Archive for the ‘ஸ்ரீ ஹரி வம்சம்’ Category

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 113–(மிருதப்ராஹ்மணபுத்ரஸ்ய புன꞉ ப்ரத்யாநயனம்)-பிராமணரின் குழந்தைகளை மீட்ட ஸ்ரீ கிருஷ்ணன் |-

February 1, 2021

பிராமணனின் நான்கு மகன்களையும் மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன்–

அர்ஜுன உவாச
தத꞉ பர்வதஜாலானி ஸரிதஷ்²ச வனானி ச |
அபஷ்²யம் ஸமதிக்ரம்ய ஸாக³ரம் வருணாலயம் ||2-113-1

ததோ(அ)ர்க⁴முத³தி⁴꞉ ஸாக்ஷாது³பனீய ஜனார்த³னம் |
ஸ ப்ராஞ்ஜலி꞉ ஸமுத்தா²ய கிம் கரோமீதி சாப்³ரவீத் ||2-113-2

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “மலைகளையும், ஆறுகளையும், காடுகளையும் கடந்து சென்ற நாங்கள் மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலைக் கண்டோம்.(1) அப்போது பெருங்கடலானவன் {சமுத்ரராஜன்}, தன் சொந்த வடிவில் கரங்களைக் கூப்பிய படியும், அர்க்கியத்தைச் சுமந்தபடியும் ஜனார்த்தனனின் முன்பு தோன்றி, “நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டான்.(2)

ப்ரதிக்³ருஹ்ய ஸ தாம் பூஜாம் தமுவாச ஜனார்த³ன꞉ |
ரத²பந்தா²னமிச்சா²மி த்வயா த³த்தம் நதீ³பதே ||2-113-3

பெருங்கடலின் துதியை ஏற்றுக் கொண்ட ஜனார்த்தனன், “ஓ! ஆறுகளின் தலைவா, “என் தேருக்கான வழியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன்” என்றான்.(3)

அதா²ப்³ரவீத்ஸமுத்³ரஸ்து ப்ராஞ்ஜலிர்க³ருட³த்⁴வஜம் |
ப்ரஸீத³ ப⁴க³வன்னைவமன்யோ(அ)ப்யேவம் க³மிஷ்யதி ||2-113-4

த்வயைவ ஸ்தா²பிதம் பூர்வமகா³தோ⁴(அ)ஸ்மி ஜனார்த³ன |
த்வயா ப்ரவர்ததே மார்கே³ யாஸ்யாமி க³மனாயதாம் ||2-113-5

அன்யே(அ)ப்யேவம் க³மிஷ்யந்தி ராஜானோ த³ர்பமோஹிதா꞉ |
ஏவம் ஸஞ்சிந்த்ய கோ³விந்த³ யத்க்ஷ²மம் தத்ஸமாசர ||2-113-6

அப்போது சமுத்ரன், கூப்பிய கரங்களுடன் கூடியவனாகக் கருடத்வஜனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தலைவா, அருளப்பட்டிருப்பாயாக. இவ்வாறு செயல்படாதே, பின்னர்ப் பிறரும் இவ்வாறு செய்வார்கள்.(4) ஓ! ஜனார்த்தனா, எட்டாத ஆழமுடைய பரந்த பரப்பில் முன்பு நீயே என்னை நிலை நிறுத்தினாய். நீ நிறுவிய வழியையே நான் பின்பற்றுவேன்.(5) நீ இவ்வாறு செய்தால், பலத்தில் செருக்குடைய பிற மன்னர்களும் இந்த வழியின் மூலம் என்னைக் கடந்து செல்வார்கள். எனவே, ஓ! கோவிந்தா, சரியென நீ கருதுவதைச் செய்வாயாக” என்றான்.(6)

வாஸுதே³வ உவாச
ப்³ராஹ்மணர்த²ம் மத³ர்த²ம் ச குரு ஸாக³ர மத்³வச꞉ |
மத்³ருதே ந புமான்கஸ்சித³ன்யஸ்த்வாம் த⁴ர்ஷயிஷ்யதி ||2-113-7

வாசுதேவன், “எனக்காகவும், இந்தப் பிராமணருக்காகவும் என் சொற்களைப் பின்பற்றுவாயாக. என்னைத் தவிர வேறு எவராலும் உன்னைத் தாக்க {கடந்து செல்ல} முடியாது” என்றான்.(7)

அதா²ப்³ரவீத்ஸமுத்³ரஸ்து புனரேவ ஜனார்த³னம் |
அபி⁴ஷா²பப⁴யாத்³பீ⁴தோ பா³ட³மேவம் ப⁴விஷ்யதி ||2-113-8

ஷோ²ஷயாம்யேஷ மார்க³ம் தே யேன த்வம் க்ருஷ்ண யாஸ்யஸி |
ரதே²ன ஸஹ ஸூதேன ஸத்⁴வஜேன து கேஷ²வ ||2-113-9

சாபத்திற்கு அஞ்சிய பெருங்கடல் அப்போது ஜனார்த்தனனிடம், “ஓ! கிருஷ்ணா, ஓ! கேசியைக் கொன்றவனே, அவ்வாறே ஆகட்டும்.(8) நான் வற்ற செய்யும் பாதையில் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட உன்னுடைய தேர் அதன் சாரதியுடன் செல்லட்டும்” என்றான்.(9)

வாஸுதே³வ உவாச
மயா த³த்தோ வர꞉ பூர்வம் ந ஷோ²ஷம் யாஸ்யஸீதி ஹ |
மானுஷாஸ்தே ந ஜானீயுர்விவிதா⁴ன்ரத்னஸஞ்சயான் ||2-113-10

ஜலம் ஸ்தம்ப⁴ய ஸாதோ⁴ த்வம் ததோ யாஸ்யாம்யஹம் ரதீ² |
ந ச கஷ்²சித்ப்ரமாணம் தே ரத்னானாம் வேத்ஸ்யதே நர꞉ ||2-113-11

வாசுதேவன், “ஓ! பெருங்கடலே, உன்னில் உள்ள ரத்தினக் குவியலைக் குறித்து மக்கள் அறியாத வரையில் நீ ஒருபோதும் வற்றமாட்டாயென முன்பு நான் உனக்கு வரமளித்திருந்தேன் {எனவே உன் நீரை நீ வற்ற செய்யாதே}.(10) என்னையும், என் தேரையும் அனுமதிக்கும் எல்லை வரை மட்டும் உன் நீர் கலங்காதிருக்கட்டும் {அசையாமல் இறுகட்டும்}. அவ்வாறு செய்தால் ஒருபோதும் எந்த மனிதனாலும் உன்னில் உள்ள ரத்தினக் குவியலின் அளவை மதிப்பிட முடியாது” என்றான்.(11)

ஸாக³ரேண ததே²த்யுக்தே ப்ரஸ்தி²தா꞉ ஸ்ம ஜலேன வை |
ஸ்தம்பி⁴தேன பதா² பூ⁴மௌ மணிவர்ணேன பா⁴ஸ்வதா ||2-113-12

ததோ(அ)ர்ணவம் ஸமுத்தீர்ய குரூனப்யுத்தரான்வயம் |
க்ஷணேன ஸமதிக்ராந்தா க³ந்த⁴மாத³னமேவ ச ||2-113-13

ததஸ்து பர்வதா꞉ ஸப்த கேஷ²வம் ஸமுபஸ்தி²தா꞉ |
ஜயந்தோ வைஜயந்தஷ்²ச நீலோ ரஜதபர்வத꞉ ||2-113-14

மஹாமேரு꞉ ஸகைலாஸ இந்த்³ரகூடஷ்²ச நாமத꞉ |
பி³ப்⁴ராணா வர்ணரூபாணி விவிதா⁴ன்யத்³பு⁴தானி ச ||2-113-15

இதைக் கேட்டப் பெருங்கடல், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்; நாங்கள் ஒளிபெருந்திய அந்தச் செந்நீரில் நிலத்தில் செல்வது போலச் சென்றோம்.(12) ஒரு கணத்தில் நாங்கள் பெருங்கடலையும், உத்தரக் குருவையும், கந்தமாதனத்தையும் கடந்து சென்றோம்.(13) அப்போது ஏழு மலைகளான ஜயந்தம், வைஜயந்தம், நீலம், ரஜதம்,(14) மஹாமேரு, கைலாசம், இந்திரக்கூடம் ஆகியவை பல்வேறு அற்புத வடிவங்களை ஏற்றுக் கேசவனின் முன்பு தோன்றி கோவிந்தனை வணங்கிவிட்டு,(15)

உபஸ்தா²ய ச கோ³விந்த³ம் கிம் குர்மேத்யப்³ருவம்ஸ்ததா³ |
தாம்ஷ்²சைவ ப்ரதிஜக்³ராஹ விதி⁴வன்மது⁴ஸூத³ன꞉ ||2-113-16

தானுவாச ஹ்ருஷீகேஷ²꞉ ப்ரணாமாவனதான்ஸ்தி²தான் |
விவரம் க³ச்ச²தோ மே(அ)த்³ய ரத²மார்க³꞉ ப்ரதீ³யதாம் ||2-113-17

தே க்ருஷ்ணஸ்ய வச꞉ ஷ்²ருத்வா ப்ரதிக்³ருஹ்ய ச பர்வதா꞉ |
ப்ரத³து³꞉ காமதோ மார்க³ம் க³ச்ச²தோ ப⁴ரதர்ஷப⁴ ||2-113-18

“நாங்கள் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டன.
மதுசூதனனான ரிஷிகேசன், அவர்கள் அனைவரையும் வரவேற்று,(16) தன் முன் தலைவணங்கி நின்ற அந்த மலைகளிடம், “நீங்கள் எனக்கு வழி வழங்க வேண்டும்” என்றான்.(17)
அந்த மலைகள், கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு அவற்றை ஏற்றுக் கொண்டு அவனுக்கு வழி வழங்கி மறைந்தன. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே},(18)

தத்ரைவாந்தர்ஹிதா꞉ ஸர்வே ததா³ஷ்²சர்யதரம் மம |
அஸக்தம் ச ரதோ² யாதி மேக⁴ஜாலேஷ்விவாம்ஷு²மான் ||2-113-19

ஸப்தத்³வீபான்ஸஸிந்தூ⁴ம்ஷ்²ச ஸப்த ஸப்த கி³ரீனத² |
லோகாலோகம் ததா²தீத்ய விவேஷ² ஸுமஹத்தம꞉ ||2-113-20

இக்காரியத்தைக் கண்டு நான் பேராச்சரியத்தால் நிறைந்தேன். மேகங்களின் ஊடாகச் செல்லும் சூரியனைப் போல நாங்கள் தடங்கலேதும் இன்றிப் பயணித்தோம்.(19) அந்தச் சிறந்த தேர், ஏழு த்வீபங்கள், பெருங்கடல்கள், ஏழு ஆறுகள் ஆகியவற்றையும், லோகாலோகத்தையும் {லோகாலோக மலையையும்} கடந்து மற்றொரு பகுதிக்குள் {உலகத்திற்குள்} நுழைந்தது.(20)

தத꞉ கதா³சித்³து³꞉கே²ன ரத²மூஹுஸ்துரங்க³மா꞉ |
பங்கபூ⁴தம் ஹி திமிரம் ஸ்பர்ஷா²த்³விஜ்ஞாயதே ந்ருப ||2-113-21

அத² பர்வதபூ⁴தம் தத்திமிரம் ஸமபத்³யத |
ததா³ஸாத்³ய மஹாராஜ நிஷ்ப்ரயத்னா ஹயா꞉ ஸ்தி²தா꞉ ||2-113-22

ததஷ்²சக்ரேண கோ³விந்த³꞉ பாடயித்வா தமஸ்ததா³ |
ஆகாஷ²ம் த³ர்ஷ²யாமாஸ ரத²பந்தா²னமுத்தமம் ||2-113-23

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குதிரைகள் தேரை இழுக்கப் பெரிதும் சிரமப்படுவதை நான் கண்டேன். என் கரங்களால் அவற்றைத் தீண்டியபோது, இருளானது அடர்த்தியான புழுதியைப் {சேற்றைப்} போல இருப்பதை உணர்ந்தேன்.(21) அது படிப்படியாக ஒரு மலையின் வடிவை ஏற்றது. {குதிரைகள் மேலும் நகர முடியாமல் நின்றன}.(22)அதைக் கண்ட கோவிந்தன், தன் சக்கரத்தால் அந்த இருளையும், புழுதியையும் விலக்கினான், தேருக்கான வழியும் புலப்பட்டது.(23)

நிஷ்க்ரம்ய தமஸஸ்தஸ்மாதா³காஷே² த³ர்ஷி²தே ததா³ |
ப⁴விஷ்யாமீதி ஸஞ்ஜ்ஞா மே ப⁴யம் ச விக³தம் மம !!2-113-24

ததஸ்தேஜ꞉ ப்ரஜ்வலிதமபஷ்²யம் தத்ததா³ம்ப³ரே |
ஸர்வலோகம் ஸமாவிஷ்²ய ஸ்தி²தம் புருஷவிக்³ரஹம் ||2-113-25

தம் ப்ரவிஷ்டோ ஹ்ருஷீகேஷோ² தீ³ப்தம் தேஜோநிதி⁴ம் ததா³ |
ரத² ஏவ ஸ்தி²தஷ்²சாஹம் ஸ ச ப்³றஹ்மணஸத்தம꞉ ||2-113-26

ஸ முஹூர்தாத்தத꞉ க்ருஷ்ணோ நிஷ்²சக்ராம ததா³ ப்ரபு⁴꞉ |
சதுரோ பா³லகான்க்³ருஹ்ய ப்³ராஹ்மணஸ்யாத்மஜாம்ஸ்ததா³ ||2-113-27

ப்ரத³தௌ³ ப்³ராஹ்மணாயாத² புத்ரான்ஸர்வாஞ்ஜனார்த³ன꞉ |
த்ரய꞉ பூர்வம் ஹ்ருதா யே ச ஸத்³யோ ஜாதஷ்²ச பா³லக꞉ ||2-113-28

வானம் புலப்பட்டு, இருளில் இருந்து நாங்கள் வெளிப்பட்டு என் அச்சம் அகன்ற பிறகே நான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என நினைத்தேன்.(24) ஒரு கணத்தில், உலகங்கள் அனைத்திலும் படர்ந்து பரந்திருக்கும் ஒரு மனிதனின் வடிவில் ஓர் ஒளிக் குவியலை வானத்தில் கண்டேன்.(25) பிறகு, ரிஷிகேசன் அந்த ஒளிக் குவியலுக்குள் நுழைந்தான், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரும், நானும் தேரில் காத்திருந்தோம்.(26) பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் ஒரு கணத்தில் அந்தப் பிராமணரின் நான்கு மகன்களுடன் திரும்பி வந்து,(27) முன்பு களவாடப்பட்ட மூன்று சிறுவர்களையும், புதிதாகப் பிறந்த குழந்தையையும் அந்தப் பிராமணரின் கரங்களில் ஒப்படைத்தான்.(28)

ப்ரஹ்ருஷ்டோ ப்³ராஹ்மணஸ்தத்ர புத்ராந்த்³ருஷ்ட்வா புன꞉ ப்ரபோ⁴ |
அஹம் ச பரமப்ரீதோ விஸ்மிதஷ்²சாப⁴வம் ததா³ ||2-113-29

ததோ வயம் புன꞉ ஸர்வே ப்³ராஹ்மணஸ்ய ச தே ஸுதா꞉ |
யதா²க³தா நிவ்ருத்தா꞉ ஸ்ம ததை²வ ப⁴ரதர்ஷப⁴ ||2-113-30

தத꞉ ஸ்ம த்³வாரகாம் ப்ராப்தா꞉ க்ஷணேன ந்ற்^பஸத்தம |
அஸம்ப்ராப்தே(அ)ர்த⁴தி³வஸே விஸ்மிதோ(அ)ஹம் புன꞉ புன꞉ ||2-113-31

ஸபுத்ரம் போ⁴ஜயித்வா து த்³விஜம் க்ருஷ்ணோ மஹாயஷா²꞉ |
த⁴னேன வர்ஷயித்வா ச க்³ருஹம் ப்ராஸ்தா²பயத்ததா³ ||2-113-32

ஓ! பேரரசே {யுதிஷ்டிரரே}, அந்தப் பிராமணர் தமது மகன்களைத் திரும்பப் பெற்றதும் பெருமகிழ்ச்சியடைந்தார், நானும் பேராச்சரியத்திலும், பெருமகிழ்ச்சியிலும் நிறைந்தேன்.(29) ஓ! பாரதர்களில் முதன்மையானவரே, அதன் பின்னர் நாங்கள் ஏற்கனவே சென்ற வழியிலேயே அந்தப் பிராமணரின் மகன்களுடன் திரும்பி வந்தோம்.(30) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஒரே கணத்தில் துவாரகையை அடைந்த நாங்கள் அந்தப் பகலின் முதல் பகுதியே {முற்பகலே} கூட நிறைவடையாததைக் கண்டோம். அதைக் கண்ட நான் மீண்டும் ஆச்சரியத்தால் நிறைந்தேன்.(31) அதன் பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், அந்தப் பிராமணருக்கும், அவரது மகன்களுக்கும் உணவளித்து, செல்வத்தால் அவர்களை நிறைவடையச் செய்து, அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தான்” என்றான் {அர்ஜுனன்}.(32)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வாஸுதே³வமாஹாத்ம்யே ப்³ராஹ்மணபுத்ராநயனே
த்ரயோத³ஷா²தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 112–(ஸ்ரீ கிருஷ்ணஸ்யோதீசீ கமநம்)-ஸ்ரீ கிருஷ்ணனின் சாரதியாக ஸ்ரீ அர்ஜுனன் |-

February 1, 2021

குழந்தையைக் காக்க முடியாமல் ஸ்ரீ மத் துவாரகை திரும்பிய ஸ்ரீ அர்ஜுனன்; தீப்புகுவதில் இருந்து ஸ்ரீ அர்ஜுனனைத் தடுத்த ஸ்ரீ கிருஷ்ணன்; ஸ்ரீ அர்ஜுனனை தனக்குத் தேரோட்டியாக நியமித்தது

அர்ஜுந உவாச
முஹூர்தேந வயம் க்³ராமம் தம் ப்ராப்ய ப⁴ரதர்ஷப⁴ |
விஷ்²ராந்தவாஹநா꞉ ஸர்வே நிவாஸாயோபஸம்ஸ்தி²தா꞉ ||2-112-1

ததோ க்³ராமஸ்ய மத்⁴யே(அ)ஹம் நிவிஷ்ட꞉ குருநந்த³ந |
ஸமந்தாத்³வ்ருஷ்ணிஸைந்யேந மஹதா பரிவாரித꞉ ||2-112-2

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒரு கணத்திற்குள் {ஒரு முஹூர்த்த காலத்திற்குள்} அந்தக் கிராமத்தின் எல்லையை அடைந்த நாங்கள், எங்கள் விலங்குகள் அனைத்தும் களைப்படைந்து இருந்ததால் அங்கேயே {எல்லையிலேயே} தங்கினோம்.(1) சில கணங்களுக்குப் பிறகு நான் விருஷ்ணிகளின் பெரும்படை சூழ நகருக்குள் நுழைந்தேன்.(2)

தத꞉ ஷ²குநயோ தீ³ப்தா ம்ருகா³ஷ்²ச க்ரூரபா⁴ஷிண꞉ |
தீ³ப்தாயாம் தி³ஷி² வாஷ²ந்தோ ப⁴யமாவேத³யந்தி மே ||2-112-3

ஸந்த்⁴யாராகோ³ ஜபாவர்ணோ பா⁴நுமாம்ஷ்²சைவ நிஷ்ப்ரப⁴꞉ |
பபாத மஹதீ சோல்கா ப்ருதி²வீ சாப்யகம்பத ||2-112-4

தாந்ஸமீக்ஷ்ய மஹோத்பாதாந்தா³ருணாம்ˮல்லோமஹர்ஷணான் |
யோக³மாஜ்ஞாபயம்ஸ்தத்ர ஜநஸ்யோத்ஸுகசேதஸ꞉ ||2-112-5

யுயுதா⁴நபுரோகா³ஷ்²ச வ்ருஷ்ண்யந்த⁴கமஹாரதா²꞉ |
ஸர்வே யுக்தரதா²꞉ ஸஜ்ஜா꞉ ஸ்வயம் சாஹம் ததா²ப⁴வம் ||2-112-6

அந்த நேரத்தில் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன, எரியும் கழுகுகளும், விலங்குகளும் எங்களை அச்சுறுத்தின.(3) பெரிய கருங்கொள்ளிகள் அங்கே விழுந்தன, சூரியன் தன் பிரகாசத்தை இழந்திருந்தான், பூமி நடுங்கினாள்.(4) பயங்கரம் நிறைந்தவையும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்தத் தீய சகுனங்களைக் கண்ட நான் கவலையில் நிறைந்தவனாக என்னுடைய படை வீரர்களிடம் ஆயத்தமாக இருக்குமாறு ஆணையிட்டேன்.(5) யுயுதானனின் {சாத்யகியின்} தலைமையிலான விருஷ்ணிகள், அந்தகக் குலப் பெருந்தேர் வீரர்கள் அதைக் கேட்டுவிட்டுத் தங்கள் தங்கள் தேர்களை ஆயத்தம் செய்தனர், நானும் ஆயுதம் தரித்தவனானேன்.(6)

க³தே(அ)ர்த⁴ராத்ரஸமயே ப்³ராஹ்மணோ ப⁴யவிக்லவ꞉ |
உபாக³ம்ய ப⁴யாத³ஸ்மாநித³ம் வசநமப்³ரவீத் ||2-112-7

காலோ(அ)யம் ஸமநுப்ராப்தோ ப்³ராஹ்மண்யா꞉ ப்ரஸவஸ்ய மே |
ததா² ப⁴வந்தஸ்திஷ்ட²ந்து ந ப⁴வேத்³வஞ்சநம் யதா² ||2-112-8

நள்ளிரவு கடந்ததும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் பிராமணர் எங்களை அணுகி, “என் மனைவி பிள்ளை பெறும் தருவாயில் இருக்கிறாள். நான் வஞ்சிக்கப்படாத வகையில் நீங்கள் {கவனமாக} உங்களை நிலைநிறுத்திக் கொள்வீராக” என்றார்.(7,8)

முஹூர்தாதே³வ சாஷ்²ரௌஷம் க்ருபணம் ருதி³தஸ்வநம் |
தஸ்ய விப்ரஸ்ய ப⁴வநே ஹ்ரியதே(அ)ஹ்ரியதேதி ச ||2-112-9

அதா²காஷே² புநர்வாசமஷ்²ரௌஷம் பா³லகஸ்ய வை |
ஊம்ˮஹேதி ஹ்ரியமாணஸ்ய ந ச பஷ்²யாமி ராக்ஷ²ஸம் ||2-112-10

ததோ(அ)ஸ்மாபி⁴ஸ்ததா³ தாத ஷ²ரவர்ஷை꞉ ஸமந்தத꞉ |
விஷ்டம்பி⁴தா தி³ஷ²꞉ ஸர்வா ஹ்ருத ஏவ ஸ பா³லக꞉ ||2-112-11

ஓ! மன்னா, {அவர் சொல்லிச் சென்ற} ஒரு கணத்திற்குள், “அபகரிக்கப்பட்டான், அபகரிக்கப்பட்டான்” என்று கதறியவாறு பரிதாபகரமான அழுகுரல் அந்தப் பிராமணரின் வீட்டில் இருந்து கேட்டது.(9)
குழந்தையின் அழுகுரல் வானத்தில் கேட்டாலும் அந்த ராட்சசனை எங்களால் காண முடியவில்லை.(10) திசைகள் அனைத்தையும் கலங்கடித்தவாறு கணைமாரியை நாங்கள் பொழிந்தாலும் {அவ்வாறு பொழிந்து குழந்தை அபகரிக்கப்படுவதைத் தடுக்க முயன்றாலும்} அந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டான்.(11)

ப்³ராஹ்மநோ(ஆ)ர்தஸ்வரம் க்ருத்வா ஹ்ருதே தஸ்மிந்குமாரகே |
வாச꞉ ஸ பருஷாஸ்தீவ்ரா꞉ ஷ்²ராவயாமாஸ மாம் ததா³ ||2-112-12

வ்ருஷ்ணயோ ஹதஸங்கல்பாஸ்ததா²ஹம் நஷ்டசேதந꞉ |
மாமேவம் ஹி விஷே²ஷேண ப்³ராஹ்மண꞉ ப்ரத்யபா⁴ஷத ||2-112-13

ரக்ஷிஷ்யாமீதி சோக்தம் தே ந ச ரக்ஷிதவாநஸி |
ஷ்²ருணு வாக்யமித³ம் ஷே²ஷம் யத்த்வமர்ஹஸி து³ர்மதே ||2-112-14

வ்ருதா² த்வம் ஸ்பர்த⁴ஸே நித்யம் க்ருஷ்ணேநாமிதபு³த்³தி⁴நா |
யதி³ ஸ்யாதி³ஹ கோ³விந்தோ³ நைதத³த்யாஹிதம் ப⁴வேத் ||2-112-15

யதா² சதுர்த²ம் த⁴ர்மஸ்ய ரக்ஷிதா லப⁴தே ப²லம் |
பாபஸ்யாபி ததா² மூட⁴ பா⁴க³ம் ப்ராப்நோத்யரக்ஷிதா ||2-112-16

ரக்ஷிஷ்யாமீதி சோக்தம் தே ந ச ஷ²க்தோ(அ)ஸி ரக்ஷிதும் |
மோக⁴ம் கா³ண்டீ³வமேதத்தே மோக⁴ம் வீர்யம் யஷ²ஷ்²ச தே ||2-112-17

அந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டதும் அந்தப் பிராமணர், விருஷ்ணிகளும், நானும் எங்கள் உணர்வுகளை இழக்கும் வகையில் கடுஞ்சொற்களால் எங்களை ஏசினார். அவர் குறிப்பாக என்னிடம்,(12,13) “நீ என்னைப் பாதுகாப்பதாகச் சொன்னாய். ஆனால் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. எனவே, ஓ! தீய புத்தியைக் கொண்ட இழிந்தவனே, இந்த நல்ல சொற்களைக் கேட்பாயாக.(14) ஒப்பற்ற புத்திமானான கேசவனிடம் {போட்டி போடுவது போல} எப்போது நீ வீணாகக் கொக்கரிக்கிறாய். கோவிந்தன் இங்கிருந்தால், இக்கொடுமை நேர்ந்திராது.(15) ஓ! மூடா, அறத்தின் நான்கில் ஒரு பகுதிக்கு உரியவனாக ஒரு காவலன் இருப்பதைப் போலவே ஒருவனைப் பாதுகாக்க முடியாதவனும் {அதன் மூலம்} விளையும் பாவத்தில் பங்குடையவனே;(16) என்னைப் பாதுகாப்பதாக நீ சொன்னாலும் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. உன்னுடைய காண்டீவமும், ஆற்றலும், புகழும் வீணே[மஹாபாரதம், கர்ண பர்வம் பகுதி 69ல் காண்டீவத்தைப் பழித்ததற்காக யுதிஷ்டிரனைக் கொல்ல விழைகிறான் அர்ஜுனன். ]” என்றார்.(17)

அகிஞ்சிது³க்த்வா தம் விப்ரம் ததோ(அ)ஹம் ப்ரஸ்தி²தஸ்ததா² |
ஸஹ வ்ருஷ்ண்யந்த⁴கஸுதைர்யத்ர க்ருஷ்ணோ மஹாத்³யுதி꞉ ||2-112-18

ததோ த்³வாரவதீம் க³த்வா த்³ருஷ்ட்வா மது⁴நிகா⁴திநம் |
வ்ரீடி³த꞉ ஷோ²கஸந்தப்தோ கோ³விந்தே³நோபலக்ஷித꞉ ||2-112-19

எனினும், நான் அந்தப் பிராமணரிடம் ஏதும் பேசாமல் விருஷ்ணி, அந்தகக் குல இளவரசர்களுடன் சேர்ந்து, பெரும்பிரகாசம் கொண்ட கிருஷ்ணன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டேன்.(18) துவாராவதி நகரை அடைந்த நான் மதுசூதனனான கோவிந்தனைக் கண்டேன், வெட்கத்தாலும், கவலையாலும் நிறைந்திருந்த என்னை அவனும் கண்டான்.(19)

ஸ து மாம் வ்ரீடி³தம் த்³ருஷ்ட்வா விநிந்த³ந்க்ருஷ்ணஸந்நிதௌ⁴ |
மௌட்⁴யம் பஷ்²யத மே யோ(அ)ஹம் ஷ்²ரத்³த³தே⁴ க்லீப³கத்த²நம் ||2-112-20

ந ப்ரத்³யும்நோ நாநிருத்³தோ⁴ ந ராமோ ந ச கேஷ²வ꞉ |
யத்ர ஷ²க்தா꞉ பரித்ராதும் கோ(அ)ந்யஸ்தத³வநேஷ்²வர꞉ ||2-112-21

தி⁴க³ர்ஜுநம் வ்ருதா²நாத³ம் தி⁴கா³த்மஷ்²லாகி⁴நோ த⁴நு꞉ |
தை³வோபஸ்ருஷ்டோ யோ மௌர்க்²யாதா³க³ச்ச²தி ச து³ர்மதி꞉ ||2-112-22

வெட்கி நின்ற என்னைக் கண்ட மாதவன், இனிய சொற்களால் என்னையும், அந்தப் பிராமணரையும் தேற்றினான்
{அந்தப் பிராமணர், கிருஷ்ணனின் முன்பு வெட்கி நின்ற என்னை நிந்திக்கும் வகையில், “ஓர் அலியின் சொற்களைக் கேட்ட என் மடமையைப் பார்.(20) பிரத்யும்னனாலோ, அநிருத்தனாலோ, பலனாலோ {பலராமனாலோ}, கேசவனாலோ காக்க முடியாதவனை வேறு எந்தத் தேவனால் காக்க முடியும்?(21) பயனற்ற சொற்களைப் பேசும் இந்த அர்ஜுனனும் பயனற்றவனே. தற்பெருமை பேசும் இவனுடைய வில்லும் பயனற்றதே[இந்தப் பிராமணர் இப்போது இரண்டாவது முறையாகக் காண்டீவத்தைப் பழிக்கிறார். அதுவும் கிருஷ்ணனின் முன்னிலையில் வைத்து.]. மூடத்தனத்தால் தீய புத்தி கொண்டவன், தேவனால் காக்கமுடியாததை இவன் காக்க வருகிறான்” என்றார்.(22)

ஏவம் ஷ²பதி விப்ரர்ஷௌ வித்³யாமாஸ்தா²ய வைஷ்ணவீம் |
யயௌ ஸம்யமநீம் வீரோ யத்ராஸ்தே ப⁴க³வாந்யம꞉ ||2-112-23

விப்ராபத்யமசக்ஷாணஸ்தத ஐந்த்³ரீமகா³த்புரீம் |
ஆக்³நேயீம் நைர்ருதீம் ஸௌம்யாமுதீ³சீம் வாருணீம் ததா² ||2-112-24

ரஸாதலம் நாகப்ருஷ்ட²ம் தி⁴ஷ்ண்யாந்யந்யாந்யுதா³யுத⁴꞉ |
ததோ(அ)லப்³த்⁴வா த்³விஜஸுதமநிஸ்தீர்ணப்ரதிஷ்²ரவ꞉ ||2-112-25

இவ்வாறு அந்தப் பிராமணர் சபித்துக் கொண்டிருந்தபோது நான் வைஷ்ணவி வித்தையைக் கையாண்டு வீரத் தலைவனான யமன் இருக்கும் ஸம்யமணிக்கு {ஸம்யமபுரத்திற்குச்} சென்றேன்.(23) அங்கே அந்தப் பிராமணரின் மகனைக் காணமுடியாமல், இந்திரனின் நகருக்கு {அமராவதிக்குச்} சென்றேன். அதன் பிறகு நெருப்பு தேவனின் {அக்னிதேவனின்} நகரமான நிர்ருதிக்கும், சோமனின் நகரான உதீசீக்கும், வருணனின் நகருக்கும் {வாருணிக்கும்} சென்றேன்.(24) அதன்பிறகு என் ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ரசாதலத்திற்கும், சொர்க்கத்திற்கும் சென்றேன். எங்கேயும் அந்தப் பிராமணரின் மகனை என்னால் காண முடியவில்லை. என்னால் என் சொற்களைக் காக்க முடியவில்லை.(25)

அக்³நிம் விவிக்ஷு꞉ க்ருஷ்ணேந ப்ரத்³யும்நேந நிஷேதி⁴த꞉ |
த³ர்ஷ²யே த்³விஜஸூநும் தே மாவஜ்ஞாத்மாநமாத்மநா ||2-112-26

கீர்திம் ந ஏதே விபுலாம் ஸ்தா²பயிஷ்யந்தி மாநவா꞉ |
இதி ஸம்பா⁴ஷ்²ய மாம் ஸ்நேஹாத்ஸமாஷ்²வாஸ்ய ச மாத⁴வ꞉ ||2-112-27

நான் நெருப்புக்குள் நுழைய இருந்தபோது[இருமுறை காண்டீவத்தை நிந்தித்தாலும் அவ்வாறு செய்தது ஒரு பிராமணர் என்பதைக் கருத்தில் கொண்டும், தன்னால் தன் சொல்லைக் காக்க முடியவில்லை என்ற வேதனையிலும் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் அர்ஜுனன் தீப்புக விழைகிறான். அப்போது அவனைத் தடுத்து கிருஷ்ணன் சொல்லும் வாக்கியம் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்ட அர்ஜுனனைப் பின்வாங்கச் செய்கிறது. எவரையும் பின்வாங்கச் செய்யும். துரோண பர்வம் பகுதி 145ல் அர்ஜுனனின் சபதத்தை மெய்ப்பிப்பதற்காகவும், அவனது உயிரைக் காப்பதற்காகவும் சூரியனை மறைத்தான் கிருஷ்ணன். ஜெயத்ரதன் விஷயத்தில் அர்ஜுனன் ஏற்ற சபதத்தைப் படிக்கத் துரோண பர்வம் 73ம் பகுதிக்குச் செல்லவும் ], கிருஷ்ணனும், பிரத்யும்னனும் என்னைத் தடுத்தனர். கிருஷ்ணன், “உன் ஆன்மாவை அவமதிக்காதே {உன்னை நீயே அவமதித்துக் கொள்ளாதே}. இந்தப் பிராமணரின் மகனை நீ காண்பாய் {உன் இலக்கை நீ அடைவாய்}.(26) உன்னுடைய பெரும் புகழை மனிதர்கள் எப்போதும் நிலைநிறுத்துவார்கள்” என்றான். மாதவன் இவ்வாறு அன்புடன் பேசி எனக்கு ஆறுதல் கூறினான்.(27)}

ஸாந்த்வயித்வா து தம் விப்ரமித³ம் வசநமப்³ரவீத் |
ஸுக்³ரீவம் சைவ ஷை²ப்³யம் ச மேக⁴புஷ்பப³லாஹகௌ ||2-112-28

யோஜயாஷ்²வாநிதி ததா³ தா³ருகம் ப்ரத்யபா⁴ஷத |
ஆரோப்ய ப்³ராஹ்மணம் க்ருஷ்ணோ ஹ்யவரோப்ய ச தா³ருகம் ||2-112-29

மாமுவாச தத꞉ ஷௌ²ரி꞉ ஸாரத்²யம் க்ரியதாமிதி |
தத꞉ ஸமாஸ்தா²ய ரத²ம் க்ருஷ்ணோ(அ)ஹம் ப்³ராஹ்மந꞉ ஸ ச |
ப்ரயாதா꞉ ஸ்ம தி³ஷ²ம் ஸௌம்யாமுதீ³சீம் கௌரவர்ஷப⁴ ||2-112-30

அவன் {கிருஷ்ணன்}, அந்தப் பிராமணரையும் தேற்றிய பிறகு, {தன் தேரோட்டியான} தாருகனிடம், “என் குதிரைகளான சுக்ரீவம், சைப்யம், மேகபுஷ்பம், பலாஹகம் ஆகியவற்றை ஆயத்தம் செய்வாயாக” என்றான்.(28)
சூரனின் வழித்தோன்றலான கிருஷ்ணன், அந்தப் பிராமணரைத் தேரில் ஏறச் செய்து, தாருகனை கீழே இறக்கி, என்னைத் தேரோட்டும்படி கேட்டுக் கொண்டான். ஓ! குருவின் வழித்தோன்றலே, அதன்பிறகு, கிருஷ்ணனும், அந்தப் பிராமணரும், நானும் அந்தத் தேரில் வடக்கு நோக்கிப் புறப்பட்டோம்” என்றான் {அர்ஜுனன்}.(30)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வாஸுதே³வமாஹாத்ம்யே க்ருஷ்ணஸ்ய உதீ³சீக³மநே
த்³வாத³ஷா²தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 111–(ஸ்ரீ வாஸுதேவ மாஹாத்ம்யம்)–ஸ்ரீ அர்ஜுனன் விளக்கிய மற்றொரு அற்புதம் |–

February 1, 2021

பிராமணரின் குழந்தையைக் காக்க கிருஷ்ணனால் ஏவப்பட்ட அர்ஜுனன்-

ஜநமேஜய உவாச
பூ⁴ய ஏவ மஹாபா³ஹோ க்ருஷ்ணாஸ்ய ஜக³தாம் பதே꞉ |
மாஹாத்ம்யம் ஷ்²ரோதுமிச்சா²மி பரமம் த்³விஜஸத்தம ||2-111-1

ந ஹி மே த்ருப்திரஸ்தீஹ ஷ்²ருண்வதஸ்தஸ்ய தீ⁴மத꞉ |
கர்மணாமநுஸந்தா⁴நம் புராணஸ்ய மஹாத்மந꞉ ||2-111-2

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, உலகத்தின் தலைவனான கிருஷ்ணனின் மகிமைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன்.(1) உயரான்மாவும், நுண்ணறிவுமிக்கவனும், புராதனப் புருஷனுமான கிருஷ்ணனின் பெருஞ்செயல்களைக் கேட்பதில் இன்னும் தணிவடையாதவனாக இருக்கிறேன்” என்றான்.(2)

வைஷ²ம்பாயந உவாச
நாந்த꞉ ஷ²க்ய꞉ ப்ரபா⁴வஸ்ய வக்தும் வர்ஷஷ²தைரபி |
கோ³விந்த³ஸ்ய மஹாராஜ ஷ்²ரூயதாமித³மத்³பு⁴தம் ||2-111-3

ஷ²ரதல்பே ஷ²யாநேந பீ⁴Sமேண பரிசோதி³த꞉ |
கா³ண்டீ³வத⁴ந்வா பீ³ப⁴த்ஸுர்மாஹாத்ம்யம் கேஷ²வஸ்ய யத் ||2-111-4

ராஜ்ஞாம் மத்⁴யே மஹாராஜ ஜ்யேஷ்ட²ம் ப்⁴ராதரமப்³ரவீத் |
யுதி⁴ஷ்டி²ரம் ஜிதாமித்ரமிதி தச்ச்²ருணு கௌரவ ||2-111-5

வைசம்பாயனர், “ஓ! மன்னா, கோவிந்தனின் மகிமைகளைச் சொல்லி முடிக்க நூறு ஆண்டுகளும் போதாது.(3) காண்டீவ வில் தரித்தவனான பீபத்சு (அர்ஜுனன்), கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மரால் தூண்டப்பட்டதும் சொன்ன பேரற்புதம் நிறைந்த கேசவனின் செயல்களை இப்போது கேட்பாயாக.(4) ஓ! குருவின் அரச வழித்தோன்றலே, மன்னர்களின் முன்னிலையில், பகைவர் அனைவரையும் வென்ற தன் அண்ணன் யுதிஷ்டிரனிடம் அவன் சொன்னதைக் கேட்பாயாக.(5)

அர்ஜுந உவாச
புராஹம் த்³வாரகாம் யாத꞉ ஸம்ப³ந்தீ⁴நவலோகக꞉ |
ந்யவஸம் பூஜிதஸ்தத்ர போ⁴ஜவ்ருஷ்ண்யந்த⁴கோத்தமை꞉ ||2-111-6

தத꞉ கதா³சித்³த⁴ர்மாத்மா தீ³க்ஷிதோ மது⁴ஸூத³ந꞉ |
ஏகாஹேந மஹாபா³ஹு꞉ ஷா²ஸ்த்ரத்³ருஷ்டேந கர்மணா || 2-111-7

ததோ தீ³க்ஷிதமாஸீநமபி⁴க³ம்ய த்³விஜோத்தம꞉ |
க்ருஷ்ணம் விஜ்ஞாபயாமாஸ த்ராஹி த்ராஹீதி சாப்³ரவீத் ||2-111-8

அர்ஜுனன், “முன்பொரு காலத்தில் என் உறவினர்களைக் காண்பதற்காக நான் துவராகா நகருக்குச் சென்றேன். போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டவனாக அங்கே சில காலம் வாழ்ந்திருந்தேன்.(6) அந்த நேரத்தில் அற ஆன்மாவும், பெருங்கரங்களைக் கொண்டவனுமான மதுசூதனன், சாத்திரச் சடங்குகளின்படி ஒரு நாள் அளவுக்கு நீளும் வேள்வியை நடத்தினான் {வேள்வியில் ஒரு நாள் தீக்ஷையில் இருந்தான்}.(7) கிருஷ்ணன் வேள்வியில் அமர்ந்திருந்தபோது ஒரு பிராமணர் தன் காரியங்களைச் சொல்லி அவனது பாதுகாப்பை நாடினார்.(8)

ப்³ராஹ்மண உவாச
ரக்ஷாதி⁴காரோ ப⁴வத꞉ பரித்ராயஸ்வ மாம் விபோ⁴ |
சதுர்தா²ம்ஷ²ம் ஹி த⁴ர்மஸ்ய ரக்ஷிதா லப⁴தே ப²லம் ||2-111-9

பிராமணர், “ஓ! தலைவா, நீயே (குடிமக்களின்) பாதுகாப்பிற்குப் பொறுப்பானவன்; மேலும், நற்பணியால் ஈட்டப்பட்ட புண்ணியத்தில் நான்கில் ஒரு பங்கைப் பெறத் தகுந்தவனே பாதுகாவலன்” என்றார்.(9)

வாஸுதே³வ உவாச
ந பே⁴தவ்யம் த்³விஜஷ்²ரேஷ்ட² ரக்ஷாமி த்வாம் குதோ ப⁴யம் |
ப்³ரூஹி தத்த்வேந ப⁴த்³ரம் தே யத்³யபி ஸ்யாத்ஸுது³ஷ்கரம் ||2-111-10

வாசுதேவன், “ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, உமக்கு நன்மை நேரட்டும். நீர் (எவருக்கும்) அஞ்ச வேண்டாம். எவ்வளவு கடும்பணியாக இருந்தாலும், உமது அச்சத்திற்குக் காரணமானவனிடம் இருந்து உம்மை நான் பாதுகாப்பேன். உமக்கு அச்சத்தை ஏற்படுத்துபவன் எவன்?” என்று கேட்டான்.(10)

ப்³ராஹ்மண உவாச
ஜாதோ ஜாதோ மஹாபா³ஹோ புத்ரோ மே ஹ்ரியதே(அ)நக⁴ |
த்ரயோ ஹ்ருதாஷ்²சதுர்த²ம் த்வம் க்ருஷ்ண ரக்ஷிதுமர்ஹஸி ||2-111-11

ப்³ராஹ்மந்யா꞉ ஸூதிகாலோ(அ)த்³ய தத்ர ரக்ஷா விதீ⁴யதாம் |
யதா² த்⁴ரியேத³பத்யம் மே ததா² குரு ஜநார்த³ந ||2-111-12

பிராமணர், “ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, என் மகன்கள் பிறந்த உடனேயே அபகரிக்கப்பட்டனர். ஓ! பாவமற்ற கிருஷ்ணா, என்னுடைய மூன்று மகன்களும் அவர்கள் பிறந்த உடனேயே அபகரிக்கப்பட்டனர். நீ இப்போது என் நான்காவது மகனைக் காக்க வேண்டும்.(11) ஓ! ஜனார்த்தனா, என் மனைவி பேறு கால வலியில் இருக்கிறாள். என் பிள்ளை அபகரிக்கப்படாத வகையில் நீ ஏற்பாடுகளைச் செய்வாயாக” என்றார்.(12)

அர்ஜுந உவாச
ததோ மாமாஹ கோ³விந்தோ³ தீ³க்Sஇதோ(அ)ஹம் க்ரதாவிதி |
ரக்ஷா ச ப்³ராஹ்மணே கார்யா ஸர்வாவஸ்தா²க³தைரபி ||2-111-13

அர்ஜுனன், “அப்போது கோவிந்தன் என்னிடம், “நான் இப்போது வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், எச்சூழ்நிலையிலும் ஒரு பிராமணர் நம்மால் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றான்.(13)

ஷ்²ருத்வாஹமேவம் க்ருஷ்ணஸ்ய வசோ(அ)வோசம் நராதி⁴ப |
மாம் நியோஜய கோ³விந்த³ ரக்ஷிஷ்யே(அ)ஹம் த்³விஜம் ப⁴யாத் ||2-111-14

கிருஷ்ணனின் சொற்களைக் கேட்ட நான் அந்தக் கோவிந்தனிடம், “இதில் என்னை நீ நியமிப்பாயாக. நான் இந்தப் பிராமணரின் அச்சத்தை அகற்றுகிறேன்” என்றேன்.(14)

இத்யுக்த꞉ ஸ ஸ்மிதம் க்ருத்வா மாமுவாச ஜநார்த³ந꞉ |
ரக்ஷஸீத்யேவமுக்தஸ்து வ்ரீடி³தோ(அ)ஸ்மி நராதி⁴ப ||2-111-15

இவ்வாறு சொல்லப்பட்டதும் சற்றே புன்னகைத்த ஜனார்த்தனன், “உன்னால் இவரைப் பாதுகாக்க முடியுமா?” என்று கேட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கிருஷ்ணனின் அந்தச் சொற்களைக் கேட்டு நான் பெரிதும் வெட்கமடைந்தேன்.(15)

ததோ மாம் வ்ரீடி³தம் மத்வா புநராஹ ஜநார்த³ந꞉ |
க³ம்யதாம் கௌரவஷ்²ரேஷ்ட² ஷ²க்யதே யதி³ ரக்ஷிதும் ||2-111-16

த்வத்புரோகா³ஷ்²ச ரக்ஷந்து வ்ருஷ்ண்யந்த⁴கமஹாரதா²꞉ |
ருதே ராமம் மஹாபா³ஹும் ப்ரத்³யும்நம் ச மஹாப³லம் ||2-111-17

இவ்வாறு வெட்கமடைந்த என்னைக் கண்ட ஜனார்த்தனன் மீண்டும், “உன்னால் அவரைப் பாதுகாக்க இயலுமென்றால் செல்.(16) பெருங்கரங்களைக் கொண்ட ராமர் {பலராமர்}, பெருந்தேர் வீரனான பிரத்யும்னன் ஆகியோரைத் தவிர, விருஷ்ணி, அந்தகக் குலத்தோர் பிறர் உன்னைப் பின்தொடர்வார்கள்” என்றான்.(17)

ததோ(அ)ஹம் வ்ருஷ்ணிஸைந்யேந மஹதா பரிவாரித꞉ |
தமக்³ரதோ த்³விஜம் க்ருத்வா ப்ரயாத꞉ ஸஹ ஸேநயா ||2-111-18

பிறகு விருஷ்ணி படை சூழ நான் என் முன் அந்தப் பிராமணரை வைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றேன்” என்றான் {அர்ஜுனன்}.(18)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வாஸுதே³வமாஹாத்ம்யே ஏகாத³ஷா²தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 110–(தந்யோபாக்யாநம்)–ஸ்ரீ நாரதர் சொன்ன ஸ்ரீ கிருஷ்ணனின் மகிமை |–

February 1, 2021

ஸ்ரீ மத் துவாரகையில் பலநாட்டு மன்னர்களின் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன ஸ்ரீ நாரதர்.

வைஷ²ம்பாயந உவாச
ஹ்ருதோ யதை³வ ப்ரத்³யும்ந꞉ ஷ²ம்ப³ரேணாத்மகா⁴திநா |
மாஸே(அ)ஸ்மிந்நேவ ஸாம்ப³ஸ்து ஜாம்ப³வத்யாமஜாயத ||2-110-1

பா³ல்யாத்ப்ரப்⁴ருதி ராமேண ஷ²ஸ்த்ரேஷு விநியோஜித꞉ |
ராமாத³நந்தரஷ்²சைவ மாநித꞉ ஸர்வவ்ரூஷ்ணிபி⁴꞉ ||2-110-2

ஜாதமாத்ரே தத꞉ க்ருஷ்ண꞉ ஷு²பா⁴ம் தாமவஸத் புரீம் |
நிஹதாமித்ரஸாமந்த꞉ ஷ²க்ரோத்³யாநம் யதா²மர꞉ ||2-110-3

யாத³வீம் ச ஷ்²ரியம் த்³ருஷ்ட்வா ஸ்வாம் ஷ்²ரியம் த்³வேஷ்டி வாஸவ꞉ |
ஜநார்த³நப⁴யாச்சைவ ந ஷா²ந்திம் லேபி⁴ரே ந்ருபா꞉ ||2-110-4

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தன் அழிவைத் தானே விரும்பிய சம்பரனால் பிரத்யும்னன் அபகரிக்கப்பட்ட அதே மாதத்தில் ஜாம்பவதி சாம்பனைப் பெற்றாள்.(1) அவன் {சாம்பன்} தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து பலராமனால் ஆயுதப் பயன்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டான். பிற விருஷ்ணிகள் அவனை ராமனுக்குச் சற்றே குறைந்தவனாகக் கருதி மதித்து வந்தனர்.(2) அவன் {சாம்பன்} பிறந்ததிலிருந்து கிருஷ்ணன், பகைவர்களற்றவனாகவும், பகை மன்னர்கள் யாரும் அற்றவனாகவும் நந்தனத் தோட்டத்தில் வாழும் தேவர்களைப் போலத் தன்னுடைய தலைநகரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.(3) அந்த நேரத்தில் ஜனார்த்தனனின் மீது கொண்ட அச்சத்தால் பகை மன்னர்களால் அமைதியாக இன்புற்றிருக்க முடியவில்லை; யாதவர்களின் செழிப்பைக் கண்ட வாசவனும் கூடத் தன் வளங்களைத் தானே விரும்பாதிருந்தான்.(4)

கஸ்யசித்த்வத² காலஸ்ய புரே வாரணஸாஹ்வயே |
து³ர்யோத⁴நஸ்ய யஜ்ஞே வை ஸமீயு꞉ ஸர்வபார்தி²வா꞉ ||2-110-5

தாம் ஷ்²ருத்வா மாத⁴வீம் லக்ஷ்²மீம் ஸபுத்ரம் ச ஜநார்த³நம் |
புரீம் த்³வாரவதீம் சைவ நிவிஷ்டாம் ஸாக³ராந்தரே ||2-110-6

தூ³தைஸ்தை꞉ க்ருதஸந்தா⁴நா꞉ ப்ருதி²வ்யாம் ஸர்வபார்தி²வா꞉ |
ஷ்²ரியம் த்³ரஷ்²டும் ஹ்ருஷீகேஷ²மாஜக்³மு꞉ க்ருஷ்ணமந்தி³ரம் ||2-110-7

அந்த நேரத்தில் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தில் {வாரண நகரத்தில் [யானையின் பெயரைக் கொண்ட நகரத்தில்]} ஒரு வேள்வியைச் செய்தான், மன்னர்கள் அனைவரும் அந்த நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(5) ஜனார்த்தனனையும், அவனது மகன்களையும், அவனது செழிப்பையும், கடற்கரையில் அமைந்துள்ள துவாரகா நகரையும் கேள்விப்பட்ட அந்த மன்னர்கள்,(6) தங்கள் ஒற்றர்களின் {அல்லது தூதர்களின்} மூலம் செய்திகளைச் சேகரித்துவிட்டு, விருந்தினர்களை விரும்புபவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனுமான கிருஷ்ணனைக் காண அவனது அரண்மனைக்குச் சென்றனர்.(7)

து³ர்யோத⁴நமுகா²꞉ ஸர்வே த்⁴ருதராஷ்த்ரவஷா²நுகா³꞉ |
பாண்த³வப்ரமுகா²ஷ்²சைவ த்⁴ருஷ்டத்³யும்நாத³யோ ந்ருபா꞉ ||2-110-8

பாண்ட்³யாஷ்²சோலகலிங்கே³ஷா² பா³ஹ்லீகா த்³ராவிடா³꞉ க²ஷா²꞉ |
அக்ஷௌஹிணீ꞉ ப்ரகர்ஷந்தோ த³ஷ² சாஷ்டௌ ச பூ⁴மிபா꞉ ||2-110-9

ஆஜக்³முர்யாத³வபுரீம் கோ³விந்த³பு⁴ஜபாலிதாம் |
தே பர்வதம் ரைவதகம் பரிவார்யாவநீஷ்²வரா꞉ ||2-110-10

விவிஷு²ர்யோஜநாக்²யாஸு ஸ்வாஸு ஸ்வாஸு ச பூ⁴மிஷு |
தத꞉ ஷ்²ரீமாந்ஹ்ருஷீகேஷ²꞉ ஸஹ யாத³வபுங்க³வை꞉ ||2-110-11

திருதராஷ்டிரனின் ஆளுகையில் இருந்த மன்னன் துரியோதனன், {அவனது தம்பிகள்}, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, திருஷ்டத்யும்னன் ஆகியோரும்,(8) பாண்டிய, சோழ, கலிங்க, பாஹ்லீக, திராவிட, கச நாடுகளின் மன்னர்கள் ஆகியோரும், பிறரும் எனப் பதினெட்டு அக்ஷௌஹிணி படைவீரர்களும், கிருஷ்ணனின் ஆயுதங்களால் பாதுகாக்கப்பட்ட யாதவர்களின் நகரத்தை அடைந்தனர்.(9) {அந்த மன்னர்கள், ரைவதக மலையின் அருகில் தங்கள் தொண்டர்களுடன் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் தங்கினர்}.(10) தாமரைக் கண்ணனான ரிஷிகேசன், மன்னர்களுக்குரிய இடங்களில் அவரவர் தங்க வைக்கப்பட்ட பிறகு, முன்னணி யாதவர்களுடன் சேர்ந்து தானும் அவர்களிடம் சென்றான்.(11)

ஸமீபம் மாநவேந்த்³ராணாம் நிர்யயௌ கமலேக்ஷணா꞉ |
ஸ தேஷாம் நரதே³வாநாம் மத்⁴யஸ்தோ² மது⁴ஸூத³ந꞉ ||2-110-12

வ்யராஜத யது³ஷ்²ரேஷ்ட²꞉ ஷ²ரதீ³வ தி³வாகர꞉ |
ஸ தத்ர ஸமுதா³சாரம் யதா²ஸ்தா²நம் யதா²வய꞉ ||2-110-13

க்ருத்வா ஸிம்ஹாஸநே க்ருஷ்ண꞉ காஞ்சநே நிஷஸாத³ ஹ |
ராஜாநோ(அ)பி யதா²ஸ்தா²நம் நிஷேது³ர்விவிதே⁴ஷ்வத² ||2-110-14

ஸிம்ஹாஸநேஷு சித்ரேஷு பீடே²ஷு ச நராதி⁴பா꞉ |
ஸ யாத³வநரேந்த்³ராணாம் ஸமாஜ꞉ ஷு²ஷு²பே⁴ ததா³ ||2-110-15

ஸுராணாமஸுராணாம் ச ஸத³ஸி ப்³ரஹ்மணோ யதா² |
தேஷாம் சித்ரா꞉ கதா²ஸ்தத்ர ப்ரவ்ருத்தாஸ்தத்ஸமாக³மே |
யதூ³நாம் பார்தி²வாநாம் ச கேஷ²வஸ்யோபஷ்²ருண்வத꞉ ||2-110-16

யது குல மன்னனான மதுசூதனன் அந்த மன்னர்களுக்கு மத்தியில் கூதிர் காலச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(12) அதன் பிறகு அவரவர் வயதுக்கும் இடத்திற்கும் தகுந்த மதிப்பை அளித்துவிட்டு கிருஷ்ணன் பொன்னாலான தன் அரியணையில் அமர்ந்தான்.(13) அந்த மன்னர்களும் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் அமைந்தவையும், அழகாக அலங்கரிக்கப்பட்டவையுமான இருக்கைகளில் அமர்ந்தனர்.(14) பிரம்மனின் தர்பார் மண்டபத்தில் ஒளிரும் தேவர்களையும், அசுரர்களையும் போல அந்த மன்னர்களும் பேரழகுடன் திகழ்ந்தனர்.(15) யதுக்களும், மன்னர்களும் கிருஷ்ணன் கேட்கும் வகையில் பல்வேறு கருத்துகளை அங்கே பேசிக் கொண்டிருந்தனர்.(16)

ஏதஸ்மிந்நந்தரே வாயுர்வவௌ மேக⁴ரவோபம꞉ |
துமுலம் து³ர்தி³நம் சாஸீத்ஸவித்³யுத்ஸ்தநயித்நுமத் ||2-110-17

தத்³து³ர்தி³நதலம் பி⁴த்த்வா நாரத³꞉ ப்ரத்யத்³ருஷ்²யத |
ஸம்வேஷ்டிதஜடாபா⁴ரோ வீணாஸக்தேந பா³ஹுநா ||2-110-18

ஸ பபாத நரேந்த்³ராணாம் மத்⁴யே ஸாக³ரஸம்நிப⁴꞉ |
நாரதோ³(அ)க்³நிஷி²கா²கார꞉ ஷ்²ரீமாஞ்ச²க்ரஸகோ² முநி꞉ ||2-110-19

தஸ்மிந்நிபதிதே பூ⁴மௌ நாரதே³ முநிபுங்க³வே |
தத³த்³பு⁴தம் மஹாமேக⁴ம் வ்யபாக்ருஷ்யத து³ர்தி³நம் ||2-110-20

ஸோ(அ)வகா³ஹ்ய நரேந்த்³ராணாம் மத்⁴யே ஸாக³ரஸம்நிப⁴꞉ |
ஆஸநஸ்த²ம் யது³ஷ்²ரேஷ்ட²முவாச முநிரவ்யயம் ||2-110-21

ஆஷ்²சர்யம் க²லு தே³வாநாமேகஸ்த்வம் புருஷோத்தம꞉ |
த⁴ந்யஷ்²சாஸி மஹாபா³ஹோ லோகே நாந்யோ(அ)ஸ்தி கஷ்²சந ||2-110-22

அதேவேளையில், மின்னலுடனும், மேக முழக்கத்துடனும் கூடிய சூறாவளி அங்கே வீசியது. சில கணங்களுக்குப் பிறகு, அந்தத் தீய பருவ நிலையைப் பிளந்து கொண்டு சடாமுடியால் முற்றிலும் மறைக்கப்பட்டவரும், கைகளில் வீணையுடன் கூடியவருமான நாரதர் தோன்றினார்.(17,18) சக்ரனின் நண்பரும், நெருப்பைப் போன்று பிரகாசிப்பவருமான நாரத முனிவர், தீப்பிழம்பைப் போல மன்னர்களின் முன்பு இறங்கி வந்தார்.(19) முனிவர்களில் முதன்மையான நாரதர் நிலத்தைத் தீண்டிய உடனேயே அங்கே நிலவிய தீய பருவ காலம் மறைந்தது.(20) நாரதர், பெருங்கடலைப் போன்ற அந்த மன்னர்களின் சபையில் நுழைந்து, அரியணையில் அமர்ந்திருந்தவனும், நித்யனுமான அந்த யது மன்னனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, நீ ஒருவனே தேவர்களுக்கும் ஆச்சரியமானவனாக இருக்கிறாய். ஓ! புருஷோத்தமா, இவ்வுலகில் உன்னைப் போன்ற அருளைப் பெற்றவன் எவனுமில்லை” என்றார்.(22)

ஏவமுக்த꞉ ஸ்மிதம் க்ருத்வா ப்ரத்யுவாச முநிம் ப்ரபு⁴꞉ |
ஆஷ்²சர்யஷ்²சைவ த⁴ந்யஷ்²ச த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யஹம் ||2-110-23

ஏவமுக்தோ முநிஷ்²ரேஷ்ட²꞉ ப்ராஹ மத்⁴யே மஹீப்⁴ருதாம் |
க்ருஷ்ண பர்யாப்தவாக்யோ(அ)ஸ்மி க³மிஷ்²யாமி யதா²க³தம் ||2-110-24

பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன் இவ்வாறு சொல்லப்பட்டதும் புன்னகைத்தவாறே, “ஆம், நான் ஆச்சரியமானவன்தான், குறிப்பாகக் கொடைகளின் காரியத்தில் நல்லூழைப் பெற்றவன்” என்றான்.(23) மன்னர்களுக்கு மத்தியில் இவ்வாறு சொல்லப்பட்டதும் முனிவர்களில் முதன்மையான நாரதர், “ஓ! கிருஷ்ணா, சரியான மறுமொழியைக் கேட்டவனானேன். நான் இனி விரும்பிய உலகத்திற்குச் செல்வேன்” என்றார்.(24)

தம் ப்ரஸ்தி²தமபி⁴ப்ரேக்ஷ்ய பார்தி²வா꞉ ப்ராஹுரீஷ்²வரம் |
கு³ஹ்யம் மந்த்ரமஜாநந்தோ வசநம் நாரதே³ரிதம் ||2-110-25

ஆஷ்²சர்யமித்யபி⁴ஹிதம் த⁴ந்யோ(அ)ஸீதி ச மாத⁴வ |
த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யேவம் ப்ரயுக்தே(அ)பி ச நாரதே³ ||2-110-26

கிமேதந்நாபி⁴ஜாநீமோ தி³வ்யம் மந்த்ரபத³ம் மஹத் |
யதி³ ஷ்²ராவ்யமித³ம் க்ருஷ்ண ஷ்²ரோதுமிச்சா²ம தத்த்வத꞉ ||2-110-27

அந்தக் கூட்டத்தில் இருந்த மன்னர்களால் நாரதரின் புதிர்நிறைந்த சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள், நாரதர் புறப்பட இருந்த சமயத்தில் அண்டத்தின் தலைவனான கேசவனிடம்,(25) “ஓ! மாதவா, ’ஆச்சரியம் என்றும், அருள் என்றும்’ நாரதர் சொன்னார், நீயும் ’கொடைகள் {தக்ஷிணைகள்}’ என்று மறுமொழி கூறினாய்.(26) ஓ! கிருஷ்ணா, இந்தத் தெய்வீக வெளிப்பாடுகளை {திவ்யமான மந்திரப் பதங்களை} எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்பதற்குத் தகுந்தவர்களாக இருந்தால், அவற்றின் உண்மை பொருளைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர்.(27)

தாநுவாச தத꞉ க்ருஷ்ணா꞉ ஸர்வாந்பார்தி²வபுங்க³வான் |
ஷ்²ரோதவ்யம் நாரத³ஸ்த்வேஷ த்³விஜோ வ꞉ கத²யிஷ்யதி ||2-110-28

ப்³ரூஹி நாரத³ தத்த்வார்த²ம் ஷ்²ரோதுகாமா மஹீபு⁴ஜ꞉ |
யத்த்வயாபி⁴ஹிதம் வாக்யம் மயா நு ப்ரதிபா⁴ஷிதம் ||2-110-29

அப்போது கிருஷ்ணன், முன்னணி மன்னர்களான அவர்கள் அனைவரிடமும், “ஆம், நீங்கள் கேட்பதற்குத் தகுந்தவர்கள்தான், இருபிறப்பாளரான நாரதர் அதை உங்களுக்குச் சொல்வார்.(28) ஓ! தெய்வீக முனிவரே, உமது கேள்விக்கும், என் மறுமொழிக்கும் உண்டான உண்மைப் பொருளைக் கேட்க ஆவலாக இருக்கும் இந்த மன்னர்களுக்கு அவற்றை விளக்கிச் சொல்வீராக” என்றான்.(29)

ஸ பீடே² காஞ்சநே ஷு²ப்⁴ரே ஸூபவிஷ்ட꞉ ஸ்வலங்க்ருத꞉ |
ப்ரபா⁴வம் தஸ்ய வந்த்³யஸ்ய ப்ரவக்துமுபசக்ரமே ||2-110-30

நாரத³ உவாச
ஷ்²ரூயதாம் போ⁴ ந்ருபஷ்²ரேஷ்டா² யாவந்த꞉ ஸ்த² ஸமாக³தா꞉ |
அஸ்ய க்ருஷ்ணஸ்ய மஹதோ யதா² பாரமஹம் க³த꞉ ||2-110-31

அஹம் கதா³சித்³க³ங்கா³யாஸ்தீரே த்ரிஷவணாதிதி²꞉ |
சராம்யேக꞉ க்ஷபாபாயே த்³ருஷ்²யமாநே தி³வாகரே ||2-110-32

அபஷ்²யம் கி³ரிகூடாப⁴ம் கபாலத்³வயதே³ஹிநம் |
க்ரோஷ²மண்ட³லவிஸ்தாரம் தாவத்³த்³விகு³ணமாயதம் ||2-110-33

அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததும், வெண்மையானதுமான ஒரு பொன் ஆசனத்தில் அமர்ந்திருந்த நாரதர் அந்தச் சொற்களை விளக்கத் தொடங்கினார். நாரதர்,(30) “ஓ! கூடியிருக்கும் மன்னர்களே, இந்தப் பெருங்கேள்வியில் நான் எவ்வாறு தேர்ந்தேன் என்பதைக் கேளுங்கள் {இந்தக் கிருஷ்ணனது பெருமைகளின் எல்லை நான் புரிந்து கொண்ட அளவில் நீங்கள் அனைவரும் கேட்பீராக}.(31) ஒரு காலத்தில், நான் {ஒரு நாளைக்கு மூன்று வேளை நீராடுபவர்களின் விருந்தினராக இருந்த நான்} இரவு முடிந்து சூரியன் உதித்த போது, தனியாகக் கங்கைக் கரையில் நடந்து கொண்டிருந்தேன்.(32) என் வீணையின் வடிவம் போன்றதும், இரண்டு குரோசங்கள் நீளம் கொண்டதுமான ஓர் ஆமையை நான் கண்டேன்.(33)

சதுஷ்²சரணஸுஷ்²லிஷ்தம் க்லிந்நம் சைவ ஸபாங்கிலம் |
மம வீணாக்ருதிம் கூர்மம் க³ஜசர்மசயோபமம் ||2-110-34

ஸோ(அ)ஹம் தம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா ப்ரோக்தவாஞ்ஜலசாரிணம் |
த்வமாஷ்²சர்யஷ²ரீரோ(அ)ஸி கூர்ம த⁴ந்யோ(அ)ஸி மே மத꞉ ||2-110-35

யத்த்வமேவமபே⁴த்³யாயாம் கபாலாப்⁴யாம் ஸமாவ்ருத꞉ |
தோயே சரஸி நி꞉ஷ²ங்க꞉ கிஞ்சித³ந்யமசிந்தயன் ||2-110-36

அது நான்கு கால்களுடனும், இரண்டு ஓடுகளுடனும், நீரில் நனைந்தும், பாசிகளால் மறைக்கப்பட்டும் ஒரு மலையைப் போல் பெரிதாக இருந்தது. அதன் தோல் யானையைப் போன்று கடினமானதாக இருந்தது.(34) அப்போது என் கரங்களால் அந்த நீர்விலங்கைத் தீண்டி, “ஓ! ஆமையே, ஆச்சரியமான உடலைக் கொண்டவனாகவும், வெல்லப்பட முடியாத இரண்டு ஓடுகளைக் கொண்டவனாகவும் இருப்பதால் நற்பேறு பெற்றவனாகவும், பெரியவனாகவும் நான் உன்னைக் கருதுகிறேன். எவரையும் கவனிக்காமல் கவலையற்றவனாக நீ நீரில் திரிந்து கொண்டிருக்கிறாய்” என்றேன்.(35,36)

ஸ மாமுவாசாம்பு³சர꞉ கூர்மோ மாநுஷவத்ஸ்வயம் |
கிமாஷ்²சர்யம் மயி முநே த⁴ந்யஷ்²சாஹம் கத²ம் விபோ⁴ || 2-110-37

க³ங்கே³யம் நிம்நகா³ த⁴ந்யா கிமாஷ்²சர்யமத꞉ பரம் |
யத்ராஹமிவ ஸத்த்வாநி சரந்த்யயுதஷோ² த்³விஜ ||2-110-38

நீருலாவியான அந்த ஆமை, இதைக் கேட்டுவிட்டு ஒரு மனிதனைப் போல என்னிடம், “ஓ! முனிவரே, என்னில் ஆச்சரியமென்ன இருக்கிறது? ஓ! முனிவரே, நான் எவ்வாறு அருளப்பட்டவன் ஆவேன்?(37) கீழ்நோக்கிப் பாய்பவளும், என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விலங்குகள் உலவும் இடமாக இருப்பவளுமான இந்தக் கங்கையே அருளப்பட்டவள். இவளை விட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?” என்று கேட்டது.(38)

ஸோ(அ)ஹம் குதூஹலாவிஷ்டோ நதீ³ம் க³ங்கா³முபஸ்தி²த꞉ |
த⁴ந்யாஸி த்வம் ஸரிச்ச்²ரேஷ்டே² நித்யமாஷ்²சர்யபூ⁴ஷிதா |2-110-39

யா த்வமேவ மஹாதே³ஹை꞉ ஷ்²வாபதை³ருபஷோ²பி⁴தா |
ஹ்ரதி³நீ ஸாக³ரம் யாஸி ரக்ஷந்தீ தாபஸாலயான் ||2-110-40

இதனால் ஆவலில் நிறைந்த நான் கங்கையாற்றை அணுகி அவளிடம், “ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, உன்னில் நீ பல மடுக்களைக் கொண்டிருக்கிறாய். பேருடல் படைத்த விலங்குகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவளான நீ {முனிவர்கள் பலரின்} ஆசிரமங்களைப் பாதுகாத்துப் பெருங்கடலுக்குச் செல்கிறாய். எனவே நீ அருளப்பட்டவள், உன்னில் ஆச்சரியங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறாய்” என்றேன்” {என்றார் நாரதர்}.(39,40)

ஏவமுக்தா ததோ க³ங்கா³ ரூபிணீ ப்ரத்யபா⁴ஷத |
நாரத³ம் தே³வக³ந்த⁴ர்வம் ஷ²க்ரஸ்ய த³யிதம் த்³விஜம் || 2-110-41

மா மைவம் தே³வக³ந்த⁴ர்வ ஸங்க்³ராமகலஹப்ரிய |
நாஹம் த⁴ந்யா த்³விஜஷ்²ரேஷ்ட² நைவாஷ்²சர்யோபஷோ²பி⁴தா ||2-110-42

தவ ஸத்யே நிவிஷ்டஸ்ய வாக்யம் மாம் ப்ரதிபா³த⁴தே |
ஸர்வாஷ்²சர்யகரோ லோகே த⁴ந்யஷ்²சைவார்ணாவோ த்³விஜ꞉ ||2-110-43

யத்ராஹமிவ விஸ்தீர்ணா꞉ ஷ²தஷோ² யாந்தி நிம்நகா³꞉ |
ஸோ(அ)ஹம் த்ரிபத²கா³வாக்யம் ஷ்²ருத்வார்ணவமுபஸ்தி²த꞉ ||2-110-44

ஓ! ஜனமேஜயா, இவ்வாறு சொல்லப்பட்டதும் இருபிறப்பாளர்களில் முதன்மையானவரும், தெய்வீக கந்தர்வரும், இந்திரனுக்குப் பிடித்தமானவருமான நாரதரின் முன்பு தன் சொந்த வடிவில் தோன்றிய கங்கை,(41) “ஓ! தெய்வீகப் பாடகரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, ஓ! சச்சரவுகள் செய்ய விரும்புபவரே, இவ்வாறு சொல்லாதீர்; நான் அருளப்பட்டவளுமில்லை, ஆச்சரியங்களைக் கொண்டவளும் இல்லை.(42) உம்மைப் போன்ற வாய்மை நிறைந்தவரின் சொற்களுக்கு நான் அஞ்சுகிறேன். ஓ! இருபிறப்பாளரே, என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான ஆறுகள் பாயும் இடமாக இருப்பவரும், பேராச்சரியங்கள் நிறைந்தவருமான பெருங்கடலே {சமுத்ரராஜனே} அருளப்பட்டவர்” என்றாள்.(43,44)

ஆஷ்²சர்யம் க²லு லோகாணாம் த⁴ந்யஷ்²சாஸி மஹார்ணவ |
யேந க²ல்வஸி யோநிஸ்த்வமம்ப⁴ஸாம் ஸலிலேஷ்²வர꞉ ||2-110-45

ஸ்தா²நே த்வாம் வாரிவாஹிந்ய꞉ ஸரிதோ லோகபாவநா꞉ |
இமா꞉ ஸமபி⁴க³ச்ச²ந்தி பத்ந்யோ லோகநமஸ்க்ருதா꞉ ||2-110-46

நாரதர், மூவழிகளில் பாய்பவளின் (கங்கையின்) சொற்களைக் கேட்டுப் பெருங்கடலிடம் சென்று, “ஓ! பெருங்கடலே, ஓ! நீர்நிலைகளின் தலைவா, நீ நீர்நிலைகள் அனைத்தின் மூலமாக இருப்பதால் நீயே இவ்வுலகில் அருளப்பட்டவன், ஆச்சரியங்கள் நிறைந்தவன்.(45) குறிப்பாக, உலகத்தோரால் வழிபடப்படுபவர்களும், அவர்களைத் தூய்மைப்படுத்துபவர்களும், நீர் நிறைந்தவர்களுமான ஆறுகள் உன் மனைவியராக உன்னிடம் வருகின்றனர்” {என்றார்}.(46)

ஸமுத்³ரஸ்த்வேவமுக்தஸ்து ததோ மாமவத³த்³வச꞉ |
ஸ்வம் ஜலௌக⁴தலம் பி⁴த்த்வா வ்யுத்தி²த꞉ பவநேரித꞉ ||2-110-47

மா மைவம் தே³வக³ந்த⁴ர்வ நாஸ்ம்யாஷ்சர்யோ த்³விஜர்ஷப⁴ |
வஸுதே⁴யம் முநே த⁴ந்யா யந்நாஹமுபரி ஸ்தி²த꞉ ||2-110-48

ருதே து ப்ர்^இதி²வீம் லோகே கிமாஷ்²சர்யமத꞉ பரம் |
ஸோ(அ)ஹம் ஸாக³ரவாக்யேந க்ஷிதிம் க்ஷிதிதலே ஸ்தி²த꞉ ||2-110-49

இவ்வாறு சொல்லப்பட்டதும், காற்றின் வலிமையால் நீரைப் பிளந்து கொண்டு உதித்தெழுந்த பெருங்கடல் {சமுத்ரராஜன்},(47) “ஓ! தெய்வீகப் பாடகரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, இவ்வாறு சொல்லாதீர்; நான் ஆச்சரியங்கள் நிறைந்தவனுமில்லை, அருளப்பட்டவனுமில்லை.(48) நான் வாழும் இந்தப் பூமியே அருளப்பட்டவள். இந்த அண்டத்தில் பூமியைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?” என்று கேட்டான்.(49)

கௌதூஹலஸம்ஆவிஷ்டோ ஹ்யப்³ருவம் ஜக³தோ க³திம் |
த⁴ரித்ரி தே³ஹிநாம் யோநே த⁴ந்யா க²ல்வஸி ஷோ²ப⁴நே ||2-110-50

ஆஷ்²சர்யம் சாபி பூ⁴தேஷு மஹத்யா க்ஷ்மயா யுதே |
தேந க²ல்வஸி பூ⁴தாநாம் த⁴ரணீ மநுஜாரணி꞉ ||2-110-51

பெருங்கடலின் சொற்களைக் கேட்ட நான், ஆவலில் நிறைந்தவனாகப் பூமிப்படுகைக்குச் சென்று அண்டத்தின் சக்தியாக இருக்கும் பிருத்வியிடம், “ஓ! பெரும் பொறுமை கொண்ட அழகிய பூமியே, உலகங்கள் அனைத்தையும் தாங்குவதால் நீயே இந்த அண்டத்தில் அருளப்பட்டவளும்,(50) ஆச்சரியம் நிறைந்தவளாகவும் இருக்கிறாய். உயிரினங்களையும், மனிதர்களையும் தாங்குபவளாகவும், பொறுமையின் பிறப்பிடமாகவும் நீயே இருக்கிறாய்.(51)

க்ஷமா த்வத்த꞉ ப்ரபூ⁴தா ச கர்ம சாம்ப³ரகா³மிநாம் |
ததோ பூ⁴꞉ ஸ்துதிவாக்யேந ஸா மயோக்தேந தேஜிதா ||2-110-52

விஹாய ஸஹஜம் தை⁴ர்யம் ப்ரத்யக்ஷா மாமபா⁴ஷத |
தே³வக³ந்த⁴ர்வ மா மைவ ஸங்க்³ராமகலஹப்ரிய ||2-110-53

நாஸ்மி த⁴ந்யா ந சாஷ்²சர்யம் பாரக்யேயம் த்⁴ருதிர்மம |
ஏதே த⁴ந்யா த்³விஜஷ்²ரேஷ்ட² பர்வதா தா⁴ரயந்தி மாம் ||2-110-54

வானுலாவும் தேவர்களின் படைப்பாக நீ இருக்கிறாய்” என்றேன்.அவள், என் சொற்களால் தூண்டப்பட்டும், தனக்கு இயல்பான பொறுமையைக் கைவிட்டும் என்னிடம்,(52) “ஓ! சச்சரவுகள் செய்வதில் விருப்பம் கொண்ட தெய்வீகப் பாடகரே, இவ்வாறு சொல்லாதீர்.(53) நான் அருளப்பட்டவளுமில்லை, ஆச்சரியம் நிறைந்தவளுமில்லை. என்னுடைய இந்தப் பொறுமை பிறரைச் சார்ந்திருக்கிறது. ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, என்னைத் தாங்கும் மலைகளே உண்மையில் பெரியவை,(54)

ஆஷ்²சர்யாணி ச த்³ருஷ்யந்தே ஏதே லோகஸ்ய ஹேதவ꞉ |
ஸோ(அ)ஹம் த⁴ரணிவாக்யேந பர்வதாந்ஸமுபஸ்தி²த꞉ ||2-110-55

த⁴ந்யா ப⁴வந்தோ த்³ருஷ்²யந்தே ப³ஹ்வாஷ்²சர்யாஷ்²ச பூ⁴த⁴ரா꞉ |
காஞ்சநஸ்யாக்³ரரத்நஸ்ய தா⁴தூநாம் ச விஷே²ஷத꞉ ||2-110-56

தேந க²ல்வாகரா꞉ ஸர்வே ப⁴வந்தோ பு⁴வி ஷா²ஷ்²வதா꞉ |
தே மமைதத்³வச꞉ ஷ்²ருத்வா பர்வதாஸ்தஸ்து²ஷாம் வரா꞉ ||2-110-57

ஊசுர்மாம் ஸாந்த்வயுக்தாநி வசாம்ஸி வநஷோ²பி⁴தா꞉ |
ப்³ரஹ்மர்ஷே ந வயம் த⁴ந்யா நாப்யாஷ்²சர்யாணி ஸந்தி ந꞉ |
ப்³ரஹ்மா ப்ரஜாபதிர்த⁴ந்ய꞉ ஸர்வாஷ்²சர்ய꞉ ஸுரேஷ்வபி ||2-110-58

அவற்றில்தான் ஆச்சரியங்கள் காணப்படுகின்றன. அவைகளே உலகங்களின் பாலங்களாக இருக்கின்றன” என்றாள்.
ஓ! மன்னர்களே, இந்தச் சொற்களைக் கேட்டு மலைகளிடம் சென்ற நான்,(55) “ஓ! மலைகளே, நீங்களே பெரியவர்கள், பேராச்சரியங்கள் பலவற்றால் நிறைந்தவர்கள். மேலும் நீங்களே தங்கச் சுரங்கங்களாகவும், விலைமதிப்புமிக்கப் பல ரத்தினங்களின் சுரங்கங்களாகவும் எப்போதும் பூமியில் நீடித்து வாழ்கிறீர்கள்” என்றேன்.(56)
அசைவற்றவையும், காடுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான மலைகள் என் கேள்வியை ஆற்றுப்படுத்தும் மறுமொழியைத் தெரிவித்தன. அவை,(57) “ஓ! பிராமண முனிவரே, நாங்கள் பெரியவர்களல்ல, எங்களில் எந்த ஆச்சரியமும் இல்லை. படைப்பாளனான பிரம்மனே பெரியவன், தேவர்களில் ஆச்சரியம் நிறைந்தவன் அவனே” என்றன.(58)

ஸோ(அ)ஹம் ப்ரஜாபதிம் க³த்வா ஸர்வப்ரப⁴வமவ்யயம் |
தஸ்ய வாக்யஸ்ய பர்யாயபர்யாப்தமிவ லக்ஷயே ||2-110-59

ஸோ(அ)ஹம் பிதாமஹம் தே³வம் லோகயோநிம் சதுர்முக²ம் |
ஸ்தோதும் பஷ்²சாது³பக³த꞉ ப்ரணதோ(அ)வநதாநந꞉ ||2-110-60

ஸோ(அ)ஹம் வாக்யஸமாப்த்யர்த²ம் ஷ்²ராவயே பத்³மயோநிஜம் |
ஆஷ்²சர்யம் ப⁴க³வாநேகோ த⁴ந்யோ(அ)ஸி ஜக³தோ கு³ரு꞉ ||2-110-61

ந கிங்சித³ந்யத்பஷ்²யாமி பூ⁴தம் யத்³ப⁴வதா ஸமம் |
த்வத்த꞉ ஸர்வமித³ம் ஜாதம் ஜக³த்ஸ்தா²வரஜங்க³மம் ||2-110-62

ஸதே³வதா³நவா மர்த்யா லோகபூ⁴தேந்த்³ரியாத்மகா꞉ |
ப⁴வந்தி ஸர்வதே³வேஷ² த்³ருஷ்ட்வா ஸர்வமித³ம் ஜக³த் ||2-110-63

தேந க²ல்வஸி தே³வாநாம் தே³வதே³வ꞉ ஸநாதந꞉ |
தேஷாமேவாஸி யத்ஸ்ரஷ்டா லோகாநாமாதி³ஸம்ப⁴வ꞉ ||2-110-64

படைப்பாளனான பிரம்மனுடன் இந்தக் கேள்விச் சுழலுக்கு முடிவேற்படும் என்று எண்ணி அவரிடம் சென்றேன்.(59) சுயம்புவும், நான்கு தலைகளைக் கொண்ட தேவனும், உலகத்தின் பிறப்பிடமுமான அவரை முறையாக அணுகி வணங்கிவிட்டு, என் சொற்களுக்கு முடிவேற்படும் என்ற எதிர்பார்ப்பில் அவரிடம், “நீரே பெரியவர், ஆச்சரியம் நிறைந்தவர், உலகின் ஆசான்.(60,61) இவ்வுலகில் உமக்கு இணையாக வேறு உயிரினம் ஏதும் கிடையாது. அசைவன, அசையாதனவற்றுடன் கூடிய இந்த அண்டம் உம்மில் இருந்தே தோன்றியது.(62) ஓ! தேவர்களின் மன்னா, தேவர்களும், தானவர்களும், மூவுலகங்களின் பிற படைப்புகளும், இந்த அண்டமும், வெளிப்பட்டவையும், வெளிப்படாதவையுமான அனைத்தும் உம்மில் இருந்தே தோன்றின.(63) தேவர்களின் நித்திய மன்னர் நீரே. ஓ! தேவா, தேவர்களில் சிறந்தவராக இருக்கும்போது உலகங்கள் அனைத்தின் தோற்றமாக நீர் இருப்பதில் ஆச்சரியமென்ன” என்று கேட்டேன்.(64)

ததோ மாம் ப்ராஹ ப⁴க³வாந்ப்³ரஹ்மா லோகபிதாமஹ꞉ |
த⁴ந்யாஷ்²சர்யாஷ்²ரிதைர்வாக்யை꞉ கிம் மாம் நாரத³ பா⁴ஷஸே ||2-110-65

ஆஷ்²சர்யம் பரமம் வேதா³ த⁴ந்யா வேதா³ஷ்²ச நாரத³ |
யே லோகாந்தா⁴ரயந்தி ஸ்ம வேதா³ஸ்தத்த்வார்த²த³ர்ஷி²ந꞉ ||2-110-66

ருக்ஸாமயஜுஷாம் ஸத்யமத²ர்வணீ ச யந்மதம் |
தந்மயம் வித்³தி⁴ மாம் விப்ர த்⁴ருதோ(அ)ஹம் தைர்மயா ச தே ||2-110-67

என் சொற்களைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன், “ஓ! நாரதா, நீ ஏன் என்னைப் பெரியவனாகவும், ஆச்சரியம் நிறைந்தவனாகவும் சொல்கிறாய்?(65) உலகங்களைத் தாங்கும் வேதங்களே பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை. ஓ! விப்ரா, ரிக், சாம, யஜூர், அதர்வணங்களில் கிடக்கும் உண்மைகளாக என்னை அறிவாயாக. வேதங்கள் என்னைத் தாங்குகின்றன, நானும் அவற்றைத் தாங்குகிறேன்” என்றார்.(66,67)

பாரமேஷ்ட்²யேந வாக்யேந நோதி³தோ(அ)ஹம் ஸ்வயம்பு⁴வா |
வேதோ³பஸ்தா²நிகாம் சக்ரே மதிஸம்ஸ்தா²நவிஸ்தராத் ||2-110-68

ஸோ(அ)ஹம் ஸ்வயம்பூ⁴வசநாத்³வேதா³ந்வை ஸமுபஸ்தி²த꞉ |
அவோசம் தாம்ஷ்²ச சதுரோ மந்த்ரப்ரவசநாந்விதான் ||2-110-69

த⁴ந்யா ப⁴வந்த꞉ புண்யாஷ்²ச நித்யமாஷ்²சர்யபூ⁴ஷிதா꞉ |
ஆதா⁴ரஷ்²சைவ விப்ராணாமேவமாஹ ப்ரஜாபதி꞉ ||2-110-70

ஸ்வயம்பு⁴வோ(அ)பீஹ பரம் ப⁴வத்ஸு ப்ரஷ்²நமாக³தம் |
யுஷ்மத்பரதரம் நாஸ்தி ஷ்²ருத்யா வா தபஸாபி வா ||2-110-71

சுயம்புவான அந்தப் பரமேஷ்டியின் சொற்களைக் கேட்ட நான் வேதங்களிடம் செல்ல வேண்டும் என என் மனத்தில் தீர்மானித்தேன்.(68) பெரும்பாட்டனின் சொற்களின்படி, மந்திரங்களால் வழிபடப்படும் நான்கு வேதங்களின் அருகில் சென்று அவற்றிடம்,(69) “ஓ! வேதங்களே, நீங்களே பெரியவர்கள், ஆச்சரியம் நிறைந்தவர்கள், பிராமணர்களின் பிறப்பிடமாக இருக்கிறீர்கள் எனப் பெரும்பாட்டன் சொல்கிறார்.(70) ஸ்ருதியிலும், தபங்களிலும் உங்களில் மேம்பட்டவை எவையுமில்லை. எனவே அதை நான் உங்களிடம் கேட்பதற்காக வந்திருக்கிறேன்” என்றேன்.(71)

ப்ரத்யூசுஸ்தே ததோ வாக்யம் வேதா³ மாமபி⁴த꞉ ஸ்தி²தா꞉ |
ஆஷ்²சர்யாஷ்²சைவ த⁴ந்யாஷ்²ச யஜ்ஞாஷ்²சாத்மபராயணா꞉ ||2-110-72

யஜ்ஞார்தே² ச வயம் ஸ்ருஷ்தா தா⁴த்ரா யேந ஸ்ம நாரத³ |
தத³ஸ்மாகம் பரோ யஜ்ஞோ ந வயம் ஸ்வவஷே² ஸ்தி²தா꞉ ||2-110-73

அப்போது தலை கவிழ்ந்த வேதங்கள் என்னிடம் மறுமொழியாக, “{பரமாத்மாவுக்காகச் செய்யப்படும்} யக்ஞங்களே {வேள்விகளே} பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை.(72) ஓ! நாரதா, யக்ஞங்களுக்காவே {வேள்விகளுக்காகவே} நாங்கள் படைக்கப்பட்டோம். நாங்கள் எங்கள் வசப்பட்டவர்களல்ல. எனவே, யக்ஞங்களே {வேள்விகளே} எங்களை ஆள்கின்றன” என்றன.(73)

ஸ்வயம்பு⁴வ꞉ பரா வேதா³ வேதா³நாம் க்ரதவ꞉ பரா꞉ |
ததோ(அ)ஹமப்³ருவம் யஜ்ஞாந்ப்³ருஹத்³வாக்³பி⁴꞉ புரஸ்க்ருதான் ||2-110-74

போ⁴ யஜ்ஞா꞉ பரமம் தேஜோ யுஷ்மாஸு க²லு லக்ஷ்யதே |
ப்³ரஹ்மணாபி⁴ஹிதம் வாக்யம் யச்ச வேதை³ருதீ³ரிதம் ||2-110-75

ஆஷ்²சர்யமந்யல்லோகே(அ)ஸ்மிந்ப⁴வத்³ப்⁴யோ நாபி⁴க³ம்யதே |
த⁴ந்யா꞉ க²லு ப⁴வந்தோ யே த்³விஜாதீநாம் ஸ்வவம்ஷ²ஜா꞉ ||2-110-76

தே(அ)பி க²ல்வக்³நயஸ்த்ருப்திம் யுஷ்மாபி⁴ர்யாந்தி தர்பிதா꞉ |
பா⁴கை³ஷ்²ச த்ரித³ஷா²꞉ ஸர்வே மந்த்ரைஷ்²சைவ மஹர்ஷய꞉ ||2-110-77

சுயம்புவான தேவனை விட வேதங்களே மேம்பட்டவை, வேதங்களைவிட யக்ஞங்களே மேம்பட்டவை என்பதைக் கேட்டு இல்ல நெருப்பால் தலைமை தாங்கப்படும் யக்ஞங்களிடம் சென்று,(74) “ஓ! யக்ஞங்களே, பெரும்பாட்டனாலும், வேதங்களாலும் சொல்லப்பட்டதைப் போல நான் உங்களிடம் பேரொளியைக் காண்கிறேன்.(75) உங்களைவிட ஆச்சரியம் நிறைந்தவை இவ்வுலகில் வேறேதும் இல்லை. நீங்கள் இருபிறப்பாளர்களிடம் பிறந்தவர்கள் என்பதால் பெரியவர்களாக இருக்கிறீர்கள்.(76) வேள்விக் காணிக்கைகளின் ஒரு பகுதியில் தேவர்களும், வேள்வி மந்திரங்களில் பெரும் முனிவர்களும், வேள்வியின் ஆகுதிகளில் {ஹவிஸ் பாகங்களால்} அக்னிகளும் உங்களால் நிறைவடைகின்றனர்” என்றேன்.(77)

அக்³நிஷ்டோமாத³யோ யஜ்ஞா மம வாக்யாத³நந்தரம் |
ப்ரத்யூசுர்மாம் ததோ வாக்யம் ஸர்வே யூபத்⁴வஜா꞉ ஸ்தி²தா꞉ ||2-110-78

ஆஷ்²சர்யஷ²ப்³தோ³ நாஸ்மாஸு த⁴ந்யஷ²ப்³தோ³(அ)பி வா முநே |
ஆஷ்²சர்யம் பரமம் விஷ்ணு꞉ ஸ ஹ்யஸ்மாகம் பரா க³தி꞉ ||2-110-79

யதா³ஜ்யம் வயமஷ்²நீமோ ஹுதமக்³நிஷு பாவநம் |
தத்ஸர்வம் புண்ட³ரீகாக்ஷோ² லோகமூர்தி꞉ ப்ரயச்ச²தி ||2-110-80

நான் சொல்லி முடித்ததும், வேள்விக்களங்களில் (யூபக் கொடிக்கம்பங்களுடன்} இருந்த அக்னிஷ்டோமமும், பிற யக்ஞங்களும் {வேள்விகளும்},(78) “ஓ! முனிவரே, எங்களின் மத்தியில் ஆச்சரியமென்றும், பெரிதென்றும் சொல்லேதும் இல்லை. விஷ்ணு மட்டுமே பேராச்சர்யம் வாய்ந்தவன். அவனே எங்கள் பரம புகலிடமாக {கதியாக} இருக்கிறான்.(79) தாமரைக் கண்ணனான விஷ்ணு, மனிதர்களாக வெளிப்பட்டு நாங்கள் உண்பதற்கான ஆகுதிகளை {நெய்யாலான ஹவிஸாக} நெருப்பில் காணிக்கையளிக்கிறான். பெருங்கரங்களைக் கொண்டவனும், செந்தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மனைவியுடன் கூடியவனுமான அந்த விஷ்ணுவே பெரியவன், கொடைகளுடன் கூடிய ஒரு யக்ஞமும் அவனைப் போலப் பெரியதே” என்று மறுமொழி கூறின.(80)

ஸோ(அ)ஹம் விஷ்ணோர்க³திம் ப்ரேப்ஸுரிஹ ஸம்பதிதோ பு⁴வி |
த்³ருஷ்டஷ்²சாயம் மயா க்ருஷ்ணோ ப⁴வத்³பி⁴ரிஹ ஸம்வ்ருத꞉ ||2-110-81

யந்மயாபி⁴ஹிதோ ஹ்யேஷ த்வமாஷ்²சர்யம் ஜநார்த³ந |
த⁴ந்யஷ்²சாஸீதி ப⁴வதாம் மத்⁴யஸ்தோ² ஹ்யத்ர பார்தி²வா꞉ ||2-110-82

ப்ரத்யுக்தோ(அ)ஹமநேநாத்³ய வாக்யஸ்யாஸ்ய யது³த்தரம் |
த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யேவம் பர்யாப்தம் வசநம் மம ||2-110-83

அதன்பிறகு விஷ்ணுவின் நடமாட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காகப் பூமிக்கு இறங்கி வந்து தகுந்தவர்களான உங்களைப் போன்ற மன்னர்களால் சூழப்பட்ட கிருஷ்ணனைக் கண்டேன்.(81) உங்கள் அனைவராலும் சூழப்பட்டிருந்த மாதவனிடம் நான், “நீயே பெரியவனும், ஆச்சரியம் நிறைந்தவனும் ஆவாய்” என்றேன்.(82) அவனும், “கொடைகளுடன் சேர்த்து {தக்ஷிணையுடன் கூடிய நான்}” என்று மறுமொழி கூறினான். இஃது என் சொற்களுக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது.(83)

யஜ்ஙாநாம் ஹி க³திர்விஷ்ணு꞉ ஸர்வேஷாம் ஸஹத³க்ஷிண꞉ |
த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யேவம் ப்ரஷ்²நோ மம ஸமாப்தவான் ||2-110-84

கூர்மேணாபி⁴ஹிதம் பூர்வம் பாரம்பர்யாதி³ஹாக³தம் |
ஸத³க்ஷிணோ(அ)ஸ்மிந்புருஷே தத்³வாக்யம் ப்ரதிபாதி³தம் || 2-110-85

யந்மாம் ப⁴வந்த꞉ ப்ருச்ச²ந்தி வாக்யஸ்யாஸ்ய விநிர்ணயம் |
ததே³தத்ஸர்வமாக்²யாதம் ஸாத⁴யாமி யதா²க³தம் ||2-110-86

{வேள்விகள் அனைத்தின் கதியாக இருப்பவன் குணங்களுடன் கூடிய விஷ்ணுவே ஆவான்}. ஆமை சொன்னவை தொடங்கிச் சொற்களை வரிசையாகப் பின்தொடர்ந்தே நான் இங்கே வந்தேன். அவை தக்ஷிணையுடன் கூடிய இந்தப் புருஷனை சரியாகக் காட்டின.(84,85)) உங்களால் கேட்கப்பட்ட நான், என் சொற்களின் ரகசியத்தை இவ்வாறு விளக்கிச் சொன்னேன். நான் இனி திரும்பிச் செல்கிறேன்” என்றார்.(86)

நாரதே³ து க³தே ஸ்வர்க³ம் ஸர்வே தே ப்ருதி²வீபு⁴ஜ꞉ |
விஸ்மீதா꞉ ஸ்வாநி ராஷ்த்ராணி ஜக்³மு꞉ ஸப³லவாஹநா꞉ ||2-110-87

ஜநார்த³நோ(அ)பி ஸஹிதோ யது³பி⁴꞉ பாவகோபமை꞉ |
ஸ்வமேவ ப⁴வநம் வீரோ விவேஷ² யது³நந்த³ந꞉ ||2-110-88

நாரதர் தேவலோகத்துக்குப் புறப்பட்டுச் சென்றதும் ஆச்சரியத்தால் பீடிக்கப்பட்ட மன்னர்கள், தங்கள் படைகளுடனும், வாகனங்களுடனும் தங்கள் தங்கள் நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(87) யது குல வீரத் தலைவனான ஜனார்த்தனனும், யாதவர்களுடன் சேர்ந்து நெருப்பு போலப் பிரகாசிப்பவனாகத் தன் அரண்மனைக்குள் நுழைந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(88)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
த⁴ந்யோபாக்²யாநம் நாம த³ஷா²தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 109–(ஸ்ரீ பலதேவாஹ்நிகம்)–ஸ்ரீ ஆஹ்நிகத் துதி |–

February 1, 2021

ஸ்ரீ பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக ஸ்ரீ பலராமனால் சொல்லப்பட்ட துதி;
நீண்ட வாழ்நாள், செல்வம், வெற்றி ஆகியவற்றைக் கொடுக்கும் ஸ்ரீ ஆஹ்நிக ஸ்தோத்திரம்–

வைஷ²ம்பாயந உவாச
அத்ராஷ்²சர்யாத்மகம் ஸ்தோத்ரமாஹ்நிகம் ஜயதாம் வர |
ப்ரத்³யும்நே த்³வாரகாம் ப்ராப்தே ஹத்வா தம் காலஷ²ம்ப³ரம் ||2-109-1

ப³லதே³வேந ரக்ஷார்த²ம் ப்ரோக்தமாஹ்நிகமுச்யதே |
யஜ்ஜப்த்வா து ந்ருபஷ்²ரேஷ்ட² ஸாயம் பூதாத்மதாம் வ்ரஜேத் ||2-109-2

கீர்திதம் ப³லதே³வேந விஷ்ணுநா சைவ கீர்திதம் |
த⁴ர்மகாமைஷ்²ச முநிபி⁴ர்ருஷிபி⁴ஷ்²சாபி கீர்திதம் ||2-109-3

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றுவிட்டு துவாரகா நகரை அடைந்தபோது மாலை வேளைக்கான ஓர் அற்புத மந்திரம் ஓதப்பட்டது.(1) பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக அந்நேரத்தில் பலதேவனால் ஓதப்பட்ட மாலை நேர மந்திரத்தை {ஆஹ்நிக ஸ்தோத்திரத்தை}[இந்த ஸ்தோத்ரத்தில் பிரம்மா, வேதங்கள், அங்க உபாங்கங்கள், பஞ்சபூதங்கள், மகரிஷிகள், முப்பத்துமூன்று தேவர்கள், அஷ்டகுல பர்வதங்கள், ஸர்ப்பராஜாக்கள், புண்ய நதி தீர்த்தங்கள், தேவ கன்னிகைகள், மாதாக்கள், க்ரஹங்கள், ஆபத்ஸஹாயர்கள், முனிவர்கள், யக்ஞசிரேஷ்டர்கள், மங்களத்ரவ்யங்கள், ஆயுதங்கள் இவை முக்கியமாக ரக்ஷைக்காகச் சொல்லப்பட்டுப் பலஸ்ருதியோடு முடிகிறது”] நான் சொல்லப் போகிறேன்.(2) இதை ஒருவன் மாலை வேளையில் ஓதினால் ஆன்மா தூய்மையடைந்தவன் ஆவான். பலதேவன், வாசுதேவன், அறப்பற்றுள்ள ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரால் இஃது ஓதப்பட்டது.(3)

கர்ஹிசித்³ருக்மிணீபுத்ரோ ஹலிநா ஸம்யுதோ க்³ருஹே |
உபவிஷ்ட꞉ ப்ரணம்யாத² தமுவாச க்ருதாஞ்ஜலி꞉ ||2-109-4

ப்ரத்³யும்ந உவாச
க்ருஷ்ணாநுஜ மஹாபா⁴க³ ரோஹிணீதநய ப்ரபோ⁴ |
கிஞ்சித்ஸ்தோத்ரம் மம ப்³ரூஹி யஜ்ஜப்த்வா நிர்ப⁴யோ(அ)ப⁴வம் ||2-109-5

{ஒரு நாள் ருக்மிணியின் மகன் (பிரத்யும்னன்) ஹலியின் (பலராமனின்) வீட்டில் கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிவிட்டு, பின்வருமாறு வேண்டினான்.(4) பிரத்யும்னன், “ஓ! கிருஷ்ணரின் தமையனாரே, ஓ! பெரும்புகழ்வாய்ந்தவரே, ஓ! ரோஹிணியின் மைந்தரே, ஓ! தலைவா, நான் அச்சமற்றவனாவதற்கான ஒரு மந்திரத்தை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

ப³லதே³வ உவாச
ஸுராஸுரகு³ருர்ப்³ரஹ்மா பாது மாம் ஜக³த꞉ பதி꞉ |
அதோ²ங்காரவஷட்காரௌ ஸாவித்ரீ வித⁴யஸ்த்ரய꞉ ||2-109-6

அப்போது பலராமன் சொன்ன அந்த ஆஹ்நிகத் துதி பின்வருமாறு},
“அண்டத்தின் தலைவனும், தேவாசுரர்களின் ஆசானுமான பிரம்மன் என்னைக் காக்கட்டும். ஓங்காரம், வஷட்காரம், சாவித்ரி, மூன்றுவிதிகள்[“மூன்றுவிதிகள் என்பன அபூர்வ, நியம, பரிசங்கிய விதிகள் ஆகும்] ஆகியவை என்னைக் காக்கட்டும்.(6)

ருசோ யஜூம்ஷி ஸாமாநி ச²ந்தா³ம்ஸ்யாத²ர்வணாநி ச |
சத்வாரஸ்த்வகி²லா வேதா³꞉ ஸரஹஸ்யா꞉ ஸவிஸ்தரா꞉ ||2-109-7

புராணமிதிஹாஸாஷ்²சாகி²லாந்யுபகி²லாநி ச |
அங்கா³ந்யுபாங்கா³நி ததா² வ்யாக்²யாதாநி ச பாந்து மாம் ||2-109-8

{ரிக், யஜுர், சாம, அதர்வணமெனும்} நான்கு வேதங்களும், புராணங்களும், இதிஹாஸங்களும், கிலாக்கள், உபகிலாக்கள் {அங்கங்களும், உப அங்கங்களும்}, வேதாங்கங்கள்,[வேதாங்கங்கள் என்பன, சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியனவாகும். உபாங்கங்கள் என்பன, புராணம், நியாயம், மீமாம்ஸம், தர்மஸாஸ்திரங்கள் ஆகும்”] அவற்றின் உரைகள் {வியாக்யானங்கள்} ஆகியனவும் என்னைக் காக்கட்டும்.(7,8)

ப்ருதி²வீ வாயுராகாஷ²மாபோ ஜ்யோதிஷ்²ச பஞ்சமம் |
இந்த்³ரியாணி மநோ பு³த்³தி⁴ஸ்ததா² ஸத்த்வம் ரஜஸ்தம꞉ ||2-109-9

வ்யாநோதா³நௌ ஸமாநஷ்²ச ப்ராணோ(அ)பாநஷ்²ச பஞ்சம꞉ |
வாயவ꞉ ஸப்த சைவாந்யே யேஷ்வாயத்தமித³ம் ஜக³த் ||2-109-10

நிலம், காற்று, ஆகாயம், நீர், ஒளி, புலன்கள், மனம், புத்தி, சத்வ ரஜஸ் தமோ குணங்கள்,(9) வியானம், உதானம், ஸமானம், பிராணம், அபானம் என்றழைக்கப்படும் ஐந்து உயிர்க்காற்றுகள் {வாயுக்கள்}, அண்டத்தில் படர்ந்தூடுருவி இருக்கும் பிற ஏழு காற்றுகள்[ஏழு காற்றுகள் என்பன, ஆவஹம், பிரவஹம், உத்வஹம், ஸம்வஹம், விவஹம், பிரணவஹம், பரிவஹம் என்பனவாகும்] ஆகியன என்னைக் காக்கட்டும்.(10)

மரீசிரங்கி³ராத்ரிஷ்²ச புலஸ்த்ய꞉ புலஹ꞉ க்ரது꞉ |
ப்⁴ருகு³ர்வஸிஷ்டோ² ப⁴க³வாந்பாந்து தே மாம் மஹர்ஷய꞉ ||2-109-11

கஷ்²யபாத்³யாஷ்²ச முநயஷ்²சதுர்த³ஷ² தி³ஷோ² த³ஷ² |
நரநாராயணௌ தே³வௌ ஸக³ணௌ பாந்து மாம் ஸதா³ ||2-109-12

ருத்³ராஷ்²சைகாத³ஷ² ப்ரோக்தா ஆதி³த்யா த்³வாத³ஷை²வ து |
அஷ்டௌ ச வஸவோ தே³வா அஷ்²விநௌ த்³வௌ ப்ரகீர்திதௌ ||2-109-13

மஹாரிஷிகளான மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, பிருகு, தெய்வீகரான வசிஷ்டர் ஆகியோர் என்னைக் காக்கட்டும்.(11)

கசியபரின் தலைமையிலான பதினான்கு முனிவர்களும், பத்துத் திக்குகளுடனும், கணங்களுடனும் கூடிய நர நாராயணர்களும் என்னைக் காக்கட்டும்.(12)

பதினோரு ருத்ரர்களும், பனிரெண்டு ஆதித்யர்களும், எட்டு வசுக்களும், இரண்டு அஸ்வினிகளும் என்னைக் காக்கட்டும்[அஜைகபாத், அஹிர்புத்நியன், பிநாகீ, அபராஜிதன், ருதன், பித்ருரூபன், த்ரையம்பகன், மஹேஷ்வரன், விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஷ்வரன் ஆகியோர் பதினோரு ருத்ரர்கள் ஆவர். அம்சன், பகன், மித்ரன், வருணன், ஜலோஷ்வரன், தாதா, அர்யமான், ஜயந்தன், பாஸ்கரன், திவஷ்டா, பூஷன், இந்திரன், விஷ்ணு ஆகியோர் பனிரெண்டு ஆதித்யர்கள் ஆவர். தரன், துருவன், ஸோமன், சாவித்ரி, அநிலன், அநலன், பிரத்யூஷா, பிரபாஸன் ஆகியோர் அஷ்ட வசுக்கள் ஆவர். நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அஸ்வினி இரட்டையர்களாவர்”].(13)

ஹ்ரீ꞉ ஷ்²ரீர்லக்ஷ்மீ꞉ ஸ்வதா⁴ புஷ்டிர்மேதா⁴ துஷ்டி꞉ ஸ்ம்ருதிர்த்⁴ருதி꞉ |
அதி³திர்தி³திர்த³நுஷ்²சைவ ஸிம்ஹிகா தை³த்யமாதர꞉ ||2-109-14

தேவாசுர அன்னையரான ஹ்ரீ, ஸ்ரீ, லக்ஷ்மி, ஸ்வதை, புஷ்டி, மேதை, துஷ்டி, ஸ்மிருதி, திருதி, அதிதி, திதி, தனு, சிம்ஹிகை ஆகியோர் என்னைக் காக்கட்டும்.(14)

ஹிமவாந்ஹேமகூடஷ்²ச நிஷத⁴꞉ ஷ்²வேதபர்வத꞉ |
ருஷப⁴꞉ பாரியாத்ரஷ்²ச விந்த்⁴யோ வைடூ³ர்யபர்வத꞉ ||2-109-15

ஸஹ்யோத³யஷ்²ச மலயோ மேருமந்த³ரத³ர்து³ரா꞉ |
க்ரௌஞ்சகைலாஸமைநாகா꞉ பாந்து மாம் த⁴ரணீத⁴ரா꞉ ||2-109-16

ஹிமவான் {இமயம்}, ஹேமகூடம், நிஷதம், ஸ்வேதம், ரிஷபம், பாரியாத்ரம், விந்தியம், வைடூர்யம்,(15) ஸஹ்யம், உதயம், மலையம், மேரு, மந்தரம், தர்துரம், கிரௌஞ்சம், கைலாசம், மைநாகம் ஆகிய மலைகள் என்னைக் காக்கட்டும்.(16)

ஷே²ஷஷ்²ச வாஸுகிஷ்²சைவ விஷா²லாக்ஷஷ்²ச தக்ஷக꞉ |
ஏலாபத்ர꞉ ஷு²க்லவர்ண꞉ கம்ப³லாஷ்²வதராவுபௌ⁴ ||2-109-17

ஹஸ்திப⁴த்³ர꞉ பிடரக꞉ கர்கோடகத⁴நஞ்ஜயௌ |
ததா² பூரணகஷ்²சைவ நாக³ஷ்²ச கரவீரக꞉ ||2-109-18

ஸுமநாஸ்யோ த³தி⁴முக²ஸ்ததா² ஷ்²ருங்கா³ரபிண்ட³க꞉ |
மணிநாக³ஷ்²ச ப⁴க³வாம்ஸ்த்ரிஷு லோகேஷு விஷ்²ருத꞉ ||2-109-19

நாக³ராட³தி⁴கர்ணஷ்²ச ததா² ஹாரித்³ரகோ(அ)பர꞉ |
ஏதே சாந்யே ச ப³ஹவோ யே சாந்யே நாநுகீர்திதா꞉ ||2-109-20

பூ⁴த⁴ரா꞉ ஸத்யத⁴ர்மாண꞉ பாந்து மாம் பு⁴ஜகே³ஷ்²வரா꞉ |
ஸமுத்³ரா꞉ பாந்து சத்வாரோ க³ங்கா³ ச ஸரிதாம் வரா ||2-109-21

சேஷன், வாசுகி, விசாலாக்ஷன், தக்ஷகன், ஏலாபத்ரன், சுக்லவர்ணன், கம்பலன், அஸ்வத்ரர்கள்,(17) ஹஸ்திபத்ரன், பிடரகன், கார்க்கோடகன், தனஞ்ஜயன், பூர்ணகன், கரவீரகன்,(18) ஸுபநாஸ்யன், ததிமுகன், சிருங்காரபிண்டகன், மூவுலகங்கள் முழுவதும் அறியப்பட்ட தலைவன் மணி {மணிநாகன்} ஆகியோரும்,(19) நாக மன்னர்களான ததிகர்மன் {அதிகரணன்}, ஹாரித்ரகன் ஆகியோரும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவர்களும்,(20) வாய்மை நிறைந்தவர்களும், அண்டத்தைத் தாங்குபவர்களுமான பிற நாகர்களும் என்னைக் காக்கட்டும்.
பெருங்கடல்கள் நான்கும் என்னைக் காக்கட்டும். ஓடைகளில் முதன்மையான கங்கையாறு,(21)

ஸரஸ்வதீ சந்த்³ரபா⁴கா³ ஷ²தத்³ருர்தே³விகா ஷி²வா |
த்³வாராவதீ விபாஷா² ச ஷ²ரயூர்யமுநா ததா² ||2-109-22

கல்மாஷீ² ச ரதோ²ஷ்மா ச பா³ஹுதா³ ச ஹிரண்யதா³ |
ப்லக்ஷா சேக்ஷுமதீ சைவ ஸ்ரவந்தீ ச ப்³ருஹத்³ரதா² ||2-109-23

க்²யாதா சர்மண்வதீ சைவ புண்யா சைவ வதூ⁴ஸரா |
ஏதாஷ்²சாந்யாஷ்²ச ஸரிதோ யாஷ்²சாந்யா நாநுகீர்திதா꞉ ||2-109-24

உத்தராபத²கா³மிந்ய꞉ ஸலிலை꞉ ஸ்நபயந்து மாம் |
வேணீ கோ³தா³வரீ ஸீதா காவேரீ கௌங்கணாவதீ ||2-109-25

க்ருஷ்ணா வேணா முக்திமதீ தமஸா புஷ்பவாஹிநீ |
தாம்ரபர்ணீ ஜ்யோதிரதா² உத்ப²லோது³ம்ப³ராவதீ ||2-109-26

நதீ³ வைதரணீ புண்யா வித³ர்பா⁴ நர்மதா³ ஷு²பா⁴ |
விதஸ்தா பீ⁴மரத்²யா ச ஐலா சைவ மஹாநதீ³ ||2-109-27

சரஸ்வதி, சந்திரபாகை, சதத்ரு, தேவிகை, சிவை, இராவதி {துவாரசுவதி}, பிபாஸை, ஸரயு, யமுனை,(22) கல்மாஷி, ரதோஷ்மை, பாஹுதை, ஹிரண்யதை, பலக்ஷை, இக்ஷுமதி, சிரவந்தி, பிரஹத்ரதை,(23) விக்யாதை, கொண்டாடப்படும் சர்மண்வதி, புனிதமான வதூஸரை ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(24) வடக்கில் பாய்பவையுமான ஆறுகளும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும். வேணி, கோதாவரி, {ஸீதா}, காவிரி, கொங்கணாவதி,(25) கிருஷ்ணை, வேணை, சுக்திமதி, தமஸை, புஷ்பவாஹினி, தாமிரபரணி, ஜோதிரதை {ஜோதிதரை}, உத்கலை, உதும்பராவதி,(26) வைதரணி, புனிதமான விதர்ப்பை, நர்மதை, விதஸ்தை, பீமரதி, மஹாநதி, ஐலை,(27)

காளிந்தீ³ கோ³மதீ புண்யா நத³꞉ ஷோ²ணஷ்²ச விஷ்²ருத꞉ |
ஏதாஷ்²சந்யாஷ்²ச வை நத்³யோ யாஷ்²சாந்யா ந து கீர்திதா꞉ ||2-109-28

த³க்ஷிணாபத²வாஹிந்ய꞉ ஸலிலை꞉ ஸ்நபயந்து மாம் |
க்ஷிப்ரா சர்மண்வதீ புண்யா மஹீ ஷு²ப்⁴ரவதீ ததா² ||2-109-29

ஸிந்து⁴ர்வேத்ரவதீ சைவ போ⁴ஜாந்தா வநமாலிகா |
பூர்வப⁴த்³ரா பராப⁴த்³ரா ஊர்மிலா ச பரத்³ருமா ||2-109-30

க்²யாதா வேத்ரவதீ சைவ சாபதா³ஸீதி விஷ்²ருதா |
ப்ரஸ்தா²வதீ குண்ட³நதீ³ நதீ³ புண்யா ஸரஸ்வதீ ||2-109-31

சித்ரக்⁴நீ சேந்து³மாலா ச ததா² மது⁴மதீ நதீ³ |
உமா கு³ருநதீ³ சைவ தாபீ ச விமலோத³கா ||2-109-32

விமலா விமலோதா³ ச மத்தக³ங்கா³ பயஸ்விநீ |
ஏதாஷ்²சாந்யாஷ்²ச வை நத்³யோ யாஷ்²சாந்யா நாநுகீர்திதா꞉ ||2-109-33

தா மாம் ஸமபி⁴ஷிஞ்சந்து பஷ்²சிமாமாஷ்²ரிதா தி³ஷ²ம் |
பா⁴கீ³ரதீ² புண்யஜலா ப்ராச்யாம் தி³ஷி² ஸமாஷ்²ரிதா ||2-109-34

காளிந்தி, கோமதி, சோணை ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(28) தெற்கில் பாய்பவையுமான ஆறுகளும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும். க்ஷிப்ரை, புனிதமான சர்மண்வதி, மஹி, சுப்ரவதி,(29) ஸிந்து, வேத்ரவதி, போஜாந்தை, வனமாலிகை, பூர்வபத்ரை, அபராபத்ரை, ஊர்மிளை, பரத்ருமை,(30) வேத்ரவதி, நன்கறியப்பட்ட சாபதாங்கி {சாபதாஸி}, {பிரஸ்தரவதி, குண்டந்தி}, புனிதமும், அழகும் மிக்க ஸரஸ்வதி,(31) மித்ரக்னி {சித்ரக்நி}, இந்துமாலா, மதுமதி, உமை, குருந்தி, தாபி, விமலோதகை,(32) விமலை, விமலோதை, மத்தகங்கை, பயஸ்விநி ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(33) மேற்கில் பாய்பவையுமான ஆறுகளும், சிவனால் தரிக்கப்பட்டவளும், கிழக்கில் பாய்பவளும், புனிதமானவுமான பாகீரதியும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும்.(34)

ஸா து த³ஹது மே பாபம் கீர்திதா ஷ²ம்பு⁴நா த்⁴ருதா |
ப்ரபா⁴ஸம் ச ப்ரயாக³ம் ச நைமிஷம் புஷ்கராணி ச ||2-109-35

க³ங்கா³தீர்த²ம் குருக்ஷேத்ரம் ஷ்²ரீகண்ட²ம் கௌ³தமாஷ்²ரமம் |
ராமஹ்ரத³ம் விநஷ²நம் ராமதீர்த²ம் ததை²வ ச ||2-109-36

க³ங்கா³த்³வாரம் கநக²லம் ஸோமோ வை யத்ர சோத்தி²த꞉ |
கபாலமோசநம் தீர்த²ம் ஜம்பூ³மார்க³ம் ச விஷ்²ருதம் ||2-3-109-37

ஸுவர்ணபி³ந்து³ விக்²யாதம் ததா² கநகபிங்க³ளம் |
த³ஷா²ஷ்²வமேதி⁴கம் சைவ புண்யாஷ்²ரமவிபூ⁴ஷிதம் ||2-109-38

ப³த³ரீ சைவ விக்²யாதா நரநாராயணாஷ்²ரம꞉ |
விக்²யாதம் ப²ல்கு³தீர்த²ம் ச தீர்த²ம் சந்த்³ரவடம் ததா² ||2-109-39

கோகாமுக²ம் புண்யதமம் க³ந்கா³ஸாக³ரமேவ ச |
மக³தே⁴ஷு தபோத³ஷ்²ச க³ங்கோ³த்³பே⁴த³ஷ்²ச விஷ்²ருத꞉ ||2-109-40

புனிதத் தடாகங்களான பிரபாஸம், பிரயாகை, நைமிஷம், புஷ்கரம், கங்கை, குருக்ஷேத்திரம், ஸ்ரீகண்டம், கௌதமாஸ்ரமம், ராமஹ்ரதம், விநசநம், ராமதீர்த்தம்,(35,36) சோமன் எழுந்த காங்கத்வாரம், {கநகலம்}, கபாலமோசனம், {ஜம்பூமார்க்கம்},(37) நன்கறியப்பட்ட ஸ்வர்ணபிந்து, கனகபிங்களம், தசாச்வமேதிகம்,(38) நர நாராயணாஸ்ரமமாகக் கொண்டாடப்படும் பதரி, பல்கு தீர்த்தம், நன்கறியப்பட்ட சந்திரவடம்,(39) கோகாமுகம், கங்காஸாகரம், மகத நாட்டின் தபோதம், நன்கறியப்பட்ட கங்கோத்பேதம் ஆகிய தீர்த்தங்களும், நான் பெயர் குறிப்பிடாதவையும்,(40)

தீர்தா²ந்யேதாநி புண்யாநி ஸேவிதாநி மஹர்ஷிபி⁴꞉ |
[ஸூகரம் யோக³மார்க³ம் ச ஷ்²வேதத்³வீபம் ததை²வ ச ||2-109-41

ப்³ரஹ்மதீர்த²ம் ராமதீர்த²ம் வாஜிமேத⁴ஷ²தோபமம் |
தா⁴ராஸம்பாதஸம்யுக்தா க³ங்கா³ கில்பி³ஷநாஷி²நீ ||2-109-42

க³ங்கா³ வைகுண்ட²கேதா³ரம் ஸூகரோத்³பே⁴த³நம் பரம் |
தம் ஷா²பமோசநம் தீர்த²ம் புநந்த்வேதாநி கில்பி³ஷாத்] ||2-109-43

மாம் ப்லாவயந்து ஸலிலை꞉ கீர்திதாகீர்திதாநி வை |
த⁴ர்மார்த²காமவிஷயோ யஷ²꞉ப்ராப்தி꞉ ஷ²மோ த³ம꞉ |
வருணேஷோ²(அ)த² த⁴நதோ³ யமோ நியம ஏவ ச ||2-109-44

மஹாரிஷிகள் வாழ்ந்து வந்த இடங்களுமான தீர்த்தங்களும் தங்கள் புனித நீரை எங்கள் மீது தெளிக்கட்டும்.
புனிதத் தலங்களான ஸூகரம், யோகமார்க்கம், ஸ்வேதத்வீபம்,(41) பிரஹ்மதீர்த்தம், ராமதீர்த்தம் ஆகியவையும், பாவங்களை அழிக்கும் கங்கையும், அவளது ஓடைகளும்,(42) வைகுண்டத்தைப் போன்ற கேதாரம், ஸுகரோத்பேதனம், பாபமோசனம் {சாபமோசனம்} ஆகியவையும் என் பாவங்களை அழித்து என்னைத் தூய்மையாக்கட்டும்.(43)
தர்மம், அர்த்தம், காமம், புகழ், பிராப்தி, சமம், தமம், வருணம், குபேரம், {தனதம்}, யமம், நியமம்,(44)

காலோ நய꞉ ஸம்நதிஷ்²ச க்ரோதோ⁴ மோஹ꞉ க்ஷமா த்⁴ருதி꞉ |
வித்³யுதோ(அ)ப்⁴ராண்யதௌ²ஷத்⁴ய꞉ ப்ரமாதோ³ந்மாத³விக்³ரஹா꞉ ||2-109-45

யக்ஷா꞉ பிஷா²சா க³ந்த⁴ர்வா꞉ கிந்நரா꞉ ஸித்³த⁴சாரணா꞉ |
நக்தஞ்சரா꞉ கே²சரிணோ த³ம்ஷ்ட்ரிண꞉ ப்ரியவிக்³ரஹா꞉ ||2-109-46

லம்போ³த³ராஷ்²ச ப³லிந꞉ பிங்கா³க்ஷா விஷ்²வரூபிண꞉ |
மருத꞉ ஸஹ பர்ஜந்யா꞉ கலாத்ருடிலவா꞉ க்ஷணா꞉ ||2-109-47

காலம், நயம், ஸந்நதி, கோபம் {குரோதம்}, மயக்கம் {மோஹம்}, மன்னிக்கும் தன்மை, பொறுமை {க்ஷமை, திருதி}, மின்னல் {வித்யுத்}, மேகங்கள், மூலிகைகள் {ஓஷதி}, கிரஹங்கள், {பிரமாத, உன்மாத, விக்ரஹ},(45) யக்ஷர்கள், பிசாசங்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், ஸித்தர்கள், சாரணர்கள், இரவுலாவிகள் {நிசாசரரர்கள்}, வானுலாவிகள், விலங்குகள், மங்கலக் கோள்கள், {கேசரர்கள்},(46) லம்போதரன், பலி, பிங்காக்ஷன், விஸ்வரூபி, காற்றுகளுடன் கூடிய இந்திரன், {மருதர்கள், பர்ஜன்யன்}, கலை, திருதி, லவம், க்ஷணம்[“கலை, திருதி, லவம், க்ஷணம் என்பன காலப்பிரிவினைகள் {நேர அலகுகள்} ஆகும். விஷ்ணு புராணத்தில், பாகவதம் மற்றும் வைவர்த்த புராணத்தில் இருந்து குறிப்புகள் பின்வருமாறு: 2 பரமாணு = 1 அணு, 3 அணுக்கள் = 1 திரஸரேணு, 3 திரஸரேணுக்கள் = 1 திருதி, 100 திருதிகள் = 1 வேதம், 3 வேதங்கள் = 1 லவம், 3 லவங்கள் = 1 நிமேஷம் {நிமிஷம்}, 3 நிமேஷங்கள் = 1 க்ஷணம், 5 க்ஷணங்கள் = 1 காஷ்டை, 15 காஷ்டைகள் = 1 லகு, 15 லகுக்கள் = 1 நாரிகம் {நாழிகை}, 2 நாரிகங்கள் = 1 முஹூர்த்தம், 6 அல்லது 7 நாரிகங்கள் {7.5 நாழிகை}= 1 யாமம்” என்றிருக்கிறது. ஒரு யாமம் என்பது 3 மணி நேரம் கொண்ட கால அளவு. ஒரு பகலில் 4 யாமங்களும், ஓர் இரவில் 4 யாமங்களும் நேரும்.],(47)

நக்ஷத்ராணி க்³ரஹாஷ்²சைவ ருதவ꞉ ஷி²ஷி²ராத³ய꞉ |
மாஸாஹோராத்ரயஷ்²சைவ ஸூர்யாசந்த்³ரமஸௌ ததா² ||2-109-48

ஆமோத³ஷ்²ச ப்ரமோத³ஷ்²ச ப்ரஹர்ஷ꞉ ஷோ²க ஏவ ச |
ரஜஸ்தமஸ்தப꞉ ஸத்யம் ஷு²த்³தி⁴ர்பு³த்³தி⁴ர்த்⁴ருதி꞉ ஷ்²ருதி꞉ ||2-109-49

ருத்³ராணீ ப⁴த்³ரகாளீ ச ப⁴த்³ரா ஜ்யேஷ்டா² து வாருணீ |
பா⁴ஸீ ச காளிகா சைவ ஷா²ண்டி³லீ சேதி விஷ்²ருதா꞉ ||2-109-50

ஆர்யா குஹூ꞉ ஸிநீவாலீ பீ⁴மா சித்ரரதீ² ரதி꞉ |
ஏகாநம்ஷா² ச கூஷ்மாண்டீ³ தே³வீ காத்யாயநீ ச யா ||2-109-51

லோஹித்யா ஜநமாதா ச தே³வகந்யாஸ்து யா꞉ ஸ்ம்ருதா꞉ |
கோ³நந்தா³ தே³வபத்நீ ச மாம் ரக்ஷந்து ஸபா³ந்த⁴வம் ||2-109-52

காலத்தின் பிற பிரிவினைகள், விண்மீன்கள் {நக்ஷத்ரங்கள்}, கோள்கள் {கிரஹங்கள்}, பருவகாலங்கள் {சிசிராதி ருதுக்கள்}, மாதங்கள், பகல்கள், இரவுகள், சூரியன், சந்திரன்,(48) கவலை, அச்சம், உணர்வுகள், செருக்கு, வாய்மை {ஆமோதம், பிரமோதம், பிரஹர்ஷம், சோகம், ஜனம், தமம், தபம், ஸத்யம்}, சித்தி {சுத்தி}, விருத்தி {புத்தி}, ஸ்ருதி, திருதி,(49) ருத்ராணி, பத்ரகாளி, பத்ரா ஜ்யேஷ்டை, வாருணி, பாஸி, காளிகை, சாண்டிலி,(50) {ஆர்யை,} குஹூ, ஸிநிவாலி, பீமை, சித்ரவதி, ரதி, {ஏகாநம்ஸை, கஷ்மாண்டீ}, காத்யாயனி,(51) லோஹித்யை, அயனமித்ரை, கனதை {ஜனமாதா, கோநந்தா, தேவபத்னி} ஆகியோரும், வேறு தெய்வீகக் காரிகையரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து என்னைக் காக்கட்டும்.(52)

நாநாப⁴ரணவேஷா²ஷ்²ச நாநாரூபாங்கிதாநநா꞉ |
நாநாதே³ஷ²விசாரிண்யோ நாநாஷ²ஸ்த்ரோபஷோ²பி⁴தா꞉ ||2-109-53

பல்வேறு ஆடைகளை உடுத்தியவர்களும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வடிவங்களில் தோன்றுபவர்களும், பல்வேறு நிலங்களில் திரிபவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரிப்பவர்களும் என்னைக் காக்கட்டும்.(53)

மேதோ³மஜ்ஜாப்ரியாஷ்²சைவ மத்³யமாம்ஸவஸாப்ரியா꞉ |
மார்ஜாரத்³வீபிவக்த்ராஷ்²ச க³ஜஸிம்ஹநிபா⁴நநா꞉ ||2-109-54

கங்கவாயஸக்³ருத்⁴ராணாம் க்ரௌஞ்சதுல்யாநநாஸ்ததா² |
வ்யாளயஜ்ஞோபவீதாஷ்²ச சர்மப்ராவரணாஸ்ததா² ||2-109-55

க்ஷதஜோக்ஷிதவக்த்ராஷ்²ச க²ரபே⁴ரீஸமஸ்வநா꞉ |
மத்ஸரா꞉ க்ரோத⁴நாஷ்²சைவ ப்ராஸாதா³ ருசிராளயா꞉ ||2-109-56

மத்தோந்மத்தப்ரமத்தாஷ்²ச ப்ரஹரந்த்யஷ்²ச தி⁴ஷ்டி²தா꞉ |
பிங்கா³க்ஷா꞉ பிங்க³கேஷா²ஷ்²ச ததோ(அ)ந்யா லூநமூர்த⁴ஜா꞉ ||2-109-57

ஊர்த்⁴வகேஷ்²ய꞉ க்ருஷ்ணகேஷ்²ய꞉ ஷ்²வேதகேஷ்²யஸ்ததா² வரா꞉ |
நாகா³யுதப³லாஷ்²சைவ வாயுவேகா³ஸ்ததா²பரா꞉ ||2-109-58

ஏகஹஸ்தா ஏகபாதா³ ஏகாக்ஷா꞉ பிங்க³ளா மதா꞉ |
ப³ஹுபுத்ராள்பபுத்ராஷ்²ச த்³விபுத்ரா꞉ புத்ரமண்டி³கா꞉ ||2-109-59

முக²மண்டீ³ பி³டா³லீ ச பூதநா க³ந்த⁴பூதநா |
ஷீ²தவாதோஷ்ணவேதாலீ ரேவதீ க்³ருஹஸஞ்ஜ்ஞிதா꞉ ||2-109-60

கொழுப்பையும், ஊனீரையும் விரும்புபவர்கள், மது, இறைச்சி, குடல் ஆகியவற்றை விரும்புபவர்கள், பூனைகள், புலிகள், யானைகள், சிங்கங்கள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்,(54) கோழி, காகம், கழுகு, கிரௌஞ்சம் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள், பாம்புகளைப் பூணூலாக அணிந்தவர்கள், தோல்களை உடுத்துபவர்கள்,(55) வாயில் குருதி கொண்டவர்கள், முரசு, பேரிகை போன்ற குரலைக் கொண்டவர்கள், கோபக்காரர்கள், முழுமையான மகிழ்ச்சி கொண்டவர்கள், அழகிய வீடுகளைக் கொண்டவர்கள்,(56) வெறி கொண்டவர்கள், அதிகம் குடிப்பவர்கள், பிறரை அடிப்பவர்கள், மஞ்சள் கண்களைக் கொண்டவர்கள், மஞ்சள் முடி கொண்டவர்கள், மழித்த தலைகளைக் கொண்டவர்கள்,(57) மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவர்கள், கருப்பு முடி கொண்டவர்கள், வெள்ளை முடி கொண்டவர்கள், ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்கள், காற்றின் வேகத்தில் பயணிப்பவர்கள்,(58) ஒரே கையைக் கொண்டவர்கள், ஒரே காலைக் கொண்டவர்கள், மஞ்சள் நிறத்தில் ஒரே கண்ணைக் கொண்டவர்கள், பல பிள்ளைகளைப் பெற்றவர்கள், குறைந்த அளவு பிள்ளைகளைப் பெற்றவர்கள், இரண்டே பிள்ளைகளைப் பெற்றவர்கள், சிறுவர்களுடன் விளையாடுபவர்கள்,(59) முகமண்டி, பிடாலி, பூதனை, கந்தபூதனை, சீதவாத உஷ்ண வேதாலி, ரேவதி ஆகிய பெயர்களைக் கொண்டவர்கள்,(60)

ப்ரியஹாஸ்யா꞉ ப்ரியக்ரோதா⁴꞉ ப்ரியவாஸா꞉ ப்ரியம்வதா³꞉ |
ஸுக²ப்ரதா³ஷ்²சாஸுக²தா³꞉ ஸதா³ த்³விஜஜநப்ரியா꞉ || 2-109-61

நக்தஞ்சரா꞉ ஸுகோ²த³ர்கா꞉ ஸதா³ பர்வணி தா³ருணா꞉ |
மாதரோ மாத்ருவத்புத்ரம் ரக்ஷந்து மம நித்யஷ²꞉ ||2-109-62

பிதாமஹமுகோ²த்³பூ⁴தா ரௌத்³ரா ருத்³ராங்க³ஸம்ப⁴வா꞉ |
குமாரஸ்வேத³ஜாஷ்²சைவ ஜ்வரா வை வைஷ்ணவாத³ய꞉ ||2-109-63

மஹாபீ⁴மா மஹாவீர்யா த³ர்போத்³பூ⁴தா மஹாப³லா꞉ |
க்ரோத⁴நாக்ரோத⁴நா꞉ க்ரூரா꞉ ஸுரவிக்³ரஹகாரிண꞉ ||2-109-64

நக்தஞ்சரா꞉ கேஸரிணோ த³ம்ஷ்ட்ரிண꞉ ப்ரியவிக்³ரஹா꞉ |
லம்போ³த³ரா ஜக⁴நிந꞉ பிங்கா³க்ஷா விஷ்²வரூபிண꞉ ||2-109-65

நகைச்சுவை, கோபம் ஆகியவற்றை விரும்புபவர்கள், ஆடைகளை விரும்புபவர்கள், நற்சொல் பேசுபவர்கள், இன்ப துன்பங்களைக் கொடுப்பவர்கள், இருபிறப்பாளர்களால் விரும்பப்படுபவர்கள்,(61) இரவில் திரிபவர்கள், நன்மையைக் கொண்டு வருபவர்கள், எப்போதும் கொடூரர்களாக இருப்பவர்கள், பிள்ளைகளைப் பாதுகாக்கும் தாய்மாரைப் போல என்னை எப்போதும் காக்கும் தாய்மார்கள்,(62) பெரும்பாட்டனின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள், பயங்கரர்கள், ருத்ரனின் அங்கங்களில் இருந்து பிறந்தவர்கள், குமரனின் (கார்த்திகேயனின்) வியர்வையில் இருந்து பிறந்தவர்கள், வைஷ்ணவ ஜ்வரங்கள்,(63) பேருடல் படைத்தவர்கள், பெரும் வீரர்கள், போலி செருக்கில் பிறந்தவர்கள், பெருஞ்சக்திவாய்ந்தவர்கள், கோபக்காரர்கள், கோபமடையாதவர்கள், கொடூரர்கள், தேவர்களைப் போலத் தெரிபவர்கள்,(64) இரவில் திரிபவர்கள், சிங்க முகம் கொண்டவர்கள், பெரிய பற்களைக் கொண்டவர்கள், சச்சரவுகளை உண்டாக்குபவர்கள், பெரிய வயிற்றைக் கொண்டவர்கள், பெரிய இடையைக் கொண்டவர்கள், மஞ்சள் கண்களைக் கொண்டவர்கள், பெரிய வடிவங்களைக் கொண்டவர்கள்,(65)

ஷ²க்த்ய்ருஷ்டிஷூ²லபரிக⁴ப்ராஸசர்மாஸிபாணய꞉ |
பிநாகவஜ்ரமுஸலப்³ரஹ்மத³ண்டா³யுத⁴ப்ரியா꞉ ||2-109-66

த³ண்டி³ந꞉ குண்டி³ந꞉ ஷூ²ரா ஜடாமுகுடதா⁴ரிண꞉ |
வேத³வேதா³ங்க³குஷ²லா நித்யயஜ்ஞோபவீதிந꞉ ||2-109-67

வ்யாளாபீடா³꞉ குண்ட³லிநோ வீரா꞉ கேயூரதா⁴ரிண꞉ |
நாநாவஸநஸம்வீதாஷ்²சித்ரமால்யாநுலேபநா꞉ ||2-109-68

க³ஜாஷ்²வோஷ்த்ரர்க்ஷமார்ஜாரஸிம்ஹவ்யாக்⁴ரநிபா⁴நநா꞉ |
வராஹோலூககோ³மாயும்ருகா³கு²மஹிஷாநநா꞉ ||2-109-69

வாமநா விகடா꞉ குப்³ஜா꞉ கராளா லூநமூர்த⁴ஜா꞉ |
ஸஹஸ்ரஷ²தஷ²ஷ்²சாந்யே ஸஹஸ்ரஜடதா⁴ரிண꞉ ||2-109-70

சக்தி, ரிஷ்டி, சூலம், பரிகம், பராஸம், சர்மம், அஸி ஆகிய ஆயுதங்களைத் தரித்தவர்கள், பிநாகம், வஜ்ரம், முசலம், பிரம்மதண்டம் முதலிய ஆயுதங்களை விரும்புபவர்கள்,(66) தண்டங்களையும், கமண்டலங்களையும் கொண்டவர்கள், துணிவுமிக்கவர்கள், சடாமுடி தரித்தவர்கள், மகுடம் தரித்தவர்கள், வேதங்களில் நிபுணர்கள், எப்போதும் வேள்விக்கான பூணூலைத் தரித்தவர்கள்,(67) பாம்புகளைத் தலையில் சூடியவர்கள், காதுகுண்டலங்களைத் தரித்தவர்கள், புஜங்களில் கேயூரங்கள் தரித்தவர்கள், பல்வேறு வகை ஆடைகளை அணிபவர்கள், அழகிய மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்பவர்கள், களிம்புகளைத் தங்கள் உடலில் பூசிக் கொள்பவர்கள்,(68) யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கரடிகள், பூனைகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள், பன்றி, ஆந்தை, நரி, மான், எலி, எருமை ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்,(69) உயரம் குறைந்தவர்கள் {குள்ளர்கள்}, அங்கப்பழுதுடையவர்கள், கூன் முதுகைக் கொண்டவர்கள், கராலர்கள், தலையை மழித்துக் கொண்டவர்கள், ஆயிரவர், நூற்றுவர், ஆயிரம் சடை தரித்தவர்,(70)

ஷ்²வேதா꞉ கைலாஸஸந்ங்காஷா²꞉ கேசித்³தி³நகரப்ரபா⁴꞉ |
கேசிஜ்ஜலத³வர்ணாபா⁴ நீலாஞ்ஜநசயோபமா꞉ ||2-109-71

ஏகபாதா³ த்³விபாதா³ஷ்²ச ததா² த்³விஷி²ரஸோ(அ)பரே |
நிர்மாம்ஸா꞉ ஸ்தூ²லஜங்கா⁴ஷ்²ச வ்யாதி³தாஸ்யா ப⁴யங்கரா꞉ ||2-109-72

வாபீதடா³க³கூபேஷு ஸமுத்³ரேஷு ஸரித்ஸு ச |
ஷ்²மஷா²நஷை²லவ்ருக்ஷேஷு ஷூ²ந்யாகா³ரநிவாஸிந꞉ || 2-109-73

கைலாசம் போன்று வெள்ளையாக இருப்பவர்கள், சூரியனைப் போன்று பிரகாசமாக இருப்பவர்கள், மழை மேகங்களைப் போலக் கருப்பாக இருப்பவர்கள், அஞ்சன மை போல நீலமாக இருப்பவர்கள்,(71) ஒற்றைக் கால் கொண்டவர்கள், இரு கால் கொண்டவர்கள், இரு தலைகளைக் கொண்டவர்கள், சதையற்றவர்கள், பெரும் இடை கொண்டவர்கள், அகலத் திறந்த வாய்களைக் கொண்டவர்கள், பயங்கரர்கள்,(72) கோள்கள், தடாகங்கள், மடுக்கள், குளங்கள், கடல்கள், ஆறுகள், இடுகாடுகள், மலைகள், மரங்கள், ஆகியவற்றிலும் சூன்யமான வீடுகளிலும் வசிப்பவர்கள் ஆகியோர் அனைத்து வகையிலும் என்னைக் காக்கட்டும்.(73)

ஏதே க்³ரஹாஷ்²ச ஸததம் ரக்ஷந்து மம ஸர்வத꞉ |
மஹாக³ணபதிர்நந்தீ³ மஹாகாலோ மஹாப³ல꞉ |
மாஹேஷ்²வரோ வைஷ்ணவஷ்²ச ஜ்வரௌ லோகப⁴யாவஹௌ ||2-109-74

க்³ராமணீஷ்²சைவ கோ³பாலோ ப்⁴ருங்க³ரீடிர்க³ணேஷ்²வர꞉ |
தே³வஷ்²ச வாமதே³வஷ்²ச க⁴ண்டாகர்ண꞉ கரந்த⁴ம꞉ ||2-109-75

ஷ்²வேதமோத³꞉ கபாலீ ச ஜம்ப⁴க꞉ ஷ²த்ருதாபந꞉ |
மஜ்ஜநோந்மஜ்ஜநௌ சோபௌ⁴ ஸந்தாபநவிளாபநௌ ||2-109-76

நிஜகா⁴ஸோ க⁴ஸஷ்²சைவ ஸ்தூ²ணாகர்ண꞉ ப்ரஷோ²ஷண꞉ |
உல்காமாலீ த⁴மத⁴மோ ஜ்வாலாமாலீ ப்ரத³ர்ஷ²ந꞉ ||2-109-77

ஸங்க⁴ட்டந꞉ ஸங்குடந꞉ காஷ்ட²பூ⁴த꞉ ஷி²வங்கர꞉ |
கூஷ்மாண்ட³꞉ கும்ப⁴மூர்தா⁴ ச ரோசநோ வைக்ருதோ க்³ரஹ꞉ ||2-109-78

கணங்களின் பெருந்தலைவன் (கணேசன்), நந்தி, பெருங்காலன், பெருஞ்சக்திவாய்ந்தவன், உலகில் அஞ்சப்படுபவர்களான பெருந்தலைவன் (சிவன்), விஷ்ணு ஆகிய இருவருக்கும் உடைய ஜ்வரங்கள்,(74) கிராமணி, கோபாலன், பிருங்காரீடி, கணேஷ்வரன், தலைவன் வாமதேவன், காதுகளில் மணிகளைக் கொண்டவன் (கண்டாகர்ணன்), கரந்தமன்,(75) ஸ்வேதமோதன், கபாலி, ஜம்பகன், பகைவரை எரிப்பவன் {சத்ருதாபனன்}, மஜ்ஜன், உனமஜ்ஜன், சந்தாபனன், விலாபனன்,(76) நிஜாகஸன், அகஸன், ஸ்தூணாகர்ணன், பிரசோஷணன், உல்காமாலி, தபதமன், ஜ்வாலாமலி, பிரதர்ஷனன்,(77) ஸங்கட்டணன், ஸங்குடனன், காஷ்டபூதன், சிவங்கரன், கூஷ்மாண்டன், கும்பமூர்த்தன், ரோசனன், {கிரஹமாகிபலி}, வைக்ருதன்,(78)

அநிகேத꞉ ஸுராரிக்⁴ந꞉ ஷி²வஷ்²சாஷி²வ ஏவ ச |
க்ஷேமக꞉ பிஷி²தாஷீ² ச ஸுராரிர்ஹரிலோசந꞉ ||2-109-79

பீ⁴மகோ க்³ராஹகஷ்²சைவ ததை²வாக்³ரமயோ க்³ரஹ꞉ |
உபக்³ரஹோ(அ)ர்யகஷ்²சைவ ததா² ஸ்கந்த³க்³ரஹோ(அ)பர꞉ ||2-109-80

சபலோ(அ)ஸமவேதாலஸ்தாஸம꞉ ஸுமஹாகபி꞉ |
ஹ்ருத³யோத்³வர்தநஷ்²சைட³꞉ குண்டா³ஷீ² கங்கணப்ரிய꞉ ||2-109-81

ஹரிஷ்²மஷ்²ருர்க³ருத்மந்தோ மநோமாருதரம்ஹஸ꞉ |
பார்வத்யா ரோஷஸம்பூ⁴தா꞉ ஸஹஸ்ராணி ஷ²தாநி ச || 2-109-82

ஷ²க்திமந்தோ த்⁴ருதிமந்தோ ப்³ரஹ்மந்யா꞉ ஸத்யஸங்க³ரா꞉ |
ஸர்வகாமாபஹந்தாரோ த்³விஷதாம் ச ம்ருதே⁴ ம்ருதே⁴ ||2-109-83

ராத்ராவஹநி து³ர்கே³ஷு கீர்திதா꞉ ஸகலைர்கு³ணை꞉ |
தேஷாம் க³நாநாம் பதய꞉ ஸக³ணா꞉ பாந்து மாம் ஸதா³ ||2-109-84

அனிகேதன், ஸுராரிக்னன், சிவன், அசிவன், க்ஷேமகன், பிசிதாஸி, ஸுராரி, ஹரிலோசனன்,(79) பீமகன், கிரஹகன், உக்ரமயகிரஹன், உபக்ரஹன், அர்யகன், ஸ்கந்தக்ரஹன்,(80) சபலன், அஸ்மவேதாளன், தாமஸன், ஸுமஹாகபி, ஹிரதயுதவாதனன், ஜடன், குண்டாசி, கங்கணப்ரியன்,(81) ஹரிமசம்ஸ்ரு, மனோவேக காற்று வேகம் கொண்ட கருத்மான், பார்வதியின் கோபத்திலிருந்து பிறந்த சக்திமிக்க நூற்றுவர், ஆயிரவர்,(82) பெருஞ்சக்திவாய்ந்தவர்கள், உறுதிமிக்கவர்கள், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவர்கள், வாய்மைக்குக் கட்டுப்பட்டவர்கள், போரில் பகைவரின் ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் அழிப்பவர்கள்(83) ஆகியோர் அனைவரும் இரவிலும், பகலிலும், கடினமான காலங்களிலும் துதிக்கப்படும்போது, கணங்களின் துணையுடன் கூடிய கணேசனுடன் சேர்ந்து எப்போதும் என்னைக் காக்கட்டும்.(84)

நாரத³꞉ பர்வதஷ்²சைவ க³ந்த⁴ர்வாப்ஸரஸாம் க³ணா꞉ |
பிதர꞉ காரணம் கார்யமாத⁴யோ வ்யாத⁴யஸ்ததா² ||2-109-85

அக³ஸ்த்யோ கா³ளவோ கா³ர்க்³ய꞉ ஷ²க்திதௌ⁴ம்ய꞉ பராஷ²ர꞉ |
க்ருஷ்ணாத்ரேயஷ்²ச ப⁴க³வாநஸிதோ தே³வலோ ப³ல꞉ ||2-109-86

ப்³ருஹஸ்பதிருதத்²யஷ்²ச மார்கண்டே³ய꞉ ஷ்²ருதஷ்²ரவா꞉ |
த்³வைபாயநோ வித³ர்ப⁴ஷ்²ச ஜைமிநிர்மாட²ர꞉ கட²꞉ ||2-109-87

விஷ்²வாமித்ரோ வஸிஷ்ட²ஷ்²ச லோமஷ²ஷ்²ச மஹாமுநி꞉ |
உத்தங்கஷ்²சைவ ரைம்யஷ்²ச பௌலோமஷ்²ச த்³விதஸ்த்ரித꞉ ||2-109-88

ருஷிர்வை காலவ்ருக்ஷீயோ முநிமேதா⁴திதி²ஸ்ததா² |
ஸாரஸ்வதோ யவக்ரீதி꞉ குஷி²கோ கௌ³தமஸ்ததா² ||2-109-89

ஸம்வர்த ருஷ்²யஷ்²ருங்க³ஷ்²ச ஸ்வஸ்த்யாத்ரேயோ விபா⁴ண்ட³க꞉ |
ருசீகோ ஜமத³க்³நிஷ்²ச ததோ²ர்வஸ்தபஸாம் நிதி⁴꞉ ||2-109-90

நாரதர், பர்வதர், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், கணங்கள், பித்ருக்கள், காரணம், காரியம், ஆதி, வியாதி,(85) அகஸ்தியர், காலவர், கார்க்யர், சகிதி, தௌம்யர், பராசரர், கிருஷ்ணாத்ரேயர், அசிதர், தேவலர், பலர்,(86) பிருஹஸ்பதி, உதத்யர், மார்க்கண்டேயர், சுருதச்ரவர், துவைபாயனர், விதர்ப்பர், ஜைமினி, மாடரர், கடர்,(87) விஷ்வாமித்ரர், வசிஷ்டர், பெரும் முனிவரான லோமசர், உதங்கர், நைப்யர், பௌலோமர், துவிதர், திருதர்,(88) காலவிருக்ஷ்யரிஷி, மேதாதிமுனி, ஸாரஸ்வதர், யவக்ரீதி, குசிகர், கௌதமர்,(89) ஸம்வர்த்தர், ரிஷ்யசிருங்கர், ஸ்வஸ்திகயாத்ரேயர், விபாண்டகர், ரிசீகர், ஜமதக்னி, தவங்களின் கருவூலமான ஔர்வர்,(90)

ப⁴ரத்⁴வாஜ꞉ ஸ்தூ²லஷி²ரா꞉ கஷ்²யப꞉ புலஹ꞉ க்ரது꞉ |
ப்³ருஹத³க்³நிர்ஹரிஷ்²மஷ்²ருர்விஜய꞉ கண்வ ஏவ ச ||2-109-91

வைதண்டீ³ தீ³ர்க⁴தாபஷ்²ச வேத³கா³ர்தோ²(அ)ம்ஷு²மாஞ்ச்சி²வ꞉ |
அஷ்டாவக்ரோ த³தீ⁴சிஷ்²ச ஷ்²வேதகேதுஸ்ததை²வ ச ||2-109-92

உத்³தா³ளக꞉ க்ஷீரபாணி꞉ ஷ்²ருங்கீ³ கௌ³ரமுக²ஸ்ததா² |
அக்³நிவேஷ்²ய꞉ ஷ²மீகஷ்²ச ப்ரமுசுர்முமுசுஸ்ததா² ||2-109-93

ஏதே சாந்யே ச ருஷய꞉ ப³ஹவ꞉ ஷ²ம்ஸிதவ்ரதா꞉ |
முநய꞉ ஷ²ம்ஸிதாத்மாநோ யே சாந்யே நாநுகீர்திதா꞉ ||2-109-94

க்ரதவ꞉ ஷா²தி⁴ந꞉ ஷா²ந்தா꞉ ஷா²ந்திம் குர்வந்து மே ஸதா³ |
த்ரயோ(அ)க்³நயஸ்த்ரயோ வேதா³ஸ்த்ரைவித்³யா꞉ கௌஸ்துபோ⁴ மணி꞉ ||2-109-95

உச்சை꞉ஷ்²ரவா ஹய꞉ ஷ்²ரீமாந்வைத்³யோ த⁴ந்வந்தரிர்ஹரி꞉ |
அம்ருதம் கௌ³꞉ ஸுபர்ணஷ்²ச த³தி⁴கௌ³ராஷ்²ச ஸர்ஷபா꞉ ||2-109-96

பரத்வாஜர், ஸ்தூலசிரர், கசியபர், புலஹர், கிரது, பிருஹதக்னி, ஹரிஸ்மஸரு, விஜயர், கண்வர்,(91) வைதண்டி, தீர்கதாபர், வேதகார்த்தர், அம்சுமான், சிவர், அஷ்டாவக்ரர், ததீசி, ஸ்வேதகேது,(92) உத்தாலகர், க்ஷீரபாணி, சிருங்கி, கௌர்முகர், அக்னிவேஸ்யர், சமீகர், பிரமுசு, முமுசு ஆகியோரும்,(93) நோன்புகளை நோற்பவர்களான பிற முனிவர்கள் பலரும், ஆன்மாக்களைக் கட்டுப்படுத்திய முனிவர்களும், இங்கே துதிக்கப்படாதவர்களும்,(94) வேள்விகளைச் செய்யும் பிற முனிவர்களும், அமைதியான முனிவர்களும் எப்போதும் எனக்கு அமைதியை அருளட்டும்.
மூன்று அக்னிகள், மூன்று வேதங்கள், மூன்று வித்தைகள், கௌஸ்துபமணி,(95) உச்சைஸ்ரவஸ் குதிரை, மருத்துவத்தில் திறன்மிகுந்த மங்கலமான தன்வந்திரி, ஹரி, அம்ருதம், கருடன் {ஸுபர்ணம்}, வெண்பறவைகள்,(96)

ஷு²க்லா꞉ ஸுமநஸ꞉ கந்யா꞉ ஷ்²வேதச்ச²த்ரம் யவாக்ஷதா꞉ |
தூ³ர்வா ஹிரண்யம் க³ந்தா⁴ஷ்²ச வாலவ்யஜநமேவ ச ||2-109–97

ததா²ப்ரதிஹதம் சக்ரம் மஹோக்ஷஷ்²சந்த³நம் விஷம் |
ஷ்²வேதோ வ்ருஷ꞉கரீ மத்த꞉ ஸிம்ஹோ வ்யாக்⁴ரோ ஹயோ கி³ரி꞉ ||2-109-98

ப்ருதி²வீ சோத்³த்⁴ருதா லாஜா ப்³ராஹ்மநா மது⁴ பாயஸம் |
ஸ்வஸ்திகோ வர்த⁴மாநஷ்²ச நந்த்³யாவர்த꞉ ப்ரியங்க³வ꞉ |
ஷ்²ரீப²லம் கோ³மயம் மத்ஸ்யோ து³ந்து³பி⁴꞉ படஹஸ்வந꞉ ||2-109-99

ருஷிபத்ந்யஷ்²ச கந்யாஷ்²ச ஷ்²ரீமத்³ப⁴த்³ராஸநம் த⁴நு꞉ |
ரோசநா ருசகஷ்²சைவ நதீ³நாம் ஸங்க³மோத³கம் ||2-109-100

ஸுபர்ணா꞉ ஷ²தபத்ராஷ்²ச சகோரா ஜீவஜீவகா꞉ |
நந்தீ³முகோ² மயூரஷ்²ச ப³த்³த⁴முக்தாமணித்⁴வஜா꞉ ||2-109-101

ஆயுதா⁴நி ப்ரஷ²ஸ்தாநி கார்யஸித்³தி⁴கராணி ச |
புண்யம் வை விக³தக்லேஷ²ம் ஷ்²ரீமத்³வை மங்க³ளாந்விதம் ||2-109-102

வெண்கடுகு, வெண்மலர்கள், கன்னிகைகள், வெண்குடை, யவம், அக்ஷதை, அருகம்புல், தங்கம், நறுமணப்பூச்சு, விசிறி,(97) சக்கராயுதம், பெரும் காளை, சந்தனம், நஞ்சு, வெள்ளை காளை, மதங்கொண்ட யானை, சிங்கம், புலி, குதிரை, மலை,(98) பூமாதேவி {நிலம்}, நெற்பொரி, பிராமணர்கள், தேன், பாயஸம், சுவஸ்திகாவளதக்கை, நந்தியாவர்த்த மலர், குங்குமப்பூ, வில்வம், கோமயம், மீன் {மத்ஸயம்}, துந்துபி, படகம் ஆகியவற்றின் ஒலி,(99) முனிவர்களின் மனைவியர் {ரிஷிபத்னிகள்}, கன்னிகைகள், மங்கல இருக்கைகள் {ஸ்ரீமத்பத்ராஸனம்}, விற்கள், கோரோசனை, மங்களத்திரவியம், ஆறுகளின் (ஆறுகள் கடலுடன் கலக்கும்) சங்கமத்தில் கிடைக்கும் நீர்,(100) நல்ல இலைகள், தாமரை, சகோரம், ஜீவ ஜீவக பறவை, நந்தீமுகப் பறவை, மயில் {மயூரம்}, முத்து, ரத்தினம் பதித்த கொடிக்கம்பங்கள்,(101) நல்ல ஆயுதங்கள் எனக் காரியங்களை நிறைவேற்றவல்லவையும், நற்பேற்றை வழங்குபவையும், கடினமான நிலைமைகளை அழிப்பவையும், நல்ல விளைவுகளை உண்டாக்குபவையுமான இவை அனைத்தும் என்னைக் காக்கட்டும்[இந்த ஆஹ்நிக துதி, மஹாபாரதம் அநுசாஸனபர்வம் பகுதி 150ல் சொல்லப்படும் சாவித்ரி மந்திரத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ].(102)

ராமேணோதா³ஹ்ருதம் பூர்வமாயு꞉ ஷ்²ரீஜயகாங்க்ஷிணா |
ய இத³ம் ஷ்²ராவயேத்³வித்³வாம்ஸ்ததை²வ ஷ்²ருணுயாந்நர꞉ ||2-109-103

மங்க³ளாஷ்டஷ²தம் ஸ்நாதோ ஜபந்பர்வணி பர்வணி |
வத⁴ப³ந்த⁴பரிக்லேஷ²ம் வ்யாதி⁴ஷோ²கபராப⁴வம் ||2-109-104

ந ச ப்ராப்நோதி வைகல்யம் பரத்ரேஹ ச ஷ²ர்மத³ம் |
த⁴ந்யம் யஷ²ஸ்யமாயுஷ்யம் பவித்ரம் வேத³ஸம்மிதம் ||2-109-105

ஷ்²ரீமத்ஸ்வர்க்³யம் ஸதா³ புண்யமபத்யஜநநம் ஷி²வம் |
ஷு²ப⁴ம் க்ஷேமகரம் ந்ரூணாம் மேதா⁴ஜநநமுத்தமம் ||2-109-106

ஸர்வரோக³ப்ரஷ²மநம் ஸ்வகீர்திகுலவர்த⁴நம் |
ஷ்²ரத்³த³தா⁴நோ த³யோபேதோ ய꞉ படே²தா³த்மவாந்நர꞉ |
ஸர்வபாபவிஷு²த்³தா⁴த்மா லப⁴தே ச ஷு²பா⁴ம் க³திம் ||2-109-107

இது நீண்டகாலத்திற்கு முன்னர்ப் பலராமனால் ஓதப்பட்டது. நீண்ட வாழ்நாள், செழிப்பு, வெற்றி ஆகியவற்றை விரும்பும் மனிதர்கள் நல்லோரைக் கொண்டு ஓதச் செய்து இதைக் கேட்க வேண்டும்.(103) திதிகள் தோறும் {நாள்தோறும்} நீராடிவிட்டு, நூற்றெட்டு மங்கலப் பெயர்களுடன் கூடிய இந்த மந்திரத்தை {ஆஹ்நிகத் துதியை} ஒருவன் ஓதினால் அவன் மரணம், பற்று, நோய், கவலை ஆகியவற்றால் பீடிக்கப்படமாட்டான்.(104) இந்த மந்திரம் இம்மையிலும், மறுமையிலும் நன்மையை ஏற்படுத்தும். வேதங்களுக்கு இணையான இந்தப் புனித மந்திரம் நற்பேற்றையும், நீண்ட வாழ்நாட்களையும், புகழையும் கொடுக்கும்.(105) இந்த மந்திரம் {ஆஹ்நிக ஸ்தோத்ரம்} எப்போதும் செழிப்பைக் கொடுக்கும். தெய்வீகமானதும், புனிதமானதுமான இது சந்ததியையும், மங்கலத்தையும் அருளும். இது நற்பேற்றையும், செழிப்பையும் அருளும். தவத்தின் பலன்களைக் கொடுக்கக்கூடிய இது {ஆஹ்நிக மந்திரம்} மனிதர்களுக்கு மிகச் சிறந்த துதியாகும்.(106) இந்த மந்திரம் அனைத்து பிணிகளையும் போக்கவல்லதும், ஒருவனுடைய புகழையும், அவனுடைய குலத்தின் புகழையும் அதிகரிக்கவல்லதும் ஆகும். அன்பு நிறைந்த இதயம் கொண்ட ஒருவனால் இந்த மந்திரம் கவனத்துடன் ஓதப்பட்டால், அவனுடைய ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடையும், அவன் மங்கல உலகை அடைவான்” என்றார் {வைசம்பாயனர்}.(107)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப³லதே³வாஹ்நிகம் நாம நவாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 108–(மாயாவத்யா ஸஹ ஸ்ரீ பிரத்யும்னஸ்ய ஸ்ரீ மத் துவாரகா கமனம்)

February 1, 2021

மாயாவதியுடன் ஸ்ரீ மத் துவாரகையை அடைந்த ஸ்ரீ பிரத்யும்னன்; மட்டற்ற மகிழ்ச்சியடைந்த ஸ்ரீ ருக்மிணி

வைஷ²ம்ப்யன உவாச
ஸமப்தமாயோ மாயாஜ்ஞோ விக்ராந்த꞉ ஸமரே(அ)வ்யய꞉ |
அஷ்டம்யாம் நிஹதோ யுத்³தே⁴ மாயாவீ காலஷ²ம்ப³ர꞉ ||2-108-1

தம்ருக்ஷவந்தே நக³ரே நிஹத்யாஸுரஸத்தமம் |
க்³ருஹ்ய மாயாவதீம் தே³வீமாக³ச்ச²ந்நக³ரம் பிது꞉ ||2-108-2

யோ(அ)ந்தரிக்ஷக³தோ பூ⁴த்வா மாயாவீ ஷீ²க்⁴ரவிக்ரம꞉ |
ஆஜகா³ம புரீம் ரம்யாம் ரக்²Sஇதாம் தேஜஸா பிது꞉ ||2-108-3

ஸோ(அ)ந்தரிக்ஷாந்நிபதித꞉ கேஷ²வாந்த꞉புரே ஷி²ஷு²꞉ |
மாயாவத்யா ஸஹ தயா ரூபவானிவ மன்மத²꞉ ||2-108-4

தஸ்மிம்ஸ்தத்ராவபதிதே மஹிஷ்ய꞉ கேஷ²வஸ்ய யா꞉ |
விஸ்மிதாஷ்²சைவ ஹ்ருஷ்டாஷ்²ச பீ⁴தாஷ்²சைவாப⁴வம்ஸ்தத꞉ ||2-108-5

ததஸ்தம் காமஸங்காஷ²ம் காந்தயா ஸஹ ஸங்க³தம் |
ப்ரேக்ஷந்த்யோ ஹ்ருஷ்டவத³னா꞉ பிப³ந்த்யோ நயனோத்ஸவம் ||2-108-6

தம் வினீதமுக²ம் த்³ருஷ்ட்வா ஸஜ்ஜமானம் பதே³ பதே³ |
அப⁴வன்ஸ்னிக்³த⁴ஸஞ்கல்பா꞉ ஸர்வாஸ்தா꞉ க்ருஷ்ணயோஷித꞉ ||2-108-7

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பெருஞ்சக்திவாய்ந்த மாயாவியான சம்பரன், தன் மாயைகள் அனைத்தும் முடிந்ததும், எட்டாம் பிறைநாளில் {அஷ்டமியில்} போரில் கொல்லப்பட்டான்.(1) பிரத்யும்னன், அசுரர்களின் முதன்மையான அவனை ரிக்ஷவந்த நகரத்தில் கொன்றுவிட்டுத் தன்னுடன் மாயாவதியை அழைத்துக் கொண்டு தன் தந்தையின் நகருக்கு {துவாரகைக்குப்} புறப்பட்டுச் சென்றான்.(2) வேகமாகச் செல்லவல்லவனான அந்த வீரன், தன் மாயா சக்தியின் மூலம் வானத்தில் எழுந்து தன் தந்தையின் சக்தியால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரை அடைந்தான்.(3) மன்மதனை (காமனைப்) போன்ற அந்த இளைஞன், மாயாதியுடன் சேர்ந்து வானத்தில் இருந்து கேசவனின் அந்தப்புரத்திற்குள் இறங்கினான்.(4) இவ்வாறு பிரத்யும்னன் கீழே இறங்கி வந்தபோது, கேசவனின் ராணிகள் ஆச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும், அச்சத்தாலும் நிறைந்தனர்.(5) காமனுக்கு ஒப்பான அந்த இளைஞனையும், அவனது மனைவியையும் கண்ட பிறகு அவர்களது முகங்களில் மகிழ்ச்சி பெருகியது; அவர்கள் தங்கள் கண்களால் அவனது முகத்தில் உள்ள அமுதத்தைப் பருகுபவர்களைப் போலத் தெரிந்தனர்.(6) நாணம் நிறைந்த அந்தப் பிள்ளையின் முகத்தையும், அடிமேல் அடியெடுத்து வைத்து அடக்கத்துடன் நடக்கும் நடையும் கண்ட அவர்கள் அனைவரும் அவனிடம் அன்பால் நிறைந்தனர்.(7)

ருக்மிணீ சைவ தம் த்³ருஷ்ட்வா ஷோ²கார்தா புத்ரக³ர்த்³தி⁴னீ |
ஸபத்னீஷ²தஸங்கீர்ணா ஸபா³ஷ்பா வாக்யமப்³ரவீத் || 2-108-8

யாத்³ருக்ஸ்வப்னோ மயா த்³ருஷ்டோ நிஷா²யாம் யௌவனே க³தே |
கம்ஸாரிணா மமானீய த³த்தம் ஸாஹாரபல்லவம் ||2-108-9

ஷ²ஷி²ரஷ்²மிப்ரதீகாஷ²ம் முக்தாதா³மவிபூ⁴ஷிதம் |
கேஷ²வேனாங்கமாரோப்ய மம கண்டே² ந்யப³த்⁴யத ||2-108-10

ஷ்²யாமா ஸுசாருகேஷா² ஸ்த்ரீ ஷு²க்லாம்ப³ரவிபூ⁴ஷிதா |
பத்³மஹஸ்தா ந்ரீறீக்ஷந்தீ ப்ரவிஷ்டா மம வேஷ்²மனி ||2-108-11

ததா² புனரஹம் க்³ருஹ்ய ஸ்னாபிதா ருசிராம்பு³னா |
குஷே²ஷ²யமயீம் மாலாம் ஸ்த்ரீ ஸங்க்³ருஹ்யாத² பாணினா ||2-108-12

நூறு சக்களத்திகளால் சூழப்பட்டவளும், மகனைப் பெற்ற அன்னையுமான ருக்மிணி, அந்தப் பிள்ளையைக் கண்டதும் துயரால் பீடிக்கப்பட்டாள். கண்ணீர் சிந்தியபடியே அவள்,(8) “ஐயோ, நடு இரவில் கண்ட கனவில் கம்சனைக் கொன்றவர் {கம்ஸாரிணர் கிருஷ்ணர்} எனக்கு மாந்தளிர்களை {மாவிலைகளைத்} தந்தார்.(9) கேசவர் என்னை மடியில் வைத்துக் கொண்டு நிலவின் கதிர்களுக்கு ஒப்பான முத்து மாலையை என் கழுத்தில் சூட்டினார்.(10) அழகிய சுருள்முடிகளுடன் கூடியவளும், வெள்ளை ஆடை உடுத்தியவளும், கையில் தாமரையைக் கொண்டவளுமான ஓர் இளம்பெண் {என்னைப் பார்த்துக் கொண்டே} என் அறைக்குள் நுழைந்தாள்.(11) அழகாக என் மீது அவள் நீரைத் தெளித்தாள் {அழகாக என்னை நீராட்டினாள்}. அதன்பிறகு அந்தப் பெண் என் தலையைத் தன் கைகளால் தீண்டித் தாமரை மாலையை எனக்குக் கொடுத்தாள்” என்று சொன்னாள்.(12)

மம மூர்த⁴ன்யுபாக்⁴ராய த³த்தா ஸ்வச்சா² தயா மம |
ஏவம் ஸ்வப்னான்கீர்தயந்தீ ருக்மிணீ ஹ்ருஷ்டமானஸா ||2-108-13

ஸகீ²ஜனவ்ருதா தே³வீ குமாரம் வீக்ஷ்ய தம் முஹு꞉ |
த⁴ந்யாயா꞉ க²ல்வயம் புத்ரோ தீ³ர்கா⁴யு꞉ ப்ரியத³ர்ஷ²ன꞉ ||2-108-14

ஈத்³ருஷ²꞉ காமஸங்காஷோ² யௌவனே ப்ரத²மே ஸ்தி²த꞉ |
ஜீவபுத்ரா த்வயா புத்ர காஸௌ பா⁴க்³யஸமன்விதா ||2-108-15

கிமர்த²ம் சாம்பு³த³ஷ்²யாம꞉ ஸபா⁴ர்யஸ்த்வமிஹாக³த꞉ |
அஸ்மின்வயஸி ஸுவ்யக்தம் ப்ரத்³யும்னோ மம புத்ரக꞉ ||2-108-16

ப⁴வேத்³யதி³ ந நீத꞉ ஸ்யாத்க்ருதாந்தேன ப³லீயஸா |
வ்யக்தம் க்ருஷ்ணகுமாரஸ்த்வம் ந மித்²யா மம தர்கிதம் ||2-108-17

விஜ்ஞாதோ(அ)ஸி மயா சிஹ்னைர்வினா சக்ரம் ஜனார்த³ன꞉ |
முக²ம் நாராயணஸ்யேவ கேஷா²꞉ கேஷா²ந்த ஏவ ச ||2-108-18

தன் தோழிகளால் சூழப்பட்டிருந்த ருக்மிணி, தன் கனவை இவ்வாறு விளக்கிச் சொல்லி மீண்டும் மீண்டும் அந்த இளவரசனைக் கண்டு,(13) “அழகும், நீண்ட ஆயுளும் கொண்டவனும், காமனுக்கு ஒப்பானவனும், இளமையின் முதல் நிலையில் அடியெடுத்து வைத்தவனுமான இத்தகைய பிள்ளையை மகனாகப் பெற்ற பெண் அருளப்பட்டவளே.(14) ஓ! மகனே, மேகம் போன்ற நிறத்துடன் கூடிய உன்னைப் போன்ற மகனால் அருளப்பட்ட நல்லூழ் கொண்ட அந்தப் பெண் யார்? உன் மனைவியுடன் நீ இங்கே வந்ததேன்?(15) ஐயோ, சக்திவாய்ந்த யமன், என் குழந்தை பிரத்யும்னனை அபகரிக்காதிருந்தால், இந்நேரம் அவனும் உன் வயதையே அடைந்திருப்பான்.(16) என் ஊகம் ஒருபோதும் பொய்யாகாது. நிச்சயம் நீ விருஷ்ணி குல இளவரசனே;(17) உன் மேனியில் உள்ள அடையாளங்களால் நீ சக்கரம் இல்லாத ஜனார்த்தனரைப் போலத் தெரிகிறாய். உன் முகமும், தலைமுடியும் நாராயணருக்கு ஒப்பானவையாக இருக்கின்றன,(18)

ஊரூ வக்ஷோ பு⁴ஜௌ துல்யௌ ஹலின꞉ ஷ்²வஷு²ரஸ்ய மே |
கஸ்த்வம் வ்ருஷ்ணிகுலம் ஸர்வம் த்³யோதயன்வபுஷா ஸ்தி²த꞉ ||2-108-19

அஹோ நாராயணஸ்யேவ தி³வ்யா தே பரமா தனு꞉ |
ஏதஸ்மின்னந்தேரே க்ருஷ்ண꞉ ஸஹஸா ப்ரவிவேஷ² ஹ |
நாரத³ஸ்ய வச꞉ ஷ்²ருத்வா ஷ²ம்ப³ரஸ்ய வத⁴ம் ப்ரதி ||2-108-20

ஸோ(அ)பஷ்²யத்தம் ஸுதம் ஜ்யேஷ்ட²ம் ஸித்³த⁴ம் மன்மத²லக்ஷணை꞉ |
ஸ்னுஷாம் மாயாவதீம் சைவ ஹ்ருஷ்டசேதா ஜனார்த³ன꞉ |
ஸோ(அ)ப்³ரவீத்ஸஹஸா தே³வீம் ருக்மிணீம் தே³வதாமிவ ||2-108-21

க்ருஷ்ண உவாச
அயம் ஸ தே³வி ஸம்ப்ராப்த꞉ ஸுதஷ்²சாபத⁴ரஸ்தவ ||2-108-22

உன் தொடைகளும், கரங்களும், மார்பும் என் மைத்துனரான ஹலாதரருக்கு {பலராமருக்கு} ஒப்பானவையாக இருக்கின்றன. ஐயோ, நீ நாராயணரின் இரண்டாம் தெய்வீக உடலைக் கொண்டவன் போலத் தெரிகிறாய். உன் மேனியால் நீ மொத்த மொத்த விருஷ்ணி குலத்தையும் அலங்கரிக்கிறாய்.(19) ஓ! பிள்ளாய், யார் நீ?” என்று கேட்டாள் {ருக்மிணி}.

அதே வேளையில், சம்பரனின் அழிவை நாரதரிடம் இருந்து கேட்டிருந்த கிருஷ்ணன், அங்கே திடீரென நுழைந்தான்.(20) ஜனார்த்தனன், காமனுக்கு ஒப்பான தன் மூத்த மகனையும், தன் மருமகள் மாயாவதியையும் கண்டு இன்பத்தால் நிறைந்து,(21) தேவி போன்ற ருக்மிணியிடம், “ஓ! தேவி, பெரும் வில்லாளியான உன் மகன் இதோ வந்துவிட்டான்.(22)

அனேன ஷ²ம்ப³ரம் ஹத்வா மாயாயுத்³த⁴விஷா²ரத³ம் |
ஹதா மாயாஸுதா꞉ ஸர்வா யாபி⁴ர்தே³வானபா³த⁴யத் ||2-108-23

ஸதீ சய ஷு²பா⁴ ஸாத்⁴வீ பா⁴ர்யா வை தனயஸ்ய தே |
மாயாவதீதி விக்²யாதா ஷ²ம்ப³ரஸ்ய க்³ருஹோஷிதா ||2-108-24

மா ச தே ஷ²ம்ப³ரஸ்யேயம் பத்நீதி ப⁴வது வ்யதா² |
மன்மதே² து க³தே நாஷ²ம் க³தே சானங்க³தாம் புரா ||2-108-25

காமபத்னீ ந காந்தைஷா ஷ²ம்ப³ரஸ்ய ரதிப்ரியா |
மாயாரூபேண தம் தை³த்யம் மோஹயத்யஸக்ருச்சு²பா⁴ ||2-108-26

மாயையில் திறன்மிக்கச் சம்பரனை இவன் கொன்றுவிட்டான். தேவர்களைத் துன்புறுத்த அவன் பயன்படுத்தி வந்த மாயக் கலைகள் அனைத்தையும் இவன் கற்றிருக்கிறான்.(23) மங்கலமானவளும், கற்புநிறைந்தவளுமான இந்தப் பெண் உன் மகனின் மனைவியாவாள். அவள் இந்தக் காலம் வரை சம்பரனின் வீட்டில் மாயாவதி என்ற பெயரில் வாழ்ந்து வந்தாள்.(24) இவளை சம்பரனின் மனைவி என்று நினைத்து மனம் வருந்தாதே. காமனின் அன்புக்குரிய மனைவியான ரதியென நீ இவளை அறிவாயாக. முற்காலத்தில் மன்மதன், ஹரனின் கோபத்தீயால் எரிக்கப்பட்டு அங்கங்களற்றவன் ஆனதில் இருந்து இந்தக் காலம் வரை இந்த மங்கலப் பெண், தன் மாய சக்தியால் உண்டான தன்னைப் போன்ற தோற்றத்தின் மூலம் அந்தத் தைத்தியனை {சம்பரனை} எப்போதும் மயக்கத்தில் {மோகத்தில்} வைத்திருந்தாள்.(25,26)

ந சைஷா தஸ்ய கௌமாரே வஷே² திஷ்ட²தி ஷோ²ப⁴னா |
ஆத்மமாயாமயம் க்ருத்வா ரூபம் ஷ²ம்ப³ரமாவிஷ²த் ||2-108-27

பத்ன்யேஷா மம புத்ரஸ்ய ஸ்னுஷா தவ வராங்க³னா |
லோககாந்தஸ்யா ஸாஹாய்யம் கரிஷ்யதி மனோமயம் ||2-108-28

ப்ரவேஷ²யைனாம் ப⁴வனம் பூஜ்யாம் ஜ்யேஷ்டா²ம் ஸ்னுஷாம் மம |
சிரம் ப்ரநஷ்டம் ச ஸுதம் ப⁴ஜஸ்வ புனராக³தம் ||2-108-29

இந்த அழகிய பெண், இளமையில் கூடச் சம்பரனை நாடவில்லை; இவள், தன் மாய சக்திகளின் மூலம் தன்னைப் போன்ற வடிவத்தை உண்டாக்கி, சம்பரனிடம் அவளை அனுப்பி வந்தாள்.(27) ஓ! அழகிய பெண்ணே, என் மகனின் மனைவியும், உன்னுடைய மருமகளுமான இவள் காமனுக்குத் துணையாக இருந்து அவனை நிறைவடையச் செய்வாள்.(28) நமது மூத்த மருமகளான இவள் நம் அன்புக்குத் தகுந்தவளாவாள். இவளை உன் அறைக்கு அழைத்துச் சென்று, தொலைந்து போய்த் திரும்பி வந்திருக்கும் உன் மகனுக்கு உணவளிப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(29)

வைஷ²ம்பாயன உவாச
ஷ்²ருத்வா து வசனம் தே³வீ க்ருஷ்ணேனோதா³ஹ்ருதம் ததா³ |
ப்ரஹர்ஷ²மதுலம் லப்³த்⁴வா ருக்மிணீ வாக்யமப்³ரவீத் ||2-108-30

அஹோ த⁴ன்யதராஸ்மீதி வீரபுத்ரஸமாக³மாத் |
அத்³ய மே ஸப²ல꞉ காம꞉ பூர்ணோ மே(அ)த்³ய மனோரத²꞉ ||2-108-31

சிரப்ரநஷ்டபுத்ரஸ்ய த³ர்ஷ²னம் ப்ரியயா ஸஹ |
ஆக³ச்ச² புத்ர ப⁴வனம் ஸபா⁴ர்ய꞉ ப்ரவிவேஷ² ச ||2-108-32

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்}, “கிருஷ்ணனால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்ட ருக்மிணி, பெருமகிழ்ச்சி அடைந்தவளாக,(30) “என் வீர மகன் திரும்பி வந்துவிட்டதால் நான் பேறுமிக்கவளானேன். என் பிறவி அருளப்பட்டது,(31) தொலைந்து போன என் மகன் தன் மனைவியுடன் திரும்பி வந்துவிட்டதால் என் நோக்கம் நிறைவேறியது. என் மகனே வா, உன் மனைவியுடன் இந்த அறைக்குள் நுழைவாயாக” என்றாள் {ருக்மிணி}.(32)

ததோ(அ)பி⁴வாத்³ய சரணௌ கோ³விந்த³ம் மாதரம் ச தாம் |
ப்ரத்³யும்ன꞉ பூஜயாமாஸ ஹலினம் ச மஹாப³லம் ||2-108-33

உத்தா²ப்ய தம் பரிஷ்வஜ்ய மூர்த்⁴ன்யுபாக்⁴ராய வீர்யவான் |
ப்ரத்³யும்னம் ப³லினாம் ஷ்²ரேஷ்ட²ம் கேஷ²வ꞉ பரவீரஹா ||2-108-34

ஸ்னுஷாம் சோத்தா²ப்ய தாம் தே³வீம் ருக்மிணீ ருக்மபூ⁴ஷணா |
பரிஷ்வஜ்யோபஸங்க்³ருஹ்ய ஸ்னேஹாத்³க³த்³க³த³பா⁴ஷிணீ ||2-108-35

ஸமேத்ய ப⁴வனம் பத்ன்யா ஷ²சீந்த்³ரமதி³திர்யதா² |
ப்ரவேஷ²யாமாஸ ததா³ ருக்மிணீ ஸுதமாக³தம் ||2-108-36

பிரத்யும்னன், தன் அன்னையையும், கோவிந்தனையும் வணங்கிவிட்டு, ஹலாதரனிடம் {பலராமனிடம்} பணிந்து தலை வணங்கினான்.(33) பகைவரின் போர்வீரர்களைக் கொல்பவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கேசவன், பிரத்யும்னனை உயர்த்தி, ஆரத்தழுவிக் கொண்டு உச்சி முகர்ந்தான்.(34) ருக்மிணி தேவியும், அன்பால் தடைபட்ட சொற்களுடன் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தன் மருமகளை உயர்த்தி, தன் மடியில் அமர்த்தி அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.(35) அதிதி, சசியுடன் கூடிய தேவர்களின் மன்னனை வழிநடத்துவதைப் போலவே ருக்மிணியும் மனைவியுடன் திரும்பி வந்திருக்கும் தன் மகனை தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள்” என்றார் {வைசம்பாயனர்}.(36)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப்ரத்³யும்நாக³மனே(அ)ஷ்டாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 107–(ஷம்பரவதம்)–

February 1, 2021

ஸ்ரீ பார்வதியைத் துதித்த ஸ்ரீ பிரத்யும்னன்; சம்பரனின் முத்கரத்தைத் தாமரை மாலையாகப் பெற்ற வரம்; ஸ்ரீ பிரத்யும்னன் ஏவிய ஸ்ரீ வைஷ்ணவாஸ்த்திரம்; சம்பரன் வதம்

வைஷ²ம்பாயந உவாச
ஷ²ம்ப³ரஸ்து தத꞉ க்ருத்³தோ⁴ முத்³க³ரம் தம் ஸமாத³தே³ |
முத்³க³ரே க்³ருஹ்யமாணே து த்³வாத³ஷா²ர்கா꞉ ஸமுத்தி²தா꞉ ||2-107-1

பர்வதாஷ்²சலிதா꞉ ஸர்வே ததை²வ வஸுதா⁴தலம் |
உந்மார்கா³꞉ ஸாக³ரா யாதா꞉ ஸங்க்ஷுப்³தா⁴ஷ்²சபி தே³வதா꞉ ||2-107-2

க்³ருத்⁴ரசக்ராகுலம் வ்யோம உல்காபாதோ ப³பூ⁴வ ஹ |
வவர்ஷ ருதி⁴ரம் தே³வ꞉ பருஷம் பவநோ வவௌ ||2-107-3

ஏவம் த்³ருஷ்ட்வா மஹோத்பாதாந்ப்ரத்³யும்ந꞉ ஸ த்வராந்வித꞉ |
அவதீர்ய ரதா²த்³வீர꞉ க்ருதாஞ்ஜலிபுட꞉ ஸ்தி²த꞉ ||2-107-4

தே³வீம் ஸஸ்மார மநஸா பார்வதீம் ஷ²ங்கரப்ரியாம் |
ப்ரணம்ய ஷி²ரஸா தே³வீம் ஸ்தோதும் ஸமுபசக்ரமே ||2-107-5

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கோபத்தில் நிறைந்த சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தபோது பனிரெண்டு சூரியர்களும் அங்கே உதித்தனர் {அந்த ஆயுதம் பனிரெண்டு சூரியன்களுக்கு ஒப்பான ஒளியுடன் இருந்தது},(1) மலைகள் அசைந்தன, பூமி நடுங்கினாள். பெருங்கடலின் நீர் கரையைக் கடந்தது, தேவர்கள் கலக்கமடைந்தனர்,(2) வானம் கழுகுகளால் நிறைந்திருந்தது, எரிகொள்ளிகள் விழுந்தன, கடுங்காற்று வீசியது, இந்திரன் குருதி மழையைப் பொழிந்தான்.(3) இந்தத் தீய சகுனங்கள் அனைத்தையும் கண்ட வீரன் பிரத்யும்னன், உடனே தன் தேரில் இருந்து இறங்கினான். பிறகு தன் கரங்களைக் குவித்தபடி,(4) சங்கரனின் அன்புக்குரிய மனைவியான பார்வதியை நினைவுகூர்ந்து, தலைவணங்கியபடியே அவளது மகிமைகளைத் துதிக்கத் தொடங்கினான்.(5)

ப்ரத்³யும்ந உவாச
ௐ நம꞉ காத்யாயந்யை கி³ரீஷா²யை நமோ நம꞉ |
நமஸ்த்ரைலோக்யமாயாயை காத்யாயந்யை நமோ நம்꞉ ||2-107-6

நம꞉ ஷ²த்ருவிநாஷி²ந்யை நமோ கௌ³ர்யை ஷி²வப்ரியே |
நமஸ்யே ஷு²ம்ப⁴மத²நீம் நிஷு²ம்ப⁴மத²நீமபி ||2-107-7

காலராத்ரி நமஸ்துப்⁴யம் கௌமார்யை ச நமோ நம꞉ |
காந்தாரவாஸிநீம் தே³வீம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி꞉ ||2-107-8

விந்த்⁴யவாஸிநீம் து³ர்க³க்⁴நாம் ரணது³ர்கா³ம் ரணப்ரியாம் |
நமஸ்யாமி மஹாதே³வீம் ஜயாம் ச விஜயாம் ததா² ||2-107-9

அபராஜிதாம் நமஸ்யே(அ)ஹமஜிதாம் ஷ²த்ருநாஷி²நீம் |
க⁴ண்டாஹஸ்தாம் நமஸ்யாமி க⁴ண்டாமாலாகுலாம் ததா² || 2-107-10

பிரத்யும்னன், “கார்த்திகேயனின் அன்னையான {மலைகளின் தேவியான} காத்யாயனியை வணங்குகிறேன். மூவுலகங்களின் அன்னையான {மூவுலகங்களிலும் மாயைகளை உண்டாக்கும்} காத்யாயனியை மீண்டும் வணங்குகிறேன்.(6) எங்கள் பகைவரை அழித்த தேவியை வணங்குகிறேன். கிரீசனின் மனைவியான கௌரியை வணங்குகிறேன். நிசும்பனின் இதயத்தைத் துளைத்து, சும்பனையும் கொன்ற தேவியை வணங்குகிறேன்.(7) காளராத்ரியையும் {பிரளய கால இரவாக இருப்பவளும்}, கௌமாரியையும் வணங்குகிறேன். மலைகள் சார்ந்த காட்டில் வாழும் தேவியைக் கரங்கூப்பித் தலைவணங்குகிறேன்.(8) விந்திய மலையில் வாழ்பவளும், கோட்டைகளை அழிப்பவளும், துர்க்கையாக {ரணதுர்க்கையாக} இருப்பவளும், போரில் விருப்பம் கொண்டவளும், ஜயை, விஜயையாக இருப்பவளுமான அந்தப் பெருந்தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(9) வெல்லப்படமுடியாதவளும், பகைவரைப் பீடிப்பவளும், கையில் மணியைக் கொண்டவளும், மணிகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(10)

த்ரிஷூ²லிநீம் நமஸ்யாமி மஹிஷாஸுரகா⁴திநீம் |
ஸிம்ஹாநநாம் நமஸ்யாமி ஸிம்ஹப்ரவரகேதநாம் ||2-107-11

ஏகாநம்ஷா²ம் நமஸ்யாமி கா³யத்ரீம் யஜ்ஞஸத்க்ருதாம் |
ஸாவித்ரீம் சாபி விப்ராணாம் நமஸ்யே(அ)ஹம் க்ருதாஞ்ஜலி꞉ ||2-107-12

ரக்ஷ மாம் தே³வி ஸததம் ஸங்க்³ராமே விஜயம் குரு |
இதி காமவசஸ்துஷ்டா து³ர்கா³ ஸம்ப்ரீதமாநஸா ||2-107-13

உவாச வசநம் தே³வீ ஸுப்ரீதேநாந்தராத்மநா |
பஷ்²ய பஷ்²ய மஹாபா³ஹோ ருக்மிண்யாநந்த³வர்த⁴ந ||2-107-14

கொடியில் சிங்கத்தைச் சின்னமாகக் கொண்டவளும், திரிசூலபாணியும், எருமை முக அசுரனை {மஹிஷாசுரனைக்} கொன்றவளும், சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளுமான தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(11) அங்கங்கள் இல்லாத ஒரே அம்சம் கொண்டவளும் {ஏகாநம்ஸையும்}, வேள்வியில் உரைக்கப்படும் புனித காயத்ரியும், பிராமணர்களின் சாவித்ரியுமான தேவியைக் கரங்கூப்பித் தலைவணங்குகிறேன்.(12) ஓ! தேவி, போரில் எப்போதும் என்னை நீ காத்து, எனக்கு வெற்றி மகுடம் சூட்டுவாயாக” என்று வேண்டினான்.
அந்தத் தேவியும் இதயத்தில் நிறைவடைந்தவளாக,(13) “ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! ருக்மிணியின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, என்னைப் பார். ஓ! மகனே, என்னைக் காண்பது கனியில்லாமல் போகாது {என் தரிசனம் வீண்போகாது}. எனவே, ஒரு வரத்தை வேண்டுவாயாக” என்றாள்.(14)

வரம் வரய வத்ஸ த்வமமோக⁴ம் த³ர்ஷ²நம் மம |
தே³வ்யாஸு வசநம் ஷ்²ருத்வா ரோமாஞ்சோத்³க³தமாநஸ꞉ ||2-107-15

ப்ரணம்ய ஷி²ரஸா தே³வீம் விஜ்ஞப்துமுபசக்ரமே |
யதி³ த்வம் தே³வி துஷ்டாஸி தீ³யதாம் மே யதீ³ப்ஸிதம் ||2-107-16

வரம் ச வரதே³ யாசே ஸர்வாமித்ரேஷு மே ஜய꞉ |
யஸ்த்வயா முத்³க³ரோ த³த்த꞉ ஷ²ம்ப³ரஸ்யாத்மஸம்ப⁴வ꞉ ||2-107-17

தேவியின் சொற்களைக் கேட்டதும் அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, அவனது மனம் இன்பத்தால் நிறைந்தது. அவன் அந்தத் தேவியை வணங்கிவிட்டு தன்னுடைய நோக்கத்தை அவளிடம் தெரிவித்தான்,(15) “ஓ! தேவி, என்னிடம் நிறைவடைந்திருக்கும் நீ, நான் விரும்பியதைக் கொடுப்பாயாக. ஓ! கௌரவத்தை அளிப்பவளே, நான் என் பகைவர் அனைவரையும் வெல்வேனாக.(16) ஓ! தேவி, உன் மேனியில் இருந்து உண்டானதும், சம்பரனுக்கு உன்னால் கொடுக்கப்பட்டதுமான அந்த முத்கரம் என் மேனியைத் தீண்டிய உடன் தாமரை மாலையாகட்டும்” என்றான்.(17)

ஏஷ மே கா³த்ரமாஸாத்³ய மாலா பத்³மவதீ ப⁴வேத் |
ததா²ஸ்த்விதி ச ஸாப்யுக்த்வா தத்ரைவாந்தரதீ⁴யத ||2-107-18

ப்ரத்³யும்நஸ்து மஹாதேஜாஸ்துஷ்டோ ரத²மதா²ருஹத் |
முத்³க³ரம் தம் க்³ருஹீத்வா ச ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ ||2-107-19

ப்⁴ராமயித்வா ஸ சிக்ஷேப ப்ரத்³யும்நோரஸி வீர்யவான் |
ஸ க³த்வா மத³நாப்⁴யாஷ²ம் மாலா பூ⁴த்வா து பௌஷ்கரீ ||2-107-20

ப்ரத்³யும்நஸ்ய ச கண்டே² து ஸமாஸக்தா வ்யராஜத |
நக்ஷத்ராணாம் து மாலாயாம் யதா² பரிவ்ருதோ விது⁴꞉ ||2-107-21

ததோ தே³வா꞉ ஸக³ந்த⁴ர்வா꞉ ஸித்³தா⁴ஷ்²ச பரமர்ஷய꞉ |
ஸாது⁴ ஸாத்⁴விதி வாசோசு꞉ பூஜயந்கேஷ²வாத்மஜம் ||2-107-22

அதைக் கேட்ட அந்தத் தேவி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனாள்.(18) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், பெரும் மகிழ்ச்சியுடன் தேரில் ஏறினான். அப்போது பெருஞ்சக்திவாய்ந்த சம்பரன் தன் முத்கரத்தை எடுத்துச் சுழற்றியபடியே அதைப் பிரத்யும்னனின் மார்பின் மீது வீசினான்.(19,20) பிரத்யும்னன் மீது பட்டவுடனேயே அது தாமரை மாலையாகி அவனது கழுத்தை அலங்கரித்தது. அவன் விண்மீன்களால் சூழப்பட்ட நிலவைப் போலத் தெரிந்தான்.(21) முத்கரம், தாமரை மாலையானதைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆகியோரும், பெரும் முனிவர்களும் பிரத்யும்னனை அவனது முன்னிலையிலேயே உயர்வாகப் பேசினர் {வாழ்த்தினர்}.(22)

முத்³க³ரம் புஷ்பபூ⁴தம் து த்³ருஷ்ட்வா ப்ரத்³யும்நஸம்நிதௌ⁴ |
வைஷ்ணவம் பரமாஸ்த்ரம் து நாரதே³ந யதா²ஹ்ருதம் ||2-107-23

ஸந்த³தே⁴ சாபமாநம்ய இத³ம் வசநமப்³ரவீத் |
யத்³யஹம் ருக்மிணீபுத்ர꞉ கேஷ²வஸ்யாத்மஜோ ஹ்யஹம் ||2-107-24

அப்போது அந்தக் கேசவன் மகன் {பிரத்யும்னன்}, தன் வில்லை வளைத்து, நாரதர் கொண்டு வந்த வைஷ்ணவக் கணையை அதில் பொருத்திவிட்டு,(23) “ஓ! கணையே, நான் கேசவனால் பெறப்பட்ட ருக்மிணியின் மகனாக இருந்தால், அந்த உண்மையின் வலிமையைக் கொண்டு போர்க்களத்தில் சம்பரனைக் கொல்வாயாக” என்றான்.(24)

தேந ஸத்யேந பா³ணேந ஜஹி த்வம் ஷ²ம்ப³ரம் ரணே |
இத்யுக்த்வா சாபமாக்ருஷ்ய ஸந்தா⁴ய ச மஹாமநா꞉ ||2-107-25

சிக்ஷேப ஷ²ம்ப³ரஸ்யாத² த³ஹம்ˮல்லோகத்ரயம் யதா² |
ஸ க்ஷிப்தோ வ்ருஷ்ணிஸிம்ஹேந ஷ²ர꞉ க்ரவ்யாத³மோஹந꞉ ||2-107-26

ஹ்ருத்³யம் ஷ²ம்ப³ரஸ்யாத² பி⁴த்த்வா த⁴ரணிமாக³த꞉ |
ந சாஸ்ய மாம்ஸம் ந ஸ்நாயுர்நாஸ்தி² ந த்வங்ந ஷோ²ணிதம் ||2-107-27

உன்னத மனம் கொண்ட பிரத்யும்னன், இதைச் சொல்லிவிட்டு, மூவுலகங்களையும் எரித்துவிடுபவனைப்போலத் தன் வில்லை வளைத்து அந்தக் கணையைச் சம்பரன் மீது ஏவினான்.(25) விருஷ்ணி தலைவனால் ஏவப்பட்ட அந்தக் கணையும் சம்பரனின் மார்பைத் துளைத்து பூமிக்குள் நுழைந்தது.(26) அந்த வைஷ்ணவக் கணையின் சக்தியால் அவனது சதை, எலும்புகள், நரம்புகள், மண்டையோடு, குருதி ஆகியவை அனைத்தும் சாம்பலாகின.(27)

ஸர்வம் தத்³ப⁴ஸ்மஸாத்³பூ⁴தம் வைஷ்ணவாஸ்த்ரஸ்ய தேஜஸா |
ஹதே தை³த்யே மஹாகாயே தா³நவே ஷ²ம்ப³ரே(அ)த⁴மே ||2-107-28

ஜஹ்ருஷுர்தே³வக³ந்த⁴ர்வா நந்ருதுஷ்²சாப்ஸரோக³ணா꞉ |
உர்வஷீ² மேநகா ரம்பா⁴ விப்ரசித்திஸ்திலோத்தமா ||2-107-29

ந ந்ருதுர்ஹ்ருஷ்டமநஸோ ஜக³த்ஸ்தா²வரஜங்க³மம் |
தே³வராஜஸ்து ஸுப்ரீத꞉ ஸர்வதே³வக³ணை꞉ ஸஹ |
ப்ரத்³யும்நம் புஷ்பவர்ஷேண தமப்⁴யர்ச்ய ப்ரஹ்ருஷ்டவத் || 2-107-30

அத² ஸமரஹதே து தை³த்யராஜே
மது⁴மத²நஸ்ய ஸுதேந வைஷ்ணவாஸ்த்ரை꞉ |
விக³தரிபுப⁴யா꞉ ஸுராஷ்²ச ஜக்³மு-
ர்மகரவிபூ⁴ஷணகேதநம் ஸ்துவந்த꞉ ||2-107-31

ஸ ச ஸமரபரிஷ்²ரமம் வஹந்வை
நக³ரமுக²ம் ப்ரவிவேஷ² ரௌக்மிணேய꞉ |
ப்ரியதம இவ காந்தயா ப்ரஹ்ருஷ்ட-
ஸ்த்வரிதபத³ம் ரதித³ர்ஷ²நம் சகார ||2-107-32

பேருடல் படைத்தவனும், பாவியுமான அந்தத் தானவன் சம்பரன் இவ்வாறு கொல்லப்பட்டதும் தேவர்களும், கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(28) ஊர்வசி, மேனகை, ரம்பை, விப்ரசித்தி, திலோத்தமை ஆகியோரும், பிற அப்சரஸ்களும் நடனமாடினர், உயிருள்ள, உயிரற்ற மொத்த படைப்புகளும் அவ்வாறே ஆடின.(29) தேவர்களுடன் கூடிய தேவ மன்னன் மகிழ்ச்சியடைந்தான், அவர்கள் பிரத்யும்னனைப் புகழ்ந்தவாறே அவன் மீது மலர் மாரியைப் பொழிந்தனர்.(30) மதுசூதனனின் மகனான மதனனால் {காமனான பிரத்யும்னனால்} தைத்தியர்களின் மன்னன் போரில் கொல்லப்பட்டதும், தேவர்கள் தங்கள் பகைவன் மீது கொண்ட அச்சத்தில் இருந்து விடுபட்டு, பிரத்யும்னனைத் துதித்துவிட்டுத் தேவலோகத்திற்குச் சென்றனர்.(31) போரில் களைத்திருந்த ருக்மிணியின் மகன், ஒரு காதலன் தன் காதலியிடம் செல்வதைப் போல விரைவான எட்டுகளை எடுத்து வைத்து நகரத்திற்குச் சென்று தன் மனைவியைச் சந்தித்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(32)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரவதே⁴ ஸப்தாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 106–(ஷம்பரவதே ஸ்ரீ நாரதவாக்யம்)–

February 1, 2021

சம்பராசுரனுக்கும் பிரத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு–

வைஷ²ம்பாயன உவாச
ஷ²ம்ப³ரஸ்து தத꞉ க்ருத்³த⁴꞉ ஸூதமாஹ விஷா²ம்பதே |
ஷ²த்ருப்ரமுக²தோ வீர ரத²ம் மே வாஹய த்³ருதம் ||2-106-1

யாவதே³னம் ஷ²ரைர்ஹன்மி மம விப்ரியகாரகம் |
ததோ ப⁴ர்த்ருவச꞉ ஷ்²ருத்வா ஸூதஸ்தத்ப்ரியகாரக꞉ ||2-106-2

ரத²ம் ஸஞ்சோத³யாமாஸ சாமீகரவிபூ⁴ஷிதம் |
தம் த்³ருஷ்த்வா ரத²மாயாந்தம் ப்ரத்³யும்ன꞉ பு²ல்லலோசன꞉ ||2-106-3

ஸந்த³தே⁴ சாபமாதா³ய ஷ²ரம் கனகபூ⁴ஷிதம் |
தேனாஹனத்ஸுஸங்க்ருத்³த⁴꞉ கோபயஞ்ஷ²ம்ப³ரம் ரணே ||2-106-4

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, அப்போது கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் தன் தேரோட்டியிடம், “ஓ! வீரா, விரைவில் என் தேரை பகைவனிடம் {பிரத்யும்னனிடம்} கொண்டு செல்வாயாக.(1) எனக்குத் தீங்கிழைத்தவனைக் கணைகளால் நான் கொல்லப் போகிறேன்” என்றான்.

எப்போதும் அவனுக்கு நல்லதைச் செய்பவனான அந்தத் தேரோட்டி, தன் தலைவனின் சொற்களைக் கேட்டு,(2) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரைச் செலுத்தினான். இனிமைமிக்கக் கண்களைக் கொண்ட பிரத்யும்னன், அந்தத் தேர் தன்னை அணுகுவதைக் கண்டு கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு பொற்கணைகளை அதில் பொருத்தினான். அதன் பிறகு அவன் அதைக் கொண்டு சம்பரனைத் தாக்கிப் போரில் தன் கோபத்தைத் தூண்டச் செய்தான்.(3,4)

ஹ்ருத³யே தாடி³தஸ்தேன தே³வஷ²த்ரு꞉ ஸுவிக்லவ꞉ |
ரத²ஷ²க்திம் ஸமாஷ்²ரித்ய தஸ்தௌ² ஸோ(அ)த² விசேதன꞉ ||2-106-5

ஸ சேதனாம் புன꞉ ப்ராப்ய த⁴னுராதா³ய ஷ²ம்ப³ர꞉ |
விவ்யாத⁴ கார்ஷ்ணிம் குபித꞉ ஸப்தபி⁴ர்நிஷி²தை꞉ ஷ²ரை꞉ ||2-106-6

தானப்ராப்தாஞ்ஷ²ரான்ஸோ(அ)த² ஸப்தபி⁴꞉ ஸப்ததா⁴ச்சி²னத் |
ஷ²ம்ப³ரம் ச ஜகா⁴நாத² ஸப்தத்யா நிஷி²தை꞉ ஷ²ரை꞉ ||2-106-7

புன꞉ ஷ²ரஸஹஸ்ரேண கங்கப³ர்ஹிணவாஸஸா |
அஹனச்ச²ம்ப³ரம் க்ரோதா⁴த்³தா⁴ராபி⁴ரிவ பர்வதம் ||2-106-8

ப்ரதி³ஷோ² விதி³ஷ²ஷ்²சைவ ஷ²ரதா⁴ராஸமாவ்ருதா |
[ஸ தி³ஷோ² விதி³ஷ²ஷ்²சைவ ஷ²ரதா⁴ரா ஸமாவ்ருணோத்] || 2-106-9

அந்த⁴காரீக்ரூதம் வ்யோம தி³னகர்தா ந த்³ருஷ்²யதே |
ததோ(அ)ந்த⁴காரமுத்ஸார்ய வைத்³யுதாஸ்த்ரேண ஷ²ம்ப³ர꞉ ||2-106-10

தேவர்களின் பகைவனான சம்பரன், அந்தக் கணைகளால் தன் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டவனாகப் பெரிதும் கலக்கமடைந்தான். தன் தேரின் கொடிக்கம்பத்தைப் பிடித்தபடியே அவன் தன் நினைவை இழந்தான்.(5) சில கணங்களுக்குப் பிறகு தன் நினைவு மீண்ட அந்தத் தானவன் சம்பரன் கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு ஏழு கூரிய கணைகளால் கிருஷ்ணனின் மகனைத் தாக்கினான்.(6) பிரத்யும்னன், அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே ஏழு கணைகளைக் கொண்டு ஏழு பகுதிகளாக அவற்றைத் துண்டித்தான். பிறகு எழுபது கணைகளைச் சம்பரன் மீது ஏவினான்.(7) மழையால் மலையை மறைக்கும் மேகத்தைப் போல அவன் அழகிய சிறகுகளைக் {மயில் இறகுகளைக்} கொண்ட ஆயிரம் கணைகளால் சம்பரனை மீண்டும் தாக்கினான். திசைகள் அனைத்திலும் கணைகளால் மறைக்கப்பட்ட வானம் சூரியன் காணப்படாமல் இருளில் மறைந்தது.(8,9) இதைக் கண்ட சம்பரன், தன் வஜ்ரத்தால் {வைத்யுத ஆயுதத்தால்} அந்த இருளை விலக்கிவிட்டுப் பிரத்யும்னனுடைய தேரின் மீது கணைகளைப் பொழிந்தான்.(10)

ப்ரத்³யும்னஸ்ய ரதோ²பஸ்தே² ஷ²ரவர்ஷம் முமோச ஹ |
தத³ஸ்த்ரஜாலம் ப்ரத்³யும்ன꞉ ஷ²ரேணானதபர்வணா ||2-106-11

சிச்சே²த³ ப³ஹுதா⁴ ராஜந்த³ர்ஷ²யன்பாணிலாக⁴வம் |
ஹதே தஸ்மின்மஹாவர்ஷே ஷ²ராணாம் கார்ஷ்ணினா ததா³ ||2-106-12

த்³ருமவர்ஷம் முமோசாத² மாயயா காலஷ²ம்ப³ர꞉ |
த்³ருமவர்ஷோச்ச்²ரிதம் த்³ருஷ்ட்வா ப்ரத்³யும்ன꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ ||2-106-13

ஆக்³னேயாஸ்த்ரம் முமோசாட² தேன வ்ருக்ஷானநாஷ²யத் |
ப⁴ஸ்மீபூ⁴தே வ்ருக்ஷவர்ஷே ஷி²லாஸங்கா⁴தமுத்ஸ்ருஜத் ||2-106-14

ப்ரத்³யும்னஸ்தம் து வாயவ்யை꞉ ப்ரோத்ஸாரயத ஸம்யுகே³ |
ததோ மாயாம் பராம் சக்ரே தே³வஷ²த்ரு꞉ ப்ரதாபவான் ||2-106-15

ஸிம்ஹான்வ்யாக்⁴ரான்வராஹாம்ஷ்²ச தரக்ஷூ²ந்ருக்ஷவானரான் |
வாரணான்வாரித³ப்ரக்²யான்ஹயானுஷ்ட்ரான்விஷா²ம்பதே ||2-106-16

முமோச த⁴னுராயம்ய ப்ரத்³யும்னஸ்ய ரதோ²பரி |
க³ந்த⁴ர்வாஸ்த்ரேண சிச்சே²த³ ஸர்வாம்ஸ்தான்க²ண்ட³ஷ²ஸ்ததா³ ||2-106-17

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிரத்யுமனனும் தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே தன்னுடைய கடுங்கணைகளால் அக்கணைகளைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(11) கிருஷ்ணனின் மகனால் கணைகளின் பெருமழை நிறுத்தப்பட்ட போது, அந்தக் காலசம்பரன் தன் மாயா சக்திகளின் மூலம் மரங்களைப் பொழிந்தான்.(12) அந்த மரங்களைக் கண்ட பிரத்யும்னன் கோபத்துடன் கூடியவனாக நெருப்பாயுதங்களை {ஆக்னேயாஸ்திரங்களை} ஏவி அவை அனைத்தையும் அழித்தான். மரங்கள் அனைத்தும் சாம்பலாக்கப்பட்ட போது சம்பரன் கல் மழையைப் பொழிந்தான்.(13,14) பிரத்யும்னன் அதை வாயு ஆயுதங்களின் {வாயவ்ய ஆயுதங்களின்} மூலம் போர்க்களத்தில் இருந்து அகற்றினான். ஓ! மன்னா, அப்போது தேவர்களின் பகைவனான சம்பரன்,(15) தன் வில்லை எடுத்துக் கொண்டு, பெரும் மாயக் காட்சியை உண்டாக்கி பிரத்யும்னனுடைய தேரின் மீது சிங்கங்கள், புலிகள், கரடிகள், குரங்குகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், மேகம் போன்ற யானைகள் ஆகியவற்றை வீசினான். எனினும் அந்தக் காமன், கந்தர்வ ஆயுதங்களால் அவற்றைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(16,17)

ப்ரத்³யும்னேன து ஸா மாயா ஹதா தாம் வீக்ஷ்ய ஷ²ம்ப³ர꞉ |
அன்யாம் மாயாம் முமோசாத² ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ ||2-106-18

க³ஜேந்த்³ரான்பி⁴ன்னவத³னான்ஷஷ்டிஹாயனயௌவனான் |
மஹாமாத்ரோத்தமாரூடா⁴ன்கல்பிதான்ரணகோவிதா³ன் ||2-106-19

தாமாபதந்தீம் மாயாம் து கார்ஷ்னி꞉ கமலலோசன꞉ |
ஸைம்ஹீம் மாயாம் ஸமுத்ஸ்ரஷ்டும் சக்ரே பு³த்³தி⁴ம் மஹாமனா꞉ ||2-106-20

ஸா ஸ்ருஷ்டா ஸிம்ஹமாயா து ரௌக்மிணேயேன தீ⁴மதா |
மாயா நாக³வதீ நஷ்டா ஆதி³த்யேனேவே ஷ²ர்வரீ ||2-106-21

நிஹிதாம் ஹஸ்திமாயாம் து தாம் ஸமீக்ஷ்ய மஹாஸுர꞉ |
அன்யாம் ஸம்மோஹினீம் மாயாம் ஸோ(அ)ஸ்ருஜத்³தா³னவோத்தம꞉ ||2-106-22

தாம் த்³ருஷ்ட்வா மோஹினீம் நாம மாயாம் மயவிநிர்மிதாம் |
ஸம்ஜ்ஞாஸ்த்ரேண து ப்ரத்³யும்னோ நாஷ²யாமாஸ வீர்யவான் ||2-106-23

பிரத்யும்னனால் தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட சம்பரன், கோபத்துடன்கூடியவனாக மற்றொரு அருஞ்செயலைச் செய்தான்.(18) அவன், அறுபது தலைகளை {அறுபது வயதைக்} கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், போர்வெறி கொண்டவையும், திறன்மிகு மாவுத்தர்களால் செலுத்தப்படுபவையுமான இளம் யானைகளை ஏவினான்.(19) அந்த மாயப் படைப்புகள் தன் மீது பாய இருப்பதைக் கண்டவனும், தன் கொடியில் மீன் சின்னம் கொண்டவனுமான அந்தத் தாமரைக் கண்ணன் (பிரத்யும்னன்) மாயச் சிங்கங்களை உண்டாக்க விரும்பினான்.(20) ஓ! மன்னா, இரவை அகற்றும் சூரியனைப் போலவே ருக்மிணியின் நுண்ணறிவுமிக்க மகனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயச் சிங்கங்களும் அந்த மாய யானைகளை அழித்தன.(21) தானவர்களின் மன்னனான சம்பரன், தன் மாய யானைகள் கொல்லப்பட்டதைக் கண்டு ஸம்மோஹினி மாயையை உண்டாக்கினான்.(22) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், மயனின் படைப்பான (கவர்ச்சிமிக்க) அந்த மாய மோகினி சம்பரனால் ஏவப்பட்டதைக் கண்டு தன் சஞ்சன (நனவு) ஆயுதத்தால் அதைத் தடுத்தான்.(23)

ஷ²ம்ப³ரஸ்து தத꞉ க்ருத்³தோ⁴ ஹதயா மாயயா ததா³
ஸைம்ஹீம் மாயாம் மஹாதேஜா꞉ ஸோ(அ)ஸ்ருஜத்³தா³னவேஷ்²வர꞉ ||2-106-24

ஸிம்ஹானாபததோ த்³ருஷ்ட்வா ரௌக்மிணேய꞉ ப்ரதாபவான் |
அஸ்த்ரம் கா³ந்த⁴ர்வமாதா³ய ஷ²ரபா⁴னஸ்ருஜத்ததா³ |
தே(அ)ஷ்டாபதா³ ப³லோத³க்³ரா நக²த³ம்ஷ்ட்ராயுதா⁴ ரணே ||2-106-25

ஸிம்ஹான்வித்³ராவயாமாஸுர்வயுர்ஜலத⁴ரானிவ |
ஸிம்ஹான்வித்³ரவதோ த்³ருஷ்ட்வா மாயயாஷ்டபதே³ன வை ||2-106-26

பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னன் சம்பரன், தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்டு பெருங்கோபம் கொண்டவனாகச் சிங்கமாயையை {மாயைகளின் மாயையை} வெளிப்படுத்தினான்.(24) பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன், தன் மீது பாய இருக்கும் சிங்கங்களைக் கண்டு கந்தர்வ ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சரபங்களை[“எட்டுக் கால்களைக் கொண்டதும், குறிப்பாகப் பனி மூடிய பகுதிகளில் வசிப்பதுமான ஓர் அற்புத விலங்கு இஃது” – மஹாபாரதம் வன பர்வம் பகுதி 134, துரோண பர்வம் பகுதி 1, சாந்தி பர்வம் பகுதி 117, சாந்தி பர்வம் பகுதி 119 ஆகியவற்றில் சரபம் குறித்த குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.] உண்டாக்கினான்.(25) எட்டுக் கால்களையும், நகங்களையும், பற்களையும் கொண்ட அந்தச் சரபங்கள், மேகங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போல அந்தச் சிங்கங்களை விரட்டின. எட்டுக் கால்களைக் கொண்ட மாய விலங்குகளால் சிங்கங்கள் விரட்டப்படுவதைக் கண்ட சம்பரன், அவற்றைக் கொல்வதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(26)

ஷ²ம்ப³ரஷ்²சிந்தயாமாஸ கத²மேனம் நிஹன்மி வை |
அஹோ மூர்க²ஸ்வபா⁴வோ(அ)ஹம் யன்மயா ந ஹத꞉ ஷி²ஷு²꞉ ||2-106-27

ப்ராப்தயௌவனதே³ஹஸ்து க்ருதாஸ்த்ரஷ்²சாபி து³ர்மதி꞉ |
தத்கத²ம் நிஹநிஷ்யாமி ஷ²த்ரும் ரணஷி²ர꞉ஸ்தி²தம் ||2-106-28

மாயா ஸா திஷ்ட²தே தீவ்ரா பன்னகீ³ நாம பீ⁴ஷணா |
த³த்தா மே தே³வதே³வேன ஹரேணாஸுரகா⁴தினா ||2-106-29

தாம் ஸ்ருஜாமி மஹாமாயாமாஷீ²விஷஸமாகுலாம் |
தயா த³ஹ்யேத து³ஷ்டாத்மா ஹ்யேஷ மாயாமயோ ப³லீ ||2-106-30

அவன் {சம்பரன்}, “ஐயோ, நான் எப்படிப்பட்ட மூடனாக இருந்திருக்கிறேன். நான் ஏன் இவன் குழந்தையாக இருக்கும்போதே இவனைக் கொல்லாதிருந்தேன்?(27) இப்போது இந்தத் தீய மனம் கொண்டவன் இளமையை அடைந்து ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். போரின் முகப்பில் நிற்கும் இந்தப் பகைவனை நான் எவ்வாறு கொல்லப் போகிறேன்?(28) அசுரர்களை அழிப்பவனான பெருந்தேவன் ஹரனால் எனக்குப் போதிக்கப்பட்டதும், {பந்நகீ என்றழைக்கப்படுவதும்} பாம்புகளாலானதுமான அந்தப் பயங்கர மாயையை நான் மட்டுமே அறிவேன்.(29) பெருஞ்சக்திவாய்ந்தவனும், தீயவனுமான இந்த மாயாபலி அதன் மூலம் எரிக்கப்படுவானென நான் நினைக்கிறேன்” என்று நினைத்தான்.(30)

ஸா ஸ்ருஷ்டா பன்னகீ³ மாயா விஷஜ்வாலாஸமாகுலா |
தயா பன்னக³மய்யா து ஸரத²ம் ஸஹவாஜினம் ||2-106-31

ஸஸூதம் ஸ ஹி ப்ரத்³யும்னம் ப³ப³ந்த⁴ ஷ²ரப³ந்த⁴னை꞉ |
ப³த்⁴யமானம் ததா³ த்³ருஷ்ட்வா ஆத்மானம் வ்ருஷ்ணிவம்ஷ²ஜ꞉ ||2-106-32

மாயாம் ஸஞ்சிந்தயாமாஸ ஸௌபர்ணீம் ஸர்பநாஷி²னீம் |
ஸா சிந்திதா மஹாமாயா ப்ரத்³யும்னேன மஹாத்மனா ||2-106-33

ஸுபர்ணா விசரந்தி ஸ்ம ஸர்பா நஷ்டா மஹாவிஷா꞉ |
ப⁴க்³னாயாம் ஸர்பமாயாயாம் ப்ரஷ²ம்ஸந்தி ஸுராஸுரா꞉ || 2-106-34

ஸாது⁴ வீர மஹாபா³ஹோ ருக்மிண்யானந்த³வர்த⁴ன |
யத்த்வயா த⁴ர்ஷிதா மாயா தேன ஸ்ம பரிதோஷிதா꞉ ||2-106-35

இவ்வாறு நினைத்த சம்பரன், எரியும் நஞ்சு நிறைந்த பாம்புகளை வெளிப்படுத்தியதும் அந்த மாயையானது தேர், குதிரைகள் ஆகியவற்றுடனும், தேரோட்டியுடன் பிரத்யும்னனையும் சேர்த்து கட்டுகளால் கட்டியது.(31) பிரத்யும்னன், மாயப் பாம்புகளால் இவ்வாறு கட்டப்பட்டுத் தான் கொல்லப்படப்போவதை நினைத்து பாம்புகளைக் கொல்லவல்ல கருட மாயையை {சௌபர்ணியை} நினைத்தான்.(32) உயரான்ம பிரத்யுமனன் அதை நினைத்ததும் கருடர்கள் பாயத் தொடங்கி நஞ்சுமிக்கப் பாம்புகளை அழித்தன.(33) அந்தப் பாம்புகளின் மாயை விலக்கப்பட்டபோது, தேவர்களும், அசுரர்களும், “நன்று செய்தாய், நன்றாகச் செய்தாய்.(34) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ருக்மிணியின் மகனே, உன்னால் அந்த மாயை விலக்கப்பட்டதில் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம்” என்று சொல்லி அவனைத் துதித்தனர்.(35)

ஹதாயாம் ஸர்பமாயாயாம் ஷ²ம்ப³ரஷ்²சிந்தயத்புன꞉ |
அஸ்தி மே காலத³ண்டா³போ⁴ முத்³க³ரோ ஹேமபூ⁴ஷித꞉ ||2-106-36

தமப்ரதிஹதம் யுத்³தே⁴ தே³வதா³னவமானவை꞉ |
புரா யோ மம பார்வத்யா த³த்த꞉ பரமதுஷ்டயா ||1-106-37

க்³ருஹாண ஷ²ம்ப³ரேமம் த்வம் முத்³க³ரம் ஹேமபூ⁴ஷிதம் |
மயா ஸ்ருஷ்டம் ஸ்வதே³ஹே வை தப꞉ பரமது³ஷ்²சரம் ||2-106-38

மாயாந்தகரணம் நாம ஸர்வாஸுரவிநாஷ²னம் |
அனேன தா³னவௌ ரௌத்³ரௌ ப³லினௌ கம்அரூபிணாஉ ||2-106-39

ஷு²ம்ப⁴ஷ்²சைவ நிஷு²ம்ப⁴ஷ்²ச ஸக³ணௌ ஸூதி³தௌ மயா |
ப்ராணஸம்ஷ²யமாபன்னே த்வயா மோக்ஷ்ய꞉ ஸ ஷ²த்ரவே ||2-106-40

இத்யுக்த்வா பார்வதீ தே³வீ தத்ரைவாந்தரதீ⁴யத |
தத³ஹம் முத்³க³ரம் ஷ்²ரேஷ்ட²ம் மோசயிஷ்யாமி ஷ²த்ரவே ||2-106-41

ஓ! ஜனமேஜயா, மாயப்பாம்புகள் விலக்கப்பட்டதும் சம்பரன் மீண்டும், “போர்க்களத்தில் தேவர்களாலும், அசுரர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாததும், யம தண்டத்திற்கு ஒப்பானதும், பொன்னாலானதுமான ஒரு தண்டம் என்னிடம் இருக்கிறது. முற்காலத்தில் உமாதேவி மகிழ்ச்சியுடன் அதைக் கொடுத்து,(36,37) என்னிடம், “ஓ! சம்பரா, பொன்னலான இந்தத் தண்டத்தை எடுத்துக் கொள்வாயாக. அனைத்து வகை மாயைகளை அகற்ற வல்லதும், அசுரர்கள் அனைவரையும் கொல்லவல்லதுமான இந்தத் தண்டத்தைக் கடுந்தவப் பயிற்சிகளின் மூலம் என் உடலில் இருந்து உண்டாக்கினேன்.(38,39) வானுலாவிகளும், பயங்கரம் நிறைந்த தானவர்களுமான சும்பன், நிசும்பன் ஆகியோரையும் அவர்களின் தொண்டர்களையும் இந்தத் தண்டத்தைக் கொண்டே யமனுலகு அனுப்பி வைத்தேன்.(40) உன் உயிர் பேராபத்தில் இருக்கும்போது இந்தத் தண்டத்தை உன் பகைவனின் மீது நீ வீசுவாயாக” என்றாள் {உமை}” என்று நினைத்தான் {சம்பரன்}.(41)

தஸ்ய விஜ்ஞாய சித்தம் து தே³வராஜோ(அ)ப்⁴யபா⁴ஷத |
க³ச்ச² நாரத³ ஷீ²க்⁴ரம் த்வம் ப்ரத்³யும்னஸ்ய ரத²ம் ப்ரதி ||2-106-42

ஸம்போ³த⁴ய மஹாபா³ஹும் பூர்வஜாதிம் ச மோக்ஷய |
வைஷ்ணவாஸ்த்ரம் ப்ரயச்சா²ஸ்மை வதா⁴ர்த²ம் ஷ²ம்ப³ரஸ்ய ச ||2-106-43

அபே⁴த்³யம் கவசம் சாஸ்ய ப்ரயச்சா²ஸுரஸூத³ன |
ஏவமுக்தோ மக⁴வதா நாரத³꞉ ப்ரயயௌ த்வரம் ||2-106-44

அவனது நோக்கத்தை அறிந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்} நாரதரிடம், “பெருங்கரம் கொண்ட பிரத்யும்னனின் தேரை விரைவில் அணுகி,(42) அவனது முற்பிறவியைக் குறித்து அவனுக்கு நினைவு படுத்துவீராக. அசுரரைக் கொல்பவனான அவனுக்குத் துளைக்கப்பட முடியாத இந்தக் கவசத்தையும், வைஷ்ணவ ஆயுதங்களையும் கொடுப்பீராக” என்றான். மகவானால் {இந்திரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட நாரதர் விரைந்து சென்றார்.(43,44)

ஆகாஷே²(அ)தி⁴ஷ்டி²தோ(அ)வோசன்மகரத்⁴வஜகேதனம் |
குமாரம் பஷ்²ய மாம் ப்ராப்தம் தே³வக³ந்த⁴ர்வநாரத³ம் |
ப்ரேஷிதம் தே³வராஜேன தவ ஸம்போ³த⁴னாய வை ||2-106-45

ஸ்மர த்வம் பூர்வகம் பா⁴வம் காமதே³வோ(அ)ஸி மானத³ |
ஹரகோபானலாத்³த³க்³த⁴ஸ்தேனானங்க³ இஹோச்யதே ||2-106-46

த்வம் வ்ருஷ்ணிவம்ஷ²ஜாதோ(அ)ஸி ருக்மிண்யா க³ர்ப⁴ஸம்ப⁴வ꞉ |
ஜாதோ(அ)ஸி கேஷ²வேன த்வம் ப்ரத்³யும்ன இதி கீர்த்யஸே ||2-106-47

ஆஹ்ருத்ய ஷ²ம்ப³ரேண த்வமிஹானீதோ(அ)ஸி மானத³ |
ஸப்தராத்ரே த்வஸம்பூர்ணே ஸூதிகாகா³ரமத்⁴யத꞉ ||2-106-48

வதா⁴ர்த²ம் ஷ²ம்ப³ரஸ்ய த்வம் ஹ்ரியமாணோ ஹ்யுபேக்ஷித꞉ |
கேஷ²வேன மஹாபா³ஹோ தே³வகார்யார்த²ஸித்³த⁴யே ||2-106-49

அவர் வானத்தில் நின்றவாறே பிரத்யும்னனிடம், “ஓ! இளவரசே, தெய்வீகப் பாடகனான நாரதனாக என்னை அறிவாயாக. உனக்கு நினைவுறுத்துவதற்காகத் தேவர்களின் மன்னன் என்னை இங்கே அனுப்பினான்.(45) ஓ! கௌரவத்தை அளிப்பவனே, உன் முற்பிறவியை நினைவுகூர்வாயாக. ஓ! வீரா, நீயே காமன் {மன்மதன்}. ஹரனின் கோபத்தால் சாம்பலான நீ அங்கங்களற்றவன் ஆனாய்.(46) விருஷ்ணி குலத்தில், ருக்மிணியிடம் கேசவனால் பெறப்பட்டு, இங்கே பிரத்யும்னன் என்ற பெயரில் நீ அறியப்படுகிறாய்.(47) ஏழாம் இரவு முடிவடைவதற்கு முன்பே பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து சம்பரன் உன்னை அபகரித்துச் சென்றான்.(48) ஓ! பெருங்கரம் கொண்ட வீரா, தேவர்களின் பெரும்பணியான சம்பரனின் அழிவின் நிமித்தமாகவே அவன் உன்னைக் கடத்திச் சென்றபோதும் கேசவன் அவனை அலட்சியம் செய்தான்.(49)

யைஷா மாயாவதீ நாம பா⁴ர்யா வை ஷ²ம்ப³ரஸ்ய து |
ரதிம் தாம் வித்³தி⁴ கல்யாணீம் தவ பா⁴ர்யாம் புராதனீம் ||2-106-50

தவ ஸம்ரக்ஷணார்தா²ய ஷ²ம்ப³ரஸ்ய க்³ருஹே(அ)வஸத் |
மாயாம் ஷ²ரீரஜாம் தஸ்ய மோஹனார்த²ம் து³ராத்மன꞉ ||2-106-51

ரதே꞉ ஸம்பாத³னார்தா²ய ப்ரேஷயத்யநிஷ²ம் ததா³ |
ஏவம் ப்ரத்³யும்னம் பு³த்³த்⁴வா வை தத்ர பா⁴ர்யா ப்ரதிஷ்டி²தா ||2-106-52

ஹத்வா தம் ஷ²ம்ப³ரம் வீர வைஷ்ணவாஸ்த்ரேண ஸம்யுகே³ |
க்³ருஹ்ய மாயாவதீம் பா⁴ர்யாம் த்³வாரகாம் க³ந்துமர்ஹஸி ||2-106-53

க்³ருஹாண வைஷ்ணவம் சாஸ்த்ரம் கவசம் ச மஹாப்ரப⁴ம் |
ஷ²க்ரேண தவ ஸங்க்³ருஹ்ய ப்ரேஷிதம் ஷ²த்ருஸூத³ன ||2-106-54

மாயாவதி என்ற பெயரில் சம்பரனின் துணைவியாக இருப்பவளே உன் முன்னாள் மனைவியான மங்கலப் பெண் ரதி என்று அறிவாயாக.(50) அவள் {மாயாவதி}, {உன் பாதுகாப்புக்காகவும்}, அந்தத் தீய தானவனிடம் மோகத்தையும், மறதியையும் உண்டாக்கவும் தன் மேனியில் இருந்து மாயையின் மூலம் உண்டாக்கப்பட்ட ரதியை அவனிடம் அனுப்புகிறாள்.(51,52) ஓ! பிரத்யும்னா, வைஷ்ணவ ஆயுதங்களால் போர்க்களத்தில் சம்பரனைக் கொன்றுவிட்டு, உன் மனைவியான மாயாவதியுடன் துவாரகைக்குச் செல்வாயாக.(53) ஓ! பகைவரைக் கொல்பவனே, இந்த வைஷ்ண ஆயுதத்தையும், பேரொளிமிக்க இந்தக் கவசத்தையும் பெற்றுக்கொள்வாயாக. இவற்றைத் தேவர்களின் மன்னன் உனக்காக அனுப்பி வைத்திருக்கிறான்.(54)

ஷ்²ருணு மே ஹ்யபரம் வாக்யம் க்ரியதாமவிஷ²ங்கயா |
அஸ்ய தே³வரிபோஸ்தாத முத்³க³ரோ நித்யமூர்ஜித꞉ ||2-106-55

பார்வத்யாம் பரிதுஷ்டாயாம் த³த்த꞉ ஷ²த்ருனிப³ர்ஹண꞉ |
அமோக⁴ஷ்²சைவ ஸங்க்³ராமே தே³வதா³னவமானவை꞉ ||2-106-56

தத³ஸ்த்ரப்ரவிகா⁴தார்த²ம் தே³வீம் த்வம் ஸ்மர்துமர்ஹஸி |
ஸ்தவ்யா சைவ நமஸ்யா ச மஹாதே³வீ ரணோத்ஸுகை꞉ ||2-106-57

தத்ர வை க்ரியதாம் யத்ன꞉ ஸங்க்³ராமே ரிபுணா ஸஹ |
இத்யுக்த்வா நாரதோ³ வாக்யம் ப்ரயயௌ யத்ர வாஸவ꞉ ||2-106-58

என்னுடைய மற்றொரு சொல்லையும் கேட்டு அச்சமில்லாமல் அதைச் செயல்படுத்துவாயாக. பெருஞ்சக்திவாய்ந்ததும், பகைவர் அனைவரையும் கலங்கடிக்கவல்லதுமான ஒரு தண்டத்தைத் தேவர்களின் பகைவனான இவனிடம் பார்வதி மகிழ்வுடன் கொடுத்திருக்கிறாள்; தேவர்களிலோ, தானவர்களிலோ, மனிதர்களிலோ எவராலும் போரில் அதைத் தாக்குப்பிடிக்க முடியாது.(55,56) அந்த ஆயுதத்திற்கு எதிர்வினையாற்ற நீ அந்தத் தேவியை நினைக்க வேண்டும். அதையுந்தவிர, போரிடும் விருப்பமுள்ள எவரும் அந்தப் பெருந்தேவியை எப்போதும் வணங்கி அவளது மகிமைகளைத் துதிக்க வேண்டும்.(57) நீ உன் பகைவனுடன் போரிடும்போது கவனமாக இருப்பாயாக” என்றார் {நாரதர்}. நாரதர் இதைச் சொல்லிவிட்டு வாசவன் {இந்திரன்} இருக்குமிடத்திற்குத் திரும்பிச் சென்றார்” என்றார் {வைசம்பாயனர்}.(58)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரவதே⁴ நாரத³வாக்யே ஷட³தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 105–(ஸ்ரீ பிரத்யும்நேந ஷம்பர ஸைந்ய வித்ராவணம்)–சம்பரன் மகன்களுடன் போரிட்ட ஸ்ரீ பிரத்யும்னன் |–

February 1, 2021

சம்பரனின் நூறு மகன்களைக் கொன்ற பிரத்யும்னன்; கேதுமாலி, துர்தரன், சத்ருஹந்தன், பிரமர்த்தனன் ஆகியோரின் அழிவு

வைஷ²ம்பாயந உவாச
தத꞉ ப்ரவ்ருத்³த⁴ம் யுத்³த⁴ம் து துமுலம் லோமஹர்ஷணம் |
ஷ²ம்ப³ரஸ்ய து புத்ராணாம் ருக்மிண்யா நந்த³நஸ்ய ச ||2-105-1

தத꞉ க்ருத்³தா⁴ மஹாதை³த்யா꞉ ஷ²ரஷ²க்திபரஷ்²வதா⁴ன் |
சக்ரதோமரகுந்தாநி பு⁴ஷு²ண்டீ³ர்முஸலாநி ச ||2-105-2

யுக³பத்பாதயந்தி ஸ்ம ப்ரத்³யும்நோபரி வேகி³தா꞉ |
கார்ஷ்²ணாயநிஸ்து ஸங்க்ருத்³த⁴꞉ ஸர்வாஸ்த்ரத⁴நுஷஷ்²ச்யுதை꞉ ||2-105-3

ஏகைகம் பஞ்சபி⁴꞉ க்ருத்³த⁴ஷ்²சிச்சே²த³ ரணமூர்த⁴நி |
புநரேவாஸுரா꞉ க்ருத்³தா⁴꞉ ஸர்வே தே க்ருதநிஷ்²சயா꞉ ||2-105-4

வவ்ருஷு꞉ ஷ²ரஜாலாநி ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா |
தத꞉ ப்ரகுபிதோ(அ)நங்கோ³ த⁴நுராதா³ய ஸத்வர꞉ ||2-105-5

ஷ²ம்ப³ரஸ்ய ஜகா⁴நாஷு² த³ஷ² புத்ராந்மஹௌஜஸ꞉ |
ததோ(அ)பரேண ப⁴ல்லேந குபித꞉ கேஷ²வாத்மஜ꞉ ||2-105-6

சிச்சே²தா³ஷு² ஷி²ரஸ்தஸ்ய சித்ரஸேநஸ்ய வீர்யவான் |
ததஸ்தே ஹதஷே²ஷாஸ்து ஸமேத்ய ஸமயுத்³த்⁴யத ||2-105-7

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு ருக்மிணியின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போர் நடந்தது.(1) கோபத்தில் நிறைந்திருந்த அந்தப் பெருந்தைத்தியர்கள், பிரத்யும்னன் மீது கணைகளையும், சக்திகளையும், பராசங்களையும், தோமரங்களையும், குண்டங்களையும், புசுண்டிகளையும், கதாயுதங்களையும் அடுத்தடுத்து பொழியத் தொடங்கினர்.(2) கோபத்தில் தூண்டப்பட்டிருந்த கிருஷ்ணனின் மகனும் போரில் தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ஐந்து கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(3) இதனால் பெருங்கோபம் கொண்டவர்களும், உறுதிமிக்கவர்களுமான அந்த அசுரர்கள், பிரத்யும்னனைக் கொல்வதற்காக ஆயுதங்களின் வலைப்பின்னலை உண்டாக்கினர்.(4) கோபத்தால் தூண்டப்பட்ட அனங்கனும் {மன்மதனான பிரத்யும்னனும்} தன் வில்லை எடுத்துக் கொண்டான். அவன் பெருஞ்சக்திவாய்ந்த சம்பரனின் மகன்கள் பத்து பேரைக் கொன்றான்.(5) பெருஞ்சக்திவாய்ந்த கேசவனின் மகன், அடுத்தக் கணத்தில் கோபத்தில் நிறைந்தவனாக ஒரு பல்லத்தால் சித்திரசேனனின் தலையை அறுத்தான்.(6) சம்பரனின் எஞ்சிய மகன்கள் போர் வெறியோடு விரைந்து கணைகளை ஏவத் தொடங்கினர். அனங்கனைக் கொல்வதற்காக அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கணைகளை ஏவிப் போரிட்டனர். (7)

ஷ²ரவர்ஷம் விமுஞ்சந்தோ ஹ்யப்⁴யதா⁴வஞ்ஜிகா⁴ம்ஸிதும் |
தத꞉ ஸந்தா⁴ய பா³ணாம்ஸ்தே விமுஞ்சந்தோ ரணோத்ஸுகா꞉ ||2-105-8

க்ரீட³ந்நிவ மஹாதேஜா꞉ ஷி²ராம்ஸ்யேஷாமபாதயத் |
நிஹத்ய ஸமரே ஸர்வாஞ்ச²தமுத்தமத⁴ந்விநாம் ||2-105-9

ப்ரத்³யும்ந꞉ ஸமராகாங்க்ஷீ தஸ்தௌ² ஸங்க்³ராமமூர்த⁴நி |
ஹதம் புத்ரஷ²தம் ஷ்²ருத்வா ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மாத³தே⁴ ||2-105-10

ஸூதம் ஸஞ்சோத³யாமாஸ ரத²ம் மே ஸம்ப்ரயோஜய |
ராஜ்ஞோ வாக்யம் நிஷா²ம்யாத² ப்ரணம்ய ஷி²ரஸா பு⁴வி ||2-105-11

ஸஸைந்யம் நோத³யாமாஸ ரத²ம் ஸ ஸுஸமாஹிதம் |
யுக்தம்ருஷ்யஸஹஸ்ரேண ஸர்பராஜஸகேதநம் ||2-105-12

ஷா²ர்தூ³லசர்மஸம்விஷ்டம் கிங்கிணீஜலபாலிநம் |
ஈஷா²ம்ருக³க³ணாகீர்ணம் பங்க்திப⁴க்திவிராஜிதம் ||2-105-13

தாராசித்ரபிநத்³தா⁴ங்க³ம் ஸ்வர்ணகூப³ரபூ⁴ஷிதம் |
ஸுபதாகமஹோச்ச்²ராயம் ம்ருக³ராஜோக்³ரகேதநம் ||2-105-14

ஸுவிப⁴க்தவரூத²ம் ச லோஹேஷாவஜ்ரகூப³ரம் |
மந்தா³ரோத³க்³ரஷி²க²ரம் சாருசாமரபூ⁴ஷிதம் ||2-105-15

நக்ஷத்ரமாலாபிஹிதம் ஹேமத³ண்ட³ஸமாஹிதம் |
விராஜமாநம் ஷ்²ரீமந்தமாரோஹச்ச²ம்ப³ரோ ரத²ம் ||2-105-16

மறுபுறம், பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனின் மகன், விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல அவர்களின் தலைகளைத் துண்டித்துக் கொண்டிருந்தான்.(8) இவ்வாறு, பெரும் வில்லாளிகளான சம்பரனின் நூறு மகன்களையும் கொன்றுவிட்டு மேலும் போரிடும் விருப்பத்தோடு போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான். சம்பரன், தன்னுடைய நூறு மகன்களும் கொல்லப்பட்டதைக் கேட்டுக் கோபத்தில் நிறைந்தான்.(9,10) அவன் தன்னுடைய சாரதியிடம் தன் தேரை ஆயத்தம் செய்யச் சொன்னான். அந்தச் சாரதியும் மன்னனின் ஆணையை ஏற்றுக் கொண்டு தலையால் தரையைத் தீண்டி அவனை வணங்கிவிட்டு அங்கே தேரைக் கொண்டு வந்து,(11) படைவீரர்களைத் தயாராகும்படி கேட்டுக் கொண்டான். அந்தத் தேரானது, பாம்புகளைக் கயிறுகளாகக் கொண்டு கட்டப்பட்ட ஆயிரம் கரடிகளால்[மான்கள்] இழுக்கப்பட்டது.(12) அது புலித்தோலால் மறைக்கப்பட்டு, சிறுமணிகளால் அமைந்த வலைப்பின்னலால் அலங்கரிக்கப்பட்டு, ஓநாய்களால் நிறைந்திருந்தது.(13) அடுத்தடுத்துப் பத்துப் படிக்கட்டுகளைக் கொண்டிருந்த அதில் நட்சத்திரங்கள் வரையப்பட்டு, பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில், சிங்கத்தின் வடிவங்கள் வரையப்பட்ட கொடிகள் அழகூட்டிக் கொண்டிருந்தன.(14) அந்தத் தேரைச் சுற்றிலும் மரத்தாலான மோதற்றடைகளும் {காக்கும் கவசங்களும்}, இரும்பு அச்சாணிகளும் இருந்தன. மந்தர மலையின் சிகரத்தைப் போல உயரமாகவும், வரிசையான அழகிய சௌரிகளாலும், நட்சத்திரங்களால் மறைக்கப்பட்டுப் பொன்னாலான கொடிக்கம்பங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15,16)

காஞ்சநம் சித்ரஸந்நாஹம் த⁴நுர்க்³ருஹ்ய ஷ²ராம்ஸ்ததா² |
ப்ரஸ்தி²த꞉ ஸமராகாங்க்ஷீ ம்ருத்யுநா பரிசோதி³த꞉ ||2-105-17

சதுர்பி⁴꞉ ஸசிவை꞉ ஸார்த⁴ம் ஸைந்யேந மஹதா வ்ருத꞉ |
து³ர்த⁴ர꞉ கேதுமாலீ ச ஷ²த்ருஹந்தா ப்ரமர்த³ந꞉ ||2-105-18

ஏதை꞉ பரிவ்ருதோ(அ)மாத்யைர்யுயுத்ஸு꞉ ப்ரஸ்தி²தோ ரணே |
த³ஷ²நாக³ஸஹஸ்ராணி ரதா²நாம் த்³வே ஷ²தே ததா² ||2-105-19

ஹயாநாம் சாஷ்டஸாஹஸ்ரை꞉ ப்ரயுதைஷ்²ச பதா³திநாம் |
ஏதை꞉ பரிவ்ருதோ யோதை⁴꞉ ஷ²ம்ப³ர꞉ ப்ரயயௌ ததா³ ||2-105-20

ப்ரயாதஸ்ய து ஸஞ்க்³ராமே உத்பாதா ப³ஹவோ(அ)ப⁴வன் |
க்³ருத்⁴ரசக்ராகுலே வ்யோம்நி ஸந்த்⁴யாகாராப்⁴ரநாதி³தம் ||2-105-21

க³ர்ஜந்தி பருஷம் மேகா⁴ நிர்கா⁴தஷ்²சாம்ப³ராத்பதத் |
ஷி²வா விநேது³ரஷி²வம் ஸைந்யம் ஸங்காலயந்மஹத் ||2-105-22

சம்பரன், காலனால் தூண்டப்பட்டவனைப் போலப் பொற்கவசம் பூண்டு, வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன்னுடைய படைவீரர்களுடனும், நான்கு அமைச்சர்களுடனும் போருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(17) துர்தரன், கேதுமாலி, சத்ருஹந்தன், பிரமர்த்தனன் என்ற நான்கு அமைச்சர்கள் சூழப் போரிடும் விருப்பத்துடன் சம்பரன் புறப்பட்டுச் சென்றான்.(18) அந்தச் சம்பரன், அனைத்துப் பக்கங்களிலும் பல்வேறு நிமித்தங்கள் தோன்றிக் கொண்டிருந்த போர்க்களத்திற்கு இருநூறு தேர்கள், இரண்டாயிரம் யானைகள்,(19) எட்டாயிரம் குதிரைகள், பத்து லட்சம் காலாட்படை வீரர்களுடன் சென்றான்.(20) {அவன் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது எரிகொள்ளிகள் விழுந்தன. வானத்தில் கழுகுகள் பறந்தன. மாலைப் பொழுதைப் போல முழங்கும் மேகங்களால் வானம் நிறைந்திருந்தது.(21) மின்னல் தோன்றியது. மேகங்கள் கடும் ஒலிகளை வெளியிட்டன}. நரிகள் ஊளையிட்டு அந்தப் பெரும்படையைப் பீதியில் பீடிக்கச் செய்தது.(22)

த்⁴வஜஷீ²ர்ஷே(அ)பதத்³க்³ருத்⁴ர꞉ காஞ்க்ஷந்வை தா³நவாஸ்ருஜம் |
ரதா²க்³ரே பதிதஷ்²சாஸ்ய கப³ந்தோ⁴ பு⁴வி த்³ருஷ்²யதே ||2-105-23

சீசீகூசீதி வாஷா²ந்தி ஷ²ம்ப³ரஸ்ய ரதோ²பரி |
ஸ்வர்பா⁴நுக்³ரஸ்த ஆதி³த்ய꞉ பரிகை⁴꞉ பரிவேஷ்டித꞉ ||2-105-24

ஸ்பு²ரதே நயநம் சாஸ்ய ஸவ்யம் ப⁴யநிவேத³நம் |
பா³ஹு꞉ ப்ரகம்பதே ஸவ்ய꞉ ப்ராஸ்க²லந்ரத²வாஜிந꞉ ||2-105-25

த்⁴வாங்க்ஷோ மூர்த்⁴நி நிபதித꞉ ஷ²ம்ப³ரஸ்ய ஸுராரிண꞉ |
வவர்ஷ ருதி⁴ரம் தே³வ꞉ ஷ²ர்கராங்கா³ரமிஷ்²ரிதம் ||2-105-26

உல்காபாதஸஹஸ்ராணி நிபேதூ ரணமூர்த⁴நி |
ப்ரதோதோ³ ந்யபதத்³த⁴ஸ்தாத்ஸாரதே²ர்ஹயயாயிந꞉ ||2-105-27

ஏதாநசிந்தயித்வா து உத்பாதாந்ஸமுபஸ்தி²தான் |
ப்ரயயௌ ஷ²ம்ப³ர꞉ க்ருத்³த⁴꞉ ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா ||2-105-28

பே⁴ரீம்ருத³ங்க³ஷ²ங்கா²நாம் பணவாநகது³ந்து³பே⁴꞉ |
யுக³பந்நாத்³யமாநாநாம் ப்ருதி²வீ ஸமகம்பத ||2-105-29

தேந ஷ²ப்³தே³ந மஹதா ஸந்த்ரஸ்தா ம்ருக³பக்ஷிண꞉ |
ஸமந்தாத்³து³த்³ருவுஸ்தஸ்மாத்³ப⁴யவிக்லவசேதஸ꞉ ||2-105-30

ரநமத்⁴யே ஸ்தி²த꞉ கார்ஷ்ணிஷ்²சிந்தயந்நித⁴நம் ரிபோ꞉ |
ஸைந்யை꞉ பரிவ்ருதோ(அ)ஸங்க்²யைர்யுத்³தா⁴ய க்ருதநிஷ்²சய꞉ ||2-105-31

கழுகுகள், தானவர்களின் குருதியைப் பருக விரும்பி கொடிமரங்களின் உச்சியில் அமர்ந்தன. தலையற்ற முண்டங்கள் அவனது தேரில் விழுவதாகத் தெரிந்தது.(23) சம்பரனின் தேரில் {தேருக்கு மேல் பறந்த} பறவைகள் தெளிவற்ற ஒலிகளை வெளியிட்டன. சந்திரன் ராகுவால் பீடிக்கப்பட்டு (கிரகணம் ஏற்பட்டு) அதன் வட்டில் அதனால் சூழப்பட்டது {நிலவில் சுற்றொளி தெரிந்தது}.(24) அவனது இடது கையும், கண்ணும் பேரழிவை முன்னறிவிக்கும் வகையில் துடித்தன. அவனது தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் {கால் தடுக்கி விழுந்து} வேகத்தைக் குறைத்தன.(25) தேவர்களின் பகைவனான சம்பரனின் தலையில் கங்கப் பறவைகள்[காக்கைகள்] அமர்ந்தன. இந்திரன் நெருப்புக் கங்குகள் கலந்த குருதி மழையைப் பொழியத் தொடங்கினான்.(26) ஆயிரக்கணக்கான கொள்ளிக் கட்டைகள் போர்க்களத்தில் விழுந்தன, சாரதியின் கைகளில் இருந்து கடிவாளங்கள் நழுவின.(27) ஆனால் கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் அந்தத் தீய நிமித்தங்களைக் கவனிக்காமல் பிரத்யும்னனைக் கொல்லப் புறப்பட்டான்.(28) அடுத்தடுத்து முழக்கப்பட்ட பேரிகைகள், மிருதங்கங்கள், சங்கங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள் ஆகியவற்றின் ஒலியால் பூமி நடுங்கினாள்.(29) இந்தப் பயங்கர ஒலியால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்ட விலங்குகளும், பறவைகளும் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடின.(30) எனினும், பகைவனைக் கொல்லும் விருப்பத்தில் இருந்த கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} அப்போது போர்க்களத்தில் காத்துக்கொண்டிருந்தான்.(31)

க்ருத்³த⁴꞉ ஷ²ரஸஹஸ்ரேண ப்ரத்³யும்நம் ஸமதாட³யத் |
ஸம்ப்ராப்தாம்ஷ்²சைவ தாந்பா³ணாம்ஷ்²சி²ச்சே²த³ க்ருதஹஸ்தவத் ||2-105-32

ப்ரத்³யும்நோ த⁴நுராதா³ய ஷ²ரவர்ஷம் முமோச ஹ |
தஸ்மிந்ஸைந்யே ந கோ(அ)ப்யஸ்தி யோ ந வித்³த⁴꞉ ஷ²ரேண வை ||2-105-33

ப்ரத்³யும்நஷ²ரபாதேந தத்ஸைந்யம் விமுகீ²க்ருதம் |
ஷ²ம்ப³ரஸ்ய ததா²ப்⁴யாஷே² ஸ்தி²தம் ஸம்ஹ்ருத்ய பீ⁴தவத் ||2-105-34

ஸ்வப³லம் வித்³ருதம் த்³ருஷ்ட்வா ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ |
ஆஜ்ஞாபயாமாஸ ததா³ ஸசிவாந்தா³நவேஷ்²வர꞉ ||2-105-35

க³ச்ச²த்⁴வம் மந்நியோகே³ந ப்ரஹரத்⁴வம் ரிபோ꞉ ஸுதம் |
நோபேக்ஷணீய꞉ ஷ²த்ருர்வை வத்⁴யதாம் க்ஷிப்ரமேவ வை ||2-105-36

உபேக்ஷித இவ வ்யாதி⁴꞉ ஷ²ரீரம் நாஷ²யேத்³த்⁴ருவம் |
ததே³வ து³ர்மதி꞉ பாபோ வத்⁴யதாம் மத்ப்ரியேப்ஸயா ||2-105-37

போரிடும் தீர்மானத்துடன் கூடிய சம்பரன், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ ஆயிரக்கணக்கான கணைகளால் பிரத்யும்னனைத் தாக்கினான். எனினும் அவன், தன் கைகளின் வேகத்தை வெளிப்படுத்தி அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(32) பிறகு தன்னுடைய வில்லை வளைத்து, அந்தப் படையில் கணையால் தாக்கப்படாத எவனும் கிடையாது என்ற அளவுக்குக் கணைகளை ஏவினான்.(33) இவ்வாறு பிரத்யும்னனால் ஏவப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட சம்பரனின் படைவீரர்கள் அச்சத்துடன் அவனிடம் திரும்பிச் சென்றனர்.(34) தன்னுடைய படைவீரர்கள் புறமுதுகிடுவதைக் கண்டு கோபத்தால் நிறைந்த சம்பரன், தன் அமைச்சர்களிடம்,(35) “என் ஆணையின் பேரில் சென்று என்னுடைய பகைவனுடைய மகனைத் தாக்குங்கள். அவனைப் புறக்கணிக்காமல் உடனடியாகக் கொல்லுங்கள்.(36) அவன் புறக்கணிக்கப்பட்டால் தொடக்கத்தில் அலட்சியம் செய்யப்படும் ஒரு நோயைப்போல மொத்தமாக நம்மை அழித்துவிடுவான். எனக்கு மகிழ்ச்சியளிக்க விரும்பினால், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான இந்தப் பாவியைக் கொல்வீராக” என்று ஆணையிட்டான்.(37)

ததஸ்தே ஸசிவா꞉ க்ருத்³தா⁴꞉ ஷி²ரஸா க்³ருஹ்ய ஷா²ஸநம் |
ஷ²ரவர்ஷம் விமுஞ்சந்தஸ்த்வரிதா நோத³யந்ரதா²ன் ||2-105-38

தாந்த்³ருஷ்ட்வா தா⁴வத꞉ ஸங்க்²யே க்ருத்³தோ⁴ மகரகேதந꞉ |
சாபமுத்³யம்ய ஸம்ப்⁴ராந்தஸ்தஸ்தௌ² ப்ரமுக²தோ ப³லீ ||2-105-39

து³ர்த⁴ரம் பஞ்சவிம்ஷ²த்யா ஷ²ரை꞉ ஸந்நதபர்வபி⁴꞉ |
பி³பே⁴த³ ஸுமஹாதேஜா꞉ கேதுமாலிம் த்ரிஷஷ்டிபி⁴꞉ ||2-105-40

ஸப்தத்யா ஷ²த்ருஹந்தாரம் த்³வ்யஷீ²த்யா து ப்ரமர்த³நம் |
பி³பே⁴த³ பரமாமர்ஷீ ருக்மிண்யா நந்தி³வர்த⁴ந꞉ ||2-105-41

ததஸ்தே ஸசிவா꞉ க்ருத்³தா⁴꞉ ப்ரத்³யும்நம் ஷ²ரவ்ருஷ்டிபி⁴꞉ |
ஏகைகஷோ² பி³பே⁴தா³ஜௌ ஷஷ்டிபி⁴꞉ ஷஷ்டிபி⁴꞉ ஷ²ரை꞉ ||2-105-42

தாநப்ராப்தாஞ்ச²ராந்பா³ணைஷ்²சிச்சே²த³ மகரத்⁴வஜ꞉ |
ததோ(அ)ர்த⁴சந்த்³ரமாதா³ய து³ர்த⁴ரஸ்ய ஸ ஸாரதி²ம் ||2-105-43

ஜகா⁴ந பஷ்²யதாம் ராஜ்ஞாம் ஸர்வேஷாம் ஸைநிகஸ்ய வை |
சதுர்பி⁴ரத² நாராசை꞉ ஸுபர்வை꞉ கங்கதேஜிதை꞉ ||2-105-44

ஜகா⁴ந சதுர꞉ ஸோ(அ)ஷ்²வாந்து³ர்த⁴ரஸ்ய ரத²ம் ப்ரதி |
ஏகேந யோக்த்ரம் ச²த்ரம் ச த்⁴வஜமேகேந ப³ந்து⁴ரம் ||2-105-45

ஷஷ்ட்யா ச யுக³சக்ராக்ஷம் சிச்சே²த³ மகரத்⁴வஜ꞉ |
அதா²பரம் ஷ²ரம் க்³ருஹ்ய கங்கபத்ரம் ஸுதேஜிதம் ||2-105-46

முமோச ஹ்ருத³யே தஸ்ய து³ர்த⁴ரஸ்யாந்யஜீவிந꞉ |
ஸ க³தாஸுர்க³தஷ்²ரீகோ க³தஸத்த்வோ க³தப்ரப⁴꞉ ||2-105-47

சம்பரனின் ஆணைக்குக் கீழ்ப்படிந்த அமைச்சர்கள், கோபத்தால் நிறைந்தவர்களாகக் கணைமாரி பொழிந்தபடியே தங்கள் தேர்களைச் செலுத்திச் சென்றனர்.(38) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், அவர்கள் போர்க்களத்தை நோக்கி விரைவதைக் கண்டு கோபத்தால் தூண்டப்பட்டு, விரைவாகத் தன் வில்லை எடுத்துக் கொண்டு அங்கே நின்றான்.(39) ருக்மிணியின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான பிரத்யும்னன், கோபத்துடன் துர்தரனை ஐந்து கணைகளாலும், அறுபத்துமூன்றால் கேதுமாலியையும், எழுபதால் சத்ருஹந்தனையும், எண்பத்திரண்டு கணைகளால் பிரமர்த்தனனையும் தாக்கினான்.(40,41) இதனால் கோபத்தில் நிறைந்த அமைச்சர்கள் கணைமாரியால் பிரத்யும்னனை மறைத்தனர். உண்மையில் அஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் நூற்றி இருபது கடுங்கணைகளை அவன் மீது ஏவினார்கள்.(42) மகரத்வஜன் (பிரத்யும்னன்) தன்னைத் தாக்குவதற்கு முன் அவை அனைத்தையும் வெட்டி வீழ்த்தினான்.(43) பிறகு பிறை வடிவக் கணையொன்றை எடுத்துப் படைவீர்கள், போர்வீரர்கள் ஆகியோரின் கண்களுக்கு முன்பாகவே துர்தரனின் தேரோட்டியைக் கொன்றான்.(44) அடுத்தக் கணத்திலேயே கங்க இறகுகளைக் கொண்ட நான்கு கணைகளைக் கொண்டு அவனது நான்கு குதிரைகளைக் கொன்றான், ஒரு கணையால் அவனது குடையையும், கடிவாளத்தையும், மற்றொன்றால் கொடிமரத்தையும், அறுபது கணைகளால் அச்சாணிகள், சக்கரங்கள், கம்பங்கள் ஆகியவற்றையும் வீழ்த்தினான்.(45) அதன்பிறகு கங்க இறங்கைக் கொண்ட மற்றொரு கணையை எடுத்துக் கொண்ட அவன் குறுகிய வாழ்நாளைக் கொண்ட துர்தரனின் மார்பில் அதை ஏவினான்.(46) அந்தத் தானவன், தன் அழகு, காந்தி, உயிர் ஆகியவறை இழந்து, புண்ணியம் குறைந்த கோளைப் போலத் தேரில் இருந்து விழுந்தான்.(47)

நிபபாத ரதோ²பஸ்தா²த்க்ஷீணபுண்ய இவ க்³ரஹ꞉ |
து³ர்த⁴ரே நிஹதே ஷூ²ரே தா³நவே தா³நவேஷ்²வர꞉ ||2-105-48

கேதுமாலீ ஷ²ரவ்ராதைரபி⁴து³த்³ராவ க்ருஷ்ணஜம் |
ப்ரத்³யும்நமத² ஸங்க்ருத்³தோ⁴ ப்⁴ருகுடீபீ⁴ஷணாநாந꞉ ||2-105-49

க்ருத்வாப்⁴யதா⁴வத்ஸஹஸா திஷ்ட² திஷ்டே²தி சாப்³ரவீத் |
ஸங்க்ருத்³த⁴꞉ க்ருஷ்ணஸூநுஸ்து ஷ²ரவர்ஷைரவாகிரத் ||2-105-50

பர்வதம் வாரிதா⁴ராபி⁴꞉ ப்ராவ்ருஷீவ யதா² க⁴ந꞉ |
ஸ வித்³தோ⁴ தா³நவாமாத்ய꞉ ப்ரத்³யும்நேந த⁴நுஷ்மதா ||2-105-51

சக்ரமாதா³ய சிக்ஷேப ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா |
தம் து ப்ராப்தம் ஸஹஸ்ராரம் க்ருஷ்ணசக்ரஸமத்³யுதிம் ||2-105-52

நிபத்யோத்பத்ய ஸஹஸா ஸர்வேஷாமேவ பஷ்²யதாம் |
தேநைவ தஸ்ய சிச்சே²த³ கேதுமாலே꞉ ஷி²ரஸ்ததா³ ||2-105-53

தத்³த்³ருஷ்ட்வா கர்ம விபுலம் ரௌக்மிணேயஸ்ய தே³வராட் |
விஸ்மயம் பரமம் ப்ராப்த꞉ ஸர்வைர்தே³வக³ணை꞉ ஸஹ ||2-105-54

க³ந்த⁴ர்வாப்ஸரஸஷ்²சைவ புஷ்பவர்ஷைரவாகிரன் |
கேதுமாலிம் ஹதம் த்³ருஷ்ட்வா ஷ²த்ருஹந்தா ப்ரமர்த³ந꞉ |
மஹாப³லஸமூஹேந ப்ரத்³யும்நமத² து³த்³ருவே ||2-105-55

தே க³தா³ம் முஸலம் சக்ரம் ப்ராஸதோமரஸாயகான் |
பி⁴ந்தி³பாலாந்குடா²ராம்ஷ்²ச பா⁴ஸ்வராந்கூடமுத்³க³ரான் ||2-105-56

யுக³பத்ஸங்க்ஷிபந்தி ஸ்ம வதா⁴ர்த²ம் க்ருஷ்ணநந்த³நே |
ஸோ(அ)பி தாந்யஸ்த்ரஜாலாநி ஷ²ஸ்த்ரஜாலைரநேகதா⁴ ||2-105-57

சிச்சே²த³ ப³ஹுதா⁴ வீரோ த³ர்ஷ²யந்பாணிலாக⁴வம் |
க³ஜாந்ஸோ(அ)ப்⁴யஹநத்க்ருத்³தோ⁴ க³ஜாரோஹாந்ஸஹஸ்ரஷ²꞉ ||2-105-58

ரதா²ந்ஸாரதி²பி⁴꞉ ஸார்த⁴ம் ஹயாம்ஷ்²சைவ மமர்த³ ஹ |
பாதயம்ஸ்தாஞ்ச²ரவ்ராதைர்நாவித்³த⁴꞉ கஷ்²சிதீ³க்ஷ்யதே || 2-105-59

வீரத்தானவனான துர்தரன் கொல்லப்பட்டதும் தைத்திய தலைவனான கேதுமாலி கணைகளைப் பொழிந்தபடியே கிருஷ்ணனின் மகனை நோக்கி விரைந்தான்.(48) கோபத்துடனும், கடுமுகத்துடனும் கூடிய அவன் பிரத்யும்னனிடம் மீண்டும் மீண்டும் “நில்! காத்திருப்பாயாக” என்றான்.(49) இதனால் கோபமடைந்த கிருஷ்ணனின் மகன், மழைக்காலத்தில் மலையில் நீரைத் தெளிக்கும் மேகத்தைப் போலக் கணைகளால் அவனை மறைத்தான்.(50) பெரும் வில்லாளியான பிரத்யும்னனால் கடுங்காயம் அடைந்த அந்தத் தானவ அமைச்சன், தன் சக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரத்யும்னனைக் கொல்வதற்காக அதை ஏவினான்.(51) எனினும் அந்த மகரத்வஜன் {பிரத்யும்னன்}, கிருஷ்ணனின் சக்கரத்துக்கு இணையான வலிமை கொண்ட அந்தச் சக்கரம் தன் மீது பாயும் முன்பே துள்ளி குதித்து அதைப் பிடித்துக் கொண்டான்.(52) மேலும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைக் கொண்டு கேதுமாலியின் தலையைக் கொய்தான்.(53) ருக்மிணியின் மகனுடைய அற்புதம்நிறைந்த அந்தப் பெருஞ்செயலைக் கண்டு தேவர்களின் மன்னனும், தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(54) கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அவன் மீது மலர்மாரி பொழிந்தனர். கேதுமாலி கொல்லப்பட்டதைக் கண்ட சத்ருஹந்தனும், பிரமர்த்தனனும் ஒரு பெரும்படை சூழ பிரத்யும்னனை நோக்கி ஓடினர்.(55) அவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் மகனைக் கொல்வதற்காக அவன் மீது கதாயுதங்கள், முசலங்கள், சக்கரங்கள், பாசங்கள், தோமரங்கள், கணைகள், பிண்டிபாலங்கள், கோடரிகள் {குடாரங்கள்} ஆகியவற்றையும் பிற ஆயுதங்களையும் {கூடங்கள், முத்கரங்கள் ஆகியவற்றையும்} ஏவினர்.(56) எனினும் வீரனான அந்தக் காமன் {பிரத்யும்னன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தும் வகையில் அவை அனைத்தையும் தன் கணைகளால் பல துண்டுகளாக வெட்டினான்.(57) கோபம் கொண்ட அவன் ஆயிரக்கணக்கான யானைகள், மாவுத்தர்கள், தேர்கள், தேரோட்டிகள், குதிரைகள் ஆகியவற்றில் காயமடையாதவர் எவரும் இல்லாதபடிக்கு அனைவரையும் தன்னுடைய கணைகளால் தாக்கினான்.(58,59)

ஏவம் ஸர்வாணி ஸைந்யாநி மமந்த² மகரத்⁴வஜ꞉ |
நதீ³ம் ப்ராவர்தயத்³கோ⁴ராம் ஷோ²ணிதாம்பு³தரங்கி³ணீம் ||2-105-60

முக்தாஹாரோர்மிப³ஹுலாம் வஸாமேதோ³ஸ்தி²பங்கிநீம் |
ச²த்ரத்³வீபஷ²ராவர்தாம் ரதை²꞉ புலிநமண்டி³தாம்||2-105-61

கேயூரகுண்ட³லாகூர்மாம் த்⁴வஜமத்ஸ்யவிபூ⁴ஷிதாம் |
நாக³க்³ராஹவதீம் ரௌத்³ரீம் மத்ஸ்யகூர்மவிபூ⁴ஷிதாம் ||2-105-62

கேஷ²ஷை²வலஸஞ்ச²ந்நாம் ஷ்²ரோணிஸூத்ரம்ருணாலிகாம் |
நராநநஸுபத்³மாம் ச ஹம்ஸசாமரவீஜிதாம் ||2-105-63

ஷி²ரஸ்திமிஸமாகீர்ணாம் ஷோ²ணிதௌஅக⁴ப்ரவர்திநீம் |
நதீ³ம் து³ஸ்தரணீம் பீ⁴மாமநங்கே³ந ப்ரவர்திதாம் ||2-105-64

து³ஷ்ப்ரேக்ஷாம் து³ர்க³மாம் ரௌத்³ராம் ஹீநதேஜ꞉ ஸுது³ஸ்தராம் |
ஷ²ஸ்த்ரக்³ராஹவதீம் கோ⁴ராம் யமராஷ்ட்ரவிவர்த்³தி⁴நீம் ||2-105-65

அவர்களின் படைவீரர்களைக் கலங்கடித்த பிரத்யும்னன், குருதியையே நீராகக் கொண்ட ஒரு பயங்கர ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(60) முத்து ஆரங்களே அதன் அலைகள் பலவாகவும், சதை, கொழுப்பு, ஊனீர் ஆகியவை புழுதியாகவும், சக்கராயுதங்கள் தீவுகளாகவும், கணைகள் சுழல்களாகவும், தேர்கள் அழகிய கரையாகவும்,(61) கங்கணங்களும், காது குண்டலங்களும் ஆமைகளாகவும், கொடிகளே மீன்களாகவும், யானைகள் பிற நீர்வாழ் விலங்குகளாகவும் இருந்தன.(62) அந்த ஆறு குதிரைகளை நீர்வாழ் விலங்குகளாகவும், தலைமுடிகளைப் பாசிகளாகவும், அரைஞாண்களைத் தாமரைத் தண்டுகளாகவும், அழகிய முகங்களைத் தாமரைகளாகவும், சாமரங்களை அன்னங்களாகவும்,(63) தலைகளைத் திமி மீன்களாகவும், குருதியை நீராகவும் கொண்டிருந்தது. அனங்கனால் அங்கே உண்டாக்கப்பட்ட ஆறானது, எவராலும், குறிப்பாகப் பலவீனர்களால் கடக்கப்பட முடியாததாக இருந்தது.(64) பயங்கரமானதாகவும், கடக்கப்பட முடியாததாகவும், ஆயுதங்களால் நிறைந்ததாகவும் இருந்த அது {அந்த ஆறு}, யமனின் ஆட்சிப்பகுதி வரை விரிந்திருந்தது.(65)

தத்ர ருக்மிஸுத꞉ ஷ்²ரீமாந்விலோட³யதி த⁴ந்விந꞉ |
ஷ²த்ருஹந்தாரமாஷ்²ரித்ய ஷ²ராநப்⁴யகிரந்ப³ஹூன் ||2-105-66

ஷ²த்ருஹந்தா புந꞉ க்ருத்³தோ⁴ முமோச ஷ²ரமுத்தமம் |
ப்ரத்³யும்நஸ்ய ஸமாஸாத்³ய ஹ்ருத³யே நிபபாத ஹ ||2-105-67

ஸ வித்³த⁴ஸ்தேந பா³ணேந ப்ரத்³யும்நோ ந வ்யகம்பத |
ஷ²க்திம் ஜக்³ராஹ ப³லவாஞ்ச²த்ருஹந்த்ரே முமூர்ஷவே ||2-105-68

ஸா க்ஷிப்தா ரௌக்மிணேயேந ஷ²க்திர்ஜ்வாலாகுலா ரணே |
பபாத ஹ்ருத³யம் பி⁴த்த்வா ஷ²க்ராஷ²நிஸமஸ்வநா ||2-105-69

ஸ பி⁴ந்நஹ்ருச்ச ஸ்ரஸ்தாங்கோ³ முக்தமர்மாஸ்தி²ப³ந்த⁴ந꞉ |
பபாத ருதி⁴ரோத்³கா³ரீ ஷ²த்ருஹந்தா மஹாப³ல꞉ ||2-105-70

ருக்மிணியின் அழகிய மகன், பிற வில்லாளிகளைக் கலங்கடித்துவிட்டு, சத்ருஹந்தன் மீது எண்ணற்ற கணைகளை ஏவினான்.(66) கோபத்தால் நிறைந்த அவனும் கணைகளை ஏவி பிரத்யும்னனின் மார்பைத் தாக்கினான்.(67) கேசவனின் பலம்வாய்ந்த மகன் அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்தாலும் நடுங்காமல் இருந்தான். அவன் மரணத் தருவாயில் இருந்த சத்ருஹந்தனைக் கொல்வதற்காக சக்தி ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.(68) ருக்மிணியின் மகனால் ஏவப்பட்டு எரிந்து கொண்டிருந்த அந்தச் சக்தி ஆயுதம், இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற ஒலியை வெளியிட்டபடியே பாய்ந்து பகைவனின் இதயத்தைத் துளைத்தது.(69) பெருஞ்சக்திவாய்ந்த சத்ருஹந்தன், இதயம் பிளக்கப்பட்டவனாகவும், அங்கங்கள் சிதைக்கப்பட்டவனாகவும், முக்கிய உறுப்புகளும், மூட்டுகளும் பிரிக்கப்பட்டவனாகவும் கீழே விழுந்து குருதி கக்கினான்.(70)

பதிதம் ஷ²த்ருஹந்தாரம் த்³ருஷ்ட்வா தஸ்தௌ² ப்ரமர்த³ந꞉ |
ஜக்³ராஹ முஸலம் ஸோ(அ)த² வசநம் சேத³மாத³தே³ ||2-105-71

திஷ்ட² கிம் ப்ராக்ருதைரேபி⁴꞉ கரிஷ்யஸி ரணப்ரிய꞉ |
மாம் யோத⁴யஸ்வ து³ர்பு³த்³தே⁴ ததஸ்த்வம் ந ப⁴விஷ்யஸி ||2-105-72

வ்ருஷ்ணிவம்ஷ²குலே ஜாத꞉ ஷ²த்ருரஸ்மத்பிதா தவ |
புத்ரம் ஹந்தாஸ்ம்யஹம் தஸ்ய ததோ(அ)ஸௌ நிஹதோ ப⁴வேத் ||2-105-73

ம்ருதேந தேந து³ர்பு³த்³தே⁴ ஸர்வதே³வக்ஷயோ ப⁴வேத் |
தை³தேயா தா³நவா꞉ ஸர்வே மோத³ந்தாம் ஹதஷ²த்ரவ꞉ ||2-105-74

ஹதே த்வயி மமாஸ்த்ரேண த்வத்ஸமுத்தை²ஷ்²ச ஷோ²ணிதை꞉ |
ஷ²ம்ப³ரஸ்ய து புத்ராணாம் கரோம்யுத³கஸத்க்ர்யாம் ||2-105-75

அத்³ய ஸா பீ⁴ஷ்மகஸுதா கருணம் விலபிஷயதி |
நிஹதம் த்வாம் ச ஷ்²ருத்வைவ யௌவநஸ்த²ம் க³தாயுஷம் ||2-105-76

ஸ தே பிதா சக்ரத⁴ரோ நிஷ்ப²லாஷோ² ப⁴விஷ்யதி |
ஹதம் த்வாம் ஸ விதி³த்வாத² ப்ராணாம்ஸ்த்யக்ஷ்யதி மந்த³தீ⁴꞉ ||2-105-77

சத்ருஹந்தன் கொல்லப்பட்டதைக் கண்ட பிரமர்த்தனன், முசலாயுதத்துடன் முன்வந்து,(71) “ஓ! போரிடும் விருப்பம் கொண்டவனே, இந்தச் சாதாரண மனிதர்களுடன் போரிடுவதில் பயனென்ன? ஓ! தீய புத்தி கொண்டவனே, ஒரு கணம் இங்கே உறுதியாக நின்று என்னுடன் போரிட்டால் இந்தப் பூமியில் இனியும் நீ வாழ மாட்டாய்.(72) நீ விருஷ்ணி குலத்தில் பிறந்தவன், உன் தந்தையோ எங்கள் பகைவன். இன்று எங்களால் அவனது மகனைக் கொல்ல முடிந்தால் அவனும் கொல்லப்படுவான்.(73) ஓ! தீய புத்தியைக் கொண்டவனே, உன் மரணத்தால் தேவர்கள் அழிவடைவார்கள், தைத்தியர்களும், தானவர்களும் தங்கள் பகைவன் கொல்லப்பட்டதால் இன்புற்றிருப்பார்கள்.(74) என் ஆயுதங்களால் உன்னைக் கொன்று, இறந்து போன சம்பரன் மகன்களின் நீர்க்கடனை உன் குருதியால் நிறைவேற்றுவேன்.(75) உன்னைப் போன்ற இளம் மகனின் மரணத்தைக் கேட்டு பீஷ்மகனின் மகள் {ருக்மிணி} பரிதாபகரமாக அழுது புலம்புவாள்.(76) தீயவனும், உன் தந்தையுமான அந்தச் சக்கரபாணியும் உன் மரணத்தைக் கேட்டு இன்று தன் உயிரை விடுவான்” என்றான்.(77)

இத்யுக்த்வா பரிகே⁴ணாஷு² தாட³யத்³ருக்மிணீஸுதம் |
தாடி³தோ ஹி மஹாதேஜா ரௌக்மிணேய꞉ ப்ரதாபவான் ||2-105-78

தோ³ர்ப்⁴யாமுத்க்ஷிப்ய தஸ்யைவ ரத²ம் மஹ்யாம் வ்யசூர்ணயத் |
ஸோ(அ)வப்லுத்ய ரதா²த்தஸ்மாத்பதா³திரவதஸ்தி²வான் ||2-105-79

தாம் க³தா³ம் க்³ருஹ்ய ஸஹஸா ரௌக்மிணேயமுபாத்³ரவத் |
தயைவ க³த³யா காம꞉ ப்ரமர்த³நமபோத²யத் ||2-105-80

ஹதே ப்ரமர்த³நே தை³த்யே த்³ருஷ்ட்வா ஸர்வே ப்ரது³த்³ருவு꞉ |
ந ஷ²க்தா꞉ ப்ரமுகே² ஸ்தா²தும் ஸிம்ஹத்ராஸாத்³க³ஜா இவ ||2-105-81

ஸாரமேயம் யதா² த்³ருஷ்ட்வாவிக³ணே வை பலாயதே |
ததா² ஸேநா விஷீத³ந்தீ ப்ரத்³யும்நஸ்ய ப⁴யார்தி³தா ||2-105-82

க்ஷதஜா தி³க்³த⁴வஸ்த்ரா வை முக்தகேஷா² விஷோ²ப⁴நா |
ரஜஸ்வலேவ யுவதி꞉ ஸேநா ஸமவகூ³ஹதே ||2-105-83

மத³நஷ²ரவிபி⁴ந்நா ஸைநிகாநப்³யயாயாத்³யுவதி
ஸத்³ருஷ²வேஷா ஸாத்³வஸை꞉ பீட்³யமாநா |
ரதிஸமரமஷ²க்தா வீக்ஷிதும் ஸோச்ச²ஸந்தீ
ஸ்வக்³ருஹக³மநகாமா நேச்ச²தே ஸ்தா²துமத்ர ||2-105-84

பிரமர்த்தனன் இதைச் சொல்லிவிட்டு, தன் பரிகத்தைக் கொண்டு ருக்மிணியின் மகனை விரைவாக அடித்தான். பெருஞ்சக்திவாய்ந்தவனும், சுறுசுறுப்பு மிக்கவனுமான ருக்மிணியின் மகன் இவ்வாறு தாக்கப்பட்டதும் தன் கரங்களால் அவனது தேரைத் தூக்கி வீசித் தரையில் அடித்து நொறுக்கினான்.(78) அப்போது அந்தத் தானவன் தன் தேரில் இருந்து கீழே குதித்துக் காலாளாகத் தரையில் நின்றான்.(79) பிறகு தன் கதாயுதத்தைக் கேசவன் மகன் மீது வீசினான். மறுபுறம் அந்தக் காமனோ {பிரத்யும்னனோ}, அந்தக் கதாயுதத்தைக் கொண்டே பிரமர்த்தனனை நசுக்கினான்.(80) பிரமர்த்தனன் கொல்லப்பட்டதைக் கண்ட தைத்தியர்களால் பிரத்யும்னன் முன்பு நிற்க இயலாமல் சிங்கத்தால் பீதியடையும் யானைமந்தையைப் போலத் தப்பி ஓடத் தொடங்கினர்.(81) {வேட்டை} நாயைக் கண்ட ஆடுகளைப் போலவே பிரத்யும்னனால் பீதியடைந்த தைத்திய படைவீரர்களும் தங்கள் இதயம் கலங்கினர்.(82) தலைமயிர் கலைந்தவர்களாகவும், குருதியால் கறைபட்ட ஆடைகளைக் கொண்டவர்களாகவும், அழகற்றவர்களாகவும் தோன்றிய தானவப் படை வீரர்கள், மாதவிலக்கில் உள்ள பெண்ணைப் போலத் தெரிந்தனர்.(83) காமாந்தகனான கொடூரனால் முரட்டுத் தனமாகக் கையாளப்பட்டு, மன்மதனின் கணைகளால் துளைக்கப்பட்டு அந்தப் போரில் {காமப்போரில்} தாக்குப்பிடிக்க முடியாமல் தன் வீட்டுக்குத் தப்பியோடும் இளம்பெண்ணைப் போலவே கணைகளால் தாக்கப்பட்டு அச்சத்தில் நிறைந்திருந்த அந்தத் தானவப் படைவீரர்களும் போர்க்களத்தைவிட்டு அகன்று, பெருமூச்சு விட்டபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்” என்றார் {வைசம்பாயனர்}.(84)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரஸைந்யப⁴ங்கோ³ நாம பஞ்சாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 104–(ஸ்ரீ பிரத்யும்ந ஹரணம்)-ஸ்ரீ பிரத்யும்னன் கடத்தப்பட்டான் | —

February 1, 2021

பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு; சம்பரனால் கடத்தப்பட்ட பிரத்யும்னன்; ரதிதேவியான மாயாவதியின் காதல்-

ஜநமேஜய உவச
ய ஏஷ ப⁴வதா பூர்வம் ஷ²ம்ப³ரக்⁴நேத்யுதா³ஹ்ருத꞉ |
ப்ரத்³யும்ந꞉ ஸ கத²ம் ஜக்⁴நே ஷ²ம்ப³ரம் தத்³ப்³ரவீஹி மே ||2-104-1

வைஷ²ம்பாயந உவாச
ருக்மிண்யாம் வாஸுதே³வஸ்ய லக்ஷ்ம்யாம் காமோ த்⁴ருதவ்ரத꞉ |
ஷ²ம்ப³ராந்தகரோ ஜஜ்ஞே ப்ரத்³யும்ந꞉ காமத³ர்ஷ²ந꞉ |
ஸநத்குமார இதி ய꞉ புராணே பரிகீ³யதே ||2-104-2

தம் ஸப்தராத்ரே ஸம்பூர்ணே நிஷீ²தே² ஸூதிகாக்³ருஹாத் |
ஜஹார க்ருஷ்ணஸ்ய ஸுதம் ஷி²ஷு²ம் வை காலஷ²ம்ப³ர꞉ ||2-104-3

விதி³தம் தஸ்ய க்ருSணஸ்ய தே³வமாயாநுவர்திந꞉ |
ததோ ந நிக்³ருஹீத꞉ ஸ தா³நவோ யுத்³த⁴து³ர்மத³꞉ ||2-104-4

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றான் என்று முன்பு நீர் சொன்னீர். பிரத்யும்னன் அவனை எவ்வாறு கொன்றான் என்பதை இப்போது எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட காமன் (மன்மதன்), சம்பரனைக் கொல்வதற்காக வாசுதேவனின் அழகிய மகன் பிரத்யும்னனாக லக்ஷ்மியின் அம்சமான ருக்மிணிக்குப் பிறந்தான்.(2) குழந்தையாக இருந்த கிருஷ்ணனின் மகன் பிறந்த ஏழாம் நாள் நள்ளிரவில் பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து காலசம்பரன் அவனை அபகரித்துச் சென்றான்.(3) தெய்வீக மாயையைப் பின்பற்றும் கிருஷ்ணன் அனைத்தையும் அறிந்தாலும்[இதே அத்யாயத்தின் 28,29ம் ஸ்லோகங்களில் உள்ள செய்தி இதற்கு முரணாக இருக்கிறது. இங்கே சொல்வது வைசம்பாயனர், அங்கே சொல்வது மாயாவதி என்பதால் இந்த வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.], போரில் வெல்லப்பட முடியாத அந்தத் தானவனை அந்நேரத்தில் கொல்லாமல் இருந்தான்.(4)

ஸ ம்ருத்யுநா பரீதாயுர்மாயயா ஸஞ்ஜஹார தம் |
தோ³ர்ப்⁴யாமுத்க்ஷிப்ய நக³ரம் ஸ்வம் நிநாய மஹாஸுர꞉ ||2-104-5

அநபத்யா து தஸ்யாஸீத்³பா⁴ர்யா ரூபகு³ணாந்விதா |
நாம்நா மாயாவதீ நாம மாயேவ ஷு²ப⁴த³ர்ஷ²நா ||2-104-6

த³தௌ³ தம் வாஸுதே³வஸ்ய புத்ரம் புத்ரமிவாத்மஜம் |
தஸ்யா மஹிஷ்யா மாயிந்யா தா³நவ꞉ காலசோதி³த꞉ ||2-104-7

மாயாவதீ து தம் த்³ருஷ்ட்வா ஸம்ப்ரஹ்ருஷ்டதநூருஹா |
ஹர்ஷேண மஹதா யுக்தா புந꞉ புநருதை³க்ஷத ||2-104-8

அத² தஸ்ய நிரீக்ஷந்த்யா꞉ ஸ்ம்ருதி꞉ ப்ராது³ர்ப³பூ⁴வ ஹ |
அயம் ஸ மம காந்தோ(அ)பூ⁴த்ஸ்ம்ருத்வைவம் சாந்வசிந்தயத் ||2-104-9

அயம் ஸ நாதோ² ப⁴ர்தா மே யஸ்யார்தே²(அ)ஹம் தி³வாநிஷ²ம் |
சிந்தாஷோ²கார்ணவே மக்³நா ந விந்தா³மி ரதிம் க்வசித் ||2-104-10

அயம் ப⁴க³வதா பூர்வம் தே³வதே³வேந ஷூ²லிநா |
கே²தி³தேந க்ருதோ(அ)நங்கோ³ த்³ருஷ்டோ ஜாத்யந்தரே மயா ||2-104-11

கத²மஸ்ய ஸ்தநம் தா³ஸ்யே மாத்ருபா⁴வேந ஜாநதீ |
ப⁴ர்துர்பா⁴ர்யா த்வஹம் பூ⁴த்வ வக்ஷ்யே வா புத்ர இத்யுத ||2-104-12

அந்தப் பேரசுரன் {காலசம்பரன்}, காலனால் தூண்டப்பட்டவனைப் போலக் கிருஷ்ணனின் மகனை அபகரித்துச் சென்றான். அவனைத் தன் தோள்களில் போட்டுக் கொண்டு தன் நகருக்குச் சென்றான்.(5) அழகியும், குணவதியும், மாயையின் அம்சமாகத் திகழ்ந்தவளுமான அவனது மனைவி மாயாவதி {ரதிதேவி} பிள்ளையற்றவளாக இருந்ததால், காலனால் தூண்டப்பட்ட அந்தத் தானவன், வாசுதேவனின் மகனைத் தன் மகன் போல் அவளிடம் கொடுத்தான்.(6,7) அவனைக் கண்டதும் அவள் இன்பத்தில் நிறைந்தாள், அவளுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது; அவள் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியாக அவனைக் கண்டாள்.(8) இவ்வாறே அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவள், அவன் தன் அன்புக்குரிய கணவனாக இருந்ததை நினைவுகூர்ந்தாள். அதை எண்ணிப் பார்த்த அவள் மீண்டும்,(9) “எவரால் எந்த இடத்திலும் மனமகிழ்ச்சியை அடைய முடியாமல் இருந்தேனோ, எவருக்காகத் துன்பக்கடலில் மூழ்கியிருந்தேனோ அந்தத் தலைவரே இவன்.(10) முற்காலத்தில் சதியால் {சதிதேவியால்} கவலையில் பீடிக்கப்பட்டிருந்தவனும், தெய்வீகனுமான தேவன் திரிசூலபாணியால் அவர் {மன்மதன்} சாம்பலாக்கப்பட்டார்.(11) அவருடைய மனைவியான நான் அந்தக் கணவர் இவனே என்று அறிந்த பின்பும் எவ்வாறு முலை கொடுத்து மகனென்று அழைப்பேன்?” என்று நினைத்தாள்.(12)

ஏவம் ஸஞ்சிந்த்ய மநஸா தா⁴த்ர்யாஸ்தம் ஸா ஸமர்பயத் |
ரஸாயநப்ரயோகை³ஷ்²ச ஷீ²க்⁴ரமேவ வ்யவர்த⁴யத் ||2-104-13

த⁴த்ர்யா꞉ ஸகாஷா²த்ஸ ச தாம் ஷ்²ருண்வந்ருக்மிணிநந்த³ந꞉ |
மாயாவதீமவிஜ்ஞாநாந்மேநே ஸ்வாமேவ மாதரம் ||2-104-14

ஸா ச தம் வர்த⁴யாமாஸ கார்ஷ்ணிம் கமலலோசநம் |
மாயாஷ்²சாஸ்மை த³தௌ³ ஸர்வா தா³நவீ꞉ காமமோஹிதா ||2-104-15

ஸ யதா³ யௌவந்ஸ்த²ஸ்து ப்ரத்³யும்ந꞉ காமத³ர்ஷ²ந꞉ |
சிகீர்ஷிதஜ்ஞோ நாரீணாம் ஸர்வாஸ்த்ரவிதி⁴பாரக³꞉ ||2-104-16

இவ்வாறு நினைத்த மாயாவதி அந்தக் குழந்தையைச் செவிலித் தாயிடம் கொடுத்து ஊட்டமிக்க மருந்துகளின் மூலம் விரைவாகவே வளர்த்தாள்.(13) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, செவிலியால் சொல்லப்பட்டும், அறியாமையினாலும் மாயாவதியைத் தன் அன்னையாக அறிந்தான்.(14) காமத்தால் பீடிக்கப்பட்ட மாயாவதியும், தாமரைக் கண்களைக் கொண்ட கமலத்தலைவனின் மகனை {பிரத்யும்னனை} வளர்த்து, அனைத்து வகை மாயைகளையும் அவனுக்குக் கற்பித்தாள்.(15) மெல்ல மெல்ல இளமையின் வரம்பைத் தொட்ட பிரத்யும்னன் பேரழகனாகத் தெரிந்தான், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், பெண்களின் அசைவுகளைப் புரிந்து கொள்வதிலும் திறன்மிக்கவனானான்.(16)

தம் ஸா மாயாவதீ காந்தம் காமயாமாஸ காமிநீ |
இங்கி³தைஷ்²சாபி வீக்ஷந்தீ ப்ரலோப⁴யத ஸஸ்மிதா |
ப்ரஸஜ்ஜந்தீம் து தாம் தே³வீம் ப³பா⁴ஷே சாருஹாஸிநீம் || 2-104-17

ப்ரத்³யும்ந உவாச
மாத்ருபா⁴வம் வ்யதிக்ரம்ய கிமேவம் வர்தஸே(அ)ந்யதா² |
அஹோ து³ஷ்டஸ்வபா⁴வாஸி ஸ்த்ரீத்வே சபலமாநஸா ||2-104-18

யா புத்ரபா⁴வமுத்ஸ்ருஜ்ய மயி லோபா⁴த்ப்ரவர்தஸே |
ந து தே(அ)ஹம் ஸுத꞉ ஸௌம்யே கோ(அ)யம் ஷீ²லவிபர்யய꞉ ||2-104-19

தத்த்வமிச்சா²ம்யஹம் தே³வி கதி²தம் கோ(அ)ந்வயம் விதி⁴꞉ |
வித்³யுத்ஸம்பாதசபல꞉ ஸ்வபா⁴வ꞉ க²லு யோஷிதாம் ||2-104-20

யா நரேஷு ப்ரஸஜ்ஜந்தே நகா³க்³ரேஷு க⁴நா இவ |
யதி³ தே(அ)ஹம் ஸுத꞉ ஸௌம்யே யதி³ வா நாத்மஜ꞉ ஷு²பே⁴ ||2-104-21

கதி²தம் தத்த்வமிச்சா²மி கிமித³ம் தே சிகீர்ஷிதம் |
ஏவமுக்தா து Sஅ பீ⁴ரு꞉ காமேந வ்யதி²தேந்த்³ரியா ||2-104-22

அப்போது மாயாவதி, அழகிய பெண்ணின் தோற்றத்தை ஏற்றுக் கொண்டு, தன் அன்புக்குரிய கணவனின் துணையை நாடி, தன் உடலசைவுகளால் {முக அபிநயங்களால்} அவனை மயக்க முற்பட்டாள். பிரத்யும்னன், தன்னிடம் பற்றுடன் இருப்பவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அந்தப் பெண்ணிடம்,(17) “இஃது என்ன? தாய்மையுணர்வுக்குப் பிறழ்முரணாக ஏன் நடந்து கொள்கிறாய்? ஐயோ, பெண்கள் எவ்வளவு தீமையானவர்களாக இருக்கிறார்கள்? அவர்களது மனம் ஏன் இவ்வாறு நிலையற்றிருக்கிறது?(18) காமத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நீ என்னை உன் மகனாகக் கருதாமல் பிறழொழுகி முரணாக நடந்து கொள்கிறாய். ஓ! மென்மையான பெண்ணே, இத்தகைய பிறழியல்பின் காரணம் யாது? நான் உன் மகன் இல்லையா?(19) ஓ!தேவி, நீ ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்? இந்த உண்மையை நான் உன்னிடம் இருந்தே அறிய விரும்புகிறேன். பெண்களின் இயல்பு மின்னலைப் போன்று நிலையற்றது {சஞ்சலத்துடன் கூடியது}.(20) மலைச் சிகரங்களுடன் இணைந்திருக்கும் மேகங்களைப் போலவே அவர்கள் ஆண்களுடன் இணைந்திருக்கிறார்கள்.(21) ஓ! மென்மையான பெண்ணே, நான் உன் மகனா, இல்லையா என்பது முக்கியமானதல்ல. உன் உடல் அசைவுகளின் நோக்கத்தை {உண்மையை} உன் வாயின் மூலமே நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(22)

ப்ரியம் ப்ரோவாச வசநம் விவிக்தே கேஷ²வாத்மஜம் |
ந த்வம் மம ஸுத꞉ காந்த நாபி தே ஷ²ம்ப³ர꞉ பிதா ||2-104-23

ரூபவாநஸி விக்ராந்தஸ்த்வம் ஜாத்யா வ்ருஷ்ணிநந்த³ந |
புத்ரஸ்த்வம் வாஸுதே³வஸ்ய ருக்மிண்யாநந்த³வர்த⁴ந꞉ ||2-104-24

தி³வஸே ஸப்தமே பா³லோ ஜாதமாத்ரோபவாஹித꞉ |
ஸூதிகாகா³ரமத்⁴யாத்த்வம் ஷி²ஷு²ருத்தாநஷா²யித꞉ ||2-104-25

மம ப⁴ர்த்ரா ஹ்ருதோ(அ)ஸி த்வம் ப³லவீர்யப்ரவர்திநா |
பிதுஸ்தே வாஸுதே³வஸ்ய த⁴ர்ஷயித்வா க்³ருஹம் மஹத் ||2-104-26

பாகஷா²ஸநகல்பஸ்ய ஹ்ருதஸ்த்வம் ஷ²ம்ப³ரேண ஹ |
ஸா ச தே கருணம் மாதா த்வாம் பா³லமநுஷோ²சதீ ||2-104-27

அத்யர்த²ம் தப்யதே வீர விவத்ஸா ஸௌரபீ⁴ யதா² |
ஸோ(அ)பி ஷ²க்ராத³பி மஹாந்பிதா தே க³ருட³த்⁴வஜ꞉ ||2-104-28

இஹ த்வாம் நாபி⁴ஜாநாதி பா³லமேவோபவாஹிதம் |
காந்த வ்ரூஷ்ணிகுமாரஸ்த்வம் ந ஹி த்வம் ஷ²ம்ப³ராத்மஜ꞉ ||2-104-29

வீர நைவம் விதா⁴ந்புத்ராந்தா³நவா ஜநயந்தி ஹி |
அதோ(அ)ஹம் காமயாமி த்வாம் ந ஹி த்வம் ஜநிதோ மயா ||2-104-30

ரூபம் தே ஸௌம்ய பஷ்²யந்தீ ஸீதா³மி ஹ்ருதி³ து³ர்ப³லா |
யந்மே வ்யவஸிதம் காந்த யத்து மே ஹ்ருதி³ வர்ததே ||2-104-31

தந்மே மநஸி வார்ஷ்ணேய ப்ரதிஸந்தா⁴துமர்ஹஸி |
ஏஷ தே கதி²த꞉ ஸர்வ꞉ ஸத்³பா⁴வஸ்த்வயி யோ மம ||2-104-32

காமத்தால் பீடிக்கப்பட்ட இதயத்தைக் கொண்டவளும், {மான் போன்று} மருண்டவளுமான அந்தக் காரிகைத் தனிமையான ஓரிடத்தில் கேசவனின் மகனான தன் காதலனிடம் {பிரத்யும்னனிடம்}, “நீ என் மகனில்லை, சம்பரன் உன் தந்தையுமில்லை.(23) பலம்வாய்ந்தவனும், அழகனுமான நீ விருஷ்ணியின் வழித்தோன்றலாவாய்; நீ வாசுதேவன், ருக்மிணியின் இனிமை மிகுந்த மகனாவாய்.(24) நீ பிறந்த ஏழாம் நாளில் இங்கே கொண்டு வரப்பட்டாய். ஆதரவற்ற மழலையாக நீ பேற்றறையில் கிடந்த போது பலம்வாய்ந்தவனான என் கணவன் {சம்பரன்} உன்னை அபகரித்து வந்தான்.(25) அந்தச் சம்பரன், பாகசாசனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவரும், உன் தந்தையுமான வாசுதேவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உன்னை அபகரித்து வந்தான்.(26) மகனின் நிமித்தமான கவலையில் பீடிக்கப்பட்டிருக்கும் உன் அன்னை {ருக்மிணி} கன்றைப் பிரிந்த பசுவைப் போல அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(27) கொடியில் கருடனைச் சின்னமாகக் கொண்டவரும், சக்ரனைவிடப் பலம்வாய்ந்தவருமான உன் தந்தை {கிருஷ்ணன்}, நீ குழந்தையாக இருக்கும்போதே இங்கே கொண்டவரப்பட்டதால் அதை அறியாமல் இருக்கிறார். ஓ! தலைவா, நீ விருஷ்ணி இளவரசனேயன்றி சம்பரனின் மகனல்ல.(28,29) மேலும் தானவர்களால் உன்னைப் போன்ற ஒரு மகனைப் பெற முடியாது. ஓ! மென்மையானவனே, நான் உன்னை ஈன்றெடுக்காததால் என் காதலனாக உன்னை நாடுகிறேன்.(30) உன் அழகைக் கண்டு என் பலவீனமான இதயம் தளர்கிறது. மேலும், ஓ! விருஷ்ணி வீரா, என் இதயத்தில் இருக்கும் விருப்பத்தை நீயே தேடுவாயாக.(31) நீ என் மகனுமில்லை, சம்பரனின் மகனுமில்லை என்பதையும், நான் உன்னை வளர்த்ததையும் இவ்வாறே நான் சொன்னேன்” என்றாள் {மாயாவதி}.(32)

யதா² ந மம புத்ரஸ்த்வம் ந புத்ர꞉ ஷ²ம்ப³ரஸ்ய ச |
ஷ்²ருத்வைவமகி²லம் ஸர்வம் மாயாவத்யா ப்ரபா⁴ஷிதம் ||2-104-33

சக்ராயுதா⁴த்மஜ꞉ க்ருத்³த⁴꞉ ஷ²ம்ப³ரம் ஸ ஸமாஹ்வயத் |
ஸர்வமாயஸ்வபி⁴ஜ்ஞோ(அ)ஸௌ நாம விஷ்²ராவ்ய சாத்மந꞉ ||2-104-34

அஹோ தா³நவது³ஷ்டாத்மா கேஷ²வஸ்யாத்மஜம் ஷி²ஷு²ம் |
ஹரதே நிர்ப⁴யஷ்²சைவ ப⁴யமத்³ய கரோம்யஹம் ||2-104-35

கத²ம் வை க்ரோத⁴மாக³ச்சே²த்³வத்⁴யதே வா கத²ம் மயா |
ப்ரத²மம் கிம் கரிஷ்யாமி யேந குப்யதி மந்த³தீ⁴꞉ ||2-104-36

அஸ்தி சாSய த்⁴வஜம் சித்ரம் ஸிம்ஹகேதுவிபூ⁴ஷிதம் |
தோரணம் க்³ருஹமாஸாத்³ய உச்ச்²ரிதம் மேருஷ்²ரு~க³வத் ||2-104-37

ஏதது³ந்மத்²ய பாதிஷ்யே ப⁴ல்லேந நிஷி²தேந வை |
த்⁴வஜச்சே²த³ம் விதி³த்வாத² ஷ²ம்ப³ரோ நிஷ்க்ரமிஷ்யதி ||2-104-38

சக்கரபாணியின் மகனான பிரத்யும்னன், அனைத்து வகை மாயைகளிலும் தேர்ச்சி அடைந்திருந்தான். எனவே மாயாவதியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தன் பெயரை உரக்க அறிவித்தபடியே சம்பரனை அறைகூவியழைத்தான். அவன்,(33,34) “ஐயோ, குழந்தையாக இருந்த கேசவனின் மகனை அபகரித்தவனும், தீய ஆன்மா கொண்டவனுமான தானவனுக்கு அஞ்சி நான் இங்கே இருப்பேனோ?(35) இழிந்தவனான அந்தப் பாவியைக் கோபமடையச் செய்வது எவ்வாறு? நான் அவனைக் கொல்வது எவ்வாறு? அவனது கோபத்தைத் தூண்டும் செயலையே நான் செய்ய வேண்டும்.(36) அவனது வாயிலில் சுமேரு மலையைப் போல நிற்பதும், சிங்கச் சின்னம் பொறித்த முக்கோணக் கொடி பறந்து கொண்டிருப்பதும், அற்புதமானதுமான அவனது கொடிக்கம்பத்தை(37) என் கூரிய பல்லத்தால் நான் வீழ்த்தப் போகிறேன். கொடிமரம் அவமதிக்கப்பட்டதை அறிந்தால் சம்பரன் நிச்சயம் வெளியே வருவான்.(38)

ததோ யுத்³தே⁴ந ஹத்வா(ஆ)ஜௌ க³ந்தாஸ்மி த்³வாரகாம் ப்ரதி |
இத்யுக்த்வா ஸஜ்யமாசக்ரே ஸஷ²ரம் சாபமோஜஸா ||2-104-39

சிச்சே²த³ த்⁴வஜரத்நம் து ஷ²ம்ப³ரஸ்ய மஹாபு⁴ஜ꞉ |
தச்சு²த்வா து த்⁴வஜச்சே²த³ம் ப்ரத்³யும்நேந மஹாத்மநா ||2-104-40

க்ருத்³த⁴ஸ்த்வாஜ்ஞாபயாமாஸ புத்ராந்வை காலஷ²ம்ப³ர꞉ |
ஜிகா⁴ம்ஸத்⁴வம் மஹாவீரா ரௌக்மிணேயம் த்வராந்விதா꞉ ||2-104-41

நைவம் வை த்³ரஷ்டுமிச்சா²மி மம விப்ரியகாரகம் |
ஷ்²ருத்வா து ஷ²ம்ப³ராத்³வாக்யம் ஸுதாஸ்தே ஷ²ம்ப³ரஸ்ய ஹ ||2-104-42

ஸம்நத்³தா⁴ நிர்யயுர்ஹ்ருஷ்டா꞉ ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா |
சித்ரஸேநோ(அ)திஸேநஷ்²ச விஷ்வஸேநோ க³த³ஸ்ததா² ||2-104-43

ஷ்²ருதஸேந꞉ ஸுஷேணஸ்து ஸோமஸேநோ மநஸ்ததா² |
ஸேநாநீ ஸைந்யஹந்தா ச ஸேநாஹா ஸைநிகஸ்ததா² ||2-104-44

ஸேநஸ்கந்தோ⁴(அ)திஸேநஷ்²ச ஸேநகோ ஜநக꞉ ஸுத꞉ |
ஸகாலோ விகல꞉ ஷா²ந்த꞉ ஸ ஷா²தாந்தகரோ விபு⁴꞉ || 2-104-45

கும்ப⁴கேது꞉ ஸுத³ம்ஷ்ட்ரஷ்²ச கேஷி²ரித்யேவமாத³ய꞉ |
சக்ரதோமரஷூ²லாநி பட்டிஷா²நி பரஷ்²வதா⁴ன் ||2-104-46

க்³ருஹீத்வா நிர்யயுர்ஹ்ருஷ்டா மந்யுநா பரமாப்லுதா꞉ |
ஆஹ்வயந்தமமித்ரம் வை தஸ்து²꞉ ஸங்க்³ராமமூர்த⁴நி ||2-104-47

அப்போது நான் அவனுடன் போரிட்டு, அவனைக் கொன்றுவிட்டுத் துவாரகை திரும்புவேன்” என்று சொன்னான்.
நீண்ட கரங்களைக் கொண்ட பிரத்யும்னன், தன் வில்லின் நாணேற்றி,(39) கணைகளை ஏவி கொடிமரங்களின் ரத்தினமான சம்பரனின் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(40) உயரான்ம பிரத்யும்னனால் தன் கொடிமரம் அழிக்கப்பட்டதைக் கேட்ட சம்பரன், கோபத்தால் நிறைந்தவனாகத் தன் மகன்களிடம்,(41) “ஓ! பெரும் வீரர்களே, ருக்மிணியின் மகனை உடனே கொல்வீராக. எனக்கு இந்தத் தீங்கைச் செய்த அவனை நான் காண விரும்பவில்லை” என்று ஆணையிட்டான்.(42) சம்பரனின் சொற்களைக் கேட்ட அவனது மகன்களான சித்ரஸேனன், அதிஸேனன், விஷ்வக்ஸேனன், கதன்,(43) ஸ்ருதனேபன், ஸுஷேணன், ஸோமஸேனன், மநன், ஸேனாநீ, ஸைன்யஹந்தன், ஸேனாஹன், ஸைனிகன்,(44) ஸேனஸ்கந்தன், அதிஸேனன், ஸேனகன், ஜனகன், ஸுதன், ஸகாலன், விகலன், சாந்தன், சாந்தந்தகரன், விபு {அஸுசி},(45) கும்பகேது, ஸுதமஷ்ட்ரன், கேசி ஆகியோர் நன்கு ஆயுதம் தரித்தவர்களாக மகிழ்ச்சியுடன் பிரத்யும்னனைக் கொல்வதற்காக வெளியே வந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டவர்களான அவர்கள், சக்கரங்கள், தோமரங்கள், சூலங்கள், பட்டிசங்கள், வாள்கள், பராஸ்வதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பிரத்யும்னனை அறைகூவியழைத்தபடியே போர்க்களத்திற்குச் சென்றனர்.(46,47)

ப்ரத்³யும்நஸ்து மஹாபா³ஹூ ரத²மாருஹ்ய ஸத்வரம் |
நிர்யயௌ சாபமாதா³ய ஸங்க்³ராமாபி⁴முக²ஸ்ததா³ ||2-104-48

தத꞉ ப்ரவ்ருத்தம் யுத்³த⁴ம் து துமுலம் லோமஹர்ஷணம் |
ஷ²ம்ப³ரஸ்ய து புத்ராணாம் கேஷ²வஸ்ய ச ஸூநுநா ||2-104-49

ததோ தே³வா꞉ ஸக³ந்த⁴ர்வா꞉ ஸமஹோரக³சாரணா꞉ |
தே³வராஜம் புரஸ்க்ருத்ய விமாநாக்³ரேஷு தி⁴ஷ்டி²தா꞉ ||2-104-50

நாரத³ஸ்தும்பு³ருஷ்²சைவ ஹாஹாஹூஹூஷ்²ச கா³யநா꞉ |
அப்ஸரோபி⁴꞉ பரிவ்ருதா꞉ ஸர்வே தத்ராவதஸ்தி²ரே ||2-104-51

தே³வராஜப்ரதீஹாரோ க³ந்த⁴ர்வஷ்²சித்ரமத்³பு⁴தம் |
ஷ²ஷ²ம்ஸ தே³வராஜாய வஜ்ரிணே தத்³விசேஷ்டிதம் ||2-104-52

ஷ²ம்ப³ரஸ்ய ஷ²தம் புத்ரா ஏக꞉ க்ருஷ்ணஸ்ய சாத்மஜ꞉ |
ப³ஹூநாம் யுத்³த்⁴யதாமேஷ கத²ம் விஜயமாப்நுயாத் ||2-104-53

பெருங்கரங்களைக் கொண்ட பிரத்யும்னன் தன் வில்லை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் தேரில் ஏறி போர்க்களத்தை நோக்கி அதைச் செலுத்தினான்.(48) அப்போது கேசவனின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதும், பயங்கரம் நிறைந்ததுமான ஒரு போர் நடந்தது.(49) அந்தப் போரைக் காண்பதற்காகக் கந்தர்வர்கள், உரகர்கள், சாரணர்கள், தேவர்கள் ஆகியோர் தங்கள் மன்னனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து வானத்தில் நின்றிருந்தனர்.(50) நாரதர், தும்புரு, ஹாஹா, ஹுஹு, பிற பாடகர்கள் ஆகியோர் அப்சரஸ்கள் சூழ அங்கே நின்றிருந்தனர்.(51) அப்போது தேவர்களின் மன்னனுடைய அவையைச் சேர்ந்த அத்புதநாமன் என்ற கந்தர்வன், வஜ்ரதாரியான வாசவனிடம்,(52) “சம்பரனின் மகன்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர், கிருஷ்ணனின் மகனோ தனி ஒருவனாக இருக்கிறான். பலருடன் போரிட்டு எவ்வாறு அவனால் வெற்றியை அடைய இயலும்?” என்று கேட்டான்.(53)

தச்ச்²ருத்வா பா⁴ஷிதம் தஸ்ய ப்ரஹஸ்ய ப³லஸூத³ந꞉ |
உவாச வசநம் சேத³ம் ஷ்²ருணு யோ(அ)ஸ்ய பராக்ரம꞉ ||2-104-54

காமோ(அ)யம் பூர்வதே³ஹே து ஹரக்ரோதா⁴க்³நிநா ஹத꞉ |
ரத்யா ப்ரஸாதி³தோ தே³வ꞉ காமபத்ந்யா த்ரிலோசந꞉ |
பரிதுஷ்டேந தே³வேந வரமஸ்யா꞉ ப்ரதீ³யதே ||2-104-55

பலனைக் கொன்றவனான வாசவன் {இந்திரன்}, அவனது சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, “அவனுடைய ஆற்றலைக் குறித்துக் கேட்பாயாக.(54) முற்பிறவியில் காமனாக {மன்மதனாக} இருந்த அவன் {பிரத்யும்னன்}, ஹரனின் கோப நெருப்பால் எரிக்கப்பட்டான். அதன் பிறகு, அவனது மனைவி {ரதிதேவி} முக்கண் தேவனைத் தணிவடையச் செய்தாள்.(55)

விஷ்ணுர்மாநுஷதே³ஹஸ்து த்³வாரகாயாம் ப⁴விஷ்யதி |
தஸ்ய புத்ரத்வமஸ்யைவ ப⁴விஷ்யதி ந ஸம்ஷ²ய꞉ ||2-104-56

அநங்க³ இதி விக்²யாதஸ்த்ரைலோக்யே து மஹாயஷா²꞉ |
தத்ரோத்பந்நோ மஹாதேஜா꞉ ஷ²ம்ப³ரம் கா⁴தயிஷ்யதி ||2-104-57

ஸப்தாஹே ஜாதமாத்ரே து ருக்மிண்யா꞉ க்ரோட³ஸம்ஸ்தி²தம் |
ஆஸ்தா²ய ஷ²ம்ப³ரோ மாயாம் ப்ரத்³யும்நமபநேஷ்யதி ||2-104-58

தத்³க³ச்ச² ஷ²ம்ப³ரக்³ருஹம் பா⁴ர்யா மாயாவதீ ப⁴வ |
மாயாரூபப்ரதிச்ச²ந்நா ஷ²ம்ப³ரம் மோஹயிஷ்யஸி ||2-104-59

தத்ர த்வமாத்மந꞉ காந்தம் பா³லரூபம் விவர்த⁴ய |
ப்ராப்தயௌவநதே³ஹஸ்து ஷ²ம்ப³ரம் நிஹநிஷ்யதி ||2-104-60

ததஸ்த்வயா ஸஹாநங்கோ³ த்³வாரகாம் வை க³மிஷ்யதி |
ரமிஷ்²யதி த்வயா ஸார்த⁴ம் ஷை²லபுத்ர்யா யதா² ஹ்யஹம் ||2-104-61

அவனும் {சிவனும்} அவளுக்கு {ரதிதேவிக்கு} ஒரு வரம் கொடுக்கும் வகையில், “விஷ்ணு மனித வடிவை ஏற்று, துவாராகா நகரில் வாழும்போது, இவன் அவனது மகனாகப் பிறந்து, அதன்பிறகு உன் கணவனாவான்.(56) பெருஞ்சக்திமிக்கவனும், ஆற்றல் வாய்ந்தவனுமான உன் கணவன், அங்கங்களற்றவனாக {அனங்கன் என்று} மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டாலும் அங்கே {துவாரகையில்} தன் பிறவியை அடைவான். பிரத்யும்னனாகப் பிறந்து, ஏழாம் நாளில் ருக்மிணியின் மடியில் இருந்து மாய சக்திகளின் மூலம் அபகரிக்கப்படும் காரணத்தால் சம்பரனைக் கொல்வான்.(57,58) எனவே நீ சம்பரனின் வீட்டுக்குச் செல்வாயாக; உன் மாய உடலில் அவனுடைய {சம்பரனின்} மனைவியான மாயாவதியாக இருந்து அவனுக்கு மகிழ்ச்சியளிப்பாயாக.(59) அங்கே குழந்தையாக வரும் உன் கணவனை ஊட்டி வளர்ப்பாயாக. இளமையை அடைந்ததும் அவனே சம்பரனைக் கொல்வான்.(60) அதன் பிறகு அனங்கன் {மன்மதனான பிரத்யும்னன், ரதியான} உன்னுடன் சேர்ந்து துவாரகைக்குச் சென்று, கிரிஜையுடன் {சைலப்புத்ரியிடம் / மலைமகளிடம்} நான் இருப்பது போல் உன்னுடன் இன்புற்றிருப்பான்” என்றான் {சிவன்}.(61)

ஏவமாதி³ஷ்²ய தே³வேஷோ² ஜகா³ம புருஷோத்தம꞉ |
கைலாஸம் மேருஸங்காஷ²ம் ஸித்³த⁴சாரணஸேவிதம் ||2-104-62

காமபத்நீ ப்ரணம்யாத² தே³வதே³வமுமாபதிம் |
ஜகா³ம ஷ²ம்ப³ரக்³ருஹம் காலஸ்யாந்தம் ப்ரதீக்ஷதீ ||2-104-63

ஏவமேவ மஹாபா³ஹு꞉ ஷ²ம்ப³ரம் நிஹநிஷ்யதி |
ஸஹ புத்ரேண ப்ரத்³யும்நோ ஹந்தா தஸ்ய து³ராத்மந꞉ ||2-104-64

தேவர்களின் மன்னனான ஹரன் இவ்வாறு சொல்லிவிட்டு, சித்தர்களும், சாரணர்களும் விரும்பிச் செல்வதும், சுமேருவுக்கு ஒப்பானதுமான கைலாச மலைக்குச் சென்றான்.(62) காமனின் மனைவியும் {ரதி தேவியும்}, உமையின் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டு, குறித்த நேரம் நிறைவடைவதற்காகச் சம்பரனின் வசிப்பிடத்தில் காத்திருந்தாள்.(63) ஓ! பிரதிகரா {ஓ! கந்தர்வன் அத்புதநாமா}, நீண்ட கரங்களைக் கொண்ட பிரத்யும்னன் நிச்சயம் சம்பரனைக் கொல்வான். அந்தத் தீய தானவனையும், அவனது மகன்களையும் அழிப்பவனாக அவனே விதிக்கப்பட்டிருக்கிறான்” என்றான் {இந்திரன்}.(64)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரவதே⁴ சதுரதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-