Archive for the ‘ஸ்ரீ வசன பூஷணம்’ Category

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் — நாலாம் பிரகரணம் –9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –சூர்ணிகை-407-463- –

August 14, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-இப் ப்ரசங்கம் தான் உள்ளது –

இனி -ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-என்று தொடங்கி கீழில் பிரபந்தத்திலே இதர உபாய த்யாக பூர்வகமாக ஸூ கரமான ஸித்த உபாயஸ்வீ கார பிரகாரத்தை விசதமாக வெளியிட்டு அருளினவர் அவ்வுபாயத்துக்கும் அநதிகாரிகளாக ஆன துர்கதியைக் கண்டு
தம்முடைய பரம கிருபையாலே அத்யந்த ஸூ கரமுமாய் அத்யந்த ஸூ லபமுமான சரம உபாயம்-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிற ஸதாச்சார்ய அபிமானம் என்னும் இடத்தை
ஸ பிரகாரமாக வெளியிடுகிறார் மேல் -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி –

பரதந்த்ர ஸ்வரூபனாய் கேவல க்ருபாவானான ஆச்சார்யனைப் போல் அன்றிக்கே -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை இப்படி நிர்ஹேதுக க்ருபவான் அன்றோ என்று பற்றின போது தான் இறே கீழ் யுக்தமான பயாபய ப்ரசங்கம் தான் இவனுக்கு உள்ளது என்று வஹ்ய மாணமான சரம உபாயத்தை ஹ்ருதீ கரித்து அத்தைப் பிரதமத்திலே ப்ரஸ்தாவிக்கிறார்

இவ் விடத்தில் தான் என்கிற ஸப்தம் பற்றும் போது தான் இறே என்று சொல் பாடாய்க் கிடக்கிறது அத்தனை –

—————

சூரணை -408-

உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ் வர்த்தம் அறுதி இடுவது —

சூரணை -409-

அவர்களைச்
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

ஆனால் வசநாத் ப்ரவ்ருத்தி -வசநாத் நிவ்ருத்தியான பின்பு இதில் பிரமாணம் ஏதோ என்கிற ஆ காங்ஷையில் -உண்ட போது -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
தர்மஞ்ஞ ஸமய ப்ரமாணம் வேதாஸ்ஸ -என்கிற ந்யாயத்தாலே இவ்வர்த்தத்துக்குப் பிரமாணம் ஏது என்று பரம தர்மஞ்ஞரான ஆழ்வார்களுடைய அனுசந்தான க்ரமத்தை ஆராய்ந்தவாறே
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே பகவத் ஸம்ஸ்லேஷ போகம் ஸித்தித்த போது
மாறுளதோ இம்மண் மிசையே -என்றும்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
உபய விபூதியிலும் தங்களுக்கு ஓர் ஒப்பு இல்லையாக அனுசந்திப்பது
உண்ணா நாள் பசி யாவது ஒன்றில்லை நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -என்கிறபடியே
பகவத் ஸம்ஸ்லேஷ போகம் இல்லாத போது
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும்இத்யாதி பிரகாரத்திலே
கூப்பிடுவதாக நிற்பர்கள் இறே ஸ்வ தந்த்ரனைத் தஞ்சமாகப் பற்றின ஆழ்வார்கள் பதின்மரும் இப்பரமார்த்த நிர்ணயம் பண்ணுவது ஆகையாலே அவர்கள் பாசுரம் ப்ரமாணமாக வன்று

அல்லாத ஆழ்வார்கள் அனைவரும் தமக்கு அங்க பூதராம் படியான ஆதிக்யத்தை யுடைய நம்மாழ்வார் திருவடிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றி
தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே ஸ்வ தந்த்ரனை உபாயமாகப் பற்றி இவர்கள் இப்படிப் படுவதே என்று ஆழ்வார் பதின்மரையும் அபஹஸித்து
அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்று சதுரராய் இருப்பார் ஒரு சர்வாதிகர் யுண்டு
இவருடைய பாசுரமான -கண்ணி நுண் சிறுத்தாம்பைப் ப்ரமாணமாகக் கொண்டு இந்த பரமார்த்த நிச்சயம் பண்ணக் கடவோம் என்கிறார்

அங்கன் அன்றிக்கே
உண்ட போது ஒரு வார்த்தையும் சொல்லுகையாவது -பகவத் அனுபவம் பண்ணின போது தச் சரம அவதியான
அடியார் யடியார் எம் கோக்கள் -என்பது
அந்த பகவத் விக்நம் பிறந்தால் சரமமான பாகவத சேஷத்வத்தையும் அழித்து
உங்களோடு எங்களிடை இல்லை – என்பராகையாலே
அவர்கள் பாசுரம் இப்பரமார்த்தத்துக்கு பிரமாணம் அன்று என்கிறார் ஆகவுமாம் –

—————–

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்-சேர்ந்து இருக்க வேணும் இறே பிராபகம் –

இப்பரமார்த்தத்தை இவர் ஒருவர் பாசுரம் கொண்டே நிர்ணயிக்க்கைக்கு அடி என் என்ன
ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர வேணும் இறே ப்ராபகம் -என்று இந்த ப்ரஸ்துதமான சரம உபாயத்துக்கு இடம் கொள்ளுகிறார் –
இவ்விடத்தில் வஹ்யமான அர்த்த சங்கதி பலத்தாலே சரம அதிகாரியான இவனுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்து இருக்க வேணும் இறே
ப்ராப்ய ப்ராபகங்கள் என்று இங்கனே ஸப்தத்தை வலித்து அருளிச் செய்து அருள்வர்-அது தான் எங்கனே என்னில் –
பிரதமத்தில் தன் ஸ்வரூபத்தை யுணர்ந்தால் ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலும் –
அந்த ததீய ப்ரதானனான ஆச்சார்ய விஷயத்திலே பண்ணின பிரதம நமஸ்ஸிலே பிரதமத்தில் ஆச்சார்ய சேஷத்வமே ஆத்ம யாதாத்ம்ய ஸ்வரூபமாகையாலே
இந்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமாக வேணும் இறே ப்ராப்யமும் ப்ராபகமும் என்கிறது –
அங்கன் அன்றிக்கே சரம உபாய ஸ்தாப நத்திலே ப்ரதான்யேந பிள்ளை திரு உள்ளத்துக்கு தாத்பர்யமாகையாலே
யதா பாடம் அர்த்தம் ஆகவுமாம் –

—————–

சூரணை -411-

வடுக நம்பி-ஆழ்வானையும்-ஆண்டானையும்-இரு கரையர் என்பர்-

இனி வடுக நம்பி -இத்யாதியாலே -இவ்வர்த்தத்தில் ஆழ்வார்களே அல்லர் -ஆச்சார்யர்களிலும் அனுஷ்டாதாக்கள் யுண்டு என்கிறார் -எங்கனே என்னில்
ஆச்சார்ய ஏக பரதந்த்ரரான வடுக நம்பி பாஷ்யகாரர் திருவடிகளை ஒழியத் தேவு மற்று அறியேன் என்று இருக்கையாலே
அவர்க்கு அத்யந்தம் அந்தரங்கரான கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் பெருமாள் திருவடிகளிலும் ப்ரேம யுக்தராய் இருக்கிற
ஆகாரத்தைக் கொண்டு இரு கரையர் என்பர் என்று இவ்வர்த்த ப்ராபல்ய ஹேதுவாக அருளிச் செய்கிறார் –

——————–

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —

இனி ப்ராப்யத்துக்கு ப்ரதம பர்வம் இத்யாதியாலே -ப்ராப்யத்துக்குச் சேர வேணும் இறே என்று
ப்ரஸ்துதமான ப்ராப்யத்தை விவரண ரூபேண நிர்ணயிக்கிறார் -எங்கனே என்னில் –
முன்பு ப்ரஸ்துதமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யத்தினுடைய பிரதம பர்வமாகச் சொல்லுகிற ஆச்சார்ய கைங்கர்யமாவது
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -என்கையாலே
அவ்வாச்சார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமான பகவத் விஷயத்திலே கைங்கர்யத்தை –
மத்யம பர்வதமான பகவத் கைங்கர்யமாவது -மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் ச பூஜ நீயா விசேஷத -என்று
திருமுகப் பாசுரம் யுண்டாகையாலே பகவத் பிரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை –
சரம பர்வமான பாகவத கைங்கர்யமாவது -ஆச்சார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவனை உகந்து ஆதரிப்பது -இன்ன ஆச்சார்யனுடைய அபிமான அந்தர் கதனாய் வர்த்திக்கிறவன் அன்றோ
என்றதாகையாலே அவர்கள் உகப்புக்கு மூலமான ஆச்சார்ய விஷயத்தில் கைங்கர்யத்தை –

—————

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப் போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தமாகில் கீழ் யுக்தமான பர்வ க்ரமத்திலே அத்தை ஸாஸ்த்ரங்கள் விதியாது ஒழிவான் என் என்னில்
ஸ்வரூப ப்ராப்தியை -என்று தொடங்கிச் சொல்கிறது -அதாவது
பரஞ்சோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே -என்று பர ப்ராப்தி பூர்வகமான ஸ்வரூப ப்ராப்தியையே -வேதாந்த ஸாஸ்த்ரம் விதியா நிற்க
அந்த ப்ராப்தி பலமாய்க் கொண்டு உபய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் உண்டாம் இடத்தில்
பார்யை பர்த்தாவை பிராபிக்கை யாவது -அந்த பர்த்ரு ஸம்ஸ்லேஷ பர்யந்தமாய் விடுமோ பாதி அந்த ஸாத்யமான
பகவத் கைங்கர்யம் தன்னடையே வருமாப் போலே தத் விவ்ருத்தியான பாகவத கைங்கர்யமும் தத் விருத்தியான சரமமான ஆச்சார்ய கைங்கர்யமும்
ஸ்வ ரஸேந தன்னடையே லபிக்கக் கடவது என்கிறார் –

—————-

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இனி இது தான் துர் லபம் -என்றது இந்த ஸ்வரூபம் ஸர்வ சாதாரணமான பின்பு புருஷார்த்த காஷ்டையான இவ்வாச்சார்ய கைங்கர்யம்
ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு எல்லாம் லபிக்குமோ என்னில் -தத்ராபி துர் லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்கையாலே
இது மிகவும் துர் லபம் என்கிறார் –

—————–

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

விஷய ப்ரவணனுக்கு இத்யாதி -இத்தால் -யுக்தமான தவ்ர் லப்யத்தை விசதமாக உபபாதிக்கிறார் -அதாவது
ஹேய தயா ஸம் பிரதிபன்னங்களான ஸப்தாதி விஷயங்களிலே மண்டினவனுக்கு அத்தை த்யஜித்து ஸமஸ்த கல்யாண குணாத் மகமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தைப் பற்றும் இடத்தில்
த்யாஜ்ய உபா தேய விபாக ஞான மாத்ரத்தாலே அவனுக்கு அது காதாசித்கமாக சம்பவிக்கவும் கூடும் –
ஆகையால் அவ்வருமை போலும் அன்று முதலடியான பகவத் கைங்கர்யத்தில் நில்லாமல் சரமமான
ஆச்சார்ய கைங்கர்யத்தில் அபி ருசி உண்டாகைக்கு உள்ள அருமை என்கிறார் –

——————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் -என்றது அநாதி வாஸநா வாஸிதமான ஸப்தாதிகளில் ருசி பிறந்த பின்பு அத்யந்தம் அபரிசிதமான பகவத் விஷய அபி முக்யம்
கூடும்படி தான் எங்கனே என்ன அவை
ஐங்கருவி கண்ட இன்பம் -என்றும்
சம்பாசலம் பஹுல துக்கம் -என்றும் -இத்யாதியில் படியே
அல்பமாய் -அஸ்திரமாய் -அதி ஜூகுப்ஸா விஷயமுமாய் –
லோக கர்ஹா ஹேதுவுமாய் உதர்க்கத்திலே நரகவாஹங்களுமாய் இருக்கக் காண்கையாலே
அவற்றை விடுகைக்கும் அவற்றுக்கு எதிர் தட்டான பகவத் விஷயத்தைப் பற்றுகைக்கும் சம்பாவனை யுண்டு –
இங்கு அது செய்ய ஒண்ணாது
இனி முதலடியான பகவத் விஷயம் நிரஸ்த ஸமஸ்த தோஷ கந்தமாகையாலே தோஷ தர்சனம் பண்ணி விடவும் வேறு ஒன்றைப் பற்றவும் அஸக்யம் -என்கிறார் –

———–

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும்-

அது எங்கனே என்ன -தோஷம் யுண்டானாலும் -என்று தொடங்கி இவ்வர்த்தத்தை விஸதீ கரிக்கிறார் -அதாவது
ஆழ்வார் -கடியன் கொடியன் -என்று தொடங்கி
விஸ்லேஷ தசையிலே அவன் குண ஹானிகளை விசதமாக அருளிச் செய்து –
கொடிய என்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்று அக் குண ஹானிகள் அவனுடையனவான பின்பு உல் லோகமான என்னுடைய நெஞ்சு
அவற்றை இப்போதே அபரோஷித்து அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படா நின்றது -என்று அருளிச் செய்கையாலே
அவையும் அல்லாத குணங்களைப் போலே அநுபாவ்யமாய் இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோக விபரீதம் இத்யாதி -தோஷதஸ் த்யாஜ்யமாயும் குணதஸ் உபா தேயமாயும் போருகிற லௌகிக வஸ்துவில் பற்றின நெஞ்சு
போல் அன்றிக்கே ஹேய ப்ரத்ய நீகமான பகவத் விஷயத்தைப் பற்றின நெஞ்சு உல்லோகமாய் இறே இருப்பது என்கிறார் –

—————-

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –இத்யாதி -அவ்வஸ்து லோக விஸஜாதீயம் என்னா
தத் குணம் உபா தேயமானவோ பாதி தோஷமும் உபா தேயமாகக் கூடுமோ என்னில்
குணம் உபா தேயமாகைக்கு ஹேதுவான நிருபாதிக ஸம்பந்தம் அத் தோஷத்துக்கும் உண்டான பின்பு விட ஒண்ணாது இறே என்கிறார் –
எங்கனே என்னில் –
ஸோ பாதிக ஸம்பந்தமான பர்த்ரு விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் பதிவ்ரதையான பார்யைக்கு
புருஷாந்தரங்களைப் பற்ற உபா தேயமாகக் காணா நின்றால் நிருபாதிக விஷயத்தில் சொல்ல வேண்டா விறே -என்று கருத்து
இவ்விடமும் நாயகி வார்த்தா ப்ரகரணம் இறே –

———–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

இவ்வர்த்தம் எங்கே கண்டது என்னில் -நிர் க்ருணன்-இத்யாதி
என் தவள வண்ணர் தகவுகளே -என்று தாயானவள் இவ்வளவில் உதவாதவன் க்ருபா ஹீனன் காண் என்று
சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே தலைமகளானவள்
தகவுடையவனே -என்று கிருபை ஒன்றுமே நிரூபகமாகச் சொன்னாள் இறே –

————-

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
ஸ்நேஹமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இப்படிச் சொல்லும்படி -இத்யாதி -அநாதி காலம் ஸப்தாதிகளுடைய அலாபத்தாலே சோகித்துத் போந்த என்னை
தன்னையே நினைத்துக் கூப்பிடும்படி பண்ணிற்றுத் தன்னுடைய கேவல கிருபையாலே என்று
மிக விரும்பும் பிரான் -என்று மேன்மேலே அவ்விஷயத்திலே
அதிசயிதமான ஸ்நேஹ உபகார ஸ்ம்ருதிகள் உண்டாய்த்து இறே என்கிறார் –

—————-

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச் சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

ஆனால் ஓர் இடத்திலும் அவன் கிருபா ஹீனன் என்று தோற்றின விடம் இல்லையோ என்னில் -நிர் க்ருணனாக -இத்யாதி
விஸ்லேஷ அஸஹத்வத்தாலே பிராட்டியும் -பிராட்டி தசையைப் ப்ராப்தரான ஆழ்வார் தாமும்
அவன் கிருபா விஷயமான அதிசயங்கள் நடந்தாலும்
க்யாதஸ் ப்ராஞ்ஞஸ் க்ருதஞ்ஞஸ் ச ஸா நுக்ரோஸஸ் ச ராகவ ஸூ வ்ருத்தோ நிரநுக்ரோச
சங்கே மத் பாக்ய சங்ஷயாத் மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய ஸமர்த்தாவபி தவ் யன் மாம் நாவே ஷேதே பரந்தபவ் -என்றும்
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் – என்றும்
சங்கைக்கு அவிஷயமான ஸ்தலத்திலே சங்கிகைக்கு ஹேதுவை
ஸ்வ கதம் என்றே அனுசந்தித்தார்கள் என்கிறார் –

————-

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

குண தோஷங்கள் இத்யாதி -ஆக இப்படி இவ்விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் ஸ்வ வ்யதிரிக்த ஸ்மரணமும் பொறாதபடி
ஸ்வ அதீனமாக்கி விடும் என்று சரம புருஷார்த்த நிஷ்டா தவ்ர் பல்யத்தை நிகமிக்கிறார்
அதில் அவனுடைய குணமானது புருஷார்த்த காஷ்டையான ததீயர் அனுபவ ரஸத்தைக் குலைத்து
அவ்வருகு போக ஒட்டாத படி தன்னளவிலே துவக்கும் -எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே பாகவத அனுபவம் பண்ணி இழிந்த ஆழ்வாரை அவர்களுக்கு நிரூபகத்வேந வந்த அவனுடைய
கல்யாண குண விக்ரஹ சேஷ்டிதங்கள் தானே ஆழங்கால் படுத்தித் தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்
தனித்தனியே விடாய்க்கும் படி அபி நிவேசத்தை விளைத்தது இறே -அநந்தரம் -முடியானே யிலே –
அவனுடைய தோஷ அனுசந்தானம் ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கை யாவது -விஸ்லேஷ தசையில்
பந்தோடு கழல் மருவாள்
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக்கு அணியிலும் தழலாம் -இத்யாதியில் படியே
ஸப் தாதிகளான ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும் –

————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இவ்விடத்திலே புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கும் என்கையிலே தாத்பர்யமாகையாலே
நித்ய ஸத்ருவாய் இறே இருப்பது -என்று
கச்சதா மாதுல குலம் -என்கிற ஸ்லோகத்தில்
நித்ய சத்ருக்ந -என்கிற இடத்தை உதாஹரிக்கிறார் –
நித்ய ஸத்ரு என்றது -பரத அநு வ்ருத்திக்கு விரோதியான ராம ஸுந்தர்யத்தை இறே –

—————-

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

இப்படி ப்ராப்யத்தை அறுதியிட்டால் இத்யாதி -கீழே ஸ்வரூபத்துக்கும் -என்ற இடத்தில்
ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு அநந்தரம் இவ்வளவாக ப்ராப்ய ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு
இனிமேல் இப்படி அறுதியிட்ட ப்ராப்யத்துக்கு அனுரூபமாக வேணும் இறே ப்ராபகமும் -என்று
ஸதாசார்யனே உத்தாரகன் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –

—————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

அது என் என்ன -அல்லாத போது ப்ராப்ய பிராபகங்களுக்கு ஐக்யம் இல்லை என்று அநிஷ்ட ப்ரஸங்கம் பண்ணுகிறார் -அதாவது –
யதாக்ரதுரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேதஸ் ப்ரேத்ய பவதி -என்கிற
தத் க்ரது ந்யாயத்தாலே யதா ஸங்கல்பமாயே பலம் இருப்பது என்கிற நியமத்தை அங்கீ கரித்து அருளிச் செய்கிறார் –

————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

இனி -ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி -ஏவம் விதமான ஆச்சார்யனுடைய வைபவத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்படி உத்தாரகனான ஆச்சார்யன் ஆஸ்ரயிக்கிற சேதனனுக்கும் ஆஸ்ரயணீயனான பரம சேதனனுக்கும் உபகாரகன் என்னும் இடத்தையும் பிரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

எங்கனே என்னில் -ஈஸ்வரனுக்கு இத்யாதி –
பஹூதா விஜாயதே -என்று ஓதப்படுகிற அநேக அவதாரங்களாலும் அலப்யமாம் படி -அஹம் மமதா தூஷிதமான சேதன வஸ்துவை
ஸார்வ பவ்மனான ராஜாவுக்கு சதுரரான சமந்தர் ஷூத்ரரான அந்நியரை விரகாலே ஜெயித்துக் கொடுக்குமா போலே
அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித
யானே நீ என் உடைமையும் நீயே -என்னும் படி பண்ணி உபகரித்தான்
சேதனனுக்கு இத்யாதி –
அபவரகே ஹிரண்யம் நிதாய உபரி ஸஞ்சரந்தோ ந த்ரஷ்யந்தி என்கிறபடியே
அநாதி காலம் அவிநா பூதமான பகவத் ஸம்பந்த ஞான ஹீனனான சேதனனுக்கு
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே
அந்த ப்ரஹ்ம ஞானத்தாலே ஸச் ஸப்த வாஸ்யனாம் படி சம்பந்த ஞான பிரதனாயக் கொண்டு சேஷியை உபகரித்தான்
அவஸ்தித மவஸ்தித தன்நபுந ரத்ர சித்திரம் மஹா நிதிம் பிரதமிகாரச ஸ்ததபி தேஸிகா பாங்க பூ ப்ரியா ந கிஷயம் ப்ரியோ ந கிமயம் கிமே தாவதா ந சேதய முதாரதீரு சித கரேகோ ஜந -என்னா நின்றது இறே

—————

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

ஈஸ்வரனும் தானும் இத்யாதி -அவாப்த ஸமஸ்த காமனான ஈஸ்வரன் தானும்
கடக க்ருத்யமான இந்த உபகாரகத்வ ரஸ்யதையாலே அந்த உபகாரகமான ஆச்சார்யத்வத்தை ஆதரித்து இருக்கும் –

————

சூரணை -431-

ஆகை இறே –
குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் –
அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னில் -அவ்வாதரம் யுண்டாகை இறே -ஆச்சார்யாணாம் அஸாவசா வித்யா பகவத்த-என்கிற பகவான் குரு பரம்பரைக்குள்ளே த்வய ரூபேண அந்வயித்ததும்
அவதார தசையிலே அர்ஜுன வ்யாஜேன தேர்த்தட்டிலே நின்று ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே சரம ஸ்லோக பர்யந்தமான உபாய உபதேசம் பண்ணிற்றும்
விபீஷண வ்யாஜேந -ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம –
என்று அபய பிரதானம் அருளிச் செய்ததும் -என்கிறார் –
இப்படிப்பட்ட உபகாரம் பிறந்து படைக்க வேணும் என்று அவதரித்தான் என்ற இடம்
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து -என்கிற பாட்டில் அருளிச் செய்தார் இறே
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்தரஸ்ய-என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி என்னும்படியான இரண்டு தலையையும் சத்தை யுண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு அவதரித்து
தூத்ய முகேன கடகனாய் இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போன தானே இறே
அர்ஜுனனைக் குறித்து -மாமேகம் சரணம் வ்ரஜ -என்றதும் கார்யகரமாய்த்தது இல்லை –
அது பின்புள்ளார்க்கு ஸதாசார்ய பலமாய்த்தது இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை -என்கிறது

——————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் –
ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இப்படி உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் பிரதியுபகாரம் பண்ண விரகுண்டோ -என்று -ஆச்சார்யனுக்கு -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார் -அதாவது
ஏதேனுமாகச் செய்த அம்சம் தன்னுடைய ஸ்வரூப ஸித்யர்த்தமான கிஞ்சித்காரமாமது ஒழிய ஸத்ருசமாகப் பண்ணினான் ஆகலாவது
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃது என்று தானும் அதினுள்ளே அடங்கும்படி
அவ்வாச்சார்யன் தனக்கு உபகரித்த உபய விபூதியையும்
தன்நிர்வாஹகனான ஈஸ்வரனையும் ஒழிய
இன்னமும் இப்படி விபூதி த்வயமும் தன் நிர்வாஹகமும் ஸம்பாவிதமாகில் யாய்த்து என்கிறார்
அவை அஸம்பாவிதம் என்று பொன்னுலகாளி யில் படியே அவன் உபகரித்தவை தன்னையே உபகரிக்கப் பார்க்கில் அது பிரதியுபகாரமாகக் கூடாது இறே
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத் ந தத் துல்யம் கதஞ்சன -என்னா நின்றது இறே –

————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

ஆனால் ஆச்சார்யனும் இப்படி பிரதியுபகார யோக்யன் அல்லனாகில் பழைய ஈஸ்வரன் தன்னையே பற்றினாள் வருவது என் என்ன
ஈஸ்வர ஸம்பந்தம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது –
ஈஸ்வரன் கிருபா விஷ்ட ஸ்வ தந்திரனாகையாலே அந்த ஸ்வா தந்தர்யத்தினுடையவும் கிருபையினுடையவும் கார்யமான
ஷிபாமி -என்றும்
ததாமி -என்றும்
சொல்லப்படுகிற பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கும் தத் சமாஸ்ரயணம்
ஆச்சார்யன் அத்யந்த பாரதந்தர்ய விஸிஷ்ட க்ருபாவானாகையாலே அவனை ஆஸ்ரயிக்கை கேவல மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்கிறார் –
சித்திர் பவதி வா நேதி ஸம்ஸ யோச்யுத சேவிநாம் அஸம்சயஸ் து தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் -என்னா நின்றது இறே

————–

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

பகவல் லாபம் இத்யாதி -இத்தால் அந்த ஈஸ்வரன் உபயத்துக்கும் ஹேதுவானாலும் அவன் நிருபாதிக சேஷியான பின்பு
அவனையே பற்றுகை அன்றோ பிராப்தம் என்ன
அந்த பகவ ஞான பூர்த்தி தான் ஆச்சார்ய உபதேசத்தால் அல்லது கூடாமையாலே
அதுவும் இந்த ஆச்சார்யனாலே ஸித்திக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

இனி ஆச்சார்ய லாபம் -பகவானாலே என்றது -இப்படி மோக்ஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை லபிக்கும் போது
ஈஸ்வரஸ்ய ச சவ்ஹார்த்தம் -இத்யாதியில் படியே
இவ்வாச்சார்ய பிராப்தி பர்யந்தமாக அவனே நடத்திக் கொண்டு போர வேண்டுகையாலே பகவானாலே -என்கிறார் –

—————-

சூரணை -436-

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே-இத்யாதி –
அக்னிஸ் ஸ்வர்ணஸ்ய குருர் பவாம்ஸ் ஸூர்ய பரோ குரு மமாப்ய கில லோகாநாம் குருர் நாராயணோ ஹரி -என்கிறதினுடைய
ஸாமான்யமான குருத்வத்தை உபகரித்து விடுகை அன்றிக்கே இவனுடைய அஞ்ஞான அசக்திகளை உள்ளபடி அறிந்து
அதுக்கீடான வழி கண்டு ரக்ஷிக்கும் படி விசேஷித்து அவனுக்கே வகுத்த விஷயமாக ஓர் ஆச்சார்யனை உபகரித்த குரு உபகாரத்தாலே
ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி இவ்வளவாக உபகாரகனாக உபபாதித்த ஆச்சார்யானைக் காட்டிலும்
அதிசயித உபகாரகன் ஸர்வ ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் என்னும் இடம் உபபாதித்த தாய்த்து-

————

சூரணை -437-

ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

இப்படி உத்தாரக-உபகாரகத்வங்களாகிற உபய ஆகார விஸிஷ்டனான சதாச்சார்ய அபிமானத்தாலே ஒருவனுக்கு உஜ்ஜீவனம் உண்டாக வேணும் என்னும்
அர்த்தத்தை அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் -ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
இப்படி மஹா உபகாரகனான ஆச்சார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானிக்கும் படி தத் ஸம்பந்த ஞானம் குலையாதபடி வர்த்தித்தால்
ஸ்வரூப உஜ்ஜீவன ஹேதுக்களான ஞான வைராக்ய பக்திகளைத் தனக்கு உண்டாக்குகை அவ்வாச்சார்ய க்ருத்யமேயான பின்பு அவை ஸர்வதா ஸம்பாவிதங்கள் –
ஏவம் வித ஸம்பந்த ஞானத்தில் ப்ரச்யுதனானவனுக்கு ஒரு ஸூ ஹ்ருத விசேஷங்களாலே இவை ஸம்பவித்தாலும் சதாச்சார்ய ப்ரஸாத முகேந தத்வ ஞான உபதேச பூர்வகமாக வந்தது அல்லாமையாலே
அவை அர்த்த க்ரியா கார்யகரமாக மாட்டாது –

————

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

அது என் போலே என்ன -தாலி கிடந்தால் -என்று தொடங்கி -லோக த்ருஷ்டி ப்ரக்ரியையாலே அத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பாரதந்த்ர ஏக நிரூபிணியையான ஸ்த்ரீக்கு ஸ பர்த்ரு காத்வ ப்ரகாசகமான மங்கள ஸூத்ர ஸத் பாவ மாத்ரத்தாலே
பின்பும் ஸர்வ பூஷண பூஷார்ஹையாய் இருக்குமா போலேயும் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை-439-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

தாமரையை அலர்த்தக் கடவ இத்யாதி -இத்தால்
நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ ப்ரச்யுதஸ்ய துர் புத்தே ஜலாத பேதம் கமலம் சோஷயதி ரவிர் ந தோஷயதி -என்கிற
பிரமாண ஸித்த த்ருஷ்டாந்தத்தாலும் அவ்வர்த்தத்தை விசதமாக்குகிறார் -எங்கனே என்னில்
நியமேன ஜலஜத்துக்கு அஜ்ஜல சம்பந்தம் யுள்ள போது விகாஸ கரணனான திவாகரன் அஜ்ஜல ஸம்பந்த ரஹிதமான தசையிலே
கமல பந்துவான தானே அதுக்கு நாஸ கரனாமாப் போலே ஸூ சீலனுமாய் ஸூ லபனுமாய் சதாச்சார்ய அபிமான அந்தர் பூதனான போது
ஸ்வா தந்தர்யத்தால் வந்த பிரதாபோத்தர்ஷத்தை உடைய ஈஸ்வரன் தானே ஸ்வ ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் என்னும் இடமும் அவ்வாச்சார்யா ஸம்பந்தம் குலைந்தால் -ஸர்வ சேஷியாய் ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான அவன் தானே ஸ்வரூப நாஸகரனாம் என்னும் இடமும் தோற்றுகிறது –
ந தோஷயதி -என்கையாலே பின்னை ஒரு காலும் இவனுக்கு உஜ்ஜீவனம் இல்லை என்னும் இடம் தோற்றுகிறது –

——————-

சூரணை -440-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இனி இத்தை ஒழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம் -என்றது நீரைப் பிரிந்த தாமரைக்கு ஆதித்ய கிரணம் விகாஸ கரம் அல்லாதவோ பாதி
ஸதாசார்ய சம்பந்த பிரச் யுதனானவனுக்கு ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனோடு உண்டான ஸம்பந்தமும்
ஸ பலமாகாது என்று கருத்து –

—————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –பெரும்குடி என் என்னில் –

இரண்டும் அமையாதா இத்யாதி -ஆனால் இப்படி விலக்ஷணமான ஆச்சார்ய ஸம்பந்தமும் தத் ஸம்பந்தம் அடியாக வருகிற பகவத் ஸம்பந்தமுமே
ஒருவனுடைய உஜ்ஜீவனத்துக்குப் போந்திருக்க -இரண்டுக்கும் நடுவே -ஸாத்விகைஸ் ஸம் பாஷணம் -என்கிற ஸாத்விக அங்கீ காரத்தையும்
ஸாதனம் என்று கொண்டு பிரஸ்தாவிப்பான் என் என்ன -என்னுதல்
அன்றிக்கே
நடுவில் பெரும் குடி -என்று மத்யம பர்வத்தில் சொன்ன பாகவத கைங்கர்ய பிரதிசம்பந்திகளான ததீயர் என்னுதல்
அங்கனும் அன்றிக்கே
ததீய சேஷத்வ ப்ரதிபாதகமான மத்யம பத நிஷ்டரான ததீயர் என்னுதல்
இப்படி ததீய சமாஸ்ரயணத்தையும் தனித்துச் சொல்லுகிறது என் என்ன –

———–

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

கொடியை இத்யாதி -பல பர்யந்தமாம் படி உத்தரிப்பிக்கிற கொள் கொம்பிலே -அது இல்லாவிடில் தரைப்படும்படியான கொடியை ஏற்றும் போது தத் ஸஹாயமான சுள்ளிக் கால்களில் பற்றுவித்தே ஏற வேண்டினவோ பாதி
வல்லிக் கொடிகாள் -என்னும் படி பரதந்த்ர ஸ்வரூபனான ஆத்மா அதிபதியாத படி உத்தாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயிக்கும் போது தத் ஸத்ருசரான ததீய சமாஸ்ரயணமும் ஸர்வதா அவர்ஜய நீயம் என்கிறார் –

—————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

இனி மேலே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற பாசுரத்தில் -ஈஸ்வரனை உபாயமாகப் பற்றும் போது இறே -என்று உபக்ரமித்து
உப பாதித்திக் கொண்டு போந்த பரமார்த்த விசேஷத்தைத் தலைக் கட்டுகிறவர்
தத் அந்ய உபாயங்களினுடைய அனுஷ்டான அனுபபத்தி பூர்வகமாக தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து நிகமிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ஸ்வா தந்தர்ய பயத்தாலே -இத்யாதி
ஸ்வ யத்ந ரூபமான பக்த் யுபாய அனுஷ்டான தசையிலே பல ஸித்தி ரஹிதமான கேவல பகவத் சமாராதந ரூபேண அனுஷ்டிக்கிலும்
நம்முடைய இவ்வநுஷ்டான பரிபாக தசையில் அல்லது பல ப்ரதனான பகவானுடைய பரம ப்ரீதி சம்பவியாது என்று
ஸ்வ ஸ்வா தந்தர்ய கர்ப்பமாய் அல்லது இராமையாலே ஸ்வரூபஞ்ஞனுக்கு அந்த ஸ்வா தந்தர்யம் ஸ்வரூப ஹானி என்ற பயத்தாலே ஸ்வயமேவ நெகிழப் பண்ணிற்று
பர கத ஸ்வீ கார ஹேதுவான பகவத் ஸ்வா தந்தர்யம் -வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்கைக்கும் பொதுவாகையாலே அவ்விஷயத்தில் ப்ரபத்தியும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று பதண் பதண் என்கையாலே தான் நெகிழப் பண்ணிற்று என்கிறார் –

————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

ஏவம் வித பய ரஹிதமாய் அதி ஸூ லபமான ஆச்சார்ய விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவனுக்கு வருவதொரு அபாயமும் இல்லையோ என்ன
ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய ஸ்வீ காரத்துக்கு விஷய பூதனாகை ஒழிய
அவ்வாச்சார்யனையும் தன் பேறாகத் தான் பற்றுமது காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி இவ்வதிகாரிக்கு அநர்த்தாவஹம் என்கிறார் -எங்கனே என்னில்
பவித்ரம் வை ஹிரண்யம் -என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அர்த்த லுப்தனானவன் மேல் வரும் அநர்த்தத்தைப் பாராதே
காஞ்சன நிமித்தமான கால தனத்தைக் கைக்கொண்டு அத்தை அழித்து இருந்த நாள் சரீர போஷணாதிகளிலே உப யுக்தமாகவும் பெறாத படி
பாமர பரிக்ரஹ ஹேதுக்களான அங்குலீயகாதி ஆபரணங்கள் ஆக்கி தரித்துப் பின்னும் அநர்த்தமே சேஷிப்பித்துக் கொண்டு விடுமா போலே
இவனுக்கு ஆச்சார்யவான் என்கையாலே வரும் லோக பரிக்ரஹ மாத்ரமே பலமாம் அளவாய்
அத்ர பரத்ர ஷாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்கிற படியே
அவன் உகப்பால் வரும் அந வரத போகம் இல்லகாத அளவே அன்றிக்கே அநர்த்தமான ஸ்வரூப காணியும் சம்பவித்தது விடும் என்கிறார் –
இத்தால் இந்த உபாயமும் கீழில் பிரபந்தத்தில் ஸ்வ கத பர கத விபாகேந நிரூபித்த உபாயத்தினுடைய துறை விசேஷ மாத்ரமே யாகிலும்ந
இத்தை சரம உபாயமாகத் தனித்து எடுக்கையாலே இதில் ஸ்வ கத ஸ்வீ கார தோஷத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————–

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

இப்படியான பின்பு -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று
இவ்வுபாயத்தினுடைய  பரகத ஸ்வீ காரமே பரமார்த்தம் என்று அவதரித்து அத்தை நிகமிக்கிறார்–

————–

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கை விட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்கக்
கடவன் அல்லன் –

கைப்பட்ட பொருளை -இத்யாதி யாலே தாம் நிச்சயித்த பரமார்த்தத்திலே நிஷ்ணா தரான அதிகாரிகளைக் குறித்து
அவர்களுக்கு நேரே ப்ரத்யயம் பிறக்கும் படியாக–வேதம் அநூச்யா சார்யோந்தே வாஸிந மநு ஸாஸ்தி -என்கிற கணக்கிலே
அந்த பரமார்த்த விஷயமான அநேக பிரமாண ப்ரதிபாதித அனுஷ்டான விசேஷங்களை அநு ஸாஸிக்கிறார் -எங்கனே என்னில்
ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் ய உபா ஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷதி ஷிதவ் -என்கையாலே
தன்னோடு ஸஜாதீயனாய் ஸந்நிஹிதனாய் நின்று பி அஞ்ஞான அந்தகார நிவ்ருத்தி பூர்வகமாக அபிமானித்த ஆச்சார்யனை அநாதரித்து
அறிந்தன வேதம் -இத்யாதியில் படியே மறை பொருளாய் துர்லபமான வஸ்துவை இச்சிக்கக் கடவன் அல்லன் -என்கிறார் –

——————-

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

விடாய் பிறந்த போது -இத்யாதி –
சாஷுர் கம்யம் த்யக்த்வா ஸாஸ்த்ர கம்யம் து யோ பஜேத் ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி -என்கையாலே
தாஹித்தவன் தன் கைப்பட்ட தண்ணீரை அதி ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்து அத்தைத் தரையிலே உகுத்து
அத்தாஹ நிவ்ருத்தி யர்த்தமாக தேச காலாதி விப்ரக்ருஷ்டங்களான ஜீமூ தாதிகளில் ஜலங்களை ஜீவிக்க ஆதரிக்கும் ஜீவனைப் போலே
தனக்கு முகஸ்தனாய் நிற்கையாலே ஸூலபனுமாய் ஸூ சீலனுமான ஆச்சார்யனை அநாதரித்து
தமஸ பரமோ தாதா -இத்யாதிஸாஸ்த்ர ஏக ஸமதி கம்யனாய் –
முகில் வண்ண வானத்திலே -அவாக்ய அநாதர என்று இருக்கும் முகில் வண்ணனையும்
தத் சமனனான கடலிடம் கொண்ட கடல் வண்ணனையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதிப்படியே அவதரித்த மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தனான மதுரவாற்றையும்
அவ்வாற்றில் தேங்கின தயரதன் பெற்ற மரகத மணித்தடம் போன்ற அர்ச்சாவதார ஸ்தலங்களையும்
கநித்ர பிடகாதி ஸாத்யமான கூப ஜலம் போலே யம நியமாதி ஸாத்யமாய்க் கொண்டு அந்தர்யாமியான நிலையும்
முமுஷை யுடையனாய்
விசேஷஞ்ஞனாய் இருக்குமவன்
ஆசைப்படக் கடவன் அல்லன் -என்கிறார் –
இனி ஜீமுதாதி ஸ்தலங்களில் ஜல ஸாம்யம் உண்டானாப் போலே பரத்வாதிகள் எல்லாவற்றிலும் வஸ்து ஸாம்யம் யுண்டானாலும்
அத்யந்த ஸூ லபமான அர்ச்சாவதாரம் போலே அவை அதி ஸூலபம் அன்று என்று கருத்து –

—————–

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன் —

ஆனால் அவை இவ்வதிகாரிக்கு அநுபாதேயங்கள் ஆகின்றனவோ என்ன -பாட்டுக் கேட்க்கும் இடமும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
நின்ற வண் கீர்த்தியும் -என்கிற பாட்டின் படியே –
ஹாவு ஹாவு -என்கிற பாட்டுக் கேட்க்கும் பரமபதமும்
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கண -என்கிற ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கூப்பீட்டுக்குச் செவி கொடுத்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யூஹ ஸ்தலமும்
அக்கூப்பீடு கேட்ட அநந்தரம் பயிர்த்தலையிலே பரண் இட்டுக் காத்துக் கிடந்தவன் பயிரில் பட்டி புகுந்த அளவிலே
அப்பரணில் நின்றும் கையும் தடியுமாய்க் கொண்டு குதித்து அத்தை அடித்து விடுமா போலே
தனக்கு ரஷ்யமான விபூதியை ஹிரண்ய ராவணாதிகள் புகுந்து அழிக்கும் அளவிலே அவர்களை அழியச் செய்க்கைக்காக
ஸ ஹி தேவைரு தீர்ணஸ்ய
ஜாதோசி தேவ தேவேஸே சங்க சக்ர கதாதர -என்றும் இத்யாதிகளில் படியே
ஸா யுதனாய்க் கொண்டு குதித்த அவதார ஸ்தலமும்
மலையாளர் வளைப்புப் போலே தன் நினைவு தலைக்கட்டும் அளவும் இட்ட வடி பேர விடாமல் வளைத்துக் கொண்டு இருக்கிற அர்ச்சா ஸ்தலமும்
உறங்குகிற பிரஜை தான் அறியாதே கிடக்க அதன் பக்கல் குடல் தொடக்காலே பாலும் தயிருமாக ஊட்டித் தரிப்பிக்கும் தாயைப் போலே
ஸர்வ தசையிலும் சத்தையை நோக்குகிற அந்தர் யாமியானவனும்
இப்படிப்பட்ட பரத்வாதிகள் எல்லாம் தனக்கு என்ன வகுத்த துறையான ஸதாசார்யனே என்று அத்யவசித்து இருக்கக் கடவன் என்கிறார் –
யேநைவ குருணா யஸ்ய ஸம்யக் வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ -என்னா நின்றது இறே –

—————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

இவனுக்கு பிரதிகூலர் இத்யாதி -கீழே ஈஸ்வர உபாய நிஷ்டனான ப்ரபந்ந அதிகாரிக்கு அனுகூல பிரதிகூல பிரதிபத்தி விஷய பூதராவார்
அஹம் கர்த்தா அஹம் போக்தா என்று இருக்கும் ஸ்வ தந்த்ரரும்
அவர்கள் அளவு அன்றிக்கே -சேஷத்வத்துக்கு இசைந்து தங்களை ப்ரஹ்ம ருத்ராதி தேவதாந்த்ர சேஷம் என்று இருப்பாரும்
இப்படி ஸ்வரூபத்தில் அந்யதா ஞான நிஷ்டராய் இருக்கை யன்றிக்கே ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்திலே நிஷ்டரான
ஆச்சார்ய பரதந்த்ரரை அனுகூலர் என்கிறார்
இனி ஈஸ்வர பர தந்த்ரரை உபேஷணீயர் என்றது ஸதாச்சார்ய அபிமான பூர்வகமான பகவத் பாரதந்தர்யம் இன்றிக்கே
கேவலம் ஈஸ்வர பரதந்த்ரரானவர்கள் இவ்வதிகாரிக்கு ஆதரணீயர் அல்லாமையாலே –

—————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

ஞான அனுஷ்டானங்கள் இத்யாதி -உபய பரிகர்மித ஸ்வாந்தனுக்கு அல்லது உபாய நிஷ்பத்தி கூடாமையாலே
ப்ரபந்ந அதிகாரிகள் அல்லாத உபாஸகர்க்கு அவை உபாய அங்கமாய் இருக்கும்
ப்ரபந்நரில் சரம அதிகாரியான இவனுக்கு தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ஞான அனுஷ்டானங்கள் எல்லாம்
ப்ரத்யகஷேண ஸ்வாச்சார்யனுக்கு உகப்பாய் இருக்கையாலே கேவலம் உபேயமாயே இருக்கும் –

—————

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் -இத்யாதி -இத்தால் இப்படி ஸ்வரூப அனுரூபமான விஹித அனுஷ்டானங்களில் ப்ரவ்ருத்தி
ஸ்வாச்சார்யனுக்கு உகப்பானவோபாதி நிஷித்தங்களில் நிவ்ருத்தியும் அவனுக்கும் உகப்பாகையாலே அத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது
இச் சரம அதிகாரிக்கும் ஸாஸ்த்ரங்களாலே நிஷேதிக்கப் படுகிற அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்களில் ப்ரவ்ருத்திக்கை
சரம அவதியில் நிற்கிறவன் தன்னையும் தன் அதிகாரத்துக்கு அநர்ஹமான ஸம்ஸாரிகளையும் ஸ்வ புத்ர சிஷ்யாதிகளையும்
ஸ்வரூப நாஸத்தைப் பண்ணுவிக்கையாலே பரித்யாஜ்யம் -என்கிறது –

—————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

சரம அதிகாரியான தனக்கும் இவ்வதிகாரத்தில் அநந்விதரான பிறருக்கும் ஓக்க
இந்த நிஷித்த அனுஷ்டான மாத்ரத்தாலே நாஸம் வரும்படி என் என்ன -தான் நசிக்கிறது -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விலக்ஷண அதிகாரியான தன்னுடைய நாசத்துக்கு ஹேது பிரதம பர்வமான பகவத் விஷயத்துக்கும் மத்யம பர்வமான பாகவத விஷயத்துக்கும்
சரம பர்வமான ஆச்சார்ய விஷயத்துக்கும் அபிமதமாகையாலே அதி குரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கை என்கிறார் –
பிறர் இத்யாதி -பகவத் ஸம்பந்த ஞான ரஹிதராய் -அத ஏவ பாகவத அபசார அநபிஞ்ஞரான ஸம்ஸாரிகளுக்கும்
அவர்களில் வ்யாவருத்தரான ஸ்வ புத்ர சிஷ்யாதிகளுமான பிறர் நசிக்கிறது
சரம அதிகாரியான தன்னை அநாதரிக்கையாலே வந்த பாகவத அபசாரத்தாலும்
தன்னளவு அவஸ்தா பரிபாகம் இன்றிக்கே இருக்கச் செய்தே தன்னுடைய அநவதா நத்தால் வந்த அனுஷ்டானங்களை
நம்முடைய ஜனகனானவன் ஆசரித்தது அன்றோ -நம்முடைய ஆச்சார்யன் ஆசரித்தது அன்றோ –
என்று அவற்றை ஆசரிக்கையாலும் -என்கிறார் –

—————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

ஆனால் அக்ருத்ய கரண அந்தர் பூதமான பர தார பர த்ரவ்ய அபி ருசி இவனுக்கு ஆகாது ஒழிகிறது -ஸாஸ்த்ரங்களிலே கர்தவ்ய தயா விதிக்கப்பட்ட
ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களிலே போகம் அவிருத்தம் அன்றோ என்னில் -விஹித போகம் -இத்யாதி –
ஸாஸ்த்ர விஹிதமான அந்த ஸ்வ தாராதி போகம் நிஷித்தமான பர தார பர த்ரவ்யாதிகளில் போகம் போலே ப்ரத்யக்ஷமான லோக கர்ஹா ஹேதுவும் இன்றிக்கே
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு -என்னும்படி
பரோஷமான க்ரூர நரக அனுபவ ஹேதுவும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
இவன் ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமுமாய் பகவத் ஏக போகமுமாய் இருக்கையாலே
ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரசத்வ ரூபமான விஷய போகம் யுக்தமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா -என்று விதிக்கிற வேதாந்தார்த்த விருத்தமாய்
அவை வைதிக அக்ரேஸரராய் ஆச்சார்ய அதீன ஸ்வரூபரான விஸிஷ்ட அதிகாரிகளாலே
கர்ஹிக்கப் படுமதாய் -ஆச்சார்ய கைங்கர்ய போகமாகிற பரம ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமு மாகையாலே
அதுவும் இவ்வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்கிறார் –

————–

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்-ஸ்வரூபம் குலையும் –

இன்னமும் போக்யதா புத்தி -இத்யாதியாலே உபாஸ விடும் என்கிறார் -கரான மஹ ரிஷிகளைப் போலே ஸ்வ தாரத்தை ஸ்நாந திவஸத்திலே அங்கீ கரியா விடில்
ப்ரூண ஹத்யா தோஷம் யுண்டு என்கிற தர்ம புத்த்யா இவன் விஷயத்தை அங்கீ கரிக்கிலும்
தத் ஏக உபாயனான இவனுக்கு ஸர்வதா ஸ்வரூப ஹானியாயே விடும் என்கிறார் –

————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

அநந்தரம் -ஷேத்ராணி மித்ராணி -இத்யாதியாலே இந்த பிரகரண யுக்தமான ஆச்சார்ய விஷயத்தோ பாதி
ப்ரத்யக்ஷ விஷயமான பெரிய பெருமாளைக் குறித்து ப்ரஹ்மா விண்ணப்பம் செய்த ஸ்லோகத்தில் அவஸ்தை யுண்டாக வேணும் என்று
இவ்வதிகாரியுடைய ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு என்கிறார் -அதாவது
ஆதி ப்ரஹ்மா அஸ்வமேத முகத்தாலே ஹஸ்தகிரியிலே பேர் அருளாளப் பெருமாளை ஆராதித்துப் பின்பும் அநேக காலம்
தத் அனுபவ ஏக பரனாய்க் கொண்டு அவன் வர்த்தியா நிற்க -அந்தப் பேர் அருளாள பெருமாள் உன்னுடைய ப்ரஹ்ம லோகம்
அநாதமாய்க் கிடவாத படி நீ அங்கே ஏறப்போ என்று விடை கொடுத்து அருள -அந்த ப்ரஹ்மாவும் அவ்வனுபவ அலாபத்தாலே ஆத்ம தாரண அயோக்யதையாலும் பரமாச்சாரியார் -எப்பாலைக்கும் சேமத்தே -என்று அருளிச் செய்யும் படி ப்ராப்ய பூமியான அத்தேச விஷயத்தில் ப்ராவண்ய அதிசயத்தாலும்
இத்தைப் பற்ற ப்ராப்ய பூமியான ப்ரஹ்ம லோகத்தில் உபேஷ்யா புத்தியாலும் -ப்ரேம பரவசனாயக் கொண்டு –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாத பத்ம ப்ரவணா ஆத்ம வ்ருத்தே பவந்தி பும்ஸஸ் சர்வே பிரதிகூல ரூப -என்று
இத்யாதியாலே தன்னுடைய அவஸ்த்தா விசேஷங்களை ஆவிஷ்கரித்தான் இறே

—————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -இத்யாதி -இவ்வவஸ்தா விசேஷங்களும் உபாஸகனான ப்ரஹ்மாவின் அளவு அன்றிக்கே
த்வத் பாத பத்ம ப்ரவணாத் ஆத்மவ்ருத்தே சர்வே பிரதிகூல ரூப பவந்தி -என்கையாலே
பகவத் பாகவத சமாஸ்ரயண பரருக்கு எல்லாம் அவிசிஷ்டங்களாகையாலே
இவை உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் என்கிறார் –
இவ்விடத்தில் உபாய சதுஷ்டயம் என்றது -பக்தி ப்ரபத்திகளையும் -ததீய சமாஸ்ரயணத்தையும் -ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் -என்னுதல் –
ஈஸ்வரனுடைய உபாயத்வத்தில் ஸ்வ கத பர கதத்வங்களையும்
ஆச்சார்யனுடைய உபாயத்வத்தில் ஸ்வகத பரகதத்வங்களையும் என்னுதல் –

—————–

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பழுதாகாது ஓன்று அறியேன் – இத்யாதியாலே
ப்ரஸக்த அநுரூபமாக -ததீய உபாயத்வத்துக்கும் ஆச்சார்ய உபாயத்வத்துக்கும் உண்டான பிரமாண விசேஷங்களை எடுக்கிறார் –
அதில் பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டில் -வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் -என்று
ஸ்வீ காரத்தில் ஸ்வ கதத்வம் தோற்றுகையாலே அமோகமான ஆச்சார்ய உபாயத்வத்தில் ஸ்வ கத ஸ்வீ கார பிரமாணம் என்னவுமாம் –

———

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –

—————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு-அங்கமாய்
ஸ்வ தந்த்ரமுமாய் –இருக்கும் –

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

சூரணை -463-

இது
பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் —

மேல் இப்படிப்பட்ட ஆச்சார்ய அபிமானம் தான் ஸகல வித்ய அங்கமாய் இருக்க -தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்று
ஸ்வ தந்த்ர உபாயமாகச் சொல்லுகிறபடி எங்கனே என்ன -ஆச்சார்ய அபிமானம் தான் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அவ்யஹித உபாயத்வேந ப்ரஸித்தமான ப்ரபத்தி தானும் -மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு -இத்யாதிகளாலே
கர்ம யோகாதிகளுக்கு அங்கத்வேந விதிக்கப்பட நிற்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸ்வ தந்த்ர உபாயமும் ஆகிறவோ பாதி
இச்சரம உபாயமும் ஸ்வ வ்யதிரிக்த ஸகல உபாயங்களுக்கும் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அங்கமாகா நின்றதே யாகிலும்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கையும் ஸூசிதம் என்கிறார் –
இவ்வர்த்தத்தில் பிரமாணம் -ஸாஸ்த்ரா திஷு ஸூ த்ருஷ்டாபி சாங்கா ஸஹ பலோ தயா ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேஸதே -என்று
யாதொரு வித்யை ஸகல வேத ஸாஸ்த்ரங்களிலும் அங்க ஸஹிதையாகவும் ஸஹஸா பல ப்ரதையாகவும்
ப்ரதிஞ்ஞா பலத்தாலே ஸூ சிஷதையாகை யானாலும்
அது ஸதாச்சார்ய உபதேசத்தால் அல்லது அர்த்த க்ரியா காரியாகவே மாட்டாது என்று இதனுடைய அங்கத்வத்தையும்
ஸதா சார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராபனுவந்தி பராங்கதிம் -என்றும்
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அதனுடைய ஸ்வ தந்த்ர பாவத்தையும் சொல்லா நின்றது இறே –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் –8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம்–மூன்றாம் பிரகரணம் –சூர்ணிகை -366-380 -நாலாம் பிரகரணம் -சூர்ணிகை -381-406—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

————

சூரணை -366-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

ஆகக் கீழ் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய பரிமாற்றத்தை அருளிச் செய்து
அதில் சிஷ்யனுடைய பரிமாற்றமாக உபகார ஸ்ம்ருதியில்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்தில்
மனஸ்ஸுக்குத் தீமையாவது -என்று தொடங்கி -பகவத் பாகவத தோஷங்களையும்
அல்லவவு அல்லாத ஸம்ஸாரி தோஷங்களையும்
இவன் காண்பான் அல்லன் என்றும்
அஸ் ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் காண ஒண்ணாத அளவே அன்று -அவர்கள் தன் பக்கல் பண்ணும்
அபஹாரங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் என்றும்
இன்னும் அவ்வளவே அல்ல
அவ்வபகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி பர்யந்தமான அதிகாரங்கள் யுண்டாக வேணும் என்றும் கீழே சொல்லி
ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷங்களையும் -என்ற இடத்தே தொடங்கி
கர்ப்பிதமாய்க் கொண்டு வருகிற பகவான் நிர்ஹேதுக ப்ரபாவத்தை விசதமாக
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –என்று தொடங்கி மேலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹே-இத்யாதி
துரந்தஸ்யா நாதேர பரிஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநா சாரோஹம் ந்ருப ஸூர ஸூபஸ்யாஸ் பதமபி -என்றும்
தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்சல்ய ஜலதே தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்றும்
ஆளவந்தாரும் அருளிச் செய்கையாலே
இவனுக்கு அநர்த்தங்களான தோஷங்களைப் பற்றிப் பார்த்தால் பயங்கரங்களாக இருக்கும் என்றும்
ஸ்வரூப உஜ்ஜீவங்களான பகவத் தயாதி குணங்களைப் பற்றிப் பார்த்தால் அந்த பய நிவ்ருத்திக்கே உடலாய் இருக்கும் என்றும் அருளிச் செய்கிறார் –

————

சூரணை-367–

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கும் –

பய அபயங்கள் -இத்யாதி -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கையாவது -அவனுடைய தயா குண அனுசந்தானத்தை விட்டு
இது நெடும்காலம் ஸம்ஸாரத்திலே நெருக்கி தண்டித்துக் கொண்டு போந்தான் இறே என்று ஈஸ்வரனுடைய தண்ட தரத்வத்தை அனுசந்தித்து பயப்படுகையும்
ஸ்வ தோஷ அனுசந்தானத்தை விட்டு இந்நாள் வரை நம்மைத் தண்டித்தானே யாகிலும் நம் பக்கலிலே இத்தனை ஆத்ம குணங்களால் வந்த ஆனுகூல்யம் யுண்டான பின்பு இனி பயம் இல்லை என்று இருக்கையும்
இவ்வதிகாரிக்கு உண்டாமாகில் முன்பு ஸம் சரிக்கைக்கு ஹேதுவான அறிவு கேடே இன்னம் பலித்து விடும் என்கிறார் –

———–

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

சூரணை -369-

பந்த-அனுசந்தானம் –

ஆனால் -நலிவான் இன்னம் -இத்யாதி -இந்த பயாபயங்களினுடைய மாறாட்டில் அஞ்ஞதையே ஸித்திக்குமாகில்
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானாதிகரான ஆழ்வார்களுக்கு ஈஸ்வர விஷயத்தில்
உண்ணிலாவிய
மாற்றமுள வாகிலும் -இத்யாதிகளிலே பயம் நடப்பான் என் என்னில்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் -என்றும்
இத்யாதிகளில் படியே ஸகலவித பந்துவும் அவனே என்று இருக்கிற பந்த அநுஸந்தானத்தாலே என்கிறார் –

—————

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

இன்னமும் இவ்வதிகாரிகளுக்குப் பிறந்த தஸா விசேஷத்தைக் கொண்டு அறுதியிட வேணும் –
அவ்வதிகாரிகளுடைய தஸா விசேஷங்கள் எவை என்னில்
ஸாஸ்த்ர ஞான மூலமாகப் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களே பிரதானமாக அநுஸந்திக்கும் அதிகாரிக்குப்
பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும்
அந்த ஸாஸ்த்ரத்தாலும் -ஸாஸ்த்ர தாத்பர்யமான திரு மந்திரத்தாலும் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களுக்கும்
சேஷத்வ பாரதந்ர்யங்களுக்கும் சம கக்ஷியாக அநுஸந்திக்குமவனுக்குப் பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும் –
அந்த ஸாஸ்த்ரத்தாலும் திருமந்திரம் அடியாகப் பிறந்த சேஷத்வ பாரதந்தர்யங்களே பிரதானமாக அத்யவசித்து இருக்கும்
அதிகாரிக்குப் பேறு இழவுகள் இரண்டும் ஈஸ்வரனாலே இருக்கும் –
ஆகையிறே ஆழ்வார்கள் அவ்விரண்டையும் அவன் பக்கலிலே ஏறிட்டு அருளிச் செய்தது –
இது இங்கே முக்த அவஸ்தை பிறந்த அதிகாரியினுடைய ஞானமாகையாலே முமுஷு அதிகாரியினுடைய அனுசந்தான கிரமத்தை அருளிச் செய்கிறார் பிரஜை தெருவிலே இடறி -இத்யாதியாலே
இத்தால் அந்த பந்த அனுசந்தானத்தால் பலிக்கும் காரியத்தை ஒரு புடை ஒப்பான த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறது –
அதாவது -ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியில் அநந்ய கதியான ப்ரஜை ஸ்வ இச்ச ஸஞ்சாரம் பண்ணுகிற தெருவிலே ஸ்வயமேவ இடறி
ஆத்தாள் வந்த வேதநாதிசயத்தாலே அகத்தேற ஓடி வந்து தனக்கு வருகிற விரோதம் முதலிலே அறியாதவளுமாய்த் தான் இடறுகிற இடத்திலும் இன்றிக்கே உண்டானாலும்
விலக்குகைக்கு அசக்தையுமாய் ஸோபாதக பந்த யுக்தையுமான மாதாவின் முதுகிலே மோதி கிலேசம் தீரக் காணா நின்றால்
ஸர்வஞ்ஞனுமாய்-ஸர்வ வியாபகனுமாய் -ஸர்வ சக்தியாய் -ஸதா சன்னிஹிதனுமாய்-ஸர்வ நியாந்தாவுமாய் -நிருபாதிக பந்துவுமாய்
நிரவதிக வாத்சல்ய யுக்தனுமான அவன் ஸ்வ கர்ம பலமான ஸாம்ஸாரிக ஸகல துக்கங்களையும் போகாது ஒழிந்தால்
அம்மாதாவின் அளவன்றிக்கே மிகவும் அவன் பக்கலிலே ஏறிட்டு வெறுக்கலாம் இறே என்கிறார் –

—————

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –

பிரஜையை இத்யாதி -அஞ்சு வயஸ்ஸுக்கு உட் பட்ட பிரஜையினுடைய ஹத்யாதி தோஷங்கள் மாதா பிதாக்களுடையது என்று
மன்வாதி ஸ்ம்ருதிகள் சொல்லா நிற்க -க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்-பதந ஹேதுவான கிண்னற்றங்கரையிலே பதறிக் கொண்டு போகிற பிரஜையை சந்நிஹிதை யான பெற்ற தாயானவள் எடுத்து ரஷியாதே அத்தை அனுமதி பண்ணி விட்டால் அவள் தானே இறே வலியத் தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே
ஆகையால் ஸ்வரூப நாஸ யோக்கியமான இந்த ஸம்ஸார மண்டலத்தில் நின்றும் ஸர்வத்ர ஸந்நிஹிதனான ஸர்வேஸ்வரன் –
உனது அருளால் வாங்காய் -என்கிறபடியே
தங்களை எடாது ஒழிந்தால் ததேக ரஷ்யரான ஆழ்வார்களுக்கு அப்படி அருளிச் செய்யலாம் இறே என்றபடி –

———————-

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இப்படி ஈஸ்வரன் இவர்களை எடாத அளவேயோ -முமுஷுக்களாய் -ஆர்த்த அதிகாரிகளான இவர்கள் அந்தமில் பேரின்பத்தை இழந்து
அநந்த கிலேச பாஜனமான இஸ் ஸம்ஸாரத்திலே அனுபவிக்கைக்கு ஹேது அவனுடைய அனுமதி அன்றோ என்ன -இவனுடைய அனுமதி -இத்யாதி –
கீழே ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ அனுமதி -என்ற இடத்தில் சேதனனுடைய அனுமதி-பேற்றுக்கு ஹேதுவான உபாயத்தில் அந்வயியாதோ பாதி
அத்யக்ஷஸ் ச அநுமந்தா ச -என்கிற ஈஸ்வரன்
இவன் நம்முடைய வஸ்துவாய் -வேறே சேஷ்யந்தரம் இன்றிக்கே இவனோடு இவன் விரோதியான கர்மத்தோடே வாசி யற நாம் இட்ட வழக்கான பின்பு
இவன் நமது விபூதிக்குப் புறம்பு ஆகிறான் அல்லனே
இன்று அன்றாகில் இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுகிறோம் என்று பண்ணும் அனுமதியும் இழவுக்கு ஹேது அல்ல என்கிறார் –

இனி கிண்னற்றங்கரைக்குப் பிரஜை போகத் தாய் பண்ணின அனுமதி மாத்ரத்தாலே அவள் தள்ளினாள் ஆய்த்தும் இல்லை இறே –

———–

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

ஆனால் அந்த இழவுக்கும் பேற்றுக்கும் ஹேதுக்கள் எவை என்ன -இழவுக்கு அடி -இத்யாதி –
இச் சேதனன் அந்தமில் பேர் இன்பத்தை இழக்கைக்கு ஹேது கால ஆர்ஜிதமான கர்மம்-
அத்தைப் பெறுகைக்கு ஹேது ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபை –

——————-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

மற்றைப்படி இத்யாதி – ஆத்ம குணங்களால் உண்டான ஆனுகூல்யத்தாலே பேறு யுண்டாய்த்து என்றும்
ஈஸ்வரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே இது நெடும் காலம் இழந்தோம் என்றும் சொல்லில்
மேல் அநந்த காலமும் இவ்விழவே பலித்து விடுகைக்கு உடலாம் -என்கிறார் –

———-

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை
தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

அவன் ஸர்வ சேஷியாய் ஸர்வ ரக்ஷகனாய் இருக்க அநாதி காலம் ஸம்ஸார ஆர்ணவ மக்நனாயக் கொண்டு தளர்ந்த இவன்
அப்படிச் சொன்னால் வருவது என் என்னில் -எடுக்க நினைக்கிறவனை -இத்யாதி –
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே
இவனை ஸம்ஸார தாபத்தாலே வெதுப்பி -ஹித பரனாய்க் கொண்டு -எடுக்க நினைக்கிற ஈஸ்வரனை இது நெடும் காலம்
இஸ் ஸம்ஸாரத்திலே உன் ஸ்வா தந்தர்யத்தாலே தள்ளினாய் என்று நைர் க்ருண்யத்தை ஏறிடுகை
தன் அநவதானத்தாலே ஆழ்ந்த குழியிலே விழுந்தான் ஒருவனை அருகே நின்றான் ஒருவன் ஐயோ என்று எடுக்கப் புக
அவஸாநத்தையே ஹேதுவாக அவன் ஒரு வழியே போகிறவனை நீயே அன்றோ தள்ளினாய் என்றால்
நிர்க்ருணனாய் எடுக்க உத்யோகியாதாப் போலே எடாமைக்கு உறுப்பாய் ஸம் சரிப்பிப்பைக்கு உடலாய் விடும் அத்தனை இறே –

—————–

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே-

சீற்றம் உள -இத்யாதி -இவ் வர்த்தத்தில் இந்த லௌகிக வியாபார த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு தர்சிப்பிக்க வேணுமோ
ஸம்ஸார தாபார்த்தரான திருமங்கள் ஆழ்வார்
மாற்றம் உள -என்கிற திரு மொழியில் –
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்த பாசுரத்தைக் கேட்ட அநந்தரத்திலே
எம்பெருமான் சீறினமை தோற்ற -சீற்றமுள -என்று
அநு போக்தாவான ஆழ்வார் தாமே இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே —

————-

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்–இத்யாதி -ஆனால் அவன் படிகள் எல்லாம் அறிந்து -அனுபவிக்கிற ஆழ்வார் -அப்பாசுரத்தாலே
அவனுக்குச் சீற்றம் யுண்டானமை அறிந்தால் மீளவும்
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்தபடி எங்கனே –
அதுக்கு ஹேது என் என்னில் –
கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேஸே -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்றும்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
சொல்லலாம் படியான அவனுடைய அருள் என்னும் ஒள் வாள் உருவி வினை முதிர்ந்து இருந்த கனமும்
காற்றத்திடைப்பட்ட கலவரைப் போலே ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -உண்டாகையாலும் அருளிச் செய்யப் பண்ணும் என்கிறார் –
மஹதா புண்ய புஞ்ஜேந க்ரீதேயம் காயநவ் ஸ்த்வயா ப்ராப்த துக்கோததே பாரந்த்வராயா வன்ன பிப்யதே -என்கையாலே
கலவர் மனம் போலே என்கிறார் –

—————-

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டு என்னா -சேஷியான அவனுக்குச் சீற்றம் பிறக்கும்படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன
சீறினாலும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
நிராச கஸ் யாபி ந தாவதுத் சஹே மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம் ருஷா நிரஸ்தோபி ஸி ஸூஸ்த நந்தயோ ந ஜாது மாதுஸ் சரணவ் ஜிஹாசதி-என்கிறபடியே
சீற்றத்தாலே தெறிக்கத் தள்ளினாலும் சென்று திருவடிகளை பூண் கொள்ளலாம் படி எளியனாய் இருப்பன்
ஒரு வத்சலனை லபித்தால் வாய் வந்த படி யுக்த பிரகாரம் எல்லாம் சொல்லலாம் இறே என்கிறார் –

—————–

சூரணை -380-

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -க்ருபயா பர்யபாலயத் -அரி சினத்தால் -என்று ஸ பிரகாரமாக அத்தை தர்சிப்பிக்கிறார் –
ஸ தம் பூமவ் நிபதிதம் சரண்யஸ் சரணாகதம் வதார்ஹமபி காகுத்ஸ்த் த க்ருபயா பர்யபாலயத் -என்றும்
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே இருந்தேனே -என்றும்
யுண்டாகையாலே இதில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியுஞ்சினம் உண்டாகக் கூடாது இறே
கூடாதது கூடினாலும் என்றபடி

ஆக -கீழே -பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது என்றவத்தை இவ்வளவாய் ப்ரதிபாதித்துக் கொண்டு போவது –

———————————————————-

நாலாம் பிரகரணம்

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி உடன் கேடனாய்-
இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –
தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப் போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

த்ரிபாத் விபூதியிலே -இத்யாதி -லீலா விபூதி அநிருத்தர் அபிமான அந்தர் கதமாய் இருக்கையாலே வாஸூ தேவாதிகளான மற்றை மூவருடையவும்
அபிமான அந்தர் கதமான திரிபாத் விபூதியிலே -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -ஸ்ரியா ஸார்த்தம்
நித்ய ஸூரிகளோடே பரிபூரணமான அனுபவம் அனுவர்த்தியா நிற்க -அந்த நித்ய விபூதி ரக்ஷணமாகிற ஜீவனத்தாலே
உண்டி உருக்காட்டாத படியாய் -ஸ ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே தன்னைத் தனியனாக நினைத்துத் தளர்ந்து –
புத்ர பவ்த்ராதிகளோடே ஜீவிப்பான் ஒரு க்ருஹஸ்தன் ஒரு புத்ரன் க்ருதயாக்ருத்ய விவேக ஸூன்யத்தையாலே அஹங்கார மமகார நிமித்தமாக
தேசாந்தரஸ்தன் ஆனால் இவர்களோபாதி இப்போகத்துக்கு இட்டுப் பிறந்த இவன் இப்படி அந்யதா ஆவதே என்று –
அந்த புத்ரன் விஷயமாக பிதாவினுடைய ஹ்ருதயம் புண் பட்டு இருக்குமா போலே
ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே -என்று தொடங்கி
தம பரே தேவ ஏகீ பவதி -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று -என்றும் இத்யாதிகளில் படியே
ஸம்ஹ்ருதி சமயத்திலே லீலா விபூதி பூதரான ஸகல சேதனரும் கரண களேபர விதுரராய்
அத ஏவ போக மோக்ஷ ஸூ ன்யராய்க் கிடக்கிற படியைக் கண்டு -தன்னோடு உண்டான நிருபாதிக பந்துவே ஹேதுவாக
அவர்கள் பக்கலிலே திரு உள்ளம் குடி கொண்டு -அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கிற நியாயத்தாலே
அவர்களை பிரிந்தால் இப்படி இவர்கள் இஸ் ஸம்பந்த ஞான ஸூ ன்யராய்க் கொண்டு கிடப்பதே என்று தன் கேவல கிருபா பாரவஸ்யத்தாலே
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே – மிகவும் விஸ்லேஷ அசஹனாய்
களே பரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
சொல்லுகிறபடியே சமாஸ்ரயண முகேந தான் அவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு தயமான மனாவாய்க் கொண்டு
கரண களேபர பிரதானத்தைப் பண்ணி கரண களேபரங்களைக் கொண்டு
நின்றனர் இருந்தனர் -என்ற பாட்டின் படியே இவர்களுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப வியாபாரங்கள் யுண்டாகைக்கு
ஆதா வீஸ்வர தத்த யைவ புருஷ ஸ்வா தந்தர்ய ஸக்த்யா ஸ்வயம் தத்தத் ஞான சிகீர்ஷண ப்ரயதநாத் யுத் பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
முதலிலே சக்தி விசேஷங்களையும் கொடுக்க அது தன்னையே கொண்டு
பரமேஸ்வர ஸம்ஞ ஜோஜ்ஞ கி மந்யோ மய்ய வஸ்திதே -என்கிற ஹிரண்ய ஸிஸூ பாலாதிகளைப் போலே இந்த்ரிய கோசரனாய் நின்று ரக்ஷிக்க நினைக்கில்
அஹங்கார மமகாரமாகிற அஞ்ஞான ரூபேண நிவாரிப்பார்கள் என்று நினைத்துக் கண்ணுக்குத் தோற்றாத படி
அதீந்த்ரியனாய்க் கொண்டு அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் -இப்படி அந்தர்யாமியாய் இருக்கும் இடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் ஒரு ஸ்மரண மாத்ரமும் இன்றிக்கே உறங்கிக் கிடக்கிற பிரஜையைப் பெற்ற தாயானவள் இத்தசையில் இதனுடைய ரக்ஷணம் நமக்கே இறே பரமாவது என்று அதன் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சேஷியான -தான் அறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக இவர்களுக்கு ஸம்பந்த ஞானம் இல்லை என்று விடுகைக்கு அஸக்தனாய் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் -என்றும்
ஸூபா ஹிதா கஹ்வரேஷ்டி -என்றும்
அடியேன் உள்ளான் -என்றும்
என்னாவி என்னுயிர் -என்றும்
இத்யாதிகளில் படியே இவ்வாத்மாக்களுடைய அகவாயிலே அணைத்துக் கொண்டு ஒருவனுக்கு ப்ராக்தநமான க்ஷேத்ரம் பரராலே அபஹ்ருதமானால்
அந்த க்ஷேத்ர அபஹாரி யானவன் ஆண்டு கொண்டு போருமித்தைப் பற்றவும் உடையவன் அநு சயித்துத் தொடருகை அந்த க்ஷேத்ர அனுபவத்துக்கு ப்ராபல்ய ஹேதுவாமோ பாதி
தவம் மே அஹம் மே குதஸ் தத் -இத்யாதி ஸ்லோக ப்ரகாரத்திலே ஸம்ஸாரி சேதனன் நான் எனக்கு உரியன் என்கிற இது அநாதி ஸித்தமாய்ப் போரு மதிலும்
நாம் ஸ்வாமியானமை தோற்ற சத்தா தாரனாய்க் கொண்டு தொடர்ந்து கொண்டு போரும் அளவன்று என்று நிரந்தரமாக
அவர்கள் சத்தையை ரக்ஷித்து ஸ்வர்க்க நரகாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இப்படி சத்தா தாரகனாய்ப் போரு கையாலே இவர்களோடே உடன் கேடனாய்
அவர்கள் பிரகிருதி வஸ்யராய்க் கொண்டு அஸத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போதும் அள்ளல் சேற்றிலே இழிந்து அளைகிற பிரஜையை அதுக்கு அத்யக்ஷனான பிதா நிவாரிக்கப் பார்த்தால் அதன் சோகம் காண மாட்டாமையாலே
அனந்த்ரம் ஒரு கால் அத்தைக் கழுவி எடுத்துக் கொள்கிறோம் என்று அனுமதி பண்ணி இருக்குமோ பாதி
அனாதையான வாசனா ருசிகளுக்கு ஈடாக அவற்றில் நின்றும் மீட்க மாட்டாதே அநு மந்தாவான தன் அனுமதி தானத்தைப் பண்ணி
உண்மையிலே உதாஸீனன் இன்றிக்கே இருக்கச் செய்தே உதாசீனரைப் போலே இருந்து
ஸர்வஞ்ஜோபி ஹி விஸ்வேச ஸதா காருணிகோபி சந் ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிறபடியே
ஆள் பார்த்து உழி தருகிறவன் ஆகையால் அஸத் கர்மங்களில் நின்றும் இவர்களை மீட்க்கைக்கு அவசரம் பார்த்து

அந்த பர ஹிம்சாதிகளான அஸத் கர்மங்களிலே
பகவத் பாகவத அபசாரிகளை யாதிருச்சிகமாக ஹிம்ஸிக்கை தொடக்கமான நன்மை என்று பெயர் இடலாவதொரு தீமையும் சர்வஞ்ஞனான தான் காணாதே
ஸர்ப்ப சந்தஷ்டனான ஒருவனுடைய நெற்றியைக் கொத்தி ரக்தப்பசை யுண்டோ என்று சோதித்துப் பார்த்தால் மந்த்ர ஒவ்ஷாதி ஸர்வ பிரகாரத்தாலும் அப்பசை காணாது ஒழிந்தால் அந்தரங்கராய் இருப்பார் இனி இவ்விஷயம் நமக்கு கை புகுறாது என்று கண்ண நீரோடு கால் வாங்கிப் போருமாப் போலே
ஸம்ஸார போகி ஸந்துஷ்டானான இவனை ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் யாதிருச்சிகாதி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவிக்கப் பார்த்தால்
த்விதா பஜ்யேயாம்-என்ற ராவணனைப் போலே ஒரு வழியாலும் உஜ்ஜீவன ஹேது காணா விட்டால் அவனை அம்பாலே அழித்து மீண்டாப் போலே
இவன் அங்கீ கார யோக்யன் அன்று என்று -ஸஞ்சாத பாஷ்ப -என்கிறபடியே கண்ண நீரோடே ஸர்வ ஸக்தியான தான்
ஸாஸ்த்ரமும் -உபதேசமும் –தன்னுடைய நிர்ஹேதுக கிருபையும் -விநியோகப்படுகைக்கு விஷயம் வேணும் என்ற நினைவாலே மீளுவது
இப்படிப்பட்ட நினைவை யுடைய தன் திரு உள்ளத்துக்கு ஈடாக யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களை யுடைய ஒரு சேதனனைப் பெற்ற அளவிலே
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன -என்றும் இத்யாதிகளில் படியே
என்னூரைச் சொன்னாய்-என் பேரைச் சொன்னாய் -என்றும்
ஒரு பாகவதன் காட்டிலே வழி போகா நிற்க அவன் பின்னே பர ஹிம்ஸா பரனாய் இருப்பான் ஓரு படனும் யாதிருச்சிகமாக ஸா யுதனாயக் கொண்டு போக
அவ்வளவிலே காட்டில் வழி பறிகாரர் இந்த பாகவத பரிபாலன அர்த்தமாக வருகிறானாக நினைத்து அவனைப் பறியாதே பயப்பட்டுப் போக
அந்தப்படனுக்கு அந்த வியாபாரத்தை ஈஸ்வரன் ஸூ ஹ்ருதமாக முதலிட்டான் என்கையாலே -என்னடியாரை நோக்கினாய் -என்றும் –
ஒரு பாகவதன் கர்ம காலத்திலே வழி நடந்து தாஹ தூரனாய்ச் செல்லா நிற்க அத்தசையிலே தன் செய்க்குச் சாவி கடிந்து இறைக்கிறான் ஒருவன்
அந்நீரிலே கால் தோய்ந்தாரையும் கடிக்கொன்டு விலக்கி இறையா நிற்க
அசிந்திதமாக அப்பாகவதன் அதில் தன் விடாய் தீர்த்துப் போக – அத்தை ஈஸ்வரன் அவனுக்கு ஸூ ஹ்ருதமாக்கி மூதலிக்கையாலே அவர்கள் விடாயைத் தீர்த்தாய் என்றும்
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி விநோதார்த்தமாக புறம் திண்ணையைக் கட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்ய ராத்ரி யானைவாரே தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என்
இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக -அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு
அவர்களால் வந்த வ்யஸனத்தை நிவர்ப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக அத்தை அவளுக்கு
ஸூ ஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும்
இப்புடைகளிலே சில ஸூ ஹ்ருத லேசங்களை ஸ்வ கார்ய வஸராய்க் கொண்டு வழி போவார் மடியிலே வலிய மறைத்து மாங்காயைப் பொகட்டு அத்தை அடையாளமாக ஆஜ்ஞா புருஷன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே
மித கலஹ கல்பநா விஷம வ்ருத்தி லீலா தயா பஹிஷ் கரண தவ்ஷ்கரீ விஹித பாரவஸ்ய ப்ரபு ஸ்வ லஷித ஸமுத்கமே
ஸூ ஹ்ருத லக்ஷணே குத்ர சித் குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந -இத்யாதிகளில் படியே
ஈஸ்வரன் லீலா ஸங்கல்ப நிர்வாஹண அர்த்தமாக ஏறிட்டு
இப்படிக் கீழே யுக்தமான யாதிருச்சிகாதிகளை ஒரு ஜென்மத்தில் ஒருக்காலே ஏறிட்டு விடுகை அன்றிக்கே -ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக சிலர் ஸ்வர்ண பரீஷை பண்ண வரப் பொன் வாணியன் அதிலே ஆதார அதிசயத்தாலே
அப்பொன்னை வாங்கி உரை கல்லிலே உரைத்து அதன் சீர்மையை அறிந்து முகப்பிலே எடுத்து கால தைர்க்யத்தோடே கால் கழஞ்சு என்று திரட்டி
ஆகர்ஷகமான ஆபரண யோக்யமாக்குமா போலே -சேதனனுடைய ஜென்ம பரம்பரைகள் தோறும்
என்னடியாரை நோக்கினாய் –விடாயைத் தீர்த்தாய் –என்று இத்யாதிகளான ஆனு ஷங்கிகம் என்ன –
ஏவம் விதமான ஸூ ஹ்ருத விசேஷங்களை ஸர்வஞ்ஞனனான தானே கல்பித்து
யம் ஏப்யோ லோகேப்ய உன்னி நீஷதி ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி தம் -என்கிறபடியே
இஸ் ஸூ ஹ்ருத விசேஷங்களை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கிறார் –

———

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –சுருக்கம் ஓழியக் காணலாம் –

ஈஸ்வரன் இப்படி விஷயீ கரிக்க எங்கே கண்டோம் என்ன -லலிதா சரிதாதிகளிலே விஸ்தரேண காணலாம் என்கிறார் -அதாவது
லலிதை என்பாள் ஒரு ராஜ கன்யகை பூர்வ ஜென்மம் பாப பிராஸுர்யத்தாலே எலியாய் ஜனித்து ஓர் எம்பெருமானுடைய கோயிலிலே இதஸ் ததஸ் சஞ்சாரியாய் நிற்க
அவ்வெம்பெருமான் ஸந்நிதியிலே எரிகிற ஒரு தீபம் திரி எரிகிற ஸமயத்திலே அது தைலேச்சுவாய்க் கொண்டு தலை வைத்ததாயிற்று
தன் முகேந ஜ்வலித்த திரு விளக்கு நெடும் போது நின்று எரிய அதில் உஷ்ணத்தாலே இழிந்து ஓடுகிற அத்தை அப்போதே ஒருவன் அடிக்க
அந்த ஸூ ஹ்ருத விசேஷத்தாலே தத் ஸ்மரணையோடே இவ்வதிகா ஜென்மத்தை லபித்து இப்படியான பின்பு நமக்கு கர்த்தவ்யம்
அநந்த தீப முச்யதே -என்கிற இத் திரு விளக்குத் திருப்பணியே யாக வேணும் என்று தனக்குச் செல்லுகிற தேசத்திலே திருப்பதிகள் எங்கும்
பரிபூர்ண தீபத்தால் தேஜிஷ்டமாம் படி பண்ணி அவள் முக்தையானாள் என்று ப்ரஸித்தம் இறே –

இனி ஆதி சப்தத்தால் நினைக்கிறது –
ஸூ வ்ரதை என்பாள் ஒரு ருஷி கன்யகை பால்யத்தில் மாதா பிதாக்களும் மரித்து தன்னைப் பாணி கிரஹணம் பண்ணுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்கையாலே
இவ்விருப்பு இருக்க வேண்டா என்று அவள் அக்னி பிரவேசம் பண்ணுகையிலே உத்யோகிக்க
அவ்வளவிலே யமன் ப்ராஹ்மண வேஷத்தைக் கொண்டு வந்து இப்படி நீ ஆத்மகாதகை யாகலாகாது காண் என்ன
அவளும் கிலேச யுக்தமாக இவ்விருப்பு இருக்கப் போகாது என்ன
உனக்கு இக் கிலேசத்துக்கு அடி பூர்வ ஜென்மத்திலே நீ யொரு வேஸ்யையாய் இருப்புதி –
உன்னகத்திலே ஒரு ப்ராஹ்மண புத்ரன் வந்து ப்ரவேசிக்க முன்பே உன்னோடே வர்த்திப்பான் ஒரு மூர்க்கன் அவனை வதிக்க அந்த ப்ராஹ்மண புத்ரனுடைய ஸ்திரீயும் மாதா பிதாக்களும் பர்த்ரு ஹீனை யாவாள் என்றும்
பித்ரு ஹீனை யாவாள் என்றும் மாத்ரு ஹீனை யாவாள் என்றும் -உன்னை சபிக்க அத்தாலே காண் உனக்கு இந்த கிலேசம் வந்தது என்ன
ஆனால் இப்படி ஹேயையான எனக்கு இந்த ஜென்மம் உண்டானபடி என் என்ன -அதுக்கு ஹேது ஒரு பாகவதன் உன் க்ருஹ ப்ராந்தத்திலே விஸ்ரமிக்க அவனைத் தலையாரிக்காரன் கள்ளன் என்று பிடித்து ஹிம்ஸிக்க நீ அத்தைத் தவிர்த்து
அவன் பக்கலிலே அத்யாத்மம் கேட்ட பலம் காண் இது என்றான் இறே
அவன் அவளுக்கு உபதேசித்த அர்த்தம்
குரு ப்ரமாணீ க்ருத சித்த வ்ருத்தயஸ் ததாகமே ஸூ ப்ரணத ப்ரவ்ருத்தய
அமாநிநோ டம்ப விவர்ஜித நராஸ் தரந்தி ஸம்ஸார ஸமுத்ர மஸ் ரமம் -என்றது இறே இதிஹாஸ சமுச்சயத்திலே –

———————————

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்-வாளா தந்தான் என்று இருப்பர்கள்-

அஞ்ஞர் இத்யாதி -இனி ஆகிஞ்சன்ய ஏக சரணமான ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறவாத அஞ்ஞரானவர்கள்
ஒரு ராஜா ஒருவன் கையிலே வாளைக் கொடுத்து நீ கைக்கு ஆயிரம் பொன்னைப் பொன்னுக்கு நம்மை சேவி என்று நியமித்து விட
அவன் வாள் தந்தமையை மறந்து இவ் வாளாலே இப்போகம் பெற்றோம் என்று கேவலம் வாளின் மேலே கர்த்ருத்வத்தை ஏறிடுமா போலே
அடியிலே கரண களேபர ப்ரதாநம் பண்ணின ஈஸ்வரனை மறந்து -நம் கையிலே ஸூ ஹ்ருதாதிகளாலே அவன் நம்மை கிருபை பண்ணினான் இத்தனை இறே என்று இருப்பர்கள் –

————————

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

ஞானவான்கள் இத்யாதி -அந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறந்த முமுஷுக்கள் அந்த ஸ்வரூப தசையோடு புருஷார்த்த தசையோடு வாசியற
பகவன் நிர்ஹேதுக கிருபையாலே பலித்தது என்று எப்போதும் உபகார ஸ்ம்ருதியாலே ஈடுபடா நிற்பர்கள்
என்னும் இடத்துக்கு ப்ராமண பாஹுல் யத்தை -இன்று என்னைப் பொருளாக்கி -இத்யாதிகளாலே அருளிச் செய்கிறார் –

———————–

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

பாஷ்யகாரர் காலத்திலே -இத்யாதி -பார்த்த இடம் எங்கும் பகவத் ஏக பரராம்படி பண்ணுகிற பாஷ்யகாரர் காலத்திலே யாதிருச்சிகமாக ஒரு நாள் பெரிய திரு மண்டபத்துக்குக் கீழாக நம்பெருமாளுடைய புறப்பாடு பார்த்து ஏகாக்ர சித்தராய்க் கொண்டு கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் குவிந்து மஹா லோகமாய் இருந்ததொரு சமயத்திலே
நாதே ந புருஷோத்தமே த்ரி ஜகதாமேகாதிபே சேதஸா சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸூரே நாராயணே திஷ்டதி
யம் கிஞ்சித் புருஷாதமம் கதி பயாக்ரமே ஸமல் பார்த்ததம் சேவாயை ம்ருகயா மஹே நரமஹோ மூடா வராகா வயம் -என்கிறபடியே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் எத்தனை பதக்தர் வாசல்கள் தோறும் ஆபிமுக்யத்துக்கு இடம் பார்த்துத் தட்டித் திரிந்தோம் என்று தெரியாது
இப்படிப்பட்ட நாம் இன்று லோக நாயகரான பெருமாள் திரு வாசலிலே இவருடைய புறப்பாடு பார்க்க என்ன ஸூ ஹ்ருதம் பண்ணினோம்
என்று ஸ ஹேதுக விஷயமான இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -அவ்வளவில் ஒரு ஞானாதிகர் இவரைப் பார்த்து பிரபாகரன் எம்பெருமானை ஒழிய
அபூர்வம் என்ற ஒன்றை ஆரோபித்துக் கொண்டால் போலே நீரும் ஒரு ஸூ ஹ்ருத தேவரை எங்கே தேடி எடுத்தீர் என்ற வார்த்தை
நிர்ஹேதுகத்வத்தை ஸ்தாபிக்கிற இவ்விடத்தே அனுசந்தேயம் என்கிறார் –

——————

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

ஆகையால் அஞ்ஞாதமான–இத்யாதி -இப்படிக் கேவலம் அத்தலையாலே பேறாகையாலே இச்சேதனருடைய புத்தி பூர்வம் அல்லாத
அஞ்ஞாத ஸூஹ்ருத லேசங்களையே அவலம்பித்துக் கொண்டு அங்கீ கரிக்கையே அவனுக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இனி இப்படி இத்தனையில் யாதிருச்சிகாதிகளை யாகிலும் ஹேதுவாக்கி அவன் அங்கீ கரிக்குமான பின்பு கேவலம் அத்தலையாலே பேறு என்கிற அர்த்தம்
அசங்கதம் ஆகிறதோ என்ன -இவையும் கூடி விளையும் படி இறே என்று தொடங்கிச் சொல்லுகிறது -எங்கனே என்னில்
யுக்தமான யாதிருச்சிகாதிகளும் வஷ்யமாணமான அபாபத்வமுமாகிற இவையும் கூட உண்டாம் படி இறே
இந்த யாதிருச்சிகாதிகளுக்கு ஆஸ்ரயமான இவன் தன்னை ஸ்ருஷ்டி காலத்திலே அவன் கரண களேபரங்களைக் கொடுத்து
இவனை யுண்டாம் படி பண்ணிற்று என்கிறார் –

—————

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் -இருக்கும் –

அது தன்னை -இத்யாதி -ஒவ்க பத்யம் அநுக்ரஹ கார்யமாகையாலே அவன் தான் நிர்ஹேதுக கிருபையாலே
கரண களேபர ப்ரதான த்வாரா இவனை அவன் ஸ்ருஷ்டித்த படியை நிரூபித்தால்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தத் அதீனனான இவன் தனக்குத் தன் தலையால் ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் இருக்கும் –

——————

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –

அது எங்கனே என்னில் -பழையதாக இத்யாதி -ஒருவன் தனக்கு ப்ராக்தனமான க்ஷேத்ரத்தைப் பலகாலும் உழுவது நடுவது விளைவதாய்
இப்படி கிருஷி பண்ணிக் கொண்டு போரா நின்றால் அக் கர்க்ஷகனுடைய புத்தி பூர்வம் அன்றிக்கே இருக்க அவன் கிருஷி பண்ணுகிற கட்டளை போலே
அரி தாளிலே விழுந்த உதிரி முளைத்து அவனுக்கு நல்ல பசியிலே புஜிக்கலாம் படி அது பல பர்யந்தமாமா போலே
விடை யடர்த்த பக்தி யுழவன் பழம் புனத்தில் வித்தும் இட வேண்டும் கொலோ-என்கிறபடியே
இந்த யாதிருச்சிகாதிகள் தான் பரபக்திக்கு கர்ஷகனான ஈசுவரனுடைய புத்தி பூர்வகமாகவும் வேண்டாதே
தானே விளையும்படி இறே பழம் புனமாகிற ப்ரக்ருத் யம்சமாய்
மன ஏவ மனுஷ்யாணாம்
யத்தி மனஸா த்யாயதி -இத்யாதி க்ரமத்தாலே
அந்த யாதிருச்சிகாதிகளுக்கு மூலமான மனஸ்ஸைத் தன் பால் மனம் வைக்கும் படி அந்த கர்ஷகன் திருந்த ஸ்ருஷ்டித்த க்ருஷிக் கட்டளை என்கிறார் –

———–

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் பஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

அவை தான் எவை என்னில் -ஆத்மாக்கள் அநந்தமாகையாலே ஒரு சேதனனுக்கு புண்ய ரூபமாகவும் பாப ரூபமாகவும் உண்டான
ஸ்வயம் ஆர்ஜிதமான கர்மங்களினுடைய பலங்கள் நரகாதிகளிலே நெடும் காலம் நிஸ் சேஷமாக அனுபவித்து
இனி பவிஷ்யமான காலத்திலே அந்தப் புண்ய பாப ரூபங்களை பூர்வ வாஸனா ருசி மூலமாக ப்ரவர்த்திக்கும் அத்தனை என்னும் படி
கர்ம பல அனுபவத்தில் அவன் கை ஒழிந்து அச்ச பாபனாய் நிற்கிற தசையிலே
அபேஷேத கதிம் நிரூணாம் கர்மணோ கஹநாம் கதிம் -என்கிறபடியே
நாஹம் தேவோ ந மர்த்யோ வா -என்கிற க்ரமத்திலே நாம் தாம் ஆர் என்று தன் ஸ்வரூபத்தை உணர்ந்து நம் ஸ்வரூபம் இதுவான பின்பு
நாம் இப்போது நிற்கிற நிலை ஏது நமக்கு இனிமேல் கர்தவ்யமாவது ஏது என்று இவனுக்கு அபூர்வமாகப் பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு
அந்த ஆத்ம குணங்களாதல் -பூர்வ யுக்தமான யாதிருச்சிகளாதல் -என்கிறார் –

—————–

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை-பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

அசிந்திதமாக ஒரு சேதனனுக்கு யாதிருச்சிகாதிகள் சம்பவிக்கும் க்ரமத்தை
யதா ஹி மோஷகா பந்த்தே பரிபர்ஹமுபேயுஷி நிவ்ருத்த மோஷணோத்த் யோகாஸ் ததா சந்த உதாசதே-என்று தொடங்கிச் சொல்லுகிற
பகவச் சாஸ்திரத்தத்திலே ஒரு பாகவதன் உத்ஸவ அர்த்தமாக ஆபரணாதிகளிலே அலங்க்ருதனாய்க் கொண்டு வழி போகா நிற்க
அவன் பின்னே கார்ய பரனாய்க் கொண்டு வருகிறான் ஒரு ஆயுத பாணியைக் கண்டு அந்த பாகவதனைப் பறிக்க வந்த மோக்ஷகர்
அந்த மோக்ஷண வியாபாரத்தின் நின்றும் நிவ்ருத்தராக -அத்தாலே -அந்த பின் வந்த படனுக்குப் பெரியதொரு ஸூ ஹ்ருத பலமாய் வந்து பலித்த படி
யாதொரு படி அப்படி அல்லாதாருக்கும் இவை யுண்டாம் என்று சொல்லுகையாலே இவ்வர்த்தம் பிரபல ப்ராமண யுக்தம் என்கிறார் –

ஆக
த்ரி பாத் விபூதியில் என்று தொடங்கி
நிர் ணீதமான அர்த்தம் ஈஸ்வரன் சேதனனுக்குத் தன் நிர்ஹேதுக கிருபையாலே கரண களேபரங்களைக் கொடுத்து
யாதிருச்சிகாதிகளையும் இவனுக்கு யுண்டாக்கும் இடத்தில் இவற்றில் இவன் அறிய வருமவை ஒன்றும் இல்லாமையாலே
உஜ்ஜீவனம் யாதிருச்சிகாதிகளாலும் இன்றிக்கே கேவலம் நிர்ஹேதுகம் என்னும் இடம் நிச்சிதம் என்றதாயிற்று –

——————-

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் -இறே –

வெறிதே அருள் செய்வர் -இத்யாதி -அதுக்கடி-ப்ரமாணிகரில் ஆப்த தமரான ஆழ்வார்
வெறிதே அருள் செய்வர் -என்று விசேஷித்து இவ்வர்த்தத்தை வெளியிடுகையாலே இறே -என்கிறது –

—————-

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூ ஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

அவ்விடத்தில் தன் கைம்முதல் கொண்டு திரு உள்ளம் உகக்கும் படி -செய்வார்கட்க்கு அருள் செய்வர் -என்கையாலே
அவ்வருள்களுக்கு ஹேது ஸூ ஹ்ருதமாய்த்து இல்லையோ என்னில்
அங்கனே விவஷையாகக் கொள்ளும் இடத்தில் -வெறிதே -என்ற பாசுரம் ஸ்வ வசன விருத்தத்வேந அசங்கதமாம் என்கிறார் –
செய்வார்கட்க்கு என்று
தான் செய்ய நினைத்தவர்கட்க்கு என்ற போது
வெறிதே என்ற இடம் சங்கதமாம் இறே –

—————————–

சூரணை -395-

பகவத் ஆபிமுக்க்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —

ஆகிடுமானாலும் இவனுக்கு பகவத் விஷயீ கார பூர்வ பாவியான அத் வேஷ ஆபி முக்யங்கள் மாத்ரம் ஸூ ஹ்ருதம் அடியாக வந்ததானாலோ என்ன
அத்தைத் துடைக்கிறார் மேல் -பகவத் ஆபி முக்யம் இத்யாதி -அதாவது
அத்வேஷ அநந்தர பாவியான பகவத் விஷயத்தில் இவனுக்கு யுண்டாம் ஆபி முக்யம் இவன் பண்ணின ஸூ ஹ்ருதம் அடியாக அன்றிக்கே
பகவத் கிருபையாலே வேணுமாகில் யுண்டாகிறது
ஏதத் பூர்வ பாவியாய் அகிலாத்ம குண ப்ரதானமான அத்வேஷ மாத்ரம் இத் தலையில் ஸூ ஹ்ருதம் அடியாக சம்பாவித்ததானாலோ என்னில்
அநாதி காலம் ஸம்ஸரித்து பகவத் விமுகனாய்ப் போந்த இவனுக்கு அவ்விஷயத்தில் அத்வேஷ யுக்தனாகை யாகிற இம்மஹா பலத்துக்கு
அஞ்ஞனாய் -அசக்தனாய் அஸ்வதந்த்ரனாய் இருக்கிற இவன் பண்ணும் ஸூ ஹ்ருதத்தைக் காரணம் ஆக்குகை
தூரதோ நிரஸ்தம் என்கிறார் –

——————

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

ஸாஸ்த்ரமும் விதியாதே -இத்யாதி -இப்படி பகவச் ஸாஸ்த்ர ப்ரஸித்தமான ஸூ ஹ்ருதங்களினுடைய அனுஷ்டான க்ரமத்தை
ஏஷ ஏவம் குர்யாத் -என்று ஒரு ஸாஸ்த்ரங்களும் விதியாதே –
அந்த ஸாஸ்த்ரங்களினுடைய விதி விஷயமான நாமும் அறியாதே வருமவையான பின்பு ஸூ ஹ்ருதம் என்ற ஒன்றை முதலிலே
அநபிஞ்ஞரான நாம் நாம கரணம் பண்ணும் படி எங்கனே என்று வ்யுத்பித் ஸூ க்களுக்கு சங்கையாக
தன் நிவ்ருத்யர்த்தமாக அதுக்கு நாமதேய கர்த்தாக்கள் நாம் அன்று
பிதா புத்ரஸ்ய நாமதா -என்ற ந்யாயத்தாலே
ஸர்வஞ்ஞனாய்-நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் என்று ஆச்சார்ய பரம்பரையை ஆஸ்ரயித்து
இவ்வர்த்தத்தை அத்யவசித்து இருக்கையாய் இருக்கும் என்று யுக்த அர்த்தத்தை த்ருடீ கரிக்கிறார் –

—————–

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

இவ்வர்த்த விஷயமாக இத்யாதி -இந்த நிர்ஹேதுக ஸ ஹேதுக ரூபமான இவ்வர்த்தம் விஷயமாக மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் பாசுரங்களிலேயும்
மாதவன் என்றதே கொண்டு
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன –
இத்யாதிகளாலும்
வெறிதே அருள் செய்வர்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்னும் இத்யாதிகளிலும்
ஸ ஹேதுகமாகவும்
நிர் ஹேதுகமாகவும்
அருளிச் செய்கையாலே -ப்ரதீதியில் அவை அந்யோன்யம் விருத்த யுக்திகள் போலே ப்ரதிபாஸிக்கும்
இனி அல்லாதவற்றைப் பற்ற இத்திரு நாமத்துக்கு வாசி அறியாது இருக்க வசன மாத்ரத்தைக் கொண்டு
அந்தப்புர பரிகரர் சொல்லும் அத்தை அன்றோ இவன் சொல்லிற்று என்றும்
ஆழ்வீர் திருமாலிருஞ்சோலை மலை என்றீரே என்ன
அவரும் நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேனோ என்ன
இப்போது இப்படிச் சொன்னீரே என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் என்றும்
இப்படி அந்த ஸ ஹேதுக ப்ரதிபாஸ வாக்யங்களுக்குச் சொல்லும் பரிஹாரங்களும் இவ்வர்த்தத்துக்கு உபோத் பலகமாக ஸாஸ்த்ரங்களிலே
ஏவம் ஸம் ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுப ஜாயதே என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேந மஹா மதே ஆச்சார்ய விஷயீ காரத் ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்றும்
நாசவ் புருஷகாரேண ந சாப்யன்யேந ஹேது நா கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷ்யே கஞ்சித் கதாசன -என்றும்
இத்யாதி வக்தவ்யங்களான பிராமண விசேஷங்களும்
இப்பிரபந்த விஸ்தர பீதயா பறக்க பரக்க அருளிச் செய்கிறிலோம் என்கிறார் –

————-

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

ஆகையால் இத்யாதி -பிரதமத்திலே இவனுக்கு அத்வேஷ ஆபி முக்யங்கள் உண்டாய்த்தும் அத்தலையாலே யான பின்பு
கேவல பகவன் நிர்ஹேதுக கிருபையாலே உஜ்ஜீவனம் ஆகையாலே இச்சேதனன் தன் பக்கல் விமுகனான ஸம்ஸார தசையிலும் கூடக்
கீழ் யுக்தமான பிரகாரத்திலே உஜ்ஜீவிக்கைக்கு கிருஷி பண்ணின
காருண்யாதி குண விசிஷ்டனாய் ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை அனுசந்தித்தால் முமுஷுவானவன் எப்போதும்
ஸம்ஸார துக்க நிமித்தமாக நிர்ப்பயனாய் நிர்ப்பரனாய்
இருக்கும் அத்தனை என்று கீழே -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்றத்தை நிகமிக்கிறார் –

————

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு –

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைப்பாரை போலே –வ்யாப்தியும் –

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

எதிர் சூழல் புக்கு இத்யாதி -இப்படி இவ்வதிகாரி தான் விமுகனான தசையிலும் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே உஜ்ஜீவிக்கைக்குக் கிருஷி பண்ணின ஈஸ்வரன் அளவில்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -என்கிற படியே
த்ரி பாத் விபூதி -என்று தொடங்கிச் சொன்ன ஸ்ருஷ்டி மாத்ரத்தையே ஆஸ்ரித அர்த்தம் என்று அனுசந்தித்து
நிர்ப்பயனாய் இருக்கும் அளவே யன்று
சத்தா தாராகத்வேந ஸர்வ ஸாமான்யமாக உண்டான வியாப்தியையும்
முற்றுமாய் நின்ற எந்தாயோ என்கையாலே
கீழ்ச் சொன்ன ஸ்ருஷ்ட்டியையும்
எதிர் சூழல் புக்கு -என்ற இடத்தில் சொல்லுகிற அவதாரத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆழ்வார்கள் அனுசந்தித்தாப் போலே
ஸ்வார்த்தமாக என்று இறே இந்த ஞானாதிகரும் அனுசந்தித்து நிர்ப்பயராய் இருப்பது -என்கிறார் –

———————

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் –

கர்ம பலம் போலே -இத்யாதி -இத்தால் கீழ் அர்த்தமாக வந்த வியாப்திக்குத் த்ருஷ்டாந்தமாக அந்த அவதாரத்தைச் சொல்லுகிற
எதிர் சூழல் புக்கு -என்கிற ப்ரமாணத்திலே
விதி சூழ்ந்தது -என்று பகவத் கிருபையை விதி ஸப்தத்தாலே அருளிச் செய்வான் என் என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம்-என்கிற விதி ரூப கர்ம பல அனுபவம் அவர்ஜனீயம் ஆனால் போலே
அவனுடைய கிருபா பலமும் இவ்வதிகாரிக்கு அனுபவித்தே விட வேண்டும்படி இருக்கையாலே
கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் -என்கிறார் –

———–

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –

சேதனன் கர்ம பரதந்த்ரனாகையாலே தத் பலம் அனுபவிக்கிறான் -அச்சேதனனுக்கு
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ் மதாதே கீடஸ்ய சக்திர் பத ரங்க பந்தோ
யத் த்வத் க்ருபா மப்யதி கோச கார ந்யாயா தசவ் நஸ்யதி ஜீவ நாஸம் -என்கையாலே
அக்கிருபையைத் தகைய வழி யுண்டே என்ன
இவனே யல்ல
ஸர்வ சக்தியான அவன் தானும் கூடத் தகைந்தாலும் இவ்விருவர் ஸ்வா தந்தர்யத்தாலும் தகைய ஒண்ணாத படி
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக கிருபை பெருகப் புக்கால் சேதனனுடைய ஸ்வா தந்தர்ய ரூபமான அஹம் மமதைகளாகிற கரையும்
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்ய ரூப தண்ட தரத்வமாகிற கரையும் இடியும்படி உத் கூலமாய்க் கொண்டு பெருகும் என்கிறார் –

—————-

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

சூரணை -405-

பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —

இனி பய ஹேது கர்மம் என்று தொடங்கி -கீழே ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது என்றஇரண்டையும் நிகமித்து
ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறார் –
இப்படி இவன் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து பயப்படுகைக்கு ஹேது
ந நிந்திதம் கர்ம ததஸ்தி -என்கிற ஸ்லோகத்தின் படியே
அந்த தோஷ ஹேதுக்களான துஷ் கர்மங்கள் பகவத் குண அனுசந்தானத்தாலே நிர்ப்பரனாய் இருக்கைக்கு ஹேது
அநுத்தமம் பாத்தரமிதம் தயாயா -என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீ நம் -என்றும் அருளிச் செய்கையாலே
அவனுடைய ஸகல குண ஸாகல்யமான நிர்ஹேதுக கிருபை
இந்த முமுஷு அதிகாரிக்கு அந்த கர்ம ஹேதுவான பயமும் காருண்ய ஹேதுகமான அபயமும்
முந்நீர் ஞாலம் சீலமில்லாச் சிறியேன் -துடக்கமானவற்றிலும்
வைகுந்தா மணி வண்ணன்
கேசவன் தமர் -தொடக்கமானவற்றிலும்
ஆழ்வாருக்கு பர்யாயேண அனுவர்த்தித்திக் கொண்டு போந்தாப் போலே
பேஷஜம் பகவத் ப்ராப்தி -என்கிற பகவத் பிராப்தி பலிக்கும் அளவும் பர்யாயேண ஸ்வயமேவ அனுவர்த்தித்து விடும் என்கிறார் –
தன்னை இட்டுப் பார்த்தால் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகாகவும்
அவனை இட்டுப் பார்த்தால் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாகவும் நினைக்கை
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் ப்ராப்தம் இறே –

——————

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது-

நிவர்த்ய ஞானம் இத்யாதி -இந்த பயா பயங்களினுடைய சரம அவதியான ஹேதுக்களாவது
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி
நிவர்த்யமான அவித்யாதி ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய ஞானமும் –
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் -என்னும்படி
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்கிற தந் நிவர்த்தகத்தினுடைய ஞான சக்த்யாதி கல்யாண குண யாதாத்ம்ய ஞானமும் -என்றதாய்த்து –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –7–ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் –சூர்ணிகை–321–365—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –

இனி சிஷ்யன் -என்று தொடங்கி -கீழே ஆச்சார்ய சோதனத்தையும் -மந்த்ர சாதனத்தையும் பண்ணி –
மேல் ப்ரஸ்துதமான சிஷ்ய லக்ஷணத்தையும் சோதிக்கிறார் -சிஷ்யன் என்பது இத்யாதி –
ஸிஷ்யன் என்பது சாத்யாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யாதி புருஷார்த்தங்களில் அத்யந்த நிவ்ருத்தியும்
உத்தம புருஷார்த்த ரூபமான பலத்திலும் தத் சாதனத்திலும் யுண்டான ஸ்ரோதும் இச்சையும்
அன்றியே
ஸா வித்யா என்கிற வித்யார்த்தியான இவனுக்கு பலம் ஞானமாகையாலே
தத் சாதன பூதனான ஆச்சார்யன் பக்கலிலே அனுவர்த்தனமும் என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
குரு ஸூஸ்ரூஷயா வித்யா புஷ்கலேந தநேந வா -அதவா வித்யயா வித்யா சதுர்த்தா நோப லப்யதே -என்கிற
ஸ்லோகத்தில் வித்யை யாகிற பலத்துக்கு ஸாதனமாகச் சொன்ன சாதன த்ரயத்திலும்
ப்ரதமோபாத்தமான சாதனமான ஸூஸ்ரூஷை என்னவுமாம்

இந்த குரு ஸூஷ்ரூஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச் சென்ற
ப்ராஹ்மண புத்ரனைத் தன்னுடைய பஸூ பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய
ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து
அப்பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக் கன்று உண்ணுகிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகையாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து
அப்பச்சிலைகளும் தீய்ந்த வாறே எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க அவ்விடத்திலும் கன்று உண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

ஆக -இப்பல சாதன ஸூஸ்ரூஷையும் த்யாஜ்யமான ஸம்ஸார வெக்காயத்தினால் யுண்டான ஆர்த்தியும்
உபாதேய தமமான பகவத் குண அனுபவத்தில் ஆதரமும்
ஆச்சார்யன் பகவத் பாகவத வைபவங்களைப் பரக்க உபபாதியா நின்றால்
ப்ராவஷ்யாமி அநஸூயவே-என்னும்படியான அநஸூய அதிகாரமும் உடையவனை -என்கிறார் –

———–

சூரணை -322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

இப்படி யுக்த லக்ஷணோ பேதனான இந்த சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் அனுசந்தான க்ரமத்தை விதிக்கிறார் -மந்த்ரமும் தேவதையும் -இத்யாதியாலே -அதாவது
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி குரு ரேவ பராயணம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிகம் ஸர்வம் ஸ ஸாஷ்டா ஷரதோ குரு இத்யேவம் யே ந மன்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி -என்றும் சொல்லுகையாலே –
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர-என்கிறபடியே ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரமும்
அம்மந்திரத்துக்கு உள்ளீடான பரதேவதையும்
அந்தப் பர தேவதையுடைய நிர்ஹேதுக கிருபா லப்யமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்ய ரூப பலமும் –
அப்பல அநு பந்திகளாய் வரும் அவித்யா நிவ்ருத்தி முதலாக -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் -அர்ச்சிராதி கதி -ஸாலோக்யாதிகள் -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவாதிகள் -என்கிற இவையும் –
இப்புருஷார்த்த ப்ரதமான சாதனமும் -இன்னமும் –
அன்னவான் அந்நாதோ பவதி மஹான் பவதி ப்ரஜயா பஸூபி ப்ரஹ்ம வர்ச்ச ஸேந மஹான் கீர்த்தயா -என்றும்
தன் நம இது யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா -என்றும்
நின்னையே தான் வேண்டி -நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் ப்ரஸாத லப்தமாய் வரும் ஐஹிக போகம் முதலான அனுக்தமான அகிலமும் தன்னுடைய ஆச்சார்யனே என்று அனுசந்தித்து இருக்கக் கடவன் என்கிறார் –
இவை எல்லாம் ஆச்சார்யனே என்று விதிக்கிறது -இவனுக்கு த்யாஜ்ய உபாதேய விபாக ஞானம் முதலாக நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண மோக்ஷ பர்யந்தமாக
அவ்வாச்சார்ய ப்ரஸாத ஏக லப்தமாய்க் கொண்டு வருகையாலே -என்கை –

—————

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

இதுவே பரமார்த்த உபதேஸம் என்னும் இடத்தை த்ருடீ கரிக்கைக்காக பரமாச்சார்யரான ஆளவந்தாரும்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி ஸர்வம் -என்று அருளிச் செய்தார் என்று ஆப்த வசனத்தையும் எடுக்கிறார் –

—————–

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

மேல் -இதுக்கு அடி உபகார ஸ்ம்ருதி என்றது -இப்படி ஆச்சார்யனே இவை எல்லாமாக இவன் அனுசந்திக்க
வேண்டுகைக்கு அடி அவன் பண்ணின உபகார பரம்பரைகளையே பலகாலும் ஸ்மரிக்கையாலே என்கிறது –

————

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –

இந்த உபகாரத்தை ஸ்மரிக்கைக்குத் தான் பிரதம ஹேது என் என்னில் ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞதை-அதாவது –
ஆச்சார்யன் தன் பக்கல் பண்ணின உபகாரங்களைத் தன் வாக்காலே பலகாலும் சொல்லுகையாலே என்றபடி –
க்ருதஜ்ஜை என்னா நிற்க வாக்காலே சொல்லுகிறபடியை காட்டுகிற படி எங்கனே என்ன
மனஸ் பூர்வகமாக வாக்குச் சொல்ல வேண்டும் ப்ராதான்யத்தை இட்டு என்று அருளிச் செய்வர் –
இனி முடிந்த நிலம் ஈஸ்வரன் பாக்கள் க்ருதஜ்ஞதை என்கிறார் –

—————–

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

ஆக -ஆச்சார்ய சோதனமும் -மந்த்ர சோதனமும் -ஸிஷ்ய சோதனமும் -பண்ணி
அந்த ஸிஷ்ய ஆச்சர்யர்களுக்கு அந்யோன்யம் உண்டாக்க கடவ பரிமாற்றத்தை மேல்
ஸிஷ்யனும் ஆச்சார்யனும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

————-

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

அந்த ஸிஷ்யனும் ஆச்சார்யனும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டும் நடத்தும் இடத்தில் -ஸிஷ்யன் தான் -இத்யாதி –
ஸச் ஸிஷ்யனான தான் -ஆச்சார்யாய ப்ரியந்தம் ஆஹ்ருத்ய -என்கையாலே அவ்வாச்சார்ய முகோல் லாஸமே பரம புருஷார்த்தம் என்று
தத் அநுரூபமாக கிஞ்சித் காராதிகளாலே ஸர்வ பிரகாரத்தாலும் அவனுடைய
பிரியத்தையே ஆதரித்துக் கொண்டு போரக் கடவன்-

ஈஸ்வரனைக் கொண்டு -இத்யாதி –
இனி அவ் வாச்சார்யனுடைய ப்ரக்ருதி வாஸனையாலே வரும் அனுஷ்டானங்கள் உண்டானால்
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்-என்கையாலே தான் ரஹஸ்யமாகப் போதித்தல் –
ஆச்சார்ய சமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை இடுவித்து போதிப்பித்தல் செய்தாலும் அவன் மீளா விடில்
இவ் வடிகளுக்கு இந் நினைவை பூர்வ அனுஷ்டானத்தை அனுவர்த்திக்கும் படி -ஈஸ்வரனைப் பிரார்த்தித்து -ஹிதத்தை நடத்துதல் –
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே கீழையூரிலே தேவதாஸி பக்கலிலே ஸக்தராய்
சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க விஷண்ணராய்
பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும் இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்ப்பந்திக்க –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு -வந்து ஸ்ரீ பீடத்தின் கீழே தெண்டனாய் விழுந்து இப்படி இவ்வடிகளுக்கு அமுது படி த்ரோஹ பர்யந்தமாக
ஆத்ம நாஸம் பிறக்கும் அளவில் தேவரீர் ரக்ஷித்து அருள வேணும் என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக
உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே அப்போதே அவர்கள் நினைவு மாறி -என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய்
இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர -அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து
வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாய்த்து இறே

ஆச்சார்யன் இத்யாதி -இனி ஆச்சார்யன் இந்த ப்ரிய ஹிதங்களை ஸிஷ்யனுக்கு மாறாடி நடத்துகையாவது
தானே ஸாஸ்த்ர யுக்தமாய் வரும் விதி நிஷேத ரூபமான ஹிதத்திலே இவனைப் ப்ரவர்த்திப்பித்து
இந்த ஸிஷ்யனுக்கு ஐஹிக போக ரூபமான ப்ரியத்தை எம்பெருமானைக் கொண்டு நடத்தக் கடவன் என்கிறார் –
அதாவது
திவ்ய தேச வாஸ ஸேவா விரோதங்கள் பிறக்கும்படியான த்ருஷ்ட சங்கோசத்தில் அத்தை எம்பெருமான் பக்கலிலே
தான் ப்ரவர்த்தித் தாகிலும் இவன் உக்கத்தை உண்டாக்குகை –
இது தன்னை ஆழ்வான் விஷயமாக உடையவர் பெரிய பெருமாள் பக்கலிலே பிரார்த்தித்து உண்டாக்கினார் இறே –

—————–

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

ஆனால் இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் இருவரும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டையும்
இப்படி நியமேன நடத்திக் கொண்டு போரக் கடவர்களோ என்னில் –
ஒருவர் ஒருவருக்கு இவற்றில் ஒன்றிலே ஊன்றி நிற்கை ஸ்வரூபமாகையாலே
ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய உகப்பிலே நிலை நின்று போரும் என்றும்
ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய ஸ்வரூப உஜ்ஜீவனத்திலே நிலை நின்று போரும் என்றும்
அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

ஆகையால் இத்யாதி -இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய ப்ரிய ஏக பரனாய் வர்த்திக்கையாலே இவன்
அந்த ஆச்சார்யனுடைய உகப்புக்கே விஷயமாகை ஒழிய சீற்றத்துக்கு விஷயமாகைக்கு அவசரம் இல்லை என்று
அவன் நிக்ரஹம் இவனுக்கு உபாதேயம் என்கைக்காக
அத்தை ப்ரசம்சிக்கிறார் –

——————

சூரணை -330-

நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் போது -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய யாத்ருச்சிகமாய் வரும் நிக்ரஹத்துக்கு இந்த ஸிஷ்யன் விஷயமாம் போது
ஸ்வ ப்ரயோஜன அர்த்தம் இன்றிக்கே ஸ்வரூப உஜ்ஜீவன அர்த்தமாக ஸிஷ்யனை நியமித்து நல் வழி போக்குகையும்
அந்த நியமனத்தில் சிஷ்யன் வர்த்திக்கையும் இருவருக்கும் ஹிதமாய் இருக்கையாலே இந்த நிக்ரஹம் அங்கீ கார்யம் என்கிறார் –
அல்லது க்ரோதம் த்யாஜ்யம் என்று நினைத்து ஈஸ்வரன் கை யடைப்பாக்கின விஷயத்தை நியமியாதே நெகிழ்க்கை அநபிமதம் இறே

————-

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-

ஆனால் இந்த நிக்ரஹம் இருவருக்கும் உபாதேயமாகில் இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுக்கு ஸதா நிக்ரஹ பாத்ரமாம் படி வர்த்திக்கக் கடவனோ என்னில்
ஸிஷ்யனுக்கு இத்யாதி -அது ப்ராப்தம் அல்ல -இந்த ஸிஷ்யனுக்கு நிக்ரஹ ஹேதுக்களில் நிரதனாய்ப் போருமது த்யாஜ்யம் –

——————

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

இங்கனம் நிரதன் அன்றிக்கே இருக்கச் செய்தே அவ்வாச்சார்யன் யாதிருச்சிகமாக நியமித்தானாகில் -நிக்ரஹம் -இத்யாதி –
இந்த ஆச்சார்யனுடைய நிக்ரஹம் தான் –
ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி
ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும் –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரானே -என்றும் சொல்லுகிற படியே
சேதனனுக்கு மஹா உபகாரகமான நியமனம் போலே
ப்ராப்யமான பலத்திலே அன்வயித்து விடும் என்கிறார் –
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோஸ்துதே தேவ வராப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் பூத சரண்ய சங்கே -என்று
பீஷ்மரும்
பகவானுடைய நிக்ரஹ ரூபத்தை தமக்குப் ப்ராப்யமாகவே அனுசந்தித்தார் இறே –
அன்றிக்கே –
இன்று -யதா ஞானம் பிறந்தவனுக்கும் பூர்வ அவஸ்தையில் ஸம்ஸாரத்தால் வந்த பகவன் நிக்ரஹம் வித்யா பாரங்கதனான ஸிஷ்யனுக்கு
உபாத்யாயனுடைய நியமனம் உபகார ஸ்ம்ருதி பண்ணும்படி உத்தேச்யம் ஆனால் போலே
ப்ராப்ய அந்தர் கதம் ஆகிறவோ பாதி ஆச்சார்ய நிக்ரஹமும் என்றுமாம் –

இவ் வர்த்தத்தைக் கூரத்தாழ்வானும் அருளிச் செய்தார்-எங்கனே என்னில் -திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத்
பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்ய -பெருமாளும் திரு முகம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் -என்ன
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்தேற எழுந்து அருளி
ஆழ்வானை அருளப்பாடிட்டு -பல வேளையிலே நீ இப்படிச் செய்தாயே என்ன –
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று
தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால் ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் ப்ரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே –

————

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய -இத்யாதி -ஆக ஸிஷ்யனுடைய ஹிதத்திலே ஊன்றிப் போருகிற ஆச்சார்யன்
அந்த ஸிஷ்யனுடைய ஹித தமமாம் படி ஸ்வரூபத்தையே நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்றும்
ஆச்சார்ய ப்ரிய ஏக பரனான ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய திரு மேனியைப் பேணும் இடத்தில்
மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ -என்றும்
ஸ்வயம் தேஹ அநு கூலாநி தர்மார்த்தோ பதிகாநி ச குர்யாத ப்ரதி ஷித்தாநி குரோ கர்மாண்ய சேஷத -என்றும் சொல்லுகிற படியே
நிரந்தரமாக நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்று உக்த அர்த்தத்தை விஸதீ கரிக்கிறார்

————-

சூரணை -334-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –

இனி இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸ்வரூப ரக்ஷணத்துக்கும் -ஆச்சார்ய விக்ரஹ ரக்ஷணத்துக்கும் பலம் எது என்ன -இரண்டும் இருவருக்கும் இத்யாதி-
ஸிஷ்யன் ஸ்வரூபத்தைப் பேணியே ஆச்சார்யனுடைய ஸ்வரூப ஸித்தியாய்
ஆச்சார்யன் விக்ரஹத்தைப் பேணியே சிஷ்யனுடைய ஸ்வரூப ஸித்தியுமாய் இருக்கையாலே
அவை இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஸரீராணி மநீஷிணாம்-யதோ நாராயண ஸாஷாத் ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித -என்கையாலே
ஸிஷ்யனுக்கு ஜங்கம ஸ்ரீ விமான ரக்ஷணமும்
ஆச்சார்யனுக்கு ஈஸ்வரன் கையடைப்பாக்கினவனை நல் வழி போக்குகையும் அவனுக்கு உகப்பாகையாலே
பகவத் கைங்கர்யமாய் இருக்கும் என்கிறார் –

————

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் இத்யாதி -இந்த ஆச்சார்யனும் ஸிஷ்யனும் ஆத்ம ரக்ஷணத்திலும் தேஹ ரக்ஷணத்திலும் கீழ் யுக்தமான
க்ரமத்தில் அன்றிக்கே இவற்றை அந்யோன்யம் மாறாடி அனுஷ்ட்டித்தால் வருவது என் என்ன –
இருவருக்கும் ஸ்வரூப ஹானியே வரும் என்று தொடங்கி யுக்தமான ஸிஷ்ய ஆச்சார்ய லக்ஷணத்தை ஸ பிரகாரமாக உப பாதிக்கிறார்
மனஸ் ஸூக்குத் தீமையாவது -என்னும் அளவாக –

இதில் ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -தான் ஸிஷ்யன் பக்கலிலே அர்த்தித்தே யாகிலும் ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணிக் கொள்ளுகை ஸ்வரூப ஹானி என்றபடி –

சிஷ்யனுக்கு ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி -இத்யாதியில் படியே
ஸ்வ ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்ய அதீனம் என்று இராதே ஸ்வ அதீனம் என்று இருக்கை -ஸ்வரூப ஹானி -என்றபடி –

அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது தான் -ஸிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி
அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும் –

ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் தான் பலகாலும் பிரவர்த்தித்துக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம் –

——————-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் யதா க்ரமம் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும் இடத்தில் அவற்றுக்கு வரும் அந்தராயங்களை அருளிச் செய்கிறார் –
ஆச்சார்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் -இத்யாதியாலே –
ஆச்சார்யன் தன் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் மண்ணுக்கும் சோற்றுக்கும் வாசி அறியாதாரைப் போலே
ஒரு த்யாஜ்ய உபா தேயம் அறியாத இவனை பகவான் நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆக்கினான் என்று இராதே -இவ்வவஸ்தா பன்னன் ஆக்கினேன் நானே என்கிற அஹங்காரம் விரோதி
ஸரீரம் அர்த்தம் இத்யாதியில் படியை யுடைய ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹ ரக்ஷணம் பண்ணும் இடத்தில் நான் என்னுடைய த்ரவ்யங்களைக் கொண்டு என் கரணங்களாலே இறே
இது நெடும் காலம் செய்தேன் என்கிற மமகாராம் விரோதி –

——————

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

இவ்வஹம் மமதைகள் இன்றிக்கே இவர்கள் பரிமாறும் படி தான் எங்கனே என்ன -அத்தைச் சொல்லுகிறது
ஆச்சார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் -தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது -ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிற
பிராமாணிகனான ஸச்சிஷ்யன் வஸ்துவைக் கொண்டு
பண்ணக் கடவன் என்றபடி –
ஸிஷ்யன் ஸ்வ தேஹ ரக்ஷணம் ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது
த்ரய ஏவாதநா ராஜன் -என்று தொடங்கி
யஸ்யைத தஸ்ய தத்தநம் -என்கிற நியாயத்தாலே
ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணக் கடவன் என்கிறது –

—————

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆச்சார்யன் சிஷ்யன் வஸ்துவை இத்யாதி -கீழே தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு என்ற இடத்தில்
ஸிஷ்யன் வஸ்துவே ஆச்சார்யன் வஸ்துவாக நீர்ணீதமாய்-ஆச்சார்யன் ஸிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவன் அல்லன் என்கிறது –
ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்து உண்டாகில் அத்தை அங்கீ கரிக்கக் கடவன் அல்லன் என்கிறது அத்தனை –
ஸிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவன் அல்லன் – என்கிறதும் தனக்கு மமதா விஷயமாக ப்ரதிபன்னமான வஸ்து உண்டாகில்
அவை அங்குற்றைக்கு அநர்ஹம் என்கைக்காகச் சொல்லுகிறது –

இவ்வர்த்தம் தன்னை நஞ்சீயர் விஷயமாக பட்டர் சோதித்து அருளினார் இறே -அதாவது
பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்து என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தனம் ஒழிய இல்லை என்ன –
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர் களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போகவிட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்தில் தனம் இருக்கிறது – அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திருமாளிகையில் சிலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையிலே வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர-அத்தைக் கண்டருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்துக் கழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள்-என்று அருளிச் செய்தார் இறே –

—————-

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

கொள்ளில் மிடியனாம் இத்யாதி -இப்படி ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான தனத்தை ஆசா லேசத்தாலே
ஆச்சார்யன் அங்கீ கரிக்கப் பார்த்தானாகில் அடங்கெழில் ஸம்பத்து -இத்யாதியில் படியே
அவாப்த ஸமஸ்த காமனை அண்டை கொண்டு இருக்கிற அவ்வாச்சார்யனுக்கு மிடி வந்து மேலிட்டதாம்
அடியிலே ஆச்சார்ய விஷயத்திலே அகில ஸமர்ப்பணத்தைப் பண்ணின ஸிஷ்யன் அத்தை மறந்து ஸ்வ அபிமான அந்தர் கதமான தொரு
த்ரவ்யம் யுண்டாக நினைத்து அத்தை அவனுக்குக் கொடுக்கில்
ஆதி மத்ய அவசாநம் க்ருத்ரிம வ்யாபாரனாய் விடுகையாலே பெரு நிலைக் கள்ளனாம் –

———————–

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

இப்படிக் கொடுத்தோம் கொண்டோம் என்கிற நினைவால் வருகிற கொள் கொடை யுண்டாகில்
ஸிஷ்ய ஆச்சார்ய ரூப சேஷ சேஷி பாவ சம்பந்தம் குலைந்தே போம் என்கிறார் –
ஆசாஸநோ ந வை ப்ருத்ய ஸ்வாமிந் நாத்மந ஆசிக்ஷ ந ஸ்வாமி ப்ருத்ய ஸ்வாம்யம் இச்சன் யோராதி வாஸிஷ -என்றான் இறே ஸ்ரீ ஸூக மகரிஷியும் –

————-

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

இவன் மிடியன் ஆகையாலே -இத்யாதி -இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் அகிஞ்சன ஸ்வரூபனான ஸிஷ்யன் அந்த ஸ்வரூப ஞானத்தாலே கொடான் என்றும் –
ஞானாம் ருதேந த்ருபதஸ்ய க்ருதக்ருத் யஸ்ய யோகிந நை வாஸ்தி கிஞ்சித் கர்தவ்ய மஸ்தி சேந்ந ஸ தத்வ வித் -என்கையாலே
பரிபூர்ண ஞான அம்ருத திருப்தனாய்க் கொண்டு ஆச்சார்யன் பூர்ணனாய் இருக்கையாலே கொள்ளான் என்றும் –
இப்படிக் கொள் கொடைகளுக்கு ஸ்வரூபத இருவருக்கும் யோக்யதை இல்லாமையாலே இருவருடையவும் ஸ்வரூபமும்
உஜ்ஜீவித்தது என்னும் இடத்தை -அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும்
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும் அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

ஆனால் ஸிஷ்யன் இத்யாதி -இப்படி இருவருக்கும் ஸ்வரூபத கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லாமையாலே -சேஷ பூதனான ஸிஷ்யனுக்கு
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கையாலே கிஞ்சித் கரித்தே ஸ்வரூப ஸித்தி யாகில்
இவன் சேஷியான ஆச்சார்யனுக்குப் பண்ணும் கிஞ்சித்காரம் ஒன்றும் இல்லையோ என்னில்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாயும் -அந்த ஆச்சார்யன் நினைவாலே இவன் பண்ணும் கிஞ்சித் காரங்கள் உண்டு என்கிறார் –

—————

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

மேல் -அதாவது -இத்யாதி -இந்த ஸிஷ்யன் பண்ணும் ப்ரவ்ருத்தி ரூபமான கிஞ்சித் காரங்களை பிரதமத்திலே சொல்லுகிறது –
அந்த கிஞ்சித் காரமாவது -மெய்ம்மையை மிக யுணர்ந்து -என்கிறபடியே ஸ்வரூப யாதாம்ய ஞானத்தில் நிரந்தரமான உணர்த்தியிலும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயத்தில் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்கிறபடியே நாள் தோறும் உண்டான அத்யவசாயத்தாலும்
அவ்வுபாய லப்யமான உபேயத்தில் ஒழிவில் காலத்தில் படியே யுண்டாம் அபி நிவேசத்திலும்
அந வரதோத் யுக்தனாகையும்
இவற்றுக்கு அனுரூபமான ஸதாசாரத்திலே ப்ரவ்ருத்தனாகையும்
இவை ப்ரவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்கள் –

———————-

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

இனி ஆச்சார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்குத் தவிர வேண்டுவது -என்று தொடங்கி
இவனுடைய நிவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்களை சொல்லுகிறது மேல் –

————

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

பகவத் த்ரவ்ய அபஹாரமாவது -என்று தொடங்கி யுக்தமான நிவ்ருத்தி ரூப நிவ்ருத்தி விசேஷங்களை விவரிக்கிறார் -அதாவது
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும்
சோரேண ஆத்ம அபஹாரிணா -என்றும் சொல்லுகிற
ஸ்வரூப ஹானியான ஸ்வ ஸ்வா தந்தர்யமும்
ப்ரஹ்மாதி மாதா பிதா பர்யந்தமான அந்நிய சேஷத்வமும்

இனித்தான் ராம தனத்தை ஸ்வாதீனமாக்க நினைத்த ராவணனைப் போலே இறே ஸ்வா தந்தர்யம்

இனி பகவத் போஜன ரூபமான அவனுடைய ரக்ஷகத்வ க்ரமத்தை விலக்குகை யாவது
ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்குப் புறம்பே ஆளிடனாலும்
ந ஹி பாலந ஸாமர்த்யம் -என்று தொடங்கி
சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -என்கையாலே
அவனுக்கே அசாதாரண விருத்தியாய்
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதியில் படியே ரக்ஷிக்குமவனுடைய
சர்வ பிரகார ரக்ஷகத்வ க்ரமத்தைத் தன் மேலும் பிறர் மேலும் ஏறிட்டுக் கொள்ளுகை -அதாவது –
அவ ரக்ஷணே -என்கிற தாது ஷயம் பிறக்கும் படி
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்ன
ந நமேயந்து கஸ்சந -என்று கலக்குகை இறே
உண்பது கொண்டார் உயிர் கொண்டார் -என்று லோக வார்த்தையும் யுண்டு இறே –

————

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –என்றது இந்த ரக்ஷகத்வம் தான் இதர ஷமம் அல்ல என்னும் இடத்தை
ப்ரபந்ந பவித்ராணம் என்கிற பிரபந்த முகத்தாலே பரக்க ப்ரதிபாதித்தோம் என்கிறார்-

குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தை படி அனுஷ்டியாது ஒழிகையும்
அநதி காரிகளுக்கு உபதேஸிக்கையும்
மந்த்ர பரிபவமாவது
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும்
தத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும்-

குரு பரிபவமாவது -இத்யாதி -ஒரு ஆச்சார்யன் பக்கலிலே அர்த்த விசேஷங்களைக் கேட்டு வைத்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் தன் பக்கல் இல்லா விடில்
அவ்வனுஷ்டானம் தன்னையே அவ்வாச்சார்யனுக்கும் அபிமதமாக லௌகிகர் அத்யவசித்து பரிபவிக்கையாலும்
நா சாத்ரா ஸாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத்-என்னா நிற்க -ஆஸ்திகர் அல்லாத அதிகாரிகளுக்கு உபதேசித்தால்
அதுவும் அவனுக்கே பரிபவமாய்த் தலைக் கட்டுகையாலும் –
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
அநதிகாரிகளுக்கு உபதேஸிக்கையும்
குரு பரிபவம் ஆவது என்கிறார் –

மந்த்ர பரிபவம் இத்யாதி -உபதிஷ்டமான மந்த்ரத்தைத் தனக்கு வியாக்யானம் பண்ணின ஆச்சார்யன் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்குச் சேரும்படி அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை விஸ்மரித்து-தத் விபரீதங்களாய்த் தனக்கு ப்ரதி பன்னங்களான அர்த்தாந்தரங்களை அனுசந்தித்தால்
அது அம்மந்திரத்துக்கு யதார்த்தம் அல்லாமையாலே இதுவும் மந்த்ரத்துக்குப் பரிபவம் இறே என்று
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும் –
மந்த்ர பரிபவம் -என்கிறார் –

தேவதா பரிபவமாவது -இத்யாதி -மந்த்ர ப்ரதிபாத்ய தேவதா விஷயத்தில் பரிபவமாவது –
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ -என்றும் சொல்லா நிற்க –
உள்ளம் உரை செயல் -என்கிற கரண த்ரயத்தையும் தன் ஸ்வரூபத்துக்குச் சேராத ஸப்தாதி விஷயங்களிலும்
தேவதாந்த்ர விஷயங்களிலும்
மேட்டு நீர் பள்ளத்திலே விழுமா போலே விநியோகித்துப் போருகையும்
ஸம் ஸேவ்ய ஏகோ ஹரிர் இந்த்ரியாணாம் ஸேவாந்யதேவ வ்யபிசார ஏவ அந்யோபி ஸேவ்யோ யதி தேவ சாம்யாத் கோ வா ஹ்ருஷீ கேஸ வதாபிதாந
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணித் வந்த்வ சமர்ச்சய-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப அநு ரூபமான பகவத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும் என்கிறார் –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்னக் கடவது இறே –

————

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

ஆக –
ஸ்வரூபமான ஞானத்திலும் –
உபாயமான வ்யவசாயத்தாலும் –
புருஷார்த்தமான ப்ரேம ஸமாசாரங்களிலும் உண்டான ப்ரவ்ருத்தி ரூப கிஞ்சித் காரமும் –
ஸ்வரூபத்தில் பகவத் த்ரவ்ய அபஹார நிவ்ருத்தியும் –
உபாயத்தில் பகவத் போஜன நிரோத நிவ்ருத்தியும்
உபேயமாய்ப் பலித்த குரு மந்த்ர தேவதா பரிபவ நிவ்ருத்தியும்
இப்படி -ப்ரவ்ருத்தி ரூபமாயும் -நிவ்ருத்தி ரூபமாயும் உள்ள
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களில்
இவனுடைய இந்த அனுஷ்டான விசேஷங்களிலே ஆதாராதிசயத்தாலே ஆச்சார்யன் உகந்து அங்கீ கரிக்கும் கிஞ்சித் காரங்களை அருளிச் செய்து

இனி

இங்கு இருந்த நாள் ஸிஷ்யன் நினைவாலே அவ்வாச்சார்ய விசேஷத்தில் உண்டாம் உபகார ஸ்ம்ருதியை அருளிச் செய்கிறார் –
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் -என்று தொடங்கி –

அந்த உபகார ஸ்ம்ருதி யாவது
என்னுடைய அத்யந்தம் ஹேயமான மனஸ்ஸூ தன்னையே திருத்தி விடுகை அன்றிக்கே
அத்தை ஸ வாஸனமாகப் போக்கி அங்கு உற்றைக்கே அந்தரங்கமான மனஸ்ஸை அடியேனுக்கு என்று
கருவூலத்திலே எடுத்து உபகரித்தாய் என்று ஆச்சார்ய விஷயத்திலே அந வரதம் அனுசந்தித்து இருக்க வேணும் -என்கிறார் –

————

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –

ஆக இவ்வளவும் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய அந்யோன்யம் யுண்டான பரிமாற்றத்தை அருளிச் செய்து –
தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்திலே ப்ரஸ்துதமான தீமையைப் பரக்க அருளிச் செய்கிறார் -மனஸ்ஸுக்குத் தீமையாவது என்று தொடங்கி -அதாவது -ஸ்வ குணத்தையும் இத்யாதி –
ஆத்ம ப்ரஸம்ஸா மரணம் பர நிந்தா ச தத் சமம் -என்றும்
நாஸ் ஸீலம் கீர்த்தயேத் -என்றும் சொல்லா நிற்க
ஸ்வ விஷயத்தில் ஆத்ம குணங்களுக்கு அவதி இல்லையாக நினைத்தும்
பாகவத விஷயத்தில் இதர ஸஜாதீயராகக் கொண்டு தன்னோடு ஓக்க அஸநவஸநாதி தத் பரராய்த் திரியா நின்றார்களே என்று
இத்யாதிகளை அவர்களுக்குத் தோஷமாக நினைக்கையும் -என்கிறார் –

இவ்விடத்தில் ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி மேலே சொல்லப் புகுகிற
நிர்ஹேதுக பிரகரணம்
பய ஹேதுக்களாய் யுள்ள தண்ட தரத்வாதி ரூப பகவத் குணங்கள் தோஷம் என்று ப்ரசங்கிக்கையாலே
இங்கே பிடித்துக் கர்ப்பித்துக் கொண்டு போரு கிறது என்று அருளிச் செய்வர் –

—————

சூரணை -351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —

இனி தோஷம் நினையாது ஒழிகிறது -இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமை என்று பகவத் பாகவத தோஷங்களை இவன் நினையாது ஒழிகிறது
தன் பக்கலிலே சில சம தம ஆத்ம குணங்களும்
குரு மந்த்ர தேவதா விஷயங்களில் ப்ரேமம் யுண்டாய் இருக்க
அபராத ஸஹஸ்ர பாஜநம் -என்று தன்னை அத்யந்த தோஷ துஷ்டனாக நினைக்கிறாப் போலே அவர்கள் பக்கலிலும் சில தோஷம் யுண்டாய் இருக்க
குண அம்ஸத்தையே நினைக்க வேண்டியோ என்னில் -அங்கன் அன்று –
அவர்கள் பக்கல் முதல் தன்னிலே அத்தோஷங்கள் இல்லாமையாலே தோஷம் நினையாது ஒழிகிறது என்கிறார் –

—————-

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பர தோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

தோஷம் உண்டு  என்று நினைக்கில் -இத்யாதி -யுக்த பிரகாரம் அன்றிக்கே அவர்கள் பக்கல் தோஷ அம்சங்கள் இன்றிக்கே இருக்கிறதோ என்று நினைக்கில்
அது பர தோஷம் அன்று –
தனக்குப் பரரான பகவத் பாகவத விஷயங்களில் உண்டான தோஷம் அன்று –
தான் ஈஸ்வரனுடைய தண்ட தரத்வ ஹேதுக்களான அபராத பூயிஷ்டனாக இருக்கையாலும்
தனக்குத் தேஹ யாத்ரா தோஷங்கள் தவிராமையைக் காண்கை யாலே அவற்றை அத்ததீயருக்கும் யுண்டாக நினைக்கையாலும்
ஆகையால் ஸ்வ த்ருஷ்டியில் திமிர தோஷத்தாலே தீப சந்திரன்கள் ப்ரத்யேகம் இரண்டாய்த் தோன்றுகிறாப் போலே
கேவலம் ஸ்வ தோஷத்தாலே தோற்றும் இத்தனை என்கிறார் –

—————-

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –இத்யாதி -தோஷம் யுண்டாகத் தோற்றுகிறது பரர் பக்கலிலேயாய் இருக்க –
அது இவன் பக்கலிலே தோஷத்தால் யானபடி என் என்னில்
யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் அபுண்யம் அந்யத் நான்யத்தயோர் பவதி லக்ஷண மத்ர ஜாது
தூரத்தாயிதம் தவ ஹி யத் கில ராஸ கோஷ்ட்யாம் தத் கீர்த்தநம் பரம பாவந மாம நந்தி -என்றும்
தேஷாம் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -என்றும் சொல்லுகையாலே
அவர்களுடைய வைபவ அதிசயத்தாலே அவர்களுக்குப் ப்ரத்யவாய ப்ரஸங்கம் இல்லை என்னாதே
ஞான மாந்த்யத்தாலே தன்னுடைய தோஷத்தை அவர்கள் மேலே ஆரோபித்து இருக்கையாலும்
அவர்களை இத்தோஷ துஷ்டர்களாக நினைத்தால் மாதா பிதாக்கள் அளவில் பண்ணும் தூஷணம் தன் பக்கலிலே வந்து
பர்யவசிக்குமா போலே அவர்களோடுள்ள பந்தத்தாலும் கேவலம் ஸ்வ தோஷமேயாய் விடும் -என்கிறார் –

————-

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

ஸ்வ தோஷம் இல்லை யாகில் -இத்யாதி -இங்கனே ஸ்வ தோஷம் என்று அவர்கள் பக்கல் தோஷம் இல்லாமையேயாக நெஞ்சில் பட்டதாகில்
அவர்கள் பக்கல் குண ஞானம் ஒன்றுமே அந வரதம் நடக்க வேணும் -என்கிறார் –

————-

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

நடந்தது இல்லை யாகில் இத்யாதி -இப்படி அவர்கள் பக்கல் குண ஞானமே நடவாதே சில தோஷம் இல்லையோ என்று நினைக்கில்
அவர்கள் பக்கல் தோஷ ஞானமே இவனுக்கு ஸ்வரூபக நாஸகம் ஆகையாலே தோஷமாம் -என்கிறார் –

————–

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-

இது தனக்கு இத்யாதி -முதலிலே இந்த பகவத் பாகவத தோஷ அனுசந்தானத்தில் இவ்வதிகாரிக்கு அவசரம் இல்லை
அமர்யாதா -ஷூத்ர-என்று தொடங்கித் தனக்கு அனுசந்தேயமான ஸ்வ தோஷ அனுசந்தானத்துக்கு
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே ஸா ஹானி -என்றும்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும்
சொல்லுகிற பகவத் குண அனுசந்தானத்துக்கும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -என்றும்
தொழுவாரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -என்றும்
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -என்றும் சொல்லுகையாலே
அந்த பாகவத குண அனுசந்தானமே காலம் போரு கையாலே என்கிறார் –
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யாத் பகவத் பிரபாவம் பகவான் ஹி வேத்தி ததா பகவந்தோ பகவத் பிரபாவம் -என்றார் இறே சர்வஞ்ஜை யான ஸ்ரீ பூமிப பிராட்டியும் –

——————-

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்கக் கடவன் –

ஸம்ஸாரிகள் தோஷம் இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமையாவது -பகவத் பாகவத தோஷ க்ரஹண மாத்ரமே அன்றிக்கே
ஸாமான்யரான ஸம்ஸாரிகள் அளவிலே தோஷ தர்சனம் பண்ணுகையும் அதுக்குத் தீமையாகையாலே –
கர்த்து மிஷ்டம நிஷ்டம் வா க ப்ரபுர் விதிநா விநா கர்த்தார மன்ய மாரோப்ய லோக ஸாத்யாதி குர்வதி -என்று
இருக்கக் கடவ இவ்வதிகாரி ப்ராக்ருதல் பக்கல் யுண்டாய்த் தோற்றுகிற தோஷமும்
இகழ்வில் இவ்வனைத்தும் -என்றிராத் தன்னுடைய ஞான மான்யத்தாலே வந்த தோஷம் என்று இருக்கக் கடவன் –

————-

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

அது என் -அஸத் கல்பரான நித்ய ஸம்ஸாரிகள் பக்கல் யுண்டான தோஷத்தை தத் வியாவ்ருத்தனான தன்னது என்று நினைக்கலாமோ என்ன
இங்கனே நினைக்கைக்கு ஹேது பந்த ஞானம் -என்கிறார் –
இங்கு பந்த ஞானம் என்கிறது ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு லீலா ரஸ விஷய பூதராய் -நித்ய முக்தரைப் போலே தாங்களும் ரஸிக்கை அன்றிக்கே
தங்களை ஸ்வரூபம் அழிந்தும் அவனுக்கே அசித்வத் விநியோகப்படும்படியான -அப்ருதக் சித்த சம்பந்த ஞானத்தால் -என்றபடி –

கீழ்ச் சொன்ன பந்த ஞானம் மொய்ம்மாம் பொழிலில் சொல்லுகிற ஞானம் போலே
இந்த பந்த ஞானம் புகழு நல் ஒருவனில் ஞானம் போலே –

———–

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

இறைப்பொழுதும் இத்யாதி –
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -என்றும்
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே -என்றும் அருளிச் செய்கையாலே
ஸிஷிதா ஸ்வரூபனான இவ்வதிகாரியுடைய ஞானத்துக்கு ப்ராக்ருதருடைய தோஷம் விஷயம் அல்லாமையாலே முதலிலே தோற்றாது -என்கிறார் –

———–

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

ஆனால் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -தொடக்கமான வற்றில் ஸம்ஸாரிகள் தோஷம் தோற்றுகைக்கு அடி என் என்ன
அவர்களுக்குத் தோற்றுகிறது நிவர்த்தன அர்த்தமாக என்கிறார் –
இப்படிப்பட்ட ஞாதாக்களுக்கு ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் தோற்றுவது அவர்களை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்காக என்னுதல் –
தாங்கள் அவர்கள் பக்கல் கை வாங்குகைக்காக என்னுதல்
இவை இரண்டு அர்த்தத்தையும்
ஒரு நாயகமாய்
நண்ணாதார்
ஒன்றும் தேவு –இத்யாதிகளில் அருளிச் செய்தார் இறே –

————-

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –

பிராட்டி இத்யாதி -இப்படி ஸம்ஸாரிகள் அளவில் தோஷ தர்சனம் பண்ண ஒண்ணாது என்கிற அளவே அன்று
அந்த ஸம்ஸாரிகள் தான் தன் அளவிலே அபராதங்களைப் பண்ணினாலும் ப்ரபந்ந அநுஷ்டான ப்ரகாசைகையான பிராட்டி -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகள் தன் பக்கல் பண்ணின குற்றங்களை
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கு ஏகாந்தத்தில் உட்பட
ஏக தேசமும் அறிவியாதாப் போலே -தீக்குறளை சென்றோதோம் -என்கிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கிறார்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் க்ரந்தத்திலும் ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்காதல் -திருவடிக்காதல் -அறிவித்ததாக ஒரு பாசுரமும் இல்லை இறே –

————–

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

இப்படி அறிவிக்க ஒண்ணாமைக்கு அடி என் என்ன -அறிவிக்க யுரியவன் -இத்யாதியாலே -சொல்லுகிறது -அதாவது –
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் -இத்யாதிப்படியே பரமபத நிலயனாய் -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் அநந்யார்ஹன் ஆக்குகையிலே
அபேக்ஷை யுண்டானால் சூழ்ந்து தானே அவதரித்து –
ந நமே யந்து கஸ்சந -என்று அவ்வாதாரங்களுக்கு பிரயோஜனம் தோற்றா விடிலும்
கர்ஷக ஹ்ருதயம் போலே காலாந்தரத்தே யாகிலும் பலிப்பித்துக் கொள்கிறோம் என்று அக்குறை தோற்றாதே
ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு இருந்து அங்குள்ள ஸாரஞ்ஞரான நித்ய ஸூரிகள்
அவதார பிரயோஜனத்தை ஆதரித்துக் கேட்டாலும் -அவாக்ய அநாதர-என்று இருக்கிற இருப்பாக அந்நிய பரதை பண்ணி
அவர்களோடும் வாய் திறவாதே மறைக்கும் என்னா நின்றால் பர தந்த்ரனான இவனுக்கு அறிவிக்க ஒண்ணாது என்னும் இடம்
சொல்ல வேண்டா விறே என்கிறது –

—————

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –

குற்றம் செய்தவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படித் தனக்குப் பிறர் செய்யும் குற்றம் பகவத் பாகவத விஷயங்களில் மறந்தும் தோன்ற ஒண்ணாத மாத்ரமே என்று-
அவர்கள் பக்கல் இவ்வதிகாரிக்கு உபகார ஸ்ம்ருதி பர்யந்தமாக நடுவுள்ள குணங்கள் யதாவாக நடக்க வேணும் என்கிறார் – அது எங்கனே என்னில்
ப்ரத்யக்ஷத்தில் ஒருவன் அபஹாரத்தைப் பண்ணினால் -சாந்தி ஸம்ருத்த ம்ருதம் -என்றும்
ந ஷமா சத்ருஸோ பந்து ந க்ரோதோ சத்ருஸோ ரிபு -என்றும் சொல்லுகையாலே
க்ஷமையே கர்த்தவ்யம் என்று அவனோடே எதிர் இடாமல் போருகையும்

இப்படி நாம் பொறுத்து நாம் புழங்கினால் ஈஸ்வரன் இவனை பாகவத அபசாரத்தில் பிழை எழுதி தண்டிக்குமாகில் இவன் சீற்றத்துக்கு விஷயமாவதே என்றும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையும் நடக்க வேணும் –

இவ்விடத்தில் அருளிச் செய்யும் வார்த்தை
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வர் –

இனி சிரிக்கை யாவது -குணஸ்சேத பர ஸம் யோகாத் தோஷஸ் சேத் ருசி மன்வயாத் மத்யஸ் தஸ்ய சிதே சஸ்ய கிம் கார்யம் ஸ்துதி நிந்தயோ -என்று
இவன் சொல்லுகிற வற்றால் ஆத்மா அஸ்ப்ருஷ்டனாய் இருக்க -இவன் யாரைப் பரிபவிக்கிறான் என்று சிரிக்கையும் –

அவன் பக்கல் உகப்பாவது -தன்னைக் கண்டால் சத்ருக்களைக் கண்டால் போலே இருக்கையாலே
ஒருவன் தனக்கு வைர ஸத்ருவானவனை பரிபவித்தால் உகக்குமாப் போலே ஒரு உகப்பும்

உபகார ஸ்ம்ருதியாவது -நமக்கு உண்டான தோஷம் நமக்குத் தெரியாது இறே –
நம்முடைய பிரகிருதி தோஷம் எல்லாம் அறியானேயாகிலும் அதில் நாம் அறியாதனவும் எல்லாம் அறிவித்தானே என்று யுண்டாம் உபகார ஸ்ம்ருதியும்

ஆக இவ்வைந்து ஸ்வ பாவமும் இவ்வதிகாரிக்கு யுண்டாக வேணும் என்கிறாராய்த்து

இனித் தான்
க்நந்தம் ஸபந்தம் பருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந பிரணமேத் யதார்ஹம் ச பாப க்ருத் ப்ரஹ்ம தவாக்நி தக்தோ வத்யஸ் ச தண்ட்யஸ் ச ந ஸாஸ்மதீய -என்று
சாமான்யேன பருஷ பாஷாணா திகளிலே ப்ரவ்ருத்தனாய் இருப்பான் ஒருவனைக் கண்டால் அவனோடே எதிரிடாத மாத்ரம் அன்றிக்கே
தான் தலை சாய்த்து அவனை அனுவர்த்தித்து விடா விடில் இவன் தானே சர்வ பிரகார தண்ட்ய னாகவும் பகவத் வாக்கியம் யுண்டாகையாலும் –
அவ்வளவு அன்றிக்கே
ரூஷா ஷராணி ஸ்ருண் வந்வை ததா பாகவதேரிதான் ப்ரணாம பூர்வகம் ஸாம்யோ யோ வேத வைஷ்ணவவோ ஹி ஸ -என்று
விசேஷஞ்ஞனாய் இருப்பான் ஒரு பாகவதன் செவி பொறாத படின் சிவிட்கென்ற வார்த்தையைச் சொல்லக் கேட்டாலும் –
சேஷியானவன் நம்மை வேண்டினபடி நியமித்துக் கொள்ளுகிறான் என்று நினைத்து அந்தப் பாகவதனை
ப்ரணாம பூர்வகமாக ஷமிப்பித்துக் கொள்ளுமவன் வைஷ்ணவன் என்றும் உண்டாகையாலே
கீழ் ப்ரதிபாதித்த அர்த்தங்கள் இவ்வதிகாரிக்கு அநுஷ்டேயம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்-சூர்ணிகை —308–320–

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

தான் ஹித உபதேஸம் பண்ணும் போது -இத்யாதி –
இங்குத் தான் என்கிறது -கீழில் ப்ரபந்தத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்ட உபாய உபேயங்களிலும்
ததேக ப்ரயோஜனத்வ பர்யந்தமான கைங்கர்யத்திலும்
தத் பூர்வ பாவிகளான ஞான தசை தொடக்கமான பாவ விசேஷங்களிலும்
அத்யந்தம் நிஷ்ணாதனாய் அக்ருத்ய கரணம் தொடங்கி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களான நிஷித்த அனுஷ்டானங்களிலே நிவ்ருத்தனான தான்
ஆச்சார்ய பதத்துக்கு ப்ராப்தனாகையாலே தன்னளவிலே உப சன்னனாய் ஆஸ்ரயிக்கும் ஆத்ம குணோ பேதனான ஸிஷ்யனுக்கு ஹித உபதேசம் பண்ணும் போது ஏவம் விதனான
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
விபரீத பிரதிபத்தி பண்ணி -க்யாதி லாப பூஜா ஸா பேஷனாய் உபதேஸிக்கை
கீழ்ச் சொன்ன நிஷித்தங்களில் காட்டில் மிகவும் க்ரூர நிஷித்தம் என்கிறார் –

————–

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

தன்னை மாறாடி நினைக்கையாவது -இத்யாதி -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரனாய்க் கொண்டு அவனுக்கு சிஷ்யனான தான் தன்னை மாறாடி நினைக்கையாவது –
தஸ்மை ஸ வித்வான் தத்வதோ ப்ரப்ரூயாத் -என்கிறபடியே
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி -என்று தொடங்கி
தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -என்னும் அளவாகவும்
தத் பாவ பாவமா பன்னையாய் பின்பு பிறருக்கு உபதேசித்தாப் போலே
ஸ்வ ஆச்சார்ய அவயவத் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேசியாதே உபதேஸ கர்த்ருத்வ மாத்ரத்தைக் கொண்டு
தன்னை ஆச்சார்யன் என்று நினைக்கை –

இனி ஸிஷ்யனை மாறாடி நினைக்கையாவது -பகவத் ப்ரஸாதத்தாலே நம்முடைய ஆச்சார்யனுக்கு இவனும் ஒரு சிஷ்யன் திருந்தினால் என்று இராதே
தனக்கு சிஷ்யன் என்று இருக்கை –

பலத்தை மாறாடி நினைக்கை யாவது -த்ருஷ்ட பிரயோஜனம் தொடக்கமான பல விசேஷங்களை -சேஷ பூதனான சிஷ்யன் -என்று
அருளிச் செய்கிற யதா க்ரமத்திலே பலிக்கை அன்றிக்கே இப் பலங்கள் யுண்டாக வேண்டும் என்று தான் கணிசித்து உபதேஸிக்கை

ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
தன்னை மாறாடி நினைக்கை யாகிற க்யாதியும்
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற பூஜையும்
பலத்தை மாறாடி நினைக்கை யாகிற லாபமும்
இம் மூன்றையும் குறித்து உபதேஸிக்கை இவ்வதிகாரிக்கு க்ரூர நிஷித்தம் என்றதாயிற்று –

—————

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

இங்கனே யாகில் -இவ்வதிகாரி நினையாது ஒழிய லோகத்திலே இந்நாலு பலமும் பலித்துப் போகிற படி தான் எங்கனே என்று
சோத்யமாக சேஷ பூதனான -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார்
அவ்வாச்சார்யனுக்கு சேஷ பூதனான சிஷ்யன் -நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -என்று நினைத்து
சரீர மர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிறபடியே
ஸகலத்தையும் உபகாரகன் பக்கலிலே உபகரிக்கையாலே த்ருஷ்ட பலம் ஸித்திக்கும் –
இப்படி விலக்ஷணனான ஆச்சார்யனுடைய அபிமானத்திலே அந்தர் கதன் அன்றோ இவன் -கிம் ஆச்சார்ய வதோ லோகே துர் லபம் ஸூல போப்யஹம் -என்றும் எம்பருமான் திரு உள்ளம்பற்றி உஜ்ஜீவிப்பிக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் உண்டாம் –
இனி இந்த உபதேஷ்டாவினுடைய ஆச்சார்யன் நாம் செய்த கார்யம் இவ்வளவும் வர பகவத் கைங்கர்யம் ஆயிற்று என்று தன் திரு உள்ளத்தால் நினைத்து
உடையவரைத் திருக்கோட்டியூர் நம்பி பெருமாள் நமக்காவாரைத் தேடிக் கொள்கிறோம் என்ற அவரோ இவர் என்று
அணைத்துக் கொண்டு உகந்தாப் போலே உகக்கும் படி இவன் வர்த்திக்கையாலே ஆச்சார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் பலிக்கும்
ஆச்சார்யன் பக்கலிலே ஞான உப போகம் கொண்ட உபகார ஸ்ம்ருதியாலே இலை படுத்த இடத்திலே தலை படுக்குமா போலே
ஸஹ வாஸமும் தன்னடையே ஸித்திக்கும் என்கிறார் –

—————

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

ஸாஷாத் பலமும் -இத்யாதி -கீழ்ச் சொன்ன த்ருஷ்ட ப்ரயோஜ நாதிகள் இவ் வாச்சார்யன் நினைவாலே வாராது ஒழிந்த பின்பு இவனுக்கு இவை ஸாஷாத் பலங்கள் அல்லவாய் இருந்தன –
இனித்தான் -பிரயோஜனம் அநுத் திஸ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்று ஒரு சேதனற்கும் ப்ரயோஜனத்தை யுத்தேசித்து அல்லது ப்ரவ்ருத்தி கூடாமையாலே
இவ் வாச்சார்யனுடைய ப்ரவ்ருத்திக்குத் தன் நினைவாலே உத்தேசித்த ஸாஷாத் பலமேதாகக் கடவது –
இவன் தன்னை ஸிஷ்யனாக நினைத்து இருக்கையாலே உபதேஷ்டாவான இவனுக்கு ஆச்சார்யத்வம் ஸித்திக்கிற வழியேதாகக் கடவது என்ன
தன் நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் ஸித்திக்கும் என்கிறார் -அவை ஸித்திக்கிற படி தான் எங்கனே என்னில்
இவ்வாச்சார்யன் உபதேஸ காலத்திலே அஸ்மத் குருவின் பொருட்டு நமஸ்ஸைப் பண்ணு என்று சிஷ்யனைக் குறித்து
விதிக்கையாலே தன்னாச்சார்ய விஷயத்தில் தன் நினைவாலே வருகிற பலமான மங்களா ஸாஸனம் ஸித்தித்து விடும் –
இனி இப்படி உபதேஸிக்கிறவனுக்கு ஈஸ்வரன் நினைவாலே ஆச்சார்யத்வம் ஸித்திக்கும் –
ராஜா ஒருவன் கையிலே ராஜ சிஹ்னத்தைக் கொடுத்துச் செல்லாத ராஜ்யத்தைச் செலுத்திக் கொள்ளுமா போலே
விலக்ஷணமான ஞான அனுஷ்டானங்களை யுண்டாக்கி –
வீசும் சிறகால் பறத்தீர்–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கிற பர ப்ரதிபாதன சாமர்த்யத்தையும் யுண்டாக்கி –
இப்படி இவனுக்கு ஆச்சார்ய பதத்தைக் கொடுக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே ஸித்திக்கும் என்கிறது –

———————-

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

ஆக -இவ்வாச்சார்யன் உக்த க்ரமத்திலே -க்யாதி -லாப -பூஜா நிரபேஷமாக உபதேஸியா விடில் -சதாச்சார்யன் அல்லாமையாலே
ஆச்சார்ய ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
ஸதாச்சார்ய உபதேசம் பெறாமையாலே ஸிஷ்யத்வ ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
இப்படி ஒழிய உபதேஸிக்கில் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி இல்லை என்று
த்ருடீ கரித்து அருளிச் செய்கிறார் –

—————–

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

ஆனால் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி யுண்டாம்படியான இந்த சிஷ்யாச்சார்ய லக்ஷணம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
ஆச்சார்யனுக்கு என்று தொடங்கி -ஆச்சார்ய லக்ஷணத்தையும் அருளிச் செய்கிறார் மேல் -ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பக்கல் கிருபையும் -இத்யாதி –
இப்படி க்யாதி லாப பூஜா நிரபேஷனாய் ஈஸ்வரனாலே ஆச்சார்ய பதம் பெற்ற தான் தன்னைச் சேர்ந்த ஸிஷ்யனுக்கு உபதேஸிக்கும் இடத்தில்
அவ்வாச்சார்யனுக்கு ஸம்ஸார தாப அர்த்தனான ஸிஷ்யன் பக்கல் ஐயோ என்கிற கிருபையும்
ஹித உபதேஸ காலத்தில் ஸ்வாச்சார்யனானவன் தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே இருந்து உபதேஸிக்கிறான் என்றும்
அவனுக்குப் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேஸிக்கையும் இவ்வதிகாரிக்கு வேணும் என்கிறார் –

—————-

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

இவை எதுக்காக வேண்டுகிறது என்ன அந்த சிஷ்யாசார்யர்களுடைய ஸ்வரூபத்துக்காக என்கிறார் –
கிருபையால் என்று தொடங்கி –

———-

சூரணை -315-

நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

நேரே இத்யாதி -நேரே ஆச்சார்யன் என்றது பூர்ண வஞ்சகனான ஆச்சார்யனும் உண்டாக மேலே அருளிச் செய்கையாலே
ஸாஷாத் ஸ்வரூப உத்தாரகனான ஆச்சார்யனாகச் சொல்லுவது -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே
திருமந்திரம் ஸகல புருஷார்த்த ஸாதனமாய் இருந்ததே யாகிலும் ஸம்ஸார நிவர்த்தக முகேந அப்பெரிய திரு மந்த்ரத்தை உபதேஸித்தவனை என்கிறார் –
ஸம்ஸார நிவர்த்தகமான த்வயத்தை உபதேஸித்தவனை என்னாது ஒழிந்தது அப்பெரிய திருமந்திரத்தில்
ப்ரணவ விவரமான நமஸ்ஸினுடையவும் நாராயண பதத்தினுடையவும் விவரணமாய்க் கொண்டு
த்வயத்தில் பூர்வ உத்தர வாக்யங்கள் இருக்கையாலே –

———–

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

ஆனால் நேரே ஆச்சார்யன் இவனாகில் வஞ்சகரான ஆச்சார்யர்கள் யார் என்ன -அவர்களைச் சொல்லா நின்று கொண்டு
மந்த்ர சோதனத்தையும் பண்ணுகிறார் -சம்சார வர்தகங்களுமாய்-என்று தொடங்கி
ஆச்சார்ய சோதனம் பண்ணினால் அவனாலே உபதேஸிக்கப் படும் மந்த்ர சோதனமும் பண்ண வேணும் இறே
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கும் -மதந கோபாலாதி மந்த்ரங்கள் ஸம்ஸாரத்தைப் பூண் கட்டிக் கொடுக்குமவையாய்
பெரிய திருமந்திரம் போல் அன்றிக்கே ஷுத்ரங்களுமான அம்மந்திரங்களை உபதேஸித்தவர்களுக்கு
ஆச்சார்யத்வ மாத்ரம் உண்டே யாகிலும் ஆச்சார்யத்வ பூர்த்தி இல்லை என்கிறார் –

—————

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –(அத்தை உபபாதிக்கிறார் )

ஆனாலும் பகவத் மந்த்ரங்களை -ஷுத்ரங்கள்-ஸம்ஸார வர்த்தகங்கள் -என்னலாமோ என்னில் -பகவத் மந்த்ரங்களை இத்யாதி –
மந்த்ரங்களினுடைய வைபவத்துக்குக் குறை இல்லை –
ஐஸ்வர்யார்த்தி கோபால மந்த்ர உபாஸகனாயும்
வித்யார்த்தி ஹயக்ரீவ மந்த்ர உபாஸகனாயும்
விஜயார்த்தி ஸூ தர்சன நரஸிம்ஹ மந்த்ர உபாஸகனாயும்
இப்படிப் போரக் காண்கையாலே ஷுத்ர பல ப்ரதத்வ த்வாரேண -அத்தை ஷுத்ரங்கள் -ஸம்ஸார வர்த்தகங்கள் -என்கிற இத்தனை என்கிறார் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –5-பிரபன்ன தினசரியா பிரகரணம்-சூர்ணிகை -244–307-

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் -ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் த்ட்டு மாறிக் கிடக்கும் –

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ –என்று தொடங்கி
மங்களா ஸாஸனமும் அனுகூல ஸஹ வாஸமும் பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் சதாச்சார்ய ப்ரஸாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்று இத் தின சரிதையிலே ப்ரஸ்த்துதமான இந்நாலு அர்த்தத்தையும் சோத்ய பரிஹார ரூபேண விஸ்தரித்து அருளிச் செய்கிறார் மேல்
எங்கனே என்னில் -மங்களா ஸாஸனம் இத்யாதி

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்துள்ள ஸர்வ ரக்ஷகனுக்கு
அஞ்ஞனாய்-அஸக்தனாய் -அபூர்ணனாய்க் கொண்டு -தத் ஏக ரஷ்ய ஸ்வரூபனான தான் ரஷா ரூபமான மங்களங்களைப் பிரார்த்திக்கை தன் ஸ்வரூபத்துக்குச் சேராதது அன்றோ என்று சோத்யமாக
ஞான தசையில் -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார் -அதாவது

அவ்வதிகாரிக்கு -அகாரார்த்தா யைவ ஸ்வ மஹம் -என்று பிரதமத்திலே பிறக்கும் ஞான தசையில் தான் ரஷ்யனாகவும் அவன் ரக்ஷகனாகவும் பிறக்கும் அனுசந்தானம் யதா வஸ்திதமாய் இருக்கும் –
அந்த ஞானத்தினுடைய பரிபாக அவஸ்தையான ப்ரேம தசையில் வந்தால் அவ்வனுசந்தானம் விபர்யாஸ ஆஸ்ரய அவஸ்திதமாய் இருக்கும் –

—————–

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

அவை தான் எங்கனே என்னில் -ஸர்வ பிரகார ரக்ஷகனான அவனுடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்கிறபடியே
அவனே ரக்ஷகனாக அத்யவசித்துக் கொண்டு தன் ஸ்வரூபத்தைக் காக்கும் –
அவ்விலக்ஷண ரூபத்துக்கும் ப்ரகாசகமாய் அத்யந்த அபி ரூபமான அவனுடைய விக்ரஹத்தில்
புஷ்ப ஹாஸ ஸூ குமாரமான ஸுகுமார்யத்தை அனுசந்தித்தால்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே -என்றும்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்றும்
இத்யாதியில் படியே தன்னை ரஷா சாதனமாக நினைத்து அவனைக் காக்கத் தேடும் –

—————-

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

உபய ஸ்வரூப அனுரூபமான இவ்வநுஷ்டானம் எங்கே கண்டோம் என்ன –
இது சிஷ்டாசார ஸித்தம் என்னும் இடத்தை சக்ரவர்த்தி ஸ்ரீ ஜனக ராஜன்-என்று தொட்ங்கிப் பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார்

பெருமாள் பிராட்டியைத் திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க மத்யே மார்க்கே பரஸூ ராமன் -என் வில் வலி கண்டு போ -என்று
பெருமாளோடே எதிரிட்ட தசையிலே சக்ரவர்த்தி முன்பே தாடகா தாடகேயருடைய நிரசன பிரகாரத்தைக் கேட்டிருக்கச் செய்தேயும்
அப்பரஸூராமனை -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் த்வம் ப்ராஹ்மணஸ் ச மஹா யஸா பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று
பெருமாள் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே சரணம் புகுந்து அவன் தோற்றுப் போனமை கேட்டிருக்கச் செய்தேயும்
கதோ ராம இதி ஸ்ருத்வா ஹ்ருஷ்ட ப்ரமுதிதோ ந்ருப புனர் ஜாதம் ததா மேநே ஸூத மாத்மாந மேவ ச -என்று
தானும் பெருமாளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருக்கையாலும்

ஜனக ராஜன் பிராட்டியைப் பெருமாளுக்கு நீர் வார்த்துக் கொடுத்த தசையிலே தநுர் பங்கத்தால் வந்த சக்தியைக் கண்டு வைத்தும்
ப்ரதீச்ச சை நாம் பத்ரம் தே -என்று
அச்சேர்த்திக்கு என் வருகிறதோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகையாலும்

தலை நீர்ப்பாட்டிலே பெருமாள் வைபவம் எல்லாம் அறிந்து இருக்கிற பிராட்டி அவர் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே
பதி சம்மா நிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான்ய பிதத்த்யுஷீ பூர்வாம் தீஸம்
வஜ்ர தர -என்று தொடங்கி-திக் பாலர்களை-அவருக்கு ரக்ஷகராக அபேக்ஷிக்கையாலும்

விஸ்வாமித்ரன் அப்பெருமாளை அத்வர த்ராணார்த்தமாக அழைத்துக் கொண்டு போகிற போது நடுவே
தாடகை பெரிய ஆர்ப்பரவத்தோடே யுத்த உன்முகையாய் வந்து தோன்ற
ஊன ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந -ந யுத்த யோக்யதா மஸ்ய பஸ்யாமி ஸஹ ராக்ஷசை -என்று
இவரைப் புறப்பட விடுகைக்கும் இசையாதே கண்ணழிவு சொன்ன சக்கரவர்த்திக்கு
அஹம் வேத்மி வஸிஷ்டோ வேத்தி -என்று அவருடைய ஸர்வ ஸக்தி யோகத்தைச் சொல்லி அழைத்துக் கொண்டு வந்தவன் –
அனந்தரம் தாடகையைக் கண்டவாறே அத்தை மறந்து –
விச்வாமித்ரோபி ப்ரஹ்ம ரிஷிர் ஹூங்காரேண அபி பர்த்ஸ்யதாம் ஸ்வஸ்தி ராகவயோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத–என்று
த்ரிகாலஞ்ஞனானவன் அவர்களுக்கு மங்களங்களை ஆசாசிக்கையாலும்

ஐந்தர வியாகரண பண்டிதனான திருவடி பெருமாள் தோள் அழகிலே ஈடுபட்டு
ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந வி பூஷிதா -என்று
ஆபரணங்களாலே அரண் செய்ய வேண்டும்படி அதி ஸூந்தரமான திருத் தோள்களை அவற்றை ஒழிய இப்படி ஆவிஷ் கரிக்கைக்கு அடி என் என்று அதி சங்கை பண்ணுகையாலும்

ஸூக்ரீவ மஹா ராஜர் பெருமாள் பக்கல் பரிவாலே சரணாகதரான ஸ்ரீ விபீஷணப் பெருமாளை
வத்யதா

—————–

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குகப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே —

இப்படி விசேஷஞ்ஞரே அன்றியே அவிசேஷஞ்ஞரையும் அதி சங்கை பண்ண வைக்கும் அவ்விஷய வை லக்ஷண்யம்
என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் -இளைய பெருமாள் என்று தொடங்கி -அதாவது –
ஸ்ரீ குஹப்பெருமாள் இடத்திலே பெருமாள் எழுந்து அருளின போது -அவர் பக்கல் பரிவாலே பங்காகப் படுத்து
அவரைப் பள்ளி கொள்ளப் பண்ணுவித்த அநந்தரம் அப் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் வெளிக் காவலாக நடை மதிள் இட்டால் போலே
கையும் வில்லுமாய்க் கொண்டு காவலாக வருகிற இளைய பெருமாளைக் கண்டு -ஒரு தம்பி இவரைக் காடேற ஓட்டினான்
இவர் என் செய்ய இப்படி இடம் பார்க்கிறாரோ என்று ஸ்ரீ குஹப்பெருமாள் அதி சங்கை பண்ணி அவர் இட்ட அடியிலே தாமும் அடி இட்டு
அங்கனே யாகில் அவரை அழித்தும் பெருமாளை நோக்கக் கடவோம் என்று பிடித்துக் கொண்டு வாரா நிற்க
அவர் ஞாதி -இவன் க்ரூர ஹ்ருதயனான வேடன் -இவ்விருவரும் இவரை என் செய்யப் புகுகிறார்களோ என்று அதிசங்கை பண்ணி
ஸ்ரீ குஹப்பெருமாளுடைய பரிகர பூதரானவர்கள் ஸ்வாமிகள் என்று பாராமல் இவ்விருவரையும் அழியச் செய்தாகிலும்
பெருமாளை நோக்குகையிலே உத்யுக்தரானார்கள் இறே என்கிறார் –

—————-

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

ஒரு நாள் இத்யாதி -இப்படி இவர்களுக்குப் பரிவுண்டாயிற்று அவ் விஷயத்தில் சிரகால வாஸனையாலே ஈடுபட்டோ என்னில்
அங்கன் அன்று –
ராம கமல பத்ராஷ -ஸர்வ சத்த்வ மநோ ஹர -என்கிறபடியே
ஸர்வ சத்த்வ மநோ ஹரமான அவ்வழகிலே ஈடுபட்டு
ஸதா பஸ்யந்தி -பண்ணினார் படுவுற்றை ஒரு நாள் அது கண்ணுக்கு இலக்கான மாத்ரத்திலே பட்ட பாடு இறே இது என்கிறார் –

—————

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே-என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

இவர்கள் இத்யாதி -கீழ்ச் சொன்ன இவ் வதிகாரிகள் இவ் வர்த்தத்தில் ஆஸ்திகராய்
யதா அனுஷ்டானம் இல்லாத அஸ்மாதாதிகள் கோடியிலே அந்வயித்த மாத்ரம்
என்னும்படி யாயிற்று இவ் வர்த்தத்தில் யாதாவான பாவ பந்தமுடைய ஆழ்வார்களுடைய தசை –

—————

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரியாழ்வார்-

ஆழ்வார்கள் எல்லாரையும் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தத்தில் அனுஷ்டாதாக்களான மற்றுள்ள ஆழ்வார்கள்
எல்லாரையும் போல் அல்லர் -கேவலம் ப்ரேம பரவசரான பெரியாழ்வார் –

——————

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –-இவர்க்கு இது நித்யம் –

அது எங்கனே என்னில் -அவன் வடிவழகு அவர்கள் நெஞ்சில் உற்று இருந்தால் அத்தைத் தங்கள் அனுபவிக்க ஆசைப்படுவது ஒழிய
அவ்வடிவழகுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கை -அங்கும் இங்கும் -இத்யாதிகளிலே காதாசித்கமாக ஓரொருக்கால் உண்டாம் அத்தனை –
இப்பெரியாழ்வாருக்கோ -மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -என்று தொடங்கி
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -என்றும்
மிடிக்கிலாமையால் நான் மெலிந்தேன் -என்றும்
உறகல் உறகல் -என்று தொடங்கி விஷ்ணு சித்தராகையாலே தம் திரு உள்ளத்திலே அவ்வஸ்துவை சேமம் கொண்டு
பள்ளியறை குறிக்கொண்மின் -என்று இத்யாதிகளாலே
பரிந்து நோக்குகையே பணி யாகையாலே இவருக்கு நித்யம் -என்கிறார் –

————–

சூரணை -252-

அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

அவ்வளவும் அன்று -அவ்வாழ்வார்கள் -காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று ஆழங்கால் படுகிற
அவன் வைலக்ஷண்யம் தானே
அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சுகிற இவருக்கு தரித்து நின்று மங்களா ஸாஸனம் பண்ணுகைக்கு
ஈடான நிலமாய் இருக்கும் –

————————

சூரணை -253-

அவர்களுக்கு-உபய சேஷத்வத்தையும் அழித்து-ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது –
விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து இத்யாதி -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியேனோ -என்றும்
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் –
உனக்குத் திரு உள்ளமான படி செய்து அருளு என்று இருக்கும் படியான பகவத் சேஷத்வத்தை உடையரானவர்கள்
ஸ்வரூப விருத்தமான ஸ்வ ப்ரவ்ருத்திகளிலே இழிந்தும்
அவ்வதி ப்ரவ்ருத்திகள் ஆகாது என்று ததீயரை -உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று உபேக்ஷித்துப் போரும் படி
உபய சேஷத்வத்தையும் அழித்து -மங்களா ஸாஸனத்துக்கு வாய் திறக்க ஒட்டாத படி ஸ்வரூபத்தை மதி மயங்கப் பண்ணும்
வை லக்ஷண்யம் தானே -இப்பெரியாழ்வாருக்கு
உன் சேவடி செவ்வி திருக்காப்பு -என்றும்
மங்கையும் பல்லாண்டு -என்றும்
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்றும் -இத்யாதிகளாலே
பகவத் பாகவத விஷயங்களிலே மங்களா ஸாஸனத்தைப் பண்ண அவ்வுபய சேஷத்வ ஸித்திக்கும் ஹேதுவாய்
அம் மங்களா ஸாஸனம் சரமாவதி யாகையாலே அஸ் ஸ்வரூபத்தை பாரங்கதமாக்கும் என்கிறார் –

——————-

சூரணை -254-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே எனபது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

இனி -பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –என்று தொடங்கி -இவருக்கு இது நித்யம் என்றது தன்னையே விசதமாக்குகிறார்
பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –இத்யாதி -அதாவது
அங்குல் யக்ரேண தான் ஹந்யாம் -என்றும்
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்றும்
இத்யாதிகளாலே நிவ்ருத்த பயரான மஹா ராஜ பரங்குசாதிகளைப் போலே அன்றிக்கே
அவன் மல்ல வர்க்கத்தை அநாயாசேந அழித்த தன் மிடுக்கைக் காட்ட அது தனக்குப் பல்லாண்டு என்று பயப்படுவது
அநந்ய ப்ரயோஜனரான தமக்குப் பிரதிகூலரான கேவலரையும் ஐஸ்வர்யார்த்தி களையும்
மங்களா ஸாஸன அர்த்தமாக அழைத்து சங்கதராய் அவர்களோடே திருப்பல்லாண்டு பாடி அனுகூலராக்கிக் கொள்வது
கதே ஜலே சேது பந்தனம் பண்ணுவாரைப் போலே அன்று
பாழாளாகப் படை பொருதானுக்கு -இத்யாதிகளாலே
முன்பு அவன் பண்ணின அபதாநங்களுக்கு அக் காலத்தில் உதவப் பெறாத இழவுக்கு இன்று இருந்து வயிறு பிடிப்பது
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்று
அவ் விலக்ஷண வஸ்துவை ப்ராபித்த அநந்தரம் அந்த பிராப்திக்கு பலமும் இம் மங்களா சாஸனம் என்பது
அப் பலாதிகாரிகளாய் -அஸ்தானே பய சங்கிகளுமான அநிமிஷரைப் பார்த்து
உறகல் உறகல் -என்ற பாட்டின்படியே -உபதேசிப்பதாய்க் கொண்டு
இம் மங்களா சாஸனமே இவருக்கு விருத்தியாய் இருக்கும் என்கிறார் –

——————

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்-தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

அல்லாதவர்களைப் போலே -இத்யாதி -இப்படி ப்ரயோஜனாந்தர பரரோடு -அநந்ய ப்ரயோஜனரோடு வாசியற இவர் உபதேசிக்கும் இடத்தில்
அல்லாத ஆழ்வார்கள் -ஆச்சார்யர்களைப் போலே உபதேசிக்கிற அர்த்தத்தைக் கேட்கிறவர்கள்
பகவத் விமுகராகையாலே -தனியரான ஸம்ஸாரிகளுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும்
பகவத் குண அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்குத் துணைத் தேட்டமாம் படி
தனியராய் இருக்கிற வக்தாக்களான தங்களுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும் அன்றியே
ஆளுமாளார்-என்கிற பாட்டின் படியே ஆழ்வாரை ஒழிய அநு சரர் இல்லாத படியாய் அத்விதீய ஸுகுமார்யத்தை யுடைய ஈஸ்வரன்
தனிமையைத் தவிர்க்கைக்காக வாய்த்து திருக்கோட்டியூர் நம்பி அஷட் கர்ணமாக உபதேசித்த அர்த்தத்தை அவ்வாச்சார்ய வார்த்த
அதி லங்கனம் பண்ணியே யாகிலும் பெரிய பெருமாளுடைய மங்களா ஸாஸன அர்த்தமாகப் பெரிய திரு மண்டபத்திலே பேர் ஓலக்கமாக வைத்து உபதேசித்த பாஷ்ய காரரும்
திருப் பல்லாண்டிலே அநந்ய ப்ரயோஜனரோடு ஓக்க ப்ரயோஜனாந்தர பரரையும் அழைத்து ஆள் தேடும் ஐவரும் உபதேஸிப்பது -என்கிறார் –

————–

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்-பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –

அல்லாதார்க்கு -இத்யாதி -அல்லாத ஆழ்வார்கள்
நின்னலால் இலேன் காண் -என்றும்
என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ -என்றும் சொல்லுகையாலே
அவனைக் கண்டு அனுபவித்த போது சத்தை யுண்டாய்
அவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே சத்தா பலமான ஸம்ருத்தியுமாக இருப்பர்கள்
இப் பெரியாழ்வாருக்கு -மயர்வற மதி நலம் அருளப்பெற்ற அன்றே தொடங்கி மங்களா ஸாஸன ஏக தத்பரராய்ப் போரு கையாலே
அவ்விரண்டுமே மங்களா ஸாஸனத்திலே என்கிறார் –

——————–

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை அநு சந்தித்தால்-ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே-நமக்கு எல்லாம்-யாத்ரையாக வேணும் –

உகந்து அருளின நிலங்களில் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தம் சிஷ்டாசார ஸித்தமான பின்பு இதில் ஆஸ்திக் யத்தையும் ஆதரத்தையும்
யுடையோமாய்க் கொண்டு போருகிற நமக்கு எல்லாம் அத்யந்த விலக்ஷணனாய் வைத்து அதி ஸூ குமாரமான வடிவோடே
அர்ச்சாவதார ரூபியாய்க் கொண்டு அவன் உகந்து அருளின அருளின நிலங்களை அனுசந்தித்தால்
விசேஷித்து மங்களா ஸாஸனம் ஒழியச் செல்லாத விஷயத்தில் நமக்கு தேஹ தாரண அர்த்தமான ஊணுக்கும் உறக்கத்துக்கு உட் பட அவசரம் இன்றிக்கே
இவ் வாழ்வாருடைய மங்களா ஸாஸன யாத்ரையே தேஹ யாத்ரையாம்படி வர்த்திக்க வேணும் -என்று விதித்து அருளுகிறார் –
அன்றிக்கே
இவ்வதிகாரிக்கு -ஊணும் உறக்கமும் இன்றிக்கே -என்றது
ஸோஸ்நுதே -இத்யாதில் படியே
ஓவாத ஊணாக உண்ணப்படும் பகவத் குண அனுபவ ஸூக ரூபமாகிற உறக்கமும் இன்றிக்கே -என்றுமாம் –

————————-

சூரணை -258-

ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

ஆகையால் இத்யாதி -ஆகக் கீழே -மங்களா ஸாஸனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ -என்று சங்கித்து ப்ரேம தசையிலே வரும்
மங்களா ஸாஸனம் ஸிஷ்டாச்சார ஸித்தமாகையாலே -அநந்ய ப்ரயோஜனர்க்கு எல்லாம் இதுவே அநுஷ்டேயம் என்று நிர்ணயித்து
இப்படி இது ஸ்வரூபத்தோடே சேருமதாகையாலே மங்களா சாஸனமே ஸ்வரூப அநு குணம் என்று பரிஹரித்துத் தலைக் கட்டுகிறார் –

—————-

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்-
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப் போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

இனி அநு கூலர் ஆகிறார் -என்று தொடங்கி -அநு கூல ஸஹ வாஸமும் -என்று கீழே சொன்ன
ஸஹ வாஸ யோக்யருமான சரம அதிகாரிகளுடைய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –
இவ் வதிகாரிக்கு ஸஹ வாஸத்துக்கு அநுகூலராவார் விசதமான ஞானம் என்ன -அந்த ஞான விபாக தசையான பக்தி என்ன
அவ் விரண்டின் கார்யமாய் வருகிற இதர விஷய வைராக்யம் என்ன -இவை ஓரொன்றை அவ்விஷயத்திலே இட்டு மற்றை இரண்டையும் மாற்றிப் பார்த்தால் –
ஒரு பாத்ரத்திலே இருந்த பண்டத்தை ஒழித்து மற்ற ஒரு பண்டத்தை இட்டு அத்தைப் பூரித்துப் பார்த்தால் அது இருக்குமோ பாதி அவை ஓரொன்றே பரிபூர்ணங்களாய்
வசதி ஹ்ருதி ஸநாதநே ச தஸ்மிந் பவதி புமான் ஜகதோஸ்ய சவும்ய ரூப
ஷிதிர ஸமதிரம்ய மாத்ம நோந்த கதயதி சாருதயைவ சால போத -என்னுமா போலே
அவர்கள் திருமேனியிலே அவை தெரியக் கண்டு படி எடுத்துக் கொள்ளலாம் படி வர்த்திக்கிற மங்களா ஸாஸன கதாரகரான சரம அதிகாரிகள் என்கிறார் –

——————-

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்-தீரக் கடவதாய் இருக்கும்

ஆனால் இவர்களோட்டை ஸஹ வாஸம் சிலருக்கு உத்தாரக ஹேதுவாகக் கண்ட இடம் உண்டோ என்ன
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹ்ருதீ கரித்து -ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வர்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு -நம் அசல் அகத்தில் இவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற எமதூதரும் வந்து ப்ரவேசிக்க
இவன் கையும் திருப்பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய்ப் பிரவேசித்துக் கிடக்க
அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க -அத்தைக்கு கண்டு அப்பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி –
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித் திருவடிகளில் சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே
அப்படி ஒரு விளை நிலமானது நீர் நிரம்ப நின்றால் அத்தோடு ஒத்த நிலமும் அதில் பொசிவாலே தரித்துக் கிடக்குமா போலே
கீழ்ச் சொன்ன ஞான பக்தி வைராக்யங்கள் இல்லாதாருக்கும் அவற்றில் பூர்ணரான அவ்வதிகாரிகளோட்டை ஸம்பந்தத்தாலே
ஸம்ஸார வெக்காயத்தால் வந்த உறாவுதல் தீர்ந்து சத்தை தரிக்கும்படி யாய் இருக்கும் என்கிறார் –
கேதாரஸ் யேவ கேதாரஸ் ஸோத கஸ்ய நிரூ தக
உபஸ்நேஹேந ஜீவாமி ஜீவந்தீம் தாம் அநு ஸ்மரன்-என்றார் இறே பெருமாளும் –

————

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே
இந்த ஸ்வபாவ விசேஷங்கள் தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

இனி -ஆறு நீர வர அணித்தானால் – என்று தொடங்கி -அவர்களோட்டை ஸஹ வாஸம் இப்படி சத்தா ஹேதுவாம் அளவே யல்ல அவர்களுடைய
ஸ்வ பாவ விசேஷங்களும் தனக்கே பிரதிபன்னமாம் படி தன்னடையே பலித்து அறும் என்கிறார் –
அது எங்கனே என்னில் -காவேரி நீர் வர அணித்தானால் மணல் ஈர்க்கை முதலாக மற்றும் அதுக்கு ஈடான அடையாளங்கள்
ஸஹ்ய பர்வத ஸம்பந்த மாத்ரத்தாலே ஸம் பிரதிபன்னமாக உண்டாமா போலே இவ்வதிகாரிக்கும் பகவத் பிராப்தி அணித்தனவாறே
பரம ஆர்த்தரானவர்களுடைய உத்தமமான ஸ்வபாவ விசேஷங்கள் இவர்களுக்கும் ஸ்வயமேவ வரக்கடவதாய் இருக்கும் –

———————–

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று- தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

இவற்றை இத்யாதி -இஸ் ஸ்வ பாவ விசேஷங்களைக் கொண்டு அநாதி காலம் ஸம்ஸரித்துப் போந்த தனக்கே
இனி ஸம்ஸரிக்கைக்கு ஹேது வல்லாத சரம சரீரம் இது என்று ஸ்வயமேவ நிர்ணயிக்கலாய் இருக்கும் -என்கிறார் –

—————-

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

ஆக -கீழ் –
ஸஹ வாஸ யோக்யரான அனுகூலருடைய லக்ஷணத்தையும் –
அஸ் ஸஹ வாசத்தால் வரும் பல விசேஷங்களையும்
அருளிச் செய்து
இனி பிரதிகூலராவார் -இத்யாதியாலே –
பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் -என்று கீழ்ச் சொன்ன ஸஹ வாஸ யோக்யர் அல்லாத பிரதிகூலருடைய பேதங்களை ப்ரதிபாதிக்கிறார் –
பிரதிகூலராகிறார் -இத்யாதி -காண்கிற தேஹமே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்களைத் தொடங்கி
ஒருவருக்கு ஒருவர் ஆதிக்யம் தோற்றும்படியான க்ரமத்திலே அவர்களை அருளிச் செய்கிறார் –

—————

சூரணை -264-

இவர்களுக்கு உத்தேஸ்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

இவர்களை ஸஹ படிக்கையாலே வந்த ஸாம்யத்தாலே அந்யோன்யம் அபேத சங்கையைத் தவிர்க்கைக்காக இவர்களுக்கு
உத்தேச்யரும் -உபாய உபேயங்களும் பேதித்து இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேச்யர் –தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–

2-ஸ்வ தந்த்ரர்க்கு -உத்தேச்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-

3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேச்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –

4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –

5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேச்யன் -நெஞ்சினால் நினைப்பான் யவன் -என்கிறவன் –
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

அந்த பேதம் தான் எங்கனே என்னில் –
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆதரணீயர் தாரகாதிகளாலே அத்தேஹத்தை வர்த்திப்பிக்குமவர்கள்
அஸ்திரமான தேஹமே ஆத்மாவாக அத்யவசித்து இருக்கையாலே அஸ்திரமான அர்த்தமும்
புத்ர பஸ் வாத்ய ஐஹிக போகமும் -அவர்களுக்கு உபாய உபேயங்கள் என்கிறார்

ஸ்வ தந்த்ரருக்கு இத்யாதி –
இனி தேஹ அதிரிக்தனான ஆத்மா ஒருவன் உளன் என்று அவன் ஞாதாவாய் கர்த்தாவாய் இருக்கும் என்னும் இடம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே
அந்த ஸாஸ்த்ர ஞானத்தாலே தங்களை ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி இருக்குமவர்களுக்கும்
ஆதரணீயர் கீழ்ச் சொன்ன ஐஹிகத்தில் விலக்ஷணமான ஸ்வர்க்காதி போக ப்ரதரான அக்னி இந்த்ராதி தேவதைகள் –
இவர்களுக்கு உபாயம் -ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத=இத்யாதிகளால் சொல்லப்படுகிற ஸ்வ யத்ன ரூபமான கர்ம அனுஷ்டானம்
இவர்களுக்கு உபேயம் -ஸ்வ போக்த்ருத்வ ரூபமான ஸ்வர்க்காதி போகம்

அந்நிய சேஷ பூதர்க்கு -இத்யாதி
ஸ்வரூபம் ஸ்வ அதீனம் இல்லாமையை லோக வேதங்களிலே காண்கையாலே சேஷத்வத்தை இசைந்து அதில் ஆபாத ப்ரதீதி ப்ரஸித்தரான
பகவத் வ்யதிரிக்தருக்கு சேஷம் என்று இருப்பார்க்கு உத்தேச்யர் ஜகாத் ஸ்ருஷ்ட்டி யாதிகளிலே நியுக்தரான ப்ரஹ்மாதிகள்
இவர்களை ஆராதிக்கையும்
ஏதா ஸாமேவ தேவதா நாம் ஸாயுஜ்யம் -என்கிறபடியே இவர்களுடைய போக்ய ஸாம்யா பத்தியும் உபாய உபேயங்கள் என்கிறார் –

உபாயாந்தர நிஷ்டருக்கு -இத்யாதி –
அங்கன் இன்றியே ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷம் என்னும் இடத்தை ஆச்சார்ய உபதேசாதிகளாலே அறிந்து வைத்து
அவனையே பற்றாதே இதர சாதன அனுஷ்டான பரரானவர்களுக்கு ஆதரணீயன்
அவ்வுபாயத்துக்கு
யஜ்ஜேந தாநேந -என்கிற கர்ம ப்ராதான்யத்தாலே வேதத்தில் பூர்வ பாகத்தில் ஆராத்யரான அக்னி இந்த்ராதி
தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸர்வேஸ்வரன் –
இவர்களுக்கு உபாயம் -உபய பரிகர்மி ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோகைக லப்ய -என்கையாலே கர்ம ஞானாதிகள்
பேஜஷம் பகவத் ப்ராப்திர் ஏகாந்த அத்யந்திகீ மதா-என்கையாலே உபேயம் பகவத் அனுபவம் –

ஸ்வ ப்ரயோஜன பரர்க்கு -இத்யாதி –
சாதனாந்தரம் துஷ் கரத்வாதி தோஷ துஷ்டம் என்று தங்களுடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஈஸ்வரனே உபாயமாகத்
தங்கள் ஸ்வீ கரித்த ஸ்வ ப்ரயோஜன பரருக்கு ஆதரணீயன்-ஆஸ்ரிதர் நெஞ்சால் உகந்த த்ரவ்யங்களிலே
அப்ராக்ருத விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார ரூபியான ஸர்வேஸ்வரன்
இவனுக்கு உபாய உபேயங்கள் -அஹம் மமதா தூஷிதமான தான் பற்றும் பற்றும் தன் பேறாகச் செய்யும் கைங்கர்யமும் –

ஆனால் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனரான சாதனாந்தர நிஷ்டருக்கும்
தத் ஏக உபாயரான ஸ்வ ப்ரயோஜன பரருக்கும்
முக்த அவஸ்தையில் வந்தால் -அநந்ய சாதனனாய் -அநந்ய ப்ரயோஜனான விலக்ஷண அதிகாரியோபாதி
பலம் அவிசிஷ்டமான பின்பு உபேயம் பகவத் அனுபவ மாத்ரம் என்றும் -ஸ்வார்த்த கைங்கர்யம் என்றும் அவர்களுக்கு விசேஷித்துச் சொல்லுவான் என் என்னில்
உபாஸகனுக்கு ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறந்தால் அவ்வாத்மாவினுடைய
ஞாத்ருத்வ கர்த்ருத்வங்கள் முற்பட உதித்து -பகவத் சமாஸ்ரயண அனுரூபமாக அநந்தரம் தத் சேஷத்வ பாரதந்தர்யங்களும் உதிக்கையாலே
அவ் வுபாசனத்துக்குக் கர்த்தாவான தனக்கு நிரதிசய போக்யமான பகவத் ப்ராப்தியை புருஷார்த்தமாகக் கோலுகை அவ்வுபாசனத்துக்கு அபிப்ராயமாக ஸம்பாவிதமாகையாலும்
ஸ்வ பிரயோஜன பரனாகச் சொல்லுகிறவனும் ஏக பதத்தாலே கழி யுண்கிற ஸ்வீ காரத்தை ஸ்வ கீயமாக்குகையாலே
உபேய தசையிலும் ஸ்வார்த்த ரூப கைங்கர்யம் அவனுக்கு அபிப்ராயமாகக் கூடுகையாலும்
உபாய தசையில் இவ்வதிகாரிகளுக்கு உண்டான அபிப்ராயத்தை த்யோதிப்பித்த மாத்ரம் இத்தனை
இனி கைங்கர்ய தசையில் இவற்றை பிராயச்சித்தத்தாலும் புருஷகாரத்தாலும் கழித்துக் கொள்ளுகையாலே
பல விசேஷ தோஷம் இல்லை என்று அபிப்ராயம் –

————–

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு –

முதல் சொன்ன மூவரும் -இத்யாதி –
தேஹாத்ம அபிமானிகள் என்றும் -ஸ்வ தந்த்ரர் என்றும் -அந்நிய சேஷ பூதர் என்றும் பிரதமத்திலே சொன்ன மூவரும்
ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநா ஸூரீஷ்வே வயோநிஷு -என்கிறபடியே
கேவலம் ஈஸ்வரனுடைய நிக்ரஹத்துக்கு விஷய பூதர்
அவசிஷ்ட ரான உபாசகனும் -ஸ்வ கத ப்ரபன்னனும்
ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே -இத்யாதிப்படியே பகவத் கிருபா விஷயங்கள் -என்கிறார் –

———————-

சூரணை -267-

மூவருடைய கர்மம்-அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு-பிராய சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு-புருஷகார விநாஸ்யம் –

ஆனால் இவர்களுடைய இந்த அக்ருத்ய கரணங்கள் போம்படி எங்கனே என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூபா ஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்கையாலே
மூவருடைய கர்மங்களும் அனுபவ ஏக விநாஸ்யம் –
நாலாம் அதிகாரியான உபாசகனுக்கு பகவத் அனுபவ விரோதி ப்ராசீன கர்மங்கள் எல்லாம்
உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாஸவ் -என்றும்
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத -என்றும்
இத்யாதியில் சொல்லுகிறபடியே உபாஸன உபக்ரமத்திலே அவை நசிக்கையாலும்
அவ்வுபாசன ரூப பக்தி பரிபாகத்தோடே ப்ராரப்த சேஷமும் நசிக்கையாலும்
இவ்வதிகாரிக்கும் அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் அவஸ்யம் ஸித்தமாய் இருக்க
பகவத் அனுபவ மாத்ர ருசி தோஷமும் சரம தசையில் பகவத் கிருபா அதிசயத்தாலே போகையாலும்
பிராயச்சித்த விநாஸ்யம் -என்கிறார் –
அஞ்சாம் அதிகாரியான ஸ்வ ப்ரயோஜன பரனுக்கு அத்தோஷம் புருஷகாரத்தாலே நசிக்கையாவது –
சேதனனாகையாலே இவன் நா நீட்டினானாகில் முத் திரு உள்ளம் பற்றாதே அத்தோஷத்தையும் வாத்சல்யத்துக்கு இரை யாக்கி யருளீர் என்று புருஷீ கரித்துப் போக்குகை -என்கிறார் –

————-

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –
கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –

ஆனால் இவனுக்குப் புருஷகாரமோ விரோதி நிவர்த்தகம் ஆகிறது என்கிற சங்கையிலே -உபாயம் ஸ்வீ கார காலத்தில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

இதர ஸஹாய அஸஹமான ஸித்த உபாயம் தன்னை இஸ் ஸம்ஸாரியான சேதனன் ஸ்வீ கரிக்கும் இடத்தில் ஸர்வ முக்தி பிரசங்காதி பரிஹார அர்த்தமாகவும்
ஸ்வீ காரத்தினுடைய தார்ட்ய ஹேதுவாகவும் -சேதனனாகிற புருஷனையும் –
பிராட்டியாகிற புருஷகாரத்தையும் -அபேக்ஷித்திக் கொண்டு இருக்கும் –

கார்ய காலத்தில் இத்யாதி -இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் அளவில்
இவ்வுபாயம் கீழ்ச் சொன்ன இரண்டையும் அபேக்ஷியாது என்கிறார் –

இனித்தான்
ஸ்வீ காரத்தில் விசேஷண ப்ராதான்யமாய்
கார்ய காலத்தில் விசேஷ்ய ப்ராதான்யமாய்
போக தசையில் விஸிஷ்ட ப்ராதான்யமாய் -இருக்கும் இறே –

————

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

இனிக் கீழ் ப்ரஸ்துதமான -ஸ்வ ப்ரயோஜனத்வம் -ஆழ்வார்கள் பாசுரங்களிலும் தோற்றுகையாலே அவர்களை வ்யாவர்த்திக்கைக்காக
ஸ்வ ப்ரயோஜனர் எல்லாரையும் என்று தொடங்கி சோத்ய பூர்வமாக அத்தைப் பரிஹரிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ப்ரயோஜன பரர் எல்லாரையும் -இத்யாதி –

இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
நான் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாய் -என்றும்
கண்டு நான் யுன்னை யுகக்க -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
இத்யாதிகளாலே தாங்கள் அவனை அநுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வார்களையும் இவர்களோடு ஓக்க ஸ்வ ப்ரயோஜனர் என்று நினைக்கலாமா -என்னில் –

—————-

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

அது ஒண்ணாது -அது எங்கனே என்னில் -பிரதிகூல விபாகம் பண்ணுகிற இவ்விடத்தில் ஸ்வ ப்ரயோஜனமாகச் சொல்லுகிறது
பல அனுபவத்துக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய துர் வாஸனா தோஷம் அடியாக வந்த ஸ்வ ப்ரயோஜனத்வத்தை –

——————

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

ஆகையால் இவனைப் பிரதிகூலன் என்ன தோஷம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம் -துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

இங்கனே யாகிலும் இந்த ஸ்வ பிரயோஜனம் அவிசிஷ்டமாகையாலே ஆழ்வார்களுக்கு அத்தோஷம் இல்லையான படி என் என்ன
விஷய தோஷத்தால் வரும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
அந்த விஷய தோஷமாவது –
அவர்கள் அனுபவத்துக்கு விஷயமானவனுடைய பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான அவனுடைய வயிர உருக்கான வை லக்ஷண்யம்
இவ்வைலக்ஷண்யம் அடியாக நா நீளுகிற அந்த ஸ்வ ப்ரயோஜனத்வம் தோஷம் இல்லை மாத்ரம் அன்றியே
ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே விடவும் முடியாது என்கிறார் -எங்கனே என்னில்
கீழில் துர் வாஸனையால் வரும் ஸ்வ ப்ரயோஜனத்வம் ஒரு ஆச்சார்ய முகத்தாலே இது ஸ்வரூப ஹானி என்று சிஷித்தவாறே த்யஜிக்கலாம்
விஷய வைலக்ஷண்யம் யாவதாத்ம பாவி யாகையாலே த்யஜிப்பிக்க நினைத்த அந்தரங்கரையும்
ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று த்யஜிக்கும் படி பண்ணா நிற்கும் இறே –

———————-

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்ய திச்ச்சதி-

இனி இவ்வர்த்தத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுடைய பாசுரம் உண்டு என்னும் இடத்தை –
ஊமை யாரோடு செவிடர் வார்த்தை —
கதம் அந்நிய திச்சதி -என்று அருளிச் செய்கிறார் –
இத்தால் பகவத் விஷயத்தில் பக்தி பரவசராய் இருப்பார்க்கு இவ்விஷயத்தில் நின்றும் மீட்கச் சொல்லுவார் வார்த்தை
மூகரோடே பதிரர் வார்த்தை சொன்னவோ பாதி நிஷ் பிரயோஜனம் என்கிறது –
தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதம் அந்நிய திச்சதி –
ஸ்த்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நே ஷுரகம் ஹி வீக்ஷதே -என்றார் இறே ஆளவந்தாரும் –
இதில் -நிவேசிதாத்மா -என்றது உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளிலே வைக்கப்பட்ட நெஞ்சானது -என்றபடி –
கதம் அந்நியதிச்சதி -அந்த நெஞ்சானது அந்த போக்யத்தையை விட்டு மற்ற ஒன்றை எங்கனே புஜிப்பது என்றபடி –

—————–

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –

ஆகக் கீழ் ஸஹ வாஸ யோக்யர் அல்லரான பிரதிகூலருடைய ப்ரகார பேதங்களை அருளிச் செய்து
அதிலே ப்ரஸ்துதமான சங்கா பரிகாரங்களையும் பண்ணி
மேல் ஸதாச்சார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் என்றத்தை விவரிக்கிறார் -இப்படி இவை இத்தனையும் -என்று தொடங்கி –
இவ் வதிகாரி தான் இவை வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போருவது எங்கனே என்னில்
வித்யுக்தங்களான வக்தவ்ய -அவக்தவ்ய -ஜப்தவ்ய -பரிக்ராஹ்ய -பரித்யாஜ்ய -கர்தவ்யாதி களிலே இவன் ஸதா காலமும் நியதனாகவே
கீழ் தின சரிதையில் சொன்ன அனுஷ்டானங்கள் ஸ்வயமேவ ஸித்திக்கும் -என்கிறது -வஸ்ததவ்யம்-இத்யாதி –
மத் பக்தைஸ் ஸஹ வாஸோ தத ஸித்தவ் மயாபி வா -என்கையாலே
ஸத்யம் வத தர்மம் சர -என்று தொடங்கி -அந்தே வாஸியான தன்னை அநு சாஸித்துக் கொண்டு போருவான் ஒரு ஆச்சார்ய ஸந்நிதியும்
அழகாலும் ஆ ஸக்தியாலும் அவற்றிலே அத்யவசாய அபி ருசிகளை விளைவிக்கும் அர்ச்சாவதார ஸந்நிதியும்
இவனுக்கு வஸ்தவ்ய ஸ்தலம் என்றும்

இப்படி வஸிக்கும் இடத்தில் –
ப்ரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்றும்
குரும் ப்ரகாஸ யேத் தீமான் -என்றும் சொல்லுகையாலே
வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும்
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து -என்றும்
திக ஸூசி மவிநீதம் -என்றும் இத்யாதிகளில் படியே –
அவ்விரண்டு சந்நிதியிலும் ஸ்வ நிகர்ஷமே சொல்லப்படும் என்றும் –

இவனுக்கு ஜப்தவ்யமும்-ஆசார்யாணாமஸாவஸா வித்யா பகவத்த-என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத் ஸ யாமுன முநேஸ் ஸ ச நாத வம்ஸ்ய
வம்ஸ்யஸ் பராங்குச முநேஸ் ஸ ச ஸோபி தேவ்யா தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேஷ ணீய -என்றும்
த்வயம் அர்த்த அநு ஸந்தாநேந ஸஹ ஸ தைவம் வக்தா யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூக மாஸ்வ -என்றும் அருளிச் செய்கையாலே
குரு பரம்பரா பூர்வகமான த்வயம் என்றும்

இவனுக்கு பரிக்ராஹ்யமும்
ஸூ வ்யாஹ் ருதாநி மஹதாம் ஸூக்ருதாநி ததஸ் ததஸ் சஞ்சின்வன் தீர ஆஸீத ஸில ஹாரீ ஸிலம் யதா -என்றும்
குரோர் வார்த்தாம் கதாம் சைவ -என்றும்
யான் யஸ் மாகம் ஸூ சரிதாநி தாநி த்வயோபாஸ்யாநி -என்றும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட தாத்தா தேவே தரோ ஜன ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அநு வர்த்ததே -என்றும் சொல்லுகையாலே
பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்த நல் வார்த்தைகளும்
பஞ்ச கால பராயண ரானவர்களுடைய அநுஷ்டான விசேஷங்களும் என்றும்

இவனுக்குப் பரித்யாஜ்யமும் -ஸ்ருத வான் வா குலீநோ வா தபஸ்வீ வா பராசர த்வய அதிகாரீ நோ சேத் தம் தூரத பரிவர்ஜயேத்-என்கையாலே
கீழ் யுக்தமான அனுஷ்டான விசேஷங்களில் அதிக்ருதர் அல்லாத அவைஷ்ணவர்களோடே பண்ணும் ஸஹ வாஸமும்
அனுஷ்டானத்துக்கு விரோதியான துரபிமானமும்

இவனுக்குக் கர்த்தவ்யமும் -ஆச்சார்ய அதீநோ பவ -என்றும் –
மத் பக்தைஸ் ஸததம் யுக்தஸ் தேஷ் வேகஸ்ய வஸே ஸ்திதஸ் தஸ்ய அநு ஸாஸனம் குர்வன் மத் சாதர்ம்யாய கல்பதே -என்றும்
அர்ச்ச நீயஸ்ய வந்த்யஸ் ச கீர்த்த நீயஸ் ச ஸர்வதா த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்ச யேந் நர -என்றும்
தாமர்ச்ச யேத்தாம் பிரணமேத் தாம் யஜேத் தாம் விசிந்தயேத் -என்றும் சொலுகையாலே
ஆச்சார்ய கைங்கர்யமும்
அவனுக்கு உகப்பாய் வரும் திரு விளக்கு எரிக்கை -திருமாலை எடுக்கை -தொடக்கமான பகவத் கைங்கர்யமும் –
என்றும் இப்படி இவன் இதிலே நிஷ்ணாதனாய்க் கொண்டு வர்த்திக்கவே கீழ்ச் சொன்ன தினசரிதா விஹிதமான அனுஷ்டானங்கள்
இவனுக்கு ஸ்வயமேவ ஸித்திக்கும் என்று
ஆக இவ்வளவால்
அத்தினசரிதையிலே சங்கித்துச் சொன்ன சோத்யங்கள் நாலையும் பரிஹரித்து அருளினார் ஆய்த்து-

—————-

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

இனி இவன் அங்கு கைங்கர்யங்களைப் பண்ணும் இடத்தில் எம் முகத்தால் பண்ணுவான் என்னும் ஆகாங்க்ஷையிலே –
கீழ்ச் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
இங்கு கீழ்ச் சொன்ன என்கிறது வக்தவ்யமான மேலில் பாசுரத்துக்குக் கீழே யான பாசுரம் தன்னை –
அதில் இவன் பகவத் கைங்கர்ய அனுஷ்டானம் அறிவது –
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா -என்கிற ஸ்ருதி ரூபமான கேவல ஸாஸ்த்ர முகத்தாலே
ஆச்சார்ய கைங்கர்யம் அறிவது -குருரேவ பரம் ப்ரஹ்ம –
அர்ச்ச நீ யஸ்ய வந்த்யஸ் ச -இத்யாதிகளான
ஸாஸ்த்ர முகங்களாலும்
அவ்வாச்சார்யன் தான் ஸ்வாச்சார்ய விஷயத்தில் தன்னுடைய அநு வர்த்தன க்ரமத்தை ஸ ப்ரகாரமாக அருளிச் செய்கையாலும்
இவனுக்கு அறியலாம் என்கிறார் –

—————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

இனி மேல் -கைங்கர்யம் தான் இரண்டு -என்று தொடங்கி -கீழே கைங்கர்யம் ப்ரஸ்துதமாகையாலே
இங்கே சதுர்த்யர்த்தமான கைங்கர்யத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –
கைங்கர்ய தசை போலே -என்னும் அளவும் –

——————

சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

இனி -அதாவது இஷ்டம் செய்கையும் -அநிஷ்டம் தவிருகையும் -என்று
இவன் கைங்கர்யம் செய்கையாவது -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் இஷ்டமானது செய்கையும்
அநிஷ்டமானது தவிருகையும் என்று பிரதமத்தில்
கைங்கர்ய வேஷம் இருக்கும்படியை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————–

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

அவர்களுடைய இஷ்ட அநிஷ்டங்கள் தான் எத்தைப் பற்ற வருகின்றனவோ என்ன –
இக் கைங்கர்யத்திலே அதிக்ருத்தனான இவ் வதிகாரியினுடைய வர்ணாஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும் பற்றிக் கொண்டு அவர்களுக்கு அவை உண்டாம் என்கிறார் –
அது என் என்னில் -இக் கைங்கர்யம் தன்னை -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஞ்ஞா -என்ன
ஈஸ்வரன் -என்ன -ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்ற சதாச்சார்யன் -என்ன –
இவ்வுபயருக்கும் ஓக்கச் சொல்லிக் கொண்டு போகையாலே
இவன் வர்ணாஸ்ரமங்களுக்குச் சொன்ன அனுஷ்டானங்களைச் செய்கையும்
அவற்றுக்குச் சேராத அநிஷ்டங்களைத் தவிருகையும்
அவ் வாச்சார்யனுக்கும் ஈஸ்வரனுக்கும் அத்யந்தம் உகப்பாய் இருக்கும் என்று கருத்து –
அங்கன் அன்றாகில் கீழே உத்க்ருஷ்ட ஜன்மாக்களாக ஸாதித்த இவர்கள் அளவில் உகப்பாலே
முன்புள்ளாரும் வர்ணாஸ்ரம விருத்தமான கொள் கொடை பண்ணுதல் –
அவ் வுத்க்ருஷ்ட ஜன்மாக்கள் தான் ஸ்ரீ புருஷ ஸூக்தாதி வைதிக மந்த்ரங்களாலே பகவத் ஸமாராதநத்திலே
ப்ரவ்ருத்தரானார்கள் என்றாதல் கேட்க வேணும் இறே –
அன்றிக்கே -இக் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தையே நிரூபித்துப் பார்த்தால்
வர்ணாஸ்ரமங்கள் மாத்ரத்தையே அவலம்பித்துக் கொண்டு வருமவை அவர்களுக்கு அநிஷ்டங்களாய் கேவல ஆத்ம ஸ்வரூபத்தை
அவலம்பித்துக் கொண்டு வருமாவை இஷ்டங்களாய் இருக்கும் என்று அருளிச் செய்வர்கள் –

———————–

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-

ஆனால் முதல் சொன்ன அர்த்தத்தோடே -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-என்கிற பாசுரத்தில் அர்த்தம் –
சங்கதமாகிற படி என் என்னில் -இவ்வளவில் ருசி பிறந்து லௌகிகருக்கு ஆதரணீயமான வர்ணமும் கால் கட்டாம் என்று அஞ்சுகிற இவ்வதிகாரி
வர்ணாஸ்ரமங்களுக்கும் ஆத்ம ஸ்வரூபத்துக்கும் சேராததாய் -அத ஏவ -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் அநிஷ்டமான பாபத்தை
முதல் தன்னிலே பண்ணான் இறே என்று இவ்வதிகாரிகள் அநிஷ்டங்களில் இழியாமையை சாதிக்கிறது –

—————

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

மேல் -இவன் புண்யத்தைப் பாபம் என்கிறது -இவ்வதிகாரிக்கு மோக்ஷ பலமான கைங்கர்ய விரோதியாகையாலே
ஈஸ்வரன் இவனுடைய பாபத்தைப் புண்யம் என்று இருக்கிறது –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்று இருக்கும் வத்சலனாகையாலே
இனி அவனுக்கு அது கிடையாது -என்றது அநிஷ்ட ப்ரவ்ருத்தி ரூபமான பாபம் இவ்வதிகாரிக்கு ஸம்பாவிதம் அல்லாமையாலே –

———————-

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

கைங்கர்யம் தான் இத்யாதி -இப்படி யுக்த லக்ஷணோ பேதமான இக்கைங்கர்யம் தான் -என்றபடி –
பக்தி மூலம் இல்லாத போது பீதி மூலமாகிலும் வேணும் -என்று இக் கைங்கர்யத்துக்குக் கீழ் நின்ற நிலையைப் பற்ற
ஓர் ஓவ்ஜ்வல்ய ரூப தஸா விசேஷத்தை ப்ரதிபாதிக்கிறார் -அதாவது
சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான பக்தி மூலமாகப் பண்ணும் கைங்கர்யமே பிராப்தம்
ப்ரக்ருதி வஸ்யதையாலே அது கூடா விடில்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா என்கிற பகவத் ஆஜ்ஞா அதி லங்கன பீதி மூலமாகவும்
அந்தே வாஸிந மநு சாஸ்தி -என்று ஆச்சார்யனுடைய அனுஸான லங்கன பீதி மூலமாகவும்
லோக அபவாத பீதி மூலவாகவும் ஆகிலும்
அனுஷ்ட்டிக்கப்படும் என்கிறார் –

——————–

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

அதுவும் இல்லாத போது -இத்யாதி -அந்த பீதி மூலமாகிலும் அனுஷ்டியாத போது
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -என்கையாலே சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூப ஸத் பாவம் இல்லாமையாலும்
அதிகாரத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழியும்
அவனுடைய கிருபையும் உகப்பும் இவனுக்கு இல்லாமையாலே உபாயத்திலும் உபேயத்திலும் அந்வயம் இன்றிக்கே ஒழியும் -என்கிறார் –

—————-

சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்

கைங்கர்யம் தன்னை இத்யாதி -இத்தால் கைங்கர்யம் தனக்கே அநந்ய ப்ரயோஜனத்வ ரூப தஸா விசேஷத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது –
உக்தமான உபய பிரகாரத்தையும் உடைத்தான கைங்கர்யம் தன்னை ப்ரீண புத்தயா பண்ணும் உபாசகனைப் போலே ஒரு பலத்தை உத்தேசித்து
இத்தை சாதனமாகப் புத்தி பண்ணாதே-பதியது ஏத்தி எழுவது பயனே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே -என்றும்
இத்யாதியில் படியே -கேவலம் பகவத் ப்ரிய ரூப கைங்கரியமேயாக பிரதிபத்தி பண்ண வேணும் –

————

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்கப்
பண்ணுகை–

அதாவது -அப்பல ரூப கைங்கர்யமாவது –
தான் கை ஏலாதே அவனைக் கை ஏற்கப் பண்ணுகை –
தேஹி மே ததாமி தே -என்று தான் அவன் பக்கல் அபேக்ஷியாதே
யா க்ரியாஸ் ஸம் ப்ரயுக் தாஸ்யு ஏகாந்த கத புத்திபி
தாஸ் ஸர்வாஸ் சிரஸா தேவா ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம் -என்று
அவன் தானே உகந்து அர்த்தித்து குச்சியால் ஏற்கும்படி அநந்ய பிரயோஜநனாய்ப் பண்ணுகை-
பலார்த்தீ பஜதே யோ மாமன்வஹம் காம லோலுப ஸ்ரத்தயாபி துராசாரோ ந ஸ ப்ருத்யஸ் ச வை வணிக் -என்னா நின்றது இறே –

———–

சூரணை -285-

கொடுத்தக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

மேல் -கொடுத்துக் கொள்ளாதே -என்று தொடங்கி -கைங்கர்யத்துக்குக் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தால் வரும் அளவு அன்றிக்கே
தத் ஏக ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தாலே வரும் ஓவ்ஜ்வல்யத்தையும் அருளிச் செய்கிறார் -கொடுத்துக் கொள்ளாதே -இத்யாதி –
இத்தால் இப்படி -தேஹி மே ததாமி தே -என்னாதே
அநந்ய ப்ரயோஜனத்வம் மாத்ரம் அன்றிக்கே
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்கிறபடியே
ததேக ப்ரயோஜனனாய்க் கொண்டு இட்ட த்ரவ்யத்தை அவன் அங்கீ கரித்ததுக்கு அந்த உபகார ஸ்ம்ருதியாலே கைக்கூலி கொடுத்து
அத்தைக் கூலி கொண்டதுக்கும் கைக்கூலி கொடுக்க வேணும் என்கிறார் –

—————

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

ஸ்ரீ விதுரரையும் இத்யாதி -இத்தால் ததேக ப்ரயோஜனத்வ ரூப கைங்கர்யத்தில்
அனுஷ்டாதாக்களும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத- படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

மடி தடவாத சோறும் –இத்யாதி -மடி தடவாத சோறாவது -ஒருவனுக்கு ஒருவன் சோறு இடும் போது ப்ரத்யுபகாரம் எவ்வளவு செய்தால் இவன் திருப்தனாம் என்னும்
சித்த வ்யதையோடே இருக்குமவனுடைய மிடறு பிடித்தால் போலே அவன் பக்கல் பிரதியுபகாரங்களைக் குறித்து வார்த்தை சொல்லாதே இடுமது –
சுருள் நாற்றமும் சுண்ணாம்பும் பூவுக்கும் சாந்துக்கும் அவத்யகரங்கள் யாகையாலே இப்பாசுரங்களை இட்டு ப்ரயோஜனத்வ ரூப தோஷத்தைத் தோற்றுவித்து
இஸ் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூப கைங்கர்யம் இறே இவர்கள் பண்ணிற்று என்கிறார் -எங்கனே என்னில்
புக்தவத்ஸூ த்விஜாக்ர் யேஷு நிஷண்ண பரமாஸநே விதுர அந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச -என்றும்
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -என்றும்
ஸூகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே ஆவயோ காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம் -என்றும்
இப்படிகளைச் சொல்லா நின்றது இறே –

————

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

இனி -கைங்கர்ய தசை போலே -என்று தொடங்கி
கீழே -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -என்று ப்ரஸ்துதமான கைங்கர்யத்தை
இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்றும்
பக்தி மூலம் அல்லாத போது பீதி மூலமாகிலும் வர வேணும் -என்றும்
அநந்ய பிரயோஜனமாக வேணும் -என்றும்
ததேக பிரயோஜனமாக வேணும் -என்றும்
இப்படி நாலு பிரகாரத்தாலே கைங்கர்ய தசையை உஜ்வலமாக்கி –
இனி மேல் –
கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும் இவ்வதிகாரியுடைய ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்க வேணும் என்று
கைங்கர்யத்துக்குப் பூர்வபாவிகளாய் வரும்
ஞான தசை
வரண தசை
பிராப்தி தசை
ப்ராப்ய அனுபவ தசைகளை
சோதியா நின்று கொண்டு இப்படி சாதுர்யேண வரும் ஸ்ருங்கலா பத்தமான அர்த்த விசேஷங்களை அருளிச் செய்கிறார் மேல் –

——————

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

அதாவது -ஞான தசையும் -இத்யாதி -கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியாய் வரும் நாலு தசையுமாவது
ஆச்சார்யன் இவனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகிற ஞான தசையும்
ஞானான் மோக்ஷம் ஆகையாலே -அந்த மோக்ஷ உபாயத்தை விவரிக்கிற வர்ண தசையும்
அந்த வர்ண தசையின் பலமாக வருகிற பகவத் ப்ராப்தி தசையும்
தத் பலமான ப்ராப்ய அனுபவ தசையும் -என்கிறார்
இவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் இறே கீழ் சோதிதமான கைங்கர்யம் தான் இருப்பது –

—————

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

யுக்தமான நாலு தசையிலும் இவன் ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்கும் படி என் என்ன -ஞான தசையில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சதாச்சார்யன் ப்ரக்ருதி ஆத்ம விவேக பூர்வகமாக த்யாஜ்ய உபாதேய விபாக ஞானத்தை உண்டாக்கும் தசையில்
தத் வித்தி பிரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா-என்கிறபடியே
ப்ரணிபாத பரி ப்ரஸ்நாதி தத் பரனாய்க் கொண்டு தத்வ ஹித புருஷார்த்தங்களில் அடியேன் அறிவது ஒன்றும் இல்லை என்று
தன் அஞ்ஞானத்தை விண்ணப்பம் செய்கையும்
வர்ண தசையில் அபூர்த்தியை முன்னிடுகையாவது உபாய வர்ண தசையில்
ந தர்ம நிஷ்டோஸ்மி –
ஸத் கர்ம நைவ கில கிஞ்சித் சஞ்சிநோமி வித்யாப்யவத்ய ரஹிதா ந ஹி வித்யதே மே
கிஞ்ச த்வதஞ்சித பதாம்புஜ பக்தி ஹீந பாத்ரம் பவாமி பகவன் பவதோ தயாயா -என்றும் –
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதிகளில் படியே –
தன்னுடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ ரூபமான அபூர்த்தியை விண்ணப்பம் செய்கையும்
பகவத் ப்ராப்தி தசையில்
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும் இத்யாதிகளில் படியே
தன் ஆர்த்தியின் அதிசயத்தை விண்ணப்பம் செய்கையும்
ப்ராப்யமான பகவத் அனுபவ தசையில் அவ்வனுபவ ஜெனித ப்ரீதியாலே
ஒழிவில் காலத்தில் படியே கைங்கர்யத்தில் அபி நிவேசத்தை விண்ணப்பம் செய்கையும் –

—————

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் இவை இவனுக்கு சமிப்பது எத்தாலே என்ன -அவற்றைச் சொல்லுகிறது -அஞ்ஞானம் போவது -என்று தொடங்கி
காலை நன் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -என்கையாலே
இவனுடைய அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே

குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருஸ நிம்ந மிமம் ஜன முன்னமய யதபேஷ்ய மபேஷி துரஸ்ய ஹி தத் பரி பூரணமீஸி துரீஸ் வரதா -என்றும்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றும் சொல்லுகையாலே
இவனுடைய அபூர்த்தி போவது ஸர்வேஸ்வரனுடைய பூர்த்தியாலே –

உன்னடி சேர் வண்ணம் அருளாயே -என்றும்
இத்யாதிகளில் படியே இவனுடைய ஆர்த்தி போவது பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –

மாறுளதோ இம்மண்ணின் மிசையே –
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே –
இனி என்ன குறை எழுமையுமே -இத்யாதிகளில் படியே –
இவனுக்கு முன்பு அனுபவிக்கப் பெறாத அபி நிவேசம் போவது பரிபூர்ணமான பகவத் அனுபவத்தாலே –
அல்லது -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமான -விஷயத்தில் அபி நிவேசம் மாறாது இறே –

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

இப்படிப் போக்க வேண்டும்படியான இஸ் ஸ்வ பாவ விசேஷங்கள் இவனுக்கு ஸம்பவிக்கைக்கு அடி என் என்ன
அஞ்ஞானத்துக்கு அடி இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
முன் செய்த முழு வினையால் திருவடிக்கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதே -என்றும்
மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன்-என்றும்
பாவமே செய்து பாவியானேன் மற்றேலொன்று அறியேன் -என்றும் இத்யாதிகளில் படியே –
ஆர்த்திக்கு அடி பகவத் அனுபவ அலாபம் -என்றும்

வேங்கடத்து எந்தை தந்தை தந்தைக்கு வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்கையாலே
அபி நிவேசத்துக்கு அடி அவன் வடிவழகு என்றும் அருளிச் செய்து –
இவ்விடத்தில் ஸங்க்ரஹேண சொன்ன ஆர்த்தியினுடைய பிரகாரத்தையும் அபி நிவேசத்தினுடைய பிரகாரத்தையும் தாம் அருளிச் செய்த
அர்ச்சிராதி கதி என்கிற பிரபந்தத்திலே விஸ்தரேண காணலாம்படி சொன்னோம் -என்கிறார் –

————

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

இவன் தனக்கு இத்யாதி -கீழ்ச் சொன்ன கைங்கர்ய தசையிலும்-தத் பூர்வ பாவிகளான நாலு தசையிலும்
உஜ்ஜ்வல ஸ்வ ரூபமான தனக்கு இப்படி ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவாக நாலு தசையும் யுண்டானாப் போலே
ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான நாலு குணமும் யுண்டு என்கிறார் –

——————-

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

அவை எவை என்ன –
ஞானமும் அஞ்ஞானமும் சக்தியும் அசக்தியும் -என்கிறார் –

—————

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

இவை தான் இவனுக்கே அசாதாரணமாய் வரும் குணங்களோ என்னில் அன்று
கீழே ப்ரஸ்துதமான கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான எம்பெருமானுக்கும் யுண்டாகையாலே
இது தான் அவனுக்கும் உண்டு என்கிறார் –

—————-

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுக்களான இவ்விருவருடைய குணங்களுக்கும் விஷயங்கள் எவை என்ன –
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சர்வஞ்ஞனான எம்பெருமானுடைய விஸருங்க லமான ஞானத்துக்கு விஷயம் இவ் வதிகாரியுடைய ஆத்ம குணங்கள் என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் அகஸ் ஸூ கமலேக்ஷண ஸதா ஜகத் ஸமஸ்தம் ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்தித -என்றும்
அவிஞ்ஞாதா ஸஹஸ்ராம் ஸூ -என்றும்
குன்று அனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -என்றும் சொல்லுகிறபடியே
அவனுடைய அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய ப்ரக்ருதி வஸ்யதையால் வந்த தோஷம் என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீ ஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீநம் -என்கையாலே
ஸர்வ சக்தியானவனுடைய சக்திக்கு இலக்கு இரும்பைப் பொன்னாக்குவரைப் போலே
நித்ய ஸம்ஸாரியான இவனை நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவையாக்கி ரக்ஷிக்கும் ரக்ஷணம் என்றும்
ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மநா -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும் இருக்குமவனாகையாலே
அவனுடைய இந்த அசக்திக்கு இலக்கு இவனை எத்தசையிலும் விடுகையும் என்கிறார் –

——————–

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

ஆனால் இவ்வதிகாரி தன்னுடைய குணங்களுக்கு விஷயம் எவை என்னில் -இவனுடைய ஞானத்துக்கு இலக்கு இத்யாதி –
குரோர் குரு தரன் நாஸ்தி குரோர் அந்யன்ன பாவயேத் -என்கையாலே
சதாசார்ய லப்தமான இவனுடைய ஞானத்துக்கு விஷயம் மஹா உபகாரகனான அவ்வாச்சார்யனுடைய ஸத் குண ஸமூஹம்
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் அவ்வாச்சார்யன் எடுத்த திருமேனிக்கு அனுரூபமான சேஷ்டிதங்களில்
ப்ரக்ருதி வாசனையால் வந்த தோஷங்கள் -அதாவது –
அத்தை அவதார சேஷ்டிதங்களோ பாதியாக நினைக்க வேண்டுகையாலே –
ஆச்சார்ய அதீநநாய் இருக்கிற இவனுடைய சக்திக்கு விஷயம் அவனுக்கு இஷ்ட தமமான கைங்கர்யம்
இவனுடைய ஒரு ப்ரவ்ருத்தி யோக்யதை இல்லாத அசக்திக்கு விஷயம் ஆச்சார்யனுக்கு அநிஷ்டமாய் ஸாஸ்த்ர விருத்தங்களுமான நிஷித்த அனுஷ்டானம் -என்கிறார் –

——————-

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

இப்படிப்பட்ட நிஷித்த அனுஷ்டானம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
அவையும் நாலு படியாய் இருக்கும் என்கிறார் –

—————-

சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

அவை தான் எவை என்னில்
அக்ருத்ய கரணமும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

இனி அக்ருத்ய கரணமாவது -இத்யாதியாலே
ஸாஸ்த்ரங்களிலே பரக்க ப்ரதிபாதிக்கப் படுகிற பர ஹிம்ஸாதி நிஷித்த அனுஷ்டானங்களை
ஸங்க்ரஹேண ப்ரதிபாதிக்கிறார் –

—————-

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை-

பகவத் அபசாரமாவது –இத்யாதி –
யேது சாமான்ய பாவேன மன்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டிநோ ஞ்ஞேயாஸ் சர்வ கர்ம பஹிஷ்க்ருதா-என்றும்
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபிமன்யதே ச யாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்றும் சொல்லுகையாலே –
ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனை அவனுடைய ஈஸிதவ்ய ஏக தேச பூதரான தேவதாந்தரங்கோளோடே சமானமாக நினைக்கையும்

ராம கிருஷ்ணாதிகளான அவதாரங்களில் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றபடி
அவை பரனாமவனாதல் பாவியாதே லோக மர்யாத அநு வர்த்தனம் பண்ணின மாத்ரத்தைக் கொண்டு
மனுஷ்ய ஸஜாதீயனாக அத்யவசிக்கையும்

அக்ர ஜன்மாவானவன் மாம்ஸாதிகளாலே ஆராதிக்கையும்
துரீய ஜன்மாவானவன் வைதிக மந்த்ரங்களாலே ஆராதிக்கையும்
உத்தம ஆஸ்ரமியானவன் தாம்பூலாதிகளைக் கொண்டு ஆராதிக்கையும்
எம்பெருமானுக்கு அநிஷ்டமாகையாலே -வர்ணத்துக்கும் ஆஸ்ரமத்துக்கும் சேராத உபசாரங்களும்

யோ விஷ்ணவ் ப்ரதிமாகாரே லோஹ பாவம் கரோதி யோ குரவ் ச மாநுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் -என்றும்
தஷாபி நீசைஸ் ஸூஹ்ருதான வித்யான் பாஷாணம் ருத்தாரு மயாம்ஸ் ச தேவான் வதந்தி யே மாதவ நிந்த காஸ்தே பூர்ணஸ் ஸதா நந்த மயோ ஹி விஷ்ணு -என்றும்
சொல்லுகையாலே அர்ச்சாவதாரத்திலே தாரு லோகாத் யுபதான நிரூபணம் பண்ணுகையும்

யோ அந்யதா சந்தமாநம் யோ அந்யதா ப்ரதிபத்யதே கிந்தேந ந க்ருதுதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –என்றும்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும் சொல்லுகையாலே –
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷமான ஆத்மாவை ஸ்வ தந்த்ரம் என்று இருக்கையும்

அமுது படி சாத்துப்படி முதலான பகவத் த்ரவ்ய அபஹாரம்-தொடக்கமானவை பகவத் அபசாரம் என்கிறார் –

—————-

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும்
அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

இப்படி பகவத் த்ரவ்யத்தை அபஹரியாது ஒழியும் அளவேயோ வேண்டுவது என்னில் -பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –இத்யாதி -அங்கன் அன்று
இந்த பகவத் த்ரவ்யத்தைத் தானே அபஹரித்து ஜீவிக்கும் அளவன்றிக்கே -பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுகிறவர்களுக்கு
ஏதேனும் ஒரு படியாலே ஸஹ கரித்து அவ்வழியாலே தான் ஜீவிக்கையும்
நாம் அபஹரிக்கிறோம் அன்று இறே என்று அவர்கள் பக்கல் யாசித்து வாங்கி ஜீவிக்கையும்
இனித்தான் நாம் யோசித்தோம் அன்று இறே என்று அவர்கள் தாங்களே தருமவற்றை வாங்கி ஜீவிக்கையும்
எம்பெருமானுக்கு அத்யந்த அநபிமதம் -என்கிறார் –

————–

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –
அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

பாகவத அபசாரமாவது-இத்யாதி -ஸ்வரூப விருத்தமான அஹம் மாநம் அடியாகவும் -அத்யந்த த்யாஜ்யமாய்த்
தன்னுடைய மமதா விஷயமான அர்த்த காமங்களை அவர்களும் ஆதரித்தார்கள் என்னும் இவ்வளவையும் கொண்டு
அர்ச்சாயாமேவ மாம் பஸ்யன் மத் பக்தேஷு ஸதா த்ருஹன் விஷதக்தை ரக்நி தக்தை ஆக ஸைர் ஹந்தி மாமசவ் -என்னா நிற்க –
இப்படி எம்பெருமானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விருத்தா சரணமும் பாகவத அபசாரம் ஆவது என்கிறார் –

————————–

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அஸஹ்ய அபசாரமாவது -இத்யாதி -இதில் நிர்நிபந்தனமாகை யாவது தன்னுடைய அர்த்த காமங்களுக்குப் பண்ணும் விரோத நிபந்தநமாகை யன்றிக்கே
கேவலம் பகவத் பாகவத விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே -ஹிரண்யனைப் போலே -அஸூய பரனாய்க் கொண்டு அஸஹமானனாக இருக்கையும்
தன்னுடைய ஆத்ம உஜ்ஜீவநாத் அகில சம்பத்துக்கும் அடியான ஆச்சார்யன் பக்கல் பண்ணும் அபசாரமும்
உயிர் நிலையிலே எறட்டினால் போலே அவன் உகந்த விஷயங்களிலே ஞாதி ஸ்பர்த்தை போலே பண்ணும் அபசாரங்களும்
அஸஹ்ய அபசாரமாவது என்கிறார் –

————–

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்-இத்யாதி –
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரம் ஆகையாவது -அக்ருத்ய கரணம் ப்ராயச்சித்தத்தாலே நசிக்கும் –
அத்தைப் பற்ற குரூரமான பாகவத அபசாரம் அவர்கள் தங்களையே க்ஷமை கொண்டவாறே நசிக்கும் -அது எங்கனே என்னில்
அம்பரீஷ சக்ரவர்த்தி பாரண காலத்திலே தனக்கு அதிதியாய் வந்த துர்வாஸர் வருவதற்கு முன்பே த்வாதஸீ கழியப் புகுந்த வாறே துளஸீ பாரணத்தைப் பண்ண –
தன் நிமித்தமாக குபிதனாய் வந்த துர்வாஸர் சபிக்கப் புக-
அவனும் ஆழ்வானைத் த்யானம் பண்ண -அவ்வாழ்வானும் துர்வாஸரைத் தொடர -அவனும் ஷீராப்தி பர்யந்தமாக தட்டித் திரிந்து
மீண்டும் அம்பரீஷன் பக்கலிலே வந்து
அஹோ அநந்தா தாஸாநாம் மஹாத்ம்யம் த்ருஷ்டமத்ய மே -என்று வந்து விழ
அவ்வபசாரத்தைத் தானும் க்ஷமித்து அத்திருவாழி ஆழ்வானையும் க்ஷமை கொண்டான் இறே –
இனி அதிலும் குரூரமான அஸஹ்ய அபசாரம் நிர் நிபந்தனமாக வருகையாலே அறிந்து ஷமிக்கைக்கு விஷயம் இன்றிக்கே
தன் நெஞ்சிலே கிடந்து புழுங்கி விடுவது ஒன்றாகையாலும்
தனக்கு அஞ்ஞாத ஞாபனம் முதலாக அகில சம்பத்துக்கும் மூலமான ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் உகந்த விஷயத்திலும் பண்ணும் அபசாரம் ஆகையாலே
இது மிகவும் ஸ்வரூப நாஸகரம் –
ஆகையால் இப்படி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களாய் -அக்ருத்ய கரணம் தொடக்கமான இவ்வபசாரங்கள் இவ்வதிகாரிக்கு
பகவத் கிருபா விரோதிகளுமாய் -பகவன் முகோல்லாஸ விரோதிகளுமாகையாலே
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய் -இருக்கும் என்கிறார் -எங்கனே என்னில்
நா விரதோ துஸ் சரிதான் நஜா சாந்தோ நா ஸமாஹித நா சாந்த மானஸோ வாபி ப்ரஞ்ஞா நேநைந மாப்நுயாத் -என்கையாலே –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- இரண்டாம் பிரகரணம் -சித்த உபாய நிஷ்ட வைபவ-பிரகரணம்-சூர்ணிகை -159–243-

July 24, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

————-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –

சூரணை -160-

தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து

ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –

நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே

தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –

———-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல —

அது என் -சேஷத்வத்தாலே அன்றோ ஆத்மாவை ஆதரிக்கிறது
இப்படி அவனுக்கு ஆதரணீயமாம் படி அலங்காரமான சேஷத்வம் அனுபவ விரோதியாம் படி எங்கனே என்ன
அழகுக்கு -என்று தொடங்கி த்ருஷ்டாந்த முகத்தாலே சொல்லுகிறது –

சூரணை -162–

ஹாரோபி—

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்றார் இறே

இவ்வர்த்த விஷயமாகப் பெருமாளும் –சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,

பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை என்றார் இறே பெருமாள் –

————-

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு  விலக்கு –

புண்யம் போலே -இத்யாதி -இப்படி இருக்கிற சேஷத்வத்தைப் பற்ற இட்டு வைத்த இடத்தே இருக்கும் படியான பாரதந்தர்யம் நன்று இறே -என்ன
ஸாஸ்த்ரங்களிலே நிஷேதிக்கிற பாபங்களில் காட்டில் அவற்றிலே அநுஷ்டேயமாக விதிக்கிற புண்யம் நன்றே யாகிலும்
மோக்ஷ விரோதித்வாத் -புண்ய பாப விதூய -என்கையாலே புண்யமும் த்யாஜ்யம் ஆகிறாப் போலே
அவன் இட்டு வைத்த இடத்தே இருக்கும்படியான பாரதந்தர்யமும்
கட்டை போலே எதிர் விழி கொடா விடில் அவனுக்குப் போக விரோதமாகையாலே த்யாஜ்யம் -என்கிறார் –

——————

சூரணை -164–

குணம் போலே சேஷ நிவ்ருத்தி –

குணம் போலே -இத்யாதி -கீழ் லோக வேத ஸித்தமான த்ருஷ்டாந்தங்களாலே அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்குப் புறம்பான
சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஸ்வரூப விருத்தம் என்று -குணம் போலே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு அந்தரங்க குணமான அவை விருத்தமானாப் போலே
அவித்யாதி தோஷத்தைப் போக்கி அவன் நம்மை விநியோகம் கொள்ள வேண்டாவோ என்னுமதுவும் தோஷாவஹம் என்று
அவை தன்னையே தோஷ நிவ்ருத்திக்கு த்ருஷ்டாந்தம் ஆக்குகிறார் –

————–

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே  –

ஆபரணம் -என்று தொடங்கி -இவ்வர்த்தம் லோக ப்ரஸித்தம் என்கிறார் -அதாவது
ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு இவளை அந்தப்புரத்து ஏற அழைப்பியுங்கோள் என்று
அந்தரங்கரை நியமிக்க அவர்கள் பய அதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கன் வந்தாள் என்று அநாதரிக்க -அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்துப் புஜித்தான் என்று பிரசித்தம் இறே –

———

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –

இவ் வர்த்த விஷயமாக ராவண வத அநந்தரம் திருவடி பெருமாள் பக்கல் ஏறப் பிராட்டியை எழுந்து அருள்வித்துக் கொண்டு போகிற தசையிலே
இவருடைய இந்த வேஷத்தைக் கண்டால் அவர் ஸஹிக்க மாட்டார் என்று திருமஞ்சனம் பண்ணி வைக்காத தேட
அவனைப் பார்த்து -ஸ்நாநம் ரோஷ ஜனகம் கிடாய் -என்று பிராட்டி அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார்
அதுக்கு ஒக்கப் பெருமாளும் -தீபோ நேத்ரா துரஸ் யேவ ப்ரதி கூலாசி மே த்ருடம் -என்றார் இறே
த்வயி ப்ரசன்னே கிமாஹா பரைர்ந த்வய்ய ப்ரசன்னே கிமாஹா பரைர் ந -ரக்தே விரக்தேபி வரே வதூ நாம் நிரர்த்தக குங்கும பத்ர பங்க -என்றார் இறே ப்ரஹ்லாதனும் –

—————

சூரணை -167–

வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —

இப்படி தோஷமே போக்யமாக அவன் தான் விரும்பக் கண்ட இடம் உண்டோ என்ன
உண்டு என்னும் இடத்துக்கு உதாஹரணமாக
வஞ்சக்கள்வன்
மங்க வொட்டு -என்று எடுக்கிறார் –
நன்கு என்னுடலம் கை விடான் -என்றார் இறே
மங்க வொட்டு -என்று கால் கட்டிற்று –

————

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

ஹேயமான ப்ரக்ருதியை அவன் இப்படி ஆதரிக்கிறது தான் என் என்ன
வேர் சூடுமவர் -இத்யாதியாலே அத்தை த்ருஷ்டாந்த முகேந ப்ரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

ஆனால் -ஆர்த்தா நாம் ஆ ஸூ பலதா -என்னா நிற்க -இப்படி ஞானாதிகராய் அத்யந்தம் ஆர்த்த அதிகாரியானவர்களுக்கு
இஸ் ஸரீரத்தோடே இருக்கிற இருப்புக்கு ஹேது என் என்ன -பரம ஆர்த்தனான இவனுடைய -இத்யாதியாலே சொல்லுகிறது –

ஆர்த்தன் என்பது -ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை

இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை

கேவல பகவத் இச்சை என்றது
கர்ம ஆராப்த சரீரமே யாகிலும் கர்ம சேஷத்தால் அன்றிக்கே -மோக்ஷயிஷ்யாமி என்று
ஸர்வ சக்தி தன் கேவல வாஞ்ச அதிசயத்தாலே வைத்தான் அத்தனை -என்கிறார் –

————

சூர்ணிகை -170-

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –

இப்படி இவ்விஷயத்திலே பண்ணும் அபி நிவேசத்துக்கு த்ருஷ்டாந்தமாக ஆழ்வார்கள் விஷயமாக
அவன் பண்ணின அபி நிவேசத்தை அருளிச் செய்கிறார் -திருமாலிருஞ்சோலை மலையே -என்று தொடங்கி
இதில் ஆழ்வாருடைய ஒரோ அவயவங்களிலே இவ்விரண்டு திவ்ய தேசத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணும் என்கையாலே
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்தில் பண்ணும் என்கிறார் –

————-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

அங்குத்தை வாஸம் -இத்யாதி -அவ்வுகந்து அருளின நிலங்களில் வாஸம் தானும்
நாகத்தணைக் குடந்தை
நின்றது எந்தை ஊரகத்து
நிற்பதும் ஓர் வெற்பகத்து –இத்யாதில் படியே
அணைப்பார் கருத்தானாகைக்காக வாகையாலே
அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் ஸாத்யம் -என்கிறார்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தான் -என்றார் இறே-

————

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –

கல்லும் கனை கடலும் இத்யாதி -இந்த ஞானாதிகனுடைய சாத்தியமான நெஞ்சு நாடு நிலமானவாறே இதுக்கு சாதனமான
உகந்து அருளின நிலங்களில் ஆதரம் அற்பமாய் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

அது அப்படியாகக் கூடுமோ என்ன -இளங்கோயில் இத்யாதி –
என் நெஞ்சம் கோயில் கொண்ட -என்கிறபடியே
மூல ஆலயமான பெரும் கோயிலுக்குள்ளே ப்ரதிஷ்டித்து உன்னை அனுபவித்தேன்
இனி இதுக்குப் பாலாலயமான ஷீராப்தியையும் கை விடாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து வைக்கையாலே
அது கூடும் இறே என்கிறார் –

————

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

அங்கனே யாகில் ஆறு ஏறினார்க்குத் தெப்பம் வேண்டாவோ பாதி அவனுக்கு அபேக்ஷிதம் கிட்டின பின்பு
அவ்வோ தேச வாஸத்தை இவர்கள் அபேக்ஷிக்கிறது என்
அவன் தானும் அத்யாபி ஆதரிக்கிறதும் என் என்ன -ப்ராப்ய ப்ரீதி இத்யாதியாலே சொல்லுகிறது –
அவனுக்குப் ப்ராப்யராய் -கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -என்று
இருக்கும்படியான ஆழ்வார்களுடைய உகப்புக்கு விஷயமாகையாலும்
இவ்விடங்களில் நிலையாலே இறே இவர்களை பெற்றோம் என்று இருக்கும் க்ருதஜ்ஞதையாலும்
அந்தப் ப்ராப்யம் கை புகுந்த பின்பும் அவ்வோ தேசங்கள் அபிமதமாய் அவன் வர்த்திக்கும் என்கிறார் –
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றது
அத்தேச விசேஷத்தில் க்ருதஜ்ஞதையாலே இறே –

——–

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே-ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

ஆகையாலே -இத்யாதி -இப்படி இவ்வதிகாரி யுடைய தோஷமே போக்யமாக அவன் ஆதரிக்குமது உண்டாகையாலே
இவன் தன் தோஷத்தைப் போக்கி விநியோகம் கொள்ள வேணும் என்னுமது தோஷா வஹம் என்னும் இடம் ஸித்த மாகையால்
இது போலே அவன் விநியோகத்துக்குப் புறம்பாய் வரும் ஆந்தரமான சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஸ்வரூப விரோதியாய் இருக்கும் என்று
தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி ப்ரதிபாதித்த அர்த்த விசேஷங்களை அந்யோன்ய த்ருஷ்டாந்த முகத்தாலே த்ருடீ கரிக்கிறார்
கீழே குணம் போலே தோஷ நிவ்ருத்தி என்றார் இறே –

—————-

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

தோஷ நிவ்ருத்தி தானே -இத்யாதி -ஆந்தர குணம் தோஷா வஹம் என்னும் இடத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆக்கின
இந்த தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம்-என்னும் இடம் இவ்வளவாக ஸாதித்தோம் இறே என்கிறார் –

———-

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை-

இப்படி தன் நினைவால் வருமது புருஷார்த்த விரோதியாம் அளவன்றிக்கே சமுசித ஸ்வரூப உபாயாதி ஸகலங்களிலும்
தான் தேடுமது துர்லபமுமாய் -ஸாவதியுமாய் -சோபாதிகமுமாய் -ஸ்வரூபத்துக்கு அநநு ரூபமாயும் இருக்கும்
என்னும் இடத்தை -தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே என்றும் –
நிருபாதிகனான -அவன் அடியாக வரும் நன்மை முலைப் பால் போலே ஸூ லபமுமாய் -நிருபாதிகமுமாய் -எல்லா அவஸ்தையிலும்
தாரகமாகையாலே ஸ்வரூபத்துக்கு அநு ரூபமுமாய் இருக்கும் என்று பிள்ளான் அருளிச் செய்வர் -என்கிறார் –

———————–

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே-காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று –

அவனை ஒழிய -இத்யாதி -இப்படிப் ப்ராப்தனானவனை ஒழிய எல்லா வழியாலும் அப்ராப்தனான தான் தனக்கு ஸ்வரூப உஜ்ஜீவனம் தேடுகை
ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை -காதுகனான -என்று தொடங்கி -த்ருஷ்டாந்த முகேந அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
முலை பிரியில் முடியும் ஸ்நந்தயம் போலே -நான் உன்னை அன்றி அறியிலேன் – என்னும் படி நித்ய ஸ்தநந்த்யமான ஆத்மாவை
மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்குகையாவது -ஸ்ரீ யபதியே இதுக்கு அவஸ்த அநு ரூபமாக நன்மை ஆசா சிப்பான் என்று இராமை –
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே யாவது -இது நெடும் காலம் தன்னை
அஸத் சமானாக்குகைக்கே வழி பார்த்து போந்த தானே தன் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கை –
அத்தால் வரும் ஹானி யாவது -அவ்வாட்டு வாணியன் அதன் காலை அறுத்து அடையாளமாகத் தூக்கி வைத்து – அப்பிரஜையை அறுத்து
அம்மாம்சத்தோடே கலந்து கூறு செய்து விற்று வயிறு வளர்க்குமா போலே இவனும் தன்னை ஆத்ம வித்தாகவும்
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு யத்னம் பண்ணுகிறானாக நினைத்தானே யாகிலும்
அநாதி வாஸனையாலே தேஹமே ஆத்மாவாக நினைத்து ஆத்ம ஸ்வரூபத்தை அழித்து அத்தால் வந்த அநேக பாப சஞ்சயங்களாலே
அந வரதம் ஸம்ஸரிக்கையே பலமாய் விடும் என்கிறார் –

————

சூரணை -179-

தன்னை தானே இறே முடிப்பான் –

ஆத்மைவ ரிபுராத்மந -என்கிறபடியே தனக்கு இப்படி பாதகனாவானும் தானே யாகையாலே –
தன்னைத் தானே இறே முடிப்பான் -என்கிறார் –

————–

சூரணை -180-

தன்னை தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி இவ்வளவான அர்த்தத்தைத் அருளிச் செய்து மேல்
தன்னைத் தான் முடிக்கை யாவது -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கி
ம -என்கிற ஷஷ்ட் யர்த்தமான அஹம் -மமதா தோஷங்களை அருளிச் செய்கிறார் –

——————

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –என்று அதில் பிரதமோ பாத்தமான அஹங்கார தோஷத்தை அருளிச் செய்கிறார் –
அத் தோஷமாவது ஸ்மஸ அக்னி கிளம்பினால் மருங்கடைந்து தூற்ற வளவிலே சுடும்
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்நீ பாத்ரங்கள் எல்லாவற்றையும் தக்தமாக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனனான இவ்வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் –

——————

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் –
எம்மா வீட்டு திறமும் –

இவ்வர்த்தத்தில்-ந காம கலுஷம் சித்தம் –
என்றது கைங்கர்யத்தில் ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரஸத்வங்கள் இவனுக்கு ஸ்வரூப ஹானி என்னும் இடத்தில் பிரமாணம்
ந ஹி மே -என்று தொடங்கி -எம்மா வீட்டு திறமும் செப்பம் -என்னும் அளவாகவும்
ஸ்வ அஹங்கார ஸ்பர்சம் உள்ளவை அடங்க துஷ்டம் என்னும் இடத்தில் பிரமாணம் –

————-

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே-

இனி -பிரதிகூல விஷய ஸ்பர்சம் –என்று தொடங்கி -கீழே விஷயங்களையும் விரும்புகை -என்று ப்ரஸ்தாவித்த மமதா விஷய
ஸ்பர்சத்தால் வரும் தோஷத்தை விஸ்தரேண அருளிச் செய்தார்
பிரதிகூல விஷய ஸ்பர்சம் -என்றது -சாஸ்திரங்களிலே இவனுக்கு பிரதிகூலங்களாக நிஷேதிக்கப் பட்ட பர தாராதிகளை –
விஷ ஸ்பர்சம் போலே-என்றது அது ஸரீரத்திலே ஸ்பர்சித்த மாத்ரத்திலே பிராண ஹானியாமாப் போலே
அவை இவனுக்கு ஸ்வரூப நாஸகம் ஆகையாலே –
அனுகூல விஷய ஸ்பர்சம் -என்றது -ஸாஸ்த்ரங்களிலே
இவனுக்கு அனுகூலங்களாக விதிக்கப் பட்ட ஸ்வ தாராதிகள் –
அவை -விஷ மிஸ்ர போஜனம் போலே-என்றது -கேவல விஷம் ஸ்பர்சித்தால் மணி மந்த்ர ஒவ்ஷதாதிகளாலே
அறிந்து மாற்றலாய் இருக்கும் –
இது அங்கன் அன்றிக்கே அபிமதமான போஜனத்திலே அஞ்ஞாதமாய்க் கலசின விஷம் ஆரோக்ய கரமுமாய் போக ரூபமாய்
இருக்கும் என்றே புஜிக்கையாலே படுக்கையோடே பிராணன் போய்க் கிடக்கைக்கு ஹேதுவாமோ பாதி
அத்யந்தம் ஸ்வரூப நாஸகம் -என்கிறது –

————–

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பிரவண னாய் ஸூகிக்க நினைக்கை —

அக்னி ஜ்வாலையை -இத்யாதி -இப்படி உபய ஆகாரேண சொன்ன விஷய அனுபவ ஸூகம் ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை
பிரமாண ப்ரஸித்தமான திருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாம் து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நஸ் சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே கர்ம காலத்தில் பெரு விடாய்ப் பட்டவன் நெருஞ்சிப் பழம் போலே சிவந்து குளிர்ந்த
தண்ணீராகப் பிரமித்து அக்னி ஜ்வாலையை விழுங்கி த்ருஷார்த்தி தீர நினைக்குமா போலேயும்
மத்யாஹ் நார்க்க மரீசி தப்தனானவன் தன்னுடைய தாப ஸ்ரமம் ஆறுகைக்கு ப்ரக்ருதியாப்ரகுபித புஜங்க பணா மண்டலச் சாயையைப்
பணைத்து ஓங்கின மர நிழலாக நினைத்து அதிலே ஒதுங்க நினைப்பாரைப் போலேயும் இறே
விஷய ஸூகத்தாலே இவன் ஸூ கிக்கப் பார்க்குமது -என்கிறார் –
அங்கார ஸத்ருஸா நாரீ க்ருத கும்ப சம புமான் தஸ்மான் நாரிஷு ஸம் சர்க்கம் தூரத பரிவர்ஜயேத் -என்றும்
விஷஸ்ய விஷயாணாம் து தூர மத் யந்த மந்தரம் உப யுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி -என்றும் சொல்லக் கடவது இறே –

—————

சூரணை -185–

அஸூணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

அஸூணமா -இத்யாதி -இத்தால் இவ்வதிகாரிக்கு இப்படிப்பட்ட விஷய ஸ்பர்சம் வேண்டா –
அதனுடைய தர்சன மாத்ரம் அமையும் ஸ்வரூப ஹானிக்கு -என்கிறார் -அதாவது
அஸூணமா-என்பதொரு பக்ஷி விசேஷத்தை அகப்படுத்தி ஹிம்சிக்க நினைத்தான் ஒருவன் அவை உள்ள இடத்திலே இருந்து –
அதி மிருதுவாய் பாடினவாறே ஸூக ஸ்ரவண ஏக தத் பரங்களானவை அங்கேற வரும்
அவ்வளவிலே அவன் அருகே இருந்த முரசை அடிக்க அக்கடின த்வனி செவிப்பட்ட அளவிலே அவை கலங்கி முடியுமா போலே
பகவத் குண அனுபவ ஆனந்த ஏக தத் பரனாய் அவ்வனுபவ அதிசயத்தாலே மெல்கி அதி மிருது ஸ்வ பாவனாய் இருக்கிற இவ்வதிகாரி
இன்னமுது எனத் தோன்றும் விஷய தர்சன மாத்ரத்தாலே மயங்கி ஸ்வரூப ஞானம் ,அறைந்து முடியும் படியும் –

—————-

சூரணை -186–

காட்டிப் படுப்பாயோ என்னக் கடவதிறே—

காட்டிப் படுப்பாயோ -என்று விஷய தர்சன மாத்ரமே நாஸகம் என்றார் இறே
உழைக் கன்றே போல நோக்கமுடையவர் வலையில் பட்டு -என்றும்
மாத் யந்தி ப்ரமதாம் த்ருஷ்ட்வா ஸூராந் பீத்வாது மாத் யந்தி தஸ்மாத் த்ருஷ்ட்டி பதான் நாரீம் தூரத பரி வர்ஜயேத்-என்றும்
கௌளீ மாத்வீ ச பைஷ்டீ ச விஜ்ஜேயாஸ் த்ரி விதாஸ் ஸூரா -என்றும்
சதுர்த்தா ஸ்த்ரீ ஸூரா ப்ரோக்தாஸ் தஸ்மாத் தாம் பரி த்யஜேத் -என்றும் சொல்லக் கடவது இறே –

———–

சூரணை-187–

அஜ்ஞனான விஷய பிரவணன்-கேவல நாஸ்திகனைப் போலே –
ஞானவானான விஷய பிரவணன்-ஆஸ்திக நாஸ்திகனைப் போலே –

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்

ஆஸ்திக நாஸ்திகனை-ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

பகவத் ப்ரபாவத்தாலே ஞானாதிகனான இவனுக்கு இவ்விஷய அனுபவ ருசி இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்ன
அல்லாதாரைப் பற்ற -விதுஷோதி க்ரமே தண்ட பூயஸ் த்வம் -என்கிறபடியே அவனுக்கு அது தோஷா வஹம் என்னும் இடத்தை
அஜ்ஞனான விஷய பிரவணன் என்று தொடங்கிச் சொல்லுகிறது -அது எங்கனே என்னில்
இப்படி யுக்தமான விஷய தோஷத்தில் அஞ்ஞனாய்க் கொண்டு அவ்விஷயத்தே ப்ரவணனாய் இருக்குமவன்
உதர பரண மாத்ர கேவல இச்சோ புருஷப ஸோஸ் ச பஸோஸ் ச கோ விசேஷ -என்னும்படியான
முதலிலே அத்ருஷ்ட ருசி இல்லாத ஸூத்த நாஸ்திகனோடு ஒக்கும் –
இதில் விஷய தோஷத்தை உள்ளபடி அறிந்து வைத்து -இவ்விஷய அனுபவத்தாலே ஸூ கிக்க நினைக்கிற இவ்வதிகாரி
காண்கிற தேஹாதி ரிக்தரான ஆத்ம ஈஸ்வர ஞானம் யுண்டாய் வைத்தே அவற்றில் தாத்பர்யம் அற்று ஸ்வைர சஞ்சாரியாய்த் திரியுமவனோடே ஒக்கும் என்கிறார்

ஆனால் இவற்றில் சொன்ன தாத்பர்யம் என் என்ன
அஜ்ஞஸ் ஸூக மாராத்யதே ஸூக தர மாராத்யதே விசேஷஜ்ஞ -ஞான லவ துர் விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஞயதி-என்கிறபடியே
கேவல நாஸ்திகனானவனை அஞ்ஞாத ஞாபன முகத்தாலே திருத்தலாம் –
அறிந்து வைத்தே அதில் நிஷ்ணாதன் அல்லாத ஆஸ்திக நாஸ்திகனானவனை எத்தனையேனும் அதிசயித ஞானராலும்
யாவஜ் ஜீவம் திருத்த ஒண்ணாமையாலே இவன் ஈஸ்வரனுக்கு தண்ட்யனேயாம் அத்தனை -என்றபடி
அநு பதன் நபி விஸ்வப்ரே கேவலம் அநு கம்ப்யதே கர்ணாந்த லோசந கூபே பதம் கைர்ந வித்பயதே-என்னக் கடவது இறே –

ஆக கீழ் ப்ரபன்னனுக்கு -விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்-என்ற இடத்தில் இவ்விஷய ப்ராவண்யம்
உபாய அதிகாரிக்கு த்யாஜ்யம் என்கையிலே
ஊற்றமாகையாலே இங்கே உபேய அதிகாரிக்குத் த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லி நின்றது –

———–

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

இனி இவை இரண்டும் -என்று தொடங்கி -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்ற
அஹங்கார மமதா ரூபமான விஷயப்ப்ராவண்யமும் என்ற
இவை இரண்டும் ஸ்வயமேவ நின்று இவ்வாத்மாவை நசிப்பிக்கையே அன்றிக்கே
பாகவத அபசாரமாகிற மஹா அநர்த்தத்தையும் உண்டாக்கி நசிப்பிக்கும் என்று
இவ் வஹங்கார விஷய ப்ராவண்யம் அடியாக வருகிற
பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –

இதில் ஸ்வரூபேணே என்றது -ஸ்வேந ரூபேண -என்றபடி –

—————–

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்-தக்த படம் போலே –

நாம ரூபங்களை -இத்யாதி -இப் பாகவத அபசார பலம் அல்லாதார்க்கும் ஒத்து இருக்க -நாம ரூபங்களை உடையராய் -என்று விசேஷித்து
கீழில் ப்ரகரண பலத்தாலே வைஷ்ணவத்வ சிஹ்னமான நாம ரூபங்களை உடையராய் வைத்து பாகவத அபசாரத்தைக் கூசாதே பண்ணி தத் பயத்தால் வரும் அனுதாப ஸூ ன்யராய்க் கொண்டு திரியுமவர்கள்
தக்த படம் போலே என்றது -நேய மஸ்தி புரீ லங்கா -இத்யாதி வத்-அஸத் சமராய்க் கொண்டு சஞ்சரிக்கிறார் இத்தனை என்றபடி –

——————

சூரணை -191–

மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்
காற்று அடித்தவாறே பறந்து போம் –

அது எங்கனே என்ன -மடிப்புடவை -இத்யாதியாலே சொல்லுகிறது –
கேவலம் புடவை வெந்தால் என்னாதே -ஒரு ஸம்ஸ்கார விசேஷம் தோற்றும் படி -மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும் -என்றது
புஜ யுகமபி சிஹ்நை ரங்கிதம் -இத்யாதி க்ரமத்திலே ஸாத்விக லக்ஷண ஸம்ஸ்க்ருத வேஷராய் வைத்தே பாகவத அபசாரத்தாலே

————-

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்-

ஸர்வ பூத ஸூஹ்ருத்தான ஈஸ்வரனுடைய திரு உள்ளம் இவர்கள் பக்கல் இப்படி சீறக் கூடுமோ என்ன
அச் சீற்றத்தின் மிகுதியாலே அன்றோ அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களும் என்று
நஞ்சீயர் அருளிச் செய்யும் படியை இவ் வர்த்தத்துக்கு உதாஹரிகிறார் -ஈஸ்வரன் அவதரித்து -இத்யாதி –
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன் ஸங்கல்பத்தாலே அழியச் செய்கை யன்றிக்கே இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்துத் தானே
கை தொடானாய்ச் செய்த அதிசயித சக்தித்வாதிகள் தோற்றும் படியான அகில வியாபாரங்களும் அபிமதரான பாகவத விஷயத்தில்
அபசாரமும் அஸஹ்யமாய் இறே அருளிச் செய்வர் அல்லது அவனுக்கு விரோதிகள் ஒருவரும் இல்லை இறே –
யத் அபராத ஸஹஸ்ரம் அஜஸ் ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்-வரத
தேந சிரம் த்வம விக்ரியோ விக்ருதி மர்ப்பக நிர்ப்பஐநாதகா -என்றார் இறே கூரத்தாழ்வானும்-

———-

சூரணை -193–

அவமாநக்ரியா–

(அவமாந க்ரியா -என்று அவ்வீஸ்வர வசனம் எடுக்கிறார் –
அவமான க்ரியா தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –
ஈஸ்வரனை இல்லை செய்தவரும் ஆச்சார்யர்களை இல்லை செய்ய மாட்டார்களே )
யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

இப்படி அஹம் மமதை களாலே ஆரப்தமாம் பாகவத அபசாரம் தான் உத்பத்தி நிரூபணம் -வாஸ நிரூபணம் –
ஆலஸ்ய நிரூபணம் -அவஸ்தா நிரூபணம் -முதலானவை
அநேகமாகையாலே -பாகவத அபசாரம் தான் அநேக விதம் என்கிறார்-

———

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

அதிலே இத்யாதி -அவற்றில் ஜென்ம நிரூபணம் கொடியதாகையாலே
அத்தை விசேஷித்து எடுக்கிறார் –

———–

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

அதில் க்ரவ்ர்யம் எவ்வளவு என்ன –
அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் அதி க்ரூரம்-என்கிறார் –

———-

சூரணை -197–

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

அதிலும் குரூரமான படி என் -என்ன -அத்தை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யாஸ் துல்யம் ஆஹூரேவம் மநீஷிண –என்று
மாத்ரு யோநி பரிக்ஷையை ஸாஸ்த்ரம் த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிற இடத்தில் அர்ச்சாவதார உபாதான ஸ்ம்ருதி ரூபமான அபசாரத்தை
அந்த மாத்ரு யோநி பரிக்ஷையில் அபசார துல்யமாகச் சொல்லி –
வைஷ்ணவ உத்பத்தி ரூபமான அபசாரம் வாக்குக்கு நிலம் அல்லாமை தோற்ற –
ஏவமாஹு -என்று அவ்வபசாரத்தை அதி தேசித்து விடுகையாலே என்கை –
ஆகை இறே -ஸாஸ்த்ரம் அத்தைச் சொல்லிற்று என்று விசேஷித்தது –
அது தான் மாத்ரு யோநி பரீஷையோடு ஓக்கை யாவது -கீழே -இது தான் -ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே -என்று தொடங்கிச் சொன்ன க்ரமத்திலே
அநாதி காலம் விஷய ப்ரவணனாய்க் கொண்டு நாஸ்திகனாய் -அசன்னேவ-என்னும் படி போந்த இவனை
பொருள் அல்லாத என்னை -இத்யாதிப்படியே –
ருசி ஜநகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் முடிவாக உண்டாக்கி –
ஸ்வரூபா பத்தியையும் பிறப்பிக்குமது அர்ச்சாவதாரமாகையாலே அதனுடைய வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம் பண்ணுமது
அல்லாத ஸ்த்ரீகளுடைய யோநி வை லக்ஷண்ய நிரூபண வாஸனையாலே தனக்கு உத்பாதகையாய்
மாத்ரு தேவோ பவ -என்று பிரதமத்திலே பூஜ்யையாக விதித்து இருக்கிற மாத்ரு யோநி வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம்
பண்ணுமோ பாதி மஹா பாதகமாகையாலே –

————-

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

ஆனால் காற்று அடித்தவாறே பறந்து போம் -என்கையாலே சரீர அவஸ அநந்தரம் இப்படி ஸ்வரூப ஹானி வரும் அத்தனையோ என்னில் -அங்கன் அன்று
மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் ஸத்யஸ் சண்டாள தாம் வ்ரஜேத் -என்றும்
நுமர்களைப் பழிப்பராகில் ஆங்கே யவர்கள் தாம் புலையர் போலும் -என்றும் சொல்லுகிறபடியே
இஜ்ஜன்மத்திலே அதிலும் -அபசாரம் பண்ணின நிலையிலே -ஸ்வரூப ஹாநியாம் -என்னும் இடத்தை -த்ரி சங்குவைப் போலே -என்று தொடங்கிச் சொல்லுகிறது
அதாவது – ஸ ஸரீர ஸ்வர்க்கம் யுண்டாம் படி தன்னை யஜிப்பிக்க வேணும் என்று ஸ்வ ஆச்சார்யனான வஸிஷ்டனை அபேக்ஷிக்க
அவன் அது அப்ராப்தம் என்று நிஷேதித்தது பொறாமல் அவ்வஸிஷ்ட புத்திரர்கள் பக்கலிலே சென்று அவன் இவ் வ்ருத்தாந்த கத நத்தைப் பண்ண
அவர்கள் ஆச்சார்ய வாக்ய அதி லங்கனம் பண்ணின அப்போதே நீ சண்டாளன் என்று சபிக்க
அநந்தரம் அவனுடைய ஷத்ரிய வேஷ உசிதமான ஆபராணாதிகள் எல்லாம் நிஹீந த்ரவ்யங்களாய்க் கொண்டு
நீ ச வேஷோ சிதமாய் விட்டாப் போலே பாகவத உத்பத்தி நிரூபணம் அடியாக சண்டாளனாய் உத்தம வர்ணனான தன் மார்பில் இட்ட ப்ரஹ்ம வர்சஸ்ஸூக்கு
ஹேதுவான யஜ்ஜோ பவீதம் தானே -அவர்கள் தாம் புல்லியர் -என்கிற ஜன்மத்துக்கு உறுப்பான வாராய்
அபசாரம் பண்ணின வாக்கில் த்ருபிசம் தானே அபேயமுமாய் விடும் என்கிறார் –

————

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –அதுவும் இல்லை இவனுக்கு –

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

இங்கனே யாகில் லோகத்தில் சண்டாளர்களுக்கும் ஒரு கால் உஜ்ஜீவனம் உண்டாகிறவோ பாதி இவனுக்கும் ஒரு காலாந்தரத்திலே யாகிலும்
உஜ்ஜீவனம் உண்டாமோ என்னில் -இல்லை என்னும் இடத்தை -ஜாதி சண்டாளனுக்கு -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
அதாவது வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வத ஆரோஹணம் பண்ணுமோ பாதி
ஜாதி சண்டாளனுக்கு ஸத்ய ஆர்ஜவாதி
தர்ம அனுஷ்டானத்தாலே ஸத்வ உத்ரேகம் யுண்டாய் அத்தாலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு
உயர ஏறினவன் விழுந்தால் உருக் காண ஒண்ணாத படி உடைந்து போமா போலே உத்தம வர்ணத்தில் நின்று உத்பத்தியிலே
அபசாரம் பண்ணிய அப்பதித்வமே ஸ்வரூபம் என்னும் படி அத பதிக்கையாலே அவனுடைய யோக்கியதையும் இவனுக்கு இல்லை என்கிறார் –

———-

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே-

இது தனக்கு இத்யாதி -இவ் வபசாரம் இதர விஷயங்களில் ஒழிந்து ஞானாதிக விஷயத்திலும் இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்னில்
இவ் வபசாரம் பலிக்கும் இடத்தில் அவ்வதிகாரி நியமம் இல்லை என்று இதுக்குப் பிரமாணமாக
தமர்களில் தலைவராய -என்று அருளிச் செய்கிறார் –

———-

சூர்ணிகை -203-

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-

இவ் விடத்திலே என்று தொடங்கி அதுக்கு ஐதிஹ்யங்களை ஸ்மரிப்பிக்கிறார் -அவை எங்கனே என்னில் –
பெரிய திருவடி விநதா ஸூதனாய் வந்து அவதரித்த தசையிலே -இவனுக்கு பால்ய மித்ரனாய் இருப்பான் ஒரு ப்ராஹ்மண புத்ரன்
வேத அத்யயனம் பண்ணின சமயத்திலே குரு தஷிணைக்கு பஞ்ச வர்ணமான பஞ்ச சத அஸ்வம் தரச் சொல்லி அவனை ஆச்சார்யன் அருளிச் செய்ய
ஆஸ்திக்யத்தாலே அப்படிச் செய்கிறோம் என்று அவ் வை நதேயனையும் ஸஹ கரிப்பித்துக் கொண்டு போகா நிற்க
பர்வத பார்ஸ்வத்திலே வர்த்திப்பளாய்-
சாண்டில்யை என்ற பெயரை யுடையாள் ஒரு பாகவதை யானவள் நீங்கள் ஏதேனும் அபசாரத்தைப் பண்ணினது உண்டோ இப்படிக்கு கிடப்பான் என் என்ன
இவ்வளவுண்டு -விலக்ஷணையான இவளுக்கு வாஸம் ஒரு திவ்ய தேசமாகப் பெற்றது இல்லையே என்று இருந்தோம் என்ன –
அங்கன் இருந்தால் உங்கள் இளைப்பில் இவ்வாதித்யம் எனக்குக் கூடுமோ -தப்ப நினைத்தி கோள் என்று கையாலே தடவி அவர்களைத் தரிப்பிக்க
அநந்தரம் அவர்கள் தரித்து எழுந்து இருந்து சிறகும் எழுந்து போனார்கள் என்று ப்ராமண ஸித்தமாகையாலும்
கூரத்தாழ்வான் தன் சிஷ்யனான பிள்ளைப் பிள்ளை ஆழ்வானைக் குறித்து அவர் அதற்குப் பதறி இருக்கையாலே
இவருக்கு இது பாகவத அபசார பர்யந்தமாகப் பலிக்கில் செய்வது என் என்று த்ரிவித கரணங்களையும் தமக்குத் தக்ஷிணையாகத் தா என்று வாங்கிப்
பின்பு உடையவர் அருளிச் செய்த வார்த்தைக்காக
உமக்கு மற்றை மானஸ காயிகங்கள் இரண்டும் மீளத் தந்தோம்
வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்கையாலும்
அபசாரத்துக்கு அதிகாரி நியமம் இல்லாமைக்கு வை நதேய வ்ருத்தாந்தத்தையும் -பிள்ளைப்பிள்ளான் ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-என்கிறார் –

——————–

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

அது எங்கனே என்னில் -ஞான அனுஷ்டான ஹீநோபி ததா பாகவதேஷணாத் -ஜீவேத் ததா தத் யுக்தோபி நஸ்யேத் ததந பேஷணாத் – என்கிறபடியே
எத்தையேனும் மோக்ஷ ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் அன்றியிலே இருந்தார்களே யாகிலும்
அந்தோ நந்த க்ரஹண வச த -இத்யாதிப்படியே
அப் பேற்றுக்கு அத் தேசிகரான பாகவதர்களுடைய ஸம்பந்தமே போருமோ பாதி –
அப் பல ஹாநிக்கும் ஸ்வரூப ஹாநிக்கும் அவர்களுடைய அந பேஷண ஹேதுவாக அபசாரமே போரும் -என்கிறார் –

—————–

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-என்றது -உத்க்ருஷ்டமான ஜென்ம வ்ருத்த ஞானங்களை
யுடையாருடைய ஸம்பந்தத்தாலே உஜ்ஜீவனமும் அவர்கள் பக்கல் இழவுமாக வேணும் என்கிற நியமம் இல்லை
இவற்றால் குறைய நின்றார்களே யாகிலும் அவர்கள் நேரே பாகவதர்கள் ஆகில் அவர்களுடைய சம்பந்தமே உஜ்ஜீவன ஹேதுவாய்
அவர்கள் பக்கல் அபசாரமே இழவுக்கு ஹேதுவாம் என்றபடி –

—————-

சூர்ணிகை –206–

இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -அத்தைச் சொல்லுகிறது -இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்-என்று தொடங்கி –
கைசிக வ்ருத்தாந்தத்திலே சரக வம்சஜனாய் -உத்க்ருஷ்ட ஜன்மாவான ஸோம சர்மாவினுடைய யஜ்ஞ சாபம் எத்தனையேனும்
அபக்ருஷ்ட ஜென்ம வ்ருத்தங்களை யுடையரான ஸ்வ பாகருடைய ஸம்பாஷண ஸஹ வாஸாதி களாலே
யஜ்ஞ ஸாபாத் வி நிர்முக்த ஸோம சர்மா மஹா யஸா -என்கிறபடியே அவனுக்குப் போகக் காண்கையாலும்
உபரிசரவ ஸூ வ்ருத்தாந்தத்தாலே ஆகாஸ ஸாரியான ரதத்தை யுடையனாய் – ஷத்ரியனுமாய் இருக்கிற உபரிசரவஸூ ஸகல தர்ம ஸூஷ்ம ஜ்ஞானனுமாய்-அத்யந்தம் ஞானாதிகனுமாய் இருக்கையினாலே
பிஷ்ட பஸூக் கொண்டே யஜிப்புதோம் என்ற ருஷிகளுக்கும்
யதாவான பஸூக் கொண்டே யஜிக்க வேணும் என்கிற தேவர்களுக்கும் விவாதம் ப்ரஸ்துதமாய் -அவர்கள் ஞானாதிகனானவனைக் கேட்க வர
அத்தை நாம் எல்லாரும் கூட விசாரிக்கும் அத்தனை அன்றோ என்று அவர்கள் பொருந்தச் சொல்லாதே
சேஷிகள் உகந்ததே சேஷ பூதங்கள் இட வேண்டாவோ என்று சிவிட்கெனச் சொல்ல
அத்தாலே ரிஷிகளும் த்வம்ஸ -என்று சபிக்க
அவர்களிலும் ஞானாதிகனான உபரி சரவஸூ அதிபதிக்கக் காண்கையாலும்
இவை இரண்டிலும் காணலாம் -என்கிறார் –

—–

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-வேதாத்யய நாதி முகத்தாலே–பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –த்யாஜ்யமாம் இறே —

ஆனால் அபிமத வித்யா வ்ருத்தங்களுடைய உத்க்ருஷ்டதையால் வரும் பிரயோஜனம் ஒன்றும் இல்லையோ என்ன –
ப்ராஹ்மண்யம் விலைச் சொல்லுகிறது -இத்யாதியாலே அவை பகவத் ப்ரத்யா சத்தி ஹேதுவாம் என்று இறே உத்தேஸ்யமாவது –
அவை தானே நாஸ ஹேதுவாமாகில் த்யாஜ்யமாம் அத்தனை இறே என்கிறார் –
அதாவது –
உத்க்ருஷ்ட ஜன்மா வாகையால் வருகிற வை லக்ஷண்யம் ஸர்வ ஸாமான்யமாக உத்தேஸ்யமாய்க் கொண்டு போருகிறது
பிரதமத்திலே சாங்கமான வேத அத்யயனம் என்ன -அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்கிறபடியே -அந்த ஞான அநு ரூபமான நிஷ்டை என்ன –
அவைகளால் -அல்லாதாரைப் பற்ற ஸூ கரமாக பகவத் பிராப்தி ஹேதுவாம் என்று இறே –
அந்த ப்ராஹ்மண்யத்தால் வந்த உத்தேஸ் யதை -தானே பாகவதர் பக்கல் அப க்ருஷ்ட புத்திக்கு ஹேதுவாய் ஸ்வரூபத்தை நசிப்பிக்குமாகில் அது தானும் த்யாஜ்யம் இறே -என்கிறார் –

————-

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய-உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம் –

ஜென்ம வ்ருத்தங்களினுடைய -இத்யாதி -ஆகக் கீழே ப்ரதிபாதிதமான அர்த்தம்
ஜென்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்குப் பிரயோஜகம் அன்று
அபகர்ஷமும் இழவுக்கு ப்ரயோஜகம் அன்று –

—————

சூரணை-209–

பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்- தத் அசம்பந்தமும் –

இனி -உஜ்ஜீவன ஹேதுவாய்க் கொண்டு -கார்யகரமாவது
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கையாலே பகவத் சம்பந்த ஞானம் உண்டாகையும்
அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கையாலே நாஸ ஹேதுவாயத் தலைக்கட்டுவதும்
அப் பகவத் ஸம்பந்த ஞானம் இல்லாமையும் என்றதாயிற்று –

——–

சூரணை -210-

பகவத் சம்பந்தம்-உண்டானால்-இரண்டும் ஒக்குமோ என்னில் –

சூரணை -211-

ஒவ்வாது –

பகவத் ஸம்பந்தம் உண்டானால் -இத்யாதி -இப்படி உஜ்ஜீவன ஹேதுவான பகவத் சம்பந்த ஞானம்
கீழ்ச் சொன்ன உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்கள் இருவருக்கும் உண்டானால் தான்
அவை இரண்டு ஜென்மமும் தன்னில் ஒக்குமோ என்று நிரூபித்து -அவ்வளவிலும்
ஒன்றினுடைய தோஷா வஹத்வ புத்யா ஒன்றுக்கு உதகர்ஷம் தோற்றுகையாலலே இரண்டும் ஒவ்வாது -என்கிறார் –

———

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –

இதில் இப்படி தோஷா வஹமான ஜென்மம் ஏது -அத்தைப் பற்ற அதிகமான ஜென்மம் ஏது என்ன -உத்க்ருஷ்டமாக பிரமித்த -என்று தொடங்கிச் சொல்லுகிறது
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ப்ரகாசகமான திரு மந்திரத்தில்
ப்ரணவத்தாலே ஆபி ஜாத்யமும் –
நமஸ்ஸாலே வித்யையும்
சரம பதத்தில் சதுர்த் யர்த்தமே வ்ருத்தமும்
தனக்கு நிலை நின்ற அபிஜன வித்யா வருத்தங்களாய் இருக்க
அஸ்த்திரமான தோல் புரையே போம் அபிஜன வித்தா விருத்தங்களாலே தான் உத்க்ருஷ்டனாக பிரமித்த
உத்தம ஜென்மம் யதாவான அபிஜன விருத்தங்களை யுடைய ததீய சேஷத்வ பர்யந்தமான அத்யந்த பாரதந்தர்ய விருத்தமாய்க் கொண்டு
ஸ்வரூப நாஸகம் ஆகையாலே
ஸரீரே மஹத் பயம் வர்த்ததே -என்று சொல்லுகிறபடியே ஸ்வரூப விருத்தமான உபாயாந்தர அனுஷ்டான யோக்கியமான உத்க்ருஷ்ட ஜென்மத்தில்
சரீரம் ஸ்வரூப அனுரூபமான பாகவத அனுவர்த்தனத்துக்கும் விரோதியாய் இருக்கையாலும்
மிகவும் பயாவஹமாய் இருந்த உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு
தம் அடியார் அடியோங்கள் -என்கிற நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப அனுரூபமான தாழ்ச்சியை நினைத்த படி வாராமையாலே பாவிக்க வேண்டுகையாலும்
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜென்மம் தோஷாவஹம் என்கிறார் –

———–

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த-உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

இனி -அபக்ருஷ்டமாக -இத்யாதி -ஸ்வரூப ஸ்பர்ஸி களாய்க் கொண்டு நிலை நின்ற ஆபி ஜாத்யாதிகளால் அவன் அதிக ஜன்மாவாய் இருக்கக் காண்கிற
சரீரத்தை இட்டு இவன் தன்னை உத்க்ருஷ்டமாக பிரமித்தால் போலே -தான் அபக்ருஷ்டனாக பிரமித்தவனுடைய
உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு பய ஜனகன் என்றும் சோக ஜனகன் என்றும் பாவிக்க வேணும் என்கிற
யுக்தமான உபய தோஷமும் இல்லை –

———

சூரணை -215-

நைச்சயம் ஜன்ம சித்தம்-

நைச்சயம் ஜன்ம சித்தம்–என்கிற இத்தால் ஸ்வரூப அனுரூபமான பாகவத அநு வர்த்தனத்துக்கும்
ஸ்வரூபத்துக்குச் சேராத உபாயந்தரங்களினுடைய அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாமைக்கு
நைச்யம் பாவிக்க வேண்டாத படி -அது அவனுக்கு ஜன்ம ஸித்தம் –

———

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

ஆகையால் -இத்யாதி -இப்படி இவனுக்கு இரண்டு தோஷமும் இல்லாமையாலே
வந்தேறியான உத்க்ருஷ்ட ஜென்மமும் இன்றிக்கே
நிலை நின்ற உத்க்ருஷ்ட ஜென்மமே ஸ்ரேஷ்டம் என்று நிச்சயித்து அருளிச் செய்கிறார் –

—————-

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால-

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்று இவ்வர்த்தத்தில் பிரமாணம்
அவைஷ்ணவோ வேதவித் யோ வேத ஹீநோ ஹி வைஷ்ணவ -ஜ்யாயாம் சம நயோர் வித்தி யஸ்ய பக்திஸ் ஸதா மயி -என்னா நின்றது இறே

————-

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-

நிக்ருஷ்ட ஜென்மத்தால் -இத்யாதி -ஆனால் உத்க்ருஷ்ட ஜன்மாவாக பிரமித்தவனுடைய அபக்ருஷ்ட ஜென்மம்
அடியாக வந்த கீழ் யுக்தமான தோஷங்கள் நிலை நின்றே விடுமத்தனையோ என்ன –
அது போவது உத்க்ருஷ்ட ஜன்மாவாக நிச்சயித்த விலக்ஷணனுடைய அபிமான விசேஷத்தாலே -என்கிறார் –

—————

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –

ஸம்பந்தத்துக்கு -இத்யாதி -அவர்களுடைய அபிமான அந்தர் பூதனாகைக்கு அதிகாரம் யுண்டாகும் போது
இவன் உத்க்ருஷ்டனாக பிரமித்த வந்தேறியான ஜன்ம வ்ருத்த அபிமான தோஷம் போக வேணும் –

—————–

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

ஜன்மத்துக்கு -இத்யாதி -உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மத்துக்கு ஆபி ஜாத் யாதிகள் வந்தேறி என்னும் இடத்தையும்
அதுக்குப் பரிஹாரம் அந்த விலக்ஷண அபிமானம் என்னும் இடத்தையும்
பழுதிலா ஒழுகல் -என்ற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் -என்கிறார் –

————–

சூரணை -221–

வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

வேதகப் பொன் -இத்யாதி -இப்படி அபக்ருஷ்ட ஜன்மாவானவன் -அவ் விலக்ஷண ஸம்பந்த மாத்ரத்தாலே
விலக்ஷணனாகக் கூடுமோ என்னில் –
ரஸ குளிகை யானது விஸஜாதீய த்ரவ்யங்களையும் விலக்ஷண த்ரவ்யம் ஆக்குமா போலே
இவர்களும் நச்சு மா மருந்தான கேவல பகவத் ப்ரபாவம் அடியாக வந்த பாக விசேஷத்தாலே
அவனையும் விலக்ஷணன் ஆக்கக் குறையில்லை -என்கிறார் –

——————-

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —

இவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படி ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே ஸ்வரூப உஜ்ஜீவனம் உண்டாக்குமவர்கள் பக்கலில்
அவர்கள் பிரதிபத்தி பண்ணும் படி தான் எங்கனே என்ன –
ஸமராகவும் அதிகராகவும் பிரதிபத்தி பண்ண வேணும் -என்கிறார் –

——————-

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும்
சம்சாரிகளிலும்
தன்னிலும்
ஈச்வரனிலும் அதிகர் என்றும் நினைக்கை-

அதாவது -இத்யாதி -அவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும் -ஆதிக்ய புத்தியும் -நடக்கை யாவது -ப்ரத்யஷிதாத்ம நாதராய் பகவத் அநுபவ ஏக போகராய்
ஸ்ரீ காஞ்சீ பூர்ண ஸத்ருசரான அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் -ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்கிறபடியே
ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே உஜ்ஜீவிப்பிக்கிற -விப்ரஸ் ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிற ஸ்வா சார்ய ஸத்ருசர் என்றும்
அதிகாரம் இடத்தில் ஸ்வ ஜாதி ஸம்பந்த ருசி பின்னாட்டாத படி பரமை காந்திகளான வர்களுடைய ப்ரக்ருதி பந்துக்களான ஸம்ஸாரிகளிலும்
தேஹ யாத்ராபராவஸ் யாதிகளை யுடைய தன்னிலும்
வாய் திறந்து க்ருத்யா க்ருத்யங்களை விதிக்கை முதலானவற்றாலே அர்ச்சாவதார ரூபியான
ஸர்வேஸ்வரனிலும் அவர்கள் அதிகர் என்றும் ஸ்மரிக்கை –

—————–

சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

ஆச்சார்ய ஸாம்யத்துக்கு -இத்யாதி -ப்ரத்யுபகார விஸத்ருசமாக உபகாரகனான ஆச்சார்யனோடு சம புத்தி பண்ணுகைக்கு அடி
அவன் உபதேச காலத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காண் என்று உபதேசிக்கையாலே -என்கை –

——————–

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –என்றது அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் இவ்வநு ஸந்தான விசேஷங்கள் நடையாடா விடில்
கீழ்ச் சொன்ன பாகவத அபசாரத்திலே இதுவும் ஓன்று என்றதாயிற்று –

——————-

சூரணை -226-

இவ் அர்த்தம்
இதிகாச புராணங்களிலும் –
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் –
நண்ணாத வாள் அவுணரிலும் –
தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

கீழே விசதமாகச் சொன்ன பாகவத வைபவம் பிரபல ப்ராமண ஸித்தமுமாய்-ப்ராமாணிக வசன ஸித்தமுமாய் இருக்கும் என்னும் இடம்
விசதமாகக் காணலாம் என்கிறார் -இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –என்று தொடங்கி -எங்கனே என்னில்
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
(மத் பக்தம் ஸ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்ம கோடி சதே நாபி நகதிஸ் தஸ்ய வித்யதே -என்றும் )
ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வ பசம் ததா வீக்ஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -என்றும்
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா –ஸர்வ வர்ணே ஷு தே ஸூத்ரா யே ஹ்ய பக்தா ஜனார்தனே -இத்யாதி களாலே இதிஹாச புராணங்களிலும்
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை -திருவாய் மொழி களிலே -நம்மாழ்வாரும்
கண் சோர வெங்குருதி –
நண்ணாத வாள் அவுணர் -என்கிற திரு மொழிகளிலே திருமங்கை ஆழ்வாரும்
தேட்டரும் திறல் தேன் -என்கிற திருமொழியிலே பெருமாளும்
மேம் பொருளுக்கு மேல் அஞ்சு பாட்டுக்களிலே ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
விஸ்தரித்து அருளிச் செய்கையாலே விசதமாகக் காணலாம் -என்கிறார் –

————–

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

ஆனாலும் இப்படி இஜ் ஜென்மம் தன்னிலே இந்த ஹேய ஸரீரத்தோடே இருக்கிறவர்கள் உத்தம ஜென்மாவினுடைய தோஷ நிவ்ருத்தி பூர்வகமாக
அவனை உஜ்ஜீவிக்கும் படி உத்க்ருஷ்டரானவர்கள் என்றால் இது கூடுமோ என்ன
ஒருவனுக்கு வந்தேறியான தொரு உபாதி விசேஷமான தபோ பலத்தாலே ஒரு உத்க்ருஷ்டம் உண்டான படி கண்டால்
நிருபாதிகமான பகவத் சம்பந்தம் அவர்களுக்கு அவ் வுத்கர்ஷத்தைப் பண்ண மாட்டாதோ என்னும் அர்த்தத்தை
ஷத்ரியனான விஸ்வாமித்ரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விஸ்வாமித்ரனுக்கு அடியில் ஷத்ரிய ஜென்மமாய் இருக்க வந்தேறியான தொரு தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷித்வம் ஆகிற
உத் கர்ஷத்தை அடைந்த பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டித்து இல்லை இறே –

————–

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –
பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்கிறார் –

விபீஷணனை -இத்யாதி -ஸோ பாதிக பந்துவான ராவணன் -விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித -என்னும் படியான
ஸ்ரீ விபீஷணப் பெருமாளை -த்வாம் து திக் குல பாம்ஸநம் -என்று இக்குலத்துக்கு அழுக்காய்ப் பிறந்தாய் நீ போ என்று உபேக்ஷித்தான்
பெருமாள் இத்யாதி -நிருபாதிக பந்துவான பெருமாள் -ந த்ய ஜேயம் கதஞ்சந -என்று இவனை விடில் நாம் உளோம் ஆகோம் -என்று கைக்கொண்டு
ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலா பலம் -என்று தம் பின் பிறந்த இளைய பெருமாளோ பாதியாக இவரையும் நினைத்து
ராக்ஷஸருடைய பலா பலங்கள் இருக்கும் படி சொல்லிக் காணீர் -என்றார் இறே என்கிறார் –

—————–

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

பெரிய உடையார் என்று தொடங்கி -இந் நிருபாதிகமான பகவத் ஸம்பந்தமே பிரபலமாய்க் கொண்டு கார்யகரமாவது என்னும் இடத்தைப்
பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார் -எங்கனே என்னில்
சர்வாதிகராய் ஆசார பிரதானரான பெருமாள் திர்யக் ஜாதீயராய் மாம்ஸாசியுமான ஜடாயு மஹா ராஜரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார் -என்றும் –

—————–

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

தர்ம தேவதா ஸ்வரூபமான தர்ம புத்திரர் பூஜ்யரான ஸ்ரீ விதுரருடைய ஸம்ஸ்கார சிந்தா வ்யாகுலிதரான தசையிலே
அசரீரி -உமக்கு ப்ரஹ்ம மேத ஸம்ஸ்கார யோக்யர் இவர் என்று சொல்லுகையாலும்
ஸம் ப்ரதி பன்னமான அவருடைய ஞானாதிக்யத்தாலும்
ஹீந ஜன்மாவான அவரை ப்ரஹ்ம மேதத்தால் ஸம்ஸ்காரம் பண்ணினார் என்றும் –

———–

சூரணை-231-

ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

மஹ ரிஷிகள் தர்ம ஸூஷ்ம விசேஷஞ்ஞன் யாகையாலே தர்ம வ்யாதன் என்று ப்ரசித்தனான வேடனுடைய வாசலிலே
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி யர்த்தமாக வந்து அவன் வேட்டையாடி வரும் அவஸர ப்ரதீ ஷிதராய்க் கொண்டிருந்து
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு போனார்கள் என்றும் –

—————

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு-ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

ஸ்ரீ கிருஷ்ணன் தூது எழுந்து அருளின மத்யாஹன வேளையிலே மீண்டு எழுந்து அருளா நிற்க
பீஷ்ம த்ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மது ஸூதந -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி
ஆபி ஜாத்யத்தாலும் -வித்யையிலும் -வ்ருத்தத்திலும் -இவை ஓர் ஒன்றிலே விசேஷித்து துரபிமானம் பண்ணி இருக்கிற
துரியோதனையும் -ஸ்ரீ பீஷ்மரையும் -துரோணாச்சார்யரையும் அதிக்ரமித்துப் போந்து
இத்துரபிமானங்களாலே துஷ்டம் இல்லாத ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
புக்த வத்ஸூ த்வி ஜாக்ர்யேஷு நிஷண்ண பரமாஸனே விதுராந்நாநி புபுஜே ஸூ சீநி குணவந்தி ச -என்று
பக்தி ரசத்தாலும் பாவநாத்வத்தாலும் போக்யத்வங்களோடே கிருஷ்ணன் அமுது செய்தான் என்றும் –

———-

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்கிற படியே சக்ரவர்த்தி திரு மகனான பெருமாள்
வேடுவச்சியான ஸ்ரீ சபரி கையாலே திருந்தத் திருவாராதனம் கொண்டு அருளினார் -என்றும்
இப்படி இதிஹாஸ புராண யுக்தங்களான உதாஹரணங்களை அருளிச் செய்து –

——————————-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

மேல் -மாறநேர் நம்பி -இத்யாதியாலே
நம் தர்சன ப்ரவர்த்தகரான பாஷ்யகாரருக்கும் -பிரதம ஆச்சார்யரான பெரிய நம்பியினுடைய அனுஷ்டானத்தையும்
பிரகாசிப்பிக்கிறார் -அதாவது
மாறநேர் நம்பி தம்முடைய அந்திம தசையில் ப்ரக்ருதி பந்துக்களுடைய ஸ்பர்சம் வரில் செய்வது என் என்று அதி சங்கை பண்ணி
ஸ ப்ரஹ்ம சரியான பெரிய நம்பியைப் பார்த்து
ஆளவந்தார் அபிமானித்த சரீரமான பின்பு இப்புரோடாசத்தை நாய்க்கு இடாதே கிடீர் -என்ன
அவரும் அத்தசையிலே உதவித் தாமே அத்திரு மேனிக்கு வேண்டும் ஸம்ஸ்காரம் எல்லாம் பண்ணித் திரு முடியும் விளக்கி மீள எழுந்து அருளி இருக்க
இச்செய்தியை உடையவர் கேட்டருளி -ஸ்ரீ பாதத்தில் சென்று கண்டு லோக உபக்ரோசம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினால் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆசார ப்ரதாநரான பெருமாள் பெரிய யுடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வைதர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜரும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை களுக்கு நான் பொருள் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார் –
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையாலே நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் இத்தனை
நான் பெருமாளில் அதிகனாய்த் தவிரவோ –
இவர் அப்பஷியில் தண்ணியராய்த் தவிரவோ -என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் -என்று ப்ரஸித்தம் இறே –

————-

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-

மேல் -ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபி ச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –என்று
உத்தமமான அனுஷ்டானத்துக்கு விஷய பூதரானவர்களுடைய அவதாரம்
ஸர்வேஸ்வரனுடைய ஸூர நர திர்யக் ஸ்தாவர அவதாரங்கள் போலேயான பின்பு
இவ்வநுஷ்டானங்கள் உண்டானால் லோக கர்ஹை இல்லை என்றும்
இவ்வதிகாரம் இன்றிக்கே ஜகாத் ஸ்ருஷ்டிகளை யுடையவன் பக்கல் விமுகரானவர் பக்கல் யுண்டான
வித்யா வ்ருத்த பாஹுள்யமும் விதவாலங்காரம் போலே என்றும் சொன்ன
ஸ்ரீ ஸூக வாக்கியத்தை -ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-என்று ப்ரசங்கிக்கிறார் –

——————–

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –

பாகவதன் அன்றிக்கே -இத்யாதி -இப்படி பகவத் சம்பந்தம் அடியாக வந்த வை லக்ஷண்யம் இன்றிக்கே இருக்க
வேத அத்யயனம் என்ன
அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஞான அனுரூபமான அதில் அனுஷ்டானம் என்ன –
இவை இத்தனைக்கும் தாங்கள் நிர்வாஹகராய் இருக்குமவர்
விலக்ஷண போக ஏக தத் பரரானவருக்கு போக உபகரணமான குங்குமப் பாரத்தை பூதி கந்த
தத் பரமான கர்த்தபம் பூர்ணமாக வஹிக்குமோ பாதி என்றும் பிரமாண சித்தம் இறே என்கிறார் –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை ப்ராஹ்மண கர்த்தப-என்று
ஸ்ம்ருதி ப்ரஸித்தமாகையாலே

——————

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –

ஆக நிஹீன ஜன்மாவானவன் இஜ் ஜென்மம் தன்னிலே பகவத் ப்ரத்யாசத்தியாலே இப்படி உத்தேச்யமான அளவே அன்று
அந் நிக்ருஷ்ட ஜென்மம் தன்னை உத்க்ருஷ்ட ஜன்மாக்களானாரும்
ஆசைப்பட்டும்
ஆஸ்தாநம் -பண்ணியும் போரும்படி இறே
அந்த பகவத் ப்ரத்யா சத்தியால் வரும் வை லக்ஷண்யம் என்கிறார் -ராஜாவானவன் என்று தொடங்கி -அவை எங்கனே என்னில்
வாசிகை பக்ஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவர தாம் நர -என்கிறபடியே
பாப பலமாய் வரும் திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை த்வதீய வர்ணரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –என்றும்
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –என்றும்
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –என்றும்
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்றும்
இத்யாதிகளாலே ஆசைப்பட்டார் –

—————–

சூரணை -238-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்- கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே-

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே

——————-

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

கந்தல் கழிந்தால் -இத்யாதி -இத்தால் கீழ்ச் சொல்லிக் கொடு போந்த உத்கர்ஷ அபகர்ஷ வைஷம்யம் தான்
இவர்களுடைய கர்ம தாரதம்யத்தால் வந்த சரீர வைசிஷ்டியிலே வருமவை யாகையாலே
அக் கந்தல் கழிந்த நிஷ்க்ருஷ்ட வேஷத்தைப் பார்த்தால் ஸகல ஆத்மாக்களுக்கும் அநந்யார்ஹ சேக்ஷத்வாதிகளாலே
அவனுக்கு அத்யந்த அபிமதையான பிராட்டி தசை பிறக்கக் காட்டுவதாய் இருக்கும் -என்கிறார் –

—————–

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

ஆறு பிரகாரத்தாலே இத்யாதி -ஈஸ்வரீம் ஸர்வ பூதா நாம் -என்கிறவளுடைய அவஸ்த்தை இவர்களுக்கு வருகையாவது என் என்ன
பரி ஸூத்தமான நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஞான ஆனந்தங்களும்
சேஷத்வ பாரதந்தர்யங்களும்
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்
விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையுமாகிற
அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே
அவளோடே ஸர்வ ஸாம்யம் இல்லையே யாகிலும் இவ்வாறு பிரகாரத்தாலே தத் ஸாம்யம் உண்டு என்கிறார் –
ஆனால் இவளுக்கு இவற்றில் அதிகமான பிரகாரங்கள் எவை என்னில்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ ஸம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூர கத்வம் –முதலானவை இறே –

————-

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

ஆக -கீழே -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கிச் சொன்ன அஹம் மமதைகளையும்
அவ் வஹம் மமதா கார்யமான பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்ய ப்ரதிபாதன அர்த்தமாக ப்ரஸ்துதமான
பாகவத வைபவத்துக்கு மூலமான பகவத் சம்பந்த யாதாத்ம்யத்தையும் -த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் அஹங்காரத்தாலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது -குக்ராம நியாமகனைத் தொடங்கி ஸர்வ நிர்வாஹகரான பிரம்மா அளவாக
அஹங்கார மமகாரங்களினுடைய அதிசயம் எவ்வளவு உண்டு அவ்வளவும் த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாய் இருக்கும் என்றும்
பகவத் சம்பந்தம் அடியாக உத்தேஸ்யமான பாகவத விஷயத்தில் எத்தனையேனும் ஜென்ம ஞான வ்ருத்தங்களால் குறைய நின்றவர்கள் பக்கலிலும்
அவ் வஹங்கார மமகார ராஹித்யத்தாலே அத்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாம் என்றும் நிகமிக்கிறார் –

—————-

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

இவ் வஹங்காரம் உண்டானதாலும் இல்லை யானதாலும் வரும் பிரயோஜனம் ஏது என்னச் சொல்லுகிறது -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் -இத்யாதி
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -என்றும்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வஹங்காரத்தில் அதிகனான பிரம்மாவாய் -த்வி பரார்த்த அவசானே மாம் ப்ராப்தும் அர்ஹஸி பத்ம ஜ -என்று
இவ்வஹம் மமதை உள்ள அளவும் ஈஸ்வரனாய் இழந்து போதல்
ஜென்ம ஞான வ்ருத்தங்களால் அவ்வஹங்கார ரஹிதை யான சிந்தயந்தி யாகிற இடைச்சியாய் அவனை லாபித்துக் கொள்ளுதல்
செய்யும் படியாய் இருக்கும் -என்று –

———————-

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-
காமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-
க்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

இவ்வளவாக -தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கின நமஸ் சப்தார்த்தை அருளிச் செய்தார் –
இனி ஸ்வரூப அனுரூபமாக சோதிதமான உபாய உபேயங்களில் நிஷ்ணாதரான அதிகாரிகளுடைய அனுசந்தான பிரகார விசேஷங்களை
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வரூப தசையோடு
உபாய தசையோடு
புருஷகார தசையோடு
வாசியற ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்வரூப நாசகமாகச் சொன்ன அஹங்காரத்துக்கும் அது அடியாக வரும் மமக விஷயமான
இஸ் ஸப்தாதி விஷய ப்ராவண்யத்துக்கும் ஜென்ம பூமி சரீர விசிஷ்டனான தானாகையாலே அந்த சரீர விசிஷ்டமான ஸ்வ விஷய ஞானம் பிறந்தால்
தன்னை ஸ்வ அநர்த்த கரரான சத்ருக்களைக் கண்டால் போலேயும்

அவ்வஹங்கார மமகாரங்களை அதிசயிப்பிக்கிற ஸம்ஸாரிகளை அனுசந்தித்தால் அணுகில் அள்ளிக் கொள்ளும் என்று அஞ்ச வேண்டும்படியான ஸர்ப்பத்தைக் கண்டால் போலேயும்

மத்யம பத நிஷ்டராகையாலே அவ்வஹம் மமதா நிவர்த்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்தித்தால் தன்னுடைய அர்த்த ப்ராமண அபிமானங்களுக்கு அபிமானிகளான ப்ராண பந்துக்களைக் கண்டால் போலேயும்

ஸர்வ பிரகார ரக்ஷகனாய் நிருபாதிக சேஷியான ஈஸ்வரனை அனுசந்தித்தால் தன்னுடைய அநவதானத்தாலே வரும் அக்ருத்யங்களை அறிந்து
ஹித பரனாகையாலே ஸிஷித்துக் கொண்டு போரும் பிதாவைக் கண்டால் போலேயும்

ஸ்வரூப உத்பாதகனுமாய் -ஸ்வரூப வர்த்தகனுமாய்த் தன்னை ஆதரித்தார்க்கு எல்லாம் சத்தையை நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்ய விஷயத்தை அனுசந்தித்தால் பெறில் தரித்தல் பெறா விடில் முடியும்படியான பெரும் பசியனானவன்
அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே -இத்யாதிகளில் படியே ஸர்வ ஒவ்ஷதமான அன்னத்தைக் கண்டால் போலே அபி நிவிஷ்டனாய் இருக்கை –
அதாவது –
ஆச்சார்ய சங்கம்
ஆச்சார்ய விக்ரஹ சங்கம்
ஆச்சார்ய கைங்கர்ய சங்கம்
ஆச்சார்யனுடைய வார்த்தையிலே இன்ன இடத்திலே இன்னபடி அருளிச் செய்தான்
என்று இருக்கும் அதிசங்கம் யுடையவனாகை –
அத்யந்த பாரதந்தர்யத்தையே வடிவாக யுடையராய் அத ஏவ அபிமத ரூபமான சிஷ்யர்களைக் கண்டால்
அவர்களுக்கு சேஷத்வமாகிற சட்டையை இட்டு ஆத்ம குணங்களாகிற ஆபரணங்களை பூட்டி பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் அபிமான
அந்தர்ப்பூதனாக்குகை ஆகிற அந்தப்புரத்தில் வைத்து
தேவதாந்தர ப்ரயோஜனாந்தர நிவ்ருத்தி சாதனாந்தர நிவ்ருத்தி முதலான கல் மதிளை இட்டு வைத்து ரஷிக்கையாலே அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் நினைத்து என்கிறது –

மண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றம்பாலை இட்டுத் தேற்றி -அது தெளித்தால் பாத்ராந்தத்திலே சேர்க்கும் தனையும்
காற்று அடிக்கில் கலங்கும் என்று நோக்குவாரைப் போலே ஞான அஞ்ஞான மிஸ்ரமான தேஹத்திலே இருக்கிற ஆத்மாவைத்
திருமந்திரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்றி -அப்ராக்ருதமான தேஹாந்தரத்திலே வர்த்தித்த போது காண்
ஸ்வரூப சித்தி உள்ளது என்றார் இறே ஆச்சான் பிள்ளையும்

இனி அஹங்கார -அர்த்த காமங்கள் மூன்றும் -என்று தொடங்கி

அஹங்காரமானது அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே பிரயோஜனம் கொள்ள வேணும் என்னும் ருசியைப் பிறப்பிக்கையாலே
அவர்கள் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்கும் என்றும்

அர்த்த ஸ்ரத்தை யானது பிரதிகூலரான சம்சாரிகள் பக்கலிலே ப்ராவண்யத்தை விளைக்கும் என்றும்

காம ஸ்ரத்தை யானது -ஈஸி போமின் -என்று உபேக்ஷிக்கும் விஷயங்களிலே -பல்லே ழையர் தாம் இழிப்பச் செல்வர் -என்னும்படியான அபேக்ஷையைப் பிறப்பிக்கும் என்றும்

அடைவே இவற்றுக்கு அஞ்சி -சம தம நியதாத்மா -இத்யாதியாலே சொல்லப்படுகிற ஆத்ம குணங்கள்
அநாதிகாலம் ஸம்ஸரிக்கைக்கே வழி பார்த்துப் போந்த நம்மாலும் –
இஸ் ஸம்ஸார வர்த்தகராயப் போந்த பிறராலும் உண்டாக்கிக் கொள்ள ஒண்ணாது
ஸப்த பூருஷ விஜ்ஜேயே சந்தத ஏகாந்த்ய நிர்மலே குலே ஜாதோ குணைர் யுக்தோ விப்ர ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிறபடியே
விலக்ஷண அதிகாரியாய் -ஆத்ம குணங்களால் பரிபூர்ணனாய் -பரம கிருபாவானான ஸதாசார்ய அங்கீ காரம் அடியான
பகவத் கடாக்ஷத்தாலே பிறக்கும் என்று அத்யவசித்து
அது எங்கனே என்னில்
அபிஷிக்த க்ஷத்ரியர்அதிக குல அபிமானத்தாலே பிறந்த கன்யகைக்குப் பிறந்த வன்றே தொடங்கி அறைப்பத்திட்டு அங்க மணி செய்து அது பக்வமானவாறே
அவஸர ப்ரதீஷனாய்க் கொண்டு அங்கீ கரிக்குமா போலே ஸதாச்சார்ய அபிமானம் அடியான பகவத் ப்ரஸாதத்தாலே ஆத்ம குணங்கள் யுண்டாய்
அங்கீ க்ருதனாம் என்றபடி –

ஆக -தன்னைக் கண்டால் என்று தொடங்கி -இவ்வளவும் வர -இவ்வதிகாரியுடைய அனுசந்தான பிரகாரங்களை சொல்லி
மேல் தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் -என்று தொடங்கி -மங்களா ஸாஸனம் அளவும்
இவனுடைய திநசர்யை இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

அதில் கர்ம ஆரப்தமான தேஹ யாத்ரை கர்ம அனுரூபமாக ஸ்வயமேவ வருகையாலே
யோ மே கர்ப்ப கதஸ்யாபி வ்ருத்திம் கல்பிதவான் ப்ரபு –
சேஷ வ்ருத்தி விதாநே ஹி கிம் ஸூப்தஸ் ஸோதவா கத -என்று அதில் தனக்கு உபேக்ஷையும்

சேஷத்வ ஸ்வரூபமான ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே அபேக்ஷையும்

அக் கைங்கர்ய ஏக போகனான தனக்கு ஹேயமான பிராகிருத வஸ்துக்களில் வாசனையால் வரும் போக்யதா புத்தியால்
பஞ்ச பூதாத்ம கைர் த்ரவ்யை பஞ்ச பூதாத்மகம் வபுஸ் ஆப்யாயதே யதி தத பும்சோ போகோத்ர கிம் குத -என்று நிவ்ருத்தனாகையும்

இனி -ஆமின் சுவை யவை ஆறோடு அடிசிலை -அத்ய சனமாம் படி புஜித்துக் கிடந்து புரளாதே தேகம் தரித்து இருக்கைக்கு வேண்டும் அளவே
பரமாத்ம ஸமாராதனத்தினுடைய பூர்த்தி ரூபமான ப்ரஸாத ப்ரதிபத்தி பண்ணும் இடத்தில் பதி விரதைக்கு பர்த்துர் உச்சிஷ்ட போஜனம்
பாதி வ்ரத்ய ஹேதுவாமோ பாதி ஸ்வரூப அனுரூபம் என்கிற புத்தியாலே தேஹ தாரணம் பண்ணுகையும்

ஏவம் வித அனுஷ்டானங்களை யுடைய தனக்கு ப்ராரப்த சரீரம் அடியாகச் சில துக்க அனுபவம் உண்டானால்
இச்சரீரத்தோடே அநுபாவ்யமாம் அவற்றில் அச்சுமை கழிந்தது இறே என்று ப்ரீதனாதல்
அன்றிக்கே
ஹரீர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும்
யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்கிறபடியே
சரீர க்ரந்தியால் வருகிற துக்கம் மீளவும் கர்ஹியாத படி பண்ணுகிற பகவத் கிருபையினுடைய பலம் என்றாதல்
அகிலேசத்தில் உண்டாம் உகப்பும் ஏவம் விதமான தன்னுடைய அனுஷ்டானங்களைத் தன் பேற்றுக்குக் கைம்முதலாக நினையாது ஒழிகை யும்
இவற்றை கேவலம் உபேய தயா அனுஷ்டித்துப் போருகிற விலக்ஷணரான பூர்வர்களுடைய ஞான அனுஷ்டானங்கள் நமக்கு உண்டாக வேணும் என்கிற ஆசையும்
ந கந்தைர் ந அநு லேபைஸ் ச நைவ புஷ்பைர் மநோ ஹரை ஸாந்நித்யம் குருதே தத்ர யத்ர சந்தி ந வைஷ்ணவா -என்கையாலே
விலக்ஷணரான ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுக்கு ஆதரணீய ஸ்தலம் என்று ஸர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற
திவ்ய தேசங்களில் நித்ய வாஸ நித்ய கைங்கர்யம் தொடக்கமான வற்றில் அத்யந்த ஆதரமும்
அத் தேச விசேஷங்களிலே உகந்து அருளின அர்ச்சாவதார வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலே
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு -இத்யாதியில் படியே
வெளி விழுங்குகிறதோ என்று நித்ய ஸூரிகளும் அஞ்சி அனுபவிக்கும் படியான விலக்ஷண விஷயம் இந் நிலத்திலே நிரந்தர வாஸம் பண்ணுவதே
என்று இவ்விஷயத்தில் பரிவாலே வரும் மங்களா ஸாஸனமும்

அவ்விலக்ஷண விஷய வியதிரிக்தங்களான ஸப்தாதி விஷயங்களில்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தந்தே -என்கிற அருசியும்

இப்படியே இவற்றில் அருசி உண்டானாலும் –
பா மாரு மூவுலகில் படியே இருந்ததின் நடுவு நின்றும் அக்கரைப் படப்பெறாத ஆர்த்தியும்

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -இத்யாதியில் படியே பகவத் பாகவத வ்யதிரிக்த விஷயங்களில் த்ரி கரண வ்யபிசாரமும் வாராத படியான அநு வர்த்தன நியதியும்

யுக்தமான
அனுசந்தான
அனுஷ்டான
அநு ரூப
ஞான ஹேதுவுமாய்
ஸாஸ்த்ர அவிருத்தமுமாய்
ததீய அபிமான அந்தர் கதமுமான ஆகாரத்தில் நியதியும்

அவ்வாஹார நியதி முதலானவற்றிலே நிரதரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசமாகிற அநுகூல ஸஹ வாஸமும்

அவ்வனுகூல ஸஹ வாஸத்துக்கு எதிர் தட்டாய்
ந சவுரி சிந்தா திமுக ஜன ஸம் வாஸ வைச ஸம் வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதிதி -என்கிறபடியே
ஹுத வஹ ஜ்வாலா பஞ்சர வாஸமே ஸ்ரேஷ்டம் என்னும்படி கொடியராய் பகவத் விமுகரான பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும்

இப்படி இவை இத்தனையும்
கீழ்ச் சொன்ன ஆத்ம குணங்களுக்கு அடியான அந்த ஸதாசார்யருடைய ப்ரஸாதத்தாலே அபி வ்ருத்தமாம் படி
அனுஷ்டித்துக் கொண்டு வர்த்திக்கக் கடவன் -என்று
இவ் வதிகாரிக்குக் கர்தவ்யமான தின சரிதத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- இரண்டாம் பிரகரணம் -உபாயாந்தர தோஷமும்-பெறுவான் முறையும் –சூர்ணிகை -115–159-

July 21, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

———

சூரணை -115-

பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான அசக்திகள் அன்று –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –

இனி -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்-என்று தொடங்கி -இப்படி இதர விஷயங்களை ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்று விடுகிறாப் போலவும்
பகவத் விஷயத்தில் ஸ்வரூப ப்ராப்தம் என்று பற்றுகிறாப் போலவும்
உபாய தசையில் உபாயாந்தரங்களும் ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்றே விடப்படுகின்றன -என்று
அங்கம் தன்னை ஒழிந்தவற்றைப் பொறாது ஒழிகை -என்று தொடங்கிக் கீழ்ப் ப்ரஸ்துதமாய் வருகிற உபாயத்துக்கு அங்கமான
உபாயாந்தர தியாகத்தை இங்கே வெளியாக அருளிச் செய்கிறார் -ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கும் -இத்யாதி

இதர உபாய தியாகத்துக்குத் தன்னுடைய அஞ்ஞான அசக்திகளும் ஹேதுவாய் இருந்ததே யாகிலும் -அது பிரதான ஹேது அன்று
ஆனால் ஏதாவது என்ன -ஸ்வரூப விரோதமே -இத்யாதி
அத்யந்த பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்கள் -ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும் குடம் சுமைக்கையும்
அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார் –

—————-

சூரணை -116-

பிரபாகாந்தரம் அஞ்ஞருக்கு  உபாயம் –

பிராபகாந்தாரம் இத்யாதி -அஞ்ஞர்க்கு உபாயம் என்றது –
இப்படி அத்யந்த பாரதந்தர்ய ஞானம் பிறவாதார்க்கு உபாயம் -என்றபடி

————-

சூரணை -117-

ஞானிகளுக்கு அபாயம்-

ஞானிகளுக்கு அபாயம்-என்றது –
அத்யந்த பாரதந்தர்ய ஞானம் யுடையாருக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயங்கள் ஸ்வரூப விரோதி யாகையாலே –

—————-

சூரணை -118-

அபாயமாய் ஆயிற்று-ஸ்வரூப நாசகம் ஆகையாலே —

அகில வேதாந்த விஹிதமானவது அபாயமானபடி என் என்னில்
ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயம் இல்லாத ஸ்வரூபத்தை அழிக்குமவை யாகையாலே
அத்தை விவரிக்கிறார் -ஸ்வரூப நாசமாகையாலே –

————-

சூரணை -119-

நெறி காட்டி நீக்குதியோ -என்னா நின்றது இறே –

இவ்வர்த்தத்தில் பிரமாணம் உண்டோ என்னில்
இதுக்குப் பிரமாணமாக -நெறி காட்டி நீக்குதியோ -என்று ஆப்த தமரான ஆழ்வார் பாசுரத்தைப் பிரகாசிப்பிக்கிறார் –

——————

சூரணை -120-
வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே
பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே
சோக ஜநகம்-

வர்த்ததே மே -இத்யாதி -இப்படி ஸ்வரூப ஹானியாம் அளவன்றிக்கே
பய ஜனகமுமாய் -சோக ஜனகமுமாயும் இருக்கும் என்னும் இடத்துக்கும் பிரமாணம் காட்டுகிறார்
இதில் -ஸரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -என்கையாலே
உபாயாந்தர அனுஷ்டானத்துக்கு அனுரூபமான வர்த்தமான தேஹத்திலும் -தேஹாந்தர ப்ராப்தி கதியிலும் பயம் உண்டாகா நின்றது -என்கையாலும்
அர்ஜுனனுக்கு இதர உபாய ஸ்ரவண அநந்தரம் சோகம் பிறக்க -மா ஸூ ச -என்ன வேண்டுகையாலும்
பய ஜனகமும்
சோக ஜனகமும் -என்கிறது –

—————–

சூரணை -121-

இப்படிக் கொள்ளாத போது–ஏதத் பிரவ்ருத்தியில்-பிராயச் சித்தி விதி  கூடாது –

இப்படிக் கொள்ளாத போது -இத்யாதி -இதர உபாயங்கள் ஸ்வரூப நாஸகம் என்றும் -பய ஜனகம் -சோக ஜனகங்கள் -என்றும் ஸாஸ்த்ர அபிப்ராயமாகக் கொள்ளா விடில்
அஸ் சாஸ்திரம் தானே உபாயாந்தரங்களில் உபாய புத்தியைப் பண்ணின ப்ரபந்ந அதிகாரியைக் குறித்து
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யே ததேவஹி -அபாய கரணே சைவ ப்ராயச்சித்தம் ஸமா சரேத்
ப்ராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத் -என்று
இதர உபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணினவனுக்கு அபாய கரணத்தோடே ஓக்க -ப்ராயச் சித்தம் பண் என்று விதிக்கக் கூடாது இறே என்கிறார்
அதாவது ஸூ த்ர ஸ்பர்சத்தில் இறே ப்ராஹ்மணனுக்கு ஸ்நான விதி உள்ளது –
சஜாதீயனான ப்ராஹ்மணன் ஸ்பர்சத்தில் அவ்விதி இல்லை இறே –

——————–

சூரணை-122-

திரு குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–

அவ் வபிப்ராயத்தைப் பற்ற இறே ப்ராமாணிகரான பிள்ளான் வார்த்தையும் -அது எங்கனே என்னில் -திருக் குருகைப் பிரான் -இத்யாதி
சாத கும்ப மயம் என்றது -ஸ்வர்ண மயமான கும்பம் -என்ற படியாய் -இத்தால்
பக்திக்கு ஆஸ்ரயமாய் விலக்ஷணமான ஞான ஆனந்த ஸ்வரூபத்தை நினைத்து –
அதில் உண்டான கங்கா ஜலத்தை பகவத் விஷயத்தில் பக்தியாகவும் நினைத்து
இவை இரண்டும் உபாதேய தமமானாலும்-அஹங்கார மஹா பாந மத மத்தான் மாத்ருஸா -என்று
அஹங்காரத்திலே மதிரா புத்தி உண்டாகையாலே
அந்த ஸ்வ யத்ன ஸ்பர்ச மாத்ரத்தை மதிரா பிந்துவாக நினைத்து இப்படி தத் ஸ்பர்சமுள்ள உபாயம் தோஷ துஷ்டம் என்று அருளிச் செய்தார் இறே என்கிறார்
இவ்வளவும் அன்றிக்கே பல விஸத்ருசமும் -என்கிறது –

———————–

சூரணை -123-

ரத்னத்துக்கு பலகரை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –

ரத்னத்துக்கு பலகரை போலேயும்-இத்யாதியாலே பல கரையும் எலுமிச்சம் பழமும் ரத்னத்துக்கும் ராஜ்யத்துக்கும்
ஸத்ருசம் அன்றே யாகிலும் அவற்றை உபஹாரமாகக் கொடுத்தே யாகிலும் அவரவர் அபிமதங்கள் பெறக் காணா நின்றோமே
அவ்வோபாதி தானாகாத் தட்டென் -என்ன –

—————–

சூரணை -124-

தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –

தான் தரித்ரன் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யை தே தஸ்ய தத் தநம் -என்று
தான் ஸ்வரூபத அகிஞ்சனன் ஆகையாலே ஒரு வழியாலும் தனக்கு கிஞ்சித் கரிக்கலாவது இல்லை என்ன –

————–

சூரணை -125-

அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –

அவன் தந்தத்தை -இத்யாதி -அது என் –
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்கையாலே
அவன் தந்த கரணங்களைக் கொண்டு அவனுக்கு கிஞ்சித் கரித்தாலோ -என்ன
அக்கரணங்கள் உடையவனைக் குறித்து கரணம் விநியோகப்பட வேணும் என்கிற க்ரமத்திலே உபகரிக்கில் அது உபாயம் ஆகாது -உபேயமாய் விடும்
அடைவு கெட -இத்யாதி -மதீயம் என்று ஸமர்ப்பிக்கில் ராஜ தனத்தை ஏகாந்தத்திலே அபஹரித்து ஓலக்கத்திலே உபஹரிக்குமோ பாதி களவு வெளிப்படும் –

————–

சூரணை -126-

பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –

பர்த்ரு போகத்தை -இத்யாதியாலே -அவ்வளவும் அன்று -பதி வ்ரதையானவள் பார்த்தாவுக்கு உடம்பு கொடுத்து
அத்தை ஜீவனார்த்தம் என்று நினைக்கில்
பர்த்ரு பார்யா ஸம்பந்தம் குலையுமா போலே
உபய ஸ்வரூப விருத்தமும் -என்கிறார் –

—————

சூரணை -127-

(ஸ்வரூப நாசகமான வற்றை )வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –

சூரணை -128-

ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தை கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை –

ஸ்வரூப நாசகமான வற்றை -என்று தொடங்கி -இப்படி அநேக தோஷ பூயிஷ்டமான உபாஸனத்தை வேதாந்தங்களில் சேதனனைக் குறித்து
த்யாயீத உபாஸீத -என்று விதிக்கிறபடி எங்கனே என்ன
ஒவ்ஷத ஸேவை -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
மரணாந்தமான வியாதி நிவ்ருத்திக்கு மஹா ஒவ் ஷதத்தை விதித்தால் அது ஒருவனுக்கு ருசியாதாப் போலே
வைப்பாம் மருந்தாம் -என்கிற ஏக ரூபையாய் ஸம்ஸார பேஷஜமான ஸக்ருத் ஸேவை என்றாலும் அதில் ருசி விஸ்வாசங்கள் பிறவாதார்க்கு
அவர்கள் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால் அவர்கள் வாசனை பண்ணின அபிமத வஸ்துக்களிலே கலந்தாகிலும் அவனுக்குப் பிரயோகிப்பாரைப் போலே
அவ்வேதாந்தங்களும் ப்ரவ்ருத்தி யுபாயங்களிலே பரந்தவர்களுக்கு நிவ்ருத்தி ரூப உபாயத்தில் ருசி விஸ்வாசங்கள் பிறவாமையாலே
தமேவ ஸாத்யம் -என்றும்
தமேவ சரணம் கச்ச -என்றும்
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும்
அத்யயனத்துக்குப் பிரதிநிதியாக -நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி – என்றும் இத்யாதி களாலே
இதர உபாயங்களிலே ஸ்வ தந்த்ர உபாயமான ஈஸ்வரனைக் கலந்து உபாயமாக்கி ப்ரயோகிக்கிறது அத்தனை –

———–

சூரணை -129-

இத்தை பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

இத்தைப் ப்ரவ்ருத்திப்பித்தது -இத்யாதி -இப்படிக்கு கலந்தாகிலும் இதர சாதனத்தை விதித்தது
குமைத்திட்டுக் கொன்று உண்பர் அறப் பொருளை அறிந்து ஓரார் -என்கிறபடியே
சரீர போஷண அர்த்தமாக அஸாஸ்த்ரீயமான ஹிம்ஸையிலே அனவரத தத் பரரான அவர்களை அதில் நின்றும் மீட் கைக்காக
அக்னீ ஷோமீயம்ப ஸூமால பேத -இத்யாதி வைதிக ஹிம்ஸையிலே மூட்டினது அத்தனை என்கிறார்

———————–

சூரணை-130-

இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –

ஆனால் விதித்து வைத்து இப்போது விடச் சொல்கிறது என் என்ன -இது தான் -இத்யாதி –
அடியிலே ஆஸ்திகனாகைக்காக அபிசார கர்மத்தை விதித்து வைத்து –
அனந்த்ரம் அவனை அத்ருஷ்ட பரன் ஆக்குகைக்காக-அவற்றை நிஷேதித்து வைத்தவோ பாதி
இதில் விதி நிஷேதங்கள் உசிதம் -என்கிறார் –

————–

சூரணை -131-

அத்தை சாஸ்திர விஸ்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விஸ்வாசத்துக்காக விதித்தது –

அந்த அபிசார விதியை முதலிலே நாஸ்திகனாய் ஸாஸ்த்ரத்திலே விஸ்வாஸம் இல்லாதவனுக்கு தத் விஸ்வாஸ ஹேதுவாக விதித்தது
சாதனாந்தரத்தை விதித்தது -ஈஸ்வரோஹம் அஹம் போகீ -என்கிறவன் தன்னை ஈஸ்வர சேஷம் என்று இருக்கைக்காக –

—————

சூரணை -132-

அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –

அது தோல் புரையே போம் -இத்யாதி -அந்த ஸ்யேந விதி கேவலம் தேஹ போஷண அர்த்தமாக வாகையாலே -அத்தேஹ அவசானத்திலே அந்த விதியும் போம் –
இந்த இதர உபாயம் ஆத்ம ஸ்வரூப ஞானம் அடியாக வருகையாலே ஸ்வரூப நாஸகம் -என்கிறார் –

——————-

சூரணை-133-

இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –

இது தான் கர்ம ஸாத்யம் -இத்யாதி -ஸர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதேரஸ் வவத் -என்றும்
யஜ்ஜேந தாநேந -இத்யாதியில் சொல்லப் படுகிறவை
தர்மான்நாதி துஸ் சரம் தானான்நாதி துஷ் கரம் -என்றும் சொல்லுகையாலும்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி -நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கையாலும்
இதற்கு துஷ்கரத்வ தோஷம் உண்டு -என்கிறார் –

————

சூர்ணிகை – 134–

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை-

ஆக -பிராப காந்தர பரித்யாகத்துக்கும் -என்று தொடங்கி -பிரபத்தி அங்க தயா த்யாஜ்யமான இதர உபாயங்களினுடைய தோஷ பூயிஷ்டதையை
ஸ்வரூப நாஸகம்
பய ஜனகம்
சோக ஜனகம்
பல வி ஸத்ருசம்
உபய ஸ்வரூப விருத்தம்
துஷ்கரம்
இத்யாதிகளாலே சொல்லிப்
பற்றப்படும் பிரபத்தி யுபாயத்துக்கு இவ் வாசக தோஷமும் இல்லை -என்று தொடங்கி
இவ்வுபாய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் மேல்
அதில் இக்குற்றங்கள் ஒன்றும் இல்லை -என்று விசேஷிக்கையாலே
மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் ஸூ சிதம் –

———–

சூர்ணிகை —135-

ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூ கரமுமாயும் இருக்கும்-

இனி மேல் -ஆத்ம யாதாத்ம்ய கார்யம் ஆகையாலே -என்று தொடங்கி இவ்வுபாய வை லக்ஷண்யத்தை உபபாதிக்கிறார் -அதாவது
இவ்வுபாயம் அத்யந்த பரதந்தர்ய ஞானம் பிறந்தால் வருமாதாகையாலே அத்யந்தம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததுமாய்
சிற்றுகை -சிதறுகையாய்-அலைய வேண்டா என்கையாலே
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிற
ஸ்வ வியாபார ஸூந்யதையாலே பெறுமதாகையாலே யுக்த தோஷங்கள் இல்லாமையே யன்றியே ஸூ கரமுமாயும் இருக்கும் –

———-

சூர்ணிகை –136-

பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –

சூர்ணிகை –137-

ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும் –

சூர்ணிகை –138-

பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை-

பூர்ண விஷயம் -இத்யாதி -இவனுடைய சைதன்யம் அடியாகச் சில கிஞ்சித் கரிக்க நினைக்கில்-சரண்யனானவன்
ஸ்ரீ யபதியாய்
அவாப்த ஸமஸ்த காமனாய் -இருக்கையாலே
அவ்வைபவ அனுரூபமாக உபகரிக்க அரிது என்ன
அகிஞ்சனான இவன் அகன்றே போம் அத்தனையோ என்ன
இவன் தன் விலக்காமையைத் தெரிவிக்கின்ற வியாபார மாத்ரமான கேவல அபிமிக்க ஸூ சகத்தாலே அவன் திரு உள்ளம் உகக்கும் –
ஆகையால் இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பூர்த்தி இறாயாதே அபி நிவேசித்துப் பற்றுகைக்கு அடியான அத்தனை -என்கிறார் –

—————

சூர்ணிகை–139—

பத்ரம் புஷ்பம் — அந்யாத் பூர்ணாத் — புரிவதுவும் புகை பூவே –

இதில் பிரமாணம் என் என்ன -பத்ரம் புஷ்பம் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்கிரா திரு முகப் பாசுரத்தாலும்
அந்யத் பூர்ணாதாபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் நதே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று
கிறுசதனனை ஐஸ்வர்யத்தாலே வஸீ கரிக்க நினைத்த த்ருதராஷ்ட்ரனைக் குறித்து ஸஞ்சயன் சொல்லுகையாலும்
புரிவதில் யீசனையென்று தொடங்கி -புரிவதுவும் புகை பூவே -1-61-என்று
அவ்வர்த்தத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கையாலும்
ஆபி முக்ய ஸூசகமே வேண்டுவது என்று அருளிச் செய்கிறார் –

——

சூர்ணிகை –140-

புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –

சூர்ணிகை –141-

ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –

இப்படி ஸூகரமான மாத்ரமே அன்று -இது பல ஸத்ருசமும் என்கிறார் -புல்லைக்காட்டி -இத்யாதியாலே -அதாவது
போக ரூபமான
புருஷகார
குண
விக்ரஹங்களே உபாயமுமாய்
அது தானே உபேயமுமாய் இருக்கையாலே இவற்றுக்குப் பிரிவில் யாகையாலே
இவ்வுபாயம் -ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -என்று ஸூக ரூபமாய் இருக்கும் -என்கிறார் –

——————-

சூரணை -142-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

சூரணை-143-

அவன் இவனை பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —

இனி இக் குற்றங்கள் இல்லை என்ற இடத்தே ஸூ சிதமான குற்றத்தைத் தோற்றுவியா நின்று கொண்டு
இவ்வுபாயத்தில் ஸ்வ கதமான ஸ்வீ காரமும் ஸ்வரூப ஹானி என்கிறார் மேல் -இவன் அவனைப் பெற நினைக்கும் போது -என்று தொடங்கி
அஞ்ஞனாய் -அசக்தனாய் இருக்கிற இவன் ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியானவனைத் தன் பேறாகத் தான் பற்றும் அன்று
அஹங்கார கர்ப்பமான இதர சாதனங்களோ பாதி விலக்ஷண உபாயமாக சாதித்த இந்தப் பிரபத்தியும் சாதனம் அன்று
அவன் தன் பேறாகத் தான் விஷயீ கரிக்கும் அன்று இவனுடைய மஹா பாதகாதி ஸமஸ்தமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது –

——–

சூரணை -144-

இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –

சூரணை -145-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

அவை எங்கே கண்டோம் என்ன -ஸ்ரீ பரதாழ்வான் இத்யாதியாலே -அவ்விரண்டத்தையும் வெளியிடுகிறார் -அது எங்கனே என்னில்
ஸ்ரீ பரதாழ்வான் -ஏபிஸ் ஸ சிவைஸ் ஸார்த்தம் -இத்யாதியாலே தம்முடைய பேற்றை மநோ ரதித்து
ஸேஷ்யே புரஸ் தாச்சா லாயாம் யா வந்த மே ப்ரஸீ ததி-என்று அவருடைய பிரபத்தி தானே
சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாமையாலே
நீரே ஸ்வ தந்தரராய் நம்மைப் பரதந்த்ரராக்கி மீட்க வந்தீரோ -என்கையாலே தீமையாய்த் தலைக்கட்டிற்று இறே
ஸிஷ்ட பரிபாலனமும் துஷ்ட நிக்ரஹமும் பண்ணிப் போந்த சக்ரவர்த்தித் திரு மகன்
நெடும் காலம் வன்னியராய் வழி யடித்துத் திரிந்த நம்மைக் கண்ட போதே
தலை அறுக்கை தவிரார் என்று ஸ்வ தோஷ அணு ஸந்தானராய் முகம் காட்டாதே இருந்த ஸ்ரீ குஹப் பெருமாளுக்கு
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்சநேந ச -என்றும்
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்றும்
அருளிச் செய்யும்படி அது தானே நன்மையாய்த் தலைக்கட்டிற்று இறே –

————

சூரணை -146-

சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —

இப்படி சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாத பிரபத்தி ஸ்வரூப ஹானி என்னும் அர்த்தத்தை
ஆச்சார்ய அனுஷ்டான ப்ரஸித்தியாலே விஸதீ கரிக்கிறார் -சர்வ அபராதங்களுக்கும் -இத்யாதியாலே -அதாவது
ப்ராயச் சித்த அந்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷணாம் கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்கிறபடியே
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாம் படி ஸர்வ அபராத ப்ராயச் சித்தமாக ப்ரஸித்தமான ப்ரபத்தியும்
அபராத கோடியிலே யாகையாவது கத்யத்திலே பாஷ்யகாரர் தாம் பண்ணின பிரபத்தி சரண்ய ஹ்ருதய அநு சாரி அன்றோ என்று சங்கித்து
பிதேவ புத்ரஸ்ய சகேவ சக்யு ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் -என்று அபராத ஷாமணம் பண்ணுகையாலும்
மத் வ்ருத்தம் அசிந்த யித்வா நாத முனிம் விலோக்ய ப்ரஸீத -என்று ஆளவந்தார் ஷாமணம் பண்ணுகையாலும்
ஷாமணம் பண்ண வேண்டும் படி நின்றது இறே என்கிறார் –

——————

சூரணை -147-

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –

அது அபராதம் என்னும் இடத்தை லோக த்ருஷ்ட்டி ப்ரக்ரியையாலே அருளிச் செய்கிறார் -நெடு நாள் -என்று தொடங்கி –
சிர காலம் ஸ்வ பர்த்ரு வ்யதிரிக்த விஷய அனுபவ பரவஸையாய்ப் போந்த பார்யை அவ்வியாபாரத்தில் லஜ்ஜையும் பர்த்ரு தந்தத்தால் வரும் பயமும் இன்றிக்கே
அவன் ஸந்நிதியிலே நின்று உனக்கு அநந்யார்ஹை யாம்படி நீ தாலி கட்டின என்னை நீயே அங்கீ கரித்து புஜிக்க வேணும் என்று அபேக்ஷிக்குமா போலே இறே
அநாதி காலம் அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யங்களாலே -அசன்னேவ-என்னும்படி கை கழிந்தவன் இப்போது நிரூபாதிக சேஷியான நீயே ரக்ஷிக்க வேணும் என்று தான் சரணாகதனாகை –

—————-

சூரணை -148-

கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –

இப்படி ஸ்வ கத ப்ரபந்ந அதிகாரிகளான காக்க விபீஷணாதிகள் பக்கலிலேயும்
க்ருபயா பர்யபாலயத் -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும்
கார்யகரமாகக் காணா நின்றோமே என்ன -கிருபையால் வரும் -இத்யாதி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூப கிருபையாலே -ஆஸ்ரித பரதந்த்ரனாய்க் கொண்டு அவர்களையும் அங்கீ கரிக்குமதுவும் இல்லை என்கிறது அன்று
அத்தைப் பற்ற பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன்னுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே ஆஸ்ரித பராதீனனாய் அங்கீ கரிக்குமதுவே
அத்யந்தம் பலவத்தரம் -என்கிறார் –

———–

சூரணை -149-

இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-

இப்படிப்பட்ட பர கத ஸ்வீ காரத்தை -நாயமாத்மா -என்று தொடங்கி
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய -தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று
வேத புருஷனும் விஸ்தரித்துச் சொன்னான் என்கிறார் –

இந்த ஜீவன் -ஞான பிரசாதத்தால் – பரமாத்மாவை -எதனால் அடைய முடியாது -பிரவசனம் பண்ணி மனனம் பண்ணி லபிக்க முடியாது —
நமேதையா-பக்தி உபாசனத்தாலும் முடியாது -ப்ரீதி ரூபாபன்ன உபாசன பரம்
யாரை பரமாத்மா இச்சிகிறானோ அந்த சேதனனால் மட்டுமே லபிக்கப் படுகிறான் -தன்னுடைய ஸ்வரூபாதிகளை தர்சிப்பிக்கிறான் –

கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –

————

சூரணை -150-

அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –

அபேஷா நிரபேஷமாக -இத்யாதி-தம் தாம் பக்கல் நினைவு இன்றிக்கே இருக்க
ஏஷ ஸர்வ பூதஸ்து பரிஷ் வங்கோ ஹனூமதா மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந -என்றும்
வாத மா மகன் மற்கடம் -இத்யாதிப்படியே திருவடிக்கு
ஏழை ஏதலன் – இத்யாதிப்படியே குஹப்பெருமாளுக்கும்
இப் பர கத ஸ்வீ காரம் உண்டாயிற்று என்று இதுக்கு அதிகாரிகளைக் காட்டுகிறார் –

———————–

சூரணை -151-

இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்
அபய பிரதா நத்திலும் காணலாம் –

இப்படி ஸ்வா தந்தர்யத்தாலே தான் நினைத்தபடி அங்கீ கரிக்குமாகில் அந்த ஸ்வா தந்தர்யம் ஷிபாமி -என்று உபேக்ஷிக்கைக்கும் ஹேது வாகாதோ -என்ன
அந்த ஸ்வாதந்தர்யத்தால் விஷயீ கரிக்கும் இடத்தில் புருஷகார ஸாக்ஷி பூர்வகமாக விஷயீ கரிக்கையாலே
அவனாலும் விடப்போகாது என்கிறது மேல் -இவன் முன்னிடுமவர்களை -இத்யாதி
இச்சேதனன் புருஷகாரமாக முன்னிடுமவர்களை உபாய பூதனான தானும்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்கையாலே ஒவ் பாதிகமுமாய்
அவள் -அகலகில்லேன் -என்று இருக்கையாலே நித்யமாயுமாய் இருக்கையாலே
அது இருவருக்கும் உண்டு இறே என்கிறார்
ஸ்ரீ மத் பதத்திலே எல்லாரும் இவளை முன்னிட அவனும் முன்னிட்டு அங்கீ கரிக்கும் என்ற இடம்
ஸ்ரீ குஹப்பெருமாள் விஷயமாக -மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்று முன்னிட்டுப் பற்றுகையாலே அவன் பக்கலிலும்
நிவேதியத மாம் க்ஷிப்ரம் -என்று விபீஷணன் முன்னிட்டு
மஹா ராஜரை -ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட -என்று பெருமாள் முன்னிடுகையாலே அபய பிரதானத்திலும் காணலாம் –

————–

சூரணை –152

இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –

இருவரும் இத்யாதி -தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கை யாவது –
பஹு தோஷ துஷ்டனாகையாலே சேதனன் அபராத ஷாமணார்த்தமாக முன்னிடும்
ஈஸ்வரன் தன் ஸ்வா தந்தர்யத்தாலே சேதனன் தன்னைக் கிட்ட ஒண்ணாதபடி இருந்த குற்றம் அவர்கள் நெஞ்சில் படாதபடி பண்ணுகைக்காக முன்னிடும் –

———

சூரணை-153 —

ஸ்வரூப சித்தியும் அத்தாலே –

சூரணை-154–

ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—

ஸ்வரூப சித்தியும் அத்தாலே -ஸ்வரூபம் ஸித்திக்கை யாவது என் என்னில்
ஒவ் பாதிகமுமாய் -இத்யாதி சேதனருக்குத் ததீயர் என்றே அவர்களுக்கு சேஷமாகையாலே ஒவ் பாதிகமுமாய் –

அது தான் யாவதாத்ம பாவி என்று நமஸ்ஸூ சொல்லுகையாலே அது தான் நித்யமானவோ பாதி
ஈஸ்வரனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமும் பற்றி ஸ்வரூப லாபம் என்கிறது

——–

சூரணை-155–

அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —

அநித்யமான இத்யாதி -மோக்ஷயிஷ்யாமி என்னும் அளவில் அநித்யமானவையான அவஸ்யம் அநு போக்தவ்ய மான
கர்ம பரதந்த்ரனாய்க் கொண்டு புஜிக்கிற கர்ம பாரதந்தர்யமும்
கர்ம அனுரூபமாக இவனைப் புஜிக்கக் கடவ ஸங்கல்ப பாரதந்ரயமுமாகிற
இவ்விரண்டு பாரதந்தர்யமும் குலைவதும் இப்புருஷகாரத்தாலே –

————-

சூரணை-156–

ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —

ஸ ஸாஷிகம் இத்யாதி -இப்படி ஸாக்ஷி ஸஹிதமான ஒவ் பாதிகமுமாய் நித்யமுமான இப்பந்தத்தை ஸர்வ ஸக்தியான அவனோடே
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ்ம தாதே கீடஸ்ய ஸக்தி -என்று அஸ் சக்தியை அதிக்ரமிக்கும் இவனோடே வாசியற
இருவராலும் இல்லை செய்ய வரிதாய் இருக்கும் –

———–

சூரணை -157-

என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –

இருவராலும் இல்லை செய்யப் போகாமைக்கு -மேல் இரண்டு பிரமாணங்களும்

————

சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –

கர்மணி வ்யுத்பத்தியில்-இத்யாதி -கர்மணி த்விதீயா என்கையாலே
கர்மணி வ்யுத்பத்தியில் ஸ்வரூபத்தாலும் ப்ரணயித்வ குணத்தாலும் வருகிற ஸேவா கர்த்தாக்களுடைய
சங்கோச ராஹித்யத்தை நினைப்பது என்று
இவ் வர்த்தத்தில் பிராமண ப்ராபல்யத்தை ஸ்மரிப்பிக்கிறார்
சேஷித்வே பரம புமான் பரிகாராஹ்யேதே தவஸ் ஸ்பாரணே -என்னக் கடவது இறே –

———-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –

சூரணை -160-

தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து

ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –

நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே

தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –

——————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

 

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- முதல் பிரகரணம் -உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

July 20, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

———–

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை முதல் பிரகரணத்தில் அருளிச் செய்து தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

————-

சூரணை -23-

பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

பிரபத்திக்கு இத்யாதி
ந தேச காலவ் ந அவஸ்த்தாம் யோகோஹ்யய மபேஷதே -என்றும்
ந திதி ந ச நக்ஷத்ரம் ந க்ரஹோ ந ச சந்த்ரமா ஸ்ரத்தைவ காரணம் நிரூணாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே -என்றும்
சொல்லுகிறபடியே இதுக்கு தேச கால நியமம் இல்லை –

—————

சூரணை -24-

விஷய நியமமே உள்ளது –

நிரபேஷ உபாயமான இதுக்கு -பிரபத்தவ்ய விஷய நியமமே உள்ளது என்கிறார் மேல் -கர்மத்துக்கு -இத்யாதியாலே

—————–

சூரணை-25-

கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இவ் வுபாய ஸுகர்ய சாதன அர்த்தமாக ஏதத் ப்ரதிகோடி சாதனங்களுக்கு -தேச காலாதி சாபேஷதை -உண்டு என்கிறார் –
இத்தால்
யஜ்ஜேந தாநேந தபஸா அ நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-என்கையாலே
பக்திக்கு பிரதம உபகாரமான கர்மத்துக்கு தேசோயம் ஸர்வ காம துக்-என்னும்படியான புண்ய ஷேத்ரமும்
வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத-என்கையாலே வஸந்தாதி காலம்
ஆக்நேயம் அஷ்டாகபாலம் ஐந்தரம் த்வாதஸ கபாலம் -இத்யாதி பிரகார விதாயக ஸாஸ்த்ர உக்தங்களான
அவ்வவ் உபாயங்களும்
இவை தான் த்ரை வர்ணிகருக்கே கர்த்தவ்யங்கள் ஆகையாலும் -அது தன்னிலும்
கிருஷ்ண கேஸோக்நீநாததீத -என்கையாலே இவை அத்தனையும் ஸர்வதா வேணும் என்கிறார் –

————-

சூரணை -26-

ச ஏஷ தேச கால -என்கையாலே–இதுக்கு தேச கால நியமம் இல்லை –

இவ்வோபாதி ப்ரபத்தியும் உபாயமாய் இருக்கச் செய்தே அவை வேண்டா என்கைக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார்
ச ஏஷ தேச கால -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாகப் பெருமாளை நோக்கித் திருவடி விண்ணப்பம் செய்த வார்த்தை இத்யாதியாலே

————–

சூரணை-27-

இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்-

தேச காலாதி நியமம் இன்றிக்கே
திருமாலை விரைந்து அடி சேர்மினே -என்னும்படியான இவ்வர்த்தம்
ஸகல பிராமண ஸாரமான த்வ்யத்தில் ஸ்ரீமத் பதத்தில்
மதுப்பில் விசதம் என்கிறார்

———–

சூரணை-28-

பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –

இனி பிரகார நியதி இத்யாதியாலே
யுக்தமான தேச காலாதிகளில் விசேஷித்து பிரகார அதிகாரி பல நியமங்கள் இல்லை என்னும் இடத்தை விவரித்து
அருளிச் செய்கிறார் மேல் –

———-

சூரணை-29-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –

இந்த பிரகார நியதி இல்லாமை ப்ரபத்தாக்கள் பக்கல் எங்கும் காணலாம் –
அது எங்கே கண்டது என்ன -கீழே பிரஸ்த்துதரா னவர்களில் – திரௌபதி அப்ரயதையான தசையிலே பிரபத்தி பண்ணுகையாலும்
நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே -என்கிற ஹேயர் நடுவே அர்ஜுனன் இப்பிரபத்தி அர்த்தத்தைக் கேட்கையாலும்
பிரகார நியதி இல்லாமை விசதம் இறே –

————-

சூரணை -30-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –

ஸூத்தி அஸூத்யாதிகள் இத்யாதி
கீழ் அஸூத்தரான தசையிலே ப்ரபன்னரானமை சொல்லுகையாலே
அவ் வஸூத்தி தான் இதுக்கு அங்கமாகிறதோ என்ன
அஸூத்தி அங்கம் அல்லாதவோபாதி ஸூத்தியும் இதுக்கு அங்கம் அல்ல
ருசி பிறந்த தசையில் நின்ற நிலையே அதிகாரம் -என்கிறார் –

————–

சூரணை -31-

இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

வேல் வெட்டிப் பிள்ளைக்கு -இத்யாதியாலே இவ்வர்த்தத்தில் ஆப்த வசனத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பெருமாள் சமுத்திர ராஜனான வருணனை சரணம் புகுந்த இடத்தில் ப்ராங் முகத்வாதி நியமங்களோடே சரணம் புகுருகையாலே
யத் தாசரதி ஸ்ரேஷ்ட -இத்யாதி க்ரமத்தாலே அல்லாதாருக்கும் அவை அநுஷ்டேயங்கள் ஆகாதோ -என்று வேல் வெட்டிப்பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய
அது அங்கனே அன்று காணும் -ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -என்று பெருமாளுக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்த
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே கால் தோய்த்தல் -அடங்கின வெற்றிலை உமிழ்தல் -செய்யாமையாலே
அவை சர்வ சாதாரணம் அன்று காணும்
அவர் ஆசார ப்ரதாநமான குலோத் பவராகையாலே அவை தானே வந்தது அத்தனை –
தீஷிதனுக்கு கர்ம யோக்யதா ஹேதுவான சிகா யஜ்ஜோ பவீதங்கள் கிடந்தவோ பாதி நை சர்கிகமானவை கிடக்குவுமாய்
அவனுக்கு நித்தியமான சந்தியாவந்தனம் இல்லாதாவோ பாதி இவனுக்கும் ஸ்வீ கார தசையிலே தத் அங்கமாக ஒரு நியதி வேண்டாமையாலே
இவன் நின்ற நிலையே காணும் இதுக்கு அதிகாரம் -என்று அருளிச் செய்தார் –

—————-

சூரணை -32-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –

அதிகார நியமம் –இத்யாதி
திரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் ஸத்ருக் ஜனார்த்தனம் -என்று
ஷத்ரியரான தர்ம புத்ராதிகள் சரணம் புகுருகையாலும்
ரக்ஷமாம் சரணாகதாம்-என்று ஸ்திரீயான திரௌபதி சரணம் புகுருகையாலும்
ஸ பித்ரா சேத்யாதி தமேவ சரணம் கத -என்று தேவ யோனியான காகம் சரணம் புகுருகையாலும்
கிருபா மாத்ரா மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -என்று திர்யக் யோனியான காளியன் சரணம் புகுருகையாலும்
ஸ து நாகவர ஸ்ரீ மான் -இத்யாதி மனஸா சிந்தயத் ஹரிம் -என்று கஜேந்திரன் சரணம் புகுருகையாலும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -என்று ராக்ஷஸ யோனியான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுருகையாலும்
அஞ்சலிம் ப்ராங் முக க்ருத்வா -என்று ஸர்வாதிகாரன பெருமாள் சரணம் புகுருகையாலும்
ஸ பிராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய -என்று பெருமாளை பிரியில் தரியாதபடி அநந்யார்ஹரான இளைய பெருமாள் சரணம் புகுருகையாலும்
அதிகாரி நியமம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–

பல நியமம் -இத்யாதியாலே
கீழ்ச் சொன்ன அதிகாரிகளுக்கு பலம் ஒருபடிப்பட்டு இராமையாலே
ஸகல பல ப்ரதமான இவ்வுபாயத்துக்குப் பல நியமம் இல்லை -என்கிறார்-

———

சூரணை -34-

விஷய நியமம் ஆவது-குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –

சூரணை -35-

ஆழ்வார்கள் பல இடங்களிலும்-பிரபத்தி பண்ணிற்றும்-அர்ச்சாவதாரத்திலே –

மேல் -விஷய நியமம் -இத்யாதியாலே
கீழே -விஷய நியமமே உள்ளது -என்று ப்ரதிஜ்ஜை பண்ணினதை ப்ரதிபாதிக்கிறார் –
ஸமஸ்த கல்யாண குண பரி பூர்த்தி உள்ள இடமே சரண்ய விஷயம் என்றும் –
அது தான் அல்லாத இடங்களை பற்றி அர்ச்சாவதாரத்திலே அதி சாய்த்து இருக்கும் என்றும் –
இக்குண பூர்த்தியாலே அனுஷ்டாதாக்களான ஆழ்வார்களும்
பிறந்த வாற்றிலும் மற்றும் க்வா சித்கமாக அவதாராதிகளிலே சரணம் புகுந்தார்களாகிலும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்றும்
இத்யாதிகளிலே உகந்து அருளின நிலங்களிலே விசேஷித்து சரணம் புகுகையாலும்
அர்ச்சாவதாரமே ஸகலர்க்கும் சரண்ய விஷயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

——————-

சூரணை -36-

பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

பூர்ணம் -இத்யாதி -இத்தால் –
ப்ரமாதாக்களுடைய அனுஷ்டானமே அன்றிக்கே -கடவல்லியில் -த்வயத்தில் -பூர்வ உத்தர கண்ட மத்யத்திலே
ஓதப்படுகிற பிரமாண ப்ராபல்யத்தையும் ப்ரதிபாதிக்கிறார் –
இதம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ருச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ வஸிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -என்னக் கடவது இறே –

———-

சூரணை-37-

பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்-இருட்டறையிலே விளக்குப் போலே-பிரகாசிப்பது இங்கே –

ப்ரபத்திக்கு இத்யாதி -இத்தால் -அர்ச்சையிலே இக் குணங்கள் பிரகாசிக்கும் படியை அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி ரூப உபாயங்களில் அஞ்ஞனாய் -அஸக்தனாய் -அகிஞ்சனனாய் -அபராத பூர்ணனானவன் –
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
கண்டு பற்றுகைக்கும்
இவன் கைம்முதல் பாராமைக்கும்
பற்றும் இடத்தில் இவன் தோஷத்தைக் குணமாகக் கொள்ளுகை
முதலானவற்றுக்கும் அபேக்ஷிதங்களான
ஸுலப்ய
வாத்ஸல்ய
அவாப்த ஸமஸ்த காமத்வாதி -குணங்கள்
பகவத் ஸ்வரூப திரோதாநகரியான இவ்விபூதியில்
இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஆஸ்ரயிக்கும் படி நிற்கையாலே
பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவை இவ்விடத்திலே விசேஷித்து பிரகாசிக்கும் என்கிறார் –

——————-

சூரணை -38-

பூர்த்தியையும் ஸ்வா தந்தர்யத்தையும் குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை-தான் ஆதரித்து நிற்கிற இடம் –

இப்படி இவ்விடத்தில் எல்லாக் குணங்களும் பரிபூர்ணமே யாகில்
அர்ச்சயஸ் ஸர்வ ஸஹிஷ்ணு -இத்யாதிப்படியே –
இச் சேதனன் கை பார்த்து இருக்கிற படி எங்கனே என்ன
ஆஸ்ரித அர்த்தமாக அக்குணங்களை அமைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்று
ஸுலப்ய காஷ்டையை ஸாதிக்கிறார் –

—————

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு எதிர்த்தட்டான நித்ய ஸூரிகள் பக்கல் ஆஸ்ரயண உப யோகியான இக்குணங்களுக்கு
விஷயம் இல்லாமையாலே பர அவஸ்தையில் பகல் விளக்குப் பட்டு இருக்கும்
அவற்றுக்கு விஷயமுள்ள இடத்திலே ப்ரகாசித்த வத்தனையான பின்பு அவை அன்றோ என்ன
பூதக ஜலம் போலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
பூதக ஜலம்-இத்யாதியாலே
எங்கும் ஜல ஸாம்யம் யுண்டே யாகிலும் -தடாக ஜலம் ஸர்வ கால -ஸர்வ அவஸ்தைகளிலும் -ஸர்வருக்கும் உபயோக யோக்யமாமோ பாதி
பரத்வாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இக்குணங்கள் ஏகீ பாவித்து இருந்ததே யாகிலும்
பர வ்யூஹங்கள் தேச விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அந்தர்யாமித்வம் அதீந்திரியாகார ஸ்வ பாவ விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
இவை நாலிலும் வைத்துக் கொண்டு அர்ச்சாவதார இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
ஸர்வதா சமாஸ்ரயணீயம் என்னும் இடத்தை
த்ருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்
அதிலே தேங்கின மடுக்கள் -என்றது
அர்ச்சா முகமாக ப்ராசுர்யேண உகந்து அருளுவது அவதார விக்ரஹங்கள் ஆகையாலே –

———

ஆனால் இவ்வர்ச்சா வவதாரம் ஆஸ்ரயித்து இருக்கிற சேதனனுக்குச் செய்யும் உபகாரம் தான் என் என்ன
செய்யும் உபகாரங்களை அருளிச் செய்கிறார் -இது தான் ஸாஸ்த்ரங்களால் -இத்யாதியால்

சூரணை -40-

இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

இது தான் –இப்படி ஸூலபமான அர்ச்சாவதாரம் தான்
அதீந்த்ர்ய அர்த்த ப்ரகாசகங்களான ஸாஸ்த்ரங்களாலும்
அஞ்ஞாத ஞாபந முகத்தாலே திருத்த அரிதாம் படி பகவத் வ்யதிரிக்தங்களான ஸப்தாதி விஷய அனுபவ அபி நிவேசம் பண்ணி
நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு வர்த்திக்கிற சேதனர்க்கு -தன் பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் -என்கிறபடியே
அவர்கள் வாசலிலே சென்றாகிலும் தன் வடிவழகை அனுபவிப்பித்து வை முக்கியத்தை பற்றி -பிரதம பாவியான ருசியை உண்டாக்கி
விஷய வை லக்ஷண்யத்தாலே யாதாவான ருசி பிறந்தால் தன்னைப் பெறுகைக்கு வேறே ஓன்று தேட வேண்டாதே
எடுத்தாப் போலே கோயிலாம் படியான தானே உபாயமாய் –
தன்னைப் பற்றின அநந்தரத்திலே சேஷ பூதனான இவனுக்கு போக்யமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித
கைங்கர்யத்தையும் கை மேலே பண்ணிக் கொடுக்கும் என்கிறார் –

ஆக
ப்ரபத்திக்கு தேச நியமம்-என்று தொடங்கி
பிரபத்தி வை லக்ஷண்யத்தையும்
பிரபத்தவ்ய விஷய வை லக்ஷண்யத்தையும்
ப்ரதிபாதித்தார் –

———-

சூரணை -41-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –

மேல் இந்த அர்ச்சாவதாரம் தன்னிலே ப்ரபத்தாக்களான அதிகாரிகள் த்ரி விதராய் இருப்பர்கள் என்கிறார் –
இது தன்னில் -இத்யாதியால்

———

சூரணை -42-

அஞ்ஞரும்–ஞானாதிகரும்-பக்தி பரவசரும் —

அவர்களுடைய த்ரை வித்யம் இருக்கும் படி எங்கனே என்னில் -அஞ்ஞரும் இத்யாதியால்
ஸம்ஸார ஆர்ணவ மக்நா நாம் விஷய அக்ராந்த சேதஸாம் -என்கிறபடியே
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலிலே விழுந்து நஷ்ட ஸர்வ சேஷ்டராய் -விவித விஷய க்ராஹகங்களால் வந்த
வ்யஸன பரம்பர அபி பூதராகையாலே இத்துக்க நிவ்ருத்தி அர்த்தமாக உபாயாந்தரங்களிலே இழிகைக்கு
ஒருபடியாலும் ஞான சக்திகள் இல்லாமையாலும்
விஷ்ணு போதம் அல்லது வேறு கத்தி இல்லை என்று ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியானவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயாந்தரங்களில் இழிகைக்கு யோக்யதை இல்லாத படியான அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூப யாதாத்ம்ய ஞானாதிக்யத்தால்
ப்ராப்த சேஷியான அவன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
இவ்விஷயத்தில் வடிவு அழகில் உண்டான வை லக்ஷண்ய அனுஸந்தா நத்தாலே ஈடுபட்டு
இதர உபாய அனுஷ்டானத்தில் இழியவும் கூட ஸக்தர் அல்லாத படி இட்ட கால் இட்ட கையராம் படி
பக்தி பரவசராய் இருக்கையாலே ஸகல பர ஸமர்ப்பணம் பண்ணுவாருமாய்
இப்படி இவர்கள் ராஸி த்ரய அந்தர் பூந்தராய் இருப்பார் என்கிறார் –

———-

சூரணை -43-

இவர்களுடைய த்ரை வித்யம் எங்கே காணலாம் என்னும் அபேக்ஷையிலே அருளிச் செய்கிறார்

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் அஸ்மதாதிகள்-

ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –

பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –

இனி அஸ்மதாதிகள் -என்றது
ப்ரபந்ந அதிகாரிகளிலே வேறே சிலரை ப்ரக்ருதி பாரவஸ்யத்தாலே அஞ்ஞராக அருளிச் செய்ய மாட்டாமையாலே
ஆதி -ஸப்தத்தாலே -இவ்வதிகாரி பாஹுல்யத்தை அருளிச் செய்கிறார் –
ஞான ஆதிக்யத்தாலே ப்ரபன்னரான ஆச்சார்யர்கள் என்றது
நாத யாமுனர் தொடக்கமானவர்களை
ஆழ்வார்கள் பக்தி பரவசர் என்னும் இடம் அவர்கள் பாசுரங்களாலே அறியலாம் –

———–

சூரணை -44-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —

இவ்வாகாரங்கள் ராஸி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரோ ஆகாரங்களே உள்ளது என்னும் படி அவற்றிலே ஊன்றிப் போருகையாலே

———–

சூரணை -45-

இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –

அசித் சம்பந்தம் அடியான அஞ்ஞானத்தாலும்
ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய வேதனத்தால் யுண்டான ஞான ஆதிக்யத்தாலும்
பகவத் விஷயத்தில் பக்தி பாரவஸ்யத்தாலும்
சரணம் புகுகையாலே மூன்று ராஸியும் கீழ்ச் சொன்ன தத்வ த்ரய ஞான நிபந்தமாய் வரும் என்கிறார் –

———

சூரணை -46-

என்னான் செய்கேன் -என்கிற இடத்தில்  இம் மூன்றும் உண்டு –

இத்தால் பரமாச்சார்யாருடைய பாசுரத்தாலே இம்மூன்று அதிகாரிகளுடைய நினைவு பிரகாசிக்கும் என்கிறார் –

———

சூரணை -47-

அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் –

சூரணை -48-

முக்கியம் அதுவே –

அவ்வாழ்வாருடைய திரு உள்ளத்தால் பர பக்தி பாரவஸ் யத்தால் வந்த ப்ரபத்தியேயாய் இருக்கும் –
பகவத் வை லக்ஷண்யம் அடியாக வந்தது ஆகையால் முக்யமும் அதுவே என்கிறார் –

———

சூரணை -49-

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –

அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம்

அவிதுஷாம்-கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே  சகலு பகவான் ஸௌ நகமுனி –

த்ரை வித்ய பேதத்துக்குப் பிரமாணம்
இதில் தேவ என்கிறது பக்தி விஷயமாக

————

சூரணை -50-

இதம் சரணம் அஜ்ஞானாம் –

இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம்–ஸ்ரீ லஷ்மி தந்த்ர ஸ்லோகம் -100-

பாரம் திதீர்ஷதாம்-என்கிறது மூவருக்கும் ஒக்கும்

———

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே-இது தான் குலையக் கடவதாய் இருக்கும் –

இதில் பக்தி பாரவஸ் யத்தாலே ப்ரபன்னரானவர்களுக்கு -அதனுடைய பாக விசேஷத்தாலே வந்த அவஸ்த்தா பேதங்களாலே
ஸ்வரூப ஹானியான ப்ரவ்ருத்தியிலே மூட்ட -இந்த பிரபத்தி விஸ்வாசம் குலையக் கடவதாய் இருக்கும் என்று
அவ்வதிகாரிகளான ஆழ்வார்களுடைய அனுஷ்டானங்கள் விஷய வைலக்ஷண்ய அதீனமாய் வருகையாலே
ஸ்வரூப ஹானி அன்று என்று பரிஹரிக்கிறார் –

———-

சூரணை -52-

தன்னைப் பேணவும் பண்ணும் –தரிக்கவும் பண்ணும் –

சூரணை -53-

இந்த ஸ்வபாவ விசேஷங்கள்-கல்யாண குணங்களிலும்-திரு சரங்களிலும்-

திரு நாமங்களிலும்-திரு குழல் ஓசையிலும்-காணலாம்-

அவ் விஷய வைலக்ஷண்யம் ஆழ்வார்களை ஒருபடிப் பட்டு இருக்க ஒட்டாமை –
அவ்விஷய அனுபந்திகளானவற்றின் பக்கலிலும் காணலாம் என்கிறது
பக்தி பாரவஸ் யத்தாலே -பந்தோடு கழல் மருவாள் -இத்யாதியில் படியே தன்னைப் பேணாமையும்
இட்ட கால் இட்ட கைகள் -இத்யாதிப்படியே தறியாமையும் யுடையராய் இருப்பாரை
அவன் வரவைக் குறித்து ஸ்வயமேவ -காரை பூணும் -இத்யாதில் படியே தந்தாமை அலங்கரித்துப் போரவும்
அத்தசையிலே அவன் வரக்கொள்ள அவ்வரவு தானே அநிஷ்டமாய்
போகு நம்பீ –
கழகமேறேல் நம்பீ -இத்யாதில் படியே தள்ளித் தரித்து இருக்கவும் பண்ணும் அவஸ்த்தா விசேஷங்களைப் பிறப்பிக்கிற
ஸ்வ பாவ விசேஷங்கள் -வல்வினையேனை ஏற்கின்ற குணங்களை உடையாய் -என்றும்
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -என்றும் இத்யாதிகளாலே
கல்யாண குணங்களிலும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே -என்றும்
சரங்களே கொடிதாய் அடுகின்ற -என்றும் இத்யாதிகளாலே
திருச்சரங்களிலும்
திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -என்றும்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று இத்யாதிகளாலே
திரு நாமங்களிலும்
அவனுடைய தீம் குழல் ஈரும் -என்றும்
ஆ கள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -என்றும்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழல் இன்னிசை போதராயே -என்றும் இத்யாதியாலே
திருக் குழல் ஓசையிலும் தோற்றும் என்கிறார் –

————

சூரணை -54-

இது தன்னை பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால்-பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் )
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே-இருப்பது ஓன்று –

இப்படி பக்தி பாரவஸ்ய ப்ரபத்தியில் வரும் ஸம்சய நிவ்ருத்தியைப் பண்ணி -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி
உக்தையான ப்ரபத்தியினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி –
நிரூபாதிக சேஷ வஸ்துவினுடைய ஸ்வரூப அனுரூபமான இந்த பிரபத்தி தன்னை உபாயம் என்னப் பார்த்தால் என்று தொடங்கி
பிதாவுக்கு -இத்யாதியாலே -நிஷேகாதி முகத்தாலே தன்னை உண்டாக்கின ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து
புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே உபய ஸம்பந்த விருத்தம் என்கிறார் –

————–

சூரணை -55-

இது தனக்கு ஸ்வரூபம்-தன்னைப் பொறாது-ஒழிகை –

ஆனால் இது தனக்கு வேஷம் எது என்னச் சொல்கிறது மேல் -இது தனக்கு -இத்யாதி
இப்பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபம் தன்னை உபாயம் என்னப் பெறாது ஒழிகை

————-

சூரணை -56-

அங்கம் தன்னை-ஒழிந்தவற்றை-பொறாது ஒழிகை –(சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –)

இப் பிரபத்திக்கு அங்கம் தன்னை ஒழிந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமானவை ஒன்றையும் ஸஹியாது ஒழிகை

———-

சூரணை -57-

உபாயம் தன்னை பொறுக்கும்-

சூரணை-58-

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –

(இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –

அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –)

ஆனால் தன்னை யுபாயம் என்னப் பொறுக்கும் இந்த ஸித்த உபாய வ்யதிரிக்தமான உபயாந்தரம் தன்னை உபாயம் என்னவும் பொறுக்கும்
தனக்கு அவிநா பூதமாகையாலே ப்ரவ்ருத்தி ஸ்வரூபமான அம்சத்தையும் பொறுக்கும் –

——–

சூரணை -59-

இது இரண்டையும் பொறாது-

இந்த பிரபத்தி
உபாயத்வத்தையும்
சேதன க்ரியாதிகள் அங்கம் ஆகுகையும்
பொறாது என்கிறார் –

———–

சூரணை -60-

பலத்துக்கு ஆத்ம ஞானமும்-அப்ரதிஷேதமுமே-வேண்டுவது –

ஆனால் பல ஸித்தி உண்டாம்படி எங்கனே என்ன -பலத்துக்கு என்று தொடங்கிச் சொல்லுகிறது
அவ ரஷணே -என்கிற தாத்வர்த்த ஸித்தமான தத் ஏக ரஷ்யத்வ ரூப ஆத்ம ஞானமும்
ரக்ஷகனுடைய ஸ்வீ கார விஷய பூதனான தன் விலக்காமையுமே
பொறுக்க அபேக்ஷிதம் என்கிறார் –

————

சூரணை-61-

அல்லாத போது-பந்தத்துக்கும்-பூர்த்திக்கும்-கொத்தையாம் –

இனி அல்லாத போது -என்றது -அநாதி காலம் அஹம் கர்த்தா -அஹம் போக்தா -என்று போந்த இத்தனையிலும் சில உண்டாக வேண்டாவோ என்ற போது
பந்தத்துக்கும் இத்யாதி
ததேக சேஷமாய்த் ததேக ரஷ்யமான பந்தத்துக்கும்
அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வ ரூபமான பூர்த்திக்கும்
மாலின்யமாம் –

———

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –அத்தை விளைத்து கொள்ளாது-ஒழிகையே வேண்டுவது –

ஆகையால் -ஆபத்தை -என்று தொடங்கி -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அபூரணனான தான்
மம மாயா துரத்யயா -என்கிற அவித்யா ஸம்பந்த ரூபமான ஆபன் நிவ்ருத்திக்கு ஆயாஸிக்க வேணும் என்று ப்ரமித்து
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா -என்கிறபடியே
அவ்வாபத்தை சத சாகமாகப் பணைப்பித்துக் கொள்ளாது ஒழிகையே இவனுக்குக் கர்தவ்யம் என்கிறார் –

—————-

சூரணை -63-

ரஷணத்துக்கு அபேஷிதம்-ரஷ்யத்வ அனுமதியே –

ஆனால் நித்ய ஸம்ஸாரியான இவனை ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வராதபடி ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ரக்ஷிக்கும் படி எங்கனே என்னில்
ரக்ஷணத்துக்கு இத்யாதி
ரஷ்ய அபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிற இவனுக்கு ரக்ஷண தர்மத்துக்கு வேண்டுவது
ஸ்வரூப பத ரஷ்ய மாத்ரமான இவனுடைய –
வைத்தேன் மதியால் -என்கிற அனுமதி மாத்திரமே அபேக்ஷிதம் -என்கை –

————

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூப வ்யதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —

ஆனால் இப்படி இத்தசையில் இசைவை அபேக்ஷித்து இருந்து ரக்ஷிக்கும் இடத்தில் அவ்வனுமதிதான் சாதனம் ஆகாதோ என்னில்
ஆகாது என்னும் இடத்தைப் பல யுக்திகளாலே அருளிச் செய்கிறார் -எல்லா உபாயத்துக்கும் -என்று தொடங்கி
ஜ்யோதிஷ்டோமாதிகளை அனுஷ்டி என்றால் -அப்படிச் செய்கிறோம் என்ற அனுமதி மாத்ரத்தால் அவற்றை அனுஷ்ட்டித்தான் ஆகாமையாலும்
இம்மாத்திரத்தாலே சேதனனான ஆகாரம் தெரிவிக்கின்ற இத்தனையே யாகையாலும்
அவன் ஏவி அடிமை கொள்ளும் இடத்தில் இவ்வனுமதி பல வேளையிலும் அனுவர்த்திக்கையாலும்
அத ஏவ விருத்தம் இல்லாமையாலும்
சைதன்ய ஆதாரமான அசித் வியாவ்ருத்தி மாத்ரமாய்
அதிகாரி விசேஷணமான இவன் அனுமதியை உபாயமாக்க ஒரு வழி இல்லை என்கிறார்
அசாதாரணமான ஸ்த்ரீயை அபிமதனானவன் ஸ்தந போஷண அத்யவஸர ப்ரதீஷனாய் அனுபவித்தால் அவள் அவ்வனுபவத்துக்கு சாதன அனுஷ்டானம் பண்ணினாள் ஆகாள் இறே –

————

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்-உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்-உபேயத்தில் உகப்பும் –

இந்த அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஸாதனமே யல்ல வாகில் இது எதுக்கு பிரயோஜனம் என்ன
உபாய தசையில் அவன் பண்ணின உபகாரத்தில் -உனக்கு என் செய்கேன் -என்கிற உபகார ஸ்ம்ருதியும்
உபேய தசையில் எதிர் விழியால் உண்டான உகப்புக்கும் உறுப்பு -என்கிறார் –

————-

சூரணை-66-

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே-பிராப்திக்கு உபாயம்-அவன் நினைவு —

இப்படி அத்தலையால் வந்த நினைவே உபாயம் என்கைக்கு ஆப்த வசனத்தை எடுக்கிறார் –
உன் மனத்தால் -இத்யாதியாலே –

———–

சூரணை -67-

அது தான் எப்போதும் உண்டு –

ஸர்வஞ்ஞனாய் -காருணிகனான அவன் நினைவு காதாசித்கம் ஆகிறது என்
அது நித்யமானால் ஆகாதோ என்ன
அது தான் எப்போதும் உண்டு -என்கிறார் –

————–

சூரணை -68-

அது பலிப்பது-இவன் நினைவு மாறினால் –

ஆனால் அது ஸர்வதா பலம் ஆகாது ஒழிகிறது என் என்ன -அது பழிப்பது இத்யாதி
ஸர்வஜ்ஜோபி ப்ரதீக்ஷதே -என்கிறபடியே நான் எனக்கு உரியேன் என்கிற இவன்
கை வாங்கும் அளவை கடாக்ஷித்து அருளுகையாலே என்கிறார் –

———

சூரணை -69-

அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இதுக்கு உதாஹரணம் -அந்திம -காலத்துக்கு இத்யாதி -அதாவது
நஞ்சீயர் ஒரு ஸ்ரீ வைஷ்ணவருடைய அந்திம தசையிலே அறிய வேணும் என்று எழுந்து அருள
அவர் -இப்போது எனக்குத் தஞ்சமாக ஓன்று அருளிச் செய்ய வேணும் -என்ன
வாரீர் இப்போது உமக்குத் தனிபாம் தேட இருந்தீர்
இத்தலையில் தங்கம் என் என்கிற நினைவு குளிகை தானே காணும் தஞ்சம்
ஆனபின்பு ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் நிர் அந்வயராய் நிர்ப் பயராய் இருக்காய் காணும் உமக்கு
ஸ்வரூப அனுரூபமான தஞ்சைமாவது -என்று அருளிச் செய்தார் –

————-

சூரணை -70-

பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

ஆக
இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பெறாது ஒழிகை -என்று தொடங்கி
இவனுடைய ஸ்வீ காரம் உபாயம் ஆகாது -ஸ்வரூபமாம் அத்தனை என்னும் இடத்தை இவ்வளவும் உப பாதித்து
இங்கே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை ச ப்ரகாரமாக சோதிக்கிறார்
ப்ராப்தாவும் என்று தொடங்கி –
இப்படி ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் அந்வயம் இல்லாத படி இவனுடைய ஸ்வரூப சித்த்யதிகள் அவன் அதீனம் ஆகையாலே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து -என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
நிர்ஹேதுகமாக இத் தலையை வந்து பிராபிக்கக் கடவானும்
நயாமி -என்கிறபடியே இவனுக்குப் ப்ராபகனும்
இவனைப் ப்ராபித்தால் உகப்பானும் அவனே என்று உபபாதிக்கிறார் –

————–

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

இப்படி எல்லாமே அவனே என்கைக்குத் தான் நிபந்தநம் என் என்னில்
ஸர்வதா ஸ்வ ஸ்வா தந்தர்ய ராஹித்யமே ஸ்வரூபமாம் படி-பாரதந்தர்ய சேஷத்வங்கள் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப தர்மங்களாய்க் கொண்டு பலிக்கையாலே -என்கிறார் மேல்
இவை பலிக்கிற படி தான் எங்கனே என்னில் -ஸ்வ யத்ன நிவ்ருத்தி -இத்யாதி
அசித்வத் உண்டான அத்யந்த பாரதந்தர்யத்தாலே ஸ்வ யத்ன நிவ்ருத்தி உண்டாகையாலும்
பரகத அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி உண்டாகையாளுண்ம் அவை இரண்டும் பலித்தது என்கிறார் –

———-

சூரணை -72-

பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

இவ்வோபாதி ஞான சிகீர்ஷா ப்ரயத்னங்களும் ஆத்ம தர்மம் அன்றோ -அவற்றுக்குப் பிரயோஜனம் என் என்ன -பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி என்று தொடங்கி –
பிரதானமான சேஷத்வ பாரதந்தர்யங்களுக்கு சேஷமாய்க் கொண்டு இவை அவற்றை ச ப்ரயோஜனமாக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
பாரதந்தர்யத்தாலே பலித்த ஸ்வ யத்ன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான கர்த்ருத்வம் அடியாக வந்த ப்ரயத்னம் ஆகையாலே
அந்த பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி ரூபமான பலமன் அந்த ப்ரயத்னத்தால் என்றும்
தத் விஷய ப்ரீதியாலே பர அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே பலித்த ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான ஞாத்ருத்வத்துக்குப் பலம்
அன்ன மதந்த மத்மி-என்றும்
பவள வாய் காண்பேனே -என்றும் சொல்லுகிறபடியே
இத்தலையில் பிரவிருத்தி கண்டு விக்ருதமான பகவத் விஷயத்தினுடைய ப்ரீதிக்கு எதிர் விழி கொடுக்கையால் வந்த ப்ரீதி என்றும் அருளிச் செய்கிறார்
அந்த ப்ரீதி தானே இறே இவனுக்கு அதந்தமத்மி -என்கிற நிலை நின்ற போக்த்ருத்வமாவது –

—————–

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

ஆனால் சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களும் ஆத்ம தர்மங்களாய் இருக்க
சேஷத்வ பாரதந்தர்யங்களை ப்ரதானம் ஆக்கி ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களை அவற்றுக்கு சேஷமாக்குகைக்கு நியாமகம் ஏது –
மற்றைப்படி யானாலாகாதோ என்ன -அது சேராது என்னும் இடத்தை -ஞான ஆனந்தங்கள் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ்வாத்மாவுக்கு பஹிரங்கமான அசித் வ்யாவ்ருத்தி ரூபமான ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும் படி அந்தரங்கமான ஈஸ்வர வ்யாவ்ருத்தி ரூபமான தாஸ்யம் அந்தரங்கமாகையாலே தத் தர்மங்களையும் தத் அனுரூபமாகக் கொள்ள வேணும் இறே என்கிறார்
அந்தரங்க பஹி ரங்க யோர் அந்தரங்கம் பலீய-என்னக் கடவது இறே –

————–

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்–அந்ய சேஷத்வமும்-வந்தேறி-

முன்பு அஹமிதமபி வேத்மி -என்று ஞான ஆனந்த ரூபமான அஹம் அர்த்தமும் தத் தர்மங்களுமான ஞான ஆனந்தங்களும் அன்றோ ப்ரகாசித்துப் போந்தது
இப்போது அன்றோ தாஸ்யாதிகள் ப்ரகாசிக்கிறது -ஆகையால் இது வந்தேறி யன்றோ என்ன
ஆகந்துக விரோதியான அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே அபி பூதமாய்க் கிடந்த வித்தனை –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யம் ஸ்வதஸ் ஸித்தம் இறே -என்கிறார் -இது தான் வந்தேறி அன்று -என்று தொடக்கி –

——————

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இதில் சேஷத்வ விரோதி -இத்யாதியாலே சாமான்யேன சேஷத்வத்துக்கு விரோதி தனக்குத் தான் கடவன் என்கை –
விசேஷித்து பகவச் சேஷத்வத்துக்கு விரோதி இதர சேஷமாகை என்கிறார் –

——————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

அஹங்காரம் -இத்யாதி -இப்படி ஸ்வரூபத்துக்கு வந்தேறியான அழுக்கு அறுத்தால் –
யஸ்யாஸ்மி –
பரவாநஸ்மி –இத்யாதிகளாலே சொல்லப்படுகிற
தாஸ்ய விஸிஷ்டமான ஆத்மாவுக்கு வாஸ்தவமான நாமம் அடியான் இறே என்கிறார்-

———-

சூரணை -78-

க்ராம குலாதிகளால்-வரும் பேர்-அநர்த்த ஹேது –

க்ராம குலாதிகளால் -இத்யாதி -கீழ் இப்படி உக்த ஸ்வரூபமான னவனுக்கு
கோயிலிலே வாழும் வைட்டணவன் -என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி -இத்யாதியாலும் வருகிற நிர்த்தேசம் ஒழிந்து
அல்லாத ஒவ்பாதிக குல சரண கோத்ராதிகளாலே வருமது ஸ்வரூப ஹானி என்று அதுக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார் –

———

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -என்று

———-

சூரணை -80-

உபாயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
பிராட்டியையும்
திரௌபதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —

உபேயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —

ஆக இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை -என்ற பாசுரத்திலே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை இவ்வளவாக
பாரங்கதமாக்கி -அப்பாசுரத்தால் பலித்த ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூபமான உபாய உபேயங்களிலே நிஷ்டரான அதிகாரிகளை
இப்ப்ரபந்ந அதிகாரிக்கு த்ருஷ்டாந்தமாக வெளியிடுகிறார் -உபாயத்தில் -என்று தொடங்கி -எங்கனே என்னில் –
உபாய அத்யவசாயத்தில் நெருப்பை நீராக்க வல்ல பிராட்டி ஸ்வ ரக்ஷணத்தில் இழியாதே
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று இருந்தால் போலேயும்
ஸ்த்ரீத்வத்துக்குப் படி எடுக்க வேண்டும்படியான திரௌபதி அம் மஹா சதஸ்ஸிலே பிறந்த பரிபவத்தில் உரிக்கிற துகிலை வாஸனையாலே தானும் ஒரு கை பற்றாது ஒழிந்தால் போலேயும்
திருக்கண்ண மங்கை யாண்டான் பத்தராவி திருவடிகளிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி அவர் கைப்புடையிலே கண் வளர்ந்தால் போலேயும்
இவ்வதிகாரியும் இருக்க வேணும் என்கிறார் –

ஆனால் உபேய அதிகாரிகள் இருக்கும் படி எங்கனே என்கிற சங்கையிலே சொல்லுகிறது -உபேயத்தில் -என்று தொடங்கி –
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ் -என்றும்
குருஷ்வ மாம் அநு சரன் -என்றும்
பெருமாளைப் பிரியில் தரியாதே பின் சென்று
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று ஸர்வவித கைங்கர்யங்களையும் அதிகரித்து
அது தன்னிலும்
ஸ்வயம் து ருசிரே தேசே -இத்யாதியாலே அவனுக்கு உகந்த அடிமையிலே அதிகரித்த இளைய பெருமாளைப் போலேயும்
ஆஸ்ரயண வேளையிலும் புருஷீ கரித்து -அடிமை செய்வார் திருமாலுக்கே -என்கிறபடி
அடிமை கொள்ளுகைக்கு முற்பாடையான பிராட்டி விஷயமாகத் தம்மை அழிய மாறி அடிமை செய்த ஜடாயு மஹா ராஜரையும்
திரு நாராயண புரத்தில் வேத நாராயணர் விஷயமாக அக்னி பயத்தால் வந்த அபாயத்தில் அந்த பகவத் ஸுகுமார்ய அநுஸந்தானத்தாலே
ஸ குடும்பராக விதக்தராம் படி ஸாஹஸ ப்ரவ்ருத்தி பண்ணின திரு நறையூர் அரையரையும்
தத் சித்த விமலாஹ்லாத -இத்யாதிப்படியே
தான் யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே முடிந்த சிந்தையந்தியைப் போலேயும் இருக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -81-

பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –

சூரணை -82-

பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –

இனி உக்தரான உபாய அதிகாரிகள் தம்தாமுக்கு உள்ள கைம்முதல்களைக் கழித்து விடக் காண்கையாலே
உபாய தசையில் இவ்வதிகாரியும் தம் கைம்முதலாய் உள்ளவற்றைக் கழிக்கக் கடவன்
என்னும் இடத்தை -பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –

—————

சூரணை-83-

பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –

சூரணை -84-
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –

இனி பசியராய் இருப்பார் -என்று தொடங்கி
உடம்பு தன்னடையே போயிற்று -என்னும் அளவும்
அவ்வுபேய அதிகாரிகளுடைய அனுஷ்டானத்தை விசதமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –

————-

சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —

உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும்-

உபாயத்துக்கு இத்யாதியாலே
இப்படி இவ்வ்வநுஷ்டானங்களில் சிஷ்டாசாரம் யுண்டாகையாலே கீழே ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்திகளிலே ப்ரஸ்துதரான
இவ்விரண்டு அதிகாரிகளுக்கும் அவை அநுஷ்டேயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்
தறியாமையும் வேணும் என்னும் அளவும் –

——————

சூரணை-86-

இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –

ஆனால் பெரிய யுடையாருக்கு -அவ்யவஸ்தித்வ ஹி த்ருஸ்யதே யுத்தே ஐயபராஜயவ் -என்று
யுத்தத்தில் வெற்றி தோல்விகள் வ்யவஸ்திதங்கள் இல்லாமையாலும்
சிந்தயந்திக்கு அனுபவ அலாபத்தாலே ஸ்வயமேவ சரீரம் விடுகையாலும்
முடிகை பிராப்தம்
உத்தம வர்ணரான திரு நறையூர் அரையர் ஒன்றையும் பாராதே ஸ்வயமேவ ஆத்ம பாதகராய்க் கொண்டு செய்த அதி ஸாஹஸ ப்ரவ்ருத்தி
ஸாஸ்த்ரங்களுக்கும் ஸ்வரூபத்துக்கும் சேராது இறே என்ன
இவனுக்கு வைதமாய் வரும்து இறே -என்று தொடங்கி அது சேரும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது
விதமாய் வரும்து என்றது -சில பலாந்தரங்களை உத்தேசித்து
ப்ராஹ்மணார்த்தே கவார்த்தே வா ஸம்யக் ப்ராணன் பரித்யஜேத் -இத்யாதி
விதி பரதந்த்ரமாய் வரும் வியாபாரங்கள் இறே இவ்வதிகாரிக்கு விடலாவது
விஷய வை லக்ஷண்யத்தாலே ராக ப்ரேரிதமாய்க் கொண்டு தானே வருமத்தைத் தள்ள ஒண்ணாது இறே –

——————–

சூரணை -87-
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் -என்றது
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான அவ்வனுஷ்டானத்தில் உபாயத்வ புத்தி யுண்டாய்த்தாகில்
அது ஸ்வரூப ஹானி யாகையாலே தானே இத்தை நிவர்த்திப்பிக்கும் -என்னுதல்
அன்றிக்கே
இவ்விஷயம் தன்னை உபாயமாக அனுசந்திக்கில் -அது ஸித்த உபாயமாகையாலே தானே நிவர்த்திப்பிக்கும் என்னுதல்
இனி உபேயத்வ அனுசந்தானம் ப்ரவர்த்தகம் -என்றது –
இவ்விரண்டும் இன்றிக்கே உபேய வை லக்ஷண்ய அனுசந்தானம் தானே ப்ரவர்த்திப்பித்தது என்கிறார் –

————-

சூரணை-88-

அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய ப்ரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –

உபேயம் என்ன ஸாஸ்த்ர விருத்தங்களான ஏவம் வித ப்ரவ்ருத்தியிலே இவர் ப்ரவர்த்திக்கலாமோ என்ன
அப்ராப்த விஷயங்கள் -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார்
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சிஷ்ட கர்ஹிதமாய்
ஜூகுப்ஸா விஷயங்களுமாய்
உதர்க்கத்தில் நரகாவஹமான விஷயங்களிலே அபி நிவிஷ்டமானவனும் தன்னை அழிய மாறியும் அத்தைப் பெற வேணும் என்று இரா நின்றால்
எல்லா வழியால் அதற்கு எதிர்த்தட்டாய் ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்ட இவருக்கு இப்படிப் படச் சொல்ல வேணுமோ என்கிறார் –

————

சூரணை -89-

அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய  கோடியில் அன்வயியாது —

ப்ரயோஜன மநுத்திஸ்யா ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்கையாலே
இது உபாயமாய் ஸம்பவிக்கிலோ என்னில் -அனுஷ்டானமும் -இத்யாதி
கீழ்ச் சொன்ன உபாய அதிகாரி லக்ஷண தயா வந்த அனுஷ்டானங்கள் உபாயத்தில் அந்வயியாதவோ பாதி
இவருடைய இந்த அனுஷ்டானமும் உபாயத்தில் அந்வயியாது
அங்கன் அன்றாகில் இது தான் உபேய அதிகாரிகள் எல்லாருக்கும் அநுஷ்டேயமாம் இறே –

——————

சூரணை -90-

அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –

இவர் அநித்யமான சரீரத்தை அழிய மாறின இதுக்குப் படுகிறதோ
நித்தியமான ஆத்ம வஸ்துவும் அஸத் சமமாம் படி அத்யந்த விலக்ஷணரானவர்களும் விஷய வைலக்ஷண்யத்தாலே அநந்ய உபாயத்வாதிகள் குலைந்து
அலமாவா நிற்க என்று அவ்வனுஷ்டானத்தில் ப்ரஸித்தியைப் பிரகாசிப்பிக்கிறார் -அநந்ய உபாயத்வமும் -என்று தொடங்கி
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
மற்றை நம் காமன்கள் மாற்றும் -என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும்
அநந்ய உபாயதவாதிகள் யுடைய பிராட்டி
வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு -நோற்கின்றேன் காம தேவா -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பான் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன் –இத்யாதியாலே
அவை குலையும்படியான ப்ரவ்ருத்திகளிலே ப்ரவர்த்திக்கையாலும்
அல்லாத ஆழ்வார்களும்
நோற்ற நோன்பு -என்று தொடங்கி அடுத்ததுசுத்து பிரபத்தி பண்ணுகையாலும்
மடல் எடுக்கையாலும்
ஓதி நாமம் குளித்து -இத்யாதியாலே உபாயாந்தரங்களிலே இழிய நினைக்கையாலும்
இவ்வநுஷ்டானம் ப்ரத்யக்ஷம் இறே -என்கிறார் –

————-

சூரணை -91-

ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–

ஆனால் அவர்கள் செயல் தானும் அஞ்ஞான கார்யமாய் இருந்ததே என்ன -அத்தைப் பரிஹரிக்கிறார் ஞான விபாக கார்யம் -இத்யாதி
பகவத் வை லக்ஷண்ய ஞானத்தினுடைய பரிபாக தசையிலே உண்டாமதான பக்தி பாரவஸ் யத்தாலே முன்னாடி தோற்றாதே
இப்படிப்படும் அலமாப்புக் கண்டு அங்கு அதிசயித புருஷார்த்த அந்வயியாய் விடும் என்கிறார்
அடிக்கழஞ்சு பெறுகை யாவது
அதில் அந்வயித்த அம்சம் பல ரூபமாய் இருக்கையாலே அத் யுத்தமம் என்கை-

————–

சூரணை -92-

உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –

உபாய பலமாய் –இத்யாதியால் –
இத்தலையில் ஸ்வீ காரமும் பொறாத சுணை யுடைய உபாயத்துக்கும் இந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூப வியாபாரங்கள் விலக்காகாவோ என்ன
அந்த உபாய ஸ்வீ கார அநந்தரம் பெரும் பேறு அன்றோ என்னுதல்
அன்றிக்கே
உபாய பூதனுடைய அநாதி கால கிருஷி பலமாய் அபி நிவேச அதிசயத்தாலே உபாயாந்தரங்களிலும் ப்ரவ்ருத்திக்கும் படியான
இவனுடைய துடிப்பைக் கண்டு அவனுக்குப் பிறக்கும் முகோலாசம் ப்ராப்ய அந்தர் கதமாகையாலே ஸித்த உபாயத்துக்கு அவை விலக்கு ஆகாது என்கிறார் –

————-

சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —

இந்த ப்ரேம அதிசயத்தால் வந்த கலக்கம் விலக்கு ஆகாது என்னும் இடத்தை விசதம் ஆக்குகிறார் -ஸாத்ய ஸமாநம் -என்று தொடங்கி -அதாவது
ஸர்வதா இவ்வுபாயம் தான் புருஷகார குண விக்ரஹங்களால் பூர்ணமாய்க் கொண்டே இருக்கையாலே
ஸர்வதா ஸாத்யத்தோடே ஒக்கும் என்றும்
ஸித்தமுமாய் ஸர்வ சக்தித்வாதிகளோடே கூடி இருக்கையாலே
ப்ரேமாந்த்யத்தாலே இப்படிப் பதறும்படி விளம்பத்தைப் பொறாது என்றும் அன்றோ இதர உபாயங்களை பற்ற இவ்வுபாயத்துக்கு ஆதிக்யம்
ஸாத்ய ப்ராவண்யம் –இத்யாதி -இப்படிப்பட்ட ப்ராப்யத்தில் த்வராதிசயத்தாலே இறே ப்ரதமத்திலே தான் இந்த ப்ராபகத்தை ஸ்வீ கரிக்கிறது
ஆகையால் விஷய வை லக்ஷண்ய அதீனமாய் வந்த அதி ப்ரவ்ருத்தி உபாய விரோதி யாகாது
ஸ்வரூப அனுரூபமாம் இத்தனை என்று திரு நறையூர் அறையருடைய அதி ப்ரவ்ருத்தியில் சங்கையை இவ்வளவாகப் பரிஹாரம் பண்ணி நின்றது –

———–

சூரணை-94-

இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –

மேல் -இவனுக்குப் பிறக்கும் -என்று தொடங்கி -இப்படி இந்த ப்ராவண்யம் பல வேளையிலே யாராது உபகாரகமாகை அன்றிக்கே
தன்னுடைய உத்பத்தியிலே ஸந்நிபத்ய உபகாரகங்களான ஆத்ம குணங்களுக்கு மூலமும் தானே யன்றோ என்கிறது –

————-

சூரணை -95-

மால் பால் மனம்  சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –

அது எங்கனே என்னில் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்றும்
பரமாத்மநி யோ ரக்த விரக்தோ அபரமாத்மநி -என்றும்
கண்டு கேட்டு -என்று தொடங்கி -கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்றும்
இப்படி விலக்ஷண விஷய தர்சனத்தாலே முதலில் ஐஸ்வர்ய கைவல்யங்களில் நசையற்று என்கையாலும் -என்கிறார் –

——————-

சூரணை -96-

ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –

ஆத்ம குணங்களில் -இத்யாதி -சமமாவது -பர தாராதிகளில் போகாத படி இந்திரியங்களை நியமிக்கை
தமமாவது -உபஸமநம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –

——————-

சூரணை -97-

இந்த இரண்டும்  உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —

இவை இரண்டும் உண்டானால் என்று தொடங்கி -இவன் சம தம உபேதனானவாறே ஸதாசார்ய ஸ்வீ காரம் உண்டாகும்
அவ்வங்கீ கார்த்தாலே ருஷோ யஜும் ஷி -இத்யாதில் படியே
ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமான திருமந்திரம் ஸித்திக்கும்
இது ஸித்தித்தவாறே ஸகல வேத வேத்யமான ஸர்வேஸ்வரன் சந்நிஹிதனாம்
அவன் சந்நிஹிதனானவாறே அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷம் அதி ஸூலபமாம் -என்கிறார் –

————–

சூரணை -98-

பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –

இனி ப்ராப்ய லாபம் என்று தொடங்கி -ஸிம்ஹ அவ லோகந ந்யாயத்தாலே யுக்த அர்த்தத்தை ஸ்த்திரீ கரிக்கிறாதல்
நிஸ் ரேணிகா ந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு இவற்றினுடைய ஸ்வரூப ஸித்தி உண்டாம் என்கிறார் ஆதல்
மீள ஆச்சார்ய லாபம் என்கிறது ஸ்வரூப ஞான பிரதர் என்றும் சொல்லுவார் –

——–

சூரணை -99-

இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —

சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –

இப்படிப் பகவத் ப்ராவண்யம் மூலமாக வந்த ஆத்ம குணங்களால் வரும் பல பரம்பரைகளைச் சொல்லுகிறது
ப்ரபந்ந அதிகாரிக்கு விஷய விரக்தியில் ஊற்றம் சொல்லுகைக்காக –
இவ்விஷயத்தில் ஒரோ வகைகளாலே உபாதேய புத்தி பண்ணி இருக்கிற ஐஸ்வர்ய காமனையும் உபாசகரையும் எடுக்கிறார் -இது தான் -என்று தொடங்கி
இது தான் என்றது இவ்வாத்ம குணம் தான் என்றபடி
ஐஸ்வர்ய காமருக்கும் -இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரி புவனம் த்வயா -என்கையாலே
இந்திரிய ஜய அர்த்தமாக பர தாராதிகள் நிஷித்தங்கள்
ஸ்வ தாராதிகள் ப்ராப்ய தயா உபாதேயங்கள்
உபாஸகனுக்கு சாந்தோ தாந்த -இத்யாதிகளில் படியே உபாஸன விரோதித்வேந பர தாராதிகள் பரித்யாஜ்யங்கள்
ஸ்வ தாராதிகள் ஸஹ தர்ம சாரிணீத்வேந உபாதேயங்கள்
ப்ரபன்னனுக்கு பகவத் அனுபவ விரோதித்வேந உபாயமும் பரித்யஜ்யம் –

———

சூரணை -101-

மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்  ஏற்றம் –

இனி பிரபன்னனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் என்கிறது -ஸ்வ தாராதிகள் மற்றை இருவருக்கும் உபேய தயாவும் உபாய தயாவும் உபாதேயங்கள் ஆகையாலும்
ஏகாந்தீ து வினிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை -பஃத்யுபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ண ஏக சாதன -என்கிறபடியே
இவன் ததேக போகனுமாய் ததேக உபாயனுமாகையாலே இவனுக்கு ஸ்வ தாரதாதிகளையும் விடுகை அவர்களைப் பற்ற ஆதிக்யம் -என்றபடி –

—————-

சூரணை -102-

இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –

இது தான் இத்யாதி –இந்த இதர விஷய விரக்தி ப்ரபன்னனுக்குப் பிறக்கும்படி தான் எங்கனே என்னில்
கீழே அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகளை -இவ்விடத்தில் அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார்
பக்தி பாரவஸ்ய ப்ரபன்னர்க்கு விஷய வை லக்ஷண்யத்தாலும்
ஞாணாதிக்ய ப்ரபன்னர்க்கு நிர்ஹேதுக கிருபையாலும் பிறக்கும்
சிலருக்கு ஆசாரத்தாலே என்றது
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா -என்கிற பகவத் ஆஜ்ஞ அதி லங்கனத்தாலே வந்த தண்ட தரத்வம் அடியாக வருகிற ஆசாரத்தாலே யாதல்
ராமாவதாராதிகளில் அவருடைய ஆசாரம் அஸ்மத்தாதிகளைக் குறித்து அன்றோ என்னுதல்
எம்பார் முதலான ஆச்சார்யர் அனுஷ்டானங்களாலே யாதல்
இவ்விஷய விரக்தி பிறக்கும் -என்கிறார் –

———-

சூரணை -103-

பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும்  –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –

இவ் வதிகாரிகளுக்கு அந்த வை லக்ஷண்யாதிகள் விரக்தி உண்டாக்கும் க்ரமம் என் என்னில்
அவனுடைய அபரிச்சின்னமான திவ்ய ஸுந்தர்யம்
நோ பஜநம் ஸ்மரன் நிதம் ஸரீரம் -என்கிறபடியே
,முதலிலே இதர விஷய ஞானம் இல்லாத படி பண்ணும்
அவனுடைய அருள் அன்ன மென்னடையினார் கலவியை அருவருக்கப் பண்ணும்
கீழ்ச் சொன்ன பகவத் பாகவத அனுஷ்டானங்கள் ஆகிற ஆசாரம் பயத்தை உண்டாக்கும் என்கிறார் –

——–

சூரணை -104-

இவையும் ஊற்றத்தைப் பற்றச்  சொல்லுகிறது –

இவையும் -என்றது -கீழேயும் ஊற்றம் சொல்லுகையாலே அஞ்ஞானமும் அரிசியும் பயமும் அதிகாரி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்க
ஒவ்வொன்றிலே ஊற்றமாய் இருக்கையாலே –

——-

சூரணை-105-

அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும் —

சூரணை -106-

அது பிரதான ஹேது அன்று –

சூரணை -107-

அப்ராப்தையே பிரதான ஹேது –

அருசி பிறக்கும் போதைக்கு -இத்யாதி -இவ்வதிகாரிகளுக்கு அருசி பிறப்பது விஷயங்களுடைய தோஷ பூயிஷ்டதையைக் கண்டாலோ என்னில்
அதுவும் ஒரு ஹேது
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்குச் சேராது என்று விடுமதுவே பிரதான ஹேது -என்கிறார் –

———

சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —

பகவத் விஷயத்தில் -இத்யாதி -கீழே மால் பால் மனம் சுழிப்ப -இத்யாதி ப்ரமாணங்களாலே இதுக்குப் ப்ரதிகோடியாக எடுத்த
பகவத் விஷயத்தில் பிரவணராகிறதும் -கல்யாண குண தர்சனத்தாலேயோ -ஸ்வரூப அனுரூபம் அன்றோ என்ன
இக் குணங்கள் அவ்வஸ்து கதமே யாகிலும் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறது -என்னும் இடத்தை ன் அநஸூயைக்குப் பிராட்டி அருளிச் செய்த வார்த்தா பர்யந்தமாக அருளிச் செய்கிறார் –

———-

சூரணை -109-

இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது — (சேராது பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )

இப்படிக் கொள்ளாத போது -இத்யாதியாலே இவ்வர்த்தத்தை
பர்வதோயம் அக்னி மான் தூமத்வாத் யத் யக்னி மான் ந பவதி தர்ஹி தூமவான் அபி ந பவதி -என்னுமா போலே
அநிஷ்ட ப்ரசங்க முகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
அதாவது -ஸ்வரூப அனுரூபம் என்றும் ஸ்வரூப ஹானி என்றும் கொள்ளாத போது அபி நிவேச அனுரூபமாக அவன் முகம் காட்டாத படியாலே
அவனுடைய குண ஹானியே தோற்றுகிற அளவிலும் ஆழ்வார்கள் மேன்மேல் என அவ்விஷயத்திலே மண்டுகையும்
ஸம்ஸாரத்திலே தோஷம் ஸர்வ ஸம் பிரதிபன்னமாகக் காணா நிற்கச் செய்தேயும் அதிலே ஆதரித்துப் ப்ரவர்த்திக்கையும் கூடாது இறே என்கிறார்
இதர விஷய தோஷ தர்சனத்தாலே விடப்படுமாகில் -அஸ் ஸம்ஸார அனுபவ தசையிலே சிலருக்கு அசிந்திதமாக ராஜ்ய ஷோபம் பிறந்து
அவர்கள் ச குடும்பமாக பர்வத ஆரோஹணம் பண்ணா நிற்க -மத்யே மார்க்கே கர்ப்பிணிக்கு ப்ரஸவ காலமாகத் தன்னால் பரிஹரிக்க அரிதான பாரங்களாலும்
புத்ர பஸ் வாதி பாரவஸ் யத்தாலும் அத்யந்த பீதி யுக்தனாய்ப் போரு கிற சமயத்திலே அபஹர்த்தாக்களால் ப்ராண பர்யந்தமான
ஆபத்து வந்தாலும் இற்றை அளவுக்கு பிராணன் ஆகிலும் கிடந்ததே என்று தான் முடியும் அளவும் அதில் அருசி பிறவாதே
புத்ரா தய கதமம மீ -இத்யாதில் படியே அக்குடும்ப ரக்ஷணத்திலே ப்ரவர்த்திக்கக் காண்கையாலும் கூடாது இறே
ஆகையால் சம்சாரத்தைத் தோஷம் கண்டு கை விடுகிறதும் இல்லை
பகவத் விஷயத்தை குணம் கண்டு பற்றுகிறதும் இல்லை –
ஸ்வரூப ஹானி என்று விடுகையும்
ஸ்வரூப பிராப்தம் என்று பற்றுகையுமே
நிலை நின்ற ஆகாரம் என்கிறார் –

———–

சூரணை -110-

கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —

கொடிய என்னெஞ்சம் -இத்யாதி -பகவத் விஷயம் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறதுக்கு பிரமாணங்கள் –

—————–

சூரணை-111-

குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் —

குண கிருத தாஸ்யத்திலும் -இத்யாதியாலே சொல்லுகிற இவ்வர்த்தத்தில் பிரஸித்துக்கு அடி -ரஹஸ்ய த்ரயத்தில்
சேஷத்வமும் குணத்தால் வந்தது -என்ற அநந்தரம்
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்றும்
குண அத்யவசாயம் சொல்லா நிற்க ஸ்வாமித்வத்தாலே ஸ்வரூப அத்யவசாயத்தைச் சொல்லுகையாலும்
திரு மேனியையும் குணங்களையும் சொல்லும் -என்ற அநந்தரம்
சேஷித்வத்திலே நோக்கு -என்கையாலும்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றிலும் குண க்ருதமாய் வருமத்தைப் பற்ற ஸ்வரூப பிரயுக்தமானது ப்ரபலமாகையாலே -என்கை –

————–

சூரணை -112-

அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை
ஸ்மரிப்பது–

இவ்வர்த்தத்துக்கு உதாஹரணம் -அநஸூயைக்கு -இத்யாதி
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே பெருமாள் எழுந்து அருளின போது அவன் அநஸூயை இடுவித்துப் பிராட்டியை ஆதரிப்பித்த அநந்தரத்திலே
அவள் பெருமாள் ஸுகுமார்யத்தைக் கண்டு பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீகளுக்கு பார்த்தாக்களே கிடீர் தேவதை
இவ்வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டுக் காட்டிலே வந்த நீர் இவர் அளவிலே இன்று போலே என்றும் இருக்க வேணும் கிடீர் -என்ன
அவளைப் பார்த்து -இவரையும் இவர் வை லக்ஷண்யத்தையும் வ்யதிரேகித்துக் காட்ட வல்லேனாகில் இறே
இவ்வழகை ஒழியவும் நாம் பெருமாளுக்கு நல்லேன் ஆண்மை காட்டலானமை -என்றாள் –

————

சூரணை -113-

பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ  என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –

ஆனால் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது -என்னும்படி இப்படி சத்தா ப்ரயுக்த தாஸ்யத்தை யுடைய ஸ்வரூபத்துக்கு முன்பு சொன்ன
அநந்ய தைவத்தாதிகள் குலையும்படியான பகவத் விஷயத்தில் அதி ப்ரவ்ருத்திகள் சேருமோ என்னில்
அதுக்கடி ப்ராவண்யம் -என்று தொடங்கி -சத்தா பிரயுக்த ஸம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வருகிற
ப்ரவ்ருத்தி களாகையாலே சேரும் என்கிறார் மேல் –
அவ்வாதி ப்ரவ்ருத்திக்கு அடி பகவத் விஷயத்தில் ப்ராவண்ய அதிசயம்
அப்பிராவண்யத்துக்கு அடி -மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற சம்பந்தம்
அஸ் ஸம்பந்தம் தான் வந்தேறி அன்று –

———

சூரணை -114-

அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –

யாவதாத்ம பாவி அப்ருதக் ஸித்தமான அந்த சத்தை ஸ்வ சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வரும் பகவத் அனுபவம் பெறா விடில்
மாந்து சோர்கிற பசியிலே சோறு பெறாத போது பிராணன் போமா போலே குலையும்
அது குலையாமைக்காக -இத்யாதி -இஸ் சத்தா ஸத் பாவ ஹேதுவாய்க் கொண்டு பி வரும் வியாபாரங்கள் எல்லாம் வருந்தியும் விடப்போகாத படியுமாய்
விழுக்காட்டில் ஸ்வரூபத்துக்கு உசிதமுமாய் இருக்கும்
ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும் என்று சோத்ய பரிஹாரம் பண்ணுகிறார் –

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்-முதல் பிரகரணம் –புருஷகார உபாய வைபவ பிரகரணம் –சூர்ணிகை-1-22- —

July 17, 2022

நமஸ் ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜன்மநே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலி நே

ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பதாஸ்ரயம்
வஸோ பூஷா ப்ரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸாதரம் —

—————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –
மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார் –

———–

ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனான -ஸர்வேஸ்வரன் -தன் நிர்ஹேதுக கிருபையாலே
அசித் அவிசேஷிதாந் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
கரண களேபர விதூரராய் -போக மோக்ஷ ஸூ ன்யரான சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
இவர்களுக்கு புருஷார்த்த -தத் சாதன -ஞானம் பிறக்கைக்காக வேதங்களையும் -வேத உப ப்ரும்ஹணங்க ளான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களையும் கொடுத்து அருள
அவற்றில் சொல்லுகிற தத்வ ஹித புருஷார்த்தங்கள் ஒருவருக்கும் அவகாஹித்து அறிய அரிதாகையாலே
தத் அவகாஹன சதுரரான நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்த வசன ஸ்ரேஷ்டங்களாலே அலங்க்ருதமான அர்த்த விசேஷங்களை
பிள்ளை தம் பரம கிருபையாலே இவ்வசன பூஷண கிரந்த முகேந அருளிச் செய்கிறார் –


சூர்ணிகை -1- வேதார்த்தம் அறுதியிடுவது -ஸ்ம்ருதி -இதிஹாஸ -புராணங்களாலே –

இத்தால் இப் பிரபந்த ப்ரதிபாத்யங்களான அர்த்த விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரதிபாதிக ப்ரமாணம்
பிரம விப்ர லம்பாதி தோஷ சம்பாவன கந்த ரஹிதமான வேதம் என்னும் இடம்
உபக்ரமத்திலே -உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று அருளிச் செய்கையாலும்
ப்ரத்யக்ஷம் ஏகம் ஸர்வாகா -இத்யாதி க்ரமத்திலே அல்லாதார் ப்ரத்யஷாதிகளை ப்ரமாணமாகக் கொள்ளா நிற்க
ஆதவ் வேதா பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்று பிரமாணாந்தரங்களில் பிரதான பிரமாணமாக பட்டர் வேதத்தை அங்கீ கரிக்கையாலும்
இவரும் வேதார்த்தம் அறுதியிடுவது -என்று உபக்ரமித்து அருளிச் செய்கிறார் –

வேதார்த்தம் அறுதியிடுவது –
பூர்வ உத்தர பாக த்வய ரூபமான நிகில வேத வேதாந்த தாத்பர்ய நிச்சயம் பண்ணுவது –

ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே -என்றது
ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரத இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்த ப்ரகாஸ்யதே-என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ யேத் -என்றும்
சொல்லுகையாலே இவற்றைக் கொண்டே அவற்றை அறுதியிட்டு வேண்டும் என்கிறார்

———————————

சூரணை-2

ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

ஸ்ம்ருதியாலே இத்யாதி –
இத்தால் இந்த வேதத்தினுடைய பூர்வ உத்தர பாக்க த்வயத்தில்
கபந்த மீமாம்சகனான பாட்டனையும்
ராஹு மீமாம்சகனான மாயா வாந்தியையும்
போல் அன்றிக்கே -உபய பாகமும் ஏக ஸாஸ்த்ர தயா பிரமாணமாக அங்கீ க்ருதம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்
இதில் எந்த பாகத்தில் அர்த்தம் எத்தாலே அறுதி யிடக் கடவது என்னில்
ஆசார வ்யவஹார ப்ராயச்சித்தங்களை விதிக்கிற ஸ்ம்ருதியாலே கர்ம பாகமான பூர்வ பாக அர்த்தத்தை அறுதி யிடக் கடவது என்கிறார்
மற்றை இரண்டாலும் -இத்யாதி
ஸர்வேஸ்வரனுடைய குண சேஷ்டி தாதிகளை பிரகாசிப்பிக்கிற இதிஹாஸ புராணங்களாலே உத்தர பாக அர்த்தத்தை அறுதி இடக் கடவது -என்கிறார் –

——–

சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

இவை இரண்டிலும் -இத்யாதி
யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் -இத்யாதிப்படியே
பகவத் அவதாரமான வேத வியாசனனாலே மஹா பாரதம் ப்ரவ்ருத்தமாகையாலும்
வேத வேத்யே பரே பும்ஸி -இத்யாதிப்படியே
சாஷாத் வேத அவதாரமான ஸ்ரீ ராமாயணம் அயோ நிஜரான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரவ்ருத்தமாகையாலும்
இதிஹாசம் ப்ரபலம் என்கிறார் –

———-

சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –

அத்தாலே அது முற் பட்டது –என்றுகீழ் உக்தமான பிரகாரத்தாலும்
இதிஹாஸ புராணாநி கல்பான் என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் -என்றும்
இத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் முற்பட எடுக்கையாலே
புராணத்துக்கும் ப்ரமாணத்வ ஸாம்யம் உண்டாய் இருக்க இதிஹாசம் முற்பட்டது
வர்ண ஸாம்யம் உண்டாய் இருக்க க்ஷத்ரியாதிகளுக்கு முன்னே ப்ராஹ்மணனை எடுக்குமா போலே முற்பட்டது -என்கை –

———

சூரணை -5-

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-

இனி -இதிஹாஸ ஸ்ரேஷ்டம் -என்றது
நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி
பாரத வம்சத்தையும்
பூசல் பட்டோலையும் -புணர்ந்து
தத் அர்த்தமாக -வாசம் ஸுரி கதாலாப கங்கயைவ புநீம் அஹே -என்று எச்சில் வாய் ஸூத்தி பண்ண வேண்டாத படி
கோன் வஸ்மின் -என்று தொடங்கி அவனுடைய அவதார சேஷ்டிதங்களையே சொல்லித் தலைக்கட்டுகையாலே
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது -இத்தால்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் -என்றும்
ஸ்ரீ மத் ராமாயணம் அபி பரம் ப்ரணிதா த்வச் சரித்ரே -என்றும் சொல்லுகிறபடியே
சாமாந்யேன ஸ்திரீகளுக்குச் சிறை இருக்குமது ஹேயமாய் இருக்க
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற தன்னை
அழிய மாறி
சிறை இருந்த தேவ ஸ்திரீகளை விடுவித்து
அவ்விருப்பிலே பிராணி ரக்ஷண அர்த்தமாகாது தான் இருக்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்கிறது –

தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -என்னக் கடவது இறே

மஹா பாரதத்தில் –இத்யாதி
ஸ்திரீகளுக்கு சிறை இருக்குமோ பாதி புருஷனுக்கு தூது போகை ஹேயமாய் இருக்க
புருஷோத்தமனான தான் ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே
இன்னார் தூதன் என நின்றான் -என்னும்படி
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க -நிற்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்லுகிறது –

——–

சூரணை-6-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

இவை இரண்டாலும் இத்யாதி
ஆக -வேதார்த்தம் என்று தொடங்கி -பிராமண சோதனத்தைப் பண்ணி –
இப்படி சோதிதமான பிராமண ப்ரதிபாதிதமான அர்த்தம் புருஷகார -உபாயங்கள் -என்று பிரதமத்திலே ப்ரஸ்தாவித்து –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா – என்று
தர்மே பிரமீய மாணே ஹி வேதேந கரணாத்மநா -என்றும்
தர்ம ஸம்ஸ்தாபன அர்த்தாய ஸம்பவாமி -என்றும்
வேதங்களுக்கும் வேத்யனுக்கும் சேதனர்க்கும்
சித்த ஸ்வரூபமான தர்ம சம்ஸ்தாப நத்திலே தாத்பர்யமாகையாலே
இப்பிரபந்தத்திலும் ஒரு முமுஷுவுக்கு ஞாதவ்யமான தத்வ ஹிதாதி ஸகல அர்த்தங்களையும் சாதியா நின்றதே யாகிலும்
உபாய யாதாத்ம்யத்தை வெளியிடுகையிலே தாத்பர்யமாகையாலே அதுக்கு உபயுக்தமாக பிரதமத்திலே புருஷகார உபாயங்களை அருளிச் செய்கிறார் –
சிறை இருக்கையும்
தூது போகையும் -ஆகிய
இவை இரண்டாலும் புருஷகார உபாயங்களினுடைய வைபவங்களை சொல்லிற்றாய் விட்டது என்கிறார் –

————

சூரணை -7-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-

புருஷகாரமாம் போது -என்று தொடங்கி
ப்ரஸ்துதமான புருஷகார வேஷத்துக்கு அனுரூபமான குணங்களை விதிக்கிறார் –
இதில் கிருபை வேணும் என்றது –
தன்னைப் பற்றும் போது அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே -சேதன விஷயமாக கிருபை வேணும்
புருஷகார தசையில் தான் ஈஸ்வரனைப் பற்றும் போதும் அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே
அவனுக்கு சேஷபூதையாய் நம்முடைய நினைவே தனக்கு நினைவாம்படி இருக்கிறவள் சொல்லும் கார்யம் என்றும்
கொள்ளுகைக்காகவும் பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும் என்கிறது –

————————

சூரணை-8-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

பிராட்டி முற்படப் பிரிந்தது –இத்யாதியாலே
யுக்தமான குணங்கள் புருஷகாரத்துக்கு பிராமண ஸித்தம் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –
இதில் முற்படப் பிரிந்தது கிருபையை வெளியிட்டபடி எங்கனே என்னில்
இஹ சந்தோ ந வா சந்தி -இத்யாதியாலே
பர அநர்த்தம் கண்டு ஸஹிக்க மாட்டாதே
மித்ர மௌபயிகம் கர்த்தும் -இத்யாதியாலே அநர்த்த பரிஹாரத்தை அருளிச் செய்கையாலும்
கார்யம் கருணமார்யேண – என்று தன்னை நலிந்தாரையும் ரஷிக்கை யாலும்
கிருபையை வெளியிட்டு அருளினாள்-

வந வாஸ வ்யாஜேந வந்த நடுவில் பிரிவில்
த்யஜேயம் ராகவம் வம்சே பர்துர் மா பரிஹாஸ்யதி என்று
பெருமாள் நினைவை பின் சென்று
பாஸ்கரேண ப்ரபா யதா -என்கிற தான் பிரிந்து இருக்கையாலே
பாரதந்தர்யத்தை வெளியிட்டாள் -என்கிறார்

அநந்தரம் -இத்யாதியாலே
வால் மீகி தன் ஆஸ்ரமத்தில் நின்றும் இவளை எழுந்து அருள்வித்துக் கொண்டு வர
ஜனக ஸமான மஹரிஷி இடத்திலே இருக்கையாலே நீ செய்ய வேண்டுவது ஓன்று இல்லையே யாகிலும்
லோக அபவாத பரிஹார அர்த்தமாக ஒரு ப்ரத்யயத்தைப் பண்ணி வா என்ன
நான் பெருமாளுக்கு அநந்யார்ஹை யாகில் பூமி நீயே ஜனனியானமை தோற்ற இடம் தா -என்று
எழுந்து அருளுகையாலே அநந்யார்ஹத்தை வெளியிட்டு அருளினாள் என்கிறார் –

————–

சூரணை-9-

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் – என்றது
இப்படி அவதார ப்ரயுக்தமான ஸம்ஸ்லேஷ தசையோடு விஸ்லேஷ தசையோடு வாசியற
ஸீதா சமஷம் காகுஸ்த்தம் இதன் வசனம் அப்ரவீத் -என்றும்
ஸீதாம் உவாஸ -என்றும் சொல்லுகையாலே -ஸம்ஸ்லேஷ திசையிலும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ –இத்யாதிகளாலே விஸ்லேஷ தசையிலும் புருஷீ கரிக்கையே இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் ப்ரகாசிக்கும் என்கிறார் –

—————-

சூரணை-10-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –

ஸம்ஸ்லேஷ தசையில் இத்யாதியாலே
இவள் இன்ன தசையில் இன்னாரைத் திருத்தும் என்னும் வகையை அருளிச் செய்கிறார்

————-

சூரணை -11

இருவரையும் திருத்துவதும்  உபதேசத்தாலே –

இருவரையும் நிறுத்துவதும் -என்று தொடங்கி
இவ்வகையில் இவள் திருத்தும் பிரகாரம் ஏது என்ன

நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனைத் திருத்தி உபதேசிக்கை யாவது –
பிதேவ த்வத் ப்ரேயான் -இத்யாதியில் படியே
தேஹம் பொல்லா வாக்கை -தேஸம் இருள் தரும் மா ஞாலம் -தேசிகரோ என்னில் பகவத் விமுகர்
மணல் சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -இவர்கள் தோஷத்தை வாத்சல்யத்துக்கு இரையாக்கி அங்கீ கரித்து அருளீர் -என்று உபதேசிக்கையும்

இச்சேதனனைத் திருத்தி உபதேசிக்கை யாவது
விதித –இத்யாதி களாலே அவனுடைய வாத்சல்யாதி குணங்களை பிரகாசிப்பித்துப் பற்றுவிக்கையும்

—————–

சூரணை-12-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –

உபதேசத்தாலே -இத்யாதியால் -இப்படி இருவருக்கும் உபதேசிகையாலே
சேதனனுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யமான -கர்ம பரதந்த்ரனாய் புஜிக்கை -குலையும்
ஈஸ்வரனுக்கு சேதனருடைய புண்ய பாப அநு ரூபமாக அநுபவிக்கக் கடவோம் என்று
இருக்கும் ஸ்வ சங்கல்ப பாரதந்தர்யமும் குலையும் என்கிறார்
இவ் விரண்டு வகைக்கும் ஈஸ்வரன் ஸஹித்தோம் என்கை இறே உள்ளது –

————-

சூரணை -13-உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –

உபதேஸத்தாலே மீளாத போது என்றது
நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலும் -அநாதி கால பாப வாஸனையாலும் -இவ்விருவரும் மீளாத போது என்றபடி
சேதனரை -இத்யாதி –
சேதனரை அருளால் திருத்துகை யாவது
பங்கயத்தாள் திருவருள் -என்கிற காருண்ய வர்ஷத்தாலே பதம் செய்விக்கை
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது
உசிதைர் உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸி –என்கிறபடியே
கச்சை நெகிழ்த்தல் -கண்ணைப் புரட்டுதல் செய்து -வடிவு அழகாலே மயக்கி -வசமாக்கிக் கொள்ளுகை –

———————-

ஆக
ஸ்ரீ ராமாயணத்தால் சொன்ன புருஷகார ஸ்வரூபத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லி
மஹா பாரத ப்ரதிபாத்யமான உபாய ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் மேல் -அறியாத அர்த்தங்களை -என்று தொடங்கி

சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –

அர்ஜுனனுக்குத் தத்த்வ விவேகாதிகளாலே அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகையாலே -ஆச்சார்ய க்ருத்யத்தையும்
தானே அவனை ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகையாலே புருஷகார க்ருத்யத்தையும்
கிருஷ்ணம் தர்மம் ச நாதனம்-என்று உபாயம் தானேயாய் இருக்கச் செய்தே
அவ் வர்ஜுனன் -த்வமே உபாய பூதோ மே பவ – என்னாது இருக்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே –

அன்றிக்கே
வஸ்து உபேயமாய் இருக்க இவனுடைய செயலறுதியாலே உபாயம் ஆகிறான் ஆகையாலே ஏறிட்டுக் கொண்டான் என்கிறது ஆகவுமாம்

ஆச்சார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டவன் -தானே உபாய க்ருத்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
இங்கே இப் பிரபந்த தாத்பர்யமான சரம உபாயம் ஸூசிதம் –

————-

ஆக
கீழ் -புருஷகார உபாயங்களினுடைய வை லக்ஷண்யத்தை ச பிரகாரமாக அருளிச் செய்தாராய் நின்றது
இனி புருஷகாரம் உபாயம் சொல்லிற்று என்னாதே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்று என்பான் என் என்ன
இவற்றுக்கு வைபவமாவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -புருஷகாரத்துக்கும் -இத்யாதி –

உபய சாதாரண வைபவம்
சூரணை-15-

புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-

இதில் தோஷமும் குண ஹானியும் ஆகிறது -அக்ருத்ய கரணமும் க்ருத்ய அகரணுமும் -ஆகையாலே இவை இரண்டையும் பார்த்து
சேதனரை புருஷகார உபாய பூதரானவர்கள் விட மாட்டாத அளவன்றிக்கே
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்கிறபடியே
அவர்களை அங்கீ கரிக்கும் இடத்தில் -அவை தன்னையே ஆதரணீயமான உபஹாரமாக்கி அங்கீ கரிக்கை -என்கிறார்
த்யஜ்யதே யதி தோஷேண குணேந பரி க்ருஹ்யதே ஸ்வ ஸாதாரண அர்த்தோயம் ஆஸ்ரிதஸ்ய க்ருதம் பலம் -என்னக் கடவது இறே –

————

சூரணை -16
இரண்டும்  இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் இரண்டும் இத்யாதி –
இரண்டும் என்கிறது -கீழ் ப்ரஸ்துதமான -புருஷகார உபாயங்களை –
மறித்து இரண்டு என்கிறது -தோஷ குண ஹானிகளை
இவை இரண்டும் போனவாறே அங்கீ கரிக்கிறோம் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது-புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் அந்த தோஷ குண ஹாநிகள் உண்டாகை
புருஷகாரத்துக்கு அந்த தோஷ குண ஹாநிகள் வரும்படி எங்கனே என்னில் –
மாத்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே ஸ்தநந்த்ய ப்ரஜையினுடைய தலையைத் திருகித் தள்ளும் தாயைப் போலே இவனை உபேக்ஷிக்கையாலும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையே வடிவான தன்னுடைய கிருபையை இவனுக்கு பண்ணாது ஒழிகையாலும்
உபாயத்துக்கு தோஷ குண ஹாநிகள் ஆவது
பித்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே-ஷிபாம் யஜஸ் ரம ஸூபான் -என்று தள்ளுகையும்
இவனுடைய தோஷங்களை கணக்கறு நலமான தன் வாத்சல்யத்துக்கு இரையாக்காது ஒழிகையும்

————–

சூரணை-17-

இரண்டும்  குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் குலைந்தது என்று இருக்கில் –இத்யாதி
சேதனன் நம்முடைய தோஷ குண ஹானிகள் போனவாறே அன்றோ
இது நெடும்காலம் அங்கீ கரியாதவன் இன்று அங்கீ கரிக்கிறது என்று இருக்கில் இவனுக்கு அவை உண்டாம்படி என் என்னில்
தம் ஸ்வம் ஆகையாலே விட மாட்டாமல் ஸ்வாமி யானவன் அங்கீ கரித்தான் என்று இராமையாலே தோஷமும்
நம் தோஷங்களைப் பாராதே நிர் ஹேதுகமாகப் பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அங்கீ கரித்தான் என்று இராமையாலே குண ஹானியும் யுண்டாய்த்து என்கிறார் –

———–

சூரணை -18-

ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –

இனி புருஷகாரம் இவை இரண்டும் பாராதே இப்படிப் பச்சை யாக்கி அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன
ராக்ஷஸிகள் தோஷம் ப்ரஸித்தம் -என்று அவ்வர்த்தத்தை வெளியிடுகிறார்
இங்கு ராஷசிகளுக்கு தோஷ குண ஹானிகளாவது
ததை வார்த்ராபராதா -என்னும்படி தர்ஜன பர்த்ஸ நாதிகளிலே ஸந்ததம் தத் பரைகளானதுவும்
ஸ்த்ரீத்வ சாமான்யத்தை இட்டாகிலும் த்ரிஜடாதிகளைப் போலே அனுகூல பாஷணாதிகள் பண்ணாமையும்

இவற்றைப் பச்சையாக்கி அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
இவர்களை நலிய ஆர்த்தித்த திருவடியைக் குறித்து
பாபாநாம் வா ஸூபா நாம் வா -என்றும்
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞயா விதேயாநாம் ச தாஸீ நாம் க குப்யேத் வாந ரோத்தம -என்றும்
ஸ்வாமிக்கு சந்த அநு வ்ருத்திகளாய்க் கொண்டு சாவதானைகளாக நலிந்தவர்கள் ஓக்க பூர்ண அதிகாரிகள் உண்டோ –

இப்படி ஸ்வாமி கார்யம் செய்தார் தண்ட் யராம் இடத்தில் உன்னோடு அவர்களோடு வாசியுண்டோ என்று மன்றாடி மறுதலைத்து
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா -என்னும்படி அவர்களை ரக்ஷித்து
பவேயம் சரணம் ஹி வ -என்று அங்கீ கரிக்கையாலே ப்ரகாசிதம் –

————

சூரணை-19-

ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-

சூரணை-20-

திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது-கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –

இனி உபாய பூதன் இரண்டும் பாராதே அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன -அத்தைச் சொல்லுகிறது மேல்
ஜிதேந்த்ரியரில் தலைவனாய் -இத்யாதி
ஊர்வசியையும் முறை கூறி உபேக்ஷிக்கும் படி -இந்த்ரிய ஜெயம் பண்ணினவர்களில் ப்ரதானனாய்
ப்ரவஹ்யாம் யந ஸூயவே -என்று வைப்பான அர்த்தங்களையும் பரக்க உபதேஸிக்கும் படி பரம ஆஸ்திகனாய்
பிராணஸ்ய ப்ராண -என்று லோகத்தில் தாரகங்களானவற்றுக்குத் காரகனான கிருஷ்ணனுக்கும் -அர்ஜுன கேஸவஸ் யாத்மா -என்னும்படி ப்ராண பூதனான அர்ஜுனனுக்கு
தோஷம் பாராதே அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
பந்துக்கள் இத்யாதியாலே
அவனுக்கும் ஸாமான்ய தோஷமும் விசேஷ தோஷமும் உண்டு என்னும் இடம் காட்டுகிறார் –
அதாவது
யுத்த யுன்முகனான ஷத்ரியனுக்கு வத பீதி வர்த்தித்தால் யாகத்தில் பஸ்வாலம்பந பீதியோ பாதி ப்ராயச்சித்த விஷயமாகையாலே
ஆச்சார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பவுத்ரான் ஸகீம் ஸ்ததா ஸ்வ ஸூரான் ஸூ
ஹ்ருதஸ் சைவ சேநயோர் உபயோர் அபி -என்று
ப்ரக்ருதி பந்துக்கள் பக்கல் யுண்டான ஸ்நேஹமும் -சாமான்யேன உண்டான பர அநர்த்த அஸஹமான காருண்யமும்
இவர்களை வதித்தால் வரும் அநர்த்தத்தில் பீதியும் வர்த்தித்த சாமான்ய தோஷமும் பாராமையும்
சங்க சக்ர கதா பாணே -இத்யாதியால்
சரணாகதையான திரௌபதியினுடைய பரிபவத்தை தர்ம ஆபாஸ அதி லங்கந பீதியாலே கூடப்பார்த்துக் கொண்டு இருந்த விசேஷ தோஷமும் பாராமையும் அங்கீ கரித்தமை யுண்டு -என்கிறார் –

—————–

சூரணை -21-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க- வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –

பாண்டவர்களை -இத்யாதியாலே
இந்த தோஷ துஷ்டதையை அர்ஜுனனுக்கும் ஸ்தீரி கரிக்கிறார்
ஞானாதிகரான பீஷ்மாதிகள் தன்னை யுள்ளபடி அறிந்து இருக்கச் செய்தே அவர்களையும் நிரசித்தது
அவளுடைய பரிபவத்தைப் பொறுத்து இருக்கையாலே இறே
இங்கனே இருக்க அர்ஜூனாதிகளை நிரசியாது ஒழிந்தது விரித்த தலை கண்டு பொறுக்க மாட்டாதவன் வெறும் கழுத்துக் கண்டு பொறுக்க மாட்டாமை இறே -என்கிறார்

——–

 

சூரணை -22-

அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —

அர்ஜுனனுக்கு -இத்யாதியாலே
இப்படி தலை யறாத மாத்ரமேயோ
அநுகூலா சரணங்களைப் பண்ணிற்றும் இவளுக்காக இறே என்கிறது
அங்கன் அல்லது பிரபத்தி யுபதேச அநந்தரத்திலே
இதம் தே நாதபஸ்காய -இத்யாதி –இச்சீரிய அர்த்தத்தை இவனுக்கு வெளியிட்டோமே என்று அனுதபிக்கக் கூடாது இறே

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை இவ்வளவாகத் தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

———–

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

 

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்

July 17, 2022

ஸ்ரீ உவே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் முதன் முறையாக ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை மேலைத் திரு மாளிகை ஸ்ரீ கோவிந்தாரியாருடைய பார்யை
ஸ்ரீ மதி அலமேலு மங்கை அம்மங்கார் அவர்கள் 1919-1920-தமிழக அரசின் கீழ்த் திசைச் சுவடி நூலகத்துக்கு வழங்கியதாக நூலாகக் குறிப்பு உள்ளது
ஓலைச் சுவடியின் தொடக்கத்தில்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை திரு மாளிகை பொன்னப்பங்கார் ஏடு –
என்று குறிப்பிடப் பெற்று உள்ளது

இந்த சுவடியின் தொடக்கத்தில்
நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மநே ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே -என்ற தனியனும்
ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பத ஆஸ்ரயம்
வாஸோ பூஷா பிரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸா தரம் –

தேவ ராஜர் என்ற இயல் பெயர் கொண்ட நாலூர் ஆச்சான் பிள்ளை திருவடிகளைப் பற்றியவர்

ஸ்வாதீந தேசிகர் –கூர குலோத்தம தாசர் என்ற ஆச்சார்யரைத் தமக்கு அதீனராக யுடைய திருவாய் மொழிப்பிள்ளை என்றபடி
பாண்டிய அரசனின் பிரதான மந்திரியான திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை
ஆழ்வார் திருநகரியை காடு திருத்தி நாடாக்கி –
மறைத்து வைக்கப்பட்டு இருந்த நம்மாழ்வார் உத்சவ விக்ரஹத்தையும் தேடி எடுத்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்வித்து
ராமானுஜ சதுர்வேதி மங்கலம் அக்ரஹாரத்தையும் ஏற்படுத்தி
பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தையும் பிரதிஷ்டை செய்வித்து
இவை அனைத்தையும் அவர் அரசுச் செல்வாக்குக் காரணமாக ஸ்வ ஆதீனமாகச் செய்த படியால் ஸ்வா தீன தேசிகர் என்று வழங்கப்பட்டார் -என்றுமாம் –

திருவாய் மொழிப்பிள்ளை வம்சத்தவர் அனைவருமே திருவாய் மொழிப்பிள்ளை என்றே வழங்கப்படுவதால்
மா முனிகளுக்கும் பிற்காலத்தில் வந்தவராலும் பண்ணப் பெற்றும் இருக்கலாம்


இதில் எங்கும் காணப்படாத சில அரிய ஐதிஹ்யங்கள் இடம் பெற்று உள்ளன –

1-உடையவருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இடையே நடந்த பரிமாற்றம் -சூர்ணிகை -332-ல் காணப்படுகிறது
திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத் பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்த்வத்தை விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் என்ன –
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்து ஏற எழுந்து அருள
ஆழ்வானை அருளப் பாடிட்டு-பல வேளையிலே இப்படிச் செய்தாயே -என்ன
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால்
ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் -என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் பிரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே

2- இதே போல் பட்டருக்கு நஞ்சீயருக்கும் இடையே நடந்த பரிமாற்றம் வேறு எந்த நூலிலும் இடம் பெறாமல் இதில் சூர்ணிகை -338 ல் காணப் படுகிறது

பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்தது என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தானம் ஒழிய இல்லை என்ன
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே
ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளினை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போக விட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்திலே தனம் இருக்கிறது -அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திரு மாளிகையிலே செலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையில் வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர
அத்தைக் கண்டு அருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்து அழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள் என்று அருளிச் செய்தார் இறே

3- மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பிகள் செய்த சரம கைங்கர்யம் –
மற்ற வியாக்யானங்களிலும் குறிப்பிடப்பட்டாலும் இதில் எம்பெருமானார் பெரிய நம்பிகள் சம்வாதம் விரிவாக உள்ளது -சூர்ணிகை -234-

இச் செய்தியை உடையவர் கேட்டருளி ஸ்ரீ பாதத்திலே சென்று கண்டு லோக உபக்ரோஸம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினாள் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆகில் அங்கு உற்றைக்கு அநந்யார்ஹனான அடியேனை நியமிக்கலாகாதோ என்ன
ஆசார பிரதானரான பெருமாள் இப்படி பெரிய உடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வை தர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜனும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமைகளுக்கு நான் போடும் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடைவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது -என்கிறார்
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையால் நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் அத்தனை
நான் பெருமாளின் அதிகனாய் தவிரவோ
இவர் அப்பஷியில் தண்ணியராய் தவிரவோ என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் என்று பிரசித்தம் இறே

4- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே
கீழை யூரிலே தேவதாசி பக்கலிலே சக்தராய் சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே
இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க -அத்தாலே விஷண்ணராய்ப் பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும்
இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்பந்திக்க
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு வந்து ஸ்ரீ பாதத்தின் கீழே தெண்டனாக விழுந்து
இப்படி இவ்வடிகளுக்கு அமுதுபடி த்ரோஹ பர்யந்தமாக ஆத்ம நாசம் பிறக்கும் அளவில் தேவரீரே ரக்ஷித்து அருள வேணும் என்று
கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக -உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே
அப்போதே அவர்கள் நினைவு மாறி என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய் இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர
அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாமாய்த்து –

5- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வார் –

6- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி வினோத அர்த்தமாகப் புறம் திண்ணையைக் காட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்திய ராத்திரி யானைவாறே
தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என் -இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக
அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு அவர்களால் வந்த
வியஸனத்தை நிவர்த்திப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக
அத்தை அவளுக்கு ஸூஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் –என்றும் –


இதிஹாச புராண கதைகள் –
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹருதீ கரித்து சூர்ணிகை -260-இல் –

ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வார்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு தம் அசல் அகத்தில் அவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற யம தூதரும் வந்து ப்ரவேசிக்க -இவன் கையும் திருப் பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு
மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய் ப்ரவேசித்துக் கிடக்க-அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க
அத்தைக் கண்டு அப் பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித்த திருவடிகளிலே சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே

அடுத்தது சூர்ணிகை -321-இல்
இந்த குரு ஸூஸ்ருஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச சென்ற ப்ராஹ்மண புத்ரனைத்
தன்னுடைய பசு பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து அப் பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக்
கன்று உண்கிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகைகளாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து அப்பச்சிலைகளும் தீய்ந்தவாறே
எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க
அவ்விடத்திலும் கன்றுண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

நிர்வாஹங்கள்
சூர்ணிகை -54-
பிதாவுக்குப் புத்ரன் எழுத்து வாங்குமா போலே
இதுக்கு -மா முனிகள் -தாமப்பனுக்கு புத்ரனானவன் –நீ என்னை ரக்ஷிக்க வேணும் -என்று எழுத்து வாங்கினால்
இவரோ -ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே –என்று அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -165-இல்
ஆபரணம் அநபிமதமாய்-அழுக்கு அபிமதமாய் -இரா நின்றது இறே
இதற்கு மா முனிகள் -லோகத்தில் விஷய ப்ரவணராய் இருப்பவருக்கு அபிமத விஷயத்தினுடைய ஓவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய்
அநவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே -என்கை –
இவரோ -அதாவது ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு -இவளை அந்தப்புரம் ஏற அழைப்பியுங்கோள் என்று அந்தரங்கரை நியமிக்க –
அவர்கள் பயாதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கு என் வந்தாள் என்று அநாதரிக்க
அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்து புஜித்தான் என்று ப்ரஸித்தம் இறே -என்று இவ்விஷயம் ஒரு கதை போலச் சொல்லப் படகியுள்ளது –

சூர்ணிகை –181-இல்
அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே
என்பதை விளக்க -அத் தோஷமாவது -ஸ்மஸாந அக்னி கிளம்பினால் மருங்கு அடைந்து தூற்ற அளவிலே சுடும் –
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்னீ பாத்திரங்கள் எல்லாவற்றையும் தக்தம் ஆக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனான இவ் வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் என்று விளக்கமாக உள்ளது –
மற்ற வியாக்யானங்களில் இந்த விளக்கம் இல்லை –

சூர்ணிகை -96-இல்
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும்
இதுக்கு மா முனிகள் -சமமானது அந்தக்கரண நியமனம் -தமமாவது பாஹ்ய கரண நியமனம்
இவரோ -சமமானது பர தாராதிகளில் போகாதபடி இந்திரியங்களை நியமிக்கஇ
தமமாவது -உபஸ மனம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –
என்று அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –240-இல்
ஜீவாத்மாக்களுக்கும் பிராட்டிக்கும் ஆறு பிரகாரங்களால் சாம்யம்
இத்தை விளக்க மற்ற வியாக்யானங்களில்
1-அநந்யார்ஹ சேஷத்வம்
2-அநந்ய சரண்யத்வம்
3-அநந்ய போக்யத்வம்
4- ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5- விஸ்லேஷத்தில் தரியாமை
6-தத் ஏக நிர்வாஹ் யத்வம்
இவரோ
ஞான -ஆனந்தங்களும் -சேஷத்வ பாரதந்தர்யங்களும் -ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும் -விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையும்
ஆகிற அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே அவளோடு ஸர்வ ஸாம்யம் இல்லையாகிலும்
இவ்வாறு பிரகாரங்களாலே தத் ஸாம்யம் யுண்டு என்கிறார்
இவளுக்கு உண்டான அதிகமான பிரகாரங்கள்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ சம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூரகத்வம் -முதலானைவை இறே என்று
வேறு ஆறு பிரகாரங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் வேறுபாடுகளும் உண்டு என்று சுட்டிக் காட்டப் படுகிறது

சூர்ணிகை –169-இல்
பரம ஆர்த்தனைப் பற்றியது
இத்தனை விளக்கும் போது
ஆர்த்தன் என்பது –

ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை
இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை
என்று ஆர்த்தனிலும் திருப்தானிலும் மூன்று வகைகளை அருளிச் செய்கிறார்
இந்த விஷயம் மற்ற வியாக்யானங்களில் கூறப்பட வில்லை

சூர்ணிகை – 335-இல்
ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி என்ற ஸூ த்ரத்துக்கு
சிஷ்யனுக்குத் தன்னுடைய ஸ்வரூப ரக்ஷணமும் -ஆச்சார்யனுக்குத் தன்னுடைய தேஹ ரக்ஷணமும் கர்த்தவ்யம் அன்று என்றதாயிற்று -மா முனிகள் வியாக்யானம்
இவரோ
அதே கருத்தும் மற்ற ஒரு நிர்வாஹமும் -அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யன் தான் -தான் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே
அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும்
ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் சிஷ்யன் தான் பலகாலும் ப்ரவர்த்தித்திக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம்

———-

பாசுரங்களின் உட் பொருள்கள்
இன்னார் தூதன் என நின்றான் -பாசுர விளக்கம் -சூர்ணிகை -5-இல்
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகரஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க நிற்கையாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது
அதாவது -நின்றான் -முன்பு இருந்த குறை தீர்ந்து பூரித்து நின்றான் –

சூர்ணிகை -380-இல் அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் -என்பதற்கு
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியும் சினம் உண்டாகக் கூடாது இறே –
அகற்றிடினும் -கூடாதது கூடினாலும் என்றபடி –

—-

ஸூ த்ரங்களின் சொல் பொருள்களின் உட் கருத்து
ஈஸ்வரன் தானும் ஆச்சார்யத்வத்தை ஆசைப்பட்டு இருக்கும் -என்றதன் கருத்தை
அடுத்த சூர்ணிகை வியாக்யானத்தில்
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னும்படியான
இரண்டு தலையையும் சத்தை உண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு –
அவதரித்து
தூத்ய முகேந கடகனாய்
இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போனதான் இறே
அர்ஜுனனைக் குறித்து மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்றதும் கார்யகரம் ஆய்த்து இல்லை
அது பின்புள்ளாருக்கு-ஸதாச்சார்ய உபதேசத்தகாலே பலமாயிற்று இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை என்கிறது –
ஸ்வ தந்த்ரனான இவனால் ஆசைப்பட மட்டுமே முடியும் -என்பதைக் காட்டி அருளுகிறார்


பிரமாணங்கள்
மற்ற வியாக்யானங்களில் இல்லாத பலவும் இவரால் காட்டப்பட்டுள்ளன
சூர்ணிகை -268-இல்
ஆசா மஹா சரண ரேணு ஜூஷா மஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மலத ஒவ் ஷதீ நாம் யா துஸ் த்யஜம்
ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் சுருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸு நாம் வா ந காமயே காம் கதம்போ பூயாஸம் ருந்தோ வா யமுனா தடே என்றும் இத்யாதிகளாலே
ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்த் தாவராதிகளை ஆசைப்பட்டான் இறே

——-
உவமைகள்
வேறு உபாயங்களைக் கை விடுகைக்கு காரணம் அவை ஸ்வரூப விரோதங்கள் -சூர்ணிகை -115-என்ற கருத்தை விளக்க
ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும்-குடம் சுமைக்கையும் அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார்

சூர்ணிகை -174-இல்
ஆறு ஏறினாருக்குத் தெப்பம் வேண்டாவோ பாதி -என்ற உதாரணமும்

சூர்ணிகை -199-இல்
வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வதா ரோஹணம் பண்ணுமோ பாதி -என்கிற உதாரணமும் காட்டப்படுகிறது –

——————–

ஸூத்ர அர்த்தோ வர்ண்யதே தத்ர வாக்யை ஸூத்ர அநு சாரிபி
ஸூத்ரத்தை அநு சரித்த வாக்யங்களால் ஸூத்ரார்த்தம் இதில் வர்ணிக்கப்படுகிறது –

————

த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே

திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு

தஸ்மை ராமாநுஜார்யாய -நம பரம யோகிநே -யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் –ஸ்ருத பிரகாசிகை

பூர்வ அபிதேயேந ஸஹ யேந தர்ம விசேஷண அனந்தர அபிதேயஸ் சம்பத்யதே ஸ தர்ம விசேஷ அனந்தர அபிதேய விஷ்டஸ் சங்கதி
இதுவே சங்கத்தின் லக்ஷணம்
முதலில் சொல்லப்பட்ட விஷயத்துடன் எந்த தர்ம விசேஷத்தால் அடுத்துச் சொல்லப்படும் விஷயம் சம்பந்தித்து இருக்கிறதோ
அடுத்துச் சொல்லப்படும் விஷயத்தில் உள்ள அந்த தர்ம விசேஷம் சங்கதி ஆகும்

முதல் திருவாய் மொழி -பரத்வ பரம்
இரண்டாம் திருவாய் மொழி பஜ நீயத்வம்
பரத்வம்-காரணம் -பஜ நீயத்வம் -கார்யம் -மேன்மை உள்ள வஸ்துவைப் பற்றினாள் தானே புருஷார்த்தம் கிட்டும் -கார்யதா சங்கதி

மூன்றாம் திருவாய் மொழி -ஸுலப்ய பரம் -பஜ நீயத்வம் வர இதுவே காரணம் -காரணதா என்பது சங்கதி

அப்படியே
ப்ரசங்க
ஆக்ஷேப
த்ருஷ்டாந்த
ப்ரத் யுதாஹரணம்
அபவாதம்
அதி தேச
உபோத்காத –முதலிய பல சங்கதிகள் உள்ளன

இவை அனைத்துமே ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையால் நன்கு காட்டப் பட்டுள்ளன –

அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு

———

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தம்மை மிகக் கொண்டு கற்றோர் -தம்முயிர்க்கு
மின்னணியாய்ச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணம்
என்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின் பி-

அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல இவ் வார்த்தை மெய் இப்போது

சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்

————

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-

பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற -ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்-

2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114

3-உபாயாந்தர தோஷம் -115–141

4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-

5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-