ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-
ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||
யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||
ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.
ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.
நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||
நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.
சிந்தையினுக்கு எட்டாமே சிறந்த அருளால் எளிது இலகி
விந்தையுறு மெய்ஞ்ஞான விரக்திக் களஞ்சியமாய்
பைந்துளவ பகவான் மீதுறு பக்திக்கு ஆழ் கடலாம்
அந்தணனாம் அந்நாத முனிகள் அடி பணிவேனே
அந்தணன் -அந்தத்தை அணவுவான் -கிட்டுவான் முனிவன்
மனத்தினால் அளவிடக் கூடாததாய்
அறிந்த மட்டில் ஆச்சர்யத்தை விளைவிப்பதாய்
பகவத் கிருபையால் வந்த காரணத்தால் ஸ்ரமம் அற்று இருப்பதாயுமுள்ள விலக்ஷணமான ஞானமும்
அந்த ஞானத்தால் யுண்டாகும் வைராக்கியமும்
ஆகிய இவற்றுக்கு இருப்பிடமானவரும்
திருத்துளஸீ தரிக்கும் பகவான் இடத்தில் உண்டாகும் பக்திக்கு நிலைக்காத ஸமுத்ரம் போன்றவரும்
முனி ஸ்ரேஷ்டருமுமான அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன்
————-
ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.
தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.
மதுவை வென்ற நெடிய மாலின் மரை மலர்ப்பதத்தின் கண்
முதிரும் தத்வ ஞான மோக மஹிமை முற்று மோர்ந்துயர்
விதுர நாதனாம் என் நாத முலைகளை வியப்பனே
கதி எனக்கு அவன் கழல்கள் இங்கும் அங்கும் என்றுமே –
விதுரன் -அறிஞன் –வியத்தல் -ஸ்துதித்தல்
மது என்னும் அசுரனை ஸம்ஹரித்த -ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான -திருமாலின்
திருவடித் தாமரைகள் விஷயமாய் முதிர்ந்து இருக்கும் தத்வ ஞானமும் -அதாவது
அத்திருவடிகளே மோக்ஷத்திற்கு உபாய உபேயம் என்னும் ஞானமும்
அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத ஒரு ப்ரேமமுமாகிய இவற்றின் மஹிமையை முற்றும் உணர்ந்தவரும்
மஹா ஞானியாயும் நமக்கு ஸ்வாமியுமான ஸ்ரீ மன் நாத முனிகளை நமஸ்கரிக்கின்றேன்
இவருடைய திருவடிகளே இம்மையிலும் மறுமையிலும்
எக்காலத்தும் எமக்கு கதியாகும்
————
ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.
பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||
பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.
அச்சுதற்கு அளப்பில்லாத பக்தி தத்வ ஞானமாம்
அச்சுதைக் கடல் பெருக்கு எனத் தரைச்சுபுச் சொலான்
மெச்சி மெய்ப்பலன் விளைக்கும் பக்தி யோக கர்த்தனை
நச்சு நான் ஸ்துதிப்பன் இன்று நாதனாம் முனீந்த்ரனே –3-
அச்சுதன் -ஆஸ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாதவன்
ஸர்வேஸ்வரன் விஷயத்தில் அளக்க ஒண்ணாத பக்தி தத்வ ஞானம் ஆகிய அந்த அமுதக் கடலானது
உள்ளடங்காது மேலே பொங்கியது போலே மதுரமான சொற்களால் பரம ப்ரயோஜன ரூபமாயும் பரிபூர்ணமாமாயும் இருக்கிற
பக்தி யோகத்தை அன்பு கூர்ந்து இவ்வுலகத்தில் பிரகாசிக்கும் படி செய்து அருளினவரும்
முனிவர்களுக்கும் ஸ்ரேஷ்டருமாய் -அவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும்
அந்த நாத முனிகளை மறுபடியும் நான் வணங்குகிறேன் –
—————
ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
தத்துவத்தின் சித் அசித்தோடு ஈசன் என்னும் தன்மையும்
முக்தி போக சாதனத்து உபாய மார்க்க முழுமையும்
வித்தரித்த மெய்யுரைப் புராண ரத்ன மீது யரும்
சத்துவப் பராசர முனீந்திரன் முன் தாழ்வனே –4-
பராசரன் பர சமயங்களை பிராமண சரங்களால் நிரசித்தவன்
சேதனம் அசேதனம் இவற்றின் ஸ்வரூபங்களையும்
இவ்விரண்டு தத்துவங்களுக்கும் ஸ்வாமியான ஈஸ்வர ஸ்வரூபத்தையும்
இம்மூன்றின் தன்மைகளையும் -யாவருக்கும் அனுபாவ்யமான போகங்களையும்
மோக்ஷத்தையும் -இவற்றை அடைவதற்கு உரிய உபாய மார்க்கங்களையும்
முழுமையும் உணர்ந்து பிறர்க்கு விசதமாய் விளங்கச் செய்பவராய்
பொருளை விளக்குவதிலும் ஆத்ம ரக்ஷணத்திலும் ரத்னம் போன்றதான ஸ்ரீ விஷ்ணு புராணத்தைச் செய்து அருளினவரும்
முனி ஸ்ரேஷ்டருமான பராசர முனிவர் முன் வணங்குகின்றேன்
————-
ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.
என்னிட வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாத் தமரும்
அன்னையும் அத்தன் தானும் ஓர் இனிய வரிவையும் ஆக்கமும் மகவும்
பின்னும் மேலாய பேறுகள் யாவும் யாகும் எம் குலபதியாம் அம்
மன்னு சீர் மகிழ மாலையார் மாறன் அடியிணைத் தலை வணங்குவனே –5-
எம் வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாமல் அமர்ந்து
பிரியத்தைச் செய்வதில் தாய் போன்றவரும்
ஹிதத்தைச் செய்வதில் தந்தை போன்றவரும்
இன்பம் விளைப்பதில் ஒரு அருமையான ஸ்த்ரீ போன்றவரும்
பாதுகாப்பத்தில் புத்ரனைப் போன்றவரும்
எல்லாவற்றையும் சாதிப்பதில் தனம் போன்றவரும்
இவ்விதம் இன்னம் பலவாய் உத்தமமான சம்பத்து போன்றவரும்
எங்கள் குலத்துக்கு பரம ஆச்சார்யராயும்
மகிழ மாலை அணிந்து விளங்குபவருமான அந்த நம்மாழ்வாருடைய
திருவடி இணையைத் தலையால் வணங்குகின்றேன் –
—————–
ஶ்லோகம் 6 –
திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி
எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும்,
எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.
யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||
புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.
இலகும் என் சென்னி மீதும் இன் மறை முடியின் மீது
மலகில் என் மனத்தின் இச்சை அகிலமும் நாடும் எங்கள்
குல தனம் குலத்தின் தெய்வங் கோமளக் கமலக் கண்ணன்
மலரும் அம்மரை மலர்த்தாள் மனம் உறப் புகழ்வன் நன்றே –6-
எந்த புண்டரீகாக்ஷனுடைய திருவடி என் சிரஸ்ஸிலும்
வேதாந்தங்களின் மீதும் ஓக்க பிரகாசிக்கின்றதோ
எந்த திருவடியில் என் இச்சையின் வழிகள் யாவும் செவ்வனே சென்று அடைகின்றனவோ
எது என் குலத்துக்குத் தனமாயும் தெய்வமாயும் இருக்கின்றதோ
அந்தத் திருவடியை என் நெஞ்சமார ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
—————
ஶ்லோகம் 7 –
ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி
அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.
தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||
எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.
அன்னவன் மஹிமை வெள்ளத்து திவலையின் அணுவை யேனும்
இன்னது என்றுள்ளது ஒர விறை சிவாதியர்க்கும் ஒண்ணா
மன்னும் மஹிமை பாட மானம் அற்று எத்தனித்த
என்னையும் வணங்குவேன் நான் இந்த ஸாஹஸத் செயற்கே –7-
ஓர்தல் –ஆராய்தல் தெளிதல்
எந்த சர்வேஸ்வரனுடைய குணக்கடலின் சிறு திவலையில் அணு மாத்ரத்தையும் உள்ளபடி அளந்து அறிவதற்கும்
ஞானாதிகனான சிவனாலும் அவனுக்கு உபதேசம் செய்த பிரமனாலும் பிரமனுக்கு சமானமான சனகாதிகளாலும் முடியாதோ
அத்தன்மையானுடைய குணங்களை ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்துதிப்பது என்கிற இந்த
ஸாஹஸத்தைச் செய்ய வெட்கம் இல்லாமல் எத்தனித்த எனக்கு நமஸ்காரம் –
—————–
ஶ்லோகம் 8 –
யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்)
என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’
(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான்.
இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.
யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||
அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)
சக்தி இலனாகிலும் யான் தளர்ச்சி எய்திச் சகிக்க இனித் தரமில்லேன் என்னும் மட்டும்
புத்தி எனக்கு உற்ற அளவும் போற்றி நிற்பன் புகழ் ஆர்ந்து எக்காலத்தும் பொருந்தி ஏத்தும்
தத்துவத்தை யுணர் மறையும் சதுர் முகத்தோன் சங்கரன் ஆதியர்களும் இங்கனமே யன்றோ
ஒத்திடில் ஓர் பெரும் கடலுள் அமிழ்ந்து மூழ்கும் உயர் மலைக்கும் அணுவிற்கும் வாசி யுண்டோ –8-
உள்ளபடியே உன்னை ஸ்தோத்ரம் செய்ய சக்தி இல்லேனாயினும் என் உணர்ச்சியில் தளர்ச்சி யுண்டாகி
இனி என்னால் ஸாத்யம் இல்லை என்னும் மட்டுமாவது என் ஞானத்துக்கு எட்டும் வரையிலுமாவது ஸ்துதி பண்ணுகிறேன்
ஜகத் ப்ரஸித்தமாய் ஆதி காலம் தொட்டு உன்னை ஸ்துதிக்கும் ஸகல தத்துவத்தையும் அறிந்த வேதங்களும்
சதுர் முகன் சங்கரனாதி மற்றவர்களும்
தத்தம் ஞான சக்தி யாதிகள் அளவே யன்றோ ஸ்துதிக்கின்றார்கள் ஸ்துதிக்கின்றார்கள்
ஒரு பெரும் கடலிலே அமிழ்ந்து மூழ்குகின்ற ஒரு பெரிய பர்வதத்துக்கும் ஒரு அணுவிற்கும் என்ன வித்யாஸம் இருக்கிறது –
உள்ளபடி யுன்னை ஸ்துதி செய்ய மாட்டாமையில் வேதம் முதலியவைகளும் எனக்கு யாதொரு வாசியும் இல்லை என்பது கருத்து –
—————–
ஶ்லோகம் 9 –
இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.
கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்த புத்தே:
இத் யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜ நேத்ர ||
மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;
எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.
உன்னையே ஸ்துதிப்ப யெய்தும் யுணர்ச்சியின் தளர்ச்சி யன்றி
நின் அருட்க்கு உரியதாமோ நிறை கவித் திரனும் சீரும்
என்னிட மந்த புத்திக்கு எளிது இளைப்பாதல் பற்றி
நன்னல நயனா விந்த முயற்சிக்கு யுரியனானே –9-
நன்னலம் –அழகு
உன்னை ஸ்துதிப்பதில் இச்சை கொண்டும் -அதற்கு வேண்டிய சக்தி இல்லாமையால் புகழவும் தவிர மாட்டாமையாலே
ஒருவன் படுகிற இளைப்புக்கு இரங்கி நீ அருள் செய்வதே யன்றி ஸ்தோத்ரம் செய்வதற்கு வேண்டிய பூர்ணமான
ஸாமர்த்ய அதிசயங்களைக் கொண்டு நீ அனுக்ரஹிக்கிறது இல்லை –
இங்கனம் இருக்க அல்ப புத்தியேனான எனக்கு ஸ்ரமம் அதிக சுலபத்தில் உண்டாய் விடுகிறது –
ஆகையால் -என் ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டும்படி கடாக்ஷிக்க வல்ல அழகிய திருக்கண்களை யுடையவனே
இந்த ஸ்தோத்ரம் செய்ய வேணும் என்னும் முயற்சிக்கு யுரியவன் நானே யாகின்றேன்
எனக்கு அம்முயற்சி தகுந்துள்ளது –
—————-
ஶ்லோகம் 10 –
எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார்,
எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார்.
அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)
எம்பெருமானின் பரத்வத்தை அருளிச் செய்கிறார்.
நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||
எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.
நாத நின் ஸங்கல்பம் இன்றி யுண்டாய் நன்மை யுறும் இருக்கைக்கும் சமர்த்தம் இல்லா
சாதனமாம் இப்புவனங்கட்க்கும் எங்கன் ஸம்பவிக்கும் ப்ரவ்ருத்தி இவ்விதத்தே
ஏது விலாத எல்லா உயிர்களுக்கும் இதம் புரியும் இயற்கையனாம் ப்ரபோ நின் தன்
பாதம் அணி அன்பர்க்கு இவ்வாற் ஸலீயம் படைத்து உள்ளாய் என்பதிலோர் விந்தை என்னே -10-
பிரபோ ஆதியில் நீ ஸங்கல்பித்து கடாக்ஷித்து இரா விட்டால் இப்பதினான்கு உலகங்களும்
உண்டாய் இருப்பதற்கே ப்ரமேயம் இருந்திராது -அப்படி இருக்க அவைகளுக்கு ப்ரவ்ருத்தி எங்கனே யுண்டாகும்
ஏ ஸர்வ சேஷியானவனே பிரமன் முதலிய சகலஜீவன்களுக்கும் கரண களேபரங்களைக் கொடுத்து குறை தீர்த்து அருளிய
ஸ்வ பாவமாய் ஸூஹ்ருத்தான உன் விஷயத்தில் ஸ்துதி பண்ண வல்லராம் படி
உன் அன்பரைச் செய்வதற்காக உனக்கு யுண்டான வாற் ஸலீயம் ஓர் ஆச்சர்யம் ஆகுமோ-
—————-
ஶ்லோகம் 11 –
இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.
ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||
நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்;
உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?
விந்தையாய் இயற்கையாம் உன் விதப்புறு நாயகத்தை
எந்த மா வைதிகர் தான் பொறுத்திலார் நாரணா நின்
சிந்துவா மஹிமை தன்னில் சிறு துளி யாவர் யன்றோ
நந்தி நான்முகன் வலாரிமுத்தராம் ஏனையோரும் –11-
விதப்பு –அதிசயம் -மிகுதி
வைதிகர் -வேதாந்த ஸாஸ்த்ரம் உணர்ந்தவர்
நந்தி -சிவன்
வலாரி -இந்த்ரன்
நாராயணா -இயற்கையையும் ஆச்சர்யமாயும் உன்னிடத்து அமைந்துள்ள உனது இப்புயர்வு இல்லாத
உபய விபூதி ஸாம்ராஜ்யத்தை -வேதாந்த ஸாரத்தை அறிந்த எவர் தான் பொறுக்க மாட்டார் –
பிரமன் சிவன் இந்திரன் முக்தர் முதலிய இவர்கள் எல்லோரும் கடல் போன்ற உன் மஹிமையில் ஒரு துளியே ஆகின்றார்கள் அன்றோ –
—————
ஶ்லோகம் 12 –
இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.
கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||
ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?
ஆர் திருவுக்கும் திருவாகுபவன் ஆனார் பரம ஸத்வ ஸ்வரூபம் உளனார்
ஆர் மலரும் தாமரையின் கண்ணுடையவன் யாவன் புருஷோத்தமன் எனும் பெயர் உளான்
ஆறுடை ஸ்வரூபம் அதில் ஆயிரத்து ஆயிரம் கோடி பதினாயிரம் அதில்
ஆர் கலையினோர் சிறிய பாகம் அதில் அகில பிரபஞ்சமும் அடங்கி உளதே –12-
திருவுக்கும் திருவாகுபவன் யாவன் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் ஒரு சம்பத்தாய் அமைந்துள்ளவன் யாவன்
ஸூத்த ஸத்வ ஸ்வரூபம் யுடையவன் நீ யல்லாமல் வேறே யாவன்
ஸர்வேஸ்வரத்வத்தைக் குறிப்பிக்கும் மலர்ந்த தாமரை போன்ற திருக்கண்களை யுடையவன் வேறு யாவன்
புருஷோத்தமன் என்னும் பெயரை யுடையவன் உன்னிலும் எவன்
சரீர போக்யாதிகளால் அத்யந்தம் வேறு பட்டு இருக்கிற சேதன அசேதன கங்களுடைய வியாபகத்தோடு கூடிய
அகில பிரபஞ்சமும் உன்னை விட மற்று எவனுடைய ஸ்வரூபத்தில்
பலகோடி நூறு ஆயிரங்களின் ஒரு சிறு பங்கில் அடங்கி இருக்கின்றது –
—————–
ஶ்லோகம் 13 –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..
வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||
ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?
வேதம் அபகாரம் உறு நாளிலும் குரூர குரு பாதகம் விளை நாளினும்
தீதர அசுரர் செயிட ராதிபல வாப தங்க டீர்த்தருண் மகோத்தம பலன்
போதன் அரனார்க்கு அருள் புரிந்த பரதேவன் எவன் புகலில் யுனை யல்லாது எவன்
பாத மலர் ஆதரவின் பாய் நதி புனல் தன் தலை ஏந்து சிவன் ஏந்து சிவமே –13–
ஆபதம் -ஆபத்து
போதன் -பிரமன்
சிவம் -மங்களம் -நன்மை –
வேதமானது மது கைடபர்களால் அபஹரிக்கப் பட்ட காலத்திலும் –
தனது பிதாவும் குருவுமான பிரமனுடைய தலையைக் கொய்தலால் யுண்டான குரூரமான குரு பாதகம் சிவனுக்கு நேரிட்ட காலத்திலும்
திரிபுர அசுரர் முதலிய அசுரர்களால் யுண்டான பீடையாதி ஆபத்துக்கள் நேரிட்ட காலத்திலும்
அவைகளின் நின்றும் விடுவித்து
தன்னைப் பிரார்த்தித்ததால் லோகத்தில் ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதவியை பிரம ருத்ராதிகளுக்குக் கொடுத்து
அவர்களுக்கு ரக்ஷகனான நீ அன்றி வேறு யார் உள்ளான்
எவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தன் தலை மேல் கொண்டதனால் சிவன் மங்களத்தை அடைந்தான் –
—————–
ஶ்லோகம் 14 –
ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து,
(இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.
கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||
யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம்
அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?
யார் இறையோன் இறை யுப்பட யண்டம் யடங்கலும் தன் உதரத்து யுடையான்
யார் இத்தலைக்கண் நின்று ஆயினவாகும் அண்டம் அனைத்தும் அளித்து அருள்வான்
யார் அகிலத்தை அளந்து விழுங்கி யுமிழ்ந்தவன் இன்னும் அன்னியனே
யார் பரதந்த்ரம் உற்றுளது அகிலமும் நின் அதலாது இதிலையமுமே –14-
இறையோன் -சிவன்
இறை -பிரமன்
இதலை -கொப்பூழ் –உந்தி
எவனுடைய திரு வயிற்றிலே பிரமன் சிவன் ஆதியரான சகலமும் அடங்கிய இந்தப் பிரபஞ்சம் அடங்கி இருந்தது
இப்பிரபஞ்சமானது வேறு எவனுடைய நாபியில் இருந்து உண்டாயிற்று
இப்பிரபஞ்சத்தை நீ அல்லது எவன் ரக்ஷிக்கின்றான்
உன்னை அல்லால் வேறு எவன் இப்பிரபஞ்சத்தை த்ரிவிக்ரமனாக அளந்து
பிரளய காலத்தில் விழுங்கி மறுபடியும் உமிழ்கின்றவன்
இப்பிரபஞ்சம் உன்னைத் தவிர வேறே எவனுடைய ஸ்வ அதீனத்தில் அடங்கி உள்ளது –
இவைகளைக் குறித்து சந்தேகிக்கவும் கூடுமோ
——————–
ஶ்லோகம் 15 –
இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும்,
ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார்.
அல்லது –
ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத் தன்மை யுடையவர்கள் பார்க்கக் கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.
த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||
[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்
உத்தம சீல குணத்தகையால் உருவால் அதி மானுட சரிதைகளால்
சத்துவ சுத்த விபூதியினால் உயர் சாத்து விகத்தினை யுரை மறையால்
தத்துவ மெய்ப்பொருள் யுன்னை யுணர்த்திடு சான்றவர் கொள்ளும் மதங்களினால்
எத்திறன் எனும் உறார் சில தாமஸ இயல்புடையோர் யுனை அறியுமே –15-
உன் உத்தமமான ஸுசீல்ய குணத்தினாலும்
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகத்தினாலும்
அதி மானுஷ சரித்ரங்களினாலும்
அத்யந்தம் ஸ்ரேஷ்டமான சுத்த ஸத்வ யோகத்தினாலும்
ஸாத்விக கல்பத்தில் சொல்லுகிறபடியால் ப்ரபலங்களான ஸாஸ்த்ரங்களினாலும்
ப்ரஸித்தமான தேவதா பாரமார்த்யத்தை அறிந்த பரசாராராதி ஸித்தாந்தங்களினாலும்
உன்னை அறிவதற்கும் கூட ஆஸூர ப்ரப்ருதிகளான சிலருக்கு எவ்வளவேனும் சாத்தியப்படுகிறது இல்லை –
—————
ஶ்லோகம் 16 –
எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார்,
அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.
உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||
உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.
வீத மூன்று அளப்பு விஞ்சி ஒப்புயர் விலா துயர்
நாத மாயையோடு நீ யுன்னாகம் மறைக்கினும்
ஓத யுன்னை அன்றி இல்லன் என்னும் ஓர்தலார் சிலர்
வாதமின்றி என்றும் உள்ள வாறு காண வல்லரே –16-
காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவினாலும் -ஆகிய மூன்று விதங்களினாலும்
இவ்வளவு என்று நிச்சயிக்க முடியாததும் ஒப்பு உயர்வு இல்லாமல் உயர்ந்து இருக்கிற உன் பிரபுத் வத்தை
உன் ஆச்சார்ய சக்தி யோகமாகிற மாயையைக் கொண்டு நீ மறைத்த போதிலும்
உன்னைத்தவிர வேறே ஒரு சேஷியையும் அறியாத மன நிலையை யுடைய சில மகான்கள்
எக்காலத்திலும் அந்தப் பிரபுத்வத்தை உள்ளபடி அறிகின்றார்கள் –
———–
ஶ்லோகம் 17 –
இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.
யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||
1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.
ஆதி யண்டம் யவ்வண்டம் அடங்கிய அகில வத்தும் ஐ இரண்டள வுயர்
மீது சூழும் ஏழு ஆவரணங்களும் விரி குணங்களும் வேற்றுமை அற்றதும்
வேதகத்திய சேதன வர்க்கமும் மேலதான் வைகுண்டமும் நித்தரும்
சோதி யாகு நின் சுந்தர ரூபமும் சொந்தமாம் உன் விபூதிகளாகுமே –16-
வேதகம் -வேறு படுத்தல்
ஆதி காலத்தில் உண்டான அண்டங்களும்
அவ்வண்டங்களில் அடங்கிய அகில வஸ்துக்களும்
பதின் மடங்கு அதிகமான அண்ட ஆவரணங்களும்
ஸத்வாதி குணங்களும்
விகாரப்படாத ப்ரக்ருதியும்
சேதனர்களும்
உயர்ந்த பரமபதமும்
பத்த முக்தர்களிலும் மேலான நித்யர்களும்
ஸூத்த ஸத்வ தேஜஸ்ஸுடன் விளங்கும் உன் திவ்ய மங்கள விக்கிரகமும்
ஆகிய இவை எல்லாம் உனது சேஷ வஸ்துக்கள்
—————
ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.
வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||
நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.
மன்னு மிரு வச முகந்து வண்மை வீசி வாய்மையுடன் தூய்மையினை வகித்து அன்பர்க்கே
இன்னமுதாய் ஏனையோருக்கும் சமனாய் என்றும் இளகிய நெஞ்சுடன் அளி கூர்ந்து அவர் தம் வேட்கை
யுன்னி முடித்து அன்னவர் செய் நன்றி நாடி யுகந்து யுதவி யரும் சீல குணவானா நீ
நின்னியல்வாம் கல்யாண குணங்கட்க்கு எல்லா நிகர் அற்ற சுதை யாழி என நின்றாயே –18-
எல்லாவற்றையும் தன் வசமாக்கி நடத்துவதோடு ஆஸ்ரிதர்களுக்குத் தானே வசமாகி நடப்பவனும்
இனிய வசனங்களோடு தன் ஆஸ்ரிதற்குத் தன்னையும் தன்னுடைமையையும் கொடுக்கும் தன்மையை யுடையவனும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அவரது அபராதத்தால் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று தான் வாக்கு அளித்தபடி ரக்ஷிப்பவனும்
நித்ய ஸம்ஸாரிகளை தன் ஸம்பந்தத்தினால் நித்ய ஸூரிகளோடே சேர்க்க வல்ல பரி ஸூத்தன் ஆனவனும்
அவர்கள் அனுபவிக்கத் தக்க போக்யனானவனும்
தன் பெருமையைக் கருதாது தன்னை அடைபவரை சாதி பேதம் பாராட்டாமல் கூடி உறவாடி அவர்களுக்கு சமானமாய் இருப்பவனும்
அவரது பிரிவையும் அவர் படும் துன்பத்தையும் சகியாத இளம் நெஞ்சை யுடையவனும்
கைம்மாறு கருதாமல் அவர்களுக்கு உபகரிக்குமவனும்
அவரது இச்சையை தன் திரு உள்ளத்தில் கொண்டு அதற்குத் தக்கபடி தான் அடைந்து அவர் கார்யத்தைத் தானே அடைபவனும்
அவர்களுக்குத் தான் செய்த பேர் உபகாரத்திற்காக அவர் செய்யும் அல்ப உபகாரத்தையும் பெரிதாக நினைப்பவனுமாகிய நீ
உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள சகல கல்யாண குணங்களுக்கும் இணை இல்லாததான
ஓர் அம்ருத சாகரம் போலே -கரை இல்லாமலும் பரம போக்யமாகவும் ஆகின்றாய் –
——————
ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .
உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||
வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,
கீதம் கிளத்திடும் தேயேசதம் எனும் கிரமத்தில்
போதனின் மென் மேற் புருடர் விதித்து உன் குணம் ஒன்றின்
ஏதமில் எல்லை காணிய விச்சித்து என்றும் உறை
வேத முயற்சி தசையினை யின்னும் விட்டிலதே –19-
வேதத்தில் கூறிய -தே யே சதம் -என்னும் ஒரு கிரமத்தை அனுசந்தித்து உன் அநந்த குணங்களில் ஆனந்த குணமாகிய ஒன்றினுடைய
எல்லையைக் காணும் பொருட்டு வேதங்கள் பிரம்மாவை மனுஷ்ய கோடிகளில் ஒன்றாய் நிறுத்தி அவனுக்கு மேன்மேல்
ப்ரம்மா வரையில் புருஷர்களைக் கற்பித்து அதில் ஒவ்வொருவருடைய ஆனந்த குணமும் நூறு நூறு மடங்கு
அதிகம் எனக் கணக்கிட்டுச் சொல்லியும் கடைசியில் அந்த உன் ஆனந்த குணத்தின் எல்லையைக் காண
மாட்டாமல் இன்றும் காணும் ப்ரயத்னத்தில் நின்றும் மீள வில்லையே –
——————-
ஶ்லோகம் 20 –
ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.
த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||
ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.
உனை யடுப்போர்க்கு உண்டாக்கல் உலகம் எல்லாம் அளித்து ஒழித்தல்
வினை யுறும் ஸம்ஸாரத்தின் விமோசனம் அடைதல் என்னும்
அனையவும் லீலையாகும் அன்னவர் தம் கம்பீர
மனதினை அநுசரிக்கும் மா மறை விதி கண் மாதோ –20-
இவ்வுலகங்களை எல்லாம் உண்டாக்குதல்
ரஷித்தல் -அழித்தல் -முதலான தொழில்களும்
ஸம்ஸார விமோசனம் அடைதல் முதலிய மற்ற சகலமும்
உன் ஆஸ்ரிதர் விஷயத்தில் லீலைகளாக்கி அவர் நிமித்தமாகவே உண்டாய் இருக்கின்றன
வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளும் உன்னை ஆஸ்ரயித்த அநந்ய ப்ரயோஜனருடைய கம்பீரமான மனஸ்ஸை அனுசரிக்கின்றன –
————-
ஶ்லோகம் 21 –
ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார்.
அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார்,
இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.
நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||
தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.
நெஞ்சுடன் வாக்கினை மீறியதாகு நினைப் பணிவேன் பணிவேன்
நெஞ்சுடன் வாக்கு அதினுக்கு இடமாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சும் அநந்த விபூதியனாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சு மஹா தயை வேலையனாகு நினைப் பணிவேன் பணிவேன் –21-
ஞானத்தில் மிக்கோர் ஆயினும் தம்முடைய பிரயத்தனத்தால் அறிய நினைக்கில் –
அவரது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவனான உன்னைப் பன்முறை நமஸ்கரிக்கிறேன்
உன் கிருபையால் நீ காட்டி அருள -அந்தக் காரணத்தால் உன்னைக் காண்பவருடைய வாக்கிற்கும் மனதுக்கும்
விஷயமான வுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்
அநேகங்களான மகத்தான உபய விபூதியை யுடையனான யுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்
வாக்கினுக்கும் மனசுக்கும் விஷயமாகிய பரம தயா சக்கரமான உன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்
—————-
ஶ்லோகம் 22 –
ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது –
முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.
ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||
சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.
நிலை பெறக் கரும நிடடை நின்றிலேன் ஞானம் இல்லேன்
மலரடி இணையைப் பற்றும் அன்பினை வகித்தேன் அல்லேன்
இலை சரண்யனும் வேறு சாதனமும் ஒன்றும் இல்லேன்
தலைவ நின் பாத மூலம் சரண் எனப் பற்றுவேனே –22-
உன் திருவடிகளை அடைந்து நிலை பெறுவதற்கு அவஸ்யமான கர்ம யோகத்தில் நிஷ்டை யுடையேன் அல்லேன்
ஞான யோகமும் யுடையேன் அல்லேன்
உன் திருவடித் தாமரைகளில் பக்தி யுடையவனும் அல்லேன்
இவைகள் இல்லை என்று அனுதாபம் யுண்டாவதற்கு ஏற்ற ஆத்ம குணம் யுடையேனும் அல்லேன்
ஏ ஸர்வ சரண்யனான ஸ்வாமியே -விரோதி நிவர்த்தக பூர்வகமாக கைங்கர்ய ப்ராப்திக்கு உபாயமாக உன் திருவடிகளையே சரணமாகப் பற்றுகிறேன் –
——————
ஶ்லோகம் 23 –
எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்”
என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||
மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.
பலமுறை யான் இயற்றா பாதக் கணங்கள் தம்முள்
உலகினில் ஒன்றும் இல்லை யுறு பலன் எனை வதைப்ப
நிலை குலைந்து ஏங்கி வேறு கதியிலேனாகி நின் முன்
கலியுடன் முகுந்த வின்றுக் கதறியே கரைகின்றேனே –23-
பலதடவைகளில் என்னால் பண்ணப்படாத மஹா பாதகக் கணங்களுள் ஒன்றேனும் இவ்வுலகின் கண் இல்லை
ஏ முகுந்த அப்பாவங்கள் பக்வ தசையை அடைந்து பலத்தை எனக்கு விளைவிக்க
இதை அனுபவித்து உழன்று நிலை குலைந்து ஏங்கி வேறே கதி ஒன்றும் இலேயேனாய்
உன் முன்பு இப்பொழுது கதறிக் கரைகின்றேன் –
—————-
ஶ்லோகம் 24 –
ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.
நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||
தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.
பவம் என்னும் பரவை தன்னுள் பகவ நீடு ஊழியாகக்
கவலையோடே அழுந்தும் எற்கு ஓர் கரையென யகப்பட்டாய் காண்
உவமையில் யுன் தயைக்கோர் யுத்தமே யுரிமை பூண்ட
வவலமார் இதுவும் உன்னால் அடை தலைப் பெற்றது இன்றே –24-
அநேக ஊழிகளாக ஸம்ஸாரம் என்னும் பெரும் கடலில் கவலையோடு கூடி அழுந்தி
வேறு பரிகாரம் அறியாத எனக்கு ஒரு கரை போலே நீ அகப்பட்டாய்
இது எங்கனம் இருக்க -ஏ ஸ்வாமியே
உன்னுடைய இணை இல்லாத தயைக்கு உத்தம உத்தமமான ஒரு விஷயமாக
இந்த அவல வஸ்துவும் உன்னால் இப்பொழுது அடையப் பெற்றது –
—————–
ஶ்லோகம் 25 –
எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு,
நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்)
என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்
அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.
அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||
ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.
இதுவரை யான் படாத இடர் எனக்கு இனி ஓன்று உண்டோ
எதையும் நான் சகிப்பன் துக்கம் இயற்கையே எனக்கானால் யுன்
பதமுறச் சரண் அடைந்தோர் பரிபவப் படில் யுன் முன்னர்
அது உனக்கு இணக்கம் அன்றே நாத எவ்விதத்தும் அந்தோ -25-
இதுவரையும் நான் அனுபவியாத சங்கடங்களில் இனி நான் அனுபவிக்கும்படி நேரிடக்கூடிய சங்கடம் ஓன்று யுண்டோ
எதையும் நான் சகிப்பன்
காமியான எனக்கு கர்ம பலமான துக்கங்கள் ஸஹஜமே
ஆனால் ஓன்று யுண்டு -ஏ ஸர்வேஸ்வரனே
உன் முன்பே உன் திருவடிகளிலே சரணம் அடைந்தோர் பரிபவப் பட்டால் அப்பரிபவம் உனக்கு எவ்விதத்திலும் தகுதி அன்று –
—————
ஶ்லோகம் 26 –
ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே)
உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.
நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||
ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.
என்னை நீ நூக்கினாலும் ஈசனே கமலம் அன்ன
யுன்னடி ஒருக்கணத்து நீத்து நான் உய்ய மாட்டேன்
என்னையே முனிந்து நூக்கின் அவள் முலைப்பால் என்றும்
மன்னியா யடியைப் பற்றா ததை விட மனமுறாதே –26-
ஆஸ்ரித ரக்ஷணத்தையே ஸ்வரூபகமாக உடைய நீ என்னை கிருபை பண்ணாமல் தள்ளிவிட்ட போதிலும்
உன் திருவடிகளை ஒரு க்ஷணமேனும் விட்டு விட்டு உஜ்ஜீவிக்க சமர்த்தன் அல்லேன்
ஏ ஸர்வேஸ்வரனே ஸ்தன்யமே தாரகமாக யுடைய ஒரு சிசுவானது கோபம் கொண்ட தன் மாதாவால் தள்ளப்பட்ட போதிலும்
தன்னை ஆதரித்த காலத்தில் போலே அவளைக் காலைக் கட்டிக் கொள்ளுமே அன்றி அதை விட்டுவிட விரும்பாதது அன்றோ –
—————-
ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.
தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?
நின்னருள் தன்னால் அமுதினைப் பொழியும் அம்புயத்தாள் களின் நிலையாய்
மன்னிய மனதும் உன்னையே யன்றி மற்றதை நாடல் எங்கனமாம்
தன்னுயிர்க்கு அரிய மதுவினை நிரம்பத் தாமரை கொண்டு அலர்ந்திருப்பப்
பின்னும் உள்ளியினைப் பிரமரம் கண்ணால் நோக்கவும் நோக்கிடாது அன்றோ -27-
உனது தேனே மலர்ந்த திருவடித்தாமரைகளில் உன் நிர்ஹேதுக கிருபையாலே நிலையாகச் செலுத்தப்பட்ட
மனஸ்ஸானது உன்னைத் தவிர வேறு விஷயத்தை எப்படி இச்சிக்கக் கூடும்
தேனை நிரம்பக் கொண்டு தாமரைப் புஷ்பமானது மலர்ந்து இருப்ப தேனையே யுண்டு ஜீவிக்கும் வண்டானது
அதை விட்டு விட்டு நெருங்கிச் செல்லவே ஸ்ரமமாயும் ஸ்ரமப்பட்டு நெருங்கினும் அற்பமான தேனை யுடையதுமான
முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பாராது அன்றோ –
—————
ஶ்லோகம் 28 –
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..
த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||
காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.
ஒருமுறை யுனது திருவடி இணையை யுன்னியே எப்பொழுதேனும்
இரு கரம் கூப்பி எத்திறத்தவர் தாமேனும் எவ்விதமாயேனும்
புரியும் அஞ்சலி அப்பொழுது இனித்தானே இடர் எல்லாம் மாயமாய்ப் போக்கித்
தரும் அரும் சுபர்கள் சகலமும் என்றும் தான் குறை ஒன்றும் இல்லாதே –28-
ஸர்வ ஸுலபமானதும் -அதி போக்யமானதுமான யுன் திருவடிகளை உத்தேசித்து எப்பொழுதாவது
இச்சை பிறந்த போது -ஜாதியாதி நியமம் இல்லாமல் எவரேனும்
முறை யாவது -நியமமாவது -பல அபேக்ஷையாவது -யாது ஒன்றும் இல்லாமல் எவ்விதமாயாவது
எந்நாளும் செய்ய வேண்டியது இல்லாமல் ஏதோ ஒரு தடவை இரு கரம் கூப்பிச் செய்யும் அஞ்சலியானது
அப்பொழுதே எல்லாப் பாவங்களையும் ஒரு குவியலாகக் களவு போனது போலே சென்ற வழி தெரியா வண்ணம் மாயமாய்ப் போக்கி
இவ்வளவு செய்தும் என்றும் தனக்கு ஒரு குறைவும் இல்லாமல் பிரபத்தி ஞானம் முதலிய ஸகல சம்பத்துக்களையும் விருத்தி பண்ணித் தரும் –
—————–
ஶ்லோகம் 29 –
இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது –
28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பர பக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.
உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||
உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும்
காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.
செந்தழல் இட்டுச் சீறும் பவம் என்னும் காட்டுத் தீயை
முந்தியோர் கணத்து அவித்து முடிவிலா அநந்த மீயும்
சந்தமார் யுனது செந்தாமரை இணைத்தாளின் அன்பாம்
அந்தமா அமுத வாரித் திவலையில் ஓன்று தானே –29-
உன்னுடைய அழகான செந்தாமரைத் திருவடிகளின் மீது வைத்துள்ள கைங்கர்ய உபகரணமான பக்தியாகிற அந்த
அமுதக் கடலின் ஒரு திவலை யானது செந்தழல் இட்டு மேலே கிளம்பிச் சீறி எரிகிற ஸம்ஸாரம் ஆகிற காட்டுத்தீயை ஒரு ஷணத்திலே அவித்து
அத்யுன்னதமான மோக்ஷ அனுபவ ஆனந்தத்தையும் கொடுக்கிறது –
—————-
ஶ்லோகம் 30 –
ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது –
ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார்,
திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை
எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.
விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||
என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?
விண்ணவராதி மண்ணோர் யுலகெலாமே அளந்து
நண்ணு நரார்த்தியாவு நசித்தலே தொழிலாய் நின்றேன்
எண்ணரும் தனமாம் யுன் தன் அம்புயத்தாளை இந்தக்
கண்ணினால் கண்டு நானே களிக்கும் நாள் என்னாளோ — 30-
திரி விக்ரம அவதாரத்தில் ஸர்வ லோகங்களையும் அளந்ததும்
ஆஸ்ரிதர்களுடைய ஸ்ரமங்களைப் போக்குவதில் தாமே மேல் விழுந்து ஸமயம் பார்த்துக் கொண்டு இருப்பதும்
எனக்கு எண்ணுதற்கு அரிதான ஒரு நிதியாயும் உள்ள உன் திருவடித் தாமரைகளை
என் கண்களால் கண்டு நான் களிக்கும் நாள் எந்த நாளோ
எப்போது கண்டு களிக்கப் போகின்றேனோ –
———————
ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.
கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||
த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.
சங்கு சக்கரத்தினோடு ஸரோருகம் த்வஜம் சார்ந்த
வங்குசம் வயிரம் கற்ப தரு முதலாகும் சின்னம்
தங்கு நின் தாமரைத் தாள் விக்ரம என் சிரத்தைப்
பொங்கும் என் மனம் களிப்பப் புனையும் நாள் எந்த நாளோ –31-
எல்லாருடைய சிரஸ்ஸுக்களிலும் உன் திருவடியை அமர்த்தி அருளிய ஏ த்ரி விக்ரமனே
சங்கம் சக்கரம் பத்மம் த்வஜம் அங்குசம் வஜ்ரம் கற்பம் இவை முதலியவற்றின் உபய விபூதி சாம்ராஜ்யத்தை
குறிக்கின்ற திவ்ய ரேகைகளையுடைய உன் திருவடிகள் என் மனம் பொங்கிக் களிக்குமாறு
எப்பொழுது என் சிரஸ்ஸை அலங்கரிக்கப் போகின்றவோ –
—————–
ஶ்லோகம் 32 –
இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம்
தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.
விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||
எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-
விந்தையுடன் திருவரை யது பூத்தது எனச் சுடர் வீசு பொன் அம்பரமும்
அந்தமுடன் அலர் காயாம்பூ நிற வாசறு மேனியும் யுன்னதமும்
சுந்தர வாழி சுழன்றது எனச் சுழற் ஆழ்ந்திடும் உந்தியும் சிற்றிடையும்
சந்தமுடன் தட மார்வம் விளங்குவதாம் மறு ஓன்று தரிப்பவனாய் –32-
திருவரையே பூத்தது என்று சொல்லும்படி வெகு ஆச்சர்யமாயும் அழகாயும் ப்ரகாசிக்கும் பீதாம்பரத்தையும்
அலர்ந்த காயாம்பூவைப் போன்ற நிர்மலமான திரு மேனியையும்
அழகு என்னும் கடலில் சுழல் யுண்டாக்கியது என்னும் படி அழுத்திச் சுழல் கொண்ட திரு நாபி கமலத்தையும்
சிற்று இடையையும் விசால மார்வில் பொலிவுடன் விளங்குகின்ற ஸ்ரீ வத்ஸம் என்னும் ஒரு மறுவையும் தரித்து உன்னதமாய்ப் ப்ரகாசிப்பவனாய் –
————
ஶ்லோகம் 33 –
இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.
சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||
வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –
பத்த விரோதிகள் பட்டற வேந்து வில் நாணியின் சுவடு படிந்து உளவா
யுத்தம புருட விலக்ஷண முற்று முழந்தளவாய்ச் சுப ஸூசிகையாய்
அத்திருவின் செவி யலர் மலர் உத்பலமும் இழையும் மவிழ் பின்னகமும்
ஒத்தி யுறுத்தியது என்ன ஒளிர் தரு மென்மையில் நான்கு புயத்தவனாய் –33-
ஆஸ்ரித விரோதிகளைக் களையும் பொருட்டு தரித்த சார்ங்கத்தின் நாணினால் யுண்டான தழும்பு படிந்துள்ளவனாய்
உத்தம புருஷ லக்ஷணமாக முழங்கால் வரைக்கும் நீண்டவனாய் பக்தர்களுக்கு மங்கள கரமானவையாய்
அந்த மஹா லஷ்மியினுடைய திருச்செவி மலரான உத்பலமும் கரண ஆபரணங்களும்
அவிழ்ந்து இருக்கும் திருக் குழல் கற்றையும் ஆகிய இவைகள் உறுத்தினது தோற்றும்படி ப்ரகாசிக்கும்
மிருதுவான நான்கு திருத் தோள்களையும் யுடையவனாய்
————-
ஶ்லோகம் 34 –
திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும்
ஆளவந்தார் அனுபவிக்கிறார்.
உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||
எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,
அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —
பருத்து உயர்வான திருப்புய மட்டும் படிந்து இழி குண்டலமும் குழலும்
இருத்தலின் ஓர் எழில் ஏந்து இலங்கும் இடம் புரி போல் ஒளிர் கண்டம் அதும்
தரித்ததுவும் ஓர் அழகோ என நின்மல பூர்ண சந்த்ரனார் ஒளியும்
திருத்துவதா மலர் மரை எழிலும் மிகு திரு முக மண்டல சோதியனாய் –34-
பருத்து உயர்ந்த திருத்தோள்கள் மட்டும் தாழ்ந்து தொங்குகின்ற குண்டலங்களாலும் குழல்களாலும்
பொலிந்து விளங்குகின்ற சங்கம் போன்ற அழகான திருக் கழுத்துடன்
தன் காந்தியினாலே கலைகளால் நிறைந்தும் நிர்மலமுமான பூர்ண சந்திரனுடைய ஒளியும்
அப்போது மலர்ந்த தாமரைப் புஷ்பமும் படைத்துள்ள அழகும்
ஒரு அழகோ எனத் தோற்பிக்கும் பேர் அழகு வாய்ந்த திரு முக மண்டலத்துடன் ஜ்வலித்துப் பிரகாசிக்கும் ஒரு ஜோதி யானவனாய் –
————-
ஶ்லோகம் 35 –
ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.
ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||
எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –
சீரலர் செவ்விய தாமரை போன்ற திருக்கண் இணைகள் அமர்ந்தவனாய்
நேரியதாம் யடியார்க்கு அருள் தோன்ற நெரித்து உளவாம் புருவத்தனனாய்
ஏர் ஆதரத்துடன் இலகு கபோலமும் இன் முறுவல் உயர் நாசிகையும்
காரின் இருண்டு சுருண்டு நுதல் வரைக் கவினுற வீழ் அளகத்தனனாய் –35-
சிறப்புடன் மலர்ந்த செந்தாமரை மலர் போன்ற சுந்தரமான திருக்கண்களை யுடையவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் தன் ஆதரவு எல்லாம் தோற்றும்படி நெறித்து இருக்கும் புருவத்தை யுடையவனாய்
அழகான திரு அதரத்துடன் தாவள்யமான திரு முறுவலுடன் கோமளங்களான கபோலங்களுடனும்
உயர்ந்த திரு நாசிகை யுடனும் -மேகம் போல் இருண்டு நெற்றி வரையில் தாழ்ந்து சுருண்டு இருக்கும் திருக் குழல்களுடன் விளங்குபவனாய்
——————
ஶ்லோகம் 36 –
ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.
ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||
எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி,
திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும்,
அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.
தேசமரும் திரு முடியனோர் மௌலியும் அங்கத ஆரமும் கண்டிகையும்
காசில் ஒளி தரு கௌத்துவமும் அரை நாணுடன் நூபுரம் முதலியவும்
மாசுகம் ஆர் தனு வாழி வளைக் கதை வாள் முதலாகிய ஆயுதமும்
வாச நறும் துளவத் தழகாம் வன மாலையுடன் விரி தேசனுமாய் –36-
ஜோதி மயமான திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் -தோள் வளைகள் -முத்துத் திருக்கட்டு வடம்
மாசு மறு இன்றிப் ப்ரகாசிக்கும் ரத்ன ஸ்ரேஷ்டமான கௌஸ்துபம்
அரை நூல் பட்டிகை திருச் சிலம்புகள் முதலான திவ்ய ஆபரணங்களால்
திருவாழி திருச்சங்கு வாள் கதாயுதம் சார்ங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களாலும்
வாசனை வீசும் திருத்துழாயாலே அழகு வாய்ந்த வனமாலையாலும் பிரகாசிப்பவனாய் –
—————-
ஶ்லோகம் 37 –
இனி வரும் இரண்டு ஶ்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈஶ்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச் செய்கிறார்.
சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||
எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–
உன் அழகான யுரம் தனை உன் பிரியைக்கு உறை மாளிகையாய் யுதவி
அன்னவனுடன் ஒன்றிய ஆழி யுனக்கு இனிது அமரும் இருப்பிடமாய் அருளி
மன்னும் இவ்வுபய விபூதி யினுள் பவம் ஆர்ந்திடும் அந்த கடாக்ஷம் உறும்
பொன்னை யடை குபு புணரி கடைந்து அணை கட்டி யுகந்து பொலிந்தவனாய் –37-
உன் அழகான திரு மார்பை உன் ப்ரியையான பெரிய பிராட்டியார் உறைவதற்குத் தக்க ஒரு மாளிகையாகக் கொடுத்து
அந்நாள் அவதரித்த ஷீராப்தியை உனக்கு இனிதாக அமரும் இருப்பிடமாய்க் கொண்டு
இவ்வுபாய விபூதியும் கடைக்கண் பார்வையாக-கடாக்ஷம் யுடைய அந்தப் பிராட்டியாரைப் பெறுவதற்காக கடலைக் கடைந்தும்
பின்பு ஒரு கால் திரு அணை கட்டியும் உக்காந்து திகழ்ந்து அருளியவனாய் –
————
ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.
ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||
நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.
நின்னிட சேர்த்தி நிரந்தரமாய்ப் பல வடிவிலும் செவ்வி நிலை பெறினும்
அன்ன வணிக்கு ஓர் அபூர்வமாகிய ஆச்சார்யத்தை விளைப்பவளாய்
தன் நிகரில் வடிவாலும் தகைமையினாலும் விலாஸ விதங்களிலும்
உன் ஒருவருக்கே யுரியவளாகும் உன் நித்ய ஸம்பத்து உறுபவனாய் –38-
ஸர்வ சக்தனான உன்னுடைய எல்லா விக்ரகத்தாலும் ஸர்வ காலத்தும் உன்னால் அனுபவிக்கப் பட்டு இருந்தும்
நித்யம் அபூர்வமான ஆச்சர்யத்தை யுனக்கு யுண்டாக்குபவளாய்
நிகரில்லாத உன் வடிவு அழகாலும் சீலாதி குணங்களாலும் திரு விளையாட்டுக்களினாலும்
பர வ்யூஹ விபவ விபவாதி எல்லா அவஸரங்களிலும் உனக்கே உரியவளாய் விளங்கும் அந்த மஹா லஷ்மியை
உன் நித்ய சம்பத்தாய்க் கொண்டான் இலங்குபவனாய்
—————-
ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப்
பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.
தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–
உத்தம ஞான பலன்கள் தமக்கு ஒரு உறைவிடமாக நிலைத்து அவனும்
துத்தி யுடைப் பணம் ஏந்தும் ரத்னம் எங்கும் துலங்கும் ஓர் சோதியுடன்
மத்தி யமாம் உதரத்தை ஓர் அத்புத மாளிகையாக வகிப்பவனும்
பத்தனுமான அநந்தன் அணை மிசை பத்தினியோடு உறைகின்றவனாய் –39-
உத்தமமான ஞான சக்திகளுக்கு ஒரு இருப்பிடமாக நிலை பெற்றவனும் பொறிகளை யுடைய படங்களை ஏந்தும்
தன் சிரோ ரத்னங்களின் காந்தியினால் பிரகாசிக்கின்ற தன் உத்தரத்தின் மத்திய பிரதேசத்தை
ஒரு திவ்ய அந்தப்புரமாக வகிப்பவனும் பரம பக்தனுமான திரு அநந்த ஆழ்வான் மடியிலே பத்தினியாக பெரிய பிராட்டியாரோடு வீற்று இருப்பவனாய் –
—————–
ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.
நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||
நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —
வாஸம் யுனக்கு ஒரு மாளிகையும் உபாதானமும் பள்ளியும் அஞ்சுகமும்
ஆசனமும் மணி பாதுகையும் மழை யாதவர்க்கு அரணாதி பல
பேச அரிதாம் உபச்சார விசித்ர பேத சரீர விதங்களினால்
தேசுறும் சான்றவரால் உசிதப்படி சேஷன் எனப்படுவோன் மிசையே –40-
நீ நிவாஸம் பண்ணுவதற்காக ஒரு திரு மாளிகையாயும்
சயனத்திற்காகப் படுக்கையாயும் தலையணை யாகவும்
ஸிம்மாஸனமாகியும் மரவடியாகவும்
மழை வெயில் இத்யாதிகளை போக்க ஒரு குடையாகவும்
இவை முதலாக இன்னும் அநேக கைங்கர்ய பேதங்களுக்குத் தக்கபடி தன் சரீர பேதங்களினால் உன்னுடைய சேஷத்வத்தை அடைந்து இருப்பதனால்
உசிதப்படி நித்ய ஸூரிகளால் சேஷன் என்று சொல்லப்படும் அந்த திரு வந்த ஆழ்வான் மீது வீற்று இருப்பவனுமாய் –
————-
ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.
தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||
வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —
நண்ணு நினக்கு ஒரு தாசனும் நண்பனும் வாகனமும் மரி யாசனமும்
திண்ணம் உறத் திகழும் கொடியும் விரி சாரமும் ஓர் விதானமுமாய்
எண்ணின் மறை வடிவானவனாய் அடி இணைகள் இறுத்தும் தழும்பு இலகிய
ஒண்ணும் உனக்கு எதிர் நின்று பணிந்திடும் உத்தமன் கலுழன் உகந்தவனாய் –41–
உனக்கு தாஸனும் தோழனும் வாகனமும் ஸிம்ஹாஸனமும் கொடியும் மேற் கட்டியும்
திருவால வட்டமும் ஆகின்றவனும் உன்னுடைய திருவடிகள் நெருங்குவதால் உண்டாகிய
தழும்பின் அடையாளத்தாலே சோபிக்கிறவனும்
வேத ஸ்வரூபியுமான பெரிய திருவடியாலே உன் முன் நிலைக்கண்ணாடி போல் நின்று கொண்டு சேவிக்கப் படுகின்றவனாய் –
————–
ஶ்லோகம் 42 –
ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.
த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||
விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.
நித்தமும் நீ யமுதுண்ட பின் நின்றதை நிகர் இலதாம் ப்ரஸாதம் எனா
பத்தி மகிழ்ந்து அதை யுண்பவனும் நினது ஆணையினால் செக பாரம் எல்லாம்
சித்திரமாய் சிரம் ஏந்தி நடத்து நின் நண்பனுமாம் சேனா பதியின்
வித்தகமாம் பணிவிடைகள் உகந்து அவன் வேண்டியவாறு பணிப்பவனாய் –42–
பிரதி தினமும் அமுது செய்த பிற்பாடு சேஷமாய் நின்றதை பரம உத்தமமான ப்ரஸாதமாக மதித்து மன மகிழ்ச்சியுடன்
அதைப் புஜிப்பவனும் உன் நியமனப்படி ஜகத்தின் -உபய விபூதியின் -பாரத்தை எல்லாம் தன் சிரஸ்ஸில் வஹித்து விசித்ரமாய் நடத்துபவனும் உனக்கு இஷ்டனுமான ஸேனாபதி ஆழ்வான்
செய்யும் பணிவிடைகளை உகந்து அவன் செய்யும் விண்ணப்பத்திற்கு அநு குணமாகவே அவனுக்கு கட்டளைகள் இடுபவனாய் –
—————
ஶ்லோகம் 43 –
விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்)
என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார்.
இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.
ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-
* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..
துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக்
கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!
துன்ப மலங்கள் அனைத்தையும் நீத்து நின் தூய மலர்த் திருவடி இணையில்
இன்பம் இயற்கையில் ஊட்டுவதாம் பணிவிடைகளில் போக்யம் உற்றவராய்
யன்புடன் இற்கு உபசாரம் இழைத்திட வாயின ஸாதனம் ஏந்தினராய்ப்
பொன் புரை நித்தியர் நின்னை யதோ உசிதம் போற்ற மகிழ்வுடன் பொலிபவனாய் –43-
துன்பத்தைத் தரக்கூடிய -அவித்யை முதலான குற்றங்கள் ஒன்றும் இல்லாதவராய்
மகா பரிசுத்தமாகிய உன் திருவடிகளில் கைங்கர்யங்களையே இயற்கையாக எக்காலத்தும் போக்யமாக எண்ணுபவராய்
பரம ப்ரேமத்துடன் உனக்கு உபசாரம் செய்யும் பொருட்டு அந்தவந்த கைங்கர்ய உப கரணங்களான சத்ர சாமராதிகளைத் தரித்துக் கொண்டு இருப்பவராய் உள்ள அந்த நித்ய ஸூரிகள் உன்னை ஸ்வரூப அனுரூபமாக சேவிக்க அதனால் மன மகிழ்ச்சி கொண்டு பிரகாசிப்பவனாய்
————–
ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல்
இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.
அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||
தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.
பற்பலவாகும் அபூர்வ பாவ ரசங்கள் பணித்து நிறைப் பதினாறு
கல்பம் அநேகம் அடங்கிய காலம் அதும் கண லேஸம் எனக் கழியப்
பொற்புடன் சாதுரியம் பல பூண்டு விளங்கு விலாஸ வகைகளினால்
அற்புதம் என்று உனது அன்பினள் மெச்சி யணைக்கு மகா புயம் உற்றவனாய் –44-
இதற்கு முன் என்றும் கண்டு அறியாதன போன்று வெகு விதங்களாய் ஸ்ருங்கார உத்ஸஹாதி ரசங்களால் அதிகமாய் விருத்தி அடைந்து இருப்பதால்
பரம்பரார்த்தம் என்னும் கற்பகங்கள் அடங்கிய காலமானது ஒரு க்ஷணம் போலே கழிந்து கொண்டு இருக்க
வெகு சாதுர்யம் பூண்டு அழகாய் அமைந்துள்ள லீலைகளினால் பெரிய பிராட்டியார் அற்புதம் என்று மெச்சி அணைத்துக் கொள்ளும் பெரிய திருத்தோள்களை யுடையவனாய்
—————
ஶ்லோகம் 45 –
ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான
எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||
எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –
நெஞ்சில் நினைக்க அரிதாகிய அற்புத நித்ய யவ்வன நீர்மையனாய்
விஞ்சும் எழில் மயமாய் அமுதக் கடலாய் விமலைக்கும் ஓர் சுப கரனாய்
தஞ்சம் அடைபவர்க்கு ஒரு தாரக போஷக போக்ய சதுரனுமாய்
நஞ்சின் விதத்திலும் நண்பனுமாய் வர நாடுபவர்க்கு ஒரு கற்பகமாய் –45–
மனத்தால் எண்ணுதற்கு அரிதாகி வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுவதான நித்ய யவ்வனத்தை இயற்கையாக யுடையவனாய்
லாவண்யம் நிறைந்து அமுதக்கடல் போன்றவனாய் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் மங்கள கரனாய்
தன்னை அடையும் ஆஸ்ரிதற்கு தாரக போஷக போக்யனாய்
தன் ஆஸ்ரிதர் அனுபவிக்கும் பொருட்டு தன்னையே கொடுக்க ஸாமர்த்யம் யுடையவனாய்
எந்த ஆபத்தில் நின்றும் ரக்ஷிக்க தோழன் போன்றவனாய்
யாசிப்பவர்க்குக் கொடுக்கும் விஷயத்தில் ஒரு கற்பக வ்ருக்ஷம் போன்றவனாய் –
——————-
ஶ்லோகம் 46 –
ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில்
பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.
பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||
மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?
நின்று நிறை நினையே யனுவர்த்தனம் என்றும் இயற்றி நினை ஒழி மற்று
ஒன்றிலும் இச்சை லேசமும் ஒன்ற விடாமல் ஒழித்து ஒரு நியதம் உடன்
என்றும் உன் நித்ய கைங்கர்யங்களை ஏந்தும் ஓர் சத்துடை வாழ்க்கையனாய்
நன்றென நிற்கு மகிழ்ச்சி விளைப்பதை நானும் வகித்தல் எஞ்ஞான்று கொலோ –46-
இத்யாதி ஸ்வரூப ரூப குண விபவங்களால் நிறைந்த உன்னையே இடைவிடாது என்றும் அனுவர்த்தித்துக் கொண்டு
உன்னைத்தவிர மற்ற விஷயங்களில் மநோ வியாபாரங்களை முற்றவும் தவிர்த்தவனாய்
இந்த ஆத்ம ஸ்வ பாவமுள்ள காலம் அத்தனையும் திடமான மனத்துடன் உனக்கு நித்ய கைங்கர்யங்களையே
செய்து கொண்டு சபலமான சத்தை யுடைய வாழ்க்கை யுள்ளவனாய் உன்னை நான் உகப்பிக்கும் நாள் எப்பொழுது வருமோ –
———————
ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.
திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||
புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்து கொள்ள வேண்டும்.
பத்துடை யோகிகளுக்குள் முதன்மைப்படும் அயன் அரன் ஸநகாதிகளாலும்
எத்துணை எண்ணுதலுக்கு மிகக்கும் வெகு துலை யுறு நின் பணிவிடை தன்னை
நத்துவன் காம விருத்தி யனேனான் நசை யுறு மசுசியன் விநயம் இலாதேன்
உத்தம புருட விலச்சை யொடச்சம் ஒழித்த வெனக்குறு மிழிவசையாமே –46-
ஏ புருஷோத்தம பரம யோகிகளுக்குள் முதன்மை பட்ட பிரமன் சிவன் ஸநகாதியர் முதலானவர்களாலும்
நினைப்பதற்கும் எட்டாத
வெகு தூரத்தில் உள்ள உன்னுடைய கைங்கர்யங்களை சரீர சம்பந்தத்தினால் அபரிசுத்தனனும்
ஆச்சார்ய முகமாக சிஷிக்கப்படாதவனும் காம விருத்தியை யுடையவனுமான நான் அபேக்ஷிக்கத் துணிந்தேன்
இப்படி பயத்தை ஒழித்து வெட்கத்தை விட்டுத் துணிந்த எனக்கு நிந்தையே தகும்
——————
ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.
அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||
துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எண்ணிலா அபராதங்கட்க்கு இருப்பிடமாகி நானே
பண்ணிய வினையின் கோரப் பவக்கடல் நடுவில் வீழ்ந்தே
திண்ணமுற்ற கதியேனாய்ச் சேவடி யடைந்த என்னை
கண்ண நின் கருணை ஒன்றே கொண்டு உகந்து அருளுவாயே –48-
எண்ணுக்கு வராத ஆயிரக்கணக்கான அபராதங்களுக்கு இருப்பிடமாகி
நான் பண்ணிய பாவத்தின் பலனாக விளைந்த கோரமான ஸம்ஸார சாகரத்தின் நடுவில் விழுந்து தடுமாறி
உன்னைத் தவிர வேறு கதி இல்லேனாய் உன்னை உறுதியுடன் சரண் அடைந்த என்னை
அருள் நிறைந்த திருக் கண்களை யுடைய நீ கடாக்ஷித்து
உன் நிர்ஹேதுக கிருபையாலே உன்னுடையவன் என்று அங்கீ கரித்து அருள வேணும்
————–
ஶ்லோகம் 49 –
எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ
அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல்,
என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஆளவந்தார்
“சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.
அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.
அடா விவேக மேகப் படலம் எத்திசையும் மூடி
இடை விடாது இடும்பை மாரி பலவிதம் சொரியும் இந்தப்
படு பவ துர்த்தி நத்தில் பதம் ஒழிந்து ஏங்கி நிற்கும்
கடையனைக் கடைக் கணிப்பாய் அச்யுத பகவானேயோ –49-
துர் தினம் -கொடிய தினம் -ஸூர்ய தர்சனம் இல்லாத தினம்
அவி விவேகம் ஆகிற மேகங்கள் எல்லாத் திக்குகளையும் மூடிக் கொண்டு பலவிதமாக இடைவிடாமல்
துக்கங்களை வர்ஷிக்கிற இந்த ஸம்ஸாரம் ஆகிற துற தினத்தில் சரியான வழியின் நின்றும்
நழுவி ஏக்கம் கொண்டு நிற்கும் கடையனான என்னை ஏ பகவானே
ஆஸ்ரிதரை நழுவ விடாதவனே -கடாக்ஷித்து அருள வேண்டும்
—————–
ஶ்லோகம் 50 –
ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும்
என்னை விட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.
ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||
ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.
வஞ்சனை அன்று நாத வாய்மையே யான் வழங்கும்
செஞ்சொலில் இவ்விண்ணப்பம் செவியில் நீ முன்னம் ஏற்பாய்
தஞ்சமாய் அடைந்த என்னைத் தயை யுறாது ஒழிகில் அந்தோ
விஞ்சும் உன் தயைக்குத் தக்க விஷயம் மற்று அரியதாமே –50-
ஏ ஸர்வ சேஷியே -அடியேன் செய்யும் இவ்விண்ணப்பம் பொய்யன்று -உண்மையே ‘
இத்தை முன்னம் நீ திருச்செவி சாய்த்து அருள வேணும்
தஞ்சமாக அடைந்த என்னை நீ தயை பண்ணாது ஒழிவாயாயின்
உனக்குத் தயை பண்ணி ரக்ஷிக்கத் தக்க வஸ்து கிடைப்பது துர்லபம்
——————
ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.
ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||
ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.
எனக்கும் ஓர் நாதனில்லை நின்னை விட்டு என்னை அன்றி
யுனக்கியல் பாந்தயைக்கும் உரிமை யோர் ஒருவரும் இல்லை
தனித்த நின் தயையினால் எம் இருவர் இனி இவ்விணக்க
மனத்தினில் கொண்டு அருள்வாய் மாதவ கை விடாமே –51-
எனக்கும் உன்னை விட ஒரு நாதனும் இல்லை
இயல்பாக அமைந்து இருக்கும் உன்னுடைய தயைக்கும் என்னை விட உரிமை பூண்டவர் வேறே ஒருவரும் இல்லை
ஆகையால் ஏ மாதவ உன் கிருபையினால் ஏற்பட்டு இருக்கும் இந்த சம்பந்தத்தைத் திரு உள்ளம் கொண்டு
அடியேனைக் கை விடாது ரக்ஷித்து அருள வேண்டும் –
—————–
ஶ்லோகம் 52 –
எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து,
என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”
வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||
நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப் பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது
உன்னுடைய திருவடித் தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது.
உடன் முதலாய வற்றுள் உற்றதி யாவனேனும்
படிகளின் பல விதத்தில் எவ்வகைப் பட்டனேனும்
திடமுற நினதே என்னும் திண்ணமார் தெரிவால் உன் தன்
அடியினில் சமர்ப்பித்தேன் இவ் வென்னையே இக்கணத்தே –52-
தேஹ இந்திரியாதிகளுக்குள் எந்த ஸ்வரூபத்தை யுடையேனேனும்
அணுத்வ விபுத்வாதி குணங்களினால் எவ்வகைப் பட்டேனேனும் ஆகக் கடவன்
இவற்றைப் பற்றிய ஞானம் இவ்விஷயத்தில் அனாவஸ்யம்
உன்னுடைய சொத்து என்று மட்டில் நிச்சயமாய் என்னால் அறியப்பட்ட இந்த நான் என்னும் வஸ்து
உன் திருவடிகளிலே இக்கணத்திலேயே என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது –
————–
ஶ்லோகம் 53 –
எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி
“நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.
மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும்
எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?
எனது நா என்ப எல்லா மாதவ யேற்று நிற்கும்
உனதலான் மற்று எவர்க்கும் உண்மையில் உரிய தாமோ
தனி முதலாகு நீயே சருவ சேடி எனத் தேர்ந்தே
யினி யுனதடிக்கு எதை நான் இன்புடன் சமர்ப்பிப்பேனே –53-
ஸ்ரீ யபதியே என்னுடைய சகலமும் அவைகளுக்குத் தங்கும் இடமான நானும் ஆகிய எல்லாம் உண்மையில்
ஸர்வ சேஷியான உனக்கே சொந்தம் அல்லால் மற்று எவருக்கு ஆயினிமாமோ
இப்படி சகலமும் உன்னுடையதே எனத் தெளிந்த உணர்ச்சியை யுடைய நான்
முன் செய்த ஆத்ம சமர்ப்பணம் அபராதத்தோடே ஒக்குமாயின் உன் திருவடிகளுக்கு வேறே எதை ஸமர்ப்பிக்கிப் போகின்றேன்
—————–
ஶ்லோகம் 54 –
ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால்,
உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே,
பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.
அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||
என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,
அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.
என்னிடம் எக்காலத்தும் இசைந்து நின் விஷயமாக
மன்னிய யுரிமை நாத வகை யுடன் அறிவித்தால் போல்
]நின்னிடம் அன்றி மற்றோர் நிலையினைப் பற்றாதாகும்
பன்னரும் பக்தி எற்குப் பணித்திடாய் அன்பு கூர்ந்தே –54–
ஏ நாத எக்காலத்தும் என் பக்கலில் இசைந்து நிற்கும் உன் விஷயமான அநந்யார்ஹ சேஷத்வத்தை வகையுடன்
தெரிவித்து இருக்கும் வண்ணமே யுன்னை விட்டு வேறே ஒன்றிலும் போக்யதையைப் பெறாது உன்னிடத்தே யுண்டாகும்
பரம பக்தியை கேவலம் உன்னுடைய கிருபையாலேயே அடியேனுக்கு உண்டு பண்ண வேணும்
—————–
ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.
தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.
உனது கைங்கர்ய இன்பம் ஒன்றையே நாடுவோர் சீர்
மனையினில் கிருமிச் சென்மம் வாய்க்கினும் மகிழ்வன் நானே
நினதொழி மற்றோர் மார்க்க நேடுவார் தன்னிடத்தில்
இனிமையார் எண் கணார் தம் சென்மமும் இச்சியேனே –55-
உன் கைங்கர்யம் ஒன்றிலேயே விருப்பம் கொள்ளும் பாகவதர்களுடைய திரு மாளிகையில் எனக்கு
ஒரு கிருமி புழு ஜென்மம் யுண்டாயினும் அதை நான் மகிழ்ந்து அடைவேன்
அப்படி அன்றி உன் கைங்கர்யங்களை விட்டு மற்ற எந்த மார்க்கத்தை ஏனும் இச்சிப்போருடைய
குடி இருப்பில் ப்ரம்மாவினுடைய சென்மம் கிடைத்த போதிலும் அதில் எனக்கு அபேக்ஷை இல்லை –
—————–
ஶ்லோகம் 56 –
ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளி விடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான
கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.
ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||
உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.
ஒரு முறை யுன் வடிவு அழகின் நோக்கில் யுறும் ஆசையினால் உயர்ந்து சீர்த்த
வரிய சுக போகமுடன் முத்தியையும் அபதார்த்தம் என நினைப்போர்
பிரிவதினால் ஒரு நொடியும் ஆற்றாமை யுனக் கூட்டும் பேற்றை யுற்றோர்
பரம வர பாகவதர் பார்வைக்குப் பாத்திரனா எனைப் பணிப்பாய் –56-
உன் திவ்ய மங்கள விக்ரகத்தை ஒரு முறை சேவிக்க ஆசை கொண்டு அதினால் அருமையான பிரமாதி போகத்தையும்
அதற்கும் மேலான மோக்ஷத்தையும் கூட ஒரு அபதார்த்தமாக நினைக்கின்றவர்களும்
தாம் ஒரு க்ஷணம் பிரிந்தாலும் அப்பிரிவினால் பொறுக்க முடியாத சங்கடத்தை உனக்கே உண்டு பண்ணுபவருமான அந்த பரம பாகவதர்களுடைய கடாக்ஷத்துக்குத் தக்கவனாக அடியேனைச் செய்து அருள வேண்டும் –
—————–
ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||
ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.
உன்னுரிமையாம் பெருமை யிற்கு வெளியுள்ள யுடல் வேண்டிலேன் உயிர் வேண்டிலேன்
பின்னும் எவரும் பெற விரும்பும் சுகமானம் முதலான பிறவும் வேண்டிலேன்
என்னுடைய நாத மது ஸூதன சகிக்ககிலன் இந்நொடியில் இவை களுக்கு எலாம்
மன்னிய விநாஸம் பலவகையில் யுற வேண்டுவன் இனி வசனம் அது வாய்மை யதுவே –57-
ஏ ஸ்வாமியே உன்னுடைய சேஷத்வமாகிய பெருமைக்கு வெளிப்பட்டுள்ள சரீரத்தையும் உயிரையும்
எல்லாரும் அடைவதற்கு ஆசைப்படக் கூடிய ஸுகத்தையும் ஆத்மாவையும் இன்னும் இது போன்ற மற்ற எதையும் நான் வேண்டிலேன் –
ஏ மது ஸூதன இவைகள் ஒன்றையும் நான் சகிக்க வல்லேன் அல்லேன்
இவ்வஸ்துக்கள் யாவும் பல விதங்களால் இந்த க்ஷணத்தில் நாஸம் அடையட்டும்
இப்படி சொல்லும் அடியேனது விண்ணப்பம் சத்தியமானதே –
—————–
ஶ்லோகம் 58 –
எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க,
கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!”
என்று ஆச்சர்யப்பட,
ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.
துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||
கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!
நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும்,
மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.
ஆதியறத் துன்பமுறு மகத்தாய் நின்று யூன் அருள் அதினாலே யன்றி யகற்ற ஒண்ணா
வேதமுறும் பாவத்திற்கு இடமாய் நின்று ஓர் ஈன நடை யுற்று நரப்பசு போன்றேனும்
மாதவ தயோ ததியே பந்துவே ஓர் வரம்பில்லா வாற் சலியக் கடலே நின் தன்
கோதிலவாம் குண கணங்கள் எண்ணி எண்ணிக் கூசாது இங்கனம் இச்சை கொள்ளுவேனே –58–
அநாதி யாய் துன்பங்களை விளைவித்துக் கொண்டு நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பருத்து நின்று
உன் கிருபை ஒன்றினால் அன்றி மற்று எதினாலும் பரிஹரிக்க முடியாதன வாயுள்ள பாவங்களுக்கு இருப்பிடமாகி
துராசாரம் யுடையவனாய் நர ஜன்மம் எடுத்தும் ஞானம் இல்லா ஒரு பசுவைப் போலே இருந்தேனாயினும்
ஏ மாதவ ஏ தயா சாகரமே ஏ பந்துவே கரை இல்லாத வாத்சல்யக் கடலே உன்னுடைய அநந்த திருக்கல்யாண கூட்டங்களை நினைத்து
நினைத்து அஞ்சாமல் இவ்வண்ணம் பரம புருஷார்த்தத்தில் இச்சை கொள்கின்றேன் –
—————-
ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.
அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||
பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.
இவ்வகையே பேற்றுக்குத் தக்க இச்சை இலேனேனும் உள்ளவன் போல் நடித்து உன் தன்
மெய்யறியாத் தம விரசோ குணங்கள் மேலாய் மிறை யுற்ற கபட மனது யுடையேனாகிப்
பொய் வசனம் கொண்டு துதி புரிந்தேனேனும் பூவளித்தோய் இதையே நீ பொருட்டாய்க் கொண்டு என்
உய்யும் வகை யுணர்ந்திடுமாறு என்னுள்ளத்தை யுன் அருளால் சிஷித்துத் திருத்துவாயே –59-
இம்மாதிரி பேற்றுக்குத் தகுந்த இச்சையை யுடையேன் அல்லேனேனும் உடையவன் போல் நடித்து
ராஜஸ தாமஸ குணங்களால் மூடப்பட்ட நான் என் கபட மனத்துடன் பொய் வசனங்களைக் கொண்டு உன் ஸ்தோத்ரம் புரிந்தேனேனும்
ஏ பூமியை நிர்த்தாரணம் பண்ணினவனே -இதையே ஒரு பற்றாசாகக் கொண்டு என் கபட மனத்தை உன் கிருபையால் நீயே சிஷித்து
நான் உஜ்ஜீவிக்கும் வகையை உணர்ந்திடுமாறு அடிமைத்தனத்துக்கு அனுகூலமாம் படி அதைத் திருத்தி அருள வேணும் –
——————-
ஶ்லோகம் 60 –
எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.
பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||
இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?
அத்தனும் நீ யன்னையும் நீ செகத்திற்கு எல்லாம் அரு மகவும் மித்ரனும் இதனும் நீயே
வித்தகமாம் குரு நீயே கதியும் நீயே வினையேனும் நின்னடிமை கதி வேறு இல்லேன்
உத்தமமாம் உன் பணிகள் பலவும் செய்ய யுரியேனான் உனை அடைக்கலம் புகுந்தேன்
எத்திறனும் இலனாய் யுன் இணக்கம் கொண்டேன் இனி யான் உனக்கே யாம் பாரம் தானே –60-
இவ்வுபய விபூதிகளுக்குள் அடங்கிய எல்லா செகங்களுக்கும் தந்தை நீயே தாய் நீ
அருமையான புத்ரன் நீ -மித்ரன் நீ ஹிதனும் நீ -ஆச்சார்யனும் நீ -அடைய வேண்டிய கதியும் நீயே
அடியேன் உன்னுடைய சேஷ பூதன் -ஊழியன் -உன்னால் போஷிக்கத் தக்கவன்
எத்திறனும் இல்லேனாய் உன்னையே கதியாக அடைந்துள்ளேன்
ஆகையால் என்னை ரக்ஷிக்கும் பாரம் உன்னுடையதே –
—————–
ஶ்லோகம் 61 –
எம்பெருமான் ஆளவந்தாரிடம்
“நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப் போல் பேசுகிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார்
“நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்;
என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.
ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||
புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான,
சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான,
உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய
பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே,
இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
பூ தலம் எங்கும் பரவும் புகழ் பெற்றோராய் புனிதரு நித்ய யோகம் புரிவோர் தாமாய்
கோதில தாய்க் குண புருட தத்துவத்தின் குறிப்பு உணர்ந்து ஜனன முதல் இயற்க்கை கொண்டு
மாதவ நின் மலர் அடி பால் நிலைத்து நின்ற மனமுடையோர் தம் சிறந்த மரபில் தோன்றி
ஏதமுறு இருள் ப்ரக்ருதியில் ஆழ்வேன் எட்டாமே சரணிய மா பாவி நானே –61-
ஜகத் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களாய் மஹா பரி ஸூத்த ஆத்மாக்களாய்
உன்னுடன் நித்ய யோகத்தை அபேக்ஷித்தவர்களாய்
சித் அசித் ஈஸ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவ ஸம்பந்தங்களை அறிந்தவர்களாய்
ஜனன காலம் தொடங்கி இயற்கையாவே உன் திருவடிட் தாமரைகளில் நிலைத்து நின்ற மனத்தை யுடையவர்களாய்
விளங்கும் உத்தமர்களுடைய திரு வம்சத்திலே ஜனித்து ஆபாஸமான இருள் நிறைந்துள்ள இந்த ப்ரக்ருதியில்
நீச்ச நிலை யற்று அமிழ்ந்து கிடக்கின்றேன்
மஹா பாவியேன் -ஏ -சரண்யனே –
—————-
ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.
அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||
நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?
நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன நின்னடி இணையில் பணி செய்வேனே –62-
சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்
நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்
நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்
பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்
நன்றி கொன்றவனாய்
மஹா பாதகனாய்
அஹங்காரியாய்
காம வசத்தனாய்
வஞ்சகனாய்
குரூரம் உள்ளவனாய்
பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற
நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன் –
—————–
ஶ்லோகம் 63 –
எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க,
ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால்,
என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.
ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||
ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.
அத்தகைய காகனையும் அன்று அளித்தாய் அடி பணிந்தான் என விரகு திலக ராமா
மொய்த்த பவம் தொறும் பிழையே முடித்து வந்த மூர்க்கன் சிசு பாலனுக்கும் கண்ண அந்நாள்
உத்தமமாம் ஓர் பதவி யுதவினாய் ஒப்பிலாதாம் பொறுமைக்கு ஓர் இலக்கு ஆகாத
எத்தகைய அபராதம் எங்கு தானும் இசைந்துளதோ என் நாத இயம்புவாயே –63-
ஏ ரகூத்தமா -அத்தன்மைத்த மஹா அபராதியான காகாசூரன் கீழே விழ-அவனை சரணாகதி பண்ணினவனாகக் கொண்டு ரக்ஷித்தாய்
ஜென்மம் தோறும் அபராதமே செய்து நின்ற அந்த சிசுபாலனுக்கும் ஏ கண்ணபிரானே ஸாயுஜ்ய பதவியைத் தந்து அருளினை
ஆதலால் உன் க்ஷமா குணத்தால் -ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் போல் இருக்கும் தன்மையினால் முக்தனானவனே
இவ்விதமான உன்னுடைய பொறுமைக்கும் அகப்படாமல் விலக்கான எந்த அபாராதமேனும் எங்காயினும் இருக்கின்றதோ
ஏ நாத அருளிச் செய்வாய் –
————
ஶ்லோகம் 64 –
எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால்,
அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க,
ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது,
அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.
நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||
ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?
ஒரு முறை யுனக்கு அடைக்கலம் புகுந்து எனக்கே யான
யுரிமையை யுடையேனாக வேண்டு நான் சபதம் முன்னி
யருளு நின்னருளுக்கு இலக்கா வாகுவன் நாத னினில்
விரதம் என் ஒருவனைத் தான் விலக்கியே ஒழிக்கும் கொலோ –64-
ஏ நாத ஒரு தரம் உனக்கு அடைக்கலம் புகுந்து உனக்கே சேஷபூதன் ஆகின்றேன் என்று பிரார்த்திக்கும் அடியேன்
தென் கடல் கரையில் செய்து அருளிய ப்ரதிஜ்ஜையை நினைத்து உன் கிருபைக்குப் பாத்திரம் ஆகிறேன்
இப்படிப்பட்ட உன் ஸங்கல்பம் அடியேன் ஒருவனை மாத்ரம் விலக்கி ஒழித்து விடுமோ -ஒருக்காலும் ஒழியாது அன்றோ –
—————–
ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.
அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||
எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.
இயற்கையில் இசைந்து இலங்கு நின் மலரடியின் பக்தி
வியப்பினுக்கு எல்லையாம் என் வித்தகப் பாட்டனாராம்
நயப்புறும் ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடைக் கணித்து என்
கயப்புறும் காதை நோக்காக் கனிவுடன் அருளுவாயே –65-
இயற்கையினாலேயே யுண்டான உன் திருவடிக்கண் உற்ற பக்தியின் விசேஷத்துக்கு எல்லை போன்றவரும்
ஆத்ம ஞானம் யுடையவரும் -ஜென்மத்தாலும் ஞானத்தாலும் எனக்குப் பாட்டனாருமான
ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடாக்ஷித்து அடியேனுடைய கைப்பு உண்டாக்கும் ஹீன சரித்திரங்களைப் பாராது
அடியேன் அபராதங்களைப் பொறுத்து அன்பு கூர்ந்து அருள வேணும் –
————-——————————————————————-——————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்