Thiruvonum's Weblog

Just another WordPress.com weblog

Archive for the ‘Ashtaadasa Rahayangal’ Category

« Older Entries

ஸ்ரீ ந்யாஸ த்ரயீ!!–1-ஸ்ரீ ந்யாஸ விம்சதி-

January 26, 2023

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ-வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————

பிறவிக் கடலைக் கடத்து விக்கும் நாவாய் ஸ்ரீ ந்யாஸ த்ரயீ!!

ந்யாஸம் என்றால் “பொறுப்புத் துறப்பு” என்று பொருள். மனிதப் பிறவியின் சாதனை எனலாம் இதனை. நிக்ஷேபணம், பர ந்யாஸம், ஶரணாகதி என்றும் இதற்குப் பெயர். எல்லா தபஸ்ஸிலும் ஶ்ரேஷ்டமானது இந்த ந்யாஸம் என்ற அனுஷ்டானம் என்கிறது வேதம்.
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த சாஸ்த்ர, காவ்ய, நாடக, தர்க்க, ஸ்தோத்ர க்ரந்தம் எதுவாயினும் பரந்யாஸம் என்ற கருத்தையே மைய்யமாய்க் கொண்டு விளங்குவதால் “ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேரப் போமளவும் வாழ்வு” என (ஏதேனும் ஒன்றைக் கற்றறிந்தாலே) மோக்ஷத்தில் ஜீவன்களைக் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தவை இந்த க்ரந்தங்கள். இந்த அனுஷ்டானத்திற்கென்றே ந்யாஸ தஶகம், ந்யாஸ விம்ஶதி, ந்யாஸ திலகம் என்ற மூன்று க்ரந்தங்களை அருளியுள்ளார் ஸ்வாமி. இம்மூன்றின் தொகுப்பே “ந்யாஸ த்ரயீ.”
இவற்றுள் தனிச்சிறப்பு வாய்ந்தது “ந்யாஸ விம்ஶதி”. ஶ்ருதி, ஸ்ம்ருதி, ஆழ்வார் ஸுக்த்திகள், ஆகம க்ரந்தங்கள் ஆகியவை கூறும் ப்ரதான விஷயங்களை இந்த ஸ்தோத்ர க்ரந்தம் உள்ளடக்கியுள்ளது. இக்காரணத்தால் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள் ப்ரார்த்தித்ததற்கிணங்க சுருக்கமான வ்யாக்யானமாக (“திங்மாத்ர ப்ரதர்ஶனம்”) ஸ்வாமியே அருளியுள்ளதே அதன் சிறப்பு.

ந்யாஸ தசகம் ந்யாஸ விம்சதி ந்யாஸ திலகம் -ந்யாஸ த்ரய ஸ்தோத்திரங்கள்-

28 -ஸ்லோகங்களுக்குள் இது ஒன்றுக்கும் மட்டும் ஸ்வாமி தேசிகன் வியாக்யானமும் அருளிச் செய்து இதன் முக்யத்வத்தை காட்டி அருளுகிறார் –

ஶரணாகதி என்ற இந்த அனுஷ்டானத்தை ஓர் நல்ல ஆசார்யனை ஆஶ்ரயித்து அனுஷ்டிக்க வேணும் என வேதம் விதிக்கிறது இதற்கு “நியம விதி”
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் “உப கோசலன்” கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது.
ந்யாஶ விம்ஶதியின் முதல், இரண்டாம் ஶ்லோகம் ஆசார்ய லக்ஷணம் பற்றியது. ஸதாசார்யன் என்பவர் 14 லக்ஷணங்கள் பொருந்திய வராக இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்வாமியே எடுத்துக்காட்டாக உள்ளார் என்றால் மிகையில்லை.
சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியம் அநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்ய வாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-

சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்ய வாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூயாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப்தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –

ஆசார்ய லக்ஷணங்கள்

  • ஸத் ஸம்ப்ரதாயே – ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி,     வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
  • ஸ்திர தியம் – சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
  • அநகம் – ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
  • ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
  • ப்ரும்ஹ நிஷ்டம் – எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
  • ஸத்வஸ்த்தம் – ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
  • ஸத்ய வாசம் – ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
  • ஸமய நியதயா ஸாது வ்ருத்யா – காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
  • டம்ப அஸூயாதி முக்தம் – தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
  • ஜித விஷயி கணம் – இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
  • தீர்க்க பந்தும் – இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
  • தயாளும் – மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
  • ஸாஸிதாரம் – தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
  • ஸ்வபர ஹிதபரம் – ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
  • ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
    சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
    கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
    உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
    சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
    2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
    3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
    ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
    கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத் குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை –
    தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
    4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
    5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
    6–சத்ய வாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
    இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
    ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
    ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
    7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
    8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
    9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
    சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை -சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
    வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
    கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
    10–ஜித விஷயி கணம்
    11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
    12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
    அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
    13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
    14—ஸ்வ பர ஹித பரம்
    தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்14-லக்ஷணங்கள்
    ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
    ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
    பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

    ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்

    அநகம்–
    அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
    இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்

    ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை

    ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு

    தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்

    தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
    ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்

    பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே

ஆக இந்த குணங்களுடைய ஆசார்யனை ஸிஷ்யன் அணுக வேண்டும். இத்தகைய ஆசார்ய–ஸிஷ்ய சம்பந்தம் கர்மாதீனமாய் ஏற்படுவதல்ல. பூர்வ புண்ய பலத்தால் மட்டுமே கிட்டும்.

——————

இத்தகைய ஆசார்யனை பகவானைப் போல உபாஸிக்க வேணும் என்றும் அதற்கான காரணங்களையும் 2ம் ஶ்லோகத்தில் சொல்கிறார்.
ஸாக்ஷாத் நாராயணனே ஆசார்யனாய் அவதாரம் செய்கிறார் என்கிறது ஸாஸ்த்ரம். பக்தி, ஸ்தோத்ரம், கைங்கர்யம் ஆகியவற்றால் ஆசார்யனை அதிதேஶ்யம் செய்ய வேண்டும். இப்படி ஆசார்யனை உயர்ந்த ஸ்தானத்தில் இருத்துவதன் காரணங்களைப் பட்டியலிடுகிறார் ஸ்வாமி.
ஆசார்யன் செய்யும் உபகாரங்களுக்கு ப்ரத்யுபகாரம் ஸிஷ்யனால் செய்யவே முடியாது

அஞ்ஞான த்வாந்த ரோதாத் அக பரிஹரணாத் ஆத்ம சாம்யா வஹத்வாத்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம ப்ரத கரிமதயா திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்
நிஷ் ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யான் நியதி ரஸதயா நித்ய சேஷித்வ யோகாத்
ஆச்சார்ய சத் ப்ரப் ரத யுபகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய–2-

அஞ்ஞான த்வாந்த ரோதாத் -அறிவின்மை என்னும் அருளை அகற்றுவதாலும்
அக பரிஹரணாத் -கீழ் ஸ்லோகத்தில் காட்டிய பாபம் துக்கம் வியசனம் -மூன்று விதமான அகத்தை நீக்குவதாலும்
ஆத்ம சாம்யா வஹத்வாத்–பிறரையும் தன்னைப் போலவே ஆக்குவதாலும்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம -மறு பிறவியைத் தீர்க்கும் வித்யா ஜென்மத்தை
ப்ரத -கொடுத்து அருளுபவர் என்கிற
கரிமதயா -பெருமையாலும்
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்–ஞானக் கண்ணின் மஹிமையாலும்
நிஷ் ப்ரத்யூஹா ஆந்ரு சம்ஸ்யான் -ஆந்ரு சம்ஸ்யம் -பிறருக்குத் தீங்கு செய்யாது இருப்பதையே தடை இன்றி நடத்தப்படுவதாலும்
நியதி ரஸ தயா -என்றும் மாறாத சுவை பொருந்தியதாலும்
நித்ய சேஷித்வ யோகாத்-ஒழிக்க முடியாத சேஷித்வம் கூடி இருப்பதாலும்
ஆச்சார்ய –ஆச்சார்யன்
சத் -ஸத்துக்களால்
அப்ரத் யுபகரண தியா -அவன் செய்து அருளும் உபகாரத்துக்கு சத்ருசமாக செய்ய ப்ரத்யுபகாரம் செய்ய முடியாது என்ற எண்ணம் கொண்டவனும்
தேவவத் -தேவனைப் போல்
ஸ்யாத் உபாஸ்ய-உபாஸிக்கத் தக்கவனாக இருக்க வேணும் -உபாஸிக்க வேணும் என்றபடி –

சிஷ்யன் ஆச்சார்யரையே பகவானாக கொள்ள வேண்டிய -8-காரணங்களை அருளிச் செய்கிறார் இதில் –
பிரதியுபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே

ஆசார்யன் செய்யும் உபகாரங்களாவன.
  • அஞானம் என்ற இருட்டைப் போக்கி தத்வ, ஹித, புருஷார்த்தம் என்ற ஆத்ம ஞானத்தை அளிப்பவர் ஆசார்யன்.
  • ஶரணாகதி என்ற அனுஷ்டானத்தைச் செய்வித்து நம் பாவங்களனைத்தையும் அழித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர்.
  • ஞானம், குணம், அனுஷ்டானம் ஆகியவற்றை அளித்து தனக்குச் சமானமாக சிஷ்யனை ஆக்குகிறார்ஆசார்யன். எம்பெருமான் முக்தாத்மாவுக்கு ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் அளிப்பது போல்.
    • ஸாலோக்யம் – முக்தனை ஶ்ரீ வைகுண்டலோகத்துக்கு வரவழைத்தல்.
    • ஸாமீப்யம் – அத்தனை பரும்ஹாண்டமான ஶ்ரீவைகுண்ட லோகத்தில் அவனுக்கு ஸமீபத்தில் நம்மை இருக்கச் செய்தல்
    • ஸாரூப்யம் – அவனைப்போல அப்ராக்ருதமான ரூபத்தை நமக்குத் தருவது.
    • ஸாயுஜ்யம் – இதற்கு மேலே தனக்குச் சமமான ப்ரும்ஹானந்தத்தை நமக்குத் தருவது
    • “தன்னோடொக்கத் தன் தாளிணைக்கீழ் வைக்கும் அப்பன்” என்கிறார் ஆழ்வார்.
  • வித்யா ஜன்மம் அளித்து ஆத்ம போஷணம் செய்து புதுப்பிறவி தந்து இந்த ஸம்ஸார பந்தம் தொடராது காப்பவர் ஆசார்யன். பிதாவாகிய ஆசார்யன், மந்த்ரமாகிய மாதாவினால் ஞானமாகிய புதுப் பிறவியைக் கொடுத்து சிஷ்யனை கடைத்தேறச் செய்கிறார்.
  • எம்பெருமானின் திவ்ய த்ருஷ்டியைப் போல ஆசார்யனும் சிஷ்யனைக் குளிரக் கடாக்ஷித்து அனுக்ரஹிக்கிறார். (ஆளவந்தார் கடாக்ஷம் உடையவர் மேல் படிந்தாற்போல. நடாதூரம்மாள் கடாக்ஷம் ஸ்வாமி தேஶிகன் மேல் விழுந்தாற்போல.)
  • எம்பெருமான் கருணை எல்லோரிடமும் தடையின்றி செல்வதுபோல் ஆசார்யனின் கருணையும் சிஷ்யனிடம் எல்லையின்றி சுரக்கின்றது.
  • எம்பெருமான் அடியார்களுக்கு என்றும் தெவிட்டாத அமுதமாய் இருப்பது போல் ஆசார்யனும் சிஷ்யர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை அளிக்கிறார்.
  • எம்பெருமானைப் போல ஆசார்யனும் நித்ய ஸ்வாமி யாக உள்ளார் தன் சிஷ்யர்களுக்கு. எம்பெருமானுக்குள்ள ஜீவ சம்பந்தமும் ஆசார்யனுக்குள்ள சிஷ்ய சம்பந்தமும் ஒழிக்க ஒழியாது. இத்தகைய உயர்ந்த ஆசார்யனுக்கு ஸ்வரூபமாக, போக்யமாக, பாக்யமாக கைங்கர்யம் செய்வதே ப்ரத்யுபகாரமாக அமையும்.
  • ஆச்சார்ய தேவோ பவ -ஸ்ருதி
    மயர்வற மதிநலம் அருளுபவர் -நிர்ஹேதுகமாக அஞ்ஞான கந்தமே இல்லாதபடி -அறியாக் காலத்துள்ளே -அறியாதது அறிவித்த அத்தன்
    நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தாதி நடை விளங்கவே
    வேதம் அரண்மனைக்கு விளக்கு போன்ற அருளிச் செயல்கள்
    ஸாஸ்த்ர பாணிநா ஸ்வயமேவ வந்து அவதரிக்கிறான் அன்றோ
    பாபம் பிரஞ்ஞாம் நாசயதி -அஞ்ஞானத்துக்கு மூல காரணம் தொல்லைப் பழ வினையே -அவற்றை முதலறித்து
    தாப த்ரயங்களைப் போக்கி அருளி -செடியாய வல் வினைகளைத் தீர்க்கும் திருமால் போலவே பண்டை வல்வினை பாற்றி அருளுகிறாரே ஆச்சார்யர்
    செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் அன்றோ
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

————————————-

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவித் அபிமதம் தத்த்வத சிக்ஷணீய –3-

சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்கமாக தண்டன் இடும் பழக்கம் யுடையவனாயும்
ப்ரஸ்ன கால ப்ரதீஷ-ஆச்சார்யன் இடம் தக்க காலம் எதிர்பார்த்து கேள்வி கேட்டு சங்கைகளைப் போக்கிக் கொள்பவனாயும்
சாந்தோ -மனத்தை அடக்கி வைப்பவனாயும்
தாந்தோ -வெளி இந்திரியங்களை அடக்கி வைப்பவனாயும்
அநஸூயு -பொறாமை இல்லாதவனாயும்
சரணமுபகத -ஆனு கூல்ய சங்கல்பாதி ஐந்து அங்கங்களோடே கூடிய விதிப்படி ஆச்சார்யன் இடம் சரணாகதி செய்பவனாயும்
சாஸ்த்ர விசுவாஸ சாலீ–ஸாஸ்த்ரங்களிலே விஸ்வாஸம் கொண்டவனாயும்
ப்ராப்த பரீஷாம் -ஒரு வருஷமா ஆறு மாதங்களோ தக்கபடி ஆச்சார்யனால் பரீக்ஷிக்கப் பட்டவனாயும்
க்ருதவித் -நன்றி யுடையவனாயும்
ஆகிய
சிஷ்ய-சிஷ்யன்
அபிமதம் தத்த்வத –தத்வ அர்த்தங்களில் விரும்பியதை -இஷ்டப்பட்டவற்றை
சிக்ஷணீய -உபதேசிக்கத் தக்கவன்
அல்லது அபிமதமாம்படி இருக்கும் படி தத்வார்த்தங்களைப் போதிக்கத் தகுந்தவன் –

சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —

சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம் -அடி பணிந்து போக்கற்ற நிலையை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன் போன்றவனே நல்ல சீடன்

இத்தகைய ஆசார்யனை வந்தடையும் சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களாக 14 அம்சங்களை சொல்கிறார் ஸ்வாமி தேஶிகன் இந்த 3ம் ஶ்லோகத்தில்.

  • ஸத் புத்தி – நல்ல ஸ்திர புத்தி உள்ளவனாக சிஷ்யன் இருக்க வேண்டும்.
  • ஸாது ஸேவீ – பெரியோர்களை மதிப்பவனாயும், பாகவதர்களோடு பழகும் தன்மை உடையவனாயும் இருக்க வேண்டும். (க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் ஆசார்யனைப் பணிந்து உபதேசம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தினார்)
  • ஸமுசித சரித: – ஸாஸ்த்ரத்தை யொட்டிய கால தேச வர்த்தமானத்தை அனுசரித்த அனுஷ்டானமும், நல்லொழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்.
  • தத்வ போதாபிலாஷி – தத்வ, ஹித, புருஷார்த்த ஞானத்தை அறியும் ஆசையுடையவனாயிருக்க வேண்டும். தர்மங்களை அறிந்து விசாரம் செய்யும் விருப்பம் (உத்காட இச்சா) உடையவனாயிருக்க வேணும்.
  • ஸுஸ்ரூஷு – ஆசார்யனுக்குப் பணிவிடை செய்யுமுகத்தான் அவரிடம் உபதேசங்களைப் பெற வேண்டும்.
  • த்யக்த மான: – “தான்” எனும் அஹங்காரம் அற்றவனாயிருத்தல். ஞானத்திலும், செல்வத்திலும், வயதிலும் ராமானுஜரை விட உயர்ந்த வராயிருந்த போதும் தன் சிஷ்ய பாவத்தைச் சற்றும் என்றும் மாற்றிக் கொள்ளாத முக்குறும்பறுத்த கூரத்தாழ்வானே சிஷ்ய லக்ஷணத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாவார்.
  • ப்ரணி பதந பர – கீழே விழுந்து ஆசார்யனை வணங்குபவனாக ஸிஷ்யன் இருக்க வேண்டும். த்ரிகரணத்தால் சங்கோசமின்றி காலக்ஷேபம் கேட்கும் முன்பும் பின்பும் ஆசார்யனை ஸேவிக்க வேண்டும்.
  • ப்ரஶ்ன கால ப்ரதீக்ஷ: – தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசார்யனிடம் உசிதமான காலத்தை எதிர்நோக்கிக் கேட்டுத் தெளிய வேணும்.
  • ஶாந்த: – சஞ்சலங்களைத் தவிர்த்து மனதை அடக்கியவனாக இருக்க வேணும்.
  • தாந்த: – புற இந்த்ரியங்களை தறி கெட்டுப் போகாமல் அடக்கியவனாயிருக்க வேண்டும். லௌகீக விஷயங்களில் அதிகம் ஈடுபடும்போது வித்தை கற்பதற்கு விருத்தம் ஏற்படும்.
  • அஸூய: – பிறருடைய பெருமையில் பொறாமையும் அதன் மூலம் போட்டியும் ஏற்படக் கூடாது. அவர்களின் குணங்களில் தோஷம் கற்பிக்காதிருக்க வேணும்.
  • ஶரணம் உபகத: – ஆசார்யனைத் தேடிப் போய் சிஷ்யன் பணிய வேணும். ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஶரணாகதி செய்து உபதேசம் கேட்க வேணும்.
  • ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலி – ஆசார்யனிடமும் அவர் உபதேசிக்கும் ஶாஸ்த்ர விஷயங்களிலும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். “ஆயிரம் மாதா பிதாக்கள் சேர்ந்தாலும் ஶாஸ்த்ரம் போன்று ஹிதம் சொல்வதற்குச் சமானமாகாது” என்கிறார் பகவத் ராமானுஜர். ஆசார்யன் செய்யும் ஹிதோபதேசம் பின்னால் தான் சிஷ்யனுக்கு நன்கு புரியும்.
  • ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் – ஆசார்யன் செய்யும் பரீக்ஷைக்குட்பட்டு சிஷ்யனாக வேணும்.
  • க்ருத விது – இவ்விதமாக சிஷ்யனாகிய பின் ஆசார்ய பக்தியுடன் நன்றி மறவாதிருக்கவேணும். க்ருதஞையுடனிருந்தால்தான் ஆசார்ய உபதேசங்கள் மனதில் நிலைக்கும்.

இத்தகைய நல்ல குணவானாகிய சிஷ்யனுக்கு வஞ்சனையின்றி ஆசார்யன் ஸம்ப்ரதாய விஷயங்களை உபதேசிப்பார்.
(1/4 பாகம் உபதேசம், 1/4 பாகம் தானே படிப்பதால், 1/4 பாகம் வாத உரையாடல்களால், 1/4 பாகம் காலக்ரமேண சிஷ்யன் தெரிந்து கொள்வான்)

———————

ஸ்வ அதீந அசேஷா சத்தா ஸ்திதி யத்ன பலம் வித்தி லஷ்மீ சமேகம்
ப்ராப்யம் நாந்யம் ப்ரதீயா ந ச சரணதயா கஞ்சி தந்யம் வ்ருணீயா
ஏதஸ்மா தேவ பும்ஸாம் பயமிதரதபி ப்ரேஷ்யா மோஜ்ஜீஸ் ததாஜ்ஞாம்
இத்யே காந்தோபதேச ப்ரதமமிஹ குரோர் ஏக சித்தேன தார்ய —4-

இஹ -இந்த சந்தர்ப்பத்தில்
ப்ரதமம் -முதன் முதலிலே
ஸ்வ அதீந –தனக்கு அதீனமான
அசேஷ-ஸகல வஸ்துக்களுடையவும்
சத்தா -இருப்பு
ஸ்திதி -அநேக காலம் தொடர்தல்
யத்ன -பிரயத்தனம் செய்தல்
பலம் -இவற்றின் பலன்களையும் யுடையவனாய்
லஷ்மீஸம் -ஸ்ரீமன் நாராயணனை
ஏகம் -முக்யமாகவும் -ஏகமேவம் அத்விதீய ப்ரஹ்மம் -முதல்வன் -ஒப்பில்லா அப்பன் -என்று
வித்தி -அறியக் கடவாய்
அந்யம்-வேறு ஒருவனை
ப்ராப்யம் -நாம் அடையத் தக்கவனாக
ப்ரதீயா ந -கருதாதீர் -நம்பாதீர்
அந்யம் கம்சித் -வேறு ஒருவனையும் ஒரு பொருளையும்
சரணதயா -சரணமாக
ந வ்ருணீயா-வரிக்காதீர் -வேண்டாதீர்
பும்ஸாம்–ஜீவ ராசிகளுக்கு
பயம் -அச்சமும்
இதரதபி-மற்றதும்-அதாவது நற் கதியும்
ஏதஸ்மா தேவ -இவன் இடமிருந்தே ஏற்படுகிறது என்று
ப்ரேஷ்ய–கண்டு அறிந்து
ததாஜ்ஞாம்-அவனது கட்டளையை
மோஜ்ஜீஸ் -கை விடாதீர்
இதி -இவ்விதமான
குரோர்-குருவின்
ஏகாந்தோபதேச –ஏகாந்தத்தில் செய்யப்பட உபதேசம் -ப்ரஹ்மம் ஒருவனே ப்ராப்யம் என்றும் ப்ராபகம் என்ற உபதேசம்
ஏக சித்தேன -ஊற்றமுள்ள -ஊன்றிய மனத்தால்
தார்ய -தரிக்கத் தக்கது

மோக்ஷத்தை விரும்பித் தன்னை வந்தடைந்த சிஷ்யனுக்கு ஆசார்யன் செய்யும் உபதேசம் பற்றி இந்த ஶ்லோகம் சொல்கிறது.
ஆசார்யன் செய்யும் ரஹஸ்ய ஏகாந்த உபதேசமாகும் இது. மிக ஶ்ரேஷ்டமான திரு அஷ்டாக்ஷரம் த்வயம் சரமஶ்லோகம் ஆகியவற்றின் ஸாரமான அர்த்த விசேஷங்களை உபதேசிக்கிறார்.
(18 முறை நடந்து திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் கேட்டறிந்தார் இந்த அர்த்தங்களை)
இந்த திருமந்த்ரார்த்தங்கள் நம் ஆத்மாவைக் காட்டித் தருபவை. பெரிய உருவைக் காட்டும் சிறிய கண்ணாடி என்கிறார் ஸ்வாமி தேஶிகன் இதனை. பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்வதே இந்த திருமந்த்ரம். இதனை ஆத்ம யாத்ரை என்பர் தேக யாத்ரை என்பது தேக வளர்ச்சி. ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்வது திருமந்த்ரத்தாலேதான். ஆக ஆசார்யன் செய்யும் இந்த முதல் உபதேசம் பிறந்த சிஸுவுக்கு ப்பாலூட்டுவதற்கொப்பாகும்.

ஆசார்யன் செய்யும் உபதேசங்களாவன-
முதலில் ஶ்ரீய:பதியைத் தெரிந்துகொள்.
அவனே ஶ்ருஷ்டி, ஸ்திதி, ப்ருவ்ருத்தியைச் செய்பவனாக ஸர்வ ஸ்வாமியாக உள்ளான். லக்ஷ்மீஸம் ஏகம் என்கிறது வேதம். கொசு முதல் யானை வரை எத்தனையோ விதமான ஜீவராசிகள், தாவரங்கள் இவற்றுக்கு விதவிதமான ஸ்வரூப, ஸ்திதி, ப்ருவ்ருத்தி பேதங்களைக் கொடுக்கிறான் எம்பெருமான்.
திருவாய்மொழியின் முதல் பாசுரம் எம்பெருமான் ஸ்வரூபம் இரண்டாம் பாசுரம் ஸ்திதி மூன்றாம் பாசுரம் ப்ருவ்ருத்தி பலனைச் சொல்கிறது. இவையனைத்தும் அவனது அதீனம். அவனே சேஷீ. அவனே ஸ்வாமீ. கூட்டிலே வளர்க்கும் கிளி போன்றவர்கள் நாம். எம்பெருமான் நம்மை உண்டாக்கி, போகங்களை அளித்து ஸந்தோஷிக்கிறான்.
ராஜா வளர்க்கும் கிளிக்கு பட்டு வஸ்த்ரம் கட்டி நகைகள் போட்டு
ரஸிப்பதும் ஸந்தோஷிப்பதும் கிளிக்கு அனுபவமாகாது. ராஜா ஸந்தோஷித்து அனுபவிக்கிறான். இந்த லீலா ரசம் தான் பகவான் அனுபவிப்பது ஜீவன்களிடம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இரண்டாவது உபதேசம் – இத்தகைய எம்பெருமானை அடைவதே சிஷ்யனின் லக்ஷ்யமாயிருக்க வேண்டும்.

ஸ்வதந்த்ரனாயில்லாமல் சூழ்நிலை தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நமக்கே உரிய எம்பெருமானுக்கு கீழ்படிந்திருப்பது நம் ஸ்வரூபத்துக்கு ஏற்புடையதாயிருக்கும். “எருது பரதேசம் போவதுபோல்” என்கிறார் ஸ்வாமி. இதர தேவதைகளை அடைந்தால் எருது படும் கஷ்டம் போன்று நாமும் உழலவேண்டியது புரியும்.

மூன்றாம் விஷயம் – நச ஶரணதயா – அவனை அடைவதை லக்ஷ்யமாய்க் கொண்டால் அவனே உபாயமாயிருந்து அவனை அடையச் செய்கிறான். வேறு தெய்வங்களை நாடவேண்டாம்.

நான்காம் விஷயம் – ஏதஸ் மாதேவ – ஸம்ஸாரத்தில் ஏற்படும்
சுகம்/துக்கம் லாபம்/நஷ்டம் பயம்/அபயம் எல்லாம் தருபவன் அவனே. ஆபத்தைத் தருகின்ற அவனே அபயத்தையும் தருகிறான் “பயக்ருத் பயநாஶன:”
ஐந்தாம் விஷயம் – எம்பெருமானுக்கு அடிமைப்பட்டதாலே அஸாஸ்த்ர விஷயங்களில் ஈடுபடாதிருக்க வேணும்.
அவன் கட்டளையை மீறக்கூடாது.
ஆசார்யன் செய்யும் இந்த உபதேசங்களில் ஒன்றிய மனத்தனாய் பசுமரத்தாணிபோல சிஷ்யன் இவற்றைப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
—————

மோஷ உபாயார்ஹ தைவம் பவதி பவ ப்ருதாம் கஸ்யசித் க்வாபி காலே
தத்வத் பக்தி ப்ரபத்யோரதி க்ருதி நியமஸ் தாத்ருஸா ஸ்யாந் நியத்யா
சக்தா சக்தாதி தத்தத் புருஷ விஷயத ஸ்தாப்யதே தத் வ்யவஸ்தா
யச்சாஹூஸ் தத் விகல்ப சம இதி கதிஸித் தத் பல ஸ்யா விசேஷாத் –5-

பவ ப்ருதாம்–ஸம்ஸாரிகளுக்குள்
கஸ்யசித்-ஒருவனுக்கு
க்வாபி காலே-ஒரு காலத்தில்
ஏவம் -கீழ் ஸ்லோக உபதேசம் பெற்ற பலனாக
மோஷ உபாயார்ஹ -மோக்ஷ உபாயத்தில் அதிகாரம்
பவதி-ஏற்படுகிறது
தாத்ருஸா-அப்படிப்பட்ட
நியத்யா-தைவ வசத்தால்
தத்வத் -அதைப் போலவே
அதாவது -அநேக கோடி ஜீவ ராசிகளில் ஒருவனுக்கு ஒரு காலத்தில் மோக்ஷ உபாய அதிகாரம் ஏற்பட்டது போலவே
பக்தி ப்ரபத்யோ-பக்தி ப்ரபத்திகளில்
அதி க்ருதி நியமஸ் -அதிகார வ்யவஸ்தை
அதாவது இன்னானுக்கு இன்னது தான் என்ற ஏற்பாடு உண்டாகக் கூடும்
தத் வ்யவஸ்தா-அந்த வியவஸ்தை -சக்தி உள்ளவன் என்றும் சக்தி அற்றவன் என்றும் இது முதலான அந்த அந்த புருஷர்களின் விஷயமாக
ஸ்தாப்யதே –நிலை நிறுத்தப் படுகிறது
கதிஸித்-சிலர்
தத் விகல்ப-அவ்விரண்டில் ஓன்று என்றது
சம-மேன்மை தாழ்மை இல்லாதது
இதி- என்று
யஹூஸ் யத் -சொல்லுகின்றனர் -என்பது யாது ஓன்று உண்டோ
தத் -அது
பல ஸ்யா விசேஷாத் -பலனில் வித்யாஸம் இல்லாதது கொண்டு என்று அறிய வேண்டும் –

முமுஷு –இச்சை -காயசித் -சிலருக்கு சில வேளைகளில் ஆச்சார்யர் இடம் உபதேசம் பெற -கஸ்யசித் க்வாபி காலே –
பஹு நாம் சன்மானம் –ஞானவான் மாம் ப்ரபத்யே -ஸ்ரீ கீதா

பக்தி பிரபத்தி இரண்டு உபாயங்களை வேறே வேறே அதிகாரிகளுக்கு
மநோ நிக்ரஹம் -ஞான வைராக்யாதி ஸாமக்ரியைகள் நிறைய பெற்ற வ்யாஸாதிகளுக்கு பக்தி
அதி அசக்தர்களான நம் போல்வாருக்கு சரணாகதி -ப்ரபத்தியே உபாயம்
இரண்டு உபாயங்களுக்கும் பலம் துல்யம் ஒன்றே என்றவாறு –

இதுவரை ஆசார்யன் அளித்த உபதேசத்தால் நல்ல ஞானமடைந்த சிஷ்யனுக்கு பக்தி, ப்ரபத்தி என்ற இரு உபாயங்களின் தன்மைகளை ஆசார்யன் எடுத்துக்கூறுகிறார் இதில்.
ஶ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய முக்யமான கார்யம்
ஶரணாகதி. அடுத்த ஜன்மம் இல்லை என்ற கதி. மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி இந்த உபதேசம் மூலம் கிடைக்கிறது. இத்தகுதி எல்லார்க்கும் கிடைப்பதில்லை.கர்ம பலனே இதற்கு மூல காரணம்.ஞானம், சக்தி, சாஸ்த்ர அனுமதி இருந்தால் இத்தகுதி பூர்த்தி யாகும். பக்தியோகம் செய்வதற்கான ஞானமும் சக்தியும் நமக்கில்லை. அது கடின உபாயம். ஶரணாகதி சுலபமானது.

மற்ற விவஸ்தைகள் தேவைப்படாமையே இதன் சிறப்பு. ஆனால் அடையப் போகும் பலன் இரண்டுக்கும் சமம்.

  1. ஸம்ஸாரிகளுள் யாரோ ஒருவர்க்கு மட்டுமே மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி கிடைக்கும்.
  2. பக்தி/ப்ரபத்தி என்ற இரண்டு அனுஷ்டானங்களால் தான் மோக்ஷம் பெற முடியும். இதில் ஞானம்,சக்தி,சாஸ்த்ர அனுமதி,விளம்ப ஸஹிப்பு (மோக்ஷம் பெற ஏற்படும் கால தாமதம்) இவற்றுடன் செய்வது பக்தி யோகம். பாபங்கள் (ஸஞ்சித, ப்ராரப்த) முற்றிலும் ஒழிந்த பின்பே மோக்ஷம் சித்திக்கும். அஞ்ஞாத ஸுஹ்ருதத்தால் நிகழ்வது ஶரணாகதி. இந்த பிறவி முடிவில் மோக்ஷம் கிடைக்கும்
  3. இந்த இரு அனுஷ்டானங்களும் குரு, லகு விகல்பமுடையதாயிருப்பதால் லகு உபாயத்தையே எல்லாரும் செய்வர். ஆனால் பலன் இரண்டுக்கும் சமம்.ஒருவர் இந்த இரண்டையும் அனுஷ்டிக்க சாஸ்த்ரம் அனுமதிக்காது. பக்தி யோகம் தைல தாரை போல இடையீடற்ற த்யானம் செய்யச் சொல்கிறது. க்ருத தாரை போல அல்ல. பஹிரங்க அங்கங்கள் உண்டு. ஶக்தனே இதனைச் செய்யமுடியும். ப்ரபத்தி அஶக்தனுக்கு. இது ஐந்து அங்கங்கள் கொண்ட க்ஷண கால அனுஷ்டானம். ஆக இரண்டின் ஸவரூபங்களும் இரு த்ருவங்களாய் நிலைப்படுகின்றன. திருக்குருகைக் காவலப்பன் பக்தியோகம் செய்து கண்ணனை சாக்ஷாத் கரித்தார். இந்த பக்தி யோகிகளுக்கு பக்தியும், ஞானமும் பிறவி தோறும் தொடரும். ஆனால் நாதமுனிகள், நம்மாழ்வார் கால விளம்பத்தைப் பொறுக்க வில்லை. த்யான ருசியுள்ளவர்களுக்கு விளம்பம் ஒரு பொருட்டல்ல. ஆக மேற்கூறிய நான்கு தகுதியுடையவர் பக்தியோகம் செய்வர். இவற்றில் எதுவுமில்லாதவர் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறார்.
  4. இப்படி வித்யாசமிருப்பினும் பலன் சமமானது. பரத்தில் இருவருக்கும் அனுபவம் ஒன்றே. பக்தி யோகனுக்கு இகத்தில் பகவதனுபவம் அதிகம். ஶரணாகதனுக்கு பகவதனுபவம் இங்கே குறைவு.

“நாள் இழவு (நஷ்டம்) அன்றி பொருள் இழவு இல்லை” என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

———————

சாநுக்ரோசே சமர்த்தே ப்ரபதநம் ருஷிபி ஸ்மர்த்யே அபீஷ்ட ஸித்த்யை
லோகே அப்யேதத் பிரசித்தம் ந ச விமதிரிஹ ப்ரேஷ்யதே க்வாபி தந்த்ரே
தஸ்மாத் கைமுத்ய சித்தம் பகவதி து பர ந்யாச வித்யா நுபாவம்
தர்ம ஸ்தேயாஸ்ச பூர்வே ஸ்வ க்ருதிஷூ பஹுதா ஸ்தாப யாஞ்சக் ருரேவம் —6-

அபீஷ்ட ஸித்த்யை–இஷ்டம் பெறுவதற்கு
சாநுக்ரோசே -தயை யுள்ள
சமர்த்தே -வல்லவன் இடத்திலே
ப்ரபதநம் -அடைக்கலம் புகுதல்
ருஷிபி ஸ்மர்த்யே -ரிஷிகளால் விதிக்கப்படுகிறது
ஏதத் -இவ் விஷயம்
லோகே பிரசித்தம் -உலக நடத்தைகளிலும் ப்ரஸித்தமானது
இஹ -இவ் விஷயத்தில்
விமதிர் -அபிப்ராய பேதமானது
க்வாபி தந்த்ரே-ஒரு சாஸ்திரத்திலும்
ந ப்ரேஷ்யதே -காணப்படுகிறது இல்லை
தஸ்மாத் –ஆதலால்
கைமுத்ய சித்தம் -கை முத்யம் நியாயத்தால் ஸித்தமான
பர ந்யாச வித்யா நுபாவம்-பர ந்யாஸம் என்னும் வித்யையின் மஹிமையை
தர்ம ஸ்தேயாஸ்–தர்மங்களை நிர்ண யிக்கிறவர்களான
பூர்வே –ஆளவந்தார் முதலான முன்னோர்
ஏவம் -முன் கூறியபடியே
ஸ்வ க்ருதிஷூ -தாங்கள் அருளிச் செய்த நூல்களிலே
ஸ்தாப யாஞ்சக்ருர் -விசாரித்து முடிவு செய்துள்ளனர்

ஸ்ம்ருதிகளும் சரணாகதி மூலம் சுக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் காகாசூரன் போன்றோர் பயன் அடைந்ததை சொல்லுமே —
பலரும் பல பலன்களுக்கு சரணாகதி செய்தமை ஸ்ம்ருதிகள் சொல்லும் -கைமுதிக நியாயத்தால் அவனை அடைய சரணாகதி உதவுமே –
பரம காருணிகன் சர்வ சக்தன் தன்னையே ஓக்க அருள் செய்வான் சரணாகதர்களுக்கு என்பதை பூர்வர்கள் பலரும் காட்டி அருளி உள்ளார்கள் –

லகு உபாயமான பிரதிபத்திக்கும் அதே உயர்ந்த பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் யுக்திகள் காட்டி அருளுகிறார்
வானரம் புலி மனுஷ்ய வ்ருத்தாந்தம் -காகாசூரன் -விபீஷணன் –திரௌபதி -சுமுகன் -கஜேந்திரன் –திரிசங்கு –
சுனஸ்ஸேபன்-ரிஷி குமாரன் யாக பசுவாக விற்கப்பட விச்வாமித்ரரை சரண் அடைய தபோ மந்த்ர பலத்தால் ரக்ஷித்து அருளினார் –
சாதாரண ஜனங்கள் இடமே சரணாகத ரக்ஷணம் காணும் இடத்தில் கைமுதிக நியாயத்தால் பகவான் விஷயத்திலே ஸித்தம் அன்றோ என்கிறார் –
ஆகவே மஹா விஸ்வாசமே வேண்டியது -என்கிறார் –

ப்ரபத்தியின் பெருமையையும்,உயர்வையும் காட்டும் ஶ்லோகம் இது.

  1. கருணையும், சக்தியும் உடையவனிடம் ப்ரபத்தி செய்தால் பலன் கிடைக்கும் என வால்மீகி, வ்யாசர் போன்ற ரிஷிகள் தங்கள் ஸுக்திகளில் சொல்லி யுள்ளனர். லௌகீகமான கார்யம் நிறைவேற ஓரளவு சக்தியும், கருணையும் கொண்ட மனிதனை நம்புகிற நாம் ஸர்வ ஶக்தனாகிய எம்பெருமான் கட்டாயம் பலனளிப்பான் என நம்ப வேணும். லக்ஷ்மணன், பரதன், தண்டகாரண்ய ரிஷிகள், சுக்ரீவன், விபீஷணன், த்ரௌபதி, பாண்டவ ஶரணாதிகள் போன்றவை இதிகாச ப்ரசித்தமானவை.
  2. சக்தியுள்ளவனின் உதவியை கார்ய சித்திக்கு நாடுவது உலக நியதி. ஸாஸ்த்ரங்களும் இதனைத் தடுக்க வில்லை. பரீக்ஷித் நகர் சோதனையில் கலிபுருஷன் பசு ஒன்றை ஹிம்ஸிக்க அவனை வெட்டக்கை ஓங்க, கலி செய்த ஶரணாகதியை ஏற்று அபயம் அளித்து தன் நாட்டை விட்டு ஓடும் படி செய்ததாக வரலாறு. கீதோபதேசம் கேட்ட அர்ஜுனனின் பேரனுக்கே ஶரணாகதி செய்தவனிடம் கருணை யிருக்கும் போது எம்பெருமான் விஷயத்தில் சந்தேகமே வேண்டாம்.
  3. ஆக இந்த ஶரணாகதி என்ற ப்ரம்ஹ வித்தையை, தர்ம நிர்ணயம் செய்யும் ஆழ்வார் ஆசார்யர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆக இந்த அனுஷ்டானம் பூர்வாசார்யர்கள் ஸ்தாபித்த பரம தர்மமாகும்.

————————

சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ நநு விதி விஷயே நிர்விசங்கோ அதிகாரீ
விச்வாஸஸ் யாங்க பாவே புநரிஹ விதுஷா கிம் மஹத்வம் ப்ரஸாத்யம்
மைவம் கோராபராதை சபதி குரு பலே ந்யாஸ மாத்ரேண லப்யே
சங்கா பார்ஷ்ணி க்ரஹார்ஹா சமயிதுமுஸிதா ஹேது பிஸ் தத் ததர்ஹை –7-

சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ –ஸாஸ்த்ரம் பிரமாணம் ஆகும் முறையை நன்கு அறிந்த
அதிகாரீ-ப்ரபந்ந அதிகாரியானவன்
விதி விஷயே -சரணாகதியை விதித்ததில்
நிர்விசங்கோ நநு–ஸந்தேஹம் இல்லாதவன் அல்லவா
புநரிஹ–புநர் இஹ -பின்னேயும் இந்த சரணாகதியில்
விஸ்வாஸஸ்ய -மஹா விஸ்வாசம்
யங்க பாவே -அங்க பாவமாக இருக்கையிலே
விதுஷா -தெரிந்தவனால்
மஹத்வம் ப்ரஸாத்யம்–மஹத் பெரியது என்ற விசேஷணத்தால் ஸாதிக்கக் கூடியது –
கிம் -எது
மைவம் –அப்படி அல்ல
கோராபராதை -அதிகம் குற்றம் செய்தவர்களால்
ந்யாஸ மாத்ரேண-சரணாகதியை மாத்ரமே கொண்டு
சபதி -தத் க்ஷணத்தில்
குரு பலே -பெரியதொரு பலன்
லப்யே–அடையப்பட இருக்கையிலே
பார்ஷ்ணி க்ரஹார்ஹா –பின் தொடரக் கூடிய
சங்கா -ஸந்தேஹம்
தத் ததர்ஹை -அவ்வவற்றுக்கு ஏற்ற
ஹேது பிஸ் –ஹேதுக்களால்
சமயிதும் உஸிதா -போக்கப் படுவதற்குத் தக்கது

மஹா விஸ்வாஸம்-முக்கிய அங்கம் –செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமை – நம் பாபங்கள் தண்மை அதிசயம்
பேற்றின் பலன் -மூன்றையும் பார்த்தால் மஹா விஸ்வாசத்தின் அருமை அறியலாம் –
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே அடைய முடியும்

பகவத் குணக் கடலிலே ஆழ்ந்து மஹா விஸ்வாஸம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே
விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி.–இத்யாதி ஸ்லோகத்தால் பிராட்டி ராவணனுக்கும் உபதேசம்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய –மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தானே அருளிச் செய்தானே அன்றோ –

மஹா விஶ்வாஸத்தின் அவஶ்யத்தைச் சொல்கிறது இந்த ஶ்லோகம்.

முதல் இரு வரிகள் கேள்விகளாகின்றன. அதாவது சாஸ்த்ரங்களை நம்புகின்றவனாக இருப்பவன் அது விதிக்கும் காரியங்களைச் செய்யத் தயங்க மாட்டான் என்னும் போது அவனுக்கு விஶ்வாஸம் இருக்கிறது என உணரலாம்.

அடுத்த இரு வரிகள் க்ஷண கால அனுஷ்டானமாகிய ப்ரபத்தி அளிக்கும் மிகப் பெரிய பலனில் சந்தேகம் ஏற்படக் கூடியதைத் தவிர்க்க ப்ரபன்னனுக்கு மஹா விஶ்வாசம் எம்பெருமானிடம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.–ப்ரபத்தியின் முக்ய அங்கமாக இந்த மஹா விஶ்வாசம் உள்ளது.

இருகையையம் விட்டுக் கதறிய த்ரௌபதியையும், எல்லாம் விட்டு வந்த விபீஷணனையும் காப்பாற்றியது எம்பெருமானிடம் அவர்கள் கொண்ட மஹா விஶ்வாஸமே. மாபெரும் நம்பிக்கை என்பதால் இதனைத் தனியான அங்கமாய்ச் சொல்லியுள்ளது.

பாத்ரமறிந்து மோக்ஷ பலனைத் தருவதில்லை எம்பெருமான். இப்போதாவது என்னைச் சரணடைந்தானே என்ற கருணையால் உந்தப்பட்டு எம்பெருமான் செய்யும் பரம அனுக்ரஹ பலன்.

ஒரேஒருநாள் ஸீதாபிராட்டி ராக்ஷஸிகளிடம் பட்ட அவஸ்தையைப்பார்த்த ஹனுமன் அவர்களைக் கொல்ல முற்படும்போது 10 மாதமாக தன்னை ஹிம்ஸித்த அவர்களுக்கு கருணை கூர்ந்து அபயமளிக்க வில்லையா பிராட்டி! ஆனாலும் கோர பேரபராதங்கள் செய்த நமக்கு இந்த சிறிய க்ஷண கால ப்ரபத்தி மோக்ஷத்தை அளிக்குமா என்ற சந்தேகமானது செய்ய விடாமல் பின்னே இழுக்கும்.

ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஸர்வ ஶக்தனான எம்பெருமான் தன் அபார கருணையாலே இதனைச் செய்கிறான். இந்த விஷயங்களை ஆசார்யன் மூலம் நன்கு தெளிதல் வேண்டும்.

————————–

ந இஹ அபிக்ராந்தி நாஸோ ந ஸ விஹதிரிஹ ப்ரத்யவாயோ பவேதிதி
உக்தம் கைமுத்ய நீத்யா ப்ரபதந விஷயே யோஷிதம் சாஸ்த்ர வித்பி
தஸ்மாத் க்ஷேத்ரே ததர்ஹே ஸூவிதத சமயைர் தேசிகை சம்ய குப்தம்
மந்த்ராக்யம் முக்தி பீஜம் பரிணதி வசத கல்பதே ஸத்பலாய–8-

இஹ –இந்த கர்ம யோகத்தில்
அபி க்ராந்தி –ஆரம்பத்துக்கு
நாஸோ ந -பயன் தராமல் வீணாகப் போவது இல்லை
விஹதி மதி -முடிவதற்கு முன்பு தடை பட்டு நின்று போய் விட்டால்
ப்ரத்யவாயோ -பெரும் குற்றமும்
ந பவேதிதி-உண்டாகாது
இதி -இவ்வாறு
யுக்தம் -கர்ம யோகத்தில் சொன்னது
ஸாஸ்த்ர வித்பி –சாஸ்திரம் அறிந்தவர்களால்
ப்ரபதந விஷயே-சரணாகதியின் விஷயத்தில்
கைமுத்ய நீத்யா –கை முதிதம் நியாயத்தைக் கொண்டு
யோஷிதம் –இணைக்கப் பட்டது
தஸ்மாத் –ஆதலால்
ஸூவிதத சமயைர்–காலம் அறிந்த
தேசிகை–ஆச்சார்யர்களால்
ததர்ஹே–அதற்குத் தகுந்த
க்ஷேத்ரே –பூமியில் இடத்தில் -அதாவது குணம் நிறைந்த சிஷ்யன் இடத்தில்
சம்யக்-நன்றாக
உப்தம்-விதைக்கப்பட்ட
மந்த்ராக்யம் –மந்த்ரம் என்னும்
முக்தி பீஜம் –முக்தியின் விதை
பரிணதி வசத -முதிர்ச்சி அடைவதால்
கல்பதே ஸத் பலாய-நல்ல பழம் கொடுக்க ஏற்படுகிறது

பிரபத்தி அங்கங்களை ஆச்சார்யர் உபதேசம் மூலம் -உணர்ந்து -மஹா விஸ்வாஸம் அடைய வேண்டுமே –
ரஹஸ்ய த்ரய ஞானம் -ஆச்சார்யர் மூலம் பெற்று -ஸ்ரீமன் நாராயணனே அசேஷ ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமி -நியாம்யன்–
அவனே பரம ப்ராப்யம் –அவனே பிராபகம்-சாஸ்திரங்கள் அவனது ஆஜ்ஞா ரூபம் -விதி நிஷேதங்களை மாறாமல் இருக்க வேண்டுமே –

பகவத் திரு நாம சங்கீர்த்தனம் -பிரபத்தி மந்த்ர உச்சாரணம் –போன்றவை பிரபத்தியிலே மூட்டி அதன் மூலமாக பயன் தர வல்லது
எனவே பிரபத்தி அனுஷ்ட்டிக்க வேண்டியது அவஸ்யமே என்றதாயிற்று –

மந்த்ர ஜபமும்,நாம ஸங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் மூலமே மோக்ஷம் தர வல்லவை என்பதனை இந்த ஶ்லோகம் வலி யுறுத்துகிறது.

பக்தி யோகத்தையும், ப்ரபத்தியையும் ஶாஸ்த்ரங்கள் ஒத்துக் கொண்டுள்ளன. இவை இரண்டும் முடியாத போது மந்த்ர, நாம கீர்த்தனங்கள் செய்ய வேதம் அனுமதிக்கிறது. தன்வசமின்றி“ஹரி” என்ற நாமத்தை ஒருவன் சொன்னால் பாபம் விலகும். காட்டில் ம்ருகங்களிடையே அகப்பட்ட ஒருவன் சிம்ஹ கர்ஜனை கேட்ட மாத்ரத்தில் அவற்றினிடமிருந்து தப்பி விடுபடுவது போல “ஹரி” ஸப்தம் கேட்டால் – சொன்னால் போதும். பாபங்கள் விலகும் என்கிறது சாஸ்த்ரம்.

இன்றைய கால கட்டத்தில் பக்தி யோகம் செய்வதற்கான ஞானம், ஶக்தி நமக்கு கிடையாது. ப்ரபத்திக்கும் முக்ய தேவை “மஹா விஶ்வாஸம்”.

ஸர்வ ஶக்தனும், பரம காருணிகனுமாகிய எம்பெருமான் என்றும் இதற்கு அடிமையானவன். தான் பெண் என்பதையும், தன் நிலைமையையும், தன்னைச் சுற்றி யிருந்த பெரியோர்களையும் தள்ளி வைத்தது த்ரௌபதியின் மஹாவிஶ்வாஸம். இத் துணை கடினமாகப் பெறும் மஹா விஶ்வாசத்தை விட மந்த்ர ஜபம் ஸுலபம். ஆனால் இது ஸாக்ஷாத்தாக பலனைத் தராது.

பகவான் கீதையில் மோக்ஷம் பெற கர்ம, ஞான, பக்தி யோகம் செய்பவன் பாதியில் விட்டானே யாகிலும் பாபமாகாது. பலன்தராமல் போகாது. ஜன்ம வாசனை தொடரச் செய்து பலனளிக்கும். வீண் போகாது என்கிறான்.

ஆக ப்ரபத்தி விஷயத்திலும் இதே போன்ற பெருமை இருப்பதை ஸாஸ்த்ரங்கள் கூறுவதைப் பெரியோர்கள் ஸ்தாபிக்கின்றனர்.

உழவுத்தொழிலில் தேர்ந்த உழவன் நல்ல விளை நிலத்தில், தேர்ந்த விதை யிட்டு வளர்த்த மரம் நல்ல பழங்களைத் தரும். விதை நேராகப் பழமாகாது. ஆனால் விதை பரிணாமத்தால் பழமாகிறது.

அது போல தேர்ந்த ஆசார்யன் ஸத் ஸிஷ்யனுக்குச் செய்யும் மந்த்ரோபதேசம் அவனுக்கு ஶ்ரத்தை உண்டாக்கிய மஹா விஶ்வாஸத்தால் மோக்ஷ பலனைப் பெறச்செய்யும். ஆக மந்த்ரத்தைத் தானே உச்சாடனம் செய்து மோக்ஷம் பெற இயலாது என்று உணர வேண்டும்.

  • இஹ அபிக்ராந்தி நாஶந– கர்ம யோகத்தில் தொடக்கம் வீணாவதில்லை.
  • இஹ விதி ப்ரத்யயாயச நபவேத் — கர்ம யோகம் நடுவில் தடைப்பட்டாலும் பாபம் ஏற்படாது.
  • இதி உக்தம் — என கீதை சொல்கிறது.
  • ப்ரபதன விஷயே சாஸ்த்ர வித்பி:யோஜிதம் — ப்ரபத்தி விஷயத்திலும்  இதேபோல் ஸாஸ்த்ரமறிந்த பெரியோர்களால் பொருத்திப் பேசப்பட்டுள்ளது.
  • தஸ்மாததர்ஹே — ஆக அந்த உபதேசத்துக்கேற்ப
  • க்ஷேத்ரே ஸுவிதித ஸமயே —- சேதனனாகிய நிலத்தில் விதைக்கும் காலத்தை நன்கறிந்த
  • தேஶிகை ஸம்ய குப்தம்—- ஆசார்யர்களால் நன்கு விதைக்கப்பட்ட
  • மந்த்ராக்யம் முக்தி பீஜம் — ப்ரபத்தி மந்த்ரமாகிய மோக்ஷ விதை
  • பரிணதி வஶத:— பக்குவமடைந்து
  • கல்பதே ஸத்பலாய– மோக்ஷமாகிய சிறந்த பலனைத்தர வல்லதாகிறது.

———————–

ந்யாஸ ப்ரோக்தோ அதிரிக்தம் தப இதி கதித ஸ்வத் வரஸ் சாஸ்ய கர்த்தா
அஹிர்புத்ந்யோ அப்யன்வவா தீத கணி திவிஷதாம் உத்தமம் குஹ்ய மேதத்
சாஷான் மோஷாய சாஸவ் ஸ்ருத இஹ து முதா பாத சங்கா குணாட்யே
தன்நிஷ்டோ ஹ்யந்ய நிஷ்டான் ப்ரபுரதி ஸயிதும் கோடி கோட்யம் சதோ அபி –9-

ந்யாஸ –பர ந்யாஸம் சரணாகதி
அதிரிக்தம்-மற்ற எல்லாவற்றாலும் உயர்ந்ததான
தப இதி-தபஸ் இது என்று
ப்ரோக்தோ –கூறப் பட்டது
அஸ்ய கர்த்தா–இத்தைச் செய்தவன்
ஸ்வத் வரஸ் –நல்ல யாகங்களைச் செய்தவன் ஆகிறான்
இதி -என்று
கதித -உரைக்கப் பட்டு இருக்கிறான்
அஹிர்புத்ந்யோ –ருத்ரனும்
யன்வவா தீத் -இதைத் தொடர்ந்து பேசினான்
ஏதத் -இந்த சரணாகதி
திவிஷதாம்–தேவர்களுடைய
உத்தமம் குஹ்யம் –உத்தமமான ரஹஸ்யமாக
அகணி –மதித்து உரைக்கப் பட்டது
அசவ்-இது
ஸாஷாத் –நேராகவே -மற்ற ஒன்றை இடையிடாமலேயே
மோஷாய –மோக்ஷத்துக்குக் காரணமாக
ஸ்ருத –வேதங்களில் கூறப்பட்டது
து -இதுக்கு விபரீதமாக
குணாட்யே-நற் குணம் வாய்ந்த
இஹ –இந்த சரணாகதி விஷயத்தில்
பாத சங்கா -விரோதத்தை சங்கிப்பது
முதா –வீண்
ஹி -ஏன் எனில்
தன் நிஷ்டோ –இந்த சரணாகதியைக் கைப் பற்றினவன்
யந்ய நிஷ்டான் –மற்ற உபாயங்களை ஸ்வீ கரித்தவர்களை
கோடி கோட்யம் சதோ அபி -கோடியிலும் கோடி பங்கைக் கொண்டு
அதி ஸயிதும் –மீறி இருக்க
ப்ரபு -சக்தி யுள்ளவன் ஆகிறான் –

பிரபத்தி சர்வாதிகாரம் -தபஸுக்களில் சிறந்ததாக ஸ்ருதி சொல்லுமே –
பிரபன்னன் சிறந்த யாகம் செய்தவனாக கருதப்படுகிறான் -குஹ்ய தமமான உபாயம்
தஸ்மாத் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அத்ரிக்தம் ஆஹு–தைத்ரியம்
சமிதி சாதனகா தீனம் யஜ்ஜானாம் .ந்யாஸம் ஆத்மனா நமஸாயோ கரோத் தேவ ஸ சவ்தவாரா –அஹிர்புத்ன்ய சம்ஹிதை
யதாத்வை மஹோபநிஷதம் தேவானாம் குஹ்யம் –தைத்ரியம்

ஓம் இத் யாத்மாநம் யுஞ்ஜீத -என்பதால் இது சர்வாதிகாரம் ஆகாதே
அநாதிகாரிகளுக்கு ப்ரணவ உச்சாரணம் கூடாதாயினும் ஆகமத்தில் விதிக்கப்பட்ட த்வய மந்த்ரத்தைக் கொண்டு
சரணாகதி பிரயோகம் சர்வாதிகாரமே யாகும்
ஸ்வ தந்திரமாக மோக்ஷம் தர வல்லதே-பக்தி யோக நிஷ்டனை விட மிகவும் உயர்ந்து -மிகுந்த கௌரவம் வாய்ந்தவன் என்றதாகும்-

ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாவதை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.

  1. ந்யாஸம் அதிரிக்தமான தபஸ். இதற்குச் சமமான அனுஷ்டானம் ஏதுமில்லை. ஒருவன் செய்த ஶரணாகதி பல யாகங்கள் செய்ததற்குச் சமம்.
  2. சமித் ஸ்தானத்தில் நம: என்ற சொல்லை வைத்துச் செய்வதாக அர்த்தம். ந்யாஸம் அனுஷ்டித்த கர்த்தா நல்ல யாகங்கள் (அஶ்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்கள்) செய்ததற்குச் சமம். இதையே “ஸ்வத்வர:” என்ற சொல் குறிக்கிறது. “செய்த வேள்வியர்” என்கிறார் ஆழ்வார்.
  3. அஹிர்புத்ஞ ஸம்ஹிதையில் சிவன் ந்யாஸத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சக்கரத்தாழ்வார் பெருமையைப் பேசுகிறார்.
  4. தேவர்களுக்கு மிக உயர்ந்த ரஹஸ்யம் இது. இந்த ஶரணாகதி நமக்கும் கிடைத்துள்ளது. இதுவே அல்ப பலனிலிருந்து மிகப் பெரிய பலனாகிய மோக்ஷம் வரை உபாயமாகிறது என வேதம் சொல்கிறது.

“முமுக்ஷு:ஶரணம் ப்ரபத்யே” என்பது வேத மந்த்ரம். ந்யாஸம் சாக்ஷாத் மோக்ஷோபாயம். பரம்பரையானதல்ல. கர்ம யோகம் செய்தால் மோக்ஷம் ஸாக்ஷாத்தாகக் கிடைக்காது. ஞான, பக்தியோகம் செய்த பின்பே மோக்ஷம். ஆனால் ஶரணாகதி செய்த ஒருவனுக்கு எம்பெருமானின் அபரிமிதமான
ஔதார்ய காருண்ய குண விஸேஷத்தால் மோக்ஷம் உறுதி யாகிறது.

கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் சொல்வதுபோல் இத்தனை உயர்ந்த மோக்ஷத்தைக் கொடுத்த பின்பும் கொடுத்தது போதாது என எண்ணுபவன் எம்பெருமான்.
ஆக மற்றைய கர்ம ஞான பக்தி யோகத்தை செய்பவரைவிட கோடி கோடி மடங்கு உயர்ந்தவன் ப்ரபன்னன். இவ்விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தன் தேவநாயக பஞ்சாஸத் ஸ்தோத்ரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
“நிஷ் கிஞ்சநத்வ தநிநா விபுதேஶயேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ் தவ பாத பத்மே
நாநா வித ப்ரதித யோக விசேஷ தந்யா:
நார்ஹந்தி தஸ்ய ஶத கோடி தமாம்ஶ கக்ஷ்யாம்” (47)

நிஷ் கிம் சனத்தவ தனிநா விபூதேஸ யேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ்த்வ பாத பத்மே
நாநா வித ப்ரதிஹ யோக விசேஷ தன்யா
ந அர்ஹந்தி தஸ்ய சத கோடி தம அம்ச கக்ஷியாம் -47-

சத் தஹர வித்யாதிகள் உபாசகர்களுக்கு -இதில் அசக்தர்களுக்கு அவர்களது ஆகிஞ்சன்யமே
பச்சையாகக் கொண்டு ப்ரபன்னராக்கி மஹா விசுவாசமும் அருளி இவர்களில்
கோடியில் ஒரு அம்சத்துக்கும் அன்றோ பக்தி யோக நிஷ்டர்களை ஆகும் படி உயர்த்தி அருளிச் செய்கிறாய்

————————–

நாநா சப்தாதி பேதாதிதி து கதயதா ஸூத்ர காரேண சம்யக்
ந்யாஸ உபாஸே விபக்தே யஜந ஹவ நவச் சப்த பேதாத பாக்தாத்
ஆக்யா ரூபாதி பேத ஸ்ருத இதர சம கிம் ஸ பின்ன அதிகார
ஸீக்ர ப்ராப்த்யாதிபி ஸ்யாஜ்ஜ குரிதி ஸ மதூபாச நாசவ் வ்வஸ்தாம் —10-

சப்தாதி பேதாத் -பரமாத்மாவின் விசேஷங்களைக் கூறும் -ஸத் -பூமா -ஜகத் காரணன் -அபஹத பாப்மா -போன்ற சொற்கள் வெவ்வேறாக இருப்பதால்
நாநா –ஸத் வித்யா தஹர வித்யா முதலான ப்ரஹ்ம வித்யைகளும் வெவ்வேறு
இதி -என்று
கதயதா –சொல்லுகின்ற
ஸூத்ர காரேண –ப்ரஹ்ம ஸூத்ர காரரால்
ந்யாஸ உபாஸே–சரணாகதியும் பக்தி யோகமும்
யஜந ஹவந வத் –யாகத்தைக் கூறும் இடத்தில் யஜனம் என்றும் ஹவனம் என்றும் தானம் என்றும் இவை போன்ற
அபாக்தாத்–ஒவபசாரிகம் அல்லாத -அதாவது வெளிப் பொருளைக் காட்டிலும் வேறான உட் பொருளைக் கொள்ளாத
ஸப்த பேதாத் -சொற்களின் வேற்றுமையால்
ஸம்யக் –நன்றாகவே -அதாவது யாதொரு சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல்
விபக்தே பிரிக்கப் பட்டு இருக்கின்றன
ஆக்யா ரூபாதி பேத –ஆக்யா ந்யாஸ வித்யா எனப் பெயரிலும்
ரூப –பரம காருணிகன் ஆகையாலே நிர்ஹேதுகமாக ரக்ஷிப்பவன் என்ற ரூபத்தாலும்
ஆதி -அங்கங்கள் ப்ரகரணங்கள் இவற்றாலும்
பேத -வேற்றுமையானது
இதர சம-மற்ற வித்யைகளுக்கு ஒப்பாகவே
ஸ்ருத –இங்கும் கூறப்படுகின்றது
கிஞ்ச -இன்னமும்
ஸீக்ர ப்ராப்த்யாதிபி –சீக்கிரம் பயன் அளிக்கும் முதலான வற்றால்
பின்ன அதிகார-அதிகாரம் வேறு பட்டதகாக
ஸ்யாத் –இருக்கலாம்
இதிச–இவ்விதமே
மதூபாச நாதள –மது வித்யை முதலான இடத்திலும்
வ்யவஸ்தாம் —நிபந்தனையை
ஜகு–சொன்னார்கள் –

பக்தி பிரபத்தி -இரண்டும் மோக்ஷ உபாயங்கள் –
பிரபத்திக்கு -பக்திக்கு அங்கமாகவும் -சாஷாத் உபாயமாகவும் -இரண்டு ஆகாரங்கள் உண்டே
பக்திக்கு அங்கங்கள் -வர்ணாஸ்ரம கர்ம ஞான யோகங்கள்
பிரபதிக்கு அங்கமாக ஆநு கூல்ய சங்கல்பம் -கார்ப்பண்யம் -மஹா விசுவாசம் போன்றவைகள் உண்டே –
பக்திக்கும் பிரபத்திக்கும் தேவையானவைகளை வேறே வேறே -மோக்ஷம் அடையும் கால விளம்பத்திலும் வாசி உண்டே –
சர்வ லோக சரண்யன் -ஸர்வஸ்ய சரணம் ஸூஹ்ருத் –
சரணாகதி -ஆறாவது அங்கம் -பக்திக்கு அஷ்டாங்கங்களில் சமாதி எட்டாவது அங்கம் போலவே –
அநு கூல்ய சங்கல்பமே ஒரு அங்கம் -செய்ய உறுதி கொண்டாலே செய்து முடிப்போம் -பிராயச்சித்த பிரபத்தி -என்பது அங்கங்களில் பிரபத்தி
பண்ணிய பின்பு குறைகள் வந்தால் போக்கிக் கொள்ள என்பர் -பிரபத்தி செய்த அதிகாரி குற்றம் தானாகவே செய்ய மாட்டான்
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பதால் இவனை அறியாமல் செய்ய நேர்ந்தால் -அதற்காக இந்த பிராயச்சித்த பிரபத்தி –
ப்ரஹ்மாஸ்திரம் போலே -மீண்டும் ஒரே பலனுக்காக பண்ணினால் தான் -குறை வரும் –

ப்ரஹ்ம ஸூத்ரத்தில் -ஸப்தாதி பேத அதிகரணத்தில் –நாநா ஸப்தாதி பேதாத் -ஸூத்ரம் உண்டே
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாமே சேர்ந்து ஒரே வித்யையா வெவ்வேறா என்கிற சங்கை வர அத்தை நீக்குகிறது –
ஒரே பொருளைக் கூறும் பர்யாய பதங்கள்
வேத உபாஸீத போன்ற பதங்களால் விதிக்கப்பட்ட பொருள் ஒன்றே யாகும்
பர்யாய பதங்களாயினும் உபாசிக்கப்பட வேண்டிய ப்ரஹ்ம குணங்கள் -அபஹத பாப்மத்வாதி குணங்கள் -காரணத்வம்
போன்றவை வெவ்வேறே வானபடியால் வித்யைகளும் வெவ்வேறெவே
விசேஷணம் வேறுபாட்டால் விசேஷ்யமும் வேறுபாடும் என்கிற நியாயத்தால் –
கீதையிலும் பக்தி யோகத்தை பஜஸ்வ மாம் என்றும் ப்ரபத்தியை சரணம் வ்ரஜ என்று விதித்து உள்ளானே
பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மாதிகள் -பிரபத்திக்குக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் அங்கங்கள் என்ற வாசியும் உண்டே
ஆகவே இந்த ஸூத்ரம் பக்தியையும் ப்ரபத்தியையும் கூறுவதாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ பாஷ்யத்தில் பிரபத்தியை விளக்க வில்லையே –

ப்ரபத்தி தனிப்பட்ட உபாயமாவதைப் பற்றிக் கூறும் ஶ்லோகம் இது. இது ஸ்ரீபாஷ்ய விஷயமான ஶ்லோகம். ஞான ஶப்தாதி பேதாதி கரணத்திலிருந்து ஸ்வாமி விஷயங்களைக் காட்டி யுள்ளார்.
எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் இரண்டிலும் பக்தி யோகமே ப்ராதான்யமாய்ப் பேசப் படுகின்றன. ந்யாஸம் பற்றிய விவரணமில்லையே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சூத்ரகாரராகிய வ்யாசர் இதற்குச் சமாதானம் சொல்கிறார்
“நாநா ஶப்தாதி பேதாத்” என்பது சூத்ரம். வேதத்தில் யாகம், ஹோமம், தானம் இவை பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக அஶ்வமேதம், ஸோம யாகம் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனி தேவதை, ரூபம், த்ரவ்யம் உள்ளன. ஹோமம் என்றால் அந்த தேவதைக்கு அக்னி மூலம் நெய் ஆஹூதி செய்ய வேண்டும். எனதல்ல என்ற எண்ணத்துடன் பிறருக்கு ஸமர்ப்பணம் செய்வதில் தானம் பூர்த்தியாகும்.
ஆக இவை ஒவ்வொன்றுக்கும் அந்த வினையைச் (அனுஷ்டானத்தை)
செய்யும் போது ஶப்தங்கள் வேறுபடுகின்றன. ‘யஜேத்’ என்பது யாகத்துக்கும், ‘ஜுஹ்யாத்’ என்பது ஹோமத்துக்கும், ‘தத்யாத்’ என்பது தானத்துக்கும் ஶப்தங்களாகின்றன. ஶப்தத்தையிட்டு பலன் கிடைக்கிறது.

ஸந்த்யாவந்தனம் என்பது அர்க்யம், காயத்ரி, உபஸ்தானம் அடங்கிய ஒரே அனுஷ்டானம். அதேபோல திருவாராதனம் என்பது மந்த்ராசனம், திருமஞ்சனம், அலங்காரம், ஸமர்ப்பணம், நிவேதனம் அடங்கிய ஒரே அனுஷ்டானம்.பக்தி யோகம் செய்பவன் 32 ப்ரும்ஹ வித்தையில் ஏதாவது ஒன்றைப் பற்றி த்யானம் செய்யலாம்.

மது வித்யா, சாண்டில்ய வித்யா, தகர வித்யா என்பன போன்ற 32 வித்யைகளில் 32 வதாக “ந்யாஸ வித்யை” சொல்லப்படுகிறது. மேற் சொன்ன வித்யைகளில் ரூபம், குணம் வேறு பட்டாலும் ஶப்த வேறுபாடில்லை. உபாஸனம் (த்யானம்/வேதனம்) தான் செய்ய வேண்டும். ஶரணாகதியில் “ஓமித் யாத்மீய உஞ்சீத்” என விதிக்கிற ஶப்தம் வித்யாசமாயுள்ளது. யாகத்தில் ஞான பாகமும், ஹோமத்தில் அனுஷ்டானமும் முக்யமாவது போல் “எனதல்ல” என்ற த்யாகம் எண்ணம் வந்தால்தான் தானம் பூர்த்தியாகும். இந்த ந்யாஸ வித்யைக்கு காருண்ய குணவானாகிய பகவான் ரூபமாயிருந்து கோரின காலத்தில் பலனைத் தருகிறான்.

பக்தியோகம் செய்ய முடியாமையே இதற்கு முக்ய தகுதி. 15 விதமான அதிகாரி (தகுதி) பேதம் ந்யாஸத்துக்குச் சொல்லப் பட்டுள்ளது. மது வித்யை செய்பவன் சூர்யனை உபாஸித்து தேவ லோகத்தில் அஷ்ட வஸுக்களில் ஒருவராக 10யுகங்களிருந்து பின் மோக்ஷமடைவான் என்று சொல்லப்படுகிறது. தகர வித்யா நிஷ்டனுக்கு இதைவிட சீக்ர மோக்ஷம் என்கிறது.
ஆக ந்யாஸம் — உபாஸனம் இரண்டும் வேறு. இரண்டுக்கும் ஸப்தம் ‘ரூபம், பலன், தகுதி வேறானவை.

கீதா பாஷ்யத்தில் பக்திக்கு ப்ரபத்தி ஒரு அங்கம் என்று குறிப்பிட்டாலும், ப்ரபத்தி ஸ்வதந்த்ரமாக மோக்ஷம் தர வல்லது. ஸ்ரீபாஷ்யகாரர் கத்யத்தில் ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாகும் என்று வெளிப்படையாகவே விளக்கி யுள்ளார்.

—————–

யத் கிஞ்சித் ரக்ஷணீயம் ததவந நிபுணே ந்யஸ்தோ அகிஞ்ச நஸ்ய
ப்ரஸ்பஷ்டம் லோக த்ருஷ்ட்யா அப்யவகமித இஹ ப்ரார்த்தநாத் யங்க யோக
தஸ்மாத் கர்மாங்க கத்வம் வ்யபநயதி பரா பேஷணாபாவ வாத
சாங்கே த்வஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத ஷட்விதத் வோபசார–11-

யத் கிஞ்சித் –யாது ஒரு வஸ்து
ரக்ஷணீயம் –ரஷிக்கத் தக்கதோ
தத் -அதை
அவந நிபுணே -ரக்ஷிக்க சக்தி யுள்ளவன் இடத்தில்
ந்யஸ்தோ -அடைக்கலமாய்க் கொடுக்கின்ற
அகிஞ்ச நஸ்ய–ஏழைக்கு
ப்ரார்த்தநாதி -பிரார்த்தனை முதலான
அங்க -அங்கங்களின்
யோக -சேர்க்கை
இஹ–இந்த சரணாகதி விஷயத்தில்
லோக த்ருஷ்ட்யா –உலக வழக்கத்தாலும்
அவகமித–அறிவிக்கப் பட்டது
தஸ்மாத்–ஆதலால்
பரா பேஷணாபாவ வாத-மற்ற ஒன்றை அபேக்ஷிப்பது இல்லை என்று கூறுவது
கர்மாங்க கத்வம் –கர்மங்களை அங்கமாகக் கொண்டு இருப்பதை
வ்யபநயதி –விலக்குகின்றது
து -ஆனால்
சாங்கே-அங்கங்களோடு கூடின ப்ரபத்தியில்
அஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத –அஷ்டாங்க யோகம் என்று சொல்லுவது போலே
ஷட்விதத் வோபசார–ஆறு விதம் என்று கூறியது
ஒவபசாரிகம் -அதாவது கௌவணப் பொருளாகும் –

தத் ஏக உபாய தாயாஞ்ச பிரபத்தி –
பிரபத்தே க்வசித் அப் யேவம் பர அபேஷா ந வித்யதே
வர்ணாஸ்ரம தர்மங்களை அபேக்ஷிப்பது இல்லை என்றவாறு
ஆனால் ஷட் விதா சரணாகதி -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -அங்கங்கள் ஐந்தும் அங்கியான ப்ரபத்தியும் சேர்த்துச் சொன்னவாறு
அஷ்டாங்க யோகத்திலும் யமம் -நியமம் -ஆஸனம் -ப்ராணாயாமம் -ப்ரத்யாஹாரம் -த்யானம் -தாரணா ஆகிய
ஏழு அங்கங்களுடன் சேர்த்து சமாதி என்கிற அங்கியையும் சேர்த்தே சொன்னால் போலவே இங்கும் –
நியாஸ பஞ்சாங்க ஸம் யுத -என்றும் உண்டே
ஐந்து அங்கங்களாவன
1-ஆனுகூல்ய சங்கல்பம்
2-பிரதிகூல்ய வர்ஜனம்
3-ரஷித்தே தீருவான் என்கிற மஹா விச்வாஸம்
4-நீயே ரக்ஷிக்க வேணும் என்கிற பிரார்த்தனை
5-அநந்ய கதித்வம் –

ப்ரபத்திக்கு அங்கங்களுடைமை பற்றி விளக்கும் ஶ்லோகம் இது.
சாதாரண லௌகீக பலன்களைப் பெறவே பல ப்ரார்த்தனைகளை முன் வைக்கும் போது மிக உயர்ந்த மோக்ஷ பலனைத் தர வல்ல ப்ரபத்திக்கு அங்கங்கள் அவஶ்யம் என்கிறார் ஸ்வாமி.
பக்தி யோகத்துக்கு ஶரணாகதி அங்கமாயிருக்கும் என்று கீதா பாஷ்யத்தில் சொல்கிறார் உடையவர் .த்யானம் நல்ல விதமாய் நடைபெற ஶரணாகதி அங்கமாகிறது இது “அங்க ஶரணாகதி” எனப்படும். சகல பலன்களையும் தரவல்லது ஶரணாகதி என்கிறார் உடையவர் கத்யத்ரயத்தில். வேதம், இதிகாச புராணங்கள், ப்ரும்ஹ சூத்ரம், பகவத்கீதை ஆகியவற்றுள் சொல்லப்பட்டுள்ள தர்மமே ஶரணாகதி.

இதற்கு 6 அங்கங்கள் உள்ளன என்று ஆகம க்ரந்தங்கள் கூறுகின்றன.
1. ஆனுகூல்ய ஸங்கல்பம்.
2. ப்ராதிகூல்ய வர்ஜனம்.
3. மஹா விஸ்வாஸம்.
4. கோப்த்ருத்வ வர்ணம் (கதியில்லாத் தன்மை)
5. கார்பண்யம் (எம்பெருமானே ரக்ஷகன் என வரித்தல்)
இந்த ஐந்தையும் உறுப்பாகக் கொண்டு ஆத்மாவை ஸமர்ப்பித்தால் அது “அங்கி”யாகிறது. த்ரிஜடை, விபீஷண ஶரணாகதிகள் இந்த ஆறு அங்கங்களுடன் கூடிய பூர்ண ஶரணாகதி என்கிறார் ஸ்வாமி.
அங்கங்கள் பற்றி எழும்3சந்தேகங்களுக்கு ஸ்வாமி ஸமாதானம் சொல்கிறார்.
1. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையா? ஆத்மாவை ஒப்படைக்கும் பர ஸமர்ப்பணத்திற்கு அங்கங்கள் அவஶ்யம்.
2. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையில்லை என்கிறார்களே?
ஸாஸ்த்ர ரீதியாகவும் ப்ரபத்திக்கு அங்கங்கள் தேவை. இவை இருவகைப்படும். அந்தரங்கம் என்பது உள்ளிருந்து செய்யும் உபகாரம் பஹிரங்கம் என்பது யக்ஞம், தானம், தபஸ் ஆகியன. இவை வெளி அங்கங்கள் இத்தகைய வெளி அங்கங்கள் பக்தியோகத்துக்கு உள்ளவை. ப்ரபத்திக்கு அந்தரங்கம் மட்டுமே.

ஆத்மா, அதன் ரக்ஷணம், அதன் பலன் மூன்றையும் ஒப்படைத்தல் அங்கியாகிறது.இதனையே ஆறு விதம் கொண்ட ஶரணாகதி என்று ஆசார்யர்கள் விளக்கி யுள்ளனர்.

———————

பஞ்சாப் யங்காந்யபிஜ்ஞா ப்ரணிஜகுரவிநா பாவ பாஞ்ஜி ப்ரபத்தே
கைஸ்சித் சம்பா விதத்வம் யதிஹ நிகதிதம் தத் ப்ரபத்த் யுத்தரம் ஸ்யாத்
அங்கேஷ் வங்கித்வ வாத பல கதநமிஹ த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ
ப்ராஸஸ் த்யம் தத்ர தத்ர ப்ரணிதததி தத சர்வ வாக்யைக கண்ட்யம் –12-

யபிஜ்ஞா -வித்வான்கள்
பஞ்சாப் யங்காந்–ஆனுகூல்யாதி ஐந்து அங்கங்களையும்
ப்ரபத்தே–ப்ரபத்திக்கு
அவிநா பாவ பாஞ்ஜி –விட்டுப் பிரியாமல் இருப்பதாக -அவஸ்யம் இருக்க வேண்டியவைகளாக
ப்ரணிஜகுர் -கூறினார்கள்
யதிஹ-யாது ஓன்று இந்த ஐந்து அங்கங்களுக்குள்
கைஸ்சித் –சில அங்கங்களால்
சம்பா விதத்வம் –தன்னடையாகவே நேர்ந்தமை -அதாவது அவஸ்யம் இல்லாமல் தானாகவே நேரக் கூடியவையாய் இருக்கை
நிகதிதம் -சொல்லப் பட்டதோ
தத் –அது
ப்ரபத்த் யுத்தரம் -பிரபத்திக்குப் பின்
ஸ்யாத்-இருக்கக் கூடும்
இஹ -இந்த சரணாகதியில்
அங்கேஷு –அங்கங்களில் சிலவற்றை
வங்கித்வ வாத–அங்கியாகக் கூறியதும்
பல கதநம் -சில அங்கங்களாலே மோக்ஷம் பலம் என்பதையும்
த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ–ஐந்தில் இரண்டு மூன்று மாத்ரம் கூறியதும்
தத்ர தத்ர-அந்த அந்த அங்கங்களில்
ப்ராஸஸ் த்யம் –மேன்மையை பெருமையை
ப்ரணிதததி –பொருளாகக் கொண்டன
தத –ஆதலால்
சர்வ வாக்ய ஏக கண்ட்யம் –எல்லா வாக்யங்களுக்கும் ஒற்றுமை உண்டு

அங்கங்கள்,அங்கி இவற்றில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றின் தீர்வும் இதிலடங்கும்.

முதல் சந்தேகம் – எல்லா அங்கங்களுடன் ப்ரபத்தி அனுஷ்ட்டிக்க வேண்டுமா அல்லது சிலதை விடலாமா?என்பது.
கட்டாயம் ப்ரபத்தி ஆறு அங்கங்களுடன் அனுஷ்ட்டிக்க வேணும் என ஆசார்யர்கள் சொல்லியுள்ளனர்.
இரண்டாம் சந்தேகம் – எல்லா அங்கங்களும் ஸம்பவிக்குமா?என்பது. ப்ரபத்தி சமயத்தில் எல்லாம் ஸம்பவிக்கலாம் அல்லது அதன்பிறகும் ஸம்பவிக்கலாம்.
அங்கங்களின் நிறை -குறை ப்ரபத்தியின் பலனை பாதிக்காது ஆனால் நம் ஸ்வரூபத்துக்கேற்ப இவைகளை கைக் கொள்ளுதல் அவஶ்யம்.
மூன்றாம் சந்தேகம் – அங்கங்களையே அங்கியாகச் சொல்வதன் தாத்பர்யம் என்ன?”விஸ்வாஸ:ஶரணாகதி”– என்கிறார் பாஷ்யகாரர். “ப்ரார்த்தனா ஶரணாகதி” –போன்ற வசனங்கள் அந்த அங்கங்களின் முக்யத்வத்தையும், பெருமையையும் தெரிவிக்கும் பொருட்டு ஏற்பட்டவை.”கருடோத்ஸவமே ப்ரும்ஹோத்ஸவம்”–என்பது போல ப்ராதன்யத்தை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.ஆக ஐந்து அங்கங்களுடன் செய்யும் போது தான் ப்ரபத்தியாகிய அங்கி நிறைவேறுகிறது என ப்ரபத்தி ஶாஸ்த்ரம் நன்கறிந்த பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர்.
———-

ரஷாபேஷா ஸ்வசாஹ்ய ப்ரணயவதி பர ந்யாஸ ஆஜ்ஞாதி தஷே
த்ருஷ்டா நாத்ர பிரபத்தி வ்யவஹ்ருதிரிஹ தந் மேளநே லக்ஷணம் ஸ்யாத்
கேஹாகத்யாதி மாத்ரே நிபதது சரணா கத்ய பிக்யோ பசாராத்
யத்வா அநேகார்த்த பாவாத் பவதி ஹி விவித பாலநீ யத்வ ஹேது –13-

ஸ்வ–தனக்கு
சாஹ்ய –ஸஹாயம் செய்ய வேணும் என்று
ப்ரணயவதி –யாசிப்பவன் இடத்தில்
ரஷா அபேஷா -ரக்ஷிக்க வேணும் என்று வேண்டுவது இருக்கிறது
ஆஜ்ஞாதி தஷே–ஏவல் செய்யும் ஊழியக் காரனிடம்
பர ந்யாஸ -பர ந்யாஸம் என்ற சொல் இருக்கிறது
அத்ர–இவ் விரண்டிலும் தனித் தனியே
பிரபத்தி வ்யவஹ்ருதி–பிரபத்தி என்ற சொல்
ந த்ருஷ்டா –காணப் பட வில்லை
இஹ -இப் பிரபத்தி விஷயத்தில்
தந் மேளநேம் -அந்த ரஷா அபேக்ஷை -பர ந்யாஸம் இவ் விரண்டின் சேர்க்கை
லக்ஷணம் ஸ்யாத்-இலஷணையால் இருக்கலாம்
சரணா கத்ய பிக்யோ -சரணாகதி என்ற பெயர்
கேஹாகத்யாதி மாத்ரே –வீட்டுக்கு வருவது முதலான பொருளில் மாத்ரம்
உபசாராத்-முக்யப் பொருள் அல்லாத இலக்ஷணைப் பொருளாகவே
நிபதது –ஏற்படக் கூடும்
யத்வா –அல்லது
அநேகார்த்த பாவாத் –சரணம் என்ற சொல்லுக்கு அநேகப் பொருள் உண்டு ஆகையாலே
பாலநீ யத்வ ஹேது-ரக்ஷிக்கப்பட வேண்டியதற்குக் காரணம்
பவதி ஹி விவித -பலவிதமாக இருக்கின்றது –

அநந்யார்ஹம் முக்கியம் –ந்யாஸம் -சரணாகதி -மஹா விச்வாஸம்

சரணம் -வீடு ரக்ஷிப்பவன்
சரணாலயம் -பர ந்யாஸம் செய்தவனை ரக்ஷிக்க வேண்டியது போலவே
வீடு என்ற பொருளிலும் வீட்டுக்கு வந்தவரை ரக்ஷிக்க வேண்டும் என்றவாறு

ப்ரபத்தியின் லக்ஷணத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்தும் ஶ்லோகம் இது.

விளையாட்டு ப்ராயத்திலிருக்கும் பாலகன் உபநயனம் ஆனபின்
காயத்ரி மந்த்ரோபதேஸம், சந்த்யாவந்தனம் முதலான அனுஷ்டானங்களால் தேஜஸ்வி யாகிறான். இதேபோல ஸமாஶ்ரயேணம், பரந்யாஸம் என்னும் அனுஷ்டானங்களும் மிகுந்த கவுரவம் உடையன. இந்த அனுஷ்டானங்கள் எம்பெருமானுக்கு தாஸன் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
ஜன்மாந்த்ர ஸுஹ்ருதத்தினால் ஆசார்ய ஸம்பந்தம் ஏற்பட்டு இந்த அனுஷ்டானங்கள் ப்ராப்தமாகின்றன. இது சாதாரண நிகழ்வல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் ஆத்மாவையும் அதனைக் காப்பாற்றும் பொறுப்பையும் எம்பெருமானிடம் ஒப்படைப்பதே ஶரணாகதி என்பதாகும்.ஆத்மாவைக் காப்பாற்றுதல் என்பதற்கு அடுத்த ஜென்மம் ஏற்படாதவாறு முடிவு செய்தல் என்று அர்த்தம்.
இதில் ப்ரார்த்தனை+ஆத்ம ரக்ஷணம் இரண்டும் அடங்கும். இவை தனித்தனியே ஶரணாகதி யாகாது. பரஸ்பர உபகாரம் தானே நட்பின் லக்ஷணம். பொறுப்பை நாம் முழுதுமாய் விடவேண்டும்.
“இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போல”– என்ற த்ரௌபதி ஶரணாகதி வேறு கதியில்லாத, கைமுதலில்லாத ஶரணாகதி. ப்ரார்த்தனையை முன்னிட்டுச் செய்வது.
“ஶரணம்”– என்றால் உபாயம், ரக்ஷகன், வீடு என்று பொருள்.
“ஆகதி”– என்றால் வருதல்,அடைதல் என்று பொருள்.
அர்ச்சையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் செல்வதே பர ந்யாசம் என்று சொல்வது உபசார வழக்காகும்.
“பத்தாஞ்சலி புடம்”–அஞ்சலியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
“தீனம்” –தளர்ச்சியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
“யாசந்தம்” –மிடுக்குடன் வந்து ப்ரார்த்திப்பவனையும் ரக்ஷிப்பேன்.
“ஶரணாகதம்” –என்னிடத்துக்கு வந்தவனை ரக்ஷிப்பேன்.
“நஹன் யாது ஸ்யாது ஶத்ரும் பரந்தம்”— அழிக்கும் குணமுள்ள
ஶத்ருவாயினும் காப்பேன் – என்று வால்மீகி ராமபிரானின் திருவுள்ளத்தைக் காட்டுகிறார்.இதனை உதாரணங்களுடன் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் விஸ்தரித்துள்ளார்.
ஆக எப்படிப்பட்ட ஶரணாகதிக்கும் ரக்ஷணம் உண்டு. எத் திசையும் உழன்றோடிய காகம் ராமன் திருவடி அடைந்ததும், பெண் புறாவைப் பிடித்த வேடன் ஆண் புறா இருந்த மரத்தை அடைந்ததும் முழுமையான ஶரணாகதி யாகாவிடினும் காப்பவனின் இடத்தை அடைந்ததே ஶரணாகதியாகிறது. இதை உபசார வழக்கமாகக் கொள்ளலாம்.

மோக்ஷத்துக்கான ஶரணாகதி என்பது ஶாஸ்த்ர ரீதியாக ப்ரார்த்தித்து ஆத்ம ரக்ஷணப் பொறுப்பை எம்பெருமானிடம் ஸமர்ப்பித்தலே ஆகும்.

——————

ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம நுகதம் யாவதர்த்தம் முமுஷோ
தத்வ ஜ்ஞான நாத்மகம் தத் ப்ரதமமத விதே ஸ்யாதுபாயே ஸமேதம்
கைங்கர்யாக்யே புமர்த்தே அப்யநுஷஜதி ததப்யர்த்தநா ஹேது பாவாத்
ஸ்வாபீஷ்டா நந்ய ஸாத்யாவதிரிஹ து பர ந்யாஸ பாகோ அங்கி பூத –14-

முமுஷோ–முமுஷுவுக்கு
ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம் -தன்னையும் தன்னைச் சேர்ந்த பொருள்களையும் பரமாத்மாவிடம் ஒப்படைப்பது
யாவதர்த்தம் -எவ்வளவு பொருள்கள் உண்டோ அவ்வளவிலும்
அநுகதம் -தொடர்ந்து நிற்கும்
தத் -இந்த கார்யமானது
ப்ரதமம் -முதன் முதலில்
விதே-உபாயத்தை விதிக்கின்ற வசந ஸ்வ பாவத்தாலே
உபாயே–மோக்ஷ உபாயத்திலே
ஸமேதம்-சேர்ந்ததாக
ஸ்யாத் -இருக்கும்
ததபி -மேலும்
யர்த்தநா ஹேது பாவாத்–முமுஷுவால் செய்யப் பட்ட பிரார்த்தனையின் காரணமாக
கைங்கர்யாக்யே-பகவத் கைங்கர்யம் என்ற
புமர்த்தே அபி -புருஷார்த்தத்திலும் -பலனிலும்
யநுஷஜதி –தொடர்கின்றது
இஹ -இந்த பிரபத்தி விஷயத்தில்
அங்கி பூத –அங்கியாக இருக்கின்ற
பர ந்யாஸ பாகோ -பர ந்யாஸம் என்ற அம்சம்
ஸ்வாபீஷ்டா நந்யஸா த்யாவதி–தன்னால் விரும்பப்பட்டது -மற்ற ஒன்றால் சாதிக்க முடியாதது எவ்வளவோ அவ்வளவில் நிற்கும் –

ஸ்வரூப சமர்ப்பணம் -யானும் நீ என் உடைமையும் நீயே – பர சமர்ப்பணம் பல சமர்ப்பணம் –ப்ரீதி காரித கைங்கர்யமே -பரம புருஷார்த்தம் என்ற நினைவு –
நம் புத்திரர் பார்யையாதிகள் உடன் சேர்ந்தே சமர்ப்பணமோ என்னில் இவர்களும் நம் சொத்து இல்லையே -எல்லாம் அவனது அன்றோ

கீழ் எல்லாம் புபுஷு முமுஷு இருவருக்கும் பொதுவான பிரபத்தி
இதில் முமுஷு -அதிலும் அநந்யார்ஹ சேஷ பூதரானவருக்கு
யானும் நீயே என்னுடைமையும் நீயே என்று இருப்பவர்களுக்கு
தத்வ ஞானம் ஏற்பட்டு அதனாலேயே இந்த எண்ணம் உபாயத்திலும் புருஷார்த்தத்திலும் சேர்ந்தே இருக்குமே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அவனது ஆனந்தத்துக்காகவே இருப்பார்களே

ஸேஷத்வ ஞானம் எல்லா நிலைகளிலும் தொடர வேண்டியதின் அவ ஶ்யத்தை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.
ஒருவன் ப்ரபத்திக்கு முன்பும், ப்ரபத்தி அனுஷ்டிக்கும் போதும்,
ப்ரபத்திக்குப் பின்னும் எம்பெருமானுக்கு ஸேஷன் என்ற ஞானத்துடனிருக்க வேணும். இந்த ஞானம் மனதில் தோன்றும் ஒரு சிந்தனை.
ஆத்ம ஸ்வரூபம்+ஆத்மீயம் (தன்னைச் சேர்ந்த எல்லாவற்றையும்) எம்பெருமானுக்கு உடைமையாக்கி ஒப்படைப்பதை “யானும் நீயே என்னுடைமையும் நீயே” என்கிறார் நம்மாழ்வார்.
தாஸன் என்று நினைப்பது முதல் நிலை. இந்த ஞானத்துடன் ஆத்மாவை ஒப்படைக்கவேண்டும். இந்த தத்வ ஞானம் வந்த காலத்திலும், உபாய அனுஷ்டான காலத்திலும், பல (phala) அனுபவ காலத்திலும் ஆத்மா எம்பெருமானுக்கு தாஸன் என்ற எண்ணத்துடன் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்க வேணும். உபாய காலத்தில் மட்டுமே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதுவே பரந்யாஸம்.

“அஸேஷ ஸேஷதைக ரதிரூப” என்று கத்யத்தில் இதனை உடையவர் குறிப்பிடுகிறார். இதுவே அங்கியான பர ந்யாஸம் எனப்படுகிறது.

—————–

ந்யாஸா தேசேஷூ தர்ம த்யஜந வசநதோ அகிஞ்ச நாதிக்ரி யோக்தா
கார்ப்பண்யம் வா அங்க முக்தம் பஜநவதிதரா பேஷணம் வா அப்யபோடம்
துஸ் சா தேச் சோத்யமவ் வா க்வசிது பசமிதா வந்ய சம்மேளந வா
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்தஸ் ததிஹ ந விஹதோ தர்ம ஆஜ்ஞாதி சித்த –15-

ந்யாஸா தேசேஷூ –சரணாகதியை விதிக்கும் இடங்களில்
தர்ம த்யஜந வசநதோ –ஸர்வ தர்மங்களை விடச் சொல்லி இருப்பதால்
அகிஞ்ச நாதிக்ரியா -வேறு வழி இல்லாதவன் இதுக்கு அதிகாரி என்பது
யுக்தா-சொல்லப்பட்டது
வா -அல்லது
கார்ப்பண்யம் –கார்ப்பண்யம் என்ற அதாவது வேறு போக்கற்று இருக்கும் நிலையை நினைப்பது –
கர்வம் இல்லாமை முதலான பகவத் கிருபை தன் மேல் உண்டாகும் படி செய்கிற கார்யம்
அங்க முக்தம் -அங்கமாகச் சொல்லப்பட்டது
வா -அல்லது
பஜநவத் -பக்தி யோகத்தைப் போலே
இதரா பேஷணம் –வர்ணாஸ்ரம தர்மாதிகளை அங்கமாக அபேக்ஷித்து இருத்தல்
அப்யபோடம்-விலக்கப் பட்டது
வா -அல்லது
க்வசித் -பேராசை கொண்டு -அஸக்யமான விஷயத்தில் முயலுகின்றவன் இடத்தில்
துஸ்சாதேச் சோத்யமவ் –அஸக்யமானத்தில் ஆசையும் முயற்சியும்
உப சமிதவ்–தடுக்கப்பட்டன
வா -அல்லது
அந்ய சம்மேளந –பிரபத்திக்கு அங்கம் அல்லாதவற்றை பிரபத்திற்கு கைக்கொண்டால்
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய -நம்பிக்கை குறைந்து மற்றவற்றைக் கூட்டினால் தானே விலகிவிடும் என்பது
உக்தஸ் –உரைக்கப் பட்டது
தத் -தர்மங்களை விடுவது பிரபத்திக்கு அங்கம் இல்லாததாலும்
தர்மங்களை பிரபத்திக்கு அங்கமாகக் கூறாமையாலும்
ஆஜ்ஞாதி சித்த –ஆஜ்ஜையாலும் அநுஜ்ஜை யாலும் ஏற்பட்ட
தர்ம -தர்மம்
இஹ ந விஹதோ –இந்தப் பிரபத்தியில் விலக்கப்பட வில்லை –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -வர்ணாஸ்ரம தர்மங்களை விடக் கூடாதே -பக்தியில் அசக்தனுக்கு இது -என்றவாறு
இதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

அகிஞ்சனனாய் -வேறு உபாயந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தன் இல்லாமல் இருக்க வேண்டுமே
பரித்யஜ்ய -கார்ப்பண்யம் சொல்லப்பட்டது
கார்ப்பண்யமாவது -ஆகிஞ்சனயாதிகளுடைய அனுசந்தானமாதல்
அது அடியாக வந்த கர்வ ஹானியாதல்
கிருபா ஜனக க்ருபண வ்ருத்தியாதல்
கைங்கர்ய புத்தியாக வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்யவே வேண்டும்

மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னம் அதில் ஆசை தனை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயன் அஸ்திரம் போல் வெள்கி நிற்கும்

நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின்றனிமை துணையாக என் தன் பாதம்
பூண்டால் யுன் பிழைகள் எல்லாம் பொறுப்பேன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழுவோமே

எல்லாவற்றையும் செய்ய வல்ல எம்பெருமானிடம் ஆத்ம ரக்ஷணமப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவனிடம் எல்லா தர்மங்களையும் விட்டுவிடும்படி சரம ஶ்லோகம் கூறுவதன் விளக்கமே இந்த ஶ்லோகம்.
“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” – என்ற வசனம் 6 விதமான அர்த்தங்களை அளிக்கிறது என்கிறார் ஸ்வாமி.

முதல் அர்த்தம்– அகிஞ்சனாதிக்ரியோக்தா– கர்ம, ஞான, பக்தி யோக தர்மங்களைச் செய்ய முடியாத அகிஞ்சனன்.

2ம் அர்த்தம் – கார்பண்யம் வாங்கமுக்தம்–கைமுதலில்லாத் தன்மையை அநுஸந்தித்துக் கொண்டு எம்பெருமானின் கருணையை ப்ரார்த்திப்பது.

3ம் அர்த்தம் – பஜனவத– பக்தி யோகத்துக்குள்ள தானம்,தபஸ் போன்ற வெளி அங் கங்கள் ப்ரபத்திக்கு வேண்டாம்.

4ம் அர்த்தம் -துஸ்ஸாத் இச்சாத்– செய்ய முடியாத பக்தி யோகத்தைச் செய்ய முற்படும் ஆசையை விடவேண்டும்

5ம் அர்த்தம் – உத்யமௌ–செய்ய முடியாத பக்தி யோகத்தைச் செய்யும் ப்ரயத்னத்தையும் அடியோடு விட்டுவிட வேணும்.

6ம் அர்த்தம் – ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்த—ப்ரபத்தி செய்யும் போது அதில் நம்பிக்கை குறைந்து வேறு உபாயத்தை நாடினால் ப்ரஹமாஸ்த்ரத்துக்கு வேறு அஸ்த்ர ப்ரயோகம் ஒவ்வாதது போல ப்ரபத்தியும் செயலிழக்கும்.

ஆக மேற்சொன்ன 6அர்த்தங்களையும் மனதிலிருத்தி ப்ரபத்திக்கு முன்னும் பின்னும் செய்யவேண்டிய ஆக்ஞா, அனுக்ஞா கைங்கர்யங்களைச் செய்தல் வேண்டும்.

இதற்கான அதிகாரஸங்க்ரஹ பாசுரம் –

“மூண்டாலும் அரியதனில் முயல் வேண்டா முன்னம் அதில் ஆசைதனை விடுகை திண்மை*
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு* வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி நிற்கும்*
நீண்டாகும் நிறை மதியோர் நெறியில் கூடா* நின் தனிமை துணையாக எந்தன் பாதம் பூண்டால்*
உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே” 
(அதிகார ஸங் 47)
————–

ஆதேஷ்டும் ஸ்வ ப்ரபத்திம் தத் அநு குண குணாத் யந்விதம் ஸ்வம் முகுந்தோ
மாமித் யுகத்வைக சப்தம் வததி ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் ப்ராப்ய ப்ராப கைக்யம் சகல பல ததாம் ந்யாஸதோ அந்யாந பேஷாம்
ப்ராதான் யாத்யம் ஸ கிஞ்சித் ப்ரதயதி ஸ பரம் ஸ்ரீ ஸகே முக்த்யுபாயே –16-

முகுந்த-ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்வ ப்ரபத்திம்-தன்னிடம் சரண் அடைவதை
ஆதேஷ்டும் -விதிப்பதற்காக
தத் அநு குண -அதற்கு ஏற்ற
குணாத் யந்விதம் -நற் குணங்கள் முதலியவற்றோடு கூடி இருக்கிற
ஸ்வம் -தன்னை
மாம் இதி -என்னை என்று
யுக்த்வா -சொல்லி
ஏக சப்தம் வததி -ஒருவனை என்ற சொல்லையும் பேசுகிறான்
ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் -ஆதலால்
விதிக்குத் தக்க பொருள் கொள்ள வேண்டி இருப்பதால்
தத்ர -அந்த ஏக ஸப்தத்தால்
தாத்பர்யம் -கருத்து
ஊஹ்யம் -ஊஹிக்கத் தக்கது
ஸ -அந்த ஏக ஸப்தமானது
முக்த்யுபாயே -முக்திக்கு உபாயமாக இருக்கிற
ஸ்ரீ ஸகே பரம் -எம்பெருமான் இடத்தில் மாத்ரம்
தத் -அப்படிப்பட்ட வேதாந்த ஸாஸ்த்ரங்களில் -அங்காங்கு ப்ரஸித்தமான என்றபடி
ப்ராப்ய ப்ராப கைக்யம் -உபாய உபேயம் ஒருவனே என்பதையும்
சகல பல ததாம் -ஸமஸ்த பல ப்ரதாதாவும் ஒருவனே என்பதையும்
ந்யாஸதோ அந்யாந பேஷாம்–சரணாகதியைத் தவிர்ந்த வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத தன்மையையும்
ப்ராதான் யாத்யம் ஸ –முக்கியமாக இருப்பது முதலான
கிஞ்சித் ப்ரதயதி ஸ -சிலவற்றையும் வெளிப்படுத்து கின்றது

ஏகம்-அவன் ஒருவனே சித்த உபாயம் -பிரபத்தியும் அவனே செய்விக்கிறான் என்ற எண்ணம் வேண்டும்
அப்படி இல்லை யாகில் பிரபத்தியும் சாதன உபாயங்களிலே சேரும்

இத்தால் பிரபத்தியும் உபாயம் அன்று என்றதாயிற்று
பகவான் இடம் நம்மிடத்தில் அனுக்ரஹ புத்தி உண்டாக பிரபத்தி தேவை -அதிகாரி விசேஷணம் மாத்ரமே
நிர் விசேஷ ப்ரஹ்மம் அத்வைத மதமும் நிரஸனம்

சரம ஶ்லோகத்தின் முற்பகுதி அனுவாதம் (நம் நிலைமையை எடுத்துச் சொல்கிறது‌) பின்பகுதி (விதிக்கிறது) கட்டளையாகிறது..

“மாம் ஏகம்”–தேர்த் தட்டில் நிற்கும் கண்ணன் தன் நெஞ்சைத் தொட்டு “மாம்” என்கிறான். வாத்ஸல்யம், கருணை முதலிய எண்ணற்ற கல்யாண குணங்களையுடைய என் ஒருவனையே என்பதை “ஏகம்” என்ற பதம் சொல்கிறது.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் ஒருவனே உபாயமாகவும், உபேயமாகவும் ஆவதை இந்த “ஏகம்”– என்ற பதம் குறிக்கிறது. இதுவே ப்ராப்ய, ப்ராபக ஐக்யம். ப்ரபத்தியைச் செய்யும் சேதனன்
(வேறு உபாயங்கள் செய்யச் சக்தியற்ற) விஷயத்தில் தானே நின்று பலன் தருகிறான்.
எம்பெருமான் ஒருவனே மோக்ஷோபாயன் என்ற உணர்வு ப்ரபன்னனுக்கு அவஶ்யம்.
ப்ரபத்தி ஒரு வ்யாஜமாகி எம்பெருமானின் சீற்றத்தைத் தணித்து சேதனனுக்குப் பலன் தருகிறது. ஆக எம்பெருமான் ஒருவனே ஸித்தோபாயனாயிருந்து மோக்ஷம் தர வல்லவன்.
இதற்கான அதிகார ஸங்க்ரஹ பாசுரம்.
“சாதனமும் நற் பயனும் நானே ஆவன்  சாதகனும் என் வசமாய் என்னைப் பற்றும்* 
சாதனமும் சரண நெறி அன்று உமக்கு சாதனங்கள் இந் நிலைக்கு ஓர் இடையில் நில்லா*
வேதனை சேர் வேறங்கம் இதனில் வேண்டா வேறு எல்லாம் நிற்கும் நிலை நானே நிற்பன்*
தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச் சோகம் தீர் என் உரைத்தான் சூழ்கின்றானே”. (அதி-ஸ 48)

——————

ஸ்வா பீஷ்ட ப்ராப்தி ஹேது ஸ்வயமிஹ புருஷை ஸ்வீக்ருத ஸ்யாத் உபாய
சாஸ்த்ரே லோகே ஸ சித்த ஸ புந ருபயதா சித்த ஸாத்ய ப்ரபேதாத்
சித்த உபாயஸ்து முக்தவ் நிரவதிக தய ஸ்ரீ சக சர்வ சக்தி
ஸாத்ய உபாயஸ்து பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் தத்வ ஸீகார ஸித்த்யை–17-

இஹ –இந்தப் பிரபஞ்சத்திலே
சாஸ்த்ரே–ஸாஸ்த்ரத்திலும்
லோகே ஸ-உலக நடப்பிலும்
சித்த -பழக்கத்தில் இருந்து வருகிறதும்
புருஷை-ஜனங்களாலே
ஸ்வயம் -தானாகவே -பிறர் தூண்டுதல் இல்லாமலேயே
ஸ்வீக்ருத-அங்கீ கரிக்கப் பட்டதுமான
ஸ்வா பீஷ்ட –தனது விருப்பத்தை
ப்ராப்தி-பெறுவதற்கு
ஹேது -காரணம் எதுவோ அதுவே
உபாய-உபாயம் என்று பெயர் பெற்றதாக
ஸ்யாத் –இருக்க வேண்டும்
ஸபுந-அவ்வுபாயம் பின்னேயும்
சித்த ஸாத்ய ப்ரபேதாத்-உபயதயா -ஸித்த ஸாத்ய என்னும் இரண்டு பிரிவால் -இரண்டு விதமாக
முக்தவ்-மோக்ஷ விஷயத்தில்
சித்த உபாயஸ்து –ஸித்த உபாயமானவன்
நிரவதிக தய -அளவில்லாக கருணை கொண்ட
ஸ்ரீ சக சர்வ சக்தி–ஸர்வ வல்லமை யுள்ள ஸ்ரீ மன் நாராயணனே
ஸாத்ய உபாயஸ்து –ஸாத்ய உபாயமோ என்னில்
தத் வஸீகார ஸித்த்யை–அந்த எம்பெருமானை வசமாக்குவதன் பொருட்டு ஏற்பட்டவையான
பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் -பக்தி என்பதும் சரணாகதி என்பதும் தனிப்பட்டவையே -வெவ்வேறானவையே –

உபாயம் என்றால் என்ன?அதன் வகைகள் என்ன?அதனை ஏன் செய்ய வேண்டும் என்பதை இதில் விவரிக்கிறார் ஸ்வாமி.

இவ்வுலகில் சேதநன் ஒரு பலனை அடைய விரும்பிச் செய்யும் க்ரியைக்கு உபாயம் என்று பெயர்  இது ஸித்தோபாயம், ஸாத்யோபாயம் என இரு வகைப் படும். நம்மால் செய்யப் பட வேண்டாத முன்பே உள்ள ஸாதனம் ஸித்தோபாயம்.
நாம் முயன்று செய்வது ஸாத்யோபாயம். உதாரணமாக மரத்தில் பழுத்திருக்கும் பழம் ஸித்தோபாயம்.அதனைச்சென்று பறித்துப் பயனடைதல் ஸாத்யோபாயம்.
கருணையும்,சக்தியுமுள்ள எம்பெருமானே ஸித்தோபாயம்.
அவனை அடைய சேதநன் செய்யும் ப்ரபத்தி ஸாத்யோபாயம்.
பக்தி யோகம்,ப்ரபத்தி என்ற இரண்டுமே ஸாத்யோபாயம்.
இவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்து  எம்பெருமானை வசப்படுத்திக் பெறுகின்ற பலனே மோக்ஷம்.

————–

அத்யந்த அகிஞ்சன அஹம் த்வதப சரணத சந்நி வ்ருத்தோத்ய நாத
த்வத் சேவை காந்த தீ ஸ்யாம் த்வமஸி சரணமித் யத்ய வஸ்யாமி காடம்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் த்வயி நிஹிதபரோ அஸ்ம் யேவமித்யர்ப்பி தாத்மா
யஸ்மை ஸ ந்யஸ்த பார சக்ருதத து சதா ந ப்ரயஸ்யேத் ததர்த்தம்–18–

நாத-ஓ நாதனே
அத்ய-இப்போது
அஹம்-நான்
அத்யந்த அகிஞ்சன -மிகவும் புகல் ஒன்றும் இல்லாதவன்
த்வத் அப சரணத -உனக்கு விரோதம் செய்வதில் இருந்து
சந்நிவ்ருத்த-ஒழிந்தவன்
த்வத் சேவை காந்த தீ -உனக்குப் பிரியம் செய்வதிலேயே நோக்கம் உள்ளவனாக
ஸ்யாம் –இருக்கிறேன்
த்வம் சரணம் அஸி -நீயே உபாயமாக இருக்கிறாய்
இதி யத்ய வஸ்யாமி காடம்-என்று தீர்மானமாக அறுதி இடுகிறேன்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் -நீயே அடியேனை ரக்ஷிப்பவனாக இருக்க வேண்டும்
த்வயி நிஹித பரோ –உன்னிடத்திலேயே சுமையை ஒப்படைத்தவனாக
அஸ்மி –இருக்கிறேன்
ஏவம் இதி -இவ் வண்ணமாக
யர்ப்பி தாத்மா-தன்னை ஒப்புக் கொடுத்தவனான
ஸ –அந்த சரணாகதன்
யஸ்மை –எந்தப் பிரயோஜனத்தின் பொருட்டு
ந்யஸ்த பார –தனது பாரத்தைப் ஒப்புவித்தானோ
ததர்த்தம்-அதற்காக
அத -அதற்குப் பின்
சதா –எக் காலத்திலும் -பயன் பெறும் அளவும் என்றபடி
ந ப்ரயஸ்யேத் –பிரயாசப் படக் கூடியவன் அல்லன்-

ஐந்து அங்கங்களையும் சேரப் பிடித்து அருளிச் செய்கிறார் இதில்
1–கார்ப்பண்யம் –அகிஞ்சன்யன் என்ற எண்ணம் -சரணாகதியை தவிர வேறே உபாயாந்தரங்களில் சக்தன் இல்லாதவன் – பிராப்தி இல்லாதவன்
2–பிரதி கூல்ய வர்ஜனம் -திரு உள்ளம் சேராதவற்றை செய்யாமல் இருக்க வேண்டுமே
3—ஆனுகூல்ய சங்கல்பம் –திரு உள்ளம் உகந்த கைங்கர்யங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமே
4—மஹா விச்வாஸம் –அவனே ரக்ஷகன் -களை கண் மற்று இலேன் -என்னும் உறுதி வேண்டுமே
5—கோப்த்ருத்வ வர்ணம் –நீயே ரஷித்து அருள வேண்டும் என்று ஸ்வீ கரிக்க வேண்டுமே
6—ஆத்ம சமர்ப்பணம் –இதுவே சரணாகதி -மோக்ஷ பலனுக்காக ஒரே தடவை தான் பண்ண வேண்டும் –

பக்தி யோகம் போலே அன்று –

ஸக்ருத் -ஒரு தடவை பர ந்யாஸம் செய்தவன் என்றதால்-பக்தி யோகம் போல் ஆவ்ருத்தி அனுஷ்டானம் இல்லை என்றதாயிற்று
தைத்ரிய உபநிஷத் -தஸ்யை வம் விதுஷ -என்று தொடங்கி புருஷ வித்யையிலே ப்ரபன்னனை யாக ரூபியாகக் காட்டி
யாகத்துக்கு உரிய அங்கங்கள் எல்லாம் இவன் சரீரம் ஜீவன் வாக்கு மார்பு முதலிய அங்கங்களாக நிரூபித்து
ஆயுஷ் காலம் தீக்ஷையாகவும்
மரணம் அவப்ருதம் -யாக பூர்த்தியாகவும் நிரூபித்து உள்ளது –
இந்த ஸ்லோகத்தில் ஆத்ம நிக்ஷேபத்தை அங்கியாகக் கூறி
இனி இவன் நிர்பயன் நிர்பரன்-என்று அருளிச் செய்கிறார்-

ஆறு அங்கங்களுடன் கூடிய  ப்ரபத்தியை ஒரு முறை செய்த பின் ப்ரபன்னன் செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை என இதில் வலியுறுத்துகிறார் ஸ்வாமி.

ப்ரபத்திக்கான ப்ரயோக விதி இங்கு சொல்லப்படுகிறது.
  1. அடியேன் வேறு உபாயத்தைச் செய்யும் சக்தியற்றவன். இதுவே கார்ப்பண்யம் என்னும் அங்கம் .
  2. உன் திருவுள்ளம் உகக்காத செயலில்  ஈடுபடமாட்டேன்.(ப்ராதிகூல்ய வர்ஜனம்)
  3. உன் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யத்தில்  ஈடுபடுவேன் (ஆநுகூல்ய ஸங்கல்பம்)
  4. நீயே என்னைக் காப்பாய் என்ற முழு நம்பிக்கையுடனுள்ளேன்.(மஹா விஶ்வாஸம்)
  5.  நீயே எனக்கு உபாயமாக இருந்து காக்கவேண்டும் (கோப்த்ருத்வ வரணம்)
இவ் விதமாக என் ஸ்வரூபத்தையும், அதனைக் காக்கும் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று ஒரு முறை செய்யும் ப்ரபத்திக்குப் பின் எக் காலத்திலும் இப் ப்ரபன்னன் எம் முயற்சியும் செய்ய வேண்டாம்.
———————

த்யக்த்வ உபாய அநபாயா நபி பரம ஜஹன் மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்
ப்ராயச் சித்தம் ஸ யோக்யம் விகத ருணததிர் த்வந்த்வ வாத்யாம் திதிஷூ
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணான் சத் ஸம்ருத்திம் ஸ யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ் தஸ்ய யத்வாஸ் அப்த வர்க்காத் –19-

உபாயாந் –மோக்ஷ உபாயத்தையும் -நித்ய நைமித்திகங்களையும் ஒழிந்த காம்ய தர்மங்களையும்
அபாயா நபி –பகவத் நிக்ரஹ ஹேதுக்களான அபராதங்களையும்
த்யக்த்வ -விட்டு
பரம் -பிரபத்திக்குப் பின்
மத்யமாம்-முன் சொன்ன உபாயங்களில் சேராத நடுத்தரமான
ஸ்வார்ஹ வ்ருத்திம்-நித்ய கர்ம ரூபமாயும் அதே போல் விட முடியாத நைமித்திக கர்ம ரூபமாயும் இருக்கிற தனது நிலைமைக்கு ஏற்ற செயலையும்
யோக்யம்-ப்ரபன்னனுக்கு உரியதான
ப்ராயச்சித் தம்ஸ புன பிரபத்தி ரூபமான ப்ராயச்சித்தத்யையும்
அஜஹத் -விடாதவனாய்
விகத ருணததிர் -தேவக் கடன் பித்ரு கடன் ரிஷி கடன் -போன்ற கடன்களில் துவக்கு அற்றவனாய்
த்வந்த்வ வாத்யாம் –சீத உஷ்ணம் ஸூக துக்கம் போன்ற த்வந்தங்கள் என்னும் சுழல் காற்றை –
அத்தால் உண்டாகும் பீடையை என்றபடி
திதிஷூ-பொறுத்தவனாய்
அநந்யஸ்-எம்பெருமானை விட்டு மாற்றத்தில் துவக்கு அற்றவனாய்
பரிசரண குணான்-பகவத் கைங்கர்யத்துக்குத் தேவையான கருவிகளை -அதாவது
சந்தனம் -புஷ்பம் முதலிய உப கரணங்களையும்
மற்றும் பல தியாகம் சங்க தியாகம் முதலியவற்றையும்
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் –பகவத் பக்தி -அதற்கு ஏற்ற அறிவு இவற்றின் வளருதலையும்
யுக்தாம்-தனது நிலைக்கு அனுகுணமான
சத் ஸம்ருத்திம் ஸ -சான்றோர்களின் சிறப்பையும்
யாசேத் -அபேக்ஷிக்கக் கடவன்
ததபி-அந்த யாசனையும்
பகவதஸ்-பகவானிடம் இருந்தோ
யத்வாஸ்-அல்லது
தஸ்ய -அந்த பகவானுடைய
ஆப்த வர்க்காத்-பக்தர்களிடம் இருந்தோ
ஸ்யாத் –இருக்க வேணும் –

பிரபன்னன் லோக யாத்திரை இருக்கும் விதம் பற்றி அருளிச் செய்கிறார் இதில் –
1—ஸ்வாரத்தமாக எத்தையும் செய்யாமல் இருக்க வேண்டுமே
2—சாஸ்த்ர ஆஜ்ஜை படியே -க்ருத்ய கரணங்கள் -அக்ருத்ய அகரணங்கள் -செய்து வாழ வேண்டும் –
3—நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம கர்மங்களை செய்தும் காம்ய கர்மாக்களை செய்யாமலும் இருக்க வேண்டுமே
4—பிராமாதிகமாக செய்த தவறுகளுக்கு பிராயச்சித்த பிரபத்தி செய்ய வேண்டும் –
5—சரணாகதனுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் தீரும் -பிரபத்தி தானே சிறந்த தபஸ் -பகவத் ஆராதனம் ஒன்றே குறிக்கோள்

வேத அத்யயனத்தால் ரிஷிகள் கடன் தீரும்
யாகாதிகளால் தேவக்கடன் தீரும்
சந்ததி வ்ருத்தியால் பித்ரு கடன் தீரும்
இவை தீர்ந்த பின்பே உபாசகன் மோக்ஷ மார்க்கத்தில் ஈடுபட வேண்டும்
ப்ரபன்னனுக்கு இந்த தேவை இல்லை –

ஶரணாகதி செய்து முடித்தபின் ஒருவனது அனுஷ்டானங்களை விவரிக்கும் ஶ்லோகம் இது.

ஶரணாகதிக்குப்பின் அதற்கேற்ப தன் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ளுதல் அவஶ்யம்.
1 &2 த்யக்த்வோபாயானபாயாந்—
ப்ரபத்தி செய்து முடித்த ஒருவன் காம்ய பலன்களை அடைவதற்கான கார்யங்களைச் செய்யக்கூடாது. ஶரணாகதிக்கு எதிரான (அபாயம்) பாபமான கார்யங்களை விடவேண்டும். செய்யாதன செய்யோம் என ஆண்டாள் சொல்கிறாள். முக்யமாக பகவத் பாகவதாபசாரம் கூடாது.
3. மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்—
நடுநிலையாக வுள்ள நித்ய கர்மானுஷ்டங்களை ஶ்ரத்தையுடன் செய்ய வேண்டும்.
4. ப்ராயச்சித்தம்ச அஜஹத்–
நம்மையும் மீறி ஏற்படும் தவறுகளுக்கு உரிய  ப்ராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
5. விகத ருண ததி —-
மனிதனுக்கு ஏற்படும் மூன்று கடன்களாகிய தேவ, ரிஷி, பிதுர் கடன்களை முறையே வேள்வி செய்தல், வேதம் கற்றல், விவாஹம் செய்து புத்ர பேறு பெறுதல் மூலமாகத் தீர்க்கலாம் என சாஸ்த்ரம் சொல்கிறது. ஆனால் ப்ரபத்தி செய்தவனுக்கு அவ்வுபாயமே
இக் கடன்களை நீக்கி விடுகின்றது. ப்ரபத்தியின் பெருமையால் அவன் இக் கடன்களிலிருந்து விடுபடுகின்றான். இதனையே
“தேவாதீனாமய மந்ருணதாம் தேஹவத்வேபிவிந்தந்” என்ற தயாஶதக ஶ்லோகத்தில் (49) ஸ்வாமி காட்டுகிறார்.
6. த்வந்த்வ வாத்யாம் திதுக்ஷு: —
ஸுக துக்கங்களாகிய சுழற் காற்றை சகித்துக் கொள்பவனாயிருக்க வேணும். கைங்கர்யத்துக்கு ஸுகத்தையும்,ப்ராரப்தம் கழிய துக்கத்தையும் கருவியாகக் கொள்ள வேண்டும்.
7. பக்தி ஞானாதி வ்ருத்திம்—-
பக்தி, ஞானம், வைராக்யம் வளர வேணும் என்ற எம்பெருமானிடம் ப்ரார்த்திக்க வேண்டும். “பகவன் பக்திமபி ப்ரயச்சமே” என்கிறார் ஆளவந்தார்.
8. பரிசரண குணான் ஸத்ஸம்ருத்திம்ச யுக்தாம்—
சாதுக்களின் சேர்க்கையையும், கைங்கர்யத் துக்கான சாதனங்களின் செழிப்பையும்  தரும்படி எம்பெருமானிடமும்-ஆசார்யனிடமும் ப்ரார்த்திக்க வேணும்.
ஆக இந்த ஸ்தோத்ரமே  பாராயணத்துக்கு உரியதாயினும், பரிபாலனம் செய்ய உதவும் வகையில் உயர்ந்தாயுள்ளது.

——————–

ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷ் வநக குருஜந ப்ரக்ரியா நேமி வ்ருத்தி
ஸ்வார்ஹா நுஜ்ஞாத சேவா விதிஷூ ஸ ஸகேந யாவதிஷ்டம் ப்ரவ்ருத்த
கர்ம பிராரப்த கார்யம் ப்ரபதந மஹிம த்வஸ்த சேஷம் த்விரூபம்பு
க்த்வா ஸ்வாபீஷ்ட காலே விசதி பகவத பாத மூலம் ப்ரபந்ந –20-

ப்ரபந்ந–ப்ரபன்னன்
ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷு -ஆஜ்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்
அநக-குற்றம் அற்ற
குருஜந ப்ரக்ரியா -பெரியோர்களின் அனுஷ்டானத்தை
நேமி வ்ருத்தி-வண்டி வட்டை போல் தொடர்ந்து செல்லுபவனாய்
ஸ்வார்ஹ-தனக்கு உரிய -ப்ரபந்ந நிலைக்கு ஏற்றதான
அநுஜ்ஞாத சேவா –அநுஜ்ஞா கைங்கர்யங்களுடைய
விதிஷூ -அனுஷ்டானம் செய்யும் முறைகளில்
ஸகேந –சக்தி இருக்குமாகில்
யாவதிஷ்டம் -இஷ்டத்தை அனுசரித்து
ப்ரவ்ருத்த–ஊக்கம் கொண்டவனாய்
த்விரூபம்-புண்யம் பாபம் என்ற இரு வகையான
ப்ரபதந மஹிம-ப்ரபத்தியின் மஹிமையால்
த்வஸ்த சேஷம் -அழிந்தது போக மீதியான
கர்ம பிராரப்த கார்யம் -பயன் கொடுக்காத தொடங்கிய செய் வினையை
புக்த்வா -அனுபவித்து
ஸ்வாபீஷ்ட காலே –தான் விரும்பிய காலத்திலேயே
விசதி பகவத பாத மூலம் -பகவானுடைய திருவடி நிழலில் புகுகிறான்

பிரபன்னன் சுக துக்கங்களை சமமாக கொண்டு -த்ரிவித தியாகங்கள் -நினைவுடன் பகவத் ஆராதனை ரூபமாக கர்மங்களை செய்து கொண்டு இருப்பான்
தனக்கு பக்தி ஞான வைராக்யங்கள் வளருவதற்கு மட்டுமே பிரார்திப்பான் –
விஷ்வக் சேனர் பெரிய திருவடி திரு வந்த ஆழ்வான் -ஆச்சார்ய குரு பரம்பரை இவர்களை மட்டுமே வணங்கக் கடவன்
பாகவதர் ஸம்ருத்திக்கும் பகவத் ஆராதனை உபகரணங்கள் ஸம்ருத்திக்கும் பிரார்த்திக்கக் கடவன்
1-வர்ணாஸ்ரம கர்மங்களை விடாமல் அனுசந்திக்கக் கடவன் –
2–திவ்ய தேசங்களில் சாத்துப்பொடி புஷ்பங்கள் சமர்ப்பித்து -உத்ஸவாதிகளை நடத்திக் கண்டு களிக்கக் கடவன் –

ப்ரபன்னன் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுவதை இந்த ஶ்லோகம் சொல்கிறது.

உபாயங்களை உபாயமாகச் செய்யாமல் பகவத் ப்ரீத்யர்த்தமாக ஸங்கல்பித்துக்கொண்டு செய்யும்போது பலனும் அவனுக்கே ஸங்கல்பமாகும் வைபவமுண்டு என்கிறார் ஸ்வாமி  தேஶிகன். இதற்கு ஸாத்விக த்யாகம் என்றும் பெயர்.
ப்ரபன்னன் செய்யும் கைங்கர்யம் ஆக்ஞா கைங்கர்யம் அநுக்ஞா கைங்கர்யம் என இருவகைப்படும். ஆக்ஞா கைங்கர்யம் எம்பெருமானிட்ட கட்டளையாக அவனுகப்புக்கு குற்றமற்ற நம் ஆசார்யர்கள் அனுஷ்டித்தபடி வண்டிச் சக்ரமுருளும் வகையில் செய்யவேண்டும். “ஆக்ஞா கைங்கர்ய வ்ருத்திஷூ அநக குருஜன ப்ரக்ரியா நேமி வ்ருத்தி:”-என்கிறார் (ஸ்நானம், சந்த்யாவந்தனம், ஆராதனம், தர்ப்பணம் முதலியன இதிலடங்கும்)
அனுக்ஞா கைங்கர்யம் எம்பெருமானின் கட்டளையல்ல. அவன் அனுமதித்து ஏற்கும் கைங்கர்யம்.
நம்மால் முடிந்ததை விரும்பி ஏற்றுக் செய்யலாம் (புஷ்பம் தொடுத்தல், கோயிலில் கோலமிடுதல், ப்ரதக்ஷிணம் செய்தல் முதலியன இதில் அடங்கும்.)
சேதனனுக்கு ஸஞ்சிதம், ப்ராரப்தம் என இரு கர்மாக்களுண்டு.
பல ஜன்மாக்களாகச் சேர்க்கப்பட்ட பாபக் குவியல்கள்-ஸஞ்சித பாபம்.
அவற்றுள் பலன்கொடுக்க ஆரம்பித்துள்ளது ப்ராரப்த பாபம்.
சேதனன் ஶரணாகதி செய்தவுடன் ஸஞ்சித பாபம் அழிகின்றன. ப்ராரப்த கர்மா இந்த தேகம் விழும் வரை அனுபவித்து முடியும். ஆக புண்ய பாபங்கள் முற்றிலும் கழிந்தவனாய் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுகிறான்.

————–

ஸ்ருத்யா ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ ஸ்வயமிஹ பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ சித்தாம்
ஸ்வாதந்தர்யே பாரதந்தர்யே அப்யநிதர கதிபி சத் பிராஸ்தீய மாநாம்
வேதாந்த சார்ய இத்தம் விவித குரு ஜன க்ரந்த சம்வாத வத்யா
விம்சத்யா ந்யாஸ வித்யாம் வ்யவ் ருணத ஸூதியாம் ஸ்ரேயஸே வேங்கடேச–21-

வேதாந்த சார்ய -வேதாந்த சார்யன் என்ற விருது பெற்ற
வேங்கடேச-வேங்கட நாதன் என்ற கவி
ஸ்ருத்யா –ஸ்ருதியாலும்
ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ –ஸ்ம்ருதி இதிஹாச புராண ஆகமாதிகளாலும்
ஸ்வயமிஹ – நேராகவே நின்று சொன்ன இவ்விஷயமான
பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ -பகவானே அருளிச் செய்த வாக்யத் தொகுதிகளாலும்
சித்தாம்–தீர்மானிக்கப் பெற்ற
ஸ்வாதந்தர்யே -மோக்ஷத்துக்கு தனியே உபாயமாக இருப்பதிலும்
பாரதந்தர்யே -மற்ற ஒன்றில் உள்ளடங்கி இருப்பதிலும்
அநிதர கதிபி -வேறு கதி இல்லாத
சத் –சத்துக்களால்
பிராஸ்தீய மாநாம்-ப்ரகாசப் படுத்தப் பட்டதுமான
ந்யாஸ வித்யாம் –சரணாகதி வித்யையை
இத்தம் விவித -கீழில் சொன்னபடி நாநா விதமான
குரு ஜன க்ரந்த –ஆச்சார்யர்களுடைய ஸ்தோத்ர ரத்னம் கத்ய த்ரயம் முதலான கிரந்தங்களோடே
சம்வாத வத்யா-ஒற்றுமை வாய்ந்த
விம்சத்யா -இந்த 20 ஸ்லோகம் அடங்கிய ந்யாஸ விம்சதி நூலால்
ஸூதியாம்-நற் புத்திக் காரர்களுக்கு
வ்யவ் ருணத ஸ்ரேயஸே -நன்மை யுண்டாகும் பொருட்டு விளக்கினார் –

இஹ, பர சுகங்களை அளிக்கவல்லது இந்த ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரம் என்கிறார் ஸ்வாமி.
வேதத்தாலும் (ஶ்ருத்ய), ஸ்ம்ருதி (ஸ்ம்ருதி ஆதிபி:ச) யாலும், எம்பெருமான் வாக்காலும் (ஸ்வயம் பகவத் வாக்ய வர்க்கை:ச) ந்யாஸத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இவை மிக ஶ்ரேஷ்டமான ப்ரமாணங்கள்.

ஸ்வதந்த்ரமான நிலையிலும் (ஸ்வாதந்த்ர்யே) அங்கமான நிலையிலும் (பாரதந்த்ர்யே அபி) அகிஞ்சனர்களாகிய பெரியோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது இந்த ப்ரபத்தி வித்யை. ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்திலும் ந்யாஸம் விவரிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தாசார்யன் என முடிசூடிய ஸ்வாமி தேஶிகன்
பூர்வாசார்யர்கள் ப்ரபத்தி பற்றி
சொல்லிய விஷயங்களைத் தழுவிய இந்த
ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரத்தை நமக்காக அருளியுள்ளார்.
(உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –நம்மாழ்வார் ) 
(த்வத்பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே–ஆளவந்தார்)
(அஶரண்ய ஶரண்யாம் அனன்ய ஶரண: – பாஷ்யகாரர்)
————–

சம்சார வர்த்த வேக பிரசமந ஸூ பத்ருக் தேசிக ப்ரேஷிதோ அஹம்
ஸந்த்யக்தோ அந்யை ரூபாயைர நுஸித சரி தேஷ் வத்ய சாந்தாபிஸந்தி
நி சங்கஸ் தத்வ த்ருஷ்ட்யா நிரவதிகதயம் ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் த்வாம்
ந்யஸ்த த்வத் பாத பத்மே வரத நிஜ பரம் நிர்பரோ நிர்பயோஸ்மி–22-

ஹே வரத–ஓ வரதனே
அஹம்-அடியேன்
சம்சார ஆவர்த்த வேக –சம்சாரம் என்னும் நீர்ச் சுழலின் வேகத்தை
பிரசமந –அடக்குகின்ற
ஸூ பத்ருக் -ஷேம காரமான கடாக்ஷம் அருளுபவர்களான
நற் கதிக்கு மூல காரணமான கடாக்ஷம் பெற்றவனாய்
தேசிக ப்ரேஷிதோ –ஆச்சார்யர்களால் கடாக்ஷித்து அனுக்ரஹம் பெற்றவனாய்
அந்யைர் உபாயைர் –மற்ற உபாயங்களாலே
ஸந் த்யக்த-நன்றாக விடப்பட்டவனாய்
அநுஸித சரி தேஷு -தகுதி அற்றவைகளான நடத்தைகளால் -அதாவது நிஷித்த காம்ய கர்மங்களில்
சாந்தாபிஸந்தி–கருத்து ஒழிந்தவனாய்
அத்ய –இப்போது -இந்த நிலையில்
தத்வ த்ருஷ்ட்யா–தத்வ ஞானத்தால்
நிஸ் சங்கஸ் -சந்தேகம் அற்றவனாய்
நிரவதிக தயம் –அளவில்லாக் கருணை கொண்ட
த்வாம்-உன்னை
ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் -ரக்ஷிப்பவனாக அடைந்து -அதாவது -என்னை ரக்ஷிக்கக் கடவாய் என்று பிரார்த்தித்து
த்வத் பாத பத்மே -உனது திருவடித் தாமரையில்
நிஜ பரம் ந்யஸ்த -எனது பாரத்தை அடைக்கலம் செய்து
நிர்பரோ நிர்பயோஸ்மி–சுமை கழிந்தவனாய் பயம் அற்றவனாகவும் இருக்கிறேன்

தம்முடைய ஆச்சார்யர் கிருபையால் -தாம் பெற்ற ஞானம் -பக்தி யோகத்தில் சக்தன் அல்லன் -பிரபத்தி ஒன்றே உபாயம்
ஒரு தடவை மட்டுமே பண்ண வேண்டும் -என்றும் -பிரபத்தியின் மகிமைகளையும் அறிந்தமையையும் –
பெரிய பிராட்டியார் பேர் அருளாளன் இடம் சரண் அடைந்தமையையும் -நிர்ப்பரராய் கைங்கர்யங்களிலே கால ஷேபம் செய்து
நிரதிசய ஆனந்தம் இங்கேயே இந்த சரீரத்துடன் பெற்றதை அருளிச் செய்து நிகமிக்கிறார் –

தம்முடைய அனுஷ்டானத்தையே த்ருஷ்டாந்தம் ஆக்கி நிகமிக்கிறார்

இங்கு மிகச் சுருக்கமாக அருளிச் செய்து
ரஹஸ்ய த்ர்ய சாரத்தில் -அர்த்த அனுசந்தான பாகம் என்ற முதல் பாதத்தில் உபோத்கார அதிகாரம் முதல்
ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் வரை -22அதிகாரங்களால் விரிவாக அருளிச் செய்துள்ளார்
அங்கு விலக்கியவற்றையும் ஒரு ஸ்லோகத்தால் சுருக்கி அருளிச் செய்துள்ளார் –

ஏறி எழில் பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி அடிமையில் நம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே —

அவிஸ்ராந்த ஸ்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா
மம ஆவிர்பூயா ஸூ மனஸி முனி சித்தாத்தி ஸூ லபா
மது ஷீர நியாய ஸ்வ குண விபவ ஆசஜ்ஜன கநத்
மஹாநந்த ப்ரஹ்ம அனுபவ பரிவாஹா பஹூ விதா —

ப்ரபன்னன் அனுஸந்திக்க வேண்டிய முறையை ஸ்வாமி அனுஸந்தானம் செய்து காட்டும் ஶ்லோகம் இது.
ஹே பேரருளாளப் பெருமானே!
இந்த ஸம்சாரம் என்ற நீர்சுழலின் வேகத்தைத் தடுக்கவல்ல (ஸம்ஸார வர்த்தக வேக ப்ரஶமன)
ஆசார்யனின் நல்ல கடாக்ஷத்தைப் பெற்றவனாக (ஶுப த்ருக் தேசிக ப்ரேக்ஷித:)
பிற உபாயங்களிலிருந்து விடுபட்ட வனாக (அந்யை: உபாயை: ஸந்த்யக்த:)
தகாத செயல்களில் ஈடுபடாத வனாக (அனுசித சரிதேஷு ஶாந்தாபிஶந்தி:)
பூர்ண விஶ்வாஸத்துடன் தத்வ ஞானத்தால் சந்தேகமின்றி (தத்வ த்ருஷ்ட்யா நிஶ்ஶங்க)
எல்லையற்ற கருணைக்கடலான உன்னை உபாயமாக ப்ரார்த்தித்து
(நிரவதிக தயம் த்வாம் ஸம்ரக்ஷகம் ப்ரார்த்தய)
உன் திருவடித் தாமரையில் என்பரத்தை ஒப்படைத்துவிட்டு
பொறுப்பும் பயமும் நீங்கியவனாக இருக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
(த்வத் பாத பத்மே வரத நிஜபரம் நிர்பரோ நிர்பயோஸ்மி)
மேற்கூறிய விஷயங்களை மோக்ஷத்தை விரும்பும் சேதனர்களாகிய நாம் அநுஸந்தானம் செய்ய வேண்டும் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

இதி ந்யாஸ விம்சதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Ashtaadasa Rahayangal, Desihan | Leave a Comment »

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த முக்த போகா வலீ —

January 25, 2023

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

(வியாக்கியான சக்ரவர்த்தி பரம காருண்யர் -ஆவணி ரோஹிணி கண்ணன் போல் இவரும் –
சங்க நல்லூரில் திரு அவதாரம்
1167 தொடங்கி -95 திரு நக்ஷத்திரங்கள் –1262 வரை
நம்பிள்ளை சிஷ்யர்
யாமுனாச்சார்யர் திருக்குமாரர்-ஆளவந்தார் பெயரே இவர் தந்தைக்கும்
ஸ்ரீ தரன் கடாக்ஷம் எளிதில் கிட்டும் -வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
இவர் சகோதரி திருக் குமாரர் -சுந்தர வரதாச்சார்யர் இயல் பெயர் –அழகிய மணவாள பெருமாள் நாயனார் -சுவீகாரம் –
இவர் பிள்ளை லோகாச்சார்யார் தம்பி அல்ல
பெயரில் குழப்பம் வரக்கூடாது -என்பதால் நாயனார் ஆச்சான் பிள்ளை என்ற பெயர் மாற்றம் செய்தார்கள்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த கிரந்தங்கள் என்று சொல்லுவதால் பெரியவாச்சான் பிள்ளை -நாயனார் ஆச்சான் பிள்ளை இருவருக்கும் பொருந்தும்
இவர் சிஷ்யர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
இவர் சிஷ்யர் -திருமாலை ஆண்டான் வம்சத்தில் வந்த யாமுனாச்சார்யர்- ப்ரமேய ரத்னம் கிரந்தம் முன்பே பார்த்தோம்)

ஸ்ருத் யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்ல ஸத் பகவத் அங்க்ரி புராண பந்தும்
ஞானாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த தனியன்

(வேதப் பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு -மலர வைக்கும் -இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் -தாமரை இணை அடிகள் -பழைய உறவினராய்,-திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
ஞானங்களுக்கு -அதி ராஜம் -பேரரசராய்,
அபய ப்ரத ராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான-பரம காருணிகம்-பெரியவாச்சான் பிள்ளையைப் போலவே
இவரும் பரம காருணிகர் என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

(ஸ்ரீ க்ருஷ்ண த்வைபாயனர் ஆதிகாலத்தில் பாற்கடல் கடைந்து வேதத்தை எடுத்துக் கொடுத்தவர்.
மஹாபாரதம் என்ற அமுதத்தை எடுத்துக் கொடுத்தவர்.
வேத நூல் கடலைக் கடைந்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர அமுதத்தையும் அளித்தவர் –
ஸ்ரீபாஷ்ய மங்கள ஸ்லோகத்தை அனுசந்தித்து ப்ராசார்யன் வாக்கே ஸீதா என்ற அமுதம்.
கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவமான நம்மாழ்வார் 3வது அமுதம்.
நாக்கு என்ற மந்திர பர்வத்தை கடைந்து திருவாய் மொழி என்ற பக்தாம்ருதத்தை கடைந்து கொடுத்தார்.
பாற்கடலில் உள்ள 4 உபநிஷத்துக்களையும் நன்கு மந்திர பூர்வமாக கடைந்து எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த ஸ்வாமி
ஸ்ம்ருதி களுக்கு எல்லாம் பால ஸூரியம் -அவை எல்லாம் ஆனந்தப்படுகிறது.
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் என்றபடி மிதுன சேஷிகளின் திருவடி தாமரைகளுக்கு பழைய உறவினராக இருக்கிறார்.
பலப் பல ஞானாதிகளுக்கு அரசராய் அபய வரதராஜன். பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரர்
அடியேனுக்கு ஆச்சார்யனாய் இருந்தவரை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.)

அபய ப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாம முடைய அப் பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

அபய ப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத் ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

(அபயப்ரத பாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய்,
எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை
இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

அஸ்மஜ் ஜநக் காருணய ஸுதாஸந்துஷி தாத்மவான் |
கரோமி சரமோபாய நிர்ணயம் மத்பிதா யதா ||

அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

(பக்தி உழவனின் உபகார பரம்பரைகள் -அவற்றால் பெரும் பேற்றை விளக்கும்

இரவு கழிந்து பகல் ஆரம்பிக்கும் முன் இடைப்பட்ட பிராயஸ் சந்தி காலம் -இருள் தொலைந்தது மட்டும் –
அஞ்ஞானம் தொலைந்து
நித்ய பகவத் அனுபவம் கிட்டாத போது
கூவிக் கொள்ளும் காலம் குருகாதோ
முமுஷு -இவன் -முக்தன் ஆவதற்கு முன்
ஸம்ஸாரிகள் -பத்தாத்மாக்கள் –
முமுஷுவுக்கு ஸஹ வாசம் சம்பாஷணம் ஸஹ போஜனம் த்யாஜ்ய உபா தேயங்கள் நடைமுறைகள் பல கிரந்தங்கள் சொல்லும்
ஸ்ரீ கீதை அருளிச் செயல்கள் ரஹஸ்ய த்ரயங்கள் இவற்றை விவரிக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தில் உத்க்ராந்தி விளக்கும் பாதம் – பிரயாணம் கதி பற்றி பாதம் -அங்கு சென்ற பின்பு கிடைக்கும் அனுபவம்
சாம்யா பத்தி -ஸாலோக்யம் ஸாமீப்யம் -ஸாரூப்யம் -ஸாயுஜ்யம் -பலவும் உண்டே)

(ஒவ்வொன்றுமே நிரதிசய அனுபவம் தானே -முக்தானாம் போக ஆவலீ -அனுபவ வரிசைகளை விளக்கும் கிரந்தம்
இனிமையான பரம போக்யம் –
பேற்றுக்குத் தவரிக்கப் பண்ணும்
அர்ச்சிராதி கதி கிரந்தம் போலே இதுவும்)

இவரும் சங்க நல்லூரில் 1192 திரு அவதாரம்-இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்
ஞான வர்ணவம்
தத்வ த்ரய விவரணம்
அணுக்த புருஷகாரஸ் ச சமர்த்தனம்
சரம உபாய நிர்ணயம்
சதுஸ் ஸ்லோகி பாஷ்யம்
தத்வ ஸங்க்ரஹம்
பரம ரஹஸ்ய த்ரயம்
முக்த போகா வலீ

(பரந்த ரஹஸ்யம் -மாணிக்க மாலை -இரண்டும்
நாயனார் ஆச்சான் பிள்ளை இவர் குமாரர் அருளிச் செய்தவையே – காஞ்சி ஸ்வாமிகள்
இவரே -தான் என்பர் -புத்தூர் ஸ்வாமிகள் பெரியவாச்சான் பிள்ளை – )

இவர் சிஷ்யர் பரம்பரை

வாதி கேசரி மணவாள ஜீயர்
பரகால தாசர்
ஸ்ரீ ரெங்காச்சார்யார் -(இவருக்கு சிஷ்யருக்கு சிஷ்யர் ஆதி வண் சடகோப ஜீயர்)

இந்த கிரந்தம் சிறு வயதிலே எழுதி தந்தை இடம் காட்டியதாக ஐதிகம் உண்டாம்
எனக்கு சரமத்திலே பிறந்த ஞானம் உனக்கு பிரதமத்திலே உண்டாயிற்று
இளைய வயசில் -ஆச்சார்ய விஷய ஞானம் உனக்கு பகவத் விஷயத்தில் உண்டானதே என்று
ஆனாலும் ஸ்ரீ வைஷ்ணத்வம் என்னிடம் கற்றுக் கொள் என்றாராம்

அர்ச்சிராதி கதி நான்கு பிரகரணங்கள் போல்
1-சம்சாரத்தில் படும் பாடு முதலில் -ஸம்ஸாரம் ரோகம் அறிந்து தானே போகம் ரசிக்கும்
2-உத்க்ராந்தி-உத் கிரமணம் -அடுத்து -கிளம்புவது
3-அர்ச்சிராதி கதி மூன்றாவது
4-போக விவரணம் அங்கு சென்று அனுபவிப்பதை
இது ஒரே நூலாக -பிரிவுகளைக் காட்டாமல் -கத்யமாகவே உள்ளது

—————

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருத்வீ ந நக்ஷத்ராணி(மஹா உபநிஷத்)
(ஸத் ஏவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லா அன்று-ஏகாகீ ந ரமேத-திரிபாதி விபூதியில் உண்டது உருக்காட்டாதே – –சம்சாரிகள் பக்கலிலே குடி போய் )

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 
குன்றம் போல் மணிமாடம் நீடு*   திருக் குருகூர் அதனுள்,* 
நின்ற ஆதிப் பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. 

மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரத் ஏவ ஏகீ பவதி(ஸூ பால உபநிஷத் )

(பிருத்வீ அப்பிலே தொடக்கி -ஆகாசம் அஹங்காரத்தில் மஹான் அவ்யக்தத்தில் சேர்ந்து
அது அக்ஷரத்தில் -அது தமஸ்ஸில் -அது ப்ரஹ்மத்துடன் சேர்ந்தே இருக்கும்
ஐந்து நிலைகள் -மஹான் தொடங்கி–அவ்யக்தம் -அக்ஷரம் -விபக்த தமஸ் -அவிபக்த தமஸ்
விதை -முதல் அவிபக்த தமஸ் -பூதலுத்துக்குள் –
மேல் மண்ணில் இருந்து வெளியில் வர தயார் விபக்த தமஸ்
அடுத்து அக்ஷரம் -தண்ணீரை உறிஞ்சி பெருத்து வெடிக்கத் தயார் நிலை –
நான்காவது -பெருத்து வெடித்த நிலை
முளை விட்டது மஹான் -இதுவே பிரதம தத்வம் -தத்வ த்ரய வியாக்யானத்தில் பார்த்துள்ளோம் -)

தம ஆஸீத் தமஸா கூடம் அக்ரே

(ஸூஷ்ம ப்ரக்ருதி மட்டுமே -அஞ்ஞானம் மூடி -மொத்த ஆத்ம சமஷ்டியும் உள்ளே-ஜடமாய் ஒட்டிக் கொண்டு சிக்கிக் கொண்டு இருக்கும்)

நாஸத் ஆஸீத் (ந அஸத் ஆஸீத் ந ஸத் ஆஸீத் )-என்கிறபடியே

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்–ஆச்சார்ய ஹ்ருதயம் -1-)

கரண களேபர விதுரராய் –அசித் அவிசேஷிதராய் -தன் பக்கலிலே சுவறிக் (ஒடுங்கிக் )கிடந்த ஸம்ஸாரி சேதனரரைப் பார்த்து
ஸூரிகளோபாதி ஸதா பஸ்யந்தி பண்ணி ஆனந்த நிர் பரராகைக்கு இட்டுப் பிறந்த இச் சேதனர் இறகு ஒடிந்த பக்ஷி போலே
கரண களேபரங்களை இழந்து போக மோக்ஷ ஸூன்யராய் இங்கனே கிலேசிக்க ஒண்ணாது என்று தயாமான மநாவாய்
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வ மேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தா பாதாதி ஸம்யுதா -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )என்று
தன் திருவடிகளிலே அபிமுகீ கரித்துக் கரை மரம் சேருகைக்காகத் தத் உப கரணங்களான கரண களேபரங்களை ஈஸ்வரன் கொடுக்க

(முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்று)

(தத் விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : திவீவ சக்ஷூராததம் தத் விப்ராஸோ விபந்யவோ )
(த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் – இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் – கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய்
முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –
விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்—ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-381-
(ஜிஹ்வே கேசவன் கீர்த்திதம் –முகுந்த மாலை)
அவற்றைக் கொண்டு

1-ஸ்வே தேஹ போஷண பரர் ஆவாரும்
2-இந்திரியங்களுக்கு இரை தேடி இடுகையிலே யத்னம் பண்ணுவாரும்
3-பர ஹிம்ஸையிலே விநியோகம் கொள்ளுவாரும்
4-தேவதாந்தரங்களுக்கு இழி தொழில் செய்வாரும்
5-பகவத் பாகவத நிந்தைக்கு பரிகரம் ஆக்குவாரும்
6-ஸ்வரூப அநனுரூபமான (பொருந்தாத )ஷூத்ர புருஷார்த்தங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுவாரும்
7-முமூர்ஷு க்களாய் அபேத ப்ரவ்ருத்தர் ஆவாரும்(முமூர்ஷு–ம்ருதும் இச்சை- இறக்க இச்சைப்பட்டு – அத்தை நோக்கியே போவான் -அபதம் தப்பான பாதை)
8-விதவ அலங்கார கல்பமான கைவல்யத்திலே யத்னம் பண்ணுவாருமாய்

இப்படி அந்ய பரராய்ப் போருகிற ஸம்ஸாரிகள்(தங்களையும் மறந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் )நடுவே
இச் சேதனரோட்டை நிருபாதிக ஸம்பந்தமே ஹேதுவாக
நெடுநாள் ஸ்ருஷ்டிப்பது(உன்னி உன்னி உலகம் படைத்து–சோம்பாது )
அவதரிப்பதாய்(மன்னிடை யோனிகள் தோறும் பிறந்தும் காண கில்லா )
இவை படுகிற நோவைக் கண்டு -ப்ருசம் பவதி துக்கித (ஸ்ரீ ராமாயணம் )–என்று திரு உள்ளம் நோவு பட்டுப் போந்த(அவஜா நந்தி மாம் மூடா )

(வ்யஸநேஷ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித : உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி )
ஈஸ்வரனுடைய பாக்ய வைபவத்தாலே

(நமக்கு அனுக்ரஹம் கிட்டி மோக்ஷம் இச்சை வருவது இதனாலேயே -கோர மா தவம் செய்தனன் கொல்
பொருப்பிடையே நின்றும் –நீர் வேண்டா -நானே பண்ணுகிறேன்

பொருப்பிடையே நின்றும்*  புனல் குளித்தும்,*  ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* – விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை*  மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால்,* 
அஃகாவே தீ வினைகள் ஆய்ந்து.)

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தாநாம் கஸ்சித் மாம் வேத்தி தத்வத –ஸ்ரீ கீதை -7-3-என்று
எங்கேனும் ஒருவன் பராக் அர்த்தங்களிலே (வெளி விஷயங்களிலே )பரகு பரகு என்கை தவிர்ந்து
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து வாடினேன் -என்கிறபடியே
த்யாஜ்ய உபா தேயங்களுக்கு நிர்ணாயக ப்ரமாணமான தத் ஸ்வரூப யாதாத்ம்ய (ஆச்சார்ய பர்யந்தம் யாதாத்ம்ய-யதா வஸ்து ஸ்திதி )நிரூபணத்திலே இழிந்து(பர ஸ்வரூபம் இத்யாதி அர்த்த பஞ்சக யாதாத்ம்ய ஞானம் அறிந்து )

(மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—ஸ்ரீ கீதை-7.3৷৷

சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்)

(வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (1-1-1)

தேஹ இந்த்ரிய மன ப்ராண தீப்ய (தீ புத்தி )அந்யனாய்
ஞான ஆனந்த லஷணனாய் (அடையாளம் )
ஞான குணகனாய்(ஞான மயமாயும் ஞானம் உடையவனாயும் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டுமே உண்டே )
நித்யத்வாதி குண யுக்தனான
ஆத்மாவை

யஸ்யாஸ்மி ந அந்தர்யேமி-(யஜுர்வேதம் நான் யாருடையவனோ அவனை தாண்ட மாட்டேன் )
தாஸ பூத (ஸ்வத ஸர்வே -இதைத் தவிர வேறே அடையாளம் இல்லை -பந்தத்திலும் மோக்ஷத்திலும் -ஹாரீத ஸ்ம்ருதி)
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய(கோசலேந்த்ரஸ்ய -ராமாயணம் )
பரவா நஸ்மி -என்கிறபடியே
பகவத் அநந்யார்ஹ சேஷ பூதன் (தீர்ந்த அடிமை) என்று அறிந்து

(தாஸபூதா: ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்!!
இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர்.
அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.)

(தீர்த்தனுக்கு அற்றபின் மற்றுஓர் சரணில்லை என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும் வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களேஎன்று பூசித்து நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.–7-10-11)

அத்தாலே
தேஹ ஆத்ம அபிமானம் என்ன
ஸ்வ ஸ்வா தந்தர்யம் என்ன
அந்ய சேஷத்வம் என்ன
ப்ரயோஜனாந்தர சம்பந்தம் என்ன
இவை இத்தனையும் குடநீர் வழிந்து

விஷய விஷ தர வ்ரஜ (சப்தாதி ஐந்து தலை பாம்பு சரப்பக் கூட்டம் )வ்யாகுலமாய்
ஜனன மரண சக்ர நக்ர ஆஸ்பதமாய்(முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்)
ஸ்வ பர ஸ்வரூப திரேதாந கரமாய்(கத்யத்ரயம் )
விபரீத விருத்த ப்ரவர்த்தகமாய்
அநந்த க்லேச பாஜனமான ஸம்ஸாரத்தில் பயமும்

(விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே
அகதிர் அசரணோ பவாப்தவ் லுடந் வரத சரணம் இத்யஹம் த்வாம் வ்ருணே –ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -82-

வரத
விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே –சப்தாதி விஷயங்கள் ஆகிற சர்ப்ப சமூகங்களால் நிபிடமாயும்
ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே –பிறப்பு இறப்பு ஆகிற முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்
பவாப்தவ் லுடந் அஹம் –சம்சாரக் கடலில் புரளா நின்ற அடியேன்
அகதிர் அசரணோ இதி –உபேயாந்த்ர ஸூந்யன் உபாயாந்தர ஸூந்யன் என்கிற காரணங்களால்
த்வாம் சரணம் வ்ருணே -உன்னை சரணம் புகுகின்றேன்)

(இரண்டு விபூதியும் நித்யம் -நித்ய விபூதி ஸ்வரூபத்தாலே நித்யம் -லீலா விபூதி ஸ்வ பாவத்தால் நித்யம் -ப்ரவாஹத்வேன நித்யம்
இங்கும் கைங்கர்யம் நித்தியமாக இருந்து இருந்தால் அங்கே போக த்வரிக்க வேண்டாம்)

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -அஞ்ஞானமும் அது அடியாக தீய அனுஷ்டானங்களும் –
அது அடியாக ப்ராக்ருதத்தில் அழுந்தி இருப்பதால்-சம்சாரத்தில் பயமும் பரம ப்ராப்யத்தில் ருசியும் வர வேண்டுமே )

ஸம்ஸாரத்தில் பயமும் –நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான பகவத் கைங்கர்யம்
ஆகிற பரம ப்ராப்யத்தில் ருசியையும் யுடையனாய் (அள்ள அள்ளக் குறையாத -ஸூகம் ஒன்றே -ஆஹ்லாத கரம் )

(கீழ் எல்லாம் ஞான தசை -இனி சாதன தசை-அறிந்த பின் அனுஷ்டானம் வேண்டுமே )

அஸ் ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான பரம ப்ராப்ய ஸித்திக்கு
தர்மேண பாபம் அப நுததி(மஹா நாராயண உப நிஷத் )
யஜ்ஜேன தானேந தபஸா நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-(ப்ரஹதாரண்யம்உப நிஷத்  )என்கிறபடியே

த்ரிவித பரி த்யாக பூர்வகமாக அனுஷ்டிதமான கர்ம யோகத்தாலே(நெஞ்சை நிலை நிருத்த கர்ம யோகம் வேண்டுமே )
த்ருதே பாதாதி வோதகம் -(தண்ணீர் ஒழுகிப் போமா போல் )என்று
துருத்தி மூக்குப் போலே ஞான ப்ரசரண த்வாரமான நெஞ்சை ( பட்டி மேயாதபடி )அடைத்து
அந்யதா ஞான விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸூக்களை
மனனகம் மலமறக் கழுவி -என்கிறபடியே
மறுவல் இடாதபடி ஷீணமாக்கி

(பிராகிருத சரீரம் என்பதால் -பட்டி மேயாதபடி அடைத்ததுக்கும் மேல் -மிஸ்ர ஸத்வம் மாற்றி –
பெருமாளை நோக்கித் திருப்ப ஸூத்த ஸத்வம் வேண்டுமே
தீ மனம் கெடுத்ததுக்கும் மேல்
மருவித் தொழும் மனமும் வேண்டுமே-மூன்றினில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று)

அம் மிஸ்ர ஸத்வத்தை அறுத்து
ஸத்வாத் சஞ்சாயதே ஞானம்
ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகம் -என்று
யதாவத் ஞான சாதனமான அந்த ஸத்வத்தாலே
ஆகார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி (சாந்தோக்யம் )-என்கிறபடியே
சாஷாத்கார பர்யந்தையான அநவரத பாவனை பிறந்து அது

(யதாவத் ஞான-உள்ளபடி அறிய ஸத்வம் –
ஞான அனுதயம் அறியாமலே போகவும் –
குணங்களையும் பொருளையும் மாற்றி அறியவும்-அந்யதா விபரீத ஞானம் வர ரஜஸ் தமஸ்ஸூக்கள்)

(ஞானம் பக்தியாக மாற அன்பு -ஸ்நேஹம் -காதல் -வேட்க்கை வேண்டுமே-த்ருவா ஸ்ம்ருதி தானே த்யானம் –
வேதனம் த்யானம் -அறிகை தியானம்-சிந்தனை – இடைவீடு இல்லாமல் தொடர்ந்து-அநு த்யானம் -இத்துடன் அன்பு ஸ்நேஹம் கலந்து )

ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -என்கிற
பக்தி ரூபா பன்னையாய்
அதனுடைய விபாக தசையாய்
அந்த பக்தி -பகவத் ஸம்ஸ்லேஷ வியோக ஏக ஸூக துக்கனாம் படி பண்ணக் கடவதாய்

(பரபக்தி நிலை -அவன் இடம் மட்டுமே -கூடி இருந்தால் சுகம் பிரிந்தால் துக்கம்)

யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய(நாயமாத்மா ஸ்ருதி -முண்டகம் -காட்டவே காணலாம் )
பக்த்யா மாம் அபி ஜாநாதி-(18-55)
பக்த்யா த்வந் அந்யயா சக்ய–(11-54)
மத் பக்திம் லபதே பராம் –(18-54)என்று
சாதன தயா ஸாஸ்த்ர ஸித்தமான பரபக்தியை ஸாதித்தல்

(நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ
ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன ।
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴ய-
ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் -முண்டக॥ 3॥)

(இந்த மூன்றில் கீழ் இரண்டும் கீதா ஸ்லோகங்கள் ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் உண்டே-)

(ஸ்ரீ சரணாகதி கத்யம்–சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பரபக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் )

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே பக்தி ஒன்றாலே முடியும் –

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.)

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.)

அங்கன் அன்றிக்கே
ஸாத்யமான ஸகல ஸாதனங்களையும் ஸ அங்கமாகவும் ஸ வாசனமாகவும் விட்டு
துஷ்கரத்வாதி தோஷ தூரமாய்
ஸ்வரூப அநு ரூபமாய்
(கண்ணனே சாதனம் என்பதால் )வாத்சல்யாதி குண விசிஷ்டமாய்
நித்ய அநபாயினியான பிராட்டியையும் ஸஹ காரியாக ஸஹியாத படி நிரபேஷமாய்
தஸ்மாந் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதி ரிக்தம் தபஸ் ஸ்ருதம்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்
பாவநஸ் ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸித்தமான ஸித்த ஸாதனத்தை ஸ்வீ கரித்தல் செய்து

(யாஜ்ஞிகீயமான உபநிஷத்தில்
சத்யம் தபோ தம சமோ தானம் தம ப்ரஜனனம் அக்னய
அக்னி ஹோத்ரம் யஜ்ஞோ மானசம் நயாசோ த்வாதச -என்று
ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாக சொல்லிப் போந்து-12 தபஸ்ஸுக்கள் நியாஸமே உயர்ந்தது –
ப்ரபத்தியும் கண்ணனும் ஒன்றே என்று கொண்டு அருளிச் செய்கிறார்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்-ஒரே வேற்றுமையில் இங்கு
பக்தியே கண்ணன் சொல்ல மாட்டோம் -அவன் இடம் பக்தி பண்ணி அடைய வேண்டும்)

———-

(சாதனங்களை அருளிச் செய்து மேல் கர்மங்கள் போவதை பற்றி விளக்கி அருள்கிறார்)

(பக்திக்கு சஞ்சித கர்மங்களை அவன் தொலைத்து பிராரப்த கர்மாக்களை நாமே தொலைக்க வேண்டும்
ப்ரபத்திக்கு இரண்டுமே அவனே தொலைத்து சரீர அவசானத்தில் பேறு-கால விளம்பம் இதுக்கு இல்லையே )

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் -தீயில் இட்ட பஞ்சு போலவும் தாமரை இலைத் தண்ணீர் போலவும்)

ஆக இப்படி ஸித்த ஸாத்ய ரூபமான சாதன த்வய அவ லம்பநத்தாலே
ஏவம் விதி பாபம் கர்ம நஸ் லிஷ்யதே
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே தூ நுதே
ஸூஹ்ருதஸ் ஸாது க்ருத்யாம் த்விஷந்த பாப க்ருத்யாம்
தஸ்ய ப்ரியா ஞாதாயஸ் ஸூ ஹ்ருதம் உப யந்தி அப்ரியா துஷ் க்ருதம்
அஸ்ய இவ ரோமாணி விதூய பாபம்(சாந்தோக்யம் )
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று(கீழ் பிரமாணங்கள் பக்திக்கும் இது பிரபத்திக்கும் )
புண்ய பாப ரூபமான பூர்வாகத்தை ஸூ ஹ்ருத்துக்கள் பக்கலிலும் துஷ் க்ருதுகள் பக்கலிலும் பகிர்ந்து ஏறிட்டு
ப்ரமாதிகமாய் (கவனக் குறைவால் ) புகுந்த உத்தராகம் ஈஸ்வரன் திரு உள்ளத்தில் படாமையாலே கழன்று

ஆக
இப்படி பூர்வாக உத்தராகங்களினுடைய
அஸ்லேஷ விஸ்லேஷ ரூபமான விமோசனம் பிறந்து

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் –
தீயில் இட்ட பஞ்சு -அஸ்லேஷ ரூபமான போலவும்
தாமரை இலைத் தண்ணீர் – விஸ்லேஷ ரூபமானபோலவும்)

(ஸ்ரீ பாஷ்யம் நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-ஆவ்ருத்தி முதல் பாதம் –
அடுத்து -இரண்டாம் பாதம் -உத் க்ராந்தி பாதம் -அத்தை இங்கு விளக்கி அருள்கிறார்-கதி பாதம் முக்தி பாதம் அடுத்தவை )

(4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இல்லை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்

ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாதுஎன்றும் –ஒட்டாதவற்றையும்

சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்

ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே)

போகே ந த்விதரே ஷபயித்வாதா ஸம் பத்யதே -என்கிறபடியே
ஆரப்த கர்ம அவசானத்திலே யாதல்(ஜன்மாந்த ஸஹஸ்ரங்கள் ஆகலாம் பக்தனுக்கு )
யன் மரணம் தத வப்ருதா(அவப்ருத ஸ்நானம் போல் )
மரணமானால் (மரணம் ஆக்கி அல்ல )–என்கிறபடியே
ஆரப்த சரீர அவசானத்திலே யாதல்(இந்த சரீரம் முடிவிலேயே )

இம் முமுஷு சேதனன் இஸ் ஸரீரத்தை விட்டுப் போம் போது
அதி ப்ரபுத்தோ மாமேவ அவலோகயந் (ஸ்ரீ வைகுண்ட கத்யம் )-என்கிறபடி தான் ஈஸ்வரன் என்று இருத்தல்
காஷ்ட பாஷாணா ஸந் நிபம் அஹம் ஸ்மராமி மத் பக்தம் என்றும்
மாம் அநு ஸ்மரணம் ப்ராப்ய -என்கிறபடியே

(அஹம் மனு -நானே ஈஸ்வரன் ப்ரஹ்லாதன் போல் -பக்தி நிஷ்டன்
அவனே நினைவில் வைத்து -பேற்றுக்கு நினைவு அவன் உபாயம்
இரண்டையும் அருளிச் செய்கிறார் )

(வேதாந்தங்களில் மகா பதமாக சொல்லுகிற பக்தியைக் காட்டில் இப் பிரபத்திக்கு ஏற்றம் என் என்னில்
அது 1-அதி க்ருதாதிகாரமுமாய்
2-துஷ்கரமுமாய்
3-விளம்ப பல பிரதமுமாய்
4-பிரமாத சம்பாவனை யுள்ளதுமாய்
5-சாத்யமுமாய்
6-ஸ்வரூப அநனு ரூபமுமாய்
7-பிராப்யத்துக்கு விசத்ருசமுமாய் இருக்கும் -8-அந்திம ஸ்ம்ருதி வேண்டும்

இதுவோ என்றால்
அதுக்கு எதிர்த் தட்டாம்படி 1-சர்வாதிகாரமுமாய்
2-ஸூ கரமுமாய்
3-அவிளம்ப பல பிரதமுமாய்
4-பிரமாத சம்பாவனையும் இன்றிக்கே–5-சித்தமுமாய்
6-ஸ்வரூப அனுரூபமுமாய் -7-பிராப்யத்துக்கு சத்ருசமுமாய் இருக்கும் -8-அஹம் ஸ்மராமி -அந்திம ஸ்ம்ருதி வேண்டாம் )

ஸ்திதே மனஸி ஸூஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

ஈஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாதல் செய்து
அஸ்ய ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங் மனஸி ஸம் பத்யதே(ஹஸ்தே புஸ்தகம் போல் ஸம்யோகம் -வாக்கு மனசில் சம்யோகம் -லயம் )
இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யதே மாநை
அத ஏவ ஸர்வாண்யநு(4-2-2) –என்கிறபடியே வாக் இந்த்ரியமும் அல்லாத கரணங்களும் லயித்து(ஸம்யோக மாத்திரம் )

(பின் ஆகாரம் கார்யம் அழிந்து முன் காரண அவஸ்தையில் ஒன்றுதல்
மண் -நீராகி -அக்னியாகி லயம்
மனஸ் வாக்கு சம்யோகம் தானே கார்ய காரண பாவம் இல்லையே)

மந ப்ராணே
தந் மந ப்ராண உத்தராத் -(4-2-3)என்று
ஸர்வ இந்த்ரிய ஸம் யுதமான மநஸ்ஸூ ப்ராணன் பக்கலிலே ஏகீ பவித்து
ஸோத் யஷே(சஹா அத்யக்ஷ ஜீவன் இடம் )
ஏவமேவம மா மாத்மாநம் அ ந்தகாலே ஸர்வே ப்ராணா அபி ஸமா யந்தி -என்கிறபடியே

பிராணன் ஜீவனோடே கூடி
ப்ராணஸ் தேஜஸி -லீயந்தி என்று
ஜீவ ஸம் யுக்தனான பிராணன் பூத ஸூஷ்மத்திலே லயித்து
பூத ஸூஷ்மம்- தான்
தேஜஸ் பரஸ்யாம் தேவதாயாம் (4-2-1 விஷய வாக்கியம் )-என்கிறபடியே
பர தேவதை பக்கலிலே ஏகீ பவிக்கும் –

(பாற்கடல் கடைந்து கிருஷ்ணன் -அமுதமும் பெண் அமுதமும்
மதி மந்தான-வியாசர் மஹா பாரதம் -க்ருஷ்ண த்வைபாயனர்
பாராசூரர் வாக் அமுதம் -உபநிஷத் பாற்கடல்-நூல் கடல் -ப்ரஹ்ம ஸூத்ரம்
மறை பாற் கடலை -திரு நாவின் மந்திரத்தால் கடைந்து பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல்
இங்கும் நூல் பாற்கடல் -உபநிஷத் கடைந்து -கௌஷீகம் சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் கட உபநிஷத்துக்கள் சாரம் –
ஸ்ம்ருதி கீதை ராமாயணம் சாரார்த்தம் -தாமரைக்கு இளம் ஸூர்யன்-கிருஷ்ண ஸூனு -அபய பிரத ராஜ புத்திரர் )

ஆக இப்படி சாதாரணமான உத் க்ராந்தி யுண்டாய்(பொதுவான உத் கிராந்தி இது வரை
அர்ச்சிராதி கதிக்கும் தூ மாதி கதிக்கும் இப்படியே )
சதஞ்ச ஏகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸாம் மூர்த்தாநம் அபி நிஸ் ஸ்ருதைகா தய ஊர்த்வம் ஆயந் அம்ருதத்வ மேதி -(கட உபநிஷத்-அம்ருதம் -ப்ரஹ்மம் அறிந்து ம்ருத்யு தாண்டி அம்ருதத்வம் ஆப் நோதி )
ஊர்த்வம் ஏகா ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா ஸூர்ய மண்டலம் -ப்ரஹ்ம லோகம் அதி க்ரம்ய தேந யாதி பராம் கதிம்-(தேந -ஸூர்ய கிரணங்களால் )-என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
ஹ்ருதய கமல அவ லம்பிகளான (பற்றுக் கொம்பாகக் கொண்டு )நூற்றொரு நாடிகளில் தலையில்
ஊர்த்வ கபால வலம்பியான நூற்றோராம் நாடியாலே(ஸூஷ்ம்நா நாடி மூலம் அர்ச்சிராதி கதி 4-2-16)

ததோ கோக்ர ஜ்வலநம்(4-2-16-)

(ததோ கோக அக்ர ஜ்வலநம் தத் பிரகாசித த்வாரோ வித்யா சாமர்த்யாத் தத் தேஷ கஸ் யநு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்த அநு க்ருஹீதஸ் ஸதாதி கயா

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச -அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான ஸூ ஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்
இந்த சிறப்பான உத்க்ராந்தி கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ் ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது மிகவும் நுண்ணியமான நாடி –
ய நு ஸ்ம்ருதி-அர்ச்சிராதி மார்க்க சிந்தனையால் அவனுக்கு ப்ரீதி -சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-)

தத் ப்ரகாஸி தத்வாரோ வித்யா ஸாமர்த்யாத் தச் சேஷகத்யனு ஸ்ம்ருதி யோகாச் ச ஹார்த்த அநு க்ருஹீதஸ் ஸதாதி கயா -என்கிறபடியே
இவன் தன்னை ஆஸ்ரயிக்கையினாலும்
அர்ச்சிராதி கதி சிந்தனையினாலும்
அதி ப்ரீதனாய் –
ஹ்ருதய குஹா கதனான ஈஸ்வரனுடைய ப்ரஸாத விசேஷத்தாலே ப்ரகாசித த்வாரனாய்க் கொண்டு
ய ஏஷ ஸ்தந இவா லம்பதே சேந்த்ர யோநி (தைத்ரியம்-இந்த்ர யோநி-ஆத்ம ஸ்தானம் )-என்று
முலை போலே நாலுகிற ஹ்ருதய குஹையினின்றும் புறப்பட்டு உச்சந்தலை அளவும் சென்று

வ்ய போஹ்ய ஸீர்ஷ கபாலே -என்று தலை யோட்டைப் பிட்டு(ரந்தரம் -தலை ஓட்டை )
அத யத்ரைத தஸ்மாச் சரீரா துத் க்ரமாதி(அத ஏதத் ரத அஸ்மாச் சரீர உத் க்ரமாதி)
அத தைரேவ ரஸ்மிபிர் ஊர்த்வமா க்ரமதே(அத தைரேவ ரஸ்மிபிர் ஊர்த்வம் அக்ரமதே)
ரஸ்ம்ய அநு சாரீ (4-2-17)-என்கிறபடியே
அந்நாடியோடே பிடையுண்டு கிடக்கிற (பிணைக்கப்பட்டு உள்ள ஜீவன் )ஆதித்ய ரஸ்மி விசேஷத்தாலே
அஸ்யைவ ச உப பத்தே ரூஷ்மா (4-2-11-)
ஸூஷ்மம் ப்ராமண தஸ்ச ததா உப லப்தோ –(4-2-9)என்கிறபடியே
ஊஷ்ம லக்ஷணையான ஸூஷ்ம ப்ரக்ருதியோடே புறப்பட்டு போம் போது

(ஸூஷ்மம் ப்ராமண தஸ்ச ததா உப லப்தோ –(4-2-9)

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்)

(4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்)

(அஸ்யைவ ச உப பத்தே ரூஷ்மா (4-2-11-)

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால் ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –)

(ரஸ்ம்ய அநு சாரீ (4-2-17)

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் சூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் -இரவிலும் சூர்ய கிரணங்கள் உண்டே
நாடிகளுக்கும் சூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு -சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –)

அர்ச்சிஷ மேவ அபி ஸம் பந்தே
அர்ச்சிஷ அஹ அஹ்ந ஆபூர்ய மாண பஷம் ஆபூர்ய மாண பஷாத் யாந் ஷட்  உதங்கேதி மா ஸாம் ஸ்தாந்
மா ஸேப்யஸ் ஸம் வத்சரம் ஸம்வத்ஸர ஆதித்யம் ஆதித்யாத் சந்த்ர மஸம் சந்த்ர மஸோ வித்யுதம்
தத் புருஷோ

அமாநவ ஸ ஏதாந் ப்ரஹ்ம கமயதீத் (வித்யுதம் தத் புருஷோ-இவனே கூட்டிச் செல்கிறான் )யேஷ தேவ பதோ ப்ரஹ்ம பத ஏதேந ப்ரதிபத்ய மாநா இமம் மாநவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே நா வர்த்தந்த இதி

ஸ ஏதம் தேவ யாநம் பந்தாநம் ஆ பத்ய அக்நி லோகம் ஆகச்சதி ஸ வாயு லோகம் ஸ வருண லோகம் ஸ ஆதித்ய லோகம்
ச இந்த்ர லோகம் ச ப்ரஜாபதி லோகம் ஸ ப்ரஹ்ம லோகம்(கௌஷீதகி -அக்னி லோகம் வார்த்தையில்அர்ச்சிஸ் -ஆதித்ய சந்த்ர லோகம் விட்டு வருண லோகம் )

(12 லோகங்கள் மூன்று உபநிஷத்துக்களும் வேறே வேறே பேராகவும் சொல்லும்
சாந்தோக்யம் கௌஷீதகம் கட-இவற்றை சமன்வயப்படுத்து நம் போவார்கள் காட்டி அருளி உள்ளார்

முதல் ஆறும் -அர்ச்சிஸ் -பகல் -ஆபூர்ய மாண பஷம்-(சுக்ல பக்ஷம்)- உத்தராயணம்- சம்வத்சரம் -வாயு
7-ஸூர்ய 8- சந்திரன்-9-மின்னல்-10-வருண 11 இந்திர 12ப்ரஜாபதி

ஸர்வ சாகா நியாயம்
தத்வ சார ஸ்லோகம் -நடாதூர் அம்மாள் வாயு வருண இந்திர பிரஜாபதி லோகம்
ஆதி வாஹிஹா அதிகரணம் இத்தை விவரிக்கும் –)

அக்னிர் ஜ்யோதிர் அஹஸ் ஸூக்லஷ் ஷண் மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா –என்று

(அக்நிர் ஜ்யோதிர் அஹஸ் ஷுக்ல ஷண் மாஸா உத்தராயணம்.–
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா—৷৷8.24৷৷)

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே பிரதமத்திலே
அர்ச்சிஸ் என்றும்
அஹஸ் என்றும்
ஸூக்ல பக்ஷம் என்றும்
உத்தராயணம் என்றும்
சம்வத்சரம் என்றும்
இவ்வோ சப்தங்களால் சொல்லப்படுகிற தத் தத் அபிமான தேவதா பூதரான ஆதி வாஹகரும்(தாண்டி அழைத்து போகிறவர்கள் )

அதுக்கு மேலே
வாயும்  அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்(4-3-2)என்று
வாயு வாக்யனான ஆதி வாஹகனும்
இவ்வளவிலே தம் தாமுடைய எல்லை அளவிலே வழி விட
ஆதித்யன் அளவிலே வந்து

(4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும் ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது
வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது
சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் -தேவ லோகம் என்பதும் வாயுவைக் குறிக்கும்
வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும் யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ -வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-)

அநந்தரம்
பித்வா ஸூர்ய மண்டலம்
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -(சிறிய திருமடல்)என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தைக் கீண்டு
அவ்வருகே புறப்பட்டு சந்திரன் அளவும் சென்று

(ஆரா வமுதம் அங்கு எய்தி -இங்கு -அளப்பரிய ஆரமித்து அரங்க மேய அந்தணன் இருக்க எதனால்
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போக வேண்டும் -திருமங்கை ஆழ்வார்)

இதுக்கு அவ்வருகே வித்யுத் அபிமானியான அமானவன் அளவும் சென்று அவனோடே கூடி
தடித் அதி வருணஸ் சம்பந்தாத்-(4-3-3) என்று மேலே(தடித் -மின்னல் -இதுக்கும் மேல் மூன்று லோகங்கள் உண்டே )
வருண இந்த்ர பிரஜாபதி லோகங்களிலே
தத் தத் அபிமான தேவதைகளாலே ஸத் க்ருதானாய்க் கொண்டு போய்

(4-3-3-தடித்- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் -கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது
ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல்
வருணன் வாயுவின் பின்னாலா மின்னலின் பின்னாலா
மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் தொடர்பு உள்ளதால்
அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் -அமானவனுக்கும் ப்ரஹ்மதுக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –)

அண்டம் பி நத்தி அவ்யக்தம் பி நத்தி தமோ பி நத்தி – என்றபடி
அண்ட கபாலத்தைப் பிட்டு -அவ்வருகே புறப்பட்டு
வாரி(நீர்) -வஹ்நி -அநல -அநில(காற்று) -ஆகாச -மஹத் அஹங்கார ரூபமாய்
ஒன்றுக்கு ஓன்று தசோத்தரமான ஆவரணங்களைக் கடந்து
இத்தனையும் தனக்குள் வாயிலே அடங்கி

அநந்தஸ்ய ந தஸ்ய அந்தஸ் சங்க்யாநம் வாபி வித்யதே -என்றும்
முடிவில் பெரும் பாழ் -என்றும் சொல்லுகிற
ப்ரவ்ருத்தி தத்வத்தைக் கடந்து

ஆக இப்படி சிறை என்கிற கூட்டத்தின் நின்றும் புறப்பட்டுப் போமா போலே
இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையைக் கழித்து
ஒருபடி வெளிநாடு கண்டு

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-11-)

(காட்டி நீ கரந்து உமிழும்*  நிலம் நீர் தீ விசும்பு கால்,* 
ஈட்டி நீ வைத்து அமைத்த*  இமையோர் வாழ் தனி முட்டைக்,* 
கோட்டையினில் கழித்து*  என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,* 
கூட்டு அரிய திருவடிக்கள்*  எஞ்ஞான்று கூட்டுதியே?   )
(ஸ்ரீ வைகுண்ட கத்யம்–சூரணை-3-அவதாரிகை –

இவ் உபாயம் கை வந்தவன் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்
பிராபிக்கும் நித்ய விபூதியையும்
அங்கு உள்ள பிரகாரங்களையும் சொல்லுகிறது -மேல் –
சதுரத் தஸ புவ நாத்மகம் -இத்யாதியாலே –

சதுர தஸ புவ நாத்மகம்
அண்டம்
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம்
சமஸ்தம்
கார்ய காரண ஜாதம்
அதீத்ய –

சதுர தஸ புவ நாத்மகம் –
பூம் யந்தரி ஷாதி யான உபரிதன லோகங்கள் ஏழும்
அதல விதலாதிகள் ஆகிற பாதாள லோகங்கள் ஏழும் ஆகிற பதினாலு லோகங்களு மாய் இருக்கை –
இப்படி இருக்கிறது தான் எது என்னில்
அண்டம் –
இப்படிப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணமாய் இருக்கிற அண்டம் –
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம் –
உத்தர உத்தர தஸ குணிதம்
ஓர் ஆவரணத்துக்கு ஓர் ஆவரணம் தஸ குணிதமாய்
தஸ குணிதமான அவ் வாரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் தஸ குணிதமாய்
இப்படி உகத க்ரமத்தாலே உத்தர உத்தர தஸ குணிதமான ஏழு ஆவரணங்களை உடைத்தாய் –
ஆவரண ச்ப்தகம் ஆவது -வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை –
சமஸ்தம் –
ஓர் அண்டம் இ றே இப்படி இருப்பது
அண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராணய யுதானி ச
ஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27-என்றும்
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் -எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதி யன்ற புறவண்டத்தாய் எனதாவி
உள் மீதாடி உருக்காட்டாதே ஒழிப்பாயோ -திருவாய் மொழி -6-9-5- என்கிறபடியே
ஈத்ருசமான சமஸ்த லோகங்களையும்
கார்ய காரண ஜாதம் –
ஒன்றினாலே உத்பாத்யமாயும் -ஒன்றை உண்டாக்க கடவதாயும் உள்ள வஸ்து சமூஹத்தை
அதீத்ய –
ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்த்தி நோஅர்ஜூன
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே -ஸ்ரீ கீதை -8-16-என்கிறபடியே
கர்ம சேஷம் உள்ளவர்கள் மீண்டு திரியும் படியான ப்ராக்ருத மண்டலத்தை
அபுநா வ்ருத்தி  ப்ராப்தியாகக் கழித்து)

————-

(நித்ய விபூதி த்ரிபாத் விபூதி -மேல் எல்லை இல்லாதது -லீலா விபூதி கீழ் எல்லை இல்லாதது -)

மூன்று மடங்கு என்பது அல்ல -மஹத் -மிகப் பெரியது என்று சொல்ல வந்ததே-

சதுர் புவனம் கீழ் ஏழு மேல் ஏழு -ஸத்ய லோகம் -மேலே இருப்பதையே
ஏழாவது மேல் லோகம்-அர்ச்சிராதி கதியில் 12 வைத்து ஸ்தானம்

50 கோடி யோஜனை தூரம் கீழ் உள்ள லோகம் தொடங்கி ஸத்ய லோகம் உள்ளது
பரணி மேல் இருப்பது போல் பரமபதம் இருக்கும் தூரம் பார்க்கும் பொழுது

மஹான் அஹங்காரம் -கார்யமாகவும் காரணமாகவும் இருக்கும்-பிரக்ருதி கார்யமாகவும் இருக்கும்
14 லோகங்களும் காரணமாகவே இருக்கும்-இவை எல்லாம் தாண்டி மேல் ஆவரணங்கள் -10 மடங்கு பெரிய
வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை சமஸ்தம் –
அதுக்கும் மேல் முடிவில் -பெரும் பாழ் -சூழ்ந்து அகன்று ஆழ்ந்த -ஆறு பரிமாணங்கள் தாண்டிப் போகிறான்

(பிராகிருத வாசனை கழியாமல் போகும் இந்த ஜீவனுக்குத் தான் ஸத் காரம் பண்ணி ஆதி வாஹிகர்கள் மேல் கூட்டிச் செல்கிறார்கள்
அர்ச்சிராதி கதி செல்பவன் எல்லாரும் திரும்ப வருதல் இல்லை
ப்ரம்மா அங்கு செல்ல் அர்ச்சிராதி கதியில் போக வேண்டிய அவஸ்யம் இல்லையே)

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் -உபதேசரத்னமாலை -74-

இரண்டு தடவை அரிசி களைவது போல் -விரஜை நீராடி -ஸூஷ்ம சரீரம் தொலைந்து -ருசி வாசனைகள் கழிந்து –
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -அப்ராக்ருத சரீரம் பெறுவது -மூன்று கார்யங்கள் -த்ரய சம்ப்ரதாயம் -அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -)

(போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே—-ஆர்த்தி பிரபந்தம் -20-)

(இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–ஆர்த்தி பிரபந்தம்-23-)

———

ஸ ஆ கச்சதி விரஜாம் நதீம் -என்கிறபடி
ஸம்ஸார பரம பதங்களுக்கு எல்லையாய்
அம்ருத மயமாய்
விரஜாக்யையான ஆற்றங்கரை அளவிலே வந்தவாறே

சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுஸ்ய தூத்வா ஸரீரம் (ஸூஷ்ம சரீரம் துரந்து )-என்கிறபடியே
ராஹு முகத்துக்கு இரையான சந்த்ரன் ராஹு முகத்தின் நின்றும் புறப்பட்டுப் போமாப் போலே
நெடுநாள் ஸ்வரூபம் கரை ஏறும்படி விழுங்கி விடாய்த்துக் கிடக்கிற  ஸூஷ்மப் ப்ரக்ருதியை விட்டுப் புறப்பட்டவாறே
கரிப் பானையாலே கவிழ்த்து ப்ரபா  ப்ரஸரம் இன்றியிலே திரோஹித ஸ்வரூபமான தீபம்
அதைத் தகர்த்தவாறே கண்ட இடம் எங்கும் தன் ஒளியாமோ பாதி இவனுக்கும்

பரம் ஜோதிர்  உப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே(சாந்தோக்யம் 8-12-2)
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபைதி -(முண்டகம் -அபஹத பாப்மத்வாதிகள் அஷ்ட குணங்களில் ஸாம்யம் )என்று
ஞான ஆனந்த ஸ்வரூப லக்ஷணமாய்(நானே ஞானி -நானே ஞானம் -தர்மி ஞானமும் தர்ம பூத ஞானமும் உண்டே )
ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்(அஸ்திர பூஷண அத்யாயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சத்தில் இறுதி அத்யாயம் )
ஸ்ரீ ஸ்தனம் போலேயும்
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹாஸ்பதமாம் படி
அத்யந்த விலக்ஷண ஸ்வரூபமும்
ஸ்வரூப ஆஸ்ரயமான அபஹத பாப்மத்வாதி குணங்களும்(விளங்கும் -உருவாவது இல்லை )

(நாராயண பர ப்ரஹ்ம -நாராயண பர மாத்மா -நாராயண பரஞ்சோதி-நாராயண பராயணம்)

(அபஹத பாப்ம–விஜூர-விம்ருத்யு -விசோக -விஜிகித்சா -அபிப்யாஸ – ஸத்ய காம -ஸத்ய ஸங்கல்ப)

(கௌஸ்துபம் ஸ்வஸ்தி தீபம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ வத்சம் பிரகிருதிக்கு பிரதி நிதி -கௌஸ்துபம் ஆத்ம சமூகத்துக்கு பிரதி நிதி)

யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரஷாலநாத் மணே
தோஷ ப்ரஹரணாத் ந ஞான ஆத்மந க்ரியதே ததா
யதா உதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம்
ஸ தேவ நீயதே வ்யக்ம் அஸதஸ் ஸம்பவ குத
ததா ஹேய குண த்வம்சாத் அவபோதா தயோ குணா
ப்ரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே –(ஸ்ரீவிஷ்ணு தர்மம்-ஸுநக பகவான் அருளிச் செய்தது ) என்கிறபடியே

(உதபாந கரணாத்)கிணற்றைக் கல்லினால் உள் வாயிலே கிடக்கிற ஜல ஆகாசங்கள் (ஜலாம்பரம்)ப்ரகாசிக்குமா போலேயும்
மல யோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை நேர் சாணையிலே இட்டுத் தெளியக் கடைந்தால்
தன்னடையே தத் கதமான ஒளி பிரகாசிக்குமா போலேயும்
இவனுக்கும் தன்னடையே பிரகாசிக்கும் –

முக்தாத்மா ஸ்வபாவ ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-

(அஸதஸ் ஸம்பவ குத -இல்லாததால் இருந்து ஸத் உண்டாக்காதே -ஸத் கார்யவாதம்)

(இயற்க்கை விளங்கப் பெறுகிறான் -உண்டாகப் பெறுகிறான் அல்ல -அதனால் ஸ்வேந பத பிரயோகம்)

(4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —

சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-)

(4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —

விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது – ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்பு காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டதுஎன்று உறுதி படக் கூறியது –)

ஆக இப்படி ப்ரகாசித ஸ்வரூப ஸ்வ பாவனாய்(ஞான ஆனந்தம் ஸ்வரூபம் -அபஹத பாப்மத்வாதிகள் ஸ்வ பாவம் )
ஸர்வத பாணி பதம் தத் ஸர்வ தோஷி ஸிரோ முகம்
ஸர்வதஸ் ஸ்ருதி மல் லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-(ஸ்ரீ கீதை -13-14ஸ்லோகம் )என்கிறபடியே
ஸ்வ ஸங்கல்ப மாத்ரத்தாலேயே கர சரணாதி அவயவங்களால் கொள்ளும் கார்யங்களைக் கொள்ளும் ஷமனாகையாலே
தாம் மனஸைவ அத்யாதி -(மனஸ்ஸாலேயே கடந்து விடுகிறான் )-என்கிறபடியே
அவ் விரஜையாக்யையான சரித்தை (ஆற்றை)ஸ்வ ஸங்கல்பத்தாலே கடந்து

(ஸர்வத பாணி பாதம் தத் ஸர்வ தோக்ஷி ஸிரோமுகம்–
ஸர்வத ஸ்ருதி மல்லோகே ஸர்வ மாவ்ருத்ய திஷ்டதி–৷৷13.14৷৷

அந்த சுத்தமான ஆத்ம வஸ்து எங்கும் கையும் காலும் இருந்தால் என்ன செய்யலாமோ அதைச் செய்ய வல்லது –
எங்கும் கண் தலை வாய் இவற்றின் காரியம் செய்யும் -எங்கும் செவியின் காரியத்தைச் செய்யும் –யாவற்றையும் சூழ்ந்து உள்ளது)

ஸ அத் வநபாரம் ஆப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்(கட உபநிஷத்-தேர் குதிரை கடிவாளம் -இத்யாதி )
ஸதா பஸ்யந்தி ஸூரயா
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத் வை பஸ்யந்தி ஸூரய -என்கிறபடியே
ப்ராப்ய பூமியாக ஸ்ருதமாய்

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதயோம் அக்னி (கட உபநிஷத்-முண்டகமும் சொல்லும் )-என்றும்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந-என்கிறபடியே(கதிர் ஆயிரம் கலந்தால் ஒத்த )
ப்ராக்ருத தேஜோ பதார்த்தங்களை கத்யோதக் கல்பமாக்கக் கடவதாய்(கத்யோத-மின் மின் பூச்சி-இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ )

காலம் ஸ பசதே தத்ர ந காலஸ் தத்ர வை ப்ரபு -என்கிறபடியே -அகால கால்யமாய்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந -என்று
அபரிமித புண்ய ஸாத்யமான பிரம்ம லோகாதிகளை யமன் குழியாக்கும் வை லக்ஷண்யத்தை யுடையதாய்
தமஸ பரஸ் தாத்
ரஜஸ பராகே
தெளி விசும்பு(9-7-5-கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லையே )
நலம் அந்த மில்லதோர் நாடு(2-8-4) -என்கிறபடியே
அநந்த க்லேச பாஜனமான இருள் தரும் மா ஞாலத்துக்கு எதிர் தட்டாய்
பரம யோகி வாங் மனஸா அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வ பாவமான பரம பதத்திலே

(தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-)

(புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-)

(மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் என்னும்)

அநேக ஜென்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜன்
மோஹாச் ஸ்ரமம் ப்ரயாதோசவ் வாஸநா ரேணு குண்டித -என்றும்
பெரும் காற்றில் தூறல் போலே அநாதி காலம் கர்ம வஸ்யனாய்
ஸ்ருஷ்டனாவது
ஸம் ஹ்ருதனாவது
ப்ரஹ்ம லோகஸ்தனாவது
பாதாளஸ்தனாவது
தேவனாவது
ஸ்தாவரமாவது
ஸ்த்ரீ யாவது
புருஷனாவது
ப்ராஹ்மணானாவது
சண்டாளனாவது
பாலனாவது
வ்ருத்தனாவதாய்

ஒரு நிலையிலே நிற்கப் பெறாதவனாய்
காலிலே சீலை கட்டி ஜங்காலனாய்
கண்டிடம் எங்கும் தட்டித் திரிந்தவன்
மீட்டுத் தட்ட வேண்டாத படி

அத் வந பாரமான தேசத்திலே வந்து புகுந்து
ஸா லோக்யம் பெற்று(இங்கும் ஸா லோக்யம் இருந்தாலும் ஞானம் மழுங்கியதால் அறியாமல் இருக்கிறோம் -அங்கே தானே உணர்கிறோம் )

1-ப்ராக்ருதமாய்
2-குண த்ரயாத்மகமாய்
3-மாம்ஸாஸ்ருகாதி மயமாய்
4-பரிணாம ஆஸ்பதமாய்
5-கர்ம ஹேதுகமாய்
6-அஸ்வா தீனமாய்
7-ஸ்வரூப திரோதான ஆகரமாய்
8-துக்க அனுபவ உப கரணமான உடம்பின் கையிலே அநாதி காலம் பட்டுப் போந்த பழிப்பு அடையத் தீரும் படி

1-அப்ராக்ருதமாய்
2-ஸூத்த சத்வாத்மகமாய்(தூ மணி துவளில் மணி இல்லையே )
3-பஞ்ச உப நிஷத் மயமாய்
4-ஏக ரூபமாய்
5-பகவத் ப்ரஸாத ஹேதுகமாய்
6-ஸ்வ அதீனமாய்(ச ஏகதா பவதி கொள்ளலாமே )
7-ஸ்வரூப ப்ரகாசகமாய்
8-கைங்கர்ய ஸூப அனுபவ உப கரணமாய்
திவ்ய மங்கள விக்ரஹ ஸ ஜாதீயமான உடம்பைப் பெற்று
இப்படி லப்த ஸ்வரூபனாய்

———–

(திவ்யம் -அப்ராக்ருதம்-பஞ்ச உபநிஷத் -சக்தி-மயம் – பரமேஷ்டி புமான் விஸ்வக நிவ்ருதக சர்வக
மங்கள-கல்யாணம் ஸூ பாஸ்ரயம் -பரம பத த்யான சோபானம் -படிக்கட்டுக்கள் திருவடி தொடங்கி
ஸாலோக்யம்- ஸாம்யா பத்தி -ஸா ரூப்யம்- ஸாமீப்யம்- ஸாயுஜ்யம் -நித்ய யுக்தன் -உடன் சேர்ந்து அனுபவிப்பது
காவேரி விரஜை -சந்த்ர புஷ்கரணி போல் இங்கும்

ஜரம் மதீயம் ஸரஸ்-புஷ் கரணி -அஸ்வத்த மரம் –ஸ்தல நதி ஸ்தல தீர்த்தம் ஸ்தல வ்ருஷம் ஸ்ரீ ரெங்கம் ப்ரத்யக்ஷமாக நாம் காண்கிறோம்

கௌஷீகி பர்யங்க வித்யை போல் சூழ் விசும்பு -வந்தவர் எதிர் கொள்ள -தர்சனத்தால் காட்டி அருளினார் அன்றோ
பராவரர்கள் சூட்டும் ஆத்ம அலங்காரம் -சூடகமே போல் )

ஜரம் மதீயம் ஸரஸ் -என்கிற திவ்ய ஸரஸ்ஸிலே அஸ்வத்தளவும் சென்றவாறே
தம் பஞ்ச சத அந்யப் சரஸஸ் ப்ரதிதா வந்தி சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சன ஹஸ்தா
சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாஸோ ஹஸ்தா சதம் பணா ஹஸ்தா (சிகை அலங்காரம் )என்கிறபடி
ஐந் நூறு அப்சரஸ் ஸூக்கள் வந்து எதிர் கொள்ள
பர்த்ரு க்ரஹத்துக்கு வரும் பெண்களை அவ்வூர்க் குளக்கரையிலே குளிப்பாட்டி
ஒப்பித்துக் கொண்டு போகும் பந்துக்களைப் போலே
தம் ப்ரஹ்மா அலங்காரேணால் அங்குர்வந்தி -(கௌஷீகி)என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாத னுக்கு சத்ருஸமாக ஒப்பித்துக் கொண்டு போம் போது(சூடகமே இத்யாதி ஆத்ம பூஷணங்கள் பராவரர் சூட்டும் )

தம் ப்ரஹ்ம கந்த ப்ரவசதி
தம் ப்ரஹ்ம ரஸ ப்ரவசதி
தம் ப்ரஹ்ம தேஜஸ் ப்ரவசதி
ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ
பரஞ்சோதி -என்கிறபடியே -சர்வேஸ்வரனுடைய
திவ்ய பரிமளத்தையும்-திவ்ய போக்யதையும்
திவ்ய தேஜஸ்ஸையும் யுடையவனாய்

(ஸூர்ய கோடி ப்ரதீகாச -என்கிறபடியே -அநேகம் ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
கண் கொண்டு காண ஒண்ணாத படி நிரவதிக தேஜஸ்சை யுடையனாய்-கந்தம் மூக்குக்கு -ரஸம் நாவுக்கு -தேஜஸ் கண்ணுக்கு )

பரம பதத்தில் நாட்டு எல்லையைக் கழித்து
ஸ ஆ கச்ச தீந்த்ர பிரஜாபதி த்வார கோபவ் (காவலர்கள் )-என்றும்
கொடி யணி நெடும் தோள் கோபுரம் குறுகினர் -என்கிறபடி
அபராஜிதா ப்ரஹ்மண என்று
அபராஜி தாக்யையான (பேர் பெற்ற )ப்ரஹ்ம புரத் த்வார கோபுரத்து அளவும் வந்து

(யோஜூம் அசக்த்யா -அபராஜி தாக்யையா-ஜெயிக்க முடியாத -அயோத்யா)

அநாதி காலம் இந்திரியங்கள் கையிலும்
மஹதாதிகள் கையிலும்
எளிவரவு பட்டுப் போந்த இவன்
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே
தேசாந்திர கதனான ராஜ புத்ரன் வரும் போது ராஜ பரிகரம் புறப்பட்டு தம் தாம் தரத்திலே எதிர் கொள்ளுமா போலே
த்ரிபாத் விபூதியில் உள்ள ஸூரி வர்க்கம் அடைய
வ மஞ்சியாக -(அமஞ்சி -கூலி இல்லாத வேலை-காதலுடன் விரும்பி செய்தல் )திரண்டு எதிர் கொள்ள
அவர்களோடே கூட ஒரு பெரிய திரு நாள் போலே ஸ ஸம் ப்ரமமாக உள்ளே புக்கு
ராஜ மார்க்கத்தாலே போய்ப் ப்ரஹ்ம வேஸ்மத்திலே சென்று

(ஓடுவார் -விழுவார் உகந்து ஆலிப்பார் -நாடுவார் நம்பிரான் எங்குற்றார் என்பார் -என்றும் –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்பராய்க் கொண்டு
பெரிய ஆர்ப்பரத்தைப் பண்ணித் திரள் திரளாகப் புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய
ஆனந்த களகளத்தைக் கண்டு அனுபவித்துக் கொண்டு –பெரிய ப்ரீதியோடு போகிற வளவிலே)

(காவேரிக்கு உள்பட்ட நாடு ஸ்ரீ ரெங்கம் -சப்த பிரகாரம் -சந்த்ர புஷ்கரணி -புன்னை மரம் ஆஸ்தானம் -திரு மா மணி மண்டபம்
காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேசய  பிரத்யட்சம் பரமம் பதம்”

விமாநம் பிரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம்
ஸ்ரீ ரங்க சாயி பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:

பர வாஸூ தேவன் -விமானத்தில் சம பிரதானம்- வ்யூஹ ஸுஹார்த்தம் பெரிய பெருமாள் பிரதானம்)

(சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்ய தேசே ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்க ராஜம் பஜேஹம் —1)

தீர்த்தம் -காவேரி விராஜா
ஐரம் வாதம் -சந்த்ர புஷ்கரணி
காலஜ்யம் பட்டணம் -ஸ்ரீ ரெங்கம்
அபராஜிதா -சப்த பிரகாரம் நடுவில் கோயில்

அஸ்வத்த வ்ருஷம் வெளியில் பார்த்தோம்  உள்ளே -இல்லியம் வ்ருஷம் போல் புன்னை மரம்
விபு ஸபா ஸ்தலம் -அழகிய மணவாளன் திரு மண்டபம்
விஷக்ஷணம்-வேதிகை -பெரிய மேடை முத்துப் பந்தல் மேல் கட்டி -சேர பாண்டியன்
அமிதவ்ஜஸம் பர்யங்கம்-அமிதவ்ஜஸ் பர்யங்கம்
திருக் கார்த்திகை -ஸாஸனம் -ஸாஸ்வதம் -புறப்பட்டு -கார்த்திகை கார்த்திகை அன்று எழுந்து அருளி -திருக்கைத்தலம் ஸேவை
செங்கழுநீர் திரு வாசல் மண்டபம்-சஹஸ்ர தூணா மண்டபம் அங்கு ஆயிரம் கால் மண்டபம் இங்கு
ஏதத் த்ரைலோக்ய நிர்மாணம் -பிராண ஸம்ஹார காரணம் -ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்கநாத ஸாஸனம் சாஸ்வதம் பரம் ஸ்லோகம் சொல்லி
அழகிய மணவாளன் திரு மண்டபம்-சேர பாண்டியன் ஸிம்ஹாஸனம் சுத்த பாண்டியன் முத்துப்பந்தல் –
ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டின் கீழ் -கலியன் பாட்டை கேளா நிற்கச் செய்தே
நான்கும் போல் இங்கும் பட்டணம் வீடு சபா ஸ்தலம் வேதிகை பள்ளிக்கட்டு)

ஸ ஆ கச்சதி விசஷணாம் ஆ சந்தீம் –என்றும்
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே (சாந்தோக்யம் -8-14-1–ப்ரஹ்ம ஸூத்ரம் -4-3-13)–என்கிறபடி
மணி மயமாய்
அநேகம் ஆயிரம் மாணிக்க ஸ்தம்பங்களாலே
அநேகம் ஆயிரம் ஆதித்ய சங்கங்களை உருக்கி வார்த்து வகுத்தால் போலே
அபரிதமான தேஜஸ்ஸை யுடையதாய்

அவ்வாதித்ய சங்கம் போலே எரிந்து இருக்கை அன்றியிலே
புக்காரை அடைய ஆனந்த நிர்ப்பரர் ஆக்கும்படி ஆனந்த மயமாய்
மஹா அவகாசமான திரு மா மணி மண்டபத்திலே ஏறி

ஸூரி சங்க சங்குலமான நடுவில் நாயக விருத்தியில் சென்று புக்கு(நாயக லக்ஷணம் )
பிரஞ்ஞயா ஹி விபஸ்யதி ஸ ஆகச்ச த்யமிதவ்ஜஸம் பர்யங்கம் சதம் ப்ராணஸ் தஸ்ய பூதம்
சப விஷயச்ச பூர்வவ் பாதவ் -(அமிதவ்ஜஸம்-பர்யங்கத்தின் பெயர் )இத்யாதிகளில் சொல்லுகிற படியே
அநேக தேவதா மயமாய்
அபரிமித விவித விசித்ரித திவ்ய ஸிம்ஹாஸனமாய்

(அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்-சூரணை -176–
அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-)

அதுக்கு மேலே ஆயிரம் தளகமாய்
எப்பொழுதும் ஓக்க அலர்ந்து அழுக்கு அற உருக்கி ஒப்பமிட்ட மேரு போலே
ஓங்கின கர்ணிகை யுடைத்தான திவ்ய கமலமாய்

அதின் மேலே அம்ருத பேந படல பாண்டரனாய்(பேந-நுரை -நெற்றியில் -பணா மண்டலம் -வெள்ளை வெள்ளத்து அரவணை )
ஸ்வ ஸாஹஸ்ர ஸிரோந் யஸ்த ஸ்வஸ்திகா அமல பூஷண(ஸ்வஸ்திகா-துதங்கள் ஆர்த்த )
பணா மணி ஸஹஸ்ரேண யஸ்ஸ வித்யோ தயந்தி ஸ -என்றும்
பண மணி ஸஹஸ்ராட்யம் -என்றும்
பணா மணி வ்ராத மயூக மண்டல ப்ரகாஸ மாநோதர திவ்ய தாமநி(ஸ்தோத்ர ரத்னம் )
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த -என்கிறபடியே
பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே விரிகிற பணா ஸஹஸ்ரங்களில் இள வெய்யில் விளங்குகிற ஆதித்ய நிவஹம் போலே
அம் மண்டலத்தோடே மாளிகையோடே வாசி யறத் தன்னுடைய அருணமாகிற கிரணங்களாலே(மேல்கட்டியாகி)
வழி வார்க்கிற மாணிக்ய மண்டலங்களை யுடையவனாய்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலன்களுக்கு ஏக தாமனாய்
ஸகல கைங்கர்ய ஸாம்ராஜ்ய தீஷிதனான திருவனந்த ஆழ்வானாய்(சென்றால் குடையாம் )

(வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த* வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்* மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை* கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று* என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!)

(கூர்மாதின் திவ்ய லோகான் ததுமணி மண்டவம் தத்தரு சேஷம் தஸ்மின்
தஸ்மின் தர்மாதி பீடம் சதுமரி கமலம் க்ராஹஹ க்ராஹஹநிம்ச
விஷ்ணும் தே விபூஷா ஷினாதே வைனதேயம்
சேநேசத் துவார பாலன் விஷ்ணு முகதான் பிரபத்தியே !!)

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாந பலைக தாமநி |
பணா மணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்ய தாமநி ||–ஶ்லோகம் 39 –

ஆதி சேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணா மணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளி விடும் திரு மடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி யிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப் பட்ட திருவனந்தாழானின் திரு மேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

(அங்கு ஸ்ரீ வைகுண்டநாதன் இருந்த திருக்கோலம் மேல்)

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-)

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு-முதல் திருவந்தாதி )

தஸ்மிந் ப்ரஹ்மாஸ்தே
தஸ்ய உத் சங்கே -என்கிறபடியே
அவன் மடியிலே
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா(காள மேகத்தில் மின்னல் ரேகை )
நீலமுண்ட மின்னன்ன மேனி (மின்னல் மேனி காள மேகம் உண்டால் போல் )-என்கிறபடியே
மஹா மேருவை உருக்கித் தேக்கினால் போலே புற வாய் அடையப் புகர்த்து
அத்தை நீக்கிப் பார்த்தவாறே

(“நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணுபமா…
தஸ்யா ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ பிரம்ம ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட் ”
தைத்திரிய ஆரண்யகத்தில்’ உள்ள ‘நாராயண ஸூக்தம்’

“கரு மேகத்தின் நடுவே திடீரென ஒளி வீசுகின்ற மின்னல் கீற்றைப் போலவும், நெல்லின் முளை போன்று மிகவும் மெல்லியதாகவும்,
பொன்னைப் போன்ற நிறத்துடன், அணுவிலும் நுண்ணியதாகவும், அந்த ஆன்மாவானது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது…..

அந்த சுடரின் நடுவே, இறைவன் பரமாத்வாக, அந்தர்யாமியாக வீற்றிருக்கிறார்…!
அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன்…! அவர் அழிவில்லாதவர்…! ஸ்வயம் பிரகாசத்துடன் விளங்குபவர்…!
தனக்கு ஒப்பாகவோ, மேலாகவோ யாரும் இல்லாதவர்…! ” என்று பொருள்.
வானமாமலை ஸ்ரீ தோத்தாத்திரிநாத பெருமாள் சாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள்.
நீல தோயத மத்யஸ்தா என்பதில் தோயத என்றால் மேகம், ககனம், வானம் என்றெல்லாம் பொருள். அதாவது நீலமேகம்.

பெருமாளை நீலமேகப் பெருமாள் என்று அழைப்பதில் இருக்கும் சுவை அலாதியானது. இந்த நீலமேகம் மலைமாதிரி
அதாவது, அத்ரி மாதிரி இருக்கிறானாம். அதுதான் தோயதாத்ரி இரண்டு சொற்களையும் இப்போது சேர்த்துப் பார்த்தால் .
தோயத+ அத்ரி; அதாவது தோயதாத்ரி என்று வரும். இதைத்தான், எல்லோரும் தோதாத்ரி என்று மாற்றி விட்டார்கள்’)

(இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-)

கண்டார் கண்களை அடைய விரித்து அஞ்ஐனம் எழுதினால் போலே இருண்டு
கரு மாணிக்க மலை மேல் மணித்தடம் தாமரைக் காடுகள் போலே திரு மார்வு வாய் கை கண் யுந்தி காலுடை ஆடைகள் செய்ய பிரான்(8-9)
கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் (திரு நெடும் தாண்டகம் -18)என்கிறபடி
காலமேக நிபாஸ்யாமமான திரு மேனிக்குப் பரபாகம் ஆகும்படி
கண்ட இடம் எங்கும் சிதற அலர்ந்த தாமரைக்காடு போலே சிவந்த கர சரணாதி அவயவ விசேஷங்களாலே
உத் புல்ல பங்கஜ தடாக ஸீதலனாய்(எழுந்து நின்ற தாமரைத் தடாகம் போல் நம் பெருமாள் பட்டர் )
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பவ்வம் மண்டி யுண்டதொரு காளமேகத்தில் கண்ட இடம் எங்கும்
மின் கொடி படர்ந்தால் போல் கிரீட மகுடாதி திவ்ய பூஷிதனாய்

(இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட*
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்-
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!)

யுவா குமாரா
அரும்பினை அலரை (7-10-1)–என்கிறபடியே
அப் பால்யத்தோடே தோள் தீண்டியான யவ்வனத்தை யுடையனாய்
ஸர்வ கந்தா -என்கிற
திவ்ய அங்க பரிமளத்தாலே த்ரிபாத் விபூதியைத் தேக்கி
ஸர்வ ரஸா -என்கிற
ஸர்வ ரஸ சாரஸ்யத்தாலும் ஸூரி சங்கங்களை விஹ்வலராக்கி

ஆதித்யாதி தேஜஸ் பதார்த்தங்களைக் கரிக் கொள்ளி யாக்குகிற தன்னுடைய திவ்ய தேஜஸ்ஸாலே
ஸோபயந் தண்ட காரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா -(ஸ்ரீ ராமாயணம் )என்கிறபடியே
பரமபதத்தை மயில் கழுத்துச் சாயலாக்கி
பொற் குப்பியில் மாணிக்கம் புறம்பு ஒசிந்து காட்டுமா போலே
உள் வாயிலே நிழல் எழுகிற ஞான ஸக்த்யாதி குணங்களையும்

அக் குணங்களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும்
யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
செந்தாமரைத் தடம் கண் -என்று
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைத் தடாகம் போலே
நிரங்குச ஐஸ்வர்யத்தாலும்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலும்-
குதறிச் சிவந்து திருச் செவி அளவும் அலை எறிகிற திருக் கண்களையும்

உள்ளே வெண் பல் இலகு சுடர் என்று -திரு முகத்திலே பால சந்த்ரிகையைச் சொரிகிற மந்த ஸ்மிதத்தையும்
திருக் கழுத்து அடியிலே ஸ்நிக்த நீலமாய் அலை எறிகிற திருக்குழல் கற்றையும்
திரு விளையாடு திண் தோள் (நாச்சியார் 9-3)என்கிறபடியே
பெரிய பிராட்டியார்க்கு லீலா கல்பக உத்யோனமாய்
சார்ங்க ஜ்யாகிண கர்க்க ஸமமான நாலு திருத்தோள்களையும்
இவை தொடக்கமான திவ்ய அவயவ சோபையையும்-(ஸுந்தர்யம் )
ஆ பாத ஸூடம் பெருக்காறு போலே அலை எறிகிற திவ்ய லாவண்ய சிந்துவையையும்

நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் அனுபவித்து அனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம் ஸஸ் சமிந்ததே –என்கிறபடியே
பெரும் கடல் இரைக்குமாப் போலே பெரிய கிளர்த்தியோடே வாயாரப் புகழ்வாரும்
பிணங்கி அமரர் பிதற்றும் குணம்(1-6-4)
கோதில வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் (4-2)-என்கிறபடியே
ஸ்வ அநு பூதமான குணங்களினுடைய தாரதம்யத்தைச் சொல்லி சரஸ விவாத கோலா ஹலம் பண்ணுவாரும்
ஸ ஸம் ப்ரஹ்ம ந்ருத்தம் பண்ணுவாருமாய்
நித்ய ஸூரிகள் திரளாக மொய்த்துக் கொண்டு அப்பெரிய போக ஸம் ப்ரமங்களைப் பண்ணும்
இவர்களுடைய ஒவ்வொரு குண சீகரங்களிலே குமிழ் நீருண்டு(குண சாகரத்தில் திவலையிலே ஆழ்ந்து )

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

—————

(சம்சார தோஷங்கள் -உத் கிராந்தி -அர்ச்சிராதி கதி -முக்த போகம் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்-அம்ருத சாகராந்த நிபக்நம் –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -பரம புருஷார்த்தம் -நான்கு பகுதிகள்)

(வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-)

தான் நிஸ் தரங்க ஜலதி போலே
அவாக்யீ அநாதர -என்கிறபடியே

ஸ்வ அனுபவ ஆனந்த வைபவத்தாலே அவிக்ருதனாய்(ஸ்தைமித்ய)
நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு பன்னெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பான் மதி ஏந்தி
ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -என்கிறபடியே

(ஸ்வரூபம் நினைத்து ஆனந்திக்கும் நித்யோதித தசை —
ஸ்வ பாவம் குணங்கள் நினைத்து ஆனந்திக்கும் தசை சாந்தோதித தசை-நடுக்கடலில் திகைத்து இருக்குமா போல் -)

(பிரசாந்த அநந்த ஆத்ம அநுபவ ஜ மஹா ஆனந்த மஹிம
ப்ரசக்த ஸ்தைமித்ய அநு க்ருத விதரங்க அர்ணவ தசம்
பரம் யத் தே ரூபம் ஸ்வ சத்ருச தரித்ரம் வரத தத்
த்ரயீ பிஸ் ப்ரஷந்தீ பர நிரஸநே ஸ்ராம்யதி பரம் –வரதராஜ ஸ்தவம் 13-)

(என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10)

ஒரு மரகத கிரி (பச்சை மா மலை )தன் கொடி முடித் தலையிலே சந்த்ர ஸூர்யர்களைக் கவ்வி இருக்குமா போலே
எதிர் மடித்த திருத் தோள்களிலே ஆழ்வார்களை ஏந்தி(நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு)
ஒரு திருக் கையைத் திருவனந்த ஆழ்வான் மடியிலே ஊன்றி
ஒரு பக்கத்திலே மின் குழாம் சேர்ந்தால் போல் ஸர்வ ஆபரண பூஷிதையாய்
ஸ்வ வைஸ்வ ரூப்ய வைபவத்தை யுடையளாய்(யதா ஸர்வ கதா விஷ்ணு -அபிமத அனுரூப மிதுனம் )
ஈஸ்வரனை வாய்க் கரையிலே அமிழ்த்தும் படியான ஸீல சரிதங்களை யுடையாளாய்(நங்கையைக் காணும் தோறும் நம்பிக்கும் ஆயிரம் கண்கள் வேணுமே அஸி தேக்ஷிணா இவள் கண் விழி விழிக்க ஒண்ணாதே இவனால் )
உபய விபூதி நாயகியாய்
ஈஸ்வர ஸ்வரூப குண விபூதிகளுக்கு நிரூபக பூதையாய்
ஸ்வ ஸம்பந்தத்தாலே ஈஸ்வரனுடைய சேஷித்வ போக்யத்வங்களைப் பூரிக்கக் கடவளான பிராட்டியோடும்

(நாக போக நிதாய பாஹு த்வேன தாரயன்னு சங்கு சக்ர ஜனயாதி ஜெகதாம் வைகுண்ட நாத-
தேவிமார் உடன் மங்களம் அளிக்கட்டும் பிரார்த்திக்கும் ஸ்லோகம்
சுவையன் திருவின் மணாளான்-)

இடப் பக்கத்தில் இம் மிதுன போகைகளாய் அவளோடு ஒத்த சவுந்தர்யாதிகளை யுடையரான ஸ்ரீ பூமி நீளை களோடும்
ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பதிர் ஆஸ்தே
தயா ஸஹ ஆஸீநம்(அனந்த போகிநி கத்யம் )
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் (இரண்டு ச காரம் பூமி நீளா தேவிகளை -உபநிஷத் )–என்கிறபடியே
கூட எழுந்து அருளி இருந்து

நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு
கண்ட போதே ப்ரீதி ப்ரகர்ஷம் பிடரி பிடித்துத் தள்ள
வேர் அற்ற மரம் போலே விழுவது எழுவதாய்(தண்டவத் ப்ரணாமம் உத்தாய ப்ரணாமம் -தலை விழுந்த இடம் மீண்டும் காலை வைத்து )
ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்கிறபடியே
க்ரம விவஷை இன்றியிலே தாய் நாடு கன்றே போல் ஸத்வரனாய்க் கொண்டு
ஆனந்த மயம் ஆத்மாநம் உப ஸங்க்ராமதி (தைத்ரியம் )-என்கிறபடி சமீபஸ்தனாய்(ஸாமீப்யம் )
இத்தம் வித் பாதேந இவ அத்ய  ஆரோஹதி -என்று
பாத பீடத்திலே காலை இட்டுப் படுக்கையைத் துகைத்து மடியிலே சென்று ஏறும்

அவனும் நெடு நாள் தேசாந்தரம் போன ப்ரஜை சாவாதே (ஆத்ம ஸ்வரூபம் கெடாமல் )வந்தால் பெற்ற தகப்பன் கண் வாங்காதே பார்த்துக் கொண்டு இருக்குமா போலே(இருக்கும் வியந்து -இருந்தான் கண்டு கொண்டே -மூன்று தத்துக்குப் பிழைத்த ஆழ்வாரை பார்த்துக் கொண்டே இருக்குமா போல் )
ஸம்ஸார தாப அனுபவத்தால் வந்த விடாய் எல்லாம் ஆறும்படி அழகிய கடாக்ஷ அம்ருத தாரைகளாலே
குளிர வழிய வார்த்து
ஸம் ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ் வஜே (ஸ்ரீ விஷ்ணு புராணம் அக்ரூரரை கைப் பிடித்து இழுத்து ஆலிங்கனம் )–என்கிறபடியே
தன் நாலு திருத் தோள்களாலும் அரவணைத்து உச்சி மோந்து இவன் நீர்ப் பண்டமாம் படி சில சாந்த்வந உக்திகளைப் பண்ணும்

(வசஸாம் சாந்தயேத்வநம் -வாக்கால் சாந்தனவம் பண்ணி -கடாக்ஷத்தாலும் பேச்சாலும் உருகி நின்ற விபீஷணனை பருகினார் பெருமாள்)

அவனும் ததீய ஸ்பர்ச ஸூகத்தாலே உடம்பு அடைய மயிர் எரிந்து(அங்கும் விகாரம் உண்டோ என்னில் -கர்ம வசத்தால் அல்ல -கிருபை -அனுபவத்தால் ஏற்படுமே)
ரஸம் ஹ்யேவாயம் லப்த்வ ஆனந்தீ பவதி -என்று பரம ஆனந்தியாய்
அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி(சாந்தோக்யம் -8-13-க்ருதாத்மா-செய்த வேள்வியர் -அடியேன் அடைகிறேன் )
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே யசோஹம் பவாமி ப்ரஹ்மணா நாம் யசோ ராஜ்ஜாம் யசோர் விசாம் யசோ -(அனைவருக்கும் ஆத்மாவாக இருக்கிறேன் -சாம்யா பத்தியால் சொல்லிக் கொள்ளலாமே )என்றும்
புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம்(ஸ்ரீ விஷ்ணு புராணம்- 5-17)-என்றும்
கதா அனு ஸாஷாத் கரவாணி சஷுஷா என்றும்
உன் கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே(4-9-8)-என்றும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அப்யேஷ ப்ருஷ்டே மம பத்ம ஹஸ்தே கரம் கரிஷ்யதி -என்றும் சொல்லுகிறபடியே

(காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-)

(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்புஅற்று
ஒளிகொண்ட 2சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம் சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.–2-3-10-)

அத் தேச விசேஷத்திலே சென்று பெறக் கடவோமே
திரு மா மணி மண்டபத்திலே சென்று ஏறக் கடவோமே
நித்ய ஸூரிகளோடே அந்ய தமராகக் கடவோமே
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் காணக் கடவோமே
அவன் திருவடிகளிலே சென்று விழக் கடவோமே-
அணி மிகு தாமரைக் கையால் நம் தலையை அலங்கரிக்கக் கடவோமே –
நம்மைக் கண்டால் இன்னான் என்று திரு உள்ளமாகக் கடவோமே -என்றால் போலே
தன் ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்துக்கு அநந்தரம் பண்ணிப் போந்த மநோ ரதங்கள் அடைய
வயிறு நிரம்பிக் கண்டவிடம் எங்கும் திறந்து பாய்கிற பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

(பக்தி ரூபா பன்ன ஞானம் -ஸாதனம் அல்லவே ஸாத்யமே -அதனால் தானே கத்யத்தில் இத்தை புருஷார்த்தமாகப் பிரார்த்தித்தார்)

(அபி பாகேந த்ருஷ்டத்வாத் -ஸாயுஜ்யம்
ஸஹ ப்ரஹ்மணா -கூடி அனுபவம்
கல்யாண குணங்களோடு கூடிய ப்ரஹ்மத்தை ஜீவன் அனுபவம் என்று அந்வயிக்காமல்
சாந்தோக்ய தசை -அவனும் நாமும் சேர்ந்து கல்யாண குணங்களை அனுபவிப்போமே)

(அதிகரணம் -2-அவி பாகேந த்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு )

(ஸ்ரீ வைகுண்டம்- குடி பிரதி தாதே-என்ற தாது அடியாக -தடுக்கும் –
இந்தத் தடங்கல் -ஏஷாம் விஹத -யார் இடம் இருந்து ஓடி விட்டதோ
தடங்கலே இல்லாதவர் வாழும் இடம் ஸ்ரீ வைகுண்டம்-வைகும் தம் சிந்தை )

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-)

(விஜரா –விரஜா -ஜரை ரஜம்-மூப்புக்கும் ரஜஸ்ஸுக்கும் இரண்டுக்கும் விரோதி -அதனால் இரண்டு பெயரும் உண்டே
ஞான சுருக்கம் தடங்கல் இல்லை என்பதால் ஸ்ரீ வைகுண்டம்)

ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் ஸ்வரூப ரூப குணங்களில் ஒன்றும் பிரி கதிர் பட மாட்டாதே
அப்ராப்தமாய்
அபோக்யமாய்
அஸ்திரமாய்
அதி ஷூத்ரமான
துர் விஷயங்களைக் கவ்வி அநாதி காலம் பட்ட வெறுப்பு அடையத் தீரும் படி
அதற்கு எதிர் தட்டான இவ்  விஷயத்தை அனுபவித்து
அவ் வனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷம் ஒரு பக்கத்திலே கடை வெட்டி விட வேண்டும் படி அணைத் தேங்கலாகத் தேங்கின வாறே

இதுக்குப் பரிவாஹ ரூபமாக
ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–என்றால் போலே
ஜ்வர சந்நி பதிதரைப் போலே வாயாரப் புகழ்ந்து

(போக்யமாகவே முதலில் -அவன் ஆனந்தம் பார்த்து நாமும் ஆனந்தம் அடைந்து போக்த்ருத்வம்
படியாய்க் கிடந்து பவள வாய் காண்போமே)

அத்தால் ஆராமையாலே
விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி –என்கிறபடியே அடிமை செய்வது
அது தனக்கும் ஓன்று இரண்டு பால் ஆராமையாலே
ஸ ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி ஸஹஸ்ரதா பவ தி -என்று
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி அடிமை செய்வது

(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் -நீ எழுந்து அருளும் அவதாரங்கள் தோறும் நானும் வந்து கைங்கர்யம் பண்ண வேண்டுமே -)

த்ரிபாத் விபூதியில் பண்ணும் அடிமையால் ஆராமையாலே
ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –
இமான் லோகான் காமான் நீ காம ரூப்ய அநு சஞ்சரன் -என்று
லீலா விபூதியிலும் தொடர்ந்து அடிமை செய்வதாய்
அப்படி
ஸர்வ தேசங்களிலும்
ஸர்வ காலங்களிலும்
உசிதமான ஸர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி(ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் )
இக் கைங்கர்யத்தால் ஈஸ்வரனுக்குப் பிறந்த முக மலர்த்தியை (அவாக்யீ அநாதர நிலை தவிர்ந்து )அனுபவியா நின்று கொண்டு
நோ பஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -பண்ணி
ந ச புனரா வர்த்ததே -என்கிறபடியே(மீளுதலாம் ஏதம் இலா விண்ணுலகு )
யாவதாத்ம பாவி ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும்

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –ஸ்தோத்ரம் -40–உசிதமான கைங்கர்யங்களையும்

அபய ப்ரதான மிஸ்ராணாம் ஸூனுநா ஸ்வாது நிர்மிதாம்
முக்த போகா வலீம் ஏநாம் ஸேவந்தம் ஸாத்விகா ஜனா

ஸாத்விகா ஜனா-பதினெட்டு நாடர் பெரும் கூட்டம்–ஸேவந்தம்-பருகிக் களிக்கட்டும்

ஸ்ரீ வைகுண்ட த்யானம்
கூர்மாதீன் திவ்ய லோகம் ததநு மணி மயம் மண்டபம் தத்ரக்ஷம்
தஸ்மின் தர்மாதி பீடம் தது பரி கமலம் சாமர க்ராஹிணீ
விஷ்ணும் தேவீ விபூஷாயுத கண முரகம் பாதுகே வைந தேயம்
ஸேநேம் த்வார பாலான் குமுத முக கணான் விஷ்ணு பக்தான் ப்ரபத்யே

திருமந்திர த்யான ஸ்லோகம்
ஸ்வயம் பாதம் ப்ரஸார்ய ஸ்ரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சு யித்வா
ஜானுந் யாதாய ஸவ்யேதரம் இதர புஜம் நாக போகே நிதாயா
பச்சாத் பாஹு த்வயேந ப்ரதிபட ஷமனே தாரயன் சங்கு சக்ரே
தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத

————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in Ashtaadasa Rahayangal, ஸப்த காதை, Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ திருமந்திரமும் நவவித ஸம்பந்தமும்–

November 24, 2022

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் தனியன்.

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதஸ்ய ஸூநவே

ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யகளுக்குள், ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்ற வடக்குத் திருவீதிப்பிள்ளை திருக்குமாரர் பிள்ளை உலகாசிரியர், ஆசார்யர் நம்பிள்ளை அனுக்ரஹத்தால் ஸம்சாரம் (போகி) என்ற பாம்பில் கடியுண்ட நம்போன்ற ஜீவர்களுக்கு மருந்தாக, ஜீவன் ஜீவித்து உஜ்ஜீவனம் அடையவேண்டும், எம்பெருமானது திருவடிகளை அடையவேண்டும், நல்வழியில் நடக்கவேண்டும் என்ற ஒரே பிரயோஜனத்தை திருவுள்ளத்தில் கொண்டு 18 ரஹஸ்ய க்ரந்தங்களை அநுக்ரஹித்தார்.

பலர் பல பல பாசுரங்களை இயற்றலாம். ஸம்ஸ்க்ருதத்தில் ஸ்தோத்திரங்களும் எழுதலாம். ஸ்லோகங்கள் பல. இதிகாச புரணங்களும் பல. அதற்குண்டான வியாக்யானங்களும் பல. ஆனால் புராணங்களைச் சொல்வதைக் காட்டிலும், ஆழ்வார்கள் தாங்கள் தங்கள் பாசுரங்களைப் பாடினதைக் காட்டிலும், திருமந்திரம், துவயம், சரமஸ்லோகம் என்ற மூன்று ஆகியவற்றை ரஹஸ்யத்ரயம் என்பர். அதையே தன் கருத்தில் கொண்டு, அதற்காகவே முமுக்ஷுப்படி போன்ற பல அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்த பிள்ளை உலகாரியனுக்கு தனிச் சிறப்பு.

 அதற்கு வியாக்யானம் அருளிச்செய்த விஸதவாக் சிகாமணியான பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு நம் ஸம்ப்ரதாயத்தில் தனி இடம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் வைஷ்ணவ ஸம்பிரதாயத்துக்கு அனுகுணமான பல அர்த்தங்களை சொல்வதாகவே அமைந்துள்ளது. தத்வத்ரயத்தை என்னவென்று காட்டுவதற்காக சில கிரந்தங்கள். ரஹஸ்யத் த்ரயங்கள் என்னவென்று சொல்வதற்கு சில க்ரந்தங்கள் ஸாதித்தார்.. அதற்குமேலே நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யரின் வைபவம் என்ன என்று சொல்வதற்காக ஸ்ரீவசனபூஷணம் என்ற சிறந்த க்ரந்தம். அந்த கிரந்தம்தான் தலையாய க்ரந்தம். அந்த தலைக்கு  அங்கங்கள் போலே பதினேழு ரஹஸ்ய க்ரந்தங்கள்.

இப்பொழுது நாம் பார்க்கப் போவது நவவித ஸம்பந்தம் ஒன்பது விதமான உறவு எனும் அழகான கிரந்தம். எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கக்கூடிய  ஒன்பது வித ஸம்பந்தங்கள் உறவுகளைச் சாதிக்கிறார் அந்த உறவுகளை எதை வைத்துச் சொல்கிறார் என்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கும்.

திருமந்திரம்:

மூன்று ரஹஸ்யகளுக்குள் ப்ரதம ரஹஸ்யம் அஷ்டாக்ஷரம் – திருமந்திரம்.  ஓம் நமோ நாராயணாய! எட்டு எழுத்துமந்திரம்.  மூன்று பதங்கள். ஓம் என்று ஒரு எழுத்து, நம: என்று இரண்டு எழுத்து. நாராயணாய என்று ஐந்து எழுத்து.

ஓமித்யக்3ரே வ்யாஹரேத்। நம இதி பஶ்சாத் |

நாராயணாயேத் யுபரிஷ்டாத்।  ஓமித்யேகாக்ஷரம் ।
நம இதித்3வே அக்ஷரே
 ।  நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி ।
ஏதத்3வை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பத3ம்
।–என்று திருமந்திரத்துக்குத் தனிச் சிறப்பு.

அந்த எட்டு எழுத்து, மூன்று பதங்களுக்குள் எத்தனை அர்த்தம் இருந்துவிடமுடியும் என்று நமக்குத் தோன்றலாம். அதில் இல்லாத அர்த்தங்கள் ருக், யஜுர், ஸாம வேதத்திலோ மற்று எதிலும் தேடினாலும் கிடைக்காது. ஏனெனில் அவைகளில் உள்ள அர்த்தங்கள் இந்த மூன்று பதங்களுக்குள்ளே அடக்கம். அந்தர்கதம். உள்ளேயே இருக்கிறது என்கிறார்கள் பூர்வர்கள்.

ருஜ: யஜூகும்சி ஸாமாநி ததைவ அதர்வணானி ச ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் … வாங் மய…  அனைத்தும் அந்த எட்டெழுத்துக்குள் அடக்கம்.  அனேக ஸாஸ்திரங்களும், மூன்று வேதங்களும் சொல்லிய அர்த்தங்கள் எல்லாம் இதில் உள்ளது. அப்போழுது இந்த எட்டெழுத்துக்கு எவ்வளவு சீர்மை இருக்கவேண்டும். திருமந்திரத்தை அலகலாகப் பிரித்து.  ஒவ்வொரு எழுத்தும் பகவானுக்கும் நமக்கும் உள்ள ஒவ்வொரு உறவைச் சொல்வதை விவரிக்கிறார்..

நம் சொந்த பந்தங்கள், பெற்றோர், பிள்ளை ஆகிய அனைத்து உறவுகளும் நிலையில்லாதது. இன்றைக்கு இருக்கும், நாளைக்குப் போகலாம்.  புதுப்புது உறவுகள் ஏற்படலாம். பிரியலாம். அதோடு உறவுகளுக்குள் சண்டை இல்லாமல் இருந்ததில்லை. பிதாவுக்கும் புத்திரனுக்கும் கூட பிரச்சினை இல்லாமல் இருந்ததில்லை. தாய்க்கும் தனயனுக்கும் அப்படியே.

ஒழிக்கவொண்ணா உறவு–இப்படித்தான் நமக்கும் பகவானுக்கும் உள்ள உறவா?. ஒரு உறவு இரண்டு உறவைப் போலேயா. நிலையில்லாததா என்ற சந்தேஹம் வரலாம். இதைப் போக்கிவிடவேண்டும் என்பதற்காக நம் பூர்வாசார்யர்கள் பகவானுக்கும் நமக்கும் இருக்கும் உறவு ஒழிக்க ஒழியாத ஒன்பது ஸம்பந்தம் என்று சொல்வர்கள். ஒரு நாளும் யார் எந்த முயற்சி எடுத்தாலும் இந்த உறவை அறுக்க முடியவே முடியாது.

பத்தன், முக்தன், நித்தியன் இம்மூவருக்கும்–பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாவான ஸம்ஸாரிகளுக்கும் ஒன்பது உறவுகள்.. ஜீவாத்மாவில் மூன்று வகை:

  1. பத்தன், (ஸம்ஸாரத்தில் தளையுண்டு நிற்பவர்)
  2. முக்தன், (ஸமாஶ்ரயணம் செய்துகொண்டு ஆசார்யன் க்ருபையால் பகவத் திருவடி ஸம்பந்தம் பெற்று மோக்ஷம் அடைந்து பரமபதம் சேர்ந்தவர்கள்)
  3. நித்தியர்,பெரியவரான திருவனந்தாழ்வான், பெரிய திருவடியான கருத்மான் எனும் கருடன், விஷ்வக்ஶேனர் ஆகிய இவர்கள் வைகுண்டத்தில் பெருமாளோடுகூட எப்போதும் இருப்பவர்கள்.  (நித்திய ஸூரிகள் அஸ்ப்ருஷ்ட ஸம்சாரகர்கள்) – ஸம்ஸாரத் தொடர்பே இல்லாமல் இருப்பவர்கள்).

பத்தர், முக்தர், நித்தியர் ஆகிய மூவருமே ஜீவாத்மாக்கள். இம்மூவருக்கும் பகவானுக்கும் உள்ள நவவித ஸம்பந்தம் எவை என்பதை பார்க்க இருக்கின்றோம்.

நித்தியர்களும் நாமும்:–ஸ்ரீ பிள்ளைலோகசாரியார் இந்த ஒன்பது வித ஸம்பந்தம் சொல்கிறார் என்றால் அது பத்தர்களான ஸம்சாரிகளுக்கு மட்டுமல்ல. முக்தர், நித்தியர் ஆகிய மூவருக்குமே இந்த நவவித ஸம்பந்தம் உண்டு. இதில் ஆச்சர்யம் என்ன என்றால் நித்தியர்களும் நாமும் பகவானோடு ஒரே நிலையில்தான் இருக்கிறோம். அவர்கள் அதிக நெருக்கம் என்றோ, நாம் குறைவான நெருக்கம் என்பதில்லை.

நித்தியர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் எத்தனை உரிமை பகவானிடம் உண்டோ அத்தனை உரிமையும் ஸம்ஸாரிகளான பிரம்மா முதல் எறும்பு வரை  அதே ஒன்பதுவித உறவுகளும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் உண்டு. நவவித ஸம்பந்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள ஏற்ற தாழ்வே வித்யாஸம்..

விலக்கமுடியாத உறவு:–யாராலும் இந்த உறவை விலக்க முடியாது. ஸம்சாரி பகவானின் உறவு வேண்டாம் என்று விலகிப் போகப் பார்ப்பான். ஆழ்வார் பாசுரத்தில் சாதிதார்:

“யானொட்டி  என்னுள் இருத்துவமென்றிலன்*

தானொட்டி வந்து எந்தனிநெஞ்சைவஞ்சித்து*

ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து* இயல்

வானொட்டுமோ? இனி என்னை நெகிழ்க்கவே.”–திருவாய் 1-7-7-

“நான் உன்னிடம் நெருங்கி, நெருங்கி வந்து உன்னோடு சேர்ந்திருக்க வேண்டும். ஒட்டாமல் மட்டும் இல்லை. விலகி, விலகிப் போனேன். வெட்டிக் கொண்டு போனால் போகட்டும் என்று நீ விடவில்லை. எவ்வளவோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள், இவன் என்னத்துக்கு என்று நினைத்து விடாமல்  பகவான் நெருங்கி, நெருங்கி வந்து என்னை சேர்த்துக் கொண்டானே.” ஏன்கிறார் ஆழ்வார்.

நாஸ்திகர்களும் பகவானுடையவர்களே:-உலகில் ஆஸ்திகர்களும் இருக்கின்றனர், நாஸ்திகர்களும் இருக்கின்றனர். எம்பெருமான் உண்டு, உலகம் உண்டு, வேதம் பிரமாணம் என்று ஒத்துக் கொள்பவர்கள் ஆஸ்திகர்கள். இவை எல்லாம் இல்லை இல்லை என்பவர்கள் நாஸ்திகர்கள். இந்த ஸம்பந்தம் ராவணனுக்கும் உண்டு, சிசுபாலனுக்கும் உண்டு. அறிவுடையவர்களுக்கும் உண்டு. அறிவேயில்லாத மரத்துக்கும் உண்டு. எதிர் அறிவு படைத்தவனான ரவணனுக்கும் உண்டு. விபரீத அதிகாரி ராவணன்.

விபரீத அதிகாரிகளுக்கும் இந்த ஒன்பது உறவு உண்டு. அனுகூலர்களுக்கும் உண்டு. பிரஹலாதனுக்கும் அதே ஒன்பது. இரண்யகசிபுவுக்கும் அதே ஒன்பது உறவு உண்டு. ஆத்திகனுக்கும், நாத்திகனுக்கும் இந்த ஒன்பது உறவும் உண்டு. அனைவருக்கும் நவவித ஸம்பந்தமும் உண்டு.இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் வெட்டினோம் என்பதற்காக இந்த உறவை வெட்டி விடமுடியாது.  எம்பெருமான் யாரையும் விலக விட மாட்டார்.

நிரந்தரமான உறவு:-சரி நம்மால் விலக்க முடியாது. ஆனால் பகவானே பார்த்து இந்த ஹிரண்யகசிபோடு நமக்கு உறவு வேண்டாம் என்று வெட்டிவிடுவாரா? என்றால் இல்லை. பகவானும் இந்த ஒன்பது ஸம்பந்தங்களை வெட்ட மாட்டார். ஜீவனுக்கோ வெட்டத் தகுதியில்லை. பக்கத்திலிருக்கும் புருஷாகார பூதையான பெரியபிராட்டியும் விலக்க மாட்டாள். ஏனெனில் பத்தனை பகவானிடம் சேர்த்து வைப்பதற்காகவே பாடுபடுகிறவள் பெரிய பிரட்டியார். நம்மாலும் வெட்ட முடியாது. வேறு யாராலும் முடியாது. ஒழிக்க ஒண்ணாத ஒன்பது வித உறவுகள் என்றார்கள் பூர்வாசாரியர்கள்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித

ஆகவே ஒழிக்க ஒண்ணா உறவு நவவித ஸம்பந்தம். ஸ்ரீய:பதியான ரமாபதியுடன் உள்ள ஸம்பந்தம்:

  1. ஸ்ரீயப்பதி  தந்தை   – குழந்தைகள்  (சிருஷ்டிப்பவன்)

பிதா – புத்ர ஸம்பந்தம். நம் ஸம்ப்ரதாயத்தில் சிஷ்டிப்பவர் பெருமாள்.

  1. காப்பாளன் (ரக்ஷ:) – ரக்ஷ்ய: காக்கப்படுபவன் அவன் நம்மைக் காப்பவன், நாம் காக்கப்படுபவர்கள். வேறு உறவுகளோ செல்வங்களோ எதுவும் நமக்குப் பாதுகாப்பில்லை. அவனே ரக்ஷகன். ஏனெனில் அவனே நமக்குப் பிதா.
  2. ஶேஷி (ஆண்டான்)         – ஶேஷன் (அடிமை)  [என்றென்றும் (ஶேஷியின் நன்மைக்கே இருக்க வேண்டும். அவர் பெருமைக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும்.ஶேஷன். அத்தனையும் அவனுக்கு அடிமை]
  3. பர்த்தா                     – பார்யை (மனைவி)

அனைவரும், புருஷர்கள் கூட பகவானுக்கு பார்யைதான். (ஜீவாத்மவர்க்கம் மூன்றுக்கும்) பகவான் பர்த்தா.   எங்கு திருமணம் நடந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் சைவர்களானாலும், காணாதிபத்தியர்களானாலும் மணமகன் விஷ்ணுவே தான். அழகிய மணவாளன் மாப்பிள்ளை. நாம் எல்லோரும் அவன் பத்தினி – திருமாங்கல்யம் எது?  திருமந்திரமே! ”ஓம் நமோ நாராயணாய” மூன்று பதம் எட்டெழுத்துக் கொண்ட, சரடு  எட்டிழையாய், மூன்று சரடாய் திருமாங்கல்யம். அஷ்டாக்ஷரம்,

பர்த்தா – பார்யை என்பது இன்றுதானே ஏற்படுகிறது. என்றென்றைக்கும் இருப்பது என்று எப்படிச் சொல்வது என்றால் ஸ்ரீராமனுக்கும் (12 வயது) சீதைக்கும், (6வயது) கல்யாணம். ஆனால் இப்பொழுதுதான் திருமணமா?  நாமும் பலபிறவிகள் எடுத்து வந்திருக்கிறோம். அப்பொழுதெல்லாம் பகவான் விஷ்ணுதான் மணமகன். ஆக என்றென்றைக்கும் இந்த உறவும் உண்டு. (என்றென்றைக்கும் எல்லா ஸம்பந்தமும் உண்டு)

  1. ஞேய: (அறியப்படுகிறான் பகவான்) – ஞாத்ரு  (ஜீவாத்மா- அறிபவன்)       

 ஞாதா – அறிபவர், ஞானம் – அறிவு , ஞேயம் – அறியப்படும் வஸ்து. நாம் அறிவை வைத்து இது புஸ்தகம் என்று  தெரிந்து கொள்கிறோம்.  தெரிந்து கொள்ளப்பட்ட புஸ்தகத்தை ஞேயம் (அறியப்படும் வஸ்து) என்று  சொல்வர். அறிய உதவி பண்ணியது எது? அதற்கு ஞானம் என்று பெயர். தெரிந்துகொண்டது யார்?. நாம். நமக்கு ஞாதா என்று பெயர். இங்கு எம்பெருமான் ஞேய: (அறியப்படுகிறார்). அறியப்படுகிறார் என்றால் யாரால் என்ற கேள்வி வரும். அவர்தான் ஞாதாவாகிற ஜீவாத்மா.

  1. ஸ்வ – ஸ்வாமி ஸம்பந்தம்.

ஸ்வாமி – உடையவன்   (ரமாபதி: – ஸ்ரீமன் நாராயணன்)                     – சொத்து ஜீவாத்மா விலிருந்து அனைத்தும். இந்த வீடு நமக்கு சொந்தம் என்றால் அது நமக்கு சொத்து. அதை உடையவன் நான். அதைப்போல பகவானுக்கு அவனைத் தவிர இந்த ப்ரபஞ்சத்தில் அனைத்தும் அவனுக்குச் சொத்து. சொத்து என்றால் அஃறிணைப் பொருள் அல்லவோ என்ற சந்தேஹம் வரும்.  அஃறிணையாய் இருந்தாலும் உயர்திணைப் பொருளாய் இருந்தாலும் எந்த திணையாக இருந்தாலும் அனைத்தும் அவனது சொத்துக்களே. இப்படி ஜீவாத்மாவையும் அசித்துக்களையும் சமமாகச் சொல்லலாமா என்றால் பரதன் அதற்கு விடையளித்துள்ளான்.

ராஜ்யமும் நானும் ராமனின் சொத்து:–பரதனுக்குக் கைகேயி வரத்தின் மூலம் ராஜ்யத்தை வாங்கி வைத்தாள். கேகய தேசத்திலிருந்து நாடு திரும்பினான். அழுது கொண்டே யிருந்தான் கைகேயி பட்டாபிஷேகம் செய்து கொள் என்றாள். பரதன் சொன்னான், “என்றென்றைக்கும் ராமன் தான் ஸ்வாமி. நானும் ராஜ்ஜியமும் ராமனுடைய சொத்துத் தான், இதை மட்டும் மாற்றவே முடியாது”

ராமனைத் திரும்ப நாட்டிற்கு அழைத்து வர பரதன் காட்டுக்குச் செல்கிறான். அங்கு பரதன் ஸ்ரீராமனிடத்தில் தெரிவிக்கிறான்,”யவர்தா வர்த்ததே சக்ரம் யாவதீ ச வசுந்தரம் தாவத்துவமிக லோகஸ்ய ஸ்வாமித்வம் அநுவர்த்தய“ ராமா உலகில் இமாலயம் இருக்கிற வரைக்கும், கடல்கள் எல்லாம் அலையோடு இருக்கிற வரைக்கும் பூமி இருக்கிற வரைக்கும்,மலை இருக்கிற வரைக்கும், ஜ்யோதிஷ் சக்கரம் சுற்றுகிற வரைக்கும் நீதான் ஸ்வாமி, நான் உன் சொத்து..ராமா நீயும் இதை மாற்ற முற்படாதே. நானும் மாற்ற மட்டேன். இரண்டு பேராலும் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டான் பரதன்.

ஏனெனில் நீ ஸ்வாமி நான் தாஸன். “ராஜ்யம்ஸ் ச அஹம் ச ராமஸ்ய.” இந்த ராஜ்யமும் நானும்  உன் சொத்துத்தான். என்றான் பரதன். இதற்கு பூர்வாசார்யர்கள் அதை எந்த விதத்தில் சேர்க்கலாம் என்று கேள்வி எழுப்பினர். தாயும், தந்தையும், பிதாவும் புத்திரனும் என்றெல்லாம் சேர்க்கலாம். ராஜ்யம் என்பதையும் நான் என்பதையும் எப்படிச் சேர்க்கலாம். ராஜ்யம் என்பது அறிவற்றது. அசித். ‘நான்’ அறிவுள்ளது.  சித்தான பரதனையும் அசித்தான ராஜ்யத்தையும், அறிவுடையதையும், அறிவற்றதையும் எப்படி ஒரே மேடையில் சேர்க்கலாம். இரண்டு பேரும் பகவானுக்கு சொத்து என்ற நிலையிலே தான் சேர்க்க முடியும். பரதனுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அவ்வளவு சிறப்பு பாரதந்த்ரியத்துக்கென்றே நின்று காட்டினவன் அதனால் அவனுக்குச் அவ்வளவு ஒரு சிறப்பு. . ஸ்வாமி தாஸன் என்ற உறவு எல்லோருக்கும் உண்டு. ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் .

  1. ஆதார: (தாங்குபவர்)      – ஆதேயம் (தாங்கப்படுபவர்கள்). பூவை எடுத்து கூடையில் வைக்கிறோம். பூவைக் கூடை தங்குகிறது. கூடை ஆதரம்.  பூ ஆதேயம். அதுபோல எம்பெருமான் தாங்குகிறார். நாம் தாங்கப்படுகிறோம். இதற்கு ஆதார-ஆதேய ஸம்பந்தம் என்று பெயர்.
  1. ஆத்மா (ஶரீரி)                  – ஶரீரம் (பகவான் – உடல், ப்ரகாரி – ப்ரகார)

 ஶரீர – ஶரீரி ஸம்பந்தம். எம்பெருமான் ஆத்மா. நாம் அனைவரும் எம்பெருமானுக்கு ஶரீரங்கள். இந்த என் ஶரீரத்தை நான் தான் தாங்குகிறேன். இந்த ஶரீரத்துக்கு ஆத்மா தான் சகலமும். இந்த ஆத்மா நினைக்கிறபடி யெல்லாம் இந்த ஶரீரம் நினைக்கும் அல்லவா? ஆத்மாவுக்காகவே இந்த ஶரீரம் இருக்குமல்லவா? ஆத்மாவையும்  ஶரீரத்தையும்  பிரிக்கவே முடியாதா!  உடல் நலிந்தால் பிரியும்.

அனைத்தும் பகவானுக்குச் ஶரீரம்–எம்பெருமான் ஆத்மா. நாம் எல்லோரும் உடல். இதைத்தான் “மமஆத்மா” என்று ஸாதிக்கிறார். ஶரீர ஆத்ம ஸம்பந்தம் என்று பெயரிடுவர்கள். ஶரீர – ஶரீரி ஸம்பந்தம் என்றும் ப்ரகார ப்ரகாரி ஸம்பந்தம் என்றும் சொல்லலாம். அவன் ஆத்மா நாம் அத்தனைபேரும் ஶரீரம்.

இதையும் ராமாயணம் சொல்லிற்று. ஜகத் ஸர்வம் ஶரீரம் தே ப்ரஹ்மம். நாராயணனை அதாவது ராமனைப் பார்த்து உலகில் எல்லோரும் கொண்டாடினார்கள், “ஜகத் அனைத்தும் உனக்கு ஶரீரம் ராமா!  நீதான் ஆத்மா!

இதை வேதாந்தங்கள் எல்லாம் சொல்லிற்று. யஸ்ய ஆத்மா ஶரீரம், யஸ்ய ப்ரித்வீ ஶரீரம் யஸ்ய ம்ருத்யு ஶரீரம். ஏஷ ஸர்வபூதாந்தராத்மா அபகதபாப்மா திவ்ய ஏக: ஸ; நாராயண: உலகத்தில் அத்தனைக்குள்ளும் தான் ஆத்மாவாக மற்ற அத்தனையையும் தனக்குச் சரீரமாகக் கொண்டுள்ளான்..

ஆழ்வார் சொல்கிறார் – உடன்மிசை உயிரென கரந்தெங்கும் பரந்துளன். உடலுக்குள் உயிர் இருக்கிறாப் போலே ஜகத் அத்தனையும் எம்பெருமான் வியாபித்து இருக்கிறான் ஆத்மாவாக. ஶரீர ஆத்ம ஸம்பந்தம்.

  1. போக்த்ரு       (அனுபவிக்கின்றவன்)         – போக்யம்   (அனுபவிக்கப்படுவது)

நாம் அவனை அனுபவிக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். ஒருவருக்கொருவர் அனுபவிக்கப் படுபவர்களாக இருக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். அவன் போக்தா. நாம் போக்யம்.

எப்படி சந்தனமும் பூவும் போக்யம்.  பூவைத் தலையில் வைத்து நாம் அனுபவிக்கிறோம் அல்லவா. சந்தனத்தை எடுத்துத் தடவிக் கொள்கிறோம். நாம் போக்தா. சந்தனமும் பூவும் போக்யம். ஜீவாத்மா போக்தா. நம் ஆனந்தத்துக்காக அதை எடுத்து அனுபவிக்கிறோம்.

இப்பொழுது கொஞ்சம் இடத்தை மாற்றுங்கள்–பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே–இங்கு போக்யம் ஜீவாத்மா. பூவையும் சந்தனத்தையும் போலே ஜீவாத்மா. இதை எடுத்து தலையில் சூடிக் கொண்டு அனுபவிப்பவர் எம்பேருமான். அவர் போக்தா.. ஜீவாத்மா போக்யம். இங்கும் சந்தேஹம் வரும். பூவும் சந்தனமும் அசித். ஜீவாத்மா சித். எப்படி என்று கேள்வி?பூவை நான் தலையில் சூடிக் கொண்டால் பூ என்றைக்காவது சந்தோஷப் படுமா? படாது. பூவும் சந்தனமும் மற்றவருக்கென்றே  பிறத்தியாரோட சந்தோஷத்துக்கென்றே இருக்கிறதல்லவா?. அதைப்போல ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே இருக்க வேண்டும்.. அதற்குத்தான் இந்த போக்தா – போக்ய ஸம்பந்தம் சொல்லப்பட்டது. அவன் ஆனந்தத்துக்காக, இஷ்ட விநியோகத்துக்கு அநுகுணமாக ஜீவாத்மா இருக்கவெண்டும்.

அஹமன்னாதோ(2) அஹமன்னாதோ(2) ஹமன்னாத:। அஹகும் ச்லோகக்ரு– தஹகும் ச்லோகக்ரு- தஹகும் ச்லோக்ருத் । அஹமஸ்மி ப்ரதமஜா ருதா(3) ஸ்ய। பூர்வம் தேவேப்யோ அம்ருதஸ்ய நா(3) பாஇ।–என்று தைத்ரீய உபனிஷத் சொல்லும்.

நான் அன்னம், அவன் அன்னத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆனந்தப்படுகின்றவர். அன்னம் என்பது போக்யம். அன்னாத: என்பது போக்தா. ஜீவாத்மா அன்னத்தினுடைய ஸ்தானம். அன்னாதன் – பகவான் போக்தா. அன்னத்தை அநுபவிப்பவர். அதையே இங்கு ஒன்பதாவது போத்ரு – போக்ய ஸம்பந்தமாக ஸ்தாபித்தார்.

நித்ய ஸூரிகள் கோஷ்டியில் சேரவேண்டுமா:–ரமாபதி: ஸ்ரீமன் நாரயணனை ஒவ்வொரு ஸம்பந்தத்துடன் சேர்த்துக் கொள்க.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித॥

இந்த ஒன்பது வித ஸம்பந்தத்தை மனப்பாடம் செய்து காலையில் எழுந்தவுடன், ஒன்பது உறவுகளையும் ஒரு நாளும் ஒழிக்கமுடியாது என்ற  நினைவோடு தினந்தோறும் சொல்லிச் சொல்லி ஞாபகத்தில் கொள்ளவும். அப்படிச் சொல்லி வந்தோமானால் இந்த எறும்பு கோஷ்டியை விட்டு நாம் நிச்சயம் நித்ய ஸூரிகள் கோஷ்டிக்குப் போகலாம். தைரியம் மனதுக்கு வரும். அவன் ஒருநாளும் கைவிடமாட்டான்.

ஒரு நிச்சயபுத்தி, விஶ்வாஸம் ஏற்படும். சரணாகதியில் மஹாவிஶ்வாஸம் ஒரு அங்கம். எப்ப விஶ்வாசம் வரும் இத்தனை உறவு நமக்கு அவனுக்கும் இருக்கிறது என்பது உறுதியானாலே மஹா விஶ்வாஸம் வரும். மோக்ஷத்தில் ஆசை படைத்த முமுக்ஷுவான ஒவ்வொருவரும் இந்த ஒன்பது ஸம்பந்தத்தைக் கண்டிப்பாக சொல்லி கொள்வர். இந்த ஒன்பதும் திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

திருமந்திரத்தில் இந்த ஒன்பது உறவுகள்–திருமந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒன்பது உறவை  எங்கு எங்கு எப்படிச் சொல்கிறது என்பதை அழகாக ஸாதிக்கிறார். ஒன்பது ஸம்பந்தத்தின் ஞானம் முக்கியம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸூகாசாரியார் கேட்டுக்கொண்டார் “தத்  பாதம் ஸலிலம் யதா வாஸுதேவ கதா ப்ரஶ்ந: பும்ஸாம் திரிம் புநாதிவை” வாஸுதேவனுடைய கதையைப் பற்றி யாரெல்லாம் பேசுகிறார்களோ, பேசுன்னு சொன்னார்களோ, கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் புண்யம் மூவேழு தலை முறைகளுக்கும் புண்ணியம்.

திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம்–எதேபோல என்பதற்கு அவரே ஒரு உதாரணம் சொல்கிறார். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் கங்கை. பார்த்தாலும் புண்யம், தீர்த்தமாடினாலும் புண்யம். அருந்தினாலும் புண்யம். மூவேழு தலைமுறைகளுக்கும் புண்யம்.

பூர்வர்கள் கேள்வி கேட்டனர், “அந்த கங்கைக்குள் நிறைய மீன்கள், திமிங்கிலங்கள், ஜந்துக்கள் இருக்கின்றனவே அவைகளுக்கெல்லாம் புண்யம் வந்து மோக்ஷத்துக்குப் போய்விடுமா? நல்ல கேள்வி. அதுக்குள் வாழ்ந்ததற்காக புண்யம் வராது. மோக்ஷம் கிடைக்காது. கங்கைக்கும் மீனுக்கும் ஸம்பந்தம் இருக்கிறது. ஞானம் வேண்டும். என்ன ஞானம்: இது திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் என்பது ரொம்ப பாவனத்துவமும்,போக்யத்துவங்களும் கூடியது.

ஆகவே கங்கையைப் பார்த்தாலோ, குடித்தாலோ, தீர்த்தமாடினாலோ எனக்கு மோக்ஷம் கிடைக்கும் என்ற ஞானம், அந்த  ஞானத்தோடு தீர்த்தமாடினால் பலன் உண்டு. பகவானுக்கும் கங்கைக்கும் உள்ள உறவை உணர்ந்து குளித்தால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். ஸம்பந்த ஞானம் வேண்டும்.

ஸம்பந்த ஞானம் வேண்டும் என்பதற்காகவே இந்த க்ரந்தத்தை பிள்ளை லோகாசாரியார் ஸாதிக்கிறார். இல்லை யென்றால் இருக்கவே இருக்கிறது ஒன்பது ஸம்பந்தம் என்று கேட்டு விடுவோம் அல்லவா? ஒன்பது ஸம்பந்தத்தை உணர்ந்து அதை அனவரதமும் சிந்தனம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்கும் என்பதில் சந்தேஹம் இல்லை.

இந்த ஒன்பது ஸம்பந்தத்தை திருமந்திரத்தில் இருந்து எடுத்து விளக்குகிறார்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித॥

கடுகைத் துளைத்து எழு கடலை புகட்டி–மேலே ஒவ்வொரு இடமாக இந்த ஸம்பந்தத்தைத் திருமந்திரத்திலே எங்கெங்கு வைக்கிறார் என்பது முக்யம். இருக்கிறதே எட்டெழுத்து அதற்குள் எப்படி ஒன்பது ஸம்பந்தத்தை புகுத்தினார் என்ற சந்தேஹம் வரும்.

ஒரு வரிக்கு ஒரு அர்த்தம் சொல்லலாம், ஒரு பதத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னாலே கிறப்பு. அதற்கு மேலும் ஒரு எழுத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னால் அவரைவிடச் சிறந்தவரில்லை. ஆனால் எட்டெழுத்துக்கு  ஒன்பது அர்த்தம் சொல்லிவிட்டார் ஸ்வாமி பிள்ளை உலகாசிரியர்.

திருக் குறளின் பெருமையைச் சொல்லும்போது “கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பெருமை சொல்வர். இரண்டுவரி, ஏழு பதத்திற்குள் அவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறார்.

இரண்டு வரிக்குள் அவ்வளவு அர்த்தம் வைத்தது அங்கு பெருமை. அதுபோல திருமந்திரமான எட்டெழுத்துக்குள் இந்த ஒன்பது ஸம்பந்தம் காட்டியது இவருக்கு அதைவிட பெருமை. வரியே கிடையாது. மூன்று பதங்கள். எட்டெழுத்து. ௐ நமோ நாராயணாய.

திருமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும்:

அகாரத்தால்                       பிதா              – புத்திர ஸம்பந்தம்

அவரக்ஷணே (தாது)        ரக்ஷ:             – ரக்ஷி:

லுப்த சதுர்த்தி                    ஶேஷி          – ஶேஷ

உகாரத்தால்                        பத்ரு              – பார்யா

மகாரத்தால்                        ஞேயம்        – ஞாத்ரு

நம:                                        ஸ்வாமி        – சொத்து

நார ஸப்தத்தால்               ஶரீரி              – ஶரீர

அயன                                   ஆதார           – ஆதேயம்

ஆய:                                      போக்த்ரு     – போக்யம்

ௐ நம: நாராயணாய     ௐ என்பது ஒரு எழுத்து. நம: எனபது இரண்டு எழுத்து. நாராயணாய என்பது ஐந்து எழுத்து. ஆக மூன்று பதம் எட்டு எழுத்து, ஒன்பது ஸம்பந்தம்.

ௐ என்ற ஒரு பதம்

ஓம் – அ+உ+ம (மூன்று எழுத்து)

அ                               – பரமாத்மா

ம                                – ஜீவாத்மா

உ                                -பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கும் ஒழிக்க வொண்ணத ஸம்பந்தத்தைச் சொல்லும். (பரமாத்மாவுக்கே        ஜீவாத்மா)

தமிழில் வேற்றுமை உருபு:–அ, உ, ம என்றால் அது ஒரு முற்றுப்பெறாத சொல். ‘அ’ – பரமாத்மா, ‘ம’ –ஜீவாத்மா, ‘உ’ – அந்த பரமாத்மவுக்கே ஜீவாத்மா என்று சொல்கிறது. ஒருவருக்கும் மற்றொருவருக்கும் உறவைச் சொல்ல தமிழ் பாஷைப்படி ஒரு வேற்றுமை உருபு வேண்டும்.

என்னுடைய புஸ்தகம். என்னோடு வந்தார். கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.  இந்த புஸ்தகம் இவரால் தூக்கப்பட்டது. என் உடைய, ஓடு, ஐ, ஆல்  என்று சேர்க்கிறோம். உடைய என்பது நாலாவது வேற்றுமை உருபு.  உறவைச் சொல்ல நாலாவது(விபக்தி) வேற்றுமை உருபு வேண்டும். ஆல், ஓடு, உடைய, இன் ஐ போல. ஓம் என்பதற்குள் பரமாத்மாவுக்கும் ஜீவத்மாவுக்கு உறவு சொல்கிறது அல்லவா. வேற்றுமை உருபு இருந்தால்தானே உறவே வரும்.

ஒன்றை ஒன்று சேர்ப்பதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. மரத்தில் கண்ணாடியை ஒட்டவேண்டுமானால் அதாற்கு ஒரு விதமான் பசை வேண்டியிருக்கிறது. சொற்களைச் சேர்ப்பதற்கு வேற்றுமை உருபு வேண்டும். இங்கு பரமாத்மா வையும் ஜீவாத்மாவையும் சேர்க்கவேண்டும். கண்ணாடி வேற ஜாதி, மரம் வேறு ஜாதி. அதுபோல பரமாத்மா ஆள்கின்ற ஜாதி, ஜீவாத்மா அடிமை (ஆளப்படுகிறவன்) என்ற வேறு ஜாதி. இந்த இரண்டையும் ஒட்டுவது அவ்வளவு ஸுலபமில்லை.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் பிரிவதே இல்லை::–ஆனால் ஆச்சர்யம் என்னெ வெனில் யாரும் ஒட்ட வைக்கவே யில்லை. பிரித்தால்தானே ஒட்ட வைக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தே தான் இருக்கிறது.

நாலாம் வேற்றுமை உருபு:–ஆனால் இலக்கணப்படி ‘அ’ வையும் ‘ம’  வையும் சேர்க்கவேண்டுமானால் ஒரு வேற்றுமை உருபு, நாலாம் (விபக்தி)வேற்றுமை உருபு வேண்டும். (உ.ம்) இருக்கு, பரமாத்மாவுக்கு ஜீவத்மா அடிமை என்று சொல்லவேண்டும். நாலாம் வேற்றுமை உருபு வேண்டும்.

ராமன்,(முதல் வேற்றுமை)  ராமனை(2), ராமனால்(3), ராமனுக்கு(4), ராமனின்(5), ராமனது(6), ராமனின் கண்(7), ஹே ராமா(8).ஆக எட்டு வேற்றுமை உருபுகள்.  4 வது வேற்றுமை உருபு  ‘க்கு’ என்பது ஸம்ஸ்க்ருத்த்தில் ‘ஆய’ என்று வரும்.

அச்சுதாய நம: அச்சுதனுக்கு. அனந்தாய, கேசவாய, அச்சுதனுக்கு, கேசவனுக்கு, என்று வரும்.ஸம்ஸ்க்ருதத்தில் “க்கு” என்பது “ஆய” என்று வரும்.  வேற்றுமை உருபு இருந்தால்தான் உறவு. ஓம் என்ற ஸப்தத்தில் தேடிப்பார்த்தால் இந்த வேற்றுமை உருபு இல்லை. அதனால் இதை லுப்த சதுர்த்தி என்று சொல்வர். லுப்தம் என்றால் ஏறிக்கழிந்தது என்று பொருள். இருந்தது, விழுந்துவிட்டது, கழிந்தது.வியாகரணத்தின்படி விழுந்ததாகக் கொண்டு  ‘அ’  என்ற எழுத்தால் சொல்லப்பட்ட பரமாத்மாவுக்கு, ‘ம’ என்ற எழுத்தால் சொல்லப்படுகிற ஜீவாத்மா, “ஆய“என்ற நாலாம் வேற்றுமை உருபால் அடிமை.என்பது ஓம் என்கிற சப்தத்தின் அர்த்தம்.

ௐ = அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. நான்கு எழுத்துக்கள்–இன்னும் கொஞ்சம் பிரித்தால்: ஓம் என்பது அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. இதைக் கொண்டு நான்கு அர்த்தம் சொல்லிவிடுவார் ௐ என்ற பதத்துக்கு. மேலும் நம: என்பதும் நாராயணய என்பதும் இருக்கிறது. அதைப் பிரிக்கப் போவதை பின்னால் பார்க்கலாம்.

திருமந்திரத்தில் ஓம் என்ன ஸம்பந்தங்களைச் சொல்கிறது:என்று பார்க்கலாம்:

  1. அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி

அ – பிதா புத்ர ஸம்பந்தம்.-‘அ’ காரத்தின் மூலம் ஜகத் காரணத்துவ சொல்லிற்று. எம்பெருமான். முதல் எழுத்தான ‘அ’ என்பதில் இருந்து அனைத்து எழுத்துக்களும் பிறக்கும். , சொற்களும் ஸப்தங்களும் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் தோன்றின. ஸமஸ்த ஸப்தங்களுக்கும்  காரணம் , முழு முதற்காரணம், வேர், விதை  “அ”காரம். அது போல எம்பெருமான் இந்த ஜகத்துகெல்லாம் காரணம்  அவனிடத்திருந்துதான் எல்லாம் தோன்றின.

எல்லாம் அவனிடமிருந்தே:–“யதோவா இமானி பூதானி ஜாயந்தே | யேன ஜாதானி ஜீவந்தி | யத்பிரந்த்-யபிஸம்விஸந்தி .. |” (தைத்ரீய உபனிஷத்) இது எல்லாம் அவனிடத்திருந்துதான் தோன்றியது.. ‘அ’ இடம் இருந்துதான் எல்லா ஸப்தங்களும் தோன்றின. பகவானிடத்திருந்துதான் உலகம் அத்தனையும் தோன்றியது. அப்பொழுது ‘அ’ என்பது பகவானைக் குறிக்கும். அ காரத்துக்கும், பகவானுக்கும் ஒரு ஸாம்யம் பார்க்கலாமில்லையா? அதனால் தான் ‘”அகார: விஷ்ணு வாச்ய: “அ’ என்பதை ஒற்றை எழுத்துச் சொல் என்பர். அதைச் சொல் என்றும் எழுத்து என்றும் சொல்லலாம். அது விஷ்ணுவையே சொல்லும். அகாரம் என்ன சொல்கிறது. எப்படி ஸப்தங்களுக்  கெல்லாம் நான் காரணமோ அப்படி உலகத்துகெல்லாம் எம்பெருமான் காரணம். என்கிறது.‘

‘அ’ காரம் காரணத்வம்:–அ’ காரத்தைப் பார்க்கும் போதே காரணத்துவம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா? காரணத்துவம் என்பது என்ன? நமக்கும் நம் பிதாவுக்கும் உள்ள உறவு. அவர் பிதா காரணம். நான் பிள்ளை காரியம். அவராலே பிறந்தேன், அவராலே படைக்கப்பட்டேன். ஆக காரணத்தை வைத்து முதல் எழுத்து பிதா – புத்ர ஸம்பந்தம் சொன்னார். அவன் தந்தை என்றும் நான் புத்ரன் என்றும் பிதா புத்திர சம்பந்தம் சொல்லிற்று.

  1. அவ -ரக்ஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி–ஏற்கனவே அ வுக்கு ஒருவிதமாக அர்த்தம் பார்த்தோம். ‘இப்பொழுது இன்னொரு விதமாக அர்த்தம் சொல்கிறார். முதலில் அர்த்தம் பார்த்து ‘அ’வை ஒரு சொல்லாகக் கொண்டு.’அ’ என்ற சொல் அனைத்து ஸப்தங்களுக்கெல்லாம் காரணம். அகார வாச்யனான எம்பெருமான் ஜகத்துக்கெல்லாம் காரணம். காரணத்துவமிருக்கிறதாலே பிதா-புத்திர ஸம்பந்தம் என்று பார்த்தோம்.

‘அ’ வின் தாது ‘அவரக்ஷணே’–ஸம்ஸ்க்ருதத்திலே தாது என்று சொல்லுவர். 2000 தாதுக்கள் உண்டு. அந்த தாதுவைக் கொண்டு ஒரு சொல் எந்த வினையை ‘செயலைக்’. குறிக்கிறது என்று சொல்லப்படும். கச்ச – போகிறேன் ஒரு தாது, வத – பேசுகிறேன் ஒரு தாது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தாது இருக்கிறதல்லவா?.. அ என்ற சொல்லுக்கு அவ ரக்ஷணே என்ற தாது. ரக்ஷிக்கிறான் என்ற வினையைச் சொல்கிறது.

அ வில் இரண்டாவது அர்த்தம் ரக்ஷிக்கிறான். உலகனைத்தையும் எம்பெருமான் ரக்ஷிக்கிறான் என்று பொருள். முதலில் ‘அ’ என்பதற்கு காரணத்துவம் சொல்லி எம்பெருமான் உலகனைத்துக்கும் காரணன் என்று பிதா – புத்திர ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

இப்பொழுது இரண்டாவதாக   ‘அ’ வுக்குள்ள அவரக்ஷணே என்ற தாதுவால் ரக்ஷகத்வம் சொல்லி ரக்ஷ: – ரக்ஷ்ய  ஸம்பந்தம் சொல்லியாயிற்று. அவன் காப்பவன். நாம் காக்கப்படுகிறோம்.

  1. லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி–லுப்த சதுர்த்தி – ஏறிக் கழிந்த நான்காவது வேற்றுமை உருபு என்பர். ‘க்கு’ ‘ஆய’ என்ற நாலாவது வேற்றுமை உருபு. மறைந்துள்ளது. அகார வாச்யனான பரமாத்மாவுக்கு ‘மகார’ வாச்யனான ஜீவாத்மா எல்லா விதத்தாலும் அடிமை என்று சொல்லிற்று. ‘க்கு’ என்கிற 4 ம் வேற்றுமை உருபு பகவானுக்கு (ஶேஷி) ஜீவாத்மா (ஶேஷ்ன்) அடிமை என்கிறது. ஆக லுப்த சதுர்த்தி ஶேஷி – ஶேஷ ஸமந்தம் சொல்லிற்று

கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன்–ஆய  – க்கு, ராமனுக்கு: அவனுக்கே இருக்கிறேன் என்று சொல்லுமல்லவா? ஶேஷி – ஶேஷ ஸம்பந்தம். அப்படியென்றால் என்னுடைய ஶேஷிக்கு நல்லதைச் சேர்க்கிறதுக்காகவே நான் இருக்கவேண்டும். ‘க்கு’ என்று சொல்லும் போதே அவனுக்கென்றே இருக்கிறேன் என்றாகின்றது அல்லவா. ராமனுக்கு சீதா ஸர்வ ப்ரகாரத்தாலும் அவனுக்கென்றே இருக்கின்றாள்.

ஶேஷ-ஶேஷி ஸம்பந்தம். ஸம்பந்தத்தை லுப்த சதுர்த்தியாலே சொல்லி. –

ஆழ்வார் “கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ’

‘கோவிந்தா உனக்கே நாம் ஆட்செய்வோம்” ஆண்டாள்.

கோவிந்தா என்பது ‘அ’,  ‘நாம்’ என்பது ‘ம’,  ‘க்கே’ என்பது ஆய என்ற லுப்த சதுர்த்தி. அதையே தான் திருமங்கை ஆழ்வாரும் பாடினார்  திருக்கண்ணபுரம் சவரிப்பெருமாள் விஷயமாக நூறு பாசுரங்கள். பெரிய திருமொழியில் எட்டாம்பத்து முழுமையும் சவரிப் பெருமாளுக்குத்தான் பட்டியுள்ளார். அதில் கடைசியில் சாதிக்கிறார்:

“நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் கண்ணபுரத்துறை அம்மானே” கற்றுக் கொண்டது என்ன?

“கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ?’ கண்ணபுரம் பெருமாளுக்கே நான் உரியவன்.  “சவரிப் பெருமான் திருவடிகளில் பணிந்தவன், உன் அடியார் வசலில் நிற்பேனே தவிர கண்டபேர் வாசலில் நிற்கமாட்டேன்.

“உற்றதும் உன் அடியார்க்கு அடிமை”  உனக்கே உரியவன், “மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பரோடுற்றிலேன்” (பெரிய திருமொழி 8-10-3) மற்றும் ஓர் தெய்வம் உள்ளது என்று சொன்னாலே அவன் வாசலில் நிற்க மாட்டேன் என்கிறார்.

அப்படிச் சொல்பவனுக்கு எனக்கும் உறவே யில்லை என்று அறுத்துக் கொண்டார்..

‘க்கு’ என்பதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம் அவன் ஶேஷி நாம் ஶேஷர்கள். என்று ஶேஷ – ஶேஷி ஸம்பந்தத்தைச் சொல்லியாயிற்று.

  1. உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –அநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம்– ‘ உ’ காரம் – அநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம். பர்த்தா – பார்யா ஸம்பந்தம்.  ‘

அ’கார வாச்யனான எம்பெருமானுக்கே  ‘ம’கார வாச்யனான ஜீவாத்மா அடிமை. நடுவில் இருக்கும் ‘உ’ ரொம்ப முக்கியம் நம் ஸம்பிரதாயத்திலே. ஏவாகாரம் தான் ‘உ’காரத்தின் பொருள். ‘உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: பராசாபட்டர் அழகாக ஸாதித்தார் உகார: அநந்யார்ஹ ஸம்பந்தம்.. அநந்யார்ஹ ஸம்பந்தம் என்றால் அகார வாச்யனுக்கு மகார வாச்யன் அடிமை என்று பார்த்தோம்.

அடுத்து ஒருவன் சொல்லுவான். மனித மூளை எந்தவிதத்திலும் பாயும். அதுக்குக் குறைச்சலே இல்லை. வேணுங்கிறதுக்கு மட்டிலும் வேலை செய்யாதே தவிர, வேண்டாங்கிறதில் நன்றாகவே வேலை செய்யும். ஒருவன் சொல்லுகிறான், “ஸ்ரீமன் நாராயணனுக்கு நான் அடிமை” நான் ஒத்துக் கொள்கிறேன். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் வேறு எங்கோ நிற்கிறான். என்ன நாராயணனுக்கு என்று சொன்னாயே, இங்கு நிற்கிறாயே என்று கேட்டால் அவன், நான் நாராயணனுக்கு என்று சொன்னேன், ஆனால் அவனுக்கே என்று சொல்லவில்லையே என்றான்.

லுப்த சதுர்த்தி மூலம் பரமாத்மாவுக்கு என்று உள்ளது. அது பரமாத்மாவுக்கும் அடிமை. மற்றவர்களுக்கும் அடிமையாயிருப்பது என்றும் சொல்லலாம். அதில் உள்ள குறையைப் போக்கி உறுதி செய்ய “உ” காரத்தால் எம்பெருமானுக்கே என்று “ஏவா காரத்தால்” உறுதி செய்யப்படுகிறது. பரமாத்மாவுக்கே இந்த ஜீவாத்மா அடிமை என்று ‘உ’காரம் உறுதி செய்கிறது. மற்ற தெய்வத்தையும் தொழான். அரசனையும் தொழான்.  அவனுக்கே என்றதிலிருந்து பர்த்தா – பார்ய ஸம்பந்தம் சொல்லிற்று.

ஸ்வாமி தேஶிகனின் வைராக்ய பஞ்சகம்–வைராக்ய பஞ்சகம் என்று ஐந்து ஸ்லோகம். ஸ்வாமி தேஶிகன், தேவப்பெருமாள் விஷயமாக அருளியுள்ளார். அதில் “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

வேதந்த தேஶிகன் மகாசாரியார். அந்த ஆசார்யரிடத்தில் சின்ன வயதிலிருந்தே ஒரு நண்பர், ஸ்நேஹம். அவர் நல்ல நிலைமையில் ஒரு அரசனிடம் பணிபுரிந்து நல்ல நிலையில் இருந்தார்.

ஸ்வாமி தேஶிகனோ கிழிந்த உடையும், உஞ்ச விருத்தியுமாக இருந்தார். அந்த நண்பர், “நீ என்னிடம் வந்துவிடு. அரசனிடம் வந்தால் பட்டும், பொன்னாடையுமாக வசதியாக வாழலாம்” என்றார். நல்ல சம்பாவனை கிடைக்கும் வந்துவிடு என்று மறுபடி, மறுபடி சொல்லிப் பார்த்தார். அங்கிருந்து ஒரு ஆளை அனுப்பி நிர்பந்தப் படுத்தினார்.

வந்தவரை ஸ்வாமி, நீர் போய் தேவப் பெருமாளை சேவித்து வாரும் என்று அனுப்பிவைத்தார். அவன் பெருமாளை சேவித்துவிட்டு திரும்பி வந்தான்.என்ன பார்த்தாய் என்று கேட்டார். பெருமாள் சேவை ஸாதிக்கிறார். ஸேவித்தேன் என்றார்.

அதற்கு பதில் சொன்னார் ஸ்வாமி, “அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம். நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்” “எனக்குத் தந்தை சம்பாதித்து வைத்த செல்வம் ஒன்றுமில்லை. நானாகவும் ஒன்றும் ஸம்பாதிக்கவில்லை. ஆனால் உலகத்துகே பாட்டனார் ஹஸ்திகிரியின் உச்சியில் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வம் எனக்கு உள்ளது. அதாவது ப்ரம்மதெவன் அசுவமேத யாகம் செய்து ஹஸ்திகிரியின் உச்சியில் ஸம்பாதித்து வைத்த செல்வம் உள்ளது” என்றார்.

உலகத்துக்கே பாட்டனார். தேவப் பெருமாள். எனக்கும் பாட்டனார். இது உன் சொத்துமில்லை, என் சொத்துமில்லை எல்லோருடைய சொத்து. இந்த சொத்திருக்கும் வரையில் வெறு தனமே வேண்டாம்.என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

அப்பொழுது சொல்கிறார், நீங்களெல்லாம் ஏதோ ஸம்பாதித்து சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எதுக்காகத் தெரியுமா? “அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்” உள்ளே ஜாடராக்நி என்று ஒன்று எரிந்து கொண்டிருக்கும். உள்ளே போடுவதை எல்லாம் அதுதான் ஜரித்துக்கொண்டே இருக்கும். அந்த ஜாடராக்நி எத்தனை போட்டாலும் கொண்டா, கொண்டா என்று கேட்டுக்கொண்டே இருக்கும்.

அக்நிக்கு ‘அநல:’ என்று பெயர். போறும் என்ற எண்ணமே அதற்குக் கிடையாது. அதனால் ‘அநல:’ அந்த தீக்கு விறகுக் கட்டை போடுவதற்காக கண்ட பேர் கால் கழுவுகிறீர்கள். நான் அதைச் செய்வதில்லை என்றார் ஸ்வாமி தேஶிகன். உள்ளுக்குள் இருக்கும் நெருப்புக்கு அது விறகு. சோறு தான் விறகுக் கட்டை. “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

இந்த தனத்தை நான் விரும்பமாட்டேன். கோவர்த்தனம் போதும் கோவர்த்தனத்தைத் தூக்கிய கண்ணன். அவன்தான் எனக்குத் தனம் அவனே எனக்குப் போதும். அர்ஜுனனுடைய தேருக்குச் சாரதியான, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளாக இருக்கும் கண்ணனே தனம். அவன் கொடுத்த தனம் கீதைதான். இதுதான் எங்களுக்குத் தனமே தவிர வேறு தனம் வேண்டியதில்லை

உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம்.-உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம். இன்னொருத்தர்.  வீட்டு வாசலில் நிற்க மாட்டேன். எந்த தெய்வத்தையும் தொழோம், பிரபுக்களையும் தொழோம். யாரையும் தொழோம். யாரையும் திரும்ப பாரோம் என்று இருக்கிறார்களல்லவா. அந்த வைராக்யத்தோடு வாழ்வதுதான் ‘உ’ என்ற லுப்த சதுர்த்திக்குப் பொருள். மேலிருக்கிற அவதாரணம் என்று சொல்லுவர். அவனுக்கே. அற்றுத் தீர்ந்தது. இவன் மற்றப்பேருக்கு ஆளாக மாட்டான். அவனுக்கே. அப்படின்னு சொல்கிறது ‘உ’.

கனவன் – மனைவி உறவு-அவனுக்கே என்றவுடன் நமக்கு என்ன ஞாபகம் வரும். . கணவன் மனைவி உறவுதானே. உலகில் மற்ற எல்லா உறவுகளையும் விட இந்த மனைவி கணவனுக்கென்றே தான் இருக்கப் போகிறாள். அடுத்த வீட்டுக்காரனையோ, எதிர்த்த வீட்டுக்காரனையோ திரும்பி பார்க்கமாட்டாள். அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கட்டும், எவ்வளவு படித்தவனாக இருக்கட்டும் என் கணவன் எனக்குக் கணவன். அதில் தான் இவளுக்கு உயர்த்தி.

தேவாதாந்தரங்களைத் தொழோம்:-ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றி சொல்லிகொண்டே இருப்பர். இவர்கள் எல்லாம் மற்ற கோவிலுக்குப் போவதில்லை. ஆனால் மற்றபேர் மட்டும் விஷ்ணு கோவிலுக்கு வருகிறார்களே என்று கேட்பர். குறுகிய கண்ணோட்டம். அவர்களுக்குப் பரந்த நோக்கம் இல்லை என்றெல்லாம் குறை சொல்லுவர். ஒரு மனைவி தன் கணவனுக்காகவே இருந்தாள். இது என்ன குறுகிய கண்ணோட்டம் என்றா சொல்வர். அப்படிக் கேட்டால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவர்.

அதுபோலத்தான் வேறு கோயிலுக்கு போகமாட்டேன் என்கிறார்களே என்ற கேள்வியும்.கணவனுக்கு மட்டுமே இருக்கிறாள் மனைவி என்பது குறுகிய கண்ணோட்டம் என்றால் அதுவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் பரந்த கண்ணோட்டம் யாருக்கும் தேவையில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷ்ணு கோவிலுக்கு மட்டுமே போவதும். குறுகிய கண்ணோட்டமாகாகவேதான்  இருந்துவிட்டுப் போகட்டும்.

அனைவருக்கும் அவனே கணவன்:-கணவன் நாராயணன் என்று புரிந்துகொண்டுவிட்டால், மனைவி ஜீவாத்மா என்றால் அந்த வட்டம் குறுகிய வட்டம். அதில் வேளிலே யாருக்கும் இடம் கிடையாது. அதில் அவனுக்கும் அவளுக்கும் மட்டும் இடமே தவிர, வேறு யாருக்கும் இல்லை. இதுல போய் இவங்கிட்டையும் திருமங்கல்யம் கட்டிக்கிறேனே,  மற்றவனிடமும் தாலி கட்டிக்கிறேனே என்று சொல்லுவதற்கு வழியே கிடையாது. .

‘உ’ காரம் என்ற நடு எழுத்தை, உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: அவனுக்கென்றே தீர்ந்திருக்கிற ஸம்பந்தத்தைச் சொல்லுமாம். பர்த்ரு – பார்யா உறவைச் சொல்லுகிறது. அவனுக்கே உரியவன்.

 நம்பெருமாளும் திருவானைக் காவலும்:-திருவானைக்காவல் என்று ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஜம்புகேஸ்வரர் க்ஷேத்ரம். பெரிய சிவ ஸ்தலம்.. அந்த ஸ்தலத்தின் பக்கத்தில் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு காண்கையில் திடீரென்று மழைவந்துவிட்டது..  ஸ்ரீரங்கம் போகமண்டபம். பெருமாள் போகி. எங்கோ மழைபெய்கிறது என்றவுடன் மணியக்கார ஸ்வாமி அக்கோவிலில் புறப்பாட்டை நிறுத்திவிடுவர்.

புறப்பாடு கண்டருள்வதில் ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிர் தேவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்  பெருமாள் கோவில்.. அது மழையோ வெயிலோ காற்றோ எது அடிச்சாலும் அந்த மூன்றரையும் மூன்றரையும் ஏழு மைல் புறப்பாடு நடந்தே தீரும். ஸ்ரீரங்கத்திலோ எங்கேயோ மழை அடிக்கிறது என்றால் புறப்பாடு நின்றுவிடும். பெருமாள் சுக போகி. தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் அல்லவோ. அவர் திருவானைக்காவல் வாசல் வழியாக ஏழிண்டிருக்கிறார். திடீரென்று மழை வந்து விட்டது. பெருமாளை ரக்ஷித்தாகணுமே.  திருவானைக்காவல் கோவிலுக்குள் கொண்டுபோய் ஏழப்பண்ணிவிட்டார்கள்.  அது சிவ க்ஷேத்ரம்.

ஸ்ரீ ராமானுஜரும் திருவானைக்காவலும்:-ஸ்ரீ ராமானுஜர் பின்னால் கோஷ்டியுடன் போய்க் கொண்டிருந்தார். அவர் உள்ளே போகாமல் வாசலிலேயே திரிதண்டத்தோடே, எழுபத்திநாலு சிம்மாஸனாதிபதிகள், எழுநூறு ஸந்யாசிகளோடே,பன்னிரண்டாயிரம் க்ரஹஸ்தர்களோடு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.

தீக்ஷிதர்கள் வாசலில் வந்து கேட்டார்களாம், என்ன ஸ்வாமி உள்ள ஏழலாமே, மழைபெய்கிறதே, நனையவேண்டாமே, மழை நின்னப்புறம் புறப்படலாமே  என்று உள்ளே  அழைத்தார்கள். இல்லை இல்லை வேண்டாம், .அடியேன் இங்கேயே இருந்துகொள்கிறேன் என்றார் ராமானுஜர்.

மறந்தும் புறந்தொழா மாந்தர் அல்லவோ. “திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்” திருமழிசை ஆழ்வார் அழகாக ஸாதித்துப் போந்தார். “அரவணைமேல் பேராயர்க்காட்பட்டார் பேர்” இந்த ஸ்ரீவைஷ்ணவர்களை எமன் மறந்தும் பார்க்கவே மாட்டனாம். எனெனில் புறந்தொழா மாந்தர். திரும்பியே பார்க்கிறதில்லை. எமனையும் இவர்கள் திரும்பி பார்க்கிறதில்லை. ராமானுஜர் வாசலிலே நின்றுவிட்டார்.

நம்பெருமாளும் யதிராஜரும்:-தீக்ஷிதர்கள் எல்லாம் வந்து ராமானுஜரிடம் கேட்டார்கள், பெருமாள், உங்கள் தெய்வம் அரங்கனே உள்ளே வந்துவிட்டார். அதுக்குமேலே உங்களுக்கு என்ன இப்பொ, நீரும் வரலாமே” என்று கேட்டனர் உடையவரிடம். .

அதற்கு ஸ்வாமி பாஷ்யகாரர், அழகாக பதில் சொன்னார், “கணவன் அப்படி இப்படி வாசலில் போய் திரிந்தார் என்பதற்காக மனைவி தானும் தேடிண்டு போய் நான் பார்த்தது கிடையாது.  பெருமாள் கணவன், பர்த்தா, எதுவும் அவனுக்கு ஒக்கும். நான் மனைவி எனக்கு அவன் மட்டுமே ஒக்கும்.மற்ற ஒன்றையும் நான் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

நம் பாரத்தேசத்துப் பெண்கள் எல்லாம் கணவன் தவறிழைத்தான் என்பதற்காக தானும் தவறிழைக்கலாம் என்று நினைக்கிற அன்று நானும் இந்த கோயிலுக்குள் வருகிறேன். அது வரை வருவதாயில்ல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாமி.  பழையபடி அந்தக் குறுகிய கண்ணோட்டம் என்பர். “எம்பெருமானே அந்த  கோவிலுக்குள் போனாலும் அவன் அடியார்கள் அதற்குள் போவதில்லை. எம்பெருமான் போவதற்குக் காரணம் என்ன? எல்லாமே அவர்க்கு ஒக்கும். ஏனெனில் எல்லாமே அவருக்குச் சரீரம், சிவனும் அவருக்குச் சரீரம், பிரம்மாவும் அவருக்குச் சரீரம்.

அக்னி:-அக்னி இருக்கிறது. எந்த ஒசந்த பதார்த்தைப் போட்டலும் எரித்துவிடும். எந்த தாழ்ந்த குப்பை செத்தையைப் போட்டாலும் எரிக்கும். குப்பை செத்தையைப் போட்டு எரித்தது என்பதற்காக அக்னியை யாராவது குறை சொல்வார்களா? சொல்லமாட்டார்கள். அக்னியுடைய தூய்மை என்னிக்குமே தூய்மைதான். அதேசமயம் குப்பை செத்தையை வீட்டில் கோண்டுவந்து வைக்கலாமா. நாறிவிடும்.

ஏன் ஸ்வாமி இப்படி. அக்னி மட்டும் குப்பை செத்தையுடன் சேர்ந்தால் நாறவில்லையே என்று கேட்டால் என்ன வித்யாசமோ அந்த வித்யாசம்தான் பகவான் எங்கும் போவதற்கும் நாம் போவதற்கும். அவன் அக்னியைப் போலே. அவர் பிரபு. எதுவும் அவனுக்குத் தகும். நமக்கு அவன் மட்டுமே தகும். வித்யாஸத்தை நன்கு அடியார்கள் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். “எம்பெருமான் கோவிலுக்குள் போகலாம். அவன் பர்த்தா, ஒதுங்கலாம், நான் பார்யை, பத்தினி எங்கும் ஒதுங்கக் கூடாது” என்றார். அவனுக்கே ஆட்பட்டவள். இது பர்த்தா – பார்யா ஸம்பந்தம். உ காரத்தாலே பர்த்தா பார்யா ஸம்பந்தம் சொல்லிற்று..

  1. மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி-மகாரத்தால் ஞேய – ஞாத்ரு ஸம்பந்தம்.

இப்பொழுது ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லப்போகிறார். என்னத்துக்காக இந்த ஜீவாத்மா  ஞானத்தோடு இருக்கிறார். ஞானத்துக்கு ஒரு விஷயம் வேண்டும். இது புஸ்தகம் என்று தெரிந்துகொண்டாலோ, இது கடிகாரம் என்று தெரிந்துகொண்டாலோ ஞானமா? ஞானம்தான். இந்த ஞானம் எல்லாம் மோக்ஷம் வாங்கிக் கொடுக்கப்பொவதில்லை. பின் எந்த ஞானம் மோக்ஷத்தைக் கொடுக்கும். . அர்த்தபஞ்சக ஞானம். இந்த ஐந்தைப் பற்றிய ஞானம் இருந்தேயாகவேண்டும்.

மிக்க இறை நிலையும், மெய்யா உயிர் நிலையும் *

தக்க நெறியும், தடையாகித் – தொக்கியலும்*

ஊழ்வினையும், வாழ்வினையும், ஓதும்

குருகையர்கோன் * யாழினிசை வேதத்தியல்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச பிரத்யகாத்மான

ப்ராப்த்யு பாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச – வதந்தி சகலா வேதா: ஸேதிகாஸ புராணகா:  முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

ஐந்தைப் பற்றிய ஞானம். அதில் பரமாத்ம ஞானம் முதல்.அவனைப் பற்றிய ஞானம் நமக்கு முதலில் இருக்கவேண்டும். இந்த ஜீ(வாத்மா ஞாதா.கீழேயே மூன்று சொல்லப்பட்டதல்லவ? ஞானம், ஞாதா, ஞேயம் – அறியப்படுபவன் பரமாத்மா. அறிபவன் ஜீவாத்மா. அறிவிப்பது ஞானம். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்த்தோம் இல்லையா?

உலகில் எதைச் சொன்னாலும் மூன்று உண்டு.அதேபோல்தான் இங்கு ஞாதா, ஞானம், ஞேயம். இந்த ‘ம’ காரத்தாலே ஞாத்ரு – ஞேய ஸம்பந்தம். ஜீவாத்மாவால் பரமாத்மா அறியப்படுபவன். என்று இந்த எழுத்துச் சொல்லும்.

எங்கிருந்து இந்த விவரணம் கிடைத்தது. ம என்ற எழுத்தாலே இந்த பொருள் வருமா என்று தோன்றும். இருக்கு. ‘மனஜ்ஞானே’ – ‘மனு அவ போதனே’ கீழே அ காரத்துக்கு அவ ரக்ஷணே  என்ற தாது.பார்த்தோமில்லையா? அதுபோல மகாரத்துக்கு மன ஜ்ஞானே என்பது தாது.  ஞானம் படைத்தவன் ஜீவாத்மா. அவ போதனே – இவன் ஆராய்ச்சி பண்ணி, ஆராய்ச்சி பண்ணி ஞானத்தை சம்பாதிப்பவன் ஜீவாத்மா.. இந்த இரண்டு அர்த்தமும் மகாரத்துக்கு உண்டு.

அப்ப ஞானத்தைச் சம்பாதிப்பவன் என்றால் ஜ்ஞாதாவாகிறான் ஜீவாத்மா. அறிவாளி. எதைப் பற்றிய ஜ்ஞானம்? பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை சம்பாதிக்கிறான். வேறு எதைப் பற்றி எவ்வளவு தெரிந்துகொண்டாலும் அது ப்ரயோஜனமில்லை. ஐந்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். அதில் முதல் பரமாத்மாவைப் பற்றிய ஞானமே

‘ம’ என்ற எழுத்தால் ஞாத்ரு – ஞேய – ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

பிதா ச ரக்ஷ:ஶேஷி, பர்த்தா, ஞேய: என்று 5 ஸம்பந்தம். ஜீவாத்மா அறிவாளி. பரமாத்மாவை வேதத்தைக் கொண்டு அறிகிறான். ஞாதா – ஞேயம் என்ற ஸம்பந்தத்தை மகாரம் சொல்லும். ‘ஓம்’ என்பதில் ஐந்து ஸம்பந்தம் முடிந்தது

  1. நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி–நம:    ம: மு , ந – ம: எனக்கு, மு – நான், ந அல்லேன், நம: எனக்கு நான் அல்லேன். எனக்கு நான் அல்லேன். அப்ப நீ யாருக்கு ஸ்வாமிக்கு. ஸ்வாமி சொத்து ஸம்பந்தம் கிடைக்கிறது. பூ (புஷ்பம்) எனக்கு நான் என்று சொல்லிக்காது. என் வீடு எனக்கு நான் என்று சொல்லிக்கொள்ளாது. எதுவும் எனக்கு நான் என்று சொல்லிக்காது. அர்ச்சனை செய்கிறோம். ராமாய நம: என்கிறோம். ஸ்ரீ ராமனுக்காகவே நான். எனக்கு நான் அல்லேன். நான் கண்ணனுக்காக எனக்கு அல்லேன். ஸ்ரீ ராமானுஜருக்கே நான். எனக்கு அல்லேன். இவர்களுக்காகவே நான், எனக்கு அல்லேன் என்று சொல்வது தான் நம: என்பதின் பொருள். எனக்கு அல்லேன் என்று சொல்லிவிட்டால் அவன்தான் என்றாகிறது அல்லவா? இதிலிருந்து அவன் தான் ஸ்வாமி – நான் சொத்து என்றாகின்றது.

ஸ்வாமி (ப்ரஹ்மம்) – சொத்து .(ஜீவாத்மா). ஸ்வாமி தான் சொத்தைப் பற்றிக் கவலைப் படவேண்டும். சொத்து தனக்காகத் தான் கவலையே படாது. நாமல்ல. ஸ்வாமிதான் நமக்காக கவலைப் படுவார்.

ஸ்வாமி – சொத்து என்றால் வீடு, கார்  போலவா?–ஒரு வீடு. யாரோ ஒருவரை குடித்தனம் வைத்தேன். வீடு குடியிருக்கறவருக்கே சொந்தம் என்று சொல்லி,  காலி செய்யமாடேன் என்று.  நீதிமன்றம் போய்விட்டார்.. வக்கீலைவைத்து நான் நடையாய் நடந்து கொண்டிருக்கிறேன். வீடு கவலையே படாது. எங்கிட்ட இருந்தாலும், குடித்தனக்காரரிடம் இருந்தாலும் கவலைப் படாது. நான் ஜயித்து வீடு என் கைக்கு வந்தபிறகு நல்ல வேளை, நாம் முதலாளி கையில் சேர்ந்துவிட்டோம் என்று சந்தோஷப் படுமா? இல்லை. பிறத்தியாரிடம் இருக்கும்போது அது அழவும் இல்லை. என்கிட்ட வந்ததால் அது சிரிக்கவும் இல்லை. வந்து சேருவதற்கு அது முயற்சியை எடுக்கவும் இல்லை. சொத்து என்பது தனக்காக இருக்காது.பிறருக்காகவே இருக்கும்.

அதே போல இந்த ஜீவாத்மாவும் ‘நம:’ தனக்காக இல்லை. என்றால் ஸ்வாமிக்காகவே இருந்தாக வேண்டும் அல்லவா? அதைத் தான் அழகாகச் சொல்லும் சாஸ்திரம், “ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்”-சொத்தாக இருக்கும் தன்மை ஜீவாத்மாவுக்கே உரியது. ஸ்வாமியாக இருக்கும் தன்மை ப்ரஹ்மத்துக்கே உரியது.. ஜீவன் ஒரு நாளும் ஸ்வாமி ஆகாது. அவன் ஒருநாளும் சொத்து ஆக மாட்டான்.

பகவான் சொத்தாவான். யாருக்கு?  அடியார்களான பாகவதர்களுக்கு அவன் சொத்தாகிறான். ஸ்வாமி தேஶிகனின் திருவாக்கு பார்த்தோம் அல்லவா? தேவ பெருமாள்தான் தன் சொத்து என்றார்.. ஸ்வ- ஸ்வாமி – எது நியாயம். அடங்கினவனுக்கு அவன் சொத்தாக இருக்கிறான். அடங்காதவனுக்கு நெருங்கமாட்டான். ஆழ்வார் தன் திருவாய்மொழி பாசுரத்தில்;

அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே.

நான் பிரிந்து பிரிந்து போனால் அவன் விலகி விலகிப் போவான். நாம் கிட்டக்க போனால் அவனும் கிட்டக்க வருவன். வெட்டிண்டு போனால் வருத்த்த்தோடே விலகி இருப்பன். நாம் அவனை நெருங்குகையில் நம்முடையவன் என்று அவன் நினைக்கிறான். நாம் சொத்து – அவன் ஸ்வாமி.

நமஸ் ஸாலே ஸ்வாமி – சொத்து ஸம்பந்தம் சொல்லிற்று, ஆறாவது அர்த்தம் சொல்லப்பட்ட்து..

ஏழாவது ஸம்பந்தம்:

நாராயணாய – மூன்றாகப் பிரித்தால்::-நார + அயன + ஆய – நாராயணாய, நாராயணாய என்ற பதம் மூன்றாகப் பிரிக்கப் படுகிறது. மூன்று சம்பந்தங்கள் சொல்கிறது.

‘அ’காரம் = நாராயணாய என்று சொல்கிறது. ஆகவே ‘அ’ காரத்தில் ‘ஆய’ லுப்த சதுர்த்தி. சம்ஸ்க்ருத இலக்கணத்தின்படி இருந்தாகணும். “நாராயணாய”வில் உள்ள ஆய என்ற விபக்தி ஸ்தானப் ப்ரமாணத்தால் ஓம் இல் உள்ள ‘அ’ காரத்தில் லுப்த சதுர்த்தியாக, (ஏறி கழிந்த சதுர்த்தியாக) எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது என்று முமுக்ஷுப்படியில் பிள்ளைலோகாசாரியார் வியாக்யானம் பண்ணியுள்ளார். அ என்பது நாராயணாய வின் சுருக்கம்.

ஆனையாட்டம் பெரிய நாராயணாய பின்னால் வரும். அதற்கு மணியோசைபோல ‘அ’காரம் வருகிறது. அ முதலிலே, நாராயணாய பின்னால் வருகிறது. பின்னாடி வரும் ‘நாராயணாய’வில் நான்காம் வேற்றுமை உருபு இருக்கிறதல்லவா? சம்ஸ்க்ருத வியாகரணத்தின் படி முதலில் இருக்கும் ‘அ’ காரத்தில் நான்காம் வேற்றுமை உருபு இருந்தே ஆக வேண்டும். அது ஏறிக் கழிந்துள்ளது, லுப்த சதுர்த்தி என்று பார்த்து விட்டோம்.

நார – நித்ய வஸ்துக்களின் திரள்:-நார – ஸ்ரீமன் நாராயணனைத் தவிர இதர நித்திய வஸ்துக்களின் திரள். தன்னைக் காட்டிலும் வேறுபட்ட நித்திய வஸ்துக்கள் அவரைத் தவிர அனைத்தும் நார ஸப்தத்தால் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜர் விடாமல் “ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண:” தன்னைத் தவிர உள்ள அனைத்து வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்தவன் ஸ்ரீமன் நாராயணன் என்கிறார்.

ரிங் க்ஷயே என்பது தாது.  ர – என்றால் அழிவது ந என்றால் இல்லை.  நார என்றால் அழியாததுகளின் கூட்டம். நித்ய வஸ்துக்களின் திரள். எது அழியாது. பெருமாளின் திருமேனி அழியாது. பெருமாளின் குணங்கள் அழியாது. பிராட்டி அழிய மாட்டார். ஏன்? நான் அழிய மாட்டேன், நீங்களும் அழிய மாட்டீர்கள். பூமியும் அழியாது. எதுவுமே அழியப் போவதில்லை. சேதனாசேதனங்கள் அத்தனையும் அழியாது. சித் – அசித்  இது இரண்டின் மொத்தக் கூட்டமும் நார ஸப்தத்துக்குள் அடக்கம்.

அயன = ஆதாரம்-அயன – ஆதாரம்.  இங்கு அமர்ந்திருக்கிறோம். அது ஆதாரம், தரை ஆதாரம், தரைக்குத் தூண் ஆதாரம். தூணுக்கு ஆதாரம் அடித் தளம். அடித் தளத்துக்கு ஆதாரம் பூமி தேவி. ஒரு வஸ்து என்று இருந்தால் அதைத் தாங்குவதற்கு ஒன்று இருந்துதான் ஆக வேண்டும். அப்பொழுது நாரங்கள் என்ற நித்திய வஸ்துக்களின் திரளுக்கு ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அயனம் என்றால் ஆஶ்ரயம். அவர் தான் நாராயணன். அனைத்துக்கும் இருப்பிடம், அனைத்துக்கும் ஆதாரம்.

கைங்கர்யமே பரம ப்ராப்தி:-ஆய – அந்த நாராயணனுக்காகவே கைங்கர்யம் பண்ணுவது எனக்கு ஸ்வரூபம். நான் தொண்டு புரிய வேண்டும். “தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க” என்று முக் கரணங்களாலும் அவருக்குக் கைங்கர்யம் பண்ணணும். அதைப் பார்த்து அவர் ஆனந்தப்பட வேண்டும்.   கைங்கர்யத்தின் மூலம்  அவனது முக மலர்த்தி பெறுதல். நார – அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்கள். அயன – இருப்பிடம். ஆய – அவனது முக மலர்த்திக்காகவே கைங்கர்யம் செய்தல். அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிற அனுபவம் ‘ஆய’ பதத்தால் சொல்லப் படுகிறது.

  1. நார பதத்தாலே -ஶரீர ஶரீரி சம்பந்தம் சொல்லி   —நார என்றல் நித்ய வஸ்துக்களின் கூட்டம் என்று பார்த்தோம். இது இத்தனையும் ஶரீரம். அப்பொழுது பெருமாள் ஶரீரி. என்பதால் ஶரீரி – ஶரீர  ஸம்பந்தம்., ஶரீர ஆத்ம ஸம்பந்தம். ‘மம ஆத்மா’ என்று சொல்லி இருக்கிறார் அல்லவா? பகவான் ஆத்மா, ஜீவன் உடல். அவனைத் தவிர அனைத்தும் ஶரீரம். அவனது திருமேனி மட்டும் அவனுக்குச் சரீரம் அல்ல. பிராட்டிமார் மட்டுமல்ல. உலகத்தில் இருக்கும் சித் அசித் கூட்டங்கள் அனைத்தும் அவனுக்குச் ஶரீரம். நித்ய வஸ்துக்களின் திரள் அனைத்துக்கும் ஶரீரம். அனைத்தும் பிரஹ்மத்துக்குச் ஶரீரம். ஶரீர – ஆத்ம ஸம்பந்த்த்தை நார பதத்தில் சொல்லியாயிற்று.
  1. அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி–அயனம்- ஆஶ்ரயம்,  இருப்பிடம் என்றலே ஆதாரம், தாங்குவது என்று பொருள். அவன் ஆதாரம். எது ஆதேயம் அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்களின் திரள் ஆதேயம். ஆக ஆதார – ஆதேய ஸம்பந்தம்.–ஆதாரம் பகவான் (தாங்குபவர்) – நாரம் ஆதேயம் ( தாங்கப்படுகிறோம்)  ஆதார ஆதேய ஸம்பந்தத்தை அயன பதத்தால் சொல்லியாயிற்று.
  1. ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி–ஆய –  போக்த்ரு  – போக்யம். இது வ்யக்த சதுர்த்தி.

ஆய என்பது நாம் செய்யும் கைங்கர்யம். அதனால் அவர் கொள்கிற ஆனந்தம். நாராயணனுக்காக. அவன் முக மலர்த்திக்காகவே. அனுபவிக்கிறான். எனக்காக புஷ்பம், எனக்காக சந்தனம். இது இத்தனையும் போக்யம். நான் போக்தா.

அதேபோல நாராயணாய – நாராயணனுக்காக என்று சொன்னால் நாரயணனுக்காக பிரம்மா. நாரயணனுக்காக சிவன், ராமாநுஜர், நான் அசித் அத்தனையும் நாராயணனுக்காகவே. இவை அத்தனையும் போக்யம்.  நாராயணன் போக்தா. இந்த .போக்த்ரு –போக்ய ஸம்பந்த்த்தை “ஆய” பதத்தால் ஸாதித்தார்.

நார என்பதால் ஶரீர – ஶரீரி ஸம்பந்தம், –அயன பதத்தால் ஆதார – ஆதேய ஸம்பந்தம், –ஆய பதத்தால் போக்த்ரு – போக்ய ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

ஆக -ப்ரதம ரஹஸ்யம் -திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

ஓம் நமோ நாராயணாய, மூன்று பதம் எட்டெழுத்துக்கள். ஓம் – அ+உ+ம, நம:, நார+ஆயனம்+ ஆய. அவ ரக்ஷணெ என்ற தாது அ காரத்தில் ஏறிக் கழிந்துள்ளது.

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி

திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.

நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள் –

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Posted in Ashtaadasa Rahayangal, ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் | Leave a Comment »

ஸ்ரீ திருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும்–

November 22, 2022

ஸ்ரீ:ரியப் பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதன் ஏற்றத்தை பரமாசார்யரான நம்பிள்ளை ஈட்டிலே “ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையிறே!” என்று கொண்டாடியருளுகிறார்.

கவி என்று பேர் கொண்டவர்கள் ஆழ்வார் திருவவதாரத்திற்குப் பின்பு தோன்றியுள்ளார்கள். ஆயினும், அவர்கள் கவிகளை நம் பூர்வர்கள் கைக்கொள்ளுவதில்லை.

ஆனால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்கள் இல்லை என்றால் உற்சவங்களும் விழாக்களும் பொலிவிழந்து போகும் என்று வியந்து கம்பர் தம்முடைய சடகோபர் அந்தாதியில் குறிக்கும் பொழுது – அந்தமிலா மறையாயிரத்தாழ்ந்தவரும் பொருளைச் செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களுந் தந்தம்விழாவும் அழகும் என்னாம்? (சடகோபர் அந்தாதி – 14)

[அழிவில்லாதனவும் அநேக ஆயிரம் சாகைகளாக உள்ளனவுமான வேதங்களின் சாரார்த்தத்தை தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாகச் சீர்திருத்தி அருளிச் செய்யாதிருந்தாரானால் அந்தணர்களும் அவர்கள் கொண்டாடும் உத்ஸவங்களும் எங்ஙனம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயும் யாதாய் முடியும்] என்று குறித்தருளுகிறார்.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில் இவ்வாழ்வாரின் திருவாய்மொழி அனுபவத்திற்குத் தடையாக எழுந்தருளினார் என்று கோஷ்டி கலைக்கும் பெருமாள் வந்தார் என்று செல்வர் புறப்பாடினை நிறுத்திக் கொண்டார்கள் என்றால் – அதன் மூலம் திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

ஆழ்வார்களில் வேதம் தமிழ் செய்த மாறன், ஶடகோபன் – அஜ்ஞானத்திற்குக் காரணமான ஶடம் என்னும் வாயுவை நிரஸித்தவர், மற்றைய ஆழ்வார்களைத் தனக்குத் அங்கங்களாகக் கொண்டவர் என்ற பெருமைகள் உடையவர் நம்மாழ்வார்.

இவர் அருளிச் செய்த நான்கு ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழிக்கு மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த செய்தவைகள் அங்கங்களாகவும் உபாங்கங்களாகும் உள்ளன.

இது “வேத சதுஷ்டய அங்கோபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்” (43) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு உணரத்தக்கது.

இவருடைய அருளிச்செயலான திருவாய்மொழிக்கு, கல்பந்தோறும் சதுர்முக ப்ரஹ்மாவிற்கு வேதத்தினைக் கொடுத்தவனான ஸ்ரீரங்கநாதன் வேத ஸாம்யத்தைப் ப்ரஸாதித்தருளினான். இதுதன்னை கோயில் ஒழுகிலும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த கலியன் அருள்பாடு என்னும் க்ரந்தத்திலும் காணலாம்.

இதனை த்ராவிட வேத ஸாகரம் என்றார் ஸ்ரீமந் நாதமுனிகள். வேதத்தின் லக்ஷணங்கள் அனைத்தும் இத்திருவாய்மொழிக்கு உண்டு என்பதை வேத நூல், இருந்தமிழ்நூல் (45) என்னும் சூர்ணிகையினால் காண்பித்தருளுகிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு வேதத்தோடுள்ள ஸாம்யமானது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் நன்கு நிலை நாட்டப்பட்டது குறிக்கொள்ளத் தக்கது. இதற்கு த்ரமிடோபநிஷத் என்றே திருநாமம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருவாய்மொழியின் ப்ரமேயம் (திருவாய்மொழியினால் அறிந்து கொள்வது) அர்த்த பஞ்சகம் ஆகும். மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்.

அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும்,  வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று. ஆக (1) பரமாத்ம ஸ்வரூபம் , (2) ஜீவாத்ம ஸ்வரூபம் , (3) உபாயஸ்வரூபம், (4) விரோதி ஸ்வரூபம், (5) புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிய ஐந்து ஞானமே அர்த்த பஞ்சகம் என்பதாகும். இது தன்னை ஹாரீத ஸ்ம்ருதியில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]-என்ற ஶ்லோகம் தெரிவிக்கிறது.

இதன் திரண்ட பொருள் – அடையத்தக்க பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, அடையும் வழி, அடைந்து பெறும் பயன், அடைவதற்குத் தடை ஆகியவற்றை இதிஹாஸ புராணங்களோடு கூடிய வேதங்களும் வேதஶப்தார்த்தங்களையறியும் மஹாபுருஷர்களான முனிவர்களும் ஆழ்வார்களும் உரைக்கின்றனர்.

இந்த ஶ்லோகம் முமுக்ஷுப்படியில் வ்யாக்யானம் அருளிச்செய்யுமிடத்து பெரிய ஜீயர் காண்பித்தருளுகிறார். அதற்கு அரும்பதம் அருளிச்செய்த எம்பாவய்யங்கார் ஸ்வாமி முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு மஹாத்மாக்களான முநிகள் என்பதால் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.

இதன் ஏற்றத்தை பூர்வாசார்யர்கள் பலபடிகளாலும் பேசியுள்ளார்கள்.

  1. ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு. முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே எம்பெருமானே ஜகத்காரணன் என்பதை சொல்வதினால் பரஸ்வரூபமும், ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும், மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும், அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும், அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.
  2. “அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.
  3. இதனை “ஞாதவ்ய பஞ்சக ஜ்ஞானம்” என்கிறார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தம் அர்த்த பஞ்சகம் என்கிறார். மேலும் அதனை அறிகையே பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், அதனை அறிந்து கொள்ளாமையே பிறப்பு இறப்பு சுழியில் சிக்கிக் கொள்வதற்கும் காரணம் என்கிறார்.
  4. ஸப்த காதையில் இதனை “அஞ்சுபொருள்” என்கிறார்.

இனி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் அமைந்திருக்கும் படியை பார்க்கலாம். திருவாய்மொழி மொத்தம் 100 பதிகங்களால் ஆனது. அதில் இவ்வர்த்தத்தை மொத்தம் 20 பதிகங்களில் விசதமாக்கி மற்ற 80 பதிகங்களில் இது தன்னையே பரக்க அருளிச் செய்துள்ளார் ஆழ்வார். இப்பொழுது முக்கியமான 20 பதிகங்கள் (ஒவ்வொரு ஜ்ஞானத்திற்கும் 5 பதிகங்கள் ) – அவற்றைப் பார்க்கலாம்.

பர ஸ்வரூபம்:

பர ஸ்வரூபம் என்றால் ஸகல கல்யாண குணநிதியாய், அகில ஹேயப்ரத்யநீகநான (தோஷங்களுக்கு எதிர்த்தட்டான) பராத்பரனான ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வரூபம். அதனைப் ப்ரதிபாதிக்கும் (சொல்லும்) திருவாய்மொழிகள்,

  1. உயர்வற உயர்நலம்
  2. திண்ணன்வீடு
  3. அணைவதரவணை
  4. ஒன்றுந்தேவும்

“உயர்வறயுயர்நலம் உடையவன்“ என்று தொடங்கும் 1ம் பத்து முதல் திருவாய்மொழி பரத்வத்தில் பரத்வம் சொல்லுகிறது என்பர் ஆசார்யர்கள். இதில் எம்பெருமான் “தம் ஈஶ்வராணாம் பரமேஶ்வரம்” (ஶ்வேதாஶ்வரோபநிஷத் ) என்கிறபடியே பரர்களுக்கு எல்லாம் பரனாய் ஸர்வஸ்மாத் பரனாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்.

முதல் பாசுரம் உயர்வறவுயர்நலம் *உயர்வறவுயர்நலம் உடையவன்* என்பதினால் கல்யாணகுண யோகத்தையும், *அயர்வறும் அமரர்கள் அதிபதி* என்பதினால் நித்ய விபூதியோகத்தையும், *சுடரடி* என்பதினால் திவ்ய விக்ரஹத்தையும் அருளிச்செய்கிறார். திருவடியைச் சொன்னது திருமேனிக்கு உபலக்ஷணம்.

ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு) கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயும் தோஷங்களுக்கு எதிர்த்தட்டாயும் இருக்கை. இதுவே உபயலிங்கம் எனும் அடையாளங்கள். இதனை அஸங்கேய (கணக்கற்ற) அநவதிக (அவதி – எல்லை – அநவதிக – எல்லையில்லாததான) திருக்கல்யாண குணங்களை உடையவன் என்பதை – உயர்வறவுயர்நலம் உடையவன் என்றார்.

இரண்டாம் பாசுரம் மனனகமலமற எல்லாவித தாழ்வுகளுக்கும் எதிர்த் தட்டாகவும் எல்லையில்லாத திருக்குணங்களையும் உடையவனாய் இருக்கும் எம்பெருமான் – சேதனம் எனப்படும் அறிவுள்ள சித் மற்றும் அசேதனம் எனப்படும் அறிவில்லாத அசித் ஆகிய இரண்டு வஸ்துக்களைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணன் என அவனது மேன்மையை அருளிச் செய்கிறார்
மூன்றாம் பாசுரம் இலனது நித்ய விபூதி (விபூதி என்பது ஐஶ்வர்யத்தைக் குறிக்கும்) போலே லீலா விபூதியும் அவனுக்கு சேஷம் – அவனுக்கு உரியது என்கிறார்
நான்காம் பாசுரம் ஆய் நின்ற அவரே இந்த லீலா விபூதியுனுடைய ஸ்வரூபம் பரமாத்மாவிற்கு அதீனம் என்கிறார். எப்படியென்னில், (1) ஸ்ருஷ்டியில் இதை உண்டாக்குவது பரமாத்மா தான், (2) வஸ்துக்கள் வஸ்துக்களாகும்படி அநுப்ரவேஶித்ததும் அவன்தான், (3) இது அழியும் பொழுது ஸூக்ஷ்மமாகத் தன்னிடம் ஒடுங்கும்படி செய்வதும் அவன்தான்.
ஐந்தாம் பாசுரம் அவரவர் இனி ஸ்திதியும் (இருப்பு) அவனது அதீனம் என்கிறார். அதாவது ஸர்வர்க்கும் அந்தர்யாமியாய் நின்று ரக்ஷிப்பது எம்பெருமான் என்கிறார்.
ஆறாம் பாசுரம் நின்றனர் இருந்தனர் கிடந்தனர் இங்கு ஶப்தங்கள் பன்மையாகப் படிக்கப்பட்டுள்ளன. அதனால் எம்பெருமானைத் தவிர்ந்த அனைத்தின் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி அவனது அதீனம் என்பது இங்கு தெளிவு.
ஏழாம் பாசுரம் உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே
ஏழாம் பாட்டில் ஜகத்துக்கும் ஈஶ்வரனுக்கும் உள்ள ஶரீராத்மபாவத்தை அருளிச்செய்கிறார். *சுடர் மிகு சுருதியுள் உளன்” என்பதினால் வேதத்தினால் சொல்லப்படும் பரம்பொருள் எம்பெருமான் என்கிறார். இங்கு “* சுடர்மிகு சுருதியுள் * என்கையாலே நாராயணாநுவாகாதிகளில் சொல்லுகிற பரத்வம் லக்ஷ்மீ ஸம்பந்தம் இவையெல்லாம் அங்கீகரித்தாகிறார் *” என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி அனுஸந்திக்கத்தக்கது.
எட்டாம் பாசுரம் பரபரன் பரபரன் என்பதே உயிரான பதம். ஸர்வஸம்ஹர்த்தாவாய் (உலகில் ஸம்ஹரிக்கிறவன் என்று பெயரெடுத்தவர்களையும் மஹாப்ரளயத்தில் ஸம்ஹரிக்கிறவனாய்), ஸர்வஸ்ரஷ்டாவாய் (ஸர்வத்தையும் படைப்பவனாய்) ஸர்வாந்தர்யாமியான (அனைவருக்கும் அந்தர்யாமியான), ஸர்வேஶ்வரனே பரபரன் என்கிறார்.
பரபரன் – பர:பராணாம் பரம: பரமாத்மாத்ம ஸம்ஸ்தித: | ரூபவர்ணாதி நிர்தேஶ விஶேஷண விவர்ஜித: || (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 1-2-10) (மேலானவற்றைக் காட்டிலும் மேலானவனும் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லாதவனும் தனக்குத்தானே ஆதாரமாய் இருப்பனுமான பரமாத்மா ரூபம் நிறம் முதலியவை, நாமம் ஆகிய ப்ராக்ருத விஶேஷணங்கள் அற்றவன்) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் என்றபடி.
பத்தாம் பாசுரம் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே * அணோரணீயாந் மஹதோ மஹீயாந் * என்று ஶ்ருதி ஓதியபடியே பரதத்த்வமானது அணுக்களிலும் அந்தர்யாமியாய் எங்கும் பரந்துளன் என்றருளிச் செய்தார். இதனால் அவனது வ்யாப்தியை அருளிச் செய்தாராயிற்று
பதினொன்றாம் பாட்டு. வரனவில் திறல்வலி அளிபொறையாய் நின்ற பரன் பஞ்சபூதங்களுக்கும் அஸாதாரணமான ஶப்தாதி குணங்களுக்கு நிர்வாஹகனாய் பரனாய் நிற்பவன் ஸர்வேஶ்வரன்

இப்படிப் பரக்க எம்பெருமானின் பரத்வத்தை பேசினார் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலம் உடையவன்” பதிகத்தில். அதிலும் அவற்றைத் தான் மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் நேரே அனுபவித்துப் பின்பு அவற்றைப் பேசினார். அதுவும் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்கிறார். இவ்வளவு அர்த்தங்களையும் சுருக்கி ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
மயர்வேத நேர்கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு. (திரு. நூ. 1)  என்றருளினார்.

உயர்வே பரன்படியை என்பதினால் பரத்வே பரத்வமும், உள்ளதெல்லாம் தான் கண்டு என்பதினால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஆழ்வார் அவை அனைத்தையும் கண்டதையும், மயர்வேத நேர் கொண்டு உரைத்து என்பதினால் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்ததையும் இப்பாசுரத்தில் அருளினார் ஆயிற்று.

திண்ணன் வீடு என்னும் பதிகத்திலும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை அருளினார் ஆழ்வார். முதலில் உயர்வற உயர்நலம் பதிகத்தில் ஶ்ருதியைக் கொண்டு பரத்வம் சொன்னாற்போலே, இந்தப் பதிகத்தில் இதிஹாஸ புராணங்களைக் கொண்டு அவனது பரத்வத்தைப் ப்ரதிபாதிக்கிறார் (சொல்லுகிறார்) இந்தப் பதிகத்தில். அப்படி அருளிச்செய்தவைகளாவன

  • மாபாவம் விட அரற்குப் பிச்சைபெய் * கோபாலகோளரி ஏறன்றியே. (2-2-2)
  • தேவனெம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும்தகுமே (2-2-4)
  • தகுங்கோலத் தாமரைக்கண்ணனெம்மான் (2-2-5)
  • புள்ளூர்தி கழல்பணிந்தேத்துவரே (2-2-10)

இப்பதிகந்தன்னில் ஈட்டில் சில மேற்கோள்கள் இதிஹாஸத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளன. சிலவற்றை மட்டும் பரத்வம் சொல்லுவதைப் பார்க்கலாம்.

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |
க்ருஷ்ணஸயஹி க்ருதே பூதமிதம் விச்வம்சராசரம் || (மஹாபாரதம் பீஷ்ம பர்வம்)
உலகங்களுடைய உத்பத்தியும் க்ருஷ்ணன் தான்; ப்ரளயமும் க்ருஷ்ணன் தான் என்பது ப்ரஸித்தம். ஜங்கம ஸ்தாவரமாயிருக்கிற ஸகலமான இந்த ப்ராணி ஸமூஹமானது க்ருஷ்ண நிமித்தமாக இருக்கிறது.

யச்ச கிஞ்சிந்மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் |
தத் பச்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந: || (மஹாபாரதம் ஆரண்யம்)
உலகத்தில் சராசராத்மகமான யாதொன்று என்னால் பார்க்கப்பட்டதோ அவை எல்லாவற்றையும் நான் ஈச்வரனுடைய வயிற்றில் பார்த்தேன்

இதனை உட்கொண்டே ஸ்ரீமத் வரவரமுனிகள் * திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை – நண்ணி அவதாரத்தே நன்குரைத்த * என்றருளினார்.

*அணைவது அரவணை மேல்* என்பது இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆகும். ஈட்டில் இதன் அவதாரிகையில் பரத்வம் சொல்லுகிறது என்பதற்கு இரண்டு யோஜனைகள் காட்டப்பட்டுள்ளன. முதலாவது “தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்” என்கிற 6வது பாசுரத்தில் உள்ள * பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்பது கொண்டு இங்கு பரத்வம் பேசப்படுகிறது என்பது ஒரு நிர்வாஹம்.

அர்ஜுனன் தினமும் பரமஶிவனுக்கு ஒரு புஷ்பம் ஸம்ர்பிப்பது வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு தினம் ஸமர்ப்பிக்க முடியாமல் போகவே – அன்று கண்ணன் எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கவே மறுநாள் பரமஶிவனின் முடியில் அந்த புஷ்பத்தைக் கண்டான்.

இனி பராஶர பட்டர் – முதல் பாசுரமான * அணைவது அரவணை மேல் * என்பதினால் எம்பெருமான் நித்ய சூரிகள் அனுபவிப்பது போன்று மோக்ஷம் அருளக் கூடியவன் என்று கொண்டு – அதனால் பரத்வம் சொல்லுகிறது என்று நிச்சயித்தார்.

ஆழ்வார் இப்படி மோக்ஷப்ரதத்வத்தை (மோக்ஷம் கொடுக்க வல்லவனாயிருக்கை) தனியாக அருளிச் செய்ததை அடியொற்றியே யாமுநமுனியான ஆளவந்தாரும் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் – “த்வாதாஶ்ரிதாநாம்” என்கிற ஶ்லோகத்தில் மோக்ஷப்ரதத்வத்தையும் சேர்த்து அனுபவித்தார். இப்படி பட்டர் நிர்வாஹத்தையே முக்கியமாகக் கொண்டார்கள் நம் பூர்வர்கள்.

அடுத்ததாக 4ம் பத்து கடைசி தஶகம் – * ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் * என்கிற பதிகத்தால் அர்ச்சையில் பரத்வம் சொல்லுகிறது. * ஸதேவ ஸௌம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் * – என்று ஶ்ருதி சொன்னபடியே ஶ்ருஷ்டிக்கு முன்பு வேறு ஒருவரும் இல்லாத நிலைமையில், அனைத்தையும் தன்னுடன் ஒட்டி வைத்துக் காப்பாற்றி, அனுப்ரவேஶம் பண்ணியருளி அனைவரையும் படைத்ததைக் கொண்டு இங்கு அர்ச்சையில் பரத்தவத்தை ஸாதித்தருளுகிறார்

  • நான்முகன் தன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்- ஆதிப்பிரான்
  • நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – புகழாதிப்பிரான்

ஈட்டில் இந்த பதிகத்தின் ப்ரவேஶத்தில் அத்புதமாக எம்பெருமானின் பரத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமானுஜபதாச்சாயரான ஸ்வாமி எம்பார் வார்த்தையாக ஒன்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது – “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக பாவிப்பர்கள்”. ஆழ்வார் இத்திருவாய்மொழி அருளிச் செய்தபின்பு, அதை உணர்ந்ததனால் எம்பெருமானின் பரத்வத்தை அறிந்து கொண்டு – மற்றைய தேவர்கள் அடுப்பில் வைக்கும் கல் போன்று கொள்வர்கள் என்று – அதாவது மோக்ஷம் பராத்பரனாலேயே கொடுக்க முடியும். எனவே மற்றவர்களால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்றபடி.

—————

ஜீவாத்ம ஸ்வரூபம்:

பரமாத்ம ஸ்வரூபத்தைப் பார்த்த அநந்தரம் ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகளைப் பார்க்கலாம். ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகள்

  1. பயிலுஞ் சுடரொளி (3-7)
  2. ஏறாளும் இறையோனும் (4-8)
  3. கண்கள் சிவந்து (8-8)
  4. கருமாணிக்க மலைமேல் (8-9)

ஸ்ரீவசனபூஷணதிவ்ய ஶாஸ்த்ரத்தில் ஆசார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாசார்யர் * அஹங்காரமாகிற ஆர்ப்பைத் ஆத்மாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிரே *  என்றருளுகிறார். அதாவது தேஹமே ஆத்மா, மற்றும் நான் ஸ்வதந்த்ரன் என்னும் இரு வகையான அஹங்காரம், மமகாரம் என்னும் அழுக்கு – ஆசார்ய உபதேசத்தால் நீங்கும் போது – ஆத்மா உள்ளவரை இருக்குமது தாஸத்வம் என்பதாகும். ஆத்மா நித்யமாகையாலே தாஸத்வமும் நித்யம் என்பது கருத்து.

அந்த தாஸத்வமும் ஹரியின் அடியார்கள் வரை செல்லும் என்பதை * உற்றதும் உன்னடியார்க்கடிமை * என்பதாக, அடியார்களுக்கு அடியவனாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தை * பயிலுஞ் சுடரொளி * திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். இத்திருவாய்மொழியில்

  • எம்மையாளும் பரமர் (3-7-1)
  • எம்மையாளுடை நாதரே (3-7-2)
  • எம்மையாளுடையார்களே(3-7-3)
  • சன்மசன்மாந்தரம் காப்பரே (3-7-6)
  • எம்தொழுகுலம் தாங்களே (3-7-8)

என்றும் அருளிச்செய்து, முடிவில் * இவைபத்து அவன் தொண்டர்மேல் முடிவு * என்றது குறிக்கொள்ளத்தக்கது. இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களுக்கும் விஷயம் அவன் தொண்டர்கள் என்றாராயிற்று.

இனி * ஏறாளும் இறையோனும் * பதிகத்தில், அவனது திருவுள்ளத்திற்கு வேறுபடில் ஆத்மாவும் வேண்டா என்பது தேறிய கருத்தாகும். இங்கு ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு வேண்டா எனில் எனக்கும் வேண்டா என்றருளிச் செய்கிறார். ஆத்மீயம் என்றால் – ஆத்மாவுடையது என்றபடி.

இதனால் தேறுவது என் என்னில் – எம்பெருமானுக்காக என்றால் தான் ஆத்மாவும் கைக்கொள்ளத்தக்கது என்பதை எதிர்மறையாக உணர்த்தியருளுகிறார் ஆழ்வார்.

இதனை அடியொற்றியே ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் * ந தேஹம் ந ப்ராணாந் * [ஆத்மா என்று அபிமானம் கொள்ளாம்படி இருக்கும் தேஹம், ப்ராணன், தேவர்களும் ஆசைப்படும் ஸுகம், பிள்ளைகள், நண்பர்கள், ஆத்மா – இவையனைத்தும் உனக்கு புறம்பாகில் ஒரு க்ஷணகாலமும் ஸகிக்கமாட்டேன். இதைப் பொய்யாக விண்ணப்பித்தேனாகில் – உன்னிடத்தில் மது என்னும் அரக்கன் பட்டது படுகிறேன்] என்கிற ஶ்லோகத்தில் இவ்விஷயத்தையே அருளினார்.

இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகளும் * ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் – தேறுங்கால் என்றனக்கும் வேண்டாவெனுமாறன்றாளை * என்றருளினார். –

இதன் தேறின அர்த்தம் – “பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் கொண்ட ஈசன் திருவுள்ளவுகப்புக்கு வேறுபட்டால் உடைமையும், ஆத்மாவும் ஆராயுங்கால் எனக்கு வேண்டியதில்லை” என்பதாகும்.

அடுத்து *கண்கள் சிவந்து* என்னும் பதிகத்தினால் ஆத்மவஸ்து எம்பெருமானுக்கு சேஷம் என்றும், ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறாய் (தேஹாதிகளைக் காட்டிலும் வேறாய்) ஜ்ஞாநம் ஆநந்தங்கள் இரண்டையும் கொண்டிருப்பது என்று ஆத்ம தத்வத்தினைத் தெரிவித்தருளுகிறார்.

அதாவது * அடியேனுள்ளான் உடலுள்ளான் * என்று ஆத்ம தத்த்வத்தை தெரிவித்தருளும் பொழுது அடியேன் என்று அது பரமாத்மாவிற்கு தாஸன் என்பதை அறிவிக்கும் முகமாக அடியேன் என்ற சப்தத்தை உபயோகப்படுத்தியருளினார்.

இது * தாஸபூதா ஸ்வதஸ்ஸர்வே ஆத்மாஹி பரமாத்மந: * (இயற்கையாகவே ஆத்மாவானது பரமாத்விற்கு அடிமைப்பட்டவன் ) என்பது முதலான ப்ரமாண வசனங்கள் இங்கு விவக்ஷிதம்.

* சென்று சென்று பரம்பரமாய் * என்பதினால் தேஹம், ப்ராணன், மனஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று மேம்பட்டதாய் அவைகளில் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆத்மா என்று ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானவன் என்று தெரிவித்தருளினார்.

*  நன்றாய் ஜ்ஞாநம் கடந்ததே * – ஆத்ம ஸ்வரூபமானது ஜ்ஞாநம் மற்றும் ஆநந்தம் இவை கொண்டே அறிய வேண்டியது; நன்றாய் ஜ்ஞாநம் என்றதால் ஆநந்தமாயிருப்பதும் – ஆநந்தமென்பது அநுகூல ஜ்ஞாநமாகையாலே அதனால் ஜ்ஞாநம் சொன்னதாயிற்று.

இதனால் ஆத்மா ஜ்ஞாந ஆநந்தங்கள் உடையவன் என்பதாயிற்று.

ஆத்மாவானது பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் என்பது கீழேயே சொல்லப்பட்டது. அந்த விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபம் தானும் தனக்கு என்றில்லாமல் எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷமாயிருக்கும் (பிறர்க்கு அர்ஹமாகாமல் அவனுக்கே சேஷமாயிருக்கும்) என்பதனை *கருமாணிக்க மலை மேல் * (8-9) என்னும் திருவாய்மொழியில் தோழிப் பேச்சாக ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

இது தானும் அறிதியிடுவது * படவரவணையான் நாமமல்லால் பரவாளிவள் *, * திருப்புலியூர் புகழன்றிமற்று – பரவாளிவள் * *திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – அன்றி மற்றோருபாயம் என் இவளந்தண்டுழாய் கமழ்தல் *

இவை கொண்டு .  ஸ்ரீமத் வரவரமுனிகள் இதனை – * திரமாக அந்நியருக்காகாது அவன்றனக்கேயாகுமுயிர் அந்நிலையையோரு நெடிதா * (திரு. நூ – 79) என்றருளிச் செய்தார் –

ஸ்ரீ க்ருஷ்ண பகவான் விஷயத்தில் ஒரு கன்னிகையின் அவஸ்தையை அடைந்து – அத்விதீயமாய் விலக்ஷணமான ஸம்ஸ்லேஷ லக்ஷணங்களைத் தோழிப் பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே ஸ்திரமாக ப்ராப்த ஶேஷி (ஶேஷி – கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன்; ப்ராப்த ஶேஷி – ஒரு காரணமன்றிக்கே இயல்பாக அமைந்த ஶேஷி) சேஷமாகிற ஆத்ம ஸ்வரூபம் பிறருக்கு சேஷமாகாமல் அவனுக்கே சேஷமாகும் நிலைமையை தீர்க்கமாக ஆராயுங்கோள் – என்பது அந்தப் பாசுரத்தின் தேறின அர்த்தம்.

—————

விரோதி ஸ்வரூபம்:

விரோதியானது – கீழ்ச்சொன்னபடி பகவானுக்கே அடிமையான ஆத்ம வஸ்து அவனைக் கிட்டி வாழ்ச்சி பெறாது தடை செய்யுமவையாம். இந்த விரோதி வர்க்கத்தைச் சொல்லும் திருவாய்மொழிகள்

  • வீடுமின் முற்றவும் (1-2)
  • சொன்னால் விரோதம் (3-9)
  • ஒருநாயகமாய் (4-1)
  • கொண்ட பெண்டிர் (9-1)

இவற்றுள்  * வீடுமின் * பதிகத்தில் எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களின் தோஷங்களை அறிவித்து அதை விட, நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கிறார் ஆழ்வார். மேலும் அவற்றைப் பற்றுவதற்கு அஹங்காரம் (நான் நான் என்று நினைப்பது), மமகாரம் (என்னுடையது என்று நினைப்பது) ஆகிய இரண்டுமே ப்ரதான காரணம் ஆதலால் அவற்றை * நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து * என அவற்றை அடியோடு விடச் சொல்கிறார்

இத்திருவாய்மொழியில்.  இங்கு * அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: | அவித்யா தருஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் * (6-7-11) என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் நினைக்கத்தக்கது. [தான் அல்லாத தேஹத்தில் தான் என்கிற நினைவும், தன்னுடையதல்லாத பொருள்களில் தன்னுடையது என்கிற நினைவும் ஸம்ஸாரத்தில் அவித்யையாகிற காம்யகர்மங்களெனும் மரம் வளர்வதற்குறுப்பான விதைகளாகும்] .

இனி ஸேவை செய்வது எம்பெருமானுக்கே என்றும் – மற்றவர்களுக்கு ஸேவை செய்வது அஸேவ்ய ஸேவையாகும் (செய்யத் தகாததாகும்) என்பதனை * சொன்னால் விரோதமிது * என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.

* என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் * – முதலான இப்பதிகத்தில் உள்ள பாசுரங்கள் இதனைத் தெரிவிப்பன. இப்படி அஸேவ்ய ஸேவை செய்தால் த்ருஷ்டமும் (கண்ணால் தெரியும் பலனும்), அத்ருஷ்டமும் (ஐஹிஹ லோக பலங்களும்) கிடைக்காது – மாறாக அநர்த்தமே ஸித்திக்கும் என்பது இப்பதிகத்தில் அறிய வேண்டியது.

ஒரு புருஷனால் வேண்டப்படுவது புருஷார்த்தமாகும். அது நான்கு வகைப்படும். ஐச்வர்யம் (இது இரு பிரிவு – இழந்த செல்வம், புதிதாக வேண்டும் செல்வம்), கைவல்யம் (ப்ரக்ருதி ஸம்பந்தம் ஒழித்து பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவித்தல்) மற்றும் பகவல்லாபம். இவற்றுள் ஐச்வர்யம், கைவல்யம் இரண்டும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விட வேண்டியது.

இதனை * மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே இனிதாம் * என்று மாமுனிகள் அருளிச் செய்கிறார்.

அதனையும் * ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் * என்பதால் இவ்வுலகம் அனைத்தையும் தன் ஆட்சியின் கீழ் என்னும்படி வாழ்ந்தாலும், அது நிரந்தரமில்லை – * பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * என்றுரைத்தார்.

இனி ஸ்வர்க்க லோகாநுபவமோ என்னில் * க்ஷீணே புண்யேமர்த்த்யலோகம் விஶந்தி * (புண்யம் அழிந்தவாறே அங்கிருந்து விழுகிறார்கள்) என்பதை * குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தி மீள்வர்கள் * என்றார். இது ப்ரஹ்மலோகானுபவம் வரை உபலக்ஷணம்.

இவை போல் அஸ்திரமாக இல்லாமல் இருந்தாலும் தன்னைத் தான் அனுபவிப்பதாகிற கைவல்யம் – * இறுகலிறப்பு * என பகவதனுபவத்தைப் பார்த்தால் தோஷமாயிருக்கும்.

ஆர்க்கும் ஹிதம் தன்னையே பார்க்கும் கீர்த்தியுடைய மாறன் * கொண்ட பெண்டிர் * பதிகந் தன்னில் சரீர ஸம்பந்தத்தினால் வரும் அனைத்தும் த்யாஜ்யம் (விட வேண்டும்) என்பதை தெளிவாக உரைத்தருளினார்.

சரீர ஸம்பந்தங்கள் அனைத்தும் கர்மமடியாக வருபவை. * கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை * என்கிறார் ஆழ்வார்.

நிருபாதிக (ஒரு காரணம் பற்றி இல்லாமல்) ஸம்பந்தியான ஈஶ்வரனைப் பற்றினால் அவன் * அடியார்க்கென்னை ஆட்படுத்தும் * என்றபடி அவனது அடியவர்களுடன் சேர்த்து விடுகிறான். அதுவே ஆத்மவிற்கு ஹிதம்.

——————–

உபாயஸ்வரூபம்:

உபாயமாவது இவ்வாத்ம வஸ்துவின் ஸ்வரூபத்திற்குச் சேர செய்ய வேண்டியது ஆகும். இது தெரிவிக்கும் திருவாய்மொழிகள்

  • நோற்ற நோன்பிலேன் (5-7)
  • ஆராவமுதே (5-8)
  • மானேய் நோக்கு நல்லீர் (5-9)
  • பிறந்தவாறும் (5-10)
திருவாய்மொழி தெரிவிக்கும் கருத்து
நோற்ற நோன்பிலேன் கைமுதலில்லாமை – பேறு பெற்றுத் தருவதற்கு – வேறு உபாயங்கள் ஒன்றும் செய்யாமை. ஶரணாகதி அநுஷ்டிக்கும் பொழுது வேறு உபாயங்கள் ஒன்றும் நம் கைகளில் இல்லை என்றும் – நமது தீய வ்ருத்தங்களையும் சொல்லிக் கொண்டே அநுஷ்டிக்க வேணும், இதனை * நோற்ற நோன்பிலேன் * என்றார். சரி பேற்றுக்கு என்ன உபாயம் என்னில் – * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என எம்பெருமானே உபாயம் என்றபடி. மற்றைய உபாயங்கள் ஸாத்யோபாயங்கள் (சேதனனுடைய செயலாலே ஸாதிக்க வேண்டுபவை). எம்பெருமானோ என்னில் ஸித்தோபாயம் (ஸித்தமாக இருக்கிறான்)
ஆராவமுதே கீழே ஆகிஞ்சன்யம் அருளிச் செய்தார். இங்கு எம்பெருமானை விட்டால் வேறு கதியில்லை என்பது தோன்றும்படி * களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் * (எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி வேறு சரணமுடையேனல்லேன்) என அநந்யகதித்வத்தை அருளிச் செய்கிறார். ப்ரபந்நர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக வேண்டும் 1) ஆகிஞ்சன்யம் – எம்பெருமானைத் தவிந்தவை உபாயாந்தரங்கள் எனப்படும் – கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள். இவைகளில் கை வைக்காமல் இருக்கை ஆகிஞ்சன்யம் ஆகும். 2) அநந்யகதித்வம் – உன்காரியமாகிற மோக்ஷம் அளிப்பதில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில் நான் என்னுடைய  * நம்மேல் வினைகடிவான்- எப்போதும் கைகழலாநேமியான் *  என்னும் நிஷ்டை (இருப்பு) குலையமாட்டேன். இப்படி அநந்யகதிவம் முன்னாக * கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் *  – கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொள்ளுகை என்பதை இந்தப் பதிகத்தால் வெளியிட்டார்.
மானேய் நோக்குநல்லீர் * நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள் * என்னும்படி ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களையெல்லாம் வைக்கையும், அவைகளின் மேல் அத்யவஸாயம் உடையவராய் இருக்கையும்.
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, * , எம்பெருமான் திருக்குணங்கள் *எனதாவியை நின்றுநின்று உருக்கியுண்கின்ற*,  *என்னையுன் செய்கை நைவிக்கும்*  *வந்தென்னெஞ்சையுருக்குங்களே* என சிதிலப் பண்ணினாலும், சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் கைகொள்ள வேண்டாம் என நினைத்தாலும் அப்படி உபேக்ஷிக்க விடாதே கைகொள்ளப்பண்ணும் இயல்வினன் திருவனந்தாழ்வான்; அவர்மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொள்ளுகை ஆழ்வார் இத்திருவாய்மொழியில் உபதேஸிக்கும் அர்த்தம் ஆகும்.

———————————–

புருஷார்த்த ஸ்வரூபம்:

புருஷார்த்தம் என்பது – புருஷனால் அர்த்திக்கப்படுவது. இதுவும் கீழே நிருபித்த அத்யந்த பாரதந்த்ரயனான ஜீவாத்மாவின் தன்மைக்குச் சேர இருக்க வேண்டும். இதனை நிருபித்த திருவாய்மொழிகள்

எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

* எம்மா வீட்டுத் திறமும் * என்கிற திருவாய்மொழி அருளும் அர்த்தம் மிகவும் சீர்மையானது. நம் பூர்வாசார்யர்கள் மிகவும் சீர்மையான அர்த்தங்களை * எம்மா வீடு * என்றே குறிப்பிடுவர்கள். இனி இதில் இருக்கும் அர்த்தத்தைப் பார்க்கலாம். ஆழ்வார் அனைவருக்கும் எம்பெருமான் மோக்ஷப்ரதன் (மோக்ஷத்தை அளிக்க வல்லவன்) என்று உபதேசித்ததைப் பார்த்த எம்பெருமான் – ஆழ்வாருக்கு மோக்ஷத்தில் ஆசையுள்ளது என்று கொண்டு, ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் ப்ரஸாதிக்க திருவுள்ளமானான்.

அதைப் பார்த்த ஆழ்வார் – ” எம்பெருமானே! எனக்காகக் கொடுப்பதனால் மோக்ஷமும் புருஷார்த்தம் அன்று என்று நிர்த்தாரணம் பண்ணியருளி, எம்பெருமானே! நீ பரமபதத்தில் என்னை வைக்கவுமாம், அல்லது ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே வைக்கவுமாம் – எனக்கு ஒன்றுமில்லை. உனக்கு திருவுள்ளமே எனக்கு வேண்டுவது ” என்று புருஷார்த்த ஸ்வரூபத்தை அருளிச் செய்தார். கைங்கர்யத்தில் தனக்காகப் பண்ணுவது என்பது ஸ்வார்த்தமாகும். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

இந்த கைங்கர்யமும் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் செய்ய வேண்டும் என்பதை * ஒழிவில் காலமெல்லாம் * என்ற திருவாய்மொழியினால் உண்ர்த்துகிறார்.

  • * சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து* (3-3-2) அதாவது – “எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்திலே ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் அனைவரும் *சென்னியோங்கு தண் * திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அந்தப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பூவார்கழல்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க முடியாதவர்களாய் சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றன;” என்பதினால் உடம்பினால் செய்யும் கைங்கர்யத்தையும்,
  • * தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து * (3-3-3) என்பதினால் தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய மனஸ்ஸு இருக்கும்படியையும் அதனால் செய்யும் கைங்கர்யத்தையும்,
  • * ஈசன் வானவர்க்கென்பன் * (3-3-4) என்பதினால் நித்யர்களைச் சொல்லி அவர்கள் இருக்கும்படியான * நம இத்யேவ வாதிந* என்று அவர்கள் எம்பெருமானால் போகம் அனுபவிப்பர்களாய் அந்த போகத்தினால் வரும் ஆனந்தமும் எங்களதன்று என்பதற்காக நம: நம: என்று உரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதினால் வாசிகமான கைங்கர்யத்தையும் காட்டியருளினாராயிற்று,

இதனால் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதை அருளிச் செய்தாராயிற்று. இதனையும் * வேங்கடத்துறைவார்க்கு நம* (ஸ்ரீவைகுண்ட வாஸத்தை விட்டு திருமலையிலே நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம:) என்பதினால் தன் போகத்திற்காக என்னும் புத்தி நிவ்ருத்தியும், * சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே * (பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்) என்பதினால் அக்கைங்கர்யத்தை அளிப்பதும் திருமலையாழ்வாரே என்றதாயிற்று. இதனால் அந்த கைங்கர்யம் தானும் * வழுவிலா அடிமையாயிருக்கும் * என்பதனை அருளிச் செய்தாராயிற்று.

இந்த கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல், அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை * நெடுமாற்க்கடிமை * (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார். இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது * தனிமாத் தெய்வமான * எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.

*சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் * (ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி) * அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே * (ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்) * கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே! * (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்கவேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.

இறுதியாக * வேய்மருதோளிணை * பதிகத்தில் புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. இதனை “ பரஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வத்தைச் சொன்ன ” (அவனுடைய திருமுகமலர்த்தியே பேறாக) என்கிறார் ஸ்ரீமத் வரவரமுனிகள். இப்பதிகந்தன்னில் * உகக்கு நல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தொறும் நாங்கள் வியக்கவின்புறுதும் எம்பெண்மையாற்றோரும் * என்கிற பாசுரம் தன்னில் இவ்வர்த்தம் சொல்லப்பட்டது.

ஆழ்வார் இப்பதிகந்தன்னில் கண்ணன் எம்பெருமான் நம்மை விட்டு பசு மேய்க்கப் போனான் என்று இடைப் பெண்கள் பேசும் பேச்சாகப் பேசினார். க்ருஷ்ணனை என்னை விட்டுவிட்டு பசு மேய்க்கிறேன் என்று போகாதே எனப் பல காரணங்களைச் சொன்னார். அதில் இப்பாசுரத்தின் முந்தைய பாசுரத்தில் * நீ உகக்குநல்லவரொடும் உழிதராயே * (உனக்குப் பிடித்த ஸ்த்ரீகளுடன் இங்கேயே இரு) என்றார்.

இதனைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மை தானோ? நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே தவிர, உங்களருகே நான் வேறு சில பெண்களோடே இருந்தல் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீகளோ?” என்று கேட்டான். அதற்கு பதில் கூறுவதாக இருந்து கொண்டு நம் ஸ்வரூபத்திற்குத் தக்க புருஷார்த்தத்தைத் தெரிவிப்பது இப்பாசுரம்;

உன்னோடு நாங்கள் இருப்பதைக் காட்டிலும், நீ உன் திருவுள்ளத்தில் உகப்பாக இருப்பவர்களோடு இரு, அதனால் நாங்களடையும் உகப்பே எங்களுக்கு உயர்ந்தது என்கிறார் இப்பாட்டில்.
* எம் பெண்மையாற்றோம்* – உன் சந்தோஷத்திற்கு வேறாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு வேண்டோம்; உன் சந்தோஷமே முக்கியம் எனும் ஸ்வரூபஜ்ஞானமில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றபடி.

ஆக இதுவரையில், கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய், அனைத்து தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், ஸர்வஶேஷியாய், அனைவரையும் ரக்ஷிக்கிறவனாய், இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் (1), தேஹம் இந்திரியம் முதலானவற்றைக் காட்டிலும் வேறாய் ஜ்ஞானானந்தங்களை லக்ஷணமாக உடையவனாய், பகவானுக்கே ஶேஷமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் (2), அஹங்கார மமகாரங்களை விளைக்கடவதாயும், ஜீவனுடைய ஸ்வரூபத்தை மறைக்கக் கடவதாய் இருக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தம், எம்பெருமானைத் தவிர மற்ற பலன்களில் ஆசை வைக்கை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் சேவை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பந்துக்கள் என நினைத்தல் ஆகிற விரோதி ஸ்வரூபமும் (3), ஜீவாத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தக்கதான உபாய ஸ்வரூபமும் (4), * ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: * என்று அவனுடைய முக மலர்த்தியே பேறான புருஷார்த்த ஸ்வருபமும் (5) ஆகிய ஐந்தினையும் விரிவாகத் தெரிவிக்கும் திருவாய்மொழிகளைப் பார்த்தோம். மற்றுமுள்ள 80 பதிகங்களிலே இவ்வர்த்தமே கிடக்கிறது.

பணவாளரவணைப் பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும் குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்தது உய்ய தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாளரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – இவ்வர்த்தங்கள் அனைத்தையும் ஒரு சூர்ணிகையிலே அடக்கி அருளியுள்ளார்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும் எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

ஜயது யஶஸா துங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணாஸார்த்தம் தஸ்மை ஶுபாந் யபி வர்த்தயந்
வரவர முநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயது க்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்; அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்; அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Ashtaadasa Rahayangal, திரு வாய் மொழி | Leave a Comment »

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதயம்– நாடகம் –முதல் அங்கம் —

October 24, 2022

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மினியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————–

ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.
“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை (அயோத்திக்கு மற்றோரு பெயர்)
மஹாராஜர் காணலாம். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்திமாநகரம்.
இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும். அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன.
அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும். ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே,
தன் அவதாரத்தை பூர்த்திசெய்து கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது,
அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது. மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி
அயோத்தி மாநகரம், ரகுவம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.
மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால், மேன் மேலும் வளருகிற
புகழையுடையவன் ராமன். இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும்,
சாபத்தையே ஆயுதமாகவுடைய கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும்
கெட்ட தசையை போக்கடிக்கும் திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-
சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் –
உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே
இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா
விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

———————-

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||–சங்கல்ப சூர்யோதயம்-

வேதம் முழங்கும் தன் திருநாவில் நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால் சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே யதீஶ்வர ஸம்ஶ்ரயா: ||–யதிராஜ சப்ததி

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

————-

பத்து காட்சிகள் கொண்ட நாடகம்
சம்சாரத்தில் மாறி மாறி பிறந்து உழன்று உள்ளவர்கள் அத்தை விடுத்து மோக்ஷம் பெறுவதை உணர்த்துவதே
இதன் மையக் கருத்தாகும்–
இரண்டு கதா பாத்திரங்கள் – -விவேகன் என்றும் மஹா மோகன் என்றும் இரண்டு அரசர்கள் –
ஜீவாத்மாக்களைக் காத்து மோக்ஷம் பெற்றுத்தருவதை குறிக் கோளாக விவேகனும் பரிவாரங்களும் இருக்க
சம்சாரத்தில் மூழ்கும்படி செய்வதையே குறிக் கோளாக மஹா மோகனும் அவனது பரிவாரங்களும் இருக்கும்

கதா பாத்திரங்கள் –
விவேக அணி
விவேகன் -அரசன் -நல்லது தீயது பிரித்து அறியக் கூடிய ஞானம்
ஸூ மதி –விவேகனின் மனைவி
சமன் தமன் ஸ்வாத்யாயன் தோஷ -விவேகனின் மந்திரிகள்
விவசாயன் -விவேகனின் சேனாதிபதி -ஜீவாத்மாக்கள் முயற்சி
தர்க்கன் -விவேகனின் தேரோட்டி
ஸம்ஸ்காரன் -விவேகனின் சில்பி
அநுபவன் -ஸம்ஸ்காரனின் தந்தை
ஸங்கல்பன்- விஷ்ணு பக்தி –பகவானுடைய பரிவா ரங்கள்-
சித்தாந்தி -ஆச்சார்யர் -பகவத் ராமானுஜர்
வாதம் -சிஷ்யன் -ஸ்வாமி தேசிகன்
நாரதன் -தும்புரு -மைத்ரி -கருணை -முதிதா –ஸூ மதியின் தோழிகள்
ஷாந்தி விரக்தி ஜூகுப்ஸை திதிஷை துஷ்டி–ஸூ மதியின் பணிப்பெண்கள் –

மஹா மோஹன் அணியினர் –
மஹா மோஹன்–அரசன் -அஞ்ஞானம் மற்றும் மயக்கம் உண்டாக்குபவன்
துர்மதி -மஹா மோகனின் மனைவி
காமன் க்ரோதன் -படைத்தளபதிகள் –
ராகன் த்வேஷன் டம்பன் லோபன் தரப்பன் -கர்வன் -ஸ்தம்பம் -மந்திரிகள் -சிலரை சிஷ்யர்கள் என்றும் கூறுவர்
சம்வ்ருத்தி சத்யன் -தூதுவன்
வசந்தன் -காமனின் நண்பன்
அபி நிவேசன் -பொருளாதாரன்
திருஷ்ணை ஆசை லோபனின் மனைவி
குஹனை -வஞ்சனை -டம்பனின் மனைவி
அஸூயை பொறாமை -தர்ப்பனின் மனைவி
துர்வாசன் -அபிநிவேசனின் மனைவி
விக்னன் ஒற்றன்
மனன் மத்சரன் -ஆலோசகர்கள்
ஸ்ருங்காரன் -காமனின் சிஷ்யன்
ப்ரமன்-நண்பன் –

——-

உபோத்காதம் -முன்னுரை
யத் பக்தி பிரசயாத்மகே திந முகே த்ருஷ்ட்டி ஷம ஷேத்ரிண
க்ஷிப்ரம் ஸம்ஸ்ருதி சர்வரீம் ஷிபதி யத் சங்கல்ப ஸூர்யோதயம்
தத்வை ரஸ்தா விபூஷணை ரதிகத ஸ்வாதீந நித்யோந்நதி
ஸ்ரீமா நஸ்து ச மே ஸமஸ்த விபதத்தாராய நாராயண -1-

சம்சாரம் என்னும் இரவில் ஜீவாத்மா உறங்கியபடி இருக்க -பக்தி யோகம் விடியற்காலை உண்டாக –
ஸ்ரீ மந் நாராயணனின் சங்கல்பமே ஸூர்ய உதயம்
ஜீவாத்மா அனைத்தையும் தெளிவாக காண உதவும் -இதன் மூலம் சம்சாரம் என்னும் இருள் விலகும் –
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தத்துவங்களும் திவ்ய ஆயுதங்கள் -திவ்ய ஆபரணங்களாக அவன் திரு மேனியில் உள்ளன
அவனே அனைத்துக்கும் காரணம் -அப்படிப்பட்ட அவன் எனக்கு சம்சாரத்தால் உண்டாகும் தீங்குகளைக் கிடைக்கும்படி செய்வானாக –

லஷ்யே யத்ர சுருதிமிதகுணா க்ருஷ்ட்டி லப்தா வதாநை
ப்ரத்யக் பாண பிரணவ தனுஷா சத்த்வ வத்பி ப்ரயுக்த
மத்யே வஷஸ் ஸ்புரதி மஹசா பத்ரல கௌஸ்து பாத்மா
பத்மா காந்தா ச பவது தயா துக்த சிந்து ஸ்ரியை வ -2-

ஜீவாத்மா இறகுகள் உடன் கூடிய அம்பு போலே -சத்வ குணத்தில் நிலைத்து நின்று –
ஸ்ருதியின் படியே பகவத் த்யானத்தில் ஆழ்ந்து வில்லாளி -வில்லில் உள்ள நாண்-என்றுமாம் –
ஜீவாத்மா என்னும் அம்பை -பிரணவம் வில்லில் தொடுத்து -பகவானுடைய திரு மார்பில் எய்கிறான்
அப்படிப்பட்ட ஜீவாத்மா கௌஸ்துபம் ஸ்தானம்
தயை என்னும் குண பாற் கடலாக உள்ள ஸ்ரீ யபதி அனைத்து செல்வங்களுக்கும் நன்மைகளுக்கும் துணை நிற்பானாக –

இந்த இரண்டு ஸ்லோகங்களும் நாந்தி-இஷ்ட தைவ நமஸ்காரங்கள் -பக்தியையும் பிரபத்தியையும் குறிக்கும் ஸ்லோகங்கள் -இவை இரண்டும்

அங்கம் -1-காட்சி -1-
ஸூத்ரதாரர் –
சர்வேஸ்வரன் -அனைத்து தேவர்கள் அஸூரர்கள் உடைய கோடிக் கணக்கான க்ரீடங்களுடைய ஒளிக் கிரணங்கள் கொண்டு
ஆலத்தி வழிக்கப்படும் திருவடிப் பீடம் கொண்டவன்–தன்னைச் சரணம் அடைந்தவர்களை ரஷிக்க விரதம் பூண்டவன் –
தாமரையில் அவதரித்தவளுடன் சேர்ந்து நின்று தர்மம் செய்பவன் –
சம்சாரம் என்னும் காட்டுத்தீயை அணைக்க வல்ல மழை மேகமாக உள்ளவன் –
இப்படிப்பட்ட சர்வேஸ்வரனின் தோற்றத்தை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் திவ்ய தேசங்களாக
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் பூரி ஜகந்நாதர் கோயில் பாண்டுரெங்கம் போல் பலவும் உள்ளன

ஆங்கு ஆங்கு உள்ள எம்பெருமானை அவனுடைய உத்சவத்தின் பொழுது சேவிக்க ஆசை கொண்டு அந்த அந்த
திவ்ய தேசங்களுக்கு பலரும் செல்கிறார்கள் –
இப்படிப்பட்ட அடியவர்களின் பாத தூளிகளால் இந்த பூ மண்டலமே தூய்மை யாகிறது –
அவர்கள் இப்பொழுது திருக் காவேரியால் சூழப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் உள்ளனர் –
அவர்களுக்கும் பெரிய திருவடி போன்ற நித்ய ஸூரிகளுக்கும் வேறுபாடு இல்லை –
அவர்கள் அனைவராலும் போற்றப்படுபவர்களாயும் -தோஷம் இல்லாதவர்களாயும் –
தங்கள் குலத்துக்கு ஏற்ற ஞானம் உள்ளவர்களாயும் -அதற்கு ஏற்ற அனுஷ்டானங்களை உடையவர்களாயும் –
குணங்களும் கொண்டவர்களாயும் உள்ளனர் –
எல்லையற்ற காலமாக தொடர்ந்தபடி உள்ள பிரகிருதி என்னும் பெரும் சூழலில் அகப்பட்டு -வேதங்களுக்கு புறம்பாக
பொருள் உரைத்து இருப்பவர்களை மதம் கொண்ட யானைகள் வாழை மரத்தைச் சாய்த்து போன்று இவர்களை வீழ்த்துகிறார்கள்-
இவர்கள் இப்பொழுது மோக்ஷ மார்க்கத்தை விரும்பியபடி உள்ளனர் –இவர்கள் அனைத்து திசைகளிலும் ஒளிரும் ரத்னங்களாயும் –
உபநிஷத்துக்களில் பொதிந்து உள்ள ஆழ்ந்த பொருள்களை மற்றவர்களுக்கு விளக்க வல்ல ஆச்சார்யர்களாகவும் உள்ளனர் –
இவ்விதமாக அனைத்துக் கலைகளிலும் தெளிந்த இவர்களால் ஸூத்ரகாரனான நான் உத்தரவு இடப்பட்டுள்ளேன் –

லலித மனஸாம் ப்ரீத்யை பிப்ரத் ஸாந்தர பூமிகாம
நவம குணோ யஸ்மின் நாடயே ரஸோ நவமஸ் ஸ்திதஸ்
ஜநந பதவீ ஐங்கால திச்சிதா ந்ருகுணீ பவந்
நடபரிஷதா தேநாஸ் வாதம் சதாமுபசிந்விதி –3-

எனக்கு –ஸூத்ரதாரனுக்கு -இடைப்பட்ட உத்தரவு என்னவென்றால் –
தாழ்ந்த விஷயங்களில் எப்போதும் மனசைச் செலுத்தும் மக்கள் இன்பம் அடையும்படி
மற்ற ரசங்கள் அனைத்து இடத்தைப் பிடிப்பதும் குறையற்ற குணமும் கொண்ட ஒன்பது ரசம் நிறைந்த சாந்தி ரசம் நிறைந்த
நாடகம் நடத்துவாயாக -வேதனைகளை நீக்க வேண்டும்
அதில் ஜீவாத்மாவுக்கு வேண்டிய குணங்களே நாடக பாத்திரங்கள் –

சன்மார்க்க வர்த்தகர் -பரத ஸாஸ்த்ர உபாத்தியாயர் -அவருடைய சிஷ்யர் நாட்டிய சக்ரவர்த்தி சந்தோஷ பாலகர் –
அவர் புத்ரன் நான் -வைகுண்ட விநோதிந் -என்ற பெயர் –
சிங்கத்தைக் கண்ட யானை போலே மற்ற நடிகர்கள் என்னைக் கண்டு ஓடுவார்கள்
நான் மேலே சொன்னபடி சான்றோர்கள் உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளேன்
இத்தை பார்க்க வித்வான்கள் பலர் கூடியுள்ளனர்

அவதாரித நாட்ய தேசி மார்க்கை ரஸமீசீ பராங்முகைரமீபி
பரதாகம தைவதைரிவைஷா பரிஷத் ஸம்ப்ரிதி பாஸதே மஹத்பி -4-

இந்த நாடக அரங்கம் பாவனை -இசை -நடனம் -இவற்றை நன்கு அறிந்தவர்களால் நிறைந்துள்ளது
வேறே விஷயத்தில் முகம் திருப்பாதவர்கள் –
பரத ஸாஸ்த்ர தேவதைகளோ இவர்கள் என்னும் படி உள்ளதே

ஆகவே நான் அனைத்து சாஸ்திரங்களை நன்கு அறியச் செய்வதும் -எண்ணிறந்த அவதாரங்களை தனது மேன்மை குறையாமல்
அவதரித்ததும் -அஞ்ஞான சமுத்திரத்தை வற்றச் செய்பவனும் -மனத்திலே பக்தியை மட்டுமே வளரச் செய்பவனுமான
முதன்மையான தேவதையை ஆடுகிறேன் –

ப்ராஸீ சந்த்யா காசித் அந்தர் நிசாயாஸ் பிரஞ்ஞா த்ருஷ்டே அஞ்சனஸ் ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –5-

ஸூத்ர தாரன் தொடர்ந்து உரைக்கிறான் –
அஞ்ஞானத்தை போக்க வல்ல அதி காலைப் பொழுது -ஞானக் கண்ணுக்கு தீட்டப்படும் அஞ்சனம் –
நான்முகனுக்கு வேதத்தை அளிப்பவன் -குதிரை முகன் -வாகீசன் -வாஸூ தேவ மூர்த்தி
எனது மனக்கண் முன்னே தோற்றுவானாக –

தேவோ ந சுபமாதநோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைரத்யஷிதோ பாவுகைஸ்
யத் பாவேஷு ப்ருதக் விதேஷு அநு குணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ
யத்தர் மைரிஹ தர்மிநீ விஹரதே நாநா க்ருதிஸ் நாயிகா –6-

ஸூத்ர தாரன் அஞ்சலி ஹஸ்தத்துடன் பணிவாக மேலும் கூறுகிறான் –
நாடகத்தில் பத்து வித வேஷங்கள் போல தச அவதாரங்கள்-திருவரங்கம் மேடையில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்குத் தக்க
துல்ய சீல வயோ வ்ருத்தையாய் – காண்பவர் ரஸ அனுபவம் பெறும்படி -ஸ்ரீ ரெங்கநாதன் நமக்கு
அனைத்து விதமான நன்மைகளையும் பெருக்கும் படி இருப்பானாக –

இவ்வாறு இறை வணக்கம் செய்து பராத்பரன் கடாக்ஷம் பெற்று மேலும் தொடர்கிறான் –

சுருதி கிரீட விஹார ஜூஷா தியா ஸூரபிதாம் இஹ நாடக பத்ததிம்
முஹுர வேஷ்ய விவேக முபக்நயந் மதமபச்சிமாமி விபச்சிதாம் –7-

வேதாந்த க்ரீடமே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-இதனுடன் புத்தியின் திருமணம் அடையப் பெற்றதாக நாடகம் –
இதில் விவேகன் கதா பாத்திரம் கொண்டு ஞானிகளின் விருப்பங்களுக்கு மதிப்பு அளிப்பேன் –

ஸூத்ர தாரன்-நாடகக் கலைஞ்சர்கள் வேடம் புனையும் அறையின் பக்கம் முகத்தைத் திருப்பி உரைக்கிறான் –
மரியாதைக்கு உரிய நடியான -நடிகை -தங்களால் இந்த நாடக அரங்கம் மகிழ்வுடன் ஏற்கப்பட வேண்டும்

நடியானவள் மிகவும் பவ்யத்தையுடன் வந்து
இதோ நான் வந்தேன் -உங்கள் உத்தரவை மிகவும் விருப்பத்துடன் ஏற்கும் எனக்கு நீங்கள் உத்தடவு இடுங்கள் –

ஸூத்ர தாரன் -நடியிடம்
சிறந்தவளே -இந்த அரங்கத்தில் சாத்விகர்களால் உத்தவிடப்பட்ட நாடகம் நடைபெற உள்ளது
இதில் நடிக்க வேடங்கள் புனைந்து சிறந்த நம் நடிகர்கள் தயாராக உள்ளார்களா –

நடி-ஸூத்ர தாரன் இடம்
இவர்கள் உங்களுக்கு கை கால் போன்றவர்கள் அன்றோ -உங்கள் எண்ணப்படியே செய்வதில் வேகம் காட்டாமல் இருப்பார்களோ
இந்த நாடகத்தின் பெயர் தன்மை இவற்றை உங்கள் இடம் இருந்து அறிய விரும்புகிறேன் –

ஸூத்ரதாரர்
இது சங்கல்ப ஸூர்யோதயம்–விவேகம் கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டது

பாவம் விதந்தி பரமத்ர பரா வரஞ்ஞா ப்ராஞ்சா தநா
ப்ரகுண நூதன சம் விதாநம் நே
யஸ்மின் குணஸ் தனுப்ருத சதா சத் பிரகார
பத்ரீ பவந்த் யனு குணைரதி தைவதைஸ் ஸ்வை -8-

நாடகத்தின் மையக் கருத்து சாந்தம்
சரியான விவேகம் கொண்டவர்களும் -ஞானத்தை சொத்தாகக் கொண்டவர்களும் அறிவாளிகள்
நல் குணம் தீய குணம் இந்த நாடக கதா பாத்திரங்கள்

விவேக ப்ராகல்ப்ய ஸ்புரித ரண வீரப்யதிகர பர ப்ரஹ்மோ
தந்த பிரகடித தயா வீர விபவ
பிரபுத்த ஷேத்ரஞ்ஞ ஸ்திதி கடித சாந்தா க்ருதிரபூத்
பிரயோகச்சித்ர அயம் பவ ரஸ பூஜாம் அபி அபிமத–9-

இந்த நாடகத்தில் விவேகம் -என்பவனுடைய யுத்தத்தின் காணும் வீர ரசம் பல இடங்களில் உண்டு
இந்த வீரம் தயை கருணை உள்ளடக்கியதாக உள்ளது –
இதில் பர ப்ரஹ்மத்தின் லீலைகளை லீலைகளை தெளிந்த ஜீவாத்மாவின் சாந்தி ரசமும் வெளிப்படுத்தப் படுவதால்
சம்சாரத்தில் உள்ளோருக்கு விருப்பமாய் இருக்கும்

இந்த நாடகத்தின் பெருமை எல்லை அற்றது -உலகில் சங்குகள் எண்ணற்றவை -பங்கை ஜன்யத்துக்கு ஈடாகாதே

ஏ லோகான் இஹ வஞ்சயந்தி விரலோ தஞ்சன் மஹா கஞ்சுகா
தே திஷ்டந்து மஹத் க்ருஹேஷு மாணயஸ் கிம் தைரிதம் சிந்த்யதாம்
ஸ்ரீ வத்ச பிரதி வேஸதீ பரூஸினா சார்தம் கிமா பாஷ்யதே
பத்ம உல்லாசந தர்பனேந மணிநா ப்ரத் நேஷு ரத்நேஷ்வபி –10-

ஒரு சிலர் ரத்ன கற்களை ஆடைகளில் பதித்து மயக்குகிறார்கள் -எதுவும் ஸ்ரீ கௌஸ்துபத்துக்கு ஒவ்வாதே
ஸ்ரீ தாமரையாளை விளக்கு -கண்ணாடி போலே உல்லாசமாகக் காட்டும்

இந்த நாடகத்துக்கு மேலும் ஒரு காரணத்தாலும் மேன்மை உண்டே

அப திஸ்ய கிமப்ய சேஷ குப்த்யை நிகாமந்தேஷு நிரூட கௌரவேண
ப்ரவிபக்த ஹித அஹித பிரயோக கவிநா காருணிகேந கல்பித அசவ் -11-

உலக நன்மைக்காக உபாதேயம் த்யாஜ்யம் பகுத்து அறிய ஸ்ரீ வேதாந்தசசார்யனான அடியேனால் இது இயற்றப்பட்டது

நடி ஸூத்ர தாரனிடம்
இந்த நாடகத்தை உருவாக்கிய கவியின் பெயர் என்ன
அவரிடம் உள்ள மரியாதை காரணமாக இங்கு உள்ளவர்கள் நம் மேல் அன்பு காட்டுகிறார்களா –

ஸூத்ர தாரர் நடியிடம்
நீ கேள்விப்படவில்லையா
புண்டரீகாக்ஷர் என்னும் சோமயாஜியின் புத்ரரும் -உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமாயும் –
விச்வாமித்ர கோத்ரத்துக்கு அணிகலனும் அனந்த ஸூரி என்பவரின் புத்ரருமான வேங்கடநாதரே இத்தை இயற்றினர்
ஸ்ரீ ரெங்கநாதர் ஆணையால் இவருக்கு வேதாந்தச்சார்யார் என்னும் விருது கிடைத்தது
அனைவராலும் கவி தார்க்கிக்க சிம்மம் என்றும் போற்றப் பெறுபவர்

கௌட வைதர்ப பாஞ்சால மாலாகாராம் சரஸ்வதீம்
யஸ்ய நித்யம் பிரசம் சந்தி சந்த ஸுவ்ரபவேதிந –12-

கௌடம் வைதர்பம் பாஞ்சாலம் சொல்லமைப்புகள் உள்ள சொல் தொடர்கள் ரசங்கள் இருப்பதாக
கவிகள் கொண்டாடுவார்கள்

அந் யேந்த்ரகம் புவனமந்யத நிந்த்ரகம் வா கர்தும் ஷமே கவிர பூதயமந்வ வாயே
ஜென்ம த்விதீயம் ருஷிபி கதிதம் யதஸ் சா தேவீ ச விஸ்வ ஜெநநீ யதநந்யகோத்ரா –13-

இந்த லோகத்துக்கு வேறே ஒரு இந்த்ரனையோ இந்த்ரன் இல்லாத லோகத்தையோ படைக்க வல்ல வம்சத்தில் அவதரித்த கவி இவர்
காயத்ரி உபதேசம் பெற்று இரண்டாம் பிறப்பு அடைவது போலே இவருடைய மண்தக்ராமும் கோத்ரமும் –

விசித்ராசிநீ விபுகவைரி வரூதிநீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜனைர் உபபத்தி பூம்நா
கண்டா ஹரே சமஜ நிஷ்ட யதாத்மாநேதி –14-

அஸூரர்களை விரட்டவும் -நான்குமானால் ஆராதனத்தில் உபயோகிக்கப்பட்ட திருமலையில் உள்ள திரு மணி
இவர் ரூபம் என்று பல பிரமாணங்கள் கொண்டு சான்றோர்கள் நிர்மாணித்தார்கள்

விம்சப்யதே விஸ்ருத நாநாவித வித்யஸ்
த்ரிம் சத்வாரம் ஸ்ராவித சாரீர பாஷ்ய
ஸ்ரேயஸ் ஸ்ரீ மாந் வேங்கட நாத சுருதி பத்யம்
நாத ப்ரீத்யை நாடகமர்த்யே வ்யதிதைதம்-15-

தமது இருபது வயதுக்குள் பல வித்யைகளைக் கற்றார் -முப்பது முறை ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் செய்தார் –
ஸ்ரீ பகவத் ப்ரீதிக்காக மோக்ஷ புருஷார்த்தத்தைக் குறித்து புகழ் பெற்ற இந்த நாடகத்தை இயற்றினார் –

நடி ஸூத்ரதாரன் இடம்
இவர் மனம் பகவத் விஷயமாக வேதாந்தத்தில் ஈடு பட்டுள்ளது
இவர் வாக்கு வேதாந்த விரோதிகளை நிரசிக்க வல்லதாயும் கடினமான தர்க்கம் உள்ளவையாயும் உள்ளது
நம்மால் பிறருக்கு இன்பம் கொடுக்கும் படி எவ்வாறு இந்த நாடகமாக இவர் வாக்கு அமையும்
ஸூத்ரதாரர் பதில் -புன்னகையுடன்
இவர் பகவத் ப்ரீத்திக்கு மட்டும் கருத்து கொண்டவராக மற்ற சிந்தனைகளுக்கு இடம் அளிக்காதவராக உள்ளார்
என்று எண்ணுகிறாயா

மநு வ்யாஸ ப்ராசேதச பரிஷதர்ஹா க்வசி தியம்
ஸூ தா ஸிக்தா ஸூ க் தி ஸ்வயம் உதயம் அந்விச்சதி ஜநே
நிருந்தியு ஸ் கே விந்த்யாசல விகட சந்த்யா ந ட
ஜடா பரிப்ராந்தா பங்கோ ருபரி யதி கங்கா நிபததி –16

மநு இத்யாதிகள் நிறைந்த சபைக்கு ஏற்ற ஸூக்தி தாமாகவே வெளிப்பட்டுள்ளது –
கங்கா நீர் முடவன் மீதி விழுந்தால் யாரால் தடுக்க முடியும் –

அந்யத பி நித்யா யது பவதி
கம்பீர பீஷண கதிர் கிரி கண்ட நாதவ் சூடா பதம்
பசுபதேரபி கூர்ணயந்தி
ஸ்வாது ப்ரசன்ன ஸூபகாநி வஸூந்தராயாம் சோதாம் ஸி தர்சயதி கிம் ந ஸூரஸ்ந வந்தீ -17-

மலைகளையும் பிளந்து பசுபதியையும் மயக்கம் அடையும்படி பெருகும் கங்கை தெளிவாக
இனிய வெல்லத்துடன் பிரவாகித்து போலே கரடுமுரடாக இருந்தாலும் மென்மையான
இனிய பொருள்களைக் கூடியவை

நடி ஸூத்ர தாரனிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஐயா நீங்கள் உரைத்தது மிகவும் பொருத்தமே
சங்கீத ஸாஸ்த்ர ஆச்சார்யர்கள் சாந்தி என்னும் ரசம் இல்லை என்கிறார்களே -இந்த நாடகத்தில் அது உள்ளதை
எவ்விதம் சரி என்று சொல்ல முடியும்

இதுக்கு ஸூத்ர தாரன்
அவர்களை நான் பரத சாஸ்திரம் அறிந்தவர்களாக நான் ஏற்க வில்லை
அதவா தாத்ருஸாந் மத்வா ஜகதி துர்லபாந் சங்கே சாந்திர ஸோல்லா சம ஸக்ய மபி மே நி ரே -18-
சாந்தி ரசம் அனுபவிப்பவர்கள் துர்லபம் என்று எண்ணி வெளிப்படுத்துவது அரிது என்று சொல்லி இருப்பார்கள்

அசப்ய பரி பாடி காம் அதி கரோதி ஸ்ருங்காரிதா
பரஸ்பர திரஸ் க்ருதம் பரிசி நோ தி வீரா யிதம்
விருத்த கதிரத்புதஸ் ததல மல்பஸாரைஸ் பரை ஸ்
சமஸ்து பரி சிஷ்யதே சமித சித்த கேதோ ரஸ –19-

ஸ்ருங்கார ரஸம் சபைக்குத் தகாதவர்களுக்கே இன்பம் அளிக்கும்
வீரம் ஒருவரை ஒருவர் ஒப்புமை செய்து அவமானம் செய்வதை வளர்க்கும்
உண்மையான அனுபவங்களுக்கு முரண்பட்ட இவற்றால் என்ன பயன்
மனத்துக்கு அமைதி அளிக்க வல்ல ஒரே ரஸம் சாந்தி ரஸமே

நடி ஸூத்ர தாரனிடம்
ஐயா அப்படியே இருக்கலாம் -இந்த சாந்தி ரசமானது சநகாதி முனிவர்களால் ஏற்கப்பட்டதாக உள்ளது –
இத்தகைய ரசம் அனைத்து இந்திரியங்களையும் வசப்படுத்தி தகுந்த யோகத்தின் மூலமே அடையப்படும்
இப்படி இருக்க அனைவராலும் காணப்படும் இந்த நாடகத்தின் மூலம் அடையப்படுவது எவ்வாறு

ஸூத்ர தாரன் நாடியிடம்
அறிந்தவளே -அப்படி உரைக்க வேண்டாம்
அனைத்து விதமான வர்ணாஸ்ரம தர்மங்களைத் துறந்தாலும் ஆத்மாவுக்கு எந்தவித தோஷமும் ஏற்படுவது இல்லை
என்று கூறும் அலேப மத வாதி வாதங்கள் இந்த நாடகத்தில் கூறப்படுவது இல்லை
ஆகவே நீ சந்தேகம் கொள்ள வேண்டாம் -ஆயிரக்கணக்கான கர்மங்கள் -எந்தவித பலன்களுக்காக இல்லாமல் செய்யவே
அவை மோக்ஷத்துக்கு இட்டுச் செல்லும் என்றானே ஸ்ரீ கீதாச்சார்யர்
இவை அனைவருக்கும் இன்பம் அளிப்பதாகவும் நம் போல்வாருக்கு வாழ்வு ஆதாரமாகவும் உள்ளன

மேலும் கீழே கூறப்படும் விஷயமும் கூறப்படுவதையும் காணலாம்
ந தத் சாஸ்திரம் ந சா வித்யா ந தத் சில்பம் த நா கலா
நாசவ் யோகோ ந தஜ் ஞானம் நாடகே யன்ன த்ருச்யதே –20-

நாடகம் மூலம் கூறப்பட முடியாத சாஸ்திரமோ வித்யையோ சிற்பக்கலையோ யோகமோ ஞானமோ
ஏதும் இங்கு காணப்படுவது இல்லை

ஸூத்ரகாரர் நடியிடம்
அச்சம் கொள்ள வேண்டாம்
நம்மிடம் பாக்யம் உள்ளது

லக்ஷண ஸம்ருத்திரநகா ரஸ பரி போஷச்ச ஸஹ்ருத்ய க்ராஹ்ய
சம்பததி நாடகே அஸ்மின் ச ஏஷ சைலூஷ ஸூ க்ருத பரிபாக –21-

இந்த நாடகத்தில் அனைத்துவித லக்ஷணங்களும் நன்றாக உள்ளன
சிறந்த மனம் உள்ளவர்கள் நன்றாக அனுபவிக்கும் படி ரசம் மிக்கு உள்ளது
இது நாடகத்தில் நடிப்பவர்களின் பாக்யமே ஆகும்

வித்யா சம்பந்நி திர வஹிதோ வேங்கடேச கவீந்த்ர
சித்தாரம்பச் சிரமபிநயே மாமக ஷாத்ர வர்க
ப்ரக்யா தேயம் பரிஷத நகா பக்ஷ பாதா நபி ஜ் ஞ
ராமா தீநாம் குல தனமிதம் ரங்கதா யாதி ரங்கம் –22-

வித்யை என்னும் செல்வத்துக்கு நிதியாக கவிகளின் அரசர் வேங்கடேசர் கவனமாகவே உள்ளார்
இங்குள்ள நாடகக் கலைஞர்களும் பலகாலம் தங்கள் உள்ளதை பலவிதங்களிலும் நிரூபிக்கிறார்கள்
இங்கு கூடி உள்ளவர்கள் பார பக்ஷம் காணாதவர்கள் தோஷங்கள் அற்றவர்கள்
ஸ்ரீ ராமன் முதலானவர்களுடைய குலதனமான ஸ்ரீ ரெங்க விமானமே இந்த நாடக அரங்கம்

ஸூத்ர தாரன் நடியிடம்
சமதன நிதிம் சத்த்வ ப்ராயம் ப்ரயோக மயோகித
ஸ்வ குண வசத ஸ்தோதும் யத்வா வரீவ்ரது நிந்திதும்
கிமஹ பஹுபி கிம் நிச்சின்னம் ந விஸ்வ மனீஸ்வரம்
ததுப நிஹிதா ஜாக்ரத்யேவம் சதுர்தச சாக்ஷிண –23-

சம தமாதி ஆத்ம குண புதையலான சத்வ குணமே ரூபமாக உள்ள இந்த நாடகம் லௌகிகரராலே
இகழவும் செய்தாலும் நமக்கு நஷ்டம் இல்லையே
ஈஸ்வரனும் -14=சாட்சிகளும் உலகில் உண்டே
ஸூர்யன் சந்திரன் காற்று அக்னி ஸ்வர்க்கம் பூமி நீர் இதயம் யமன் பகல் இரவு
விடியற்காலை ஸந்த்யாகாலம் தர்மங்கள் ஆகியவை

மேலும் விவேகம் நிறைந்தவர்களுக்குப் பொறாமை முதலிய நிலைகள் அவர்கள் அறியாமல் உண்டானாலும்
மின்னல் போன்று உண்டாகும் பொழுதே அழிந்து விடும்

மவ்னம் விப்ரது மத் சரேண நமிதாஸ் தூர்ணே தா ஏவ த்ருவம்
காலோந் நித்ர கதம்ப கோல வபுஷஸ் கம்பஸ் புரந் மௌலயஸ்
கிஞ்சித் வ்ரீடித குஞ்சதாஷ மவஸாதுத்தாந தத்தா நநா
ப்ரஸ் தோஷ் யந்த்ய வதிம் ப்ரயோக பதவீ ஸாரஸ்ய ஸாரஸ்ய –24-

அவர்கள் பொறாமை காரணமாக எதுவும் பேசாமல் மவ்னமாகவே இருக்கட்டும் –
வெகு விரைவில் ரோமங்கள் அனைத்தும் கதம்ப மர மலர்கள் கார் காலத்தில் போல் சிலிர்த்த படி நிற்கும்
அதைத் தொடர்ந்து தங்கள் தவறை நினைத்து இந்த நாடகத்தை உயர்வாகவே பேசுவார்கள்

உபவேத முதாரதீ ஸ்வ நாம் நா பரத ஸூ சித பாவாரக தாளம்
யமுதா ஹரதி ஸ்ந விஸ்வ குப்தயை போக்யம் தத பிஜ்ஜை ரவ ஹிஷ்க்ருதா வயம் ஸ்ம -25-

ப ர த –பாவம் ராகம் தாளம் காண்பித்து அருளிய பரதர் -உப வேதம் அறிந்தவர்களால்
நாம் இந்தக்கலையை விடாமல் ஆள் படுத்தப் பட்டோம் –

நடி ஸூத்ரதாரனிட ம்-
நன்கு அறிந்தவர்களும் குறை கூற வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பார்களே
நம்மால் இந்த நாடகத்தை எவ் விதமான குறை இல்லாமல் முடிக்க இயலுமா -என்று கேட்டான் –

ஸூத்ரதாரன் நடியிடம்
மற்றவர்களுடைய நற் குணங்களை எப்போதும் கொண்டாடுபவளே
சிலருக்கு சாஸ்த்ர ஞானம் தெளிவாக இருந்தாலும் மீண்டும் கேள்விகளை எழுப்பி சங்கைகளை தெளிவு படுத்தவே
கலக்கம் இல்லாமல் இருக்கும் ஞானவான்களை நாம் மதிக்க வேண்டும் –

பூய ஸீ ராபி கலா கலங்கிதா ப்ராப்ய கிஞ்சித பஸீ யதே சநை
ஏகயாபி கலயா விசுத்தயா யோ அபி கோ அபி பஜதே கிரீஸதாம் –26-

ஒருவனிடம் பல கலைகள் இருந்தாலும் களங்கம் இருந்தால் சந்திரன் போல்
நாள் தோறும் தேய்ந்து கொண்டே இருப்பான்
ஒரே கலை இருந்தாலும் தெளிவாக இருப்பான் ஆகில் சிவன் சிரஸா வஹிப்பான் –

நடி ஸூத் ரதாரன் இடம்
இனி இங்கு கூடி உள்ளவர்களை இந்த நாடகத்தைக் காணும் படி செய்வேனாக
இது பராசரர் வியாசர் போன்றவர்களால் கொண்டாடத் தக்கது –
தத்வ ஞானம் போதிக்கும்படியாகவும்
சங்கீதம் மூலம் பரம புருஷனை கடாக்ஷிக்க செய்யும் படியாகவும் உள்ளது

விவேக ப்ரா ரம்பே விமத மத பங்க ப்ரயதநே
முமுஷா ஸம் ஸித்தவ் முர மதந யோகே ச சபலே
முகா தீன் நித்யாதும் நிப்ருதும் இஹ நாடயே க்ருத முகை
பவத்பி ஸ்தா தவ்யம் பரத மத தைரேய மதிபி –27-

ஸூத்ர தாரன் தனது கைகளைக் குவித்தபடி கூறுவது
பரதமுனிவருடைய சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்களே -உங்களுடைய கவனம் முழுவதும்
நாடகத்தின் லக்ஷணமாக உள்ள சந்திகளில் வைப்பீர்களாக -அவை யாவன –
விவேகன் என்னும் அரசன் ஜீவாத்மாவுக்கு மோக்ஷம் அடையும்படி செய்தல்
மற்ற மாதங்களில் கூறப்பட்ட கருத்துக்களை மறுத்தல்
ஜீவாத்மா மோக்ஷத்தில் விருப்பம் கொள்ளுதல்
யோகம் என்னும் உபாயத்தைக் கைக் கொள்ளுதல்
மற்றும் பலனைப் பெறுதல் என்பவை ஆகும்
இவை முறையே
முகம் -பிரதிமுகம் -கர்ப்பம் -அவமர்சம் -மற்றும் நிர்வஹணம்-எனப்படும் –

ஸமய நியதை ப்ரயாகை ஸத் பத ஸீ மாம் அநு ஞாதோ விதுஷ
கிரணை ரிவ திவ ஸக்ருத ஷிப் யந்தே தாம ஸாரம்பா –28

திரையின் உட் புறத்தில் இருந்து எழும் குரல்
நக்ஷத்ர பாதையில் செல்லும் சூரியனின் கதிர்களால் சரியான நேரத்தில் இருளானது விரட்டப் படுகிறது
இதே போன்று நல் மார்க்கத்தில் செல்லும் ஞானிகளால் தாமஸம் நிறைந்தவர்கள் செய்யும்
அனைத்து முயற்சிகளும் விலக்கப் படுகின்றன –

நம்முடைய நாடகத் தொழில்களின் செய்கைகள் மற்றும் முமுஷுக்களின் செய்கைகள் ஆகியவற்றை
ஒரே போன்ற சொற்களைக் கொண்டு இந்த நாடகத்தின் தொடக்கத்தில் சுருக்கமாகக் கூறுவதை
நன்றாகக் கவனித்துக் கேட்ப்பாயாக -அதாவது

துர்ஜனம் பிரதிபக்ஷம் ச தூரத் யஷ்டி ரயம் ஜன
விவேகச்ச மஹா மோஹம் விஜேதும் பிரப விஷ்யத–29-

ஸூத்ர தாரன் கூறுவது -தனது விரோதியான மஹா மோஹனை எவ்விதம் விவேகம் என்னும் அரசன்
வென்றானோ அது போன்று நானும் என்னுடைய விரோதிகளை வெல்வேன் என தீர்க்க தரிசனமாகக் கூறுகிறேன்

திரையின் உள்ளே இருந்து எழும் குரல் –கைகளிலே கூடியதாகவும் இனிமையாகவும் உள்ள வில்லை —
காமனுடைய கரும்பு வில் ஏந்தியபடி – மென்மையானதும் நறு மணம் வீசுவதாயும் ஆகிய மலர்க் கண்களைக் கொண்ட படி –
எனது அனைத்து விரோதி களுக்கும் அச்சத்தை உண்டாக்கும் நான் உள்ள போது நாடகக் கலைஞர்களின்
குலத்துக்கு அனல் போன்று உள்ள அவன் யார்
எங்களுடைய அரசனும் துர்மதி என்பவளுடைய கணவனும் நாடக மேடை என்னும் யுத்த களத்தில் உள்ள
பெரிய கலைஞனும் ஆகிய மஹா மோஹன் என்ற எங்கள் அரசனின் இந்த அவையில் எங்களுடைய
விரோதிகளுக்குச் சார்பாகக் குரல் எழுப்புபவன் யார் –

ஸூத்ர தாரன் -பயத்துடன் பரபரப்புடன் சுற்றிலும் நோக்கி -கோபத்தினால் அக்னி போன்று
சிவந்த கண்களுடன் தனது நண்பன் ஒருவன் இடம் யாரோ ஒருவர் வருகிறார் –
ஆஹா அவர் யார் என நான் காண்கிறேன் -அவர்

அபவர்க்க விருத்தேஷு த்ரிஷு வர்க்கேஷு திஷ்டதாம்
ப்ரதான புருஷார்த்தஸ்ய பச்சி மஸ்ய அதி தைவதம் –30-

மோஷத்துக்கு எதிர் தட்டாய் உள்ள மூன்று புருஷார்த்தங்களை எப்பொழுதும் நாடிய படி உள்ளவருக்கு
முதன்மையான முடிவாக உள்ள அபிமான தேவதை யாவான் –

அர்த்தா வ சேஷித மஹேஸ்வர பவ்ருஷ அயம்
வர்க்கே த்ருதீயம் அவதீர யதாம் விநேதா
ரத்யா ஸலீல பரி ரம்பண லோக கத்யா
புஷ்ணா யுத புல கிதை குபுஜ அப்யுபைதி –31-

ஸூத்ர தாரன் கூறுவது
மேலும் இவன் பரமேஸ்வரனுடைய ஆண்மையைப் பாதியாகக் குறைத்தவன் ஆவான்
மூன்றாவது புருஷார்த்தம் ஆகிய காமம் என்பதை முடிக்க முயலுபவர்களை மலர்க்கண்
மற்றும் கரும்பு வில் கொண்டு தண்டிப்பவன் ஆவான்
அழகான நடையைக் கொண்ட ரதியால் நன்கு அணைக்கப் பட்டவனாக ஒரு கரத்தில் முடிகள் சிலிர்த்தபடி
உள்ளவனாக வருகிறான்
ஸூத்ரகாரன் கூறுவது –
ஆகவே அவனை விட்டு நாம் விலகுவோம்
இந்தப் பருவத்துக்கு உரிய காம விழாவில் பலரும் தங்களை மறந்து ஈடுபட்ட படி உள்ளனர்
அவர்களுடன் கலந்து நமது நிலையை மறைத்த படி நாம் அடுத்து செய்ய வேண்டியத்தைச் செய்வோம்
இவ்விதம் உரைத்து விட்டு இருவரும் அகன்றனர்

ப்ரஸ்தாவனை -அறிமுக பாவம் சம்பூர்ணம் –

விஷ்கம்ப -நாடக விஷயங்களை கதா பாத்திரங்கள் மூலம் அறிதல்
காமன் தனது மனைவி உடன் வசந்தனின் கையைப் பிடித்து வருதல்
காமன் கூறுவது -யார் அவன் -ஹே ஹே -நாடகக் கலைஞர்கள் குலத்துக்கு இழிவாக உள்ளவனே

தர நமித மநோஜ்ஜே ப்ரூலதா சாப பாஜாம்
தரல ஹ்ருதய லஷ்யே தாத்ருஸ ஸ்நேஹ திக்தே
குவலய நயனநாம் கூணிதே லோச நாஸ்த்ரே
சரண யது விவேக காம் திசம் காம்தி சீக –32-

காமன் கூறுவது -குவளை மலர் போன்றதும் -காதல் பார்வை வீசுவதும் -சற்றே வளைந்த புருவங்களின் கீழே
உள்ள பெண்கள் கண்கள் காதல் என்னும் தைலம் பூசப்பட்டு -எனது வில்லில் இருந்து வரும் பொழுது
விவேகம் எந்த திசையில் அச்சம் கொண்டு ஓட இயலும் –

வசந்தன் -தனது மனத்தில் எண்ணுவது
விஷம் நிறைந்த அம்புகள் கொண்ட பேராசை கொண்ட மன்மதன் உள்ளான் –
அர்ச்சிராதி மார்க்கம் காட்டும் குழுவில் நான் உள்ளேன்
மன்மத சம்பந்த ருசி வாஸனை எளிதில் விலக்க முடியாது
உரத்த குரலில் மன்மதன் இடம் கூறத் தொடங்கி
மஹா மோஹனின் புகழ் பாடவும் விவேகனை அச்சம் கொண்டு ஓட வைக்கவும் இந்த விழாவை மங்களமாகத் தொடங்குகிறேன்

சூடா வேல்லித சாரு ஹல்ல கபர வ்யாலம்பி லோலம்பக
க்ரீடந்த் யத்ர ஹிரண் மயாநி தகத ஸ்ருங்காணி ஸ்ருங்காரிண
தந் வங்கீகர யந்த்ர யந்த்ரண கலா தந்த்ர ஷரத்பிஸ் த்ரிகா
கஸ்தூரி பரிவாஹ மேதுரமிலத் ஜம்பால லம்பாலகா –33-

வசந்தன் கூறுவது
இளைஞர்கள் தலையில் செங்கழு நீர் மலர் சூடி -அதில் வண்டுகள் ஆடிப்பாட
பெண்டிர் கஸ்தூரி கலந்த நீரை பீச்சாங்குழல் கொண்டு தெளித்த நீர் சேறு போல் படிந்துள்ளது –

காமன் உரைப்பது –
மிகவும் நல்லது வஸந்தா -தீயவனாகிய அந்த விவேகன் தோற்கடிக்கப் பட்டவனே ஆகிறான் –
எப்படி என்றால் –
காவேரிக் கரையில் நடைபெறும் இந்த மஹா உத்சவத்தின் தொடக்கம் என்பது சுவர்க்கத்தில் உள்ள நந்தவனங்களையும்
தோற்கடிக்கச் செய்வதாகவே உள்ளதால் ஆகும்
இங்கு

உந் நித்ராம் புஜ வாடிகாம் உபய தோரோதோ நிரோதோல்லத்
ஸ்ரோதஸ் ஸ்ம்ருத ஸாரணீ சத க்ருத ஸ்வச் சந்த கந்தாப்லவாம்
கேலச் சோல வதூ விதூத கவரீ சைவாலிதாம் அன்வஹம்
பஸ்யமே ப்லவமாந ஹம்ஸ மிதுனஸ்மேஸாம் கவரோத்மஜாம் –34-

காமன் கூறுவது -ஒவ்வொரு நாளும் நன்கு மலர்ந்த தாமரைகளால் நிறைந்த கரைகளைக் கொண்டதாக நாம் காவேரியைக் காண்கிறோம்
இரண்டு கரைகளுக்குள் அடங்கி ஓடும் காவேரியின் வெள்ளமானது நூற்றுக்கணக்கான வாய்க்கால்கள் வழியே வெளியேறி
சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தையுமே ஈரமாக வைத்துள்ளது –
இதில் விளையாடி மகிழ்கின்ற சோழ தேசத்துப் பெண்களின் மிதந்தபடி உள்ள கூந்தலானது கறுத்த கொடிகள் போன்று உள்ளன –
ஜோடியாக நீந்தும் அன்னப் பறவைகள் சிரித்தபடி உள்ள தோற்றத்தை உண்டாக்குகின்றன –

காமனின் மனைவியாகிய ரதி உரைப்பது
இந்த மஹா உத்ஸவம் மிகவும் அழகாக உள்ளது – ஆனால் நமது மன்னராகிய மஹா மோஹனுடைய தடை படாத தலைவிதி
காரணமாக விவேகம் செல்ல இயலாத விரோதியாக உள்ளான் என்பதை எண்ணும் போது என் மனம் தடுமாறுகிறது –

காமன் ரதியிடம் உரைப்பது
ஏதும் அறியாத குழந்தை போன்று உள்ளவளே -எனது பிராணன் போன்றவளே -பெண்ளுடைய தேவதையே –
நமக்கு வேண்டப்பட்ட ஒருவன் கிட்டினான் என்பதை எண்ணி மகிழ வேண்டிய இந்தத் தருணத்தில்
குழந்தையைப் போன்ற மநோ பாவத்தை வெளிப்படுத்தி விவேகனுடைய பெருமையை ஏன் வர்ணிக்கிறாய் –
நீயே காண்பாயாக –

கர த்ருத லலிதே சஷு தன்வனோ மே ப்ரமர குணார்பித புஷ்ப மார்கணஸ்ய
மருத நல சர அபி மேரு தந்வா க்ஷணம் அதி லங்கித ஸாஸன கதம் ஸ்யாத் –35-

காமன் கூறுவது
எனது கையில் இளைய கரும்பு வில் உள்ளது –எனது பாணங்கள் மலர்களால் ஆனவை ஆகும் –
அந்த மலர்களில் அமர்ந்துள்ள வண்டுகளே இந்த வில்லின் நாணாக உள்ளன -இவ்விதம் உள்ள எனது கட்டளையை
திரிபுரம் எரிக்கச் செல்லும் போது மேரு மலையை வில்லாகக் கொண்டு காற்றுடன் கூடிய நெருப்பைக்
கணையாகத் தொடுக்கும் சிவன் கூட ஒரு நொடியாவது மீற இயலுமோ

வசந்தன் ரதியிடம் உரைப்பது
தோழியே காமன் உரைப்பது சரியே யாகும் -இது வெறும் தற் புகழ்ச்சியே அல்ல –
இந்த உலகில் ஒரு கொசு வானத்து யானையை எதிர்த்து நிற்குமா -இந்த உலகின் வரலாற்றை நீ அறியவில்லை –
உனது கணவனுடைய வீரச் செயல்களை நீ கண்டது இல்லை -அதாவது –

வஹதி மஹிளாம் ஆத்யோ வேதாஸ் த்ரயீ முகரைர் முகைர்
வர தநு தயா வாமோ பாக சிவஸ்ய விவர்த்ததே
ததாபி பரமம் தத்துவம் கோபீ ஜனஸ்ய வசம் வதம்
மதந கதநைர்ந க்லிஸ் யந்தே கதம் ந்வி தரே ஜநா –36–

வசந்தன் கூறுவது
முதலில் வெளிப்பட்ட நான்முகன் மூன்று வேதங்களை ஓதும் தனது முகங்களில் தனது மனைவியை வைத்துள்ளான்
சிவனது இடது பாகம் பெண் வடிவாகவே மாறி உள்ளது -யாருக்கும் வசப்படாத பரம தத்துவமான நாராயணனும்
கோபிகளுக்கு வசப்பட்டான் இவ்விதம் உள்ளபோது மற்றவர்கள் எவ்விதம் மன்மதனுக்கு வசப்படாமல் இருப்பர் –

காமன் உரைப்பது
சரியாக உரைத்தாய் வசந்தா -உனது சொற்கள் அப்படியே அந்த அந்த காலத்துக்கு ஏற்றபடியே உள்ளன

விஸ்வம் யுவதி ஸாத் க்ருதம் பவதா தத்த சாயகே
விவேக கிம் நு வர்த்ததே விபக்ஷ அபி மயி ஸ்திதே –37-

காமன் கூறுவது –
இந்த உலகம் முழுவதும் பெண்கள் வசம் ஆக்குவதற்காக உன்னுடைய அம்பை எனக்கு நீ கொடுத்துள்ளாய் –
இவ்விதம் நான் முன்பாக நிற்கும் போது விவேகம் நிலைப்பானோ –

ரதி காமனிடம் கூறுவது –
எஜமானரே இது உண்மையே ஆகும் -ஆனால் வைராக்யம் என்பதான -யாராலும் புக இயலாத கோட்டையில் விவேகன் உள்ளான் –
அவனுக்குக் காவலாக -தமம்-புலன் அடக்கம் -மற்றும் சமம் -மன அடக்கம் -ஆகிய மந்திரிகள் உள்ளனர் –
,அவன் யாருடைய துணையாக வேண்டாத வீரனாக உள்ளான் –
இயலாத செயல்களையும் எந்தவித அபாயமும் இன்றியே செய்ய வல்லனாக உள்ளான் –
ஆகவே அவன் எத்தை எப்போது செய்வான் என்ற கலகத்துடனே நான் உள்ளேன் –

ரதியிடம் காமன் கூறுவது
அச்சம் கொண்டவளே -அஞ்ச வேண்டாம் -நீ நம்முடைய விரோதிக் கூட்டத்தில் பற்றுக் கொண்டவர்களால் ஏமாற்றப் பட்டுள்ளாய்
ஆகவே நம்முடைய கூட்டத்தின் திறனையும் மேன்மையையும் நீ அறியவில்லை
இந்த உலகம் முழுவதையும் வெல்லக் கூடிய உனது கணவனுக்கு உள்ளதான வெற்றி அளிக்கக் கூடிய கருவிகளைக் காண்பாயாக –

வபுர ப்ரதிமம் நிதம்பிநீநாம் த்ருட ஸுந்தர்ய குணம் தரவா நம்ரம்
ஸ்ரவண அவதி நேத்ர சித்ர ப்ருங்கம் தனு ராத்யம் மம முஷ்டி மேய மத்யம் –38-

காமன் கூறுவது –
ஈடில்லாத அழகான பெண்களுடைய உருவம் எனக்கு வில்லனாகும் -இந்த சில சற்றே வளைந்து உள்ளது –
அதனுடைய நாண் என்பது வலிமையாகவும் பெண்களுடைய அழகாகவும் உள்ளது –
அதனுடைய அம்புகளானவை அவர்களுடைய காதுகள் முடிய நீண்டுள்ள கண்களே ஆகும் –
பிடித்துக் கொள்ள ஏற்றதாக உள்ள வில்லின் நடுப்பகுதி யானது அவர்களது இடுப்பாகும் –

சைலீம் விலோ பயதி சாந்தி மகா கரோதி வ்ரீடாம் வ்யுதஸ்யதி விரக்திம் அபஹ்ருதே ச
கர்ணாம்ருதம் கமபி தத் கலமா ஷிணீ நாம் நாமாபி கிம் ந விகரோதி நிசம்யமாநம் –39–

காமன் கூறுவது -மேலும் இனிமையான குரல் கொண்ட இந்தப் பெண்களுடைய பெயர் மட்டும்
செவிக்கு அமிர்தமாகவும் -ஒருவருடைய அனைத்து உடைமைகளையும் குலைக்கும் படியாயும் இருக்கும் –
அவர்களுடைய குரல் மன அமைதியைக் குலைப்பதாக உள்ளது -ஒருவருடைய வெட்கத்தை விலக்கி
அவர்களுடைய வைராக்யத்தை அழிக்கும்
எந்த மாறுதல்களைத் தான் அவர்கள் குரல் ஏற்படுத்துவது இல்லை

வசந்தன் கூறுவது
இப்படி உள்ள போது பெண்களைக் குறித்து புகழ்ந்து பேசும்போது கேட்பது -அவர்களைக் குறித்துப் பேசுவது
முதலானவற்றால் மனம் கலங்கும் என்பது உறுதியே யாகும் –

திஷ்டது குணா வமர்ச ஸ்த்ரீ குணாம் ஆலோக நாதிபி சார்தம்
தோஷ அநு சிந்த நார்த்தா ஸ்ம்ருதிரஷி தூரி கரோதி வைராக்யம் –40-

வசந்தன் கூறுவது –
பெண்களுடைய குணங்கள் குறித்து அதிகமாகப் புகழ்தல்
மற்றும் அவர்களைக் காணுதல் போன்றவை ஒரு புறம் இருக்கட்டும் –
அவர்களுடைய தோஷங்களைக் குறித்துச் சிந்திக்கும் நேரத்தில் கூட பெண்களைக் குறித்த எண்ணங்கள்
மனத்தை வைராக்யம் என்ற நிலையில் இருந்து மாற்றி விடும் –

அபிச ப்ரபூத மத மேதுராத் மநோ விஷயாட வீஷூ விவிதா ஸூ தாவத
ஸ்வ பலேந ஹந்த மநஸோ நிவர்த்தநம் பிச தந்து நேவ ஸூர தந்தி யந்த்ரணம் –41-

வசந்தன் கூறுவது
மிகுந்த வலிமையுடன் மதம் பிடித்து பலவகையான உலக விஷயங்கள் என்னும் காட்டிலே
எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி திரியும் மனசை ஒருவன் தனது முயற்சியால் கட்டுப்படுத்த முயலுதல்
என்பது ஐரா வதம் என்ற யானையை தாமரை நூல் கொண்டு காட்டுவதுக்கு சமானம் ஆகுமே –

ரதி கூறுவது
எஜமானரே மனதை உறுதியாகப் பற்றுகின்ற வலிமையான மயக்கங்கள் எதுவாக இருந்தாலும்
அதனைப் போக்க வல்லவர்களாக யோகிகள் உள்ளனர் –
அவர்களை அணுகாமல் தங்கள் இருத்தல் வேண்டும்

காமன் சிரித்த படி உரைத்தல் –
அன்பானவளே -உனது கண்களில் உள்ள தடுமாற்றத்தை -உனது மனதிலும் நான் காண்கிறேன்
யோகிகளின் முதன்மையானவர்களைக் கூட -இளம் பெண்கள் என்னும்
யோகிகளுடைய கால்களில் விழும்படி நான் செய்ய வில்லையா –

ஸூபக பருஷைர் மதஸ்த்ரைஸ் கீலிதம் அந்யோன்ய கவசிதைர் காதம்
கிம் ந விதிதம் பவத்யா கிம் அபி பிதஸ் ஸ்யூத ஜீவிதம் மிது நம் –41-

காமன் கூறுவது
அழகானதும் கொடியதாக உள்ளதுமாகிய எனது அம்புகளால் ஒன்றாக இணைக்கப் பட்டு
ஒருவருடைய உடல் கொண்டு மற்ற ஒருவருடைய உடல் மூடப்பட்ட படி ஒன்றுடன் ஓன்று பின்னிய நிலையில்
உள்ள ஒரு ஜோடியை -(இது அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கும் ) நீ அறியவில்லை போலும் –

ரதி காமனிடம் உரைத்தல்
உயர்ந்தவர் உம்முடைய மேன்மையைக் குறித்து நான் நன்றாக அறிவேன்–
ஆனால் தற்போது பலத்த சூறைக்காற்றால் அடிபட்ட வாழை மரங்கள் போன்று நான் ஆட்டம் காண்கிறேன்
ஏன் என்றால்
நல்ல ஆலோசனைகளால் திறன் அடைந்தவனும் -தகுந்த தெய்வத்தால் உதவப் பெற்றவனும்
விதியானது உதவும்படி உள்ளவனும் -யமம் நியாமாதிகளால் உதவப் பெற்றவனும் –
மேலும் பல உபாயங்களைக் கொண்ட வானுமாக உள்ள நம்முடைய சத்ரு
எப்போது வேண்டுமானாலும் எதையாகிலும் செய்யக்கூடும் என்பதை எண்ணுகிறேன்
ஞானமானது மோக்ஷத்தைத் தவிர மற்ற அனைத்துப் பலன்களையும் அளிக்க வல்லது என்பதை அனைவரும் அறிவார்

காமன் கோபம் கலந்த சிரிப்புடன் உரைத்தல்
பேதையே
நீ இனிமையாகப் பேசினாலும் உனது அச்சமானது பேதமையே யாகும் –
ஒலிக்கும் வண்டுகள் என்பதான நாணில் கோர்க்கப் பட்டதும் அனைத்து உலகங்களும் இலக்காகக் கொண்ட
அம்புகள் கொண்டதுமாகிய வில்லைக் உடையவனும் -எப்போதும் வெற்றியிலே மட்டுமே
கவனம் கொண்டவனுமாக உனது அன்பனான நான் உள்ளேன்
இப்படி உள்ள என் முன்பே அறிவு என்ன செய்ய இயலும் -யார் எதன் மூலம் மோக்ஷம் பெற முடியும்
உனது இடைப்பகுதியில் உள்ள நுண்மையானது உனது மனத்தில் காணப்பட வில்லையே –
கெட்டாய் -உனது ஸ்தனங்களில் உள்ள காடின்யமும் பருமனும் உனது மனத்தில் புகுந்தது போலும் –
அல்லது இயல்பாகவே உள்ள பெண்மையிடம் முதலில் காணப்படும் தன்மையானது உன்னிடம் உள்ளது எனலாம் –

மயா அதிஷ்ட க்ரோத ப்ரயாதி கிம் அப்யாந்த்யமத ச
ஸ்ம்ருதி பிரம்ச சேத்தா விகடயதி புத்திம் சபதி ச
தயா முக்த ஷேத்ரீ தமஸீ ஜஹனே விந்ததி லயம்
ததா பூதே கிம் வா ஜனயது (தி ) விவேகோ ஜடமதி — 43-

காமன் கூறுவது
நான் ஆணை இட்டால் கோபம் என்பவன் முதலில் அஞ்ஞானம் என்னும் இருளை உண்டாக்குவான் -தொடர்ந்து மறதி உண்டாக்கும் –
அதன் பின்பு புத்திக்கு அழிவு உண்டாகும் -புத்தியைஇழக்கும் ஒருவன் சம்சாரம் என்னும் அடர்ந்த இருளில் லயிக்கிறான்
இப்படிப்பட்ட ஒருவன் இடம் விவேகம் என்ன செய்ய இயலும் -அவனுடைய பத்னியும் ஜடமாகிறாள் –

காமன் ரதியிடம் உரைத்தல்
நம்முடைய விரைவுடன் கூடிய சேனையை விவேகனின் அமைச்சர்களான சமம் தமம் போன்றவர்களால் தடுக்க இயலாது –
தேவர்கள் அசுரர்கள் தலையில் இடது காலை வைத்த மஹா மோஹன் யாராலும் வெல்ல ஒண்ணாதவன்
சிங்கத்துக்கு முன்பாக அல்ப விலங்கு என்ன செய்ய இயலும் –

பரஸ்ய புருஷஸ் யேவ பஞ்ச பிச்ச மம ஆயுதைஸ்
சமயே ஷு விமத் யந்தே ஸத்வந்தஸ் அபி சத்ரவ–44-

காமன் கூறுவது -பரம புருஷன் போலவே நானும் ஐந்து ஆயுதங்கள் கொண்டவன் –
ஸாத்விகர் களையும் கூட அழிக்க வல்லவை -மேலும்

அலமிஹ விபுதாத்யை ஆகம க்ராஹ்ய வாசோ
முனி பரிஷிதி தர்மான் காயதோ முக்தி ஹேதூன்
தபஸி நியத வ்ருத்தேஸ் தஸ்ய தேவஸ்ய சாந்தி
ஜெனித யுவதி ரத்னம் தர்ச யத்யூரு காண்டம் –45–

காமன் கூறுவது -தேவர்கள் ஒரு புறம் இருக்கட்டும் -வேதங்களைப் போன்ற பேச்சு கொண்டவனும் –
முனிவருடைய சபையில் – மோஷத்தைப் பற்றி உரைப்பவனும் -ஆன
நாராயணனுடைய தொடையில் இருந்து உண்டானவள் ஊர்வசி அல்லவா –
ரதி -உமது சக்தி அறிவேன் -எனக்கு அறியாத ஒன்றை நீங்கள் கூற வேணும் –
-சிங்கம் யானை -பகை போல் விவேகன் மஹா மோஹன் -இடையில் உள்ள பகைக்குக் காரணம் என்ன
காமன் -அன்பாளவளே -இத்தை நான் முதலில் இருந்து கூறுகிறேன் –

த்ரி குண கடிதாத் போக்த்ரு புத்திஸ் ஸதீ ததநு வ்ரதா
ஸமய நியதோஸ் ஸ்ராயம் த்ரேதா குலம் சமஜீ ஜனத்
ப்ரதமம் இஹ தத் போக த்வேஷ்யம்விவேக புரஸ் சரம்
த்விதய மிதரஜ் ஜுஷ்டம் ராக ப்ரமோஹ முகம் மித –46-

காமன் கூறுவது
ஜீவாத்மாவின் பத்தினியான புத்தி என்பவள் -முக்குண மயத்தாலே ஓன்று ஓன்று அதிகமாக உள்ள போது மூன்று குலங்களைப் பெற்று எடுக்கிறாள்
ஸத்வ குணத்தால் விவேகமும் -இன்பங்களை அனுபவிப்பதை ஜீவாத்மாவை வெறுக்கப் பண்ணும்
ராஜஸம் தாமசம் ஆகியவற்றின் கூடிய ராகம் -மஹா மோஹம் -இரண்டு குலங்களும் ஓன்று சேர்ந்து நிற்கின்றன –
காமன் -இந்த இரண்டு பிரிவினர்கள் -விவேகன் மற்றும் மஹா மோஹன் ஆகியோர்களைத் தங்கள் குல அரசர்களாக ஆக்கினார்கள் –

மோஹஸ்ய தர்ம பத்நீ துர் மதி அபவர்க்க தோஷ த்ருஷ்டி மயீ
விஷய ரஸ தோஷ த்ருஷ்டி ஸூமதி அநந்யா விவேகஸ்ய –47-

காமன் கூறுவது -மோஹனுடைய தர்ம பத்னி துர்மதி –இவள் மோக்ஷ தோஷமே பார்ப்பவள்
விவேகன் தர்ம பத்னி ஸூமதி -உலக விஷய தோஷங்களையே பார்ப்பவள் –

ரதி -அதன் பின்னர் -அதன் பின்னர்

காமன் –அதனைத் தொடர்ந்து ரஜோ குணத்தின் மூலமாக உள்ள ராகம் -ஆசை -முதலானவர்கள் –
தமோ குணத்தின் ஆதாரமாகத் திகழ்கின்ற ஸம்ஸார சக்கரவர்த்தியான மஹா மோஹனுக்கு
அசுரர்கள் ராக்ஷஸர்களுக்கு உதவின்படி உதவுகிறார்கள் –
ஆனால் சத்வத்தில் இருந்து பிறந்த விவேகனின் குலமானது குறைந்த துணையுடன் பலம் அற்று இருந்தது –
நம்முடைய தந்தையாகிய ஜீவாத்மா பொதுவான -நடுநிலைமையான -உள்ளவர் என்றாலும் –
தமது தர்ம பத்தினியான -புத்தி -தர்ம பூத ஞானம் -உடன் நம்மிடமே அன்புடன் உள்ளார் –
தங்களுடைய கருத்துக்களுக்கு தாங்களே ஆஷேபம் கூறுபவர்களும் -ஜாதிவாதிகள் என்று கூறப்படுபவர்களும் –
ஆகிய சிலரைப் போன்று எப்போதும் சூழ்ச்சியுடன் உள்ள விவேகன் முதலானவர்கள் நம்முடைய தந்தையான ஜீவாத்மா
நம்முடன் நெருக்கமாக உள்ளதை விரும்பவில்லை -ஆகவே ஜாவாத்மாவின் இன்பங்களை அழித்து எண்களையும் அழிக்க முயல்கிறார்கள் –
தந்தையை அழிப்பவர்கள் தாங்களும் அழிவார்கள் என்று தெரிந்தே இவ்விதம் செய்கிறார்கள் –

இவர்கள் செய்வது என்ன வென்றால் நம்முடைய தந்தை எல்லையற்ற காலமாக அனுபவித்தபடி உள்ள ப்ரக்ருதியில்
பல்வேறு தோஷங்கள் உள்ளதாகக் கூறி -அவருக்கு பிரகிருதியின் மீது வெறுப்பை உண்டாக்கி –
மீண்டும் சம்சாரம் என்ற நம்முடைய குடும்பத்துக்குத் திரும்பாமல் -மஹா ப்ரஸ்தானம் என்பதைச் செய்யும் படி தூண்டுகிறார்கள்
ஆனால் நம்முடைய குலத்தை நாமே அழிக்கலாமோ என்பதற்கு
வானவர் அரசன் சுக்ரீவன் ராக்ஷஸ அரசன் விபீஷணன் செய்வதைக் கூறுகிறார்கள் –

இதன் மூலம் நம்முடைய தந்தையான ஜீவாத்மா அடையும் துயரங்களைக் காண இயலவில்லை –
இவர்கள் செய்கின்ற இந்தச் செயல்களால் – ஜீவாத்மா பல விஷயங்களிலும் வீணாகிறான் –
மற்றவர்கள் தோஷங்களைக் காண குருடன் ஆகிறான் -மற்றவர்களை பழிப்பதில் ஊமை ஆகிறான் –
மற்றவர்களை பழிக்கும் விஷயங்களில் கேட்பதில் முதல்தர செவிடன் ஆகிறான் –
பரதாரம் விரும்பும் விஷயத்தில் பெண் ஆகிறான் –
பெண்களை வசப்படுத்தும் வழிகளை ஆராயாமல் உள்ளான் –
புலன்களை இழந்த ஒருவன் போன்று பெண்கள் விஷயத்தில் உள்ளான் –

ஆகவே இவர்கள் விஷயத்தில் சகோதரத் தன்மையை விட்டுவிட்டு அவர்களை அழிக்க விரும்புகிறோம் –
எனவே நாங்களும் அவர்களும் முறையே பிறவிருத்தி -சுய நலம் விரும்பும் செயல்கள் –
மற்றும் நிவ்ருத்தி -சுய நலம் அற்ற செயல்கள் -தர்மங்களைக் கைக்கொள்ள வேண்டும் –
இதன் மூலம் ஸத்வ குணத்தை முதன்மையாகக் கொண்ட அவர்களுடைய குலமானது
ஸூர்யன் முன்பாக அழியும் மின்மினிப் பூச்சிகளின் ஒளி போல் ஆகும் –

ஸுஹார்த்த மித்த மந வாப்ய ஸஹோ த ராணாம் ஆஸீத்
ஸ்வ மூல குண பேத வசாத் விரோத
ஏக பிரஜாபதி புவா மபி வைர பந்த
ஸ்வாத் மாவதி ஸ்வய முதேதி ஸூ ரா ஸூ ராணாம் –48–

காமன் கூறுவது
இப்படியாக எங்களுக்கு உரியதான பிறவிக் குணங்களில் வேறுபாடு உள்ளதால் எங்களுக்கு இடையே உள்ள
சகோதரத் தன்மை மறைந்து பகைமையே மேல் ஓங்கி உள்ளது –
கஸ்யப பிரஜாபதி என்னும் ஒரு தந்தைக்கே பிறந்துள்ள போதிலும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கும் இடையே
எப்பொழுதும் பகையே உள்ளது அல்லவா –

ரதி
இத்தகைய பாபமானது அழிய வேண்டும் -தந்தையுடைய இன்பத்தை அவருக்குப் பிறந்தவர்களே அழிக்க முயல்கிறார்களே
அது மட்டும் அல்லாமல் தங்களுடன் பிறந்தவர்களுக்கே அழிவை ஏற்படுத்த எண்ணுகிறார்களே
நாதனே உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே போர் மூளாதபடியாக இருப்பதற்கு ஒரு வழி இல்லையா

காமன் – நீ ஏதும் அறியாதவளாக உள்ளாய்
அவ்விதம் எங்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட வழி இல்லையே

ஸ்வத சதஸ் ஸத்வ விஹிநாநாம் சத்தயைவா பராத்யதாம் த
கதம் காரம் ப்ரதீ கார கல்ப கோடி சதைரபி –49–

காமன் கூறுவது
நல்ல தன்மைகள் சிறிதும் அற்றவர்களாயும் -மற்றவர்கள் இருப்பையே தோஷமாக எண்ணுபவர்களாயும்
உள்ளவர்களுக்கு எத்தை கோடி கல்பங்கள் உண்டானாலும் அமைதி ஏற்படுமா

அபி ச
பிரதி புருஷ விபக்த மூர்த்தி பேதா வயமிதரே ச மிதி ப்ரதீப வ்ருத்தா
க்வசித் அதி கரணே ஸமாப தந்த ஸூ தனு ததீ மஹி வத்ய காத கத்வம்–50–

காமன் கூறுவது
மேலும் -ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு உருவத்தில் உள்ள நாங்களும் எங்கள் விரோதிகளும்
ஒருவருக்கு ஒருவர் எதிராகவே செயல் படுவோம்
ஒரே இடத்தில் நாங்கள் இருந்தால் ஒருவர் அழிபவராகவும் – மற்ற ஒருவர் அழிப்பவராகவும் இருப்போம் —

காமன் -நாங்கள் செல்வம் சற்று இன்பங்களில் ஆசை கொண்டவர்கள் ஆவோம் –
எங்கள் விரோதிகளோ நாராயணன் இடம் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்கள் –
இவ்வாறு இருக்க பேச்சுக்காகவாகவும் எங்களுக்குள் சேர்த்தி கிடையாது –
அவ்விதம் சேர்ந்து இருக்க இடம் இருந்தாலும் பகைவர்களை அழிக்க வல்ல மஹா மோஹன் அவ்விதம் செய்ய அனுமதிக்க மாட்டார் –
மேலும் யாருடைய உதவியையும் இல்லாமல் அனைவரையும் வீழ்த்த வல்ல வீரனான நான் அதற்கு எவ்விதம் இசைவேன்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதே

ரதி -ஐயனே -தங்களுடைய குலத்தை தாங்களே அழிக்கக் கொடிய அந்தக் கொடியவர்களாலே
பலம் பொருந்திய உங்களை அழிக்க எத்தகைய சதித்திட்டம் தீட்டப் பட்டுள்ளதோ

காமன் -அச்சம் நிறைந்தவளே -அது ராஜ குல ரஹஸ்யம் -அத்தை வெளியிடுதல் தகாது -குறிப்பாக பெண்கள் இடம் கூறுதல் ஆகாதே

ரதி -காமனுடையை கைகளை பிடித்த படியே –என் மேலும் எனது தோழனாகிய வஸந்தன் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்
அந்த ரஹஸ்யத்தைக் கூறுவீராக –

வஸந்தன் தனது மனதில் நினைத்தல் –எத்தனை உரைப்பது -விதியின் விளையாட்டுக்காகக் காலம் உரைக்க இயலுமோ –
அல்லது அதனைத் தடுக்க இயலுமோ –
தொடர்ந்து உரத்த குரலில் -தோழனே மகரக் கொடி கொண்டவனே

மநோ ரத ஸமர்த்தா நாம் மஹா மோஹ விகோதி நாம்
மந்த்ர பேத நமஸ் மாபி கார்யே தத் பரி பந்திபி –51-

வஸந்தன் கூறுவது -ஆசை கொள்வதில் சிறந்தவராகிய மஹா மோஹனுடைய பகைவர்களுடைய
சதித் திட்டங்களை வெளியிடுவதில் என்ன தவறு உள்ளது –

காமன் -பிரியமானவளே -அப்படியானால் உனக்கு நான் கூறுவேன்
அந்த மூடர்களுடைய அரசனாகிய விவேகன் நிவ்ருத்தி மார்க்கம் என்னும் தர்மத்தை உரைக்கிறான்
இதனை ஏதும் விளையாமல் உள்ளதான உபநிஷத் என்னும் பூமியில் வசிக்கும் சில க்ரூரமானவர்கள் ஏற்கிறார்கள்
அவர்கள் நம்முடைய குலத்துக்குத் தகாத வழியில்
அழிவை உண்டாக்க எண்ணுகிறார்கள்
இத்தகைய நிவ்ருத்தி தர்மமானது -எனது எந்த ஒரு செயலையும் நான் செய்ய வில்லை –என்னும்
கொள்கையைக் கொண்டதாக உள்ளது –
இத்தகைய வழியைக் கடைப்பிடிப்பவர்கள் குருடர்கள் செவிடர்கள் ஊமைகள் பேடிகள் என்பதான நிலையில் இருந்தபடி
மற்றவர்களுடைய தவறுகளையே மட்டும் காண்பவர்களாக உள்ளனர் –
இவர்களுடைய கருத்தின் படி புத்தியானது தவிர்க்க முடியாததும் குணப்படுத்த இயலாததும் ஆகிய
தர்மத்துடன் தொடர்பு கொண்டு புருஷருக்குள் பிசாசு புகுந்தது போன்று ஆகிறது –
அத்தகைய சேர்க்கையால் நம்முடைய குலத்தின் மீது ஆழ்ந்த த்வேஷத்தை மட்டுமே நெஞ்சகத்தில் கொண்டபடி –
மேலும் இனிமையான வேஷம் பூண்ட படி பரபக்தி என்னும் ப்ரஹ்ம ராக்ஷஸி தோன்றுகிறாள்
இவள் சம்சார இன்பங்களுக்கு பீமரதி என்னும் காள ராத்ரி போன்றவள் ஆகிறாள்
பீமரதி –77 வருஷம் 7 மாதம் 7 வது நாள் இரவு

குண த்ரேத உன்மேஷ க்ரம பரிணத அநந்த விக்ருதி
க்வசித் காலே புத்தி குல யுகல கூடஸ்த க்ருஹிணீ
அதி க்ரூராத் யந்த பிரளய விதிது மந்த்ர புருஷாம்
புரா பீமா காராம் ஸ்ருஜதி பர பக்திம் பர வதீ –53-

காமன் கூறுவது -நம்முடைய குலங்களுக்குத் தாயாக உள்ள புத்தி என்பவள் மூன்று குணங்களுடைய
ஏற்றத் தாழ்வு வரிசை காரணமாக பலவிதமான எண்ணற்ற மாறுதல்களை அடைகிறாள்
அவள் ஒரு கால கட்டத்தில் வேறு ஒருவருக்கு வசப்பட்டு அழிவு என்பதான மோக்ஷத்தை நடக்கும்படி
செய்த மந்த்ர ஆலோசனைகளின் பலனை அடைந்து
தனது சுதந்திரம் இல்லாத காரணத்தால் பரபக்தி என்னும் குரூரமான உருவத்தைப் பெற்று எடுக்க வேண்டும் –

ப்ர வ்ரஜ்யாதி யுதா பரத்ர புருஷே பாதி வ்ரதீம் பிப்ரதீ
பக்தி ஸா ப்ரதிருத்த ஸர்வ காரணாம் கோரம் தபஸ் தப்யதா
துஷ்டா தேந ஜனார்த்தநஸ்ய கருணா குர்வீத தத் கங்கரம்
க்வசித் கைடப கோடி கல்ப மஸூ ரம் –54-

காமன் கூறுவது –
அதன் பின்னர் அந்த பரபக்தி என்பவள் பதிவிரதை என இருந்து ஸந்யாஸம் போன்ற பலவற்றைக் கைக்கொண்டு
பரமபுருஷன் மட்டுமே நோக்கம் கொண்டவளாக இந்த்ரங்களை அடக்கி கடுமையான தவம் இயற்றுவாள் –
அவளுடைய பக்தியைக் கண்டு மகிழும் ஜனார்த்தனன் தனது கருணை காரணமாக
கோடி கைடப அஸூரர்களும் ஈடாக முடியாதபடியான அஸூர குணம் கொண்ட ஒரு பணியாளை அவனுக்கு நியமனம் செய்கிறான் –
கூற வாதத்தை பாதியில் நிறுத்துகிறான்

வசந்தன் தனக்குள் கூறுகிறான்
அந்த அஸூரன் -ஸங்கல்ப ஸூர்ய உதயமே ஆவான்
மேலே கூறப்பட்ட ஸ்லோகத்தை –அவன் நம்மை முடியுடன் அளிப்பவன் ஆவான் – என்று முடிக்க வேணும்
ஆனால் அதற்கு முன்பாக நாம் வேறு விதமாக முடிப்போம்
இவ்விதம் எண்ணியபடி உரத்த குரலில் இதுக்கு மேலே ஏதும் கூற வேண்டாம் என்றான்

ரதி மிகவும் பரபரப்பாக
நாதனே என்னைக் காக்க வேண்டும் -என்னைக் காக்க வேண்டும் -என்று
உரைத்த படி தனது கணவனை அழைத்துக் கொள்கிறாள் –

காமன் -அவளை அணைத்துக் கொண்டு
இதற்கு முன்பு இது போன்ற சுகத்தை அனுபவித்தது இல்லை என்னும்படியாக நின்று தனக்குள் கூறுவது

ஜெனித வலய மங்கே தத்த ஹாராவ மர்தே
முஷித நிகில கேதே மோஹ ஸந்தோஷ ஹே தவ்
ஸ சகித பரி ரம்பே ஸாம் ப்ரதம் -ஸ ஆதரம் -காத ராஷ்யா ஸ்த்யஜதி
யுகல சிந்தாம் அங்கயோ அந்தராத்மா –55–

காமன் -மனத்தில் சிந்திப்பது –
பரபரப்பாக அலைகின்ற கண்களுடன் இவள் நம்மை அணைத்துக் கொள்கிறாளே -இந்த அணைப்பால் இவள் வளைகள் உடைந்தன
ஹாரத்தின் முத்துக்கள் நசுங்கின -இவளுடைய வலிகள் குறைந்தன -இது மோஹனுக்கு மகிழ்வை அளிக்கும்
நாங்கள் இருவரும் இரண்டு சரீரங்கள் என்னும் எண்ணமே எனக்கு மறைந்தது
எங்களுடைய மனம் மற்றும் எங்கள் அந்தர் யாமியான சர்வேஸ்வரனை கூட இவ்விதம் இரண்டாக எண்ணக் கூடுமோ –

காமன் உரத்த குரலில் பிரகாசத்துடன்
தோழியே நீ அச்சம் கொள்ள வேண்டாம் -நீ மஹா மோஹனுடைய சேனைத் தலைவர்களில் ஒருவனாகிய எனது மனைவி அல்லவோ
சாந்தம் கொள்வாயாக -நான் கூறிய சொற்கள் உண்மையானவை அல்ல
அவை தனது இந்த்ர ஜால வித்யை மூலம் ஒரு ஊரையே தன் வாயாலே விழுங்குவது போலே ஆகும்
அவை வேதங்களை கண் மூடித்தனமாக நம்பியபடி தெருவில் உலவும் ஒரு வழிப்போக்கனுடைய சொற்கள் போலே ஆகும் –

குவ்ருத்தம் இதி கௌக்குடம் வ்ரதம் அதி ஷிபத்பிஸ்ததா
ஸூதா கர சதருது ப்ரப்ருதிபி ஸ்வயம் சரஸ்வலே
நதத் பிரமர பங்க்திகே நமதி கார்மகே மாமகே
விரக்தி க்ருஹ தேஹ லீம் க இஹ தோஹலீ வீக்ஷதே –56-

காமன் கூறுவது -சேவல் ஓன்று தன் பேடையைப் பலாத்காரமாக ஆக்ரமிப்பது போன்ற செயல்களை
சந்திரனும் இந்திரனும் கண்டிக்கிறார்கள்
ஆயினும் அவ்வழி தவறியே அவர்கள் நடக்கிறார்கள்
வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற எனது வில்லானது வளைக்கப்படும் போது
வைராக்யம் என்னும் வீட்டின் அருகில் செல்லக் கூட யார் தான் விரும்புவார்கள் –

காமன் -மஹா பலம் பொருந்திய நம்முடைய மந்திரிகள் ஒரு புறம் இருக்கட்டும்

ப்ரமாதா லஸ்ய நித்ராதி விவித வ்யூஹ விக்ரஹ
ப்ரஜ்ஞா வரண கோராத்மா மோஹ கேந விஜேஷ்யதே –57-

காமன் கூறுவது
பக்தி ஞானம் என்பதை மறைப்பதையே வடிவம் கொண்டவனாகவும்
கவனக்குறைவு சுறுசுறுப்பின்மை உறக்கம் போன்ற வ்யூஹமான பல படைகளைக் கொண்டவன் மோஹன் ஆவான்
இப்படிப்பட்ட அவனை யாரால் வெல்ல இயலும்

ரதி தனக்குள் பேசுகிறாள்
விதி காரணமாக நம்முடைய கணவன் முரணாகப் பேசுகிறார்
அதாவது கேந -யாரால் எதனால் -மோஹனை வெல்ல முடியும்
பின்பு உரத்த குரலில்
மோகனுக்கு மங்களம் உண்டாகட்டும் –

அயி மன்மத பத்தி மா ஸ்ம சபஷீர் நநு மோஹாதீஷு ஸம்ஸ்திதேஷு ஸத் ஸூ
ப்ரக்ருதிம் புருஷ ப்ரபித் ஸமாந பிரதிபத்யதே விரக்திதோ விமுக்தம் –58–

வசந்தன் ரதியிடம் கூறுவது
தோழியே -மன்மதனின் பத்னியே -அச்சம் கொள்ள வேண்டாம்
மோஹன் போன்ற பலரும் உயிருடன் உள்ள போது -புருஷன் என்னும் ஜீவாத்மா
ப்ரக்ருதியை அடைந்து வைராக்யத்தைச் சார்ந்த விடுதலை அடைவான்

இதற்கு மற்ற ஒரு பொருளும் சொல்லலாம்
மோஹன் போன்ற பலரும் இறந்த பின்னர் புருஷனாகிய ஜீவாத்மா தனது தூய்மையான நிலையை அடைந்து
வைராக்யத்தின் துணையுடன் மோக்ஷத்தை அடைவான்

ரதி தனக்குள் கூறுவது
வசந்தனின் இந்தப் பேச்சானது அவன் கூற வருவதற்கு மாறான பொருள் தருவதாகத் தோன்றுகிறது
பின்னர் உரத்த குரலில்
விவேக்குக்கு விவேகம் இல்லையே
அவனுடைய மந்திரிகளாகிய சமன் தமன் இவர்களுக்கும் விவேகம் இல்லையா –
புருஷனாகிய ஜீவாத்மா மூல ப்ரக்ருதியை விட்டு அகன்றால் நம்மைப் போன்றே
எந்தவிதமான வேறுபாடும் இன்றி அழிவு அன்றோ உண்டாகும்

காமன் கூறுவது -நீ கூறியது சரியே –
புருஷனாகிய ஜீவாத்மா தனது ஞானம் என்ற கண்ணைக் கொண்டு அனைத்தையும் காண்கிற சாக்ஷியாக உள்ளான்
நம்முடைய மேன்மைகளை இந்தப் பாபிகளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை
ஆகவே நம்முடைய இரண்டு குலங்களும் அழிவதற்கான வழியைக் குறித்து ரஹசியமாகத் திட்டம் தீட்டுகிறார்கள்
தங்களுடைய இந்த முயற்சிகள் வீணாகப் போவதை இந்த மூடர்கள் நிச்சயமாக அறிவார்கள்

ப்ரஸூப்தா நபி யுத்தேந ஸூக்ரீவ ஸூபடாநிவ
கர்ம சக்திர நுச் சேத்யா புநருத்தோ த்ஸே தயிஷ்யதி –59–

காமன் கூறுவது -ஸூ க்ரீவனுடைய வானரர்களைப் போன்ற வீழ்ந்த வீரர்களைப் போன்று
மஹா மோஹன் மற்றும் அவனுடைய சேனைகள் அனைவரும்
தங்களுடைய பூர்வ கர்ம வினையின் சக்தியால் எழுவார்கள் —

திரையின் பின்னால் இருந்து
கண்கள் கெட்டுப்போன அவன் யார்
அனைவருடைய அனுகூல்யத்திலேயே நோக்கம் கொண்ட படி உள்ள நம்மை பாபிகள் என்று அழைப்பது யார்
தாழ்ந்த ஒழுக்கம் கொண்டவனே -எங்களுடைய பிறப்புக்கு காரணமாக உள்ளவனை விலங்கி பூட்டி அழிக்கும்
உங்களை அழிப்பதிலும் அவனுடைய துக்கங்கள் அனைத்தையும் நீக்கி அவனுக்குப் பேரானந்தம் அடைய வைப்பதிலும்
அஸூரர்களுடைய குலத்துக்கு விரோதியான பகவானுடைய கருணைக்கு உட்பட்டு நாங்கள் முயல்கிறோம்
அடுத்து உள்ள சொற்கள் உபநிஷத்தில் கூறப்பட்டவை –

ஸ்வாதீன ஸம் சாரண நாட்ய நிரூட வ்ருத்தே
சந்தோஷித ப்ரணத பூமிக யாஸ்ய பும்ஸ
ஸ்தாநே விதாஸ்வதி விபுஸ் ஸ்திர சிஹ்ன மேதம்
க்ரீட நடஸ் ஸ டஸ்ய பகவான் க்ருபயா பரமம் ஸ்வ ஸாம்யம் —-60-

ஒரு நடிகன் போன்று பகவானுடைய நாடக லீலைகளில் பங்கு பெறுகிறான்
அவனது ஆஜ்ஜைக்கு இணங்க ஸம்ஸாரம் என்னும் நாடகத்தில் பல வேடங்களைப் பூணுகிறான்

இறுதியாக சரணாகத்தான் என்னும் பாத்திரத்தை ஏற்று பகவானை மகிழும்படி செய்கிறான்
இப்படிப்பட்ட ஜீவாத்மா பரமபதத்தில் உள்ள போது பரமாத்மாவாகிய தனக்கு மட்டுமே
அசாதாரணமான அடையாளங்கள் செயல்பாடுகளைத் தவிர்ந்து
தன்னை ஒத்த நிலை ஜீவாத்மாவும் அடையும் படி செய்து அருளுகிறார்

ரிபு மதந க்ருதம் யசோ மஹீய பித்ரு பரி ரக்ஷண சம்ம்ருதச்ச தர்ம
அபிமத கட நோத் பவச்ச ஹர்ஷ சபதி விதாஸ்யதி சந்நிதிம் ஸ்வயம் ந –61-

அந்த வேளையில் நம்முடைய விரோதிகளை வென்றதன் விளைவாக நமக்குப் புகழ் கிட்டும்
நம்முடைய தந்தையைக் காப்பாற்றிய கடமையை செய்தவர்கள் ஆவோம்
நாம் எண்ணியது தானே நடந்தது என்பதால் உண்டாகும் மகிழ்ச்சி நம்முடைய இதயங்களில் நிறைந்து நிற்கும் –

காமன் தன் அச்சத்தை மறைத்துக் கொண்டு தன் மனைவியை நோக்கியபடி
பிரியமானவளே மோஹனுடைய விரோதிகளுக்கு அரசனாகிய விவேகன்
தனது மனைவியான ஸூ மேதி யுடன் கூடியவனாக நம்மிடம் வருகிறான் –

முகுலயதி விவித் ஸாம் மோஹ வித் வம்சம் இச்சன்
விம்ருசதி நிகமாந்தான் வீக்ஷதே மோக்ஷ தர்மான்
நிச மயதி ச கீதம் நித்ய போகாந்த பக்த்யா
குண பரிஷத வேஷீ குப்த மந்த்ரோ விவேக –62-

இந்த விவேகம் ஐயங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றவனாக உள்ளான்
மோஹனை அழிக்க விருப்பம் கொண்டவனாக வேதாந்தங்களை நன்றாக ஆராய்கிறான்
மோக்ஷ மார்க்கம் கூட்டிச் செல்லும் கர்மங்கள் குறித்துப் படிக்கிறான்
சமநிலை உள்ளவனாய் திரு அஷ்டாக்ஷரத்தை பிறர் அறியாதபடி உச்சரிக்கிறான்
ஸ்ரீ கீதையை பக்தியுடன் எப்போதும் அறிகிறான் –

ப்ரதயங் முகீம் ஸூமதி தீப்தம் இஹ பிரசிந்வந்
ப்ராப்தோதய அப்ய மித ராக பலோ பபந்ந
ஷாம்யந் அஹங்க்ருதி மயீ மவஸோ ஹிமாநீம்
பாஸ்வா நசவ் பஜதி விஷ்ணு பதம் விவேக –62-

உதய ஸூர்யன் தனது கிரணங்களுடன் மேரு நோக்கி வானத்தில் நகர்ந்து பணியை நீக்கி செல்வது போல்
விவேக்கும் தனது மனைவி ஸூ மதியுடன் ஒளியைப் பெருக்கிய படி உள்ளான் –
வேறே பற்றுதல் இல்லாமல் பரமாத்மாவிடம் ஆழ்ந்த பற்றுதலையே வளர்த்து
அஹங்காரத்தைத் தன் வசப்படுத்தி
விஷ்ணுவின் உயர்ந்த திருவடிகளையே நாடியபடி உள்ளான்

காமன் தொடர்ந்து
நம்முடைய விரோதி வரும் பொழுது நாம் இங்கு இருப்பது சரி இல்லை
மேலும் நாம் இப்போது அவனை சந்திக்கும் தருணமும் இல்லை –
நமக்கு இப்போது துணை யாரும் இல்லை
என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான்

மிஸ்ர விஷ்கம்பம் ஸம்பூர்ணம் –

——-

அரசன் விவேகனும் அரசி ஸூ மதியும் அரங்கத்தில் வருதல்
விவேகன் தனது மனைவியுடன் மிக சிந்தனையுடன்
பிரியமானவளே முடிவில்லாத வினைகள் என்னும் விஷக் காட்டின் வேராக உள்ளவனும்
கர்வம் கொண்டவனுமாகிய காமனின் பேச்சைக் கேட்டாயா
அனைவருடைய பாபங்களையும் நீக்க முயன்று வரும் நம்மை அவன் பாபி என்று பழித்துக் கூறுகிறான்
அல்லது
பஸ்யதி பரேஷு தோஷான் அஸத அபி ஜன சத அபி நைவ குணான்
விபரீதம் இதம் ஸ்வஸ்மிந் மஹிமா மோஹாஞ் ஜனஸ் யைஷ –63-

விவேகன் கூறுதல்
மற்றவர்கள் இடத்தில் இல்லாத குற்றங்களைக் காண்பதையும்
அவர்கள் இடம் உள்ள நல்லவற்றைக் காணாது இருத்தலையுமே பொதுவாக அனைவரும் செய்கிறார்கள்
ஆனால் அவர்கள் தங்களைப் பொறுத்த வரையில் இந்தத் தன்மையை நேர் மாறாகக் கொள்கிறார்கள்
இது அவர்களுடைய கண்களில் தடவப்பட்ட மோகம் என்னும் மையின் மகிமை ஆகும்

ஸூமதி
அனைத்தும் அறிந்தவரே தங்களுடைய முகத்தில் தென்படும் விகாரத்தைக் கூட
மாசு இல்லாத கண்ணாடியின் தோஷமாகவே கூறுவார்கள் அல்லவோ

விவேகன்
நீ உரைப்பது சரியே ஆகும்
நீ எப்போதும் உண்மையை மட்டும் காண்கிறாய்
அவற்றை உள்ளது உள்ளபடி உரைக்கிறாய்
மேலும்

நிர்தூத நிகில தோஷா நிரவதி புருஷார்த்த லம்பந பிரவணா
ஸத் கவி பணிதி இவ த்வம் ஸ குண அலங்கார பாவ ரஸ ஜூஷ்டா –64-

விவேகன் கூறுதல்
ஒரு சிறந்த கவிஞனால் படைக்கப்பட்டதும் -எவ்விதமான தோஷமும் அற்றதும் –
உயர்ந்த புருஷார்த்தத்தை அடையும்படிச் செய்வதில் நோக்கம் என்பதாக உள்ள
கவிதையின் மொழி போன்று நீ உள்ளாய்
அதாவது சிறந்த குணம் அலங்காரங்கள் பாவம் மற்றும் ரஸம் பொருந்தியவளாக நீ உள்ளாய் —

விவேகம் ஸூ மதியிடம்
பிரியமானவளே ஹா -நற் குணங்களில் எந்தவிதமான மாற்றமும் அடையாத மனிதர்களை பீடித்து
அவர்கள் அடையும் துன்பத்தைக் கண்டு ரசிக்கும்
இந்தக் காமம் க்ரோதம் மற்றும் லோபம் போன்றவர்கள் நல்ல வழியில் நடப்பவர்கள் எனக் கூறப் படுகிறார்கள்
ஆனால் நாம் அந்த மனிதனுக்குப் பெரும் பேறு உண்டாக்க எண்ணுகிறோம்
அவனுக்கு அனைத்து உயிர்களுடைய நண்பனாக எப்பொழுதும் திகழ் பவனும்
அனைவரையும் தாபத்த்ரயங்களில் இருந்து காப்பவனும் ஆகிய பகவானுடைய கருணையைப் பெற்றுத்தர முயல்கின்றோம்
இப்படிப்பட்ட நாம் தகாத வழியில் செல்பவர்களாகக் கூறப்படுகிறோம்
மனநிலை குன்றிய இவர்களுடைய பேச்சு எவ்விதமாக உள்ளது
இவர்கள் அனைவரும் பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெரும் பொருட்டு
உன்னுடன் இணைந்து மேற் கொள்ள இருக்கின்ற நோன்பை நோக்குவாயாக –

மஹத் யாரம்பே அஸ்மின் மதுரிபு பதயா ஸம் ப்ருதத் ருதிர்
பஹிஷ் க்ருத்யாராதீந் ஸூ முகி பஹிரந்தச்ச பவத
சமாதா வாயாதா ஷபிதவ் ருஜிதம் ஷேத்ரிண மகம்
பர ப்ராப்தயா தன்யம் பரிணமயிதம் ப்ராப்த நியம —-65-

விவேகன் கூறுதல்
அழகான நெற்றியை யுடையவளே -இந்தப் பெரும் தொடக்கத்தில் மது என்ற அசுரனை அழித்த
பகவானுடைய கருணையால் தூண்டப்பட்டு எனது உள்ளும் புறமும் உள்ள விரோதிகளை
விரட்டிய பின்னர் செய்வது என் என்றால்
பகவானைத் த்யானிப்பதன் மூலமாக அந்தப்புருஷனுடைய அனைத்துப் பாபங்களையும் விலக்கி
அவன் பகவானை அடையும்படி செய்து அவனை மகிழ வைப்பதே ஆகும் –

ஸூ மதி –
அனைத்தும் அறிந்தவரே -ஜீவாத்மா என்பவன் தனது இயல்பாகவே எப்போதும் உள்ளவனாக-
தோஷம் அற்றவனாக -ஆனந்தம் நிறைந்தவனாக –
அமைதி நிறைந்தவனாக -தானாகவே தன்னை வெளிப்படுத்த வல்லவனாக –
அனைவருக்கும் இனிமை யானவனாக உள்ளவன் ஆவான்
இப்படிப்பட்ட அவன் மஹா மோஹனால் கர்வம் மற்றும் வெறுப்பு என்பது போன்ற தீயவர்கள் மூலமாக
எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உள்ள
அஹங்காரம் என்னும் காற்றால் கிளர்ந்து எழுகின்ற வினைகள் என்னும் அலைகள் ஓங்குவதால்
பயங்கரமாக உள்ள துன்பம் என்ற சமுத்திரத்தில் எவ்வாறு தள்ளப்பட்டான்

அரசன் –
அன்பானவளே -அனைத்தையும் நுட்பமாகக் காண்பவளே -நாம் நேரடியாகக் காண்பதை எவ்விதம் நிராகரிக்க இயலும்
வேதங்கள் கூறுவதை நம்பாமல் இருக்க முடியுமா நீயே காண்பாயாக –

ஸ்வத பிராப்தம் ரூபம் யத் இஹ கில பாவேஷு
தத் அபி த்யஜந்தஸ்தே த்ருஷ்டா நியதி கடித உபாதி வசத
ப்ரக்ருதியா திஷ்டந்தி ஹி உபாதி விகமே தே ச
ஸதசா வநாதி சம்சார புருஷ முப ருந்தே கலாதி ச –66-

விவேகன் கூறுதல்
ஒவ்வொரு வஸ்துவும் தனது இயல்பான தன்மையை விட விதி மூலமாக உண்டாகின்ற சேர்க்கை –
உபாதி -காரணமாக் கை விடுகின்றன
அந்த உபாதியானது மறைந்தவுடன் அவை தங்கள் இயல்பான நிலைக்கு மீண்டும் திரும்புகின்றன
இதனைப் போன்றே புருஷனாகிய ஜீவாத்மா எல்லையற்ற காலமாக உபாதியுடன் கூடியவனாக இருந்து
ஒளி வீசாமல் உள்ளான்
தகுந்த வழியால் அந்த உபாதி விலகும் –

ஸூ மதி
உண்மையே ஆகும் -ஆனால் மிகுந்த கருணை கொண்டவனும் மஹா லஷ்மி நாதனுமான
பகவானால் இத்தனை காலமாக மிகவும் கொடியதான துன்பங்களிலே சிக்கித் தவித்தபடி
உள்ள இந்தப் புருஷன் எவ்வாறு நிராகரிக்கப் பட்டான் –

அரசன்
அதை நீ அறியவில்லையா –எல்லை யற்ற காளான்களாகத் தொடர்ந்து வரும் கர்மங்கள்
என்னும் அவித்யையால் ஜீவாத்மா சம்சாரத்தில் உழல்கிறான்
தகுந்த காலத்தில் அவன் இதில் இருந்து மீட்கப்படுகிறான்

மித கலஹ கல்ப நா விஷம வ்ருத்தி லீலா தயா
பரி க்ரஹண கௌதுக பிரதித பரா வஸ்ய ப்ரபு
ஸ்வ லஷித ஸமுத் கமே ஸூஹ்ருத லக்ஷணே குத்ர சித்
குண க்ஷதலி பித்ரு மாதுபநிபா திநஸ் பாதிஸ் ந –67-

விவேகம் கூறுதல்
பிரபுவுக்கு -லீலை தயை என்று இரண்டு தேவிமார்கள் உள்ளனர்
இருவருக்கும் இடையே எப்போதும் கலகம் உண்டாகி விரோதம் ஏற்பட்ட படி உள்ளது
ஆகவே தான் செய்யும் செயல்களுக்குத் தன்னை மட்டுமே நம்புவது இல்லை
ஜீவாத்மாவிடம் ஏதேனும் நற்செயல் உள்ளது போன்று காணப் பட்டால் -தோற்ற அளவில் மட்டுமே உள்ளதான
அந்தச் செயலின் விளைவாக அவன் ஜீவாத்மாவுக்கு உதவுகிறான்
பனை ஓலையில் உள்ள புழுவின் மூலமாக அவற்றில் உண்டாகும் துளைகள் எழுத்துக்கள் போலே
தோன்றுமா போலே இதுவும் ஆகும் –

ஸூக துக்க வாஹி நீநாம் வ்யத்யய விநிமய நிவர்த்த நாநர்ஹே
நியத க்ரம ப்ரவாஹே நிபதி தம் உத் ஷிப்ய மோததே தேவ –68–

விவேகம் கூறுதல் -இன்ப துன்பங்கள் என்பவை வெள்ளம் போன்று வருகின்றன -இதில் ஜீவாத்மா விழுகிறான்
இவற்றின் போக்கானது முன்பே தீர்மானிக்கப் பட்டதே ஆகும் -இவற்றை நிறுத்துவது மாற்றுவதோ இயலாது
ஆனால் இவ்விதம் விழுந்தவனை தகுந்த நேரத்தில் பகவான் மேலே உயர்த்தி மகிழும்படி செய்கிறான்

ஸூ மதி -எல்லையற்ற காலமாக இந்த ஜீவாத்மாவால் மோக்ஷம் அடையப்பட வில்லை –
எதிர் காலம் என்பதும் எல்லையற்றதாகவே உள்ளது
இவ்விதம் உள்ளபோது எவ்விதம் யாரால் மோக்ஷம் பெறுவான் என்பதை
எண்ணும் போது எனது இதயம் துடிக்கிறது

அரசன் -தேவி விவேகனின் பத்னியே -தகுந்த பிரமாணங்களையும் நியாயங்களையும்
அறியாதவள் போல் கேட்க்கிறாயே –

கால ஸ்வ பாவ நியதி யத் ருச்சா திஷு வஸ்துஷு
காரணம் கிமி வாத் ரேதி தாபஸை ரபி தர்கிதம்–69-

விவேகன் கூறுகிறான்-அனைத்திற்கும் காரணமாக உள்ள ப்ரஹ்மமானது –
காலமா -இயற்கையா -வினைகளா -தற்செயலாக நேரும் செயல்களா என்பது போன்ற கேள்விகளை
தவங்கள் பல புரிகின்றவர்களே கேட்க்கின்றார்கள் –

விவேகன் -இது மட்டும் உறுதியானது –

கர்ம அவித்யாதி சக்ரே ப்ரதி புருஷம் இஹ அநாதி சித்ர ப்ரவாஹே
தத் தத் காலே விபக்திர் பவதி பஹு விதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல் லப்த ஸ்வா வகாச ப்ரதம குரு க்ருபா க்ருஹ்ய மாண கதாசித்
முக்த ஐஸ்வர்யாந்த சம்பந் நிதி ரிபி பவிதா கச்சித் சித்தம் விபச்சித் –70-

விவேகன் கூறுகிறான்
கர்மங்கள் அஞ்ஞானம் போன்ற பலவும் சக்கரம் போன்று சுழன்றபடி உள்ளன
இவை எல்லையற்ற காலமாக சம்சாரத்தில் உள்ள ஒவ்வொரு புருஷனுக்கும் பிரவாகமாக வருகின்றன
அந்த அந்த கால கட்டத்தில் பூர்வ கர்மங்கள் அந்த அந்த பலன்களை அளிக்கின்றன
இந்தக்கருத்தானது அனைத்து மதங்களினுடைய சித்தாந்தங்களிலும் உள்ளது –
குறிப்பிட்ட பலன் அளிக்கும் நேரத்தில் முதல் ஆச்சார்யனாக உள்ள பகவான் அதற்கான தருணத்தை
எதிர்பார்த்து நின்றவன் போன்று அந்த அந்த ஜீவாத்மாக்களுக்குத் தனது கருணையைப் பொழிகிறான்
அந்த ஜீவாத்மா விவேகம் போன்றவை அடையப்பெற்று முக்தி அளவான செல்வங்களைப் பெறுகிறான் —

விவேகன் -நான் இருக்கின்ற நேரத்தில் ஜீவாத்மாவானது இவ்விதம் மோக்ஷம் பெற்றது ஆகும்

தர்போ தக்ர தச இந்த்ரியாநந மநோ நக் தஞ்சர அதிஷ்டிதே
தேஹே அஸ்மின் பவ ஸிந்துநா பரிகதே தீ நாம் தசாம் ஆஸ்தித
அத்யத்வே ஹநுமத் ஸமேந குருணா ப்ரக்யாபி தார்த்தஸ் புமான்
லங்கா ருத்த வைதேஹ ராஜ தநயான் யாயேந லா லப்யதே –71-

விவேகன் கூறுதல் –மனமானது கர்வம் கொண்ட பத்து தலைகளை யுடைய இவனைப் போன்று
பத்து இந்த்ரியங்களாலே அலைக்கழிக்கப் படுகிறது
இது ஸம்ஸாரம் என்னும் கடலால் சூழப்பட்ட உடலிலே தங்கி உள்ளது
கடலால் சூழப்பட்ட இலங்கையிலே சிறைப்பட்ட வைதேஹ அரசனுடைய புத்ரியான சீதா பிராட்டியைப் போல்
தீனமான நிலையில் ஜீவாத்மா உள்ளது
அவளுடைய இருப்பானாது திருவடியால் உணர்த்தப்பட்டது போல் ஆச்சார்யனால்
இந்த ஜீவாத்மாவுக்கு அனைத்தும் உணர்த்தப்படுகின்றது –
அதன் பின்னர் தெளிவடைந்து ஜீவாத்மா அவனை அடைவது உறுதி என்று உள்ளான் –
விவேகன் மேலும்

பஹுல துரித த்வாரே ப்ராஹ்ம புரே பர ஸம்மத
ஸ்வ மதி கடித ஸ்வா தந்தர்யத்வாத் அயந்த்ரித சேஷ்டித
விஷம ச சிவைர் ஸ்வே ஸ்வே கார்யே விக்ருஹ்ய விக்ருஷ்யதே
நர பதி ரிவ ஷீ போ நாநா விதை அயம் இந்த்ரியை –72-

விவேகன் கூறுவது -ப்ரஹ்மத்துக்கே உரியதான சரீரம் என்னும் நகரத்தில் ஒன்பது வாசல்கள் வழியே
பாபங்கள் உள்ளே செல்கின்றன
இதனால் அந்த நகரத்துள் இருக்கும் ஜீவாத்மா தான் ஸ்வதந்த்ரமானவன் என்று மனதில் எண்ணுகிறான்
இதனாலேயே யாராலும் அடக்க இயலாத பலவற்றையும் செய்கிறான் -பல்வேறு இந்த்ரியங்களால்
பல திக்குகளிலும் அலைக்கப் படுகிறான்
தகாத செயல்கள் கொண்ட அமைச்சர் ஒருவரால் தவறான வழிகளில் நடத்தப்படும் அரசனைப் போல் உள்ளான் –

ஸூ மதி -ஆர்ய புத்ரரே -நெருப்பினால் சூலப்படும் ஒரு வீட்டில் இருப்பதற்கு ஒப்பான நிலையில் உள்ள புருஷன்
தன்னைக் கவனத்துடன் காப்பாற்றிக் கொள்ள மாட்டானோ

ராஜா -விவேகன் -பிரியமானவளே -அனைத்தும் அறிந்தவளே -எல்லையற்றதான ஆசை என்னும் சமுத்ரத்தைக் கடப்பது இயலாத ஒன்றாகும்

ஸ்திரத்ர சவி பக்திமத் த்ரிவித ராக த்ருஸ் யோதயம்
ஸூம் ருஷ்ட மணி பித்திவத் ஸ்வயம அபித்யமாந புமான்
த்ரி யுக்ம குண சில்பநா த்ரி குண தூலிகா தாரிணா
விவிஸ்ய விநிவேசிதம் வஹதி சித்ரம் அத்யத்புதம் –73-

விவேகன் கூறுதல் -எந்தவிதமான களங்கமும் இன்றி காணப்படும் அழகான சுவர் ஓன்று பல சித்ரங்களைக் கொண்டு உள்ளது போன்று
பிரதானம் என்பதில் தனது லீலை என்னும் தூரிகையால் ஆறு குணங்களைக் கொண்ட தெய்வீகமான ஓவியன்
அசைகின்ற மற்றும் அசையாமல் உள்ள சரீரங்களை ஓவியமாகத் தீட்டுகிறான்
அந்த ஓவியங்களை -மூன்று வர்ணங்கள் -ஸத்வம் -வெண்மை ராஜஸம் -சிகப்பு -தாமஸம் -கறுப்பு -கொண்டு அமைக்கிறான்
இவையே மூன்று விதமான ராகங்களாக -செல்வ ஆசை -இன்ப ஆசை -மக்கள் ஆசை -என்று அமைகின்றன
இந்தச் சரீரங்களான சித்தரத்தை இதுவே நான் என்று கொண்டாடியபடியே புருஷன் பிரியாமல் இருக்கிறான் –

ஸூ மதி
இவ்விதம் மனநிலை சரியாக இல்லாதபடி மாறிய தனது கணவனை
அவனுடைய பத்னி புத்தி திருத்த வில்லையா

ராஜா -விவேகன்
பிரியமானவளே -நுட்பமாகப் பேசுபவளே -தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வல்ல
அந்த புத்தியும் உறங்கிய படியே உள்ளாள்

பத்யவ் தூரம் கதவதி ரவவ் பத்னி நீவ ப்ரஸூப்தாம்ல
நாகாரா ஸூ முகி நிப்ருதா வர்த்ததே புத்தி ரம்பா
மாயா யோகான் மலிநி தருசவ் வல்லபே துல்ய சீலா
ராஹு க்ரஸ்தே துஹிந கிரணே நிஷ் ப்ரபா யமி நீவ –74-

விவேகன் கூறுதல்
சூரியன் தனது கணவன் தூரமாகச் செல்ல -தாமரைக் குளமானது உறங்குகிறது
இதே போன்று நமது தாயாகிய புத்தியும் அசையாமல் உறங்குகிறாள்
அழகான நெற்றி கொண்டவளே தனக்கு மிகவும் பிரியமான சந்திரன் ராகுவால் விழுங்கப்படும் போது
இறைவனது ஒளி யற்று உள்ளது
அதனைப் போன்று பிரக்ருதியுடன் சம்பந்தம் கொண்டதால் ஒளி இழந்த கணவனைப் போன்றே புத்தியும் உள்ளாள் –

ஸூ மதி –
அனைத்தும் அறிந்தவரே -இந்தப் புருஷனுக்கு அவனுடைய பத்தினியான புத்தி யுடன் உள்ள
இந்த நிலையை வருந்தத்தக்கதாகவே யுள்ளது
இப்படிப்பட்ட புருஷன் இந்தத் துக்கம் நீங்கி மோக்ஷம் அடையும் நிலையை விரித்துக் கூற வேண்டும்

ராஜா -விவேகன்
தேவீ அடுத்தவருடைய நன்மையைக் குறித்து எப்போதும் சிந்தித்தபடி உள்ளவளே
நான் இது பற்றி முன்பு அறிந்தவற்றை நினைவு கூர்ந்து உரைக்கிறேன்

துராஸே தஸ்தேம்நா துரித பரிபாகே ந பவிந
ப்ரமாதீ ஸம்ஸார ப்ரசம ரஹித அயம் ப்ரபவதி
நிரோதே தஸ்யை கா நிரூ பாதிக காருண்ய கடித
ஸ்வ தந்த்ர இச்சா சக்தி ஸ்வயம் உபதிம் ஆஸ்தாய -தாய -ரமதே –75-

விவேகன் கூறுதல்
ஒருக்காலும் விலக்க ஒண்ணாத வினைப்பயனால் சம்சாரம் வருத்துவதாயும்
மேன்மேலும் துக்கம் வளர்க்குமாயுமே இருக்கும்
ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரனுடைய இச்சை -நிர்ஹேதுக கிருபை ஒன்றாலே
நல்ல சூழ்நிலையை உண்டாக்கி நன்மையை உண்டாக்கி மகிழும்

ஸூமதி –
அத்தகைய தகுந்த சூழ்நிலையை உண்டாக்குதல் என்பது என்ன வென்று எனது செவிகளிலே
நான் கேட்கலாம் என்றால் அதனைத் தங்கள் கூற வேண்டும்
ராஜா -விவேகன்
எந்தக்கபடமும் இல்லாமல் பேசுகின்ற பிரியமானவளே
அந்த உண்மையை நான் சுருக்கமாக உரைக்க நீ கேட்ப்பாயாக

மதநமத்ஸர மாந மய புமான் பஹு பிசாச க்ருஹீத இவார்பக
நிகம ஸித்த நரேந்திர நிரீக்ஷயா ணாத் நிபுண பத்திம் அப்யவபத்யதே –76-

விவேகன் கூறுதல் –
பலவிதமான பிசாசுக்கள் இடம் அகப்பட்ட குழந்தை போன்று புருஷனானவன்
கர்வம் கோபம் விருப்பு போன்றவற்றின் பிடியில் சிக்கியுள்ளான்
வேதம் என்னும் உயர்ந்த இடத்தின் மூலம் அனைவராலும் அறியப்படுபவனும்
அனைத்து ஜீவர்களுடைய ஈஸ்வரனாகவும் உள்ள வைத்யனால் நோக்கப்படும் பொழுது நேர் வழிக்குத் திரும்புகிறான் –

அநக தேசிக த்ருஷ்டி ஸூதா ப்லவே விதி வஸாத் உப ஸேதுஷி தேஹிந
விமல போதமுக விவிதா குணா பரிண மந்த்ய பவர்க தாசங்குரா –77-

அதன் பின்னர் அந்தப்புருஷன் எந்தவித தோஷங்களும் அற்ற ஒரு சான்றோனுடைய கடாக்ஷம் என்னும்
அம்ருதத்தில் விதி வசத்தால் மூழ்குகிறான்
அப்போது மோக்ஷம் என்பதற்கான முளைகளான ஞானாதி குணங்கள் உண்டாகின்றன –

ஸ்வாதீநே தர பாத பீதி பருஷ ஸ்வர்வாஸ துர் வசநா
பாச கர்ஷண யந்த்ரணாபி அபித ஷிப் தாத்மந ஷேத்ரிண
நிஷ் ப்ரத்யூஹ விஜ்ரும்பமாண கருணா துக்த அர்ணவே நிர்பரா
பக்தி சேத்ஸ்யதி பாகதேய வசன ப்ராப்யே பர ப்ரஹ்மணி –78-

விவேகன் கூறுதல்
துர்வாசனையால் ஜீவாத்மாஸ அங்கும் இங்கும் அலைக்கழிக்கப் படுகிறான்
ஸ்வர்க்கம் கிட்ட வேணும் என்னும் ஆசை உண்டாகிறது
மேலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தனக்குத் தானே எஜமானன் என்னும் நிலையில் இருந்து
கீழே விழுவோம் என்னும் அச்சமும் அவனுக்கு எப்போதும் உண்டாகியபடியே உள்ளது
அப்போது பாக்யத்தால் எந்தவித தடையும் இல்லாமல் பெருகுகின்ற தயைக்குப் பாற்கடலாக உள்ளதும்
நம்மால் அடையப்பட வேண்டியதுமாகிய பர ப்ரஹ்மத்தின் இடம் ஜீவாத்மாவுக்கு பக்தி உண்டாகிறது –

விவேகன் –
இதற்கு இடையில் தன்னிடம் உள்ள அனைத்துச் செல்வங்களையும் தக்ஷிணையாக அளித்து
ஒரு யஜ்ஜம் நடத்தப்பட வேண்டும்

அந்த யஜ்ஜத்தில்
த்வயா ஜூஷ்ட பத்ந்யா பிதி வதிஹ யஷ்டா ஸ்வயமஹம்
விதத்தே சார்த்விஜ்யம் சம தம முகோ அயம் குண கண
அகஸ்மாத் உத்தேச்யோ பவதி பகவன் ஆத்ம ஹவிஷ
பசுர் பத்தோ முக்திம் பஜதி விகலத் கர்ம நிகில –79-

விவேகன் கூறுதல்
எனது தர்ம பத்னியாகிய உன்னுடன் இணைந்து அந்த யஜ்ஜத்தின் எஜமானன் ஆவேன்
சமம் தமம் முதலான குணங்கள் ருத்விக்குகள் ஆவர்
அந்த யஜ்ஜத்தில் எந்தவிதமான பலனும் எதிர்பார்க்கப் படாமல் ஆத்மா வானது
பகவானுக்கு ஹரிர்பாவமாக அளிக்கப் படும்
இதன் விளைவாக வினை என்ற விலங்கு நீங்குகிறது
ஆகவே அந்த யஜ்ஜத்தின் பசுவாகிய ஜீவாத்மா முக்தி அடைகிறான் –

விவேகன் மேலும் -இத்தனையும் நீ அறிய வேண்டும்

ஸ்வ ரக்ஷண பரார்பண க்ஷணிக சத்ரிணா ஷேத்ரிண
ப்ரவர்த்ய க்ருபயா ஸ்திதம் ப்ரபுர பூதுர் வோதயாம்
ஜகத் விபரி வர்தந ப்ரதிந நித்ய சக்தி ஸ்வயம்
ஷி பத்ய புநரங்குரம் துரிதம் அஸ்ய லஷ்மீ பதி –80-

விவேகன் கூறுதல்
தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை பகவானிடம் சமர்ப்பித்தலாகிற பிரபத்தி என்னும் யஜ்ஜத்தை ஒரு நொடியில் செய்யலாம்
அப்படிப்பட்ட ஜீவாத்மாவுக்கு இங்கு உள்ள போது அந்த ஜீவாத்மா உட்பட வேறே யாருக்கும் உண்டாக்காத நிலையை
ஸ்ரீ யபதி தானாகவே தனது கிருபையால் அளிக்கிறான்
இந்த ஜகத்தை அழிக்க வல்ல அவன் அந்த ஜீவாத்மாவின் அனைத்து பாபங்களையும் அழிக்கிறான்

ஸூ மதி
அனைத்தும் அறிந்தவரே -தங்கள் கூறும் இந்த நிலையை ஜீவாத்மா எப்போது அடைகிறான்

விவேகன்
மூன்று உலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவளே -பொறுத்துக்க கொள்ள இயலாத கடுமையான துக்கம்
என்னும் சமுத்ரத்திலே மூழ்கியபடி உள்ள ஜீவாத்மாவுக்கு
ஸாஸ்த்ரம் மற்றும் யுக்தி இரண்டுக்கும் ஏற்றபடியாக -கரை ஏறுவதற்கு வழியானது நிச்சயம் உண்டாகும்
என்பதை எண்ணி மகிழ வேண்டும் –
இது மட்டுமே தற்காலத்தில் செய்யக் கூடியதாகும் –

நிரபாய தேசிக நிதர்சிதா மிமாம் கமலா ஸஹாய கருணா திரோ ஹணீம்
க்ரமச அதிருஹ்ய க்ருதிந சமிந்தத பரிசுத்த ஸத்வ பரிகர்மிதே பதே –81- விவேகன் மேலும் கூறுதல்

ஸ்ரீ யபதி -எப்போதும் மறையாத தனது தயை என்னும் ஏணியை வைத்துள்ளான்
தக்க செயல் கொண்ட பாக்யசாலிகள் தங்களுடைய ஆச்சார்யனால்
அந்த ஏணியைக் காண்பிக்கப் படுகிறார்கள்
அவர்கள் படிப்படியாக அதிலே ஏறிச் சென்று தூய்மையான ஸத்வம் மட்டுமே கொண்ட
ஸ்ரீ பரமபதத்தை அடைகிறார்கள்

ஸ்வயம் உப ஸமயந்தீ ஸ்வாமி ந ஸ்வைர லீலாம்
ஸ்வமத மிஹ பஹுநா ஸ்வாது பத்யம் பிரஜா நாம்
நியத மிய மிதா நீம் அந்யதா வா பவித்ரீ
நிரவதி ஸூக ஸித்யை நிஷ் ப்ரகம்பாநு கம்பா –82-விவேகன் மேலும் கூறுதல்

ஜீவாத்மாவைத் தண்டித்தல் என்பதான அவனுடைய லீலைகளைத் தானே தணித்து
தனக்கு விருப்பமானதாகவும்
பிரஜைகளுக்கு நன்மை அளிக்க நல்லதாகவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும்
உள்ளதை தயா தேவி அளிக்கிறாள்
இப்படியாக ஜீவாத்மாவின் அளவற்ற ஸூ கத்துக்கு அவளே காரணமாக இருக்கிறாள் –

விவேகன் மேலும்
அவிரல குணச்சாயா மாயா தமஸ் ப்ரதிரோதி நீ
பரிஹ்ருத ரஜஸ் பங்கா தோஷைர சங்கடிதா த்ரிபி
மதுரிபு தயா மூர்த்திர் திவ்யா நிராக்ருத கண்டகா
வஹதி நிகமான் வர்த்தன்யேஷா புரீம் அபராஜிதாம் –83-

விவேகன் கூறுதல்
இங்கிருந்து ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் அபராஜிதம் என்னும் இறுதியான இடத்துக்கு ஒரு பாதை அமைந்துள்ளது
அது மது என்னும் அசூரனை வதைத்த ஸர்வேஸ்வரனுடைய தயை என்பதே யாகும்
அந்தப் பாதையில் அவனுடைய குணங்கள் நிழலாக உள்ளன
அந்த நிழலானது மாயை என்னும் இருளை விளக்குவதாகும்
அது ரஜஸ் மூலம் உண்டாக்க வல்ல பாபம் என்னும் சேறு இல்லாதது ஆகும்
அதில் மூன்று விதமான துக்கங்கள் இல்லை
முட்கள் போன்ற இடையூறுகள் யாதும் இல்லை

ஸூ மதி
அளவற்ற வினைகள் என்னும் சுமைகளை சுமந்தபடி ஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தில் உள்ள
ஜீவாத்மா காப்பாற்றப்படுகிறான் என்னும் இந்தச் சொற்களானவை
குழந்தைகளை மகிழவைக்கும் போலியான சொற்களோ என நான் அச்சம் கொள்கிறேன்

விவேகன்
உள்ளதை உள்ளபடி காண்பவளே நீ தவறான கண்ணோட்டத்தில் நோக்காமல் இருப்பாயாக-
ஸூமதி உண்மையை மட்டும் உரைக்கும் ஸாஸ்த்ரங்கள் தவறாக உரைப்பதைக் கண்டுள்ளாயா-
உனக்கு நான் மேலும் நம்பிக்கை ஊட்டுவேன்

சபே தைஷிடிக்யேந ஸ்வயம் இஹ பவத்யா ச ஸூமதே
த்வயைவ த்ரஷ்டவ்ய ஸ்வபநவிகம உன்மீலித தியா
அஹங்கார க்ராஹ க்ரஹ கதந சாக்ரந்ததநு ப்ருத்
முமுஷா ஸம்ரப்தோ முர மதந ஸங்கல்ப மஹிமா –84-

விவேகன் கூறுதல்
எனக்கு ஸாஸ்த்ரங்களின் மீது உள்ள நம்பிக்கை மற்றும் உன் ஆணை வைக்கிறே
ஸூ மதி
நான் கூறும் பகவத் ஸங்கல்பத்தையே நீயே காண இயலும்
உறக்கம் நீங்கிக் கண் வேண்டும்
சரீரத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பு முதலான அஹம் நான் என்பது போன்ற எண்ணங்களே
ஸம்ஸாரத்தில் முதலைகள் ஆகும்
இது பீடித்ததே -என்று கதறியபடி அழைக்க வேண்டும் படியாக ஒருவனுக்கு மோக்ஷத்தில் விருப்பம் ஏற்பட் டால்
முரன் என்னும் அஸூரனை வதைத்த பகவானின் ஸங்கல்ப வேகமானது கண் கூடாக அறியலாம் படி உள்ளது –

விவேகன்
பொதுவாகவே பகவத் ஸங்கல்பமானது தன்னைச் சரணம் புகுந்தவன் விஷயத்தில் தப்பாது
மேலும்

தீநோ த்ருப்யது வாபராத்யது பரம் வ்யாவ்ர்த்ததாம் வா தத
ஸ்வா தவ்ய சரணாகத சாக நத ஸத் பிஸ்ததா ஸ்தாப்யதே
விச்வாமித்ர கபோத ராகவ ரகு வ்யோ மாக்வகப்ரே யஸீ
நாலீ ஜங்க ப்ருஹஸ்பதி பரப்ருதி பிர்நத்வேஷ கண்டா பத –85-

விவேகன் கூறுதல்
சக்தி நிறைந்தவனைச் சரணம் புகுந்தால் அவன் காப்பாற்றுவான் என்பது பொதுவான ஒன்றாகும்
உடனேயே பலம் பெற வேண்டும் என்று உள்ளவன்
தாமதம் ஆயினும் பலம் பெற வேண்டும் என்று உள்ளவன்
குற்றங்களை செய்பவன்
குற்றங்கள் அற்றவன்
என எவ்விதமாக இருந்தாலும் இது பொருந்தும்
இந்தக் கருத்தானது
விசுவாமித்திரர்
புறா
இராமன்
ரகு
நாலீ ஜங்கன்
ப்ருஹஸ்பதி
போன்ற பல உத்தமர்கள் விஷயத்தில் நிலை நாட்டப் பட்டது –

ஸூ மதி –
நான்முகன் முதலான பெரிய தேவதைகளும் அவர்களுடைய பக்தர்களால் மோக்ஷத்திற்காக உபாசிக்கப் படுகிறார்கள்
இவ்வாறு இருக்க ஸ்ரீ யபதியை மட்டுமே மோக்ஷம் அளிப்பவன் என்று ஏன் கூறுகிறார்கள்

ராஜா -விவேகன்
பிரியமானவளே உனது நுட்பமான கேள்வியானது உனது மதி நுட்பத்தை உணர்த்துகிறது
நீ அறியவில்லையா =மது ஸூதனனுடைய மஹாத்ம்யம் அசாதாரணமானதாகும்

புரா வேதஸ் ஸ்தம் வாவித புருஷ ஸ்ருஷ்டே ஸ்திதி மதி
ஸ்திரா பக்தி ஸூதே விபது பரதிம் பும்ஸி பரமே
ததன்யான் அம்யச் சத் அபி லஷித முக்தி ஸூர கணான்
உதன்யாம் ப்ராலே யை ரூப சமயிதும் வாஞ்சதி ஜட

விவேகன் கூறுதல் -அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனும் காப்பவனுமாகிய பரமபுருஷன் இடம் உண்டான நிலையான பக்தி மட்டுமே
நான்முகன் தொடக்கமாக புல் பூண்டு உள்ளிட்ட அனைத்தையும் அவற்றின் ஆபத்துக்களில் நின்றும் விடுவிக்கும்
அவனை விடுத்து மோக்ஷத்தை விரும்பி மற்ற தேவதைகளை அர்ச்சிப்பவன் பனித்துளி கொண்டு தனது தாக்கத்தைத் தீர்க்க முயலும் முட்டாள் ஆகிறான்

விவேகம் -ஓவியத்தில் தீட்டப்பட்ட ஆயிரம் ஸூர்யன்கள் ஒன்றாக நின்றாலும் அவை இருளைப் போக்காது -எனவே

அபத்தவ் விகத சந்திம் அநாதி நித்ரம்
சேதஸ் விநஸ் த்ரி குண சக்தி மயீ த்ரி யாமா
நாதஸ்ய கேவல மாசவ் நரகாந்த கர்த்து
ஸங்கல்ப ஸூர்ய விபவேந ஸமாபநீயா –87-

இடைவிடாமல் எல்லையற்ற காலங்களாக சேதனர்களுக்கு அஞ்ஞாத்தைத் தருவதாக முக்குண மாயம் எனும் சக்தி கொண்ட இரவு உள்ளது
இது நரகாசுரனை அழித்தவனும் அனைத்துக்கும் நாதனான ஸூர்யனுடைய வைபவத்தாலே மட்டுமே விலகும் –

ஸூ மதி
இந்நாளில் உயர்ந்த புருஷன் யார் என்னும் உண்மையை அறியும் விஷயத்தில் தேவர்களும் ரிஷிகளும் கூட தடுமாறியபடியே உள்ளனர்
இவ்விதம் உள்ள போது உம்முடைய பக்தியை எப்படி ஒரே புருஷோத்தமன் இடம் வைக்கிறீர்கள்

விவேகன்
தேவீ அப்படி அல்ல -இந்த முடிவானது ஸ்ம்ருதி மற்றும் புராணங்கள் வாயிலாக உபநிஷத்துக்களை ஆராய்ந்து அறியப்பட்டதாகும்
வேதங்கள் அந்தணர்கள் மற்றும் கேசவன் ஆகியோர் ஒரே வகுப்பினரே ஆவர்

மேயம் விஷ்ணுர் வேத வாதாச்ச மாநம்
மாதாரச்ச ப்ரஹ்மண சத்துவ நிஷ்டா
சித்தம் தோஷாமைகராஸ்யம் ப்ரதீய கீட பிராயைர்
துர் விதக்தை கிம் அந்யை –87-

விவேகன் கூறுதல்

உயர்ந்த புருஷனே விஷ்ணு என அனைவராலும் அறியப்படுகிறான்
இவ்விதம் அறிவதற்கு பிரமாணமாக வேதங்கள் உள்ளன
இந்த உண்மையை அறிபவர்கள் ஸத்வ குணத்தில் எப்போதும் நிலை நிற்கும் அந்தணர்கள் ஆவர்
இதனால் தான் இம்மூவரும் ஒரே வகுப்பினர் எனப்பட்டது
இவ்விதம் உள்ள போது எந்தவிதமான திறனும் அற்ற புழுக்கள் போன்ற மற்றவர்களால் என்ன ஆகப்போகிறது –

சாஸ்த்ராண்ய லோஜ்ய சர்வாண்ய சிதில கதிபிர் யுக்தி வர்கைர் விசார்ய
ஸ்வாந்தர் நிர்தார்ய தத்வம் ஸ்வ புஜமபி மஹத் யுத்தரன் ஸூரி சங்கே
ஸத்யம் ஸத்யம் ச ஸத்யம் புநரிதி கதயன் சாதரம் வேத வாதீ
பாராசர்ய ப்ரமாணம் யதி க இஹ பரஸ் கேசவாதா விரஸ்தி –88 –

விவேகன் கூறுதல் –
பராசரருடைய புத்திரரான வேத வியாசர் அனைத்து வேத சாஸ்திரங்களையும் நன்றாக ஆராய்ந்து அசைக்க இயலாத பழக்க யுக்திகளைக் கொண்டு விசாரித்து
உறுதியான ஒரு முடிவு எடுத்து ஞானிகள் நிறைந்த சபையிலே தனது புஜத்தை உயர்த்தி -ஸத்யம் ஸத்யம் ஸத்யம் -என உரைத்தார் –
இப்படிப்பட்ட வேத வியாசர் அனைத்தையும் அறிந்தவர் என்னும் போது கேசவனைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் உள்ளனர் –

விவேகன் -சான்றோர்கள் செல்லும் வழியே செல்ல வேண்டும் என்று மஹ ரிஷிகள் கூறுவர் -இதனை நீயே இங்கு காணலாம்-

தர்கோ ந ப்ரதிதிஷ்டதி ப்ரபவதி த்ரய்யாபி வையாகுலீ
ஷேபம் யாந்தி மிதஸ் ஷதா ருஷிகிரஸ் ஷு தோக்தய கிம் புந
இத்தம் தத்த்வ வி நிச்சயோ நிதிரிவ ஷிப்தோ குஹாப் யந்தரே
பந்தாநம் து மஹா ஜநஸ்ய விஷ்ணு ப்ரத்யஞ்ச மத் யஞ்சதி –89-

விவேகன் கூறுதல் -தர்க்கம் என்பது தனியாக நிலைத்து நின்று இதனை உரைக்க வல்லது அல்ல –
வேதங்களும் தகுந்த விசாரம் இல்லை என்றால் குழப்பமாக உள்ளன –
ரிஷிகளுடைய வாக்கானது ஒன்றுடன் ஓன்று முரண்பாடாகவே உள்ளன –
இவ்விதம் உள்ள போது சாதாரணமானவர்களுடைய பேச்சு குறித்து என்ன கூறுவது
ஒரு குகைக்குள் மறைந்துள்ள புதையல் போன்று தத்வ ஞானம் மறைந்து உள்ளது –
ஆகவே விஷ்ணுவின் பெருமையை உணர்ந்த பராசரர் நம்மை நல் வழிப்படுத்துகிறார்

விவேகன் கூறுதல் -வியாஸர் -வால்மீகீ -மநு -ப்ருஹஸ்பதி -ஸூகர் -ஸுநகர் போன்ற பல சான்றோர்கள் நமக்கு அந்த வழியைக் காண்பிக்கட்டும்
இவ்விடம் உள்ள பல பிரமாணங்கள் இருக்கட்டும் -நான் மீண்டும் கூறுகிறேன் –

அப ஜந்ம ஜராதிகாம் ஸம்ருத்திம் க்ருபயா சம்முகயன் அசேஷ பும்ஸாம்
பர தைவத பாரமார்த்யவேதீ பரி க்ருஹணாதி பராசர ஸ்வயம் ந –90-

விவேகன் கூறுதல் -பராசரர் தனது கருணை காரணமாக எந்த ஒரு மனிதனையும் விடாமல்
பிறப்பு மற்றும் வயோதிகம் போன்றவை இல்லாத அந்த முழுமையான தத்வத்தைக் கூறட்டும் –
பர தேவதையின் உண்மையை அறிந்த பராசரர் நம்முடைய கையைப் பிடிக்கட்டும் –

ஸூ மதி -தாங்கள் கூறுவதை மறுக்க இயலாது -பல இன்றி ஜீவாத்மாவால் உபநிஷத்துக்கள் திரண்ட கருத்தை அறிய இயலாது
ஆயினும் அவற்றின் உண்மையை அறிய அவன் ஆவலாக இருக்கிறான் –
ஆகவே அனைத்து ஸாஸ்த்ரங்களுடைய ஸாரத்தை தாமதம் இன்றி கூறுபடியாக உங்களை நான் வேண்டுகிறேன்

அரசன் -விவேகன் -நீ எண்ணியது நல்லதே ஆகும் -நான் கூறுகிறேன் –

ஸ்வ ஸங்கல்ப உபக்ந த்ரிவித சித் அசித் வஸ்து விததி
புமர்த்தா நாமேக ஸ்வயம் இஹ சதுர்ணாம் ப்ரஸவ பூ
சுபஸ்த்ரோதோ பாஜாம் ஸ்ருதி பரிஷதாம்
ஸ்ரீ பதிரஸாவ நந்தஸ் ஸிந்தூ நாமுததிரிவ விஸ்ராந்தி விஷய –91-

விவேகன் கூறுதல் -மூன்றுவிதமான சேதனங்களும் -மூன்று விதமான அசேதனங்களும் -ஸுத்த ஸத்வமும்
மஹா லஷ்மியின் பதியுடைய ஸங்கல்பத்தில் அடங்கி நிற்கின்றன
அவன் மட்டுமே நான்கு புருஷார்த்தங்களை அளிக்கிறான்
அனைத்து நதிகளும் சென்று சேரும் சமுத்திரம் போன்று அனைத்து ஸ்ருதிகளும் சென்று கலக்கும் இடமாக அவனே உள்ளான் –

பர பத்மா காந்த ப்ரணிபதநம் அஸ்மின் ஹித தமம்
சுபஸ்தத் ஸங்கல்பச் சுலகயதி ஸம்ஸார ஜலிதம்
ஜடித்யேவம் ப்ரஞ்ஞாம் உப ஐநயதா கேந சித்சவ்
அவித்யா வேதாலீ மதி பததி மந்த்ரேண புருஷ –92-

விவேகன் கூறுதல் -மஹா லஷ்மியின் நாதனே புருஷோத்தமன் ஆவான் –
அவனிடம் செய்யப்படும் ஸரணாகதியே அனைத்திலும் உயர்ந்த நன்மை ஆகும் –
ஸுபமான அவனுடைய ஸங்கல்பமானது ஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தை உள்ளங்கை அளவு நீராக்கும்
இப்படிப்பட்ட உயர்ந்த அறிவை அளிக்க வல்ல மந்திரத்தின் -அஷ்டாக்ஷரத்தின் -பலம் மூலமாக
புருஷனானவன் அஞ்ஞானம் என்னும் வேதாளத்தின் பிடியில் சிக்காமல் விரைவில் மீள்வான் –

விவேகன் -பிரியமானவளே -குறைந்த அறிவு கொண்டவர்களுக்கும் கூட மன ஆறுதல் அளிக்க வல்ல வற்றை நான் கூறினேன் -ஆனாலும்

த்ருத நிகம கவச மூடா கஷ்டம் ஸம் ப்ரதி குத்ருஷ்டய கேசித்
சலயந்தி ஸுகதாதீந் ஸ்யா லோபா லம்ப துல்யயா வாசா -93-

விவேகன் கூறுதல் -தவறான பார்வை கொண்ட சிலர் வேதங்களைத் தங்கள் போர்வையாக அணிந்த படி
தம்மை மறைத்துக் கொண்டு பவுத்தர் முதலானவர்களைக் கண்டிப்பது போன்று பாவனை செய்கிறார்கள்
அதாவது -மருமகன் மைத்துனனைக் கண்டிப்பது போன்று போலியாக உள்ளனர் –

விவேகன் -வேதாந்தத்தில் வல்லவர்கள் -இவர்களுக்கான பதில்களை விரிவாக அளித்து உள்ளனர் –
சான்றோர்கள் சுருக்கமான வடிவில் உள்ள பதில்கள் மூலம் விரிவான கருத்துக்களை உரைக்க வல்லவர்கள் அல்லவோ

ஸூ மதி –நீங்கள் சரியாக உரைத்தீர்கள் -ஆனால் திருடர்களால் கைப்பற்றப் பட்ட பசுக்கள் போன்று அவர்களுடைய தவறான கருத்துக்களால்
உபநிஷத்துக்களில் தவறாகப் பொருள் அளிக்கப் படுமோ என்னும் அச்சம் எனது மனதில் உண்டாகிறது –

விவேகன் -அச்சம் கொள்ள வேண்டா
அவிப்லுத பரிக்ரஹ ஸ்ம்ருதி சதைக கண்டீ ஸ்ருதி
ஸ்வ பக்த விகல ஸ்ம்ருதீ ஸ்வ பநத அபி ந ப்ரேஷதே
ஸ்வத ப்ரமித ஸாதிநீ ஸூ த்ருட தர்சு குப்தா ச ஸா
ருணத்தி புநத ப்ரதிஷ்டதி க்ருதர்க கோலாஹலம் –94-

விவேகன் கூறுதல் -எந்த விதமான விவாதமும் இன்றி ஏற்கப்பட்ட மஹரிஷிகளுடைய நூற்றுக்கணக்கான ஸ்ம்ருதிகளுடைய
கருத்துடன் ஒத்துப் போகும் ஸ்ருதியானது தனது பொருளை உணர்த்தும்
வேதங்களுடன் ஒத்துப் போகாத ஸ்ம்ருதிகளுடைய ஆதரவை அவை கனவிலும் எதிர்பார்ப்பது இல்லை –
அந்த வாதங்கள் அனைத்தும் தங்களுடைய விருப்பம் போன்று -எந்தவிதமான அடிப்படையும் இன்றி உரைக்கும் தவறான பொருளாகும்
ஆனால் அனைத்து ஞானங்களையும் உள்ளடக்கிய ஸ்ருதியானது தகுந்த தர்க்கத்தின் துணை யுடன் அந்தக் கருத்துக்களைத் தள்ளுகின்றன –

திரைக்கு பின்னால் இருந்து எழும் குரல்
மூலச்சேதப யோஜ்ஜிதேந மஹதா மோஹேந துர் மதஸா
கம்ஸேந ப்ரபு ருக்ரசேந இவ நஸ் காராக்ருஹ ஸ்தாபித
விக்யா தேந விவேக பூமிபதி நா விச்வே பகாரார்த்திநா
க்ருஷ்ணே நேவ பலோத்தரேண க்ருணிநா முக்தஸ் ஸ்ரியம் ப்ராப்ஸ்யதி –95-

தனது வளர்ச்சிக்குத் தடையாய் உள்ளது என தனது தந்தையான உக்ரசேனனை கம்சன் சிறையில் அடைத்தான் –
நம்முடைய யஜமானனாகிய ஜீவாத்மாவை ஸம்ஸாரமாகிய சிறையில் அடைத்தான்
தனது தமையனான பலராமனுடைய உதவியுடன் உக்ரசேனனை கிருஷ்ணன் விடுவித்தான்
இதனைப் போன்றே நம்முடைய ஜீவாத்மாவும் இந்த உலகுக்கு நன்மை செய்யும் அரசனாகிய விவேகனால் விடுவிக்கப் படுவான்
அதன் பின்னர் முக்தர்களுடைய ஐஸ்வர்யத்தை ஜீவாத்மா அடைவான் –

விவேகன் மிகுந்த உவகையுடன் -அதனைக் கேட்டவனாக –

ப்ரியே யாராலும் உண்டாக்கப்படாத வேதங்களின் ஒலி போன்று உண்மையை விளம்புகின்ற
இந்த அசரீரி கூறுவதைக் கேட்டாயா

ஸூமதி -மிகுந்த ஆனந்தம் கொண்டவளாக
எனது எஜமானரே இது தேவர்களுடைய வாக்கு அல்லவோ -இது பொய்யாகாது

விவேகன்
அன்பானவளே உன்னை எனது துணையாகக் கொண்டுள்ளேன்
உனது துணையுடன் வெற்றியானது எனது கைகளிலே வருவது உறுதியாகும் –

ரிபு குண விஜி கீஷா பிந்து லேசஸ் அபி அசவ் மே
மது ஜித நுஜி க்ருஷா வாஹிநீ வர்த்தி தாத்மா
சபலயிது மதீஷ்டே ஸாது சம்ப்லா வயிஷ்யன்
கதி கண பஹு மான்யம் யத்ந ஸந்தான வ்ருக்ஷம் –96–

விவேகன் கூறுவது
எனது விரோதிகளை வெல்ல வேண்டும் என்று எனக்குள்ளே இருக்கும் ஆசையானது இப்பொழுது சிறு துளியாகவே உள்ளது
ஆயினும் அது மது ஸூ தனின் கிருபை என்னும் வெள்ளத்தால் பெருகி
ஸாதுக்களால் கொண்டாடப்படும் மோக்ஷத்திற்கான முயற்சி என்பதான கற்பக மரத்துக்கு என்றும் பாய்ந்த படி இருந்து
நல்ல பயனை அளிப்பதாக இருக்கும் –

———————————————378–

அங்கம் -2-விசாரணை
இவள் ஸூ மதியின் பணிப்பெண் -ஒன்றைச் செய்தல் ஏற்புடையதா ஏற்புடையது ஆகாதா என்னும் ஆய்வு
இவள் ஸ்ரத்தை என்னும் மற்ற ஒரு பணிப் பெண்ணிடம் உரையாடுகிறாள்
தோழியே களைப்பு காரணமாக உனது நெற்றியில் வியர்வைத் துளிகள் காணப்படுகின்றன
தனது கன்றைக் காண ஆவலாக உள்ள பசு போன்று நீ உள்ளாய்

முஹ சந்த சந்திஅ ஸூஹா ஸூஹ ஆ சவி புள்ள மள்ளி ம அரந்த ணிஹா
ணவ ஸோம்ம ஜோவ்வண களிஆ ஸூரி முவ்வ ஹந்தி துஹ ஸே அகணா –98-

———————-380

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Ashtaadasa Rahayangal, ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர், Desihan | Leave a Comment »

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் — நாலாம் பிரகரணம் –9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –சூர்ணிகை-407-463- –

August 14, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-இப் ப்ரசங்கம் தான் உள்ளது –

இனி -ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-என்று தொடங்கி கீழில் பிரபந்தத்திலே இதர உபாய த்யாக பூர்வகமாக ஸூ கரமான ஸித்த உபாயஸ்வீ கார பிரகாரத்தை விசதமாக வெளியிட்டு அருளினவர் அவ்வுபாயத்துக்கும் அநதிகாரிகளாக ஆன துர்கதியைக் கண்டு
தம்முடைய பரம கிருபையாலே அத்யந்த ஸூ கரமுமாய் அத்யந்த ஸூ லபமுமான சரம உபாயம்-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிற ஸதாச்சார்ய அபிமானம் என்னும் இடத்தை
ஸ பிரகாரமாக வெளியிடுகிறார் மேல் -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி –

பரதந்த்ர ஸ்வரூபனாய் கேவல க்ருபாவானான ஆச்சார்யனைப் போல் அன்றிக்கே -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை இப்படி நிர்ஹேதுக க்ருபவான் அன்றோ என்று பற்றின போது தான் இறே கீழ் யுக்தமான பயாபய ப்ரசங்கம் தான் இவனுக்கு உள்ளது என்று வஹ்ய மாணமான சரம உபாயத்தை ஹ்ருதீ கரித்து அத்தைப் பிரதமத்திலே ப்ரஸ்தாவிக்கிறார்

இவ் விடத்தில் தான் என்கிற ஸப்தம் பற்றும் போது தான் இறே என்று சொல் பாடாய்க் கிடக்கிறது அத்தனை –

—————

சூரணை -408-

உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ் வர்த்தம் அறுதி இடுவது —

சூரணை -409-

அவர்களைச்
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

ஆனால் வசநாத் ப்ரவ்ருத்தி -வசநாத் நிவ்ருத்தியான பின்பு இதில் பிரமாணம் ஏதோ என்கிற ஆ காங்ஷையில் -உண்ட போது -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
தர்மஞ்ஞ ஸமய ப்ரமாணம் வேதாஸ்ஸ -என்கிற ந்யாயத்தாலே இவ்வர்த்தத்துக்குப் பிரமாணம் ஏது என்று பரம தர்மஞ்ஞரான ஆழ்வார்களுடைய அனுசந்தான க்ரமத்தை ஆராய்ந்தவாறே
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே பகவத் ஸம்ஸ்லேஷ போகம் ஸித்தித்த போது
மாறுளதோ இம்மண் மிசையே -என்றும்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
உபய விபூதியிலும் தங்களுக்கு ஓர் ஒப்பு இல்லையாக அனுசந்திப்பது
உண்ணா நாள் பசி யாவது ஒன்றில்லை நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -என்கிறபடியே
பகவத் ஸம்ஸ்லேஷ போகம் இல்லாத போது
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும்இத்யாதி பிரகாரத்திலே
கூப்பிடுவதாக நிற்பர்கள் இறே ஸ்வ தந்த்ரனைத் தஞ்சமாகப் பற்றின ஆழ்வார்கள் பதின்மரும் இப்பரமார்த்த நிர்ணயம் பண்ணுவது ஆகையாலே அவர்கள் பாசுரம் ப்ரமாணமாக வன்று

அல்லாத ஆழ்வார்கள் அனைவரும் தமக்கு அங்க பூதராம் படியான ஆதிக்யத்தை யுடைய நம்மாழ்வார் திருவடிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றி
தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே ஸ்வ தந்த்ரனை உபாயமாகப் பற்றி இவர்கள் இப்படிப் படுவதே என்று ஆழ்வார் பதின்மரையும் அபஹஸித்து
அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்று சதுரராய் இருப்பார் ஒரு சர்வாதிகர் யுண்டு
இவருடைய பாசுரமான -கண்ணி நுண் சிறுத்தாம்பைப் ப்ரமாணமாகக் கொண்டு இந்த பரமார்த்த நிச்சயம் பண்ணக் கடவோம் என்கிறார்

அங்கன் அன்றிக்கே
உண்ட போது ஒரு வார்த்தையும் சொல்லுகையாவது -பகவத் அனுபவம் பண்ணின போது தச் சரம அவதியான
அடியார் யடியார் எம் கோக்கள் -என்பது
அந்த பகவத் விக்நம் பிறந்தால் சரமமான பாகவத சேஷத்வத்தையும் அழித்து
உங்களோடு எங்களிடை இல்லை – என்பராகையாலே
அவர்கள் பாசுரம் இப்பரமார்த்தத்துக்கு பிரமாணம் அன்று என்கிறார் ஆகவுமாம் –

—————–

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்-சேர்ந்து இருக்க வேணும் இறே பிராபகம் –

இப்பரமார்த்தத்தை இவர் ஒருவர் பாசுரம் கொண்டே நிர்ணயிக்க்கைக்கு அடி என் என்ன
ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர வேணும் இறே ப்ராபகம் -என்று இந்த ப்ரஸ்துதமான சரம உபாயத்துக்கு இடம் கொள்ளுகிறார் –
இவ்விடத்தில் வஹ்யமான அர்த்த சங்கதி பலத்தாலே சரம அதிகாரியான இவனுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்து இருக்க வேணும் இறே
ப்ராப்ய ப்ராபகங்கள் என்று இங்கனே ஸப்தத்தை வலித்து அருளிச் செய்து அருள்வர்-அது தான் எங்கனே என்னில் –
பிரதமத்தில் தன் ஸ்வரூபத்தை யுணர்ந்தால் ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலும் –
அந்த ததீய ப்ரதானனான ஆச்சார்ய விஷயத்திலே பண்ணின பிரதம நமஸ்ஸிலே பிரதமத்தில் ஆச்சார்ய சேஷத்வமே ஆத்ம யாதாத்ம்ய ஸ்வரூபமாகையாலே
இந்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமாக வேணும் இறே ப்ராப்யமும் ப்ராபகமும் என்கிறது –
அங்கன் அன்றிக்கே சரம உபாய ஸ்தாப நத்திலே ப்ரதான்யேந பிள்ளை திரு உள்ளத்துக்கு தாத்பர்யமாகையாலே
யதா பாடம் அர்த்தம் ஆகவுமாம் –

—————–

சூரணை -411-

வடுக நம்பி-ஆழ்வானையும்-ஆண்டானையும்-இரு கரையர் என்பர்-

இனி வடுக நம்பி -இத்யாதியாலே -இவ்வர்த்தத்தில் ஆழ்வார்களே அல்லர் -ஆச்சார்யர்களிலும் அனுஷ்டாதாக்கள் யுண்டு என்கிறார் -எங்கனே என்னில்
ஆச்சார்ய ஏக பரதந்த்ரரான வடுக நம்பி பாஷ்யகாரர் திருவடிகளை ஒழியத் தேவு மற்று அறியேன் என்று இருக்கையாலே
அவர்க்கு அத்யந்தம் அந்தரங்கரான கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் பெருமாள் திருவடிகளிலும் ப்ரேம யுக்தராய் இருக்கிற
ஆகாரத்தைக் கொண்டு இரு கரையர் என்பர் என்று இவ்வர்த்த ப்ராபல்ய ஹேதுவாக அருளிச் செய்கிறார் –

——————–

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —

இனி ப்ராப்யத்துக்கு ப்ரதம பர்வம் இத்யாதியாலே -ப்ராப்யத்துக்குச் சேர வேணும் இறே என்று
ப்ரஸ்துதமான ப்ராப்யத்தை விவரண ரூபேண நிர்ணயிக்கிறார் -எங்கனே என்னில் –
முன்பு ப்ரஸ்துதமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யத்தினுடைய பிரதம பர்வமாகச் சொல்லுகிற ஆச்சார்ய கைங்கர்யமாவது
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -என்கையாலே
அவ்வாச்சார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமான பகவத் விஷயத்திலே கைங்கர்யத்தை –
மத்யம பர்வதமான பகவத் கைங்கர்யமாவது -மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் ச பூஜ நீயா விசேஷத -என்று
திருமுகப் பாசுரம் யுண்டாகையாலே பகவத் பிரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை –
சரம பர்வமான பாகவத கைங்கர்யமாவது -ஆச்சார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவனை உகந்து ஆதரிப்பது -இன்ன ஆச்சார்யனுடைய அபிமான அந்தர் கதனாய் வர்த்திக்கிறவன் அன்றோ
என்றதாகையாலே அவர்கள் உகப்புக்கு மூலமான ஆச்சார்ய விஷயத்தில் கைங்கர்யத்தை –

—————

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப் போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தமாகில் கீழ் யுக்தமான பர்வ க்ரமத்திலே அத்தை ஸாஸ்த்ரங்கள் விதியாது ஒழிவான் என் என்னில்
ஸ்வரூப ப்ராப்தியை -என்று தொடங்கிச் சொல்கிறது -அதாவது
பரஞ்சோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே -என்று பர ப்ராப்தி பூர்வகமான ஸ்வரூப ப்ராப்தியையே -வேதாந்த ஸாஸ்த்ரம் விதியா நிற்க
அந்த ப்ராப்தி பலமாய்க் கொண்டு உபய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் உண்டாம் இடத்தில்
பார்யை பர்த்தாவை பிராபிக்கை யாவது -அந்த பர்த்ரு ஸம்ஸ்லேஷ பர்யந்தமாய் விடுமோ பாதி அந்த ஸாத்யமான
பகவத் கைங்கர்யம் தன்னடையே வருமாப் போலே தத் விவ்ருத்தியான பாகவத கைங்கர்யமும் தத் விருத்தியான சரமமான ஆச்சார்ய கைங்கர்யமும்
ஸ்வ ரஸேந தன்னடையே லபிக்கக் கடவது என்கிறார் –

—————-

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இனி இது தான் துர் லபம் -என்றது இந்த ஸ்வரூபம் ஸர்வ சாதாரணமான பின்பு புருஷார்த்த காஷ்டையான இவ்வாச்சார்ய கைங்கர்யம்
ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு எல்லாம் லபிக்குமோ என்னில் -தத்ராபி துர் லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்கையாலே
இது மிகவும் துர் லபம் என்கிறார் –

—————–

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

விஷய ப்ரவணனுக்கு இத்யாதி -இத்தால் -யுக்தமான தவ்ர் லப்யத்தை விசதமாக உபபாதிக்கிறார் -அதாவது
ஹேய தயா ஸம் பிரதிபன்னங்களான ஸப்தாதி விஷயங்களிலே மண்டினவனுக்கு அத்தை த்யஜித்து ஸமஸ்த கல்யாண குணாத் மகமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தைப் பற்றும் இடத்தில்
த்யாஜ்ய உபா தேய விபாக ஞான மாத்ரத்தாலே அவனுக்கு அது காதாசித்கமாக சம்பவிக்கவும் கூடும் –
ஆகையால் அவ்வருமை போலும் அன்று முதலடியான பகவத் கைங்கர்யத்தில் நில்லாமல் சரமமான
ஆச்சார்ய கைங்கர்யத்தில் அபி ருசி உண்டாகைக்கு உள்ள அருமை என்கிறார் –

——————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் -என்றது அநாதி வாஸநா வாஸிதமான ஸப்தாதிகளில் ருசி பிறந்த பின்பு அத்யந்தம் அபரிசிதமான பகவத் விஷய அபி முக்யம்
கூடும்படி தான் எங்கனே என்ன அவை
ஐங்கருவி கண்ட இன்பம் -என்றும்
சம்பாசலம் பஹுல துக்கம் -என்றும் -இத்யாதியில் படியே
அல்பமாய் -அஸ்திரமாய் -அதி ஜூகுப்ஸா விஷயமுமாய் –
லோக கர்ஹா ஹேதுவுமாய் உதர்க்கத்திலே நரகவாஹங்களுமாய் இருக்கக் காண்கையாலே
அவற்றை விடுகைக்கும் அவற்றுக்கு எதிர் தட்டான பகவத் விஷயத்தைப் பற்றுகைக்கும் சம்பாவனை யுண்டு –
இங்கு அது செய்ய ஒண்ணாது
இனி முதலடியான பகவத் விஷயம் நிரஸ்த ஸமஸ்த தோஷ கந்தமாகையாலே தோஷ தர்சனம் பண்ணி விடவும் வேறு ஒன்றைப் பற்றவும் அஸக்யம் -என்கிறார் –

———–

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும்-

அது எங்கனே என்ன -தோஷம் யுண்டானாலும் -என்று தொடங்கி இவ்வர்த்தத்தை விஸதீ கரிக்கிறார் -அதாவது
ஆழ்வார் -கடியன் கொடியன் -என்று தொடங்கி
விஸ்லேஷ தசையிலே அவன் குண ஹானிகளை விசதமாக அருளிச் செய்து –
கொடிய என்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்று அக் குண ஹானிகள் அவனுடையனவான பின்பு உல் லோகமான என்னுடைய நெஞ்சு
அவற்றை இப்போதே அபரோஷித்து அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படா நின்றது -என்று அருளிச் செய்கையாலே
அவையும் அல்லாத குணங்களைப் போலே அநுபாவ்யமாய் இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோக விபரீதம் இத்யாதி -தோஷதஸ் த்யாஜ்யமாயும் குணதஸ் உபா தேயமாயும் போருகிற லௌகிக வஸ்துவில் பற்றின நெஞ்சு
போல் அன்றிக்கே ஹேய ப்ரத்ய நீகமான பகவத் விஷயத்தைப் பற்றின நெஞ்சு உல்லோகமாய் இறே இருப்பது என்கிறார் –

—————-

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –இத்யாதி -அவ்வஸ்து லோக விஸஜாதீயம் என்னா
தத் குணம் உபா தேயமானவோ பாதி தோஷமும் உபா தேயமாகக் கூடுமோ என்னில்
குணம் உபா தேயமாகைக்கு ஹேதுவான நிருபாதிக ஸம்பந்தம் அத் தோஷத்துக்கும் உண்டான பின்பு விட ஒண்ணாது இறே என்கிறார் –
எங்கனே என்னில் –
ஸோ பாதிக ஸம்பந்தமான பர்த்ரு விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் பதிவ்ரதையான பார்யைக்கு
புருஷாந்தரங்களைப் பற்ற உபா தேயமாகக் காணா நின்றால் நிருபாதிக விஷயத்தில் சொல்ல வேண்டா விறே -என்று கருத்து
இவ்விடமும் நாயகி வார்த்தா ப்ரகரணம் இறே –

———–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

இவ்வர்த்தம் எங்கே கண்டது என்னில் -நிர் க்ருணன்-இத்யாதி
என் தவள வண்ணர் தகவுகளே -என்று தாயானவள் இவ்வளவில் உதவாதவன் க்ருபா ஹீனன் காண் என்று
சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே தலைமகளானவள்
தகவுடையவனே -என்று கிருபை ஒன்றுமே நிரூபகமாகச் சொன்னாள் இறே –

————-

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
ஸ்நேஹமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இப்படிச் சொல்லும்படி -இத்யாதி -அநாதி காலம் ஸப்தாதிகளுடைய அலாபத்தாலே சோகித்துத் போந்த என்னை
தன்னையே நினைத்துக் கூப்பிடும்படி பண்ணிற்றுத் தன்னுடைய கேவல கிருபையாலே என்று
மிக விரும்பும் பிரான் -என்று மேன்மேலே அவ்விஷயத்திலே
அதிசயிதமான ஸ்நேஹ உபகார ஸ்ம்ருதிகள் உண்டாய்த்து இறே என்கிறார் –

—————-

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச் சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

ஆனால் ஓர் இடத்திலும் அவன் கிருபா ஹீனன் என்று தோற்றின விடம் இல்லையோ என்னில் -நிர் க்ருணனாக -இத்யாதி
விஸ்லேஷ அஸஹத்வத்தாலே பிராட்டியும் -பிராட்டி தசையைப் ப்ராப்தரான ஆழ்வார் தாமும்
அவன் கிருபா விஷயமான அதிசயங்கள் நடந்தாலும்
க்யாதஸ் ப்ராஞ்ஞஸ் க்ருதஞ்ஞஸ் ச ஸா நுக்ரோஸஸ் ச ராகவ ஸூ வ்ருத்தோ நிரநுக்ரோச
சங்கே மத் பாக்ய சங்ஷயாத் மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய ஸமர்த்தாவபி தவ் யன் மாம் நாவே ஷேதே பரந்தபவ் -என்றும்
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் – என்றும்
சங்கைக்கு அவிஷயமான ஸ்தலத்திலே சங்கிகைக்கு ஹேதுவை
ஸ்வ கதம் என்றே அனுசந்தித்தார்கள் என்கிறார் –

————-

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

குண தோஷங்கள் இத்யாதி -ஆக இப்படி இவ்விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் ஸ்வ வ்யதிரிக்த ஸ்மரணமும் பொறாதபடி
ஸ்வ அதீனமாக்கி விடும் என்று சரம புருஷார்த்த நிஷ்டா தவ்ர் பல்யத்தை நிகமிக்கிறார்
அதில் அவனுடைய குணமானது புருஷார்த்த காஷ்டையான ததீயர் அனுபவ ரஸத்தைக் குலைத்து
அவ்வருகு போக ஒட்டாத படி தன்னளவிலே துவக்கும் -எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே பாகவத அனுபவம் பண்ணி இழிந்த ஆழ்வாரை அவர்களுக்கு நிரூபகத்வேந வந்த அவனுடைய
கல்யாண குண விக்ரஹ சேஷ்டிதங்கள் தானே ஆழங்கால் படுத்தித் தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்
தனித்தனியே விடாய்க்கும் படி அபி நிவேசத்தை விளைத்தது இறே -அநந்தரம் -முடியானே யிலே –
அவனுடைய தோஷ அனுசந்தானம் ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கை யாவது -விஸ்லேஷ தசையில்
பந்தோடு கழல் மருவாள்
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக்கு அணியிலும் தழலாம் -இத்யாதியில் படியே
ஸப் தாதிகளான ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும் –

————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இவ்விடத்திலே புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கும் என்கையிலே தாத்பர்யமாகையாலே
நித்ய ஸத்ருவாய் இறே இருப்பது -என்று
கச்சதா மாதுல குலம் -என்கிற ஸ்லோகத்தில்
நித்ய சத்ருக்ந -என்கிற இடத்தை உதாஹரிக்கிறார் –
நித்ய ஸத்ரு என்றது -பரத அநு வ்ருத்திக்கு விரோதியான ராம ஸுந்தர்யத்தை இறே –

—————-

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

இப்படி ப்ராப்யத்தை அறுதியிட்டால் இத்யாதி -கீழே ஸ்வரூபத்துக்கும் -என்ற இடத்தில்
ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு அநந்தரம் இவ்வளவாக ப்ராப்ய ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு
இனிமேல் இப்படி அறுதியிட்ட ப்ராப்யத்துக்கு அனுரூபமாக வேணும் இறே ப்ராபகமும் -என்று
ஸதாசார்யனே உத்தாரகன் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –

—————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

அது என் என்ன -அல்லாத போது ப்ராப்ய பிராபகங்களுக்கு ஐக்யம் இல்லை என்று அநிஷ்ட ப்ரஸங்கம் பண்ணுகிறார் -அதாவது –
யதாக்ரதுரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேதஸ் ப்ரேத்ய பவதி -என்கிற
தத் க்ரது ந்யாயத்தாலே யதா ஸங்கல்பமாயே பலம் இருப்பது என்கிற நியமத்தை அங்கீ கரித்து அருளிச் செய்கிறார் –

————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

இனி -ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி -ஏவம் விதமான ஆச்சார்யனுடைய வைபவத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்படி உத்தாரகனான ஆச்சார்யன் ஆஸ்ரயிக்கிற சேதனனுக்கும் ஆஸ்ரயணீயனான பரம சேதனனுக்கும் உபகாரகன் என்னும் இடத்தையும் பிரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

எங்கனே என்னில் -ஈஸ்வரனுக்கு இத்யாதி –
பஹூதா விஜாயதே -என்று ஓதப்படுகிற அநேக அவதாரங்களாலும் அலப்யமாம் படி -அஹம் மமதா தூஷிதமான சேதன வஸ்துவை
ஸார்வ பவ்மனான ராஜாவுக்கு சதுரரான சமந்தர் ஷூத்ரரான அந்நியரை விரகாலே ஜெயித்துக் கொடுக்குமா போலே
அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித
யானே நீ என் உடைமையும் நீயே -என்னும் படி பண்ணி உபகரித்தான்
சேதனனுக்கு இத்யாதி –
அபவரகே ஹிரண்யம் நிதாய உபரி ஸஞ்சரந்தோ ந த்ரஷ்யந்தி என்கிறபடியே
அநாதி காலம் அவிநா பூதமான பகவத் ஸம்பந்த ஞான ஹீனனான சேதனனுக்கு
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே
அந்த ப்ரஹ்ம ஞானத்தாலே ஸச் ஸப்த வாஸ்யனாம் படி சம்பந்த ஞான பிரதனாயக் கொண்டு சேஷியை உபகரித்தான்
அவஸ்தித மவஸ்தித தன்நபுந ரத்ர சித்திரம் மஹா நிதிம் பிரதமிகாரச ஸ்ததபி தேஸிகா பாங்க பூ ப்ரியா ந கிஷயம் ப்ரியோ ந கிமயம் கிமே தாவதா ந சேதய முதாரதீரு சித கரேகோ ஜந -என்னா நின்றது இறே

—————

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

ஈஸ்வரனும் தானும் இத்யாதி -அவாப்த ஸமஸ்த காமனான ஈஸ்வரன் தானும்
கடக க்ருத்யமான இந்த உபகாரகத்வ ரஸ்யதையாலே அந்த உபகாரகமான ஆச்சார்யத்வத்தை ஆதரித்து இருக்கும் –

————

சூரணை -431-

ஆகை இறே –
குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் –
அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னில் -அவ்வாதரம் யுண்டாகை இறே -ஆச்சார்யாணாம் அஸாவசா வித்யா பகவத்த-என்கிற பகவான் குரு பரம்பரைக்குள்ளே த்வய ரூபேண அந்வயித்ததும்
அவதார தசையிலே அர்ஜுன வ்யாஜேன தேர்த்தட்டிலே நின்று ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே சரம ஸ்லோக பர்யந்தமான உபாய உபதேசம் பண்ணிற்றும்
விபீஷண வ்யாஜேந -ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம –
என்று அபய பிரதானம் அருளிச் செய்ததும் -என்கிறார் –
இப்படிப்பட்ட உபகாரம் பிறந்து படைக்க வேணும் என்று அவதரித்தான் என்ற இடம்
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து -என்கிற பாட்டில் அருளிச் செய்தார் இறே
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்தரஸ்ய-என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி என்னும்படியான இரண்டு தலையையும் சத்தை யுண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு அவதரித்து
தூத்ய முகேன கடகனாய் இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போன தானே இறே
அர்ஜுனனைக் குறித்து -மாமேகம் சரணம் வ்ரஜ -என்றதும் கார்யகரமாய்த்தது இல்லை –
அது பின்புள்ளார்க்கு ஸதாசார்ய பலமாய்த்தது இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை -என்கிறது

——————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் –
ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இப்படி உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் பிரதியுபகாரம் பண்ண விரகுண்டோ -என்று -ஆச்சார்யனுக்கு -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார் -அதாவது
ஏதேனுமாகச் செய்த அம்சம் தன்னுடைய ஸ்வரூப ஸித்யர்த்தமான கிஞ்சித்காரமாமது ஒழிய ஸத்ருசமாகப் பண்ணினான் ஆகலாவது
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃது என்று தானும் அதினுள்ளே அடங்கும்படி
அவ்வாச்சார்யன் தனக்கு உபகரித்த உபய விபூதியையும்
தன்நிர்வாஹகனான ஈஸ்வரனையும் ஒழிய
இன்னமும் இப்படி விபூதி த்வயமும் தன் நிர்வாஹகமும் ஸம்பாவிதமாகில் யாய்த்து என்கிறார்
அவை அஸம்பாவிதம் என்று பொன்னுலகாளி யில் படியே அவன் உபகரித்தவை தன்னையே உபகரிக்கப் பார்க்கில் அது பிரதியுபகாரமாகக் கூடாது இறே
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத் ந தத் துல்யம் கதஞ்சன -என்னா நின்றது இறே –

————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

ஆனால் ஆச்சார்யனும் இப்படி பிரதியுபகார யோக்யன் அல்லனாகில் பழைய ஈஸ்வரன் தன்னையே பற்றினாள் வருவது என் என்ன
ஈஸ்வர ஸம்பந்தம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது –
ஈஸ்வரன் கிருபா விஷ்ட ஸ்வ தந்திரனாகையாலே அந்த ஸ்வா தந்தர்யத்தினுடையவும் கிருபையினுடையவும் கார்யமான
ஷிபாமி -என்றும்
ததாமி -என்றும்
சொல்லப்படுகிற பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கும் தத் சமாஸ்ரயணம்
ஆச்சார்யன் அத்யந்த பாரதந்தர்ய விஸிஷ்ட க்ருபாவானாகையாலே அவனை ஆஸ்ரயிக்கை கேவல மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்கிறார் –
சித்திர் பவதி வா நேதி ஸம்ஸ யோச்யுத சேவிநாம் அஸம்சயஸ் து தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் -என்னா நின்றது இறே

————–

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

பகவல் லாபம் இத்யாதி -இத்தால் அந்த ஈஸ்வரன் உபயத்துக்கும் ஹேதுவானாலும் அவன் நிருபாதிக சேஷியான பின்பு
அவனையே பற்றுகை அன்றோ பிராப்தம் என்ன
அந்த பகவ ஞான பூர்த்தி தான் ஆச்சார்ய உபதேசத்தால் அல்லது கூடாமையாலே
அதுவும் இந்த ஆச்சார்யனாலே ஸித்திக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

இனி ஆச்சார்ய லாபம் -பகவானாலே என்றது -இப்படி மோக்ஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை லபிக்கும் போது
ஈஸ்வரஸ்ய ச சவ்ஹார்த்தம் -இத்யாதியில் படியே
இவ்வாச்சார்ய பிராப்தி பர்யந்தமாக அவனே நடத்திக் கொண்டு போர வேண்டுகையாலே பகவானாலே -என்கிறார் –

—————-

சூரணை -436-

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே-இத்யாதி –
அக்னிஸ் ஸ்வர்ணஸ்ய குருர் பவாம்ஸ் ஸூர்ய பரோ குரு மமாப்ய கில லோகாநாம் குருர் நாராயணோ ஹரி -என்கிறதினுடைய
ஸாமான்யமான குருத்வத்தை உபகரித்து விடுகை அன்றிக்கே இவனுடைய அஞ்ஞான அசக்திகளை உள்ளபடி அறிந்து
அதுக்கீடான வழி கண்டு ரக்ஷிக்கும் படி விசேஷித்து அவனுக்கே வகுத்த விஷயமாக ஓர் ஆச்சார்யனை உபகரித்த குரு உபகாரத்தாலே
ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி இவ்வளவாக உபகாரகனாக உபபாதித்த ஆச்சார்யானைக் காட்டிலும்
அதிசயித உபகாரகன் ஸர்வ ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் என்னும் இடம் உபபாதித்த தாய்த்து-

————

சூரணை -437-

ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

இப்படி உத்தாரக-உபகாரகத்வங்களாகிற உபய ஆகார விஸிஷ்டனான சதாச்சார்ய அபிமானத்தாலே ஒருவனுக்கு உஜ்ஜீவனம் உண்டாக வேணும் என்னும்
அர்த்தத்தை அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் -ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
இப்படி மஹா உபகாரகனான ஆச்சார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானிக்கும் படி தத் ஸம்பந்த ஞானம் குலையாதபடி வர்த்தித்தால்
ஸ்வரூப உஜ்ஜீவன ஹேதுக்களான ஞான வைராக்ய பக்திகளைத் தனக்கு உண்டாக்குகை அவ்வாச்சார்ய க்ருத்யமேயான பின்பு அவை ஸர்வதா ஸம்பாவிதங்கள் –
ஏவம் வித ஸம்பந்த ஞானத்தில் ப்ரச்யுதனானவனுக்கு ஒரு ஸூ ஹ்ருத விசேஷங்களாலே இவை ஸம்பவித்தாலும் சதாச்சார்ய ப்ரஸாத முகேந தத்வ ஞான உபதேச பூர்வகமாக வந்தது அல்லாமையாலே
அவை அர்த்த க்ரியா கார்யகரமாக மாட்டாது –

————

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

அது என் போலே என்ன -தாலி கிடந்தால் -என்று தொடங்கி -லோக த்ருஷ்டி ப்ரக்ரியையாலே அத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பாரதந்த்ர ஏக நிரூபிணியையான ஸ்த்ரீக்கு ஸ பர்த்ரு காத்வ ப்ரகாசகமான மங்கள ஸூத்ர ஸத் பாவ மாத்ரத்தாலே
பின்பும் ஸர்வ பூஷண பூஷார்ஹையாய் இருக்குமா போலேயும் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை-439-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

தாமரையை அலர்த்தக் கடவ இத்யாதி -இத்தால்
நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ ப்ரச்யுதஸ்ய துர் புத்தே ஜலாத பேதம் கமலம் சோஷயதி ரவிர் ந தோஷயதி -என்கிற
பிரமாண ஸித்த த்ருஷ்டாந்தத்தாலும் அவ்வர்த்தத்தை விசதமாக்குகிறார் -எங்கனே என்னில்
நியமேன ஜலஜத்துக்கு அஜ்ஜல சம்பந்தம் யுள்ள போது விகாஸ கரணனான திவாகரன் அஜ்ஜல ஸம்பந்த ரஹிதமான தசையிலே
கமல பந்துவான தானே அதுக்கு நாஸ கரனாமாப் போலே ஸூ சீலனுமாய் ஸூ லபனுமாய் சதாச்சார்ய அபிமான அந்தர் பூதனான போது
ஸ்வா தந்தர்யத்தால் வந்த பிரதாபோத்தர்ஷத்தை உடைய ஈஸ்வரன் தானே ஸ்வ ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் என்னும் இடமும் அவ்வாச்சார்யா ஸம்பந்தம் குலைந்தால் -ஸர்வ சேஷியாய் ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான அவன் தானே ஸ்வரூப நாஸகரனாம் என்னும் இடமும் தோற்றுகிறது –
ந தோஷயதி -என்கையாலே பின்னை ஒரு காலும் இவனுக்கு உஜ்ஜீவனம் இல்லை என்னும் இடம் தோற்றுகிறது –

——————-

சூரணை -440-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இனி இத்தை ஒழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம் -என்றது நீரைப் பிரிந்த தாமரைக்கு ஆதித்ய கிரணம் விகாஸ கரம் அல்லாதவோ பாதி
ஸதாசார்ய சம்பந்த பிரச் யுதனானவனுக்கு ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனோடு உண்டான ஸம்பந்தமும்
ஸ பலமாகாது என்று கருத்து –

—————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –பெரும்குடி என் என்னில் –

இரண்டும் அமையாதா இத்யாதி -ஆனால் இப்படி விலக்ஷணமான ஆச்சார்ய ஸம்பந்தமும் தத் ஸம்பந்தம் அடியாக வருகிற பகவத் ஸம்பந்தமுமே
ஒருவனுடைய உஜ்ஜீவனத்துக்குப் போந்திருக்க -இரண்டுக்கும் நடுவே -ஸாத்விகைஸ் ஸம் பாஷணம் -என்கிற ஸாத்விக அங்கீ காரத்தையும்
ஸாதனம் என்று கொண்டு பிரஸ்தாவிப்பான் என் என்ன -என்னுதல்
அன்றிக்கே
நடுவில் பெரும் குடி -என்று மத்யம பர்வத்தில் சொன்ன பாகவத கைங்கர்ய பிரதிசம்பந்திகளான ததீயர் என்னுதல்
அங்கனும் அன்றிக்கே
ததீய சேஷத்வ ப்ரதிபாதகமான மத்யம பத நிஷ்டரான ததீயர் என்னுதல்
இப்படி ததீய சமாஸ்ரயணத்தையும் தனித்துச் சொல்லுகிறது என் என்ன –

———–

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

கொடியை இத்யாதி -பல பர்யந்தமாம் படி உத்தரிப்பிக்கிற கொள் கொம்பிலே -அது இல்லாவிடில் தரைப்படும்படியான கொடியை ஏற்றும் போது தத் ஸஹாயமான சுள்ளிக் கால்களில் பற்றுவித்தே ஏற வேண்டினவோ பாதி
வல்லிக் கொடிகாள் -என்னும் படி பரதந்த்ர ஸ்வரூபனான ஆத்மா அதிபதியாத படி உத்தாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயிக்கும் போது தத் ஸத்ருசரான ததீய சமாஸ்ரயணமும் ஸர்வதா அவர்ஜய நீயம் என்கிறார் –

—————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

இனி மேலே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற பாசுரத்தில் -ஈஸ்வரனை உபாயமாகப் பற்றும் போது இறே -என்று உபக்ரமித்து
உப பாதித்திக் கொண்டு போந்த பரமார்த்த விசேஷத்தைத் தலைக் கட்டுகிறவர்
தத் அந்ய உபாயங்களினுடைய அனுஷ்டான அனுபபத்தி பூர்வகமாக தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து நிகமிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ஸ்வா தந்தர்ய பயத்தாலே -இத்யாதி
ஸ்வ யத்ந ரூபமான பக்த் யுபாய அனுஷ்டான தசையிலே பல ஸித்தி ரஹிதமான கேவல பகவத் சமாராதந ரூபேண அனுஷ்டிக்கிலும்
நம்முடைய இவ்வநுஷ்டான பரிபாக தசையில் அல்லது பல ப்ரதனான பகவானுடைய பரம ப்ரீதி சம்பவியாது என்று
ஸ்வ ஸ்வா தந்தர்ய கர்ப்பமாய் அல்லது இராமையாலே ஸ்வரூபஞ்ஞனுக்கு அந்த ஸ்வா தந்தர்யம் ஸ்வரூப ஹானி என்ற பயத்தாலே ஸ்வயமேவ நெகிழப் பண்ணிற்று
பர கத ஸ்வீ கார ஹேதுவான பகவத் ஸ்வா தந்தர்யம் -வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்கைக்கும் பொதுவாகையாலே அவ்விஷயத்தில் ப்ரபத்தியும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று பதண் பதண் என்கையாலே தான் நெகிழப் பண்ணிற்று என்கிறார் –

————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

ஏவம் வித பய ரஹிதமாய் அதி ஸூ லபமான ஆச்சார்ய விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவனுக்கு வருவதொரு அபாயமும் இல்லையோ என்ன
ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய ஸ்வீ காரத்துக்கு விஷய பூதனாகை ஒழிய
அவ்வாச்சார்யனையும் தன் பேறாகத் தான் பற்றுமது காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி இவ்வதிகாரிக்கு அநர்த்தாவஹம் என்கிறார் -எங்கனே என்னில்
பவித்ரம் வை ஹிரண்யம் -என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அர்த்த லுப்தனானவன் மேல் வரும் அநர்த்தத்தைப் பாராதே
காஞ்சன நிமித்தமான கால தனத்தைக் கைக்கொண்டு அத்தை அழித்து இருந்த நாள் சரீர போஷணாதிகளிலே உப யுக்தமாகவும் பெறாத படி
பாமர பரிக்ரஹ ஹேதுக்களான அங்குலீயகாதி ஆபரணங்கள் ஆக்கி தரித்துப் பின்னும் அநர்த்தமே சேஷிப்பித்துக் கொண்டு விடுமா போலே
இவனுக்கு ஆச்சார்யவான் என்கையாலே வரும் லோக பரிக்ரஹ மாத்ரமே பலமாம் அளவாய்
அத்ர பரத்ர ஷாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்கிற படியே
அவன் உகப்பால் வரும் அந வரத போகம் இல்லகாத அளவே அன்றிக்கே அநர்த்தமான ஸ்வரூப காணியும் சம்பவித்தது விடும் என்கிறார் –
இத்தால் இந்த உபாயமும் கீழில் பிரபந்தத்தில் ஸ்வ கத பர கத விபாகேந நிரூபித்த உபாயத்தினுடைய துறை விசேஷ மாத்ரமே யாகிலும்ந
இத்தை சரம உபாயமாகத் தனித்து எடுக்கையாலே இதில் ஸ்வ கத ஸ்வீ கார தோஷத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————–

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

இப்படியான பின்பு -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று
இவ்வுபாயத்தினுடைய  பரகத ஸ்வீ காரமே பரமார்த்தம் என்று அவதரித்து அத்தை நிகமிக்கிறார்–

————–

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கை விட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்கக்
கடவன் அல்லன் –

கைப்பட்ட பொருளை -இத்யாதி யாலே தாம் நிச்சயித்த பரமார்த்தத்திலே நிஷ்ணா தரான அதிகாரிகளைக் குறித்து
அவர்களுக்கு நேரே ப்ரத்யயம் பிறக்கும் படியாக–வேதம் அநூச்யா சார்யோந்தே வாஸிந மநு ஸாஸ்தி -என்கிற கணக்கிலே
அந்த பரமார்த்த விஷயமான அநேக பிரமாண ப்ரதிபாதித அனுஷ்டான விசேஷங்களை அநு ஸாஸிக்கிறார் -எங்கனே என்னில்
ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் ய உபா ஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷதி ஷிதவ் -என்கையாலே
தன்னோடு ஸஜாதீயனாய் ஸந்நிஹிதனாய் நின்று பி அஞ்ஞான அந்தகார நிவ்ருத்தி பூர்வகமாக அபிமானித்த ஆச்சார்யனை அநாதரித்து
அறிந்தன வேதம் -இத்யாதியில் படியே மறை பொருளாய் துர்லபமான வஸ்துவை இச்சிக்கக் கடவன் அல்லன் -என்கிறார் –

——————-

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

விடாய் பிறந்த போது -இத்யாதி –
சாஷுர் கம்யம் த்யக்த்வா ஸாஸ்த்ர கம்யம் து யோ பஜேத் ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி -என்கையாலே
தாஹித்தவன் தன் கைப்பட்ட தண்ணீரை அதி ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்து அத்தைத் தரையிலே உகுத்து
அத்தாஹ நிவ்ருத்தி யர்த்தமாக தேச காலாதி விப்ரக்ருஷ்டங்களான ஜீமூ தாதிகளில் ஜலங்களை ஜீவிக்க ஆதரிக்கும் ஜீவனைப் போலே
தனக்கு முகஸ்தனாய் நிற்கையாலே ஸூலபனுமாய் ஸூ சீலனுமான ஆச்சார்யனை அநாதரித்து
தமஸ பரமோ தாதா -இத்யாதிஸாஸ்த்ர ஏக ஸமதி கம்யனாய் –
முகில் வண்ண வானத்திலே -அவாக்ய அநாதர என்று இருக்கும் முகில் வண்ணனையும்
தத் சமனனான கடலிடம் கொண்ட கடல் வண்ணனையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதிப்படியே அவதரித்த மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தனான மதுரவாற்றையும்
அவ்வாற்றில் தேங்கின தயரதன் பெற்ற மரகத மணித்தடம் போன்ற அர்ச்சாவதார ஸ்தலங்களையும்
கநித்ர பிடகாதி ஸாத்யமான கூப ஜலம் போலே யம நியமாதி ஸாத்யமாய்க் கொண்டு அந்தர்யாமியான நிலையும்
முமுஷை யுடையனாய்
விசேஷஞ்ஞனாய் இருக்குமவன்
ஆசைப்படக் கடவன் அல்லன் -என்கிறார் –
இனி ஜீமுதாதி ஸ்தலங்களில் ஜல ஸாம்யம் உண்டானாப் போலே பரத்வாதிகள் எல்லாவற்றிலும் வஸ்து ஸாம்யம் யுண்டானாலும்
அத்யந்த ஸூ லபமான அர்ச்சாவதாரம் போலே அவை அதி ஸூலபம் அன்று என்று கருத்து –

—————–

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன் —

ஆனால் அவை இவ்வதிகாரிக்கு அநுபாதேயங்கள் ஆகின்றனவோ என்ன -பாட்டுக் கேட்க்கும் இடமும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
நின்ற வண் கீர்த்தியும் -என்கிற பாட்டின் படியே –
ஹாவு ஹாவு -என்கிற பாட்டுக் கேட்க்கும் பரமபதமும்
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கண -என்கிற ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கூப்பீட்டுக்குச் செவி கொடுத்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யூஹ ஸ்தலமும்
அக்கூப்பீடு கேட்ட அநந்தரம் பயிர்த்தலையிலே பரண் இட்டுக் காத்துக் கிடந்தவன் பயிரில் பட்டி புகுந்த அளவிலே
அப்பரணில் நின்றும் கையும் தடியுமாய்க் கொண்டு குதித்து அத்தை அடித்து விடுமா போலே
தனக்கு ரஷ்யமான விபூதியை ஹிரண்ய ராவணாதிகள் புகுந்து அழிக்கும் அளவிலே அவர்களை அழியச் செய்க்கைக்காக
ஸ ஹி தேவைரு தீர்ணஸ்ய
ஜாதோசி தேவ தேவேஸே சங்க சக்ர கதாதர -என்றும் இத்யாதிகளில் படியே
ஸா யுதனாய்க் கொண்டு குதித்த அவதார ஸ்தலமும்
மலையாளர் வளைப்புப் போலே தன் நினைவு தலைக்கட்டும் அளவும் இட்ட வடி பேர விடாமல் வளைத்துக் கொண்டு இருக்கிற அர்ச்சா ஸ்தலமும்
உறங்குகிற பிரஜை தான் அறியாதே கிடக்க அதன் பக்கல் குடல் தொடக்காலே பாலும் தயிருமாக ஊட்டித் தரிப்பிக்கும் தாயைப் போலே
ஸர்வ தசையிலும் சத்தையை நோக்குகிற அந்தர் யாமியானவனும்
இப்படிப்பட்ட பரத்வாதிகள் எல்லாம் தனக்கு என்ன வகுத்த துறையான ஸதாசார்யனே என்று அத்யவசித்து இருக்கக் கடவன் என்கிறார் –
யேநைவ குருணா யஸ்ய ஸம்யக் வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ -என்னா நின்றது இறே –

—————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

இவனுக்கு பிரதிகூலர் இத்யாதி -கீழே ஈஸ்வர உபாய நிஷ்டனான ப்ரபந்ந அதிகாரிக்கு அனுகூல பிரதிகூல பிரதிபத்தி விஷய பூதராவார்
அஹம் கர்த்தா அஹம் போக்தா என்று இருக்கும் ஸ்வ தந்த்ரரும்
அவர்கள் அளவு அன்றிக்கே -சேஷத்வத்துக்கு இசைந்து தங்களை ப்ரஹ்ம ருத்ராதி தேவதாந்த்ர சேஷம் என்று இருப்பாரும்
இப்படி ஸ்வரூபத்தில் அந்யதா ஞான நிஷ்டராய் இருக்கை யன்றிக்கே ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்திலே நிஷ்டரான
ஆச்சார்ய பரதந்த்ரரை அனுகூலர் என்கிறார்
இனி ஈஸ்வர பர தந்த்ரரை உபேஷணீயர் என்றது ஸதாச்சார்ய அபிமான பூர்வகமான பகவத் பாரதந்தர்யம் இன்றிக்கே
கேவலம் ஈஸ்வர பரதந்த்ரரானவர்கள் இவ்வதிகாரிக்கு ஆதரணீயர் அல்லாமையாலே –

—————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

ஞான அனுஷ்டானங்கள் இத்யாதி -உபய பரிகர்மித ஸ்வாந்தனுக்கு அல்லது உபாய நிஷ்பத்தி கூடாமையாலே
ப்ரபந்ந அதிகாரிகள் அல்லாத உபாஸகர்க்கு அவை உபாய அங்கமாய் இருக்கும்
ப்ரபந்நரில் சரம அதிகாரியான இவனுக்கு தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ஞான அனுஷ்டானங்கள் எல்லாம்
ப்ரத்யகஷேண ஸ்வாச்சார்யனுக்கு உகப்பாய் இருக்கையாலே கேவலம் உபேயமாயே இருக்கும் –

—————

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் -இத்யாதி -இத்தால் இப்படி ஸ்வரூப அனுரூபமான விஹித அனுஷ்டானங்களில் ப்ரவ்ருத்தி
ஸ்வாச்சார்யனுக்கு உகப்பானவோபாதி நிஷித்தங்களில் நிவ்ருத்தியும் அவனுக்கும் உகப்பாகையாலே அத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது
இச் சரம அதிகாரிக்கும் ஸாஸ்த்ரங்களாலே நிஷேதிக்கப் படுகிற அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்களில் ப்ரவ்ருத்திக்கை
சரம அவதியில் நிற்கிறவன் தன்னையும் தன் அதிகாரத்துக்கு அநர்ஹமான ஸம்ஸாரிகளையும் ஸ்வ புத்ர சிஷ்யாதிகளையும்
ஸ்வரூப நாஸத்தைப் பண்ணுவிக்கையாலே பரித்யாஜ்யம் -என்கிறது –

—————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

சரம அதிகாரியான தனக்கும் இவ்வதிகாரத்தில் அநந்விதரான பிறருக்கும் ஓக்க
இந்த நிஷித்த அனுஷ்டான மாத்ரத்தாலே நாஸம் வரும்படி என் என்ன -தான் நசிக்கிறது -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விலக்ஷண அதிகாரியான தன்னுடைய நாசத்துக்கு ஹேது பிரதம பர்வமான பகவத் விஷயத்துக்கும் மத்யம பர்வமான பாகவத விஷயத்துக்கும்
சரம பர்வமான ஆச்சார்ய விஷயத்துக்கும் அபிமதமாகையாலே அதி குரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கை என்கிறார் –
பிறர் இத்யாதி -பகவத் ஸம்பந்த ஞான ரஹிதராய் -அத ஏவ பாகவத அபசார அநபிஞ்ஞரான ஸம்ஸாரிகளுக்கும்
அவர்களில் வ்யாவருத்தரான ஸ்வ புத்ர சிஷ்யாதிகளுமான பிறர் நசிக்கிறது
சரம அதிகாரியான தன்னை அநாதரிக்கையாலே வந்த பாகவத அபசாரத்தாலும்
தன்னளவு அவஸ்தா பரிபாகம் இன்றிக்கே இருக்கச் செய்தே தன்னுடைய அநவதா நத்தால் வந்த அனுஷ்டானங்களை
நம்முடைய ஜனகனானவன் ஆசரித்தது அன்றோ -நம்முடைய ஆச்சார்யன் ஆசரித்தது அன்றோ –
என்று அவற்றை ஆசரிக்கையாலும் -என்கிறார் –

—————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

ஆனால் அக்ருத்ய கரண அந்தர் பூதமான பர தார பர த்ரவ்ய அபி ருசி இவனுக்கு ஆகாது ஒழிகிறது -ஸாஸ்த்ரங்களிலே கர்தவ்ய தயா விதிக்கப்பட்ட
ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களிலே போகம் அவிருத்தம் அன்றோ என்னில் -விஹித போகம் -இத்யாதி –
ஸாஸ்த்ர விஹிதமான அந்த ஸ்வ தாராதி போகம் நிஷித்தமான பர தார பர த்ரவ்யாதிகளில் போகம் போலே ப்ரத்யக்ஷமான லோக கர்ஹா ஹேதுவும் இன்றிக்கே
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு -என்னும்படி
பரோஷமான க்ரூர நரக அனுபவ ஹேதுவும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
இவன் ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமுமாய் பகவத் ஏக போகமுமாய் இருக்கையாலே
ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரசத்வ ரூபமான விஷய போகம் யுக்தமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா -என்று விதிக்கிற வேதாந்தார்த்த விருத்தமாய்
அவை வைதிக அக்ரேஸரராய் ஆச்சார்ய அதீன ஸ்வரூபரான விஸிஷ்ட அதிகாரிகளாலே
கர்ஹிக்கப் படுமதாய் -ஆச்சார்ய கைங்கர்ய போகமாகிற பரம ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமு மாகையாலே
அதுவும் இவ்வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்கிறார் –

————–

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்-ஸ்வரூபம் குலையும் –

இன்னமும் போக்யதா புத்தி -இத்யாதியாலே உபாஸ விடும் என்கிறார் -கரான மஹ ரிஷிகளைப் போலே ஸ்வ தாரத்தை ஸ்நாந திவஸத்திலே அங்கீ கரியா விடில்
ப்ரூண ஹத்யா தோஷம் யுண்டு என்கிற தர்ம புத்த்யா இவன் விஷயத்தை அங்கீ கரிக்கிலும்
தத் ஏக உபாயனான இவனுக்கு ஸர்வதா ஸ்வரூப ஹானியாயே விடும் என்கிறார் –

————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

அநந்தரம் -ஷேத்ராணி மித்ராணி -இத்யாதியாலே இந்த பிரகரண யுக்தமான ஆச்சார்ய விஷயத்தோ பாதி
ப்ரத்யக்ஷ விஷயமான பெரிய பெருமாளைக் குறித்து ப்ரஹ்மா விண்ணப்பம் செய்த ஸ்லோகத்தில் அவஸ்தை யுண்டாக வேணும் என்று
இவ்வதிகாரியுடைய ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு என்கிறார் -அதாவது
ஆதி ப்ரஹ்மா அஸ்வமேத முகத்தாலே ஹஸ்தகிரியிலே பேர் அருளாளப் பெருமாளை ஆராதித்துப் பின்பும் அநேக காலம்
தத் அனுபவ ஏக பரனாய்க் கொண்டு அவன் வர்த்தியா நிற்க -அந்தப் பேர் அருளாள பெருமாள் உன்னுடைய ப்ரஹ்ம லோகம்
அநாதமாய்க் கிடவாத படி நீ அங்கே ஏறப்போ என்று விடை கொடுத்து அருள -அந்த ப்ரஹ்மாவும் அவ்வனுபவ அலாபத்தாலே ஆத்ம தாரண அயோக்யதையாலும் பரமாச்சாரியார் -எப்பாலைக்கும் சேமத்தே -என்று அருளிச் செய்யும் படி ப்ராப்ய பூமியான அத்தேச விஷயத்தில் ப்ராவண்ய அதிசயத்தாலும்
இத்தைப் பற்ற ப்ராப்ய பூமியான ப்ரஹ்ம லோகத்தில் உபேஷ்யா புத்தியாலும் -ப்ரேம பரவசனாயக் கொண்டு –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாத பத்ம ப்ரவணா ஆத்ம வ்ருத்தே பவந்தி பும்ஸஸ் சர்வே பிரதிகூல ரூப -என்று
இத்யாதியாலே தன்னுடைய அவஸ்த்தா விசேஷங்களை ஆவிஷ்கரித்தான் இறே

—————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -இத்யாதி -இவ்வவஸ்தா விசேஷங்களும் உபாஸகனான ப்ரஹ்மாவின் அளவு அன்றிக்கே
த்வத் பாத பத்ம ப்ரவணாத் ஆத்மவ்ருத்தே சர்வே பிரதிகூல ரூப பவந்தி -என்கையாலே
பகவத் பாகவத சமாஸ்ரயண பரருக்கு எல்லாம் அவிசிஷ்டங்களாகையாலே
இவை உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் என்கிறார் –
இவ்விடத்தில் உபாய சதுஷ்டயம் என்றது -பக்தி ப்ரபத்திகளையும் -ததீய சமாஸ்ரயணத்தையும் -ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் -என்னுதல் –
ஈஸ்வரனுடைய உபாயத்வத்தில் ஸ்வ கத பர கதத்வங்களையும்
ஆச்சார்யனுடைய உபாயத்வத்தில் ஸ்வகத பரகதத்வங்களையும் என்னுதல் –

—————–

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பழுதாகாது ஓன்று அறியேன் – இத்யாதியாலே
ப்ரஸக்த அநுரூபமாக -ததீய உபாயத்வத்துக்கும் ஆச்சார்ய உபாயத்வத்துக்கும் உண்டான பிரமாண விசேஷங்களை எடுக்கிறார் –
அதில் பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டில் -வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் -என்று
ஸ்வீ காரத்தில் ஸ்வ கதத்வம் தோற்றுகையாலே அமோகமான ஆச்சார்ய உபாயத்வத்தில் ஸ்வ கத ஸ்வீ கார பிரமாணம் என்னவுமாம் –

———

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –

—————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு-அங்கமாய்
ஸ்வ தந்த்ரமுமாய் –இருக்கும் –

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

சூரணை -463-

இது
பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் —

மேல் இப்படிப்பட்ட ஆச்சார்ய அபிமானம் தான் ஸகல வித்ய அங்கமாய் இருக்க -தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்று
ஸ்வ தந்த்ர உபாயமாகச் சொல்லுகிறபடி எங்கனே என்ன -ஆச்சார்ய அபிமானம் தான் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அவ்யஹித உபாயத்வேந ப்ரஸித்தமான ப்ரபத்தி தானும் -மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு -இத்யாதிகளாலே
கர்ம யோகாதிகளுக்கு அங்கத்வேந விதிக்கப்பட நிற்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸ்வ தந்த்ர உபாயமும் ஆகிறவோ பாதி
இச்சரம உபாயமும் ஸ்வ வ்யதிரிக்த ஸகல உபாயங்களுக்கும் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அங்கமாகா நின்றதே யாகிலும்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கையும் ஸூசிதம் என்கிறார் –
இவ்வர்த்தத்தில் பிரமாணம் -ஸாஸ்த்ரா திஷு ஸூ த்ருஷ்டாபி சாங்கா ஸஹ பலோ தயா ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேஸதே -என்று
யாதொரு வித்யை ஸகல வேத ஸாஸ்த்ரங்களிலும் அங்க ஸஹிதையாகவும் ஸஹஸா பல ப்ரதையாகவும்
ப்ரதிஞ்ஞா பலத்தாலே ஸூ சிஷதையாகை யானாலும்
அது ஸதாச்சார்ய உபதேசத்தால் அல்லது அர்த்த க்ரியா காரியாகவே மாட்டாது என்று இதனுடைய அங்கத்வத்தையும்
ஸதா சார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராபனுவந்தி பராங்கதிம் -என்றும்
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அதனுடைய ஸ்வ தந்த்ர பாவத்தையும் சொல்லா நின்றது இறே –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

Posted in Ashtaadasa Rahayangal, ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர், ஸ்ரீ மணவாள மா முனிகள், ஸ்ரீ வசன பூஷணம் | Leave a Comment »

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் –8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம்–மூன்றாம் பிரகரணம் –சூர்ணிகை -366-380 -நாலாம் பிரகரணம் -சூர்ணிகை -381-406—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

————

சூரணை -366-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

ஆகக் கீழ் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய பரிமாற்றத்தை அருளிச் செய்து
அதில் சிஷ்யனுடைய பரிமாற்றமாக உபகார ஸ்ம்ருதியில்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்தில்
மனஸ்ஸுக்குத் தீமையாவது -என்று தொடங்கி -பகவத் பாகவத தோஷங்களையும்
அல்லவவு அல்லாத ஸம்ஸாரி தோஷங்களையும்
இவன் காண்பான் அல்லன் என்றும்
அஸ் ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் காண ஒண்ணாத அளவே அன்று -அவர்கள் தன் பக்கல் பண்ணும்
அபஹாரங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் என்றும்
இன்னும் அவ்வளவே அல்ல
அவ்வபகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி பர்யந்தமான அதிகாரங்கள் யுண்டாக வேணும் என்றும் கீழே சொல்லி
ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷங்களையும் -என்ற இடத்தே தொடங்கி
கர்ப்பிதமாய்க் கொண்டு வருகிற பகவான் நிர்ஹேதுக ப்ரபாவத்தை விசதமாக
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –என்று தொடங்கி மேலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹே-இத்யாதி
துரந்தஸ்யா நாதேர பரிஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநா சாரோஹம் ந்ருப ஸூர ஸூபஸ்யாஸ் பதமபி -என்றும்
தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்சல்ய ஜலதே தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்றும்
ஆளவந்தாரும் அருளிச் செய்கையாலே
இவனுக்கு அநர்த்தங்களான தோஷங்களைப் பற்றிப் பார்த்தால் பயங்கரங்களாக இருக்கும் என்றும்
ஸ்வரூப உஜ்ஜீவங்களான பகவத் தயாதி குணங்களைப் பற்றிப் பார்த்தால் அந்த பய நிவ்ருத்திக்கே உடலாய் இருக்கும் என்றும் அருளிச் செய்கிறார் –

————

சூரணை-367–

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கும் –

பய அபயங்கள் -இத்யாதி -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கையாவது -அவனுடைய தயா குண அனுசந்தானத்தை விட்டு
இது நெடும்காலம் ஸம்ஸாரத்திலே நெருக்கி தண்டித்துக் கொண்டு போந்தான் இறே என்று ஈஸ்வரனுடைய தண்ட தரத்வத்தை அனுசந்தித்து பயப்படுகையும்
ஸ்வ தோஷ அனுசந்தானத்தை விட்டு இந்நாள் வரை நம்மைத் தண்டித்தானே யாகிலும் நம் பக்கலிலே இத்தனை ஆத்ம குணங்களால் வந்த ஆனுகூல்யம் யுண்டான பின்பு இனி பயம் இல்லை என்று இருக்கையும்
இவ்வதிகாரிக்கு உண்டாமாகில் முன்பு ஸம் சரிக்கைக்கு ஹேதுவான அறிவு கேடே இன்னம் பலித்து விடும் என்கிறார் –

———–

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

சூரணை -369-

பந்த-அனுசந்தானம் –

ஆனால் -நலிவான் இன்னம் -இத்யாதி -இந்த பயாபயங்களினுடைய மாறாட்டில் அஞ்ஞதையே ஸித்திக்குமாகில்
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானாதிகரான ஆழ்வார்களுக்கு ஈஸ்வர விஷயத்தில்
உண்ணிலாவிய
மாற்றமுள வாகிலும் -இத்யாதிகளிலே பயம் நடப்பான் என் என்னில்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் -என்றும்
இத்யாதிகளில் படியே ஸகலவித பந்துவும் அவனே என்று இருக்கிற பந்த அநுஸந்தானத்தாலே என்கிறார் –

—————

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

இன்னமும் இவ்வதிகாரிகளுக்குப் பிறந்த தஸா விசேஷத்தைக் கொண்டு அறுதியிட வேணும் –
அவ்வதிகாரிகளுடைய தஸா விசேஷங்கள் எவை என்னில்
ஸாஸ்த்ர ஞான மூலமாகப் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களே பிரதானமாக அநுஸந்திக்கும் அதிகாரிக்குப்
பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும்
அந்த ஸாஸ்த்ரத்தாலும் -ஸாஸ்த்ர தாத்பர்யமான திரு மந்திரத்தாலும் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களுக்கும்
சேஷத்வ பாரதந்ர்யங்களுக்கும் சம கக்ஷியாக அநுஸந்திக்குமவனுக்குப் பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும் –
அந்த ஸாஸ்த்ரத்தாலும் திருமந்திரம் அடியாகப் பிறந்த சேஷத்வ பாரதந்தர்யங்களே பிரதானமாக அத்யவசித்து இருக்கும்
அதிகாரிக்குப் பேறு இழவுகள் இரண்டும் ஈஸ்வரனாலே இருக்கும் –
ஆகையிறே ஆழ்வார்கள் அவ்விரண்டையும் அவன் பக்கலிலே ஏறிட்டு அருளிச் செய்தது –
இது இங்கே முக்த அவஸ்தை பிறந்த அதிகாரியினுடைய ஞானமாகையாலே முமுஷு அதிகாரியினுடைய அனுசந்தான கிரமத்தை அருளிச் செய்கிறார் பிரஜை தெருவிலே இடறி -இத்யாதியாலே
இத்தால் அந்த பந்த அனுசந்தானத்தால் பலிக்கும் காரியத்தை ஒரு புடை ஒப்பான த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறது –
அதாவது -ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியில் அநந்ய கதியான ப்ரஜை ஸ்வ இச்ச ஸஞ்சாரம் பண்ணுகிற தெருவிலே ஸ்வயமேவ இடறி
ஆத்தாள் வந்த வேதநாதிசயத்தாலே அகத்தேற ஓடி வந்து தனக்கு வருகிற விரோதம் முதலிலே அறியாதவளுமாய்த் தான் இடறுகிற இடத்திலும் இன்றிக்கே உண்டானாலும்
விலக்குகைக்கு அசக்தையுமாய் ஸோபாதக பந்த யுக்தையுமான மாதாவின் முதுகிலே மோதி கிலேசம் தீரக் காணா நின்றால்
ஸர்வஞ்ஞனுமாய்-ஸர்வ வியாபகனுமாய் -ஸர்வ சக்தியாய் -ஸதா சன்னிஹிதனுமாய்-ஸர்வ நியாந்தாவுமாய் -நிருபாதிக பந்துவுமாய்
நிரவதிக வாத்சல்ய யுக்தனுமான அவன் ஸ்வ கர்ம பலமான ஸாம்ஸாரிக ஸகல துக்கங்களையும் போகாது ஒழிந்தால்
அம்மாதாவின் அளவன்றிக்கே மிகவும் அவன் பக்கலிலே ஏறிட்டு வெறுக்கலாம் இறே என்கிறார் –

—————

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –

பிரஜையை இத்யாதி -அஞ்சு வயஸ்ஸுக்கு உட் பட்ட பிரஜையினுடைய ஹத்யாதி தோஷங்கள் மாதா பிதாக்களுடையது என்று
மன்வாதி ஸ்ம்ருதிகள் சொல்லா நிற்க -க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்-பதந ஹேதுவான கிண்னற்றங்கரையிலே பதறிக் கொண்டு போகிற பிரஜையை சந்நிஹிதை யான பெற்ற தாயானவள் எடுத்து ரஷியாதே அத்தை அனுமதி பண்ணி விட்டால் அவள் தானே இறே வலியத் தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே
ஆகையால் ஸ்வரூப நாஸ யோக்கியமான இந்த ஸம்ஸார மண்டலத்தில் நின்றும் ஸர்வத்ர ஸந்நிஹிதனான ஸர்வேஸ்வரன் –
உனது அருளால் வாங்காய் -என்கிறபடியே
தங்களை எடாது ஒழிந்தால் ததேக ரஷ்யரான ஆழ்வார்களுக்கு அப்படி அருளிச் செய்யலாம் இறே என்றபடி –

———————-

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இப்படி ஈஸ்வரன் இவர்களை எடாத அளவேயோ -முமுஷுக்களாய் -ஆர்த்த அதிகாரிகளான இவர்கள் அந்தமில் பேரின்பத்தை இழந்து
அநந்த கிலேச பாஜனமான இஸ் ஸம்ஸாரத்திலே அனுபவிக்கைக்கு ஹேது அவனுடைய அனுமதி அன்றோ என்ன -இவனுடைய அனுமதி -இத்யாதி –
கீழே ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ அனுமதி -என்ற இடத்தில் சேதனனுடைய அனுமதி-பேற்றுக்கு ஹேதுவான உபாயத்தில் அந்வயியாதோ பாதி
அத்யக்ஷஸ் ச அநுமந்தா ச -என்கிற ஈஸ்வரன்
இவன் நம்முடைய வஸ்துவாய் -வேறே சேஷ்யந்தரம் இன்றிக்கே இவனோடு இவன் விரோதியான கர்மத்தோடே வாசி யற நாம் இட்ட வழக்கான பின்பு
இவன் நமது விபூதிக்குப் புறம்பு ஆகிறான் அல்லனே
இன்று அன்றாகில் இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுகிறோம் என்று பண்ணும் அனுமதியும் இழவுக்கு ஹேது அல்ல என்கிறார் –

இனி கிண்னற்றங்கரைக்குப் பிரஜை போகத் தாய் பண்ணின அனுமதி மாத்ரத்தாலே அவள் தள்ளினாள் ஆய்த்தும் இல்லை இறே –

———–

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

ஆனால் அந்த இழவுக்கும் பேற்றுக்கும் ஹேதுக்கள் எவை என்ன -இழவுக்கு அடி -இத்யாதி –
இச் சேதனன் அந்தமில் பேர் இன்பத்தை இழக்கைக்கு ஹேது கால ஆர்ஜிதமான கர்மம்-
அத்தைப் பெறுகைக்கு ஹேது ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபை –

——————-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

மற்றைப்படி இத்யாதி – ஆத்ம குணங்களால் உண்டான ஆனுகூல்யத்தாலே பேறு யுண்டாய்த்து என்றும்
ஈஸ்வரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே இது நெடும் காலம் இழந்தோம் என்றும் சொல்லில்
மேல் அநந்த காலமும் இவ்விழவே பலித்து விடுகைக்கு உடலாம் -என்கிறார் –

———-

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை
தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

அவன் ஸர்வ சேஷியாய் ஸர்வ ரக்ஷகனாய் இருக்க அநாதி காலம் ஸம்ஸார ஆர்ணவ மக்நனாயக் கொண்டு தளர்ந்த இவன்
அப்படிச் சொன்னால் வருவது என் என்னில் -எடுக்க நினைக்கிறவனை -இத்யாதி –
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே
இவனை ஸம்ஸார தாபத்தாலே வெதுப்பி -ஹித பரனாய்க் கொண்டு -எடுக்க நினைக்கிற ஈஸ்வரனை இது நெடும் காலம்
இஸ் ஸம்ஸாரத்திலே உன் ஸ்வா தந்தர்யத்தாலே தள்ளினாய் என்று நைர் க்ருண்யத்தை ஏறிடுகை
தன் அநவதானத்தாலே ஆழ்ந்த குழியிலே விழுந்தான் ஒருவனை அருகே நின்றான் ஒருவன் ஐயோ என்று எடுக்கப் புக
அவஸாநத்தையே ஹேதுவாக அவன் ஒரு வழியே போகிறவனை நீயே அன்றோ தள்ளினாய் என்றால்
நிர்க்ருணனாய் எடுக்க உத்யோகியாதாப் போலே எடாமைக்கு உறுப்பாய் ஸம் சரிப்பிப்பைக்கு உடலாய் விடும் அத்தனை இறே –

—————–

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே-

சீற்றம் உள -இத்யாதி -இவ் வர்த்தத்தில் இந்த லௌகிக வியாபார த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு தர்சிப்பிக்க வேணுமோ
ஸம்ஸார தாபார்த்தரான திருமங்கள் ஆழ்வார்
மாற்றம் உள -என்கிற திரு மொழியில் –
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்த பாசுரத்தைக் கேட்ட அநந்தரத்திலே
எம்பெருமான் சீறினமை தோற்ற -சீற்றமுள -என்று
அநு போக்தாவான ஆழ்வார் தாமே இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே —

————-

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்–இத்யாதி -ஆனால் அவன் படிகள் எல்லாம் அறிந்து -அனுபவிக்கிற ஆழ்வார் -அப்பாசுரத்தாலே
அவனுக்குச் சீற்றம் யுண்டானமை அறிந்தால் மீளவும்
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்தபடி எங்கனே –
அதுக்கு ஹேது என் என்னில் –
கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேஸே -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்றும்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
சொல்லலாம் படியான அவனுடைய அருள் என்னும் ஒள் வாள் உருவி வினை முதிர்ந்து இருந்த கனமும்
காற்றத்திடைப்பட்ட கலவரைப் போலே ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -உண்டாகையாலும் அருளிச் செய்யப் பண்ணும் என்கிறார் –
மஹதா புண்ய புஞ்ஜேந க்ரீதேயம் காயநவ் ஸ்த்வயா ப்ராப்த துக்கோததே பாரந்த்வராயா வன்ன பிப்யதே -என்கையாலே
கலவர் மனம் போலே என்கிறார் –

—————-

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டு என்னா -சேஷியான அவனுக்குச் சீற்றம் பிறக்கும்படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன
சீறினாலும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
நிராச கஸ் யாபி ந தாவதுத் சஹே மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம் ருஷா நிரஸ்தோபி ஸி ஸூஸ்த நந்தயோ ந ஜாது மாதுஸ் சரணவ் ஜிஹாசதி-என்கிறபடியே
சீற்றத்தாலே தெறிக்கத் தள்ளினாலும் சென்று திருவடிகளை பூண் கொள்ளலாம் படி எளியனாய் இருப்பன்
ஒரு வத்சலனை லபித்தால் வாய் வந்த படி யுக்த பிரகாரம் எல்லாம் சொல்லலாம் இறே என்கிறார் –

—————–

சூரணை -380-

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -க்ருபயா பர்யபாலயத் -அரி சினத்தால் -என்று ஸ பிரகாரமாக அத்தை தர்சிப்பிக்கிறார் –
ஸ தம் பூமவ் நிபதிதம் சரண்யஸ் சரணாகதம் வதார்ஹமபி காகுத்ஸ்த் த க்ருபயா பர்யபாலயத் -என்றும்
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே இருந்தேனே -என்றும்
யுண்டாகையாலே இதில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியுஞ்சினம் உண்டாகக் கூடாது இறே
கூடாதது கூடினாலும் என்றபடி

ஆக -கீழே -பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது என்றவத்தை இவ்வளவாய் ப்ரதிபாதித்துக் கொண்டு போவது –

———————————————————-

நாலாம் பிரகரணம்

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி உடன் கேடனாய்-
இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –
தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப் போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

த்ரிபாத் விபூதியிலே -இத்யாதி -லீலா விபூதி அநிருத்தர் அபிமான அந்தர் கதமாய் இருக்கையாலே வாஸூ தேவாதிகளான மற்றை மூவருடையவும்
அபிமான அந்தர் கதமான திரிபாத் விபூதியிலே -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -ஸ்ரியா ஸார்த்தம்
நித்ய ஸூரிகளோடே பரிபூரணமான அனுபவம் அனுவர்த்தியா நிற்க -அந்த நித்ய விபூதி ரக்ஷணமாகிற ஜீவனத்தாலே
உண்டி உருக்காட்டாத படியாய் -ஸ ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே தன்னைத் தனியனாக நினைத்துத் தளர்ந்து –
புத்ர பவ்த்ராதிகளோடே ஜீவிப்பான் ஒரு க்ருஹஸ்தன் ஒரு புத்ரன் க்ருதயாக்ருத்ய விவேக ஸூன்யத்தையாலே அஹங்கார மமகார நிமித்தமாக
தேசாந்தரஸ்தன் ஆனால் இவர்களோபாதி இப்போகத்துக்கு இட்டுப் பிறந்த இவன் இப்படி அந்யதா ஆவதே என்று –
அந்த புத்ரன் விஷயமாக பிதாவினுடைய ஹ்ருதயம் புண் பட்டு இருக்குமா போலே
ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே -என்று தொடங்கி
தம பரே தேவ ஏகீ பவதி -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று -என்றும் இத்யாதிகளில் படியே
ஸம்ஹ்ருதி சமயத்திலே லீலா விபூதி பூதரான ஸகல சேதனரும் கரண களேபர விதுரராய்
அத ஏவ போக மோக்ஷ ஸூ ன்யராய்க் கிடக்கிற படியைக் கண்டு -தன்னோடு உண்டான நிருபாதிக பந்துவே ஹேதுவாக
அவர்கள் பக்கலிலே திரு உள்ளம் குடி கொண்டு -அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கிற நியாயத்தாலே
அவர்களை பிரிந்தால் இப்படி இவர்கள் இஸ் ஸம்பந்த ஞான ஸூ ன்யராய்க் கொண்டு கிடப்பதே என்று தன் கேவல கிருபா பாரவஸ்யத்தாலே
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே – மிகவும் விஸ்லேஷ அசஹனாய்
களே பரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
சொல்லுகிறபடியே சமாஸ்ரயண முகேந தான் அவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு தயமான மனாவாய்க் கொண்டு
கரண களேபர பிரதானத்தைப் பண்ணி கரண களேபரங்களைக் கொண்டு
நின்றனர் இருந்தனர் -என்ற பாட்டின் படியே இவர்களுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப வியாபாரங்கள் யுண்டாகைக்கு
ஆதா வீஸ்வர தத்த யைவ புருஷ ஸ்வா தந்தர்ய ஸக்த்யா ஸ்வயம் தத்தத் ஞான சிகீர்ஷண ப்ரயதநாத் யுத் பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
முதலிலே சக்தி விசேஷங்களையும் கொடுக்க அது தன்னையே கொண்டு
பரமேஸ்வர ஸம்ஞ ஜோஜ்ஞ கி மந்யோ மய்ய வஸ்திதே -என்கிற ஹிரண்ய ஸிஸூ பாலாதிகளைப் போலே இந்த்ரிய கோசரனாய் நின்று ரக்ஷிக்க நினைக்கில்
அஹங்கார மமகாரமாகிற அஞ்ஞான ரூபேண நிவாரிப்பார்கள் என்று நினைத்துக் கண்ணுக்குத் தோற்றாத படி
அதீந்த்ரியனாய்க் கொண்டு அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் -இப்படி அந்தர்யாமியாய் இருக்கும் இடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் ஒரு ஸ்மரண மாத்ரமும் இன்றிக்கே உறங்கிக் கிடக்கிற பிரஜையைப் பெற்ற தாயானவள் இத்தசையில் இதனுடைய ரக்ஷணம் நமக்கே இறே பரமாவது என்று அதன் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சேஷியான -தான் அறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக இவர்களுக்கு ஸம்பந்த ஞானம் இல்லை என்று விடுகைக்கு அஸக்தனாய் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் -என்றும்
ஸூபா ஹிதா கஹ்வரேஷ்டி -என்றும்
அடியேன் உள்ளான் -என்றும்
என்னாவி என்னுயிர் -என்றும்
இத்யாதிகளில் படியே இவ்வாத்மாக்களுடைய அகவாயிலே அணைத்துக் கொண்டு ஒருவனுக்கு ப்ராக்தநமான க்ஷேத்ரம் பரராலே அபஹ்ருதமானால்
அந்த க்ஷேத்ர அபஹாரி யானவன் ஆண்டு கொண்டு போருமித்தைப் பற்றவும் உடையவன் அநு சயித்துத் தொடருகை அந்த க்ஷேத்ர அனுபவத்துக்கு ப்ராபல்ய ஹேதுவாமோ பாதி
தவம் மே அஹம் மே குதஸ் தத் -இத்யாதி ஸ்லோக ப்ரகாரத்திலே ஸம்ஸாரி சேதனன் நான் எனக்கு உரியன் என்கிற இது அநாதி ஸித்தமாய்ப் போரு மதிலும்
நாம் ஸ்வாமியானமை தோற்ற சத்தா தாரனாய்க் கொண்டு தொடர்ந்து கொண்டு போரும் அளவன்று என்று நிரந்தரமாக
அவர்கள் சத்தையை ரக்ஷித்து ஸ்வர்க்க நரகாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இப்படி சத்தா தாரகனாய்ப் போரு கையாலே இவர்களோடே உடன் கேடனாய்
அவர்கள் பிரகிருதி வஸ்யராய்க் கொண்டு அஸத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போதும் அள்ளல் சேற்றிலே இழிந்து அளைகிற பிரஜையை அதுக்கு அத்யக்ஷனான பிதா நிவாரிக்கப் பார்த்தால் அதன் சோகம் காண மாட்டாமையாலே
அனந்த்ரம் ஒரு கால் அத்தைக் கழுவி எடுத்துக் கொள்கிறோம் என்று அனுமதி பண்ணி இருக்குமோ பாதி
அனாதையான வாசனா ருசிகளுக்கு ஈடாக அவற்றில் நின்றும் மீட்க மாட்டாதே அநு மந்தாவான தன் அனுமதி தானத்தைப் பண்ணி
உண்மையிலே உதாஸீனன் இன்றிக்கே இருக்கச் செய்தே உதாசீனரைப் போலே இருந்து
ஸர்வஞ்ஜோபி ஹி விஸ்வேச ஸதா காருணிகோபி சந் ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிறபடியே
ஆள் பார்த்து உழி தருகிறவன் ஆகையால் அஸத் கர்மங்களில் நின்றும் இவர்களை மீட்க்கைக்கு அவசரம் பார்த்து

அந்த பர ஹிம்சாதிகளான அஸத் கர்மங்களிலே
பகவத் பாகவத அபசாரிகளை யாதிருச்சிகமாக ஹிம்ஸிக்கை தொடக்கமான நன்மை என்று பெயர் இடலாவதொரு தீமையும் சர்வஞ்ஞனான தான் காணாதே
ஸர்ப்ப சந்தஷ்டனான ஒருவனுடைய நெற்றியைக் கொத்தி ரக்தப்பசை யுண்டோ என்று சோதித்துப் பார்த்தால் மந்த்ர ஒவ்ஷாதி ஸர்வ பிரகாரத்தாலும் அப்பசை காணாது ஒழிந்தால் அந்தரங்கராய் இருப்பார் இனி இவ்விஷயம் நமக்கு கை புகுறாது என்று கண்ண நீரோடு கால் வாங்கிப் போருமாப் போலே
ஸம்ஸார போகி ஸந்துஷ்டானான இவனை ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் யாதிருச்சிகாதி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவிக்கப் பார்த்தால்
த்விதா பஜ்யேயாம்-என்ற ராவணனைப் போலே ஒரு வழியாலும் உஜ்ஜீவன ஹேது காணா விட்டால் அவனை அம்பாலே அழித்து மீண்டாப் போலே
இவன் அங்கீ கார யோக்யன் அன்று என்று -ஸஞ்சாத பாஷ்ப -என்கிறபடியே கண்ண நீரோடே ஸர்வ ஸக்தியான தான்
ஸாஸ்த்ரமும் -உபதேசமும் –தன்னுடைய நிர்ஹேதுக கிருபையும் -விநியோகப்படுகைக்கு விஷயம் வேணும் என்ற நினைவாலே மீளுவது
இப்படிப்பட்ட நினைவை யுடைய தன் திரு உள்ளத்துக்கு ஈடாக யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களை யுடைய ஒரு சேதனனைப் பெற்ற அளவிலே
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன -என்றும் இத்யாதிகளில் படியே
என்னூரைச் சொன்னாய்-என் பேரைச் சொன்னாய் -என்றும்
ஒரு பாகவதன் காட்டிலே வழி போகா நிற்க அவன் பின்னே பர ஹிம்ஸா பரனாய் இருப்பான் ஓரு படனும் யாதிருச்சிகமாக ஸா யுதனாயக் கொண்டு போக
அவ்வளவிலே காட்டில் வழி பறிகாரர் இந்த பாகவத பரிபாலன அர்த்தமாக வருகிறானாக நினைத்து அவனைப் பறியாதே பயப்பட்டுப் போக
அந்தப்படனுக்கு அந்த வியாபாரத்தை ஈஸ்வரன் ஸூ ஹ்ருதமாக முதலிட்டான் என்கையாலே -என்னடியாரை நோக்கினாய் -என்றும் –
ஒரு பாகவதன் கர்ம காலத்திலே வழி நடந்து தாஹ தூரனாய்ச் செல்லா நிற்க அத்தசையிலே தன் செய்க்குச் சாவி கடிந்து இறைக்கிறான் ஒருவன்
அந்நீரிலே கால் தோய்ந்தாரையும் கடிக்கொன்டு விலக்கி இறையா நிற்க
அசிந்திதமாக அப்பாகவதன் அதில் தன் விடாய் தீர்த்துப் போக – அத்தை ஈஸ்வரன் அவனுக்கு ஸூ ஹ்ருதமாக்கி மூதலிக்கையாலே அவர்கள் விடாயைத் தீர்த்தாய் என்றும்
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி விநோதார்த்தமாக புறம் திண்ணையைக் கட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்ய ராத்ரி யானைவாரே தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என்
இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக -அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு
அவர்களால் வந்த வ்யஸனத்தை நிவர்ப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக அத்தை அவளுக்கு
ஸூ ஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும்
இப்புடைகளிலே சில ஸூ ஹ்ருத லேசங்களை ஸ்வ கார்ய வஸராய்க் கொண்டு வழி போவார் மடியிலே வலிய மறைத்து மாங்காயைப் பொகட்டு அத்தை அடையாளமாக ஆஜ்ஞா புருஷன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே
மித கலஹ கல்பநா விஷம வ்ருத்தி லீலா தயா பஹிஷ் கரண தவ்ஷ்கரீ விஹித பாரவஸ்ய ப்ரபு ஸ்வ லஷித ஸமுத்கமே
ஸூ ஹ்ருத லக்ஷணே குத்ர சித் குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந -இத்யாதிகளில் படியே
ஈஸ்வரன் லீலா ஸங்கல்ப நிர்வாஹண அர்த்தமாக ஏறிட்டு
இப்படிக் கீழே யுக்தமான யாதிருச்சிகாதிகளை ஒரு ஜென்மத்தில் ஒருக்காலே ஏறிட்டு விடுகை அன்றிக்கே -ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக சிலர் ஸ்வர்ண பரீஷை பண்ண வரப் பொன் வாணியன் அதிலே ஆதார அதிசயத்தாலே
அப்பொன்னை வாங்கி உரை கல்லிலே உரைத்து அதன் சீர்மையை அறிந்து முகப்பிலே எடுத்து கால தைர்க்யத்தோடே கால் கழஞ்சு என்று திரட்டி
ஆகர்ஷகமான ஆபரண யோக்யமாக்குமா போலே -சேதனனுடைய ஜென்ம பரம்பரைகள் தோறும்
என்னடியாரை நோக்கினாய் –விடாயைத் தீர்த்தாய் –என்று இத்யாதிகளான ஆனு ஷங்கிகம் என்ன –
ஏவம் விதமான ஸூ ஹ்ருத விசேஷங்களை ஸர்வஞ்ஞனனான தானே கல்பித்து
யம் ஏப்யோ லோகேப்ய உன்னி நீஷதி ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி தம் -என்கிறபடியே
இஸ் ஸூ ஹ்ருத விசேஷங்களை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கிறார் –

———

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –சுருக்கம் ஓழியக் காணலாம் –

ஈஸ்வரன் இப்படி விஷயீ கரிக்க எங்கே கண்டோம் என்ன -லலிதா சரிதாதிகளிலே விஸ்தரேண காணலாம் என்கிறார் -அதாவது
லலிதை என்பாள் ஒரு ராஜ கன்யகை பூர்வ ஜென்மம் பாப பிராஸுர்யத்தாலே எலியாய் ஜனித்து ஓர் எம்பெருமானுடைய கோயிலிலே இதஸ் ததஸ் சஞ்சாரியாய் நிற்க
அவ்வெம்பெருமான் ஸந்நிதியிலே எரிகிற ஒரு தீபம் திரி எரிகிற ஸமயத்திலே அது தைலேச்சுவாய்க் கொண்டு தலை வைத்ததாயிற்று
தன் முகேந ஜ்வலித்த திரு விளக்கு நெடும் போது நின்று எரிய அதில் உஷ்ணத்தாலே இழிந்து ஓடுகிற அத்தை அப்போதே ஒருவன் அடிக்க
அந்த ஸூ ஹ்ருத விசேஷத்தாலே தத் ஸ்மரணையோடே இவ்வதிகா ஜென்மத்தை லபித்து இப்படியான பின்பு நமக்கு கர்த்தவ்யம்
அநந்த தீப முச்யதே -என்கிற இத் திரு விளக்குத் திருப்பணியே யாக வேணும் என்று தனக்குச் செல்லுகிற தேசத்திலே திருப்பதிகள் எங்கும்
பரிபூர்ண தீபத்தால் தேஜிஷ்டமாம் படி பண்ணி அவள் முக்தையானாள் என்று ப்ரஸித்தம் இறே –

இனி ஆதி சப்தத்தால் நினைக்கிறது –
ஸூ வ்ரதை என்பாள் ஒரு ருஷி கன்யகை பால்யத்தில் மாதா பிதாக்களும் மரித்து தன்னைப் பாணி கிரஹணம் பண்ணுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்கையாலே
இவ்விருப்பு இருக்க வேண்டா என்று அவள் அக்னி பிரவேசம் பண்ணுகையிலே உத்யோகிக்க
அவ்வளவிலே யமன் ப்ராஹ்மண வேஷத்தைக் கொண்டு வந்து இப்படி நீ ஆத்மகாதகை யாகலாகாது காண் என்ன
அவளும் கிலேச யுக்தமாக இவ்விருப்பு இருக்கப் போகாது என்ன
உனக்கு இக் கிலேசத்துக்கு அடி பூர்வ ஜென்மத்திலே நீ யொரு வேஸ்யையாய் இருப்புதி –
உன்னகத்திலே ஒரு ப்ராஹ்மண புத்ரன் வந்து ப்ரவேசிக்க முன்பே உன்னோடே வர்த்திப்பான் ஒரு மூர்க்கன் அவனை வதிக்க அந்த ப்ராஹ்மண புத்ரனுடைய ஸ்திரீயும் மாதா பிதாக்களும் பர்த்ரு ஹீனை யாவாள் என்றும்
பித்ரு ஹீனை யாவாள் என்றும் மாத்ரு ஹீனை யாவாள் என்றும் -உன்னை சபிக்க அத்தாலே காண் உனக்கு இந்த கிலேசம் வந்தது என்ன
ஆனால் இப்படி ஹேயையான எனக்கு இந்த ஜென்மம் உண்டானபடி என் என்ன -அதுக்கு ஹேது ஒரு பாகவதன் உன் க்ருஹ ப்ராந்தத்திலே விஸ்ரமிக்க அவனைத் தலையாரிக்காரன் கள்ளன் என்று பிடித்து ஹிம்ஸிக்க நீ அத்தைத் தவிர்த்து
அவன் பக்கலிலே அத்யாத்மம் கேட்ட பலம் காண் இது என்றான் இறே
அவன் அவளுக்கு உபதேசித்த அர்த்தம்
குரு ப்ரமாணீ க்ருத சித்த வ்ருத்தயஸ் ததாகமே ஸூ ப்ரணத ப்ரவ்ருத்தய
அமாநிநோ டம்ப விவர்ஜித நராஸ் தரந்தி ஸம்ஸார ஸமுத்ர மஸ் ரமம் -என்றது இறே இதிஹாஸ சமுச்சயத்திலே –

———————————

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்-வாளா தந்தான் என்று இருப்பர்கள்-

அஞ்ஞர் இத்யாதி -இனி ஆகிஞ்சன்ய ஏக சரணமான ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறவாத அஞ்ஞரானவர்கள்
ஒரு ராஜா ஒருவன் கையிலே வாளைக் கொடுத்து நீ கைக்கு ஆயிரம் பொன்னைப் பொன்னுக்கு நம்மை சேவி என்று நியமித்து விட
அவன் வாள் தந்தமையை மறந்து இவ் வாளாலே இப்போகம் பெற்றோம் என்று கேவலம் வாளின் மேலே கர்த்ருத்வத்தை ஏறிடுமா போலே
அடியிலே கரண களேபர ப்ரதாநம் பண்ணின ஈஸ்வரனை மறந்து -நம் கையிலே ஸூ ஹ்ருதாதிகளாலே அவன் நம்மை கிருபை பண்ணினான் இத்தனை இறே என்று இருப்பர்கள் –

————————

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

ஞானவான்கள் இத்யாதி -அந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறந்த முமுஷுக்கள் அந்த ஸ்வரூப தசையோடு புருஷார்த்த தசையோடு வாசியற
பகவன் நிர்ஹேதுக கிருபையாலே பலித்தது என்று எப்போதும் உபகார ஸ்ம்ருதியாலே ஈடுபடா நிற்பர்கள்
என்னும் இடத்துக்கு ப்ராமண பாஹுல் யத்தை -இன்று என்னைப் பொருளாக்கி -இத்யாதிகளாலே அருளிச் செய்கிறார் –

———————–

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

பாஷ்யகாரர் காலத்திலே -இத்யாதி -பார்த்த இடம் எங்கும் பகவத் ஏக பரராம்படி பண்ணுகிற பாஷ்யகாரர் காலத்திலே யாதிருச்சிகமாக ஒரு நாள் பெரிய திரு மண்டபத்துக்குக் கீழாக நம்பெருமாளுடைய புறப்பாடு பார்த்து ஏகாக்ர சித்தராய்க் கொண்டு கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் குவிந்து மஹா லோகமாய் இருந்ததொரு சமயத்திலே
நாதே ந புருஷோத்தமே த்ரி ஜகதாமேகாதிபே சேதஸா சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸூரே நாராயணே திஷ்டதி
யம் கிஞ்சித் புருஷாதமம் கதி பயாக்ரமே ஸமல் பார்த்ததம் சேவாயை ம்ருகயா மஹே நரமஹோ மூடா வராகா வயம் -என்கிறபடியே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் எத்தனை பதக்தர் வாசல்கள் தோறும் ஆபிமுக்யத்துக்கு இடம் பார்த்துத் தட்டித் திரிந்தோம் என்று தெரியாது
இப்படிப்பட்ட நாம் இன்று லோக நாயகரான பெருமாள் திரு வாசலிலே இவருடைய புறப்பாடு பார்க்க என்ன ஸூ ஹ்ருதம் பண்ணினோம்
என்று ஸ ஹேதுக விஷயமான இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -அவ்வளவில் ஒரு ஞானாதிகர் இவரைப் பார்த்து பிரபாகரன் எம்பெருமானை ஒழிய
அபூர்வம் என்ற ஒன்றை ஆரோபித்துக் கொண்டால் போலே நீரும் ஒரு ஸூ ஹ்ருத தேவரை எங்கே தேடி எடுத்தீர் என்ற வார்த்தை
நிர்ஹேதுகத்வத்தை ஸ்தாபிக்கிற இவ்விடத்தே அனுசந்தேயம் என்கிறார் –

——————

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

ஆகையால் அஞ்ஞாதமான–இத்யாதி -இப்படிக் கேவலம் அத்தலையாலே பேறாகையாலே இச்சேதனருடைய புத்தி பூர்வம் அல்லாத
அஞ்ஞாத ஸூஹ்ருத லேசங்களையே அவலம்பித்துக் கொண்டு அங்கீ கரிக்கையே அவனுக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இனி இப்படி இத்தனையில் யாதிருச்சிகாதிகளை யாகிலும் ஹேதுவாக்கி அவன் அங்கீ கரிக்குமான பின்பு கேவலம் அத்தலையாலே பேறு என்கிற அர்த்தம்
அசங்கதம் ஆகிறதோ என்ன -இவையும் கூடி விளையும் படி இறே என்று தொடங்கிச் சொல்லுகிறது -எங்கனே என்னில்
யுக்தமான யாதிருச்சிகாதிகளும் வஷ்யமாணமான அபாபத்வமுமாகிற இவையும் கூட உண்டாம் படி இறே
இந்த யாதிருச்சிகாதிகளுக்கு ஆஸ்ரயமான இவன் தன்னை ஸ்ருஷ்டி காலத்திலே அவன் கரண களேபரங்களைக் கொடுத்து
இவனை யுண்டாம் படி பண்ணிற்று என்கிறார் –

—————

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் -இருக்கும் –

அது தன்னை -இத்யாதி -ஒவ்க பத்யம் அநுக்ரஹ கார்யமாகையாலே அவன் தான் நிர்ஹேதுக கிருபையாலே
கரண களேபர ப்ரதான த்வாரா இவனை அவன் ஸ்ருஷ்டித்த படியை நிரூபித்தால்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தத் அதீனனான இவன் தனக்குத் தன் தலையால் ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் இருக்கும் –

——————

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –

அது எங்கனே என்னில் -பழையதாக இத்யாதி -ஒருவன் தனக்கு ப்ராக்தனமான க்ஷேத்ரத்தைப் பலகாலும் உழுவது நடுவது விளைவதாய்
இப்படி கிருஷி பண்ணிக் கொண்டு போரா நின்றால் அக் கர்க்ஷகனுடைய புத்தி பூர்வம் அன்றிக்கே இருக்க அவன் கிருஷி பண்ணுகிற கட்டளை போலே
அரி தாளிலே விழுந்த உதிரி முளைத்து அவனுக்கு நல்ல பசியிலே புஜிக்கலாம் படி அ