அவனுக்கு ஆக்கிக் கொள்ளுகை ஸ்வ பாவம் –

என்றும் உளன் கண்டாய் –
நாம் வேண்டாத காலமும்
நம்மை வேண்டி இருக்குமவன் –
சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
செய்ய வேண்டுவது இவ்வளவே கிடாய் –
ஓர் அனுசந்தானமே கிடாய் வேண்டுவது –
புகுரப் புக்கால் விளக்காதார் ஹிருதயத்திலே உளன் –
அன்றிக்கே
அறிந்த அம்சம் அமையும் -என்னுமாம் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறத்தை யுபபாதிக்கிறது –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
ஆகாசமானது சுருங்கும் படி ஓங்கா நின்றுள்ள
சிகரங்களை யுடைத்தாய் –
உபரிதன லோகங்களும் சில எல்லைகளும் உண்டு என்று இராதே
இவை வேண்டா வென்று கொண்டு –
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படி –
அன்றியே
த்ரிபாத் விபூதி சங்குசிதமாம்படி-என்றுமாம் –

வீங்கருவி வேங்கடத்தான்-
மிக்க ஜலத்தை உடைத்தாய் உள்ள திரு மலையை
இருப்பிடமாக உடையனானவன் –

மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —-
பூமிப் பரப்பு அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும்படி
தான் அளந்து கொண்ட ராஜா –

மண் ஒடுங்க –
திருவடிகளிலே பூமி ஒடுங்க
பரப்பின திருவடிகளே தோற்றி
பூமி தோற்றாதபடி யளந்து கொண்டான் –

மன் –
ஈரரசு தவிர்த்த படி –

மன்-
உடையவன் –
இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்
மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –

தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்
அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ
எனக்கு ஒருவரும் இல்லை
நீயும் இல்லை
உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு –

பிரபோ –
என்னையும் என் பர்த்தாக்களையும் போலே
கழுத்துக் கட்டியாய்
ஒட்டை ஒடத்தோடு ஒழுகல் ஓடமாய் இருந்தாய் ஆகில்
எனக்கு கண்ண நீர் பாயுமோ –

ந தேரூபம் –பக்தா நாம் -ஜிதந்தே
என்ற அவன்
உதவா விடில் அன்றோ வெறுப்பாவது-

——–

திவ்யார்த்த தீபிகை —

நம்முடைய சத்தையை நோக்குவதற்காகவே தான் சத்தை பெற்று இருக்கிறான்
எம்பெருமான் உளன் என்று நாம் இசைந்தாலும் இசையா விட்டாலும்
நம்முடைய ரஷணத்தில் முயன்று உளனாய் இருக்கிறான்
தன்னை சிந்திப்பவர்கள் நெஞ்சிலே படுகாடு கிடக்கின்றான்
இதற்கு உறுப்பாக திரு வேங்கடமலையில் வந்து தங்குமவன்
இக் குணங்களை எல்லாம் திரி விக்கிரம திருவவதாரத்தில் விளங்கக் காட்டினவன் –

———–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

இப்படி சர்வாதிகனானவன் எண் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா —

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திரா அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு
உயரா நின்ற ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக
உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையிலே நின்றவன்
பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்
இந்திரன் இழந்தது பெறுகையாலும் –
மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

———–

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே –
நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும் ஸ்வபாவனான சர்வேஸ்வரன்
நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –

நாம் அவனுடைய உண்மைக்கு இசைந்த அன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு
உளனாய் இருக்குமவன் கிடாய் –

அவன் தானே வந்து புகுரும் இடத்திலே விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய
ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-

ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான –
திருமலையை இருப்பிடமாக உடையனானவன்
பூமிப் பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————–

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி -86-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-

நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

உளன் இத்யாதி
எம்பெருமான் என்றால் அபி நிவேசித்து இருக்கிற நெஞ்சே
அவன் நமக்கு உளன் கிடாய் –
இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்
தன் ஒப்பான் இத்யாதி
ஈஸ்வரன் சமாதிக தரித்ரனாய்க் கொண்டே உளன் –
அகிஞ்சனான படிக்கு வேறு ஒப்பில்லை
எனக்கும் மற்றும் என்னைப் போலே வெறுவியராய் இருப்பாருக்கும் அவன் நிர்வாஹகன்
இமை –
அனுசந்தி -புத்தி பண்ணு என்றபடி –

————-

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –
நல் நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-
என்னைப் போலே உபாய சூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான-ஈஸ்வரன் உளன் –
இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

————

திவ்யார்த்த தீபிகை

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார்

உத்தமன் உளன் கண்டாய் –
ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் –
ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் –
எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–
என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

—————————————————————————–—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 20, 2020

கூரிதான அறிவை  உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –

நன்கோது நால் வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற் கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11-

அந்த நீர் உறுத்தாத படி திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின் படி
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய்-தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து –
தரிசித்து –லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து

————-

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே
காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப்பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக நன்கு உணர்ந்தவர்கள் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி நாள் தோறும் காண்பார்கள் –

—————

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில் அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

இத்தால் இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————

எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி–அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –
அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம்-
சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால எளிதாம் –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து நிற்கிறவன் –நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹநீயன் ஆனவன்
நித்ய ஸூரிகள் வந்து ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடான திருவடிகளை யுடையவன் தாழ நின்ற இடத்திலும் மேன்மை குறைவற்று இருக்கிறபடி
அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் –
ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம்

——–

இப்படிப் பெரியனான சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்
அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத்துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –
இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பரியவும் அறியாதே –படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே -இருக்க வந்து என் மனசிலே தங்கா நின்றான் –
பரிவாரைக் கை விட்டுப் பரிய வறியா விடிலும் -முறை யுணர்ந்தாரை தானே வந்து உகக்கும் –
அங்கு வகுத்தது என்று கிடக்கும் இங்கு உகந்து கிடக்கும்-எங்கே தங்குமவன் எங்கே வந்து தங்குகிறான்
கிடைக்கைக்கு ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே தானே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு வந்து உகக்கும்-

————

திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனம் தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை
அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம் உத்தமை –
மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்-
ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்-

————-

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம்
ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் அவளோடே கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டில்லை –
இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக என்கிறது
எம்பெருமான் படி இதுவான பின்பு நாம் க்ருதக்ஞராய் இருக்கும் அத்தனை வேண்டும் –என்கிறார்
இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு
கழிந்த நாள்களும் இப்பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு
மேல் வரக் கடவ எல்லா நாள்களும் அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
இத்தை அசையிடும் நாள் இறே –

———–

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

சர்வேஸ்வரனே உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ-என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று அருளிச் செய்ய வேணும்-
இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்
ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இறே
அவனுடைய அருள் பெற்றவன்று சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே –

—————

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்- திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

அவனுக்கு அருள ஒண்ணாதது இல்லை -அஞ்சாது இருக்க அருள் -என்று அபேஷிக்கவும் அறியாதார்க்கும்
அருளுமவன் நமக்கு அருளானோ-
தம்தாமுக்கு என்ன ஒரு கைம்முதல் உடையார் பக்கல் காணும் அவன் தாழ்ப்பது –
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அக்கடிகடனா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

————-

அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று எம்பெருமானைக் கேட்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப் பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இறே
இந்திரன் பல் காட்டின்து பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ–சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத்தாழ்வார் தாமே அனுபவிக்கும் இரண்டாம் திருவந்தாதி —

July 18, 2020

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

——–

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப்
போவது வருவதாக ஒண்ணாது என்று திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

————

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே
பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

———–

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ்வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

——————

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

————–

எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

ராஷசனாக அமையும் -குரங்குகளாக அமையும் -ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் -பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது -ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

————

பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது -அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று
வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –

இத்தை ஒற்றியே –
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே-பெரிய திருமொழி -11-7-9- -என்கிறார் –
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் –
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் -பாகவத சேஷத்வத்தை
இந்த பதிகத்தில் வைத்தார்
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்து கொண்டு இருப்பவர் அருளுகிறார் –
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய் பாகவத சேஷத்வத்தை காட்டி கொண்டு
எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன்
திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

அழைப்பன் திருமாலை-ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை-
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-

—————————

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

இவ் வுடம்பைப் பொகட்டு லோகாந்தரத்தே வேறு ஒரு யுடம்பு கொண்டு அனுபவிக்க நினைக்க –
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள்
திருமலையே பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-நான் இவ் யுடம்பால் யுள்ள பிரயோஜனம் இங்கே கொள்ளப் பெற்றேன் –

——————

இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக
நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே
பண்ணினானாய் இருக்கிறது –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின –பாலாலயமான திருப் பாற் கடலை க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-
உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

—————-

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –
பொன்னாழி பாடு என்று –வேப்பங்குடி நீர் இருக்கிறபடி-
நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வா பாவமாக உடையவனானவன் பண்ணின பிரசாதம்- நாம் பெற்ற நன்மைக்கு அடி என்கிறார் –

————–

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

உன்னுடைய கமலம் போன்றுள்ள திருவடிகளை நினைத்தேன் –
உன் திருவடிகளை நமக்கு பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தேன் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினேன் -அநந்தரம் –
ஓர்ந்து – நிரூபித்துப் பரதந்த்ரமாய் என்னோடு எனக்கு அடைவில்லாமையையும் அவனுக்கேயாய் இருக்கிறபடியையும்
ஆராய்ந்து -ஆருடையத்தை ஆருடையதாகத் தான் நாம் பிரதிபத்தி பண்ணி இருந்தோம் என்று அனுதபித்து –
என்னையும் அங்கு ஓக்கினேன் –அத்திருவடிகளிலே என்னையும் நிஷேபித்தேன் -உபாயமும் அவனே யாக அத்யவசித்தேன் –
இத்தால்
கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

————-

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர் யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60–

உயர்வற உயர்நலம் உடையவனாய் இருக்கை யல்ல ஸ்வரூபம் -எளிவரும் இயல்வினனாகை-
ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
பிறக்கப் பிறக்க ஸூத்த சத்வ மயமாகக் கொண்டு நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திருமேனி-
ஜகத் காரணாமாய்-எல்லார்க்கும் சத்தை அவன்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-
முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார்-
அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

—————————

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன் பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை சேஷபூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்-
அன்பாய்த் துணிந்தேன்-ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –
பெருமாள் புக்கு அருளினால்-பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன்
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் – ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு -அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது -அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே அவர்கள்
நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –

————-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

நித்தியமான ஆத்ம வஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப் பின்னையும்
மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது -அஞ்சுகைக்கும் அச்சம் கெடுகைக்கும்-
துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும் துரத்தி விட்டுப்
பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் -துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும்
செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

—————-

அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

தாய் பேர் சொல்லக் காலமும் தேசமும் பார்க்க வேணுமோ –

————–

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான
ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9-
என்றாப் போலே யாயத்து இவர்க்கும் இது –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பெரும் தமிழன்— பெரிய தமிழன் –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்-
பலத்தைக் கொண்டு நிச்சயிக்கிறார் -எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6–
எம்பெருமான் – இதுக்கடி இவன் எனக்கு சேஷி ஆகையாலே –
இவருடைய தபஸ்ஸூம் பலமும் இருக்கிறபடி -போந்தேன் புண்ணியனே -பெரிய திருமொழி -6-3-4–
யானே இரும் தமிழ் நன் மாலை –வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –
என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –
நல்லேன் பெரிது – யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –
நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்–என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –
ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

—————

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆனபடியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

நேர்ந்தேன் அடிமை –
அவன் பக்கலில் யுண்டான அடிமையிலே நேர்ந்தேன் -ஸ்வரூப அனுரூபமான கைகர்யத்தைக் கிட்டினேன் –
துணிந்தேன் -என்று கீழே -65- பாசுரத்தில் சொன்னபடி -ஷத்ரியனுக்குஅபிஷேகம் நேர்பட்டால் போலே –
அவனுடைய அழகிய திருவடிகளை ஸ்மரித்தேன்-இவருடைய அபிஷேகம் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-7-என்றும்
மாலடி முடிமேல் கோலமாம் -குலசேகரன் -பெருமாள் -7-11-என்றும் சொல்கிறபடி
அடிமை ஆசைப்பட்டால் அடியை நினைத்து இருக்கும் அத்தனை இறே –
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன்-

————

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் –
கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் –
முன்பு பகல் கலவாது -பின்பு இரவு கலவாது –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் -உறங்காத என்னையும் கண்டேன் –
கனவில்-இந்த்ரியங்களால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –

————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல -திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

வடிக்கோலம்-கோலம் தனை வடித்து -அதில் நன்றான அம்சம் ஆய்த்து இங்குத்தை அழகாய் இருப்பது –
இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே -இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும்
எல்லை காண ஒண்ணாத படி புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இறே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி-

————

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

ஆழியான் -போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –
எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு -எல்லா போக்யதையும் தன்னுடைய
போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள
சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன்-
அறிந்து கவி பாடினேன் அல்லேன் -ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –
ஏத்தி நவின்று – மிகவும் ஆதரித்து ஏத்தினேன் -ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி
நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

———–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ்ஸூ பண்ணிக் கண்டேன் -அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே
ஒரு தபஸ் ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-
காண்பன் கொல் இன்று –நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது –

————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –

————

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய
செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன -எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம்-
எங்கள் பெருமானை- அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின் –
கை தொழுதேன் – உபய விபூதியும் தன்னதாகை தொழுகை யோடு வ்யாப்தம் –
உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

—————

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய
சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

அவனை இவருடைய நெஞ்சு விரும்பினவாறே இவருடைய சர்வ அவயவங்களிலும் அவன் இருந்தான் –
இவருடைய ஒரு பரிகரத்தை அங்கே வைக்க அவன் இவருடைய சர்வ பரிகரத்திலும் புகுந்தான் –
சர்வ அவயவங்களுக்கும் உப லஷணம்-
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

————

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் -தேவ ராஜன் -எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் -எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –

—————-

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

செங்கண் நெடுமால் – ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
பரமபதம் போலே -குடமூக்கில் கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான்

———————-

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதாநங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன்-அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப்
பொருந்திக் கொண்டு என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமி

————-

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

கன்றையும் விளாவாயும் வந்த அஸூ ரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று -இத்தை அமைத்து அருள வேணும்-
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 18, 2020

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பன்னூல் அளந்தான்-எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே வேண்டுவது –
சேவடி –பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இறே -அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-

————-

அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் –

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

அழகிய ஸூ குமாரமான திருவடியாலே கம்சனைப் பாய்ந்து –என் தலையிலே வைக்க வேண்டாவோ –
ஒருகால் திரு நாமம் சொன்னால் -அவர்கள் மறக்கிலும் தான் அவர்களை ஒரு நாளும் மறவாதவனுடைய
திரு நாமங்களையே ஏத்துங்கோள்-வாய் விட்டுப் புகழுங்கோள் -இப்படி புகழ்ந்தால் தம் தாமுக்கு அபேக்ஷிதமான
ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்கள் ஆகிற சகல புருஷார்த்தங்களையும் எத்தின வாய் மூடுவதுக்கு முன்னே
சீக்கிரமாக கைப்படும் படி காட்டித் தரும் –

——————

கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்-
பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

நெஞ்சாலே அனுசந்தித்து -வாயாலே -மேல் எழ அன்றிக்கே ச மனசமாக உறைத்து நின்று
ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்

——————–

என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்து கிறபடி -அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் –
ஜகத் ரஷண ஸ்வ பாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே –
சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே-

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பூம் பாடகத்துள் இருந்தானை ––பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று போக்யதை யுடைத்தான
திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருக்கிறவனை –
ஆஸ்ரிதருடைய பிரளயங்களை நீக்கி விரோதிகளுக்கு பிரளயம் யுண்டாககுமவன் வர்த்திக்கிற தேசம் –
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்காக நிரதிசய போக்யமான திருப் பாடகத்திலே சிறுக்கனுக்கு உதவினபடியை
எல்லாரும் காண வேணும் என்று எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரனை என்னுடைய நெஞ்சானது
இவ்வோ ஸ்வ பாவங்களைச் சொல்லி புகழா நிற்கும் -இப்படியே நீங்களும் உங்கள் யோக்யதை நினைத்து பிற்காலியாதே
கிட்டி நின்று பஃன அபிமானராய்த் திருவடிகளிலே விழுந்து அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் –

————-

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய
சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

அவனை இவருடைய நெஞ்சு விரும்பினவாறே இவருடைய சர்வ அவயவங்களிலும் அவன் இருந்தான் –
இவருடைய ஒரு பரிகரத்தை அங்கே வைக்க அவன் இவருடைய சர்வ பரிகரத்திலும் புகுந்தான் –
சர்வ அவயவங்களுக்கும் உப லஷணம்-
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

——————–

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் -தேவ ராஜன் -எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் -எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –

—————-

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

செங்கண் நெடுமால் – ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
பரமபதம் போலே -குடமூக்கில் கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான்

———————-

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன்-அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப்
பொருந்திக் கொண்டு என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமி

————-

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும்படியைச் சொல்லுகிறார் –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

மா வடிவில் என்றும் –மா வலியை என்றும்-பாட பேதம்-

ஆஸ்ரித அர்த்தமாக சுருங்கின வடிவை யுடையவனாய் -வடிவு கண்ட போதே பிச்சேறும் படியாய் இருக்கை –
இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -திருவாய் -7-5-6-இ றே –
மா வடிவு –பூமி அத்யல்பமாம் படி வளர்ந்தான் –

——————

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

கன்றையும் விளாவாயும் வந்த அஸூ ரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று -இத்தை அமைத்து அருள வேணும்-
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 18, 2020

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் –
கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் -முன்பு பகல் கலவாது -பின்பு இரவு கலவாது –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் -உறங்காத என்னையும் கண்டேன் –
கனவில்-இந்த்ரியங்களால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –

————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல -திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

வடிக்கோலம்-கோலம் தனை வடித்து -அதில் நன்றான அம்சம் ஆய்த்து இங்குத்தை அழகாய் இருப்பது –
இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே -இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும்
எல்லை காண ஒண்ணாத படி புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இறே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி-

————

கீழே -74- பெரும் தமிழன் நல்லேன் பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் –
இங்கே நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி -நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது –
என்ன சாஹசிகனோ -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –
அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் –
இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ ச நாதமாக அனுசந்திக்கையாலே அங்குத்தைக்கு வி சத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் –
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-
நல்லேன் பெரிது -என்றார் ஐஸ்வர்யத்தைக் கண்டு வெருவித் தீயேன் என்கிறார் –
பேசிற்றும் தப்பாய் பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பரிபூர்ண விஷயத்தை அபரிபூர்ணமாகச் சொன்னேன் -அதுக்கு மேல் கேட்டார் செவி கன்றும்படி வெட்டிதாகவும் சொன்னேன் –
விசத்ருசமாகச் சொன்ன அளவேயோ –ஓன்று சொன்னேனாய் அதுக்குப் பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன் –
இவர் பின்னை ஒரு பிரயோஜனத்துக்காக கவி பாடுவாரோ என்னில்
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் -அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு
என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

——————–

மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் –
அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி –
ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

நரம் கலந்த சிங்கம் – சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் சேர்ந்தாப் போலே இருக்கை –
வெறும் மனிச்சாதல் -சிம்ஹமாதல் காணிலும் உபேஷிக்க வேண்டி இருக்கை –
ஒரு தேச விசேஷத்திலே போனால் புஜிக்கத் தக்க அம்ருதம் சம்சாரத்திலே மிகவும் போக்யம் என்கிறார் –
அங்கண் மா ஞாலம் –திரு அவதாரத்துக்கு ஈடான நிலம் –

———————

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

ஆழியான் -போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –
எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு -எல்லா போக்யதையும் தன்னுடைய
போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள
சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன்-
அறிந்து கவி பாடினேன் அல்லேன் -ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –
ஏத்தி நவின்று – மிகவும் ஆதரித்து ஏத்தினேன் -ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி
நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

———–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ்ஸூ பண்ணிக் கண்டேன் -அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே
ஒரு தபஸ் ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-
காண்பன் கொல் இன்று –நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது –

—————-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –

——————–

அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பெரிய பெருமாள் –மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –
மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –
செம்மை யுடைய திருவரங்கர் -நாச் -11-10-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -11-3-அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும் –
திறம்பா வழி-0ஏக பதத்தால் நிர்ணயித்த வழி – பர வியூஹ விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள்
பக்கலிலே கண்ணழிவு சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் –
அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை என்று கருத்து -தேவதாந்த்ரங்கள் என்றுமாம் –
அவனாலே அவனைப் பெறுதல் அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -தன்னாலே அவனை இழத்தல் –
பிரதிகூலராய் இழப்பாரும் அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும் ஆக இழக்கை இரண்டு விதம் –

———-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –
மாணியாய் – இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –

———

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன -எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம்-
எங்கள் பெருமானை- அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின் –
கை தொழுதேன் – உபய விபூதியும் தன்னதாகை தொழுகை யோடு வ்யாப்தம் –
உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 18, 2020

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –
ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் –
கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது –
அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –
சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ்-சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம் காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைப் பரப்பின போது இடங்கை வலம்புரி நின்றார்ப்ப இப்படிப் பட்டார்கள் என்கிறது –
பூவாரடி – வெருமனிருக்கிலும் வயிறு எரிய வேண்டி இருக்கிற படியாலே பிராட்டிமார் பரியும் திருவடிகள் –
பூவைப் பரப்பினால் போலே இருக்கை –-

—————–

அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு
யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க-அது வேண்டா காண்-
திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் -ஆனபின்புரியும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

திருவேங்கடமுடையானுடைய திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு இது என்ன நீர்மை என்று கொண்டு
அவன் திருவடிகளிலே கிட்டும்படி போதை யணிவோம்-பூவைக் கொண்டு ஆஸ்ரயிப்போம்-

———————-

அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

தாய் பேர் சொல்லக் காலமும் தேசமும் பார்க்க வேணுமோ –
ஐஸ்வர் யாதிகளில் கை வைத்தார்க்கு இ றே நியதி உள்ளது -கைக்கு எட்டித்த ஒரு கண்ட சர்க்கரையை வாயிலுடுமா போலே –
குவலயா பீடத்தை யானபோது ஆஸ்ரயிப்பாருடைய விரோதிகளைப் போக்குகைக்கு உப லஷணம் ஆகிறது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானை யானபோது ஆஸ்ரிதர் விஷயத்தில் அவனுக்கு யுண்டான வாத்சல்யத்தைச் சொல்லுகிறது –

————–

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான
ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9-
என்றாப் போலே யாயத்து இவர்க்கும் இது –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பெரும் தமிழன்— பெரிய தமிழன் / –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்-
பலத்தைக் கொண்டு நிச்சயிக்கிறார் -எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6–
எம்பெருமான் – இதுக்கடி இவன் எனக்கு சேஷி ஆகையாலே –
இவருடைய தபஸ்ஸூம் பலமும் இருக்கிறபடி -போந்தேன் புண்ணியனே -பெரிய திருமொழி -6-3-4–
யானே இரும் தமிழ் நன் மாலை –வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –
என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –
நல்லேன் பெரிது – யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–நித்ய முக்தரும் அடைவு கெட்டுச்சொல்லுவார்கள் –
நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்–என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –
ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

—————

நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன -அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி –
ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து –
இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக திருமலை யிடை யாட்டம் நேர் பட்டபடி-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

மும்மதம் என்ற ஒரு பிரதேச நியமம் இன்றிக்கே கிண்ணகம் போலேயாய் சிம்ஹம் அஞ்ச வேண்டும்படி இருக்கை –
இதினுடைய வியாபாரம் மாப்பிடிக்கு-அதினுடைய புத்யதீனமாய் இருக்கை –
சர்வ நியந்தா வானவன் பாண்டவர்களுக்கு நியாம்யனானாப் போலே –
இதுக்குக் கொடுக்கையே புருஷார்த்தமாய் -அது அநாதரிக்கிறபடியும்-இருக்கிறபடி –
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்னுமா போலே யாய்த்து அதுக்குக் கருத்து -இரந்து அது கொள்ளும்படி கொடுக்கும் –
மூங்கில் குருத்தும் தேனும் ஏக ரசமாய்க் கொண்டு கலந்தால் போலே யாய்த்து
இங்கும் மேகத்தோடு கலந்து சேர்ந்த வடிவு இருக்கிறபடி –
மேகத்தினுடைய நிறத்துக்கும் அவனுடைய வடிவுக்கும் வாசி அறிந்து சொல்ல ஒண்ணாத படியாய் இருக்கும்-

————–

கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு
இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்-

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-இத்தால் இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –
இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன்
சீரியதாய் – இப்போதும் இனிதாய் -என்றும் இனிதாம் -கருப்புக் கட்டி தின்னக் கண்ட சர்க்கரை கூலி என்கை-
அப்ராக்ருத வஸ்துவை ஆஸ்ரயிக்கும் போது அப்ராக்ருத த்ரவ்யங்கள் வேணும் என்று அஞ்ச வேண்டா கிடி கோள்-என்கிறார்
தன் பக்கல் இவன் பண்ணின அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே வாயார ஸ்தோத்ரம் பண்ணி தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-

———————–

இப்படி ஆஸ்ரயணத்தை அடைவு பட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே -திரு உள்ளத்தைக் குறித்து
அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

உத்தமன் –தன் பேறாக வடிவைக் கொள்ளக் கடவ சர்வேஸ்வரன் -நாம் வேண்டாத நாளும் நம்மைத் தொடர்ந்து திரிந்தவன் –
நல் பாதம்-நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் திருவடிகளுக்கும் –தானே வந்து தலையிலே இருக்கும் திருவடிகள் –-
சாற்றி உரைத்தலான தவம் உறும் கண்டாய் -இத்தைத் தவமாகச் சொல்லுகிறது ஈஸ்வரன் கருத்தாலே–

——————-

இப்படிப்பட்ட தபஸ்சை அனுசந்தித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான்
சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78–

பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்கியமான திருவடிகள் -எட்டாதபடி பரணிட்டு இருக்கக் கிடீர் பலித்தது என்கை-
தன்னுடைய சிவந்த கைகள் அனைத்தும் ஆரும்படி விளக்கினான் –
அநேகம் கை படைத்ததால் உள்ள லாபம் பெற்றான் –அவனுடைய எல்லா திரு நாமங்களையும் சொல்லி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றான் –
சர்வேஸ்வரன் அந்ய அர்த்தமாகச் செய்த செயல் அவனுடைய தபஸ் ஸூ க்குப் பிரயோஜன ரூபமாகக் கொண்டு தலைக் கட்டப் பெற்றது –
யாரேனுக்கும் கார்யம் செய்ய யாரேனுக்கும் பலித்துப் போவதே –

——–

ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது -தாயார் அபேஷிக்க மறுத்துக்
காடேறப் போன சக்ரவர்த்தி திருமகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்-

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

இரப்பாள் மொய்ம்மலராள்0பெருமாள் ஆகிற கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த வேணும் என்று நெருப்பிலே இடுமா போலே
இந்த அதி ஸூ குமாரமான திருமேனியைக் கொண்டோ காடேறப் போகிறது -என்று
உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் -உமக்கு முன்னே போகக் கடவேன் என்று ப்ரார்த்தியா நிற்க –
பெருமாள் கருமுகை மாலையை வெய்யிலிலே இடவோ என்று இருந்தார் –
அவள் தன்னை மறந்து பெருமாளையே நினைந்து இருந்தாள்-
அவன் அளந்த பூமிப் பரப்பு அடங்கலும் இத்தனைக்கும் நேர் -அவன் அளந்த பூமி அவன் குணம் அத்தனைக்கும் நேர்-

அதாவது மாத்ரு வசனத்தை மறுத்துப் பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
அனுகூல அக்ரேசரரான ஸூரிகள் வயிற்று எரிச்சலையும் தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -காடுமோடையுமான அளக்கிற
பூமியினுடைய கொடுமையையும் -ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல் ஆஸ்ரிதரான இந்திரன்
பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக் கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –

——————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆனபடியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

நேர்ந்தேன் அடிமை –
அவன் பக்கலில் யுண்டான அடிமையிலே நேர்ந்தேன் -ஸ்வரூப அனுரூபமான கைகர்யத்தைக் கிட்டினேன் –
துணிந்தேன் -என்று கீழே -65- பாசுரத்தில் சொன்னபடி -ஷத்ரியனுக்குஅபிஷேகம் நேர்பட்டால் போலே –
அவனுடைய அழகிய திருவடிகளை ஸ்மரித்தேன்-இவருடைய அபிஷேகம் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-7-என்றும்
மாலடி முடிமேல் கோலமாம் -குலசேகரன் -பெருமாள் -7-11-என்றும் சொல்கிறபடி
அடிமை ஆசைப்பட்டால் அடியை நினைத்து இருக்கும் அத்தனை இறே –
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன்-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 17, 2020

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று –
பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –-
உன் திருவடிகளிலே ந்யஸ்த பரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து -இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று
கொண்டு நிர்ப்பரராய் -மார்பிலே கை வைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இறே-
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆனபின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை-

—————

நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே
நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது-

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்-நம் பிரதி பஷத்துக்கும்
மாறு என்று சொல்லி வணங்கினேன் –
நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன் –
இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் -அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று
அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் -இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

——————

இத்தால் எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் -அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் –
தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது-

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத் தந்து -இத்தைக் கொடு போய் நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு
கொடுத்து வாரும் -என்று போக விட -அப்போது இப் பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய -அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும்
தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –இது இறே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் -சாபத்தைப் போக்கினவனோ -தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ
பார்த்துக் கொள்ளும் அத்தனை –

——————-

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

கதையின் திருமொழி யாய் நின்ற திருமாலே – உபநிஷத் சித்தமான ஏதேனுமாக ஒரு வித்யா விசேஷங்களில் யுண்டான
சப்தங்கள் ஸ்ரீ யப்பதிக்கு வாசகமாயாய்த்து இருப்பது –
அர்த்தத்துக்கு போதகமான சப்தம் -அவனையும் அவளையும் காட்டக் கடவதாய் இருக்கும் –
அர்த்தம் அவனே சப்தம் இவளே யாய்த்து இருப்பது-
இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

————

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன் பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை சேஷபூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்-
அன்பாய்த் துணிந்தேன்-ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –
பெருமாள் புக்கு அருளினால்-பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன்
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் – ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு -அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது -அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே அவர்கள்
நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –

————-

பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும்
அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் –
ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகவத் பிரசாதம் யுடையார்க்கு இறே பிரத்யஷிக்கிற தோஷமும் தோஷமாய்த் தோற்றுவது-
தன்னைக் காட்டினவோபாதி இது தன்னையும் தானே காட்ட வேணும் –
எம்பெருமான் தன்னையும் பற்றுவித்து புறம்பையும் விடுவிக்குமா போலே –
இத் தோஷ தர்சனமும் தன்னையும் விடுவித்து எம்பெருமானையும் பற்றுவிக்கும் –
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவன் உளனாய் இருக்க -அநிஷ்டத்திலே இவன் இஷ்டம் பண்ண
அத்தைத் தவிர்த்து சாஷாதிஷ்டம் தருவானாய் நின்றான் –
நம்மாழ்வார் இமையோர் தலைவனான படியை முந்துறக் கண்டார்
அதுக்கு எதிர்தட்டான பொய் நின்ற ஞானம் தொடக்கமான வற்றை-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
விடுவிக்க வேணும் -என்கிறார் –

————-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் வடிவு–67 –என்றும் பாடமாம்

நித்தியமான ஆத்ம வஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப் பின்னையும்
மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது -அஞ்சுகைக்கும் அச்சம் கெடுகைக்கும்-
துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும் துரத்தி விட்டுப்
பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் -துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும்
செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

—————-

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச் சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது –
இத்தால் நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் -அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது –
தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் பக்கல் தட்டில்லை –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

நம் வேர்ப் பற்றிலே நலிய நினைத்து வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் யுடைய கொம்பைச் சலித்த சேஷீ-
தன்னுடைய விரோதியைப் போக்கி எழுதிக் கொண்ட படி யாதல் –
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான் -என்னுதல் -இச் செயலாலே எல்லாரையும் எழுதிக் கொண்டவன் –
இப்படிப்பட்ட அவன் கிடீர் கடல் கடைந்தான் –

————

அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ-
நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை
ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்-

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பூ வேகும்–பாட பேதம்-பூக்கள் தள்ளும் படியான செவ்வியை யுடைய கமலத்தை நாபியிலே உடையவன்
பூ மேவும் -என்ற பாடமாய்த்தால் போக்யதை பொருந்தி இருக்கிற படி

—————–

ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது
அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்
ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு ராஜ்யத்தைக் கொடுக்கும் –
தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-
தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி ஓக்க விரும்பி
அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

தமருள்ளும் – இதில் முற்பட்டது ஆஸ்ரிதருடைய ஹ்ருதயம் ஆகையாலே உத்தேச்யம் இது -இத்தால்
அவ்வோ இடங்கள் போலும் அன்றிக்கே இவர்கள் ஹ்ருதயங்களிலே ஒரு வாசி தோற்றப் பரிமாறும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் யுடைய ஹ்ருதயங்கள் –
தஞ்சை –தஞ்சை மா மணிக் கோயில் –
தலை யரங்கம் –திருப்பதிகளில் பிரதானமாய் -பரமபதத்தோடே ஒக்க எண்ணலாம் படியான பெரிய கோயில் –
தமருள்ளும் தண் பொருப்பு – நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது -திருவாய்-9-3-8-என்று தங்களுக்கு வைப்பாக
அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை –ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வ ஸ்வமான தேசம் இறே –
வேலை –எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் –ப்ரஹ்மாதிகளுக்கே யாய் இருக்கையாலே விசேஷணம் இட்டிலர்-
தமருள்ளும் மா மல்லை –ஆஸ்ரிதனுக்காகத் தரைக்கிடை கிடக்கிற திருக் கடல் மலை –
கோவல் –திருக் கோவலூர் எங்கள் மூவரோடும் ஓக்க நெருக்கின இடம் -தங்கள் நெருக்கு உகந்த இடம் இறே –
மதிள் குடந்தை –அரணை யுடைத்தான திருக் குடந்தை -திரு மழிசைப் பிரான் உகந்த இடம் –
என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் -எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி—தசாரதாத் மஜனுக்கு
சக்கரவர்த்தி திருமகனுக்கு இடம் என்று சொல்லுவார்கள்
மிடுக்காலே பிரதிகூலரை அழியச் செய்தவன் -அனுகூலரை எழுதிக் கொண்ட இடங்கள் –
இப்படி சக்திமானாய் இருக்கிறவன் இவர்களை அனுகூலித்து மீட்கைக்காக வந்து இருக்கிற தேசங்கள் இவை

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 17, 2020

இப்படித் தாம் அடைவு கெட்டபடியை அனுசந்தித்து -நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே
அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் –
பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் –

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51-

நினைத்து உஜ்ஜீவி –தேவர்களுடைய புன்மையில் போகாது ஒழிகை -அவனையே நினை-
ஆஸ்ரித அபேஷிதம் ஒரு தலையானால் தன் படுக்கை என்றும் பாராதே அங்கு நின்றும் எழுந்து நின்று கார்யம் செய்த படி
பிரயோஜனாந்த பரருக்கு கடல் கடைந்து கொடுத்த படி-அர்த்திப்பாரைப் பெற்றவாறே படுக்கையைக் கடைந்து கொடுத்தான்
ஒரு கருங்கடல் வெண் கடலை நின்று கலக்கினாப் போலே -கடலைக் கடைந்த அழகு யுடையவனை புத்தி பண்ணு கிடாய் –
கிடந்த கடலை நின்ற கடல் கடைந்தாப் போலே -சமுத்ரத்தில் நீர் நிறம் போலே இருந்துள்ள நிறத்தை யுடையவன் –

———

திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும்
பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52-

அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன்-
ஆர் அது அறிவார் –அந்த ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –
ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –
அவன் பிராட்டியை அபஹரித்தான் -இவன் பூமியை அபஹரித்தான்-
அவனைப் போலே தலை அறுத்துப் பொகடாதே வைத்தமைக்கு அடி ஔ தார்யம் என்று ஒரு குணலேசம் கிடக்கையாலே –
மேல் இந்திர பதம் செலுத்துவானாக வைத்தவனுடைய ஆன்ரு சம்ச்யத்தை அறிவார் யார் –

————–

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

இவ் வுடம்பைப் பொகட்டு லோகாந்தரத்தே வேறு ஒரு யுடம்பு கொண்டு அனுபவிக்க நினைக்க –
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள்
திருமலையே பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-நான் இவ் யுடம்பால் யுள்ள பிரயோஜனம் இங்கே கொள்ளப் பெற்றேன் –

——————

இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக
நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே
பண்ணினானாய் இருக்கிறது –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின –பாலாலயமான திருப் பாற் கடலை க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-
உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

—————-

இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் –
அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார்
உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் –
இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக் கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்
ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-உன்னுடைய ஆனந்த சமுத்ரத்தையும்
நீ எனக்கு அருளவும் வேணும் –-கண்டால் பிறக்கும் ஸூகத்தையும் பண்ணித் தந்து அருள வேணும்
அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ

——–

சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் -அது வைதமான படி இறே –
ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே அவளைக் கண்டால் இ றே அவ்வடிவு தோற்றுவது-
பிராட்டி சந்நிதி யுண்டாக அயோக்யன் என்று அகலவும் விரகு இல்லை -சாபராதன் என்று மீளவும் போகாது –
முறையில் நிற்கவும் ஒண்ணாது –
பிரபல புருஷ காரம் உண்டான பின்பு -முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து ஆறி இருக்கப் போமோ –

———————-

இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடி கோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

நாங்கள் அவனுடைய பேரை சேஷபூதர் என்னும் ப்ராப்தியாலே ஏத்தினோம் -முறை யறிந்த நாம் முறை தப்பாமே ஏத்தினோம் –
விபீஷண லஷ்மணாதிகளைப் போலே –சூர்பணகை போலே முறை கெட அல்ல –

————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –
பொன்னாழி பாடு என்று –வேப்பங்குடி நீர் இருக்கிறபடி-
நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வா பாவமாக உடையவனானவன் பண்ணின பிரசாதம்- நாம் பெற்ற நன்மைக்கு அடி என்கிறார் –

————–

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

உன்னுடைய கமலம் போன்றுள்ள திருவடிகளை நினைத்தேன் –
உன் திருவடிகளை நமக்கு பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தேன் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினேன் -அநந்தரம் –
ஓர்ந்து – நிரூபித்துப் பரதந்த்ரமாய் என்னோடு எனக்கு அடைவில்லாமையையும் அவனுக்கேயாய் இருக்கிறபடியையும்
ஆராய்ந்து -ஆருடையத்தை ஆருடையதாகத் தான் நாம் பிரதிபத்தி பண்ணி இருந்தோம் என்று அனுதபித்து –
என்னையும் அங்கு ஓக்கினேன் –அத்திருவடிகளிலே என்னையும் நிஷேபித்தேன் -உபாயமும் அவனே யாக அத்யவசித்தேன் –
இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

————-

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர் யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூ லபனான படியைச் சொல்லுகிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60–

உயர்வற உயர்நலம் உடையவனாய் இருக்கை யல்ல ஸ்வரூபம் -எளிவரும் இயல்வினனாகை-
ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
பிறக்கப் பிறக்க ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திருமேனி-
ஜகத் காரணாமாய்-எல்லார்க்கும் சத்தை அவன்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-
முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார்-
அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.