Archive for the ‘ஸ்ரீ ராமனின் அருள் அமுதம்’ Category

ஸ்ரீ வால்மீகி மற்றும் சில ராமாயணங்கள் 

March 19, 2024

கம்பரே ஆதிகவியாகிய வால்மீகியை வணங்கி, வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கூறியுள்ளார், பாயிரத்தில் –

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

———-

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் 

வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது

கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை.

————

ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர், கன்னடத்தில் ராமாயணம் குறித்த எழுதிய நவீன காலத்திய கவிஞர் எழுத்தாளருமான குவெம்பு போன்றோர் அனைவரும் ஆதிகவி வால்மீகியின் வழியே தாங்கள் செல்வதாக எழுதியிருக்கிறார்கள்.

பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் இவையிரண்டில் மட்டிலும் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார். இரண்டாம் காண்டம் முதல் ஆறாம் காண்டம் வரை பொதுவிலே தீரம் மிக்க கதாநாயகனாகவும் மனிதனாகவுமே ராமபிரான் காட்டப்படுகிறார். இந்தப் பகுதிகளிலும் சில இடங்களில் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார் என்பது வாஸ்தவம் தான்

—————-

மஹாபாரதத்தில் நான்கு இடங்களில் ராமகதை சொல்லப்படுகிறது

  1. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ராமோபாக்யானம் (ராமகதை)
  2. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ஹனுமத் – பீம சம்வாதம் (உரையாடல்)
  3. த்ரோண பர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம் ( பதினாறு ராஜாக்களைப் பற்றிய கதைகள்)
  4. சாந்திபர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம்

வனவாசத்தில் இருக்கும் தர்மபுத்ரருக்கு ராமகதை சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் மிகவும் கஷ்டதசையில் இருப்பவர்கள் அது போன்று கஷ்டம் அனுபவித்த வேறு மாந்தர்கள் சுகத்தையும் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என நம்பிக்கை தரும்படிக்காக இந்த சூழ்நிலையில் ராமகதை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கு சொல்லப்படும் ராமகதை ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. ஆயினும் விஷ்ணுவின் அவதாரமாக ராமபிரான் தேவர்கள் துயர்நீக்க அவதரிப்பது சித்தரிக்கப்படுவதும் ராக்ஷஸர்களின் பூர்வ சரித்ரம் சொல்லப்படுவதும் ராமாயண காவ்யத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்ட பகுதிகளை உள்வாங்கியமையை துலக்குகிறது. இந்த மஹாபாரதமென்னும் இதிஹாசத்தைப் படைத்தவருக்கு, அந்த இதிஹாசம் படைத்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ராமகதை உள்ளது உள்ள படிக்கு விபரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது.

பீம ஹனுமத் சம்வாதத்தில் ஹனுமான் ராமபிரானிடம் ராமகதை புழக்கத்தில் உள்ள வரை ராமபிரான் புவியில் வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக்கொள்வது உத்தரகாண்டத்தில் வரும் நிகழ்வை படம் பிடிக்கிறது.

யாவத்3ராம கதா2வீர ப4வேத் லோகேஷு சத்ருஹன்
தாவஜ்ஜீவேயமித்யேவம் ததாஸ்த்விதி ச ஸோ(s)ப்3ரவீத்
(மஹாபாரதம் – III – 147/37)

யாவத்3ராமகதா2ம்வீர ச்ரோஸ்யே(s)ஹம் ப்ருத்வீதலே
தாவச்சரீரே வத்ஸ்யந்து மம ப்ராணா ந சம்சயா
: (ராமாயணம் – உத்தரகாண்டம் – 39/16) – (கோரக்பூர் பதிப்பின்படி சர்க்கம் ஒத்துப்போகவில்லை)

சாந்திபர்வத்து ஷோடசராஜோபாக்யானம் ராமபிரான் பதினோராயிரம் வருஷம் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறது.

த3சவர்ஷஸஹஸ்ராணி த3சவர்ஷசதானி ச
ராஜ்யம் காரிதவான் ராமஸ்ததஸ்து த்ரிதிவம் க3த:
(ம.பா XII – 29-54)

தசவர்ஷஸஹஸ்ராணி தசவர்ஷசதானி ச
ராமோ ராஜ்யமுபாஸீத்வா ப்3ரம்ஹலோகம் க3மிஷ்யதி
( ராமாயணம் – உ.கா – 1/76)

த்ரோணபர்வத்து ஷோடசராஜோபாக்யானத்தில் ராமபிரான் தனது தேசத்தை எட்டு பாகங்களாக விபாகம் செய்து அதனை தன் மகன்களான குச லவர்களுக்கும் தன் தம்பி மார்களுடைய மகன் களிடையேயும் ஒப்படைக்கும் விஷயம் சொல்லப்படுகிறது.

இவையாவும் ராமாயண காவ்யத்தில் உத்தர காண்டத்தில் சொல்லப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

——————

ரங்கநாத ராமாயணம்

ரங்கநாத ராமாயணம் என்பது தெலுங்கு மொழியில் கிபி 1300 முதல் கிபி 1310 வரையிலான காலகட்டத்தில் கோனா புத்தா ரெட்டி என்றும் அழைக்கப்படும் கவிஞர் ரங்கநாதரால் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தின் பிரபலமான தழுவலாகும். தெலுங்கில் உள்ள ராமாயணத்தின் நான்கு பதிப்புகளில் இது ராமாயணத்தின் முழு கருப்பொருளையும் உள்ளடக்கியது. ராமரால் ஆசிர்வதிக்கப்பட்ட அணிலின் கட்டுக்கதையை பெரும்பாலான மக்கள் கேட்டிருப்பார்கள். ரங்கநாத ராமாயணத்தில் தான் இந்தக் கட்டுக்கதை உருவானது. 

ராமரின் வானவர் சேனை இலங்கைக்கு செல்வதற்கு பாலம் கட்டும் போது, ​​அவர்களின் முயற்சிக்கு ஒரு அணிலும் தன் பங்களிப்பை அளித்தது. நன்றியின் அடையாளமாக, ராமர் தனது விரல்களால் அதன் முதுகில் மூன்று கோடுகளை வரைந்து அதை ஆசீர்வதித்தார். இந்த பதிப்பு 17,290 வசனங்களைக் கொண்டுள்ளது மற்றும் அறிஞர்கள் மற்றும் பொது மக்களால் போற்றப்படுகிறது.

————-

காகவின் ராமாயணம்

இது அசல் ராமாயணத்தின் பழைய ஜாவானிய கவிதை விளக்கமாகும் மற்றும் ஜாவானிய மக்களால் இந்தோனேசியாவில் கலை வெளிப்பாட்டின் உச்சமாக அறியப்படுகிறது. காகவின் என்பது இந்து சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட மீட்டர்களைக் கொண்ட ‘காவ்யா’வின் ஜாவானிய பதிப்பாகும். இது ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேடாங் வம்சத்தின் ஆட்சியின் போது இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மூலம் அதன் பிரபலத்தை அளவிட முடியும். அசல் ராமாயணத்தைப் போலல்லாமல், இந்தோனேசியப் பதிப்பில், ஹனுமான் வானரர்களின் ராஜாவாகப் போற்றப்படுகிறார், பாலி அல்லது சுக்ரீவ் அல்ல. 

———————

ரீம்கர்

ரீம்கர் என்பது காவியமான ராமாயணத்தின் கம்போடிய பதிப்பு. ரீம்கர் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் “ராமின் மகிமை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ரீம்கர் என்பது கம்போடியாவின் தேசிய காவியம் மற்றும் அதன் பழமையான குறிப்பு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜாதகாவின் கதைகளின் அடிப்படையில் பாறைக் கல்வெட்டுகளின் வடிவத்தில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அசல் ராமாயணத்தைப் போலவே, இது அதே கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றின் கம்போடிய பெயர்களுடன்: ஃபிரே ராமா, நியாங் சேடா மற்றும் க்ராங் ரீப், முறையே ராம், சீதா மற்றும் ராவணனைக் குறிக்கிறது. இது வால்மீகியின் ராமாயணம் போன்ற நீதி மற்றும் விசுவாசத்தின் உலகளாவிய கருப்பொருளைக் கையாள்கிறது. இருப்பினும், ரீம்கரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், ஹனுமான் தனது பயணத்தின் போது சந்திக்கும் தேவதையான சோவன்னா மச்சா போன்ற சில புதிய கதாபாத்திரங்களைச் சேர்ப்பதாகும். 

உலகின் மிகப் பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றான அங்கோர் வாட்டில் ரீம்கரின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இந்த முக்கிய கம்போடிய காவியம் அதன் உரை வடிவத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் நடனம்-நாடகம், இசை மற்றும் சிற்பங்கள் போன்ற கலையின் பிற பிரதிநிதித்துவங்களாகவும் உள்ளது.

———-

ராமாயணத்தின் பிராந்திய பதிப்புகள்

மேற்கூறிய பதிப்புகளைத் தவிர, இந்தியாவில் காவியமான ராமாயணத்தின் சில முக்கிய பிராந்திய பதிப்புகளும் உள்ளன. கிருட்டிவாசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான பெங்காலி பதிப்பு 15 ஆம் நூற்றாண்டில் கிருட்டிபாஸ் ஓஜாவால் இயற்றப்பட்டது. இதேபோல், சப்தகண்ட ராமாயணம் எனப்படும் அசாமிய பதிப்பு 14 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலியால் இயற்றப்பட்டது. கேரளாவில், 12 ஆம் நூற்றாண்டில் சீராமனால் ராமசரிதம் என்றழைக்கப்படும் நீடித்த மலையாளக் கவிதைப் பதிப்பு எழுதப்பட்டது.

 இந்த பதிப்புகளின் உள்ளார்ந்த கதைக்களம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் அதே வேளையில், எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகள் ராமரின் புகழ்பெற்ற கதையை தங்கள் மொழியில் மொழிபெயர்ப்பதை விட, அவர்களின் கலாச்சார சுழற்சியைக் கொடுத்து மறுபரிசீலனை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் தனித்துவமான நுண்ணறிவுகளைச் சேர்த்துள்ளனர், இது இந்த காவியப் படைப்பை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உதவியது

———-

ஜைன ராமாயணங்கள் :-

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாக டாக்டர் ஜேக்கபி அவர்களுடைய நூலின் வாயிலாகத் தெரிகிறது. மூன்று ஆசிரியர்களின் வெவ்வேறு கதைகளை ஒட்டி இவை சமைக்கப்படதாக ஸ்ரீ ஜேக்கபி கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி, ஸ்ரீ குணபத்ரர் என்ற இருவரின் வெவ்வேறான கதைகள் ஆனாலும் அவையல்லாமல் ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனருடைய வேறான மூன்றாவது கதைகள் ஜின ராமாயணக் கதைகள் .

ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனர் இருவருடைய ராமாயணக் கதைகள் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயணக் கதைகளை பெரும்பாலும் ஒட்டியவை என்றும் மற்ற இருவருடைய கதைகளும் ஆதிகாவ்யமான ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுவதாகவும் கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி மற்றும் பிந்தையவர்களது ராமாயணம் ப்ராக்ருதத்திலும் குணபத்ரருடைய ராமாயணம் சம்ஸ்க்ருதத்திலும் இயற்றப்பட்டுள்ளது.

ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்ர்வர்த்திகள், 9 பலபத்ரர்கள், 9 வாஸுதேவர்கள் மற்றும் 9 ப்ரதிவாஸுதேவர்கள் என்று அறுபத்துமூவர் காலசக்ரத்தில் திரும்பத் திரும்பத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவர் என்பது ஜைனக்கோட்பாடு. வாஸுதேவர்கள் ப்ரதி வாஸுதேவர்களை அழிப்பவர் என்பதும் ஜைனக்கோட்பாடு.

ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். சீதை ராவணனுக்கு மகளாகப் பிறந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளால் ராவணனுக்கு அழிவு என்பதால் ராவணன் பிறந்ததுமே அவளை அப்புறப்படுத்தி விடுகிறான். பின்னாளில் தன் மகள் தான் அவள் என்று அறியாது சீதையைக் கவர்ந்த ராவணனுடன் யுத்தம் நிகழ்கிறது.

ப்ரதி வாஸுதேவனாகிய ராவணன் லக்ஷ்மணன் மீது சக்ராயுதத்தை வீசுகிறான். ஆனால் லஷ்மணன் வாஸுதேவனானதால் அது அவனைத் தாக்கவில்லையாம். வீசப்பட்ட ஆயுதம் அவனைத் தாக்காது அவன் வசமகிறதாம். வாஸுதேவனாகிய லக்ஷ்மணன் தன்னுடைய ஆயுதத்தால் தாக்குவதன் மூலம் அழிக்கப்படவேண்டிய ப்ரதிவாஸுதேவனாகிய ராவணன் அழிக்கப்படுகிறான். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ……..ஜைன சமயம் விதந்தோதும் நற்பண்புகளின் இருப்பிடமாகிய……. பலபத்ரனான ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான்.

மற்ற ஜைன புராணங்களைப் போன்று இந்த ஜின ராமாயணமும் ஒரு ப்ரதி புராணம் ( Anti – Counter – Purana) என்று ஸ்ரீ ராமானுஜன் கருத்துப் பகிர்கிறார். வைதிக சமயத்தில் படைக்கப்பட்ட ராமாயணத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவுக்கு முரணான கருத்துக்களை மறுதலித்துச் சமைக்கப்பட்டது ஜின ராமாயணம் என்று வ்யாசமும் பவுமசரிஅ என்ற நூலின் விவரணைகளும் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தையதாகிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாததான பற்பல நிகழ்வுகளையும் விவரணைகளையும் உடையதாகவும் அவற்றையெல்லாம் துலக்கி பகுத்தறிவின் பாற்பட்டு சமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ஜைனராமாயணம்.

லங்காபுரியின் மக்கள் நரமாமிசம் உண்ணும் ராக்ஷசர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை. அதே போல குரங்கினத்தவர்களாக வானரர்களும் சித்தரிக்கப்படுவதில்லை. இவர்கள் மனிதர்களும் இல்லாது தேவர்களும் இல்லாத வித்யாதரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த ராமாயணத்திலும் கூட விவரிக்கப்படும் சாஹசம் மிகுந்த நிகழ்வுகளின் பாற்பட்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யமான சக்திகளை தம் வசம் உடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். (Courtesy : Dr.Jacobi’s work…….. Chapter 15………Vanaras in reality are a race of Vidyadharas. A class of beings endowed with many supernatural qualities, if not human beings in the correct sense of the term) ஸ்வர்க்கம், நரகம், மறுபிறவி, மோக்ஷம் போன்ற கருத்தாக்கங்கள் இந்த ஜைன ராமாயணத்தில் காணக்கிட்டுகின்றன. பற்பல மொழிகளில் ஆன வைதிக சமய ராமாயணங்களில் விதந்தோதப்படுவதான ஏகபத்னீவ்ரதன் என்ற ராமனுக்கு எதிரான ஒரு கருத்தாக்கமாக ராமனுக்கு 8000 மனைவிகள் இருந்ததாகவும் லக்ஷ்மணனுக்கு 16000 மனைவிகள் இருந்ததாகவும் இவர்களுடையே வம்ச மூத்தவர்களாகிய சகரன் மற்றும் ஹரிஸேனர்களுக்கு தலா 64000 மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

———-

தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய தேசங்களின் ராமாயணங்கள்:

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் என்று இந்த வ்யாசம் சொல்லுகிறது.

தாய்லாந்து தேசத்திய ராமகதை கம்பநாட்டாழ்வாரின் ராமாவதாரம் என்ற கதையிலிருந்து கரந்துரையப்படுவதை ராமானுஜன் வ்யாசம் பகிருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்கள். வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது ஒரு காட்டு. மானுட, ராக்ஷஸ, குரங்கின என்ற படிக்கு ராமகீர்த்தியில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன என்று வ்யாசம் பகிருகிறது. கதைக்களனைப் பார்க்கையில் ராம ஜனனம் துவங்கி, சீதாராம விவாஹம், வனவாஸம், சீதையை ராவணன் அபகரித்து லங்காபுரிக்கு எடுத்துச் செல்லுவது, ராமராவண யுத்தம், ராமபிரான் அயோத்திக்கு திரும்பி அரசாளுவது, உத்தரராமாயண நிகழ்வுகள் என்று தாய்லாந்திய ராமாயணங்களின் நிகழ்வுப் பட்டியல் நீளுகிறது.

வைதிக சமயத்தைச் சார்ந்த ராமாயணங்கள் விஸ்தாரமாக மனதில் பதியும் வண்ணம் சொல்லும் நிகழ்வுகளாகிய திவ்ய தம்பதிகளின் பிரிவு அதையொட்டிய சம்பவங்கள் பின்னர் அவர்கள் ஒன்றிணைவது என்ற நிகழ்வுகள் தாய்லாந்திய ராமாயணத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களல்ல. மாறாக தாய்லாந்து ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல் அதையடுத்து நிகழும் யுத்தம் போன்றவை மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுவதாக வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள், யுத்தத்தில் கையாளப்படும் யுக்திகள் அதில் கையாளப்பட்ட அதிசயத்தக்க யுத்த தளவாடங்கள் போன்றவை தாய்லாந்திய ராமாயணத்தில் வெகு விஸ்தாரமாகச் சொல்லப்படுவதாக ராமானுஜனுடைய வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள் தாய்லாந்திய ராமாயணத்தில் விஸ்தாராமாகச் சொல்லப்படுவதன் பின்னணியை ஸ்ரீ சந்தோஷ் தேசாய் அவர்கள் குறிப்பிடுவதை ராமானுஜனின் வ்யாசம் தெரிவிக்கிறது. முற்காலத்திய தாயாலாந்திய சரித்ரம் யுத்தங்களால் வடிக்கப்படும் ஒரு சரித்ரம் என்பது கவனிக்கத் தக்கது. யுத்தங்களுக்கிடையே பிழைத்து வாழ்தல் என்பது அவர்களுடைய அக்கலத்திய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது.

கதாபாத்திரங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ராமரை விட ஹனுமான் என்றும் தாய்லாந்திய ஹனுமான் உறுதியான ப்ரம்மசாரி இல்லையென்றும் பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று ராமானுஜன் வ்யாசம் சொல்லுகிறது. லங்காபுரிவாசிகளின் படுக்கையறைகளுக்குச் சென்று அங்கு துயிலும் தையலார்களைக் கண்ணுறுவதை கம்பநாட்டாழ்வாரோ வால்மீகியோ காட்டும்படிக்கு அல்லாமல் ……… அதார்மிகமாக தாய்லாந்திய ஹனுமான் கருதாதவாறு…….. தாய்லாந்திய ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்று வ்யாசம் தெரிவிக்கிறது.

வ்யாசம் சித்தரிக்க முனையும் சில முரண்களைப் பார்க்கையில் தாய்லாந்திய ராமாயணம் அல்லது பல தாய்லாந்திய அரசர்கள் எழுதிய ராமாயணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் பகிரப்படுதல் நன்று என்று படுகிறது.

அவை என்னென்ன?

1. தாய்லாந்திய மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பது ராமனின் கதாபாத்திரம் அல்ல மாறாக ஹனுமனின் கதாபாத்திரம் என்று வ்யாசம் சொல்லுகிறது. தாய்லாந்திய ராமனின் பாத்திரப்படைப்பு வ்யாசத்தில் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு வெகுஜன மக்கள் திரளின் தலைவனாக சதாப்தங்களாக தாய்லாந்தினை ஆளும் அரசர்களின் பெயர்களில் ஏன் **ஹனுமன்** என்ற விகுதி காணப்படாது **ராம** என்ற விகுதி காணப்படுகிறது என்று சம்சயம் எழுகிறது.

2. ஒரு புறம் தாய்லாந்திய ராமகீர்த்தி மானுட, ராக்ஷஸ மற்றும் குரங்கின என்ற படிக்கு மூன்று கதாபாத்திரங்கள் தாய்லாந்திய ராமாயணத்தில் காணக்கிட்டுவதைக் கவனமாக வகை தொகை சார்ந்து வ்யாசம் பகிருகையில் ஹனுமனை பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று வ்யாசம் சுட்ட விழைவதை கவனிக்காது போக முடியவில்லை. இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தம் கற்பிக்கலாம் அல்லது சால்ஜாப்பு சொல்லலாம் தான். பின்னிட்டும் ஒரு குரங்கினத்தவன் ladies man என்று சுட்டப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஆயினும் ஒரு முழுமையான சித்திரம் தாய்லாந்திய ராமாயணங்களிலிருந்து காய்த்தல் உவத்தல் இல்லாமல் பகிரப்படுவது முறையாகும்.

3. பெயர்களைக் கையாளுதல் என்ற படிக்கு கம்பராமாயணத்திலிருந்து பெரும்பாலும் கரந்துரையப்பட்டது தாய்லாந்திய ராமாயணம் என்று வ்யாசத்தில் ஒரு புறம் பகிரப்படுகையில்……….. கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை. வ்யாசத்தின் சித்தரிப்பினைச் சார்ந்து தாய்லாந்திய ராமாயணம் பெயர்களைக் கையாள்வதில் கம்பநாட்டாழ்வாரைக் கைக்கொள்வதை ஒரு புறம் அவதானிக்கையிலேயே மறுபுறம் நிகழ்வுப் பட்டியலைப் பார்க்கையில் ஆதிகாவ்யமான மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தையும் அடியொற்றுவது தெளிவாகத் தெரிகிறது. சித்தரிப்பு ஒருவைகயாக இருக்கையில் பகிரப்படும் முடிபுகள் வேறாகக் காணப்படுவது வ்யாசத்தின் சித்தரிப்பு காய்த்தல் உவத்தல் கொண்டதோ என்று சம்சயம் ஒரு புறம் எழுகிறது.

————–

4. கோரக்பூர் கீதாப்ரஸ் என்ற ஸ்தாபனத்தினால் பதிக்கப்பட்ட ஸ்ரீமத் வால்மீகி ராமாயணப் பதிப்பின் ஏழாவது பதிப்பின் பாற்பட்டு ஒவ்வொரு காண்டமும் அதில் காணப்படும் ஸர்க்கங்களின் (அத்யாயம்) எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-

1. பாலகாண்டம் ………………………77
2. அயோத்யாகாண்டம்…………….119
3.ஆரண்யகாண்டம்…………………75
4.கிஷ்கிந்தாகாண்டம்……………..67
5.ஸுந்தரகாண்டம்………………..68
6.யுத்தகாண்டம்…………………….128
7.உத்தரகாண்டம்……………………111  (பிற்சேர்க்கை என்று 2 அதிகப்படி ஸர்க்கங்கள் தனி)

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண யுத்தகாண்டத்து விவரணைகளை முழுதாக வாசிக்கையில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் யுத்த களமும், யுக்திகளும் அதில் உபயோகிக்கப்பட்ட யுத்த தளவாடங்களும் அஸ்த்ர சஸ்த்ரங்களும் வெகு விஸ்தாரமாக ஆதிகவி வால்மீகி முனிவரால் சொல்லப்பட்டிருப்பது துலங்குகிறது. தாய்லாந்திய ராமாயணத்தின் மாறுபாடான கதையம்சமாக வ்யாசம் சுட்டப்படும் கருத்து அப்படி அந்த வாசிப்புக்கேயான ஒரு மாறுபாடான அம்சம் இல்லை என்பது இதன் மூலம் துலங்குகிறது.

இவை மேம்போக்காகத் தோன்றும் சம்சயங்கள் தான். முழுமையான சித்தரிப்பு மற்றும் முழுமையான புரிதல் தாய்லாந்திய ராமாயணத்தை முழுமையாக வாசித்து அறிவதன் மூலம் மட்டிலும் தான் கிட்டும் என்பது திண்ணம்.

தக்ஷிண பாரதத்து நாட்டார் வழக்கியலில் காணப்படும் ராமாயணக் கதைகளில் சில ஆதிகாவ்யத்தை ஒத்தும் சில அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. சில கதைகளில் ஆதிகாவ்யத்துக்கு மாறாக கதாபாத்ரங்கள் தாறுமாறாக சித்தரிக்கப்படுவதும் புலனாகிறது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம பக்தி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –ஸ்ரீ அபூர்வ ராமாயணம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் ––ஸ்ரீ ராமாயணத்தில் 18 குஹ்ய தம விஷயங்கள் –

January 22, 2024

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே மஹா மண்டபே,
மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,

———-

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்-பொன் மானைக் கொல்லல்-சீதா தேவி கடத்தல்–ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு-உரையாடல்-வாலீ அழிவு,-கடல் தாண்டல்-இலங்கை எரிப்பு-பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ஸ்ரீ ராமாயணம்

—————

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்த கரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

—————

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

————

ஒரே சுலோகத்தில் ஸ்ரீ சுந்தரகாண்டம்

யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே

க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ர புஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே

——————

ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
பால காண்டம் –77-சர்க்கங்கள் –2266-ஸ்லோகங்கள்
அயோத்யா காண்டம் –119-சர்க்கங்கள் –4185-ஸ்லோகங்கள்
ஆரண்ய காண்டம் –75-சர்க்கங்கள் –2441-ஸ்லோகங்கள்
கிஷ்கிந்தா காண்டம் –67-சர்க்கங்கள் –2453-ஸ்லோகங்கள்
ஸூ ந்தர காண்டம் –68-சர்க்கங்கள் –2807-ஸ்லோகங்கள்
யுத்த காண்டம் –128-சர்க்கங்கள் –5675-ஸ்லோகங்கள்
உத்தர காண்டம் -111 சர்க்கங்கள் -3373-ஸ்லோகங்கள்
மொத்தம் -645 சர்க்கங்கள் –23200 ஸ்லோகங்கள்

————

ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீ வால்மீகி முனிவரின் அவதார தினம் வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’
எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ வால்மீகியின் இயற்பெயர் ஸ்ரீ ரத்னாகர்.

ஸ்ரீ திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு
இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து,
ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.

———–

ஸ்ரீ ராம பக்தி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் 
1-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் 
2-ராம பக்தி பட்டாபிஷேகம் 
3-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
4-ஸ்ரீ ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
5-ராம ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
6-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
7-ஸாம்ராஜ்ய சாம்ராஜ்யம்பட்டாபிஷேகம்  

ஏழு காண்ட அர்த்தங்களும் இதில் உண்டே

கைங்கர்ய ஸாம்ராஜ்யம் -ராம பக்தி பரதாழ்வான் -குடி கொண்ட கோயி -ராமானுஜர் ஸாம்ராஜ்யம் -அர்ச்சா ஸாம்ராஜ்யம் -மோஷ -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்ய சாம்ராஜ்யம்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது 

ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன்

ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக் கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன்

கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

————

ஸ்ரீ அபூர்வ ராமாயணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

ஸ்ரீ ராமச்சந்திரன் –
கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச்ச வீர்யவான் –என்று தொடங்கி-
16-திருக் குணங்கள்-16-கலைகள் நிறைந்த பூர்ண சந்த்ரன் அன்றோ –
குண பரிவாஹ ஆத்மநாம் ஜென்மநாம் –ஸ்ரீ பராசர பட்டர் – திருக் குணங்களை வெளியிட்டு அருளவே ஸ்ரீ ராமாவதாரம் –

——————

1-கோ குணவான்
கோ குணவான் –
வசீ வதான்ய –குணவான் ருஜு சுசி ஸமஸ்த கல்யாண குண அம்ருதோதி -ஸ்ரீ ஸ்லோக ரத்னம் —
குணவான் -விசேஷ ஸுசீல்ய குணவான் என்றவாறு –
சீல க ஏஷ தவ ஹந்த—அத்ர அவதீர்ய- நநு லோசன கோசரோ பூ — ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -10-
ஆசூரா ப்ரக்ருதிகளுடைய கண்ணுக்கு இலக்கான கட்கிலி அன்றோ -பிறந்தவாறும் -என்று அனுசந்தித்தவாறே மோகிக்கப் பண்ணுமே –
நீராய் நிலனாய் –தாயாய் தந்தையாய் –அனைத்துமாயுள்ளவன் ஸ்ரீ ராமனாக திருவவதாரம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்ம ஸமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம்பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் —
உயிர்த் தோழன் -முன்பே பிடித்த தோழமை –
குகனோடும் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனோடும் அறுவரானோம் எம்முழையன் பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னோடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை — ஸ்ரீ கம்பர்
எந்தை எண்ணாமல் ஸ்ரீ விபீஷண ஆழ்வானது தந்தையாகவே உந்தை –
இவ்வாறு சீல குணம் குகன் சுக்ரீவன் விபீஷணன் இடம் காட்டி அருளி –

மேலே -சபரி இடமும் –நிஷாதாநாம் நேதா கபி குலபதி காபி சபரி -ஸ்ரீ தயா சதகம் –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் –
சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜ -என்னும்படியாய் வேடுவிச்சியாய் வைத்தே குரு சுஸ்ரூஷையிலே பழுத்து-ஞானாதிகையாய்
தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன் ஆதார அனுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப் பண்ண
அதி ஸந்துஷ்டாராய் அமுது செய்தார் -மா முனிகள் ஸ்ரீ ஸூக்திகள்
சம்யக் -என்பதே நாவுக்கு இனிதாய் இருந்த -என்றவாறு
குகனிடம் நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே -என்று மறுத்த பெருமாள்
இவள் இடம் அர்ச்சிதோஹம் த்வயா பக்த்யா -என்று உகந்து கூறி அவளுடைய சமர்ப்பணையை ஏற்றுக் கொண்டார் –
குரு ஸுஸ்ரூஷையிலே பழுத்த ஞானாதிகை யாகையாலே –
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -இது என்ன நீர்மை -என்று
ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார் ஸ்ரீ தேசிகரும் –

கோயம் குண கதர கோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -என்று
திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பாவையைப் பிரித்த பாவி வஞ்சனாக இருந்தும்
கச்ச அனுஜா நாமி –இன்று போய் நாளை வா என்றதும் இந்த சீல குணத்தைக் காட்டுமே –

சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே வனவாசோ மஹோதய என்று காடேறப் புறப்பட்டுப் போவது –
ரிஷிகள் பக்கலிலே சென்று தாழ நிற்பது
கிங்கரவ் சமுபஸ்திதவ்-என்பது
ஜென்ம விருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை உகந்த தோழன் நீ -என்பது
இப்படிகளாலே சீலவத்தையை மூதலித்தது -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ தனி த்வயத்தில் –
இவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரை வென்றதம்மா -ஸ்ரீ கம்பர் –

—————————————–

2–க வீர்யவான்
சீலவத்யை நினைத்து நீர்பண்ட மாகும் அவர்கள் இந்த வீர்யத்தை அனுசந்தித்து தரிக்க இத்தை அடுத்து அருளிச் செய்கிறார்
ஜெய ஜெய மஹா வீரன் – ஸ்ரீ ரகுவீர கத்யம்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் அன்றோ
சத்ரோ ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை –யுத்த -106-6-
வீர்யம் -எதிரிகள் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அத்தை கண்டு சிறிதும் அஞ்சாமை –
ஸுர்யம் -எதிரிகளை அனாயாசமாகக் கொன்று முடிக்கும் வல்லமை —
பராக்ரமம் -அப்படி செய்யுமளவில் தனக்கு ஒரு பங்கமும் இன்றிக்கே சகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சார நிற்றல்-
சின்னம் பின்னம் சரைர் தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருசுர் ண ராமம் சீக்ர காரிணம்-என்றும்
தே து ராம சகஸ்ராணி ரணே பஸ்யந்தி ராக்ஷஸா -என்றும்
புன பஸ்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே-என்றும்
செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும்தோறும் தித்திப்பான் -என்றும்
வியாபாரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை-
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த வீரம் அன்றோ-அசாஹாய சூரன்
மரணாந்தாநி வைராணி நிவ்ருத்தம் ந பிரயோஜனம் -இவன் ஜீவித்து இருக்கிற நாளிலே
நாம் செய்யும் நன்மையை இவன் விலக்காது ஒழிய வேணும் என்று இத்தனையே பெறப் பார்த்து இருந்தோம் –
அது அந்நாளில் பெற்றிலோம் -நாம் தேடி இருந்த அது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் –
தத் அபிசந்தி விராம மாத்ராத் –அப்ரதிஷேதம் -ஒன்றே வேண்டுவது –
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் சத்யா பராக்ரமம் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ஷட் குணங்கள் -கஸ்தூரி பரிமளம் தான் விகாரப்படாமல்
சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்துவது போலே தானே –
அபி வ்ருஷா பரிம்லாநாஸ் ச புஷ்பாங்குர கோரகா-சேதன அசேதன வாசியற சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்தும் குணமே வீர்யம் –

—————————————————–

3-—க தர்மஞ்ஞ –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத–சுந்தர -38–41-
தருமம் அறியாக் குறும்பன் இல்லையே
கருணா காகுத்ஸ்த–
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநுகம்பா ஸ்யாத் அனுக்ரோச அபி -ஏழு பதங்களும் பர்யாயம்
தர்மம் என்பதே கருணை -பர துக்கத் துக்கித்வம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் —
இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்மசரீதவ –
விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-
சரணாகத பரித்ராணமே பெருமாளுடைய தர்மம்
சர்வ அவஸ்த சரத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணைகவ்ரதி தர்மோ விக்ரஹவான் –
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்ய பாலயத் –தேவ்யா காருண்ய ரூபயா —
இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது –
அது இல்லாமையால் ராவணன் முடிந்தான் -தான் செய்யும் பிரவிருத்தியில் இருந்து விலகி நிற்பதே சரணாகதி –

——————————————————

4–க க்ருதஞ்ஞ
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் –
கதஞ்சித் உபகாரணே க்ருதே நைகேந துஷ்யதி நஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா–
லோக நாத புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி -பம்பாதீரே ஹநுமதா சங்கதோ வானரேண ஹ என்று
சுக்ரீவன் கட்டளையால் தானே பெருமாள் திருவடி சங்கம் உண்டாயிற்று -அதுக்கு க்ருதஞ்ஞதையாக பெருமாள் –
அதே போலே சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே -என்று தன் இருப்பிடம் தேடி வந்த சிறிய செயலுக்கு
க்ருத்ஞ்ஞதையாக பெருமாள் இஷுவாகு வம்சயராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை-
க்ருதம் ஞானாதி இதி க்ருதஞ்ஞ -அஞ்ஞாத ஸூஹ்ருதம் –
சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற இத்தை ஸூஹ் ருதம் என்று நாம் பேரிடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும்
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -ஆனுஷங்கிக ஸூஹ்ருதம் –ப்ராசங்கிக ஸூஹ் ருதம் –
என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -என் அடியார்களை நோக்கினாய் -என் அடியார்களின் விடாய் தீர்த்தாய் –
என் அடியார்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் –
ஆநயைநம் ஹ்ரிஸ்ரேஷ்ட தத்தமஸ்ய அபயம் மயா–
விபீஷனோ வா ஸூக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் -போன்ற இடங்கள் இதுக்கு உதாஹரணம்

—————————————————

5–க சத்ய வாக்ய
உள்ளதை உள்ளபடியே கண்டு சொல்வது சத்யம் என்னாமல்-தான் கண்டபடியே சொல்வது சத்யம் –
கயிற்றை பாம்பு என்று பிரமித்து பாம்பு என்று சொல்வதும் சாத்தியமே -மருள் அடியாக –
தான் கண்டபடியே சொல்வதும் சத்தியமாகாது -சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் –
சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் –
ராமோ த்விர் நாபி பாஷதே –
அன்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யே கதாசன
ஏதத் தே ப்ரதிஜானாமி சத்யே நைவச தே தப -கிஷ்கிந்தா-7-22-/-14-14-
ராமோ விக்ரஹவான் தர்ம –சக்ரவர்த்தி ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி இழந்தான்
அவன் இங்கு இல்லை என்று சொன்ன ததிபாண்டன் தயிர் தாழி க்கும் பேறு பெற்றுக் கொடுத்தான்
சத்யேன லோகான் ஜயதி தீனான் தானேன ராகவ
குரூன் சுச்ருஷ்யா தீரோ தனுஷா யுதி ஸாத்ரவான் -நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் -நம்பிள்ளை –

——————————————————–

6–க த்ருட வ்ரத–
விதி தஸ் சஹி தர்மஞ்ஞ –சரணாகத வத்ஸல –
நிஷ்கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தா நாயசசே–அபயப்ரதான சார ஸ்லோகம்
சர்வ அவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷண ஏக வ்ரதீ -தசாவதார ஸ்லோகம்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம்
ந து ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய பிராஹ்மனேப்யோ விசேஷத்தை –ஆரண்ய -10-10-
சத்ருசஞ்ச அனுரூபஞ்ச குலஸ்ய தவ சாத்மன
ச தர்ம சாரிணீ மே த்வம் ப்ரானேப்யோபி கரீயசி–ஆரண்ய -10–22-
சிபி சக்ரவர்த்தி கதை -இந்திரன் பருந்தாகவும் யமன் புறாவாகவும் -வந்து சோதிக்க
பருந்து சரண் அடைய உடம்பின் தசை அறுத்து கொடுத்து ரக்ஷணம்
கபோத உபாக்யானம்
வ்யாக்ர வானர சம்வாதம் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ தாதாமி ஏதத் விரதம் மம —

———————————————————

7–சாரித்ரேண ச கோ யுக்த
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
இமவ் ஸ்ம முனிசார்தூல-கிங்கரவ் சமூபஸ்திதவ் ஆஞ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவை கிம்
ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச
தம் விநா கைகேயீ புத்ரம் பாரதம் தர்ம சாரினம்-
பரத்வாஜஸ்ய சாஸனாத்
பிதுர்வசன நிர்தேசாத்
விச்வாமித்ரஸ்ய வஸனாத்
அகஸ்ய வஸனாத் சைவ
கர்தவ்யம் தைவமாஹ்நிகம்–வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டர் பெருமாள் -ஆஹ்நிகம் -பஞ்ச மஹா யஞ்ஞாதி அனுஷ்டானங்கள்
ஸ்ரீ கீதாச்சார்யனும் -ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் –வர்த்த ஏவ ச கர்மணி –
வேல்வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தை –
ஸஹ பத்நயா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் –
த்யாயன் நாராயணம் தேவம் –
மைதிலி ரமண வபுஷா ஸ்வேந ஸ்வார்ஹானி ஆராதநாநி அஸி லம்பித
ஏக தார வ்ரதன்

——————————————————–

8–சர்வ பூதேஷு கோ ஹித —
தற்கால இனிமை தான் பிரியம் -பிற்கால நன்மை பயப்பது ஹிதம் –
மேலாய்த் தாய் தந்தையும் இவரே இனி யாவாரே–தஞ்சமாகிய தந்தை தாயோடு தாணுமாய் –
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் –
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண –
கருணா காகுஸ்தன் –
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்தயா கரோதி வை —
கர்மம் அடியாக செய்து மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப்பண்ணும்
மாதாவைப் போலே ஹித்பரனாகவே செய்து அருளுகிறார் –

———————————————————————

9–க வித்வான் —
வேத வேதாந்த தத்வஞ்ஞ தனுர்வேதேச நிஷ்டித
சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஞ்ஞ ஸ்ம்ருதிமான் பிரதிபாநவான் —
வேதமுரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம்
சஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்தீதோ மானுஷே லோகே ஐஜ்ஜே விஷ்ணுஸ் சனாதன
வித்வான் -சர்வஞ்ஞன் -பகவான் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் –
பச்யதி அசஷூஸ் -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே —
வித்வான் விபச்சித் தோஷஞ்ஞ-துஷ்டனாகையாலே கொள்ள வேணும் -பெருமாள் பக்ஷம்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத கர்ஹிதம் -கைக்கொள்வதற்காக தோஷம் காணும் வித்வான் அன்றோ பெருமாள்
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் வாத்ஸல்ய நிதி அன்றோ –

———————————————————–

10—க சமர்த்த –
இளையவர்கட்க்கு அருளுடையாய் ராகவன் -தம்பி என்றும் இளைத்தவர்கள் என்றுமே சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் அருள்
அங்குல்ய அக்ரேன தான் ஹந்யாம் கிச்சன் ஹரி கணேஸ்வர –
அசமர்த்தம் விஜானாதி மாமயம் மகராலய-கொண்ட சீற்றம் ஓன்று உண்டே கடல் அரசன் மீது –

————————————————–

11–ஏக ப்ரிய தர்சன க –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் அன்றோ
ரமயதி ராம -ரூப உதார குணை -பும்சாத் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி
சந்த்ரகாந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதாரம் செய்வான்
முனிவன் உன்னைப் புக்கு வாயை மறப்பாரைப் போலே
கௌசல்யா ஸூப்ரஜா ராமா-பெற்ற திருவயிற்றுக்குப் பட்டம் கட்டுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
ஒரு நாள் முகத்தில் விழித்தாரை–குகனும் குகப் பரிக்ரங்களும்
தோள் கண்டார் தோளே கண்டார்
வா போகு வா இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ
தருணவ் ரூப சம்பன்னவ்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்
சர்வ பூஷண பூஷார்ஹா
பத்மதள பத்ராக்ஷம் –பத்மதளம் பத்ம பத்ரம் இரண்டையும் ஆழ்வார் அருளிச் செய்தது போலவே
செங்கமலத்தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை திருமேனி அடிகளுக்கே
கிள்ளிக் களைந்தவனே மனத்துக்கு இனியான் போலும்
புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன்
சஷுஷா தவ ஸும் யேன பூதாஸ்மி ரகு நந்தன -பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ

—————————————————–

12–ஆத்மாவான் க —
ஆத்மா ஜீவே த்ருதவ் தேஹே ஸ்வ பாவே பரமாத்மனி –ஜீவாத்மா தைர்யம் உடல் இயல்பு பரமாத்மா -ஐந்து பொருள்கள்
ஜீவாத்மாக்களை சொத்தாக யுடையவன் -ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையை யுடையவன் –
தேகமுடையன் –ஆத்மாக்களை தேகமாகக் கொண்டவன் –
பிதரம் ரோசயாமாச–ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
கைங்கர்யம் செய்வதே ஜீவனுடைய இயல்பான தன்மை
இச்சா க்ருஹீத அபிமதொரு தேஹ –உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்த இமையோர் தலைவன்
தேவும் தன்னையும் -திருவாய் -2-7-4-தேவு ஐஸ்வர்யம் -தன்னை -நீரான தன்மை -ஆஸ்ரித பரதந்த்ரம் -பக்த பராதீனன் –
கச்ச லோகான் அநுத்தமான் -என்ற இடம் பரமாத்மாவின் தன்மையை ஸ்பஷ்டமாக்கும் –

————————————–

14–க த்யுதிமான் —
கோ ஜீதக்ரோத-13-குணம் மேலே கஸ்ய பிப்பதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய ஸம்யுகே -16-உடன் விவரிக்கப்படும்
த்யுதி -ஓளி–ராம திவாகரன் அன்றோ -ராம ரத்னம் -மணியே மணி மாணிக்கமே –
அநந்யா ராகவேனா அஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அநந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –
நித்ய அநபாயினீ -கிருஷ்ணாஜிநேந சம்வ்ருன்வன் ச்ரியம் வக்ஷஸ் தலஸ் திதாம்
இவளோடு கூடியே வஸ்துவின் உண்மை
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பன்
திரு இல்லாத்தேவரை தேறேன்மின் தேவு
ஒளியின் ஸ்தானத்தில் திருக்குணங்களையும் கொள்ளலாம் -பரமபதத்தில் விலை செல்லா குணங்களைக் காட்டி அருளவே திருவவதாரங்கள்
பிராட்டியும் குணங்களும் சேர்ந்தே த்யுதி -புருஷகார பலத்தால் ஸ்வா தந்தர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்கும் குணங்கள் அன்றோ –
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த –சிசுக்களை ஈடுபடுத்த வல்ல அழகும் குணமும் -பால பருவம் தொட்டில் பருவம் –

—————————————————-

15–க அநஸூயக–
வாத்சல்யமும் அனசூயையும் பர்யாய சப்தங்கள் –
நற்றங்களைக் குற்றமாகக் கொள்ளும் அஸூயை இல்லாதவன் –
குற்றங்களைக் குற்றமாக கொள்ளும் அவஸ்தைக்கு மேலே நற்றமாக கொள்வதே வாத்சல்யம்
தன்னடியார் திறத்தகத்து இத்யாதி
விபீஷணன் தோஷாவாகனாகையாலே கைக் கொள்ளத்தத்தக்கவன் -பெருமாள் பக்ஷம் -சுக்ரீவ பஷமும் இல்லாமல் மாருதி பஷமும் இல்லாமல் –
மித்ரா பாவேந -தோஷோயத்யபி -குற்றம் குறைகளையே பச்சையாக கொண்டு –
பிறருக்கு யுண்டான பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமையும் அஸூயை –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ -மா முனிகள்
சாஸ்த்ரா உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று குதர்க்கம் செயபவன் அஸூயை யுடையவன் என்றுமாம்
பெருமாள் ஜபாலி சம்வாதம் – அறிவோம் –

———————————————-

13–கோ ஜித க்ரோத /16— கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஜஸ்ய ஸம்யுகே —
கோபத்தை வெல்வதாவது ஸ்வ அதீனமாக்குகை
அம் கண் மா ஞாலம் அஞ்ச
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச –
உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
சதைவ பிரிய தர்சன –சோமவத் பிரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத –
க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் வதார்த்தம் சர்வ ரக்ஷஸாம் ஜனஸ்தானத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டார்
கோபஸ்ய வசமேயிவான்-இரண்டும் உண்டே பெருமாள் இடம் –

——————————————————-

ஸ்ரீ ராமாயணத்தில் 18 குஹ்ய தம விஷயங்கள்

1-வித்யா ஸர்வாபி -வேத அங்கங்களின் பெருமை
2-பாஹ்ய த்யஜனம் -வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
3-அகில ஸத் தர்மம் நித்ய வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டியவை
4-ஆத்யாத் மிகம் –ஆத்ம விஷய ஞானம் -4–ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -திருவடி ஆச்சார்யர் -இலங்கை -பிறவி பெரும் கடல் ஸம்ஸார சாகரம் -அசோக வனம் சரீரம்
5- அர்த்த பஞ்சக ஞானம் -காண்டம் தோறும் உண்டே
6–ஸ்ரீ ரகுபதி பரத்வம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
8—கிம் அர்த்த -புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே
9-ஸ்வா பாவிக சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய
10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்
11-தத் அவதி -பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே -சரம பர்வம்
12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
13-விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்-வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே
14-குரோர் கடாக்ஷ மஹிமை
15–ஸ்ரீ ப்ராதான்யம்-ஆச்சார்ய அபிமானம் கிட்டிய உடன் ஸ்ரீ
16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
17- ஸூ வஸிதி
18—ஸத் த்யானமீ கால ஷேபம் உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை

1-வேத அங்கங்களின் பெருமை
அயோத்யா 91-19-சிஷா ஸ்வர ஸமா யுக்தம் பரத்வாஜர் சொல்ல தேவதைகள் வந்து உணவு பரத்தாழ்வான் உடன் வந்த அயோத்யா ஜனங்களுக்கும் சமர்ப்பித்தார்கள் அன்றோ

ஆயதாஷவ் -dual இல்லாமல் பன்மை -நான்கு திருத்தோள்களை ஸேவித்து திருவடி -இலக்கணம்
ஜடாயு -பெருமாள் இடம் -ஆயுஷ்மன் -விந்தோ நாம முஹூர்த்தம் -ராவணான்கொண்டு -காணாமல் போனாய் மாறாமல் அப்படியே கிடைக்கும் -ஜ்யோ திஷம்

2-வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
தசரதனையும் ஒரே இடத்தில் நிந்தை -ஜாபாலி வார்த்தை கேட்டு

புலையற மாகி நின்ற புத்தொடு சமணமெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம்?
தலையறுப்புண்டும் சாகேன் சத்தியம் காண்மின் ஐயா!
சிலையினால் இலங்கை செற்றதேவனே தேவனாவான்.
3- நித்ய வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டியவை
ஐயர் பார்த்து வைத்த திருக் கல்யாணம்
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை -அனுஷ்டித்துக் காட்டிய பெருமாள்
ஒருவருக்கு ஒருத்தி -நல்ல ஒழுக்கம்
அரச தர்மங்கள் -ராமன் பரதன் ஸம்வாதம்
4–ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -திருவடி ஆச்சார்யர் -இலங்கை -பிறவி பெரும் கடல் ஸம்ஸார சாகரம் -அசோக வனம் சரீரம்
ஸத்வ குணம் விபீஷணன் -ரஜோ குணம் கும்பகர்ணன் -தமோ குணம் சூர்ப்பணகை
நல்ல சிஷ்யனைத்தேடி ஆச்சார்யன் -சங்கு சக்கர லாஞ்சனை -செய்து உபதேசித்து பரமாத்மாவிடம் சேர்த்து வைக்கிறார்

5- அர்த்த பஞ்சகம் -காண்டம் தோறும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும்  வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்
  • ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
      • நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
      • முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
      • பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
      • கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
      • முமுக்ஷுக்கள் –  ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
  • ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
      • பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
      • வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
      • விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
      • அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும்  இருத்தல்
      • அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
  • புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
    • தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
    • அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
    • காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
    • ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
    • பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
  • உபாயம் – வழி –  ஐந்து வகை உண்டு:
    • கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
    • ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
    • பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
    • ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும்  இதுவே நெறி.  இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
    • ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html பார்க்கவும். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.
  • விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
    • ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
    • பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
    • புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
    • உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
    • ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம்  முதலியவை.

வில் தடை உடைத்து சீதா கல்யாணம் -பால காண்டம் –
பாரத கைங்கர்யம் -கைகேயி வரன்கள் விரோதி -பாதுகை -அடி சூடும் அரசு -உபாயம் சரணாகதி -அயோத்யா ஆணிடம்
ஆரண்ய காட்டும் -ரிஷிகள் -அரக்கர்கள் தடை -சரணாகதி உபாயம் கர தூஷணாதிகள் வதம்
கிஷ்கிந்தா வாலி தடை -சரணாகதி –
ஸூந்தர காண்டம்
யுத்த காண்டம் -ஆச்சார்யர் பரிந்துரை உபாயம் -ராவணன் போல் பாபக்கூட்டங்கள்

6–ரகுபதி பரத்வம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
காகாஸுர வ்ருத்தாந்தம்–வித்தகனே நின் அபயம் -ஜடாயு மோக்ஷம் -ப்ரஹ்மா-ருத்ரன் -இந்த்ரன் -யாராலும் -சர பலம் -மிக்கது

7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
பால -தேவர் நாராயணன் -விசுவாமித்திரர் இடம் -திரிசங்கு -பரசுராமன் இடம் சக்ரவர்த்தி
அயோத்யா -லஷ்மணன் -பெருமாள் இடம் -பரதன் சரணாகதி
ஆரண்யன் -ரிஷிகள்
கிஷ்கிந்தா சுக்ரீவன்
ஸூ ந்தர -காகாசுரன் -அடையாளமாக பிராட்டி
யுத்த -விபீஷணன் சரணாகதி-கண்டவர் பேச்சைக் கேட்க்காமல் கண்ட திருவடி பேச்சையம் கேட்க்காமல் மித்ர பாவேந –ஸக்ருதேவ –ஏதத் விரதம் மம

8—புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை -அவன் உகப்புக்காகவே கைங்கர்யம்
கைங்கர்ய சாம்ராஜ்யம் இழக்காமல் லஷ்மண லஷ்மி ஸம் பன்னன்

9-சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய -பூ பரிமளம்-மணி தேஜஸ் –
திருவடி இடம் -லஷ்மணன் பேசுவது அஹம் அஸ்ய அவரோ ப்ராதா -குணைர் தாஸ்யம் உபாகதா -பெருமாள் பார்வையில் தம்பி -நான் அவருக்குத் தொண்டன்

10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்–போக்த்ருத்வ சேஷத்வம் போல் அன்றே போக்யத்வ பாரதந்தர்யங்கள்
பரதாழ்வான் -உயர்ந்தவன் -பாதுகா தேவி மிக உயர்ந்தவள்
லஷ்மணன் -25-%-சீதா –50-%-பரதன் -75- %-பட்டாபிஷேகம் செய்து கொள்ளவில்லையே -பாதுகா தேவி -100%-சொன்னது எல்லாம் செய்து இட்ட வழக்காக இருந்ததால் –

11-பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே-சரம பர்வம் -பாகவத பாரதந்தர்யம் -சத்ருக்ந ஆழ்வான்

கச்சதா  மாதுல குலம் பரதேன ததா அநக சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-

அநக -தோஷம் அற்றவரும்
நித்ய சத்ருக்ந-எப்போதும் எதிரிகளான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருப்பவரும்
சத்ருக்ந -எதிரிகளை மண் உண்ணப் பண்ண வல்லவர் ஆகையாலே சத்ருனன் என்று பெயரிட்டவருமானவர்
ப்ரீதி புரஸ்க்ருத -அன்பினால் முன் உந்தப்பட்டவராய்
ததா -பரதன் சென்ற அப்போதே
மாதுல குலம் -மாமாவின் வீட்டுக்கு
கச்சதா -போகா நிற்கிற
பரதேன -பரதனால்
நீத -அழைத்துச் செல்லப் பட்டார் –

கச்சதா –
போகா நிற்கிற என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே போகிற விடத்தில்
தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாதல்
இங்கே மாதா பிதாக்களை கேள்வி கொள்ளுதல்
பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல்
இவ்வளவும் அன்றிக்கே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாத படியாலே போனான் -என்கை-
மாதுல குலம் –
யுதாஜித் அழைத்தது அவனை யாகையாலே போக்கில் உத்தேச்யதையும் அவனுக்கு .
இவனும் அவன் உத்தேச்யனாய் போனான் என்கை –

பரதேன –
சக்ரவர்த்தியும் துஞ்சி
பெருமாளும் ராஜ்யத்தைப் போகட்டுப் போய்
இளைய பெருமாள் அடிமை செய்ய வேணும் என்று தொடர்ந்து போய்
சத்ருந ஆழ்வானும் -ராமனை அல்லாது அறியாத பரதா -நின்னை அல்லது அறியேன் என்று இருக்கும் தசையிலும்
ராஜ்யத்தை பரிக்கக்-தாங்கக் -கடவன் என்று ஆயிற்று ஸ்ரீ வசிஷ்ட பகவான் திரு நாமம் சாத்திற்று –
பரதன் இதி ராஜ்யஸ்ய  பரணாத்-என்றான் இ றே ஸ்ரீ சதா நீகன்-

ததா -அப்போதே
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதம் உண்டானால் பிரித்து முஹூர்த்தம் இட்டுப் போக ப்ராப்தமாய் இருக்க
அவன் போனதுவே முஹூர்த்தமாகப் போனான் -என்கை –
கச்சதா -என்கிறதிலே அர்த்த சித்தம் அன்றோ –
ததா என்றது என் என்னில்
அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -தனக்கே ஒரு பிரயோஜனம் இன்றி சென்றமை சொல்லி –
இங்கு அதுக்கு ஆச்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -தான் ஒருவன் உளன் என்கிற நினைவும் இல்லாமல் –
ஆகையாலே புநருக்தி தோஷம் இல்லை
சேஷத்வ விரோதி இ றே இரண்டும் –

அநக –
பாபம் அற்றவன்
அகம் இல்லாதது இவனுக்கே இ றே
அகம் -உத்தேச்ய விரோதி
இவ்விடத்தில் அகமாவது ராம பக்தி
இத்தைப் பாபம் என்னப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி யாகையாலே புண்யமும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -சாந்தோக்யம் -8-13-1-என்று பாப சப்த வாஸ்யமாய் ஆயிற்று இ றே –
ஆகையால் பரத அநு வ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம சௌந்தர்யத்தில் கால் தழுவும் அதுவும் பாபமாம் அத்தனை இ றே –
ராமோ பிரமாத மம கார்ஷீ -என்று ராம அநு வ்ருத்திக்கு இடைச் சுவராக சொல்லிற்று இ றே ராம சௌந்தர்யத்தை –
பரத அநு வ்ருத்திக்கு இடைச் சுவர் என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே

சத்ருக்ந –
பிள்ளைகள் உடைய சந்நி வேசங்களைப் பார்த்து  திரு நாமம் சாத்துகிற ஸ்ரீ வசிஷ்ட பகவான்
பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லராகத் தோற்றுகையாலே ராமன் -என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே -லஷ்மணன் -என்றும் திரு நாமம் சாத்தினாப் போலே
இவனுடைய சந்நி வேசததைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கையாலே-சத்ருக்னன் -என்று திரு நாமம் சாத்தினான் –

நித்ய சத்ருக்ந –
பாஹ்ய சத்ருக்களைப் போலே அன்றிக்கே ஆந்திர சத்ருக்களான இந்த்ரியங்களை ஜெயித்து இருக்கும் -என்கை –
அவ் விந்த்ரிய ஜெயத்தின் எல்லை எவ்வளவோ என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்கிற ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு ஒண்ணாது ஒழிகை –
அதாகிறது
பெருமாளைப் பற்றும் போதும் -தன உகப்பாலே யாதல் –
அவருடைய வை லஷ்ண்யத்தாலே ஆதல் அன்றிக்கே
தனக்கு உத்தேச்யனான இவன் உகந்த விஷயம் என்று பற்றுகை –

நீத –
அழைத்துச் செல்லப் பட்டான் –
ராஜாக்கள் போகும் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமோபாதி
அவன் கொடுபோகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்டமாய் இருக்கும் இ றே
அது போல் அன்றிக்கே  ஜாதி குணங்களோ பாதி -கடமும் கடத்வமும் போலே -போனான் –

ப்ரீதி புரஸ்க்ருத –
அன்பினால் முன் தள்ளப் பட்டான் –
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தி கர்த்தவ்யம் என்று போனான் அல்லன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-27- என்று போன இளைய பெருமாளைப் போலே போன இடத்தில்
சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ணலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி பிரேரிக்க போனான் –
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே விழுக்காட்டோ பாதி இ றே சித்திப்பது

நீத -என்கையாலே
சேஷத்வத்தில் அசித் கல்பனாய் இருக்கக் கடவன் -படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
அடிமைத்தனத்தில் அசித் சமனாயும் கைங்கர்யம் செய்யும் பொழுது சேதனத்வமும் -பெருமாள் திரு -4-9-
ப்ரீதி புரஸ்க்ருத -என்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சைதன்ய பிரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை-
அநக -என்கையாலே
பாவநத்வத்தாலும்
நித்ய சத்ருக்ந-என்கையாலே
போக்யதையாலும்
அவனையே பற்றினான் -என்னவுமாம் –
அநக நித்ய சத்ருக்ந  -என்கிறதுக்கு பிரயோஜனம்  என் என்னில்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி
அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத படியானை -என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –
இதுவே பிரயோஜனம் ஆனால் பரதனுக்கு பெருமாள் விட சொன்ன மிகை  எல்லாம் பொறுக்கும் இ றே-

12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
விபீஷணன் சொல்படி பெருமாள் -தர்ப்ப சயனம் -கருணைக்கடல் கரும் கடலை நக்கி – சமுத்திர ராஜன் இடம் சரணாகதி –
கைம்முதல் இல்லாமல் இருக்க வேண்டுமே -து பெருமாள் இடம் இல்லையே
என் நான் செய்கேன் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இருக்க வேண்டுமே
பக்தி பாரவசயத்தால் ஆழ்வார்கள் சரணாகதி –என் நான் செய்கேன்
ஆச்சார்யர்கள் ஞாணாதிக்யத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
அஸ்மாதாதிகள் அஞ்ஞானத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
ஒரே தொடர் மூவருக்கும் ஸ்வரத்தால் மட்டுமே மாற்றி –

13- விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்–வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே 
நல்ல பதத்தால் -கொண்ட பெண்டிர் –
நித்ரா தேவி -தூக்கம் இல்லாமல் -இருக்க வேண்டும் -14 வருஷம் அருகி வராத
உறங்கா வில்லி -இவனுக்கு
அதே பெயரில் உறங்கா வில்லி தாஸர் ஆச்சார்யர்
அயோத்யா மக்கள் தூக்கத்தால் பெருமாளை இழந்தார்கள்

14-குரோர் கடாக்ஷ மஹிமை
ஏக கண் -ஸஹஸ்ர கண்களும் -மூன்று -அஷ்ட -சேர்ந்து வந்தாலும் ஒப்பாகாதே
சபரி -சாக்ஷியாகவே பெருமாள் -சபரி மோக்ஷ சாக்ஷி பூதா -ரகுவீரா கத்யம்
முனி ஜன பஜன் –முஷித ஹ்ருதய கலுஷம் -ஸ்ரீ முஷ்ணம் -பாபங்கள் நமக்கே திரியாமல் களவு பண்ணுவதே முஷணம்

ஆச்சார்யர் திருவடி அடைந்தார்கள் என்றே சொல்கிறோம்-தானே வைகுந்தம் தரும் -அன்றோ

15–ஸ்ரீ ப்ராதான்யம்
சூர்ப்பணகை -ராவணன் இழக்க –காகாசூரன் விபீஷணன் பேறு -இவள் ஸந்நிதியால்
ரக்ஷணம் -வார்த்தை கைவிட மாட்டேன் -உயிரை விட்டாலும் பிராட்டி ஆதி சேஷனை விட்டாலும்
இத்தைச் சொல்லியே சமாஸ்ரயணம் செய்து வைக்கிறார்கள்
தன்னடியார் –சிதைகு உரைக்குமேல் –ஸ்திரமாக இருக்கிறதா பார்க்கவே -என்னடியார் அது செய்யார் என்பானே

ராமானுஜர் திருமலையில் சீதா ராமன் பிரதிஷ்டை
புனர்பூசம் புறப்பாடு உண்டு

16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
தத் தஸ்ய ஸத்ருசம் பவத்
சொல்லினால் சுடுவேன் -வில்லின் மாசு படக்கூடாதே
ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை ராமாநுஜர்

17- ஸூ வஸிதி
குண அனுபவம் பண்ணி -தேசோயம் சர்வ காம துக்
பவத் விஷய வாஸினா -ரிஷிகள் பெருமாள் இடம்
ராமானுஜர் ஆறு கட்டளைகளில் ஓன்று திவ்ய தேசத்தி வஸிக்க வேண்டும்
அன்று சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றி –

18-உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை
நிச்சயதார்த்தமான பெண் போல்
சீதா பிராட்டி -கணையாழி பெற்று நம்பி இருந்து சூடா மணி சமப்பித்து பொறுத்து இருந்தது போல்
சங்கு சக்கர லாஞ்சனை பெற்று நிம்மதியாக இருப்போம்

முழு ராமாயணத்திலும் ஒவ்வொரு குஹ்ய ரஹஸ்யம் சொல்லி 18 தடவை ஆவ்ருத்தி திருமலை நம்பி ராமானுஜருக்கு அருளிச் செய்தாராம்

———–

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

———————–

ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-

தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ
ராமம் ரத்னமயே பீடே ஷஹஸீதம் ந்யவேசயத்
வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப
காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா
ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா
யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை

———-

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப்பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகப் பெருமாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீராமருக்கு சங்கத் தமிழ் மாலை – ஸ்ரீபாவைப்படி ஸ்ரீராமாயணம்— ஸ்ரீசுஜாதா தேசிகன் அவர்கள் தொகுத்து அருளியது

April 9, 2023

ஸ்ரீ பால காண்டம்

1. உத்தமன் யார் என்று நாரதரை வால்மீகி கேட்க
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
உதவ
தேவாதி தேவன் சீர் மல்கும்
அயோத்தியில்
கதிர் மதியமாக
பாரோர் புகழ அவதரித்தான்.
( கதிரவன் குலத்தில் ; நிலவின் குணத்துடன் )

2. தசரதனிடம்
’யாம் வந்த காரியம் –
தவத்தவரை காக்க
ஆற்றப் படைத்த மகன்
ராமனை கொடு என்று விஸ்வாமித்திரர் கேட்க,
தசரதன் அவன்
பூவைப் பூ வண்ணா
என்று மறுக்க
வசிஷ்டர்
இளம் சிங்கம்
ராமரை அனுப்புங்கள் என்று கூற,
ராமனை அனுப்பி வைத்தான் தசரதன்.
3. பொற்றாமரை அடி
கல்லில் பட அகலிகையின் மேல்
சாபம் இழிந்தது.
4. திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
ராமன்   சீதையை நோக்க —
செங்கண் சிறுச் சிறிதே …
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை
நோக்கினாள்.

5. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல,
வில் அரைவில் ஆக, ஜனகரின் புதல்வி சீதை ராமருக்கு
செல்வ பெண்டாட்டி
ஆனாள்.
———-
ஸ்ரீ அயோத்தியா காண்டம்
6. தசரதன் ராமனுக்கு இளவரசு பட்டத்தை பரிசுரைக்க,
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணை மேல் இருந்த
தசரதனிடம்
ஒருத்தி ஓர் இரவில்
இரண்டு வரம்
வேண்டுவன கேட்க,
உன்மகன் தான் என்று கேள்விப்பட்டு
ஒருத்தி
வாய் நெகிழ்ந்து துடிக்கத்
தாயைக் குடல் விளக்கம் செய்த
காகுத்தன்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
சீதையுடன்
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று கானகம் செல்ல,
உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
என்று லக்ஷ்மணன் முன் சென்றான்.

7.கறவைகள் பின் செல்லும் கன்றுகள் போல்,
நாடெல்லாம்
பின் சென்றது.

8.’பேய்ப் பெண்ணே!’
என்று அந்த ஒருத்தியைப் பரதன் வசை பாடி, காட்டுக்குச் சென்று ’அண்ணா !
வல்லீர்கள் நீங்களே !துன்பதுக்கு காரணம்
நானே தான் ஆயிடுக என்று
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று என்று கூறி, 
ஆற்றாது வந்து அடி பணிந்து  நிற்க,
செம்பொற் கழலடியை சம்மானமாக’
கொடுத்தனுப்பினார் ராமர்.

9.கள்ளம் தவிர்ந்து
ராமன்
உள்ளம் புகுந்த
குகனை
‘உம்பியும் நீயும்’
என்று சொந்தம் கொண்டாட,
கூடி இருந்து குளிர்ந்தான்.

10.பாதுகா ராணியைக்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்று சீரிய சிங்காசனத்தில்
அமர்த்தினான் பரதன்.
———-
ஸ்ரீ  ஆரண்ய காண்டம்
11. என்றென்றுன் சேவகமே
என்று இருக்கும்
முனிவர்களும் யோகிகளையும்
ராக்ஷசர்களிடமிருந்து
ஆழி போல் மின்னி சீறி அருளினான்.

12. பேய்முலை நஞ்சுண்டு
நற்செல்வன் தங்காய் போல்
வந்த சூர்ப்பணகையின் அகந்தை
அபிமானத்தைப் பங்கமாக்கினார்.

13. போதரிக் கண்ணினாய் (மான் போன்ற கண் உடையவள் )
மாயமானை வேண்டுமெனக் கேட்க, மான்பின் எம்பெருமான் ஓட,
வல்லை உன் கட்டுரைகள்
கேட்ட இளைய பெருமான்
மாற்றமும் தாராமல், வாசல் திறவாதார்
என்று சொல்லி விட்டு சென்றவுடன், சீதையைப்
பொல்லா அரக்கன்
அபகரித்தான்.

14. புள்ளரையன்
ஜடாயுவைப் பார்த்த ராமர்
ஆவாவென்று
அழுது, பின்
ஆராய்ந்து எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று
மோட்சத்தை நல்கினான்.

15. சபரி ராமரைப் பார்த்து
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
என்று
முழங்கை வழி வாரக்
கொடுத்த நற் பழங்களை ராமர் சுவைத்த பின் ,
‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’
என்று அவள் ஆசாரியன் திருவடியை அடைந்தாள்.
————–
கிஷ்கிந்தா காண்டம்
16. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்த
ராமரைப் பார்த்த அனுமார்
கோது கலம் அடைந்து உய்யுமாறு எண்ணி தன் நேய நிலைக் கதவத்தை திறந்து
அதில் ராமரைப் பிரதிஷ்டை செய்தார்.
17. சீதை
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிக்கக்
கீழே விழுந்த
காசும் பிறப்பும்
சுக்ரீவன் காண்பிக்க ராமர் மனதில் சீதை
பரந்தன காண் ( இடமெங்கும் பரவி யிருந்தது )
என்றென்றும் உன் சேவகமே
என்றார் ராமர்.

18. வாலியை ஒரே அம்பினால் அடிக்க அது
சார்ங்க முதைத்த சரமழை போல்
வீழ்த்தியது.

19. இனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
என்று சுக்ரீவனை எழுப்பி,
தென் இலங்கைக் கோமானைச் செற்ற
அரி என்ற பேரரவத்துடன்
வானரங்கள் கைங்கரியம் செய்ய வந்தது.

20. பாலன்ன வண்ணத்து
கணை யாழியை ராமர் அனுமானிடம் கொடுக்க சீதையைத் தேட நிமிர்ந்து
முழங்கிப் புறப்பட்டார்.
————–
ஸ்ரீ சுந்தர காண்டம்

21. ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
என்பதைப் போல அனுமார் கடலைத் தாண்டினார்.

22. ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
தசரதன்
மருமகளே ! திருவே
என்று சீதையைக் கண்ட நாள் அனுமாருக்கு
‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாக’ இருந்தது.

23. ஆழி போல் மின்னிய
கணை யாழியைப் பெற்றுக்கொண்ட சீதை
‘மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்’
என்பது போல மகிழ்ந்தாள்.

24. ராவணன் அனுமார் வாலை தீயினால்
குடல் விளக்கம் செய்த போது,
இஷ்வாகு குலத்தின்
அணி விளக்கான
சீதையின் அருளால் தீ அனுமானுக்கு குளிர்ந்து, இலங்கையைத் தூசாக்கியது.

25. மாமாயன் மாதவன் வைகுந்தனை
இப்போதே எம்மை காக்க வரச் சொல்லு என்று
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே என்று
எதையும் கொடுக்காமல்,
கிங்கிணி வாய்ச் செய்த
தாமரைப் பூப் போன்ற சூடாமணியைக் கொடுத்து அனுப்ப, அனுமார்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
என்பது போலப் பறந்து, ராமனிடம் சமர்ப்பிக்க
வருத்தமும் தீர்ந்து நாடு புகழும் பரிசாக
அனுமனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
—————-
ஸ்ரீ யுத்த காண்டம்
26. கடல் வழி விடாமல் தடுக்க உலகினில் ராமர்
தோற்றமாய் நின்ற சடர் போல
காட்சி அளிக்க, கடலரசன்
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
என்று சரணாகதி செய்ய, பாலம் கட்டப் பட்டது.

27. பொல்லா அரக்கனை
துறந்து,
ஆற்றாது வந்து உன்னை அடி பணிந்த
என்ற விபீஷணனனை
‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’
என்பது போல
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
என்று அபயம் அளித்தார் ராமர்.

28. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனை
கன்று குணிலா எறிந்தாய் என்பது போல வீழ்த்தி,
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனாக
இந்திரஜித்தை வீழ்த்தி,
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து,
மண்டோதரிக்கு
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையனாகக் காட்சி யளித்தார்.

29. வங்கக்கடல் கடைந்து
பாலம் கட்டி ராவணனை வீழ்த்த
யாம் வந்த காரியத்தை முடித்த ராமரை,
உக்கமும் தட்டொளியும் தந்து
தன் மணாளனை மீண்டும் கைபிடித்த சீதையுடன்
சீதாராம பட்டாபிஷேகம் அயோத்தியில்
நீங்காத செல்வம் நிறைந்து நடை பெற்றது.

30. மனத்துக்கு இனியானை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால்,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்யும் பேறு பெற்று
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.
—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமாயணம் பற்றிய முத்துக்கள் முப்பது–தொகுப்பு: ஸ்ரீ எஸ்.கோகுலாச்சாரி

April 8, 2023

முத்துக்கள் முப்பது

பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீராமாயணமும், மகாபாரதமும்.
ஸ்ரீராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள்.
காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு தான் இராமாயணம்.
ஒரு அட்சரத்திற்கு ஆயிரம் ஸ்லோகங்கள் வீதம் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்டது ஸ்ரீராமாயணம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.
ஆத்மாவை பரமாத்மாவிடம் சரணடையச் செய்துவிட்டால் அதற்குப் பிறகு அவனுக்கு எவ்விதமான துன்பங்களும் கிடையாது.
அந்த ஆத்மாவுக்கு அடைக்கலமாக பெருமானே விளங்குவார் என்பதுதான் வேத நூல்களின் சாரமான கருத்து.
அந்தக் கருத்து எல்லோருக்கும்  புரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்ரீராமாயணம் இயற்றப்பட்டது.
ஸ்ரீராமாயணத்தை, ‘‘சரணாகதி சாஸ்திரம்” என்று தான் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

1. தாயிற் சிறந்த கோயில் இல்லை

வேத இதிகாசங்களில் அடிப்படையான கருத்து ‘‘அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்” என்பதுதான்.
இது இந்திய நாட்டிற்கே உரிய அடிப்படையான விஷயம்.
மாதா, பிதா,  குரு, தெய்வம் என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்,
வடமொழியில் மாத்ரு  தேவோ பவ; பித்ரு தேவோ பவ ;ஆச்சார்ய தேவோ பவ ; என்று வருகிறது.
தைத்ரிய உபநிஷத்தின் உயிர் வாக்கியம் இது.
இந்த தர்மத்தின் முதல் சொல் மாதா தான்  தெய்வம் என்பது.
தாயில் சிறந்த கோயில் இல்லை என்ற வாக்கியத்தின் படி நடந்தவன் ஸ்ரீராமன்.

2. பகவானைப் பெற்றெடுத்த கோசலை

ஸ்ரீராமபிரான் கோசலையின் மணிவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து,
இந்த புண்ணிய பூமியிலே, சித்திரை மாதம், வளர்பிறை நவமி நன்னாளில் அவதரித்தான்.
எல்லா நற்குணங்களையும் தன்னிடத்திலே பெற்றவள்  கௌசல்யா தேவி.
வேதங்களால் அறிவதற்கு அருமையானவனும், கருமேகம் போன்ற நிறமும் மின்னலைப் போன்ற ஒளியும் படைத்த  பகவானை,
எல்லா உலகங்களும் இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறும்படியாக இந்த உலகத்தில் பெற்றெடுத்தாள் என்று பாடுகிறார்.

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை

3. தெய்வத்தை பயந்த தெய்வம்

இதில் “திறன் கொள் கோசலை” என்கின்ற வார்த்தை மிக முக்கியமானது.
ஒரு குழந்தையைப்  பெற வேண்டுமானால் அதற்கான திடமான ஆரோக் கியமும் பலமும் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும்
ஒரே ஒரு சாதாரண குழந்தையைப்  பெறுவதற்கு இத்தனை திடகாத்திரம் தேவை என்று சொன் னால்,
உலகத்தை எல்லாம் தன்னுடைய உடலாகக்  கொண்ட  எம் பெருமானைப்  பெற்றெடுப்பதற்கு எத்தனை திடகாத்திரம் வேண்டும்.
கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய  மூன்று தாய்மார்களில்  இந்த   திடம் கோசலைக்கு இருந்ததால்
பகவான் கோசலையின் மணி வயிற்றை தான் பிறப்பதற்கு ஏற்ற கருவறையாகத் தேர்ந்தெடுத்தார்.
பகவானைப் பெற்றெடுத்த கருவறையாக திருவயிரை உடையவள் என்பதால் தேவர்கள் அனைவரும்
கோசலையை தெய்வத்தை பயந்த தெய்வமாகப் போற்றினர்.

4. முதல்வனைப் பெற்றவள்

குகனிடம் கோசலையை அறிமுகப்படுத்தும் போது பரதன் சொல்வான்.  ‘
‘எல்லாஉலகங்களையும் யார் படைத்தவனோ, அப்படிப்  படைத்தவனையே தன் வயிற்றின் மூலம்
படைத்த பெருமை உடையவள் கோசலை”

சுற்றத் தார், தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.

5. கோசலை பெயர் சொல்லி ராமனுக்குத் தாலாட்டு

கண்ணனுக்கு தாலாட்டு பாடல் உண்டு.
ஆனால் இராமனுக்கு இல்லையே என்ற குறையைத்  தீர்த்து வைத்தவர் குலசேகர ஆழ்வார்.

மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

என்று ராமனின் திருத்தாயாரான கோசலையின் பெருமையைக்  கூறி
திருக் கண்ணபுரம் பதிகத்தின்  தாலாட்டைத் தொடங்குகிறார்.

6. கோசலையின் பெயரோடு சுப்ரபாதம்

தாலாட்டு பாடிய குழந்தையை திரும்பவும் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்ப வேண்டும்.
திருப்பள்ளி எழுச்சிக்கு சுப்ரபாதம் என்று பெயர்
அந்த சுப்ரபாதமும் கோசலையின் பெயரில்தான் தொடங்குகிறது என்பது
கோசலைக்கும்  ராமனுக்கும் உள்ள தாய் மகன்  பிணைப்பை, பக்தி உலகம் எவ்வாறு போற்றுகிறது என்பதைக்  காட்டுகிறது.
திருப்பள்ளி எழுச்சியின் முதல் வார்த்தையே கௌசல்யா சுப்ரஜா என்று தான் ஆரம்பிக்கிறது.

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

இன்றைக்கு பல்வேறு திருக் கோயில்களிலும் சுப்ரபாதங்கள் இசைக்கப் படுகிறது.
அந்த சுப்ரபாதங்களின் முதல் ஸ்லோகம் பெரும்பாலும் இந்த ஸ்லோகமாகவே இருக்கும்.
“இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன்.
ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை (கௌசல்யா) எத்தனை அரிய பேற்றினை பெற்றவள்.

7. கோசலை ஒரு சிறந்த தாய்

இறைவனே மகனாக அவதரித்தாலும் கூட, தாயின் கடமையாகிய தர்ம உபதேசத்தை செய்து கொண்டே
இருக்க வேண்டும் என்று உலகத் தாய்மார்களுக்கு காட்டியவள் கோசலை.
ராமன் காட்டுக்கு புறப்படும் போது அவள் ஒரு வார்த்தையை சொல்லுகின்றாள்.

யம் பாலயஸி தர்மம் த்வம் திருத்யா சநியமேன ச |
ஸவை ராகவசார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

“நீ தர்மத்தின் வழியில் நின்று, சத்தியத்தைக்  காப்பதற்காக இந்தக்  காரியத்தை செய்கிறாய்.
மிகுந்த மகிழ்ச்சி. நீ எந்த தர்மத்தை காப்பாற்றுகிறாயோ, அந்த தர்மம் உன்னை காப்பாற்றும்
(தர்மஸ்த்வாம் அபிரக்ஷது) என்று ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றாள்.

பட்டத்தைத் துறந்து, தன்னுடைய மகன் காட்டுக்குச் செல்கின்றானே என்ற வேதனை ஒருபுறம் இருந்தாலும் கூட,
அதனை வெளிக் காட்டாது ஆசீர்வதித்து அனுப்புகின்ற உறுதியான தாயின் கடமைக்கு அடையாளமாக
இங்கே கோசலையைப் பார்க்கிறோம்.

8.எல்லோருக்கும் நல்ல உறவு

ராமாயணத்தில் ராமனை நேசித்த அடுத்த தாய் சுமித்திரை.
ஸு என்றால் நல்ல , மங்கலகரமான என்று பொருள்.
மித்ரா என்றால் உறவு.
ஸு மித்ரா என்றால்  நல்ல உறவு என்று பொருள்.
யாரிடமும் பகைமை பாராட்டாத உயர்ந்த உள்ளம் கொண்டவள்.
கோசலையாவது தன்னுடைய மகன் காட்டுக்குப் போகிறானே என்று கொஞ்சம் தயங்கினாள்.
அந்த தயக்கத்தை அவளுடைய பேச்சிலிருந்து பார்க்கலாம்.
ஆனால் தசரதன் கைகேயிக்கு அளித்த வரங்களின்படி இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றபோது
எவ்வித சலனமும் இன்றித் தனது மகனான இலக்குமணன் இராமனுடன் கூடச் செல்வதை விரும்பியவள் சுமித்திரை.

9. ராமனிடம் கொண்ட அன்பு

இரண்டு அற்புதமான பாடல்கள்.
ஆகாதது அன்றால் உனக்கு -அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை – என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள்.

அந்தக் காடு தான் உனக்கு அயோத்தி.
ராமனே தசரத மன்னன்.
சீதையே உன்னுடைய தாய்.
இவ்வாறு எண்ணிக் கொண்டு ராமருடன் செல்.
இனி இங்கே ஒரு நொடி நிற்பதும் தாமதிப்பதும் குற்றம் என்று சொல்லி
தன்னுடைய மகனை அனுப்புகிறாள் என்று சொன்னால்
ராமனிடம் சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்பது விளங்கும்.

10. மனதில் தைத்த வாளை அகற்றினான்  

அடுத்த பாடலிலே சொல்வது நம் மனதை உருக்கும். கண்ணீர் வரும்.

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின்ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள்.

மகனே, நீ ராமன் பின்னே செல்.
தம்பி என்னும் தகுதியானல்ல. ஒரு அடிமையாய் சொல்.
அவன் அயோத்திக்கு திரும்பி வந்தால் நீயும் அவனுடன் வா.
அப்படி அவன் வரவில்லை என்று சொன்னால் அவனுக்கு முன்னர் நீ இறந்து போ”
இதன் மூலம் ராமனிடத்திலே சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்று தெரியும்.
ராமனும் அத்தகைய அன்பு உடையவன் தான்.
ராமன் காட்டுக்கு போவதை நினைத்து சோர்ந்து சுமித்திரை கீழே விழுகின்ற பொழுது அவளைத் தாங்கி,
அவளுடைய மனதை அரித்து கொண்டிருக்கும் துக்கம் என்னும் வாளை ஆறுதல் கூறி ராமன் அகற்றினான்.

‘‘சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்” என்பது கம்ப சித்திரம்.

11. இராமனும் கைகேயியும்

மூன்றாவது தாய் கைகேயி.
அது என்னவோ தெரியவில்லை,
எல்லோருமே கைகேயியை கொடுமைக் காரியாகவே சித்தரிக்கின்றனர்.
கைகேயி இல்லா விட்டால் ராமாயணம் ஏது?.
அவதார நோக்கம் எப்படி நிறைவேறும்?
ராமனை வளர்த்தவள் கைகேயி.
மந்தரை ராமனுக்கு மணி மகுடம் என்று சொன்னவுடன் கோசலையை விட, தசரதனை விட,
மிகவும் சந்தோஷப்பட்டவள் கைகேயி.
தன் மகன் வேறு; கோசலை மகன் வேறு என்ற வேற்றுமை கைகேயிக்கு இல்லை என்பதை
“வேற்றுமை உற்றிலள்” என்று கம்பன் சுட்டிக் காட்டுவார்.
மந்தரை சொன்னதற்காக தன்னுடைய முத்து மாலையைப் பரிசாகத்  தந்தவள் அவள்.

12. ராமன் தான் என் கண்மணி

கைகேயி ராமன் மீது கொண்ட அன்பையும்,
அவனுக்கு மகுடம் என்றவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சியையும்,
வால்மீகியை விடவும், கம்பனை விடவும், ரசித்து ரசித்துச் சொன்னவர் அருணாச்சல கவிராயர்.
தன்னிடம் கோள் சொன்ன மந்தரையிடம்,
‘‘பாமரத்தனமாக ஏன் பேசுகிறாய்?
அவன் தான் பட்டத்துக்கு உரியவன்” என்று எடுத்துச் சொல்லி,
காரணத்தை அடுக்குவாள்.

பாமரமே,  உனக்கு என்னடி பேச்சு?
பழம் நழுவி பாலில் விழுந்தால் போல் ஆச்சு
பரசுராம கர்வம் தீர்த்தவன் ‘‘டி”
அவன் நம்மையெல்லாம் காத்தவன் ‘‘டி”
பட்டம் கட்ட ஏற்ற வன் “டி”
நாலு பேரில் மூத்தவன் ‘‘டி” அவன் தான் என் கண்மணி

என்று தன்னுடைய கண்ணின் மணியாக ராமனைச் சொல்வாள்.

13. அன்று அலர்ந்த செந்தாமரை

பெற்ற தாய் கோசலையை விட, வளர்த்த தாய் கைகேயியிடம் பெரு மதிப்பும் அன்பும் கொண்டிருந்தான்.
கடைசிவரை தன்னை காட்டுக்கு அனுப்பியவள் என்று கைகேயியை வெறுக்கவே இல்லை.
மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயி, ராமனை காட்டுக்கு அனுப்புவதற்காக அழைக்கிறாள் .
தான் சொன்னால் கேட்பானோ மாட்டானோ என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது.
அதனால் இது அரச கட்டளை என்று சொல்ல,
ராமன் புரிந்து கொண்டு, சிரித்துக் கொண்டே சொல்லுகின்றான்.

மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

தாயின் கட்டளையை ஏற்ற போது அவன் முகம் அன்று அலர்ந்த  செந்தாமரை போல மலர்ந்தது என்று கம்பன் காட்டுவான்.

14. இராமன் முதலில் வணங்கியது யாரை?

வன வாசம் முடிந்து திரும்ப அயோத்திக்கு வந்தவுடன் அவனுடைய மூன்று அன்னையர்களும் நிற்கும் பொழுது
ராமன் முதலில் வணங்கியது கோசலையை அல்ல, கைகேயியைத் தான்.
“கைகையன் தனையை முந்தக் காலூறப் பணிந்து” என்பது கம்பன் பாட்டு.
தன்னுடைய தந்தை கைகேயியின் உறவை ‘‘நீ எனக்கு மனைவியும் அல்ல. பரதன் எனக்கு மகனும் அல்ல’’ என்று
சூளுரைத்து துறந்ததை அறிந்தான் ராமன்,
போர் முடிவில் ஆசி வழங்க வந்த தசரதன் இராமனிடம் ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கும் பொழுது,
இராமன் “தந்தையே, நீ கொடியவள் என்று கைவிட்ட, எனக்கு தெய்வம் போன்ற கைகேயியையும்
அவளுடைய மகனான பரதனை தாயும் தம்பியுமாக நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்”
தீயள்  என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும்
தம்பியும் ஆம் வரம் தருக எனத்  தாழ்ந்தான்” என்பது கம்ப சித்திரம்.

15. மாற்றுத் தாய், ஈற்றுத் தாய், கூற்றுத்தாய்

பெரியாழ்வார் இராமனுடைய மூன்று தாய்மார்களையும் பெயரைச் சொல்லி அழைக்காமல்
மாற்றுத்தாய்,
ஈற்றுத்தாய்,
கூற்றுத்தாய் என்ற மூன்று சொற்களால்
குறிப்பிடும் நயம் அற்புதமானது.

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து  எம்பிரான்! என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக்  கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற.

இதில் மாற்றுத்தாய் என்பது பெற்ற தாய்க்கு மாறான இராமனை வளர்த்த கைகேயியைக் குறிக்கும்.
ஈற்றுத்தாய் என்பது ஈன்ற தாயான கோசலையைக் குறிக்கும்.
அவள் தானே பெற்றவள்.
மகனே வனம் போகாதே என்று தடுக்கிறாள். அழுகிறாள்.
கூற்றுத் தாய் என்பது சுமித்திரையைக் குறிக்கும்.
அவள் இரண்டு கூறு பாயாசங்களை பெற்று இலக்குவனையும் சத்துருக் கணையும் ஈன்றவள்.
இதை இன்னொரு விதமாகவும் சொல்வார்கள்.
மாற்றுத்தாய் என்பது சுமித்திரையைக்  குறிப்பதாகவும்,
கூற்றுத் தாய் என்பது தசரதனுக்கு எமனாக
அதாவது கூற்றுவனாக வந்த கைகேயியைக்  குறிப்பதாகவும் ஒரு பொருள் உண்டு.

16. சக்கரவர்த்தி திருமகன்

ஒரு தந்தையும் தனயனும் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற தர்ம முறை
தசரதன் ராமன் இருவரிடத்திலும் வெளிப்படும்.
உலகுக்கெல்லாம் தந்தையான பகவான், தனக்கு ஒரு தந்தையைத்  தேர்ந்தெடுக்கும் பொழுது,
இஷ்வாகு  குலத்திலே தசரதனைத் தேர்ந்தெடுத்தான் என்பதிலிருந்து தசரதனின் சிறப்பு தெரியவரும்.
பத்து திசைகளையும் வென்று, நிர்வகித்து, சக்கரவர்த்தி என்கின்ற பெருமையுடன் காத்தவன் தசரதன்.
இராமன் மகனாகப்  பிறந்த பிறகு இராமனை கண் போல் பாதுகாப்பதன் மூலம்,
இந்த உலகத்தைப் பாதுகாக்கலாம் என்று நினைத்தவன்.
வைணவ மரபில் இராமனை அழைக்கும் பொழுது இராமன் என்று அழைக்க மாட்டார்கள்.
சக்கரவர்த்தி திருமகன் என்றுதான் அழைப்பார்கள்.

17. ஏன் கைகேயியிடம் அதிக அன்பு?

தசரதன் தனக்குரிய மூன்று மகிஷிகளில் கைகேயியின் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான்.
அவள் இளைய மனைவி.
குமாரர்களில் இராமன் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான்.
குமாரர்களில் இராமன் மூத்தவன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பரதனைப்  பெற்றெடுத்த கைகேயி, கோசலை பெற்றெடுத்த இராமனிடம் தான் மிக அதிகமான அன்பைக் கொண்டிருந்தாள்.
இராமனை வளர்த்தவள் அவள்.

அதனால் இராமன் பெரும்பாலும் கைகேயின் இல்லத்திலேயே இருப்பான்.
கைகேயியின் இல்லத்தில் இராமன் இருப்பதால் தசரதனும் கைகேயின் இல்லத்தில் இருப்பான்.
தசரதன், கைகேயி பெற்று வளர்த்த மகன்(உனைப்பயந்த கைகேசி) ராமன் என்றே சொல்வதை கவனிக்கலாம்.
இராமன் மீது தன்னைப் போலவே அதிக பாசம் வைத்திருந்த கைகேயின் மீது
இயல்பாகவே தசரதனின் அன்பு அதிகரித்திருந்தது.
அதுவே தசரதனின் முடிவுக்கு காரணமானது.

18. ராமனுக்காக உயிர் துறந்தவன்

வைணவ மரபில் ஞான பாவத்தை விட பிரேம பாவத்தை அதிகம் கொண்டாடுவார்கள்.
பிரேம பாவம் அதிகரிக்கும் பொழுது, வந்திருப்பவன் பரம்பொருள் (மஹாவிஷ்ணு) என்ற நினைவு கூட போய்விடும்.
மகன் என்ற வாஞ்சை தான் மிஞ்சி நிற்கும்.
அதுதான் தசரதனிடம் இருந்தது.
தசரதன் ராமனிடம் ஆழங்கால் பட்டிருந்தான்.
அதனால் ராமனிடம் சேர்ந்திருக்கும் பொழுது அவனுக்கு மகிழ்ச்சி.

ராமனைப் பிரிந்தால்  வருத்தம்.
இன்னும் ஒரு படி மேலே போய் இராமனுடைய பிரிவைத்  தாங்க முடியாமல் தன்னுடைய உயிரையே இழந்தான் தசரதன்.
‘‘இராமன் காடாளப்  போனான்;
தசரதன் வான் ஆளப் போனான்” என்று சொல்வார்கள்.
பெற்று வளர்த்த தாய்மார்களுக்கு இல்லாத அசாதாரணமான   பரிவு தசரதனுக்கு இருந்தது.

19. நன் மகன் ராமன்

குலசேகர ஆழ்வார் இராமனை நன்மகன் என்று அழைக்கிறார்
.‘‘நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே”என்பது பாசுர வரி.
நன்மகன் என்ற சொல்லுக்கு உரை விளக்கம் தந்த ஆசாரியர்கள்,
‘‘ஒரு மகனுக்குரிய எல்லா குணங்களையும் உடையவன். தந்தையின் சொல் கேட்டு நடப்பவன்.  அவனே நன்மகன்”
(புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி
தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க.)என்று விளக்கம் அளித்தார்கள்.

20. இராமன் வேறு; என் உயிர் வேறு அல்ல

இராமனை ஒரு கணம் பிரிந்திருந்தாலும் உயிர் தரிக்க மாட்டான் தசரதன்.
அதனால் தான் முதன் முதலில் விசுவாமித்திரன் தன்னோடு காட்டுக்கு
இராமனை அனுப்ப வேண்டும் என்று கேட்ட பொழுது, துடித்தான்.
பார்வை இல்லாத ஒருவன் பார்வை வந்து, உடனடியாக, அந்தக்  கண் பார்வையை பறி கொடுத்தால்
எத்தனை துன்பம் அடைவானோ அத்தனை துன்பத்தை அடைந்ததாக (கண்ணிலான் பெற்றிழந்தான்) கம்பன் காட்டுகின்றார்.

அதைப் போலவே திருமணம் முடிந்து மிதிலையில் இருந்து அயோத்திக்கு திரும்புகின்ற பொழுது
பரசுராமன் சண்டைக்கு வந்து நிற்கின்றார்.
அவரிடத்திலே இராமனுக்காக சரணாகதி புகுகின்றார் தசரதன்.
‘‘சிவனும், பிரமனும், திருமாலும் உன் வீரத்துக்கு ஒரு பொருளாக மாட்டார்கள்.
அப்படி இருக்க அற்ப மானிடர் உனக்கு ஒரு பொருள் அல்லவே.

இந்த இராமனும் எனது பிராணனும் இனி உன் அடைக்கலப்  பொருட்கள்”

சிவனும் அயன்  அரியும் அலர்; சிறு மானுடர் பொருளோ
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான்
‘‘எனது உயிர் வேறு ராமன் வேறு இல்லை.
இரண்டும் ஒன்று தான் ”என்பதை சொல்லாமல் சொல்லுகின்றான் தசரதன்.

21. உடனே இராமனை அழைத்து வா

வால்மீகி ராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் இல்லாத ஒரு அற்புதமான காட்சியை குலசேகர ஆழ்வார் சித்தரிக்கிறார்.
ஸ்ரீராமனை பார்க்காமல் தசரதனால் ஒரு நொடி கூட இருக்க முடியாது.
அரசவைக்குச் சென்றாலும் நினைவெல்லாம் ராமன் மீதுதான் இருக்கும்.
அரசவைக் காரியங்களைக்  கவனிக்கும் பொழுதே ராமன் மீது நினைவு வந்துவிடும்.
உடனே சுமந்திரனை அழைத்து இராமனை அழைத்து வரும்படி கட்டளை யிடுவான்.

அப்பொழுது இராமன் ஓடி வருவான்.
ஓடி வரும் பொழுது அப்படியே வைத்த கண் வாங்காது அவனைப்  பார்த்துக் கொண்டிருப்பான்.
அவன் மடி மீது அமர்ந்து, ‘‘கூப்பிட்டீர்களா, என்ன காரணம்” என்று கேட்டவுடன், ‘
‘ஒன்றும் இல்லை; நீ போகலாம்” என்பான்.
உடனே இராமன் இறங்கி ஓடுவான்.

22. முன்னழகும் பின்னழகும்

கண் மறையும் வரை இராமனைப்  பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒரு சில நிமிடங்கள் தான். மறுபடியும் இராமனைப்  பார்க்க முடியவில்லை என்கிற தவிப்பு வர,
சுமந்திரனைக் கூப்பிட்டு மறுபடியும் இராமனை அழைத்து வரும் படி கட்டளை இடுவான்.
இப்படி இராமன் வருவதும் போவதும் என அந்த நாளே  போய்விடும்.
இராமன் ஓடி வரும் பொழுது அவனுடைய முன்னழகையும் அவன் திரும்பி ஓடும்பொழுது
அவனுடைய பின்னழகையும் ரசிக்கக் கூடிய  ரசிகனாக தசரதன் இருந்தான்.
அப்படி ரசிப்பதில் தான் அவனுடைய உயிர் இருந்தது என்பதைக் காட்டும் உருக்கமான பாசுரம்.

வா போகு வா இன்னம் வந்தொரு கால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலு மெழில் தோளி தன் பொருட்டா விடையோன் றன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல் வினையேன் மனமுருக்கும் மகனே இன்று
நீ போக என்னெஞ்ச மிரு பிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

இந்தப்  பாசுரத்தின் கடைசி வரியை ஒருமுறை படித்துப்  பாருங்கள்.
‘‘என்னைப் பிரிந்து நீ காட்டுக்கு போகிறாய் என்று கேட்டவுடன்,
என்னுடைய நெஞ்சம் இரண்டு கூறாகப்  பிளந்துப் போயிருக்க வேண்டும்.
அப்படி போகவில்லை என்றால் என் நெஞ்சம் எத்தனை வலிமை?” என்பது போல அமைந்த பாசுரம்.

23. மயங்கி விழுந்த இராமன்

இராமன் தசரதன் மீது கொண்டிருந்த அன்பு, தசரதன் ராமன் மீது கொண்டிருந்த அன்புக்கு சற்றும் குறைந்தது அல்ல.
எத்தனைத் துன்பம் வந்தாலும் தந்தையின் சத்தியம் காப்பாற்றப்பட வேண்டும்,
அதுதான் ஒரு தனயனுக்கு தலையாய கடமை என்பதில் உறுதியாக இருந்தவன் இராமன்.
தசரதன் இறந்த பொழுது, ‘‘வாய்மைக்கு இனி யார் உளர் ?”என்று கம்பன் கேட்கின்றான்.
காட்டில் வசிக்கும்போது பரதன் வருகின்றான்.
தன்னுடைய தந்தை தசரதன் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டதும்,
‘‘வெந்த புண்ணில் நுழைந்த வேல் போல, வார்த்தை செவியில் நுழைவதற்கு முன்னாலே,
கண்ணும் மனமும் காற்றாடியை போல் கழன்று விழ, மயங்கி தரையில் விழுந்தான் ராமன்.

இதை இப்படிச்  சொன்னால் சரிதான்.
ஆனால் கம்பன் ஒரு படி மேலே போய், விண் ணுலகத்துக்கு அப்பால் உள்ள பரமபதத்துக்கு  உரியவனான இராமன்,
தசரதனின் மரணத்தைக்  கேட்டு தரையில் விழுந்தான் என்று சொல்வதில் இருந்து,
இராமன் தசரதன் மீது கொண்ட அளவற்ற அன்பு தெரிகிறது.

விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்
புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம்
கண்ணொடு  மனம் சுழல் கறங்கு போல் ஆய்
மண்ணினை விழுந்தனன் வானின் உம்பரான்

24. பெயர் சூட்டிய குரு

தசரதனுக்கும் இராமனுக்கும் குருவான வசிஷ்டர் பிரம்மனின் புதல்வர்.
புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர்.
பிள்ளை இல்லாத தன்னுடைய குறையை தசரதன் குரு வசிஷ்டரிடம் சொல்லிப் புலம்பிய பொழுது
சாட்சாத் அந்தப்  பெருமானே, தசரதனுக்குப் பிள்ளையாகப்  பிறக்கப் போகின்றான் என்கின்ற தேவ ரகசியத்தை
அறிந்து புத்ர காமேஷ்டி யாகத்தைச் செய்யச் சொல்லுகின்றார் வசிஷ்டர்.
புத்திர காமேஷ்டி யாகம் மூலம் திருமாலே தசரதனுக்குப் பிள்ளையாக அவதரிக்கிறார்.
அப்படி அவதரித்த பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டியவர் வசிஷ்டர்.

கரா மலைய தளர் கைக்கரி எய்த்தே
அரா அணையில் துயில்வோய்  என அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப் பொருளுக்கே
இராமன் எனப்  பெயர் ஈந்தனன் அன்றே

குரு என்ற நிலையை மீறி, இராமனிடத்திலே ஆழமான அன்பை வைத்திருந்தார் வசிஷ்டர்.
அதைப்போல குலகுரு வசிஷ்டர் என்ன சொன்னாலும் தட்டாமல் நிறைவேற்றும் ஒரு சீடனாக
இராமன் திகழ்ந்தான் என்பதை இராமாயணம் முழுக்கக்  காணலாம்.

25. விஸ்வாமித்திரர்
‘‘நான் அறிவேன்”

இராமாயணத்திலே எம்பெருமானாகிய இராமன் இரண்டு ஆச்சாரியார்களை பெற்றான்.
ஒருவர் வசிஷ்டர் என்று பார்த்தோம்.
அவர் குல குரு.
இன்னொருவர் விசுவாமித்திர மகரிஷி.
விஸ்வம் என்றால் உலகம்.
மித்ரன் என்றால் நண்பன்.
இந்த உலகுக்கு நண்பன் என்கிற பொருள் கொண்ட பெயரை உடையவர் விசுவாமித்திரர்.
விசுவாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் ஒரு காலத்தில் பகை இருந்தது.

எப்படி கருடனும் பாம்பும் ஒன்றுக்கொன்று பகையாக இருந்தாலும், பகவானிடத்திலே இணைந்து இருக்கிறதோ,
அப்படி வசிஷ்டரும் விசுவாமித்திரரும் இராமருடைய விஷயத்திலே ஒன்றாகவே இணைந்து
செயல் படுவதை இராமாயணத்தில் காணலாம்.
பரம்பொருள் ராமனாக வந்து அவதரித் திருக்கிறான் என்பது வசிஷ்டருக்குத் தெரிந்தாலும்
அவர் ரகசியத்தை  வெளியே சொல்லவில்லை.
ஆனால் விசுவாமித்திரர் சபையில் போட்டு உடைத்து விடுகிறார்.
” தசரதா! நீ சாதாரண பிள்ளை என்று நினைக்கக்கூடிய இராமன் பரம்பொருள் என்பதை நான் அறிவேன்.
வசிஷ்டர் போன்ற ரிஷிகளும் அறிவார்கள்.

அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம்
வசிஷ் டோபி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்திதா:’

இந்த இடத்தில் வால்மீகியின் இந்த  ஸ்லோகத்தை எடுத்து பெரியவாச்சான் பிள்ளை பற்பல அர்த்தங்களை கொட்டித்  தீர்க்கிறார்.

26. பிராட்டி பெருமாளை சேர்த்து வைத்தவர்

பரம்பொருள் இராமனாக வந்து  அவதரித்து விட்டான்.
பிராட்டி சீதையாக அவதரித்து விட்டாள்.
இந்த இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய கைங் கரியத்தைச் செய்தவர் விசுவாமித்திரர்.
அது மட்டும் இல்லை
இராமனுக்கு முதன் முதலில் ஸூப்ரபாதம் பாடியவரும் அவர் தான்.
இராமன் விசுவா மித்திரரை   தனது குரு என்கிற நிலையை என்றும் மறந்ததில்லை.
விசுவாமித்திரர் வேள்வியை இராமன் காத்து முடித்தவுடன்.
‘‘இந்த உலகத்தை முழுக்க படைத்து காக்கும் பரம்பொருளான நீ இன்று
என்னுடைய கேள்வியை காப்பாற்றிக்  கொடுத்தாய்” என்று ஒரு வார்த்தையைச் (அவன் பரம்பொருள்) சொல்லிப்  பாராட்டுகிறார்.
”என்ன பணியை நான் செய்ய வேண்டும்?” என்று குருவைக்  கேட்பது சீடனின் கடமை.
அதை இராமன் மிக அழகாகச்  செய்கிறான். ‘
‘குருவே  சொன்ன கடமை நிறைவேறிவிட்டது அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? என்று
கேட்கும் பொழுது விசுவாமித்திரன் இராம அவதாரத்தின் நோக்கத்தை ஸூஷ்மமாக சொல்லிக் காட்டுகின்றார்.
அந்தப் பாடல் இது.

அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர்
விரியும் வார் புனல் மருதம் சூழ்  மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்

‘‘பெரிய காரியம் உள, அவை முடிப்பது பின்னர்
” இராவண வதம் போன்ற பெரிய காரியங்கள் பின்னால் உண்டு.
இப்போதைக்கு மிதிலை போவோம் என்ற வரியில் உள்ள அர்த்தத்தைக் கவனிக்க வேண்டும்.

27. இராமாயணமும் மகாபாரதமும்

இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
அதை ஒரு திரைப்படப் பாடலிலே கவியரசு கண்ணதாசன் மிக மிக அற்புதமாகச் சொல்லுவார்.
பாகப் பிரிவினை என்ற படத்தில் எழுதப்பட்ட அந்தப் பாடலின் பல்லவி இது.

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை  வளர்ப்பதனாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்ந்தால் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதைச்  சொல்ல வந்த காப்பியம் இராமாயணம்.
வேற்றுமையை வளர்த்தால் எப்படி மக்கள் அழிவார்கள் என்பதை குருஷேத்திரப் போர் மூலம் காட்டிய காப்பியம் மகாபாரதம்.
18 அக்குரோணியும் அழிந்து விஞ்சியர்கள் எத்தனை பேர்?
மனித சமூகம் அறிய வேண்டிய செய்தி அல்லவா இந்தியாவின் இரண்டு இதிகாசங்கள் தரும் செய்தி.

28. மூன்று தம்பியர்

இராமனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர்.
லட்சுமணன், பரதன், சத்ருக்கணன்.
பரம்பொருள் இராமனாக அவதரித்தான்.
அவனுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் இருந்து பணி புரியும் இறைத்தொண்டனாக லட்சுமணன் இருந்தான்.
சீதையைப் பிரிந்து பல மாதங்கள் சகித்துக் கொண்டிருந்த இராமன்,
லட்சுமணனைப் பிரிந்த பிறகு, ஒரு நொடியும் தாமதிக்காது தன்னுடைய சோதிக்குத்  திரும்பினான்.
‘‘இமைப்பில நயனன்” (ஒரு நொடியும் தூங்காதவன்) என்று லட்சுமணனை கொண்டாடுவார்கள்.
கைங்கர்ய ஸ்ரீமான் என்றும்,
இளையபெருமாள் என்றும்
லட்சுமணனை வைணவ உலகம் போற்றும்.

இராமனிடத்திலே பரதன்  கொண்ட அன்புக்கு  ஈடாகச் வேறு ஒருவரைச்  சொல்லவே முடியாது.
இராமனுடைய தாய் கோசலை பரதனைப்  பற்றி சொல்லும் பொழுது
‘‘ராமா உன்னை விட மும் மடங்கு நல்லவன்” என்று சொல்வதில் இருந்து
பரதனின் பெருமையைப்  புரிந்து கொள்ளலாம்.
‘‘படியில் குணத்து பரத நம்பி” என்று பரதனின் பெருமையை ஆழ்வார்கள் பாடுவார்கள்.

29. ஒரே பாட்டுக்காரன்

கடைசி தம்பி சத்துருக்கனன்.
பரம பாகவதனான பரதன் கூடவே இருந்தவன்.
பாகவத நிஷ்டை என்று சத்ருக்கனாழ்வாரை வைணவ மரபு போற்றும்.
ராமன் சொன்ன பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது.
இராமன் வருவதில் தாமதம்.
‘‘தம்பி சத்ருக்கனா, நீ இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்.
நான் உயிரை விடப் போகிறேன்” என்று பரதன் கூறினான்.
சத்ருக்கனன் துடித்துப் போனான்.
‘‘இந்த அரசை விட்டு, காட்டை ஆள போனான் ஒருவன். (இராமன்)
அவனுக்குத்  தொண்டு செய்ய அவன் பின்னால் போனான் ஒரு தம்பி (இளைய பெருமாள்).
அண்ணன் வர தாமதம் ஆகி விட்டது என்று உயிரை விடத் துணிந்தான்  ஒரு தம்பி (பரதன்).
இவர்களுக்கு இடையில், இந்த அரசை ஏற்று நடத்த நான் ஒரு தம்பி, நன்றாக இருக்கிறது கதை”

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; ‘‘போனவன் தான் வரும் அவதி போயிற்று’’ என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா!

30. ஸ்ரீராம நவமியின் நோக்கம் இதுதான்

இராமாயணம் முழுக்க
அன்பு தான்.
அடைக்கலம் தான்.
தொண்டு தான்.
தூய்மை தான்.
வேடனாகிய குகனை தம்பியாக ஏற்றுக் கொண்ட இராமன்
வானரமாகிய சுக்ரீவனையும்,
அரக்கனாகிய வீடணனையும்
சகோதரனாகவே ஏற்றுக் கொள்ளுகின்றான் என்றால்
உலக சகோதரத்தை ஓங்கிச் சொல்லும் உன்னதமான இதிகாசம் இராமாயணம்.
‘‘நடத்தையில் நின்று உயர் நாயகன்”என்று இராமனின் பெருமையை பலத்த குரலில் பேசும் காவியம்
என்பதால்தான் பாரத நாட்டின் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் சிறப்பு பெறாது,
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்த பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும்
இராமாயணம் போற்றப்படுகிறது.

இராமன் வணங்கப் படுகிறான்.
நம்மாழ்வார் ஒரே வரியிலேயே சொல்லிவிட்டார்.
‘‘கற்பார் இராமபிரானை அல்லால்  மற்றும் கற்பரோ?” என்று பாடினார்.
ஸ்ரீராம நவமி நன்னாள் எப்படிக் கொண்டாடுவது என்றால்,

1. இராமனுடைய குணங்களை நெஞ்சில் ஏற்றி போற்ற வேண்டும்.

2. பரம்பொருளாகிய ஸ்ரீராமனிடம் அடைக்கலம் புகுந்து நம் வாழ்வை ஏற்றிக் கொள்ள  வேண்டும்.

இந்த இரண்டும் தான் முக்கியம் என்பதை உணர்ந்து இந்த ஸ்ரீராம நவமியைக் கொண்டாடுவோம்.

————————–————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–

March 27, 2023

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்ற பெருமகனார், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலுள்ள
சொற்றொடர்களையை தொகுத்து, ஸ்ரீ ராமாயணமாக அருளிச் செய்துள்ளார்.
இதனைத் தினமும் பாராயணம் செய்தால்
ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும்,
ஸ்ரீ ராமாயண பாராயண பலனும் ஒருங்கே கிடைக்கும்.
இதைப் பாராயணம் செய்ததின் பலனாக நல்ல கணவனையும்,
மக்கட் செல்வத்தையும் அடைந்து சௌபாக்கியம் பெற்றவர் பலர்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

நாம் எல்லோரும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து
நம் ஸம்ப்ரதாயத்திற்கு  அவருடைய அர்ப்பணிப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்வோமாக.

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த ஸ்ரீ யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து
அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக கொண்டார்.
ஸ்ரீ நம்பிள்ளையின் அனுக்ரஹத்தால் நம்முடைய சம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தி பெற்ற ஆச்சார்யனாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீ பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி ஸ்ரீ திருக்கண்ணமங்கை எம்பெருமான் ,
ஸ்ரீ திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஸ்ரீ கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார்.
எனவே அருளிச் செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக ஸ்ரீ கலியன் ஸ்ரீ நம்பிள்ளையாகவும்,
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.
இவருக்குஸ்ரீ வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும்
ஸ்ரீ அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையை தன் ஸ்வீகார புத்ரராக ஏற்றுக் கொண்டார்.

இவர் வாழ்ந்த காலத்தில், பின்வரும் ஸ்ரீ ஸூக்திகளை அருளி உள்ளார்

4000 திவ்ய பிரபந்தம் (அருளிச்செயல்  பாசுரங்கள்) – எல்லாவற்றுக்கும் இவர் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
அவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் வ்யாக்யானங்கள் தொலைந்துபோக
அவற்றுக்கு மட்டும் மாமுனிகள் வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்தோத்ர க்ரந்தங்கள் –
இவர் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி, கத்யத்ரயம் ,
மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ரம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்ரீராமாயணம் –
ஸ்ரீராமாயணத்திலிருந்து முக்கியமான  சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுற்கு விளக்கமான
வ்யாக்யானத்தை ஸ்ரீராமாயண தனி ச்லோகியில்  எழுதியுள்ளார்.
இவருடைய விபீஷண சரணாகதி பற்றிய புலமை மிக்க மிகச் சிறந்த விளக்கங்களுக்காக
இவர்  அபய ப்ரத ராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.

இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.
அவைகள் ரஹஸ்ய த்ரயம் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகின்றன.
ரஹஸ்ய த்ரயம் பற்றிய விளக்கங்களை ஏடு படுத்தியதில் இவர் முதன்மையாகத் திகழ்ந்தார்.
பிள்ளை லோகாசார்யார் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கங்களிருந்து
முக்கியமான ஸாராம்சத்தைக் கொண்டு தன்னுடைய அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தத்தை எழுதினர்.

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளை சொன்னது
இருபத்து நாலாயிரம்.

நம்பிள்ளை தம்முடைய கருணையினால் பெரியவாச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதப் பணிக்கிறார்.
அதை மனதில்  கொண்டு பெரியவாச்சான் பிள்ளையும், சகல வேதங்களின் சாரமான திருவாய்மொழிக்கு
மிகவும் அனுபவிக்கத்தகுந்த ஒரு வ்யாக்யானம் எழுதினார் 24000 ஸ்லோகங்கள் அடங்கிய
ஸ்ரீ ராமாயணத்தைப் போன்றே 24000 படிகள் கொண்டதாக எழுதினார்

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தினாலே தான் பிற்காலத்தில் உள்ளவர்கள்
அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்
அதன் உண்மையான அர்த்தங்களைப் பரப்பவும் முடிந்தது.
இவருடைய வ்யாக்யானம் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் யாராலும்
அருளிச்செயலின் அர்த்தத்தையறிந்து கொண்டிருக்கவே முடியாது.
மேலும் மாமுனிகள் தம்முடைய 39 வைத்து பாசுரத்தில், திருவாய்மொழியின்
பிரதான 5 வ்யாக்யான கர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்றும்
அந்த வ்யாக்யானங்களைப் பாதுகாத்து நம்மிடையே பரப்பியிராவிட்டால் நம்மால்
அருளிச்செயலின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டே இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும்
நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும்
அறிந்து கொள்ளலாம்.
அவைகளில் சில கீழே:

“நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது
அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம்
உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம்
[நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால்
நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள்.
ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால்
அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.

இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது,
உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது
(சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது.
இவையே பாரதந்த்ரியம்”.

மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?
நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா
அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல.
எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.

ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”.
அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து,
அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது
நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது,
பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள்
குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார்.
பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ –
பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும்
அதுவும் நன்மைக்கே’ என்கிறான்.

ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே,
அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.

ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது
வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது
எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச் செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

——-

ஸ்ரீ பால காண்டம்

திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு

ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல் அமரர்

துயர் தீர

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்

மன்னன்  ஆவான் நிற்க;

————-

 

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு

மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய

குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப

இருநிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மாஓழிந்துதேர்ஒழிந்து

கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து

அங்கங்கள்அழகுமாறி

மான்அமரும்மெல் நோக்கி  வைதேகி இன்துணையா

இளங்கோவும்வாளும்  வில்லும்கொண்டுபின் செல்லக்

கலையும்கரியும்பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு

வியன்கானம் மரத்தின் நீழல்

கல்லணைமேல்கண்துயின்று

சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்

நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு

என்னையும் நீள் வானில்போக்க

என் பெற்றாய்கைகேசீ!

நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்

என்று வான்எறத்

தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து

ஆனை புரவி தேரோடுகாலாள்

அணிகொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன்பரதநம்பிபணியத்

தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்

எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்

திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த்

தண்டகாரண்யம் புகுந்து

————-

ஸ்ரீ ஆரண்ய காண்டம்

தயங்குமறைமுனிவர்க்கு
‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்  வாங்கி
புலர்ந்து  எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்குநேராவன்என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக்
கரனொடு  தூடணன்தன்உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில்  தனி இருப்பில்
கனிவாய்த்திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

————

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு-(பெருமாள் 10-6)

மராமரங்கள் ஏழும் எய்து

உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி

கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து

வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட

விடுத்த திசைக் கருமம் திருத்திக்

திறல் விளங்கு மாருதியும்

மாயோன் தூது உரைத்தல் செய்ய

———-

ஸ்ரீ சுந்தர காண்டம்

 

சீராரும் திறல் அனுமன் -3-10-10

மா கடலைக் கடந்தேறி-10-2-6-

மும் மதிள் நீள் -திரு எழு கூற்று இருக்கை

இலங்கை புக்குக்-3-9-10

கடிகாவில்,-10-2-5-

வாராரும்  முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-3-10-10-

‘நின் அடியேன் விண்ணப்பம்-3-10-1-

கேட்டருளாய்!திரு விருத்தம் 1

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்

‘குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி

‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன

அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்-10-11-
இலங்கையர் கோன்-8-5-7-

மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-10-2-6
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன்-திருமாலை  11

சினம் அழித்து,-8-6-9-

மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;

————

                                ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள் 

காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக் 6-10-6-

கொடியோன் இலங்கை புகலுற்று-8-6-4-

அலையார் கடற்கரை வீற்றிருந்து–4-1-3

செல்வ வீடணற்கு  நல்லவனாய்(நல்லானாய் )-6-8-5

விரி நீர் இலங்கை அருளிச்-7-6-9-

சரண் புக்க

குரை கடலை அடலம்பால் மறுக எய்து,10-7

கொல்லை விலங்கு  பணி செய்ய-8-6-4

மலையதனால் அணை கட்டி-8-8-

மறு கரையை ஏறி-10-7

(வால்மீகி
கும்பகர்ணன் முதலில்
இந்திரஜித் 5 நாள்
இராவணன் 7 நாள்

கம்பராமாயணம் மாறுபாடு உண்டு

இங்கு ஆழ்வார் பாசுரப்படி)

இலங்கை பொடி பொடியாகச்-siriya thiru  madal-26

சிலைமலி  நெஞ்சரங்கள்  செல உய்த்துக்-11-4-7-

கும்பனோடு நிகும்பனும் பட 10-2-5

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-10-3-2-

அரக்கர் ஆவி மாள,4-8-5-

அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-

இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-3-9-5

சிலை வளைத்துச்-8-5-5-

சரமழை பொழிந்து-thiruppaavai -4

(கரம் துணிந்து பாட பேதம் )வென்றி கொண்ட செருக் களத்துக்-6-6-8

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-naanmukan -42

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-poykai -52

மற்றுமுள்ள வானவர்-thiruchchantha viruththam 87

மலர்மழை பொழிந்து-10-9-3

மணி முடி பணித அடியிணை வணங்கக்–periya thirumoli 1-2-6-

கோலத், திரு மா மகளோடு-6-9-3

செல்வ வீடணன்-6-8-5

வானரக் கோனுடன்-3-10-8-

இலகும்-9-7-5-

அணி நெடுந்தேர் ஏறிச்-5-4-9-

சீரணிந்த குகனோடு கூடி-3-10-4-

அங்கண் நெடு  மதிள் புடை சூழ்  அயோத்தி எய்தி-10-1

நன்னீராடிப்-thiru viruththam -21

பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9

திருச்செய்ய  முடியும் ஆரமும் குழையும் -thiruvaay 8-4-7

முதலா  மேதகு பல் கலன் அணிந்து-thiruvaasiriyam -1

சூட்டு நன் மாலைகள் அணிந்து-21

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு  இரவும்  நன் பகலும்-2-3-7-

வடிவிணை இல்லாச் -9-2-10-

சங்கு தங்கு முன்கை நங்கை-thiruchchantha- 58

மலர்க் குழலாள் சீதையும் தானும்-3-10-9

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து -thiruppaavain -23

ஏழுலகம் தனிக் கோல் செல்ல–4-5-1-

வாழ்வித்தருளினார்.”–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவடி மாலை–ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள்–

March 6, 2023

ஸ்ரீ திருவடி மாலை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்‌ சேது சமத்தான மகாவித்துவான்‌ பாஷா கவிசேகரர்‌ ஸ்ரீ  ரா. இராகவையங்கார்‌

மகாவித்துவான்‌ ரா. இராகவையங்கார்‌ மாலையின்‌ தொடக்கத்தில்‌ உள்ள வாழ்த்தில்‌,
‘திருவினிய பொய்கை’ . என்று பொய்கையாழ்வார்‌
முதலாக குருகைமகிழ்‌ மாறன்‌ பெரிய சடகோபன்‌” ஆகிய குரவர் தாள்‌ சேர்குவர்‌ அடிமையானே’ என்று
குறித்தல்‌ அவர்‌ தம்‌ அடியார்க்கு அடியனாகும்‌ பத்தி நிலையைக்‌ காட்டும்‌.

திருவடிமாலையில்‌ சிலபாடல்கள்‌ திருமால்‌ திருவடி களைப்‌ போற்றுகின்றன. ௪ட கோபரைச்‌ சில பாடல்கள்‌ து.திக்கின்‌றன. பலபா டல்கள்‌ கிருஷ்ணாவதாரம்‌, இராமாவதாரம்‌, நரசிங்காவ வதாரம்‌ முதலிய அவதாரங்கள்‌ பற்றியவையே= திருவேங்கடம்‌, திருவரங்கம்‌, திருமாவிருஞ
சோலை, – திருப்புல்லாணி: முதலிய திருப்பதிகளில்‌ எழுந்தருளிருள்ள எம்‌ பெருமான்‌ களைப்‌ பற்றியவை பல.
திருமால்‌ அருள்‌ வேண்டும்‌ பாடல்கள்‌, மாயோனிடம்‌ முறையிடும்‌ பாடல்கள்‌ சிற்சில, இவ்வாறு திருவடி மாலை பத்தி ரசம்‌ கனிய அமைந்த இன்னிசைப்‌ பாடல்களாகும்‌.

திருவடிமாலையின்‌ இறுதியில்‌ இராமநாம மகமை உரைக்கும்‌ *சீராமநாமப்‌ பாட்டு என்னும்‌ பகுதி உள்ளது.
கல்லாரும்‌ கற்றாரும்‌ கற்கும்‌ நாமம்‌ கங்‌.கை முதல்‌ தீர்த்த பயன்‌ காட்டு நாமம்‌ வில்லாரும்‌ வீரர்‌ செயம்‌ வேண்டும்‌ நாமம்‌ மெய்ம்மைக்கே பரியாயம்‌ வேண்டும் நாமம்‌ என்று இவ்வாறு இராம நாம மகிமை பேசுதலை இப் பகுதியில்‌ காணலாகும்‌.
இந்தப்‌ பக்திப்‌ பனுவல்‌ மகாவித்துவான்‌ வாழ்  நாளி லேயே 1983ஆம்‌ ஆண்டு முதன்‌ முறையாக வெளிடப்‌ பெற்றது. 66 ஆண்டுகளுக்குப்‌ பின்‌ வெளியாகும்‌ இப்‌ பதிப்பினைத்‌ தமிழார்வலர்கள்‌ பெற்றுப்‌ பயன் பெறுவாார்களாக.

————–

வாழ்த்து
‘திருவினிய பொய்கை கருவினொளிர்‌ பூதன்‌
செகமுழுவ தும்பே யெனவகலு நன் பேய்‌
மருவினிய பாணன்‌ வளர்மழிசை பூரன்‌
மசிழ்புதுவை நாதன்‌ மதுரகவி கோதை
அரசினுயர்‌ கொங்கர்‌ மகிபகுல துங்கள்‌
அடியர் பத தூளி யணி குறைய லாளி
குருகைமகழ்‌ மாறன்‌ பெரியசட கோபன்‌.
குரவரிவர்‌ தாள்சேர்‌ குவரடிமை யானே,

விதியோர்தர வியலாத மு குந்தன் மிசை யன்பின்‌
விதுரற்கொரு சபரிக்கெழு பதினாயிர மதிகன்‌
மதியோர் புகழ்‌ குருகூர் மகிழ்‌ மாறன் சட கோபன்‌
மதுரத் தமி ழமிழ்தைப் பொரு மறையைப் பொழி முகிறாள்‌
துதியோர் குரு வழிபாடு செய்‌ கோளூர் மறை வாணன்‌
றுகடீர் மது ரகவீச னிணைச் செம்பத பதுமங்‌
கதியோர் தரு பூதூரெதி ராசன் பத கஞ்சங்‌
கலை தேர் வர வர யோகிகள்‌ கழலே தொழுவோமே.

நூல்

பொருள் கொடுத்து வசை கேட்கும்‌ புல்லர்க்‌ கேயும்‌
பொறுக்கரிதாய்ச்‌ செலிசுடும்வெம்‌ புன்சொல்‌ பெய்தாற்‌
கருள்கொடுத்து மீளாவீ டாங்கே நல்கு
மம்மானின்‌ திருவுளத்துக்‌ காகு மென்றே
தெருள்கொடுத்த பெரியவர்க்குந்‌ தெளிய லாகாத்‌
தெய்வங்கள்‌ தெய்வதமாஞ்‌ செம்மா லுன்னை
யிருள்கொடுத்த நெஞ்சினொடு மேத்து வேன்போ
லிழித்துரையிற்‌ பழித்துரைப்பா னெண்ணினேனே..–1–

மறை யெடுத்துன்‌ குணத்தொன்று வழுத்தப்‌ புக்கு
மனம் வாக்குக்‌ கெட்டாத மகிமைத்‌ தென்றே
யிறையெடுத்துச்‌ சொல மாட்டா தீண்டு மீண்ட
வேற்றமுள போற்றுமுளச்‌ சோதீ யுன்னைத்‌
துறையெடுத்த நெறி தோன்றா நாயேனெய்தச்‌
சொல்லாலே கூவுகின்ற தெல்லாம்‌ பாலர்‌
பிறையெடுத்து விளையாட வாவா வென்று
பிதற்றுகின்‌ற தன்மையினும்‌ புன்மைத்‌ தம்மா.–2-

ஏரி தான்‌ மாரியினுக்‌ கேது வாயி
னிருவிழிநோக்‌ கிரவிவரற்‌ கேது வாயிற்‌
சீரிதா நின்னருட்கு நாயேன்‌ செப்புஞ்‌
சிறுசொல்லு மேதுவெனச்‌ சிறக்கு மம்மா
பாரினீ யருள் செய்வாய்‌ செய்யா யானோ
பயன்கருதேன்‌ பருகுபவன்‌ பருகா துய்யா
னோரில்யா னவனாக வுன்னை யேத்தா
துய்யாமை யேத்தினே னுடைய கோவே.–3-

சொல்லாலே மேலாப்புச்‌ செய்து வானிற்‌
.றிகழ்சோலை மலை மேய தேவ தேவே
சொல்லாலே யுனை வழுத்தத்‌ துணிவ தெல்லாந்‌
துகிலாலே யெரிய விக்கத்‌ துணிவ தாகும்‌
வில்லாலே யாகாய மெய்வ தாகும்‌
விரலாலே வளி யளக்க. மேவ லாகுங்‌
கல்லாலே பெருங்கடனீர்‌ கடத்த லாகுங்‌
காலாலே வானேறக்‌ கற்ப தாமே.–4-

5. அவியாத்‌ தருப்பைவெஞ்‌ சாயக
மாஞ்சிலை யாரணங்காந்‌
தவியாக்‌ கரியர சாகுந்‌
தயிர்க்குடத்‌ தங்குமுத்தி செவியாற்‌ கனவினுந்‌ தெய்வக்‌
கவிகை தெரிந்திலெனைக்‌
கவியாக்கி யாண்ட முழுமுதற்‌று ஓன்மைக்‌ கடவுளுக்கே.

6. ஏழு லோகமும்‌ வாழ வென்று ஓரு
சோழ  மண்டல மீதுதன்‌
னிணையில் காவிரி நடுவி லேயர
வணையிலே வளர்‌ தெய்வதம்‌
மாழை மாதகலாது மின்னென
மார்பிலே யொளி ரருண் முகில்‌
வள மிகுந்தமிழ்‌ மறை மொழிந்துயர்‌
பதின்ம ராடு குணக் கடல்‌
வேழ மென்பதன் வாயினால் வெளி
யாகி வந்த விழுப்பரம்‌
வேத முள்ளன யாவையும் முத
லீறு மோதும்‌ வியன் சுடர்‌
ஊழி யின்னுயிர்‌ முழுதை யுந்தன துதரம்‌ வைத்த தனிப் பொருள்‌
உம்ப ரிம்பரெ லாமு நாபியி
தய மாமுழு முதலரோ.

7. கடன்மிசைக்‌ கிடந்த கருணை வா ரிதியைக்‌
கன் மழை தடுத்த கார்‌ முகிலை
யடன் மிசைத்‌ தேவர்க்‌ கமுது பெய்‌ யாரா
வமுதினை யலர் மகட்‌ கணியை
மடன் மிசைத்‌ தேன் பாய்‌ மாலிருஞ்‌ சோலை
மலை மிசை மரகத மலையை
யுடன் மிசைச்‌ சுழலும்‌ புன் பிறப்‌ பொழிவா
னுள்ளினே னெள்ளினே னுலகே.

8. பல்லா யிரம் பழி சூழ்கின்ற யானுன்‌ பதுமபத
மல்லாற்‌ றொழுது துதித்தறி யேனகி லாண்டமுத
லெல்லாம்‌ வயிற்றி னடக்கி யளிக்கின்ற வின்னருட்கு
நல்லார்‌ பொல்லாரென்‌ றிருகூறு செய்யு நவையுமுண்டே..

9. பிள்ளைப்‌ பருவத்‌ ‘தொரு குழவி
பெரியோர்‌ கையாற்‌ றொழது தொழுது பேணி யவர் தாமுரைத்த மொழி
பிதற்றி யிருக்கும்‌ பெற்றியைப்போ
லுள்ளத்‌ துருகு மன்பர் தொழி
லுதனை நடிக்க“வுவந்துன சீர்‌
உள்ள படி யொன்‌ றுணரும்வலி
யொழிந்த விழிந்த நாயடியேன்‌
எள்ளத்‌ தனையு மிளகாத
விருப்பு மனத்தாற்‌ பொய்ந் நாவா
லீயா திவறுங்‌ கொடுங்கையா
லெண்ணி யியம்பித்‌ தொழலெல்லாங்‌
கொள்ளத்‌ தினையுந்‌ திருவுளத்துக்‌ குறித்த லுளதோ கோகனகக்‌
கோயில்‌ வளர்ந்த கொடி படர்ந்த
கொடைக் கற்‌ பகமே குணக் கடலே.

10. வெருவித்‌ துயர் படு கடலைப்‌ பொரு பிற
வியினிற்‌ சுழல் வரும்‌ வினை தீர
மருவித்‌ தொழு மன மதனைத்‌ தருவதுன்‌
மகிமைத்‌ திருவரு ணெறியாமே
குருவிற்‌ பொலி குல முழுதுக்‌ கொருபதி
குருகைப்‌ பதி வளர்‌ தமிழ் மாறர்‌
பெருவிற்‌ பன மறை யமிழ்தைப்‌ பருகிய
பெருமைப்‌ புயலெனு நெடுமாலே.

17. கத்து கடல் சூழ்‌ புலி
கண்டா கருணன்‌ முனமெதிர்ந்து
செத்த வுடலை நிவேதனஞ்செய்‌
திறத்துக்‌ குகந்தே யவற்குமவன்‌
சித்த முவத்தல்‌ காரணமாத்‌
தீய தம்பி தனக்குமுயர்‌
முத்தி கொடுத்த திருவருளே
மூட னேனை யாண்டதுவே.

12. பத்தி செய்து பகைத்த கண்‌டா கர்‌ணன்‌
பாழி வெள்ளிப்‌ பருப்பத வாணனை
முத்தி யெய்த விழைந்து வணங்கவு
முகுந்த னன்றி யுகந்தது வல்லமோ
புத்தி செய்தரி பொங்கரு டங்குமா
புரிக வென்ற புராரி யிடத்துநீ
நத்தி யெய்தி மகப் பெறு மாயமென்‌
நான்முகப் பிர மற்கொரு தந்தையே.

13-. கூவத்தே வீழ்ந்த சிறு குழவியை நம்‌.
றாயெடுக்கக்‌ குதித்தாற்‌ போலப்‌
பாவத்தே மனக் கலம்போய்ப்‌ பவக் கடல் வாய்ப்‌
பட்டாரைப்‌ பரமன்‌ றானே
யாவத்தே யில்லாத பெருவீட்‌.டை.
யடைவிப்பா னருளா லிச்சை
மேவத்தே கம்படைத்துத்‌ தோன்‌ றுவனிம்‌
மெய்யுணர்ந்தோர்‌ வினைதீர்ந்‌ தோரே.

14, காயா மலருங்‌ கருவிளையுங்‌
காருங்‌ கடலுங்‌ கமழுமெழின்‌
மாயா மதுசூ தன முகுந்த
வர மாதவ வாமன வெனவா
யோயா தலற்றி யகங்கரைய
யுள்ளே ததும்பி யின்பவெள்ளம்‌
பாயா வழிந்து வினைக் கோடை.
பாற்று நாளு முளதேயோ.

15. மனைவிட்டிலன்‌ மகவிட்டிலன்‌
வலிவிட்டிலன்‌ மாலே
‘தனைவிட்டில னிலம்விட்டிலன்‌
றனம்விட்டில னாசை
‘தினைவிட்டிலன்‌ வினைவிட்டிலன்‌
திருவற்றவ னேனும்‌
உனைவிட்டில னெனின்‌ மற்றவ
னொளி பெற்றவ னாமே.

16. நின்ன தாகுமால்‌ விண்ணு மண்ணொடும்‌
நிலைய தாகிய வீடு மேயெனின்‌
என்ன தாக யாதுள்ளதோ தெரி
கிற்கிலே னுடற்‌ செனன மோடுயிர்‌
உன்ன தாகலானிற்கு நல்குதற்‌
கொன்று மில்லையா னேழை யேனுமென்‌
தன்ன தாக வென்‌ கையி லுள்ளதஞ்‌
சலி நினாதுகை தனிலி லாததே.

17. நெய்யிற்‌ றனியே யெரியாத
நெருப்புத்‌ திரியின்‌ மிசை யதையே
பெய்யிற்‌ சுடர் விட்‌ டொளி கிளரும்‌
பெற்றி யேய்ப்ப மலவுயிரை
மெய்யிற்‌ புகுவித்‌ திரண்டனையு.
மேவிப்‌ பொலியும்‌ விழுச்சுடர்‌ நீ
கையிற்‌ கனி போற்‌ காட்டினல்லாற்‌
காணா தெவர்க்கு மகக் கண்ணே.

18. காமாந்த காரமடுக்‌ காரிகையார்‌ வேட்கைக்‌
கராவாயிற்‌ கண்ணிழந்து கன்‌மனவெங்‌
றேமாந்து வீழ்ந்துகரை யேறவலி யில்லா களிறு ஓன்‌
தெந்தையுனை யுன்னாது நொந்தழிவ தருள்வாய்‌
பூமாந்து வண்டுலவு பொய்கையிடைப்‌ புக்குப்‌
போற்று கரி காத்ததினு மேற்றமிதற்‌ குண்டால்‌
தீமாந்து மெழுகு பொரத்‌ தினமுருகு மன் பர்‌
சிந்தை குடி கொண்டிருலகு முந்தை முழு முதலே.

19. பாபத்தாற்‌ காழ்த்தறிவு
பாழ்த்ததனான்‌ வெளிறியடுங்‌
கோபத்ததாற்‌ சிவப்புற்றுக்‌
கொடுஞ்செருக்கா னனியிருண்டே
யாபத்தா னிளைப் பெய்தி
யழுக்காற்றாற்‌ றடிக்கு மனம்‌
சாபத்தேற்‌ குயிர்ப் பிணியாய்த்‌
தழைப்பது காண்‌ டனி முதலே.

20. பழுவிருக்கத்‌ தோல் வேய்ந்த பாவை நெஞ்சப்‌
பாம்பிருக்கும்‌ பாழ்ங்குடங்கர்‌ பற்பல்‌ கோடிப்‌
புழுவிருக்கப்‌ போர்த்தமலப்‌ பொதியே யைந்து
புலப் பேய்கள்‌ குடியிருக்கும்‌ புக்கில்‌ புண்ணாய்‌
குழுவிருக்கத் தொக்கமுடை யிரைமெய்‌ யென்று
குறித்திருக்கப்‌ பெற்றபெருங்‌ குணத்தோர்க்‌ கல்லா
லெழுவிருக்க மொருகணையா ஸனெய்து பத்த
ரெழுபிறப்பு மறுப்பவனை யேத்த லாமே.

21. பணவாசைப்‌ பேய் கண்‌ டுயில விடா
தெனைப்‌ பாவையராம்‌
பிணவாசைப்‌ பூதங்‌ கனவும்‌
புகுந்து பிடித்துடற்று
முணவாசைக்‌ கூளி யெஞ்‌ ஞான்றுந்‌
தெறுமிவைக்‌ கோய்வுமுண்‌டோ
குணவாசைப்‌ பாநுவைப்‌ போன்றுள
னோங்மென்‌ குலதெய்வமே.

22. பொன்னினைக்கும்‌ புகழ் நினைக்கும்‌
பூமியெலா நினைக்கும்‌
பூணினைக்கு மூணினைச்கும்‌
பூவை மொழி யாரை
மன்னினைக்குந்‌ தன்னினைக்கும்‌ மற்றையர்க்குத்‌ தீது
வர நினைக்கும்‌ பழி மறைக்கும்‌
வழி நினைக்குந்‌ தன்ன
தின்னினைக்கு நென்னினைக்கு
மிருள் புகுத்த வல்ல தெது நினைக்க வென்றாலு
மதுநினைக்கு நெஞ்ச
நின்னினைக்க லாகாது
நீநினைத்தல்‌ வேண்டு
நீடொளிய சேடகிரி
நின்ற பெருமாளே.

23-மாட்டாலும்‌ மயக்காலும்‌ மகிழாலும்‌
புகழாலும்‌ வாட் கண்‌ மாதர்‌
கூட்டாலு முணைவாலுங்‌ குடியாக் கொண்
மடியாலுங்‌ கோபத்‌ தாலும்‌
பீட்டாலு மழுக்காற்றுப்‌ பேயாலு
நாயேன் செய்‌ பிழைக ளெல்லாம்‌
பாட்டாலு நிரம்பாது கேட்டாலும்‌
பாவபெனப்‌ பகர்வ ரெந்தாய்‌.

24-ஏழாலே அளந்திட்ட புன் பிறப்பின் எத் துணைக்கோ வினைவேன் எந்தாய் ே
ஊழாலே ஒரு கோடி உடலாலே யுரையாலே யுடறுங்‌ காமப்‌
பாழாலே கூழாலே பகையாலே பசியாலே பயத்தாற்‌ பாவச்‌
சாழாலே திணிந்த மனக்‌ கல்லாலே படுவல் எலாங்‌ கணிக்கலாமே.

25. சற்றேனு மிரங்கீரோ வெனப் பசித்தார்‌
தழங்குரைமுன்‌ றலைக் கேட்‌ டோர்கைத்‌
துற்றேனு மீவறியாச்‌ சுமடனேன்‌
சுடும்வறுமை தொலையத்‌ தம்மை
விற்றேனு முதவுகொடை வீரர்முன
மென்னாவேன்‌ வியாள மேய
புற்றேனு மொவ்வாவென்‌ புல்லுடலே
புவியினெடும்‌ பொறையா மெத்தாய்‌.

26. அருகிருக்கும்‌ புல்லாணி யமர்ந்திருக்கும்‌
வில்லாளிக்‌ கன்பு பூண்டு
பெருகிருக்கு முறையானே பேசறியே
னந்தணரிற்‌ பிறந்தேன்‌ வாளா
முருகிருக்குங்‌ குழலார்க்கு முனைந்திருக்குங்‌ காமத்தீ மூள நாளும்‌
வெருகிருக்கு மாறிருளை விழைந்திருக்கும்‌
வெய்யனருண்‌ மேவ லுண்டே.

27. அனைபடைத்த வுயிர்க்கெல்லா மயன் படைத்த
‘தில்லை யுட லடியார்க்‌ காக்க
முனை படைத்த வறவாழி முதல்வனடி.
முளரியினை முன்னு மெண்ணந் தினை படைக்க மாட்டாது தீ நரகு
படைப்பார்தாஞ்‌ செய்த முன்னை
வினை படைத்த தல்லாது வேறுண்டோ
மெய்யுணர்ந்து விள்ளுங்‌ காலே.

28-குழலோம்பு மினியவிசைக்‌ குயிலோம்பு
குரன் மடவார்‌ கொடிய காமத்‌
தழலோம்பி யேயபணி தலையோம்பிப்‌
பெற்றவற்ப சார மென்னும்‌
விழலோம்பி யதனானோய்‌ மிக வோம்பி
மெலிவெல்லாம்‌ வீடாண்‌ மாயன்‌
கழலோம்பு மாறறியாக்‌ கசடோம்பி
நின்ற வெய்ய காட்சி யாமே.

29-பாடு பட்டுத்‌ தேறி நிதிப்‌ பரப்பு நாளும்‌
பகை விளைக்கு நிலனும் பெண்‌ பாலார்‌ கொங்கைக்‌
கோடு பட்டுச்‌ சிதைந்த புல வுடம்பும்‌ வாழ் நாள்‌
குறை பட்டுப்‌ போம் வழிக்குத்‌ துணையோ சொல்லாய்‌
காடு பட்டுப்‌ போகாமே காக்குங்‌ கார் போற்‌
கருணை மழை பொழிகின்ற கமலக்‌ கண்ணந்‌
கீடுபட்டு வீடுபெற்று வாழ வெண்ணா
திரும்பிறவிக்‌ கடற்பட்ட வேமை நெஞ்சே.

30-எல்லணைத்த பிறைபோலு மெழிலணைத்த
இரு நுதலா ரிரண்டு கொங்கைக்‌
கல்லணைத்துக்‌ கண்ட சுகங்‌ கனவலைத்த
கனி சுவைத்த காட்சித்‌ தென்று
வில்லணைத்து நீல முகின்‌ மிளிர் பச்சைப்‌
பாயன் மிசை மேயினாற் போற்‌
புல்லணைக்கட்‌ சாய்ந்தவன் பேர்‌ புகன்‌ மிருப்பார்‌
பேர் புகன்று புகுவர்‌ வீடே

31-மலைபோ னிதியு மணுவா மதித்து வறுமை கொளுங்‌
கலையோ துளியுங்‌ கடலா நினைத்துக்‌ கருவமுறு
நிலையோ பெறாது நரகு படைக்கின்‌ற நெஞ்சிற்கியான்‌
விலையோ வருளு மிலையோ வடமலை மேலவனே.

32-குடி பிடிக்கு மானப் பேய்‌ குலம் பிடிக்கு
மகங்காரக்‌ கூளி யோடு
செடி.பிடி.க்கும்‌ பேராசைச்‌ செந்நாயு
மனக் குரங்குத்‌ தினமு மென்னை
மடிபிடிக்கும்‌ விடியலும்‌ வழி மறிக்கு
நரக நெறி வகுக்கு மூன்னை
யடி பிடிக்க வொட்டா விவ்‌ வல்லலெலாம்‌
வெல்ல வரு ளரங்கத்‌ தெந்தாய்‌.

33-பாட்டா னளி கண்‌ முரலுமெழிற்‌
பங்கே ருகத்தின்‌ மிசை யமர்ந்து
சூட்டா ரேகினம்‌ பெடைதிளைக்குந்‌
துறை சேர் மல்லி வளதாடி
தாட்டா மரைப்  போதுளப்போதிற்‌
றணவார்‌ பிறவச்‌ சலதி பட
மாட்டார்‌ முடிப்போ தவாவுமுதல்‌
வன்றாட்‌ பிணைந்‌ தெடுத்தலினே.

34-குலை யெடுத்த மரக் கொம்பிற்‌ குதித்துத்‌ தாவும்‌
குரங்கனைத்து நீ முன்னர்க்‌ குறித்த வாறே
மலை யெடுத்து மலை கடந்தும்‌ வாழ்ந்த வென்றன்‌
மனக்குரங்கு மட்டுமுனை வணங்க லில்லாத்
தலையெடுத்து நிமிர்‌ ந்திருளின்‌ வீழ்த லெல்லாத்‌
தயா வுளத்திழற் குறியாத தன்மை யென்னோ
சி லை யெடுத்த நீல முகில்‌ போற் புல்‌லாணித்‌
திருப்பதியின்‌ மேவி வளர்‌ தேவ தேவே,

35. செகத்துக்க ணவதரிக்குத்‌ தெய்வதச் சீர்‌
கேட்டுரையாச்‌ செவிட்டு மூங்கை
முகத்துக்கண்‌ விழித்திருக்க வகத்துக் கண்‌
குருடுபட்ட மூட னல்லா
லிகத்துக் கண்‌ வாழ் வனைத்து மிருங்கான
னீரனைத்தென்‌ றெண்ணா தேபெண்‌
அகத்துக் கண்‌ வந்துழல வாழ் நரக
மமிழப்போ மாதன்‌ யானே.

36. மருவேட்ட குழலார்க்கு மனம் வேட்ட
மயலானே வையத்‌ தென்றுங்‌
கருவேட்ட விடர்க்கடலிற்‌ சரைவே.ட்ட
வுடை கலம்போற்‌ கவிழ்கின்‌ றேற்குச்‌
செரு வேட்ட. தென்னிலங்கை தீ வேட்டஞ்‌
செயம் பொருத செல்வன்‌ கஞ்சத்‌
திருவேட்ட முழு முதல்வன்‌ சீர் வேட்ட
சேவடியே சேம மாமே.

37-ஆற்றைக் கடவா திருஞ்சழிவா
வாழ்த்த விரைவு மடு மரம் போன்
வாற்றைக் கடவா தீ குண முகில்
மாட்‌ட . விரையு மா மிவிடநீ .
றூற்றைக்‌ களைந்து வேர றுக்குத்‌
துகடீ ரருள்வா டருவை கொலோ
சேற்றைக்‌ கழுவ முடையளறு
திளைப்பேற்‌ கொருநாட்‌ டிருமாலே.

38. தெருளாசைப்‌ பட்டறிந்து செங்கண்மால்‌
சேவடிக்கே சேர்ந்த நெஞ்சா
லருளாசைப்‌ பட்டிருக்கு மடியார்முன்‌
செடிநாயேனவனிமீது பொருளாசைப்‌ பட்டிவறிப்‌ புன்பழியே
நனி யிட்டிப்‌ பொரு கண்‌ மானார்‌ மருளாசைப்‌ பட்டதனா னிருளாசைப்‌
பட்டெய்த வதிகின்‌ றேனே.

39-கறையடிக்குள்‌ வெதுப்பொழியக்‌ கலுழன்‌ மிசைக்‌
கார் மழைபோற் கடிது போந்த
விறை யடிக்குத்‌ தினை யுருகா விரும்புமன
மெமனெனும்பேர்‌ யார் சொற்‌ றாலும்‌
மறை படிக்கும்‌ பதைபததைக்கும்‌ பல்கோடி
நினை நினைந்து பரிவு கூரு
மறையடிக்கு முடிக்குமிக வழுத்து மரி
யெழுத்துமெண்ண மாட்டா தந்தோ.

40-தேக நிலை யாத நிலை செத்தபிண மோதுஞ்‌
செல்வ நிலை யாதபடி சொல்வரிர வாளர்‌
போக நிலை யாமை வலி போமுதுமை கூறும்‌
புத்திநிலை யாதமுறை பித்தர்மொழி வாரான்‌
மோக நிலை யாமைசொல மூடமன முண்டு
முற்று நிலை யாமை மறை கற்றவர்கள்‌ சொல்வார்‌
சோக நிலை யாத நிலை சொல்லி யருள்‌ வாரார்‌
சோலை மலை மேவி வளர்‌ நீல நெடு மாலே.

41-முடியிருக்கு நெடுமாலுக்‌ கடிமைசெய
முயலாத மூடமூர்க்கச்‌
செடியிருக்கு மனக்குரங்கு குடி.யிருக்கு முடையாக்கை சிதையா தேயிப்‌
படியிருக்கு மெனநினைக்கும்‌ பாமரர்க்குச்‌
செத்த பிணம்‌ பறை யாற்‌ சாற்றி
நொடியிருக்கு மெனக் கருதீர்‌ நுமக்குமிது
வழியென்று நுவலு மாலோ.

42. ‘குகை கண்டு தனி யிருந்து குல தெய்வம்‌
வரானாக்காக்‌ குருட்டு நெஞ்சாற்‌
பகைசண்டு சினந்துமுறு பணங்கண்டு
விழைந்தும் விழிப்‌ பான லார்புன்‌
னகை கண்டு மருண்டுமவர்‌ நடங்கண்டு
வியந்‌து மொழி நாள்க ளெல்லாந்‌
தொகை கண்டு துறவார்க்குச்‌ சுடுகாட்டிற்‌
புகை கண்டு சொல்லு மெய்யே.

43. மறி கேட்டு வாங்கியதை மலைக் கடவுட்‌ கென்று
வதைத்திட்டுக்‌ கொலை படை.த்து வருள் படைத்த வேலன்‌
குறி கேட்டுக்‌ களியாட்டுக்‌ குணக் கூத்து மாடிக்‌
கும்பிட்டுப்‌ பெற்ற பயன்‌ றுன்பத்தின்‌ வேறோ
செறி கேட்டுப்‌ பவக் கடலிற்‌ றிரையிடர்க்கு நொந்து
தீ வினைக்‌ கரா வாயிற்‌ சிக்குவது தீர்ந்து
நெறி கேட்டுப்‌ பெரு வீட்டி னிலைத்தினிது வாழ
நீர் நினைதி ராயினரி பேர் நினைதிர்‌ மாதோ.

44. தீவினைப்‌ பெருக்காற்‌ பொருடனைப்‌ பெருக்கிச்‌
சிறு புகழ்க்‌ கொரு சில விடுவீர்‌
கோவினைத்‌ தொலைத்துச்‌ செருப்பினைக்‌ கொடுக்குங்‌
கொள்கைநுங்‌ கொள்கையே யம்மா
காவினைச்‌ சயித்த கொடையினா லடியர்‌
கருதிய தன்னையு மளிக்குத்‌
தேவினைப்‌ பழிச்சி யாவையுங்‌ கழித்துச்‌
சிறப்பினை யுறப் பெறா தீரே.

45. மா கனக மேருவென நிதியி ௫ந்தென்
மகிழ் பெண்டிர்‌ மக்களொடு வாழ்விருந்தென்‌
றேக நக மெனவிருந்தென்‌ றெளித்த தாலென்‌
செக முழுது மடிமை புகுஞ்‌ செயத்தி னாலென்‌
போக நகராதிபதி யாயி னாலென்‌
பொல்லாத விரணியரா வணர் போன்‌ மாள்வர்‌
கோகனக மலர்ந்தருணீர்‌ கோத்த கொண்டல்‌
கோதண்ட கோளரியைக்‌ கூறா தோரே.

46-திரவியமொன்‌ றுறுமாயிற்‌ றிரைமேற்‌ செல்வர்‌
தீ மலையின்‌ மிசைச் சேர்வர்‌ சீயத்‌ துஞ்சா
‘திரவியல்வெங்‌ கான்சுரம்போ யிளைப்பர்‌ வையத்‌
தினைப்பிளந்து பாதாளத்‌ திடையும்‌ பார்ப்பர்‌
உரவிய கார்‌ வானத்தும்‌ பறப்பர்‌ பூத
மொன்றுக்கு மஞ்சார்த முயிரு மாய்ப்பர்‌
விரவிய விவ்‌ வினையினொரு தினையும்‌ தெய்வ
விழுப் பொருளைப்‌ பெறப்புரிய விழைவோர்‌ யாரே.

47-அன்புருக்கொ ளசோதைத்தாய்க்‌ கெளிய னாகி
யழனுருக்கொள் வஞ்சத்தாய்க்‌ கெமனே யாகித்‌
துன்புருக்கொள் பொரு களிற்றை மாய்த்துத்‌ தாய
தொழு களிற்றைத்‌ துயர்‌.தீர்த்துத்‌ துகடீ ருள்ளத்‌
தின்புருக்கொள்‌ சேடன் மிசை யினிது சாய்தந்தன்‌
றிடருருக்கொள்‌ காளியனை யடர்த்த லானே
வன் புருக்கொள்‌ கொடியார்க்கு மடியா ருக்கு
மன்னிறைவ னருண் முறைமை மதிக்க லாமே.

48-கங்கைக்‌ கரைக்குக்‌ குகப் பெருமான்‌
கருதும்‌ பம்பைக்‌ கரைக்கநுமான்‌
சங்கம்‌ கடலின்‌ பெருங்கரைக்குச்‌
சார்ந்த வொருவீ டணனிவரைப்‌
பங்கத்‌ துறையும்‌ பள்ள நிலம்‌
பாயும்‌ புனல் போற்‌ கலந்த விறை
துங்கத்‌ தினிய திருவருளே
தொலையாப்‌ புணையாந்‌ துயர்க் கடற்கே.

49-ஓலை கட்டித்‌ தூதேகிப்‌ பாண்டவர்க்கா
வூரிரந்தா னுவந்து சாத்த மாலை கட்டிக்‌ கருள் புரிந்‌தான்‌ மண்ணினுற்றார்‌
புண்ணியத்தின்‌ வாழச்‌ சேது
வேலைகட்டி வைத்த பிரான்‌ யருள் கடலிற்‌
குளித்தற்கு விரகி லாமே
சேலை கட்டி விழி வலைக்கொள்்‌ தெரிவையர்கா
தலின்மூழ்குஞ்‌ சிதடன்‌ யானே.

50-பிரமனை முன்‌ படைத்தவற்குப்‌ பெரு மறையைப்‌
பிறக்குவித்த பிரம மென்றே
பரமனை முன்‌ றுதிக்கறியாப்‌ பாழ்ம் பிறப்பு
மானிடமாய்ப்‌ பார்க்கப்‌ பட்ட
கரமனைத்துக்‌ கழுகனைத்துக்‌ கழுதனைத்துக்‌
கல்லனைத்துக்‌ கனியு நஞ்சா
மரமனைத்தென்‌ றெண்ணி விடா மதியுடையேற்‌
குவமையிந்த வையத்‌ துண்டே.

51-தனக்கு மே லொருவருள ரென வெறுக்குஞ்‌ _
சழக்குயிரின்‌ மமதையினைச்‌ சாற்றி னுற்றா
ருனக்குமேற்‌ கடவளுள னென்ற போதும்‌
உருத்தவரைக்‌ கொலை சூழு முதற்குச்‌ சான்று
சினக்குமே லுலகமெலா நடுங்கா நிற்குந்‌
,தீயவிர ணியனென்று தெளிவா ரன்னா
னெனக்குமே லில்லை யென வகங்கரிப்பி
னெல்லையினின்‌ றேற்கிறைவ வென்செய்‌ வாயே.

52-முற்றத்‌ துறந்த முனிவரரு முதல்வா நின்பான்‌ முறையிட்டுச்‌
செற்றக்‌ காம மயக்கமெலாந்‌
தீரு மாறு வரங்கிடப்பக்‌ குற்றக்‌ கலமா யுளவடியேன்‌
குறைவேண்‌ டுவது முறையோதான்‌
தெற்றத்‌ தெளிந்த சடகோபர்‌
தெவிட்டா தருந்துந்‌ தெள்ளமுதே.

53-அரனைப்‌ படைக்குந்‌ திசைமுகனை
யலரிற்‌ படைக்குந்‌ திரு நாபி
வரனைப்‌ படைக்கு மனப் பெரியார்‌
மலர்ந்த செழுந் தாமரைப் பதத்துச்‌
சிரனைப்‌ படைக்க மாட்டாத
தேகம்‌ படைக்குந்‌ தீய வினை
மரனைப்‌ படைத்து வளர்க்கின்‌ ற
மதியைப்‌ படை.த்தேற்‌ கருளுளதோ.

54-காலமெலாங்‌ கணிகையரிற்‌ கழித்து மூத்த
காரிகையாள்‌ காந்தனைப்பின காண லுற்றுச்
சீலமெலாஞ்‌ திறந்த குணத்‌ தெரிவை யொப்பச்‌
செய்த பிழை பொறுக்குவென்று செப்பல்‌ போல
வாலமெலாந்‌ திரண்டனையே னந்தோ வாசைக்‌
காளாகி நாடொலைத்தே னன்ப ரேய்ப்ப
வோலமெலா மிடுகின்றே னிதற்கு நீயு
முற்றருள்வையோ வறியேன்‌ பெற்ற தேவே.

55-கிளை யெலா நச்சுக்‌ கனி பழுத்‌ திருக்குங்‌
கெட்ட தீ மரத்தையும்‌ வித்து
முளையெலாங்‌ கெடுத்துப்‌ புனலெலாம்‌ வீணாய்‌
முடித்து நல்‌ லெருவெலாந்‌ தீத்துக்‌
களையெலாம்‌ விளைக்‌ குங்‌ களரையு மனையேன்‌
காண்பனோ நின்னையு மாயர்‌
அளையெலா மடிய ரன்புபோ லருந்து
மய்யனே தெய்வ நா யகனே.

56.மறப்பினுக்கோ ரறையா குமை யிருட்டுச்‌
சிறையாகு மயற்கூ டாகும்‌
இறப்பினுக்கும்‌ பிறப்பினுக்கும்‌ படியாகும்‌
நரகினுக்கோ ரேணி யாகுந்‌
துறப்பினுக்குப்‌ பகையாகுந்‌ துர்க் குணத்துக்‌
குறவாகுந்‌ துகடீ ரெந்தாய்‌ சிறப்பினுக்குச்‌ செல்லாது செய் சுவராந்‌
தீமனமென்‌ செயத்தத்‌ தாயே.

57-ஓழுக்கினா னீத்த வுயர் முனி வரரு
முள்ளமுக்‌ கறவுனை யுள்வா
ரிமுக்கினா னளறே யெனுங்குடும்‌ பத்தோ
டிரண்டறப்‌ பொருந்தழுக கிருநீர்‌ முழுக்கினாற்‌ போமோ வுன்‌ றிரு வருளின்‌
மூழ்கினா னல்லது வினையைப்‌
புழுக்கினான்‌ முளைக்கா வித்தெனப்‌ புரிந்து
போற்றினார்க்‌ காற்றுமா தவனே.

58-உடலிந்தே யிடரினுக்கொன்‌ றுன்ன லெல்லா
முரலிருந்தே யுலக்கையினுக்‌ கஞ்சல்‌ போலாங்‌
குடலிருந்த தொடக்கறுத்துக்‌ கோத்த சுற்றக்‌
கொடும்பாசப்‌ பிணிப்பவிழ்த்துக்‌ கொண்ட பெண்ட
மடலிருந்த பெரும்பேயி னாசை யோட்டி
யகப்பற்றும்‌ புறப்பற்று மனைத்தும்‌ வீட்டி
மடலிருந்த துளவலங்கன்‌ மாயன்‌ நூய
மலரடிக்கீ ழ்ப்‌ புக்கொடுங்கா மடமை நெஞ்சே.

59-சரிந்த குழ றாங்கிய கண்‌ கரமும்‌ பற்றத்‌
தளர்ந்த வுடை பிடித்த மலர்க்‌ கரமும்‌ விட்டுத்‌
தெரிந்த வுளத்‌ தொளிர்கின்ற தேவே யுன்னைத்‌
தேர்ந்தொருகாற்‌ கூப்புதலைச்‌ செய்யும்‌ போழ்‌தே விரிந்த குணப்‌ பாண்டவர்தம்‌ வென்றி போல
விளங்குதவக்‌ கொடிமான மெய்யே காத்துப்‌
புரித்தபெரும்‌ பாரதமும்‌ போதா தென்று
புலம்பியதுன்‌ றிருவருளின்‌ பொலிவே யம்மா.

60-துட்டவிரா வணனாவாற்‌ சுடுகென்‌ றோதத்‌
துனைந்தெழுந்து புகுந்தன்பாற்‌ றொழுது தீயர்‌ கிட்டவிரா முழு முதலே சரண மென்று
கிளத்திரங்கும்‌ வீடணனைத்‌ கய னென்னப்‌
பட்டவிராக்‌ கதன்றம்பி நம்பாற்‌ கொள்ளப்‌
படாதென்ற கவி வேந்தை மறுத்து நல்கி
யுட்டவிரா வன்பின்வரி விராவ ணற்கு
முற்ற பய மளிப்பலென்ற வுரையே தஞ்சம்‌.

61-பிரமாண்ட கோடியெலாம்‌ பெற்றுக்‌ காக்கும்‌ பிரமநீ யவரித்த பெற்றி தேறா
துரமாண்ட கவியளனத்து முவரிக்‌ கூலத்‌
துறுகணுனக்‌ கெய்தாமை யளிக்க வோர்ந்து
கரமாண்ட வால்பிணைத்துக்‌ கவிந்து கொண்டு
கடி மதில்போ னின்றிளைப்பாற்‌ கண்க டுஞ்சச்‌
சரமாண்ட வில்லினொடுத்‌ தம்பி யோடுத்‌
தாண்டியவை காத்தவரு டமியேன்‌ றஞ்சம்‌.

62-திசைக்கும்‌ வெப்ப வினைத் துயரைத்தெறு இடத்த வச்ச வரிப் பெ ணருத்திய
திருக்க னிக்கு மணித் துணை கட்டிய
செவிக்க சட்ட னளித்த மூடைச்சவக்‌
தசைக்கு மற்பி னுருக் கொளுத்தருள்‌
தழைத்த பத்த ருடற் புள கத்தொடு
தழற்கணுற்ற வரக்கை நிகர்த்துளன்‌
தனித்து ருக்க முறத்தமி மிற்பொழி
றிசைக்கும்‌ வெற்றி யுருக்கு மிணிக்குயி லெழிற் கை பற்றி யதற்கு வெறுத்தர வெனக் கொ தித்த செருக்க னிடைக் குலத்‌
‘திலச்சை யற்ற சழக்க னெனச்சொலும்‌
வசைக்கு முத்தி கொடுத்து மறைச்சிரம்‌
வழுத்த நிற்கு மடிப்பது மத்தலான்‌ மனத்தை வைக்க நினைப்ப கொல்‌ கற்றவர்‌
மயக்க மிக்க பவக்கடல்‌ வற்றவே.

63. விது வைத்த தலைச் சிவ னுக்குமலர்‌
மிசைவைத்த மறைந்பிர மற்குமிறை
புதுவைத்தல முற்ற முதுக் குறைவி புனை புத்தமிழ்‌ தத்தமி மிற்குமுடி மது வைத்த விதழ்த் தொடை யற்கு மகிழ்‌
மனம் வைத்து மணத்தைய ஸித்தபுயல்‌
பொது வைத்த நிதிக்கு நிகர்த்தவருள்‌
டொழியத்‌ தழைகிற்பது முற்றுமரோ.

64. சேப்படைத்த சவனயனே யெனலான
தெய்வதங்கள்‌ திகழ் மந்‌ தாரக்‌
காப்படைத்த விந்தரனே தலையாய
தேவர்நரர்‌ கனக மேரு
தேப்படைத்த பலகாடி யண்டமுதற்‌
பூதமெலாந்‌ திருமால்‌ நாபிப்‌
பூப்படைத்த தென்‌ றவன்பேர்‌ நாப்படைத்த
பயன்கொள்ளப்‌ புகல்வர்‌ மேலோர்‌ .

65. பரகாலனை முதலாகிய பழையோ ரருளானே
கரவாதுள மறவாதுன கழலே தொழு வேனே
நரநாரண வரிவாமன நளினாசனி நாதா
வரகாரண சகன்மோகன மதுசூதன மாலே.

66-துருவனுக்குயர்‌ நிலைகொடுத்தன
துருபதைக் கவிழ்‌ துகில் வளர்த்தன
சுமுக னுக்குள பயமொ ழித்தன வுலகாளும்‌
ஒருவ னுக்கெழில்‌ வளை தரித்தன
வுரைக ரிக்குயர்‌ கதி படைத்தன
வுலம ழைக்கொரும லையெ டுத்தன வுமை கேளவன்‌
சருவனுக்கிர வொழிய விட்டன
தசமுகற்கடு கணை தொ டுத்தன
சகல ருக்குநல்‌ வரம்விளைப்பன வடி நீழன்‌
மருவெனக்கிக பரம ளிப்பன
வடம லைக்குறு கடவு ணற்பொல
வரை யெனத் தரு தரு வெனப்படு புயமாதோ.

67-முறை க டந்து பிறர் ம டந்தை
முலை புணர்ந்த பழுதெலாந்‌
தறை கி டந்து புனல் படிந்து
தழலி னின்று மொழியுமோ
சிறை கி டந்த செனனம்‌ விஞ்சி
நரகு ழந்து தவிருமோ
மறை க டந்த வரமு குந்த மனமி ரங்கி யருள்வையே.

68-தானே வழங்க வறியாத
சலவா ரியையுன்‌ றயையினுக்கு
நானே யுவமை நவில்வதையு
நயந்துந்‌ தன்னை நல்கலிலா
வானே வளருங்‌ கற்பக மா
மரத்தை நினக்கொப்‌ புரைப்பதையுங்‌
கோனே நிளையுந்‌ தொறுமெனது
கொடிய மனமுங்‌ குலைவுறுமே.

69.மாறு பட்டுரிய கொழுந னுக்கியைய
வாழ்த லற்று மயல்‌ மனைகளில்‌
வயிறு பட்ட பசி தணிய லுற்றுவினை
வழியி யற்றிவரு கூலி கொண்‌
டூறு பட்டசிறு நிலையி னிற்குமவ
ளொருவ னுக்கென முன்‌ னாளினி
லுடைமை பட்டு மண முடிய லுற்றதனை
யுணர்வின்‌ வைத்து நிறை தன் மனம்‌
வேறு ட்டிலளு பட்‌ மாகி மற்ழெதையும்‌
விழைத லற்ற வளு மாயினால்‌
மெலியு மத் தெரிவை குணனை மெச்சிவரன்‌
மேவு காலமுள தாகுமால்‌
தூறு பட்டவினை யேனு னக்கடிமை
தொடர் விலிட்டுமுனை யல்லது
தொழ நி னைத்தவனு மிலையெ னத்தெரிவை
துளவு தொட்ட .முடி மாயனே.

70-தாயிருந்தும்‌ முலையினிற்பால்‌ தழைத்திருந்துந்‌ தரைக் கிடக்குந்‌ தருணந்‌ தானே
வாயருந்த மாட்டாத மகவினுக்கு
வாயின் முலை மடுக்குந்‌ தாய் போல்‌
நீயிருந்து நின் கணருள்‌ நிறைந்திருந்தும்‌
யானருந்தா நிலை கண்‌ டென்கண்‌.
மேயிருந்து நீயூட்டா வெளின்‌ மெலிவேன்‌
வசையுநினை மேவு மெந்தாய்‌.

71-அனும னுக்கு நளிர்க வென ச்சொலி
யழலின்‌ வெப்ப மகற்றி யளித்தவள்‌
அடல ரக்கர்‌ சிறையை யறுப்பதற்‌
கணுமு யற்சியு முற்றில எற்றென முனும யற்கு முதுமறை சொற்றவன்‌ முழுது யிர்க்கு முலகு படைத்தவன்‌
முதிரி ருட்கொர்‌ பரிதி யளித்தவன்‌
முகிலி டர்க்கு மலைமயை யெடுத்தவன்‌
தனுவெ வைக்கும்‌ நிறுவி வளர்ப்பவன்‌
தனய ருக்குண்‌ முலையை யமைப்பவன்‌
தழை. பயிர்க்கு மழையை விடுப்பவன்‌
தரணி துக்க மொழிய வுதிப்பவன்‌
இனும னுக்கு கொடிய பவக் கடல்‌
இழிய வைப்ப னெடுப்ப னெனக்கவன்‌
எழின்மி குத்த வருளின்‌ முறைப்படி .
இனிதி ருப்பதை யல்லது மொல்லுமே.

72. பொற்றை யுடலைப்‌ புறங்கழுவிப்‌
பொழுதே புசித்துப்‌ புனையர வப்‌
புற்றை விழைந்து புணர்ந்துறங்கும்‌ புன்மை யலது புவியினிடை
மற்றை யெதுவு மின்பமென
மதியேன்‌ பரமா வுனைத் துதியேன்‌
இற்றை நாளுன்‌ னடி யெண்ணி
யிருப்பேற்‌ கென்னீ யெண்ணுவதே.

73. கரியுந்‌ திருவீ டணனுமடத்‌
காகா சுரனுந்‌ துருபதையும்‌
பரியு மிடரா னு ளதநடுங்கிப்‌
பகவ னுனையே பற்றியபோ
துரிய தூய்மை முறை புரிய
வுணர்ந்து .மிலரா லன்னவர்க்கு
விரியு மரிய பெருங்கருணை
வினையேன்‌ தனக்கு முளதாமே.

74. பாந்தண்‌ மணிவாய்‌ விடமருத்திப்‌
படரு மழலி னிடைவீழ்த்திப்‌
படையி னறுத்து மலையுருட்டிப்‌
பதைக்க வதைக்கும்‌ படி.புரிந்துந்‌
தேந் தண்‌ டுளவத்‌ தொடைகமழுஞ்‌
செழுந்தாண்‌ மலரி னழுந்துமனந்‌
திறம்பாச்‌ சிறுவன்‌ மொழி காக்கத்‌
திருத் தூ ணுதித்துத்‌ தனைக்குவிக்குங்‌ காந்தண்‌ மெலியும்‌ விரற்கரத்தான்‌
கருத்தோன்‌ றிடங்காண்‌ டலைவேட்டுக்‌
கனக னுரங்கீண்‌ டுடற்றொடக்காற்‌
கரிய குடரு மெடுத்தணிந்து பூந்தண்‌ மாரி சுரருவந்து பொழிய வெல்லா வுயிர்க்குமளி
பொங்கி வழியுஞ்‌ சிங்கப்பிரான்‌
புகழே நினைவேற்‌ கிகழ்வுளதோ

75. எல்லா வுயிரு மெம்பெருமாற்‌
கினிய வுடலா யிருக்குமுடல்‌
பொல்லா தொருநோ யுறினதனைப்‌
போக்க முயற லுயிர்க்கன்‌ றித்‌
கல்லா வுடற்கு முளதாமோ
கடவுள்‌ கழற்கே யறத் தீர்ந்த
நல்லார்‌ தமக்குத்‌ தாமுயலார்‌
நங்கோ னருளி னடப்பாரே.

76. நம்பிரான்‌ காளிங்க நடன மாடி
நயந்ததனை யநுகரிக்க நயந்தார்‌ தம்மு
ளெம்பிரான்‌ றிருவேட மியைந்தா டன்னி
னிருங்காளி யன்வடிவ மெய்தி னாளே
அம்பிரா னடிக்கமலஞ்‌ சிரமேற்‌ றாங்கு
மருமையினாற்‌ பெருமை மிகப்‌ படைத்தாளன்னாள்‌
வெம்பிரா மனம் பழுத்த விழுத்த பத்தி வினையேற்குத்‌ இனையேனு மேவு மேயோ.

77–வாள் பிடித்த கண்ணியர் தம்‌ மயற்பேயின்‌
பேழ்வாயின்‌ மயங்கி வீழ்ந்து
தேள்பிடித்த கரப்பினுருச்‌ சிதைவேற்குச்‌
சேண்முழுதுஞ்‌ சென்று தாஅய
தாள்பிடித்து வழுத்தவிடாக்‌ கோள்பிடித்‌
சழக்குவிதி தணப்ப தெந்த நாள்பிடித்து நண்ணுறுமோ நண்ணாது
நரகிலெனை நாட்டு மேயோ.

78-ஆசையெலாம்‌ புகவல்ல மனமீ காம
னல்வழியிற்‌ செலவுய்க்கு மாக்கை நாவாய்‌
மாசையெலாம்‌ பண்டமெனச்‌ சுமந்தவாவாம்‌
வன்காற்றான்‌ மறுகுபவ வாரி யோடத்‌
தேசையெலா மிழந்ததன்கண்‌ வினையை யீட்டச்‌
சிறுநாய்க னெனநாயேன்‌ செறிந்தேன்‌ கண்டா
ரோசையெலா மிடவெமனாம்‌.பாறை தாக்கி
யுடையும்போ தென்னாவே னுடைய தேவே.

79-தாழியினுக்குமூயர்‌ வீடு கொ டுத்த முதல்‌ தாமரை யுற்ற திரு மா மகளுக் கழகன்‌
வேழ ம ழைக்குமுன மேவிய ளித்தவரன்‌
வேதமு தற்கலைகள்‌ யாவுமு யிர்த்தபரன்‌
ஏழும ரத்தினையு மூடுரு வச்சிலையின்‌
ஏவை விடுத்தபுய லீரடி யைப்பிடியார்‌
ஆழும்‌ வினைப்பிறவி யாகு மிடர்க்கடலில்‌
ஆவி திகைக்கவுழல்‌ வாரிது சத்தியமே,

80-ஒருகூற னுமை கேள்வ னொளிர்நாபி
யுறையாதி மறை வாண னொடு மாதவர்‌
புருகூதன்‌ முதலாய சுரர்யாரு
மறியாத பொருளாய தனிமாமுதல்‌
குருகூரர்‌ பரகாலர்‌ குளிர்கோதை
யதிராசர்‌ வரயோகி குருதாள்களின்‌
முருகூரு நறைவீசு தமிழோத ,
வெனையாள முனமே செய்‌ தவமேதரோ.

81-எய்தாலும்‌ வால்குழைக்கு மிருஞ்சுணங்கன்‌
பெருங்குணனு மில்லே னின்றேன்‌
பெய்தாலுங்‌ கைப்பறாப்‌ பேய்ச்சுரைக்காய்‌
போல்கின்றேன்‌ பெரு நூறம்மேற்‌
செய்தாலு மீவறியாச்‌ செல்வர்கடைக்‌
குழன்றிடர்கொ டீய னேற்கு
வைதாலும்‌ வீடளிக்கு மால் பதத்தை
முடிசூடி வழுத்த லாமே.

82-தூய நீயுயிர்‌, யாவும்‌ வீடு
துலங்கு மாறருள்‌. செய்யினுஞ்‌
சுத்த சத்துவ ருக்க.லாதொரு
துட்ட னேற்கது கிட்டுமோ
தீய ராவண னேனு நம்மொடு
சேர்க வென்ற தினத்திலே
சீல வீடண னன்றி மற்றெவர்‌
தேவ நின்னடி. சூடினார்‌
பாய மாமுகி லேழும்‌ வாழிய
பாரி லேமழை பெய்யினும்‌
பைந்த ருக்குல மல்ல தங்குள
பட்ட தாருத ழைக்குமே
ஆய யாவ முண்ண நல்குறு
மன்ன சாலையு ளாயினும்‌
அறப்ப சித்தவ ரன்றியேவ
ரருந்தி யின்புறு வாரரோ..

83–நீழலொன்று மிலாத பாலை
நெஞ்சு ரத்தி னிருந்ததோர்‌ நிறை குழைத்தரு வடிய டுத்தவர்‌ நெடு வெ யிற்றுயர்‌ தீர்பபோற்‌:
கேழ லென்றொரு ஞான மேனி
கிளர்ந்து கொண்டுல கங்களைக்‌
கீறு வெண்பிறை மாற மைந்தொளிர்‌
கேடில்‌ கொம்பிடை யேந்தினார்‌
வீழ லென்றும்‌ விழாமை யென்றுமிம்‌
மேதி னிக்கண்‌ மிடைந்த
தீ வினை ந ருங்கெடு குணமெ னுங்கறை
விரவு றாம லிருப்பரால்‌ –
தாழ லொன்றுமி லாது போயவர்‌
தாள்‌ டைந்தவர்‌ யாவருஞ்‌
சார்கொ டும்பவ நோயொ. ழித்துயர்‌
தணவி லின்படை வாரரோ.

84-‘திலத்தளவும்‌ பிறர்க்குதவாத்‌ தீயமன னாலே
சிதலைதின்‌ ற மதலையெனத்‌ இனமெலிந்து சாய்வேன்‌
சலத்தையடை தொறும்வேதத்‌ தனிக்கடவுள் யுன்னைத்‌
தயாவிலியென்‌ பேனென்றன்‌ சழக்குவினை யென்னேன்‌
நலத்த நெறி நடக்கறியா தடி யிழுக்கி வீழ்ந்து நனி துயரான்‌ முனி வெய்தி நடுங்குகர மோச்‌சத்‌
தலத்தை யறை குற்ற தளர்‌ நடைப் பருவக்‌ குழவி
தன்மதியென்‌ றுன்மதியிற்‌ சாலவழ கிற்றே.

85-தேனும்‌ பாலுங்‌ கன்னலும்போற்‌
றெவிட்டாச்‌ சுவைய தீந்தமிழின்‌
யானும்‌ பாட வல்லனென
ஞாலம்‌ புகழ்த னனிவிருப்போ
வானும்‌ பாரு மளந்தசெந்தா
மரைத்தாள்‌ விருப்போ நீயறிவை
மீனும்‌ பாழி யாமையுமாம்‌
விமலா நின்சீர்‌ விளம்புதற்கே.

86. தழலை நிகர்த்த துயர்ப் பிறவி
தழைக்கு நிலனா யயன்‌ றிருத்து
மழலை மொழிப்பெண்‌ மயிலனையார்‌
மயற்பேய்‌ பிடித்த மனக்குரங்குன்‌
கழலை வழுத்தி யமுது சுவை
காணா தினிய கரும்பிருக்க
விழலை வளர்க்கு மாத ரைப் போன்‌
மெலிதல்‌ விதியோ விழுப் பொருளே.

87. விள்ளற்‌ கரிய தொரு வீடும்‌
வேண்டா விறலின்‌ விழுப் பெரியார்‌
கொள்ளக்‌ குறையாப்‌ பெருங்கருணைக்‌
குவாலை முகந்து கொளவளிக்கும்‌
வள்ளல் கடவுள் திருவடிப்பூ மணக்காப் பனுவல் மாலை எலாம்
தள்ளப்‌ படுமா லீமம்சைத்‌
தயங்கு மாலை தனை நிகர்த்த

88-பவத்தைப்‌ புகுவேன்‌ பர மாயான்‌
பாவிற்‌ குழல் போ லுழல்‌வேனோ
தவத்தைப்‌ புகுவார்க்‌ குளதாமுன்‌
றயைதான்‌ றமியேற்‌ கிலதாமே.

89. நீயிருக்குங்‌ கோயிலென.நினையாம
லுடம்பிதனை நெடிய காலம்‌
பேயிருக்கும்‌ பாழ் மனையிற்‌ பெருங்கேடு
பெறவிகழ்ந்து பிறருக்‌ கச்ச
மாயிருக்குந்‌ இீயவினைத்‌ தூறுமண்டி
யழியவிட்டே னந்தோ சேய்க்குத்‌
தாயிருக்கு மாறிருக்குந்‌ தடங்கருணைப்‌
பெருங்கடலே தம்பி ரானே.

90. முத்த மிரங்கு முறுவனல்லார்‌
முலைக்கண்‌ மோத முரணழிந்து
நித்த மிரங்கும்‌ வகையுடைந்த
நெஞ்சப்‌ புணையே துணையாய்ப் போய்‌
நத்த மிரங்கும்‌ பவக்கடலி. னனிமூழம்‌ குவதொன்‌ றல்லாதுன்‌
சித்த மிரங்கும்‌ படிவேறென்‌
செயவ லேன் யான்‌.தெய்வதமே.

91. தேறா வொருவன்‌ றெங்கிளநீர்‌
செவ்வே நிறைந்த தீங்காயைச்‌
செங்கை வருந்த வசைத்த சைத்துச்‌
சிறிதுந்‌ தளும்பா வகையோர்ந்து
மாறா மிதுநீ ரிலதென்று
மருண்டு மாந்த முயலாது வறிதே யிகழ்ந்து விட்டாங்கு
வைய முழுது நிறைந்தெவர்க்கும்‌
பேறா யருளுக்‌ குருவான
பெருந்தே வூனப்‌ பேய்விழிக்குப்‌
பிறங்கா வியல்பா னிலையென்‌ று
பேணா திகழ்ந்து பெரும்பிறிதாய்‌
நீறாய்‌ நிலத்து விளிவேனை
நெடுமாற்‌ கேநீ யடிமையென
நினைவித்‌ தெடுத்தாண்‌ டதுஞான
நிதி போன்‌ மாற னெறித்தமிழே.

92. நெஞ்ச மென்ற கருங்கல்‌ கொண்டிடர்‌
நீர வெம்பவ வாரியி
னீடு செல்ல நினைந்து மூழ்குறு
நீச னேனகி லேசனே
தஞ்ச மென்றன னஞ்ச லென்‌ றரு
டந்தி டாயெனி னின்னையே
தந்தை தாய்கதி யென்று வேதம்‌
விதந்த துந்தவ றாகுமே கஞ்ச நாண்மல ரந்த ணன்றரு
கங்கை மோலிய ஸிந்திரர்‌
காசி லாதப ராச ராதியர்‌
காண வாசைகொள்‌ சேவடி
வஞ்ச னேனும வாவி னாலது
மாறெ னாநினை வாயெனின்‌
மாசு ளேற்கென வேறு பாதம்‌
வகுத்தி லாதென்‌ மாயனே.

93. முழுதுந்‌ தெளிந்து சலனங்கொ ளாது
முதுகுன்‌ றிருந்த சுனையிற்‌ பழுதின்‌ றிருந்த புனலின் கண்‌ வந்து படர்திங்க ணீழல்‌ படல்போற்‌று
ஓழுதொன்று தூய ருளமீது வந்து
சுடர்கின்ற சோதி யெனையே
கழுதென்று நின்ற கடையே னெனாது
கழறந்து வீடு தருமே.

94. வெருடருங்‌ கூற்ற மேற்றவெத்‌ நரகின்‌
விமுமமே கெழுமியும்‌ பல்கா
லுருட.ரும்‌ பிறவி யெனைப்பல கோடி
யுறுவதே பெறுவதாய்ப்‌ பொல்லா
இருடரு ஞாலத்‌ திடராலா முழந்து மிம்மியுங்‌ கழிந்திலா தந்தோ.
தெருடருந்‌ தேவுன்‌ னருளையு மறிக்குந்‌
திறத்‌த்‌ தென்‌ தீவினைத்‌ திரளே.

95. வான் மறந்த காலத்தும்‌ வழங்கு புனற்‌
பேராறு மான நின்னின்‌
றூன்மறந்த யோகியர் தமுளமறந்து
பருகவரு ளொழுகஈ நிற்ப: ,
தான்மறந்து நாவற்று நலிவெல்லா
முணர்ந்திலையே நற்றாய்‌ பி
‘தான்மறந்துந்‌ தான் மறவாள் எனல் பொய்யோ
தரைகடந்த சரணத்‌ தாயே.

96. உனக்குரிய வருட்கடலிற்‌ றிளைக்கும்‌ போதா
வொருதுளியிற்‌ றுளியெடுத்திங்‌ குரைக்கப்‌ புக்க
தெனக்கினிப்ப தென்னுமந்த வேது வன்றி
யாதுமோர்‌ பயன்கருஇ யில்லை கண்டாய்‌
‘தனக்கினிக்கு மெனத்தாய்ப்பா லுண்ப தல்லாற்‌
றன்னுடலம்‌ வளர்ப்பதெனச்‌ சற்றுப்‌ பிள்ளை ‘
மனக்கணினைப்‌ பில்லாத வாறு போல்வேன்‌
வரத்தவத்த ரமுதமென மடுக்குந்‌ தேவே.

97. மத்தேறு முதலாகப்‌ படாதனபட்‌
டுயிர்க்கருள வருமாத்‌ தெய்வம்‌
பித்தேறு மகவுக்கும்‌ பெரிதிடருற்‌
றுணவருத்தும்‌ பெற்றாண்‌ மான
தத்தேறு திருக்கரத்தான்‌ ஞாலமெலா நனியூட்டு நன்றி தேறார்‌ செத்தேறு பாடைமரஞ்‌ செய்பாவ
மென்னென்று செப்பு மாறே.

98-நலத்து மருந்தீங்கே நயக்கும் வெந்தீயேனாக
நாட்டமுதமே பெய்த கலத்துளும் கயப்பே சுவைக்குறும் இயல்பேன்
கண்ணநின்‌ கோயிலைச்‌ சூழும்‌
வலத்துளு நின்னை மதித்திடா துலக
வாழ்க்கையே மனக்கொள்வேன்‌ வைகு
நிலத்துளு மினிப்போ நீணர குளும்யா
னெடும்பொறை யாகுவே னம்மா.

99. மையோ மணியோ வெனுமேனி
மாயோனடித் தா மரை வாழ்த்தி
மெய்யோ புளக மரும்பவுளம்‌
வெந்தீ மெழுகின்‌ விரைந்துருகக்‌
கையோ தலைமேற்‌ குவித்தொருகாற்‌
கண்ணீர்‌ கலுழக்‌ கண்டறியேன்‌
ஐயோ வவன்ற னருட்பேரா
ற்ருந்த விழைந்தே னழகிதன்றே.

100. எள்ளற்‌ குரிய மனப்பேயார்க்‌
கேவற்‌ றொழில் செய்‌ திளைப்பேனைக்‌
கொள்ளக்‌ கருதிற்‌ -கொடும்பாவக்‌
கோட்டை யகத்தேன்‌ குணமிலென் று
தள்ளக்‌ கருதி னவன்றாளே
சரணம்‌ புகுந்தே னிவையிரண்டால்‌
விள்ளற்‌ கரிய விழுக்கடவுட்‌
கடியே னிடரே விளைத்தேனே.

101. தாய்வ யிற்றிடை வைத்த தார்கரு
தான ருத்தி வளர்த்ததார்‌ தலையி னிற்பொறி யிட்ட தார்நல
தரையி னிற்பெற விட்டதார்‌
பாய்வ யிற்றுயர்‌ போது தாய்முலை
பால்பி லிற்ற விழைத்ததார்‌
பளக றப்பயி றற்கெ னப்பல
பாடை மைப்புவி நட்டதார்‌
நோய்வ யிற்புக லுற்ற காலையி
னொய்தெ டுத்து நிறுத்ததார்‌  நுவலுக்கடை யுதரம்‌ வைத்துயிர்‌
நுதலி யற்பொ டணைத்ததார்‌
நாய்வ யிற்றிகழ்‌ குணமி லேனையும்‌
நன்னெறிச் செல  வுய்த்ததார்‌
நான்மு. கத்தொரு சேய்படைத்தொளிர்‌
நாபி மெய்ப்பொரு ளன்‌ றியே.

102. விழிவழியே தெரிகின்ற பேய்த்தேரை
நீரென்று விழைவுற்‌ நாரும்‌ குழிவழியாய்‌. வழிகுழியாங்‌ குருட்ருநல்‌ லொளியரெனக்‌ குறித்துக்‌ கூறப்‌
பழிவழியே யொழுகியிருட்‌ பாழ்ங்குழியில்‌
வீழ்கிற்பேன்‌ பரமா நிற்கே
வழிவழியா யுளவடியார்‌ மாந்துதிரு
வருட்காசை வைக்க லாமே.

103. பத்திச்‌ சுவையே பழுத்தமனப்‌
பகவ ரமுதப்‌ பழம்பாடல்‌
நத்திச்‌ சுவைதேர்‌. திருச்செவிக்கு
‘நவில்வார்‌ நாவுங்‌ கயக்கும்வெஞ்சொல்‌
வித்திச்‌ சுவையே நவையாக
விளைத்த வருத்த மித்தனைக்கு
முத்துச்‌ சுவைநல்‌ கருட்கடவுண்‌
முனியா யிதுவ முன்னருளே.

104. பீட்டைப்‌ புரிந்த பெருந்தமிழிற்‌
பிறவா நெறியே நனிகாட்டி
நாட்டைப்‌ புரிந்த தெருட்பெரியார்‌
நயந்த கடவுட்‌ பத்திமைதான்‌
கேட்டைப்‌ புரிந்தேற்‌ கணுவேனுங்
இடையா திவைகொண்‌் டுளதெனின்யான்‌
பாட்டைப்‌ புரிந்து படி.றியற்றிப்‌
பாரை மயக்கும்‌ பாதகனே.

105.– செகத்தைப்‌ புரக்கக்‌ கவித்த முடி
இருந்த வெழுதித்‌ தேசெழுதேன்‌
செந்தா மரைக்க ணெழுதியருட்‌
டேனார்‌ வெள்ளந்‌ தெரித்தெழுதேன்‌
முகத்தைப்‌ புதுக்கி யெழுதிமணி
மூறுவ னிலவை முகிழ்த்தெழுதேன்‌
மொய்யா ரகல மெழுதிமலர்‌
முதல்வி கோயின்‌ முடித்தெழுதேன்‌.

106. அகட்டைப்‌ புனைய வெழுதியூல
கனைத்து மடங்கு மாறெழுதேன்‌
அணியார்‌ நாபி யெழுதிமறை
வவனார்‌ வரவை யமைத்தெழுதேன்‌
இகத்தைப்‌ பரத்தை யளிககுமடி வயெழுதி யெமைக்காப்‌ பதையெழுதேன்‌
எழுதா மறைக்கு மரியவனை
யெழுதி யேமாந்‌ திருந்தேனே

707. தன்னையே தந்தையெனச்‌ சார்ந்தார்க்கோர்‌ தந்‌ தையையும்‌
பின்னையே நல்காப்‌ பெருங்கடவுள்‌–முன்னையே
தன்னையே தந்தையெனச்‌ சாரார்க்‌ கநந்தபிதா
என்னையோ நல்கு மியல்பு.

108, கொலைக்களிற்றிற்‌ கொண்ட குளிர்முத்தை யுப்பு
விலைக்குக்‌ கொடுத்த. விதமே–நிலைத்ததமிழ்ப்‌
பாவைப்‌ பிறர்க்குப்‌ பகர்ந்த பிழை, தீர
நாவைக்‌ கழுவினே னான்‌.

109. கற்ற நயித்துருவ காகுபனி. ராகவன்யான்‌.
சொற்ற தமிழ்க்குச்‌ *சுவைதேறார்‌–உற்ற
ஒருங்குலக மெல்லா மொருவாயி னுண்ட
பெருங்கடவுள் அல்லாற்‌*பிற்‌:

*கேள்வியாற்‌. செவிகண்முற்றுந்‌’ தோட்டவருணர்‌
வினுண்ணு மமுதத்தின்‌… சுவையாய்‌ நின்றான்‌” என்பது
கம்பநாடர்‌. . திருவாக்கு… (இராமாவதாரம்‌. ஆரணிய.சவரி பிறப்‌. 7)

——————-

ஸ்ரீ ராமப்பாட்டு

மதியிருக்குஞ்‌ சடைச்சிவனார்‌ மனைவியினுக்‌
குபதேசம்‌ வகுத்துக்‌ கங்கை
நதியிருக்குந்‌ தண்காசி நகர்மரிக்கு
மூயிர்க்கெல்லா நல்கக்‌ கஞ்சப்‌
பொதியிருக்கு மறைமுதல்வன்‌ பொறியழித்து
வீடளிக்கும்‌ பொற்பிற்‌ றென்று
விதியிருக்கு முடிவழுத்து மெய்ந்நாமம்‌
ராமவென விளம்பு வாயே.

2-தாதையார்‌ நாரதற்குத்‌ தந்த நாமம்‌
தவமுனிவன்‌ வான்மீகி சாற்று நாமம்‌
மேதையார்‌ ஞானியார் தாம்‌ விள்ளு நாமம்‌
விபீடணற்குப்‌ பேறருள மிக்க நாமம்‌
தீதையா ருற்றாலுந்‌ தீர்க்கு நாமம்‌
தேவரெலாஞ்‌ செபிக்கின்ற தெய்வ நாமம்‌
சதையா ருயிர் தளிர்க்கச்‌ செய்க நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

3. குரு வடிவ வசிட்டன் மகிழ்‌ கூர்ந்த நாமம்‌
கோசிகனார்‌ வழிபட்டுக்‌ கொண்ட நாமம்‌
கருவடியிற்‌ புகாநெறியே காட்டு நாமம்‌
கவந்தனொடு விராதனுயிர்‌ களிக்கு நாமம்‌
மருவடிய ரெல்லாரும்‌ வாழ்த்து நாமம்‌
மந்திரங்கட்‌ கரசெனவே வகுத்த நாமம்‌
திருவடிக்கின்‌ னமுதாத்தித்‌ திக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌.செப்பு வாயே.

4. இகத்துக்கும்‌ பரத்துக்கு மேற்ற நாமம்‌
* இருக்கனைத்து நாந்தியினி னியம்பு நாமம்‌
மகத்துக்குப்‌ புகல்கின்‌ற மகிமை நாமம்‌
மாதவயோ கியருளத்தே வரைந்த நாமம்‌
முகத்துக்கின்‌ சுவைத்தாக முளைத்த நாமம்‌
மூன்னொரு புள்‌ சிறை முளைக்க மொழிந்த நாமம்‌
செகத்துக்குந்‌ திவியினுக்குஞ்‌ சிறந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* – ராமபத்ரன்‌ விஷயமான “பத்ரங்கர்ணேபி’ என்னுஞ்‌
சுருதியே நாந்தியாதலால்‌ இங்ஙனங்‌ கூறியது.

5. உலகினிலெட்‌. டைந்தினுக்கு ளூயிரா நாமம்‌
உறங்காத வில்வியுளத்‌ துறைந்த நாமம்‌
பலகலைதேர்‌. சரபங்கர்‌ பன்னு நாமம்‌ பாய புகழ்க்‌ கவியரசர்‌ பாடு நாமம்‌
இலகலைவாமழ்‌ வருணன்மகிழ்ந்‌ தேத்து நாமம்‌
இத்திரசித்‌ தனை வதைக்க வெண்ணு நாமம்‌
சிலவிலங்குஞ்‌ செப்பவருள்‌ செய்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.–எட்டு -திருமந்திரம்-அஷ்டாக்ஷரம் ஐந்து சிவ பஞ்சாக்ஷரம்

6. கல்லாருங்‌ கற்றாருங்‌ கற்கு நாமம்‌
* கங்கை முதற்‌ நீர்த்தபலன்‌ காட்டு நாம
வில்லாரும்‌ வீரர் செயம்‌ வேண்டு நாமம்‌
மெய்ம்மைக்கே பரியாய மேய நாமம்‌
சொல்லாருஞ்‌ சொலவேட்குந்‌ தூய நாமம்‌
தோமரக்க ரளத்தச்சந்‌ தோற்று நாமம்‌
செல்லாரு மழையினருள்‌ சிறக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.—*-தீர்த்த ஸ்நாநம் அநந்த கோடி பலதம் ஸ்ரீ ராம நாம அம்ருதம்

7-அரிய குகப்‌ பெருமாளா தரித்த நாமம்‌
ஆயிர நா மப்பயனு மளிக்கு நாமம்‌
பெரியதிரு வடி.பரவும்‌ பெரிய நாமம்‌
பெரும் புண்ணி யப் பயனாப்‌ பிறங்கு நாமம்‌
உரியதந்தை யங்கதனுக்‌ கோது நாமம்‌
ஓன்னாரும்‌ வழுத்துபுக முற்ற நாமம்‌
தெரியவழற்‌ தடவுள் முனந்‌ தெளித்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* “நிற்கின்ற செல்வம்‌ வேண்டி நெறி நின்ற வுயிர்க ளெல்லாங்‌ கற்கின்ற திவன்ற னாமங்‌ கருதுவ திவனைக்‌
சுண்டாய்‌’” என்று அங்கதனுக்‌ குரைப்பது காண்க.

8.–இசையியற்கண்‌ வாயார-வேத்து நாமம்‌
இம்மையே நன்மை தரு மினிய நாமம்‌
தசையறச் சு தீக்கணற்கு நயக்கு நாமம்‌
நமபட.ரு மிறைஞ்சி யகல்‌ நல்ல நாமம்‌
பசையறுத்த பரதனுளம்‌ பதித்த நாமம்‌
பனிமொழியா ளகலிகைநற்‌ பயன்கொ ணாமம்‌
திசையனைத்துந்‌ தொழவுரைத்துத்‌ திருந்து நாமம்‌
ராம நாமமெனச்‌ செப்பு வாயே.–இசைக்கண்ணும்‌ இயற்கண்ணும்‌ என்க.

9. மலய முனி யுலகறிய வழுத்து நாமம்‌
மலரயனே முதற்றேவர்‌ வாழ்த்து நாமம்‌
அலையுமுயிர்க்‌ கெலாமபய மளிக்கு, நாமம்‌
அத்திரி மா முனியறித்த வமுத நாமம்‌
நிலையில் பிறுப்‌ யற வெருவை நினைந்த நாமம்‌
நீண் நகரம் புகுவார் தாம் நினையா நாமம்
சிலைவலவன்‌ சத்துகுக்கன்‌ தேறு தாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

10. எத்திக்கு மெழுமுனிவ ரேத்து நாமம்‌
எவ்வுயிர்க்குஞ்‌ சீவனமா வெண்ணு நாமம்‌
பத்திக்கு மூலமெனப்‌ பன்னு நாமம்‌
பரமசிவ னுமையவட்குப்‌ பகர்ந்த நாமம்‌ முத்திக்கு வித்தாக முன்னு நாமம்‌
முதியவரு மிளையவரு மொழியு நாமம்‌
சித்திக்கு மந்திரமாத்‌ தேர்ந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

17, * தாரணியிற்‌ கலிதெறுவே தாந்த நாமம்‌
சபரிநெடுங்‌ காலமுளஞ்‌ சமைத்த நாமம்‌
பேரணியி னவர்க்குநலம்‌ பேணு நாமம்‌
பிரிய வந சூயை புகழ்‌ பேசு நாமம்‌
ஏரணியுந்‌ திரிசடைக்கு மினிய நாமம்‌
யான்சொலவு மெளிவந்த வின்ப நாமம்‌
சீரணியு முமையவள்முன்‌ றெளிந்த நாமம்‌
சீராம நாமமென்று சேர்க வீடே.

காராரு மேனிக்‌ கருணாகர மூர்த்திசக்
காரா தனையிதுவா வாதரித்து–நாரானே
சீராம நாமத்‌ திருப்பாட்‌ டிவணுரைத்தான்‌-மாரா கவன் கவிஞர் மன்

வரி சிலை நெடியேபன் பேர் படைத்தவர்க்கு
அடியவர்க்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த எம் பிறவி யாற்றுவக் குணா வீடு -கம்பர்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்–ஸ்ரீ சம்பு ராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்–– பெங்களூரு ஸ்ரீகாந்த். (வலம் இதழில் வெளிவந்த கட்டுரை)

February 24, 2023
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் 

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் | 
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

வேதங்கள் “எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும்” என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மீகி போன்றோர் உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி, நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான்.

அவரது குணாதிசயங்களைப் பற்றி படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மீகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மீகி வாழ்ந்திருந்தார் என்றால், “ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும்” என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மீகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர் போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மீகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

பதினாறும் பெற்ற பெருவாழ்வு

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் | 
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||
சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: | 
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: ||  1.1.3 ||
ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: | 
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

நற்குணங்களின் குன்று, 
வீரன், 
கடமையில் கருத்துடையவன், 
நன்றி மறவாதவன், 
உண்மை விளம்பி, 
மனத்திடம் மிக்கோன், 
நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், 
அனைவரின் நலம் விரும்பி, 
கல்வி மிக்கோன், 
திறமை மிக்க தொழிலாளி, 
பழகுதற்கு எளிமையானவன், 
தன்னிலே இன்புற்றோன், 
சீற்றத்தை அடக்கியவன், 
அழகன், 
அழுக்காறு அகன்றோன், 
சீண்டினால் சீறுவோன் 
என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. 
இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், 
இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் 
மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, 
அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.

தேவ பாடையின்-தெய்வ மொழி எனப்படுகின்ற வடமொழியில்;
இக்கதை செய்தவர்-இந்த இராம கதையை இயற்றிய; மூவரானவர்
தம்முளும்- வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவருள்;
முந்திய நாவினார் உரையின்படி-முதன்மையாராகியவரும் வாக்கிற்
சிறந்தவருமாகிய வான்மீகி முனிவர் சொல்லியபடியே; தமிழ்ப் பாவினால்-தமிழ்ப் பாடல்களால்;
இது நான் உணர்த்திய பண்பு-
இந்த இராமாவதாரத்தை நான் சொல்லிய இயல்பாகும்.

வடமொழியில் இராமபிரான் கதை சொல்லியவர் மூவர்;
அவர்களுள் ஆதிகவி வான்மீகி அருளிய காப்பியத்தின் வழியாலேயே கவிச் சக்கரவர்த்தி
இராமாவதாரக் காப்பியத்தை நடத்துவதாக இச்செய்யுள்
சொல்லுகிறது.
காப்பியக் கதையின் பொது அமைப்பு ஆதிகாவியத்தின்
வழியதே;
எனினும், காப்பியக் கட்டமைப்புச் சீர்மையையும், தமிழ்ப்
பண்பாட்டு மரபையும் கருதிக்
கவிச் சக்கரவர்த்தி பல மாற்றங்கள் செய்துள்ளார் என்பதை மறந்திடுதல் கூடாது.
ஆதிகவி விரிவாக ஓதியதைச் சுருக்கியும், சுருங்கக் கூறியதை விரித்தும், சில
செய்திகளை விடுத்தும்
புதியன சில புகுத்தியும், செய்திகளை இடம்
மாற்றியும் கம்பர் தம் காவியத்தை இயற்றியுள்ளனர் என்பதையும் மனங்கொள்ளவேண்டும்.
(‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
என்பது தொல்காப்பிய விதி,
அசைச் சொல்லாகிய ‘அரோ’ இக்
குறிப்பினை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ‘அசை’என்பது வெற்றிடம்
நிரப்புவதாக மட்டும் கொள்ளலாகாது.
அசைத்தல், கட்டுதல்;
கவிதை வாசித்துச் சொல்பவனைக் கட்டி நிறுத்திச் சிந்திக்க வைப்பது அசைகளின் பொருண்மையுள் ஒன்று.)

வசிட்டர் இராமபிரானுக்கு வைராக்கிய உபதேசமாகக் கூறிய நூல்
‘யோக வாசிட்டம்’;
அதில் இராம சரிதம் முழுமையாகக்
கூறப்படவில்லை.
போதாயனார் இராம காதை பாடினார் என்பது
செய்தியளவாகவே நிற்கிறது. நூல் கிடைக்கவில்லை.
கம்பர் காலத்தில் பரவியிருந்த வடமொழி இராமாயணங்கள்
வான்மீக இராமாயணம்,
அத்யாத்ம ராமாயணம்,
சம்பு ராமாயணம் என்பனவே என்பர்.
இவற்றையே கம்பர் தம் பாடலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதலாம்.
வான்மீகி, வசிட்டர், போதாயனர் என்ற பட்டியலில்
வசிட்டருக்குப் பதிலாக வியாசர் பெயரை இணைத்துரைப்பதும் உண்டு.

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2.ஸ்ரீ புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன.

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு
ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன.

1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு
வரையில் தோன்றியுள்ளன.-
ஸ்ரீ காளிதாசரின் ஸ்ரீ இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் ஸ்ரீ இராமசரிதையைப்
பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:

1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4)
2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா
(கி. பி. 550-600)
3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650)
4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8)
5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9)
6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11).
: (b)தசாவதார சரிதை
7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12)
8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை (கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன.
பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம்
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
கம்பன் : கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1. கோன புத்தா ரெட்டி : ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் : பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல : மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. அபிநவ பம்பா என்னும் -நாக சந்திரர் : பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும- நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. கன்னச இராம பணிக்கர் : கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன் : அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1. கோஸ்வாமி துளசிதாஸ் : துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ் : இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு
மக்களிலக்கியப் பாடல்கள்.

——————–

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப் போக்கில் மேலும்
பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

ஸ்ரீ மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும்
ஸ்ரீ பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது.
இவை தவிர ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட
ஸ்ரீ ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.
மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார்
அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது
v கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட
கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர்
இயற்றிய ஸ்ரீ ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும்
கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான
v ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.
கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம்
(ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட
ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
தவிரவும்–கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான
அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ஸ்ரீ ராம கதையாக
கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்ரீ கம்பர் இயற்றிய ‘ஸ்ரீ கம்பராமாயணம்’.
கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு
மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய
பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால்
கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள்
போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி,
ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட
கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த
பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

———-

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்,
தாய் மொழியில் உள்ள ராமகியென்,
லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்,
மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

——–

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்.
அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது.
இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள
சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

——–

ஸ்ரீ இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien,) என்பது
தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.
இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில்
சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார்.
இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்.
இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் ஸ்ரீ வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை,
ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை
தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்
பாத்திர அமைப்பு தொகு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும்
இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது

வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப்போக்கில் மேலும் பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

  • அத்யாத்ம ராமாயணம்
  • வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
  • லகு யோக வசிஸ்டா
  • ஆனந்த ராமாயணம்
  • அகஸ்திய ராமாயணம்
  • அத்புத ராமாயணம்

துளசி தாசரின் ராமசரித மானஸை -இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.

ஜம்மு & கஷ்மீரில் ‘ராமாவதார சரிதை’ இன்னொரு விதமான ராமாயணம் புழங்குகிறது. அது எழுதப்பட்ட காலம் 19 ஆம் நூற்றாண்டு.

குஜராத்தில் 17 ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் ராமசரிதமானஸை அடியொற்றி துளசி கிருத ராமாயணத்தை பிரேமானந்த ஸ்வாமி எனும் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் இயற்றினார்.

மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார். மகாராஷ்டிரத்தில் முன்னதாக 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட
மற்றொரு ராமாயணமும் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில்  மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது

வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட   கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர் இயற்றிய ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கி

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும் கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.

கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம் (ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன. தவிரவும்.. கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ராமகதையாக கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கம்பர் இயற்றிய ‘கம்பராமாயணம்’.

கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய  ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.

கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் இயற்றப்பட்ட  ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள் போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

மலையாளத்தில் தொடர்ந்து ராமாயண வடிவங்கள் எழுந்தபடியே இருந்தன. 12 ஆம் நூற்றாண்டில் சீராமன் என்னும் கவிஞர் எழுதிய ராமசரிதம் என்னும் பாட்டுவடிவம் மலையாளமாக அப்போதும் உருவாகியிராத அரைத்தமிழில் எழுதப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கண்ணச்ச பணிக்கர் எழுதிய கண்ணச்ச ராமாயணம் கம்பராமாயணத்தின் நகல்வடிவம்போன்றது.

சம்ஸ்கிருத ராமாயணங்களுக்கு நெருக்கமான ராமாயண வடிவமான ராமாயணம் சம்பு [சம்பு ஓரு செய்யுள்வகை] புனம் நம்பூதிரியால் எழுதப்பட்டது. சம்ஸ்கிருத மணிப்பிரவாள நடையில் 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இது மலையாளமொழி சம்ஸ்கிருதக் கலப்பால் இன்றைய வடிவத்தை அடைவதையும் காட்டுகிறது

கதகளிக்காக கொட்டாரக்கர தம்புரான் இயற்றிய ராமாயண ஆட்டக்கதை என்னும் காவியவடிவம் பெரும்பாலும் உத்தர ராமாயணத்திற்கு நெருக்கமான நாடக உருவாக்கம். ராமாயணத்தின் கதகளி வடிவங்களுக்கான முன்வடிவம். கதகளியில் ராமனைவிட ராவணனே பெரிய கதாபாத்திரம். பதினாறாம் நூற்றாண்டில் இது உருவானது

பதினேழாம் நூற்றாண்டில் அத்யாத்ம ராமாயணம் என அழைக்கப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயணம் எழுந்தது. மலையாளமொழியின் பிதாவாகவும் எழுத்தச்சன் கருதப்படுகிறார். சம்ஸ்கிருத மணிப்பிரவாளத்தை விட்டு விலகி மக்கள்மொழியில் எழுதப்பட்ட இந்த ராமாயணம் மிகப்புகழ்பெற்றது. இன்றும் கேரளத்தில் ஒவ்வொரு நாளும் வாசிக்கப்படுகிறது.

இதுவன்றி கேரளத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டார் ராமாயண வடிவங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது வாய்மொழியில் இருந்து பதிவுசெய்யப்பட்ட மாப்பிள ராமாயணம். பதினெட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம் கடற்பயணிகளால் பாடப்பட்டது. அரபுச்சொற்களும் முஸ்லீம் வழக்காறுகளும் கொண்டது இது.

  • கம்போடியாவில் ரீம்கர்
  • தாய்லாந்தில் ராமாகீய்ன்
  • லாவோஸில் பிர லாக் பிர லாம்
  • பர்மாவில் யம ஸாட்டாவ்
  • மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
  • இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
  • பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
  • இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
  • ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
  • ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
  • சீனா, திபெத் & யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

—————-

ஸ்ரீ சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள் பெரும்பாலும் இயற்றப் பட்டு வந்த நிலையில் போஜராஜன் சம்பு (Champu) என்கிற காவிய அமைப்பில், கவிதையையும் உரைநடையையும் கலந்து வித்தியாசமாக அளித்திருக்கிறார்.

गद्यानुबन्ध रसमिश्रित पद्यसूक्ति:
ह्रुद्या हि वाद्यकलया कलितेव गीति: |
तस्माद्दधातु कविमार्गजुषां सुखाय
चम्पुप्रबन्ध रचनां रसना मदीया || (बालकाण्डम् ३)

க³த்³யானுப³ந்த⁴ ரஸமிஶ்ரித பத்³யஸூக்தி:
ஹ்ருத்³யா ஹி வாத்³யகலயா கலிதேவ கீ³தி: |
தஸ்மாத்³த³தா⁴து கவிமார்க³ஜுஷாம்ʼ ஸுகா²ய
சம்புப்ரப³ந்த⁴ ரசனாம்ʼ ரஸனா மதீ³யா || (பாலகாண்டம் – 3)

வாத்தியங்களும், வாய்ப்பாட்டும் இணைந்து ஒலிக்கும்போது அது கேட்பவர்களுக்கு எத்தனை இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போல கவிதையும் உரைநடையும் கலந்த சம்பு பிரபந்தமாக அமைந்துள்ள என் கவிதை, ரசனை மிகுந்த பெரியோர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கட்டும் என்று கூறுகிறார் கவி.

அவையடக்கம்

பகீரதன் கதை தெரிந்தது தான். தன் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்று அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய, தேவலோகத்தில் இருந்து கங்கையை கடுந்தவம் இருந்து தருவித்தான் பகீரதன். இன்றோ சாதாரண மனிதர்கள் கூட தன் முன்னோர்களுக்காக, பகீரதப் பிரயத்தனத்தில் சிறு துளி அளவு கூட இன்றி அதே கங்கை நீரை வெகு சுலபமாக எடுத்து தர்ப்பணம் செய்து விடுகிறார்கள். அது அவர்களின் முன்னோர்களுக்கும் நற்கதியை அளித்து விடுகிறது.

அதே போல, வால்மீகி முதலிய மாபெரும் கவிகள் மிகுந்த பிரயாசைப் பட்டு, அனைவரும் ரசித்து அனுபவிக்கும் விதத்தில் தம் வாழ்நாள் சாதனையாக வெளிப்படுத்திய கதையை, சுலபமாக நானும் எடுத்து என் சிறு முயற்சியில் காவியமாகப் படைத்தால் அது நல்லோர்கள் விரும்ப மாட்டார்களா என்ன என்று சாதுர்யமாகக் கேட்கிறார்.

वाल्मीकिगीत रघुपुंगवकीर्तिलेशै:
तृप्तिं करोमि कथमप्य्धुना बुधानाम् |
गङ्गाजलैर्भुवि भगीरथयत्नलब्धै:
किं तर्पणं न विदधाति नर:पितृणां || (बालकाण्डम् ४)

வால்மீகிகீ³த ரகு⁴புங்க³வகீர்திலேஶை:
த்ருʼப்திம்ʼ கரோமி கத²மப்ய்து⁴னா பு³தா⁴னாம் |
க³ங்கா³ஜலைர்பு⁴வி ப⁴கீ³ரத²யத்னலப்³தை⁴:
கிம்ʼ தர்பணம்ʼ ந வித³தா⁴தி நர:பித்ருʼணாம்ʼ || (பாலகாண்டம் – 4)

சம்பு ராமாயணம் வால்மீகியின் கதையமைப்பை அப்படியே தொடர்கிறது. ஆனாலும் போஜனின் கவித்துவம் பல புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறிப்பிட்டு ஒரு சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீராம ஜனனம்

பழைய இலக்கியங்கள் பெண்ணழகை பலவிதங்களில் பாடியிருந்தாலும், தாய்மையுற்றிருக்கும் பெண்ணை வர்ணித்த கவிதைகள் அதிகம் கிடைப்பதில்லை. தசரதனின் பட்டத்தரசிகள் பாயசத்தை அருந்தி கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றார்கள் என்ற அளவில் மற்ற இராமாயணக் காவியங்கள் கடந்து சென்று விடுகின்றன. ஆனால் போஜன் அழகிய கவிதைகளால் தாய்மை அடைந்த அரசியர்களை மேலும் அலங்கரிக்கிறார்.

अपाटवात्केवलमङ्गकानां मनोज्ञकान्तेर्महिषीजनस्य |
शनै: शनै: प्रोज्झितभूषणानि चकाशिरे दौहृदलक्षणानि || (बालकाण्डम् २५)

அபாடவாத்கேவலமங்க³கானாம்ʼ மனோஜ்ஞகாந்தேர்மஹிஷீஜனஸ்ய |
ஶனை: ஶனை: ப்ரோஜ்ஜி²தபூ⁴ஷணானி சகாஶிரே தௌ³ஹ்ருʼத³லக்ஷணானி || (பாலகாண்டம் – 25)

ஒளிபொருந்திய அரசியர்கள் சிற்சில காலத்தில், உடல் மெலிந்து ஆபரணங்கள் கூட அணியமுடியாமல் ஆனது, அவர்களிடம் இரு இதயம் உள்ளதற்கான அடையாளங்கள், தௌஹ்ருத லக்ஷணங்கள் அல்லது த்வி ஹ்ருதய லக்ஷணங்கள் அழகாக மிளிர்ந்தன.
குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணை, இரண்டு இதயம் உள்ளவள் (குழந்தையின் இதயம் மற்றும் தாயின் இதயம்) என்று கவிஞர் சமத்காரமாகக் குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல் பின்வருமாறு கூறுகிறது:

मातृजन्यस्य हृदयं मातुश्च हृदयेन यत् |
संबद्धं तेन गर्भिण्या नेष्टं श्रद्धाविमाननं || (अष्टाङ्गहृदयम् )

மாத்ருʼஜன்யஸ்ய ஹ்ருʼத³யம்ʼ மாதுஶ்ச ஹ்ருʼத³யேன யத் |
ஸம்ப³த்³த⁴ம்ʼ தேன க³ர்பி⁴ண்யா நேஷ்டம்ʼ ஶ்ரத்³தா⁴விமானனம்ʼ || (அஷ்டாங்கஹ்ருதயம்)

சாதாரண நாட்களில் ஒரு பெண்ணுக்கு சில உணவு, உடைகள், வாசனைகள் பிடிக்கும். ஆனால் பேறுகாலத்தில் அந்த விருப்பு வெறுப்புகள் பெரிதும் மாறி இருக்கும். முன்பு பிடிக்காதது இப்போது வேண்டும் என்று கேட்பார்கள். இதற்கு காரணம் உள்ளே இருக்கும் இன்னொரு இதயம் தான் என்கிறது ஆயுர் வேத நூல். கவி போஜனுக்கு ஆயுர்வேதம் தெரியும் என்பதால்தான் அந்தக் குறிப்பை இங்கே கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

அரசியர் மூவரில் கௌசல்யைக்கு கொஞ்சம் சிறப்பு அதிகம். ஏனெனில் அவள் வயிற்றில் தான் கதையின் நாயகன் தோன்றுகிறான். அவன் சாதாரணமானவனல்ல. விஷ்ணுவின் அவதாரம்.

न्यग्रोधपत्रसमतां क्रमश: प्रयातामङ्गीचकार पुनरप्यदरं कृशाङ्गया: |
जीवातवे दशमुखोरगपीडितानां गर्भञ्चलेन वसता प्रथमेन पुंसा || (बालकाण्डम् २७)

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம்ʼ க்ரமஶ: ப்ரயாதாமங்கீ³சகார புனரப்யத³ரம்ʼ க்ருʼஶாங்க³யா: |
ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்ʼ க³ர்ப⁴ஞ்சலேன வஸதா ப்ரத²மேன பும்ʼஸா || (பாலகாண்டம் – 27)

கௌசல்யையின் வயிறு ஆலிலை போல இருக்குமாம். இளமையின் காரணமாக சிறுத்துப் போன இடை, கர்ப்பத்தின் காரணமாக அதன் ஆலிலை வடிவம் வெளித்தெரியுமாறு வளர்ந்ததாம். உலகெங்கும் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிவிட, அப்போது ஆலிலையில் படுத்திருக்கும் குழந்தையாக விஷ்ணு மிதந்து வருவார் என்பது புராணக் கோட்பாடு. அதனை இங்கே கௌசல்யையின் இடையை ஆலிலையாகவும் அதில் சிசுவாகப் படுத்திருக்கும் ராமனே விஷ்ணு என்று அழகாக உருவகப் படுத்துகிறார்.

பெண்களின் இடை சிறுத்து இருப்பது அழகு. பல இடங்களில் காவியங்களில் பெண்களின் இடை இருந்தும் இல்லாதது போல இருப்பதாக உவமைகளுடன் குறிப்பிடுவர். கௌசல்யையும் அப்படித்தான். அவள் கருவுற்ற காலத்தில் இல்லாதிருந்த இடை தன் இருப்பை வெளிப்படுத்துகிறதாம். ஆகாயம் போல சூன்ய பிரதேசமாக இருந்த இடை இன்று விஷ்ணு பதம் ஆகி விட்டது என்கிறார் கவி. ஆகாயத்திற்கு விஷ்ணுபதம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதைக் சிலேடையாகக் குறிப்பிடுகிறார்.

मध्यं तनुत्वादविभाव्यमानं आकाशमासीद् असितायताक्ष्या: |
गर्भोदये विष्णुपदापदेशात्कार्श्यं विहायापि विहाय एव || (बालकाण्डम् २८)

மத்⁴யம்ʼ தனுத்வாத³விபா⁴வ்யமானம்ʼ ஆகாஶமாஸீத்³ அஸிதாயதாக்ஷ்யா: |
க³ர்போ⁴த³யே விஷ்ணுபதா³பதே³ஶாத்கார்ஶ்யம்ʼ விஹாயாபி விஹாய ஏவ || (பாலகாண்டம் – 28)

முன்பு இவள் வயிறு காணமுடியாத ஆகாசம் போல இருந்தது. இப்போது கர்ப்ப காலத்தில் விஷ்ணுபதமாக ஆகி விட்டது. ராமன் விஷ்ணுவின் அவதாரம், அவன் இருக்கும் இடமாக அவள் வயிறு ஆனது என்று ஒரு அர்த்தத்திலும், ஆகாயம் போல விரிந்து பெரிதானது என்று இன்னொரு அர்த்தத்திலும் அந்த சொல்லை கவிஞர் உபயோகித்திருக்கிறார்.

ஸ்ரீராமனின் வனவாசம்

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள..” நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கைகேயி கூறியதைக் கேட்டும் இராமனின் முகமலர்ச்சியில் ஒரு சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை என்பதை எல்லா இராமசரித கவிஞர்களும் பாடியுள்ளனர். இத்தருணத்தில், போஜனின் இராமன் கீழ்கண்டவாறு பேசுகிறான்:

वनभुवि तनुमात्रत्राणमाज्ञापीतं मे
सफलभुवनभार: स्थापितो वत्समूर्ध्नि |
तदिह सुकरतायामावयोस्तर्कीतायां
मयि पतति गरीयानम्ब ते पक्षपात: || (अयोद्याकाण्डम् २५)

வனபு⁴வி தனுமாத்ரத்ராணமாஜ்ஞாபீதம்ʼ மே
ஸப²லபு⁴வனபா⁴ர: ஸ்தா²பிதோ வத்ஸமூர்த்⁴னி |
ததி³ஹ ஸுகரதாயாமாவயோஸ்தர்கீதாயாம்ʼ
மயி பததி க³ரீயானம்ப³ தே பக்ஷபாத: || (அயோத்யா காண்டம் -25)

அம்மா நீங்கள் சிறிது பாரபட்சம் காட்டி விட்டீர்கள். அனைத்துலகையும் அதனுள் வாழும் மக்களையும் காப்பாற்றும் சுமை பரதனுக்கு, என்னுடைய உடலை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்கிற சுமை எனக்கு என்று, எனக்கு சிறிய வேலையையும் தம்பிக்கு மிகப்பெரிய பாரத்தையும் சுமத்தி விட்டீர்களே என்று கேட்கிறான்.

ராமனிடம் காமம் கொண்ட சூர்ப்பனகை

ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப் படுகிறது.

दशरथात्मज युग्म निरीक्षण समाकुल बुद्दिरियं दधौ |
उभयकुल समस्थितशाद्वलभ्रम गतागत खिन्नगवीदशाम् || (आरण्यकाण्डम् १६)

த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண ஸமாகுல பு³த்³தி³ரியம்ʼ த³தௌ⁴ |
உப⁴யகுல ஸமஸ்தி²தஶாத்³வலப்⁴ரம க³தாக³த கி²ன்னக³வீத³ஶாம் || (ஆரண்யகாண்டம் – 16)

சூர்ப்பனகை ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, எந்த கரையில் மேய்வது என்று திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி இவரிடமும் அவரிடமும் என்று அலைந்தாளாம் சூர்ப்பனகை.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு ஏன் இந்த கஷ்டம் என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் அவள்.

लावण्याम्बुनिधे: अमुष्य दयितामेनामिवैनं जनं
कस्मान्नसृजदस्मदन्वय गुरोरुत्पत्तिभू: पद्मभू: |
आस्तां तावदरण्यवासरसिके हा कष्टमस्मिन्निमां
कान्तिं काननचन्द्रिकासमदाशां किं निर्ममे निर्ममे || (आरण्यकाण्डम् २८)

லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்ʼ ஜனம்ʼ
கஸ்மான்னஸ்ருʼஜத³ஸ்மத³ன்வய கு³ரோருத்பத்திபூ⁴: பத்³மபூ⁴: |
ஆஸ்தாம்ʼ தாவத³ரண்யவாஸரஸிகே ஹா கஷ்டமஸ்மின்னிமாம்ʼ
காந்திம்ʼ கானனசந்த்³ரிகாஸமதா³ஶாம்ʼ கிம்ʼ நிர்மமே நிர்மமே || (ஆரண்யகாண்டம் – 28)

பிரம்மன் நமது குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? சரி அதாவது போகட்டும், இந்த ராம லட்சுமணர்களை சந்திரனைப் போல ஒளியுடையவர்களாக படைத்தும் காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? என்ன கஷ்டம் இது! என்று புலம்புகிறாள்.

புத்திமான் ஹனுமான்

கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமான் முதலில் ராம லட்சுமனர்களைச் சந்தித்து அவர்கள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, அண்ணனுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் தம் மன்னன் சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறார். சுக்ரீவனும் ராம லட்சுமணர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு நண்பர்களான வேளையில் சுக்ரீவன் ஹனுமானின் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லுகிறான்.

अयमसुखयदेवं देव! धीमान् हनुमान्
रिपुरिति भवतोऽपि त्रस्तमस्तौजसं माम् |
दवहुतवहधूमस्तोम इत्यम्बुवाहा-
च्चकितमिव मयूरं मारुतो वारिशीत: || (किष्किन्दाकाण्डम् १२)

அயமஸுக²யதே³வம்ʼ தே³வ! தீ⁴மான் ஹனுமான்
ரிபுரிதி ப⁴வதோ(அ)பி த்ரஸ்தமஸ்தௌஜஸம்ʼ மாம் |
த³வஹுதவஹதூ⁴மஸ்தோம இத்யம்பு³வாஹா-
ச்சகிதமிவ மயூரம்ʼ மாருதோ வாரிஶீத: || (கிஷ்கிந்தா காண்டம் 12)

சுக்ரீவன் சொல்லுகிறார், பயத்தில் நான் உங்களைக் கூட விரோதி என்று நினைத்து அஞ்சினேன். அப்போது புத்திசாலியான ஹனுமான் தான் ஆறுதல் அளித்தார். எப்படி என்றால், கறுத்து திரண்டு வரும் மேகத்தை காட்டுத் தீயின் புகை என்று எண்ணி அஞ்சி நடுங்கும் மயிலுக்கு, அந்த மேகம் நெருங்குவதற்கு முன்னால், மழையின் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசி எப்படி அந்த மயிலை ஆனந்தப் படுத்துமோ அப்படி இருந்தது ஹனுமானின் செயல் என்று கூறுகிறார். ஹனுமானும் வாயுவின் சம்பந்தம் உள்ளவர். மாருத என்ற சொல் இங்கே ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஆகிறது.

சுந்தர காண்டம்

ராம லட்சுமணர்கள் சுக்ரீவனை சந்தித்து, வாலி வதம் முடிந்து, அனுமான் இலங்கைக்கு சீதையைத் தேடியபடி வருகிறார். ராவணனின் அரண்மனை, நகரம் முழுவதும் அனுமான் தேடத் துவங்கும் போது, இரவு நேரம். அந்நேரத்தில் ஒரு காட்சி வருணனை:

आदित्य: कृतकृत्य एष भविता सीतापतेरीदृशं
साहाय्यं विरचय्य कीर्तिमतुलामादित्सुना सूनुना |
इत्यालोच्य तदा किल स्वयमपि ख्यातिं ग्रहीतुं परां
लङ्कायां रघुनाथदूतसरणौ चन्द्रेण दीपायितम् || (सुन्दरकाण्डम् १४)

ஆதி³த்ய: க்ருʼதக்ருʼத்ய ஏஷ ப⁴விதா ஸீதாபதேரீத்³ருʼஶம்ʼ
ஸாஹாய்யம்ʼ விரசய்ய கீர்திமதுலாமாதி³த்ஸுனா ஸூனுனா |
இத்யாலோச்ய ததா³ கில ஸ்வயமபி க்²யாதிம்ʼ க்³ரஹீதும்ʼ பராம்ʼ
லங்காயாம்ʼ ரகு⁴னாத²தூ³தஸரணௌ சந்த்³ரேண தீ³பாயிதம் ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 14)

சூரியனின் அம்சம் சுக்ரீவன் என்று கருதப் படுகிறது. ராமனுக்கு தன் பிள்ளை சுக்ரீவனைக் கொண்டு உதவி செய்து சூரியன் புகழடைந்தான். இதை ஆலோசித்து, தானே ராமனுக்கு உதவி செய்யும் காரியத்தில் இறங்கி, ராம தூதனான அனுமன் செல்லும் இடமெல்லாம் தன் ஒளிக்கிரணங்களை நிறைத்து வழிகாட்டினான் சந்திரன் என்று கவித்துவமாக குறிப்பிடுகிறார்.

பல இடங்களில் சுற்றித் தேடிவிட்டு அசோக வனத்துக்கு வந்து சீதையைச் சந்திக்கிறார். சீதையைத் தானே தூக்கிச் சென்று ராமனிடம் சேர்த்து விடுகிறேன் என்று அவர் கேட்கும்போது சீதை பலவாறும் நன்றியுடன் மறுத்து பின்னர் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியை ராமனிடம் அடையாளமாகக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறாள்.

चूडामणिं कपिवरस्य ददौ दशास्य
संत्रासपुञ्जितरुषाग्निदशं कृशाङ्गी |
आदाय तंप्रणतिपूर्वमासौ प्रतस्थे
माणिक्यगर्भवदनोरगतुल्यबाहु: || (सुन्दरकाण्ड ३६)

சூடா³மணிம்ʼ கபிவரஸ்ய த³தௌ³ த³ஶாஸ்ய
ஸந்த்ராஸபுஞ்ஜிதருஷாக்³னித³ஶம்ʼ க்ருʼஶாங்கீ³ |
ஆதா³ய தம்ப்ரணதிபூர்வமாஸௌ ப்ரதஸ்தே²
மாணிக்யக³ர்ப⁴வத³னோரக³துல்யபா³ஹு: || (சுந்தரகாண்டம் 36)

இளைத்த உடலுடன் வலிமை குன்றி இருந்த சீதை, அனுமனிடம் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். அது அவளுக்கு ராவணன் மீது இருந்த கோபத்தீயைப் போல ஒளிர்ந்தது. அதைக் கையில் வாங்கிய அனுமனின் கைகள், ரத்தினம் தாங்கிய நாகப் பாம்பு போல இருந்தது.

அனுமன் திரும்பி வந்து, தன்னுடன் வந்த வானர சேனையுடன் இணைந்து ராமனை சந்தித்து சீதையச் சந்தித்த விவரத்தைச் சொல்லுகிறார்.

अक्लेशसंभूतगतागताभ्यां वितीर्णविस्तीर्ण महार्णवोऽपि |
आनन्दसिन्दौ पृतनासमक्षमक्षस्य हन्ता नितरां ममज्ज || (सुन्दरकाण्डम् ७२)

அக்லேஶஸம்பூ⁴தக³தாக³தாப்⁴யாம்ʼ
விதீர்ணவிஸ்தீர்ண மஹார்ணவோ(அ)பி |
ஆனந்த³ஸிந்தௌ³ ப்ருʼதனாஸமக்ஷமக்ஷஸ்ய
ஹந்தா நிதராம்ʼ மமஜ்ஜ || (சுந்தரகாண்டம் 72)

ஒரு துன்பமும் இல்லாமல் சுலபமாக பெருங்கடலை இருமுறை தாண்டி வந்த அனுமன், இங்கே வானர சேனை ராமலட்சுமணர்கள் மத்தியில் அவர்களின் ஆனந்தக் கடலில் மூழ்கிவிட்டார். அரக்கர்களிடம் போரிட்டது, ராவணனைச் சந்தித்து எச்சரித்தது, சீதையைச் சந்தித்து பேசி தைரியம் சொல்லி, அவள் தந்த சூடாமணியைப் பெற்று வந்தது என்று பல சாதனைகள் செய்து எல்லோருடைய ஆனந்தத்துக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அனுமன் பேச்சின்றி அவர்கள் அன்பிலும் அங்கீகாரத்திலும் மூழ்கினார் என்று கவி அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுத்த காண்டத்தில் சில கவிதைகள்

சுந்தரகாண்டத்துடன் போஜ ராஜன் எழுதிய சம்புராமாயணம் நின்று விடுகிறது. அந்த சமயம் ஏற்பட்ட போரில் போஜராஜன் வீரமரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் லக்ஷ்மண சூரி என்னும் கவி போஜனின் கவிதை அமைப்பிலேயே யுத்த காண்டத்தையும் எழுதி முழுமை செய்துள்ளார்.

भोजेन तेन रचितामपि पूरयिष्यन्
अल्पीयसापि वचसा कृतिमत्युदराम् |
न व्रीडितोऽहमधुना नवरत्नहार-
सङ्गेन किन्न हृदि धार्यत एव तन्तु: || (युद्धकाण्डम् – २)

போ⁴ஜேன தேன ரசிதாமபி பூரயிஷ்யன்
அல்பீயஸாபி வசஸா க்ருʼதிமத்யுத³ராம் |
ந வ்ரீடி³தோ(அ)ஹமது⁴னா நவரத்னஹார-
ஸங்கே³ன கின்ன ஹ்ருʼதி³ தா⁴ர்யத ஏவ தந்து: || (யுத்த காண்டம் – 2)

ஆரம்பத்தில் பால காண்டத்தில் வால்மீகி முனிவருக்கு போஜன் வணங்கி தன எளிமையை வெளிப்படுத்தியது போலவே இங்கு, லக்ஷ்மண சூரியும் போஜகவியின் மீது தன் மரியாதையை வெளிப்படுத்துகிறார். போஜராஜனால் இயற்றப் பட்ட சம்பு ராமாயணத்தை பூர்த்தி செய்யப் புகுவதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. ஏனெனில் நவரத்தின மாலையை நெஞ்சில் தவழ விட, அதற்கு ஒரு நூல் தேவைப் படுகிறது தானே என்று கூறுகிறார். ஆனால் யுத்த காண்டத்தின் கவிதைகளும் போஜராஜனின் கவிதையின் தரத்துக்கு சற்றும் குறைவில்லாதவை.

சம்பு இராமாயணம் முழுவதுமே கவித்துவமும், சுவையும் மிகுந்த ஒரு படைப்பு. இங்கே ஒரு சில கவிதைகளை மட்டுமே பார்த்தோம். சம்ஸ்க்ருத மொழியை கற்க விரும்போவோருக்கும், பக்தியுடன் படிக்க எண்ணுவோருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆழ்ந்த பொருளை அறிந்து ரசிக்கக் கூடிய வேத சாத்திர விற்பன்னர்களுக்கும் கூட சம்பு ராமாயணம் அள்ள அள்ள குறையாமல் வழங்கும் பொக்கிஷமாகவே இருக்கும்.

———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராகவ யாத வீயம்–ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் மகிமைகள் –

February 24, 2023

வைணவன் என்ற சொல்லிற்கு அர்த்தம் ஐந்து குறள் பாக்களில் சொல்லப் படுகிறது )
1. தைவத்துள் தைவம் பர தெய்வம் நாராயணனையே தெய்வம் எனப் போற்றுபவன் வைணவன்
2. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலே பேணுபவனே எல்லோரிலும் சாலச் சிறந்த வைணவன் .
3. உடுக்கை இழந்தவன் கை போல் மற்றவர்களின் இடுக்கண் களைபவனே வைணவன் .
4. மது, புலால் நீக்கி ஸாத்விக உணவினைத் தவிர வேறு எதுவும் விரும்பாதவன் வைணவன் .
5. தெய்வத்திலும் மேலானவன் நம் ஆச்சார்யரே என்று மெய்யாக வாழ்பவனே வைணவன் .

————-

இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||

விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||

இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:

தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.

பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:

1) மனு :

விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரி பாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.

2) மயன் :

விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.

3) த்வஷ்டா:

விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :         ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.

5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :

ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ண ரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.

இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது.

கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்

வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.

ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.

வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்.

1) தமிழகம் :

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

2) ஆந்திர மாநிலம் :

விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3) கேரளம் :

கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடகம்:

கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

5) கோவா:

கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தான்:

ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.

சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.

மறைக்கப்பட்ட வரலாறு:

சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…

பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.

பேஷ்வாக்கள் எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது.

——————

ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

———————-

தைவக்ஞர் சூரிய கவி-கவி வேங்கடாத்வரி -ஸ்ரீ ராம யாத வீயம் -ஸ்ரீ ராம கிருஷ்ண விலோம காவ்யம்
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II -ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

ராம மாநா ஸதா கேத பாவே தயா வான்
அதாபி இந தேஜா ரிபவ் அநதே
காதி மோதா சஹாதா ஸ்வ பாஸா
ரஸாமே ஸூக ரேணுகா த்ரஜே பூருமே –7-

இடர் உற்றவருக்கு அருளும் காருண்ய சீலன்
கரு ஞாயிறு போன்றவன் இந்தேஜோ -ஸூர்யன் போல் பிரகாசிக்ப்பவன்
ஆனாலும் அருகில் செல்ல ஸுலப்யன் உடையவன்
அப்படிப்பட்ட ராமன் பூமி முழுவதும் சுற்றி அதைச் செல்வமாக யுடைய
ரேணுகையான புதல்வனான பரசுராமன் விரோதத்துடன் தோன்றி
பின் அவனைப் பணிந்ததும் ஸ்ரீ ராமசந்திரன் கருணையுடன் திகழ்ந்தான்

கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர் தம் புரமும் பொற்பும்
சிதைவு செய் குறியைக் காட்டி வட திசைச் சிகரக் குன்றின்
உதயம் அது ஒழித்துத் தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஓத்தான் -கம்பர் –

கட்டார் சிலைக் கரு ஞாயிறு புரைவான்
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
செந் தண் கமலக்கண் சிவந்த வாய் ஒரு கரு ஞாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய் -8-5-7-

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!’ என்றான்.–பரசுராம படலம் 36-

‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை’ எனத் தொழுது போயினான். 40-

மேரு பூ ஜேத் ரகா காணுரே கோ ஸூமே ஸா அரஸா
பாஸ்வதா ஹா ஸதா மோதிகா
தேந வா பாரிஜாதே ந பீதா நவா யாதவே அபாத் அகேதோ
ஸமாநாமரா —ஸ்லோகம் 7 -ப்ரதிலோமம்

எப்படி ரைவதக பர்வதமானது கிருஷ்ணனின் இருப்பாள் மேருவை விஞ்சியதோ
அதே போல் பாரிஜாத மலரை அடைந்த உடன் ருக்மிணி பிராட்டி சிறிதே மணம் நிறைந்த பூ லோகத்து மலர்களை எல்லாம் அறவே விட்டாள்
அத்தைச் சூடிய பின் அவள் அம் மலரைப் போலவே வெண்மை நிறம் வீசக்கூடிய திவ்ய மேனி பெற்று
தேவ லோக மங்கையரைப் போல் கவலை அற்று மகிழ்ச்சியுடன் விளங்கினாள்
ரைவதக பர்வம் த்வாராகை ஒட்டி இருக்கும் மலை-கிர் நார் இப்பொழுது உள்ள பெயர் -ஹரி வம்சம்

————-

ஸாரஸ அஸம தாத அஷி பூம்நா தாம அசவ் ஸீதயா
ஸாது அசவ் இஹ ரேம ஷேமே அரம் ஆஸூர ஸாரஹா –ஸ்லோகம் -8-

இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரி வட்டக் கண்கள் -இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு -திருமழிசைப் பிரான் பாசுரம் போலவே இங்கு கவி வேங்கடாத்ரி அருளிச் செய்கிறார்

ஹார ஸார ஸூமா ரம்யா ஷேமேர இஹ விஸாத் வஸா
யா அதஸீ ஸூ மதாம் நா பூஷிதா தாம ஸ ஸார ஸா –ஸ்லோகம் -8-ப்ரதி லோமம் 

அழகிய முத்தினாலான மாலையைப் போல் ஒளிர்ந்ததும்
செல்வத்துக்கு எல்லாம் அணி கலனாய் திகழ்ந்ததுமான
அந்த பாரிஜாத மலரைச் சூடின ருக்மிணி பிராட்டி அதஸி புஷ்ப மாலையை சூடின கண்ணனுடன்
மற்ற மனைவியரைக் கண்டு பயம் அற்றவளாய் அவன் திரு மாளிகைக்கு சென்றாள்

————-

ஸாகஸா பர தாய இபமா பாதா மந்யு மத்தயா
ஸா அத்ர மத்யமா தாபே போதாய அதி கதா ரஸா –ஸ்லோகம் -9- அநு லோபம்

ராஜ்ய லஷ்மியின் வைபவத்தால் பிரகாசிக்கும் அயோத்தியை நகரை கைகேயி யானவள்
ராமனுக்கு முடி சூட்டும் வைபவம் பற்றிக் கேள்விப்பட்ட வுடன் கோபத்தாலும் வருத்தத்தாலும்
உன்மத்த நிலையை அடைந்தவளாய் பரதனுக்காக நிலை நிறுத்தினாள் –

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். –கைகேயி சூழ்ச்சிப் படலம் –3-

ஸாரதா கதியா தபோ பேதா யா மத்யம த்ரஸா
யாத்த மந்யு மதா பாமா பயேதா ரபஸா ஆகஸா –ஸ்லோகம் -9-ப்ரதி லோமம்

தன் சீலத்தால் பெரும் புகழை யுடைய யோசித்த இடை யுடையளான -மத்ய மா -ஸத்ய பாமை
கண்ணன் பாரிஜாத மலரை ருக்மிணியிடம் அளித்த செய்தி அறிந்து கோபமும்
கண்ணனின் அன்பு தன்னிடத்தில் குறைந்ததோ என்ற பயமும் அடைந்தாள்

மேல் உள்ள இரண்டு ஸ்லோகங்களும் இரு மனைவியரின் துக்கத்தையும் கோபத்தையும் காட்டுகிறது
கைகேயி -கௌசல்யை
ஸத்ய பாமை -ருக்மிணி பிராட்டி
முன்னுரிமை பறிக்கப் பட்டு தங்களை மத்யமா -secondary -என்று கணவர் எண்ணுகிறார்கள் என்ற நினைவு

————–

தாநவாத் அபகா உமாபா ராமே கானனத ஆஸ ஸா
யா லதா அவ்ருத்த ஸேவாகா கைகேயீ மஹத அஹஹ –ஸ்லோகம் -10- அநு லோமம்

ராமனுக்கு முடி சூட்டப் போகும் விஷயம் அறிந்த கைகேயி துயரத்தால் நலிவுற்று வெளுத்தவளாய்
அறுந்த கொடி போல் தரையிலே விழுந்து தயரதனுக்கு செய்யும் அனைத்து பணிவிடைகளையும் மறந்தவளாய்
முடி சூட்டுதலை எதிர்த்து ரானைக் காட்டுக்கு அனுப்பினாள்

கூன் உருவில் கொடும் தொழுத்தை தன் சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகர் –பெருமாள் திரு மொழி

‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் –
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.–கைகேயி சூழ்ச்சிப் படலம்– 14-

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15-

ஹஹ தாஹ மயீ கோகைகா வாஸோத் தா வ்ருதாலயா
ஸா ஸத் ஆந நகா அமேரா பாமா கோபத வா நதா –ஸ்லோகம் -10- ப்ரதி லோமம்

அழகிய முகம் கொண்டவளான பாமா இப்பொழுது கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ போன்ற கோபத்தால்
முகம் எல்லாம் ஜ்வலிக்க கலக்கமுற்ற மனத்தளாகி அழகிய மயில்கள் நடமாடும் தனது வீட்டினுள்
பணிப்பெண்கள் நுழையா வண்ணம் தாள் இட்டாள்

அநு வ்ரதா காம கலா ஸ்வ தீதி நீ விசித்ர சஸ்த்ராஸ்த்ர விஹார வேதி நீ
பஹு ப்ரிய ஸ்யாபி ஹரேர் அதீவ ஸா பபூவ தேவீ பஹு மாந கோசர –யாதவாப்யுதம் -14-72-ஸத்ய பாமா வர்ணனம்

பர்த்தாவின் திரு உள்ளபடி நடப்பவள்=காம சாஸ்திரம் கற்றவள்
அம்பு அஸ்த்ரங்களின் பிரயோகம் அறிந்தவள்
ஆகையால் பல மனைவியர்களிலும் இவளே கண்ணனின் அன்புக்கு பூர்ண பாத்ரமானவள்

கைகேயி யாருடன் பேசாமல் தன்னையே வருத்திக் கொள்ள
ஸத்ய பாமையோ கோபத்தால் பணிப் பெண்களை தவிர்த்தாள்

————————-

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

—————-

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II -ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II – ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!

ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.

அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
******************

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே  கிடையாது  என்று கூறும்

காரணம் என்ன?

காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும்  பல கட்டங்களைக் காண்கிறோம்.

இந்தப்  பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர்  எவரேனும் உண்டா?  என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும்  காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப்  பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க  உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.

இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-

வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும்  பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ  ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது  அந்தச் சொற்சித்திரம் :-

(1)

அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய

ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா

பொருள்

பரத்வாஜரே  இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.

நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ  (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச்  செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர்  அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை  பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை  பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச்  சாம்பலிலிருந்து  பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக்  காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.

(2)

சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட  வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது.  ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.

“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான  ஸீதை சொல்கிறாள் :-

பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம

கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னா பராத்யதி

சீதை சொல்கிறாள் –

“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ,  தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”

(3)

வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?

“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப்  புறப்படுகிறது . வானத்தில் கண்கள்  (நட்சத்திரங்கள்)  முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச  சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.

இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன

இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார்,
இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள்,
விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள
ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

இஷுவாகு தொடங்கி ராமர் வரை நான்கு சதுர்யுகம் காலம்

———————–

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஏக ஸ்லோக ராமாயணம்

 ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ராமாயணம்

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

—————-

ஏக ஸ்லோக பாகவதம்

 ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே மஹா பாரதம்

ஸ்ரீ பெருமாளின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வான்–ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்–ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம– —

February 24, 2023

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

————

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்

இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று

—–

அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ர சக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -93-

தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு

விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்

விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ

ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப்
பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்

சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது

சமக்ர சக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –

மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்

நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே
பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————-

12 குணங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி

1-தயா -தயா சதகம் -கல்கண்டு போல் திருமலை -ஞானாதிகள் அப்ரயோஜனம் தயை இல்லாமல் –
பிரதானம் இதுவே -ராமானுஜரை விந்தியா மலையில் இருந்து மிதுனமாக அழைத்துச் சென்றார்களே

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது,
தேவாதி ராஜன் –காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து,
மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாயார், “நீர் வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர்.
உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும்
அக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார்.
கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே.
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
இவன் அருளால் பெற்ற ஸாம்யா பத்தி ஸ்வாமிக்கும் உண்டே

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

———-
2-ஷாந்தி ஸகல மனுஷ நயன விஷயதாங்கனாக -பொறுமை யுடன் நமக்காக
காஞ்சி பிரம்மாவால் தொழப்பட்டவர்
ஹஸ்திகிரி
ஹஸ்த திரு நக்ஷத்ரம்
சரஸ்வதி -வேகவதி -பல திவ்ய
திருவெஃகா வேகா சேது
ஒரு ஆஸ்ரிதனான ப்ரம்மனுக்காக
ஹஸ்திகிரி மத்த சேகரன்
அத்திகிரியான்-த்யாகேசன்

————-

3-ஓவ்தார்ய –
ஆர்த்திதார்த்த பரிபால தீக்ஷிதன்
வரம் ததாதி
வரதம் அளிப்பவர்களுக்குள் ஈஸ்வரன்
வரத ஹஸ்தம் இல்லாமல் அபய ஹஸ்தம்
வரதராஜனாகவே பிரசித்தமாக இருக்க ஹஸ்தமும் காட்ட வேண்டுமோ

கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் !
கொள்ள குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ –3-9-5-
திருமங்கை ஆழ்வாருக்கு காட்டிக்கொடுத்த உதார வள்ளல்-மண்ணை அளந்து பொன்னாகி -இஹ லோக ஐஸ்வர்யம்
தன்னையே கொடுக்கும் கற்பகம்
ராமாநுஜரையே அரங்கனுக்கு கொடுத்த உதார குணம்
சேராது உளவோ பெரும் செல்வருக்கு—அரையர் ஸ்துதிக்க -ஸ்த்வயன் -ஸ்தவ ப்ரியன் – ஸ்துதி பிரியன்
ஞானம் வழங்கிய உதாரம் -யஜ்ஞ மூர்த்தி -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பிள்ளை லோகாச்சார்யாராக -இவரே
ஏடு படுத்தச் சொல்லி
——–
4-பிரதிம ஸ்வ பாவம் -மென்மையான -திருமேனியும் -திரு உள்ளவும் மார்த்தவம்
ஞானிகள் பிரிவை அஸஹம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -திரு மூழி க்களத்தில்
ஆலவட்டம் -கைங்கர்யம் -ஆறு வார்த்தை
——-
5-சமதா -பக்தனை எனது அளவாவது
வேறுபாடு மட்டும் அல்ல
தன்னையும் அவர்களுக்கு கீழ்
அஷ்ட வித பக்தி மிலேச்சசன் இடம் இருந்தாலும்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பெயரிலே சாம்யம்
———–
6-ஸுஹார்த்தம்
கிருபை இதன் அடிப்படையால்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம்
முனியே -மனன சீலன் –
உறங்குவான் போல் யோகு செய்து
நாலூரானுக்கும் முக்தி
——–
7-த்ருதி
ஊற்றம் உடையார்
ஆஸ்ரித ரக்ஷணம்
ராமானுஜர் அவதாரம் தொடங்கி உபகார பரம்பரைகள்
நம்மாழ்வார் திரு உள்ளத்திலும் பட அருளி
——
8-பிரசாதம்
பேர் அருளாளன் அருளாத நீர் அருளி வீதி வழியாக ஒரு நாள்
———-
9-ப்ரேம
சேர்த்தி புறப்பாடு பிரசித்தம்
கஜேந்திர ரஷணம் -அகில காரணமத்புத காரணம்
நடாதூர் அம்மாள்
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான்
————
10ஆஜ்ஞா
ஆறு வார்த்தைகள் பிரசித்தம்
ராமானுஜரை ஆக்கி அருளி
ஆளவந்தார் ஆ முதல்வன் கடாக்ஷிக்க சரண் அடையும் பொழுதும் அருளி
விந்திய மலையில் இருந்து காத்து அருளி
ஸந்யாஸ ஆஸ்ரமும் அநந்த ஸரஸ்ஸில் செய்து அருளி
அரங்கனுக்கு அரையர் மூலம் கொடுத்து அருளி
ஸ்ரீவசன பூஷணம் ஏடு படுத்த
ஈட்டை வெளியிட்டு அருளி
————
11-ஆஸ்ரித சுலப
தொட்டாச்சார்யார் ஸேவை பிரசித்தம்
——–
12 கல்யாண
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸுந்தர்யம் லாவண்யம் மிக்கு
ஆதி ராஜ்யம்
திவ்ய மங்கள விக்ரஹம்
நாபி சுழி
வலித்ரயம் உதர பந்தம் பட்டம் கட்டி -தாமோதரன்
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
————-
காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

—————————————————————————————

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.
திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம். -கொடையும் விசேஷம் பேர் அருளாளன் அன்றோ
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.

கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற
இந்த நான்கு திவ்யதேசங்ககளுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.

———————-

ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம

ஹரே அகில ஹேய ப்ரத்ய நீகன்
ராம -கல்யாண ஏக குண நிதி -ஏக ஸ்தானம்
சீதா ராம -மிதுனமே ப்ராப்யம்
ஜய ஜய ராம -பேற்றுக்கு உகப்பானும் அவனே
ஆஸ்ரித நிரஸனம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -போக்யம் பசும் கூட்டம்

ஸத்ய வாக்யனாகி -சத்யம் நேர்மை உறுதி மூன்றும் சேர்ந்தவன் -நம்மையும் அப்படி ஆக்கி அருளுவான் அன்றோ

ஹரே ராம-நன்மை செய்யும் ஸுஹார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி — தாரகம் –வாழ் முதல்
ஜய ராம்-போஷகம் -வளர் முதல்
சீதா ராம -ஸீயாராம் -அயோத்தியில் கோஷம் –பிராகிருத வீட்டுப்பேச்சு -போக்யம்-ஸ்ரீ யபதித்தவம் – -மகிழ் முதல்

ராதே கிருஷ்ணா ராதே ராதே பிருந்தாவனம் இதே போல்-

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் மிதுனமே

திருவுக்கும் திருவாகிய செல்வன்

ஸுர்ய -வீர்ய -பராக்ரமம்
வெளியில் இருந்து தான் கலங்காமல் ஸுர்ய
புகுந்தும் கலங்காமல் பராக்ரமம் சின்னா பின்னம்
தனக்கு விகாரம் இல்லாமல் மற்றவை விகாரம் செய்வது வீரம்
ஜய ஜய மஹா வீரா

ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-

விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –

ஸத்ய வாதி பிரிய வாதி த்ருட வாதி -மே விரதம் -அசைக்க முடியாத திடம்-சரணாகத வாத்சல்யம் -அபய பிரதான சாரம்

ஸத்ய வாதி -ஹரே ராம
பிரிய வாதி -சீதா ராம
த்ருட வாதி-ஜய ஜய ராம

ஸத்ய பாஷா ராகவா பிரிய பாஷா ராகவா மிருது பாஷா ராகவா பூர்வ பாஷா ராகவா மஞ்சு பாஷா ராகவா –
சொல்லின் செல்வன் இவனே கொண்டாடும்படி திருவடி

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-

விபீஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவணஸ்வயம்*

—————-

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
“ஹரிர் ஹரி ஹரிர் ஹரி”என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
“கேசவா”என்று சொல்ல வேண்டும். “கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
“கோவிந்தா”என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
“மாதவா”என்று கூற வேண்டும்.

கஜேந்திர மோக்ஷம் செய்து அருளினை அவதாரம்
துஸ் ஸ்வப்னம் போக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -361-656-ஹரி நாமம்

நாராயணா மணி வண்ணா -ஆர் இடரை நீக்காய்
கபிஸ்தலம்
சென்று நின்று ஆழி தொட்டானை
புண்யோ துஸ் ஸ்வப்ன நாசநா
அஜிதன் -அம்ருத மதனன் –கூர்மம் தங்கி -மோஹினி -அவதாரங்களும் உண்டே

பச்சை வர்ணத்தையும் ஹரி குறிக்கும்
பச்சை வண்ணன் பவள வண்ணன்
கரும் பச்சை
நீல மேக ஸ்யாமளன் -கறுத்தே -முகில் வண்ணன் -பச்சையும் மரகத பச்சை ஆழ்ந்து
ஸம்ஸ்திதா பூஜித -கோவர்த்தன மலையில் இன்றும் எழுந்து அருளி இருக்கிறவன் ஹரி திரு நாமம் -பட்டர்
கோவர்த்தன தாரியும் ஹரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தவன் –

ஓம் பிரணவத்தையே தாங்கும் ஹரி திரு நாமம்-திரு மணத் தூண்கள் ஹரி-த்வய அக்ஷரங்களே –

ரமயதீ ராம –கண்டவர் தம் மனம் வழங்கும் -திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு அறிவோமே

ரூபம் குணம் இரண்டுமே வசீகரிக்கும்
நடத்தை -இன்றும் பாஷ்யகாரர் உத்சவம் நடை அழகை ராமர் பிரகாரத்தில் நடை பெறுமே
ரம்யதி-மகிழ்ச்சி கொடுப்பதில் ஸ்ரேஷ்டம் –
ராம நாமமே ஜென்ம ரஷக மந்த்ரம்

ரம்யதே அஸ்மின் –தோள் கண்டார் தோளே கண்டார் –
பூமா -ஒவ்வொன்றும் –
வேறே எங்கும் போகவோ கேட்கவோ அனுபவிக்கவோ போக முடியாதே
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
அபி ராமம் -நீலோத் புஷ்பம் -ஸரத்கால முழு நிலா -பிருந்தாவனத்தில் பெரிய ஸமூஹம்
குணாபி ராமன் ராமஞ்ச –

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம் -ஹரே ராம் அர்த்தம்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய:
கண்டிதாகில தைத்யாய ராமாயா ஆபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டத ச்’சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணொ…
அச்யுதாநந்த கோவிந்த.நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந்தைவம் கேசவாத்பரம் //
 
சரீரே ஜர்ஜரி பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே
ஒளஷதம் ஜாஹ்நவி தோயம் வைத்யோ .நாரயணோ ஹரி:
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:
இதமேகம் ஸுநிஷ்பநம் த்யேயோ .நாரயணோ ஹரி :
 
காயே.ந வாசா ம.நஸா இந்த்திரியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாரயணாயேதி ஸமர்ப்பயாமி //
 
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீநந்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷ்ம்யதாம் தேவ.நாரயண .நமோஸ்துதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம://
ராம நாமமே தாரக ம்ந்த்ரம். கஷ்டங்களை விலக்குபவர். பீடைகளை ஒழிப்பவர். பயங்களை போக்குபவர். ஸர்வ மங்களங்களையும் தருபவர். ஒரு நாள் ஒரு தரம் சொன்னால் போதும்.

ஹரே ராம
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -ஹரி சொன்னாலே ராம புண்யம் கிட்டும்
ராம ஹரே
கிட்டி அனுபவிக்க போக -ஸம்ஸார உழன்று இருக்க -யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே-அணைவிக்கும் முடித்தே
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

கஷ்டங்களை நீக்கி ஆனந்தம் தருவதே ஹரே ராம்

வேத ஸ்வரூபமே ஸ்ரீ ராமாயணம்-“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே! வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!”

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு.

ராம நாமம் ஒரு வேதமே! ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம் அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான் கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி–(வால்மீகி ராமாயணம் 1.2.36)

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

காலங்களைக் கடந்த பெருமை
லோகங்களைக் கடந்த -கோடி கோடி அண்டங்களிலும் பெருமை பெற்ற ஸ்ரீ ராமாயணம்
கால தேச பரிச்சேதய ரஹிதம்
இரண்டு அரண் ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழி

1. நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச்  சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார் .ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

2. நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான்.
தர்மம் நான்கு வகைப்படும்.

1.சாமானிய தர்மம், 2.சேஷ தர்மம் ,3.விசேஷ தர்மம், 4.விசேஷதர  தர்மம் . இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.
இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது  “விசேஷ தர்மம்”.
இறைவனுக்குத்  தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத்  தொண்டு செய்வதே முதன்மையானது என்று  பாகவத சேஷத்வத்தைக்  காட்டினான் சத்ருக்கனன்.இது “விஷேதர” தர்மம்.

‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா”என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

3. இராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின்  நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது .அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப்  படிக்காமல்,  தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும்.  அத னால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல்,  “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்.

4. 18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்

ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின்  சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும் ,தன்னுடைய  ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம்   பாடம் கேட்டார்.

5. காயத்ரி மந்திரமும்,  ஸ்ரீ ராமாயணமும்.

சகல வேதங்களின் சாரமான  காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு  அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள்  என்ற வகையில்   24 ஆயிரம் ஸ்லோகங்களை வால்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால்,அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

6. ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச்  சொல்வது ராமாயணம். ஒரு வருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்  கொண்டால்  என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச்  சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச்  சொல்லுகின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில்  சிரேஷ்டமானது  ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

7. சீதையின் பெருமையா?ராமனின் பெருமையா?

ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக்  கூறுவதாகச் சொன் னாலும், அது சீதையின் பெருமையை  பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று  மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான்  ரிஷிகள் சொல்லுகின்றார்கள்.ஆழ்வாரும்  தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறையில் இருந் தவளின்  பெருமையைச்  சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.

தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-என்பது திருவாய்மொழி.

தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள்  கருத்து.

8. முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார்.எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம்  வரும்.முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது.
முக்கியமான க்ஷேத்திரமும் கூட.‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவ திஸ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

9. அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும்  வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி.யுத்தங்களால்  வெல்லப்படாத பூமி. மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார் என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமபிரான்  வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின்  அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத் தினுள், சுவர்களில் ஸ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

10. சரயு நதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி  சரயு.
இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.–(பால-ஆற்றுப்படலம் -24) என்று

நதியின் பெருமையை கம்பன் வர்ணிப்பான். சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன.கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை.-இராமரின் அவதாரதினமான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னு மிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.இராமர் இந்த உலக வாழ்வை முடித்துத்  கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

11. தங்கச் சிலைகள்

சீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும் வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதைக்கு, கைகேயி உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

12. பிரணவம் நடந்தது

ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள். இதை விவரிக்க கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும்  பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம் தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ” எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ  என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம” என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.

இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும்  எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத்  தொடர்ந்து ஒரு வராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக்  குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.

13. ஸ்ரீ ராமனும், ஸ்ரீ ராமானுஜரும்

ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே  ஸிதே  பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு”  என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார்   என்பதை இந்த ஸ்லோகம் சொல்லுகின்றது. “மேஷார் த்ராஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.

1.இருவரும் உலகை ரமிக்கச் செய்தவர்கள்.
2.இருவர் பெயரி லும் “ராம” என்ற நாமம் உண்டு.
3.இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4.இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5.இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு  கொண்டவர்கள்.

14. ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்றபோது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது.மேல் நிலைக்குச் செல்வது.இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல் லுவார்.எல்லோரையும் உயரே ஏற்ற ,கீழே இறங்க வேண்டும்.கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான்.

மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல்.அதனால் தானே  இராமன் கட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள்  அழுதார்கள்.

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்- (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

15. ஏழு மராமரம்
இராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி வான் மீகியைப்  பதப்படுத்தியது.  இராமாயணத்தை எழுத வைத்தது.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே- என்பார் கம்பர்.

அது சரி மராமரம் என்பது என்ன? இங்கே மராம் என்பது யா மரம் (ஆச்சா/சாலம்). மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத் தந்துள்ளது.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.

இராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து, ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது, இனி துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.

16. ஏழும் இராமனும் ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.

1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3.இராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படை யெடுத்தான்.
4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5.ஏழு  பிராகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால்  இராமா யணம்   பாடிக்கொண்டிருக்கிறார்.

17. தோல்வியே இல்லை

1.அவன் ஜெயராமன்.
2.ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3.ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4.“ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப் பாடுவார்.
5.‘‘தோலா வீரன்”  என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6.எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

18. ஏன் ராமன் பெயர் இல்லை ? ஒரு அருமையான பாட்டு.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.சரி.

இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?

இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள் பெரியவர்கள்.பட்டாபிஷேகம் என்கின்ற அந்த  கிரீடம் ராமர் தலையில் வைக்கப்பட்டது  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், வெகுஜனங்களின் அபிப்ராயம், மகிழ்ச்சி ஆகிய கிரீடத்தை, அதாவது மக்களின் அபிமானத்தை ராமபிரான் சூட்டிக் கொண்டான்.
ஒவ்வொருவர் இதயத்திலும் ஆட்சி செய்தான்,ராமர் சூடிய கிரீடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள், எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர் இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம்.

19. வேதங்கள் ஏன் ராமனைத் தொடர்ந்தன?

வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள் தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
அதாவது இராமாயணத்தில் தூல வடிவம் ராமன் என்கிற அவதாரம். தன் அவதார  காலம் நிறைவு பெற்றவுடன் ராமன் சரயு நதியில் இறங்கி உடனடியாக வைகுண்டத்திற்குச் செல்லத்  தொடங்க, வேதங்களும் அவனைத் தொடர்ந்து சென்றன. அதைத்தொடர்ந்து முனிவர்களும் மக்களும் ராமன் பின்னால் சென்றார்கள்.இதன் மூலம் பிரமாணமும் பிரமேயமும் (வேதமும் ,வேதப் பொருளும் ஒன்று என்பதை காட்டுகிறார்.

20. குலசேகர ஆழ்வார் வர்ணிக்கும் காட்சி இது

ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அவர் ராமாயணம் பாடவும், அந்த காட்சிகளை அனுபவிக்கவும் விரும்புகிறார்.பகவான், “நீ திருச்சித்ர கூடம் வா, அங்கு இதை அநுபவிக் கலாம்” என, ஆழ்வார் தில்லை திருச்சித்ரகூடத்தில்  (வடக்கேயும் ஒரு சித்ரகூடமுண்டு) இக்காட்சிகளை கண்டு, ராமாயணத்தை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்கிறார். அதில் 10 வது பாசுரம் இது. தன்னுடன் சரா சரங்களை வைகுண்டம் ஏற்றினான் என்று பாடுகிறார்.

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.
இப்பொழுதும் இந்த காட்சியை, நாம் தில்லை திருச்சித்ரகூடத்தில் (சிதம்பரம்) காண முடியும்.

21. ஏன் சித்திரையில் ஸ்ரீராமநவமி?

ஸ்ரீராமநவமி யானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது அவதரித்தான்.

22. வசந்த ருதுவும் ராம நவமியும்பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும் ,  சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான் மார்கழியாகவும் , பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத்  தனிச்  சிறப்பு உண்டு.

23. ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் இராமபிரான் ?

இராமாயணத்தில் பலகாலம் சீதையை ராமன் பிரிந்து இருப்பதாகப் பார்க்கின்றோம். முதலில் காட்டில் சீதையைப் பிரிகின்றான். ராவணன் சீதையை அசோகவனத்தில் சென்று மறைத்து வைக்கிறான். அதற்குப் பிறகு சீதையை மீட்ட பிறகு மறுபடியும் பிரிவு ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால், ஒருமுறை பிருகு மகரிஷியின் பத்தினியை மகாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தால் தலையை துண்டித்து விட்டதாகவும், அதனால் பிருகு மகரிஷி, நீ உன் மனைவியை பிரிந்து துன்பப்படுவாய் என்று சாபம் விட்டதாகவும், முனிவரின் சாபத்தை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டு, உம்முடைய சாபத்தின் பலனை நாம் ராமா வதாரத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்ததாகவும் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

முனிவரின் வாக்கு பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டான். இந்த சாபத்தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.

24. ஸ்ரீராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு “ராம கோடி” என்று பெயர்.
தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம்  எழுதி  பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

25. மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?
அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதி தேவிக்குச்  சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.

எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. “ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், “ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் “ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2X5 2×5 2×5. என்றால் 2X5 =10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்:  சிறப்புப் பாயிரம் 14)

26. யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின்  குணங்கள் பற்றி அழகான தமிழ் பாடல் ஒன்று உண்டு. இராமா யணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6.துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.
27. ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?
ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிடம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

28. இதிகாசம் என்பதன் பொருள் இதுதான்இராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரவி இருக்கக்கூடிய ஒரு உன்னதமான இதிகாசம். இதி என்றால் “இவ்வாறு, இப்படி, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக” என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள்படும். (ஹ) என்பது வலியுறுத்தும் ஓர் அசைச்சொல். தமிழில் இப்படித்தான், இவ்வாறாகத்தான் என்பதில் வரும் ‘தான்’ என்னும் சொல் போல.கடைசி பகுதியாகிய  (ஆஸ) என்பதன் பொருள் “இருந்தது”.

அஸ் என்றால் “இரு” (நிகழ்காலம்), இதன் இறந்தகால வடிவம் ஆஸ. இதிகாசம் என்றால் “இப்படி நடந்தது” என்று பொருள்.அந்த ஆசிரியரே அதிலே ஒரு கதாபாத்திரமாக வருவார். அப்படிப்பட்ட இதி காசங்கள் இரண்டு. ஒன்று. இராமாயணம். இன்னொன்று மகா பாரதம்.வேதத்தில் அர்த்தத்தை தெளிவாக கதை போல் விளக்குவது இந்த இதி காசங்கள். மகாபாரதத்தில் வேத வியாசர் கதைக்குள் வருவார். இராமாயணத்தில் வால்மீகி  முனிவரே வருகிறார். அவர் தான் சீதையை தன் ஆசிர மத்தில் வளர்க்கிறார்.

29. இராமாயணம் முதலில் அரங்கேறியது எப்போது?

இராமாயணதிற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது இராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜ மண்டபத்திலேயே அரங்கேறியது. அதை இராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம்
ஒன்றே மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம்பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட இராமன் தன் சரிதை(கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும்போது அமுதம் கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் இராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

30.வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் இராமாயணம்

வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வேதம் என்ன தான் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இராமாயணத்தைப்  படிக்க வேண்டும் என்பதால்,
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

என்று நம்மாழ்வார் பாடினார். வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ ராமானுஜர்  இராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டு இருந்தார். இராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக்  கொண்டுதான்  ஸ்ரீ பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார்,” படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி  வெள்ளம்  குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்” என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் இராமாயணம் இராமானுஜர் நெஞ்சத்தில் இருக்குமாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.

இப்படி நம்மையும் வழி நடத்தி நல்வழி காட்ட இந்த ராம நவமியில் ஸ்ரீ ராமாயணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ ராமனின் குணங்களைக் கொண்டாடுவோம்.ஸ்ரீ ராம நாமம் ஜெபம் செய்வோம்.உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும் முனைவோம். அது தான் நிஜமான ஸ்ரீ ராமநவமி.

—————-

பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |

ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||

ஒளிரும் தன் கடைக் கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்

சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்

பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்

அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்

பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்

ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்

சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

——————

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வ வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்) 
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதைக் கேட்டாள் 
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான் 
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடனென போவதென தடுத்தனர் சென்று 
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே (ஜகம்) 
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான் 
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான் 
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான் 
வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான் 
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐயன் வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் 
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே 
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
————————————————————————————————————————–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்ய தேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறு மதிநலம் அருளப் பெற்ற திவ்ய ஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.
இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கப் பெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருத யுக முகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரி பதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதச பதயோ தாரயந்த்யுத்தமாங்கை: || என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது.
அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன்
கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.
அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது.
அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக் கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள
தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள்.
அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
வந்தே ஹஸ்தி கிரீசஸ்ய வீதீ சோதக கிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.
அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள்
நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து
திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.
இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி?
ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள்
இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது.
அத்தி யூரான் பபுள்ளை யூர்வான் அணிமணியின்
துத்தீ சேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீ
மறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம்.
இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம்
தேவப்பெருமாளுக்கே.
இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார்.
காலையானதும் எழுந்து விடுகிறார்.
பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி.

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டே

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்துநான்கு சாண் கொண்டது.
வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள்.
த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.
இவையும் இருபத்துநான்கே.
இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக
அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு
இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்,
ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்
தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்;-ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக
இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –

ஸம்ஸாரவாரி நிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தர விம்சதிர் யா |
தாமேவ தத்வ விதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து,
ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா.
தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்து கொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி
ஸ்ரீ வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது
மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள
பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.
இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும்
வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான்.
அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது.
இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால்
இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா.
ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள்.

எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான்.
எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.
இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள்.
அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான்.
யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான்.
ஒன்று யதோக்தகாரி.
இரண்டாவது தேவப் பெருமான்.

ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார்.
ஸ்வாமி தேசிகன் இதை
ஏகம் வேககதீ மத்யே ஹஸ்தி சைலே சத்குச்யதே.
உபாயப் பல பாவேன ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒரு ஸ்லோகத்தை பார்ப்போம்.
இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை.
வ்யாஸஸூத்ரத்துக்கும்
ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார்.

அவரது மற்றொரு ஸ்லோகம் .
தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன்.
அதைப் பொருத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே
ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார்.

முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார்.
இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார்.

மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை.
ஆக அப்பொழுது வணங்க ப்ரஸக்தி இல்லையே.

ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார்.
அந்த ஸ்லோகம் இதோ –

வபூ: ப்ராதுர் வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் |
நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||

—————————

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ வேத வியாஸ பகவான் அருளிச் செய்த ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் —

September 13, 2022

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ இளைய பெருமாளுக்கு உபதேசம்

வேத வியாசரின் பிரம்மாண்ட 61வது அத்தியாயத்தில் பரமசிவனும் அம்பாள் பார்வதியும் பேசிக்கொள்கிறார்கள்
( இதை நாரதருக்கு பிரம்மா சொல்லியிருக்கிறார்) இந்த பகுதி தான் அத்யாத்ம ராமாயணம் ஆகும்.

வால்மீகி ராமாயணம் 7 காண்டங்கள். 24000 ஸ்லோகங்கள்.
ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்குப் பின் முதல் எழுத்து காயத்ரி மந்த்ரத்தில் இருந்து வரும்.

வேத வியாசரின்  அத்யாத்ம   ராமாயணம்  6 காண்டங்கள்,  கிட்டத்தட்ட 4000  ஸ்லோகங்கள்  கொண்டது.

ராவண வதத்துக்குப் பிறகு மாய சீதை தான் அக்னி ப்ரவேசம் செய்கிறாள் – வியாசர்.
உண்மையான சீதை தான் அவ்வாறு செய்தது – வால்மீகி.

லக்ஷ்மனனுக்குத் தெரியாமல், ”சீதா, ராவணன் வருவான், உன்னைக் கடத்துவான்.
எனவே உன்னை அக்னியிடம் ஒப்படைத்து ஜாக்ரதையாக பிறகு பெற்றுக் கொள்கிறேன்
அதுவரை உன்னைப் போன்று இப்போது முதல் ஒரு மாய சீதா உருவாக்கி ராவணன் தூக்கிச் செல்ல வைக்கிறேன்.
பிறகு ராவண வதம் முடிந்து மாய சீதாவை அக்னியில் பிரவேசிக்க வைத்து உன்னை மீட்டுக் கொள்வோம். –
ராமன் – சீதாவின் இந்த ஒப்பந்தம் வியாசர் சொல்கிறார்.

—————

ஸ்ரீ ராமகீதாமாகாத்மியம்‌,

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் மாகாத்மியம்‌ (பெருமை) முழுவதனையும்‌ ஸ்ரீ சங்கரன்‌ அறிவார்‌.
௮தில் பாதி பார்வதி தேவி யார்‌ அறிவர்‌. முனிவரே !-௮தில் பாதி யான்‌ ௮றிவேன்‌.

எந்த மாகாத்மியத்தை யறிதலால்‌ உலகத்தினர்‌ அக்‌ கணமே சித்த சுத்தியை அடைவரோ, ௮தனை யுனக்குச்‌
சிறிது சொல்லுகிறேன்-முழுவதும்‌ சொல்லக் கூடிய தன்று

நாரதரே! ஸ்ரீ ராம கீதை எந்தப்‌ பாபத்தைக்‌ கெடுக்‌கிறதோ அந்தப் பாபம் உலகில் ஓர் இடத்திலும் ஒரு போதும்
தீர்த்தம் முதலியவற்றால் போக்க முடியாது-
ஸ்ரீ ராம கீதையினால் கெடாத பாபத்தை உலகில் எங்கும் காண முடியாது

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியினால் உபநிஷத் ஆர்ணவம் கடைந்து உண்டு பண்ணப் பட்டது
ஸ்ரீ லஷ்மணனுக்கு உகந்து உபதேசிக்கப்பட்டது
இந்த ஸ்ரீ ராம கீதா அம்ருதத்தைப் பருகின புருஷன் அமரன் ஆகிறான் –

ஸ்ரீ பரசு ராமர் கார்த்த வீர்ய அர்ஜுனனைக் கொல்ல வில் வித்யையை பழகுவதற்கு முன்
ஸ்ரீ ராம கீதையை ஸ்ரவணம் செய்து கிரஹித்து படித்து ஸ்ரீ நாராயணனின் கலையைப் பெற்றார்

ப்ரஹ்மஹத்தி பாபங்களையும் போக்கும் சக்தி இதற்கு உண்டு

இத்தால் ஸாயுஜ்யமும் அடையலாம்

——————

ஆகாசத்தில்‌ மூன்று விதமான பேதம்‌ காணப்படுகிறது.
அதாவது ஒரு தடாகத்தை வியாபித்திருக்கிற ஆகாசம்‌ (1) மஹா ஆகாசம்‌,
அதற்குள்‌ ௮டங்கி யிருக்கிற ஆசாசம்‌ (2) அவிச்சின்ன ஆகாசம்
அதில்‌ பிரதிபலித்திருக்கிற ஆகாசம்‌ (3) பிரதிபிம்ப ஆகாசம்‌
என்னும் இம்மூன்று வித பேதங்களும்‌ ஆகாயத்தில் காணப் படுகின்றன,
பிரமத்திலும்‌, ஆபாஸம்‌, ௮விச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம் -என்னும் மூன்று வித பேதங்களும் உண்டே –
ஆபாஸ மென்பது பொய்பான புத்தி, ௮து அவித்தை (அஞ ஞானத்தின் காரியம்‌.
௮.து-விச்சின்னம்‌ (வேறுபட்டது) இல்‌லாதது. அஞ்ஞானத்தால்‌ விச்சின்னம்‌ ஏற்படுகிறது,
ஞானம்‌ ஏற்பட்டால்‌, அவிச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம்‌, இவை இரண்டும்‌ ஒன்றென்றும்‌,
ஆபாஸமாகிய அவித்தை தன்‌ காரியங்களுடன்‌ நசிக்கும் என்றும்‌ ௮றியக் கூடும்‌,

ரிக்‌ வேதத்தில்‌ அபாத்திரிய உபநிஷத்தில் –ப்ரக்ஞானம் ப்ரஹ்மம் என்னும்‌ வாக்கியமும்‌,
யஜுர்‌ வேதத்தில்‌ தைத்தரிய உபநிஷத்தில் அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி என்னும்‌ வாக்கியமும்‌,
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபநிஷத்தில் தத்துவமஸி என்னும்‌ வாக்யமும்‌,
அதர்வண வேதத்தில்‌ மாண்டோக்ய உபநிஷத்தில்‌ அயமாத்மா ப்ரஹ்மம் ப்ரஹ்மம் என்‌னும்‌ வாக்யமும்‌ உண்டே –

ப்ரக்ஞானம் பிரம்மம் என்றால் தூய அறிவே பிரம்மம் எனப் பொருள். அயமாத்மா பிரம்மம் என்றால் இந்த ஆத்மாவே பிரம்மம் எனப் பொருள். அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே பிரம்மம் எனப் பொருள்.

இந்த நான்கு மகா வாக்கியங்களை
ஸ்ரவணம் (1)
மனனம் (2)
நிதித்யாசனம் (தெளிதல்) (3)
நிட்டை கூடுதல் (4) என்று
ஸ்ரீ கீதை கூறுகின்றது.-

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஸத்யம்
நித்யம்
பூர்ணம்
ஏகம்
பரமார்த்தம்
பர ப்ரஹ்மம்
கூடஸ்தர்
பரஞ்சோதி -பர்யாய பதங்கள் –

ஸ்ரீ ராம ஹ்ருதயமே இந்த உபநிஷத் வாக்கியங்களின் தாத்பர்யம்

நியந்த்ரு நியாம்ய பாவம்-
சேஷி சேஷ பாவம்-
சரீர ஆத்ம பாவம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -உணர வேண்டுமே –

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-