Thiruvonum's Weblog

Just another WordPress.com weblog

Archive for the ‘Ashtaadasa Rahayangal’ Category

« Older Entries

ஸ்ரீ ஸித்தி த்ரயம் -ஸ்ரீ ஸம்வித் ஸித்தி –ஸ்ரீ ஆத்ம ஸித்தி –ஸ்ரீ ஈஸ்வர ஸித்தி —

May 4, 2023

ஸ்ரீ வைஷணவ மரபில் ( சம்பிரதாயம் ); ஸ்ரீ நாதமுனி (Ca.823-951?), ஸ்ரீ யமுனாச்சார்யா (917-1042), மற்றும் ஸ்ரீ ராமானுஜர் (1017 முதல் 1137) ஆகியோர் முனித்ரயம் – என்று மிகவும் மதிக்கப்படுகிறார்கள் .

ஸ்ரீ நாதமுனிகளால் பிரவர்த்தனம் -ஸ்ரீ ஆளவந்தாரால் போஷணம் -ஸ்ரீ ராமானுஜரால் வர்த்திக்கப்பட்ட விசிஷ்டாத்வைதம்

ஸ்ரீ லக்ஷ்மி நாத சம ஆரம்பம்
நாத-யமுனா மத்யம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தம்
வந்தே குரு-பரம் பரம்

ஸ்ரீ யமுனாச்சார்யார் ஸ்ரீ நாதமுனியின் பேரன் என்று வர்ணிக்கப்படுகிறார்;
மற்றும், ஈஸ்வர பட்டா ஆழ்வான் மற்றும் ரங்கநாயகியின் மகனாக . அதில் கூறப்பட்டுள்ளது;
பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபோதும், யமுனாச்சார்யார் கற்றறிந்தவனாகவும், புலமை வாய்ந்தவனாகவும், மிகுந்த பேச்சாற்றல் மிக்கவனாகவும் இருந்தார் .
அவரது காலத்தில் ஒரு மதிப்புமிக்க மற்றும் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட விவாதத்தில்,
பிரகாசமான இளம் யமுனாச்சார்யார் , பாண்டிய அரச சபையின் அகங்காரமான ஆக்கியாழ்வானை தோற்கடித்தார்,
அனைத்து விவாதக்காரர்களுக்கும் ( பிரதி-வாதி-பயங்கரா ) பயங்கரமாக பயந்தார் .

மேலும், மிகவும் அஞ்சப்படும் எதிரியை வென்றதற்காக, நன்றியுள்ள சோழ ராணி (ஒருவேளை பராந்தக I 907 – 955 கிபி ராணியா?)
ஸ்ரீ யமுனாச்சார்யார்க்கு ஆளவந்தார் என்ற பட்டத்தை வழங்கினார் (மீட்பவர் அல்லது மீட்புக்கு வந்தவர்);
மேலும், மன்னரின் எல்லைக்குள் கணிசமான நிலத்தின் மீது அவருக்கு உரிமையும் வழங்கப்பட்டது.
இவ்வாறு, இளமைப் பருவத்தில் இருந்தபோதே, ஸ்ரீ யமுனா, ஐசுவரியத்தைத் தவிர, பெரும் சிறப்பை அடைந்தார்;
மற்றும், அவரது அறிவுத்திறன் மற்றும் விவாதத் திறமைக்கு புகழ்.
அதன்பிறகு, ஆரம்பத்தில், இளம் யமுனா, ஒரு குறுகிய காலத்திற்கு, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தினார் ;

அவர் பரம்பரையாக பெற்ற ஞானத்தின் மரபை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்.
மணக்கால்-நம்பி என்றும் அழைக்கப்படும் ராம மிஸ்ரரின் செல்வாக்கு, அறிஞரான புண்டரிகாக்ஷாவின்
(அவரே ஸ்ரீ நாதமுனியின் சீடர்களில் முதன்மையானவர்) தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர், இளம் யமுனாச்சார்யாரை எழுப்பியது;
அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த வழிகெட்ட வாழ்க்கையின் பயனற்ற தன்மையை அவருக்கு உணர்த்தியது.
அந்த இளைஞனிடம் புத்திசாலித்தனமாகப் பேசியவர் ராம மிஸ்ரர்; அவரது முதன்மையான பரம்பரை பற்றிய விழிப்புணர்வை அவருக்குள் தூண்டியது;
அவரது ஆன்மீக கடமைகளை அங்கீகரிக்க அவரைத் தூண்டியது;
மேலும், இறுதியில் அவரை நல்லொழுக்கத்தின் பாதையில் செல்ல வழி வகுத்தது .
ராம மிஸ்ரர் இளம் யமுனாச்சார்யாரின் ஆசிரியரானார்;
மேலும், வேத நூல்கள், மீமாம்சம் மற்றும் திவ்ய பிரபந்தம் போன்ற பிற நூல்களையும் கற்பித்தார் .

அதன்பிறகு; ராம மிஸ்ரர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது தாத்தாவின் வழிபாட்டுத் தலத்தை ஸ்ரீ யமுனாச்சார்யார் இடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகு, ஸ்ரீ யமுனாச்சார்யார் சன்யாசியாகி , புனித நகரமான ஸ்ரீரங்கத்தில் குடியேறினார்;
மேலும், தனது வாழ்நாள் முழுவதையும் வைணவ நம்பிக்கையின் பிரச்சாரத்திற்காக அர்ப்பணித்தார்;
மேலும், அவர் தனது ஆசிரியர் ராம மிஸ்ரர் மற்றும் அவரது பரம குரு ஸ்ரீ நாதமுனி ஆகியோரிடமிருந்து பெற்ற ஆன்மீக ஞானத்தைப் பரப்பினார் .

விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–8-

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
“யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

அவரது தாத்தா ஸ்ரீ நாதமுனி மற்றும் அவரது புகழ்பெற்ற வாரிசு ஸ்ரீ ராமானுஜரைப் போலவே,
ஸ்ரீ யமுனாச்சார்யாரும் சுமார் 120 ஆண்டுகள் மிகவும் பழுத்த முதுமை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ யமுனாச்சார்யார் எட்டு மதிப்பு மிக்க படைப்புகளை எழுதியதாகக் கூறப்படுகிறது:
ஆத்மா-சித்தி ;
ஈஸ்வர-சித்தி ;
சம்வித்-சித்தி;
கீதார்த்த-ஸங்க்ரஹம் ;
புருஷ -நிர்ணய;
ஸ்தோத்ர-ரத்னம் ;
சதுஸ்-ஸ்லோகி;
மற்றும், ஆகம-பிரமாண்யம் .

—————-

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் –உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –

————

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்

பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்

வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –

———-

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப் படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்த மயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்ன மய, ப்ராண மய மனோ மயங்களுக்கு அவ் வருகே சரீரம், ப்ராணன், மனம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாந மயன் என்று காட்டியது.

ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரும்
“சென்று சென்று பரம் பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே
என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மை நிலை பகவத் குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

————

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் இறைவனுக்கு உட்பட்டதே
என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்ய ஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலை நாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேத வேத்யனான பரமபுருஷனை ஒத்துக் கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது. ஆகையால் உலகிற்குக் காரணமாய்,
கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும் கர்ம மீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து,
ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில் மறுபடியும் படைத்து காத்தருளும்
ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலை நாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாத போது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்), ஸர்வ கர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பல ப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
“கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின்
ஸகல வித்யா சர்வஸ்வம் என்று போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

————–

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது;
அறியப்படும் பொருளும், அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.
இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.

மேலும் பரம் பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

“ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை.
“பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது. உண்மையாக உள்ள பரம்பொருளையும்,
இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள்
ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய்
சம்சாரியாய் துக்கப்படுபவனான ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது
ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

——

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது
வேதார்த்தம் ஸ்தாபிக்க -சத் சித்தாந்தம் -வைதிக தர்மம் –
சித்தி -ஞானம் -1-ஆத்ம 2-சம்வித் -3-ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
பிரமாணம் -பிரமாதா -பிரமேயம் -மூன்றும்
அசேதனம் பற்றியும் ஞானி பற்றியும் சர்வஞ்ஞான் பற்றியும்-இப்படி மூன்றும்
மாதா -பிரமாதா -ஆத்மா
மேயம் பிரமேயம் ஈஸ்வரன்
ஏற்படும் ஞானம் பிரமேதி -தர்ம பூத ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் உக்திகளைக் கொண்டு -பரமார்த்தம் ஸ்தாபிக்க முடியாதே –
சாஸ்த்ர யுத்தம் எளிமை –4-ஸ்தோத்ர ரத்னம் –5-சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ த்வயார்த்தம் -ஸ்ரீ பெருமை தனியாக
6-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்
7-மஹா புருஷ நிர்ணயம்
8-ஆகம பிராமண்யம்
ஆக எட்டு நூல்கள் அருளிச் செய்துள்ளார் – முதலில் அருளிச் செய்த கிரந்தங்கள் இவை

கை விளக்காகக் கொண்டே ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீ ஸூ க்திகள்–
உத்தமூர் வீர ராகவாச்சார்யர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
திரு நாங்கூர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
கத்யமும் ஸ்லோகமும் இவற்றில் உண்டே –
ஸ்ரீ உடையவர் ஒன்பது கிரந்தங்கள்
ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் -அஹம் -ஆத்மதத்வம் –
ஆத்ம சித்தி சம்வித் சித்தி கொண்டு நிர்ணயம்
சித்தி -ஞானம் -ஆத்ம சம்வித் -ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
சம்வித் என்றாலும் ஞானம்
சம்வித் -தர்மபூத ஞானத்தை குறிக்கும் -உத்பத்தி நாசம் கூடி இருக்கும் –
ஆத்மாவே ஞானம் -உத்பத்தி விநாசம் இல்லையே

ஞானம் ஏற்படும் சாதனம் -ஞான த்ரயம்
பிரஸ்தாபனம் -ஸ்ரீ பெரும்புதூர் ஆஸூரி ராமானுஜாச்சார்யார் -பல முகேன உபாய-
ஆயுள் நெய் -தலையிலே ப்ராப்யம் ஏற்றிச் சொல்வது –
சித்தி த்ரயம் நூலே ஞான த்ரயம் வருவது நிச்சயம் -சடக்கென தடங்கல் இல்லாமல் கிடைப்பதால் -உபச்சாரமாக சொல்வது
சாதனத்தில் பல விபதேசம்-
பல அபேதம் முகேன -சாதனத்தை சாத்தியம் -விளம்பம் இல்லாமல் -விட்டுப் போகாமல் -நிச்சயமாக ஏற்படுத்தும்
ஆத்மதத்வம் இவை கொண்டே நிர்ணயம் மஹா சித்தாந்தத்தில்
ஈஸ்வர சித்தி கொண்டே -சாஸ்த்ர யோனித்வ அதிகரணம் –
ஆகம ப்ராமாண்யம் -அடி ஒற்றி ப்ரஹ்ம மீமாம்ச அந்தக்கதை -பாஞ்சராத்ர ஆகமம் பரம பிராமணியம்
கீதார்த்த ஸங்க்ரஹம் கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
வேதார்த்த ஸங்க்ரஹம் தீபம் சாரம் இவை -மஹா புருஷ நிர்ணயம் கொண்டே-சாதித்தார்
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ் ஸ்லோகி கொண்டே கத்ய த்ரயம்
ஆ முதல்வன் -நிர்ஹேதுக கடாக்ஷம்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் -திரு அவதாரம் -74-ரூபங்கள் ஸ்ரீ நரசிம்மர் -மதகுகளை -74-வைதிக சம்ப்ரதாயம் காட்டிக் கொடுத்த கோயில் –

823-ஸ்ரீ மந் நாதமுனிகள் திரு அவதாரம்/ யமுனைத்துறைவன் பெயர் சாத்த -ஈஸ்வர முனிகள் திருத்தந்தை
ஆக்கி ஆழ்வான்-மஹா பாஷ்ய பட்டர் இடம் சிஷ்யர் -பிரதிவாதி வாரணம் பிரகட ஆடோபம் – விபாசனம் ஷம-
ஆ சைலாத் ஹிமாசலம் தொடங்கி -உப கண்டாதி மலை தாழ்வாரை வரை -அத்ரி கன்யா சரண கீதாலயா
கொழுந்து போன்ற திருவடி ஸ்பரிசத்தால் -பாக்யம் பெற்ற தாழ்வாரை –
ஆ ரஷோணீதா சீதா முக கமலம் சமுல்லாசாத ஹேது -சேது வரை –மாத்ருஸ அ ந்யா -என்னை ப் போலே கிடையாது தேடலாம்
அவதாம்சம் -ராக்குடி -கிழக்கு பர்வதம் சூர்யன் -அஸ்தமாத்ரிக்கு சந்திரன் -தேடினாலும் மீமாம்ச சாஸ்த்ரா யுக்ம –
அவற்றிலே புத்தி செலுத்தி நம்மைப் போலே -ஆளவந்தார் பேர் பெற்றார்
மணக்கால் நம்பி -தூது வளைக்கீரை கொடுத்து –கா பிஷா -போட வந்தேன் -கீதா பிரமாணம் பிரமேயம் காட்டி –
பெரிய பெருமாளை காட்டச் சொல்லி
ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்த பிரகாசம் -விமானம் பிராணாவாகாரம் —
சேவித்து மற்றவை விட்டார் -சந்யாச ஆஸ்ரமம் -கஜேந்திர தாசர் காட்டிக் கொடுக்க ஆ முதல்வன் கடாக்ஷித்து -விட்டு
தேவப்பெருமாள் -சரணாகதி –
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் கொண்டே ராமானுஜர் -பெரிய நம்பி உடன் வர -சரம திருமேனி சேவித்து திரும்ப
மதுராந்தகம் மகிழமரம் அடியில் சமாஸ்ரயணம்
நாஸ்திகர் –
அநாதி நிதன அவிச்சின்ன -பாட சம்ப்ரதாயம்-ஸூத பிராமண பூதம்- -வேத ஸாஸ்த்ர யுக்த அர்த்தேஷு நாஸ்தி என்பவன்

வேறே வேறே வித நாஸ்திகர்களை ஒரே சப்தத்தால் விளக்கி
சரீரம் தாண்டி வேறே பிறவி என்பது இல்லை -இஹ லோகம் பர லோகம் -கர்மங்களால் கட்டுப்படுத்தலாம் –
சாரு வாகர் -கண்ணாலே பார்ப்பதே உண்மை -அயம் லோக -நாஸ்தி பர /
புத்தன் -க்ஷணிகம் -ஸூந்யா -க்ஷணிக விஞ்ஞான சைதன்யம் பிரவாஹா ரூபேண அனுவர்த்திக்கும் -சைதன்யம் –
ஞானம் ஞாதா ஜே யம் மூன்றும் ஒன்றே அறிவு அறியப்படும் பொருள் அறியுமாவான் சேர்ந்தே -மூன்று இல்லை
நையாயிகன்-வேதம் பிரமாணம் ஒத்துக் கொண்டு -பாஷாண கல்பம் ஆத்மா அடைந்தாள் மோக்ஷம் -அசேஷ விசேஷ குண இல்லாமல் –
சைதன்யம் மாத்திரம் ஞானமே ஆத்மா -அடுத்து -யுக்தியால் வாதங்கள் –
அநிஷ்டம் போனது கல் இஷ்ட பிராப்தி ஆனந்தம் இல்லையே -புருஷார்த்தம் இல்லையே
சங்கர பாஸ்கர யாதவர் மூன்று குத்ருஷ்டிகள் –
பர ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் -வேதார்த்த ஸங்க்ரஹம் மங்கள ஸ்லோகம் இரண்டாவது -விஜயதே யமுனா முனி
தமஸா ஹார்த்தும் -சத் அசத் விவேகம் அறிய காருணிகோ ஈஸா ப்ரதீவம் ததாதி பட்டர் -ரெங்கராஜா ஸ்தவம்
சரபம் சலபமாகி வீட்டில் பூச்சி போலே கூரத்தாழ்வான்
ஆத்ம பரமாத்மா சம்வித் பிரமாணம் கொண்டு ப்ரதிஷ்டிதம் யுக்தி கொண்டே பாஹ்ய நிரசனம் -பிரதானம் -பரமாச்சாரியார் கையாண்டார்
உன் ஸ்திதி என் ஆதீனம் -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் -திரை விலக்கி சேவை சாதித்தான் திருவேங்கடமுடையான்
-நியாய சாஸ்திரம் -சத்காரியவாதிகள் –
பிரதிபக்ஷ -நிரசன பூர்வக ஆத்மதத்வ நிர்ணயம் -வேத ஸாஸ்த்ர அனுகூல தர்க்கங்கள் கொண்டே –
தேகாதி விலக்ஷணம் -அஜடம் -நித்யம் ஞானானந்த குணகம் -பர ப்ரஹ்ம குண அனுபவ தாஸ்யைக ரசம்
பர ப்ரஹ்ம சேஷ பூதர் -முக்தி பிரசாதத்தால் பெற்ற ஆத்மதத்வம் –
ஆத்மசித்தி கடைசியில் -இது -நாம் அறிந்தவை –
த்வைதம் -சரீராத்மா பாவம் இல்லாமல் சேஷ சேஷி கைங்கர்யம் எல்லாம் உண்டே என்பர்
ஈஸ்வர சித்தி -நிரீஸ்வர வாதி -நிரசித்து -த்ரையந்த வேத பிரமாணம் கொண்டே ஸ்தாபித்தார்
சம்வித் சித்தி -மாத்ரு-பிரமாத மேய -ப்ரமேயம் -பிரமித்தி ஞானம் -பிரமிதி ரூபம் -ப்ரமேயத்தை தத்வம் ஸ்தாபிக்க
பரமார்த்ததக ஸ்வரூப பேதம் இம்மூன்றுக்கும் -தர்மபூத ஞானம் -சங்கோச விகாசம் அடையும் -அர்ஹமாய் இருக்கும் –
இவை இல்லாமல் பரமாத்மா -உபநிஷத்தால் -சச்சிதானந்த ரூபம் ஸ்ரீ மான் புருஷோத்தமன் -உபநிஷத்தால் சொல்லப்படுபவர்
மாயாவதி இத்யாதிகளுடைய கற்பனைகளை தகர்த்து –
யத் பத த்யானம் அசேஷ கல்மஷன்கள் அழிக்கப் பட்டு அஹம் அவஸ்துவாய் இருக்க -பொருளாக்கின யாமுனாச்சார்யரை வணங்குவேன்

ஸ்ரீ மங்களா சரண வஸ்து நிர்தேசங்கள் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்த
பிரகிருதி அவ்யக்தம் -மாறி வ்யக்தம்
புருஷ சப்தம் தனியாக -பத்த ஜீவர்கள் —
யத் இச்சாம் அனுவிததி நித்யம் -சங்கல்பத்தை பின் தொடர்ந்து
நித்தியமாக பின் தொடர்ந்து செல்லும்
இது வரை லீலா விபூதி
நித்யம் நித்ய சித்தர் அநேகர்- எப்போதும் தொடரப்பட்டு
ஸூ பரிசரண போகை-கைங்கர்ய ரசம் யாத்திரை
ஸ்ரீ மதி-ஸ்ரீ யபதி இடத்தில் பிரியமான பிரியம் காட்டப்படுபவர் -பூருஷ பரம புருஷன் பரஸ்மின் -ஒரே வேற்றுமை –
மம பக்தி பூமா -பவது
அகில ப்ரஹ்மணி –ஸ்ரீ நிவாஸே-பரஸ்மின் -பக்தி ரூபா அங்கும் இப்படியே

பிரகிருதி -மாயாந்து பிரகிருதி வித்தி -அவ்யக்தம் -தத் கார்யாணி-வ்யக்தம் -காரியம் –
ப்ரக்ருதி பிராகிருத பரிணாமம் -ஹேது- காலம் தூண்ட -நடக்கும்
தத் பத்த-புருஷ -மூன்றையும் வசப்படுத்தி வைக்கும் காலம் -காலத்தாலும் வ்யக்த்ததாலும் பந்தம் -சரீரத்தாலும் காலத்தாலும்
முக்த -பகவத் உபாசனை பிரபாவாத் -பாவ பந்தனாத் -கர்மா -முக்தா -நிர்முக்தா விநிர்முக்தா -திரும்பி வராத அளவுக்கு –
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் சங்கல்பம் பின் தொடர்ந்து
சைதன்யம் இல்லாமல் பிரக்ருதியும் வ்யக்தியும் எப்படி -என்றால்
ஞானம் இருந்தால் தடுப்போம் -அவை கேட்க்காதே-லீலா ரசம் -அலகிலா விளையாட்டுடையார் -லீலே-ஏவம் லீலா விபூதி யோகம்
நித்ய விபூதி யோகம் -கூடி இருத்தல் யோகம் -நித்யம் மத்திய மணி நியாயம் –
ஸ்ரீ யபதி ஸ்ரீ வைகுண்டம் -நித்ய கைங்கர்யம் ரசம் -அனுபவ ஜெனீத ப்ரீதி காரித்த அசேஷ சேஷ வ்ருத்தி –
அகாத போகம் அநந்தம் -அனந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் -நிரதிசய ப்ரீதி –
ஸ்ரீ வல்லபன் புருஷோத்தமன் -பர ப்ரஹ்மணி -பக்தி -கடல் ஏற்படுத்த வேண்டும்
ஸ்ரேயஸ்-ஸ்ரீயப்பதியிடம் பக்தி ரேவ -பக்தியை பிரார்த்திதுப் பெற்றால் தானே வைகுந்தம் தரும் – பாரம்யம்-இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அன்பை உள்ளடக்கிக் கொண்ட உபாசனம் பக்தி -அவிச்சின்ன பூர்ண பகவத் அனுபவ கர்ப்ப சேவா கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ஸூவ அபிமதம் பிரகாரணார்த்தம்-முதல் ஸ்லோகமே ஸங்க்ரஹம் –
அசேதன சேதன பரமாத்மா பேதங்கள் உண்மை -தத்வத்ரயம் -பாரம்யம் ஸ்ரீ மந் நாராயணனே –
சர்வ சேதன அசேதனங்கள் விபூதியாய் இருக்கும் -சார்ந்தே விட்டுப் பிரியாமல் -உபாசனமே அபவர்க்க ஹேது –
திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்

விருத்த மதம் அநந்தம்
ஆத்ம சித்தி விரித்து இவற்றை நிரசித்து–ஆத்ம பரமாத்மா விஷயங்களில் முரண்பாடுகள் -பரிசோதனம் பண்ணி –
நாநா விப்ரபுத்தி -முமுஷுக்கு தானே இவற்றின் யாதாம்ய ஞானம் வேண்டும் –
தோஷ நிரசனம்-சாஸ்திரமும் உக்திகளையும் கொண்டு -தர்க்கம் -கவி தார்க்கிக–ஸ்ரீ தேசிகர்-
நியாய மீமாம்ச வ்யாக்ரண சாஸ்திரங்களில் அவகாஹித்து தத்வ நிர்ணயம் –
பர அவர ஆத்மா -இரண்டையும் யாதாவாக ஸ்தாபித்து -பர பாஷ ப்ரதிஷேப பூர்வகமாக -நிர்ணயம் சாஷாத் நோக்கம் –
ஆத்மாவை பற்றியே சொல்ல வந்தது -பரமாத்வாவுக்கு சேஷி என்று சொல்ல வேண்டுமே –
தர்ம பூத ஞானம் -ஈஸ்வர -இரண்டையும் அடுத்து அருளிச் செய்து –
ஞானத்தால் அறிந்து அவனையே பற்றி அவன் இடமே கைங்கர்யம்- ஸ்ரேயஸ் அடைய

285-வருஷம் கழித்து பஞ்சாங்கம் மாறும் –அயனாம்சம் -2160-ராசி மாறும் —
பங்குனி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு ஆகும் -2545-வருஷங்கள் கழித்து

அனுபந்தி சதுஷ்ட்யம் -விஷயம் -ஆத்மாவைப்பற்றி –பிரயோஜனம் -ஆத்ம விஷய யாதாம்யா ஞானம் —
சம்பந்தம் பிரதிபாத்ய பிரதிபாதக — அதிகாரி விஞ்ஞாஸூ இந்த நாலும்
முக்கிய க்ருத்யம் -தர்க்கம் சொல்வது -சாஸ்திரங்களை அனுகூலமான தர்க்கம் -சுருதி நியாயம் இரண்டுக்கும் விருத்தமாக இருப்பதை போக்கி –
ஸ்தாபனம் -அனுமானம் கொண்டு –
இரண்டாவது ஸ்லோகம்

மேலே கத்யம் –
வேதாந்த வாக்ய கூட்டங்கள் பர அபர ஞானமே -அபவர்க்கத்துக்கு மோக்ஷத்துக்கு சாதனம் –
சர்வ சமயேஷு இத்தை ஒத்துக் கொள்ளப்பட்டது -நின் கண் வேட்க்கை எழுவிக்கவே-
ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாநாம் -மத்வ – அம்ருதத்வம் -அறிந்தவன் மோக்ஷம்
சோகமான சம்சார சாகரம் தாண்ட -ஆத்ம ஞானம் வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -நன்கு அறிந்தவன் அவனை அடைகிறான் –
சோகம் சரீரகதம் -வேறே அறிந்தால் சோகம் போகுமே
வேதாந்த வாக்ய கூட்டங்கள் இப்படி சொல்லி இருக்க
சங்கை இருந்தால் தானே யுக்தி -நியாயம் பிரவ்ருத்தம் ஆகும் –
வேற தரிசனங்கள் -அவைதிக தரிசனங்கள் -வேதம் ஒத்துக் கொண்டாலும் ப்ரஹ்மம் ஒத்துக்கொள்ளாதவர் மீமாம்சகர் போல்வார் -அபூர்வம் கல்பித்து –
ஆந்திர அஞ்ஞானம் மலத்தை ஒழித்து -தத்வ ஞானம் சுத்தமாக தெளிவாக கொடுக்க -தர்சனம்
சாங்க்யர் வைசேஷிக -இத்யாதி –
சாருவாக்கர் புத்தர் ஜைனர் மூவரும் அவைதீகர்
மீமாம்ஸகர் -பூர்வ உத்தர -பட்ட பிரபாகர் -வைசேஷிகன் -மூவரும் வைதிகர் –
தேகமே ஆத்மா -கண்டதே கோலம் -சாருவாகர்-முதல் -சாரு வாக் -அழகாகப் பேசுவார் -ப்ரத்யக்ஷமே எல்லாம்
இந்த்ரியங்களே ஆத்மா -மனமே ஆத்மா -பிராணனே ஆத்மா –
போத மாத்திரம் -ஸுகத்தர்கள் -ஜீவாத்மா ஞானமாக தான் ஞாதாவாக இல்லை -ஞானம் உடையவர் இல்லை
ஞாதா பாவம் ஏறிடப்பட்டு-ஞாத்ருத்வம் அத்யர்த்தம் -ஞானம் ஒன்றே உண்மை
அநஹங்காரம்-அஹம் சொல்லுக்கு கோசாரமாக மாட்டார் -இத்தையே சொல்லுகிறது -அஹம் புத்தி சப்த அவிஷயம்
அஹம் -அந்தக்கரணம் இவர்கள் மதம்
ஞானத்தை ஞாதா என்று வாசனையால் சொல்லுகிறார் என்பர்

அடுத்தவர் -அஹம் -ஆத்மா என்பர் -ஆகந்துகம் -வரும் போகும் -பாஷாண கல்பம் மோக்ஷம் –
தேக இந்திரிய மந ஞானம் விலக்ஷணன் -அசாதாரணமான குணாகாரம் -என்பர் -சாஸ்திரம் அறிந்தவர் இவர் –
ஆகாசாத்வதி அசித் தானே பிரகாசிக்காது என்பர் -ஸ்வஸ்மை-ஸ்வயம் பிரகாசிக்கும் இரண்டும் உண்டே நம் சம்ப்ரதாயம்
இவர்கள் ஜடப்பொருள் போலே என்பர் -தார்க்கிகள் இவர்கள் -கணாத-கௌதம மதம் –

சாங்க்யர் -செம்பருத்தி பூ படிக்கல் -இயற்க்கை இல்லாமல் சன்னிதானம் ஏறிட்டு -பிரகிருதி ஆத்மா -வெளுப்பு –
சோக துக்கங்கள் இவர் மேலே ஏறிட்டு -மனஸ் பாலம் – வேறே வேறே ஞானம் வந்தால் இவை வாராது என்பர் –
இதுவே மோக்ஷம் -கபிலர் மதம்
உபாதி சன்னிதானம் உபாதானம் உபாதான விசேஷ ஆபாதக-தன்மை ஏறிடப்பட்டு பாதிக்கப்பட்டும் -செம்பருத்தி பூ ஸ்படிக மணி த்ருஷ்டாந்தம்
பிரகிருதி கார்ய சரீரம் -மனம் அந்தக்கரணம் உபாதி -ஆத்மாவில் ஏறிடப்பட்டு -நிர்பாதம் தோற்றும் -ராக த்வேஷ சோக துக்காதிகள்-
தோற்றம் மறைவு இல்லாத ஸ்வரூப பிரகாசம் -ஸ்வஸ்மை பிரகாசம் ஸ்வயம் பிரகாசம் – இரண்டும் -உண்டே –
மனம் வேலை இழந்த நேரம் இருந்தாலும் தான் அவருக்குத் தோற்றும் -தர்மி ஞானம் தனக்கு பிரகாசம் ஸ்வஸ்மை பிரகாசம்-
ஸ்ரீ வைகுண்டம் -அசித் -இருந்தாலும் ஸ்வயம் பிரகாசம் –

மீமாம்சகர் -ஞான ஆனந்த ஸ்வ பாவம் -வடிவம் -சித்தாந்தி போலே -போத விசேஷம் -ஆஸ்ரய ஆனுகூல்ய ஞானமே ஆனந்தமும் ஸூ கமும் –
பிரதிகூல்ய ஞானம் துக்கம் -பேரிடப்பட்டு உள்ளது –
சம்சாரித்வ ஸூகம் துக்கம் -கர்மா உபாதி

பிரமாணங்கள் -அனுமானம் -சமாதிகம்யம் -தார்க்கிக்கரும் -ஸுத்ராந்திக புத்த பக்ஷம் –
மாத்யத்மீகன்-சர்வம் சூன்யம் -உண்மையான புத்த மதம் -யோகாச்சாரன் அடுத்து -ஞானம் உண்டு –
ஞானத்துக்கு விஷயம் இல்லை -அடுத்து
ஸுத்ராநதிக்க பக்ஷம் -ஞானம் உள்ளது -விஷயமும் உண்டு -அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் –
அடுத்து வைபாஷிகன் -ஞானம் உள்ளது விஷயம் உண்டு பிரத்யக்ஷம் பிரமாணம்-இப்படி நால்வரும்
தார்கிகர் -நீல பீத-வர்ணம் -ஞானம் -அஹம் விஞ்ஞானம் சாலம்பனம் விஞ்ஞானத்வாத் -நான் என்கிற அறிவுக்கு பற்றுக்கொம்பு –
ஆகவே ஆத்மா இருக்க வேண்டும் -அனுமானித்து
இதம் -இது சொல்ல ஆலம்பனம் வேண்டாமே –
விலக்ஷண ஆத்மா பரமாத்மா அனுமானித்து தெரிந்து கொள்ளலாம் -என்பர்
ஆகமத்தால் -அறியலாம் -வேதத்தால் -சாஸ்திரீய கம்யம் -பூத சங்காதம் ஏற்பட்டாலே பரார்த்தம் -பரன் ஆத்மாவுக்காக –
பட்டார்-தார்க்கிகர் பக்ஷம் -மானஸ ப்ரத்யக்ஷம் -நான் -எனக்கு என்னைப் பற்றி தெரியும் -நான் பிரகாசிக்கிறது எனக்கு –
அஹம் சப்த கோசாரம் அந்த அந்த ஆத்மாவுக்கு -மானஸ ப்ரத்யக்ஷ வேதம் –
பிரபாகர் -பக்ஷம் -குடம் -அறிவது -அயம் கட-இது குடம் -பிரமேயம் குடம் -பிரமாணம் -பிரமாதா இல்லை -மானம் மேயம் தான் ஒளி விடும்
கடம் அஹம் ஜானாமி -அறிகிறேன் -பிரமிதி உண்டே இதில் –
பாட்டர் அஹம் கடம் முதலில் அப்புறம் அஹம் கடம் ஜானாமி இப்படி இரண்டு படிக்கட்டுக்கள் என்பர்

சகல விஷய வித்தி -க்ராஹதயா ஏவ -கிரகிக்கும் இருந்தால் தானே கிரகிக்கப்படும் –
அடுத்து சாங்க்யர் -ஞான ஸ்வரூபம் -பிறப்பு இறப்பு இல்லாமல் ஸ்வயம் ஜோதி
ஸ்வம் பாவம்- சோ பாவ- தன் பாவம் ஸ்வபாவம் -தானே ஒளி -இதர அநதீனம்-
வேதாந்தி -ஆகமம் -அனுமானம் -மானஸ ப்ரத்யக்ஷம் மூன்றுக்கும் இடம் உண்டு
ஆத்மா வார்த்தை வியவகாரம்-நான் கையால் எடுத்தேன்-சங்கை -நான் எடுத்தேன் -நான் வேறே அஹம் வேற –
கீதா படித்து அறிந்து -ஸ்திரப்பட -என்ன அளவு -தெரியாதே -ப்ரத்யக்ஷம் இல்லை -அணு சாஸ்திரம் சொல்ல -நம்பி –
அடுத்து நித்யம் என்று அறிந்து –
தனக்கு தோன்றி -சாஸ்திரம் மூலம் உறுதி -தர்க்கம் யுக்தி மூலம் ஸ்திரப்படுத்தி -மனம் புத்தி ஆத்மாவை –
விளக்கினை விதியினால் காண -ப்ரத்யக் விஷயம் -த்யானம் -யோகஜம் –
வ்யவகாரிகம் ஆகம வேத்யம் யுக்தி யோகஜம் நான்கும் –
ப்ரத்யக்ஷமாக மட்டும் இல்லை -இப்போது இல்லை இங்கே இல்லை -அப்போது அங்கே -அறிந்து செய்ய வேண்டியது
சேஷபூதன் என்று அறிந்த பயன் பகவத் ஏக சரண்யம் -பகவத் ஏக போக்யம் என்று அறிந்து -சரணம்
ச சொன்ன உடன் கூட்டிக் கொண்டு பிரத்யக்ஷம்
சாம்யாபத்தி-அடைந்து -இப்படி ஐந்து நிலைகள் -தோன்றியதை தகவல் உடன் அறிந்து ஸ்திரப்படுத்தி –
ஸ்வ இதர விலக்ஷணன் -விசத-ஆகமம் விசததரம்-அனுமானத்தால் – விசததமம் -உபாசனம் மூலம்
அபரோஷம்-நித்யம் அணு ஞாத்ருத்வம் ஆகமத்தால் -அறிந்து -க்ருஹீதோயம் முக்த –
சங்கை இல்லாமல் நேராக அனுபவம் அங்கே

தார்க்கிகர் ஆத்மா விபு -பரம மஹான் என்பர் -இவரைப் போலே ஸ்வரூபத்தால் வியாப்தி -நையாயிகன்
வேதாந்தி அணு பரிமாணம் -வாலாக்ரா சத பாகம் சததா –வியாப்தி தர்மபூத ஞானம் –
உடம்பில் எல்லா அவயவ வலியும் உணரலாம் -சைதன்ய மாத்திரம் வியாப்தி
ஜைனர் -தேகம் அளவு-சரீர பரிமாணம் -நிர்விகாரத்வம் பாதிக்கும்
சாங்க்யர் மனஸ் அளவு-அந்தகாரணத்தால் அளவுபடுத்துகிறது உபாதியால்

ஞானத்து அளவு வியாபகத்வம் -ஸுவ்பரி -50 -சரீரத்து அளவும் வியாப்தி -ஒரே ஆத்மாதான் -அங்கும் –
யோகத்தால் பல சரீரங்களுக்கும் வியாப்தி -ஸ்வ பாவத்தால் வியாப்தி -தர்ம பூத ஞானத்தால் வியாப்தி
ஸ்வரூபத்தால் வியாப்தி நையாயிகர்
ததா ஷணிக-புத்தன் -க்ஷணிக விஞ்ஞானம் -ஞானம் உண்டு என்றாலும் க்ஷணம் தோறும் மாறும்
சாருவாகர் சரீரத்தில் சூடு இருக்கும்வரை இருக்கும் ஆத்மா -யாவது சரீரத் உஷமா
பிராகிருத பிரளயம்–மொத்தமும் அழிந்து – -ப்ரஹ்மதேவர் ப்ரஹ்ம தத்த-வரை
ஆ மோக்ஷம் -வரை ஆத்மாவுக்கு காலம் ஓவ்டுலோமி-சொல்வார்
கூடஸ்த்தர் -நிர்விகாரம் -கொல்லம்பட்டறை இருப்பது த்ருஷ்டாந்தம் -ஆத்மா நிர்விகாரம் நித்யம் -சித்தாந்தி நையாயிகர்
எல்லா சரீரத்தில் ஒன்றே என்பர் சிலர் -ப்ரீத்தி க்ஷேத்ரம் நாநா பூத சித்தாந்தி -சரீரம் தோறும் உண்டே
ஏக ஜீவ வாதம் -மாயாவாதியில் ஒரு சாரார் –
ச -அணுகாத சமுச்சயம் -இன்னும் பல மதி விகற்ப்புக்கள் உண்டே

இதே போலே பரமாத்மா -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -ஆதி காரணம் ஒருவனை
சாருவாகர் புத்தர் ஜைனர் -இல்லை -என்பார்
பூர்வ பக்ஷிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவமதியாமல் கேசித் அந்யா என்று சப்த பிரயோகம்
ஒத்துக்கொள்பவர்களும் –
அத்வைதி ஒரு சாரார் -அஸ்தமனம் இல்லாமல்-வேறுபாடு இல்லாமல் -மிதி -பிரமித்தி மேயம் மானம் மாதா இவற்றுள்ளும்
ஈஸ்வர ஈஸித்வய -மான -பேத விகற்பம் -கற்பனை என்பர் –
ஞான மாத்ர ரசமாக இருப்பர்-ஆகாசாதிகளும் கற்பனை -அவனும் கற்பனை -அநாதி அவித்யா -உபாதியால் -தோற்றப்பட்ட
உப தர்சித-வியாதி பேதம் -ஆகாசாதிகள் வேறுபாடு போலே -ஞான ஐஸ்வர்யாதி மஹிமை விகல்பயாதி –
ஆத்மா என்பதை உண்மை -ஆத்மா ஜீவாத்மா என்றால் பரமாத்மா சொல்ல வேண்டி இருக்குமே
இரண்டும் ஏறிடப்படுகிறது-என்பர் –
முத்துச்சிப்பி வெள்ளி பிரமித்து போலே -அவித்யையின் ஆதிக்யத்தால் -ஈசன் ஈஸித்வய
ஏதோக்த ஸ்வரூபம் -அவித்யா -மூலம் காம க்ரோதம் தோன்ற ஜீவன் -செல்லப்படுகிறார் -மாயை தொடர்பால் பரன் –
தத் குணசாரதயா-ப்ரஹ்மாதி ஸ்தாவரம் -வேறுபாடு இல்லாத ஒன்றுக்கு -ப்ரகல்பிதம் விவித ஜீவ பேதம்-
ஸ்வா தீந விவித விசித்திர -விவர்த்த ஸ்வபாவம் மாயையால் -பரன்
ஹிரண்யகர்ப்ப ப்ரவர்த்தகன் யோகமதம்-மரபு அணுக்கள் கூட்டம் -அறிவின் பேதம் –
மரம் ஜங்கமம்-மகரந்த சேர்க்கை குரங்கு சிங்கம் யானை மனுஷ்யன் பிரம்மன் -விஞ்ஞானிகள் கொள்கை
ப்ரக்ருதி பிராகிருதம் -அசேதன அம்சமே அறிவு -என்பர் -தனித்து மனம் ஒத்துக்க கொள்ள மாட்டார்கள்
பிராகிருத ப்ரக்ருஷ்ட சத்வம் -அதிகமான சத்வம் உள்ள பகுதி ஆத்மா என்பர் -உபாதான நிமித்த ஸ்வ தந்த்ர பிரகிருதி என்பர்
நாம் ஸ்வ தந்த்ர ஈஸ்வரன் பிரகிருதி கொண்டு
பரிணாம விஷய மாத்திரமே ஈஸ்வரன் என்று பெயர் என்பர் -ஸ்வ தந்த்ர இல்லையானால் ஆட்டிப் படைக்க பரமாத்மா இருக்க வேண்டுமே –
நித்ய உத்ரிக்த்த சத்வ பகுதி -ப்ரக்ருஷ்ட சத்வ -அதனால் சம்பாதிக்கப்பட்ட ஈஸ்வர பெயர் -என்பர் –

நியாய வைசேஷியர் –
சாங்க்ய யோக கபிலர் ஹிரண்யகர்ப்பர்
பூர்வ உத்தர மீமாம்சை
ஸ்வ தந்த்ர பிரகிருதி -பிரதானம் -சத்வ குணம் உயர்ந்த பகுதி ஆத்மாவாகி -என்பர் ஆத்மா பேரில் ஏறிட படுகிறான்
ஈஸ்வரன் உள்ளார் இல்லார் -ஆத்மாவை தவிர்ந்த இல்லையா -அஞ்ஞானம் -உபாதி -பல வாதங்கள்
பரிணாம வாதி -யாதவ பிரகாசர் பக்ஷம் -கடல் -நுரை -நீர் குமிழி அலைகள் -பேதங்கள் -எதனுடன் சேராமல் –
கடலில் வேறுபட்டவை இல்லை -பரிணாமம் போலே ஆத்மாவே பரிணாமம் -ஜடம் ஜீவ ஈஸ்வர ரூபமாய் -ஆகும் என்பர்
ஞானம் உள்ள ஆத்மா -கடல் -நுரையா அலையா நீர் குமிழியா நீரா -பிரித்து பார்க்க முடியாதது போலே –
பரிணாம வாதம் யாதவ பிரகாசர் வாதம் -ஜடம் ஆத்மா பரமாத்மா மூன்றும் உண்டு என்பவர் இடரும்

அடுத்து -அ பரிணாம வாதி
பிரதி பிம்பம் -வாதிகள் -ஆத்மாவே உள்ளது -மாயையால் பிரதிபலிக்கிறது -ஈஸ்வரன் என்று தோற்றி –
அந்தக்கரணத்தில் பிரதிபலித்து ஆத்மா -ஆத்மா உள்ளது -பரமாத்மா ஜீவாத்மா பேதம் இல்லை என்பர் –
இரண்டு பிரதிபம்பங்களே இவை
ஸூ மாயா -விசித்திர அந்தக்கரணம் -இரண்டிலும் பிரதிபலித்து
விசித்திரம் -வேறே வேரேகா காட்டும் -ஒரு சமயம் அனுகூலமாகவும் ஒரு சமயம் பிரதிகூலமாயும் இருக்குமே
ஆகவே விசித்திரம் என்கிறார் –

சித்தாந்தி -அன்யே து -இதற்கும் இந்த சப்தம் -ஸ்வ ஆதீன த்ரிவித-சேதன –
பத்த முக்த நித்ய -மூன்றும் -அசேதன -சுத்த சத்வ மிஸ்ர தத்வ காலம் -அபிமானி தேவதைகளுக்கு
குண சம்சர்கம் உண்டு என்பதால் நல்ல காலம் இத்யாதி
ஞாத்ருத்வம் இல்லாமையான நித்ய விபூதி பிரகிருதி காலம் மூன்றும் அசேதன த்ரயம்
ஞாத்துருத்வம் உள்ள பத்த முக்த நித்ய மூன்றும் சேதன த்ரயம்
ஞானம் உடைமையால் வேறுபாடு -ஞான ஸ்வரூபத்தால் வேறு பாடு இல்லை
புஸ்தகம் -ஞானமும் ஞானம் உடைமையும் இல்லை
நித்ய விபூதி -ஞான மாத்திரம் ஞானம் உடைமை இல்லை
ஆத்மா ஞானமும் ஞானம் உடைமையும் உண்டே
இவற்றின் ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஈஸ்வர அதீனம்
ஸ்வா பாவிக-இயற்கையான -நிரவதிக எல்லை அற்ற -அதிசய மேன்மை -ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் –
சகல கல்யாண குண ஆர்ணவம் -புருஷ விசேஷம் -சர்வேஸ்வரன் -இத்தகையவர் என்று சொல்லி –

ஸ்வரூப ஸ்வாபாவ சங்கைகளை கீழே பார்த்தோம் -இனி யார் -மத பேதங்கள்
ஹரி ஹர விரிஞ்சு பாஸ்கராதி -தத் தத் மூர்த்தி பரித்யாக -த்ரி மூர்த்தி வாதிகளும் உண்டு -த்ரய தேவா துல்யா-
மூர்த்தி விசேஷ விஷயம் -திருமேனி -பற்றியும் வாதங்கள் –
நித்யத்வ -அநித்ய -ரூபம் -இங்கு -ஸ்வரூபம் ஏற்றுக் கொண்டாலும் -பாதிக்கத்தவ பஞ்ச பூதங்களால் என்றும்
பிராகிருத அப்ராக்ருத -ஸ்வாரத்த பரார்த்தம் என்றும் -பக்தானாம் ப்ரகாஸதே-இப்படி விசாரங்கள்

பரிஜன பத்னிகள்-விசாரம் -ஸ்தான விசேஷ விசாரம் -இப்படி பலவும் உண்டே

பிரமாணம் -வேதம் மட்டுமே -/ ஆகம -அனுமானம் இரண்டையும் என்பாரும் உண்ட –
வேதம் கொண்டு அறிந்து அனுமானம் கொண்டு உறுதிப்படுத்தி த்யானம் -மானஸ சாஷாத்காரம்-
பிரேம பூர்வக -விசிஷ்ட ப்ரத்யக்ஷ சமானா காரம் –
ஆத்மா பரமாத்மா சம்பந்தத்திலும் பல வாதங்கள்
அநாதி அவித்யா உபாதியால் பேதமாக தோற்றம் -சங்கரர் -ஈசன் ஈஸித்வய தொடர்பு -கயிறு பாம்பு –
ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவும் மாற்றி தோற்றும் தன்மை -அவித்யை -பேதத்துக்கு இடம் கொடுக்கும் –
அபேதம் உண்மை -ஏக தத்துவமே பரமார்த்தம் –
பரமார்த்தம் -ஜகாத் பத்தி இரண்டையும் நாம் சொல்வதால் -ஒருவனே ஜகாத்தும் உண்மை –
சரீரமாக உண்மை -பிரகாரமாக உண்மை –
ஒருவன் -நிகர் அற்றவன் -ஏக சப்தம் -நம் சம்ப்ரதாயம் -..

இரண்டு தத்வ வாதிகள் –
நான் பிம்பம் இரண்டும் தெரியும் -தத்வம் ஓன்று -இரண்டாவது இல்லை – –
வ்யதிரேகம் உண்டு -பிரதிபிம்பம் இருப்பதால் –நேராகவும் சேவித்து கண்ணாடி சேவையும் சேவிக்கிறோமே –
ப்ரதிபிம்ப வாதிகள் -இரண்டு என்று சொல்ல இடம் கொடுக்கிறதே –

பாஸ்கர பக்ஷம் -ஸ்வஸ்தி ஐக்கியம் -உபாதியால் பேதம் பேத அபேத வாதம் -இயற்க்கை அபேதம் –
உபாதியால் பேதம் -ஸ்வரூபத்தால் அபேதம் என்றவாறு

நாநாதவம் யாதவ பிரகாசர்-வேறே வேறே தத்வங்கள் -அபேதமும் உண்டு -வேறு படாமையும் உண்டு –
அம்சம் அம்சி பாவம் -உடல் -கை கால் பல உண்டே -அதே போலே –
சித்தாந்தி -பரதந்த்ரா லக்ஷணை-நாநா சம்பந்த -ஜீவ பர சம்பந்தம் -பிதா -சேஷி -ஸ்வாமி -சேவக சேவகி இத்யாதி நவவித சம்பந்தம்
அப்ருதக் சித்த விசேஷணம் -சமவாயம் -வைசேஷிகர் சொல்வது இல்லை –
பரகத அதிசய ஆதேயன இச்சையா -சேஷத்வ லக்ஷணம்

ப்ராப்தியிலும் வாதங்கள் உண்டே -மரணம் -இயற்க்கை எய்தினார் பாஞ்ச பவ்திகம் -பரமபதித்தார் -ஸ்தானம் –
இறைவன் அடி சேர்ந்தார் -கைங்கர்ய -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -ஆசார்யர் திருவடி அத்ரபரத்ர
சாருவாகர் -சர்வ சூன்யம் -ஆத்ம ஸ்வரூப அழிந்து மோக்ஷம் –
அவித்யா அஸ்மயத்தி லக்ஷணம் யோகாசாரம் அத்வைதிகள் -ஐக்கியம் –
நியாய வைசேஷகர் -ஞானம் ப்ரதயத்னம் போன்ற குணங்கள் போனால் மோக்ஷம்
சாங்க்யம் கைவல்யம் மோக்ஷம் –
சத் பாவ ப்ரஹ்ம பாவ சா தர்ம லக்ஷணம்-அத்வைதிகள் -ஒரு சிறு பகுதி நமக்கு அஷ்ட குண சாதரம்யம்
சாந்தி தேஜஸ் இவனுக்கும் வருமே
முகில் வண்ணனுக்கு நிழல் – பாட வல்லார்-சாயை போலே அணுக்கர்களே -இது வேறே
மீமாம்சகர் -ஸ்வரூப ஆவிர்பாவம் -நம் போலே -ஸ்வேந ரூபேண -இவர்கள் ஈஸ்வரனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
ஸ்வரூப ஆவிர்பாவமே மோக்ஷம்
சத் குண அனுபவ ஜனித–நிரதிசய ஸூக சம் உன்மேஷ -தூண்டப்பட்ட ஏகாந்திக ஆத்யந்திக-ப்ரஹ்மமே விஷயம்
இடைவிடாமல் -அவிச்சின்னத்வம் – -கிங்கரத்வ லக்ஷணம் -மோக்ஷம் -மேலைத்தொண்டு உகந்து –

சாதனம் -இதிலும் பல வகை
கர்ம யோகம் -ஞான யோகம் லப்யத -அன்யதர அநுக்ரஹீத அன்யதர -அங்கம் அங்கி மாறுபடும் -தரம் இரண்டில் ஓன்று –
கர்ம ஞான யோகங்களில் ஓன்று அங்கி ஓன்று அங்கம்
உபய லப்யம் -ஞான கர்ம சமுச்சயம் -அவித்யா வித்யாஞ்ச -அவித்யா ம்ருத்யம் -கர்மத்தால் சம்சாரம் தாண்டி வித்யையால் மோக்ஷம்
பக்தி யோகமே -ஞான கர்ம அங்கங்கள் -உபய பரிகர்மித்த ஸ்வாந்தம் மனஸ் -சம்ஸ்காரம் இவற்றால் –

பக்ஷங்களில் பலாபலன்கள் அறியாமல் சங்கை -குழம்பி இருக்க –
யாவது- ஆத்மா பரமாத்மா ஸ்வரூபம் சம்பந்தம் பிராப்தி சாதனம் -நிர்ணயத்துக்கு பிரமாணம் கொண்டு –
இவற்றைத் தெளிவு படுத்தவே இந்த பிரபந்தம் –

ப்ரஹ்ம மீமாம்ஸா இவற்றை விளக்க வந்தவை -இந்த கிரந்தம் மூலம் இவற்றை விளக்கி பரியாப்தி பிறவாமல்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய மநோ ரதித்து பின்பு ஸ்ரீ பாஷ்யகாரர் அத்தை நிறைவேற்றி அருளினார்

பகவத் பாதராயணர் -ப்ரஹ்ம ஸூத்ர காரர்
விவரணம் -வாக்ய காரர் த்ரவிடாச்சார்யார் -விருத்தி காரர்
போதாயனர் குறிப்பு உரை
பரிமித கம்பீர பாஷாணம் –
ஸ்ரீ வத் சாங்க மிஸ்ரர் -இன்னும் விரித்து -இவர் கூரத்தாழ்வான் இல்லை
பார்த்திரு ப்ரபஞ்சர் -பார்த்திரு மிஸ்ர சங்கரர் போன்றவர் எழுதி -ஸ்புடமாகவும் அஸ்புடமாகவும்
தெளிந்து தெளிவு இல்லாமலும் -அந்யதா ப்ரதிபாதகமாய் -மதாந்தரம்-
பிரகரண கிரந்தம் -இது -ஆத்ம சித்தி -யதாவத்தாக காட்டி அருள -ப்ரதிஜ்ஜை –
ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு -ஒரு பகுதி சாரம் பிரகரண கிரந்தம்-என்றபடி

ஸாஸ்த்ர ஏக தேச அர்த்தம் –ஒரு பகுதி மட்டுமே -ப்ரதிபாதனம் -சாஸ்த்ரார்த்த முழுவதும் அரிய உபயோகப்படும் –
பிரதமம் -ஆத்ம தத்வம் இப்படிப்பட்டது -என்று -சித்தாந்தம் -வேதாந்த தாத்பர்யம்
ஸ்வரூபம் –1-தேக இந்திரிய மன பிராணன் தீ -புத்தி -ஐந்தையும் விட அந்நிய
புத்தி ஞானம் -விஷய பிரகாசனம் -தர்ம பூத ஞானம் வேறே தர்மி வேறே -ஆத்மாவே ஞானம் -ஞான ஸ்வரூபம்
2-அநந்ய சாதனா —ஸ்வயம் பிரகாசம் -3-உத்பத்தி விநாசம் இல்லாதது -4-வியாபி -தேகங்கள் தோறும் புகுர சக்தி உண்டே –
அணு மாத்ரம் -அவன் சர்வ வியாபகம் –
5-பிரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னம்-வேறே வேறே -6-ஸ்வ தஸ் ஸூகி –எப்போதும் அனுகூல புத்தி இயற்க்கை –
ஸ்வா பாவிக ஆனந்தத்வம் –துக்கித்தவம் உபாதி அடியாகவே
கர்மத்தால் ஜென்மத்தால் முக்குண சேர்க்கையால் துக்கம் -இப்படி ஆறு பெருமைகள்

நான் என்கிற உணர்வுக்கு உடலே விஷயம் என்பர் -அதிகரணம் ஸ்தானம் இருப்பிடம் -ஸமான -அதிகரணம்
நான் என்றால் அறிவாளி அன்றோ உடம்பில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பு ஆகும்- அவயவ சேர்க்கையால் வந்த ஞானம்
அது போனால் முக்தி என்பர் –
உபசார வார்த்தை -போரில் புலி -புலி போன்ற வீரம் மட்டும் அந்வயம் -சாஷாத் –
நாம் அஹம் தேக விஷயத்தில் உபசாரம் -ஆத்மாவில் பர்யவாசிக்கும் சொல்ல
சாஷாத்தாகவே சொல்லலாம் முக்கிய வ்ருத்தி முடியாவிட்டால் தானே பர்யவசான வ்ருத்தி என்பர் -ப்ரத்யக்ஷமாக தேகம் குறிக்கும்
நான் -தேக அவயவங்களை குறிக்க வில்லையே -நான் பேசுகிறேன் -ஏக தேசம் தானே –
கிரியைக்கு உள்ள அவயவத்தையே தானே குறிக்கும்-அவயவி யான தேகத்தை குறிக்காதே -என்று ஆக்ஷேபிக்க –
உடலைப் பற்றிய அறிவு அம்சங்களைப் பற்றி இருக்க வேண்டாமே -நான் அறிகிறேன் மனசால் தானே என்னும் போது
அவயவங்களை கிரஹிக்க வேண்டாமே என்பான் -இந்திரியங்களுக்கு புலப்படாத பரம அணுக்கள் சேர்ந்து –
சேர்ந்த பின்பு -அவயவி பிரத்யஷிக்கிறோம்-
வாயு ஸ்பரிசத்தால் -வந்ததை அறிகிறோம் -ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
நான் ஆத்மாவை குறிப்பதாக சொன்னால் ததீய குணங்களை க்ரஹிப்பது இல்லையே
ரூபம் கந்தம் ரசம் விசேஷ குணம் –காரணங்கள் சேர்ந்து கார்யம் -காரண பூர்வகமாக இருக்கும் நியாயம்
ஞானம் சரீரத்துக்கு விசேஷ குணம் என்பர் -காரணத்தில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க -அனுமானத்தை ப்ரத்யக்ஷம் வெல்லும் என்பர் –
பரம அணு தோறும் ஞானம் உண்டு என்பார் ஆகில் சரீரத்தில் பல சேதனர்கள் உண்டாக வேணுமே -என்றும் ஆக்ஷேபிக்க -ப்ரத்யக்ஷ பாதிதம்-
விருப்பம் -தேகம் பண்பு -இந்திரியங்களுக்கு உண்டு -அசைதன்யம் கடாதிகள்-இவற்றுக்கு இல்லையே –
புடவை வேறே உடம்பு வேற -இடுப்பு உறுத்த வேறே நூல் புடவை உடுத்தி கொள்கிறோம் –
அத்யந்த வ்யாவர்த்தம் சரீரத்துக்கு சைத்தன்யம் பொருந்தும் என்பர்
தேகத்துக்கு ஞானம் அழகாக பொருந்தும் -என்பர் –
தேகம் ஏவ ஆத்மா -ப்ரத்யக்ஷமாக தெரிகிறதே -சாருவாக வாதம் -நான் அறிகிறேன் -அஹம் ஜானாமி -எத்தை அறிகிறீர் –
பருத்தவன் என்று -உயரம் சிகப்பு எங்கே இருக்கு -கண்ணுக்கு உடம்பு தானே படுகிறது -தேகத்தின் பண்புகள் –
ஆகவே நான் சொல்வது சரீரத்தை குறிக்கும் என்பர்
அஹம் சப்த கோசாரம் ஆத்மா வேதாந்தம் -அஹங்கார கோசாரம் தேகம் -ஸ்தூலோஹம் இதி தர்சநாத் –
வேறே சொல்வீர்கள் ஆகில் பிரத்யக்ஷ விரோதம் என்பர்
சேர்க்கை விசேஷத்தால் தேகத்தில் சைதன்யம் தோன்றும் -வெத்தலை பாக்கு -சிகப்பு உதாரணம்
சம்யோகம் -மட்டும் இல்லை -வாயில் மெல்லுதல் – உஷ்ணம் வர சிகப்பாக என்று ஆக்ஷேபிக்க –

துணி சித்ரம் வர்ணம் -த்ருஷ்டாந்தம் -நூலில் இல்லாத ஹம்சம் சித்திரத்தில் பார்க்கிறோம் –
மயில் கண் நூலில் இல்லா விட்டாலும் பார்க்கிறோம் –
ஆகவே காரண பூர்வகம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை -விசேஷ குணம் சேர்க்கையில் பார்க்கிறோம் –
அதே போலே தேகத்துக்கு ஞானம் இருக்கலாம் என்பர் –
விசேஷ குண காடின்யம் -பனிக்கட்டியில் -ஜல பிந்துவில் இல்லையே -காரண பூர்வகம் இல்லையே –
அடர்த்தியாக சேர்ந்ததால் வந்த தண்மை -சம்யோக விசேஷம் என்று சொல்ல
அறிவுக்கு இலக்காக உள்ள தேகம் அறிவுக்கு இருப்பிடமாக எப்படி -தேகம் அறிகிறது -தேகத்தை அறிகிறோம் -விரோதி வருமே என்றால்
கர்மாவாகவும் கர்த்தாவாகவும் –
ஆத்மா பக்ஷத்தில் இதே ஆஷேபம் வருமே என்பர்
ஞாத்ருத்வம் -மனம் கர்த்தா -தர்மி ஞானம் நான் -தன்னை உணர்ந்து –
பிருத்வி வாயு தேஜஸ் நீர் -ஆகாசம் இல்லா நான்கும் சேர்ந்து ஞானம் வரும் -கள்ளுக்கு மயக்கம் –
அதன் காரண பொருள்களில் இல்லையே -என்பர் சாருவாகர்
தேகம் விழுந்தால் மோக்ஷம் -தனித்து இல்லை

நான்கு -ஆகாசம் தவிர -மற்ற கூட்டரவே சரீரம் -சைதன்யம் ஞானம் வரலாம்–பிருத்வி அப்பு தேஜஸ் வாயு –
இவற்றில் ஞானம் இல்லா விட்டாலும் –
பனை கள்ளில் மயக்கும் சக்தி இருப்பது போலே -பூர்வ பக்ஷம் -சாருவாக லோகாயுத மதம்

மேலே சித்தாந்தம்
பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு விரோதம் –
அஹம் இதன்காரவ் -நான் இது சொல்லுகிறோம் -தேகம் ஆத்மா அல்லவே -அஹம் வேறே இதம் வேறே –
ஒரு பொருளில் இரண்டுக்கும் இருக்காதே -நான் உயரமானவர் -அஹம் தத்வம் வேறே இதம் வேறே அன்றோ
பிரத்யக் அர்த்தம் அஹம் -பராக் அர்த்தம் இதம் அன்றோ
என்னுடைய கை சொல்கிறோம்
இதம் -என்னும் சொல்லால் கிரஹிப்பத்து கை வீடு போலே -சரீரத்தை ஆத்மா இடம் பிரித்தே அறிய வேண்டும் –
ஸ்வ ஆத்ம கோஸரா -தானாகிய ஆத்மாவை பொருளாகக் கொண்டது அஹம் சொல்
ஸ்வ அந்யா கோசரத்வம் இதம் –
ஒரே விஷயத்தில் அஹம் இதம் இரண்டும் பொருந்தாதே –
இதம் சரீரம் கௌந்தேய -கிருஷ்ணன் மட்டும் இல்லை -நாமும் இதே பிரயோகம் செய்கிறோம்
இத்தை மேலும் விளக்குகிறார் –

நான் அறிகிறேன் -அஹம் ஞானாமி -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –
இது குடம் என்னும் அறிவுக்கு இருப்பிடம் ஆத்மா -விஷயம் குடம் –
ஞானத்துக்கு ஆஸ்ரயம் வேறே விஷயம் வேறே -ஆத்மா சரீரம் வேறே தானே இதே போலே
ப்ரத்யக் விருத்தி தன்னைப்பற்றிய அறிவு -இதங்கார கோசாரம் சரீரம் –பராக் —
அகங்கார கோசாரம் ஆத்மா -நிஷ்க்ருஷ்டமேவ -பிரித்தே அறிய வேண்டும்
சேமுஷி -ஞானம் -அறிவு வேறே அறிபவன் வேறே –

ஒரே விஷயத்தில் தன்மை மாறினால் -பிதாவே புத்திரனாக –அகார பேதம் ரூப பேதம் போலே
அஹம் இதம் ஒரே வ்யக்தியிலே -சொன்னால் என்ன என்றால் இது ப்ரத்யக்ஷ விரோதம் ஆகுமே –
சாருவாகன் இடம் வாதம் ஸாஸ்த்ரம் கொண்டு சொல்லமுடியாதே -அவன் அத்தை ஒத்து கொள்வது இல்லையே –
ப்ரத்யக்ஷம் கொண்டே சாதிக்கிறார்
தேவதத்தன் -தண்டம் -அஹம் தண்டி -தண்டம் பிடித்து கொண்டு இருப்பவன் -நான் கோலைக் கொண்டவர்

மனசைக் கொண்டே ஆத்மாவை அறிகிறோம் -கண்களுக்கு விஷயம் இல்லை –
நியமித பஹிர் இந்திரிய வ்ருத்தி -வெளிப்புலன்களையும் அடக்கி மனசையும் அடக்கி –
ஆத்மாவை அறியும் பொழுதே -உடம்பு தெரியாதே -அவயவ கிரஹணம் இல்லையே -ஸ்தூலமாக இருந்தாலும் –
நீ சொல்வது போலே ஒன்றாக இருந்தால் இது தெரியுமே

இதுக்கு ஆஷேபம் -நையாயிகர் பரம அணு -த்வய அணு–இப்படி மூன்று -த்ரய அணுகம் -இத்தையே ஜகத் காரணம் என்பர் –
த்ரய அணுகம் கிரஹிக்கிறோம் -அவயவம் த்வ அணுகமோ பரம அணுவோ கண்ணில் படவில்லையே –
அசேதனங்களுக்குள் சின்னதாக த்ரய அணுகம்
ஜன்னலை திறக்க -சூர்ய கிரணங்கள் -மூலம் கண்ணுக்கு தெரியும் த்ரய அணுகம் -ப்ரத்யக்ஷ யோக்ய அவயவம் -இதுவே

வெளி இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படும் அவயவி -அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹிக்கப் படும்
மனசால் நான் என்னும் சரீரத்தை அறியும் பொழுது அவயவங்கள் உடன் அறிய வேண்டும் -என்பர் பூர்வ பஷி
வ்யாப்தியை குறைக்க பிரமாணம் இல்லையே –
மனசால் கிரஹிக்கப்படும் வஸ்து வெளிப்புலன்களால் கிரஹிக்கப்படும் வஸ்து இரண்டும் இருக்க வேண்டுமே –
மனசுக்கு வெளி இந்திரியங்கள் உதவியால் மட்டுமே கிரகிக்க முடியும் -எல்லாமே அது தான் –
விசேஷணம் வேண்டாமே -நீ சொல்வதும் அங்கே போய் முடியுமே –
ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு -ஸ்பர்சத்தால் மட்டுமே அறிகிறோம் -வாயுவுக்கு அவயம் இல்லையே –
கடம் படம் -இவற்றில் அவயவங்கள் உண்டே

ஸ்தூலோஹம் -நான் பருத்தவன்–சரீரத்தின் குணத்தை ஆத்மாவிடம் சொல்லுகிறோம் –
ஸ்தூலமான சரீரத்தை ஏற்றுக் கொண்ட நான் என்று சொல்ல வில்லையே
இப்படி சொல்லும் பொழுதும் சரீரத்துக்குள்ளே அஹம் ஆகாரம் -வஸ்து தானே அஹம் கோசாரம் –
தேகத்தை அஹம் என்ற சொல் சொல்லாதே –
ஸ்தூலம் பால்யம் இவை ஆத்மா பர்யந்தம் பர்யவசிக்கும் -எனவே தேகமும் ஆத்மாவும் ஓன்று என்பார்
ஓன்று இல்லை -இரண்டு தத்துவங்களே அப்ருதக் சித்தம் என்பதால் –விட்டுப்பிரியாமல் -பர்யவசான வ்ருத்தி -அன்றோ இது –
உபசாரத்துக்காகவா முக்கியமாகவா –அதுக்குள்ளும் பரமாத்மா -இது தனி விசாரம் –

மமேதம் க்ருஹம் -பேத ப்ரதிபாதம் உண்டே -வ்யவஹாரத்திலும் காணப்படுகிறதே
என்னுடைய ஆத்மா சொல்லக்கூடாதே -சொன்னால் -நானாகிய ஆத்மா என்பதையே சொல்கிறோம் –
நடு மதியத்தில் இருக்கிறோம் சொல்வது போலே -அப்ரதானம் -உபசார வார்த்தை என்றபடி
என்னுடைய தேகம் -வ்யவஹாரம் -நானே தேகம் சாருவாகர் பக்ஷம் -உபசாரமாக சொல்வதாக கொண்டால் என்ன என்று ஆஷேபம் –
ப்ரத்யக்ஷ விரோதி ஆகுமே சிலா புத்ரேக சரீரம் அதாவது -பொம்மையின் சரீரம் –சொல்லும் பொழுது
பொம்மை ஒரு வஸ்து சரீரம் வஸ்து இரண்டு இல்லையே -இதம் அர்த்தமே பொம்மையும் சரிரமும்
மம அயம் ஆத்மா -என்னுடைய இந்த ஆத்மா –உபசார வார்த்தை -உபய பஷத்திலும் உபசார பிரயோக சம்மதம்
என்னுடைய ஆத்மா -அஹம் சப்தம் என் -மம -வந்த பின்பு மீண்டும் ஆத்மா -உபசார
என்னுடைய தேகம் -என் -என்றால் தேகம் -அஹம் சப்த கோசாரம் தேகம் ஆகுமே –
நீ இதம் சப்தம் தானே தேகம் என்றாய் -இது வரை -ஆகவே நீ உபசாரமாகக் கொள்ள முடியாதே -என்று சமாதானம் –
நான் உயரமானவர் -தேகம் உயரம் -லக்ஷணையால் தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மாவையே நான் குறிக்கும் என்றவாறு

இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது அவி விவேகிகள் -ஒன்றாக பார்ப்பது -எதற்க்காக என்றால் –
அபேத பிரமம் -பிராந்தி -வேறுபாட்டை கிரஹிக்க முடியாமல் –
பாஹ்ய விஷயம் -பரஸ்பர வ்ருத்தம் ரூபம் -பரிமாணம் -சங்க்யா எண்ணிக்கை-சந்நிவேசம் ஆகாரம் –
வேறுபாடு -கிரஹிக்கிறோம் -வ்யதிரேகம் புற விஷயங்களில்
ஆனால் ஆத்மாவில் -ஆத்மாக்களுக்குள் வாசி இல்லை –
சாத்ருசம்-வெள்ளி முத்துச் சிப்பி -பாம்பு கயிறு -பிரமிக்க சில ஒற்றுமைகள் இருக்க வேண்டுமே
ஆத்மா -தேகம் இரண்டுக்கும் பொது தன்மைகள் ஒன்றுமே இல்லையே –
இரண்டும் வேறே வேறே இல்லை வஸ்து ஒன்றே என்பான் பூர்வ பஷி
இதுக்கு சமாதானம்

இச்சைக்கு தகுந்த வியாபாரம் -நான் அங்கே போக நினைக்க -தேகம் -முயன்று -இச்சா சங்கல்பம் —
இரண்டும் ஆத்மா இடம் -பிரயத்தனம் -தேகத்திடம் –
இச்சா அனுவியாதி-அதன் வழி செல்லும் தொடர்பு உண்டே -பொதுத்தன்மை -சாத்ருசம் உண்டே –
இதுவே அபேத பிரமத்துக்கு காரணம் –

பிரனீஹித மனஸ்- யோகிகள் வாசியை நன்றாக அறிகிறார்கள் -அஹம் -அவயவம் இல்லாததாக -ஆத்மாவையையும்
இதம் -அவயவம் கூடி -ஸ்தூலம் தேகம் -வேறு பட்டதாக ப்ரத்யக்ஷத்தாலே காண்கிறார்கள் –

அனுமானம் -மேல் -நான் அறிகிறேன் -அறிவுக்கு -உடம்புக்கு இல்லை -வேறு பட்ட ஒன்றுக்கே -விஷயம்
அப்ரகாசமான தத் அவயவ ப்ரதிபாத்யத்வாத் –
எந்த அறிவு சரீரத்தை கிரஹிக்கறதோ அது அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹித்து அறியும்
நான் அறிகிறேன் -வேறு பட்ட ஆத்மாவை இலக்காக கொண்டதே ஆகும் –
அறிவுக்கு அவயவங்கள் பிரகாசிக்காதே –
யாது ஒரு அறிவு சரீரத்தின் அவயவங்களை இலக்காகாமல் உருவாகிறது அது ஆத்மாவுக்கே -இது முதல் அனுமானம்

சரீரம் அஹம் -என்பதுக்கு இலக்காகாது -இது என்று கிரஹிக்கிறபடியால் -இது கடம் -இது சரீரம் –
அஹம் சொல்லுக்கு பொருளை ஆகாதே -இரண்டாவது அனுமானம்

மூன்றாவது அனுமானம் -பாஹ்ய இந்திரியங்களுக்கு புலப்பட்டால் -சரீரம் -அவயவங்கள் உடன் கூடி இருப்பதால்
சப்தத்துக்கு சப்த ஸ்வரம் -இத்யாதிகள் உண்டே –
கடம் முதலானவை கண்ணால் கிரஹிக்கிறோம் -அவயவம் அற்ற ஆத்மா -கண்ணால் கிரஹிக்கப்படாதது –

எம்மா வீட்டில் எம்மா வீடு –
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
தேஹே கதம் ஆத்ம -பரார்த்தம் தேஹே

அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்–பிறருக்காக இருப்பதே இல்லை -ஸ்வ தந்த்ரன் -தனக்காகவே இருக்கும் -எல்லா பொருள்களும்
சரீரம் பிறருக்காகவே இருக்கும் -ஆத்மா மொத்தம் தனக்காகவே இருக்கும் –
அவயவங்கள் உடன் கூடி இருந்தால் பிறருக்காக இருக்கும்

ஸர்வஸ்ய பாஹ்ய ஆத்யந்த்ர போக்யம்-சப்த ஸூக -இரண்டும் ஆத்மாவின் பொருட்டே –
ஆத்மா அநன்யார்த்தம் -ஸர்வஸ்ய சேஷி -தனக்காகவே –
சரீரம் பிறர்க்காகவே ஏன் என்றால் கூட்டரவாக இருப்பதால் –
படுக்கை -ரத்தம் -நாற்காலி -அவயவங்கள் உடன் -பிறர்க்காகவே -பிறர் யார் -ஆத்மா
அவன் சரீரம் தானே ரதத்தில் -இருக்குமே -பிறர் சரீரமாக அவயவத்துடன் இருந்தாலும் என்பான் பூர்வ பஷி –
யாது ஓன்று மற்ற ஒன்றை தன் உபயோகத்துக்காக கொள்ளுமோ அதுவும் சேர்த்தி பொருள்
ஆத்மா சேர்த்தி பொருளை உபயோகமாக கொள்ளுவதால் அதுவும் சேர்த்தி பொருள் -அவயவங்கள் உடன் கூடியது என்பான் பூர்வ பஷி
அப்பொழுது ஆத்மாவும் பிறருக்காக இருக்கும் -பிரத்யக்ஷ விரோதம் பிறக்கும்
இது அறிந்து தானே சேஷி -அஹம் போகி- நானே எல்லாம் யானே என் தனதே என்று இருக்குமே —
ஆழ்வார் அத்தை சொன்னது பூர்வ பக்ஷம்
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
ஆத்மாநாம் அந்யத்-மேலே ஈஸ்வர சித்தியில் விளக்கம் கிட்டும் –

ஆத்மா கார்ய பொருளே இல்லையே -உருவாவதே இல்லை -அவயவமே இல்லை
கார்ய குண பூர்வகமாக இல்லையே -தேகத்துக்கு ஞானம் வாதம் எடுபடாதே –
கல்லில் மத சக்தி -காரண பொருள்களில் இல்லாவிட்டாலும் காரண பொருளில் இருக்கலாமே
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்னால் சிகப்பு வருகிறதே –
கூட்டுறவு-சங்காதம்- -தனக்கே -தேகம் பிறருக்கே யாக இருக்கும் –
ரதம் கட்டில்-சரீரத்துக்காக உள்ளதை பார்க்கிறோம் -பிறரும் குற்றவாகவே இருக்க வேண்டும் – இது வரை பார்த்தோம் –

பரார்த்தம் –சங்காதம் -அநவஸ்தா நிலை வரும்
போக்தா வேறே போக உபகரணம் வேறே பிரித்து சமாதானம் -அனுபவிப்பவர் அன்றோ
ஆத்மா பிறருக்காகவே இல்லை சங்காதமும் இல்லையே
சங்காதம் என்று கொண்டால் வேறு ஒருவருக்காக இருக்க வேண்டும் –அதற்கும் அந்த சட்டம் வருமே –
த்ருஷ்டாந்தகத்தில் உள்ள எல்லாம் தார்ஷ்டாந்தகத்தில் வர வேண்டாமே -பக்ஷம் ஹேது ஸாத்யம்
மலை புகை நெருப்பு போலே-அனுமானம்
த்ருஷ்டாந்த த்ருஷ்ட தர்மம் மாத்திரமே கொள்ள வேண்டும் -இல்லா விட்டால் அனுமானம் வராதே

ப்ரத்யக்ஷத்தால் பேதம் -சரீர ஆத்மா -தெளிவாக இல்லா விட்டாலும் அனுமானத்தால் அறியலாம் என்பான்
தத் அசம்பாவித -ஞான அசம்பாவித சரீரே
சரீரே அபுஷ்டஸ்வேதே பேதஸ்ய-தஸ்ய அசம்பவாத் –
தஸ்மிந் அசம்பவாத்-சரீரத்தில் ஞானம் ஏற்படாதே எதனால் என்றால் —
தத் குணாந்தர -சரீர குணாந்தர வைதர்மயாதபி –பருமன் இளமை போன்றவை ஞானம் போல இல்லவே –
ஞானம் சரீரத்துக்கு குணம் ஆகாதே –
ஞானம் இருந்தால் சுகம் துக்கம் -இந்த சத்தர்மம் ஆத்மாவுக்குத்தானே
தேகம் தவிர்ந்த சங்காதம் பரார்த்தம்
தேகம் ஆகிற சங்காதம் பரார்த்தமாக இருக்காது தனக்காக இருக்கும் -பூர்வ பக்ஷி-
இப்படி இருந்தால் ஞானம் தேகத்துக்கு சொல்லலாமே என்பர்
ஆனால் தேகத்தின் மற்ற குணங்களுடன் பொருந்தாதே -என்று சித்தாந்தம்
சரீரத்தில் ஞானம் உதிக்கவே அவகாசம் இல்லையே -யோக்யதையே இல்லையே
இத்தை காரிகை -ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

காரண குண பூர்வகம் விசேஷ குணம் –அவயவத்தில் இருப்பது அவயவியில் ஏற்படும்- நூலில் உள்ள நிறம் புடவையில் –
விசேஷ குணம் -16-சாமான்ய குணம் -8-ஆக மொத்தம் -24-
கார்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் இருந்தால் காரண குண பூர்வகத்வம்
சாமான்ய குணத்துக்கு வேண்டாம்
சரீரத்துக்கு ஞானம் சொன்னாய் ஆனால் -காரண குண பூர்வகம் இல்லையே –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி –ஹேதுக
தந்து -நூல் -படம் -சமவாயி காரணம் -உபாதான காரணம் நாம் சொல்வது போலே

சமவேத குணம் சேர்ந்து இருக்கும் குணம் நூலில் -இதுவே துணியில் இருக்கும் ரூபத்துக்கு காரணம் அசமவேத குணம் ஆகும் –
சமவாயி -அசமவாயி -நூலில் சேர்க்கை -சமவாயி காரணம் –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி சமவேத குண அசமவாயிக ஹேதுவாக கொண்டு – -நூலில் வாசனை -துணியில் ரூபம் –
ரூபத்துக்கு வாசனை காரணம் இல்லையே -இத்தையே சஜாதீயம் -வி சஜாதீயம் -என்கிறது
இதே போலே சரீரம் -ஞானம் -சரீரத்தில் உள்ள குணங்கள் ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே –
சிகப்பு கருப்பு நீளம் இவை ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே
சாமான்ய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் -கொண்டே சாதிக்கிறார்

சாருவாகர் -ஆகாசம் ஒத்து கொள்ளவில்லை -நாம் அதுவும் த்ரவ்யம் -சூர்ய சந்த்ரராதிகள் இங்கே இருப்பதால்
கள்-த்ருஷ்டாந்தம் -சொல்வது பொருந்தாது –
சக்தி விசேஷ குணமே அல்லவே
சாமான்ய குணம் -தானே
ரூபம் கந்த ஸ்பர்ச ரசம் சிநேகம் சம்பசிதிகோ த்ரவ்யம் புத்தி -சுகம் துக்கம் இச்சா ப்ரயத்னம் -பாவனா -16-விசேஷ குணங்கள்
சங்க்யா பரிமாணம் பரத்வம் அபரத்வம் குருத்வம் -8-குணங்கள்
மீமாம்சகர் சக்தி -சர்வ த்ரயேஷு–கார்யம் செய்வதை கொண்டு ஊகிக்க படும் —
கார்யதவே உண்டாகும் ஒரு புலனால் அறியப்படும் ஞானம் விசேஷ குணம்
சக்தியை விசேஷ குணம் சொன்னால் என்ன என்பன்–காரண குண பூர்வகம் ஆகும் –
த்ரவ்யங்களை கலந்து த்ரவ்யத்திலே மத சக்தி உண்டாகும் என்று சொல்லலாம் என்று சமாதானம்
அணுவில் மத சக்தி வரும் என்றவாறு –
வெத்தலை பாக்குக்கும் இதே கதை -தாம்பூல ராகத்துக்கும் சிகப்புக்கும் இதே வாதம் –
இதே போலே தனித்தனி அவயவங்களுக்கும் ஞானம் இருக்கு -என்றால் பொருந்தாது –
ஒரே சரீரத்தில் பல ஞானவான்கள் சேர்ந்து ஒரு கார்யம் செய்ய முடியாதே –
அங்கி அங்க பாவமே போகுமே –
சித்ர ரூபம் பல வண்ணங்களின் சேர்க்கை -நூலில் பல வண்ணங்களின் சேர்க்கை இருந்தால் தானே முடியும் –
நாநா வண்ணம் –அந்த துணியானது பல வண்ணங்களாலான நூல்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால்
என்ன பொருந்தாமை வரும் –
அகாரண குண பூர்வகம் -ஒவ் வொரு நூலிலும் பலவண்ணங்கள் காணா விட்டாலும் –

சரீர குணங்கள் பிரத்யக்ஷமாக அறியும்படி இருக்கும் -ஆனால் ஞானம் அளவை அறிய முடியாதே —
ஞானம் சரீரத்தின் குணமாக இருக்க முடியாது என்றவாறு -ஸாத்யம் -இதுவே –
கிஞ்ச
தேகம் ஆத்மா அல்ல -குடம் போல்வன போலே
உத்பத்தி -உருவாகிறதே -இது போலே ஆத்மா இல்லையே
பிறர் பயனுக்காக –வேதாந்தத்தில் ஆத்மா தனக்காக
அவயவ சேர்க்கை –
ரூபமாதி குணம் உண்டே –
பூதத்வாத் பஞ்ச பூதங்கள் சேர்க்கை

ஸச் சித்ரத்வாத் -ஓட்டை நவ த்வார பட்டணம் -ஆத்மாவில் இல்லை
அதேகித்வாத் -இவர் தேகம் -தேஹி இல்லையே -சாருவாகரும் தேகம் என்றே சொல்லுவான்
தேகமாக
ம்ருத தேகத்வாத் -இறந்து போன உடல் போலே ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே
தேக ஆத்மா வாத நிரசன பிரகரணம் -முடிந்து இந்திரியம்

இந்திரியம் -ஸ்தூலம் இல்லை -அவயவங்கள் உடன் கூடியது இல்லையே -இத்தையே ஆத்மா
இதம் -சப்தம் அர்த்தம் –பாஹ்ய இந்திரிய க்ராஹ்யம் -வெளி புலன்களுக்கு விஷயம் -வேறே அஹம் சப்த அர்த்தம் –
உள் புலன் மனஸ்ஸூ க்கு தானே விஷயம்
அதீந்த்ரியம் -இந்திரியங்கள் -அதிஷ்டான தேசம் இந்திரியங்களால் கிரகிக்க முடியும் -மாம்ச பிண்டம் சஷுர் கோளகம் –
குணங்கள் -ரூபம் ரசம் இத்யாதிகளை இல்லையே -உத்பூத குணங்களாக இருக்காது -பிருத்வியில் காந்தம் நன்றாக தெரியும்
சப்தம் ரூபம் -ஸூ ஷ்மங்களில் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
இந்திரிய ஸூஷ்மம் தானே –மூக்கு நுனியில் தான் இருக்கு –
ஒன்றின் வியாபாரம் -பலன் -முயன்றவர் இடம் -அத்யயனம் பண்ணினவன் இடமே -யத் வியாபார பலம் யதி தத் தன்னிஷ்டம் –
அர்த்த சன்னிகர்ஷம் -நேர் ஆதி தொடர்பு ஞானத்தின் மூலமாக -ஞானம் த்ரவ்யம் குணம் இரண்டு ஆகாரம் -நம் சம்பிரதாயத்தில்
தண்டம் -சக்கரம் -உண்டான குடம் தண்டத்திடம் இல்லையே -த்ரவ்யத்துக்கு இந்த சட்டம் இல்லை
குளித்தால் சரீர சுத்தி புக்கியம் -த்ரவ்யம் இல்லை –
ஞானம் -சாருவாகனுக்கு த்ரவ்யம் இல்லையே
தண்டம் வைத்து குடத்தை உடைத்தால் -அபாயம் தண்டத்தில் இல்லையே -சூரணமாக இருப்பதில் குடத்தில் இல்லாமை இருக்குமே –
பிறப்பது என்றாலே போகுமே -ஸ்ரீ கீதை –
குடம் -அபாயம் -சூர்ணத்தின் அவஸ்தையில் தொடக்கம் -கட்டத்தில் சூர்ணத்தின் அழிவு -இப்படித்தானே
த்ரவ்யத்தில் அபாவத்திலும் பொருந்தாதே –
ஞானம் அபாயம் இல்லை -த்ரவ்ய பின்னம் தானே ஆகவே பொருந்தும் என்பான்
த்ரஷ்டா சஷூஸ் பார்ப்பவர் கண் -கர்த்தா -ஞாதா -ஞானம் குணம் ஆகும் -ஆப்த வாக்கியம் சத்யதபா முனிவர் வார்த்தை
மேலே சமாதானம் -தது ந –சொல்லி மேலே விளக்குகிறார்

விகல்பம்–ஒவ் ஒரு இந்திரியம் தனி தனி ஆத்மாவா -ஐந்தும் சேர்ந்து ஒரே ஆத்மாவா –
ப்ரத்யேகம் -என்றால் -ப்ரதிஸந்தானம் -ஒவ் ஒன்றும் ஆத்மா -கண்ணால் பார்த்த நான்
பழம் கொடுத்தேன் சொல்ல முடியாதே -அவர் வேறே இவர் வேறே -பொருந்தாதே –
எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன் சொல்ல முடியாதே
சேர்ந்தே ஆத்மா என்றாலும் -பொருந்தாதே -ஒரு இந்திரியம் இல்லாமல் வாழ முடியாதே -பிரத்யக்ஷ விரோதம் வரும் –
கண் போனால் முன்பு பார்த்தவர் நினைவு வரக் கூடாதே கண்ணுக்கு ஞானம் என்றால் –
வியாபார பலன் வாதமும் தப்பு -சாஸ்த்ரத்தால் வெட்டினால் பாபம்–த்ரவ்யம் இல்லை -அபாயமும் இல்லை –
உன் சட்டம் செல்லுபடி ஆகுமே – கத்திக்கு போகாமல் ஆத்மாவுக்கு அன்றோ
ஆப்த வசனம் -அவர் சொன்னது -இந்திரனும் ஸ்ரீ மந் நாராயணன் பேச உபநிஷத் கதை –
வராஹம் வேடன் வேஷன் -போட்டு வர -ரிஷிகள் -இருக்கு இல்லை சொல்ல முடியாமல் -யா பச்யதி ந ப்ரூயதே
-கண் பார்த்தது அது பேசாதே -பேசுவது பார்க்க வில்லை -வேடனே கண்ணு பேசுமா வாக்கு காணுமோ –
த்ரஷ்டா கண் தானே -என்ற இடம் -அனிதா வேறு பயனுக்காக சொன்னது -சரணாகாத பரித்ராயணத்துக்காக சொன்னது –
இந்திரியங்கள் ஆத்மா அல்ல -என்று நிரூபணம் –

மனமே ஆத்மா -அடுத்து
முன்பு சொன்ன தோஷங்கள் வராதே -உத்ப்பூதம் ஸ்தூலம் –
பலவா ஒன்றா வம்பு இங்கு இல்லையே –
வெறும் கருவி தானே -ஆத்மா தானே கர்த்தா -ஆத்மாவின் தர்மா தானே கர்த்ருத்வம் –
இந்திரியங்களின் தலைவர் மனஸ் -தெரிகிறது லோகத்தில் -பிரதி சந்தானம் குறை வராதே –
ஞானம் பதிவது மனசில் -ஞான ஆஸ்ரயம் -தரிசன அனுசந்தான ஆதாரம் -பார்ப்பதும் நினைவும் -இங்கே தானே –
ஒரு இந்திரியம் போனாலும் வாழலாம் -அந்த குறையும் இங்கு இல்லையே –

தத் அபி ந -முதல் ந -அப்புறம் தத் ந
மனம் கர்த்தா அல்ல -கரணமான படியால் -கண்ணைப் போலே சிந்திக்கும் கருவி
எனவே ஞானம் இல்லை -ஞானத்துக்கு இருப்பிடம் வேறே கருவி வேறே அன்றோ
பாஹ்ய ஆந்திர சகல விஷய சம்வேதன ஞானம் அறிவிக்கும் கருவி தானே மனஸ்ஸூ
பாஹ்ய இந்திரிய அதன் அதன் விஷயம் -தொடர்பு -யுகபத் ஒரே காலத்தில் -அனைத்து ஸ்ருஷ்ட்டி போலே –
யுகபாத் ஏவ சர்வ விஷயமும் தோன்றாதே -எதனுடைய உதவி இல்லாத போது வஸ்து பிரகாசிக்காதோ –மனஸ் தானே க்ரஹிக்க வேண்டும் –
ஸூகம் போன்றவை -இவற்றுக்கும் கருவி வேணும் -கிரியை -என்றாலே கரணமும் கர்த்தாவும் வேணுமே -ஆத்மாவும் மனசும் வேண்டுமே –
ஞான கருவியே மனஸ்ஸூ -கர்த்தா அல்ல என்றதாயிற்று -ஞான ஆஸ்ரயம் ஆகாதே
கர்த்தா என்றாலே ஸ்வதந்த்ரர் -கருவி மற்றவர் விருப்பம் படிதானே

மேலே ஸ்வா தந்தர்யம் விளக்கம் –விருப்பம் தகுந்த-கார்யம் செய்யும் கருவி கொண்டு -அடைய
தன இடத்தில் உள்ள இச்சையால் செயல்படுவது ஸ்வ தந்தர்யம் –
பர அதிஷ்டானம் பிறர் நியமனத்தால் -செய்யும் மனஸ் -ஆத்மாவாகாதே -பரஸ்பர விருத்தம்-
மனம் ஆத்மா அவருக்கு கரணம் என்றால் -கர்த்தா கரணம் வேறே வேறே ஒத்துகே கொண்டாலே –
உன் சித்தாந்தம் பலிக்காதே -பேரிலே தான் வாதம் —
ஏவ கண்களால் ரூபம் -சுகாதிகளை மனசாலே க்ரஹிக்கிறார் ஆத்மா
லோக வியாபாரத்துக்கு ஒத்து போகாதே -மனம் கரணமே பரதந்த்ரமே ஞானம் இல்லை ஆத்மா இல்லை
அஹம் சப்த கோசாரம் ஆகாதே –
மன ஆத்மவாத கண்டன பிரகாரணம் முற்றிற்று

மேலே மனஸ் என்ன என்று விவரிக்கிறார்
சம்பிரதாயம் பகவான் இடம் மட்டுமே ஸ்வா தந்தர்யமும் தானே ஏறிட்டுகே கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
வேறு ஒரு வியக்தியில் இரண்டும் இல்லையே –

அதிஷ்டானம் -நியமனம் என்றபடி இருக்கிறது மட்டும் இல்லை —ஒரே ஆத்மா தான் நியமிப்பான் -சரீரத்துக்குள் பல உண்டே —
தேகம் மனம் இந்திரியம் -மூன்றும் கர்மத்துக்கு அனுஷ்டானம் -கர்ம சாபேஷத்தால் ஈஸ்வரன் நியமிக்கிறார் –
மன வைத்தியர் -கண் வைத்தியர் போலே -அனைவரும் மனோ வியாதிக்கு ஆள்பட்டு இருப்பதால் –
கண்ணுக்கு உபகரணம் கண்ணாடி –கண்ணே கரணம் தானே -மனசுக்கு என்ன பண்ணலாம் –
மற்ற கரணங்களுக்கு மனஸ் சஹகாரி வேண்டும் —

விஷயங்களை இந்திரியங்களை கிரகிக்க -மனஸ் இந்திரியம் விட வலிமை –
புத்தி விவேக ஞானம் அத்தை விட வலிமை -அதிருஷ்ட ரூபமான அனுக்ரஹம் -த்யான ரூபமான கர்மம் –
சத்வம் வளர்ப்பதே மனசுக்கு உப கரணம் –
சத்வ குணம் –கர்மம் பண்ண -ஞான யோகம் -பகவத் பிரீதி வந்து -மனஸ் வியாதி போகும் –
மனஸ் சமாதானம் கோயில் சேவை -வளர்க்க வளர்க்க -ஆகார சுத்தி -சத்வ சுத்தி -துர்குணங்கள் போக்க –
காமம் போக்க வைராக்யம் கோபம் போக்க பணிவிடை செய்து -இதுவே மாற்று மருந்து –
மனசுக்கு பிரகரணம் கண் காது இத்யாதி -மன நோய் மருத்துவர் தூங்க வைப்பர் இதன் அடிப்படையில் –
நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் -நோய் முதல் நாடி தீர்ப்பது -அதுவே அத்தை அறிவது கஷ்டம் தானே குழம்புகிறோம்
ஆந்திர ஞான கரணம் –உள் இந்திரியம் -உள் அறிவு புலன் -த்ரவ்யம் –
யுகபத் ஞான-ஒரே காலத்தில் ஏற்படாதே -கண் காது -சுவைப்பதும் கேட்பதும் பார்ப்பதும் ஒரே அளவிலே பதிவாகாதே –
புலன் உடன் தொடர்பு கொண்டு மனஸ் கிரகிக்கிறது -அதுவே மனசுக்கு லிங்கம் அடையாளம் –
ஞானம் -அறிவு -ஸ்மரணம் -நினைவு -சம்ஸ்காரம் -மனப்பதிவு -விஷய சுகம் ஏக காலத்தில் –
பதித்தது அனைத்தும் ஏக காலத்தில் நினைவுக்கு வர வில்லையே –
யுகபத் ஞானம் -வேறே
யுகபத் ஸ்மரணம் –பண்பு பதிவுகள் –நினைவும் மனசும் ஒன்றா வேறே வேறாயா -அவன் கேள்வி –
கொஞ்சம் கொஞ்சம் எப்போதோ எப்போதோ நினைவுக்கு வருகிறதே –
பதிக்கப்பட்ட வரிசையில் நினைவு வருகிறதா -இல்லையா –
மனசை ஒருமைப்படுத்தினாலும் நினைவு வரிசைகளை மாற்ற முடியாதே –
அனுபவித்த சகல விஷய நினைவுகளும் ஒரே காலத்திலேயே வராதே –
சுக துக்க ரூப கர்மங்கள் –அதிருஷ்டம் –வாயிலாக என்று கொள்ளலாமா -என்றால் –
ஆத்ம ஸ்வ பாவமே க்ரமமாகவே ஞானம் கொடுக்கும் -இப்படி இரண்டு விகல்பம்
இரண்டும் ஒத்து வராது –

துணி -சமவாயி தந்து -அசமவாயி நூலுக்கும் நூலுக்கும் சேர்க்கை -நிமித்தம் -உண்டை பாவி -நையாயிகர் இந்த மூன்று காரணங்கள்
சுக துக்கம் ஏற்படும் -சுக ஞானம் துக்க ஞானம் -இதுக்கு -சமவாயி காரணம் -ஆத்மா -நிமித்தம் –
வெளி விஷயங்கள் -அதிருஷ்டம் -அசமவாயி -சமவாயி உடன் தொடர்பு-சம்யோகத்துக்கு ஓன்று வேண்டுமே அது மனஸ்
மனம் த்ரவ்யம் சித்திக்கும் என்பான் –அது பொருந்தாது -தார்க்கீகன் -மனஸ் ஒன்பதாவது தத்வம்
சுக -துக்க -பூர்வ கால ஜென்ம ஞானம் இருக்க வேண்டுமே அபிமத அநபிமத விஷய தொடர்பு ஞானம்-நெருப்பு -உஷ்ணம் அறிந்து தொட்டால் சுடும் –
இந்த ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மாவில் -இதனால் சம்யோகம் -இதுவே அசமவாயி காரணம் -மனஸ் வேண்டாமே –
விஷய ஞானத்துக்கு அசமவாயி -அதுக்கு அசமவாயி -இப்படி மேலே மேலே எவ்வளவு கேட்டாலும் மனஸ் வேண்டாம் என்பான் –
விஷயத்துடன் தொடர்பு உள்ள வெளிப்புலன் அதன் உடன் தொடர்பு கொண்ட -ஆத்மா–அது தான் அசமவாயி –
வெளிப்புலன் தொடர்பு -சப்தாதிகள் இந்திரிய தொடர்பு –
மனசை ஒத்து கொள்ளாதவன் அன்றோ –
இந்திய பொருள் சம்பந்தத்துக்கு அசமவாயி இந்திரிய கிரியா செயல்பாடு
அதுக்கு இந்திரிய ஆத்ம சம்பந்தம் –
அதுக்கு அதிருஷ்டம் கர்மமும்
அதுக்கு பிரயத்னம் அசமவாயி
அதுக்கு கர்தவ்யதா ஞானம் –

சுக துக்கம் அனுபவிக்க த்ரவ்யாந்தரம் -மனசை கல்பிக்க வேண்டாமே -என்பன் பூர்வ பக்ஷி –
நித்ய த்ரவ்யம் -விசேஷ குணம் –த்ரவ்யாந்தர சம்யோகம் தேவை –
மாங்காய் -நாலு நாள் கழித்து மாம்பழம் -பார்த்திப -பிருதிவியின் -பரம அணு –
தேஜஸ் சம்பந்தம் பட்டு கட்டியாக இருந்தது மெலிதாக -சுவையும் மாறி-பச்சை மஞ்சள் – –
அனுமானித்து சம்பந்தம் -தேஜஸ் சம்பந்தம் உணர்கிறோம்
ஆத்மா -சுக துக்கம் -விசேஷ குணம் -இதுக்கு மனஸ் -என்று சொல்லப் போனால் இதுக்கும் வேண்டாமே என்பான்
இஷ்டம் கிடைத்தது தெரிந்தால் சுகம் -அநிஷ்டம் கிடைத்தது தெரிந்தால் துக்கம் -பிராப்தியும் அறிவும் வேணுமே–
இத்தை அசமவாயியாக கொள்ளலாமே என்பான் -மாங்காய் மாம்பழம் நேராக பார்த்து அறிகிறோம் –
பிரத்யக்ஷமாக சம்பந்தம் தெரியாமல் அனுமானிக்கிறோம்
இங்கு அது வேண்டாமே என்பான்
துணி -தந்து -சமவாயி காரணம் -நூலுக்குள் சம்பந்தம் அசமவாயி -தறி உண்டை பாவு நிமித்தம் –
இங்கு காரணம் கிடைப்பதால் அனுமானிக்க வேண்டாமே என்பான் -பூர்வ பக்ஷி

வ்யாப்தியில் தப்பு இல்லையே -நித்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் கிடைக்க த்ரவ்யாந்தர சம்பந்தம் வேணும் –
என்கிற வ்யாப்தியில் குற்றம் இல்லையே –
த்ரவ்யாந்தரம் இருக்க ஒத்துக் கொண்டால் மனசை கல்பிக்கலாமே –
த்ரவ்யாந்தம் ஒத்துக் கொண்டு –அக்னி -சரீரம் தொடர்பால் -மாறுதல் -ஸ்பர்சத்துடன் கூடிய த்ரவ்யந்தரம் -பவ்திகமாகவும் இருக்க வேண்டும் –
மனசை தொட முடியாதே –
ஸ்பர்ச வைத்த த்ரவ்யாந்தரம் -ஆத்மா தேகம் சொல்லலாமே -மனஸ் கண்ணுக்கு தெரியாதே -தேகம் காணலாம்
தேகத்துக்கு தானே சுகம் துக்கம் -அவயவங்களுடன் இருப்பதால் –
கண்ணுக்கு ஸூஷ்மமும் பாஹ்ய குழகமும் உண்டே -மனசுக்கு வலிக்காதே
மனஸ் பவ்திக்கமா இல்லையா விசாரம்
பஞ்ச பூதங்களை விட வேறுபட்டதா இல்லையா –
அனுமானத்தால் வேறுபட்டது என்று சாதிக்கலாம் -மனஸ் சேர்ந்தால் தானே-சப்தம் -ஆகாச குணம் -கிரஹிக்கும்–
ஆகாசம் பிரதானமாக கொண்ட காது -மற்ற ஒன்றை கிரகிக்காதே
ஆகாசாத் வாயு -கண் அக்னி -ஜாலம் -நாக்கு -பிருத்வி மூக்கு -கிரஹித்து அவ் இந்திரியம் அதில் இருந்து உருவானது –
பவ்திக்க இந்திரியம் தனக்கு உள்ளதை தான் கிரகிக்க வேண்டும் வேறே ஒன்றை கிரகிக்கக் கூடாதே
பூதாந்த்ர குணம் கிரகிக்கக் கூடாதே -ஆகவே மனஸ் அபவ்திகம்
நாக்கை போலே இருக்க கண் இல்லை -இது போன்று ஐந்தும் இல்லை -மனம் -ஐந்தையும் கிரகிப்பதால் –
சரீரம் போலே பாஞ்ச பவ்திகம்-என்னலாமே-எண்ணில் —
காது -ஆகாசம் மட்டும் இல்லை பஞ்சீ கரணம் -மற்ற நான்கும் தொட்டு கொண்டு இருக்குமே
மனம் அன்ன மயம் சோம்ய–வேதம் -உபாதானமாக கொண்டது என்று சொல்ல வில்லை -தத் ஆதீன வ்ருத்தி -என்றவாறு –
அன்னத்தால் போஷிக்கப்பட்டுள்ளது என்றவாறு –
ஆபோ மயப்பிராணன் -பிராணன் தண்ணீர் மயம் சொல்வது போஷிப்பதால் -அதனால் ஆக்கப்பட்டது இல்லை
மோக்ஷ தசையில் மனஸ் உண்டு
மனசான் யேதான் காமான் காம ரூபியான் சஞ்சரன் –சாந்தோக்யம் –அபவர்க்க தசையில் மன அநுவிருத்தி –
அப்ராக்ருத மண்டலம் அன்றோ -ஆகவே பிராகிருதம் இல்லை –
மனமே திவ்யமான கண் -சுருதி -அது போலே இங்கும் என்பான்
பரமாத்மாவுக்கு மனசால் சங்கல்பித்தது என்கிறதே எனவே பவ்திகமாக இருக்க முடியாதே என்பான்
நீ சொன்னதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன் –
த்ரவ்யாந்தரம் கல்பிக்காமல் -பவ்திகமே
புத்தியே மனஸ் -நல்ல புத்தி உடையவன் மனசே
புத்தி -ஞானம் -மனஸ் கரணம் -என்று வாதிப்பான்
நிலை வேறுபாடு -கலக்கமான மனஸ் -தெளிந்த மனஸ் -சந்தோஷிக்கும் மனஸ் சொல்கிறோம் –
புத்தி அகங்காரத்தை சொல்கிறது என்பான் -பூர்வ பஷி
உச்யதே –ஆத்மா மனமா இல்லையா என்று தானே பேச வந்தோம் –
புத்தியே மனமாக இருந்தாலும் -சேதனத்வம் ஞாத்ருத்வம் இல்லையே -புத்தி என்றாலும் ஞாத்ருத்வம் வராதே –
ஆத்மா மனஸ் இல்லை என்று நிகமித்தார்

அடுத்து -பிராணன் -தான் ஆத்மா என்பான் -ஜீவன் பிராணன் கூடிய சரீரத்தை சொல்கிறோம்
உத்க்ரந்தி -லோகாந்த்ர கமனம் -நகர ஸ்பர்சம் வேணுமே புது சட்டம் -வாயுவுக்கு ஸ்பர்சம் உண்டே –
ஆத்மா கிலாபத்தை சுருதி சொல்லுமே –
பிராணன் உடன் இருந்தால் தானே ஜீவதி-என்றும் -இல்லா விட்டால் ஆத்மா இல்லை என்றும் சொல்கிறோமே –
இது சரி இல்லை
வாயுவான படியால் பொருந்தாது -சைதன்யம் இல்லையே வாயுவுக்கு -வெளியில் உள்ள வாயு போலவே உள்ளே இருக்கும் பிராணனும்
நிர் வியாபாரம் -தூங்கும் பொழுதும் – ஆத்மா தூங்கும் பொழுதும் பிராணன் வேலை பார்த்து -வ்ருத்தி உண்டே
உண்டது ஜெரிப்பதும் பிராணன் -சப்த தாதுக்கள் -ரத்தம் இத்யாதி -இதனாலே -வைவரானாக்னி ஜடாராக்கினி —
நாலு வித அன்னம் தளிகை பண்ணுகிறேன் – முழுங்குவது போன்றவை -பிராணாயாமம் முக்கியம் –
வாதம் பித்தம் கபம் மூன்றும் சமமாக ஆக்குவதே ஆயுர்வேத வைத்தியம்
உண்டதும் பருகினதும் பரிமாணம் –பிராணன் வேலை செய்வதால் –
சுவாசம் -வெளி மூச்சு நடப்பது ப்ரத்யக்ஷம் அன்றோ தூங்கும் பொழுதும்
கோஷ்ட்ய மாருதம் -பிராணன் -அபான சமாயுக்த –
தண்ணீராலே நன்றாக எறியும் வாயு வயிற்றுக்குள்ளே –
கடலுள் பாடவாகினி உண்டே -அதே போலே –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -வேலைக்கு தக்க பெயர் -ஒரே வாயு -கண்டம் முகம் மூக்கு -உள்ளே சென்று –
வெளியில் வந்து பூரகம் ரேசகம் கும்பகம் நிறுத்துவது –
தோலால் தொட்டுப்பார்க்கலாம் -ரேஸிகத்தை வெளியில் வரும் காற்றை தொடலாமே -கடத்தை போலே -ஆகையால் -ஆத்மா இல்லையே –
தேக ஆத்ம ஒன்றே நிரசன வாதமே இதுக்கும் உண்டே தனியாக நிரசிக்க வேண்டாமே
பிரயாணம் -ஸ்பர்சம் -சொன்னாயே -கதி ஆகதி-ஆத்மா அணு வாக இருக்கும் -ஸ்பர்சம் இல்லாமலும் இருக்கும்
பிரயத்தனம் -கர்ம-இவற்றால் தூண்டப்பட்ட -மனசை போலே உதக்ராந்தி-மனஸ் ஸூஷ்மம் இருந்தாலும்
ஸ்பர்சம் இல்லாமல் இருந்தாலும் மனசு செல்வதை பார்க்கிறோமே
ஸ்தூலமாக இருந்தால் தாள் கதி க்கு ஸ்பர்சம் வேண்டும் –
ஆத்மாவுடைய பரிமாணம் மேலே விரிவாக சொல்லுவேன் –
இதி பிராண ஆத்மா ஒன்றே வாத நிரசனம்

அடுத்து சம்பவித்தே ஞானம் -புத்த மதம் நிராசனம் -அயம் கட-உத்பத்தி விநாசத்துடன் கூடிய ஞானத்தை சொல்கிறான் –
தர்ம ஞானத்தை சொல்கிறான் -தர்மி ஞானத்தை இல்லை
பாட்டன் மீமாம்சகர் அனுமானித்தே ஞானம் இருப்பதை அறியலாம்
அஜடத்வாத்–ஸ்வயம் பிரகாசம் -தானே விளங்கும் –மற்று ஒன்றினால் பிரகாசம் ஜடம் –
விளக்கும் ஜடம் -ஞானத்தை பயன்படுத்தியே விளக்கு என்று அறிகிறோம் -தேஜஸ்ஸை சொல்லவில்லை –
வ்யவஹார ஹேதுவை பிரகாசம் என்கிறோம் இங்கு
ஆத்ம ஞானம் தானே பிரகாசிக்கும் -பரமாத்மா -ஸ்ரீ வைகுண்டம் ஞானம் இவையும் ஸ்வயம் பிரகாசம்
புத்தர் ஞானமே ஆத்மா அது க்ஷணிகம்
அத்வைதி ஞானமே ஆத்மா நித்யம்
ஆத்மா அஜாதம் ஸ்வயம் பிரகாசம் சுருதி சொல்லும் -சம்வித்தும் அப்படியே -ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஒன்றே
மடப்பள்ளி போலே புகை இருந்தால் நெருப்பு -அன்வயம்
ஆத்மா போலே வேறு அஜாதம் இருந்தால் தானே சொல்ல முடியும்
அன்வய வ்யாப்தி சொல்ல முடியாதே
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை
யத்ர யத்ர அநாத்மத்வம் தத்ர தத்ர ஜடத்வம்
யத்ர யத்ர அஜடத்வம் அங்கு அங்கு ஆத்மத்வம் -சொல்ல முடியாதே
இதுக்கு த்ருஷ்டாந்தம் -கடத்தைப் போலே-
ஞானம் ஸ்வயம் பிரகாசம் -அசித் ஸ்ரீ வைகுண்டம் போலே
ஜீவனும் பரமாத்மாவும் ஸ்வயம் பிரகாசமும் சித்தும் –
ஞானத்துக்கு அஜடத்வம் சத்தையாலே பிரகாசிக்கும் -பிரத்யக்ஷம் –
சம்வித் இருக்கும் பொழுது விளங்க வில்லை என்பது இல்லையே -சதி சம்வித் –

அதுக்கு -பட்டார் மீமாம்சகர் -ஆபேஷம் -அனுமானம் -ஞானமே அனுமானித்தே அறிவோம் என்போம் –
நீலக் குடத்தை பார்த்து –நீலம் என்றும் குடம் என்றும் விஷய மாத்திரம் -அநீதம் அதீத ரூபம் –
அறிகிறோம் ஞானம் என்று ஓன்று தனியாக இல்லையே
அனுமானித்தே ஞானம் என்று அறிகிறோம்
இது குடம் -குடம் அறியப்பட்டது -குடத்தில் ஒரு தன்மை அறியப்பட்டது தன்மை வைத்து அறிவு வந்ததாக அனுமானம் –
ஸ்வரூப சத்தையால் இல்லை -இந்திரியம் -அர்த்த சன்னிகர்ஷம் வந்தாலே கிட்டும்
கண் குடத்தை -பார்த்தது என்ற ஞானம் வரவில்லை —
ப்ரத்யக்ஷம் — இந்த்ரியமும் பொருளை தொடர்பு வந்ததும் ஞானம்
அனுமானத்தின் அப்படி இல்லை -எங்கு எங்கு புகை அங்கு நெருப்பு -ஞானமும் வேணும் த்ருஷ்டாந்தமும் வேணும்
இருந்தால் தானே நெருப்பை அனுமானிக்கலாம்
எங்கு எங்கு எல்லாம் அறியப்பட்ட தன்மை உள்ளதோ -என்று பார்த்த குடத்தில் தன்மை ஏறிட்டு –
அதனால் ஞானம் அனுமானித்து அறிகிறோம்
குடத்தில் அதிசயம் -இந்த அறியப்பட்ட தன்மை -ஞாததா – ஆகந்துக பிரகாசத்தால் தரிசனத்தால் -பிரத்யக்ஷம் –
சம்வித் ஆத்மா இல்லை -இவரும் நம்மைப்போல் –
இரண்டு பக்ஷமும் தப்பு –பிரத்யக்ஷத்தாலே -ஸ்தாபித்து -ஞானம் உடையவன் தான் ஆத்மா ஞானம் ஆத்மா இல்லை –
இது தர்ம ஞானத்தை பற்றி -தர்மியும் தர்மமும் வேறே வேறே தானே
நன்றாக பார்க்கிறவர் -ஞானத்தை தவிர்ந்து ஞதாதா பார்ப்பவர் யாரும் இல்லையே -அர்த்த தர்மம் -ஞதாதா
ரூபம் தான் பார்க்கிறோம் -ஞதாதா உடன் இருந்ததை யாரும் பிரத்யக்ஷமாக காண முடியாதே
ஞானத்தைக் கொண்டே சகல வியாபாரமும் பொருந்தும் ஞத்தாவை கற்பிக்க வேண்டாமே
இது குடம் -ஆத்மாவுக்கு ஞானம் -ஞாதா ஞானம் ஜேயம் மூன்றும்
வித்தி -விதித்திரு ஞாதா பிரதிபாத சூன்யம் -இது குடம் -என்பதில் ஞானமும் இல்லை ஞாதாவும் இல்லையே –
இது குடம் என்றாலே நான் குடம் இருப்பதை பார்க்கிறேன் என்பதே தான்
வேறே வேறே பிரயோகம்
இது குடம் எனக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை யாரும் சொல்ல மாட்டார்
தசரதன் ராமன் தந்தை -தசரதன் இடம் ஞாததா ஏற்பட்டு அறியவில்லை
கல்கி இது போலே -விஷய கிரஹணம் -அனுமானிக்க முடியாதே –
ஞானத்தால் வியவகாரம்- வாக்கால் பேசுவோம் -மாற்றி சொல்ல முடியாதே
என்னால் நினைக்கப்பட்டது வாக் வியாபாரம் -பூர்வகம் -ஞானம் -இருக்க வேண்டும் –
முன்பு வேடு பறி உத்சவம் பார்த்ததை-ஸ்ம்ருதி -அப்புறம் வாக்கால் சொல்லுகிறோம் –
அன்யோன்ய ஆஸ்ரம தப்பு வரும் -வெட்கம் இல்லாதவன் தான் நான் வியவஹாரம் செய்வதால் ஞானம் அனுமானிப்பான் –

பிரகட புத்தர் -அனைத்தும் சூன்யம் –
அத்வைதி மறைந்த புத்தர் –
ஞானம் அனுமானித்து அறிகிறோம் என்கிற மீமாம்சகர் பக்ஷம் –
இதில் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும் என்பதை பார்த்தோம்
மீமாம்ச பக்ஷம் நிரசித்த பின்பு மாற்று இருவரையும் நிரசிக்க வேண்டும் ஞானமே ஆத்மா -ஞாதா ஜேயமும் பொய் என்பர் –
இது குடம் -விஷயம் மட்டும் -அறிவாளியை பற்றும் அறிவையும் பற்றியும் இல்லை
நான் குடத்தை அறிகிறேன் -மூன்றும் உண்டே
பேதம் பிராந்தி மயக்கம் -என்பர் –

புத்தன் சொன்ன ஹேதுவை அத்வைதி -முன் முன் க்ஷணிக ஞானம் —
தண்டம் -தண்டி -தண்டி பிள்ளை -க்ஷணிக விஞ்ஞானம் -ஒரு வினாடி ஞானம் அப்புறம் இருக்காது –
ஆத்மாவே ஞானம் என்றால் ஆத்மா வேறே வேறேயா -நேற்று மண்டபத்தை பார்த்த நான்
இன்று அங்கு இருந்து உண்கிறேன் –நேற்று மண்டபம் எல்லாம் பொய்
இத்தை அத்வைதி கண்டனம் –

ஸ்வயம் பிரகாசம் -ஞானம் -அஜடம்-வேறு ஒன்றின் உதவி வேண்டாம் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் –
எந்த வஸ்துவின் தொடர்பால் -அர்த்தாந்தரே வேறு பொருளில் வியாவஹாரமோ தர்மம் வேறுபாடு ஏற்பட்டால்
அது அந்த பொருளில் ஸ்வரூபமாகவே இருக்கும் –
வெள்ளைப்பசு -பார்க்க -கண்ணால் வெள்ளையை கிரகிக்க வெள்ளையே காரணம் -பசுவை கிரகிக்க வெள்ளை வேணும் –
வெண்மைக்கு -வேறு ஒன்றின் உதவி இல்லாமல் பிரகாசிப்பதால் ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லலாமே என்பர் –
அஸ்தி -சொல்ல சத்தா இருப்பே காரணம் -இது தான் வியவஹாரம்
சத்தா அஸ்தி இருப்பு இருக்கு -அந்த இருப்பு எப்படி சத்தத்தையே காரணம் -அது தான் ஸ்வரூபம்

பூமி இருக்கு -சொல்ல இருப்பு காரணம் -இருப்புக்கு அதுவே காரணம் -நிறத்தினால் -இத்தையே ரூபத்தினால் -என்பர் –
தொடர்பால் கண்ணால் பார்க்கிறோம்
குடம் பிரகாசிக்க -அறிவு வர -அதற்கு வேறு ஒன்றின் தேவை இல்லை –
ஆகவே அறிவு ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஆத்மா என்பர்
ஞானம் இருந்து ஞாதா -தனியாக கல்பிக்காமல் –ஞானமே இல்லை என்றால் ஞானம் ஞாதா இரண்டையும் சொல்ல வேண்டாமே –
ப்ரத்யக்ஷ விரோதம் வரும் -நான் அறிகிறேன் சொல்லுகிறோம்-அறிவு வேறே நான் வேறே அன்றோ -ஞானத்துக்கு ஆஸ்ரயம் தானே ஆத்மா
சத்யம் -உண்மை -/ பிரத்யக்ஷம் -விகல்பம் உடன் உள்ள -ப்ரத்யக்ஷம் -நிர்விகல்பிக்க பிரத்யம் -இரண்டு வகை –
பேதத்துடன் பார்ப்பது பிரமத்துக்கு மூலம் –
வஸ்து மாத்திரம் -வஸ்து இருந்தால் தான் கண்ணாடி நீலம் இத்யாதி உண்டே -ஏற்றி சொல்கிறோம்
வஸ்துவை கிரஹித்து மற்றவற்றை அதிலே ஏத்தி –
நான் அறிகிறேன் சொல்வதே பொய் -ச விகல்பிக்க ரத்யக்ஷம்
நான் அறிவு என்பதே நிர்விகல்பிக்க ப்ரத்யக்ஷம் என்பன்

ஞாதாவே ஞானம் -ஒன்றாகவே கிரகிக்கப்படும் -ஸஹ-/ ஒன்றை விட்டுப் பிரியாமல் இருக்கும் -ஸஹ உபலம்பம் –
ஞாதா சொல்லும் பொழுது ஞானத்துடன் தானே –
குடம் அறிவு இருந்தால் தான் குடம் அறிபவர் சொல்ல முடியும் -எனவே ஒன்றே தான் என்பன் -ஸஹ உபலம்ப நியாயம்
அப்ரகாச ஆத்மா என்று ஓன்று இல்லையே -அடுத்த காரணம் –பேத ஞானத்தை பிரமாணமாக கொண்டாலும் –
தெரிய வருவதால் ஞானமே தானே –
இரண்டாலும் ஞானமே ஆத்மா என்பான் –
ஜடமாக உள்ள அஹம் அர்த்தம் சித்திக்காதே -ஸம்வித்தை விட வேறு பட்ட ஆத்மாவை அறியவே முடியாதே

க்ராஹ விகல்பம் இல்லை
க்ராஹ்ய விகல்பம் -விஷயத்தை தனியாக சொல்லாமல் -கட ஞானம் -ஞானத்துடன் சேர்ந்தே விஷயம்
பிரகாச யோகமே ஞானம் –
வாசனையால் -புத்த வாதம் -முன் முன் தப்பாக அறிந்த அறிவு –
சமானந்தர ஞானம் முன் அடுத்து மாறி மாறி வருமே -தண்டம் -தண்டி இத்யாதி –
பொய் நின்ற ஞானம் -சதத பரிணாமம் ஆழ்வார்-விகாரத்தைப் பற்றி -இவனோ க்ஷணிகம் –
அநாதி அவித்யாதி வசப்பட்டு பேதம் -அத்வைதி பக்ஷம்
அந்த அவித்யாவும் பொய்யான -என்பர் அத்வைதி -வேறே ஒன்றையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரமத்துடன் பார்ப்பார்வர்கள் தான் க்ராஹ்ய க்ராஹக ஞான வாசி அறிவார்கள்
மூன்றிலும் வேறுபாடு இல்லை -தோற்றமே –
ஜகத் ஜநநீ-அவித்யை -அதனாலே தோற்றும் -சுத்தமான ஞானம் சின் மாத்திரமே ப்ரஹ்மம் -பிரபஞ்சம் மித்யை –
சுத்தம் நித்யம் பரமார்த்தம் -பிரபஞ்சத்துக்கு உபாதானமாக சொன்னால் சம்சாரத்தில் இருந்து மோக்ஷம் எப்படி –
ஒரே ஆத்மா தானே அவர்கள் பக்ஷம் -மாயா ஏவ ஜநநீ -என்பர்
பிரகட பிரசன்ன புத்தர்கள் இருவர் வாதங்கள் இவை

அத்வைதி -மற்ற பிரகட புத்த வாத கண்டனம் அடுத்து -க்ஷணிகம் -பிரதி விஷயம் வேறே வேறே ஞானம் –
படம் கடம் -முன் பார்த்தவர் இன்று பார்க்கிறவர் எப்படி வரும் -அவரே இவர் -அதுவே இது சொல்ல முடியாதே

அதே நான் அதே பொருளை இன்று வேறு ஒரு நாளில் பார்க்கிறேன் -பொருந்தாதே என்னில் –
நிராலம்பன –ஞானத்துக்கு ஆலம்பனம் விஷயமே இல்லை – நேற்று நன்றான பசுவைப் பார்த்தேன் –
இன்று சோர்ந்த பசுவைப் பார்க்கிறேன்
நேற்று ஞானத்துக்கு விஷயம் இல்லை
நேற்று இன்று கிடையாது
ஞானம் மட்டுமே -மற்ற அனைத்தும் மித்யா
கற்பனையே என்பான்

ப்ரத்யக்ஷம் விரோதம் வரும் -நிராலம்பனம்-எல்லா ஞானமும் விஷயம் அற்றவை என்றால் –
இந்த வார்த்தை யாலே வரும் ஞானத்துக்கு விஷயம் உண்டா இல்லையா
கேள்வியால் ஸ்ரீ ஆளவந்தார் நிரசனம் எளிதாக செய்தார்
பூர்வ மீமாம்சை –1-1- உத்தர மீமாம்சை -2-2-
தர்க்க பாதத்திலும் நியாய தத்வம் நாத முனிகள் இவற்றை காட்டி உள்ளார் -அங்கு கண்டு கொள்க

க்ஷணிக ஞானமே ஆத்மா -பிரகட புத்தன்
அநித்யமான ஞானம் உடையவன் ஆத்மா -இரண்டாம் பக்ஷம் -அனுபவம் ஸ்மரணம் இருப்பதால் –
நித்தியமான ஞானமே ஆத்மா -அத்வைதி
தர்ம பூத ஞானம் அழியும் அநித்தியம் -ஞானம் வேறே ஆத்மா வேறே -சித்தாந்தம்
ஞான சந்தானம் -வினாடிக்கு வினாடி ஏற்படும் ஞான புள்ளி -பல புள்ளிகள் -வரிசையே ஆத்மா –
தொடர் சங்கிலி ஞானமே ஆத்மா -ஞானம் உடையவர் இல்லை -இது புத்தவாதம் –
பிரவாகமாக நித்யம் -அதனால் ஸ்மரணம்-என்பன்–தீப த்ருஷ்டாந்தம்
இப்படி சாதிப்பாய் ஆகில் -அது முடியாது -ஏன் என்றால் – தீபம் -பார்ப்பவன் ஒருவன் -ஒன்றாக தெரிவது சாத்ருசம்-அதுவே இது –
இங்கு பார்க்கிற ஆத்மாவே மாறினால் எப்படி -போன நிமிஷ ஞானம் வேறே ஆத்மா வேறே உனது பக்ஷம் படி –
க்ஷண விஞ்ஞானம் -சந்தானம் -சந்தானி புள்ளி -கோக்க வேண்டும் -அவயவம் சமுதாயம் –இரண்டா ஒன்றா -கேள்வி –
சந்தானி சந்தானம் -ஞானம் ஞானத்து ஆஸ்ரயம் இரண்டு வருமே -ஞானமே ஆத்மா பக்ஷம் பழிக்காதே
ஒன்றானால் -ஸ்மரணம் வராதே –
நிலையாக நின்றால் தானே நினைக்க முடியும் -அனுசந்தாயி நிலைக்கவராக இருக்க வேண்டுமே –
அனுபவிதா-அனுசந்தாதா -வேறே வேறே வ்யக்தி -உன் மதத்தில் –தெரியவே வாய்ப்பு இல்லை –
சாத்ருசம் வந்தால் தானே பிரமம் வரும் -வந்து போகும் சந்தான ஆஸ்ரயம் -ஞான தொடர்ச்சி இருப்பிடம்
என்றால் ஞானம் வேறே ஆத்மா வேறே -என்றதாகுமே -க்ஷணிக வாத நிரசனம்

அடுத்து -ஞானம் நித்யம் -அத்வைதி -அதுவே ஆத்மா -பரமாத்மா -ஞானம் -ப்ராக் அபாவம் –
முன்னால் இருக்கும் நிலை இல்லாதபடியால் –
ப்ரத்வம்சா அபாவம் -இருந்தது இப்பொழுது இல்லை -பானை துவம்சம்
அத்யந்த அபாயம் -ஆகாச தாமரை -முயல் கொம்பு போல்வன
ஞானம் அநித்தியம் என்பது சித்திக்காது -தானே பிரகாசிக்கிறபடியால் -தானே தோன்றுகிறபடியால்
ஞானத்துக்கு ப்ராபக பாவம் இல்லை -இன்மை பாவம் -தன்னால பிறராலோ கிரகிக்க முடியாதே –
இன்மை கிரகிக்க இன்மை இருக்க வேண்டுமே -இருப்பதால் இன்மை அபாயம் இல்லையே -க்ராஹ்யம் இல்லை ஆகுமே
நான் இல்லாத போது கிரகிக்கலாமா என்றால் யார் கிரகிப்பார் -க்ராஹகம் இல்லை –
இன்னும் ஒருவர் கிரகிக்கிறார் என்றால் ஜடமாகுமே -தனது அபாவம் வேறு ஒருவரால் கிரகிக்க முடியாதே-
இன்னொருவர் ஞானம் நமது பாஷையில் -அத்வைதி இன்னும் ஒரு ஞானத்துக்கு விஷயம் என்பார் –

ப்ராபக பாவம் இல்லை உத்பத்தி இல்லை ஆகவே நித்யம்
மேலே -உத்பத்தி இல்லை என்றாலே மற்ற ஐந்து விகாரங்களை இல்லையே –
ஜென்மம் இல்லா விட்டால் அஸ்தி பரிணமதே இத்யாதிகளும் வராவே –
நாநாத்வமும் தள்ளப்பட்டது -கட ஞானம் வெள்ளை ஞானம் —
யத்ர அஸ்தித்வம் முதலான பாவ விகாரங்கள் உண்டோ அங்கு தானே உத்பத்தி உண்டு
எங்கு உத்பத்தி இல்லையோ அங்கு இவை இல்லையே
பலவாக உள்ள தன்மை இருந்தால் உத்பத்தி இருக்க வேண்டுமே

ஞானத்து விஷயம் ஆனால் -ரூபம் நிறம் -அது ஞானத்தின் தர்மம் ஆகாதே –
யத்ர யத்ர ஞான விஷயத்வம் -தத்ர தத்ர சமவித்து தர்மம் ஆகாதே
அதே போலே -விகாரம் -பேதங்கள் -இவை ஞானத்துக்கு விஷயம் தானே -ஞானத்துக்கு தர்மம் ஆகாதே –
ஞானத்துக்கு பேதமோ விகாரமோ இல்லை -சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் இல்லை
சஜாதீயம் -வேறே வேறே மரங்கள் -ஒரே ஜாதி
விஜாதீயம் -மலை -மரம் –
ஸூ கத பேதம் -மரத்தில் உள்ள கிளை இலை பழம்
மூன்று பேதங்களும் உண்டு சம்ப்ரதாயம்
ஞானம் உடைமை -ஆத்மா பரமாத்மா -பேதம் உண்டே
விஜாதீயம் -ப்ரக்ருதி -பரமாத்மா
ஸூகத -திருமேனியும் குணங்களும் உண்டே
நலம் உடையவன் –ஸூகத
அயர்வரும் அமரர்கள் அதிபதி -சஜாதீய
மயர்வற மதி நலம் -விஜாதீய –
மூன்றுமே முதலிலே காட்டி அருளினார்
அத்வைதி -மூன்று பேதங்களும் இல்லை -தவிர்ந்து வேறே இல்லை நிர்விசேஷ சின் மாத்திரம் ப்ரஹ்மம்
உத்பத்திமத்வம் நிவ்ருத்தி யானால் வியாப்தமான நாநாத்வமும் சித்திக்கும்
விபாகம் இருந்தால் பிறப்பிலியாக இருக்க முடியாதே
யாருமே கிரகிக்கா விடில் வஸ்துவே இல்லையாகும்

ஞானம் உண்டு -ஞானத்துக்கு தர்மம் இல்லை -என்பர் அத்வைதி –
நிகில பேத விகல்ப–நீர் தர்ம -பிரகாச மாத்ரமாய் இருப்பதாய் -பிரகாசத்தை உடையது இல்லை –
தத்தாக இருக்கும் தத்வமாக இருக்காது
கூடஸ்த-விகாரம் அற்ற – நித்தியமான – சம்வித் ஞானமே ஆத்மா -அதுவே பரமாத்மா -அத்வைதி –
வேதாந்தத்தின் கருத்து என்கிறார் -வேதாந்த சப்தம் சொல்லாது -தாத்பர்யம் என்பர் –
ஞானாந்த கோசாரம் -அறியப்படுவதாக இருக்க முடியாதே -வேறு ஒரு ஞானத்துக்கு விஷயம் ஆகாதே –
வேதாந்தம் நினைக்கும் பேதம் -புரிந்தால் அத்வைதி ஞானம் -ப்ரஹ்மம் சத்யம் -ஜகத் மித்யா -என்பர்

எந்த சம்பவித்தானது -உண்டாகாதோ -அஜத்வம் -வேறு ஒரு ஞானத்தால் அறியப்படாத அமய -அநந்தம் -அழியாததாய் -விநாச ரஹித்யம் –

சம்வித் -அஜா-பிறக்காதது அமேயர் வேறு ஒன்றால் அறிய முடியாதது -ஆத்மா இதி -வேதாந்த வாக்ய தாத்பர்யம் இதுவே –
ஞானம் மாத்திரம் -நிர் விசேஷம் –
வேறு ஒன்றைக் கல்பிக்க வேண்டாம் –
ஞானம் -கொண்டே பிரமாணம் அறிகிறோம் -கடம் படம் பிரமேயம் -லௌகிகத்தில்-
இந்திரிய ஜன்ய ஞானம் பலம் -கட ஞானம் பலம் -பராக் அர்த்தம் –
வேதாந்தத்தில் இதுவே-ஞானமே – ப்ரமேயம் என்பர் – வேதாந்தம் பிரமாணம் –
அமேயா-என்பது -கருத்தால் -சப்தம் சொன்னதாக சொன்னால் பிரமாணம் ப்ரமேயம் இரண்டையும் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
நிர்விசேஷ -நித்ய விஞ்ஞானமே ஆத்மா -அத்வைதிகள் -புத்தன் க்ஷணிக விஞ்ஞானமே ஆத்மா என்பான் –

ஞாதா இல்லை ஜேயம் இல்லை ஞானம் மாத்திரமே – கடம் அஹம் பார்க்கிறேன் -சொல்ல மாட்டார்கள் -மூன்றையும் சொல்லாமல்
ஞானம் மாத்திரம் உண்மை -மற்ற இரண்டும் மீதியை -ஞானமே ஆத்மா -நிர்விசேஷ சீன மாத்திரமே ஞானம்
அஹம் -ஞானம் உடையவன்
அஹம் -அந்தக்கரண -ஞானத்துக்கு கோசாரம் -அவித்யையால் கடம் இத்யாதி பிரதிபலிக்கிறது –
அந்தக்கரணமும் கடம் இவை எல்லாம் மித்யை பொய்–அவித்யை பட்ட சிதறல் மறைந்து -அதுவே முக்தி -பலவாக தோற்றம் சம்சாரம் –
ப்ரத்யக்ஷத்துக்கு தேவையான இந்திரியம் -இவற்றுக்கு அதீனப்பட்டு மனஸ் -கண்ணுக்கு ஆட்பட்டு காண்கிறது உண்மை இல்லை –
பிரதிபலிப்பது போலே -இவை -அவித்யை காரணம் -மனம் -உபாதி -கண்ணாடி போலே -அனைத்தும் மித்யை

ஆத்மாவை அறிந்தவர் -அலௌகீகம் அவைதிக தர்சனம் -என்பர் உனது அத்வைதத்தை
சம்வித் -தர்மம் பிரசித்தம் -தர்மி இல்லையே –
எப்படி இருக்கும் -ஆச்ரயித்து இருக்கும் ஆத்மாவுக்கு -தானாகவே பிரகாசிக்கிப்பித்துக் கொண்டே இருக்கும் –
ஞான -அவனது -அனுபூதி பர்யாய சொற்கள் -கர்மா -படம் கடம்-பலத்தை நறுக்கினேன் -படத்தை பார்த்தேன்
இரண்டாம் வேற்றுமை உள்ளது கர்மா -முதல் வேற்றுமை கர்த்தா
தர்மம் வேறே தர்மி வேறே –
சர்வ பிராண -உயிர் உள்ள அனைவரும் இப்படியே சொல்வர் -சர்வ பூத ராசியும் -அனுபவம் இப்படியே இருக்கும் –
நான் இதை அறிகிறேன் -ஞானம் ஏற்படும் இருக்கும் அழியும் -நித்யம் இல்லை நீ சொன்னபடி
உத்பத்தி கண்ணுக்கு தெரியுமே -சுகம் துக்கம் வரும் போகும் அதே போலே ஞானமும் -ப்ரத்யக்ஷ சித்தம் –
தூங்கும் பொழுது ஞானம் இல்லை -பின்பு ஸ்மரிக்கிறோமே -அநித்தியம் வரும் போகும் -ஆத்மா நித்யம் -எப்படி இரண்டும் ஒன்றாகும்

மரணம் -நரக வேதனை -கர்ப்ப விசனம் -மூன்றாலும் மறக்கலாம் -பழைய ஜென்ம வாசனை இல்லையே –
யாவது அனுபூதி எல்லாம் ஸ்மரிக்க–சம்ஸ்காரம் -மனப்பதிவு -இந்த மூன்றாலும் விச்சேதம் -ஆகும் –
அத்வைதி தூங்கும் பொழுதும் ஞானம் உண்டு ஆனால் மறக்கிறோம் என்பான் -இது சரி இல்லை –
முன் சொன்ன மூன்றாலும் தான் மறக்கிறோம் -ஆகவே தூங்கும் பொழுது ஞானம் இல்லை -அனுபவம் இல்லை –

ஞானம் -விஷயம் -அந்தக்கரணம் தொடர்பு வந்தால் தான் சம்ஸ்காரம் ஏற்படும் –
தூங்கும் பொழுது விஷயமும் அந்தக்கரணமும் இல்லை அதனால் சம்ஸ்காரம் இல்லை –
ஞானம் இருந்தாலும் ஸ்மரிக்க முடியவில்லை என்பான் –
விஷயம் இல்லை -அந்தக்கரணம் நாசம் அதனால் நினைவு வரவில்லை என்பான்
இது பொருந்தாது –
ஞானம் இருந்தாலே பிரகாசமாக தானே இருக்கும் -ஸ்வயம் பிரகாசம் தானே
நீ சொல்வது சரி இல்லை -ஸ்வயம் பிரகாசம் வேறு ஒன்றை எதிர்பார்க்காதே –
மூன்று சேர்க்கை -தனி தனி ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்தும் -ஞானம் ஜேயம் ஞாதா –
கடம் அஹம் அறிகிறேன் த்ரிதயம் -பார்த்த பார்த்த அம்சம் தனித்தனியே சம்ஸ்காரம் -ஏற்படுத்து ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
அஹம் சொல்லுக்கு மனம் என்று சொல்லி அது இல்லை என்கிறாயே
நான் தூங்கும் பொழுது வைத்த மாத்திரை தூங்கி எழுந்த பின் இல்லை என்றால்
நான் -முன்பும் தூங்கும் பொழுதும் அப்புறமும் இருப்பதால் -நான் நித்யம் -இதுவே அஹம் அர்த்தம்

கட பட ஞானம் அநித்யமாகவே இருக்கட்டும் -வேறு ஒரு ஞானம் நித்யம் அதை ஆத்மா என்கிறேன் என்பான் –
நிர் விஷய நிராசரயமாய் -விஷயம் இல்லாமல் -கர்மா கர்த்தா இரண்டும் இல்லாமல் -சம்வித் -ஞானம் என்பதே இல்லையே –
ப்ரத்யக்ஷத்தில் இல்லை என்றால் அனுமானிக்கலாம் என்றால் -முடியாது –
சப்தார்த்தம்–பிதா என்றாலே புத்ரன் இருக்கும் சம்பந்தி எதிர்பார்க்கும்
ஞானம் சொன்னால் -கர்மா கர்த்தா தேடும் எத்தை பற்றி யாருடையது வருமே
இல்லாமல் பிரயோகம் இல்லையே –
ஞா தாது பிரயோகப்படுத்தினால் இரண்டும் கூடவே இருக்க வேண்டுமே –
சம்வித் ஞானம் பிரகாசம் அனுபூதி சப்தங்கள் சம்பந்தத்தை எதிர்பார்த்தே இருக்கும்
சதம்வந்தி சப்தம் தானே இது –

தர்மி ஞானம் -தர்ம ஞானம் -தானே விளங்கும் தனக்கு விளங்கும் -ஸ்வரூப ஞானம் -எல்லாத்தையும் விளக்கும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா வராது -கர்மா மட்டும் இருக்கலாம் -ஞானத்துக்கு விஷயம் உண்டு –
ஆஸ்ரயம் இல்லை -ஆனால் விஷயம் ஆத்மா -நான் நான் என்று ஆத்மா தானே விஷயம்
நான் சொல்லும் பொழுதே ஏகத்துவம் -நாங்கள் இல்லை நான் ஒருவன் தோன்றும் –
அடுத்து நான் எனக்கு அனுகூலமானவன் என்றும் தோன்றும் -வேண்டியவன்
அடுத்து நான் வெளியில் இல்லை உள்ளே -பாராக்த்வம் இல்லை -இப்படி மூன்றும் உண்டே

ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தாலும் விஷயம் இருக்குமே -இரண்டும் ஞானம் -ஒன்றுக்கு ஆஸ்ரயம் இல்லை -இரண்டா
கோ சப்தம் மாடு பூமி வாக்கு மூன்றையும் குறிக்கும் -வாக்கு சொல்லும்பொழுது நான்கு கால்கள் இருக்க வேண்டாமே
அதே போலே ஞானம் இரண்டு பிரயோகத்தில் இந்த இரண்டும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா இல்லை கர்மா உண்டு
தர்ம ஞானத்துக்கு இரண்டும் உண்டு என்பதில் விருத்தம் இல்லையே -சம்பந்தி –அசம்பந்தி -இரண்டும் இந்த தர்ம தர்மி ஞானங்கள் –
ஞானம் நித்தியமாக இருந்தால் அதுக்கு சம்ஸ்காரம் ஏற்படுத்தி ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆக வேண்டுமே

நான் குடத்தை பார்த்தேன் -கர்த்தா நான் ஆத்மா -ச கர்ம -சேர்ந்தே ஞானம் இருக்கும் –

——————-

ஈஸ்வர ஸித்தி
வேதைக சமைதி கம்யன்
அனுமானத்தால் மட்டும் சாதிக்க முடியாதே -ஸாஸ்த்ர யோநித்வாத் -1-1-3-

அநு மானிகி மாப்யாத்மா சித்திம் அஸ்ரத்தா தான ஸ்ரவ்தி மேவதம் ஸ்ரோத் ரியா சங்கிரந்தே

நனு ச கேவல தர்க பல தயம் யதி சிக்ஷ தயிஷ பதம் ஈஸ்வர
பவேது நம தத சதி துஷநம் ஸ்ருதி ஸிரஸ் ப்ரமிதோ ஹி மஹேஸ்வர –ஆகம ப்ரமாண்யம்

வேர் முதல் வித்து -இவனே த்ரிவித ஸர்வ காரணம்

————-

ஸம் வித் ஸித்தி

சதேவ சவும்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மன்
தத் ஸத்யம் ஸ ஆத்மா தத் த்வம் ஆஸீ ஸ்வேத கேதோ

நிர் விசேஷ நிர் தர்மக ஸம் வித் மாயா அவித்யா ஏக ஜீவ வாதம்
பேத ஸ்ருதிகள்
அபேத ஸ்ருதிகள்
கடக ஸ்ருதிகள்

ஸமான அதிக ராஹித்யன்
அகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை ஏக ஸ்தானம்
உபய லிங்க உபய விபூதி விஸிஷ்டன்

ஐத தாத்மியம் இதம் ஸர்வம் தத் ஸத்யம்
பிரகார பிரகாரீ பாவம்
சரீராத்ம பாவம்

ஸப்த வித அனுபபத்தி

ஸ்ரீ பாஷ்யம்—சப்த வித அனுபபத்தி -மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்

அவித்யா -வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -நாம்
6 வித அர்த்தம் negative உண்டே
அப்ராஹ்மானம் கூட்ட வா
விதித்வா -ஞானம்
தமேவ -மிருதயம் தாண்டி மோஷம் அடைகிறான்
தமேவ வித்வான் அம்ருத ஏக பவதி நானன்ய பவதி
பக்தி ரூபானன்னா ஞானம்
ஞானம் யோகம் ஒன்றாலே மோஷம் அத்வைதிகள்
ஞான யோகம் நிராகாரமான
உபாசனம் இல்லையே அத்வைதிக்கு
ஒன்றே தான் உண்டு
ஏது அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவியக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்தியம் கூடஸ்தம் அசரம் துருவம்
ஸநியம்ய இந்திரிய கிராமம் ஸர்வத்ர சமபுத்தேர்
தே பிராபனுவந்தி மாமேவ ஸர்வபூத ஹிதே ரதா :கீதை 12 யோகம் -ஞான யோகம்
அவயகதம் உபாசனம் கிலேசம் சரமம் உண்டாகும்
துக்கத்தில் போய் முடியும்
பக்தி மார்க்கம் சொல்லி அருளுகிறான்

மர்கட கிசோர நியாயம்-குரங்கு குட்டி தானே அம்மாவைக் கட்டி கொண்டு தன ரஷணம் தனக்கு
மார்ஜுவர கிசோர நியாயம் -தானே கவ்வி கொண்டு போகும் பூனை
ஞானம் பக்தி மார்க்கம்
குழந்தை தாய் கை பிடிப்பதற்கும் தாய் குழந்தை பிடித்து போவதற்கும்
அவதாரணம்
பக்தி ரேவா முக்தி உபாயம் –
அவித்யா வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -கர்மம் தானே
ஞான கர்ம சமுச்சய வாதம் -நான்குவித பசங்கள் உண்டு
அங்க அங்கி பாவம் நம் சித்தாந்தம்
ஞானம் அங்கி
கர்மம் அங்கம் –

அத்வைதிகள் –
அவித்யை எனபது-கொண்டே சம்ப்ரதாயம்
அடித்தளம்
சாதகம் செய்ய -சாத்தியம் இல்லையே
ஆத்மா யாதாம்ய வித்யை அநாதாரிகம்
ஏழு அனுபபத்தி காட்டி -அருளி
அனுர்வசநீயம் -நிர்வசனம் நிர்வசநீயம் அவித்யை எப்படி பட்டது சொல்ல முடியாது
பர ப்ரஹ்மா அவித்யையால் ஜீவாத்மாவாக என்பதால்
அபூர்வமான பர ப்ரஹ்மம்
நாம ரூபம்
அநேன ஜீவனே – ஜீவாத்மா மூலமாக -சாதுர்முகன் மூலம் நாம ரூபம் வாயகரவாணி
காலம் –
எல்லா வஸ்துவும் வசநீயம் நீயமானம்

1-ஆஸ்ரய அனுபபத்தி முதல் அனுபபத்தி
நேதி நேதி மார்க்கம் நிராகாரா உபாசனம்-ஆழந்த சிந்தனை-கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் அறிய
உபநிஷத் சொல்வது எல்லாம் சகுண வித்யை தான்
உபாசனம் சொன்னாலே குணம் ஆகாரம் வேண்டுமே –

ஈசா வாச உபநிஷத் வித்யா அவித்யா
கர்மம் அர்த்தம் அங்கும்
ஈஸ்வர சர்வ பூதானம் ஈசான சீலன் நாராயண சங்கரர் அருளி –
நாராயண சப்தம் கொண்டே

ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-19-41-முக்கிய ஸ்லோகம்
ககனமான அர்த்தம்
கீதை ஷணம் தோறும்வேலை செய்து கொண்டே
சூஷ்ப்ப்தி அவஸ்தையிலும் அஹம் அர்த்தம் உண்டே
ஜாக்ரதை சொபன துரியா அவஸ்தை
கர்மம் -ஆகர்ஷக ரூபமான கர்மம்
பந்தத்துக்கு காரணமாக இல்லாமல் காயிக வாசக மானச –
மோஷத்துக்கு காரணமாக இருக்க வேண்டும்
வித்யை அது போலே
வித்யை விகாசம் -சிந்தம் –
உப லஷணம்-
ஆயாசாகா -கர்மம் -சரமம் தாபம் பந்தம்
வித்யை பேர் லௌகிக அறிவு
சரியான கர்மம் வித்யை ததேவ கர்மா
ச ஏவ வித்யா முக்திக்கு காரணமானது தான் –

பந்தங்கள் மோஷங்கள்
அவித்யை காரணத்தால் சம்சாரதுக்குள் படும் ப்ரஹ்மம்
அநாதி அவித்யை
நிர்விசேஷ சுயம் பிராகசம் ப்ரஹ்மம் இரண்டும் பிரதான அம்சம்
தீபம் போலே தன்னையே காட்டிக் கொடுக்கும் போலே
ஈச ஈச்தவ்யாது அநேக வித
ஈசிதவ்யம் -நம்முடையது
ஈசித -சுவாமி
ஸும் ஸ்வாமி பாவம்
தோஷத்தால் விகல்பங்கள் உண்டாகிறது
தோஷச்த ஸ்வரூப திரோதான -பிரகாசிக்க முடியாமல் பண்ண -அவித்யா தோஷம்
அது மட்டும் இல்லை –
விவித விச்சேத்ரா விச்சேபம் -கடம் படம் போலே காட்ட –
அநாதி
பிரதம பிரவ்ருத்தி -ஸ்வா தந்த்ர்யம்
கரமண அநாதித்வா
ந வித்யதே –ஆதி என்றுமாம் -ஆரம்பம் தெரியாததுஎன்றும் ஆதி இல்லாதது –
சத் அசத் அநிர்வசனீய
ஹிரன்ய நிதி -அமிர்தேன
நித்ரா –
பரமாத்மா சம்யோகம் தான் நித்ரா
நாடி புரீதம் நாடிக்குள் மனஸ்
சைதன்யமயம் பரமாத்மா
பிராணிகள் எல்லாம் இப்படி
யதா ஹிரன்ய நிதிம் அஷர-ப்ரஞ்ஞாகா -தெரியாமல்
புதையல் கீழே -இருப்பது அறியாமல் -வீட்டை விற்று
உபரி உபரி சஞ்சரி ன் விந்தைதான் நிறை நிறை
அது போலே அஹர் அஹர் ப்ரஹ்ம கச்சந்தி ன் வின்தடி
எதானால் தோஷம் -ஏவமேவ
அமிர்தம் ன் பிரத்யஊடக வார்த்தை எடுத்து தோஷம்
சுஷ்ப்தி அவஸ்தை சொல்ல வந்த பிரகரணம்
சதச் அநிர்வசநீயா அநாதி அவதியை

சத் -இருக்கும் வஸ்து
அசத் வஸ்து -சச ஸ்ருங்கம் முயல் கொம்பு ஆகாச தாமரை சிங்க தும்பிக்கை போல்வன -சம்பூரணமான அசத் வஸ்து
பிரபஞ்சம் எல்லாம் சத் அசத் வஸ்துக்களாக இருக்கும்
இரண்டும் உள்ள வஸ்துவோ
இரண்டுமாக இல்லாத வஸ்து உண்டோ
அத்வைதிகள்
இருக்கலாம் -illution
கயிறு பார்த்து பாம்பு சொல்வது
புல் குச்சி -கரடி
சர்வதா அசத்தாக இருந்தால் சரபம் போலே எப்படி தோன்றும்
கரடி போலே நினைக்க வில்லை
சத் தானே சர்ப்பம் –
சர்வதா அசத்தாக இருந்து இருந்தால் தோன்றி இருக்காதே
பாம்பு தான் என்று நினைத்து பயந்து இருக்க
கயிறு தான் காட்டிய பின்பு
புரிந்து
முன்னாள் பாம்பு புரிதது பொய்
பாதக -பெயர் கொடுத்து
பூர்வ ஞானம் பாதிகம்
சர்ப்பம் அசத்
சர்ப்பம் இத்தால் சத் அசத் இரண்டு ஆகாரமும் வந்ததே
சதித் ந பாத்யேதே
அசத்த்யேத தோன்றியே இருக்காதே
சதசதே அதனால் அநீவசநீயம் -define பண்ண முடியாதது
1/o =infinity அநிர்வசனீயம்
infinity /infinity -infinity அநிர்வசனீயம் போலே
அவித்யை அது போலே
அசத் -சொல்ல முடியாது
ஜீவாத்மாவாகவும் மற்ற அசித் வஸ்துகளாகவும் பார்ப்பதால்
சத் சொல்லலாமோ -உண்மையால் இல்லை
சதேவ சமய ஏக மேவ அத்விதீயம் ப்ரஹ்மா
ஒரே வஸ்து
ஒற்றே இருந்தது
இரண்டாவது இல்லை சொல்லி
விதி முகென நிஷேத முகென

சதசத அநிர்வசநீயத்வம் அநாதி
நிர்வசன யோக்யதை இல்லையாமையால்
பிராந்த பாதம் இரண்டும் இருப்பதால் சத்
ஸ்ருதி விரோதம் வருவதால் அசதி சொல்ல முடியாதே
இரண்டு கோடியிலும் இருப்பதால்
இரண்டு கோடியிலும் சேராமல் இருப்பதால்
ஏழு வித அனுபபத்தி காட்டி
ஆஸ்ரய அநுபவத்தி பிரதம
அவித்யை எங்கு இருக்கு -முதல் கேள்வி –
அப்யுகம -இருந்து என்று வைத்து கொண்டால்
கௌதம மக ரிஷி காட்டி
வாத க்ரம-படி
ப்ரஹ்ம வசத்துக்கு ஆஸ்ரயம் எங்கே அவர்கள் கேட்டால் ஸ்ரீ பாஷ்யம் அர்த்தம் உண்டே
அவித்யை ஜீவாத்வாவிலீ பரமாத்வாவிலா
விகந்தி பூஷணம்
ஜீவாத்மாவே இல்லையே உங்கள் பஷத்தில் இருக்க முடியாதே
பரமாத்மாவில்
சூரியன் இடம் அந்தகாரம் இருக்குமா
சுயம் பிரகாச வஸ்து நீங்களே சொல்லி
அங்கும் இருக்கும் முடியாதே
தத் அயுத்தம்-
தத்ச்ய சுயம் பிரகாச ஞான ஸ்வரூபம் என்று சொல்வதால்
நித்யத்வம்
அநித்யத்வம் ஆகாசம் காலம்
புஸ்தகம் உத்பத்தி வினாசகம்
ஒரே வஸ்துவில் இரண்டும் சேர முடியாதே
ஏகத்வம் பகுத்வம் இருக்க
பரஸ்பர விருத்தம்
அவித்யை உபாதியால் எனபது முடியாது
ஆஸ்ரய அனுபபத்தி உண்டே

கவிதார்த்த சக்கரவர்த்தி -ஸ்ரீ பாஷ்யம் கண்டனம்
கவிதார்த்த சிம்ஹம் தேசிகன்
தூஷணி அருளி பதில் கொடுக்க
சத பூஷணி எழுத வைத்தார் காஞ்சிபெரிய ஸ்வாமி
பரமார்த்த பூஷணி உத்தமர் ஸ்வாமி
பாஸ்கரர் உபாதி சத்யம் சொல்லி த்விதீயம் ஸ்ருதி வசனம் தப்பாகுமே

பாமதி பிரஸ்தானம்
விவரண பிரஸ்தானம் அத்வைதி இரண்டு பஷம்
பரகால ஸ்வாமி ஆராய்ந்து இத்தைக் காட்டி அருளி –
திரோதான உபபத்தி -இரண்டாவது
மறைவது –
அந்தர்தானம் -ஒரு சப்தம் உண்டு -அது வேற
பிரகாச ஏக ரூபம் ப்ரஹ்மன்-முதலில்
யாருக்கு
பார்க்கிறவன் பார்க்கப் படுபவன் இரண்டு இல்லையே அவர்கள் பஷம்

2-அடுத்து அவித்யை ஏற்பட்டு -அநிர்வசனீயம்
மறைத்து –
பூர்ண அந்தகாரமா -தோராயமாக காட்டி
அடுத்து -இதனால் -திரோதானம்
அந்த திரோதானம் போன பின்பு
பந்தமும் மோஷமும் ப்ரஹ்மத்துக்கு
பந்தத்துக்கு காரணம் அவித்யை
மோஷத்துக்கு காரணம் வித்யை –
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மிதியை
மறைத்தது
ஹிரன்ய மயமான பாத்ரத்தால் ஆவிர்வதம் சத்யம் அபிஹிதம் ஈசானா உபநிஷத்
ஜீவாத்மா -அந்தர்ஹிதம் பரமாத்மா சொல்ல வந்தது
எள்ளுக்குள் யென்னெய் போலே
கரந்தநெய் தயிரில் போலே
சர்வம் வியாபி
ஷீரே-
பாலில் நெய் -காய்ச்சி கொஞ்சம் ஆரி -உறை குத்தி -ஏடு எடுத்து கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்
த்யானம் -கடைவது போலே
தேவம் பச்யேது
அல்லோக்கம் அகாரத்துக்கு லோபம்
விஹிதம் -ஒரே அர்த்தம்
நிகூடவது -as if hidden
திரோதானம் என்ன –
மூடி வைத்தா -முதல்
தீபம் விநாசம் -பிரகாச உத்பத்தி பிரதிபந்தம்
தீபத்தையே அழித்து
இரண்டும் சரிப்படாதே
வித்யமானச விநாசகம் இருக்க முடியாதே
நித்ய சுத்த பிரகாச்த்வ ஸ்வரூபம் சொன்ன பின்பு –
மறைக்க -முடியாதே பிரகாசம் எப்பொழுதும் உண்டே
பிரகாசம் குணமா –
தீபம் திருஷ்டாந்தம் சொன்னால் தேப்பம் வேற பிரகாசம் வேற
பத்ரம் வைத்து மூடி
தீபமே அணைந்து
தீபம் வேற பிரகாசம் வேற குணா குணி பாவம் வருமே
இரண்டு இல்லையே உங்கள் பஷத்தில்
அபசித்தாந்தம் -self goal போலே

கிஞ்ச –
ந்னு-
அத –
major objection
தூஷநாந்தரம் -ஓன்று சொல்லி பின்பு அடுத்து சொல்ல
இதி வததா-இப்படி சொல்லிய உன்னால்
பிரகாச ஏக ஸ்வரூபம் அவித்யய்யால் திரோதிகம்
ஸ்வரூப நாசம் ஆனது போலே ஆகுமே
பிரகாச திரோதானம்
உத்பத்தி பிரதிபந்தி
விநாசன
ஞான ஏக ஸ்வரூபம் ப்ரஹ்மம் அவித்யையால் மறைய முடியாதே

பூஷணம் போலே அத்வைதிகள் சப்த அனுபபத்தி சொல்வார்கள்
பூஷணம் ஏவ தூஷணம் இல்லை
ராமாயணம் -சீதை ராவணனுக்கு உபதேசம் சுந்தர காண்டம்
உனது மனைவி தொக்கி போனால்
சு தர்ம ரஷணம் -இது எங்கள் தர்மம் என்பான்
நீ தோஷம் சொன்னது எல்லாம் குணம் தான் என்பான்
துர்கடத்வம் எல்லாம் பூஷணம் தான் என்பார்கள் –
கண்டன கண்ட காவியம்
சதா தூஷணி 68 வாதம் தேசிகன்
வாத ஜல்ப விகண்டா வாதம் -தத்வம் அறிய
ஜல்பம் உளறுவது

விதண்டா -சுய பஷ ஸ்தாபனம் உத்தேச்யம் இல்லை
ப்ரஹ்மம் சத்யம் நிராகரணம் செய்தால் ப்ரஹ்மம் மிதியை வருமே
கதையாம் அதிகாராம் நாஸ்தி
வாதம் பண்ண மாட்டேன் -சொன்னால் insult
அவமானம் –

சங்கராச்சாரியாருக்குப் பிறகு வந்த பாஸ்கர, யாதவபிரகாசர் பக்ஷங்கள் தவிற ,
மிஸ்ரருடைய பாமதி பிரஸ்தானம் , பிரகாஸாத்மா வினுடைய பஞ்சபாதிகா விவிரண பிரஸ்தானம் முறையே
ஜீவாக்ஞான வாதம், பிரஹ்மக்ஞான வாதம் என அனுபபத்திப் பரிகாரம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்களும், பகவத் ராமானுஜருடைய இந்த சப்தவித அனுப்பபத்திகளுக்கு யுக்தா யுக்தமாக பதில் சொல்ல வில்லை.
அவர்களுக்குப் பிறகு வந்த ஸ்ரீஹர்ஷா என்கிற கவி ”கண்டன கண்ட காவியம் ” என்கிற தன்னுடைய கிரந்தத்தில்
பகவத் ராமானுஜருடைய யுக்திகளை விதண்டா வாத முறையில் எதிர்க்க, அவைகளுக்கு ஸ்வாமி தேசிகன்,
”ஸததூஷணி” என்கிற கிரந்த முகேண தக்க பதில் அளித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை புனருத்தரித்தார்.

2. திரோதான அனுப்பபத்தி :
ஸ்வயம் பிரகாசமான பிரஹ்மம் அவித்யையின் பரிணாமத்தால் திரோதானத்தை அடைகிறது .
பரம் பிரஹ்மைவ அக்ஞம் பிரம பரிகதம் ஸம்ஸர்கி என்று பந்த மோக்ஷம் இரண்டும் பிஹ்மத்துக்காய் –
அகண்டைஸ்ச நித்ய முக்த ஸ்வரூபம் நித்ய பிரகாசமான பிரஹ்மத்துக்கு வித்யமானஸ்ய விநாசம் என்பது ஏற்புடைத்தல்லவே?
தீபம் போலே பிரஹ்மம் , திரையிட்டாப் போலே அதன் ஒளி மழுங்கிவிடுகிறது என்றால்,
பிரஹ்மத்துக்கு பிரகாசம் அப்படியே இருக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் ஒளி குன்றித் தோற்றம்
அளிப்பது போல வைத்துக் கொண்டால் பிரஹ்மம் வேறு, பார்க்கிறவர் வேறு
அதாவது விளக்கு வேறு ஒளி வேறு என்றாகி அத்வைதம் நிற்காது.
திரோதானத்தால் பிரஹ்மத்தினுடைய ஸ்வப்பிரகாச தர்மம் மறைகிறது என்று வைத்துக் கொண்டால் , பிரஹ்ம ஸ்வரூபம் நாசமடைகிறது என்றாகும்.
சூரியனில் இருட்டு சேராதாகையாலே, தாங்கள் சொன்னதை தாங்களே பொய்ததாகிற, அப -சித்தாந்த தோஷம் வரும் ?

அகடித கடனா படீயத்வா: அவித்யாயேவ துர்கடத்வம் பூஷ்ணமேவா நது தூஷணம். – என்று அத்வைதிகள்
இந்த சப்தவித அனுப்பபத்திகளை குறை எனக்கொள்ளாமல் தங்கள் ஸித்தாந்தத்தின் பெருமையாக,
”அவித்யா ” அப்படியானதொரு அநிர்வசனீய ”பிரஹ்மைவ அக்ஞம் ” என்று ஆமோதிக்கின்றனர்.

அசோக வனத்தில் சிறை இருந்தவளான சீதை, ராவணனுக்கு தன்னை ராமனிடத்தில் சமர்ப்பித்துவிடு என்று உபதேசிக்கிற வேளையில்,
‘ஹே! ராவணா உன்னுடைய மனைவியை வேறு யாரேனும் கவர்ந்து சென்று விட்டால் உன்மனம் எப்படி பாடுபடும்,
அதை நினைத்து , என்னை ராமனிடத்தில் சமர்பிப்பாய் ‘ என்று சொல்ல அதற்கு
இராவணன் பிறர் மனைவியை பெண்டாடுவது ராக்ஷச தர்மமாய் குணமாகும் அன்றி குற்றமாகாது என
தன் தூஷணத்தை பூஷணமாக கொண்டாடினாப்போல உள்ளது அத்வைதிகளுடைய இந்த விமர்சன ஸ்வீகாரம்.

3-ஸ்வரூப அனுப பத்தி மூன்றாவது – ஸ்வரூபம் –இயற்க்கை தன்மை-ரூபம் –நிறம் -ரூப்யம்
அவயவ அர்த்தம் இல்லை –இருந்தால் நித்யமா அநித்தியமா விகல்பம் செய்து வாதம்
சத்யமான யதார்த்தமான வஸ்துவா-அசத்தியமான அயார்த்தமான வஸ்துவா
சத்யம் என்றால் இரண்டாவது வஸ்து வருமே-அசத்தியம் என்றால் அத்தால் பிரமை ஏற்படுமா
அசத்தியம் என்றால் ப்ரஹ்மமும் அசத்தியம் ஆகுமே
பாவ ரூபம் அவித்யை -அனுமானம் பிரமாணம் வைத்து
கயிறு பாம்பு -இருட்டில் -வளைந்த ரூபம் இந்த காரணங்கள் நிஜமா பொய்யா –
கயிறு சத்யம் தானே -வளைவு சத்யம் -நேராக இருந்தால் பிரமை ஏற்பட்டு இருக்காதே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி வாக்கியம்
சிரோ வாக்கியம்-நிர்விஷய நிராசாயா சு பிரகாச anu பூதயா ஞானமே பிரம்ஹம்
அனந்தாச்ரயம்-அனந்த விஷயம் ஆத்மாநாம் -சம்சாரம் அனுபவிக்க தன்னை தானே
பரமார்த்த -சத்யம் -அபரமார்த்தாமா -அசாத்தியமா
பிரமாதாவா -த்ரஷ்டா -பார்க்கக் கூடியவன்
தர்ஷ்யம் -பிரமேயம்
த்ரீஷியம் -பிரமாணம்
அத்வைதம் – -பிரமை -இரண்டு அம்சம் –
ஜகத் சர்ப்பம் ஸ்தானம் -கயிறு ப்ரஹ்மம் ஸ்தானம்
சாதிஷ்டான ப்ரஹ்மம் அத்வைதி
-அதிஷ்டானமான ப்ரஹ்மம் மிதியை சூன்ய வாதம் -மாத்யமிக பாஷம் -புத்தர் போலே
வைதிக சித்தாந்தம் ஆகாதே
சத் அசத் சதசத் ந அசதசத விலஷணம்-சூன்யம் மாத்மிகர்

அவித்யையினுடைய ஸ்வரூபம் என்ன என்பது கேள்வி? ஸ்வரூபம் என்றால் = nature. ரூபம் என்றால் colour or form.
abstract ஆன விஷயத்துக்கு ஸ்வரூபம் உண்டா என்றால் கிடையாது. இங்கு அவித்யைக்கு ரூடி அர்த்தம் என்ன?
அப்படியான ஒரு வஸ்து உண்டா? இல்லையா? என்பதே கேள்வி?

அப்படியொரு வஸ்து இருக்கிறது என்று வைத்துக் கொண்டு , அது உண்மையா? பொய்யா? என்று வாதிப்பது விகல்பம்.
இருக்கிறது என்றால், கூடாத விஷயங்கள் (அனுப்பபத்தி) இவை.
இல்லை என்றால் கூடாத விஷயங்கள் இவை என்று இரண்டுமே சித்திதால், அப்படியொரு நித்யாநித்ய வஸ்துயில்லை என்பதே உண்மை.
அவித்யா யதார்த்தம் என்றால் துவைதம் சித்திக்கும். அயதார்த்தம் என்றால் அது எப்படி பிராஹ்மத்தைப் பீடிக்கும் ? என்பது அடுத்த கேள்வி?
அது ஊகத்தால் பெறப்படுகிறது என்கின்றனர். ஊகமாவது அனுமானம் .
உ.ம்.-பர்வதோ வந்நிமான் , தூமத்வாத் என்பது ஒரு அனுமான நிர்தேசம்.
இங்கு
பர்வதம் – பக்ஷம்.
வந்நி – சாத்தியம் .
தூமம் – ஹேது .
பர்வத: வந்நி அபாவவான் , பாஷாணத்வாத் – என்று பிரதிவாதி.
வாதம் என்றால் வாதி, பிரதிவாதி இடையில் மத்யஸ்தன் என்ற நடுவர் உண்டு.
முதலில் ”சமய பந்தம்” என்று சில Axioms பொதுவாக நிர்ணயிக்கப் படும் .
அதற்கு உடன்பட்டு இருவரும் வாதத்தைச் செய்ய வேண்டும். இதற்கு ஸத் பிரதிவாதம் என்று பெயர்.
அப்படி ஒப்புக்கொள்ள வில்லையானால் அவர்கள் மேலும் வாதம் செய்ய முடியாமல் கதா-அநதிகாரி என்று வாதத்தில் இருந்து விலக்கப் படுவர்.

4-நான்காவது அநிர்வசனீயதவ அனுபபத்தி
5-ஐந்தாவது பிரமாண அனுபபத்தி -அனுமானம் -ஸ்ருதி வாக்யங்கள்
பிரமாண அனுபபத்தி பெரிய அனுபபத்தி
க்யாதி வாதம் -பல விஷயங்கள் theory of ஏற்றோர்
இப்படி பட்ட வஸ்து ஸ்பஷ்டமாக காட்ட முடியாது -அநீர்வசநீயத்வம்

அநிர்வசனீயம் அவித்யா என்பதை
a . யுக்தியைக் கொண்டும்,
b . அனுமானத்தாலும்,
c . ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாச வசனங்களாலும்-அத்வைதிகள் நிரூபிக்க பார்க்க, அதன் அனுப்பபத்தியை மேலும் பார்ப்போம்.

பிற மதத்தவர் காட்டும் பிரமாணங்களின் எண்ணிக்கை 8. அவை :

a. பிரத்யக்ஷம். – புலனறிவு. மானஸம் சேர 6 வகை.
b. அனுமானம் – ஊகம் . தெரிந்தலிருந்து தெரியாததை அறிவது- inference.
c. உபமானம் – உவமை. ஒரு சம்பவத்தில் இருந்து இன்னொரு சம்பவத்தை d. ஒப்புவமிப்பது.
d. ஸப்த – உபதேச ./ யதா திருஷ்ட, யதார்த்த ஆப்த வசனம்.
e. அர்த்தாபத்தி – பீனோ தேவதத்தா திவா நபுங்க்தே – ராத்திரி போகி. இரவில் பூஜிப்பான் என்று ஊகித்தறிவது – deduction.
f. அநுபலபத்தி – இருந்ததில்லை
g. ஸம்பவம் – Possibility
h. ஐதிஹ்யம் – சதே பஞ்சாசம் நியாயம் / அக்ஞாத வக்திருகம் – செவி வழி.

நமக்கு 3 பிரமாணங்களே சம்மதம்.

ஸதஸத் அநிர்வசனீயம் அநாத் யவித்யா., என்பதற்கு,
பகவத் ராமானுஜர் பல அனுப்பபத்திகளை காட்டின பிறகு , அநிர்வசனீயம் என்றில்லாமல் ”பாவ” ஸப்தத்தாலே காட்ட முயன்றனர்.

பதார்த்தா : த்விதா : பாவ: அபாவ: சேத்.
பாவ: என்றால் அஸ்தித்வ வஸ்து (+ve entity ).
அபாவ : என்றால் நாஸ்தி வஸ்து ( -ve entity ).

அவித்யா என்பது பாவ: Positive entity .
பிராஹ்மத்துக்கு அவித்யையால் ஜீவ பாவத்தை அடைந்து ஸம்ஸரிக்கிறது .
தன்னுடையதேயான வித்தையால் மோக்ஷ பிராப்தி அடைகிறது. அதாவது பிரஹ்மத்துக்கே பந்தம். பிரஹ்மத்துக்கே மோக்ஷம்.
ஜீவ பாவம் கல்பிதம் என்பது அத்வைதிகள் சொல்வது.

ஸுத்த புத்த முக்த ஸ்வரூபம் பிரஹ்ம என்ற போது புத்த என்ற வித்யைக்கு எதிர்த்தட்டான
அவித்யா (ந+வித்யா) எப்படி பிரஹ்மத்தோடு சேர்ந்திருக்கும்?

ஆலோக: = வெளிச்சம்.–ந ஆலோக: = இருட்டு.-என்பது போல் அல்ல .

அவித்யா வித்யா விரோதி அல்ல . வித்யா பின்னம் . வித்யா சதுர்சம். நவித்யா- அன்யது கிஞ்சிது வித்யையைப் போன்றது. வேறுபட்டது.
உ.ம். அபிராஹ்மண: அதுவும் ஒரு பாவ வஸ்து. வித்யைப்போலே இன்னொரு positive entity.
ஆகையால் இரண்டும் பிரஹ்மத்திடத்தில் ஒருசேர இருக்க தட்டில்லை.
விஷயம் – விஷயீ.
ஒரு புத்தகத்தைப் பார்த்து, ”இது புத்தகம்” என்று தெரிந்து கொள்கிறபோது, ”புத்தகம்” விஷயம்.
இது புத்தகம் என்று ஏற்பட்ட ”அறிவு” விஷயீ என்றாகும்.
உறங்கி விழித்தவன் ”நான் சுகமாக தூங்கினேன், (என்ன நடந்தது என்று) ஒன்றுமே தெரிய வில்லை ” என்று சொன்னானேயாகில் ”
ஞான அபாவம்” இருந்ததாக உணர்த்துகிறான்.

ஞான அபாவத்துக்கு பிரதியோகி = ஞானம்

உ.ம். கஜாபாவத்துக்கு பிரதியோகி = கஜம்.
அஸ்வாபாவத்துக்கு பிரதியோகி = அஸ்வம். .

கஜாபாவத்தை குறிப்பிட வேண்டுமாயின், கஜத்தை ஒருமுறையேனும் பார்த்தவனாக இருக்க வேண்டும் .
கஜாபாவ பிரதி கஜ காரணம். அது இல்லாதவனுக்கு அபாவ க்ஞானமே ஏற்படாது. இதை ஒரு Thumb rule ஆக சொல்லப் போனால்
அபாவ க்ஞானம் பிரதி பிரதியோகி காரணம் – என்ற இத்தை
மேல்சொன்ன தூங்கி விழித்தவனுடைய உதாரணத்தில் பொருத்தி பார்க்கையில் ,
ஞானா-க்ஞானம் ” இல்லாமல் ”க்ஞான-அபாவம்” உண்டாகாது என்று தேறுகிறது.
தூங்கி விழித்தவன் ”ஒன்றும் தெரியவில்லை ” என்று நினைவு கூறுவது (பிரத்யபிக்ஞா) அஞானமாக வைத்துக்கொண்டால் ,
அது ஞான விரோதியான ஞான-அபாவம் இல்லை . அதுவும் ஞானத்தைப் போன்ற இன்னொரு வஸ்து .

அந்த வகையில், எப்படி தூங்கிவிழித்தவனிடத்தில் ”ஞானம் ” , ”அஞானம் ” இரண்டும் ஒருசேர இருந்ததாக
ஒப்புக்கொள்கிறோமோ அதுபோல , ”வித்யா ” , ”அவித்யா ” இரண்டும் ”ஸகபாவி” யாக இருட்டு,
வெளிச்சம் போல் அல்லாமல். புத்தகம், பேனா – லேகனி, அலேகனி போலே பிரஹ்மத்திடத்தில் இருக்க அமையும்.
எந்த தோஷமும் இல்லை..

அவித்யா என்பது ஸதஸத் அநிர்வசனீயம் தான். பாவ ரூபமான வஸ்து வானபடியாலே பிரஹ்மத்திலே இருக்கலாம் என்று
பிரத்யக்ஷ பிரமாண த்தைக் கொண்டு அத்வைதிகள் சமர்த்திக் கின்றனர்.

அவித்யா தோஷமா? இல்லையா ?
தோஷமானால், அது பிரஹ்மத்திட்டத்தில் இருக்க வழி இல்லை. காரணம்,
பிரஹ்மம் நிரவத்யம், நிரஞ்சனம் என்று சுருதிகள் கோஷிக்கின்றன அத்வைதிகள் படி அந்த பிரஹ்மம் ஸுத்த புத்த நித்ய தத்வம்.

தோஷமில்லையாகில், அது எப்படி பிரஹ்மத்தை வஸ்து ஜாதங்களாக பிரமிக்கச் செய்யும்? ஸம்சரிக்கச் செய்யும்?
அத்துவால் வியாகாத தோஷம் (Self contradition) வாராதோ?

ஸுஷுப்தி (sub-Conscious state) அல்லது உறக்கம் மற்றும் மூர்ச்சா அவஸ்தையில் (un-Conscious state)
பாஹ்ய வஸ்து க்ஞான உணர்த்தி இல்லையே ஒழிய ( Dharma bhootha Jnanam goes dormant and not absent),
”அஹமர்த்த” (நான் என்கிற உணர்வு) ஞானம் ஸ்வ பிரகாசமாதலால் தூக்கம், மூர்ச்சை வேளையிலும் நிலைத்தே இருக்கும்.
This ” I ” is not Ego – அஹங்காரம். இல்லை.

அத்வைதிகள் தர்மிபூத ஞானத்தை ஒப்புக் கொள்கின்றனர். தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்வ தில்லை.
தார்க்கிகளாகிற நையாயிகன் தர்மிப்பூத ஞானத்தை ஒப்புக் கொளவதில்லை. தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.
விசிஷ்டாத்வைத்த சித்தாந்தத்தில் இரண்டுமே ஒப்புக் கொள்ளப் படுகின்றன.
மற்ற சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட இந்த நிலைப்பாட்டால், ஸர்வ தந்திர ஸ்வதந்திர சித்தாந்தமாகிறது.

அவித்யா – ஞான அபாவமா? (absence of Jnana) ஞான விகல்பமா? (different from Jnana) ஞான விரோதியா? (or opposed to jnana).
எப்படியானாலும் அவித்யா பாவ ரூபா: என்பது மேலே பலபடியாக நிராகாரணம் செய்யப் பட்டது.

கியாதி வாதம் :

அக்கியாதி – மீமாம்சகன்.
அன்யதா கியாதி – தார்கிகன் .
(அக்கியாதி ஸம்ஹரித ) யாதார்த்த கியாதி – பகவத் ராமானுஜர்.
அஸத் கியாதி – பௌத்தன்.
அநிர்வசனீய கியாதி – சங்கரர்./ ஜைனர்.

பாம்பை பழுதென்று நினைகை அயதார்த்த கியாதி.
இல்லாததை இருப்பதாக புரிகை (அ ) இருப்பதை இல்லாதாக புரிகை அயதார்த்த ஞானம்.

வசிஷ்ட புத்திம் பிரதி விசேஷண ஞானம் காரணம்..
உ.ம்.
குண்டலி தேவதத்த :
குண்டலத்தை அணிந்தவன் குண்டலி.
தேவதத்தன் குண்டலத்தை அணிந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டுமானால்,
குண்டலத்தைப் பற்றிய ஞானம் நமக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
குண்டலம் விசேஷணம்.
கோ என்றால் கௌ-த்வ விசிஷ்ட: கோ: அதுபோல
ரஜ்ஜுத்வ க்ஞானம் இல்லாமல் ரஜ்ஜு தோற்றது.
ஸர்பத்துவ க்ஞானம் இல்லாமல் சர்ப்பம் தோற்றது.
ரஜ்ஜுவில் ஸர்பத்துவ க்ஞானம் ஏற்பட்ட வேண்டுமானால் , அதற்கு காரணம் அங்குள்ள ரஜ்ஜுத்வம் தோற்றாதது ஒன்று. அது அக்கியாதி.
ஸர்பத்துவம் தோற்றினது அன்யதா கியாதி .-அந்யதாகியாதிக்கு காரணம் அக்கியாதி.

ப்ரமா ஸத்கியாதி. ப்ரமா அக்கியாதி ( அயதார்த்தம்) ஸம்ஹரித யாதார்த்த கியாதி (க்ஞானம்). உ.ம். கானல் நீர்.
”யதார்த்தம் ஸர்வ விஜ்ஞானம் இதி வேதவிதாம் மதம்” – என்கிற வேதாந்த அனுமதியும் இதற்கு உண்டு
என்பதை பகவத் ராமானுஜர் இவ்விடத்தில் காட்டுகிறார்.
இனி அனுமான பிரமாண முகேண உத்பாதனம் .

எல்லாம் மிதியை சொல்லுகிற வார்த்தை மித்யையா சத்தியமா
நான் சொல்லுகிற வார்த்தை பொய் என்பதும் பொய்யாம்னால் –
வாய் திறந்தால் அத்வைதம் போகும் சொல்லும் சொல்பவனும் உண்டே

சந்தாயவதன வேளையில்
சிகை பூணல் தாகம் அத்வைதிகள்
சஞாசா ஆஸ்ரமம் பண்ணக் கூடாது சாஸ்திரம்
புதர்
சங்கரர் ஆச்சார்யர் கோவிந்த பாதர் -அவர் குரு
குட பாதர் பௌத்தர் அவர்
அவதூத சன்யாச கிராமம்
நான்கு ஆஸ்ரமம் தாண்டினது
சிகை பூணல் விதிக்க தர்மம்
ஏக தண்டமும் அப்படி
சாஸ்திர விருத்தம்
ராவணன் -த்ரி தண்ட தாரி தான்

வர்ண ஆஸ்ரமம் உள் பட்ட சன்யாசம் -சிகை -பூணல் உண்டு நமக்கு
மோஷம் கிடைத்தாயிற்று -அதனால் வேண்டாம் என்று அவர்கள்
கடாகாசம் -கடம் உடைந்து கடாகாசம் மகாசம் லயம் ஆனபின்பு
உதாரணம் காட்ட
சரீரம் போகத்தான் காத்து இருக்க –
அவித்யா பாவ ரூபம் பிரமாணம்
பிரத்யஷம்
அனுமானம் -காட்டி சொல்ல
அத்தை நிரசனம் செய்து அருளுகிறார் –
தமஸ் -பாவ ரூபமான வஸ்து நாம் சொல்கிறோம்
அவித்யை பாவ ரூபம் இதுக்கும் நிறைய வாசி உண்டு நல்குரவும் -புண்ணியம் பாபம்-விருத்த ஸ்வபாவம் –
அவித்யா எனபது -வித்யா பின்னம் சத்ருசம் அதனால் – கர்மம் நாம் சொல்கிறோம்

5- அநிர்வசனானுப்பபத்தி :
அவித்யா அநிர்வசனீயா – அது இன்ன தன்மை என்று காட்ட முடியாது என்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. காரணம்
உலகில் பெயர், உருவம் இல்லாத பொருள் என்று எதுவும் கிடையாது. இவையே பதார்த்தம் எனப்படுவது.
பதம் + அர்த்தம். யானை என்று சொன்னால், தந்தம், தும்பிக்கையுடைய விலங்கைப் பற்றி நம் மனதில் ஒரு சித்திரம் அல்லது பிம்பம் ஏற்படுகிறது.
அந்த பிம்பத்துக்கு ”பிரதீதி ” என்று பெயர். இந்த பிரதீதியைக் குறிக்கும் சப்தம் வார்த்தை ஆகிறது.

ஸர்வாஹி பிரதீதிஹி ஸதஸகாரா – யதார்த்தமாய் வரும் ஞானம் யாவுமே சத்தியம். – பகவத் ராமானுஜர்.

பிரத்யய ஸர்வா மித்யா, பிரத்யது ஸ்வாப்பந பிரத்யயாது – ஸ்வப்பனத்தில் ஏற்படும் ஞானம் பொய் போலே எல்லா ஞானமும் அசத்தியம்.
காரணம் ஸ்வப்னத்தில் வஸ்து இல்லாமல், வரும் ஞானம் அயதார்த்தம் . கட : பட: குட்யம் , குசூலம் (அத்யஸ்தம் ) என்று ஏற்படுகிற (அத்யாஸ) ஞானமும் பொய், பிரஹ்மத்துக்கு பிரமத்தால் ஏற்படும் க்ஞானம் அதுவாகையாலே. பிரஹ்ம (அதிஷ்டான) க்ஞானம் பிறந்தவாறே ,
கட : பட: என்பது மறைந்து , பிரஹ்மம் ஒன்றே புலப்படும்.- சங்கர பகவத் பாதர்.

த்வனி சப்தம் — கடலோசை, பக்ஷி கூவல் இவைகளுக்கு பொருள் இல்லை.
வர்ண சப்தம் – ஏதாவது ஒரு பொருளை குறித்தே வரும். புத்தகம், பேனா நாஸ்தி (இல்லை) என்றால்,
இப்போது, இங்கு இல்லை என்பது பொருள். அப்படிப்பட்ட பொருள்களே உலகத்தில் இல்லை என்பது கிடையாது. அப்படியான பொருள் அனைத்தும் ”சது” .

முயல்கொப்பு, ஆகாசத் தாமரை, சிம்ஹசுண்டம் (சிங்கத்தின் துதிக்கை) என்பான எக்காலத்திலும், எங்கேயும் இல்லை என்பதுதான் பொருள்.
அவை ”அசது ”. இவை இரண்டைத் தவிற ”சதசது ” என்கிற மூன்றாவது பொருள் ”அவித்யா ” என்று அத்வைதிகள் சொல்லக் காரணம் . உ.ம். பாம்பு-கயிறு.

கயிறு , வேறு எதுவுமாகத் தோற்றால், பாம்பு என்று தோற்ற வேண்டுமானால், பாம்பு ”ஸது ” ஆகிறது
”அஸத் ”சேத் ந பாஸயதி. நாயம் சர்ப்ப இதி , கிந்து ரஜ்ஜு எவ ” – பாம்பு இல்லை, கயிறுதான் என்று புரியும் போது அது ”அசது ” ஆகிறது.
”ஸத் ” சேத் ந பாத்யதா ” . அதனால் ”அவித்யா ” ஸத் போல தோற்றி, அஸத் என மறைகிறது .
இதுவா அதுவா என்று சொல்ல முடியவில்லை ஆகையாலே அநிர்வசனீயம் என்பது அத்வைதிகள் வாதம்.

சதசத் என்றோ சதசத் விலக்ஷணம் என்றோ ஒன்று இருப்பதாக சாஸ்திர பிரமாணம் கிடையாது.
அப்படி இருப்பதாக ஒத்துக்க கொண்டால் எது எதுவாக வானாலும் ஆகலாம்- என்றாகி சாஸ்திர வரம்பற்றுப் போகும்.
2 + 2 = 4 என்பது கணிதம். ஏன் 5 ஆகாது? என் 3 ஆகக்கூடாது என்றால், அந்த வாதம் அர்த்தமற்றது அன்றோ?

சூத்ரம்-வார்திக்யம்-பாஷ்யம் இவை 3ம் சாஸ்த்திர பிரக்கிரியை .
நியாய சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – கௌதம மஹரிஷி.
வார்திக்யம் – உத்தியோகர மஹரிஷி .
பாஷ்யம் – வாத்ஸாயனர் .
மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – ஜைமினி.
வார்திக்யம் – குமாரித பட்டர். (சிஷ்யர்-பிரபாகர குரு)
பாஷ்யம் – ஷபர ஸ்வாமி

பிரபாகரர் ஞானம் சு பிரகாசம்
குமாரின பட்டர் -பாட்டர் மதம் –
குரு துரோகம் பௌத்தர்
உமி -அக்னியில் உட்கார்ந்து
வேதனையால் பாபம் போக்கிக் கொண்டார்
சங்கரர் வாதம் -செய்ய சொல்ல –
சிஷ்யர் வாதம் பண்ணுவார்
தோற்று சிஷ்யர் ஆனார் சங்கரர் இடம் என்பர்
பஜ கோவிந்தம் போன்றவை சங்கரர் பண்ணவே இல்லை
நாராயண சப்தம் கீதா பாஷ்யம்
ஈஸ்வர சீலன் நாரார்யணன்
பிரமை உண்டு
எல்லா ஞானமும் யதார்த்தம் இல்லை
எல்லா ஞானமும் பிரமாணம் இல்லை
சர்வ பிரமாணமும் அபிரமாணமும் இல்லை
மாணா அமாண வ்யவஸ்தை வேண்டும்

பிரபாகரர்
குமார பட்டர் -பிரபாகர் குரு
இங்கும் சொல்ல வில்லை அங்கும் சொல்ல வில்லை -அதனால் அனுக்தம் புனர யுக்தம் எப்படி தெரிய வில்லை
கதைகள்
ராஜா -சரஸ் -தண்ணீர் இறைக்க
மோதகம் கொண்டு வா
மா உதகைகி தா தண்ணீரை அடிக்காதே சொன்னேன்
சமஸ்க்ருதம் கற்று வா
பிரகரணம் அறிந்து அர்த்தம்
அத்ரா புனர யுக்தம் து சப்தம் தாத்ரா அபி நா யுக்தம் அதனால் புநரா உக்தம்
அபி சப்தத்தாலும் து சப்தத்தாலு
பிரபாகர் வேத வித் –பிராபாகர மதம்
க்யாதி வாதம் –
கௌரவ பூர்வகமாக ராமானுஜர் –
தர்சன பிரஸ்தானம் –
ஸூ தரம் -வாக்கியம் -பாஷ்யம் -மூன்றும் இருக்க வேண்டும்
கௌதம உத்தியோகத வாத்சாயனர் பாஷ்யம் நியாய சாஸ்திரம்
ஜைமினி சபராசா
குமாரயா பட்டெர்
யதார்த்தம் சர்வ விஞ்ஞானம் -முக்கியமான விஷயம் –

விபுத்வம் ஆகாரத்வம் மட்டும் இல்லை
நிராகாரத்வமும் உண்டு
சாகாரம் எனபது நிராகாரத்வ நிஷேதம் இல்லை
உருவமும் அருவமும் ஆனான் –

ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் –
அறிந்த பின் ஆசை வந்து அடைய பிரயத்னம் செய்கிறோம் –
சர்வம் ஞானம்
பிரத்யக -சப்தம் அத்வைதிகள் -இது பேனா போன்ற ஞானம்
சர்வோ மித்யா
சொபன ஞானம் போலே -நல்லதும் கேட்டதும் விசித்ரமாகவும் இருக்குமே –மித்யை தானே இது
ராமானுஜர் -இதுவும் சத்யம்
அதிகரணம் -தனியாக
ஜீவாத்மா கர்த்தா இல்லை
நமக்கு வேண்டிய சொபனம் காண வில்லை
பரமாத்மா தான் கர்த்தா
ஸூ சகமாக காட்ட -நடக்கப் போவதை
நான்கு அவாந்தர அவஸ்தை உண்டு நான்கிலும்
சொபனம் துரிய சுஷூப்தி ஜாக்ரதை

புஷ்பக விஷயம் ஞானம்
ஞானம் ப்ரஹ்ம ஞானமே
சமுத்ரம் நீர் பாத்ரம் கொண்டு வந்தது போலே
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானம்
விருத்தி ஞானம்
இந்த ரூபமாக இருக்கக் கூடிய ஞானம் அத்வைதிகள்-

அனுமானம் பிரயோகம் -பர்வதம் -பஷம்- சாத்தியம் -புகை -ஏக சம்பந்த ஞானம் -ஹேது -வாக்கியம் -உதாரண வாக்கியம் –
பஷ்யம் -சாத்தியம் -ஹேது -மூன்றும் உண்டே
சப்த பிரமாணம் வேதம் -முன்னோர் மொழிந்த முறைகளே பிரமாணம்
-சாஸ்திர ப்ரத்யஷ விரோதி -வேதமே பிரதானம் –
அஹம் ஸ்தூல -நான் -ஆத்மா தான் -ஆத்மா ச்தூலத்வம் இல்லை -வேதம் மூலம் அறிகிறோம் –
ஜ்வாலை-விளக்கு ஏற்றி பின் வேலை செய்து -அதே ஜ்வாலை இல்லை சாயம் காலம்
திரி எண்ணெய் குறையும் -ஜ்வாலைக்கு பிரத்யஷ பேதம் -என்னுடைய சரீரம் -ஆத்மா வேற சரீரம் வேற
ராமன் உடைய புத்தகம் போலே
ஸ்வம் ஸ்வாமி சம்பந்தம் –
அத்வைதி சங்கரர் பின் ஜீவாத்மா பரமாத்மா வாதம் -இரண்டாக பிரிந்து –
ஸ்வ அவலோக கல்பிதம் இல்லை -பஞ்ச பாதிகா விவரணம் கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் –
பரமாத்மாவிடம் அவித்யை -சொல்லி
மாயை வேற அவித்யை வேற என்பர்
பிரமாண அனுபபத்தி பார்த்தோம் முன்பு

ஆறாவது அனுபபத்தி –
நிவர்த்தகார அனுபபத்தி
சரீரம் -போன பின்பு -ஒன்றாகி
அவஸ்தை மூன்று
பிரதிபாதிகம் total  illusion முதல்
வ்யவாரிக்க -இப்பொழுது இருப்பது போலே  -அடுத்து
பாரமார்த்திக -அவஸ்தை
சத்தா -existing
சத்யம் reality  –
வாக்யார்த்த ஞானம் அஹம் பிரம்மாஸ்மி -நிவர்த்தாக ஞானம் -சத்வமசி இத்யாதி வாக்கியம்
போக்கக் கூடிய ஞானம் கடபடாதி விஷயமான ஞானம்
நிவர்த்தக ஞானம் சத்தியமா மித்யையா-தோஷம் –

அனவஸ்தா தோஷம் -நிவர்த்தக ஞானம் போக்க ஞானம் –
கடக பீஜம் -நீரை சுத்தியாக்கி தானும் கரைந்து போகும் –
காட்டு தீ காட்டியும் அழித்து தானும் அழிந்து போவது போலே தானும் நிவர்த்தகம் ஆகும் -என்பர் அத்வைதிகள்
நிர்விசேஷ   சின் மாத்ர பிரமஸ்-பரமாத்மா என்பர்
ஸ்ருதி உபநிஷத் வாக்கியம் கொண்டும் -வேதாகமேதம்
மஹதோ   மஹதா
ஆதித்ய வர்ணம்
தமசஸ் பரஸ்தாத்
ப்ரஹ்ம ஏவம்
பல ஸ்ருதி வாக்யங்கள் –
logic கொண்டும் சுவாமி நிராகரிக்கிறார்

பட்டர் கோஷ்டியில் சாதாரண ஞானம் கொண்டவரை வித்வான் விட கொண்டாடி பேசி -சிஷ்
மீமாம்ஸா -விசாரம் பண்ணி -புரியும் அதிகாரிகளுக்கு -ஸ்ரீ பாஷ்யம் -அதிகாரி –
சின்மாத்திர -ராமோ விக்ரஹவான் தர்ம -நிர்விசேஷம்-ப்ரஹ்மம்-
அவாந்தர ஆஷேபம் -அனவஸ்தா தோஷம் -பார்த்தோம்
வாக்யார்த்த ஞானம் –
வேதாஹமேதம் -அவன் ஒருவனே புருஷன் -நாம் ஸ்திரீ ப்ராயர்-

சோதக வாக்கியம்
சத்யம் ஞானம் அநந்தம்
அசத் வ்யாவர்த்தம் -நாம் அசத் –
ஞான ஆஸ்ரய
ஸ்வரூப நிரூபக தர்மம் -unique -அசாதாராணமான-
நிரூபித ஸ்வரூப விசேஷணம்-
தேகம் -சரீரம் –
வளருவது -தேகம்
தேய்வது சரீரம் –
புண்ய பாபம் அனுபவிக்க தேவ மனுஷ்யாதி –
சரீர அவசானே மோஷம் -நம் சம்ப்ரதாயம் -அம்ருத இஹ பவதி -மோஷம் போன்ற நிலை
ஜீவன் முக்தி -அத்வைதிகள் –

பந்தம் -போக மோஷம்
பந்தம் மித்யை-நிவ்ருத்தி ஆவது எப்படி
யோனி எடுக்கும் சில ஆத்மாக்கள்
பிறந்தவன் இறப்பான் ஜாதஸ்ய …மிருத்யு –
தவன் ஜன்ம -மிருதச்ய-இறந்தவன் பிறப்பான் –
ஞானி அம்ருதத்வா –
நித்யா நித்யானாம் சேதன அசேதனனாம் ஏகோ  பகுனாம்  யோ விததாயி  காம -அநேக ஜீவாத்மா -மித்யை இல்லை

நிவ்ருத்தி அனுபபத்தி சாரம்  ஸ்வ நாச -மரக்கிளையில் இருந்து கொண்டே வெட்டுமா போலே அத்வைதிகள் வாதம்
நான் பொய் அஹம் ப்ரஹ்மாசி-
காளிதாசர் -கதை -ராஜ குமாரி -அத்வைதி  மடாதிபதிகளும் பூஜா செய்து –
ஆத்மயாத்ம்ய ஞானம் பெற்று -ஆஸ்ரம வர்ண கர்ம யோகம் செய்து -ப்ரஹ்ம ஞானம் பெற்று -மோஷம் அடைவோம்

பீடிகா -அவதாரிகை –
அதா தோ  ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –
லகு -பூர்வ பஷம் -சித்தாந்தம் -சாதான ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
மகா-பூர்வ  பஷம் – சித்தாந்தம் -பல ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
தஸ்மாத் -அநாத கர்ம பிரவாக ரூப -அஞ்ஞான ஞான மூலத்வாத் -பந்தம் ஏற்பட்டது அஞ்ஞானத்தால் –
அது நிவர்த்தகம் ஆக கர்ம வர்ண அனுகுணமான ஆத்ம யாதாம்ய புத்தி விசேஷம் சம்ஸ்க்ருதம் -கார்யாந்தர யோக்யதா கர்த்தும்
சம்ஸ்காரம் -க்ரமப்படி செய்து –
ஜீவா பரமாத்மா யாதாம்ய ஞானம் பூர்வகமாக -ஆராதானம் ரூபம் –
ஆன்மிகம் -பகவத் கைங்கர்ய ரூபம்
அஹரஹராக அனுஷ்டானம் விடாமல் நித்யம் -பரம புருஷாராதனம் என்கிற நினைவுடன் –
சுருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞை -ப்ரீதி கோபம் புண்யம் பாபம்
கேவல கர்மம் அல்ப அஸ்திரம் பலம்
அநந்தம் ஸ்திரம் பலம் கிடைக்க பரம புருஷாராதனம் வேதம்
உபாசான ஆத்மக ஞானம் த்வாரேன கிட்டும்
கர்ம ஸ்வரூப ஞானம் முதல் படி

பூர்வ பூர்வ பதார்த்தானாம் –உத்தர உத்தர -பிச்சைக்காரன் கனவு -மாவு உதைத்து
கேவல ஆகார -ஞானம் இல்லாமல்-கர்மா
சந்த்யாவந்தனம் அத்வைதிகள் சன்யாசிகள் விட –
ஆபாத பிரதிபத்தி
அத -கர்ம விசாரம் பின்பு
அதோ -ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் –
அதிகரண க்ரமம் முன்பே பார்த்தோம்

————-

ஸம் வித் ஸித்தியில் மறைந்த சில பகுதிகள் ஸ்ருத ப்ரகாசிகாவில் உள்ளவற்றை
வேதாந்த தேசிகன் ஸ்வாமிகளும் காட்டி அருளுகிறார்

1- யாதவ ப்ரகாஸ மன தீ கதாசித வதித்ஸ்ததே
கடதவிவ தத்ரபி கல்பனியம் ப்ரகாசகம் |–

ஸ்வயம் ப்ரகாஸம் இல்லாமல் வேறே ஒன்றை அண்டி இருந்தால் அதுவும் வேறே ஒன்றை அண்டி இருக்க வேண்டி வரும்

2-கதோ யமிதி விஜ்ஞநே கட மாத்ரம் ப்ரகாஸதே
ந விட்டிரிதி யுஷ்மகம் கோஷ்திஷு நனு குஷ்யதே |–

பொருள்களைப் பார்த்து அறியும் ஞானத்தில் -பொருட்கள் மட்டும் முதலில் தங்களைக் காட்டும் பின்பு அறிவு வருகிறது -அத்வைதிகள்

3-அதித நகதே கர்தே கதம் ப்ரகத்ய ஸம்பவ
ந ஹி தர்மின் வஸத் யேவ தர்ம ஸம்பவம் ருச்சதே |–

4-ததேவ பஸ்யதம் ஸர்வ ஸூந்யத் வத் பிப்யதம் சதம்
கதிஸ் ஸ்வயம் ப்ரகாஸத் வத்ர்தே நந்யோ பலப்யதே |–

தத்வ ஹித புருஷார்த்தங்களை விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் படியே நிர்வஹித்து அருளுகிறார்

பிரகார பிரகாரீ பாவமும் சரீர ஆத்ம பாவமும் நம் ஸித்தாந்த பிரதிதந்தர -அசாதாரண -கொள்கை

ப்ரக்ருதி புருஷ கால வ்யக்த முக்த யதச்ச
மநுவிதிதா தாதி நித்யம் நித்ய சித்தைர் அநேகை

ஸ்வாதீந த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் புருஷ விசேஷ மிஸ்வர

ஆத்ம பரமாத்மநோ சம்பந்தேபி —-நநத்வே ஸத்யேவ
அபேதோ நாம அந்வய அம்ச அம்சி பாவ லல்ர்ஷணா ஸமவய
சேஷ சேஷித்வ ஸ்வரூப பரதந்த்ர லக்ஷண ஸ்வ ஸ்வாமி பாவ
ப்ருத்ய ஸ்வாமி லக்ஷண இதி

தத ததாத்ம்ய சம்பந்தே ஸ்ருதி ப்ரத்யக்ஷ மூலகே
நிர் தோஷ பவ்ருஷேய ச ஸ்ருதி யர்த்தம் ஆதராத் –ஸம் வித் ஸித்தி-இத்தையே ஸ்தோத்ர ரத்னத்திலும் அருளிச் செய்கிறார் –

எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம்–60-

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

இதிஸ்தி வேதவாக் அந தன் முலக்தகமை ரபி ப்ரஹ்ம ஆத்மநத்ம லபோ ஸ்யாம் ப்ரபஞ்சஸ் அசித் சின் மய –ஸம் வித் ஸித்தி

உபய பரிகர்மித ஸ்வந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய –ஹிதம் -தத் சாதனோபி

பரம புருஷார்த்த பூதே ப்ரஹ்ம ப்ரபத்தி லக்ஷண மோஷே
தத் குணஸ் அனுபவ ஜெனித நிரதிசய ஸூக சமுன்மேஷ

ப்ரஹ்மிநந்த ஹ்ருதந்தஸ்தோ முக்தாத்மா ஸூக மேததே -ஸம் வித் ஸித்தி

நாதோபஜ்நம் ப்ரவ்ருத்தம் பஹுபிர் உபசிதம் யாமுநேய பிரபந்த்தை –ஸ்த்ரேதும் ஸம் யக் யதீந்த்ர –தத்வ முக்த கலாபம்

—————-

Analytical, Outline of the Three Siddhis Page

ATMA-SIDDHI
Mangala sloka _
Conflicting .views concerning the finite self
Conflicting views regarding the pramanasby’which the finite self is established

Conflicting views ;regarding the Supreme Self

Diversity of views regarding the manifestations of the Supreme Self
Conflicting views concerning how‘ the Supreme Self is known“
Varying views regarding the nature of moksa
Conflicting views regarding the means to moksa
The special features of this treatise
Determination of the nature of the individual self
The pfirvapaksa or prima facie view that body is the soul on the
evidence of perception. The case for the identity of- soul and body
The purvapaksin’s criticism of the position that the body- is not the self
The attempt to show that the body could at- once be the subject and, the object of knowledge –

Summing up of dehatma vada position with reasons.
The refutation of the doctrine of the identitv of body and soul
Ahampratyaya (the c0gnition “I” or self-consciousness) does not
involve knowledge of bodily organs; hence the self is distinctfrom the body
Even cognitions like ‘I am stout’ establish a self distinct from the body

Identity of body with soul illusory
Yogic perception vouches for the separateness of soul and body
Arguments in support of the view that body and soul are distinct entities

The Sankhya arguments against the claim that perception establishes identity of body and soul
Refutation of the Carvaka critic’psim’of arguments that the body and soul are different
The illustration that intoxicating quality arises from the mixture of non-intoxicants not apposite

Example of redness produced by chewing not apposite
The illustration of parti-coloured cloth unhelpful to the Carvaka 15
Being distinct from the other qualities of the body, consciousness is not an attribute of the body
Additional reasons in support of the view that the body is not the soul [7

Argument based on negative concomitance indefensible
,, The view that the senses are the soul
,, The refutation of this view 13
The doctrine that manas is the soul 19
The refutation of this doctrine H
Refutation of the Naiyayika proof for the existence of manas 20
Refutation of the argument that manas is the non—inherent cause of pleasure, pain and the like 21
Untenability of the view that atma gunas such as pleasure arise only
in conjunction with some substance other than itself and that

it is manas ,,
Even if conjunction with such a substance were necessary it does not follow that it must be with manas 22
Manas is no other than buddhi 24
Manas is not the soul

..
The theory that prana is the soul 25
Refutation of this theory ”
The theory that consciousness is the soul ’

26–The Bhatta view that consciousness is insentient

There is no such thing as jnatata: hence consciousness is self-luminous

27–Additional arguments to show that consciousness is self-luminous

28 The contention that consciousness is itself the soul as there is economy of thought
The contention that the cognition ‘I know’ will not prove the existence of a soul distinct from knowledge ,,
The contention that like the knower. the known also is unreal

29-The refutation of the Buddhistic doctrine that consciousness is the soul

30–Impossibility of explaining recognition even on the admission that the self is a stream of consciousness

30–To obviate this difficulty the veiled Buddhist contends that
consciousness is unborn, changeless and devoid of distinctions

31 Refutation of the Advaitic view

33–This is opposed to experience
It cannot be maintained that consciousness does not grasp its own prior non-existence

34–The contention that there are no pramanas to establish antecedent non-existence is refuted

35–Consciousnees is not eternal

36–The contention that consciousness cannot be proved by anything other than consciousness is disproved
The contention that if consciousness becomes the object of another consciousness it would cease to be consciousness is met

37–The assertion that if consciousness is without an origin it could have no changes is refuted

39–The contention that if consciousness is unborn it cannot have differentiation is refuted

The contention that consciousness is quality-less stands self-refuted 40
Even on the view of the veiled Buddhists recognition would be
inexplicable 42
Refutation of the view that jnatrtva is the result of super-imposition 43
The contention that jnatrtva resides in ahamkara 44
This is opposed to every-day experience
Indefensibility of the position that pratyaktva belongs to ahamkara 45
The untenablility of the view that akamkara appears as knower
either on account of reflection or contact with consciousness
The contention that ahamkara appears as knower because it
manifests consciousness as residing in itself 45
The refutation of the preceding view
None of the three alternative ways in which ahamkara could be said
to manifest consciousnessis tenable 47
None of these possible modes of the third alternative is tenable

It cannot be maintained that the manifesting entity should
manifest the object as residing within itself.
Refutation of the’contention of Suresvara that in deep sleep there
is no consCiousness of 1′
Analysis of your statement establishes just the opposite of what
you intend to prove
The reflection “I was not even aware of my self” does not mean
the absence of .l’ but- something else.
The statement in question‘undoubtedly points to the existence of
the “I” and its manifestation

The “I” (ahamartha) persists in the state of release
On the’strength of the sacred text relating to liberation and
endeavour of souls for securing moksa the existence of “I”
(aham’ariha) is proved
Refutation of the view that the I is an objective element
’

(i. e. it is jada)
Even in the state of release the self shines to itself as I’
The consciousness of “I” is natural and not due to occasional factors
Ahamkarawhich refers to the body and which is a product of
matter—is the result of delusion and has to be diSpelled
It1s only where the self appears as “I “— I am deva—-‘I am
‘rnan’ the possibility of ajnana arises
The unsoundness of the argument that consciousness itself18 the
soul as it is insentient
The argument that on account of the invariable concomitance of
the knowledge of ‘l’ and consciousness they are identical is unsound
Even the contention that since one and the same consciousness
presents the invariable concomitance ofknown. knower and
knowledge they are identical is refuted.
;The contention that knower and known are one on the ground of ”
invariable concomitance even as different flames are considered
‘one on account of similarity
The example of different terms appearing as identical is not helpful
Refutation of the contention that there is no object that does not manifest itself.

Scriptural support for the existence of a soul distinct from consciousness
The Pramana by which the existence of the jiva is established
(a) The Nyaya view
After proving in general terms that consciousness being a guna
must have a substrate it is shown by a process of elimination
that it must be a spec:fic entity namely, atma
Refutation of the Nyaya view
Argument from pure negative concomitance fares no better
(b) The Sankhya view
The Sankhya mode of proof stands discredited for the same reasons
Refutation of the Sankhya arguments

The impossibility of a conscious and changeless entity being the
victim of illusions ‘
The refutation of the argument that the vrttis of the antahkarana
are superposed on the purusa
The existence of the soul established by iruti and srutyarthapatti
(c) The Mimamsa view
Refutation of this view
The Bhatta view
Refutation of the view .
Untenability of the suggestion that jnana is the objects of mental perception

Enquiry into the nature of sukha, duhkha etc
The Bhatta view again
The Prabhakara reply thereto
The Bhatta rejoinder
The Prabhakara position clarified while refuting the Bhatta view
The Prabhakara view that in deep sleep and moksa there is no
self—consciousness
Refutation of the prabhakara view and proof that the soul
is self—luminous
The Prabhakara centention that jnana is not self-luminous
Even if prana is self-luminous, the soul does not depend on prana for its apprehension
The soul is self-luminous
The proof that the soul has consciousness as its eternal and. essential nature

The pfirvapaksa.that consciousness isnoneternal and that there areno grounds to prove that it is eternal 89
The Opponentcalling’.1111 questionthe siddhantin’s position ‘90
Refutation of the view that the atma (dharmin) and consciousness
(dharma)are one ’91
Refutationcef view; that. consciousness is all—pervasive 92
Untenability of the view thatthe soulhas a twofold knowledge

(i) eternal and (ii) non-eternal 93

The illustration of the remembrance that there was noelephant
at the tank—bund in the morning cited to prove the existence of consciousness in deep sleep is unhelpful
Nor13 the remembrance on waking, ‘I slept well’ helpful in proving that there is zself-awareness in deep sleep 95
§Ihe contention that the self depends on jnana for its manifestation
and that jnana is non-eternal ’96

(The proof that dharma bhuta-jnana is eternal

though magmas.eternal ithas atma for its support 97
Refutation of the view that the conjunction of consciousness with object is prana
In respect of the self the analogy ofthe relation of cause and effect does not hold 93
The contention that since dharma bhuta jnana is dependent on occasional factors it cannot be eternal 99

The reply to the foregoing
Refutation of the view that as cognitions are limited by time they are non-eternal 101

fictivities of consciousness altoether of a different nature from

activities such as locomotion and cooking 102

The illustration of the body not apposite
In deep sleep there are no.:activitics of consciousness(dharma bhuta jnana) 104
The experiences of the soul in deep sleep need not all be remembered
Refutationof thecontention that if dharma-bhuta-jnana is eternal, it would do away with the distinction between bound
and released asouls 105

Refutation of the view that nidra is a mode of action accounting
for the experience of pleasure or pain on waking
The conclusion that nidra is no vrtti will not contradict the yoga sutra _
Granting nidra is a vrtti, from that reason itself it follows that
consciousness is an essential nature of the self

The self-luminoussoul-the substrate of prana-is eternal
The soul being the substrate of prana is svayamprakasa
Determination of the significance of the term prakasa and of the
nature of its relation to the soul
The contention that the self18 the object of knowledge and not
svayam prakasa
The contention that atma is the seat of prakasa inferred from prakatya

Refutation of that view
Nyaya refutation of the Prabhakara and Bhatta views and the

contention that relation ofjnana and its visaya is through sense contact 113
The Nyaya argument that with the disappearance of jnana,
prakatya disappears is untenable because with the disappearance
of the efficient cause. the eflect need not disappear

That the disappearance of the nimitta karana need not
necessarily lead to the disappearance of the effect is illustrated
with the instance of two-ness and the like
Untenability of the argument that numbers commencing from 2
do not last as long as objects last
Cognition of duality and the like is not constant, since it
depends on desire to enumerate
Consciousness illumines objects thrOugh contact with them by means of sense contact

Jnana is of limited nature
Fallacious to consider what is devoid of touch unlimited
Objects. past and future could come into contact ,with,
consciousness as what existed or what is yet to be

The non-apprehension of intervening space explained 119
The objection that consciousness as a quality cannot leave its

substrate and proceed elsewhere answered 120

The prabhakara view of sabda refuted
The Prabhakara view that object is manifested without the

relation of consciousness 122

The prabhakara view refuted

The objections to the concept of adiiratva answered 124
Deciding on the nature of the knowledge relation as samyoga 125
The examples of sukha etc adduced by the purvapaksin not apposite 126
Definition of Sarira (body) according to the siddhantin 127
The significance of dhih occurring in the sruti texts cited above 128
References to origination of knowledge, its loss. doubt, certainty
and the like explained 130

Though the soul is self—luminous, there is need of scripture to

make its nature clearly known 132

Inquiry into the duration of the soul : The soul is eternal
Pfirvapaksa: The Buddhist view that the soul is momentary

ISWARA SIDDHI

The Mimamsaka view
Laukikapratyaksa cannot prove the existence of God
Nor could yoga pratyaksa prove the existence of God
Impossible even for the senses that have acquired supernomal
powers through drugs, charms, austerities and yogic concentration
to establish the existence of God 137
The Nyaya arguments for the existence of God ,,
Yogic concentration even of the end stage incapable of proving God 138
No pramana other than perception is competent either to prove

the existence of God ,,
The Mimfimsaka critcism of the Naiyayika view 140
The argument proves what is already proven 141
The Mimamsaka objection that since the earth, the ocean etc,,

cannot be made, they can not be said to have a cause.
Your argument would only establish the reverse of what you seek
to prove i.e it would not prove an omniscient Lord but only a
finite indiVidual
The possibility of the precisely opposite conclusion i.e. that the
world is not created
The argument that the nimitta karana need not know the
upadana karana and hence one who is not omniscient could be cause
The Mimamsaka concludes his argument
The Naiyayika reply to the Mimamsaka contention
Meeting the charge that there is no vyapti
The nature of adhisthana defined
The jiva cannot be the nimittakarana of the world
The untenability of the contention that the argument only
establishes attributes opposed to omniscience etc.
What is needed for creation is controlling activity and not the body

Activity can be initiated without the instrument
of the body i.e. mere sankalpa suffices
No need to entertain any doubt on the ground that in the case in
point many of the characteristics differ from those found in the
illustrative example
Adducing special illustrations to strengthen the conclusion that
the divine creator is vastly different from the human agent
Other arguments to establish the existence of Isvara
SAMVIT SIDDHI
Enquiry into the significance of the text
“Brahman exists, one only without a second”
‘Advitiya’ cannot be taken as a tatpurusa compound
Nor can it be taken as a bahuvrihi compound
The significance of the expression Advitiya (the view of the Visistadvaitin)

Other sruti texts in support of the siddhantin’s view
Refutation of the view that the world is illusory
The untenability of the view that the world is at once sat and asat
Inquiry into the significance of the text tat tvam asi

The view that consciousness is the cause of the world is untenable
The pfirvapaksin trying to justify the above contention with
examples

The contention that consciousness is eternal
The contention that consciousness is devoid of attributes

Detailed examination of the advaitic‘ position-consciousessis manifold ,,
Consciousness cannot be eternal, all—pervasive and unitary
Untenability of the contention that there is nothing apart from
consciousness
The contention that avidya is the cause of the world and that it
is difficult to define it as different and non-different
What is the significance of the negative particle in avidya ?
What does the term vidya occurring in vidya mean 2
Ksrayanupapatti-avidya cannot dwell in jiva
Nor is Brahman the substrate of avidya
‘
There is no escape from anyonyasraya dfisana by stating that
vidya is an avastu (unreality)

Avidya cannot be avastu (unreal)
Is avidya single or manifold; is the bound soul which is its
substrate unitary or manifold ?

Avidya cannot be single
The contention that Suka and others attained mukti is not true
Refutation of the above contention
The contention that moksa is an eternally existent state; it has only
to be rendered manifest through dhyana etc.
The unintelligility of the notion abhivyakti (manifestation)
Avidya cannot be an obstacle to Brahma jnana
Refutation of the view that there is only a single soul
The untenability of the view that there is a plurality‘of jivas,
each having its own avidya
Being endowed with qualities like self-luminosity and unity.
consciousness cannot be said to be without a second (advitiya)
The untenability of the contention that these are not qualities
but refer to the absence of certain features
It cannot be contended that the world is distinct from sat and asat

The refutation of th: view that pratyaksa cann)t perceive difference 177
Is the mithyatva of the world real or unreal? Either alternative goes
against the advaitic position.In the very act of denying dharmas, the ground on which the denial
is made shows Brahman to be endowed with dharma. 180
Refutation of the contention that the invariable concomitanoe of
knowledge and the known eetablishes their – identity. 180

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Posted in Ashtaadasa Rahayangal, ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர், Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ திருவடி மஹாத்ம்யம்– –

March 14, 2023

ஸ்ரீ ஹநுமான் காயத்ரி

ஓம் அஞ்சனி சுதாயா வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹநுமன் ப்ரசோதயாத்

ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் தத்புருஷாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ: ஹநுமத் ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி.

————

தர்ப்போதேக்ரத சேந்த்ரியா ந நமநோ நக்தஞ்சரா திஷ்டிதே
தேஹேஸ்மின் பவ ஸிந்து நா பரிகதே தீ நாம் தசமாஸ்திதஸ்
அத்யத்வே ஹனுமத் ஸமேந குருணா சம்போதிதார்த்தஸ்
ஸூ தீ லங்காருத்த விதேஹ ராஜ தநயா ந்யாயேநலா லப்யதே —சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்
முதலியாண்டான் வார்த்தை -சிறை போல் சம்சாரம் -ஆச்சார்யனே திருவடி

அந்தத் திருவடியின் தன்மையும் ஆச்சார்ய லக்ஷணமும்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது,
பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் –
இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

ஐந்து–நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள்
ஐந்து(பஞ்ச)பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்,…
ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி,…..
ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய வழியாக, ஸ்ரீராமனுக்காக,
ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு,…
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பை அயல் தேசமான இலங்கையில் வைத்தான்,

அஞ்சிலே ஒன்று (*வாயு) பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்(*நீர்) தாவி
அஞ்சிலே ஒன்றாறாக(*ஆகாயம்) ஆரியர்க்காக(*இராமனுக்காக) ஏகி
அஞ்சிலே ஒன்று (*நிலம்) பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்(*இலங்கையில்)
அஞ்சிலே ஒன்று(*நெருப்பை) வைத்தான்.அவன் எம்மை அளித்துக் காப்பான்

அத்தகைய அனுமன், நமக்கு வேண்டியன எல்லாம் அளித்து காப்பான்-

பஞ்சபூத தத்துவம்
சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்திரன் என்பதால் காற்றை வென்றவர்
சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர்.
பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர்
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர்
வானத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர்.
இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை.
ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார்.

உள்ளுறை பொருள் –

முதல் அஞ்சு –பஞ்ச ஸம்ஸ்காரம்
இரண்டாம் அஞ்சு —அர்த்த பஞ்சகம்
மூன்றாம் அஞ்சு —உபாய பஞ்சகம்
நான்காம் அஞ்சு —பரத்வாதி பஞ்சகம்
ஐந்தாம் அஞ்சு —லோக பஞ்சகம்

பஞ்ச சம்ஸ்காரம் முதல் அஞ்சு -வித்யை- தாயாகப் பெற்ற -அன்று நான் பிறந்திலேன் -இவ்வாத்ம வஸ்துவை ஜனிப்பித்து

தாய் தந்தையர் உடலை மட்டுமே பிறப்பிக்கின்றனர்
ஆச்சார்யர் ஞானத்தினால் ஆத்மாவைப் பிறப்பிக்கின்றார் -அழுக்கை நீக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் அடைவிக்கின்றார்

தாப ஸம்ஸ்காரத்துக்குப் பிறகே மந்த்ர ஸம்ஸ்காரத்துக்கு ப்ரஸக்தி யாதலால்
முதலான அந்த ஸம்ஸ்காரத்தையே கொள்ளுதல் தகும் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்

திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிரதராய் ஆவீர் -என்று அனுக்ரஹத்து அருளுவார் அன்றோ

வித்யைத் தாயாகப் பெற்று , பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த
தஞ்சமாகிய தந்தை மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல் விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
நாலு இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
பரம் புருடன் கைக் கொண்ட பின்
சதுர்த்தியுள் புக்கு இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து ஜன்ம பூமியை விட்டகன்று
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று குடைந்து நீராடி
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்துப்
பல்லாண்டு இசைத்துக் கவரி செய்ய நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள
வைகுந்தம் புக்கிருந்து வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து
பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —

வித்யையைத் தாயாகப் பெற்று-
அதாவது —
சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே
ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே ,
வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-

பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –
அதாவது
தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற
போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த-
அதாவது —
திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி –
அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே-(ஆறு குண சாம்யம் மேலே வரும்) ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-

தஞ்சமாகிய தந்தை-
அதாவது
தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய
தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே
ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –
பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க –
பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே –
ஸ்வரூப உத்பாதகனாய் (திரோதானமாய் இருந்ததை தெளிய விட்ட – தீர்க்க பந்து -தயாளுவான)-
ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் –
உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே
ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-

மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –
அதாவது –
மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,
மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற
அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —

விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –
பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,
கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று
பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் (ரஷிக்கிற படியால் பதி– தரிக்கிற படியால் பர்த்தா)-
சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற
மணவாளரை –
பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6-
என்கிற அழகிய மணவாளரை

நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க –
அதாவது –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற
மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே
பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –

பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –
பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே
பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –

சதுர்தியுள் புக்கு –
அதாவது –
விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,
அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப்
பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு செல்லும் (பிரார்த்தனா சதுர்த்தி) சரம சதுர்த்தியிலே உள் புக்கு –
(நான்கு பதிகம் கழித்து -2-9-எனக்கே ஆக -பிரார்த்தனை –
புகழும் என்கோ -3-3- நான்கு திருவாய் மொழி -சதுர்த்தி தானாகே அமைந்ததே)
நான்கு நாள் கழித்தே சேஷ ஹோமம் நடக்கும்
முதல் நாள் சோமன் -அடுத்து கந்தர்வர் -அடுத்து அக்னிக்கும் -அடுத்து இவனுக்கு
நாராயண ஆய -நடுவிலும் நான்கு அக்ஷரங்கள் உண்டே )

இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –
அதாவது –
தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை
இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே –
சேஷத்வ ஞானமும் சேஷ வ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே ,
இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி –
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே
அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –
நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –

ஜன்ம பூமியை விட்டு அகன்று –
அதாவது –
முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற
செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே
ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு
ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..
அன்றிக்கே-
(ஜென்ம பூமி ஞானம் பெற்ற பூமி என்ற நிர்வாகம்-மிகவும் சேரும் )
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு
ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை
பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே -இத்யாதி படியே –
முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு
இது மிகவும் சேரும் இறே-

சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-
அதாவது –
சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க –
அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி-
நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –

குடைந்து நீராடி- –
அதாவது –
குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு
போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே
அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –

வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –
அதாவது –
குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –
வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,
மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,
பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே
அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –
தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா –கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே
போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-

பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –
அதாவது –
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே
இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற
திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-

நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –
அதாவது –
அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே –
அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே –
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே
மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு ,
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே
நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –

வைகுந்தம் புக்கிருந்து –
அதாவது –
உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே –
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே –
ஸ்ரீய பதியானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –

வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-
அதாவது –
பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும்
மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே –
நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –

கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து –
அதாவது –
பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே –
கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே –
தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –

பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –
அதாவது –
தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே -என்றும்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா
சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா
மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி ,
ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட –
மணி மிகு மார்பு-10-3-5– -என்று
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..

குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –
அதாவது –
குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு
(திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)

மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல –
அதாவது –
வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று
உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி
அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும்
கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி –
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது –
மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி -என்றால்
சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே —

இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம் என்று சொல்லிற்று ஆய்த்து-

—————————————-

இரண்டாவது அஞ்சு அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே உண்டே -விரோதி ஸ்வரூபத்தை தாண்டி
ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகளையும் -தாண்டி

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும்  வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்……பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியன்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்த்துச் ச ப்ரத்யகாத்மநா
ப்ராப்தயுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதா ச இதிஹாச புராண கா

மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேந நமஸா
அஹங்கார மமகார ஸ்பர்சம் அற்று
ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய ரஹிதராய்
எம்பெருமானுடைய போகத்துக்கு காணியை விளைவிப்பாதவராய் -இருக்கும் இருப்பு

    • ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
        • நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
        • முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
        • பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
        • கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
        • முமுக்ஷுக்கள் –  ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
    • புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
      • தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
      • அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
      • காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
      • ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
      • பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
    • விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
      • ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
      • பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
      • புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
      • உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
      • ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம்  முதலியவை.

————–

மூன்றாவது அஞ்சு உபாய பஞ்சகம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

  • உபாயம் – வழி –  ஐந்து வகை உண்டு:
    • கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
    • ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
    • பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
    • ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும்  இதுவே நெறி.  இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
    • ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர்.  மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -427-

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

—————-

நான்காவது அஞ்சு பரத்வாதி பஞ்சகம் –அர்ச்சாவதாரம் -கண்டு காணச் செய்து -அணங்கு தெய்வம்

  • ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
      • பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
      • வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
      • விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
      • அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும்  இருத்தல்
      • அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
      • கண்டு -பிற வினையில் வந்த தன் விபினை -காணச் செய்து என்றபடி
        நாம் உஜ்ஜீவனம் அடைய தமர் உகந்த உருவம் கொண்டு இருக்கும் அர்ச்சாவதார எளிமையைக் காட்டிக் கொடுத்த படி

———————–

ஐந்தாவது அஞ்சு லோக பஞ்சகம் -மண் உலகம் நரக லோகம் ஸ்வர்க்க லோகம் கைவல்ய லோகம் பரமபதம்

இருள்தரும் மா ஞாலம் மண்ணுலகம் ஹேயம்
ஸ்வர்க்காதி போகமும் கைவல்யமும் வேண்டேன்
இனிப்பிறவி யான் வேண்டேன் என்றபடி
பரமபதத்துக்கு ஆளாக்கித் திருத்திப் பனி கொள்வதே ஆச்சார்ய க்ருத்யம் என்றபடி

ஆக பஞ்ச சம்ஸ்காரம் பெற்று -பிரதி பந்தகங்களைக் கடந்து சரம உபாயத்தைக் கடைப் பிடித்து அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து
சம்சார உத்தீரணராக்கும் சதாசார்யனுடைய படிகளை வெளியிட்டார் யாயிற்று –

————–

பஷீ ச ஸாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட

ஸூ ப சகுனமாக ஆச்சார்யர் கிடைத்தமை பற்றிய ஸ்லோகம்

பஷீ
ஞான அனுஷ்டானம் இவை நன்குடைய குருவை அடைந்தக்கால் தானே வைகுந்தம் தரும்
உபாப்யாமேவ பஷாப்யாம் யதா கே பஷீணாம் கதி
ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -பிராமண வசனம்
சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஞான கர்மாக்களை சிறகு என்று
குரு ஸ ப்ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -3-1-

ஸாகா நிலய
சாகை என்று கிளைக்கும் வேத பாகத்துக்கும் பெயர்
யஜுஸ் ஸாகாத்யாயீ -ஸாம ஸாகாத்யாயீ
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
வேதம் ஓதாதவன் பரம புருஷனை அறியாதவனாவான்

ப்ரஹ்ருஷ்ட
ஆச்சார்யன் எப்போதும் பகவத் சிந்தையனாக இருப்பதால் மிக்க மகிழ்ச்சி யுடையவனாயே எப்போதும் இருப்பான்
ஆனந்த மயனான எம்பெருமானை அநவரதம் சிந்தை
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்க்கு எங்கே வரும் தீ வினையே -திரு விருத்தம்
தேஹ யாத்திரையிலும் ஆத்ம யாத்திரையிலும் கவலை அற்று ஆனந்தம் ஒன்றே கொண்டு இருப்பார்கள்

புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
சிறந்த ஹித உபதேசங்களுக்கு ஸாந்த்வ வாதம் என்று பெயர்
க்யாதி லாப பூஜா ஹேது அன்றிக்கே
சிஷ்யர்கள் பிரார்த்திக்காமலேயே
தனது பேறாக அடுத்து அடுத்து ஹித உபதேசம் பண்ணும்
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் என்றதாயிற்று –

ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந
ஸ் வாகதாம்-என்றது ஸ்வஸ்மை ஆகதாம் -என்றபடி
ஸூஷ்டு ஸ்வஸ்மை ஆகதாம்–ஸூஸ் வாகதாம்-
ஸ்வ கபோல கல்பிதமான அர்த்தங்களை மனம் போன படியே சொல்லுகை அன்றிக்கே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவரே உத்தமமான ஆச்சார்யர் –

புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -என்றபடிக்கும்
ஸ் காலித்யே ஸாசீ தாரம் -ந்யாஸ விம்சதி ஸூ க்தியின் படிக்கும்
நிர்தாஷிண்யமாக சிஷிப்பவரே ஆச்சார்யர்

 

ஆகவே இந்த ஸ்லோகம் உத்தம ஆச்சார்யர் படியைச் சொல்லிற்று ஆயிற்று –

———-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Posted in Ashtaadasa Rahayangal, Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ ந்யாஸ த்ரயீ!!–1-ஸ்ரீ ந்யாஸ விம்சதி-

January 26, 2023

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ-வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————

பிறவிக் கடலைக் கடத்து விக்கும் நாவாய் ஸ்ரீ ந்யாஸ த்ரயீ!!

ந்யாஸம் என்றால் “பொறுப்புத் துறப்பு” என்று பொருள். மனிதப் பிறவியின் சாதனை எனலாம் இதனை. நிக்ஷேபணம், பர ந்யாஸம், ஶரணாகதி என்றும் இதற்குப் பெயர். எல்லா தபஸ்ஸிலும் ஶ்ரேஷ்டமானது இந்த ந்யாஸம் என்ற அனுஷ்டானம் என்கிறது வேதம்.
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த சாஸ்த்ர, காவ்ய, நாடக, தர்க்க, ஸ்தோத்ர க்ரந்தம் எதுவாயினும் பரந்யாஸம் என்ற கருத்தையே மைய்யமாய்க் கொண்டு விளங்குவதால் “ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேரப் போமளவும் வாழ்வு” என (ஏதேனும் ஒன்றைக் கற்றறிந்தாலே) மோக்ஷத்தில் ஜீவன்களைக் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தவை இந்த க்ரந்தங்கள். இந்த அனுஷ்டானத்திற்கென்றே ந்யாஸ தஶகம், ந்யாஸ விம்ஶதி, ந்யாஸ திலகம் என்ற மூன்று க்ரந்தங்களை அருளியுள்ளார் ஸ்வாமி. இம்மூன்றின் தொகுப்பே “ந்யாஸ த்ரயீ.”
இவற்றுள் தனிச்சிறப்பு வாய்ந்தது “ந்யாஸ விம்ஶதி”. ஶ்ருதி, ஸ்ம்ருதி, ஆழ்வார் ஸுக்த்திகள், ஆகம க்ரந்தங்கள் ஆகியவை கூறும் ப்ரதான விஷயங்களை இந்த ஸ்தோத்ர க்ரந்தம் உள்ளடக்கியுள்ளது. இக்காரணத்தால் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள் ப்ரார்த்தித்ததற்கிணங்க சுருக்கமான வ்யாக்யானமாக (“திங்மாத்ர ப்ரதர்ஶனம்”) ஸ்வாமியே அருளியுள்ளதே அதன் சிறப்பு.

ந்யாஸ தசகம் ந்யாஸ விம்சதி ந்யாஸ திலகம் -ந்யாஸ த்ரய ஸ்தோத்திரங்கள்-

28 -ஸ்லோகங்களுக்குள் இது ஒன்றுக்கும் மட்டும் ஸ்வாமி தேசிகன் வியாக்யானமும் அருளிச் செய்து இதன் முக்யத்வத்தை காட்டி அருளுகிறார் –

ஶரணாகதி என்ற இந்த அனுஷ்டானத்தை ஓர் நல்ல ஆசார்யனை ஆஶ்ரயித்து அனுஷ்டிக்க வேணும் என வேதம் விதிக்கிறது இதற்கு “நியம விதி”
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் “உப கோசலன்” கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது.
ந்யாஶ விம்ஶதியின் முதல், இரண்டாம் ஶ்லோகம் ஆசார்ய லக்ஷணம் பற்றியது. ஸதாசார்யன் என்பவர் 14 லக்ஷணங்கள் பொருந்திய வராக இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்வாமியே எடுத்துக்காட்டாக உள்ளார் என்றால் மிகையில்லை.
சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியம் அநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்ய வாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-

சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்ய வாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூயாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப்தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –

ஆசார்ய லக்ஷணங்கள்

  • ஸத் ஸம்ப்ரதாயே – ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி,     வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
  • ஸ்திர தியம் – சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
  • அநகம் – ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
  • ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
  • ப்ரும்ஹ நிஷ்டம் – எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
  • ஸத்வஸ்த்தம் – ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
  • ஸத்ய வாசம் – ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
  • ஸமய நியதயா ஸாது வ்ருத்யா – காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
  • டம்ப அஸூயாதி முக்தம் – தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
  • ஜித விஷயி கணம் – இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
  • தீர்க்க பந்தும் – இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
  • தயாளும் – மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
  • ஸாஸிதாரம் – தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
  • ஸ்வபர ஹிதபரம் – ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
  • ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
    சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
    கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
    உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
    சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
    2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
    3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
    ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
    கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத் குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை –
    தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
    4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
    5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
    6–சத்ய வாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
    இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
    ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
    ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
    7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
    8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
    9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
    சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை -சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
    வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
    கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
    10–ஜித விஷயி கணம்
    11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
    12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
    அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
    13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
    14—ஸ்வ பர ஹித பரம்
    தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்14-லக்ஷணங்கள்
    ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
    ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
    பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

    ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்

    அநகம்–
    அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
    இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்

    ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை

    ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு

    தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்

    தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
    ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்

    பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே

ஆக இந்த குணங்களுடைய ஆசார்யனை ஸிஷ்யன் அணுக வேண்டும். இத்தகைய ஆசார்ய–ஸிஷ்ய சம்பந்தம் கர்மாதீனமாய் ஏற்படுவதல்ல. பூர்வ புண்ய பலத்தால் மட்டுமே கிட்டும்.

——————

இத்தகைய ஆசார்யனை பகவானைப் போல உபாஸிக்க வேணும் என்றும் அதற்கான காரணங்களையும் 2ம் ஶ்லோகத்தில் சொல்கிறார்.
ஸாக்ஷாத் நாராயணனே ஆசார்யனாய் அவதாரம் செய்கிறார் என்கிறது ஸாஸ்த்ரம். பக்தி, ஸ்தோத்ரம், கைங்கர்யம் ஆகியவற்றால் ஆசார்யனை அதிதேஶ்யம் செய்ய வேண்டும். இப்படி ஆசார்யனை உயர்ந்த ஸ்தானத்தில் இருத்துவதன் காரணங்களைப் பட்டியலிடுகிறார் ஸ்வாமி.
ஆசார்யன் செய்யும் உபகாரங்களுக்கு ப்ரத்யுபகாரம் ஸிஷ்யனால் செய்யவே முடியாது

அஞ்ஞான த்வாந்த ரோதாத் அக பரிஹரணாத் ஆத்ம சாம்யா வஹத்வாத்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம ப்ரத கரிமதயா திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்
நிஷ் ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யான் நியதி ரஸதயா நித்ய சேஷித்வ யோகாத்
ஆச்சார்ய சத் ப்ரப் ரத யுபகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய–2-

அஞ்ஞான த்வாந்த ரோதாத் -அறிவின்மை என்னும் அருளை அகற்றுவதாலும்
அக பரிஹரணாத் -கீழ் ஸ்லோகத்தில் காட்டிய பாபம் துக்கம் வியசனம் -மூன்று விதமான அகத்தை நீக்குவதாலும்
ஆத்ம சாம்யா வஹத்வாத்–பிறரையும் தன்னைப் போலவே ஆக்குவதாலும்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம -மறு பிறவியைத் தீர்க்கும் வித்யா ஜென்மத்தை
ப்ரத -கொடுத்து அருளுபவர் என்கிற
கரிமதயா -பெருமையாலும்
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்–ஞானக் கண்ணின் மஹிமையாலும்
நிஷ் ப்ரத்யூஹா ஆந்ரு சம்ஸ்யான் -ஆந்ரு சம்ஸ்யம் -பிறருக்குத் தீங்கு செய்யாது இருப்பதையே தடை இன்றி நடத்தப்படுவதாலும்
நியதி ரஸ தயா -என்றும் மாறாத சுவை பொருந்தியதாலும்
நித்ய சேஷித்வ யோகாத்-ஒழிக்க முடியாத சேஷித்வம் கூடி இருப்பதாலும்
ஆச்சார்ய –ஆச்சார்யன்
சத் -ஸத்துக்களால்
அப்ரத் யுபகரண தியா -அவன் செய்து அருளும் உபகாரத்துக்கு சத்ருசமாக செய்ய ப்ரத்யுபகாரம் செய்ய முடியாது என்ற எண்ணம் கொண்டவனும்
தேவவத் -தேவனைப் போல்
ஸ்யாத் உபாஸ்ய-உபாஸிக்கத் தக்கவனாக இருக்க வேணும் -உபாஸிக்க வேணும் என்றபடி –

சிஷ்யன் ஆச்சார்யரையே பகவானாக கொள்ள வேண்டிய -8-காரணங்களை அருளிச் செய்கிறார் இதில் –
பிரதியுபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே

ஆசார்யன் செய்யும் உபகாரங்களாவன.
  • அஞானம் என்ற இருட்டைப் போக்கி தத்வ, ஹித, புருஷார்த்தம் என்ற ஆத்ம ஞானத்தை அளிப்பவர் ஆசார்யன்.
  • ஶரணாகதி என்ற அனுஷ்டானத்தைச் செய்வித்து நம் பாவங்களனைத்தையும் அழித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர்.
  • ஞானம், குணம், அனுஷ்டானம் ஆகியவற்றை அளித்து தனக்குச் சமானமாக சிஷ்யனை ஆக்குகிறார்ஆசார்யன். எம்பெருமான் முக்தாத்மாவுக்கு ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் அளிப்பது போல்.
    • ஸாலோக்யம் – முக்தனை ஶ்ரீ வைகுண்டலோகத்துக்கு வரவழைத்தல்.
    • ஸாமீப்யம் – அத்தனை பரும்ஹாண்டமான ஶ்ரீவைகுண்ட லோகத்தில் அவனுக்கு ஸமீபத்தில் நம்மை இருக்கச் செய்தல்
    • ஸாரூப்யம் – அவனைப்போல அப்ராக்ருதமான ரூபத்தை நமக்குத் தருவது.
    • ஸாயுஜ்யம் – இதற்கு மேலே தனக்குச் சமமான ப்ரும்ஹானந்தத்தை நமக்குத் தருவது
    • “தன்னோடொக்கத் தன் தாளிணைக்கீழ் வைக்கும் அப்பன்” என்கிறார் ஆழ்வார்.
  • வித்யா ஜன்மம் அளித்து ஆத்ம போஷணம் செய்து புதுப்பிறவி தந்து இந்த ஸம்ஸார பந்தம் தொடராது காப்பவர் ஆசார்யன். பிதாவாகிய ஆசார்யன், மந்த்ரமாகிய மாதாவினால் ஞானமாகிய புதுப் பிறவியைக் கொடுத்து சிஷ்யனை கடைத்தேறச் செய்கிறார்.
  • எம்பெருமானின் திவ்ய த்ருஷ்டியைப் போல ஆசார்யனும் சிஷ்யனைக் குளிரக் கடாக்ஷித்து அனுக்ரஹிக்கிறார். (ஆளவந்தார் கடாக்ஷம் உடையவர் மேல் படிந்தாற்போல. நடாதூரம்மாள் கடாக்ஷம் ஸ்வாமி தேஶிகன் மேல் விழுந்தாற்போல.)
  • எம்பெருமான் கருணை எல்லோரிடமும் தடையின்றி செல்வதுபோல் ஆசார்யனின் கருணையும் சிஷ்யனிடம் எல்லையின்றி சுரக்கின்றது.
  • எம்பெருமான் அடியார்களுக்கு என்றும் தெவிட்டாத அமுதமாய் இருப்பது போல் ஆசார்யனும் சிஷ்யர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை அளிக்கிறார்.
  • எம்பெருமானைப் போல ஆசார்யனும் நித்ய ஸ்வாமி யாக உள்ளார் தன் சிஷ்யர்களுக்கு. எம்பெருமானுக்குள்ள ஜீவ சம்பந்தமும் ஆசார்யனுக்குள்ள சிஷ்ய சம்பந்தமும் ஒழிக்க ஒழியாது. இத்தகைய உயர்ந்த ஆசார்யனுக்கு ஸ்வரூபமாக, போக்யமாக, பாக்யமாக கைங்கர்யம் செய்வதே ப்ரத்யுபகாரமாக அமையும்.
  • ஆச்சார்ய தேவோ பவ -ஸ்ருதி
    மயர்வற மதிநலம் அருளுபவர் -நிர்ஹேதுகமாக அஞ்ஞான கந்தமே இல்லாதபடி -அறியாக் காலத்துள்ளே -அறியாதது அறிவித்த அத்தன்
    நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தாதி நடை விளங்கவே
    வேதம் அரண்மனைக்கு விளக்கு போன்ற அருளிச் செயல்கள்
    ஸாஸ்த்ர பாணிநா ஸ்வயமேவ வந்து அவதரிக்கிறான் அன்றோ
    பாபம் பிரஞ்ஞாம் நாசயதி -அஞ்ஞானத்துக்கு மூல காரணம் தொல்லைப் பழ வினையே -அவற்றை முதலறித்து
    தாப த்ரயங்களைப் போக்கி அருளி -செடியாய வல் வினைகளைத் தீர்க்கும் திருமால் போலவே பண்டை வல்வினை பாற்றி அருளுகிறாரே ஆச்சார்யர்
    செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் அன்றோ
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

————————————-

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவித் அபிமதம் தத்த்வத சிக்ஷணீய –3-

சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்கமாக தண்டன் இடும் பழக்கம் யுடையவனாயும்
ப்ரஸ்ன கால ப்ரதீஷ-ஆச்சார்யன் இடம் தக்க காலம் எதிர்பார்த்து கேள்வி கேட்டு சங்கைகளைப் போக்கிக் கொள்பவனாயும்
சாந்தோ -மனத்தை அடக்கி வைப்பவனாயும்
தாந்தோ -வெளி இந்திரியங்களை அடக்கி வைப்பவனாயும்
அநஸூயு -பொறாமை இல்லாதவனாயும்
சரணமுபகத -ஆனு கூல்ய சங்கல்பாதி ஐந்து அங்கங்களோடே கூடிய விதிப்படி ஆச்சார்யன் இடம் சரணாகதி செய்பவனாயும்
சாஸ்த்ர விசுவாஸ சாலீ–ஸாஸ்த்ரங்களிலே விஸ்வாஸம் கொண்டவனாயும்
ப்ராப்த பரீஷாம் -ஒரு வருஷமா ஆறு மாதங்களோ தக்கபடி ஆச்சார்யனால் பரீக்ஷிக்கப் பட்டவனாயும்
க்ருதவித் -நன்றி யுடையவனாயும்
ஆகிய
சிஷ்ய-சிஷ்யன்
அபிமதம் தத்த்வத –தத்வ அர்த்தங்களில் விரும்பியதை -இஷ்டப்பட்டவற்றை
சிக்ஷணீய -உபதேசிக்கத் தக்கவன்
அல்லது அபிமதமாம்படி இருக்கும் படி தத்வார்த்தங்களைப் போதிக்கத் தகுந்தவன் –

சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —

சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம் -அடி பணிந்து போக்கற்ற நிலையை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன் போன்றவனே நல்ல சீடன்

இத்தகைய ஆசார்யனை வந்தடையும் சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களாக 14 அம்சங்களை சொல்கிறார் ஸ்வாமி தேஶிகன் இந்த 3ம் ஶ்லோகத்தில்.

  • ஸத் புத்தி – நல்ல ஸ்திர புத்தி உள்ளவனாக சிஷ்யன் இருக்க வேண்டும்.
  • ஸாது ஸேவீ – பெரியோர்களை மதிப்பவனாயும், பாகவதர்களோடு பழகும் தன்மை உடையவனாயும் இருக்க வேண்டும். (க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் ஆசார்யனைப் பணிந்து உபதேசம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தினார்)
  • ஸமுசித சரித: – ஸாஸ்த்ரத்தை யொட்டிய கால தேச வர்த்தமானத்தை அனுசரித்த அனுஷ்டானமும், நல்லொழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்.
  • தத்வ போதாபிலாஷி – தத்வ, ஹித, புருஷார்த்த ஞானத்தை அறியும் ஆசையுடையவனாயிருக்க வேண்டும். தர்மங்களை அறிந்து விசாரம் செய்யும் விருப்பம் (உத்காட இச்சா) உடையவனாயிருக்க வேணும்.
  • ஸுஸ்ரூஷு – ஆசார்யனுக்குப் பணிவிடை செய்யுமுகத்தான் அவரிடம் உபதேசங்களைப் பெற வேண்டும்.
  • த்யக்த மான: – “தான்” எனும் அஹங்காரம் அற்றவனாயிருத்தல். ஞானத்திலும், செல்வத்திலும், வயதிலும் ராமானுஜரை விட உயர்ந்த வராயிருந்த போதும் தன் சிஷ்ய பாவத்தைச் சற்றும் என்றும் மாற்றிக் கொள்ளாத முக்குறும்பறுத்த கூரத்தாழ்வானே சிஷ்ய லக்ஷணத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாவார்.
  • ப்ரணி பதந பர – கீழே விழுந்து ஆசார்யனை வணங்குபவனாக ஸிஷ்யன் இருக்க வேண்டும். த்ரிகரணத்தால் சங்கோசமின்றி காலக்ஷேபம் கேட்கும் முன்பும் பின்பும் ஆசார்யனை ஸேவிக்க வேண்டும்.
  • ப்ரஶ்ன கால ப்ரதீக்ஷ: – தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசார்யனிடம் உசிதமான காலத்தை எதிர்நோக்கிக் கேட்டுத் தெளிய வேணும்.
  • ஶாந்த: – சஞ்சலங்களைத் தவிர்த்து மனதை அடக்கியவனாக இருக்க வேணும்.
  • தாந்த: – புற இந்த்ரியங்களை தறி கெட்டுப் போகாமல் அடக்கியவனாயிருக்க வேண்டும். லௌகீக விஷயங்களில் அதிகம் ஈடுபடும்போது வித்தை கற்பதற்கு விருத்தம் ஏற்படும்.
  • அஸூய: – பிறருடைய பெருமையில் பொறாமையும் அதன் மூலம் போட்டியும் ஏற்படக் கூடாது. அவர்களின் குணங்களில் தோஷம் கற்பிக்காதிருக்க வேணும்.
  • ஶரணம் உபகத: – ஆசார்யனைத் தேடிப் போய் சிஷ்யன் பணிய வேணும். ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஶரணாகதி செய்து உபதேசம் கேட்க வேணும்.
  • ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலி – ஆசார்யனிடமும் அவர் உபதேசிக்கும் ஶாஸ்த்ர விஷயங்களிலும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். “ஆயிரம் மாதா பிதாக்கள் சேர்ந்தாலும் ஶாஸ்த்ரம் போன்று ஹிதம் சொல்வதற்குச் சமானமாகாது” என்கிறார் பகவத் ராமானுஜர். ஆசார்யன் செய்யும் ஹிதோபதேசம் பின்னால் தான் சிஷ்யனுக்கு நன்கு புரியும்.
  • ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் – ஆசார்யன் செய்யும் பரீக்ஷைக்குட்பட்டு சிஷ்யனாக வேணும்.
  • க்ருத விது – இவ்விதமாக சிஷ்யனாகிய பின் ஆசார்ய பக்தியுடன் நன்றி மறவாதிருக்கவேணும். க்ருதஞையுடனிருந்தால்தான் ஆசார்ய உபதேசங்கள் மனதில் நிலைக்கும்.

இத்தகைய நல்ல குணவானாகிய சிஷ்யனுக்கு வஞ்சனையின்றி ஆசார்யன் ஸம்ப்ரதாய விஷயங்களை உபதேசிப்பார்.
(1/4 பாகம் உபதேசம், 1/4 பாகம் தானே படிப்பதால், 1/4 பாகம் வாத உரையாடல்களால், 1/4 பாகம் காலக்ரமேண சிஷ்யன் தெரிந்து கொள்வான்)

———————

ஸ்வ அதீந அசேஷா சத்தா ஸ்திதி யத்ன பலம் வித்தி லஷ்மீ சமேகம்
ப்ராப்யம் நாந்யம் ப்ரதீயா ந ச சரணதயா கஞ்சி தந்யம் வ்ருணீயா
ஏதஸ்மா தேவ பும்ஸாம் பயமிதரதபி ப்ரேஷ்யா மோஜ்ஜீஸ் ததாஜ்ஞாம்
இத்யே காந்தோபதேச ப்ரதமமிஹ குரோர் ஏக சித்தேன தார்ய —4-

இஹ -இந்த சந்தர்ப்பத்தில்
ப்ரதமம் -முதன் முதலிலே
ஸ்வ அதீந –தனக்கு அதீனமான
அசேஷ-ஸகல வஸ்துக்களுடையவும்
சத்தா -இருப்பு
ஸ்திதி -அநேக காலம் தொடர்தல்
யத்ன -பிரயத்தனம் செய்தல்
பலம் -இவற்றின் பலன்களையும் யுடையவனாய்
லஷ்மீஸம் -ஸ்ரீமன் நாராயணனை
ஏகம் -முக்யமாகவும் -ஏகமேவம் அத்விதீய ப்ரஹ்மம் -முதல்வன் -ஒப்பில்லா அப்பன் -என்று
வித்தி -அறியக் கடவாய்
அந்யம்-வேறு ஒருவனை
ப்ராப்யம் -நாம் அடையத் தக்கவனாக
ப்ரதீயா ந -கருதாதீர் -நம்பாதீர்
அந்யம் கம்சித் -வேறு ஒருவனையும் ஒரு பொருளையும்
சரணதயா -சரணமாக
ந வ்ருணீயா-வரிக்காதீர் -வேண்டாதீர்
பும்ஸாம்–ஜீவ ராசிகளுக்கு
பயம் -அச்சமும்
இதரதபி-மற்றதும்-அதாவது நற் கதியும்
ஏதஸ்மா தேவ -இவன் இடமிருந்தே ஏற்படுகிறது என்று
ப்ரேஷ்ய–கண்டு அறிந்து
ததாஜ்ஞாம்-அவனது கட்டளையை
மோஜ்ஜீஸ் -கை விடாதீர்
இதி -இவ்விதமான
குரோர்-குருவின்
ஏகாந்தோபதேச –ஏகாந்தத்தில் செய்யப்பட உபதேசம் -ப்ரஹ்மம் ஒருவனே ப்ராப்யம் என்றும் ப்ராபகம் என்ற உபதேசம்
ஏக சித்தேன -ஊற்றமுள்ள -ஊன்றிய மனத்தால்
தார்ய -தரிக்கத் தக்கது

மோக்ஷத்தை விரும்பித் தன்னை வந்தடைந்த சிஷ்யனுக்கு ஆசார்யன் செய்யும் உபதேசம் பற்றி இந்த ஶ்லோகம் சொல்கிறது.
ஆசார்யன் செய்யும் ரஹஸ்ய ஏகாந்த உபதேசமாகும் இது. மிக ஶ்ரேஷ்டமான திரு அஷ்டாக்ஷரம் த்வயம் சரமஶ்லோகம் ஆகியவற்றின் ஸாரமான அர்த்த விசேஷங்களை உபதேசிக்கிறார்.
(18 முறை நடந்து திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் கேட்டறிந்தார் இந்த அர்த்தங்களை)
இந்த திருமந்த்ரார்த்தங்கள் நம் ஆத்மாவைக் காட்டித் தருபவை. பெரிய உருவைக் காட்டும் சிறிய கண்ணாடி என்கிறார் ஸ்வாமி தேஶிகன் இதனை. பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்வதே இந்த திருமந்த்ரம். இதனை ஆத்ம யாத்ரை என்பர் தேக யாத்ரை என்பது தேக வளர்ச்சி. ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்வது திருமந்த்ரத்தாலேதான். ஆக ஆசார்யன் செய்யும் இந்த முதல் உபதேசம் பிறந்த சிஸுவுக்கு ப்பாலூட்டுவதற்கொப்பாகும்.

ஆசார்யன் செய்யும் உபதேசங்களாவன-
முதலில் ஶ்ரீய:பதியைத் தெரிந்துகொள்.
அவனே ஶ்ருஷ்டி, ஸ்திதி, ப்ருவ்ருத்தியைச் செய்பவனாக ஸர்வ ஸ்வாமியாக உள்ளான். லக்ஷ்மீஸம் ஏகம் என்கிறது வேதம். கொசு முதல் யானை வரை எத்தனையோ விதமான ஜீவராசிகள், தாவரங்கள் இவற்றுக்கு விதவிதமான ஸ்வரூப, ஸ்திதி, ப்ருவ்ருத்தி பேதங்களைக் கொடுக்கிறான் எம்பெருமான்.
திருவாய்மொழியின் முதல் பாசுரம் எம்பெருமான் ஸ்வரூபம் இரண்டாம் பாசுரம் ஸ்திதி மூன்றாம் பாசுரம் ப்ருவ்ருத்தி பலனைச் சொல்கிறது. இவையனைத்தும் அவனது அதீனம். அவனே சேஷீ. அவனே ஸ்வாமீ. கூட்டிலே வளர்க்கும் கிளி போன்றவர்கள் நாம். எம்பெருமான் நம்மை உண்டாக்கி, போகங்களை அளித்து ஸந்தோஷிக்கிறான்.
ராஜா வளர்க்கும் கிளிக்கு பட்டு வஸ்த்ரம் கட்டி நகைகள் போட்டு
ரஸிப்பதும் ஸந்தோஷிப்பதும் கிளிக்கு அனுபவமாகாது. ராஜா ஸந்தோஷித்து அனுபவிக்கிறான். இந்த லீலா ரசம் தான் பகவான் அனுபவிப்பது ஜீவன்களிடம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இரண்டாவது உபதேசம் – இத்தகைய எம்பெருமானை அடைவதே சிஷ்யனின் லக்ஷ்யமாயிருக்க வேண்டும்.

ஸ்வதந்த்ரனாயில்லாமல் சூழ்நிலை தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நமக்கே உரிய எம்பெருமானுக்கு கீழ்படிந்திருப்பது நம் ஸ்வரூபத்துக்கு ஏற்புடையதாயிருக்கும். “எருது பரதேசம் போவதுபோல்” என்கிறார் ஸ்வாமி. இதர தேவதைகளை அடைந்தால் எருது படும் கஷ்டம் போன்று நாமும் உழலவேண்டியது புரியும்.

மூன்றாம் விஷயம் – நச ஶரணதயா – அவனை அடைவதை லக்ஷ்யமாய்க் கொண்டால் அவனே உபாயமாயிருந்து அவனை அடையச் செய்கிறான். வேறு தெய்வங்களை நாடவேண்டாம்.

நான்காம் விஷயம் – ஏதஸ் மாதேவ – ஸம்ஸாரத்தில் ஏற்படும்
சுகம்/துக்கம் லாபம்/நஷ்டம் பயம்/அபயம் எல்லாம் தருபவன் அவனே. ஆபத்தைத் தருகின்ற அவனே அபயத்தையும் தருகிறான் “பயக்ருத் பயநாஶன:”
ஐந்தாம் விஷயம் – எம்பெருமானுக்கு அடிமைப்பட்டதாலே அஸாஸ்த்ர விஷயங்களில் ஈடுபடாதிருக்க வேணும்.
அவன் கட்டளையை மீறக்கூடாது.
ஆசார்யன் செய்யும் இந்த உபதேசங்களில் ஒன்றிய மனத்தனாய் பசுமரத்தாணிபோல சிஷ்யன் இவற்றைப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
—————

மோஷ உபாயார்ஹ தைவம் பவதி பவ ப்ருதாம் கஸ்யசித் க்வாபி காலே
தத்வத் பக்தி ப்ரபத்யோரதி க்ருதி நியமஸ் தாத்ருஸா ஸ்யாந் நியத்யா
சக்தா சக்தாதி தத்தத் புருஷ விஷயத ஸ்தாப்யதே தத் வ்யவஸ்தா
யச்சாஹூஸ் தத் விகல்ப சம இதி கதிஸித் தத் பல ஸ்யா விசேஷாத் –5-

பவ ப்ருதாம்–ஸம்ஸாரிகளுக்குள்
கஸ்யசித்-ஒருவனுக்கு
க்வாபி காலே-ஒரு காலத்தில்
ஏவம் -கீழ் ஸ்லோக உபதேசம் பெற்ற பலனாக
மோஷ உபாயார்ஹ -மோக்ஷ உபாயத்தில் அதிகாரம்
பவதி-ஏற்படுகிறது
தாத்ருஸா-அப்படிப்பட்ட
நியத்யா-தைவ வசத்தால்
தத்வத் -அதைப் போலவே
அதாவது -அநேக கோடி ஜீவ ராசிகளில் ஒருவனுக்கு ஒரு காலத்தில் மோக்ஷ உபாய அதிகாரம் ஏற்பட்டது போலவே
பக்தி ப்ரபத்யோ-பக்தி ப்ரபத்திகளில்
அதி க்ருதி நியமஸ் -அதிகார வ்யவஸ்தை
அதாவது இன்னானுக்கு இன்னது தான் என்ற ஏற்பாடு உண்டாகக் கூடும்
தத் வ்யவஸ்தா-அந்த வியவஸ்தை -சக்தி உள்ளவன் என்றும் சக்தி அற்றவன் என்றும் இது முதலான அந்த அந்த புருஷர்களின் விஷயமாக
ஸ்தாப்யதே –நிலை நிறுத்தப் படுகிறது
கதிஸித்-சிலர்
தத் விகல்ப-அவ்விரண்டில் ஓன்று என்றது
சம-மேன்மை தாழ்மை இல்லாதது
இதி- என்று
யஹூஸ் யத் -சொல்லுகின்றனர் -என்பது யாது ஓன்று உண்டோ
தத் -அது
பல ஸ்யா விசேஷாத் -பலனில் வித்யாஸம் இல்லாதது கொண்டு என்று அறிய வேண்டும் –

முமுஷு –இச்சை -காயசித் -சிலருக்கு சில வேளைகளில் ஆச்சார்யர் இடம் உபதேசம் பெற -கஸ்யசித் க்வாபி காலே –
பஹு நாம் சன்மானம் –ஞானவான் மாம் ப்ரபத்யே -ஸ்ரீ கீதா

பக்தி பிரபத்தி இரண்டு உபாயங்களை வேறே வேறே அதிகாரிகளுக்கு
மநோ நிக்ரஹம் -ஞான வைராக்யாதி ஸாமக்ரியைகள் நிறைய பெற்ற வ்யாஸாதிகளுக்கு பக்தி
அதி அசக்தர்களான நம் போல்வாருக்கு சரணாகதி -ப்ரபத்தியே உபாயம்
இரண்டு உபாயங்களுக்கும் பலம் துல்யம் ஒன்றே என்றவாறு –

இதுவரை ஆசார்யன் அளித்த உபதேசத்தால் நல்ல ஞானமடைந்த சிஷ்யனுக்கு பக்தி, ப்ரபத்தி என்ற இரு உபாயங்களின் தன்மைகளை ஆசார்யன் எடுத்துக்கூறுகிறார் இதில்.
ஶ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய முக்யமான கார்யம்
ஶரணாகதி. அடுத்த ஜன்மம் இல்லை என்ற கதி. மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி இந்த உபதேசம் மூலம் கிடைக்கிறது. இத்தகுதி எல்லார்க்கும் கிடைப்பதில்லை.கர்ம பலனே இதற்கு மூல காரணம்.ஞானம், சக்தி, சாஸ்த்ர அனுமதி இருந்தால் இத்தகுதி பூர்த்தி யாகும். பக்தியோகம் செய்வதற்கான ஞானமும் சக்தியும் நமக்கில்லை. அது கடின உபாயம். ஶரணாகதி சுலபமானது.

மற்ற விவஸ்தைகள் தேவைப்படாமையே இதன் சிறப்பு. ஆனால் அடையப் போகும் பலன் இரண்டுக்கும் சமம்.

  1. ஸம்ஸாரிகளுள் யாரோ ஒருவர்க்கு மட்டுமே மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி கிடைக்கும்.
  2. பக்தி/ப்ரபத்தி என்ற இரண்டு அனுஷ்டானங்களால் தான் மோக்ஷம் பெற முடியும். இதில் ஞானம்,சக்தி,சாஸ்த்ர அனுமதி,விளம்ப ஸஹிப்பு (மோக்ஷம் பெற ஏற்படும் கால தாமதம்) இவற்றுடன் செய்வது பக்தி யோகம். பாபங்கள் (ஸஞ்சித, ப்ராரப்த) முற்றிலும் ஒழிந்த பின்பே மோக்ஷம் சித்திக்கும். அஞ்ஞாத ஸுஹ்ருதத்தால் நிகழ்வது ஶரணாகதி. இந்த பிறவி முடிவில் மோக்ஷம் கிடைக்கும்
  3. இந்த இரு அனுஷ்டானங்களும் குரு, லகு விகல்பமுடையதாயிருப்பதால் லகு உபாயத்தையே எல்லாரும் செய்வர். ஆனால் பலன் இரண்டுக்கும் சமம்.ஒருவர் இந்த இரண்டையும் அனுஷ்டிக்க சாஸ்த்ரம் அனுமதிக்காது. பக்தி யோகம் தைல தாரை போல இடையீடற்ற த்யானம் செய்யச் சொல்கிறது. க்ருத தாரை போல அல்ல. பஹிரங்க அங்கங்கள் உண்டு. ஶக்தனே இதனைச் செய்யமுடியும். ப்ரபத்தி அஶக்தனுக்கு. இது ஐந்து அங்கங்கள் கொண்ட க்ஷண கால அனுஷ்டானம். ஆக இரண்டின் ஸவரூபங்களும் இரு த்ருவங்களாய் நிலைப்படுகின்றன. திருக்குருகைக் காவலப்பன் பக்தியோகம் செய்து கண்ணனை சாக்ஷாத் கரித்தார். இந்த பக்தி யோகிகளுக்கு பக்தியும், ஞானமும் பிறவி தோறும் தொடரும். ஆனால் நாதமுனிகள், நம்மாழ்வார் கால விளம்பத்தைப் பொறுக்க வில்லை. த்யான ருசியுள்ளவர்களுக்கு விளம்பம் ஒரு பொருட்டல்ல. ஆக மேற்கூறிய நான்கு தகுதியுடையவர் பக்தியோகம் செய்வர். இவற்றில் எதுவுமில்லாதவர் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறார்.
  4. இப்படி வித்யாசமிருப்பினும் பலன் சமமானது. பரத்தில் இருவருக்கும் அனுபவம் ஒன்றே. பக்தி யோகனுக்கு இகத்தில் பகவதனுபவம் அதிகம். ஶரணாகதனுக்கு பகவதனுபவம் இங்கே குறைவு.

“நாள் இழவு (நஷ்டம்) அன்றி பொருள் இழவு இல்லை” என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

———————

சாநுக்ரோசே சமர்த்தே ப்ரபதநம் ருஷிபி ஸ்மர்த்யே அபீஷ்ட ஸித்த்யை
லோகே அப்யேதத் பிரசித்தம் ந ச விமதிரிஹ ப்ரேஷ்யதே க்வாபி தந்த்ரே
தஸ்மாத் கைமுத்ய சித்தம் பகவதி து பர ந்யாச வித்யா நுபாவம்
தர்ம ஸ்தேயாஸ்ச பூர்வே ஸ்வ க்ருதிஷூ பஹுதா ஸ்தாப யாஞ்சக் ருரேவம் —6-

அபீஷ்ட ஸித்த்யை–இஷ்டம் பெறுவதற்கு
சாநுக்ரோசே -தயை யுள்ள
சமர்த்தே -வல்லவன் இடத்திலே
ப்ரபதநம் -அடைக்கலம் புகுதல்
ருஷிபி ஸ்மர்த்யே -ரிஷிகளால் விதிக்கப்படுகிறது
ஏதத் -இவ் விஷயம்
லோகே பிரசித்தம் -உலக நடத்தைகளிலும் ப்ரஸித்தமானது
இஹ -இவ் விஷயத்தில்
விமதிர் -அபிப்ராய பேதமானது
க்வாபி தந்த்ரே-ஒரு சாஸ்திரத்திலும்
ந ப்ரேஷ்யதே -காணப்படுகிறது இல்லை
தஸ்மாத் –ஆதலால்
கைமுத்ய சித்தம் -கை முத்யம் நியாயத்தால் ஸித்தமான
பர ந்யாச வித்யா நுபாவம்-பர ந்யாஸம் என்னும் வித்யையின் மஹிமையை
தர்ம ஸ்தேயாஸ்–தர்மங்களை நிர்ண யிக்கிறவர்களான
பூர்வே –ஆளவந்தார் முதலான முன்னோர்
ஏவம் -முன் கூறியபடியே
ஸ்வ க்ருதிஷூ -தாங்கள் அருளிச் செய்த நூல்களிலே
ஸ்தாப யாஞ்சக்ருர் -விசாரித்து முடிவு செய்துள்ளனர்

ஸ்ம்ருதிகளும் சரணாகதி மூலம் சுக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் காகாசூரன் போன்றோர் பயன் அடைந்ததை சொல்லுமே —
பலரும் பல பலன்களுக்கு சரணாகதி செய்தமை ஸ்ம்ருதிகள் சொல்லும் -கைமுதிக நியாயத்தால் அவனை அடைய சரணாகதி உதவுமே –
பரம காருணிகன் சர்வ சக்தன் தன்னையே ஓக்க அருள் செய்வான் சரணாகதர்களுக்கு என்பதை பூர்வர்கள் பலரும் காட்டி அருளி உள்ளார்கள் –

லகு உபாயமான பிரதிபத்திக்கும் அதே உயர்ந்த பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் யுக்திகள் காட்டி அருளுகிறார்
வானரம் புலி மனுஷ்ய வ்ருத்தாந்தம் -காகாசூரன் -விபீஷணன் –திரௌபதி -சுமுகன் -கஜேந்திரன் –திரிசங்கு –
சுனஸ்ஸேபன்-ரிஷி குமாரன் யாக பசுவாக விற்கப்பட விச்வாமித்ரரை சரண் அடைய தபோ மந்த்ர பலத்தால் ரக்ஷித்து அருளினார் –
சாதாரண ஜனங்கள் இடமே சரணாகத ரக்ஷணம் காணும் இடத்தில் கைமுதிக நியாயத்தால் பகவான் விஷயத்திலே ஸித்தம் அன்றோ என்கிறார் –
ஆகவே மஹா விஸ்வாசமே வேண்டியது -என்கிறார் –

ப்ரபத்தியின் பெருமையையும்,உயர்வையும் காட்டும் ஶ்லோகம் இது.

  1. கருணையும், சக்தியும் உடையவனிடம் ப்ரபத்தி செய்தால் பலன் கிடைக்கும் என வால்மீகி, வ்யாசர் போன்ற ரிஷிகள் தங்கள் ஸுக்திகளில் சொல்லி யுள்ளனர். லௌகீகமான கார்யம் நிறைவேற ஓரளவு சக்தியும், கருணையும் கொண்ட மனிதனை நம்புகிற நாம் ஸர்வ ஶக்தனாகிய எம்பெருமான் கட்டாயம் பலனளிப்பான் என நம்ப வேணும். லக்ஷ்மணன், பரதன், தண்டகாரண்ய ரிஷிகள், சுக்ரீவன், விபீஷணன், த்ரௌபதி, பாண்டவ ஶரணாதிகள் போன்றவை இதிகாச ப்ரசித்தமானவை.
  2. சக்தியுள்ளவனின் உதவியை கார்ய சித்திக்கு நாடுவது உலக நியதி. ஸாஸ்த்ரங்களும் இதனைத் தடுக்க வில்லை. பரீக்ஷித் நகர் சோதனையில் கலிபுருஷன் பசு ஒன்றை ஹிம்ஸிக்க அவனை வெட்டக்கை ஓங்க, கலி செய்த ஶரணாகதியை ஏற்று அபயம் அளித்து தன் நாட்டை விட்டு ஓடும் படி செய்ததாக வரலாறு. கீதோபதேசம் கேட்ட அர்ஜுனனின் பேரனுக்கே ஶரணாகதி செய்தவனிடம் கருணை யிருக்கும் போது எம்பெருமான் விஷயத்தில் சந்தேகமே வேண்டாம்.
  3. ஆக இந்த ஶரணாகதி என்ற ப்ரம்ஹ வித்தையை, தர்ம நிர்ணயம் செய்யும் ஆழ்வார் ஆசார்யர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆக இந்த அனுஷ்டானம் பூர்வாசார்யர்கள் ஸ்தாபித்த பரம தர்மமாகும்.

————————

சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ நநு விதி விஷயே நிர்விசங்கோ அதிகாரீ
விச்வாஸஸ் யாங்க பாவே புநரிஹ விதுஷா கிம் மஹத்வம் ப்ரஸாத்யம்
மைவம் கோராபராதை சபதி குரு பலே ந்யாஸ மாத்ரேண லப்யே
சங்கா பார்ஷ்ணி க்ரஹார்ஹா சமயிதுமுஸிதா ஹேது பிஸ் தத் ததர்ஹை –7-

சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ –ஸாஸ்த்ரம் பிரமாணம் ஆகும் முறையை நன்கு அறிந்த
அதிகாரீ-ப்ரபந்ந அதிகாரியானவன்
விதி விஷயே -சரணாகதியை விதித்ததில்
நிர்விசங்கோ நநு–ஸந்தேஹம் இல்லாதவன் அல்லவா
புநரிஹ–புநர் இஹ -பின்னேயும் இந்த சரணாகதியில்
விஸ்வாஸஸ்ய -மஹா விஸ்வாசம்
யங்க பாவே -அங்க பாவமாக இருக்கையிலே
விதுஷா -தெரிந்தவனால்
மஹத்வம் ப்ரஸாத்யம்–மஹத் பெரியது என்ற விசேஷணத்தால் ஸாதிக்கக் கூடியது –
கிம் -எது
மைவம் –அப்படி அல்ல
கோராபராதை -அதிகம் குற்றம் செய்தவர்களால்
ந்யாஸ மாத்ரேண-சரணாகதியை மாத்ரமே கொண்டு
சபதி -தத் க்ஷணத்தில்
குரு பலே -பெரியதொரு பலன்
லப்யே–அடையப்பட இருக்கையிலே
பார்ஷ்ணி க்ரஹார்ஹா –பின் தொடரக் கூடிய
சங்கா -ஸந்தேஹம்
தத் ததர்ஹை -அவ்வவற்றுக்கு ஏற்ற
ஹேது பிஸ் –ஹேதுக்களால்
சமயிதும் உஸிதா -போக்கப் படுவதற்குத் தக்கது

மஹா விஸ்வாஸம்-முக்கிய அங்கம் –செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமை – நம் பாபங்கள் தண்மை அதிசயம்
பேற்றின் பலன் -மூன்றையும் பார்த்தால் மஹா விஸ்வாசத்தின் அருமை அறியலாம் –
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே அடைய முடியும்

பகவத் குணக் கடலிலே ஆழ்ந்து மஹா விஸ்வாஸம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே
விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி.–இத்யாதி ஸ்லோகத்தால் பிராட்டி ராவணனுக்கும் உபதேசம்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய –மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தானே அருளிச் செய்தானே அன்றோ –

மஹா விஶ்வாஸத்தின் அவஶ்யத்தைச் சொல்கிறது இந்த ஶ்லோகம்.

முதல் இரு வரிகள் கேள்விகளாகின்றன. அதாவது சாஸ்த்ரங்களை நம்புகின்றவனாக இருப்பவன் அது விதிக்கும் காரியங்களைச் செய்யத் தயங்க மாட்டான் என்னும் போது அவனுக்கு விஶ்வாஸம் இருக்கிறது என உணரலாம்.

அடுத்த இரு வரிகள் க்ஷண கால அனுஷ்டானமாகிய ப்ரபத்தி அளிக்கும் மிகப் பெரிய பலனில் சந்தேகம் ஏற்படக் கூடியதைத் தவிர்க்க ப்ரபன்னனுக்கு மஹா விஶ்வாசம் எம்பெருமானிடம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.–ப்ரபத்தியின் முக்ய அங்கமாக இந்த மஹா விஶ்வாசம் உள்ளது.

இருகையையம் விட்டுக் கதறிய த்ரௌபதியையும், எல்லாம் விட்டு வந்த விபீஷணனையும் காப்பாற்றியது எம்பெருமானிடம் அவர்கள் கொண்ட மஹா விஶ்வாஸமே. மாபெரும் நம்பிக்கை என்பதால் இதனைத் தனியான அங்கமாய்ச் சொல்லியுள்ளது.

பாத்ரமறிந்து மோக்ஷ பலனைத் தருவதில்லை எம்பெருமான். இப்போதாவது என்னைச் சரணடைந்தானே என்ற கருணையால் உந்தப்பட்டு எம்பெருமான் செய்யும் பரம அனுக்ரஹ பலன்.

ஒரேஒருநாள் ஸீதாபிராட்டி ராக்ஷஸிகளிடம் பட்ட அவஸ்தையைப்பார்த்த ஹனுமன் அவர்களைக் கொல்ல முற்படும்போது 10 மாதமாக தன்னை ஹிம்ஸித்த அவர்களுக்கு கருணை கூர்ந்து அபயமளிக்க வில்லையா பிராட்டி! ஆனாலும் கோர பேரபராதங்கள் செய்த நமக்கு இந்த சிறிய க்ஷண கால ப்ரபத்தி மோக்ஷத்தை அளிக்குமா என்ற சந்தேகமானது செய்ய விடாமல் பின்னே இழுக்கும்.

ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஸர்வ ஶக்தனான எம்பெருமான் தன் அபார கருணையாலே இதனைச் செய்கிறான். இந்த விஷயங்களை ஆசார்யன் மூலம் நன்கு தெளிதல் வேண்டும்.

————————–

ந இஹ அபிக்ராந்தி நாஸோ ந ஸ விஹதிரிஹ ப்ரத்யவாயோ பவேதிதி
உக்தம் கைமுத்ய நீத்யா ப்ரபதந விஷயே யோஷிதம் சாஸ்த்ர வித்பி
தஸ்மாத் க்ஷேத்ரே ததர்ஹே ஸூவிதத சமயைர் தேசிகை சம்ய குப்தம்
மந்த்ராக்யம் முக்தி பீஜம் பரிணதி வசத கல்பதே ஸத்பலாய–8-

இஹ –இந்த கர்ம யோகத்தில்
அபி க்ராந்தி –ஆரம்பத்துக்கு
நாஸோ ந -பயன் தராமல் வீணாகப் போவது இல்லை
விஹதி மதி -முடிவதற்கு முன்பு தடை பட்டு நின்று போய் விட்டால்
ப்ரத்யவாயோ -பெரும் குற்றமும்
ந பவேதிதி-உண்டாகாது
இதி -இவ்வாறு
யுக்தம் -கர்ம யோகத்தில் சொன்னது
ஸாஸ்த்ர வித்பி –சாஸ்திரம் அறிந்தவர்களால்
ப்ரபதந விஷயே-சரணாகதியின் விஷயத்தில்
கைமுத்ய நீத்யா –கை முதிதம் நியாயத்தைக் கொண்டு
யோஷிதம் –இணைக்கப் பட்டது
தஸ்மாத் –ஆதலால்
ஸூவிதத சமயைர்–காலம் அறிந்த
தேசிகை–ஆச்சார்யர்களால்
ததர்ஹே–அதற்குத் தகுந்த
க்ஷேத்ரே –பூமியில் இடத்தில் -அதாவது குணம் நிறைந்த சிஷ்யன் இடத்தில்
சம்யக்-நன்றாக
உப்தம்-விதைக்கப்பட்ட
மந்த்ராக்யம் –மந்த்ரம் என்னும்
முக்தி பீஜம் –முக்தியின் விதை
பரிணதி வசத -முதிர்ச்சி அடைவதால்
கல்பதே ஸத் பலாய-நல்ல பழம் கொடுக்க ஏற்படுகிறது

பிரபத்தி அங்கங்களை ஆச்சார்யர் உபதேசம் மூலம் -உணர்ந்து -மஹா விஸ்வாஸம் அடைய வேண்டுமே –
ரஹஸ்ய த்ரய ஞானம் -ஆச்சார்யர் மூலம் பெற்று -ஸ்ரீமன் நாராயணனே அசேஷ ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமி -நியாம்யன்–
அவனே பரம ப்ராப்யம் –அவனே பிராபகம்-சாஸ்திரங்கள் அவனது ஆஜ்ஞா ரூபம் -விதி நிஷேதங்களை மாறாமல் இருக்க வேண்டுமே –

பகவத் திரு நாம சங்கீர்த்தனம் -பிரபத்தி மந்த்ர உச்சாரணம் –போன்றவை பிரபத்தியிலே மூட்டி அதன் மூலமாக பயன் தர வல்லது
எனவே பிரபத்தி அனுஷ்ட்டிக்க வேண்டியது அவஸ்யமே என்றதாயிற்று –

மந்த்ர ஜபமும்,நாம ஸங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் மூலமே மோக்ஷம் தர வல்லவை என்பதனை இந்த ஶ்லோகம் வலி யுறுத்துகிறது.

பக்தி யோகத்தையும், ப்ரபத்தியையும் ஶாஸ்த்ரங்கள் ஒத்துக் கொண்டுள்ளன. இவை இரண்டும் முடியாத போது மந்த்ர, நாம கீர்த்தனங்கள் செய்ய வேதம் அனுமதிக்கிறது. தன்வசமின்றி“ஹரி” என்ற நாமத்தை ஒருவன் சொன்னால் பாபம் விலகும். காட்டில் ம்ருகங்களிடையே அகப்பட்ட ஒருவன் சிம்ஹ கர்ஜனை கேட்ட மாத்ரத்தில் அவற்றினிடமிருந்து தப்பி விடுபடுவது போல “ஹரி” ஸப்தம் கேட்டால் – சொன்னால் போதும். பாபங்கள் விலகும் என்கிறது சாஸ்த்ரம்.

இன்றைய கால கட்டத்தில் பக்தி யோகம் செய்வதற்கான ஞானம், ஶக்தி நமக்கு கிடையாது. ப்ரபத்திக்கும் முக்ய தேவை “மஹா விஶ்வாஸம்”.

ஸர்வ ஶக்தனும், பரம காருணிகனுமாகிய எம்பெருமான் என்றும் இதற்கு அடிமையானவன். தான் பெண் என்பதையும், தன் நிலைமையையும், தன்னைச் சுற்றி யிருந்த பெரியோர்களையும் தள்ளி வைத்தது த்ரௌபதியின் மஹாவிஶ்வாஸம். இத் துணை கடினமாகப் பெறும் மஹா விஶ்வாசத்தை விட மந்த்ர ஜபம் ஸுலபம். ஆனால் இது ஸாக்ஷாத்தாக பலனைத் தராது.

பகவான் கீதையில் மோக்ஷம் பெற கர்ம, ஞான, பக்தி யோகம் செய்பவன் பாதியில் விட்டானே யாகிலும் பாபமாகாது. பலன்தராமல் போகாது. ஜன்ம வாசனை தொடரச் செய்து பலனளிக்கும். வீண் போகாது என்கிறான்.

ஆக ப்ரபத்தி விஷயத்திலும் இதே போன்ற பெருமை இருப்பதை ஸாஸ்த்ரங்கள் கூறுவதைப் பெரியோர்கள் ஸ்தாபிக்கின்றனர்.

உழவுத்தொழிலில் தேர்ந்த உழவன் நல்ல விளை நிலத்தில், தேர்ந்த விதை யிட்டு வளர்த்த மரம் நல்ல பழங்களைத் தரும். விதை நேராகப் பழமாகாது. ஆனால் விதை பரிணாமத்தால் பழமாகிறது.

அது போல தேர்ந்த ஆசார்யன் ஸத் ஸிஷ்யனுக்குச் செய்யும் மந்த்ரோபதேசம் அவனுக்கு ஶ்ரத்தை உண்டாக்கிய மஹா விஶ்வாஸத்தால் மோக்ஷ பலனைப் பெறச்செய்யும். ஆக மந்த்ரத்தைத் தானே உச்சாடனம் செய்து மோக்ஷம் பெற இயலாது என்று உணர வேண்டும்.

  • இஹ அபிக்ராந்தி நாஶந– கர்ம யோகத்தில் தொடக்கம் வீணாவதில்லை.
  • இஹ விதி ப்ரத்யயாயச நபவேத் — கர்ம யோகம் நடுவில் தடைப்பட்டாலும் பாபம் ஏற்படாது.
  • இதி உக்தம் — என கீதை சொல்கிறது.
  • ப்ரபதன விஷயே சாஸ்த்ர வித்பி:யோஜிதம் — ப்ரபத்தி விஷயத்திலும்  இதேபோல் ஸாஸ்த்ரமறிந்த பெரியோர்களால் பொருத்திப் பேசப்பட்டுள்ளது.
  • தஸ்மாததர்ஹே — ஆக அந்த உபதேசத்துக்கேற்ப
  • க்ஷேத்ரே ஸுவிதித ஸமயே —- சேதனனாகிய நிலத்தில் விதைக்கும் காலத்தை நன்கறிந்த
  • தேஶிகை ஸம்ய குப்தம்—- ஆசார்யர்களால் நன்கு விதைக்கப்பட்ட
  • மந்த்ராக்யம் முக்தி பீஜம் — ப்ரபத்தி மந்த்ரமாகிய மோக்ஷ விதை
  • பரிணதி வஶத:— பக்குவமடைந்து
  • கல்பதே ஸத்பலாய– மோக்ஷமாகிய சிறந்த பலனைத்தர வல்லதாகிறது.

———————–

ந்யாஸ ப்ரோக்தோ அதிரிக்தம் தப இதி கதித ஸ்வத் வரஸ் சாஸ்ய கர்த்தா
அஹிர்புத்ந்யோ அப்யன்வவா தீத கணி திவிஷதாம் உத்தமம் குஹ்ய மேதத்
சாஷான் மோஷாய சாஸவ் ஸ்ருத இஹ து முதா பாத சங்கா குணாட்யே
தன்நிஷ்டோ ஹ்யந்ய நிஷ்டான் ப்ரபுரதி ஸயிதும் கோடி கோட்யம் சதோ அபி –9-

ந்யாஸ –பர ந்யாஸம் சரணாகதி
அதிரிக்தம்-மற்ற எல்லாவற்றாலும் உயர்ந்ததான
தப இதி-தபஸ் இது என்று
ப்ரோக்தோ –கூறப் பட்டது
அஸ்ய கர்த்தா–இத்தைச் செய்தவன்
ஸ்வத் வரஸ் –நல்ல யாகங்களைச் செய்தவன் ஆகிறான்
இதி -என்று
கதித -உரைக்கப் பட்டு இருக்கிறான்
அஹிர்புத்ந்யோ –ருத்ரனும்
யன்வவா தீத் -இதைத் தொடர்ந்து பேசினான்
ஏதத் -இந்த சரணாகதி
திவிஷதாம்–தேவர்களுடைய
உத்தமம் குஹ்யம் –உத்தமமான ரஹஸ்யமாக
அகணி –மதித்து உரைக்கப் பட்டது
அசவ்-இது
ஸாஷாத் –நேராகவே -மற்ற ஒன்றை இடையிடாமலேயே
மோஷாய –மோக்ஷத்துக்குக் காரணமாக
ஸ்ருத –வேதங்களில் கூறப்பட்டது
து -இதுக்கு விபரீதமாக
குணாட்யே-நற் குணம் வாய்ந்த
இஹ –இந்த சரணாகதி விஷயத்தில்
பாத சங்கா -விரோதத்தை சங்கிப்பது
முதா –வீண்
ஹி -ஏன் எனில்
தன் நிஷ்டோ –இந்த சரணாகதியைக் கைப் பற்றினவன்
யந்ய நிஷ்டான் –மற்ற உபாயங்களை ஸ்வீ கரித்தவர்களை
கோடி கோட்யம் சதோ அபி -கோடியிலும் கோடி பங்கைக் கொண்டு
அதி ஸயிதும் –மீறி இருக்க
ப்ரபு -சக்தி யுள்ளவன் ஆகிறான் –

பிரபத்தி சர்வாதிகாரம் -தபஸுக்களில் சிறந்ததாக ஸ்ருதி சொல்லுமே –
பிரபன்னன் சிறந்த யாகம் செய்தவனாக கருதப்படுகிறான் -குஹ்ய தமமான உபாயம்
தஸ்மாத் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அத்ரிக்தம் ஆஹு–தைத்ரியம்
சமிதி சாதனகா தீனம் யஜ்ஜானாம் .ந்யாஸம் ஆத்மனா நமஸாயோ கரோத் தேவ ஸ சவ்தவாரா –அஹிர்புத்ன்ய சம்ஹிதை
யதாத்வை மஹோபநிஷதம் தேவானாம் குஹ்யம் –தைத்ரியம்

ஓம் இத் யாத்மாநம் யுஞ்ஜீத -என்பதால் இது சர்வாதிகாரம் ஆகாதே
அநாதிகாரிகளுக்கு ப்ரணவ உச்சாரணம் கூடாதாயினும் ஆகமத்தில் விதிக்கப்பட்ட த்வய மந்த்ரத்தைக் கொண்டு
சரணாகதி பிரயோகம் சர்வாதிகாரமே யாகும்
ஸ்வ தந்திரமாக மோக்ஷம் தர வல்லதே-பக்தி யோக நிஷ்டனை விட மிகவும் உயர்ந்து -மிகுந்த கௌரவம் வாய்ந்தவன் என்றதாகும்-

ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாவதை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.

  1. ந்யாஸம் அதிரிக்தமான தபஸ். இதற்குச் சமமான அனுஷ்டானம் ஏதுமில்லை. ஒருவன் செய்த ஶரணாகதி பல யாகங்கள் செய்ததற்குச் சமம்.
  2. சமித் ஸ்தானத்தில் நம: என்ற சொல்லை வைத்துச் செய்வதாக அர்த்தம். ந்யாஸம் அனுஷ்டித்த கர்த்தா நல்ல யாகங்கள் (அஶ்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்கள்) செய்ததற்குச் சமம். இதையே “ஸ்வத்வர:” என்ற சொல் குறிக்கிறது. “செய்த வேள்வியர்” என்கிறார் ஆழ்வார்.
  3. அஹிர்புத்ஞ ஸம்ஹிதையில் சிவன் ந்யாஸத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சக்கரத்தாழ்வார் பெருமையைப் பேசுகிறார்.
  4. தேவர்களுக்கு மிக உயர்ந்த ரஹஸ்யம் இது. இந்த ஶரணாகதி நமக்கும் கிடைத்துள்ளது. இதுவே அல்ப பலனிலிருந்து மிகப் பெரிய பலனாகிய மோக்ஷம் வரை உபாயமாகிறது என வேதம் சொல்கிறது.

“முமுக்ஷு:ஶரணம் ப்ரபத்யே” என்பது வேத மந்த்ரம். ந்யாஸம் சாக்ஷாத் மோக்ஷோபாயம். பரம்பரையானதல்ல. கர்ம யோகம் செய்தால் மோக்ஷம் ஸாக்ஷாத்தாகக் கிடைக்காது. ஞான, பக்தியோகம் செய்த பின்பே மோக்ஷம். ஆனால் ஶரணாகதி செய்த ஒருவனுக்கு எம்பெருமானின் அபரிமிதமான
ஔதார்ய காருண்ய குண விஸேஷத்தால் மோக்ஷம் உறுதி யாகிறது.

கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் சொல்வதுபோல் இத்தனை உயர்ந்த மோக்ஷத்தைக் கொடுத்த பின்பும் கொடுத்தது போதாது என எண்ணுபவன் எம்பெருமான்.
ஆக மற்றைய கர்ம ஞான பக்தி யோகத்தை செய்பவரைவிட கோடி கோடி மடங்கு உயர்ந்தவன் ப்ரபன்னன். இவ்விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தன் தேவநாயக பஞ்சாஸத் ஸ்தோத்ரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
“நிஷ் கிஞ்சநத்வ தநிநா விபுதேஶயேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ் தவ பாத பத்மே
நாநா வித ப்ரதித யோக விசேஷ தந்யா:
நார்ஹந்தி தஸ்ய ஶத கோடி தமாம்ஶ கக்ஷ்யாம்” (47)

நிஷ் கிம் சனத்தவ தனிநா விபூதேஸ யேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ்த்வ பாத பத்மே
நாநா வித ப்ரதிஹ யோக விசேஷ தன்யா
ந அர்ஹந்தி தஸ்ய சத கோடி தம அம்ச கக்ஷியாம் -47-

சத் தஹர வித்யாதிகள் உபாசகர்களுக்கு -இதில் அசக்தர்களுக்கு அவர்களது ஆகிஞ்சன்யமே
பச்சையாகக் கொண்டு ப்ரபன்னராக்கி மஹா விசுவாசமும் அருளி இவர்களில்
கோடியில் ஒரு அம்சத்துக்கும் அன்றோ பக்தி யோக நிஷ்டர்களை ஆகும் படி உயர்த்தி அருளிச் செய்கிறாய்

————————–

நாநா சப்தாதி பேதாதிதி து கதயதா ஸூத்ர காரேண சம்யக்
ந்யாஸ உபாஸே விபக்தே யஜந ஹவ நவச் சப்த பேதாத பாக்தாத்
ஆக்யா ரூபாதி பேத ஸ்ருத இதர சம கிம் ஸ பின்ன அதிகார
ஸீக்ர ப்ராப்த்யாதிபி ஸ்யாஜ்ஜ குரிதி ஸ மதூபாச நாசவ் வ்வஸ்தாம் —10-

சப்தாதி பேதாத் -பரமாத்மாவின் விசேஷங்களைக் கூறும் -ஸத் -பூமா -ஜகத் காரணன் -அபஹத பாப்மா -போன்ற சொற்கள் வெவ்வேறாக இருப்பதால்
நாநா –ஸத் வித்யா தஹர வித்யா முதலான ப்ரஹ்ம வித்யைகளும் வெவ்வேறு
இதி -என்று
கதயதா –சொல்லுகின்ற
ஸூத்ர காரேண –ப்ரஹ்ம ஸூத்ர காரரால்
ந்யாஸ உபாஸே–சரணாகதியும் பக்தி யோகமும்
யஜந ஹவந வத் –யாகத்தைக் கூறும் இடத்தில் யஜனம் என்றும் ஹவனம் என்றும் தானம் என்றும் இவை போன்ற
அபாக்தாத்–ஒவபசாரிகம் அல்லாத -அதாவது வெளிப் பொருளைக் காட்டிலும் வேறான உட் பொருளைக் கொள்ளாத
ஸப்த பேதாத் -சொற்களின் வேற்றுமையால்
ஸம்யக் –நன்றாகவே -அதாவது யாதொரு சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல்
விபக்தே பிரிக்கப் பட்டு இருக்கின்றன
ஆக்யா ரூபாதி பேத –ஆக்யா ந்யாஸ வித்யா எனப் பெயரிலும்
ரூப –பரம காருணிகன் ஆகையாலே நிர்ஹேதுகமாக ரக்ஷிப்பவன் என்ற ரூபத்தாலும்
ஆதி -அங்கங்கள் ப்ரகரணங்கள் இவற்றாலும்
பேத -வேற்றுமையானது
இதர சம-மற்ற வித்யைகளுக்கு ஒப்பாகவே
ஸ்ருத –இங்கும் கூறப்படுகின்றது
கிஞ்ச -இன்னமும்
ஸீக்ர ப்ராப்த்யாதிபி –சீக்கிரம் பயன் அளிக்கும் முதலான வற்றால்
பின்ன அதிகார-அதிகாரம் வேறு பட்டதகாக
ஸ்யாத் –இருக்கலாம்
இதிச–இவ்விதமே
மதூபாச நாதள –மது வித்யை முதலான இடத்திலும்
வ்யவஸ்தாம் —நிபந்தனையை
ஜகு–சொன்னார்கள் –

பக்தி பிரபத்தி -இரண்டும் மோக்ஷ உபாயங்கள் –
பிரபத்திக்கு -பக்திக்கு அங்கமாகவும் -சாஷாத் உபாயமாகவும் -இரண்டு ஆகாரங்கள் உண்டே
பக்திக்கு அங்கங்கள் -வர்ணாஸ்ரம கர்ம ஞான யோகங்கள்
பிரபதிக்கு அங்கமாக ஆநு கூல்ய சங்கல்பம் -கார்ப்பண்யம் -மஹா விசுவாசம் போன்றவைகள் உண்டே –
பக்திக்கும் பிரபத்திக்கும் தேவையானவைகளை வேறே வேறே -மோக்ஷம் அடையும் கால விளம்பத்திலும் வாசி உண்டே –
சர்வ லோக சரண்யன் -ஸர்வஸ்ய சரணம் ஸூஹ்ருத் –
சரணாகதி -ஆறாவது அங்கம் -பக்திக்கு அஷ்டாங்கங்களில் சமாதி எட்டாவது அங்கம் போலவே –
அநு கூல்ய சங்கல்பமே ஒரு அங்கம் -செய்ய உறுதி கொண்டாலே செய்து முடிப்போம் -பிராயச்சித்த பிரபத்தி -என்பது அங்கங்களில் பிரபத்தி
பண்ணிய பின்பு குறைகள் வந்தால் போக்கிக் கொள்ள என்பர் -பிரபத்தி செய்த அதிகாரி குற்றம் தானாகவே செய்ய மாட்டான்
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பதால் இவனை அறியாமல் செய்ய நேர்ந்தால் -அதற்காக இந்த பிராயச்சித்த பிரபத்தி –
ப்ரஹ்மாஸ்திரம் போலே -மீண்டும் ஒரே பலனுக்காக பண்ணினால் தான் -குறை வரும் –

ப்ரஹ்ம ஸூத்ரத்தில் -ஸப்தாதி பேத அதிகரணத்தில் –நாநா ஸப்தாதி பேதாத் -ஸூத்ரம் உண்டே
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாமே சேர்ந்து ஒரே வித்யையா வெவ்வேறா என்கிற சங்கை வர அத்தை நீக்குகிறது –
ஒரே பொருளைக் கூறும் பர்யாய பதங்கள்
வேத உபாஸீத போன்ற பதங்களால் விதிக்கப்பட்ட பொருள் ஒன்றே யாகும்
பர்யாய பதங்களாயினும் உபாசிக்கப்பட வேண்டிய ப்ரஹ்ம குணங்கள் -அபஹத பாப்மத்வாதி குணங்கள் -காரணத்வம்
போன்றவை வெவ்வேறே வானபடியால் வித்யைகளும் வெவ்வேறெவே
விசேஷணம் வேறுபாட்டால் விசேஷ்யமும் வேறுபாடும் என்கிற நியாயத்தால் –
கீதையிலும் பக்தி யோகத்தை பஜஸ்வ மாம் என்றும் ப்ரபத்தியை சரணம் வ்ரஜ என்று விதித்து உள்ளானே
பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மாதிகள் -பிரபத்திக்குக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் அங்கங்கள் என்ற வாசியும் உண்டே
ஆகவே இந்த ஸூத்ரம் பக்தியையும் ப்ரபத்தியையும் கூறுவதாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ பாஷ்யத்தில் பிரபத்தியை விளக்க வில்லையே –

ப்ரபத்தி தனிப்பட்ட உபாயமாவதைப் பற்றிக் கூறும் ஶ்லோகம் இது. இது ஸ்ரீபாஷ்ய விஷயமான ஶ்லோகம். ஞான ஶப்தாதி பேதாதி கரணத்திலிருந்து ஸ்வாமி விஷயங்களைக் காட்டி யுள்ளார்.
எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் இரண்டிலும் பக்தி யோகமே ப்ராதான்யமாய்ப் பேசப் படுகின்றன. ந்யாஸம் பற்றிய விவரணமில்லையே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சூத்ரகாரராகிய வ்யாசர் இதற்குச் சமாதானம் சொல்கிறார்
“நாநா ஶப்தாதி பேதாத்” என்பது சூத்ரம். வேதத்தில் யாகம், ஹோமம், தானம் இவை பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக அஶ்வமேதம், ஸோம யாகம் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனி தேவதை, ரூபம், த்ரவ்யம் உள்ளன. ஹோமம் என்றால் அந்த தேவதைக்கு அக்னி மூலம் நெய் ஆஹூதி செய்ய வேண்டும். எனதல்ல என்ற எண்ணத்துடன் பிறருக்கு ஸமர்ப்பணம் செய்வதில் தானம் பூர்த்தியாகும்.
ஆக இவை ஒவ்வொன்றுக்கும் அந்த வினையைச் (அனுஷ்டானத்தை)
செய்யும் போது ஶப்தங்கள் வேறுபடுகின்றன. ‘யஜேத்’ என்பது யாகத்துக்கும், ‘ஜுஹ்யாத்’ என்பது ஹோமத்துக்கும், ‘தத்யாத்’ என்பது தானத்துக்கும் ஶப்தங்களாகின்றன. ஶப்தத்தையிட்டு பலன் கிடைக்கிறது.

ஸந்த்யாவந்தனம் என்பது அர்க்யம், காயத்ரி, உபஸ்தானம் அடங்கிய ஒரே அனுஷ்டானம். அதேபோல திருவாராதனம் என்பது மந்த்ராசனம், திருமஞ்சனம், அலங்காரம், ஸமர்ப்பணம், நிவேதனம் அடங்கிய ஒரே அனுஷ்டானம்.பக்தி யோகம் செய்பவன் 32 ப்ரும்ஹ வித்தையில் ஏதாவது ஒன்றைப் பற்றி த்யானம் செய்யலாம்.

மது வித்யா, சாண்டில்ய வித்யா, தகர வித்யா என்பன போன்ற 32 வித்யைகளில் 32 வதாக “ந்யாஸ வித்யை” சொல்லப்படுகிறது. மேற் சொன்ன வித்யைகளில் ரூபம், குணம் வேறு பட்டாலும் ஶப்த வேறுபாடில்லை. உபாஸனம் (த்யானம்/வேதனம்) தான் செய்ய வேண்டும். ஶரணாகதியில் “ஓமித் யாத்மீய உஞ்சீத்” என விதிக்கிற ஶப்தம் வித்யாசமாயுள்ளது. யாகத்தில் ஞான பாகமும், ஹோமத்தில் அனுஷ்டானமும் முக்யமாவது போல் “எனதல்ல” என்ற த்யாகம் எண்ணம் வந்தால்தான் தானம் பூர்த்தியாகும். இந்த ந்யாஸ வித்யைக்கு காருண்ய குணவானாகிய பகவான் ரூபமாயிருந்து கோரின காலத்தில் பலனைத் தருகிறான்.

பக்தியோகம் செய்ய முடியாமையே இதற்கு முக்ய தகுதி. 15 விதமான அதிகாரி (தகுதி) பேதம் ந்யாஸத்துக்குச் சொல்லப் பட்டுள்ளது. மது வித்யை செய்பவன் சூர்யனை உபாஸித்து தேவ லோகத்தில் அஷ்ட வஸுக்களில் ஒருவராக 10யுகங்களிருந்து பின் மோக்ஷமடைவான் என்று சொல்லப்படுகிறது. தகர வித்யா நிஷ்டனுக்கு இதைவிட சீக்ர மோக்ஷம் என்கிறது.
ஆக ந்யாஸம் — உபாஸனம் இரண்டும் வேறு. இரண்டுக்கும் ஸப்தம் ‘ரூபம், பலன், தகுதி வேறானவை.

கீதா பாஷ்யத்தில் பக்திக்கு ப்ரபத்தி ஒரு அங்கம் என்று குறிப்பிட்டாலும், ப்ரபத்தி ஸ்வதந்த்ரமாக மோக்ஷம் தர வல்லது. ஸ்ரீபாஷ்யகாரர் கத்யத்தில் ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாகும் என்று வெளிப்படையாகவே விளக்கி யுள்ளார்.

—————–

யத் கிஞ்சித் ரக்ஷணீயம் ததவந நிபுணே ந்யஸ்தோ அகிஞ்ச நஸ்ய
ப்ரஸ்பஷ்டம் லோக த்ருஷ்ட்யா அப்யவகமித இஹ ப்ரார்த்தநாத் யங்க யோக
தஸ்மாத் கர்மாங்க கத்வம் வ்யபநயதி பரா பேஷணாபாவ வாத
சாங்கே த்வஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத ஷட்விதத் வோபசார–11-

யத் கிஞ்சித் –யாது ஒரு வஸ்து
ரக்ஷணீயம் –ரஷிக்கத் தக்கதோ
தத் -அதை
அவந நிபுணே -ரக்ஷிக்க சக்தி யுள்ளவன் இடத்தில்
ந்யஸ்தோ -அடைக்கலமாய்க் கொடுக்கின்ற
அகிஞ்ச நஸ்ய–ஏழைக்கு
ப்ரார்த்தநாதி -பிரார்த்தனை முதலான
அங்க -அங்கங்களின்
யோக -சேர்க்கை
இஹ–இந்த சரணாகதி விஷயத்தில்
லோக த்ருஷ்ட்யா –உலக வழக்கத்தாலும்
அவகமித–அறிவிக்கப் பட்டது
தஸ்மாத்–ஆதலால்
பரா பேஷணாபாவ வாத-மற்ற ஒன்றை அபேக்ஷிப்பது இல்லை என்று கூறுவது
கர்மாங்க கத்வம் –கர்மங்களை அங்கமாகக் கொண்டு இருப்பதை
வ்யபநயதி –விலக்குகின்றது
து -ஆனால்
சாங்கே-அங்கங்களோடு கூடின ப்ரபத்தியில்
அஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத –அஷ்டாங்க யோகம் என்று சொல்லுவது போலே
ஷட்விதத் வோபசார–ஆறு விதம் என்று கூறியது
ஒவபசாரிகம் -அதாவது கௌவணப் பொருளாகும் –

தத் ஏக உபாய தாயாஞ்ச பிரபத்தி –
பிரபத்தே க்வசித் அப் யேவம் பர அபேஷா ந வித்யதே
வர்ணாஸ்ரம தர்மங்களை அபேக்ஷிப்பது இல்லை என்றவாறு
ஆனால் ஷட் விதா சரணாகதி -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -அங்கங்கள் ஐந்தும் அங்கியான ப்ரபத்தியும் சேர்த்துச் சொன்னவாறு
அஷ்டாங்க யோகத்திலும் யமம் -நியமம் -ஆஸனம் -ப்ராணாயாமம் -ப்ரத்யாஹாரம் -த்யானம் -தாரணா ஆகிய
ஏழு அங்கங்களுடன் சேர்த்து சமாதி என்கிற அங்கியையும் சேர்த்தே சொன்னால் போலவே இங்கும் –
நியாஸ பஞ்சாங்க ஸம் யுத -என்றும் உண்டே
ஐந்து அங்கங்களாவன
1-ஆனுகூல்ய சங்கல்பம்
2-பிரதிகூல்ய வர்ஜனம்
3-ரஷித்தே தீருவான் என்கிற மஹா விச்வாஸம்
4-நீயே ரக்ஷிக்க வேணும் என்கிற பிரார்த்தனை
5-அநந்ய கதித்வம் –

ப்ரபத்திக்கு அங்கங்களுடைமை பற்றி விளக்கும் ஶ்லோகம் இது.
சாதாரண லௌகீக பலன்களைப் பெறவே பல ப்ரார்த்தனைகளை முன் வைக்கும் போது மிக உயர்ந்த மோக்ஷ பலனைத் தர வல்ல ப்ரபத்திக்கு அங்கங்கள் அவஶ்யம் என்கிறார் ஸ்வாமி.
பக்தி யோகத்துக்கு ஶரணாகதி அங்கமாயிருக்கும் என்று கீதா பாஷ்யத்தில் சொல்கிறார் உடையவர் .த்யானம் நல்ல விதமாய் நடைபெற ஶரணாகதி அங்கமாகிறது இது “அங்க ஶரணாகதி” எனப்படும். சகல பலன்களையும் தரவல்லது ஶரணாகதி என்கிறார் உடையவர் கத்யத்ரயத்தில். வேதம், இதிகாச புராணங்கள், ப்ரும்ஹ சூத்ரம், பகவத்கீதை ஆகியவற்றுள் சொல்லப்பட்டுள்ள தர்மமே ஶரணாகதி.

இதற்கு 6 அங்கங்கள் உள்ளன என்று ஆகம க்ரந்தங்கள் கூறுகின்றன.
1. ஆனுகூல்ய ஸங்கல்பம்.
2. ப்ராதிகூல்ய வர்ஜனம்.
3. மஹா விஸ்வாஸம்.
4. கோப்த்ருத்வ வர்ணம் (கதியில்லாத் தன்மை)
5. கார்பண்யம் (எம்பெருமானே ரக்ஷகன் என வரித்தல்)
இந்த ஐந்தையும் உறுப்பாகக் கொண்டு ஆத்மாவை ஸமர்ப்பித்தால் அது “அங்கி”யாகிறது. த்ரிஜடை, விபீஷண ஶரணாகதிகள் இந்த ஆறு அங்கங்களுடன் கூடிய பூர்ண ஶரணாகதி என்கிறார் ஸ்வாமி.
அங்கங்கள் பற்றி எழும்3சந்தேகங்களுக்கு ஸ்வாமி ஸமாதானம் சொல்கிறார்.
1. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையா? ஆத்மாவை ஒப்படைக்கும் பர ஸமர்ப்பணத்திற்கு அங்கங்கள் அவஶ்யம்.
2. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையில்லை என்கிறார்களே?
ஸாஸ்த்ர ரீதியாகவும் ப்ரபத்திக்கு அங்கங்கள் தேவை. இவை இருவகைப்படும். அந்தரங்கம் என்பது உள்ளிருந்து செய்யும் உபகாரம் பஹிரங்கம் என்பது யக்ஞம், தானம், தபஸ் ஆகியன. இவை வெளி அங்கங்கள் இத்தகைய வெளி அங்கங்கள் பக்தியோகத்துக்கு உள்ளவை. ப்ரபத்திக்கு அந்தரங்கம் மட்டுமே.

ஆத்மா, அதன் ரக்ஷணம், அதன் பலன் மூன்றையும் ஒப்படைத்தல் அங்கியாகிறது.இதனையே ஆறு விதம் கொண்ட ஶரணாகதி என்று ஆசார்யர்கள் விளக்கி யுள்ளனர்.

———————

பஞ்சாப் யங்காந்யபிஜ்ஞா ப்ரணிஜகுரவிநா பாவ பாஞ்ஜி ப்ரபத்தே
கைஸ்சித் சம்பா விதத்வம் யதிஹ நிகதிதம் தத் ப்ரபத்த் யுத்தரம் ஸ்யாத்
அங்கேஷ் வங்கித்வ வாத பல கதநமிஹ த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ
ப்ராஸஸ் த்யம் தத்ர தத்ர ப்ரணிதததி தத சர்வ வாக்யைக கண்ட்யம் –12-

யபிஜ்ஞா -வித்வான்கள்
பஞ்சாப் யங்காந்–ஆனுகூல்யாதி ஐந்து அங்கங்களையும்
ப்ரபத்தே–ப்ரபத்திக்கு
அவிநா பாவ பாஞ்ஜி –விட்டுப் பிரியாமல் இருப்பதாக -அவஸ்யம் இருக்க வேண்டியவைகளாக
ப்ரணிஜகுர் -கூறினார்கள்
யதிஹ-யாது ஓன்று இந்த ஐந்து அங்கங்களுக்குள்
கைஸ்சித் –சில அங்கங்களால்
சம்பா விதத்வம் –தன்னடையாகவே நேர்ந்தமை -அதாவது அவஸ்யம் இல்லாமல் தானாகவே நேரக் கூடியவையாய் இருக்கை
நிகதிதம் -சொல்லப் பட்டதோ
தத் –அது
ப்ரபத்த் யுத்தரம் -பிரபத்திக்குப் பின்
ஸ்யாத்-இருக்கக் கூடும்
இஹ -இந்த சரணாகதியில்
அங்கேஷு –அங்கங்களில் சிலவற்றை
வங்கித்வ வாத–அங்கியாகக் கூறியதும்
பல கதநம் -சில அங்கங்களாலே மோக்ஷம் பலம் என்பதையும்
த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ–ஐந்தில் இரண்டு மூன்று மாத்ரம் கூறியதும்
தத்ர தத்ர-அந்த அந்த அங்கங்களில்
ப்ராஸஸ் த்யம் –மேன்மையை பெருமையை
ப்ரணிதததி –பொருளாகக் கொண்டன
தத –ஆதலால்
சர்வ வாக்ய ஏக கண்ட்யம் –எல்லா வாக்யங்களுக்கும் ஒற்றுமை உண்டு

அங்கங்கள்,அங்கி இவற்றில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றின் தீர்வும் இதிலடங்கும்.

முதல் சந்தேகம் – எல்லா அங்கங்களுடன் ப்ரபத்தி அனுஷ்ட்டிக்க வேண்டுமா அல்லது சிலதை விடலாமா?என்பது.
கட்டாயம் ப்ரபத்தி ஆறு அங்கங்களுடன் அனுஷ்ட்டிக்க வேணும் என ஆசார்யர்கள் சொல்லியுள்ளனர்.
இரண்டாம் சந்தேகம் – எல்லா அங்கங்களும் ஸம்பவிக்குமா?என்பது. ப்ரபத்தி சமயத்தில் எல்லாம் ஸம்பவிக்கலாம் அல்லது அதன்பிறகும் ஸம்பவிக்கலாம்.
அங்கங்களின் நிறை -குறை ப்ரபத்தியின் பலனை பாதிக்காது ஆனால் நம் ஸ்வரூபத்துக்கேற்ப இவைகளை கைக் கொள்ளுதல் அவஶ்யம்.
மூன்றாம் சந்தேகம் – அங்கங்களையே அங்கியாகச் சொல்வதன் தாத்பர்யம் என்ன?”விஸ்வாஸ:ஶரணாகதி”– என்கிறார் பாஷ்யகாரர். “ப்ரார்த்தனா ஶரணாகதி” –போன்ற வசனங்கள் அந்த அங்கங்களின் முக்யத்வத்தையும், பெருமையையும் தெரிவிக்கும் பொருட்டு ஏற்பட்டவை.”கருடோத்ஸவமே ப்ரும்ஹோத்ஸவம்”–என்பது போல ப்ராதன்யத்தை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.ஆக ஐந்து அங்கங்களுடன் செய்யும் போது தான் ப்ரபத்தியாகிய அங்கி நிறைவேறுகிறது என ப்ரபத்தி ஶாஸ்த்ரம் நன்கறிந்த பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர்.
———-

ரஷாபேஷா ஸ்வசாஹ்ய ப்ரணயவதி பர ந்யாஸ ஆஜ்ஞாதி தஷே
த்ருஷ்டா நாத்ர பிரபத்தி வ்யவஹ்ருதிரிஹ தந் மேளநே லக்ஷணம் ஸ்யாத்
கேஹாகத்யாதி மாத்ரே நிபதது சரணா கத்ய பிக்யோ பசாராத்
யத்வா அநேகார்த்த பாவாத் பவதி ஹி விவித பாலநீ யத்வ ஹேது –13-

ஸ்வ–தனக்கு
சாஹ்ய –ஸஹாயம் செய்ய வேணும் என்று
ப்ரணயவதி –யாசிப்பவன் இடத்தில்
ரஷா அபேஷா -ரக்ஷிக்க வேணும் என்று வேண்டுவது இருக்கிறது
ஆஜ்ஞாதி தஷே–ஏவல் செய்யும் ஊழியக் காரனிடம்
பர ந்யாஸ -பர ந்யாஸம் என்ற சொல் இருக்கிறது
அத்ர–இவ் விரண்டிலும் தனித் தனியே
பிரபத்தி வ்யவஹ்ருதி–பிரபத்தி என்ற சொல்
ந த்ருஷ்டா –காணப் பட வில்லை
இஹ -இப் பிரபத்தி விஷயத்தில்
தந் மேளநேம் -அந்த ரஷா அபேக்ஷை -பர ந்யாஸம் இவ் விரண்டின் சேர்க்கை
லக்ஷணம் ஸ்யாத்-இலஷணையால் இருக்கலாம்
சரணா கத்ய பிக்யோ -சரணாகதி என்ற பெயர்
கேஹாகத்யாதி மாத்ரே –வீட்டுக்கு வருவது முதலான பொருளில் மாத்ரம்
உபசாராத்-முக்யப் பொருள் அல்லாத இலக்ஷணைப் பொருளாகவே
நிபதது –ஏற்படக் கூடும்
யத்வா –அல்லது
அநேகார்த்த பாவாத் –சரணம் என்ற சொல்லுக்கு அநேகப் பொருள் உண்டு ஆகையாலே
பாலநீ யத்வ ஹேது-ரக்ஷிக்கப்பட வேண்டியதற்குக் காரணம்
பவதி ஹி விவித -பலவிதமாக இருக்கின்றது –

அநந்யார்ஹம் முக்கியம் –ந்யாஸம் -சரணாகதி -மஹா விச்வாஸம்

சரணம் -வீடு ரக்ஷிப்பவன்
சரணாலயம் -பர ந்யாஸம் செய்தவனை ரக்ஷிக்க வேண்டியது போலவே
வீடு என்ற பொருளிலும் வீட்டுக்கு வந்தவரை ரக்ஷிக்க வேண்டும் என்றவாறு

ப்ரபத்தியின் லக்ஷணத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்தும் ஶ்லோகம் இது.

விளையாட்டு ப்ராயத்திலிருக்கும் பாலகன் உபநயனம் ஆனபின்
காயத்ரி மந்த்ரோபதேஸம், சந்த்யாவந்தனம் முதலான அனுஷ்டானங்களால் தேஜஸ்வி யாகிறான். இதேபோல ஸமாஶ்ரயேணம், பரந்யாஸம் என்னும் அனுஷ்டானங்களும் மிகுந்த கவுரவம் உடையன. இந்த அனுஷ்டானங்கள் எம்பெருமானுக்கு தாஸன் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
ஜன்மாந்த்ர ஸுஹ்ருதத்தினால் ஆசார்ய ஸம்பந்தம் ஏற்பட்டு இந்த அனுஷ்டானங்கள் ப்ராப்தமாகின்றன. இது சாதாரண நிகழ்வல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் ஆத்மாவையும் அதனைக் காப்பாற்றும் பொறுப்பையும் எம்பெருமானிடம் ஒப்படைப்பதே ஶரணாகதி என்பதாகும்.ஆத்மாவைக் காப்பாற்றுதல் என்பதற்கு அடுத்த ஜென்மம் ஏற்படாதவாறு முடிவு செய்தல் என்று அர்த்தம்.
இதில் ப்ரார்த்தனை+ஆத்ம ரக்ஷணம் இரண்டும் அடங்கும். இவை தனித்தனியே ஶரணாகதி யாகாது. பரஸ்பர உபகாரம் தானே நட்பின் லக்ஷணம். பொறுப்பை நாம் முழுதுமாய் விடவேண்டும்.
“இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போல”– என்ற த்ரௌபதி ஶரணாகதி வேறு கதியில்லாத, கைமுதலில்லாத ஶரணாகதி. ப்ரார்த்தனையை முன்னிட்டுச் செய்வது.
“ஶரணம்”– என்றால் உபாயம், ரக்ஷகன், வீடு என்று பொருள்.
“ஆகதி”– என்றால் வருதல்,அடைதல் என்று பொருள்.
அர்ச்சையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் செல்வதே பர ந்யாசம் என்று சொல்வது உபசார வழக்காகும்.
“பத்தாஞ்சலி புடம்”–அஞ்சலியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
“தீனம்” –தளர்ச்சியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
“யாசந்தம்” –மிடுக்குடன் வந்து ப்ரார்த்திப்பவனையும் ரக்ஷிப்பேன்.
“ஶரணாகதம்” –என்னிடத்துக்கு வந்தவனை ரக்ஷிப்பேன்.
“நஹன் யாது ஸ்யாது ஶத்ரும் பரந்தம்”— அழிக்கும் குணமுள்ள
ஶத்ருவாயினும் காப்பேன் – என்று வால்மீகி ராமபிரானின் திருவுள்ளத்தைக் காட்டுகிறார்.இதனை உதாரணங்களுடன் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் விஸ்தரித்துள்ளார்.
ஆக எப்படிப்பட்ட ஶரணாகதிக்கும் ரக்ஷணம் உண்டு. எத் திசையும் உழன்றோடிய காகம் ராமன் திருவடி அடைந்ததும், பெண் புறாவைப் பிடித்த வேடன் ஆண் புறா இருந்த மரத்தை அடைந்ததும் முழுமையான ஶரணாகதி யாகாவிடினும் காப்பவனின் இடத்தை அடைந்ததே ஶரணாகதியாகிறது. இதை உபசார வழக்கமாகக் கொள்ளலாம்.

மோக்ஷத்துக்கான ஶரணாகதி என்பது ஶாஸ்த்ர ரீதியாக ப்ரார்த்தித்து ஆத்ம ரக்ஷணப் பொறுப்பை எம்பெருமானிடம் ஸமர்ப்பித்தலே ஆகும்.

——————

ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம நுகதம் யாவதர்த்தம் முமுஷோ
தத்வ ஜ்ஞான நாத்மகம் தத் ப்ரதமமத விதே ஸ்யாதுபாயே ஸமேதம்
கைங்கர்யாக்யே புமர்த்தே அப்யநுஷஜதி ததப்யர்த்தநா ஹேது பாவாத்
ஸ்வாபீஷ்டா நந்ய ஸாத்யாவதிரிஹ து பர ந்யாஸ பாகோ அங்கி பூத –14-

முமுஷோ–முமுஷுவுக்கு
ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம் -தன்னையும் தன்னைச் சேர்ந்த பொருள்களையும் பரமாத்மாவிடம் ஒப்படைப்பது
யாவதர்த்தம் -எவ்வளவு பொருள்கள் உண்டோ அவ்வளவிலும்
அநுகதம் -தொடர்ந்து நிற்கும்
தத் -இந்த கார்யமானது
ப்ரதமம் -முதன் முதலில்
விதே-உபாயத்தை விதிக்கின்ற வசந ஸ்வ பாவத்தாலே
உபாயே–மோக்ஷ உபாயத்திலே
ஸமேதம்-சேர்ந்ததாக
ஸ்யாத் -இருக்கும்
ததபி -மேலும்
யர்த்தநா ஹேது பாவாத்–முமுஷுவால் செய்யப் பட்ட பிரார்த்தனையின் காரணமாக
கைங்கர்யாக்யே-பகவத் கைங்கர்யம் என்ற
புமர்த்தே அபி -புருஷார்த்தத்திலும் -பலனிலும்
யநுஷஜதி –தொடர்கின்றது
இஹ -இந்த பிரபத்தி விஷயத்தில்
அங்கி பூத –அங்கியாக இருக்கின்ற
பர ந்யாஸ பாகோ -பர ந்யாஸம் என்ற அம்சம்
ஸ்வாபீஷ்டா நந்யஸா த்யாவதி–தன்னால் விரும்பப்பட்டது -மற்ற ஒன்றால் சாதிக்க முடியாதது எவ்வளவோ அவ்வளவில் நிற்கும் –

ஸ்வரூப சமர்ப்பணம் -யானும் நீ என் உடைமையும் நீயே – பர சமர்ப்பணம் பல சமர்ப்பணம் –ப்ரீதி காரித கைங்கர்யமே -பரம புருஷார்த்தம் என்ற நினைவு –
நம் புத்திரர் பார்யையாதிகள் உடன் சேர்ந்தே சமர்ப்பணமோ என்னில் இவர்களும் நம் சொத்து இல்லையே -எல்லாம் அவனது அன்றோ

கீழ் எல்லாம் புபுஷு முமுஷு இருவருக்கும் பொதுவான பிரபத்தி
இதில் முமுஷு -அதிலும் அநந்யார்ஹ சேஷ பூதரானவருக்கு
யானும் நீயே என்னுடைமையும் நீயே என்று இருப்பவர்களுக்கு
தத்வ ஞானம் ஏற்பட்டு அதனாலேயே இந்த எண்ணம் உபாயத்திலும் புருஷார்த்தத்திலும் சேர்ந்தே இருக்குமே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அவனது ஆனந்தத்துக்காகவே இருப்பார்களே

ஸேஷத்வ ஞானம் எல்லா நிலைகளிலும் தொடர வேண்டியதின் அவ ஶ்யத்தை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.
ஒருவன் ப்ரபத்திக்கு முன்பும், ப்ரபத்தி அனுஷ்டிக்கும் போதும்,
ப்ரபத்திக்குப் பின்னும் எம்பெருமானுக்கு ஸேஷன் என்ற ஞானத்துடனிருக்க வேணும். இந்த ஞானம் மனதில் தோன்றும் ஒரு சிந்தனை.
ஆத்ம ஸ்வரூபம்+ஆத்மீயம் (தன்னைச் சேர்ந்த எல்லாவற்றையும்) எம்பெருமானுக்கு உடைமையாக்கி ஒப்படைப்பதை “யானும் நீயே என்னுடைமையும் நீயே” என்கிறார் நம்மாழ்வார்.
தாஸன் என்று நினைப்பது முதல் நிலை. இந்த ஞானத்துடன் ஆத்மாவை ஒப்படைக்கவேண்டும். இந்த தத்வ ஞானம் வந்த காலத்திலும், உபாய அனுஷ்டான காலத்திலும், பல (phala) அனுபவ காலத்திலும் ஆத்மா எம்பெருமானுக்கு தாஸன் என்ற எண்ணத்துடன் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்க வேணும். உபாய காலத்தில் மட்டுமே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதுவே பரந்யாஸம்.

“அஸேஷ ஸேஷதைக ரதிரூப” என்று கத்யத்தில் இதனை உடையவர் குறிப்பிடுகிறார். இதுவே அங்கியான பர ந்யாஸம் எனப்படுகிறது.

—————–

ந்யாஸா தேசேஷூ தர்ம த்யஜந வசநதோ அகிஞ்ச நாதிக்ரி யோக்தா
கார்ப்பண்யம் வா அங்க முக்தம் பஜநவதிதரா பேஷணம் வா அப்யபோடம்
துஸ் சா தேச் சோத்யமவ் வா க்வசிது பசமிதா வந்ய சம்மேளந வா
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்தஸ் ததிஹ ந விஹதோ தர்ம ஆஜ்ஞாதி சித்த –15-

ந்யாஸா தேசேஷூ –சரணாகதியை விதிக்கும் இடங்களில்
தர்ம த்யஜந வசநதோ –ஸர்வ தர்மங்களை விடச் சொல்லி இருப்பதால்
அகிஞ்ச நாதிக்ரியா -வேறு வழி இல்லாதவன் இதுக்கு அதிகாரி என்பது
யுக்தா-சொல்லப்பட்டது
வா -அல்லது
கார்ப்பண்யம் –கார்ப்பண்யம் என்ற அதாவது வேறு போக்கற்று இருக்கும் நிலையை நினைப்பது –
கர்வம் இல்லாமை முதலான பகவத் கிருபை தன் மேல் உண்டாகும் படி செய்கிற கார்யம்
அங்க முக்தம் -அங்கமாகச் சொல்லப்பட்டது
வா -அல்லது
பஜநவத் -பக்தி யோகத்தைப் போலே
இதரா பேஷணம் –வர்ணாஸ்ரம தர்மாதிகளை அங்கமாக அபேக்ஷித்து இருத்தல்
அப்யபோடம்-விலக்கப் பட்டது
வா -அல்லது
க்வசித் -பேராசை கொண்டு -அஸக்யமான விஷயத்தில் முயலுகின்றவன் இடத்தில்
துஸ்சாதேச் சோத்யமவ் –அஸக்யமானத்தில் ஆசையும் முயற்சியும்
உப சமிதவ்–தடுக்கப்பட்டன
வா -அல்லது
அந்ய சம்மேளந –பிரபத்திக்கு அங்கம் அல்லாதவற்றை பிரபத்திற்கு கைக்கொண்டால்
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய -நம்பிக்கை குறைந்து மற்றவற்றைக் கூட்டினால் தானே விலகிவிடும் என்பது
உக்தஸ் –உரைக்கப் பட்டது
தத் -தர்மங்களை விடுவது பிரபத்திக்கு அங்கம் இல்லாததாலும்
தர்மங்களை பிரபத்திக்கு அங்கமாகக் கூறாமையாலும்
ஆஜ்ஞாதி சித்த –ஆஜ்ஜையாலும் அநுஜ்ஜை யாலும் ஏற்பட்ட
தர்ம -தர்மம்
இஹ ந விஹதோ –இந்தப் பிரபத்தியில் விலக்கப்பட வில்லை –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -வர்ணாஸ்ரம தர்மங்களை விடக் கூடாதே -பக்தியில் அசக்தனுக்கு இது -என்றவாறு
இதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

அகிஞ்சனனாய் -வேறு உபாயந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தன் இல்லாமல் இருக்க வேண்டுமே
பரித்யஜ்ய -கார்ப்பண்யம் சொல்லப்பட்டது
கார்ப்பண்யமாவது -ஆகிஞ்சனயாதிகளுடைய அனுசந்தானமாதல்
அது அடியாக வந்த கர்வ ஹானியாதல்
கிருபா ஜனக க்ருபண வ்ருத்தியாதல்
கைங்கர்ய புத்தியாக வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்யவே வேண்டும்

மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னம் அதில் ஆசை தனை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயன் அஸ்திரம் போல் வெள்கி நிற்கும்

நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின்றனிமை துணையாக என் தன் பாதம்
பூண்டால் யுன் பிழைகள் எல்லாம் பொறுப்பேன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழுவோமே

எல்லாவற்றையும் செய்ய வல்ல எம்பெருமானிடம் ஆத்ம ரக்ஷணமப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவனிடம் எல்லா தர்மங்களையும் விட்டுவிடும்படி சரம ஶ்லோகம் கூறுவதன் விளக்கமே இந்த ஶ்லோகம்.
“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” – என்ற வசனம் 6 விதமான அர்த்தங்களை அளிக்கிறது என்கிறார் ஸ்வாமி.

முதல் அர்த்தம்– அகிஞ்சனாதிக்ரியோக்தா– கர்ம, ஞான, பக்தி யோக தர்மங்களைச் செய்ய முடியாத அகிஞ்சனன்.

2ம் அர்த்தம் – கார்பண்யம் வாங்கமுக்தம்–கைமுதலில்லாத் தன்மையை அநுஸந்தித்துக் கொண்டு எம்பெருமானின் கருணையை ப்ரார்த்திப்பது.

3ம் அர்த்தம் – பஜனவத– பக்தி யோகத்துக்குள்ள தானம்,தபஸ் போன்ற வெளி அங் கங்கள் ப்ரபத்திக்கு வேண்டாம்.

4ம் அர்த்தம் -துஸ்ஸாத் இச்சாத்– செய்ய முடியாத பக்தி யோகத்தைச் செய்ய முற்படும் ஆசையை விடவேண்டும்

5ம் அர்த்தம் – உத்யமௌ–செய்ய முடியாத பக்தி யோகத்தைச் செய்யும் ப்ரயத்னத்தையும் அடியோடு விட்டுவிட வேணும்.

6ம் அர்த்தம் – ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்த—ப்ரபத்தி செய்யும் போது அதில் நம்பிக்கை குறைந்து வேறு உபாயத்தை நாடினால் ப்ரஹமாஸ்த்ரத்துக்கு வேறு அஸ்த்ர ப்ரயோகம் ஒவ்வாதது போல ப்ரபத்தியும் செயலிழக்கும்.

ஆக மேற்சொன்ன 6அர்த்தங்களையும் மனதிலிருத்தி ப்ரபத்திக்கு முன்னும் பின்னும் செய்யவேண்டிய ஆக்ஞா, அனுக்ஞா கைங்கர்யங்களைச் செய்தல் வேண்டும்.

இதற்கான அதிகாரஸங்க்ரஹ பாசுரம் –

“மூண்டாலும் அரியதனில் முயல் வேண்டா முன்னம் அதில் ஆசைதனை விடுகை திண்மை*
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு* வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி நிற்கும்*
நீண்டாகும் நிறை மதியோர் நெறியில் கூடா* நின் தனிமை துணையாக எந்தன் பாதம் பூண்டால்*
உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே” 
(அதிகார ஸங் 47)
————–

ஆதேஷ்டும் ஸ்வ ப்ரபத்திம் தத் அநு குண குணாத் யந்விதம் ஸ்வம் முகுந்தோ
மாமித் யுகத்வைக சப்தம் வததி ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் ப்ராப்ய ப்ராப கைக்யம் சகல பல ததாம் ந்யாஸதோ அந்யாந பேஷாம்
ப்ராதான் யாத்யம் ஸ கிஞ்சித் ப்ரதயதி ஸ பரம் ஸ்ரீ ஸகே முக்த்யுபாயே –16-

முகுந்த-ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்வ ப்ரபத்திம்-தன்னிடம் சரண் அடைவதை
ஆதேஷ்டும் -விதிப்பதற்காக
தத் அநு குண -அதற்கு ஏற்ற
குணாத் யந்விதம் -நற் குணங்கள் முதலியவற்றோடு கூடி இருக்கிற
ஸ்வம் -தன்னை
மாம் இதி -என்னை என்று
யுக்த்வா -சொல்லி
ஏக சப்தம் வததி -ஒருவனை என்ற சொல்லையும் பேசுகிறான்
ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் -ஆதலால்
விதிக்குத் தக்க பொருள் கொள்ள வேண்டி இருப்பதால்
தத்ர -அந்த ஏக ஸப்தத்தால்
தாத்பர்யம் -கருத்து
ஊஹ்யம் -ஊஹிக்கத் தக்கது
ஸ -அந்த ஏக ஸப்தமானது
முக்த்யுபாயே -முக்திக்கு உபாயமாக இருக்கிற
ஸ்ரீ ஸகே பரம் -எம்பெருமான் இடத்தில் மாத்ரம்
தத் -அப்படிப்பட்ட வேதாந்த ஸாஸ்த்ரங்களில் -அங்காங்கு ப்ரஸித்தமான என்றபடி
ப்ராப்ய ப்ராப கைக்யம் -உபாய உபேயம் ஒருவனே என்பதையும்
சகல பல ததாம் -ஸமஸ்த பல ப்ரதாதாவும் ஒருவனே என்பதையும்
ந்யாஸதோ அந்யாந பேஷாம்–சரணாகதியைத் தவிர்ந்த வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத தன்மையையும்
ப்ராதான் யாத்யம் ஸ –முக்கியமாக இருப்பது முதலான
கிஞ்சித் ப்ரதயதி ஸ -சிலவற்றையும் வெளிப்படுத்து கின்றது

ஏகம்-அவன் ஒருவனே சித்த உபாயம் -பிரபத்தியும் அவனே செய்விக்கிறான் என்ற எண்ணம் வேண்டும்
அப்படி இல்லை யாகில் பிரபத்தியும் சாதன உபாயங்களிலே சேரும்

இத்தால் பிரபத்தியும் உபாயம் அன்று என்றதாயிற்று
பகவான் இடம் நம்மிடத்தில் அனுக்ரஹ புத்தி உண்டாக பிரபத்தி தேவை -அதிகாரி விசேஷணம் மாத்ரமே
நிர் விசேஷ ப்ரஹ்மம் அத்வைத மதமும் நிரஸனம்

சரம ஶ்லோகத்தின் முற்பகுதி அனுவாதம் (நம் நிலைமையை எடுத்துச் சொல்கிறது‌) பின்பகுதி (விதிக்கிறது) கட்டளையாகிறது..

“மாம் ஏகம்”–தேர்த் தட்டில் நிற்கும் கண்ணன் தன் நெஞ்சைத் தொட்டு “மாம்” என்கிறான். வாத்ஸல்யம், கருணை முதலிய எண்ணற்ற கல்யாண குணங்களையுடைய என் ஒருவனையே என்பதை “ஏகம்” என்ற பதம் சொல்கிறது.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் ஒருவனே உபாயமாகவும், உபேயமாகவும் ஆவதை இந்த “ஏகம்”– என்ற பதம் குறிக்கிறது. இதுவே ப்ராப்ய, ப்ராபக ஐக்யம். ப்ரபத்தியைச் செய்யும் சேதனன்
(வேறு உபாயங்கள் செய்யச் சக்தியற்ற) விஷயத்தில் தானே நின்று பலன் தருகிறான்.
எம்பெருமான் ஒருவனே மோக்ஷோபாயன் என்ற உணர்வு ப்ரபன்னனுக்கு அவஶ்யம்.
ப்ரபத்தி ஒரு வ்யாஜமாகி எம்பெருமானின் சீற்றத்தைத் தணித்து சேதனனுக்குப் பலன் தருகிறது. ஆக எம்பெருமான் ஒருவனே ஸித்தோபாயனாயிருந்து மோக்ஷம் தர வல்லவன்.
இதற்கான அதிகார ஸங்க்ரஹ பாசுரம்.
“சாதனமும் நற் பயனும் நானே ஆவன்  சாதகனும் என் வசமாய் என்னைப் பற்றும்* 
சாதனமும் சரண நெறி அன்று உமக்கு சாதனங்கள் இந் நிலைக்கு ஓர் இடையில் நில்லா*
வேதனை சேர் வேறங்கம் இதனில் வேண்டா வேறு எல்லாம் நிற்கும் நிலை நானே நிற்பன்*
தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச் சோகம் தீர் என் உரைத்தான் சூழ்கின்றானே”. (அதி-ஸ 48)

——————

ஸ்வா பீஷ்ட ப்ராப்தி ஹேது ஸ்வயமிஹ புருஷை ஸ்வீக்ருத ஸ்யாத் உபாய
சாஸ்த்ரே லோகே ஸ சித்த ஸ புந ருபயதா சித்த ஸாத்ய ப்ரபேதாத்
சித்த உபாயஸ்து முக்தவ் நிரவதிக தய ஸ்ரீ சக சர்வ சக்தி
ஸாத்ய உபாயஸ்து பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் தத்வ ஸீகார ஸித்த்யை–17-

இஹ –இந்தப் பிரபஞ்சத்திலே
சாஸ்த்ரே–ஸாஸ்த்ரத்திலும்
லோகே ஸ-உலக நடப்பிலும்
சித்த -பழக்கத்தில் இருந்து வருகிறதும்
புருஷை-ஜனங்களாலே
ஸ்வயம் -தானாகவே -பிறர் தூண்டுதல் இல்லாமலேயே
ஸ்வீக்ருத-அங்கீ கரிக்கப் பட்டதுமான
ஸ்வா பீஷ்ட –தனது விருப்பத்தை
ப்ராப்தி-பெறுவதற்கு
ஹேது -காரணம் எதுவோ அதுவே
உபாய-உபாயம் என்று பெயர் பெற்றதாக
ஸ்யாத் –இருக்க வேண்டும்
ஸபுந-அவ்வுபாயம் பின்னேயும்
சித்த ஸாத்ய ப்ரபேதாத்-உபயதயா -ஸித்த ஸாத்ய என்னும் இரண்டு பிரிவால் -இரண்டு விதமாக
முக்தவ்-மோக்ஷ விஷயத்தில்
சித்த உபாயஸ்து –ஸித்த உபாயமானவன்
நிரவதிக தய -அளவில்லாக கருணை கொண்ட
ஸ்ரீ சக சர்வ சக்தி–ஸர்வ வல்லமை யுள்ள ஸ்ரீ மன் நாராயணனே
ஸாத்ய உபாயஸ்து –ஸாத்ய உபாயமோ என்னில்
தத் வஸீகார ஸித்த்யை–அந்த எம்பெருமானை வசமாக்குவதன் பொருட்டு ஏற்பட்டவையான
பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் -பக்தி என்பதும் சரணாகதி என்பதும் தனிப்பட்டவையே -வெவ்வேறானவையே –

உபாயம் என்றால் என்ன?அதன் வகைகள் என்ன?அதனை ஏன் செய்ய வேண்டும் என்பதை இதில் விவரிக்கிறார் ஸ்வாமி.

இவ்வுலகில் சேதநன் ஒரு பலனை அடைய விரும்பிச் செய்யும் க்ரியைக்கு உபாயம் என்று பெயர்  இது ஸித்தோபாயம், ஸாத்யோபாயம் என இரு வகைப் படும். நம்மால் செய்யப் பட வேண்டாத முன்பே உள்ள ஸாதனம் ஸித்தோபாயம்.
நாம் முயன்று செய்வது ஸாத்யோபாயம். உதாரணமாக மரத்தில் பழுத்திருக்கும் பழம் ஸித்தோபாயம்.அதனைச்சென்று பறித்துப் பயனடைதல் ஸாத்யோபாயம்.
கருணையும்,சக்தியுமுள்ள எம்பெருமானே ஸித்தோபாயம்.
அவனை அடைய சேதநன் செய்யும் ப்ரபத்தி ஸாத்யோபாயம்.
பக்தி யோகம்,ப்ரபத்தி என்ற இரண்டுமே ஸாத்யோபாயம்.
இவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்து  எம்பெருமானை வசப்படுத்திக் பெறுகின்ற பலனே மோக்ஷம்.

————–

அத்யந்த அகிஞ்சன அஹம் த்வதப சரணத சந்நி வ்ருத்தோத்ய நாத
த்வத் சேவை காந்த தீ ஸ்யாம் த்வமஸி சரணமித் யத்ய வஸ்யாமி காடம்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் த்வயி நிஹிதபரோ அஸ்ம் யேவமித்யர்ப்பி தாத்மா
யஸ்மை ஸ ந்யஸ்த பார சக்ருதத து சதா ந ப்ரயஸ்யேத் ததர்த்தம்–18–

நாத-ஓ நாதனே
அத்ய-இப்போது
அஹம்-நான்
அத்யந்த அகிஞ்சன -மிகவும் புகல் ஒன்றும் இல்லாதவன்
த்வத் அப சரணத -உனக்கு விரோதம் செய்வதில் இருந்து
சந்நிவ்ருத்த-ஒழிந்தவன்
த்வத் சேவை காந்த தீ -உனக்குப் பிரியம் செய்வதிலேயே நோக்கம் உள்ளவனாக
ஸ்யாம் –இருக்கிறேன்
த்வம் சரணம் அஸி -நீயே உபாயமாக இருக்கிறாய்
இதி யத்ய வஸ்யாமி காடம்-என்று தீர்மானமாக அறுதி இடுகிறேன்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் -நீயே அடியேனை ரக்ஷிப்பவனாக இருக்க வேண்டும்
த்வயி நிஹித பரோ –உன்னிடத்திலேயே சுமையை ஒப்படைத்தவனாக
அஸ்மி –இருக்கிறேன்
ஏவம் இதி -இவ் வண்ணமாக
யர்ப்பி தாத்மா-தன்னை ஒப்புக் கொடுத்தவனான
ஸ –அந்த சரணாகதன்
யஸ்மை –எந்தப் பிரயோஜனத்தின் பொருட்டு
ந்யஸ்த பார –தனது பாரத்தைப் ஒப்புவித்தானோ
ததர்த்தம்-அதற்காக
அத -அதற்குப் பின்
சதா –எக் காலத்திலும் -பயன் பெறும் அளவும் என்றபடி
ந ப்ரயஸ்யேத் –பிரயாசப் படக் கூடியவன் அல்லன்-

ஐந்து அங்கங்களையும் சேரப் பிடித்து அருளிச் செய்கிறார் இதில்
1–கார்ப்பண்யம் –அகிஞ்சன்யன் என்ற எண்ணம் -சரணாகதியை தவிர வேறே உபாயாந்தரங்களில் சக்தன் இல்லாதவன் – பிராப்தி இல்லாதவன்
2–பிரதி கூல்ய வர்ஜனம் -திரு உள்ளம் சேராதவற்றை செய்யாமல் இருக்க வேண்டுமே
3—ஆனுகூல்ய சங்கல்பம் –திரு உள்ளம் உகந்த கைங்கர்யங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமே
4—மஹா விச்வாஸம் –அவனே ரக்ஷகன் -களை கண் மற்று இலேன் -என்னும் உறுதி வேண்டுமே
5—கோப்த்ருத்வ வர்ணம் –நீயே ரஷித்து அருள வேண்டும் என்று ஸ்வீ கரிக்க வேண்டுமே
6—ஆத்ம சமர்ப்பணம் –இதுவே சரணாகதி -மோக்ஷ பலனுக்காக ஒரே தடவை தான் பண்ண வேண்டும் –

பக்தி யோகம் போலே அன்று –

ஸக்ருத் -ஒரு தடவை பர ந்யாஸம் செய்தவன் என்றதால்-பக்தி யோகம் போல் ஆவ்ருத்தி அனுஷ்டானம் இல்லை என்றதாயிற்று
தைத்ரிய உபநிஷத் -தஸ்யை வம் விதுஷ -என்று தொடங்கி புருஷ வித்யையிலே ப்ரபன்னனை யாக ரூபியாகக் காட்டி
யாகத்துக்கு உரிய அங்கங்கள் எல்லாம் இவன் சரீரம் ஜீவன் வாக்கு மார்பு முதலிய அங்கங்களாக நிரூபித்து
ஆயுஷ் காலம் தீக்ஷையாகவும்
மரணம் அவப்ருதம் -யாக பூர்த்தியாகவும் நிரூபித்து உள்ளது –
இந்த ஸ்லோகத்தில் ஆத்ம நிக்ஷேபத்தை அங்கியாகக் கூறி
இனி இவன் நிர்பயன் நிர்பரன்-என்று அருளிச் செய்கிறார்-

ஆறு அங்கங்களுடன் கூடிய  ப்ரபத்தியை ஒரு முறை செய்த பின் ப்ரபன்னன் செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை என இதில் வலியுறுத்துகிறார் ஸ்வாமி.

ப்ரபத்திக்கான ப்ரயோக விதி இங்கு சொல்லப்படுகிறது.
  1. அடியேன் வேறு உபாயத்தைச் செய்யும் சக்தியற்றவன். இதுவே கார்ப்பண்யம் என்னும் அங்கம் .
  2. உன் திருவுள்ளம் உகக்காத செயலில்  ஈடுபடமாட்டேன்.(ப்ராதிகூல்ய வர்ஜனம்)
  3. உன் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யத்தில்  ஈடுபடுவேன் (ஆநுகூல்ய ஸங்கல்பம்)
  4. நீயே என்னைக் காப்பாய் என்ற முழு நம்பிக்கையுடனுள்ளேன்.(மஹா விஶ்வாஸம்)
  5.  நீயே எனக்கு உபாயமாக இருந்து காக்கவேண்டும் (கோப்த்ருத்வ வரணம்)
இவ் விதமாக என் ஸ்வரூபத்தையும், அதனைக் காக்கும் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று ஒரு முறை செய்யும் ப்ரபத்திக்குப் பின் எக் காலத்திலும் இப் ப்ரபன்னன் எம் முயற்சியும் செய்ய வேண்டாம்.
———————

த்யக்த்வ உபாய அநபாயா நபி பரம ஜஹன் மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்
ப்ராயச் சித்தம் ஸ யோக்யம் விகத ருணததிர் த்வந்த்வ வாத்யாம் திதிஷூ
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணான் சத் ஸம்ருத்திம் ஸ யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ் தஸ்ய யத்வாஸ் அப்த வர்க்காத் –19-

உபாயாந் –மோக்ஷ உபாயத்தையும் -நித்ய நைமித்திகங்களையும் ஒழிந்த காம்ய தர்மங்களையும்
அபாயா நபி –பகவத் நிக்ரஹ ஹேதுக்களான அபராதங்களையும்
த்யக்த்வ -விட்டு
பரம் -பிரபத்திக்குப் பின்
மத்யமாம்-முன் சொன்ன உபாயங்களில் சேராத நடுத்தரமான
ஸ்வார்ஹ வ்ருத்திம்-நித்ய கர்ம ரூபமாயும் அதே போல் விட முடியாத நைமித்திக கர்ம ரூபமாயும் இருக்கிற தனது நிலைமைக்கு ஏற்ற செயலையும்
யோக்யம்-ப்ரபன்னனுக்கு உரியதான
ப்ராயச்சித் தம்ஸ புன பிரபத்தி ரூபமான ப்ராயச்சித்தத்யையும்
அஜஹத் -விடாதவனாய்
விகத ருணததிர் -தேவக் கடன் பித்ரு கடன் ரிஷி கடன் -போன்ற கடன்களில் துவக்கு அற்றவனாய்
த்வந்த்வ வாத்யாம் –சீத உஷ்ணம் ஸூக துக்கம் போன்ற த்வந்தங்கள் என்னும் சுழல் காற்றை –
அத்தால் உண்டாகும் பீடையை என்றபடி
திதிஷூ-பொறுத்தவனாய்
அநந்யஸ்-எம்பெருமானை விட்டு மாற்றத்தில் துவக்கு அற்றவனாய்
பரிசரண குணான்-பகவத் கைங்கர்யத்துக்குத் தேவையான கருவிகளை -அதாவது
சந்தனம் -புஷ்பம் முதலிய உப கரணங்களையும்
மற்றும் பல தியாகம் சங்க தியாகம் முதலியவற்றையும்
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் –பகவத் பக்தி -அதற்கு ஏற்ற அறிவு இவற்றின் வளருதலையும்
யுக்தாம்-தனது நிலைக்கு அனுகுணமான
சத் ஸம்ருத்திம் ஸ -சான்றோர்களின் சிறப்பையும்
யாசேத் -அபேக்ஷிக்கக் கடவன்
ததபி-அந்த யாசனையும்
பகவதஸ்-பகவானிடம் இருந்தோ
யத்வாஸ்-அல்லது
தஸ்ய -அந்த பகவானுடைய
ஆப்த வர்க்காத்-பக்தர்களிடம் இருந்தோ
ஸ்யாத் –இருக்க வேணும் –

பிரபன்னன் லோக யாத்திரை இருக்கும் விதம் பற்றி அருளிச் செய்கிறார் இதில் –
1—ஸ்வாரத்தமாக எத்தையும் செய்யாமல் இருக்க வேண்டுமே
2—சாஸ்த்ர ஆஜ்ஜை படியே -க்ருத்ய கரணங்கள் -அக்ருத்ய அகரணங்கள் -செய்து வாழ வேண்டும் –
3—நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம கர்மங்களை செய்தும் காம்ய கர்மாக்களை செய்யாமலும் இருக்க வேண்டுமே
4—பிராமாதிகமாக செய்த தவறுகளுக்கு பிராயச்சித்த பிரபத்தி செய்ய வேண்டும் –
5—சரணாகதனுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் தீரும் -பிரபத்தி தானே சிறந்த தபஸ் -பகவத் ஆராதனம் ஒன்றே குறிக்கோள்

வேத அத்யயனத்தால் ரிஷிகள் கடன் தீரும்
யாகாதிகளால் தேவக்கடன் தீரும்
சந்ததி வ்ருத்தியால் பித்ரு கடன் தீரும்
இவை தீர்ந்த பின்பே உபாசகன் மோக்ஷ மார்க்கத்தில் ஈடுபட வேண்டும்
ப்ரபன்னனுக்கு இந்த தேவை இல்லை –

ஶரணாகதி செய்து முடித்தபின் ஒருவனது அனுஷ்டானங்களை விவரிக்கும் ஶ்லோகம் இது.

ஶரணாகதிக்குப்பின் அதற்கேற்ப தன் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ளுதல் அவஶ்யம்.
1 &2 த்யக்த்வோபாயானபாயாந்—
ப்ரபத்தி செய்து முடித்த ஒருவன் காம்ய பலன்களை அடைவதற்கான கார்யங்களைச் செய்யக்கூடாது. ஶரணாகதிக்கு எதிரான (அபாயம்) பாபமான கார்யங்களை விடவேண்டும். செய்யாதன செய்யோம் என ஆண்டாள் சொல்கிறாள். முக்யமாக பகவத் பாகவதாபசாரம் கூடாது.
3. மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்—
நடுநிலையாக வுள்ள நித்ய கர்மானுஷ்டங்களை ஶ்ரத்தையுடன் செய்ய வேண்டும்.
4. ப்ராயச்சித்தம்ச அஜஹத்–
நம்மையும் மீறி ஏற்படும் தவறுகளுக்கு உரிய  ப்ராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
5. விகத ருண ததி —-
மனிதனுக்கு ஏற்படும் மூன்று கடன்களாகிய தேவ, ரிஷி, பிதுர் கடன்களை முறையே வேள்வி செய்தல், வேதம் கற்றல், விவாஹம் செய்து புத்ர பேறு பெறுதல் மூலமாகத் தீர்க்கலாம் என சாஸ்த்ரம் சொல்கிறது. ஆனால் ப்ரபத்தி செய்தவனுக்கு அவ்வுபாயமே
இக் கடன்களை நீக்கி விடுகின்றது. ப்ரபத்தியின் பெருமையால் அவன் இக் கடன்களிலிருந்து விடுபடுகின்றான். இதனையே
“தேவாதீனாமய மந்ருணதாம் தேஹவத்வேபிவிந்தந்” என்ற தயாஶதக ஶ்லோகத்தில் (49) ஸ்வாமி காட்டுகிறார்.
6. த்வந்த்வ வாத்யாம் திதுக்ஷு: —
ஸுக துக்கங்களாகிய சுழற் காற்றை சகித்துக் கொள்பவனாயிருக்க வேணும். கைங்கர்யத்துக்கு ஸுகத்தையும்,ப்ராரப்தம் கழிய துக்கத்தையும் கருவியாகக் கொள்ள வேண்டும்.
7. பக்தி ஞானாதி வ்ருத்திம்—-
பக்தி, ஞானம், வைராக்யம் வளர வேணும் என்ற எம்பெருமானிடம் ப்ரார்த்திக்க வேண்டும். “பகவன் பக்திமபி ப்ரயச்சமே” என்கிறார் ஆளவந்தார்.
8. பரிசரண குணான் ஸத்ஸம்ருத்திம்ச யுக்தாம்—
சாதுக்களின் சேர்க்கையையும், கைங்கர்யத் துக்கான சாதனங்களின் செழிப்பையும்  தரும்படி எம்பெருமானிடமும்-ஆசார்யனிடமும் ப்ரார்த்திக்க வேணும்.
ஆக இந்த ஸ்தோத்ரமே  பாராயணத்துக்கு உரியதாயினும், பரிபாலனம் செய்ய உதவும் வகையில் உயர்ந்தாயுள்ளது.

——————–

ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷ் வநக குருஜந ப்ரக்ரியா நேமி வ்ருத்தி
ஸ்வார்ஹா நுஜ்ஞாத சேவா விதிஷூ ஸ ஸகேந யாவதிஷ்டம் ப்ரவ்ருத்த
கர்ம பிராரப்த கார்யம் ப்ரபதந மஹிம த்வஸ்த சேஷம் த்விரூபம்பு
க்த்வா ஸ்வாபீஷ்ட காலே விசதி பகவத பாத மூலம் ப்ரபந்ந –20-

ப்ரபந்ந–ப்ரபன்னன்
ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷு -ஆஜ்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்
அநக-குற்றம் அற்ற
குருஜந ப்ரக்ரியா -பெரியோர்களின் அனுஷ்டானத்தை
நேமி வ்ருத்தி-வண்டி வட்டை போல் தொடர்ந்து செல்லுபவனாய்
ஸ்வார்ஹ-தனக்கு உரிய -ப்ரபந்ந நிலைக்கு ஏற்றதான
அநுஜ்ஞாத சேவா –அநுஜ்ஞா கைங்கர்யங்களுடைய
விதிஷூ -அனுஷ்டானம் செய்யும் முறைகளில்
ஸகேந –சக்தி இருக்குமாகில்
யாவதிஷ்டம் -இஷ்டத்தை அனுசரித்து
ப்ரவ்ருத்த–ஊக்கம் கொண்டவனாய்
த்விரூபம்-புண்யம் பாபம் என்ற இரு வகையான
ப்ரபதந மஹிம-ப்ரபத்தியின் மஹிமையால்
த்வஸ்த சேஷம் -அழிந்தது போக மீதியான
கர்ம பிராரப்த கார்யம் -பயன் கொடுக்காத தொடங்கிய செய் வினையை
புக்த்வா -அனுபவித்து
ஸ்வாபீஷ்ட காலே –தான் விரும்பிய காலத்திலேயே
விசதி பகவத பாத மூலம் -பகவானுடைய திருவடி நிழலில் புகுகிறான்

பிரபன்னன் சுக துக்கங்களை சமமாக கொண்டு -த்ரிவித தியாகங்கள் -நினைவுடன் பகவத் ஆராதனை ரூபமாக கர்மங்களை செய்து கொண்டு இருப்பான்
தனக்கு பக்தி ஞான வைராக்யங்கள் வளருவதற்கு மட்டுமே பிரார்திப்பான் –
விஷ்வக் சேனர் பெரிய திருவடி திரு வந்த ஆழ்வான் -ஆச்சார்ய குரு பரம்பரை இவர்களை மட்டுமே வணங்கக் கடவன்
பாகவதர் ஸம்ருத்திக்கும் பகவத் ஆராதனை உபகரணங்கள் ஸம்ருத்திக்கும் பிரார்த்திக்கக் கடவன்
1-வர்ணாஸ்ரம கர்மங்களை விடாமல் அனுசந்திக்கக் கடவன் –
2–திவ்ய தேசங்களில் சாத்துப்பொடி புஷ்பங்கள் சமர்ப்பித்து -உத்ஸவாதிகளை நடத்திக் கண்டு களிக்கக் கடவன் –

ப்ரபன்னன் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுவதை இந்த ஶ்லோகம் சொல்கிறது.

உபாயங்களை உபாயமாகச் செய்யாமல் பகவத் ப்ரீத்யர்த்தமாக ஸங்கல்பித்துக்கொண்டு செய்யும்போது பலனும் அவனுக்கே ஸங்கல்பமாகும் வைபவமுண்டு என்கிறார் ஸ்வாமி  தேஶிகன். இதற்கு ஸாத்விக த்யாகம் என்றும் பெயர்.
ப்ரபன்னன் செய்யும் கைங்கர்யம் ஆக்ஞா கைங்கர்யம் அநுக்ஞா கைங்கர்யம் என இருவகைப்படும். ஆக்ஞா கைங்கர்யம் எம்பெருமானிட்ட கட்டளையாக அவனுகப்புக்கு குற்றமற்ற நம் ஆசார்யர்கள் அனுஷ்டித்தபடி வண்டிச் சக்ரமுருளும் வகையில் செய்யவேண்டும். “ஆக்ஞா கைங்கர்ய வ்ருத்திஷூ அநக குருஜன ப்ரக்ரியா நேமி வ்ருத்தி:”-என்கிறார் (ஸ்நானம், சந்த்யாவந்தனம், ஆராதனம், தர்ப்பணம் முதலியன இதிலடங்கும்)
அனுக்ஞா கைங்கர்யம் எம்பெருமானின் கட்டளையல்ல. அவன் அனுமதித்து ஏற்கும் கைங்கர்யம்.
நம்மால் முடிந்ததை விரும்பி ஏற்றுக் செய்யலாம் (புஷ்பம் தொடுத்தல், கோயிலில் கோலமிடுதல், ப்ரதக்ஷிணம் செய்தல் முதலியன இதில் அடங்கும்.)
சேதனனுக்கு ஸஞ்சிதம், ப்ராரப்தம் என இரு கர்மாக்களுண்டு.
பல ஜன்மாக்களாகச் சேர்க்கப்பட்ட பாபக் குவியல்கள்-ஸஞ்சித பாபம்.
அவற்றுள் பலன்கொடுக்க ஆரம்பித்துள்ளது ப்ராரப்த பாபம்.
சேதனன் ஶரணாகதி செய்தவுடன் ஸஞ்சித பாபம் அழிகின்றன. ப்ராரப்த கர்மா இந்த தேகம் விழும் வரை அனுபவித்து முடியும். ஆக புண்ய பாபங்கள் முற்றிலும் கழிந்தவனாய் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுகிறான்.

————–

ஸ்ருத்யா ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ ஸ்வயமிஹ பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ சித்தாம்
ஸ்வாதந்தர்யே பாரதந்தர்யே அப்யநிதர கதிபி சத் பிராஸ்தீய மாநாம்
வேதாந்த சார்ய இத்தம் விவித குரு ஜன க்ரந்த சம்வாத வத்யா
விம்சத்யா ந்யாஸ வித்யாம் வ்யவ் ருணத ஸூதியாம் ஸ்ரேயஸே வேங்கடேச–21-

வேதாந்த சார்ய -வேதாந்த சார்யன் என்ற விருது பெற்ற
வேங்கடேச-வேங்கட நாதன் என்ற கவி
ஸ்ருத்யா –ஸ்ருதியாலும்
ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ –ஸ்ம்ருதி இதிஹாச புராண ஆகமாதிகளாலும்
ஸ்வயமிஹ – நேராகவே நின்று சொன்ன இவ்விஷயமான
பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ -பகவானே அருளிச் செய்த வாக்யத் தொகுதிகளாலும்
சித்தாம்–தீர்மானிக்கப் பெற்ற
ஸ்வாதந்தர்யே -மோக்ஷத்துக்கு தனியே உபாயமாக இருப்பதிலும்
பாரதந்தர்யே -மற்ற ஒன்றில் உள்ளடங்கி இருப்பதிலும்
அநிதர கதிபி -வேறு கதி இல்லாத
சத் –சத்துக்களால்
பிராஸ்தீய மாநாம்-ப்ரகாசப் படுத்தப் பட்டதுமான
ந்யாஸ வித்யாம் –சரணாகதி வித்யையை
இத்தம் விவித -கீழில் சொன்னபடி நாநா விதமான
குரு ஜன க்ரந்த –ஆச்சார்யர்களுடைய ஸ்தோத்ர ரத்னம் கத்ய த்ரயம் முதலான கிரந்தங்களோடே
சம்வாத வத்யா-ஒற்றுமை வாய்ந்த
விம்சத்யா -இந்த 20 ஸ்லோகம் அடங்கிய ந்யாஸ விம்சதி நூலால்
ஸூதியாம்-நற் புத்திக் காரர்களுக்கு
வ்யவ் ருணத ஸ்ரேயஸே -நன்மை யுண்டாகும் பொருட்டு விளக்கினார் –

இஹ, பர சுகங்களை அளிக்கவல்லது இந்த ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரம் என்கிறார் ஸ்வாமி.
வேதத்தாலும் (ஶ்ருத்ய), ஸ்ம்ருதி (ஸ்ம்ருதி ஆதிபி:ச) யாலும், எம்பெருமான் வாக்காலும் (ஸ்வயம் பகவத் வாக்ய வர்க்கை:ச) ந்யாஸத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இவை மிக ஶ்ரேஷ்டமான ப்ரமாணங்கள்.

ஸ்வதந்த்ரமான நிலையிலும் (ஸ்வாதந்த்ர்யே) அங்கமான நிலையிலும் (பாரதந்த்ர்யே அபி) அகிஞ்சனர்களாகிய பெரியோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது இந்த ப்ரபத்தி வித்யை. ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்திலும் ந்யாஸம் விவரிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தாசார்யன் என முடிசூடிய ஸ்வாமி தேஶிகன்
பூர்வாசார்யர்கள் ப்ரபத்தி பற்றி
சொல்லிய விஷயங்களைத் தழுவிய இந்த
ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரத்தை நமக்காக அருளியுள்ளார்.
(உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –நம்மாழ்வார் ) 
(த்வத்பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே–ஆளவந்தார்)
(அஶரண்ய ஶரண்யாம் அனன்ய ஶரண: – பாஷ்யகாரர்)
————–

சம்சார வர்த்த வேக பிரசமந ஸூ பத்ருக் தேசிக ப்ரேஷிதோ அஹம்
ஸந்த்யக்தோ அந்யை ரூபாயைர நுஸித சரி தேஷ் வத்ய சாந்தாபிஸந்தி
நி சங்கஸ் தத்வ த்ருஷ்ட்யா நிரவதிகதயம் ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் த்வாம்
ந்யஸ்த த்வத் பாத பத்மே வரத நிஜ பரம் நிர்பரோ நிர்பயோஸ்மி–22-

ஹே வரத–ஓ வரதனே
அஹம்-அடியேன்
சம்சார ஆவர்த்த வேக –சம்சாரம் என்னும் நீர்ச் சுழலின் வேகத்தை
பிரசமந –அடக்குகின்ற
ஸூ பத்ருக் -ஷேம காரமான கடாக்ஷம் அருளுபவர்களான
நற் கதிக்கு மூல காரணமான கடாக்ஷம் பெற்றவனாய்
தேசிக ப்ரேஷிதோ –ஆச்சார்யர்களால் கடாக்ஷித்து அனுக்ரஹம் பெற்றவனாய்
அந்யைர் உபாயைர் –மற்ற உபாயங்களாலே
ஸந் த்யக்த-நன்றாக விடப்பட்டவனாய்
அநுஸித சரி தேஷு -தகுதி அற்றவைகளான நடத்தைகளால் -அதாவது நிஷித்த காம்ய கர்மங்களில்
சாந்தாபிஸந்தி–கருத்து ஒழிந்தவனாய்
அத்ய –இப்போது -இந்த நிலையில்
தத்வ த்ருஷ்ட்யா–தத்வ ஞானத்தால்
நிஸ் சங்கஸ் -சந்தேகம் அற்றவனாய்
நிரவதிக தயம் –அளவில்லாக் கருணை கொண்ட
த்வாம்-உன்னை
ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் -ரக்ஷிப்பவனாக அடைந்து -அதாவது -என்னை ரக்ஷிக்கக் கடவாய் என்று பிரார்த்தித்து
த்வத் பாத பத்மே -உனது திருவடித் தாமரையில்
நிஜ பரம் ந்யஸ்த -எனது பாரத்தை அடைக்கலம் செய்து
நிர்பரோ நிர்பயோஸ்மி–சுமை கழிந்தவனாய் பயம் அற்றவனாகவும் இருக்கிறேன்

தம்முடைய ஆச்சார்யர் கிருபையால் -தாம் பெற்ற ஞானம் -பக்தி யோகத்தில் சக்தன் அல்லன் -பிரபத்தி ஒன்றே உபாயம்
ஒரு தடவை மட்டுமே பண்ண வேண்டும் -என்றும் -பிரபத்தியின் மகிமைகளையும் அறிந்தமையையும் –
பெரிய பிராட்டியார் பேர் அருளாளன் இடம் சரண் அடைந்தமையையும் -நிர்ப்பரராய் கைங்கர்யங்களிலே கால ஷேபம் செய்து
நிரதிசய ஆனந்தம் இங்கேயே இந்த சரீரத்துடன் பெற்றதை அருளிச் செய்து நிகமிக்கிறார் –

தம்முடைய அனுஷ்டானத்தையே த்ருஷ்டாந்தம் ஆக்கி நிகமிக்கிறார்

இங்கு மிகச் சுருக்கமாக அருளிச் செய்து
ரஹஸ்ய த்ர்ய சாரத்தில் -அர்த்த அனுசந்தான பாகம் என்ற முதல் பாதத்தில் உபோத்கார அதிகாரம் முதல்
ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் வரை -22அதிகாரங்களால் விரிவாக அருளிச் செய்துள்ளார்
அங்கு விலக்கியவற்றையும் ஒரு ஸ்லோகத்தால் சுருக்கி அருளிச் செய்துள்ளார் –

ஏறி எழில் பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி அடிமையில் நம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே —

அவிஸ்ராந்த ஸ்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா
மம ஆவிர்பூயா ஸூ மனஸி முனி சித்தாத்தி ஸூ லபா
மது ஷீர நியாய ஸ்வ குண விபவ ஆசஜ்ஜன கநத்
மஹாநந்த ப்ரஹ்ம அனுபவ பரிவாஹா பஹூ விதா —

ப்ரபன்னன் அனுஸந்திக்க வேண்டிய முறையை ஸ்வாமி அனுஸந்தானம் செய்து காட்டும் ஶ்லோகம் இது.
ஹே பேரருளாளப் பெருமானே!
இந்த ஸம்சாரம் என்ற நீர்சுழலின் வேகத்தைத் தடுக்கவல்ல (ஸம்ஸார வர்த்தக வேக ப்ரஶமன)
ஆசார்யனின் நல்ல கடாக்ஷத்தைப் பெற்றவனாக (ஶுப த்ருக் தேசிக ப்ரேக்ஷித:)
பிற உபாயங்களிலிருந்து விடுபட்ட வனாக (அந்யை: உபாயை: ஸந்த்யக்த:)
தகாத செயல்களில் ஈடுபடாத வனாக (அனுசித சரிதேஷு ஶாந்தாபிஶந்தி:)
பூர்ண விஶ்வாஸத்துடன் தத்வ ஞானத்தால் சந்தேகமின்றி (தத்வ த்ருஷ்ட்யா நிஶ்ஶங்க)
எல்லையற்ற கருணைக்கடலான உன்னை உபாயமாக ப்ரார்த்தித்து
(நிரவதிக தயம் த்வாம் ஸம்ரக்ஷகம் ப்ரார்த்தய)
உன் திருவடித் தாமரையில் என்பரத்தை ஒப்படைத்துவிட்டு
பொறுப்பும் பயமும் நீங்கியவனாக இருக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
(த்வத் பாத பத்மே வரத நிஜபரம் நிர்பரோ நிர்பயோஸ்மி)
மேற்கூறிய விஷயங்களை மோக்ஷத்தை விரும்பும் சேதனர்களாகிய நாம் அநுஸந்தானம் செய்ய வேண்டும் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

இதி ந்யாஸ விம்சதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Ashtaadasa Rahayangal, Desihan | Leave a Comment »

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த முக்த போகா வலீ —

January 25, 2023

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

(வியாக்கியான சக்ரவர்த்தி பரம காருண்யர் -ஆவணி ரோஹிணி கண்ணன் போல் இவரும் –
சங்க நல்லூரில் திரு அவதாரம்
1167 தொடங்கி -95 திரு நக்ஷத்திரங்கள் –1262 வரை
நம்பிள்ளை சிஷ்யர்
யாமுனாச்சார்யர் திருக்குமாரர்-ஆளவந்தார் பெயரே இவர் தந்தைக்கும்
ஸ்ரீ தரன் கடாக்ஷம் எளிதில் கிட்டும் -வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
இவர் சகோதரி திருக் குமாரர் -சுந்தர வரதாச்சார்யர் இயல் பெயர் –அழகிய மணவாள பெருமாள் நாயனார் -சுவீகாரம் –
இவர் பிள்ளை லோகாச்சார்யார் தம்பி அல்ல
பெயரில் குழப்பம் வரக்கூடாது -என்பதால் நாயனார் ஆச்சான் பிள்ளை என்ற பெயர் மாற்றம் செய்தார்கள்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த கிரந்தங்கள் என்று சொல்லுவதால் பெரியவாச்சான் பிள்ளை -நாயனார் ஆச்சான் பிள்ளை இருவருக்கும் பொருந்தும்
இவர் சிஷ்யர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
இவர் சிஷ்யர் -திருமாலை ஆண்டான் வம்சத்தில் வந்த யாமுனாச்சார்யர்- ப்ரமேய ரத்னம் கிரந்தம் முன்பே பார்த்தோம்)

ஸ்ருத் யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்ல ஸத் பகவத் அங்க்ரி புராண பந்தும்
ஞானாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த தனியன்

(வேதப் பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு -மலர வைக்கும் -இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் -தாமரை இணை அடிகள் -பழைய உறவினராய்,-திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
ஞானங்களுக்கு -அதி ராஜம் -பேரரசராய்,
அபய ப்ரத ராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான-பரம காருணிகம்-பெரியவாச்சான் பிள்ளையைப் போலவே
இவரும் பரம காருணிகர் என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

(ஸ்ரீ க்ருஷ்ண த்வைபாயனர் ஆதிகாலத்தில் பாற்கடல் கடைந்து வேதத்தை எடுத்துக் கொடுத்தவர்.
மஹாபாரதம் என்ற அமுதத்தை எடுத்துக் கொடுத்தவர்.
வேத நூல் கடலைக் கடைந்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர அமுதத்தையும் அளித்தவர் –
ஸ்ரீபாஷ்ய மங்கள ஸ்லோகத்தை அனுசந்தித்து ப்ராசார்யன் வாக்கே ஸீதா என்ற அமுதம்.
கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவமான நம்மாழ்வார் 3வது அமுதம்.
நாக்கு என்ற மந்திர பர்வத்தை கடைந்து திருவாய் மொழி என்ற பக்தாம்ருதத்தை கடைந்து கொடுத்தார்.
பாற்கடலில் உள்ள 4 உபநிஷத்துக்களையும் நன்கு மந்திர பூர்வமாக கடைந்து எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த ஸ்வாமி
ஸ்ம்ருதி களுக்கு எல்லாம் பால ஸூரியம் -அவை எல்லாம் ஆனந்தப்படுகிறது.
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் என்றபடி மிதுன சேஷிகளின் திருவடி தாமரைகளுக்கு பழைய உறவினராக இருக்கிறார்.
பலப் பல ஞானாதிகளுக்கு அரசராய் அபய வரதராஜன். பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரர்
அடியேனுக்கு ஆச்சார்யனாய் இருந்தவரை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.)

அபய ப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாம முடைய அப் பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

அபய ப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத் ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

(அபயப்ரத பாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய்,
எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை
இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

அஸ்மஜ் ஜநக் காருணய ஸுதாஸந்துஷி தாத்மவான் |
கரோமி சரமோபாய நிர்ணயம் மத்பிதா யதா ||

அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

(பக்தி உழவனின் உபகார பரம்பரைகள் -அவற்றால் பெரும் பேற்றை விளக்கும்

இரவு கழிந்து பகல் ஆரம்பிக்கும் முன் இடைப்பட்ட பிராயஸ் சந்தி காலம் -இருள் தொலைந்தது மட்டும் –
அஞ்ஞானம் தொலைந்து
நித்ய பகவத் அனுபவம் கிட்டாத போது
கூவிக் கொள்ளும் காலம் குருகாதோ
முமுஷு -இவன் -முக்தன் ஆவதற்கு முன்
ஸம்ஸாரிகள் -பத்தாத்மாக்கள் –
முமுஷுவுக்கு ஸஹ வாசம் சம்பாஷணம் ஸஹ போஜனம் த்யாஜ்ய உபா தேயங்கள் நடைமுறைகள் பல கிரந்தங்கள் சொல்லும்
ஸ்ரீ கீதை அருளிச் செயல்கள் ரஹஸ்ய த்ரயங்கள் இவற்றை விவரிக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தில் உத்க்ராந்தி விளக்கும் பாதம் – பிரயாணம் கதி பற்றி பாதம் -அங்கு சென்ற பின்பு கிடைக்கும் அனுபவம்
சாம்யா பத்தி -ஸாலோக்யம் ஸாமீப்யம் -ஸாரூப்யம் -ஸாயுஜ்யம் -பலவும் உண்டே)

(ஒவ்வொன்றுமே நிரதிசய அனுபவம் தானே -முக்தானாம் போக ஆவலீ -அனுபவ வரிசைகளை விளக்கும் கிரந்தம்
இனிமையான பரம போக்யம் –
பேற்றுக்குத் தவரிக்கப் பண்ணும்
அர்ச்சிராதி கதி கிரந்தம் போலே இதுவும்)

இவரும் சங்க நல்லூரில் 1192 திரு அவதாரம்-இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்
ஞான வர்ணவம்
தத்வ த்ரய விவரணம்
அணுக்த புருஷகாரஸ் ச சமர்த்தனம்
சரம உபாய நிர்ணயம்
சதுஸ் ஸ்லோகி பாஷ்யம்
தத்வ ஸங்க்ரஹம்
பரம ரஹஸ்ய த்ரயம்
முக்த போகா வலீ

(பரந்த ரஹஸ்யம் -மாணிக்க மாலை -இரண்டும்
நாயனார் ஆச்சான் பிள்ளை இவர் குமாரர் அருளிச் செய்தவையே – காஞ்சி ஸ்வாமிகள்
இவரே -தான் என்பர் -புத்தூர் ஸ்வாமிகள் பெரியவாச்சான் பிள்ளை – )

இவர் சிஷ்யர் பரம்பரை

வாதி கேசரி மணவாள ஜீயர்
பரகால தாசர்
ஸ்ரீ ரெங்காச்சார்யார் -(இவருக்கு சிஷ்யருக்கு சிஷ்யர் ஆதி வண் சடகோப ஜீயர்)

இந்த கிரந்தம் சிறு வயதிலே எழுதி தந்தை இடம் காட்டியதாக ஐதிகம் உண்டாம்
எனக்கு சரமத்திலே பிறந்த ஞானம் உனக்கு பிரதமத்திலே உண்டாயிற்று
இளைய வயசில் -ஆச்சார்ய விஷய ஞானம் உனக்கு பகவத் விஷயத்தில் உண்டானதே என்று
ஆனாலும் ஸ்ரீ வைஷ்ணத்வம் என்னிடம் கற்றுக் கொள் என்றாராம்

அர்ச்சிராதி கதி நான்கு பிரகரணங்கள் போல்
1-சம்சாரத்தில் படும் பாடு முதலில் -ஸம்ஸாரம் ரோகம் அறிந்து தானே போகம் ரசிக்கும்
2-உத்க்ராந்தி-உத் கிரமணம் -அடுத்து -கிளம்புவது
3-அர்ச்சிராதி கதி மூன்றாவது
4-போக விவரணம் அங்கு சென்று அனுபவிப்பதை
இது ஒரே நூலாக -பிரிவுகளைக் காட்டாமல் -கத்யமாகவே உள்ளது

—————

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருத்வீ ந நக்ஷத்ராணி(மஹா உபநிஷத்)
(ஸத் ஏவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லா அன்று-ஏகாகீ ந ரமேத-திரிபாதி விபூதியில் உண்டது உருக்காட்டாதே – –சம்சாரிகள் பக்கலிலே குடி போய் )

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 
குன்றம் போல் மணிமாடம் நீடு*   திருக் குருகூர் அதனுள்,* 
நின்ற ஆதிப் பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. 

மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரத் ஏவ ஏகீ பவதி(ஸூ பால உபநிஷத் )

(பிருத்வீ அப்பிலே தொடக்கி -ஆகாசம் அஹங்காரத்தில் மஹான் அவ்யக்தத்தில் சேர்ந்து
அது அக்ஷரத்தில் -அது தமஸ்ஸில் -அது ப்ரஹ்மத்துடன் சேர்ந்தே இருக்கும்
ஐந்து நிலைகள் -மஹான் தொடங்கி–அவ்யக்தம் -அக்ஷரம் -விபக்த தமஸ் -அவிபக்த தமஸ்
விதை -முதல் அவிபக்த தமஸ் -பூதலுத்துக்குள் –
மேல் மண்ணில் இருந்து வெளியில் வர தயார் விபக்த தமஸ்
அடுத்து அக்ஷரம் -தண்ணீரை உறிஞ்சி பெருத்து வெடிக்கத் தயார் நிலை –
நான்காவது -பெருத்து வெடித்த நிலை
முளை விட்டது மஹான் -இதுவே பிரதம தத்வம் -தத்வ த்ரய வியாக்யானத்தில் பார்த்துள்ளோம் -)

தம ஆஸீத் தமஸா கூடம் அக்ரே

(ஸூஷ்ம ப்ரக்ருதி மட்டுமே -அஞ்ஞானம் மூடி -மொத்த ஆத்ம சமஷ்டியும் உள்ளே-ஜடமாய் ஒட்டிக் கொண்டு சிக்கிக் கொண்டு இருக்கும்)

நாஸத் ஆஸீத் (ந அஸத் ஆஸீத் ந ஸத் ஆஸீத் )-என்கிறபடியே

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்–ஆச்சார்ய ஹ்ருதயம் -1-)

கரண களேபர விதுரராய் –அசித் அவிசேஷிதராய் -தன் பக்கலிலே சுவறிக் (ஒடுங்கிக் )கிடந்த ஸம்ஸாரி சேதனரரைப் பார்த்து
ஸூரிகளோபாதி ஸதா பஸ்யந்தி பண்ணி ஆனந்த நிர் பரராகைக்கு இட்டுப் பிறந்த இச் சேதனர் இறகு ஒடிந்த பக்ஷி போலே
கரண களேபரங்களை இழந்து போக மோக்ஷ ஸூன்யராய் இங்கனே கிலேசிக்க ஒண்ணாது என்று தயாமான மநாவாய்
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வ மேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தா பாதாதி ஸம்யுதா -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )என்று
தன் திருவடிகளிலே அபிமுகீ கரித்துக் கரை மரம் சேருகைக்காகத் தத் உப கரணங்களான கரண களேபரங்களை ஈஸ்வரன் கொடுக்க

(முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்று)

(தத் விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : திவீவ சக்ஷூராததம் தத் விப்ராஸோ விபந்யவோ )
(த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் – இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் – கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய்
முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –
விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்—ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-381-
(ஜிஹ்வே கேசவன் கீர்த்திதம் –முகுந்த மாலை)
அவற்றைக் கொண்டு

1-ஸ்வே தேஹ போஷண பரர் ஆவாரும்
2-இந்திரியங்களுக்கு இரை தேடி இடுகையிலே யத்னம் பண்ணுவாரும்
3-பர ஹிம்ஸையிலே விநியோகம் கொள்ளுவாரும்
4-தேவதாந்தரங்களுக்கு இழி தொழில் செய்வாரும்
5-பகவத் பாகவத நிந்தைக்கு பரிகரம் ஆக்குவாரும்
6-ஸ்வரூப அநனுரூபமான (பொருந்தாத )ஷூத்ர புருஷார்த்தங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுவாரும்
7-முமூர்ஷு க்களாய் அபேத ப்ரவ்ருத்தர் ஆவாரும்(முமூர்ஷு–ம்ருதும் இச்சை- இறக்க இச்சைப்பட்டு – அத்தை நோக்கியே போவான் -அபதம் தப்பான பாதை)
8-விதவ அலங்கார கல்பமான கைவல்யத்திலே யத்னம் பண்ணுவாருமாய்

இப்படி அந்ய பரராய்ப் போருகிற ஸம்ஸாரிகள்(தங்களையும் மறந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் )நடுவே
இச் சேதனரோட்டை நிருபாதிக ஸம்பந்தமே ஹேதுவாக
நெடுநாள் ஸ்ருஷ்டிப்பது(உன்னி உன்னி உலகம் படைத்து–சோம்பாது )
அவதரிப்பதாய்(மன்னிடை யோனிகள் தோறும் பிறந்தும் காண கில்லா )
இவை படுகிற நோவைக் கண்டு -ப்ருசம் பவதி துக்கித (ஸ்ரீ ராமாயணம் )–என்று திரு உள்ளம் நோவு பட்டுப் போந்த(அவஜா நந்தி மாம் மூடா )

(வ்யஸநேஷ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித : உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி )
ஈஸ்வரனுடைய பாக்ய வைபவத்தாலே

(நமக்கு அனுக்ரஹம் கிட்டி மோக்ஷம் இச்சை வருவது இதனாலேயே -கோர மா தவம் செய்தனன் கொல்
பொருப்பிடையே நின்றும் –நீர் வேண்டா -நானே பண்ணுகிறேன்

பொருப்பிடையே நின்றும்*  புனல் குளித்தும்,*  ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* – விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை*  மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால்,* 
அஃகாவே தீ வினைகள் ஆய்ந்து.)

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தாநாம் கஸ்சித் மாம் வேத்தி தத்வத –ஸ்ரீ கீதை -7-3-என்று
எங்கேனும் ஒருவன் பராக் அர்த்தங்களிலே (வெளி விஷயங்களிலே )பரகு பரகு என்கை தவிர்ந்து
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து வாடினேன் -என்கிறபடியே
த்யாஜ்ய உபா தேயங்களுக்கு நிர்ணாயக ப்ரமாணமான தத் ஸ்வரூப யாதாத்ம்ய (ஆச்சார்ய பர்யந்தம் யாதாத்ம்ய-யதா வஸ்து ஸ்திதி )நிரூபணத்திலே இழிந்து(பர ஸ்வரூபம் இத்யாதி அர்த்த பஞ்சக யாதாத்ம்ய ஞானம் அறிந்து )

(மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—ஸ்ரீ கீதை-7.3৷৷

சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்)

(வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (1-1-1)

தேஹ இந்த்ரிய மன ப்ராண தீப்ய (தீ புத்தி )அந்யனாய்
ஞான ஆனந்த லஷணனாய் (அடையாளம் )
ஞான குணகனாய்(ஞான மயமாயும் ஞானம் உடையவனாயும் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டுமே உண்டே )
நித்யத்வாதி குண யுக்தனான
ஆத்மாவை

யஸ்யாஸ்மி ந அந்தர்யேமி-(யஜுர்வேதம் நான் யாருடையவனோ அவனை தாண்ட மாட்டேன் )
தாஸ பூத (ஸ்வத ஸர்வே -இதைத் தவிர வேறே அடையாளம் இல்லை -பந்தத்திலும் மோக்ஷத்திலும் -ஹாரீத ஸ்ம்ருதி)
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய(கோசலேந்த்ரஸ்ய -ராமாயணம் )
பரவா நஸ்மி -என்கிறபடியே
பகவத் அநந்யார்ஹ சேஷ பூதன் (தீர்ந்த அடிமை) என்று அறிந்து

(தாஸபூதா: ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்!!
இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர்.
அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.)

(தீர்த்தனுக்கு அற்றபின் மற்றுஓர் சரணில்லை என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும் வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களேஎன்று பூசித்து நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.–7-10-11)

அத்தாலே
தேஹ ஆத்ம அபிமானம் என்ன
ஸ்வ ஸ்வா தந்தர்யம் என்ன
அந்ய சேஷத்வம் என்ன
ப்ரயோஜனாந்தர சம்பந்தம் என்ன
இவை இத்தனையும் குடநீர் வழிந்து

விஷய விஷ தர வ்ரஜ (சப்தாதி ஐந்து தலை பாம்பு சரப்பக் கூட்டம் )வ்யாகுலமாய்
ஜனன மரண சக்ர நக்ர ஆஸ்பதமாய்(முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்)
ஸ்வ பர ஸ்வரூப திரேதாந கரமாய்(கத்யத்ரயம் )
விபரீத விருத்த ப்ரவர்த்தகமாய்
அநந்த க்லேச பாஜனமான ஸம்ஸாரத்தில் பயமும்

(விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே
அகதிர் அசரணோ பவாப்தவ் லுடந் வரத சரணம் இத்யஹம் த்வாம் வ்ருணே –ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -82-

வரத
விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே –சப்தாதி விஷயங்கள் ஆகிற சர்ப்ப சமூகங்களால் நிபிடமாயும்
ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே –பிறப்பு இறப்பு ஆகிற முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்
பவாப்தவ் லுடந் அஹம் –சம்சாரக் கடலில் புரளா நின்ற அடியேன்
அகதிர் அசரணோ இதி –உபேயாந்த்ர ஸூந்யன் உபாயாந்தர ஸூந்யன் என்கிற காரணங்களால்
த்வாம் சரணம் வ்ருணே -உன்னை சரணம் புகுகின்றேன்)

(இரண்டு விபூதியும் நித்யம் -நித்ய விபூதி ஸ்வரூபத்தாலே நித்யம் -லீலா விபூதி ஸ்வ பாவத்தால் நித்யம் -ப்ரவாஹத்வேன நித்யம்
இங்கும் கைங்கர்யம் நித்தியமாக இருந்து இருந்தால் அங்கே போக த்வரிக்க வேண்டாம்)

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -அஞ்ஞானமும் அது அடியாக தீய அனுஷ்டானங்களும் –
அது அடியாக ப்ராக்ருதத்தில் அழுந்தி இருப்பதால்-சம்சாரத்தில் பயமும் பரம ப்ராப்யத்தில் ருசியும் வர வேண்டுமே )

ஸம்ஸாரத்தில் பயமும் –நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான பகவத் கைங்கர்யம்
ஆகிற பரம ப்ராப்யத்தில் ருசியையும் யுடையனாய் (அள்ள அள்ளக் குறையாத -ஸூகம் ஒன்றே -ஆஹ்லாத கரம் )

(கீழ் எல்லாம் ஞான தசை -இனி சாதன தசை-அறிந்த பின் அனுஷ்டானம் வேண்டுமே )

அஸ் ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான பரம ப்ராப்ய ஸித்திக்கு
தர்மேண பாபம் அப நுததி(மஹா நாராயண உப நிஷத் )
யஜ்ஜேன தானேந தபஸா நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-(ப்ரஹதாரண்யம்உப நிஷத்  )என்கிறபடியே

த்ரிவித பரி த்யாக பூர்வகமாக அனுஷ்டிதமான கர்ம யோகத்தாலே(நெஞ்சை நிலை நிருத்த கர்ம யோகம் வேண்டுமே )
த்ருதே பாதாதி வோதகம் -(தண்ணீர் ஒழுகிப் போமா போல் )என்று
துருத்தி மூக்குப் போலே ஞான ப்ரசரண த்வாரமான நெஞ்சை ( பட்டி மேயாதபடி )அடைத்து
அந்யதா ஞான விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸூக்களை
மனனகம் மலமறக் கழுவி -என்கிறபடியே
மறுவல் இடாதபடி ஷீணமாக்கி

(பிராகிருத சரீரம் என்பதால் -பட்டி மேயாதபடி அடைத்ததுக்கும் மேல் -மிஸ்ர ஸத்வம் மாற்றி –
பெருமாளை நோக்கித் திருப்ப ஸூத்த ஸத்வம் வேண்டுமே
தீ மனம் கெடுத்ததுக்கும் மேல்
மருவித் தொழும் மனமும் வேண்டுமே-மூன்றினில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று)

அம் மிஸ்ர ஸத்வத்தை அறுத்து
ஸத்வாத் சஞ்சாயதே ஞானம்
ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகம் -என்று
யதாவத் ஞான சாதனமான அந்த ஸத்வத்தாலே
ஆகார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி (சாந்தோக்யம் )-என்கிறபடியே
சாஷாத்கார பர்யந்தையான அநவரத பாவனை பிறந்து அது

(யதாவத் ஞான-உள்ளபடி அறிய ஸத்வம் –
ஞான அனுதயம் அறியாமலே போகவும் –
குணங்களையும் பொருளையும் மாற்றி அறியவும்-அந்யதா விபரீத ஞானம் வர ரஜஸ் தமஸ்ஸூக்கள்)

(ஞானம் பக்தியாக மாற அன்பு -ஸ்நேஹம் -காதல் -வேட்க்கை வேண்டுமே-த்ருவா ஸ்ம்ருதி தானே த்யானம் –
வேதனம் த்யானம் -அறிகை தியானம்-சிந்தனை – இடைவீடு இல்லாமல் தொடர்ந்து-அநு த்யானம் -இத்துடன் அன்பு ஸ்நேஹம் கலந்து )

ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -என்கிற
பக்தி ரூபா பன்னையாய்
அதனுடைய விபாக தசையாய்
அந்த பக்தி -பகவத் ஸம்ஸ்லேஷ வியோக ஏக ஸூக துக்கனாம் படி பண்ணக் கடவதாய்

(பரபக்தி நிலை -அவன் இடம் மட்டுமே -கூடி இருந்தால் சுகம் பிரிந்தால் துக்கம்)

யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய(நாயமாத்மா ஸ்ருதி -முண்டகம் -காட்டவே காணலாம் )
பக்த்யா மாம் அபி ஜாநாதி-(18-55)
பக்த்யா த்வந் அந்யயா சக்ய–(11-54)
மத் பக்திம் லபதே பராம் –(18-54)என்று
சாதன தயா ஸாஸ்த்ர ஸித்தமான பரபக்தியை ஸாதித்தல்

(நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ
ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன ।
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴ய-
ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் -முண்டக॥ 3॥)

(இந்த மூன்றில் கீழ் இரண்டும் கீதா ஸ்லோகங்கள் ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் உண்டே-)

(ஸ்ரீ சரணாகதி கத்யம்–சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பரபக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் )

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே பக்தி ஒன்றாலே முடியும் –

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.)

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.)

அங்கன் அன்றிக்கே
ஸாத்யமான ஸகல ஸாதனங்களையும் ஸ அங்கமாகவும் ஸ வாசனமாகவும் விட்டு
துஷ்கரத்வாதி தோஷ தூரமாய்
ஸ்வரூப அநு ரூபமாய்
(கண்ணனே சாதனம் என்பதால் )வாத்சல்யாதி குண விசிஷ்டமாய்
நித்ய அநபாயினியான பிராட்டியையும் ஸஹ காரியாக ஸஹியாத படி நிரபேஷமாய்
தஸ்மாந் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதி ரிக்தம் தபஸ் ஸ்ருதம்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்
பாவநஸ் ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸித்தமான ஸித்த ஸாதனத்தை ஸ்வீ கரித்தல் செய்து

(யாஜ்ஞிகீயமான உபநிஷத்தில்
சத்யம் தபோ தம சமோ தானம் தம ப்ரஜனனம் அக்னய
அக்னி ஹோத்ரம் யஜ்ஞோ மானசம் நயாசோ த்வாதச -என்று
ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாக சொல்லிப் போந்து-12 தபஸ்ஸுக்கள் நியாஸமே உயர்ந்தது –
ப்ரபத்தியும் கண்ணனும் ஒன்றே என்று கொண்டு அருளிச் செய்கிறார்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்-ஒரே வேற்றுமையில் இங்கு
பக்தியே கண்ணன் சொல்ல மாட்டோம் -அவன் இடம் பக்தி பண்ணி அடைய வேண்டும்)

———-

(சாதனங்களை அருளிச் செய்து மேல் கர்மங்கள் போவதை பற்றி விளக்கி அருள்கிறார்)

(பக்திக்கு சஞ்சித கர்மங்களை அவன் தொலைத்து பிராரப்த கர்மாக்களை நாமே தொலைக்க வேண்டும்
ப்ரபத்திக்கு இரண்டுமே அவனே தொலைத்து சரீர அவசானத்தில் பேறு-கால விளம்பம் இதுக்கு இல்லையே )

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் -தீயில் இட்ட பஞ்சு போலவும் தாமரை இலைத் தண்ணீர் போலவும்)

ஆக இப்படி ஸித்த ஸாத்ய ரூபமான சாதன த்வய அவ லம்பநத்தாலே
ஏவம் விதி பாபம் கர்ம நஸ் லிஷ்யதே
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே தூ நுதே
ஸூஹ்ருதஸ் ஸாது க்ருத்யாம் த்விஷந்த பாப க்ருத்யாம்
தஸ்ய ப்ரியா ஞாதாயஸ் ஸூ ஹ்ருதம் உப யந்தி அப்ரியா துஷ் க்ருதம்
அஸ்ய இவ ரோமாணி விதூய பாபம்(சாந்தோக்யம் )
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று(கீழ் பிரமாணங்கள் பக்திக்கும் இது பிரபத்திக்கும் )
புண்ய பாப ரூபமான பூர்வாகத்தை ஸூ ஹ்ருத்துக்கள் பக்கலிலும் துஷ் க்ருதுகள் பக்கலிலும் பகிர்ந்து ஏறிட்டு
ப்ரமாதிகமாய் (கவனக் குறைவால் ) புகுந்த உத்தராகம் ஈஸ்வரன் திரு உள்ளத்தில் படாமையாலே கழன்று

ஆக
இப்படி பூர்வாக உத்தராகங்களினுடைய
அஸ்லேஷ விஸ்லேஷ ரூபமான விமோசனம் பிறந்து

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் –
தீயில் இட்ட பஞ்சு -அஸ்லேஷ ரூபமான போலவும்
தாமரை இலைத் தண்ணீர் – விஸ்லேஷ ரூபமானபோலவும்)

(ஸ்ரீ பாஷ்யம் நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-ஆவ்ருத்தி முதல் பாதம் –
அடுத்து -இரண்டாம் பாதம் -உத் க்ராந்தி பாதம் -அத்தை இங்கு விளக்கி அருள்கிறார்-கதி பாதம் முக்தி பாதம் அடுத்தவை )

(4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இல்லை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்

ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாதுஎன்றும் –ஒட்டாதவற்றையும்

சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்

ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே)

போகே ந த்விதரே ஷபயித்வாதா ஸம் பத்யதே -என்கிறபடியே
ஆரப்த கர்ம அவசானத்திலே யாதல்(ஜன்மாந்த ஸஹஸ்ரங்கள் ஆகலாம் பக்தனுக்கு )
யன் மரணம் தத வப்ருதா(அவப்ருத ஸ்நானம் போல் )
மரணமானால் (மரணம் ஆக்கி அல்ல )–என்கிறபடியே
ஆரப்த சரீர அவசானத்திலே யாதல்(இந்த சரீரம் முடிவிலேயே )

இம் முமுஷு சேதனன் இஸ் ஸரீரத்தை விட்டுப் போம் போது
அதி ப்ரபுத்தோ மாமேவ அவலோகயந் (ஸ்ரீ வைகுண்ட கத்யம் )-என்கிறபடி தான் ஈஸ்வரன் என்று இருத்தல்
காஷ்ட பாஷாணா ஸந் நிபம் அஹம் ஸ்மராமி மத் பக்தம் என்றும்
மாம் அநு ஸ்மரணம் ப்ராப்ய -என்கிறபடியே

(அஹம் மனு -நானே ஈஸ்வரன் ப்ரஹ்லாதன் போல் -பக்தி நிஷ்டன்
அவனே நினைவில் வைத்து -பேற்றுக்கு நினைவு அவன் உபாயம்
இரண்டையும் அருளிச் செய்கிறார் )

(வேதாந்தங்களில் மகா பதமாக சொல்லுகிற பக்தியைக் காட்டில் இப் பிரபத்திக்கு ஏற்றம் என் என்னில்
அது 1-அதி க்ருதாதிகாரமுமாய்
2-துஷ்கரமுமாய்
3-விளம்ப பல பிரதமுமாய்
4-பிரமாத சம்பாவனை யுள்ளதுமாய்
5-சாத்யமுமாய்
6-ஸ்வரூப அநனு ரூபமுமாய்
7-பிராப்யத்துக்கு விசத்ருசமுமாய் இருக்கும் -8-அந்திம ஸ்ம்ருதி வேண்டும்

இதுவோ என்றால்
அதுக்கு எதிர்த் தட்டாம்படி 1-சர்வாதிகாரமுமாய்
2-ஸூ கரமுமாய்
3-அவிளம்ப பல பிரதமுமாய்
4-பிரமாத சம்பாவனையும் இன்றிக்கே–5-சித்தமுமாய்
6-ஸ்வரூப அனுரூபமுமாய் -7-பிராப்யத்துக்கு சத்ருசமுமாய் இருக்கும் -8-அஹம் ஸ்மராமி -அந்திம ஸ்ம்ருதி வேண்டாம் )

ஸ்திதே மனஸி ஸூஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

ஈஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாதல் செய்து
அஸ்ய ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங் மனஸி ஸம் பத்யதே(ஹஸ்தே புஸ்தகம் போல் ஸம்யோகம் -வாக்கு மனசில் சம்யோகம் -லயம் )
இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யதே மாநை
அத ஏவ ஸர்வாண்யநு(4-2-2) –என்கிறபடியே வாக் இந்த்ரியமும் அல்லாத கரணங்களும் லயித்து(ஸம்யோக மாத்திரம் )

(பின் ஆகாரம் கார்யம் அழிந்து முன் காரண அவஸ்தையில் ஒன்றுதல்
மண் -நீராகி -அக்னியாகி லயம்
மனஸ் வாக்கு சம்யோகம் தானே கார்ய காரண பாவம் இல்லையே)

மந ப்ராணே
தந் மந ப்ராண உத்தராத் -(4-2-3)என்று
ஸர்வ இந்த்ரிய ஸம் யுதமான மநஸ்ஸூ ப்ராணன் பக்கலிலே ஏகீ பவித்து
ஸோத் யஷே(சஹா அத்யக்ஷ ஜீவன் இடம் )
ஏவமேவம மா மாத்மாநம் அ ந்தகாலே ஸர்வே ப்ராணா அபி ஸமா யந்தி -என்கிறபடியே

பிராணன் ஜீவனோடே கூடி
ப்ராணஸ் தேஜஸி -லீயந்தி என்று
ஜீவ ஸம் யுக்தனான பிராணன் பூத ஸூஷ்மத்திலே லயித்து
பூத ஸூஷ்மம்- தான்
தேஜஸ் பரஸ்யாம் தேவதாயாம் (4-2-1 விஷய வாக்கியம் )-என்கிறபடியே
பர தேவதை பக்கலிலே ஏகீ பவிக்கும் –

(பாற்கடல் கடைந்து கிருஷ்ணன் -அமுதமும் பெண் அமுதமும்
மதி மந்தான-வியாசர் மஹா பாரதம் -க்ருஷ்ண த்வைபாயனர்
பாராசூரர் வாக் அமுதம் -உபநிஷத் பாற்கடல்-நூல் கடல் -ப்ரஹ்ம ஸூத்ரம்
மறை பாற் கடலை -திரு நாவின் மந்திரத்தால் கடைந்து பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல்
இங்கும் நூல் பாற்கடல் -உபநிஷத் கடைந்து -கௌஷீகம் சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் கட உபநிஷத்துக்கள் சாரம் –
ஸ்ம்ருதி கீதை ராமாயணம் சாரார்த்தம் -தாமரைக்கு இளம் ஸூர்யன்-கிருஷ்ண ஸூனு -அபய பிரத ராஜ புத்திரர் )

ஆக இப்படி சாதாரணமான உத் க்ராந்தி யுண்டாய்(பொதுவான உத் கிராந்தி இது வரை
அர்ச்சிராதி கதிக்கும் தூ மாதி கதிக்கும் இப்படியே )
சதஞ்ச ஏகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸாம் மூர்த்தாநம் அபி நிஸ் ஸ்ருதைகா தய ஊர்த்வம் ஆயந் அம்ருதத்வ மேதி -(கட உபநிஷத்-அம்ருதம் -ப்ரஹ்மம் அறிந்து ம்ருத்யு தாண்டி அம்ருதத்வம் ஆப் நோதி )
ஊர்த்வம் ஏகா ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா ஸூர்ய மண்டலம் -ப்ரஹ்ம லோகம் அதி க்ரம்ய தேந யாதி பராம் கதிம்-(தேந -ஸூர்ய கிரணங்களால் )-என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
ஹ்ருதய கமல அவ லம்பிகளான (பற்றுக் கொம்பாகக் கொண்டு )நூற்றொரு நாடிகளில் தலையில்
ஊர்த்வ கபால வலம்பியான நூற்றோராம் நாடியாலே(ஸூஷ்ம்நா நாடி மூலம் அர்ச்சிராதி கதி 4-2-16)

ததோ கோக்ர ஜ்வலநம்(4-2-16-)

(ததோ கோக அக்ர ஜ்வலநம் தத் பிரகாசித த்வாரோ வித்யா சாமர்த்யாத் தத் தேஷ கஸ் யநு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்த அநு க்ருஹீதஸ் ஸதாதி கயா

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச -அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான ஸூ ஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்
இந்த சிறப்பான உத்க்ராந்தி கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ் ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது மிகவும் நுண்ணியமான நாடி –
ய நு ஸ்ம்ருதி-அர்ச்சிராதி மார்க்க சிந்தனையால் அவனுக்கு ப்ரீதி -சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-)

தத் ப்ரகாஸி தத்வாரோ வித்யா ஸாமர்த்யாத் தச் சேஷகத்யனு ஸ்ம்ருதி யோகாச் ச ஹார்த்த அநு க்ருஹீதஸ் ஸதாதி கயா -என்கிறபடியே
இவன் தன்னை ஆஸ்ரயிக்கையினாலும்
அர்ச்சிராதி கதி சிந்தனையினாலும்
அதி ப்ரீதனாய் –
ஹ்ருதய குஹா கதனான ஈஸ்வரனுடைய ப்ரஸாத விசேஷத்தாலே ப்ரகாசித த்வாரனாய்க் கொண்டு
ய ஏஷ ஸ்தந இவா லம்பதே சேந்த்ர யோநி (தைத்ரியம்-இந்த்ர யோநி-ஆத்ம ஸ்தானம் )-என்று
முலை போலே நாலுகிற ஹ்ருதய குஹையினின்றும் புறப்பட்டு உச்சந்தலை அளவும் சென்று

வ்ய போஹ்ய ஸீர்ஷ கபாலே -என்று தலை யோட்டைப் பிட்டு(ரந்தரம் -தலை ஓட்டை )
அத யத்ரைத தஸ்மாச் சரீரா துத் க்ரமாதி(அத ஏதத் ரத அஸ்மாச் சரீர உத் க்ரமாதி)
அத தைரேவ ரஸ்மிபிர் ஊர்த்வமா க்ரமதே(அத தைரேவ ரஸ்மிபிர் ஊர்த்வம் அக்ரமதே)
ரஸ்ம்ய அநு சாரீ (4-2-17)-என்கிறபடியே
அந்நாடியோடே பிடையுண்டு கிடக்கிற (பிணைக்கப்பட்டு உள்ள ஜீவன் )ஆதித்ய ரஸ்மி விசேஷத்தாலே
அஸ்யைவ ச உப பத்தே ரூஷ்மா (4-2-11-)
ஸூஷ்மம் ப்ராமண தஸ்ச ததா உப லப்தோ –(4-2-9)என்கிறபடியே
ஊஷ்ம லக்ஷணையான ஸூஷ்ம ப்ரக்ருதியோடே புறப்பட்டு போம் போது

(ஸூஷ்மம் ப்ராமண தஸ்ச ததா உப லப்தோ –(4-2-9)

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்)

(4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்)

(அஸ்யைவ ச உப பத்தே ரூஷ்மா (4-2-11-)

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால் ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –)

(ரஸ்ம்ய அநு சாரீ (4-2-17)

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் சூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் -இரவிலும் சூர்ய கிரணங்கள் உண்டே
நாடிகளுக்கும் சூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு -சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –)

அர்ச்சிஷ மேவ அபி ஸம் பந்தே
அர்ச்சிஷ அஹ அஹ்ந ஆபூர்ய மாண பஷம் ஆபூர்ய மாண பஷாத் யாந் ஷட்  உதங்கேதி மா ஸாம் ஸ்தாந்
மா ஸேப்யஸ் ஸம் வத்சரம் ஸம்வத்ஸர ஆதித்யம் ஆதித்யாத் சந்த்ர மஸம் சந்த்ர மஸோ வித்யுதம்
தத் புருஷோ

அமாநவ ஸ ஏதாந் ப்ரஹ்ம கமயதீத் (வித்யுதம் தத் புருஷோ-இவனே கூட்டிச் செல்கிறான் )யேஷ தேவ பதோ ப்ரஹ்ம பத ஏதேந ப்ரதிபத்ய மாநா இமம் மாநவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே நா வர்த்தந்த இதி

ஸ ஏதம் தேவ யாநம் பந்தாநம் ஆ பத்ய அக்நி லோகம் ஆகச்சதி ஸ வாயு லோகம் ஸ வருண லோகம் ஸ ஆதித்ய லோகம்
ச இந்த்ர லோகம் ச ப்ரஜாபதி லோகம் ஸ ப்ரஹ்ம லோகம்(கௌஷீதகி -அக்னி லோகம் வார்த்தையில்அர்ச்சிஸ் -ஆதித்ய சந்த்ர லோகம் விட்டு வருண லோகம் )

(12 லோகங்கள் மூன்று உபநிஷத்துக்களும் வேறே வேறே பேராகவும் சொல்லும்
சாந்தோக்யம் கௌஷீதகம் கட-இவற்றை சமன்வயப்படுத்து நம் போவார்கள் காட்டி அருளி உள்ளார்

முதல் ஆறும் -அர்ச்சிஸ் -பகல் -ஆபூர்ய மாண பஷம்-(சுக்ல பக்ஷம்)- உத்தராயணம்- சம்வத்சரம் -வாயு
7-ஸூர்ய 8- சந்திரன்-9-மின்னல்-10-வருண 11 இந்திர 12ப்ரஜாபதி

ஸர்வ சாகா நியாயம்
தத்வ சார ஸ்லோகம் -நடாதூர் அம்மாள் வாயு வருண இந்திர பிரஜாபதி லோகம்
ஆதி வாஹிஹா அதிகரணம் இத்தை விவரிக்கும் –)

அக்னிர் ஜ்யோதிர் அஹஸ் ஸூக்லஷ் ஷண் மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா –என்று

(அக்நிர் ஜ்யோதிர் அஹஸ் ஷுக்ல ஷண் மாஸா உத்தராயணம்.–
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா—৷৷8.24৷৷)

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே பிரதமத்திலே
அர்ச்சிஸ் என்றும்
அஹஸ் என்றும்
ஸூக்ல பக்ஷம் என்றும்
உத்தராயணம் என்றும்
சம்வத்சரம் என்றும்
இவ்வோ சப்தங்களால் சொல்லப்படுகிற தத் தத் அபிமான தேவதா பூதரான ஆதி வாஹகரும்(தாண்டி அழைத்து போகிறவர்கள் )

அதுக்கு மேலே
வாயும்  அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்(4-3-2)என்று
வாயு வாக்யனான ஆதி வாஹகனும்
இவ்வளவிலே தம் தாமுடைய எல்லை அளவிலே வழி விட
ஆதித்யன் அளவிலே வந்து

(4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும் ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது
வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது
சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் -தேவ லோகம் என்பதும் வாயுவைக் குறிக்கும்
வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும் யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ -வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-)

அநந்தரம்
பித்வா ஸூர்ய மண்டலம்
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -(சிறிய திருமடல்)என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தைக் கீண்டு
அவ்வருகே புறப்பட்டு சந்திரன் அளவும் சென்று

(ஆரா வமுதம் அங்கு எய்தி -இங்கு -அளப்பரிய ஆரமித்து அரங்க மேய அந்தணன் இருக்க எதனால்
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போக வேண்டும் -திருமங்கை ஆழ்வார்)

இதுக்கு அவ்வருகே வித்யுத் அபிமானியான அமானவன் அளவும் சென்று அவனோடே கூடி
தடித் அதி வருணஸ் சம்பந்தாத்-(4-3-3) என்று மேலே(தடித் -மின்னல் -இதுக்கும் மேல் மூன்று லோகங்கள் உண்டே )
வருண இந்த்ர பிரஜாபதி லோகங்களிலே
தத் தத் அபிமான தேவதைகளாலே ஸத் க்ருதானாய்க் கொண்டு போய்

(4-3-3-தடித்- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் -கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது
ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல்
வருணன் வாயுவின் பின்னாலா மின்னலின் பின்னாலா
மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் தொடர்பு உள்ளதால்
அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் -அமானவனுக்கும் ப்ரஹ்மதுக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –)

அண்டம் பி நத்தி அவ்யக்தம் பி நத்தி தமோ பி நத்தி – என்றபடி
அண்ட கபாலத்தைப் பிட்டு -அவ்வருகே புறப்பட்டு
வாரி(நீர்) -வஹ்நி -அநல -அநில(காற்று) -ஆகாச -மஹத் அஹங்கார ரூபமாய்
ஒன்றுக்கு ஓன்று தசோத்தரமான ஆவரணங்களைக் கடந்து
இத்தனையும் தனக்குள் வாயிலே அடங்கி

அநந்தஸ்ய ந தஸ்ய அந்தஸ் சங்க்யாநம் வாபி வித்யதே -என்றும்
முடிவில் பெரும் பாழ் -என்றும் சொல்லுகிற
ப்ரவ்ருத்தி தத்வத்தைக் கடந்து

ஆக இப்படி சிறை என்கிற கூட்டத்தின் நின்றும் புறப்பட்டுப் போமா போலே
இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையைக் கழித்து
ஒருபடி வெளிநாடு கண்டு

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-11-)

(காட்டி நீ கரந்து உமிழும்*  நிலம் நீர் தீ விசும்பு கால்,* 
ஈட்டி நீ வைத்து அமைத்த*  இமையோர் வாழ் தனி முட்டைக்,* 
கோட்டையினில் கழித்து*  என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,* 
கூட்டு அரிய திருவடிக்கள்*  எஞ்ஞான்று கூட்டுதியே?   )
(ஸ்ரீ வைகுண்ட கத்யம்–சூரணை-3-அவதாரிகை –

இவ் உபாயம் கை வந்தவன் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்
பிராபிக்கும் நித்ய விபூதியையும்
அங்கு உள்ள பிரகாரங்களையும் சொல்லுகிறது -மேல் –
சதுரத் தஸ புவ நாத்மகம் -இத்யாதியாலே –

சதுர தஸ புவ நாத்மகம்
அண்டம்
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம்
சமஸ்தம்
கார்ய காரண ஜாதம்
அதீத்ய –

சதுர தஸ புவ நாத்மகம் –
பூம் யந்தரி ஷாதி யான உபரிதன லோகங்கள் ஏழும்
அதல விதலாதிகள் ஆகிற பாதாள லோகங்கள் ஏழும் ஆகிற பதினாலு லோகங்களு மாய் இருக்கை –
இப்படி இருக்கிறது தான் எது என்னில்
அண்டம் –
இப்படிப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணமாய் இருக்கிற அண்டம் –
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம் –
உத்தர உத்தர தஸ குணிதம்
ஓர் ஆவரணத்துக்கு ஓர் ஆவரணம் தஸ குணிதமாய்
தஸ குணிதமான அவ் வாரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் தஸ குணிதமாய்
இப்படி உகத க்ரமத்தாலே உத்தர உத்தர தஸ குணிதமான ஏழு ஆவரணங்களை உடைத்தாய் –
ஆவரண ச்ப்தகம் ஆவது -வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை –
சமஸ்தம் –
ஓர் அண்டம் இ றே இப்படி இருப்பது
அண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராணய யுதானி ச
ஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27-என்றும்
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் -எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதி யன்ற புறவண்டத்தாய் எனதாவி
உள் மீதாடி உருக்காட்டாதே ஒழிப்பாயோ -திருவாய் மொழி -6-9-5- என்கிறபடியே
ஈத்ருசமான சமஸ்த லோகங்களையும்
கார்ய காரண ஜாதம் –
ஒன்றினாலே உத்பாத்யமாயும் -ஒன்றை உண்டாக்க கடவதாயும் உள்ள வஸ்து சமூஹத்தை
அதீத்ய –
ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்த்தி நோஅர்ஜூன
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே -ஸ்ரீ கீதை -8-16-என்கிறபடியே
கர்ம சேஷம் உள்ளவர்கள் மீண்டு திரியும் படியான ப்ராக்ருத மண்டலத்தை
அபுநா வ்ருத்தி  ப்ராப்தியாகக் கழித்து)

————-

(நித்ய விபூதி த்ரிபாத் விபூதி -மேல் எல்லை இல்லாதது -லீலா விபூதி கீழ் எல்லை இல்லாதது -)

மூன்று மடங்கு என்பது அல்ல -மஹத் -மிகப் பெரியது என்று சொல்ல வந்ததே-

சதுர் புவனம் கீழ் ஏழு மேல் ஏழு -ஸத்ய லோகம் -மேலே இருப்பதையே
ஏழாவது மேல் லோகம்-அர்ச்சிராதி கதியில் 12 வைத்து ஸ்தானம்

50 கோடி யோஜனை தூரம் கீழ் உள்ள லோகம் தொடங்கி ஸத்ய லோகம் உள்ளது
பரணி மேல் இருப்பது போல் பரமபதம் இருக்கும் தூரம் பார்க்கும் பொழுது

மஹான் அஹங்காரம் -கார்யமாகவும் காரணமாகவும் இருக்கும்-பிரக்ருதி கார்யமாகவும் இருக்கும்
14 லோகங்களும் காரணமாகவே இருக்கும்-இவை எல்லாம் தாண்டி மேல் ஆவரணங்கள் -10 மடங்கு பெரிய
வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை சமஸ்தம் –
அதுக்கும் மேல் முடிவில் -பெரும் பாழ் -சூழ்ந்து அகன்று ஆழ்ந்த -ஆறு பரிமாணங்கள் தாண்டிப் போகிறான்

(பிராகிருத வாசனை கழியாமல் போகும் இந்த ஜீவனுக்குத் தான் ஸத் காரம் பண்ணி ஆதி வாஹிகர்கள் மேல் கூட்டிச் செல்கிறார்கள்
அர்ச்சிராதி கதி செல்பவன் எல்லாரும் திரும்ப வருதல் இல்லை
ப்ரம்மா அங்கு செல்ல் அர்ச்சிராதி கதியில் போக வேண்டிய அவஸ்யம் இல்லையே)

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் -உபதேசரத்னமாலை -74-

இரண்டு தடவை அரிசி களைவது போல் -விரஜை நீராடி -ஸூஷ்ம சரீரம் தொலைந்து -ருசி வாசனைகள் கழிந்து –
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -அப்ராக்ருத சரீரம் பெறுவது -மூன்று கார்யங்கள் -த்ரய சம்ப்ரதாயம் -அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -)

(போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே—-ஆர்த்தி பிரபந்தம் -20-)

(இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–ஆர்த்தி பிரபந்தம்-23-)

———

ஸ ஆ கச்சதி விரஜாம் நதீம் -என்கிறபடி
ஸம்ஸார பரம பதங்களுக்கு எல்லையாய்
அம்ருத மயமாய்
விரஜாக்யையான ஆற்றங்கரை அளவிலே வந்தவாறே

சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுஸ்ய தூத்வா ஸரீரம் (ஸூஷ்ம சரீரம் துரந்து )-என்கிறபடியே
ராஹு முகத்துக்கு இரையான சந்த்ரன் ராஹு முகத்தின் நின்றும் புறப்பட்டுப் போமாப் போலே
நெடுநாள் ஸ்வரூபம் கரை ஏறும்படி விழுங்கி விடாய்த்துக் கிடக்கிற  ஸூஷ்மப் ப்ரக்ருதியை விட்டுப் புறப்பட்டவாறே
கரிப் பானையாலே கவிழ்த்து ப்ரபா  ப்ரஸரம் இன்றியிலே திரோஹித ஸ்வரூபமான தீபம்
அதைத் தகர்த்தவாறே கண்ட இடம் எங்கும் தன் ஒளியாமோ பாதி இவனுக்கும்

பரம் ஜோதிர்  உப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே(சாந்தோக்யம் 8-12-2)
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபைதி -(முண்டகம் -அபஹத பாப்மத்வாதிகள் அஷ்ட குணங்களில் ஸாம்யம் )என்று
ஞான ஆனந்த ஸ்வரூப லக்ஷணமாய்(நானே ஞானி -நானே ஞானம் -தர்மி ஞானமும் தர்ம பூத ஞானமும் உண்டே )
ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்(அஸ்திர பூஷண அத்யாயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சத்தில் இறுதி அத்யாயம் )
ஸ்ரீ ஸ்தனம் போலேயும்
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹாஸ்பதமாம் படி
அத்யந்த விலக்ஷண ஸ்வரூபமும்
ஸ்வரூப ஆஸ்ரயமான அபஹத பாப்மத்வாதி குணங்களும்(விளங்கும் -உருவாவது இல்லை )

(நாராயண பர ப்ரஹ்ம -நாராயண பர மாத்மா -நாராயண பரஞ்சோதி-நாராயண பராயணம்)

(அபஹத பாப்ம–விஜூர-விம்ருத்யு -விசோக -விஜிகித்சா -அபிப்யாஸ – ஸத்ய காம -ஸத்ய ஸங்கல்ப)

(கௌஸ்துபம் ஸ்வஸ்தி தீபம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ வத்சம் பிரகிருதிக்கு பிரதி நிதி -கௌஸ்துபம் ஆத்ம சமூகத்துக்கு பிரதி நிதி)

யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரஷாலநாத் மணே
தோஷ ப்ரஹரணாத் ந ஞான ஆத்மந க்ரியதே ததா
யதா உதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம்
ஸ தேவ நீயதே வ்யக்ம் அஸதஸ் ஸம்பவ குத
ததா ஹேய குண த்வம்சாத் அவபோதா தயோ குணா
ப்ரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே –(ஸ்ரீவிஷ்ணு தர்மம்-ஸுநக பகவான் அருளிச் செய்தது ) என்கிறபடியே

(உதபாந கரணாத்)கிணற்றைக் கல்லினால் உள் வாயிலே கிடக்கிற ஜல ஆகாசங்கள் (ஜலாம்பரம்)ப்ரகாசிக்குமா போலேயும்
மல யோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை நேர் சாணையிலே இட்டுத் தெளியக் கடைந்தால்
தன்னடையே தத் கதமான ஒளி பிரகாசிக்குமா போலேயும்
இவனுக்கும் தன்னடையே பிரகாசிக்கும் –

முக்தாத்மா ஸ்வபாவ ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-

(அஸதஸ் ஸம்பவ குத -இல்லாததால் இருந்து ஸத் உண்டாக்காதே -ஸத் கார்யவாதம்)

(இயற்க்கை விளங்கப் பெறுகிறான் -உண்டாகப் பெறுகிறான் அல்ல -அதனால் ஸ்வேந பத பிரயோகம்)

(4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —

சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-)

(4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —

விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது – ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்பு காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டதுஎன்று உறுதி படக் கூறியது –)

ஆக இப்படி ப்ரகாசித ஸ்வரூப ஸ்வ பாவனாய்(ஞான ஆனந்தம் ஸ்வரூபம் -அபஹத பாப்மத்வாதிகள் ஸ்வ பாவம் )
ஸர்வத பாணி பதம் தத் ஸர்வ தோஷி ஸிரோ முகம்
ஸர்வதஸ் ஸ்ருதி மல் லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-(ஸ்ரீ கீதை -13-14ஸ்லோகம் )என்கிறபடியே
ஸ்வ ஸங்கல்ப மாத்ரத்தாலேயே கர சரணாதி அவயவங்களால் கொள்ளும் கார்யங்களைக் கொள்ளும் ஷமனாகையாலே
தாம் மனஸைவ அத்யாதி -(மனஸ்ஸாலேயே கடந்து விடுகிறான் )-என்கிறபடியே
அவ் விரஜையாக்யையான சரித்தை (ஆற்றை)ஸ்வ ஸங்கல்பத்தாலே கடந்து

(ஸர்வத பாணி பாதம் தத் ஸர்வ தோக்ஷி ஸிரோமுகம்–
ஸர்வத ஸ்ருதி மல்லோகே ஸர்வ மாவ்ருத்ய திஷ்டதி–৷৷13.14৷৷

அந்த சுத்தமான ஆத்ம வஸ்து எங்கும் கையும் காலும் இருந்தால் என்ன செய்யலாமோ அதைச் செய்ய வல்லது –
எங்கும் கண் தலை வாய் இவற்றின் காரியம் செய்யும் -எங்கும் செவியின் காரியத்தைச் செய்யும் –யாவற்றையும் சூழ்ந்து உள்ளது)

ஸ அத் வநபாரம் ஆப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்(கட உபநிஷத்-தேர் குதிரை கடிவாளம் -இத்யாதி )
ஸதா பஸ்யந்தி ஸூரயா
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத் வை பஸ்யந்தி ஸூரய -என்கிறபடியே
ப்ராப்ய பூமியாக ஸ்ருதமாய்

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதயோம் அக்னி (கட உபநிஷத்-முண்டகமும் சொல்லும் )-என்றும்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந-என்கிறபடியே(கதிர் ஆயிரம் கலந்தால் ஒத்த )
ப்ராக்ருத தேஜோ பதார்த்தங்களை கத்யோதக் கல்பமாக்கக் கடவதாய்(கத்யோத-மின் மின் பூச்சி-இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ )

காலம் ஸ பசதே தத்ர ந காலஸ் தத்ர வை ப்ரபு -என்கிறபடியே -அகால கால்யமாய்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந -என்று
அபரிமித புண்ய ஸாத்யமான பிரம்ம லோகாதிகளை யமன் குழியாக்கும் வை லக்ஷண்யத்தை யுடையதாய்
தமஸ பரஸ் தாத்
ரஜஸ பராகே
தெளி விசும்பு(9-7-5-கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லையே )
நலம் அந்த மில்லதோர் நாடு(2-8-4) -என்கிறபடியே
அநந்த க்லேச பாஜனமான இருள் தரும் மா ஞாலத்துக்கு எதிர் தட்டாய்
பரம யோகி வாங் மனஸா அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வ பாவமான பரம பதத்திலே

(தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-)

(புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-)

(மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் என்னும்)

அநேக ஜென்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜன்
மோஹாச் ஸ்ரமம் ப்ரயாதோசவ் வாஸநா ரேணு குண்டித -என்றும்
பெரும் காற்றில் தூறல் போலே அநாதி காலம் கர்ம வஸ்யனாய்
ஸ்ருஷ்டனாவது
ஸம் ஹ்ருதனாவது
ப்ரஹ்ம லோகஸ்தனாவது
பாதாளஸ்தனாவது
தேவனாவது
ஸ்தாவரமாவது
ஸ்த்ரீ யாவது
புருஷனாவது
ப்ராஹ்மணானாவது
சண்டாளனாவது
பாலனாவது
வ்ருத்தனாவதாய்

ஒரு நிலையிலே நிற்கப் பெறாதவனாய்
காலிலே சீலை கட்டி ஜங்காலனாய்
கண்டிடம் எங்கும் தட்டித் திரிந்தவன்
மீட்டுத் தட்ட வேண்டாத படி

அத் வந பாரமான தேசத்திலே வந்து புகுந்து
ஸா லோக்யம் பெற்று(இங்கும் ஸா லோக்யம் இருந்தாலும் ஞானம் மழுங்கியதால் அறியாமல் இருக்கிறோம் -அங்கே தானே உணர்கிறோம் )

1-ப்ராக்ருதமாய்
2-குண த்ரயாத்மகமாய்
3-மாம்ஸாஸ்ருகாதி மயமாய்
4-பரிணாம ஆஸ்பதமாய்
5-கர்ம ஹேதுகமாய்
6-அஸ்வா தீனமாய்
7-ஸ்வரூப திரோதான ஆகரமாய்
8-துக்க அனுபவ உப கரணமான உடம்பின் கையிலே அநாதி காலம் பட்டுப் போந்த பழிப்பு அடையத் தீரும் படி

1-அப்ராக்ருதமாய்
2-ஸூத்த சத்வாத்மகமாய்(தூ மணி துவளில் மணி இல்லையே )
3-பஞ்ச உப நிஷத் மயமாய்
4-ஏக ரூபமாய்
5-பகவத் ப்ரஸாத ஹேதுகமாய்
6-ஸ்வ அதீனமாய்(ச ஏகதா பவதி கொள்ளலாமே )
7-ஸ்வரூப ப்ரகாசகமாய்
8-கைங்கர்ய ஸூப அனுபவ உப கரணமாய்
திவ்ய மங்கள விக்ரஹ ஸ ஜாதீயமான உடம்பைப் பெற்று
இப்படி லப்த ஸ்வரூபனாய்

———–

(திவ்யம் -அப்ராக்ருதம்-பஞ்ச உபநிஷத் -சக்தி-மயம் – பரமேஷ்டி புமான் விஸ்வக நிவ்ருதக சர்வக
மங்கள-கல்யாணம் ஸூ பாஸ்ரயம் -பரம பத த்யான சோபானம் -படிக்கட்டுக்கள் திருவடி தொடங்கி
ஸாலோக்யம்- ஸாம்யா பத்தி -ஸா ரூப்யம்- ஸாமீப்யம்- ஸாயுஜ்யம் -நித்ய யுக்தன் -உடன் சேர்ந்து அனுபவிப்பது
காவேரி விரஜை -சந்த்ர புஷ்கரணி போல் இங்கும்

ஜரம் மதீயம் ஸரஸ்-புஷ் கரணி -அஸ்வத்த மரம் –ஸ்தல நதி ஸ்தல தீர்த்தம் ஸ்தல வ்ருஷம் ஸ்ரீ ரெங்கம் ப்ரத்யக்ஷமாக நாம் காண்கிறோம்

கௌஷீகி பர்யங்க வித்யை போல் சூழ் விசும்பு -வந்தவர் எதிர் கொள்ள -தர்சனத்தால் காட்டி அருளினார் அன்றோ
பராவரர்கள் சூட்டும் ஆத்ம அலங்காரம் -சூடகமே போல் )

ஜரம் மதீயம் ஸரஸ் -என்கிற திவ்ய ஸரஸ்ஸிலே அஸ்வத்தளவும் சென்றவாறே
தம் பஞ்ச சத அந்யப் சரஸஸ் ப்ரதிதா வந்தி சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சன ஹஸ்தா
சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாஸோ ஹஸ்தா சதம் பணா ஹஸ்தா (சிகை அலங்காரம் )என்கிறபடி
ஐந் நூறு அப்சரஸ் ஸூக்கள் வந்து எதிர் கொள்ள
பர்த்ரு க்ரஹத்துக்கு வரும் பெண்களை அவ்வூர்க் குளக்கரையிலே குளிப்பாட்டி
ஒப்பித்துக் கொண்டு போகும் பந்துக்களைப் போலே
தம் ப்ரஹ்மா அலங்காரேணால் அங்குர்வந்தி -(கௌஷீகி)என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாத னுக்கு சத்ருஸமாக ஒப்பித்துக் கொண்டு போம் போது(சூடகமே இத்யாதி ஆத்ம பூஷணங்கள் பராவரர் சூட்டும் )

தம் ப்ரஹ்ம கந்த ப்ரவசதி
தம் ப்ரஹ்ம ரஸ ப்ரவசதி
தம் ப்ரஹ்ம தேஜஸ் ப்ரவசதி
ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ
பரஞ்சோதி -என்கிறபடியே -சர்வேஸ்வரனுடைய
திவ்ய பரிமளத்தையும்-திவ்ய போக்யதையும்
திவ்ய தேஜஸ்ஸையும் யுடையவனாய்

(ஸூர்ய கோடி ப்ரதீகாச -என்கிறபடியே -அநேகம் ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
கண் கொண்டு காண ஒண்ணாத படி நிரவதிக தேஜஸ்சை யுடையனாய்-கந்தம் மூக்குக்கு -ரஸம் நாவுக்கு -தேஜஸ் கண்ணுக்கு )

பரம பதத்தில் நாட்டு எல்லையைக் கழித்து
ஸ ஆ கச்ச தீந்த்ர பிரஜாபதி த்வார கோபவ் (காவலர்கள் )-என்றும்
கொடி யணி நெடும் தோள் கோபுரம் குறுகினர் -என்கிறபடி
அபராஜிதா ப்ரஹ்மண என்று
அபராஜி தாக்யையான (பேர் பெற்ற )ப்ரஹ்ம புரத் த்வார கோபுரத்து அளவும் வந்து

(யோஜூம் அசக்த்யா -அபராஜி தாக்யையா-ஜெயிக்க முடியாத -அயோத்யா)

அநாதி காலம் இந்திரியங்கள் கையிலும்
மஹதாதிகள் கையிலும்
எளிவரவு பட்டுப் போந்த இவன்
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே
தேசாந்திர கதனான ராஜ புத்ரன் வரும் போது ராஜ பரிகரம் புறப்பட்டு தம் தாம் தரத்திலே எதிர் கொள்ளுமா போலே
த்ரிபாத் விபூதியில் உள்ள ஸூரி வர்க்கம் அடைய
வ மஞ்சியாக -(அமஞ்சி -கூலி இல்லாத வேலை-காதலுடன் விரும்பி செய்தல் )திரண்டு எதிர் கொள்ள
அவர்களோடே கூட ஒரு பெரிய திரு நாள் போலே ஸ ஸம் ப்ரமமாக உள்ளே புக்கு
ராஜ மார்க்கத்தாலே போய்ப் ப்ரஹ்ம வேஸ்மத்திலே சென்று

(ஓடுவார் -விழுவார் உகந்து ஆலிப்பார் -நாடுவார் நம்பிரான் எங்குற்றார் என்பார் -என்றும் –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்பராய்க் கொண்டு
பெரிய ஆர்ப்பரத்தைப் பண்ணித் திரள் திரளாகப் புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய
ஆனந்த களகளத்தைக் கண்டு அனுபவித்துக் கொண்டு –பெரிய ப்ரீதியோடு போகிற வளவிலே)

(காவேரிக்கு உள்பட்ட நாடு ஸ்ரீ ரெங்கம் -சப்த பிரகாரம் -சந்த்ர புஷ்கரணி -புன்னை மரம் ஆஸ்தானம் -திரு மா மணி மண்டபம்
காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேசய  பிரத்யட்சம் பரமம் பதம்”

விமாநம் பிரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம்
ஸ்ரீ ரங்க சாயி பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:

பர வாஸூ தேவன் -விமானத்தில் சம பிரதானம்- வ்யூஹ ஸுஹார்த்தம் பெரிய பெருமாள் பிரதானம்)

(சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்ய தேசே ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்க ராஜம் பஜேஹம் —1)

தீர்த்தம் -காவேரி விராஜா
ஐரம் வாதம் -சந்த்ர புஷ்கரணி
காலஜ்யம் பட்டணம் -ஸ்ரீ ரெங்கம்
அபராஜிதா -சப்த பிரகாரம் நடுவில் கோயில்

அஸ்வத்த வ்ருஷம் வெளியில் பார்த்தோம்  உள்ளே -இல்லியம் வ்ருஷம் போல் புன்னை மரம்
விபு ஸபா ஸ்தலம் -அழகிய மணவாளன் திரு மண்டபம்
விஷக்ஷணம்-வேதிகை -பெரிய மேடை முத்துப் பந்தல் மேல் கட்டி -சேர பாண்டியன்
அமிதவ்ஜஸம் பர்யங்கம்-அமிதவ்ஜஸ் பர்யங்கம்
திருக் கார்த்திகை -ஸாஸனம் -ஸாஸ்வதம் -புறப்பட்டு -கார்த்திகை கார்த்திகை அன்று எழுந்து அருளி -திருக்கைத்தலம் ஸேவை
செங்கழுநீர் திரு வாசல் மண்டபம்-சஹஸ்ர தூணா மண்டபம் அங்கு ஆயிரம் கால் மண்டபம் இங்கு
ஏதத் த்ரைலோக்ய நிர்மாணம் -பிராண ஸம்ஹார காரணம் -ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்கநாத ஸாஸனம் சாஸ்வதம் பரம் ஸ்லோகம் சொல்லி
அழகிய மணவாளன் திரு மண்டபம்-சேர பாண்டியன் ஸிம்ஹாஸனம் சுத்த பாண்டியன் முத்துப்பந்தல் –
ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டின் கீழ் -கலியன் பாட்டை கேளா நிற்கச் செய்தே
நான்கும் போல் இங்கும் பட்டணம் வீடு சபா ஸ்தலம் வேதிகை பள்ளிக்கட்டு)

ஸ ஆ கச்சதி விசஷணாம் ஆ சந்தீம் –என்றும்
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே (சாந்தோக்யம் -8-14-1–ப்ரஹ்ம ஸூத்ரம் -4-3-13)–என்கிறபடி
மணி மயமாய்
அநேகம் ஆயிரம் மாணிக்க ஸ்தம்பங்களாலே
அநேகம் ஆயிரம் ஆதித்ய சங்கங்களை உருக்கி வார்த்து வகுத்தால் போலே
அபரிதமான தேஜஸ்ஸை யுடையதாய்

அவ்வாதித்ய சங்கம் போலே எரிந்து இருக்கை அன்றியிலே
புக்காரை அடைய ஆனந்த நிர்ப்பரர் ஆக்கும்படி ஆனந்த மயமாய்
மஹா அவகாசமான திரு மா மணி மண்டபத்திலே ஏறி

ஸூரி சங்க சங்குலமான நடுவில் நாயக விருத்தியில் சென்று புக்கு(நாயக லக்ஷணம் )
பிரஞ்ஞயா ஹி விபஸ்யதி ஸ ஆகச்ச த்யமிதவ்ஜஸம் பர்யங்கம் சதம் ப்ராணஸ் தஸ்ய பூதம்
சப விஷயச்ச பூர்வவ் பாதவ் -(அமிதவ்ஜஸம்-பர்யங்கத்தின் பெயர் )இத்யாதிகளில் சொல்லுகிற படியே
அநேக தேவதா மயமாய்
அபரிமித விவித விசித்ரித திவ்ய ஸிம்ஹாஸனமாய்

(அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்-சூரணை -176–
அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-)

அதுக்கு மேலே ஆயிரம் தளகமாய்
எப்பொழுதும் ஓக்க அலர்ந்து அழுக்கு அற உருக்கி ஒப்பமிட்ட மேரு போலே
ஓங்கின கர்ணிகை யுடைத்தான திவ்ய கமலமாய்

அதின் மேலே அம்ருத பேந படல பாண்டரனாய்(பேந-நுரை -நெற்றியில் -பணா மண்டலம் -வெள்ளை வெள்ளத்து அரவணை )
ஸ்வ ஸாஹஸ்ர ஸிரோந் யஸ்த ஸ்வஸ்திகா அமல பூஷண(ஸ்வஸ்திகா-துதங்கள் ஆர்த்த )
பணா மணி ஸஹஸ்ரேண யஸ்ஸ வித்யோ தயந்தி ஸ -என்றும்
பண மணி ஸஹஸ்ராட்யம் -என்றும்
பணா மணி வ்ராத மயூக மண்டல ப்ரகாஸ மாநோதர திவ்ய தாமநி(ஸ்தோத்ர ரத்னம் )
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த -என்கிறபடியே
பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே விரிகிற பணா ஸஹஸ்ரங்களில் இள வெய்யில் விளங்குகிற ஆதித்ய நிவஹம் போலே
அம் மண்டலத்தோடே மாளிகையோடே வாசி யறத் தன்னுடைய அருணமாகிற கிரணங்களாலே(மேல்கட்டியாகி)
வழி வார்க்கிற மாணிக்ய மண்டலங்களை யுடையவனாய்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலன்களுக்கு ஏக தாமனாய்
ஸகல கைங்கர்ய ஸாம்ராஜ்ய தீஷிதனான திருவனந்த ஆழ்வானாய்(சென்றால் குடையாம் )

(வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த* வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்* மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை* கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று* என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!)

(கூர்மாதின் திவ்ய லோகான் ததுமணி மண்டவம் தத்தரு சேஷம் தஸ்மின்
தஸ்மின் தர்மாதி பீடம் சதுமரி கமலம் க்ராஹஹ க்ராஹஹநிம்ச
விஷ்ணும் தே விபூஷா ஷினாதே வைனதேயம்
சேநேசத் துவார பாலன் விஷ்ணு முகதான் பிரபத்தியே !!)

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாந பலைக தாமநி |
பணா மணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்ய தாமநி ||–ஶ்லோகம் 39 –

ஆதி சேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணா மணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளி விடும் திரு மடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி யிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப் பட்ட திருவனந்தாழானின் திரு மேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

(அங்கு ஸ்ரீ வைகுண்டநாதன் இருந்த திருக்கோலம் மேல்)

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-)

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு-முதல் திருவந்தாதி )

தஸ்மிந் ப்ரஹ்மாஸ்தே
தஸ்ய உத் சங்கே -என்கிறபடியே
அவன் மடியிலே
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா(காள மேகத்தில் மின்னல் ரேகை )
நீலமுண்ட மின்னன்ன மேனி (மின்னல் மேனி காள மேகம் உண்டால் போல் )-என்கிறபடியே
மஹா மேருவை உருக்கித் தேக்கினால் போலே புற வாய் அடையப் புகர்த்து
அத்தை நீக்கிப் பார்த்தவாறே

(“நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணுபமா…
தஸ்யா ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ பிரம்ம ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட் ”
தைத்திரிய ஆரண்யகத்தில்’ உள்ள ‘நாராயண ஸூக்தம்’

“கரு மேகத்தின் நடுவே திடீரென ஒளி வீசுகின்ற மின்னல் கீற்றைப் போலவும், நெல்லின் முளை போன்று மிகவும் மெல்லியதாகவும்,
பொன்னைப் போன்ற நிறத்துடன், அணுவிலும் நுண்ணியதாகவும், அந்த ஆன்மாவானது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது…..

அந்த சுடரின் நடுவே, இறைவன் பரமாத்வாக, அந்தர்யாமியாக வீற்றிருக்கிறார்…!
அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன்…! அவர் அழிவில்லாதவர்…! ஸ்வயம் பிரகாசத்துடன் விளங்குபவர்…!
தனக்கு ஒப்பாகவோ, மேலாகவோ யாரும் இல்லாதவர்…! ” என்று பொருள்.
வானமாமலை ஸ்ரீ தோத்தாத்திரிநாத பெருமாள் சாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள்.
நீல தோயத மத்யஸ்தா என்பதில் தோயத என்றால் மேகம், ககனம், வானம் என்றெல்லாம் பொருள். அதாவது நீலமேகம்.

பெருமாளை நீலமேகப் பெருமாள் என்று அழைப்பதில் இருக்கும் சுவை அலாதியானது. இந்த நீலமேகம் மலைமாதிரி
அதாவது, அத்ரி மாதிரி இருக்கிறானாம். அதுதான் தோயதாத்ரி இரண்டு சொற்களையும் இப்போது சேர்த்துப் பார்த்தால் .
தோயத+ அத்ரி; அதாவது தோயதாத்ரி என்று வரும். இதைத்தான், எல்லோரும் தோதாத்ரி என்று மாற்றி விட்டார்கள்’)

(இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-)

கண்டார் கண்களை அடைய விரித்து அஞ்ஐனம் எழுதினால் போலே இருண்டு
கரு மாணிக்க மலை மேல் மணித்தடம் தாமரைக் காடுகள் போலே திரு மார்வு வாய் கை கண் யுந்தி காலுடை ஆடைகள் செய்ய பிரான்(8-9)
கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் (திரு நெடும் தாண்டகம் -18)என்கிறபடி
காலமேக நிபாஸ்யாமமான திரு மேனிக்குப் பரபாகம் ஆகும்படி
கண்ட இடம் எங்கும் சிதற அலர்ந்த தாமரைக்காடு போலே சிவந்த கர சரணாதி அவயவ விசேஷங்களாலே
உத் புல்ல பங்கஜ தடாக ஸீதலனாய்(எழுந்து நின்ற தாமரைத் தடாகம் போல் நம் பெருமாள் பட்டர் )
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பவ்வம் மண்டி யுண்டதொரு காளமேகத்தில் கண்ட இடம் எங்கும்
மின் கொடி படர்ந்தால் போல் கிரீட மகுடாதி திவ்ய பூஷிதனாய்

(இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட*
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்-
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!)

யுவா குமாரா
அரும்பினை அலரை (7-10-1)–என்கிறபடியே
அப் பால்யத்தோடே தோள் தீண்டியான யவ்வனத்தை யுடையனாய்
ஸர்வ கந்தா -என்கிற
திவ்ய அங்க பரிமளத்தாலே த்ரிபாத் விபூதியைத் தேக்கி
ஸர்வ ரஸா -என்கிற
ஸர்வ ரஸ சாரஸ்யத்தாலும் ஸூரி சங்கங்களை விஹ்வலராக்கி

ஆதித்யாதி தேஜஸ் பதார்த்தங்களைக் கரிக் கொள்ளி யாக்குகிற தன்னுடைய திவ்ய தேஜஸ்ஸாலே
ஸோபயந் தண்ட காரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா -(ஸ்ரீ ராமாயணம் )என்கிறபடியே
பரமபதத்தை மயில் கழுத்துச் சாயலாக்கி
பொற் குப்பியில் மாணிக்கம் புறம்பு ஒசிந்து காட்டுமா போலே
உள் வாயிலே நிழல் எழுகிற ஞான ஸக்த்யாதி குணங்களையும்

அக் குணங்களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும்
யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
செந்தாமரைத் தடம் கண் -என்று
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைத் தடாகம் போலே
நிரங்குச ஐஸ்வர்யத்தாலும்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலும்-
குதறிச் சிவந்து திருச் செவி அளவும் அலை எறிகிற திருக் கண்களையும்

உள்ளே வெண் பல் இலகு சுடர் என்று -திரு முகத்திலே பால சந்த்ரிகையைச் சொரிகிற மந்த ஸ்மிதத்தையும்
திருக் கழுத்து அடியிலே ஸ்நிக்த நீலமாய் அலை எறிகிற திருக்குழல் கற்றையும்
திரு விளையாடு திண் தோள் (நாச்சியார் 9-3)என்கிறபடியே
பெரிய பிராட்டியார்க்கு லீலா கல்பக உத்யோனமாய்
சார்ங்க ஜ்யாகிண கர்க்க ஸமமான நாலு திருத்தோள்களையும்
இவை தொடக்கமான திவ்ய அவயவ சோபையையும்-(ஸுந்தர்யம் )
ஆ பாத ஸூடம் பெருக்காறு போலே அலை எறிகிற திவ்ய லாவண்ய சிந்துவையையும்

நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் அனுபவித்து அனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம் ஸஸ் சமிந்ததே –என்கிறபடியே
பெரும் கடல் இரைக்குமாப் போலே பெரிய கிளர்த்தியோடே வாயாரப் புகழ்வாரும்
பிணங்கி அமரர் பிதற்றும் குணம்(1-6-4)
கோதில வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் (4-2)-என்கிறபடியே
ஸ்வ அநு பூதமான குணங்களினுடைய தாரதம்யத்தைச் சொல்லி சரஸ விவாத கோலா ஹலம் பண்ணுவாரும்
ஸ ஸம் ப்ரஹ்ம ந்ருத்தம் பண்ணுவாருமாய்
நித்ய ஸூரிகள் திரளாக மொய்த்துக் கொண்டு அப்பெரிய போக ஸம் ப்ரமங்களைப் பண்ணும்
இவர்களுடைய ஒவ்வொரு குண சீகரங்களிலே குமிழ் நீருண்டு(குண சாகரத்தில் திவலையிலே ஆழ்ந்து )

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

—————

(சம்சார தோஷங்கள் -உத் கிராந்தி -அர்ச்சிராதி கதி -முக்த போகம் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்-அம்ருத சாகராந்த நிபக்நம் –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -பரம புருஷார்த்தம் -நான்கு பகுதிகள்)

(வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-)

தான் நிஸ் தரங்க ஜலதி போலே
அவாக்யீ அநாதர -என்கிறபடியே

ஸ்வ அனுபவ ஆனந்த வைபவத்தாலே அவிக்ருதனாய்(ஸ்தைமித்ய)
நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு பன்னெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பான் மதி ஏந்தி
ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -என்கிறபடியே

(ஸ்வரூபம் நினைத்து ஆனந்திக்கும் நித்யோதித தசை —
ஸ்வ பாவம் குணங்கள் நினைத்து ஆனந்திக்கும் தசை சாந்தோதித தசை-நடுக்கடலில் திகைத்து இருக்குமா போல் -)

(பிரசாந்த அநந்த ஆத்ம அநுபவ ஜ மஹா ஆனந்த மஹிம
ப்ரசக்த ஸ்தைமித்ய அநு க்ருத விதரங்க அர்ணவ தசம்
பரம் யத் தே ரூபம் ஸ்வ சத்ருச தரித்ரம் வரத தத்
த்ரயீ பிஸ் ப்ரஷந்தீ பர நிரஸநே ஸ்ராம்யதி பரம் –வரதராஜ ஸ்தவம் 13-)

(என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10)

ஒரு மரகத கிரி (பச்சை மா மலை )தன் கொடி முடித் தலையிலே சந்த்ர ஸூர்யர்களைக் கவ்வி இருக்குமா போலே
எதிர் மடித்த திருத் தோள்களிலே ஆழ்வார்களை ஏந்தி(நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு)
ஒரு திருக் கையைத் திருவனந்த ஆழ்வான் மடியிலே ஊன்றி
ஒரு பக்கத்திலே மின் குழாம் சேர்ந்தால் போல் ஸர்வ ஆபரண பூஷிதையாய்
ஸ்வ வைஸ்வ ரூப்ய வைபவத்தை யுடையளாய்(யதா ஸர்வ கதா விஷ்ணு -அபிமத அனுரூப மிதுனம் )
ஈஸ்வரனை வாய்க் கரையிலே அமிழ்த்தும் படியான ஸீல சரிதங்களை யுடையாளாய்(நங்கையைக் காணும் தோறும் நம்பிக்கும் ஆயிரம் கண்கள் வேணுமே அஸி தேக்ஷிணா இவள் கண் விழி விழிக்க ஒண்ணாதே இவனால் )
உபய விபூதி நாயகியாய்
ஈஸ்வர ஸ்வரூப குண விபூதிகளுக்கு நிரூபக பூதையாய்
ஸ்வ ஸம்பந்தத்தாலே ஈஸ்வரனுடைய சேஷித்வ போக்யத்வங்களைப் பூரிக்கக் கடவளான பிராட்டியோடும்

(நாக போக நிதாய பாஹு த்வேன தாரயன்னு சங்கு சக்ர ஜனயாதி ஜெகதாம் வைகுண்ட நாத-
தேவிமார் உடன் மங்களம் அளிக்கட்டும் பிரார்த்திக்கும் ஸ்லோகம்
சுவையன் திருவின் மணாளான்-)

இடப் பக்கத்தில் இம் மிதுன போகைகளாய் அவளோடு ஒத்த சவுந்தர்யாதிகளை யுடையரான ஸ்ரீ பூமி நீளை களோடும்
ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பதிர் ஆஸ்தே
தயா ஸஹ ஆஸீநம்(அனந்த போகிநி கத்யம் )
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் (இரண்டு ச காரம் பூமி நீளா தேவிகளை -உபநிஷத் )–என்கிறபடியே
கூட எழுந்து அருளி இருந்து

நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு
கண்ட போதே ப்ரீதி ப்ரகர்ஷம் பிடரி பிடித்துத் தள்ள
வேர் அற்ற மரம் போலே விழுவது எழுவதாய்(தண்டவத் ப்ரணாமம் உத்தாய ப்ரணாமம் -தலை விழுந்த இடம் மீண்டும் காலை வைத்து )
ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்கிறபடியே
க்ரம விவஷை இன்றியிலே தாய் நாடு கன்றே போல் ஸத்வரனாய்க் கொண்டு
ஆனந்த மயம் ஆத்மாநம் உப ஸங்க்ராமதி (தைத்ரியம் )-என்கிறபடி சமீபஸ்தனாய்(ஸாமீப்யம் )
இத்தம் வித் பாதேந இவ அத்ய  ஆரோஹதி -என்று
பாத பீடத்திலே காலை இட்டுப் படுக்கையைத் துகைத்து மடியிலே சென்று ஏறும்

அவனும் நெடு நாள் தேசாந்தரம் போன ப்ரஜை சாவாதே (ஆத்ம ஸ்வரூபம் கெடாமல் )வந்தால் பெற்ற தகப்பன் கண் வாங்காதே பார்த்துக் கொண்டு இருக்குமா போலே(இருக்கும் வியந்து -இருந்தான் கண்டு கொண்டே -மூன்று தத்துக்குப் பிழைத்த ஆழ்வாரை பார்த்துக் கொண்டே இருக்குமா போல் )
ஸம்ஸார தாப அனுபவத்தால் வந்த விடாய் எல்லாம் ஆறும்படி அழகிய கடாக்ஷ அம்ருத தாரைகளாலே
குளிர வழிய வார்த்து
ஸம் ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ் வஜே (ஸ்ரீ விஷ்ணு புராணம் அக்ரூரரை கைப் பிடித்து இழுத்து ஆலிங்கனம் )–என்கிறபடியே
தன் நாலு திருத் தோள்களாலும் அரவணைத்து உச்சி மோந்து இவன் நீர்ப் பண்டமாம் படி சில சாந்த்வந உக்திகளைப் பண்ணும்

(வசஸாம் சாந்தயேத்வநம் -வாக்கால் சாந்தனவம் பண்ணி -கடாக்ஷத்தாலும் பேச்சாலும் உருகி நின்ற விபீஷணனை பருகினார் பெருமாள்)

அவனும் ததீய ஸ்பர்ச ஸூகத்தாலே உடம்பு அடைய மயிர் எரிந்து(அங்கும் விகாரம் உண்டோ என்னில் -கர்ம வசத்தால் அல்ல -கிருபை -அனுபவத்தால் ஏற்படுமே)
ரஸம் ஹ்யேவாயம் லப்த்வ ஆனந்தீ பவதி -என்று பரம ஆனந்தியாய்
அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி(சாந்தோக்யம் -8-13-க்ருதாத்மா-செய்த வேள்வியர் -அடியேன் அடைகிறேன் )
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே யசோஹம் பவாமி ப்ரஹ்மணா நாம் யசோ ராஜ்ஜாம் யசோர் விசாம் யசோ -(அனைவருக்கும் ஆத்மாவாக இருக்கிறேன் -சாம்யா பத்தியால் சொல்லிக் கொள்ளலாமே )என்றும்
புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம்(ஸ்ரீ விஷ்ணு புராணம்- 5-17)-என்றும்
கதா அனு ஸாஷாத் கரவாணி சஷுஷா என்றும்
உன் கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே(4-9-8)-என்றும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அப்யேஷ ப்ருஷ்டே மம பத்ம ஹஸ்தே கரம் கரிஷ்யதி -என்றும் சொல்லுகிறபடியே

(காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-)

(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்புஅற்று
ஒளிகொண்ட 2சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம் சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.–2-3-10-)

அத் தேச விசேஷத்திலே சென்று பெறக் கடவோமே
திரு மா மணி மண்டபத்திலே சென்று ஏறக் கடவோமே
நித்ய ஸூரிகளோடே அந்ய தமராகக் கடவோமே
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் காணக் கடவோமே
அவன் திருவடிகளிலே சென்று விழக் கடவோமே-
அணி மிகு தாமரைக் கையால் நம் தலையை அலங்கரிக்கக் கடவோமே –
நம்மைக் கண்டால் இன்னான் என்று திரு உள்ளமாகக் கடவோமே -என்றால் போலே
தன் ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்துக்கு அநந்தரம் பண்ணிப் போந்த மநோ ரதங்கள் அடைய
வயிறு நிரம்பிக் கண்டவிடம் எங்கும் திறந்து பாய்கிற பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

(பக்தி ரூபா பன்ன ஞானம் -ஸாதனம் அல்லவே ஸாத்யமே -அதனால் தானே கத்யத்தில் இத்தை புருஷார்த்தமாகப் பிரார்த்தித்தார்)

(அபி பாகேந த்ருஷ்டத்வாத் -ஸாயுஜ்யம்
ஸஹ ப்ரஹ்மணா -கூடி அனுபவம்
கல்யாண குணங்களோடு கூடிய ப்ரஹ்மத்தை ஜீவன் அனுபவம் என்று அந்வயிக்காமல்
சாந்தோக்ய தசை -அவனும் நாமும் சேர்ந்து கல்யாண குணங்களை அனுபவிப்போமே)

(அதிகரணம் -2-அவி பாகேந த்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு )

(ஸ்ரீ வைகுண்டம்- குடி பிரதி தாதே-என்ற தாது அடியாக -தடுக்கும் –
இந்தத் தடங்கல் -ஏஷாம் விஹத -யார் இடம் இருந்து ஓடி விட்டதோ
தடங்கலே இல்லாதவர் வாழும் இடம் ஸ்ரீ வைகுண்டம்-வைகும் தம் சிந்தை )

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-)

(விஜரா –விரஜா -ஜரை ரஜம்-மூப்புக்கும் ரஜஸ்ஸுக்கும் இரண்டுக்கும் விரோதி -அதனால் இரண்டு பெயரும் உண்டே
ஞான சுருக்கம் தடங்கல் இல்லை என்பதால் ஸ்ரீ வைகுண்டம்)

ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் ஸ்வரூப ரூப குணங்களில் ஒன்றும் பிரி கதிர் பட மாட்டாதே
அப்ராப்தமாய்
அபோக்யமாய்
அஸ்திரமாய்
அதி ஷூத்ரமான
துர் விஷயங்களைக் கவ்வி அநாதி காலம் பட்ட வெறுப்பு அடையத் தீரும் படி
அதற்கு எதிர் தட்டான இவ்  விஷயத்தை அனுபவித்து
அவ் வனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷம் ஒரு பக்கத்திலே கடை வெட்டி விட வேண்டும் படி அணைத் தேங்கலாகத் தேங்கின வாறே

இதுக்குப் பரிவாஹ ரூபமாக
ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–என்றால் போலே
ஜ்வர சந்நி பதிதரைப் போலே வாயாரப் புகழ்ந்து

(போக்யமாகவே முதலில் -அவன் ஆனந்தம் பார்த்து நாமும் ஆனந்தம் அடைந்து போக்த்ருத்வம்
படியாய்க் கிடந்து பவள வாய் காண்போமே)

அத்தால் ஆராமையாலே
விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி –என்கிறபடியே அடிமை செய்வது
அது தனக்கும் ஓன்று இரண்டு பால் ஆராமையாலே
ஸ ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி ஸஹஸ்ரதா பவ தி -என்று
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி அடிமை செய்வது

(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் -நீ எழுந்து அருளும் அவதாரங்கள் தோறும் நானும் வந்து கைங்கர்யம் பண்ண வேண்டுமே -)

த்ரிபாத் விபூதியில் பண்ணும் அடிமையால் ஆராமையாலே
ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –
இமான் லோகான் காமான் நீ காம ரூப்ய அநு சஞ்சரன் -என்று
லீலா விபூதியிலும் தொடர்ந்து அடிமை செய்வதாய்
அப்படி
ஸர்வ தேசங்களிலும்
ஸர்வ காலங்களிலும்
உசிதமான ஸர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி(ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் )
இக் கைங்கர்யத்தால் ஈஸ்வரனுக்குப் பிறந்த முக மலர்த்தியை (அவாக்யீ அநாதர நிலை தவிர்ந்து )அனுபவியா நின்று கொண்டு
நோ பஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -பண்ணி
ந ச புனரா வர்த்ததே -என்கிறபடியே(மீளுதலாம் ஏதம் இலா விண்ணுலகு )
யாவதாத்ம பாவி ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும்

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –ஸ்தோத்ரம் -40–உசிதமான கைங்கர்யங்களையும்

அபய ப்ரதான மிஸ்ராணாம் ஸூனுநா ஸ்வாது நிர்மிதாம்
முக்த போகா வலீம் ஏநாம் ஸேவந்தம் ஸாத்விகா ஜனா

ஸாத்விகா ஜனா-பதினெட்டு நாடர் பெரும் கூட்டம்–ஸேவந்தம்-பருகிக் களிக்கட்டும்

ஸ்ரீ வைகுண்ட த்யானம்
கூர்மாதீன் திவ்ய லோகம் ததநு மணி மயம் மண்டபம் தத்ரக்ஷம்
தஸ்மின் தர்மாதி பீடம் தது பரி கமலம் சாமர க்ராஹிணீ
விஷ்ணும் தேவீ விபூஷாயுத கண முரகம் பாதுகே வைந தேயம்
ஸேநேம் த்வார பாலான் குமுத முக கணான் விஷ்ணு பக்தான் ப்ரபத்யே

திருமந்திர த்யான ஸ்லோகம்
ஸ்வயம் பாதம் ப்ரஸார்ய ஸ்ரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சு யித்வா
ஜானுந் யாதாய ஸவ்யேதரம் இதர புஜம் நாக போகே நிதாயா
பச்சாத் பாஹு த்வயேந ப்ரதிபட ஷமனே தாரயன் சங்கு சக்ரே
தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத

————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in Ashtaadasa Rahayangal, ஸப்த காதை, Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ திருமந்திரமும் நவவித ஸம்பந்தமும்–

November 24, 2022

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் தனியன்.

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதஸ்ய ஸூநவே

ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யகளுக்குள், ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்ற வடக்குத் திருவீதிப்பிள்ளை திருக்குமாரர் பிள்ளை உலகாசிரியர், ஆசார்யர் நம்பிள்ளை அனுக்ரஹத்தால் ஸம்சாரம் (போகி) என்ற பாம்பில் கடியுண்ட நம்போன்ற ஜீவர்களுக்கு மருந்தாக, ஜீவன் ஜீவித்து உஜ்ஜீவனம் அடையவேண்டும், எம்பெருமானது திருவடிகளை அடையவேண்டும், நல்வழியில் நடக்கவேண்டும் என்ற ஒரே பிரயோஜனத்தை திருவுள்ளத்தில் கொண்டு 18 ரஹஸ்ய க்ரந்தங்களை அநுக்ரஹித்தார்.

பலர் பல பல பாசுரங்களை இயற்றலாம். ஸம்ஸ்க்ருதத்தில் ஸ்தோத்திரங்களும் எழுதலாம். ஸ்லோகங்கள் பல. இதிகாச புரணங்களும் பல. அதற்குண்டான வியாக்யானங்களும் பல. ஆனால் புராணங்களைச் சொல்வதைக் காட்டிலும், ஆழ்வார்கள் தாங்கள் தங்கள் பாசுரங்களைப் பாடினதைக் காட்டிலும், திருமந்திரம், துவயம், சரமஸ்லோகம் என்ற மூன்று ஆகியவற்றை ரஹஸ்யத்ரயம் என்பர். அதையே தன் கருத்தில் கொண்டு, அதற்காகவே முமுக்ஷுப்படி போன்ற பல அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்த பிள்ளை உலகாரியனுக்கு தனிச் சிறப்பு.

 அதற்கு வியாக்யானம் அருளிச்செய்த விஸதவாக் சிகாமணியான பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு நம் ஸம்ப்ரதாயத்தில் தனி இடம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் வைஷ்ணவ ஸம்பிரதாயத்துக்கு அனுகுணமான பல அர்த்தங்களை சொல்வதாகவே அமைந்துள்ளது. தத்வத்ரயத்தை என்னவென்று காட்டுவதற்காக சில கிரந்தங்கள். ரஹஸ்யத் த்ரயங்கள் என்னவென்று சொல்வதற்கு சில க்ரந்தங்கள் ஸாதித்தார்.. அதற்குமேலே நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யரின் வைபவம் என்ன என்று சொல்வதற்காக ஸ்ரீவசனபூஷணம் என்ற சிறந்த க்ரந்தம். அந்த கிரந்தம்தான் தலையாய க்ரந்தம். அந்த தலைக்கு  அங்கங்கள் போலே பதினேழு ரஹஸ்ய க்ரந்தங்கள்.

இப்பொழுது நாம் பார்க்கப் போவது நவவித ஸம்பந்தம் ஒன்பது விதமான உறவு எனும் அழகான கிரந்தம். எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கக்கூடிய  ஒன்பது வித ஸம்பந்தங்கள் உறவுகளைச் சாதிக்கிறார் அந்த உறவுகளை எதை வைத்துச் சொல்கிறார் என்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கும்.

திருமந்திரம்:

மூன்று ரஹஸ்யகளுக்குள் ப்ரதம ரஹஸ்யம் அஷ்டாக்ஷரம் – திருமந்திரம்.  ஓம் நமோ நாராயணாய! எட்டு எழுத்துமந்திரம்.  மூன்று பதங்கள். ஓம் என்று ஒரு எழுத்து, நம: என்று இரண்டு எழுத்து. நாராயணாய என்று ஐந்து எழுத்து.

ஓமித்யக்3ரே வ்யாஹரேத்। நம இதி பஶ்சாத் |

நாராயணாயேத் யுபரிஷ்டாத்।  ஓமித்யேகாக்ஷரம் ।
நம இதித்3வே அக்ஷரே
 ।  நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி ।
ஏதத்3வை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பத3ம்
।–என்று திருமந்திரத்துக்குத் தனிச் சிறப்பு.

அந்த எட்டு எழுத்து, மூன்று பதங்களுக்குள் எத்தனை அர்த்தம் இருந்துவிடமுடியும் என்று நமக்குத் தோன்றலாம். அதில் இல்லாத அர்த்தங்கள் ருக், யஜுர், ஸாம வேதத்திலோ மற்று எதிலும் தேடினாலும் கிடைக்காது. ஏனெனில் அவைகளில் உள்ள அர்த்தங்கள் இந்த மூன்று பதங்களுக்குள்ளே அடக்கம். அந்தர்கதம். உள்ளேயே இருக்கிறது என்கிறார்கள் பூர்வர்கள்.

ருஜ: யஜூகும்சி ஸாமாநி ததைவ அதர்வணானி ச ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் … வாங் மய…  அனைத்தும் அந்த எட்டெழுத்துக்குள் அடக்கம்.  அனேக ஸாஸ்திரங்களும், மூன்று வேதங்களும் சொல்லிய அர்த்தங்கள் எல்லாம் இதில் உள்ளது. அப்போழுது இந்த எட்டெழுத்துக்கு எவ்வளவு சீர்மை இருக்கவேண்டும். திருமந்திரத்தை அலகலாகப் பிரித்து.  ஒவ்வொரு எழுத்தும் பகவானுக்கும் நமக்கும் உள்ள ஒவ்வொரு உறவைச் சொல்வதை விவரிக்கிறார்..

நம் சொந்த பந்தங்கள், பெற்றோர், பிள்ளை ஆகிய அனைத்து உறவுகளும் நிலையில்லாதது. இன்றைக்கு இருக்கும், நாளைக்குப் போகலாம்.  புதுப்புது உறவுகள் ஏற்படலாம். பிரியலாம். அதோடு உறவுகளுக்குள் சண்டை இல்லாமல் இருந்ததில்லை. பிதாவுக்கும் புத்திரனுக்கும் கூட பிரச்சினை இல்லாமல் இருந்ததில்லை. தாய்க்கும் தனயனுக்கும் அப்படியே.

ஒழிக்கவொண்ணா உறவு–இப்படித்தான் நமக்கும் பகவானுக்கும் உள்ள உறவா?. ஒரு உறவு இரண்டு உறவைப் போலேயா. நிலையில்லாததா என்ற சந்தேஹம் வரலாம். இதைப் போக்கிவிடவேண்டும் என்பதற்காக நம் பூர்வாசார்யர்கள் பகவானுக்கும் நமக்கும் இருக்கும் உறவு ஒழிக்க ஒழியாத ஒன்பது ஸம்பந்தம் என்று சொல்வர்கள். ஒரு நாளும் யார் எந்த முயற்சி எடுத்தாலும் இந்த உறவை அறுக்க முடியவே முடியாது.

பத்தன், முக்தன், நித்தியன் இம்மூவருக்கும்–பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாவான ஸம்ஸாரிகளுக்கும் ஒன்பது உறவுகள்.. ஜீவாத்மாவில் மூன்று வகை:

  1. பத்தன், (ஸம்ஸாரத்தில் தளையுண்டு நிற்பவர்)
  2. முக்தன், (ஸமாஶ்ரயணம் செய்துகொண்டு ஆசார்யன் க்ருபையால் பகவத் திருவடி ஸம்பந்தம் பெற்று மோக்ஷம் அடைந்து பரமபதம் சேர்ந்தவர்கள்)
  3. நித்தியர்,பெரியவரான திருவனந்தாழ்வான், பெரிய திருவடியான கருத்மான் எனும் கருடன், விஷ்வக்ஶேனர் ஆகிய இவர்கள் வைகுண்டத்தில் பெருமாளோடுகூட எப்போதும் இருப்பவர்கள்.  (நித்திய ஸூரிகள் அஸ்ப்ருஷ்ட ஸம்சாரகர்கள்) – ஸம்ஸாரத் தொடர்பே இல்லாமல் இருப்பவர்கள்).

பத்தர், முக்தர், நித்தியர் ஆகிய மூவருமே ஜீவாத்மாக்கள். இம்மூவருக்கும் பகவானுக்கும் உள்ள நவவித ஸம்பந்தம் எவை என்பதை பார்க்க இருக்கின்றோம்.

நித்தியர்களும் நாமும்:–ஸ்ரீ பிள்ளைலோகசாரியார் இந்த ஒன்பது வித ஸம்பந்தம் சொல்கிறார் என்றால் அது பத்தர்களான ஸம்சாரிகளுக்கு மட்டுமல்ல. முக்தர், நித்தியர் ஆகிய மூவருக்குமே இந்த நவவித ஸம்பந்தம் உண்டு. இதில் ஆச்சர்யம் என்ன என்றால் நித்தியர்களும் நாமும் பகவானோடு ஒரே நிலையில்தான் இருக்கிறோம். அவர்கள் அதிக நெருக்கம் என்றோ, நாம் குறைவான நெருக்கம் என்பதில்லை.

நித்தியர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் எத்தனை உரிமை பகவானிடம் உண்டோ அத்தனை உரிமையும் ஸம்ஸாரிகளான பிரம்மா முதல் எறும்பு வரை  அதே ஒன்பதுவித உறவுகளும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் உண்டு. நவவித ஸம்பந்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள ஏற்ற தாழ்வே வித்யாஸம்..

விலக்கமுடியாத உறவு:–யாராலும் இந்த உறவை விலக்க முடியாது. ஸம்சாரி பகவானின் உறவு வேண்டாம் என்று விலகிப் போகப் பார்ப்பான். ஆழ்வார் பாசுரத்தில் சாதிதார்:

“யானொட்டி  என்னுள் இருத்துவமென்றிலன்*

தானொட்டி வந்து எந்தனிநெஞ்சைவஞ்சித்து*

ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து* இயல்

வானொட்டுமோ? இனி என்னை நெகிழ்க்கவே.”–திருவாய் 1-7-7-

“நான் உன்னிடம் நெருங்கி, நெருங்கி வந்து உன்னோடு சேர்ந்திருக்க வேண்டும். ஒட்டாமல் மட்டும் இல்லை. விலகி, விலகிப் போனேன். வெட்டிக் கொண்டு போனால் போகட்டும் என்று நீ விடவில்லை. எவ்வளவோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள், இவன் என்னத்துக்கு என்று நினைத்து விடாமல்  பகவான் நெருங்கி, நெருங்கி வந்து என்னை சேர்த்துக் கொண்டானே.” ஏன்கிறார் ஆழ்வார்.

நாஸ்திகர்களும் பகவானுடையவர்களே:-உலகில் ஆஸ்திகர்களும் இருக்கின்றனர், நாஸ்திகர்களும் இருக்கின்றனர். எம்பெருமான் உண்டு, உலகம் உண்டு, வேதம் பிரமாணம் என்று ஒத்துக் கொள்பவர்கள் ஆஸ்திகர்கள். இவை எல்லாம் இல்லை இல்லை என்பவர்கள் நாஸ்திகர்கள். இந்த ஸம்பந்தம் ராவணனுக்கும் உண்டு, சிசுபாலனுக்கும் உண்டு. அறிவுடையவர்களுக்கும் உண்டு. அறிவேயில்லாத மரத்துக்கும் உண்டு. எதிர் அறிவு படைத்தவனான ரவணனுக்கும் உண்டு. விபரீத அதிகாரி ராவணன்.

விபரீத அதிகாரிகளுக்கும் இந்த ஒன்பது உறவு உண்டு. அனுகூலர்களுக்கும் உண்டு. பிரஹலாதனுக்கும் அதே ஒன்பது. இரண்யகசிபுவுக்கும் அதே ஒன்பது உறவு உண்டு. ஆத்திகனுக்கும், நாத்திகனுக்கும் இந்த ஒன்பது உறவும் உண்டு. அனைவருக்கும் நவவித ஸம்பந்தமும் உண்டு.இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் வெட்டினோம் என்பதற்காக இந்த உறவை வெட்டி விடமுடியாது.  எம்பெருமான் யாரையும் விலக விட மாட்டார்.

நிரந்தரமான உறவு:-சரி நம்மால் விலக்க முடியாது. ஆனால் பகவானே பார்த்து இந்த ஹிரண்யகசிபோடு நமக்கு உறவு வேண்டாம் என்று வெட்டிவிடுவாரா? என்றால் இல்லை. பகவானும் இந்த ஒன்பது ஸம்பந்தங்களை வெட்ட மாட்டார். ஜீவனுக்கோ வெட்டத் தகுதியில்லை. பக்கத்திலிருக்கும் புருஷாகார பூதையான பெரியபிராட்டியும் விலக்க மாட்டாள். ஏனெனில் பத்தனை பகவானிடம் சேர்த்து வைப்பதற்காகவே பாடுபடுகிறவள் பெரிய பிரட்டியார். நம்மாலும் வெட்ட முடியாது. வேறு யாராலும் முடியாது. ஒழிக்க ஒண்ணாத ஒன்பது வித உறவுகள் என்றார்கள் பூர்வாசாரியர்கள்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித

ஆகவே ஒழிக்க ஒண்ணா உறவு நவவித ஸம்பந்தம். ஸ்ரீய:பதியான ரமாபதியுடன் உள்ள ஸம்பந்தம்:

  1. ஸ்ரீயப்பதி  தந்தை   – குழந்தைகள்  (சிருஷ்டிப்பவன்)

பிதா – புத்ர ஸம்பந்தம். நம் ஸம்ப்ரதாயத்தில் சிஷ்டிப்பவர் பெருமாள்.

  1. காப்பாளன் (ரக்ஷ:) – ரக்ஷ்ய: காக்கப்படுபவன் அவன் நம்மைக் காப்பவன், நாம் காக்கப்படுபவர்கள். வேறு உறவுகளோ செல்வங்களோ எதுவும் நமக்குப் பாதுகாப்பில்லை. அவனே ரக்ஷகன். ஏனெனில் அவனே நமக்குப் பிதா.
  2. ஶேஷி (ஆண்டான்)         – ஶேஷன் (அடிமை)  [என்றென்றும் (ஶேஷியின் நன்மைக்கே இருக்க வேண்டும். அவர் பெருமைக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும்.ஶேஷன். அத்தனையும் அவனுக்கு அடிமை]
  3. பர்த்தா                     – பார்யை (மனைவி)

அனைவரும், புருஷர்கள் கூட பகவானுக்கு பார்யைதான். (ஜீவாத்மவர்க்கம் மூன்றுக்கும்) பகவான் பர்த்தா.   எங்கு திருமணம் நடந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் சைவர்களானாலும், காணாதிபத்தியர்களானாலும் மணமகன் விஷ்ணுவே தான். அழகிய மணவாளன் மாப்பிள்ளை. நாம் எல்லோரும் அவன் பத்தினி – திருமாங்கல்யம் எது?  திருமந்திரமே! ”ஓம் நமோ நாராயணாய” மூன்று பதம் எட்டெழுத்துக் கொண்ட, சரடு  எட்டிழையாய், மூன்று சரடாய் திருமாங்கல்யம். அஷ்டாக்ஷரம்,

பர்த்தா – பார்யை என்பது இன்றுதானே ஏற்படுகிறது. என்றென்றைக்கும் இருப்பது என்று எப்படிச் சொல்வது என்றால் ஸ்ரீராமனுக்கும் (12 வயது) சீதைக்கும், (6வயது) கல்யாணம். ஆனால் இப்பொழுதுதான் திருமணமா?  நாமும் பலபிறவிகள் எடுத்து வந்திருக்கிறோம். அப்பொழுதெல்லாம் பகவான் விஷ்ணுதான் மணமகன். ஆக என்றென்றைக்கும் இந்த உறவும் உண்டு. (என்றென்றைக்கும் எல்லா ஸம்பந்தமும் உண்டு)

  1. ஞேய: (அறியப்படுகிறான் பகவான்) – ஞாத்ரு  (ஜீவாத்மா- அறிபவன்)       

 ஞாதா – அறிபவர், ஞானம் – அறிவு , ஞேயம் – அறியப்படும் வஸ்து. நாம் அறிவை வைத்து இது புஸ்தகம் என்று  தெரிந்து கொள்கிறோம்.  தெரிந்து கொள்ளப்பட்ட புஸ்தகத்தை ஞேயம் (அறியப்படும் வஸ்து) என்று  சொல்வர். அறிய உதவி பண்ணியது எது? அதற்கு ஞானம் என்று பெயர். தெரிந்துகொண்டது யார்?. நாம். நமக்கு ஞாதா என்று பெயர். இங்கு எம்பெருமான் ஞேய: (அறியப்படுகிறார்). அறியப்படுகிறார் என்றால் யாரால் என்ற கேள்வி வரும். அவர்தான் ஞாதாவாகிற ஜீவாத்மா.

  1. ஸ்வ – ஸ்வாமி ஸம்பந்தம்.

ஸ்வாமி – உடையவன்   (ரமாபதி: – ஸ்ரீமன் நாராயணன்)                     – சொத்து ஜீவாத்மா விலிருந்து அனைத்தும். இந்த வீடு நமக்கு சொந்தம் என்றால் அது நமக்கு சொத்து. அதை உடையவன் நான். அதைப்போல பகவானுக்கு அவனைத் தவிர இந்த ப்ரபஞ்சத்தில் அனைத்தும் அவனுக்குச் சொத்து. சொத்து என்றால் அஃறிணைப் பொருள் அல்லவோ என்ற சந்தேஹம் வரும்.  அஃறிணையாய் இருந்தாலும் உயர்திணைப் பொருளாய் இருந்தாலும் எந்த திணையாக இருந்தாலும் அனைத்தும் அவனது சொத்துக்களே. இப்படி ஜீவாத்மாவையும் அசித்துக்களையும் சமமாகச் சொல்லலாமா என்றால் பரதன் அதற்கு விடையளித்துள்ளான்.

ராஜ்யமும் நானும் ராமனின் சொத்து:–பரதனுக்குக் கைகேயி வரத்தின் மூலம் ராஜ்யத்தை வாங்கி வைத்தாள். கேகய தேசத்திலிருந்து நாடு திரும்பினான். அழுது கொண்டே யிருந்தான் கைகேயி பட்டாபிஷேகம் செய்து கொள் என்றாள். பரதன் சொன்னான், “என்றென்றைக்கும் ராமன் தான் ஸ்வாமி. நானும் ராஜ்ஜியமும் ராமனுடைய சொத்துத் தான், இதை மட்டும் மாற்றவே முடியாது”

ராமனைத் திரும்ப நாட்டிற்கு அழைத்து வர பரதன் காட்டுக்குச் செல்கிறான். அங்கு பரதன் ஸ்ரீராமனிடத்தில் தெரிவிக்கிறான்,”யவர்தா வர்த்ததே சக்ரம் யாவதீ ச வசுந்தரம் தாவத்துவமிக லோகஸ்ய ஸ்வாமித்வம் அநுவர்த்தய“ ராமா உலகில் இமாலயம் இருக்கிற வரைக்கும், கடல்கள் எல்லாம் அலையோடு இருக்கிற வரைக்கும் பூமி இருக்கிற வரைக்கும்,மலை இருக்கிற வரைக்கும், ஜ்யோதிஷ் சக்கரம் சுற்றுகிற வரைக்கும் நீதான் ஸ்வாமி, நான் உன் சொத்து..ராமா நீயும் இதை மாற்ற முற்படாதே. நானும் மாற்ற மட்டேன். இரண்டு பேராலும் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டான் பரதன்.

ஏனெனில் நீ ஸ்வாமி நான் தாஸன். “ராஜ்யம்ஸ் ச அஹம் ச ராமஸ்ய.” இந்த ராஜ்யமும் நானும்  உன் சொத்துத்தான். என்றான் பரதன். இதற்கு பூர்வாசார்யர்கள் அதை எந்த விதத்தில் சேர்க்கலாம் என்று கேள்வி எழுப்பினர். தாயும், தந்தையும், பிதாவும் புத்திரனும் என்றெல்லாம் சேர்க்கலாம். ராஜ்யம் என்பதையும் நான் என்பதையும் எப்படிச் சேர்க்கலாம். ராஜ்யம் என்பது அறிவற்றது. அசித். ‘நான்’ அறிவுள்ளது.  சித்தான பரதனையும் அசித்தான ராஜ்யத்தையும், அறிவுடையதையும், அறிவற்றதையும் எப்படி ஒரே மேடையில் சேர்க்கலாம். இரண்டு பேரும் பகவானுக்கு சொத்து என்ற நிலையிலே தான் சேர்க்க முடியும். பரதனுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அவ்வளவு சிறப்பு பாரதந்த்ரியத்துக்கென்றே நின்று காட்டினவன் அதனால் அவனுக்குச் அவ்வளவு ஒரு சிறப்பு. . ஸ்வாமி தாஸன் என்ற உறவு எல்லோருக்கும் உண்டு. ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் .

  1. ஆதார: (தாங்குபவர்)      – ஆதேயம் (தாங்கப்படுபவர்கள்). பூவை எடுத்து கூடையில் வைக்கிறோம். பூவைக் கூடை தங்குகிறது. கூடை ஆதரம்.  பூ ஆதேயம். அதுபோல எம்பெருமான் தாங்குகிறார். நாம் தாங்கப்படுகிறோம். இதற்கு ஆதார-ஆதேய ஸம்பந்தம் என்று பெயர்.
  1. ஆத்மா (ஶரீரி)                  – ஶரீரம் (பகவான் – உடல், ப்ரகாரி – ப்ரகார)

 ஶரீர – ஶரீரி ஸம்பந்தம். எம்பெருமான் ஆத்மா. நாம் அனைவரும் எம்பெருமானுக்கு ஶரீரங்கள். இந்த என் ஶரீரத்தை நான் தான் தாங்குகிறேன். இந்த ஶரீரத்துக்கு ஆத்மா தான் சகலமும். இந்த ஆத்மா நினைக்கிறபடி யெல்லாம் இந்த ஶரீரம் நினைக்கும் அல்லவா? ஆத்மாவுக்காகவே இந்த ஶரீரம் இருக்குமல்லவா? ஆத்மாவையும்  ஶரீரத்தையும்  பிரிக்கவே முடியாதா!  உடல் நலிந்தால் பிரியும்.

அனைத்தும் பகவானுக்குச் ஶரீரம்–எம்பெருமான் ஆத்மா. நாம் எல்லோரும் உடல். இதைத்தான் “மமஆத்மா” என்று ஸாதிக்கிறார். ஶரீர ஆத்ம ஸம்பந்தம் என்று பெயரிடுவர்கள். ஶரீர – ஶரீரி ஸம்பந்தம் என்றும் ப்ரகார ப்ரகாரி ஸம்பந்தம் என்றும் சொல்லலாம். அவன் ஆத்மா நாம் அத்தனைபேரும் ஶரீரம்.

இதையும் ராமாயணம் சொல்லிற்று. ஜகத் ஸர்வம் ஶரீரம் தே ப்ரஹ்மம். நாராயணனை அதாவது ராமனைப் பார்த்து உலகில் எல்லோரும் கொண்டாடினார்கள், “ஜகத் அனைத்தும் உனக்கு ஶரீரம் ராமா!  நீதான் ஆத்மா!

இதை வேதாந்தங்கள் எல்லாம் சொல்லிற்று. யஸ்ய ஆத்மா ஶரீரம், யஸ்ய ப்ரித்வீ ஶரீரம் யஸ்ய ம்ருத்யு ஶரீரம். ஏஷ ஸர்வபூதாந்தராத்மா அபகதபாப்மா திவ்ய ஏக: ஸ; நாராயண: உலகத்தில் அத்தனைக்குள்ளும் தான் ஆத்மாவாக மற்ற அத்தனையையும் தனக்குச் சரீரமாகக் கொண்டுள்ளான்..

ஆழ்வார் சொல்கிறார் – உடன்மிசை உயிரென கரந்தெங்கும் பரந்துளன். உடலுக்குள் உயிர் இருக்கிறாப் போலே ஜகத் அத்தனையும் எம்பெருமான் வியாபித்து இருக்கிறான் ஆத்மாவாக. ஶரீர ஆத்ம ஸம்பந்தம்.

  1. போக்த்ரு       (அனுபவிக்கின்றவன்)         – போக்யம்   (அனுபவிக்கப்படுவது)

நாம் அவனை அனுபவிக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். ஒருவருக்கொருவர் அனுபவிக்கப் படுபவர்களாக இருக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். அவன் போக்தா. நாம் போக்யம்.

எப்படி சந்தனமும் பூவும் போக்யம்.  பூவைத் தலையில் வைத்து நாம் அனுபவிக்கிறோம் அல்லவா. சந்தனத்தை எடுத்துத் தடவிக் கொள்கிறோம். நாம் போக்தா. சந்தனமும் பூவும் போக்யம். ஜீவாத்மா போக்தா. நம் ஆனந்தத்துக்காக அதை எடுத்து அனுபவிக்கிறோம்.

இப்பொழுது கொஞ்சம் இடத்தை மாற்றுங்கள்–பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே–இங்கு போக்யம் ஜீவாத்மா. பூவையும் சந்தனத்தையும் போலே ஜீவாத்மா. இதை எடுத்து தலையில் சூடிக் கொண்டு அனுபவிப்பவர் எம்பேருமான். அவர் போக்தா.. ஜீவாத்மா போக்யம். இங்கும் சந்தேஹம் வரும். பூவும் சந்தனமும் அசித். ஜீவாத்மா சித். எப்படி என்று கேள்வி?பூவை நான் தலையில் சூடிக் கொண்டால் பூ என்றைக்காவது சந்தோஷப் படுமா? படாது. பூவும் சந்தனமும் மற்றவருக்கென்றே  பிறத்தியாரோட சந்தோஷத்துக்கென்றே இருக்கிறதல்லவா?. அதைப்போல ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே இருக்க வேண்டும்.. அதற்குத்தான் இந்த போக்தா – போக்ய ஸம்பந்தம் சொல்லப்பட்டது. அவன் ஆனந்தத்துக்காக, இஷ்ட விநியோகத்துக்கு அநுகுணமாக ஜீவாத்மா இருக்கவெண்டும்.

அஹமன்னாதோ(2) அஹமன்னாதோ(2) ஹமன்னாத:। அஹகும் ச்லோகக்ரு– தஹகும் ச்லோகக்ரு- தஹகும் ச்லோக்ருத் । அஹமஸ்மி ப்ரதமஜா ருதா(3) ஸ்ய। பூர்வம் தேவேப்யோ அம்ருதஸ்ய நா(3) பாஇ।–என்று தைத்ரீய உபனிஷத் சொல்லும்.

நான் அன்னம், அவன் அன்னத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆனந்தப்படுகின்றவர். அன்னம் என்பது போக்யம். அன்னாத: என்பது போக்தா. ஜீவாத்மா அன்னத்தினுடைய ஸ்தானம். அன்னாதன் – பகவான் போக்தா. அன்னத்தை அநுபவிப்பவர். அதையே இங்கு ஒன்பதாவது போத்ரு – போக்ய ஸம்பந்தமாக ஸ்தாபித்தார்.

நித்ய ஸூரிகள் கோஷ்டியில் சேரவேண்டுமா:–ரமாபதி: ஸ்ரீமன் நாரயணனை ஒவ்வொரு ஸம்பந்தத்துடன் சேர்த்துக் கொள்க.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித॥

இந்த ஒன்பது வித ஸம்பந்தத்தை மனப்பாடம் செய்து காலையில் எழுந்தவுடன், ஒன்பது உறவுகளையும் ஒரு நாளும் ஒழிக்கமுடியாது என்ற  நினைவோடு தினந்தோறும் சொல்லிச் சொல்லி ஞாபகத்தில் கொள்ளவும். அப்படிச் சொல்லி வந்தோமானால் இந்த எறும்பு கோஷ்டியை விட்டு நாம் நிச்சயம் நித்ய ஸூரிகள் கோஷ்டிக்குப் போகலாம். தைரியம் மனதுக்கு வரும். அவன் ஒருநாளும் கைவிடமாட்டான்.

ஒரு நிச்சயபுத்தி, விஶ்வாஸம் ஏற்படும். சரணாகதியில் மஹாவிஶ்வாஸம் ஒரு அங்கம். எப்ப விஶ்வாசம் வரும் இத்தனை உறவு நமக்கு அவனுக்கும் இருக்கிறது என்பது உறுதியானாலே மஹா விஶ்வாஸம் வரும். மோக்ஷத்தில் ஆசை படைத்த முமுக்ஷுவான ஒவ்வொருவரும் இந்த ஒன்பது ஸம்பந்தத்தைக் கண்டிப்பாக சொல்லி கொள்வர். இந்த ஒன்பதும் திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

திருமந்திரத்தில் இந்த ஒன்பது உறவுகள்–திருமந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒன்பது உறவை  எங்கு எங்கு எப்படிச் சொல்கிறது என்பதை அழகாக ஸாதிக்கிறார். ஒன்பது ஸம்பந்தத்தின் ஞானம் முக்கியம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸூகாசாரியார் கேட்டுக்கொண்டார் “தத்  பாதம் ஸலிலம் யதா வாஸுதேவ கதா ப்ரஶ்ந: பும்ஸாம் திரிம் புநாதிவை” வாஸுதேவனுடைய கதையைப் பற்றி யாரெல்லாம் பேசுகிறார்களோ, பேசுன்னு சொன்னார்களோ, கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் புண்யம் மூவேழு தலை முறைகளுக்கும் புண்ணியம்.

திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம்–எதேபோல என்பதற்கு அவரே ஒரு உதாரணம் சொல்கிறார். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் கங்கை. பார்த்தாலும் புண்யம், தீர்த்தமாடினாலும் புண்யம். அருந்தினாலும் புண்யம். மூவேழு தலைமுறைகளுக்கும் புண்யம்.

பூர்வர்கள் கேள்வி கேட்டனர், “அந்த கங்கைக்குள் நிறைய மீன்கள், திமிங்கிலங்கள், ஜந்துக்கள் இருக்கின்றனவே அவைகளுக்கெல்லாம் புண்யம் வந்து மோக்ஷத்துக்குப் போய்விடுமா? நல்ல கேள்வி. அதுக்குள் வாழ்ந்ததற்காக புண்யம் வராது. மோக்ஷம் கிடைக்காது. கங்கைக்கும் மீனுக்கும் ஸம்பந்தம் இருக்கிறது. ஞானம் வேண்டும். என்ன ஞானம்: இது திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் என்பது ரொம்ப பாவனத்துவமும்,போக்யத்துவங்களும் கூடியது.

ஆகவே கங்கையைப் பார்த்தாலோ, குடித்தாலோ, தீர்த்தமாடினாலோ எனக்கு மோக்ஷம் கிடைக்கும் என்ற ஞானம், அந்த  ஞானத்தோடு தீர்த்தமாடினால் பலன் உண்டு. பகவானுக்கும் கங்கைக்கும் உள்ள உறவை உணர்ந்து குளித்தால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். ஸம்பந்த ஞானம் வேண்டும்.

ஸம்பந்த ஞானம் வேண்டும் என்பதற்காகவே இந்த க்ரந்தத்தை பிள்ளை லோகாசாரியார் ஸாதிக்கிறார். இல்லை யென்றால் இருக்கவே இருக்கிறது ஒன்பது ஸம்பந்தம் என்று கேட்டு விடுவோம் அல்லவா? ஒன்பது ஸம்பந்தத்தை உணர்ந்து அதை அனவரதமும் சிந்தனம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்கும் என்பதில் சந்தேஹம் இல்லை.

இந்த ஒன்பது ஸம்பந்தத்தை திருமந்திரத்தில் இருந்து எடுத்து விளக்குகிறார்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித॥

கடுகைத் துளைத்து எழு கடலை புகட்டி–மேலே ஒவ்வொரு இடமாக இந்த ஸம்பந்தத்தைத் திருமந்திரத்திலே எங்கெங்கு வைக்கிறார் என்பது முக்யம். இருக்கிறதே எட்டெழுத்து அதற்குள் எப்படி ஒன்பது ஸம்பந்தத்தை புகுத்தினார் என்ற சந்தேஹம் வரும்.

ஒரு வரிக்கு ஒரு அர்த்தம் சொல்லலாம், ஒரு பதத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னாலே கிறப்பு. அதற்கு மேலும் ஒரு எழுத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னால் அவரைவிடச் சிறந்தவரில்லை. ஆனால் எட்டெழுத்துக்கு  ஒன்பது அர்த்தம் சொல்லிவிட்டார் ஸ்வாமி பிள்ளை உலகாசிரியர்.

திருக் குறளின் பெருமையைச் சொல்லும்போது “கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பெருமை சொல்வர். இரண்டுவரி, ஏழு பதத்திற்குள் அவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறார்.

இரண்டு வரிக்குள் அவ்வளவு அர்த்தம் வைத்தது அங்கு பெருமை. அதுபோல திருமந்திரமான எட்டெழுத்துக்குள் இந்த ஒன்பது ஸம்பந்தம் காட்டியது இவருக்கு அதைவிட பெருமை. வரியே கிடையாது. மூன்று பதங்கள். எட்டெழுத்து. ௐ நமோ நாராயணாய.

திருமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும்:

அகாரத்தால்                       பிதா              – புத்திர ஸம்பந்தம்

அவரக்ஷணே (தாது)        ரக்ஷ:             – ரக்ஷி:

லுப்த சதுர்த்தி                    ஶேஷி          – ஶேஷ

உகாரத்தால்                        பத்ரு              – பார்யா

மகாரத்தால்                        ஞேயம்        – ஞாத்ரு

நம:                                        ஸ்வாமி        – சொத்து

நார ஸப்தத்தால்               ஶரீரி              – ஶரீர

அயன                                   ஆதார           – ஆதேயம்

ஆய:                                      போக்த்ரு     – போக்யம்

ௐ நம: நாராயணாய     ௐ என்பது ஒரு எழுத்து. நம: எனபது இரண்டு எழுத்து. நாராயணாய என்பது ஐந்து எழுத்து. ஆக மூன்று பதம் எட்டு எழுத்து, ஒன்பது ஸம்பந்தம்.

ௐ என்ற ஒரு பதம்

ஓம் – அ+உ+ம (மூன்று எழுத்து)

அ                               – பரமாத்மா

ம                                – ஜீவாத்மா

உ                                -பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கும் ஒழிக்க வொண்ணத ஸம்பந்தத்தைச் சொல்லும். (பரமாத்மாவுக்கே        ஜீவாத்மா)

தமிழில் வேற்றுமை உருபு:–அ, உ, ம என்றால் அது ஒரு முற்றுப்பெறாத சொல். ‘அ’ – பரமாத்மா, ‘ம’ –ஜீவாத்மா, ‘உ’ – அந்த பரமாத்மவுக்கே ஜீவாத்மா என்று சொல்கிறது. ஒருவருக்கும் மற்றொருவருக்கும் உறவைச் சொல்ல தமிழ் பாஷைப்படி ஒரு வேற்றுமை உருபு வேண்டும்.

என்னுடைய புஸ்தகம். என்னோடு வந்தார். கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.  இந்த புஸ்தகம் இவரால் தூக்கப்பட்டது. என் உடைய, ஓடு, ஐ, ஆல்  என்று சேர்க்கிறோம். உடைய என்பது நாலாவது வேற்றுமை உருபு.  உறவைச் சொல்ல நாலாவது(விபக்தி) வேற்றுமை உருபு வேண்டும். ஆல், ஓடு, உடைய, இன் ஐ போல. ஓம் என்பதற்குள் பரமாத்மாவுக்கும் ஜீவத்மாவுக்கு உறவு சொல்கிறது அல்லவா. வேற்றுமை உருபு இருந்தால்தானே உறவே வரும்.

ஒன்றை ஒன்று சேர்ப்பதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. மரத்தில் கண்ணாடியை ஒட்டவேண்டுமானால் அதாற்கு ஒரு விதமான் பசை வேண்டியிருக்கிறது. சொற்களைச் சேர்ப்பதற்கு வேற்றுமை உருபு வேண்டும். இங்கு பரமாத்மா வையும் ஜீவாத்மாவையும் சேர்க்கவேண்டும். கண்ணாடி வேற ஜாதி, மரம் வேறு ஜாதி. அதுபோல பரமாத்மா ஆள்கின்ற ஜாதி, ஜீவாத்மா அடிமை (ஆளப்படுகிறவன்) என்ற வேறு ஜாதி. இந்த இரண்டையும் ஒட்டுவது அவ்வளவு ஸுலபமில்லை.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் பிரிவதே இல்லை::–ஆனால் ஆச்சர்யம் என்னெ வெனில் யாரும் ஒட்ட வைக்கவே யில்லை. பிரித்தால்தானே ஒட்ட வைக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தே தான் இருக்கிறது.

நாலாம் வேற்றுமை உருபு:–ஆனால் இலக்கணப்படி ‘அ’ வையும் ‘ம’  வையும் சேர்க்கவேண்டுமானால் ஒரு வேற்றுமை உருபு, நாலாம் (விபக்தி)வேற்றுமை உருபு வேண்டும். (உ.ம்) இருக்கு, பரமாத்மாவுக்கு ஜீவத்மா அடிமை என்று சொல்லவேண்டும். நாலாம் வேற்றுமை உருபு வேண்டும்.

ராமன்,(முதல் வேற்றுமை)  ராமனை(2), ராமனால்(3), ராமனுக்கு(4), ராமனின்(5), ராமனது(6), ராமனின் கண்(7), ஹே ராமா(8).ஆக எட்டு வேற்றுமை உருபுகள்.  4 வது வேற்றுமை உருபு  ‘க்கு’ என்பது ஸம்ஸ்க்ருத்த்தில் ‘ஆய’ என்று வரும்.

அச்சுதாய நம: அச்சுதனுக்கு. அனந்தாய, கேசவாய, அச்சுதனுக்கு, கேசவனுக்கு, என்று வரும்.ஸம்ஸ்க்ருதத்தில் “க்கு” என்பது “ஆய” என்று வரும்.  வேற்றுமை உருபு இருந்தால்தான் உறவு. ஓம் என்ற ஸப்தத்தில் தேடிப்பார்த்தால் இந்த வேற்றுமை உருபு இல்லை. அதனால் இதை லுப்த சதுர்த்தி என்று சொல்வர். லுப்தம் என்றால் ஏறிக்கழிந்தது என்று பொருள். இருந்தது, விழுந்துவிட்டது, கழிந்தது.வியாகரணத்தின்படி விழுந்ததாகக் கொண்டு  ‘அ’  என்ற எழுத்தால் சொல்லப்பட்ட பரமாத்மாவுக்கு, ‘ம’ என்ற எழுத்தால் சொல்லப்படுகிற ஜீவாத்மா, “ஆய“என்ற நாலாம் வேற்றுமை உருபால் அடிமை.என்பது ஓம் என்கிற சப்தத்தின் அர்த்தம்.

ௐ = அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. நான்கு எழுத்துக்கள்–இன்னும் கொஞ்சம் பிரித்தால்: ஓம் என்பது அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. இதைக் கொண்டு நான்கு அர்த்தம் சொல்லிவிடுவார் ௐ என்ற பதத்துக்கு. மேலும் நம: என்பதும் நாராயணய என்பதும் இருக்கிறது. அதைப் பிரிக்கப் போவதை பின்னால் பார்க்கலாம்.

திருமந்திரத்தில் ஓம் என்ன ஸம்பந்தங்களைச் சொல்கிறது:என்று பார்க்கலாம்:

  1. அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி

அ – பிதா புத்ர ஸம்பந்தம்.-‘அ’ காரத்தின் மூலம் ஜகத் காரணத்துவ சொல்லிற்று. எம்பெருமான். முதல் எழுத்தான ‘அ’ என்பதில் இருந்து அனைத்து எழுத்துக்களும் பிறக்கும். , சொற்களும் ஸப்தங்களும் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் தோன்றின. ஸமஸ்த ஸப்தங்களுக்கும்  காரணம் , முழு முதற்காரணம், வேர், விதை  “அ”காரம். அது போல எம்பெருமான் இந்த ஜகத்துகெல்லாம் காரணம்  அவனிடத்திருந்துதான் எல்லாம் தோன்றின.

எல்லாம் அவனிடமிருந்தே:–“யதோவா இமானி பூதானி ஜாயந்தே | யேன ஜாதானி ஜீவந்தி | யத்பிரந்த்-யபிஸம்விஸந்தி .. |” (தைத்ரீய உபனிஷத்) இது எல்லாம் அவனிடத்திருந்துதான் தோன்றியது.. ‘அ’ இடம் இருந்துதான் எல்லா ஸப்தங்களும் தோன்றின. பகவானிடத்திருந்துதான் உலகம் அத்தனையும் தோன்றியது. அப்பொழுது ‘அ’ என்பது பகவானைக் குறிக்கும். அ காரத்துக்கும், பகவானுக்கும் ஒரு ஸாம்யம் பார்க்கலாமில்லையா? அதனால் தான் ‘”அகார: விஷ்ணு வாச்ய: “அ’ என்பதை ஒற்றை எழுத்துச் சொல் என்பர். அதைச் சொல் என்றும் எழுத்து என்றும் சொல்லலாம். அது விஷ்ணுவையே சொல்லும். அகாரம் என்ன சொல்கிறது. எப்படி ஸப்தங்களுக்  கெல்லாம் நான் காரணமோ அப்படி உலகத்துகெல்லாம் எம்பெருமான் காரணம். என்கிறது.‘

‘அ’ காரம் காரணத்வம்:–அ’ காரத்தைப் பார்க்கும் போதே காரணத்துவம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா? காரணத்துவம் என்பது என்ன? நமக்கும் நம் பிதாவுக்கும் உள்ள உறவு. அவர் பிதா காரணம். நான் பிள்ளை காரியம். அவராலே பிறந்தேன், அவராலே படைக்கப்பட்டேன். ஆக காரணத்தை வைத்து முதல் எழுத்து பிதா – புத்ர ஸம்பந்தம் சொன்னார். அவன் தந்தை என்றும் நான் புத்ரன் என்றும் பிதா புத்திர சம்பந்தம் சொல்லிற்று.

  1. அவ -ரக்ஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி–ஏற்கனவே அ வுக்கு ஒருவிதமாக அர்த்தம் பார்த்தோம். ‘இப்பொழுது இன்னொரு விதமாக அர்த்தம் சொல்கிறார். முதலில் அர்த்தம் பார்த்து ‘அ’வை ஒரு சொல்லாகக் கொண்டு.’அ’ என்ற சொல் அனைத்து ஸப்தங்களுக்கெல்லாம் காரணம். அகார வாச்யனான எம்பெருமான் ஜகத்துக்கெல்லாம் காரணம். காரணத்துவமிருக்கிறதாலே பிதா-புத்திர ஸம்பந்தம் என்று பார்த்தோம்.

‘அ’ வின் தாது ‘அவரக்ஷணே’–ஸம்ஸ்க்ருதத்திலே தாது என்று சொல்லுவர். 2000 தாதுக்கள் உண்டு. அந்த தாதுவைக் கொண்டு ஒரு சொல் எந்த வினையை ‘செயலைக்’. குறிக்கிறது என்று சொல்லப்படும். கச்ச – போகிறேன் ஒரு தாது, வத – பேசுகிறேன் ஒரு தாது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தாது இருக்கிறதல்லவா?.. அ என்ற சொல்லுக்கு அவ ரக்ஷணே என்ற தாது. ரக்ஷிக்கிறான் என்ற வினையைச் சொல்கிறது.

அ வில் இரண்டாவது அர்த்தம் ரக்ஷிக்கிறான். உலகனைத்தையும் எம்பெருமான் ரக்ஷிக்கிறான் என்று பொருள். முதலில் ‘அ’ என்பதற்கு காரணத்துவம் சொல்லி எம்பெருமான் உலகனைத்துக்கும் காரணன் என்று பிதா – புத்திர ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

இப்பொழுது இரண்டாவதாக   ‘அ’ வுக்குள்ள அவரக்ஷணே என்ற தாதுவால் ரக்ஷகத்வம் சொல்லி ரக்ஷ: – ரக்ஷ்ய  ஸம்பந்தம் சொல்லியாயிற்று. அவன் காப்பவன். நாம் காக்கப்படுகிறோம்.

  1. லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி–லுப்த சதுர்த்தி – ஏறிக் கழிந்த நான்காவது வேற்றுமை உருபு என்பர். ‘க்கு’ ‘ஆய’ என்ற நாலாவது வேற்றுமை உருபு. மறைந்துள்ளது. அகார வாச்யனான பரமாத்மாவுக்கு ‘மகார’ வாச்யனான ஜீவாத்மா எல்லா விதத்தாலும் அடிமை என்று சொல்லிற்று. ‘க்கு’ என்கிற 4 ம் வேற்றுமை உருபு பகவானுக்கு (ஶேஷி) ஜீவாத்மா (ஶேஷ்ன்) அடிமை என்கிறது. ஆக லுப்த சதுர்த்தி ஶேஷி – ஶேஷ ஸமந்தம் சொல்லிற்று

கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன்–ஆய  – க்கு, ராமனுக்கு: அவனுக்கே இருக்கிறேன் என்று சொல்லுமல்லவா? ஶேஷி – ஶேஷ ஸம்பந்தம். அப்படியென்றால் என்னுடைய ஶேஷிக்கு நல்லதைச் சேர்க்கிறதுக்காகவே நான் இருக்கவேண்டும். ‘க்கு’ என்று சொல்லும் போதே அவனுக்கென்றே இருக்கிறேன் என்றாகின்றது அல்லவா. ராமனுக்கு சீதா ஸர்வ ப்ரகாரத்தாலும் அவனுக்கென்றே இருக்கின்றாள்.

ஶேஷ-ஶேஷி ஸம்பந்தம். ஸம்பந்தத்தை லுப்த சதுர்த்தியாலே சொல்லி. –

ஆழ்வார் “கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ’

‘கோவிந்தா உனக்கே நாம் ஆட்செய்வோம்” ஆண்டாள்.

கோவிந்தா என்பது ‘அ’,  ‘நாம்’ என்பது ‘ம’,  ‘க்கே’ என்பது ஆய என்ற லுப்த சதுர்த்தி. அதையே தான் திருமங்கை ஆழ்வாரும் பாடினார்  திருக்கண்ணபுரம் சவரிப்பெருமாள் விஷயமாக நூறு பாசுரங்கள். பெரிய திருமொழியில் எட்டாம்பத்து முழுமையும் சவரிப் பெருமாளுக்குத்தான் பட்டியுள்ளார். அதில் கடைசியில் சாதிக்கிறார்:

“நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் கண்ணபுரத்துறை அம்மானே” கற்றுக் கொண்டது என்ன?

“கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ?’ கண்ணபுரம் பெருமாளுக்கே நான் உரியவன்.  “சவரிப் பெருமான் திருவடிகளில் பணிந்தவன், உன் அடியார் வசலில் நிற்பேனே தவிர கண்டபேர் வாசலில் நிற்கமாட்டேன்.

“உற்றதும் உன் அடியார்க்கு அடிமை”  உனக்கே உரியவன், “மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பரோடுற்றிலேன்” (பெரிய திருமொழி 8-10-3) மற்றும் ஓர் தெய்வம் உள்ளது என்று சொன்னாலே அவன் வாசலில் நிற்க மாட்டேன் என்கிறார்.

அப்படிச் சொல்பவனுக்கு எனக்கும் உறவே யில்லை என்று அறுத்துக் கொண்டார்..

‘க்கு’ என்பதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம் அவன் ஶேஷி நாம் ஶேஷர்கள். என்று ஶேஷ – ஶேஷி ஸம்பந்தத்தைச் சொல்லியாயிற்று.

  1. உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –அநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம்– ‘ உ’ காரம் – அநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம். பர்த்தா – பார்யா ஸம்பந்தம்.  ‘

அ’கார வாச்யனான எம்பெருமானுக்கே  ‘ம’கார வாச்யனான ஜீவாத்மா அடிமை. நடுவில் இருக்கும் ‘உ’ ரொம்ப முக்கியம் நம் ஸம்பிரதாயத்திலே. ஏவாகாரம் தான் ‘உ’காரத்தின் பொருள். ‘உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: பராசாபட்டர் அழகாக ஸாதித்தார் உகார: அநந்யார்ஹ ஸம்பந்தம்.. அநந்யார்ஹ ஸம்பந்தம் என்றால் அகார வாச்யனுக்கு மகார வாச்யன் அடிமை என்று பார்த்தோம்.

அடுத்து ஒருவன் சொல்லுவான். மனித மூளை எந்தவிதத்திலும் பாயும். அதுக்குக் குறைச்சலே இல்லை. வேணுங்கிறதுக்கு மட்டிலும் வேலை செய்யாதே தவிர, வேண்டாங்கிறதில் நன்றாகவே வேலை செய்யும். ஒருவன் சொல்லுகிறான், “ஸ்ரீமன் நாராயணனுக்கு நான் அடிமை” நான் ஒத்துக் கொள்கிறேன். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் வேறு எங்கோ நிற்கிறான். என்ன நாராயணனுக்கு என்று சொன்னாயே, இங்கு நிற்கிறாயே என்று கேட்டால் அவன், நான் நாராயணனுக்கு என்று சொன்னேன், ஆனால் அவனுக்கே என்று சொல்லவில்லையே என்றான்.

லுப்த சதுர்த்தி மூலம் பரமாத்மாவுக்கு என்று உள்ளது. அது பரமாத்மாவுக்கும் அடிமை. மற்றவர்களுக்கும் அடிமையாயிருப்பது என்றும் சொல்லலாம். அதில் உள்ள குறையைப் போக்கி உறுதி செய்ய “உ” காரத்தால் எம்பெருமானுக்கே என்று “ஏவா காரத்தால்” உறுதி செய்யப்படுகிறது. பரமாத்மாவுக்கே இந்த ஜீவாத்மா அடிமை என்று ‘உ’காரம் உறுதி செய்கிறது. மற்ற தெய்வத்தையும் தொழான். அரசனையும் தொழான்.  அவனுக்கே என்றதிலிருந்து பர்த்தா – பார்ய ஸம்பந்தம் சொல்லிற்று.

ஸ்வாமி தேஶிகனின் வைராக்ய பஞ்சகம்–வைராக்ய பஞ்சகம் என்று ஐந்து ஸ்லோகம். ஸ்வாமி தேஶிகன், தேவப்பெருமாள் விஷயமாக அருளியுள்ளார். அதில் “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

வேதந்த தேஶிகன் மகாசாரியார். அந்த ஆசார்யரிடத்தில் சின்ன வயதிலிருந்தே ஒரு நண்பர், ஸ்நேஹம். அவர் நல்ல நிலைமையில் ஒரு அரசனிடம் பணிபுரிந்து நல்ல நிலையில் இருந்தார்.

ஸ்வாமி தேஶிகனோ கிழிந்த உடையும், உஞ்ச விருத்தியுமாக இருந்தார். அந்த நண்பர், “நீ என்னிடம் வந்துவிடு. அரசனிடம் வந்தால் பட்டும், பொன்னாடையுமாக வசதியாக வாழலாம்” என்றார். நல்ல சம்பாவனை கிடைக்கும் வந்துவிடு என்று மறுபடி, மறுபடி சொல்லிப் பார்த்தார். அங்கிருந்து ஒரு ஆளை அனுப்பி நிர்பந்தப் படுத்தினார்.

வந்தவரை ஸ்வாமி, நீர் போய் தேவப் பெருமாளை சேவித்து வாரும் என்று அனுப்பிவைத்தார். அவன் பெருமாளை சேவித்துவிட்டு திரும்பி வந்தான்.என்ன பார்த்தாய் என்று கேட்டார். பெருமாள் சேவை ஸாதிக்கிறார். ஸேவித்தேன் என்றார்.

அதற்கு பதில் சொன்னார் ஸ்வாமி, “அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம். நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்” “எனக்குத் தந்தை சம்பாதித்து வைத்த செல்வம் ஒன்றுமில்லை. நானாகவும் ஒன்றும் ஸம்பாதிக்கவில்லை. ஆனால் உலகத்துகே பாட்டனார் ஹஸ்திகிரியின் உச்சியில் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வம் எனக்கு உள்ளது. அதாவது ப்ரம்மதெவன் அசுவமேத யாகம் செய்து ஹஸ்திகிரியின் உச்சியில் ஸம்பாதித்து வைத்த செல்வம் உள்ளது” என்றார்.

உலகத்துக்கே பாட்டனார். தேவப் பெருமாள். எனக்கும் பாட்டனார். இது உன் சொத்துமில்லை, என் சொத்துமில்லை எல்லோருடைய சொத்து. இந்த சொத்திருக்கும் வரையில் வெறு தனமே வேண்டாம்.என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

அப்பொழுது சொல்கிறார், நீங்களெல்லாம் ஏதோ ஸம்பாதித்து சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எதுக்காகத் தெரியுமா? “அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்” உள்ளே ஜாடராக்நி என்று ஒன்று எரிந்து கொண்டிருக்கும். உள்ளே போடுவதை எல்லாம் அதுதான் ஜரித்துக்கொண்டே இருக்கும். அந்த ஜாடராக்நி எத்தனை போட்டாலும் கொண்டா, கொண்டா என்று கேட்டுக்கொண்டே இருக்கும்.

அக்நிக்கு ‘அநல:’ என்று பெயர். போறும் என்ற எண்ணமே அதற்குக் கிடையாது. அதனால் ‘அநல:’ அந்த தீக்கு விறகுக் கட்டை போடுவதற்காக கண்ட பேர் கால் கழுவுகிறீர்கள். நான் அதைச் செய்வதில்லை என்றார் ஸ்வாமி தேஶிகன். உள்ளுக்குள் இருக்கும் நெருப்புக்கு அது விறகு. சோறு தான் விறகுக் கட்டை. “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

இந்த தனத்தை நான் விரும்பமாட்டேன். கோவர்த்தனம் போதும் கோவர்த்தனத்தைத் தூக்கிய கண்ணன். அவன்தான் எனக்குத் தனம் அவனே எனக்குப் போதும். அர்ஜுனனுடைய தேருக்குச் சாரதியான, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளாக இருக்கும் கண்ணனே தனம். அவன் கொடுத்த தனம் கீதைதான். இதுதான் எங்களுக்குத் தனமே தவிர வேறு தனம் வேண்டியதில்லை

உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம்.-உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம். இன்னொருத்தர்.  வீட்டு வாசலில் நிற்க மாட்டேன். எந்த தெய்வத்தையும் தொழோம், பிரபுக்களையும் தொழோம். யாரையும் தொழோம். யாரையும் திரும்ப பாரோம் என்று இருக்கிறார்களல்லவா. அந்த வைராக்யத்தோடு வாழ்வதுதான் ‘உ’ என்ற லுப்த சதுர்த்திக்குப் பொருள். மேலிருக்கிற அவதாரணம் என்று சொல்லுவர். அவனுக்கே. அற்றுத் தீர்ந்தது. இவன் மற்றப்பேருக்கு ஆளாக மாட்டான். அவனுக்கே. அப்படின்னு சொல்கிறது ‘உ’.

கனவன் – மனைவி உறவு-அவனுக்கே என்றவுடன் நமக்கு என்ன ஞாபகம் வரும். . கணவன் மனைவி உறவுதானே. உலகில் மற்ற எல்லா உறவுகளையும் விட இந்த மனைவி கணவனுக்கென்றே தான் இருக்கப் போகிறாள். அடுத்த வீட்டுக்காரனையோ, எதிர்த்த வீட்டுக்காரனையோ திரும்பி பார்க்கமாட்டாள். அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கட்டும், எவ்வளவு படித்தவனாக இருக்கட்டும் என் கணவன் எனக்குக் கணவன். அதில் தான் இவளுக்கு உயர்த்தி.

தேவாதாந்தரங்களைத் தொழோம்:-ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றி சொல்லிகொண்டே இருப்பர். இவர்கள் எல்லாம் மற்ற கோவிலுக்குப் போவதில்லை. ஆனால் மற்றபேர் மட்டும் விஷ்ணு கோவிலுக்கு வருகிறார்களே என்று கேட்பர். குறுகிய கண்ணோட்டம். அவர்களுக்குப் பரந்த நோக்கம் இல்லை என்றெல்லாம் குறை சொல்லுவர். ஒரு மனைவி தன் கணவனுக்காகவே இருந்தாள். இது என்ன குறுகிய கண்ணோட்டம் என்றா சொல்வர். அப்படிக் கேட்டால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவர்.

அதுபோலத்தான் வேறு கோயிலுக்கு போகமாட்டேன் என்கிறார்களே என்ற கேள்வியும்.கணவனுக்கு மட்டுமே இருக்கிறாள் மனைவி என்பது குறுகிய கண்ணோட்டம் என்றால் அதுவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் பரந்த கண்ணோட்டம் யாருக்கும் தேவையில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷ்ணு கோவிலுக்கு மட்டுமே போவதும். குறுகிய கண்ணோட்டமாகாகவேதான்  இருந்துவிட்டுப் போகட்டும்.

அனைவருக்கும் அவனே கணவன்:-கணவன் நாராயணன் என்று புரிந்துகொண்டுவிட்டால், மனைவி ஜீவாத்மா என்றால் அந்த வட்டம் குறுகிய வட்டம். அதில் வேளிலே யாருக்கும் இடம் கிடையாது. அதில் அவனுக்கும் அவளுக்கும் மட்டும் இடமே தவிர, வேறு யாருக்கும் இல்லை. இதுல போய் இவங்கிட்டையும் திருமங்கல்யம் கட்டிக்கிறேனே,  மற்றவனிடமும் தாலி கட்டிக்கிறேனே என்று சொல்லுவதற்கு வழியே கிடையாது. .

‘உ’ காரம் என்ற நடு எழுத்தை, உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: அவனுக்கென்றே தீர்ந்திருக்கிற ஸம்பந்தத்தைச் சொல்லுமாம். பர்த்ரு – பார்யா உறவைச் சொல்லுகிறது. அவனுக்கே உரியவன்.

 நம்பெருமாளும் திருவானைக் காவலும்:-திருவானைக்காவல் என்று ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஜம்புகேஸ்வரர் க்ஷேத்ரம். பெரிய சிவ ஸ்தலம்.. அந்த ஸ்தலத்தின் பக்கத்தில் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு காண்கையில் திடீரென்று மழைவந்துவிட்டது..  ஸ்ரீரங்கம் போகமண்டபம். பெருமாள் போகி. எங்கோ மழைபெய்கிறது என்றவுடன் மணியக்கார ஸ்வாமி அக்கோவிலில் புறப்பாட்டை நிறுத்திவிடுவர்.

புறப்பாடு கண்டருள்வதில் ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிர் தேவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்  பெருமாள் கோவில்.. அது மழையோ வெயிலோ காற்றோ எது அடிச்சாலும் அந்த மூன்றரையும் மூன்றரையும் ஏழு மைல் புறப்பாடு நடந்தே தீரும். ஸ்ரீரங்கத்திலோ எங்கேயோ மழை அடிக்கிறது என்றால் புறப்பாடு நின்றுவிடும். பெருமாள் சுக போகி. தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் அல்லவோ. அவர் திருவானைக்காவல் வாசல் வழியாக ஏழிண்டிருக்கிறார். திடீரென்று மழை வந்து விட்டது. பெருமாளை ரக்ஷித்தாகணுமே.  திருவானைக்காவல் கோவிலுக்குள் கொண்டுபோய் ஏழப்பண்ணிவிட்டார்கள்.  அது சிவ க்ஷேத்ரம்.

ஸ்ரீ ராமானுஜரும் திருவானைக்காவலும்:-ஸ்ரீ ராமானுஜர் பின்னால் கோஷ்டியுடன் போய்க் கொண்டிருந்தார். அவர் உள்ளே போகாமல் வாசலிலேயே திரிதண்டத்தோடே, எழுபத்திநாலு சிம்மாஸனாதிபதிகள், எழுநூறு ஸந்யாசிகளோடே,பன்னிரண்டாயிரம் க்ரஹஸ்தர்களோடு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.

தீக்ஷிதர்கள் வாசலில் வந்து கேட்டார்களாம், என்ன ஸ்வாமி உள்ள ஏழலாமே, மழைபெய்கிறதே, நனையவேண்டாமே, மழை நின்னப்புறம் புறப்படலாமே  என்று உள்ளே  அழைத்தார்கள். இல்லை இல்லை வேண்டாம், .அடியேன் இங்கேயே இருந்துகொள்கிறேன் என்றார் ராமானுஜர்.

மறந்தும் புறந்தொழா மாந்தர் அல்லவோ. “திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்” திருமழிசை ஆழ்வார் அழகாக ஸாதித்துப் போந்தார். “அரவணைமேல் பேராயர்க்காட்பட்டார் பேர்” இந்த ஸ்ரீவைஷ்ணவர்களை எமன் மறந்தும் பார்க்கவே மாட்டனாம். எனெனில் புறந்தொழா மாந்தர். திரும்பியே பார்க்கிறதில்லை. எமனையும் இவர்கள் திரும்பி பார்க்கிறதில்லை. ராமானுஜர் வாசலிலே நின்றுவிட்டார்.

நம்பெருமாளும் யதிராஜரும்:-தீக்ஷிதர்கள் எல்லாம் வந்து ராமானுஜரிடம் கேட்டார்கள், பெருமாள், உங்கள் தெய்வம் அரங்கனே உள்ளே வந்துவிட்டார். அதுக்குமேலே உங்களுக்கு என்ன இப்பொ, நீரும் வரலாமே” என்று கேட்டனர் உடையவரிடம். .

அதற்கு ஸ்வாமி பாஷ்யகாரர், அழகாக பதில் சொன்னார், “கணவன் அப்படி இப்படி வாசலில் போய் திரிந்தார் என்பதற்காக மனைவி தானும் தேடிண்டு போய் நான் பார்த்தது கிடையாது.  பெருமாள் கணவன், பர்த்தா, எதுவும் அவனுக்கு ஒக்கும். நான் மனைவி எனக்கு அவன் மட்டுமே ஒக்கும்.மற்ற ஒன்றையும் நான் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

நம் பாரத்தேசத்துப் பெண்கள் எல்லாம் கணவன் தவறிழைத்தான் என்பதற்காக தானும் தவறிழைக்கலாம் என்று நினைக்கிற அன்று நானும் இந்த கோயிலுக்குள் வருகிறேன். அது வரை வருவதாயில்ல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாமி.  பழையபடி அந்தக் குறுகிய கண்ணோட்டம் என்பர். “எம்பெருமானே அந்த  கோவிலுக்குள் போனாலும் அவன் அடியார்கள் அதற்குள் போவதில்லை. எம்பெருமான் போவதற்குக் காரணம் என்ன? எல்லாமே அவர்க்கு ஒக்கும். ஏனெனில் எல்லாமே அவருக்குச் சரீரம், சிவனும் அவருக்குச் சரீரம், பிரம்மாவும் அவருக்குச் சரீரம்.

அக்னி:-அக்னி இருக்கிறது. எந்த ஒசந்த பதார்த்தைப் போட்டலும் எரித்துவிடும். எந்த தாழ்ந்த குப்பை செத்தையைப் போட்டாலும் எரிக்கும். குப்பை செத்தையைப் போட்டு எரித்தது என்பதற்காக அக்னியை யாராவது குறை சொல்வார்களா? சொல்லமாட்டார்கள். அக்னியுடைய தூய்மை என்னிக்குமே தூய்மைதான். அதேசமயம் குப்பை செத்தையை வீட்டில் கோண்டுவந்து வைக்கலாமா. நாறிவிடும்.

ஏன் ஸ்வாமி இப்படி. அக்னி மட்டும் குப்பை செத்தையுடன் சேர்ந்தால் நாறவில்லையே என்று கேட்டால் என்ன வித்யாசமோ அந்த வித்யாசம்தான் பகவான் எங்கும் போவதற்கும் நாம் போவதற்கும். அவன் அக்னியைப் போலே. அவர் பிரபு. எதுவும் அவனுக்குத் தகும். நமக்கு அவன் மட்டுமே தகும். வித்யாஸத்தை நன்கு அடியார்கள் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். “எம்பெருமான் கோவிலுக்குள் போகலாம். அவன் பர்த்தா, ஒதுங்கலாம், நான் பார்யை, பத்தினி எங்கும் ஒதுங்கக் கூடாது” என்றார். அவனுக்கே ஆட்பட்டவள். இது பர்த்தா – பார்யா ஸம்பந்தம். உ காரத்தாலே பர்த்தா பார்யா ஸம்பந்தம் சொல்லிற்று..

  1. மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி-மகாரத்தால் ஞேய – ஞாத்ரு ஸம்பந்தம்.

இப்பொழுது ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லப்போகிறார். என்னத்துக்காக இந்த ஜீவாத்மா  ஞானத்தோடு இருக்கிறார். ஞானத்துக்கு ஒரு விஷயம் வேண்டும். இது புஸ்தகம் என்று தெரிந்துகொண்டாலோ, இது கடிகாரம் என்று தெரிந்துகொண்டாலோ ஞானமா? ஞானம்தான். இந்த ஞானம் எல்லாம் மோக்ஷம் வாங்கிக் கொடுக்கப்பொவதில்லை. பின் எந்த ஞானம் மோக்ஷத்தைக் கொடுக்கும். . அர்த்தபஞ்சக ஞானம். இந்த ஐந்தைப் பற்றிய ஞானம் இருந்தேயாகவேண்டும்.

மிக்க இறை நிலையும், மெய்யா உயிர் நிலையும் *

தக்க நெறியும், தடையாகித் – தொக்கியலும்*

ஊழ்வினையும், வாழ்வினையும், ஓதும்

குருகையர்கோன் * யாழினிசை வேதத்தியல்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச பிரத்யகாத்மான

ப்ராப்த்யு பாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச – வதந்தி சகலா வேதா: ஸேதிகாஸ புராணகா:  முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

ஐந்தைப் பற்றிய ஞானம். அதில் பரமாத்ம ஞானம் முதல்.அவனைப் பற்றிய ஞானம் நமக்கு முதலில் இருக்கவேண்டும். இந்த ஜீ(வாத்மா ஞாதா.கீழேயே மூன்று சொல்லப்பட்டதல்லவ? ஞானம், ஞாதா, ஞேயம் – அறியப்படுபவன் பரமாத்மா. அறிபவன் ஜீவாத்மா. அறிவிப்பது ஞானம். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்த்தோம் இல்லையா?

உலகில் எதைச் சொன்னாலும் மூன்று உண்டு.அதேபோல்தான் இங்கு ஞாதா, ஞானம், ஞேயம். இந்த ‘ம’ காரத்தாலே ஞாத்ரு – ஞேய ஸம்பந்தம். ஜீவாத்மாவால் பரமாத்மா அறியப்படுபவன். என்று இந்த எழுத்துச் சொல்லும்.

எங்கிருந்து இந்த விவரணம் கிடைத்தது. ம என்ற எழுத்தாலே இந்த பொருள் வருமா என்று தோன்றும். இருக்கு. ‘மனஜ்ஞானே’ – ‘மனு அவ போதனே’ கீழே அ காரத்துக்கு அவ ரக்ஷணே  என்ற தாது.பார்த்தோமில்லையா? அதுபோல மகாரத்துக்கு மன ஜ்ஞானே என்பது தாது.  ஞானம் படைத்தவன் ஜீவாத்மா. அவ போதனே – இவன் ஆராய்ச்சி பண்ணி, ஆராய்ச்சி பண்ணி ஞானத்தை சம்பாதிப்பவன் ஜீவாத்மா.. இந்த இரண்டு அர்த்தமும் மகாரத்துக்கு உண்டு.

அப்ப ஞானத்தைச் சம்பாதிப்பவன் என்றால் ஜ்ஞாதாவாகிறான் ஜீவாத்மா. அறிவாளி. எதைப் பற்றிய ஜ்ஞானம்? பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை சம்பாதிக்கிறான். வேறு எதைப் பற்றி எவ்வளவு தெரிந்துகொண்டாலும் அது ப்ரயோஜனமில்லை. ஐந்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். அதில் முதல் பரமாத்மாவைப் பற்றிய ஞானமே

‘ம’ என்ற எழுத்தால் ஞாத்ரு – ஞேய – ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

பிதா ச ரக்ஷ:ஶேஷி, பர்த்தா, ஞேய: என்று 5 ஸம்பந்தம். ஜீவாத்மா அறிவாளி. பரமாத்மாவை வேதத்தைக் கொண்டு அறிகிறான். ஞாதா – ஞேயம் என்ற ஸம்பந்தத்தை மகாரம் சொல்லும். ‘ஓம்’ என்பதில் ஐந்து ஸம்பந்தம் முடிந்தது

  1. நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி–நம:    ம: மு , ந – ம: எனக்கு, மு – நான், ந அல்லேன், நம: எனக்கு நான் அல்லேன். எனக்கு நான் அல்லேன். அப்ப நீ யாருக்கு ஸ்வாமிக்கு. ஸ்வாமி சொத்து ஸம்பந்தம் கிடைக்கிறது. பூ (புஷ்பம்) எனக்கு நான் என்று சொல்லிக்காது. என் வீடு எனக்கு நான் என்று சொல்லிக்கொள்ளாது. எதுவும் எனக்கு நான் என்று சொல்லிக்காது. அர்ச்சனை செய்கிறோம். ராமாய நம: என்கிறோம். ஸ்ரீ ராமனுக்காகவே நான். எனக்கு நான் அல்லேன். நான் கண்ணனுக்காக எனக்கு அல்லேன். ஸ்ரீ ராமானுஜருக்கே நான். எனக்கு அல்லேன். இவர்களுக்காகவே நான், எனக்கு அல்லேன் என்று சொல்வது தான் நம: என்பதின் பொருள். எனக்கு அல்லேன் என்று சொல்லிவிட்டால் அவன்தான் என்றாகிறது அல்லவா? இதிலிருந்து அவன் தான் ஸ்வாமி – நான் சொத்து என்றாகின்றது.

ஸ்வாமி (ப்ரஹ்மம்) – சொத்து .(ஜீவாத்மா). ஸ்வாமி தான் சொத்தைப் பற்றிக் கவலைப் படவேண்டும். சொத்து தனக்காகத் தான் கவலையே படாது. நாமல்ல. ஸ்வாமிதான் நமக்காக கவலைப் படுவார்.

ஸ்வாமி – சொத்து என்றால் வீடு, கார்  போலவா?–ஒரு வீடு. யாரோ ஒருவரை குடித்தனம் வைத்தேன். வீடு குடியிருக்கறவருக்கே சொந்தம் என்று சொல்லி,  காலி செய்யமாடேன் என்று.  நீதிமன்றம் போய்விட்டார்.. வக்கீலைவைத்து நான் நடையாய் நடந்து கொண்டிருக்கிறேன். வீடு கவலையே படாது. எங்கிட்ட இருந்தாலும், குடித்தனக்காரரிடம் இருந்தாலும் கவலைப் படாது. நான் ஜயித்து வீடு என் கைக்கு வந்தபிறகு நல்ல வேளை, நாம் முதலாளி கையில் சேர்ந்துவிட்டோம் என்று சந்தோஷப் படுமா? இல்லை. பிறத்தியாரிடம் இருக்கும்போது அது அழவும் இல்லை. என்கிட்ட வந்ததால் அது சிரிக்கவும் இல்லை. வந்து சேருவதற்கு அது முயற்சியை எடுக்கவும் இல்லை. சொத்து என்பது தனக்காக இருக்காது.பிறருக்காகவே இருக்கும்.

அதே போல இந்த ஜீவாத்மாவும் ‘நம:’ தனக்காக இல்லை. என்றால் ஸ்வாமிக்காகவே இருந்தாக வேண்டும் அல்லவா? அதைத் தான் அழகாகச் சொல்லும் சாஸ்திரம், “ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்”-சொத்தாக இருக்கும் தன்மை ஜீவாத்மாவுக்கே உரியது. ஸ்வாமியாக இருக்கும் தன்மை ப்ரஹ்மத்துக்கே உரியது.. ஜீவன் ஒரு நாளும் ஸ்வாமி ஆகாது. அவன் ஒருநாளும் சொத்து ஆக மாட்டான்.

பகவான் சொத்தாவான். யாருக்கு?  அடியார்களான பாகவதர்களுக்கு அவன் சொத்தாகிறான். ஸ்வாமி தேஶிகனின் திருவாக்கு பார்த்தோம் அல்லவா? தேவ பெருமாள்தான் தன் சொத்து என்றார்.. ஸ்வ- ஸ்வாமி – எது நியாயம். அடங்கினவனுக்கு அவன் சொத்தாக இருக்கிறான். அடங்காதவனுக்கு நெருங்கமாட்டான். ஆழ்வார் தன் திருவாய்மொழி பாசுரத்தில்;

அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே.

நான் பிரிந்து பிரிந்து போனால் அவன் விலகி விலகிப் போவான். நாம் கிட்டக்க போனால் அவனும் கிட்டக்க வருவன். வெட்டிண்டு போனால் வருத்த்த்தோடே விலகி இருப்பன். நாம் அவனை நெருங்குகையில் நம்முடையவன் என்று அவன் நினைக்கிறான். நாம் சொத்து – அவன் ஸ்வாமி.

நமஸ் ஸாலே ஸ்வாமி – சொத்து ஸம்பந்தம் சொல்லிற்று, ஆறாவது அர்த்தம் சொல்லப்பட்ட்து..

ஏழாவது ஸம்பந்தம்:

நாராயணாய – மூன்றாகப் பிரித்தால்::-நார + அயன + ஆய – நாராயணாய, நாராயணாய என்ற பதம் மூன்றாகப் பிரிக்கப் படுகிறது. மூன்று சம்பந்தங்கள் சொல்கிறது.

‘அ’காரம் = நாராயணாய என்று சொல்கிறது. ஆகவே ‘அ’ காரத்தில் ‘ஆய’ லுப்த சதுர்த்தி. சம்ஸ்க்ருத இலக்கணத்தின்படி இருந்தாகணும். “நாராயணாய”வில் உள்ள ஆய என்ற விபக்தி ஸ்தானப் ப்ரமாணத்தால் ஓம் இல் உள்ள ‘அ’ காரத்தில் லுப்த சதுர்த்தியாக, (ஏறி கழிந்த சதுர்த்தியாக) எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது என்று முமுக்ஷுப்படியில் பிள்ளைலோகாசாரியார் வியாக்யானம் பண்ணியுள்ளார். அ என்பது நாராயணாய வின் சுருக்கம்.

ஆனையாட்டம் பெரிய நாராயணாய பின்னால் வரும். அதற்கு மணியோசைபோல ‘அ’காரம் வருகிறது. அ முதலிலே, நாராயணாய பின்னால் வருகிறது. பின்னாடி வரும் ‘நாராயணாய’வில் நான்காம் வேற்றுமை உருபு இருக்கிறதல்லவா? சம்ஸ்க்ருத வியாகரணத்தின் படி முதலில் இருக்கும் ‘அ’ காரத்தில் நான்காம் வேற்றுமை உருபு இருந்தே ஆக வேண்டும். அது ஏறிக் கழிந்துள்ளது, லுப்த சதுர்த்தி என்று பார்த்து விட்டோம்.

நார – நித்ய வஸ்துக்களின் திரள்:-நார – ஸ்ரீமன் நாராயணனைத் தவிர இதர நித்திய வஸ்துக்களின் திரள். தன்னைக் காட்டிலும் வேறுபட்ட நித்திய வஸ்துக்கள் அவரைத் தவிர அனைத்தும் நார ஸப்தத்தால் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜர் விடாமல் “ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண:” தன்னைத் தவிர உள்ள அனைத்து வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்தவன் ஸ்ரீமன் நாராயணன் என்கிறார்.

ரிங் க்ஷயே என்பது தாது.  ர – என்றால் அழிவது ந என்றால் இல்லை.  நார என்றால் அழியாததுகளின் கூட்டம். நித்ய வஸ்துக்களின் திரள். எது அழியாது. பெருமாளின் திருமேனி அழியாது. பெருமாளின் குணங்கள் அழியாது. பிராட்டி அழிய மாட்டார். ஏன்? நான் அழிய மாட்டேன், நீங்களும் அழிய மாட்டீர்கள். பூமியும் அழியாது. எதுவுமே அழியப் போவதில்லை. சேதனாசேதனங்கள் அத்தனையும் அழியாது. சித் – அசித்  இது இரண்டின் மொத்தக் கூட்டமும் நார ஸப்தத்துக்குள் அடக்கம்.

அயன = ஆதாரம்-அயன – ஆதாரம்.  இங்கு அமர்ந்திருக்கிறோம். அது ஆதாரம், தரை ஆதாரம், தரைக்குத் தூண் ஆதாரம். தூணுக்கு ஆதாரம் அடித் தளம். அடித் தளத்துக்கு ஆதாரம் பூமி தேவி. ஒரு வஸ்து என்று இருந்தால் அதைத் தாங்குவதற்கு ஒன்று இருந்துதான் ஆக வேண்டும். அப்பொழுது நாரங்கள் என்ற நித்திய வஸ்துக்களின் திரளுக்கு ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அயனம் என்றால் ஆஶ்ரயம். அவர் தான் நாராயணன். அனைத்துக்கும் இருப்பிடம், அனைத்துக்கும் ஆதாரம்.

கைங்கர்யமே பரம ப்ராப்தி:-ஆய – அந்த நாராயணனுக்காகவே கைங்கர்யம் பண்ணுவது எனக்கு ஸ்வரூபம். நான் தொண்டு புரிய வேண்டும். “தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க” என்று முக் கரணங்களாலும் அவருக்குக் கைங்கர்யம் பண்ணணும். அதைப் பார்த்து அவர் ஆனந்தப்பட வேண்டும்.   கைங்கர்யத்தின் மூலம்  அவனது முக மலர்த்தி பெறுதல். நார – அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்கள். அயன – இருப்பிடம். ஆய – அவனது முக மலர்த்திக்காகவே கைங்கர்யம் செய்தல். அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிற அனுபவம் ‘ஆய’ பதத்தால் சொல்லப் படுகிறது.

  1. நார பதத்தாலே -ஶரீர ஶரீரி சம்பந்தம் சொல்லி   —நார என்றல் நித்ய வஸ்துக்களின் கூட்டம் என்று பார்த்தோம். இது இத்தனையும் ஶரீரம். அப்பொழுது பெருமாள் ஶரீரி. என்பதால் ஶரீரி – ஶரீர  ஸம்பந்தம்., ஶரீர ஆத்ம ஸம்பந்தம். ‘மம ஆத்மா’ என்று சொல்லி இருக்கிறார் அல்லவா? பகவான் ஆத்மா, ஜீவன் உடல். அவனைத் தவிர அனைத்தும் ஶரீரம். அவனது திருமேனி மட்டும் அவனுக்குச் சரீரம் அல்ல. பிராட்டிமார் மட்டுமல்ல. உலகத்தில் இருக்கும் சித் அசித் கூட்டங்கள் அனைத்தும் அவனுக்குச் ஶரீரம். நித்ய வஸ்துக்களின் திரள் அனைத்துக்கும் ஶரீரம். அனைத்தும் பிரஹ்மத்துக்குச் ஶரீரம். ஶரீர – ஆத்ம ஸம்பந்த்த்தை நார பதத்தில் சொல்லியாயிற்று.
  1. அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி–அயனம்- ஆஶ்ரயம்,  இருப்பிடம் என்றலே ஆதாரம், தாங்குவது என்று பொருள். அவன் ஆதாரம். எது ஆதேயம் அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்களின் திரள் ஆதேயம். ஆக ஆதார – ஆதேய ஸம்பந்தம்.–ஆதாரம் பகவான் (தாங்குபவர்) – நாரம் ஆதேயம் ( தாங்கப்படுகிறோம்)  ஆதார ஆதேய ஸம்பந்தத்தை அயன பதத்தால் சொல்லியாயிற்று.
  1. ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி–ஆய –  போக்த்ரு  – போக்யம். இது வ்யக்த சதுர்த்தி.

ஆய என்பது நாம் செய்யும் கைங்கர்யம். அதனால் அவர் கொள்கிற ஆனந்தம். நாராயணனுக்காக. அவன் முக மலர்த்திக்காகவே. அனுபவிக்கிறான். எனக்காக புஷ்பம், எனக்காக சந்தனம். இது இத்தனையும் போக்யம். நான் போக்தா.

அதேபோல நாராயணாய – நாராயணனுக்காக என்று சொன்னால் நாரயணனுக்காக பிரம்மா. நாரயணனுக்காக சிவன், ராமாநுஜர், நான் அசித் அத்தனையும் நாராயணனுக்காகவே. இவை அத்தனையும் போக்யம்.  நாராயணன் போக்தா. இந்த .போக்த்ரு –போக்ய ஸம்பந்த்த்தை “ஆய” பதத்தால் ஸாதித்தார்.

நார என்பதால் ஶரீர – ஶரீரி ஸம்பந்தம், –அயன பதத்தால் ஆதார – ஆதேய ஸம்பந்தம், –ஆய பதத்தால் போக்த்ரு – போக்ய ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

ஆக -ப்ரதம ரஹஸ்யம் -திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

ஓம் நமோ நாராயணாய, மூன்று பதம் எட்டெழுத்துக்கள். ஓம் – அ+உ+ம, நம:, நார+ஆயனம்+ ஆய. அவ ரக்ஷணெ என்ற தாது அ காரத்தில் ஏறிக் கழிந்துள்ளது.

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி

திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.

நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள் –

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Posted in Ashtaadasa Rahayangal, ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் | Leave a Comment »

ஸ்ரீ திருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும்–

November 22, 2022

ஸ்ரீ:ரியப் பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதன் ஏற்றத்தை பரமாசார்யரான நம்பிள்ளை ஈட்டிலே “ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையிறே!” என்று கொண்டாடியருளுகிறார்.

கவி என்று பேர் கொண்டவர்கள் ஆழ்வார் திருவவதாரத்திற்குப் பின்பு தோன்றியுள்ளார்கள். ஆயினும், அவர்கள் கவிகளை நம் பூர்வர்கள் கைக்கொள்ளுவதில்லை.

ஆனால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்கள் இல்லை என்றால் உற்சவங்களும் விழாக்களும் பொலிவிழந்து போகும் என்று வியந்து கம்பர் தம்முடைய சடகோபர் அந்தாதியில் குறிக்கும் பொழுது – அந்தமிலா மறையாயிரத்தாழ்ந்தவரும் பொருளைச் செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களுந் தந்தம்விழாவும் அழகும் என்னாம்? (சடகோபர் அந்தாதி – 14)

[அழிவில்லாதனவும் அநேக ஆயிரம் சாகைகளாக உள்ளனவுமான வேதங்களின் சாரார்த்தத்தை தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாகச் சீர்திருத்தி அருளிச் செய்யாதிருந்தாரானால் அந்தணர்களும் அவர்கள் கொண்டாடும் உத்ஸவங்களும் எங்ஙனம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயும் யாதாய் முடியும்] என்று குறித்தருளுகிறார்.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில் இவ்வாழ்வாரின் திருவாய்மொழி அனுபவத்திற்குத் தடையாக எழுந்தருளினார் என்று கோஷ்டி கலைக்கும் பெருமாள் வந்தார் என்று செல்வர் புறப்பாடினை நிறுத்திக் கொண்டார்கள் என்றால் – அதன் மூலம் திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

ஆழ்வார்களில் வேதம் தமிழ் செய்த மாறன், ஶடகோபன் – அஜ்ஞானத்திற்குக் காரணமான ஶடம் என்னும் வாயுவை நிரஸித்தவர், மற்றைய ஆழ்வார்களைத் தனக்குத் அங்கங்களாகக் கொண்டவர் என்ற பெருமைகள் உடையவர் நம்மாழ்வார்.

இவர் அருளிச் செய்த நான்கு ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழிக்கு மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த செய்தவைகள் அங்கங்களாகவும் உபாங்கங்களாகும் உள்ளன.

இது “வேத சதுஷ்டய அங்கோபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்” (43) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு உணரத்தக்கது.

இவருடைய அருளிச்செயலான திருவாய்மொழிக்கு, கல்பந்தோறும் சதுர்முக ப்ரஹ்மாவிற்கு வேதத்தினைக் கொடுத்தவனான ஸ்ரீரங்கநாதன் வேத ஸாம்யத்தைப் ப்ரஸாதித்தருளினான். இதுதன்னை கோயில் ஒழுகிலும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த கலியன் அருள்பாடு என்னும் க்ரந்தத்திலும் காணலாம்.

இதனை த்ராவிட வேத ஸாகரம் என்றார் ஸ்ரீமந் நாதமுனிகள். வேதத்தின் லக்ஷணங்கள் அனைத்தும் இத்திருவாய்மொழிக்கு உண்டு என்பதை வேத நூல், இருந்தமிழ்நூல் (45) என்னும் சூர்ணிகையினால் காண்பித்தருளுகிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு வேதத்தோடுள்ள ஸாம்யமானது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் நன்கு நிலை நாட்டப்பட்டது குறிக்கொள்ளத் தக்கது. இதற்கு த்ரமிடோபநிஷத் என்றே திருநாமம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருவாய்மொழியின் ப்ரமேயம் (திருவாய்மொழியினால் அறிந்து கொள்வது) அர்த்த பஞ்சகம் ஆகும். மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்.

அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும்,  வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று. ஆக (1) பரமாத்ம ஸ்வரூபம் , (2) ஜீவாத்ம ஸ்வரூபம் , (3) உபாயஸ்வரூபம், (4) விரோதி ஸ்வரூபம், (5) புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிய ஐந்து ஞானமே அர்த்த பஞ்சகம் என்பதாகும். இது தன்னை ஹாரீத ஸ்ம்ருதியில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]-என்ற ஶ்லோகம் தெரிவிக்கிறது.

இதன் திரண்ட பொருள் – அடையத்தக்க பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, அடையும் வழி, அடைந்து பெறும் பயன், அடைவதற்குத் தடை ஆகியவற்றை இதிஹாஸ புராணங்களோடு கூடிய வேதங்களும் வேதஶப்தார்த்தங்களையறியும் மஹாபுருஷர்களான முனிவர்களும் ஆழ்வார்களும் உரைக்கின்றனர்.

இந்த ஶ்லோகம் முமுக்ஷுப்படியில் வ்யாக்யானம் அருளிச்செய்யுமிடத்து பெரிய ஜீயர் காண்பித்தருளுகிறார். அதற்கு அரும்பதம் அருளிச்செய்த எம்பாவய்யங்கார் ஸ்வாமி முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு மஹாத்மாக்களான முநிகள் என்பதால் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.

இதன் ஏற்றத்தை பூர்வாசார்யர்கள் பலபடிகளாலும் பேசியுள்ளார்கள்.

  1. ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு. முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே எம்பெருமானே ஜகத்காரணன் என்பதை சொல்வதினால் பரஸ்வரூபமும், ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும், மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும், அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும், அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.
  2. “அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.
  3. இதனை “ஞாதவ்ய பஞ்சக ஜ்ஞானம்” என்கிறார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தம் அர்த்த பஞ்சகம் என்கிறார். மேலும் அதனை அறிகையே பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், அதனை அறிந்து கொள்ளாமையே பிறப்பு இறப்பு சுழியில் சிக்கிக் கொள்வதற்கும் காரணம் என்கிறார்.
  4. ஸப்த காதையில் இதனை “அஞ்சுபொருள்” என்கிறார்.

இனி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் அமைந்திருக்கும் படியை பார்க்கலாம். திருவாய்மொழி மொத்தம் 100 பதிகங்களால் ஆனது. அதில் இவ்வர்த்தத்தை மொத்தம் 20 பதிகங்களில் விசதமாக்கி மற்ற 80 பதிகங்களில் இது தன்னையே பரக்க அருளிச் செய்துள்ளார் ஆழ்வார். இப்பொழுது முக்கியமான 20 பதிகங்கள் (ஒவ்வொரு ஜ்ஞானத்திற்கும் 5 பதிகங்கள் ) – அவற்றைப் பார்க்கலாம்.

பர ஸ்வரூபம்:

பர ஸ்வரூபம் என்றால் ஸகல கல்யாண குணநிதியாய், அகில ஹேயப்ரத்யநீகநான (தோஷங்களுக்கு எதிர்த்தட்டான) பராத்பரனான ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வரூபம். அதனைப் ப்ரதிபாதிக்கும் (சொல்லும்) திருவாய்மொழிகள்,

  1. உயர்வற உயர்நலம்
  2. திண்ணன்வீடு
  3. அணைவதரவணை
  4. ஒன்றுந்தேவும்

“உயர்வறயுயர்நலம் உடையவன்“ என்று தொடங்கும் 1ம் பத்து முதல் திருவாய்மொழி பரத்வத்தில் பரத்வம் சொல்லுகிறது என்பர் ஆசார்யர்கள். இதில் எம்பெருமான் “தம் ஈஶ்வராணாம் பரமேஶ்வரம்” (ஶ்வேதாஶ்வரோபநிஷத் ) என்கிறபடியே பரர்களுக்கு எல்லாம் பரனாய் ஸர்வஸ்மாத் பரனாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்.

முதல் பாசுரம் உயர்வறவுயர்நலம் *உயர்வறவுயர்நலம் உடையவன்* என்பதினால் கல்யாணகுண யோகத்தையும், *அயர்வறும் அமரர்கள் அதிபதி* என்பதினால் நித்ய விபூதியோகத்தையும், *சுடரடி* என்பதினால் திவ்ய விக்ரஹத்தையும் அருளிச்செய்கிறார். திருவடியைச் சொன்னது திருமேனிக்கு உபலக்ஷணம்.

ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு) கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயும் தோஷங்களுக்கு எதிர்த்தட்டாயும் இருக்கை. இதுவே உபயலிங்கம் எனும் அடையாளங்கள். இதனை அஸங்கேய (கணக்கற்ற) அநவதிக (அவதி – எல்லை – அநவதிக – எல்லையில்லாததான) திருக்கல்யாண குணங்களை உடையவன் என்பதை – உயர்வறவுயர்நலம் உடையவன் என்றார்.

இரண்டாம் பாசுரம் மனனகமலமற எல்லாவித தாழ்வுகளுக்கும் எதிர்த் தட்டாகவும் எல்லையில்லாத திருக்குணங்களையும் உடையவனாய் இருக்கும் எம்பெருமான் – சேதனம் எனப்படும் அறிவுள்ள சித் மற்றும் அசேதனம் எனப்படும் அறிவில்லாத அசித் ஆகிய இரண்டு வஸ்துக்களைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணன் என அவனது மேன்மையை அருளிச் செய்கிறார்
மூன்றாம் பாசுரம் இலனது நித்ய விபூதி (விபூதி என்பது ஐஶ்வர்யத்தைக் குறிக்கும்) போலே லீலா விபூதியும் அவனுக்கு சேஷம் – அவனுக்கு உரியது என்கிறார்
நான்காம் பாசுரம் ஆய் நின்ற அவரே இந்த லீலா விபூதியுனுடைய ஸ்வரூபம் பரமாத்மாவிற்கு அதீனம் என்கிறார். எப்படியென்னில், (1) ஸ்ருஷ்டியில் இதை உண்டாக்குவது பரமாத்மா தான், (2) வஸ்துக்கள் வஸ்துக்களாகும்படி அநுப்ரவேஶித்ததும் அவன்தான், (3) இது அழியும் பொழுது ஸூக்ஷ்மமாகத் தன்னிடம் ஒடுங்கும்படி செய்வதும் அவன்தான்.
ஐந்தாம் பாசுரம் அவரவர் இனி ஸ்திதியும் (இருப்பு) அவனது அதீனம் என்கிறார். அதாவது ஸர்வர்க்கும் அந்தர்யாமியாய் நின்று ரக்ஷிப்பது எம்பெருமான் என்கிறார்.
ஆறாம் பாசுரம் நின்றனர் இருந்தனர் கிடந்தனர் இங்கு ஶப்தங்கள் பன்மையாகப் படிக்கப்பட்டுள்ளன. அதனால் எம்பெருமானைத் தவிர்ந்த அனைத்தின் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி அவனது அதீனம் என்பது இங்கு தெளிவு.
ஏழாம் பாசுரம் உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே
ஏழாம் பாட்டில் ஜகத்துக்கும் ஈஶ்வரனுக்கும் உள்ள ஶரீராத்மபாவத்தை அருளிச்செய்கிறார். *சுடர் மிகு சுருதியுள் உளன்” என்பதினால் வேதத்தினால் சொல்லப்படும் பரம்பொருள் எம்பெருமான் என்கிறார். இங்கு “* சுடர்மிகு சுருதியுள் * என்கையாலே நாராயணாநுவாகாதிகளில் சொல்லுகிற பரத்வம் லக்ஷ்மீ ஸம்பந்தம் இவையெல்லாம் அங்கீகரித்தாகிறார் *” என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி அனுஸந்திக்கத்தக்கது.
எட்டாம் பாசுரம் பரபரன் பரபரன் என்பதே உயிரான பதம். ஸர்வஸம்ஹர்த்தாவாய் (உலகில் ஸம்ஹரிக்கிறவன் என்று பெயரெடுத்தவர்களையும் மஹாப்ரளயத்தில் ஸம்ஹரிக்கிறவனாய்), ஸர்வஸ்ரஷ்டாவாய் (ஸர்வத்தையும் படைப்பவனாய்) ஸர்வாந்தர்யாமியான (அனைவருக்கும் அந்தர்யாமியான), ஸர்வேஶ்வரனே பரபரன் என்கிறார்.
பரபரன் – பர:பராணாம் பரம: பரமாத்மாத்ம ஸம்ஸ்தித: | ரூபவர்ணாதி நிர்தேஶ விஶேஷண விவர்ஜித: || (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 1-2-10) (மேலானவற்றைக் காட்டிலும் மேலானவனும் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லாதவனும் தனக்குத்தானே ஆதாரமாய் இருப்பனுமான பரமாத்மா ரூபம் நிறம் முதலியவை, நாமம் ஆகிய ப்ராக்ருத விஶேஷணங்கள் அற்றவன்) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் என்றபடி.
பத்தாம் பாசுரம் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே * அணோரணீயாந் மஹதோ மஹீயாந் * என்று ஶ்ருதி ஓதியபடியே பரதத்த்வமானது அணுக்களிலும் அந்தர்யாமியாய் எங்கும் பரந்துளன் என்றருளிச் செய்தார். இதனால் அவனது வ்யாப்தியை அருளிச் செய்தாராயிற்று
பதினொன்றாம் பாட்டு. வரனவில் திறல்வலி அளிபொறையாய் நின்ற பரன் பஞ்சபூதங்களுக்கும் அஸாதாரணமான ஶப்தாதி குணங்களுக்கு நிர்வாஹகனாய் பரனாய் நிற்பவன் ஸர்வேஶ்வரன்

இப்படிப் பரக்க எம்பெருமானின் பரத்வத்தை பேசினார் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலம் உடையவன்” பதிகத்தில். அதிலும் அவற்றைத் தான் மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் நேரே அனுபவித்துப் பின்பு அவற்றைப் பேசினார். அதுவும் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்கிறார். இவ்வளவு அர்த்தங்களையும் சுருக்கி ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
மயர்வேத நேர்கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு. (திரு. நூ. 1)  என்றருளினார்.

உயர்வே பரன்படியை என்பதினால் பரத்வே பரத்வமும், உள்ளதெல்லாம் தான் கண்டு என்பதினால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஆழ்வார் அவை அனைத்தையும் கண்டதையும், மயர்வேத நேர் கொண்டு உரைத்து என்பதினால் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்ததையும் இப்பாசுரத்தில் அருளினார் ஆயிற்று.

திண்ணன் வீடு என்னும் பதிகத்திலும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை அருளினார் ஆழ்வார். முதலில் உயர்வற உயர்நலம் பதிகத்தில் ஶ்ருதியைக் கொண்டு பரத்வம் சொன்னாற்போலே, இந்தப் பதிகத்தில் இதிஹாஸ புராணங்களைக் கொண்டு அவனது பரத்வத்தைப் ப்ரதிபாதிக்கிறார் (சொல்லுகிறார்) இந்தப் பதிகத்தில். அப்படி அருளிச்செய்தவைகளாவன

  • மாபாவம் விட அரற்குப் பிச்சைபெய் * கோபாலகோளரி ஏறன்றியே. (2-2-2)
  • தேவனெம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும்தகுமே (2-2-4)
  • தகுங்கோலத் தாமரைக்கண்ணனெம்மான் (2-2-5)
  • புள்ளூர்தி கழல்பணிந்தேத்துவரே (2-2-10)

இப்பதிகந்தன்னில் ஈட்டில் சில மேற்கோள்கள் இதிஹாஸத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளன. சிலவற்றை மட்டும் பரத்வம் சொல்லுவதைப் பார்க்கலாம்.

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |
க்ருஷ்ணஸயஹி க்ருதே பூதமிதம் விச்வம்சராசரம் || (மஹாபாரதம் பீஷ்ம பர்வம்)
உலகங்களுடைய உத்பத்தியும் க்ருஷ்ணன் தான்; ப்ரளயமும் க்ருஷ்ணன் தான் என்பது ப்ரஸித்தம். ஜங்கம ஸ்தாவரமாயிருக்கிற ஸகலமான இந்த ப்ராணி ஸமூஹமானது க்ருஷ்ண நிமித்தமாக இருக்கிறது.

யச்ச கிஞ்சிந்மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் |
தத் பச்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந: || (மஹாபாரதம் ஆரண்யம்)
உலகத்தில் சராசராத்மகமான யாதொன்று என்னால் பார்க்கப்பட்டதோ அவை எல்லாவற்றையும் நான் ஈச்வரனுடைய வயிற்றில் பார்த்தேன்

இதனை உட்கொண்டே ஸ்ரீமத் வரவரமுனிகள் * திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை – நண்ணி அவதாரத்தே நன்குரைத்த * என்றருளினார்.

*அணைவது அரவணை மேல்* என்பது இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆகும். ஈட்டில் இதன் அவதாரிகையில் பரத்வம் சொல்லுகிறது என்பதற்கு இரண்டு யோஜனைகள் காட்டப்பட்டுள்ளன. முதலாவது “தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்” என்கிற 6வது பாசுரத்தில் உள்ள * பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்பது கொண்டு இங்கு பரத்வம் பேசப்படுகிறது என்பது ஒரு நிர்வாஹம்.

அர்ஜுனன் தினமும் பரமஶிவனுக்கு ஒரு புஷ்பம் ஸம்ர்பிப்பது வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு தினம் ஸமர்ப்பிக்க முடியாமல் போகவே – அன்று கண்ணன் எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கவே மறுநாள் பரமஶிவனின் முடியில் அந்த புஷ்பத்தைக் கண்டான்.

இனி பராஶர பட்டர் – முதல் பாசுரமான * அணைவது அரவணை மேல் * என்பதினால் எம்பெருமான் நித்ய சூரிகள் அனுபவிப்பது போன்று மோக்ஷம் அருளக் கூடியவன் என்று கொண்டு – அதனால் பரத்வம் சொல்லுகிறது என்று நிச்சயித்தார்.

ஆழ்வார் இப்படி மோக்ஷப்ரதத்வத்தை (மோக்ஷம் கொடுக்க வல்லவனாயிருக்கை) தனியாக அருளிச் செய்ததை அடியொற்றியே யாமுநமுனியான ஆளவந்தாரும் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் – “த்வாதாஶ்ரிதாநாம்” என்கிற ஶ்லோகத்தில் மோக்ஷப்ரதத்வத்தையும் சேர்த்து அனுபவித்தார். இப்படி பட்டர் நிர்வாஹத்தையே முக்கியமாகக் கொண்டார்கள் நம் பூர்வர்கள்.

அடுத்ததாக 4ம் பத்து கடைசி தஶகம் – * ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் * என்கிற பதிகத்தால் அர்ச்சையில் பரத்வம் சொல்லுகிறது. * ஸதேவ ஸௌம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் * – என்று ஶ்ருதி சொன்னபடியே ஶ்ருஷ்டிக்கு முன்பு வேறு ஒருவரும் இல்லாத நிலைமையில், அனைத்தையும் தன்னுடன் ஒட்டி வைத்துக் காப்பாற்றி, அனுப்ரவேஶம் பண்ணியருளி அனைவரையும் படைத்ததைக் கொண்டு இங்கு அர்ச்சையில் பரத்தவத்தை ஸாதித்தருளுகிறார்

  • நான்முகன் தன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்- ஆதிப்பிரான்
  • நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – புகழாதிப்பிரான்

ஈட்டில் இந்த பதிகத்தின் ப்ரவேஶத்தில் அத்புதமாக எம்பெருமானின் பரத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமானுஜபதாச்சாயரான ஸ்வாமி எம்பார் வார்த்தையாக ஒன்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது – “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக பாவிப்பர்கள்”. ஆழ்வார் இத்திருவாய்மொழி அருளிச் செய்தபின்பு, அதை உணர்ந்ததனால் எம்பெருமானின் பரத்வத்தை அறிந்து கொண்டு – மற்றைய தேவர்கள் அடுப்பில் வைக்கும் கல் போன்று கொள்வர்கள் என்று – அதாவது மோக்ஷம் பராத்பரனாலேயே கொடுக்க முடியும். எனவே மற்றவர்களால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்றபடி.

—————

ஜீவாத்ம ஸ்வரூபம்:

பரமாத்ம ஸ்வரூபத்தைப் பார்த்த அநந்தரம் ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகளைப் பார்க்கலாம். ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகள்

  1. பயிலுஞ் சுடரொளி (3-7)
  2. ஏறாளும் இறையோனும் (4-8)
  3. கண்கள் சிவந்து (8-8)
  4. கருமாணிக்க மலைமேல் (8-9)

ஸ்ரீவசனபூஷணதிவ்ய ஶாஸ்த்ரத்தில் ஆசார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாசார்யர் * அஹங்காரமாகிற ஆர்ப்பைத் ஆத்மாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிரே *  என்றருளுகிறார். அதாவது தேஹமே ஆத்மா, மற்றும் நான் ஸ்வதந்த்ரன் என்னும் இரு வகையான அஹங்காரம், மமகாரம் என்னும் அழுக்கு – ஆசார்ய உபதேசத்தால் நீங்கும் போது – ஆத்மா உள்ளவரை இருக்குமது தாஸத்வம் என்பதாகும். ஆத்மா நித்யமாகையாலே தாஸத்வமும் நித்யம் என்பது கருத்து.

அந்த தாஸத்வமும் ஹரியின் அடியார்கள் வரை செல்லும் என்பதை * உற்றதும் உன்னடியார்க்கடிமை * என்பதாக, அடியார்களுக்கு அடியவனாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தை * பயிலுஞ் சுடரொளி * திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். இத்திருவாய்மொழியில்

  • எம்மையாளும் பரமர் (3-7-1)
  • எம்மையாளுடை நாதரே (3-7-2)
  • எம்மையாளுடையார்களே(3-7-3)
  • சன்மசன்மாந்தரம் காப்பரே (3-7-6)
  • எம்தொழுகுலம் தாங்களே (3-7-8)

என்றும் அருளிச்செய்து, முடிவில் * இவைபத்து அவன் தொண்டர்மேல் முடிவு * என்றது குறிக்கொள்ளத்தக்கது. இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களுக்கும் விஷயம் அவன் தொண்டர்கள் என்றாராயிற்று.

இனி * ஏறாளும் இறையோனும் * பதிகத்தில், அவனது திருவுள்ளத்திற்கு வேறுபடில் ஆத்மாவும் வேண்டா என்பது தேறிய கருத்தாகும். இங்கு ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு வேண்டா எனில் எனக்கும் வேண்டா என்றருளிச் செய்கிறார். ஆத்மீயம் என்றால் – ஆத்மாவுடையது என்றபடி.

இதனால் தேறுவது என் என்னில் – எம்பெருமானுக்காக என்றால் தான் ஆத்மாவும் கைக்கொள்ளத்தக்கது என்பதை எதிர்மறையாக உணர்த்தியருளுகிறார் ஆழ்வார்.

இதனை அடியொற்றியே ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் * ந தேஹம் ந ப்ராணாந் * [ஆத்மா என்று அபிமானம் கொள்ளாம்படி இருக்கும் தேஹம், ப்ராணன், தேவர்களும் ஆசைப்படும் ஸுகம், பிள்ளைகள், நண்பர்கள், ஆத்மா – இவையனைத்தும் உனக்கு புறம்பாகில் ஒரு க்ஷணகாலமும் ஸகிக்கமாட்டேன். இதைப் பொய்யாக விண்ணப்பித்தேனாகில் – உன்னிடத்தில் மது என்னும் அரக்கன் பட்டது படுகிறேன்] என்கிற ஶ்லோகத்தில் இவ்விஷயத்தையே அருளினார்.

இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகளும் * ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் – தேறுங்கால் என்றனக்கும் வேண்டாவெனுமாறன்றாளை * என்றருளினார். –

இதன் தேறின அர்த்தம் – “பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் கொண்ட ஈசன் திருவுள்ளவுகப்புக்கு வேறுபட்டால் உடைமையும், ஆத்மாவும் ஆராயுங்கால் எனக்கு வேண்டியதில்லை” என்பதாகும்.

அடுத்து *கண்கள் சிவந்து* என்னும் பதிகத்தினால் ஆத்மவஸ்து எம்பெருமானுக்கு சேஷம் என்றும், ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறாய் (தேஹாதிகளைக் காட்டிலும் வேறாய்) ஜ்ஞாநம் ஆநந்தங்கள் இரண்டையும் கொண்டிருப்பது என்று ஆத்ம தத்வத்தினைத் தெரிவித்தருளுகிறார்.

அதாவது * அடியேனுள்ளான் உடலுள்ளான் * என்று ஆத்ம தத்த்வத்தை தெரிவித்தருளும் பொழுது அடியேன் என்று அது பரமாத்மாவிற்கு தாஸன் என்பதை அறிவிக்கும் முகமாக அடியேன் என்ற சப்தத்தை உபயோகப்படுத்தியருளினார்.

இது * தாஸபூதா ஸ்வதஸ்ஸர்வே ஆத்மாஹி பரமாத்மந: * (இயற்கையாகவே ஆத்மாவானது பரமாத்விற்கு அடிமைப்பட்டவன் ) என்பது முதலான ப்ரமாண வசனங்கள் இங்கு விவக்ஷிதம்.

* சென்று சென்று பரம்பரமாய் * என்பதினால் தேஹம், ப்ராணன், மனஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று மேம்பட்டதாய் அவைகளில் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆத்மா என்று ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானவன் என்று தெரிவித்தருளினார்.

*  நன்றாய் ஜ்ஞாநம் கடந்ததே * – ஆத்ம ஸ்வரூபமானது ஜ்ஞாநம் மற்றும் ஆநந்தம் இவை கொண்டே அறிய வேண்டியது; நன்றாய் ஜ்ஞாநம் என்றதால் ஆநந்தமாயிருப்பதும் – ஆநந்தமென்பது அநுகூல ஜ்ஞாநமாகையாலே அதனால் ஜ்ஞாநம் சொன்னதாயிற்று.

இதனால் ஆத்மா ஜ்ஞாந ஆநந்தங்கள் உடையவன் என்பதாயிற்று.

ஆத்மாவானது பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் என்பது கீழேயே சொல்லப்பட்டது. அந்த விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபம் தானும் தனக்கு என்றில்லாமல் எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷமாயிருக்கும் (பிறர்க்கு அர்ஹமாகாமல் அவனுக்கே சேஷமாயிருக்கும்) என்பதனை *கருமாணிக்க மலை மேல் * (8-9) என்னும் திருவாய்மொழியில் தோழிப் பேச்சாக ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

இது தானும் அறிதியிடுவது * படவரவணையான் நாமமல்லால் பரவாளிவள் *, * திருப்புலியூர் புகழன்றிமற்று – பரவாளிவள் * *திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – அன்றி மற்றோருபாயம் என் இவளந்தண்டுழாய் கமழ்தல் *

இவை கொண்டு .  ஸ்ரீமத் வரவரமுனிகள் இதனை – * திரமாக அந்நியருக்காகாது அவன்றனக்கேயாகுமுயிர் அந்நிலையையோரு நெடிதா * (திரு. நூ – 79) என்றருளிச் செய்தார் –

ஸ்ரீ க்ருஷ்ண பகவான் விஷயத்தில் ஒரு கன்னிகையின் அவஸ்தையை அடைந்து – அத்விதீயமாய் விலக்ஷணமான ஸம்ஸ்லேஷ லக்ஷணங்களைத் தோழிப் பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே ஸ்திரமாக ப்ராப்த ஶேஷி (ஶேஷி – கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன்; ப்ராப்த ஶேஷி – ஒரு காரணமன்றிக்கே இயல்பாக அமைந்த ஶேஷி) சேஷமாகிற ஆத்ம ஸ்வரூபம் பிறருக்கு சேஷமாகாமல் அவனுக்கே சேஷமாகும் நிலைமையை தீர்க்கமாக ஆராயுங்கோள் – என்பது அந்தப் பாசுரத்தின் தேறின அர்த்தம்.

—————

விரோதி ஸ்வரூபம்:

விரோதியானது – கீழ்ச்சொன்னபடி பகவானுக்கே அடிமையான ஆத்ம வஸ்து அவனைக் கிட்டி வாழ்ச்சி பெறாது தடை செய்யுமவையாம். இந்த விரோதி வர்க்கத்தைச் சொல்லும் திருவாய்மொழிகள்

  • வீடுமின் முற்றவும் (1-2)
  • சொன்னால் விரோதம் (3-9)
  • ஒருநாயகமாய் (4-1)
  • கொண்ட பெண்டிர் (9-1)

இவற்றுள்  * வீடுமின் * பதிகத்தில் எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களின் தோஷங்களை அறிவித்து அதை விட, நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கிறார் ஆழ்வார். மேலும் அவற்றைப் பற்றுவதற்கு அஹங்காரம் (நான் நான் என்று நினைப்பது), மமகாரம் (என்னுடையது என்று நினைப்பது) ஆகிய இரண்டுமே ப்ரதான காரணம் ஆதலால் அவற்றை * நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து * என அவற்றை அடியோடு விடச் சொல்கிறார்

இத்திருவாய்மொழியில்.  இங்கு * அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: | அவித்யா தருஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் * (6-7-11) என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் நினைக்கத்தக்கது. [தான் அல்லாத தேஹத்தில் தான் என்கிற நினைவும், தன்னுடையதல்லாத பொருள்களில் தன்னுடையது என்கிற நினைவும் ஸம்ஸாரத்தில் அவித்யையாகிற காம்யகர்மங்களெனும் மரம் வளர்வதற்குறுப்பான விதைகளாகும்] .

இனி ஸேவை செய்வது எம்பெருமானுக்கே என்றும் – மற்றவர்களுக்கு ஸேவை செய்வது அஸேவ்ய ஸேவையாகும் (செய்யத் தகாததாகும்) என்பதனை * சொன்னால் விரோதமிது * என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.

* என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் * – முதலான இப்பதிகத்தில் உள்ள பாசுரங்கள் இதனைத் தெரிவிப்பன. இப்படி அஸேவ்ய ஸேவை செய்தால் த்ருஷ்டமும் (கண்ணால் தெரியும் பலனும்), அத்ருஷ்டமும் (ஐஹிஹ லோக பலங்களும்) கிடைக்காது – மாறாக அநர்த்தமே ஸித்திக்கும் என்பது இப்பதிகத்தில் அறிய வேண்டியது.

ஒரு புருஷனால் வேண்டப்படுவது புருஷார்த்தமாகும். அது நான்கு வகைப்படும். ஐச்வர்யம் (இது இரு பிரிவு – இழந்த செல்வம், புதிதாக வேண்டும் செல்வம்), கைவல்யம் (ப்ரக்ருதி ஸம்பந்தம் ஒழித்து பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவித்தல்) மற்றும் பகவல்லாபம். இவற்றுள் ஐச்வர்யம், கைவல்யம் இரண்டும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விட வேண்டியது.

இதனை * மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே இனிதாம் * என்று மாமுனிகள் அருளிச் செய்கிறார்.

அதனையும் * ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் * என்பதால் இவ்வுலகம் அனைத்தையும் தன் ஆட்சியின் கீழ் என்னும்படி வாழ்ந்தாலும், அது நிரந்தரமில்லை – * பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * என்றுரைத்தார்.

இனி ஸ்வர்க்க லோகாநுபவமோ என்னில் * க்ஷீணே புண்யேமர்த்த்யலோகம் விஶந்தி * (புண்யம் அழிந்தவாறே அங்கிருந்து விழுகிறார்கள்) என்பதை * குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தி மீள்வர்கள் * என்றார். இது ப்ரஹ்மலோகானுபவம் வரை உபலக்ஷணம்.

இவை போல் அஸ்திரமாக இல்லாமல் இருந்தாலும் தன்னைத் தான் அனுபவிப்பதாகிற கைவல்யம் – * இறுகலிறப்பு * என பகவதனுபவத்தைப் பார்த்தால் தோஷமாயிருக்கும்.

ஆர்க்கும் ஹிதம் தன்னையே பார்க்கும் கீர்த்தியுடைய மாறன் * கொண்ட பெண்டிர் * பதிகந் தன்னில் சரீர ஸம்பந்தத்தினால் வரும் அனைத்தும் த்யாஜ்யம் (விட வேண்டும்) என்பதை தெளிவாக உரைத்தருளினார்.

சரீர ஸம்பந்தங்கள் அனைத்தும் கர்மமடியாக வருபவை. * கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை * என்கிறார் ஆழ்வார்.

நிருபாதிக (ஒரு காரணம் பற்றி இல்லாமல்) ஸம்பந்தியான ஈஶ்வரனைப் பற்றினால் அவன் * அடியார்க்கென்னை ஆட்படுத்தும் * என்றபடி அவனது அடியவர்களுடன் சேர்த்து விடுகிறான். அதுவே ஆத்மவிற்கு ஹிதம்.

——————–

உபாயஸ்வரூபம்:

உபாயமாவது இவ்வாத்ம வஸ்துவின் ஸ்வரூபத்திற்குச் சேர செய்ய வேண்டியது ஆகும். இது தெரிவிக்கும் திருவாய்மொழிகள்

  • நோற்ற நோன்பிலேன் (5-7)
  • ஆராவமுதே (5-8)
  • மானேய் நோக்கு நல்லீர் (5-9)
  • பிறந்தவாறும் (5-10)
திருவாய்மொழி தெரிவிக்கும் கருத்து
நோற்ற நோன்பிலேன் கைமுதலில்லாமை – பேறு பெற்றுத் தருவதற்கு – வேறு உபாயங்கள் ஒன்றும் செய்யாமை. ஶரணாகதி அநுஷ்டிக்கும் பொழுது வேறு உபாயங்கள் ஒன்றும் நம் கைகளில் இல்லை என்றும் – நமது தீய வ்ருத்தங்களையும் சொல்லிக் கொண்டே அநுஷ்டிக்க வேணும், இதனை * நோற்ற நோன்பிலேன் * என்றார். சரி பேற்றுக்கு என்ன உபாயம் என்னில் – * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என எம்பெருமானே உபாயம் என்றபடி. மற்றைய உபாயங்கள் ஸாத்யோபாயங்கள் (சேதனனுடைய செயலாலே ஸாதிக்க வேண்டுபவை). எம்பெருமானோ என்னில் ஸித்தோபாயம் (ஸித்தமாக இருக்கிறான்)
ஆராவமுதே கீழே ஆகிஞ்சன்யம் அருளிச் செய்தார். இங்கு எம்பெருமானை விட்டால் வேறு கதியில்லை என்பது தோன்றும்படி * களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் * (எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி வேறு சரணமுடையேனல்லேன்) என அநந்யகதித்வத்தை அருளிச் செய்கிறார். ப்ரபந்நர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக வேண்டும் 1) ஆகிஞ்சன்யம் – எம்பெருமானைத் தவிந்தவை உபாயாந்தரங்கள் எனப்படும் – கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள். இவைகளில் கை வைக்காமல் இருக்கை ஆகிஞ்சன்யம் ஆகும். 2) அநந்யகதித்வம் – உன்காரியமாகிற மோக்ஷம் அளிப்பதில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில் நான் என்னுடைய  * நம்மேல் வினைகடிவான்- எப்போதும் கைகழலாநேமியான் *  என்னும் நிஷ்டை (இருப்பு) குலையமாட்டேன். இப்படி அநந்யகதிவம் முன்னாக * கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் *  – கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொள்ளுகை என்பதை இந்தப் பதிகத்தால் வெளியிட்டார்.
மானேய் நோக்குநல்லீர் * நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள் * என்னும்படி ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களையெல்லாம் வைக்கையும், அவைகளின் மேல் அத்யவஸாயம் உடையவராய் இருக்கையும்.
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, * , எம்பெருமான் திருக்குணங்கள் *எனதாவியை நின்றுநின்று உருக்கியுண்கின்ற*,  *என்னையுன் செய்கை நைவிக்கும்*  *வந்தென்னெஞ்சையுருக்குங்களே* என சிதிலப் பண்ணினாலும், சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் கைகொள்ள வேண்டாம் என நினைத்தாலும் அப்படி உபேக்ஷிக்க விடாதே கைகொள்ளப்பண்ணும் இயல்வினன் திருவனந்தாழ்வான்; அவர்மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொள்ளுகை ஆழ்வார் இத்திருவாய்மொழியில் உபதேஸிக்கும் அர்த்தம் ஆகும்.

———————————–

புருஷார்த்த ஸ்வரூபம்:

புருஷார்த்தம் என்பது – புருஷனால் அர்த்திக்கப்படுவது. இதுவும் கீழே நிருபித்த அத்யந்த பாரதந்த்ரயனான ஜீவாத்மாவின் தன்மைக்குச் சேர இருக்க வேண்டும். இதனை நிருபித்த திருவாய்மொழிகள்

எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

* எம்மா வீட்டுத் திறமும் * என்கிற திருவாய்மொழி அருளும் அர்த்தம் மிகவும் சீர்மையானது. நம் பூர்வாசார்யர்கள் மிகவும் சீர்மையான அர்த்தங்களை * எம்மா வீடு * என்றே குறிப்பிடுவர்கள். இனி இதில் இருக்கும் அர்த்தத்தைப் பார்க்கலாம். ஆழ்வார் அனைவருக்கும் எம்பெருமான் மோக்ஷப்ரதன் (மோக்ஷத்தை அளிக்க வல்லவன்) என்று உபதேசித்ததைப் பார்த்த எம்பெருமான் – ஆழ்வாருக்கு மோக்ஷத்தில் ஆசையுள்ளது என்று கொண்டு, ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் ப்ரஸாதிக்க திருவுள்ளமானான்.

அதைப் பார்த்த ஆழ்வார் – ” எம்பெருமானே! எனக்காகக் கொடுப்பதனால் மோக்ஷமும் புருஷார்த்தம் அன்று என்று நிர்த்தாரணம் பண்ணியருளி, எம்பெருமானே! நீ பரமபதத்தில் என்னை வைக்கவுமாம், அல்லது ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே வைக்கவுமாம் – எனக்கு ஒன்றுமில்லை. உனக்கு திருவுள்ளமே எனக்கு வேண்டுவது ” என்று புருஷார்த்த ஸ்வரூபத்தை அருளிச் செய்தார். கைங்கர்யத்தில் தனக்காகப் பண்ணுவது என்பது ஸ்வார்த்தமாகும். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

இந்த கைங்கர்யமும் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் செய்ய வேண்டும் என்பதை * ஒழிவில் காலமெல்லாம் * என்ற திருவாய்மொழியினால் உண்ர்த்துகிறார்.

  • * சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து* (3-3-2) அதாவது – “எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்திலே ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் அனைவரும் *சென்னியோங்கு தண் * திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அந்தப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பூவார்கழல்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க முடியாதவர்களாய் சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றன;” என்பதினால் உடம்பினால் செய்யும் கைங்கர்யத்தையும்,
  • * தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து * (3-3-3) என்பதினால் தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய மனஸ்ஸு இருக்கும்படியையும் அதனால் செய்யும் கைங்கர்யத்தையும்,
  • * ஈசன் வானவர்க்கென்பன் * (3-3-4) என்பதினால் நித்யர்களைச் சொல்லி அவர்கள் இருக்கும்படியான * நம இத்யேவ வாதிந* என்று அவர்கள் எம்பெருமானால் போகம் அனுபவிப்பர்களாய் அந்த போகத்தினால் வரும் ஆனந்தமும் எங்களதன்று என்பதற்காக நம: நம: என்று உரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதினால் வாசிகமான கைங்கர்யத்தையும் காட்டியருளினாராயிற்று,

இதனால் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதை அருளிச் செய்தாராயிற்று. இதனையும் * வேங்கடத்துறைவார்க்கு நம* (ஸ்ரீவைகுண்ட வாஸத்தை விட்டு திருமலையிலே நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம:) என்பதினால் தன் போகத்திற்காக என்னும் புத்தி நிவ்ருத்தியும், * சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே * (பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்) என்பதினால் அக்கைங்கர்யத்தை அளிப்பதும் திருமலையாழ்வாரே என்றதாயிற்று. இதனால் அந்த கைங்கர்யம் தானும் * வழுவிலா அடிமையாயிருக்கும் * என்பதனை அருளிச் செய்தாராயிற்று.

இந்த கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல், அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை * நெடுமாற்க்கடிமை * (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார். இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது * தனிமாத் தெய்வமான * எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.

*சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் * (ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி) * அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே * (ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்) * கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே! * (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்கவேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.

இறுதியாக * வேய்மருதோளிணை * பதிகத்தில் புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. இதனை “ பரஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வத்தைச் சொன்ன ” (அவனுடைய திருமுகமலர்த்தியே பேறாக) என்கிறார் ஸ்ரீமத் வரவரமுனிகள். இப்பதிகந்தன்னில் * உகக்கு நல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தொறும் நாங்கள் வியக்கவின்புறுதும் எம்பெண்மையாற்றோரும் * என்கிற பாசுரம் தன்னில் இவ்வர்த்தம் சொல்லப்பட்டது.

ஆழ்வார் இப்பதிகந்தன்னில் கண்ணன் எம்பெருமான் நம்மை விட்டு பசு மேய்க்கப் போனான் என்று இடைப் பெண்கள் பேசும் பேச்சாகப் பேசினார். க்ருஷ்ணனை என்னை விட்டுவிட்டு பசு மேய்க்கிறேன் என்று போகாதே எனப் பல காரணங்களைச் சொன்னார். அதில் இப்பாசுரத்தின் முந்தைய பாசுரத்தில் * நீ உகக்குநல்லவரொடும் உழிதராயே * (உனக்குப் பிடித்த ஸ்த்ரீகளுடன் இங்கேயே இரு) என்றார்.

இதனைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மை தானோ? நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே தவிர, உங்களருகே நான் வேறு சில பெண்களோடே இருந்தல் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீகளோ?” என்று கேட்டான். அதற்கு பதில் கூறுவதாக இருந்து கொண்டு நம் ஸ்வரூபத்திற்குத் தக்க புருஷார்த்தத்தைத் தெரிவிப்பது இப்பாசுரம்;

உன்னோடு நாங்கள் இருப்பதைக் காட்டிலும், நீ உன் திருவுள்ளத்தில் உகப்பாக இருப்பவர்களோடு இரு, அதனால் நாங்களடையும் உகப்பே எங்களுக்கு உயர்ந்தது என்கிறார் இப்பாட்டில்.
* எம் பெண்மையாற்றோம்* – உன் சந்தோஷத்திற்கு வேறாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு வேண்டோம்; உன் சந்தோஷமே முக்கியம் எனும் ஸ்வரூபஜ்ஞானமில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றபடி.

ஆக இதுவரையில், கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய், அனைத்து தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், ஸர்வஶேஷியாய், அனைவரையும் ரக்ஷிக்கிறவனாய், இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் (1), தேஹம் இந்திரியம் முதலானவற்றைக் காட்டிலும் வேறாய் ஜ்ஞானானந்தங்களை லக்ஷணமாக உடையவனாய், பகவானுக்கே ஶேஷமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் (2), அஹங்கார மமகாரங்களை விளைக்கடவதாயும், ஜீவனுடைய ஸ்வரூபத்தை மறைக்கக் கடவதாய் இருக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தம், எம்பெருமானைத் தவிர மற்ற பலன்களில் ஆசை வைக்கை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் சேவை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பந்துக்கள் என நினைத்தல் ஆகிற விரோதி ஸ்வரூபமும் (3), ஜீவாத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தக்கதான உபாய ஸ்வரூபமும் (4), * ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: * என்று அவனுடைய முக மலர்த்தியே பேறான புருஷார்த்த ஸ்வருபமும் (5) ஆகிய ஐந்தினையும் விரிவாகத் தெரிவிக்கும் திருவாய்மொழிகளைப் பார்த்தோம். மற்றுமுள்ள 80 பதிகங்களிலே இவ்வர்த்தமே கிடக்கிறது.

பணவாளரவணைப் பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும் குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்தது உய்ய தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாளரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – இவ்வர்த்தங்கள் அனைத்தையும் ஒரு சூர்ணிகையிலே அடக்கி அருளியுள்ளார்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும் எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

ஜயது யஶஸா துங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணாஸார்த்தம் தஸ்மை ஶுபாந் யபி வர்த்தயந்
வரவர முநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயது க்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்; அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்; அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Ashtaadasa Rahayangal, திரு வாய் மொழி | Leave a Comment »

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதயம்– நாடகம் –முதல் அங்கம் —

October 24, 2022

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மினியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————–

ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.
“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை (அயோத்திக்கு மற்றோரு பெயர்)
மஹாராஜர் காணலாம். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்திமாநகரம்.
இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும். அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன.
அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும். ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே,
தன் அவதாரத்தை பூர்த்திசெய்து கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது,
அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது. மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி
அயோத்தி மாநகரம், ரகுவம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.
மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால், மேன் மேலும் வளருகிற
புகழையுடையவன் ராமன். இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும்,
சாபத்தையே ஆயுதமாகவுடைய கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும்
கெட்ட தசையை போக்கடிக்கும் திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-
சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய