பாரத பூமியெங்கும் முழுமுதற் கடவுள் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோயில்களில் வழிபடப்படுகிறார்.
அவற்றில் சில கோயில்களும் விக்ரஹங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர், திருப்பதியில் பாலாஜி, குருவாயூரில் குருவாயூரப்பன், உடுப்பியில் கிருஷ்ணர்,
துவாரகையில் துவாரகாதீஷர் என்று இருப்பதைப் போல,
மஹாராஷ்டிராவின் பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ விட்டலராக வீற்றுள்ளார்.
அவர் தமது பக்தர்களால் பாண்டுரங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
பண்டரிபுரம் மும்பைக்கு தென்கிழக்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிலரால் பூ-வைகுண்டம் (பூலோகத்தில் உள்ள வைகுண்டம்) என்றும்,
சிலரால் தக்ஷிண துவாரகை (தென்னிந்தியாவின் துவாரகை) என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம்
பீமா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
இந்த நதி பண்டரிபுரத்தை அடையும்போது பிறைநிலை போன்று தோற்றமளிப்பதால்,
இங்கே சந்திரபாகா என்று அழைக்கப்படுகிறது.
விட்டலரின் பக்தர்களுக்கு இந்நதி கங்கையைப் போன்று புனிதமானதாகும்.
நதிக்கரையில் பதினான்கு படித்துறைகள் உள்ளன, அவற்றுள் மஹா துவார படித்துறை முக்கியமானதாகும்.
இப்படித் துறையையும் விட்டலரது கோயிலின் கிழக்கு வாசலையும் இணைக்கக்கூடிய வீதியில்
துளசி, பூமாலைகள், தேங்காய், பழம், ஊதுவத்தி, இனிப்புகள் என பகவானுக்கு அர்ப்பணிப்பதற்காக
பல்வேறு பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன.
கோயிலும் விக்ரஹ வழிபாடும்
கருங்கல்லினால் கட்டப்பட்டதும் சுமார் ஐயாயிரம் வருடங்கள் பழமையானதுமான இத்திருக்கோயிலில்
பகவான் விட்டலர் ஸ்வயம்பு மூர்த்தியாக வீற்றுள்ளார்.
முற்றத்திலிருந்து சில படிகள் ஏறினால் தரிசன மண்டபத்தை அடையலாம்.
சுவர் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நின்றபடி தரிசனத்திற்கு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
விக்ரஹ அறையின் நுழை வாயிலில் வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான
ஜயர், விஜயர் ஆகிய இருவருக்கும் பெரிய மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.
மெல்லிய புன்சிரிப்புடன் கருமை நிறத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ விட்டலரின் விக்ரஹம் மூன்றரை அடி உயரத்தில் உள்ளார்.
அவர் ஒரு செங்கல்லில் நின்று கொண்டுள்ளார்,
தனது கரங்களை இடுப்பில் வைத்தபடி கம்பீரமாக தோற்றமளிக்கின்றார்.
இந்த தோற்றம் பண்டரிபுரத்தில் நிகழ்ந்த அவரது லீலையைக் காட்டுகிறது.
பகவான் ஏன் பண்டரிபுரத்திற்குச் சென்றார் என்பதையும்
இந்த ரூபத்தில் அவர் நிற்பதற்கான காரணத்தையும்
பத்ம புராணமும் ஸ்கந்த புராணமும் விளக்குகின்றன.
ஒருமுறை ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைச் சந்திப்பதற்காக துவாரகைக்கு வந்தாள்.
அச்சமயத்தில் கிருஷ்ணர் தன்னை விட ராதையின் மீது அதிக கவனம் செலுத்துவதை ருக்மிணி தேவி கவனித்தாள்.
அதனால் மனமுடைந்து பண்டரிபுரத்திற்கு அருகிலிருந்த திண்டிரவனத்திற்கு அவள் வந்து சேர்ந்தாள்.
ருக்மிணியிடம் மன்னிப்பை வேண்டி கிருஷ்ணர் வந்த போதிலும், அவளது கோபம் தணியவில்லை.
அச் சமயத்தில் தனது பக்தரான புண்டரிகரை சந்திப்பதற்காக பகவான் பண்டரிபுரத்திற்கு வந்தார்.
புண்டரிகரின் ஆஸ்ரமத்தை பகவான் அடைந்தபோது,
அவர் தனது வயதான வைஷ்ணவ தாய் தந்தையருக்கு சேவை செய்து வந்தார்.
அதனால், பகவானுக்கு ஒரு செங்கல்லினைக் கொடுத்து அதில் நின்றபடி காத்திருக்கக் கோரினார்.
பகவானும் அப்படியே செய்தார். தனது தாமரைக் கரங்களை இடுப்பில் வைத்தபடி புண்டரிகரின் வருகைக்காக காத்திருந்தார்.
அவர் அங்கு காத்திருந்தபோது, தனது கோபத்தைக் கைவிட்ட ருக்மிணி தேவியும்
திண்டிரவனத்திலிருந்து வந்து அவருடன் சேர்ந்து கொண்டாள்.
இருவரும் விக்ரஹ ரூபத்தில் அப்படியே பண்டரிபுரத்தில் தங்கிவிட்டனர்.
பகவான் இன்றும் அந்த செங்கல்லில் நின்றபடி, புண்டரிகருக்காக அன்றி எல்லா பக்தர்களின் வருகைக்காக காத்திருக்கின்றார்.
அவ்வாறு காத்திருக்கும்போது, அவர் தமது பக்தர்களிடம் கூறுகிறார்,
“கவலைப்பட வேண்டாம். என்னிடம் சரணடைந்தவர்களுக்கு, இந்த பௌதிக உலகத்தின் கடல் போன்ற
துன்பத்தினை நாம் பெருமளவில் குறைத்து விடுகிறேன். பாருங்கள் இதன் ஆழத்தை!”
கடலின் ஆழம் இடுப்பளவில் மாறி விட்டதைக் காட்டும் பொருட்டு, அவர் இடுப்பில் கைவைத்தபடி நிற்கின்றார்.
மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர்
வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார்.
வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார்.
அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன.
அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி திலகத்தினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு
அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர்.
விட்டலரின் வழிபாடு அதிகாலை நான்கு மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்குகின்றது.
ஆரத்திக்குப் பின்னர், பால், தயிர், நெய், தேன், சக்கரை நீர் ஆகியவற்றினால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சில சமயங்களில் அபிஷேகத்திற்கு மத்தியில் அவருக்கு வெண்ணெய் ஊட்டுவதும் வழக்கம்.
அபிஷேகத்திற்குப் பின்னர், அவர் நன்கு உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகிறார்.
தனது கருணை வாய்ந்த தன்மையை வெளிப்படுத்தும் விதமாக,
அவர் தனது அபிஷேக நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அனைவருக்கும் அனுமதியளிக்கின்றார்.
தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் தரிசனத்திற்காக பண்டரிபுரம் வருகின்றனர்.
பண்டரிபுரத்தின் தன்னிகரற்ற வழக்கம் என்னவெனில்,
ஒவ்வொரு யாத்திரிகரும் விக்ரஹத்தின் திருப்பாதங்களை தொடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்,
சிலர் அந்த திருப்பாதங்களில் தங்களது தலையைக்கூட வைத்து வணங்குகின்றனர்.
ஆயினும், கூட்டத்தின் காரணத்தினால் அனைவரும் விரைந்து செல்ல வேண்டியது அவசியமாகிறது.
விட்டலரின் சன்னதிக்கு அருகில், பகவானின் அழகிய திருமகளான ஸ்ரீமதி ருக்மிணி தேவியின் சன்னதி உள்ளது.
தரிசனம், ஆரத்தி, நைவேத்யம் என்று நாள் முழுவதும் விட்டலர் கருணையை வழங்குகிறார்,
மதிய நேரத்தில் சிறிய ஓய்வு வழங்கப்படுகிறது.
இரவு பதினோரு மணிக்கு கடைசி ஆரத்தி காட்டப்பட்டு, பின்னர் அவருக்கு ஓய்வு வழங்கப்படுகிறது.
விட்டலரின் பக்தர்கள்
விட்டலரின் சில பிரசித்தி பெற்ற பக்தர்கள் மஹாராஷ்டிரா முழுவதும் பயணம் செய்து அவரது மகிமையைப் பரப்பியுள்ளனர்.
அவர்களது பிரச்சாரமும் பக்தி பாவமும் மக்களிடையே நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்களது முடிவான உபதேசம் என்னவெனில்,
“தொடர்ந்து பாடுங்கள், தொடர்ந்து ஆடுங்கள், அவரது திருவடிகளின் அருகில் செல்லும்போது கருணைக்காக வேண்டுங்கள்.”
எனவே, நாம ஸங்கீர்த்தனம் மஹாராஷ்டிரா முழுவதும் பிரபலமான ஒன்றாகும்.
இது துகாராமின் நிலம்,
துகாராமர் மஹாராஷ்டிராவின் சாதுக்களில் மிகவும் பிரபலமானவர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர்,
இன்றுவரை மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அபாங்கங்கள் என்று அழைக்கப்படும் அவரது 4,500 பாடல்கள் மஹாராஷ்டிர மக்களின் இதயத்தில் குடிகொண்டிருப்பவை.
துகாராமர் தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார், நாட்டு மக்களை பக்தியின் பாதைக்கு கொண்டு வந்தார்.
அவரது மொழி மிகவும் எளிமையானதாக இருந்ததால், அனைத்து கிராமத்தினரும் அவரது பாடல்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
பண்டரிபுரத்தின் முக்கிய திருவிழாக்களில் நிகழும் கீர்த்தனைகளுக்கும் பஜனைகளுக்கும் அவரே முக்கிய மூலமாவார்.
“துகாராமரின் ஸங்கீர்த்தன குழு இன்றும் மும்பையில் மிகவும் பிரபலமானதாகும்.
அது ஏறக்குறைய கௌடீய வைஷ்ணவர்களின் கீர்த்தன குழுவினை ஒத்துள்ளது,
அவர்களும் பகவானின் திருநாமத்தினை மிருதங்கம் மற்றும் கரத்தாளங்களுடன் இணைந்து பாடுகின்றனர்.”
அவர்களும் கௌடீய பழக்கத்திற்கு ஏற்றாற் போல, கழுத்தில் துளசி மாலையும் திலகமும் அணிகின்றனர்.
துகாராமர் சில நேரங்களில் பொறாமை கொண்ட நபர்களால் அவமரியாதை செய்யப்பட்டார்,
ஆயினும் அவர் புல்லை விடப் பணிவாக அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டார்,
அதனால் அவரது எதிரிகளின் இதயமும் மாறியது. அவர் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபட்டபடியே
தனது அதே உடலுடன் பலரும் பார்க்கும்படி ஆன்மீக உலகத்தை அடைந்தார்.
ஞானேஸ்வரர், நாமதேவர் ஆகியோரும் பண்டரிபுரத்தின் பிரபலமான சாதுக்களாவர்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் மக்கள் குவிகின்றனர்.
இருப்பினும், ஜுலை மாதத்தில் வரும் ஆஷாதி ஏகாதசி திருவிழா (அல்லது திண்டி யாத்திரை திருவிழா)
இலட்சக்கணக்கான மக்களைக் கவருகின்றது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்ள மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி,
கர்நாடகா, ஆந்திரா, குஜராத் என பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிகின்றனர்.
ஆஷாதி ஏகாதசியன்று விட்டலரை தரிசிக்க அனைவரும் முயல்வதால், பெரும் திரளான கூட்டத்தைக் காண முடியும்,
ஒவ்வொருவரும் சில நொடித் துளிகளே விட்டலரை தரிசிக்க இயலும்.
சந்திரபாகா நதியின் ஒரு கரையில் விட்டல் ருக்மிணியின் கோயில்;
மறுகரையிலோ ஸ்ரீ ஸ்ரீ ராதா பண்டரிநாதர் வீற்றிருக்கும் இஸ்கான் திருக்கோயில்.
நாங்கள் இஸ்கானின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததால், நதியின் அழகு, பாண்டுரங்கர் கோயில்,
பக்தர்களின் புனித நீராடல், படகு போக்குவரத்து, பண்டரிபுரத்திற்கு அருகிலுள்ள கோபாலபுரம் ஆகியவற்றை
பரவசத்தோடு ரசித்து அனுபவிக்க முடிந்தது.
இரவில் சந்திரபாகா நதியைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கி விடலாம் போலிருந்தது.
ஆயினும், மறுநாள் காலை இவையனைத்தையும் பிரிய மனமில்லாமல் பிரிய நேர்ந்தது.
தங்கியிருந்த இரண்டு நாள்களும் பண்டரிபுர் இஸ்கான் பக்தர்களின் உபசரிப்பும் பிரசாதமும் மிக நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருந்தன.
“இக் கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. http://www.tamilbtg.com”
——-
பாட்டு கேட்கும் சாமி
பீமா நதி என்றழைக்கப்படும் இந்நதி மஹாராஷ்ட்ரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை
வளப்படுத்திக்கொண்டு க்ருஷ்ணா நதியுடன் கலக்கிறது.
பண்டரிபுரத்தில் இந்நதி சந்த்ரபாகா என்றழைக்கப்படுகிறது.
புண்டலீகன் என்னும் பக்தனுக்காக பகவான் கண்ணன் நதியை வளைந்து ஓடப் பணித்ததால்
நதியின் போக்கு பிறைச் சந்திரன்போல் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன்.
பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால்
அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர்.
அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி.
காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர்.
அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்தனர்.
விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக
அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான்.
அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர்.
கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்டபோது,
அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர்.
மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன்,
வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப் பாதங்களில் விழுந்தான்.
‘நீங்கள் யார்?’ என வினவினான். ‘கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள்.
மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள்.
தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம்.
தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால்,
எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்பு கிறோம்’ என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள்.
அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.
தென்னாட்டிலிருந்து காசி யாத்திரையாக பெற்றோருடன் கிளம்பிய புண்டலீகன், ஆங்காங்கு தங்கி
மாதக் கணக்கில் பயணம் செய்து இவ்விடம் வந்தான்.
இங்கு குக்குட மஹரிஷி என்பவர் வசித்து வந்தார். அவர் குக்கூடாசனத்தில் அமர்ந்து சாதனைகள் செய்து சித்தி பெற்றவர்.
மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை காஞ்சி மஹா பெரியவர் ஸர்வ சாதாரணமாகப் போட்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்.
மிகவும் வயதான தாய் தந்தையரை வைத்துக் கொண்டு,புண்டலீகன் கஷ்டப்பட்டு யாத்திரை செல்வதைப் பார்த்த மஹரிஷி,
இதற்கு மேல் வயதானவர்களை அழைத்துக் கொண்டு அலைய வேண்டாம்.
பெற்றோருக்கு சேவை செய்வது கங்கையில் ஸ்நானம் செய்த பலனைத் தரும்.
நதி தீரமாய் இருப்பதால், பெரியவர்களுடன் வசிப்பதற்கும், அவர்களின் சேவைக்கும் வசதியாக இருக்கும்.
இங்கேயே தங்கி பெற்றோர் சேவை செய் எனப் பணித்தார். ப்ரும்மதேஜஸுடன் விளங்கிய மஹரிஷியின் வார்த்தைக்குக்
கட்டுப்பட்டு புண்டலீகன் அங்கேயே குடிசை போட்டுக்கொண்டு பெற்றோருடன் வசிக்கலானான்.
தினமும் பெற்றோர்க்கு உணவு ஏற்பாடு செய்வதும், அவர்களின் ஸ்நானம் போன்ற அன்றாட வேலைகளுக்கு உதவி செய்வதும்,
அவ்வப்போது கைகால்கள் பிடித்து விடுவதும், இரவு உறங்கும்போது விசிறிவதும்,
பல புராணங்களைப் பார்வை மங்கிய பெற்றோருக்குப் படித்துக் காட்டுவதும்,
தனக்குத் தெரிந்த இறைப் பாடல்களை பாடி அவர்களை மகிழ்விப்பதுமாய் இனிதாகப் பொழுது போயிற்று.
அவ்வமயம் துவாரகையில் கண்ண பெருமான் வசித்து வந்தான்.
ஒருநாள் அவன் நீண்ட சிந்தனையில் இருப்பதைக் கண்ட நாரதர் என்ன சிந்தனை என்று விசாரிக்க..
நாரதரே! என் பெற்றோருக்கு சேவை செய்யும் பேறு எனக்குக் கிட்டவில்லை.
சுமந்து பெற்ற அன்னைக்கு மழலையின்பம் கூடத் தரவில்லை. எனக்கு அது பெரும் குறையாய் இருக்கிறது.
பெற்றோருக்கு சிறப்பாக சேவை செய்பவர் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைப் பார்த்தாவது நான் மகிழ்ச்சி அடைவேன் என்றான்.
நாரதர் இருக்கிறார் கண்ணா.. என்றது தான் தாமதம்.
உடனே பார்க்கலாம் வாருங்கள் என்று கிளம்பி வந்துவிட்டான் கண்ணன்.
துவாரகாதீசன் கிளம்பியதும், தாயார்ருக்மிணியும் கிளம்ப, ஒரு பரிவாரமே கிளம்பியது.
நாரதர் கண்ணனை நேராக நமது புண்டலீகன் வீட்டு வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினார்.
அரசன் வந்திருப்பதாக கட்டிய வசனங்கள் வானைப் பிளக்க, புண்டலீகனோ உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த
தந்தைக்கு கால் பிடித்துக் கொண்டிருந்தான்.
குடிசைக்குள் எட்டிப் பார்த்த கண்ணன், அமைதியாய் இருக்கும்படி பரிவாரங்களுக்கு சைகை காட்டி விட்டு மெதுவாக அழைக்க,
புண்டலீகனோ, அரசே! சற்று பொறுங்கள். வயதான என் தந்தை உறங்குகிறார்.
வயதானவர்களுக்கு உறக்கம் வருவதே அரிது. சற்று நேரத்தில் வருகிறேன்.
அதுவரை இந்த செங்கல்லை ஆசனமாக ஏற்றுக்கொள்ளுங்கள். என்று சொல்லி
இரண்டு செங்கற்களை வாசலை நோக்கி வீசினான்.
அன்பே உருவான கண்ணனும் ருக்மிணியும் புண்டலீகன் வீசிய செங்கலின்மீது ஏறி நின்று கீழே விழாமல்
சமன் செய்வதற்காக இடுப்பில் கையை வைத்துக் கொண்டனர்.
இவர்கள் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதற்கு இன்னும் பல காரணங்களைப் பெரியோர் சொல்கின்றனர்.
அவற்றைப் பிறகு பார்ப்போம்.
தந்தை உறங்கியதும் வெளியில் வந்த புண்டலீகன் இறைவனிடம் காக்க வைத்ததற்காக மன்னிப்பு வேண்ட,
கண்ணனோ, புண்டலீகனின் பெற்றோர் சேவையில் நெகிழ்ந்து போயிருந்தான்.
வழக்கம் போல் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, கலியுகத்திற்கான ப்ரத்யேக வேண்டுதலாக,
நமக்காக புண்டலீகன் கேட்டது என்ன தெரியுமா?
பெற்றோர் சேவைக்கு மனம் மகிழ்ந்து இறைவனே நேரில் காண வந்து வாசலில் நின்றான் என்பதன் சாட்சியாக
நீ இங்கேயே இருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டான்.
தங்கள் திவ்ய மங்கள ரூபத்திலிருந்து இரண்டு விக்ரஹங்களை எடுத்துக் கொடுத்தனர் கண்ணனும் ருக்மிணியும்.
ஆம், விட்டலனின் விக்ரஹம் ஒரு உளி கொண்டு சிற்பியால் செதுக்கப்பட்டதல்ல.
இறைவனின் திருமேனியிலிருந்தே வெளிவந்தது.
இருபத்தெட்டு சதுர்யுகங்களாக புண்டலீகனுக்குக் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற அங்கேயே நிற்கின்றான் பாண்டுரங்கன்.
சாதாரணமாக பாண்டுரங்கன் தரிசனம் என்றால் கோவிலின் பக்கத்தில் இருக்கும் பெரிய கட்டடத்தின் வழியாக
வரிசையில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஷாட, மற்றும் கார்த்திகை ஏகாதசி, இன்னும் சில விழாக்காலங்கள் தவிர, மற்ற நாள்களில் எவ்வளவு
நீண்ட வரிசையில் வந்தாலும் பெரும்பாலும் ஒரு மணி நேரத்தில் ஸ்வாமி தரிசனம் செய்து விட முடிகிறது.
ஆனால், தினமும் இரவு 9 மணி அளவில் கோவிலுக்குச் சென்றால் நேராக கோவிலினுள் உள்ள வரிசையில் அனுமதிக்கிறார்கள்.
மஹாத்வாரிலிருந்து உள்ளே நுழைந்தால், பத்து நிமிடங்களில் தரிசனம் செய்து விட முடியும்.
இதைத் தவிர அர்த்த மண்டபத்திலிருந்து விட்டலனின் திருமுகத்தை எப்போது வேண்டுமானாலும்
வரிசையின்றி தரிசனம் செய்யலாம். இதை முக தர்ஷன் என்று சொல்கிறார்கள்.
இரவு 11:30 மணிக்கு மேல் ஷேஜ் (சயன) ஹாரதி உண்டு. அப்போது பொது தரிசனம் இல்லை.
அதிகாலை 4 மணிக்கு பெருமாள் பள்ளி எழுந்ததும் செய்யப்படும் ஹாரதியை காகடா ஹாரதி என்று சொல்கிறார்கள்.
காகடா ஹாரதி சேவிக்க வேண்டுமானால், இரவு 2 மணி வாக்கில் கோவில் வாசலில் சென்று அமர்ந்து விட வேண்டும்.
முதல் இருபது பேரை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் வெளியிலிருந்து ஸேவிக்கலாம்.
மிக முக்கியமான விஷயம் இவை எதற்கும் கட்டணம் கிடையாது.
காத்திருக்க நேரமில்லாதவர்கள் இணைய தளத்தில் தர்சன நேரத்தை நிர்ணயம் செய்துகொண்டு செல்லலாம்.
மஹாத்வாரம் எனப்படும் ப்ரதான வாயில். நாமத்தின் மூலமாக இறைவனை அடையலாம் என்று
கலியுகத்திற்கான தர்மமான நாம வழிக்கான நாம த்வாரம்.
இதே வாசல் வழியாகத் தானே நாமதேவர், ஞானேஸ்வரர், துகாராம் போன்ற எண்ணற்ற மஹான்கள்
விட்டலனை தரிசனம் செய்யச் சென்றிருப்பார்கள் என்ற எண்ணம் வந்தபோது மேனி சிலிர்த்தது.
தேவாசீயா த்வாரீ
உபா க்ஷண பரீ..
தேணே முக்தி சாரீ
ஸாதியேல்யா..
தேவாதிதேவனான விட்டலனின் கோவில் வாசலில் ஒரு கணம் நின்றாலும் போதும்.
நான்கு வகையான முக்திகளும் கிடைத்துவிடும் என்று பாடுகிறார் ஸத் ஞானேஸ்வர் மஹராஜ்.
வாசலில் இருந்த நாமதேவரின் படியை (நாமதேவரின் படியைப் பற்றி பிறகு பார்க்கலாம்) வணங்கிவிட்டு,
பக்கவாட்டில் இருந்த வழியின் வழியே உள்ளே சென்றோம்.
கருட மண்டபத்தில் ஸுஸ்வரத்தில் நூற்றுக்கணக்கான ஸாதுக்கள் மிக அழகாகத் தாள்
(பாயசக் கோப்பை மாதிரி இருக்கும் ஜால்ரா வகை) போட்டுக்கொண்டு அபங்கம் இசைத்துக்கொண்டிருந்தனர்.
உள்ளே செல்லும் வழியில், ஒரு தூணுக்கு வெள்ளிக் கவசம் சாற்றியிருந்தது.
எங்களுக்கு முன்னால் சென்ற அனைவரும் அந்த தூணைக் கட்டித் தழுவிக் கொண்டு
தலையால் முட்டி வந்தனம் செய்துகொண்டு சென்றுகொண்டிருந்தனர்.
வெள்ளிக் கவசம் சாற்ற்ப்பட்ட தூணின் முன்பு நின்றோம். ரங்க சிலா மண்டபத்தில் இருக்கும் அந்தத் தூணை
தாஸரஸ்தம்பம், மற்றும் புரந்தரதாஸர் தூண் என்றும் அழைக்கின்றனர்.
புரந்தரதாஸருக்கும் இந்தத் தூணுக்கும் என்ன தொடர்பு?
ஸங்கீத பிதாமஹர் என்றழைக்கப்படும் ஸ்ரீ புரந்தரதாஸர் கர்நாடக இசையின் அடிப்படைகளை வரையறுத்தவர்.
சுமார் 4,75,000 பாடல்களை இறைவன்மீது பாடியுள்ளார். நாரதரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
அவருடைய சரித்ரம் மிகவும் அற்புதங்கள் நிறைந்தது.
நாம் அவருக்கும் விட்டலன் கோவிலில் உள்ள தூணுக்குமான தொடர்பை மட்டும் பார்க்கலாம்.
விட்டலனின் பரம பக்தரான புரந்தரதாஸர் சில காலம் பண்டரி புரத்தில் தங்கியிருந்தார்.
இறைவனின் புகழை அபிநயங்களுடன் ஆடிப்பாடுவதற்கு கோவிலுக்கென்று சில மங்கையர் நியமிக்கப்பட்டிருந்த காலம்.
தினமும் கோவிலுக்கு வந்து விட்டலன் முன்னால் பாடுவார் தாஸர்.
ஒருநாள் அவர் வரும் சமயத்தில் கோவிலில் ஒரு பெண் விட்டலனின் புகழைப் பாடி ஆடிக் கொண்டிருந்தாள்.
அவளது பாடலின் கருத்தும், அவள் உருக்கமாகப் பாடிய விதமும் அவளை உண்மையான பக்தை என்று பறை சாற்றியது.
நடனத்தினால் விட்டலனைக் கண் முன்னால் கொண்டு நிறுத்தினாள் அவள்.
நடனம் முடிந்ததும், அவள் புரந்தரதாஸரைக் கண்டு வணங்கினாள்.
அவள் தனக்கு ஸங்கீத நுணுக்கங்களைக் கற்றுத்தரும்படி வேண்ட,
அவளது பக்தியைப் பார்த்து தாஸர் அவளுக்கு முறைப்படி அவளுக்கு ஸங்கீதப் பயிற்சி அளிக்கத் துவங்கினார்.
இறைவனால் நேரடியாக ஆட்கொள்ளப்பட்டவர். பரம்பரைப் பணக்காரர். நவகோடி நாராயணன் என்று அழைக்கும்
அளவிற்கு கோடிக் கணக்கான சொத்துக்களை உடையவர். இறைவனின் விளையாட்டால், ஒரு கணத்தில் பற்றுக்களைத் துறந்து,
குடும்பத்துடன் உஞ்ச வ்ருத்தி எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கியவர். இறை தரிசனம் பெற்றவர்.
அவரைத்தான் அவதூறு பேசியது இவ்வுலகம்.
அவரரோ எதைப் பற்றியும் கவலைப்பட்டாரில்லை.
உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் மஹாத்மாக்கள் பாகுபாடு பார்ப்பதில்லை.
அவ்வாறு ஏதேனும் நேர்ந்தால் அவர்களை இறைவனே தடுத்தாட்கொள்கிறான்.
விட்டலனுக்கு தாஸரை ஊரார் கண்டபடி பேசுவது பொறுக்குமா? துவங்கினான் ஒரு லீலையை.
ஒரு நாள் நள்ளிரவில் புரந்தரதாஸரின் உருவத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குப் போனான்.
தன்னுடைய விலை உயர்ந்த மாலை (கங்கணம் என்றும் சொல்லப்படுகிறது) ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
இது எனக்குக் கிடைத்தது. நீ வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.
அவளோ தாஸரைத் தன் குருவாகப் பார்ப்பவள்.
குருவின் ப்ரஸாதமாக அதை வாங்கிக் கொண்டு தன் வீட்டிலிருந்த விட்டலனுக்குப் போட்டுவிட்டாள்.
மறுநாள் காலை கோவிலைத் திறந்த பண்டா முதல்நாள் இரவு விட்டலனுக்கு சாற்றப்பட்டிருந்த
நகையைக் காணாமல் பதைபதைத்துப் போனார்.உடனே அரசனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோவில் விவகாரங்களில் அரசனே நேரடியாகத் தலையிட்டு உடனே சரி செய்யும் காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது.
காவலரை அனுப்பி விசாரித்ததில், நகை நடனமாடும் பெண்ணின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட,
அவள் தயங்காமல் உண்மையைச் சொன்னாள், புரந்தரதாஸர் கொடுத்தார் என்று.
விட்டலன் தாஸரின் உருவில் அல்லவா சென்றான்?
தாஸரோ கோவிலிலேயே எப்போதும் இருப்பவர். அவர் எடுத்திருக்க வாய்ப்பு உண்டென்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டனர்.
விட்டலனின் ஸந்நிதியிலேயே அவருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டு தூணில் கட்டினர்.
புரந்தர தாஸருக்கோ, தன்னை எதற்குக் கைது செய்தார்கள்? என்ன நகை? அந்தப் பெண் ஏன் அப்படிச் சொன்னாள் ஒன்றும் புரியவில்லை.
நன்மையோ, சோதனையோ, அடியார்களின் நாவில் வருவது இறைவனின் திருநாமம் மட்டுமே.
விட்டல நாமத்தைச் சொல்லிக் கொண்டு எது நடந்தாலும் அவன் இஷ்டம் என்று பேசாமல் இருந்தார்.
கோவிந்தனுக்காட்பட்டவர்கள் வேறெப்படி இருப்பார்கள்?
அவரிடமிருந்து பதிலேதும் வராததால், அரசன் கசையடிகள் கொடுப்பதாக தீர்ப்பு சொல்லி சாட்டையை ஓங்க…
சட்டென்று அற்புதம் நிகழ்ந்தது. அரசன் கையிலிருந்த சாட்டையைக் காணவில்லை. அது விட்டலன் கையில் இருந்தது.
விட்டலன் அசரீரியாக நாமே கொண்டு போய்க் கொடுத்தோம் என்று சொல்ல,
அரசன் உள்பட ஊர் மக்கள் அனைவரும், புரந்தரதாஸரைத் தவறாக எண்ணி அவதூறு பேசியதற்கு வெட்கி, வருந்தி அவர் பாதம் பணிந்தனர்.
தாஸர் அதன்பின் அந்தத் தூணிலேயே சாய்ந்து நின்று கொண்டு ஏராளமான பாடல்களை விட்டலன் மீது பாடியிருக்கிறார்.
இந்நிகழ்விற்குப் பிறகு,
அந்தத் தூணை வணங்கி கட்டித் தழுவிக்கொண்டு அவரது ஆசீர்வதத்தால் தங்களுக்கும் பக்தி சித்திக்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டு விட்டலனைக் காணச் செல்வது மரபாயிற்று.
தொடர்ந்து மேலே செல்ல, ஸந்த் துகாராம் அவர்கள் எழுதிய அபங்கங்கள் அடங்கிய பெரிய புத்தகம்
கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
அதன் அருகில் விட்டலன் மீது அசையாத பக்தி பூண்டு ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி,
பூத உடலுடனேயே வைகுண்டம் ஏகிய ஸந்த் துகாராம் அவர்களின் திருப் பாதம்.
அதையும் வணங்கித் திரும்பினால்…
ஆஹா!
வா வா ..
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்.. என்பதாக சிரித்த முகத்துடன்..
இடுப்பில் கையை வைத்துக் கொண்டு..
எந்தையின் தரிசனம்..
இடுப்பில் கைகளை ஊன்றியவாறு, ஒரு செங்கல்லின் மீது நின்று அருள்புரிகிறான் பண்டரிநாதன்.
இந்தப் பண்டரிநாதர் சுயம்பு மூர்த்தி. மணற் கல்லால் உருவான மூர்த்தி. செங்கல் மீது நிற்பதாக ஐதீகம்.
சுவாமியின் பீடமும் மணற்கல்லே. காதுகளில் மகர குண்டலங்கள். தலையில் சிவ லிங்க வடிவ கிரீடம் தரித்திருக்கிறார்.
‘ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா’ என்னும் கோஷம் கருவறையை நிறைக்கிறது.
பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர்.
விட் என்ற மராத்தி மொழிச் சொல்லிற்கு செங்கல் என்பது பொருள்.
‘வா’வென்று அழைத்தால், நம்மோடே வந்துவிடுவதற்குத் தயாராக உள்ளது போல் ஒரு தோற்றம்.
கிருஷ்ணன் நம் வீட்டுப் பிள்ளை போல் வெகு அந்நியோன்யமாக அங்கே எழுந்தருளியிருக்கிறார்.
பக்தர்கள் மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கலாம். இதற்கு பாத ஸ்பரிச தரிசனம் என்று பெயர்.
மூலநாதனைத் தரிசித்த மன நிறைவோடு கருவறையை வலம் வந்தால், பின்னால் ஒரு தனிக் கோயில்.
இங்கே, அன்னை ருக்மணிக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
அன்னை ருக்மணி தேவி இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியபடி, ஆனந்தம் தவழும் வதனத்துடன் தரிசனம் தருகிறாள்.
அன்னைக்குக் குங்குமத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது.
ருக்மணி சந்நிதியை அடுத்து சத்தியபாமா மற்றும் ராதையான ராதிகாவுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.
பாண்டுரங்கனின் பக்தர்கள்
புரந்தரதாசர்
நாமதேவர்
துக்காராம்
ஏகநாதர்
ஞானேஷ்வர்
சோகாமேளர்
ஜனாபாய்
சக்குபாய்
மகாராட்டிராவின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் விட்டலர் மீதான பக்தி பஜனைப் பாடல்களுடன்
பாடிக்கொண்டே ஊர்வலமாக, ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்று
விட்டலர் கோயிலுக்குச் புனித யாத்திரையாகச் செல்வது வழக்கும்.
நாமதேவர், துக்காராம், ஞானேஷ்வர், புரந்தரதாசர், சோகாமேளர் மற்றும் ஜனாபாய் போன்ற
வைணவ அடியவர்களால் பகவான் விட்டலரின் குறித்து அபங்கம் எனும் பதிகங்கள் பாடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக, 2014-ஆம் ஆண்டிலிருந்து, இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
வைணவர்கள் இக்கோயிலில் பூசாரிகளாக பணியாற்றுகிறார்கள்
——–
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே
பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
எம பயம் நீக்கி இன்பமும் தருமே
எம பயம் நீக்கி இன்பமும் தருமே
எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே
எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
மண்ணுலகில் பிறந்து பிறந்து உழலாமல்
மானிடப் பிறவி பழுதாகாமல்
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே(8)
பாண்டுரங்கா ஸ்ரீ ரங்கா..(4)
——-
ரெங்கா ரெங்கா ஓடிவா
ஏ… ரெங்கா ரெங்கா ஓடிவா பாண்டுரங்கா ஓடிவா
பண்டரி புரம் வாழும் பாண்டுரங்க சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா
பாற்கடலின் மீதினில் பாம்பணையில் தூங்கியே
பார் முழுதும் படியளக்கும் பாண்டுரங்க சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா! (ஏ… ரங்கா)
மங்காபுரம் தாயிருக்க மலை மேலே நீயிருக்க
ஏழுமலை நாதனே எங்கள் சீனி வாசனே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
எங்கும்நீ திளவும் எல்லோருமே வாழவும்
பத்து அவ தாரமாய் பார் புகழ வந்தவா
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
சங்கு சக்கரம் கொண்டுவா தாயாரையும் கூட்டி வா
கண் குளிரக் காணவா கார் மேக சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
சர்வ லோக நாயகா சங்கரனின் மைத்துனா
பாரளந்த தேவனே பறந்து வாராய் சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
காவடியான் மாமனாம் காலடியால் வாமனை
மூவடியாய் ஆண்டவா என்பாவடியில் ஆடியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)
———
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
பேகனே பாரோ முகவன்னு தோரோ
வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!)
காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி
நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ
காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ஒடியல்லி ஒடிகெஜ்ஜே பெரலல்லி ஒங்குர
கொரலல்லி ஹாகித வைஜயந்தீ மாலே
இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
காசி பீதாம்பர கையல்லி கொலாலு
பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா
காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ராகம்: யாமுன கல்யானீ
தாளம்: சாபு
வரிகள்: வியாசராய தீர்த்தர்
மொழி: கன்னடம்
———-
ரங்க பாரோ பாண்டுரங்க பாரோ
ஸ்ரீரங்க பாரோ நரசிங்க பாரோ (ரங்க)
ரங்கனே வாராய் பாண்டுரங்கனே வாராய்
ஸ்ரீரங்கனே வாராய் நரசிங்கனே வாராய் (ரங்க)
கந்த பாரோ என்ன தந்தே பாரோ
இந்திரா ரமண முகுந்த பாரோ (ரங்க)
குழந்தையே வாராய் என் தந்தையே வாராய்
இலக்குமியின் கணவனே முகுந்தனே வாராய் (ரங்க)
அப்ப பாரோ திம்மப்பா பாரோ
கந்தர்பனய்யனே கஞ்சி வரத பாரோ (ரங்க)
தந்தையே வாராய் திம்மப்பா (வேங்கடவன்) வாராய்
மன்மதனின் தந்தையே காஞ்சி வரதனே வாராய் (ரங்க)
அண்ண பாரோ என்ன சின்ன பாரோ
புண்ணியமூர்த்தி மஹிஷபுரிய சென்ன பாரோ (ரங்க)
தந்தையே வாராய் எந்தன் செல்லமே (தங்கமே) வாராய்
புண்ணியமூர்த்தி மகிஷபுரியின் சென்ன கேசவனே வாராய் (ரங்க)
விஷ்ணு பாரோ உடுப்பி கிருஷ்ண பாரோ
என் இஷ்ட மூர்த்தி புரந்தர விட்டல பாரோ (ரங்க)
விஷ்ணுவே வாராய் உடுப்பி கிருஷ்ணனே வாராய்
என் இஷ்ட தெய்வமே புரந்தர விட்டலனே வாராய் (ரங்க)
———-
நானேன மாடிதேனோ ரங்கய்யா ரங்கா
நீ என்ன காய பேகோ (நானேன)
நான் என்ன (பாவம்) செய்தேன், ரங்கா
நீ என்னை காப்பாற்ற வேண்டும் (நானேன)
மானாபி மானவு நின்னது எனகேனு
தீன ரக்ஷக திருப்பதிய வேங்கடரமணா (நானேன)
(பக்தர்களுக்கு காட்டும்) அன்பு, பாசம் முதலியன உன்னுடையது எனக்கென்ன++
தீன ரக்ஷகனே திருப்பதி வேங்கடரமணா (நானேன)
கரிராஜ கரெசிதனே த்ரௌபதி தேவி
பரெதோலே களுஹிதளே
ஹருஷதிந்தலி ரிஷிபத்னிய சாபவ
பரிஹரிசிதேயல்லோ (நானேன)
துரியோதனன் கூப்பிட்டு (அவமானப்படுத்தியபோது) திரௌபதி தேவி
கடிதமா எழுதி அனுப்பினாள்?
(கூப்பிட்ட நேரத்திற்கு வந்து காப்பாற்றினாயல்லவா?)
ஒரு நிமிடத்தில் ரிஷிபத்தினியின் (அகலிகை) சாபத்தை
போக்கினாய் அல்லவா? (நானேன)
ரக்கசசூதனனே கேளோ
த்ருவராயா சிக்கவனல்லவேனோ
உக்கிபருவா கர்மா மாடித அஜாமிள
நின்னக்கன மகவேனோ (நானேன)
அரக்கர்களை அழித்தவனே கேளாய்
துருவ மகாராஜா சின்னப்பையன்தானே?
மறுபிறவி எடுக்கும்படியான பாவத்தை செய்த அஜாமிளன்
(அப்படி எடுக்காமல் மோட்சத்தை கொடுத்து காப்பாற்றினாயே)
அவன் என்ன உன் அக்கா மகனா? (நானேன)
முப்பிடி அவலக்கியா தந்தவனிகே
வப்புவந்தே கொடலில்லவே
சர்ப்பசயன ஸ்ரீ புரந்தரவிட்டலா
அப்ரமேய காயோ (நானேன)
மூன்று பிடி அவல் தந்தவருக்கு
உலகிலுள்ள அனைத்து செல்வங்களையும் நீ கொடுத்தாய் அல்லவா?
சர்ப்பத்தின் மேல் சயனித்திருக்கும் புரந்தர விட்டலனே
இறைவனே (எண்ணிக்கையில் அடங்காதவனே) என்னைக் காப்பாற்று (நானேன)
——–
வேங்கடரமணனே பாரோ
சேஷாசல வாசனே பாரோ (வேங்கட)
வேங்கடரமணனே வாராய்
சேஷாச்சலத்தில் (திருப்பதியில்) வசிப்பவனே வாராய் (வேங்கட)
பங்கஜநாபா பரமபவித்ரா சங்கர மித்ரனே பாரோ (வேங்கட)
தாமரைக் கண்ணனே மிகவும் பவித்ரமானவனே
சங்கரனின் நண்பனே வாராய் (வேங்கட)
முத்து முகத மகுவே நினகே
முத்து கொடுவேனு பாரோ
நிர்தயவேகோ நின்னோளகே நானு
பொந்தித்தேனு பாரோ (வேங்கட)
அழகான முகத்தையுடைய குழந்தையே உனக்கு
முத்தம் கொடுக்கிறேன் வாராய்
ஏன் தயவில்லை; உன்னில் நான்
கரைந்திருக்கிறேன் வாராய் (வேங்கட)
மந்தர கிரியனெத்திதானந்த
மூருத்தியே பாரோ
நந்தன கந்த கோவிந்த முகுந்த
இந்திரேயரசனே பாரோ (வேங்கட)
மந்தர மலையை தூக்கியவனே
எப்போதும் ஆனந்தமாய் இருப்பவனே வாராய்
நந்தனின் மைந்தனே; கோவிந்தனே முகுந்தனே
இந்திரனின் அரசனே வாராய் (வேங்கட)
காமனய்யா கருணாளோ
ஷ்யாமள வர்ணனே பாரோ
கோமளாங்க ஸ்ரீ புரந்தர விட்டலனே
ஸ்வாமி ராயனே பாரோ (வேங்கட)
மன்மதனின் தந்தையே கருணையே உருவானவனே
கறுமை நிறத்தவனே அழகானவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே ;
தலைவனே வாராய் (வேங்கட)
——–
கண்டேன கோவிந்தன
புண்டரிகாக்ஷ பாண்டவ பக்ஷ கிருஷ்ணன (கண்டேன)
கோவிந்தனை கண்டேன்
புண்டரீகாக்ஷனை ; பாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணனை (கண்டேன)
கேசவ நாராயண ஸ்ரீ கிருஷ்ணன
வாசுதேவ அச்சுதா அனந்தன
சாசிர நாமத ஸ்ரீ ரிஷிகேஷன
சேஷ சயன நம்ம வசுதேவ சுதன (கண்டேன)
கேசவனை நாராயணனை ஸ்ரீ கிருஷ்ணனை
வாசுதேவனை அச்சுதனை அனந்தனை
ஆயிரம் நாமங்கள் கொண்ட ஸ்ரீ ரிஷிகேசனை
சேஷன் மேல் சயனித்திருக்கும் நம்ம வசுதேவரின் புதல்வனை (கண்டேன)
புருஷோத்தம நரஹரி ஸ்ரீ கிருஷ்ணன
சரணாகத ஜன ரக்ஷகன
கருணாகர நம்ம புரந்தர விட்டலன
நேரே நம்பிதேனோ பேலூர சன்னிகனா (கண்டேன)
புருஷோத்தமனை நரஹரியை ஸ்ரீ கிருஷ்ணனை
சரணாகதி செய்யும் பக்தர்களை காப்பவனை
கருணாகரனை; நம்ம புரந்தர விட்டலனை
உன்னையே நம்பியிருக்கிறேன்; பேலூரில் சென்னகேசவனாய் இருப்பவனை (கண்டேன)
———
ஏனு தன்யளோ லக்குமி
எந்தா மான்யளோ
சானு ராகதிந்தா ஹரியா
தானே சேவே மாடுதிஹளு (ஏனு)
எத்தனை அதிர்ஷ்டம் வாய்ந்தவளோ லட்சுமி
எவ்வளவு மரியாதைக்கு உரியவளோ
சானு ராகத்தினால் அந்த ஹரியை
சேவை செய்து கொண்டிருக்கிறாள் (ஏனு)
கோடி கோடி ப்ருத்யரிரலு
ஹாடகாம்பரனா சேவே
சாடியில்லதே பூர்ண குணலு
ஸ்ரேஷ்டவாகி மாடுதிஹளு (ஏனு)
கோடி (எண்ணிக்கை) பணியாட்கள் இருந்தும்
ஸ்ரீ ஹரியின் சேவையினை
சாடியில்லதே ; குற்றமில்லாதவளான லட்சுமி
மிகவும் அருமையாக செய்து வருகிறாள் (ஏனு)
சத்ர சாமர வ்யஜன பர்யங்க
பாத்திர ரூபதல்லி நிந்து
சித்ர சரிதனு ஹாத ஹரியா
நித்ய சேவே மாடுதிஹளு (ஏனு)
குடை சாமரம் விசிறி கட்டில்
ஆகிய ரூபங்களில் நின்று
அதி சுந்தரனாகிய ஹரியை
தினமும் பணிவிடை செய்கிறாள் (ஏனு)
சர்வஸ்தலதி வ்யாப்தனாதா
சர்வதோஷ ரஹிதனாதா
கருட கமனன நாத
புரந்தர விட்டலன சேவிசுவளு (ஏனு)
எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும்
களங்கமில்லாதவனும்
கருடனை வாகனமாகக் கொண்டிருப்பவனுமாகிய
புரந்தர விட்டலனை வணங்குபவள் (ஏனு)
———-
குருவின குலாமனாகுவ தனகா
தொரயதண்ண முகுதி (குருவின)
குருவிற்கு அடிமையாய் ஆகாதவரை
கிடைக்காது முக்தி (குருவின)
பரிபரி ஷாஸ்த்ரவனேகவனோதி
வ்யர்தவாய்து பகுதி (குருவின)
விதவிதமான சாஸ்திரங்கள் பலவற்றை படித்தாலும்
வீணாகிப் போய்விடும் பக்தி (குருவின)
ஆறு ஷாஸ்த்ரவ ஓதிதரேனு
மூராறு புராணவ முகிசிதரேனு
சாரி சஜ்ஜனர சங்கவ மாடதே
தீரனாகி தான் மெரெதரேனு (குருவின)
ஆறு சாஸ்திரங்களை படித்தாலென்ன
(3×6) 18 புராணங்களை முடித்தாலென்ன
கற்று உணர்ந்த பெரியவர்களிடம் எதையும் கற்காமல்
கர்வத்துடன் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னாலும் (குருவின)
கொரளலு மாலெய தரிசிதரேனு
கரதல்லி ஜபமணி எணிசிதரேனு
மருளனந்தெ ஷரீரக்கே லேபவா
ஒரசிகொண்டு தா திரிகிதரேனு (குருவின)
கழுத்தில் (துளசி) மாலை அணிந்தாலென்ன
கைகளில் ஜபமணி இருந்தாலென்ன
ஹரிதாஸனென்று உடம்பில் கோபிசந்தனத்தை
தரித்துக் கொண்டு சுற்றினாலும் (குருவின)
நாரியர சங்கவ அளிதரேனு
ஷரீரக்கே துக்கவ படிசிதரேனு
மரையண்ண ஸ்ரீ புரந்தர விட்டலன
மரெயதே மனதொளு பெரெயுவ தனகா (குருவின)
பெண்களை புறக்கணித்து சன்னியாசி ஆனாலென்ன
பட்டினி கிடந்து உடம்பை துக்கப் படுத்தினாலென்ன
ஸ்ரீ புரந்தரவிட்டலனை மறக்காமல்
மனதில் வைத்து நினைக்கும் வரை (குருவின)
———
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)
வேங்கடாசலத்தில் (திருப்பதியில்) வீற்றிருப்பவன் வைகுண்டத்தில் வசிக்கிறான்
தாமரை மலர் போன்ற அழகான கண்கள்; எவ்வித களங்கமுமில்லாத தூய்மையானவன்
இரு கைகளிலும் சங்கு, சக்கரம் தரித்த அழகே வடிவானவன் (வேங்கடாசல)
அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல)
எப்பொழுதும் அவன் பேரை ஜபித்துக் கொண்டே இருக்கும் பிரம்மன்;
கூடவே தம்புரா வைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருக்கும் நாரதர் (வேங்கடாசல)
மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல)
பளபளக்கும் குண்டலங்களை அணிந்திருக்கும் மதனகோபாலன்
பக்தர்களை காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனே (வேங்கடாசல)
————
கலியுகதொளு ஹரி நாமவ நெனேதரே
குலகோடிகளு உத்தரிசுவவோ ரங்கா (கலியுக)
இந்த கலியுகத்தில், ஹரியின் பெயரை நினைத்தால்
உன் குலம் முழுவதற்கும் புண்ணியம் கிட்டும் (கலியுக)
சுலபத முக்திகே சுலபவெந்தேணிசுவ
ஜலருஹநாபன நெனே மனவே (கலியுக)
சுலபமாய் முக்தி பெற, சுலபமாய் நினைவில் வைக்கும்படியான
ஸ்ரீ கமலாநாபனின் (பத்மநாபனின்) பெயரை நினைத்திரு மனமே (கலியுக)
ஸ்னானவனறியேனு மௌனவனறியேனு
த்யானவனறியேன் எந்தெணபேடா
ஜானகிவல்லப தசரத நந்தன
கானவினோதன நெனெ மனவே (கலியுக)
ஸ்னானம் எப்படி செய்யணும்னு தெரியாது; மௌனமாய் இருக்கத் தெரியாது
தியானம் செய்யத் தெரியாது என்று சொல்ல வேண்டாம்
ஜானகியின் கணவனை, தசரதனின் மைந்தனை
பாடலை விரும்பிக் கேட்கும் ஸ்ரீ ராமனை நினைத்திரு மனமே (கலியுக)
அர்ச்சிஸலறியேனு மெச்சிசலறியெனு
துச்சனு தானெந்தெணபேடா
அச்சுதானந்த கோவிந்த முகுந்தன
இச்சேயிந்தலி நெனெமனவே (கலியுக)
அர்ச்சனை / பூஜை செய்யத் தெரியாது; கடவுளை மெச்சவும் (புகழ் பாடவும்) தெரியாது
(அதனால்) நான் ரொம்ப கெட்டவன் என்று நினைக்க வேண்டாம்
அச்சுதன், ஆனந்தன், கோவிந்தன், முகுந்தன், (ஆகிய ஹரியை)
பாசத்துடன் நினைத்திரு மனமே (கலியுக)
ஜபவொந்தறியேனு தபவொந்தறியேனு
உபதேச வில்ல எந்தெணபேடா
அபார மஹிமே ஸ்ரீ புரந்தரவிட்டலன
உபாயதிந்தலி நெனெ மனவே (கலியுக)
(மந்திரங்களை) ஜெபிக்கத் தெரியாது; தபஸ் (தியானம்) செய்யத் தெரியாது
(தக்க குருவினிடத்தில்) உபதேசமும் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல வேண்டாம்
பெரும் மகிமை வாய்ந்த ஸ்ரீ புரந்தர விட்டலன் பெயரை
உத்தியுடன் (ஆபத்து காலத்தில் துடுப்பு போல்) நினைத்திரு மனமே (கலியுக)
——–
சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.
ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.
நரசிம்ம அவதாரத்தைப் பற்றி ஹரிதாஸர்கள் பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று ஸ்ரீ புரந்தரதாஸரால் பாடப்பட்ட ‘சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே’. அதை இன்று பார்ப்போம்.
***
சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே
நாமகிரீஷனே
சிம்ம ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியே
ஒம்மனதிந்த நிம்மனு பஜிசலு
சம்மததிந்த காய்வனெந்த ஸ்ரீஹரே
ஒருமனதாக உன்னை வணங்கினால்
கண்டிப்பாக காப்பேன் என்று கூறிய ஸ்ரீஹரியே (சிம்ஹ)
தரளனு கரெயே ஸ்தம்பவ பிரியே
தும்ப உக்ரவ தோரிதனு
கரளனு பகெது கொரளொளகிட்டு
தரளன சலஹித ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)
ஹிரண்யகசிபு கூப்பிட்டவுடன் தூணை உடைத்துக்கொண்டு (வந்த நரசிம்மர்)
மிகவும் உக்கிரத்தை காட்டினார்
அவனைக் கொன்று தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு
அனைவரையும் காத்த ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)
பக்தரெல்ல கூடி பஹுதூர ஓடி
பரம சாந்தவனு பேடிதரு
கரெது தன் சிரியனு தொடெயொளு குளிசித
பரம ஹருஷவனு பொந்தித ஸ்ரீஹரி (சிம்ஹ)
பக்தர்கள் அனைவரும் (நரசிம்மரின் உக்கிரத்தால் பயந்து) வெகுதூரம் ஓடி
கோபத்தை குறைக்குமாறு வேண்டினர்
தன் பக்தனை (பிரகலாதனை) கூப்பிட்டு, தன் மடியில் உட்காரவைத்து
தன் கோபத்தை குறைத்தான் ஸ்ரீஹரி (சிம்ஹ)
ஜயஜயஜயவெந்து ஹுவ்வனு தந்து
ஹரிஹரிஹரியெந்து சுரரெல்ல சுரிசி
பய நிவாரண பாக்ய ஸவரூபனே
பரமபுருஷ் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)
வெற்றி வெற்றி என்று பூக்களை கொண்டுவந்து
ஹரி ஹரி என்று அனைவரும் (நரசிம்மரின் மேல்) அர்ச்சனை செய்ய
பயத்தைப் போக்கும் பாக்கியங்களை கொடுக்கும்
உத்தமமான கடவுள் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)
———–
தர்மர் பீஷ்மரிடம் கேள்விகள் கேட்கிறார்.
கிமேகம் தைவதம் லோகே
கிம் வாப்யேகம் பராயணம் !
ஸ்துவம்த:கம் கமர்சந்த:
ப்ராப்னுயுர் மானவா சுபம் !!
கோ தர்ம: சர்வதர்மாணாம்
பவத: பரமோமத:!
கிம் ஜபன் முச்சதே ஜந்துர்
ஜன்ம சம்சார பந்தனாத்!!
1. உத்தமமான கடவுள் யார்?
2. யாரிடம் போய் நாம் அனைவரும் சரணமடையலாம்?
3. யாரை புகழ்ந்து பாடினால், நாம் அமைதியையும், வளர்ச்சியையும் (முக்தி) அடையலாம்?
4. யாரை வணங்குவதால், நமக்கு மோட்சம் கிட்டும்?
5. மிகவும் உயர்ந்த தர்மமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
6. யார் பெயரை உச்சரிப்பதன் மூலம், ஜீவராசிகள் மறுபிறப்பு அடையாமல் இருப்பார்கள்?
இவைகளுக்கு பதில் சொல்லும் பீஷ்மர், பகவான் விஷ்ணுவின் அருமை பெருமைகளை சொல்லும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளுகிறார்.
ஜகத்ப்ரபும் தேவதேவம்
அனந்தம் புருஷோத்தமம் !
ஸ்துவன் நாம சஹஸ்ரேண
புருஷஸ் ஸததோஸ் தித: !!
அனைவரிலும் உத்தமமானவன் அந்த புருஷோத்தமன். அவனை வணங்குவதாலேயே மறுபிறப்பு கிட்டாமல், மோட்சம் கிட்டும் என்று சொல்கிறார்.
இந்த விளக்கத்தையே ஸ்ரீ புரந்தரதாஸர் இந்த அற்புதமான பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார்.
இனி பாடல்.
***
சகல க்ரஹபல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வரக்ஷா (சகல)
அனைத்து கிரகங்களின் பலன்களும் நீயே, தாமரை போல் கண்களை உடையவனே,
எல்லா இடத்திலும் இருந்து, இந்த உலகத்தை கட்டிக்காப்பவனே (சகல)
ரவிசந்திர புத நீனே ராஹு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவராத்ரியு நீனே நவவிதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)
சூர்ய, சந்திர, புதனும் நீயே, ராகு கேதுவும் நீயே
வியாழன், சனி மற்றும் வெள்ளியும் நீயே
பகலும் இரவும் நீயே, ஒன்பது விதானங்களும் நீயே++
நோய்களை தீர்க்கும் மருத்துவனும் நீயே, மருந்தும் நீயே (சகல)
பக்ஷமாசவு நீனே பர்வகாலவு நீனே
நக்ஷத்ர யோக கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்த நீ
பக்ஷிவாகன லோக ரக்ஷகனு நீனே (சகல)
(சுக்ல & கிருஷ்ண) பட்சமும் நீயே, மாதங்கள், பர்வ காலங்கள் நீயே
நட்சத்திர, யோக, கரணங்களும் நீயே
திரௌபதியின் மானத்தை குறைவில்லாத ஆடையளித்து காப்பாற்றிய நீ
கருட வாகனத்தில் வந்து உலகத்தை காப்பாற்றுபவனும் நீயே (சகல)
ருது வாசர நீனே ப்ருதிவிகாதியு நீனே
க்ரது ஹோம யஞ்ய சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடைய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகதா அப்ரதிம மஹிம நீனே (சகல)
(ஆறு) காலமும், வருடங்களும், வருடப்பிறப்பும் நீயே
ஹோம, யாகங்களினால் அடையும் முக்தியும் நீயே
யாராலும் தோற்கடிக்க முடியாத என் தலைவன் புரந்தர விட்டலனே,
நீ வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே (சகல)
——
பாக்யதா லட்சுமி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யதா லட்சுமி பாரம்மா
பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா
என் தாயே, சகல சௌபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா
ஹெஜ்ஜெ கால்களா த்வனிய மாடுதா
ஹெஜ்ஜெய மேல் ஒந்து ஹெஜ்ஜெய நிக்குதா
சஜ்ஜன சாது பூஜெயெ வேளெகே
மஜ்ஜிகே ஒளகின பெண்ணேயந்தே (பாக்யதா)
கொலுசு அணிந்த கால்களால் சத்தத்தை செய்தவாறு
அடி மேல் அடி வைத்து
நன்கு படித்தவர்களின் பூஜை வேளையில்
தயிரிலிருந்து (கடைந்தால்) வரும் வெண்ணையைப் போல் (பாக்யதா)
கனக வ்ருஷ்டியா கரெயுத பாரே
மன காமனெயா சித்தியு தோரே
தினகர கோடி தேஜதி ஹொளெயுத
ஜனகராயன குமாரி பேக (பாக்யதா)
தங்க மழை பெய்தவாறே வாராய்
என் விருப்பங்களை நிறைவேற்றுவாய்
கோடி சூரியர்களின் ஒளியை (போல தேஜஸ்) கொண்ட
ஜனகனின் மகளே (சீதையே) சீக்கிரம் (பாக்யதா)
அத்தித்தகலதே பக்தர மனெயொளு
நித்ய மஹோத்ஸவ நித்ய சுமங்கள
சத்யவ தோருவ சாது சஜ்ஜனர
சித்ததி ஹொளெயுவ புத்தளி பொம்பே (பாக்யதா)
அங்கிங்கு போகாமல் (நேராக) பக்தர்களின் வீட்டிற்கு (நீ வந்தால்)
(அங்கே) எப்போதும் திருவிழா; தினமும் சந்தோஷம்
(வேத சாஸ்திரங்களின்) உண்மையை எடுத்துரைக்கும் பக்திமான்களின்
மனதில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் லட்சுமி (பாக்யதா)
சங்க்யே இல்லதா பாக்யவ கொட்டு
கங்கண கையா திருகுத பாரே
குங்குமாங்கிதே பங்கஜ லோசன
வேங்கடரமணன பட்டத ராணி (பாக்யதா)
கணக்கேயில்லாத பாக்கியத்தைக் கொடுக்கும்
வளையல்கள் கூடிய (உன்) வலது கையை காட்டியவாறே வாராய்
குங்குமம் இட்ட நெற்றியோடு, தாமரை (போல்) விழிகளை கொண்டவளே,
வேங்கடரமணனின் பட்டத்து ராணியே (பாக்யதா)
சக்கரே துப்பவ காலுவே ஹரிசி
சுக்ரவாரதா பூஜய வேளகே
அக்கரெயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணி (பாக்யதா)
சக்கரையும், நெய்யும் மழையாய் பெய்ய
வெள்ளிக்கிழமை பூஜை வேளையில்
கருணையே வடிவான ரங்கனின்,
புரந்தர விட்டலனின் ராணியே (பாக்யதா)
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோஓஓஓ
ஞான வைராக்யம்
ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மை ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மையான பக்தி பகுத்தறிவுடன்
இகபர சுகம் தரும் கருணையாம்
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்ஈஈ
கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
குடல் கலங்குதே
இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
கலங்குதே இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை
ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ
பாண்டுரங்க ஜெய விட்டலை
என்று பணிந்திட
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர் உயர்
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோஓஓஓ
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ருக்மிணி தேவி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.