Archive for the ‘Abimana Desam’ Category

ஸ்ரீ பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

May 24, 2023

ஸ்ரீ  பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

ஸ்ரீ விட்டல் என்னும் விட்டோபாவும் (கிருஷ்ணன்) ருக்மிணியும் தரிசனம் தரும் விட்டல கோவில் இடம்பெற்ற பண்டரிபுரம் , சோலாப்பூரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , பண்டரீபுரம் ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்குப் போகலாம்.

1195-ம் ஆண்டுமுதல் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறும் கோவில் இது.

இந்த ஊரில் மேலும் பல கோவில்களும் புனிதர்களின் மடங்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . பீமா என்னும் நதி இந்த ஊரின் நடுவே சந்திரபாகா என்ற பெயரில் பாய்கிறது . தமிழ் நாட்டில் தேவாரம், திவ்யபிரபந்தம் உள்ளது போலவே மஹாராஷ்டிரத்தில் மராத்தி மொழியில் அபங்கம் என்னும் பக்தி பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த நதியின் பெயரும் இறைவனின் பெயரும் அடிக்கடி வரும்.

நாமதேவ் பயரி என்னும் இடத்தைத் தாண்டி பஸ்ச்சிம  வாயில் வழியாக நுழைந்தால்
கீழ்கண்ட கடவுளரின் கோவில்களைக் காணலாம் :
கணபதி,
தத்தாத்ரேயர்,
கருடன்,
மாருதி என்னும் அ
கருட கம்பம் ,
நரசிம்மர்,
ஏகமுக தத்தாத்ரேயர்,
ராமேஸ்வர லிங்கம்,
கால பைரவர்,
லெட்சுமி நாராயணன்,
காசி விஸ்வநாதர் ,
சத்ய பாமா,
ராதிகா,
சித்தி விநாயகர் ,
மஹா லெட்சுமி,
கண்டோபா ,
அமிதா பாய் ,
சனைச்சரன் ,
குப்த லிங்கம்,
கனோபத்ர சந்நிதிகள்.

ஸ்ரீ விட்டல் சந்நிதி

இதுதான் பிரதான கோவில்;
நகரின் நடுவில் அமைந்துள்ளது கோவிலுக்கு எட்டு வாசல்கள் இருக்கின்றன.
கிழக்கு வாசலை நாமதேவர் என்ற மகானின் பெயரில் அழைக்கின்றனர்.
அவர் இறந்த பின்னர் அவருடைய வேண்டுகோளின் பேரில் அவருடைய உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட
இடத்தின் மீது கட்டப்பட்ட படிகளை உடையது நாமதேவ் ப்யாரி .
அதைத் தாண்டிச் சென்றால் வருவது முக்தி மண்டபம்.
அங்கே மூன்று அறைகள் உண்டு.
பின்னர் நாம் நுழைவது மரத் தூண்களைக் கொண்ட சபா மண்டபம்.;
அடுத்தது 16 கம்பங்களை-தூண்களை உடைய சோல் கம்ப ;
அதில் ஒரு தூண் தங்கத் தகடால் மூடப்பட்டிருக்கும்

இது கருட கம்பம் எனப்படும் . அதனருகே உள்ள கற்பலகையில் பொது .ஆண்டு CE 1208 கல்வெட்டைக் காணலாம் . பின்னர் 4 தூண்களை உடைய சோகாம்ப் வரும்.

பின்னர் வெள்ளிக்கூரை வேய்ந்த மண்டபத்தில் ஸ்ரீ விட்டல் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவார்
அவரைக் கண்டு ஆசிபெற ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
விட்டல் ,
விட்டோபா,
விட்டல் நாத் ,
பண்டரிநாதன் ,
பாண்டுரங்கன் என்ற பல பெயர்களில்
அவரைப் போற்றியவாறு பக்தர்கள் பவனி வருவார்கள் .
பின்னர் ருக்மிணி சந்நிதி வருகிறது.
அவரையும் தரிசித்த பின்னர் வெளியே செல்லலாம்.

பாத ஸ்பர்ச தரிசனம் – காலைத் தொட்டு வணங்கலாம்

ஜாதி, குலம் , கோத்ரம் வேறு பாடின்றி அனைவரும் விட்டோபா சிலை அருகில் சென்று, தொட்டு வணங்கலாம்.
விடோபாவின் பாதங்களில் பக்தர்கள் தலையை வைத்து வழிபடுவது மரபு.
இந்த சம்பிரதாயத்தை வேறு    எந்தக் கோவிலிலும் காணமுடியாது
இதற்கான வரிசையில் நின்றால் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
விழாக் காலங்களில் 5 மணியும்
ஏகாதசி மற்றும் யாத்திரை ஊர்வலம் வரும் நாட்களில் 36 மணி நேரமும்
காத்திருக்க நேரிடலாம் ;
இவரிடம் திருப்பதி பாலாஜியும் கூடத் தோற்றுவிடுவார்!!

முக தரிசனம்

கியூவரிசையில் நிற்க இயலாதோர், முக தரிசனம் செய்யலாம்.
இதை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம்.
ஆயினும் விட்டலையும் ருக்மிணியையும் 25 அல்லது 15 மீட்டர் தொலைவிலிருந்தே காண முடியும் .
தமிழ் நாட்டுக் கோவில்களில் ஆறு கால பூஜை இருப்பது போல இங்கும்
அதிகாலை முதல், பல ஆரத்திகள், தீவாராதனைகள் நடைபெறும்

நகரிலுள்ள ஏனைய கோவில்கள் :
பத்மாவதி கோவில்,
லகுபாய் அம்பா பாய்,
கோபால்பூர்,
விஷ்ணு பாத,
புண்டரீக ,
நாமதேவ்,
ஞான தேவ் ,
துகாராம் ,
கால மாருதி,
தம்பத மாருதி,
வியாச நாராயண,
யாமை துர்கா ,
கஜான மஹராஜ்,
ராம் பாக் ,
லக்ஷ்மண் பாக் கோவில்கள் .

அருகிலுள்ள முக்கிய இடங்கள்

கைக்கடி மஹராஜ் மடம் , தனபுரி மஹராஜ் மடம், குஜராத்தி தேவஸ்தான,ம்.

வாரி விழாவின்போது, பல சந்யாசிகள் பெயர்களில் பக்தர்கள் சுமந்துவரும் பல்லக்குகள்,
கோவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வர்காரி என்னும் இடத்தில் நிறுத்தப்படும்
மஹான் ஞானேஸ்வர் பெயரில் ஆலந்தி நகரிலிருந்து 2 லட்சம் பக்தர்களுடனும்
தேஹு என்னும் இடத்திலிருந்து மேலும் பல்லாயிரம் துகாராம் பக்தர்களும் ,வருவார்கள்.
பிற இடங்களில் மேலும் எட்டு லட்சம் பேர் சேருவர் .
இது 800 ஆண்டுகளாக நடைபெறுகிறது
ஆஷாட ஏகாதசி விழாதான் மிகப் பெரியது
சித்திரை,
ஆடி,
கார்த்திகை,
மாசி ஆகிய நாலு மாதங்களில்
இந்த பவனிகள் நடைபெறுகின்றன.

 

வாரி என்பது கால் நடையாக பவனி வருதல்,
வர்காரி என்பது அப்படி காலில் நடந்து வரும் பக்தர்கள் ஆவர்..
பக்தர்களின் பரவசம்மிகுந்த ஊர்வலங்கள், நம்மூர் காவடி ஊர்வலங்களை நினைவப்படுத்தும்.

காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994), சாதாரா நகரில், 1980-ல்
வியாச பூஜை காலத்தில்  சில மாதங்களுக்கு முகாமிட்டிருந்தார்.
அப்போது சிதம்பரம் மாதிரியில் வடக்கிலும் ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டார்.

ஏழு குன்றுகள் சூழ்ந்ததால் இது சாதாரா என்று அழைக்கப்படுகிறது .
சுவாமிகளின் திட்டத்தைக்  கேட்டவுடன் ஊர்ப் பிரமுகரும்
காஞ்சி சங்காராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதியின் பக்தருமான சாமண்ணா ,
தனது நிலத்தைக் கோவில் கட்ட தானம் செய்தார்.
அப்போதைய கர்நாடக, தமிழ்நாடு, மஹாராஷ்டிர அரசுகள், அந்தக் கோவிலுக்கு நிதி உதவி செய்தன.
கேரள மாநிலம், நல்ல ஜாதி மரங்களைக் கோவில் கட்ட கொடுத்து உதவியது.
தர்ம சிந்தனையாளர்களும் பொருளுதவி செய்தனர் .

சிதம்பரம் போலவே எழுந்த இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது
கோவில் கட்டும் பணி 1981ல் துவங்கி மூன்றே ஆண்டுகளில் நிறைவு அடைந்தது.
சிதம்பரத்திலிருந்து வரும் தீட்சிதர்களே உத்தர சிதம்பரம் நடராஜருக்கும்
அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார்.
அதன்படி இப்போதும்
ரொடேஷன் Rotation முறையில் சிதம்பரம் தீட்சிதர்களே இக் கோவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர்.

மும்பை நகரத்தில் மட்டுமே இருபது புகழ்மிகு இந்துக் கோவில்கள் உள்ளன. இதோ அவற்றின் பெயர்கள் :-

1.சித்தி விநாயகர் கோவில்

2.மகாலெட்சுமி கோவில்

3.மும்பாதேவி கோவில்

4. குட்டி சபரிமலை கோவில்

5. ஹரே கிருஷ்ணா கோவில் கோவில்

6.வைஷ்ணவ தேவி கோவில்

7.பாபுல்நாத் சிவன் கோவில்

8.வாகேஸ்வரர் சிவன் கோவில்

9.ராதா கோபிநாத் கோவில்

10.பாலாஜி/ வெங்கடேஸ்வரா கோவில்

11.சுவாமிநாராயண் கோவில்

12.பிரபாதேவி கோவில்

13.கண்டேஸ்வரர் ஹனுமான் கோவில்

14.இச்சாபுரி கணேஷ் கோவில்

15.ஆர்ய சமாஜ் கோவில்

16.சிருங்கேரி மடம் கோவில்

17.சுவர்ணா கோவில்

 18.ஸஹர் ஐயப்ப சிவா பார்வதி கோவில்

19.BAPS சுவாமிநாராயண கோவில்

20.சமணர் கோவில் (Jain Temple)

மும்பா தேவி கோவில்

மும்பை என்ற பெயருக்கே காரணமாக அமைந்த மிகப்பழைய கோவில் இது.
துர்கா தேவியின் வேறு பெயர் மும்பா தேவி.
மதுரைக்கு மீனாட்சி,
காஞ்சிக்குக் காமாட்சி,
காசிக்கு விசாலாக்ஷி என்பது போல
ஒவ்வொரு ஊருக்கும் உரித்தான கடவுள் உண்டு.
அவ்வகையில் மும்பை நகரின் தெய்வம் மும்பா தேவி .
விவசாயிகளும், மீனவர்களும், சந்திர வம்ச க்ஷத் ரியர்களும் காலா காலமாக வழிபடும் தெய்வம் அவள் .
தற்போதைய கட்டிடங்கள் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டவை.
ஒரு மேடை மீது காட்சி தரும் தேவிக்கு கிரீடம், நகைகள் ஆகியன அழகு சேர்க்கின்றன.
கருங்கல்லிலான  தேவிக்கு முகத்தில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டுள்ளது
கோவிலுக்குள் பிற தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு
செவ்வாயன்று நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

சித்தி விநாயகர் கோவில்

பிள்ளையார், எல்லா இந்துக்களுக்கும் முதற் கடவுள் என்ற போதிலும் மஹாராஷ்டிர மக்களுக்கு தேசீய கடவுளும் ஆகும்.
வங்காளத்தில் துர்கா பூஜை போல மஹாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தி ஒரு வாரத்துக்குக் கொண்டாடப்படும்.
மும்பை நகர சித்தி விநாயகருக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால்
பாலிவுட் நடிகர் நடிகையரும் அரசியல்வாதிகளும் வருகை தந்து கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டனர் ;
எல்லோருக்கும் வரம் தரும் சக்தி உடையவர் என்பது இதன் பொருள்.
1801-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

இங்குள்ள பிள்ளையார் வலம் சுழி பிள்ளையார்
இந்த மாநிலத்தின் பெரிய வரும்படி தரும் கோவில்களில் இதுவும் ஒன்று.
அந்தக் காலத்திலேயே ஆண்டு வருமானம் 25 கோடிரூபாய்
கோவிலின் மரக்கதவுகளில் பல தெய்வ உருவங்களைக் காணலாம் .
தங்கத் தகடுகளுக்கு இடையே கர்ப்பக்கிரகம் ஜொலிக்கும். அதிகமான பக்தர்கள் வரும் கோவில் இது.

மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர்
சித்தி விநாயகர் கோவிலையும்
மஹா லக்ஷ்மி கோவிலையும்
தரிசிக்காமல் வர மாட்டார்கள்.
உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று.
இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும்
மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை
இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார்
இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர்.
மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்;
மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் .
மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்
வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும்
ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும்
(தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி)
மிகப் பெரிய பண்டிகைகள் .
கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின் விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன.
பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க
ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற
தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார்.
ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன.
ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,
தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள்.
முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை
ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் .
பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது .
ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,
இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

பாலாஜி – வெங்கடேச்வர சுவாமி கோவில்

பாலாஜி கோவில், தமிழ்நாட்டு கோபுரம் போல பெரிய உயரமான கோபுரத்துடன் திகழ்கிறது.
ஏனைய மராட்டிய கோவில்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது .
Nerul நெருள் ரயில் நிலையத்துக்கு அருகில் குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவில்,
பக்தர்களுக்கு திருப்பதியை நினைவுபடுத்தும்.
தென்னிந்திய மக்களைக் கவர்ந்து இழுக்கும் கோவிலுக்குள் ராமானுஜர், ருக்மிணி , லட்சுமி, ராம , லட்சுமண, ஹனுமான் சந்நிதிகளும் இடம்பெற்றுள்ளன
60 அடி  உயர கோபுரமும், உள்ளே அமைந்த நந்தவனமும் (தோட்டமும்) கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன .

ஸ்வாமி நாராயணர் கோவில்

ஸ்வாமி நாராயண பக்தர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர்.
அவர்கள் தனித்தனியே கோவில்களைக் கட்டி வழிபடுகின்றனர்.
இந்த ஸ்வாமி நாராயண கோவில் மிகவும் பழமையானது
ஸ்வாமி நாராயண சம்பிரதாயத்தினர்ன் நடத்ததும் இக்கோவில் 1903ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது
ஸ்வாமி நாராயணனுடன்,
கிருஷ்ணா,
லட்சுமி நாராயணன்,
ராதா,
கணஷ்யாம் சிலைகளும் அலங்கரிக்கின்றன
ஜன்மாஷ்டமி , ராம நவமி பண்டிகை காலங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.

மாதா வைஷ்ணவ தேவி கோவில்

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருக்கும் வைஷ்ணோ தேவி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய தலம் .
அந்தக் கோவில் ஒரு குகைக்குள் இருப்பதால் ஊர்ந்து சென்றுதான் கோவிலுக்குள் நுழைய முடியும்.
அதே பாணியில் மும்பை நகர வைஷ்ணவ தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது .
நகரின் நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கோவில்
மாறுபட்ட புதிய அனுபவத்தை நல்கும் இடமாகத் திகழ்கிறது

————–

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்  இருக்கிறது

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது.
மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில்  அமைக்க எண்ணி
இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் .
ஆனால் பல தடைகள் ஏற்பட்டன.
பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம்.
அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது.
தாயாரை அணைத்த வண்ணம்  பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து ,
அருள் சுரக்கும் கோவில் இது .

இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்,
திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.

திரை போட்டிருந்ததால், நாங்கள் வரிசையில் நின்று காத்திருந்தோம்.
மன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு TEEN AGE BOY டீன்  ஏஜ் பையனை அவனது தந்தை அழைத்து வந்திருந்தார்.
அவன் ஆடிக்கொண்டும் சப்தம் போட்டுக்கொண்டும் இருந்தான்.
கோவிலுக்குப் பலரும் எண்ணெயும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார்.

கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !-
இரு முறை கோவில் கட்டுவதில் தடை  ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம்  என்றும்
அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள்
பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும்  தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது.
உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை.
அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த
பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .

பிரஹலாதன் பெயர் மருவி
பரகால  என்றும்
பரிக்கல் என்றும்
மருவியது என்பதே பொருத்தம்!!

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை  நமக்குக் காட்டிய
பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் .
பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒப்பிலியப்பன் – திருவோண விரதம்–நல் வாழ்வருளும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ திருத் தலங்கள்

May 16, 2023

ஸ்ரீ  மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.

துளசி, ஸ்ரீ மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள் தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போது தான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்த வாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.

தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பது தான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற் கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.

அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்து கொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக் கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.

மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற் கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.

எல்லாம் கூடி வந்ததை, இதை யெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக் குடந்தை மலர்க் காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மண முடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளி வீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.

துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்து விட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.

பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார் முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப் பருவம் எய்திய போது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!

மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’

அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.

‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக் கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.

‘‘நீ உன் பெண்ணை எனக்கு மண முடித்துக் கொடுக்க வில்லை யானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!

இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹா விஷ்ணு தோன்றினார். பூமி தேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போது தான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.

உப்பிடப் படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவை தான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன் தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத் தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டு வரக் கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!

நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே– என்கிறார்

அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவ சர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்து கொள்ள முயன்ற போது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.

அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும் வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வ லவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீ ப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.

மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் எம்பெருமானாருக்கு உரிய திருவாதிரை மற்றும் எம்பெருமானுக்கு உரிய  திருவோணம் இவ் விரண்டு நட்சத்திரங்கள் தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.

—————–

நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்

திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக் கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள் பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில் தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.

திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்

திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.

‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.

வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.

தேவர் மலை அழகிய சிங்கர்

கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத் தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.

கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் இத்திருத் தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.

வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றி மலை கோயில்களை சேவித்து விட்டு தேவர்மலை கதிர் நரசிங்கப் பெருமாளைச் சேவித்து விடலாம்.

சிந்தலவாடி

திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.

வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.

தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.

வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.

வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)

ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.

இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.

வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.

கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்

அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.

வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப் பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.

கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்

மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்று விடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.

விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸ ராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண் முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.

வழி: கும்பகோணம் நகரில் காவிரிக் கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப் பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.

அரியலூர்

அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.

வழி: அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

திருக்குறையலூர்
உக்கிர நரசிம்மப் பெருமாள்

வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்ட மதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.

வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.

திருவாலி லட்சுமி நரசிம்மர்

தூவிரிய மலருழக்கிக் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே (பெரிய திருமொழி 3-6-1)

திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட பாசுரத்தைப் பேசித் துதிக்கும் போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத் தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத் துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.

வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.

வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.

மங்கை மடம் அழகிய சிங்கர்

திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும் போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கடலங்குடி

திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.

வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.

முகாசாபரூர்

திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.

இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.

வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.

வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி- ரயில்- பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பஞ்ச பாண்டவர் நினைவு சிஹ்ன கோயில்கள் —

February 23, 2023

பஞ்ச பாண்டவர் குகைக் கோயில்-(பஞ்ச பாண்டவர் கோயில்கள் மற்றும் ஐந்து பாண்டவர்களின் மண்டபங்கள்
எனவும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச் சின்னமாகும். –
இதுவே மாமல்லபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குகைக்கோயில் ஆகும்.
கி.பி. 7 ஆம் நுாற்றாண்டில் இந்தியாவின் குடைவரைக் கட்டிடக் கலைக்கான உதாரணமாகத் திகழ்கிறது.
இந்தக் கோயிலானது, மாமல்லபுரத்தில் காணப்படும் பல குகைக் குடைவு மண்டபங்களுள்,
விசுவகர்ம இந்துக் கோயில் கட்டிடக்கலை சிற்பிகளின் குடவரைக் கோயில்கள் கட்டுமானத் திறமைக்கான
மிகச்சிறந்த நற்சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
மாமல்லபுர மரபுச்சின்னங்களின் பகுதியாக விளங்கும் இந்தக் கோயில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்,
பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1984 ஆம் ஆண்டில்
தெரிவிற்கான வரைமுறைகள் i, ii, iii மற்றும் iv இன் படி தெரிவு செய்யப்பட்டது.
பஞ்ச பாண்டவர் மண்டபம் அல்லது பஞ்ச பாண்டவர் குகைக்கோயிலானது, மாமல்லபுரம் நகரில் அர்ச்சுணன் தபசு
திறந்த வெளி பாறைச்சிற்பங்களின் அருகில் அமர்ந்துள்ளது.
இது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டலக் கடற்கரையில். மாமல்லபுரத்தில் இதர குகைக்கோயில்களுடன்
குன்றுகளின் தொடரின் உச்சியில் அமைந்துள்ளது.
இந்த இடம் சென்னையிலிருந்து தோராயமாக 58 கிலோமீட்டர் (36 மைல்கள்) தொலைவிலும்.
செங்கல்பட்டு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் (20 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.
பல்லவ கட்டிடக் கலையின் ஒரு பொதுவான பாணியாக சிங்கத்தின் உருவத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள
தாழ்வாரத்தின் தூண்கள் அமைந்துள்ளன.
இந்தக் குகையின் கட்டிடக்கலை சிறப்பியல்புகளிலிருந்து, இது 7 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நரசிம்மர்வர்மன் I
(மாமல்ல காலம்) முதல் நரசிம்மவர்மன் II (ராஜசிம்மா) வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தக் குகைக் கோயிலானது முழுமை பெறாத நிலையில் உள்ளது.
நுழைவு வாயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலானது, 50 அடி அளவில், மாமல்லபுரம் குகைக்கோயில்களிலேயே அதிக நீளமான நிலக்குடைவினைக் கொண்டதாகும்.
குகையின் தொடக்கத்தின் நீளம் முதன்மை சன்னதிக்குச் செல்ல
குகைக்குள் ஒரு சுற்றுவட்டப் பாதை உருவாக்கப்படுவதைக் காட்டுகிறது.

நுழைவு வாயிலில் உள்ள இரு தூண்களும், பல்லவர் கால பாறை குடைவு வகை கட்டிடக் கலை பாணியிலான,
உட்கார்ந்த நிலையில் உள்ள இரு சிங்கங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த குகைக் கோயிலின் முகப்புத் தோற்றத்தில், இருபுறத்திலும் பாறையோடு முட்டிக்கொண்டுள்ள இரண்டு
செவ்வகத் தூண்களைத் தவிர்த்து, மொத்தம் ஆறு தூண்கள் சிங்கத் தோற்ற அடிப்பகுதியைக் கொண்டுள்ளன.
மற்ற குகைகளுடன் ஒப்பிடுகையில், குகைக்குள் செதுக்கப்பட்ட தளவமைப்பு மற்றும் கட்டடக்கலை
கூறுகளில் பின்வரும் மேம்பாடுகள் காணப்படுகின்றன.
முதலாவது, தென்னிந்தியாவின் வழக்கமான அமைப்புள்ள கோயில்களிலிருந்து மாறுபட்ட சுற்றுவட்டப்பாதை,
மற்றொன்று முகப்புத் தோற்றத்தை அமைக்கின்ற சிங்க சிலை வடிவத் தூண்கள் வளைவாக அமைக்கப்பட்ட விதம் ஆகியவையாகும்.
ஒவ்வொரு சிங்க வடிவத் தூண்களும் மூன்று சிங்கங்களைக் கொண்டதாக உள்ளது.
ஒன்று முகப்புப் புறத்திலும், மற்ற இரண்டு சிங்கங்களும் பக்கவாட்டிலும்,
ஒருபுறம் சிங்கமே இல்லாமல் வெறுமையாகவும் காட்சியளிக்கின்றன,

—————————-

கடைசி இரண்டு ஹிந்து இருந்தாலும்     அவர்கள் இரண்டு இதிஹாஸசங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள், அவை ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் என்றார் ஸ்வாமி விவேகானந்தர்.

பாரத தேசமெங்கும் ஸ்ரீ ராமாயணத்தையும் , மஹாபாரதத்தையும்  தெரியாத, போற்றாத மக்கள் எந்த மொழியிலும் இல்லை.

பாரத மொழிகள் அனைத்தும் இந்த இரு இதிகாசங்களைப் போற்றுகின்றன, என்று உறுதியாகச் சொல்லலாம்.

தமிழகமும் ஸ்ரீ ராமாயணத்துடனும், மஹாபாரதத்துடன் தொடர்புடையது. தமிழ் இலக்கியங்களில் ஸ்ரீ ராமாயண, மஹாபாரதக்  குறிப்புகள் உள்ளன.

தமிழகத்தில் ஸ்ரீ ராமனின் திருவடிகள் பட்டுள்ளன. இன்றும் அதற்கு ஆதாரமாய் உள்ளது ஸ்ரீ ராமர் பாலம்.

சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் 358வது பாடல் வான்மீகியார் என்பவர் பாடியது.

இது ஸ்ரீ வால்மீகி ரிஷி பாடியது அல்ல, என்றாலும் ஸ்ரீ ராமாயணத்தை  நமக்கு அளித்த ஸ்ரீ வால்மீகியின் பெயரை வைக்குமளவுக்கு  ஸ்ரீ வால்மீகியின் புகழ் தமிழகத்தில் பரவியிருந்ததைக் காட்டும் அகச்சான்றாகும்.

புறநானூறு 378வது பாடல் ஸ்ரீ ராமாயண ஸம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

மஹாபாரதத் தாக்கமும் தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் தமிழ் மக்களிடமும் காணலாம். தர்மன், ஸஹாதேவன்,  அர்ஜு(ன)ன்  போன்ற பெயர்கள் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது இதற்குச் சான்று.

சங்க இலக்கிய நூலான புறநானூறு இரண்டாவது பாடல் பாண்டவர்கள், கௌரவர்கள் என்னும் இரு தரப்புக்கும் போர் மூண்டபோது இருதரப்புக்கும் உணவு வழங்கியவன் உதியன் சேரலாதன் என்ற தமிழக மன்னன் என்று முரஞ்சியூர் முடிநாகனார் என்னும்  புலவர் பாடுகிறார்.

 சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம், புறநானூறு கூறிய தகவலை உறுதி செய்கிறது.

 பாண்டிய மன்னன்  ஒருவன் பாண்டவர்கள் தரப்பில் போரிட்ட தகவலும் அவனது வீரத்தை  அஸ்வத்தாமன் புகழ்வதும் வியாசரால் மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதத்தூக்கும்  தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு தொன்மையானது என்றால் மறுக்கமுடியாதது.

தமிழகத்தில் திரௌபதி கோயில்கள் இல்லாத கிராமங்கள் அரிது என்றே சொல்லலாம்.

திரௌபதி வரலாறு: திரௌபதி யார்? அவள் பிறப்பின் ரகசியம்!

குரு துரோணாச்சார்யாரின் அறிவுரை படி அர்சுனன் பாஞ்சால தேசத்து மன்னன் துருபதனை வீழ்த்தி பாதி ராஜ்யத்தை கைப்பற்றுகிறான்.

இதனால் மணமுடைந்த துருபதன் அவர்களை பழி தீர்க்க வாரிசு வேண்டி மிகப் பெரிய யாகத்தை நடத்துகிறான்.

அந்த அக்குரோசமான ஜுவாலையில் இருந்து கரிய நிறத்தில் அழகிய பெண் ஒருத்தி வெளியே வருகிறாள். தோன்றும் போதே வானில் பெரிய அசரீரி ஒலிக்கிறது.

“ குரு வம்சமானது இவளாளே அழியும்” என்று கூறியது. அப்படிப்பட்ட அந்த தீயில் தோன்றிய பெண்ணே “திரௌபதி” ஆவாள்.

இவளே பாஞ்சால நாட்டை சார்ந்ததால் பாஞ்சாலி என்றும், யாகத்தில் தோன்றியதால் யாகசேனி என்றும், கரிய நிறம் கொண்டதால் கிருஷ்ணை என்றும் பெயர்க் கொண்டாள்.

திரௌபதியின் சிறப்பு

அழகில் சிறந்தவள். எவரேனும் கண்டாலும் ஆசை கொள்ளும் அளவிற்கு பேரழிகி. அவளின் உடலில் இருந்து இயற்கையாகவே நீல தாமரையின் மணம் வீசுமாம்.

அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்ணாக விளங்குபவள். சர்வ லக்சணங்களும் பொருந்திய தேவலோக பெண்ணைப் போல் விளங்கினாள்.

திரௌபதியின் சுயம்வரம்

துருபதன் திரௌபதிக்கு திருமணம் நடத்த சுயம்வரம் அறிவித்தார். பல்வேறு தேச இளவரசர்களும், அரசர்களும் கலந்து கொண்டனர். துருபதன் தன் மகளை மணக்க போட்டி அறிவித்திருந்தார்.

இயந்திரத்தில் சுற்றும் குறியை யார் சரியாக வில்லால் அடிகிறாரோ அவருக்கே தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறினார்.

அர்சுனனே போட்டியில் வென்றார் பாஞ்சாலியை மணக்க ஆயத்தமானார்.

வெற்றி கொண்ட திரௌபதியுடன் குந்தியை காணச் சென்று, வென்ற விஷயத்தை கூறினார் அந்நிலையில் குந்தி வென்றது ஒரு பெண் என்று அறியாது.

வென்ற பொருளை ஐவரும் சமமாகப் பிரித்து கொள்ளுமாறு கூறினார். அனைவரும் அதிர்ந்தனர்.

குந்தியும் உண்மை அறிந்து அதிர்ந்தார். இருப்பினும் அன்னையின் வாக்கின் படி அனைவரும் ஒப்பு கொண்டனர்.

ஐவருடன் திருமணம் நடக்க காரணம் என்ன?

பின்பு பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் திருமணம் ஏற்பாடனது. பாஞ்சாலியின் தந்தை துருபதனுக்கு மனம் ஒப்பவில்லை. இது குறித்து அவர் யுதிஷ்டிரனிடம் கேட்டார்.

தர்மம் தவறாத யுதிஷ்டிரனும் இந்த திருமணத்தில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை. மேலும் சில உயர்ந்த தர்மத்தை காக்க சட்டங்களை மீறலாம் என்று கூறினார்.

இந்த திருமணமானது நடமுறைக்கு மாறாது ஆனாலும் மிகப்பெரிய தர்மத்தை நிலைநாட்ட போகிறது. ஆனாலும் துருபதன் ஏற்க தயங்கினார்.

திரௌபதி பிறப்பு ரகசியம்

பாண்டவர்கள் அனைவரும் முற்பிறவியில் தேவர்கள். பாஞ்சாலி ஒருத்தி அல்ல நான்கு தேவர்களின் மனைவியின் சக்தியாவாள்.

எமனின் மனைவி சியாமளா, வாயுவின் மனைவி பாரதி, இந்திரனின் மனைவி சசி, இரண்டு அசுவினி குமாரர்களின் மனைவி உஷா ஆகியோரின் சக்தி ஆவாள்.

பஞ்ச பாண்டவர்கள்

1. தர்மன் – எமதர்மன்
2. பீமன் – வாயு
3. அர்சுனன் – இந்திரன்
4. நகுலன் & சகாதேவன் – அசுவினி குமார்கள்.

எனவே தான் அந்த தேவர்களின் அம்சமாக தோன்றிய பாண்டவர்கள் ஐவரும் இவளை மணக்க நேரிட்டது என்பதை வியாசர் ஞான திருஷ்டியின் மூலம் துருபதனிற்கு உணர்த்தினார்.

துருபதனும் திரௌபதியின் பிறப்பு ரகசியம் அறிந்து ஒப்புக் கொண்டு திருமணம் நடந்தேறியது.

திரௌபதியின் கற்பு நெறி

ஐவரின் மனைவியாயினும் திரௌபதி ஐந்து பத்தினி கன்னிகைகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

சீதை, அகலிகை, தாரை, மண்டோதரி, திரௌபதி என்று கற்பு நெறி தவறாது வாழ்ந்த மாதர்களை போன்றுகின்றோம்.

திரௌபதி ஐந்து கணவர்களையும் சமமாக மதித்தாள். ஐவரை தவிற பிரிதொருவரை நினைக்கவில்லை.

மேலும் ஒருவரிடம் கூடிய பிறகு மற்றொருவரிடம் செல்லும் போது மீண்டும் கன்னித் தன்மையை அடையும் வரம் பெற்றிருந்தாள்.

எனவே கணவர் ஐவருடன் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தாள். வேறு எவர் மீதும் எந்த ஒரு இச்சையும் கொண்டதில்லை.

திரௌபதியின் சபதம்

கற்பு நெறி தவறாத திரௌபதியினை சூதில் வென்று துரியோதனன் சபையில் துச்சாதனன் அவளை நிர்வாணபடுத்த துகிள் உறித்தான்.

கிருஷ்ண பக்தியினால் அவள் காப்பாற்ற கிருஷ்ணனை அழைத்தாள். அவள் கற்பு தவறாத மங்கை. ஆதலால் அவள் துகில் நீண்டுக் கொண்டே சென்றது. மானம் காத்தருளினான் கிருஷ்ணன்.

தன் மானத்தை பங்க படுத்திய துச்சாதனனின் மார்பின் குருதியை தன் தலையில் பூசும் வரை கூந்தலை வாரி முடியேன் என சபதம் எடுத்தாள்.

தன் தொடையில் அமர சொன்ன துரியோதனின் தொடை நொருங்கும் வரை தன் சினம் தீராது என சபதம் மேற்கொண்டாள். அதன்படியே மகாபாரத யுத்தம் மூண்டு கௌரவர்கள் அனைவரும் மாய்ந்தனர்.

திரௌபதி என்கிற பத்தினி தெய்வம்

பல்வேறு இன்னல்கள் வந்த போதிலும் தன் கணவர்கள் ஐவருக்கும் உறுதுணையாய் நின்று கௌரவ வம்சத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார்.

அந்த பத்தினி தெய்வத்திற்கு இன்றளவும் பல்வேறு இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பக்தி, கற்பு, பெண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கும் சான்றாக விளங்கிய அந்த மகாசக்தியே திரௌபதி அம்மன் ஆவாள்.

——————-

குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனிதம் மிக்கதாக போற்றப்படுகிறது.
அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை.
இந்தக் கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும்
அதையொட்டி மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறதுபஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நால்வரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை எனப் பெயர் இருந்திருக்கிறதகாலப்போக்கில் மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது.
பாண்டவ சகோதரர்களில் நான்குபேர் தடாகத்தில் தண்ணீர் குடித்ததால் மாண்டுபோனது பற்றி மஹாபாரதத்தில் சொல்லப்படும் சம்பவத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்தனர் பஞ்ச பாண்டவர்கள்.
சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் 12 வருடங்கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும்
(தலைமறைவு வாழ்க்கை) செய்யும் நிலை பஞ்சபாண்டவர்களுக்கு ஏற்பட்டது.
பாண்டவர்களும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் ஈடுபட்டனர்.
12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நேர்ந்தது.
அந்தணர் ஒருவருடைய வேள்வி தீ மூட்டும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது.
மருண்டு போன மான் திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தது. மானிடமிருந்து அரணிக்கட்டையை மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் அந்தணர் வேண்டினார்.
பாண்டவர்கள் மானைத் துரத்தியபடி ஓடினர்.
வனத்தில் வெகுதூரம் சென்றபிறகும் மானைப் பிடிக்கமுடியாமல் தளர்ந்துபோய் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.
அந்தணருக்கு உதவமுடியாமல் போய்விட்டதே என்று பாண்டவர்கள் மிகவும் வருந்தினர்.

அனைவருக்கும் தாகம் ஏற்பட்டதால் எங்கிருந்தாவது தண்ணீர் எடுத்துவரும்படி நகுலனிடம் தருமர் கூறினார்.
தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான்.
முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான்.
அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக யத்தனித்தபோது  அசரீர் ஒலித்தது.
“இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்.
அதன்பிறகு நீர் பருகலாம்” என்றது அசரீரி.
சுற்றும் முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்தான்.
ஒரு மிடறு தண்ணீர் குடித்த மாத்திரத்திலேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன்
அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை.
மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான்.
உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான்.
கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன்.
அப்போதும் அதே குரல் ஒலித்தது “உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது.
முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல்” என்றது.

”முதலில் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு உன் கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன்
என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் மாண்டு வீழ்ந்தான்.
மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் தருமன் மனக்கவலை அடைந்தான்.
அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான்.
“தம்பிகளுக்கு என்னதான் ஆனது என்று பார். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று பீமனிடம் தருமன் கூறினார்.
தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான்.
இது யக்ஷர்களின் வேலையாகத்தான் இருக்கும்.
முதலில் தாகத்தை தணித்துக் கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான்.
மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. ‘எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார்?’ என அலட்சியமாக
நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே மாண்டு விழுந்தான்.

தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் தருமன்.
தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார்.
இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர்
உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகம் தணிக்க முற்பட்டார்.
அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது.
“என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள்.
முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால்
உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும்” என்று குரல் ஒலித்தது.
அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய தர்மர் “இந்தப் பொய்கை உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய்.
உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை.
உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன்” என்றார்.

எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற அசரீரியின் கேள்விக்கு
சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார் தருமன்.
இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் தருமன்.
தருமனின் பதில்களால் மகிழ்ந்துபோன அந்த குரல் இறுதியில்
“மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன்.
யாருக்கு உயிர் கொடுக்கவேண்டும்” எனக் கேட்டது.

”நகுலனை எனக்குத்  திருப்பிக்கொடுங்கள்” என தருமர் வேண்டினார்.
“யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன், அர்ஜூனன் ஆகியோரில்
ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய்” என அசரீரி கேட்டது.

அதற்கு தருமன், “என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய இரண்டு மனைவிகள்.
நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம்.
மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர்.
என் தாய்க்கு பக்திப் பூர்வமாக சேவைசெய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள்.
அவளுக்குச் செய்யவேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால்
நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன்.
போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல” என்றான்.

தருமனின் இந்த பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தர்மதேவன் (யமதர்மன்) அங்கு பிரசன்னமானார்.
“தருமா நான் உனக்கு தெய்விகத் தந்தையாவேன். அந்தணரின் அரணிக்கட்டையை மான் வடிவில் எடுத்து வந்தது நான்தான்.
உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனது நான்கு சகோதரர்களும்
மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்” என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார்
தர்மதேவன். தருமனின் நான்கு சகோதரர்களும் தூங்கி எழுவது போன்று கண் விழித்தார்கள்.
அரணிக் கட்டையும் கிடைத்தது.

அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள்.

மகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான்
சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகா விஷ்ணு கோயிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள் இப் பகுதி வாசிகள்.

சொத்தவிளை குறித்து ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.சர்வேஸ்வரன் கூறும்போது,
“சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது.
மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல் கொண்டு நேர்த்தியாக இக்கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு, மகாலட்சுமி தேவியும் காட்சிதருகிறார்கள்.
ஆரம்பத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது.
மஹா விஷ்ணு, லட்சுமி தேவியும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கிறார்கள்.
இக் கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப் பொய்கையில் கால்நடைகள் நீர் அருந்தாது.
நஞ்சுப் பொய்கை என்பதால் பொதுமக்களும் பயன்படுத்துவது இல்லை.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு
நஞ்சுப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள்.
இந்தத் தீர்த்ததால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள்.
எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்தப் பொய்கை வறண்டுபோகாது.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தக் கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எந்தச்  சேதாரமும் ஏற்படவில்லை.
நஞ்சுப் பொய்கை பற்றி கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை இப்போது அதிகரித்துள்ளது” என்றார்.

பொய்கையைப் பார்த்தவண்ணம் வினை தீர்க்கும் விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது.
பொய்கைக் கரையில் யம தர்மனுக்கு வடக்குப் பார்த்து பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
நவகிரக சந்நிதி, மகா விஷ்ணுக் கோயிலைப் பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக மஹா விஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம்
ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது.

“விநாயகர் சதூர்த்தி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது.
பிரதோஷம், அனுமன் ஜயந்தியின்போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமை தோறும் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது.
இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வார்கள்” என்கிறார் கோயில் பூசாரி ராமன்.

எங்கிருக்கிறது எப்படிச் செல்வது?

நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சொத்த விளை நஞ்சுப் பொய்கை மஹா விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலப்பதி, மணக்குடி
செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம்.
சொத்த விளை நஞ்சுப் பொய்கை மஹா விஷ்ணு ஆலயம் வருபவர்கள் நடந்து செல்லும்
தூரத்தில் உள்ள சொத்தவிளை கடற்கரையின் அழகை ரசிக்கலாம்.
அய்யா வைகுண்டரின் ஐந்து பதிகளில் ஒன்றான அம்பலப்பதி கோயிலும் அருகில்தான் அமைந்துள்ளது.
சொத்த விளை வரும் பக்தர்கள் மனதுக்கு நிம்மதி நிச்சயம்.

————————–

மஹாபாரதத்துடன் தொடர்புள்ள ஒரு ஸ்தலம்தான் பாண்டூர். இத்திருத்தலம் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறைத் தாலுகாவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை வழியாக 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பாண்டூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஸன்னிதி

அக்ரஹாரம் என்பது மேற்குப் புறம் பெருமாள் ஸன்னிதியுடன் இருக்கும். கிழக்கு நோக்கி பெருமாள் ஸேவை ஸாதிப்பார். பழமையான எந்த ஒரு அக்ரஹாரத்து அமைப்பும் அப்படித்தான் இருக்கும்.

பாண்டவ நல்லூர் என்றழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயர் இப்போது “பாண்டூர்” என்பதாகும். பஞ்சபாண்டவர்களுக்கு எல்லா விதத்திலும் எப்போதும் துணை நின்றவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மஹாபாரதமே “தூது சென்றவன் ஏற்றம் சொல்லும் நூல்” என்று சிறப்பிக்கப்படுகிறது.

பாண்டவர்களுக்கு ஸஹாயம் செய்ததால் பாண்டவ ஸஹாயப் பெருமாள் என்று பெயர். அதாவது இந்த ஸன்னதி பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறிக்கும் பெயர் கொண்டவர். ஸ்ரீ பூமி நீளா தேவி ஸமேத பாண்டவ ஸஹாய பெருமாள் ஸன்னிதி.

தென்னச்சார்ய ஸம்ப்ரதாயம் , வைகானஸ ஆகமம்.

ஸன்னிதி நுழைவாயில் மேல்புறம் ஸ்ரீமந் நாராயணன் இரு தேவிகளுடன் காட்சி தருகிறார். இடது மற்றும் வலது புறத்தில் ஸ்ரீ கருடன் கைகளைக் கூப்பியவண்ணம் காட்சி தருகிறார்.

உள்ளே ஸன்னதி முன் மண்டபத்தில் நுழைந்தவுடன் அங்கு பெருமாளை நோக்கி கைகளை கூப்பியபடி ஸ்ரீ கருடனின் காட்சி.

 அர்த்த மண்டப வெளிச் சுவற்றில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியம்

அடுத்து அர்த்த மண்டபம் நாயக்கர் காலக் கட்டிடக் கலையைப் பறைசாற்றுகிறது அதில் இடது புறம் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் கிழக்கு நோக்கியபடி (முன்பு தாயாருக்குத் தனி ஸன்னிதி இருந்திருக்கும்),  வலது புறம் வளைவுகளின் உள்புறம். கிழக்கு நோக்கியபடி, ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ நம்மாழ்வார், வடதிசையில் தெற்கு நோக்கியபடி விஷ்வக்ஸேசனர்.

 இரண்டாவது வளைவில் ஜெயகார்ய ஸித்தி ஆஞ்சநேயர் கைகளைக் கூப்பியபடி.. அருள் பாலிக்கிறார்.

 மஹாபாரதத்தின் குருக்ஷேத்திரப் போரில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தேரோட்ட அர்ஜுனனின் தேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கொடியில் இருந்தார். அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஸஹாயமாக இருந்தது போல ஸ்ரீ ஆஞ்சநேயரும் இருந்ததை  நினைவுறுத்துகிறார் இந்த ஆஞ்சநேயர்.

 துவார பாலகர்களின் சித்திரம்………

அடுத்துச் சிறு மண்டபம் அதனைத் தாண்டி கர்பக்ரஹகம் அதில் ஸ்ரீ பூமி நீளா ஸமேத பாண்டவ ஸகாயப் பெருமாள் கருணை பொங்கும் முக அழகுடன் தேவிமார்களுடன் காட்சி தருகிறார்.

 பெருமாள் திருமேனி மட்டும் ஒரே வடிவில் இரண்டு திருமேனிகள் இந்த ஸன்னிதியில் உள்ளன. மாயன் என்பது ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பது வழக்கம் அதனாலோ என்னவோ ஒரே வடிவில் இரண்டு மூர்த்தியாக முன் பின் என்று காட்சி தருகிறார்.

 வலது கை வரத ஹஸ்தம் இடது கை இடுப்பில், மற்ற இரு கைகளில்  இடது கையில் சங்கு, வலது கையில் சக்கரம் ஏந்தியபடி சதுர்புஜ ஸேவையில் தேவிமார்களுடன் காட்சிதருகிறார் பெருமாள்.

 ஸ்தல விருக்ஷசம் பாரி ஜாதம் (பவழமல்லி). பவழமல்லி மரத்தின் வேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இருப்பதாகவும் , பூவில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதாகவும் ஐதீஹ்யம்.

இந்த ஸன்னிதி ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையது என்பதால் இந்த ஸன்னிதி ஸ்தல விருக்ஷம் பவழமல்லியாக இருப்பதும் சிறப்பு.

ஹேவிளம்பி ஆவணி 11 இல் ஸம்ப்ரோஷணம் (27/8/17) நடைபெற்றுள்ளது.

பாண்டவர்களுக்குத் தூது சென்று அர்ஜுனனுக்குத் தேரோட்டித் தனது கருணையைக் காட்டிய ஸ்ரீ கிருஷ்ணனைப், பாண்டவர்களுக்கு ஸஹாயம் செய்த ஸ்ரீ கண்ணனை ஸேவிக்க நீங்களும் செல்லலாமே…

——————

துரோணாச்சாரியார் கோயில் (Dronacharya Temple) மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியரான துரோணாச்சாரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயிலாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இருக்கும் குருகிராமில் உள்ள பீம் நகர் கிராமத்தில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் (பாண்டவேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும் .
மேலும், (இச்சிவலிங்கம் தற்போது இல்லை; கட்டிடங்கள் கட்டும்போது இது காணாது போய்விட்டது என்று சொல்லப்படுகிறது.)
இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப் படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது
தல வரலாறு
பாண்டவர்கள், திரௌபதி, உரோமேசர் முனிவர் முதலிய முனிவர்களும் அவர்களின் மனைவியர்களும்
தீர்த்த யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்குச் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர்.
காஞ்சிக்கு வந்த அவர்கள் தத்தம் பெயர்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது பாண்டவேசம் எனப்பட்டது.

பாண்டவேசம் எனப்படும் இச்சிவலிங்கத்திற்கு தென்திசையில் ஈசானன், கயிலாயநாதர் என்னும் பெயரில்
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வடகிழக்கு திசைக்கு திசைப் பாலகனாகும் பேற்றை அடைந்தான் என்பது வரலாறு

அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடகிழக்கு பகுதியில், (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி)
ரயில்வே ரோடில் சென்று தோட்டப்பகுதியில், வெட்ட வெளியில் (தற்போது கட்டிடங்கள் நிறைந்துள்ளது) உள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின்
வடகிழக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் (தற்போது இல்லை) அமைக்கப்பட்டுள்ளது.

—————–

கீழையில் – கீழையூர்

இறைவர் திருப்பெயர்: செம்மலைநாதர்

இறைவியார் திருப்பெயர்: வண்டமரும் பூங்குழலாள்

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பஞ்ச பாண்டவர்கள்.

  • மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர்.
  • வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது
  • வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - ஈழ நாட்டுமா தோட்டந்தென் (7-12-7).
    • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.
    • கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு காய்த்து வருமானத்திற்கு உதவுகின்றன.
    • இவ்வூரை’அருமொழி தேவ வளநாட்டு அளநாட்டுக் கீழையூர்’ என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.
    • அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று – ‘கருங்கண்ணி’யைத் கடந்தால் – கீழையூரை அடையலாம்.
  •  —————
  • உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு

  • திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ‘திருமிற்றக்கோடு’, ‘திருவீக்கோடு’, ‘ஐந்து மூர்த்தி திருக்கோவில்’ என்றும் இதனை வழங்குவர்.தலவரலாறு

    இந்துத் தொன்மங்களின்படி துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள் வழிபாட்டிற்காகச் சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மாணித்தனர்.

    முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்குப் பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மாணித்தனர். அவர்களது வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

  • நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாகச் செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாகக் கூறுவர்.வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தை சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.

    இறைவன், இறைவி

    இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வித்துவக்கோட்டு வல்லி, பத்மாசனி நாச்சியார். என்பதாகும். இத் தலத்தீர்த்தம் சக்ர தீர்த்தம். விமானம் தத்துவ காஞ்சன விமானம் என்ற அமைப்பினை சேர்ந்தது.

    சிறப்புக்கள்

    கேரள நாட்டு ஆழ்வாரான குலசேகராழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது சிறப்பானதாகும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக 108 வைணவத் திருத்தலங்களில்10க்கு மேற்பட்ட தலங்கள் உள்ளன. பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.

  • —————-
  • திருப்பார்த்தன் பள்ளி தாமரைக் கேள்வன் கோயில்

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோயில், 39-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ராமபிரான் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
  • திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமருசீர்க்

    குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்

  • தவள மாடம் நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
  • மூலவர்: தாமரையாள் கேள்வன்

    உற்சவர்: பார்த்தசாரதி

    தாயார்: தாமரை நாயகி

    தீர்த்தம்: கட்க புஷ்கரிணி

    விமானம்: நாராயண விமானம்

    தல வரலாறு

    கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறான். அவர் அருகே கமண்டலம் இருப்பதைக் கண்டதும், அதில் தண்ணீர் இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்தான். முனிவர் தியானம் செய்து முடிக்கும்வரை தன்னால் பொறுத்திருக்க முடியாது என்பதால், அவர் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தைத் திறந்து பார்த்தால் அதில் நீர் இல்லை.

    அகத்திய முனிவர், “நமக்கு எது வேண்டும் என்றாலும், கொடுக்கும் கடவுளான கிருஷ்ணரிடம் தானே கேட்டிருக்க வேண்டும்” என்று அர்ஜுனனிடம் கூறினார். உடனே அர்ஜுனன் கிருஷ்ணரை அழைத்தான். கூப்பிட்ட குரலுக்கு உடனே கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றினார். தன் கையில் இருந்த கத்தியை அர்ஜுனனிடம் கொடுத்த கிருஷ்ணர், அதைப் பயன்படுத்தி எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தார். கிருஷ்ணர் கூறியபடி, அர்ஜுனன், கத்தியால் தரையை கீறி, கங்கையை வரவழைத்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான். அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிருஷ்ணர் (பார்த்தசாரதி) இங்கேயே கோயில் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் பார்த்தன்பள்ளி என்று தல வரலாறு தெரிவிக்கிறது.

    ராமபிரானின் அருட்காட்சி

    அயோத்தியை ஆளும் தசரத மன்னர், குழந்தை வரம் பெற, புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது, ஸ்ரீமன் நாராயணனே தனக்கு மகனாக (ராமபிரானாக) அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்தார் தசரதர். தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக திருமாலை அழைத்தார். அப்போது யாக குண்டத்தில் இருந்து நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தோன்றி, தான் எவ்வாறு இருப்பேன் (ராமபிரான்) என்பதை தசரதருக்கு உணர்த்தினார். ராமாவதாரத்தின்போது, ராமபிரானுடன் இருவரும் (ஸ்ரீதேவி, பூதேவி) வாழ முடியாது என்பதால், அப்போதே ராமபிரானை தரிசித்தனர். ராமபிரான் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல காட்சி தரும் நிகழ்ச்சி, சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் இரு தேவியரும் உள்ளனர் என்பது தனிச்சிறப்பு.

    கோயில் அமைப்பும், சிறப்பும்

    ராஜகோபுரம் 3 நிலை கொண்டதாக அமைந்துள்ளது. நாராயண விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் கையில் கத்தியுடன் அருள்பாலிக்கிறார், அருகே கோலவல்லி ராமர் கையில் சங்கு, சக்கரம், கதை, வில், அம்புடன் உள்ளார். அர்ஜுனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் திருமால் தரிசனம் கண்டுள்ளனர்.

    பார்த்தனுக்காக உண்டான கோயில் என்பதால் பார்த்தன்பள்ளி ஆயிற்று. அர்ஜுனனுக்கும் இவ்விடத்தில் ஒரு கோயில் உண்டு. வருணன் இத்தல பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, தனக்கு பார்த்தசாரதியாக காட்சி தருமாறு வேண்டியதால், பெருமாளும் அவ்வாறே அருள்பாலித்ததால், பார்த்தசாரதி பள்ளி என்று இவ்வூருக்கு பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    திருவிழாக்கள்

    வைகுண்ட ஏகாதசி விழா, ஸ்ரீராம நவமி உற்சவம், தைப்பூச தீர்த்தவாரி, தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருடசேவை, ஆடி அமாவாசை தீர்த்தவாரி உற்சவ தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.

    அமைவிடம்: சீர்காழியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 4 கிமீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

    —————————-

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீமேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது.

    இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய (தற்போது இந்தியா என்றழைக்கப்படும் பழைய தேசங்கள்) மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன.

    இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான ‘பாலியோலித்திக்’ வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன.

    பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இந்த குகைகளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது

    பல்லாயிரம் ஆண்டுகளாக காற்றிலும், மழையிலும் கிடந்து இயற்கையாக ஒரு ஆமையின் வடிவத்தில் காட்சி தரும் பாறை.

    ஸ்பெயினுடன் பாண்டவர்களுக்கு என்ன தொடர்பு? வி.எஸ். வாகன்கர் என்பவர் 1957-ஆம் ஆண்டு ரயிலில் போபால் செல்லும்போது பீம்பேட்கா பாறை வடிவங்களை கண்டு அவை ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள சில பாறை அமைப்புகளோடு ஒத்துப்போவதைப் பார்க்கிறோம்

    யுனெஸ்கோவின் பெருமிதம் பீம்பேட்கா குகைகள் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    —————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சாரதா பீடம்–காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்–

February 22, 2023

காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

தமிழ்’ என்ற சொல்லின் வேர்ச் சொல்  எது?
 தாய், தம்பி, தமக்கை, தங்கை , தந்தை போன்ற சொற்கள் எந்த வழிமுறையில் வந்ததோ, அதே வழியில் தான் ‘தமிழும்’ வந்தது.
‘தம்’ என்பது படர்க்கையை குறிக்கும் என்பது தொல்காப்பியன் கூறும் இலக்கணம்.
தம் + ஆய் = தாய்
தம் + ஐயன் = தமையன்
தம் + அக்கை = தமக்கை
தம் + கை = தங்கை
தம் + எந்தை = தந்தை
அதுபோல
தம் + மொழி = தமிழ்
————
சாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

முதலாம் நூற்றாண்டை சேர்ந்த குஷாணப் பேரரசு காலத்தில் சாரதாபீடம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு பெரிய பல்கலைக்கழகம் ஒன்றும் செயல்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்டிதர்கள் சாரதா பீடத்துக்கு சென்று பல்வேறு பண்டிதர்களுடன் விவாதம் செய்வார்கள். அதில் வெற்றி பெறுபவர் சர்வக்ஞர் (எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவர்) என்று அழைக்கப்பட்டார்.

சர்வக்ஞர் பட்டம் பெற்றவர்களே சாரதா பீடத்தின் கருவறைக்கு சென்று தேவியை வழிபட முடியும். 7-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆதி சங்கரர், சாரதா பீடம் சென்று அனைவரையும் தனது வாதத் திறமையால் வென்று பீடத்தின் உள்ளே நுழைந்தார்.

அவர் உள்ளே சென்றபோது சரஸ்வதி தேவி அவரை சோதனை செய்தார். அந்த சோதனையிலும் ஆதி சங்கரர் வெற்றி பெற்றார். அவரது அறிவு, ஞானத்தை மெச்சி, தேவி அருளாசி வழங்கினார்.

ஸ்ரீ சாரதா பீடம்-அற்புதம் வாய்ந்த இந்துக்களின் ஆன்மிக பூமியான ஜம்மு காஷ்மீர்-

ஸ்ரீ சாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.
சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.

14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார்
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும்,
முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும்,
எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.
அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர்,
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.

யுவான் சுவாங்
கி பி 632 இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து,
இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.[6]

சாரதா கோயில் அமைப்பு
சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது.
மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது.
கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.

வரலாற்று குறிப்புகள்
காஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்ஹானர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமஸ்கிருத நூலில்
சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.

இசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 – 1048), சாரதா பீடத்தின் கருவறையில்
மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் மூல ஸ்தானம் -மருவி இந்தப்பெயர் – சூரியன் கோயில் போன்று,
சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.

பதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.

காஷ்மீரம் – ஒரு ஹிந்து பூமி! ஹிந்து மதத்தின் அடித்தளம்!காஷ்யபபுரி எனும் காஷ்மீர்! வேதம் விளைந்த பூமி!
தெய்வங்கள் தேடி வந்த பூமி! ரிஷிகள், முனிவர்களின் அருந்தவ பூமி! ஆசார்யர்களின் ஆன்மீக பூமி!

காஷ்மீர்=காஷ்யபர்+ மீரா. காஷ்யப ரிஷியின் பெரிய ஏரி. பெரிய ஏரிக்கு சம்ஸ்க்ருதத்தில் ‘மீரா’என்பர்.
காஷ்யப ரிஷி இப்போதைய வைவஷ்வத மந்வந்ரத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர். அதாவது ஏழு ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர்.
காஷ்யப கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ரிஷியின் மரபினர்.
ப்ரஜாபதி தக்ஷர் தம் 13 குமாரத்திகளை காஷ்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
தேவர்கள், கன்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள் எல்லாம் காஷ்யபரின் பிள்ளைகள்.

ஸ்ரீநகர்–குல்மார்க் பெரிதும் வற்றிப் போன ஏரியின் பெரும்பகுதியைச் சமப்படுத்தி ஊராக்கினார் அனந்த்நாக்.
அங்கு பல குருகுலங்கள், சர்வகலா சாலைகள் நிறுவி மிகப் பெரிய ஞான நகரம் ஆக்கினார்.
உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல சமயங்களைச் சார்ந்த அறிஞர்களும் ஞானிகளும் வந்து கூடி சத் சங்கம் செய்யும் இடமாகத் திகழ்ந்தது.
ஞானம் என்னும் செல்வத்தை (ஸ்ரீ) உடைய நகர் என்பதால் ‘ஸ்ரீநகர்’ ஆயிற்று.
இவற்றை எல்லாம் நிர்வாகம் செய்ய நிர்மாணித்த இடமே இன்றைய ‘அனந்த்நாக்’.
ஸ்ரீநகரின் ஞானச் செல்வத்தை அனுபவிக்க கெளிரி தேவியும், விநாயகரும் கைலாயத்தி லிருந்து அங்கு வருவார்களாம்!
அவர்கள் வரும் வழிக்கு ‘கெளரிமார்க்’ என்று பெயர். அதுவே மருவி இன்றைய ‘குல்மார்க்’ ஆயிற்று.

ஞான பூமியை ஆளும் ஞான தேவி ஸ்ரீ சரஸ்வதி:
காஷ்மீரை ஆளும் காவல் தெய்வம் சரஸ்வதி தேவி. சரஸ்வதிக்குரிய ஸ்லோகத்தில் ‘காஷ்மீர பூர வாசினி’ என்று போற்றப்படுகிறார்.
‘நமஸ்தே சாரதா தேவி!
காஷ்மீர் பூர வாசினி!
த்வமஹே ப்ரார்த்யே நித்யம்,
வித்யா தான் இஞ்சா தேஹிமே!’

காஷ்மீர மொழியின் எழுத்து வடிவங்கள் ‘சாரதா’ என்று அழைக்கப்பட்டது. கலாசாலைகள் ‘சாரதாபீடங்கள்’ஆயின.
அந்த நாடே ‘சாரதா தேசம்’ என்றும் அழைக்கப்பட்டது.
(சரஸ்வதி கோவில், சாரதா பீடம் எல்லாம் இன்றைய பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் – POK – இடிந்த நிலையில் உள்ளன!
வழிபாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன!)

ஆதிசங்கரரின் ‘செளந்தர்ய லஹரி’
ஆதிசங்கராசார்யர் எட்டாம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்து, பல ஆண்டுகள் தங்கியிருந்தார்.
கோபாலாத்ரி மலைமேல் அமர்ந்து தான் சிறந்த ‘செளந்தர்ய லஹரி’பாடினார். இந்த மலை சங்கராசார்ய மலை என்றும் அழைக்கப்படுகிறது.
நீலம் நதி (கிருஷ்ண கங்கா)க் கரையில் இருந்த சாரதா கோவிலுக்குச் சென்ற ஆதிசங்கரர், அந்தக் கோவிலின் அமைப்பு,
சாந்நித்யம் ஆகியவற்றைக் கண்டு மிக உகந்து அதே போல சிருங்கேரியில் துங்கபத்ரா நதி தீரத்தில் கோவில் கட்டினாராம்.
சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான மூல விக்ரகம் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ ராமானுஜரின் ‘ஸ்ரீபாஷ்யம்’
ஸ்வாமி ராமாநுஜர் 11 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்தார். வேத வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதுவதற்காக,
சாரதா பீடத்தில் இருந்த, வேத வியாசரின் சீடர் போதாயன மகரிஷி இயற்றிய ‘போதாயன விருத்தி கிரந்தம்’ என்னும் நூலைப் பார்க்க வந்தார்.
ஸ்ரீ ராமாநுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீ சரஸ்வதி தேவி தம் சிரசில் சூடிப் பெருமைப் படுத்தினார்.
சில சூத்திரங்களுக்கு ஸ்ரீ ராமானுஜரின் வ்யாக்யானங்களைக் கேட்டு, அவரை உச்சி முகர்ந்தார்.
ஸ்ரீ ராமாநுஜரை ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று போற்றினார்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி தாம் வணங்கி வந்த ‘ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்’ விக்ரகத்தை ஸ்ரீ ராமாநுஜருக்குத் தந்தருளினார்.

பிற மத அறிஞர்கள்:
பெளத்த, சமண மத அறிஞர்களும் இங்கு வந்து தத்துவ விசாரம் செய்தனர்.
பல பெளத்தத் துறவிகள் இங்கு பல ஆண்டு காலம் தங்கி இருந்து கற்றனர்.
யுவான் சுவாங்(சீனா) ஹேமசந்திரர்(சமண) ஆகியோர் இங்கிருந்தனர்.
இஸ்லாமிய மத அறிஞர்களும்- அல்பரூனி- இங்கு வந்து படித்துச் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன.
பெளத்தம் இங்கு வளர்ந்ததற்கு அடையாளமாக இன்றைய லடாக் பிரதேசம் விளங்குகிறது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பைத் எதிர்த்து வென்ற இந்து மன்னர்கள்:
இஸ்லாமியர்கள் உலகின் பல நாடுகளிலும் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிய போதும்,
பரத கண்டத்துக்குள் அவ்வளவு சுலபமாக நுழைய முடியவில்லை.
‘லோஹனா’ வம்சத்து மன்னர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் நம் வட மேற்கு எல்லையைப் பாதுகாத்தனர்.
லோஹனா வம்சத்தின் முன்னோர் ‘லவ’ பேரரசரின் (ஆம்… ஸ்ரீராமரின் திருக்குமாரர் தான்) படையில் வாள் படைத் தளபதிகளாக இருந்தார்கள்!
ஸ்ரீராமாயண காலத்து லவ புரி தான் இன்றைய லாகூர் (பாகிஸ்தான்).

காஷ்மீரின் வரலாறு:
மகாகவி கல்ஹணர் காஷ்மீரின் வரலாற்றை ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூலாக எழுதியுள்ளார்.
எட்டு பகுதிகள்- தரங்கங்கள்-கொண்ட இந்நூலில் 7826 ஸ்லோகங்கள் உள்ளன.
இதையே காஷ்மீர் பற்றிய அடிப்படை ஆதார நூலாக மற்ற ஆராய்ச்சி யாளர்கள் / எழுத்தாளர்கள் கொண்டுள்ளனர்.
கல்ஹணர் காஷ்மீரை ஆண்ட பல மன்னர்களின் பெயரைப் பட்டியல் இட்டுள்ளார்.

அவர்களுள் சில பெயர்கள்:
கோநந்தா, தாமோதரா யஷோவதி, லவ, குசேஷயா, சுரேந்திரா, ஜனகா, அசோகா, ஜலோகா, அபிமன்யு… மற்றும் பலர்.
இந்த நூல் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக M.A.Stein என்பவர் ஆங்கிலத்தில் Kalhana’s Rajatarangini-A Chronicle of the Kings of Kashmir என்று
மூன்று புத்தகங்களாக எழுதியுள்ளார்.

காஷ்மீரத்தில் (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில்) முஸாபராபாத் நகரிலிருந்து சுமார் 207 கி.மீ தூரத்திலும்,
பாரத -பாக் எல்லைக் கோட்டில் உள்ள குப்வாராவில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் சாரதா கிராமம் அமைந்துள்ளது.
மேலும் ஒரு சிறப்பு என்ன வென்றால், இந்த கிராமம் கிஷன்கங்கா (இன்னொரு பெயர் நீலம்) மதுமதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில்
நீலம் பள்ளத்தாக்கில், அழகு கொஞ்சும் பிரதேசத்தில் உள்ளது.
இந்த பகுதி பனிபடர்ந்த நங்கபர்பத் மலைத் தொடரின் சாரதா – நாரத சிகரங்களுக்கு இடையில் உள்ளது.

வரலாறு – புராதனம்

சாம்ராட் அசோகரால் பொது ஆண்டு முன் 273ல் புத்தமத கலாசாலை நிறுவப்பட்டது.
மஹாராஜா கனிஷ்கரால் பொது ஆண்டு பின் 141ல் சாரதா பீடத்தில் 4வது புத்த அறிஞர்களின் அவை சந்திப்பு நடத்தப்பட்டது.
கவி கல்ஹணர் தன்னுடைய ராஜ தரங்கிணி என்ற 11வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட காவியத்தில் சாரதா ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அல் பெரூனி என்பவர் இன்றைய தஜிகிஸ்தான் – உஸ்பெஸ்கிஸ்தான் என்றறியப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்.
அல் பெரூனி வெளிநாட்டிலிருந்து (மத்திய ஆசிய) வந்த சரித்திர ஆராய்ச்சியாளர்.
இவர் சமஸ்கிருதம், பாரசீகம் என்று எழெட்டு மொழிகள் அறிந்தவர்.
அவர் பாரதத்திற்கு பொது ஆண்டு முன் 1036ல் வந்த போது காஷ்மீரத்திற்கு பயணம் செய்திருக்கிறார்.
அங்கு சாரதையின் பெரிய விக்கிரகம் இருந்ததாகவும் பெரும் எண்ணிக்கையில் யாத்ரிகர் திரண்டிருந்திருந்ததாகவும்
தன்னுடைய பயணநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் 500 வருடங் களுக்குப் பின்னர் அக்பர் காலத்தில் வாழ்ந்து அய்னி அக்பரி எழுதிய
அபுல் பஸலும் சாரதையின் கோயிலைப் பற்றி விவரித்துள்ளார்.

டோக்ரா என்ற ஜாம்வால் வம்சாவளி முதல் அரசர் மஹாராஜா குலாப்சிங். அவர் ஆட்சி புரியத் துவங்கிய ஆண்டு 1846.
அதுவரை முஸ்லிம் படையெடுப்புகளின் போது சிதைக்கப்பட்ட பல கோயில்களை புதுப்பித்துச் செப்பனிட்டார்.
அவற்றுள் முதன்மையானது சாரதா பீடம். இந்த வம்சத்தின் கடைசி அரசர் ஹரிசிங்.

ஊடாடும் ஆன்மீக இழை

ஆதிசங்கரர் பாரத நாடெங்கும் தன் சீடர்களுடன் திக்விஜயம் செய்த போது காஷ்மீரத்தில்
சைவமும் (சிவ வழிபாடு) சாக்தமும் (சக்தி வழிபாடு) புத்துயிர் பெற பெரும் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
இடைப்பட்ட காலத்தில் காஷ்மீரத்தில் புத்த மதம் ஓங்கி இருந்திருக்கிறது. அவர்களை, ஆதிசங்கரர் சமய உரையாடல்கள்
வாத பிரதிவாதம் நிகழ்த்தி சனாதன தர்மத்தின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தி,
அவர் தம் மனங்களை வென்று ஹிந்துமதத்தை ஏற்கச் செய்துள்னார்.
அவருடைய இலக்கிய நயம் மிக்க இறைவனின் தெய்வீக அழகைப் பாடும் செனந்தரிய லஹரி என்ற நூலை
காஷ்மீரில் எழுதியதாகத் தெரிகிறது. இயற்கையின் அழகு மிளிரும் காஷ்மீரையே சங்கரர் அன்னையின் வடிவமாய் கண்டிருப்பாரோ?

காஸ்யப ரிஷி ஏழு ரிஷிகளுள் ஒருவர். காஷ்மீரம் என்ற பெயர் கச்யயமிர் அதாவது,
காச்யப முனிவர் ஏற்படுத்திய ஏரி அல்லது காச்யப மேரு காச்யபமலை என்பதன் மருவிய வடிவமாக இருக்க வேண்டும்.
வரலாற்று அறிஞர்களின், புராணங்களை படித்தவர்களின் கருத்து அலெக்சாண்டரின் படைகளின் பயண வரலாற்றைக் குறிப்பிடும்
கிரேக்க புத்தகம் பண்டைய காஷ்மீரை காஸ்பேரியா என்று பதிவு செய்திருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமானுஜரும் சீடர்கள் உடன் வர யாத்திரை, மேற்கொண்டு அன்னை சாரதையைத் தரிசனம் செய்தார்.
வேதாந்தத்திற்கு அவர் எழுதிய விளக்கவுரை (பாஷ்யம்) அன்னையின் சன்னதியில் சமர்ப்பித்து, அதன் ஏற்று அங்கீகரிக்குமாறு வேண்டினார்.
அன்னை மிகவும் மகிழ்ந்து இது சாதாரண விளக்கவுரை அல்ல, பாஷ்யங்களுள் உயர்வானது என்று பொருள்பட, ராமானுஜரின் படைப்பு
ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று அசரீரியாக ஒலித்து ஆசீர்வாதம் அளித்தாள்.

கர்நாடக சங்கீதத்தின் மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சரஸ்வதியைப் போற்றி எழுதிய பாடலில்
அன்னையை காஷ்மீரபுர வாஸினி (காஷ்மீரத்தில் வசிப்பவளே) என்று அழைக்கிறார்.

இன்றளவிலும், காஷ்மீரத்து மக்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், தங்கள் காலை பிரார்த்தனையில்
“நமஸ்தே சாரதா தேவி காஷ்மீர புரவாஸினி த்வாம் வரம் பிரார்த்தயே நித்யம் வித்யாதனம் ச தேஹிமே” என்று வேண்டுகிறார்கள்.
(பொருள் : சாரதே, தேவியே, காஷ்மீரத்தில் வாசம் செய்பவளே, யான் உன்னை தினமும் துதிக்கிறேன்,
அடியேனுக்கு ஞானச் செல்வத்தினை அளிப்பாய்)

புனித யாத்திரை

சாரதாபீடம் என்னும் இந்த சரஸ்வதி கோயிலுக்கு பாரத நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாமரர்கள் முதல் துறவிகள் வரை
பன்னெடுங்காலமாய் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ணியம் அடைந்துள்ளனர் என்று தெரிகிறது.
1947ல் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100 நாட்களுக்குள் பாகிஸ்தான் நயவஞ்சமாக போர்தொடுத்து
நம் ஜம்மு- காஷ்மீரின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டதால் சாரதா பீட யாத்திரை நின்று போயுள்ளது.
கோயிலும் பராமரிப்பின்றி பொலிவிழந்து உள்ளது. குறிப்பாக அக்டோபர் 2005ல் நிலநடுக்கத்தாலும் இந்த கோயில் சிதிலமடைந்தது.

சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் பிறந்த தால் வாண்டிக்கு வருடம்தோறும் புனித யாத்திரை மேற்கொள்ள பாக் அரசும்நம் அரசும்
ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.அதைப்போல சாரதா பீடத்திற்கும் யாத்ரிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த
சில ஆண்டுகளாகவே பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்களுள் ரவீந்திர பண்டிதர் என்பவரும் முக்கியமானவர் – அதுவும் சமீபத்தில் கர்தார்பூர் தடம் திறக்கப்பட்டு
சீக்கியர்கள் தால் வாண்டிக்கு சுலபமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டவுடன் சாரதா யாத்திரை கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது.

ராணுவ ரீதியிலும் நன்மை

சாரதா பீடம் அமைந்துள்ள பகுதி பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருந்தாலும், ஏற்கனவே நம்முடைய பாரத நாட்டின்
ராணுவம் இந்த பகுதியில் கவனம் செலுத்தி எப்பொழுது தேவையென்றாலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் உள்ளது.
நாம் மலையின் மேல் பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்தி உள்ளதால் எளிதில் எதிரியை சமாளிப்பது மட்டுமல்ல
வலு விழக்கச் செய்யக் கூடிய வசதியான நிலையில் இருப்பதாகவும் அந்த பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள
லெட் ஜெனரல் சய்யத் அல்ஹஸ்னின் கூறுகிறார். பாக். ராணுவம் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ளாது என்றாலும்
நாம் தொடர்ந்து யாத்திரைக்கு முயல வேண்டும் – பாக் அரசு மீது நிர்ப்பந்தங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார் இவர்.

சாரதா என்றால் சரஸ்வதி என்ற பொருள் உண்டு. சரஸ்வதியின் சிலை இருந்ததால் மட்டுமே அது சிறப்பு பெற்றுவிடவில்லை.
அந்த இடமே வேத பல்கலைக் கழகம் போன்று செயல்பட்டிருக்கிறது. எண்ணற்ற அறிவாளிகள் அங்கே இருந்திருக்கிறார்கள்.
அரிய பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள் அதுகுறித்து விவாதம் செய்திருக்கிறார்கள்.
அதனால்தான் அது அறிவின் தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
முதலில் சிறிய வழிபாட்டுத் தலமாகவும் இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரிய கோயிலாகவும் எழும்பியதாகச் சொல்லப்படும்
சாரதா பீடத்தில் வேதங்களும் 64 கலைகளும் குடிகொண்டு இருந்திருக்கிறது.

வேதமும் சங்கீதமும் கல்வியும் கற்றுத் தரப்பட்ட இந்த மையத்தில் சமஸ்கிருத மற்றும் காஷ்மீர சரஸ்வத் பண்டிதர்கள் தங்கியிருந்திருக்கிறார்கள்.
ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதிக்கு வருகை தந்த சீன பௌத்த துறவியான யுவாங் சுவாங் இந்த வேத பாடசாலை பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.

இந்த கோயிலுக்கு நான்கு திசைகளிலும் வாசல்கள் இருந்ததாகவும் வேதங்களை கற்று உணர்ந்தவர்கள் வந்தால் மட்டுமே
தெற்கு வாயிற் கதவுகள் திறக்கும் என்றும், ஜகத்குரு ஆதிசங்கரர் வருகை புரிந்த போது தானாக தெற்கு பக்கக் கதவு திறந்து
அவரை வரவேற்றது என்றும் சொல்லப்படுகிறது.

நமது எல்லைப் பகுதியில் இருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு முறையும் அன்னியர் படையெடுப்பின் போது இந்த ஸ்தலம் பாதிக்கப்பட்டது.
முதலில் 14ஆம் நூற்றாண்டில் அந்நிய அரசர்களால் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.

சுமார் 450 வருடங்களுக்கு பின் இந்த பகுதியின் முதல் இந்து மன்னரான டோக்ரா வம்சத்து குலாப் சிங் இந்தக் கோயிலின் பல பகுதிகளை சீர் செய்தார்.
ஷ்ரதா தேவியை முதன்மை தெய்வமாக வழிபடும் சரஸ்வத் பண்டிதர்களைக் கொண்டு வழிபாடுகள் நடந்தன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டபோது போரில் மீண்டும் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.
பின்னர் 1948இல் போர் முடிவுக்கு வந்த பின் ஸ்தலம் இருந்தப் பகுதியானது ஆப்கன் பழங்குடியினரான பாஷ்யன்களிடம் சென்றது.
அதன்பின் ஆசாத் காஷ்மீர் பகுதிக்கு போய்விட்டது. 2005 ல் ஏற்பட்ட பூகம்பத்தில் மிச்சமிருந்த இந்த கோயிலின் பெரும்பகுதியும் சேதமடைந்து விட்டது

சாரதா எழுத்து வரி வடிவம் – கலாச்சாரம்

தேவநாகரி எழுத்து வடிவம் போல சாரதா எழுத்து வடிவம் பொது ஆண்டு முன் 8ல் இருந்து 12 நூற்றாண்டு வரை பிரபலமாக இருந்ததாய் தெரிகிறது.
பிராம்மி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய பாரதத்தின் வடமேற்கு பகுதிகளில்
காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இன்றைய ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தாகத் தெரிகிறது.
சீக்கியர்கள் அதிகம் பயன்படுத்தும் குருமுகி சாரதா எழுத்திலிருந்ததாகத் தெரிகிறது.
சாரதா எழுத்து வடிவத்தை மீண்டும் உயிர்ப்பித்து பழைய நூல்கள் மொழி பெயர்த்து வெளி உலகிற்கு கொண்டு வந்தால்
புராதனமான சாரதா – காஷ்மீர் கலாச்சாரத்தை அதன் மாண்பை அனைவரும் போற்றுவர்.
சாரதா பீடத்தைக் காப்போம் (Save Saradha Committee) என்ற கோஷத்துடன் கர்நாடகாவில் ஒரு குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் 2018 செப்டம்பர் மாதம் இந்த கருத்தை வலியுறுத்தி இரண்டு நாட்கள் பெங்களூரில் மாநாடு நடத்தியுள்ளனர்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்ல காஷ்மீர் ஹிந்துவிற்கு விசா தேவையின்றி சுதந்திரமாக சென்று வர
பாக்.அரசை பாரத அரசு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
சாரதா பீட யாத்திரை ஆண்டிற்கு ஒரு முறையாவது நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாரதா பல்கலைக்கழகத்தை ஜம்மு-காஷ்மீரில் நிறுவுவோம்.
அன்னை சாரதையின் கலாச்சாரம் புத்துயிர் பெற்றுப் ஞானத்தின் ஒளி எங்கணும் பரவ வேண்டும் என்று நாமும் பிராத்திப்போம்.

——————————–

விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை ”பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன.
கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும்” என்று பழமையான இலக்கியத்தில் பாடப்பட்டிருக்கின்றதே..
பூவையும் நீரையும் பொருளாதாரமாகக்கொண்டு இயங்கும் ஒரே இந்திய ராஜ்யம் காஷ்மீரமாகத்தான் இருக்க முடியும். அடுக்கடுக்காக வானை மறைக்கும் தொழிற்கூடமோ, மூட்டை மூட்டையாக நிலத்தை மறைக்கும் விவசாயமோ ஏற்பட முடியாத அந்த இடத் தில், உல்லாசப் பயணிகளின் கையை எதிர்பார்த்தே மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.
காஷ்மீரி பிராஹ்மணன் கல்ஹணன் என்பவன் வரலாற்று உணர்வோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ தரங்கணி (Raja Tarangini by Kalhana) நூலை எழுதினான்
தமயந்தி, திரவுபதி, இந்துமதி ஸ்வயம்வரம் நிகழ்ச்சிகளுக்கு 56 தேச மன்னர்கள் வந்தார்கள் என்று படிக்கிறோம். காளிதாசன் தனது ரகு வம்சத்தில் பாண்டிய மன்னரும் இந்துமதி  ஸ்வயம்வரம் நிகழ்ச்சிக்கு வந்தார் என்று 4, 5 பாடல்களில் வருணிக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே , தமிழனையும் ,அகஸ்தியனையும் தொடர்புபடுத்தும் பாடல்கள் அவை.!

நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!

நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்

எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்

மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்

பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ

—————–

அமர்நாத் குகை–

இந்த புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன.

அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன. இந்நூல்கள் நீலமத புராணத்தை விட பழைமையானவை.

வரலாற்றுக் குறிப்புநூலான ராஜதரங்கிணி மற்றும் பல மேலைநாட்டு பிரயாணிகளின் குறிப்புகளில் அமர்நாத் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனால் இந்தத் தலத்தை மக்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தார்கள் என்பது விளங்குகிறது. இந்தத் தலத்தின் பழங்காலப் பெயர் அமரேஸ்வரா எனப்படும். அமர்நாத் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது.

ராஜதரங்கிணி பிரயாண வரலாற்றாளர் கல்ஹனா என்பவரால் 1148-49 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜதரங்கிணியில் ஸூஸ்ருவஸ் என்ற நாகத்தின் கதை சொல்லப்படுகிறது. அந்தண இளைஞர் ஒருவரை மணந்த தன் மகளை அபகரிக்க ராஜா முயல்கிறார். அந்த இளைஞர் ராஜாவையும் அவர் தேசத்தையும் சாம்பலாகச் சபிக்கிறார். அதிலிருந்து தப்புவதற்கு சேஷ்நாக் என்ற புனிதக் குளத்தில் (தற்போது காஷ்மீரில் சுஷ்ரம்நாக் என்று அறியப்படுகிறது) ஸூஸ்ருவஸ் அடைக்கலமானதாக அந்தக் கதை சொல்கிறது.

“பாற்கடலை ஒத்த, ஒளிரும் வெண்ணிற நீர்நிலை, நாகம் படைத்த மாயம், தூர மலையின் மட்டில் காண்போம் அமரேசர் யாத்திரையில்” – ராஜதரங்கிணி (அத். 1: பா. 267 – ஆங்கில மொழியாக்கம். M.A. Stein).

ராஜதரங்கிணியில் இன்னோர் இடத்தில் (அத். 2, பா. 138) அரசர் ஸம்திமத ஆர்யராஜா (காலம் கி.மு. 34–கி.பி. 17) “மிக இனிமையான காஷ்மீர கோடைநாட்களை” “காட்டிற்கு மேல் அமைந்த” பனிலிங்கத்தை வணங்குவதில் கழித்தார் என்று சொல்கிறது. இது அமர்நாத் கோவிலைப் பற்றிய குறிப்பே.

அந்த அரசரின் பட்டத்து ராணி, தன் கணவரின் பெயரால் அமரேஸ்வரர் கோயிலுக்கு அக்ரகாரங்களை அளித்ததும், திரிசூலம், பாணலிங்கங்கள் அளித்ததும் கலஹனரால் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிற்காலத்தில், ஜோனராசர் என்பவர் எழுதிய ஒரு வரலாற்றுக் குறிப்பில் சுல்தான் ஜைனுல்-அபிதீன் (1420-1470) லித்தர் நதியின் அருகே ஒரு கால்வாய் அமைத்தபோது அமர்நாத் கோவிலுக்கு விஜயம் செய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இக்கால்வாய் இன்று ஷாஹ் கோல் என்று அழைக்கப்படுகிறது.

பிராக்ஞபட்டர் மற்றும் சுகர் என்பவர்களால் எழுதப்பட்ட ராஜவளிபதகா என்ற இன்னொரு வடமொழிக் குறிப்பில், இந்த யாத்திரைக்கான அதிக விவரங்கள் கிடைக்கின்றன. அக்பர் ஆட்சியில் காஷமீரத்தின் கவர்னராக இருந்த காஷ்மீர்யூசுப்கான் அக்பருக்கு யாத்திரையை விளக்கிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. அந்த விவரங்களின்படி அக்பர் காலத்தில் இந்த யாத்திரை மிக பிரசித்தமாய் இருந்ததும், இந்தப் பனிலிங்கம் தேய்ந்து பின் வளரும் சிறப்பும் தெரிந்திருக்கின்றன என்பது விளங்குகிறது (அக்பர் காஷ்மீரைக் கைப்பற்றியது 1586ல்).

முகலாய மன்னர் ஷாஜகான் காலத்திலும் அமரேஸ்வரர் (அமர்நாத்) யாத்திரை மிகவும் புகழ்பெற்றிருந்தது. ஜகன்னாத பண்டிதராஜர் என்பவர் எழுதிய ஷாஜஹானின் மாமனார் அசிஃப் கான் புகழ்பாடும் ‘அசிஃப் விலாஸம்’ என்ற வடமொழி நூலில் அசிஃப் கான் நிர்மாணித்த நிஷத் என்கிற முகலாய தோட்டத்தின் வர்ணனையும் அமரேஸ்வரர் (அமர்நாத்) சிறப்பும் பேசப்படுகிறது. “தேவர்களின் தலைவன் இந்திரனே சிவபெருமானைத் தொழ அமரேஸ்வர் வருகிறான்” என்கிறது அசிஃப் விலாஸம்.

அமர்நாத் புனிதபூமி காஷ்மீர் மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ளதை சோதா வோனி முதலான பல காஷ்மீர நாடோடிக் கதைகள் நிரூபிக்கின்றன.

ஆகவே காஷ்மீரத்து அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்துக்களின் ஆன்மீகப் பாரம்பரியம். இது வெறும் 150 வருட காலக் கதை அல்ல.

காஷ்யப முனிவரின் பெயரால் காஷ்மீரம் என்று அழைக்கப் படும் இப் புனித பூமி

இந்தியாவின் தெற்கு பாகத்தில் ரத்னாகர் தம்பதியினர் நீண்ட நாட்களுக்கு குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அன்னை வைஷ்ணவா தேவி பிறந்தார்.  இக்குழந்தை பிறக்கும் முன் நாள் இரவன்று, இறைவனிடம் ரத்னாகர் ‘குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டேன்’ என்று வாக்களித்தார். குழந்தைப் பருவத்தில் அன்னை வைஷ்ணவா தேவி, ‘திரிகுட’ என அழைக்கப் பெற்றார்.

திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா இராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். இராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருகுடாவின் மேல் விழுந்தது.திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

ராமர் அவரிடம் இந்த தெய்வீகப் பிறப்பில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப் போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.

அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

திரிகுடா நவராத்திரியின் பொழுது இராமர் இராவணனை வெற்றி கொள்ள நோன்பு மேற்கொண்டார். இந்தத் தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சியுற்ற இராமர், அனைத்து உலகமும் திரிகுடா புகழைப் பாடுவார்கள் என வரமளித்தார். பிறகு அவர் பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என அழைக்கப்பெற்றார்.

ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். கோயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுமதி சீட்டு இல்லாமல் கோயிலின் நுழைவு வாயிலை யாரும் கடந்து செல்ல முடியாது. கோயில் பாதையில் புகையிலையிலான பொருட்கள், தீப்பெட்டி, கத்தி, எளிதில் எரியும் வேதியியல் பொருட்கள் கொண்டு செல்வதை கோயில் நிர்வாகம் தடை செய்துள்ளது.

மேலும் இக்கோயிலுக்கு பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் மலைக்கோயில் முழுவதும் 24 மணிநேரமும் கோயில் பாதுகாப்பு படையினர், மாநில, மத்திய அரசுகளின் காவல் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் இரும்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு உணர்வுடன் வைஷ்ணவ தேவி மலைக்கோயிலுக்கு பயணிக்கலாம்.

இந்த பாரத மண்ணில் தோன்றிய தத்துவங்களுக்கு ஒரு பெயர் உண்டு. சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்று பல பெயர்களில் பரந்துவிரிந்து இருந்தது. தத்துவங்களில், வழிபடும் கடவுள்களின் உருவங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தாலும், பெரிய அளவில் பிளவுபட்டிருந்தாலும் அதையெல்லாம் தனித்தனியாக கடைபிடித்துவந்த மக்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஒரே பண்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தார்கள். சைவத்தை கடைபிடிக்கிற மக்கள் வேறு இனம், வைணவத்தை கடைபிடிக்கிற மக்கள் வேறு இனம் என்ற இனவேறுபாடில்லாத மக்களாகவே இருந்தனர்.

கிறிஸ்தவம், இஸ்லாம் காஷ்மீருக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன் காஷ்மீரில் வாழ்ந்துவந்தவர்கள் இந்த தத்துவங்களை கடைபிடிக்கிறவர்கள்தான் வாழ்ந்து வந்தனர்.சிந்துசமவெளி நாகரிகத்தின் ஒரு அம்சமாக காஷ்மீரும் விளங்கி இருக்கிறது. அழகு தொட்டிலாக விளங்கும் காஷ்மீரின் இந்து வரலாறு மிகவும் பழமையானது. வேதங்களில் காஷ்மீரைப் பற்றி நிறையக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. மத்ரம், டுக்ரம் என்றெல்லாம் வேதங்கள் குறிப்பிடுவது காஷ்மீரத்தை பற்றியே. புராணங்களில் ‘த்வி கர்த்தம்’ என்ற பெயர் காஷ்மீரத்துக்கு வழங்குகிறது. இந்தச் சோல்லுக்கு ‘இரண்டு ஏரிகள் உள்ள பிரதேசம்’ என்று பொருளாம். மானசரோவரம், சரூஈசர் என்னும் இரு பெரிய ஏரிகள் இந்தப் பகுதி எல்லைக்குள் இருப்பதே இந்த பெயருக்கு காரணமாகும்.

கி.மு.500 முதற் கொண்டே கிரேக்க வரலாற்று பேரறிஞர்கள் ஹெகடாயிஸ், ஹெரடோடஸ், ப்டாலமி(Ptolomy) போன்றவர்கள் காஷ்மீரை அவர்களது குறிப்புகளில் காஸ்பாபைரல், காஸ்பத்ராஸ், காஸ்பீரியா என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள்.வியாச  முனிவரின் மகாபாரதத்திலும், காஷ்மீர் பற்றிய செய்தி வருகிறது. வடமொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி காஷ்மீரைப் பற்றி குறிப்பிடுகிறார். பாணினியின் இலக்கணத்திற்கு உரை செய்த பதஞ்சலி முனிவர் (யோகசூத்திரம் எழுதியவர்) காஷ்மீர்க்காரர் . இவர் திருமூலர், வியாக்ரபாதர் இவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்து தில்லையில் பல காலம் தங்கி இருந்து, தமிழ் நாட்டில் சமாதியானதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பத்மமிஹிரர், ஹேலராஜா, சாவில்லகாரா, சங்குஹா, கே்ஷமேந்திரா, கல்ஹணர் போன்ற காஷ்மீரப் பண்டிதர்கள் காஷ்மீரின் வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். எனினும் கிறிஸ்தவம், இஸ்லாம் காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன் இங்கு வாழ்ந்தவர்களைப் பற்றித் தெள்ளத்தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கி.பி.1180களில் வாழ்ந்த கல்ஹணர் என்ற காஷ்மீரத்து கவிஞர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ என்ற புத்தகம்தான். ராஜதரங்கிணி என்றால் அரசர்களின் ஆறு’ என்று பொருள். காஷ்மீரத்துத் தொன்மையான வரலாற்றை அறிய உதவும் பழமையான புத்தகம் இது. கி.பி.1148 முதல் 1150க்குள் எழுதப்பட்ட இந்தக் கவிதை வடிவிலான வரலாறு, காஷ்மீரைப் பற்றியும் இந்தியாவின் மற்ற பகுதிகளைப் பற்றியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், சமூக, பிற செய்திகளைத் தெரிவிக்கிறது. ராஜதரங்கிணி புத்தகத்தைப் பற்றி எச்.ஜி,ராலின்ஸன், ‘வரலாற்றுத் துறைக்கு இந்து இந்தியா அளித்துள்ள ஒரே காணிக்கை’ என்று கூறுகிறார்.

இந்த நூல்களில் எல்லாம் காஷ்மீரத்தின் இந்து ஆன்மிகப் பண்பாட்டுத் தன்மையையும், ஆதிகாஷ்மீரில் ஆட்சி செய்த இந்து அரசர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.உண்மையில் காஷ்மீர் முழுவதும் பெரும்பான்மையாக நாகர்களே ஆட்சி செய்து வந்தனர். காரணம் காஷ்மீர தேசத்தின் ஆதிகுடிகள் நாகர்களே. இன்றளவிலும் எழுநூறுக்கும் மேற்பட்ட ”நாகம்” (Naag) என்ற சோல்லோடு முடியக் கூடிய சிறிய, பெரிய ஏரிகள் உள்ளன. உதாரணம்:அனந்தநாக், சேஷநாக், ருத்ரநாக் , கோகர் நாக்,  போன்றவை.

காஷ்மீரில் ஆதியில் குடியேறியவர்கள் நாகர்களே என்ற குறிப்பு ‘‘அயினி-அக்பரி’’ என்ற நூலில் காணப்படுகிறது. காஷ்யப மகரிஷி நாக வம்சத்தை சேர்ந்தவர். காஷியபரின் மகன் நீலநாகன் இந்த பகுதியை அரசாண்டு வந்ததாகவும் புராணம் பகர்கிறது. காஷ்யப முனிவரின் மகனான நீலநாகரே ‘நீலமதபுராணம்’ எழுதியவர். நாகவம்சத்தின் துவக்கம் நீலநாகரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.

நாக வணக்கம் மிகப் பழைமையான வழிபாடுகளின்
ஒன்று. நீலநாகன் நாகபூஜைக்கு முக்கியத்துவம் அளித்துவந்தார். நாகபூஜை காஷ்மீரக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருந்து வந்தது. நாகர்கள் நாகபூஜை செய்துவந்தாலும் நாகத்தை சிவன்-பார்வதியின் அம்சமாகவே உருவகித்து வழிபட்டு வந்தனர். சைவத்தையே கடைபிடித்து வந்தனர். சமஸ்கிருதமே ஆட்சி மொழியாக இருந்து வந்தது.இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை.

இனி காஷ்மீரை அரசாண்டவர்கள் பற்றி ராஜதரங்கிணியில் சொல்லப்பட்ட வரலாற்றைப் பார்ப்போம்.

காஷ்மீரின் ஆதிவரலாறு (புராணக் கதை) கி.பி.1148 வரை கல்ஹணர் நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார். அதே ராஜதரங்கிணியை கி.பி.1148 முதல்  1420 வரையிலான வரலாற்றை ஜோனராஜா என்பவர் தொகுக்க 1420 முதல் 1486 வரையிலான வரலாற்று நிகழ்ச்சிகளை அவருடைய மாணவர் ஸ்ரீவரகவி என்பார் தொகுத்திருக்கிறார். அவருக்குப் பின்னர் ஆண்ட அக்பரின் வரலாற்றினை ராஜதரங்கிணியின் நீட்சியாக பிரஜா பட்டரும், சுகாவும் எழுதினார்கள்.

கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணியில் குறிப்பிட்டுள்ளபடி, முதலாம் கோநந்தன் காஷ்மீர் மன்னராக இருந்து ஆட்சி புரிந்துவந்தார். மதுரா அருகே யமுனை ஆற்றங்கரைப் பகுதியில் கிருஷ்ணருக்கும் ஜராசந்தனுக்கும் இடையே கடும்போர் நடைபெற்றபோது, ஜராசந்தனுக்கு அனுசரணையாகச் செயல்பட்டவர். போரில் முதலாம் கோநந்தன் இறந்தார்.

முதலாம் கோநந்தன் இறந்தபிறகு அவர் மகன் தாமோதர் மன்னராக பொறுப்பேற்றார். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க, கிருஷ்ணருக்கு எதிராக போர் தொடுத்தார். அவரும் கிருஷ்ணரால் இறந்தார்.போர்க்களத்தில் இறந்த தாமோதர் மன்னனுக்கு மகன் கிடையாது. ஆகவே, கிருஷ்ணரால் கர்ப்பிணியாய் இருந்த தாமோதர் மனைவி யசோவதி அரியணையில் அமர்த்தப் பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கோநந்தன் என்று அவருடைய தாத்தா பெயர் சூட்டப்பட்டது.
பின்பு இரண்டாம் கோநந்தன் என்ற பெயருடன் இவர் ஆட்சிபுரிந்தார். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டாம் கோநந்தர் கலந்துகொள்ளவில்லை.

இரண்டாம் கோநந்தரின் ஆட்சிக்கும் அசோகரின் ஆட்சிக்கும் இடையே 35 வேந்தர்கள் காஷ்மீரை ஆண்டிருக்கின்றனர். அவர்களுள் 23 மன்னர்கள், பாண்டவர்களின் வழித்தோன்றல்கள்.அர்ஜூனனின் பேரனும், பரீட்சித்தின் மகனுமான ஹரன்தேவ், காஷ்மீருக்குச் சென்று இரண்டாம் கோநந்தன் படையில் சேர்ந்தார். அவர் தமது திறமையால் படிப்படியாய் முன்னேறி, இரண்டாம் கோநந்தனின் மரணத்திற்குப் பிறகு காஷ்மீர் மன்னரானார்.

மகத மாமன்னர் அசோகர், காஷ்மீரை 250ஆம் ஆண்டு கைப்பற்றினார். காஷ்மீரில் ‘ஸ்ரீநகரி’ என்ற நகரை அவர் நிர்மாணித்தார். இந்த ஸ்ரீநகரிதான் தற்போதைய ‘ஸ்ரீநகர்’ என்று அழைக்கப்படுகிறது. அசோகர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அப்போது அவர் இசோகீஸ்வரலாயம்’ என்ற சிவன் கோயிலை கட்டுவித்தார் என்று சொல்லப்படுகிறது. (ஸ்ரீ என்றால் திரு (செல்வம்) என்று பொருள். ஸ்ரீநகர் சூரியநகர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஸ்ரீநகர் இரண்டாம் ப்ரவரசேனன் என்னும் மன்னனால் கி.மு.2000 வாக்கில் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் வந்த மௌரியப் பேரரசர் அசோகர் (245 BC) ஸ்ரீநகரை மேலும் விரிவுபடுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.)அசோகர் ஆட்சிக்காலத்தில் பௌத்தம் கோலோச்சியது. அவர் ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 5000 புத்தத் துறவிகள் காஷ்மீரில் குடியேறினார்கள்.

அசோகருக்குப் பிறகு அவருடைய மகன் ஜலோக் ஆட்சி செய்தார். இவர் சைவத்தை பரப்பும் மன்னராக இருந்துள்ளார்.

மூன்று நூற்றாண்டுகள் கழித்து துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட குஷான வம்ச மாமன்னர் கனிஷ்கர் காஷ்மீரை கைப்பற்றினார். அவர் புத்த சமயத்தின்மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் புத்த மத த்தைப் பரப்ப ஈடுபாடு காட்டினார். புத்தமதமே அரசின் மதம் என்று பறைசாற்றப்பட்டது

இவரது ஆட்சியில்தான்.ஹூண வம்சத்தினர் 515ல் காஷ்மீரைக் கைப்பற்றினர். ஹூண வம்சத்தைச் சேர்ந்த மெஹர்குல்லை, மகத மன்னர் பாலாதித்தர் போர்க்களத்தில் தோற்கடித்தார். ஆனாலும் அவரை மன்னித்து விடுதலை செய்தார். பின்னர் காஷ்மீரை மெஹர்குல் கைப்பற்றினார். கொடூர சிந்தனையுடைவராய் விளங்கிய மெஹர்குல்லை சைவ சமயம் வெற்றிகொண்டது. அதன்காரணமாக மெஹரேஸ்வராலயத்தை மெஹர்குல் நிர்மாணித்தார். பல்ஹாமிலுள்ள இக்கோயில், தற்போது மாமலேஸ்வராலயம் என்று அழைக்கப்படுகிறது.இவருக்குப்பிறகு காஷ்மீரின் ஆட்சி இந்துக்களின் வசமே இருந்துவந்தது.

தம் அமைச்சரான பிரதாப்தித்தரை, விக்கிரமாதித்தர் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார். காஷ்மீரின் நிர்வாகத்தை பிரதாப்தித்தர் திறமையாக நிர்வகித்து வந்தார்.அவருக்குப் பிறகு மேகவாகனன் அரியணை ஏறினார். இவர் புத்த சமயம் பரப்புவதில் அதீத ஈடுபாடு காட்டினார். ஆனால் பிற மதத்தினரை வெறுக்கவில்லை. விலங்குகளைக் கொல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். ஜீவகாருண்யத்தின் சிறப்பை தம் ஆட்சியில் பரப்பினார்.

மேகவானனின் மனைவி அமிர்தப் பிரபா, அஸ்ஸாம் மன்னரின் மகள் ஆவார். அப்போது அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் வைணவம் பிரபலமாக இருந்து வந்தது. அமிர்தப்பிரபாவின் முயற்சியால் காஷ்மீரில் வைணவம் பரவ ஆரம்பித்தது. ஆனாலும் அவர் புத்த சமயத்திற்கு யுகாங்விஹார் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அதற்கான கொடிமரத்தை மேகவாகனிடம் இலங்கை மன்னர் நன்கொடையாய் அளித்தார்.

மேகவாகனின் காலத்திற்குப் பிறகு கார்கோட வம்சத்தினர் 254 ஆண்டுகள் காஷ்மீரை ஆட்சி செய்தனர். கார்கோட வம்சத்தை நிறுவியவர் துர்லபவர்த்தன் என்பவர். 631ல் காஷ்மீருக்கு வந்திருந்த யுவான்சுவாங்க காஷ்மீரில் தங்கியிருந்தபோது துர்லபவர்த்தனின் ஆட்சித்திறம்பற்றி குறிப்பிட்டுள்ளார். துர்லபவர்த்தன் மாமன்னர் ஹர்ஹரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்துவந்தார்.

கார்கோட வம்சத்தின் (கார்கோட வம்சம் நாகவம்சத்தின் ஒரு பிரிவுதான்) முக்கியமான, புகழ்பெற்ற மன்னர் சந்திரபீடர். இவர் சீனாவுடன் நட்பில் இருந்துவந்தார். அப்போது படையெடுத்துவந்த அரேபியர்களை சீனாவின் உதவியோடு விரட்டியடித்தார். சந்திரபீடரின் மனைவி பிரகாஷ்தேவி. எல்லா மதத்தின்மேலும் பற்று உள்ளவர்கள் இவர்கள். இவர்களுடைய ஆட்சி எப்படி ஜனநாயகமாக இருந்தது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியே உதாரணம்.

1003 முதல் 1028வரை காஷ்மீரை ஆண்டார் மன்னர் சங்கிரம் ராஜ். ஈரான், துருக்கி மீது படையெடுத்து வெற்றிவாகை சூடினார். இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் முகமது கஜினி காஷ்மீர் மீது படையெடுத்தான். இருமுறை படையெடுத்தும் வெற்றிபெற முடியவில்லை.

சங்கிரம் ராஜுக்குப் பிறகு அவருடைய மகன் ஹர்ஷ் அரசரானார். இவர் ஒரு கவிஞர்.இவருக்குப் பிறகு 1128 முதல் 1140ஆம் ஆண்டுவரை காஷ்மீரை மன்னர் ஜெய்சிங் ஆண்டார். ஜெய்சிங்குக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராகப் பலர் காஷ்மீரை ஆண்டபோதும் யாருடைய ஆட்சியும் நீடித்து நிலைக்கவில்லை. 1301ஆம் ஆண்டில் சக்தேவ் என்ற மன்னர் அரியணையில் ஏறினார். திபெத்திய அகதியான ரின்சானாவை ஆதரித்து முக்கியப் பதவி தந்தார். துல்சூ என்ற கொள்ளைக்காரன் காஷ்மீரைத் தாக்கியதும் சக்தேவ் தலைமறைவாகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினார் ராமச்சந்திரா. இவர் சக்தேவ் மன்னரின் தளபதியாவார். விவேகம் இல்லாத இந்த அரசனை திபெத்திய அகதியான ரின்சானானின் ஆட்கள் சதிசெய்து கொன்றனர்.

ராமச்சந்திராவின் மகள் கோதராணியை ரின்சானா மணந்து கொண்டார். கோதராணியின் விருப்பப்படி ரின்சானா இந்து மதத்தை தழுவினார்.புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய ரின்சானாவை பிராமணர்கள் ஏற்க மறுத்தனர். அதனால் வெறுப்புற்ற ரின்சானா, திடீரென முஸ்லீமாக மாறிவிட்டார். தமது பெயரையும் மாலிக் சத்ருதீன் என்று அவர் மாற்றிக்கொண்டார். மாலிக் சத்ருதீன்தான் காஷ்மீரின் முதல் முஸ்லீம் மன்னர் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.

உதயண்தேவ் உடனான போரில் படுகாயமடைந்த ரின்சானா தம் மனைவி கோதராணியையும் மகன் ஹைதரையும் மந்திரி ஷாமீரிடம் ஒப்படைத்து பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் 1320ல் மரணமடைந்தார்.படையெடுத்துவந்த உதயண்தேவை கோதராணி மணந்து கொண்டார். கோதராணியின் சொற்படியே அப்போது ஆட்சி நடைபெற்றது. இதற்கிடையில் பெர்ஷியாவைச் சேர்ந்த சர்தார் அச்லா காஷ்மீரை முற்றுகையிட்டார். உதயண்தேவ் திபெத்திற்கு ஓடிவிட்டார். இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை கோதராணி. படைபலத்தில் குறைவாக இருந்தாலும் கோதராணியின் வியூகத்தால் அச்லா தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும் அச்லா விடுவதாயில்லை. அதனால் கோதராணி அவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து தலையை வெட்டி வீழ்த்தினார்.

திபெத்திற்கு ஓடிப்போன உதயண்தேவ் மறுபடியும் வந்து சேர்ந்து கொண்டார். அவரை ஓரம் கட்டியே வைத்திருந்தார் கோதராணி.ஆட்சிக்குள்ளேயே கோதராணிக்கு துரோகிகள் முளைத்து விட்டிருந்தார்கள். சில ராணுவ அதிகாரிகள் திடீரென தாக்குதல் நடத்தி கோதராணியை கைது செய்து சிறைபடுத்தினர். சிறையிலிருந்து அமைச்சர் குமார்பத் உதவியினால் தப்பினார். மீண்டும் அரியணையேறிய கோதராணி முக்கியப் பதவிகளை குமார்பத்திடம் ஒப்படைத்தார்.

கோதராணிக்கு விசுவாசமாக இருப்பதாக நடித்துக்கொண்டிருந்த ஷாமீர், ஆட்சியைக் கைப்பற்ற சமயம் எதிர்பார்த்திருந்தார்.1338ல் உதயண்தேவ் மரணமடைந்த காரணத்தால் மூத்த மந்திரியான பிக்ஷன்பத் பிரதமரானார். லாவண்யர் என்ற தம் ஆதரவாளரை அமைச்சராக்கினார் கோதராணி. காலம் செல்லச் செல்ல ஷாமீர் ஓரங்கட்டப்பட்டார். இதனால் பிக்ஷன்பத் மேல் கடுங்கோபம் கொண்ட ஷாமீர் அவரைத் தீர்த்துக்கட்ட திட்டம்போட்டு நயவஞ்சகமாக கொன்றான். ஷாமீரின் கை ஓங்கியது. கோதராணி அவனை கொல்ல முயற்சி செய்து முடியாதபோது தம் குறுவாளால் தம்மையே மாய்த்துக் கொண்டார் கோதராணி.

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம்–ஸ்ரீ தில்லை விளாகம் ராமர்–ஸ்ரீ சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்–ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர் —

January 15, 2023

ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமன்த்ரஸ்ய
பு³த⁴கௌஶிக ருஷி:
ஶ்ரீ ஸீதாராம சன்த்³ரோதே³வதா
அனுஷ்டுப் ச²ன்த:³
ஸீதா ஶக்தி:
ஶ்ரீமத்³ ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசன்த்³ர ப்ரீத்யர்தே² ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோக:³ ॥

த்⁴யானம்
த்⁴யாயேதா³ஜானுபா³ஹும் த்⁴ருதஶர த⁴னுஷம் ப³த்³த⁴ பத்³மாஸனஸ்த²ம்
பீதம் வாஸோவஸானம் நவகமல த³ல்த³ஸ்பர்தி² நேத்ரம் ப்ரஸன்னம் ।
வாமாங்காரூட⁴ ஸீதாமுக² கமலமிலல்லோசனம் நீரதா³ப⁴ம்
நானாலங்கார தீ³ப்தம் த³த⁴தமுரு ஜடாமண்ட³லம் ராமசன்த்³ரம் ॥

(மஞ்சள் ஆடை உடுத்தி வில்லும் அம்பும் தாங்கி பத்மாசனத்தில் கருணை பொங்கும் கடாக்ஷங்களுடன்
அடர்ந்து படர்ந்த விரிந்த கூந்தலுடன் ஆஜானுபாஹுவாய் வீற்று இருந்து அருளும் பெருமாளையும்
இடது பக்கத்தில் மேகவண்ண திவ்ய மங்கள விகிரகத்துடன் தெய்விக அணிகலன் பூஷிதமாய்
தாமரை திருமுகத்துடன் இருந்து அருளும்
பிராட்டியையும் நமஸ்கரிக்கிறேன்)

ஸ்தோத்ரம்
சரிதம் ரகு⁴னாத²ஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம் ।
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாஶனம் ॥ 1 ॥

(பெருமாள் சரித்திரத்தையும் அழகையும் விவரிக்க நூறு கோடி வார்த்தைகளாலும் இயலாது
விஸ்தாரமாக ஸத்ய லோகத்தில் ஸ்ரீ ராமாயணம் உண்டே
இங்கு அவற்றுள் ஒரு பதம் -ஒரு எழுத்தே அனைத்து சம்சார பாபங்களையும் ஒழிக்கும் அன்றோ)

த்⁴யாத்வா நீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம் ।
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டி³தம் ॥ 2 ॥

ஸாஸிதூண த⁴னுர்பா³ண பாணிம் நக்தம் சரான்தகம் ।
ஸ்வலீலயா ஜக³த்த்ராது மாவிர்பூ⁴தமஜம் விபு⁴ம் ॥ 3 ॥

ராமரக்ஷாம் படே²த்ப்ராஜ்ஞ: பாபக்⁴னீம் ஸர்வகாமதா³ம் ।
ஶிரோ மே ராக⁴வ: பாது பா²லம் (பா⁴லம்) த³ஶரதா²த்மஜ: ॥ 4 ॥

(நீலோத் பலம் -நீல நிற அல்லிப்பூ நிறத்தவன்-புண்டரீகாக்ஷன் -திரு அபிஷேகம் சாத்தி அருளி –
திருக்கரங்களில் கத்தி வில் அம்பு ஏந்தி அருளி துஷ்ட நிரசனத்துக்காக திரு அவதாரம் செய்து அருளி
லோக ரக்ஷணம் செய்து அருளும் கருணா மூர்த்தியான பெருமாளையும் சீதாப்பிராட்டியார் இலக்குமணன் உடன் இருக்கும் சேர்த்தியை
த்யானம் செய்து இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் பாராயணம் செய்து
ஸர்வ அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி சித்திகளைப் பெறுவோம்
பெருமாள் -சக்ரவர்த்தி திருமகன் -தலையையும் நெற்றியையும் காக்கட்டும்)

கௌஸல்யேயோ த்³ருஶௌபாது விஶ்வாமித்ரப்ரிய: ஶ்ருதீ ।
க்⁴ராணம் பாது மக²த்ராதா முக²ம் ஸௌமித்ரிவத்ஸல: ॥ 5 ॥

(கௌசல்யை குமரன் கண்களைக் காக்கட்டும் –
விச்வாமித்ர ரிஷி பிரியமான சிஷ்யன் காதுகளைக் காக்கட்டும்
யஜ்ஜ்ங்களை ரக்ஷிக்கும் பெருமாள் மூக்கினைக் காக்கட்டும்
சுமித்ரா தேவி குமாரனை நேசிக்கும் பெருமாள் முகத்தைக் காக்கட்டும்)

ஜிஹ்வாம் வித்³யானிதி⁴: பாது கண்ட²ம் ப⁴ரதவன்தி³த: ।
ஸ்கன்தௌ⁴ தி³வ்யாயுத:⁴ பாது பு⁴ஜௌ ப⁴க்³னேஶகார்முக: ॥ 6 ॥

(அறிவின் புதையல் என் நாக்கினையும்
பரதாழ்வானால் ஆஸ்ரயிக்கப்படும் பெருமாள் தொண்டையினையும்
தெய்வீக திவ்ய ஆயுதங்களைத் தாங்கியவர் தோள்களையும்
சிவ தனுஸ்ஸை உடைத்தவர் கரங்களையும் காக்கட்டும்)

கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருத³யம் ஜாமத³க்³ன்யஜித் ।
மத்⁴யம் பாது க²ரத்⁴வம்ஸீ நாபி⁴ம் ஜாம்ப³வதா³ஶ்ரய: ॥ 7 ॥

(சீதா தேவியின் பதி என் கைகளையும்
பரசுராமரை வெற்றி கொண்டவர் என் ஹ்ருதயத்தையும்
கரணை நிரசித்தவர் என் மத்ய பாகத்தையும்
ஜாம்பவானுக்குப் புகலிடம் அளித்த பெருமாள் என் தொப்புள் கொடியையும் காக்கட்டும்)

ஸுக்³ரீவேஶ: கடிம் பாது ஸக்தி²னீ ஹனுமத்-ப்ரபு⁴: ।
ஊரூ ரகூ⁴த்தம: பாது ரக்ஷ:குல வினாஶக்ருத் ॥ 8 ॥

(சுக்ரீவனின் தலைவன் என் இடுப்பையும்
திருவடி ஹ்ருதய வாஸம் செய்து அருளும் பெருமாள் என் சக்தினியையும் -அதாவது -வலது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும்
ரகு வம்ச சிறந்த அரசர் இடது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும் காக்கட்டும்)

ஜானுனீ ஸேதுக்ருத்-பாது ஜங்கே⁴ த³ஶமுகா²ன்தக: ।
பாதௌ³ விபீ⁴ஷணஶ்ரீத:³ பாது ராமோகி²லம் வபு: ॥ 9 ॥

(சேது காட்டியவர் என் முழங்கால்களையும்
ராவணனை அழித்தவர் தொடைகளையும்
செல்வ விபீஷணனுக்கு அனைத்தையும் அளித்தவர் என் பாதங்களையும் மற்றும் உடம்பையும் காக்கட்டும்)

ஏதாம் ராமப³லோபேதாம் ரக்ஷாம் ய: ஸுக்ருதீ படே²த் ।
ஸ சிராயு: ஸுகீ² புத்ரீ விஜயீ வினயீ ப⁴வேத் ॥ 10 ॥

(சாத்விகர்கள் இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரத்தை நித்தியமாக பாராயணம் செய்வர்-சாத்விக கொண்ட பெண்டிர் மக்களுடன்
அவர்கள் விநயத்துடன் இங்கும் லீலா விபூதியை ஆண்டும் அங்குச் சென்றும் நித்ய கைங்கர்யசெல்வம் பெறுவர் )

பாதால்த-³பூ⁴தல-வ்யோம-சாரிண-ஶ்சத்³ம-சாரிண: ।
ந த்³ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபி⁴: ॥ 11 ॥

(இத்தைப் பாராயணம் செய்பவர் மூ உலக அதிபதியான இந்திரனும் நிமிர்ந்து பார்க்க முடியாது
புண்ணிய சக்தி வாய்ந்த மந்த்ரம் இது)

ராமேதி ராமப⁴த்³ரேதி ராமசன்த்³ரேதி வா ஸ்மரன் ।
நரோ ந லிப்யதே பாபைர்பு⁴க்திம் முக்திம் ச வின்த³தி ॥ 12 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை பாப்பம் தீண்டாது
இங்கும் மகிழ்வுடன் வாழ்ந்து அங்கும் பரம புருஷார்த்த கைங்கர்யம் பெறுவர்)

ஜகஜ³்ஜைத்ரைக மன்த்ரேண ராமனாம்னாபி⁴ ரக்ஷிதம் ।
ய: கண்டே² தா⁴ரயேத்தஸ்ய கரஸ்தா²: ஸர்வஸித்³த⁴ய: ॥ 13 ॥

(இத்தை மனப்பாடமாக வைத்து பாராயணம் செய்பவர்கள் அனைத்து வெற்றிகளையும் அடைவார்கள்
ஸமஸ்த அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக ஸமஸ்த இஷ்ட பிராப்தியும் பெறுவர்)

வஜ்ரபஞ்ஜர நாமேத³ம் யோ ராமகவசம் ஸ்மரேத் ।
அவ்யாஹதாஜ்ஞ: ஸர்வத்ர லப⁴தே ஜயமங்க³ல்த³ம் ॥ 14 ॥

(இந்திர வஜ்ராயுதத்துக்கும் மேலான இந்த வஜ்ரா ராம கவசம் அனைத்து அபீஷ்டங்களையும் அருளும்
ஸகல வித புண்யமும் ஐயமும் அடைவிக்கும்(

ஆதி³ஷ்டவான்-யதா² ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர: ।
ததா² லிகி²தவான்-ப்ராத: ப்ரபு³த்³தௌ⁴ பு³த⁴கௌஶிக: ॥ 15 ॥

(பவித்ரமான இந்த கவசம் சிவபெருமானால் புத கௌசிக முனிவருக்கு கனவில் உபதேசிக்கப்பட்டு
உரைத்த படியே அவரால் ஈடுபடுத்தப்பட்ட ஸ்லோகம்)

ஆராம: கல்பவ்ருக்ஷாணாம் விராம: ஸகலாபதா³ம் ।
அபி⁴ராம-ஸ்த்ரிலோகானாம் ராம: ஶ்ரீமான் ஸ ந: ப்ரபு⁴: ॥ 16 ॥

(நம்மையும் பொருளாக்கி தன்னையே தந்து அருளும் கற்பகம் ராமபிரான்
ஈடில்லா அழகன் -ஒப்பில்லா அப்பன் -ஸர்வ சேஷீ)

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாப³லௌ ।
புண்ட³ரீக விஶாலாக்ஷௌ சீரக்ருஷ்ணாஜினாம்ப³ரௌ ॥ 17 ॥

ப²லமூலாஶினௌ தா³ன்தௌ தாபஸௌ ப்³ரஹ்மசாரிணௌ ।
புத்ரௌ த³ஶரத²ஸ்யைதௌ ப்⁴ராதரௌ ராமலக்ஷ்மணௌ ॥ 18 ॥

ஶரண்யௌ ஸர்வஸத்த்வானாம் ஶ்ரேஷ்டௌ² ஸர்வத⁴னுஷ்மதாம் ।
ரக்ஷ:குல நிஹன்தாரௌ த்ராயேதாம் நோ ரகூ⁴த்தமௌ ॥ 19 ॥

(பெருமாள் அலகுக்குத் தோற்று சூர்ப்பணகை ஸ்தோத்ரம் -)

(வாலிப பருவம் -அழகியான் தானே -புண்டரீகாக்ஷன் -மான் தோல் மரவுரி தரித்தவர்
காய்கனி புஜிப்பவர் -ப்ரஹ்மசாரியம் அனுஷ்டிப்பவர் -அனைவருக்கும் ஒரே புகலிடம்
அசுரர் குலங்களை வெட்டிக்களைந்தவர்
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -இவர்கள் நம்மை ரக்ஷிக்கட்டும்)

ஆத்த ஸஜ்ய த⁴னுஷா விஷுஸ்ப்ருஶா வக்ஷயாஶுக³ நிஷங்க³ ஸங்கி³னௌ ।
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்³ரத: பதி² ஸதை³வ க³ச்ச²தாம் ॥ 2௦ ॥

(அமோக வில் -அம்புறாத் துணியில் எடுக்க எடுக்க குறைவற்ற பாணங்களால் நிரம்பியே இருக்கும்
இருவரும் நம் முன்னால் இருந்து ரக்ஷித்து அருளட்டும்(

ஸன்னத்³த:⁴ கவசீ க²ட்³கீ³ சாபபா³ணத⁴ரோ யுவா ।
க³ச்ச²ன் மனோரதா²ன்னஶ்ச (மனோரதோ²ஸ்மாகம்) ராம: பாது ஸ லக்ஷ்மண: ॥ 21 ॥

ராமோ தா³ஶரதி² ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ ப³லீ ।
காகுத்ஸ: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூ⁴த்தம: ॥ 22 ॥

9எப்போதும் தயார் நிலையில் இருந்து -கவசம் அணிந்து திருக்கைகளிலே கத்தி வில் அம்பு ஏந்தி
நமக்கு முன்னால் இருந்து அனைத்து அபீஷ்டங்களையும் அளித்து ரக்ஷிக்கட்டும்)

வேதா³ன்தவேத்³யோ யஜ்ஞேஶ: புராண புருஷோத்தம: ।
ஜானகீவல்லப:⁴ ஶ்ரீமானப்ரமேய பராக்ரம: ॥ 23 ॥

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்³ப⁴க்த: ஶ்ரத்³த⁴யான்வித: ।
அஶ்வமேதா⁴தி⁴கம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்ஶய: ॥ 24 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் அஸ்வமேத யாகத்தை விட பன்மடங்கு ஸ்ரேஷ்டம்-இதில் எவ்வித சங்கையும் வேண்டாம் )

ராமம் தூ³ர்வாத³ல்த³ ஶ்யாமம் பத்³மாக்ஷம் பீதவாஸஸம் ।
ஸ்துவன்தி நாபி⁴-ர்தி³வ்யை-ர்னதே ஸம்ஸாரிணோ நரா: ॥ 25 ॥

(இவ்வுலக பந்த விடுதலையும் அடைவிக்கும்(

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகு⁴வரம் ஸீதாபதிம் ஸுன்த³ரம்
காகுத்ஸ்த²ம் கருணார்ணவம் கு³ணனிதி⁴ம் விப்ரப்ரியம் தா⁴ர்மிகம் ।
ராஜேன்த்³ரம் ஸத்யஸன்த⁴ம் த³ஶரத²தனயம் ஶ்யாமலம் ஶான்தமூர்திம்
வன்தே³ லோகாபி⁴ராமம் ரகு⁴குல திலகம் ராக⁴வம் ராவணாரிம் ॥ 26 ॥

ராமாய ராமப⁴த்³ராய ராமசன்த்³ராய வேத⁴ஸே ।
ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா: பதயே நம: ॥ 27 ॥

ஶ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம
ஶ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம ।
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் ப⁴வ ராம ராம ॥ 28 ॥

ஶ்ரீராம சன்த்³ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ வசஸா க்³ருஹ்ணாமி ।
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶிரஸா நமாமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 29 ॥

மாதா ராமோ மத்-பிதா ராமசன்த்³ர:
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா² ராமசன்த்³ர: ।
ஸர்வஸ்வம் மே ராமசன்த்³ரோ த³யால்து³:
நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே ॥ 3௦ ॥

த³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச (து) ஜனகாத்மஜா ।
புரதோ மாருதிர்யஸ்ய தம் வன்தே³ ரகு⁴னந்த³னம் ॥ 31 ॥

லோகாபி⁴ராமம் ரணரங்க³தீ⁴ரம்
ராஜீவனேத்ரம் ரகு⁴வம்ஶனாத²ம் ।
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசன்த்³ரம் ஶரண்யம் ப்ரபத்³யே ॥ 32 ॥

மனோஜவம் மாருத துல்ய வேக³ம்
ஜிதேன்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்டம் ।
வாதாத்மஜம் வானரயூத² முக்²யம்
ஶ்ரீராமதூ³தம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 33 ॥

கூஜன்தம் ராமராமேதி மது⁴ரம் மது⁴ராக்ஷரம் ।
ஆருஹ்யகவிதா ஶாகா²ம் வன்தே³ வால்மீகி கோகிலம் ॥ 34 ॥

ஆபதா³மபஹர்தாரம் தா³தாரம் ஸர்வஸம்பதா³ம் ।
லோகாபி⁴ராமம் ஶ்ரீராமம் பூ⁴யோபூ⁴யோ நமாம்யஹம் ॥ 35 ॥

ப⁴ர்ஜனம் ப⁴வபீ³ஜானாமர்ஜனம் ஸுக²ஸம்பதா³ம் ।
தர்ஜனம் யமதூ³தானாம் ராம ராமேதி க³ர்ஜனம் ॥ 36 ॥

ராமோ ராஜமணி: ஸதா³ விஜயதே ராமம் ரமேஶம் பஜ⁴ே
ராமேணாபி⁴ஹதா நிஶாசரசமூ ராமாய தஸ்மை நம: ।
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தா³ஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலய: ஸதா³ ப⁴வது மே போ⁴ ராம மாமுத்³த⁴ர ॥ 37 ॥

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ।
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம நாம வரானநே ॥ 38 ॥

இதி ஶ்ரீபு³த⁴கௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

———-

ஶ்ரீராம ஜயராம ஜயஜயராம ।

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் – மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு “ஆதி தில்லை” என்றும் பெயருண்டு.

“ராம சரம்” என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் “தில்லை சித்ரகூடம்” என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

“எம்பார்” கோவிந்த தாசர், இராமனுஜருடைய “திருவடி நிழல்”(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். “சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை”, “மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை”ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று

சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்

இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது.

மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.
விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான்.ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார்.
அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.

வராஹ நரசிம்மரின் கட்டளைப்படி இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.

மற்ற நாட்களில் சந்தனகாப்பிட்ட தரிசனம் தான்.

சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா?
வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள்.

எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ராமானுஜர் ஸ்ரீ கூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசலமான இம்மலையை அடைந்தார்.

விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோயில் இது.
இங்கு கோயில் கொண்டிருக்கும் வராக நரசிம்மர், பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரஹலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.

பிரஹலாதன் பெருமாள் காத்தருளிய அந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம்.

பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள்.

வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருவதென்று தெரியவில்லை.

ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.

சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனமளித்ததாக தலபுராணம் கூறுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

————-
ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர்
மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி.
இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று.
ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது.
மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன.
ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில்.
இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.
மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும்.
இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.
இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான்.
அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான்.
அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான்.
அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர்.
அவனும் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான்.
அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான்.
ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான்.
திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.
மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு,
ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு,
மங்களகிரியில் பானகம் அருந்தி,
திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு,
ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.
திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம்.
சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு.
அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்
மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது
தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி
அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை
ஸப்த  குல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில்
நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது.
ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன.
வேத புராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.
இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட
பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று
பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான்.
அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி,
மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.
மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற,
அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.
இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற,
அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.
கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில்
சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது,
அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின.
இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன்,
எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.
இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட,
திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார்.
அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு
குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக,
பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது.
இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க,
பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க,
நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு,
அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார்.
அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.
அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர்
திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும்,
நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம்.
மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும்,
தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர்.
சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.
ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார்.
புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய,
அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது.
வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில்
மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.
வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள்.
இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும்,
ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது.
இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம்.
இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர்,
சங்கு – சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய்
அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார்.
இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.
ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும்.
இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.
அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும்.
அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் “மடக் மடக்” என பருகும் சத்தம் கேட்கும்.
சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும்.
இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல.
தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ
அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில்
அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர்.
பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற,
இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது.
பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது. தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர்.
பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.
அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது.
தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம்.
மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு,
இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம்
வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க,
மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.
அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால்,
ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர்
நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார்.
ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது.
ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று
ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில்
இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார்.
இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார்.
இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது.
இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது
கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.
இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.
குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது
தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான்.
அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து,
மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை.
மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.
ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு
குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால்,
நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம்.
உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு,
இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன்,
நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில்
பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை.
பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.
கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில்,
ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.
லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார்.
தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன.
இக் கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது.
முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த
இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.
லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில்
பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும்,
கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள்.
இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது.
தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார்.
மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.
இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர்.
இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.
கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும்,
பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர்.
போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர்
கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.
மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது.
பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும்,
மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம்,
நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும்,
பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது.
இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.

——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத சக்ரவர்த்தி திருமகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பானக லஷ்மீ நரஸிம்ஹர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸிம்ஹாஸல லஷ்மீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பஞ்ச நாராயண -ஸ்ரீ ரெங்க -ஸ்ரீ ராம -ஸ்ரீ க்ருஷ்ண -ஸ்ரீ நரஸிம்ஹ ஷேத்ரங்கள்

December 23, 2022

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :

ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில்
எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டி தேவன் என்கிற விஷ்ணு வர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.

கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்–
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்
தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி ,
கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத் பரர் ஆகையால்,
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத் பரத்தையே இவர் கைவேல்.
திரு மந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு
ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.
கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது
முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார் மேனி நாராயணன் –
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவது போல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் –
என்றது செவ்வரி யோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.
மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும்
இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.

———-

பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன திருக் காவேரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின்  கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்- ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும் 

ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒன்று கர்நாடகாவிலும் மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் உள்ளன.

ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு)

ஆதிரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம்

காவிரிநதியின் முதல் தீவு கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உருவாகிறது.
இங்கு அரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது.
எனவே இது ஆதிரங்கம் எனப்படுகிறது
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது

அரங்கநாதசுவாமி கோவில். சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார்.
பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார்.
பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார்.

இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் சிவசமுத்திரம் ஆகும்.
இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவில் மத்தியரங்கம் என்று ஒரு சிலரால் அழைக்கப்படுகிறது.

மத்தியரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

அரங்கநாதசுவாமி

தமிழ்நாட்டில் காவிரி நதி திருச்சிராப்பள்ளி அருகே மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும்.
இது மத்தியரங்கம் என்று பெயர் பெறுகிறது
சிலர் இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் காவேரிக் கரையில் அமைந்த, பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்று.

ஸ்ரீரங்கம் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம்.
இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்.

அப்பாலரங்கம்

அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்ளில் அப்பாலரங்கம் என்று சொல்லப்படும்
திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் இரண்டாகப் பிரியுமிடத்தில்
இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில்,
கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை சென்று அங்கிருந்து கோவிலடி செல்லவேண்டும்.

இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.
உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று.
இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும்,
உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.
தாயாரின் திருப்பெயர்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி என்பனவாகும்.

சதுர்த்தரங்கம்

சாரங்கபாணி கோவில்,கும்பகோணம்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் (உபய பிரதான திவ்யதேசம்) ஒன்றாகவும்,
பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில்,
காவிரி நதி – காவிரி, அரசலாறு என்று – இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது.
தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன.
பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார்.
எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார்
இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது.
வேத சக்ர விமானத்தின் கீழ் பரிமள ரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் சந்நிதியின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பரிமள ரங்கநாதர் திருவடிகளில் யமதர்ம ராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாயாரின் திருப் பெயர் பரிமள ரங்கநாயகி ஆகும்.
சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் திரு இந்தளூர் எனப் பெயர் பெற்றது.

————

பஞ்ச சயன ரங்கம்

“பஞ்ச“  என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள். 

இந்த “பஞ்ச“  என்ற ஐந்தின் சிறப்பினை நாம் பஞ்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்.

பஞ்ச நிலைகள் ..பகவான் பரம், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி  என்று ஐந்து நிலைகளில் அர்ச்சிக்கப்படுபவன்.

பாஞ்சராத்ரம்..பகவானை ஆராதிக்கும் ஒரு வழிமுறை.  ஐந்து ராத்ரிகளில் ஐந்து முனிவர்களுக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஒரு சிறந்த வழிப்பாட்டு முறை.

பஞ்ச சம்ஸ்காரம்,இது ஒவ்வொரு வைணவருக்கும் கட்டாயம் அமைய வேண்டிய “நல்வினை சடங்கு“.  (1)தாப ஸம்ஸ்காரம் (2) புண்ட்ர ஸம்ஸ்காரம் (3) நாம ஸம்ஸ்காரம் (4) மந்த்ர ஸம்ஸ்காரம் (5) யாக ஸம்ஸ்காரம் என்ற ஐந்து நிலைகளையும் குருவிடமிருந்து ஒரே சமயத்தில் பெறுதல்.

பஞ்சாங்கம்..பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:

  1. வாரம் 2.திதி3.கரணம் 4-நட்சத்திரம்,5.யோகம் என்பனவாகும்.

பஞ்ச கவ்யம் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் என பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.  சாத்திரப்படி சரீரத்திற்கும், இதர பொருட்கள் சுத்திக்கும்  இன்றியமையாதது.

பஞ்சாம்ருதம் பகவானுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவை.

தீபத்திலும் பஞ்ச முக விளக்கு  பஞ்ச முக தீபம் முதலியன சிறந்தனவாம்.
இது வரை பகவானோடு தொடர்புடைய சில ஐந்தின் சிறப்பினைப் பார்த்தோம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐந்து என்ற எண் புதன் கிரகத்திற்குரியது.  இந்த புதனின் அதிதேவதை விஷ்ணு அதாவது ஸ்ரீரங்கநாதனே..!. புதன் நன்கு அமையப் பெற்றவர்
அதிபுத்திசாலிகள்.  கணிதத் திறமை, கணினித் திறமை,  கலைத்திறன் வாய்ந்தவர்கள்.ஆக்கப்பூர்வமானவர்கள்….!

ஐந்து என்ற எண் இயக்க சக்தி..! காலில் மற்றும் கைகளில் உள்ள ஐந்து விரல்களின் இயக்கத்தினால் தான் ஒரு செயலை தடையின்றி செய்ய முடிகின்றது.
ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகத்தின் வலிமைக் குன்றியவர்கள்,  மற்றும் நம்முடைய ஜாதகரீதியாக
புதன் மேலும் வலிமைப் பெற ஸ்ரீரெங்கநாதனை வணங்குபவர்கள் நீங்கப் பெறுவர்.

சயனம்‘சயனம்’ என்றால் ‘நித்திரை’  அல்லது ‘உறங்குதல்’ என்று பொருள்.  இது ஒரு தற்காலிக விடுதலை..! இது ஒரு வரப்பிரஸாதம்..!  இது சரிவர அமையப்பெறாதவர் அனைவரும் துர்பாக்கியசாலிகளே..!  இது ஜாதகத்தின் 12ம் இடமாகும்.  இந்த இடம் கெட்டிருந்தால் அந்த ஜாதகரின் நிம்மதியான நித்திரை என்பது சந்தேகமே..!சயனம் கொண்டிருக்கும் பகவானை அனுதினமும் ஸேவிக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்..!  நிம்மதியாக வாழ்வர்..!

பஞ்ச சயன ரங்கம்

ரங்கம் என்றால் அரங்கம்.  இந்த அரங்கமானது பாம்பணையின் மிருதுவான பள்ளிக்கட்டிலின் மேல்பரப்பு.  இங்கு பள்ளிக்கொண்டு உறங்குபவன் அரங்கன். அரங்கன் என்றாலே அழகு..!  இதனை நான் சொல்லவில்லை..!  ஆண்டாளின் திருவாயினால் கேட்போம்..!  ஆண்டாளுக்கு 108 திவ்யதேச எம்பெருமான்களில்  அரங்கனின் அழகுமட்டுமே நெஞ்சைக்கவர்கிறது…!

எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரேஎன்று பாடுகிறாள். 

01.ஸ்ரீரங்கம்.

வைணவத்தினைக் கருவில் சுமந்தவள் அரங்கத்தம்மா..!

வைணவத்தினை வளர்த்த ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் அவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான் தாய்வீடு..!

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அடைக்கலம் புகுந்தது இந்த அரங்கத்தம்மாவிடம்தான்..!வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்..!

எந்த திவ்யதேசம் சென்றாலும் “அடியார்கள் வாழ்க..!  அரங்கநகர் வாழ்க..!“ என்னும் கோழம் இல்லாமல் சாற்றுமுறையில்லை.

ஸ்ரீரங்கம் நன்கு செழிப்புடன் இருந்தால் தான் வைணவத்திற்கு சிறப்பு..!

இங்கு ஏதேனும் தாழ்வு ஏற்பட்டால் உலகிலுள்ள அனைத்து வைணவதலத்திற்கும் தாழ்வே..!

அதனால்தான் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் அடியார்களும், ஆச்சார்யர்களும், ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தில் மண்டியிட்டு கிடந்துள்ளனர்.., கிடக்கின்றனர்..!

இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள் புரிபவள்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகர்
“அள்ள அள்ளக் குறையாத அருள் அமுதம்.
தோளாத தனிவீரன் ஸ்ரீராமன் தொழுதகோயில்.
வீடணருக்குத் துணையாய் திருவரங்கம் வரை வந்த கோயில்..!
செழுமறையின் முதல் எழுத்தாம் “பிரணவரூபமாய்“ விளங்கும் கோவில்..!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்..!“ என்கிறார்.

இங்கே பெருமாள் “புஜங்க சயனம்”  –
விமானம் ப்ரணவாக்ருதி விமானம்.
தாயார் – ஸ்ரீரெங்கநாயகி.

எந்த க்ஷேத்திரம் சென்றாலும் “லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் – ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்….“  என்றுதான் சாற்றுமுறையில் ஓதுவர்.
இவள் சமஸ்த லோகங்களுக்கும் “ஓளி்“யாவாள்.   இவள் கருணையில்லாவிடின் இருட்டுதான் எங்கும்..!
இங்குள்ள தீர்த்தம்   சந்திரபுஷ்கரிணி தீர்த்தம்.
தர்மவர்மா என்னும் சோழ அரசன் அரங்கன் வருகைவேண்டி கடும் தவம் பரிந்த இடம்.
இந்த அரங்கன் தர்வவர்மா, காவேரீ, விபீஷணன் ஆகியோருக்குப் ப்ரத்யக்ஷம்.
ஆழ்வார்களோடும், ஆச்சார்யர்கள் பலருடனும் தன்னுடைய “அர்ச்சை“ என்ற நிலைப்பாட்டினையும் தாண்டி அன்போடு அளாவியவன்.
இன்னமும் மெய்யன்போடு  இருப்பவரிடத்து தாயன்போடு உருகுபவன்.
தன்னை அண்டியவர்களை அபய முத்திரை காண்பித்துக் காப்பாற்றும் இந்த அரங்கனை அதிகாலையிலேயே வந்து தரிசியுங்கள்.
இங்கு பெருமாள், தாயாருக்கு நந்தவனத்திலிருந்து வரும் மாலைகளைத் தவிர வேறு ஏதும் சாற்றுவது கிடையாது.
அரங்கன் அன்புக்குத்தான் அடிமை..!  உங்கள் துாய அன்பினை சமர்ப்பியுங்கள்..!  அதுவே பெரிய புஷ்பம் அவனுக்கு

——–

02. உத்தமர் கோவில்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே

திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம்.
ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட ஸ்தலம் –
ஆழ்வார் மீது – ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.
ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹா லக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார்.
இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.
தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம் தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..?
கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர்.
கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.

இங்கு பெருமாள் புஜங்க சயனம் – கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.
விமானம் உத்யோக விமானம்.
தீர்த்தம் கதம்ப தீர்த்தம்.
ப்ரத்யக்ஷம் கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ
மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் – ஒரு பாடல்
ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த ஸ்தலம்.
பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும்

———–

03. கோபுரப்பட்டி
வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:1324ம் ஆண்டு. திருவரங்கத்தின் ஒரு மோசமான ஆண்டு..! மாலிக்காபூர் என்னும் முகலாய தளபதியின் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 12000 வைணவர்களின் தலையைச் சீவிக் கொன்ற ஆண்டு..! “பன்னீராயிரம் தலைத் திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று ஸ்ரீரங்கத்தின் கோவிலொழுகு இந்த வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது.
இந்த கொலைப்படையிடமிருந்து தப்பிய வைணவர்கள் சுமார் 750 பேர்களேயாவர். இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்த ஊர் கோபுரப்பட்டி.
அபயமளித்து அருளியவர் ஆதிநாயகன் – இந்த ஊரில் பள்ளிகொண்டு அருளும் கதாநாயகன்.
வைணவம் காத்த ஊர் – வைணவம் வளர்த்த ஊர்.

ஸ்ரீரங்கத்தில் இறந்த வைணவர்களுக்கெல்லாம் இங்குள்ள பெருவளவாய்க்காலின் கரையில் இங்குள்ள வைணவர்கள் வாழ்ந்த வரையிலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் அனைத்தும் செய்து வருடந்தோறும் திதி கொடுத்திருக்கின்றனர். இறந்த அனைவருமே இவர்களின் உறவுக்காரர்களா என்ன? ஆம்..! ஆண்டாளின் கூற்றுப்படி அரங்கனுக்கு உற்றவர்கள் அனைவருமே உறவினர்கள்தானே..! ஒரு கூட்டமாக நின்று பலவருடங்கள் ஒரு நதியின் கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ, பாரபட்சம் இல்லாது, வேற்றுமைகள் இல்லாது ஒருமித்து சுமார் 50 பேர்கள் சேர்ந்து திதிகள் கொடுத்தாலே அந்த நதி பவிஷ்யமானது..! அந்த நீர் புண்ணிய தீர்த்தம்..! முன்னோர்களின் ஆசிபெற்ற க்ஷேத்திரம்! ஒரு சில தீர்த்தகரைகளுக்கே இந்த புண்ணியபாக்கியமுண்டு. கோபுரப்பட்டி அத்தகைய புண்ணியத்தினைப் பெற்றுள்ளது. இங்கு உறையும் ஆதிநாயகர் பித்ருதோஷங்களை கண்டிப்பாக போக்கக்கூடியவர். ஆதிநாயகி ஸமேத ஆதிநாயகரை வணங்குங்கள். நம் முன்னோர்களின் அருளாசியோடு, வாஸூதேவனாம் ஆதிநாயகனின் அருட்பார்வையும் அமையப்பெறுவீர.

பெருமாள் ஆதிநாயகரை் என்னும் ஸ்ரீரங்கநாதர்
தாயார் ஆதிநாயகி என்னும் ஸ்ரீரங்கநாச்சியார்
சயனம் பால சயனம்
தலவிருட்சம் பன்னீர் புஷ்ப மரம்.
அர்ச்சகரின் அலைபேசி எண் +91 98655 56504.
வழி மண்ணச்சநல்லுார் – அழகிய மணவாளம் – கோபுரப்பட்டி

வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:

வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:

வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:

வேத நுால்களின் படி, அறிவின் இறுதி நோக்கமாகயிருப்பவர் வாஸூதேவனே.!
யாகங்கள் செய்யும் நோக்கமே அவரை திருப்திப்படுத்துவதுதான்!. வேதம் கற்பதே அவரை உணர்வதற்குதான்!. அவரே பரமஞானம்! கடும்தவமும் அவரை அறிவதற்கே!
மதமும் அவருக்கு அன்புத் தொண்டாற்றவே..! எல்லா க்ரியைகளும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம்..! வாழ்வின் மிக உயர்ந்த இலக்கும் அவரே..!

03. திருஅன்பில்
கோபுரப்பட்டியினை தரிசித்தபின், சுமார் 1 கி.மீ தொலைவில் ’அழகிய மணவாளம்’ என்னும் திருத்தலம் உள்ளது. நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பித்துச் செல்கையில், இங்கு சிலகாலம் தங்கி சென்றதாக வரலாறு. நல்ல ஆகுரிதியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வீர் பின்னர் அருகில் சுமார் 2 கி.மீ தொலைவில்தான் “திருவெள்ளரை“ எனும் மிகவும் புராதனமான திவ்யதேசம் உள்ளது. இந்த திவ்யதேச பெருமாளையும் சேவித்து அங்கிருந்து திரும்பவும் மண்ணச்சநல்லுார் வழியாக டோல்கேட் அடைந்து இலால்குடி செல்லும் பாதையில் பயணித்து “திருஅன்பில்“ என்னும் நான்காவது சயனம் கொண்ட அரங்கனைத் தரிசிக்கலாம்

அறியாமல் செய்த பாபத்தினி்ன்று கூட தப்பி விடலாம். ஆனால் ஒருவர் சாபத்திலிருந்து விடுதலை பெறுதல் மிகவும் கடினம். ரிஷிகளின் காலத்தில் சாபங்களுக்கும், சாபவிமோசனங்களுக்கும் குறைவேயில்லை. ஒரு மகரிஷி தாம் பெற்ற சாபத்தினால் தவளையாகவே மாறிவிட்டார். தவியாய் தவித்தார். இத்தலத்து பெருமாள்தான் அவருக்கு சாபத்தினின்று விடுதலை அளித்தவர். “மண்டூகம்“ என்றால் சமஸ்கிருதத்தில் ‘தவளை’ என்று அர்த்தம். அந்த மகரிஷி இந்த சாபவிமோசனத்திற்குப் பிறகு ‘மண்டூக மகரிஷி’ என்றே அழைக்கப்பெற்றார். இந்த மகரிஷி தன் சாபவிமோசனம் பெற நித்யமும் நீராடிய குளம் ”மண்டூக புஷ்கரிணி’ என்று அழைக்கப்படுகின்றது. மகாசாபத்தினைப் போக்கிய இந்த புஷ்கரிணியும் பெருமாளும் நம் பாபத்தினைத் தொலையச் செய்ய மாட்டார்களா என்ன..? நம் முற்பிறவி பாபத்தினையும் சேர்த்துக் கண்டிப்பாக போக்குவார். இத்தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. மூன்று நதிகள் இணையும் இடம் திரிவேணி சங்கமம் ஆகும். இந்த சங்கமம் நம் சங்கடங்களை போக்கும். சாபங்கள், பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும். இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் காவிரி, பல்குணி, சாவித்ரி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமம் ஆகுவதாக புராணங்கள் சொல்கின்றன. பல்குணியும், சாவித்ரியும் கீழே பாதாளத்தில் ஓடுவதாக கூறுகின்றது.. இந்த க்ஷேத்திரத்தினை “தக்ஷிண கயா“ என்றழைப்பர். கயா சென்ற பலனை இத்தலத்தில் நீராடி தரிசித்தால் அடைவோம்.
வால்மீகி ரிஷி இங்குதான் அவதரித்து பின்னர் வடநாடு சென்றார் என்பர். கம்பரும், ஓளவையாரும் இத்தலத்துப் பெருமாளை வழிப்பட்டிருக்கின்றார்கள்.
திருமழிசை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலமிது.
பெருமாள் : வடிவழகிய நம்பி (சௌந்தரராஜன்)
தாயார் : அழகிய வல்லித் தாயார்
விமானம் : தாரக விமானம்
சயனம் : புஜங்க சயனம..

05. திருப்பேர்நகர் என்னும் கோவிலடி

பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம். திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.  அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.

‘இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய  உணர்தலுற்றேனே!’  – நம்மாழ்வார் திருவாய்மொழி

திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
“இருப்பேன்” அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!”    – நம்மாழ்வார் திருவாய்மொழி

பெருமாள், “இந்த இடத்தை விட்டு பெயரேன்“ எனவருளியதால், ‘திருப்பேர்நகர்’ என்று பெயர்க்காரணம் .   நம்மாழ்வார் இந்த பெருமாளை தரிசித்தபின் “…அமுதுண்டு களித்தேனே…“ என்கின்றார்.  ஆம் இந்த அமுதம் நம் பிணி போக்கும் அமுதம். நம் பசி, நம்மை சுற்றியுள்ளோரின் பசியாற்றும் அமுதம்.  நம் பாபம் போக்கும் அமுதம். நமக்கு அழிவில்லா மோக்ஷானந்ததை காட்டிக்கொடுக்கும் அமுதம்! சோழ தேசத்தின் வழியாக கோயில் என்னும் திருவரங்கத்திற்குள் பக்தர்கள் எடுத்துவைக்கும் முதல் அடியில்  இருப்பதால் இந்த திவ்யதேசம் கோயிலடி என்று பெயர்பெற்றது! நம் மன இருளின் நடுவே ஜீவாத்மாவிற்கு சுஷும்னா நாடியை காட்டிக்கொடுக்கும் பேரொளியாய்!, பேரேன்! என்று உள்ளத்தினுள் இருக்கும் அந்தர்யாமியாக, நம் நெஞ்சுக்குள் நிறைபவரே இந்த திருபேர்நகர் எம்பெருமான்!.  நாம் ஸ்ரீவைகுண்டம் புகுவதற்கு ஆணிவேராய் உதவும் பெருமாள் இவர்!   எப்படி ஜீவாத்மா ஸ்ரீவைகுண்டம் அடைவதற்கு முதலடியாய் அந்தர்யாமி துனைபுரிகிராரோ! அப்படியே நாம் பூலோக வைகுண்டமான திருவரங்கம் புக துனைபுரிகிறார் இந்த பெருமாள்!  இந்த பெருமாள்,   பெரியாழ்வார், திருமழிசையாழ்வார்ஈ திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (33 பாசுரங்கள) ஆகியோரால் கொண்டாடப்பட்டவர்.

மேற்கு நோக்கி சயனம்.  தாயார் கமலவல்லித் தாயார்.  விமானம் – இந்திரவிமானம்.

தீர்த்தம்  காவிரி.

இங்கு இத்தலத்துப் பெருமாள் காவிரியின் கரையில், ஒரு கையினை அப்பக்குடத்தின் மேல் வைத்தப்படி, காவிரியன்னையின் தாலாட்டு அரவணைப்பில் குளர்ச்சியாய் பள்ளி கொண்டருளுகின்றார். எப்போதும் நதிதீரத்தில் குளிர பள்ளி கொள்ளும் இப்பெருமாளை வணங்குவோர் வாழ்வுதனையும் இத்தலத்து பெருமாள் குளிரக் கடாக்ஷிக்கின்றார்.  காவிரி கரையின் ஓரமாக ஒரு முறை பயணித்து இந்த பெருமாளையும் தரிசியுங்கள.வாழ்வில் உய்வு பெறுதல் திண்ணம்..!

—————

பஞ்ச ராமர் தலங்கள் – பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர்.

இத் தலங்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன.

இவை முடிகொண்டான், அதம்பார், பருத்தியூர், தில்லைவிளாகம், வடுவூர் ஆகிய இடங்களில் உள்ளன. 

முடிகொண்டான் ராமர் கோயில்
அதம்பார் கோதண்டராமர் கோயில்
பருத்தியூர் ராமர் கோயில்
தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
வடுவூர் கோதண்டராமர் கோயில்

உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு.

இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு.

இதில் ‘பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை.

அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்திவாய்ந்த ஆலயங்களாகும்.

இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.

அருள்மிகு தில்லை விளாகம் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர்தேவர் எனும் இராம பக்தர் கனவில் இராமர் கோவில் கட்ட தெய்விக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்.

அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் ஒரு கோவிலே புதைந்து கிடப்பதைக் கண்டார். 1862இல் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். கம்பீரமான இந்தத் திருமேனிக்கு ‘ஸ்ரீ வீர கோதண்டராமர்’ என்று பெயர்.

1905க்குப் பின்னர் கோவில் விரிவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் இராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் தை, ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள் புனித நீராடுகின்றனர். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

நடராஜருக்கும் இந்தக் கோவிலில் சந்நிதி உள்ளது. இந்த தில்லைவிளாகம் கோவிலில் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமரைத் தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலில் இராம நவமி, ஹனுமார் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்டஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் வடுவூர் தாலுகாவில் உள்ளது. வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்குப் புறப்படத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர்.

இராமர் தன் உருவத்தை சிலையாகச் செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, இராமபிரானிடம், “இராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,”என்றனர்.

சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையைத் தரும்படி கேட்டனர். அதன்படி இராமர் அவர்களிடம் சிலையைக் கொடுத்துவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.

தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மஹாராஜா தலைஞாயிறு எனும் இடத்தில், அரசமரத்தடியில் விக்ரஹங்கள் இருப்பதாகக் கனவு கண்டார். அங்கு தோண்டியதில் கிடைத்த அற்புதமான இராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேய விக்ரஹங்களை, வடுவூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோவிலுள் பிரதிஷ்டை செய்தார்.

இந்த வடுவூர் இராமர் பேரழகு. பிராகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இந்த ஆலயந்தின் கோவில் குளம் ஸ்ரீ சரயு தீர்த்தம். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலில் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம்.

அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர்.

தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். இராமாயணச் சொற்பொழிவுகள் செய்து நூற்றுக்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை.

ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ இராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது.

தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைக் களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்தப் பழைமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் இராமர் கதை சொல்லி, இராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு அழகான ஒரு கோவிலை அமைத்தார்.

இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி விக்ரஹங்கள் உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம்.

இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது.

இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.

அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம்.

அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை போகும் வழியில் உள்ளது மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டான்.

ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல்தலையில் மகுடத்துடன் காணப்படுகிறார் ராமர். பரத்வாஜர் தவம் செய்த இடம் முடிகொண்டான். மூலவர் இராமர், சீதை, லக்ஷ்மணர் மட்டுமே. ஸ்ரீராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்து திரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார்.

இந்தக் கோவிலில் மூலவர் ஆஞ்சனேயர் இல்லை. இராமரின் வருகை பற்றி பரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சனேயர் சென்று விட்டார் என்பது புராணம். ஸ்ரீராமரை அரசராக உடனே பார்க்க பரத்வாஜர் ஆசைப்பட, பரத்வாஜர் இராமனுக்கு முடிசூட்ட, ஸ்ரீராமர் மகுடத்துடன் இங்கு கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாக ஐதீகம்.

ஹனுமாருக்கு தனியாக வெளியே ஒரு சந்நிதி உள்ளது. பரத்வாஜர் இராமனுக்கு முடிசூடியதைப் பார்க்காததால் அனுமார் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். ரங்கநாதருக்கு இங்கு தெற்கு நோக்கி சந்நிதி உள்ளது. இந்த ஆலயந்தின் மிகப்பெரிய கோவில் குளம் ஸ்ரீ ராம தீர்த்தம் உள்ளது.

சுவாமிக்கு பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது. இந்த அதம்பார் கிராமத்தின் அருகில் தாடகாந்தபுரம், நல்லமான்குடி, வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாடகச்சேரி, என்ற சிறிய கிராமங்கள் இராமாயணத்துடன் தொடர்புடையவை. தாடகையை வதம் செய்த இடம் தாடகாந்தபுரம், அழகிய மானை சீதை பார்த்த இடம் நல்லமான்குடி, மான் வலப்புறம் துள்ளி ஓடிய இடம் வலங்கைமான், மாயா மாரீசன் என்று அறிந்து, அதனை வதம்(ஹதம்) செய்ய முடிவெடுத்த இடம் அதம்பார், மானைக் கொன்ற இடம் கொல்லுமாங்குடி, தன் பாத அணிகலன்களை சீதை கழற்றிய அடையாளம் காட்டிய இடம் பாடகச்சேரி. தெளிவாக சிந்தித்து மாரீசனைக் கொல்ல (ஹதம் செய்ய) முடிவு செய்தஇடத்தில் அதம்பார் இராமர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலின் விக்ரஹங்கள் ஸ்ரீராமர், சீதை. லக்ஷ்மணர், ஆஞ்சனேயர், மான் உருவில் மாரீசன் மற்றும் பிரதான மூலவர் அதம்பார் வரதராஜப் பெருமாள். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் பிரசித்தம்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.

புத்திர் பலம் – அறிவில் வலிமை
யசோ – புகழ்
தைர்யம் – துணிவு(பொறுமை)
நிர்பயத்வம் – பயமின்மை
அரோகதா – நோயின்மை
அஜாட்யம் – ஊக்கம்
வாக் படுத்வம் – பேச்சு வலிமை
ச – இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால்
பவேத் – பிறக்கின்றன.

அஷ்ட ஸித்திகளும் கிட்டுமே

அறிவுக் கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத் திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன.

————

 

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில்

திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில்
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை.

கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார்.

சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.

கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ‌ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.

108 திவ்யதேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.

நீலமேகப் பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம்

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது.

ஒரு சமயம் திருமாலை வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது.

திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை வெட்டினர்.

இதனைத்தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது.

திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.

திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டியருளினார். எனவே இத்தல இறைவனை சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். இத்தலத்தில் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன.

இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும்.

இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.

இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.

பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை

இவ்விடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது.

பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது.

திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.

திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும்.

இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தலஇறைவன் அருளுவார்.

வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.

கஜேந்திர வரதப்பெருமாள், கபிஸ்தலம்

இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான்.

அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான். ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான்.

கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது.

திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம் செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார்.

இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும்.

ஆடி பௌர்ணமியில் இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்

இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள்.

இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம்.

இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார்.

இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.

பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.

நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.

—————–

காயாம் பூ அரணங்கள்

“ஆ என்று ஓலமிட்ட ஆனைக் கோன் வீடு பெற அருளியதோ கவித் தலத்தில்
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு ஆனதுவோ கண்ண மங்கை
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம் கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க் காட்டியதோ கண்ணன் கட்டில்
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க பட படத்து மூவர் நிற்க
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப் பாடுவதோ கோவ லூரில்
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக் காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

கவித்தலம், கண்ணமங்கை, கண்ணங்குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி, ஐந்தாவது கண்ண அரணத்தை(கிருஷ்ணாரண்யம்) கண்ணபுரத்தில் தேடுகிறது

கவித்தலம்:
தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் உள்ளது கவித்தல். (வளந்து கிடத்தல். குடமூக்கைப் போல்(கும்பகோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன்(கய வேந்தன் = கஜேந்திரன்.) “ஆதி மூலமே” எனக் கூக்குரல் இட்டதும், கய வேந்தனுக்கும், அவன் காலைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். “ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்” எனத் திருமழிசை ஆழ்வாரால் பாடப் பெற்றது.

கண்ணமங்கை:
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது. பூதேவியை மணந்த இடமாகப் பல தலங்கள் சொல்லப்பெறும்; ஆனால் சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப்படுபவை சிலவையே. அவற்றுள் கண்ணமங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்று, நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால், பத்ராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். “கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்” என்பது திருமங்கையாரின் வாக்கு.

கண்ணன்கட்டு:
இது திருக்கண்ணங்குடி. நாகை-திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணைக் கண்ணனைக் கட்டிப் போட்டதால் குடியிருந்த தலம். மூலவரின் நாமம் உலகநாதன்.

கண் துஞ்சாப் புளி:
இது உறங்காப்புளி; நாகை புத்த விகாரையில் தங்கம் எடுத்துக்கொண்டு திரு அரங்கள் கிளம்பிய திருமங்கையார் கண்ணங்குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்துவிட்டு, அருகே உள்ள புளியமரத்தின் அடியி படுத்துறங்க எண்ணீ,”நான் அயர்ந்ததும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்” என்று புளிய மரத்துக்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளியமரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள சில புளிய மரங்கள் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஊறாக் கிணறு:
ஒரு நாள் தங்க இடம் கேட்ட திருமங்கயாழ்வார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர் தர மறுக்க, கோவத்தில், “ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக” என்று திருமங்கையார் கடும் உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவது இல்லையாம். தவறி ஊறினாலும் இங்கு உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்:
கடு உரைக்குப் பின், பசி மயக்கம் வந்து, மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை, யாரோ தட்டி எழுப்பி,”வழிப்போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு” என்று கொடுக்க, அதை உண்டு, திருமங்கையார் உறங்கிப் போகிறார். திரும்ப எழும்போது, மனம் குளிர, உலகைக் கனிவோடு பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய்(பதிலாக), ஓய்வுக்கு உதவிய மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும்படி இன்னுரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய் வந்து இடைமறிக்க, தான் வழிப்போக்கன் என்பதால், தனக்கு வழிப்போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததைக் கண்டு வியக்கிறார்.

திருக்கோவலூர்:
இது தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; இங்கிருப்பது கண்ணன் கோயில்; இங்கிருக்கும் ஆறு கண்ண பெண்ணை (கருத்த ஆறு; இதே பெயர் ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமராய்க் காட்சி அளித்தாலும், ஊருலவரைக்(உற்சவர்) கோவலன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இடைகழியில் இருக்க,மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற உன்னத நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. “வையம் தகளியாய்” என்று பொய்கையாரும், “அன்பே தகளியாய்” என்று பூதத்தாரும், “திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்று பேயாரும் பாடிய பெருந் தலம் இது. ஆக, நாலாயிரப் பனுவலின்(பிரபந்தம்) முதல் எழுச்சி, இந்த ஊரில்தான் நடந்தது.

காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து எனப் பொருள் வரும்.

——————

மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1) மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2) மதில் ஆறு போக்கச் சொன்னான்
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில் செய்குவதே நோக்க மாக
சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க, செழுங் கோயில் அரையர்(4) வந்து
“எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை எங்கள் முனம் பொய்யா ன..தோ?”(5)
என்று எறிந்த தாளத்தால்(6), நெற்றி வடு பட்டு விட எகிறியதே திகிரி(7)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வர்மோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது கண்டு பொங்கி எழுந்து, ஒரு பத்தர், “நீ எப்படி பொறுத்துக் கொண்டு இருந்தாய்?” என்று கேள்வி கேடடுப் பெருமாள் மீதே தாளத்தை எறிய, அதனால் பெருமாளுக்கு நெற்றியில் வடு ஏற்பட்டு, பின் பத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை, இந்தப் பாடலில் பேசப்படுகிறது.

1. கீழ்வீடு – 108 விண்ணவத் திருப்பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ்வீடு என்று அழைக்கப்படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் – மால்மேகன்

2. வளநாடன் – சோழன்
3. சென்னி – பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)
4. அரையர் – திருப் பணி செய்யும் அன்பர் (திருவரங்கத்தில் அரையர் சேவை உண்டு)
5. “பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ?” என்று கேட்டதாக ஐதீகம்.
6. தாளம் – கைத்தாளம்
7. திகிரி – சக்கரம்.

—————

வரையாத அழகோடு, வடிவான உருவோடு, வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும், பழிக்கின்ற பருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன் ஒரு நாள் புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும் புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில் நுழையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் கழிப்பதை, நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி கண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

புரைதல் – ஒப்புதல், பொருந்துதல்;
புரையாத திருமகள் – ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்;
கரையோடு ஊருலவும் திரு மேனி – கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.

இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம்(ப்ழைய கதை) உண்டு. இந்தத் தோற்றரவில்(அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. பெருமாள், பத்மினி நாச்சியாரைக் கைப்பிடிக்கும் விழா, கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் நடக்கிறது. மீனவனாய் மாற்றிச் சரம்(கைலி) கட்டி, பெருமாளின் ஊருலவுத் திருமேனி(உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். அங்கே, கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். இப்படி,”எங்கள் மாப்பிள்ளை” என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சிலகாலம் வரை இருந்திருக்கின்றது.

———-

“பண்டு ஒரு நாள் மூலவருக்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில் படிந்திருந்த முடியைக் காட்டி,
பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன் பட்டனிடம் கேட்டு நிற்க,
செண்டோடும், திகிரியொடும், செறி முழங்கு சங்கமொடும், செழுந் தேவி நால்வ ரோடும்,
சீராளும் விண்ணவனின் செளரியிலே வீழ்ந்தது எனச் செப்பியதை உண்மை யாக்கி,
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம் மாலையினை அழகு பார்த்த
வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய், வரி தவழச் செளரி காட்டும்,
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப்(ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு என இருந்த மாலையையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடுநாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையிலொன்றிரண்டு முடியிழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, “ஏதோ ஒன்று தவறாக நடந்துகொண்டு இருக்கிறது” என்று மற்றவர்கள் பதறி மன்னனிடம் சொல்ல, அவன் பட்டரிடம் வினவ,”பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்” என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் தான் செய்கிற புரிசையில் தவறாத பட்டர் “அந்த முடியிழை பெருமாளுடைய செளரியில் இருந்துதான் வந்தது” என்று அடித்துச் சொல்ல, பக்தன் சொல்லியதை மெய்ப்பிப்பதுபோல், செளரி கொண்டு பெருமாள் காட்சியளித்துக் காத்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டுவிடும் கரிய அழகு. எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீலமேகர். தாயார் பெயர் கண்ணபுர நாயகி. சீதேவி, பூதேவி போக, பத்மினி, ஆண்டாள் என்னும் அவர்களுடைய தோற்றரவுகள்(அவதாரங்கள்) ஆக தேவியர் நால்வர். ஊருலவரோடு(உற்சவருக்கு) நாலு நாச்சியார்களையும் அருகே வைத்துத் தான் திருமஞ்சனம் செய்வார்கள்.

————

தமிழ்நாட்டின் மாயவரம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர்  ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.  ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் திவ்ய தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார். அவர் கள்ளர் எனும் பிரிவில் பிறந்தவர். சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் எனும் ஊரில் பிறந்தவர்.

சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது மங்கை மடம் எனும் பகுதிக்கு குறுநில மன்னராக திருமங்கை மன்னன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் உண்மையில் யார்?

சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்குறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அந்த நகரை நிர்வாகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு பகவான் விஷ்ணுவின் அருளினால் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள்.

அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்து வளர்த்தாலும், படை வீரர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை என்பதினால் அதற்கு பல்வேறு சண்டைப் பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்தார்கள். ஆகவே சிறு வயது முதலே அது யுத்தக் கலையில் சிறந்து விளங்கியது. அதனால்  ஒரே நேரத்தில் யானை, குதிரை, காலாட்டுப் படை என அனைத்து படைகளையும் திறமையுடன் அவரால் கையாள முடிந்தது. அவருடைய திறமையைக் குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் அவரை அழைத்து வந்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். அவர் யுத்தங்களில் எதிரிகளை சுலபமாக வீழ்த்தி கொன்று வந்ததால் அவரை காலன் என அழைத்தார்கள். காலன் என்பது அனைவர் உயிரையும் பறிக்கும் எம தர்மராஜரைக் குறிக்கும் பெயர். அவர் திறமையினால் அவர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள்.

திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர். அவருக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் பூமியில் மனிதராகப் பிறந்து வைஷ்ணவத்தை பரப்ப வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் பூமியில் மனித உருவில் அவதரித்து இருந்த இன்னொரு தேவ கன்னிகையின் சாபத்தையும் விலக்க வேண்டும் எனவும் தெய்வ நியதி இருந்தது. அந்த தேவலோக மங்கையோ ஒருமுறை தேவலோகத்தில் கபில முனிவருடன் இருந்த அவலட்ஷணமான தோற்றத்தைக் கொண்ட இன்னொரு முனிவரை பரிகாசம் செய்ததினால் கோபமுற்ற கபில முனிவரின் சாபத்தைப் பெற வேண்டி இருந்தது. தான் செய்த தவறுக்கு அந்த தேவ கன்னிகை கபிலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதினால் அவர் தனது சாபத்தை மாற்றி அமைத்தார். அதன்படி அவள் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்து அங்கிருக்கும் வேறொரு பிரிவை சார்ந்த ஒரு படைத் தலைவரை மணந்து கொண்டு அவரை ஆன்மீக உலகுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் மூலம் வைஷ்ணவத்தைப் பரப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவளுக்கு கிடைத்த சாபம் விலகும் என்றார்.

அந்த தெய்வ நியதியின்படி அவர்கள் இருவரும் திருமங்கை மன்னன் மற்றும் குமுதவல்லியாக பூமியில் பிறந்தார்கள். பல நிகழ்ச்சிகள் நடந்தேற அதன் இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால்  தெய்வ நியதிப்படி அவருக்கு அவள் ஒரு நிபந்தனை போட வேண்டி இருந்தது. அது என்ன எனில் குமுதவல்லி திருமங்கை மன்னனை மணக்க வேண்டும் எனில் திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.அவர்கள் கால்களை அலம்பி விட்ட பின் அந்த நீரில் சிறிது எடுத்து வந்து அவள்  தலை மீது தெளிக்க வேண்டும்.  அப்படி தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே அவளை திருமங்கை மன்னனால் மணக்க முடியும். திருமங்கை மன்னனும் அவள் கூறிய நிபந்தனையை ஏற்று அதை செய்து வர இருவருக்கும் திருமணம் நடந்தது. இப்படியாக ஆன்மீக உலகில் திருமங்கை ஆழ்வாரை ஆன்மீகத்தில் நுழைந்து விட்டால் அவர் மூலம் வைஷ்ணவத்தை பரப்பி அந்த ஷேத்திரத்தில் ஐந்து நரசிம்ம அவதாரத்தில் தானும் காட்சி தரலாம் என விஷ்ணு பகவான் எண்ணினார்.

திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததினால் அவருடைய கஜானாவும் காலி ஆயிற்று. சோழ மன்னனும் திருமங்கை மன்னன் தனக்குத்  தர வேண்டிய கப்பத் தொகையை தராமல் இருந்ததினால் மிச்சம் மீதி இருந்த அவருடைய செல்வத்தை அவர் நாட்டில் இருந்து  எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஆகவே பணம் இல்லாத நிலையை நிவர்த்தி செய்து கொள்ள திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்கத் துவங்கினார்.

திருமங்கை மன்னனின் நன் நடத்தையைக் கண்ட லட்சுமி தேவி அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணி  பகவான் விஷ்ணுவிடம் கேட்டபோது அவர் அவளை சற்று நாட்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கூறினார். அதன் பின் ஒரு சிறிய நாடகம் நடைபெற்றது. ஒருநாள் திருமால் தனது மனைவியான லட்சுமி தேவியுடன் புதியதாக மணம் செய்து கொண்ட தம்பதி போல உரு எடுத்து உடம்பில் பல்வேறு நகைகளை அணிந்து கொண்டு திருமங்கை மன்னன் ஆண்டு கொண்டு இருந்த இடத்தின் காட்டு வழியே சென்றார். அவர்களைக் கண்ட திருமங்கை மன்னன் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கொள்ளை அடித்தார். ஆனால் அந்த நகைகளை அவரால் எடுத்துக் கொண்டு செல்ல முடியாமல் அவை கனத்தன . அதன் காரணம் அந்த நகைகள் அனைத்துமே சில மந்திரங்களினால் கட்டடப்பட்டு இருந்தது என்பதே. ஆகவே அந்த மந்திரத்தை கற்றுக் கொண்டு நகைகளை எளிதில் எடுத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்த திருமங்கை மன்னனுக்கு அந்த மந்திரத்தை போதிப்பதாக மாற்று உருவில் இருந்த திருமால் கூற அதை காது கொடுத்து கேட்க அவர் அருகில் சென்ற திருமங்கை மன்னன் காதில் மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார்.  அவர் பகவான் விஷ்ணு மீது பல தோத்திரங்களை பாடத் துவங்கினார். அதன் பின் சில காலத்திலேயே அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.

திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை இயற்றத் துவங்கினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற ஹிரண்யகசிபுவின் வதமும் நிகழ்ந்தது. அதைக் கண்ட திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி  அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள். அவை உள்ள இடங்கள்:

  • குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள்
  • மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்
  • திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்

(1) திருவாலியில் வில்வாரண்யம் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் லட்சுமி நரஸிம்ம தோற்றத்தில் காட்சி தரும் பெருமாளை திருவாலி நகரலன் அல்லது வரதராஜப் பெருமான் எனவும் அழைக்கின்றார்கள். அங்குள்ள தாயாரை அமிர்தவல்லித் தாயார் அல்லது அமிர்தகடவல்லித் தாயார் என அழைக்கின்றார்கள். ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின் நரசிம்மத் பெருமான் அடங்காத கோபத்துடன் இருந்தார். அவருடைய கோபத்தைக் தணிக்க உதவுமாறு தேவர்கள் அனைவரும் லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள லட்சுமி தேவியும் நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவின் வலது தொடையில் சென்று அமர, கோபம் தணிந்த நரசிம்மத் பெருமான் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருவாலி ஆகும். ஆகவே ஆலிங்கனம் எனப் பொருள்படும் விதத்தில் அமைந்த  திருவாலி என இந்த இடம் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில்தான் லட்சுமி தேவி தொடையில் அமர்ந்திருக்க விஷ்ணு பகவான் தனது மனைவியுடன் கூடிய  ரங்கநாத பெருமானாகவும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தந்தாராம்.

(2) அங்கிருந்து சற்றே தூரத்தில் உள்ள குறையலூரில் நரஸிம்ம பெருமாள் உக்கிர நரஸிம்மராக காட்சி தந்தாலும், அவர் முகத்தில் அதீத கோபக்களை காணப்படவில்லை.

(3) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மங்கை மடத்தில் பெருமாள் வீர நரஸிம்மராக காட்சி தருகின்றார்.

(4 & 5) திருநகரி எனும் இடத்தில் உள்ள  ஆலயத்தில் பெருமாள் இரண்டு நரஸிம்ம அவதார தோற்றத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்தில் அவர் யோக நரஸிம்மராகவும், ஹிரண்ய நரஸிம்மராகவும் காட்சி தருகின்றார். இந்த ஆலயம் த்ரேதா யுகத்தை சேர்ந்தது. ஒருமுறை பிரும்மாவின் ஒரு மகன் விஷ்ணு பகவானின் தரிசனம் கிடைக்க தவம் செய்தபோது அவர் காட்சி தரவில்லை. லட்சுமி தேவி வேண்டிக் கொண்டும் விஷ்ணு அவருக்கு காட்சி தரவில்லை. ஆகவே லட்சுமி தேவி தன் கணவரான விஷ்ணு பகவானின் மீது கோபம் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். அவளைத் தேடிக் கொண்டு திருநகரிக்கு வந்த விஷ்ணு தாமரை தடாகம் ஒன்றில் அவள் ஒளிந்து கொண்டு இருந்ததை அறிந்து கொண்டார். அந்த குளத்தில் ஐந்து தாமரை மலர்கள் இருந்தன. அங்கு சென்ற விஷ்ணு பகவான் தனது இடது கையை அவற்றை நோக்கிக் காட்டினார். அவர் இடது கையில் சந்திர பகவான் இருந்ததினால் நான்கு தாமரை மலர்கள் மலர்ந்தன. ஆனால் ஐந்தாவதில் லட்சுமி தேவி ஒளிந்து கொண்டு இருந்ததினால் அது திறக்கவில்லை என்பதினால் விஷ்ணு பகவானினால் லட்சுமி ஒளிந்து கொண்டு இருந்த மலரை எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது. அந்த தாமரை மலரை கையில் எடுத்து திறந்து அதில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதனால்தான் திருமால் மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்த அந்த இடம் அதே பொருளைத் தரும் திரு நகரம் அதாவது திருநகரி என ஆயிற்றாம். இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் ஒரே ஒரு கொடிமரத்தைக் கொண்ட மற்ற ஆலயங்களை போல இல்லாமல், இந்த ஆலயத்தில் இரண்டு கொடி  மரங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆலயத்துக்கும் இன்னொன்று திருமங்கை ஆழ்வாருக்கும் என்பதாக பண்டிதர் கூறினார்.

——————

திருக்குருகூர் பஞ்ச க்ஷேத்ரம் என்பர்

குருகு -பறவை சங்கு -சங்கன் வழி பட்ட துறை சங்கணித்துறை -தீர்த்த க்ஷேத்ரம்
குரு -க -அத்ர -மதர்சனம் -நான்முகன் வழி பட்ட -பிரளயம் பின்பு முதலில் தோன்றிய க்ஷேத்ரம் ஆதி க்ஷேத்ரம்
சாளக்ராமத்தில் மந்தன் என்ற அந்தணன் வேதம் பயிலாமல் வேதத்தை இகழ -ஆச்சார்யர் சாபத்தால்
தாந்தன் என்ற இழி பிறப்பில் புல் வெட்டி ஜீவனம் செய்பவனாக
முன் செய்த புண்ய பலத்தால் இங்கே பிறக்க வடகரையில் இருந்து ஆதிநாதரை வழி பட்டு வீடு பேறு பெற்றதால் தாந்த க்ஷேத்ரம்
அர்த்த மண்டபத்தில் முதல் படிக்கட்டில் தான்தான் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
அவன் புல் வெட்டி ஜீவனம் செய்த ஸ்தலம் அப்பன் கோயில் -ஆழ்வார் அவதாரம் -இதுவே செம் பொன் மாடத் திரு குருகூர் என்பர்
வராஹ மூர்த்தி முனிவர்களுக்கு தர்சனம் கொடுத்ததால் -இங்கு ஞானப்பிரான் சந்நிதி -வராஹ க்ஷேத்ரம்
திருப்புளி ஆழ்வார் -சேஷ க்ஷேத்ரம்

ஆக -தீர்த்த க்ஷேத்ரம்-ஆதி க்ஷேத்ரம்-தாந்த க்ஷேத்ரம்-வராஹ க்ஷேத்ரம்-சேஷ க்ஷேத்ரம்-பஞ்ச க்ஷேத்ரம் இது

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஐந்தாம் பாகம் —ஸ்ரீ பூரி ஜெகந்நாத க்ஷேத்ர மஹிமை —

August 29, 2022

ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில்இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த ஸ்ரீ வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஸ்ரீ ஜெகன்நாதர், ஸ்ரீ பலபத்திரர் மற்றும் ஸ்ரீ சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர்பலபத்திரர்சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்..

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார்.இவரது இயற்பெயர் கௌரங்கன் என்பதாகும். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார்.

சைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.

உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.-

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.

பூரியில் கருமாபாய் என்ற பக்தை வசித்தாள். அவளுக்கு சோதனைகள் பல இருந்தும் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஜெகந்நாதப்பெருமாளை தரிசனம் செய்த பின்னே, வேலைகளைத் தொடங்குவாள். பாண்டுரங்க பக்தர் ஒருவர் கருமாபாயின் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அன்னமிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள். உங்களுக்கு நேர்ந்த துன்பம் என்ன என்பதைக் கூறுங்கள், என்றார் வந்தவர். கருமாபாய், எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால், தாய்மை அடைந்த சில மாதங்களிலேயே என் கணவர் இறந்து விட்டார். இருந்தாலும், வைராக்கியத்துடன் அவனை வளர்த்து ஆளாக்கினேன். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகனும் ஒரு குழந்தைக்கு தந்தையானான். ஆனால், அப்போதும் என் வாழ்வில் விதி விளையாடியது. பேரன் பிறந்த சில மாதங்களிலேயே என் மகனும், மருமகளும் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போனேன். மிகுந்த சிரமத்திற்கிடையே என் பேரனை வளர்த்து வந்தேன். அப்போது பாழாய்ப் போன விதி என்னை விடுவதாக இல்லை. அவனும் நோய் வாய்ப்பட்டு இறைவனிடமே சென்று விட்டான். செய்வதறியாமல் நடை பிணமாகி விட்டேன். இதுவே, என் மன வேதனைக்கு காரணம், என்று கூறி அழுதாள். இந்த துக்க சம்பவங்களைக் கேட்ட பாண்டுரங்க பக்தர் மவுனமானார்.

அவர், இம்மண்ணில் பிறந்த உயிர் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. கடவுள் கொடுத்த இப்பிறவியைப் பயனுள்ளதாக்க வேண்டியது நம் கடமை. அதனால், பாண்டுரங்கனைத்தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடம் தராதீர்கள். உங்கள் கைகள் இரண்டும் அவனுக்கே பணி செய்யட்டும். கால்கள் அவன் திருக்கோயிலையே நாடட்டும். மனம் அந்த ரங்கனின் திருவடித் தாமரைகளையே சிந்தித்திருக்கட்டும், என்று ஆறுதல் வார்த்தை கூறினார். தான் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் விக்ரஹத்தை அவளிடம் கொடுத்த பக்தர், அம்மா! இந்த உலகில் நம்மோடு வரும் உறவுகளெல்லாம் தற்காலிகமானவையே. இந்த நீலமேக சியாமள வண்ணனே நமது நிரந்தர உறவினன். அவனே தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக இருந்து எப்போதும் காத்து நம்மைக் கரைசேர்ப்பவன், என்றவர், ஒரு மந்திரத்தையும் உபதேசம் செய்து, அதை தினமும் ஓதி மனச்சாந்தி பெறும்படி கூறி புறப்பட்டார்.

அன்றுமுதல் கருமாபாயும் சின்னக் கண்ணனின் நினைப்பிலேயே மூழ்கினாள். பாசம் மிக்க தாயாக, அந்தக் கண்ணன் சிலையை மடியில் வைத்துக் கொள்வாள். காலையில் துயில் எழுந்ததும் கண்ணனை நீராட்டுவாள். பட்டுச் சட்டை அணிந்து அலங்காரம் செய்வாள். கன்னத்தில் அன்போடு முத்தமிடுவாள். பால், அன்னம் வைத்து பாட்டுப் பாடி ஆராதனை செய்வாள். இதுவே அவளின் அன்றாடப் பணியாக மாறியது. ஒருநாள், அவள் பொழுது புலர்ந்தது தெரியாமல் ஏதோ அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டாள். கண் விழித்ததும் கண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. குளிக்காமலேயே அடுப்படிக்கு சென்று, பால் காய்ச்ச ஆயத்தமானாள். அப்போது, கருமாபாய்க்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் தற்செயலாக வந்தார். அவள் குளிக்காமல் அடுப்படியில் பால் காய்ச்சுவதைப் பார்த்து, பக்திக்கு ஆச்சாரம் மிக முக்கியம் என்பது தெரியாதா? காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே! என்றார்.

ஐயா! எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம்! குழந்தைக்குப் பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம். குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர்ச்சகர் புறப்பட்டார். தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார். 

புரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவி (பிமலா தேவி) சக்தி பீட சன்னதி உள்ளது. இது சார் சக்தி தாம்கள் என்றும் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். புரி செல்வோர் தவறாமல் இந்த தேவியையும் வழிபடுகிறார்கள்.

ஆதி சங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன பீடம் புரியில் அமைந்துள்ளது.

புவனேசுவரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் புரியில் உள்ள இவ்வாலயத்திற்குச் செல்ல மும்பைதில்லிகொல்கத்தாசென்னைபெங்களூருஅகமதாபாத்ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தொடருந்து வசதிகள் உள்ளன.

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஐந்தாம் பாகம் —ஸ்ரீ பூரி ஜெகந்நாத க்ஷேத்ர மஹிமை —

வர்ஷாணாம் பாரத சிரேஷ்ட தேஸாநாம் த்கால ஸ்ம்ருத

உத்கலஸ்ய சமோ தேச நாஸ்தி மஹீ தலே –வர்ஷன்களுக்குள் பாரதமும் தேசங்களில் உதகளமும் -ஒடிஷா -ஒப்பு உயர்வற்றவை –

உத்கல க்ஷேத்ரம் –சங்க க்ஷேத்ரம் –பூரி / பத்ம க்ஷேத்ரம் -கோனாரக் /சக்ர க்ஷேத்ரம் -புவனேஸ்வரம் /கதா க்ஷேத்ரம் -ஜாஜபுரா -ஆகியவற்றை உள்ளடக்கியது
இவை அனைத்தும் -100-சதுரமைல் பரப்பு -/பூரி -5-க்ரோசங்கள் -10-சதுரமைல் பரப்பு /
-6-சதுரமைல் கடலுக்குள்ளும் -4-சதுரமைல் நிலத்திலும் சக்ர வடிவத்தில் உள்ளது –20-கிலோ மீட்டர் சுற்றளவு –
சங்கம் தோன்றிய நாள் -மார்கழி தேய்பிறை பஞ்சமி -அன்று வளம் வருவது மரபு –
பாத்ம ப்ரஹ்ம ஸ்கந்த புராணங்கள் இதில் மஹாத்ம்யம் கூறும் –

சார்தாம் –ஸ்ரீ பத்ரீ/ஸ்ரீ பூரி/ ஸ்ரீரங்கம்/ஸ்ரீ த்வாராகா /நான்கு எல்லைகளில் -உள்ள புண்ய ஷேத்ரங்கள் /பரம பாவனம் இங்கு யாத்திரை செல்வது
ஸ்ரீ மன் நாராயணன் விடியற்காலையில் ஸ்ரீ பதரியில் நீராடி -ஸ்ரீ த்வாராகாவில் திருவஸ்த்ரம் தரித்து /ஸ்ரீ புரியில் திரு அமுது செய்து திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளுகிறார் –
ஸ்ரீ பூரி -பல பெயர்களுடன் விளங்குகின்றது –
1–ஸ்ரீ க்ஷேத்ரம் –ஸ்ரீ மஹா லஷ்மியின் கேள்வன் ஸ்ரீ புருஷோத்தமன் உறையும் தேசம் –
2–சங்க க்ஷேத்ரம் -சங்க வடிவில் இருப்பதால்
3—புருஷோத்தம க்ஷேத்ரம் -அபுருஷன் -அசேதனங்கள்-/புருஷன் பத்த -கட்டுண்ட ஜீவர்கள் /உத்புருஷன் -முக்த ஜீவர்கள் /உத்தர புருஷன் நித்ய ஸூ ரிகள்/
இவர்களை விட வ்யாவருத்தமானவன் புருஷோத்தமன் உத்தம புருஷன் -ஸ்ரீ கீதை -15-புருஷோத்தம வித்யை விளக்கும் –
4–நீலாஸலம் -நீலமலையில் உள்ளபடியால் இப்பெயர் -இதுவே புராதானப் பெயர்
5–பூஸ்வர்கம்–ஸ்வர்க்கம் போலெ மிதமான தட்ப வெப்பமும் இன்பமும் இங்கு எப்போதும் இருக்கிறபடியால் பூ லோக ஸ்வர்க்கம் –
6—நரஸிம்ஹ க்ஷேத்ரம் -இத் திருக் கோயில் கட்டிய பின்பு ப்ரஹ்மா ஒரு யாகம் செய்ய ஸ்ரீ நரஸிம்ஹர் உக்ர வடிவுடன் தோன்றி பின்பு சாந்தம் அடைந்ததால் இப்பெயர் –

ஸ்தல புராணம் –
க்ருத யுகத்தில் இந்த்ரத்யும்னன் என்னும் அரசன் — அவந்தி நகரை தலைநகரமாக கொண்ட மலேயா தேச அரசன் -தனது குல குருவினிடம்
பகவானை நேருக்கு நேர் தரிசிக்கும் பெருமையையுடைய புண்ய க்ஷேத்ரம் கண்டுபிடித்து கூற பிரார்த்திக்க -குருவும் ஷேத்ராடனம் போய்வரும் யாத்ரீகர்கள் இடம் வினவ
அதில் ஒருவர் -நான் அனைத்து புண்ய ஷேத்ரங்களையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன் –
பாரத வர்ஷத்தில் உத்கல-ஒடிஷா தேசத்தில் கடலுக்கு வடக்கே இருப்பது புருஷோத்தம க்ஷேத்ரம் -அங்கு அடர்ந்த கானகத்தின் நடுவே நீலமலை உள்ளது –
அங்கு இருக்கும் கல்பவிடம் என்னும் ஆலமரத்தின் மேற்கே ரோஹிணி குண்டம் புண்ய தீர்த்தம் உள்ளது -அதின் கிழக்கே ஒளிவிடும் நீல மணியால் ஆன
ஸ்ரீ வாசுதேவர் கோயில் கொண்டுள்ளார் -தீர்த்தத்துக்கு மேற்கே சைபர் தீபக் என்னும் ஆஸ்ரமத்தில் இருந்து சற்று தொலைவில் ஜகந்நாதர் கோயில் கொண்டுள்ளார்
ஒரு முழு ஆண்டு கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றேன் -மன்னா தங்கள் அங்கு சென்றால் பகவானை நேரே தரிசிக்கலாம் -என்று கூறி மறைந்தார் –
அரசன் குலகுருவிடம் நீலாசலம் சென்று ஜெகந்நாதனை தரிசித்து மோக்ஷம் பெற உதவ வேண்ட –
குருவும் தன தம்பி வித்யாபதியை முதலில் அங்கு சென்று விபரம் அறிந்து வராகி சொன்னார் –
வித்யாபதியும் விரைவில் மஹா நதியை அடைந்து அனுஷ்டானங்களை முடித்து ஏகாம்பர கானனம் என்ற புவனேஸ்வரத்தை தாண்டி
நீலாத்ரியைக் கண்டு -மலை உச்சியில் கல்பவடத்தை தரிசித்தார் -இரவாகிவிட்ட படியால் இருட்டில் அடர்ந்த காட்டில் தங்கினார் –
சிலரின் குரல் கேட்டு தொடர்ந்து சென்ற பொது ஸபர் தீபக் –மலைவாசி -ஆஸ்ரமத்தை அடைந்தார் -அங்கு இருந்த விச்வா வசூ-இவரை வரவேற்று பிரசாதம் அளித்தார் –
இந்த்ரத்யும்னன் இங்கு வந்து தங்குவார் என்று கோபி பட்டு இருக்கிறேன் -போவோம் வாரும் என்று சொல்லி கூட்டிப் போக பாதை குறுகி முள் நிறைந்து இருக்க
விடியலில் புண்யமான ரோஹிணி குண்டத்தை தரிசித்தனர் -பின் கல்பவடத்தை வணங்கி இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள தோப்பின் உள்ளே சென்று பேர் ஒளியுடன் உள்ள
பகவானை வியந்து வணங்கினார் -பின் வேகமாக மலை இரங்கி ஆஸ்ரமத்தை அடைந்து விச்வாவசூ அளித்த அமானுஷ்யமான சுவை கொண்ட மஹா பிரசாதத்தை உண்டார் –
இந்திரன் சமைத்து ஜெகந்நாதனை ஆராதித்து சேஷமான பிரசாதம் -இதை உண்டால் பாபங்கள் எல்லாம் தொலையும்-என்று ஜெகந்நாதனின் பிரசாத பெருமையை உரைக்க
வித்யாபதி -எங்கள் மன்னர் இங்கு வந்து நீல மாதவனை தரிசித்து ஒரு பெரிய கோயிலை எழுப்பி சிறப்பான பூஜை முறைகளையும் ஏற்படுத்துவார் -என்றார் –
ஆனால் விச்வாவசூ -மன்னார் வருவார் -ஆனால் இப்போது இருக்கும் பெருமான் அவர் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து விடுவார் -மன்னர் உபவாசம் இருக்க
பகவான் வேறு மர உருவத்தில் தோன்றி ப்ரஹ்மாவால் ஸ்தாபிக்கப் பட்டு பின் நெடும் காலம் காட்சி கொடுப்பார் -ஆனால் இவற்றை மன்னன் இடம் அறிவிக்க வேண்டாம் என்றார் –

வித்யாபதியும் விடை பெற்று மீளவும் அவந்தி புரியை அடைந்து பிரசாதத்தை மன்னனுக்கு கொடுக்க உடனே அங்கு செல்ல விருப்பம் கொண்டான்
தெய்வ சங்கல்பத்தால் நாரத ரிஷி அங்கு வந்து மன்னனின் விருப்பம் ஈடேறும் என்று ஆசீர்வதித்தார் -ஜ்யேஷ்ட மாத பஞ்சமி திதி அன்று
நாரதர் ராணி பிரஜைகள் புடை சூழ தேரில் புறப்பட்டு மஹா நதி கரையை அடைந்து இருக்க உத்கல மன்னன் காண வர -இருவரும் ஒருவரை ஒருவர் நமஸ்கரிக்க
சூறாவளியால் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டதை தெரிவிக்க -நாரதர் அனைத்தும் ப்ரஹ்மா கூறியபடியே நடக்கிறது –
பகவான் நான்கு உருவங்களோடு உனக்குத் தோன்றுவார் -நல்லதே நடக்கும் -என்று சொல்லி நீலாசலத்தை அனைவரும் அடைய
உக்ரமான நரஸிம்ஹ விக்ரஹத்தை கண்டனர் -நீல மாதவன் மண்ணால் மூடப் பட்டு இருப்பதையும் கண்டனர் -நரசிம்ஹ பெருமானை மேற்கு முகமாக எழுந்து அருள பண்ணி
யாக சாலை அமைத்து ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்ய
மன்னன் தியானத்தால் – -ஸ்வேத த்வீபத்தை கண்டு -அது ஸ்படிகக் கல்லால் ஆக்கப்பட்டு பாற் கடலால் சோள பட்டுள்ளதை கண்டான்
அங்கு ஆதிசேஷ பீடத்தில் ஸ்ரீ மன் நாராயணன் சதுர்புஜனாய் எழுந்து அருளி இருந்தான் -மன்னன் இந்த கனவை கூற நாரதர் –
பெருமாள் எழுந்து அருளும் தருணம் நெருங்கி விட்டது -அவர் தாரு-உரு விடுக்க இருக்கிறார் -கடற்கரைக்கு செல்வோம்-என்றார்
கிழக்கு கடலில் ஒளிவிடும் ஒரு மரம் உருவாக்கி மிதந்து வர -அவ்விடம் சக்ர தீர்த்தம் -எனப்படுகிறது -அதை ராஜா ராணி பக்தியுடன் பெற்றுக் கொண்டனர்
அசரீரி வாக்கு -இதை வஸ்த்ரத்தில் சுற்றி வையும் -ஒரு தச்சன் வந்து செதுக்குவார் -யாரும் உள்ளே செல்லக் கூடாது –
செதுக்கும் ஒலி வெளியில் கேட்க்காதபடி வாத்தியங்கள் முழங்க வேண்டும் -என்று சொல்ல
அரசனும் அதன் படியே செய்ய -தச்சன் வந்து செதுக்க -15-நாட்கள் கழிய ஒலி நிற்க -ராணி குண்டீஸா கதவைத் திறந்து பார்க்க விரும்ப அரசன் தடுத்தும் கேளாமல்
ராணி அறையைத் திறக்க ஆணை இட-திறந்த பொது தச்சன் அங்கு இல்லை -விக்ரஹங்கள் பாதி நிலையில் இருக்க -அசரீரி வாக்கியம் –
இந்த எளிய நிலையிலேயே தர்சனம் கொடுப்பார் என்று கூற -அன்று முதல் ஜெகந்நாதப் பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார் –

ஸ்ரீ புருஷோத்தமன் இவ்வுருவத்தில் இருக்கும் ரஹஸ்யம் –
கண்ணன் ஸ்ரீ மத் துவாரகையில் அஷ்ட மஹிஷிகளுடன் ஆனந்தமாக ராஜ்ஜியம் ஆண்ட போதும் -கோகுல பெண்டிர்களையே திரு உள்ளத்தில் நிறைந்து இருக்க
அஷ்ட மஹிஷிகளும் ரோஹிணி தேவியை வினவ -ரசமான லீலைகளே காரணம் -என்று சொல்ல அவற்றை மஹிஷிகள் கேட்க விருப்பம் கொள்ள
ரோஹிணி மாதா -கூறுகிறேன் ஆனால் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கோள் -என்றார் –
காவலுக்கு ஸ்ரீ ஸூபத்ரா தேவியை நிறுத்தி விட்டு
அனைவரும் கதை கேட்டு லயித்து இருக்க
அருகில் இருவர் வந்து நிற்பதை உணராமல் இருக்க -கதை கேட்டு மூவரும் மெய் மறந்து கை கால்கள் சுருங்கி விழிகள் விரிய நின்று கொண்டு இருக்க
நாரதர் அந்த சேவையைக் கண்டு ஆனந்த கூத்தாட -மூவரும் உணர்ந்து இயல்வு நிலையை அடைய முயல நாரதர் தடுத்து
தேவர்ர்ர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையை தரிசித்தால் பக்தர்கள் பாபங்கள் தொலைந்து முக்தி அடைவார்கள் –
இந்த எளிய திருக் கோலத்துடன் கோயில் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்திக்க
அதன் படியே பத்துடை அடியவர்க்கு எளியனான எம்பெருமான் இங்கே சேவை சாதித்து அருளுகிறார் –

கடைத் தலை சீய்த்த அரசன் –
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே–ரத்த யாத்திரைக்கு முன் பெருக்கிய அத்தேசத்து அரசன் புருஷோத்தமனுக்கு கல்யாணமே நடந்த ஐதீகம் –
தங்கத் துடைப்பத்தால் பெருக்குவது மரபு –காஞ்சிபுரம் சென்று ஸ்ரீ வராத ராஜனை தரிசித்த மன்னன் காஞ்சி மன்னன் மகளைக் கண்டு மையல் கொண்டான் –
இரு மன்னர்களும் சம்மதிக்க புருஷோத்தமன் ஸ்ரீ பூரி திரும்ப -முறையாக பேச காஞ்சி மன்னன் மந்திரியை அனுப்ப
அன்று ரத்த யாத்ரையாய் இருக்க -மன்னன் துப்புரவு செய்ய பொறுக்காத மந்திரி திரும்பி மன்னன் இடம் கூற பெண் கொடுப்பதில் தடை ஏற்பட்டது –
இதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதி பூரி மன்னன் காஞ்சீ நகரின் மேல் படை எடுத்தான் -ஆனால் அவன் படை சிறியது –
இரு மன்னர்களும் பூரி படை தோற்றால் ஜகந்நாதர் பலபத்ரர் ஸூ பத்ரா மற்றும் ஸூ தர்சனர் விக்ரகங்களை காஞ்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும்
காஞ்சி படை தோற்றால் அவர்கள் ஆராதிக்கும் விநாயகர் விக்ரஹத்தை புரிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் சபதம் செய்தனர் –
புருஷோத்தமன் ஜகந்நாதர் இடம் தேவரீரது அருளால் அடியேனது சிறிய படை வெற்றி பெற வேணும் -என்று பிரார்த்தித்தான் –
அரசன் புறப்பட்ட போது ஜகந்நாதர் கருப்புப் பிறவியிலும் பலராமர் வெள்ளைப் பிறவியிலும் ஆரோஹணித்து -இரு வீரர்கள் போல் காஞ்சிக்கு சென்று
வழியில் ஒரு கிராமத்தில் தாக்கத்துக்காக ஒரு முதிய இடைப்பெண்ணிடம் மோர் வாங்கிக் குடித்தனர் –
கையில் காசு இல்லாமல் மோதிரத்தை காட்டி பணம் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள் –
புருஷோத்தமன் படையோடு அவ்வழியே வர முதியவள் கொடுத்த மோதிரத்தைக் கண்டு வியந்து உருகினான்-
இரு வீரர்கள் உதவியால் வெற்றி பெட்ரா மன்னன் காஞ்சி இளவரசியை சிறையெடுத்து வந்து புரியில் துப்புரவு செய்யும் ஒருவனுக்கு மனம் முடிக்க சொன்னான் –
பக்தரான மந்திரி இளவரசியிடம் தனிமையில் பேசி -அவளின் பக்தியையும் மன்னனிடம் அவள் கொண்ட காதலையும் அறிந்து
அவர்களை சேர்த்து வைக்கும் தருணத்துக்கு காத்து இருந்து அடுத்த ரத்த யாத்திரையின் போது இளவரசியை மணக்க கோலத்தில் தயார் செய்து
மன்னன் தங்கத் துடைப்பத்தால் பெருக்க -மன்னா இவளுக்கு ஏற்ற பேருக்கும் மணமகனைத் தேடினேன் -அப்படிப்பட்டவர் நீர் ஒருவரே -எனக் கண்டு கொண்டேன் –
ஆகவே ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள் முன் நீரே மனம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள –
அரசனும் மந்திரியின் சமயோசித புத்தியைப் பாராட்டி கல்யாணம் செய்து கொண்டான் –
ஆகவே கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினையும் களையலாம் -கல்யாணமும் செய்து கொள்ளலாம் –

புண்ய தீர்த்தங்கள் —
1–மஹா நதி -கிழக்கு சமுத்திரம் -ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ கீதையில் ஸரஸாம் அஸ்மி சாகரம் -என்கிறான் –
அதன்படி இங்குள்ள கிழக்கு கடலே சக்ர தீர்த்தம் என்று கொண்டாடப் படுகிறது –
இங்கு தான் தாரு ப்ரஹ்மம் -சக்ர முத்திரையோடு தோன்றினார்
க்ருத யுகத்தில் பார்கவி என்னும் நதி கடலில் கலக்கும் இவ்விடத்தில் தான் பாங்கி முஹானா -பங்குனி சுக்ல துவாதசி அன்று தாரு ப்ரஹ்மம் தோன்றினார்
கடலில் இவ்விடத்தில் தான் இந்த்ரத்யும்னன் -ராஜா ராணி தாரு ப்ரஹ்மத்தைப் பெற்று பெருமானின் பிம்பத்தை வடிவு அமைக்க வேண்டினார்
கங்கா யமுனா கோதாவரி காவேரி தாமிரபரணி ஆகியவை இக்கடலிலே கலக்கின்றன –
2—இந்த்ரத்யும்ன சரோவரம் –இந்த்ரத்யும்ன மன்னன் பகவத் பிரதிஷ்டை செய்யும் போது ஆயிரம் பசுக்களை தானம் செய்தான் –
அவற்றின் குளம்பு பட்டு பள்ளம் ஏற்பட்டு மன்னம் தானம் கொடுத்த போது விழுந்த தீர்த்தத்தால் அது நிரம்பி இந்தக் குளம் ஏற்பட்டது
3–மார்க்கண்டேய சரோவரம் -ரிஷியின் வேண்டுகோளின் படி பகவான் பிரளய கடலில் ஆலிலைத் தளிரில் சயனித்து இருப்பதைக் காட்டி அருள
அன்று முதல் அந்த தீர்த்தத்தின் கரையிலேயே ரிஷி தவம் செய்து வந்தார் –
4—ஸ்வேத கங்கா –இங்கு ஸ்வேதா மாதவன் மற்றும் மத்ஸ்ய மூர்த்தியின் கோயில் உள்ளது -இது த்ரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத மன்னனால் தோற்றுவிக்கப் பட்டது –
5—ரோஹிணி குண்டம் -இது கோயிலுக்கு உள்ளே உள்ளது -கடந்த பிரளயத்தின் சிறிதளவு தீர்த்தம் இங்கு உள்ளது -அடுத்த பிரளயமும் இந்த தீர்த்தத்தில் இருந்தே உருவாகுமாம்
ப்ரஹ்மா இங்கே வந்த போது ஒரு காக்கை இதில் விழுந்து நான்கு கைகளோடு விஷ்ணு ஸ்வரூபம் பெற்று முக்தி அடைந்தத்தைக் கண்டார் –

ஜெகன்நாத் பூரி கோயிலின் அமைப்பு
இப்போது உள்ள கோயில் சோட கங்க தேவனால் கட்ட ஆரம்பிக்கப் பட்டு அநங்க பீமா தேவனால் -1200-ஆண்டு முடிக்கப் பட்டது
நில மட்டத்தில் இருந்து -214-அடி உயரத்தில் நீலாசலம் மலையில் உள்ள திருக் கோயில் –
-10.7-ஏக்கர் நிலப்பரப்பில் -20-அடி உயரமுள்ள செவ்வக வடிவில் -15-நூற்றாண்டில் கட்டப் பட்டு இரண்டு நீண்ட மதிள் சுவர்களால் சூழப் பட்டுள்ளது –
வெளி மதிள் -மற்றும் பிரகாரத்துக்கு மேக நந்த ப்ராசீரம் -665-.-640-அடி /உள் சுற்றுக்கு கூர்மபேதம் -420-.-315-அடி –
பிரதான கிழக்கு வாசல் -சிம்ம சிங்கம் துவாரம் / தெற்கு வாசல் அஸ்வ துவாரம் /மேற்கு வாசல் வ்யாக்ர துவாரம் /வடக்கு வாசல் ஹஸ்தி துவாரம் /
அந்த அந்த வாசல்களில் அவ்வவற்றின் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன
கிழக்கு வாசலுக்கு வெளியே -36-அடி உயர அருணா ஸ்தம்பம் உள்ளது –
18-நூற்றாண்டில் கோனாராக்கில் இருந்து கொண்டு வந்து பிரதிஷடை செய்யப்பட இதன் உச்சியில் ஸூ ர்யனின் தேரோட்டியாக அருணன் அமர்ந்துள்ளார்
இத் திருக் கோயில் நான்கு பகுதிகளாக உள்ளது
1–போக மண்டபம் -பிரசாதம் கண்டு அருள பண்ணும் பெரிய மண்டபம் -60-/.-57-அடி -இதில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் அழகான சித்திரங்களாக வரைய பட்டுள்ளன
2–நட மண்டபம் -பெருமாளை உகப்பிக்க இசை நாட்டியம் நடக்கும் -70-/67-அடி மண்டபம்
3–ஜெகன் மோஹன மண்டபம் -முக சாலா –இங்கு தான் பக்தர்கள் நின்று கொண்டு தரிசிக்கும் இடம் -இதில் கருட ஸ்தம்பம் உள்ளது –
4–விமான மண்டபம் -இதுவே கர்ப்பகிரகம் -ரத்ன சிம்ஹாசனத்தில் -16–13–4-அடி / பலதேவர் -6-அடி உயரம் வெள்ளை நிறம்
ஸூபத்ரா -4-அடி உயரம் மஞ்சள் நிறம் / ஜகந்நாதர் -5-அடி உயரம் கருப்பு நிறம் / ஸூ தர்சனர் லஷ்மீ நீல மாதவர் சரஸ்வதி ஆகியோர் எழுந்து அருளி உள்ளனர்
குறிப்பிட்ட நேரத்தில் ரத்ன வேதிகையில் ஏறி இவ்வனைவரையும் வலம் வரலாம் –
திருக் கோயிலின் கைங்கர்ய பூஜாரிகள் –சுமார் -1000-பேர் உள்ளனர் -36-வகையான கைங்கர்யங்களை செய்கின்றனர் –

திருக் கோயிலுக்குள் இருக்கும் மற்ற தரிசன ஸ்தலங்கள்
1–பைசா பஹாசா -கிழக்கு வாசலில் இருந்து உள்ளே எரிச் செல்லும் -22-படிகள் பக்தர்களின் பாத தூளிபட்டுப் புனிதமானது –
யமதர்மராஜனும் கூட சாஷ்டாங்கமாக பிராணாயாமம் செய்யும் பெருமை பெற்றது
2–கல்பவடம்-அபீஷ்டங்களை வழங்கும் ஆலமரம்
3–முத்தி மண்டபம் -வேத விற்பன்னர்களின் த்யான மண்டபம் -16-கால் மண்டபம் -ப்ரஹ்ம சபா என்றும் வழங்கப்படும்
4–நரஸிம்ஹர் சன்னதி -முத்தி மண்டபத்துக்கு அருகே உள்ளது –
5–ஸ்ரீ தேவி பூ தேவி சந்நிதிகள் -இங்கு இருக்கும் மூலிகைச் சாற்றினால் வரைய பெட்ரா சித்திரங்களில் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் பகவத் ராமானுஜர் ஆகியோர் உள்ளனர்
6–கோய்லா மண்டபம் –ஸ்ரீ ஜெகந்நாதராது திருமேனி -12-ஆண்டுகளுக்கு ஒரு முறை புது தருவாள் செய்யப்படும் –
இந்த உத்சவம் நவ கலேவரம் எனப்படும் -பழைய திருமேனி இவ்விடத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படும் –
7–ஆனந்த பஜார் -மஹா பிரசாதம் விநியோகிக்கப் படும் இடம் –

திருக் கோயிலுக்கு வெளியே இருக்கும் சந்நிதிகள் –
1–குண்டீஸா மந்திர -ராணி குண்டீஸாவின் பெயரால் -படா தாண்டா சாலையின் -க்ராண்ட் ரோட் –
ஒரு கோடியில் ஸ்ரீ ஜகந்நாதர் திருக் கோயிலும் மறு முனையில் குண்டீஸா மந்திரம் உள்ளது -ஆசியாவிலேயே மிகப் பெரிய சாலை இது தான் –
இந்த கோயிலில் தான் முதலில் தாரு ப்ரஹ்மத்தில் இருந்து விக்ரஹங்கள் செதுக்கப் பட்டன -ஆகவே பகவானின் பிறப்பிடம் இதுவே –
இவ்வளாகத்தில் தான் அரசன் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தார் -ரத்த உத்சவத்தின் போது ஸ்ரீ ஜகன்னாநாதர் பலதேவர் ஸூ பத்ரா ஸ்ரீ ஸூ தர்சனர் ஆகியோர்
இங்கு தான் எழுந்து அருளி இருப்பர் –
2–யஜ்ஞ நரஸிம்ஹ தேவர் -குண்டீஸா மந்தரில் இருந்து இந்த்ரத்யும்ன சரோவர் போகும் வழியில் மஹாவேதி என்னும் இடத்தில் எழுந்து அருளி உள்ளார்
இங்கு தான் இந்த்ரத்யும்னன் மன்னன் இவரை பிரதிஷ்டை செய்து ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பின்னரே ஜகந்நாதர் தோன்றினார் –
இவருடைய திருமுகம் முன்னர் தரிசிக்க சாந்தமாகவும் மற்றொரு புறம் உக்ரமாகவும் இருக்கும் –
3–அலர்நாத் -20-மில் தூரத்தில் உள்ளது -ஆலால நாதன் -பெயருடன் -இவரே ஆழ்வார் நாதன் -ஆலங்கால் பட்டோர்க்கு ஆட்படுபவர்
ஸ்ரீ கேதன் என்பவர் தனது மகனான மது என்னும் சிறுவனிடம் கொதிக்கும் சக்கரைப் பொங்கலைத் தந்து அதனை உண்மையான அன்புடன்
பெருமானுக்கு அமுது செய்யச் சொல்ல அந்த சிறுவனும் செய்ய பெருமானின் திரு விரல்கள் சிவந்து இருப்பதை இன்றும் காணலாம்
இங்கு சைதன்ய பிரபு தரிசிக்க வந்த போது ஆச்ரித பாரதந்தர்யத்தை கேட்டு உருகி மயங்கி விழுந்து கிடந்த சுவடே இன்றும் காணலாம் –
4–சாக்ஷி கோபால் -15-மைல் தொலைவில் உள்ள சந்நிதி -கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாபரால் பிரதிஷ்டை -வ்ருந்தாவனத்தில் உள்ள மத மோஹனர் போலே-
ஐவரும் முதலில் பிரதான கோயிலில் இருக்க அனைத்து பிரசாதங்களை முன்னமேயே உண்டு முடிக்க -லீலா ரசமாக பிணக்கு ஏற்பட
பின்பு ஒரு முடிவுக்கு வந்து வெளியே கோயில் கொண்டுள்ளதாக ஐதிஹ்யம்
ஒரு அந்த இளைஞ்சனுக்கு பெண் கொடுக்க இசைந்த முதியவர் ஒருவர் பின்பு பானா வ்யவஹாரத்தால் மறுக்க அப்போது தன பக்தனுக்காக மக்கள் மன்றத்தில் சாக்ஷி சொல்லி
கல்யாணத்தை நடத்தி வைத்த படியால் அன்று முதல் சாக்ஷி கோபால் என்று அழைக்கப் பட்டதாக வரலாறு-

ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் –இங்கே தரிசிக்க வர -இங்குள்ள பூஜா முறைகள் ஆகமத்தின் படி இல்லாததைக் கண்டு சரிப்படுத்த எண்ண
ஸ்ரீ ஜகந்நாதர் இங்கு தொண்டு புரியும் பூஜாரிகளை வீட்டுக் கொடுக்க திரு உள்ளம் இல்லாமல் அவர் அறியா வண்ணம் ஸ்ரீ கூர்மத்தில் கொண்டு போய் விட்டார்
ஆச்ரித பக்ஷபாதத்தை உணர்ந்து பல்லாண்டு பாடினார் -அவர் தங்கிய மடம் மற்றும் எம்பார் மேடம் ஆகியவை உள்ளன –
இங்கு உள்ள சன்யாசிகளுக்கு இத் திருக் கோயிலில் பரம்பரையாகப் பெறப்பட்ட கைங்கர்யமும் உள்ளது –

ஸ்ரீ ஜெகந்நாதரின் மஹா பிரசாத மஹிமை –
முதலில் பிரசாதம் யாருக்குமே கிடைக்காமல் இருக்க -ஸ்ரீ மஹா லஷ்மியிடம் நாரதர் பிரார்த்திக்க -பிரசாதம் பெற்று ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று கூத்தாடினார் –
இதனைக் கண்டா பரமசிவனும் வேண்டி பெற்று ஆனந்த நர்த்தனம் ஆட மேருவும் கைலாசமும் நடுங்கின –
பார்வதி தேவி இனி உலகில் ஸ்ரீ ஜகந்நாதர் பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்வேன் என்று சபதம் செய்ய அவள் பக்தியை பாராட்டி
இனி அன்ன ப்ரஹ்மமாகவே இருப்பேன் என்று ஸ்ரீ ஜகந்நாதர் அருளினார் –
பிரசாதம் உண்பதாலேயே பாபங்கள் அனைத்தும் விலகி நன்மைகளே விளையும் –
இங்கே அமர்ந்தே உண்ண வேண்டும் -விநியோகத்துக்கு கரண்டிகள் உபயோகிக்க கூடாது -இலைகளை உபயோகிக்கலாம் –
உண்டு முடித்து முதல் வாய் கொப்பளித்து துப்பாமல் விழுங்க வேண்டும் -அடுத்தவாய் மண்ணில் துப்ப வேண்டும் -சாப்பிட்ட இடத்தை கைகளால் சுத்தம் செய்ய வேண்டும் –

திரு மடப்பள்ளி மஹாத்ம்யம்
உலகிலேயே மிகப் பெரிய சமையல் கூடம் -தென் கிழக்கு மூலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் திரு மடப் பள்ளி -752-அடுப்புக்கள் ஒவ் ஒன்றும் -3–4-அடி அளவு கொண்டவை
சட்டிப்பானைகள் தவிர வேறே யந்திரமோ உலகமோ இல்லை
20-படிக்கட்டுக்கள் இறங்கி கேணியில் இருந்து தாம்புக் கயிற்றால் கைகளால் இழுக்கப் பட்ட சுத்தமான தண்ணீரை -30-தொண்டர்கள் இடைவிடாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்
மிளகாய் வெங்காயம் பூண்டு காரட் உருளை தக்காளி போன்ற நிஷித்தமான பல காய்கறிகள் உபயோகப் படுவதில்லை
-400-கைங்கர்ய பரர்கள் -மேலும் -400-உதவியாளர்கள் –
ஒரு நாளைக்கு -72-குவிண்டல் –(சுமார் -5000 படி பிரசாதம் )/ விசேஷ நாட்களில் -92-குவிண்டல் –
-60-கைங்கர்ய பரர்கள் தொழில் சுமந்து பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள்
ஒவ் ஒரு நாளும் -56-வகையான பிரசாதங்கள் -சப்பன் போக் -செய்யப் படுகின்றன /-9-வகை சித்தரான்னம் -14-வகை கறியமுது-9-வகை பால் பாயாசம்
-11-வகை இனிப்புக்கள் -13-வகை திருப்பி பணியாரங்கள்
காலை -8-மணி கோபால் வல்லப போகம்
காலை -10-மணி சகல போகம்
பகல் -11-மணி -போக மண்டப விநியோக போகம்
மதியம் -12–30-மத்யாஹ்ன போகம்
மாலை -7-மணி சயன போகம் –
இரவு -11-15-மஹா சிருங்கார போகம் –

தினம் நிகழும் கொடி ஏற்றம்
விமானம் -214-அடி உயரம் –அதன் மேலே நீல சக்ரம் ஸ்ரீ ஸூ தரிசன சக்ரம் பொருத்தப் பட்டுள்ளது -எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது -36-அடி சுற்றளவு கொண்டது
இதில் மேல் மஞ்சள் சிகப்பு வெள்ளை ஆகிய நிறம் கொண்ட கொடிகள் தினமும் மாலை-6–30- மணி அளவில் ஏற்றப்படுகின்றன
கருட சேவகர்கள் என்று அலைக்கும் தொண்டர்களில் ஒருவர் அனைத்து கொடிகளையும் சுமந்து -15-நிமிடங்களில் சர சர என ஏறி -10-நிமிடங்களில் கொடிகளை கட்டுகிறார்கள்
இப்பரம்பரையில் வந்தவர்களுக்கு கருட பகவானின் அருளால் -8-வயது முதலே இத்தொண்டில் பழக்கம் ஏற்படுகிறது –

நவ கலேவர -புது திருமேனி உத்சவம் –
எந்த ஆண்டில் அதிக மாசமாய் ஆணி மாதத்தில் இரண்டு பவ்ர்ணமிகள் வருமோ அந்த ஆண்டு இந்த உத்சவத்துக்கு என்றே நியமனம் பெட்ரா பூஜாரிகள்
சுமார் -40-மில் தூரத்தில் ப்ராஸீ நதிக் கரையில் இருக்கும் காகாத்புர் எனும் உரின் காடுகளில் தகுந்த வேப்ப மரங்களைத் தேடுவர்
சில விசேஷ அடையாளங்கள் உடன் இருக்கும் மரத்தை எடுத்து வந்து பூஜித்து அதை கோய்லா வைகுண்டத்தில் இருக்கும் மண்டபத்தில் தச்சர்கள் செதுக்குவார்கள் –
புதுத் திருமேனிகள் உருவானவுடன் அமாவாசை இரவு அவர்களை எழுந்து அருள பண்ணிக்க கொண்டு வந்து கர்ப்பக்கிருகத்தில் உள்ள பழைய திருமேனிகளை அருகே வைப்பர் –
அன்று ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் படும் -பூஜாரிகளில் மூத்தவர் கண்களைக் கட்டிக் கொண்டு கைகளிலும் துணி சுற்றிக் கொண்டு
இடையே நின்று பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரஹ்ம பதார்த்தத்தை எடுத்து புதுத் திரு மேனியில் பொறுத்துவார்
பின்பு பழைய திரு மேனிகள் கோய்லா வைகுண்டத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படுபவர் –
சுமார் நான்கு மாதங்கள் நடக்கும் இந்த உத்சவம் -பரம ரஹஸ்யமாக நடத்தப்படும் -பழைய திருமேனிக்காக தாயாதிகள் -தயிதர்கள் -13-நாட்கள் துக்கம் அனுஷ்ட்டிப்பார் –
கடந்த நவ கலேவர – உத்சவங்கள் நடந்த ஆண்டுகள் –1912-/-1931-/–1950 -/-1969-/-1977-/-1996-ஆகியவை –

ஜகம் புகழும் ரத யாத்திரை –
ராணி குண்டீஸாவின் வேண்டுகோளுக்கு இணங்கி பல்லாயிரம் ஆண்டுகளாக மூன்று மூர்த்திகளும் மூன்று தேர்களில் -2-மைல் பவனி வந்து
குண்டீஸா மந்திர அடைவர் -ஆனி மாதம் பவ்ர்ணமியில் -ஸ்நான பூர்ணிமா தொடங்கி ஆடி மாதம் சுக்ல சதுர்த்தசி அன்று நீலாத்ரியிலே முடியும் இத்தேர் திரு விழா –
ரத யாத்ரா குண்டீஸா யாத்ரா கோஷா யாத்ரா என்று அழைக்கப் படும் –10-திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ வடமதுரை வந்ததை நினைவு கூறும்
தேர்களின் அமைப்பு
மூன்றுமே மரத்தால் கைகளாலேயே செய்யப்பட்டவை -இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாகவே –125-தச்சர்கள் -2188-மறதி துண்டுகள் இணைத்து செய்வர்
ஸ்ரீ ஜகந்நாதர் தேர் -நந்தி கோஷ் என்ற பெயருடன் -7-அடி உயரமுள்ள -16-சக்கரங்கள் -கலைகள் பொருத்தப்பட்ட இதன் உயரம் -45-அடி –
தேர்ச் சீலைகள் வர்ணம் மஞ்சள் –/சங்கிகா ரேஸிகா மோஷிகா மற்றும் த்வாலினி என்ற பெயர்கள் கொண்ட நான்கு குதிரைகள் பூட்டி இருக்கும் அடி நீளம் –
சக்கரங்கள் மன்வந்த்ரங்கள் பொருத்தப்பட்டு -இதன் உயரம் -44-அடி /தேர்ச் சீலைகள் வர்ணம் நீலம்
ருக் யஜுஸ் சாம அதர்வணம் பெயர்களுடன் நான்கு குதிரைகள் -மாதலி தேரோட்டி -வாஸூகி தெற்கை கயிறு
ஸூபத்ராவின் தேரின் பெயர் பத்மத்வஜம் -தேவதாலனம் /-12-சக்கரங்கள் பொருத்தப்பட்டு -மாதங்களின் கணக்கு /உயரம் -43-அடி
தேர்ச் சீலைகள் வர்ணம் சிவப்பு /ப்ரஜ்ஞ்ஞா -அநுபா -கோஷா -அக்ரி -நான்கு குதிரைகள் அர்ஜுனன் தேரோட்டி -ஸ்வர்ண சூடன் தேர்க் கயிறு –
இத்தேரில் ஸ்ரீ ஸூதர்சனரும் எழுந்து அருளி இருப்பர் –

உத்சவத்தில் முக்கிய நாட்கள்
1 -ஆனி பவ்ர்ணமி -ஸ்நான யாத்ரா -தாரு ப்ரஹ்மத்தில் இருந்து ஸ்ரீ ஜகந்நாதர் தோன்றிய நாள் –
இன்று -108-குடம் பன்னீரால் திரு மஞ்சனம் -அதனால் ஜலதோஷம் பிடிக்க அடுத்த -15-நாட்கள் தனிமை -தர்சனம் இல்லை –
2-ஆனி சுக்ல த்விதீயை -முதலில் பலராமர்-அடுத்து ஸூ பத்ரா -கடைசியாக ஜகந்நாதர் -அலங்காரத்துடன் தேரில் எழுந்து அருள்வார்கள்
அரசன் தங்க துடைப்பத்தால் பெருக்க தேர்கள் புறப்பட்டு குண்டீஸா மந்திர் சென்று அடைவர் –
மூர்த்திகள் உள்ளே சென்று அடுத்த ஒன்பது நாள்கள் இங்கேயே எழுந்து அருளி இருப்பர் -பிரசாதங்களை இங்கேயே தளிகை பண்ணப் படும்
3-ஆனி சுக்ல பஞ்சமி -ஹோரா பஞ்சமி –தன்னை விட்டுச் சென்றதற்காகக் கோபம் கொண்ட மஹா லஷ்மீ பிரதான கோயிலில் இருந்து
பல்லக்கில் குண்டீஸா மந்திர் வந்து ஜகந்நாதர் தேரின் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக லீலா ரசம்
4—ஆனி சுக்ல தசமி -உல்டா ரத்தம் –மூர்த்திகள் திரும்ப எழுந்து அருள்வார் –
பிரணய கலகம் -மட்டையடி உத்சவம் -பிரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்து இருப்பர் –
5–ஆனி சுக்ல ஏகாதசி -ஸூனா வேஷ தர்சனம் –ஸ்வர்ண திரு ஆபரணங்கள் மூர்த்திகள் சாத்திக் கொள்வார்கள் –
மூலை மூட்டுக்களில் இருந்து மக்கள் வெள்ளம் பெருகி வருவர்
6—ஆனி சுக்ல துவாதசி -இன்று இரவு பெருமாள் உள்ளே எழுந்து அருள்வார் -வீதியில் தேரில் இருக்கும் போது மட்டும்
பக்தர்கள் அனைவரும் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு தரிசிக்கலாம் –

ஜெய் ஜெகன்நாத் புரி புருஷோத்தம் தாம் கீ ஜெய்
நீலாசல நிவாசாயா நித்யாய பரமாத்மனே ஸூபத்ரா ப்ராண நாதாயா ஜெகந்நாதாய மங்களம்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பத்ராசலம்-ஸ்ரீ சீதா இராமச்சந்திர ஸ்வாமிகள் திருக் கோவில்

July 11, 2022

பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர ஸ்வாமிகள் திருக் கோவில்

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இராமருக்காக அமைக்கப்பட்ட இந்து சமயக் கோவிலாகும். பத்ராச்சலம் நகரத்தில் அமைந்த கோவிலில் மூலவரான இராமருக்கும் அவர் துணைவி சீதைக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டு தோறும் இராமநவமியன்று மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது –

பத்திராசலம் கோவில் 17 நூற்றாண்டில் வாழ்ந்த துறவியும் கீர்த்தனைகளை இயற்றியவருமான பக்த இராமதாஸ் என்ற கஞ்சர்ல கோபண்ணா என்பவருடைய வாழ்க்கையுடன் மிகவும் இணைந்துள்ளது.

கோபண்ணா பத்திராசலத்தில் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியல் வட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். இவர் அரசாங்கக் கருவூலத்தின் பணத்தைப் பயன்படுத்தி இந்தக் கோவிலைக் கட்டினாராம். இதனால் அரசு இவரை கோல்கொண்டா சிறைச்சாலையில் அடைத்து கடுங்காவல் தண்டனை வழங்கியதாம். பத்திராசல இராமர், கோபண்ணா கோவில் கட்ட செலவழித்த பணத்தை தம் தெய்வ சக்தியால் அந்நாட்டை ஆண்ட சுல்தானுக்குத் திரும்பக் கொடுத்தாராம். இதனால் வியப்புற்ற சுல்தான் உடனே கோபண்ணாவை விடுதலை செய்தார். இதைத் தொடர்ந்து கோபண்ணா பத்திராசல இராமதாசர் என்னும் பெயர் பூண்டு தெலுங்கில் பற்பல கீர்த்தனைகளை இராமர் பேர் பாடி தொகுத்தாராம்.

புகழ் பெற்ற இதிகாசமான இராமாயணத்துடன் பத்திராசலமும் விச்யநகரமும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இராமர், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது தங்கியதாகக் கருதப்படும் பர்ணசாலை பத்திராசலத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இன்று பத்திராசல இராமர் கோவில் அமைந்துள்ள இடத்தில் கோதாவரி நதியைக் கடந்ததாக நம்பப்படுகிறது.

புராணங்கள் மேரு மற்றும் மேனகையின் மகனான பத்திரன் என்பவன் இராமரை நோக்கி தவமியற்றியதாகச் சொல்கிறது.

கபீர்தாஸ் என்ற இசுலாமியர் கூட இக்கோவிலுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இக்கோவிலில் நுழைய கபீர்தாசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். அப்போது கோவிலில் இருந்த மூலவர் மற்றும் துணைக் கடவுளர் சிலைகளும் மறைந்து போயினவாம். பின்னர் கபீர்தாசர் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்தவுடன் சிலைகள் மீண்டும் தங்கள் இடத்தில் மீண்டும் தோன்றினவாம்.

பத்திராசலம் உலகிலுள்ள பலநூறு ஆயிரம் பக்தர்களைத் தன வசம் கவர்ந்திழுக்கிறது.

புண்ணிய நதியான கோதாவரி பத்திராசலம் என்னும் இம் மலையைச் சுற்றியவாறு தெற்கு நோக்கிப் பாய்கிறது.

இம்மலை மேரு மற்றும் மேனகாவின் மகனான பத்திரன் பெயரால் பத்திரகிரி என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் வரலாரோ இராமாயணத்துடன் இணைந்துள்ளது. இராமயணத்தில் தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்ட மலை சூழ்ந்த பகுதியில் இராமன், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் அவர்கள் வனவாசத்தை இங்கே நிகழ்த்தியதாகத் தெரிகிறது.

இந்தக் கோவிலுடன் தொடர்புடைய மற்றொரு புராணச் செய்தியில் திருமால் பக்த பத்திரன் என்னும் மலைநாட்டு (அரச) முனிவனின் கடும் தவத்தை மெச்சி அவருக்கு அருளும் நோக்கத்தில் இராமாவதாரம் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வைகுண்ட இராம அவதாரம் நிகழக் காரணமாக வரலாறு நமக்குச் சொல்வது பத்திரன் என்னும் பக்தனின் வேண்டுகோளை ஏற்று திருமால் இராமனாக அவதரித்தார் என்பதாகும்.

கோதாவரி நதிதீரத்தில் தண்டகாரண்யத்தில் பத்திர முனிவர் இராமபிரானின் அருள் வேண்டித் தவமியற்றினார். முனிவர் இராமனை தன உள்ளத்தில் அமரும்படி வேண்டினார். இராமபிரானோ தான் தன துணைவி சீதையைத் தேடிச் செல்வதாகவும், சீதையைக் கண்டு சிறை மீட்டு, இராவணனை தண்டித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் அயோத்தி திரும்பும் வழியில் தன பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார்.

எனினும் இராமாவதாரத்தில் தன பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது போயிற்று. முனிவரும் தன கடும் தவத்தை தொடர்ந்து அச்சுறுத்தினார். இதைத் தொடர்ந்து திருமால் வைகுண்ட இராமனாக அவதரித்தார்.

தன் பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்ற தன துணைகளான இலக்குவ மற்றும் சீதை ஆகியோருடன் சங்கநாதம் ஒலித்தவாறு முனிவர் முன் தோன்றினார். இராமபிரான் தன நான்கு கைகளுடன், வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம், மற்ற இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, சீதையைத் தன இடது மடியிலும், இலக்குவனை வலது மடியிலும் அமர்த்தி இருந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த தெய்வ திருச்சிலைகள் அமர்ந்த இடம் பத்திர முனிவரின் தலைப் பகுதி என்பதால் இந்த மலை பத்திராசலம் என்ற பெயரில் விளங்கித் திகழ்கிறது.

பத்திராசலம் அருகே பத்திரி ரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் 17 ஆம் நூற்றாண்டில் வசித்துவந்த இராம பக்தையான போகல தம்மக்கா என்ற பெண்மணி வைகுண்ட இராமர், சீதா மற்றும் இலக்குவன் சிலைகளைக் கண்டெடுத்தாகச் சொல்கிறார்கள்.

ஒரு இரவில் வைகுண்ட இராமபிரான் இவள் கனவில் தோன்றி முனிவர்களும் தவயோகிகளும் வழிபட்ட என் சிலை பத்திரகிரியில் உள்ளது என்றும், இவற்றை தேடிக் கண்டுபிடித்து பூசை செய்து வர முக்தி அடைவாய்’ என்று வாய் மலர்ந்தருளினார்.

மறு நாளே இப்பெண்மணி இந்த சிலைகளைத் தேடி அலைந்து முடிவில் ஒரு கரையான் புற்றருகில் கண்டுபிடித்தாள்.

புற்றில் உள்ளே இருந்த இச்சிலைக்கு குடம் குடமாய் கோதாவரி நீரால் முழுக்காட்டினாள். புற்று கரைந்து சிலை வெளிப்பட்டது.

அன்று முதல் இவள் தினந்தோறும் சிலைக்குப் பூசை செய்தாள்,

கீழே விழுந்த பணம் பழத்தை எடுத்து தெய்வத்திற்குப் படைத்தாள். பின்னாளில் கிராமத்தார் உதவியுடன் ஒரு மண்டபமும் கட்டினாள்.

பத்திராசலம் கோவிலைக் கட்டியவர் கஞ்சர்ல கோபண்ணா என்ற பக்த இராமதாஸ் ஆவார்.

இவர் பதினேழாம் நூற்றாண்டு (1630 கி.பி) கம்மமேட் வட்டம் நிலகொண்டபள்ளி என்னும் கிராமத்தில் லிங்கன்ன மூர்த்தி மற்றும் காமாம்பா ஆகிய பெற்றோர்களுக்கு மகனாக அவதரித்தார்.

வட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த இவர் தன அலுவலகப் பணிகளைச் செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து வந்தார்.

நவாப்புக்காக செவ்வனே நிலவரிகளை வசூலித்ததோடு இராம நாமத்தை ஓதியும் தன வீட்டில் ஏழைகளுக்கு உணவளித்தும் மகிழ்ந்தார்

ஒரு சமயம் பல்வோஞ்ச பரகானா (palvoncha paragana). என்ற கிராமத்து மக்கள் பத்திராசலத்தில் சிலைகளைக் காணச் (ஜடர) சென்ற செய்தியினைக் கேள்விப்பட்டு தானும் ஆவல் மிகுதியுடன் அங்கு சென்றார். அங்கே கண்ட சிலைகளின் அழகில் மயங்கினார்.

அப்போதே கிராம மக்களிடம் கோவில் கட்டும் திருப்பணிக்காக நிதியுதவி வேண்டினார்.

கிராம மக்கள் அவரிடம் நிலவரியாக வசூலித்த பணத்தை கோவில் கட்டும் பணிக்காகச் செலவு செய்யுமாறும், அறுவடை முடிந்தவுடன் செலவு செய்த பணத்தை திரும்பக் கொடுத்து ஈடு செய்து விடுவதாகவும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கோல்கொண்டா நவாப்பிடம் தேவையான அனுமதி பெறாமல் நிலவரி மூலம் வசூலான ரூபாய் ஆறு லட்சம் பணத்தைச் செலவு செய்து கோவில் திருப்பணிகளை நிறைவு செய்தார்.

கோவில் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில், சுதர்சன சக்கரம் ஒன்றை மூலவர் விமானத்தின் மேல் நிறுவும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெரும் அவதியுற்று உறக்கத்தில் ஆழ்ந்தார். இராமர் அவர் கனவில் தோன்றி அவரை கோதாவரி நதியில் முழுக்குப் போடுமாறும் அங்கே அவருக்கு வேண்டிய விடை கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். மறுநாள் இராமதாசர் நதியில் முங்கிய போது ஒரு சுதர்சன சக்கரத்தை அங்கு கண்டெடுத்தார். இந்த சக்கரம் இந்த நதியில் அவருடைய அன்பிற்குரிய கடவுள் இராமரால் அருளப்பட்டது என்று நம்பினார்.

திருப்பணிகள் முடிந்த தருவாயில் அவருக்குப் பல இன்னல்கள் காத்திருந்தன. நிலவரிப் பணத்தைத் தவறான வழியில் கோவில் கட்டப் பயன்படுத்திய குற்றத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று கோல்கொண்டா சிறையில் சொல்லவொண்ணாத் துன்பங்களை அனுபவித்தார். துன்பங்களைத் தாங்க இயலாத நிலையில், இராமதாசர் இராமபிரானிடம் தம்மைக் காத்தருளும்படி பாடிப் பணிந்தார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள் தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.

குதூப் சாகி அரச வம்சத்தைச் சேர்ந்த கோல்கொண்டா அரசர் தானிஷா, இராமதாசர் சிறை பிடிக்கப்பட்ட பின்பு இராமர் பால் காட்டிய இறை நம்பிக்கையும் பக்தியையும் கண்டு மெய்சிலிர்த்தார். தானும் ஒரு இராம பக்தனாக மாறினார்.

மேலும் ஒரு படி முன்னேறி கோவில் நிர்வாகச் செலவுகளைத் தன அரசே ஏற்கும்படி அமைத்தார்.

இது மட்டுமல்லாமல் இராமனும் இலக்குவனும் ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து இராமதாசர் செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை திரும்பச் செலுத்தி தமது பக்தனைச் சிறையிலிருந்து விடுவித்த நிகழ்வு கண்டு கோல்கொண்டா அரசர் நெகிழ்ந்து போனார். பின்னிரவில் வந்து தம்மை அணுகிய இந்த இரண்டு நபர்களிடம் அரசர் தாம் பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வழங்கினார்.

இதன் பின்னர் இந்த இருவரும் அரசரிடம் பெற்ற இரசீதினை சிறையில் இருந்த இராமதாசரின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள்.

மறுநாள் கண்விழித்த அரசர் இரவு தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இவர்கள் இராமனும் இலக்குவனுமே என்று உணர்ந்தார். உடனே இராமதாசரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். இராமதாசரைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர்.

தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார்.

ஆனால் இராமதாசரோ தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் இறைவனின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் காணலாம்.

இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் ரூபாய் 20000/- அளவிலான வருமானமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இந்த ஆணை குதூப் சாகி அரச வம்சம் ஆண்ட காலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை (pearls) யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இன்றும் கூட ஆந்திர அரசு இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது.

ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.

சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் அபிஜித லக்ன சுப முகூர்தத்தில் சீதாராம கல்யாணம் வைபவமாக கண்ணிற்கு விருந்தாக நடக்கிறது. அர்ச்சகர்களின் வேத மந்திர உச்சாரணையால் நகரம் முழுவதும் பவித்திரச் சூழல் நிலவியது.

இயந்திரங்களில் போட்டு நெல்லை இடிக்காமல் ஒவ்வொரு நெல்லையும் கையால் உரித்து எடுத்து, அந்த அரிசியால் செய்யபட்ட அக்ஷதைகலை மட்டுமே பத்ராசலம் திருக்கோவிலில் நடைபெறும் ஸ்ரீ சீதா ராமன் கல்யாண மகோத்சவத்தில் உபயோகப் படுத்தப் படுகிறது.

18ம் நூட்றாண்டில் பக்த ராமதாசனால் செய்யபட்ட மாங்கல்ய சூத்ரம் தான் இன்றும் சீதாராமர் கலாயன மகோத்சவத்தில் பயன் படுத்தப் படுகிறது

இந்த திருக்கோவிளில் கற்பகிரக கோபுரத்தை ஒரே கிரானைட் கல்லால் செதுக்கபட்டது அதனுடய எடை 36 டன்.

பக்தனுடய கோரிக்கைக்கு இணங்கி ஸ்ரீராமன் இங்கு தரிசனம் அளித்தாராம். அதனால் தான் கற்ப கிரஹம் கோவில் அருகில் பத்ர ரூபத்தில் சிலை பார்க்கலாம். அந்த சிலைக்கு அருகில் காதை ஒட்டி நாம் நின்றால் ஸ்ரீ ராம நாமம் உச்சரிக்கும் ஒலி கேட்கும் என்று சொல்கிறார்கள்.

இராமதாசர் கோவிலில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி (Suprabhata Seva) தொடங்கி இரவு பவலிம்பு சேவை வரை தினசரி நடக்க வேண்டிய நித்ய பூசைகளையும் சேவைகளையும் தொகுத்து கல்வெட்டாக இரண்டு தூண்களில் சிலாசாசனலு என்ற பெயரில் செதுக்கி வைத்துள்ளார். இந்தக் கல்வெட்டுக்கள் தினசரி அலுவல்கள், சடங்குகள் மற்றும் பூசைகள் பற்றி விவரிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பல்வோஞ்ச பரகானாவின் வட்டாட்சியரான தும்ரு நரசிம்ம தாசா மற்றும் இவரின் சக ஊழியரான வரத இராமதாசா ஆகிய இருவரும் குண்டூரிலிருந்து வந்து பத்திராசலம் கோவிலின் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பத்ராசலம்-ஸ்ரீ சீதா இராமச்சந்திர ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குருஷேத்ர மஹாத்ம்யம் –

June 30, 2022

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே சம வேதா யுயுத்சவ
மாமகா பாண்டவஷ் சைவ கிம் குர்வத ஸஞ்சய-

குரு க்ஷேத்ர கமிஷ்யாமி குரு க்ஷேத்ரே வசாம் யஹம்
அப்யகா காசம் ருத் ஸ்ருஜ்ய ஸர்வ பாபே ப்ரமுச்யதே-

ஸ்ரீ குருஷேத்ரத்தை, தர்ம ஷேத்ரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில்அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.

பாண்டவர் – கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.

குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித பிரம்ம சரோவர் குளம் அமைந்துள்ளது

வாமன புராணம் பரத குல அரசன், குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது.[1] யக்ஞம்தானம்தவம்வாய்மைதியாகம், மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் ‘குரு’வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

  • பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
  • கிருஷ்ணா அருங்காட்சியகம், மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம் 
  • பீஷ்ம குண்டம், பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்
  • சோதிசர் அருச்சுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம்
  • பிரம்ம குண்டம், அருச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
  • குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்
  • கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம்
  • பிர்லா மந்திர் 

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

படை அமைப்புகளின் (வியூகம) பெயர்கள்:

  1. நாரை வியூகம்
  2. முதலை வியூகம்
  3. ஆமை வியூகம்
  4. திரிசூலம் வியூகம்
  5. சக்கர வியூகம்
  6. பூத்த தாமரைமலர் வியூகம் என்ற பத்ம வியூகம்
  7. கருட வியூகம்
  8. கடல் அலைகள் போன்ற வியூகம்
  9. வான் மண்டல வியூகம்
  10. வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம்
  11. பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
  12. அசுர வியூகம்
  13. தேவ வியூகம்
  14. ஊசி போன்ற வியூகம்
  15. வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
  16. பிறை சந்திர வடிவ வியூகம்
  17. பூ மாலை போன்ற வியூகம்

 

  1. பாண்டவர்கள் வெற்றி பெற்ற புண்ணிய பூமி.–பகவத் கீதை பிறந்த பெருமையுடைய தலம்.தீர்த்த விசேஷம் உள்ள இடம். இந்தியாவிலேயே பெரிய குளம் / தீர்த்தம் – ‘பிரமசரஸ்’; 11 ஏக்கர் பரப்பில் மிகப் பரந்துள்ளது.இத்தலத்திற்கு தர்மக்ஷேத்ரம், பிரம்ம க்ஷேத்ரம், ஆர்யாவர்த்தம், உத்தரவேதி முதலிய வேறு பெயர்களுண்டு.

    சரஸ்வதி, திருஷத்வதி ஆகிய நதிகளுக்கு இடையில் இத்தலம் உள்ளது.

    மாபெரும் ரிஷிகளும், மகான்களும் இங்குத் தவம் செய்து வாழ்ந்துள்ளனர்.

    வியாசர் பாரதத்தையும், மனு, மனுஸ்மிருதியையும் இங்கிருந்து தான் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

    ததீசி முனிவர் தன் முதுகெலும்பை இந்திரனுக்குத் தர, அதைக் கொண்டு இந்திரன் விருத்திராசூரனைக் கொன்றதும்; பரசுராமர் பீஷ்மர் யுத்தம் நடந்ததும் இத்தலத்தில் தான்.

    குந்தி தேவி வழிபட்ட சிவாலயம் இங்குள்ளது. கருவறையில் சிவலிங்கத்தின் பின்னால் குந்தியின் உருவம் உள்ளது.

    கீதோபதேசம் நடைபெற்ற இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இதனடியில் உபதேசக் காட்சி பளிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    அருச்சுனன் தன் அம்பினால் – பாணத்தால் உண்டாக்கிய தீர்த்தக் கிணறு – ‘பாண கங்கா’ உள்ளது.

  2. பீஷ்ம பர்வம்

    குருச்சேத்திரப் போர்

    குருச்சேத்திரப் போரில் முதல் பத்து நாட்கள் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக இருந்து பீஷ்மர் நடத்திய போர்கள் முதல் அவர் அம்புப் படுக்கையில் விழுந்தது வரை இது விவரிக்கிறது. பீஷ்மரின் ஆணைப்படி, கர்ணன் முதல் பத்துநாள் போரில் கலந்து கொள்ளவில்லை.

    இப்பர்வத்தில் பகவத் கீதை ஸ்ரீகிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது.

    போர் நாள் 1

    போரில் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், சாந்தனு– கங்கையின் மகன் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. விராடனின் மகன்களான உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்படுகின்றனர்.

    போர் நாள் 2

    பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, இரண்டாம் நாள் போரில் பரசுராமரின் மாணவரான பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. ஆனால் அருச்சுனன் அதையும் மீறி பீஷ்மரைக் கொல்ல கடும் போராட்டம் நடத்தினான். துரோணர், பாண்டவ படைகளின் தலைமைப் படைத் தலைவனான திருட்டத்துயுமனனை அம்புகளால் துளைத்து விட்டார். எனவே வீமன் படுகாயமடைந்த அவனை போர்க் களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான். வீமனைத் தாக்கிய கலிங்க நாட்டுப் படைகளை வீமன் நசுக்கி விட்டான். பீஷ்மரின் தேரோட்டியை சாத்தியகி கொன்றான். ஆனால் தேர்க் குதிரைகள் பீஷ்மரைப் போர்க்களத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றது. இரண்டாம் நாள் போரின் இறுதியில் கௌரவர் படைகளுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது.

    போர் நாள் 3

    பீஷ்மர் தனது படைகளைக் கருட வடிவத்தில் வியூகம் அமைத்தார். பாண்டவர்கள் பிறைச்சந்திர வடிவத்தில் தங்கள் படைகளை வியூகம் அமைத்தனர். அபிமன்யுவும் சாத்தியகியும் சேர்ந்து, சகுனியின் காந்தார நாட்டுப்படைகளைத் தாக்கி வென்றனர். பீமனால் அவன் மகன் கடோற்கஜன்னும் சேர்ந்து துரியோதனனுடன் போரிட்டு, அவனைத் தாக்கியதால் தேரில் பலத்த காயமடைந்து வீழ்ந்தான். அதனால் அவன் போர்களத்திலிருந்து வெளியே சென்றதால், அவன் படைவீரர்கள் சிதறி ஓடினர். சிதறி ஓடிய கௌரவப்படைகளை மீண்டும் பீஷ்மர் ஒன்று சேர்த்து, துரியோதனனுடன் போர்க்களத்திற்கு வந்தார். தோல்வியின் காரணமாக துரியோதனன், பீஷ்மரை மிகவும் கடிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட பீஷ்மர் தன் அம்புகளால், பாண்டவர் படைகளைச் சிதறடித்தார். அருச்சுனன் பீஷ்மருடன் போரிட்டாலும், பாண்டவர் படைகளுக்குப் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

    போர் நாள் 4

    துரியோதனனின் எட்டு சகோதரர்க, பீமனால் கொல்லப்பட்டனர். இதைக் கேட்டு ஆத்திரமுற்ற துரியோதனன், பீஷ்மரிடம் சென்று பாண்டவப் படைகளை எவ்வாறு வெல்லப் போகிறீர்கள் எனக் கடுமையாக கேட்டான். அதற்கு பீஷ்மர், பாண்டவர் பக்கம் தர்மம் இருப்பதால் அவர்களை வெல்ல இயலாது, அதனால் அவர்களுடன் சமாதானம் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். ஆனால் துரியோதன்ன் அவரது அறிவுரையைப் புறந்தள்ளிச் சென்றான்.

    போர் நாள் 5 முதல் 9 முடிய

    ஐந்தாம் நாள் போரில் பெரும்பாலான பாண்டவப் படைகள் பீஷ்மரின் அம்பு மழையால் அழிந்தன. சாத்தியகியை, துரோணரிடமிருந்து வீமன் காப்பாற்றினான். அருச்சுனன், கௌரவர் படைகளைக் காண்டீபம் எனும் வில்லால் அம்பு மழை பொழிந்து கொன்றான். துரோணர் பாண்டவப் படைகளை சிதறடித்தார். இரண்டு படைகளின் வியூகங்கள் உடைபட்டு போர்வீரர்கள் சிதறினர். அருச்சுனன் மகன் கௌரவர்களால் கொல்லப்பட்டான். துரியோதனனின் எட்டு தம்பியர்கள் வீமனால் கொல்லப்பட்டனர். பீஷ்மரைப் போரில் வெல்ல முடியாத காரணத்தினால், அருச்சுனன் மீது கிருஷ்ணன் கோபம் கொண்டார். எனவே பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.

    போர் நாள் 10
    அம்புப் படுக்கையில் பீஷ்மர்

    பீஷ்மரின் அம்புகள், பாண்டவப் படைகளுக்குப் பெருத்த அழிவை ஏற்படுத்தின. பீஷ்மர் பெண்களுடனும், ஆண்மையற்றவர்களுடனும் போரிடுவதில்லை என்று சபதம் செய்துள்ளதைச் சாதகமாக பயன்படுத்தி, பீஷ்மரைப் போரில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பாண்டவப்படைகள், கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர். பீஷ்மர், போர்க்களத்தில் தனக்கு எதிராக நிற்கும் சிகண்டியை பார்த்த உடன், சிகண்டியுடன் போரிடாது தனது போர்க்கருவிகளை கீழே போட்டு விட்டார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அருச்சுனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப் படுக்கையில் கிடத்தினான்.

    பீஷ்மரின் தந்தை சாந்தனு பீஷ்மருக்கு இச்சை மரணம் (“Ichcha Mrityu” (self wished death) என்ற விரும்பும்போது இறக்கலாம் எனும் வரத்தை அளித்த காரணத்தினால், பீஷ்மர் குருச்சேத்திரப் போர் முடிந்தபின், உத்தராயனம் முதல் நாளில் தன் விருப்பப்படி உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் அரச நீதி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாண்டவர்களுக்கு அருளினார் பீஷ்மர்.

    துரோண பர்வம

    பகதத்தனை அருச்சுனன் வீழ்த்துதல்

    துரோணர் குருச்சேத்திரப்போரில் ஐந்து நாட்கள் கௌரவர்களின் படையின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.

    போர் நாள் 11

    குந்தியின் மகன் கர்ணன் முதன்முதலாக குருச்சேத்திரப் போரில் இறங்குகிறான். தருமனைப் போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், பாண்டவர்கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று சகுனி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். தருமரைப் போரில் உயிருடன் பிடிக்கும் இத்திட்டம் துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே துரோணர் தருமனைக் கடுமையாக எதிர்த்து அவன் வில்லையும் மற்ற ஆயுதங்களையும் அழித்தார். தருமனைக் காக்கவந்த அருச்சுனனையும் அம்பு மழைகளால் துளைத்தெடுத்தார்.

    போர் நாள் 12

    தருமரைக் கையோடு பிடிக்கத் தடையாக இருந்த அருச்சுனனைத் தடுத்து நிறுத்தி போர்செய்ய, கௌரவர் அணியில் இருந்த திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன், அவன் சகோதரர்கள் மூவர் மற்றும் அவர் மகன்கள் 35 பேர்கள் ஒன்று சேர்ந்து அருச்சுனன் மீது தொடுத்த கடுமையான போரில், அருச்சுனன் அவர்களைத் தனது காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு அம்புகள் தொடுத்துக் கொன்றான்.

    போர் நாள் 13
    அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைதல்.

    கௌரவப்படைகளைச் சக்கர வடிவில் அமைத்தார் துரோணர். பகதத்தன் தனது ஆயிரக்கணக்கான வலிமை மிக்க யானைப்படைகளுடன், சுப்ரதீபம் எனும் யானையில் அமர்ந்து அருச்சுனனுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான்.

    துரோணரின் சக்கர வியூகத்தை அபிமன்யு உடைத்து உட்புகுந்து, கௌரவர் படைகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினான். அபிமன்யு, துரியோதனனின் மகன் இலட்சுமணகுமாரனைப் போரில் கொன்றான். எனவே ஆத்திரமுற்ற துரியோதனன், அபிமன்யுவைக் கொல்ல தனது படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டான். அதன்படி ஜயத்திரதன்கர்ணன்துச்சாதனன் போன்ற கௌரவப் படைத்தலைவர்கள் ஒரே நேரத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் தொடுத்துக் கொன்றனர். அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என்றும், அவ்வாறு ஜயத்திரதனைக் கொல்ல இயலவில்லை எனில் தீக்குளித்து இறப்பேன் என அருச்சுனன் சபதம் எடுத்தான்.

    போர் நாள் 14

    அருச்சுனன் ஜயத்திரதனை கொல்தல்

    அருச்சுனனின் கடும் தாக்குதலிருந்து ஜயத்திரதனைப் பாதுகாக்க, ஒரு அக்ரோணி படையணியைத் (1,09,350 படைகள்) துரியோதனன் நிறுத்தி வைத்தான். அருச்சுனன், தன்னை எதிர்த்த பலம் மிக்க கௌரவப் படைத்தலைவர்களுடன் போராடிக் கொண்டே, ஜயத்திரதன் இருக்கும் இடம் அடைந்து, கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்னரே அவனைத் தனது கூரிய அம்புகளால் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

    கர்ணன் கடோற்கஜனை கொல்தல்

    14-ஆம் நாள் போர் இரவிலும் தொடர்ந்தது. பீமனின் மகன் கடோற்கஜன், இரவுப்போரில் இலட்சக்கணக்கான கௌரவப் படைகளை அழித்தான். கடோற்கஜனின் தாக்குதலிருந்து கௌரவப்படைகளைக் காக்க, கர்ணன் தனக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தை கடோற்கஜன் மீது ஏவிக் கொன்றான்.

    போர் நாள் 15

    துரோணர், பாஞ்சால நாட்டரசன் துருபதன் மற்றும் விராட நாட்டரசன் விராடன் ஆகியவர்களைப் போரில் கொன்றார். துரோணரைத் தந்திரமாக கொல்ல முடியுமோ தவிர, அவருடன் போரிட்டு கொல்ல முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணர், துரோணர் தன் மகன் அசுவத்தாமன் மீது கொண்டுள்ள அளவுகடந்த பாசத்தை மனதில் கொண்டு, பீமனைக் கூப்பிட்டு அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொல்ல என ஆணையிட்டார். பீமனும் அவ்வாறே அசுவத்தாமன் எனும் பெயருடைய ஒரு யானையைக் கொன்றான். கிருஷ்ணர், பின் தருமனிடம், துரோணரின் முன் சென்று அசுவத்தாமன் கொல்லப்பட்டது என்று கூறுமாறு ஆலோசனை கூறினார். முதலில் இதை மறுத்த தருமன் பின் ஏற்றுக் கொண்டு, துரோணர் முன் தனது தேரை நிறுத்தி, அசுவத்தாமன் யானை போரில் இறந்தது விட்டது எனக் கூவினார். ஆனால் ”யானை” என்ற வார்த்தையை மட்டும் தருமர் மிகமெதுவாக கூறியதைத் துரோணர் கேட்கவில்லை. அசுவத்தாமன் போரில் இறந்து விட்டான் என்பதைத் தருமர் மூலம் தவறாக அறிந்த துரோணர் துக்க மேலீட்டால் தனது கை வில்லை கீழே போட்டுவிட்டு, தேரில் அமர்ந்து புத்திர சோகத்தால் புலம்பிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் திருட்டத்துயும்னன் துரோணர் மீது அம்புகளை மழை போல் செலுத்திக் கொன்றான். 15-ஆம் நாள் போரின் இறுதியில் துரியோதனனின் தம்பிமார்களில் துச்சாதனன் தவிர 98 பேர்கள் வீமனால் கொல்லப்பட்டிருந்தனர்.

    15-ஆம் நாள் போரின் இரவில், குந்தி, கர்ணனை இரகசியமாகச் சந்தித்து அருச்சுனனைத் தவிர மற்ற பாண்டவர்கள் மீது அம்புகள் செலுத்துவதில்லை என்றும், நாகபாணத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் செலுத்துவதில்லை என்றும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள்.

    கர்ண பர்வம்[தொகு]

    போர் நாள் 16

    துரோணரின் மறைவுக்குப் பின் 16-ஆம் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான்.[7] கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஒட விரட்டி அடித்தான். பின் அருச்சுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.

    பீமன், துச்சாதனனின் நெஞ்சை பிளந்து குருதி குடிக்கும் காட்சி

    அதே நாளில், கதாயுதப் போரில் வீமன் துச்சாதனனின் வலது கையை முறித்து, நெஞ்சைப் பிளந்து, குருதியை குடித்து, பின் அவன் நெஞ்சத்து குருதியை கையில் ஏந்தி, திரெளபதியின் முடிக்காத முடியில் தோய்த்து, திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றினான். தன் தம்பிமார்கள் பலரை வீமன் கதாயுதத்தால் அடித்து கொன்ற போதிலும் துச்சாதனனின் கோரமரணத்தை நினைத்து புலம்பித் தவித்தான் துரியோதனன்.

    போர் நாள் 17

    கர்ணன் – அருச்சுனன் போர்

    கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அருச்சுனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.

    ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான்.

    போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.

    சல்லிய பர்வம்[தொகு]

    போர் நாள் 18

    பதினெட்டாம் நாள் போரில் கௌரவர் படைத்தலைவராக சல்லியன் தலைமை தாங்கினான்.[8] இப்போரில் சகாதேவன் சகுனியையும் அவன் மகன் உல்லூகனையும் கொன்றான். தருமர் சல்லியனை தன் ஈட்டியால் கொன்றார். பதினெட்டாம்நாள் போர் முற்பகலிலேயே முடிந்தது.

    சௌப்திக பர்வம்[தொகு]

    வீமன் – துரியோதனன் கதாயுதப் போர்

    தன் படையின் தோல்வியை உணர்ந்த துரியோதனன், போர்க்களத்திலிருந்து ஓடி சரசுவதி ஆற்றின் அருகில் இருந்த சமந்தபஞ்சகம் எனும் குளத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடி கண்டுபிடித்தனர். அப்போது தீர்த்த யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பலராமன் முன்னிலையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே மிகக் கடுமையான கதாயுதப் போர் நடந்தது. போரின் இறுதியில் பீமன் கதாயுதப் போரின் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இரண்டு தொடைகளிலும் உயிர் போகும்படி கடுமையாகப் பலமுறை அடித்தான். அதனால் துரியோதனன், தொடைகள் ஒடிந்து நசுங்கி குற்றுயிறும் குலையுறுமாக வீழ்ந்து மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். பலராமன் வீமனின் கதாயுதப் போர் விதிமீறல்கள் குறித்து கடிந்து கொண்டார்.

    பதினெட்டாம் நாள் போரின் இரவில், துரியோதனனின் உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அசுவத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் துரியோதனனைத் தேடி வந்தனர். துரியோதனனின் துயர நிலையைக் கண்டு கண்கலங்கிய அசுவத்தாமன், பாண்டவர்களைக் கொன்று பழி தீர்ப்பேன் என்று சபதமிட்டு, கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியவர்களுடன் அன்றைய நடு இரவில் பாண்டவர்களின் போர்ப் பாசறையில் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த உபபாண்டவர்கள் (திரெளபதிக்கும்-ஐந்து பாண்டவர்களுக்கும் பிறந்தவர்கள்), திருட்டத்துயும்னன்சிகண்டி, மற்றும் உதாமன்யு மற்றும் அனைத்துப் படைவீரர்களையும் கொன்றான். இந்த நடுஇரவுப் படுகொலையில் தப்பியவர்கள் பாண்டவர் ஐவர், சாத்தியகியுயுத்சு, மற்றும் கிருஷ்ணர் மட்டுமே.[9]

    குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள்[தொகு]

    கௌரவர் தரப்பில் கிருபர்அசுவத்தாமன்கிருதவர்மன்கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

    பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர்சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

    குருச்சேத்திரப் போருக்குப் பின்[தொகு]

    அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும்இந்திரப்பிரஸ்தமும் ஒன்றிணைக்கப்பட்டது. அத்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானர். திருதராஷ்டிரன் மகன் யுயுத்சு, அத்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். கர்ணன் மகன் விருச்சகேது அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.

    துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதிப்பகுதி, மீண்டும் பாஞ்சாலர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது.

    அங்க நாடு, சேதி நாடு, காந்தார நாடு, கலிங்க நாடு, ஆந்திர நாடு, கோசல நாடு, மதுரா, மகதம், மத்ஸ்ய நாடு, காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து நாடு, திரிகர்த்த நாடு, விராட நாடு மற்றும் இதர நாடுகளின் மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் வீரமரணம் அடைந்தபடியால், அந்நாடுகளுக்குப் புதிய மன்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

    திருதராட்டிரன்காந்தாரி மற்றும் குந்தி அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு (வானப்பிரஸ்தம்) மேற்கொண்டனர்.

    தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் அருச்சுனன்சுபத்திரை ஆகியவர்களின் பேரனும், அபிமன்யு– உத்தரை இணையரின் மகனுமான பரீட்சித்துவை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர்.

    பிறகு பாண்டவர்-தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதியுடன் கையிலை நோக்கி தவம் இயற்ற பயணித்தனர். பயணத்தில் தருமன் தவிர மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தருமனை, எமதர்மராசன் வரவேற்று சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

    ஹஸ்தினாபுரம் என்பது என்ன. ஹஸ்தி என்றால் எலும்பு, புரம் என்றால் வீடு. எலும்புகளால் கட்டப்பட்ட வீட்டை தான் ஹஸ்தினாபுரம் என்று சொல்லப்படுகிறது.கௌவரவர்களின் அரசனாக துரியோதனனும் அவனின் தம்பிகளையும் மனிதர்களின் மனதில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துர்குணத்தை குறிக்கிறது. பாண்டவர்கள் ஐந்து பேரையும் அவர்களுக்கு ஒரு மனைவியையும் மனிதனுக்குள் இருக்கும் ஐந்து புலன்களையும் ஒரு சக்தியையும் குறிக்க கூடியது. துர்குணங்கள் ஒரு மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பொழுது அவனுடைய சக்தி பல வழிகளில் செல்வாகிகொண்டே இருக்குறது. தெய்வ குணங்கள் நோக்கி செல்லும் பொழுது சக்தி பாதுகாக்கிறது. யோகம் செய்யும் பொழுது உடலும் மனமும் ஆடாமலும் அசையாமலும் இருக்க வேண்டும். அப்படி செய்வதற்க்கு பல நிமிடங்கள் முதல் பல மணி நேரம் ஆகும். மனம் நல்ல கருத்துகளை விட தீய கருத்துக்களையும் தீய செயல்களையும் தான் விரும்பும். அந்த மனதை தூய்மை படுத்துவதற்க்கு உடலையும் மனதையும் பழக்க வேண்டும். தவம் செய்யும் பொழுது மனம் தன்னுல் ஆழ்ந்த அனுபவங்களும் சொந்த பந்தங்களும் அவர்களின் நல்ல தீய நினைவலைகள் ஆகிய அனைத்தும் நம்மை தியானம் செய்ய விடாமல் நம்மை எதிர்க்கும். துர்குணம் மீது அதிகம் பற்றிருந்தால் தவம் செய்யும் பொழுது கோபம், காமம், பேராசை போன்ற குணங்களினால் இழுத்து செல்லும்.

மனமே கிருஷ்னன். அவன் உடுத்திய உடைய சற்று ஆய்வு செய்வோம். ஒரு கையில் சங்கும், ஒரு கையில் சக்கரமும், ஒரு கையில் கதையும் மற்றொரு கையில் தாமரையும், வாயில் புல்லாங்குழலையும் வைத்திருப்பார். அவர் உறங்கும் இடம் ஆதிசேசனாகிய சற்பமாகும். மனிதர்களின் ஐந்து புலண்களை பார்ப்போம். கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், மூக்கால் நுகர்வதும், நாக்கால் சுவைப்பதும் , தோலினால் தொடு உணர்வை அனுபவிப்பது ஆகும். மனம் இந்த ஐந்து புல்ன்-கலால் உள்வாங்கும். சங்கும் காதும் ஒரே மாதிரி இருக்கும். சங்கு ஒலியை குறிப்பிடுகிறது. மூக்கும் கதையும் ஒரேமாதிரி இருக்கும். வாசனையை நுகர்வது. மூக்கிற்க்கும் ஜீவனுக்கும் இடையில் கதாகதம் செய்தால் உள்ளொளி பிறக்கும். சக்கரம் என்பது சுதர்ஷனத்தை குறிப்பதாகும். சுதர்ஷனம் என்பது பார்வை. ஒரே நேரத்தில் தூரத்திலிருக்கும் பொருளையும் அருகிலுள்ள பொருளையும் மிக வேகமாக கண்ணால் உள்வாங்க முடியும். அதனால் சக்கரத்தை ஏவினால் பல தலைகள் ஒரே நேரத்தில் வெட்டிவிடும். இப்படிபட்ட கண்ணை பக்குவபடுத்தவில்லை என்றால் சக்தி நாசமாகி சீக்கிரமாக உடல் அழிந்து விடும். தவம் செய்யும் பொழுது உடல் அழியாது ஆனால் தீவிர தவத்தினால் மனம் உடலின் மீதுள்ள பற்றை விட்டு விடும். சற்பமாகிய ஆதிசேசன் மூச்சுகாற்றை குறிப்பதாகும். அதவாது சுழிமுனையை குறிப்பதாகும். பாம்பு விசத்தை கொடுப்பதா அல்லது அமிர்தத்தை கொடுப்பதா என்பது மனதின் ஆளுமையை பொருத்துள்ளது. தாமரை என்பது ஞானம் அல்லது நெற்றிகண்ணை குறிப்பதாகும். மனதின் மூலம் யோகா செய்யும் முறையை உள்வாங்கி, புலன்-கள்லால் வெளியே செல்லும் மனதை ஜீவன் நோக்கி திருப்பினால் ஞானஒளியை அல்லது உள்ளொளியை பெறலாம்

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஜல நரஸிம்ஹர்–ஸ்ரீ யாதகிரி லெட்சுமி நரஸிம்ஹர் கோவில்–

May 23, 2022

ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச

யஸ்ப  அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய  லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

” பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே !!

தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே !

நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே !

லட்சுமி நரசிம்மனே ! உனது திருவடியைச் சரணடைகிறேன் .


ஸ்ரீ ஜல நரஸிம்ஹர்-

300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர நரசிம்மர் கோவில்

மக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

அனால் இவற்றை எல்லாம் கடந்து ஒரு விசித்திரமான குகை கோவில் .

கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.

பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை காண்பது அவ்வளவு எளிதல்ல.
ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில்,

மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால்தான் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும்.

இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.

இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

குகையின் முடிவில் சிவ லிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார் என்று சிலர் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர்

ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ததாகவும். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்றும்.
இந்த குகையில்தான் அவன் தவம் செய்து சிவனை வழிபட்டதாகவும், நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர்

இந்த குகையில் அவன் ஜலமாக(நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகவும்,

அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்றும் கூறுகின்றனர்.
கடினமான பாதைகளை கடந்து நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செல்லும் பக்தர்களுக்கு

இங்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————

ஸ்ரீ யாதகிரி லெட்சுமி நரஸிம்ஹர் கோவில்

https://yadagiriguttasrilakshminarasimhaswamy.org/index.html

ஸ்ரீ யாதகிரி நரசிம்மர் கோவில் (Yadagirigutta Templeதெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்மர் கோவில் ஆகும்.

இந்த கோவில் இந்தியாவில் தெலுங்கானா மாநிலதில் புவனா யாததிரி மாவட்டதில் உள்ள யாதகிரிகுட்டா எனும் சிறு நகரதில் உள்ள சிறுகுன்றில் உள்ளது-

இந்த கோவில் ஐதராபாத் இருந்து 52 கி.மீ துரத்தில் உள்ளது.

அதிக அளவு பக்தர்கள் கூட்டம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வருவது உண்டு.

புராண யாதகிரி நரசிம்மர் கோவில் புதிய யாதகிரி நரசிம்மர் கோவில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

புராண யாதகிரி நரசிம்மர் கோவிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன,

ஒன்று ஹனுமானின் கால் அடி தடம்

மற்றொன்று அங்கு உள்ள தெப்பகுளம்.

ஹனுமானின் கால் அடி தடம் ஹனுமான் இங்கிருந்து கிஷரா என்னும் இடத்தில் தாவிய போது வந்த தடம்.

இப்போதும் மாற்றம் அடையாது இருப்பது. அதே மாதிரி இங்கு உள்ள தெப்பத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது.

திரேதா யுகம் நடக்கும் போது யாத ரிஷி என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார்.

இவர் அனுமானின் அருள் பெற்று நரசிம்மரை நினைத்து தவம் செய்து வந்தார்.

இவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர் இவர் முன் ஐந்து வடிவில் தோன்றினார்.

ஐந்து வடிவானது ஜ்வால நரசிம்மர், யோக நரசிம்மர், நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லெட்சுமி நரசிம்மர் ஆகும்.

இதனால் பிற்காலங்களில் பஞ்ச நரசிம்ம கோவில் என பெயர் பெற்றது.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸகந்த புராணத்தில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் உள்ளது[-

இன்னொரு புராணக்கதையின்படி நாராயணர் யாத ரிஷியின் தவத்தால் மகிழ்ந்து ஹனுமனை அனுப்பி

முனிவருக்கு புனித இடத்தை காட்டியதாகவும்

அங்கு இறைவன் லட்சுமி நரசிம்மர் வடிவில் முனிவர் முன் தோன்றியதாகவும் உள்ளது.

அந்த இடம் இப்போதுள்ள கோவில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழி பட்டுள்ளார்.

முனிவரின் முக்திக்கு பிறகு அங்குள்ள மக்கள் இறைவனைப் பற்றி அறிந்து அவரை வழிபட்டனர்.

ஆனால் மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார்.

மக்கள் பல நாட்கள் இறைவனை தேடினார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்டினார்.

அங்கு அவர்கள் சென்ற போது இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார்.

அமைப்பும் வழிபாடும்–

இந்த குடவரைக் கோவிலிலுள்ள கருவறை உச்சத்தில் உள்ள விமானம்

விஷ்ணுவின் கையில் உள்ள தங்க சுதர்ஸன சக்கரம் ஆகும் (3 அடி X 3அடி ).

கோவில் அலங்காரங்களும் பொருட்களும் 6 கி.மீ தொலைவில் இருந்தே அறியலாம்.

பல வருடங்களுக்கு முன் சக்கரம் பக்தர்களுக்கு வழிகாட்டிய போல் செயற்பட்டுள்ளது.

இந்த கோவில் பல ரிஷிகளால் வழிபட்டுள்ளதால் ரிஷி ஆராதன ஷேத்திரம் என பெயர் உள்ளது.

இங்குள்ள நரசிம்மர் பக்தர்களுக்கு உள்ள தீராத நோயை தீர்ப்பதால் வைத்திய நரசிம்மர் என அழைக்கப்படுகிறார்.

அதைப்போல் தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பிடிக்கப் பட்டவர்களை துன்பங்களை அகற்றி, காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும் விளங்குகிறார்.

பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ முலிகைகளை தருவதும்,

பக்தர்களை நோயை தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லாசியும் வழங்குகிறார்.

ஒரு மண்டல (48 நாள்) விரத முறை மிக விசேஷமானது.

இங்கு ஆராதனைகளும், பூஜைகளும் பாஞ்சராத்திரம் நெறிகளின்படி பின்பற்றப்படுகிறது.

விரிவாக்கப் பணிகள்-

யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோயிலை ஆந்திராவின் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக மாற்ற தெலங்காணா அரசு திட்டமிட்டது.

இதற்காக ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கியது.

கடந்த 2016ஆம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமான பணிகள் தொடங்கின.

இதற்கென யாதாத்ரி கோயில் வளர்ச்சி குழுவை முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்தார்.

இந்த குழுவினரின் மேற்பார்வையில் கோயிலை பிரம்மாண்டமாக 14 ஏக்கர் பரப்பளவில்

ஆகம விதிப்படியானதாககாக்கத்தியர் கட்டடக்கலையில் கட்டப்பட்டுவருகிறது.

இக்கோயில் மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளடக்கியதாக

விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

மேலும் 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகம சாஸ்திரங்களின்படி கட்டப்பட்டு வரும் இக்கோயில் சிமெண்ட், மணல்,இரும்பு போன்றவைகளால் கட்டப்படாமல்,

வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டு வருகிறது.

சுவாமியின் சிலைகள் அனைத்தும் ‘கிருஷ்ண சிலா’ அல்லது புருஷ சிலா என்றழைக்கப்படும் கற்களால் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்திரீ சிலா எனும் கற்கள் மூலம் பெண் கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மற்றும் நபுசகா சிலா என்றழைக்கப்படும் கற்கள் மூலம் கோயிலில் தரை மற்றும் சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், கருப்பு நிற கிரானைட் கற்களும் இக்கோயிலில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை, தெலங்கானா மாநில காக்கதீயர்களின் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கட்டிட கலையை மாதிரியாக கொண்டு

கருப்பு கிரானைட் கற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு கிரானைட் கற்கள் மூலம் சில சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலில் உள்ள மூலவர் 12 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்ட குகையில் வீற்றிருப்பார்.

இது தற்போது புதிய வடிவமைப்பில், கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது.

இந்த குகைக்கு செல்ல வேண்டுமாயின், பக்தர்கள் படிக்கட்டுகள் மூலம் இறங்கி சுவாமியை தரிசிக்க வேண்டி வரும்.

மேலும், இக்கோயிலில்

நாக வடிவில் உள்ள ஜுவாலா நரசிம்மர்,

யோக முத்திரையில் யோக நரசிம்மர்,

வெள்ளியில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கோயிலின் வலது புறம் ஹனுமன் கோயில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த வைணவ திருத்தலத்திற்கு தினமும் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில் கட்டிட பணிகள் நடைபெற்று வந்தாலும், மூலவரை தரிசிக்காவிடிலும் பாலாலயம் மூலம் சுவாமியை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இக்கோயிலுக்கு 39 கிலோ தங்கமும், 1,753 டன்வெள்ளியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான கோபுரம், பலிபீடம், கொடி கம்பம் போன்றவற்றுக்கு தங்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் கோயில் கதவுகள், வாசற்படிகள், சுவர்களுக்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இரு கற்களுக்கிடையே பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சுண்ணாம்பு கலவை இக்கோயிலில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.300கோடி செலவில் கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் 1,900 ஏக்கர் தனியார் இடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இக்கோயிலுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு குளத்தின் அருகே புதிதாகவீடும் கட்டி தரப்பட்டுள்ளது.

7-ம் நிஜாம்மன்னரான மிர்-ஒஸ்மான் அலிகான் என்பவர், தனது ஆட்சி காலத்தில் ரூ.82,825-ஐ இக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.

14 ஏக்கர் பரப்பளவு

இக்கோயில் 14 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது.

மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளடக்கிய இக்கோயில் விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும் 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்குள்ள விஷ்ணு குண்டம் எனும் குளத்தில் குளித்தால் தீய சக்திகள் மறையும் என்பது ஐதீகம்.

மிக அழகாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்டு வரும் இக்கோயில் தெலங்கானா மாநிலத்தின் ஒரு அடையாளமாக மாறப்போவது உறுதி.

இக்கோயில் தலைமை ஸ்தபதி சவுந்தர்ராஜன் என்பவர் மூலம் கட்டப்பட்டு வருகிறது.

புராண வரலாறு…..

ரிஷியஸ்ருங்கா- சாந்தா தேவியின் புதல்வராகப் பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர்,

அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர்.

அவரைக் காணும் ஆவலில் கடுமையாகத் தவம் இயற்றி வந்தார்.

அவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி,

அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு அருள்காட்சி தந்தருளினார்.

முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார்.

ஆனால் யாத ரிஷியோ, “தாயார் லட்சுமியோடு காட்சியருள வேண்டும்” என வேண்டி நின்றார்.

தொடர்ந்து உடனடியாக லட்சுமியோடு, லட்சுமி நரசிம்மராகத் தோன்றி அருளினார்.

எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாகப் போற்றப் படுகிறது.

நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில், தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

யாத ரிஷி முக்தியடைந்த பின்பு இப்பகுதி வாழ் மக்கள், அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடு செய்யவில்லை.

இதனால் அங்கிருந்து அகன்று, தற்போதைய மலை மீதுள்ள குகைக்குள் இறைவன் குடிபுகுந்தார்.

இந்த நிலையில் இறைவனை வழிபட விரும்பும் பக்தர்கள், நரசிம்மரைக் காணாமல் தவித்தனர்.

அப்போது ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன் இருப்பிடத்தைக் கூறினார்.

மகிழ்ச்சியடைந்த மக்கள் மலை மீது ஏறி, குகைக்குள் இருந்த நரசிம்மரைக் கண்டு மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர் என தலவரலாறு கூறப்படுகிறது.

கி.பி.1148-ல் நாராயண சுவாமி கோவில் கல்வெட்டு ஒன்றில்,

திரிபுவன மல்லுடு மன்னர், தான் போரில் வென்றோருக்காக போன்கிரில் கோட்டை கட்டியதாகவும்,

அங்கிருந்து யாதகிரி வந்து நரசிம்மரைப் பலமுறை வழிபட்டுத் தரிசித்துச் சென்றதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இதேபோல, விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவாராயர், யாதகிரி லட்சுமி நரசிம்மரை வழிபட்டு, மகப்பேறு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆலய அமைப்பு……

யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது.

சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது.

இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே, நரசிம்மர் அமர்ந்த குகைக்குள், பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர்.

பிரதானமாக லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாக, லட்சுமியோடு அருள்காட்சி வழங்குகிறார்.

மேல் இரு கரங்கள் சக்கரம், சங்கு தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் காணப்படுகிறது.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும்.

அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர்.

தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார்.

அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது.

நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

குடவரைக் கோவிலான யாதகிரி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், கருவறை உச்சியில் உள்ள விமானத்தில்,

தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.

3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

இந்த ஆலயத்தில் நாள்தோறும் திருமண வைபவமும் நடைபெறுகிறது.

இக்கோவில் பிரம்மோற்சவம் தெலுங்கு பல்குண மாதத்தில் (பிப்ரவரி- மார்ச்) பதினோரு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.

அதே போல நரசிம்மர் ஜெயந்தியும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.

இது தவிர ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள் திருநட்சத்திர விழாக்கள்,

மார்கழி, ராமநவமி, மகா சிவராத்திரி, தேவி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.

தினந்தோறும் திருக்கல்யாணம் நடைபெற்று, நித்திய கல்யாண நரசிம்மராக விளங்கும் இந்த ஆலயம், காலை 4 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாலயம் தெலுங்கானா மாநில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி வாரி தேவஸ்தானம் இந்த ஆலயத்தை நேரடியாகக் கவனித்து வருகிறது.

அமைவிடம்……

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் – வாரங்கல் வழித் தடத்தில்

6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து

60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது.

போன்கிர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தைச் சென்றடையலாம்….

ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது.

போன்கிர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தைச் சென்றடையலாம்.

ஓம் நரசிம்ஹாய நமஹ…….

—————-

ஸ்ரீ நரசிம்ஹர் அக்ஷர மாலை —

ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாத ரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.

இஷ்டார்த்தப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ர ஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வாபாஹூ நரசிம்ஹ.

எல்லா ரூப நரசிம்ஹ
ஐஸ்வர்ய ப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.

அம்பரவாஸ நரசிம்ஹ
காம ஜனக நரசிம்ஹ
கிரீடதாரி நரசிம்ஹ
ககபதி வாஸன நரசிம்ஹ.

கதாதரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதரவாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.

கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர்புஜனே நரசிம்ஹ
சதுராயுத்தர நரசிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப நரசிம்ஹ.

தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ரதாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.

துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞானப்ரதனே நரசிம்ஹ
நரகிரி ரூப நரசிம்ஹ.

நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாகரூப நரசிம்ஹ
நாமகிரீஷ நரசிம்ஹ.

பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாகதாரி நரசிம்ஹ.

புராண புருஷ நரசிம்ஹ
பவபய ஹரண நரசிம்ஹ
பக்த ஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.

பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்த ரக்ஷக நரசிம்ஹ
முநி ஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருக ரூபதாரி நரசிம்ஹ.

யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கிபுரிஷ நரசிம்ஹ.

சாந்தமூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்கதாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்திபுருஷ நரசிம்ஹ.

சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரிநாராயண நரசிம்ஹ
க்ஷேமகாரி நரசிம்ஹ.

ஜெய ஜெயலக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெயசுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ.

——————-

108 லக்ஷ்மி நரசிம்மர் போற்றி –

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
3. ஓம் யோக நரசிங்கா போற்றி
4. ஓம் ஆழியங்கையா போற்றி
5. ஓம் அக்காரக் கனியே போற்றி

6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி

11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி

16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
17. ஓம் ஊழி முதல்வா போற்றி
18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
19. ஓம் ராவணாந்தகனே போற்றி
20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

21. ஓம் பெற்ற மாளியே போற்றி
22. ஓம் பேரில் மணாளா போற்றி
23. ஓம் செல்வ நாரணா போற்றி
24. ஓம் திருக்குறளா போற்றி
25. ஓம் இளங்குமார போற்றி

26. ஓம் விளக்கொளியே போற்றி
27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
30. ஓம் இமையோர் தலைவா போற்றி

31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
35. ஓம் நந்தா விளக்கே போற்றி

36. ஓம் நால் தோளமுதே போற்றி
37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

41. ஓம் மூவா முதல்வா போற்றி
42. ஓம் தேவாதி தேவா போற்றி
43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி

46. ஓம் வட திருவரங்கா போற்றி
47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

51. ஓம் மாலே போற்றி
52. ஓம் மாயப் பெருமானே போற்றி
53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி

56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
64. ஓம் அரவிந்த லோசன போற்றி
65. ஓம் மந்திரப் பொருளே போற்றி

66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
69. ஓம் பின்னை மணாளா போற்றி
70. ஓம் என்னையாளுடையாய் போற்றி

71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
72. ஓம் நாரண நம்பி போற்றி
73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி

76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
83. ஓம் இனியாய் போற்றி
84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
85. ஓம் புனலரங்கா போற்றி

86. ஓம் அனலுருவே போற்றி
87. ஓம் புண்ணியா போற்றி
88. ஓம் புராணா போற்றி
89. ஓம் கோவிந்தா போற்றி
90. ஓம் கோளரியே போற்றி

91. ஓம் சிந்தாமணி போற்றி
92. ஓம் சிரீதரா போற்றி
93. ஓம் மருந்தே போற்றி
94. ஓம் மாமணி வண்ணா போற்றி
95. ஓம் பொன் மலையாய் போற்றி

96. ஓம் பொன்வடிவே போற்றி
97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி

101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
103. ஓம் வள்ளலே போற்றி
104. ஓம் வரமருள்வாய் போற்றி
105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி

106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
107. ஓம் பத்தராவியே போற்றி
108. ஓம் பக்தோசிதனே போற்றி

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம்

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

 

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

 

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்

அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

———————–

ஸ்ரீ ராமானுஜருக்கு  தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ராமாநகரில் 216 அடி உயரத்தில் 1,500 டன் ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்க சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே யானைகள் தாங்கி பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்மபீடம் (தாமரை) 2 அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 அடுக்குகளிலும் 18 சங்கு, 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன.

பீடம் 108 அடி, சிலை 108 அடி என 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, உலகின் 2வது மிகப்பெரிய ஐம்பொன் சிலையாகும்.

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்த படியாக ராமானுஜரின் சிலை உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது.

ஐதராபாத்தில்

ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின்

216 அடி உயர ஐம்பொன் சிலை,

—————

ஸ்ரீ யதுகிரி ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் கைங்கர்யம்
Statue of peace –ஷாந்தி மூர்த்தி -பிரதிஷ்டை -காஷ்மீர் சாரதா பீடத்தில்-ஞான கேந்திரத்தில் ஆனி மாதம் நடந்தது
Statue of dignity at ayothyaa -12 ocr 2022 ஸ்ரீ அம்மாஜி மந்திர் ஸ்ரீ அயோத்யா
Statue of -நல்லிணக்கம் harmony -கன்யாகுமரியில் வள்ளுவர் விவேகானந்தர் சிலைகள் அருகில் -25-11-2022 n
அடுத்த மாதங்களில் ஸ்ரீ பூரியிலும் குஜராத்திலும் உண்டு

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .