Archive for the ‘Aandaal’ Category

ஸ்ரீ கோதா ஸ்துதி அனுபவம் —

March 14, 2023

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

1-ஸ்ரீ பூர்வாச்சார்யர்களின் ஸூ க்தி நடையை அநு சரித்தல்

முதல் ஸ்லோகம் -ஐந்தாம் ஸ்லோகம் -இவற்றில் காணலாம்

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–ஸ்ரீ குணரத்னகோசம் 3–

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

தேவேந்த்ரனுடைய உத்யான வனத்துக்கு -நந்தனம் -என்ற பெயர் உண்டு -அங்கு கற்பகக் கொடி படரும்
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் குடியாகிற நந்தவனத்தில் தோன்றிய ஆண்டாளும்
தனது திவ்ய ஸூ க்திகள் மூலம் சகல வேதார்த்தங்கள் எல்லாம் விளக்கி அருளுகிறாள்
பெரியாழ்வார் குலம் ஆண்டாள் திருவவதரித்ததால் பெருமை மிக்கு விளங்கியதே
கொடி கொள் கொம்போடே அணைந்து அல்லால் நிற்காதே
எனக்கே தன்னைத் தந்த கற்பகமான எம்பெருமானான பெரிய பெருமாளாகிய கற்பகத் தருவை அணைந்து விளங்கா நிற்கும்

பஞ்சைதே தேவ தரவோ மந்தார பாரிஜாதக சந்தான கல்ப வ்ருஷச் ச பும்ஸி வா ஹரி சந்தனம் -அமர கோசம்
ஐந்து வ்ருக்ஷங்கள் தேவ வ்ருக்ஷங்கள்

ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ கல்ப வ்ருஷ தேந ஸஹ யோகேந -த்ருஸ்யாம் ரமணீயாம் இத்யர்த்த
மானிடவர்க்கு என்று பேச்சுப்பதில் வாழகில்லேன்

ஆக பட்டரை அடி ஒட்டி ஆண்டாளை கற்பக வல்லியாக அருளிச் செய்கிறார் –

———

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌ தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளி தாம்நா
த‌ந்த்ரீநி நாத‌ ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||–5-

அன்ன வயல் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பூ மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு -தனியனைப் பின்பற்றி அருளிச் செய்த ஸ்லோகம்

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகு கால‌மாகக் கொண்டிருக்கும்
என் போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான்
என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக் க‌ம்பிக‌ளின் நாதத்தைப் போல்
ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலே தான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகலிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா -ஸர்வாத்மநா விதேயனாக ஆக்கிக் கொண்டவள் அன்றோ

————————

2- இந்த ஸ்துதி அவதரித்த வரலாற்றை விலக்ஷணமாக அருளிச் செய்தல்

வைதேசிக: ஸ்ருதி கிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌந த்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா|| .2.

“எண்ணிறந்த ஸ்ருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”

ஸ்வாமி மவ்வ்ன வரத்துடன் எழுந்து அருளி இருக்க
ஆண்டாள் திரு வீதிப் புறப்பாட்டில் -வீதியில்
ஏதோ அனுபபத்தி விளைய -அதன் வழியாக எழுந்து அருள முடியாமல்
இவர் விரதத்தை ஸஹஸா விஸர்ஜனம் செய்து அருளி இந்த ஸ்துதியை விஞ்ஞாபிக்க உபக்ரமித்தார் –

—————

3- அநித அஸாதாரணமான கவித் திறமை

இதற்கு எல்லா ஸ்லோகங்களுமே லஷ்யமானாலும்
ஆறாவது பதினாறாவது ஸ்லோகம் அதி அசாதாரணம்

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம் போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.
உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா ) தோன்றுகிறாய்.
சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய்.
திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–.
உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய்.
மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.
ஆறு ஆறுகள்—கோதாவரி, சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா

இதற்கும் மேல் அபி சப்தத்தை ஐந்து தடவை பிரயோகித்து

சோணா அபி துங்க‌ப‌த்ரா-
துங்க‌ப‌த்ரா அபி ஸரஸ்வதீ
ஸ‌ர‌ஸ்வ‌தி அபி விரஜா
விரஜா அபி கோதா –கோதாவரீ
கோதாவரி அபி நர்மதா
என்று இங்கனம் வாக்ய விந்யாஸம் ஸ்வாமிக்கு விவஷிதம்

——–

த்வந் மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித ஸ பீதி ரஸ ப்ரமோதா|
மஞ்ஜு ஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || .16.

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

இந்த ஸ்லோகத்தில் பிரயோகித்த பதங்கள் யாவுமே மங்களகரமாக அமைந்து உள்ளன
விவாஹ காலங்களிலே பூச்சூடுதல் –மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே-
குழாம் கூடி யுண்ணுதல் –ஸ பீதி ரஸ
சந்தோஷமாக அனுபவித்தல் -ப்ரமோதா|-
மங்கள ஒலி மல்குதல் –மஞ்ஜு ஸ்வநா-
இனிய உணவுகளை அனுபவித்தல் –மதுலிஹோ விதது:-
மங்கள வாத்தியங்கள் முழங்குதல் -மங்கள தூர்ய கோஷம்
இவை அனைத்துமே சொல் நடை நயத்தில் அமைந்துள்ள
அழகு அனுபவிக்கத் தக்கது

வஸ்ய வாக்த்வ பிரபாவம் இது

———————-

4- வேதத்தில் உள்ள திறமையைக் காட்டுதல்

வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)

கோதாய்! பூமிப் பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

உமது காதின் பெருமையோ லோக விலக்ஷணம்
அரவிந்தத்தில் மகரந்தம் ஸ்ரவிப்பது ஸஹஜமே
வால்மீகி கோகிலத்தில் சொற்களின் இனிமையை விட கிளி மொழி கோதையின் சொற்களே அது மதுரம் என்கிறார்
ஆசிரியரின் இந்த நிரூபணத்துக்கு வேத பாண்டித்யமே உதவிற்று –

—————-

5- ஆழ்வார்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு ஏற்றம் கூறுதல் –

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)

கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணு சித்தர்) உன்னைப் போலவே
உன் பிரிய தமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ஸ்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.

இவளுக்கு ஸ்த்ரீத்வத்வம் ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே –
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் என்றும்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்றும்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு
அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே -என்றும்
கொங்கை முலைகள் இடர் தீர இத்யாதி
பாசுரங்களால் ஸ ஹ்ருதய ஹ்ருதயங்கம் -விளங்குமே
அநுராக ரீதியில் உள்ள ஆழ்வார்கள் பாசுரங்கள் போல் அன்ரிக்கே இயற்கையாகவே அமைந்த பகவத் அனுபவ ரஸவத்தரம் விளங்குமே

குரவஸ்த்வதீயா:-அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி அன்றோ இவள் -அஞ்சுகின்ற குடி என்றுமாம்

———————-

6-ஆண்டாளுடைய திருக்குறளின் மேன்மை

இது பல பாசுரங்களிலும் பேசப்பட்டு இருந்தாலும் பத்தாவது ஸ்லோகம் மிக விலக்ஷணம்

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)

கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

கர்ணாம்ருதை: ஸ்துதி-புராதன பாதாம் அன்று -வியஸ்த பாடம் அங்கதம் ஆகும்
கர்ணாம்ருத: ஸ்துதி-என்று ஸமஸ்தமாகவே பாடம் கொள்ள வேண்டும்
கர்ணாம்ருத மான ஸ்துதி ஸதஸ் பாடின ஆழ்வார்களைக் காட்டிலும் அதிக அனுக்ரஹம்
பெற்றுத் தந்ததே இவள் சூடிக் களைந்த மாலையின் பயனாகவே-

————-

7-விரோத ஆபாஸம் காட்டுதல்

சோணா தரேபி -10 பாசுரத்தில் விரோத ஆபாஸம் உண்டாய் இருந்தாலும்
அடுத்த பாசுரம் மிக விலக்ஷணம்
மேல் எழப்பார்க்கும் போது விரோதம் உள்ளது போல் தோன்றி
ஆழ்ந்து பார்க்கும் இடத்து விரோதம் காணாமல் பேசுவதே விரோதி ஆபாஸ லஷ்யம்

திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)

அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!

உத்தர -வட திசைக்கும் உத்க்ருஷ்டமாக இருபதுக்கும்
முந்தின பொருளில் விரோதி உத்பாவநமும்
பிந்தின பொருளில் அதற்குப் பரிஹாரமும்

குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி -என்றும்
மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்து -என்றும்
இருந்தாலும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் உள்ள அபி நிவேசத்தாலே தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிறார் என்றபடி –

———————–

8-விலக்ஷணமான உல்லேகம் காட்டி அருளுதல்

ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்ட காலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

ஏகதேசம் தனது திருநாமம் வகிப்பதாலேயே இழந்த தூய்மை பெற்றது என்று சமத்காரமாக அருளிச் செய்துள்ளார் –

—————-

9- ஸாஸ்த்ரார்த்தங்களை விநோதமாகக் காட்டி அருளுதல்

ரங்கேஸ்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதி கத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

அம்மா பூதேவியே! ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

நம்பியைக் காண நம்பிக்கு ஆயிர நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்

எம்பெருமானுக்கு சேஷித்வமும் ஸகல ஜகத் பதித்தவ ப்ரயுக்தமான ஏற்றமும் பிராட்டிக்கு
ஞானீ து ஆத் மைவ மே மதம் -என்பதால் பிராட்டிக்கு ஏற்றமும் உண்டே
ரசிகா -விநோத வார்த்தைகள் இவ்வாறு உண்டே
இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளும் ஸமத்வத்மமும் வேதார்த்த -சாஸ்த்ர -அர்த்தங்களே

————-

10-அதி லலித வாக் விந்யாஸ வைதக்த்யம்

செவிக்கு இனிய செஞ்சொற்கள் அனைத்துமே –

சதமக மணி நீலா சாருகல்ஹார ஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ஸ்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

இது அதி விலக்ஷணம்
நித்தியமாக ஸூ ப்ரபாதத்தில் இந்த ஸ்லோகம் அனுசந்தேயம் –

 

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா சதுச்லோகீ –

January 21, 2023

ஸ்ரீ கோதா சதுச்லோகீ – சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியாரின் பெருமைகளைச் சொல்லும் நான்கு ஸ்லோகங்கள் – ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச்செய்தது.

திருமலை அனந்தாழ்வான் விஷயமாக திருவேங்கடமுடையான் தானே அருளிச் செய்த தனியன்கள்:

1) அகிலாத்ம குணா வாஸம் அஜ்ஞாந திமிராபஹம்|

ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஆத்மாவுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.

2) ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹ த்வயம்|

ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்ய மஹம் பஜே||

ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித் தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

முதலியாண்டான் மற்ற திவ்ய தேசங்களில் -திருவேங்கடத்தில் மட்டும் அனந்தாழ்வான் சாதிப்பார்

தனியன்

“சக்ரே கோதா சதுச் லோகீம் யோ வேதார்த்த பிர கர்ப்பிதம்

ஸ்ரீ வேங்கடேச சத் பக்தம் தம் நந்த குரும் பஜே”️

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட கோதா சதுச் லோகீ ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தவரும், 
திருவேங்கடமுடையானின் பரம பக்தருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன்.
--------------

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை |
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா ஸூப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 1

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்யஸ்  த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்திரம் -போலே

நிஸ் சம உத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கச விலுலிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

மாலைக் கட்டிய மாலை -மாலையாலே மாலாக்கிய கோதை

ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகள் –ஸூபகயா-செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸூப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாம் அபாங்கை–
இத் தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்

வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்திகளை – திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகளை – அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகளை அருளியவள் ஸ்ரீ ஆண்டாள். இவை உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம். ஈடு இணையற்ற வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் இந்த ஸ்ரீ ஸூக்திகளை கேட்டு இவ்வுலகத்தார் சுப்ரபாதமாக கேட்டு துயில் துறந்து விழித்து எழுகிறார்கள். ஆண்டாள் குழல்களில் சூடிக் களைந்ததால் பூச்சரங்கள் கண்ணனை பிச்சேற்ற வல்லவை, கோதை சூடி களைந்ததால் ரத்னா ஹாரமாக கொள்கிறான். ‘கோதா’ என்றால் ‘மாலை’. ஆண்டாளே மாலை, அதாவது ‘மாலை’ மாலை கட்டினாள். ‘திருமாலைக்’ கட்டினாள், – தன் வார்த்தையால். கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள், திருப்பாவையாக! இத்தகு அகில ஜகன் மாதாவுடைய குளிர்ந்த கடாக்ஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்!

எந்த நாச்சியாருடைய இணையற்ற உயர்ந்த அருளிச்செயல்கள் வேதங்களின் தலையான பாகமான உபநிஷத்தின் ஆபரணங்களாக ஆகிறதோ, எந்த நாச்சியாருடைய காதலன் (எம்பெருமான்) அவள் குழலில் சூடிக் களைந்த மாலையில் மிகவும் ஆசை யுடையவனாய் உள்ளானோ, எந்த நாச்சியாருடைய, வேதம் போன்ற மங்களமான திரு வாக்கினால் உலகம் நல் விடிவு பெற்றதாக ஆகிறதோ, அப்படிப்பட்ட லோக மாதாவான ஆண்டாள் நாச்சியார் அடியேனைத் தமது திருக் கண் நோக்கமாகிற அமுத மழையாலே நனைத்தருள வேணும்.

————–

மாதா சேத் துலஸீ பிதா யதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர  ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா யதி |
ஜ்ஞாதாரஸ் தனயாஸ் த்வதுக்தி ஸரஸ ஸ்தந்யேந: ஸம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வ மந்ய ஸூலபா சாதாரணா ஸ்ரீ ரஸி”||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 2-

மாதா சேத் துலஸீ
த்வ மாதா துளஸீ

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான்  –மே ஸூதா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || கோதா ஸ்துதி -(1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || கோதா ஸ்துதி(10)

ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.
அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து ,
அவனுக்கு அணிவித்த பிறகு தான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள்  வாழியே –

ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதாரஸ்-
ஞானம் -அறிவு -ஜ்ஞாதா-அறிபவன் -தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள்  –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்-வாய் சொல் அமுதத்தையே தாய்ப் பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸ்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு   என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த  நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீயை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

 “கேசவ பிரியையான துளசி தேவி மாதா நந்தவனத்தில் ஆழ்வார் திரு மகளாராய் – வேயர் பயந்த விளக்காய் ஸ்ரீ விஷ்ணு சித்த குலத்தில் அவதரித்தீர்! நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்ற உம்முடைய ஆசையை நிறை வேற்றி வைத்தாரன்றோ எதிராசர்!”
“பிரிய தமன் அதாவது பிரியமானவன், அரங்கத்து அரவின் அணை அம்மான், ஸ்ரீ ரெங்க நாதன் மூடு பல்லக்கில் எழுந்து அருள, கேசவ நம்பியை கைப்பிடித்தாயே. பிரிய தமன் உன் புக்ககத்திலே குடி புகுந்தார்,” (பெரியாழ்வாருடைய அகம் தான் இன்று ஆண்டாள் சந்நிதி. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம்! ) “ஆண்டாளே உம்முடைய வாய் சொல் அமுதத்தை – வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவையை, இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த ஜ்ஞானவான்கள் இருக்க, ‘போய பிழை புகுதருவான்’ என்று சொல்லி மற்றவர்க்கும் கிட்டி உய்யும்படி எளிதான, சாதாரணமான புகலாய் இருக்கிறீர்! “
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரே! தேவரீருக்குத் திருத்தாயார் யாரென்னில் துளசிச்செடி. தேவரீருக்குத் திருத்தகப்பனார் யாரென்னில் பரமபாகவதோத்தமரான ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். தேவரீருக்குத் திருத்தமையனார் யாரென்னில் யதிராஜரான ஸ்வாமி ராமாநுஜர். தேவரீருடைய ப்ராணநாதன் யாரென்னில் திருவரங்கநாதன். தேவரீருடைய குழந்தைகள் யாரென்னில், தேவரீருடைய அமுதவாய்மொழிகளான முலைப்பாலைப் பருகி வளர்க்கப்பட்ட ஞானவான்கள். தேவரீருடைய அமுதவாய்மொழிகளை அறியாத சாமான்யர்களுக்கெல்லாம் தேவரீர் எப்படி அடையத்தகுந்த புகலாக இருக்கிறீர்?
——————

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணா ஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்-
தன் காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட

ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

பாசி தூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் –2-8-7-

ஸ்வஸ்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப் பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப் பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –

உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய  ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப்   பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ ரஹஸ்ய சிகாமணி —

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் –

இடம் பெற்றார் எல்லாம் என் உடலாய் நிற்க
இடர்ப் பிறப்பு ஒன்றும் இவை இல்லா என்னை அன்பால்
அடம் ( திடம் ) பற்றாம் இவன் என்று நினைத்தான் யாவன்
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தான் தாரூம் -( கட்டை ) உபலமும் (கல்லும் ) போலே கிடக்க நானே
உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என் தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற
எம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த உரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் இருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஓளி சுற்றும் பரப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே

மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலையென்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம்

ஸ்வஸ்த்தம் சித்தம் ஸூகமபி வபுஸ் தாது சாம்யம் ச க்ருத்வா
ஸ்வாத் மாநம் ச ஸ்ம்ருதி பத மஜம் விஸ்வ ரூபம் விதந்வந்
காலே ப்ராப்தே கரண விலயாத் காஷ்ட்ட பாஷாண கல்பாந்
நாத போத்ரீ நயது க்ருபயா நாதித ஸ்வம் பதம் ந –

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵 ️
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!

—————

ஆகூதஸ்ய பரிஷ்க்ரியாம் அனுமபாம் ஆஸேசனம் சக்ஷுஷோ:
ஆனந்தஸ்ய பரம்பராம் அனுகுணாம் ஆராம சைலேசிது: |
தத்தோர் மத்ய கிரீட கோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யா மோத ஸமேதித ஆத்ம விபவாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 4 

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தஸ்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர் மத்ய க்ரீட கோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூக ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

விளக்கம்:

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய பகவானுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள் ஸ்ரீ ஆண்டாள். தனது அழகு அலங்காரங்களால் கண்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பவள். திருமங்கை தங்கிய சீர் மார்வன் தாம் விரும்பி, நாள் தோறும் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திருமுடியிலே தரித்து ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி, இவ்வாறு பகவானை பிச்சேற்றி மகிழச் செய்யும் பெருமையுடைய ஸ்ரீ கோதா பிராட்டியை நாம் ஸ்துதி செய்து வணங்குவோமாக!

திருவேங்கடமலையிலும், திருமாலிருஞ்சோலை மலையிலும் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய அபிப்ராயம் நிறைந்த செயலுக்கு மிகவும் அழகூட்டுமவளாயும், சேவிக்கும் அடியவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை உண்டு பண்ணுமவளாயும், அவனுக்கு எல்லாவிதத்திலும் தக்கவளாய், நிரந்தர ஆனந்தவெள்ளமூட்டும்படி அவனது திருமார்பிலும், திருமுடியிலும் அணியும் தான் சூடிக்களைந்த குங்குமம், பூமாலை ஆகியவற்றின் மணத்தினால் பெருகும் வைபவத்தை உடையவளாய், உதாரவாக்காளரான ஆண்டாள் நாச்சியாரைப் போற்றுகிறோம்!

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந் மௌளி மால்ய பர ஸம் பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜ மிவாதததி த்வதீயாந்யா
கேகராணி பஹுமாந விலோகிதாநி || .கோதா ஸ்துதி -20–போக ரஸாந் -கண்ணின் கடாக்ஷ குளிர்ச்சியால் அலங்காரம்

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது,
நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,தந்யமாயிற்று மேலும்,
நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து,
அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்) மாலைபோல் அமைந்துள்ளது.
தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்;
ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில்,
நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

தையொரு திங்களும் தரைவிளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*
உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்*
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கைவேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! 1

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்

இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

———————–

ஸ்ரீ ஆண்டாள் மங்கள ஸ்லோகங்கள் ☘

🌸 ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (1)

🌸 மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (2)

🌸 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே |

நந்த நந்தன ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம் || (3)

🌸 கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான நோத்பவாம் |

பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் || (4)

—————–
“கோவிந்தன்” என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்..
1. மத்ஸ்யாவதாரத்தில் “கோ” எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால்,
“கோவிந்தன்” என்கிற திருநாமம், மத்ஸ்யாவதாரத்துக்குப் பொருந்துகிறது..
2. கூர்மாவதாரத்தில் “கோ” எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே!..
.
3. வராக அவதாரத்தில் “கோ” எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்..
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய “கோ”வை (“கோ” என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே!..
5. “கோ” எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்..
6. “கோ” எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது..
7. “கோ” எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தனே!…
8. “கோ” எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்..
9. “கோ” எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை..
10. “கோ” எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட, நாளைய தினம் அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்!…
————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாவை நோன்பும் தை நீராடலும் –ஸ்ரீ மதி ஜெயஸ்ரீ சாரநாதன்–ஸ்ரீ சங்கத் தமிழ் மாலை —

January 20, 2023

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்

ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம் ஸ்வஸ்மை ப்ரஸூநார்பணம் |

ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மநிசம் ஸ்ரீதன்வி நவ்யே புரே

ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தனயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵 ️
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!

—————————

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்

—————-

மார்கழியும் திருப்பாவையும் நமக்கு நினைவூட்டுவது பாவை நோன்பென்னும் பண்டைய வழக்கம். மார்கழி மாதம் பாவை நோன்புக்குப் பெயர் பெற்றது. தைந் நீராடல் என்பதும் பிரசித்தி பெற்ற ஒன்று. மார்கழியிலும் நீராட்டம் உண்டு. இந்தச் செய்திகளை எல்லாம் அரைகுறையாகக் கேட்டுள்ளோம். இவை குறித்த இலக்கியச் செய்திகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரை.

பாவை நோன்பின் முக்கிய அம்சமே இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, சில்லிடும் ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும். சற்று யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தேவையா என்று தோன்றும். இளம் சிறுமியரை பகல் நேரத்தில் விளையாட அனுப்பக் கூடாதா? விடியலுக்கு முன்னால் எழுப்பி, குளிரில் ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் ஆற்றங்கரைக்கு அனுப்பி, ஆற்றில் இறங்கிக் குளிக்கச் சொல்வது நல்லதா என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இந்தப் பாவை நோன்பில் பொதிந்துள்ள சில கருத்துகள், பொதுநலத்தையும், அக வாழ்வின் நன்மையையும் இணைத்து, மக்கள் சமூகத்தின் ஒரு முக்கியக் கடமையாகவே பாவை நோன்பினைக் காட்டுகின்றன.

அக வாழ்வு என்னும் பொழுது, மனம் நிறைந்த வாழ்க்கையை, கண் நிறைந்த கணவனுடன் இப்பிறப்பு மட்டுமில்லாமல், அடுத்த பிறவியிலும் வாழ வேண்டும் என்னும் வேண்டுதல் செய்யப்படுகிறது.

பொது நலம் என்னும் பொழுது, வரப்போகும் மாரிக்காலம் தப்பாமல் மழை கொடுக்க வேண்டுமெனில் மார்கழி மாதம் ஆற்றங்கரையில் நோன்பிருக்க வேண்டும். மாதம் முப்பது நாள்களும் செய்யும் இந்த நோன்பினை பெரியவர்கள் செய்தாலும்கூட, சில குறிப்பட்ட விதங்களில் இளம் சிறுமியர் செய்வதே பலனளிக்கும் வண்ணம் இருக்கும். இது எப்படி என்று பார்பதற்குமுன், இந்த வழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கக் கூடும் என்று பார்ப்போம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, பிங்கலந்தை நிகண்டு, சூத்திரம் 1369 இவ்வாறு கூறுகிறது:

பேணும் சிறப்பின் பெண் மகவாயின் …..
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும்.

ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பருவத்தில் உள்ள சிறுமியர் பனி நீர் தோய்ந்து, பாவை ஆடி, ஐங்கணைக் கிழவன் எனப்படும் ஐந்து பாணங்களை உடைய காம தேவனுக்கு ஆர்வமோடு நோன்பு நோற்பர் என்பது இதன் பொருள்.

இதுவே தமிழ் மரபென்றால், வட நாட்டில் மார்கழி மாதத்தில், யமுனை ஆற்றங்கரையில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைக் குறித்து பாவை செய்து, நோன்பு நோற்பர் என்னும் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. இங்கே காமதேவன், அங்கே கார்த்யாயினி. ஆனால் குறிக்கோள் ஒன்றே. கண்ணன் போல, திருமால் போல, மனம் கவர் கணவனை அடைதல் என்பதாகும்.

இதைச் செய்யும் பருவம், கணவன் என்பதும் திருமணம் என்பதும் என்னவென்றே அறியாத சிறார்ப் பருவம்! அப்பருவத்தில் எதற்கு இப்படி ஒரு நோன்பு என்று நோக்கினால், அங்கேதான் புலப்படுகிறது, ஒரு பொதுநலம்.

வசிஷ்டர், காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம் அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து-  மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.

மூவகையில் கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின் சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும் இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது. மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும் இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள் அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது, முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால் மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம் தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர் போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின் பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம் தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்- காட்டி.

மூன்றாவது வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான் அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து, மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல் இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள் ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.

தற்சமயம் மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ் முன்னோர்.

பாவை நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும் சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப் பெறவே, சைய மலையின் கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார்.

பாவை நோன்பு செய்யும் முறை

மார்கழி மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும் மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரை தோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, அதே ஆதிரை நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள், ஓரை ஆகியவற்றின் அடிப்படையில், மாரிக் காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர். பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும் மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள பொதுநலக் கருத்து.

இந்தக் கருத்தினை திருப்பாவையிலும் காணலாம்.

“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள். அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால் மாதம் மூன்று முறை மழை பொழியும்.

அது மட்டுமல்ல, அடுத்த பாசுரத்தில் (‘ஆழி மழைக் கண்ணா’), மாரிக்காலத்தில் இருண்டு திரண்டு மேகங்கள் மழை பொழிவதைக் குறிப்பிட்டு, “வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்” என்று மார்கழி நீராட்டத்திற்கும், மழைக் காலத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறாள். ஆக, பாவை நோன்பின் முதல் நோக்கம், பொதுநலம் அல்லது நாட்டு நலம் என்னும் மழை வளம் வேண்டுதல்.

இந்த நோன்பை விவரிக்கையில், பரிபாடல் 11-இல் நல்லந்துவனார் இவ்வாறு கூறுகிறார்.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல்
அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
உறை சிறை வேதியர் நெறி நிமிர்
நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

கதிரவன் அதிகம் காயாத, குளிர்ந்த கடை மாரியையுடைய மார்கழித் திங்களில், சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் முழுமை பெற்ற அந்தப் பௌர்ணமி நன்னாளில், விரி நூல் அந்தணர் விழவு தொடங்குவர். முப்புரி நூலை உடைய அந்தணர் (அந்தணர் என்றால் வேதாந்தத்தை அணவினவர் என்பது நச்சினார்க்கினியர் கருத்து) இறைவனுக்கு பலிப் பொருள் (நைவேத்தியப் பொருள்) பெய்த பொற்கலங்களை ஏந்தி நிற்க, “வெப்பமடையாமல் இந்நில உலகம் குளிர்வதாக!” என்று வாழ்த்தி, “அம்பாவாடல்” என்னும்படி, அம்பா என்று சொல்லப்படும் தாயோடு, இளம் கன்னியர் ஆற்றினில் நீராடி வர, அவர்களுக்கு, ‘முனித் துறை முதல்வியர்’ எனப்படும், சடங்குகள் அறிந்த முதிய பார்ப்பனப் பெண்டிர் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க, நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள், குளிர்ந்த ஆற்று நீரில் குளித்தமையாலும், குளிர் தாளாததாலும், உடுத்தின ஈரத் துணியுடனே இருப்பதாலும், அந்தக் குளிர் தணியும் வண்ணம், ஹோமத் தீயின் அருகே வந்து, தங்கள் ஈரத்துணியைக் காட்டி உலர்த்தும் வண்ணம் இருப்பர். அந்தத் துணியிலிருந்து கிளம்பும் நீராவியானது, வைகை ஆற்றுக்குத் தரும் அவிப் பொருள் போன்று இருக்கும். ‘வையை! நினக்கு மடை வாய்த்தன்று’ என்று , கன்னியர் ஈரத் துணியில் கிளம்பும் நீராவியே வைகை உண்ணும் ஹவிஸ் என்னும் ஹோமப் பொருள் என்று புலவர் கூறுகிறார்.

அடுத்து ஒரு முக்கியக் குறிப்பைத் தருகிறார்.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இவ்வாறு ஹோமமும், நோன்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மறுபுறம், இளம் பெண்கள் நடனம் ஆடுவர். இங்கே சிறுவர்கள் பற்றியும் புலவர் குறிப்பு தருகிறார். மையோலை பிடித்து கவி பாடும் மழ புலவர் என்றால் முதன் முதலாக ஓலைச் சுவடி பிடித்து பாடம் பயில ஆரம்பிக்கும் சிறுவர் என்பது பொருள். அவர்கள் படிக்கும் பாடலுக்கு மாறாக, அந்தப் பெண்கள் பொய்யாடல் ஆடுவர் என்கிறார். பூசையின் பகுதியாக, அந்தக் குளிரிலும், அபிநயம் பிடித்து அவர் ஆடுவர். அது பொய்யாடல் என்கிறார். கள்ளமில்லாப் பருவத்தினராக இருப்பதால், அந்தப் பாடல்களுக்குக் காமக் குறிப்பின்றி ஆடுதல் ‘பொய்யாடல்’ எனப்படும் என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். இதன் மூலம் அந்தப் பாடல்களில் காதல் ரசம் அல்லது, நல்ல கணவனை விரும்பும் விழைவு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் கள்ளமிலா அந்தச் சிறுமியர் அபிநயித்தபோது, அது வைகைக்கு வைக்கும் ஒரு விண்ணப்பம் ஆகிறது.

அது என்ன விண்ணப்பம் என்றால், நீரின் கண் ஆடியும், தீயின் கண் (ஹோமத் தீ) நின்றும், பொறியையும், புலனையும் அடக்கி இந்தச் சிறுமியர் ஆடுவது, இவர்தம் முன் பிறப்புகளிலும், இவ்வாறு ஆடினமையின் காரணமாகவோ? இந்தப் பேறுக்குரிய காரணத்தை நீயே சொல்வாய் வைகை நதியே- இவ்வாறு கூடியிருப்போர் நினைப்பர், கேட்பர். புலவரும் கேட்கிறார்.

“தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?” என்னும் இந்த வரிகளின் மூலம், தைந் நீராடுதல் என்பது, ‘தவத்தை நீராடுதல்’ என்னும் சொற்களின் சேர்க்கையே என்று தெரிகிறது. இந்த வரிகள் சொல்லப்படும் காலமும் இடமும், மார்கழி மாதத்து பாவை நோன்பு ஆரம்பிக்கும் முதல் நாள். தை மாதம் இன்னும் வரவில்லை. ஆனால் மார்கழி மாதத்து பாவை நோன்பின் நீராட்டத்தையே, தைந் நீராடல் என்று புலவர் கூறுகிறார். பொதுநலம் கொண்ட பாவை நோன்பில் பிணைக்கப்பட்டுள்ள அக நலம் காட்டும் பகுதி இது.

சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து, நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து, இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். ‘தவமும் தவமுடையார்க்காகும்’ என்பது முதுமொழி. ஒருவர் வழி வழியாக தவம் மேற்கொண்டிருந்தால்தான், இப்பிறப்பிலும், தவத்தை மேற்கொள்வர். ஆகவே அந்தச் சிறுமியரும் முன்னரே இருந்த தவத்தைப் பற்றியே இன்று, வைகையே, உன் முன்னரும் தவத்தை ஆகும் பேறு பெற்றனரோ, நீ கூறு என்கிறார் புலவர்.

தை என்றால் பிணைத்தல் அல்லது தைத்தல் என்பது பொருள். தைந் நீராடல் என்பது, பிறவி தோறும் கடைபிடித்த தவத்தை, இப்பிறவியிலும் பிணைக்கும் ஒரு நீராடல், எனவே அதை ‘தவத் தைந் நீராடல்” என்கிறார் புலவர். மார்கழிப் பாவை நோன்பே தைந் நீராட்டமும் ஆகும் என்பது இதன் மூலம் புலனாகிறது.

அந்தப் பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்பர் அங்குக் கூடியுள்ள மகளிர். காட்டாற்று வெள்ளமெனப் பெருகி வந்த ஆற்று நீர், மார்கழி மாதம் தெளிந்து, முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும். அதுவே தக்க நீர். எதற்குத் தக்கது என்றால், தங்கள் மன விருப்பங்களையும், தவத்தையும் அந்த நீரிடம் கூறும்பொழுது, கண்ணாடி போல் தெளிந்த அந்நீர் அவற்றைத் தைத்துக் கொள்ளும். அதுவே ‘தைந் நீர்’. தெளிந்து இருக்கும் அந்நீர், அந்த மகளிரின் தவத்தை அப்படியே வாங்கிகொண்டு, நிறைவேற்றிக் கொடுக்கும்.

அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை அடுத்த வரிகளில், புலவர் கூறுகிறார். இங்கேதான் அக வாழ்வின் வேண்டுதல்களைப் பொது நலம் கொண்ட பாவை நோன்புடன் தைக்கும் அருமையான கருத்துகள் புலனாகின்றன.

‘ “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,
‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,
‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்

“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர், கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”

இப்படி வேண்டிக் கொண்டு, பரிபாடல் இசைத்துப் பாடி இறுதியாக அவர் வேண்டுவது இது.

முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே!

“நாங்கள் முன்பிறப்பில் செய்த தவத்தாலே, இப்பிறவியில் நின்பால் இத் தைந் நீராடலாகிய தவத்தைப் பெற்றோம். அத்தவத்தினை யாவரும் விரும்பத்தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் நாங்கள் பெறுவோமாக,” என்று பிறவி தோறும் தொடரும் தவமாக, இந்த வேண்டுதல் நடப்பதே பாவை நோன்பின் அகத் திறமும், தைந் நீராடலின் மகத்துவமும் ஆகும்.

இந்த வர்ணனைகள் பாவை நோன்பின் முதல் நாளான மார்கழி பௌர்ணமியன்று நடப்பவை. அதன் பின்னரும் என்ன ஆயிற்று, எவ்வளவு நாட்கள் இந்த நோன்பு தொடர்ந்தது என்று பார்க்கும் முன், இந்நோன்பில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

பிள்ளைப்பருவத்தின் ஐந்து முதல் ஒன்பது வரையிலான வயதுச் சிறுமியர் செய்வது என்று கூறப்படும் இந்தப் பாவை நோன்பில், முது பெண்டிர் கலந்து கொண்டு, மற்றவர்களுக்கு செய்யும்முறை சொல்லிக் கொடுக்கின்றனர். கன்னிப்பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதே பாடலில் ஓரிடத்தில், பாவை ஆடிய கன்னிப் பெண்ணைக் கண்டு மயங்கின இளமகனைப் பற்றிய விவரங்கள் வருகின்றன. கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டும் இள மங்கையர் கலந்து கொள்கின்றனர். ஆக, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் அனைவரும் இந்த நோன்பை மேற்கொண்டுள்ளனர். வருடம் தோறும் செய்திருக்கின்றனர்.

ஹோமம் செய்யும் ஆண் மக்கள் அங்கே இருக்கின்றனர். பெண்கள் பாடுவதையும், ஆடுவதையும் வேடிக்கை பார்க்கும், இளம் பருவ ஆண்கள் அங்கே நீராடித் திரிந்து கொண்டிருக்கின்றனர். நோன்பில் கலந்து கொண்டவர்கள் என்று சொல்லத்தக்க வகையில், இளம் சிறுவரும் அங்கே இருந்துள்ளனர். அவர்கள் பாடிய பாடலுக்கு மாறாக, சிறுமியர் அபிநயித்துள்ளனர் என்று புலவர் கூறுகிறார்.

மறுநாள் முதல், ஆற்றங்கரைக் காட்சியாக இந்தச் சிறுவரும், சிறுமியரும் ஆற்றில் நீராடி, சிறுமியர் பாவை சமைக்க, அவர்களோடு சேர்ந்து சிறுவர்களும் விளையாடுவர். இந்த வர்ணனையை புற நானூறு 243 -இல் காணலாம்.

தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர், தான் போகும் வழியில், ஆற்றங்கரையில் பாவைப் படிமங்கள் செய்யும் சிறுமியரையும், அவர்களோடு கைகோத்து, நீரிலும், மணலிலும் குதித்து, கள்ளமில்லாமல் விளையாடும் சிறுவர்களையும் பார்த்து, அவர்களைபோன்ற இளமைக்காலம் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்.

“திணிமணல் செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை”

என்னும் இவ்வரிகளில் சிறுவர்- சிறுமியர் ஒன்றாகப் பாவை ஆடி விளையாடியமை தெரிகிறது.

“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து”

என்னும் புறநானூறு 11-இன் மூலம் இள மங்கையரும் மணலில் பாவை செய்து, மலர் சொரிந்து வழிபட்டனர் என்று தெரிகிறது.

நோன்பின் காலம்

ஆண்டாள் கூறும் முறைப்படி, மார்கழி முழுவதும், ஆற்றங்கரையில் நோன்பிருக்கப்பட்டது. அது தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்திருக்கின்றது. பங்குனி நாள் வரை என்று நாச்சியார் திருமொழியில், இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மழைத் தொடர்பு வகையில் பார்த்தால், மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் இருக்கும் மூன்று வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலையைப் பொருத்தே, ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை உட்பட நான்கு மாதங்களிலும் மழை இருக்கும். மார்கழி தொடங்கி நான்கு மாதங்களிலும், என்றெல்லாம் மூவகைச் சூழ்நிலைகள் நன்றாக இருந்தனவோ, அன்றிலிருந்து 195ஆம் நாள் நல்ல மழை பொழியும். இதன் அடிப்படையில், பங்குனி வரை நோன்பு தொடர்ந்திருக்க வேண்டும்.

நாச்சியார் திருமொழி அடிப்படையில் நோக்கும் போது, மார்கழியில், மணலில் பாவை சமைத்தாலும், தையில் சிற்றில் இழைத்தலும் இருந்திருக்கக்கூடும். திருக்கூடல் போன்ற பிற மணல் விளையாட்டுகளையும், சிறுமியர் பிற மாதங்களில் விளையாடியிருக்கின்றனர்.

திருக்கூடல் என்பது, மணலில் வட்டமாக வரைந்து, கையை எடுக்காமல் அப்படியே அந்த வட்டத்தின் உட்புறம் சுழிகள் பல வரைய வேண்டும். பிறகு, இரண்டிரண்டாக சுழிகளை என்ன வேண்டும். கடைசியில் இரட்டைபடையில் கூடினால், நினைத்தது நடக்கும். ஒற்றைப்படையில் கூடினால், நினைத்தது நடக்காது. ஆண்டாள் நினைத்தது, நாராயணனே தன்னிடம் வரவேண்டும், தன்னை மணம் புரிய வேண்டும் என்பது. நோன்பின் தொடர்ச்சியான இந்த விளையாட்டுகளிலும், வரப்போகும் கணவனைப்பற்றியே வேண்டுதல்கள் இருந்திருக்கின்றன.

அதன் ‘க்ளைமாக்ஸ்’ பங்குனித் திருநாள்! அதுதான் பங்குனி உத்திரம் என்னும், பங்குனி மாதப் பௌர்ணமி. அன்றுதான் காமன் பண்டிகை. காதலர்களை காமதேவன் சேர்த்து வைத்த நாள். அன்றுதான், யார் காரணமாக காமதேவன் மலர்க்கணை தொடுத்து, அதனால் சிவனால் எரிக்கப்பட்டு, அனங்கன் என்று ‘உருவம் இல்லாதவன்’ என்னும் பெயர் பெற்றானோ, அந்தப் பார்வதி, பரம சிவனை மணந்த நாள். அதுவே, ராமன் சீதையை மணந்த நாள். பாற்கடலில் ஸ்ரீதேவி தோன்றிய நாள், அது மட்டுமல்ல, அந்த நாராயணனையே மணந்த நாள். அரங்கநகர் பெருமான், தாயாரை மணந்த நாளும் அதுவே. அந்தப் பங்குனி உத்திரப் பெரு விழா ஸ்ரீரங்கத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்றது என்று அக நானுறும் பறை சாற்றும் திருநாள். அன்றுதான் ஆண்டாளும், அரங்கனை மணந்தாள். அந்நாளே சேர்த்தி – திருமணப் பிணைப்பில் சேர்த்து வைக்கும் நாள் எனப்படுகிறது.

பாவை நோன்பின் ஒரு பகுதியாக காமதேவனைத் தொழுவர். பரிபாடலில் மங்கையர் தெரிவிக்கும் விருப்பங்களைப் பார்த்தால், கணவன் அன்பு குறையாமல், தம்மை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்னும் காமதேவன் அருளும் வரங்களே. சிவனை நோக்கியே மலர்க்கணை தொடுத்தவன் காமதேவன் என்னும் மன்மதன். அவன் தமக்கும் அருள் புரிய வேண்டும். தாம் விரும்பும் மணவாளனை அடைய உதவ வேண்டும். அடைத்த கணவன் என்றும் அன்புடனும், பிரியாமலும் இருக்க வேண்டும் என்பது பாவையாடும் பெண்டிர் விருப்பம். இதை ஆண்டாளும் தெரிவிப்பதை நாச்சியார் திருமொழியில் காணலாம்.

marriage4ஹோலிப் பண்டிகையன்று கொண்டாடப்படும், பங்குனி உத்திரமே பாவை நோன்பின் முடிவு நாள். திருமணப் பருவத்தில் இருக்கும் கன்னியர் மார்கழியில் இந்த நோன்பை ஆரம்பிக்க, அடுத்த மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு வரன் அமைந்து, பங்குனி உத்திரத்திற்குள் மண வாழ்கை அமைய முன்னேற்பாடுகள் நடந்து விடும். இதைத்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர் நம் முன்னோர்.

பாவை உருவம்

மணலில் பாவை என்னும் பொம்மை செய்வர் என்று பார்த்தோம். அது என்ன பொம்மை என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைப் பாவையாக வடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தமிழ் மண்ணில் என்ன செய்திருப்பார் என்று ஆராய்வோம்.

வெளிப்படையாகத் தெரிவது, பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம். பாவைப் பாட்டு என்பது முன்பு இருந்தது என்று தொல்காப்பிய உரையில் காணப்படுகிறது. அதுபோல பாவைக் கூத்து அல்லது பாவை ஆட்டம் என்பதும், பதினோரு கூத்து வகைகளுள் ஒன்று. இதை ஆடியவள் செய்யோள் என்னும் செந்நிறம் கொண்ட திருமகள். அவளுக்குக் கொல்லிப் பாவை என்று பெயர் உண்டு. போருக்கு வந்த அசுரர்கள் மோகித்து, மெலிந்து விழும்படி அவள் புனைத்து கொண்ட உருவம், கொல்லி மலையின் மேற்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதை காண்போர் அப்பொழுதே மோகிப்பர் என்று சொல்லப்படுகிறது. மோகத்தைத் தரும் காமதேவன் போல, இவள் பாவை உருவமே மோகத்தைத் தரும். எனவே இவள் உருவைப் பாவையாக அமைத்திருக்கலாம்.

முன்னிக்கடலை” என்னும் திருவெம்பாவையிலும், சக்தியின் உருவாக வருணிக்கப்பட்டு, மழை பொழிதலுடன் பாவை நோன்பு சொல்லப்படுகிறது. எனவே, பராசக்தி என்னும் பெண் தெய்வத்தையே வடித்திருக்கலாம்.

ஆனால் சிலப்பதிகாரத்தில் வஞ்சின மாலையில், புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்டிரில் ஒருவராக ஒரு இளம் பெண் வடித்த பாவை பற்றிய குறிப்பு வருகிறது. பொன்னிக் கரையில் மணல் பாவை அமைக்கிறாள் அந்தப் பெண். அதுவே அவள் கணவனாகும் என்று மற்ற பெண்கள் சொல்லுகின்றனர். பிறகு அவர்கள் எல்லோரும் வீடு திரும்பிய பின்னரும், அந்தப் பெண் மட்டும் அங்கிருந்து அகலவே இல்லை. அந்தப் பாவையே தன் கணவன் என்று அவள் அந்த இடத்திலேயே இருக்கிறாள். அப்பொழுது ஆற்று நீர் கரை புரண்டு மணலில் பாய்கிறது. ஆனால் அவள் வடித்த பாவையை மட்டும் அழிக்காமல், அதைச் சுற்றிக் கொண்டு போகிறது. தான் வடித்த பாவை தன் கணவன்தான் என்று அவள் இருந்தமை அவள் பத்தினித்தனத்துக்குச் சாட்சி என்று சொல்லப்படுகிறது.

இங்கே இரண்டு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று, இப்படிப்பட்ட உருவம் கொண்டவன்தான் தன் கணவனாக வரவேண்டும் என்று அவ்வுருவைப் பாவையாக அமைக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.

மற்றொன்று, அந்த உருவம் கொண்டவனே அவள் கணவனாவான் என்று மெய்ப்பிப்பது போல ஆற்று நீரும் நடந்து கொண்டிருக்கின்றது. இது பிறவி தோறும் பாவை நோன்பு நோற்பதனால் ஏற்படும் பயனைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. இப்பிறவியில் இனி வரப்போகும் கணவன், முன் பிறவியிலும், இவளுக்குக் கணவனாக இருந்திருக்கின்றான். இவளது ஆழ் மனதில் பதிந்துள்ள அவன் உருவத்தையே பாவை நோன்பின்போது, மணலில் பாவையாக வடித்துள்ளாள். அவள் கணவன் அவனே என்று அவள் உறுதியாக அவ்விடத்திலேயே இருந்ததை, அவள் நோன்பினை ஏற்றுக்கொண்ட ஆற்று நீர், ஆமோதிக்கும் வண்ணம் அந்தப் பாவையை சிதைக்காமல் சென்றது. அவள் கணவன் யார் என்பதை அவளது பல பிறவிகளிலும், அந்த ஆற்றங்கரையில் அவள் நோன்பிருந்தமையால், ஆற்று நீர் தெரிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாறாக, சிறுமியர் வடித்த பாவையை, வைகை நீர் சிதைத்தது. அதனால் அவர் அழுவர் என்னும் வருணனையும் பரிபாடல் -7 இல் வருகிறது. தாங்கள் வடித்த பாவை சிதைந்து விட்டதே என்னும் துக்கம் இருக்கலாம். அல்லது, மேற்கூறிய வகையில் தன் கணவன் உருவம் என்று சமைத்த உருவம் சிதைந்ததே என்றும் அழுதிருக்கலாம்.

இந்த வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின் அவதாரங்களாகவோ அல்லது வேங்கடம், மாலிரும் சோலை போன்ற பதிகளில் உள்ள திருமால் உருவமாகவோ இருந்திருக்கலாம்.

பின்னாளில் பாவை நோன்பு

பாவை நோன்பு விவரிக்கும் பரிபாடல், அப்பாடல் எழுதப்பட்ட காலத்தைக் கணிக்கும் விதமாக கோள்களின் நிலையைக் கூறுகிறது. நான் தேடின வரையில் கி.மு. 1042, ஆவணி மாதம் இருந்த கோள் நிலை அதை ஒட்டி வருகிறது. பரிபாடல்கள் முதல் சங்கக் காலத்திலிருந்தே பாடப்பட்டு வந்திருக்கின்றன. பிறவி தோறும் பெண்டிர் பாவை நோன்பு நோற்றமை பற்றிக் கூறவே இந்நோன்பும், அது பற்றி விளக்கும் இப்பாடலும் மிகப் பழமை வாய்ந்தவையாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம்.

பிற்கால வழக்கிலும் இந்நோன்பு இருந்திருக்குமா என்று தேடினால், சிலப்பதிகாரத்தில் இதை ஒத்த ஒரு நோன்பு சொல்லப்படுகிறது. கணவனைப் பிரிந்து வாடும் கண்ணகியைப் பார்த்து, பார்ப்பனப் பெண்ணான அவள் தோழி தேவந்தியும் வருந்துகிறாள். தீய கனவு கண்டு வருந்தும் கண்ணகியிடம், கணவனைப் பிரியாமல் இருக்கச் செய்யும் நோன்பினை முன்பிறவியில் கண்ணகி செய்திருக்க மாட்டாள். அதனால்தான் இத்துன்பம் வந்திருக்கிறது. இருந்தாலும், இப்பிறவியில், அந்த நோன்பைச் செய்ய காவிரி நதியானது கடலில் சங்கமிக்கும் புகார்த் துறையில், சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு துறைகளில் நீராடி, காமதேவனைத் தொழுதால் இப்பிறவியிலும் கணவனைப் பிரியாது இருக்கலாம். மறு பிறவியிலும் போக பூமியில் பிறந்து கணவனைப் பிரியாது இருக்கலாம் என்கிறாள். ஆனால் கண்ணகி தங்களுக்கு அது வழக்கம் இல்லை என்கிறாள்.

(கனாத்திறம் உரைத்த காதை)
கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்’

பாண்டிய நாட்டில் வைகை நதி தைந் நீராக – தக்கதாக இருந்தது போல, சோழ நாட்டில், காவிரி ஆறு இருந்திருக்கின்றது. சோம குண்டம் என்பது சந்திரன் துறை. சந்திரனும், சூரியனும் ஒருவரை ஒருவர் பார்க்கும் மார்கழித் திருவாதிரையில் பாவை நோன்பு ஆரம்பித்தார்போல, இவை இரண்டும் எதிர்நோக்கும் துறைகளாக இருந்திருக்கலாம். அங்கே நீராடி, காமதேவனைத் தொழுதல், பாவை நோன்புக்கு இணையாக இருக்கிறது.

பின்னால், கோவலனுடன், கண்ணகியும் மதுரை புறப்பட்ட போது, இதே சங்கமத் துறைக்கு வருவது சொல்லப்படுகிறது. ஆனால், காமதேவனைத் தொழும் நேரமல்ல அது. அவ்விடத்தில் மணிவண்ணன் கோட்டத்தை வலம்வந்து, பயணத்தைத் தொடர்கின்றனர். மணிவண்ணன் என்பது திருமால். காமதேவன் திருமாலின் மைந்தன். சங்கமிருந்து காமதேவன் தொழுது, அருகில் திருமாலை வணங்கிச் செல்லும் வழக்கம், அந்நோன்பு நோற்றாரிடை இருந்திருக்க வேண்டும். அந்தணர்கள் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும். பாவை நோன்பிலும், அந்தணப் பெண் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுப்பாள் என்று வருகிறது. சிலம்பிலும், அந்த நோன்பைப் பற்றிக் கூறுபவள் ஒரு அந்தணப் பெண்.

சிலப்பதிகாரம் காலத்திற்குப் பிற்பட்டு, ஆண்டாள் காலத்திலும் இந்த வழக்கம் இருந்திருக்கலாம். கண்ணனை அவள் அடைய விரும்பவே, தான் இருக்கும் இடமே ஆயர்பாடி என்று அவள் உருவகித்து, திருப்பாவை அமையும் களம் ஆயர்பாடி எனப் பாடியிருக்கலாம்.

‘அங்கண் மா ஞாலத்து’ எனத் தொடங்கும் பாசுரத்தில், அரசர்களும் ‘சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்’ என்று சொல்வதன் மூலம், புகாரின் கண் உள்ள சங்கத் துறையைக் கோடிக் காட்டியிருக்கலாம். சோம குண்டம், சூரிய குண்டம் போல, அந்தப் பாடலில் ‘திங்களும், ஆதித்யனும்’ பற்றிய குறிப்பும் வருகிறது.

பாண்டிய, சோழ நாட்டில் மட்டுமல்ல, சேர நாட்டிலும் இந்த வழக்கம் இருந்திருக்கின்றது என்று கோபால பணிக்கர் என்பவர் எழுதிய புத்தகம் கூறுகிறது.

தமிழ் கூறும் உலகம் என்று மட்டுமல்லாமல், யமுனைக் கரையிலும், இந்த நோன்பு செய்யப்பட்டது என்பதால், இது, மழையை நம்பி இருக்கும் எல்லா இடங்களிலும் பொதுநலம் கருதி, ஆன்மிகமும் இணைத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக்குக் காரணன் இந்திரன். மழையை நம்பி இருக்கும் நிலங்களில் அவனுக்குப் பெயர் உண்டு. பாகவதத்தில் வரும் ஒரு குறிப்பில், இமயமலைப் பகுதியில் யாரும் இந்திரனை நம்பி இல்லை. ஊற்று நீரும், பனி உருகிய நீருமே அவர்களுக்குப் போதும் என்று வருகிறது. அந்த இமயப் பகுதியில் சேடி நாட்டைச் சேர்ந்த புது மணத் தம்பதியர், காமன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, புகார் நகரில் இந்திர விழா காணப் புறப்பட்டனர் என்று சிலப்பதிகாரம் கூறிகிறது.

பங்குனி உத்திரத்தில் வரும் காமன் பண்டிகை இமயத்தில் பிரசித்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை – அது பார்வதியின் பிறந்தகமாக இருக்கவே. தென் கோடியிலும் காமன் பண்டிகை, வட கோடியிலும் காமன் பண்டிகை. மனமொத்த மண வாழ்க்கையை விரும்பும் மக்கள், பாரதத்தில் எங்கிருந்தாலும், காமதேவனைக் குறித்து ஏதேனும் தவமோ நோன்போ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திர விழா என்பது மழையை எதிர் நோக்கி வாழும் தமிழ் பூமியில் நடந்திருக்கின்றது.

இந்திரனுக்கும் சேடி நாட்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இந்திரக் கொடியை நாராயணனிடமிருந்து இந்திரன் பெற்றுக் கொள்கிறான். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடியை சேடி நாட்டவரிடம் இந்திரன் கொடுத்ததாக வராஹா மிஹிரர் கூறுகிறார். அந்த இந்திரனுக்கு எடுக்கப்படும் விழவு என்பதால், சேடி நாட்டு தம்பதியர் புகார் வருவதற்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

மாறுபாடு உடையது என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒன்றே மதம், ஒரே வித வழக்கம் என்று இந்த பாரதப் பெரு நிலம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு இவையெல்லாமே சாட்சி.

தெய்வம் என்பதே இல்லை என்பதுதான் பகுத்தறிவு என்று கூறும் இன்றைய தமிழர் வாழும் இந்நாட்டில், இயற்கையும், மானுடமும் ஒத்து வாழ்ந்த இயல்பினைக் காட்டுவது பாவை நோன்பாகும். இயற்கையைப் பேணுங்கள், இயற்கை உங்களைப் பேணும் என்னும் உயரிய கருத்தின் அடிப்படையில் அமைந்தது இந்நோன்பு. அறிவியலும், ஆன்மிகமும் கலந்த பண்பாட்டினைப் பேசுவதுதான் இந்நோன்பு. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ‘தங்களுக்கு வழக்கம் இல்லை’ என்று கூறிய கண்ணகியே, தெய்வமான பிறகு, இளங்கோ அடிகளிடம் சொன்னாளே அதை மறவாமல் இருக்க வேண்டும்..

“தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்:
….தானம் செய்மின்: தவம் பல தாங்குமின்.”

கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!

இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்

—————

ஸ்ரீ சங்கத் தமிழ் மாலை —

ஸ்ரீ மத் பாகவதம் -10-22-காத்யாயினீ விரதம் பற்றிச் சொல்லும்

ஹே மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா சேருர் ஹவிஷ்யம் புர்ஜானா காத்யாயனி யர்ச்சன விரதம்

ஹேமந்தருவின் முதல் மாதத்தில் நந்தனுடைய ஆயர்பாடியில் உள்ள கன்னிகைகள் ஹவிஸ்ஸை
உணவாகக் கொண்டு காத்யாயினியைப் பூஜிக்கும் விரதத்தை அனுஷ்ட்டித்தார்கள்

ஆப் லுத் யாம்ப ஸி காளிந்த்யா ஜலாந்தே சோதயேருணே க்ருத்வா ப்ரதி க்ருதம் தேவீம் ஆனர்ச ந்ருப ஸை கதிம்

அருணோதயத்தில் யமுனை நதியில் நீராடி நீரின் கிட்டே மணலினால் தேவியின் உருவத்தைச் சமைத்து அர்ச்சித்தார்கள்

கந்தர் மால்யை ஸூரபி பிர் பலி பிர் தூப தீபகை உச்சா வசைது சோபஹார ப்ரவாள பல தண்டு லை

மணமுள்ள புஷ்ப சந்தனங்களால் அர்ச்சித்தும் தூப தீபங்கள் காட்டியும் பலிகள் உபகாரங்களாய்
சிவந்த பழங்களும் ரிஷிகளும் கொடுத்தார்கள்

காத்யாயனி மஹா மாயா மஹா யோகின் யதீஸ்வரி நந்த கோப ஸூதம் தேவி பதம் மே குருதே நம

அவர்கள் செய்த ஸ்தோத்ரம் -மஹா மாயையான ஸ்வரூபமாயும் மஹா யோகினியாயும்
எல்லாவற்றுக்கும் மேலான காத்யாயினி தேவியே உனக்கு நமஸ்காரங்கள் -நந்தகோபன் குமரனை எனக்குப் பதியாகச் செய்து அருள்

இதி மந்த்ரம் ஜபந்த்யஸ்தா பூஜாம் சக்ரு குமாரிகா ஏவம் மாஸம் வ்ரதம் சேரு குமார்ய க்ருஷ்ண சேதஸ

இந்த மந்த்ரத்தை ஜெபிப்பவர்களாய் கன்னிகைகள் பூஜை செய்தார்கள் –
இவ்விதம் கிருஷனையே மனதில் உடையவர்களாக பூஜை செய்தார்கள்
ஒரு மாதம் விரதம் அனுஷ்ட்டித்தார்கள்

பத்ர காளீம் ஸமானர்சு பூயான் நந்த ஸூத ப்பகு யுஷஸ் யுத்தாய கோத்ரை ஸ்வைரஸ் யோன்யா பத்த பாஹவஸ்

நந்தகோப குமரன் பதியாக வேண்டும் என்று பத்ரகாளியை ஆராதித்தார்கள்-

தினம் தோறும் யமுனையில் நீராடப் போகும் பொழுது கிருஷ்ண நாமத்தை உரத்த குரலில் பாடிக் கொண்டும்
ஒருவரை ஒருவர் கை கோர்த்துக் கொண்டும் சென்றார்கள் –

கதி -அயன -என்ற இரண்டு பதங்களால் மோக்ஷ மார்க்கங்கள் எவை என்று விசாரிக்கும் கத்யயனர் ரிஷி குலம்

தவத்தைந் நீராடல் என்று நீராட்டம் தபஸ்ஸாகவே பரிபாடல் சொல்லும்
தாய் அருகா நின்று தவத்தைந் நீராடல்
அம்பா வாடலின் ஆய் தொடிக் கன்னியர்

பேணும் சிறப்பில் பெண் மகவாயின் மூன்றாம் ஆண்டில் குழ மணை மொழிதலும்
ஐங்கணைக் கிழவனை ஆர்வமோடு போற்றுதலும் பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் பிங்கலந்த நிகண்டில் -1369-

ஐங்கணைக் கிழவனை-மன்மதனை கால் பிடித்தாள் அன்றோ கேசவ நம்பியைக் கால் பிடிக்க

பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.
இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன,
அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது.
மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.
அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலை பெற்றது போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல்.
காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். திவாகர நிகண்டைக் காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல்.

இந்த நீராட்டம் -ஆதிரைத் திரு நாளாக மலையாளத்தில் -திருவாதிரைக்கு ஒரு வாரம் முன்பு தொடங்கி
பெண்டிர் கூட்டமாகச் சென்று நீராடி திருவாதிரை அன்று புதிய ஆடை ஆபரணங்கள் சூடி
விசேஷ பாயாசம் கூடாரை வெல்லும் சீர் -போல் கொண்டாடுகிறார்கள் –

பத்ம புராணத்தில் ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்
மார்கழி சுக்ல பக்ஷ நவமி தொடங்கி ஏழு நாள்கள் பவ்ர்ணமி வரை
ஸ்ரீ மத் பாகவதம் சப்தாகம் பாராயணம் ஸ்ரேஷ்டம் என்கிறது

ஸ்ரீ மத் பாகவதத்தில் காத்யாயினி விரதம் அனுஷ்ட்டித்து வஸ்த்ர சோரம் நடந்து பின்பு கோவிந்தா பட்டாபிஷேகம் செய்தால் போல் இங்கும் உண்டே

————-

மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல் -ஸ்ரீ வராஹ நாயனார் விதைத்த வித்தே கோல் தேடி எழும் கொழுந்தாக ஆண்டாள்

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம் உத்3போ3த்யத்4ய க்ருஷ்ணம்
பாரார்த்ய2ம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்3த4ம் அத்4யாபயந்தீ |
ஸ்வோச்சிஶ்ட்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத் க்ருத்ய பு4ங்க்தே
கோ3தா3 தஸ்யை நம இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய: ||–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம்–மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் -பாசுரக் கருத்தும்(மாரி -ஆண்டாள் கூந்தல் -மலை -ஸ்தனம் -முழைஞ்சு குகை -ஹ்ருதய குஹரம்-ஹார்த்த விக்ரஹம் -யஸீதை இளம் ஸிம்ஹம் -ந்ருஸிம்ஹ குட்டி )
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேலும் வைத்துக் கிடந்த மலர் மார்பா -பாசுரக் கருத்தும்
ஆஸ்ரிதர்களுடைய வளர்ந்து -பருத்து -உயர்ந்து -நிமிர்ந்து நிற்கும் பக்தியே மலை -முலை

இவன் தூக்கமே-பரமனின் பையத்துயில் -எழுப்புவது -விசேஷ பக்திக்கு பரவசனாகி இருப்பவனை எழுத்து அத்வேஷ மாத்திரம் உள்ளோர்க்கும்
அருளி ஸூ முகனாகி அவர்கள் பக்தியையும் வளர்க்கத் தூண்டுவதே ஆகும்

அத்4யாபயந்தீ |-நினைவூட்டுகிறேன் -ஞாபயே ந சிஷயே -கண்டிக்கிறேன் இல்லை

இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய-இதம் இதம் பூய பூய -நான்கு தடவை -ஸ்லோகத்தில் உள்ள (நீளா-க்ருஷ்ணம்-ஶ்ருதி ஶத ஶிரஸ்-கோ3தா3)நான்கு தத்துவங்களையும் வணங்குகிறேன்

————

ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்தவை

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

அன்ன வயல் -சரீரத்தை வளர்க்கும் நெல் வளரும் இடம் -நினைவுகள் முளைத்து எழுந்து வளரும் மனம்
அன்னம் -சாரப் பொருளை விவேகிக்கும்
மார்கழி நீராட்ட நோன்பு -பகவத் ப்ரீதி யர்த்தம் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஸ்ரேயஸை அருளும் ப்ரஹ்ம வித்யை –
இதில் பகவத் அர்ப்பணம் ஆனால் தான் வேத வித்யை ஆகும் என்பதால் அரங்கற்கு இன்னிசையால் கொடுத்தாள்

பூ மாலை -நற் சித்தம் -ஸூ மனஸ்ஸூ
சூடிக் கொடுத்த பூ மாலையில் -பூமிக்கு உரிய மணங்கள் -க்ராண இந்திரிய இன்ப ஹேது
பாடிக் கொடுத்த பா மாலையில் வேத மணம் கமழும் -ஞான அனுஷ்டான அபி விருத்திக்கும் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஆத்ம ஸூ கத்துக்கும் ஹேது

———–

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! * தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *
நாம் கடவா வண்ணமே நல்கு

சுடர் கொடியே –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
வெளிச்சம் இல்லா விடில் சூர்யன் வெறும் தோசைக் கல்லு தானே

தொல் பாவை
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் -பரிபாடல்

————–

பாவைப் பிரபந்தம் ஒரு முத்தமிழ் நூல் வகை. எப்படியெனில் வெண்பாவுக்குரிய வெண்தளை கொண்டு எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவாகப் பாடப்படுகிறது.

—————-

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.–1-இப் பாசுரம் பர அவதார அனுபவம்

ஹார்த்த விக்ரஹத்தையே பாவ -என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 7 திருநாமம்
மதி நிறைந்த அளவைக்காட்ட -ஆல் -கார்த்திகை நக்ஷத்ரம்
சுக்ல பக்ஷ த்ரயோதசை -13 கலைகள் நிறைந்த சந்திரன் ஸூசிதம்
இரவில் 26 நாழிகை வெளிச்சம் -மீதி உள்ள 4 நாழிகை அடுத்த நாள் உஷஸ் காலம் என்பதால் வெளிச்சம் –
திரயோதசி சதுர்த்தி பவ்ர்ணமி -மூன்று நாள்களுக்குமாக 30 பாசுரங்கள் –
சீர் -வைதிக ஸ்ரீ ஆத்ம உத்கர்ஷம் அடைய ஸ்ரீ -பகவத் ப்ரீதி யர்த்தமாக இந்த நோன்பு

நேரே நடக்கும் செங்கோல் வளைந்து கொடுங்கோல்
யசோதா பிராட்டிக்கு உபாஸனா தெய்வம் நரஸிம்ஹன் -ஆகவே இவன் இளம் சிங்கம்
ஏல் ஓர் எம்பாவாய் -உணர்ந்து ஏற்றுக் கொள்வாய் -என்று கார்த்த விக்ரஹத்துக்கு அர்ப்பணம்
நீராடுதல் -பகவத் ஆஞ்ஞா ரூபம் படி -வகுத்து வைத்த நீர்மை யாகிற அனுஷ்டானம் –
ஸூத்தாந்த ஸித்தாந்தி -அந்தப்புர-மறந்தும் புறம் தொழா தவர்கள் –

ஆய்ப்பாடியை” இந்த இருள் தருமாஞாலமாயும், எம்பெருமானின் கல்யாண குணங்களை அறிந்தும், அறியாத சிறுவர்கள் போன்றவர்களாய் “சீர்மல்கும் செல்வச்சிறுமீர்காள்” எனவும் உருவகப்படுத்தியுள்ளார். இவர்கள் ஆத்ம குணங்களும் நிறைந்தவர்களாகையால், இந்த நன்னாளில் சிறந்த “ப்ரபத்தி உபாயம்” அனுஷ்டிக்க அழைப்பதுவே “நீராடப் போதுவீர்…. நேரிழையீர்” என்பதாகும்.
கூர்மையான வேல் போன்ற ஸங்கல்பம் உடையவனும், நம் பாபங்களை அழிக்க வல்லவனும், நித்ய யுவாவுமாயுள்ள இவனே க்ருஷ்ணாவதாரம் செய்துள்ள ஸர்வேஶ்வரன். ப்ரபத்தி செய்த நமக்கே மோக்ஷானந்தத்தைத் தருவான் என்பதை
“ஏரார்ந்த….பறை தருவான்” என்றவரிகளால் சொல்கிறாள்.
கண்ணபிரான் கர்ம, ஞான, பக்தியோகம் செய்ய முடியாது கலங்கிய அர்ச்சுனனுக்குக் கடைசியாகக் காட்டிய ஶரணாகதி மார்க்கத்தை,
ஆண்டாள் இந்த முதல் பாசுரத்தாலே காட்டியுள்ளாள்.

———–

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.–2-இப்பாசுரம் வ்யூஹ அவதார அனுபவம்

வையம் -மிக உயர்ந்த வண்டி -சொல் பொருள் -அனைத்து ஆத்மாக்களுக்கு உரிய ப்ரஹ்ம வித்யை இதுவே
பூணி இன்றி பொறியின் இயங்கும் மானமே வையம் -பெரும் காதை
மாடு குதிரை பூட்டாமல் இந்த்ரியங்களால் இயங்கும் உயர்ந்த வண்டி
பையத்துயின்ற -காளிதாசன் ஸ்வ பதோ ஜாக ரூகஸ்ய -உன்னைப் போல் விழித்துக் கொண்டே தூங்குபவன் இல்லையே –
ஐயம் -விதி வழி கொடுத்தல்
பிச்சை -இஷ்டப்படி கொடுத்தல்
நாட் காலே -பொழுது புலரும் வேளை -நாள் கால் வைத்திடும் நேரம்

வராஹ அவதாரத்தில் எம்பெருமான் சொல்ல வந்த அவதாரமே ஆண்டாள்.
க்ருஷ்ணானுபவத்துக்கு தேஹாலங்காரம் வேண்டாம். ஆத்மாலங்காரம்தான் முக்யம். பொறுமை, புலனடக்கம், காமமின்மை ஆகியன ஆத்மாவின் ஆபரணங்கள். உய்யும் வழி ஶரணாகதி அதனை அடைய ஆறு அங்கங்கள் என்பதனை “உய்யுமாறு” என்கிற பதம் காட்டுகிறது.
தர்மத்தையே நினை, பாடு, பேசு, அனுமதி கேள், பார் என்கிறது இப்பாசுரம்.
இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு ஆசார்யனுக்ரஹமும், எம்பெருமானின் கடாக்ஷமும் கிடைத்து மோக்ஷம் கிடைக்கும்.

“நாமும் நம்பாவைக்கு….பாடி”—
நமக்காக ஏற்பட்ட ஶரணாகதி என்ற நோன்பைச் செய்யவும், அதற்கு வேண்டிய சடங்குகளைச் செவியால் கேட்டும், அனுஷ்டித்தும் பயன் பெறுவீர்களாக. த்வயமந்த்ரத்தின்
த்யான ஶ்லோகத்தின்படி அவனை வணங்கி அம்மந்த்ரத்தைச் சொல்லி ப்ரபத்தி செய்தல்வேண்டும்.

“நெய் உண்ணோம்……தீக்குறளை ஓதோம்”—-காம விகாரங்களைத் தரும் பொருட்களை உண்ணாமலும், காம்ய கர்மாக்களை விலக்கியும் சரீர அலங்காரங்களைத் தவிர்த்தும் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்தும், பர ஹிம்சை, நிஷித்த கர்மா பாகவத அபசாரம் இவைகளைச் செய்யாமல், வாக்காலே தவிர்க்க
வேண்டியவைகளைத் தவிர்த்து செயல் படவேண்டும்.
“ஐயமும்….காட்டி..” ஆசார்ய உபகாரம், பாகவத கைங்கர்யம்
முடிந்த வரை செய்து உய்யும் வகை நினைந்து சந்தோஷிக்க கற்க வேண்டும்.

———-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.-3-இப்பாசுரம் விபவ – அவதார அனுபவம்

முதல் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு -உலகளந்த-உலகு அளவு கோலாக அவனை அளந்து –தனது சிறுமையையும் அவனது பெருமையையும் உணர்ந்ததே
பரத்வத்துக்கும் வ்யூஹத்துக்கும் மேல் உயர்ந்த விபவம் அன்றோ

அர்ஜுந உவாச–
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா–ஜகத் ப்ரஹ்ருஷ்யத் யநுரஜ்யதே ச.–
ரக்ஷாம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி–ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்த ஸங்கா—৷৷11.36৷৷

அர்ஜுனன் கூறுகிறான் -இந்திரியங்களை நியமிக்கும் தலைவனே -உன்னுடைய புகழைக் கண்டு இப்போரைக் காண
வந்து இருக்கும் தேவர் கந்தர்வர் முதலிய உலகு அனைத்தும் உன்னை மிகவும் உகக்கின்றது -ஈடுபடவும் செய்கின்றது –
அரக்கர்கள் பயந்தவர்களாய் எல்லாத் திக்குகளிலும் ஓடுகிறார்கள் –
சித்தர் கூட்டங்கள் அனைவரும் வணங்கவும் செய்கின்றார்கள் -இவை அனைத்தும் பொருத்தமே

ஓங்கு பெரும் செந்நெல் -அவனது அருளால் இவர்கள் நெஞ்சில் பக்தி பெருகி
ஊடு கயல் உகள -அவன் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் இவர்கள் மனத்தில் ஓடி ஒளி வீச
குவளைப் போது -மலராத மனஸ்ஸூ
பொறி வந்து -சங்கு சக்கரங்கள் ஒற்றிக் கொண்ட ஆச்சார்யர்கள்
கண் படுப்ப -சிஷ்யர்கள் மனஸ் மலரும் அவகாஸம் பார்த்து இருக்கும் ஆச்சார்யர்கள் –
இவர்களையே வள்ளல் பசுக்கள் என்கிறாள்
ஞானம் அனுஷ்டானம் நிறைந்து -கிருபை சுரந்து -அர்த்த ஞானம் அருளி -இவர்களுக்காக தானே பிரபத்தி பண்ணி
அபிமானத்தால் பாதார விந்தங்களிலே சேர்த்துக் கொள்ளுமவர்கள்
மோக்ஷ பர்யந்தமாக அருளும் செல்வமே நீங்காத செல்வம்
சிஷ்யன் கார்யம் இவர்கள் அருளிச் செய்வதை வாங்கும் பாத்திரமாக இருப்பதே –

பரக்கும் புகழ் வரும் பைம் பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கின்றவர்க்கு இவை ஈந்தால் அறம் உளது என்று இயம்பார்
கரக்கும் கருத்துடைத் தேசிகர் கன்று என நம்மை எண்ணிச்
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே –ஸ்ரீ அமிருதாசுவாதினி -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-14-

இப் பாடலில் பக்தன் எப்படி இருத்தல் வேண்டும் என்னும் வரையறை விதிக்கப்படுகிறது. கழனியில் தலை சாய்ந்து நிற்கும் கதிர்போலப் பக்தன் அடக்கத்துடன் தலைக்கனமின்றி இருக்க வேண்டும். அக் கழனியின் தண்ணீரில் வாழும் கயல் மீன்களைப் போல் (அறியாமை, தீவிரம் நீங்கிய) விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கரு நெய்தல் மலர் போல இல்லறத்திலிருப்பினும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க வேண்டும்.

அஷ்டாக்ஷரமாகிய திருநாமம் பாடினால் அவனுகந்து நம்மை ஏற்பான். கட்டிப் பொன் போல எம்பெருமான் பணிப் பொன் போன்றது அவன் நாமம். நாமத்தை தரிக்கவும் பாடவும் முடியும் அனன்ய சேஷத்வம், அனன்ய உபாயத்வம், அனன்ய போக்யத்வம் என்ற மும் மழையால் ஆத்மா பலம் பெறுகிறது செந் நெல் உயர்வது போல். கயல்கள உழல்வது எம்பெருமான் பெறும் கைங்கர்யம்.
வாங்கக் குடம் நிறைக்கும் பெரும் பசுக்கள் போல ஆசார்யர்கள் வள்ளண்மையால் நமக்கு அளிக்கும் ஞானம் சொல்லப்படுகிறது. நீங்காத செல்வம் என்பது எம்பெருமானுடனே சேர்ந்து நாம் அனுபவிக்கும் அந்த மிலா பேரின்பம்.
“ஓங்கி உலகளந்த……தீங்கின்றி”-
த்ரிவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்த க்ருஷ்ணனுடைய “யத் ப்ரபத்திம் விநா ஸர்வைர்யஸ்ய மாயா துரத்யயா
தனஞ்ஜய ரதோத்தம்ஸம் தத் ப்ரபத்யே பரம் மஹ:”
—என்ற தனியனின் அர்த்தத்தை (அவன் விரித்த வலையில் சிக்கி நாம் அல்லல்படுகிறோம். அம் மாயத் திரை விலக, அர்ஜூனன் தேர் தட்டில் ப்ரகாசமாக ஒளிரும் பரம் பொருளாகிய க்ருஷ்ணனை சரண் புகுகிறேன்) நினைத்து ஶரணாகதி ரஹஸ்யத்தைப் பலரும் அறியும் வகையில் உபதேசித்து அனுஷ்டித்தால் அனன்ய சேஷத்வம் முதலான தீங்கின்றி இருப்பர்.

—————-

ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.—4-அந்தர்யாமி -பரமான பாசுரம் –

முதல் மூன்றும் பர வ்யூஹ விபவ -வாழ்த்துப் பாசுரங்கள்
அடுத்து வான் சிறப்பு பாசுரம் -மேகமே நாராயணன் -அந்தர்யாமி -பரமான பாசுரம் –
வலம்புரி போல் நின்று அதிர்ந்து-என்பதையே விவரித்து
மேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியம் -26-
ஊழி முதல்வன் –ஊழியான் முதல்வன் -ஸம்ஹார கர்த்தா -ஸ்ருஷ்ட்டி கர்த்தா இரண்டும் இவனே

மழையே இறைக் கருணையாவது பாடலின் சிறப்பு. மேகம் கடல் நீரை உண்டு எடுத்துக் கொள்வதைப் போல இறைவன் பக்தியை எடுத்துக்
கொள்கிறான். எங்கும் பரந்து செயல்படும் சக்தியாகிறான். மின்னலின் ஒளிர்வும் இடியின் முழக்கமும் போலத்
தப்பாது தெரிய வரும் வடிவம் கொள்கிறான். தனது கருணையைப் பக்தனுக்கு மட்டுமன்றி உலகுக்கே
பொழிகிறான். இப்படியாக இறைக் கருணையின் அளப்பற்ற பெருமையை பக்தன் தவறாது உணர்கிறான்.

மேகங்கள் உப்பு நீரை மதுரமாக்கித்
தருவது போல் ஆசார்யன் வேதார்த்ங்களை நமக்களித்து ஞானம் பெறச் செய்கிறார்.
ப்ரத்யுபகாரம் எதிர் பார்க்காத மழை போல் ஆசார்யனும் எந்த லாபமும் எதிர்பார்ப்பதில்லை.
மேகங்கள் போல ஆசார்யனும் சஞ்சாரம் செய்து ஞான மழை பொழிகின்றார்.
மழை மேகம் மின்னுவது போல ஆசார்யன் ஞானத்தால் ப்ரகாசிக்கிறார். சங்க முழக்கம் போல தம் கருத்தை ஸ்தாபிக்க ஆசார்யனும் சிம்ஹ கர்ஜனை செய்கிறார்.
மேகம் வர்ஷிக்கும் மழை போல் ஆசார்யனும் வாதங்களை வர்ஷித்து எம்பெருமானை ஸ்தாபிக்கிறார்.

————

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.–5-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –

தூய பெருநீர் யமுனைத் துறைவனை–உபாயாந்தரங்கள் -பக்தி -பிரபத்தி -இவற்றிலும் வ்யாவ்ருத்தமான ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
அணி விளக்கு -ஸம்ஸார ஆரணவத்துக்கு கலங்கரை விளக்கு –
அக்கரை சேர போதம் -நாவாய் -நயாமி பரமம் கதிம் –
மனம் மொழி செயல்கள் -பெரிய திருமொழி -1-6-7 தொடக்கி மூன்று பாசுரங்களால்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

எம்பெருமானின் எல்லா அவதாரங்களையும் ஆண்டாள் குறிப்பிடுகிறாள் இப்பாசுரத்தில்.
  • மாயன் —பரரூபம்
  • மதுரை மைந்தன் —விபவம் (திருப்பாற்கடல்)
  • துறைவனை —வ்யூகம்
  • விளக்கு —அந்தர்யாமி 
  • தாமோதரன் —அர்ச்சை
தூய பெருநீர் என்பது விரஜையைக் குறிக்கும்.
தேவகி, யசோதை என் இரு தாய்மார்கள் அவனுக்கு.
அது போல காயத்ரி, அஷ்டாக்ஷரம் என்ற இரு மந்த்ரங்களும் நமக்குத் தாய்க்கு ஒப்பானவை. இதன் பொருளை பகவான் நரநாரண அவதாரம் செய்து விளக்குகிறான். பக்தி என்ற கயிற்றுக்கு கட்டுப்படுபவன் எம்பெருமான். அவனைச் சரணாகதி செய்தோமாகில் சஞ்சித பாபங்களும், புத்தி பூர்வமாய் பின்னால் செய்யும் பாபங்களும் பொசுங்கி விடும்.

———-

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–6-

ப்ரஹ்ம முஹுர்த்தே உத்தாய -ஸூர்ய உதயத்துக்கு முந்திய 2 ஹோரை 5 நாழிகைப் பொழுது தான் ப்ரஹ்ம முஹூர்த்தம்

மெய், மனம், ஆன்மா என்ற மூன்றையும் எழுப்பும் விதத்தில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது என்று கொள்ளலாம்.

ஹம்ஸாவதாரம் எடுத்த பகவானும், அவனருள் பெற்ற ஆசார்யர்களும் ஸத்வ குணம் பெற்ற சங்கைப் போல ப்ரணவத்தின் அர்த்த விசேஷங்களை நமக்கு உபதேசிப்பது கேட்க வில்லையா என்கிறாள்.
அவித்யை என்ற பூதனையை அழித்து, சரீரமாகிய வண்டியை
கெட்ட வழிகளில் ஈடுபடாமல் நல்வழிப் படுத்துவோர் ஆசார்யர்கள். இவர்கள் ஸம்ஸார போகத்தில் ஆசைப்படாது ப்ரபத்தி மார்க்கத்தில் சேதனர்களை சேர்த்து ஹரி என்ற பேரொலி எழுப்பி அவனுள்ளம் குளிரச் செய்து நம்மை அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி உபகாரம் செய்கிறார்கள்.

——

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.-7-

கிளியும் பூவையும் பேசும் பறவைகள்
பூவை -நாகணை வாய்ப்புள் –நார்த்தம் பிள்ளை -கறுப்பும் மஞ்சளு மான இறக்கைகள் -குருவிகளைக் காட்டும் பெரியவை
கீசு -க ஈசு -ஈஸாவாஸ்ய உபநிஷத் ஸித்தமானவன் -எவன் என்று பக்ஷிகள் கேட்க ஹரி என்று ரிஷிகள் பதில் –

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையாய் வைக்கப் படும் -அலகை -பேய்
காசு -பொன்னாலான அணிகலன்
பிறப்பு -சிப்பிகளில் தானாக விளையும் முத்து -கடலில் விளையும் பவளம் பொருள்கள் –
மலை சுரங்கம் இவற்றில் உள்ள ரத்னம் வைரம் கோமோதகம் போல்வன

ஆனைச் சாத்தன் என்ற பறவை கரிக்குருவி என்றும் செம்போத்து என்றும் பலவாகக் கூறுவார்கள். கரிக்குருவி கதிரவன் எழும் காலையிலும் கதிரவன் மறையும் மாலையிலும் ஜிவ்வென்று மேலெழும்பிச் செங்குத்தாகக் கீழே பாய்ந்து வானத்தின் குறுக்கே பறந்து மீண்டும் மெலெழும்பிப்
பறக்கும் இயல்புடையது. மேலேறும் போது சீச்சென்ற குரல் உயர்ந்தொலித்துக் கீழே விழும் போது மெல்ல மறைந்து பறக்கும் போது இல்லாமல் போய் மீண்டும் ஒலித்துக் குறைந்து தேயும். எனவே இந்தப் பாடல் குறிப்பது கரிக் குருவியைத் தான் என்பது தெளிவு. எனினும் கரிக் குருவி காலையில் பறப்பதில்லை. மாலையில் மட்டுமே பறக்கும் என்றும் சொல்வார்கள். அதுவன்றியும் கரிக் குருவிக்குத் தமிழில் கஞ்சனம் என்றே பெயர் என்பதையும் சுட்டிக் காட்டுவார்கள். செம்போத்து என்று சொல்வாரும் உண்டு. ஆனால் செம்போத்து கீசு கீசென்று ஒலி
எழுப்புவதில்லை. பொதுவாகக் காலை நேரத்துப் பறவைகளின் ஒருமித்த ஒலிகளின் சங்கமம் என்று கொள்வது
பொருத்தமாக இருக்கும். ஆயினும் ஆனைச் சாத்தன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் அப்படிக் கொள்வதும்
சரியெனத் தெரியவில்லை.

வ்ரஜபாஷையில் கன்ஹா என்பதை நாம் கண்ணன் என்கிறோம். கிச்சா என்பதை கீசு கீசு என்று பறவைகள் சப்திப்பதாய்க் கொள்ளப்படுகிறது.
“கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா” “காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி” என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பறவைகள் எம்பெருமான் பேர் சொல்லும் அழகைக் காட்டுகிறாள்.
கேசவன், நாராயணன் எனப்பாடி பகவதானுபவம் செய்ய எழுந்து வரும்படி தலைவியை அழைக்கிறார்கள்.
ஆனைச்சாத்தம் கலந்து பேசுதல் என்பதன் மூலம் காலக்ஷேப கோஷ்டியில் சேர அழைக்கிறாள். இதிகாஸ புராணங்கள் இந்த உரையாடல்களை கீழ்க் கண்டபடி இப் பாசுரத்தில் ஸ்லாகிக்கின்றன.
க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதம், ஸுகர் பரீக்ஷித் ஸம்வாதம், உத்தவர் விதுரர் ஸம்வாதம், மைத்ரேயர் விதுரர் ஸம்வாதம் ஆகியன ப்ரஸித்தமானவை.
காசு என்பது த்வயமந்த்ரமாகவும்
பிறப்பு என்பது திருமந்த்ரமாயும் கொள்ளப்படுகின்றன. இரண்டும் ஆசார்யர்கள் நமக்களிக்கும் ஆபரணங்கள்.
அவர்கள் ஞானப் பிறப்பையளித்து பகவானுடன் நம்மைச் சேர்த்து வைக்கிறார்கள் இந்த காசும் பிறப்பும் கடைந்தெடுத்து அளிப்பனவே இதிகாச புராணங்களும், ப்ரபந்தங்களும். ஆக இந்த பகவதனுபவம் பெற நாயகியை தோழிகள் எழுப்புகின்றனர்.
ஞானம், அனுஷ்டானம் என்ற இரு இறக்கைகளைக் கொண்டு ஆசார்யர்கள் சேதனனை உய்விக்கச் செய்யும் மந்த்ரோபதேசங்கள், பதவாக்யார்த்தங்கள் திருமாளிகை தோறும் ஒலிப்பதே “கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து பேசின பேச்சு” என்பது.
உபநிஷத்துடன் பகவத் விஷயமும் சேர்ந்து கமழ்வது “வாஸ நறுங்குழல் ஆய்ச்சியர் கூந்தல் மணம் போல”.
புத்தி என்ற மத்தினால் த்வயமாகிய தயிரைக் கடைந்து நாராயணனாகிய வெண்ணெயை எடுத்து மோக்ஷ வழி காட்டுகின்றார்
ஆசார்யன். இத்தகைய ஸப்தங்களைக் கேட்டும் இன்னும் உறங்குகிறாயே! க்ருஷ்ணானுபவத்தால் தேஜஸ்வியாகிய நீ எங்களது அஞானத்தையும் போக்க எழுந்துவா. நாராயணன், மூர்த்தி, கேசவனைப் பாடலாம் என்கிறார்கள் தோழிகள்.

———

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–8-

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் போல் புல் விட்ட தளிரை -விடு என்னும் பகுதி அடியாக வீடு -சிறு வீடு -என்கிறாள்

ஸம்ஸாரம் என்ற இருட்டிலிருந்து ஸத்வ குணம் மேலோங்கிய ஶரணாகதனுக்கு விடியல் கிடைக்கிறதை “கீழ்வானம் வெள்ளென்று” என்பது குறிக்கிறது.
எருமையின் மெத்தனம் போல மெதுவாக மோக்ஷம் வேண்டும் பக்தி யோகத்தை “எருமை சிறுவீடு” எனக் காட்டுகிறார்.
பக்தி யோகம் செய்யப் போகிறவர்களைத் தடுத்து
ஆசார்யனிடம் ஶரணாகதி செய்ய அனுப்புகிறாள் – “போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்று.
மா வாய் பிளந்தானை என்பதில் அஹங்காரத்தை அழிக்கிறான் என்கிறார்.
காமம் க்ரோதம் என்ற இரு மல்லர்களை அழித்து கண்ணனிடம் ஆசை ஏற்படச் செய்கிறார் ஆசார்யன்.
இத்தகைய ப்ரம்ஹ தத்வத்தை நமக்களிக்கும் ஆசார்யன் தேவாதி தேவன். அவர் தனியன்களை ஸ்மரித்து அவரை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறாள் ஆண்டாள்.

————–

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.–9-

ஊமையோ -மௌன விரதம் -செவிடோ -ப்ரத்யாஹாரம் -ஸ்ரோத்ரிய இந்திரிய அடக்கம் —
அனந்தலோ –
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்,
புயல் மே ம் போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக் கீழ்,
சயமே யடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான் பெற்ற துறுமோ பாவி யேனுக்கே?—போல்

ஜகத் ஶ்ருஷ்டிகர்த்தாவாகிய எம்பெருமான் மிக்க ஸௌலப்யத்துடன் இந்த ஆய்ப்பாடியில் வந்து பிறந்துள்ளான்.

அவனே “மாமாயன்” அவனுக்கு சுப்ரபாதம் பாட வாருங்கள். “லோகபந்துர், லோகநாதோ, மாதவோ, பக்த வத்ஸல:” என்ற ஸஹஸ்ர நாம வரிகளை ஆண்டாள் பிடிக்கிறாள்.

கண் படைத்த பயன் கண்ணனைத் காண, நா படைத்த பயன் அவன் நாமங்களைச் சொல்ல, காது படைத்த பயன் அவன் புகழ் கேட்க என்பதனை உணர்த்துகிறாள்.
“சிறையிருந்து ஏற்றம் பெற்றாள் ஸீதாபிராட்டி” என்றால் “சிறையில் பிறந்து ஏற்றம் பெற்றவன் இந்த மா மாயன்”.
ஶரணாகதி செய்தவன் ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் விட்டு விடுவதால் பயமும் , பரமும் தொலைந்தவனாய் மார்பில் கை வைத்து தூங்குகிறான்.
ஆசார்யன் தந்தையைப் போல் தன் சிஷ்யனுக்கு எம்பெருமான் பற்றிய ஞானத்தை ப்ரகாசிக்கச் செய்கிறான். அந்த ஞானம் பெற்றதால் சிஷ்யன் துயிலணை மேல் கண்வளர அவனை எழுப்புகிறார்.
ஒரு ஜீவன் தன் தனயனுக்கு பிறவி தந்து, ப்ரும்ஹோபதேசம் செய்து, அன்னமளித்து மூன்று முறை தந்தையாகிறார்.
ஆசார்யன் என்பவர் ஞானமளித்து, பயத்தை நீக்கி இரண்டு முறை தந்தையாகிறார்.
ஆக 2 தந்தைகள் ஒருவனுக்கு. உபதேசம் பெற்று
த்வயமர்த்தானுஸந்தானம் செய்யும் த்யான நிலையே “ஊமையோ அன்றிப் செவிடோ” என்பது.

———

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.–10-

ஆழ்வார்களின் இலக்கியத்தில் மிக அதிகமாகப் பேசப்படுவது கண்ணன் அவதாரம்தான் .–முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பாடல்களிலேயே பேசப்படும் அவதாரங்களின் எண்ணிக்கை பின் வருமாறு அமைந்துள்ளது.

கண்ணன் = 60, வாமனன் = 51, நரசிம்மன் = 19, ராமன் = 15, வராகம் = 12, கூர்மம் = 1.

நாற்றத்துழாய் நாச்சியாருக்குச் சொல்லும் கதைகள் பல.
“நீலார்  தண்ணந்துழாய் கொண்டு என்நெறிமென் குழல் மேல் சூட்டீரே” என்கிறாள். கண்ணன் வரவை எதிர்நோக்கி பதட்டத்துடனிருந்த ருக்மிணி பிராட்டியின் மனதுக்கு ஶாந்தி அளித்தது க்ருஷ்ணன் சூடி வந்த துளசி கந்தமே.
பெரிய மாலையானால் –  “தோளிணைமேலும்” 
சிறிய மாலையானால் – “சுடர்முடிமேலும்”
உதிரியாயிருப்பின் –“தாளிணைமேலும்” புணர்ந்த தண்ணந்துழாய் அம்மான் என்கிறார் நம்மாழ்வார்.

“மாற்றமும் தாராரோ” என்பதில் மதுரகவிக்கு அருளியது சொல்லப்படுகிறது.
நான்காம் வர்ணத்தில் பிறந்த நம்மாழ்வார் முதல் வர்ணத்தில் பிறந்த மதுர கவிக்கு ஆசார்யனாகிறார்.
“அத்தை தின்று அங்கே கிடக்கும்” – என்று முன்முதலாக மதுர கவிக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.

—–

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.–11-

இந்தப் பாடல் முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரைக் குறிப்பதாகச்
சம்பிரதாய விளக்கங்கள் காண்கின்றன. முதலாழ்வார்கள் மூவரும் ஓரிடத்தில் நிலையாகத் தங்காதவர்களாக
எங்கும் திரிந்து யோகியராக இருந்தவர்கள். தமது பாடல்கள் வழியாக அறியாமையையும் இறைத் தொடர்பு உணர்வு இல்லாமையையும் நீக்க எங்கும் திரிந்தவர்கள் இந்த ஆழ்வார்கள். அதனாலேயே எங்கும் தேடிப் போய் ஆணவத்தை அடக்கியதாகக் கூறுவது இவர்களுக்கு மிகவும்
பொருத்தமாக அமைகிறது. இம் மூவரும் பெண் வழியாகப் பிறந்தவர்களாக அன்றிப் பொய்கையிலிருந்தும்
பூவிலிருந்தும் கிணற்றிலிருந்தும் தோன்றி வந்தவர்கள் என்பதால் எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். தவிரவும்
எந்த வித உலகப் பந்தத்தோடும் தம்மைப் பிணைத்துக் கொள்ளாதவர்கள். துறப்பதென்பது கூட இவர்களைப்
பொறுத்த அளவில் எந்தப் பொருளுமில்லாதது. ஏனென்றால் ஏதாவது இருந்தால்தானே அதைத் துறக்க முடியும்?
எனவே குற்றமொன்றில்லாதவர்கள் என்ற விளக்கம் முதலாழ்வார்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

இப்பாசுரம் நம்மாழ்வாரைக் குறிப்பதாயுள்ளது. நாஸ்திக வாதிகளை வாதமிட்டு ஓடச் செய்யும் பராங்குசன். “செற்றார் திறலழிய சென்று செறுச் செய்யும்” என்பதால் பிறந்தது முதல் அழாது, பேசாது புளியம் பொந்தில் இருந்ததால் “குற்றமொன்றில்லாதவர்”.
அழகில் சிறந்த இந்த ஆழ்வார் மீது எம்பெருமானே மையல் கொண்டாராம். ஆழ்வார் மேல் கொண்ட ஈடுபாடு, அவரைத் திருமேனியுடனேயே வைகுந்தம் அழைத்துச் செல்லத் துணிந்ததிலிருந்து வெளிப்படுகிறது.
(திருவாய்மொழி 7-2-10)
“முகில் வண்ணன் அடி அடைய”,
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன”
“முகில் வண்ண வானத்து இமையவர்” என்ற வரிகளை ஆண்டாள் இதில் பொருத்திக் காட்டுகிறாள். நாயகி ரூபத்தில் கொண்டையுடன் கூடிய ஆழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹமே “செல்வ பெண்டாட்டி” என்பதில் தெரிகிறது.
க்ருஷ்ணன் தன் கரங்களாலேயே கறவைக் கணங்களைத் தான் ஒருவனாக அடங்க கறக்கிறான்.
ஈவிலாத தீவினைகளால் பலகோடி ஜீவராசிகளைப் பிறப்பித்து நிர்வகிக்கிறான் இந்த பசுக் கணங்கள் போல. பகைவன் இருப்பிடம் சென்று வென்று தன் திறலைக் காட்டுபவன் எம்பெருமான். தன் மேல் கர்மாதீனமான பாபங்கள் ஒட்டாதவாறு பல அவதாரங்களை செய்வதால் அவன் தோஷமற்றவன்.

——–

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.–12-

தானாகப் பெருகிப் பாயும் பால் இறைவனின் கருணை என்பார்கள். அருச்சுனன் கேட்காத போதும் கீதையில் கண்ணன் தானாக முன்வந்து உபதேசம் அளித்ததை நினைவில் கொள்ளவேண்டும்.

“திருமாலிருஞ்சோலை என்றேன் திருமால் என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”–என்பது போல தன்னையே தரும் கற்பகம் எம்பெருமான் என்பது “கனைத்து” என்ற சொல் உணர்த்துகிறது.
நற் செல்வன் என்பதால் பாகவத கைங்கர்யம் கொள்ளப்படுகிறது.
பரதன், ஶத்ருக்னன், லக்ஷ்மணன்,‌ விபீஷணன் ஆகியோர் கைங்கர்ய செல்வர்களாகிறார்கள். ராவண பாணம் ஹனுமானைத் தாக்கியதால் சினம் கொண்டான் ராமன். ஸீதா பிராட்டியைப் பிரிந்து வருந்தி அவள் மனத்துக்கினியானாகினான்.
ஆசார்யன் தனியன்களை தான் ஸேவித்து சிஷ்யர்களையும் ஸேவிக்கச் செய்வது “கனைத்து” என்ற பதம் உணர்த்துகிறது.
“பனித்தலை” என்பதன் மூலம் வேதங்களின் சிரோ பூஷணமாகிய உபநிஷத்துக்களையும்,
“நனைத்தில்லம் சேறாக்கும்” என்பதால் பால் பெருக்கெடுத்தோடுமாப்போல அதனை பகவத் விஷயத்துடன் கலந்து சிஷ்யர்களுக்கு அளிப்பது கூறப்படுகிறது.
“நற் செல்வன்” என்பவன் க்ருஷணானுபவமும், அவனது தங்கை மனத்துகினியானாகிய ராமானுபவம் செய்பவர்கள்.
கன்று நான்கு காம்பு மூலம் சுரப்பது போல் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு நான்கு விதமாக விஷயங்களை சாதிக்கின்றனர்‌.

  1. கருணையுடன் தானாகவே உகந்து உபதேசித்தல்
  2. தான் பெற்ற ப்ரும்ஹானுபவத்தை பகிர்தல்
  3. சிஷ்யன் ப்ரார்த்திப்பதைச்சொல்வது.
  4. பரமத நிரஸனம் செய்து நம் ஸம்ப்ரதாயத்தின் மேன்மை சொல்வது.
நற்செல்வன் தங்காய் என்பதற்கு “ஞானச்செல்வனாகிய ஆசார்யன்
தன் சிஷ்யனுககு பதம்படா நெஞ்சைச் சேறாக்க வல்ல சில
ஈரச் சொற்களைச் சில தார்மிகர்கள் வைத்துப் போந்தார்களே”
 என்று ஈடு வ்யாக்யானம் காட்டுகிறது.

——–

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.–13-

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் -பயிரில்
களை போல் அசுரரைக் காய்ந்தான் தன் கையில்
வளை போல் எம்மாசிரியர் வாக்கு –ஸ்ரீ அமிருத ரஞ்சனி –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர்-5–

போதரிக் கண்ணினாய் என்கிறார்கள். செவ்வரி ஓடிய அழகிய கண்கள். உணர்வின் முகிழ்வாய்த் தெரியும் கண்கள்.

அரி என்றால் மான். துள்ளித் திரியும் மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவள் என்றும் பொருள் காணலாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் மான்.
பாவையின் கண்கள் குவளை மலர்களைப் போலும் மானின் விழிகளைப் போலும் அழகாக இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்.

போது என்றால் மலர்: அரி என்றால் வண்டு என்றும் பொருள்.
மலரில் கிடக்கும் வண்டைப் போலக் கண்மணி சுழல்கிறதாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் போட்டி என்றும் பொருள்.
அழகில் மலருக்குப் போட்டியாகும் கண்கள் என்றும் சொல்லாம்.

புள்ளின்வாய் கீண்டானை என்பது கொக்கு போல் கபடமான (சிறிய மீன்களை விட்டு பெரிய மீனைப் பிடிக்கக் காத்திருக்கும் கபடம்) செயல்களைச் செய்பவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்ற கருத்தை அறிவிக்கிறது.
பொல்லா அரக்கன் ராவணன். சாது அரக்கன் விபீஷணன். ராமனால் ஸஹோதரனாய் பாவிக்கப் பட்டவன்.
கிள்ளிக் களைந்தான் எனில் ராமன் நகத்தால் கிள்ளி எறிவதுபோல பாணத்தால் அநாயசமாய் செய்தான் என்பதாகும்.
“அத்திர அரக்கன் முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்”-என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
எம்பெருமான் ராவணன், பகாசுரன் ஆகியோரை அழித்து தம்மை நமக்கு அளித்த படியால் “கீர்த்தி” என்கிறாள் ஆண்டாள்.
ராம க்ருஷ்ணாவதாரங்களை முடித்துக்கொண்டு சென்ற
பின்பும் “திருவணை (ராம சேது), கீதை” இரண்டையும் நாம் உய்ய விட்டுச்சென்ற பரம உபகாரத்தைப் புகழ்ந்து பாட அழைக்கிறாள்.
ராவண குடும்பமே ராமனின் குணானுபவத்தில் மூழ்கிப் புகழ்ந்தது. ராவணன் ராமனின் வீரத்தைப் புகழ்ந்தான். கும்பகர்ணன் சௌர்யத்தில் ஈடுபட்டான். விபீஷணன் ஸௌஸீல்யத்தை ஸ்லாகித்தான். ஸுரப்பனகா அவன் ஸௌந்தர்யத்தில் மயங்கினாள்.

“பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்”—ப்ரபத்திக்கு அதிகாரிகளான எல்லாரும் ஆத்ம ஞானம் பெற ஆசார்யர்கள் காலக்ஷேபம் சொல்லுமிடம் சேர்ந்தனர் என்பதாகும்.

“வெள்ளி—–உறங்கிற்று”—ஞானம் பிறந்து அஞானம் அழிந்தது.
“குள்ள குளிர…..கள்ளம் தவிர்ந்து”—மோக்ஷத்தை அடைய விரும்பாதவளாய், ஸம்ஸாரத்தில் தூங்குகிறாயே! நல்ல ஞானம் பெற்று ஆத்மாபஹரத்தை விட்டு பகவதனுபவம் பெறுவாயாக என்பது உள்ளார்த்தம்.

—————

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.–14-

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து என்னும் சொற்றொடரால், உணர்வின் மிகுதியால்
உதடுகள் துடிப்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கூடலை எதிர்பார்த்து உதடுகள் மெல்லப் பிளப்பதைக் காட்சியாக்குகிறது. கடவுளோடு இணைந்து விடுவதில் உள்ள இன்பம் சிறப்பாக வெளிப் படுத்தப் படுகிறது.

இறைவனிடம் கூடல் கைகூடாத போது உள்ளம் சாம்பிப் போய் முகம் கூம்பிவிடுமே. அதையே, “ஆம்பல் வாய் கூம்பின காண்” என்றாள் ஆண்டாள். இப் பாடலின் முதலிரண்டு அடிகள் இறைவனுடன் கூடும் இன்பத்தையும் இன்னும் போய் அவனிடம் போய்ச் சேர்ந்தாக வில்லையே என்ற ஏக்கத்தையும் சேர்த்துக் குறிக்கிறது.

சிவப்பும் வெள்ளையும் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். சிவப்பு மலர்கள், வெள்ளை மலர்கள் – காவி உடை, வெண்பற்கள் – வெள்ளைச் சங்கு, தீயெனச் சிவந்து ஒளிரும் சக்கரம் என்று இப்படி வெள்ளையும் சிவப்பும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பிப் பாடல் முழுவதும் வரக் கடைசியில் இரண்டும் இணைவதைப் பாருங்கள். வெண் தாமரையில் செவ்வரிகள் போலக் கண்கள் கூர்ந்து நோக்க, வெண்மை தன் பரிசுத்தத்தால் இறைவனைக் குறித்தால் சிவப்பு தாயாரின் நிறத்தைக் குறிக்கிறது

சேதனர்களின் ஹ்ருதயத்தில் ஞானம் மலர்ந்து, அஞானம் நீங்குவதை “செங்கழுநீர். …கூம்பினகாண்” என்று கூறுகிறார்.
முதன் முதலில் சிறிய திருவடி ராமனைப் பார்க்கும் போதே அவர் பரமாத்மா எனத் தெரிந்து கொண்டாராம். அதுபோல உள்ளே உறங்குபவள் ஞானம் உள்ளவளாயும், நா வன்மை உடையவளாயும் இருக்கிறாள்.
பேயாழ்வார் எம்பெருமானை மங்களாஸாசனம் செய்யும் போது நாபிக் கமலத்தில் ப்ரும்ஹா வீற்றிருப்பதை பார்க்கிறார்.

அக்கமலம் மலர்ந்து மூடுவதை அவனது திறந்து மூடிய கண்களின் நோக்கால் நிகழ்வது என உணர்ந்தாராம்.

“எங்களை முன்னம்……எழுந்திராய்”…வெகுகாலமாய் ஸம்ஸாரத்தில் தூங்கும் எங்களுக்கு குணபூர்ணரான நீ ஞானம் போதித்து அனுக்ரஹிக்க வேணும் என்கிறாள். தேவதாந்த்ர வ்யாவர்த்தகமாக அடையாளங்களைப் பெற்ற பகவானை உபதேசித்தருள வேண்டுகிறாள்.

—-

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.–15-

ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம் கூறும் இப்பாசுரம் “இளங்கிளியே” என்று திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது. இவ்வாழ்வார் வளர்த்த கிளி ஸ்வாமி தேஶிகன். தன்னை ஒரு கூண்டுக் கிளியாக எண்ணியே அச்சுத ஶதகம் பாடினார் ஸ்வாமி.
பாகவதர்களின் பேச்சு ரஸமானதாயிருக்கும் என்பது “வல்லை உன் கட்டுரைகள்” என்பதன் பொருளாகிறது. தி‌ருமங்கையாழ்வார் நான்கு கவிகளில் (ஆசு கவி, சரள கவி, மதுர கவி, சித்ர கவி) வல்லவர் திரு எழுகூற்றிருக்கை (ரத பந்தம்) சித்ரகவிக்கு உதாரணம்.
“வல்லானை…..பாடு”—-யானை போல பலமான நம் இந்த்ரியங்களை அடக்க வல்லவனும் மோக்ஷ விரோதிகளையும் அழித்து,
நம்மிடம் உள்ள மாயயைத் தன் வசமாக்குபவனும் ஆகிய பகவானை துதிக்க வருவாய் என்று கூப்பிடுகின்றனர்.

———

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.–16-

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –நான்முகன் -81-

நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாந சக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து
கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து
விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.

தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாயக்
கருணை யம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான் -கம்பர் அடைக்கலப் படலம் -47-நேய நிலைக் கதவம்

கண்ணன் உள்ளே உறங்குவதால் நந்தகோபன் மாளிகையைக் கண்ணும் கருத்துமாய் காவல் காக்கின்றனர்.

நித்யசூரிகள் ஶ்ரீ வைகுண்டத்தைக் காக்குமாப்போல ஶ்ரீரங்கத்தைப் பஞ்சாயுதங்களும் காக்கின்றன என்கிறார் குலசேகராழ்வார்.

“உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே சங்கே*
அறவெறிநாந்தக வாளே 
அழகிய சார்ங்கமே தண்டே” – என்கிறார் பெரியாழ்வார்.
“புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா: ப்ரபோ*
ததைவ குமுதாதயோ நகர கோபுர 
த்வாரபா:”—என்று அபீதிஸ்தவத்தில் ஸ்வாமி தேஶிகன், நித்யசூரிகள், கோபுரம் காப்போர், வாயில் காப்போர் எல்லோரும் விழித்திருந்து இந்த பூமியயையும் ஶ்ரீரங்கத்தையும் காப்பாற்றுங்கள் என்கிறார்.
கைங்கர்யபரர்களை அவர்களது கைங்கர்யத்தையொட்டி அழைக்கும் வழக்கம் ஆண்டாள் காலத்திருந்தது என்பது “கோயில் காப்பான், வாயில்காப்பான்” என்றழைப்பதிலிருந்து புரிகிறது. இதனையே எம்பெருமானார் கோயில் கைங்கர்யங்களில் பின்பற்றினார்.
“கொடிதோன்றும் தோரண வாயில்காப்பான்” என்பதில் ஆசாராயர்களிடம் நம்மைக் கொண்டு சேர்ப்பவரை உபாஸிப்பதாய்க் காட்டுகிறாள் ஆண்டாள். ராமாவதாரத்தில்
ஶ்ரீராமனை மகரிஷிகள் அனுபவிக்கக் கேட்டதை “நென்னலே வாய் நேர்ந்தான்” எனக் குறிப்பிடுகிறாள் க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாக. விபீஷணனின் நல்ல உள்ளத்தை அறிந்து அனுமன் ராமனிடம் அழைத்துச் சென்றது போல உண்மையான பக்தி கொண்ட எங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேணும் என்கிறாள்.நேராக பகவானை உபாஸிக்காமல் ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு செல்ல வேணும் என்கிறாள் ஆண்டாள்.
(நேராக பகவானை அடைய நினைத்த ஸூர்ப்பநகாவின் மூக்கும் காதும் அறுபட்டது) என்பது திருக்குடந்தை ஆண்டவன் நிர்வாகம்.
குருடன் மற்றொருவர் உதவியுடன் செல்வது, நொண்டி படகோட்டி உதவியுடன் அக்கரை சேர்வது, ராஜாவைப் பார்க்காமலேயே ராஜ ஸேவகர்களின் குடும்பம் ராஜ போகம் அனுபவிப்பது போல ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு அரங்கனை அடைய முடியும் என்கிறார் ஸ்வாமிதேஶிகன் (ந்யாஸ திலகம் – 21)
க்ருஷ்ணன் இருக்க நந்தகோபனை நாயகன் என விளிக்கக் காரணம் ஶ்ரீவைகுண்டத்தில் பொறுப்புக்கள் அனைத்தும் விஷ்வக்ஸேனர் கையிலிருப்பது போல இங்கே நந்தகோபனிடம் ஒப்படைத்திருப்பதைக் குறிக்கிறது. ராமன் பிறந்தது த்ரேதாயுகம் தர்மத்திற்குக் குறைவில்லை. ராமனோ மஹா வீரன். அண்டை நாட்டு ராஜாக்கள் அவனுள் அடக்கம். தந்தை தஶரதனோ பேரரசன். அதனால் அவனுக்குக் காவல் வேண்டாம் ஆனால் க்ருஷ்ணனோ கலி யுகத்தின் தோளைத் தொட்ட த்வாபர யுகத் தில் பிறந்ததால் அதர்மம் மிகுதி. தந்தையோ புல்லை மிதிக்க யோசிக்கும் ஸாத்வீகன். மகனோ இடைப்பிள்ளை. எடுப்பார் கைப்பிள்ளை. கம்ச பயத்தோடு சுற்றியிருந்த அரசர்களும் பகைவர்கள். அதனால் காவல் அதிகம் நந்தன் மாளிகைக்கு.
நாயகானாகிய ஆசார்யன் கோயில் காப்பானாக ப்ரணவத்தையும், அஷ்டாக்ஷரத்தையும் உபதேசிக்கும் பொருட்டு, வாயில் போன்ற “நம:” ஶப்தத்தின் பொருளைச் சொல்லி நம்மைத் தயார் செய்கிறார். ஜீவன் ஸ்வதந்த்ரனல்லன். அகிஞ்சனன் என் உணர்த்தி மோக்ஷவாயிலைத் திறக்க உதவுபவராக ஆசார்யனை “மணிக் கதவம்” என்பதன் மூலம் உணர்த்துகிறாள் ஆண்டாள்.

———-

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.–17-

ஊனில் உயிரினில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேன் -மூன்றைச் சொல்லி
அன்பு ஆர்வம் இடு திரி இன்புருகு சிந்தை -மூன்றும் போல்
நந்தகோபன் யசோதை நம்பி மூத்த பிரான் இங்கும்

அசுரபயத்தைவிட, தோழிப் பெண்களிடமிருந்து க்ருஷ்ணன் பத்ரமாகக் காப்பாற்றப் படுகிறான். க்ருஷ்ணனின் பேரன் அநிருத்தனை மஞ்சத்துடன் கடத்தியவர்களாயிற்றே இப்பெண்கள்!தஶரதன் போல ராமனை அனுபவிக்க விடாத லோபியல்ல இந்த நந்த கோபர். பரம உதாரனாகிய இவர் க்ருஷ்ணனை அனைவரும் அனுபவிக்க அளிப்பவராதலால் முதலில் அவரை எழுப்புகின்றனர்.
க்ருஷ்ண ஸ்பர்சம் பட்டதால் கோகுலமே புனிதமாகியது. த்ரௌபதிக்கு வஸ்த்ர தானம் செய்த க்ருஷ்ணன் கோகுலம் பசுக்களுக்கு நீர் தானம் செய்தான்.
 
“அம்பரமே தண்ணீரே” மாடு மேய்த்துக் கொண்டிருந்த க்ருஷ்ணன், தோழர்களுக்கேற்பட்ட பசியை ரிஷி பத்னிகள் யாகத்துகுச் செய்த ப்ரசாதத்தை கொண்டு போக்கினான்.
இது “சோறே அறம் செய்யும்” சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்று எம்பெருமானுக்கு சேவை செய்பவராயிற்றே பலராமனாகிய ஆதிசேஷன். மரவடியாக இருக்கும் (பாதுகை) பலராமனை “செம்பொற்கழலடிச்செல்வன்” என்கிறாள்.
அம்பரமாய், (ஆகாசம்) நீராய், உணவாய் இருக்கும் க்ருஷ்ணனை எங்களிடம் தரவேண்டும் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
ஶரீரத்தை வஸ்த்ரம் மறைத்து வ்யக்தியைக்காண்பிப்பது போல
எம்பெருமான் இந்த ப்ரபஞ்சத்தை யோகிகளின் உணர்வுகளிலிருந்து மறைக்கிறான் என்பது ஸ்வாபதேசம்.
தத்வ, ஹித புருஷார்த்தங்களை பலன் எதிர்பாராது உபதேசிக்கும் ஆசார்யனாக நந்த கோபலாரைச் சொல்கிறாள். இத்தகைய ஞானத்தைக் தரும் மந்த்ரங்களின் ப்ரதானமாக இருக்கும் நிலை யசோதைக்கு. அடுத்து ஸர்வ வ்யாபியான எம்பெருமான் க்ருபையைக் கோருகிறார். அடுத்து அவன் சம்பந்தப்பட்ட பாகவத கைங்கர்யத்தை யாசித்து ஆக எல்லோரும் அனுக்ரஹப்பீர்களாக என்று வேண்டுகிறாள்.

———

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–18-

புருஷாகாரம் செய்யும் பிராட்டி அருகே இருந்ததால் காகாசுரன் உயிர் பிழைத்தான். ராவணன் எம்பெருமான் கோபத்துக்கு ஆளானான். நம் குறைகளைப் பிராட்டி கேட்டு, பெருமானையும் கேட்கச் செய்வதால் அவளை முன்னிட்டுக் கொண்டே பகவானிடம் செல்ல வேண்டும்.
ஶரணாகதி என்று வந்த ஜீவனின் குற்றங்களுக்கேற்ப தண்டனை
அளிக்க முன்வரும் பகவானிடம் பரிந்துரை செய்து பிராட்டி ஶரணாகதனுக்கு மோக்ஷமும், அல்லாதவர்களுக்கு தண்டனையும் அளித்தால் லோக நிர்வாகம் பாதிக்காது என்று அவனுக்கே உபதேசம் செய்பவள்.

இத்தனை சிறப்பான குணங்களையுடையவள் நப்பின்னை.
க்ருஷ்ணனை மகனாயடைந்த நந்தகோபனுக்கு வஸுதேவர் யானைகளையும், வஸுதேவர்ருக்கு வேண்டிய பசுக்களை நந்தகோபரும் அளிப்பார்களாம்.

ஸீதை தன்னை தஶரதனின் மருமகள் என அறிமுகப் படுத்திக் கொள்கிறாள் ஹனுமனிடம். அதுபோல நப்பின்னை தன்னை நந்தகோபன் மருமகள் எனச்சொல்கிறாள். ஒருகையில் பந்தும், மற்றோர் கையில் கண்ணனையும் பிடித்துக் கொண்டு உறங்குகிறாள்.

நித்ய விபூதி, லீலா விபூதி என இரண்டையும் நிர்வகிக்கும் செல்வாக்கு உடையவள். ராமானுஜர் இந்த பாசுரத்தைப்பாடி பிக்ஷை கேட்டு கதவைத் தட்ட, வந்து திறந்த அத் துழாயை (பெரிய நம்பியின் திருக் குமாரத்தி) ஆண்டாளாக நினைத்து மயங்கி வீழ்ந்ததாக வரலாறு.

உபய விபூதியை நிர்வகிக்கும் யானை போன்றவனும், வீணாகாத ஸங்கல்பம் என்னும் நலத்தைப் பெற்றவரும் ஆகிய எம்பெருமானின் ஜேஷ்ட மகிஷியே! கேசவனை அடையத் தடையாயுள்ள பாபத்தை நீக்குபவள் இவளே!
ஸாரமான தானியங்களை மட்டும் கொத்தும் கோழிகள் போல (ஸார க்ராஹிகள்) எம்பெருமானிருக்குமிடம் சென்று ப்ரபத்தி செய்யும் பாகவதோத்தமர்களைக் குறிக்கிறது. (ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களாக கொக்கு போல் இருப்பான், கோழி போல் இருப்பான், உப்பைப் போலிருப்பான், உம்மைப் போலிருப்பான் என்பது ப்ரஸித்தம்)
வேதாந்த சாகைகள் மாதவிப் பந்தல் எனவும் அதில் கூறும் ஶ்ரீய: பதியின் பெருமையை உறைக்கும் வால்மீகி, ஸுகர் போன்றவர்களை குயில்கள் எனவும் உருவகப் படுத்தப் பட்டுளது.
பந்து போன்ற எங்களை லீலோபகரணமாக்கி விளையாடும் எம்பெருமானுக்கு நாங்கள் போகோபகரணமாக வேணும். அதற்கு பிராட்டியின் வளை யோசை துணையாயிருந்து சீற்றத்தைத் தணிக்க வேணும் என்பது உட்பொருள்.

——–

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.–19-

பிராட்டியும், பெருமானும் மோக்ஷமளிப்பதில் அவரவர் அடியவர்களை விட்டுக் கொடுப்பதில்லை. நப்பின்னை வீரமங்கை என்பதால் கோட்டுக்கால் கட்டில். ருக்மிணி ராஜபத்னியாகையால் தங்கக் கட்டில்.சத்யபாமா அழகி என்பதால் வெள்ளிக்கட்டில் அமைத்திருந்தனராம். மோக்ஷமடைந்து முக்தன்

ஶ்ரீவைகுண்டம் சேர்ந்து திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷ பர்யங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருமடியில் சென்றமர்கின்றான். அப்படிச் செல்லும்  போது ஆதிஸேஷனைத் துகைத்துக் கொண்டு ஏறுவானாம். இதனையே “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி” – என்கிறாள்.

மைத்தடங்கண்ணியான நீ உன் மணாளானுடனிருக்கிறாய். க்ருஷ்ணனைப் பிரிந்த ஒரு கணம் ஒருயுகமாயுள்ளது. எங்களை இன்னும் காக்க வைப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர் தோழிகள். ராவணவதம் முடிந்து ஸீதா பிராட்டியைக்காண வந்த ஹனுமான் ராக்ஷஸிகளை நசுக்கி விடுவாதகக் கூற அவர்களுக்குப் பரிந்து பேசிய பிராட்டி யைப் போல நீயும் எங்களுக்காக இரங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் தோழிகள்.

ஸ்திரமான ஸம்ப்ரதாய ப்ரதியே “குத்து விளக்கு” என்பதாம். ஒரு ஆசார்யனிடமிருந்து இன்னொரு ஆசார்யன் வருவதை வழிவழியாக வரும் தீபம் குறிக்கிறது. அஞானத்தைப் போக்கும் ஞான தீபம் இது. நிரபாய ஸம்ப்ரதாய பரம்பரையே இந்த குத்து விளக்கு.
விளக்கு ப்ரகாசத்தால் தன்னையும் காட்டி பிறவற்றையும் காட்டுமாப்போல நப்பின்னையே! நீ உன் க்ருபையைத் தந்து, கண்ணனையும் காட்டித் தர வேணும் என்கின்றனர்.
நான்கு வேதங்களையும் கால்களாய் கொண்ட கோட்டுக்கால் கட்டில் சுமக்கும் திவ்ய தம்பதிகளை அடைவதற்கு முன் அந்த பர்யங்கத்தில் வீழ்கினறனர். குத்து விளக்கின் 5 முகங்கள் போல எம்பெருமானின் ஐந்து நிலைகள், பஞ்ச இந்த்ரியங்கள், அர்த்த பஞ்சகம் முதலியன ஆசார்ய உபதேசத்தால் அறியப்படுகின்றன.
ப்ரளய காலத்தில் அசித்தைப்போலக் கிடக்கும் ஜீவன்களுக்காக இரங்கி மோக்ஷம் வரையில் இவைகளை அழைத்துச்செல்லும் விசாலமான மனமுடையவனே “மலர்மார்பா” என்பதாம்.
இப் பாசுரம் பட்டர் உகந்த பாசுரம் என்பர்.

———

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.–20-

முப்பத்து மூவர்…அமரர்க்கு”— எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருக்கும் எம்பெருமான் நாமளிக்கும் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் மிடுக்குடையவன்.

செப்பமுடையாய்–தேர்த்தட்டிலும், கடற்கரையிலும் சொன்னபடி அடைக்கலம் அடைந்தவர்களை ரக்ஷிக்கும் ஆர்ஜவம் உடையவன்!

திறலுடையாய்—தடைகளை நீக்கி நிர்வகிக்கும் திறலுடையவன்.

செற்றார்க்கு—–விமலா – ஆஶ்ரித விரோதிகளிடத்தில் துன்பம் உண்டாக்கப் பண்ணுவது எம்பெருமானுக்குக் குற்றமாகாது. ஜயத்ரதனைக் கொல்லும் பொருட்டு சூர்யனை மறைத்துப் பகலை இரவாக்ககினான் பரமன். பாரத யுத்தத்தில் ஆயுதம் எடுக்கா விடினும், ஒவ்வொரு முறையும் தேரோட்டியாக சாட்டையை சொடுக்கும் போதும் பல எதிரிகள் வீழ்ந்தனர் என்பதை “பற்றலர் வீயக் கோல் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்றானை”–என்கிறார் கலியன்.

கண்ணன், அர்ஜுனன் தேர்தட்டில் ஏறியவுடனேயே கௌரவ பத்னிகளின் திருமாங்கல்யம் ஒரே சமயத்தில் அசைந்தனவாம்
பாஞ்சாலியின் துயிலுரிந்த வருத்தத்தை அந்த நூறு பத்னிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தானாம்.

“பாண்டவர் தம்முடைய மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை” எனகிறார் பெரியாழ்வார்.

ஆசார்ய வைபவத்தை இப் பாசுரம் அழகாய்க் காட்டுகிறது. ஸ்த்ரீகளுக்கு மூன்று விஷயங்கள் அழகைத் தருவது போல ஆசார்யன் மூன்று விஷயங்களை சிஷ்யனுக்குத் தெரியப் படுத்துகிறார்.
  • சிறு மருங்குல் போல அஷ்டாக்ஷரத்தில் பிராட்டி இருப்பது தெரியாது.
  • மென்முலை யொத்த த்வயத்தில் லக்ஷ்மீ ஸ்பஷ்டமாகத் தெரிகிறாள் சைதன்யஸ்தன்ய தாயினியாக எப்போதும் ரக்ஷிப்பதால்.

இவை யிரண்டையும் ப்ரபன்னனுக்கு ஆசார்யன் திருவாக்கால் (செவ்வாய்) சொல்லித் தெளிய வைக்கிறார் சரம ஶ்லோகமாக.

———–

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.–21-

உகவாதார் அம்புக்குத் தோற்பர்கள். நாங்கள் தோற்றோம் உன் குணத்துக்கே!” — என்று வந்துள்ளனர் தோழியர். பிராட்டி பகவானுக்கு எல்லா விதத்திலும் ஈடானவள். ஆயினும் பகவானுக்கு அடங்கி பாகவதர்களுடன் சேர்ந்து தொண்டு செய்பவளாக தன்னை ஆக்கிக் கொள்கிறாள். தனக்கு மேம்பட்டவர் எவருமில்லாத எம்பெருமானுக்கு விபவத்தில் “நந்த கோபனுடைய மகன்” என்பதில் அளவற்ற சந்தோஷமாம்.
ராவண வதம் முடிந்து வந்த ராமனைத் துதித்த ப்ரம்ஹா, சிவனிடம், “நான் தஶரதன் புத்ரன்”–என்று சொல்லி மகிழ்ந்து, இப்படிச் சொல்வதையே நான் பெரிதாக மதிக்கிறேன் என்றான். நம்மில் ஒருவனாக வந்த இந்த மகன் நம்மைக் கைவிடமாட்டான் என்பது இதன் பொருள்.
“ஊற்றமுடையாய் ……தோற்றமாய் நின்ற சுடரே” என்கிறாள் ஆண்டாள். “சமாதானம் பேசப்போகிறாயா” என்ற த்ரௌபதியிடம், “நான் உன் கோவிந்தா என்ற கதறலுக்குக் கடன் பட்டுள்ளேன். கவலைப்படாதே என்று சொல்லிச் சென்றான் யுத்தத்தை ஆரம்பிக்க, ஆஶ்ருத பாதபக்ஷனாகிய எம்பெருமான்.
ஶ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் கல்யாணகுணங்கள்  சுடர்விடாது.
ஆனால் ப்ருக்ருதி மண்டலத்தில் அவன் பிறக்க பிறக்க சுடர்விட்டு ப்ரகாசிக்கிறது அவனது குணங்கள் என்று உபநிஷத்துக்கள் கொண்டாடுகின்றன.
“ஆற்றாது….போற்றியாம் வந்தோம்” என்பதற்கு “அகங்காரம் மமகாரம் ஒழிந்து உன்னைப் புகழ்ந்து, உன்னடிபணிந்து, எங்கள் இயலாமையை உணர்ந்து வந்துள்ளோம்” என்பது பொருள்.
“ஏற்ற கலங்கள் ….பசுக்கள்” ஸத்பாத்ரங்களான சீடர்களுக்கு பக்ஷபாதமின்றி ஞானமாகிய பாலை மிகுந்தளிக்கும் ஸதாசார்யன் என்பதாகும்.
“ஆற்றப் படைத்தான்…….துயிலெழாய்”…. இத்தகைய ஆசார்யர்களுக்கு புத்ரனாயிருப்பவனாகிய எம்பெருமான் ஸம்ப்ரதாயம் வளர பாஞ்சராத்ரம் போன்ற ஆகமங்களை உபதேசித்து, விபவாதாரங்களைச் செய்து விளங்கினாய் .
இத்தகைய பெருமையுடைய நீ எங்கள் கைங்கர்யத்தை ஏற்க வேணும் என்கிறார்கள்.

——–

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.–22-

ஐம்புலன்களுடன் கூடிய அழகிய சரீரத்திலிருக்கும் ஜீவராசிகள்
நானே ஸ்வதந்த்ரன் என்பன போன்ற அபிமானங்களை விட்டு ஶ்ரீ வைகுண்டத்தில் உன் பர்யங்கத்தின் கீழ் கூடியிருக்கும் நித்ய முக்தர்களின் கூட்டம் போல நாங்களும் முக்தானுபவம் பெற ஶரணாகதி செய்ய வந்துள்ளோம். எங்கள் பாபத்தைப் பார்த்து கண்களைச் சிறுச்சிறிதே மூடி விழித்தால் உன் பரிபூர்ண கடாக்ஷம் எம்மேல் பட்டு எங்களது ஸஞ்சித, ப்ராரப்த பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
“அபிமான பங்கம்” என்பதற்கு ராமாயணத்திலிருந்து உதாரணம் ஒன்று. ராவண வதம் முடிந்தபின் மந்தோதரி புலம்புகிறாள் இப்படி. “தானவ அரசனான மயன் என் தந்தை. ராக்ஷஸ அரசன் என் கணவன்‌. இந்த்ரனையே ஜெயித்தவன் என் புத்ரன் இந்த்ரஜித். சூர்யனின் ஒளியோ, வெப்பமோ இந்த ராஜ்யத்தில் விழுந்ததில்லை. அப்ஸரஸ்ர ஸ்த்ரீகள் குடையும், சாமரமும் ஏந்தி வருவர் ராவணன் பின்னால். ஆனால் ராவணன் வீழ்ந்ததும் என் இந்த கர்வமும் அழிந்தது. சூர்ய ஒளி இலங்கையில் விழுந்தது. வட்டமிடும் கழுகுகளின் நிழல் ராவணன் மீது விழுந்தது குடை பிடிப்பது போல” என்கிறாள்.
ஶ்ரீரங்கநாதன் புறப்பாட்டிற்குச் செல்லும் போது பாதுகைகளை அணிந்து, ஸயன சமயத்தில் களைவான். திரும்ப காலை எழுந்ததும் அவர் முதலில் கடாக்ஷிக்கும் பாதுகைகள் போல கண்ணா நீ எங்களைக் கடாக்ஷிக்க வேணும் என்கின்றனர் கோபியர்.
ஶரணாகதனின் தோஷத்தைப் பார்க்காத வாத்ஸல்யம் மிக்க திருக்கண் மலராலும், பாபத்தைக் கண்டு தண்டிக்கத் தோன்றும் மற்றொரு சற்றே மூடிய கண்ணாலும் சிறுச் சிறிதாய் எங்களை விழித்துப் பார்த்து எங்கள் பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
அகல்யா சாபம் தீர்த்த ராம பாத தூளிகள் போல, உன் திருவடித் துகள்பட்டு எங்கள் சாபம் தீர வேண்டும் கண்ணா என்கின்றனர் கோபியர்.

——–

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–23-

இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சிறப்பை ஆண்டாள் காட்டுகிறாள். பாற்கடலில் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் பர்யங்கம் என்ற குகையில் பிராட்டியுடன் மன்னி யோகநித்ரை செய்யும் எம்பெருமான் முன்னே பூபாரம் தாங்க முடியாத பூமிதேவி கம்சன், சிசுபாலன் முதலியோரால் உண்டான கஷ்டம் நீங்க வேண்டும் என வேண்டியபடியால் ஸங்கல்ப ஞானத்தைப் பெற்றான் (அறிவுற்று தீவிழித்து) எழுந்த எம்பெருமான் தன் திருமேனியிலிருந்து, கருப்பு, வெண்மைநிற கேஸத்தையும் எடுத்து வீசியதை “வேரிமயிர் பொங்க” என்கிறாள்.

வாஸனை யுடைய இக் கேஸத்தை விடுவித்து, அழகிய தேக உறுப்புக்களை பெற்று ஆதிஸேஷனையும் உதறி, ஆலஸ்யத்தை நீக்கி உடனே அவதாரம் செய்து முழங்கினான் தேவகி வஸுதேவர் மகனாய் வந்துதித்தான்.
பொற்கொல்லன் மெழுகில் ஒட்டிய பொன்னைப்போல ஞானமில்லாத இப்ருக்ருதியில் ஞானமுள்ள ஜீவன் ஒட்டியிருப்பதைக் கண்டு அறிவுற்றுத் தீவிழித்து கரண களேபரங்களுடன், முக் குணங்களையும் அளித்து மூரி நிமிர்ந்து ஶ்ருஷ்டி செய்து ஸ்தூலத்தில் ஸூக்ஷ்மமாயுள்ளான்.
இப் பாசுரம் அஹோபிலத்தில் எழுந்தருளியுள்ள ந்ருஸிம்ஹனைப் பற்றியது என்றும் சொல்வர். அஹோபில மலையில் மன்னிக்கிடந்த மாலோலன் இக் கலியுக ஜனங்கள் நற்கதி பெறும் பொருட்டு பரிவாரங்களுடன் வெளியே வந்து ஸஞ்சாரமாக பல
க்ராமங்களையும், நகரங்களையும் அடைந்து மக்களை தன் வசமாக்கினான் அழகிய சிங்கர்கள் மூலமாக என்பது வ்ருத்தாந்தம்.
மாரி மாறாத தண்ணம்மலையாம் திருமலையிலிருந்து, ஹஸ்தி கிரி சென்று, ஹயக்ரீவ, கருட கடாக்ஷம் பெற்று, நடாதூர் அம்மாள், அப்புள்ளார் அருள் பெருக்கால் அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்து, அரங்கம் சேர்ந்து, சீரிய சிங்கமென வாதியரை விரட்டி, கவிதார்க்கிக ஸிம்ஹமாகி, க்ரந்தங்கள் பலவற்றை நம் ஸம்ப்ரதாயம் உய்ய, நமக்காக அருளியுள்ளார் நம் ஸ்வாமி தேஶிகன்.
ஆக நம்பெருமாளின் “கதியே” நமக்கு “கதி” என்றார்.
இவனது நடையழகாகிய “ஸஞ்சாரம்” ஸேவித்தால் நமக்கு
“ஸஞ்சாரம்” (பிறப்பு/இறப்பு) இருக்காது என்பது திண்ணம்.

———

அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.–24-

அன்று மகாபலி தர இயலாத மூன்றடியை நான் தருகிறேன் என்கிறாள் ஆண்டாள்
  1. ஓங்கி உலகளந்த
  2. அம்பரம் ஊடறுத்து
  3. அன்றிவ்வுலகமளந்தாய் – என
இரண்டு அடிகளால் மகாபலியின் மமகாரத்தையும், மூன்றாம் அடியால் அவனது அகங்காரத்தை அவன் தலையில் வைத்தும் அழித்தான். ஆக ஜீவர்களாகிய நாம் அவன் திருவடியில் தலையை சேர்க்க வேண்டும். அவன் முன்னே தலை குனிந்தால் வாழ்வில் நிமிரலாம் என்பது தத்துவம்.
தண்டகாரண்யத்தில் ராக்ஷஸர்களால் தங்களுக்கேற்பட்டு வரும் கஷ்டங்கள் தீர ராமபிரான் வரவை எதிர்பார்த்திருந்த ரிஷிகள் அவனைப் பார்த்தவுடன் அவனது அழகில் மயங்கி தம் கஷ்டங்களை மறந்து பல்லாண்டு பாடினர். கருடாரூடனாகிய எம்பெருமானைக் கண்டதும் பெரியாழ்வார் பல்லாண்டு பாடினார்.
“அன்றிவ்வுலகம்……அடிபோற்றி” ஸ்ருஷ்டிகாலத்தில் இந்த எல்லா உலகங்களையும் படைத்த உன் திருவடிகளில் ஶரணாகதி செய்து போற்றுகிறோம்.

“இலங்கைசெற்றாய்…போற்றி”— அவ்வுலகங்களில் விபவமாயும், அந்தர்யாமியாயும், ஆசார்யராயும் அவதரித்து மனதை விவேகம் மூலம் அழிக்கும் திறலைப்போற்றுகிறோம்.“சகடம் உதைத்தாய்….போற்றி”– ஜீவன்களின் கர்மாவாகிய வண்டியை அழிக்கும் உன் கீர்த்தியைப் போற்றுகிறோம்.

“கன்று…..கழல் போற்றி“—கன்று போல் விரும்பக் கூடிய புண்ய பாபங்ஙளை அழிக்கவல்ல உன் வீரத்தைப் போற்றுகிறோம்.

“குன்று…குணம்போற்றி”….சிகரம் போன்ற வைகுண்ட லோகத்தில்
ஏக சக்ராதிபதியாக வெண் கொற்றக் குடையுடன் வீற்றிருக்கும் உன் குணத்தைப் போற்றுகிறோம்.

வென்று…வேல் போற்றி”…. மோக்ஷ விரோதிகளாக தடைகளை அழிக்கும் வேல் போன்ற உன் ஸங்கல்பத்தைப் போற்றுகிறோம்.

“என்றென்றும்…..இரங்கேலோரெம்பாவாய்”—-இவ்விதமாக உன் திருக் கல்யாண குணங்களைப் பாடி பரம பதத்தில் கைங்கர்யம் கொள்வதற்கு வேண்டி வந்துள்ளோம். அருள் புரிவாயாக. என்பது உட்பொருள்.

வானரங்களைக் கொண்டு ராவணனை வென்றான் எம்பெருமான். “இக்கரை” யிலிருந்து “அக்கரை” சேர்க்கும் “அக்கரை”அவனுக்கு மட்டுமே உண்டு.

———

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–25-

ஸம்ஸாரம் என்பது ஓர் இரவு. இதில் வாழும் நமக்கு இரண்டு தாய்கள். நம்மைப் பிறப்பிக்கும் தாய். இவள் நம் உடலைத் தான் உண்டுபண்ணுகிறாள். ஆனால் ஆத்மாவை அதைப் பற்றிய அறிவை உண்டு பண்ணும் தாய் “காயத்ரீ மந்த்ரம்” என்னும் தாய். இவளையே “ஒருத்தி” என்கிறாள் ஆண்டாள். இவள் மூலமாக மற்றொரு பிறப்பு உண்டாகிறது .
அதனைத்தரும் தாய் “மூலமந்த்ரம்”. இதன் மூலம் எம்பெருமானுக்கு அடிமை என்ற ஞானம் பெற்று பரமைகாந்தி ஆகிறான் ஜீவன்.
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து ஶரணாகதி என்னும் உபாயத்தை அனுஷ்டித்து பிறவி நோய் தீர்க்கச் செய்கிறார் ஆசார்யன்.

“தரிக்கிலானாகி….நெடுமாலே”–
ஆனால் மனத்தாலும், வாக்காலும், உடலாலும் செய்யும் பாபங்கள்
“கம்சன்” போன்றவை. அவற்றின் பலனைத் தரிக்க இயலாது தவிக்கிறோம்.
இந்த மோக்ஷ விரோதியாகிய பாபங்களை உன் கருணையால் அழித்து உன் கைங்கர்யத்தில் எங்களைச் சேர்த்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்கின்றனர் பாவையர்.

———-

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.–26-

மாலே! மணிவண்ணா! பக்த வ்யாமோஹம் உள்ளவன் எம்பெருமான். அதனால் மாலே என்கிறாள்‌.
“சமுத்ரத்தின் அக்கரையிலிருந்து கூப்பிட்ட உனக்கு ஆதிமூலமே என்றலறிய யானையைக் காக்க ஓடிவந்தது போல ஓடிவந்து ரக்ஷித்திருக்க வேணும்” என்று கூறி விபீஷணனைக் கண்களால் பருகினாராம். அத்தனை ஆஶ்ருத வாஞ்சை!
திருக்காட்கரை அப்பனாகிய வாமன மூர்த்தி நம்மாழ்வாருக்குத் தர்ஶனம் தரச் சென்றபோது, அவரைத் தன் கண்களால் பருகி ஹ்ருதயத்திலிட்டாராம் ஆழ்வார்.
காட்கரை அப்பனும் கண்களை மலர்த்தி உள்வாங்கினார் ஆழ்வாரை!

“மேலயார் செய்வனகள்”–பெரியோர்கள் அனுஷ்டித்த படியால் நாங்களும் அனுஷ்டிக்கிறோம். தர்மம் அறிந்த பெரியோர்களின் அனுஷ்டானமே ப்ரமாணம். அதில் பலனும் ப்ரசித்தி எற நோன்பைப் பற்றிச் சொல்கின்றனர்.

அடுத்து நோன்புக்கு வேண்டிய உபகரணங்களைக் கேட்கின்றனர்.
“ஞாலத்தை எல்லாம்….கொடியே விதானமே”–அனுஷ்டானம் ப்ரபத்தி என்னும்போது, அதற்கான அங்கங்கள் உபகரணங்களாகின்றன.
த்ருவனைப் பேசவைத்து ஞானமளித்தது இந்த பாஞ்ச ஜன்யமே. க்ருஷ்ணன் செய்த சங்கநாதத்தைக் கேட்டு ருக்மிணி பிராட்டி கண்ணன் அருகே வந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தாளாம். “ருக்மிணி பிராட்டிக்குக் கேட்ட சங்கொலியும்,
ஸீதா பிராட்டிக்குக் கேட்ட சார்ங்க ஒலியும் போல் எனக்கு எப்போது கேட்கும்” என்கிறாள் நப்பின்னை.
சங்க நாதம் போன்றது ஆசார்ய ஸூக்திகள்.
பல்லாண்டு பாடும் ஆழ்வார் ஸூக்திகள்.
பறை கொட்டுவது போல் வாத க்ரந்தங்கள் குத்ருஷ்டிகளை மாய்க்க.
கோல விளக்கு போன்ற சாத்வீக ஞானம்.
பக்தி என்பதன் மூலம் யார் என்பதைக் காட்டும் கொடி.
அகங்காரம் நீங்கிய வைராக்யம் விதானம்.
இப்படியான உபாய அனுஷ்டானம் ஆனந்தம் தரவல்லது என்பதனை ஆண்டாள் காட்டுகின்றாள்.

————-

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–27-

யுத்தம் செய்த அழகால் ராவணனை வென்றான். கூடமாட்டேன் என்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் ஆகியோரையும் வென்றான்.
கூடமாட்டேன் என்ற ஆழ்வார்கள் முன்னின்று வென்று பாடவைத்தான், வாத்ஸல்யத்தால் வென்றான்.
தன்னுடன் கூடியவரை வெல்ல மாட்டேன் என்பான். பரசுராமனளித்த வில்லை வாங்கிய ராமபிரானை வணங்கிய பரசுராமனின் புண்ணியங்களை எடுத்த அஸ்த்ரத்தால் அழிக்கிறார். சமுத்ர ராஜனிடமும் இதே நிலை தோல்விதான். புல் ப்ரும்ஹாஸ்த்ரமாகியது முதலில். காகாசுரன் ஶரணாகதி செய்த பின் அதற்கு தோற்ற எம்பெருமானின் கருணை ப்ரும்ஹாஸ்த்ரத்தை புல்லாக்கியது.
ராம பட்டாபிஷேகம் நடந்தபின் உலகமே புகழும் வண்ணம் ஹனுமனுக்குத் தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அளிக்கிறாள் ஸீதை. “நாங்கள் எம்மிலிருந்தொட்டிய  கச்சங்கம் நானும் அவனும் அறிதும்” என்கிறாள் ஆண்டாள்.
அதுபோன்ற சம்மானம் வேண்டும் எனக் கேட்கிறார் ஆண்டாள்.. ஹனுமனிடம் ராமனளித்த மோதிர அடையாளமும், பிராட்டி அளித்த சூடாமணியும் இருவருக்கும் சொல்லிய கதைகள் பல. தபஸ்வினி அனுசூயா தன் ஆபரணங்களை அனைத்தையும் ஸீதாபிராட்டிக்குப் பூட்டி அழகு பார்த்து ராமபிரான் முன்பு நிறுத்துகிறாராம்.
“கோவிந்தா” என்ற நாமம் சுரந்த புடவையால் த்ரௌபதியின் மானஸம்ரக்ஷணம் நடந்தது.
  • ஸத்கர்மாக்களைச் செய்ய மாட்டேன் என்றும் கூடாரை வெல்பவர்ஙள் ஆசார்யர்கள்.
  • சூடகம் என்பது கைகூப்புச்செய்கை.
  • தோள்வளை என்பது சங் கு சக்ரப் பொறி.
  • தோடு, செவிப்பூ என்பன ஆசார்யன் சொல்லும் த்வய மந்த்ரம்.
  • பாடகம் என்பன சிஷ்யன் செய்யவேண்டிய அனுஷ்டானங்கள்.
  • த்வாதச புண்ட்ரம், அணியும் கச்சம் முதலியன பிற அணிகலன்களாகின்றன.
  • மூடநெய்பெய்த பால் சோறு போல பரம போக்யமான க்ருஷ்ணானுபவத்தைப் பெறுகிறான் ஶரணாகதி செய்த சேதனன் என்பது உட்பொருள்.

———–

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.–28-

வானரங்களுடன் கலந்து பழகிய ராமபிரான் இங்கு மாடுகளுடன் கலந்து நிற்கிறான். “இறைவா” என்றழைத்து அவனது ஸ்வாமித்துவத்தைக் காட்டுகிறாள். க்ருத க்ருத்யனான
ப்ரபன்னனுடைய குறைகளைக் தான் ஏற்றுக்கொண்டு, தன்னிறைவை அவர்களுக்கு அளித்து, ரக்ஷணப் பொறுப்பை ஏற்பதால் “குறையொன்றுமில்லாஎம்த கோவிந்தா” என்கிறாள். இதனையே “தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும் அமைவுடைய அருளாளர் அடியிணைகள் அடைந்தேனே”
என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

எம்பெருமானுக்கும், ஜீவனுக்கும் உள்ள ஆத்ம பந்தம் என்றும் அழியாது என்பதை “உன்னோடுறவேல் .. ‌..ஒழியாது” என்கிறாள்.

  • இந்த ஸம்ஸாரத்தில் ஜீவர்கள் ஸத்கர்மங்கள் செய்வது துர்லபம் என்பதை முதலடி காட்டுகிறது.
  • எம்பெருமான் விஷயமான ஞானமின்றி அலைகிறது என்பது 2ம் அடி.
  • இப்படி பசுப்ராயராக இருக்கும் ஜீவன்களை கடைத்தேற்ற எம்பெருமான் நினைத்து இறங்குவது அவர்களின் புண்ய விசேஷத்தால் என்பது 3ம் அடியின் கருத்து.
  • இப்படி எம்பெருமான் அவதரித்தாலும், அனாதி காலமாய் அவனுக்கும் நமக்கும் இருக்கும் சேஷத்வம் நீங்குவதில்லை என்பது 4ம் அடி தரும் கருத்து.
  • இது ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம். பகவானை நினையாவிடினும் அவன் சேஷி என்பதில் ஐயமில்லை, என்பது 5ம்அடி.
  • ஸர்வேஶ்வரனாகிய ஸ்வாமியிடம் எப்படி நடக்க வேணும் என்ற சேஷத்வ ஞானமற்றவர்களாயுள்ளனர் ஜீவர்கள் என்பது 6ம்அடி.
  • எம்பெருமான் என்ற உணர்வின்றி ஸ்வதர்மங்களை விடுத்து செய்த கார்யங்களால் நீ கோபிக்காது பொறுத்து க்ஷமிக்க வேணும். எங்களைத் திருத்திப் பணி கொள்ளவேணும் உன் கருணையால் என்பது கடைசி இரு அடிகளின் கருத்து.

———-

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.–29-

ப்ரபத்தி க்ஷண காலத்தில் அனுஷ்டிக்கப்படும் ஸாத்யோபாயம். “சிற்றஞ்சிறுகாலே” என்பது இந்த ப்ரபத்தியை நாள் கடத்தாது நல்லமன, தேக ஸ்திதி இருக்கும்போது அனுஷ்டிக்க வேண்டியதைக் குறிப்பது.
ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம்
ஆகிய மூன்று தளங்களைக் கொண்டது இந்த ப்ரபத்தி சாஸ்த்ரம் என்பதை ஆண்டாள் காட்டுகிறாள் இந்தப் பாசுரத்தில். இப்படி அனுஷ்டித்துப் பெறும் கைங்கர்யத் தைச் செய்யும்போது
உண்டாகும் உகப்பை உனக்கே அர்ப்பணிப்போம் என்பதை,
“மற்றை நம்….மாற்று” என்ற வரிகாட்டுகிறது. இதனை அனுஷ்டிக்க நமக்கு வழிகாட்டும் ஆசார்யனின் பொற்றாமரைக் திருவடிகளை பற்றி போற்றவேணும்.
ஆசார்யன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாய விஷயங்களை ஊட்டிச் செய்யும் கார்யத்தை, “பெற்றம் மேய்த்துண்ணும்” என்ற வரிதெரிவிக்கிறது.
ஆசார்யனுக்கு சிஷ்யன் செய்யும் கைங்கர்யங்களை, “குற்றேவல் எங்களை” என்ற வரிகாட்டுகிறது.
மற்றும் ஒரு விளக்கம்.

  1. ப்ராப்யத்தில் த்வரை (சிற்றம் சிறுகாலே வந்துன்னை)
  2. சாத்யத்தில் சாதனை புத்தி (போற்றும் பொருள் கேளாய்)
  3. சபலமாம்படி அபேக்ஷித்தல்/நிர்பந்தித்து கேட்டல் (குற்றேவல் எங்களைக் கொள்ளாமல்)
  4. ப்ரயோசனாந்த்ர வைமுக்யம். வர்ணாஶ்ரம தர்ம வ்ருத்திக்காக ஆசை (இற்றை பறை கொள்வான்)
  5. விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனை (ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல்)
  6. பல ப்ரார்த்தனை (மற்றை நம் காமங்கள் மாற்று)

30 பாசுர மங்களும் தினம் ஸேவிக்காவிடினும், இந்த ஒரு பாசுரத்தையாவது தினம் ஸேவித்து உய்யும் வழி பெறவேணும் என்பது பராசரபட்டரின் கருத்து.

———–

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.–30-

இழை -இழைதல் -நடந்து கொள்ளுதல் -ப்ரபந்ந நிஷ்டை -அபய பிரதானம் பெற்றவர்கள் -ந்யாஸ வித்யை ஸர்வ உப ஜீவ்யம்

நமக்குப் பறைதரும் நாராயணனை!
பாற்கடலில் பையத்துயின்ற பரமனை!
ஓங்கி உலகளந்த உத்தமனை!
பத்மநாபனை!
மாயனை!
ஹரியை!
கேசவனை!
தேவாதி தேவனை!
வைகுந்தனை!
அருங்கலத் தை!
முகில் வண்ணனை!
மனத்துக்கினியானை!
புள்ளின் வாய் கீண்டானை!
பங்கயக்கண்ணனை!
வல்லானை!
மணிவண்ணனை!
குல விளக்கை!
ஓடாத தோள்வலியனை!
மலர் மார்பனை!
விமலனை!
சுடரை!
அபிமானனை!
பூவைப்பூவண்ணனை!
குன்றைக்குடையாக்கினானை!
நெடுமாலை!
கோல விளக்கை!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை!
குறையொன்றுமில்லாத கோவிந்தனை!
அன்று காண் கோவிந்தனை!
செல்வத்திருமாலை!

சேதனர்களாகிய நாமனைவரும் கரணத்ரயம் படைத்ததன் பயனாக உள்ளத்திருத்தி, வாயினால் பாடி, செவியால் கேட்டு அனுபவித்து மகிழ்வோம்!

ஆக இப்படி எம்பெருமானின் இணையில்லா திருநாமங்களைக் கொண்டு தொடுத்த பாமாலையை அனுதினமும் அனுஸந்தித்து ஆண்டாளின் அருளுக்குப் பாத்ரமாவோமாக.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஏழாவது அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஏழாவது அத்தியாயம்‌
திருவுடைய சிவனுக்கும்‌ (மேருமலையை வில்லாக திருமால்‌ பாணமாகவும்‌) திருமகளுக்கும்‌ தன்‌ மேனி தந்தவனே/
(கம்சனுடைய குவலாயாபீடம்‌ எனும்‌) யானையைக்‌ கொன்றவனே/ முதலையை அரிந்த சக்கராயுதத்தை உடையவ?னை/
நல்லோரைக்‌ காப்பவனே! தாமரைப்‌ பாதங்களும்‌ தங்க ஆடையும்‌ உடையவனே! வேங்கடாசலத்‌ திறைவனே! Vil—I1

கேட்பாயாக! அந்த இராச்கதன்‌ வருத்தத்துடன்‌ இவ்விதம்‌ கூறலானான்‌. VII—2

பிரம்மராட்சசன்‌ வரலாறு
சோழவள நாட்டில்‌ ஒரு ஊரில்‌ பதினான்கு கலைகளும்‌ கற்றவனாக இருந்தேன்‌. தருக்க வாதிகளை வாய்ச்சவடாலில்‌
வென்றேன்‌. வேதாந்திகளைக்‌ குற்றம்‌ சொன்னேன்‌. சுவடிகளை விரிக்கக்‌ சுண்டு சிரித்தேன்‌, புரோகிதர்கள்‌ கற்ற
அறிஞர்கள்‌, நூலாய்வு செய்குநர்‌ அனைவரையும்‌ அவமானப்‌ படுத்தினேன்‌. /11–3

இப்படியாக இருந்து மதயாளைபோலச்‌ செருக்குடன்‌, அரைகுறைப்‌ படிப்பினால்‌ அகங்காரம்‌ கொண்டவனாக, அவிழ்க்கவும்‌
முடியவும்‌ அயராத வீசம்‌ (கொஞ்சம்‌) காசுகள்‌ உடைய ரெட்டி.யைப்‌ போல, என்‌ படிப்பே பரம்பிரம்மம்‌ (பேரறிவு) ஆகக்கருதிய
வாறு பெரியோர்களைக்‌ கிளறி, (வாதத்தில்‌, தோற்றாலும்‌ வென்றதாகக்‌ கூறிக்கொண்டு, சில்லரைப்‌ பிரபுக்களை மயக்கி
தட்சிதரைக்கண்டு வேள்வி செய்யும்‌ ஆசை ஏற்பட்டு, பொருள்‌ வேண்டி மதுரைக்குச்‌ சென்று அந்‌ நகரில்‌ VIT—4

(சமூகத்திலிருந்து) வெளியேற்றப்பட்ட (ப௫ிஷ்சாரம்‌ செய்யப்பட்ட) பிராமணனுக்கு (செலவு) குறைந்த பிராயச்‌
சித்தம்‌ (கழுவாய்‌) செய்வித்து, பொன்னுக்ீகாக நான்‌ அவன்‌பந்தியிலமர்ந்து சாப்பிட்டு, வணிகருடைய புரோகிதர்களுடன்‌
கலந்து திதி நாட்களின்‌ (புண்ணியவாசனம்‌) அரிசிக்காக சண்டைபோட்டு, சூரிய சந்திர கிரகண காலங்களில்‌ தவம்‌, நீராடல்‌
முதலியவற்றின்‌ புண்ணியப்‌ பயன்‌” எல்லாம்‌ செல்வந்தர்‌ வீட்டு வாசலிலேயே தாரை வார்த்துவிட்டு, பச்சை மான்தோல்‌,
எரும, அடு, பசுச்களிள்‌ தோல்‌ செருப்புகள்‌ பெற ஊரெல்லாம்‌ திரிந்து தருப்பைப்‌ பீண்டச்‌ சோறு (8ீராத்த தினத்துண்டி)
உண்டு கிடைக்காத போது, நட்பற வாடிச்‌ சென்று தென்புலர்த்‌ கார்க்கிடும்‌ உண்டி மிச்சிலையுண்டும்‌, அதுவும்‌ கிடைக்கா
விட்டால்‌, சாப்பாட்டுக்‌ கடைக்காரர்களிடம்‌ இரந்து அரைச்‌ சாப்பாடு,சாப்பிட்டு இதற்கெல்லாம்‌’ தலையாய துலாபாரதாளம்‌
பெற்றும்‌ பொருள்‌ சேர்த்தேன்‌.
(துலாதாளம்‌ – ஈவோர்‌ தம்‌ எடையளவு/ஏதேனும்‌ பொருள்‌களை தானம்‌ செய்தல்‌) 971 ..5

இவ்விதம்‌ சேர்த்து ஒரு வைசியனுக்குத்‌ தந்து, மீண்டும்‌ வாங்கி, நான்கு மடங்காக்க, வட்டிக்‌ சுணக்குகள்‌ வைத்து
தானியங்களில்‌ முதலீடு செய்து கணக்கில்‌ சண்டையிட்டு அவன்‌“தருவேன்‌, தரமாட்டேன்‌” என்றேதும்‌ கூறாதவனாக இருப்ப,
சபைக்கு முறையிட்டுப்‌ போராடிக்‌ கொண்டிருந்தபோது (திருடன்‌) ஒருவன்‌ கவனித்து வந்தான்‌. VIT—6

புறச்சேரியில்‌ (பறைச்‌?சரி) புதிதாகத்‌ தைத்த செருப்புகளை வாங்கி, எண்ணெய்‌ தேய்த்து ஆவரம்‌ இலைகட்டும்‌ விரைவும்‌,
தாடிமீசை சிரைத்து, வென்னீர்‌ குளியற்‌ கடையில்‌ எண்ணெய்‌ தேய்த்துக்‌ குளிக்கும்‌ நிலையும்‌, சமையல்‌ செய்பவளின்‌ வீட்டுக்கு
முன்னைவிட அதிகமாக பால்‌, தயிர்‌, நெய்‌, காய்கறிகள்‌அனுப்பும்‌ முறையும்‌, அடப்பைப்‌ பெட்டி விரிதிது, வெற்றிலை
பாக்குகள்‌ நிறைக்கும்‌ ம௫ழ்வும்‌, (£டனான) பிரம்மச்சாரி தோளில்‌ சுமக்கும்‌ பையில்‌ உலையரிச, வாங்குவதும்‌, என்‌
மனைவிக்கு நல்ல சேலை வாங்கும்‌ பரபரப்பும்‌, பிற பயணிகளிடம்‌ பயணம்‌ குறித்து கேள்விகள்‌ கேட்டலும்‌ எல்லாம்‌ கண்டு
எனது பயணத்தை அறிந்தவனாக 41]….7

எநிகளோடு சேர்ந்து, ஒரு சிலரை வழிமறித்து (கொள்ளையிட) அனுப்பிவைத்து விட்டு, எல்லோரும்‌ போல
தானும்‌ ஒரு பையைதீ தூக்கிக்‌ கொண்டுவந்து, படுத்தெழுந்ததும்‌ வடக்கே வடக்கே ஒன்று கூறி திசைகாட்டி நடந்தான்‌ 41/8

எழுந்து செல்லவும்‌ விரைந்தெழுந்துகூட வந்தவர்கள்‌ நடக்கவே நானும்‌ மூட்டை முடிச்சுகளை சீடனிடம்‌ தந்து
போகவும்‌, அவன்‌ *இப்படி வருக’ என்று காட்டுப்‌ பாதை காட்டிடவே அவ்வழிச்‌ சென்று ஒரு சிற்றாற்றினைக்‌ கடக்க
இறங்குதலும்‌ (ஈளை) வி௫ல்‌ அடித்தான்‌. VII—9

உடனே, உள்ளங்கை ரேகை காணப்படும்‌ (விடியல்‌) வேளையில்‌ ஒரு அம்பு முன்‌ வந்து வீழ்ந்தது. இதற்குப்‌ பயணிகள்‌
நிற்கவே, விர்‌ விர்‌ என்று கற்கள்‌ வந்து விமுந்தன. வழியின்றி சாத்தரீகல்‌ (பயணியராகிய வணிகர்கள்‌ குழு) நிலை குலைந்தனர்‌ 11-10

பிரளய காலத்தில்‌ பெரும்‌ படயுழன்ற முக்கண்ணனின்‌ பரிவாரஙிகளாகிய பூதங்களைப்‌ போன்ற வலிமையோடு
திருடர்கள்‌ சூழ்ந்தனர்‌. உற்பாதங்களைப்‌ போன்ற அவர்கள்‌ கத்தி வீச்சுகள்‌ ஆலகால விஷத்தோடு போட்டியிட்டன. வாள்‌
வீச்சுக்களை இராகுவெனக்‌ கருதிய சூரியன்‌ பயற்து நிலை குலைந்து போனான்‌. அத்திருடர்‌ கூட்டம்‌ இராக்கதர்களைப்‌
போல விரைந்து “குத்து குத்து” என்று கூறியவாறு சொல்லும்‌ வில்லும்‌ கடுமையுறச்‌ சுற்றி வளைத்து விட்டனர்‌. 11-11

இவ்விதம்‌ காட்டு மரங்களிடையிருந்து வந்து வில்லை வளைத்துக்‌ கொண்டு சூழ்ந்த ௮க்‌ கருநிற மக்களைக்‌ கண்டு
(பயணியர்‌) அல்லகல்லோலப்பட்டுச்‌ சிதறியோடினர்‌. VIT—12

“பசை இல்லை (வலிவில்லை) நில்லுங்கள்‌ பாவிகளே?” என்று கூறி இயற்கைக்‌ கருவிகளை (வேள்விக்கருவிகளை) எடுத்‌
தெறிந்து நிற்பவர்களும்‌, தங்கம்‌ முதலிய முடிச்சுகளை மரத்தில்‌ எறிந்து செப்புச்கம்பி அடிக்குப்‌ பயந்து ஒடியவாறு 3மல்‌
துண்டை கீழே விட்டோடுபவர்களும்‌, சுமையை இறக்கிவைத்து கட்டாரியை உருவி நின்று ““இங்கெங்கே வருகிறீர்கள்‌! என்று
அதட்டி எதிர்த்து நிற்பவர்களும்‌, “ஆடையைக்‌ கொண்டு செல்க! தெய்வ (விக்கரக)த்தைத்‌ தொடாதீர்கள்‌! இது
போனால்‌ பட்டினி கிடக்க வேண்டியதுதான்‌” என்று தயை பிறக்குமாறு வேண்டிக்‌ கொள்பவர்களும்‌,
“எங்களிடம்‌ உள்ளத்தைத்‌ தந்து விடுகிறோம்‌; விலங்குகள்‌! ஆனால்‌ ஒன்று! பெண்களை மட்டும்‌ தொடாகூர்கள்‌ என்று
பெருமிதத்துடன்‌, சுயமரியாதையும்‌ துணிவும்‌ தோன்றக்‌ கூறி (திருடரீகளை) நிற்கச்‌ செய்து கொள்ளை கொழுப்போரும்‌ ஆக
அப்பயணிகள்‌ விலகிச்‌ சென்றனர்‌
(தங்கம்‌ முதலிய முடிச்சுகள்‌ மரத்தில்‌ எறிந்து திருடர்‌ கூட்டம்‌ போனபில்‌ தேடி எடுத்துக்‌ கொள்ள சிலர்‌ முனைவர்‌. 11-13

வில்லில்‌ அம்பு தொடுத்தவன்‌ சென்ற வழிப்‌ போகாமல்‌ எதிரீப்பட்டவர்களை பரபரப்புடன்‌ கத்தியாற்குத்தியும்‌ விடாக்‌
கண்டனாகிய கஞ்சன்‌ போராடவே பெரிதும்‌ துன்புறுத்தாமல்‌ குருதி ஒழுகக்‌ காயம்‌ செய்து கிடைத்த மட்டும்‌ பிடுங்கிக்‌
கொண்டும்‌ செவ்வியறிந்து (சமயமறிந்து) உருவிக்‌ கொண்டேோடு பலனைப்‌ பின்‌ தொடர்ந்து செல்லாது விட்டுத்‌ தொலைத்தும்‌,
சேமிப்பு பணம்‌, சொத்து) ஏதுமில்லாமல்‌, வாட்டசாட்டமாக இருப்பவனை சோதிக்குமாறு அப்புறம்‌ அனுப்பிவித்தும்‌, புதரில்‌
ஒளித்திருப்பவர்களை ஈட்டியால்‌ துழாவுவேன்‌ என்று பயமுறுத்தி வெளிப்படச்‌ செய்து கட்டிய துணிகளையும்‌ அவிழ்த்துக்கொண்டு
தயையுடன்‌ கோவணத்‌ (கெளபீனம்‌) திற்காக பழைய துணியை கொடுத்து விடுத்தம்‌, செருப்பு அட்டைகள்‌ கூட சோதித்தும்‌;
தலை முடிகூட ஆய்ந்தும்‌ அத்திருடரிகள்‌ கொள்ளையிட்டனர்‌.–7-14-

இவ்விதம்‌ அத்திருடர்‌ கூட்டம்‌ கிளர்ந்தெழுந்து அச்சமின்றி பல்விதமாகப்‌ பயணியர்‌ குழுவினைக்‌ கொள்ளையிட்டபோது
ஏற்பட்ட கைகலப்பில்‌, VIT—15

இடையிலிருந்து மார்பு வரை இழுத்துக்‌ கட்டிய கருநிறக்‌ கசிசு மிளிர, பூனைத்தாடி போல வடர்ந்த மீசை வயிறொட்ட
ஊசலாட, நீறுபூயே முகத்தில்‌ வடி கட்டிய மெழுகு பழஞ்சாந்துப்‌ பொட்டெனத்‌ திகழசுண்டு விரலில்‌ பொருந்திக்‌ கடந்த சுரிகை
(கத்தி)யின்‌ ஒளிவீச்சு மிகுந்திருப்ப, நின்ற ஊரிலிருந்துகண்‌ வைத்‌ துக்காத்திருந்த காகமஸ்ரு (காக்காய்‌ மீசையன்‌) என்னும்‌, ஒரு
பயங்கரமான சண்டாளத்‌ இருடன்‌, தப்பி ஓடிய என்னை தற்செயலாக எப்படியோ பார்த்து விட்டான்‌. ViI—16

கூடவந்த பிரம்மசாரி (மாணி) €டனை விட்டு விட்டு நான்‌ ஓட்டம்‌ பிடிக்கவும்‌, சுரிகையை முழங்கால்‌ சதையில்‌ பாய்ச்சவும்‌
ழே விழுந்ததும்‌, தொந்தி மேல்‌ இருந்த ஆடையை அவிழ்த்து, பொன்‌ முடிச்சிளைப்‌ பற்றிக்‌ கொண்டான்‌. நான்‌ தராமல்‌
முரண்டிப்‌ போராட இழுபறியில்‌ அரைஞான்‌ கயிற்றில்‌ பையின்‌ கயிறு இடக்க பை மட்டும்‌ அறுத்துக்‌ கொண்டு, காதிலிருந்த பாம்‌
படம்‌ அறுத்து, தலையிலணிந்த குல்லாயையும்‌ பிடுங்கிக்‌ கொண்டான்‌, 71…

என்‌ வாயில்‌ சனியிருத்ததால்‌ (சும்மா இருக்காமல்‌) **அ3ட/பாவி! பக்கத்‌ தூரில்‌ இரந்தும்‌ அயலானா$ூ மிகுந்த துன்பம்‌
செய்தாய்‌? இந்தப்‌ பணம்‌ எவ்விதத்திலும்‌ உளக்கு கிட்டாது! இர பார்த்துக்‌ கொள்கிறேன்‌’ ” என்றன்‌. VII—18

எனவும்‌ அத்திருடன்‌ “QsS மனிதன்‌ நிறையப்‌ பணம்‌ கொள்ளை கொடுத்ததால்‌ கிராமத்‌ தலைவனையும்‌ அரசனையும்‌
கண்டு (பிடித்துக்‌ கொடுத்து) விடுவான்‌! * என்று அஞ்சியவனாக குறையுயிரையும்‌ போக்க “எண்ணி, மீண்டும்‌ வர, மேல்‌ வரும்‌
மக்களும்‌, திருடர்‌ குழுவும்‌ ,காண்பரென்று அஞ்சியவாறு ஓடும்‌ வேகத்தில்‌ என்னைத்‌ தாறுமாறாகக்‌ குத்தி விட்டுச்‌ சென்றான்‌.

அப்போது, அருகே பெருவழியில்‌ வற்து கொண்டிருந்த மக்களில்‌ என்‌ மனைவியின்‌ சகோதரன்‌ (மைத்துனன்‌) கூடவந்து பயணியர்‌ கொள்ளையடிக்கப்பட்ட செய்தியறிந்து, என்னைத்‌ -தேடி வந்து என்னைக்‌ கண்டு, தான்‌ ஒருவனே மிகவும்‌ நலிந்து டந்த என்னைக்‌ காலடியில்‌ வைத்துச்‌ சுமந்து கொண்டு, என்னை வைது கொண்டே சென்றான்‌. VII—20

கொக்குவால்‌ கத்தியால்‌ வெட்டப்பட்ட காயத்தை விரலால்‌ மேல்‌ சதையை மூடிப்‌ பிடித்து தையல்‌ போட மருத்துவரைத்‌ தேடுபவர்களும்‌, மண்டையில்‌ சிறிய காயத்தில்‌ பழந்துணி எரித்த மையைத்‌ திணித்துக்‌ கொண்டு வீடுகட்குச்‌ சென்று கஞ்ச, கூழ்‌ கேட்டுத்‌ திரிபவர்களும்‌,
தாம்பட்ட பாட்டினைச்‌ சொல்லவும்‌ இரங்கிய உள்ளமுடை யோரால்‌ இகழித்துத்‌ தந்த உடையணிந்து ஈவாரை வாழ்த்து
வாரும்‌ கொள்ளை போன சாக்கில்‌ இருந்தத.ம்‌ இல்லாததுமான செல்வத்தைப்‌ பறிகொடுத்‌ தாகச்‌ சொல்லி உறவினர்‌ வீடு
கட்குப்‌ படை எடுப்போரும்‌, ஆகிய பயணிகள்‌ கூட்டம்‌ நிறைந்த
வர்களின்‌ வழியே என்னை என்‌ மைத்துனன்‌ கொண்டு வந்து இத்த மர நிழலில்‌ இறக்கி வைத்துவிட்டு இவ்வாற்றில்‌ தண்ணீர்‌
குடிக்கச்‌ செல்லவும்‌ நோவின்‌ மிகுதியால்‌ என்‌ மூச்சும்‌ நின்று விடவே, அவன்‌ திரும்பி வருவதற்குள்‌ நான்‌ இந்த(பிரம்ம
ராட்சச) உருவினை அடைந்தேன்‌. 41-21

சண்டையில்‌ ஓடோடி. வந்து என்‌ காயத்தை (உடலை) காயப்‌ (புண்‌) படுத்தி அச்சுறுத்திய அந்த “காக்கை மீசையன்‌*
எனும்‌ சண்டாளனின்‌ பயங்கரத்‌ தோற்றம்‌ கண்ணில்‌ கட்டி விட்டாற்‌ போல இருந்ததால்‌, நான்‌ இறக்கும்‌ தறுவாயில்‌ அவ்‌
வுருவைக்‌ கண்டதால்‌ எனக்கு இந்த பயங்கரமான அவ்வுருவமே வாய்த்தது. *கைசிக கானம்‌ பாடிய பயன்‌ தந்து இந்த உருவை
நீக்குவாயாக” £” என்று வேண்டவும்‌, அவன்‌ (தாசரி) நான்‌ பயன்‌ அறியேன்‌! திருமாலின்‌ திருமுகவிலாசமே பயன்‌ ஆகும்‌,
கட்டளைக்கும்‌ தொண்டுக்கும்‌ பய குறித்து எண்ணுவது பக்தர்‌
களாகிய (பிரபன்னர்கட்கு) எமக்கு உண்டோ? செய்வினைப்‌ பம்‌ பிறவிக்கு வித்தாகும்‌, ஆதலில்‌ அதனைத்‌ தர அஞ்சு
கேன்‌ பகவானே காப்பாற்றுவான்‌! ஆறுதல்‌ அடைக” என்று கூறிய வாய்ச்‌ சொல்‌ வாயிலிருக்கும்‌ போதே அந்த பிரம்ம ராட்சசன்‌ VUI—22

தியஜ்யன்தே களேபரம்‌ தம்தம்‌ மேவைதி கெளன்தேய, சதா தத்பாவ பாவித’ * எனும்‌ தை (18-6) கூற்றுப்படி இறக்கும்‌ போது எதை
நினைப்பாரோ அவ்வுருவடைவரீ என்பது நமது மரபி. சண்டாளனை நினைத்தவாறு இறந்ததால்‌ சோம சர்மன்‌
சண்டாள பிரம்ம ராட்சசனாளனான்‌ என்பது குறிப்பு)

நுண்ணீயதாகத்‌ தலையில்‌ மூன்று பாகம்‌ மழித்து ஒருபாகம்‌ குடுமியுடன்‌ கூடியவனாகவும்‌, பனிபோல்‌ Danes ட்டம்‌ நூல்‌
(பூணூல்‌) அணிந்தும்‌, புனிதப்‌ பன்னிரு நாமங்கள்‌ ஆகிய கொடிகளுடன்‌ துளசி, தாமரைக்‌ கொட்டை மாலைகள்‌ அணிந்தும்‌,
கெளபீனம்‌, அரைஞாண்‌, காவியுடைகளுடனும்‌ நீர்‌ நிறைந்த கமண்டலத்துடனும்‌ கையில்‌ திவ்வியப்‌ பிரபந்நச்‌ சுவடி.
யூடனும்‌ துவய அனுசந்தானத்துடன்‌ கூடிய பிரம்மதேஜசடனும்‌, பாகவதத்‌ திருவுடையவளனாக புகைமண்டலத்திலிருந்தெழும்‌
தீக்கொழுற்து (சுவாலை) போல அந்த (ராட்சச) மேனியை நீக்கி, பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ போதே வைணவனாக
அச்சோமசரீமா நின்றான்‌. (இராட்சச சரீரம்‌ புகைக்கும்‌, புதியவைணவ சரீரம்‌ இச்சுடருக்கும்‌ உவமை, நெற்றி கேசவன்‌, வயிறு நாராயணன்‌,
நெஞ்சு மாதவன்‌, கழுத்துக்குமி கோவிந்தன்‌. வயிற்றின்‌ வலப்புறம்‌ விஷ்ணு, தோள்‌ நடுவே மதுசூதனன்‌, கழுத்தின்‌
மேல்‌ திரிவிச்சரமன்‌, வயிற்றின்‌ இடப்புறம்‌ வாமனன்‌, இடத்தோள்‌ ஸ்ரீதரன்‌, கழுத்தின்‌ புறம்‌ ஹ்ருஷிகேசம்‌ பத்ம
நாபம்‌, தாமோதரம்‌”* என்ற நாமமுடைய திருமாலினை உருவ௫ூத்து பன்னிரு நாமங்கள்‌ (துவாதச புண்ட்ரம்‌) போடுவது
வைணவ மரபு ஆகும்‌.) 41-23

இவ்விதம்‌ பாகவதரின்‌ பரிசய (அறிமுக)த்தின்‌ பெருமையால்‌ அந்தணனாதல்‌ மட்டுமன்றி பாகவதத்‌ திருவினையும்‌ அடைந்து,
உப்பு சிந்தி இருமடங்கு ஆவது போல மிக்க மகிழ்ச்சியுற்று, தன்‌ உருவுக்கேற்ப மரபுப்‌ படி அந்த தாசரிக்கு வணக்கம்‌
செலுத்தினான்‌. (உப்பு மண்ணில்‌ சிந்தினால்‌ அம்மண்ணும்‌ உப்பாவது போல என்ற உவமை கூறப்பட்டது.) 11-04

கடத்தற்கரிய பிறவியாகிய தாமரையிலையில்‌ தண்ணீராகத்‌ திகழ்பவனே வெல்க/
இசைச்‌ சக்கரவர்த்தியே வெல்க! திருமால்‌ கதைகளின்‌ சுவை யுணர்ந்த நாவினையுடையவனே வெல்க!
தத்தவ ஐயங்களைக்‌ களைந்தெரியும்‌ பண்ணரிவாள்‌ போன்றவனே வெல்க/ வெல்க/
தன்பெருமையை வெளிக்காட்டாமல்‌ மறைக்கும்‌ சான்றோய்‌ வெல்க
ஆசாரியரின்‌ திருவடிகளே சரணாகக்‌ கொண்ட அண்ணலே
வெல்க! சொன்ன சொல்‌ திலைநிறுத்த உடலைத்‌ துரும்பென மதித்த
தூயனே வெல்க/ இறைவன்‌ கட்டளையை மேற்கொண்டொழுகும்‌ இனியனே வெல்க/
எல்லா உயிர்களையும்‌ சமமெனப்‌ பாவித்து அருள்‌ உள்ளம்‌ கொண்ட அறவோனே வெல்க!
பிறதெய்வங்களைப்‌ பெரிதெனக்‌ கருதும்‌ சாத்திரங்களைக்‌ . கேளாத சாந்தனே வெல்க]
எட்டுவித பக்தி லட்சணங்களையுணர்ந்து திருமாலடி.யார்‌
தம்‌ இருவடித்‌ தாமரைகட்கு தும்பியாசிய தொண்டர்க்கடியனே வெல்க/ VIT—25

என்றிவ்விதம்‌ பாராட்டி, வலம்‌ வற்து, மறு பிறவி வாரா திருக்கும்‌ வழிதேடி, மனை, மனைவி, முதலிய சுகநிகளில்‌ பற்றின்றி, பதரிகாரன்யம்‌ முதலாய திருமாலின்‌ திவ்விய தே௪ங்‌ கட்கு அடிக்கடி தீர்த்தயாத்திரை செய்து, . பரமபதமான மோட்சத்தை அடைந்தான்‌.
இப்புண்ணிய சரிதத்தை, வராக அவதாரமெடுத்த காலத்தில்‌ பூமிதேவி (நிலமகள்‌) :*எனக்குச்‌ செய்யும்‌ கைங்‌ கரியங்களில்‌ பாடுவதே சிறந்த பயன்‌ தரும்‌** என அறிந்து கொண்டவளாய்‌ அவளே பாடுவதில்‌ விருப்புற்று உன்‌ மகளாகப்‌ பிறந்து, இனந்தோறும்‌ பிரிவு எனும்‌ பரிவு காட்டி எனது கதை களைப்‌ பொருளாழம்‌ மிக்க பாசுரங்களால்‌ பாடி.ப்பர வி பொழுது போக்குகிறாள்‌ அன்றி வேறொன்றுமில்லை/
என்ன தவம்‌ செய்கிறாள்‌ என்று கேட்டாய்‌! இதைவீடப்‌ பெரிய தவம்‌ வேறு என்ன இருக்கிறது. எல்லாம்‌ நலமாக
முடிவுறும்‌! திருவரங்கத்திற்கு அரங்களனைச்‌ சேவிக்க அவளையும்‌ அமைத்துக்‌ கொண்டு செல்க/ என்று (திருமால்‌) கூறவும்‌ (பெரியாழ்வார்‌) பிரசாதம்‌ (அருள்‌) என்று வணங்கி தங்கப்‌ பல்லக்கில்‌ கோதையை இருத்தி பரிசாரிகர்களும்‌ பாகவதர்களும்‌ சூட வர மகிழ்வுடன்‌ பயணம்‌ புறப்பட்டார்‌, 11-26

கோதை திருவரங்கம்‌ பெருமானை வணங்குதல்‌

சென்று, விரஜாநதி என்னும்‌ (காவேரி) பெயருடைய சஹ்ய (குடகு) மலையிலிருந்து பிறந்த நதிக்கரையின்‌ நந்தவன மரக்‌
கூட்டங்களின்‌ இலைச்‌ சந்துகளுடாகக்‌ காணப்படும்‌ ஏழு பொற்‌ பிராகாரங்களின்‌ கலசங்களாகிய சுடர்‌ விளச்குகள்‌ சம்பகப்‌
பூக்கள்‌ ஆக, பாவரிகளாகிய வண்டுகள்‌ விலகும்‌ திருவரங்கத்தைக்‌ கண்டான்‌.
(௪ம்பகப்‌ பூக்கள்‌ கண்டால்‌ வண்டுகள்‌ அகல்வது போல இப்பிராகாரங்களைக்‌ கண்டால்‌ பாவம்‌ அசலும்‌ என்பது குறிப்ப
சோழநாட்டு நங்கையரின்‌, செஙிகழுறீர்ப்பூச்‌ செரு$£ய கூந்தலில்‌ மொய்க்கும்‌ யாழிசை முரலும்‌ வண்டுகளின்‌ ஓசையும்‌,
கவேரன்‌ மகள்‌ (காவேரி) உடைய அன்னங்களின்‌ மென்‌ குரலும்‌ சுமந்து வரும்‌ இளங்காற்று , விரதியாகிய விட்டு சித்தனின்‌
களைப்பிளைப்‌ போக்கியது. 1.26

அவன்‌ (பெரியாழ்வார்‌) பாவங்களைப்‌ போக்கும்‌ காவிரிப்‌ புனித நீரில்‌ நீராடி, நண்பகல்‌ நோன்புகள்‌ முடித்து, புளலாடிப்‌, பொலங்கலன்‌ அணிந்த மகளை அழைத்துக்‌ கொண்டு, வைணவர்கள்‌ குழாம்‌ புடைசூழச்‌ சென்று 4//–69
பாதச்‌ சலங்கை ஒலி கேட்டதுமே, களிறுகட்கொதுங்குவது போன்றே காரிகையருக்கும்‌ ஒதுங்கி, (பிச்சையாக) தமக்கிட்ட சைப்பிடி. மாணிக்கங்களை, இல்லறத்தானின்‌ ஆரத்தியிலுள்ள இர.த்தினங்களோடு கலக்குமாறு வாயிலிலே சொரிந்து விட்டு,
(அரிசியன்றி மணிகளை ஏற்றுக்‌ கொள்ளார்‌ என்பது கருத்து)
மலர்‌ முதலியவற்றின்‌ மணத்தையும்‌, ஒவ்வொரு மனையிலும்‌ கோயிற்‌ படையலுக்கான உண்டிகளிள்‌ மணம்‌ போலவே
முகராதவாறு மூச்சடைத்துக்‌ கொண்டும்‌
(கோயில்‌ பிரசாதமான படையல்‌ இருமால்‌ நுகராத முன்பு தாம்‌ நுகர்தல்‌ கூடாதெனமூச்சடிக்கிச்‌ செல்வர்‌ என்பது கரத்து.)
நடனம்‌, பாட்டு முதலிய திருமால்‌ துதிகளை, கிளி, பூவைகள்‌ கூறுவதைக்‌ கேட்பது போல அரை மனதோடு கேட்டும்‌,
(நடனம்‌, கதம்‌ விரும்பாரேனும்‌ திருமால்‌ துதிகள்‌ ஆதலின்‌ கிளியின்‌ பேச்சுப்‌ போல அசைமனத்துடன்‌ கேட்டனர்‌)
மாளிகை மேற்‌ கூரையிலுள்ள மணிகளின்‌ வண்ணங்கள்‌ தம்‌ வெண்துகிலில்‌ பிரதிபலித்து பன்னிறம்‌ காட்ட அதனை
வெறுத்து விரைந்து அரிசி சேட்கும்‌ இல்லங்களை அடையும்‌ பற்றற்ற பாகவதர்கள்‌ திரிவதால்‌ வெள்ளைத்‌ தீவினை ஓத்த
அந்த திருவரங்கத்தை அடைந்தார்‌.
(பெண்கட்கொதுங்கும்‌ பற்றற்ற பாகவதர்கள்‌ வெண்‌ டுகலால்‌ வெண்மையுற்ற திருவரங்கம்‌ வெள்ளைத்‌ தவெனப்‌
பொலியும்‌ என்பது கருத்து)  VII—30

கோபுரக்‌ குகைகள்‌ வரையுலவும்‌, சந்திரபுட்கரணி (தெப்பம்‌) நீர்த்துளிகளை அளைந்து, பனித்த, வெம்மை நீக்கும்‌ இளங்‌
காற்று, மேல்‌ கட்டிலுள்ள மணிச்‌ சலங்கைகளையசைவித்து மெல்லோசையாகய, உரையாடலில்‌ நலம்‌ விசாரிக்கவும்‌ ஆறு
பிரகாரங்களைக்‌ கடந்து சென்று, (ஏழாம்‌ பிரகாரத்தில்‌) அப்போது விரைவுற்ற தேவர்களை சண்டன்‌ எனும்‌ துவார பாலகன்‌ (வாயிற்‌ காப்போன்‌] செவ்வியன்றென அதட்டும்‌ உள்‌ வாசலில்‌ VII—31

பிரம்பைக்‌ கையில்‌ பிடித்து, மணியரங்கில்‌, சித்திரக்‌ கம்பள விரிப்பின்‌ மேல்‌, வெண்டாமரைக்‌ கண்ணன்‌ உருவம்‌ பொறித்த
மோதிரமணிந்த விரல்‌ மிளிர, இரு புறமும்‌ சிறிதே வணகிகயெ வாறசையாதுள்ள யாளை முகத்தினர்‌ நாரற்றவர்‌ பணிந்து நிற்ப,
அமர்நீதுள்ள விஷவச்சேனர்‌ (சேனை முதலியார்‌) தமைக்‌ கண்டு (பெரியாழ்வார்‌) வணங்கவும்‌, அவரும்‌ பக்தியுடன்‌ அன்பு
செய்தார்‌. ்‌ VIJ—32

இந்திரனின்‌ இடியேற்றினையறியாத பொன்மலை (மேரு போன்ற இறகுகளின்‌ ஒளிவீச்சு வானமும்‌ நாற்றிசையும்‌ பரவிதீ
இகழ்ந்து இளவெயில்‌ காயும்படி நின்ற வேதசொருபனாகய கருடனை வணகிகிகி காணவும்‌ (கருடனும்‌) மீண்டும்‌ (தன்னை)
வணங்கக்‌ சண்டாளன்‌. VN—33

பின்னர்‌ அக்கருடனிடம்‌ விண்ணப்பம்‌ செய்து அனுமதி பெற்று, நான்கு தோளுடையவர்களும்‌, முகல்‌ வண்ணத்தினரும்‌,
தாமரைக்‌ சுண்ணரும்‌, மின்பசுந்துகிலுடுத்தியவரும்‌, தளிமாலையணிந்த மார்பினரும்‌, தஇிருமாலின்‌ பிரதி பிம்பமாகக்‌
காணப்‌ படுபவருமான அருகணைந்துள்ள நம்மாழ்வார்‌ முதலிய மூக்தார்களைச்‌ சேவித்து, அவர்களால்‌ ஆதரிக்கப்‌ பெற்றவராய்சி சென்று; மிகப்‌ பரந்த மணிமிடைந்த தரண்களும்‌, பொற்கலசங்‌ களும்‌, அணி செய்யப்‌ பெற்று, சித்திர விதானத்தில்‌ தொங்கும்‌
பல்வகைப்‌ பூச்சரங்களும்‌ முத்துக்‌ கோவைகளும்‌; வெண்‌ ‘ சாமரைகளும்‌, அகழ்‌ புகையும்‌ மண்டிய கருவறை நடுவே, சந்திர
காநீதமேடையில்‌ கால்‌ முதலாகுஅவ்வவ்வவயவங்கள்‌ பொருந்திய தருமன்‌ முதலான நித்திய சூரிகள்‌ அமர்ந்த மன்றம்‌ அமைந்ததும்‌
அமர்ந்த மன்றம்‌ அமைந்ததும்‌, ஒனி௰௦௰யமான, வீரிந்த, கரய, ஆசனத்தில்‌, மணம்‌ நாடிய வண்டுகளின்‌ கூட்டம்‌ மொய்க்கும்‌
தாமரையின்‌ பொன்னிறத்துக்கு கடன்‌ வழங்கும்‌ தன்மைத்தாய்‌, அகன்ற பொகுட்டென அமைந்த மேடையின்‌ கண்‌, பாழ்‌
கடலுக்கு மூல காரணமான பூத தன்மாத்திரை போல, பாத
ரசமும்‌, பளிங்கும்‌, சந்தனமும்‌, நிலவும்‌, வெண்டாமரையும்‌, மாசுறும்படியான தன்‌ மேன்மையான ஒளிமிக்க ஆ௫ுசேடனின்‌
உடலில்‌ தலையணையம்‌ிீது, கேழூர (தோள்வளை)யின்‌ மணி ஒளி படிந்த முழங்கையை ஊன்றி, முனிவர்களின்‌ மனத்துட்‌ பொங்‌
கும்‌ பக்திர௪சம்‌ கழுவியதால்‌ மிகுந்த செம்மையுற்றதோ எனுமாறமைந்த செங்கை, கன்னதில்‌ ஊன்றியவாறு, கற்பகமரத்தின்‌
பூக்களால்‌ மூடப்பட்ட. அதிசேடனின்‌ சட்டையே படுக்கை விரிப்‌பாகக்‌ கொண்டு, ஒரு சாய்த்துப்‌ படுத்துசி உடக்ின்றவனும்‌,
களிற்றினைத்‌ துன்புறுத்திக்‌ கடினமான தன்‌ கைச்‌ சக்கரத்தால்‌ கண்டிக்கப்பட்ட மகரம்‌ (முதலை) வணங்கத்‌ தகுந்த சாயுச்சியம்‌
(தன்னோடிணைதல்‌) பெற்றதோ எனப்படுமாறு, கன்னத்தின்‌ மேற்‌ காணப்படும்‌ மணிகுயின்ற மகர குண்டலங்களின்‌ பிரதி
பலிக்கும்‌ ஒளிவீச்சின்‌ எழில்‌ மிக்க மகரந்தம்‌ ஒழுகும்‌ முகத்‌ தாமரையுடனும்‌, எழில்‌ பெற்றவனும்‌,
இமையாத பாரிவையால்‌ முயன்றது நோக்கும்போது
மிக்கெதுர்ப்படும்‌ வெள்ளியெனப்‌ பொலியும்‌ வெண்ணிற ஒளி வெள்ளத்தில்‌ மூழ்கிக்‌ கண்‌ கசசி செய்யும்‌ பேரொளிப்‌ பிழம்‌
பாகிய தனது மங்கள உருவினை, தனது உருவு, அருவும்‌ ஆய மூர்த்தியாகக்‌ காட்டுமாப்போலே ஒளிர்பவனும்‌, தனதிரு சண்‌
களாகிய சூரிய சந்திரர்கள்‌ தத்தம்‌ மளைவியராகிய இருளும்‌
நிழலும்‌ தம்முடன்‌ கலந்திருத்தல்‌ போலம்‌ காட்டும்‌ கருவிழியும்‌ வெணவிழியும்‌ செவ்வரிபடாந்த கண்ணிலமைகளும்‌ கூடி செந்தா
மரை இதழ்கள்‌ பரப்‌ 4னாற்‌ போலக்‌ காணப்படுகின்ற நோக்‌ கெழில்‌ உடையவனும்‌) பந்தரக மலரை வென்ற இதழ்களின்‌
செம்மை எனும்‌ சாக்கிட்டுப்‌ பிறந்த அக்கினியும்‌, அவன்‌துணைவனான வரயுவை இணைவீத்தாகத்‌ தோன்றும்‌ எள்பூப்‌
போன்ற எழில்‌ நாசி, திகழ்பவனும்‌, வயிற்றில்‌ பிறந்த வெண்மை யான ஓளிமிக்க தாமரையைக்‌ கண்டு, சற்திரன்‌ என ஐயுற்று,

பெரிய இடத்சைச்‌ சார்ந்துள்ளதால்‌ அவன்‌ (சந்திரன்‌) உடன்‌ பிறநிதவளான திருமகளிடம்‌ இராகு தன்‌ பகையை நீக்குமாறு : பொன்‌ வலயமாகிய லஞ்சம்‌ கொடுத்து இறைஞ்சுவது போல இருமாலின்‌ பாதங்களை ஒற்றும்‌ கேயூரமும்‌ (தோள்வளை)
வளையலும்‌ அணிந்த திருமகளின்‌ தோள்கள்‌ தன்‌ தொடைகளில்‌ மிளிரும்படியாக அமைந்தவனும்‌, மார்பிடத்தில்‌ வைத்த
இணையற்ற கெளஸ்துப மணியின்‌ ஒளிச்சுடர்‌ பட்டு தாமரை
யாள்‌ மேனி எழிலோ எனத்‌ ததந்த தூயதாய திருமறுவும்‌, (ஸ்ரீவத்சம்‌). கொண்டு கண்‌ விருந்தளிப்பவனும்‌ கஸ்தூரி மானின்‌
உந்தி மணம்‌ நாடி வந்த வண்டுகள்‌ கூட்டமோ எனுமாறு திகழும்‌ கரும்பசுந்துமாய்‌ மாலை (வனமாலிகை) அணிந்து எழில்‌ பெற்றவனும்‌,
மாயச்சிங்கமாகி, கனகளைக்‌ களன்றுயிர்‌ கவர்ந்த பின்னர்‌ மீண்டும்‌ மானுட உருத்‌ தாங்கும்போது, மறந்துபோய்‌ இடை
மட்டும்‌ அப்படியே இருக்கும்படி விட்டுவிட்டது போல நுண்ணிடை கொண்டெழில்‌ மிக்கவனும்‌ கடிதடத்தில்‌ உதய
இரியில்‌ உதித்தெழும்‌ இளஞாயிற்றின்‌ பொன்வெயில்‌ பொலிவு தோன்றும்‌ அரையின்‌ மென்மையால்‌ வெளித்தோன்றும்‌ தொடை
களின்‌ நுண்மை வெளிய காணப்பட்ட தங்கம்‌. புட்பராகம்‌. வைடூரியம்‌ குயின்ற தூண்‌ இணைகள்‌ போலச்சிறிது கருவண்ணங்‌
காட்டிய தொடையிணைகளையுடையவனும்‌, திரிவிக்கரம னாூய உருவங்கொண்டபோது, சினந்து வானுற வளர்த்‌ தபோது
உடன்‌ பரப்பினது விரைவால்‌ சுற்றிவந்த மணிமயமான சுவர்க்க லோகத்தின்‌ பொற்பிராகார வளையமோ என மிளிரும்‌ கழல்‌
சூடியதால்‌ பிறந்த ஒளி மிக்குடையதாஇியும்‌, ஆலம்பழத்தின்‌எழிற்கோலங்கொண்ட கணைக்காலும்‌, எதிர்காலத்தில்‌தான்‌
எடுக்கும்‌ கூர்மாவதாரத்திற்கு (ஆமைப்பிறப்பு) முன்னோடியாகஅமைந்ததோ எனத்‌ தகைய இளம்‌ ஆமையின்‌ வளமார்ந்த
எழிலை நகும்‌ முழங்காலுடனும்‌ செங்கழுமீர்போவ்ற மென்மை யுடன்‌ உள்ளங்கால்‌ அமைய, மின்னும்‌ விண்மீன்களின்‌ ஒளியை
வென்ற நகங்களின்‌ நிலவினால்‌, அன்பர்களின்‌ இதயத்‌- இருட்டினை நீக்கிெயவாறும்‌. ஏர்‌ வச்சிராயுதம்‌ முதலிய ரேகை
களையுடையதும்‌, திருமகளின்‌ முலைக்‌ குவட்டிலெழுதிய குங்குமத்‌ தொய்யில்‌ படிந்து சிவந்ததுமான திருவடிகளால்‌,
மூவகை (அத்யாத்மிகம்‌, ஆதி தைவிகம்‌, ஆதி பெளதிகம்‌)த்‌துயரீகளைக்‌ கெடுத்து அருள்‌ செய்பவனாயும்‌ உள்ள, ஸ்ரீமத்‌
நாராயணன்‌, புராண புருஷன்‌, புருடோத்த மன்‌, பிரணுதார்த்திகரன்‌ (சரணடைந்தார்‌ துன்பம்‌ நீக்குவோன்‌) வாசுதேவன்‌,
இருடீகேசன்‌, ஈசனால்‌ வணங்கப்படுவோன்‌, வீடணனுக்குநாடளித்துக்‌ காத்தவன்‌, மன்மதனின்‌ தந்‌ைத, திருவரங்கத்துறை
பவன்‌ என்னும்‌ இத்தகைய பெயர்களைப்‌ பூண்ட திருமாலைக்‌கண்டு, தன்னுடன்‌ வந்த பாகவதர்சளுடனும்‌ தானும்‌, தன்‌
மகள்‌ (சூடிக்கொடுத்த சுடரீக்சொடி) தானும்‌, பயபக்தியுடன்‌பணிந்திறைஞ்சி, ஐய ஐய கோஷமிட்டு, சாட்டாங்கமாக வீழ்ந்து
வணங்கி, நின்று தலை மேற்கைகூப்பியவாறு இவ்விதம்‌துதித்தார்‌। 411-034

பிரம்மதேவனின்‌ அழிவற்ற செல்வப்‌ புதையலானவனே சரணம்‌! இட்சுவாகு குலப்‌ புண்ணிய ராசியானவனளே[ சரணம்‌.
குபேரனின்‌ உடன்‌ பிறந்தவனுடைய (விபீஷணன்‌) குலதேவ தையே! போற்றி. வணங்கப்‌ பெற்ற சிவன்‌ முதலாய தேவர்‌
களையுடையவனே[ வணக்கம்‌, : VII—35

சர்வேசனும்‌, எல்லாம்‌ தானேயான எம்பெருமானும்‌ எல்லையற்றவனும்‌, காணற்கியலாதவனும்‌ எல்லா உலற்கும்‌ ஆதார
மானவனும்‌, அணுவுக்கும்‌ அணுவாயமைந்தவனும்‌, ஆதாரமற்றவனுமாகிய நித்திய சத்தியப்‌ பொருளாகிய உன்னை வணங்கு
ஹேன்‌,. VII-—35

நாராயணன்‌, பூமி முதலான பெரும்‌ பொருள்களைவிட விஞ்சிய பெருமையுடையவனை பரமபுருடன்‌, ஆ௫ய உன்னைப்‌
புகழ்ந்து விழைந்து சரணுறுகன்றேன்‌. 11-37

பிரம்மன்‌, வன்‌ முதலாக 740 உலகும்‌ படைதீதுப்‌ பாது காத்து அழிக்கும்‌ முத்தொழிற்‌ பெருமைக்குறைவிடமான
நித்தியனும்‌, எல்லாப்‌ பூதங்களிலும்‌ இருப்பவனும்‌ அப்பாலுக்‌ கப்பாலமைந்த பெரியவனாகிய தின்னை வணங்குகின்றேன் —VII—38

(தேஹேற்திரியங்களுக்கப்பாற்பட்ட) பரபுருஷன்‌ (ஜீவன்‌) தனக்கும்‌ மேலானதத்துவம்‌ (ஈஸ்வரன்‌) ஆனவனும்‌, பரமான்மா வானவனும்‌, வீடு பேற்றுக்காக எப்போதும்‌ யோடயர்களால்‌ போற்றப்படுபவனும்‌; எவனிடம்‌, (சத்துவம்‌, ராஜசம்‌, தமஸ்‌) முக்குணங்களாகிய பிரகிருதி தத்துவங்களின்‌ தொழிற்பாடுகள்‌
அடங்கிக்‌ கடச்குமோ அந்த நிர்மலனை எல்லா பூதங்கட்கும்‌ முற்பட்டவளை, தூயவனான மாயவனை, எங்கும்‌ பரந்துள்ள இறைவனை, கலை, நிமிடம்‌ மதலிய காலக்‌ சணிதங்களை இயக்குபவனை, மறைந்துறையும்‌ இறைமைத்‌ தத்துவத்தை, எல்லாம்‌ க௨ற்த கடவுளாயினும்‌ பெயருக்குப்‌ பரமேசுவரன்‌ எனப்‌ பெயரிட்டழைக்கப்படும்‌ விஷ்ணுவாகிய உன்னை நிளைந்து போற்றுகிறேன்‌. VIT—-39

என்றிவ்வாறு, பரம்பொருளாகிய சொரூபத்தினையும்‌ தேவர்கள்‌ வணங்கும்‌ திவ்விய அவதார லிலைகளைப்‌ புகழ்ந்தும்‌ போற்றியிசைப்ப, கெளஸ்துப மணி அணிந்த திருமால்‌, கருணை
யொழுகுங்‌ கடைக்‌ கண்களால்‌ அப்பெரியாழ்வாரைக்‌ கண்டு, நலம்நாடி உசாவியபின்‌, வளையணிகள்‌ மெல்ல ஒலிப்ப திருவடித்‌ தாாமரைகட்கு மலர்‌ சொரிந்து இறைஞ்சி நிற்கும்‌ பெண்டிர்கட்‌. கெல்லாம்‌ பெரும்‌ பேரணியாஃப்‌ பெரும்‌ பேறுற்ற பேதையாம்‌
கோதையாகியசூடிக்கொடுத்த ஈடர்சிகொடியின்‌ எழிலும்‌ இளமை நலனும்‌ உட்குறிபோடுணரிந்து கண்டு தன்‌ மனத்துள்‌ ViIT—40

இவளது பார்வை, எதிர்ப்பட்டதாலன்றோ திருமகள்‌ மைந்தன்‌ (மன்மதன்‌) தனக்குப்போரின்வெற்றிக்கொடிபெற்றிலங்‌ கினான்‌.
(இவள்‌ மீன்‌ விழியாள்‌ என்றும்‌ மன்மதன்‌ Sows Oars, யோன்‌ என்றும்‌ கருத்து) .
இவளது இடை, (கொடிபோல) அசைந்தாடுவதாலன்றோ
வசந்தன்‌ காலூன்ற முடிந்தது. . ; (இவள்‌ இடை கொடி போன்றது. கொடிகளால்‌ வசந்த சாலம்‌ நிலை பெறுகிறது என்பது கருத்து)
இவளது மென்‌ முலைகள்‌ வளர்ந்ததாலன்றோ இரதி தேவி யின்‌, கின்னரி (சிறுவீணை)யின்‌ நாதத்திற்கு எழில்மிக்கது.
(இவள்‌ முலை கின்னரி (சுரைக்காய்‌) போன்றது என்பது கருத்து) – இவளது முகம்‌ ஓளிர்வதாலன்றோ கலை மகளின்‌
(வாகனமாகிய) அன்னப்‌ பேடுவிற்கு கூடு (இல்லம்‌) கிடைத்தது.
(அன்னம்‌ உறையும்‌ இல்லம்‌ தாமரை. இவள்‌ முகம்‌ தாமரை என்பது கருத்து) . ற்‌ .. இவள்‌ egdangse watgier QaCor வளர்ப்பு
மயிலுக்கு மயக்கம்‌ கிட்டியது. . . த (குருஙிகூற்தல்‌ முகில்‌ ற அதுல்‌ மயில்‌ மகிழ்ந்து மயக்கமுற்‌ என்பது கருத்து து
பகத அள கப்‌ எழில்‌ மிச்கராலன்றோ தேனீச்கட்குதாகம்‌ இரிந்திட மேட்டு நில விளைச்சல்‌ கிடைத்தது. _
(பாதங்கள்‌ தாமரைகள்‌, ஆதலின்‌. தேனிக்கள்‌ தாரம்‌ அலையாமல்‌ அருகிலேயே விளைச்சல்‌ பெற்றன என்பதுகருத்து) 11-41

என்ற ஆர்வத்துடன்‌ திருமால்‌ காமம்‌ கைமிகத்தான்‌ அந்தப்‌புரத்தில்‌ அற்நங்சையைச்‌ சேர்த்து, ஒரு பொய்யான
(மாயநநிகை) நங்கையை (கோதையைப்‌ போன்றே)ச்‌ செய்து, அவர்கள்‌ இருப்பதாகவே கருதச்‌ செய்திருப்ப, VIT—42

அரிச்சசர்சளால்‌ ஸ்ரீபாத தீர்த்தப்‌ பிரசாத பரிவட்டகிகளைதிதரச்‌ செய்து தம்‌ விடுதிக்கு அனுப்பி வைக்கவும்‌, கோயிலிலிருந்து
புறப்பட்டு மாயநங்கையைப்‌ பல்லக்கில்‌ வைத்து இல்லம்‌ போந்து பல்லக்குத்‌ இரை விலக்கப்‌ பார்க்க அங்கற்‌ நநிகையைக்‌ காணாது 37.43

ஒ. கொடுமை! திருவரங்கத்தான்‌ அனியாயமாக என்‌ மகளைக்‌ கைப்படுத்தக்‌ கொண்டான்‌! அவையோர்‌ இந்த
மெலிந்த அந்தணனைப்‌ பாரீரே!’ £ என்று துயர்க்கடலில்‌ வீழ்ந்து கண்ணீர்‌ மிகத்‌ தழுதழுத்த குரலில்‌ முறையிட்டு தோளுயர்த்திய
வாரது கூறினான்‌. VII—44

மிகுந்த காதல்‌ உடையவனானால்‌, திருமணம்‌ செய்து கொடுக்க மாட்டேனா? உடல்‌ பொருள்‌ ஆவி, வீடு, சுற்றம்‌,
செல்வம்‌, பயிர்‌ எல்லாம்‌ நான்‌ சம்பாதித்ததா? எல்லாம்‌ அவனது பக்தர்கட்கு சமர்ப்பணம்‌ செய்வதற்குத்தானே! அந்தோ?
விந்தை என்னே! இச்சிறுமி பெரிதா? (கேட்டால்‌ தர மாட்டேனா) என்னைச்‌ ூறுமைப்‌ படுத்தினால்‌ தன்னை மெச்சுவார்களோ?’ * VUI—45

கவன்‌, பிரம்மன்‌, இந்திரன்‌ முதலானோர்‌ உன்னைச்‌ சேவிப்பவர்கள்‌ ஆதலினால்‌, உன்னை ஒன்றும்‌
மாட்டார்கள்‌! (கண்டிக்கும்‌ இறமையற்றவரீகள்‌) என்‌:பதால்‌ திடையற்ற (சுதந்திரமுடைய) வனாய்‌ உள்ளாய்‌ என்பதாஃம்‌
இிநீதியை மீறலாமா? உலகங்கள்‌ எல்லாம்‌ உன்னுடையதாளாலு உன்னருகே அருள்மிக்க அம்மை (திருமகள்‌) இல்லையா?
பாகவதர்கள்‌ இல்லையா? என்‌ பக்கம்‌ அவர்களாவது கூற மாட்டார்களா?” VII—46

ஏற்கனவே அத்திருமகளஞும்‌, நிலமகளும்‌, நப்பின்னை (நீளாதேவி)யும்‌ இருக்க, உனக்கு இந்த விரத நிட்டைகளை
யுடைய மெல்லியல்பால்‌ மனம்‌  என்ன சொல்வது? ஏழையாக ஏன்னைப்‌ பித்தனாக்குவதற்காகச்‌
செய்த பகீசாசமேயன்றி, (இவளிடம்‌ திருமகளிடம்‌ இல்லாத) புதியதென்ன கண்டாய்‌? உலகில்‌ ஆற்றின்‌ வளைவுகளையும்‌
நீரீ்ப்போக்குகளையும்‌ எவரால்‌ திருத்த முடியும்‌?
(நதியின்‌ வளைவுகளைத்‌ திருத்த முடியாதது போலவே, பெரியவரீசளின்‌ நடத்தைகளையும்‌ மாற்ற முடியாது என்பது கருத்து.) 11-47

என்றிவ்வாறு அந்தணாளன்‌ (பெரியாழ்வார்‌) முறையிடவும்‌, பாகவதரின்‌ துயர்‌ கண்டு அஞ்சிய பரந்தாமனும்‌, அவரது அறியா
மையைக்‌ கண்டு எள்ளுவான்‌ (கேலி செய்வான்‌) போலத்‌ தோன்‌றும்படி மகர குண்டலமணிந்த எழிற்கன்னங்களில்‌ இளநகையரும்‌
இவ்விதம்‌ கூறினான்‌.  ViI—48

“(வயதுக்‌ கோளாறினால்‌) பெரிய ஆழ்வாரே? முதுமதி தப்பினாய்‌ போலும்‌! உமது மகளை வீட்டில்‌ பாதுகாப்பாக வைத்து
விட்டு வந்து (நாலுபேர்‌ அறிய) பகிரங்கமாக வெறும்‌ வசை புராணம்‌ பாடுகிறாய்‌/ வீட்டில்‌ இன்னொரு தடவை ஆராய்ந்து பாரீத்து அந்நந்கையில்லாவிட்டால்‌ வைவாயாச/ அறிவு மயக்கம்‌ உறாமல்‌ போய்ப்‌ பாரீப்பாயாக।!  VIT—49

எனலும்‌ **என்னப்பனே! ஆய்விட்டதா? (உன்‌ காரியம்‌ ஆ௫ விட்டது போலும்‌) என்று கூறி எம்‌ துயர்‌ தீர்த்தனை! ஏதறி
வோம்‌! ௮ருள்‌ கூர்ற்தனை! வெல்க/’* என்று பரவி, கண்ணீர்‌ அடக்கிக்‌ கொண்டு வீட்டிற்கு விரைந்து ஏஏனார்‌” 4711-50

(சென்று) வணங்கிய மகளின்‌ ௨ச்சி மோந்து ஆனறந்தகண்ணீர்‌ சொரிய, கைகளால்‌ முதுகை நீவி “என்‌ தாயே! உன்னைக்‌ கண்‌
டேனல்லவா?* * என்று ம௫ழ்ந்து இல்லத்துறைந்தனன்‌ ViI—51

திருவரங்கத்தான்‌. பிரம்மா, வன்‌, சரஸ்வதி, பார்வதிஆகியோரை தனக்குப்‌ பெண்‌ கேட்குமாறு பணிக்கவும்‌, அவரீ
களும்‌, சேனை முதலியை உடன்‌ கொண்டு வரவும்‌, பெரியாழ்‌வார்‌ பரபரப்புடன்‌ வரவேற்று VIl—52

சேனை முதலி முதியோரை மரியாதையுடன்‌ விருந்தோம்பி, தகுந்த ஆசனங்களை அளித்து அமர்ந்த அவர்களிடம்‌ வந்த கார
ணம்‌ அறிந்து மகிழ்ச்சி மிக்க உள்ளத்தினனாக இவ்விதம்‌ கூறி னான்‌. 9411-53

சேனை முதலி சிவன்‌! பிரம்மன்‌ முதலானவர்களே/ நற்‌பேறுற்றவனானளேன்‌[ அவனுக்கு (இருமாலுக்கு) இக்‌ கன்னியைத்‌
தற்து பிருகு முனிவனும்‌ கடலும்‌ பெற்ற பெருமையையுற்றேன்‌.
(எனினும்‌) இவ்விதம்‌ கேட்டுப்‌ பெறுவது முறைதானா? (லட்சுமி பிருகு முனிவர்க்கும்‌ கடலுச்கும்‌ மகளாகப்‌ பிறந்தாள்‌) Vil—54

கேட்பீராக! கொடுக்கத்‌ தகுந்ததே! எளிய மனிதர்கள்‌ இத்.தச்‌ சம்பந்தப்‌ பொருத்தத்தைப்‌ பாரீத்து (தானாக) சுமந்து
வற்து கொடுத்தான்‌ என்று சொல்லமாட்டாரீகளா? ஆதலின்‌ எநிகள்‌ ஊருக்கு வந்தால்‌ மகளைத்‌ தருவேன்‌. Vif—S55
திருமால்‌ ஆளுமையில்‌ பரமேசுவரனே எனினும்‌, தன்னடி
யிழைஞ்சுவார்பால்‌ தயவுடையவன்‌ ஆதலினால்‌, உங்கள்‌ விருப்‌பம்‌ நிறைவேற்றுவான்‌. தானே கட்டுவித்த மாமனார்‌ வேடத்தை
பூண்ட எமக்குப்‌ பெருமை சேர்ப்பது அவனுக்கே பெருமையாகும்‌.VIT— 56

எனலும்‌, சென்று (திருமாலிடம்‌ சேனை முதலி முதலானோர்‌) விண்ணப்பிக்கவும்‌, அருளொழுகு உள்ளத்தானாகிய
அகிலாஸ்டேசுவரனாகிய திருமால்‌ ௧௫ட வாகனதிதிலைறி,பிரம்மா, முதலிய தேவர்கள்‌ தத்தம்‌ வாகனங்களில்‌ ஏறிச்‌ சூழ்ந்து
வரவும்‌. VII—57

சேனை முதலி முன்னேவர, வான வீதியில்‌ வரிசை வரிசையாக வரும்‌ “மக்களின்‌ அணிகளும்‌, வாளும்‌, வஜ்ராயுதமும்‌,
கோடானுகோடிச்‌ சூரியர்களின்‌ ஒளியை திசை முழுதும்‌ பரப்ப ViI—58

ஸ்ரீவில்லிப்புத்தாருக்குச்‌ சென்று, விசுவகருமா மணிமயமாகக்‌ கட்டிய விடுதியில்‌, அந்த முதன்‌ முதல்‌ மணமகன்‌ இருந்தான்‌.
தேவமகளிர்‌ மஞ்சள்‌ முதலான குளியலுக்கான மஙிகலப்‌ பொருள்‌களைக்‌ கொணர்ந்தணி செய்ய மணமகன்‌ ஆக, தேவதுந்துபிகள்‌
தாரதர்முதலிய வேதமுனிவர்கள்‌ இசை முழங்க, வெள்ளியொத்தவெண்‌ முகில்கள்‌ பொழியும்‌ அமுததாரையில்‌ அபிஷேகம்‌ செய்ய
ப்பட்டவனாய்‌, முத்துமாலையுடன்‌ கெளஸ்துப மணியும்‌,அணிந்த சங்கொத்த கழுத்தினளாயும்‌, மகர குண்ட லம்‌, மகுடம்‌
முதலான அணிகள்‌ அணிந்தவனாய்‌, சந்தனம்‌ பூசப்பெற்றவனாய்‌, பொன்னாடையணிந்தவனாய்‌, துளசி, கற்பகமலர்‌
மாலைகள்‌ பூண்ட மார்புடையவளாய்‌, இருக்கவும்‌, அங்கு(ஆண்டான்‌ இருந்த இடத்தில்‌) அதற்கு முன்பே இல்லம்‌ புகுந்து,
பரபரப்புடன்‌ (திருமண ஏற்பாடுகளில்‌) முனைந்தவனாசுப்‌ பெரியாழ்வார்‌ இருந்தார்‌ VUH—59

மலைமகள்‌, கலைமகள்‌ முதலிய தேவ மகளிர்கள்‌ சிதாராமர்‌ களின்‌ இருமண விழாப்பாட்டுக்களைப்‌ பாடினர்‌, 4917-60

வைபவத்துடனும்‌, அன்புடனும்‌ ஏகாவளி, சரக்விணி எனும்‌ தோழியர்‌ இருபுறமும்‌ இருந்து சாமரை வீச, மஞ்சள்‌ நீரால்‌
விருப்புடன்‌ அந்நங்கையை மணமகள்‌ ஆக்கும்‌ தவமுதுமகளிர்கள்‌ வாழ்த்துரைபுடன்‌ நலுங்கு வைத்தனர்‌, VII—61

இவ்விதம்‌ இருமணச்‌ சடங்குகள்‌ நடத்தி மணமலி என்ணெய்‌ தலையில்பூசி கூந்தலை சந்தன தைலத்தால்‌ தேதய்த்து
பொற்குடத்தில்‌ குளிர்ந்த . பன்னீர்‌ கொணர்ந்து நீராடச்‌ செய்த பின்னர்‌, அந்த உலகநாயகி (ஆண்டாள்‌)க்கு தேவமாது ஒருத்தி ViI—02

ஈரம்‌ புலர்த்தி, மென்துகில்‌ புனைந்து, மணிபீடத்தில்‌ அமர்த்‌தினாள்‌. அந்நங்கையின்‌ ஒளிர்மென்‌ நீள்‌ கூந்தலை புலர்த்தி நறும்‌
புகையிட்டாள்‌ மற்ழொருத்தி, மற்றொரு மான்விழியாள்‌ அன்புடன்‌ கொண்டை போட்டாள்‌. Vil—63

செம்பஞ்சுக்‌ குழம்பு (தொய்யில்‌) ஏற்கனவே சிவந்த பாதந்கங்கட்குப்‌ பூசினாள்‌ ஒருத்தி, மற்றொருத்தி மெல்லடி விரலில்‌
மெட்டி புளைந்தாள்‌. சிலம்பு அணிவித்தாள்‌ ஒருத்தி. குஞ்சம்‌வைத்து பொற்சரிகைக்‌ கரையையுடைய வெண்துகில்‌ எழிலுற
அணிவித்தாள்‌. மற்றொருத்தி, இடையில்‌ பொன்மணி மேகலையும்‌ கழுத்தில்‌ முத்து மாலையும்‌ அணிவித்தாள்‌. இன்னொருத்தி,
வளையல்கள்‌, தோள்வளை, கைச்சரம்‌, மோதிரம்‌ முதலியன அணிவித்து கம்மல்‌ மூக்குத்தி சுட்டி முதலியனவும்‌ கொண்டு
கோலம்‌ புளைந்தாள்‌. VII—064

அந்நங்கையின்‌ இளிமிச்க கண்கட்கு மை தீட்டி, மெய்யில்‌ கஸ்தூரி பூசி, உச்சிப்‌ பொட்டு வைத்து, கூந்தலுக்கு செங்கழுநீர்ப்‌
பூக்கள்‌ சொருக வேறு ஒருத்தி அணி செய்வித்தாள்‌, ViJ—65

இவ்விதம்‌ ஒப்பனை செய்திருப்ப இலக்கினம்‌ (முகூரீதிதம்‌ நெருங்கியதென்று, விண்ணப்பிக்கவும்‌, பாம்பணைப்‌ பள்‌
கொண்ட பெருமாள்‌, பன்னிரு சுடர்களும்‌ (துவாதச ஆதித்தி யர்கள்‌) இவட்டிகளாக ஒளிர, விண்மீன்‌ கூட்டம்‌, முத்துகி
கோவையாக, திங்களஞ்‌ செல்வன்‌ குடை (ஆலலவட்டம்‌)யாக அமைய, கடலரசன்‌ (வருணன்‌) செங்கமழுநீர்ப்‌ பூபிதழ்களுடன்‌
அநிகாடியில்‌ சாண நீர்‌ தெளிப்ப, இயற்கை (மாயை)த்தாய்‌, வரனர மகளிருடன்‌ கூடி பரிசம்‌ ஏற்பாடு செய்ய, ௮க்கினிதேவன்‌,
அஇற்புகை சளறச்‌ செய்ய, மழைக்‌ கடவுள்‌ (மு௫ற்‌ குலம்‌) மேற்‌ – கட்டு (விதானம்‌) இடவும்‌ தொன்முது மறைகள்‌, ஓதுவார்களாய்‌
விருதுகள்‌ வாசிக்க, நாரத சனந்தனர்‌ முதலானோர்‌ மங்கல இசையால்‌ மனங்குளிர மகிழ்வித்திட கருடன்‌ மத யானையபோல
மணி குயின்ற பொற்பீடத்தைச்‌ சுமக்க, தெய்வீக வைபவத்துடன்‌ சென்று, பர மானந்தத்துடன்‌, பாகவத சிரேட்டனாகய
பெரியாழ்வார்‌ பக்தியுடன்‌ வணங்கி, வரவேற்க. வாகளத்திலிருந் திறங்கெய இரு மால்‌, சேனை முதலியார்‌ கைலாகுகதரவும்‌ வாயிற
போந்ததும்‌ ஆங்கு நங்கையர்‌ கழுவிய ஸ்ரீபாத தீர்த்தத்தற்ன மேன்‌ 3மல்‌ வீழ்ந்து தேவர்‌, சித்தர்‌, குழுக்கள்‌ ந௱ன்முந்தி நான்‌
முந்தி என வந்து நிலத்தில்‌ சலமில்லாதவாறு பிடித்தப்‌ பருகலம்‌, புகுந்து, ஆங்குள பொற்பீடத்தில்‌ அமர்ந்து, அவன்‌ மீண்டும்‌
பொற்‌ செம்புகளால்‌ தங்கத்‌ தாம்பாளத்தில்‌ வைத்த தாமரை போன்ற மெல்லடித்‌ தலிர்களைக்‌ கழுவி, சோட சோபசாரங்‌
களுடன்‌, மதுபர்க்கம்‌ (வெல்லம்‌ கலந்ததயிர்‌) தரவும்‌ பெற்று அப்பெரியாழ்வார்‌ இல்லக்‌ இழத்தியுடன்‌ தாரை வார்த்துத்‌ தர
௮ச்கன்னியை (ஆண்டாளை)க்‌ கைப்பிடித்தான்‌ , 11-66

பின்னர்‌, பொன்முலாம்‌ பூசிய  வேலைப்பாடுடைய முத்துக்கள்‌ கோர்த்த கருவண்ணக்‌ சகுரைய/டைய பெருந்திரையை,
இறக்கி, முகூர்த்தம்‌ வரவும்‌ தேவலோகப்‌ பெரியோர்கள்‌, மணமக்களின்‌ மென்மையான கைகளில்‌ வெல்லமும்‌ சீரகமும்‌
தரவே, மிக்க ஆர்வமுடன்‌ கண்‌ ஒளி பாய்ந்துராய (ஒருவரை ஒருவா்‌) கண்டனர்‌. VII—67

பின்‌, கோதை, திருவரநகிகநாதனின்‌ திருமுடியில்‌ முதலில்‌ முத்துக்களை மங்கள அக்ஷ்தை (தலப்ராலு) சொரியவே, அவள்‌
விரல்‌ தளிர்கள்‌ பட்டுப்‌ புளசமுற்று வியர்ப்புற்ற இருமாலின்‌ உடவில்‌ செறிற்துதிரீந்த வியர்வைத்‌ துளிகள்‌, மழைத்‌ துளிகளாக வும்‌, முத்துக்கள்‌ ஆலங்கட்டிகளாகவும்‌: முடலிலிருந்து பெய்துஒளியுடன்‌ மிளிர்வது போலத்‌ தோன்றியது.
(திருமால்‌ கருவண்ணயாதலின்‌ கார்மு௫லாகவும்‌ வியர்வைத்‌ துளிகள்‌ மழைத்‌ துளிகளாகவும்‌, முத்துக்கள்‌ ஆலங்கட்டிக்ளாகவும்‌
உ.வமிக்கப்பட்டன. தெலுங்கு நாட்டுத்‌ திருமணச்‌ சடங்கில்‌ வெல்லமும்‌, €ரகமும்‌, ஒருவர்‌ கையில்‌ ஒருவர்‌ வைத்தக்‌ கொண்டு
தலைகளைத்‌ தொடுவதும்‌, பின்‌ தலப்ராலு எனும்‌ அரிசியை ஒருவர்‌ தலையில்‌ ஒருவர்‌ சொரிதலும்‌ இங்கு வருணிக்கப்‌
பட்டுள்ளன. தலப்ராலு என்பது தலையிற்‌ பெய்யும்‌ அரிச என்பது பொருள்‌) ViI—68

நங்கை யிரு செங்கைசளாலும்‌ தலையரிசி வாரி எடுத்த போது, ஏந்திள வனமுலைகள்பால்‌ ஏந்தல்‌ திருமால்‌ வீரைந்து
,கண்போடவே, அதைப்‌ பார்த்து நாணங்‌ கொண்டு தோள்சளை மேலே தூக்காமலேயே கை முனையால்‌ மேலே விழுமாறு எறிந்த
வாறு சொரிந்தாள்‌, VII—69

இருமால்‌ அச்செல்வீயின்‌ கழுத்தில்‌ மங்கல நாண்‌ (மங்கல சூத்திரம்‌) கட்டினான்‌. அவளது உடல்‌ புளகமுற்றது, நங்கையும்‌
நாயகனும்‌ ஒருவரை ஒருவர்‌ கரங்களில்‌ கங்கணம்‌ சுட்டினர்‌. Vil—70

நங்கையால்‌ விரகமுடன்‌ பொரி வேள்வி (லாஜஹோமம்‌)செய்வித்து சப்தபதி (ஏழடிகள்‌) நடத்தச்‌ செய்தான்‌.
நநிகையுடன்‌ வடமீன்‌ (அருந்ததி நட்சத்திரம்‌) கண்டனன்‌, பிரம்ம ருத்திரரீ முதலிய தேவர்கள்‌ படைத்த காணிக்கைகளை
அருளோடேற்றுக்‌ கொண்டு, அன்போடு அனுப்பி வைத்தான்‌.
தனது திருவரங்க நகருக்கு மிகுந்த சிறப்புடன்‌ நங்கையை அழைத்துச்‌ சென்று, காவேரிக்‌ கரையில்‌ சந்தனமரச்‌ சோலை
களில்‌ கருங்கூந்தலாளைக்‌ கொஞ்சிக்‌ குலாவி மன்மதப்‌ பேரரசின்‌ ஆட்சியளித்து அருளுடன்‌ அகல உலகமும்‌ பரிபாலித்து
வருகிறான்‌. Vil—71

கோளனேரியின்‌ கரையில்‌ மளங்கவரும்‌ முழைகளிலிருந்து வந்த சந்தனம்‌, முல்லை மலர்களை தழுவிய மந்தமாருதம்‌ அசைவித்த
வனமாலை (துள? மாலையை) உடையவனே! தூய கருவண்ணத்‌ துடல்‌ எழிலால்‌ வானத்தை வென்றவனே/ ஆய்ச்சியர்தம்‌
மனத்தை தளிரீவிக்கும்‌ வேய்ங்‌ குழல்‌ இசைவாணனே[ VII—-72

சக்கிராயுதத்தால்‌ தேவ விரோதிகளைக்‌ கண்டித்தவனே! (கருடற்‌) பறவை வாகனனே! உந்தியில்‌ எழுந்த பெருந்தாமரை
மாலரகிய தொன்னை பில்‌ நிறைந்த தேன்‌ எனும்‌ வெள்ளத்தில்‌ பிரம்ம தேவனை நீர்‌ மனிதன்‌ போலத்‌ திகழச்‌ செய்தவனே! VU—73

வாலியைக்‌ கொன்றவனே/ தாமரைக்‌ கண்ணனே! மலை மகளால்‌ புகழப்‌ படுபவை! தோளில்‌ ‘ வில்‌ அமைந்தவேே!
நெற்றிக்‌ கண்ணன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ முதலானோர்‌ தம்‌ -மகுடங்களின்‌ மணியொளியாற்‌ கோலங்கொண்ட அடியிணை
களையுடையவனே! 4171-74

இஃது நீல மலையில்‌ நீல வண்ணத்துகில்‌ புளைந்தவனான பலராமனும்‌, சுபத்திரையுடன்‌ கூடியுள்ள குவளை மலர்‌ வெல்ற
கண்களையுடைய கண்ணனின்‌ கருணைக்‌ கடைக்‌ கண்களின்‌ அருளால்‌ தோள்‌ வலிமையுடன்‌ தோ ழற்சடிக்கப்பட்ட கடகாதிபதி
யாகிய கஜபதி மன்னர்களை அஞ்சச்‌ செய்த கஇருஷ்ண3தவராய மன்னரால்‌ உருவாக்கப்பட்ட *ஆமுக்த மால்யத* எனும்‌
காவியத்தில்‌ ஏழாவது அத்தியாயம்‌ இனிய செய்யுட்களுடன்‌ நிறைவுறும்‌.
(நீலமலை என்பது பூரி ஜகந்நாத க்ஷேத்திரமாகும்‌. இங்கு கண்ணன்‌, பலராமன்‌, சுபத்திரை மூவரும்‌ இணைந்திருக்கும்‌
சன்னதியைக்‌ காணலாம்‌. தனது தங்கையுடன்‌ தங்கியிருக்கும்‌ இறப்பு இந்தத்‌ தலத்திற்குண்டு. அது கடகம்‌ (ஒரிசா) பகுதி
யாதலின்‌ அதனைவென்ற இருஷ்ணதேவராயர்‌ அப்பகுதி திருமாலையை வழிபட்டு இச்செய்யுள்‌ யாத்த சிறப்பும்‌

ஆமுக்த மால்யத’ முற்றும்‌

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஆறாவது அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஆறாவது அத்தியாயம்‌

செல்வத்தை நல்கும்‌ அருள்‌ நிறைந்த கண்களையுடையவனே வைகுண்டனே! தடையற்றவனே! பக்தர்கட்‌ கருளும்‌
பாதகமலங்களில்‌ பூந்தேன்‌ போல கங்கையையுடையவனே/வேங்கடமலையென்னும்‌ உதயகிரியின்‌ சூரியனே[ Vi—1

அடுத்துள்ள சரிதத்தைக்‌ கேட்பாயாக VI—2

தாசரி
பெயர்‌ சொல்லத்தகாத குலத்தில்‌ (பஞ்சமர்‌ குலத்தில்‌) எனது பகிதன்‌ ஒருவன்‌ இருந்தான்‌. அவன்‌ முன்பு நான்‌
வாமனாவதாரம்‌ எடுத்த புண்ணிய பூமியினைச்‌ (ிருக்குறுஙி குடியில்‌) சார்ந்துள்ள ஒரு யோசனைத்‌ தூரத்திலிருக்கும்‌ ஊரில்‌
வசத்தவனாக, பிரம்ம முகூரித்தத்தில்‌ (விடியற்காலத்தில்‌) வற்து கைக ராகத்தில்‌ பாடுவான்‌. VI—3

தினந்தோறும்‌ அம்மகாத்மா, VI—4

சாதிக்குரிய நடவடிக்கைகளை, என்பால்‌ பக்தியினால்‌ செய்துகொண்டு, தன்‌ மனம்‌ பரிசுத்தமாக அமைய, அழுக்குடை
யில்‌ பொதிந்துள்ள மாணிக்கம்போல குற்றமற்றவனாசக இருந்தான்‌. VI—5

என்னெய்‌ தோய்ந்த தோல்‌ சட்டை, குல்லாய்களுடன்‌ பித்தளைச்‌ சங்கு சக்கரக்‌ குண்டலங்கள்‌ காதில்‌ அமைய,
விளக்குத்‌ தூண்‌ எனும்‌ கருவியும்‌ தோற்பையும்‌ கையம்பும்‌ கொண்டிலங்கி, கழுத்தில்‌ தாழங்குடையுடனும்‌ திகழ்ந்து, எனது
பாதுகையும்‌ குதிரைவால்‌ மயிரால்‌ புனைந்த சுரைக்காய்‌ வீணை யும்‌ மிளிர, சிறுதாளமும்‌ (சங்கி) கக்கத்திலுள்ள சிறுபெட்டியும்‌
நடைவேகத்தால்‌ ஓவ்வொரு சமயம்‌ உரசி கலந்தொலிப்ப, கழுத்தில்‌ துளசிமாலையும்‌, அழுக்குடலும்‌, பட்டைத்‌ திருமண்‌
மணும்‌, அஞ்சிய சிவந்த பார்வையும்‌, மஞ்சல்‌ காவியுடையும்‌ திகழ அந்தப்‌ பஞ்சம வைணவன்‌ என்னைச்‌ சேவிக்க வருவான்‌. VI—6

சண்டாளர்‌ (பஞ்சமர்‌) கள்‌ அல்லாதவர்களின்‌ சீலமுடன்‌ கூடிய அவன்‌, தன்‌ சுமைகளை இறக்கி, பக்தியோடு கூடியவனாக
ஆடிக்கொண்டும்‌, பாடிக்கொண்டும்‌, மழை, காற்று, வெயில்‌, பச என்று பாராமல்‌ கல்லும்‌ கரையுமாறு பறைத்தம்புராவை
மீட்டியவாறு முற்பகலில்‌ கன்னங்களில்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ வழிய எனது தோத்திரங்களைப்‌ பாடிப்பரவசமடைவான்‌, VI—7

இவ்விதம்‌ நெடுநெரம்‌ சேவித்து, நெற்றி நிலந்தோய வீழ்ந்‌இறைஞ்சி, கருவறையிற்‌ கழுவிய தீரீத்தம்‌ கலஷ்தொட்டியில்‌
வீழ்ந்து நிறைந்து கால்வாய்‌ வழியாக கோயிற்புறத்துப்‌ போகவும்‌, சூத்திரன்‌ ஒருவன்‌ எடுத்தூற்றத்தான்‌ குடித்தான்‌.
(தான்‌ பஞ்சமன்‌ ஆதலின்‌ கீண்டாது நாலாம்‌ வருணத்தவரால்‌ தீர்த்தம்‌ எடுத்துத்தருமாறு பணித்து அதனைக்‌ குடித்தான் VI—7

அவன்‌, மேல்வருணத்தாரைக்‌ கண்டு விலஇஒயும்‌, வயில்‌ காற்றுகளில்‌ எவ்வளவு நேரமோ காத்திருந்தும்‌, பிரசாதம்‌ வினியோகிக்கும்போது இருந்து, நான்காம்‌ வருணத்தார்‌ மெச்சிக்‌ கொடுத்த பிரசாதத்தை, தம்புரா ஒதுக்கி, பத்த சிரத்தை களுடன்‌ அடக்கத்துடன்‌ கை ஏந்தி வாக்றி, உண்டு, தீர்த்தம்‌ குடித்து மகிழ்வான்‌. VI—9

இவ்விதம்‌ தன்‌ தாழ்ந்த பிறப்பினால்‌ ஏற்பட்ட ஏமைமை யால்படும்‌ துன்பங்களைக்‌ கண்டு எல்லோரும்‌ இரக்கப்பட கோயில்‌ வெளிப்‌ பிராகாரத்திலுள்ள நீர்‌ விழும்‌ துரம்புவின்‌ அருகில்‌ இருந்துகொண்டு சேவித்து, வலம்வந்து, பொழுது தேறவும்‌, தன்‌ சேரிக்குச்‌ செல்வான்‌, இப்படி. இருக்க ஒரு நாள்‌.
V{—10

நடு இரவில்‌ அந்த தாசரி (தாழ்ந்த குல வைணவ பக்தன்‌) அவ்வருகே, பூனைபுகுந்த குடிலில்‌ உள்ள கோழி பெருங்குரலில்‌
கூவக்கேட்டு, (திருமாலைச்‌ சேவிக்கும்‌) பொழுதாயிற்றெனக்‌
கருதி பாடுவதற்காகச்‌ செல்லும்‌ வழியில்‌, VI—il

மருட்கொடியை மிதித்து, “இருளே என்ன வென்று கேட்கும்‌’ இருட்டில்‌ வழிதவறி காடெல்லாம்‌ திரிந்து இழக்கே
வெளுக்கும்போது ஒரு ஆளரவமற்ற காட்டில்‌ புகுந்து சென்று,
(மருட்கொடியை மிதித்தால்‌ பாதை மறந்துபோகும்‌ என்பது மரபுவழிப்பட்ட நம்பிக்கை, இருளே என்று கூவி என்னவென்று
இருள்‌ பதில்‌ சொல்லும்‌ என்பது இருட்செறிவினை எதிரொலிக்‌ கும்‌ என்ற கருத்தில்‌ வற்த தெலுங்கு மரபுச்‌ சொல்‌ ஆகும்‌.) VI—12

இடிந்த சுவர்களில்‌, நாயுருவி சகாசமரீத்தம்‌, பூளைப்புதர்‌களாலும்‌, கீழே சாய்ந்த சுவரிடுக்குகளிலும்‌ கல்லிடுக்குகளிலும்‌
வூக்கும்‌ பெருச்சாளிகளாலும்‌, பாதி தரசியால்‌ புதைந்த, புல்‌ பூண்டுகளால்‌ வாய்முடப்பெற்ற, கஇணற்று வளைகளும்‌, எறும்பு
கள்‌ அரிசியை இழுத்துக்கொண்டு போக3வ சிதைந்து, காய்ந்‌துலரீந்த வேலித்தட்டிகளில்‌ உள்ள இறுங்கும்‌, தூதுவளை
குப்பை வேளைக்‌£ரைகளில்‌ வயிறொட்டியவாறு மீசை அசைதீதலும்‌ அடங்கிவிட்ட முதிய பூனைககளும்‌, புலங்களில்‌ வளரீந்த
சாரணத்தி, . கோரை முதலானகளைகளும்‌ நிறைந்து, ஏற்றம்‌ கெட்டுவிடவே கல்‌ துண்‌ மட்டும்‌ மிஞ்சியதாக உள்ளதும்‌ ஆன
பாழ்ப்பட்ட நிலத்தின்‌ வழியே சென்றவாறு. [13

தவறான வழியில்‌ சென்று, வழியிலுள்ள (உத்தரேனி) முள்ளைக்கால்களினால்‌ விபரீதமான முறையில்‌ துடைதி
தெறிந்து, நெருஞ்சி முட்களை விழிப்புடன்‌ பிடுங்கி எறிந்து கொண்டு போனான்‌. Iv—14

அவ்வழியில்‌ வைணவன்‌, அரையோசனை (இரண்டு குரோஸ்‌) நீளமுடைய, விழுதுகள்‌ விட்டு பல கிளைகளும்‌
உட்களைகளும்‌ உடைய ஆரமரத்தைக்‌ கண்டான்‌. அக்கிளைகளில்‌ உள்ள புழுக்கள்‌ குடைந்த இலைகள்‌ காற்றால்‌ வீசி
எறியப்பட்டு தூரத்தில்‌ வழிப்போக்கர்கள்‌ முன்பு வீழ்ந்து. இந்த மரத்தில்‌ பிரம்மராட்சசு உள்ளது. அருகே வரவேண்டாம்‌
என்று சொல்லி எச்சரிப்பதுபோல்‌ இருந்தன, அந்த இலைகளின்‌புழுக்க்குடைந்து எழுத்துக்களாகக்‌ காணப்பட்டன. இவ்விதம்‌
எச்சரித்த புண்ணியப்‌ பயனோ எனுமாறு அவ்வாலமரத்தில்‌ பழங்கள்‌ நிறைந்திருந்தன.
(ஆலமரம்‌, புழுக்கள்‌ குடைந்தது எழுத்துக்களாகத்‌ தோன்ற இலைகள்‌ வீசி வழிப்போக்கரை எச்சரித்தது போல இருந்தது
என்றும்‌, அந்தப்‌ புண்ணிய பயனே பழங்கள்‌ எனுமாறு இருந்தது என்றும்‌ கற்பிக்கப்பட்டு ள்ளது), 91.15

அவன்‌ அவ்வாலமரத்தைக்‌ கண்டு அப்பக்கம்‌ ஒரு ஒற்றை யடிப்‌ பாதை செல்வதையும்‌ சுண்டு, வழி கிடைத்ததே பெரும்‌
பாக்கியம்‌ எனக்‌ கரத விரைந்து அம்மரத்தின்‌ அருகே சென்றான்‌. IV—16

இளநீர்க்‌ குரும்பைகள்போல, மூளை எல்லாம்‌ உறிஞ்சி எறிந்ததால்‌ உருண்ட மண்டை ஓடுகளும்‌, இறைச்சியைக்‌ &றிய
கீறல்கள்‌ தோன்றும்படியாக முழுவதும்‌ சுவைத்துதி சுவைத்து, இளம்பச்சையூன்‌ படிந்த எலும்புகளும்‌, முசுமுசுவென மொய்த்த
ஈக்கள்‌ கூட்டம்‌ உருவம்‌ தெரியாமல்‌ மறைத்த முள்கிளைகளில்‌ தொங்கும்‌ பச்சைத்‌ தோலும்‌, தர படிந்து அழுக்கடைந்து,
நாவிதனின்‌ குப்பையோல இளர்ந்து எழுந்து பரவும்‌ காற்றிற்‌ காடும்‌ மயிர்க்குவையும்‌, துண்டுபட்ட மனித உடலுறுப்புக்களை,
கூடிவந்து கடித்து போகும்போது ஒன்றோடொன்று பிணங்கிப்‌ போராடும்‌ நாய்நரிக்‌ கூட்டமும்‌, அதன்‌ கால்பட்டு நகங்கி
இநாற்றம்‌ பரப்பும்‌ வருவல்‌ (உப்புக்‌ கண்டச்‌ சதைகள்‌) களும்‌, கழுகுகளும்‌ மிகுந்திருந்த செறிந்த துர்க்கந்தமிக்க வழியே
சென்று, எதிரே… (கண்டான்‌) VI—17

முன்கால்களால்‌ நீட்டி வளைந்து, மேலே திருட்டுப்‌ பார்வை கள்‌ செலுத்தியவாறு ஓடுகின்ற நாய்களும்‌, புலால்‌ தோரணஙி
இடீரென பறக்கும்போது கிளையடித்துவிட இரைச்சலிட்டோடும்‌ பருற்துகளும்‌, (பிரம்ம ராட்சசனுக்கு)
இடையே வந்ததால்‌ உள்ளங்கையால்‌ அடிபட்டு, இடையை இரு கரத்தாலும்‌ பிடித்துக்‌ கொண்டமும்‌ குரங்குகளும்‌, தற்செயலாக
ஓரிடத்தில்‌ காணப்பட்டு, அவ்விடத்தில்‌ மாயமாகி வேறோரிடத்‌ இல்‌ காணப்படுவதாகிய நடவடிக்கைளும்‌, பார்த்து, “யாரோ
ஒருவன்‌ (இம்மரத்தில்‌) இருக்கிறான்‌ போலும்‌. மனிதன்‌ அல்ல, விறகு, கட்டைகள்‌ சேகரிக்கும்‌ வேளையும்‌ இதுவல்ல, புலால்‌
மணக்காற்று வீசுறது. வழியோ தூரமாக இருக்கிறது”” என்று நினதைது கவலையும்‌ ஐயம்‌ உடையவனாகியிருந்‌த போது
(வேதம்‌ வெங்கட சாஸ்திரி உரையில்‌ பெண்‌ நாய்கள்‌ என்று உரை கூறுவார்‌. பெண்‌ நாய்களே வஞ்சகம்‌ மிக்கதாயும்‌ துணிந்து
வருபவையாகவும்‌ இருக்கும்‌ என்பது உரைக்‌ குறிப்பு: மாவிலைத்‌ தோரணம்‌ போல, உப்புக்கண்டம்‌ போடுவது போல புலால்‌
துண்டுகள்‌ தோரணமாகப்‌ போட்டுள்ளதால்‌ புலால்‌ தோரணம்‌ என வருணிக்கப்பட்டது) VI—~18

இறந்த மனிதப்‌ பிணத்தை தன்‌ கோவணம்‌ (கெளபீனம்‌) ஆக சட்டப்‌. போதாமையின்‌ இழுத்துக்கட்டும்‌ போது இரத்தம்‌
பட்ட உந்தியடைய அரைஞாண்‌ .உடையவனும்‌ முசுறு (முயிறு) மொய்த்த அண்டிமாப்‌ .போலசி சிவந்த போர்வையைப்‌
போர்த்திய கருமேனி உடையவனும்‌, தலை8ழ்‌ ஆக உள்ள யானைத்‌ கலைபோல்‌ தாடை (நாடி)யும்‌
கோரைப்‌ பற்களும்‌ உடைய முகத்தினனும்‌, குளவிகளின்‌ நீண்ட கூட்டைப்போல்‌ கோரோசனை வண்ணத்திலுள்ள தாடி. மீசை
களையுடையவனும்‌, இரைக்காக (தின்பதற்காக) வழிப்போக்கர்‌ யாராவது வருகிறார்களா எனப்‌ பார்க்க மரக்கிளையில்‌ ஏறும்‌
போது நழுவும்‌ குடல்பூனூலைச்‌ சினந்தவாறு மீண்டும்‌ தோள்‌களில்‌ சரிசெய்து வைத்துக்‌ கொள்பவனும்‌, தொங்கும்‌ தொந்தி
யும்‌, யானைக்காலும்‌, வழுக்கைத்‌ தலையும்‌, பிடரி மயிரும்‌ உள்ளவனும்‌…… (மூயிறு–சிவப்பு நிறமாள பெரிய எறும்பு) vi—19

சதை வளர்ந்த கண்களும்‌, பசியினால்‌, வேதாளங்களை (பிசாசுகளை) அடிக்கடி கெட்டவசவு (வசை)கள்‌ வைபவனும்‌
மலைப்பாரம்‌ உடையவனும்‌, முடமூழுகிகால்‌ (கும்பஜானு) எனும்‌ பொருத்தமானப்‌ (காரண) பெயருடையவனுமான ஒரு
பிரம்ம ராட்சசனளைக்‌ கண்டான்‌. VI—20

அவன்‌ (அந்த பிரம்ம ராட்சசனும்‌), “பார்த்தேன்‌! போகாதே! என்று மரங்கள்‌ பொடிப்பொடியாகுமாறு குதித்தான்‌ –
இவனும்‌ (வைணவ தாசரி) முன்பு இரவும்‌ பகலும்‌ போரில்‌ வீரமுடன்‌ போரிட்டவன்‌ ஆதலினால்‌ தைரியமாக நின்று, அந்த
கூரிய அம்பினைக்‌ கொண்டு (ராட்சசனை) அடிக்கவும்‌, அவன்‌ ,அதை (அம்பினை) முறிக்கவும்‌ இவன்‌ வீரமுடன்‌ முனைத்தான்‌.*VI—2!
*(மூற்காலத்தில்‌ பிணந்தின்னும்‌ பேய்மக்கள்‌ சிலர்‌ இருந்தனர்‌ எவ்று தமிழ்‌, வடமொழி இலக்கியச்‌ சான்றுகளால்‌ தெரிகிறது)

(இராட்சசன்‌) இழுக்கவும்‌, (தாசரி) காலடி பெயராமல்‌ அவன்‌ மாரீபில்‌ தட்டி, அந்தப்‌ பக்கம்‌ விலக, குதித்து, அவன்‌
அடிக்கவரவும்‌ வஞ்சித்துப்‌ பின்‌ வாங்கி, அவன்‌ மீண்டும்‌ முனைவதைக்‌ கண்வைத்து (எச்சரிக்கையுடன்‌) பார்தீது, அவன்‌ தன்‌
மேல்‌ பாய முனைந்து வரவும்‌, மார்பில்‌ குறிவைத்தவாறுள்ளபிடிப்பின்‌ வலிமையால்‌ அவனுக்குப்‌ பிடிபடாமல்‌ நின்று, அவன்‌
தன்மேல்‌ பாய முனையவே தான்‌ குனிந்து, தன்‌ கைப்பிடியே . (பாதுகாப்புக்‌) கோட்டையாக அவனை விடாது, திரியும்‌
இடமெல்லாம்‌ திரிந்து, அவன்‌ கொல்கருவிகளைத்‌ (கல்‌, முசலியன) தேடும்போது அவனை நையப்‌ புடைத்து, உதைத்து,
அவன்‌ திரும்பவுமே கைப்பிடியால்‌ முதுகிலும்‌ இடையிலும்‌ குத்தி, என்மேல்‌ பக்தியினால்‌ ஏமாந்து விடாமல்‌ எச்சரிக்கையாக
இருந்து போரிட்டான்‌. VI–22

தள்ளிவிட்டுப்‌ போகப்‌ பார்க்கவும்‌, தனது இராட்சதக்‌ கூட்டத்தை அவன்‌ விளிக்கவும்‌ அவர்களும்‌ ‘(மரத்திலிருந்து)
இறங்கி வரவும்‌, அதோ அவன்‌ போனான்‌, வாருங்கள்‌ வாருங்கள்‌ என்று ஒடிச்‌ சென்று அவர்களும்‌ தானும்‌ (தாசரியை) பிடித்துக்‌
கொள்ளவும்‌, VI—23

காளையொத்த தாசரி அப்போது கால்கை உதைத்து முழங்‌ கையால்‌ இடித்து, இருபக்கமும்‌ குத்திப்‌ போரிட்டவாறு ஏக
அவரீகள்‌ பிடித்து ஆலமரத்தில்‌ கட்டி (இராட்சசன்‌) இவ்விதம்‌ கூறினாள்‌. 13…-24

உன்‌ கொழுப்பிளனைச்‌ சுவைத்தின்புற்று மனநிறைவோடு மகிழ, என்‌ பஞ்ச பிராணங்களும்‌ தாகம்‌ தீருமாறு கத்தியால்‌ உன்‌
செருக்குடைய தலையைக்‌ கொய்து உனது முண்டத்திலிருநீது பொஙிகும்‌ சூடான இரத்தத்தை இனிது பருக இந்தப்‌ பிசாச
(பெண்‌ பேய்‌) இரும்புக்‌ கம்பியில்‌ கோர்த்து நெருப்பில்‌ வாட்டி உன்‌ மாமிசத்‌ துண்டுகளை எடுத்துத்‌ தரக்‌ கடித்து இந்த பனங்‌
காட்டினுள்ளே இருக்கும்‌ மண்டையோட்டு கலஙிகளில்‌ உள்ள கள்வினைக்‌ குடிப்பேன்‌, 41-29

என்னை இவ்வளவு அலைக்கழித்த நீசனாகிய உன்னை மென்மையாகக்‌ கொல்வேனளோ (கடுமையாகச்‌ சித்திரவதை செய்‌
வேன்‌) என்று விண்ணதிர ஆர்ப்பரித்து நெட்டுயிர்த்து, அக்கடை யோன்‌ தாகம்‌ கொண்ட தெளிவற்ற மொழிகளில்‌, VI—26

கத்தியும்‌, கலமும்‌ (இரத்தம்‌ பிடிக்கும்‌ பாத்திரமும்‌) கொண்டு வருமாறு கட்டளையிட்டு, கொடிபோன்ற குடலால்‌ பின்னிய
கயிற்றினை (கோலகக்கர)” (* கோலகக்கர–மாடுகளை லாடம்‌ அடிக்கும்‌ போது நான்கு கால்களையும்‌ கட்டி வீழ்த்தப்‌ பயன்படும்‌ கயிற்றுக்குப்‌ பெயர்‌,)எடுத்துத்‌ தள்ளிவிடவும்‌ மரத்தில்‌ சாய்ந்த (தாசரி) ௮ந்த இராட்சசனிடம்‌ அச்சமற்ற உறுதியான மொழிகளில்‌ அறநெறி கூறலானான்‌. VI—27

இரவில்‌ திரிபவனே (இராட்சசனே) ஒரு சொல்‌ கேட்பாயாக! விரைவு படுதல்‌ (அவசரம்‌) ஏன்‌? உன்னை தேவர்கள்‌ ஆனாலும்‌
வெல்ல முடியுமா? வட்டிலில்‌ வைத்த சோறு நான்‌/ இனி எங்கே போய்‌ விடுவேன்‌! (எனினும்‌) உயிரைக்‌ காப்பாற்றப்‌ போரா
டாமல்‌ இருப்பது பாவம்‌/ (அதனால்‌ தான்‌ பிணங்‌கிப்‌ போராடி .ளேன்‌) அதற்காகக்‌ கோபப்பட வேண்டாம்‌! எனக்கு உடல்‌ மேல்‌
பற்றில்லை! இது (இந்‌.த உடல்‌) போவதே மேலானது. VI—28

இழிந்த (சண்டாளப்‌) பிறப்பு அறுவது! ஏதேனும்‌ ஒரு உயிர்‌ மகிழ்வது, வீடுபேற்றுக்கருகே அடைவது நல்லதேயல்லவா! நிலை
யற்ற உடலை விற்று பரத்தை அடைந்த பிச்‌ சக்கரவர்த்தி மேலான வழிகாட்டியல்லவா
(சிபி-புறவுக்காக தன்‌ உடல்‌ அரிந்து துலைபுக்ககதை பிரசித்தம்‌) INV—29

நோயோ, பேயோ, தேளோ, வாளோ, மனக்கவலையோ, நஞ்சோ, வெள்ளமோ, கள்ளனோ, நீரோ, நெருப்போ, தயோ,
விலங்கோ, சூது, வாது, மாதுகளாலோ, மண்ணிலோ, புண்‌ ணாலோ, இடியோ, பாம்போ, ஏதேனும்‌ ஒன்றால்‌ எளிதில்‌
நாசமடையும்‌ இந்த உடல்‌, இவ்விதம்‌ கெடாமல்‌ ஒரு (பசியால்‌) மெலிந்தவனுக்கு உதவுவதால்‌ கெடுவது நல்லதல்லவா? VI—30

அது அப்படியிருக்க, இன்னொரு நல்லுரை கூறுகிறேன்‌. அதுவும்‌ உயிருக்கஞ்சி, காரியவாதியாகச்‌ சொல்வதாகக்‌ கருதாபல்‌, நடுநிலைமையுடன்‌ பேசுவதாகக்‌ கருதிக்‌ கேட்பாயாக! (நீ) கேட்கா விட்டாலும்‌, உயிர்களின்‌ நலம்‌ கருதிக்‌ கூறப்படும்‌ சொற்களை இறைவனாவது பாராட்டுவானல்லவா? (நீ) புலி, சிங்கம்‌, பன்றி, ஓநாய்‌, நரி முதலான கொல்‌ விலங்குகளில்‌ ஒரு விலங்கன்று. நீ தெய்வப்‌ பிறப்பினன்‌. உனக்கும்‌ எங்களைப்‌ போல கை, கால்‌, முகம்‌ முதலிய அறுப்புக்கள்‌ உள. பேச்சும்‌ எங்களைப்‌ போன்றுதான்‌. செய்யத்தக்கன, செய்யத்தகாதன எனும்‌ பகுத்தறிவும்‌ எம்‌ போன்றதே. ஆ! மறந்து சொன்னேன்‌! தாரவரங்களைவிட புழுப்பூச்சிகட்கும்‌, (ஊர்வன) அவற்றைவிட பறவை, விலங்குகள்‌ (நடப்பன) ஆகியவற்றுக்கும்‌ அவற்றைவிட எங்கட்கும்‌, எம்மைவிட, உங்கட்கும்‌ கை௰ால்‌,, உடல்‌, Baia, அறிவூத்‌ திறனும்‌, மிகுதியாகும்‌. இத்தகைய உனக்கு, முக்கியமாக திந்தைக்குரிய வெறுக்கத்தக்க, தக்கன, க்காதன, உண்பன, உண்ணாதன, பருகுவன, பருகாதன, எனும்‌ விவேகும இல்லா திருப்பது பொருத்தமாகுமா? இந்தத்‌ இய உண்டி (நரமாமிசம்‌) சுவையற்றது, தூய்மையற்றது. அதவும்‌ எல்லாப்‌ பாவங்களிலும்‌ தலையாய கொலையால்‌ வருவது.
கொலை (ப்பாவம்‌) பரலொகத்திலன்றோ பாதிப்பது, பர லோகம்‌ உயிர்‌ நீத்த பிறகன்றோ? நெடுநாள்‌ வாழும்‌ உயிர்‌ களாகிய எமக்கெதற்கு (கொலைப்‌ பாவ) அச்சம்‌? என்று கருத வேண்டாம்‌? பிராணபயம்‌ (உயிர்‌ நீக்கும்‌ அச்சம்‌) எமக்கு (மனிதர்க்கு) இன்றென்றால்‌ உங்கட்கு நாளையோ, நானை மறுநாளோ, முடிவில்‌ யுகரிந்தத்திலோ நீண்ட, குறுகிய கால எல்லைக்குள்‌ எப்படியும்‌ தப்பாது. சாவு வர ஏற்றத்தாழ்வுகள்‌ எப்படி இருந்தால்‌ என்ன? முன்னீரில்‌ (கடலில்‌) மூழ்குவதெதன்‌ றான பிறகு மலையானாலென்ன? அணுவானால்‌ என்ன? இரண்டும்‌ ஒரே நிலை தானே! எதிர்காலத்தைப்‌ பற்றி ஆலோசிக்க வேண்டாமா? தவத்தினால்‌ பெற்ற வரங்களை யுடைய முன்னாளில்‌ தேவர்களின்‌ செருக்கடக்கி உயர்ந்து நின்ற இரணியகூபு (கனகன்‌) தசமுகன்‌(இராவணன்‌) முதலான வார்கள்‌, நூறாயிரம்‌ ஆண்டுகள்‌ வாழ்ந்தும்‌ முடிவில்‌ இறந்த, தாம்‌ வெற்றிகொண்ட யமன்‌ கையிலேயே இக்கிக்‌ கொள்ள வில்லையா? இங்கு நீங்கள்‌ வலிமையிகுந்தோராயின்‌, அங்கு அவன்‌ (யமன்‌) வலிமைமிக்கவன்‌. எல்லா உயிர்களின்‌ ஏற்றத்‌ தாழ்வுகள்‌ அதனதன்‌ இடச்சிறப்பினால்‌ உருவாவதேதான்‌. கொடுங்கதிர்க்‌ கடவுளின்‌ மகன்‌ (சூரியன்‌ மகன்‌ யமன்‌) பட்டிணத்தில்‌ எல்லை கடந்த எம்போன்றே உங்கட்கும்‌ தண்டனை நிச்சயமாகும்‌. நீங்களும்‌, யமன்‌, மற்றதேவதைகளும்‌ குலத்தால்‌ சகோதரர்கள்‌ தான்‌, எனினும்‌ பரலோகத்தில்‌ ஒருவரை ஒருவர்‌ பீடிக்கன்றீர்‌ கள்‌. இந்த வேறுபாட்டுக்கு தமஸ்‌, சத்துவ குணங்கள்தான்‌ மூல காரணமாகும்‌, அந்த குணங்கட்கு உணவே மூலக்காரணம்‌,

வேதமந்திரங்கள்‌. மூலம்‌ வேள்வியில்‌ அழைக்கப்பட்டு புரோடாசம்‌ (வேள்வி நெய்யன்னம்‌) உண்ட புனித உணவினால்‌
தான்‌ பவித்திரர்களாகி தேவர்கள்‌ சாவதின்றி உங்களைவிட நெடுங்காலம்‌ நிலைத்திருக்கின்றனர்‌. அந்தப்‌ புனிதத்துவத்தைக்‌
கண்டல்லவா எப்போதும்‌ நான்முகக்‌ கடவுளின்‌ அம்சமாகிய அமுதகிரணன்‌ (சந்திரன்‌) கரைந்து, எல்லா ரசங்கட்கும்‌
எல்லையாய அமுதரசத்தால்‌ (தேவர்கட்கு) திருப்தியைத்‌ தரு கிறான்‌. இந்தப்பொருளை நாங்கள்‌ சொல்லக்‌ கூடாதென்றாலும்‌ வேதம்‌, முதற்‌ கலையை அக்னி (இக்கடவுள்‌) பருகுவதாகக்‌ கூறும்‌, மேலும்‌ அந்தந்தக்‌ கலைகள்‌ அந்தந்த தேவர்கட்கு
வரிசைக்கிரமமாகக்கூறும்‌, ஆதலின்‌ இதை எல்லாம்‌ ஆராய்ந்து உனக்குப்‌ பிடித்ததைச்‌ செய்க’ ”. என்று கூறவும்‌, கட கடவெளனச்‌
சிரித்து அந்த தாசரிக்கு இராட்சசன்‌ இவ்விதம்‌ கூறினான்‌.
(சந்திரனின்‌ பதினாறு கலைகளும்‌ பல்வேறு தேவர்களின்‌ உணவாகக்‌ கற்பித்தல்‌ வேத மரபாகும்‌. தூய அமுத ரசம்‌ உண்ட
தேவர்கள்‌ நூயராய்‌ நெடுநாள்‌ வாழ்வர்‌ என்று கூறி, நரமாமிசம்‌ உண்பது பரவம்‌ என்று தாசரி கூறுகிறான்‌). ்‌ Vi—31

“படிப்பினால்‌ (உபதேசங்களைக்‌ கூறிக்‌கொல்லாதே! நாங்கள்‌ படிக்காத சாஸ்திரங்களா? நாங்கள்‌ படிக்காத
வெதங்களா? அவை யெல்லால்‌ எமக்குப்‌ பிடிக்கவில்லை! நம்ப மாட்டாயா?” பிரதமாம்‌ பிபதே வஹ்னி (முதல்‌ பங்கை அக்னி
குடிக்கிறான்‌) என்ற சொல்‌ தப்பாதல்லவா?
(சந்திர கலையை ஒவ்வொரு தேவரும்‌ பருகுவர்‌ என்பதால்‌, முதல்கலை அக்னிதேவனுக்கு என்ற மந்திரம்‌ எடுத்துக்காட்டி,
தேவார்கள்‌ நிலவிளனைப்‌ பருகுவதால்‌ பிறரை அழித்து உண்டு இன்புறும்‌ கொடியர்தாம்‌ என்று பிரம்ம ராட்சசன்‌ கூறுகிறான்‌ என்பது கருத்து) 41.32

நில்‌! ஓகோ? எங்களை தேவர்கட்கு சகோதரர்கள்‌ என்றா யல்லவா? அவர்கள்‌ அமுதம்‌ குடிப்பவர்கள்‌, புனிதமற்றவை
யூண்ண மாட்டார்கள்‌ என்றாய்‌! சந்திரனின்‌ முதற்கலை அக்னி (பிற பிறரும்‌) பருகுவர்‌ என்றாய்‌! ஒரு செய்தி உன்னைக்கேட்‌
கிறேன்‌. அந்த அக்னி எல்லாம்‌ உண்பவன்‌ (சர்வபட்‌8) உலூல்‌ அவன்‌ நியாய3ம (முறையே) எங்கட்கும்‌, போதும்‌. இனி பெரிய
வர்கள்‌ ஓழுக்கப்படி நடந்துகொள்வது பாவமா?
(அக்னி தேவனுக்கு நாங்கள்‌ (ராட்சசர்‌) சகோதரர்கள்‌. அக்னி எல்லாம்‌ உண்பவன்‌. அவன்‌ ஆசாரப்படி. நாஙிகளும்‌
(நரமாமிசம்‌ உட்பட) எல்லாம்‌ சாப்பிடுவோம்‌; இது தப்பா? என்று வாதிக்கிறான்‌ பிரம்ம ராட்சசன்‌) 41-33.

திருமாலுக்கு நண்பனும்‌ வாஹனமும்‌ (தேர்‌) ஆகிய கருடன்‌. குனக்குக்‌ இடைத்த அமுதத்தை தேவர்கட்கு மீண்டும்‌ தந்துவிட்டு
பாம்புகளை உணவாக (சோறாக) வரம்பெற்றுக்‌ கொள்ள வில்லையா? அமுதமாயினும்‌ பிறவிக்கேற்ற உண்டியின்‌ சுவைக்‌ கீடாகுமா?
(கருடன்‌ தேவாமிர்தத்தை விட பாம்புதான்‌ சுவை எனக்‌ கருதியதுபோல, (பூனைக்கு எலிதான்‌ சுவை) தான்‌ நரமாமிசம்‌
சுவைப்பவன்‌ என்று கூறி நியாயப்‌ படுத்துகிறான்‌ பிரம்ம ராட்சசன்‌) VI—34

துக்கமும்‌ சோறும்‌ இன்றி படித்துக்கண்ட பயன்‌ என்ன? இந்தப்‌ படிப்பினால்‌ உண்டான வாதங்களாகிய பொய்களைக்‌
கேட்டு எவன்‌ ஏமாறுவான்‌?நீ எம்மிடம்‌ படிப்பு (சாத்திரம்‌) களைச்‌ சொல்ல ஒரு பாராட்டும்‌ கிடைக்கப்‌ போவதில்லை. “இந்த
படித்த கறி (மாமிசம்‌) புதிய சுவையாயுள்ளது. வேண்டுமட்டும்‌ கொணர்க” என்ம பாராட்டு ஒன்றுதான்‌ கிடைக்கும்‌.
(உன்‌ படிப்பைப்‌ பாராட்ட ஆள்‌ இல்லை. உன்‌ BMP சுவை யாக இருக்கும்‌ என்று பிரம்ம ராட்சசன்‌ கூறுகிறான்‌) ViI—35

என்று இவ்வாறு பிரகஸ்பதி மதம்‌ (லோசகாயதவாதம்‌) கைக்‌ கொண்டு தன்‌ சொற்களைப்‌ பரிகசிக்கும்‌ ராட்சசனின்‌ குதர்க்க
வாதங்களைக்‌ கேட்டு “இருஷ்ண கருஷ்ண’்‌ எனக்‌ காதுகளை மூடி இதற்கேற்ற பதில்களைக்‌ சொல்லி இவனைக்‌ இளறினால்குழப்பத்‌
தால்‌ இதைவிட அபத்தமான சொற்களைக்‌ கேட்க நேரும்‌/இனிச்‌ செய்யவேண்டியதைச்‌ சிந்திக்கவேண்டிய நமக்கு இதனை மறுக்க
வேண்டிய தேவையுமில்லை, என்று கருதி, மனத்தெளிவுடன்‌, அவன்‌ விருப்பத்திற்கேற்றபடி பேச விழைந்து, மனத்துள்‌ வெறுத்‌
தவாறு, இருபொருள்பட மனத்துள புத்தபகவாளை நினைத்துக்‌ கொண்டே :₹நீ சர்வக்ஞன்‌ (எல்லாம்‌ அறிந்தவன்‌) நான்‌
சாதாரண மனிதன்‌, தாழ்ந்த குலத்தினன்‌. சாத்திரங்களைக்‌ கல்லாதவன்‌. உளக்கு பதில்‌ கூற இயலுமோ? ஏதோ வாய்தவறிச்‌
சொன்ன சொற்களைப்‌ பொறுத்து அருள்‌ கூர்ந்து என்பால்‌ நம்பிக்கை வைத்து எனது வேண்டுகாளை நிறைவேற்றுவாயாக”) IV—36

ஏற்கனெவே தைத்தியர்‌ (இராக்கதரி) களில்‌ நீ பிரசித்தமானவன்‌. மேலும்‌ உனக்கு புகழ்‌ சேர்க்கவிரும்புகிறேன்‌. என்‌
உடலைத்‌ தருவதில்‌ தவறமாட்டேன்‌. முக்கியமான விரதம்‌ (நோன்பு) ஒன்றைக்‌ கடைப்பிடித்து வருகிறேன்‌. அதை நிறை
வேற்ற மாட்டாயா? ₹’சக்யம்‌ சாப்த பதீனம்‌’” (ஏழெட்டு நடந்‌ தாலே நண்பன்‌) என்ற சொல்படி நாம்‌ நண்பர்கள்‌,
அதைநினைத்தாவது என்‌ கோரிக்கையை நிறைவேற்றுக/ 1/1–37

அஃது யாதெனின்‌ — VI~38

தாசரி குறுங்குடிக்குப்‌ போதல்‌
இதற்கருகில்‌ இத்திருக்‌ குறுங்குடியில்‌ உள்ள திருமாலுக்கு தினந்தோறும்‌ விரதப்படி பாடிவருவேன்‌. அப்பகவானுச்கு
சேவை செய்துவிட்டு உனக்கு உணவாவேன்‌, இது உறுதி! உறுதி யாக இன்று திரும்பிவந்து உணவாவேல்‌ இதில்‌ தவறமாட்ேன்‌. VI—39

என்று அவன்‌ (தாசரி) சொல்ல குறுநகையுடன்‌ கன்னத்தில்‌ அடித்து “ஓ! தாசரி, நன்றாகப்‌ பழுக்க வைக்கிறாய்‌ (ஏமாற்று
கிறாய்‌) காட்டில்‌ வழிப்‌ போக்கர்களைக்‌ கொள்ளையடித்து உடம்பை வளர்த்து வைராக்யம்‌ வந்து நேற்றுத்தானே தாசரி
யானாய்‌! நீ எம்மை எளிதாசு (லேசாக) நினைத்து * கம்பி நீட்டப்‌ (தப்பித்துக்கொள்ளப்‌) பார்க்கிறாய்‌, உன்னை பாராட்டு கிறேன்‌. VI—40
கயிற்றைக்‌ கடிக்க பார்க்கிறாய்‌ என்பது மூலம்‌ பசுக்கள்‌ கட்டிய கயிற்றைக்‌ கடித்து அறுத்து தப்புதலைக்‌ குறிக்கும்‌,

எந்த நாட்டுக்‌ காரனாவது வாயிற்கு வந்த கவளத்தை உன்‌ உபதேசம்‌ கேட்டு விடுவானா? எந்த நாட்டுக்‌ காரனாவது தன்‌
சபதத்தை நிறைவேற்ற தானாக வந்து உடலைத்‌ தருவானாசீ (உயிர்‌ விடுவானா?) இனி உன்னைப்‌ போக விடுவதோ? திரும்பி
நீ வருவதோ! நடக்காதென்பது தெட்டத்‌ தெளிவு. ஏன்‌ வீண்‌ விவகாரங்களும்‌ பலப்பட பேசுவதும்‌? தாழ்ந்த குலத்தவனே / ஏன்‌
ஆலோசனைகள்‌ ஏன்‌ சவலை? IV—41

எனலும்‌ காதுகளைப்‌ பொத்திக்கொண்டு £“நாராயணா’” என்று நாமோச்‌ சாரணை செய்து அவன்‌ (தாசரி) “என்னை நம்‌
பாவிட்டால்‌ என்‌ சபதத்தை நம்புக” என்று ஆயிரமாயிரம்‌ சத்தியப்‌ பிரமாணங்கள்‌ கூறி, அதற்கும்‌ கேளாமல்‌ இருக்கவும்‌. VI—42

“இன்றே நான்‌ எவ்விதத்தேனும்‌ உன்னிடம்‌ வராவீட்‌ டால்‌! “*எவனது பார்வையினால்‌ உலகம்‌ உண்டாகுமோ! எவ
னிடம்‌ இவ்வுலகம்‌ மீண்டும்‌ அடங்குமோ அந்த இருமாலுக்கு இணையாக வேறோரு தெய்வத்தை நினைத்த பாவத்தை நான்‌
அடைவேளாகவும்‌’ £ என்று சூளுரைக்கவும்‌ கேட்டு (இராக்கதன்‌ தாசரியின்‌) கட்டுக்களை அவிழ்த்து விடவும்‌ VI—43

தாசரி திரும்பி வருதல்‌
அவன்‌ (தாசரி) தனது பாவ எச்சமும்‌ இருமாறு கட்டு நீங்கியவனாய்ச்‌ சென்று, அந்த (குறுங்குடி) தாமரைக்‌ கண்ணனாகிய
இருமாலிளை நிலம்‌ வீழ்ந்து வணங்கி, இசைக்கும்‌ வீணையுடன்‌ இன்னிசைப்‌ பாடல்களை செரக்குமாறு பாடி, பின்னர்‌ பொய்க்கு
அஞ்சியவனாக விரைந்தோடி வந்து, விரதம்‌ முடித்த மகிழ்வோடு இரரட்சசனிடம்‌;இவ்விதம்‌ கூறினான்‌. Vi—44

“இராக்கதனே! நின்‌ சிறை நீங்கிச்‌ சென்று திருமாலை வணங்கியதால்‌ முக்தி (வீடுபேறு) கிடைத்தது! இனி எந்தச்‌ சிறை
யிலும்‌ நான்‌ கட்டுப்பட மாட்டேன்‌; இனி நீ என்னை அனுப்பும்‌ போது எந்தக்‌ கால்கள்‌, எந்த வயிறு, எந்த மார்பு,2 எந்தத்தலை,
எற்தக்‌ கைகள்‌ இருந்தனவோ அதே சால்கள்‌, அதே வயிறு, அதே மார்பு, அதே தலை, அதே கைகள்‌ இருக்கின்றதை நீசரிபார்த்துக்‌
கொள்க: *
(இராக்கதன்‌ நம்பி விட்டதற்கு மோசம்‌ செய்யவில்லை. அதே உறுப்புகளுடன்‌ கொண்டுவந்து ஓப்படைத்துவிட்டேன்‌
என்று தாசரி கூறும்போது நகைச்சுவையுணர்வுடன்‌ சாவுக்கஞ்‌ சாத மனத்தெளிவும்‌ புலப்படுகிறது) VI—45

எனலும்‌, அவனது சத்தியத்தைக்‌ கண்டு கண்களில்‌ கண்ணீர்‌ உருள மகிழ்ச்சியுடன்‌ புளகமுற்றவனாக அந்தபிரம்ம ராட்சசன்‌,
நடுப்பகல்‌ கதிரவனின்‌ வெயில்‌ அவனது பெரிய வழுக்கைத்‌ தலையில்‌ பளபளக்க, தாசரியை அருகணைய ஓடிச்‌ சென்று, VI—46

அவன்‌ (இராக்சதன்‌) மலைபோல்‌ பக்தியினால்‌ வலம்வந்து, குறியைச்‌ சுற்றிலும்‌ சுற்றிச்சுழன்று விழும்‌ பாகலம்‌ எனும்நோய்‌
கொண்ட யானைபோல, தனது நெற்றி தாசரியின்‌ பாதத்தில்‌ பட, குரல்முழக்கத்தால்‌ பெருமலைகள்‌ அதிர்ந்தெதிரொலிப்பத்‌
துதித்தவாறு வீழ்ந்து வணங்கி, நீண்டபற்கள்‌ ஒதுக்கி, தான்‌பிடித்த பாதங்கள்‌ ஒவ்வொன்றாக தன்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டு VI—47

இந்த சசுல உலகலும்‌ தேவர்‌, அசுரர்‌, மன்னர்கள்‌, முனிவர்‌சுள்‌, யாவரும்‌ சொல்‌, செல்வம்‌ முதலியவற்றில்‌ சத்தியத்தை
நிலை நாட்டினரேயன்றி உன்போல உடல்‌ தருவதற்காக சத்திய விரதம்பூண்டு நிறைவேற்ற முன்வந்தார்‌ இலர்‌. நான்‌ வயது
முதிர்ந்தவன்‌, இனி, உன்போல சபதம்‌ நிறைவேற்றியவர்‌ இல்லை என்று சபதம்‌ செய்வேன்‌, 41-48

மேலும்‌, பண்ணார்ந்த இன்னிசைப்‌ பாடலாகிய கடலலை களில்‌ நீந்தும்‌ மிதவையாகிய சுரை (வீணை) யமைய, இருக்குறுங்‌
குடி நம்பியின்‌ அருளே பற்றுக்‌ கோடாகக்‌ கொண்டு, பிறவிக்‌ கடல்‌ கடந்து விட்ட உனது உறுதி, உளது ஞானம்‌, உனது சத்திய விரதம்‌, முதலியவற்றில்‌ உனக்கணையாவாரீ பிறருளரோ? 1249

(இராக்கதன்‌ இவ்வாறு) கூறுதலும்‌ அவனை,பாகவதோத்தமனாகிய அந்த தாசரி தழுவியவாறு “ஓ! இராட்சசனே/பாவமற்ற
வனே! ௨ன்‌ கடைச்கண்‌ பார்வையால்‌ பாக்கியசாலியானேனே ! என்‌ விரதம்‌ நிறைவேற்றுவித்தாய்‌/ VI—50

சபதங்கள்‌ வண்டிச்சக்கரம்‌ போல நிலையற்றவை, நம்பமுடியாது. பிராணபயத்தால்‌ இலட்சம்‌ சத்தியம்‌ செய்தாலும்‌
கிடைத்த உணவை விட்டுக்கொடுக்க உனக்குத்தான்‌ முடிந்ததுஅந்தணர்‌ குலத்துதித்தவனே! புண்ணியஜனம்‌ என ராட்சசனை
அழைப்பது உன்னால்தான்‌ பொருள்‌ படைத்ததாகியது, உன்‌மூலம்‌ உன்‌ இருகுலத்துக்கும்‌ புகழ்வாய்ந்தது.
(தீய பாம்புக்கு நல்லபாம்பு என்று பெயரீ வாய்த்தாற்போல தீயோராகிய இராக்கதருக்கு ‘“புண்யஜனர்‌”” என்று இடக்கரடக்‌
கராக ஒரு பெயர்‌ உண்டு. அதனை இராக்கதன்‌ அருள்‌ சேர்ந்த தால்‌ அது பொருள்‌ உடையதாயிற்று என்பது கருத்து) இருகுலம்‌,
அந்தணர்‌ குலம்‌, இராச்கதர்‌ குலம்‌ ஆகும்‌, இவன்‌ பிரம்ம ராட்ச சன்‌ ஆதலினால்‌ இருகுலம்‌ எனப்பட்டது. 81-51

வயிறு பெரும்பசியினின்று கபகபவென்றெரிந்தும்‌ என்‌ கடன்‌ நிறைவேற்ற வேண்டிப்‌ போகவிடுத்தனை! உங்கட்கியல்‌ பான
உணவாக இறைவனால்‌ நாங்கள்‌ (மனிதர்கள்‌) ஏற்படுத்தப்பட்‌டுள்ளோம்‌. ஆதலின்‌ (ந என்னை உண்பதால்‌) எனக்கொருபாவ
மும்‌ இல்லை சூளுரைக்கி3றன்‌. மறுக்காமல்‌ என்பால்‌ நட்புடன்‌ இருப்பாயானால்‌ என்‌ உடலை உன்‌ களைப்பு நீங்க உண்டு மூழ்‌வாயாக: ” V¥—52

இச்சொற்கள்‌ வஞ்சனையின்றி மனதாரச்‌ சொல்கிறேன்‌ . என்பதற்கு பகவானே சாட்சி! ஓ ராட்சசனே! என்‌ உடலிலுள்ள
கொழுப்புநிறைந்த புமாலினை உண்பாயாக” என்றதும்‌ அவன்‌ வருத்தத்தோடு (இரக்கமுடன்‌) கூறினான்‌. VI—53

என்ன சொன்னாய்‌? இப்படி அருளின்றிப்‌ பேசலாமா? இத்‌தனை நாளும்‌ இந்தச்‌ சோறே (நரமாமிசம்‌) இந்த வயிற்றில்‌
வைத்து, பெரும்பாவத்தை அடைந்து, உடலை வளர்த்து, எப்‌போதாயினும்‌ எப்படியாயினும்‌ ஒரு முனிவரோ, ஒரு நோன்பின
ரோவந்து என்னைக்‌ காண மாட்டாரா? அவர்‌ அருளால்‌ இந்தப்‌ பிறவி நீப்பேனாகவும்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்த என்னி
டம்‌ ஓ! புண்ணியாத்மாவே இப்படிக்‌ கூறலாமா? VI—54

தங்களைப்போன்ற பாகவதர்ர்சள்‌, எம்மைக்‌ கடைத்தேற்‌றாவிட்டால்‌ பின்‌ வேறு கதியுண்டோ? எம்மைப்‌ போன்றவர்க்கு
கதி நீங்கள்‌ தான்‌! எமது (முன்னைய) இழிபினைக்‌ கருதாமல்‌, அருள்‌ செய்வாயாக. VI—55

கோடாலியாயினும்‌, அந்தணனைக்‌ கொன்ற கொலைவாள்‌ எனினும்‌, பருசவேதியானது தஙிகமாக மாற்றும்‌. அந்த நியாயப்‌
படி தங்களை அணுகிய எங்களைப்‌ போன்றோசையும்‌ அருள்‌ செய்ய வேண்டாவோச VI—-56

எனவும்‌, உடல்‌ தருவதை வேண்டாமென்று வருந்திக்‌ கூறும்‌எளியதன்மையைக்‌ கண்டு “உன்‌ கருத்து யாவும்‌” என்‌ ஆன்மா
“வின்‌ சசடு (குற்றம்‌) நீக்குவதுதான்‌ அருளாகுமன்றி உடலைத்‌ தருகிறேன்‌ என்று கூறுவது அருளாகுமா? VI—57

சண்டாகருணனணனை விடவா கொடுஞ்செயல்‌ புரிந்தேன்‌? அவையே திருமால்‌ திருத்திச்‌ செல்வமளித்து முக்தி தரவில்லையா
இதைவிட பக்தர்கள்‌ அதிகம்‌ தர இயலுமன்றோ!/ அத்தகைய நலம்‌ எனக்குத்‌ தரக்குடாதா? உயிர்கட்கு நலம்‌ செய்வதுவே
இருமாலுக்குப்‌ பூசை செய்வதாகாதா? VI—58

எனக்கேட்ட தாசரி, அது பொருந்துவதே என்று கூறலும்‌, அந்த ராக்கதன்‌ ”நான்‌ ஒரு பிரம்மராட்சசன்‌, கும்பஜானு எனும்‌
பெயருடையவன்‌, கொடுஞ்செயல்புரிந்தவனாசு, இந்த ஆலமரத்‌தையடைந்து, வஞ்சமாக மனிதர்களைத்‌ தின்று கொண்டிருந்‌
தேன்‌. முற்பிறப்பில்‌ சோமசர்மா எனும்‌ பிராமணன்‌ ஆக இருந்‌ தேன்‌ சென்றபிறப்பில்‌ பிராமணனாக இருந்தமையால்‌ அருளுக
குரியவன்‌. ஒரு தீய செயலால்‌ இவ்விதம்‌ ஆனேன்‌. நீ திருமாலுக்‌குப்‌ பாடிய பாசுரங்களில்‌ புண்ணியப்‌ பயனை நீரோடுவார்த்துக்‌
கொடுப்பாயேயானால்‌ எனது இழிந்த பிறவி நீங்கும்‌. உனக்கு துயருற்றோரைக்‌ காத்த புண்ணியம்‌ இடைக்கும்‌. எல்லா அறக்‌
கருவியாகிய இவ்வுடலும்‌ வீடடையும்‌’*” எனலும்‌ அந்த உடல்‌ குறித்த சொற்கட்கு கலகலவெனச்‌ திரித்து அந்த தாசரி இவ்‌விதம்‌ கூறினான்‌. VI—S9

இதுபோன்ற உடல்கள்‌ மேற்பிறப்பும்‌ கீழ்ப்பிறப்புமாக எத்தனையோ எடுத்திருப்பதில்‌ இப்போதையதொன்று, இத்தகு
இழிந்த உடலுக்காக ஒரு நாளையதன்று ஒருகண நேரம்‌ பாடிய பயளைக்‌ கூடத்‌ தர இசையேன்‌! VI—60

இசைக்கதிபதியாக உடலெடுத்துப்‌ பின்‌ இரறந்துண்ணும்‌ வசைக்கதிபதியாக எத்தனை பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌;
எங்க உடலெடுத்தும்‌ சிறு புழு உடலாகியும்‌ எத்தனை பிறப்‌பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? குஞ்சர (யானை) உடலெடுத்தும்‌
கொசு உடலெடுத்தும்‌ எத்துணை பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? அரச உடலெடுத்தும்‌ அடிமை உடலெடுத்தும்‌ எத்தனை
பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? வேள்வியந்தணர்களாகப்‌பிறந்தோம்‌! சண்டாளர்களாகப்‌ பிறந்தோம்‌! பாம்பு, பேய்‌,
பிசாசு என்று எத்தனை பிறப்புகள்‌ எடுக்காதிருந்தோம்‌!
இருமாலடியாராகும்‌ பிறப்பு எடுக்கவில்லையேயன்றி எல்லாப்‌ பிறப்பும்‌ பிறந்ததிளைத்தோமன்றோ?
(திருமாலடியாராய்ப்‌ பிறந்ததால்‌ பிறவி நீங்கி மோட்சம்‌ பெறும்‌ வாய்ப்புளதாதலின்‌ அப்பிறப்பே சிறந்ததென்பது கருத்து) vI—61

இவ்வுடல்‌ வலைப்பெட்டியிற்‌ பெய்த நீர்‌, சிலந்தி வலையால்‌ முடிந்த மூட்டை இலவம்பஞ்சு. மரத்தில்‌ புழுத்துளைத்த எழுத்து
வெயிலில்‌ வைத்த மஞ்சள்‌, போன்றது. இதனை நம்பி புண்ணியத்தை விற்பது கற்பூரத்தை விற்று உப்பை வாஙிகினாற்‌ போலத்தான்‌.
(மீன்‌ பிடிக்கும்‌ வலைப்பெட்டியில்‌ நீர்‌ தங்காது, அதுபோல நிலையற்றது உடல்‌, சிலந்திவலை நிலையற்றது. வெயிலில்‌
மஞ்சள்‌ பிரகாடிக்காது. புழு துளைத்த எழுத்து புரியாதது எனும்‌ உவமைகள்‌ நிலையாமை, சிறப்பின்மைகளைச்‌ குழித்து வந்தன) VI~—62

என்று கூறவும்‌ இராக்கதன்‌ இவ்விதம்‌ கூறினான்‌ 1-63

சங்கதப்‌ பயனில்‌ ஓ! தாசரி! பாதியாகிலும்‌ அருள்‌ கூர்ந்து ஈவாயாக! மீன்‌ குடித்த ஒரு மடக்கு நீரால்‌ கடல்‌ குறைவு படுமா?
இருமாலைப்‌ பாடிய புண்ணியம்‌ (ஒரு சிறிதீவதால்‌) குறைவுறாது-6-64-

உடலை விடுத்து புண்ணியம்‌ கேட்டு ஏன்‌ தொந்தரவு செய்‌கிறாய்‌? என்னை வி$ூவித்தபோது உடலுக்காகசீ சூளஞூரைத்‌
தேனா? திருமாலை (வாமனனை) பாடிய பயனுக்காகச்‌ சூளுரைத்‌தேனா? பாதாளம்‌ மட்டும்‌ பாயும்படியான (கடினமான) கேள்வி
களை விடுத்து உடலைக்‌ கைக்கொள்க. கிணறு வெட்டப்‌ பூதம்‌புறப்பட்ட கதையாக நீ நினைத்த காரியம்‌ மட்டும்‌ கைகூடாது.VI—65

எனலும்‌, இராக்கதன்‌, மிக வருந்தி, காரியத்தில்‌ ஆர்வமுடன்‌ கண்ணிரை அடக்கிக்‌ கொண்டு, “அந்தோ! திருமால்‌ அடியார்கள்‌
அருளுடையவர்கள்‌ ஆக இருக்க வேண்டாமா? முன்பு தரிசளப்‌ பிரவார்த்தகராக பிரம்ம சாத்திரங்கட்கு வியாக்கியானம்‌ எழுதத்‌
திருமாலின்‌ விசிஷ்டாத்துவித சித்தாந்தத்தை நிலை நிறுத்திய ஸ்ரீராமானுஜ முனிவரரீ, நெடுநாட்‌ பணிவிடை செய்தமையால்‌
மகிழ்ந்த பெரிய நம்பி (திருக்கோட்டியூர்‌ நம்பி) எனும்‌ ஆரியர்‌, தகுதியிலார்க்குக்‌ கூற வேண்டாம்‌ என்று கூறி முறைப்படி தனக்‌
கருளிய கதையின்‌ சரமசுலோகப்‌ பொருளை இரக்கம்‌ மிக்கவராக அரங்கநாதனின்‌ தாமோதரம்‌ எனும்‌ தங்கக்‌ கோபுரத்திலேறி
நின்று, பெருங்குரலில்‌ அம்மந்திரப்‌ பொருளை அறிவிக்க, ஆசாரியர்‌ சினந்து கூறவும்‌ “தேவரீர்‌! தேவரீருடைய ஆணையை
மீறியதால்‌ நான்‌ ஒருவன்‌ மட்டுமே ரெளரவ நரகில்‌ வீழ்தல்‌ நன்றோ! பாகவதர்‌ கூட்டத்திற்கு பரமபதம்‌ காட்டுவித்தல்‌
நன்றோ என ஆராய்ந்து தாங்கள்‌ கூறியதாகவே கருதிக்‌ கூறினேன்‌’” என்று கூறி பாராட்டப்‌ பெற்றார்‌. அவர்‌ தனது
சடர்கட்கு நான்தோறும்‌ காலையில்‌ விலைபெறாமல்‌ பாலும்‌ தயிரும்‌ தந்து வேண்டிய இடையர்‌ தம்பதிகட்கு பரமபதம்‌
அருளினாச்‌. அவ்வுடையவரே முக்தி பெற்றும்‌ மற்றொருபிறப்பில்‌ அஞ்ஞானிகட்கு வீடு பேற்றின்‌ சுவை தெரியுமாறு
சுந்தர ஜாமாத்ரு (அழகிய மாப்பிள்ளை) என்ற பெயரில்‌ அர்ச்சி ராதி மார்க்கங்களைப்‌ பற்றி விளக்கினார்‌. அவரே எதிர்காலத்‌
இல்‌ யாதக௫ிரி (திரு நாராயணபுரம்‌) பகுதியில்‌ பாசன்டி (பிழ மதத்தின.) மிகுதயாகவே அவர்களை ஒழித்துக்கட்ட சடகோபர்‌
(ஆதிவண்‌ சடகோ. ஜீயர்‌) எனும்‌ பெயரில்‌ பிழந்து இடையறாதபிரசாரத்தால்‌ ஆந்‌ சர நாடு முதலிய இ.ங்களில்‌ அறிஞர்கட்கு
பகவத்‌ விஷயமாகிய வாதங்களை இரந்து கேட்டு திக்விஜயம்‌ செய்து கருடாசல குகையில (அகோ பிலத்தில்‌) நரசிங்க சுவாமியய
கபடசன்னியாசியாக வந்‌, கமண்டலமும்‌ கஷாயமும்‌ இரிதண்டி யூம்‌ அருளப்‌ பெற்று சனனியாச ஆ௫௪ரமத்தை ஏற்று பதஞ்சலி,
கணாதர்‌, அக்கபாதர்‌, பாதராயணர்‌ (வியாசர்‌) கபிலர்‌ ஜைமினி ஆ௫ூயோரின்‌ அறுவசைத்‌ தரிசனங்களின்‌ தத்துவங்களை மடத்தி
லுள்ள அந்தணருள்ளிட்ட டர்கள்‌ அனைவர்க்கும்‌ போதித்து,துறவிகட்கு எடுத்துக்காட்டாக நின்று தன்னை அடைந்த உலகி
லுள்ள மக்கள்‌ இதயமெல்லாம்‌ இருமகளும்‌ திருமாலும்‌ உறைவிட.மாகச்‌ செய்து, காமக்‌ குரோதங்களாகிய முள்ளினைத்‌ துடைத்து
பரிசுத்தமாக்கி பக்தியைப்‌ போதித்து உலகைப்‌ புனிதப்படுத்துவார்‌. மேலும்‌, ஹயக்கிரீவரை ஆராதனை செய்யும்‌ வெங்க
டேசன்‌ (வேதாந்த தே9கர்‌) எனும்‌ இன்னொரு ஞானி, திருமவின்‌ மதத்தினை விளக்கிக்‌ கூறும்‌ நூறு நூல்களை யாத்து, உஞ்ச விருத்தி செய்யும்‌ துறவியாகி தவமியற்றி தனக்கு முதிர்ந்த இலைகள்‌ தந்து அகத்திமரத்துக்கு வீடு பேரளிப்பான்‌.
இத்தசைய எதிர்கால சோதிடங்கள்‌ (ஹேஷ்யம்‌) எனது திவ்விய ஞானத்தால்‌ அறிந்திருப்பேன்‌.*
இத்தகைய முக்காலமும்‌ உணர்ந்த ஞானம்‌ இருத்தலினால்‌ இந்த உடல்‌ பாராட்டத்‌ தகுந்ததல்லவா எனலாம்‌. இது
பிறப்பால்‌ வந்ததன்று, சமம்‌, தமம்‌ முதலிய சாதனையால்‌ வந்த தன்று. குறத்தி குறி சொல்கிறாள்‌. அவள்‌ புனிதமானவளா?
ஆந்தை, காட்டுக்‌ கோழி, பல்லி, கரிச்சான்‌ குருவி, தங்கக்கண்‌ குருவி முதலிய விலங்கு பறவைகள்‌ கூட சகுனம்‌ கூறுகிறது. அவை
யெல்லாம்‌ எதிர்கால சூசனைகள்‌ செய்வதால்‌ தவசியர்‌ ஆவரோஅவற்றைப்‌ போன்றுதான்‌ எமது விஞ்ஞானமும்‌. எப்படி.
என்றால்‌ நாத்திகத்தனால்‌ (இறை நம்பிக்கையின்மையால்‌) சாத்திரங்களைக்‌ கற்றதன்றி அதன்படி. நிற்றல்‌ என்பதில்லை.
பிறரையும்‌ கற்பித்து ஒழுக்கமாக நடக்குமாறு செய்ததுமில்லை.ஆதலின்‌ அறநெறி எமக்கு வெகுதூரம்‌, ஆதலின்‌ பிறவி நீத்தல்‌
இயலாது. ஆதலின்‌ மாசற்ற புனித உடலாலன்றி மோட்சம்‌
கிடைக்காது, ஆகையினால்‌ இந்த குரூபமான உடலை நீங்க, புனிதனாவதற்கு அருள்‌ செய்வாயாக”* என்று பாதங்களில்‌
வீழ்ந்து பாடிய பாட்டில்‌ புண்ணியம்‌ கால்பங்காவது தருக என்றும்‌, அவன்‌ அதையும்‌ மறுக்கவே, **சரி! இன்று காலையில்‌
பாடிய கடைப்‌ பாட்டின்‌ பயனாவது தருக?” என்று மன்றாடிக்‌ கேட்கவே மனமிரங்கி, “அப்படியே யாகட்டும்‌’* என்று கூறி
அவன்‌ அவனை எழுமாறு செய்து, இந்த உடல்‌ கிடைத்த விதம்‌யாது என விளக்கமாகக்‌ கூறுக எனலும்‌, கேட்பாயாக என்று
அப்புலாலுண்போன்‌ (இராட்சசன்‌) துக்கத்துடன்‌ இவ்ிசம்‌கூறினான்‌;-VI—66

பமபிரம்மராடசசன்‌ கதை புராணத்திலுள்ளது. அவன்‌ கூறுவ தாகபிற்கால ராமானுஜர்‌, ஆதிவண்‌ சடகோபர்‌(அகோபில
மட முதலாம்‌ ஜீயர்‌) வேதாநத தேசிகர்‌ வரலாறு கூறுவது கால முரண்‌ ஆகும்‌. ஆதலின்‌ பிரம்ம ராட்சசன்‌ எதிர்கால ஞானம்‌
உடையவனாக கூறியதாகக்‌ கவிஞர்‌ அமைதி கூறியுள்ளார்‌.

குறிப்பு – வேதம்‌ வெங்கட்ராய சாஸ்திரி அவர்கள்‌ விளக்க வுரை நூலில்‌ இத்துடன்‌ ஆறாம்‌ அத்தியாயம்‌ முடிகிறது.

அடுத்து ஏழாம்‌ அத்தியாயம்‌ வருறங. சில பிரதிகளில்‌ இவ்விதம்‌ உள்ளனவாம்‌. வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்திரி விளக்கவுரை
நூலில்‌ இத்துடள்‌ முடியாமல்‌ தொடர்ந்து நூலிறுதிவரையும்‌ ஆறாம்‌ அத்தியாயம்‌ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாவது 65 ஏழாவது 73 பாடல்கள்‌ இருப்பதாகக்‌ கூறுவதைவிட 139 பாடல்களுடைய ஒரே அத்தியாயமாக கொள்வதே பொருத்தம்‌
என்று வாவிள்ள கூறுவது சரியாகவே தோன்றுகிறது. எனினும வேதம்‌ வெங்கட்ராய சாஸ்கிரியாரைப்‌ பின்பற்றி ஆறாவது
அத்தியாயம்‌ ஏழாவது அத்தியாயம்‌ என்றே பாகுபடுத்தி யுள்ளோம்‌.

பிரம்மதேவன்‌ இருடிய கன்றுகளையும்‌ குழந்தைகளையும்‌ போலத்தானே அவ்வவ்வுருவாகி, பசுக்களுக்கு கன்றுகளாய்‌
ஆயர்‌ மடந்தையர்க்குக்‌ குழந்தைகளாய்‌ அமைந்து இன்பம்‌ ஊட்டிய பெருமைமிக்கனே! அசுவத்தாமன்‌ விடுத்த அம்பால்‌
உத்தரையின்‌ கருவான பரீட்சித்து கருகும்‌ நிலையில்‌ இருக்க காத்த கண்ண3ேே/ சூரிய சந்திரர்கள்‌ கண்களாக உடைய
பெருமானே 71-௦7

எப்போதும்‌ புதிய புதிய காதல்‌ விளையாட்டுக்களால்‌ ஆயர்‌ குல மடந்தையர்களை இன்புறுத்தயவனே! துறவியரின்‌ மன
மாய பொய்கையில்‌ விளையாடும்‌ அன்னப்‌ பறவையாகியவனே! மணம்‌ மிக்க உருவுடையவனே. VI—68

நளன்‌ முதலான சக்கரவர்த்திகள்‌ காணிக்கை தநீத விலை மதிப்பற்ற மகுடம்‌ முதலிய அணிகளை யணிந்துள்ள வேங்கடே
சனே! ஓளி மிக்க உருவினையுடையவனே [ தேவர்களின்‌ பகைவர்‌ களை அழிப்பவனே [ சகல பிரம்மாண்டங்களின்‌ தலைவனே!
தரயவனே!/ அளப்பரிய குணநலன்களால்‌ சான்றோரை மகழ்‌ வித்துக்‌ காத்தருள்பவனே. VI—69

இஃது நைராமன (நைஜாம்‌) எனும்‌ யவன மன்னனின்‌ (முஸ்லிம்‌ அரசனின்‌) பெரிய விண்முட்டும்‌ கோட்டைகளைத்‌
தகர்க்கும்‌ பயங்கரமான யானைப்‌ படைக்கு மூன்‌ செல்லும்‌ இருஷ்ணதேவராயர்‌ எனும்‌ பெயருடைய எனது அமுக்த மால்யத
எனும்‌ காவியத்தின்‌ இனிய செய்யுள்‌ களுடைய ஆறாவது அத்தியாயம்‌. Vi—70

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஐந்தாம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஐந்தாம்‌ அத்தியாயம்‌
திருமகள்‌, நீளாதேவி (நப்பின்னை) ஜாமபவதி ஆகிய தேவியரின்மனத்தாமரையில்‌ வண்டென உறைபவனே[/களிந்த மலைபி
லிருந்து வரும்‌ யமுனை நதிபோல கருவண்ண எழில்‌ பொங்கும்‌அழகனே! எல்லையற்ற பாதங்களும்‌ தலைகளும்‌ கண்களும்‌
உடையவனே! சேடமலைபில்‌ வாழ்‌ சிங்கமே! (சேடமலை திருமலை) V-1

கேட்பரயாக/ அந்த விட்டுசித்தன்‌ (பெரியாழ்வார்‌) V-2

மாந்தளிர்கள்‌ நிறைந்த பூம்புதர்களிடையே, படுக்கை யமைத்துக்‌ காதலர்‌ மேலமரீந்து காதலுணர்வுமிக்க காரிகையார்‌
கலந்தின்புற்றுக்‌ களைத்து நெட்டுயிர்ப்பு மிகவே மீண்டும்‌ தாம்‌ மூன்போலவே (ழே) அமர்ந்து கலவிப்போரில்‌ தோற்கவே
அதைக்‌ கண்ட மன்மதன்‌ அவரை விரட்டியெறிந்த(வாள்‌ வீச்சுக்‌) காயமோ எனும்படியாக முதுகில்‌ ஒட்டிய மாத்தளிர்கள்‌
தோன்றும்‌ பூந்தோட்டத்தில்‌ ஒரு நாள்‌, * V—3

* இளவேனிற்‌ காலத்தில்‌ மாந்தளிர்கள்‌ சிந்திக்‌ கடந்த பூந்தோட்டத்தில்‌ பெண்கள்‌ காதலுணர்வுமிக்கவர்கள்‌ தாமே
ஆண்போலப்‌ பாவித்துக்‌ கலவி செய்தனர்‌ என்ற இந்த வருணனை இருஷ்ண தேவராயர்‌ ஆண்டாளின்‌ அறிமுகத்துக்கு
முன்பு வைத்துள்ளாஈ. இதில்‌ தொனியிருப்பதாக நான்‌ கருது கிறேன்‌. வேதம்‌ வேங்கட்ராய சாஸ்திரியோ, வாவிள்ள ராமசாமி
சாஸ்திரியோ இப்படி தொனி இருப்பதாக சிந்திக்கவில்லைதான்‌ எனினும்‌ பூந்‌ தோட்டத்தை வருணிக்காமல்‌ காம உணர்வு மிக்கு
காதலர்களை ஏன்‌ வருணித்தார்‌? என்பது ஆராய்வுக்குரியது.

ஒரு படைவீரன்‌ தோற்றால்‌ அந்தப்‌ படைதி தலைவனே அந்த வீரனின்‌ முதுகில்‌ அடித்து இழிவுபடுத்துவான்‌ வாள்‌ வீசித்தாக்க அவமானப்படுத்துவான்‌. என்பது மறபு. அது போலவே கலவிப்‌ போரில்‌ இந்த நங்கை தோற்று ”புருஷாயத கேளி” யிலிருந்து மீண்டும்‌ பழைய நிலைக்கு வந்ததால்‌ மன்‌
மதன்‌ தோற்றவரை வாளால்‌ வீரி காயம்‌ உண்டாக்களொன்‌. அந்த காயம்‌ தான்‌ எனுமாறு மாந்தளிர்‌ முதஇல்பட்டிருந்தது என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. V—3

அசன்ற ஒரு காட்டுப்பாதையில்‌ மர நிழல்பட்டு மரகதத்‌ இண்ணையபோல்‌ தோன்றும்‌, வெண்பளிங்குத்‌ தஇண்ணையில்‌
வெண்காமரைப்‌ பொய்கைக்கருகில்‌, துளசி வனத்தில்‌, மங்கள கரமான இலட்சணங்களோடு கூடிய பதுமராகப்‌ (செம்மணி)
பாளங்கள்‌ போன்ற சேவடிகள்‌, உள்ளங்கை, இதழ்களை யுடைய ஒரு பெண்‌ குழந்தையைக்‌ கண்டான்‌. vV—4

கண்டு, வியப்புற்று, அருகணைற்து, மென்மை, மேனிஎழில்‌ சுபலட்சணங்களையும்‌, கண்ணிமைக்காது சிறிது நேரம்‌
பார்த்து, **ஆகா! குழந்தையற்ற எனச்குத்‌ திருமாலே மகளாக இக்தழந்தையைத்‌ தந்தருள்‌ கூரீந்தான்‌’ £* என்று கூறி மூழ்ந்த
வனாக, V—5

கொண்டுபோய்‌, தன்‌ இல்லக்கிழத்தியினிடம்‌ அன்போடு தந்திடவும்‌, அவளும்‌ சுரந்த தன்‌ முலைப்பாலுடன்‌ செல்லமாக
வளர்த்தாள்‌. இப்படி வளரிந்து வரும்‌ நாளில்‌ உதடுகள்‌ (வாய்த்திரை)* முன்போல விரைந்து பேச
வில்லை. கூந்தல்‌ வளைந்து நெளிந்து இயன்றன. செல்வம்‌ சேரீந்ததால்‌ அரைவிழியோடு கண்டன. முகம்‌
புருவங்கள்‌ நெரித்து, விளையாடக்‌ கற்றன. முலைகள்‌ வளர்ந்த மாரீபானது குழந்தைமையை அலட்சியப்படுத்தியது. பாதங்‌
களும்‌ கைகளும்‌ சிவந்தன. இடை வறுமைப்பட்டது. உடல்‌ பயிர்ப்பினை உற்றது. உந்தி வெறும்‌ ஆழத்தைக்‌ காட்டியது.
இவ்விதமாக நாள்தோறும்‌ முன்னைய அன்புகுறைந்து விடலாலே இஙிகிருக்கக்‌ கூடாது என்று குழந்தைமையானது அகன்றது.

(குழந்தைமை நீங்கக்‌ கோதைகுமரியானாள்‌ என்பதுகருந்து]-5-7-
* உதடுகட்கு தெலுங்கில்‌: *வாதெற்‌ எனும்‌ அழகிய சொல்‌ உண்டு, வாய்த்திரை என்பது பொருள்‌, ்‌

அவளுக்கு முதலிலிருற்து இருக்கிற மேனியின்‌ பொன்‌ வண்ணத்தினாலோ, இதழின்‌ செம்மையாலோ, முகமதியின்‌ வெண்ணில வொளியினாலோ பெயர்‌ அமையவில்லை.
(பொன்‌ மேனியள்‌, செவ்விதழினள்‌ என்றில்லாமல்‌)அவளது கருங்கூந்தலின்‌ வண்ணத்தால்‌ மாமை நிறுத்தினாள்‌ (சியாமங்கி) என்ற பெயரை அடைந்தனள்‌, உடலில்‌ தலையே பிரதான மானது எனும்‌ பழஞ்சொல்‌ சரியானதுதான்‌, தலை முடிக்‌ கூந்தல்தானே பெயரிட வைத்துள்ளது.
(வடமொழியில்‌ சியாமளா என்றால்‌ இளம்‌ பருவப்பெண்‌ என்று பொருள்‌, இச்சொல்லைக்‌ கொண்டு சியாமளா (மாமை
நிறம்‌) எனும்‌ பண்புக்கு கூற்தலைக்‌ காரணம்‌ காட்டி கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-8-

(இக்‌ கோதை திருமாலை மயக்கிடற்குள்ளாள்‌ ஆதலின்‌), ஒரே சக்கர த்தனையடைய கண்ணனை, கைகலப்புப்‌ போரில்‌
வெல்வதற்காக முயலும்‌ மன்மதனுடைய உருக்குச்‌ சக்க்ரங்‌ சளோ(இரும்பு வளையஙிகள்‌) எனுமாறு. அந்‌ நங்கையின்‌ சுருண்ட கூந்தல்‌ அமைந்தது,
(மோதிரங்கள்‌ போல சுருள்‌ சுருளாகப்‌ படியும்‌ கூந்தல்‌ உருக்காலான சக்கிரங்களாக உவமை கூறப்பட்டுள்ளது) 1/9

கருப்பூரத்திலகத்தினால்‌ வெண்மை ஒளி படிந்த அவள்‌
நுதலில்‌ படிந்த கருங்கூந்தல்‌, பிரம்ம தேவன்‌ இவள்‌ எல்லாப்‌ பெண்டிர்கட்கும்‌(சீமற்தனி) மேலாக செல்வ வளத்துடன்‌
இிகழ்வாள்‌ என்று எழுதிய எழுத்துக்களின்‌ வரிசை போலத்‌ தோன்றியது.
(பிரம்மன்‌ நெற்றியில்‌ எழுதுவதாக ஐ$ூகம்‌, தலைஎழுத்து என்பர்‌. வெள்ளைக்காகிதத்தில கருப்புமையால்‌ எழுதிய
எழுத்துக்கள்‌ போல கற்பூர திலகமிட்ட நெற்றியில்‌ சுருண்ட. கூந்தல்‌ படிந்தது என்பது கருத்து) V-10

ஒப்பனை செய்யும்‌ தோழியர்‌, கோதையின்‌ முகத்தை மேல்நிமிர்த்திக்‌ கண்கட்கு மை தட்டும்போது கண்கள்‌
தோழியரின்‌ முகமாகிய நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ கண்டது,
அதனால்‌ இவள்‌ முகஎழிலை சற்திரன்‌ கவர்ந்திட மக்கள்‌, சந்திரனின்‌ எழில்‌ தான்‌ இவள்‌ சுவர்ந்தாள்‌ என்று கூறுவர்‌.
(நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ காணல்‌ நன்றல்ல எனும்‌ ஐதிகத்தை ஒட்டிக்‌ கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-.11

கண்ணிணை(மதியிலுள்ள) கஸ்தூரிமானன வெல்ல, அப்பழி தீர்க்க வேண்டி அந்தமான்‌, மதியைத்‌ தூண்டவும்‌, சந்திரனும்‌
முகத்திற்குத்‌ தோற்று முகத்தின்‌ மணம்‌ தனக்கில்லை, ஒளி தான்‌ உண்டு எனப்பின்‌ வாங்கவும்‌’ கஸ்தூரிமான்‌ மணம்‌ தர
சந்திரனையடையவும்‌, அந்த மானின்‌ மீது பகைபூண்ட அந்த நங்கை (பகைவரின்‌ குருதியால்‌ திலகமிட்டுப்‌ பழி இர்ப்பது
போல்‌) மானின்‌ குருதியால்‌ திலகமிட்டாளேயன்றி மணம்பெறு தற்கன்று எனுமாறு பச்சைக்‌ கஸ்துரி திலகமிட்டாள்‌.
(கஸ்தூரி மானின்‌ அஸ்டகோசத்திலுள்ள சுரப்பியால்‌ கஸ்துரரிஎனும்‌ மணப்பொருள்‌ வெளிப்படும்‌. அதைத்‌ திஎகமிட
மரபு. இங்கு மான்கண்ணை வென்ற மங்கையின்‌ முகல்ம்‌ மதியையும்‌ வென்று விட்டதாம்‌. மானின்‌ மீது பழி தீர்க்கவே
திலகமிட்டாள்‌ என்பது கற்பனை)
கஸ்தூரிமான்‌ சந்திரனுக்கு மணம்‌ தந்ததாகவும்‌. அதனால்‌ பகைபூண்ட நங்கை, கஸ்தூரியின்‌ இரத்தத்தால்‌
இலகமிட்டுப்‌ பழி தீர்த்தால்‌ என்பது கருத்து) 412

கருவிழிகள்‌ கடைச்கண்களில்‌ அடிக்கடி சென்று மீண்டும்‌ விரைந்து வருவதாகி நாணோடு கூடிய அவளது பார்வைகள்‌,
மன்மதன்‌; வில்லில்‌ குறி வைத்து நாணிற்பூட்டிய கருங்குவளை மலர்களோ எனுமாறு இருந்தன . V—13

புது இளமையாகிய மதுவின்‌ மயக்கத்தால்‌ கருவிழிகள்‌ ஐடி காதுகளாகிய இணற்றில்‌ வீழ்ந்து விடுமோ என்றஞ்சிய பிரமன்‌
அதைத்‌ தடுக்க வைத்த தளைகளோ (சங்கிலி) எனுமாறு மை இட்டிய கண்ணிணையில்‌ பொருத்தி எழிலூட்டின .
(மதங்கொண்ட யானைகள்‌ இணெற்றில்விழுந்து விடாமல்‌சங்கிலியாற்‌ பிணைத்தற்‌ போல கருவிழிகள்‌ செவியாகிய
சணெற்றில்‌ விழாது தடுக்க இமையாகய சங்கிலியைப்‌ பிணைத்த தாகக்‌ கதிபனை) 5-14

(உலகில்‌ சுமங்கிலியான சகோதரியின அணிகளற்ற வெறம்‌ காதினைச்‌ சகோதரன்‌ பார்ப்பது பாவம்‌ என்பது மரபு ஆதலின்‌)
அவள்‌ காதுகள்‌ ஸ்ரீ(திரு) எனும்‌ (தெலுங்கு) எழுத்தைப்‌ போன்றிருக்கும்‌, திருமகள்‌, கூடப்பிறந்த சந்திரன்‌ ஆகிய முகம்‌
பத்தாடும்போது காதணி &மே வீழ்ந்துவிட்டதால்‌ அக்காதினளை பார்க்கக்‌ கூடாது என்று தலையைற்‌ தோளோடு சேர்த்து
மறைத்து காதணியுடைய பக்கத்தைக்‌ காட்டவே கம்மல்கள்‌ தள.தளக்க பந்தாடி மகிழ்ந்தாள்‌. V—I15

சம்பகப்பூப்‌ போன்ற நாசியை வண்டுகள்‌ முகர அஞ்சினும்‌ அவள்‌ பேசும்‌ போது வண்டுகள்‌ மொய்க்கும்‌, அவள்‌ வாயில்‌
எற்த மணம்தான்‌ இல்லை? அவளது முல்லைப்பூ போன்ற பற்களில்‌ பிரதிபலிக்கும்‌ தம்‌ உருவைக்‌ கண்டு வண்டுகள்‌ மயங்கி
மொய்த்துக்‌ கடக்கும்‌, V—I16

சங்களைப்‌ போல முன்பு பிரமன்‌ அத்‌ தாமரைக்‌ கண்ணி னாளின்‌ கழுத்திஎனப்‌ படைத்தான்‌. இளமை வந்ததும்‌ மீண்டும்‌
மென்‌ சந்தளப்‌ பூச்சென, அதன்‌ (உருவத்தோடு) வண்ணமும்‌ சேர்ந்து எழமில்பெற்றது. V—17

தாமரை இதழ்போன்ற கண்ணை உடைய அவளது சங்கேதத்தில்‌ திகழும்‌, மந்திர, மத்திய தாரம்‌ எனும்‌ மூன்று
சுரங்களில்‌ இருப்பிட எல்லைகளை வரைந்து காட்டியது போல அவள்‌ கழுத்தில்‌ வரைகள்‌ “மூன்றும்‌ திகழ்ந்தன. V—18

நங்கையின்‌ மெல்லிய தோளிணைகளாகிய தாமரைத்‌ குண்டுகள்‌, தாமரைத்‌ தண்டின்‌ திருவிளை (அழடஏளனை) சுவர்ந்து
கொண்டன. அதனால்‌ திருவிழந்த தாமரைத்தண்டு நெறிமுறிந்து
(செல்வத்தோடு கூடிய தன்‌ வாழ்க்கை நெறி கெட்டு) வறுமைப்‌
பட்டதால்‌ தன்‌ தேகயாத்திரை (உடல்‌ ஓம்பும்‌ வாழ்க்கை) நூல்‌
நூற்பதால்‌ கழித்துக்‌ கொண்டிருந்தது.
(வறுமையுற்றார்‌ நால்‌ நூற்றுப்‌ பிழைப்பர்‌. அதுயோல்‌ துரமரைத்‌ தண்டின்‌ திரு (அழகு) வினை நங்கையின்‌ தோள்கள்‌
சுவர்நீிது கொண்டதால்‌ வறுமையுற்றதாம்‌. நூல்‌ நூற்று வாழ்ந்ததாம்‌. தாமரைத்‌ தண்டினை முறித்தால்‌ நரல்‌ வரும்‌.
அதுனை நரல்‌ நூற்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது.) ‘

அநீநங்கையின்‌ கழுத்துக்குக்‌ கீழும்‌ முலையிணைக்கு மேலும்‌ அகன்று நீண்டு குறுக்காக உள்ள மார்பில்‌ இகழும்‌ மாலை
யில்‌, தோள்‌ வளையிலுள்ள மணிகள்‌ பிரதிபலித்து, மன்மதன்‌,
ரதிதேவிக்கு திருமண காலத்தில்‌ சூட்டிய நெற்றிச்‌ சுட்டியோ எனுமாறு இகழ்ந்து. V—20

அவளுக்கு இளமை உருவாகி உடலினின்றும்‌ ததும்பி வெளிப்‌ போதலும்‌, முந்தானையும்‌ வெட்சுமும்‌ அதனை உள்ளுச்‌
கனுப்பி அழுத்தவும்‌, (இளமை எனும்‌ எழிற்சாறு) முதிர்ச்சி யுறாத இளம்பாகமாதலின்‌ வெளிப்படவும்‌ இயலாது, உட்‌ புகவும்‌ இயலாது. பிதுங்கி மார்பிடத்ரல்‌ இருபுறமும்‌ அடங்கிக்‌ கிடக்கவும்‌ பின்‌ நாட்படவும்‌ வலிமையுற்று வளர்ச்சியுற்ற தெனதங்கையில்‌ நூல்கள்‌ (முலைகள்‌) ஒளிர்ந்தன.
(உடலிலிருந்து வெளிப்பட்ட இளமை எழிலும்‌ நாணமும்‌,
முந்தானைகளால்‌ உள்ளே அடக்கப்படவும்‌, உள்ளும்‌ புக இயலாது, வெளிப்படவும்‌ இயலாது. அங்கேயே பிதுங்கிக்‌
கிடந்தது போல முலைகள்‌, பருத்துச்‌ செழித்தன என்பது கருத்து) குரும்பை முலையுடன்‌ கூடவே நாணம்‌ கூடுதலும்‌,
தூவணியில்‌ மறைத்தலும்‌ எண்டு கூறப்பட்டது) 5-21-

இராமனது சாபம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடவும்‌ இறுதியில்‌ இணைந்த சக்கரவாகப்‌ பறவை (அன்றில்‌) இணை போல மார்பு முழுவதையும்‌ கவர்ந்து கொண்ட முலை யிணைகள்‌ இணைந்து கொண்டன, அப்பறவைகள்‌ மூக்குப்‌ போல முலைக்‌ கண்கள்‌ இளங்கருப்புடன்‌ திகழ்ந்தன.
(இராமன்‌ சீதையின்‌ பிரிவில்‌ துயருற்மபோது சக்கிரவாசுப்‌ பறவைகள்‌ களித்தின்புறம்‌ ௪ண்டு, சினந்து பிரிவறும்படி சபித்த தாக ஒரு கதை இங்கு கூறப்பட்டுள்ளது. எத்த சாபமும்‌ இரண்‌ டாயிரம்‌ ஆண்டுகளுக்குள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடும்‌ என்பது ஐதீகம்‌, அதன்படி பிரிந்து தனித்தனியாக இருந்த மூலைகள்‌, வளர்ந்து செறிந்து ஒன்று கூடின என்றும்‌ அவை oa een போன்றுள்ளன என்றும்‌ கூறப்பட்டுள்ளன 5-22-

தாம்‌ எப்படியோ அப்படியே தம்மைச்‌ சேர்ந்த முத்துச்சரத்‌ தையும்‌ அவள்‌ முலைகள்‌, இரு பக்கத்தையும்‌ இணைவித்து ஒன்றாக்கின. பெரியவர்கள்‌ தம்மைச்‌ சாரீந்தோரிக்கும்‌ தமத ஒழுக்கத்தை ஈவார்கள்‌ அன்றோ?”
(முத்து மாலையின்‌ இருவடங்களும்‌ முலைகள்‌ மேல்‌ நில்லாது முலைச்‌ சந்தின்‌ ஒன்று கூடி இணைவது இயல்பு. அதனை, எப்படி முலைகள்‌ இரண்டும்‌ ஒன்றோடொன்று செறிந்து சொண்டனவேோ அதுபோல முத்துமாலையின்‌ இரு பக்க வடங்களையும்‌ ஒன்றாக ஆக்க. சான்றோர்களைச்‌ சேர்ந்தவர்களும்‌ சான்றோர்‌ பண்பு களை அடைவார்கள்‌ என்ற கருத்தினை மெய்ப்பிப்பது போலுள்ளது என்பது கருத்து.) V—23

பிரிவின்‌ மெலிந்த பெண்டிர்‌ மீது சினந்து மன்மதன்‌ விரைந்து பொன்னுறையுடன்‌ கூடிய வாளினை எறியவும்‌, உறையின்‌ தையல்‌ அறுந்து வாள்தோன்றியது போல பொன்னெழில்‌ இடை யூடாக மயிரொழுங்கு (வளி) தோன்றியது.
(பொன்னுறை வயிறாகவும்‌, தையல்‌ பிரிந்து நடு3வ தோன்றும்‌ வாள்‌ மயிர்‌ ஒழுங்காகவும்‌ உவமிக்சப்பட்டது.) 1.24

அன்னமென்னடையாளின்‌ உயிர்ப்புக்‌ சாற்றினை அவாவி, உந்திப்புற்றிலிருந்து புறப்பட்டு வந்து முளைக்குவடுகளின்‌ கடு போந்தூரும்‌ பாம்போ எனுமாறு அவளது மயிரொழுஙிகு எழில்‌ பெற்றிலங்கியது, V—25

நங்கை நிற்கும்போது அவளது மென்தோளும்‌ இடையும்‌ உலகினர்‌ காணுமாறு மணிகள்‌ மிடைந்ததோள்‌ வளையும்‌,
மேகலையும்‌ அணிவதாலும்‌, மயிரொழுங்கு அமைந்ததாலுமே தோன்றின,
(காணரிய இடையும்‌, மென்தோாளும்‌ அணிகள்‌ அணிவதால்‌ இருப்பது புலப்பட்டது என்பது கருத்து.) V—26
உடல்நடுவிலுள்ள (வயிற்றிலுள்ள) மும்மடிப்புகன்‌ எனும்‌ தங்கத்‌ துண்டுகளை பற்றவைத்திணைக்க அதே சாதியைச்‌

சார்ற்த தங்கத்தகுடு மன்மதன்‌ வைத்தான்‌ எனுமாறு ஒட்டியாணம்‌ அவளுக்கு எழிலூட்டியது.
(பொற்கொல்லர்‌ தங்கத்தை இணைக்க த௫கத்‌.தகட்டினை பயன்படுத்துவதுபோல, மன்மதன்‌ எனும்‌ பொற்கொல்லன்‌, அவளது வயிற்று மடிப்புகள்‌ (வளி) எனும்‌ துண்டுகளை இணைக்கும்‌ தங்கத்தசடு ஆக ஒட்டியாணம்‌ இருந்தது என்பது கருத்து.) V—27

மெல்லிடையாகய கொடி, நிதம்பம்‌ (புட்டம்‌) ஆய பாரத்‌தால்‌ அறுந்துவிழக்கண்ட பிரம்ம தேவன்‌, அதை இறக்கிவிட,
தளர்வாக முடிச்சுப்‌ போட்டானோ எனுமாறு சக்கிரவாகப்‌பறவை போன்ற முலைகளையுடைய அவளது ஆழமான உந்தி
அமைந்திருந்தது,(பிரம்மனின்‌ கயிற்றுமுடிச்சுப்‌ போல உற்தி இருந்தது என்றஉவமை நீயம்‌ சிறப்புறுகிறது.) V—28

நங்சையின்‌ நிதம்பம்‌ ஏனும்‌ பெயரில்‌ ஒரு மணல்‌ இட்டு– நதிக்கரை மணல்‌ திட்டுகளிலிருந்து தப்பி வந்துவிட்டது. அந்தக்‌
கணக்கு தெரியவே பிரம்மன்‌ : மனால்‌ திட்டில்‌ அன்னத்தின்‌ அடிகளாகிய குறியை இட்டான்‌.
(ஒரு பொருள்‌ காணாவிட்டால்‌ தெரிவதற்காக, கணக்கு அறிய குறியிடுவது வழக்கம்‌, மணல்‌ திட்டு ஒன்று நங்கையின்‌
நிதம்பமாகி காணாமற்போனது. . பீரம்மன்‌ மற்ற திட்டுக்களை கணக்கிட அன்னத்தின்‌ அடியாகய 3 என்ற குறியை இட்டு
வைத்தான்‌ என்பது கருத்து) V—29

வளத்தினைத்‌ திருடிக்‌ கொண்டது. எப்படி என்றால்‌, (திருடனின்‌ உடைகளைச்‌ சோதிப்பதுபோல) மட்டை புரிச்‌
தால்‌ உள்ளே பசு வால்போன்ற (மேலே அகன்று கழே குற்கிய) தண்டும்‌, பூவினையுரித்தால்‌ உள்ள நகம்‌ போன்ற மொட்டுக்களும்‌
(பூமூகைகள்‌ திருடர்களின்‌ ஒருவகைக்‌ கருவி போலுள்ளது) ௮தன்‌ சிகப்பும்‌ (பத்மராகக்‌ கற்கள்‌ எனும்‌ நவமணிகளும்‌) இருடியதின்‌
அடையாளங்களாகத்‌ திகழ்கின்‌றன. V—30

செல்வமிக்கவர்களானாலும்‌ அவளது தொடைகளுக்கு அடிமை செய்பவர்களாசத்தான்‌
ஆவார்கள்‌. செல்வமிக்க பெண்களின்‌ அங்கையின்‌ குடையும்‌ பூரண கும்பழம்‌ ரேகைசளாக அமைந்திருப்பது அடையாளமாகும்‌.
(அடிமைகள்‌ பிரபுவுக்கு குடைபித்து, பூரண கும்பம் பிடித்து வரவேற்பது போல–௮வள்‌ எழிலுக்கு தோற்ற பிற பெண்டிர்‌
தம்‌ கரங்கள்‌ குடை, கலச ரேகைகளால்‌ அடிமையாகின்‌றன என்பது கருத்து.) 5-31

நங்கையின்‌ சணுச்சால்‌ கலம்பிலுள்ள மரகதப்‌ பச்சையின்‌’ ஒளியால்‌ பசுமை படர்ந்து மன்மதனின்‌ குடும்பத்தைச்‌ செழிப்‌
பாகப்‌ பேணும்‌ செஞ்சாலிப்‌ பொதிபோல இருந்தது,
(நெற்பொதி (கதிர்விடுமுன்‌ உள்ள கருநிலை) சணுக்காலுக்கு உவமை கூறப்பட்டது.) V—32

நங்கையின்‌, மென்மையான, சணுக்காலின்‌, இணையாக வேண்டிய நெற்பொதி, தம்முன்னே முள்ளினை திறமையுடன்‌
அடக்கி வைத்திருந்தது, பின்னர்‌ நாட்படவும்‌ அடங்காது ௮வை (முள்‌) வெளிப்படவே (நாணத்தால்‌) தலை குனிந்தன.
(முதலில்‌ நெற்பொதி இணையாக இருந்தாலும்‌ நாட்படவும்‌ முள்வெளிப்படல்‌, நிறமாற்றம்‌, ஆ௫யெவையால்‌ இணையாக
முடியவில்லை, அதனால்‌ நாணுற்று தலை சுவிழ்ந்தது. நெற்‌ குதிர்கள்‌ முற்றியதும்‌ தலை கவிழ்தலை நாணுற்றதாக பல
சவிஞர்கள்‌ கூறியுள்ளனர்‌. அறிவு நிறைந்ததும்‌ தலை நிமிரீந்த செருக்கு நீங்கி தலை கவிழ்ந்து அடக்கம்‌ ஏற்படுவதாகவும்‌
கவிஞர்கள்‌ வருணிப்பர்‌.) 3.33

“உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம்‌ செல்வண்ணம்புூசும்‌ இயல்பினராகய எம்மீது இனிவேறு செம்பஞ்சுக்‌ குழம்பு
(அரத்தகம்‌) பூசுவா?னன்‌? பேதைமை யல்லவா??* என்றுஅவளது பாதங்கள்‌, முகமாகிய விரல்சளினால்‌ நகமாகபய பற்‌
களைக்‌ காட்டிச்‌ சிரிப்பது போல, நங்கை எழில்‌ மிக்‌இருந்தாள்‌.
(வெண்பற்களாகிய நகங்களிலும்‌ செம்பஞ்சுக்‌ குழம்பு பூசும்‌போது செம்மை படியுமமே எனினும்‌, வெற்றிலை போட்ட பற்‌
களோடு சிரித்தன என்று கொள்க,) V—34

நங்கையின்‌ முழங்கால்‌ ஆமை3யாடு போல இருக்கும்‌, அவளீ நடையோ பிடிநடையாகும்‌. ஆமைக்கும்‌ பிடிக்கும்‌ (பானளைக்கும்‌)
ஏற்பட்ட போராட்டம்‌ எனப்படும்‌ பழமொழி இவளால்தான்‌ ஏற்பட்டது,
(கஜகச்சப (யானை, ஆமை) கலஹ நியாயம்‌ எனும்‌ வட மொழிப்‌ பழமொழியைக்‌ கருத்துட்கொண்டு இக்கவிதை உள்ளது
யானைக்கும்‌ முதலைக்கும்‌ ஏற்பட்ட போராட்டக்கதை தான்‌ பிரசித்தம்‌ யானை, ஆமை கலகக்கதை தெரியவில்லை. V—35

மங்கையின்‌ மேனி எழிலுக்கெதிரே, புது மஞ்சள்‌ துலைக்கு வர முடியாமல்‌ (இணையாகாமல்‌) மிகுந்த மாசுற்றது. அதனால்‌
தான்‌ அதற்கு இரா, ௮ல்‌, என்பனை போன்ற இரவின்‌ பெயர்‌ களையுற்று கரைந்து இராமலே, இல்லாது போனது.
(மஞ்சள்‌ நாட்படின்‌ மேல்தோல்‌ கருவண்ணம்‌ உறும்‌, மாசுறு வதாக சுற்பனை செய்யப்பட்டது. மஞ்சளுக்கு வடமொழியில்‌
இரவீன்‌ பெயர்கள்‌ எல்லாம்‌ பரியாய பதங்களாகும்‌. ராத்ரி, நிச, தமிஸ்ர, நிஸீதினி, கூப என்பன இரவின்‌ பெயர்கள்‌.
கரைதல்‌, கெடுதல்‌, தேய்தல்‌, என்ற பொருளின்‌ அடியாக இச்சொற்கள்‌ அமைந்தன. அவளது உடல்‌ பொன்‌ வண்ணம்‌
உண்ட மஞ்சள்‌ தோற்ற கரைந்து இல்லாது போயிற்று என்பது கருத்து.) 5-36

அந்த மதிமுகத்தினள்‌, பூமி ‘தவியாசலின்‌ அவளுடைய முன்னைய தோழியரான நாகக்கள்னிகள்‌, அவளை இணை
பிரீயாதிருக்க வேண்டி, பக்கத்து வீடுகளில்‌ வைணவர்களின்‌ மகளிர்களாகப்‌ பிறந்து, மராளிகா (அன்னம்‌) ஏகாவளி (ஒற்றை
வட முத்துமாலை) மனோக்ஞா (மனதை அறிபவள்‌) ஸ்ரக்விணீ (பூமாலை யுடையவள்‌) என்ற பெயரிகளுடன்‌ தோழியராகத்‌
திகழ்ந்தனர்‌. அவர்கள்‌ பொம்மைக்‌ கல்யாணம்‌ முதலிய விளையாட்டுக்களில்‌ லட்சுமி தேவி திருமண வைபவக்‌ கதைப்‌
பாட்டுக்களைக்‌ கேட்டுக்கேட்டு, வியப்புற்று, திருமாலின்‌ திருவிளையாடல்களில்‌, ஈடுபட்டு அவனையே மணம்‌ புரிய
வேண்டுமென முன்பிறவி. வாசனையால்‌, ஆசையுற்று அவனது இரு அவதாரக்‌ கதைகளை மீண்டும்‌ மீண்டும்‌ கேட்டின்புற்று மூழ்ந்தாள்‌. 1.37

அவளது  தந்‌ைத (பெரியாழ்வார்‌) திருமால்‌ தந்த செல்வச்‌ செழிப்பு மிக்சிருந்தும்‌ தனது முன்னைய மாலை தொடுத்துச்‌
சேவகம்‌ புரிதலை விடாது ஆர்வமுடன்‌ இருந்தமையால்‌, திருமாலின்‌ திருவிளையாடல்களையும்‌, வைணவபுராணங்களை
யும்‌ வியாக்கியானம்‌ செய்து கொண்டும்‌, நுரல்கள்‌ இயற்றிக்‌கொண்டும்‌ இருப்ப, அவர்‌ கட்டிய மணமிகு செங்கழுநீர்‌,
பூக்களை யுடைய தோமாலையை, கூந்தல்‌ சீவி, மன்மதனுக்கு மயிற்பிலியால்‌ இயற்றிய முடி (கேடகம்‌) போல, கருவண்ணக்‌
காளை மாட்டின்‌ இமில்போல சிறிதே இடப்பக்கம்‌ சாய்ந்த கொண்டையினடியில்‌ விருப்புடன்‌ சேர்த்து (கூந்தலில்‌ பூமாலை
சூடி) ணெற்று நீரில்‌ (தன்னெழில்‌) கண்டு மீண்டும்‌ பூக்குடலை யில்‌ வைப்பாள்‌. V—38

அந்நகிகை (கோதை) சிறிது மஞ்சள்‌ பூசிக்குளித்து கூறை (சேலை) யுடுத்தி, முலைக்குவட்டில்‌ மணம்‌ மிகுமாறு குங்குமச்‌
சாறு பூசி, கற்பூரத்‌ இலகமிட்டு, தந்‌ைத கட்டிய பூமாலையை விருப்புடன்‌ கூநீதலில்‌ சூடி, சிறிது நேரம்‌ வைத்திருந்து, மீண்டும்‌ களைந்து வைத்துவிட்டு தோழிகளைப்‌ பார்த்து வெய்துயிர்ப்‌பாள்‌. [39

நீங்கள்‌ பாடிய திருமாலின்‌ நடவடிக்கைகளை எந்த முறையில்‌ சேர்க்க முடியும்‌? தஷ்னை நாடிய நங்கையரையே
அருள்‌ செய்யாதவன்‌, எந்தப்‌ பெண்ணைத்தான்‌ காப்பாற்றினான்‌, TV—-40

அவன்‌ தேவன்‌, (வாமனன்‌) முனிவன்‌ (பரசுராமன்‌) அரசன்‌ (ஸீராமன்‌) ஆய உடலைத்‌ தாஙிகி பெண்களை வெய்துயிர்க்கச்‌
செய்ததைவிட அதற்குமுன்‌ எடுத்த பிறவிசகளாகிய, மீன்‌, ஆமை பன்றி, சங்கமாகிய உருவிலிருந்தாலே நல்லதாயிருந்திருக்கும்‌.
(பெண்களுக்கு விரகதாபத்துயர்‌ தராத முன்னைய பிறவி களில்‌ மட்டும்‌ பிறந்திருந்தால்‌ நன்றாயிருக்கும்‌ என்பது கருத்து)-5 41

அந்த (மீன்‌, ஆமை, பன்றி, சங்க)ப்‌ பிறவிகளில்‌ பெண்கள்‌ காதலிக்க வில்லையல்லவா? நல்லதாசப்‌ போயிற்று, ஒருவேளை
காதலித்தாலும்‌ விலங்குகட்கு மனிதர்கட்டுள்ள வேட்கை இராதல்லவா? (என்‌ இராது?) தெரியாமல்‌ ஏன்‌ இப்படிச்‌ சொன்னேன்‌. IV—42

*அத்மவத்‌ சரீவபூதானி’* (தன்னைப்‌ போலவே எல்லா உயிர்களும்‌) என்பது பொய்தான்‌. மனிதப்பெண்களாவது
ஆடல்‌ பாடல்களிலும்‌, சரச சல்லாபங்களிலும்‌, கதைகளிலும்‌ கொஞ்சமாவது விரகதாபத்தை அடக்கிக்கொள்ளலாம்‌.
வாயில்லா உயிர்களுக்கு நோயும்‌ அதிகம்தான்‌.
(தன்போலவே பிற உயிர்களையும்‌ கருதுவது எப்படி? மனிதர்கள்‌ வாயிருப்பதால்‌ பேசி மகிழ்ந்து ஆற்றியிருக்க முடியும்‌.
வாயற்ற விலங்குப்‌ பிறவிகளில்‌ எப்படி விரகதாபத்தை அடக்க முடியும்‌ என்பது கருத்து ) 14-43

இவன்‌ முன்பிறவிகளில்‌, காதலித்த சன்னியரின்‌’ கமலக்‌ கண்களில்‌ நீரை வரவழைத்தும்‌, அவர்கள்‌ உடலில்‌ புளகம்‌
உருமாறம்‌ செய்த வினைப்பயனால்‌ தான்‌, பின்னர்‌, நீரில்‌ இடக்கும்‌ மீன்‌, ஆமையாகவும்‌, புளகம்‌ போன்ற மயிர்கிலிர்க்கும்‌
பன்றி, சிங்கமாகவும்‌ பிறந்தான்‌. எனினும்‌ அந்த உண்மையை மறைத்து திறமையாக இருக்கிறான்‌. ivV—44

தேவன்‌, முனிவன்‌, அரசனாகப்‌.பிறந்த பிறவிகளில்‌ இவன்‌ தாமரைக்‌ கண்ணாரைத்‌ தண்ணளியின்‌ றித்‌ தவிக்கச்‌ செய்தான்‌
என்றேனே அதனை உங்கள்‌ பாடல்களிலிருந்தே தெரிவிக்‌கிறேன்‌. IV—45

முதலில்‌ விஷ்ணுழூர்த்தியாக, இவன்‌, பிருகு முனிவரின்‌ மனைவியைக்‌ கொன்று, அந்தக்‌ கிழவன்‌ (பிருகுமுனி) தன்னைப்‌
போல மனைவியைப்‌ பிரிந்து வருந்துவாயாக எனச்‌ சாபமிட எனக்கு அதுவம்‌ தேவகாரியமாகட்டும்‌’ கூறி
வாமனனாஇ (பிரம்மச்சாரியாகி) திருமகளைப்‌ பிரிவுத்துயரில்‌ ஆழ்த்தினான்‌ அல்லவா?
(இராமாயணம்‌ உத்தர காண்டத்தில்‌ பிருகு முனிவன்‌ சாபக்‌கதை வருகிறது, பிருகு முனிவனின்‌ மனைவி அசுரர்களுக்கு அபயமளித்துக்‌ காப்பாற்றியதால்‌ அவளை, விஷ்ணு கொன்றதாகக்‌ கதை.) IV—46

பிரளயகாலச்‌ சூரியனைப்‌ போன்ற கூரிய கோடாரி (பரசு)யாகிய வீணைக்‌ தண்டினால்‌, பகைவன்‌, பகைவனின்‌ நண்பன்‌,
நண்பனின்‌ பகைவன்‌ எனும்‌ முத்திறத்துப்‌ பகைவர்களின்‌ சம்மாசனங்களாகிய (மந்திர மத்திய தாரங்கள்‌) கட்டைகளில்‌
ஏழு தடவை (ஏழு சுரங்களில்‌) வாசித்து, தன்‌ தோள்‌ வலிகாட்டிய புகம்‌ எனும்‌ வீணையை மீட்டிய போது, விழைந்து
வந்த பூமியாகிய கற்பின்‌ செல்வியைத்‌ துறந்து காசியப முனிவனின்‌ மகளாகி.ச்‌ செய்யவில்லையா?
(பரசுராமன்‌, தன்‌ தந்தையைக்‌ கொன்ற கார்த்த வீரியார்ச்‌ சுனனின்‌ மக்கள்‌ மீது வஞ்சினம்‌ பூண்டு ஏழு தடவை பூமியை
வலம்‌ வந்து, க்ஷத்திரியர்களைக்‌ கொன்று அந்தக்‌ குருதியினால்‌ சமந்த பஞ்சகம்‌, எனும்‌ மடுவை உருவாக்கி பித்ரு தர்ப்பணம்‌
செய்தான்‌. அவன்‌ உலகை வென்றும்‌, காசியபன்‌ எனும்‌ முனிவன்‌ யாசித்ததுமே அந்த உலக முழுதுமே தானம்‌ செய்து
விட்டான்‌. உலகம்‌ காசியபன்‌ மகள்‌ ஆயிற்று. ஆதலில்‌ காசினி என்று பூமிக்குப்‌ பெயர்‌ உண்டாயிற்று பரசுராமன்‌ தான்‌ வென்ற
பூமியை ஆளாமல்‌ துறந்தான்‌ என்பதால்‌ இப்பிறவியிலும்‌ இருமகள்‌ (பூமி) எனும்‌ பெண்ணுக்கு ௮ரள்‌ செய்யவில்லை என்பது கருத்து.) IV—47

தனது அழகினைச்‌ சொல்லக்‌ கேட்டு, மனமுருகி, திருமகள்‌ (ராஜ்யலட்சுமி) அழைத்துத்‌ தாமசைப்‌ படுக்கையில்‌ இன்ப
முடைய அன்போடு கூடி இணைய வரும்போது, கொடுமையாகத்‌ துறந்து சென்று அவளைப்‌ பித்துறச்‌ செய்த காகுத்தனாகய
இராமனின்‌ நடவடிக்கைகளை உள்ளத்தில்‌ ஆராய்ந்து பாருங்கள்‌.
(இராமன்‌, அரசு அகிய திருமகளைத்‌ துறந்து பட்டம்‌ ஏற்காமல்‌ காட்டுக்குச்‌ சென்று அவளை பிரிவுத்‌ துயரில்‌
ஆம்த்தினான்‌ என்பது கருத்து.) 13.48

அழூய உருவந்தாங்கி, தன்னை நாடிக்‌ காதலித்து வந்த இராவணனின்‌ தங்கை (சூர்ப்பநகை) யை, நாலுபேர்‌ நகைக்கும்‌
படியாக அவ்விதம்‌ (மூக்கரிந்த செயல்‌) செய்யாமல்‌, எற்றுக்‌ கொண்டிருந்தால்‌, சம்பந்தியாகி, அந்த இராவணனும்‌ சினந்து
சீதையைச்‌ றை வைச்கமாட்டான்‌. வீணாகப்‌ பகை மூளச்‌ செய்து தனக்கும்‌, தைக்கும்‌ இராவணனுக்கும்‌, சூர்ப்பணகைக்‌
கும்‌ கேடுண்டாக்கிக்‌ கோண்டானல்லவா?
(சூர்ப்பணகசையை ஏற்றிருந்தால்‌ இத்துணைத்‌ துன்பம்‌ வராது என்றும்‌: நயந்து வந்த பெண்ணைக்‌ கொடுமைப்படுத்து
வது நியாயமா? என்றும்‌ கேட்டிறாள்‌ கோதை! பெண்கள்‌ உணர்வறிந்த பெண்ணுக்குத்தானே இரச்கம்‌ அதிகம்‌.) IV—49

ஓவென்றலறிச்‌ செங்குருதி ஓழமுக, உதடுகள்‌ துடிக்க, முகில்‌ முழக்கம்‌ என முறையிட்டவாறு, கொடி போன்ற வாள்‌ ஏந்திய
சந்தன மரக்களை போன்ற தோள்களைத்‌ தடுக்க பாம்பு போன்ற தன்‌ கரங்களைச்‌ சுற்றிய சூர்ப்பபகையை இங்க
மொத்த அவன்‌ மூக்கரிந்து கொடுமைப்‌ படுத்தவில்லையா?
(மூக்கரிந்தது இலக்குவனே எனினும்‌ பொறுப்பாளி இராமனாதலின்‌ இராமன்‌ மேலைற்றிக்‌ கூறப்பட்டது. கோயில்‌
கட்டுதல்‌ சற்பியேயாயினும்‌ அரசன்‌ கோயில்‌ கட்டினான்‌ என்பது போல) IV—50

வேண்டாம்‌ போ என்றால்‌ போக மாட்டாளா? அவள்‌ அரக்கி என்பதால்‌ பரிகாசம்‌ செய்து அலைக்‌ கழித்தல்‌ முறையோ? பெண்‌
குலமே நாணுமாறு அவளாகவே வந்தாள்‌! அது போதாதென்று பெண்ணைக்‌ கேவலப்‌ படுத்த வேண்டுமா? V—51

தன்னைத்‌ தழுவப்‌ பெண்ணாகப்‌ பிறக்க விரும்பிய முனிவர்‌ களை, தன்‌ பாதத்துக்குள்‌ (பொண்ணாக்கும்‌) ஆற்றல்‌ இருந்தும்‌ கூட, மற்றொரு பிறவியில்‌ (கண்ணன்‌ ஆக) ஆயரீ மகளிராகப்‌ பிறக்கச்‌ செய்து இணைந்தும்‌, அக்குரூரவன்‌ தூண்டுதலால்‌, அநீநங்கையரைப்‌ பிரிந்து மதுராபுரிக்குச்‌ சென்று விடவில்லையா?
(ஆடவர்‌ பெண்மை அவாவுறும்‌ அழகன்‌ என்று கம்பனும்‌ இராமனைக்‌ குறிப்பிடுவான்‌. முனிவர்கள்‌ பரம்பொருளைப்‌ பெண்‌ கோலத்தில்‌ சுவைக்க விரும்பி ஆயர்‌ மகளிராகப்‌ பிறந்தனர்‌ என்று பாகவதக்‌ கதை கூறுகிறது.) V—52

அயோமுகி, சூர்ப்பணகை ஆகியவர்களை அரக்கியர்‌ அழகற்ற வார்கள்‌ என நயவாது தண்டித்தான்‌ என்றால்‌ பலரா.மனாக, தன்னை விட வயதில்‌ மூத்த பனைமரம்‌ போன்றுயர்ந்த ரேவதியைத்‌ தான்‌ கிழவனாக இணையவில்லையா? கண்ணன்‌ ஆகி, கூனியாகிய (குப்ஜா எனும்‌) வேலைக்காரியை விரும்பி உக்கிரசேனனிடம்‌ தான்‌ சேவகனாக, கூனலைத்‌ திருத்தி ஏற்றுக்‌ கொள்ளவில்லையா?
(அழகு, இளமை இல்லாவிட்டாலும்‌ அன்பிருந்தால்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌ என்றும்‌, அரக்கியர்பால்‌ அன்பின்மையால்‌ அவன்‌ அவர்களை ஏற்றுக்‌ கொள்ளவில்லை என்றும்‌ கருத்து)
(கிழவன்‌ என்பது உரிமையுடையவன்‌ என்ற பொருளிலும்‌ கொள்க.) V—53

முராரி, (கண்ணன்‌) பிருந்தாவனத்தில்‌ தன்னை எல்லோரும்‌ காதலித்திருந்தாலும்‌ சிலரைப்‌ புணர்ந்தும்‌ சிலரை விரகதாபத்‌
கால்‌ வருத்தியும்‌ ராதையிடம்‌ மட்டும்‌ ஈடுபாட்டுடன்‌ இருந்து எல்லாப்‌ பெண்டிரையும்‌ மனவருத்தம்‌ செய்யவில்லையாச்‌ VY—54

என்று, இவ்விதமாக, நாணம்‌ மிகுதியினால்‌ நிந்திப்பது போல மீண்டும்‌ மீண்டும்‌ நினைந்து திருமாலைப்‌ பற்றிப்‌ பேசவுல்‌,
தோழியர்‌ அவளது உட்கரந்துறையும்‌ காதலையுணர்ந்து
கொண்டு “இந்தத்‌ தோழி திருமாலிடம்‌ ஈடுபட்ட கன்னிக்‌ காதலுடையவளாய்‌ நாணத்தால்‌ வெளிப்படக்‌ காட்டாமல்‌, புடமிட்ட பொன்‌ போல, உள்ளம்‌ வெதும்பி, சிக்குற்று, நாள்‌ தோறும்‌ சிரித்தவாறே சங்கடப்பட்டுக்‌ கொண்டிருக்கிறாள்‌.
இந்நங்கையின்‌ தனிமை (மறைவான உணர்வுகளை) நீக்கி நம்மோடிணைந்து கலந்துறவாடச்‌ செய்து, நம்மிடம்‌ மறைக்கும்‌
மனக்‌ கருத்தினை (இங்கிதம்‌) தானே தெரிவிக்கும்படி செய்து சுவலையை நீக்காவிட்டால்‌ மோசம்‌ நேரும்‌” என்று சிரித்தவாறு குறிப்போடிவ்வாறு கூறினர்‌.V—54

எல்லோரும்‌ இப்படித்தான்‌, உயிர்த்துணைவரீகள்‌ நெடுந்‌தொலை பிரிந்திருத்தார்கள்‌ என்றால்‌, பிரிவுத்‌ துயரால்‌
வெய்துயிர்த்து குற்றங்கூறாமலிருக்க மாட்டார்கள்‌. பின்‌ அவரிகள்‌ தம்‌ வசப்படினோ, யாரையும்‌ பொருட்படுத்தாமல்‌
அவர்களோடிணைந்து இந்திரன்‌ சந்திரன்‌ என்று புகழ்வார்கள்‌ .
அதன்‌ பிறகு இணைவித்த தோழியரும்‌ பயனற்றவர்களாக நினைப்பார்கள்‌. இத்தகைய நிலை உன்‌ தலையிலும்‌ விடிந்தது போலும்‌. | V—56

எனலும்‌, இளநகை யரும்ப, வெளிக்காட்டாதடக்க, சிறிது . சினம்‌ வரவழைத்துக்‌ கொண்டு, &முதட்டைக்‌ கடித்துக்கொண்டு,
அத்தோழியரை பந்தினால்‌ மெல்ல வீசி எறிந்து, அக்கம்பக்கம்‌ பார்த்தவாறு மெதுவாகச்‌ சொன்னாள்‌. V—57

இடைவிடாத உஙிகள்‌ பாட்டு அழகாக இருந்ததினால்‌, மீண்டும்‌ பாடச்‌ சொன்னேனே யன்றி வேறல்ல. இது தவறா?
பாயசம்‌ மீண்டும்‌ கேட்டால்‌ ஏழைகளாக விடுவரே? பழி தூற்றா தர்கள்‌. அவனோடெனக்கென்ன வேலை?
(விருந்தில்‌ பாயசம்‌ மீண்டும்‌ வேண்டினால்‌ அவர்கள்‌ ஏழைகள்‌தான்‌ என்பதில்லை. செல்வந்தரும்‌ சுவைத்துக்‌ கேட்கலாம்‌ என்ற
பழமொழியைக்‌ கூறி இசைக்கு மயங்கனே?னேயன்றி இறைவனை நாடவில்லை என்றாள்‌ கோதை) ப V—58

அந்தப்‌ பேச்சை விடுங்கள்‌ என்று கோதை கூற தோழியர்‌, இவ்விதம்‌ கூறலானாரீகள்‌. :அகட்டும்‌, நீ சொல்வது உண்மை
இனிமேலேப்‌ போதாவது, இனிக்கொஞ்சநேரம்‌ கழித்தாவது, நாளையேனும்‌, நீ அவனுடைய குணங்களையோ
குற்றங்களையோ சொன்னால்‌ அப்போது சொல்லுகிறோம்்‌ஸ்ரீ உன்‌ மனம்‌ அவனிடம்‌ ஈடுபட்டிருப்பதை மழைத்து எங்களை ஏமாற்றப்‌
பார்க்கிறாயா? V—59

நீ முகத்தைத்‌ திருப்பிக்‌ சொண்டு (பிறஈறியாது) நகநுனியால்‌ துடைத்தெரிந்த கண்ணீர்த்‌ துளிகள்‌, விளக்குச்‌ சுடரில்பட்டு
௪ட௪ட என்ற ஓசை எழுப்ப நீ அழுவதைத்‌ தெரிவிக்கவும்‌, மிகுந்த வருத்தமுடன்‌ மறைவாக (உஸ்‌ என்று) வாயால்‌
நெட்டுயிர்த்தல்‌, மெல்லிய இடையின்‌ பக்கங்கள்‌ அடிக்கடி அசைவதால்‌ தெரிவிக்கவும்‌,
(நாங்கள்‌ பேச்சுக்‌ கொடுக்கும்போது) இடுக்கிட்டு தமுதழுத்த
குரலைச்‌ சரி செய்ய நீ முயலும்‌ முயற்சியே நின்‌ நிலையை வெளிப்படுத்தவும்‌,
(பெண்ணாகப்‌ பிறந்ததே தவறு என்று) பெண்பிறவியை விரகத்துயரால்‌ நிந்திக்கும்‌ உன்‌ நடவடிக்கைகளை உன்‌ துயரை
எடுத்துக்‌ காட்டவும்‌, பிரிவாற்றாது படுக்கையில்‌ புளுவதே துயிலின்மையை புலப்படுக்க, தணிவு (இறந்து விடுவோமா என்ற
மனத்துணிவு) உள்ளுக்குள்ளேயே நீ சிரித்துக்‌ கொள்வதே புலப்படுத்த, எங்கள்‌ மேல்‌ (தோழியர்பா&்‌) காரணமில்லாமல்‌
கோபித்துக்கொள்வது உன்‌ மனக்கலக்கத்தை உணர்த்த, நங்காய்‌ நீ. இரவில்‌ படும்‌ அவத்தையைக்‌ காட்டும்‌
அடையாளங்கள்‌ அல்லவா?” V—60

(ஒருதோழமி சொல்கிறாள்‌)
அ ஒரு அற்புதம்‌ உங்களுக்குத்‌ தெரியாதல்லவா? இந்தத்‌ தோழி (கோதை) பொய்கையீல்‌ குளிக்கப்போகும்போது தன்‌ முத்து
மாலையை என்னிடம்‌ ஒப்படைத்தாள்‌, நானும்‌ அவளுடன்‌ சென்று மறந்துபோய்‌ கூடவே குளிக்க நீரில்‌ இறங்கினேன்‌
(வீரகதாபத்தால்‌ முன்பே பொரிந்திருந்த முத்துமாலை) நீரில்‌ பட்டதும்‌ சுண்ணாம்பாடிவிட்டது. : அவளே௱
வற்புறுத்தி தனது நகையைத்‌ (முத்துமாலை) தருமாறு கேட்கி றாள்‌! கேட்ிறா3ளயன்றி தன்‌ நிலைமையை கிறிதும்‌ உணர்ந்த
தாகத்‌ தெரியவில்லை. v—61

எனலும்‌, மராளிகா எனும்‌ தோழி சொல்வாள்‌ “கேட்டாயா ஹரிணி/ ஒரு நாள்‌ கஸ்தூரி எடுத்துக்கொண்டு போய்‌ எனக்கு
பொட்டுவை என்று அன்புடன்‌ (கோதையை) கேட்கவும்‌ அவள்‌ பொட்டிட முனைந்தாள்‌, சுரீர்‌ என்று முகத்தில்‌ சுட்டதுபோல
அவள்‌ நெட்டுயிர்ப்புக்காற்றினால்‌ கஸ்தூரி காய்ந்துபோகவும்‌, அதை நகத்தால்‌ சுரண்டி எடுக்கவும்‌, மீண்டும்‌ வைக்கவும்‌,
காய்ந்ததைச்‌ சுரண்டவு3ம நேரம்‌ சரியாகப்‌ போய் விட்டது v—62

எனலும்‌, சிரக்வினி எனும்‌ தோழி சொன்னாள்‌… *தோழியரே/நான்‌ இவளை பூங்கொடி ஊஞ்சலில்‌ ஊக்கும்போது, இவளது முலைப்‌ பாரத்தினால்‌ பூங்கொடி அறுந்து வீழின்‌ எவ்விதம்‌ தாங்குவது என்று ஐயுற்று கைலாஇல்‌ இவளைத்‌ தூக்கிப்‌ பார்க்கவ நடுப்பகலில்‌ வாடிய தட்டைப்பொம்மை போல எளிதாக (இ3லசாக) என்‌ கைகளில்‌ இருந்தாள்‌”, v—63

என்றிவ்வாறு தன்‌ நிலைமை தோன்றும்‌ படியாகக்‌ கூறவும்‌, அவற்றைப்‌ பொருட்படுத்தாதவள்போல அவர்களிடம்‌ இவ்விதம்‌ கூறினாள்‌. V— 64

ஆற்று விக்கவும்‌, தீரீத்துவிடவும்‌ மிகுதிறமையுடைய தோழிகள்‌ போல நீங்கள்‌ ஏதேதோ பேசுகிறீர்கள்‌! என்மீது எவ்வளவே அக்கறை இருப்பது போலக்‌ காட்டுகிறீர்கள்‌ உங்களுக்கேன்‌ இந்தக்‌ கவலை எல்லாம்‌? V—65

என்று பரிகாசம்‌ செய்துகொண்டு, ம௰க்கடித்துப்‌ பேக புடமிட்டதுபோல விரகத்துயரால்‌ வெய்துயிர்த்து, அந்நங்கையர்‌ திலகம்‌, அடக்கியும்‌ அடக்க முடியாமல்‌ இரவில்‌ ஒவ்வொரு சமயம்‌ தனக்குள்‌ இவ்விதம்‌ கூறிக்கொள்வாள்‌. v—-56

புதிதாக அலர்த்த வேளை மலர்‌ போன்ற கருவண்ணமுடைய மென்மையான இடது தோளில்‌ மகர குண்டலம்‌ தொட்டுக்‌
கடக்க, இணையற்ற முகத்‌ 9ெழில்‌ எனும்‌ திருவார்ந்த இளமையை நிலைநிறுத்தும்‌ வேப்பிலையோ என புுவத்தைச்‌
காட்டியும்‌, பருவத்தலர்ந்த பந்தூகம்‌ (உச்சிதிலகம்‌*) போன்ற இதழ்கள்‌ சிந்தூர. மழை பொழிய, ஒளி பொருந்திய கண்ணிணைகளின்‌ ,
பார்வை, காதிலணிந்த குண்டலங்களின்‌ ஒளியோடிணைய, ஏழு உலகங்களிலுள்ள மகளிரையும்‌ மகிழ்விக்கும்‌ ஏழுவிதமான
(சப்தசரங்களாகய) மதகுகள்‌ மூலம்‌ அமுதம்‌: பொழிவித்திடல்‌ போல குழல்மேல்‌ விரல்களை மாற்றி மாற்று வைத்து (ஊது)
ஆய்ச்சியரை மயக்க முறச்செய்தனையோ? V—67

அந்தோ. ராதையே/ உனக்குத்‌ தகுநீிததுதானா? (முறையா) கணவரையும்‌ மாமன்மாமியரையும்‌ விடுத்து (ஏமாற்றி வந்து) முகுந்தனின்‌ வேணுகானம்‌ (குழலிசை) ஆய வீளைக்கு (விளிக்கும்‌ ஒசை) ஆட்பட்டு, மான்களின்‌ கூட்டம்‌ போல வந்து, (திராசையுற்று) விரகதாபத்தால்‌ வெந்து, பயந்து, இரவில்‌ வந்த ஆய்ச்சியர்களை வருத்தமுறச்‌ செய்து, நீ ஒருத்திம்ட்டும்‌ அவன்‌ நலம்‌ முழுமையும்‌ குத்தகைக்கு எடுத்தாற்‌ போல்‌ இன்பத்தில்‌ திளைத்தாயே/ (இது தியாயமாகுமா?) V—~68

அக்கமலக்‌ கண்ணன்‌, ஒருத்தியைத்‌ தன்‌ தோளில்‌ ஏற்றிக்‌ கொண்டு பூம்‌ புதார்க்காட்டிற்கொண்டு போகவும்‌, பிற
நங்கையர்‌ எல்லாம்‌, யமுளைக்‌ கரையில்‌, சுமையால்‌ மிகவும்‌ அழுத்திய அடிச்சுவடுகளைப்‌ பின்பற்றித்‌ தேடிச்‌ செல்வர்‌,
சென்று தேடி அங்கே எதைக்‌ காணப்போடறார்கள்‌? பெண்‌களுக்குத்‌ தன்மானம்‌ வேண்டாமோ? V—69

வீட்டை விட்டுக்‌ கனவிலும்‌ வெளியேறாத சுற்புடைய மகளிரைச்‌ கூட்டி, விடுபவளாக, அச்சத்தை நீக்கி, கண்ணனின்‌
கலவி இன்பச்‌ சுவையைக்‌ காட்டி, பிறகு, அவர்கள்‌ வீரகதாபத்‌தால்‌ உன்னுடைய மணல்‌ திட்டுகளில்‌ வருத்தத்தால்‌ புரளச்‌
செய்தனை! கொடுங்கதஇர்ச்கற்றையுடையவனின்‌ மகள்‌ அல்லவா நீ!
(கொடுங்கதிர்களையுைய சூரியனின்‌ மகள்‌ யமுனை/ யமனின்‌ சகோதரியுமாவாள்‌! ஆதலின்‌ மரபு வழிப்பட்ட
கொடுமை உனக்கும்‌ ஏற்பட்டது என்பது குறிப்பு. உள்ளச்‌
சூட்டைவிட மணல்கதிட்டுச்‌ சூடு குறைந்தது ஆதலின்‌ அதில்‌ துன்பத்தால்‌ புரண்டனர்‌ என்றும்‌ குறிப்புள்ளது) V—70

என்று தனித்துத்‌ தனக்குள்‌ சொல்லிக்கொள்ளும்‌ சொற்‌ களைக்‌ கேட்ட அருகிலிருந்த தோழியர்‌: முகத்தில்‌
சிரிப்பு ஏனும்‌ நிலவொளி கால, வெளிப்பட்டு, நங்காய்‌,!
என்னென்ன உன்‌ மனபறிந்துதானே முதன்‌ முதலிலேயே அவனைப்‌ பற்றிய பேச்சுக்களைவிட இயலாது என்று
சொன்னோம்‌ என்று நினைஷூட்டவும்‌, சிறிது தலை சுவழ்ந்தவளாக, முகம்‌ வெளுப்ப குறு நகையடக்கிக்கொண்டு, இனியும்‌
மறைக்க முடியாமற்‌ போகவே, அவர்களோடு கலந்து இவ்வாறு கூறினாள்‌. V—72,

“மலரன்ன மங்கையரே! அன்று நாம்‌ இருந்திருந்தால்‌ எப்படியிருப்போம்‌?2’* எனலும்‌ அவர்கள்‌ பதிலுக்கு அவளிடம்‌
கூறினர்‌. “நங்காய்‌ அன்று நீ இல்லாமல்‌ எங்கே போய்‌ விட்டாரய்‌2”* என்றலும்‌ வியப்புடன்‌ கோதை கூறினாள்‌, V—72

“தோழியரே! முக்காலமும்‌ உணர்ந்த முனிவர்கள்‌ போலச்‌ சொல்கிறீர்கள்‌! அத்தகைய ஞானம்‌ உங்களுக்கிருந்தால்‌
சொல்லுங்கள்‌, முதலில்‌ நான்‌ யாராக இருந்தேன்‌?“ எனவும்‌, அவர்கள்‌ மீண்டும்‌ இவ்விதப்‌ கூறலானார்கள்‌, V—73

“சம்மலர்க்‌ கண்ணினாய்‌! வானுலகப்‌ (பாரிவிதப்‌) பூவை சக்களத்தி (ருக்மணி)யிடம்‌ தந்ததைக்‌ கண்டு, பொறுக்காமல்‌,
சிறிய செய்தியைப்‌ பெரியதாக்க, சினமும்‌ பொறாமையும்‌ கொண்டு, பூவோடு போகாமல்‌ மரத்தையே கொண்டு வருமாறு
கணவனை ஏவி, மருந்தென மரமே கொண்டு வருமாறு போலகெடுவைத்துத்‌ தருவித்த அப்போதைய சத்தியயாமையல்லவா நீ்‌ *
(மருந்து கொண்டு வரச்சொல்லின்‌ மரத்தையே கொண்டு வருமாறு என்பது பழமொழி. அனுமன்‌ மருந்துக்காக
மலையையே கொணர்ந்தது போல என்பது குறிப்பு. செம்மலர்க்‌ கண்ணினாய்‌! என்பதில்‌ சனந்ததால்‌ (செம்மை படர்ந்த கண்‌
என்று குறிப்பால்‌ சத்திய பாமையே நீ என்ற கருத்தை விளக்கும்‌)V—74

திடீரென (உடனை) உதித்த ஞானம்‌ உடையவளாய்‌, வீட்டில்‌ விளக்கேற்றியதும்‌ வீட்டிலுள்ள பொருள்கள்‌ எல்லாம்‌
உடனே புலப்படுவது போல, முற்‌ பிறவியில்‌ கண்ணனோடு விளையாடிக்‌ கவித்த இனிய அனுபவங்கள்‌ அப்போது துய்த்தாற்‌
போலத்‌ தோன்றவும்‌, V—75

பரந்த கண்களில்‌ தோன்றிய கண்ணீர்‌, (கண்ணீல்‌ கட்டிய)மையோடு கலந்து, செவித்துளையில்‌ நிறைந்து, அருகிலுள்ள
கூந்தலுக்குத்‌ தாய்ப்‌ போலப்‌ பேணவும்‌ ஏலவள்ளி போன்ற தன்‌மேனியில்‌ பூ மொட்டுகள்‌ போலப்‌ புளகமுற்று, தளர்ந்த
மேனியளாய்‌, மயங்கிவிழவும்‌, தோழியர்‌ கண்டு மனம்‌ பதைத்து ஆ/ என்றலறியபடி. அன்போடு அருகணைந்தளர்‌.
(கண்ணீர்‌ கருமையினால்‌ கருங்குழலுக்கு மேலும்‌ வண்ணம்‌ பூச, தாய்போலப்‌ பேணியது என்பது குறிப்பு) 77-76

“தாமரைக்‌ கண்ணினாளின்‌ செயல்கள்‌ எந்த அளவுக்குக்‌ கொண்டு போய்‌ விட்டது பார்த்தீர்களா? அதோடு நிற்காது
இவளது முற்பிறவியைப்‌ பற்றிய செய்திகளைக்‌ கூறி நகத்‌தளவினை மலையளவாக்கி (கடுகனைமலையாக்கி) விட்டோம்‌.
என்று கூறி குவளையுமிழ்ந்த நீரோடு பனைமடல்‌ வீசிறியோடு விசிறி மென்மையான பனித்துளிகள்‌ பெய்து ஆற்றுவிக்கவும்‌,77

உணர்வு வரவும்‌, கண்‌ திறந்து, மீண்டும்‌ தாமரைக்‌ கண்‌களையுடைய கோதை, கண்ணனின்‌ திருவடிகளை ‘ நினைந்து
அசைவற்று, கண்களை மூடி, மீண்டும்‌ கண்ணீர்‌ நிறைந்து இமைகளைத்‌ தள்ளி கண்‌ திறந்து பார்த்துத்‌ தோழியரிடம்‌ கூறினாள்‌. V—78

நீங்கள்‌ யார்‌” எனலும்‌’? அழகிய நங்காய்‌, நாங்கள்‌ நாகக்கன்னியரி, முன்பே பூலோகத்திற்கு வந்தோம்‌’” என்றனர்‌
எனலும்‌ அந்‌ நங்கையரைத்‌ தழுவிக்கொண்டு ஆர்வமுடன்‌ கூறினாள்‌. V—79

“அத்தகைய முராரி (கண்ணன்‌)க்கு அப்போது காதலியாக இருந்து, பின்‌ இக்‌ கலிகாலத்தில்‌ மீண்டும்‌ பிறந்து பிரிவுத்துயரில்‌ வருந்தும்‌ இந்த உடல்‌ எதற்காக? இத்தகைய என்னை எனது தந்தை இன்னொருவனுக்குத்‌ தருவதற்கு முன்பே யோகசக்தி யால்‌ உடலை மாய்த்துக்‌ கொள்கிறேன்‌! மீண்டும்‌ கண்ணனின்‌ பாத தாமரைகளைப்‌ பற்றுவேன்‌” “, V—80

எவள்‌ காதலனைப்‌ பிரியும்‌ துயரினுக்குஞ்சி உடனே உடலைத்‌ துறப்பாளோ, அவளது மனமே தசுரயபக்தியுடைய
தாகும்‌. மற்றதெல்லாம்‌ வஞ்சக முடையதுதான்‌. 8)

என்று (கோத) கூறவும்‌, அவர்கள்‌ கூறினர்‌. “ அந்தக்‌ கண்ணன்‌ எங்கேபோய்விட்டான்‌?”” கேள்‌; இருவரங்கத்தில்தான்‌
அருக்கிறான்‌! விரைவெதற்கு? அவனே உன்‌ கணவளாவதற்கு அர்ச்சனைகள்‌ முதலியவற்றால்‌, இந்த (திருவில்லிபுத்தார்‌)
ஊரிலுள்ள ஆரி (வடபெருங்கோயிலுடையான்‌)யினைப்‌ பூசிப்பாயாக!’ * V—82

*அஞ்சேல்‌” எனவும்‌, மனம்‌ தெளிந்தாள்‌. பின்‌, அதிலிருந்து, அடிக்கடி தோழியர்‌ கூறும்‌ தெளிவுரைகளாகிய வெண்
(முத்துக்களும்‌, கவலைகளாகய ௧௫ (*லமணி)களும்‌ சுலந்து நகையணியாதக மெலிவுற்ற அவள்‌ இதயத்தில்‌ இடை இடை
மணிகோத்த பன்னசரம்போல இருந்தது.
(தெளிவுரைகள்‌ முத்துக்கள்‌, கவலை நீலமணிகளாக, இதயத்தில்‌ பிரதிபலித்தது என்பது கருத்து) V—83

காத்திருந்து எப்போதும்‌ சுண்ணுறங்கவிடாமல்‌, மன்மதண்டி சண்டைக்‌ கிழுத்தவாறிருக்க, வெண்ணிற (வளர்பிறை) கருநிற
(தேய்பிறை) இரவுகளாகிய முள்ளம்‌ பன்றியின்‌ முள்‌ வீட்டில்‌ வைத்தாற்போல மதிமுகத்திளளுக்காயிற்று,
(முள்ளம்‌ பன்றி முள்‌ வீட்டில்‌ இருந்தால்‌ கலகம்‌ வரும்‌ என்பது ஐ.கம்‌. அந்த முள்‌ கருப்பும்‌ வெளுப்பும்‌ ஆமாறு போல
வளர்பிறை தேய்பிறைகளாகய இரவுகள்‌ முள்போல குத்தவைத்து மன்மதன்‌ போரிட்டான்‌ என்பது கருத்து) -34

கதுளிர்களே ஆயுதமாக உடைய மன்மதனின்‌ அணையால்‌, காலை எனும்‌ பீரங்கி வீரன்‌, நங்கையின்‌ உறுதியாகிய பெருங்‌ கோட்டையை வீழ்த்த, நாள்‌ கோறும்‌ சினத்துடன்‌ மென்மை யான சூரியனின்‌ இளங்கதிராகய வத்தியின்‌ சுடர்பட்டு விரிந்த தாமரைக்‌ தண்டாகய இருப்புக்‌ குமா (பீரங்கி)யின்‌ துளை நின்று புறப்பட்ட கருவண்டுகளாகிய குண்டுகளைப்‌ பிரயோக௫ித்‌ தானி.
(மாலையில்‌ தாமரை மலருட்‌ புகுந்த கருவண்டுகள்‌ இகழ்‌ ஹடப்பட்டபின்‌, காலையில்‌ கதிர்பட விரிந்ததும்‌ இதழ்‌ விரிய வெளியேறியது. பீரங்கியிலிருந்து புறப்பட்ட இரும்புக்குண்டு களாக உவமிக்கப்பட்ட நயம்‌ பாராட்டற்பாலது) V—S85

நங்கையின்‌ உறுதியைக்‌ கெடுக்க, அருகில்‌ நடுப்பகல்‌ என்னும்‌ மந்திரவாதி, பனி நீர்த்துளிகள்‌ சிந்தும்‌ இல்லத்தில்‌ காவித்‌ துகில்‌ போரீத்த மாலையை விதானத்தின்‌ கீழ்‌ அமர்ந்து குடயற்திர ஏற்றம்‌ ஆகிய உருட்டினான்‌,
(குடங்களைச்‌ சச்கரத்தில்‌ கட்டி ஏற்றமாக இறைக்க ஒன்று கீழே நீர்‌ மொண்டு கொண்டும்‌ ஒன்று மேலே நீரைச்‌ இந்திக்‌ கொண்டும்‌ இருக்கும்‌ வகையிலமைந்த கமலையாகும்‌. இது இன்றும்‌ வடநாட்டில்‌ கிணற்றில்‌ நீர்‌ இறைக்கப்‌ பயன்படுத்தக்‌ காணலாம்‌. இது ஜபமாலை உருட்டுவதாக உவமிச்கப்பட்டது. பிறரை அழிக்க *அபிசாரஹோமம்‌” செய்வது போல நங்கையின்‌ உறுதியைக்‌ குலைக்க, நடுப்பகல்‌ முயன்றது என்பது கருத்து)1/..-660

தாமரை கேள்வனாகிய சூரியனாகய முகமுடையதும்‌ மல்லிகை மலர்கள்‌ ஆகிய பல்லினையுடையதும்‌, குவளை மலர்ப்‌ ந்தாதாகிய மேனி வண்ணமுடையதும்‌, தேன்வண்ணத்தாரகை களாகிய கண்களையுடையதும்‌ ஆகாய மரத்தில்‌ திரியும்‌ மாலை யாகிய பெண்‌ குரங்கு குட்டிகளாகய சக்கரவாகங்களின்‌ இச்சுக்‌ குரலோடு கூடியதாக–அந்த நங்கையின்‌ கவலையா இரவு களில்‌ (கனவில்‌) தோன்றி வருத்தியது.
(கனவில்‌ குரங்கு தென்படுவது  என்பது ஐதீகம்‌ மாலையே குரங்காகக்‌ காணப்பட்டதாகச்‌ கற்பனை) 37-67

இவ்விதம்‌ காலை, நடுப்பகல்‌, மாலை ஆய வேளைகளிலும்‌ வருந்தி, அற்ற மாட்டாது. அற்நங்கை, அங்கிருக்கும்‌ திருமாலை ண்டும்‌ அடைய மனளத்துட்கறாதினாள்‌. V— 88

தாமரை முகத்தினளளாகிய கோதை, தினந்தோறும்‌ விடியற்‌ காலையில்‌ மெளனமாகக்‌ கடவுளை வணங்கி எழுந்து, தோழியர்‌
தங்கப்பாத்திரத்தில்‌ மஞ்சளும்‌, நெல்லிக்காய்‌ முதலியவையும்‌ குளித்தற்குரிய பொருட்களைத்‌ தரவும்‌, துவைத்த துகிலும்‌,
கூந்தல்‌ உலார்த்தத்‌ துணியும்‌ எடுத்துக்‌ கொண்டுபோய்‌, வீட்டருகிலுள்ள தோட்டக்கிணற்றிற்குச்‌’ சென்று இவ்விய பிரபந்தப்‌
பாடலைப்‌ பாடியவாறு குளித்தெழுந்து, மஞ்சள்‌ பூசிய எழில்‌ மேனி அசைவின்‌ ஒளி வீச்சுகள்‌, இளங்கதிர்‌ வெயிலுக்கு மாறு
கொள்ள, (போட்டிடபோட) நீண்ட கூந்தலைப்‌ பின்னுக்கு முடித்து விரைந்து ஈரம்புலர்த்தி நியமப்படியே V—89

முல்லை முகை வென்ற பல்லினளாகிய கோதை, நெற்றியில்‌ பூசணிவிதை போல திருமண்‌ (நாமக்கட்டி) திலகம்‌ நீட்டி
யானையின்‌ மத்தகத்தில்‌ சிந்தாரம்‌ போல நிதம்பங்களில்‌ செவ்‌ வண்ணப்‌ பட்டாடையுடுத்தி இருந்தாள்‌. குளிர்ந்த இரவில்‌ பூசிய
புனுகன்‌ மணத்திற்கு வண்டுகள்‌ வந்து விருந்தயர கூந்தல்‌ ஈரம்‌ மணம்‌ பரப்பிட V—90

கோயிலுக்குச்‌ சென்று, தான்‌ கட்டிய செங்கழுநீர்‌ பூமாலையும்‌, மரத்தில்‌ பழுத்த கதலிப்‌ பழக்குலையும்‌ கொண்டு
சென்று, நம்பி (பூசாரி) மக்களை விலக்கி வழி செய்யப்போந்து, திருமாலை வணங்கி வழிபட்டு, கருவறைத்‌ திண்ணையில்‌ பல்‌
வண்ணக்‌ கோலமிட்டு 4.91

காராம்பசுவின்‌ நெய்‌ பெய்த பெரிய விளக்கில்‌ சுடரேற்றி துவய மந்திரத்தை உச்சரித்தவாறு திருமார்பிற்‌ சாற்றி, அகில்‌
புகையிட்டு, சர்க்கரை, நெய்‌ கலந்த வாழைப்பழத்தை நைவேத்தியம்‌(படையல்‌) சமர்ப்பித்து. V—92
* அதுகாலையில தாமமை மலபாதாதலின செங்கமுநீர்ப்‌ பூமாலை கொண்டு சென்றாள்

நறுக்கிய பாக்கும்‌, இஞ்சித்‌ துண்டுகளும்‌, கற்பூரத்‌ தண்டுகளும்‌ கலந்த தாம்பூலம்‌ (வெற்றிலை) மிகுந்த பக்கியுடன்‌
சமர்ப்பித்து, தோழிகளுடன்‌ புறப்பட்டு V—93

நங்கை, கருப்பகிரகத்தைப்‌ பிரதட்சினம்‌ செய்து (வலம்‌ வந்து) வணங்கி தலையில்‌ சடகோபம்‌ (சடாரி) தரித்து, சரண
இர்த்தம்‌ பெற்றுக்‌ கொண்டு, பிரசாதமாகக்‌ இடைத்த பூமாலையை அணிற்து கொண்டு, இல்லத்திற்குச்‌ செல்வாள்‌. V—94

அச்சுதன்‌ (வடபெருங்கோயிலுடையான்‌) திருவடிகளைத்‌ தினந்தோறும்‌ பூசை செய்து வந்து, பிரிவாற்றாமையாலே உறுதி
யிழந்தவளாகி, அப்பெருமானின்‌ குணங்களை தமிழ்‌ மொழியில்‌ (த்ரவிடபாஷன்‌) பாடிக்‌ கொண்டிருப்பாள்‌. V—95

இளவேனில்‌ ஏற்கனவே சூடி. கொடுத்தவளின்‌ (அமுக்க மால்யத) காதல்‌ வெம்மையாகிய கதிரவனால்‌ சுட்டெரிக்கப்பட்டு வெப்‌
புற்ற தென்திசையை எனது சூடும்‌ கூடினால்‌ முழுவது?ம கரிந்துவிடுமென்று விலகிக்கொண்டானோ எனுமாறு வடதிசை
நோக்கிக்‌ கதிரவன்‌ புறப்பட்டான்‌.
(தட்சிணாயனம்‌ விட்டு உத்தராயணம்‌ நோக்கி (மகர சங்கி ராந்தியன்று) சூரியன்‌ வடக்கு முகமாகப்‌ புறப்படுதல்‌ இயல்பு) V—S6

கொடுங்கதர்களையுடைய கதிரவன்‌ அப்போது குபேரனின்‌ (வடக்குத்‌) இசைக்குத்‌ சென்றதன்‌ காரணம்‌, தெரிந்துவிட்டது.
நங்கையின்‌ தாங்கரிய வீரகதாபத்தின்‌ தீச்சுட்ட தென்இசையில்‌ இருந்ததால்‌ உண்டான தன்‌ மேனிச்‌ சூட்டினைத்‌ தணிக்க
வேண்டி, சனவுருவடைந்த தண்ணீராகிய சிவபிரானின்‌ மாம னாகிய இமயமலைச்‌ சாரலில்‌ குனிர்மையுற்று உய்வதற்காகத்‌தான்‌. V—97

மன்மதன்‌ சினற்து (விரகமுற்ற நங்கையரீமேல்‌, படை எடுத்து வரும்போது அவன்‌ கொடியில்‌ உள்ள மீன்‌ (மீன ராசி) வருவது சரிதான்‌. மேடம்‌ (ஆடு) (மேஷ ராசி) எதற்காக, வநீதது என்று கூறுவானேன்‌? தலைவனைப்‌ பிரிந்து வாடும்‌ நஙிகையரின்‌ வருத்தும்‌ தீ (அக்னி) வரும்போது அதன்‌ வாகனமும்‌ (ஆடு) வராமல்‌ இருக்குமாச்‌(உத்தராயணத்தில்‌ சூரியன்‌ மீனராசி, மேடராூிகளில்‌ சஞ்சறித்‌ தலைக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது) V—98

காதலரை இறுகத்‌ தழுவுதல்‌ இனிமேல்‌ அவ்வளவாக (வசந்த காலம்‌ வருவதால்‌) இராது என்று குளிர்‌ காலத்திலேயே பயந்து உதடுகளை நக்கிய நங்கையர்கள்‌ முன்‌, வசந்த பருவம்‌ விரைந்து வந்தது, குளிர்‌ தீர்ந்து முன்னைய நிலைமைகளைத்‌ துறந்தகர்‌,
ஆபத்துக்‌ சகாரலத்தில்‌ தைரியமாக இருக்க வேண்டும்‌ என்ற மூதுரை பொருத்தமேயல்லவா?
(உதடுகளை நாக்கால்‌ நக்குதல்‌ பயத்தாலும்‌ ஏற்படும்‌ குளிர்‌காலத்தில்‌ பனியால்‌ உதடுகள்‌ பிளவுறுவதாலும்‌ ஏற்படும்‌. இவ்‌
விரண்டினையும்‌ இலக்கணையாலும்‌ சிலேடையாகவும்‌ உணர்த்தப்‌ பட்டுள்ளது. நங்கையார்‌ பயந்தபடியே வசந்தகாலம்‌ வந்தாலும்‌
உறுதியோடு சமாளித்துக்‌ கொண்டனர்‌ என்பது கருத்து) 14-99

பல காயங்களை (உதடுகளில்‌) உண்டாக்கிய குளிர்காலத்தில்‌ தாம்‌ எச்சிற்படத்திய தேனையே உண்ட தேனீக்களின்‌ எச்சி
லாகிய மெழுகினை (தம்‌ உதடுகளில்‌) பூசியதால்‌ ஏற்பட்ட அவமானத்தை இந்த வசந்தம்‌ இர்த்தது என்ற நன்றிப்‌ பெருக்‌
கால்‌ அந்நங்கையர்‌ஜ இலவேனிலானுக்கு ஓய்வளிதீது தாமே பூக்கள்‌ மலர ஊக்கமூட்டும்‌ (தோகத) செயல்கள்‌ செய்தார்கள்‌.
(உதட்டுப்‌ பிளவுக்குத்‌ தேன்‌ மெழுகினைப்‌ பூசுதல்‌ மரபு. அதனால்‌ பெண்கள்‌ இழிவுற்றனராம்‌. அதைத்‌ தவிர்தசது
இளவேனில்‌. ஆதலால்‌ நன்றியுடன்‌ வசந்தனின்‌ வேலைகளில்‌தாமும்‌ பங்கு கொண்டு வேலைப்‌ பளுவைக்‌ குறைத்தனராம்‌,
உதைத்தலால்‌ அசோகு, உமிழ்தலால்‌ மகிழும்‌, டார்த்தலால்‌ மாவும்‌ தளிரித்துப்‌ பூக்கும்‌ என்பது வடமொழி இலக்கிய ட்டம்‌–5-100

ஏற்கனவே சந்திரனின்‌ பலத்தோடு (கஇிரககஇியால்‌ சந்திரபலம்‌) மலய மலையின்‌ மணம்படு இளங்காற்று எனும்‌ தேரில்‌,
ஏறிவரும்‌ மன்மதனுக்கு, கதிரவன்‌ கூட புதிதாகத்‌ துணை நின்றான்‌. பிரிந்த தலைவியரின்‌ உயிர்கவர நினைக்கும்‌ விதியின்‌
செயல்‌ நிறைவேறாமல்‌ போகுமா? 5-.10]

சூடாமணிப்‌ பாடலும்‌ இக்கருத்தைக்‌ கூறும்‌. — ஏடவிழ்‌ ம௫ழ்சுவைக்க எழிற்பாலை நண்புகூடப்‌
பாடலம்‌ நிந்திக்கத்‌ தேம்படிமுல்லை நகைக்கப்‌ புன்னை ஆட, நீள்குரா அணைக்க, அசோகுதைத்திட வாசத்தி
பாட மாப்பார்க்க வார்சண்பக நிழற்படத்‌ தளிர்க்கும்‌ சூடாமணி நிகண்டு 12-109

மலய (பொதிகைமலைச்‌) சாரலில்‌ தவக்குடியில்‌ வாழும்‌ குடமுனியினிடம்‌ பணிவிடை புரிந்து கற்றாளனோ எனுமாறு
தென்றல்‌ காற்று மெதுவாகத்‌ தவழ்ந்து பனிக்கடலைப்‌ பருகியது.
(குடமுனி (அசத்தியன்‌) கடலைக்‌ குடித்த கதை பிர௫த்தம்‌. அவனிடம்‌ கந்றுதனால்‌ குளிர்கடலைக்‌ குடித்துக்‌ குளிர்மை
யூ.ற்‌.றதென்பது கருத்து), V—102

பொதிகைச்‌ சந்தன மரத்தின்‌ பரிமளச்‌ சிறப்பினை மற்றுள்ள எல்லா மரங்கட்கும்‌ உருவாக்க வேண்டுமென்றுதான்‌ போலும்‌
மலரீவிக்கும்‌ சாக்கில்‌ மணமுண்டாக்கியது எனுமாறு அங்கு தென்றல்‌ வீசியது. ்‌ Y—103

இரவிக்கையவிழ்த்து, ஒருக்களித்துக்‌ காதலரைத்தழுவியவாறு தமது செறிமுலைகள்‌ அவர்களது மார்பில்‌ ஒற்றப்படுத்திருந்த
காதலியர்‌, சிறிது நேரம்‌ கழித்து வியர்வை படிந்ததென ஐயுற்று விடியலில்‌ இலுப்பைப்‌ பூக்களை மலரச்‌ செய்து வரும்‌ தென்றற்‌
காற்று வீசவும்‌, கொசுவலையை மேலே எடுத்துக்‌ கட்டினார்கள்‌. வெம்மை மிகவே இரும்படுப்பின்‌ கணப்பினைத்‌ தூண்டாமல்‌
விட்டு விட்டனர்‌. V—10

செங்கதிர்களையுடைய கதிரவன்‌, பனிக்கர்லம்‌ எனும்‌ இரவில்‌ மெலிந்து மறைந்து, இளவேனிற்காலமாகிய பகலின்‌
விடியலில்‌ எழுந்து, மங்கையரின்‌ கொங்கைகளிற்‌ பூச்சாக இட்ட குங்குமமாகிய செம்மையை (முன்‌ ஒப்படைத்த பொருளை
மீண்டும்‌) பெற்றுக்‌ கொண்டான்‌. இல்லாவிட்டால்‌ காலக்கணித மறியும்‌ கோழி (குயில்‌)யின்‌ குரல்‌, புலர்ந்த மகளிரின்‌ செவிகட்கு
இடியாகத்‌ தோன்றுமா?
(பனிக்காலம்‌ (ஹேமந்த சிசிரருதுக்கள்‌) இரவாகும்‌. வசந்தம்‌ பகல்‌, பசுலில்‌ எழுந்த சூரியன்‌ செம்மை ஏற்றான்‌. அது
முன்பே பெண்களின்‌ முலைக்குவட்டில்‌ பூசிய குங்குமமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, சூரியன்‌ இரவில்‌ தன்‌ சூட்டினை
அக்னியிடம்‌ தருவான்‌. மறுநாள்‌ பெறுவான்‌ என்பது மரபு.
இங்கு அக்னிகை எனும்‌ குங்குமப்பூ அகீனியாகும்‌, அதனிடம்‌ செம்மையுளது, முலையில்‌ வெம்மையும்‌ குஙிகுமச்‌ செம்மையும்‌
இருத்தலின்‌ சூரியன்‌ ஒப்படைத்ததாகக்‌ கற்பனை செய்யப்‌ பட்டது. விடிந்ததும்‌ கோழி கூவும்‌. அதுபோல வசந்தமாகிய
விடியலில்‌ கோழி போலக்‌ காலக்‌ சுணிதமறிந்து வசந்தத்தில்‌ கூவும்‌ குயிலின்‌ குரலிசையும்‌ அமைந்தது. புலவி கொண்ட மகளிர்‌
கோழியின்‌ குரல்‌ கேட்டதும்‌ இடி முழக்கம்போல பொழுது வீணே கழிந்ததே விடிந்து விட்டதே என்று வருத்தம்‌ செய்வது போல,
குயிலின்‌ இசையும்‌ பிரிந்த தலைவியரை வருத்தமுறச்‌ செய்யும்‌.பருவஙிகளை ஒரே நாளாகக்‌ கற்பனை செய்யப்பட்டது) v—105

கஸ்‌.தூரிப்‌ பூச்சை விடுத்து சந்தனம்‌ பூசினர்‌. முலையிணை களில்‌ முத்துமாலை அணிந்தனர்‌, செருகிய சரப்பூமா லையில்‌ ஒரு நன்னாறிவேரினை ஏற்றுக்‌ கொண்டார்கள்‌.
(இளவேனிற்‌ தொடக்கமாதலின்‌ சம சீதோஷ்ணமான பொருள்களை ஏற்றனர்‌ என்பது கருத்து), V—106

பெண்‌ பாம்புகளின்‌ அமுத ரச இதழிலிருந்‌ தூறிய வாய்‌ மணத்தால்‌ இனிமையுடையதாகியும்‌, நயந்த காதலராகிய ஆண்‌ பாம்புகளின்‌ நச்சுப்‌ பற்களின்‌ வெம்மை படிந்த காரமுடியதாரஅ யும்‌ கலந்து சந்தனப்‌ பொதிகைத்‌ தென்றல்‌, புறப்பட்டு வீசுவதால்‌ மரங்களில்‌ வற்றலாகி (இலைகள்‌ உதிர்தலும்‌)யும்‌ தளிர்கள்‌ தளிர்த்தும்‌ இருகுணங்களையும்‌ கொண்டதாக இருந்தது.
(ஆண்‌ பாம்பின்‌ நச்சுக்காற்றால்‌ மரங்களில்‌ இலைகள்‌ உதிர்‌தலும்‌, பெண்‌ பாம்பின்‌ அமுதக்‌ காற்றால்‌ தளிர்கள்‌ தலிர்த்தலும்‌
ஆகிய இரு பண்புகளையும்‌ கொண்டதாகத்‌ தென்றல்‌ காற்று வீசியது). V—107

சந்தன (பொதிகை) மலையிலிருந்து திரியும்‌ மெல்லிய தென்றற்காற்று, பழுத்த மரஞ்‌ செடி கொடிகளிலிருந்து காம்‌
புதிர்ந்து வீழ்ந்த இலை (சருகு)கள்‌–தாமரைப்‌ பொகுட்டில்‌ உடையதும்‌, முறித்த மஞ்சட்‌ காம்பினுடையதுமான மஞ்சள்‌
வண்ணமுடைய தங்கச்‌ சக்கரங்கள்‌ (ஆடப்‌ பொலியும்‌ தேரில்‌ கிறு கிறு என்ற ஒலியுடன்‌ செல்வதால்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது
உண்மை எனத்‌ தெரிந்தது.
(தென்றல்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது சுவி மரபு, மன்மதன்‌ திருமகளின்‌ மகன்‌ அல்லவா? தங்கத்தேராகத்‌ தானே இருக்க
வேண்டும்‌. தங்கத்தேரின்‌ தங்கச்‌ சக்கிரங்களே உதிர்ந்த மஞ்சள்‌ இலைகள்‌ என்பது கற்பனை) V—108

அதன்பிறகு V—109

பூமி என்னும்‌ பிடி (பயானை)யின்‌ மேல்போரீத்திய சப்புக்‌ கம்பளமாகவும்‌, பெருங்காடு எனும்‌ நங்கையின்‌ மதுமாதம்‌
(வசந்தம்‌) எனும்‌ மதுவுண்டதால்‌ ஏற்பட்ட செம்மையாகவும்‌, கொடிகள்‌ என்னும்‌ பாம்புகளின்‌ நாக்காகவும்‌, மரங்கள்‌ எனும்‌
கருடனின்‌ இறகாசவும்‌, செய்குன்றமாகிய மேகத்தின்‌ படிந்த வாள வில்லாகவும்‌,
புதிதாக வந்த தும்பிகள்‌ எனும்‌ விருந்தாளிகளை அழைக்கும்‌ மங்கள (அட்சதை) மஞ்சளரிசியாகவும்‌, காகத்திடமிருந்து பிரிந்த
குயில்களின்‌ பிரிவுப்‌, பத்திரிக்கைகளாகவும்‌, மாலதி (சாதிமல்லிகை)யை அச்சுறுத்தும்‌ நோயான பச்சை இரத்தமும்‌, வன
தேவதைகள்‌ பூசிய குங்குமமாகவும்‌, தென்றல்‌ காற்று எனும்‌ சாணையிற்பிடித்ததால்‌ உராய்ந்து பழுத்த இலைகள்‌ எனும்‌
மேற்‌ செதில்கள்‌ உதிர்ந்து, ஒளி வீசும்‌ பதுராகம்‌ (செம்மணி) ஆகவும்‌, தளிர்கள்‌ எங்கும்‌ தளிர்த்திருந்தன . V—110

முல்லைப்‌ பூக்கள்‌ அம்பறாத்‌ தூணியில்‌ தீர்ந்துவிட்டன மன்மதனை இச்சமயத்தில்‌ வெல்லலாம்‌ எனக்‌ கருதிய
பெரியோர்கள்‌, கொடிய பலிகள்‌ தரும்‌ நாட்களான தேய்பிறைஇரவில்‌ (சிவராத்திரியில்‌ மன்மதன்‌ பகைவனான சிவனை
வணங்கியும்‌, தளிர்கள்‌ எனும்‌ பட்டாக்கத்தியால்‌ அடிக்கப்‌ பட்டார்கள்‌.
(மன்மதனுக்கு மலரம்புகளில்‌ மாசி மாதம்‌ மிகுதியும்‌ பூக்கும்‌முல்லைப்‌ பூக்கள்‌ சித்திரை மாதத்தில்‌ தீர்ந்துவிட்டதால்‌, அவன்‌
தூணியில்‌ முல்லைகள்‌ இல்லை. இதுதான்‌ சமயம்‌ என்று மன்மதனை வெல்ல பெரியோர்கள்‌ முயன்றனர்‌. மன்மதனின்‌
பகைவன்‌ சிவன்‌ ஆதலின்‌ வழிபட்டனர்‌. எனினும்‌ மன்மதன்‌ அம்புகள்‌ இல்லாவிட்டாலும்‌ தளிர்கள்‌ எனும்‌ கத்தியால்‌ அவர்‌
களை வீழ்த்தினான்‌. என்பது கருத்து) 111

பூமியில்‌ அப்போது புதிதாகப்‌ பிறந்த மன்மதன்‌ எனும்‌ குழந்தைகளுக்கு, வசந்த காலம்‌ எனும்‌ மருத்துவச்சி கொப்பூம்க்‌
கோடியறுத்த பண்ணரிவாள்‌ போன்ற புரசம்‌ பூமொட்டுகள்‌, பிரிந்திருப்பவர்களின்‌, நெஞ்சங்களையும்‌ அரிந்தன. 4.12

(பிரசவம்‌ பார்க்கும்‌ மருத்துவச்‌ வசந்த காலம்‌, புதிதாகப்‌ பிறந்த குழந்தையே மன்மதன்‌. கொப்பூழ்‌ கொடியறுத்த பண்ணிரிவாள்‌ புரசமொட்டு. புரசமொட்டு பண்ணரிவாள்‌ போல வளைந்திருக்கும்‌ கொப்பழ்‌ அறுத்ததால்‌ இரத்தம்‌ படிந்து சிவந்தாற்போல புரசம்‌ பூக்கள்‌ சிவந்திருக்கும்‌)
பிற எல்லா மலர்களும்‌ நங்கையரின்‌ கூந்தலில்‌ இருப்ப (மணமின்மையின்‌) தான்‌, மட்டும்‌ அப்படி இருக்க முடிய வில்லையே என்ற நாணத்தால்‌ வணங்கிளாற்‌ போல வளைந்‌ திருந்த, புரசமொட்டுகள்‌ எனினும்‌, காதலா்‌ (பீய்ச்சுங்‌) குழலில்‌ (புரச மலரை அரைத்துக்‌) கரைத்துத்‌ தெளித்தலால்‌ நங்கையரின்‌ கொங்கைகளில்‌ சிறிது நேரமேனும்‌ மெய்ப்பூச்சாக இருக்கும்‌ பாக்கியம்‌ இடைத்ததே என்ற பெருமிதத்தில்‌ மக௫ழ்ந்ததவோ எனுமாறு சிவந்து மலர்ந்து எழில்‌ பெற்றன.
(புரசமுூகை, நாணத்தால்‌ வளைந்தாலும்‌, வசந்தகாலத்தில்‌ (காமன்‌ பண்டிகையில்‌) செவ்வண்ண நீருக்காக புரசமலர்சளை அரைத்து நீரிற்‌ கலந்து பீய்ச்சாங்குமலால்‌ தெளிப்பார்‌, ஆதலின்‌ கொங்கையிற்‌ படிந்து, அதிக நேரம்‌ கூந்தலில்‌ இருப்பதைளி ட சிறிது நேரம்‌ கொங்கசையில்‌ இருப்பது சிறப்பெனக்‌ கருதி மகிழ்ந்து மலர்ந்தன என்பது கருத்து) V—113

தென்றல்‌ காற்றானது, சந்தனப்‌ பொதிகை மலைக்‌ காடு களின்‌ மரங்களின்‌ மணத்தில்‌ தோய்த்து, தாமிரபரணியில்‌
கிடைத்த முத்துக்களாகிய விதைகளை திறமையுடன்‌, கை விதைப்பாக விதைத்திட முளைத்தது போலும்‌, இல்லாவிட்டால்‌
இத்த (வசந்த சால) மலர்களுக்கு உருவெழிலும்‌ நன்‌ மணமும்‌, எவ்விதம்‌ கிட்டும்‌ எனுமாறு புதுமலர்கள்‌ தோன றின,
(விதைத்தல்‌ இருவகை, கைவிதைப்‌ பாக கைப்பிடியில்‌ எடுத்து எறிந்து விதைத்தல்‌ ஒருவகை. கருவியில்‌ விதைகளைப்‌
பெய்து துளை வழியாக ஒவ்வொன்றாக வீழச்‌ செய்வது ஒரு வகை. கைவிதைப்பு சிறப்பென்பர்‌, தென்றல்‌, முத்துக்களை
சந்தன மனத்தில்‌ தோய்த்து விதைத்ததாக கற்பனை செய்யப்‌ பட்டது) v—114

கொடிகளையும்‌ மரங்களையும்‌ இரட்டையராக (தம்பதியராக) இணைவிக்க, மன்மதன்‌ (அம்பினை) எய்யவும்‌. அது
துளைத்து (இப்புறமிருந்து அப்புறத்திற்கு) ஊடுருவி, பசு வண்ணமுடைய  மேற்தோல்‌ சிதைய முளைத்த அம்பின்‌ முனைகளோ
எனுமாறு மொட்டுக்கள்‌ தோன்றின. v—115

வனலட்சுமி எனும்‌ திருமகள்‌, தன்‌ வயிறரகிய நிலத்தில்‌ பிறந்த மரங்கள்‌ எனும்‌ குழந்தைகள்‌ தளிர்களால்‌ செவ்வண்ணம்‌
கொண்டிருப்ப, அவை வளரவும்‌ மொட்டுக்கள்‌ ஆகிய பற்கள்‌ முளைக்கவும்‌, இனி மாதவன்‌ (வசந்தன்‌) ஆகிய காதலனைக்‌
கலந்தின்புறலாம்‌ என மஒழ்ச்சியாற்‌ பொங்கினாள்‌.
(குழந்தைகள்‌ பிறக்கும்போது டுயல்பாக செம்மையாக இருப்பார்‌. அதுபோல தளிர்‌ வண்ணச்‌ செம்மையால்‌ மரங்கள்‌
பிறந்த குழந்தைகள்‌ போன்றன. பின குழந்தைகள்‌ வளரவும்‌ பற்கள்‌ தோன்றும்‌, அது? பால மரஙிகளில்‌ மொட்டுக்கள்‌ பற்கள்‌
போலத்‌ தோன்றின. பிரசவித்த பெண்டிர்‌, தமது குழந்தை களுக்கு பற்கள்‌ முளைத்த பிறகு மீண்டும்‌ புணர்ச்சிக்குத்‌ தகுதி பெறுகின்றனர்‌ என்பது மரபு, ஆதலின்‌ வனலம்சுமியாகிய திருமகள்‌, மரக்குழந்தைகட்கு மொட்டாகிய பற்கள்‌ வரவே இனி மாதவனைக்‌ சகுலநிதின்புறலாம்‌ என மகிழ்ந்தாள்‌ எனுமாறு
வசந்த கால எமில்‌ தோன்றியது.
குழந்தைகட்கு பற்கள்‌ முளைத்ததும்‌ கலவிக்குத்‌ தாம்‌ தகுதி யுற்றோம்‌ என பெண்டிர்‌ மகழ்ந்ததாக *காதா சப்த சதிூயிலும்‌
சில பாடல்கள்‌ உள்ளன. சுருதி, ஸ்மிருதிகளிலும்‌ கூறப்‌ பட்டுள்ளது) V–116

முதலில்‌ பூக்களை ஆர்வமுடன்‌ முன்கால்களால்‌ பற்றி மூக்கன்‌ இரு துளை (தும்பிக்கை)சகளால்‌ உறிஞ்சி, பச்சை
வாசனையடிக்க3வ விடுத்து,
பருவமலரீகளின்‌ கொத்துள்ள இடத்தை ஆராய்ந்து பூம்புதர்க்கு நிரை நிரையாகச்‌ சென்று, நுழைந்து ஒரு தும்பி,
புது மலரின்‌ முன்பே நுழைய முயன்றபோது அதனைத்‌ தள்ளி
நிலத்தில்‌ விழச்‌ செய்து, தான்‌ பூந்தேன்‌ மாந்த, இலைகளு]ர்ந்த துளையில்‌, ஊறிய பசையை (மதுவெளனமயங்கி) குடிக்க ஆசைப்‌
பட்டு, காலூன்றி கால்‌ சிக்கிக்கொள்ளவே பயந்து கூவி, எப்படிமோ, ஒரு மலர்‌ கிடைக்கவும்‌, வயிறாரக்‌ குடித்து,
அம்மலர்‌ காற்றில்‌ அசையவும்‌ தடுமாறி நிலை நிற்க,
பூந்தோட்டத்தைக்‌ காவல்‌ காக்கும்‌ கஉனியர்‌ விளையாட்டாக நகைத்தவாறு பிடிக்கவும்‌ மலரிலிருந்து கீழே விழும்‌.
(வசந்த காலப்பூக்களை நாடும்‌ ஒரு தும்பியின்‌ வருணனை இது, முதலில்‌ படிந்த பூ பக்குவமில்லாததாதலின்‌ விடுத்து, பருவமலரை நாடி, ஏற்கனவே படியும்‌ தும்பியைக்‌ கீழே ஒன்ளித்தான்‌ குடித்தது. வயிறு நிறைத்த மயக்கத்தில்‌ இருக்கும்‌ போது கன்னியர்‌ பிடித்தனர்‌) V—117

(வண்டுகளின்‌ வருணனை)
காற்று கொணர்ந்த சந்தனமலை மரப்பாம்புகளின்‌ ந்ச்சுப்‌ புகைபோலவும்‌, ௮ ) சக்கடி வீழும்‌ மன்மதனின்‌ தோர்ச்சக்கர த்தின்‌ வண்டிமை (மசகு)த்‌ துண்டுகள்‌ (கவளம்‌) போலவும்‌,
(வசந்தகாலத்தைக்‌ கண்டஞ்சி) பயந்தோடும்‌ சர (குளிர்‌) காலம்‌ (நங்கை விடுத்த (கருமை நீட்டிய) கண்ணீர்த்துளிசளோ எனுமாறும்‌,
குயிலின்‌ பஞ்சமசுத்தைப்‌ பாடற்கேற்ற சின்னஞ்சிறிய வீணை3யா எனுமாறும்‌, மழைபோன்று தேன்மமை பெய்யவும்‌ பழுத்த நாவற்கனிகளோ எனவும்‌ மமைக்காலம்‌ பாடப்பட்ட இததோளராகத்திற்‌ இசைந்து வந்த காரர்வண்ணனாகய திரு மாலின்‌ மேனி எழிலோ எனுமாறும்‌, கனவினில்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியரின்‌ துகலினை கருவண்ணமாக்கும்‌ சித்த குளிகையோ எனுமாறும்‌ சாதிமல்லிகைப்‌ பூக்கள்‌ (பூக்காத கால மாதலின்‌) வசந்த காலத்தைப்‌ பழித்துத்‌ தூற்றிய வசைமொமி களோ எனுமாறும்‌,
நங்கையர்‌ (குளிர்காலத்தில்‌ கணப்படுப்பில்‌ வைத்த alls துண்டுகள்‌, வசந்த காலம்‌ வந்ததால்‌ இனித்‌ தேவையில்லை என்று) எறிந்ததும்‌ அக்‌ கரித்துண்டுகள்‌, வசந்தகாலமாகிய அமுத சஞ்சீவிபட்டு, மீண்டும்‌ உயிர்பெற்று தாம்‌ பிறந்த இடமாகிய மரங்களை நாடிச்‌ செல்கின்றனவோ எனுமாறும்‌ வண்டுகளின்‌ கூட்டம்‌ காட்டில்‌ அலைந்து திரிந்தன.
(இந்தோள ராகம்‌ . வசற்த காலத்‌ தொ…க்கத்தில்‌ பாடுதற்‌ குரிய பண்ணாகும்‌.
சித்த குளிகையால்‌ பிறரரியாது போகும்‌ திறன்‌ ஏற்படும்‌. களவிற்புணரக்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியர்‌ பிறர்‌ காணா
திருக்க இரவில்‌ நீல வண்ண ஆடை அணிவர்‌. சித்த குளிகை ௧௫
நிறம்‌ ஆக இருப்பதால்‌ வண்டாக கற்பனை செய்யப்பட்டது .
புகழ்‌, வெண்மை, இகழ்கருமை என்பது கவிமறபு. சாதிமல்விகை கள்‌ சபித்தல்‌ இகம்‌ ஆதலின்‌ அவை கருமையாக உ வமிக்கப்‌
பட்டது) V—i18

இரு பிறப்பிளையுற்றும்‌ மதுசேவை விடாது சாஇதியைவிடுத்த
தேனீக்களின்‌ இசையோடு கூடிய தாலோ என்னவோ குயிலிசை யும்‌ பஞ்சமத்தையடைந்தது,
(இரு.அிறப்பு – அந்தணர்‌, பல்‌, பறவை மூன்றுக்கும்‌ துவிசர்‌ என்பதாதலின்‌, ஈண்டு வண்டு (பறவை) ஆகிய பிராமணன்‌, மது
சேவை (தேன்‌-கள்‌) யாலே சாதியை (சாதிமல்லிகைப்பூவை) விடுத்தலால்‌ பாவம்‌ செய்ததாயிற்று. அந்த வண்டோடு சேர்த
லினாலே குயில்‌ பஞ்சமத்தை (பஞ்சமம்‌ எனும்‌ சுரத்தை) அடைந்தது. பஞ்சமம்‌ என்பது பஞ்சமாபஈதகத்தை என்பதும்‌
குறிப்பிடும்‌, இவை சிலேடையாகப்‌ பொருள்பட்டன.
பிரம்ம ஹத்தி, மதுபானம்‌, இருட்டு, குருமனைவியைப்‌ புணரல்‌ இந்நான்டும்‌ மாபாதகம்‌, இத்நதுகையோரிடம்‌ சேர்வது
ஐந்தாவதாகிய பஞ்சமாபாதகம்‌ என்பது மரபு.) V—119

(மா என்ற சொல்‌, குதிரை, மாமரம்‌எனும்‌ இருபொருட்டும்‌, இச்சிலேடை. மூலம்‌ வரும்‌ கற்பனை இது.)
பூத்த மாவினை. கேடுவரும்‌ எனும்‌ ஐயத்தால்‌ மலரம்பின னுக்கு மாதவன்‌ (வ௪ந்த காலம்‌) விற்றனன்‌ அவன்‌ அதனையே
கைக்கொண்டு, பிரிந்து செல்பவர்களை வெல்லும்‌ திறமை பெற்றனன்‌. தனக்குதெய்வம்‌ அனுகூலமாகவும்‌, பிறருக்கு
மேன்மை குறையும்காலமாகவும்‌ இருந்தால்‌ கருவிகள்‌ பழுதுறினும்‌ வெற்றி பெறுவது நிச்சயம்‌ அல்லவா?
(பூத்த மா என்பது ஈண்டு நிறம்‌ வேறுபாடுற்ற குதிரை என்பது ஒரு பொருள்‌.ர்குதிரையின்‌ தோல்‌ நிறம்‌ வெளுப்புற்றால்‌
அதனால்‌ தீங்கு ஏற்படும்‌ என்பது அசுவ சாத்திரக்‌ கருத்து. பூத்த மாமரம்‌ பிரிந்தவார்கட்கு துன்பந்தருவதாகும்‌. இங்கு பூத்த
மாவாகிய குதிரையை மன்மதனுக்கு வசந்தன்‌ விற்றுவிட்டான்‌ என்றாலும்‌ மன்மதன்‌ தெய்வ அரளால்‌ அதனைக்‌ கொண்டே
வெற்றி பெற்றான்‌ என்பது கருத்து) V—120

வசந்த காலம்‌ எனும்‌ பால்‌ கறப்பவன்‌ தன்‌ ஆற்றல்‌ முழுதும்‌ காட்டி, இரவு எனும்‌ பசுவின்‌ சந்திரன்‌ எனும்‌ மடியில்‌ கறந்த
நிலவு,என்னும்‌ அமுது பரந்து, பிச்சிப்‌ (கொஜ்ஜக) பூக்களின்‌ மச ரந்தமாகிய மணம்‌ பொருந்திய நீரும்‌ கலந்து முன்னீராகப்‌
(கடலாக) பெருக்கெடுத்து இருக்கவும்‌, வண்டுகள்‌ ஆ£ய அன்னங்‌கள்‌ பிரித்தறிந்து உண்டன.
(அன்னம்‌ பால்‌ மட்டும்‌ பிரித்தறிந்துண்ணும்வண்டுகள்‌ நீர்‌ மட்டும்‌ பிரித்தறிந்துண்ணும்‌ நிலவாகியபாலும்‌, பூந்தேனாகய
மண நீரும்‌ கலந்திருட்ப வண்டுகள்வேறு பிரித்துண்டன என்‌. கருத்து,) V—.20

பொய்கையில்‌ அன்னப்பறவை தாமரைத்‌ தண்டினைத்‌ துண்‌டித்து வாயிற்‌ கவ்விக்‌ கொண்டு, கரையில்‌ வளைத்திருச்கும்‌ கரும்‌
பின்‌ ஊடாகப்‌ பறந்து அப்புறத்திலுள்ள மலர்ந்த புன்னை மரக்‌ இளையிற்‌ சென்று வ௫க்கவும்‌, (தாமரைத்‌ தண்டின்‌) நூலிழைகள்‌
வழியாக புன்னை மரத்‌ தேனுக்கும்‌ பொய்கை மலர்த்தேனுக்கும்‌ வரவும்‌ போகவுமாக இருக்கும்‌ வண்டுகளின்‌ வரிசை மன்மதனில்‌
(கரும்பு) வில்லுக்கு இரட்டை நாண்‌ ஆகத்தோன்றியது. 7–122

காற்று, நீண்ட தேன்‌ ஒழுக்கினை (நிலத்தில்‌ விழுமுன்பே) இடையை பெற்று, (பிசுபிஈத்துள்ள மையின்‌) அவை கொடிகளா
இச்‌ சுற்றிக்‌ கொண்டாற்போல பஞ்சள்‌ (கோரோசனை திறம்‌) வண்ணமுடையதா௫, கண்ணாடி வளைபோல நெளிந்த சுழித்துக்‌
கொண்டிருப்ப மெதுவாக நடந்தது? பிரிவுற்ற தலைவர்களின்‌ நெடுமூச்சுக்களாகிய இ எதிர்படவே, கொழுந்துவிட்டெறிந்து
படபடவெளனப்பொறிந்து சுழிப்புற்றனவோ எனுமாறு அக்காற்று திகழ்ந்தது. V—123

வனலட்சுமியானவள்‌ தனக்கும்‌ நிலமகளுக்கும்‌ கணவனாகிய மாதவன்‌ (வசந்தகாலம்‌) வருவதை உணர்ந்து, மலர்கள்‌ என்னும்‌ தகைகளை நிலமகளுக்கும்‌, நிலத்தாமரை என்னும்‌ நகைகளைத்‌ தனக்கும்‌ இரவலாகப்‌ பரிமாறிக்‌ கொள்ளத்‌ திரியும்‌ மரையாணித்‌ தஇருகலோ.
எனுமாறு 8ழே உதிர்ந்த பூ மகரந்தத்‌ தூளை வாரி எடுத்து சுழன்றடித்த காற்று மரங்கள்‌ மேல்‌ பொழிந்து மஞ்சள்‌ வண்ண முடன்‌ சுழன்றன. V—124

நங்கையர்‌ மகிழ மரத்தை மதுவுமிழ்ந்து பூக்கச்‌ செய்தலைக்‌ கண்ட வனதேவதைகள்‌ “நாங்களும்‌ பெண்கள்தானே” £ என்று எல்லா மகிழ மரங்களையும்‌ பூத்திடச்‌ செய்ததற்கு (தாண்டற்‌ காக) தம்‌ கன்னம்‌ நிறைய மதுவைத்‌ தேக்கி (௨மிழ்தற்காக)
வைத்தனரோ எனுமாறு மகரந்தம்‌ நிறைந்த இலுப்பைப்‌ பூக்கள்‌ நிறைந்திருந்தன.
(இலுப்பைப்‌ பூக்கள்‌ வெண்ணிறமுடையவை, கள்ளிற்கு உவமையாக்கப்பட்டது.) V—125

நங்கையர்‌ தழுவுதலால்‌ பூக்கும்‌ வாய்ப்பினை இழக்கசி செய்து, தம்மைப்‌ வீணாகப்‌ பூக்கள்‌ சுமை தாங்கெளாக்கி
விட்டான்‌ இந்த வசந்தன்‌. (இளவேனிற்காலம்‌) என்று; தழுவு மின்பம்‌ இடைக்காததால்‌ காதல்‌ தீயில்‌ வெந்து, வண்டுகளே
புகையாக, பூநீதுகளே நீறாக (சாம்பலாக) மகரந்தமே சா$தாக கொள்ளிக்கட்டையான குரவகம்‌ (மருதாணி) நிலத்தில்‌ சாய்ந்தது.
(கொரவி என்ற சொல்‌ கொள்ளிக்கட்டை ‘ என்றும்‌ குரவக மரம்‌ என்றும்‌ இருபொருள்‌ தெலுங்கு மொழியில்‌ உண்டு. அப்‌
பொருள்‌ சிலேடை நயம்‌ தோன்ற இப்பாடல்‌ அமைந்திருக்கிறது,
கொள்ளிக்கட்டை எரிந்தால்‌ புகையும்‌, சாம்பலும்‌ கட்டை நுனியில்‌ நீர்ச்‌ கசிவாகிய சாந்தும்‌ ஏற்படுதல்‌ இயல்பு. வண்டுகள்‌
கருநிறமாதலின்‌ புகையாகவும்‌, பூந்துகள்‌ சாம்பல்‌ (நீறு) ஆகவும்‌ மகரந்தம்‌ சாந்தாகவும்‌ உவமிக்கப்பட்டன. மிகுதியாகப்‌ பூத்து
விட்டதால்‌ பெண்கள்‌ தழுவ வரவில்லை என்ற ஏக்கத்தால்‌ காதல்‌ வெம்மை கொண்டு மரம்‌ எரிந்து கொள்ளிக்கட்டையாகி
விட்டது என்பது கற்பனை) V—J26—மரையாணி -Screw.

நங்கையர்‌ மாமரத்தை தொட்டு, பூக்கச்செய்யவே வண்டுகள்‌ கொண்டாட, காய்கனிகள்‌ உதிர்ந்து தம்‌ ‘உணவு கெடுதலின்‌,
கிளிகளும்‌ குயில்களும்‌, திண்டாடிச்‌ சனத்தலினால்‌ (கிளிகளின்‌) முகமும்‌, (குயில்களின்‌) கண்ணும்‌ மிகுதியாகச்‌ சலவந்தன.
(வசந்த காலத்தில்‌ கிளி (மூக்கும்‌, குயிற்கண்ணும்‌ அதிகம்‌ சிவப்புறும்‌ அதனைச்‌ சினத்தலினால்‌ வந்ததாகக்‌ கற்பனை செய்யப்பட்டது) V—127

இணையற்ற காதலால்‌ நெகிழ்ந்த ஒரு பெண்‌, தன்‌ காதலன்‌ விளையாட்டாகக்‌ குறியிடத்தில்‌ மறைந்திருப்ப அவனைக்‌
காணாது காதல்‌ வெம்மை கூர்ந்து மனக்கலக்கம்‌ உற்று “Qlமரமே! என்‌ ‘ காதலனைக்‌ கண்டனையோ” என்று கேட்டதும்‌
அற்த மலைக்‌ கோங்குமரம்‌, மலர்ந்தது. அவ்வளவில்‌ அவன்‌ காணப்படவே அவள்‌ நகைக்கவும்‌, அருகிலிருந்த சுரபுன்னை
மரமும்‌ மலர்களால்‌ நிறைந்தது.
(கோங்கு பெண்கள்‌ உரையாட மலரும்‌. சுரபுன்னை நகைத்தலின்‌ மலரும்‌ என்பது கவி மரபு. குறியிடத்தில்‌
விளையாட்டாக மறைந்திருந்த காதலனைக்‌ காணாக்காரிகை கலக்கமுடன்‌ மரத்தைப்‌ பார்த்து உரையாடினாள்‌. கோங்கு
மலர்ந்துவிட்டது. கோங்கு ! மலர்‌ பொன்‌ வண்ணமுடைத்தாதலின்‌ அம்மலரின்‌ ஒளியால்‌ மறைவிடத்தில்‌ இருட்டில்‌ இருந்த
காதலன்‌ தென்பட்டான்‌. அது கண்டு மகிழ்ந்து நகைத்தாள்‌. சுரபுன்னையும்‌ மலர்ந்தன என்பது கருத்து, கோங்குமலரை
சுடருக்கு உவமை கூறல்‌ கவிமரபு) V—128

தாணு (ஸ்தாணு மரக்கட்டை-சிவன்‌) ஒரு ஆண்‌ மகன்‌ தயங்காது உமிழகிவாது பலன்‌ (பயன்‌-பழம்‌) தந்ததாகக்‌
கூறுவர்‌. தாமரை முகத்தினள்‌ வாய்‌ மதுவினை அன்போடு தர மலராவது தராமல்‌ இருக்கலாமோ என்று தினைந்தாற்போல
(ஒருத்தி) உமிழவே வகுளம்‌ (மகிழ்‌) மலர்ந்தது. (வகுளம்‌ உமிழ்தலால்‌ மலரும்‌ என்பது கவிமரபு, மரக்‌
கட்டையே பழம்‌ தந்தபோது – இலைகளுடன்‌ செழித்த மரம்‌ ஆ$ூய நான்‌ மலராவது தரக்‌ கூடாதா? என்று கருதியதாகக்‌
குறிப்பு. தாணுவாகிய சிவனைக்‌ கண்ணப்பனாகிய திண்ணன்‌…வாயால்‌ நீரைக்‌ கொணர்ந்து உமிழ்ந்து பூசை செய்ய சிவன்‌
பயன்‌ (அருள்‌) தந்தான்‌ என்பது தமிழில்‌ பெரியபுராணத்திலும்‌ தெலுங்கில்‌ ஸ்ரீ காளாஹஸ்தி மகாத்மியம்‌ எனும்‌ நூலிலும்‌ கூறப்‌
பட்ட கதை; இதைக்‌ கருத்திற்கொண்டு இக்குவிதையமைநீ துள்ளது. அண்‌ மகன்‌ உமிழவே பயன்தர பெண்மகள்‌ உமிழ்த
லின்‌ மலராவது தரவேண்டும்‌ என்று வகுளமரம்‌ நினைத்தாகக்‌ கற்பிக்கப்பட்டது.) V—129

மது என்ற பெயரையுடைய வசந்தகாலமும்‌ மதுவென்ற கள்ளும்‌, ஒரே பெயரைப்‌ பெற்றதால்‌ ஏற்பட்ட போட்டி
பொறாமையாலே தத்தம்‌ ஆற்றலைக்‌ காட்ட முனைந்து
(பெண்களின்‌ வாயில்‌ உள்ள மது உமிழ்வதாலும்‌, வசந்த கால வருகையாலும்‌) வகுள மரங்கள்‌ இலையுதிர்ந்து மலர்‌ சொரிந்து
நிறைந்தன. அது கண்ட தேனீக்கள்‌ வெற்றியடைந்ததாகக்‌ கருதி ஆரவாரம்‌ செய்தன்‌. V— 130

முயன்று பிருகுமுனிவன்‌ (இருமாலைக்‌ காலால்‌) உதைத்த போது (சனக்காமல்‌) மெச்சியவர்‌ (நாராயணன்‌ )னுக்கு மனித
மனைவி (£தை)யாகிய திருமகஷூக்கு உறைவிடமாகி (அசோக வனத்தில்‌) நட்புப்பூண்டதால்‌ இத்தகைய சாந்த குணம ஏற்‌
பட்டதோ எனுமாறு பூங்காவிலுளள அசோகமரம்‌ ஒரு நங்கை உதைத்தலும்‌ மலர்ச்சியாயிற்று, மலர்த்தாது ஆகிய (பொன்‌
நாணயங்கள்‌) கனகாபி?ேகம்‌ செய்தது.
(அசோகு நங்கையர்‌ உதைத்தலால்‌ பூக்கும்‌ என்பது க்வி மரபு. மண்‌ மகள்‌ ஈதையின்‌ பொறுமை அசோகுக்கு ஏழ்‌
பட்டது என்பது கற்பனை) V—131

பொறுமைமிக்க சம்பகமரத்தில்‌ ஒரு நங்கை முகமெடுத்துப்‌ பார்த்தலும்‌ அவளது முகச்சந்திரனது அமுதூறப்பிறந்த பது
மலர்களில்‌ இனிய தேன்‌ சுவைக்கலாம்‌, முன்‌ போல கசப்பும்‌ வாசனையும்‌ இராதென்று கருதி தும்பிகள்‌ அருகணைந்தன/
அந்தோ! அம்மலர்களிலும்‌ பழைய சம்பகத்தீன்‌ குணமே இருந்தது. கசந்து விரட்டியது. பொதுவாக தாயினைப்‌
போலவே பிள்ளை என்பது போல தாயின்‌ தீய குணங்கள்‌ தாயினை ஓத்துள்ள குழந்தைகட்கும்‌ இருக்குமல்லவா?
(சம்பகம்‌ நங்கையர்‌ ஏறெடுத்துப்‌ பார்த்தலால்‌ மலரும்‌ என்பது கவிமரபு. தும்பிகட்கு சம்பகமலர்‌ பகை. அதன்‌ மணம்‌
பிடிக்காது. (அலர்ஜி) அதன்‌ பூந்தேனும்‌ கசக்கும்‌ எனினும்‌ நங்கையின்‌ முசுச்சந்திரனால்‌ உருவான மலர்கள்‌ ஆதலினாலே
ஒருவேளை தேன்‌ இனிக்கும்‌ என்ற நப்பாசையில்‌ தும்பிகள்‌ சென்றன. சம்பகத்தின்‌ இயல்பான தன்மை மாறவில்லை.
முகச்சற்திரன்‌–தந்்‌தயாகவும்‌, சம்பகம்‌ தாயாசவும்‌ கற்பனை செய்யப்பட்டது. தாயின்‌ குணமே பிள்ளைக்கு
வந்தது என்றும்‌ தந்தையின்‌ குணம்‌ அல்ல என்றும்‌ கருத்தாகும்‌ 5-132–

ஒரு பெண்‌ தனக்கு விருப்பமான வசந்த ராகத்தைப்‌ பாடவும்‌ (பாட்டை கேட்டலரும்‌) பிரியாளு எனும்‌ மரம்‌ பூக்கவும்‌
அப்பெண்ணின்‌ சக்களத்தி பொறாதையால்‌ *₹:பக்தியினால்‌ தேவர்கள்‌ மெச்சி அநள்வார்கள்‌ இவள்‌ வசந்த ராகம்‌ பாடிய
தால்‌ வசந்தன்‌ அருள்‌ கூர்ந்து பூக்கச்‌ செய்தானே யன்றி இவள்‌ ஆற்றல்‌ ஒன்றுமில்லை’ * என்று குறை கூறினாள்‌. V—133

ஒருத்தி தனது வாயால்‌ காற்றினை ஊதவும்‌ அவள்‌ அணித்‌ இருந்த மூக்குத்தி (புல்லாக்கு)யாகிய முத்து அவளது இதழழ
தால்‌ உயிர்‌ பெற்று தான்‌ (முத்து) உயிர்ப்‌ பொருள்‌ ஆதலினால்‌ உயிரித்து முத்து முட்டைகள்‌ இட்டனவோ எனுமாறு மலர்கள்‌
உடர்ந்த சிந்துவாரம்‌ (தேக்கு) மீண்டும்‌ மலர்களால்‌ நிறைந்தது,
(சிந்துவாரம்‌ பெண்களின்‌ உ&யிர்ப்புக்‌ காற்றால்‌ மலரும்‌ என்பது சவிமர பு) V—130

செறிந்திருந்த இலைகள்‌ உதிர்ந்து திலகமரம்‌ மிகு வறுமை யுற்றதைக்‌ கண்ட ஒருத்தி, உள்ளத்தில்‌ இரக்கம்‌ பூண்டு,
கண்ணிணையால்‌ கண்டாள்‌. தொடாமலும்‌, ஒரு செயற்பாடு மின்றி மலர்கள்‌ பூத்துக்‌ குலுங்குவது கண்டால்‌, மன்மதன்‌
ஏற்கனவே இவளிடம்‌ ஒப்படைத்திருந்த மலரம்புகள் தான்‌ நிறைந்‌ துள்ளன. இல்லாவிட்டால்‌ எப்படி பார்த்ததுமே பூக்கள்‌ வரும்‌.
இது பொய்‌! என்று கூறுமாறு பார்வையாலே மலர்வித்தாள்‌. (திலகம்‌ பார்வையால்‌ மலரும்‌ என்பது கவி௦ரபு) V—135

அடிக்கடி மகரந்த மழை பெய்து பாதாளமும்‌, உதிரும்‌ பூக்களால்‌ பூலோகமும்‌, பூந்துகள்‌ செறிந்து வானுலகும்‌ ஆக
மும்முறைகளாலும்‌ மாதவனாகிய வசந்தன்‌ மூவடி அளந்து சூரியனணாகிய பலி சக்கரவர்த்தியின்‌ சூடாகிய ஆற்றலினை
அடங்கச்‌ செய்தான்‌.
(மாதவனாகிய திருமால்‌ மூவடியினால்‌ மூவுலகளந்தாற்‌ போல மாதவனாகிய வசந்தன்‌ மூவுலகும்‌ அளந்தான்‌ என்பது கருத்து) V—136

மகரந்த ஊற்றுக்கள்‌ கொப்புளித்த நிலங்களில்‌ படிந்த கருவண்டுகளின்‌ கூட்டம்‌, வசந்த காலத்தில்‌ மர நிழல்கள்‌ அசையாது நின்று விட்டன போலத்‌ தோன்றின.
(நிழல்‌, சூரியன்‌ செல்லச்‌ செல்ல தானும்‌ அசைந்து வேறு படுவது இயல்பு, மரத்தடியில்‌ மொய்த்த வண்டுசளின்‌ கருவண்ணத்தால்‌ நிழல்‌ எப்போதும்‌ மாறாமல்‌ அசையாது இருப்பது போலத்‌ தோன்றிற்று என்பது கருத்து) V—137

வெண்டாமரை மலர்களைப்‌ பரப்பினாற்‌ போன்ற சித்திரை மாத இரவில்‌ பொழியும்‌ வெண்ணிலவாகிய வெள்ளத்தில்‌
வான்‌ தொடும்‌ மரங்களின்‌ பூந்துகள்‌ குவை சேர்ந்து சேறாட களங்கமுறலும்‌, மலைக்‌ காடுகளிலுள்ள களா மரப்‌ பூந்துகள்‌ பட்டு
தேறும்படி செய்தலாலன்றோ காதலர்கள்‌ நிலவாகிய வேள்ளத்‌திம்‌ புனல்‌ விளையாடிக்‌ களித்தின்‌ புற்றனர்‌. இல்லா விட்டால்‌
களித்தின்‌ புறுவது கெடும்‌ அன்றோ?
(களாவிள்‌ பூந்துகள்‌ நீரின்‌ கலக்சலை நீக்கி தெளிவுறுத்தும்‌; தேற்றாங்‌ கொட்டை போல என்க) V— 138

பனி(க்காலம்‌) இர்ந்ததும்‌ ௮தன்‌ குளிர்மையும்‌ வெண்மையும்‌ இருள்படு திராட்சைக்‌ பந்தரிலும்‌, பூக்களிலும்‌ சார்ந்தன.
பிரிவின்‌ மெலிந்தவர்களின்‌ கழன்ற வளையும்‌ கானமும்‌, பொதிகைத்‌ தென்றற்‌ காற்றில்‌ சுழலிலும்‌, வண்டுகளின்‌
ரீங்காரத்திலும்‌ சேர்ந்து கொண்டன.
சாதி மல்லிகையின்‌ மணமும்‌ ஓளியும்‌ புது மருதாணிப்‌ பூக்களையும்‌ நிலவையும்‌ சேரீந்தன.
நோற்றவன்கள்‌ (துறவிகள்‌) விரதம்‌ முடித்ததும்‌ அவர்களது சடைமுடி உச்சிமர விழுதினையும்‌, மூங்கில்‌ தண்டம்‌–வேலி
களையும்‌ சார்ந்தன, மாமரங்களில்‌ நங்கையர்‌ வளர்த்த
குயில்கள்‌ பாடின. ஆங்கு அவர்கள்‌ களவின்பத்தில்‌ துய்த்த களைப்பிளை நீக்கித்தாமரைப்‌ பொய்கையில்‌ தவழ்ந்து வரும்‌
புதுமணத்‌ தென்றல்‌ வீசியது, V—139

அடிக்கடி கிளிகள்‌ தேமாவின்‌ கிளையில்‌ பழங்களை கொத்தச்‌ செல்லவும்‌, அக்கனிரசத்தைச்‌ சுவைக்க கருவண்டுகள்‌ இளிகளைத்‌ தொடர்ந்து சென்றன. வனலட்சுமி மனிதர்களைப்‌ போலவே இளிகளின்‌ இன்‌ சொல்‌ அமுது பருக விழைந்து (கருவண்டுகள்‌ ஆகிய) சங்கிலியால்‌ (இளிகளைக்‌) கட்டி வளர்க்‌
கின்றனளோ எனமாறு அங்கே ஓசை மிகுந்திருந்தது. V—140

நோன்பினரைக்‌ கெடுத்த பாவத்தால்‌ புழுவாகப்‌ பிறந்து, அந்நிலை மாறி: வண்டுகளகக உருவெடுத்த உடலைப்‌ பெற்று, இயமன்‌ இசை (தெற்கு)யிலிருந்து வந்த காற்றால்‌ உயிர்ப்பினைப்‌ பெற்று, அந்த வண்டுகளின்‌ நடன அரங்கமாக காமரைப்‌ பூவாசிய கண்‌ விழித்து, ஆங்குள்ள மலர்ந்த மா மரத்தினைசி சேர்ந்து மொய்க்கும்‌ வண்டின்‌ ஈட்டம்‌ திடீரென்று எழுந்து (போவதுவே) சித்திரன்‌ (வசந்தனைத்‌ தழுவிக்‌ கொண்டு பூந்‌ துகளாகிய, ஆடையினால்‌, (நீர்‌ மட்டத்திலிருந்து) மேலேமழுந்த துண்டினையுடைய பொய்கை அல்லி மலரின்‌ பூந்தாகய இரதி தேவியின்‌ கண்ணீரைத்‌ துடைத்தவாறு, வெண்ணிறமுடைய முசிகண்ணன்‌, இரதியின்பால்‌ இரக்கப்‌ பட்டு உதைத்துவிட்ட தால்‌ பிழைத்த, மன்மதன்‌ மீண்டும்‌; புரசமுகை என்னும்‌ விற்பிடியினால்‌ கிளிகள்‌ அசைத்த இலைகளையுடைய அசோக மரத்தின்‌ பூங்கணைகளைத்‌ தொடுத்து எழுந்து நின்றான்‌.
(சிவனால்‌ எரிக்கப்பட்ட மன்மதன்‌, வண்டுகள்‌ எனும்‌ உடலைப்‌ பெற்று, தென்றல்‌ எனும்‌ உயிர்ப்பினையுற்று தாமரை யாகிய கண்‌ விழித்து எழுந்தான்‌. தன்‌ நண்பன்‌ வசந்தனை (சைத்திரன்‌) தழுவிக்‌ கொண்டான்‌. (வண்டுகள்‌ மொய்த்து எழுந்து வேறொரு மரத்தில்‌ படிதலைப்‌ தழுவுதலாக உருவ௫க்கப்‌ பட்டது) பூநீதுகள்‌ ஆகிய ஆடையால்‌, இரதிதேவியின்‌ கண்ணீரைத்‌ துடைத்தான்‌.
(நீர்மேல்‌ எழுற்துள்ள அல்லி மலரின்‌ பூந்‌?தன்‌ கண்ணீ ராகவும்‌, பூந்தேனில்‌ படிந்த பூந்துகளால்‌ தேன்‌ மறைதல்‌ துடைத்ததாகவும்‌ கற்பனை செய்யப்‌ பட்டது). உயிர்பெற்ற மன்மதன்‌ மீண்டும்‌ அசோக மலரம்புகளைத்‌ தொடுத்து தன்‌ கடமை ஆற்றப்‌ புறப்பட்டு விட்டான்‌. பனிக்‌ காலம்‌, இலையுகிரீந்து, பொலிவின்றி இருத்தல்‌ சிவன்‌, எரித்த மன்மதனுக்கு உருவகம்‌, வசந்தகாலத்தில்‌ வண்டுகள்‌.
மலர்கள்‌, பொலிவுடன்‌ இகழ்தல்‌ மன்மதன்‌ மீண்டும்‌ உயிர்‌ பெற்றதற்கு உருவகம்‌, மன்மதன்‌. நோன்பிருந்த துறவிகளை மலரம்பு எய்து கொடுமைப்‌ படுத்தியதால்‌ புழுவாகப்‌ பிறந்து
ணை்டாூப்‌ பிறப்பெடுதிதான்‌. என்பது இமை புரிந்தோர்‌ புழுவாகப்‌ பிறப்பர்‌ என்ற மர பிளை ஒட்டி எழுந்த கற்பனை, .  இருந்த வண்டுகள்‌, அந்நிலைமாறி .. இறகுகள்‌ பெற்று வானில்‌ பறந்து திரியும்‌ அமனை, புழு நிலை மாறிய வண்ணத்துப்‌ பூச்சிகள்‌ போல இருந்து, பனிக்‌ காலம்‌ புழுறிலை யாகவும்‌ வசந்த சாலம்‌ பறந்து திரியும்‌ வண்டாகவும்‌ உருவ௫த்‌ தாற்‌ போல தொனிப்‌ பொருல்‌ தருறது.
(அற்புதமான கற்பனை தயம்‌ செறிந்த கவிதையிது ,) 5-141-

குயில்களுக்குத்‌ தளிரும்‌, கிளிகட்‌ ஈமப்‌ மங்களும்‌, அஸி (தேனீக்‌) கட்குத்‌ தேனும்‌. வளி (காற்ழடக்கு மணமும்‌, காதலர்‌
கட்கு மலர்களும்‌, அருளோடு நிறையக்‌ தந்த வசந்தகாலம்‌ எனும்‌ காம3தனு, தான்‌ கொடை தந்ததால்‌ தன விருப்பங்கள்‌ நிலற வேறும்‌ என்ற கருத்தால்தான்‌ ஆண்மையை அடைதந்ததோ எனுமாறு கடுமையா பிரிந்தவர்களை வருத்தியது. 5- 142

தேமாவின்‌ பழச்சாற்றின்‌ மணத்தோடு கள்‌ மணமும்‌ கலந்து இதழ்களில்‌ பரிமளிக்க சந்தனப்‌ பூச்னால்‌ எலுமிச்சைத்‌ தோலின்‌ வண்ணத்தோடு எழில்‌ பெற்றிலஙிகும்‌ கரதுகளில்‌ ரோஜாமலர்களை அணிந்து, கற்பூரவாழையின்‌ உட்தண்டின்‌ வண்ணத்தோடு மாறு கொள்ளும்‌ பாவாடைகள்‌, தொடைகளின்‌ தகதகவெனும்‌ மினுமினுப்பைப்‌ பற்றிக்‌ கொண்டு (அவ்வெழிலில்‌) தமக்கும்‌ ஒரு பங்கு கேட்டு முரண, மிதிக்கும்‌ தேனீக்களை
விரட்ட சம்பகப்‌ பூமாலைகள்‌ தலை முடியில்‌ சூடி எழில்‌ பெற்றிலங்ட, கைகளில்‌ சித்திரான்ன வாசனை போக, குங்குமப்‌
மூ பூரிக்‌ கொண்டவாறு, பூக்கள்‌ பாரத்தால்‌ எழில்‌ பெற்ற
சுரபுன்னை மரங்களை தென்றல்‌ அசைத்ததால்‌ பூந்துகள்‌ நீறு தனது மேனி படிய, நங்கையர்‌, பூம்புதரிடையே தன்‌ சகாதலரோடு
இணைத்தின்புற்றனர்‌. V—143

அப்போது — (அந்த வசந்த காலத்தில்‌) V—144

நங்கை (சூடிக்கொடுத்த நாச்சியார்‌); வசந்த காலத்தில்‌ செருக்கினை அடக்குவேன்‌ என்று கூறி, தன்‌ நலம்‌ நாடியவளாக
(மேகரஞ்சனி’ ” எனும்‌ பண்ணினைப்‌ பாடவும்‌, பல்வண்ண மணி களுடன்‌ எழில்பெற்ற வானவில்லும்‌, மின்னலும்‌, கூடிய கார்‌
முகில்‌ கூட்டம்‌ தோன்ற, மலர்ந்த கதம்ப மலர்கள்‌, தாழம்‌பூக்களின்‌ மணத்தைத்‌ தழுவியவாறு மென்காற்று வீசவே,
அதைத்‌ தாங்க முடியாது சோர்ந்து மயங்கி வீழ்ந்தாள்‌.
(பிரிந்தவர்களை கதம்ப (கடம்‌ப) மலரும்‌ தாமை மலரும்‌ மிகவும்‌ வருத்தும்‌ என்பது கவி மறபு) V—-145

நங்கை (ஆண்டாள்‌) முழுமதியைக்‌ கண்டஞ்சி சந்திரகாந்தக்‌ கல்‌ மேடையில்‌ படுக்கவும்‌, அங்கு (வருத்தம்‌) இருமடஙிகாகவே
வானில்‌ இருந்த சந்திரனை வீட்டிற்குக்‌ கொணர்ந்தேனே என்று மிகவும்‌ பரபரப்புடன்‌ எழுந்து செல்வாள்‌.
(சந்திரகாற்தக்கல்‌ குளிரிச்சியுடையது. அதில்‌ சந்திரன்‌ பிரதி பிம்பம்‌ தோன்றும்‌, அது கண்டு தேவி பொறுக்க இயலாமல்‌
விஷ்ணில்‌ இருழ்ததை மண்ணிற்குக்‌ கொணர்ந்தேனே என மறுகினாள்‌ என்பது கருத்து) 5-146-

வண்டுகளின்‌ தத்தை அடக்க வீணை மீட்டவே, அந்த வீணையின்‌ இசை சுருதி கூடி வண்டிசையை இருமடங்கு சுவை
கூட்டி விடவும்‌, உடனே மீட்டுவதை நிறுத்தி **ஊழ்வலியின்‌ முன்னர்‌ நமது உபாயங்கள்‌ பலிக்காது”£” என்று கூறி நெட்டு யிர்த்துச்‌ சிரிப்பாள்‌. yV—147

மலர்ப்படுக்கை மங்கைக்கு மிகுந்த வெம்மையைத்‌ தந்தது, முன்‌ அவள்‌ உதைத்தல்‌ (நகைத்தல்‌, இகழ்தல்‌) முதலிய அதட்டல்‌
களால்‌ மனம்‌ நொந்து மரங்களில்‌ பூத்த மலர்கள்‌, காத்திருந்து பழிவாங்கும்‌ சமயம்‌ வாய்த்தது என மிகவும்‌ வருத்துமேயன்றி
ஆறுதலைத்‌ தருமா?
(நங்கையர்‌ உதைத்தல்‌, இகழ்தல்‌, உமிழ்தல்‌, முதலிய தோகதக்‌ (தூண்டற்‌) கிரியைகளினால்‌ அவமானமுற்ற மரஙி
களில்‌ பூத்த மலர்கள்‌ ஆதலின்‌ அவை பழிவாங்கக்‌ காத்திருந்து இதுதான்‌ சமயமெனப்‌ பழி தீர்த்துக்‌ கொண்டாற்‌ போல மலர்‌
களும்‌ வெம்மை தந்தன என்பது கருத்து) 5-148

அன்ன மங்கை நல்லாள்‌, பூசை புரிவதற்காக எனும்‌ காரணம்‌ காட்டி கவனமின்றி தன்‌ விரக தாபத்தைதி
தணிக்க வேண்டி, தஇருமாலின்‌ திருவுருவத்தை திறமையுடன்‌ சாத்திர விதிப்படி தூரிகை கொண்டு (9த்திரம்‌) எழுக, நாண
முற்று, எல்லா அவயவங்களையும்‌ வரைந்தாள்‌. பின்‌ அந்த தெய்வத்தின்‌ மார்பில்‌ இடங்கொண்ட திருமகள்‌ உருவத்தைக்‌
கண்டு, பொறாமையும்‌, தாபமும்‌ மிக3வ கலக்கமுற்றாள்‌.
(சத்திரம்‌ எழுதும்போது கவனமின்றி இருந்ததால்‌ இருமகள்‌ சித்திரமும்‌ வரைந்தாள்‌ என்றும்‌ பின்‌ அச்சித்திரம்‌ கண்டு
பொறாமையுற்றாள்‌ என்றும்‌ குறிப்பு) V—149

வள்ளையல்லிப்பூப்‌ பொய்கைக்‌ சுரையில்‌ புது கமுநீர்ப்பூம்‌ படுக்கையில்‌ சாய்ந்து, அந்த
தேவி, பெளர்ணமி, (முழு மதிஉலா)யில்‌ குயில்கள்‌ கூவி உயிரைப்‌ பறிக்க குறறுயிரோடு கிடந்து தாளம்‌ செய்த புண்ணியப்‌
பேற்றினால்‌ பிழைத்திருந்தாள்‌. அவ்விரலில்‌ மல்லிகை மலர்‌களை நாடிய வண்டுகளின்‌ ஓசை அவள்‌ காதில்‌ விழாதவாறு
இரவு முழுதும்‌ சொரிந்த கண்ணீரானது காதுகளில்‌ தேங்கிஅடைத்தது, அதனால்தான்‌ மறுநாளும்‌ பிழைத்திருந்தாள்‌.
(காதில்‌ கண்ணீர்‌ தேங்குவதால்‌ ஒலிபுகாது வண்டிசை கேட்கவில்லை. அதுவும்‌ கேட்டால்‌: துயர்‌ மிகுதியால்‌ இறந்‌திருப்பாள்‌ என்பது கருத்து) v-—150

(குடங்களில்‌ உதவியால்‌ வெள்ளத்தில்‌ நீந்திக்‌ கடச்களாம்‌. ஆனால்‌ அக்குடங்களினுள்ளே வெள்ளம்‌ மிகுந்தால்‌ அவை மிதக்காது.. மூழ்கடிக்கும்‌, அதுபோல)
நங்கையின்‌ முலைக்குடங்கள்‌ இரண்டிருந்தும்‌ பிரிவுத்‌ துயராகிய கடலைக்‌ கடக்கத்‌ துணைபுரியவில்லை தோழியர்‌ பெய்யும்‌ பன்னீர்‌ வெள்ளம்‌ உட்புகுந்தமையால்‌, மூழ்கடிக்காமல்‌ எளிதாக மிதக்க செய்யுமா என்ன?
– (விரகதாபம்‌ போக்க பன்னீர்‌ தெளித்தார்கள்‌. அந்தப்‌ பன்னீர்‌ முலைக்‌ குடத்தில்‌ நிறைந்ததால்‌ அதன்மூலம்‌ துயர்‌ வெள்ளத்தை நீந்திக்‌ கடக்க முடியவில்லை என்பது கருத்து]–151

சஞ்சலிக்கும்‌ கண்களையுடைய அந்நங்கையணிந்த தாமரைத்‌ தண்டுகளை, விரைந்து களையவும்‌, ஒடி வந்து பேய்ந்த அரச அன்னம்‌, அதன்‌ சூட்டினைப்‌ பொறுக்காமல்‌ (வாய்‌ வெந்து) அலறித்‌ தவித்திடும்‌ அதன்‌ சேட்டைகளை கண்டு, அவள்‌ மெல்லச்‌ சிரித்தான்‌! அவள்‌ நகையைக்‌ காண்போமா? என முகத்தில்‌ விழி வைத்து முகத்தினையே பார்த்துக்‌ கொண்டிருந்த தோமியர்கட்கு ஒருவிதமாக உயிர்‌ வந்தது
(விரகதாபத்தால்‌ தாமரைத்‌ தண்டுகள்‌ கொதித்தன. அறியாது தின்ற அன்னங்கள்‌ வாய்வெந்து அலறின. மரணப்‌ படுக்கையில்‌ இருப்பவர்சள்‌ சிரித்தால்‌ மீண்டும்‌ உயிர்‌ பிமைப்பா்‌ என நம்பிக்கை ஏற்படும்‌ என்பது மரபு. அன்னத்தின்‌ நிலை கண்டு தேவி சிரித்தாள்‌. தோழியர்கட்கும்‌ போன உயிர்‌ திரும்பியது. சஞ்சலநேத்திரி அலையும்‌ (கண்களையுடையவள்‌) என்ற விளி பொருத்தமானது. உயிர்‌ ஊசலாடுவது போல அவள்‌ கண்களும்‌ ஊசலாடின என்பது குறிப்பு) V—152

இருமகள்‌ கேள்வன்‌ மேல்‌, இனிய குரலையுடைய அந்த தேவி, பாட விரும்பி, வீணைஞஷயத்‌ தொடவும்‌, அவள்‌ கைச்சூடு பட்டு, படிக்கட்டின்‌ (மெட்டு) மெழுகு கரைந்து போகவே, அதனை விடுத்து, தம்புராவை எடுத்து பாட முனையவும்‌, மீண்டிம்‌ வியரீவையினால்‌ தந்திகள்‌ நனைந்து கெடவே, விடுத்துத்‌ தானே பாடுவாள்‌! கழுத்து குரல்தடுமாறவே இயலாது(செய்வதறியாது) நிலை குலைந்து திற்பாள்‌. V—153

ஒவ்வொரு பூம்படுக்கையிலும்‌ நழுவிவிழுந்த சுட்ட வளையல் களின்‌ கரிய குறிகள்‌ இரண்டும்‌, வட்ட வடிவமாகக்‌ கடந்தது;
அழகிய பற்களையுடைய நங்கை, இனி மானமும்‌, தைரியமும்‌ பூஜ்யம்தான்‌ என்று வெட்கத்தால்‌ சொல்ல முடியாமல்‌ எழுதிக்‌
காட்டினாளோ எனும்படியாக இருந்தது.
(பூம்‌ படுக்கையில்‌ சரிந்த வளையல்‌ இரண்டும்‌ இரு பூத்யங்‌களை (சைபர்‌ 0) குறியாகப்‌ பதித்தன, அவை நங்கை, மான
தைரியங்கள்‌ இன்மையை வரைந்து காட்டியது போலிருந்ததுஎன்பது கருத்து, பூஜ்யம்‌ (சுன்னம்‌) இன்மையை எண்ணிற்‌
குறிக்கும்‌) v—154

அந்தத்‌ தாமரைக்‌ கண்ணாள்‌, விரகதாபத்தால்‌ புரளவும்‌, கசங்கிய ஆடை. அணிகளை, உடனுக்குடன்‌ களைந்து வேறு வேறு
அணிகள்‌, உடைகள்‌ அணிந்து (பகற்கால) பூசைக்களுக்காக புத்தாடையணிவது போலத்‌ தோன்றுமாறு பகவத்‌ பூசளையில்‌
கவனமாக இருந்தும்‌, பொய்யான நலன்‌ காட்டியும்‌ காதல்‌ நோயை மறைத்தாலும்‌ அது எப்படியும்‌ வெளிப்படவே அதைக்‌
கண்டு (விஷ்ணு கத்தர்‌) மனம்‌ வருந்தினார்‌. V—155

விஷ்ணு சித்தர்‌, புதல்வர்‌ பேறின்மையாலும்‌, ஒருமகளும்‌ இவ்விதம்‌ இருப்பதறிந்தும்‌, காதல்‌ உணர்ச்சிகளை அறியாதவர்‌
ஆகையாலே, இது ஏதோ ஒரு தவம்‌ (விரதம்‌) என்று கருதினார்‌.V—156

(விஷ்ணுசித்தர்‌) நினைந்து நாள்தோறும்‌ வளரும்‌ மகள்‌ உடல்‌ மெலிவினைக்‌ கண்டு மிகுந்த வருத்தம்‌ அடைந்து அதன்‌
காரணத்தை அறியாமல்‌; வேண்டாம்‌ என்று அறியாமையால்‌ தடுத்துப்‌ பார்த்தும்‌, வரவர அதிகமாவதையறிந்து கோயிலுக்குச்‌
சென்று, பூசை முடித்து வணங்கிய பின்‌, தன்‌ மன வருத்தத்தை அநீநகரத்‌ திருமாலுக்கு (ஸ்ரீவில்விபுத்தூர்‌, மன்னார்‌ சுவாமிக்கு)
விண்ணப்பித்துட மீண்டும்‌ வணங்கி, ஓ தேவா! தங்கள்‌ அடிமை யாகிய என்மசள்‌ எதற்காகவோ விந்தையான விரதத்தை மேற்‌
கொண்டு உடலை மெலிவிக்கிறாள்‌. வேண்டாம்‌ என்றாலும்‌ கேட்க மாட்டாள்‌. மகன்‌ இல்லாத எனக்கு, மசன்‌ ஆனாலும்‌
மகள்‌ ஆனாலும்‌ அவளே தான்‌. நான்‌ என்‌ செய்வேன்‌! மேலும்‌, அள்‌ தவம்‌ செய்யும்‌ விதம்‌ எங்கள்‌ தவமுறையன்று, நாங்கள்‌
துங்கள்‌ தினங்கள்‌, தங்கள்‌ அவதார தினங்கள்‌ தவிர பிற நாட்‌ களில்‌ இரவில்‌ சண்‌ விழித்தறியோம்‌. நாங்கள்‌ தாமரைக்‌
கொட்டை அச்கமாலையன்றி தாமரைத்‌ தண்டு மாலையை அறியோம்‌. நாங்கள்‌ பிரசாதமான பூக்களை காதில்‌ செருகுவ
தன்றி, பூவினாலான படுக்கையில்‌ படுத்தறியோம்‌. நாங்கள்‌ தங்கள்‌ தீர்த்தத்தைப்‌ பருகினால்‌, அவள்‌ தன்னுடல்‌ முழுதும்‌
நனைத்துக்‌ கொள்கிறாள்‌. நாங்கள்‌ சாந்திராயண விரதத்தில்‌ கலைகட்கேற்ப (வளர்பிறையில்‌) கவளத்தைக்‌ கொஞ்சங்‌
கொஞ்சமாக அதிகமாக்க (உண்டால்‌) குறைத்துக்கொண்டு வருறாள்‌, நாஙிகள்‌ மூச்சை உள்‌ வாங்க அடக்கினால்‌ அவள்‌
மூச்சை (நெடு மூச்சுக்கள்‌) வெளியே விடுகிறாள்‌. நாங்கள்‌ சின்‌ முத்திரையாக கையை இதயத்தில்‌ சேர்த்தால்‌ அவளோ கையைக்‌
கன்னத்தில்‌ வைத்திருக்கிறாள்‌. நாங்கள்‌ மரவுரி அணிந்தால்‌ அவன்‌ தளிரிலைகள்‌ அணிகிறாள்‌. நாங்கள்‌ வளர்பிறை புதிய
நிலவினை (பிறைச்சந்திரனை) பாராட்டினால்‌ அவள்‌ முழுமதி யினை இகழ்கின்றாள்‌. இவ்விதமாக இருக்கிறாள்‌. இது என்ன
விரதமோ! பித்துற்றனள்‌ போலும்‌, தங்கள்பால்‌ எத்துணை பக்தியிருந்தாலும்‌ எங்களைப்‌ போன்றோருக்கு பிரகிருதி
சம்பந்தம்‌ ( உலகப்பற்று) விடாது. அந்தர்‌ யாமியாகிய உனக்குத்‌ தெரியாதது ஒன்றுமில்லை. இவளது நிலையினைத்‌ தெரிவிக்க
மாட்டாயா?” * என்றார்‌. எனலும்‌ துயைமிகுந்து அவரது வைஇீகத்தை (உலக விவகாரம்‌ தெரியாத நிலையை)யுணர்ந்து
குறுநகை புரிந்த குன்றெடுத்த மாதவன்‌ இவ்விதம்‌ ண -5-157

முகில்‌ போன்ற நீல வண்ணனே/ மது கைடபார்‌ எனும்‌ இராக்கதார்களாகிய நாகங்கட்டு கருடன்‌ ஆனவனே! யோகியரின்‌
இதய முடிச்சைப்‌ பிளந்து எழுந்த பெண்‌ பாம்பின்‌ (குண்டலினி சக்தி) உயிர்ப்பினோடு கபாலத்தில்‌ ஓழுகும்‌ அமுததாரையாகிய
பாற்கடல்‌ அலைகளில்‌ விளையாடும்‌ விருப்புடையவனே பத்துத்‌ தலை இராவணனின்‌ சகோதரன்‌ (விபீஷணன்‌) சரண்‌ புகப்‌ பெற்றவனே. V—158

தேவர்கள்‌ அனைவரும்‌ வணங்கும்‌ பாதங்களையுடையவனே! அசுரரை அழிக்கப்‌ பிறந்த சீதையின்‌ கேள்வனே/ பிறவிக்குப்‌
பகையான புகழ்மிக்க பெயரையுடையவனே . V—159

எல்லா பிரம்மாண்டங்களையும்‌ வயிற்றிலடக்கியவனே / குமரனின்‌ தவப்பயனாக குழந்தையாக அவதரித்தவனே! நீரி
நிறைந்த கோனளேரியில்‌ பொன்‌ மண்டபத்தில்‌ அமர்ந்தவனே /V—160

அது. தெலுங்கு மொழியில்‌ செம்பாவி (செங்கிணறு) என்ற இயல்பான பெயருடைய, யவனர்‌ (துருக்கர்‌) களின்‌ குருதியால்‌
நிறைக்கப்பட்ட, மேகங்களைத்‌ தடுக்கும்‌ கோட்டைகளை அழித்த சேனைகட்குமுன்‌ நடக்கும்‌ கிருஷ்ணராய மன்னன்‌ எனப்‌ பெயா்‌
பூண்ட எனது *ஆமுக்த மால்யத’ எனும்‌ நூலில்‌ ஐந்தாவது அத்தியாயம்‌ இனிய செய்யுட்களால்‌ அமையப்பெற்றுள்ள து.-V—161

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) நான்காம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஸ்ரீ (சூடிக்‌ கொடுத்தவள்‌) நான்காம்‌ அத்தியாயம்‌

இருமகட்சில்லமாகிய மார்பினையுடையவனே! பசுச்களைக்‌ சுவரும்‌ குழலூதுபவனே! செருக்குற்ற நரகாசுரன்‌ கவர்ந்த குண்ட
லங்களை மீட்டியவனே ! பசுமலை (வேங்கடகிரி) உறையும்கருடக்‌ கொடியுடையவனே! Iv—1

கேள்‌! அச்சமயத்தில்‌ 1-2

பெரியாழ்வாரின்‌ வெற்றி
வலிதின்‌ அறுத்தாற்போல நூலறுந்து தொங்கிய பொற்‌ எமி, சிறிது நேரம்‌ அந்தரத்தில்‌ இருந்து பின்‌ படீரெனக்‌ கீழே
நிலத்தில்‌ வீழ்ந்தது, வானத்தில்‌ துந்துபி முழங்கப்‌ பூமழை பொழிந்தது. IV—3

அப்போது, பாண்டிய மன்ளன்‌ பரிசளிக்க அனுப்பிய சேவகர்‌கள்‌ அங்குமிங்கும்‌ அலைந்து விரைவதினால்‌ மணிகளும்‌“பொன்‌
அணிகளும்‌, உடைகளும்‌, சிந்த, அவைக்களத்துக்கும்‌, கருவூலத்‌திற்கும்‌ இடையே உள்ள நிலம்‌, முழங்காலளவு நிறைந்து நிலமகள்‌
மகிழ்ச்சிப்‌ பெருக்கால்‌ அணிந்த பல்வண்ண மலர்மாலையோ எனும்‌ படியாக இருந்தது.
(சிந்திய மணிகளும்‌ அணிகளும்‌ முழங்காலளவு நிறையப்‌பெற்றதென்றால்‌, கொடைந்த பொருட்குவையின்‌ அளவினை
எவ்விதம்‌ கூறுவது? என்பது கருத்து) IV—4

வேதங்களால்‌ உணரப்பட்ட விஷ்ணு தத்துவத்தை விளக்கி இவ்விதம்‌ வாதிட்ட பெரியாழ்வார்‌, வென்று, பாண்டிய
மன்னனை பக்தியில்‌ மூழ்கச்‌ செய்து, இறைவனைச்‌ சரணடையு மாறு செய்து உலக நன்மையை உருவாக்கினார்‌. IV—5

அப்பெரியாழ்வார்‌ வென்றதைப்‌ பாராட்டி வானத்தில்‌ எல்லாம்‌ வாழ்த்தொலிகள்‌ முழங்க. தேவர்கள்‌ அடடா”
என்னும்‌ பிதுர்கள்‌ *ஆகா! * என்றும்‌, சித்தர்‌, **அப்பப்பா என்றும்‌, கந்தருவர்கள்‌ கலியுகம்‌” * “இரு தயுகமாயிற்று” * என்றும்‌,
கின்னரர்கள்‌ *இிறுமதியாளரின்‌ செருக்கடங்கிற்றல்லவா?” *என்றும்‌ கூவிப்பரவிளார்கள்‌. IV—6

மேலுதட்டினை நக்கியவாறு, (அரண்மனை) வெளித்‌ திண்ணைகளைப்‌ பாராமல்‌ சென்று, பாதுகைகளைச்‌ சுமப்‌.பவர்‌
களைத்‌ தேடுவோர்களும்‌, . தம்மருகிலுள்ள பல்லக்கிளைக்‌ காணாமல்‌ தாண்டிச்‌ சென்று, பெருங்குரலில்‌, சுமப்பவர்களைக்‌
கூவியழைப்பவர்களும்‌, நகரை நீங்கும்‌ வரையும்‌ தனித்துச்‌ சென்றுபின்‌ தின்று, கூடவந்த புலவர்களைக்‌ கூடுவோரும்‌* தம்‌
வீட்டினர்‌ எதிர்வரவும்‌ வீட்டு விவகாரங்களை கேட்டு அவர்கள்‌ ஒன்று கூடி தாம்‌ ஒன்றாக நினைந்து ஏதோ நினைவில்‌ *சரி சரி”
என்பவர்களும்‌ *வாதம்‌’*” என்னாயிற்று?” என்று கேட்ப,
“மன்னன்‌ ஒரு பக்கம்‌ சாய்ந்து அந்த தாசரி (நாலாம்‌ வருண பாகவதர்‌) யைப்‌ பாராட்டினான்‌. இல்லாவிட்டால்‌ அவளை
விட்டு வைப்போமா? ஏதோ தப்பித்தக்கொண்டான்‌ ”? என்போரும்‌ *சரி! விடு ஆராய்தலில்லாதவன்‌ வாசலில்‌ எவன்‌ .
இருப்பான்‌,’ ‘ என்பவர்களுமாக பண்டிதர்கள்‌ புறப்பட்டனர்‌.[3……7

அவர்கள்‌ சதுக்கத்தெருவில்‌ ஒன்று கூடி அரண்மனையைப்‌ பார்த்தவாறு ஏதோ மத்தனங்கள்‌ (இரகசியப்‌ பேச்சுக்கள்‌)
பேசியவாறு தத்தம்‌ இல்லங்கட்குச்‌ சென்றனர்‌. அப்பாண்டிய மன்னன்‌ அனைவரும்‌ அறிய. பெரியாழ்வாரைப்‌ பெரிய யானை
யின்‌ மீது ஏற்றி அமரச்‌ செய்தான்‌. Iv—8

நகர்வலம்‌ வரச்‌ செய்து, சிற்றரசர்களும்‌, இளவரசுகளும்‌, இருமருங்கும புடைசூழ, திருவல்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்‌ தான்‌. பாடகர்களும்‌, யானை, குதிரைகளின்‌ மணிகளின்‌ ஓசை யும்‌ பரத்தைய ரின்பாதச்‌ சிலம்பிசையும்‌ முழங்க, வழிச்செல்லும்‌ போது நடுவழியில்‌ 4-9-

இறைவன்‌ காட்சிதரல்‌
இங்கிலீகம்‌ நனைத்த மயில்துத்‌ த ஈரிழைச்‌ சீரையோ எனுமாறு வானம்‌ தன்‌ சிறகின்‌ ஒளி வீச்சினால்‌ இளஞ்சிகப்பு
வண்ணமுற்றது, அவ்வளவில்‌, பாற்கடலின்‌ பாலாடைப்‌ பிசுபிசுப்பினை உணர்த்தும்‌ இனிய காற்றுவீசியது. பின்‌
(கருடன்‌ (நெருங்கி வருதலால்‌) பேரோசை நிறைந்தது. பின்‌ பெரிய திருவடியைக்‌ (கருடாழ்வார்‌) கண்டனர்‌. அந்தப்‌ புள்ளரசன்‌ முதுகில்‌ திருமால்‌ தோன்றினான்‌. IV—10

தளி ர்க்கொத்து இணையில்‌ செந்தாமரை இருந்தாற்போல கருடனின்‌ உள்ளங்கைகளில்‌ தெய்வீக அடியிணைகள்‌ அமர,
மென்கரிய மேனியில்‌ தோன்றிய கருடனின்‌ (செவ்‌) வண்ணப்‌ பிரதிபலிப்போ எனுமாறு பீதாம்பரம்‌ மிளிர, படிந்த யோகி
யரின்‌ தூய இதயங்கள்‌ போல முத்தாரம்‌ ஒளிர, திருமகளுடன்‌ கூடப்பிறந்த உரிமையினால்‌ போலும்‌ ஏதோ விண்ணப்பிப்பது
போது (செவியருசே நெருங்கிச்‌ சென்றுரைப்பது போல) மகர குண்டலங்கள்‌ திகழ, கற்பக மரக்கிளை போன்ற தோள்‌
களும்‌ அதிலுள்ள அன்னம்‌ போன்ற சங்கும்‌, சுழல்‌ காற்றில்‌ எழுத்து சுழலும்‌ பூமகரந்தம்‌ போன்ற சக்கரமும்‌ தோன்ற கமலக்‌
கண்ணனாகிய நான்கு தோள்களையுடைய திருமால்‌ தோன்றினான்‌. 1V—11

எப்போது திருமாலைக்‌ கண்டனரோ அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும்‌, பெரியாழ்வாரைக்‌ கண்டு கொண்டிருந்‌
அனைவரும்‌ தமது சுரங்கஞுடன்‌ குடைகளையும்‌ விரைந்து முகிழ்வித்தனர்‌. (விரித்த குடையைச்‌ சுருக்கி வணக்க மிடுதல்‌ நமது மரபு) IV—12

தேவர்களுடன்‌ கூட இராக்கதரும்‌ பிசாசர்களும்‌ கூட்டமாகக்‌ கண்டு கொண்டிருத்தபோது கருடனின்‌ இறக்கைகளிலிருந்து
வீசிய காற்றினால்‌ நெற்களத்தில்‌ முறத்தால்‌ புடைக்கப்பட்ட காற்றில்‌ பறந்தோடும்‌ பதர்போல இராக்கதரும்‌ பிசாசர்களும்‌
அஞ்சியோடினர்‌. 17… 13

இடைவிடாது சொரிந்த பூ மழையில்‌ படிந்து சஞ்சரிக்கும்‌ வண்டினங்களின்‌ ரீங்காரம்‌ போல தன்னைத்‌ தொடர்ந்து
முனிவர்கள்‌ பாடும்‌ சாம கானம்‌ இசைத்தது. IV+14

இவ்விதம்‌ வானில்‌ கண்ணெதிரே திருமாலைக்‌ கண்ட பெரியாழ்வார்‌ ம௫ழ்ச்சிப்‌ பெருக்கால்‌ ஆனந்தக்‌ கண்ணார்‌
சொரிந்து, புளகாங்கமுற்று, (தானமர்ந்துள்ள) யானையின்‌ மணிகளே தாளங்களாக இவ்விதமாகத்‌ திருமாலைத்‌ துதி
(மங்களாசாசனம்‌) செய்தார்‌. 14/15

வெல்க! வெல்க! அசுரரை அழிக்கும்‌ சார்ங்கம்‌ எனும்‌ வில்லும்‌, கதையும்‌, சக்கரமும்‌ (சுதர்சனம்‌) – பூண்டவனே!
ஞாயிறும்‌ இங்களும்‌ போன்ற நூறுமடங்கு பேரொளியுடையமேனியை உடையவனே! கங்கைக்குப்‌ பிறப்பிடமான தாமரை
போலும்‌, பாதங்கள்‌ உள்ளவனே! பிரம்மனும்‌ சிவனும்‌ உருவான மூலகாரணனே! தாமரைக்‌ சண்ண! வெல்க! வெல்க! IV—16

வேதங்களைத்‌ திருடிய சோமன்‌ எனும்‌ அரக்கனை, மீன்‌ உருவில்‌ அழித்து, செதிள்கள்‌ *சதுரமான வேதாட்சரங்கள்‌ (வடமொழி நாகரி எழுத்துக்கள்‌) ஒப்பப்‌ பொலிவுறவும்‌, நீலக்‌ கடலைக்‌ கலக்கித்‌ தாண்டியபோது எழுந்த நீர்த்‌ துளிகள்‌ பிரம்ம லோகத்தை அடைவது வேதத்தை பிரம்மனிடம்‌ ஒப்படைப்பறு போல தோற்றுமாறு நீ பேரொளிப்‌ பிழம்பாக நீ கடலலைகளைத்‌ தாண்டவில்லையா? IV—17

மகிழ்வுடன்‌ பிரளயகால வெள்ளத்தில்‌ எதிர்‌ நீச்சலடித்துக்‌ கொண்டு நீ (மீன்‌ உருவில்‌) செல்லும்போது உன்‌ ,(வாயில்‌) தாடைகளில்‌ மலைகளும்‌, திமிங்கலங்களும்‌ உட்புகுந்துறை தலான்‌, அந்த வேகத்தில்‌ மலைகளும்‌ பிரம்மாண்டமும்‌ மோதும்‌ பேரொலியே, அரக்கனை வேதங்களை மீட்டிக்‌ கொன்ற வெற்றி முழக்கத்துந்துபி (றை) ஒலியாக அமைந்ததன்றோ? IV—18

நீ ௨ன்‌ திமிங்கல உருவை மிகமிக வளர்த்தபோது உன் வாயில்‌ தானாக துள்ளி வீழ்ந்தானன்றி, அவ்வரக்கன்‌ மிகச்சிறு
மீன்போலும்‌ அளவினனாதலின்‌ அவனை நீ விழுங்கிளனாய்‌ என்பது பொருந்தாதன்றோ? உன்‌ மூச்சுக்காற்று உள்ளிழுக்கும்‌
போது எழுந்த வேகத்தில்‌ வேதத்துடன்‌ கூட அவனும்‌ ஈர்க்கப்‌ பட்டு உன்‌ வாயில்‌ தானே புகுந்தான்‌ என்பதே மெய்யாகும்‌. IV—19

வெள்ளத்தில்‌ மூழ்கிய மண்‌ (பூமி) ஆய நிலம்‌, கரைந்து போகாமல்‌ இருக்க, காரை (சுண்ணாம்பு) பூசிப்‌ பாதுகாப்பதற்‌
காக, வைரம்‌ (இடி) ஓத்த தன்‌ முதுகு திரிகையின்‌ அடிக்கல்லாக அமைய, (பாற்கடல்‌ கடையுங்காலத்தில்‌) மந்திரமலை மேற்‌
கல்லாக உராயவும்‌, முத்து, சிப்பி, சங்குகள்‌ எல்லாம்‌ சூரணமாக (நீறாக) ஆக்கிய கூர்ம (ஆமை) மான தேவனே! உன்னை வணங்குகிறேன்‌.* 1V—20
… *தெலுங்கு எழுத்து வட்ட எழுத்து, நாகரி சதுர எழுத்து என்பது கருத்து. ;-இப்பாடல்‌ பெத்தன ‘மனுச்சரித்ர”விலும்‌ உளது.

வராகமாக உடலை வளர்த்துப்‌ பேருருத்‌ தாங்கி பிரளய வெள்ளத்தை நீ ஒரே தடவை முட்டியாற்‌ பெயர்த்தபோது
எழுந்த நீர்‌, பிரம்மாண்டத்தைக்‌ கடந்து மேலெழும்பி, மீண்டும்‌ கீழே தாரையாக விழுந்தபோது, அந்த தாரை–பொற்‌
சரடாகவும்‌, பிரம்மாண்டம்‌ தங்கமணி ஆகவும்‌ அமைய மாயை (இயற்கை)த்‌ தாயிற்கு அணிவித்த மூக்குத்தியாசு அமைந்த துன்றோ? Iv-—21
(நீரின்‌ தாரை பொற்சரடாகவும்‌ அதில்‌ வெண்‌ முத்துக்கள்‌ கோர்த்திருப்பதால்‌ வெள்ளிய தாரையாக உவமை, பிரம்‌
மாண்டம்‌ அந்த சரட்டில்‌ நடுமணியாகிய பொன்‌. மணியாக உவமிக்கப்பட்டுள்ளது.)
நரசிம்மனே! இரணியனின்‌ இதயமாகிய குண்டத்தில்‌ தூய குருதியில்‌ தோன்றும்‌ தனது பிரதிபிம்பத்தைப்‌ பார்த்து எதிரி
யாகிய சிங்கம்‌ எனக்கருதி அதன்‌ பிடரி மயிரைப்‌ பிடித்திழுத்‌ தாற்போல, அவன்‌ குடல்‌ மாலைகளைப்‌ பிய்த்தெறிந்த சினமிக்க
உனது கூரிய வெள்ளுகிர்கள்‌ எம்மைக்‌ சாக்குமாக. {V¥—22

முதன்‌ முதலில்‌ வெளுப்பும்‌, நுழைய நுழைய பின்‌ இகப்பும்‌ மீண்டும்‌ நுழைய குண்டிக்காய்‌ (ஈரல்‌)க்‌ கருப்பும்‌ தோன்ற, தன்‌
கூரிய நகங்களால்‌ அசுரனின்‌ மார்பாகிய சுவரினைப்‌ பிளந்துடி மும்மூர்த்திகளின்‌ தேசினை மீண்டும்‌ பெற்றது போல்‌ கோன்றும்‌
படி பொய்ச்சிங்கமாகிய நீ செய்தளையன்றோ?
(நகம்‌ தோலிற்‌ துளைப்ப முதலில்‌ வெளுப்பும்‌, சதையிற்‌ துளைப்ப சிகப்பும்‌, ஈரலைத்‌ துளைப்ப கருப்பும்‌ தோன்றுதல்‌,
சிவன்‌ தேசு (தேஜஸ்‌) வெளுப்பும்‌ பிரம்மன்‌ தேசு சிகப்பும்‌, விஷ்ணு தேஜஸ்‌ கருப்பும்‌ ஆகிய மூன்றும்‌, இரணியம்‌ முன்பு
கவர்ந்ததனை மீண்டும்‌ பெற்றெடுத்தாற்‌ போல்‌ தோன்றியது என்பது கற்பனை.) 1V—23

‌ பிரம்மாண்டமாகிய இல்லத்தில்‌ படியுமாறு, மேலோங்கி நிமிர்நத பலிச்‌ சக்கரவர்த்தன்‌ ஆற்றலாகய இபச்‌ சுடர்‌, அவிந்ததுமே, இருன்‌ விண்‌ முழுதும்‌ விரைந்து பரந்து செலுமாறு போல உன்‌ நீலமேனியை வானகத்துச்கப்புறமும்‌ (சம்சுமார சக்கரம்‌ எனும்‌ (நெபுலப்படலம்‌) இடம்‌ வரையும்‌) வளரீந்த வாமன மூர்த்தியல்லவா நீ!
(விளக்கின்‌ அடி நிழல்‌ இருள்‌–உலகல்‌ பலியைப்‌ பற்றிய அச்சத்துக்கு உவமை, பலியின்‌ ஆற்றல்‌ விளக்குச்‌ சுடர்‌ வாமனன்‌
அதை அணைத்ததும்‌ பேரிருட்டு மூவுலகும்‌ பரவுவதற்கு, திருமாலின்‌ கூரிய திருமேனி வளர்ந்தது உவமை.) 14-24

பரசுராமனே! உன்னால்‌ அழிக்கப்பட்ட க்ஷத்திரியர்‌ (அரசர்‌ குலம்‌) களின்‌ மனைவியர்‌ அழுத கண்ணீர்‌ மழைக்காலமாக,
உனது புகழ்‌ என்னும்‌ அன்னப்பறவை, நீ அம்பாற்‌ துளைத்த கரெளஞ்சமலைக்‌ துளையின்‌ வழியாகச்‌ சென்றதைக்‌ கண்டு
அன்று தொட்டு இன்று வரையும்‌ மழைக்‌ காலம்‌ வரவும்‌ அன்னங்கள்‌|பழக்கத்தால்‌ அதே வழியிற்‌ செல்கின்றன. ஈறுக்காகச்‌
செல்லும்‌ (விலங்கு, புள்‌) இனங்கள்‌ எல்லாம்‌ செல்வழிச்‌ செல்லும்‌ இயல்பினதன்றோ? IV—25
(சிவனிடம்‌ வில்வித்தை கற்ற பரசுராமன்‌, தன்னோடு கற்ற சிவகுமாரன்‌ முருகனுடன்‌ பந்தயம்‌ போட்டு அம்பெய்த போது
கிரெளஞ்சகிரி துளைக்கப்பட்டது என்பது புராணக்கதை, கிரெளஞ்சகிரி துளை வழியாச அன்னங்கள்‌ மழைக்‌ காலத்தில்‌
இமயமலையிலுள்ள மானச சரோவரத்திற்குச்‌ செல்லும்‌ என்பது கவிமரபு. ஹம்ஸத்வாரம்‌ ப்ருகு பதி யசோ வர்த்ம்யத்‌ க்ரெளஞ்‌
சரந்த்‌* ரம்‌என்று மேகதூதத்தில்‌ காளிதாசன்‌ பரசுராமனின்‌ புகழ்‌ வழியான கிரெளஞ்சமலை துளை வழியாக அன்னங்கள்‌ செல்‌
வதை வருணித்து இருப்பதும்‌ காணலாம்‌.)

இரகுகுல வீரனே/ தஇிருமகள்‌ கேள்வனே! இந்திரனின்‌ இடியேற்றின்‌ அடிகளைப்‌ பொருட்படுத்தாத இராவணன்‌
உடலிலுள்ள சப்த தாதுக்களையும்‌ புகுந்து பார்க்கும்‌ பயிற்சிக்‌ காசு முயன்றதோ எனுமாறு, சப்த சால மரங்களை (ஏழ்‌
கூந்தற்‌ பனை மரங்களை) வீழ்த்தியும்‌ நில்லாது அப்புறம்‌ சென்ற உனது காற்றினும்‌ கடிய அம்பு எமக்கு செல்வத்தை ஈயுமாக!
(சப்த தாதுசகள்‌–வச்சை, இரத்தம்‌, மாமிசம்‌, மஜ்ஜை எலும்புக்குள்ளிருக்கும்‌ நெய்‌) எலும்பு, மூளை, விந்து (சுக்கிலம்‌)
என்பன சப்த தாதுக்கள்‌. இவற்றால்‌ உடம்பு ஆக்கப்பட்டூள்ளது. வச்சை– என்பது கொழுப்பு.) 1V—26

இந்திரன்‌ அனுப்பிய தேரின்‌ சாரதி மாதலியின்‌ தலை சற்றுமாறு (மயங்குமாறு) பிரளயக்‌ காற்றுப்‌ போல அம்பிறக்கைகளின்‌
சிவ்வெளப்‌ பறக்கும்‌ ஓசையும்‌, இராவணனின்‌ உடலைப்‌ பிளந்து எலும்பினை உராய்ந்து பற்றிய தீ்ப்பொறிகள்‌௮வன்‌ இரத்தத்தில்‌
புகுந்ததால்‌ *சுய்‌’ என்ற ஓசையும்‌, அரக்க வீரர்களின்‌ கவசங்‌ களைத்‌ துளைத்து இதயத்தைப்‌ பிளந்து ஊடுருவிச்‌ சென்று
(இலங்கைக்‌) கோட்டைச்‌ சுவர்க்‌ சற்களிற்‌ பட்டு “டாண்‌” என்ற ஓசையும்‌, வீரர்கள்‌ வீழ்ந்து பட்ட முண்டங்களின்‌ பாரத்தைத்‌
தாங்க முடியாமல்‌ ஆதிசேடன்‌ தலை நெளிய விட்ட நெட்டுயிர்ப்‌ பாக *உஸ்‌” என்ற ஓசையும்‌, உண்டாக்கி, களைத்த தேர்க்‌
குதிரைகட்கு வெயில்‌ தோன்றாதபடி நிழலிட்டதாயும்‌ அமைந்த உனது தெய்வீக வில்லிலிருந்து புறப்பட்ட இலங்காபுரி வானகத்‌
தில்‌ சஞ்சரித்த அம்புகள்‌ எமது பாவங்களைப்‌ போச்குமாக. 14-27

“மண்ணை உழும்போது டைத்து (பிறந்து) மண்ணிலேயே மறைந்தாள்‌ தை” என்று அந்த கற்புக்கரசியின்‌ பிரிவாற்றாமை
யால்‌ வெளுத்துப்‌ போய்‌ ராமனாக உருவெடுத்த (பலராமனாகிய) நீ, அத்தச்‌ சதையை மீண்டும்‌ அடைவதற்காக அல்லவா ஏரார்‌
பிடித்து யமுனை நதிக்‌ கரையில்‌ உழுது கொண்டு, இருக்கிறாய்‌!
இல்லாவிட்டால்‌ மெய்‌ தள்ளாட (மதுவுண்டதாலோ, பிரி வாற்றாத மயக்கத்தாலோ) ஏன்‌ உழ 3வேண்டும்‌? ஏர்‌ ஏந்திய
பலராமா.! எம்மைச்‌ சாப்பாயாக,. IV—28

இந்திரன்‌ பெருமழை பொழிவித்தபோது கோவர்த்தன கிரியைக்‌ குடையாக உன்‌ விரலில்‌ ஏந்தியபோது, சுற்றிலும்‌
வீழ்ந்த நீர்த்தாரைகள்‌ சந்திர காந்தக்‌ கல்களில்‌ உன்‌ உருவம்‌ பிரதிபலித்து பசுக்கட்கு நாராயணகவசம்‌ போல ஏழு நாட்கள்‌
பாது காத்தது. யதுகுலவீர! எம்மையும்‌ காப்பாயாக!
(நாராயணன்‌ என்ற சொற்கு நீரில்‌ உறைபவன்‌ என்பது பொருள்‌. மழை நீரில்‌ கண்ணன்‌ உரு பிரதிபலிப்பது அப்பெய
ருக்குப்‌ பொருத்தமாக உள்ளது என்பது கருத்து, ) IV—29

இளமையுடைய உனது மசனை (மன்மதனை) அனுப்பி ஐந்து (மலர்‌) அம்புகளால்‌ அரக்கர்‌ மகளிர்‌ லத்தை அழித்து, பின்‌ நீயே ஒரே முதிய அம்பாகி (திரிபுரம்‌ எரித்த வன்‌ கையில்‌) அரக்கரை அழித்த தன்மை ஏன்‌? அடடா! போதமாயிற்று (உன்‌ கருத்து அறிந்தோம்‌) அந்நங்கையர்‌ கற்பு எனும்‌ கவசம்‌ யாரா
லும்‌ வெல்லற்கரிதல்லவா? கண்ணனே! உன்‌ எண்ணம்‌ என்னே?
(திரிபுர தகன காலத்தில்‌ திருமால்‌ அம்பானான்‌ என்ற புராணக்சுதை நினைவு கூரத்தக்கது. இரட்டையர்‌ எனும்‌ தமிழ்க்‌ கவிகள்‌ .
“நாணென்றால்‌ நஞ்ருக்கும்‌ நற்சாபம்‌ கற்சாபம்‌
பாணந்தான்‌ மண்தின்ற பாணமே”
என்று மண்தின்ற கண்ணனே அம்பானான்‌ என்பதை அழகாக வருணித்துள்ளதும்‌ அறிக! :

ஈண்டு அரக்க மகளிர்‌ ₹லம்‌ கெடச்‌ செய்தற்கு இளமையும்‌ ஐந்து மலரம்புகளும்‌ உடைய மன்மதன்‌ தேவைப்பட்டான்‌.
*புகழ்புரிந்த இல்லிலோர்க்கில்லை இகழ்வார்முன்‌
ஏறுபோல்‌ பீடு நடை” *
என்ற குறட்படி அரக்கர்‌ மனைவியர்‌ சீலம்‌ அழிந்த பிறகு அவர்‌களை முதிய அம்பால்‌ வெல்வதும்‌ எளிதாயிற்று என்று கருத்து.
இப்பாடலில்‌ இத்தன்மை ஏன்‌? என வினவிய கவி புத்தம்பய்‌’ (போதம்‌ ஆயிற்று) என்று கூறிய புத்தன்‌ பெயரை
முத்திரையலங்காரம்‌ எனும்‌ அணியில்‌ பெய்து புத்தாவதாரத்தை நினைவூட்டி வணங்குகிறார்‌. காமத்தை வெல்வது வீரத்தை விட
அரிய செயல்‌ என்ற குறிப்புத்‌ தோன்றும்‌ இப்பாடல்‌ மூலம்‌ புத்தன்‌ காமத்தை வென்று சிறப்புற்றான்‌ என்று குறிப்புப்‌
பொருள்‌ தோன்ற நயமுடன்‌ அமைத்துள்ளார்‌ கவிஞர்‌.) 14-30

கலியுகத்தில்‌ மிஞ்சும்‌ பஞ்சமாபாதகங்களை ஒடுக்க கல்‌கிஅவதாரமாக, குதிரையின்‌ பஞ்ச கதிகளை (ஐந்து நடை பேதங்‌
களை) அறிந்தவனாக, தன்னிரு சுரத்தும்‌ ஏந்திய பட்டாக்‌ சுத்தி களின்‌ மின்னொளியே கவசமாக மிலைச்சரின்‌ அம்புகளைத்‌
தடுக்க கல்கியாகிய பெருமானே! எம்மைக்‌ காப்பாயாக, 17-31

என்றிவ்வாறு துதிக்கவும்‌, திருமால்‌, தேவசிற்பியை நோக்கி
“பாண்டிய மன்னன்‌ தந்த அளவற்ற செல்வம்‌ முழுதும்‌ வைணவ அடியார்கட்‌ 8ந்து வெறுங்கையன்‌ ஆவான்‌ ஆதலின்‌ இவனது
இல்லத்தை அவ்வூரில்‌ மணிமயமாகச்‌ செய்து இறப்பிச்கவும்‌’ என்று கூற, 1V—32

விசுவகருமனும்‌ அவ்விதமே ஆக்கித்‌ தந்தான்‌. அவ்வளவில்‌ தாமரைக்‌ -சண்ணனும்‌ பெரியாழ்வாரை ஆதரித்து காட்சி
யளித்துப்‌ பின்‌ மறைந்தான்‌. முனிவனும்‌ (பெரியாழ்வாரும்‌) ஊரார்‌ போற்றத்‌ திருவில்லிபுத்தூருக்குப்‌ போந்தான்‌. [4.33

——

பெரியாழ்வார்‌ தன்நகர்‌ புகல்‌
வில்லிபுத்தூர்‌ மக்களும்‌ பெரியாழ்வாரைக்‌ காணும்‌ வேட்கையுடன்‌, நகரை அலங்கரித்து மக்கள்‌ எதிர்‌ சென்றழைத்து
வர மேளதாளத்துடன்‌ சென்றனர்‌. Iv—34

இவ்விதம்‌ அவ்வூரினர்‌ எதிர்‌ சென்று, பரிவட்டமும்‌, புனித மான பகவத்‌ பிரசாத தீர்த்தங்களும்‌ காணிக்கையாக்கி, வணக்கம்‌
செய்து, கை குவித்து, தங்க ரதத்திலேற்றி அமரச்‌ செய்து அழைத்துச்‌ சென்று போகும்போது, நகரவாசிகஞம்‌, சராமவாச
களும்‌ தம்முட்‌ கலந்து பரந்து நடந்து சென்றவாறு, மிருதங்கம்‌, பஹறை தாரை, தப்பட்டை, உருமு, காகளம்‌, வீணை, முகவீணை
புல்லாங்குழல்‌, தவில்‌, நாதசுரம்‌, முதலிய வாத்தியங்களோடு, இசை முழங்க, நடனமங்கையர்‌ நடனமாட, யானை, குதிரை
களின்‌ மணியோசைக்கியைய, நங்கையர்‌ லெம்பிசைபாட மெல்ல நடந்து வந்தனர்‌.

அருகில்‌ இரத்தினக்‌ கம்பளம்‌ போர்த்திய களிறுகளிலும்‌ பிடி. களிலும்‌ ஏறிய, பொன்னாலான அங்குசங்களைத்‌ தரித்த
சிற்றரசர்களின்‌ குமாரர்களின்‌ குழு, ஒருவரை ஒருவர்‌ முந்த பரபரப்புற்று, பெரியாழ்வாரைக்‌ கண்டு வணங்கி, ஒருபக்கம்‌
ஒதுங்கி மேல்‌ நோக்கிய அசையும்‌ கண்பார்வைசளோடு திரும்பித்‌ திரும்பிப்‌ பார்த்து, புகழ்ந்தவாறேகினர்‌.
அவ்வரச குமாரர்கள்‌ திருவில்லிபுத்‌தூரில்‌ புகும்போது தமக்கு முன்பே பழக்கமான, கலைத்திறனார்‌ தந்த சணிகையர்மேல்‌ வீசி
எறியும்‌ சாக்கிட்டு, ராம அதிகாரிகள்‌ காணிக்கையாகத்‌ தரும்‌ தாரத்தை, மாதுளம்‌, எலுமிச்சை, முல்லைப்‌ பூப்‌ பந்துகளை.
முன்பு தாம்‌ வந்தனுபவித்த நங்கையர்மேல்‌ எறிந்தவாறு சென்றனர்‌. ஒளிவீசும்‌ கும்மல்களுடன்‌, புன்முறுவல்‌ பூத்தவாறு
இளைஞர்களை, கருத்தோடு கூடிய கடைக்கண்‌ வீச்சுக்களோடு பார்த்து சிறிதே கூந்தலசைய, முகத்தைத்‌ திருப்பிக்‌ கொண்டு
மத்தளக்காரரின்‌ முதுகு மறைவில்‌ ஒதுங்கி வேசியர்‌ நடக்க, மத்தளக்காரார்‌ வாசிக்கும்போது குனிவதால்‌ வெளிப்பட்டு,
வேறு உபாயமின்மையின்‌, கொப்பினைச்‌ சரிசெய்து இளைஞர்கள்‌ எறியும்‌ பூப்பந்து முதலியவற்றைத்‌ தடுக்கும்‌ வகையில்‌ கைகளை
மறித்துச்‌ சுழலும்போது காதிலணிந்த பூக்களும்‌; கன்னத்தில்‌ தவமும்‌ புன்முறுவலாகிய முல்லைகளும்‌ செறிந்த நிலவினை உமிழச்‌ சென்றனர்‌,

இனிய சொற்களும்‌ சாதுரியமான சொற்கஞம்‌ உடைய பேரிளம்‌ பெண்டிர்‌ (அரச குமாரார்களான) இளைஞர்களை
வணங்க, அப்பெண்டிர்கட்கிருபுறமும்‌ ஒதுங்கி நிற்கும்‌ இள நங்கையர்‌, பழைய காதலுறவை நினைந்து (நாணத்தால்‌) தலை
குனிந்து, (இளைஞர்களை) வணங்காமல்‌ சிறிதே முகந்திருப்பி வேறுபக்கம்‌ பார்க்கவும்‌, அவ்வரச குமாரர்கள்‌ அந்நங்கையர்‌
தம்மை வணங்காத வஞ்சனையைப்‌ பார்த்து, பரிகாசமாக அவர்‌களையும்‌ வணங்கச்‌ செய்யும்‌, வேட்கையுடன்‌, ஆங்கே பேரரசர்‌
இன்மையாலும்‌, பொதுமக்களைப்‌ பொருட்படுத்தாமலும்‌, தம்‌ கருத்தினைஅறியும்வகையில்‌ பெண்டிரைநோக்கி, *வயதிலும்கல்வி
யிலும்மூத்த நீங்கள்‌ வணங்கும்போது அவர்கள்‌ (இளநங்கையர்‌) ஏன்‌ வணங்குவதில்லை. அவர்களையும்‌ வணங்கச்‌ செய்க”என்றும்‌
உடனே முறுவல்பூத்த முகத்தாமரைகட்குப்‌ புதிய எழில்‌ கூட்டி வணங்காமல்‌, ஆங்கு இணைத்தேகும்‌ தோழியர்கட்கு, தமக்கும்‌
அவ்வரச குமாரர்கட்கும்‌ நெருங்கிய உறவுண்டு என்ற பெருமையை வெவளிப்படுத்தச்‌ செவ்விதழை மடித்து, உள்ளுர
விரைந்தெழும்‌ உணர்ச்சித்‌ துடிப்பில்‌ இகழ்ச்சியாக உச்‌ சென்று ஓலி செய்யவும்‌, அக்குறிப்புணா்ந்த பேரிளம்‌ பெண்டிர்‌ “நமக்குச்‌
செல்வம்‌ திட்டியது, நமக்கருள்‌ செய்யும்‌ வள்ளல்‌ பெருந்‌தெய்வங்கள்‌ ஆன இவர்களை வணங்கீ3ரா?’* என்று கூறி
இளநங்கையரை முன்னேறும்படி உற்சாகப்‌ படுத்தியும்‌, புருவ நெரிவில்‌அச்சுறுத்தியும்‌ எப்படியோ உடன்பட வைத்துவற்புறுத்த
வும்‌, அவ்விள நங்கையர்‌, வெட்கத்தால்‌ சஞ்சலித்த கண்களோடு இடையீடுடைய விரல்களோடு கூடிக்‌ கை கூப்பி வணங்கவும்‌ ,
அவ்விதம்‌ வற்புறுத்தலுக்காக அரைமனதோடு வணங்கிய அந்தங்‌கையரை பறவைகளைப்‌ பிடிக்கும்‌ வலைகள்‌ போலச்‌ சூழ நின்ற
பெண்டிர்‌ பெரு நகை செய்யவும்‌, அவர்களை இளநங்கையா்‌ பொய்க்கோபம்‌ கொண்டு அடித்து, சினங்கலந்த பார்வையை
அரச குமாரர்கள்‌ மேல்‌ செலுத்திப்‌ பின்‌ மீண்டும்‌ மறைந்‌ தொதுங்கும்‌ மான்‌ விழியாரின்‌ வளையல்களின்‌ ஓசையும்‌,
முகத்திற்பூகிய வாசனைப்‌ பூச்சுக்காகப்‌ படிந்த வண்டுகளின்‌ ரீங்கார ஒலியும்‌ மிக, நடந்தனர்‌.

காதுகளில்‌ சங்குமணிகளும்‌, உள்‌ வளைந்த தோள்களும்‌, சுரி குழலும்‌, காவித்‌ துப்பட்டாவும்‌ (துண்டு) ௮மர சுயகிராமம்‌
தவிர்ந்து முதுமையில்‌ வில்லிபுத்தூர்‌ அடைந்து அவ்வூர்‌ மக்களின்‌ உறவினால்‌ தன்‌ சொந்த பந்தங்களை மறந்து, வாசனைப்‌
பொருள்கள்‌ கலப்பதும்‌ பூமாலை தொடுப்பதும்‌ ஆகிய தொழில்‌களில்‌ சிறந்து, ஆந்திறன்‌ காட்டும்‌ ஆந்திர நாட்டு சுகந்தப்‌ பொடி
செய்பவர்கள்‌, சல சில சொற்களில்‌ பாடல்கள்‌ புனைந்து துதித்து பைத்தியக்காரச்‌ சேட்டைகளோடு வணங்கி, யானை, குதிரை
களின்‌ மேல்‌ வரும்‌ அரசகுமாரர்கள்‌ ,மேலும்‌, நாட்டியக்காரிகள்‌ மேலும்‌ பெரியாழ்வார்‌ மீதும்‌, குளிரும்படியாக (மணப்பொடி
யைத்‌) தூவ, அப்பொடி மேல்‌ gH) உலகனைத்தும்‌ ஒரு பிடிக்குள்‌ கொணர்ந்தாற்‌ போல்‌ பரந்து சுதிரவனின்‌ வெயில்‌
மறையும்படியாக வானகத்தையும்‌ மூடவும்‌, பன்னீர்‌ நிறைந்த தோற்பைகளை அமுக்சவும்‌, அதன்‌ வழிப்‌ போந்த நீர்‌ வானத்திற்‌
பாய்ந்து கீழே வளைந்திறங்கும்‌ போது அதன்‌ தாரைகள்‌ மிருதங்கம்‌ முதலிய வாத்தியங்களில்‌ பட்டு, நனைந்துவிட ௮க்‌
கலைஞர்கள்‌, தம்‌ வாத்தியங்களைக்‌ காத்துக்‌ கொள்ள சூடாக்கநெருப்பினை வேண்டி. அலைய, அக்கூட்டம்‌ சென்றது.

அக்கூட்டத்தில்‌ அப்போது நாட்டியமாடுவகைக்கண்டு நின்று மெல்ல மெல்லச்‌ செல்லும்‌ உல்லாசம்மிக்க இளைஞர்கள்‌, தாமும்‌
ஆங்குள்ள தாமரை முகத்‌ தையலர்களும்‌, சமயம்‌ பார்த்து; நாணற்பூக்கள்‌ பிரதஇுபலிப்பதனால்‌ வெளுத்துள்ள பாதைகளில்‌
இருபுறமும்‌ மனோகரமான முங்காக்களுக்கும்‌ செங்கழுநீர்ப்‌ — பூக்கள்‌ நிஹைந்த கால்வாய்களில்‌ இறங்கி, எருமைத்‌ தயிரும்‌
பாலாடையும்‌ பிசைந்து கட்டிய நாரத்தங்காய்‌, இஞ்சித்‌ துண்டு களுடைய ஊறுகாய்களுடன்‌ செந்நெற்‌ சோற்றினை கமுகம்‌
பாளைகளில்‌ வைத்து உண்பதற்காக அமரவும்‌, அவர்களைக்‌ கண்டு வயிற்றுப்‌ பாட்டுக்காக, பசி கொண்டிளைத்து அலைந்‌
கலைந்தலுத்துப்போன தாசரிகள்‌ (வைணவ அடியார்களில்‌ ஒரு வகை) கூட்டம்‌ அவர்களை அணு “கோபாலா பிச்சை” என்ற
அன்னப்‌ பிச்சை கேட்டு, உண்டனர்‌. ஆற்றங்கரையில்‌ வைத்‌துள்ள பருத்த கல்‌ விளக்குத்‌ தூணில்‌ எறியும்‌ சகசோதி (அகலும்‌
வத்தியுமின்றி, எண்ணெய்‌ ஊற்றி துணிப்‌ பொதியை வைத்துத்‌ திப்பந்தம்‌ போல எறியும்‌) தீபங்களிலும்‌, சாம்பிராணிப்‌ புகை
போட்ட தூப குண்டிகையின்‌ நெருப்பிலும்‌, (முன்‌ பன்னீரால்‌ நனைந்த வாத்தியங்களை) ஈரம்‌ புலர்த்திடக்‌ காய வைத்து
தமது வாத்தியங்களின்‌) நாதத்தைப்‌ பரீட்சிக்க வாசிக்கும்‌ திம்‌ திம்‌ எனும்‌ ஓசை கேட்டுப்‌ பதறிய இந்தப்‌ பக்கத்துப்‌ பூங்கா
விருந்த ளிகள்‌ அந்தப்‌ பக்கத்திற்கும்‌ அந்தப்‌ பக்கப்‌ பூங்காவி லிருந்த இளிகள்‌ இந்தப்‌ பக்கமும்‌ பறந்து நெருங்கி கட்டாத
கோரணமாக எழில்‌ கூடிப்‌ பரந்துலவி ஓடின. தலையசைத்தலும்‌, வாய்‌ இறத்தலும்‌ தாளமிடக்‌ கைதட்டலும்‌ காணப்பட்டதன்றி
அந்தக்‌ கோலகலத்தில்‌ சிறிதும்‌ பாட்டுக்‌ கேட்க இயலாமல்‌ போக்‌, (திவ்விய பிரபந்தம்‌ பாடும்‌) பாகவதர்கள்‌ அக்கூட்டத்தில்‌ பஈடி*
கொண்டு வந்தவர்சுள்‌ மெளனம்‌ வகித்தார்கள்‌.

ஒவ்வோர்‌ சளர்ச்சந்தைகட்கும்‌ செல்வதற்காக தனவந்தர்கள்‌ வீட்டில்‌ வளர்க்கும்‌ பெண்‌ குதிரைகட்குப்‌ பிறந்து, நீளக்‌ கயிற்றால்‌ காலிற்‌ கட்டப்பட்டு தரிசுகளில்‌ மென்மையான பசும்‌ புல்லைத்‌ தின்று கொழுப்பேறி, மாலை நேரங்களில்‌ கொள்ளு காணம்‌ முதலிய ஊட்டங்களைப்‌ பெற்று வளர்ந்து, வரட்டி,
முதலியவற்றால்‌ (குதிரையுடன்‌) கேய்க்கப்பட்டு மினுமிஷப்புற்று கருங்கம்பளித்‌ துணி, நிழல்‌ முதலியன கண்டு பதறித்துள்ளும்‌ இளம்‌ குதிரைகளை கால்வரை தொங்கும்‌ குஞ்சங்களும்‌, Amy மணிகளும்‌, புரசம்பட்டையிற்‌ தோய்ந்த முழத்திற்கொன்றும்‌ சாணுக்கொனள்றுமாகத்‌ தொங்கும்‌ வலைகள்‌ தொங்க, அலங்கரித்து, வாசனைப்‌ பூச்சு தொய்த்த நிலவொத்த ஆடைகள்‌ அலங்கரிக்க (அக்குதிரைகளில்‌) ஏறி இளைஞர்கள்‌ வந்தனர்‌.

அவ்வூரின்‌ மேலோர்களான சாலியர்களும்‌, தட்டார்களுக்‌ கும்‌, சும்மாளரும்‌ செட்டிகளும்‌, கோமுட்டிகளும்‌, பாய்முடை வோரும்‌ ஆகிய பல குலங்களின்‌ இள நங்கையர்கள்‌ கூட்டமாக
கலந்து வரும்போது யானையைக்‌ கண்டு பயந்து ஓதுங்கவே, கடிவாளம்‌ இருகரத்தாலும்‌ பற்றி ஈர்த்தும்‌ அடங்காதோடிய குதிரைகள்‌ மிரண்டு௮க்கூட்டத்தினை மிதித்தக்கொண்டோடின்‌, மிதிபட்ட கூட்டத்திடையே உள்ள முதியவர்கள்‌, பெண்டிர்‌,
நோயாளிகள்‌ முதலியோர்‌ (அக்குதிரையில்‌ ஏறியவர்களை) வையவும்‌, அவாகள்‌ எதுவும்‌ பேச முடியாமல்‌ உயிரைக்‌ கைபில்‌
பிடித்துக்கொண்டு, போய்‌ அருகிலுள்ள புய வயலில்‌ துள்ளிக்‌ குதித்து தொடைகள்‌ வரையும்‌ மூழ்கி எம முடியாத குரை மீதிருந்து தாம்‌ இறங்க இடம்‌ இன்றி நாலுதிசையும்‌ பார்த்து பரிதாபகரமாக இருப்ப அதைக்கண்ட பூப்படையாத பெதும்‌£ பப்‌ பருவத்து மகளிர்கள்‌ “ஓ” “ஓ” என்று கூவி பரிகாசமாகக்‌ கேலி
செய்து கைதட்டவும்‌ அந்த ஒடை செறிந்த பூங்கா, மரங்களில்‌ எதிரொலிக்கவும்‌ செய்தன.

இவ்விதமாக மகாவைபவத்தோடு, அத்திருவில்லிபுத்‌ தாரையடைந்து, அந்த சக்கிராயுதமுடைய திருமாலின்‌ கோயில்‌ புக்கு
நின்று, அப்பெரியாழ்வார்‌ அந்த பிரம்மரதத்திலிருந்து கீழே இறங்க, இற்றரசுகளஞும்‌, தேவஸ்தானாதிபதிகளும்‌ குழுமி
பின்தொடர, இருமாலைச்‌ சேவித்து, சுவாமி பிரசாதமான பரிவட்டத்தினால்‌ அலங்கரிப்பட்டு, பின்னர்‌, பல்வேறுஅலங்காரங்‌ களுடன்‌ கூடிய, மணிகளும்‌ பொன்னும்‌ நிறைந்த தனது இல்லத்‌ தைக்‌ கண்டு வியந்து, இருமாலின்‌ திருவருட்பேறென நினைந்து
ஆங்குள்ள மன்னர்களை விடை கொடுத்து அனுப்பி வைத்து, இல்லம்‌ புகுந்து, முன்னைவிட நாறு மடங்கு அடியார்களை ஆதரித்துச்‌ சிறப்புற்றிருந்தார்‌. 11-49

அப்போது காணிக்கை ஈந்தவர்‌ இல்லங்களில்‌ விருந்தினனாகச்‌ குளித்துண்டு மகழ்ந்து, இரவில்‌ திருமால்‌ கோயிலில்‌ பல்வேறு
நாட்டியக்காரர்களின்‌ வாதங்களைத்‌ தீர்த்து வைத்து; மணிகள்‌, உடைகள்‌, ஊர்கள்‌ திருமாலுக்கு சமர்ப்பணம்‌ செய்து, மறுநாள்‌
காலையில்‌ 17-36

சிற்றரசுகள்‌ மதுரைக்குத்‌ திரும்பிச்‌ சென்றனர்‌. பெரியாழ்வாரும்‌ முன்போல வைணவ அடியார்களைச்‌ சேவித்‌
தும்‌ தனது நெடுநாளைய தொண்டாகுிய துளசிமாலை கட்டித்‌ தரும்‌ கைங்கரியம்‌ செய்து கொண்டும்‌, பக்தியுடன்‌ திகழ்ந்தார்‌. 1.37

ஒரு நாள்‌ நண்பகலில்‌ பூமாலை சமர்ப்பித்த பிறகு போய்க்‌ கொண்டிருந்த பெரியாழ்வாரை, அருளொயுகும்‌
புன்முறுவல்‌ பூத்த கடைக்கண்களோடு பார்த்துப்‌ பின்‌, கருட வாகனனான பகவான்‌ தாமலை மலராள்‌ ஆகிய தேவியைப்‌
பார்த்து இவ்விதம்‌ கூறினான்‌. IV—38

“யாமுனாசாரியர்‌ (ஆளவந்தார்‌) ஒருவனும்‌, இந்த மகாத்மா (பெரியாழ்வார்‌) ஒருவனும்‌ அல்லவா (வைணவ) தரிசனத்தை
புனருத்தாரணம்‌ செய்து எனது போருளுக்குப்‌ பாத்திரம்‌ ஆனார்கள்‌.” என இந்திராதேவி (லட்சுமி) தன்‌ கணவனிடம்‌
இவ்விதம்‌ கூறினாள்‌’ ”, 139

ஆளவந்தார்‌ வரலாறு
“இவர்‌ (பெரியாழ்வார்‌) கதை தெரிந்ததுதாஷே! அவர்‌ என்ன செய்தார்‌?” என்று கேட்ப, தாமரைக்‌ கண்ணன்‌, அந்த
நூற்றிதழ்த்‌ தாமரையில்‌ உறையும்‌ திருமகளுக்கு இவ்விதம்‌ கூறினான்‌! “*நங்காய்‌! என்னைச்‌ சேவிக்கும்‌ பக்தன்‌ ஒருவன்‌
முல்‌ பிருந்தான்‌.* ்‌ 1V—-40

அவன்‌ சிறுவயது முதலே ஆசாரியரிடம்‌ வேத சாத்திரங்‌களைக்‌ சற்றுச்‌ சிறந்திருந்தான்‌. நங்காய்‌! அப்போது இப்போ
துள்ள பாண்டிய மன்னனின்‌ முன்னோராகிய ஒருவன்‌ ஆண்டு வந்தான்‌. Iv—41
பித்துற்ற சைவத்தில்‌ முதிர்ந்து, எனது துதிகளை (விஷ்ணு துதி)க்‌ கேட்க மாட்டான்‌. எனது விக்கிரகங்களை வணங்கமாட்டான்‌. சிவன்தான்‌ பரம்பொருள்‌ என்பான்‌. எனது ஆலய உற்சவங்களைக்‌ கண்டு அஞ்சுவான்‌. அவளைச்‌ சார்ந்‌ தோரும்‌ அப்படியே இருந்தனர்‌. 1342

* வரலாற்றுப்படி யாமுனராகிய ஆள வத்த ரர்‌ பெரியாழ்வாருக்குச்‌ சில நூற்றாண்டுகள்‌ கழிந்த பின்‌ தமிழகத்‌
தில்‌ வாழ்ந்த வைணவ அடியார்‌ ஆகும்‌. கிருஷ்ணதேவராயர்‌ தமது காவியத்தில்‌ பின்னர்‌ இருந்தவரை முன்னவராக வருணித்‌ திருப்பது பொருந்தாது. எனினும்‌ இலக்கியங்களில்‌ இவ்விதம்‌ காலக்‌. கணக்கைப்‌ பொருட்படுத்தாது அமைப்பது மரபாகவே வந்துள்ளது. பின்‌ வந்த வேதாந்த தேசிகர்‌ அகோபில மடம்‌ உருவாக்கிய ஆதிவண்‌ சடகோபர்‌ போன்றவர்களையும்‌ இக்‌ காவியத்தில்‌ ஆண்டாள்‌ சரிதம்‌ கூறுமிடத்து வருணித்திருப்பதும்‌ காணலாம்‌. இப்போக்கு பல புராணங்களிலும்‌ காவியங்களிலும்‌ காணப்படுகிறது. எனினும்‌ சரித்திர நோக்கத்தில்‌ இது முரண்‌ பாடாகும்‌. *தரதா யதாபூர்வம்‌ கல்ப3யத்‌’ என்ற சுலோகப்படி பிரம்மா மீண்டும்‌ மீண்டும்‌ முன்போல உலக சிருஷ்டி நடத்து கிறார்‌ என்பதால்‌ யாமுனர்‌ முன்னைய யுகத்தவர்‌ ஆகக்‌ கொள்ளலாம்‌ எனச்‌ சிலர்‌ சமாதானம்‌ கூறுவர்‌.

அவன்‌ வேதமுணர்ந்த பிராமணர்களைப்‌ போற்றுவ தொழிந்து, ஐங்கமர்‌ (சைவ அடியார்‌, களைப்‌ போற்றி வணங்கினான்‌.
செவ்வாய்க்‌ கிழமைகளில்‌ வீரபத்தினுக்கு மாவிளக்கெடுத்துக்‌ கொண்டு சென்றான்‌. குலதெய்வங்களையும்‌ கும்பிட மறந்தான்‌.
தொண்ணுற்றாறு நாள்‌ விரதங்களில்‌ சங்க௱தாசமய்யார்களான சிவனடியார்கட்கு மன நிறைவுண்டாகும்படி சிரார்த்தங்களைச்‌ செய்து மகிழ்விப்பான்‌.
பழமையான கோயில்கள்‌ பாமாகக்‌ கடக்க சைவ மடங்களை நிறுவினான்‌. வடக்கத்திய சைவமதத்திற்‌ சேர்ந்து பூணூலையும்‌
அறுத்தெறிந்தான்‌. ஆசாரமற்ற ஆராத்திய்களை பெரிதாக எண்ணி கொண்டு செய்தான்‌. அவர்கள்‌ கூறும்‌ உபறிஷத்துக்‌
களை (வேதாந்தம்‌)க்‌ கேட்டான்‌. ஏதாவதொரு சைவஅடியார்‌ வந்தால்‌ வியந்து பாராட்டிப்‌ போற்றி வந்தான்‌. IV—43

சிவலிங்கதாரிகளாகிய ஐங்கமர்கள்‌ எது செய்தாலும்‌ இது பாவம்‌ புண்ணியம்‌ என்று ஆராயாமல்‌ ஒப்புக்‌ கொண்டு
இருப்பான்‌. சைவத்தைப்‌ போற்றும்‌ பிராமணர்கட்கு மட்டுமே அக்கரகாரங்கள்‌ தருவான்‌. 1V—44

அவன்‌ அரசாண்டு வந்த காலத்தில்‌ அவனது ஆட்சியிலிருந்த தாமிரபரணி நதித்துறையில்‌ மட்டுமே கிட்டும்‌ ஆணி முத்துக்கள்‌
எல்லாம்‌ சைவ அடியார்கள்‌ கழுத்துக்கு (ருத்ராட்ச மாலையில்‌ கோர்த்து) தீர்ந்து போய்விட்டன. IV—45

அவ்வப்போது, மன்னன்‌ விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில்‌ அந்தணர்கள்‌, தம்‌ நாட்டைப்‌ பிரிய
மனமில்லாமல்‌, நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு, . ருத்திராட்ச மாலை தரித்து, சூதசம்்‌ஹிதைச்‌ சுவடியைக்‌ கக்கத்‌
இல்‌ இடுக்கிக்‌ கொண்டு அவைக்களம்‌ புகத்‌ தொடங்கினர்‌. IV—46

ஒழுக்கத்திற்கு முரண்பாடாக மறைவாகக்‌ கஞ்சா, சாராயம்‌ குடிக்கும்‌ நீசர்களை வெளியேற்ற இயலாமல்‌ ஏற்றுக்‌ கொண்
டான்‌. பிராமணர்களின்‌ சிறு “தவறுகளை வெளிப்படுத்துமாறு சைவர்களுக்குச்‌ சைகை செய்வான்‌. . IV—47

அப்பட்டத்தரசி, நற்பேற்றினால்‌ என்‌ மீது பக்தியால்‌ ஆராதனை கொண்டிருந்தும்‌, தன்‌ கணவன்‌ எனது பக்தனாக
இல்லாததை தினைந்து மிகுந்த வருத்தத்தையடைந்திருந்தாள்‌. IV—48

மேலும்‌ அப்பெண்மணி I1v—49

மாளிகைக்கு முன்புள்ள அழகிய துளசி வனத்திற்கு: தானே கோலமிடுவாள்‌.. தசமியன்று ஒரு பொழுதுமட்டும்‌
உண்பாள்‌. மறுநாள்‌ ஏகாதசியன்று தூங்காமல்‌ உபவாசமிருந்து துவாதசியன்று பிராமணப்‌ பெண்கள்‌ கூறும்‌ கதைகளைக்‌
கேட்பாள்‌. விரதம்‌ இருக்கும்‌ மூன்று நாட்களும்‌ தன்‌ கணவனை விரும்ப மாட்டாள்‌, அதன்‌ மறுநாள்‌ தன்‌ கணவன்‌ படுக்கைக்குள்‌
அன்போடு செல்வாள்‌. செல்லும்‌ போது கஸ்தூரி (திலகத்தை துடைத்து கற்பூரத்‌ திலகத்தை அணிந்து செல்வாள்‌. இவ்விதரூ
என்‌ மேல்‌ பக்தி மிகுந்திருந்தாலும்‌ தன்‌ கணவனிடம்‌ பக்தி குறையாமல்‌ இருப்பாள்‌. இதுவே எனக்கும்‌ விருப்பமாகும்‌. 17-50

பிரம்மா, ரத்திரர்கள்‌ என்‌ உடல்கள்‌ தாம்‌ அவர்களை வணங்குவதும்‌ என்னை வணங்குவதுதான்‌. அவர்களை விருப்பத்‌
தைத்‌ தருபவனும்‌ நான்தான்‌. எனினும்‌ அதில்‌ சிறிது ஏற்றத்‌ தாழ்வுகள்‌ உள்ளன. 1-5)

பிற தெய்வங்களை என்னிலும்‌ வேறாகக்‌ கருதி உள்ள மந்த மதியினர்‌, எனது வாசுதேவநிலை–(அனளைத்திலும்தான்‌. தன்னில்‌
அனைத்தும்‌)யை உணராமல்‌ இயற்றும்‌ பூசனையின்‌ பயன்‌.- எல்லைக்குட்பட்டதாகவே முடிவுறும்‌. IV—52

மேலும்‌, இந்த ரகசியம்‌ (எல்லாம்‌ நானே எனும்‌ தத்துவம்‌) தெரியாமல்‌ அம்மன்னன்‌, தாமத குணமுடையவளாய்‌, எனது
பக்தர்களை சாதாரணமாகக்‌ கண்டு, அவர்கட்கு ஏற்படும்‌ தொல்லைகளை நீக்காது அலட்சியப்படுத்தி, காவல்‌ கடமையில்‌
நீங்கியவனாகினான்‌. இதைக்‌ கண்டு கலியுகத்தில்‌ தமிம்‌ நாட்டில்‌
(த்ரவிடமண்டலம்புன) கருதமாலா,* தாமிரபரணி நஇக்‌ கரை களில்‌ எனது பக்தர்கள்‌ பரந்திருட்பார்கள்‌, அந்நாட்டு
மன்னனாகிய பாண்டிய மன்னன்‌ ஆதலின்‌ காத்தல்‌, தண்டித்தல்‌ முதலியன நானே பிரத்தியட்சமாக செய்ய இயலாது. மன்னன்‌
மூலமே செய்வித்தல்‌ வேண்டுமாதலினாலும்‌, எனது பக்தர்களைக்‌ காப்பாற்றும்‌ விரும்பினாலும்‌, எனது பரதத்துவ நிர்ணயம்வாதத்‌
தாலன்றி நிலை நாட்ட முடியாதாகையாலும்‌, மன்னனை என்‌ பக்தனாக்க அவன்‌ சபையிற்சென்று வாதாடி வெற்றி பெறச்‌
செய்யும்‌ வகையில்‌ ஃ அவ்வந்தணனுக்கு (யாமுனாசாரியருக்கு) உணர்வைத்‌ தோற்றுவித்தேன்‌. ்‌ பல்வேறு நாடுகளிலிருந்தும்‌ வந்த ஏழை எளியோர்‌,
அனாதை, முதியவர்கட்கு தானியம்‌, உடை, மான்தோல்‌
முதலியன தந்தும்‌, பிரம்மச்சாரிகட்குத்‌ திருமணம்‌ செய்வித்தும்‌, உபநயனங்கள்‌ நடத்தியும்‌ முடம்‌, குருடு, செவிடுகட்கு எருது
முதலிய வாகனங்கள்‌ தந்தும்‌, மேலும்‌, குளம்‌ (தோண்டும்‌ வேலை) முடியாமல்‌ மிஞ்சியுள்ளது என்றும்‌, ஏழ்மை மிக்க (மரனியங்களற்ற) கோயில்கட்டு பூசை நடத்த வேண்டியும்‌, பாலை வழிகளில்‌ தண்ணீர்ப்பந்தல்‌ வைக்க வேண்டியும்‌, சிராத்தம்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌, :
தீர்த்த யாத்திரைபோக வேண்டுமென்றும்‌, நோன்பு
(விரதம்‌) முதலியவற்றுக்காகவும்‌, நோய்‌ தீர்க்கவும்‌ என்று சொல்லி பட்டத்தரசியுடன்‌ சென்று தெரிந்தும்‌, தெரியாதும்‌ கொடை தந்த பொருட்களை முதிய பணியாளர்கள்‌ கொண்டு வந்து தர இடைவிட்டுக்‌ கட்டிய தோரணம்‌ போலுள்ள கரங்களால்‌ வாங்கிய ஏகதண்டி (சுமார்த்தர்கள்‌) திரிதண்டி
(வைணவர்கள்‌) பிரம்மசாரிகளின்‌ கையி3லந்திய கோல்களில்‌ காவி வண்ணக்‌ கொடிகளும்‌, பச்சைக்‌ கொடிகளும்‌ உடைகளும்‌,
நிறைந்து, யாசிக்கும்‌ வித்தையன்றி வேறு வித்தையறியாத
இரவலர்கள்‌ கூட்டமும்‌ நிறைந்து கடக்கும்‌, மேற்கு வாசலில்‌
அந்த யாமுனரும்‌ சென்று என்‌ கதைகளை முன்பே கேட்ட பாண்டிய மன்னன்‌ பட்டத்தரசியிடம்‌ வாயிலர்‌ மூலம்‌ சொல்லி
யனுப்பி “வெளி நாட்டவன்‌, விஷ்ணுவே பரதத்துவம்‌ என வாதில்‌ நிரூபித்து வெல்வேன்‌. அரசன்‌ விஷ்ணு பக்தர்களை மதியான்‌.
ஆகுலின்‌ அவனிடம்‌ நேரில்‌ யானோ, மற்றவர்களோ சென்று கூற முடியாது. நீ கணவன்பால்‌ அன்பும்‌ விஷ்ணு பக்தியும்‌ உடையவள்‌ ஆதலின்‌ உன்னிடம்‌ விண்ணப்பம்‌ செய்து கொள்‌கிறேன்‌. நீ சொல்வதை அரசன்‌ கேட்பான்‌. நீ சொல்லி என்னை
அழைப்பித்து வாதம்‌ செய்ய ஏற்பாடு செய்வாயாயின்‌ வாதம்‌ செய்து வென்று உன்‌ கணவனை விஷ்ணு பக்தனாக்கி பேறு
பெற்றவனாக்குவேன்‌.” என்று கூறி அனுப்பினான்‌. IV—53
* கிருதமாலா–மதுரையில்‌ தெற்கில்‌ உள்ள சிற்றாறு. புனித நீதியாக மதிக்கப்பட்டது. மகாபாரதத்திலும்‌ இந்நதி குறிப்பிடப்‌ பட்டுள்ளது. தற்போது இந்த அறு தூய்மையற்ற சிறுகால்‌வஈயாக மதுரை தெற்கு மேமபாலததருகே காணப்டுகிறது,

கோடைக்‌ காலத்தில்‌ வாடியிருந்த வெண்‌ மயில்‌ புது முகில்‌ முழக்கம்‌ கேட்டதும்‌ மகிழ்வுறுவதுபோல மகிழ்ச்சியுற்று, அந்த
அரசி தனித்திருக்கும்போது கணவனிடம்‌ யாமுனரைப்‌ பற்றிய செய்தி அறிவிக்கவும்‌ அரசன்‌ வியப்புற்று 1V—54

“எப்படி எப்படி? தான்‌ வாதம்‌ செய்து சைவமதத்தை வெல்வதற்கு வந்தானோ? பார்ப்போம்‌, வரவமைக்கவும்‌” என்று
கூறு அன்றிரவு சுமியவும்‌ 1V—55

காலையில்‌ ஜரா பாடு கூடிய அவையில்‌ (குறிப்பிட்ட உயர்‌ காரிகள்‌, கவிஞர்கள்‌, மட்டும்‌ உள்ள ௮வை) கொலுவிருக்கும்‌
சுணவன்‌ அருஇல்‌:.தான்‌ அமர்ந்து இருந்து அந்த மதிமுகத்தாள்‌, கணவனின்‌ அனுமதியுடன்‌ காவல்‌ மூலம்‌ ஏவி அமழைப்பிக்கவும்‌
அவ்‌ அந்தண குமாரன்‌ 1-0

ஆளவந்தார்‌ பாண்டியன்‌ அவைபுகல்‌
வாயில்புக்கு, கருடபச்சைகளுடன்‌ கூடிய நிலத்தில்‌ வைரம்‌ பொதிந்த மேடையுடன்‌ அமைந்த செந்தளிர்களுடைய *அசுவத்த
மரம்‌ (அரசமரம்‌) கண்டு அதனை வாகுத்திற்கு சாட்ியாக்கி வலம்‌ வந்து வணங்கினான்‌. IV—57

பொன்‌ வேய்ந்த மூன்றுபடிக்கட்டுகளையுடையதும்‌ பரந்‌ துயர்ந்து சத்திர வேலைப்‌ பாடுகளுடன்‌ கூடியதும்‌ ஆன மேடை
யில்‌, இரத்தினகம்பள மெத்தையில்‌, பாண்டிய மன்னன்‌ அமர்ந்‌ இருந்தான்‌. அவனைச்‌ சுற்றிலும்‌ புலித்தோல்‌ மேலாடையாக
உடைய முதிய சைவ சன்னியாசிகள்‌ இருந்தனர்‌. முத்துச்சரத்‌ இல்‌ கோர்த்த ருத்திராட்சை மாலை அணிந்து, நெற்றியில்‌ பூசிய
விபூதி விசிறியினால்‌ வீசிய காற்‌.றில்‌ உதிர சிவந்த கண்களுடன்‌சிறு பீடத்தில்‌ வட்டத்‌ தலையணையில்‌ முழங்கையை ஊன்றி
நந்தி பொறித்த மோதிரக்‌ கையை கன்னத்தில்‌ வைத்தவாறு, சைவாகமங்களைக்‌ கேட்டவாறு, பொன்பொதிந்த சிறிய ருத்தி
ராட்சங்கள்‌ காதில்‌ பளபளத்து ஒளிர, வெண்தலைப்பாகையின்‌ மேலாக பெண்துகில்‌ ‘போர்த்து, தாம்பூலப்படிகம்‌ ஒருத்தியும்‌
கத்தி ஒருத்தியும்‌ ஏந்தி நிற்க, அரசி வெண்சாமரை வீச ஓலக்கசு மிருந்த மன்னனை யாமுனன்‌ கண்டான்‌. 1V—58

கண்டு, அடக்கத்துடன்‌ அருகளைந்து பூணூல்‌ காணிக்கை யாகத்‌ தந்து அமரவும்‌, அரசன்‌ ஆதரவு காட்டாமல்‌ பரபரப்புடன்‌
இவ்விதம்‌ கூறினான்‌. IV—59

“என்னப்பா? சிறிய குட்டிப்‌ பயல்‌ நீ, உனக்குத்‌ தகுமா? துத்துவவாத நிர்ணயங்கள்‌ செய்ய இயலுமா? தோற்றால்‌ ஐயோ
அப்பா என்று கூவினும்‌ பிடித்து லிங்கத்தைக்‌ கட்டாமல்‌ விட மாட்டோம்‌ தெரிந்து சொல்‌!” IV—60

வாதாடுவோம்‌ என்று சொல்லிவிட்டு வருவார்கள்‌. தோற்ற பின்‌ வெட்கமில்லாமல்‌ ஏதாயினும்‌ தயவுடன்‌ தரமாட்டீர்களா?
என்பார்கள்‌. இவ்விதமான வஞ்சசமுடன்‌ சபையிலேறும்‌, துணிவுடைய பிராமணர்களைப்‌ பற்றிச்‌ சொல்வானேன்‌? 774-061

ஓன்று கூறி இரகூயுமாக தேவியைப்‌ பார்த்து இவ்விதம்‌ “கூறினான்‌. IvV—62

“என்‌ (சைவ) மதத்தவன்‌ தோற்றால்‌, விபூதி, ௬ுத்திராட்சங்‌ி களைத்‌ துறந்து இவனால்‌, வியப்புறும்‌ வகையில்‌ என்னவர்‌
களுடன்‌ விஷ்ணுவின்‌ சக்கிர முத்திரையை ஏற்றுக்‌ கொண்டவனா கிறேன்‌. 77. 63

“பெண்ணே! உனது இந்த பண்டிதன்‌ தோற்றால்‌, உனக்கும்‌ இவனுக்குச்‌ சொன்ன மாதிரி தான்‌’* (கழுத்தில்‌ லிங்கம்‌ கட்டி
விடுவேன்‌), “பஞ்சபூதங்கள்‌ சாட்சியாக தேவரீர்‌ ஆணை குவறாமல்‌ இருந்தால்‌ போதும்‌.” ” IV—64

என்று கூறும்‌ அவ்விருவரின்‌ சபதங்களைக்கேட்டு IV—€3

அவன்‌ (யாமுளர்‌) மான்தால்‌ படபட என ஒலிப்ப, மஞ்சள்‌ துணி கட்டிய புரசங்கோல்‌ மேலெழ, கை கூப்பி அடக்கமுடன்‌ ,
விண்ணப்பம்‌ என்று பாதி இருக்கையிலிருந்து எழுந்து தைரியமுடன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. IV—66

“தவா? இவ்விதம்‌ கூறலாகாது. நான்‌ வயிற்றுப்‌ பாட்டுக்‌காக இங்குவரவில்லை. என்தோற்றம்‌ (பிரம்மச்சாரி)கண்டாலே,
பிரம்மா பிச்சை ஏற்றுண்ணுமாறு விதித்துள்ளான்‌ ஆதலின்‌ (வேறு தேவைகள்‌) இல்லை எவ்பதுணரலாம்‌. [77-07

எவர்‌ எல்லா உயிர்களிலும்‌ இருப்பாரோ அவரே இவ்விதம்‌ (வாதாடத்‌)தூண்டினார்‌. அவர்‌ கட்டளைப்படியே வந்துள்ளேன்‌.
தெரிந்தது நாலு சொல்ல எல்லாம்‌ நல்லதாகவே முடியும்‌. அவரே பொய்‌ கூறின்‌ நான்‌ என்ன செய்ய முடியும்‌. IV—68

அரசே! நானே போட்டியிட வந்தேன்‌. என்று நிளைத்தாலும்‌ அப்படியே ஆகட்டும்‌. அம்மா (அரசி) அழைத்து வந்து
பண்டிதம்‌ என்று (தாட்சண்ணியம்‌) பார்க்க வேண்டாம்‌.
வாதத்தில்‌ தோற்றால்‌ தாங்கள்‌ எப்படிச்‌ செய்ய வேண்டுமானாலும்‌ அப்படியே செய்து கொள்ளுங்கள்‌. Iv—69

என்று தைரியமாகக்‌ கூறி, மீண்டும்‌ அமர்ந்து, அவன்‌ அமைதி யுடன்‌ வாதத்தைத்‌ கொடங்கினான்‌. IV—70

பிறன்மதம்‌ மறுத்தல்‌
* அவர்களுடன்‌ ஒரு அறிஞனைப்‌ பார்த்து, அவன்‌ கூறிய வாதங்களை மீண்டும்‌ தானும்‌ கூறி அவன்‌ கருத்தை நிச்சயப்‌
படுத்திக்கொண்டு, பின்‌ அவன்‌ வாதங்களைக்‌ கண்டிக்கத்‌ தொடங்கி, அவன்‌ சொன்ன சுருத்துக்களின்‌ குற்றங்களை மெல்ல
எடுத்துக்காட்டி, பின்னர்‌ அவ்‌ அவையோர்‌ உடன்படப்‌ இடையே பேசும்‌ வாதங்கட்கு ஒவ்வொன்றாக பதில்கூறி
எல்லோரும்‌ இடைமறித்துப்‌ பேசும்பேதும்‌ கலவரமடையாமல்‌ எல்லோரையும்‌ சமாதானம்‌ அடையச்‌ செய்து, முதலில்‌ பேசிய
வனிடமே திரும்பி மற்றும்‌ சுருதி, சுமிருதி, சூத்திரம்‌ முதலிய
வற்றால்‌ ஒரே கருத்தை உருவாக்கி, தனது சிந்தாந்தத்தை அனைவரும்‌ ஏற்கச்‌ செய்து எதிரியை முறியடித்து அருளோடு
அவனை விடுவித்து* 17-71
* இப்பாடல்‌ மூன்றாம்‌ அத்தியாயம்‌ 6வது பாடலாகும்‌

நீ என்ன சொன்னாய்‌” வருக! (ய) என்ற ௮ அடுத்த த்தவனை இ ணு அவனையும்‌ தோற்றோடச்‌ செய்து அவ்வந்தணன்‌ (யாமுனரீ) அனைவரையும்‌ வென்றான்‌. IV—72

இவ்விதம்‌ வென்று திருமாலே பரதத்துவம்‌ என்று விசிட்டாத்துவிதமே மதம்‌ என்று நிறுவிட. 17:….73
அச்சமயம்‌ அவ்விதம்‌ எதிரிலிருந்த அரச மரத்திலிருந்து “ஓ. மன்ன! இதுவே மெய்ப்பொருள! நாராயணனே பரம்‌ பொருள்‌! [அவனைப்‌ போற்றுவாயாக[!, என்று ஒரு .சொல்‌ கேட்கப்பட்டது. 17-74

அச்சொற்களைக்‌ கேட்டு, வருத்தமுடன்‌ அங்கு கூடியபுற மதத்தார்‌ (பாசண்டர்‌) தலைகுனிந்தவாறு வெளியேறினர்‌.
அவ்வரசன்‌ அவனது (யாமுளர்‌) பெருமைகளையுணர்ந்து மகிழ்ந்து, சாட்டாங்கமாக வணங்கி மகஇழ்ச்சி, வியப்பு ஆய
உணர்ச்சிகள்‌ பொங்கும்‌ இதயத்துடன்‌. இருமால்‌ அடித்தாமரைகட்கு பக்தியடையவனாகி, பேறு பெற்றவனாக, பாண்டிய
மண்டலத்திற்கு மருமகனை பட்டத்துக்‌ குரியவனாதலினால்‌;
தகுந்தவன்‌ என பிரம்மச்சாரியான அவனுக்கு (யாமுனருக்கு) தன்‌ சிறிய தங்கையைக்‌ கொடுத்துத்‌ இருமணம்‌ செய்வித்து,
தட்சணையாக அம்மகாத்மாவுக்கு தாரை வார்த்து பாதி நாடு தந்து, இளவரசாக்கி, வேதவேதாங்கங்களைக்‌ கற்ற அவன்‌
அதுர்வணாவதமும்‌, கற்றவன்‌ என்பதுணர்ந்து, அந்து வேதத்தில்‌          தெய்வீகமான மந்திரதந்திரங்கள்‌ உடைமையும்‌ அறிந்து
அம்மகாத்மாவுக்கு முன்னறிவித்து அரிய பகைவரை அடக்குமாறு போருக்குச்‌ செல்லுமாறு கட்டளையிட அந்த யாமுனரும்‌
இசைந்துபுறப்பட முனைய, அவனது புரோகிதன்‌, முதன்மந்திரி ஆூயோர்‌ மழைக்காலம்‌ வருவதால்‌ அதன்‌ பிறகு சரத்காலத்தில்‌
பகைவரை யடக்கச்‌ செல்சு எனக்‌ கூறவும்‌ அதை அரசனுக்கு அறிவித்து அவன்‌ இசைவு பெற்று அங்கேயே இருந்தான்‌.
அவ்வளவில்‌ 17:75

மழைக்காலம்‌
சூரியன்‌, தான்‌ கடுமையானவன்‌ எனக்‌ கூறுவதனைச்‌ ச௫க்காமல்‌ தானும்‌ வருணனைப்போல நீரிளைச்‌ சேமிக்கும்‌ எண்ணம்‌ உடையவனாக ,நீர்‌ நிலைகளை (ஆவியாகச்‌)சேமித்தும்‌ அமையாமல்‌, வருணன்‌ முதலை (மகரம்‌) யை வாகனமாக்கியது போல தானும்‌ நண்டினை (சர்க்கடகம்‌) வாகனமாக்கிறானோ என கர்க்கடக ரா௫ியில்‌ புகுந்தான்‌. (சூரியன்‌, வருணனைப்போல குளிர்ந்தவன்‌ எனப்‌ பெயா்‌ வாங்கஅவனுடன்‌ போட்டியிட்டான்‌ என்பது கருத்து) 1V~-76
* இப்பாடல்‌ மூன்றாம்‌ அத்தியாயம்‌ 7 வது பாடலாகும்‌

சூரியன்‌ கர்க்கடகம்‌ புகுந்ததுமே, காடு, (வளம்‌) பன்றி(வராகம்‌) எருமை, மயில்‌, யானை, தவளை மன மகிழ்ச்சி
யடைந்தன. ஜன்மராசியிலிருந்து மூன்றாவது ராசியில்‌ சூரியன்‌ புகுந்தால்‌ உலகுக்கு மகழ்ச்சி விளையுமன்றோர?” *
(கிருஷ்ணதேவராயர்‌ தமது சோதிட நூற்புலமை தோன்ற இப்பாடல்‌ அமைத்துள்ளார்‌. வனம்‌, வராகம்‌ முதலிய உயிர்கள்‌
மகிழும்‌ என்றதால்‌ வ என்ற எழுத்துக்குரிய நட்சத்திரம்ரோகினி ஆகும்‌ என்றும்‌ ரோகிணி விருஷபராசி நட்சத்திரம்‌ ஆகலின்‌
விருஷபத்திற்கு மூன்றாவது ராசி கர்க்கடகம்‌ என்றும்‌ அதில்‌ சூரியன்‌ புகுந்ததால்‌ மனமகிழ்ச்சி ஏற்படும்‌ என்று கற்பனை செய்துள்ளார்‌.) 7.77

சூரியனிற்‌ பிறந்த கதிர்களாகய (பெண்‌) மக்கள்‌ கடலினைக்‌
கலந்து கருவுற்று மீண்டும்‌ (மழை பொழிதலாகிய) பிரசவத்திற்‌ காக தனது இல்லம்‌ (பிறந்த வீடாகிய சூரிய மண்டலம்‌) அடைந்‌
தனர்‌. பெண்மக்கள்‌ பெருமையுடன்‌ புக்ககத்தில்‌ இருந்து பின்‌ பிரசவத்திற்காக தாய்‌ வீட்டுக்கு வருவது வழக்கம்‌ (மரபு) அல்லவா? IV—78

பூமியில்‌ முகில்களின்‌ பனிக்குடம்‌ உடைந்த நீர்‌ (முதல்மழை) பொழியக்‌ கண்ட மயில்கள்‌ தாமும்‌ துவிஜர்‌ (இருபிறப்பாளர்‌)
ஆதலின்‌ ஆரணியகம்‌ (காட்டில்‌ எழும்‌ சத்தம்‌) படித்து கருப்பம்‌ சுகப்பிரசவமாதற்கு முயற்சிப்பதுபோல தோன்‌ றியது.
(பல்‌, பறவை, அந்தணர்‌ இரு பிறப்பாளர்‌ என்பது கவி மரபு, பல்‌ விழுந்து மீண்டும்‌ முளைத்திடும்‌ பறவை முட்டையாகி ஒரு
பிறப்பும்‌ பின்‌ முட்டையிலிருந்து பிறப்பது ஆக இரு பிறப்பு எனப்பட்டன. அந்தணர்‌ பிறப்பால்‌ ஒரு பிறப்பு
உபதயனத்தால்‌ இரு பிறப்பு எனப்பட்டனர்‌. ஈண்டு, மேகம்‌ பெண்ணாகவும்‌, முதல்‌ மழை-பிரசவ காலத்தில்‌ பனிக்குடம்‌
உடைதலாகவும்‌, சுகப்பிரசவத்திற்காக வேதத்தின்‌ ஆரணியக பாகம்‌ அந்தணர்‌ ஓதுவது மயில்‌ அகவுதலாசுவும்‌ கற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆரணியகமந்திரம்‌ காட்டில்தான்‌ படிப்பது மரபு. வீட்டில்‌ படித்தால்‌ கருச்சிதைவு ஏற்படுமாம்‌. பிரசவ சமயத்தில்‌ சுகப்‌
பிரசவத்இற்காக அந்தணர்கள்‌ ஓதுவது மரபு, இதனை ஒட்டி இக்கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌.) IV—-79

இந்திரன்‌, சூரியன்‌ எனும்‌ உலையில்‌, வானம்‌ என்னும்‌ பெரிய கொப்பரையை, நீர்நிறைக்க வேண்டி (அதிலுள்ள துரு,
துளைகள்‌ நீங்க) இடியேற்றுடன்‌ பிறந்த அயக்காந்தம்‌ எனும்‌ துண்டினை வைக்க. (காந்தம்‌ இரும்பை ஈரத்‌ தலான்‌) உலகிலுள்ள
இரும்புத்தூளை ஈர்த்தனவோ, எனுமாறு, கோடையில்‌ காட்டுத்‌ தீயால்‌ 1எழுந்தமை (புகைக்கரி) சூறவளியால்‌ மேலெழுந்து
போய்‌, முதலில்‌ பருந்தளவு இருந்த மேகத்தை சார்ந்து பெரிய முகிலாக மாறியது. IV—80

மேகங்கள்‌, எனும்‌ யானைச்குட்டிகள்‌, வானகத்து ஐராவத யானையிடம்‌ கற்றதோ எனுமாறு பூமியில்‌ இறங்கி சூறாவளி
என்னும்‌ துதிக்கையால்‌ பூழ்த்தியை வாரி இறைத்து கடல்‌ நீரை உறிஞ்சி வானத்திலிருந்து சொரிந்து திரிந்தன .Iv—81

நீர்‌ (பால்‌) குடித்தபுதிய முகிற்குழந்தைகளின்‌?ஆலங்கட்‌ டிகள்‌ எனும்‌ பாற்பற்கள்‌ உதிர்ந்தன. மீண்டும்‌ கொக்குகள்‌ எனும்‌
இருப்பிறப்பின (பறவை-பல்‌) கஇடைத்தன, முகில்‌ வளர வளர குரலும்‌ கம்பீரமானது.
(வடமொழில்‌ பயஸ்‌ என்றால்‌ பால்‌, நீர்‌ என்ற இரு பொருளும்‌ உண்டு. அது சிலேடையாகச்‌ சிறப்புறுகிறது. இரு
பிறப்பு (துவிஐ) என்பது பறவை, பல்‌, அந்தணர்‌ மூவர்க்கும்‌ உரித்தெனக்கூறல்‌ கவிமரபு. குரல்‌ கம்பீரமடைதல்‌ இடிமுழக்‌
கத்தைக்குறிக்கும்‌) கொக்கு முகிலின்‌இரண்டாவது முளைத்து பல்லாக உவமை. IV—82

குனது நீரை கதிரவனின்‌ கதிர்களாகிய (திருடர்கள்‌) எடுத்துக்‌ கொண்டு போகவே, பூமி, சூறாவளிக்‌ காற்றின்‌ மூலம்‌ மேல்‌
சென்று இந்திரனிடம்‌ (அரசனிடம்‌) முறையிடவும்‌, அவன்‌திருட்டைக்‌ கண்டுபிடிக்க வானத்தில்‌ வில்‌ ஏந்தவும்‌, (அதைக்‌
கண்டு) பயந்த ஆயிரங்கற்றைகளுடைய ஆதித்தனும்‌ மறைவாக மு௫ல்‌ இறங்கி தான்‌ (கவர்ந்த பொருனை) &ீமே கொட்டியது
போல மின்னல்‌ வெளிச்சத்தில்‌ மழை நீர்‌ வெள்ளம்‌ saree IV—83

முதன்மழை பொழிந்ததும்‌ (மண்ணிலிருந்துஎழும்‌) ஆவியாகிய கொடிகள்‌ மேலெழுந்து, இந்திரன்‌ முதன்‌ மழை வெள்ளத்தைக்‌
கண்டு பயந்து பிரளயகாலமோ எனக்‌ கருதி அதைத்‌ தடுத்து நிறுத்த அதன்‌ பாதங்களில்‌ (நீர்த்தாரைகளாகிய நூல்களில்‌)
தளையிட்ட விலங்குகளோ எனத்தோன்றியது. IV—84

மூன்பு வானத்தில்‌ எந்தத்‌ தடையும்‌ இன்றி ஓசையின்றிச்‌ சென்ற சூரிய சந்திரரின்‌ தேர்கள்‌, மழைக்காலத்தில்‌ முகில்கள்‌
குடையாவதால்‌ அதன்‌ மேல்‌ உராய்வதால்‌ எழும்‌ தேதர்ச்‌ சக்கரங்களின்‌ முழக்கமோ எனுமாறு இரவும்‌ பகலும்‌ பயங்கர
மான இடி முழக்கங்கள்‌ முழங்கின. IN=85

அன்றாடம்‌ கடல்‌ நீரைக்‌ குடித்ததினால்‌ படிந்த உப்புப்‌ பாளங்கள்‌, வளரும்‌ காட்டுத்‌ தீயாகிய இடி மின்னல்களின்‌ நெருப்‌
பில்‌ பட்டு, ௪டசட வெனப்‌ பற்றி வெடித்ததுவோ? எனுமாறு பயங்கரமான முழக்கங்களை மேகங்களின்‌ கருவறைகள்‌ உ௬-:வாக்கின. 1V—86

சூரிய கரணங்கள்‌ தாகங்கொண்டு கடலைச்‌ சேர்ந்து நீர்‌. சிறிது குடிக்கு முயலும்போது, உடனே தனது சூட்டினால்‌. சுய்‌
யென்ற ஒலியுடன்‌ எழுந்தபுகை சுற்றிக்‌ கொண்டு மேலெழவும்‌ காற்றிற்‌ கலைந்த மேகத்‌ திடைவெளிகளில்‌ காணப்பட்டதாக
புகை சுண்களில்‌ பட்டு எரிச்சலை மூட்டிக்‌ கண்ணீர்‌ உண்டாகியது போல மழை பொழிந்தது. IV—87

பூமியில்‌ உள்ள நீரையெல்லாம்‌ சூரியன்‌ கவர்ந்ததால்‌, (பூமி சூரியனின்‌ பகைவனான) இராகுவிடம்‌, பகைவனுக்குப்‌ பகைவன்‌
நண்பன்‌ எனும்‌ நியாயப்படி முறையிட அந்த நீரை ஒரே தட வையில்‌ கவிழ்க்குமாறு செய்ய எவ்வளவு பேருருவம்‌ தேதேவையோ
அந்த அளவு உருவெடுத்தாற்போல கார்முகில்கள்‌ வாளம்‌ முழுவதும்‌ பரந்திருந்தன. IV—83

புற்றிலிருந்து புறப்பட்டு வானச்‌ சுவரில்‌ ஏறிச்‌ செல்லும்‌ வாளவில்லாகிய பல்‌ வண்ண முடைய பூரான்‌ (ஆயிரங்கால்‌
பூச்சி எனினும்‌ அமையும்‌) நடந்து செல்லும்‌ கால்சுளோ எனு மாறு காற்றடித்தலால்‌ அசையும்‌ கார்முகில்‌ குழுவின்‌ மழைத்‌
தாரைக்‌ கால்கள்‌ வானகம்‌ முழுவதும்‌ நடந்தன. IV—89

ஒருதுளி கூட பயிர்களோடு கூடிய பூமிக்கு இறங்க விடாமல்‌ நெருங்கி மொய்த்துக்‌ குடித்துச்‌ சாதகங்கள்‌ (வான்‌ குயில்கள்‌)
குடுக்கன்றன என்று மனதிற்‌ சினந்த முகில்‌, அவை ஆடிக்கொண்டிராமல்‌ அகலும்படியாக குழலில்‌ ஊதி உண்டைகளை எறிந்தாற்‌
போல்‌, ஆலங்கட்டிகளை மழையோடு உதிர்த்தன. (குழலில்‌உண்டைக்‌ கற்களை வைத்து வாயால்‌ வேகமாக ஊதி அக்கற்‌
சுளால்‌ பறவைகளைப்‌ பிடித்தலும்‌ விரட்டலும்‌ முன்னோர்‌ கையாண்ட முறையாகும்‌) 1.90

முதலில்‌ பெய்த இளஞ்சாரல்‌ மமை சடசட வென இறங்கி தடுவீட்டை நனைத்துச்‌ செல்லவும்‌,
இரண்டாவது தொடர்ந்த மழை ஆலங்கட்டிகளுடன்‌ விழ (அதன்‌ குளிர்ச்சியும்‌ நிலத்தின்‌ வெம்மையும்‌ கலந்து எழுந்து) அவி எழுந்து மண்மணம்‌ பரப்பி முன்போலவே செல்ல, மூன்றாவதாக மீண்டும்‌ வந்த மழை நின்று பெய்து மின்னலிடிகளுடன்‌ வெள்ளம்‌ பொழிந்து உலஇனையே இருளில்‌ மூழ்கச்செய்ய, ஊஞ்சல்‌ சங்கிலிபோல&£ழும்‌ மேலுமாகப்‌ பெய்த மமழைபெருமமை யாகா மேலும்‌ மேலும்‌ ஊற்றிய வண்ணமிருந்தது,
நிலத்தைப்‌ பிளப்பதுபோல கனமமைத்துளிகள்‌ வீழ்ந்து, வேசுமான காற்றோடு இடைவிடாமல்‌ குடத்தைக்‌ கவிழ்த்தாற்‌ போல தாரைகள்‌ வீழ்ந்து வெள்ளக்‌ கஈடரதி விண்ணும்‌ மண்ணும்‌ ஒன்றாமாறு மழை பெய்தது, 1/9]

அந்த இந்திரன்‌ மயில்களாகிய நடனக்‌ காரர்களை ஆடச்‌ செய்தபோது, காற்றாகிய மிருதங்கக்‌ காரன்‌, மேகமாகிய மிரு தங்கத்தைக்‌ கமும்‌ மேலும்‌ ஆட்டி வாசிக்க நிலத்தில்‌ விழும்‌ வென்னிய தாரைகளும்‌, அந்த நீர்த்தாரைகளில்‌ அசைந்தாடும்‌ இந்திர கோபம்‌ (தம்பலம்‌) பூச்சிகளும்‌, மிரு தங்கத்தை அலங்கரிக்‌ கும்‌ வெண்‌ சரிகையும்‌ அதில்‌ கோத்த சிவந்த குஞ்சமும்‌ போரவத்‌ கோன்றின. 1/2

முதலில்‌ பெருமழை பொழியும்போது காற்றடித்து ஒருக்‌ ஈரய்வாக இழுக்கவும்‌ மேகங்கள்‌ இந்திரன்‌ அமரும்‌ தேர்களோ எனுமாறு இயங்கின. முஇில்களில்‌ மின்னல்கொடி. பிடிக்கவும்‌, இருவிழாவிற்கொடியேழ்றுவதால்‌ Shouy A பிறஊர்கட்கு செல்ல இயலாதவாறு (கொடித்தடை) போல மக்கள்‌ (மழை _ விடாது பெய்தலின்‌) தத்தம்‌. இல்லங்களிலேயே வெளிமயற முடியாது தங்களரி, IV—93

வசந்த காலத்தில்‌ மஞ்சள்வண்மைச்‌ சம்பங்கி பூக்கள்‌ மிகுஇ யாகக்‌ கிடைத்ததை நம்பி, தாழையை புறக்கடையில்‌ வைத்த அதே மக்கள்‌, கற்போது (சம்பங்கி கிடைக்காததால்‌ அதே வண்ணம்‌ ஓத்த) தாழை (சைதை) மடல்களை விரும்பிடவும்‌ அவை அவார்களைப பார்த்து (முன்பு மட்டும்‌ அலட்சியப்படுத்தி னீர்களே என்று கூறுமுகத்தான்‌ சிரிப்பது போல வாய்திறந்து விரிந்தன. ்‌
(தாழம்‌ பூக்கள்‌ முள்ளுடைத்தாதலின்‌ வேலிகளின்‌  களில்‌ போட்டு வளர்ப்பர்‌, அதனை அலட்சியமா (1றக்கடையில்‌ வைத்ததாக கவிஞர்‌ கற்பனை செய்துள்ளார்‌.) IV–94

எப்போதும்‌ வானகத்துப்‌ பூர்தோட்டங்களில்‌ இருந்து (பாரி சாதம்‌ முதலிய பூக்களின்‌ மணம்‌ அடைந்து, மழைக்‌ காலத்தில்‌ முகிலுடன்‌ 8ீமே இறங்கி ஓடி வந்த மின்னல்‌, தாழம்‌ புதரில்‌ இறங்கவும்‌, அங்குள்ள பெண்‌ நாகப்பாம்புகள்‌ (மின்னலின்‌ பாரி சாதவாசனைக்‌ காட்பட்டு) பிணைத்துக்‌ கொள்ளவும்‌ விடுபட முடியாமல்‌ அகப்பட்டுக்‌ சொண்டனவோ எனுமாறுதாழம்புதரில்‌ பொன்தகட்டிளனை இகழும்‌ தாழம்பூ மடல்கள்‌ நிறைந்து எழில்‌ பெற்றன.
(மின்னல்‌ பாம்பு போல்தலின்‌ பெண்‌ பாம்புகள்‌ பிணைந்தன என்றும்‌, சுவர்க்க லோகப்‌ பூமணத்தைக்‌ சுவார்ந்து வந்தமின்னலை செல்வம்‌ மிக்கவளை நாடும்‌ மகளிர்‌ என பெண்‌ நாகங்கள்‌ குவர்ந்‌ தீன என்றும்‌ குறிப்பு தோன்றுகிற த) IV—95

வேனிற்காலத்தில்‌ மன்‌ மதன்‌ வில்லாகிய கரும்‌?பநிலத்தோடு கிடந்ததுதான்‌ இப்போது பசிய இலைகளும்‌, கணுக்களில்‌ சாம்பல்‌ பூத்தும்‌ மேல்‌ தோல்‌ சிவந்தும்‌ மூவண்ணப்‌ பொலிவுற்று இருக்கவும்‌. மன்மதன்‌ அதனை கைப்பிடியில்‌ இறுச்கவும்‌ அதிலி ருந்து உதிர்ந்த முத்துக்களோ எனுமாறு, வாளவில்லோடு கூடிய முகிலிலிருந்து உதிர்ந்த ஆலங்கட்டிகள்‌ தோன்றின. இதன இத்திரவில்‌ என்பது சரியல்ல! இந்திரவில்லானால்‌ புற்றில்‌ பிறப்பானளேன்‌?
(கரும்பில்‌ முத்துக்கள்‌ தோன்றும்‌ என்பதுகவிமரபு. வானவில்‌ பல்வண்ணம்போல கரும்புவில்லும்‌ மூவண்ணப்பொலிவுறு கத லான்‌, உவமை இந்திறவில்‌ அன்று! மன்மதன்‌ வில்‌”* என்று கற்‌ பனை நயம்‌ கூறப்பட்டது) TV—96

இவன்‌ மிகுந்த நீரைக்‌ கடலிலிருந்து குடித்திருக்கிறான்‌! எல்‌ லாமே சொரிந்தால்‌ மிகுமழை என்னும்‌ கேடுண்டாகும்‌. அளவோடு முகில்‌ உருவில்‌ பொழிந்த மழையே பரயிர்கட்குப்‌ போதும்‌. என்று மனதில்‌ நினைத்த பிரம்மதேவன்‌, வானத்தில்‌ சூரியனைச்‌ சுற்றிலும்‌ (மிகுநீர்‌ வெளியேறாது தடுக்கக்‌) கட்டிய
அணைபோல வட்டமான பரிவட்டம்‌ சூழ்ந்திருந்தது. [3.97

வானகம்‌ எனும்‌ அரநிகத்தில்‌ மிகுந்த திறமையுடன்‌ காளி | தேவி எனும்‌ மகம்‌, நீலப்புடவை தரித்து நாட்டியமாடும்போது
அவள்‌ வாயிலிருந்து உமிமும்‌ நெருப்புத்‌ துண்டுசகுளோ எனுமாறு இயந்திர கோபப்‌ (தம்பலம்‌) பூச்சிகளின்‌ கூட்டம்‌ பூமியில்‌ உதார்ந்தன. 7898

சூரியனின்‌ கதிர்கள்‌, மேகமாக, அமாவாசையன்று சந்தி னைச்‌ சேர்ந்ததும்‌ (சந்திரனிடமுள்ள அமுதத்தை) மழைச்‌
சமயம்‌ வந்தபோது தான்‌ உண்ட அமுதத்‌ துளிகளை மீண்டும்‌ உமிழ்ந்தனவோ எனுமாறு ஆலங்கட்டிகள்‌ மிகுதியும்‌ உதிர்ந்தன.
(அமுதத்துளிகள்‌ நீராகிலும்‌ மேகத்தின்‌ குளிர்மையால்‌ கட்டி யாகி வீழ்ந்ததுவே ஆலங்கட்டிகள்‌ என்பது கற்பனை. சூரியனும்‌
சந்திரனும்‌ சேர்வதுவே அமாவாசை என்பது சோதிட நரல்‌ மரபு) IVv—99

முதலில்‌ மேகங்களில்‌ ஒளியோடு இகழ்ந்த வானவில்லின்‌ செம்மை நிறம்‌ எல்லாம்‌, மழை நீரோடு கரைந்து செந்நுரை
படிந்தாற்போல இந்தர கோபப்பூச்சகள்‌ காணப்பட்டன. வான வில்லின்‌ பிய வண்ணமே கரைந்து கரைந்து மண்ணிற்‌ படுந்‌
துள்ளது போல பசும்புல்வெளிகள்‌ தோன்றின.
(வானவில்லின்‌ பச்சை நிறமே மழை நீரால்‌ கரைந்து பூமியில்‌ பசும்‌ புல்லாகவும்‌, செவ்வண்ணம்‌ தம்பலப்‌ பூச்சிகளாகவும்‌ தெரிவதாகக்‌ கற்பனை.) Iv—100

மேகங்கள்‌, படீர்‌, படீர்‌ என உறுமி முழக்கவும்‌, திடுக்கிட்டுப்‌ பயத்த பூமிதேவி, வைடூரிய மணி முூனைகளாகிய புளகாங்கித
முற்று, தன்‌ தலைவனாகிய தூங்கும்‌ நாராயணனைத்‌ தழுவ விரைந்த கரங்களோ எனுமாறு, கற்கணப்‌ பறவைகள்‌ ஓலிப்ப
புல்‌ மிதக்கவும்‌, வண்டல்‌ (சேறு) மேலேபடிந்தவாறு நதிகள்‌ விரைந்து கடலிற்‌ புகுந்தன.
(வண்டல்படிந்த நீரால்‌ சந்தனம்‌ பூசிய சரம்‌ ஆக உவமிக்கப்‌ பட்டது. . கடலில்‌ இருமால்‌ துயில்வதாக மரபு) 4-101-

மயில்‌ சட்ஜம்‌ எனும்‌ சுரம்தவீர இல்லாததாலும்‌, மேகத்தின்‌ . முழக்கம்‌ கடுமையாதலாலும்‌, (கோடையில்‌) பிரிவாற்றாது
மெலிந்த நதிகளாகிய நங்கையர்‌ சடல்சலைவனளைக்‌ கலந்துற வாடத்‌ துணையாகும்‌ தூதியராக மயில்‌ அகவலே அமுதமாக இனித்தது. 1V—102

பேருடலினனாஇய இராகு, சந்திரனின்‌ அமுதத்தை விழுங்கவும்‌, திருமால்‌ கண்டித்த கழுத்துப்போல, கருமேகுத்தில்‌ வானவில்‌
தோன்றியது. அந்த சக்கிராயுதம்‌ (சுதரிசனம்‌) போல வானத்‌தில்‌ பிரதி சூரிய பிம்பம்‌ தோன்றியது.
(மழைக்‌ காலத்தில்‌ வானத்தில்‌ சூரிய பிம்பம்‌ போல எதிர்‌ பிம்பமும்‌ தோன்றும்‌ என்பது வானநால்‌ கருத்தாகும்‌.) IV—103

இடியின்‌ கூர்மை, நீரின்‌ இனிமை, மயிலின்செருக்கு, மின்னல்‌ தீச்சுடர்‌, ஆலங்கட்டிவெண்மை, கொக்குகளின்‌ வளர்ச்சி, நன்னீர்‌
மழை வளம்‌, இவற்றைத்‌ தருவதற்காக மேகம்‌ முறையே உப்பு, கருப்பஞ்சாறு, கள்‌, நெய்‌, தயிர்‌, பால்‌, நன்னீர்‌ ஆகிய ஏழு கடல்‌
களில்‌ படிந்து குடித்தனவோ என்னத்‌ தோன்றிற்று.
(இடியின்‌ கூர்மைக்கு உப்பும்‌, நீரின்‌ இனிமைக்கு கருப்பஞ்‌சாறும்‌, மயிலின்‌ செருக்குக்கு கள்ளும்‌, மின்னல்‌இக்கு சுடர்மிக
நெய்யும்‌, ஆலங்கட்டிக்குதயிரும்‌ கொக்குவிற்கு பாலும்‌, மழைக்கு நன்னீரும்‌ குடித்தன என்று கூறப்பட்டுள்ளது. ஏழு கடல்கள்‌
என்பது புராண வழக்கு) 17104

சிறியபசுமையானமின்னல்‌ எனும்‌ கெளபீனமும்‌ (கோவணம்‌) வானவில்‌ என்னும்‌ கோலும்‌ தரித்து, நாய்க்குடை என்னும்‌
குடை கிடைக்கவும்‌, மயில்‌ தோகை என்னும்‌ சுவடியை விரித்து. உருமும்‌ முழக்கமே வேதப்படனமாக அமைய எழும்‌ துரசிப்படல
மாகிய பலிச்சக்கரவர்த்தியை அடக்கிய வாளம்‌ மூழுதும்‌ பரந்து நின்ற வாமனளாகிய மேகத்தினை வாயுவாகிய பிரம்மதேவன்‌
உபசரித்து கழுவிய பாத நீர்‌ என்னும்படி மழை சொரிந்தது. 4-105-

மிகு மழையால்‌ பாம்புகள்‌ தம்‌ பூற்றுக்களின்‌ துளைகளை மூட்‌ எடுத்த குடைகளோ எனுமாறு நிலமெங்கும்‌ நாய்க்குடைகள்‌ தோன்றின,
(நாய்க்‌ குடையை தெலுங்கில்‌ புட்டகொடுகு) புற்றுக்குடை என்பரீ, புற்றுகளில்‌ பிறத்திலின்‌ இப்பெயர்‌ வந்தது, இதனை
யொட்டி கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌.) IV—106

அடிக்கடி வானத்தில்‌ செவ்வாய்க்‌ (அங்காரகன்‌) கிரகம்‌, புரோ அங்காரக யோகம்‌ (முன்செவ்வாய்‌) மூலம்‌ மழையின்மை
யாகிய இமை பயப்பதைக்‌ கண்டு, மேகம்‌ சினந்து, செவ்வாய்‌ கிரகத்தை குடும்பத்தோடு வெளித்‌ தள்ள செவ்வாய்‌ கிரகத்தின்‌
குட்டிகள்‌ கழே வீழ்ந்தனவோ எனுமாறு இயதிர- கோபப்‌பூச்சிகள்‌ உதிர்ந்தன.
(இந்திர கோபம்‌ வானத்திலிருந்து உதுர்வதாகக்‌ கற்பனை செவ்வாய்‌, சிவப்பாதலின்‌ அதன்‌ குட்டி குழந்தைகளாக
கற்பனை செய்யப்பட்டது. புரோ அங்காரகன்‌ மழையின்மையும்‌ புரோ சுக்கிரன்‌ மழை மிகுதியும்‌ தரும்‌ என்பது சோதிட றா
பகையாகிய பாம்புகளை மேகம்‌ மின்னி இடித்தலின்‌ புற்று களுக்குள்‌ புகச்‌ செய்தது என்று கண்ட தவளைக்‌ கூட்டம்‌
பல்வேறு சந்த விருத்தங்களில்‌ பாராட்டிசைத்தனபோல தவளைகள்‌ கத்தின. iv—108

முகில்‌, தன்மெய்யிருட்டினால்‌ பகலை இரவாக்கியும்‌, தனது மின்னொளியால்‌ இரவைப்‌ பகலாக்கியும்‌ மாறுபாடுறச்‌ செய்தது.
எல்லாவற்றையும்‌ உறங்கச்‌ செய்யும்‌ திருமாலையே, உறங்க வைக்கும்‌ பெருமை சேர்ந்த முகிலுக்கு இது ஒன்றும்‌ வியப்பான
செயல்‌ அல்லவே! . © W—109

தரசியடங்கவும்‌ பின்‌ வானத்தில்‌ மின்னல்‌ தோன்றியது எப்படியிருந்ததென்றால்‌ இந்திரன்‌ வான்மகளுக்கு நசைசெய்யும்‌ விருப்பத்துடன்‌ நிலத்தும்‌ மென்மையான பொன்பொடியை மேக மாகிய அரிப்பலகையில்‌ வைத்து வானகங்கை நீரில்‌ கழுவவும்‌ தோன்றும்‌ பொற்சுடர்‌ போலிருந்தது.
(நகை செய்யும்‌ தட்டார்களின்‌ மனைத்‌ தூசியை குவித்து
வைப்பர்‌. அது கருநிறமாக இருக்கும்‌. அதனை மண்‌ அரித்தலசம்‌ பெட்டியில்‌ போட்டு நீர்‌ ஊற்றி ஊற்றி அலசுவர்‌. மண்‌ போய்‌
விட பொன்‌ துகள்கள்‌ மிஞ்சும்‌, அதனைச்‌ சேர்த்து நகையாக்கலாம்‌. இந்த நிகழ்ச்சியை கவிஞர்‌ உருவகித்துள்ளார்‌) 14-10

பெரியதும்‌ பழுத்ததுமான காட்டு அத்திப்‌ பழத்தின்‌ மேல்‌ துளையில்‌ மழைதீர்‌ புகுதலான்‌ கொசுக்‌ கூட்டம்‌. காட்டுத்‌ இப்‌ புகையடங்கிற்று, இனிக்கூட்டம்‌ கூடலாம்‌ என்று ஓய்வு பெற வெளியேறுவதுபோல வெளிச்‌ சென்றன. (மழைக்காலத்தில்‌ கொசுக்கள்‌ மிகுதல்‌ இயல்பு) IV—211

வானத்தில்‌ ஆவணி மாத முகில்கள்‌ வரவும்‌ மலைமேல்‌
மயில்கள்‌ தோகை விரித்தாட, தாழை மடற்பூந்தாதும்‌, மல்லி கைப்‌ பூ மகரந்தமும்‌ படிந்து, பசும்‌ புல்‌ வெளி காணாமல்‌ மூட்‌,
மழை வந்ததும்‌ பசும்புல்‌ மீண்டும்‌ தோன்றுவதுமான காட்சி
மேகமாகிய இந்திர ஜாலவித்தைக்காரன்‌, விபூதி, அறுகம்புல்‌, மயில்‌ தோகைகள்‌ வைத்துக்கொண்டு காட்டும்‌ தோன்றலும்‌
மஷழஹைதலுமான காட்சி அற்புதங்களாக அமைந்தன. IV—112

மலைச்சிகரங்களிலுள்ள நாவல்‌ மரத்திலிருந்து உதிர்ந்த கனி, களில்‌ சாறுகளில்‌ பிறந்தது, ஐம்பூநதி (நாவலாறு) ஆதலின்‌,
அக்கனிச்சாறு முகில்களில்‌ பட்டதும்‌ மின்னலாகிய மேலான தங்கம்‌ ஆயிற்று.
(நம்‌ நஈட்டுக்கு ஐம்பு.தீவு (நாவலந்தீவு) என்று பெயர்‌… இங்கு
ஜஐம்புநதி பாய்கறதாக கூறுவார்‌. அது பொன்னாறு ஆகும்‌. ஜாம்பு நதம்‌ என்றால்‌ ஐம்பு நதியில்‌ பிறந்தது என்ற பொருள்‌. இத பொன்னைக்‌ குறிக்கும்‌ வட சொல்‌, இந்த அடிப்படையில்‌ “கவிஞர்‌ கற்பனை செய்துள்ளார்‌.) IV—113

வசந்த காலத்தோடு சென்றுவிட்ட, முல்லை தாமரை அசோகம்‌, குவளை, மா ஆகிய மலர்கட்குப்‌ பதிலாக கதம்பம்‌;
(கடப்பம்‌) குண்டுமல்லிகை, காட்டுமுல்லை, மருது, ஆகிய ஐந்து மலர்களும்‌ மன்மதனுக்கு மலரம்புகளாயின,
அதோடு தாழம்பூ என்னும்‌ சுரிகை (கட்டாரி)யும்‌ அதிகமாகக்‌ கிடைத்தது. IV—114

நடனமிடும்‌ மயிலாகிய கதாபாத்திரத்திற்கு மேகமே திரைச்‌ சீலையாயிற்று. மலைமுகட்டில்‌ முகிலின்‌ இலைகள்‌ மேயும்‌ சட்‌
சட்‌ எனும்‌ ஓசையே தாள இசையாக அமைந்தது.
(மேகம்‌ மலைமுசுடூகளின்‌ இலைகள்‌ மேய்ந்து கடல்‌ நீர்‌, குடிக்கும்‌ எனும்‌ மக்கள்‌ வழக்காற்றுக்‌ கற்பனையை ஓட்டி
இலைகள்‌ மேயும்‌ என்று கவிஞர்‌ குறிப்பிட்டார்‌. இலைகளில்‌ பனிக்கட்டி வீழ்ந்தால்‌ இலைகள்‌ துளைபடுதலின்‌ இக்கற்பனை
உருவாயிற்று போலும்‌, மழைபெய்து ஓய்ந்தபின்‌, இலைகளிலிருந்து கட்‌ கட்‌ என மெல்ல மெல்ல விழும்‌ துளிகளின்‌ ஒலியே
தாளமாக கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌. ரூ.115
(மேகம்‌, உப்போடு புளிப்பும்‌ கலந்தால்‌ சுவையாயிருக்கு மெனக்‌ கருதி) முதலில்‌ உப்புக்‌ கடலைக்‌ குடித்துப்‌ பின்‌ தயிர்க்‌
கடலைக்‌ குடிக்க முனையவும்‌, தயிர்க்கடல்‌ மிகப்பழமையான தாதலின்‌, தயிர்க்கட்டிகள்‌ மிகப்‌ புளிப்புறவே துப்பிவிடவே
அவையே ஆலங்கட்டிகளாக உதிர்ந்தன. பூமியில்‌ விழுந்த ஆலங்‌கட்டிகளைத்‌ தின்றதுமே பல்‌ சிவ்வென்று கூச்சமுறுவானேன்‌?
(புளிப்பு மிகினே பல்‌ கூச்சம்‌ எடுக்கும்‌. ஆலங்கட்டி (பனிக்‌கட்டி) யாதலின்‌ குளிர்‌ மிகுதலானும்‌ பல்‌ கூச்சம்‌ எடுக்கும்‌.
இதனைக்‌ கவிஞர்‌ கற்பனை நயமுடன்‌ விவரித்துள்ளார்‌.) iV—l116

அப்போது (மழைக்‌ காலத்தில்‌) சேறுமிகுந்திருக்கும்‌ நிலங்‌களில்‌ இறங்காமல்‌ மலை முகடுகளில்‌ இருக்கும்‌ மான்‌ கூட்டங்கள்‌
காவல்‌ மந்தையில்‌ (இடையில்‌ இருப்பது போலிருக்க அதைசீசுற்றி முகில்கள்‌ சூழ்ந்திருப்பது இந்திரன்‌ ஆகிய அரசன்‌
வில்லேந்தி வேட்டையாடத்‌ தயார்படுத்திய திரைவேட்டை போல இருந்தது. ்‌
(அரசனுக்காக அதிகாரிகள்‌ காட்டைச்‌ சுற்றிலும்‌ மிருகங்கள்‌ வெளியேறாமல்‌ தடுக்க இரைகட்டி விடுவார்கள்‌. நடுவில்‌ உள்ள
காட்டில்‌ அரசன்‌ எளிதில்‌ வேட்டையாடி. மகிழ்வான்‌. இருஷ்ணதேவராயர்‌ தம்‌ அனுபவ முத்திரைகளை ஆங்காங்கே பதித்திருப்‌
பதற்கு இக்கவிதையும்‌ சான்றாகும்‌). IV—117

மழைநீர்‌ தலையில்‌ விழுந்து உடல்‌ முழுதும்‌ நனைப்பவும்‌ அசைவுற்று, நுனி இமைகளால்‌ (மிகுந்த முயற்சியுடன்‌) கண்‌
இறந்து கண்‌ மூடாது பார்த்துக்கொண்டும்‌, நீர்‌ மூக்கில்‌ மூக்குத்திபோல வீழவும்‌, (சுவாசம்‌ தடைப்படவே), வாயில்‌ கொஞ்சம்‌
வாங்கியும்‌, கொஞ்சம்‌ கூண்டுச்கம்பியில்‌ உராய்ந்தும்‌ நீக்கி, முழங்கால்‌ மார்பில்‌ புக. நடுங்குவதன்றி இறக்கை விதிர்ப்பவும்‌
இயலாமல்‌ பறவைகள்‌ இருந்தன. IV—118

அந்திச்‌ செல்வானம்‌ குங்குமப்‌ பூப்பொலிந்த காசுமீரதேச: மாக ஆகிவிட்டது. அந்தாட்டிலுள்ள சந்திரக்‌ காந்தக்‌ கல்லாக சூரியன்‌ ஆகிவிட்டது. இல்லாவிட்டால்‌ (சந்திரக்காந்தக்‌ கல்‌ கசிந்த நீராகிய) மழை எங்கிருந்து வரும்‌2(குங்குமம்‌ சாசுமீர நாட்டில்‌ விளைவது. அங்கு சந்திரகாந்தக்‌
கற்களும்‌ மிகுதி. ஆதலின்‌ மழை நாட்களில்‌ மப்புமந்தாரத்தி னூடுள்ள சூரியன்‌ சந்திரன்‌ போலத்‌ தோன்றுவதால்‌ சந்திர காந்தக்கல்லாக உவமிக்கப்பட்டது.) W—119

பகலில்‌, சூரிய கிரணங்கள்‌ கடல்‌ நீரைக்‌ குடித்துக்‌ கருக்‌ கொண்டதைக்‌ கண்டு, இரவில்‌, சந்திர கரணங்களும்‌ தாமும்‌
பொறாமை கொண்டு முகில்கள்‌ குடித்துக்‌ கொணர்ந்த அக்கடல்‌ நீரைக்‌ குடித்துக்‌ கருக்கொள்ளக்‌ கூடியவோ எனுமாறு வெள்ளை
நிறக்கொக்குகள்‌ முகில்களைச்‌ சேர்ந்து கருக்கொண்டன. IV— 120

இடிமுழக்கவும்‌ கேட்டுப்பயந்த அளகை நகருக்குச்‌ செல்லும்‌ அன்னப்பறவைகளின்‌ கூட்டம்‌, தின்னுவதற்சாகக்‌ கடித்த
தாமரைக்‌ தண்டின்‌ துண்டுகளை, பயத்தால்‌ வாய்‌ நழுவிக்‌ மேல்‌விழுந்தனவோ எனுமாறு ஆலங்கட்டிகள்‌ உதிர்ந்தன. 1712]

இடி.முழக்கத்தால்‌ விரட்டப்பட்ட பாம்புகளாகிய (புற்று களுக்குள்‌ ஒளிந்து கொள்ளவே) உணவு கிடைக்காவிட்டாலும்‌
மயில்கள்‌ நடனமாடுவதை விடவில்லை. மனதிற்கு மிகுந்த மகழ்ச்சி ஏற்பட்டால்‌ பசியும்‌ தாகமும்‌ தோன்றாதல்லவா? IV—122

சூரியனைப்‌ பார்த்துவிட்டுப்‌ பிறகுண்ணும்‌ விரதமுடையவர்‌கட்கும்‌, ஒணான்கட்கும்‌ பார்வை விண்மேலேயே நின்றன.
மாலை சந்தியாவந்தனம்‌ செய்யும்‌ அந்தணர்கட்கும்‌, வீடு இரும்பும்‌ பசுக்கட்கும்‌, (மாலையாயிற்றோ இல்லையோ என்னும்‌)
மயக்கம்‌ உண்டாயிற்று,
ஏர்வாழ்க்கையுடைய உழவர்‌ கூட்டத்திற்கும்‌ கொக்கு கூட்டத்திற்கும்‌ நல்ல கருக்காலம்‌ (விதை விதைக்கும்‌ காலம்‌) கிடைத்தது.
அழூய காட்டு முல்லைப்‌ பூக்கள்‌ மலர்ந்தன. சந்தையில்‌ மக்கள்‌ (மழைக்கஞ்சி) கலைந்து சென்றனர்‌. விருந்தினர்‌ (அதிதி) கூட்டத்திற்கு (வெளிச்சென்று உணவு சாப்பிட முடியாமல்‌) வாய்க்கட்டப்பட்டது. ஈன்றணிமையுடைய எருமைக்‌ கன்றுக்குட்டிகள்‌ (குஸிரால்‌) வாய்க்கட்டு ஏற்பட்டது.
மண்மாடியுடையவர்கள்‌ (நீர்‌ ஓழுகுவதால்‌) தமக்கும்‌,
காமன் பணிக்கும்‌ (கலவிபுரிவார்க்கும்‌) காதலியைப்‌ பிரிந்தவர்‌ கட்டும்‌, தாச்சும்‌, கெட்டது. 14… 123

எமனின்‌ வாசுனமாகிய எருமை தான்‌ காளையாக இருந்தால்‌, மேட்டு நிலங்களை உழச்செய்வர்‌ (நல்லவேளை தப்பித்தோம்‌) எருமையாக இருப்பதால்‌ பிழைத்தோம்‌ என்றும்‌, எமனை மிதித்த ஈசுவரனின்‌ வாகனமாகிய நந்தி (எருது), :₹நல்லவேளையாக உழவுமாடாக இல்லாமற்போனோம்‌’”. நம்மையும்‌ வயலில்‌ சேற்றுமவிற்‌ கட்டியிருப்பர்‌ ஏதோ தப்பித்தோம்‌” என்றும்‌ மகழ்ச்சியுற்றன எனுமாறு எல்லா மாடுகளையும்‌ பூட்டி மேட்டு நிலம்‌, பள்ளக்கால்‌ எல்லாம்‌ ஏரைப்‌ பிடித்கோட்டி ஏழைகள்‌ கூட உழவு செய்தனர்‌. IV—124

வயலில்‌ சேற்றில்‌ மிதித்து உழவர்கள்‌ (கொத்தைகளை சமப்‌ படுத்த மிதிக்கும்‌ போது) காலில்‌ பொன்னிறமாக வயிற்றினை யுடைய நீர்‌ பாம்பு காலிற்‌ சுற்றிக்‌ கொள்ளவே, உழவர்கட்கு (கழல்‌ அணிந்து) விருது அளித்தாற்போலத்‌ தோன்றியது. IV—125

மழையில்‌ நனைந்த கரும்புச்‌ சக்கைகள்‌ அடுப்பில்‌ போடவும்‌ நெருப்பாறிவிட்டது. இப்பட்டதும்‌ கரும்புச்சாறு வெளியேறுவது
போல மை சுசிந்தன, மக்கள்‌ உணவு சமைக்க இயலாது. விழாக்‌
காலத்தில்‌ இயக்கர்கள்‌ (யட்சகானம்‌ பாடுவோர்‌) கூறும்‌ “சோஹறோ சோறு” எனும்படியாக பொய்யான சோறு (உணவு)
உடையார்கள்‌ அகுமாறு அடுப்புக்கள்‌ மழையால்‌ எரியவும்‌ இல்லை. IV—126

அடைமமை நாட்களில்‌ பெண்டிர்‌ வீடு வீடாகச்‌ சென்று சிறிது நெருப்புக்‌ இடைக்கவே அதைக்‌ கொண்டு வந்தனர்‌,
வீட்டுக்‌ கூரையைப்‌ பிய்த்து அந்‌ நெருப்பைப்‌ பற்றவைத்தனர்‌,
விஈறினால்‌ அன்றிப்‌ பற்றவில்லை. பற்றினாலும்‌ எரியவில்லை. எரிந்தாலும்‌ சோறு சமைக்க முடியவில்லை. கறிவகையும்‌
சமைப்பது அரிதாயிற்று, எப்படியோ சமைத்தாலும்‌ முதல்‌
பத்தியில்‌ உட்கார்ந்தவர்கட்கே தேர்ந்துவிடும்‌, பெண்டிர்‌ மீண்டும்‌ தம்‌ பசிக்காக சமைக்க முயல்வர்‌. நெய்‌ தோய்த்த
துணிகள்‌, வீட்டுக்‌ கூரை ஈத்தைகள்‌ போட்டு எரித்து அவை அழிவது குறித்துக்‌ சவலைப்படவில்லை. பசயோடுள்ள
மனைவி மீண்டும்‌ சமையல்‌ வேலையில்‌ ஈடுபடவே படுச்கையி வுள்ள கணவன்‌, மன்மதனின்‌ குறும்பினால்‌ மனைவி வர
வில்லையோ என்று நொந்து கொண்டிருந்தான்‌. 4-127

இடிகட்‌ கஞ்சிய பெண்டிர்‌, வீட்டின்‌உள்ளேயே வட்டிலைக்‌ நீர்‌ வெளியே ஊற்றவும்‌, அப்போது பளபளக்கும்‌
. வட்டிலின்‌ ஒளி மின்னல்‌ போலத்‌ தோன்ற, புகை படிந்த புல்‌ வேய்ந்த வீடுகள்‌ மேகங்களாகவும்‌ தோன்றின. இந்த (வீடாகிய
மேகங்கள்‌, பூமி முழுதும்‌ வெள்ளத்தில்‌ மூழ்கடித்துவிட்டோம்‌. இனி பாதாளத்தைப்‌ படையெடுப்போம்‌ என்று செல்லும்‌
பாசறை)களாகத்‌ தோன்றின, IV—128

குடையைக்‌ காற்றடித்துக்‌. கொண்டு போக வெறும்‌ காம்பு மட்டும்‌ ஏந்தி ஓடும்‌ வழிப்போக்கர்களை உடல்‌ முழுதும்‌ நனை
வித்த அடைமழை மேகத்துக்கு என்ன பகையோ? எனினும்‌ பிரம்மன்‌ பாதுகாப்பாக, ஒவ்வொரு சமயம்‌ நஞ்சும்‌ அமுதாக்கு
மாறு போல, மழை நீர்‌ அவன்‌ உடலில்‌ நுழைந்து காதலியின்‌ பிரிவினால்‌ ஏற்பட்ட விரகத்‌ தீயினைக்‌ கொஞ்சம்‌ கொஞ்சம்‌ அவித்தது. IV—129

தூரத்தில்‌ சாரல்‌ வரக்கண்ட வழிப்போக்கர்கள்‌ அருகிலுள்ள மரத்தடியில்‌ ஒதுங்கவும்‌, ஏற்கனவே பெய்த சாரலால்‌ நனைந்‌
திருந்த மரக்கிளை, சாரலுக்கு முன்வரும்‌ காற்றினால்‌ அசைக்கப்‌ பட்டு, மழைத்‌ துளிகள்‌ பெய்து, சாரல்‌ வரு முன்பே அவர்களை
(மரங்கள்‌) நனைவித்தன. IV—130

பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வழிப்போக்கர்கள்‌ மழைக்கு விரைந்தோடி வந்து சாவடியில்‌ ஓதுங்கி, அசுவபஇியை
விட கஜபதி, அவனைவிட நரபதி சிறந்தவன்‌ என்றும்‌, யானைகளின்‌ எண்ணிக்கைகளைப்‌ பற்றியும்‌ தமக்குள்‌ வீண்சண்டைகள்‌
போட்டுக்‌ கொண்டிருப்பர்‌. அதற்குள்‌ மேகம்‌ சிறிதே கலையவும்‌, தாமும்‌ தம்‌ தம்‌ வழிகளைப்‌ பார்த்துக்‌ கொண்டு செல்வர்‌. 2131

காகங்கள்‌ (மழைக்காலத்தில்‌) நந்தவன மரங்களில்‌ கூடுகட்ட புல்‌, முதலியன வாயிற்‌ கவ்விக்‌ கொண்டு திரிதல்‌ காணின்‌ நீஏ
மணிகள்‌ புல்‌ கவர்வன ஆதலின்‌ நிறைந்த கிராமத்திருமகளின்‌ கழுத்திவிட்ட நீலமணிகளோ எனுமாறிருந்தன,
(காந்தம்‌ இரும்புத்‌ தூள்‌ கவர்வது போல நீலமணி, வைக்கோல்‌ (புல்‌) துண்டுகளைக்‌ கவரும்‌ என்பது இரத்தின நூல்‌ மரபு ஆகும்‌.) 1132

ஐப்பசி மாதத்தின்‌ அடை ॥ழைக்‌ காலத்தில்‌ வீட்டிலிருந்து புறப்பட்டு கஞ்சிக்‌ கலயம்‌ எடுத்துக்கொண்டு, மழைக்காக தலை
யில்‌ நார்க்கூடை (தொப்பி போல) வைத்துக்கொண்டு காட்டுக்குச்‌ சென்ற குடியானவர்‌ பெண்களின்‌ பருத்த மென்முலைகளும்‌
(சோளம்‌, கேழ்வரகு) போன்றவற்றின்‌ பசுங்கதிர்களும்‌ உழவர்‌ களால்‌ கசக்கப்பட்டன.
(கதிர்களைக்‌ கசக்கிய தானியத்தை உண்பது இயல்பு “குடை எடுத்துச்‌ சொல்லின்‌ இரு கரங்கட்கும்‌ தொந்தரவு: தரும்‌ என
குலையில்‌ தொப்பிபோல முடைந்த கூரை அணிந்து செல்வரி, 1V—133

அவ்வடைமழைக்‌ காலத்தில்‌, இரட்டியார்கள்‌ (இஅராமத்‌ தவைவார்கள்‌) கரை வகைகளின்‌ (குருது, செஞ்சலி, தும்மா
Sale) மெல்லடகுகளை இளம்‌ புளியந்தளிரோடு சேர்த்து” அவியல்‌ செய்து எண்ணெய்‌ நிறைய *ஊற்றி வதக்கி, ஆவியெழ
உணவுண்பார்கள்‌. பசுக்கள்‌ காட்டுக்குச்‌ செல்ல, இளகஙிகளன்றுகள்‌, ஆட்டுச்‌ சாணக்‌ *கணப்படுப்பின்மேல்‌ கட்டில்‌ பட்டுக்கையில்‌
கிடக்கும்‌ இவர்கள்‌ உடம்பை நக்கும்‌, IV—134

மணி குபின்ற மேடையில்‌ அமர்ந்து, மயில்கள்‌ அகவும்‌ அமுத இசை கேட்டின்புற்று நேரங்கழித்து விழித்தெழுந்து, கமகம
வெனும்‌ பூமணச்‌ சுகந்தப்பொடி மெய்‌ முழுதும்‌ பூசி, இளஞ்‌ சூடான வென்னீரில்‌ நெடுநேரம்‌ குளித்து, ஒளிர்மென்‌
துகிலுடுத்தி ஆரங்கள்‌ பூண்டு, தாழம்பூ மடல்கள்‌’ தரித்து, தாழிகை கழிந்ததும்‌, கொலு மண்டபஞ்செல்லும்‌ நேரம்‌ குறித்த,
செஞ்செற்சோறும்‌, காட்டு வேட்டையிற்‌ கிடைத்த புள்‌, விலங்குகளின்‌ புலாலுடன்‌, புத்துருக்கு நெய்‌ மிகவிட்டு, உணவுண்டு,
கஸ்குரரி மிகுந்த தாம்பூலம்‌ தரித்தலால்‌ கருவண்ணம்‌ இதழில்‌ படிய, அல்‌ கணப்பு எரிய, மேடைச்‌ சாளரங்களில்‌ வந்து
திற்கும்‌. அந்தப்புரத்தினரின்‌ கண்பார்வை மின்னல்கள்‌ ஒளிவீச, மன்னர்கள்‌ மகிழ்ச்சியுடன்‌ இருந்தனர்‌. IV—135

இவ்விதம்‌ இடைவிடாத மழைத்துளிகள்‌ ஒழுக்கும்‌ மிகுமமை மாதங்கள்‌ அமைதியாக கழியவும்‌, அதன்‌ பி.ழகு IV—136

அரச அன்னங்கள்‌ கிரெளஞ்சமலைத்‌ துவாரத்தின்‌ வழியே மீண்டும்‌ திரும்பும்‌ காலமும்‌ நெல்விளைந்து, நாணற்பூக்கள்‌
பூத்துக்‌ குலுங்கும்‌ வேள்வி செய்தற்குரிய காலமும்‌, ஒளிரும்‌ திருமகள்‌ தாமரைப்‌ பூக்களைச்‌ சேர திருமால்‌ பாம்புப்‌ படுக்கை
விட்டெழவும்‌, எடுத்த ஆரத்திபோல, மலர்ந்த செங்கமுநீர்‌ பொய்கைகளையுடைய காலமும்‌, ஆகிய சரத்காலம்‌ உலகில்‌
உதித்தது. 14137

மின்னலாகிய விளக்குச்‌ சுடர்கள்‌ உமிழ்ந்த புகையால்‌ புகை படிந்தது என்ன வானம்‌ இந்திர நீலம்‌, நாவற்‌ பழம்போல
கருநிறமுற்று மிகு செருக்குற்றது. 17138

அந்திச்‌ செவ்வண்ண அலைகளால்‌ பாதி சிவந்த வெண்‌ மு௫ல்கள்‌, வானத்தில்‌ இரிந்து உறக்கத்திலிருந்து எழுந்‌த திருமகள்‌
கேள்வனுக்கு எடுத்த கற்பூர ஆரத்தியோ எனுமாறு சரத்காலத்‌தில்‌ தோன்றின, 14139

நெல்‌ வயலை நாடி வானிற்‌ பறக்கும்‌ கிளிக்‌ கூட்டத்திடையே சிறிதே செவ்வந்தி வண்ணம்‌ படிந்த மேகத்‌ துண்டுகள்‌ விரிந்த
பழங்களுடன்‌ பசும்‌ இலைகளும்‌ கூடிய வெள்ளரித்‌ தோட்டூ போலிருந்தன. வண்டுகள்‌ இறக்கை நுனிபோல்‌ கருவண்ணம்‌
பளபளக்கும்‌ வானத்தில்‌ அம்முகல்கள்‌ பிரதிபலிப்பதாகத்‌ தோன்றின. IV—140

மரவண்டுகள்‌ துளைத்தலால்‌ பொடிப்பொடியாக வான: வில்லிலிருந்து உதிர்ந்த தூள்‌ போல, கண்ணாடி போன்ற
வானத்தில்‌, சணப்பநார்‌ஆ. போன்று வெளுத்துள்ள முகில்‌ துண்டுகள்‌ திரிந்தன, 17… 141

சரத்காலம்‌ எனும்‌ இளநங்கை, (மழைக்‌ காலத்தில்‌ மாசு படிந்து) சந்திர சூரியர்களாகிய கண்ணாடிகளை துலக்குவதற்‌
காக வைத்த சாம்பல்‌ தானோ எனுமாறு ஏழமிலை வாழையின்‌ மகரந்தப்‌ பொடி காற்றால்‌ வானத்தில்‌ பறந்து தூய ஒளியோடு திகழ்ந்தது. 17–142

விழித்தெழுந்த உலகுடை நாயகன்‌ ஸ்ரீமன்‌ நாராயணன்‌, காற்றையுண்ணும்‌ பாம்புப்‌ படுக்கையில்‌ கையூன்றி எழவும்‌,
(அச்சுமையால்‌) பூமி ஆழத்தில்‌ இறங்க, மழைக்கால இடிகளால்‌துளைக்கப்பட்ட துவாரங்கள்‌ வழியாக பாதாள கங்கையின்‌ நீர்த்‌
தாரைகள்‌ ஐல தம்பங்களாக வெளிப்போந்தன3வா எனுமாது நாணல்‌ பக்கல்‌ வெண்ணிறத்துடன்‌ ஒளிர்ந்தன.
(நீரில்‌ ஒரு பக்கம்‌ அழுத்தினால்‌ மறுபக்கம்‌ துணை வழி நீர்‌ பிய்ச்சிக்‌ கொண்டு மேலெழுந்து“ சிதறுவதுபோல பாதாள கங்கை
நீர்‌ மேலே பிய்ச்சியடிப்பது போல நாணற்பூக்கள்‌ தோன்றின என்பது கருத்து, காற்றையுண்ணும்‌ பாம்புஆதலின்‌ காற்றடைத்த
இரப்பர்‌ தலையணை போல இருந்ததாகக்‌ கருதலாம்‌), [7143

தாமரைக்‌ கண்ணன்‌ அவ்வேளையில்‌ தூக்கம்‌ கலைந்துஎழுந்து தனது பாதங்களைத்‌ தன்மீது வைத்ததனாலோ பூதேவி,
புளகாங்கித மடைந்தனள்‌. எனுமாறு முற்றிய ௧௬ முட்களுடன்‌ கூடிய நெற்கதிர்கள்‌ நிலத்தில்‌ விளைந்தன. [*……144
மீண்டும்‌ (அகத்தியன்‌) குடிப்பானோ என ஐயுற்‌.ற சூரியனின்‌ கதிர்கள்‌ கடலை வானில்‌ வைத்துக்கொள்ள இடியேறாகிய
வடவைக்களலுடன்‌ கூடிய அக்கடல்‌ முகலாகி நிலங்குளிரப்‌ பெய்யவும்‌, அங்கும்‌ (வானத்திலும்‌) அகத்தியன்‌ (நட்சத்திரம்‌)
தோன்றி மீண்டும்‌ கடல்நீர்‌ குடித்தனன்‌ போலும்‌! இல்லா விட்டால்‌ ஓரே இடத்தில்‌ விண்மீன்களும்‌ கிரகங்களும்‌ சூரிய
சந்திரார்களாகிய முத்துக்களும்‌ மணிகளும்‌ தெளிவாகத்‌ தோன்றுமா?
(அகத்திய நட்சத்திரம்‌ தோன்றுவதுடன்‌, வானம்‌ மேகங்‌ களற்றுத்‌ தெளிவாக பிரகாசிப்பதும்‌ ஈண்டு வருணிக்சுப்‌ பட்டுள்ளன) IV—145-

மலயமலை (பொதிகை)யில்‌ இருந்த அகத்தியன்‌ எனும்‌ தேற்றாங்கொட்டையை சரத்காலம்‌ பொய்சைகளில்‌ (அகத்திய
மீன்‌) பிரதி பிம்பம்‌ ஆகபோட, நீராமகளிர்‌, அலைகளாகிய கைகளால்‌, தேய்த்துவிட, சலங்கியநீர்‌ தெளிவுற்றது. அதன்‌
குறுகிய தன்மையே கரி (சாட்சி)யாகும்‌, விண்‌ மீனாயின்‌ நீரை எப்படித்‌ தெளிவிக்கும்‌?
(அகத்திய விண்மீன்‌ தேற்றாங்கொட்டைக்கு உவமை, சரத்‌ காலத்தில்‌ நீர்‌ நிலைகள்‌ தெளிந்திருக்கும்‌) IV—~ 146

பூமியில்‌ அமுதுக்கிணையாக்க வேண்டி. சரத்காலம்‌ எனும்‌ நங்கை, பொய்கை நீரின்‌ மாச நீக்க முகிலற்ற வெயிலில்‌ காய்ச்சி,
மலார்ந்த தாமரை, குவளை மலர்களின்‌ மகரந்தப்‌ பொடியாகியமஞ்சள்‌ பொடியை அலைகளில்‌ தெளித்தாளோ எனத்‌ தோற்ற மளித்தது.
(நீர்‌ சுவை மிகவும்‌, கருமி நாசினியாகவும்‌, நெல்லிக்கட்டை மஞ்சள்‌ பொடிகளை Harnad போடுவது மரபு. அதுபோல
ஈண்டு பூமகாந்தத்‌ தூளாகிய மஞ்சள்‌ பொடி போட்டதாகக்‌ கற்பனை) IV—147

மிகுத்த நேயமுடன்‌ தாமரையாகிய தையலர்கட்கெல்லாம்‌ அணி செய்ய சரக்காலம்‌ எனும்‌ பொற்கொல்லன்‌, கம்பியிழைகள்‌
சமமாக்க கிரவுஞ்சமலை எனும்‌ கம்பியச்சு (நூரச்சு-கம்பி இழுக்கும்‌ சட்டம்‌) தன்னில்‌, இழுத்த வெள்ளிமலையின்‌ வெள்ளிச்‌
கட்டிகள்‌ போல அன்னப்பறவைகள்‌ பொய்கைகளில்‌ வட்ட மிட்டுப்‌ பறந்து கூவியமைந்தன. IV—148

அகத்தியன்‌, கடலினைக்‌ குடித்து வயிற்றிலடக்கியிருந்த ஒளிமிக்க முத்துக்களை மட்டும்‌ கொட்டிவைத்தானோ எனுமாறு
காரமரை இலைகளில்‌ தெளிந்த இனிய நீர்த்துளிகள்‌ அப்பொய்கை – களில்‌ ஒளிவீசித்‌ திகழ்ந்தன. IV—149

ஆற்ஹறொழுக்கினைப்‌ போன்ற கடிகாயந்திரத்தில்‌ (நாழிகை வட்டிலில்‌) மேல்‌ பணம்‌ கீமே நிறைந்த வேளையில்‌
(சுபமுகூர்த்தத்தில்‌ சூரியன்‌, மேகத்திரை விலயகதும்‌ (எதிரே உள்ள மணப்பெண்ணாகிய) தாமரையாள்‌ மீது சீரகமும்‌ வெல்லமும்‌
வைப்ப அவை பிரிவுத்‌ தாபத்தால்‌ உருகியவோ எனுமாறு பூ மகரந்தம்‌ பொலிந்தது. மணப்பெண்‌ தலையில்‌ தெளித்த முத்துக்‌
களாகிய அட்சதைகள்‌ அவளது தாபத்தால்‌ வெந்து சரூகினவேோ எனுமாறு கருவண்டுகள்‌ படிந்தன.
(முன்னாட்களில்‌ கடிகாரங்கள்‌ இல்லாத காலத்தில்‌ மணல்‌ நிறைத்த வட்டில்‌ மேலே வைத்து ஒரு சிறு துளை வழி மணல்‌
ஒழுசக்‌ செய்து கழே கண்ணங்களில்‌ பிடித்து நிறைத்தனர்‌.
கிண்ணம்‌ நிறைந்தால்‌ ஒரு நாழிகை எனக்‌ கணக்கிடுவர்‌. மேல்‌ மணல்‌ கமே வருதல்‌ மழைக்காலத்தில்‌ மேலே கலங்கிய நீருடன்‌
இருந்த மணல்‌ சரத்காலத்தில்‌ தெளிவுற்று மணல்‌ 8ழே படிவதற்கு உவமையாக்கப்பட்டது. ஆற்றொழுக்கினைப்‌ போன்றே என்பது இவ்வுவமையின்‌ பொருள்‌ கொண்டதாகும்‌.
சூரியன்‌ மணமகன்‌, மணமகள்‌ தாமரை. . இருவருக்கும்‌ இடையே இருந்த திரை மேகம்‌. அது விலகவும்‌ சூரியன்‌ திருமணச்‌
சடஸ்கில்‌ ஆந்திர நாட்டில்‌ சீரகமும்‌ வெல்லமும்‌ மணப்பெண்‌ தலையில்‌ வைப்பது போல்‌ வைத்தான்‌. சீரகம்‌ தாமரைப்‌
பொகுட்டின்‌ கேசரங்கள்‌, உருகிய வெல்லம்‌ மகரந்தம்‌. மணப்‌ பெண்‌ தலையில்‌ அட்சதைகள்‌ தெளிப்பதும்‌ மரபு ) IV~150

தாமரை இலை மேலிருக்கும்‌ நீரும்‌, (இலைகட்கு) இடை
வெளியில்‌ தோன்றும்‌ வானத்தின்‌ நிழலும்‌ எப்படித்‌ தோன்றிய தென்றால்‌, பொய்கையின்‌ அவ்விரண்டில்‌ (தீர்‌-வானம்‌) எது மென்மையானது, எனத்‌ தெரிய, அலைக்கரத்தால்‌, மே?லழும்‌ வண்டுகளாகிய சங்கிலியில்‌, தாமரையிலையாகிய தட்டில்‌ வைத்து தூக்க (எடைபோடவும்‌) நீர்‌ மென்மையானதாதலின்‌
மேலே எழுத்துள்ளது. வரனம்‌ செறிவுடையது (கனமானது) ஆதலின்‌ மே கிடக்கிறது எனுமாறுள்ளது.
(தாமரை இலைத்‌ தண்ணீர்‌ தவிர மற்ற நீர்‌ வானத்தைப்‌ பிரதிபலிப்பதால்‌ வானமாகவே தோன்றிற்று, துலாக்கோலின்‌
தட்டாக தாமரை இலை உள்ளது. வானம்‌ வைத்த தட்டு கீழே கடப்பதால்‌ அது காணப்படவில்லை. என்றும்‌ நீர்வைத்த குட்டு
மேலே இருப்பதால்‌ காணப்படுகிறது என்றும்‌ கற்பனை).
வானினும்‌ மென்மையானது தெளிந்த நீர்‌ என்பது கருத்து. ன நிலத்திற்குச்‌ சுமையாக நன்கு முற்றிய இனிய நாமக்குரும்பு
சுள்‌ நதிக்கரையோரத்தில்‌ விளைந்து தாமே வளைந்து, தாமரை மலர்கள்‌ மேல்‌ விழ, காலையில்‌ தாமரைமலர்கள்‌ மகரந்தம்‌
ததும்பிச்‌ சந்தன. தாமரையாகிய கரும்பாலையில்‌ சுரும்பு களா௫ய உருளைகள்‌ சுழன்று ஓசையுடன்‌ பிழிந்த சாறே மகரந்த
மாகவும்‌ பொய்கையே சுடாரம்‌ (சாறு நிறைக்கும்‌ பாத்திரம்‌)ஆகவும்‌ அமைந்தன. IV—152

ஏர்முளையால்‌ தோண்டப்பட்ட வாழைக்‌ கிழங்குபோல, குறுக்காக வளைந்துள்ள தலையில்‌ (வாழைக்‌) குருத்துப்போல ஒரு
கொம்பு மண்ணைக்‌ குத்தி நிற்க, கவுளிலிருந்து இறங்கி தாடையில்‌ இரவெல்லாம்‌ படிந்த மதம்‌ கருஞ்சாந்துச்‌ சிமிழ்‌ போல அமைய,
புற்றிலிருந்து வந்ததும்‌ அடிப்பட்ட பாம்பு, மெய்‌ சுற்றியும்‌ விரிந்தும்‌ துடிப்பது போல துதிக்கை ஆடிக்கொண்டிருப்ப,
(யானை உராய்தலின்‌) நாணல்‌ பூக்களுடன்‌ மண்‌ கட்டிகள்‌ ஆற்றில்‌ வீழ்ந்த (பூக்கள்‌) நுரையாகவும்‌, (மண்‌) வண்டலாகவும்‌
அமைநீது (சேறும்‌ நுரையுமான) மழைக்‌ காலவெள்ளம்‌ மீண்டும்‌ வந்ததோ எனும்‌ எண்ணத்தைத்‌ தோற்றுவிக்க,
பூற்துகுள்‌ கண்களில்‌ படியாதவாறு மேற்கண்ணை மூடி, இடைமேலெம, தோல்‌ அசைய, ஓழுகும்‌ மதநீர்‌ ஆற்றில்‌ கலந்து
மணமும்‌ இளங்கசப்பும்‌ ஈய, தன்‌ போலக்‌ குதித்தாடும்‌ எருதுகளுடன்‌ வண்டுகள்‌ பறக்க, யானைகள்‌ அவ்வாற்றங்கரையில்‌,
(தந்தங்களால்‌ மண்‌ மேடுகளைக்‌ குத்திக்‌ கொண்டு குதித்து) விளையாடின. IV—153

இரு கன்னங்களிலும்‌ படிந்த மதத்தில்‌, மலர்ந்த ஏழிலைப்‌ பாலைப்பூக்களின்‌ மகரந்தம்‌ படிந்து, சாமரங்கள்‌ போலவும்‌,
தந்தம்‌ போலவும்‌ அமைய, மலையைத்‌ தோண்டிய மண்ணால்‌ உறையுடன்‌ கூடிய கத்திகளாக தந்தங்கள்‌ மிளிர, யானைகள்‌,
ஐராவதம்‌ போல நின்று அரசர்களைப்‌ போருக்குத்‌ தரண்டுவது போல நின்றன. IV—154

அப்போது (சரத்காலத்தில்‌) ஒருவரை ஒருவர்‌ வெல்லும்‌நோக்கமுடன்‌ உள்ள மன்னர்‌ இரட்டையம்பறாதக்‌ தூணிகளி
லிருந்து குறிவைத்து எய்து வெற்றி பெற்றதால்‌, தமது குலத்தின வாகிய சரங்கள்‌ (அம்புகள்‌) மூலம்‌ புகழ்பெற்றதைக்‌ குறிக்கும்‌
வகையில்‌ மலர்ந்த நாணற்பூக்கள்‌ காடெல்லாம்‌ ஒளிர்ந்தன.
(நாணற்தட்டையால்‌ முன்‌ காலத்தில்‌ அம்பு செய்தனர்‌. ஆதலின்‌ அதற்கும்‌ சரம்‌ என்றே பெயர்‌. நாணற்பூக்கள்‌
பூத்தலின்‌ சரத்காலம்‌ என்று பெயர்‌ வந்தன. நாணலின்‌ வெண்ணிறப்‌ பூக்கள்‌ புகழுக்குக்‌ குறியீடாகும்‌) iV-=155

ஆற்றங்கரை ஈரமண்படிந்த திமிலையுடைய: காளை மாட்டின்‌ மேலே நாணற்‌ மூக்கள்‌ சிதறி வீழ்வது, மலைச்‌ சிகரங்கள்‌ எனக்‌ கருஇப்படியும்‌ மழை பெய்து தீர்ந்த வெண்முஒற்‌ துண்டுகளோ எனுமாறு இருந்தன, IV—156

வானத்‌ இிருமகளின்‌ பெரிய நட்சத்திர மாலை எனும்‌ ஆரத்தை ஆகாய கங்கையில்‌ கழுவப்‌ பிசைந்ததும்‌, பரந்து சீயக்காய்‌ பழத்தின்‌ நுரைபோல, புலபுலவெளன வெளுத்த முகில்‌ நிரைகள்சிதறிக்‌ கிடந்தன.(27 ஆணிமுத்துக்களை வைத்துச்செய்யும்‌ நசையே நட்சத்திர மாலை எனப்படும்‌) 17157

நீராசிய கடனை கடலிலிருந்து பெற்றுக்‌ கொண்டு தன்‌ கடமைகள்‌ முடித்து, தான்‌ முன்பெற்ற கடனை தூரதேசம்‌ சென்றும்‌ திரும்பவும்‌ வட்டியுடன்‌ அக்கடலுக்கே துநிது( கணக்குத்‌) தீர்த்ததனால்‌, அந்தப்‌ புண்ணியத்தால்‌ பரிசுத்தமான ஆன்மா வும்‌, தூயஉடலும்‌ உடையதாக, நிலாவினை உடைய SUIT our துயர்ந்து செல்லும்‌ வெண்‌ மேகங்கள்‌ திகழ்ந்தன.
(அப்பு எனும்‌ தெலுங்குச்‌ சொல்‌ நீர்‌, கடன்‌ எனும்‌ இரு பொருள்படும்‌. இச்சொல்லைக்‌ கவிஞர்‌ பயன்படுத்தியுள்ளார்‌. கடனைத்‌ தீர்த்தவன்‌ உள்ளமும்‌ அதன்வழி உடலும்‌ தரய்மை யுறும்‌ எனும்மனத்தத்துவச்‌ சிந்தனைஇக்கவிதையினைச்‌ சிறப்பிக்‌ கிறது. பரிசுத்தமானவர்கள்‌ உயர்ந்து நிற்பர்‌ ஒன்ற தொனிப்‌ பொருளும்‌ உண்டு. வெண்மேகம்‌–கடன்‌ தீர்த்த சான்றோர்க்குஉவமை, கரு3மகம்‌ -கடன்‌ 9கொாண்டவர்க்குவமை) (7158

தெளிந்த மூடில்‌ எனும்‌ yor சுற்றிய வானமணியாகயே சூரியனின்‌ “லசுனபட” எனும்‌ (பால்போலும்‌) படலம்‌ உருவாகக்‌ கண்ட திருமால்‌ அது மணிவகைக்‌ குற்றம்‌ ஆதலின்‌ அதை மனத்‌துணர்ந்து, தன்‌ பாதமாகய ஆகாயத்திலிருந்து பரிவட்டமாகய கழலை நீத்துவைத்து, பேராசையற்றவனாக அறிவுபெற்றவனாக பாற்கடலில்‌ திருமகளுடன்‌ இணைந்திருந்தான்‌. IV—159

வானத்தவர்கள்‌ (தேவர்கள்‌) நெருப்புப்பெற வேண்டி (மழைக்காலத்தில்‌ இழந்தமையால்‌) சூரியனாகய பளிஙிகுக்சல்லின்‌
(சூரிய காந்தக்கல்லாகிய9க்கி முக்கெல்‌) மேல்‌ வெண்முகிலாகய பஞ்சினை வைத்துஉராய, இப்பிடித்து, ஒரளவோடு நில்லாது
(மட்டுமீறி) பரவியது எனுமாறு மு௫ல்கலைந்த வெயில்‌ மிகவும்‌சுட்டெரித்தது IV—16

சூரியனின்‌ உதய அத்தமனங்களின்‌ செவ்வந்தி வண்ணம்‌ அமைய திசைகளின்‌ கருவண்ணம்‌ சுற்றிலும்‌, நடுவிலும்‌ இருக்க,
வாளம்‌,இயற்கைத்‌ தாய்‌ என்னும்‌ குறிஞ்சமகளின்‌ மூக்கலணிந்த குன்றி மணியாகிய மூக்குத்தியோ எனும்‌ படியாக இருந்தது.IV—161

கூண்டுகட்கு நெற்கதிர்களைக்‌ கொண்டு,கூட்மாக வான்வழிச்‌ செல்லும்‌ கிளிகள்‌, பய ஒவ்வொரு இலை (சோகை) களோடு
பமுத்த (விளைந்த) நெல்‌ வயல்‌ அறுத்து விடுவார்கள்‌ என்ற பயத்தால்‌ பறந்து செல்கின்றதே எனுமாறுதோன்றிற்று, 175-162

தாம்‌ திரு (ஸ்ரீ) வினர்‌ ஆதலின்‌ தாம்‌. சேரும்‌ இடம்‌ ஆன தரமரைப்‌ பொகுட்டினைக்‌ சார்ந்தனவோ எனுமாறு காதில்‌
தாமரைப்‌ பொருட்டினை அணிந்தவராக, மன்மதனின்‌ தேரை நடத்தும்‌ ரதி தேவியின்‌ அதட்டல்கள்‌ போலபரண்‌ மீதமர்ந்து
கிளிகளை ஓப்பும்குரல்‌ அதட்டல்களோடு திகழ்ந்து,(இளி கடிதற்கு குவளை மொட்டுகளை எறிய அவை தாரம்‌ செல்லாமையின்‌
கைதட்டி ஓசை எழும்பும்போது மென்‌ முலைகளும்‌ கூந்தலும்‌ அசைந்தாட, (கேலிக்காக) தவறான வழியை முன்பு கூறி, உடனே
சிரிக்கவும்‌, (அதை அறிந்து) வழிப்போக்கர்கள்‌ சென்ற வழியேஇரும்பும்போது அவர்களோடு நாணமும்‌ திரும்பிவர, இதழின்‌
இனிமையையும்‌, பல்‌ நிறையின்‌ எழிலினையும்‌ போலாது கரும்பும்‌, அதில்‌ விளையும்‌ முத்தும்‌ அவள்‌ அருள்வேட்டரோ
எனுமாறு முதிர்ந்து பிதிர்ந்து முத்துக்கள்‌ சிந்தும்வளைந்திருக்கும்‌ கரும்புத்‌ தோட்டமும்‌, அவர்களது, முழங்காலுக்குஇணையாக
இயலாமையின்‌ நாணமுற்றுத்‌ தலை கவிழ்ந்து அடியிறைஞ்சும்‌ கதிர்‌ தண்டினையும்‌ உடைய நெல்‌ வயலையும்‌, காவல்புரியும்‌
அக்குடியாவைப்‌ பெண்கள்‌ எழிலுடன்‌ திகழ்ந்தனரி. IV—163

வாளம்‌ அப்போது [சரத்காலத்தில்‌) தான்‌ மாபெரும்‌ நீலக்கல்‌ போலுதலின்‌ அதன்‌ பெருமைக்‌ கேற்ப (gr நீலம்‌
புல்லினைக்‌ கவர்வதியல்பாதலின்‌) தகும்படி. நிறைந்து கவர்ந்தி மூத்ததுவோ எனுமாறு விளைந்த நெல்‌ வயல்களில்‌ வைக்கோற்‌
போர்கள்மலைபோல விண்ணெட்டி உராய்ந்திடல்‌ போல்‌ திகழ்ந்தன.
(நீலக்கல்‌ புல்லைக்கவரும்‌ என்பது முன்‌ 413வது பாடலிலும்‌ கூறப்பட்டுள்ளது காண்க.) IV—166

சரத்‌ காலமாகிய சனகன்‌ வெண்டாமரையாகிய குடை. ஏற்தி வேள்வி செய்யப்புகுங்‌ காலை,பரமஹம்சர்‌ (முனிவர்கள்‌. அன்னப்‌
பறவைகள்‌) வந்து நிறைய கார்வண்ண இராமன்‌ வான வில்லாகய சிவத னுசுவை முறிக்க ஏரீச்சாலாகிய சீதை கிடைக்‌
காமற்‌ மோவாளா?
(சனகளை சரத்காலத்துக்கு சிலேடை மூலம்‌ஒப்பிட்ட இக்‌ சுவிதை சிறிது சிக்கலானது. காரீ காலம்‌ முடிந்து சரத்‌ காலத்தில்‌
உழவு வேலைகள்‌ நடைபெறுவதையும்‌ அதனால்‌ உழவர்கள்பயன்‌ பெறுவதையும்‌ கற்பனை செய்துள்ளார்‌) IV—165
முகல்‌ சலைந்து வெயிற்‌ சூடு மிகுதலின்‌, வானில்‌ கிளிகளின்‌ பச்சை வண்ணம்‌ பரவுதலும்‌, பச்சை வண்ணக்‌ குதிரைகளுடன்‌
சூரியனின்‌ தேர்‌ அருகில்‌ வந்ததோ என்று மக்கள்‌ பயந்தனர்‌.(சூரியனின்‌ குதிரைகள்‌ பச்சை வண்ணம்‌ என்பது கவிமரபு) IV~166

மண்ணிலிருந்து பொய்கையில்‌ மலரீந்த வெள்ளாம்பற்பூக்கள்‌ (விளக்குகளாகி) வீரட்டியடிக்க, விண்ணிலிருந்து சுடரும்‌ கோள்‌
களும்‌ (வின்மீன்களும்‌) ஒளிரும்‌ ஒளி ஓட்டிவிடவும்‌, தேய்பிறைக்‌ கரல வலவிமையின்றி, இருள்‌, தனது கருநிறத்தை (திற்கவேறிட
மின்றி) வானக்‌ சுருமை நிறத்தோடொன்றி விட்டதோ எனுமாறு ஆகாயம்‌ கருமைவண்ணம்‌ மிக்கது. IV—-167

கன்றுகளை நினைந்து (ஆற்றோரஙிகளில்‌) புல்மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள்‌ சுரந்த பால்‌ ஆற்று நீரோடு கலக்கவும்‌
(தாகம்‌ கொண்டவர்கள்‌ பாலைச்சாப்பிட்டால்‌ உடல்‌ நலத்துக்கு ஊறு நேரும்‌ ஆதலில்‌) வெயில்களைத்த வழிப்போக்கர்கட்கு
உதவும்‌ பொருட்டு, பிரம்மதேவன்தன்‌ வாகளஙிகளாகிய அன்னஙி களை (பால்‌ பிரித்துண்டு நீர்மட்டும்‌ இருக்கு மாறு செய்ய
வேண்டி) அனுப்பினானோ எனுமாறு அன்னங்கள்‌ ஆறுகளில்‌ நிறைந்திருந்தன. IV—~168

பருவத்திலுள்ள (புணர்ச்சிக்கு ஏற்ற காலமுடைய) பசுக்க களின்‌ கூடப்போச முடியாத தாபத்தினால்‌ கொழுப்பு கரைந்து,
கமுத்தை வளைத்து முயன்று கனைப்பொலி எழுப்பிய முழக்ககி சளோடு காளைகள்‌ மந்தையின்‌ பின்னர்‌ மந்தகதியில்‌ சென்றன.
(கொழுத்த காளைகள்‌ உடல்‌ சுமையால்‌ பசுக்களோடு விரைந்து செல்ல முடியாமல்‌ மெல்லச்‌ செல்லும்‌, பருவப்பசுக்‌
களும்‌ வேட்கை மீறினும்‌ பிடிகூடாமல்‌ விரைந்து முன்செல்லும்‌,அதைத்‌ தொடரகாளை முயன்று சனைத்தவாறு மெல்லாப்பின்‌
தொடரும்‌ என்பது கருத்து) Iv—169

கடல்‌ நீரையெல்லாம்‌ வெறும்‌ வயிறாகுமாறு &மே சொரிந்து மீந்த உட்பு வயிற்றில்‌ சேரவும்‌ அந்த வெண்மை நிறமே வெளியே
அதன்‌ தூய்மையால்‌ தோன்றுகிறது எனுமாறு ஓடும்‌ சரத்கால மேகங்களின்‌ உடம்பில்‌ வெண்மை மிகுந்துதோன்றியது.
(கடல்நீர்‌ உப்பானது மேகம்‌ அதைக்‌ குடித்து நன்னீர்‌ பொழிகிறது, அந்த உப்பு படிந்து மொத்தமாக மேகத்தின்‌ வயிற்றில்‌
உள்ளதுதான்‌ வெண்மை நிறமாகக்‌ காட்சி தருகிறது என்பதுகருத்து[ 1V—170

கடலில்‌ முன்‌ குடித்த நீரெல்லாம்‌ போழிந்து, மேகம்‌ எனும்‌ உருவத்தை இழந்த சூரியனின்‌ கதிர்கள்‌, தன்‌ சுய உருவத்தை
அடைதலின்‌ கதிர்கள்‌ முன்னிலும்‌ ஒளிமிக்கதாயின. முகில்களும்‌ உருக்கலைந்தோடின. /–171

சரத்கால மேகங்கள்‌, மூன்‌ குடித்த (கடல்‌) நீர்‌ எல்லாம்‌ சொரிந்து தீரீந்ததனால்‌, மீண்டும்‌ நீர்‌ நிறைத்தற்குப்‌ பொய்கை
களுக்குட்புகுந்தனவோ எனுமாறு ஆங்குள்ள நாணற்பூக்களின்‌ நிழல்கள்‌ (பிரதிபிம்பங்கள்‌) பொய்கையிற்‌ தோன்றின. (172

குளத்தில்‌ பிடியும்‌ களிறுய்‌, சிறிது மலரீந்த தாமரை மொட்டு களை, ஒன்றற்கொன்று (உண்ணத்‌) தருவதற்காக ஒரே சமயம்‌
எடுத்து (துதிக்கை நீட்டிக்‌) கொடுக்க, அம்மலரிலிருந்து மகரந்தம்‌ சொரிதலும்‌, பொய்கைத்‌ திருமகளுக்கு அன்போடு இரட்டை
யானைகள்‌ அபிடேகத்திற்கு எடுத்த பொற்கலசங்களோ எனும்‌ படியாக இருந்தன, 4173

சேறு அடியிற்படிந்து தெளிந்த பொய்சைகளில்‌ எல்லாம்‌ மீண்டும்‌ சேறாகும்படி பங்கயங்கள்‌ (சேற்றிற்‌ பிறந்த தாமரை
மலர்கள்‌) செய்தன. தாமரையின்‌ பூந்தேனோடு குழைந்து பூந்தாதுசேறாகி அவ்விதம்‌ அமைந்தது. காரணத்தின்‌ பண்புகள்‌
காரியத்திலும்‌ உண்டாகுமல்லவா?
(காரணமாகிய மண்‌, பொன்‌ முதலியவற்றின்‌ பண்புகள்‌ காரியமாகிய மட்குடம்‌, ‘பொற்குடத்துிலும்‌ அமைதல்போல
சேற்றில்‌ இருந்து பிறந்த தாமரை மலர்‌ பூந்தேள்‌, பூந்தாது கலந்து சேற்றினையே உருவாக்கின என்பது கருத்து) |/-174

அகத்தியரை (விண்மீனை) நோக்கி “தாங்கள்‌ இக்குளநீரை பயிர்கட்காக விட்டுவைக்கவும்‌’ ” எனக்கது
கேட்டு அவரது சினட்பார்வை தலிர்க்சு வணங்கிப்‌ பணிந்தனர்‌, எனுமாறு மச்கள்‌ பூசனளைபுரிந்தளர்‌. IV—175

கொடும்‌ வெயிலிழற்‌ காய்நீத பூமியாகிய பாத்திரத்திற்‌ பட்டதனால்‌, இறுகிப்‌ பரிபக்குவமடைந்தது எனுமாறு சரத்கால
வெண்ணிலவு இரவுகளில்‌ செறிவுற்று ஒளிர்ந்தது.
(சாய்ந்த தோசைக்‌ கல்லில்‌ பட்டதும்‌ திரவமான மாவுப்‌ பொருளும்‌ இறுகி திடப்பொருளாவதுபோல, நிலாவும்‌ இறுகியது
என்பது கருத்து) iV—176

மழைக்காலத்தில்‌ இட்ட (மீன்‌) கருவினைக்‌ குடிக்க, 8ழிருந்து மேலே வரும்‌ பெரிய மீன்கள்‌, பாசிக்‌ கொடியோடு மிதந்து
பளபளப்போடு மின்னுவது, (தாசரிகள்‌ வாசிக்கும்‌) குதிரைவால்‌ மயிரில்‌ கட்டிய வில்லில்‌ வெள்ளியினாலான மீன்‌ உருவங்களை
யூடைய உடுக்கையினை யாட்டுவது போல இருந்தது. 14197

ஹம்ச (அன்னற்பறவை)த்தினை விட பரம ஹம்சரமான அகத்தியரோ மலய (பொதிகை) மலைச்‌ சிகரத்தின்‌ வழியே வருகிறார்‌ ஹம்சம்பாலும்‌ நீரும்‌ வேறு யிரித்திட, பரம ஹம்‌ சரான அகத்தியர்‌ நீரும்‌ சேறும்‌ வேறுபடுத்திச்‌ சிறப்புற்றார்‌.
(சரத்காலத்தில்‌ அசுத்திய நட்சத்திரம்‌ தோன்றுதலும்‌ சேறு நீங்கி நிர்‌ தெளிவுறுதலும்‌ இங்கு வருணிக்கிறார்‌) IV—178

கிரவுஞ்ச மலைத்துளையில்‌ செல்லும்‌ அன்னப்பறவைகள்‌ வானத்தில்‌ செல்லும்‌ வழியில்‌ இட்ட முட்டைகளை, பிற பறவைகள்‌ அடை காத்தலின்‌ அன்னப்பறவைகள்‌ உருவாகி மிகுதியாயின. அதெப்படி முடியும்‌ என்றால்‌ கோழி அடைகாக்க மயில்‌ முட்டைகவிலிருந்து மயிற்‌ குஞ்சுகள்‌ வருவது சான்றல்லவா?
(சரத்காலத்தில்‌ அன்னங்கள்‌ மிகுதியாக வரும்‌ அதன்‌ பெருக்‌ கத்துக்குமான சரோவரம்‌ மட்டுமின்றி, கரவுஞ்சமலைப்‌ பாதை
களிலும்‌ உற்பத்தியாகியிருக்கும்‌ என்று கற்பனை செய்யப்படு கிறது) IV—179
நீரரமகளிர்கள்‌, காணும்‌ பொய்கை என்னும்‌(கண்‌) ஆடியில்‌ படிந்த களிம்பினை நீக்க, அன்னப்பறவைகள்‌ அங்குமிங்கும்‌ மிதந்து தேய்ப்பது (விளக்குவது) போலிருந்தது. அதனால்‌ மாசு பறப்பது போல தாமரைப்‌ பூந்தாது சிதறியது (தேய்க்கும்‌ பொதெழும்‌ சத்தம்‌ போல) அன்னங்களின்‌ ச்சுக்குரல்‌ ஒலித்தன.
(மூற்காலத்தில்‌ முகம்பார்க்கும்‌ கண்ணாடியாக வெங்கலத்‌ தால்‌ செய்து கொண்டனர்‌. அதன்‌ களிம்பு நீக்க சாம்பலால்‌
துலக்குவர்‌. இங்கு பொய்கை ஆடி, அன்னஙிகள்‌ துலக்குகன்றன என்பது கற்பனை) iV—180

சூரிய மண்டலத்தை முகில்‌ மலறத்ததுமே (மயில்‌) இரைதேடுவதை விடுத்து, முகம்மேல்‌ நோக்க (மழைமுகில்‌ வந்ததோ என்ற
ஆசையுடன்‌) மயங்கி,குகையில்‌ புகுந்த காற்றினால்‌ குமகும* எனும்‌ ஓசை வரவே,
(உரும்‌ஓலி என மயங்க) தோகையை சிறிதே விரிக்க முயன்று(முகிலின்மைஅறிந்து) மேலே பார்த்து புரிந்துகொண்டு,
(தோகையை) மடக்கக்‌ கொண்டு, பூக்கள்‌ இல்லாத தாழையினைக்‌ கண்டு வருந்திக்‌ கண்ணீரை அதிலையே துடைத்துக்‌
கொண்டு, தவளைகள்‌ பதுங்கும்‌ குட்டைகளின்‌ ஓரம்‌ செவி கொடுத்துக்‌ கேட்டு, அகவுதற்காக மும்முறை கழுத்தை லளைத்து
முயன்றும்‌ குரல்‌ வராமையின்‌, ஏதோ சிறிது அகவி, வாயில்‌ எதையோ கடித்துக்‌ கொண்டு, வெயிலின்‌ கொடுமைக்கஞ்சி
நிழல்‌ தேடி சரத்காலத்தில்‌ பூக்கும்‌ மரங்களை நாடாமல்‌ மழைக்‌ காலத்தில்‌ பூச்கும்‌ மரநிழலை நாடிச்‌ சென்று அலகினால்‌ இருபக்க
இறக்கைகளையும்‌ கொத்திச்‌ சிலிர்த்தவாறு, வெறுமையுற்ற பாரிவைகளுடன்‌, மார்பின்‌ இருபுறமும்‌. பார்த்துக்கொண்டும்‌
காளச மயில்கள்‌ இருந்தன.
(தவளைச்‌ சத்தம்‌ கேட்டால்‌ மழை வரும்‌ ஆதலின்‌ மயில்‌ குட்டையில்‌ தவளைகள்‌ இருக்கும்‌ குழிகளில்‌ காதுகொடுத்து
ஓசை வருகிறதா என்று காதுகளைத்‌ தீட்டிக்காத்திருப்பதாக கற்பித்துள்ளார்‌. மழைக்கேங்கும்‌ மயிலின்‌ மூலமாக மனித
மனத்தின்‌ மழைக்கேங்கும்‌ ஏக்கத்தையும்‌ கவிஞர்‌ காட்டி யுள்ளார்‌) 14/18]

நிழல்‌ வாட்டத்தில்‌ காய்ந்த சேறு படிந்த கூம்பிய தோகையை விரிக்காததனால்‌ அப்படியே (சேறு) அழியாமல்‌, தோகையுடன்‌
மயில்‌ இருந்தது. முன்‌ (மழைக்காலத்தில்‌) இந்திரன்‌ அதன்‌ நடனம்‌ கண்டு மகஒழ்ந்து அளித்த பொற்கிழியின்‌ முத்திரையோ
எனு மாறு அத்தோகையில்‌ சேறுஇருந்தது.
(பட்டுத்துணியில்‌ பொன்‌ நாணயங்கள்‌ பெய்து அரக்கு முத்திரையிட்ட பொற்கிமி போல்‌ மயில்‌ தோகை (பீலியின்‌
கண்கள்‌) நாணயங்கள்‌ பொிந்திருந்ததாகவும்‌ சேறுஅரக்கு முத்திரையாசவும்‌ இருந்தது. மழைக்காலமின்மையின்‌ தோகை
விரிக்கவில்லை.அது முத்திரை வைத்ததாலே எனுமாறு இருந்தது என்பது கருத்து) iV—182

சக்கிரவாகம்‌ (அன்றில்‌) எனும்‌ முலை தெரியுமாறு. நுரையர்‌ கிய முந்தானையைசி சரியவிட்டு நீரீக்கோழியின்‌ மென்குரலால்‌, முணங்கியவாறு, கம்‌ பாறைகளாகிய கடிதடம்‌, அன்னங்களாகிய முத்துச்சரம்‌, பூந்தாது என்னும்‌ தங்க அரைஞான்‌, களுடன்‌ நீர லையாகிய உடை, மணல்மேடுகளாகிய கடிதட மேற்பாகத்தில்‌ சரிய, புன்னளைமரங்களாகய கரங்களால்‌ தழுவி, மெலிந்து,வருந்தி கரையிலுள்ள நாணற்பூக்களின்‌ நிழல்களாகய தகைகளுடன்‌, நெட்டுயிரீப்போடு, செங்குவளைக்‌ கண்களால்சினந்து, தாமரை யைத்‌ நீண்டும்‌ கடற்காயல்‌ கரங்களின்‌ பரிசத்திற்கு மகிழ்ந்து குவளைகளின்‌ பூந்தேன்‌ கலந்த அலைகளால்‌ கடல்‌ ஆடிய காதலனை, நதி மகள்‌ முரண்‌ புணர்ச்சியில்‌ (பெண்‌ ஆண்போல அமைநீதியற்றும்‌ கலவி) ம௫ழ்வுறச்‌ செய்தாள்‌.
(நதியின்‌ கணவன்‌ கடல்‌ சரத்கரலத்தில்‌ பிரிவுற்ற நதியைப்‌ புலந்து பின்‌ கூடியதாகக்‌ கற்பனை) ்‌

ஆளவந்தார்‌ ஆட்சியின்‌ மாட்சி
இவ்விதமாக சரத்காலம்‌ திகழவும்‌, யாமுனர்‌ (யமுளைத்‌ துறைவன்‌) அரசநீதியை ஏற்றவர்‌ ஆதலின்‌, திக்விசயம்‌ செய்தல்‌ மூறையெனக்‌ கருதி ஆறங்கங்கள்‌ சிற்றரசுகள்‌ கூட வர புயணம்‌ புறப்பட்டு [4184

யாளை,குதிரை தேர்ப்படைகள்‌ நிறைந்ததால்‌ பாரம்‌ தாங்கப்‌ மல்‌ நிலத்தைத்‌ தாங்கும்‌ ஆதிசேடனின்‌ தலை முடியிலுள்ள மணிகள்‌, நிலத்தில்‌ உள்ள மணிகளோடு புதைற்து கொள்ளுமாறு சுமைமிகுந்ததாக அமைய எட்டியுடன்‌ கட்டியகொடிகள்‌, காற்ற சைத்தலால்‌ கடல்‌ அலை முழங்குதலைவிட படைகளின்‌ L169 9 யொலி முழக்கமே பெரிதாக, படைகளுடன்‌ யாமுளர்‌ புறப்பட்டு திக்விஜயம்‌ செய்து பகைவரை முறியடித்துச்‌ சிறப்புற்றார்‌.[44165

வேள்விகள்‌ இயற்றி, தாளங்கள்‌ அந்தந்த நாட்டு அந்தணர்‌ கட்கு மனநிறைவுறுமாறு செய்து, செல்வச்‌ செழிப்புடன்‌ என்றும்‌ கவலையின்றி, அச்சமின்றி இருந்தார்‌. IV—186

மேலும்‌ அவர்‌ ஆட்சியில்‌ புல்‌ தின்று கைஎடுத்துமுறையிடுவது களிறுகள்‌ மட்டுமே (வீரர்கள்‌ அன்று( ஆங்காங்கிருப்ப, கழுத்தைப்‌
பிடித்துத்‌ தள்ளுவது, பண்டிகைகளில்‌ எண்ணெய்‌ தேய்த்துக்‌குளிக்குமாறு கணிகையரின்‌ சகோதரர்கள்‌ கேலியாக (நாணத்‌
தால்‌) மெல்லச்செல்லும்‌ இளைஞர்களைத்தான்‌ (வெறுப்பால்‌ அன்று) சுண்ணாம்பு நீற்றல்‌, குறடுபற்றி இழுத்தல்‌ மாளிகை
வெள்ளையடிக்கவும்‌, நகைகள்‌ செய்யவும்‌ மட்டுமே (குற்றவாளி களைத்‌ தண்டித்தற்காக அன்று),
பொற்கிழி கட்டி கத்தி ஏந்துதல்‌ கோழிகள்‌ போரில்‌ (சேவற்‌போர்‌ (மட்டுமே மக்கட்குள்‌ போட்டி பொறாமை சண்டைகள்‌ இல்லை.

அளவினால்‌ ஏற்படும்‌ உராய்வுகள்‌ (சிறு சண்டைகள்‌) பொன்‌ உரைகல்லில்‌ மட்டுமே. எதி3லனும்‌ கண்வைத்தல்‌ (பொருளை
அபகரிக்க எண்ணுதல்‌) என்பது மிருதங்கத்தில்‌ மட்டும. (மிருதங்‌கத்தின்‌ ஒரு பக்கம்‌ கருமையான கண்போள்ற தோற்‌ 4பகுதிவைத்‌
தலைக்‌ குறிக்கும்‌) (பிறர்‌ பொருளிற்‌ கண்‌ வைக்கமாட்டார்கள்‌) :
தாது (வினைச்சொல்‌) வாதங்கள்‌ (தாது மருந்துகள்‌ சப்ததாதுக்கள்‌) எல்லாம்‌ இலக்கணத்தில்‌ மட்டுமே. மற்ற இடஙிகளில்‌
இவை இல்லாதவாறு அரசாட்சி செய்து வந்தான்‌. IV—187

அந்த யாமுனரின்‌ பிதாமகர்‌ (பாட்டன்‌) ஆகிய நாதமுனியீன்‌ சீடராகிய ஸ்ரீபுண்ட ரீகாட்சர்‌ (உய்யக்கொண்டார்‌) உடைய
நெருங்கிய சீடரான ஸ்ரீராம மிசிரா்‌ (மணக்கால்நம்பி) எனது பரமகுருவின்‌ பேறரருக்கு இத்தகைய பந்தம்‌ எப்படி. நேர்ந்தது? * * IV—188

யோக சாம்ராச்சியத்தை மறந்து லோகசாம்ராச்சியத்தில
ஈடுப்ட்டவாறு என்னை? அப்பெரிய மகானின்‌ மரபில்‌ பிறந்து இவர்‌ இவ்விதமானது முறையன்று: ** IV—189

**இவரது பாட்டனார்‌ ஸ்ரீமன்‌ நாதமுனிகள்கடிகாசல நதியில்‌ மூன்று வேளையும்‌ குளித்து நியமநிட்டைகளைக்‌ கடைப்பிடித்து
பகல்‌ பூசைகள்‌ முடித்து, ஒரு குகையில்‌ தனித்துச்சென்று தருப்‌ பைப்புல்‌ இருக்கையில்‌ அமர்நீது, திருமகள்‌ கோள்வன்‌ திருவடி.
களை, மகழ்ச்சியுடன்‌ புளகமுற்று கண்ணீர்‌ மல்கச்‌ சந்தித்து வந்‌தித்து மாலையானதும்‌, பூணூல்‌; தாமரைக்‌ கொட்டை மாலை
களுடன்‌ யோக பட்டம்‌ மார்பில்‌ இகழ அம்மலையில்‌ இருக்கும்சுநீ தரத்‌ தோளுடையானைச்‌ சிந்தித்துச்‌ சேவித்து,இல்லத்தரச ரை
அடகு பண்ணிவிக்க குலதெய்வத்துக்கு சமர்ப்பித்து, வேள்வியியற்றி சிறப்புற்றுதன்‌ வாழ்நாளைக்‌ கழித்தார்‌. IV—190

புலனின்‌ பங்களில்‌ ஈடுபட்டிருப்பவனிடம்‌ விரைவுற்று அதனை விடுமாறு கூறுவதை விட வேறுபகையுண்டோச திறமையுடன்‌
இன்சொற்கதைகள்‌ மூலம்‌ பேசி ஒரு விதமாக உணரச்‌ செய்து, புலன்‌ வேட்கையைப்‌ போக்க வேண்டும்‌. ச/-191

உலகில்‌ தந்‌ைத, தன்‌ மகனின்‌ தீய நடவடிக்கைகளேயே திருத்த இயலாமற்‌ போகும்போது, அரசபோகத்தில்‌ மூழ்கிய
மன்னனை திருத்துவது என்பது முடிக்கிற காரியமா? யாரால்‌ எப்படி முடியும்‌? IV—198

இரத்தம்‌ குடிக்கவிட்டு, மெல்ல வேங்கையின்‌ வாயிலிருந்து மானை ஈர்த்துக்‌ கொள்ளும்‌ சாதுரியம்‌ மிக்கு வேட்டைக்கார
ளைப்‌ போல, புலன்கள்‌ மூலம்‌ துய்க்கும்‌ வேட்கைதணியச்செய்து பின்‌ திருத்திக்‌ கொள்வதுவே மேலாகும்‌.
(மானைக்‌ கவரும்‌ புலி சிறுத்தை ‘மு.தலியன கழுத்தைக்‌
கடித்து இரத்தம்‌ குடிக்கும்போது அதை விரட்ட முடியாது. விரட்டினால்‌ மானை இழுத்துக்‌ கொண்டோடும்‌. அல்லது எதிர்‌
வற்து தாக்கும்‌. ஆதலின்‌, அது இரத்தம்‌ குடிக்கும்‌ அளவு விட்டு பின்விரட்டி மானை எடுத்துக்‌ கொண்டு வரும்‌ வேட்டைக்காரன்‌
போல அரன்பங்களில்‌ மூழ்கிக்‌ கடப்பவனை சிறிது விட்டுக்‌ கொடுத்து பின்னர்‌ திருத்தவேண்டும்‌ என்பது கருத்து) 1/–193

ஆதலின்‌ “அதற்காக இதுவரை இனிமேல்‌ பொருட்படுத்‌தாமல்‌ விடவும்‌ கூடாது. தகுந்த முறையில்‌ உபாயத்தினால்‌ ஒரு விதமாகத்‌ இருப்ப வேண்டும்‌. உலசுமக்கள்‌ உணவுக்குற்றத்தால்‌அறிவு மயங்குவர்‌. உணவே உணர்வுக்கு மூலகாரணம்‌” * என்று கருதி IV—194

முள்‌ உருவாகாத இளம்‌ தளிரானதும்‌, முக்தி எனும்‌ பெண்ணின்‌ காதுகளில்‌ அணியும்‌ நெருஞ்சப்பூக்கள்‌ போன்ற,
பூக்களை உடைய ஆம்‌ ஆன தூதுளைக்‌ ரையை நிறையக்‌ கொண்டு வந்து IV—195

ஒரு வைணவன்‌ கொண்டு வந்து தந்தான்‌ ‘என்று கூறி சமையல்‌ அந்தணர்‌ மூலம்‌ கொடுத்தனுப்பவும்‌, அவர்‌ (யாமுளர்‌)
பிரியமுடன்‌ சமைத்துண்டு மகிழ்ந்தார்‌. இவ்விதம்‌ (மணக்கால்‌ நம்பி) சல நாட்கள்‌ சொண்டு வற்து தந்தார்‌. —IV196

ஒரு நாள்‌ அவர்‌ (யாமுனர்‌) உணவுண்ணும்போது, எல்லாக்‌ காய்கறிகளையும்‌ உண்டவாறு அந்த (தூதுளை)க்‌ For ous
சுவைத்து நினைவு வரவே, “இதைக்‌ கொண்டு வந்துதரும்‌ பாசுவதுரை உணவுண்டபின்‌ எமக்குக்‌ காண்பியும்‌** என்று கூறி,
கைகால்‌ கழுவி நீர்‌ குடித்துப்‌ பின்‌ அவரைக்‌(மணக்கால்‌ நம்பியை ‘கண்டு, வணங்கி, “வந்த காரியம்‌ என்ன?” என்று கேட்டதும்‌,
அவர்‌ இவ்விதம்‌ கூறலானார்‌. IV—197

அரசே[ தங்கள்‌ முன்னோர்கள்‌ கூட்டிவைத்த புதையல்‌ ஓன்று மேற்குமலை (சஹ்யாத்திரி) யிலிருந்து பிறந்த காவேரி
யாற்றின்‌ இடையே உள்ள ;தீவில்‌ (இருவரங்கம்‌) உள்ளதை தங்கட்கு காட்ட வந்தேன்‌,” 1/4198

எனக்கு  என்று கூற வேண்டாம்‌ நதிகளும்‌ கனிவளங்களும்‌ மன்னர்கள்‌ உடமையாதலினால்‌ விண்ணபித்துக்‌ கொள்கிறேன்‌. அதன்‌ விவரத்தைக்‌ கேட்பாயாக…199(நிதிக்கும்‌ கருணாநிதியாகிய திருமாலுக்கும்‌ சலேடை மூலம்‌ கவிஞர்‌ இங்கு விவரிக்கிறார்‌)

படத்தில்‌ மணிகள்‌ ஒளிரும்‌ வெண்ணிறப்‌ பாம்பு சாந்தமுடன்‌ சுற்றியிருக்கும்‌ (அதிசேடன்‌ எனும்‌ பாம்பு) அரக்கர்‌ (wien) காத்துக்கெடப்பரீ, எனினோ ஆறுமாதத்துக்‌ கொருதடவைதான்‌ வருவான்‌ (விபீடணன்‌ ஆறு மாதத்துக்கொருமுறை இருவரங்கப்‌ பெருமானை தரிசிக்க வருவான்‌ என்பர்‌) ஏதாவது பலி கொடுக்க வேண்டுமே எனினோ உயிர்ப்பலி மூதலிய கொலைகளை விரும்‌ பாது (மலரிட்டு வணங்கினும்‌ போதும்‌) கண்கட்கு அஞ்சனம்‌ (மை) இீட்டித்தான்‌ காண வேண்டும்‌ என்பஇில்லை. குன்‌ சுய ஒளியாற்‌ காணப்படும்‌. (மாசற்ற ஞானத்தினால்‌ காண முடியும்‌) அத்றிதி அளவற்றது. அங்கு விலைமதிப்பற்ற இரத்தினம்‌ (கெளஸ்துப மணி மாரீபில்‌) உள்ளது. பதுமநிதி (உந்தித்‌ தாமரை, சங்கறிதி (கையில்‌ சங்கு) உள்ளது. சொற்களால்‌ என்ன பயன்‌) அழிவற்றதும்‌, எல்ளையற்றதும்‌ முதலுடையதுமான அதை தனித்து உன்‌ ஒருவனுக்கேயன்றி மன்னா] பிறருக்குக்‌ காட்டல்‌ கூடாது,
(புதையலை பாம்பு சுற்றியிருக்கும்‌, அரக்கர்‌, யட்சர்‌ காத்திருப்பர்‌, பலிகொடுத்தல்‌ வேண்டும்‌, அஞ்சனம்‌ இட்டிடு பார்க்க வேண்டும்‌ என்ற ஐ.கங்களை ஒட்டி ஈண்டு திருமாலாகிய நிதியை சிலேடை மூலம்‌ உருவஒத்திருச்கும்‌ நயம்‌ காணப்‌ படுகிற து.) IV—200 perl

என்று விண்ணப்பிக்கவும்‌, மகிழ்ந்து, படைகளுடன்‌ அவன்‌ (மணக்கால்‌ நம்பி) முன்னே வழிகாட்ட இருவரங்கம்‌ சென்று காவேரி, சந்திரபுட்கரணிகளில்‌ குளித்து திருவரங்கத்‌ தம்மானைசி சேவித்து, குறிப்புடன்‌ கடைக்கண்ணால்‌ மணக்கால்‌ தம்பியை மன்னன்‌ பார்க்கவும்‌ ௮வன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. IV—20!

தங்கள்‌ முன்னோர்‌ சேவித்த நிதியிது. கைக்கொள்க என்று திருவரங்கத்தானின்‌ இருவடிகளைக்‌ காட்டவும்‌ அம்மன்னனும்‌
(யாமுனர்‌) அதிரிச்சியுடன்‌ மயக்கம்‌ சளைந்தவனாகி IV—202

விரைந்து, தனது முள்னைய நிலையை உணர்ந்து இதுகாறும்‌ தான்‌ மறைந்திருந்தமைச்சாக வருந்தி, “நீ யார்‌?” என வினவலும்‌
நரன்‌ தங்கள்‌ பிதாமகர்‌ ஸ்ரீநாதமுனிசுள்‌ “டரா௫ய உய்யக்‌ கொண்டாரின்‌ சீடன்‌, அந்த யோகி, எதிர்காலத்தில்‌ தாங்கள்‌
அவதரிப்பதுணர்ந்து, பாகவதர்களில்‌ உயர்ந்தவனாகிய உன்னால்‌ விசிட்டாத்துவித சித்தாந்தம்‌ எல்லா உயிர்களும்‌ கடைத்தேற
சீர்‌ பெற்.றிலங்குமென நிச்சயித்து, உனக்கு துவயம்‌ (மந்திரம்‌) உபதேக்குமாறு | தனது சடனாகிய உய்யக்கொண்டாரிடம்‌ கூற
அவர்‌, புலனின்பத்தில்‌ ஈடுபட்ட உன்னை உபாயத்தினால்‌ உணர்த்துமாறு கூற நானும்‌ வந்து அவ்விதம்‌ செய்தேன்‌!” என்று
கூறவும்‌, அடி மீசை வீழ்ந்து வணங்கி, அவர்‌ (மணக்கால்‌ நம்பி) மூலம்‌ பஞ்ச சமஸ்காரங்கள்‌ பெற்று, அத்துடன்‌ நில்லாது நாலாம்‌
ஆிரமத்திற்கு (துறவு) புகமுனைந்தவனாய்‌, பாடி வீடு வந்து தன்‌ மசுனுக்கு அரசினை ஒப்படைத்து உற்றார்‌ உறவு நட்பு
மந்திரி முதலிய படை பலங்களையும்‌ மக்களையும்‌ ஒப்படைத்து மகனிடம்‌ இவ்வீதம்‌ கூறலானான்‌. IV—203

அரசநீதி
எந்நேரத்திலும்‌ முனைப்புடன்‌ மக்களைப்‌ பாதுகாக்க வேண்டும்‌. துயருற்றவர்கள்‌ முறையிட்டால்‌ கேட்டு நல்ல நீதி
வழங்க வேண்டும்‌, சுயவர்களிடம்‌ அதிகாரம்‌ கதுரவேண்டாம்‌. IV—204

நாட்டு மக்கனின்‌ நன்மையை நாடும்‌ மன்னனின்‌ நலத்தை நாட்டு மக்களும்‌ விழைவார்கள்‌. அதனால்‌ என்ன பயன்‌ எனக்‌
கருதல்‌ கூடாது. அம்மக்களின்‌ விழைவினை அவர்களில்‌ அந்தனர்‌ முதலிய சான்றோர்‌ தம்‌ ஒருமித்த விருப்பத்தை, அந்தரான்மா
வாகத்‌ திகழும்‌ இறைவன்‌ நிறை?3வற்றுவான்‌. IV—205

அரசனுக்கு ஆணை செலுத்துவது அவ௫ியமாகும்‌, இடையர்‌, வேடர்‌ முதலியவர்கள்‌ கூட அம்பு நூல்‌ இவற்றின்‌ குறியீட்டால்‌
ஆணை செலுத்துவர்‌, (அப்படியிருப்ப)) மன்னர்‌ மன்னராக பேரரசின்‌ ஆணைகிகு எல்லோரும்‌ அஞ்சவேண்டாமா?
(காட்டில்‌ இடையர்‌, வேடர்‌ முதலிய பாளையக்காரர்கள்‌ தம்‌ எல்லைக்குள்‌ ஆணை செலுத்துவர்‌. தளைவன்‌ ஒருவனிடம்‌
அம்பு, நரல்‌ முதலியன ஆணையின்‌ குறியீடாக தந்தால்‌ அவளை மற்றவர்கள்‌ சரண்‌ தந்து இங்கியற்ற மாட்டார்கள்‌ என்பர்‌.
சாதாரண பாளையக்காரர்கட்கே அரசாணை நடக்கும்‌ எனின்‌ பேரரசுக்கு ஆணை செலுத்தல்‌ வேண்டுமன்ஹறோ?) IV—206

கோட்டைகட்கு தன்னவா்களாகிய அதந்தணர்கட்கே அதிகாரம்‌ தருக, அவர்கள்‌ கம்‌ எதிரிகளை முறியடிச்கும்‌ அளவான படைகளையே தருக, அளவுக்கதிகமான படைகளை நிறுத்தல்‌ வேண்டாம்‌. IV—207

மூதலில்‌ உயரச்‌ செய்து, பின்னா்‌ (பதவியில்‌) குறையச்‌ செய்தால்‌ யாரானாலும்‌ தனது முன்னைய நிலையினைக்‌ கருதாமல்‌ (மன்னனைச்‌) பனப்பர்‌, ஆகையால்‌ அவனது நன்னடத்தையை அப்போதைக்கப்போது ஆராய்ந்து வரிசைப்படி பதவி உயர்வுகள்‌ தந்து, காலமறிந்து செயற்படக்‌ செய்ய வேண்டும்‌, IV—208

உனது ஆட்சி உன்னிடமே இருக்க விரும்புவாயானால்‌, அந்ிதணனே யானாலும்‌, நற்குடிப்பிறவாதவன்‌, வேடர்கள்‌ சேரியில்‌ வாழ்பவன்‌, கல்வியறிவில்லாதவன்‌, கொலைக்கஞ்சா தவன்‌, கொடுமனத்தன்‌, அயல்நாட்டான்‌, ஒழுக்கமற்றவன்‌ ஆகியவர்களை விலக்க வேண்டும்‌ (தன்னருகே சேரவிடக்‌ கூடாது) 1/–209

நன்னெறி நீங்கிய வேடருடன்‌ வூக்கும்‌ தயரை விலக்குக! முன்‌ ஓழுக்கம்கெட்ட அந்தணன்‌ தன்னைப்‌ பாதுகாத்த கொக்கிளை ஒருவேளைச்‌ சோற்றுக்காகக்‌ கொல்லவில்லையா?(ஒரு அந்தணன்‌ கெளதமன்‌ எனும்‌ பெயரினன்‌ ஓழுக்கம்‌ கெட்டு வேடர்களுடன்‌ கூடி வேட்டுவச்சியை மணந்து கொண்டு, வழிப்போக்கருடன்‌ சென்று யானைக்‌ கூட்டத்திலகப்பட்டு தப்பித்துக்கொண்டு ஒரு ஆலமரத்தடியில்‌ சென்றிருந்தான்‌. அங்கே நாடீ சங்கன்‌ என்னும்‌ கொக்கு விருத்தினனுக்கு உணவீந்து, பணமும்‌ தந்தது. மறுநாள்‌ பயணம்‌ ,புறப்பட்ட அந்தணன்‌ துங்கும்‌ கொக்கினைக்‌ கொன்று மாமிசத்தினை எடுத்துக்‌ சொண்டு புறப்பட்டான்‌. நன்றி கொன்ற இவ்வந்தணல்‌ கதை மகாபாரதம்‌ சாந்தி பருவத்தில்‌ வருகிறது. இவனைப்போலும்‌ பிராமணன்‌ உண்டு. ஆகையால்‌ அப்படிப்பட்டவர்கள்‌ தன்னருசே வரவிடக்கூடாது) 47210

கற்று மறவழிக்கஞ்சி, அரசியல்‌ அறிவுடையவனாகி, ஐம்பது வயதுக்குமேல்‌, எழுபது வயதுக்குட்பட்டவனாக, அமைந்து,
நோயற்ற மரபினனாகி, அகந்தையற்றவளாய்‌, அரசன்‌ வேண்டிய தூரல்‌ அமைச்சர்‌ பதவியை ஏற்று, காரியங்கள்‌ நடத்தும்‌ மந்திரி
கிடைத்தால்‌, அரசாங்கம்‌ சிறந்து மிளிரும்‌, இத்தகையவர்‌ ஒரு நாள்‌ இருந்தால்‌ போதாதா? ்‌ 1V—211

அத்தகு அமைச்சர்கள்‌ இடைக்காவிட்டால்‌ IV—219

அரசன்‌ தானே அரச நீதியுணர்ந்து செயலாற்ற வேண்டும்‌ கார்யங்‌ கள்‌ நிறைவேறினும்‌ நிறைவேறாவிட்டாலும்‌ சரியே
படை பலத்தாலும்‌ செல்வவளத்தாலும்‌ நிம்மதியாக இருக்காமல்‌ மந்திரி என்ற! ஒருவஎள, பண்பற்றவளை நியமீத்துப்‌ பேணினால்‌
ழூசணிக்காயளவு முத்து என்பது போல மனத்தை வருத்தம்‌ உறச்‌ செய்யும்‌. அதன்பிறகு அவன்‌ கையிற்‌ சிக்கி (அவன்‌ சொன்னபடி
ஆடும்‌) வாழ்க்கையுடையவனாக நேரும்‌, ்‌
(முதிது சிறிதாக இருக்கும்போது அணிந்து மகிழலாம்‌. ழூசணிக்காயளவாக இருந்தால்‌ அதை அணிந்தாலும்‌ தாங்க
முடியாது, வருத்தம்‌ தரும்‌. அதுபோன்றே தன்னளவு மீறும்‌ அமைச்சினால்‌ துயரே பெருகும்‌ என்பது கருத்து) 1V—213

ஒருவனிடமே அதிகமான பாரத்தை விரிவாச்காமல்‌ பலரிடமும்‌ ப௫ர்ந்தளிக்க வேண்டும்‌. ஓவ்வொருவரரைச்‌ சார்ந்தும்‌
பலர்‌ இருப்பதால்‌ காரியம்‌ எளிதில்‌ நிறைவேறும்‌. அதிகாரத்தைக்‌ குறைப்பதால்‌ சிரமங்கள்‌ மிகும்‌, மிகுவிப்பதால்‌ சிரமங்கள்‌ குறையும்‌. /7……214

பொருளால்‌ (பணத்தால்‌) மட்டும்‌ எச்சேயலும்‌ நிறைவேறி விடாது. பல குறுநில மன்னர்கள்‌ அக்கறையுடன்‌ செயலாற்ற
வேண்டும்‌, அவர்களை நம்‌ வசம்‌ இருக்குமாறு செய்ய பொருளைத்‌ தாராளமாகத்‌ தரவேண்டும்‌. கொடுமை கூடாது.
உண்மையும்‌ நட்பும்‌ இருக்க வேண்டும்‌. iv—215

மூலதனம்‌ (கருவூலம்‌) குதிரைகள்‌ முதலியன இருந்தும்‌, தகுந்த மனிதர்சள்‌ (அதிகாரிகள்‌) இன்மையால்‌, அவை இழந்து
நாட்டையும்‌ இழந்து, பகை வருக்கடங்கி இருக்கும்‌ சிம்மாசனகிகள்‌ (சமஸ்தானங்கள்‌) குறித்து நாம்‌ கேள்விப்பட்டதில்லையா? IV—216

அரசகுலத்தினர்‌ (க்ஷத்திரியர்‌) வேளான்‌ குலத்தினர்‌ (சூத்திரர்‌) முதலியவர்கள்‌ தம்மை இகழ்வர்‌ என்ற அச்சத்‌
தாலும்‌, தன்‌ போன்ற அற்தணர்களில்‌ தருமத்தை அறித்தேனும்‌ – சங்கடங்கள்‌ வரும்போது உறுதியாக நின்று சமாளிப்பர்‌ என்ப
தால்‌, அந்தணர்களை அதிகாரிகள்‌ ஆக்குவது மேன்மை பயக்கும்‌,
(பிரம்மனின்‌ குலையிலிருந்து அத்தணர்‌, தோளிலிருந்து கூத்திரியர்‌, தொடையிலிருந்து வைசியர்‌, பாதங்களிலிருந்து
சூத்திரர்‌ (தொண்டர்‌) பிறந்தனர்‌ என்று வேதம்‌ கூறும்‌) 114….217

வருமான அதிகாரிக்கு, கோயில்‌, முதலியவற்றின்‌ நிருவாக அதிகாரம்‌ தரக்கூடாது. அவன்‌ தன்‌ வருமான இழப்புக்டோக
கோயில்‌ சொத்து முதலியவற்றைக்‌ கவர்ந்து அரசனுக்கும்‌ அனுப்பிவைப்பான்‌. அவ்விதம்‌ செய்தாய்‌ தீங்காகும்‌. அதலின்‌
தனியதிகாரியே கோயிலுக்கிருத்தல்‌ வேண்டும்‌, கோயில்‌ சொத்தை அனுபவிப்பவன்‌ தானே நாசம்‌ அடைவான்‌, [7….218

மூதவில்‌ தனது நிலத்தின்‌ எல்லையை வரையறுத்து வேலி யிட்டு, புலம்‌ மென்மையுற கடப்பாரையால்‌ வேர்‌, தூர்களை
அப்புறப்படுத்தி உழுது பண்படுத்தும்‌ உழவன்‌ போல, மன்னன்‌ பகைவருடன்‌ நட்புடனோ, தன்‌ படை வலிமையாலோ தனது
நாட்டின்‌ எல்லையைப்‌ பத்திரப்படுத்தி, கவலையின்றி பிறகு தன்‌தாட்டினுள்‌ உள்ள எதிர்ப்புகளை அடக்க, ஆட்சியை திலைதீரட்டுவதே சிறப்பாகும்‌, IV-—219

புறங்கூறுபவனை முதலிலேயே கடிந்து பே9ிவிடக்‌ கூடாது. அவன்‌ கூற்றை மனதில்‌ அழ்ந்து சிந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌. முற்றிலும்‌ பொய்‌ என்று தெரிந்தாலும்‌ பின்‌ அவனை வீரட்டி, விடாமல்‌ தனிமைப்‌ படுத்தி, அவன்‌ கூற்றுக்களை மட்டும்‌ புறக்கணிக்கவும்‌.
(பிறர்‌ மறைவான செய்திகளை அறிய அத்தகையோரும்‌
அரசனுக்குத்‌ தேவை ஆகையால்‌, அவனை விரட்டி விடக்கூடாது, அவன்‌ கூற்றை முற்றிலும்‌, ஏற்கவோ, நம்பிவிடவோ கூடாது என்பது கருத்து) IV—220

புகுதற்கரிய மலை, காடுகளைச்‌ சேரிந்த இடங்களில்‌ வ௫ிக்கும்‌, தொல்லை தருபவர்களான வேடர்‌, Loh opt aon ar ஊரீகளைசி சேர்ந்த இடங்களைச்‌ சரண்‌ புகுந்த அன்னியா்‌ களுக்குத்‌ தாற்காலிகமாகத்‌ தரவும்‌. அவர்கள்‌ கலந்திருந்தாலும்‌ போரிட்டாலும்‌ இரண்டு?ம நமக்கு நல்லது தான்‌, 1V—222

முக்கியமாக மலைப்பகுதியுள்ளவர்கள்‌ . தன்னோடிணையாத அரசனுக்கு மக்களால்‌ தொல்லைகள்‌ மிகும்‌. எப்படியும்‌
பயத்தைப்‌ போக்க அவர்களை கைவசப்படுத்திக்‌ கொள்ள
வேண்டும்‌. .நம்பிக்கையில்லாமை, நம்பிக்கை, சினம்‌, நட்பு; மிகுபகை, மிகுந்த உறவு முதலியன அவர்கள்‌ சிறுமதியாளர்‌
ஆதலின்‌ சிறிய காரணங்களிலேயே அமையும்‌,
(சிறிய விஷயங்களினாலேயே சினப்பர்‌. அதே போல்‌ சிறியவற்றினாலே மிகுந்த அன்பு பாராட்டுவர்‌ என்பது கிருத்து ) எப்படி என்றால்‌ IV—222

ஒரு வேடன்‌ வில்லுடன்‌ மற்றொரு வேடன்‌ இல்லம்‌ சென்றான்‌. (வந்தவனுக்கு) பாலன்னத்துடன்‌ விருந்தளிதிதான்‌
(அடுப்பில்‌) பளைநார்‌ வெந்து கொண்டிருக்கக்‌ கண்டான்‌. மாமிசம்‌ என்று கருதினான்‌. (விருந்தோம்பலை) மறந்து
(அவனை தனக்கு மாமிசம்‌ படைக்கவில்லை என்று இநந்து அவனைக்‌ கொல்லக்‌ கருதினான்‌) வழியனுப்ப வற்துவனைக்‌
கொல்லக்‌ கருதும்‌ (போது (வீருந்தளித்த) அவன்‌ ““விடைதருக/
(என்‌ வீட்டில்‌ வேரும்‌) பணைநார்‌ முறுகிம்‌ கெட்டுவிடும்‌] விரைந்தேக வேண்டும்‌” *, எனவும்‌ (மாமிகமல்ல என்று உணரிநற்து தெளிந்தவனாக (கொல்லாது) செல்ல விடுத்தான்‌ (முன்னைய கருத்துக்கு உதாரணம்‌) V—223

காட்டாள்கள்‌, பால்‌ சோற்றுக்கே, படைத்தவரிகளிடம்‌ நன்றியுடன்‌ சத்தியம்‌ தவறாமல்‌ நடந்து கொள்வர்‌, அது
போன்ற ஒரு சிறிய தவறு கண்டாலும்‌ அதைப்‌ பெரிது படுத்தி சினந்து விடுவார்கள்‌,
(மிகச்‌ சிறு காரணஙிகளிலும்‌ அன்பும்‌ பகையும்‌ கொள்‌ வார்கள்‌ என்பது கருத்து) IV—224

வாய்மை தவறாமை காட்டாள்களை வசமாக்க உதவும்‌, பகையரசரின்‌ தரதர்களைக்‌ கெளரவிப்பதனால்‌ அவர்தம்‌ நட்பு
உருவாகும்‌. சரியான சமயத்தில்‌ சம்பளம்‌ கொடுப்பதால்‌ காலாட்படை வசமாகும்‌. குதிரை வீரர்களை பரிசுகள்‌ தருவதால்‌
பற்றுடன்‌ இருப்பர்‌. IV—225

மேலான குதிரை, யானைகளை உனக்கு வேண்டியவர்‌களிடமே தருக, குதிரை லாயம்‌ முதலியன விழிப்போடு
பாதுகாக்கவும்‌. அதிகாரிகள்‌ வசம்‌ அப்பொறுப் பிளை ஒப்படைக்க வேண்டாம்‌. IV—226

ஒரு காரியத்தை ஒருவன்‌ சொன்னால்‌ அவன்‌ மீது பொறாமையினால்‌ மற்றொருவன்‌ அதனை மறுத்துரைப்பான்‌. இருவர்‌
கூற்றையும்‌ கண்டிக்காமல்‌ ஏற்றுக்‌ கொண்டு, பின்‌, அவை முடிந்ததும்‌, முதலில்‌ சொன்னவள்‌ கூற்று சரியானதாயின்‌
அதன்படி செய்தால்‌ நலமாகும்‌, 1V—227

அமைச்சர்கள்‌, ,வெளிப்பகைவர்களைதீ தாண்டியும்‌, உட்பகையாகிய திருடர்‌. கொள்ளையடிப்பவர்களை அடக்காமல்‌
வளரவிட்டும்‌, அரசனைச்‌ சிக்க வைத்து தம்மை விட்டால்‌ வேறு க தியில்லை எனுமாறு/ஆட்டிப்படைக்க முயல்வார்கள்‌. 1V—228

தனக்கு வேண்டி௰வரீகட்குத்‌ தருவார்கள்‌, பிறருக்கு உதவ மாட்டார்கள்‌. அரசன்‌ வாக்கை திறைவேற்றாமல்‌ தவறும்படி
செய்வர்‌. (அதற்குக்‌ காரணம்‌): அரசன்தான்‌ என நம்பும்படி செய்வர்‌, பிறரை அரசனிடம்‌ அணுகமுடியாதபடி செய்வர்‌. IV—229

கூர்மையுடைய ஜடராக்கினி (வயிற்றில்‌ சீரணிக்க உதவும்‌ வெம்மையுடைய தி) கபம்‌, பித்தம்‌, வாயு முதலிய குற்றங்களால்‌
வலிமை கெட்டு மந்தமுற்றால்‌ புறமான பெரு மருந்துகளால்‌ மீண்டும்‌ வலிமை (ஆரோக்கியம்‌) பெறுவது போல, தீய
அமைச்சர்களை அடக்க புதியவனை நியமித்தால்‌ அவன்‌ அவர்கள்‌ செருக்கிளை அடக்குவான்‌. 1V—230

அந்த தியவர்களை அடக்குவது எப்படி எனின்‌. IV—231

நிதி (கருவூலம்‌)–யரளை குதிரைப்‌ படைகள்‌, தனது சுவா தினத்தில்‌ இருந்தால்‌, அறிவாளியும்‌ வீரமும்‌ உடைய மன்னனுக்கு
தீயவர்களால்‌ ஆதம்‌ தொந்தரவுகள்‌ தானாக நீஙிஒவிடும்‌.
(நிதி, பாதுகாப்பு இரண்டும்‌ அரசன்‌ வசம்‌ இருக்கவேண்டும்‌ கல்வி, சுகாதாரம்‌ போன்ற .பிற துறைகள்‌ பிற அமைச்சரிடம்‌
இருக்கலாம்‌ என்பது கருத்து) IV—232

வயிற்றுக்கு (கண்டிக்கு)  (அரசனைக்‌) கெடுக்கப்‌ பார்ப்பார்களே அன்றி அரசனுக்கு (உண்மையான) நண்பனும்‌ இருக்கிறானாம்‌ (இல்லை), ஆதலின்‌,
தரமாட்டேன்‌ என்று கூறி, விட்டு விடவும்‌ முடியாது, திறமையுடன்‌ அவர்கள்‌ (ஏதாவது தற்து திருப்திப்‌ படுத்தியவாறும்‌) நம்பாமலும்‌ நடதித வேண்டும்‌. 7833

ஒரு செயலில்‌ வெறுப்படையாமல்‌ ஈடுபடுவறைக்‌ கண்டு, Yo செயலிலும்‌ ஈடுபடுவான்‌ என்பதை அறிந்து சொள்க; துருபதன்‌ துரோணனைக்‌ கொல்வதற்காக ஒரு யாகம்‌ செய்யு மாறும்‌ இலட்சம்‌ பசுக்கள்‌ காணிக்கை தருவதாகவும்‌ கூறவும்‌; அதற்கு முனிவன்‌ (உபயாஜன்‌) தான்‌ செய்ய விரும்பவில்லை என்றும்‌ எனது அண்ணன்‌ (யாஜன்‌) செய்வான்‌/ ஒரு பழம்‌ புனித மற்ற இடத்தில்‌ கிடந்ததைக்‌ கண்டு நான்‌ வேண்டாது செல்ல அவன்‌ அதனை எடுத்துண்டான்‌.! வெறுப்புறவில்லை! ஆதலில்‌ அவன்‌ செய்வான்‌ என்பதை உணர முடியும்‌ என்றும்‌ கூறினான்‌. இது போல்‌ ஒருவனின்‌ செயல்‌ (நடத்தை) மூலம்‌ அவளது இயல்பை உணர்ந்து கொள்ள வேண்டுமேயன்றி எல்லஈ நிகழ்ச்சிகளையும்‌ கண்டு தெளிய முடியுமோ?
(துரோணன்‌ துருபதனின்‌ ஒரு சாலை மாணாக்கன்‌ என்ப தாலும்‌ தான்‌ கற்கும்‌ காலை பின்னாளில்‌ தான்‌ அரசளானதும்‌ பாதியரசு தருவதாக துருபதன்‌ கூறியதாலும்‌ தான்‌ வறுமையுற்ற போது குழந்தைக்காக பால்‌ வேண்டி இல பசுக்களை யாூப்‌ பதற்காக துருபதனிடம்‌ சென்றான்‌. துருபதன்‌ அடையாளம்‌ தெரியாதவனாக பொய்யாக நடந்தான்‌. அதனால்‌ சினமுற்ற துரோணன்‌ பின்னாளில்‌ அத்தினாபுரம்‌ வந்து கெளரவ பாண்டவர்கட்கு ஆசிரியனாக அமைந்தான்‌. அருச்சுணனைப்‌ பயிற்றுவித்து துருபதனை தன்‌ தேர்க்காலில்‌ இழுத்துவரச்‌ செய்தான்‌, இந்த அவமானம்‌ தாங்காத துருபதன்‌ யாகம்‌ செய்து துரோணனைச்‌ கொல்லும்‌ மகளைப்‌ பெற விரும்பினான்‌. அருச்சுணனை மணக்கும்‌ மகளைப்‌ பெற விரும்பினான்‌. அந்த யாகம்‌ செய்ய *உபயாஜன்‌” எனும்‌ முனிவனை வேண்ட அவன்‌ மறுத்து தன்‌ அண்ணன்‌ :₹யாஜன்‌” அக்காரியம்‌ செய்வான்‌ என்றும்‌ புனிதமற்ற. இடத்தில்‌ உள்ள பழத்தைத்‌ தான்‌ வெறுத்தும்‌ அவன்‌ அதை நயந்து எடுத்ததால்‌ இதை உணர்வ தாகவும்‌ கூறினான்‌. இக்கதை மகாபாரதம்‌ ஆஇிபருவத்தில்‌ வருகிறது.
சாதாரணமான பழம்‌ எடுத்த நிகழ்ச்சி மூலம்‌ இந்த சகோதரர்களின்‌ இயல்பு புலப்படுவது போல ஒரு மனிதனின்‌
நடதிதையை சாதாரண நிகழ்ச்சி மூலமேமுன்னறிந்து அவர்களை கணிக்க வேண்டும்‌ என்பது கருத்து) IV—234

“இவன்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌ கேடு நினைத்தவன்‌* என்று இருந்தாலும்‌ நீ அந்த இடரிலிருந்து நீங்கி வெற்றி பெற்ற பின்‌ அவனைத்‌ துன்புறுத்த வேண்டாம்‌. அவன்‌ மட்டும்‌ சகுவர்ந்து கொள்க! பாம்பின்‌ சோரைப்‌ பற்களைப்‌ பிடுங்கி விட்டால்‌ அது என்ன செய்ய இயலும்‌? அதுபோல அவன்‌
செருக்கடஙிகிக்‌ உடப்பான்‌. தனனைக்‌ கொல்லாது விட்டதற்காக நன்றியுடன்‌ நட்பும்‌ பூணமுயல்வாள்‌. IV—235

நாட்டின்‌ விரிலே பொருட்பேற்றுக்கு மூலமாகும்‌, நிலட்‌ கொஞ்சமாக இருந்தாலும்‌, குளம்‌, கால்வாய்கள்‌ உருவாக்கி, ஏழைகளிடம்‌ வரி, பணமேல்‌. தானியமோ நியாயப்படி  படு,சீதாமல்‌ வசூலிதிது அவர்களை வளம்‌ உறும்படி செய்தால்‌ அரசுக்கு அறமும்‌ பொருளும்‌ வளரும்‌. IV—236

மக்கள்‌, வறுமையால்‌’ வாடி கட்குச்‌ சென்றால்‌, அவர்களை “மீண்டும்‌ அழைத்து வநீது குடி யேற்றி வைக்காமல்‌, அந்த மக்களின்‌ பசுக்களையும்‌ தானியங்‌ களையும்‌ விற்று, வீடுகள்‌ விறகுக்‌ காகும்‌ என்று எண்ணும்‌ போரீக்களத்து நரி போன்ற அதிகாரிகளை உடைய அரசன்‌, ஏழு தீவுகளையாண்டாலும்‌ செல்வவளம்‌ உற மாட்டான்‌. ]134._.237

அரசன்‌, தனது வருமானத்தில்‌ மிகுந்த கொடைக்கும்‌ தன்‌ அனுபவத்திற்கும்‌ ஆய இரண்டுச்கும்‌ ஒரு பங்கும்‌; படைபலம்‌ பெருக்கி அதனைக்‌ காப்பாற்ற இருபஙிகும்‌, சுருவூலத்தில்‌ சேமிக்க ஒரு பங்கும்‌ ஆக (நாற்பகிகாக்கி) வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஒற்றர்கள்‌ மூலமாக பகைவரின்‌ நட்பினரைக்‌ கண்‌
காணிப்பதோடு தன்‌ அங்கங்களான அமைச்சு, முதலியவர்களின்‌ இரகசிய நடவடிச்கைகளையும்‌ சண்காணித்து வரவேண்டும்‌, தன்‌ நாட்டில்‌ உள்ள திருடர்கள்‌ முதலிய தீயரைத்‌ தண்டிக்க வேண்டும்‌: IV —238

பரிசில்களை ஈந்து காவலர்களைப்‌ பேணி, அவர்கள்‌ மூலம்‌ திருடர்களைத்‌ தெரிந்து உடனே தண்டித்து விட வேண்டும்‌.
தாமதப்படுத்தினால்‌ அவன்‌ தப்பித்துக்‌ கொண்டு ஓடிவிட்டால்‌ அவனுகிகுப்‌ பதில்‌ ஒருவனைப்‌ பிடித்து வைக்திருப்பார்கள்‌.
அவனை அரசன்‌ அறியாது தண்டித்து இகழ்‌ அடைய நேரும்‌, கழுவேற்றிய பெரிய செட்டி நியாயம்தான்‌ நடக்கும்‌,
(கழுவிலேற்றிய பெரிய செட்டி. நியாயம்‌ ஆனது. ஒரு மூட அரசனிடம்‌ ஒருவன்‌ தான்‌ கட்டிய மண்வீடு மழையில்‌ சுரைந்து
சுவர்‌ இடிந்து விட்டதால்‌ தனக்கு நஷ்டம்‌ ஏற்பட்டதென்றும்‌
அவரைத்‌ தண்டிக்கவேண்டும்‌ என்றும்‌ முறையிட்டான்‌. மன்னன்‌ காரணம்‌ யார்‌ என விசாரித்தான்‌. மழைக்குக்‌ காரணம்‌ மேகம்‌,
மேகத்துக்கு காரணம்‌ குயவன்‌ இட்ட புகை, புசைக்குக்‌ காரணம்‌ குயவன்‌, குயவன்‌ சூளை வைக்கக்‌ காரணம்‌ யார்‌ என விசாரித்‌
தான்‌, மழைக்குக்‌ காரணம்‌ மேகம்‌, மேகத்துக்குக்‌ காரணம்‌ குயவன்‌ இட்ட. வுகை, புகைக்கு காரணம்‌ குயவன்‌. குயவன்‌
சூளை வைக்கக்‌ காரணம்‌ திருமண விழாச்‌ சட்டிகள்‌ செய்ததால்‌
இருமண மாப்பிள்ளை, என்ற கடைசியில்‌ மாப்பிள்ளை தலையில்‌ வீழ்ந்தது. அவனைக்‌ கழுவில்‌ ஏற்றுமாறு அரசன்‌ கூறினான்‌.
அவனைக்‌ கழுவில்‌ ஏற்றச்‌ சென்ற போது அவன்‌ நான்‌ ஒல்லியாக
இருக்கிறேன்‌. கழுமரம்‌ பருத்துள்ளதால்‌ அதற்கேற்ற ஆளை ஏற்றுங்கள்‌ என்றான்‌. அரசனும்‌ ஏற்று அங்கே வேடிக்கை
பார்க்கு வந்த பருத்த உடலையுடைய சேட்டி ஒருவனை கழுவி
லேற்றினான்‌ என்று கதை. இதை *சூலப்ருது வணிக நியாயம்‌” என வடமொழி நியாயம்‌ (பழமொழி) கூறும்‌, இக்கதையை இசி
செய்யுளில்‌ பயன்படுத்துகிறார்‌ கவிஞர்‌, தொல்காப்பிய உரை பில்‌ இதுபோல வேறொரு கதை வருவது –4-239

அரசன்‌, அரசியல்‌ குறித்துத்‌ தெரிய வேண்டியவற்றிகி நால