Archive for the ‘ஸ்ரீ யதிராஜ விம்சதி’ Category

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் —

May 25, 2022

மன்னுயிர்காளிங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி
சிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்.

பல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் புனிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும்

நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது.

அவருக்கு பின்னும் பல மகான்கள் திரு அவதாரம் செய்திருப்பினும் நம்பெருமாளே அழகிய மணவாளனான திருக்கோலத்தில்

பூர்த்தியுள்ள  மாமுனிகள் பக்கலிலே சிஷ்யனாக இருந்தமையால்,

பூர்வாசார்ய குருபரம்பரையானது மாமுனிகளுடன் பூர்த்தி அடைந்ததாகக் கருதுவர் பெரியோர்.

நல்லார் நவில் குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் திரு நாவீருடைய பிரான் தாசர் என்கிற மஹாசார்யருக்கு

திருக்குமாரராய் சாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்ரத்தில் திரு அவதாரம் செயதார்.

மணவாள மாமுனிகளுடைய ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்.

திருவாய்மொழிப் பிள்ளை ஒரு நாள் எம்பெருமானாருடைய குணாநுபவம் பண்ணிக்கொண்டு இருக்கையில்

மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசன் என்றும் உள்ள பல பாசுரங்களை சிந்தை செய்து

ஆழ்வார் திருவடிகளிலும் அருளிச்செயல் திறத்திலும் எம்பெருமானாருக்கு இருந்த பெருத்த ஈடுபாட்டை

மனத்தில் கொண்டு இத்திருநகரியிலே அவருக்கு ஒரு தனிக்கோயில் அமைக்க வேணுமென்று சிஷ்யர்களை நியமித்து அருளினார்.

நாயனாரும் ( மணவாளமாமுனியும் ) அந்த உடையவர் திருவடிகளிலே மிகவும் பக்தியுடன் உரிய கைங்கர்யங்களை செய்து வந்தார்.

அந்த உடையவரின் திருவடிகளிலே ஒரு ஸ்தோத்ரம் விக்ஞாபிக்க வேணுமேன்னு ஆசார்ய நியமனமாக

யதிராஜ விம்சதி என்னும் ஸ்துதியை இயற்றினார்.

இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதியின் மாதுர்யம் முதலிய குண விசேஷங்களைப்பற்றி

ஸ்ரீ அண்ணா வரவர முநி சதகத்தில் அருளிசெய்துள்ளார்.

ஸ்ரீ யதிராஜ விம்சதியின் அவதாரிகை

இங்ஙனம் பூர்வதிநசர்யையில், அபிகமநம், உபாதாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யாநுஷ்டாநங்களில்

தம்முடைய ஆசார்யராகிய ஸ்ரீ மணவாளமாமுனிகளை அநுபவித்து,

நான்காம் அநுஷ்டாநமாகிய ஸ்வாத்யாயத்தில் அவரை அநுபவிக்க விரும்பிய எறும்பியப்பா,

பலவகைப்பட்ட ஸ்வாத்யாயத்தில், பூர்வாசார்ய க்ரந்தங்களைச் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபமாகச் சொல்லுதலென்னும்

ஒருவகையை ‘வாக்யாலங்க்ருதி’ வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல நினைத்து,

புதிதாக ஒரு க்ரந்தத்தை நிர்மாணித்தல் என்னும் மற்றொறு வகையை இப்போது சொல்ல விரும்பியவராய்,

ஸ்ரீ மணவாளமாமுனிகள் தமது ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்ப ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி அருளிச்செய்த

ஸ்ரீ யதிராஜ விம்சதி என்ற க்ரந்தத்தை இங்கே அநுவாதம் செய்கிறார்.

பரமபூஜ்யரான ஸ்ரீ மணவாளமாமுனிகள், ப்ரபந்ந ஜன கூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே

உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) ஸ்ரீ நம்மாழ்வார் முதலான

பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும்,

திருமந்த்ரம் த்வயம் சரமஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய –

முடிந்த பொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம்

(மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும்,

ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும்

ஸ்ரீ யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளியவருளிச்செய்ய விரும்பி,

தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக,

தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு ஸ்ரீ யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை

இதன் முதலிரண்டு ச்லோகங்களால் செய்தருளுகிறார்.

ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய

இருபதென்ற எண்ணே, ச்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் இதன் உரையாசிரியர் திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக

மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து,

இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ச்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க.

விம்சதி = இருபது.

தனியன்

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்சதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||

பதவுரை:-

: – யாவரொருவர்,

யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுமதான,

யதிராஜ விம்சதிம் – அந்த யதிராஜர் விஷயமான இருபது ச்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஸதி என்னும் பெயருடையதாகிய,

ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை,

வ்யாஜஹார – அருளிச்செய்தாரோ,

ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான,

தம் ஸௌம்ய வர யோகி புங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முநிஸ்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனிகளை),

நௌமி – துதி செய்கிறேன்.

கருத்துரை:-

இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது.

யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில்

யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி.

ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகம் போன்றவர்.

ப்ரபந்நஜநங்களுக்கு மோக்ஷமளித்து உயிர்காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து.

யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹாமுனிகள்.

———————————–

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரமா விலாஸய பராங்குஸ பாத பக்தம்|
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1

பதவுரை:-

ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின் மணாளனுடைய தாமரைமலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க,

நித்யஸேவா – ப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய,

பராங்குஸ பாதபக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும்,

ஆத்மபத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய,

காம ஆதி தோஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும்,

யதிபதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான,

ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை,

மூர்த்நா – தலையால்,

ப்ரணமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை:-

ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள்.

ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன,

பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில்

திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரிய பிராட்டியாரை ஒத்தவன்

அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள்.

இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும்

எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான்

திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்”

(பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1)

என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய

பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று

மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய

பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற் கொண்டு

‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார்.

அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார்.

‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும்.

அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும்.

பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன,

வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு.

அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க.

‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது

அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார்.

அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம்

லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார்

வ்யாக்யாதா திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே,

தம்மை யடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை

முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார்.

தம் மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின் கண் உண்டாகும் குற்றங்களைக்

களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும்.

மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட

தாமரை மலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக-

மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும்,

பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால்

அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல்

‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி

இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும்.

குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும்

ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.

எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு,

அவர் தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி  ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸபாதபக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை –

பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார்.

“யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால்

ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும்,

காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது.

ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே,

ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது.

திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது.

இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு

வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால். (1)

————–

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம் ஸ்ரீமத் பராங்குஸ பதாம் புஜ ப்ருங்க ராஜம் |
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் யதிராஜ மீடே || 2

பதவுரை:-

ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹம்ஸம் போன்றவரும்,

ஸ்ரீமத்பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – ஸ்ரீமத்பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய திருவடிகளென்னும் தாமரைமலர்களில் (தேனைப்பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,

ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரைமலர்களை மலரச்செய்கிற ஸூர்யன் போன்றவரும்,

ஸ்ரீவத்ஸசிஹ்ந ஸரணம் – ஸ்ரீவத்ஸசிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய,

யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை,

ஈடே – துதிக்கிறேன்.

கருத்துரை:-

துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29)

[உயிர்களுக்கு, கணநேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது,

அது கிடைத்தபோதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது]

என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது

அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லையாகையால்,

பாகவத கைங்கர்யமாகிய யதிராஜவிம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து,

அத்தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி

யதிராஜ-ஸ்தோத்ர ரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார் –

ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ்வுலகுமாகிய இருவகைச் செல்வங்களைக் காட்டுமதாய்

அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது.

அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப்பெற்ற

ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித்தாமரைகளைத் தெரிவிக்கிறது.

இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத்தோன்றும்.

பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும்

அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய –

ஜீவாத்மஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும்.

காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி,

கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம்,

கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர்.

இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம்.

பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும்

அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம்.

ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை

இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி.

ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய்,

முறையே பரம்பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும்,

புறச்சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரியகோயிலில் மதிள்கட்டுதல்,

எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத்தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது.

இத்தகைய மென்மைத்தன்மையை

‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று

தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம்.

‘ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில்,

சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட

கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை

ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம்.

தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு

தமக்குக் கண் போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான்

எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே.

முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது.

இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாகிகமங்களம் செய்யப்படுகிறது.

வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின்கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் –

மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிகமங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத்தக்கது.

இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத்தொடங்குகிறார் மாமுனிகள் என்க. (2)

———————

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாத குருகேஸ முகாத்ய பும்ஸாம் பாதாநுசிந்தந பரஸ் ஸததம் பவேயம் || 3

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

மநஸா – மனத்தினாலும்,

வாசா – நாவினாலும்,

வபுஷா  – தேஹத்தினாலும்,

யுஷ்மத் – தேவரீருடைய,

பாதாரவிந்தயுகளம் – தாமரைமலர் போன்ற திருவடிகளின் இரட்டையை,

பஜதாம் – ஸேவித்துக் கொண்டிருக்கிற,

குரூணாம் – ஆசார்யர்களாகிய,

கூராதி நாத குரு கேஸ முக ஆத்ய பும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய்,

ஸததம் பாத அநுசிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக,

பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

கருத்துரை:-

மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு,

அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார்.

கூராதிநாதர்-கூரத்தாழ்வான்.

குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க.

குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை இந்த குருஸப்தம் குறிக்கும்.

மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-

குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும்.

இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும்.

பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால்

பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய், பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும்

அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும்.

அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும்.

பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால்

கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று,

யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும். (3)

———————

நித்யம் யதீந்த்ரதவ திவ்ய வபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்ய கரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச ||

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே,

மே – அடியேனுடைய,

மந: – மனமானது,

தவ – தேவரீருடைய,

திவ்யவபுஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில்,

நித்யம் – எப்போதும்,

ஸக்தம் – பற்றுடையதாக,

பவது – இருந்திடுக.

அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது,

தவ – தேவரீருடைய,

குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில்,

ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும்,

தவ – தேவரீருக்கு,

தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே,

க்ருத்யம் – கடமையாக,

அஸ்து – இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கரண  த்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும்,

வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில்,

விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

கருத்துரை:-

கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர்,

அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘

க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம்,

மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு,

அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது.

இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும்,

நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று.

பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள்.

க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி.

முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)

——————–

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ர நாத |
ஸிஷ்டாக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

பதவுரை:-

நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய,

யதீந்த்ர – யதிராஜரே,

அத்ர – இருள்தருமாஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில்,

அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில்,

மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு,

அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்திபெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள,

பதத்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய

அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய ஸரணத்வம், அநந்ய போக்யத்வம்

(எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,

எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.)

என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை,

விதர – தந்தருளவேணும்.

ஸிஷ்ட அக்ர கண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில்

திரிபுணர்ச்சியில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று

நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய

கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க

தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை,

நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,

அஸ்ய மம புத்தி: – மிகத்தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது,

ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக,

அஸ்து – ஆயிடுக.

கருத்துரை:-

இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும்,

‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன.

‘ஸ்ரீமந்யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும்

யதீந்த்ர தாஸகைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உபஸம்ஹாரமாக அமைந்துள்ளது.

‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோவென்னில்

முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது –

ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை

ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும்.

நடுவெல்லையோவெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,

பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத்தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே.

முதல் பர்வம் எம்பெருமான், மத்யமபர்வம் – பாகவதர்கள், சரமபர்வம் – ஆசார்யன்.

ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும்

நேரான பதப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து,

பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து,

அதற்குப் பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே

தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன.

ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம்பர்வம் பகவான், மத்யமபர்வம் – பாகவதர், சரமபர்வம் – ஆசார்யன்.

ஆக இந்த ஸ்லோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து,

யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப்பொருள்களின் முடிவெல்லையை

(உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை,

தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி

க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று.

மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால்

அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார்.

திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது.

இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான

ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான

தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக்

கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (5)

————–

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி: ஸப்தாதி போக ருசிரந்வஹமேத தேஹா |
மத் பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைக ஸிந்தோ || (6)

பதவுரை:-

தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே,

ஆர்ய – ஆசார்யரே,

யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே,

மே – அடியேனுக்கு,

பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் ஆசையானது,

அல்பா அபி – சிறிது கூட,

 (அஸ்தி) – இல்லை,

ஸப்த ஆதி போக ருசி: – ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது,

அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும்,

ஏததே – வளர்ந்து வருகிறது,

ஹா – கஷ்டம்,

அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு,

நிதாநம் – மூலகாரணம்,

மத்பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும்.

அந்யத் ந – வேறொன்றுமன்று,

தத் – அந்த பாபத்தை,

வாரய – போக்கியருளவேணும்.

கருத்துரை:-

‘நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில்,

அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்.

வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால்,

இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ?

இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால்.

தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால்,

தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை.

அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல்போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால்,

எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும்,

எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது.

ஆர்ய ஸப்தம்

(1) ஆசார்யஸப்தத்தோடு ஒரே பொருளையுடையதாய்க் கொண்டு அறியாத தத்வஹிதபுருஷார்த்தங்களை

அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது.

(2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும்,

கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரம வைதிகர் என்பதைக் காட்டுகிறது.

ஆராத் = அண்மையும் சேய்மையும்.

(3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு,

எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது.

வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே –

தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும்,

குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டு பண்ணும்

எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும்.

‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் –

பக்திமான்களைப் பகைப்பதனால் அப்பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை

எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு.

அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது.

‘அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத்தன்மையினாலோ,

அடியேனையிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும்

தக்க பொருளில் ஆசையில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்;

பின்னையோவென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

——————–

வ்ருத்த்யா பஷுர் நரவபுஸ்த்வஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோSத்ர யதீந்த்ர! வர்த்தே || (7)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

வஞ்சநபர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான,

அஹம் – அடியேன்,

நரவபு: – மனிதவுடல் கொண்ட,

பஷு:து – விலங்காகவே (விலங்கென்றே)

வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே,

(ஜ்ஞாயே – அறியப்படுகிறேன்.)

(உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக்கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே

அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.)

ஈத்ருஸஅபி – இப்படிப்பட்டவனாக இருந்த போதிலும்,

ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்மகுண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்மகுணங்களுக்கும் இருப்பிடமானவன்,

அயம் – இந்த மணவாளமாமுனிவன்’

இதி – என்றிவ்வாறாக,

க்ருதிநஅபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட,

ஆதரேண – மனமார்ந்த அன்போடு,

மித: – தங்களில் ஒருவர்க்கொருவர்,

ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்லவேண்டிய நல்வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்கபடியாக,

அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும்,

அத்ய – இப்போது,

வர்த்தே – இருக்கிறேன்.

தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கி யருள வேணும்.

கருத்துரை:-

அஹிம்ஸை மெய்பேசுதல் கொடுமையில்லாமை தூய்மை பொறியடக்கம் கொடைத்தன்மை மனவடக்கம்

பொறுமை அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும்.

‘இவன் ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால்

மற்றும் சிலரும் ஆத்மகுணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத்தோன்றக் கூடுமென்று நினைத்து

அப்படிச்சொல்லாமல், ‘ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால்,

‘அத் தகையவன் இம்மணவாளமாமுனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப்பற்றி மகிழ்ந்து பேசுமளவிற்குத்

தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க.

அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத

நாத யாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின மிகப் புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே,

இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.

—————

து:காவஹோSஹமநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:|| (8)

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய்,

ஸப்தாதி போகநிரத: – ஸப்தாதி நீசவிஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய்,

துஷ்டசேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கியகெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (

அதனால்) தவ – தேவரீருக்கு,

து: ஆவஹ: – துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற,

அஹம் – அடியேன்,

த்வத் பாத பக்தஇவ – தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட ப்ரபந்நன்போல்,

சிஷ்டஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில்,

மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன்,

தத: – அக்காரணத்தினால்,

மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன்,

தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:-

அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தையுண்டாக்குமாகையால்

அவ்வூற்றத்தை நஸிப்பித்தருளவேணுமென்று வேண்டுகிறாரிதனால்.

யதிராஜர் – மனத்தையடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மனவடக்கத்தாலே

மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி.

ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனேயொழிய,

ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி.

ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல்,

தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல்,

தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல்,

வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய

ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம்.

து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதிபோக நிரதனாய் துஷ்டசேஷ்டனாயிருப்பது –

‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி.

அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர்படைத்திருப்பதினால் இவனைக்காக்கவேணுமோ,

துஷ்டசேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிடவேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்மசங்கடமாகிய

துக்கத்தையுண்டாக்குமென்றும் சொல்லலாம்.

மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான்பிடித்தது விடாமலிருக்குமவன்.

இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

——————

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சிதஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|| (9)

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

அஹம் – அடியேன்,

குரும் – அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும் ஆசார்யனையும்,

மந்த்ரம் – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும்,

தத் தேவதாம் அபி – அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனையும்,

நித்யம் து – எப்போதுமே,

பரிபவாமி – அவமதிக்கிறேன்.

கிஞ்சித் அபி – சிறிதும்,

 பிபேமி – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை.

அஹோ – இது என்ன ஆஸ்சர்யம்.

இத்தம் – இவ்விதமாக,

ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்து வைத்தும்,

அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும்,

பவதீயஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில்,

ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தவனாய்க் கொண்டு,

சராமி – ஸஞ்சரிக்கிறேன்.

தத: – அதனால்

அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன்.

தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத் தனத்தைப் போக்கி யருள வேணும்.

கருத்துரை:-

கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில்

ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர்மாறாக குரு மந்த்ர தேவதைகளை

வாயார வைது பரிபவித்தலாகிற கெட்டகாரியங்களில் வாக்கு ஊன்றியிருப்பதையறிந்து,

இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத் தனத்தையும்

போக்கியருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விடவேண்டியவற்றை விடாமலிருத்தல்,

பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ

தநலாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதியற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம்.

மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப்பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம்.

மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந்நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் தரப்பட்ட

மனமொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும்.

இவற்றின் விரிவு ஸ்ரீவசநபூஷணாதிகளில்  காண்க.

அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும்

தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.

———————

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)

பதவுரை:-

யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ய: அஹம் – எத்தகைய அடியேன்,

மநஸா வாசா க்ரியயா ச – மனமொழி மெய்களால்,

த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும்,

ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ,

ஸ:அஹம் – அத்தகைய அடியேன்,

தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு,

அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க்கொண்டு,

ப்ரியக்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே,

காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன்.

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ

தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன்,

தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:-

மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார்.

‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால்,

வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும்

மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும்,

ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும்,

ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும்,

பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும்

ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.

பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும்,

ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும்,

அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம்.

பாகவதாபசாரமாவது – தனது தநலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும்

ஸ்ரீவைஷ்ணவர்க்குப் பண்ணும் விரோதம் ஆகும்.

அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும்,

ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும்.

இதன் விரிவு ஸ்ரீவசநபூஷணத்தில் காணத்தக்கது.

மூன்றபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று

மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க.

ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப்பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது.

தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில்

‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட

மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப் பற்றிக்

குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.

————–

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)

பதவுரை:-

யே யதிராஜ – வாரீர் யதிராஜரே ,

பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப்போது,

மம – அடியேனுக்கு,

பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும்,

பவந்தி யதி – உண்டாகுமேயானால்,

அஸ்ய புந: கரணம் – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது,

கதம் கடேத – எப்படிப்பொருந்தும் ?

இஹ – இப்பாவம் செய்யும் விஷயத்தில்,

பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட,

மோஹேந – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே,

மே – அடியேனுக்கு,

ந பவதி – உண்டாகிறதில்லை.

தஸ்மாத் – அதனால்,

அகம் – பாவத்தை,

புந: புந: – மறுபடியும் மறுபடியும்,

குர்வே – செய்துவருகிறேன்.

கருத்துரை:-

ஐயா, ஸரணாகதனென்னும் பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்தபிறகு பயமும் வெட்கமும் உண்டானால்

பாபத்தை மேலும் செய்யமாட்டீர். பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம்

என்று ஊஹித்து அருளிச்செய்கிறார்.

அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை.

அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்யவழியில்லை.

அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற

மோஹத்தை – ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை

நீக்கி யருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும்.

அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கியருளவேணும்) என்பதை இங்கும் வருவித்துக் கொள்ள வேணும்.

——————–

அந்தர்பஹிஸ் ஸகல வஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ் ஸ்திதமிவாஹம வீக்ஷமாந: |
கந்தர் பவஷ்ய ஹ்ருதயஸ் ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரக மநஸ்ய யதீந்த்ர! நார்ஹ: || (12)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

அஹம் – அடியேன்,

ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும்,

அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து,

ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை,

புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை,

அந்த: இவ – குருடன் போல்,

அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு,

(அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தையுடையவனாக,

ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன்.

(ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு

(அஹம்) ந அர்ஹ: – அடியேன் தகுந்தவனாக இல்லை,

ஹந்த – ஐயோ கஷ்டம்.

கருத்துரை:-

‘ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று

யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி

தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார்.

‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய்,

உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய்

தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி.

யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய

எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை

இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும்.

காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி,

அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும்

இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால்

அப்படிவந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-12-

—————-

தாபத்ரயீ ஜநிதது:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் || (13)

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே,

தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூவகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டேயிருந்த போதிலும்,

மம து – மிக நீசனான அடியேனுக்கோவென்றால் ,

தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒருபடிப்பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில்,

ருசி: – ஆசையானது,

பவதி – உண்டாகிறது,

தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில்,

ந ருசி: – வெறுப்பு,

பவதி – உண்டாகிறது.

ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு,

காரணம் – காரணமானது,

மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும்.

நாத – ஸ்வாமீ!,

த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே,

தத் – அப்பாவத்தை,

ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே,

ஹர – போக்கியருளவேணும்.

கருத்துரை:-

‘ஐயா, நீர் இதுவரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம்,

நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையேயாகும்.

அவ்வாசையை அவ்வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை,

நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து

அவ்வுடலை நீரே விட்டுவிடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார் இதனால்.

தாபத்ரயீ – மூன்று வகையான துக்ககாரணங்கள்,

(1) ஆத்யாத்மிகம் – உடலைப்பற்றிவருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன,

(2) ஆதிபௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன.

(3) ஆதிதைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை முதலியன.

இவற்றை வேறுவகையாகவும் கூறுவதுண்டு.

உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை

வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற

நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும்

‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க.

‘தந்நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் ந என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து

ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது.

ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும்

உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை

அடுத்த க்ஷணத்திலேயே போக்கியருளவேணும்மென்றார் இதனால்.

இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம்,

இவர் இன்னும் சிலநாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு

உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.-13-

—————-

வாசா மகோசர மஹா குண தேஸிகாக்ர்ய கூராதி நாதகதிதாகில நைச்ய பாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர் ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே || (14)

பதவுரை:-

ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே,

வாசாம்  அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும்,

ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய,

தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால்,

கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட,

அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன்,

ஏஷஅஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன்,

ஈத்ருஸபுந: – இத்தகைய மற்றொருவனோவென்னில்,

ஜகதி – உலகில்,

 (அஸ்தி) – இல்லவேயில்லை.

தத் – அக்காரணத்தினால்,

தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய,

கருணா ஏவ – கருணையே,

மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக,

பவதி – ஆகிறது.

கருத்துரை:-

இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து,

பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும்

தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார்.

கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது –

‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க.

எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் –

தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார்.

தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி.

‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும்,

வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது.

கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன்,

நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான்

பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன்.

என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று

தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.

—————–

சுத்தாத்மயாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேசிகவரோக்த ஸமஸ்த நைச்யம் |
அத்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத் யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில்,

அத்ய – கலிபுருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில்,

ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான

ஆத்மஸ்வரூபத்தையுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன,

ஆத்மகுணங்கள் நிறைந்தவர்களில் மிகமிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன,

பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸரபட்டரென்ன இவர்களால்,

உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லாவகையான நீசதர்மங்களும் (குற்றங்களும்),

மயி ஏவ – அடியேனிடத்திலேயே,

அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன)

தஸ்மாத் – ஆகையால்,

தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்திபெற்ற தேவரீரது கருணையானது,

மத் கதிஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.

(மிகப்பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப்பெருத்த பாபம் செய்த அடியேனொருவனேயன்றி,

குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லையென்றபடி.)

கருத்துரை:-

ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸரபட்டர் ஆகிய இம்மூவரும் ஸுத்தாத்மாக்கள்.

ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக்கொண்ட குற்றங்களில்

ஒன்றுகூடத் தம்மிடமில்லாமையே ஆகும்.

பட்டர் – பராஸரபட்டர், கூரத்தாழ்வானுடைய பெரியதிருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற்பெயர்.

அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரியபெருமாள் ‘பராஸரபட்டர்’ என்று பலதடவைகள் அருள்பாடிட்டதனால்

அவருக்கு பராஸரபட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது.

அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணுபுராணத்தில் பராஸரமுனிவர் போல்,

‘பரம்பொருள் திருமாலே’ என்று அறுதியிட்டுப் ப்ரசாரம் செய்ததேயாகும்.

‘ஸமஸ்தநைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமேயல்லாமல்,

‘ஸமஸ்தநைச்யம் மயி அஸங்குசிதமேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம்.

எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது.

அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே.

ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக்கொண்டு

‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம்

அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன.

ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம்.

‘தே கருணா து மத்கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியேயன்றி ,

‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல் தகும்.

ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு

அவற்றில் கூறப்பட்ட கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம்.

நல்ல தகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப் பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே

கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.

ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன்,

ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந்நன்றிகொன்றவன்,

துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம்

தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.

கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து

இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்கமுடியாத

பெரிய அஜ்ஞாநக்கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன்.

இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை.

அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதிவார்த்தையின் பொருளிலும்

அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக்கொண்ட குற்றங்களாகும்.

ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட

ஜ்ஞானயோக கர்மயோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை.

வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன்.

மூர்க்கத்தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று

வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும்

‘யாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.

—————–

ஸப்தாதி போகவிஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! |
த்வத்தாஸதாஸகணநாசரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே,

அஸ்மதீயா – அடியேனுடையதான,

ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய

ருசி: – ஆசையானது,

பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால்,

நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக,

(மேலும்) : – எந்த பாக்யஸாலியானவன்,

த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய,

தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது,

சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில்,

பவதி – இருக்கிறானோ,

தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில்,

ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது,

அவிரதா – நித்யமாக ,

பவத்தயயா – தேவரீருடைய தயையினால்,

மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.

கருத்துரை:-

இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது.

இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருளவேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால்.

இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும்,

யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ

அவருக்குத் தொண்டு செய்யவேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய

இவ்விரண்டு பலன்களையும் முறையே இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக்கொண்டாராயிற்று.

எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால்

அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது.

எம்பெருமானாருடைய க்ருபையோவெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரையேற்றும்.

அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும்.

எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர்நம்பிகள்

தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது.

இவ்விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத்தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது.

பகவானுடைய தயை அடியேனிடம் வேலைசெய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.

——–

ஸ்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச் சக்த: ஸ்வகீய ஜந பாப விமோசநே த்வம் || (17)

பதவுரை:-

யே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய,

நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன,

எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும்

தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய்,

இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில்,

ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த,

ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன்,

தே – தேவரீருக்கு,

ஸதா – எப்போதும்,

வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய்,

பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.

(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.)

தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால்,

ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின்,

ஜந – தாஸஜநங்களினுடைய,

பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில்,

த்வம் – தேவரீர்,

ஸக்தபவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:-

ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலே

யிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய

தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அ

தற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு,

இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார்.

அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின்

வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார்.

பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்திநாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே

இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார்.

இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்)

இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார்.

அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி

நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான்.

அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து

ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும்.

இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து

அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு

ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது –

புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் –

என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார்.

பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால்

பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.

—————

கால த்ரயேSபி கரண த்ரய நிர்மிதாதி பாப க்ரியஸ்ய ஸரணம் பகவத் க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணேSர்த்திதாயத் க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் || (18)

பதவுரை:-

யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

காலத்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும்,

கரணத்ரயநிர்மித – மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட,

அதிபாபக்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு)

மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு,

ஸரணம் – பாவங்களைப்போக்கும் உபாயமானது,

பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும்.

அந்தப் பொறுமையோ எனில்,

த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே,

கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை

வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில்

அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ,

 ஏவ – அந்த ப்ரார்த்தனையே,

பவச்ச்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு,

க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?

கருத்துரை:-

கீழ் ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார்.

இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்கவேண்டாம்.

முன்பே கத்யம் விண்ணப்பிக்கும்போது ‘மநோவாக்காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே,

‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’

(முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான

எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று.

அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய்விட்டதே.

அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.

(முன்பு எடுத்த கத்யவாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி

ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும்,

‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று

தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற

ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே

எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும்,

உண்மையில் – பிறர்துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும்

அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள்

நடக்கவைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரமஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல்

தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும்

யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக

ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’

(தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று

மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல்தகும்.

இக்கத்யவாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும்

பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)

————–

ஸ்ரீமந் யதீந்த்ர! தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம் ஸ்ரீஸைல நாத கருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தய நாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (19)

பதவுரை:-

ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற

என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே,

த்வம் – தேவரீர்,

மே – அடியேனுக்கு,

ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும்

திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட,

தாம் – மிகச்சிறந்த,

தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை,

அந்வஹம் – நாடோறும்,

விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும்,

(அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி

அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி)

நாத – ஸ்வாமியான யதிராஜரே,

தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு,

விருத்தம் – தடையாகிய,

அகிலம் – எல்லாவற்றையும்,

காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.

கருத்துரை:-

கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும்,

‘நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய –

முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும்

யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்து முடிக்கிறார்.

‘ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் ,

‘விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி.

இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும்,

அக்கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று.

திருவாய்மொழிப்பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமேயாகும்.

யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹலோக பரலோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும்,

யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத்கைங்கர்யமும் முதலியனவாகும்.

—————–

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம் அங்கீ குருஷ்வ யதிராஜ! தயாம்பு ராஸே |
அஜ்ஞோSயமாத்ம குண லேஸ விவர்ஜிதஸ்ச தஸ்மாதநந்ய ஸரணோ பவதீதி மத்வா || (20)

பதவுரை:-

தயா அம்புராஸே – பிறர்துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல்போன்ற,

யதிராஜ – யதிராஜரே,

அத்ய – இப்போது,

மாமகீநம் – அடியேனுடையதான,

யத் விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ,

இதம் – இந்த விண்ணப்பத்தை,

அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன்,

ஆத்மகுணலேஸ விவர்ஜிதஸ்  – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன்,

தஸ்மாத் – ஆகையால்,

அநந்ய ஸரணபவதி – நம்மைத்தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான்,

இதி மத்வா – என்று நினைத்தருளி,

அங்கீகுருஷ்வ – ஏற்றுக்கொண்டருளவேணும்.

இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தையேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள

யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.

இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை

ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது.

‘தயைகஸிந்தோ’ (6), ‘

ராமாநுஜார்ய கருணைவ து’ (14),

‘யதீந்த்ர கருணைவ து’ (15),

‘பவத்தயயா’ (16),

‘கருணாபரிணாம’ (19),

‘தயாம்புராஸே’ (20) என்று

தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால்,

ராமாநுஜர் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள

தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.

இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள

‘ஸ்ரீமாதவாங்க்ரிஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸபாதபக்தம்’ என்பதனால்,

இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள

‘பூமன்னுமாதுபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னுமாறனடிபணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற

பகுதி நினைவு படுத்தப் பெற்றதும்,

இங்கு இக்கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள

‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜமுனிவரே! தேவரீர் திருவடித்தாமரைகளில்

அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருளவேணும்) என்பதனால்,

இராமாநுசநூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள

‘இராமாநுச! உன்தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்து’ என்ற

பகுதி நினைவுபடுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப்போலே

இந்த யதிராஜவிம்ஸதியையும் நாம் சொல்லக்கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.

——————

இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் |
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||-ஸ்ரீ வர வர முனி உத்தர தினசர்யா–ஸ்லோகம் 1-

பதவுரை:

இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே,

ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற,

ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான,

உதிதை: – பேச்சுக்களாலே,

யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை,

ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற,

வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே,

சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற,

இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது,

நிரத்யயம் – நித்யமான,

ப்ரஸாதம் – தெளிவை,

ஏதி – அடைகிறது.

கருத்துரை:

இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த

தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற

மணவாளமாமுனிகளொருவரையே நினைத்துக்கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து,

முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா.

‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதிநூலால் மகிழ்விக்கும்

மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று.

பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட,

ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி.

இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச்சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று

மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது

எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ளவேணும்.

தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும்

ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார்.

கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹாபுருஷர்கள்.

‘ப்ரஹர்ஷயந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக் குறிக்கும், ‘

ப்ர’ என்று உபஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும்

ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதேயன்றி அந்த ஸந்தோஷத்தைக்கொண்டு

மாமுனிகள் வேறொருபயனை ஸாதித்துக்கொள்ள நினைக்கவில்லையென்பதை அறிவிப்பதற்காகவே என்க.

வரவரமுநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான

ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக் காட்டிலும்

எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம்மணவாளமாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும்.

எம்பெருமானை நினைப்பவரைவிட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர்.

இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது.

ஸ்ருதிமதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம்.

ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும்.

இந்த யதிராஜவிம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும்

தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாபகாரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி,

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும்,

ஆத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டுபண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும்,

‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும்  ஏற்குமென்க.

மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி

மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க.

(யதிராஜவிம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்திப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஶ்ரீ யதிராஜ விம்ஶதி: ॥பதவுரை – ஶ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் — கருத்துரை – புத்தூர் ஶ்ரீ.உ.வே.ரகுராமன் ஸ்வாமிகள் —

January 14, 2022

॥ ஶ்ரீ யதிராஜ விம்ஶதி: ॥

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி³நீம் வ்யாஜஹார யதிராஜ விம்ஶதிம் ।
தம் ப்ரபந்ந ஜந சாதகாம்பு³த³ம் நௌமி ஸௌம்ய வர யோகி³ புங்க³வம் ॥

ஶ்ரீ மாத⁴வாங்க்⁴ரி ஜலஜ த்³வய நித்யஸேவா-
ப்ரேமாவிலாஶயபராங்குஶபாத³ப⁴க்தம் ।
காமாதி³தோ³ஷஹரமாத்மபதா³ஶ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்⁴நா ॥ 1॥

ஶ்ரீரங்க³ராஜசரணாம்பு³ஜராஜஹம்ஸம்
ஶ்ரீமத்பராங்குஶபாதா³ம்பு³ஜப்⁴ருʼங்க³ராஜம் ।
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுகா²ப்³ஜமித்ரம்
ஶ்ரீவத்ஸசிஹ்நஶரணம் யதிராஜமீடே³ ॥ 2॥

வாசா யதீந்த்³ர மநஸா வபுஷா ச யுஷ்மத்-
பாதா³ரவிந்த³யுக³ளம் ப⁴ஜதாம் கு³ரூணாம் ।
கூராதி⁴நாத² குருகேஶமுகா²த்³ய பும்ஸாம்
பாதா³நுசிந்தநபர: ஸததம் ப⁴வேயம் ॥ 3॥

நித்யம் யதீந்த்³ர தவ தி³வ்யவபு:ஸ்ம்ருʼதௌ மே
ஸக்தம் மநோ ப⁴வதுவாக்³கு³ணகீர்தநேऽஸௌ ।
க்ருʼத்யஞ்ச தா³ஸ்யகரணம் து கரத்³வயஸ்ய
வ்ருʼத்த்யந்தரேঽஸ்து விமுக²ம் கரணத்ரயஞ்ச ॥ 4॥

அஷ்டாக்ஷராக்²யமநுராஜபத³த்ரயார்த²-
நிஷ்டா²ம் மமாத்ர விதராத்³ய யதீந்த்³ரநாத² ।
ஶிஷ்டாக்³ரக³ண்யஜநஸேவ்யப⁴வத்பதா³ப்³ஜே
ஹ்ருʼஷ்டாঽஸ்து நித்யமநுபூ⁴ய மமாஸ்ய பு³த்³தி:⁴ ॥ 5॥

அல்பாঽபி மே ந ப⁴வதீ³யபதா³ப்³ஜப⁴க்தி:
ஶப்³தா³தி³போ⁴க³ருசிரந்வஹமேத⁴தேஹா ।
மத்பாபமேவ ஹி நிதா³நமமுஷ்ய நாந்யத்-
தத்³வாரயார்ய யதிராஜ த³யைகஸிந்தோ⁴ ॥ 6॥

வ்ருʼத்த்யா பஶுர்நரவபுஸ்த்வஹமீத்³ருஶோঽபி
ஶ்ருʼத்யாதி³ஸித்³த⁴நிகி²லமாத்மகு³ணாஶ்ரயோঽயம் ।
இத்யாத³ரேண க்ருʼதிநோঽபி மித:² ப்ரவக்தும்-
அத்³யாபி வஞ்சநபரோঽத்ர யதீந்த்³ர வர்தே ॥ 7॥

து:³கா²வஹோঽஹமநிஶம் தவ து³ஷ்டசேஷ்ட:
ஶப்³தா³தி³போ⁴க³நிரதஶ்ஶரணாக³தாக்²ய: ।
த்வத்பாத³ப⁴க்த இவ ஶிஷ்டஜநௌக⁴மத்⁴யே
மித்²யா சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்க:² ॥ 8॥

நித்யம் த்வஹம் பரிப⁴வாமி கு³ரும் ச மந்த்ரம்
தத்³தே³வதாமபி ந கிஞ்சித³ஹோ பி³பே⁴மி ।
இத்த²ம் ஶடோ²ঽப்யஶட²வத்³ப⁴வதீ³ய ஸங்கே⁴
ஹ்ருʼஷ்டஶ்சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்க:² ॥ 9॥

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோঽஹஞ்சராமி ஸததம் த்ரிவிதா⁴பசாராந் ।
ஸோঽஹம் தவாঽப்ரியகர: ப்ரியக்ருʼத்³வதே³வம்
காலம் நயாமி யதிராஜ ததோঽஸ்மி மூர்க:² ॥ 10॥

பாபே க்ருʼதே யதி³ ப⁴வந்தி ப⁴யாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கத²ம் க⁴டேத ।
மோஹேந மே ந ப⁴வதீஹ ப⁴யாதி³லேஶ-
ஸ்தஸ்மாத்புந: புநரக⁴ம் யதிராஜ குர்வே ॥ 11॥

அந்தர்ப³ஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஶம்-
அந்த:⁴ புரஸ்ஸ்தி²தமிவாஹமவீக்ஷமாண: ।
கந்த³ர்பவஶ்யஹ்ருʼத³யஸ்ஸததம் ப⁴வாமி
ஹந்த த்வத³க்³ரக³மநஸ்ய யதீந்த்³ர நார்ஹ: ॥ 12॥

தாபத்ரயீஜநிதது:³க²நிபாதிநோঽபி
தே³ஹஸ்தி²தௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருʼத்தௌ ।
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத² த்வமேவ ஹர தத்³யதிராஜ ஶீக்⁴ரம் ॥ 13॥

வாசாமகோ³சர மஹாகு³ண தே³ஶிகாக்³ர்ய
கூராதி⁴நாத² கதி²தாঽகி²லநைச்யபாத்ரம் ।
ஏஷோঽஹமேவ ந புநர்ஜக³தீத்³ருʼஶஸ்தத்³-
ராமாநுஜார்ய கருணைவ து மத்³க³திஸ்தே ॥ 14॥

ஶுத்³தா⁴த்மயாமுநகு³ரூத்தம கூரநாத²
ப⁴ட்டாக்²யதே³ஶிகவரோக்தஸமஸ்தநைச்யம் ।
அத்³யாঽஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாத்³யதீந்த்³ர கருணைவ து மத்³க³திஸ்தே ॥ 15॥

ஶப்³தா³தி³போ⁴க³விஷயா ருசிரஸ்மதீ³யா
நஷ்டா ப⁴வத்விஹ ப⁴வத்³த³யயா யதீந்த்³ர ।
த்வத்³தா³ஸதா³ஸக³ணநாசரமாவதௌ⁴ ய-
ஸ்தத்³தா³ஸதைகரஸதாঽவிரதா மமாஸ்து ॥ 16॥

ஶ்ருத்யக்³ரவேத்³யநிஜதி³வ்யகு³ணஸ்வரூப:
ப்ரத்யக்ஷதாமுபக³தஸ்த்விஹ ரங்க³ராஜ: ।
வஶ்யஸ்ஸதா³ ப⁴வதி தே யதிராஜ தஸ்மாத்-
ச²க்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் ॥ 17॥

காலத்ரயேঽபி கரணத்ரயநிரமிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ப⁴க³வத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேঽர்தி²தா யத்-
க்ஷேம: ஸ ஏவ ஹி யதீந்த்³ர ப⁴வத்ச்²ரிதாநாம் ॥ 18॥

ஶ்ரீமந் யதீந்த்³ர தவதி³வ்யபதா³ப்³ஜஸேவாம்
ஶ்ரீஶைலநாத²கருணாபரிணாமத³த்தாம் ।
தாமந்வஹம் மம விவர்த⁴ய நாத² தஸ்யா:
காமம் விருத்³த⁴மகி²லம் ச நிவர்தயத்வம் ॥ 19॥

விஜ்ஞாபநம் யதி³த³மத்³ய து மாமகீநம்-
அங்கீ³குருஷ்வ யதிராஜ த³யாம்பு³ராஶே ।
அஜ்ஞோঽயமாத்மகு³ணலேஶவிவர்ஜிதஶ்ச
தஸ்மாத³நந்யஶரணோ ப⁴வதீதி மத்வா ॥ 20॥

இதி யதிகுலது⁴ர்யமேத⁴மாநை: ஶ்ருதிமது⁴ரைருதி³தை ப்ரஹர்ஷயந்தம் ।
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாத³ம் ॥ 21॥

இதி ஶ்ரீயதிராஜவிம்ஶதி: ஸம்பூர்ணம் ।

———————

யঃ ஸ்துதிம் யதிபதிப்ரஸாদிநீம் வ்யாஜஹார யதிராஜவிம்ஶதிம் ।
தம் ப்ரபந்நஜநசாதகாம்বுদம் நௌமி ஸௌம்யவரயோগிபுங்গவம் ॥

ய: – யாவரொரு மணவாள மா முனிகள்,
யதிபதி ப்ரஸாதி³நீம் – எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை உகப்பிக்குமதான,
யதிராஜ விம்ஶதிம் ஸ்துதிம் – யதிராஜ விம்ஶதி யென்கிற தோத்திரத்தை,
வ்யாஜஹார – அருளிச் செய்தாரோ,
ப்ரபந்நஜந சாதக அம்பு³த³ம் –ப்ரபந்நர்களாகிற சாதக பக்ஷிகளுக்குக் கார்முகில் போன்றவரான,
தம் ஸௌம்ய வர யோகி³ புங்க³வம் – அந்த மணவாளமாமுனிகளை,
நௌமி – துதிக்கிறேன்.

————–

ஶ்ரீமாধவாங்ঘ்ரிஜலஜ দ்வயநித்யஸேவா-
ப்ரேமாவிலாஶயபராங்குஶபாদভக்தம் ।
காமாদி◌ேদাஷஹரமாத்மபদாஶ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்ধ்நா ॥ 1॥

ஶ்ரீமாத⁴வ அங்க்⁴ரி ஜலஜத்³வய நித்யஸேவா ப்ரேம ஆவில ஆஶய பராங்குஶ பாத³ ப⁴க்தம் – அழகு பொலிந்த எம்பெருமானது
திருவடித்தாமரையிணைகளை நிச்சலும் தொழுகையினாலுண்டான ப்ரேமத்தினால் கலங்கின திருவுள்ளமுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளிலே அன்பு பூண்டவரும்,
ஆத்ம பத³ ஆஶ்ரிதாநாம் – தமது திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு,
காமாதி³ தோ³ஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிப்பவரும்,
யதிபதிம் – யதிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – எம்பெருமானாரை,
மூர்த்⁴நா ப்ரணமாமி – தலையால் வணங்குகின்றேன்.

இதில் முதல் ஶ்லோகத்தால், தொடங்கிய ஸ்தோத்ரம் நன்கு நிறைவேறும் பொருட்டு
ஆசார்யாபிவாதநரூபமான மங்களம் செய்யப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞாநபூர்த்தியும்,
இரண்டாவது ஶ்லோகத்தில் அவருடைய அநுஷ்டாநபூர்த்தியும் பேசப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் திருவின் மணாளனான எம்பெருமனுடைய திருவடித்தாமரை யிணையில் செய்யத்தக்க
நித்யகைங்கர்யத்தில் உள்ள ப்ரேமத்தினாலே கலங்கின திருவுள்ளத்தையுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளில் மிகுந்த பக்தியை யுடையவரும்,
தமது திருவடிகளை அடைந்தவர்களுடைய காமம் முதளான தோஷங்களைப் போக்கடிப்பவரும்,
யதிகளின் தலைவருமான எம்பெருமானாரைத் தலையால் வணங்குகிறேன் என்கிறார்.

——

ஶ்ரீரங்গராஜ சரணாம்বுஜ ராஜஹம்ஸம்
ஶ்ரீமத்பராங்குஶ பாদாம்বுஜ ভৃங்গராஜம் ।
ஶ்ரீভட்டநாথ பரகால முখாব்ஜமித்ரம்
ஶ்ரீவத்ஸசிஹ்ந ஶரணம் யதிராஜமீ◌ேড ॥ 2॥

ஶ்ரீரங்க³ராஜ சரண அம்பு³ஜ ராஜஹம்ஸம் – ஶ்ரீரங்கநாதனுடைய திருவடியாகிற தாமரையிலே ராஜஹம்ஸம் போன்று ஊன்றியிருப்பவரும்,
ஶ்ரீமத் பராங்குஶ பதா³ம்பு³ஜ ப்⁴ருʼங்க³ராஜம் – நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரைகளிலே வண்டுபோல் அமர்ந்திருப்பவரும்,
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுக² அப்³ஜமித்ரம் – பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற
தாமரைப் பூக்களை விகாஸப் படுத்துவதில் ஸூர்யன் போன்றவரும்,
ஶ்ரீவத்ஸ சிஹ்ந ஶரணம் – கூரத்தாழ்வானுக்குத் தஞ்சமாயிருப்பவரும் (அல்லது) கூரத்தாழ்வானைத் திருவடிகளாக வுடையவருமான,
யதிராஜம் – எம்பெருமானாரை,
ஈடே³ – துதிக்கின்றேன்.

இரண்டாவது ஶ்லோகத்தில் பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகளில் விளையாடும் உயர்ந்த அன்னப் பறவை போன்றவரும்,
நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளில் பொருந்திய வண்டு போன்றவரும்,
பெரியாழ்வார் மற்றும் பரகாலரான திருமங்கையாழ்வார் ஆகியோரின் முகத்தாமரையை மலரச் செய்யும் ஸூர்யன் போன்றவரும்,
ஆழ்வானுக்கு உபாயமாக விருப்பவருமான யதிராஜரைத் தொழுகிறேன் என்கிறார்.

மேலே மூன்று ஶ்லோகங்களாலே ப்ராப்ய ப்ரார்த்தனை செய்கிறார்.

————-

வாசா யதீந்দ்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்-
பாদாரவிந்দயுগலம் ভஜதாம் গுரூணாம் ।
கூராধிநாথ குருகேஶமுখாদ்ய பும்ஸாம்
பாদாநுசிந்தநபரঃ ஸததம் ভவேயம் ॥ 3॥

ஹே யதீந்த்³ர! – எம்பெருமானாரே!,
வாசா மநஸா வபுஷா ச – மநோவாக்காயங்க ளாகிற த்ரிகரணங்களாலும்,
யுஷ்மத் பாதா³ரவிந்த³ யுக³ளம் – தேவரீருடைய திருவடித் தாமரையிணையை,
ப⁴ஜதாம் – ஸேவிப்பவர்களும்,
கு³ரூணாம் – ஆசார்யபீடத்தை யலங்கரிப்பவர்களுமான,
கூராதி⁴நாத² குருகேஶ முக² ஆத்³ய பும்ஸாம் – கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலான தலைவர்களினுடைய,
பாத³ அநுசிந்தந பர: – திருவடிகளையே சிந்திப்பவனாக,
ஸததம் ப⁴வேயம் – எப்போதும் இருக்கக்கடவேன்.

மூன்றாவது ஶ்லோகத்தில் மனம் மொழி மெய் என்கிற மூன்று கரணங்களாலும் உடையவர் திருவடிகளையே
உபாயமாகக் கொண்டிருக்கும் ஆழ்வான், பிள்ளான் முதலான ஆசார்யர்களை இடைவிடாமல் சிந்திக்கக் கடவேன் என்கிறார்.

———–

நித்யம் யதீந்দ்ர! தவ দிவ்ய வபுঃஸ்மৃதௌ மே
ஸக்தம் மநோ ভவதுவாগ்গுணகீர்தநேঽஸௌ ।
கৃத்யஞ்ச দாஸ்யகரணம் து கரদ்வயஸ்ய
வৃத்த்யந்தரேঽஸ்து விமுখம் கரணத்ரயஞ்ச ॥ 4॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
மே மந: – அடியேனுடைய நெஞ்சானது,
நித்யம் – எப்போதும்,
தவ தி³வ்யவபுஸ் ஸ்ம்ருʼதௌ – தேவரீருடைய திவ்யமங்கள விக்ரஹ த்யானத்திலேயே,
ஸக்தம் ப⁴வது – ஆஸக்தமாகக் கடவது;
அஸௌ மே வாக்³ – எனது இந்த வாக்கானது,
தவ கு³ண கீர்தநே ஸக்தா ப⁴வது – தேவரீருடைய திருக்குணங்களைப் பற்றிப் பேசுவதிலேயே ஊன்றியிருக்கக் கடவது;
கரத்³வயஸ்ய – இரண்டு கைகளினுடைய,
க்ருʼத்யம் – செயலானது,
தவ தா³ஸ்ய கரணம் ப⁴வது – தேவரீருக்கு அடிமை செய்வதுதானேயாகக் கடவது; (இவ்வாறாக)
கரணத்ரயம் ச – மநோவாக்காயங்களாகிற மூன்று கரணங்களும்,
வ்ருʼத்த்யந்தரே விமுக²ம் அஸ்து – இதர வியாபாரங்களை அடியோடு நோக்காதிருக்கக் கடவன.

நான்காவது ஶ்லோகத்தில் தம்முடைய கரணங்கள் மூன்றும் எப்போதும் எம்பெருமானாரிடத்திலேயே ஈடுபட்டிருக்கவேண்டும் என்கிறார்.
அடியேனுடைய மநஸ்ஸானது எப்பொழுதும் தேவரீருடைய திவ்யமங்களவிக்ரஹத்தை த்யானிப்பதிலேயே ஊன்றி யிருக்க வேணும்;
வாக்கானது தேவரீரது குணங்களைப் பேசுவதிலேயே ஈடுபட்டிருக்க வேணும்;
கைகளிரண்டின் செயல்பாடானது தேவரீருக்கு அடிமை செய்வதிலேயேயாக வேணும்.
முக்கரணங்களும் மற்றெதிலும் ஈடுபடாதிருக்கக் கடவன.

———-

அஷ்டாக்ஷராখ்ய மநுராஜ பদத்ரயார்থ-
நிஷ்ঠாம் மமாத்ர விதராদ்ய யதீந்দ்ரநாথ ।
ஶிஷ்டாগ்ரগண்ய ஜநஸேவ்ய ভவத்பদாব்ஜே
ஹৃஷ்டாঽஸ்து நித்யமநுভூய மமாஸ்ய বுদ்ধிঃ ॥ 5॥

நாத² யதீந்த்³ர – எமது குலத்தலைவரான எம்பெருமானாரே!,
அஷ்டாக்ஷராக்²ய – திருவஷ்டாக்ஷரமென்கிற,
மநுராஜ – பெரிய திருமந்த்ரத்திலுள்ள,
பத³த்ரய – ப்ரணவ, நம: பத, நாராயண பதங்களில் தேறின,
அர்த² – அநந்யார்ஹ சேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வ மென்கிற அர்த்தங்களில்,
நிஷ்டா²ம் – திடமான வுறுதியை,
மம – அடியேனுக்கு,
அத்ர – இவ்விருள்தரு மா ஞாலத்திலேயே,
அத்³ய – ருசி பிறந்த விப்போதே,
விதர – ப்ரஸாதித்தருளவேணும்.
அஸ்ய மம பு³த்³தி⁴: – நீசனேன் நிறையொன்றுமிலேனான வென்னுடைய புத்தியானது,
ஶிஷ்டாக்³ரக³ண்ய ஜநஸேவ்ய ப⁴வத்பதா³ப்³ஜே – சிஷ்டர்களில் தலைவரான ஆழ்வான் ஆண்டான் போல்வார்
தொழத் தகுந்த தேவரீருடைய திருவடித் தாமரைகளை,
நித்யம் அநுபூ⁴ய – இடைவீடின்றி யநுபவித்து,
ஹ்ருʼஷ்டா அஸ்து – (அவ்வநுபவத்தின் பலனான கைங்கர் யத்தையும் பெற்று) மகிழ்ந்திருக்கக் கடவது.

ஐந்தாவது ஶ்லோகத்திலே திருவஷ்டாக்ஷரம் என்னும் திருமந்த்ரத்தின் மூன்று பதங்களாலும் தேறின
அநந்யார்ஹஶேஷத்வ அநந்யஶரணத்வ அநந்யபோக்யத்வங்க ளாகிற அர்த்தங்களிலே உறுதியும்,
ஶிஷ்டர்களில் தலைவரான ஆழ்வான் போல்வாரால் தொழத்தகுந்த தேவரீருடைய
திருவடிகளில் இடைவிடாத அநுபவத்தையும் தந்தருளவேணும் என்கிறார்.

இதற்கு மேல் ஏழு ஶ்லோகங்களாலே போக்கப்படவேண்டியதான அநிஷ்டத்தைக் கூறுகிறார்.

————

அல்பாঽபி மே ந ভவদீய பদாব்ஜ ভக்திঃ
ஶব்দாদி ◌ேভাগ ருசி ரந்வஹ மேধதே ஹா ।
மத்பாபமேவ ஹி நிদாநமமுஷ்ய நாந்யத்-
தদ் வாரயார்ய யதிராஜ দயைகஸிந்◌ேধা ॥ 6॥

த³யா ஏக ஸிந்தோ⁴ – அருட்கடலான,
யதிராஜ ஆர்ய – ஆசார்யசிகாமணியே!,
மே – அடியேனுக்கு,
ப⁴வதீ³ய பதா³ப்³ஜ ப⁴க்தி: – தேவரீருடைய திருவடித் தாமரைகளிற் பதிந்த பக்தியானது,
அல்ப அபி ந – சிறிதளவுமில்லை; (அஃது இல்லாததும் தவிர),
ஶப்³தா³தி³ போ⁴க³ ருசி: – ஶப்தாதி விஷய போகங்களில் ஊற்றமானது,
அந்வஹம் ஏத⁴தே – நாடோறும் வளர்ந்து செல்லாநின்றது;
ஹா – அந்தோ! (இதற்கென் செய்வேன்!),
அமுஷ்ய நிதா³நம் – இதற்கு அடிக்காரணம்,
மத்பாபம் ஏவ ஹி – என்னுடைய பாபமேயன்றோ;
அந்யத் ந – வேறொரு காரணமுமில்லை;
தத்³ வாரய – அந்த எனது பாபத்தைப் போக்கியருளவேணும்.

ஆறாவது ஶ்லோகத்திலே தாம் ப்ராப்யத்தில் ருசியில்லாதிருக்கிறபடியையும்,
மற்ற விஷயங்களில் ருசியானது மேன்மேலும் வளருகிறபடியையும் கூறி,
இவ்விரண்டிற்கும் காரணமான தனது பாபத்தைப் போக்கியருளவேண்டும் என்கிறார்.

————-

வৃத்த்யா பஶுர் நரவபுஸ் த்வஹமீদ்ருஶோঽபி
ஶৃத்யாদிஸிদ்ধநிখிலமாத்ம গுணாஶ்ரயோঽயம் ।
இத்யாদரேண கৃதிநோঽபி மிথঃ ப்ரவக்தும்-
அদ்யாபி வஞ்சநபரோঽத்ர யதீந்দ்ர வர்தே ॥ 7॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
அஹம் து – அடியேனோவென்றால்,
நரவபு: – மநுஷ்ய சரீரனாயிருந்தேனாகிலும்,
வ்ருʼத்த்யா பஶு: – செய்கையினால் பசுவோடொத்திரா நின்றேன்;
ஈத்³ருஶ: அபி – இப்படிப்பட்டவனாயிருக்கச் செய்தேயும்,
அயம் ஶ்ருʼதி ஆதி³ ஸித்³த⁴ நிகி²ல ஆத்ம கு³ண ஆஶ்ரய: இதி – “இவன் வேதம் முதலியவற்றில் தேறின
ஸகல ஆத்ம குணங்களுக்கும் கொள்கலமானவன்” என்று,
க்ருʼதிந: அபி ஆத³ரேண மித²: ப்ரவக்தும் – அபிஜ்ஞர்களையும் ஆதரவோடு பரஸ்பரம் பேசுவிக்கும்படி,
அத்ர அத்³யாபி – இவ்வுலகில் இன்னமும்,
வஞ்சநபர: வர்த்தே – வஞ்சிக்குமவனாயிரா நின்றேன்.

ஏழாவது ஶ்லோகத்திலே அடியேன் ஶரீரத்தாலே மனிதனாகவிருந்தாலும், செயலாலே விலங்கைப் போன்றவன்.
இப்படியிருக்கச் செய்தேயும், ‘எல்லா ஆத்ம குணங்களுக்கும் கொள்கலமானவன் இவன்’ என்று
பெரியோர்களும் பேசும்படியான வஞ்சகன் என்கிறார்.

——————

দுঃখாவஹோঽஹ மநிஶம் தவ দுஷ்டசேஷ்டঃ
ஶব்দாদி◌ேভাগநிரதஶ் ஶரணாগதாখ்யঃ ।
த்வத்பாদভக்த இவ ஶிஷ்டஜநௌঘமধ்யே
மிথ்யா சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்খঃ ॥ 8॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
து³ஷ்ட சேஷ்ட: அஹம் – கெட்ட நடத்தைகளையுடை யேனான நான்,
ஶப்³தா³தி³ போ⁴க³நிரத: – ஶப்தாதி விஷய ப்ரவணனாய்,
ஶரணாக³த ஆக்²ய: – ப்ரபந்நனென்று பேர் சுமப்பவனாயிருந்துகொண்டு,
தவ அநிஶம் து:³கா²வஹ – எப்போதும் தேவரீருடைய திருவுள்ளத்தைப் புண்படுத்துமவனாய்,
ஶிஷ்டஜந ஓக⁴ மத்⁴யே – சிஷ்டர்களின் திரளினிடையே,
த்வத்பாத³ப⁴க்த: இவ – தேவரீருடைய திருவடிகளுக்கு அன்பன் போல,
மித்²யா சராமி – க்ருத்ரிமமாகத் திரியா நின்றேன்;
தத: மூர்க:² அஸ்மி – ஆகையினால் மூர்க்கனாயிரா நின்றேன்.

எட்டாவது ஶ்லோகத்திலே அடியேன் கெட்ட செயல்களையே செய்பவனாய், ஶப்தம் முதலிய விஷயங்களின்
அநுபவத்தில் ஈடுபட்ட மனத்தையுடையனாய், ஶரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமப்பவனாயிருந்துகொண்டு,
எப்பொழுதும் தேவரீர் திருவுள்ளம் புண்படும்படி துக்கத்தை உண்டுபண்ணுமவனாய்,
தேவரீர் திருவடிகளில் ஈடுபட்டவன் போல் ஶிஷ்டர்களின் கோஷ்டியில் பொய்யாகத் திரிந்தேனாதலால்
மூர்க்கனாகவிருக்கிறேன் என்கிறார்.

————

நித்யம் த்வஹம் பரிভவாமி গுரும் ச மந்த்ரம்
தদ்◌ேদவதாமபி ந கிஞ்சிদஹோ বি◌ேভமி ।
இத்থம் ஶ◌ேঠাঽப்யஶঠவদ் ভவদீய ஸங்ঘে
ஹৃஷ்டஶ்சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்খঃ ॥ 9॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
அஹம் து – அடியேனோவென்றால்,
கு³ரும் மந்த்ரம் தத்³ தே³வதாம் ச – ஆசார்யனையும் மந்த்ரத்தையும் அதற்குள்ளீடான தேவதையையும்,
நித்யம் பரிப⁴வாமி – நித்யமும் பரிபவிக்கின்றேன்,
கிஞ்சித்³ அபி ந பி³பே⁴மி – ஈஷத்தும் அஞ்சுகிறேனில்லை;
அஹோ – அந்தோ!,
இத்த²ம் ஶட² அபி – இங்ஙனம் போட்கனா யிருந்தேனாகிலும்,
அஶட²வத்³ – குருமந்த்ர தேவதா விஶ்வாஸ யுக்தன் போல,
ப⁴வதீ³ய ஸங்கே⁴ – தேவரீரடியார் திரளிலே,
த்ருʼஷ்ட: சராமி – துணிவுடையேனாய்த் திரிகின்றேன்,
தத: மூர்க²: அஸ்மி – ஆதலால் மூர்க்கனாயிரா நின்றேன்.

ஒன்பதாவது ஶ்லோகத்திலே எந்நாளும் கொண்டாடத்தக்க ஆசார்யனையும், அவருபதேஶித்த மந்த்ரத்தையும்,
அம்மந்த்ரத்தின் பொருளான தேவதையையும் நித்யம் அவமதித்து சிறிதளவும் பயமில்லாமல்,
தேவரீர் திருவுள்ளத்திற்கு உகப்பானவற்றையே செய்பவன் போலே தேவரீருடைய அடியார்கள் திரளிலே புகுந்து,
‘இவர்களை வஞ்சித்து விட்டோமே’ என்று மகிழ்ச்சியோடு திரிகிறேன் என்கிறார்.

————–

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோঽஹஞ் சராமி ஸததம் த்ரிவிধாபசாராந் ।
ஸோঽஹம் தவாঽப்ரியகரঃ ப்ரியகৃদ்வ◌ேদவம்
காலம் நயாமி யதிராஜ ததோঽஸ்மி மூர்খঃ ॥ 10॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
ய: அஹம் – யாவனொரு அடியேன்,
ஸததம் – எப்போதும்,
மநஸா வாசா க்ரியயா ச – மனமொழிமெய்களகிற முக்கரணங்களாலும்,
த்ரிவித⁴ அபசாராந் – மூவகைப்பட்ட அபசாரங்களையும்,
சராமி – செய்கின்றேனோ,
ஸ அஹம் – அப்படிப்பட்ட நான்,
தவ அப்ரியகர: – தேவரீருக்கு அப்ரியங்களையே செய்து போருமவனாய்க் கொண்டு,
ப்ரியக்ருʼத்³வத்³ – ப்ரியத்தையே செய்பவன்போல நின்று,
ஏவம் காலம் நயாமி – இப்படியே காலத்தைக் கழிக்கின்றேன்;
தத: மூர்க²: அஸ்மி – ஆதலால் மூர்க்கனாயிரா நின்றேன்,
ஹா ஹந்த ஹந்த – என்ன கொடுமை!

பத்தாவது ஶ்லோகத்திலே மூன்று கரணங்களாலும் மூன்றுவிதமான அபசாரங்களைச் செய்துகொண்டு,
தேவரீருக்கும் விருப்பமல்லாதவற்றையே செய்துகொண்டிருந்தாலும் தேவரீர் விரும்பக்கூடிய செயல்களையே
செய்பவன் போல தேவரீருடைய அடியார்களை ஏமாற்றியதோடல்லாமல்,
தேவரீரையும் ஏமாற்றினேன் மூர்க்கனான அடியேன் என்கிறார்.

———–

பாபே கৃதே யদி ভவந்தி ভயாநுதாப-
லஜ்ஜாঃ புநঃ கரணமஸ்ய கথம் ঘடேத ।
மோஹேந மே ந ভவதீஹ ভயாদிலேஶஸ்
தஸ்மாத்புநঃ புநரঘம் யதிராஜ குர்வே ॥ 11॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
பாபே க்ருʼதே ஸதி³ – பாவம் செய்தால்,
ப⁴ய அநுதாப லஜ்ஜா: – அச்சமும் அநுதாபமும் வெட்கமும்,
ப⁴வந்தி யதி³ – உண்டாகுமேயானால்,
அஸ்ய புந: கரணம் கத²ம் க⁴டேத – மறுபடியும் பாவம் செய்கை எப்படி நேரிடும்,
மே – எனக்கோவென்றால்,
இஹ – இந்த பாப கரணத்தில்,
மோஹேந – அஜ்ஞாநத்தினால்,
ப⁴யாதி³லேஶ: ந ப⁴வதி – அச்சமும் அநுதாபமும் வெட்கமுமாகிற விவை சிறிது முண்டாவதில்லை;
தஸ்மாத் – ஆதலால்,
அக⁴ம் புந: புந: குர்வே – பாபத்தை அடுத்தடுத்துச் செய்து போராநின்றேன்.

பதினோராவது ஶ்லோகத்திலே பாபகார்யத்தைச் செய்தால் தண்டனை கிடைக்குமே என்ற பயமும்,
நான் இத்தகைய செயலைச் செய்யலாமோ வென்கிற அநுதாபமும்,
இப்படிப் பாபம்புரிந்த நாம் பெரியோர்களின் திருமுன்பே எப்படிச்செல்வது என்கிற வெட்கமும்
ஏற்பட்டால் மறுபடியும் பாபமிழைக்க நேராது;
ஆனால் அடியேனோவென்றால் அறியாமையால் பயம், அநுதாபம், வெட்கம் ஆகிய இவை சிறிதுமில்லாமல்
மீண்டும் மீண்டும் பாவச்செயல்களையே செய்கிறேன் என்கிறார்.

—————-

அந்தர் বஹிஸ் ஸகலவஸ்துஷு ஸந்தமீஶம்-
அந்ধঃ புரஸ்ஸ்থிதமிவாஹமவீக்ஷமாணঃ ।
கந்দர்பவஶ்யஹৃদயஸ்ஸததம் ভவாமி
ஹந்த த்வদগ்ரগமநஸ்ய யதீந்দ்ர நார்ஹঃ ॥ 12॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
ஸகல வஸ்துஷு – எல்லாப் பொருள்களிலும்,
அந்த: ப³ஹி: – உள்ளோடு புறம்போடு வாசியற எங்கும்,
ஸந்தம் ஈஶம் – வியாபித்து நிற்கிற எம்பெருமானை,
அந்த⁴: புர: ஸ்தி²தம் இவ – பிறவிக்குருடன் முன்னேயிரா நின்ற பொருளைக் காணமாட்டாதவாறுபோல,
அவீக்ஷமாண: அஹம் – காணகில்லாதவனான அடியேன்,
ஸததம் கந்த³ர்ப்ப வஶ்ய ஹ்ருʼத³ய: ப⁴வாமி – எப்போதும் காமபரவச மநஸ்கனாயிரா நின்றேன்;
ஹந்த – அந்தோ! (ஆதலால்),
த்வத்³ அக்³ர க³மநஸ்ய ந அர்ஹ: – தேவரீர் திருமுன்பே வருகைக்கும் அர்ஹதையுடையேனல்லேன்.

பன்னிரண்டாவது ஶ்லோகத்திலே பிறவிக்குருடன் கண்முன்னேயுள்ள பொருளைக் காணாதது போலே
எல்லாப்பொருள்களின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்துள்ள எம்பெருமானைக் காணாதவனாய்,
காமபரவசனாய் (மற்ற பயங்களையே விரும்பும் மனத்தை யுடையவனாய்) இருக்கிறேனாதலால்
தேவரீர் திருமுன்பே வருவதற்கும் தகுதியற்றவனாய் உள்ளேன் என்கிறார்.

—————-

உள்ளும் புறமும் ஸகல பதார்த்தங்களிலுமுறைகின்ற எம்பெருமானைக் காண்கிலீராகிலும்
ஹேய விஷயங்களின் தோஷங்களை ப்ரத்யக்ஷமாகக் காண்கிறீரன்றோ;
காணவே அவற்றில் ஜிஹாஸை பிறந்ததில்லையோ? என்ன;
துன்பங்களையும் இன்பமாக நினைக்கும்படியன்றோ என்னுடைய நிலைமையுள்ளது?
இதுக்கடி என்னுடைய ப்ரபல பாபமேயாயிற்று. அதைத் தேவரீர் தாமே களைந்தருள வேணுமென்று பிரார்த்திக்கிறார்.

தாபத்ரயீஜநித দுঃখநிபாதிநோঽபி
◌ேদஹஸ்থிதௌ மம ருசிஸ்து ந தந்நிவৃத்தௌ ।
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாথ த்வமேவ ஹர தদ்யதிராஜ ஶீঘ்ரம் ॥ 13॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
தாபத்ரயீ ஜநித து:³க² நிபாதிந: அபி – தாபத்ரயத்தாலு முண்டு பண்ணப்பட்ட துக்கங்களிலே வீழ்ந்து கிடக்கச் செய்தேயும்,
மம – எனக்கு,
ருசிஸ் து – அபிலாஷமோவென்றால்,
தே³ஹஸ்தி²தௌ – து:க்காஸ்பதமான சரீரத்தைப் பேணுமையிலேயாம்;
தத் நிவ்ருʼத்தௌ ந – அந்த தேஹத்தைத் தவிர்த்துக்கொள்வதில் ருசியுண்டாவதில்லை,
ஏதஸ்ய காரணம் மம பாபமேவ – இப்படிப்பட்ட நிலைமைக்குக் காரணம் எனது பாவமேயாம்,
அஹோ நாத² – அந்தோ!; ஸ்வாமிந்!,
தத்³ த்வமேவ ஶீக்⁴ரம் ஹர – அந்த பாபத்தை தேவரீரே கடுகப் போக்கவேணும்.

பதிமூன்றாவது ஶ்லோகத்திலே மூன்றுவிதமான தாபங்களினால் ஏற்பட்ட துக்கத்திலே அழுந்தியிருந்தபோதிலும்,
அடியேனுக்கு துக்கத்திற்கு இருப்பிடமான ஶரீரத்தைப் பேணுவதிலேயே ஆசையானது வளர்ந்துவருகின்றது;
ஶரீரத்தைப் போக்கிக்கொள்வதில் விருப்பமுண்டாகவில்லை. இதற்கு அடியேனது பாபமே காரணமாகையால்
ஸ்வாமியான தேவரீரே விரைவில் அந்தப் பாபத்தைப் போக்கியருளவேணுமென்கிறார்.

————–

வாசாம◌ேগাசர மஹாগுண ◌ேদஶிகாগ்ர்ய
கூராধிநாথ கথிதாঽখிலநைச்யபாத்ரம் ।
ஏஷோঽஹமேவ ந புநர் ஜগதீদৃஶஸ் தদ்-
ராமாநுஜார்ய கருணைவ து மদ்গதிஸ்தே ॥ 14॥

ஆர்ய ராமாநுஜ – எம்பெருமானாரே!,
வாசாம் அகோ³சர மஹாகு³ண தே³ஶிக அக்³ர்ய கூராதி⁴நாத² கதி²த அகி²ல நைச்ய பாத்ரம் – வாய்க்கு நிலமல்லாத நற்குணங்களை
யுடைய ஆசார்யஶ்ரேஷ்டரான கூரத்தாழ்வான் அநுஸந்தித்த ஸமஸ்த நைச்யங்க ளுக்கும் பாத்ரமாயிருப்பவன்,
ஜக³தி – இவ்வுலகில்,
ஏஷ: அஹம் ஏவ – இந்த அடியேன் ஒருவனேயாவன்;
ஈத்³ருʼஶ: புந: ந – இப்படிப்பட்ட தோஷத்தையுடையான் வேறொருவனில்லை, (ஆதலால்)
தே கருணா து – தேவரீருடைய திருவருளோவென்றால்,
மத்³க³தி: ஏவ – என்னையே கதியாகவுடையது.

பதினான்காவது ஶ்லோகத்திலே வாயால் இவ்வளவென்று அளவிட்டுச் சொல்ல வொண்ணாத நற்குணங்களை உடையவராய்,
ஆசார்யர்களின் தலைவராயுள்ள கூரத்தாழ்வானால் அருளிச்செய்யப்பட்ட எல்லாத்தாழ்வுகளுக்கும்
கொள்கலமாக விருப்பவன் இவ்வுலகில் அடியேன் ஒருவனேயன்றி வேறொருவரில்லையாதலாலே
தேவரீருடைய க்ருபையே அடியேனுக்குப் புகலிடம் என்கிறார்.

—————

ஶுদ்ধாத்மயாமுந গுரூத்தம கூரநாথ
ভட்டாখ்ய ◌ேদஶிகவரோக்த ஸமஸ்தநைச்யம் ।
அদ்யாঽஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாদ ்யதீந்দ்ர கருணைவ து மদ்গதிஸ் தே ॥ 15॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
ஶுத்³தா⁴த்ம யாமுந கு³ரூத்தம கூரநாத² ப⁴ட்டாக்²ய தே³ஶிக வர உக்த ஸமஸ்த நைச்யம் – பரம பவித்திரரான ஆளவந்தார் ஆழ்வான் பட்டர்
என்னுமிந்த ஆசார்ய சிகாமணிகள் அநுஸந்தித்துக் கொண்ட ஸகலவிதமான தாழ்வும்,
இஹ லோகே – இவ்வுலகின்கண்,
அத்³ய – இக்காலத்தில்,
மயி ஏவ – என்னிடத்திலேயே,
அஸங்குசிதம் அஸ்தி – குறையுறாது நிரம்பியிருக்கின்றது,
தஸ்மாத்³ – ஆதலால்,
தே கருணா ஏவ து மத்³க³தி: – தேவரீருடைய திருவருளே எனக்குப் புகல் (அல்லது) தேவரீருடைய திருவருள் என்னையே புகலாகவுடையது.

பதினைந்தாவது ஶ்லோகத்திலே தூய்மையான மனத்தையுடையவர்களான ஆளவந்தாராலேயும்,
ஆசார்யகளில் தலைவரான ஆழ்வானாலேயும், ஆசார்ய ஶ்ரேஷ்டரான பராஶரபட்டராலேயும்
தம்முடைய ஸ்தோத்ரங்களிலே சொல்லப்பட்ட எல்லாவிதமான தாழ்வுகளும் இவ்வுலகிலே இக்காலத்திலே
அடியேனிடத்திலேயே குறைவில்லாமல் இருக்கின்றதாதலாலே அடியேனுக்குப் புகலிடம்
தேவரீருடைய கருணையொழிய மற்றொன்றில்லை என்கிறார்.

————–

ஶব்দாদி◌ேভাগவிஷயா ருசிரஸ்மদீயா
நஷ்டா ভவத்விஹ ভவদ்দயயா யதீந்দ்ர ।
த்வদ்দாஸদாஸগணநா சரமாவ◌ெধள யஸ்
தদ்দாஸதைகரஸதா அவிரதா மமாஸ்து ॥ 16॥

யதீந்த்³ர! – எம்பெருமானாரே!,
அஸ்மதீ³யா – எம்முடையதான,
ஶப்³தா³தி³ போ⁴க³ விஷயா ருசி: – ஶ்ப்தாதி விஷயங்களை யநுபவிக்க வேணுமென்பது பற்றியுண்டான அபிநிவேசமானது,
ப⁴வத்³ த³யயா – தேவரீருடைய திருவருளாலே,
நஷ்டா ப⁴வது – தொலைந்ததாகக் கடவது;
ய: – யாவரொருவர்,
த்வத்³ தா³ஸ தா³ஸ க³ணநா சரம அவதௌ⁴ – தேவரீருடைய பக்த பக்தர்களை எண்ணிக்கொண்டு போமளவில் சரம பர்வத்திலே நிற்கிறாரோ,
தத்³ தா³ஸதைக ரஸதா – அவர்க்கு அடிமைப்பட்டிருப்ப தொன்றிலேயே ப்ராவண்யமானது,
மம அவிரதா அஸ்து – எனக்கு அவிச்சிந்நமாக நடைபெற வேணும்.

பதினாறாவது ஶ்லோகத்திலே ஶப்தாதிவிஷயங்களை அநுபவிக்கவேண்டுமென்கிற அடியேனுடைய ருசியானது
தேவரீருடைய திருவருளாலே அடியோடழியக்கடவது;
யாரொருவர் தேவரீரோடு ஸம்பந்தமுடையவர்களின் எண்ணிக்கையில் எல்லையிலி ருக்கிறரோ,
அவருக்கு அடிமைப்பட்டிருப்பதிலேயே அடியேனுக்கு இடைவிடாத ஈடுபாடு இருக்கவேண்டுமென்கிறார்.

————-

ஶ்ருத்யগ்ர வேদ்ய நிஜদிவ்யগுண ஸ்வரூபঃ
ப்ரத்யக்ஷதாமுபগதஸ் த்விஹ ரங்গராஜঃ ।
வஶ்யஸ் ஸদா ভவதி தே யதிராஜ தஸ்மாத்-
ছக்தஸ் ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் ॥ 17॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
ஶ்ருத்யக்³ர வேத்³ய நிஜ தி³வ்யகு³ண ஸ்வரூப: – வேதாந்தங்களில் கேட்டறிய வேண்டும்படியான தன்னுடைய குணஸ்வரூபாதிகளை யுடையனாய்,
இஹ – தன்வாசியறிந்து ஈடுபடுவாரில்லாத இந்த ஸம்ஸாரமண்டலத் திலே,
ப்ரத்யக்ஷதாம் உபக³த: – எல்லார்க்கும் கண்ணெதிரே காட்சி தந்தருள்கின்ற,
ரங்க³ராஜ: – ஶ்ரீரங்கநாதன்,
தே – தேவரீருக்கு,
ஸதா³ – எப்போதும்,
வஶ்ய: ப⁴வதி – விதேயனாயிரா நின்றான்;
தஸ்மாத் – ஆதலால்,
ஸ்வகீய ஜந பாப விமோசநே – தம்மடியார்களின் பாவங்களைத் தொலைத்தருள்வதில்,
த்வம் ச²க்த: – தேவரீர் சக்தி யுடையராயிரா நின்றீர்.

பதினேழாவது ஶ்லோகத்திலே உபநிஷத்துக்களாலே அறியத்தக்கவைகளான தன் கல்யாணகுணங்களையும்,
திவ்யமங்கள ஸ்வரூபத்தையுமுடையனான எம்பெருமான் அனைவரும் கண்ணாலேயே கண்டுபற்றலாம்படி
திருவரங்கத்திலே பெரியபெருமாளாக எழுந்தருளி, எல்லாக்காலமும் தேவரீருக்கு வசப்பட்டவனாயிருக்கையாலே,
உம்மடியார்களின் பேற்றுக்குத் தடையான பாபங்களைப் போக்குவதில் தேவரீர் ஸமர்த்தரன்றோ வென்கிறார்.

—————

காலத்ரயேঽபி கரணத்ரய நிர்மிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ভগவத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேঽர்থிதா யத்-
க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்দ்ர ভவத்ছ்ரிதாநாம் ॥ 18॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
காலத்ரயே அபி – வருங்காலம் நிகழ்காலம் கழிகால மென்கிற மூன்று காலங்களிலும்,
கரணத்ரய நிர்மித அதி பாபக்ரியஸ்ய – மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களினாலும் கோர பாபங்களைச் செய்தவனுக்கு,
ப⁴க³வத் க்ஷமா ஏவ – எம்பெருமானது பொறுமையொன்றே,
ஶரணம் – புகல்,
ஸா ச – அந்த க்ஷமைதானும்,
த்வயா ஏவ – தேவரீராலேயே,
கமலாரமணே – நம்பெருமாள் பக்கலிலே,
அர்தி²தா இதியத் – ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று,
ஸ: ஏவ ஹி – அந்த ப்ரார்த்தனை தானே,
ப⁴வத் ச்²ரிதாநாம் – தேவரீரை யடிபணிந்தவர்களுக்கு,
க்ஷேம: – க்ஷேமமாவது.

பதினெட்டாவது ஶ்லோகத்திலே நிகழ்காலம் வருங்காலம் கழிகாலம் என்கிற மூன்று காலங்களிலும்,
மனம் மொழி மெய் என்கிற மூன்று கரணங்களினாலும், ப்ராயஶ்சித்தத்தாலும் அநுபவத்தாலும்
போக்கவொண்ணாத அளவிறந்த பாபங்களைச் செய்தவனுக்கு எம்பெருமானுடைய பொறுமை மட்டுமே தஞ்சமாகும்.
அந்தப் பொறுமையானது தேவரீரால் பெரியபிராட்டிகு இனியவனான எம்பெருமானிடத்திலே ப்ரார்த்திக்கப்பட்டது
என்பது யாதொன்றென்றுண்டோ அதுவே தேவரீருடைய அடியார்களுக்கு பாதுகாப்பாகும் என்கிறார்.

—————

ஶ்ரீமந் யதீந்দ்ர தவ দிவ்யபদாব்ஜஸேவாம்
ஶ்ரீஶைலநாথகருணாபரிணாமদத்தாம் ।
தாமந்வஹம் மம விவர்ধய நாথ தஸ்யாঃ
காமம் விருদ்ধமখிலஞ்ச நிவர்த்தய த்வம் ॥ 19॥

நாத² – எமக்குத் தலைவரான,
ஶ்ரீமந் யதீந்த்³ர – ஶ்ரீராமாநுஜரே!, ஶ்ரீஶைலநாத² கருணா பரிணாம த³த்தாம் – (அஸ்மதாசார்யரான) திருமலையாழ்வாருடைய
திருவருள் மிகுதியினால் அளிக்கப்பட்ட,
தாம் – அப்படிப்பட்ட,
தவ தி³வ்ய பதா³ப்³ஜ ஸேவாம் – தேவரீருடைய பாதாரவிந்த ஸேவையை,
அந்வஹம் – நாடோறும்,
மம விவர்த⁴ய – அடியேனுக்கு வளரச்செய்தருளவேணும்;
தஸ்யா: விருத்³த⁴ம் – அந்த பவதீய பாதாரவிந்த ஸேவைக்கு எதிரிடையான,
அகி²லம் ச காமம் – எல்லா விருப்பங்களையும்,
த்வம் நிவர்தயத்வம் – தேவரீர் தவிர்த்தருளவேணும்.

பத்தொன்பதாம் ஶ்லோகத்திலே புலன்களை வென்றவர்களுக்குத் தலைவரான ஸ்வாமி எம்பெருமானாரே!
திருமலையாழ்வாரென்கிற திருவாய்மொழிப்பிள்ளை தம்முடைய மிகுந்த கருணையினால் அளித்த
தேவரீருடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யத்தை எல்லாக்காலத்திலும் அடியார்களளவிலும் வளர்ந்தருள வேணும்;
அக்கைங்கர்யத்திற்குப் புறம்பான ஶப்தாதிவிஷயங்களிலுள்ள ஈடுபாட்டை அடியோடு அழித்தருளவேணும் என்கிறார்.

————–

விஜ்ஞாபநம் யদிদமদ்ய து மாமகீநம்-
அங்গீகுருஷ்வ யதிராஜ দயாம்বுராஶே ।
அஜ்ஞோঽயமாத்மগுணலேஶவிவர்ஜிதஶ் ச
தஸ்மாদநந்யஶரணோ ভவதீதி மத்வா ॥ 20॥

த³யா அம்பு³ராஶே! – கருணைக்கடலான,
யதிராஜ! – எம்பெருமானாரே!,
அயம் – (அடியேனாகிற) இவன்,
அஜ்ஞ: – (தத்வஹித புருஷார்த்தங்களில்) அறிவில்லாதவன்,
ஆத்ம கு³ணலேஶ விவர்ஜிதஶ்ச – ஆத்ம குணங்கள் சிறிதுமில்லாதவன்;
தஸ்மாத் – ஆகையினாலே,
அநந்யஶரண: ப⁴வதி – நம்மைத் தவிர்த்து வேறு புகலற்றவன்,
இதி மத்வா – என்று திருவுள்ளம் பற்றி,
அத்³ய மாமகீநம் யத் து விஜ்ஞாபநம் தத் அங்கீ³ குருஷ்வ – இப்போது அடியேனுடையதான விண்ணப்பம் யாதொன்றுண்டோ
அதனைத் தலைக்கட்டியருள்வதாக ஏற்றுக்கொள்ள வேணும்.

இருபதாவது ஶ்லோகத்தில் கருணைக்கடலான எம்பெருமானாரே! ‘இவன் ஶாஸ்த்ர ஜ்ஞாநமும் ஆத்மகுணங்களும்
சிறிதுமில்லாதவனாகையாலே நம்மையொழிய மற்றொரு புகலிடமில்லாதவன்’ என்று திருவுள்ளம் பற்றி
இக்காலத்திலே அடியேனு டையதான இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டருள வேணும்
(அப்படியே செய்கிறோம் என்று திருவுள்ளம் பற்றியருளவேணும்).

———-

இதி யதிகுலধுர்யமேধமாநைঃ ஶ்ருதிமধுரைருদிதை ப்ரஹர்ஷயந்தம் ।
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாদம் ॥ 21॥

இதி ஶ்ரீயதிராஜவிம்ஶதிঃ ஸம்பூர்ணம்

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஶ்ரீ.உ.வே.ரகுராமன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஶ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

March 25, 2021

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் –
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6-

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்

இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு.
இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )
ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம் –அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை; இன்னும் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள்.
இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் .
ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள்.

ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,
தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில்,
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.

நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே || –1-

சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும்
சேர்ந்த குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் || -2-

ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்)
திருவடித் தாமரைகளில் உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட .
மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.

பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய || –3-

அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் )
பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால்,
இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தி யோகியும்,
யோகி ஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள்.
மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் ,
என்று மூன்று படிகளுக்கு மேலே –
ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால்,ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம்,
அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக் கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.

இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,
ஆசார்யனுடன் ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும்போது,
ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,

யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.

குரு பரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.

ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் ,
பிறகு , பெரிய பிராட்டி,
பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார்,
நாதமுனிகள்,
உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி
ஆளவந்தார்,
பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.

——-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை
ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள
பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார் –

—————————————————————–

1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் -ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும் ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை
அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப்பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ -பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரியபிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்யதம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள்
எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .
இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.
இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்குபோல,
உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,
முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,
பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,
தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ச்லோகத்தில், ஆதிகுருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

———————————-

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்
வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ச்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்த வர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.
அதற்கு, பிராட்டி, நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.
உடனே பகவான், பிராட்டியிடம், “நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.
இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து, பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

——————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ராவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே

ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –
குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூத்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனைமுதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற்கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய்விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனைமுதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

—————————-

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத்துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.
அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால்
பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர்.
குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து,
மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்து கொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபரயுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.
அவரோ,கண்திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.

மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்ததன் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது,
ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?
ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”
அதாவது,
சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து,
தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது,
ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.
பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,
ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது .
இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .
பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

————————————-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப் பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
“ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !’
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,
அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட, அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,
திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.

அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து, அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்து போன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள் ரஹஸ்யஅர்த்தங்கள்,ப்ரஹ்மஸுத்ரங்கள்
எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
“கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.
திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .
ஸ்ரீ நம்மாழ்வார் அருள் செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.
தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய
மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————————-

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

———————————–

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.
புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு
உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால்,
மணக்கால் நம்பி 4வது ராமர்.

——————————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம்.
மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல
அன்று முதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,
ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி,
கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு விளையாடி,
இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும்
யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் ,
யமுனைக்குக் கருணை செய்ததைப் போல,
ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
“யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச் சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

———————————————————–

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

——————————

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் -பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .
இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத்தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச்சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ச்ருதி “—உபநிஷத் நாயகி .இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி,
பொய் என்றும் சொல்லி ,அழுக்கை ஏற்றிவிட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ” மீமாம்சம் போன்ற
வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,உண்மையான ரூப கல்யாண குண விசேஷங்களை உடைய
பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

———————————

யதிராஜ ஸப்ததி

யதிராஜன் —யதிகளுக்கு ராஜன்; யதீச்வரர்களுக்குத் தலைவன்; அது யார் ! அவரே ஸ்ரீ ராமாநுஜன் .
இந்த யதிராஜரைப் போற்றிப் புகழ்ந்து ஸப்ததி –எழுபது ச்லோகங்கள் இதுவே, யதிராஜ ஸப்ததி
ஸப்ததி—-எழுபது என்று சொன்னாலும், 74 ச்லோகங்கள் அருளி இருக்கிறார், ஸ்வாமி தேசிகன்.

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிச் ச்லோகம் இயற்றத் தொடங்கியதும், ஸ்வாமி தேசிகனுக்கு,
ஸ்ரீ உடையவர் 74 ஸிம்ஹாசநாதிபதிகளை நியமித்து,
விசிஷ்டாத்வைதத்தை வேரூன்றி வளரச் செய்தது நினைவுக்கு வர, 74 ச்லோகங்கள் இயற்றினாரோ ? ஸ்வாமி தேசிகனே அறிவார் !

ராமாநுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் |

நபஸ்ய மாசி ஸிஸ்ரோணாயாம் அநந்தார்ய குரூத்பவம் |
ஸ்ரீவேங்கடேச கண்டாம்சம் வேதாந்தகுரு மாஸ்ரயே ||

ப்ரணாமம் லக்ஷ்மணமுநி :ப்ரதிக்ருஹ்ணாது மாமகம் |
ப்ரஸாதயதி யத்ஸுக்தி : ஸ்வாதீநபதிகாம் ச்ருதிம் ||- ஸ்ரீ ராமாநுஜர் —ஸ்ரீ உடையவர் .

தயாநிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாச்ரயே |
யேந விச்வஸ்ருஜோ விஷ்ணோ : அபூர்யத மநோரத : ||–ஸ்ரீ பெரிய நம்பிகள்

விகாஹே யாமுனம் தீர்த்தம் ஸாதுப்ருந்தாவநே ஸ்திதம் |
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்ஸே யத்ர க்ருஷ்ண : க்ருதாதர : ||–ஸ்ரீ ஆளவந்தார் என்கிற யாமுனாசார்யர்

அநுஜ்ஜித க்ஷமா யோகம் அபுண்யஜந பாதகம் |
அஸ்ப்ருஷ்ட மதராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ மணக்கால் நம்பி

நமஸ்யாமி அரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம் |
சுத்த ஸத்வமயம் சௌரே : அவதாரமிவாபரம் ||–ஸ்ரீ உய்யக்கொண்டார்

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||– ஸ்ரீமந்நாதமுநிகள்

யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம் |
ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ நம்மாழ்வார்

வந்தே வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸுத்ரவதீ ஸகம் |
யத்வேத்ர சிகரஸ்பந்தே விச்வ மேதத் வ்யவஸ்திதம் ||–ஸ்ரீ விஷ்வக்ஸேநர் .

ஸஹ தர்மசரீம் சௌரே : ஸம்மந்த்ரித ஜகத்திதாம் |
அநுக்ரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத நிக்ரஹாம் ||–10. ஸ்ரீ பெரிய பிராட்டி –ஸ்ரீ மஹாலக்ஷ்மி .

கமபி ஆத்யம் குரும் வந்தே கமலாக்ருஹ மேதிநம் |
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய : ஸ்வயம் || ஸ்ரீ பகவான்-ஸ்ரீமன் நாராயணன்–ஆதிகுரு . .

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ விம்சதி —

November 20, 2020

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாதரம் முநிம்–

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதநீம் வ்யாஜாஹர யதிராஜ விம்சதீம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் நௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –ஸ்ரீ எறும்பு அப்பா அருளிச் செய்த தனியன் —

————

1-ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –

நம்மாழ்வார் உடைய தாமரை போன்ற திருவடிகளில் ஆழ்ந்த அன்பும் பக்தியும் பூண்ட ராமானுஜரை -மாறன் அடி பணிந்து உய்ந்தவரை வணங்குகிறேன் –
தனது திருவடிகளை பணிந்தவர்களுடைய காமம் தோஷம் குரோதம் அனைத்தையும் நீக்க வல்லவர் –

-ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய–திருவின் மணாளனுடைய தாமரை மலர் போன்ற திருவடி இணைகளில் செய்யத் தக்க
நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய-நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவை யுடைய
பராங்குச பாத பக்தம் -பராங்குசர் -நம்மாழ்வார் -திருவடிகளில் பரம பக்தி பூண்டவரும் –
ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம்–தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுடைய
காமாதி தோஷ ஹரம் -காமம் முதலிய தோஷங்களை போக்கடிப்பவரும்
-ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –துறவிகளுக்கு தலைவருமான எம்பெருமானாரை தலையால் வணங்குகிறேன் –

———————————————

ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குS பதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் |
ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே3 ||

அழகிய தாமரை மலரை அன்னப்பறவை எவ்வாறு தனது இருக்கையாக கொண்டுள்ளதோ,
அது போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளையே தன்னுடைய நிரந்தரமான இருப்பிடமாகக் கொண்டுள்ள
ஸ்வாமி இராமானுசரைத் தொழுகிறேன். மகரந்ததுகள்களால் சூல் கொண்டு தேன் நிரம்பியுள்ள நறுமணம் வீசும்
தாமரை மலரின்மேல் அத்தேனைக் குடிக்கும் வண்டு எவ்வாறு அமர்ந்திருக்கிறதோ அது போன்று
நம்மாழ்வாரின் திருப்பாத கமலத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்.
திருக்கமலமுகத்தை உடைய பெரியாழ்வாருக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ஸ்வாமி இராமானுசர்
சூரியனைப் போன்று விளங்குகிறார். அவர்களது திருமுகம் ஸ்வாமியை கண்ட மாத்திரத்திலே மலர்கின்றது.
அந்த யதிராசனை நமஸ்கரிக்கின்றேன்.
கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலேயே கொண்டுள்ள எம்பெருமானாரைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எம்பெருமானாரைப் பற்றிய நான்கு கருத்துகளை ஸ்வாமி மணவாள மாமுனிகள்
இப்பாசுரத்திலே அருளிச்செய்கிறார்.

1. ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம் :
பங்குனி உத்திர நன்நாளிலே திருவரங்கத்திலே அரங்கநாதன் தன்னுடைய அர்ச்சை ரூபத்திலிருந்து எழுந்து
ஸ்வாமி இராமானுசருடன் உரையாடினான். ஸ்வாமி இராமானுசரை அவருடைய அந்திமக்காலம் வரை
தன்னுடனேயே இருக்கும்படி விண்ணப்பித்தான் (“யவாத் ஸரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ”).
மிகுந்த பாசத்துடன் அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசருடைய ப்ரபத்தியை ஏற்றுக்கொண்டான்.
தன்னுடைய திருவடித் தாமரையிலேயே ஸ்வாமி இராமானுசர் இருக்கவேணும் என்ற கருத்தையே
எம்பெருமான் “அத்ரைவ” என்ற பதத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறான்.
ராஜஹம்ஸத்தைப் போல ஸ்வாமி இராமானுசரும் அரங்கநாதனின் திருவடித் தாமரையிலேயே
தன்னுடைய அந்திமக்காலம் வரை எழுந்தருளியிருந்தார்.

ராஜ ஹம்ஸத்துடன் ஸ்வாமி இராமானுசரை ஒப்பிடுதல் :
அன்னப்பறவையான ராஜஹம்ஸம் எவ்வாறு பாலைத் தண்ணீரில் இருந்து பிரிக்க வல்லதோ,
அதுபோன்று ஸ்வாமி இராமானுசர் ஸாஸ்திரங்களில் இருந்து அதன் ஸாரத்தைப் பிரிக்க வல்லவர்
என்பதையே இந்த ஒப்பிடுதல் காட்டுகின்றது.
மேலும் இது ஸ்வாமியுடைய பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆசார்யத்வத்தையும் காட்டுகிறது.
எப்படி சேறு நிரம்பிய நெல் வயல்களிலே நீந்தும் அன்னத்தின் பாதங்கள் அந்த சேற்றிலே அமிழ்வதில்லையோ
அது போன்று ஸ்வாமி இராமானுசரும் களங்கம் நிறைந்த இந்த சம்சார உலகத்திலே இருந்தாலும்,
சம்சார வாசனையினால் களங்கப்படுவதில்லை.
இந்த ஒப்பிடுதலுக்கு ஈடாக ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி, நம்மாழ்வாரின்
திருவிருத்த பிரபந்தத்தின் பலஸ்ருதியை குறிப்பிடுகிறார்.
திருவிருத்தத்தின் நூறு பாசுரங்களின் ஆழ்ந்த பொருளையும் அறிந்தவர்கள் சம்சாரம் என்னும் சேற்றிலே
ஆழங்கால் படமாட்டார்கள் என்பது பலஸ்ருதி.
இதற்க்கு வியாக்கியானம் அளிக்க ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி
“ந பதநாதி ரதிம் ஹம்ஸ: கதாசித் கர்தமாம்பஸி” என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.

ஸ்வாமி இராமானுசர் தாயார் ரங்கநாயகியைப் போலவே புருஷகார க்ருத்யத்திலே ஈடுபடுபவர்.
எவ்வாறு தாயார் அரங்கநாதனிடம் ஜீவாத்மாக்களின் அபராதங்களைப் பொறுத்துக் கொண்டு
ப்ரபந்நர்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டுகிறாளோ, அது போன்று ஸ்வாமி இராமானுசரும் வேண்டுகிறார்.
அன்னத்தின் நடையும் நடத்தையும் தாயாரை ஒத்தனவாக இருக்கின்றன.
அது போன்றே எம்பெருமானாரும் விளங்குகிறார் என்பதே மாமுனிகளின் எண்ணம்.
ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 22வது பாசுரத்திலே
எம்பெருமானாரை ராஜ ஹம்ஸத்துடன் ஒப்பிடுகிறார்.
இங்கு அரங்கநாதனின் பக்தர்களின் மனத்திலே அமர்ந்திருக்கும் ராஜஹம்ஸம் என்று ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்.

2. ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் :
முதல் பாசுரத்திலே மாமுனிகள் ஸ்வாமி இராமானுசரை “பராங்குச பாத பக்தம்” என்று காட்டுகின்றார்.
இரண்டாவது பாசுரத்திலே “ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம்´என்று கொண்டாடுகின்றார்.
முதல் பாசுரத்திலே அருளியது “ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும்.
இரண்டாம் பாசுரத்திலே அருளியது “குண ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும்.
தேனுருஞ்சும் வண்டு எங்கனம் மலர்களிலே உள்ள தேனை அறிந்துகொண்டு அம்மலர்களை சுற்றுகின்றதோ,
அங்கனம் ஸ்வாமி இராமானுசரும் திருவாய்மொழி என்னும் அருளிச்செயலில் பொதிந்துள்ள அமுதினும் இனிய
பகவத் விஷயத்தை அனுபவிக்கவேண்டி நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளையே நாடுகின்றார்.
“தொண்டர்க்கு அமுதுன்ன சொல் மாலைகள் சொன்னேன்” என்று நம்மாழ்வாரே ஸாதித்துள்ளார்.
தேனுன்னும் வண்டைப் போலவே இராமானுசன் என்னும் வண்டும் நம்மாழ்வாரின்
ஒரு பாசுரத்தில் இருந்து மற்றொரு பாசுரத்திற்குத் செல்லுகிறது என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸாதிக்கிறார்.

3. ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம் :
பெரியாழ்வார் பட்டநாதன் என்று வழங்கப்படுபவர். திருமங்கையாழ்வார் பரகால நாதன் என்று வழங்கப்படுபவர்.
“ஆப்ஜம்” என்பது தாமரை மலரைக் குறிக்கும். “முகாப்ஜம்” என்பது தாமரை போன்ற முகம் என்பதைக் குறிக்கும்.
அத்தாமரை போன்ற முகத்தினை மலரவைக்கும் சூரியனாக ஸ்வாமி இராமானுசர் ஒப்பிடப்படுகிறார்.
பெரியாழ்வாரைப் போல எம்பெருமானுக்குத் துளசி கைங்கர்யத்திலே ஈடுபட்டிருந்ததாலும்,
திருமங்கையாழ்வாரைப்போல பிராகாரங்களையும், கோபுரங்களையும் அமைத்ததாலும்,
இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது ஒரு நிர்வாகம்.
ஆழ்வார்களின் பாசுரங்களின் கருத்தை உணர்ந்து அவர்கள் கூறியபடி அனுஷ்டானங்களைக் கடைபிடித்ததாலும்
இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது மற்றொரு நிர்வாகம்.

4. ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம்: கூரத்தாழ்வான் ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்று வழங்கப்படுபவர்.
உடையவருடன் விசேஷமான தொடர்பை உடையவர். எம்பார் போன்ற மற்ற சிஷ்யர்களும் ஸ்வாமியின் அன்புக்கு
பாத்திரமாயிருந்தாலும், கூரத்தாழ்வானிடமே ஸ்ரீபாஷ்யம் எழுதும் பெரும் பொறுப்பை ஸ்வாமி அளித்தார்.
பேர் சொல்ல தகுதியில்லா சோழ மன்னனின் சபைக்குச் சென்று இராமானுச தர்சனத்திற்காக தனது
தர்சனத்தையே இழந்தவர் கூரத்தாழ்வான். எம்பெருமானாரிடம் கூரத்தாழ்வானின் பக்தி ஈடு இணையற்றது.
ஆகையினாலேயே கூரத்தாழ்வான் “பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று
இராமானுச நூற்றந்தாதியிலே திருவரங்கத்து அமுதனாரால் போற்றப்படுகிறார்.
இந்த கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலே கொண்டுள்ளார் ஸ்வாமி இராமானுசர் என்பது ஒரு நிர்வாகம்.
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி இங்கே மற்றொரு விளக்கத்தை ஸாதிக்கிறார்.
“ஸ்ரீவத்ஸசிஹ்ந ஸரணம்” என்பதற்கு மாறாக “ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணம்” என்று கொண்டால்,
கூரத்தாழ்வான் ஸ்வாமி இராமானுசருடைய திருவடியாகவே விளங்குகிறார் என்ற பொருள் கொள்ளலாம்.
திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவடியாகவே கருதப்படுவது போலே,
கூரத்தாழ்வானும் எம்பெருமானாருடைய திருவடியாகவே அமைகிறார்.

யதிராஜ மீடே : ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்தை “யதிராஜ மீடே” என்ற வணக்கத்துடன் தலைக்கட்டுகிறார்.
அரங்கநாதனின் திருவடித்தாமரைகளிலே ராஜஹம்ஸத்தைப்போல அமர்ந்திருப்பவரும்,
தேனுருஞ்சும் வண்டைப்போல நம்மாழ்வாரின் பாதங்களை நாடுபவரும்,
பெரியாழ்வார், திருமங்கையாழ்வாடைய தாமரை போன்ற திருமுகத்தை சூரியனாக மலரச்செய்பவருமான
ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்.

————-

நித்யம் யதீந்த்3ர! தவ தி3வ்ய வபுஸ் ஸ்ம்ருதெள மே
ஸக்தம் மநோ ப4வது வாக் கு3ண கீர்தநேऽஸெள |
க்ருத்யஞ்ச தா3ஸ்ய கரணே து கரத்3 வயஸ்ய
வ்ருத்த் யந்தரேऽஸ்து விமுக2ம் கரண த்ரயஞ்ச ||

ஸந்யாஸிகளின் சக்ரவர்த்தியே! உம்முடைய திவ்ய மங்கள விஹ்ரகத்திலேயே என் மனது தியானித்திருக்க வேண்டும்.
உம்முடைய கல்யாண குணங்களைப் பற்றி பேசுவதிலேயே என் வாக்கு ஈடுபட வேண்டும்.
என் இரு கைகளும் உம்முடைய கைங்கர்யத்திலேயே ஈடுபட வேண்டும்.
இம் மூன்று கரணங்களும் (மனது, வாக்கு, காயம்) வேறு எல்லா கார்யங்களிலிருந்தும் திருப்பப்பட வேண்டும்.

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த இராமானுச நூற்றந்தாதியின் 100-102ம் பாசுரங்களின் சாராமே இந்தப் பாசுரமாகும்.
இம்மூன்று பாசுரங்களில், முதலில் அமுதனார் தம்முடைய மனது எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை
அனுபவிப்பதைப் பற்றி தெரிவிக்கிறார். இங்கே மற்றைய விஷயங்களிலிருந்து விடுபடுவதற்கான வரத்தை வேண்டுகிறார்.
இரண்டாவதாக, அமுதனார் தன்னுடைய வாக்கும் எம்பெருமானாருடைய வைபவத்தைப் பற்றியே பேச வேண்டும்
என்ற வரத்தை வேண்டுகிறார். இது சிஷ்யனுடைய உத்தம கல்பம் ஆகும்.
மூன்றாவதாக, அமுதனார் தன்னுடைய மனது, வாக்கு, மெய் அனைத்துமே எம்பெருமானார் தொடர்புடையது என்று தெரிவிக்கிறார்.
என் மனது உம்முடைய கல்யாண குணங்களை தியானம் செய்வதிலே மகிழ்ந்து இருக்கிறது.
என்னுடைய நாக்கு “இராமானுசா” என்று எம்பெருமானாருடைய நாம ஸங்கீர்த்தனத்திலேயே திளைத்திருக்கிறது.
என் கைகள் எம்பெருமானாரையே தொழுகின்றது.
என் கண்கள் எம்பெருமானாரையே நோக்குகிறது என்று அமுதனார் “நையும் மனமும்” என்ற பாசுரத்திலே அருளிச் செய்கிறார்.
தம்முடைய ஆசாரியன் அளித்த ஞானத்தினாலேயே மனது, வாக்கு, செயல் அனைத்தும்
எம்பெருமானாரிடம் திளைத்துள்ளன என்று தலைக்கட்டுகிறார்.

ஸ்வாமி மணவாள மாமுனிகளும் அமுதனாரது பாங்கிலேயே பிரார்த்திக்கிறார்.
“மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்” என்று ஆண்டாள் அருளியது போன்று மாமுனிகள்
மற்ற விஷயங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறார். எம்பெருமானாரின் அங்க செளந்தர்யத்தை
ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 11வது பாசுரத்திலே கொண்டாடுகிறார்.
முப்புரி நூலையும், ஊர்த்வ புண்ட்ரத்தையும் தரித்தவரும், மூன்று லோகங்களிலும் உண்டான புண்ணியங்களை
கையிலே த்ரிதண்டமாக கொண்டிருப்பவரும், ப்ரபந்நர்களை மோக்ஷ சாம்ராஜ்யத்திற்க்கு கொண்டு செல்பவரும்,
மிகப் பிரகாசமான தோற்றத்தை யுடையவருமான சந்நியாசிகளின் சக்ரவர்த்தியாகிய ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்
என்று ஸ்வாமி தேசிகன் கொண்டாடுகிறார். எம்பெருமானாரின் கம்பீரமான அழகை எம்பார் சொல் ஓவியமாகத் தீட்டுகிறார்.
“எதிராசன் வடிவழகு என்னிதயத்திலுள்ளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை என்க்கு எதிரே”
என்று பரவசப்படுகிறார். ஆழ்ந்த ஆச்சார்ய அனுபவத்தினாலேயே இவ்வாறு இம்மகான்களால் இங்கனம் கொண்டாட முடிகிறது.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய ஆர்த்திப் பிரபந்தத்திலேயும் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை
வாழி வாழி என்று கொண்டாடுகிறார்.
“சீராருமெதிராசர் திருவடிகள் வாழி! திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி!” என்று அருளிச் செய்கிறார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாருக்கு மங்களாஸாசனம் செய்தது போன்றே
எம்பார், ஸ்வாமி தேசிகன், ஸ்வாமி மணவாள மாமுனிகளும் எதிராசரான எம்பெருமானாருக்கு மங்களாஸாசனம் செய்கிறார்கள்.

—————

அஷ்டாக்ஷராக்2ய மநு ராஜ பத3 த்ரயார்த2 நிஷ்டா2ம்
மமாத்ர விதராத்3ய யதீந்த்3ர நாத2!
S¢ஷ்டாக்3ரக3ண்ய ஜந ஸேவ்ய ப4வத் பதா3ப்3ஜே
ஹ்ருஷ்டாऽஸ்து நித்ய மநுபூ4ய மமாஸ்ய பு3த்3தி4:

எம் குலத்தின் அரசே! துன்பமும், வேதனையும் நிறைந்த இந்த சம்சார வாழ்க்கையிலே,
மந்திரங்களிலே அரசனாகிய அஷ்டாக்ஷர மந்திரத்தினால் வழங்கப்படுகின்ற மூன்று சித்தாந்தங்களையும்
மன உறுதியோடும் தடுமாற்றமின்றியும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பம் வளரவேண்டும் என்ற வரத்தை
இப்பொழுதே அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
குறைந்த அறிவையும், ஆற்றலையும் உடைய எனக்கு, கூரத்தாழ்வான், எம்பார், பட்டர் போன்ற மகான்களால்
போற்றித் தொழத் தகுதியுடைய உம்முடைய திருவடித் தாமரைகளை என்றென்றும் தங்கு தடையில்லாமல்
தியானித்திருக்குமாறு அருளிச் செய்ய வேண்டுகிறேன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் “மம ஆத்ர அத்ய விதர” என்று பிரார்த்திக்கிறார்.
சம்சார துன்பங்களிலே இன்னும் உழன்று கொண்டு இருக்கும்போதே அவர் உள்ளத்திலே விருப்பம் துளிர்ந்துவிட்டது.
ஆகையால் அவ்வரத்தை உடனடியாக வழங்க வேண்டுகிறார். ஸ்வாமிகளின் உள்ளத்திலே துளிர்ந்த ஆசைதான் என்ன?
“ப்ரணவம், நம:, நாராயணாய” என்ற மூன்று பதங்களையும் அவற்றின் பொருளாகிய
“அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம்” என்ற மூன்று தத்துவங்களையும் உள்ளடக்கியுள்ள
மந்திரங்களின் அரசனாகிய அஷ்டாக்ஷர மந்திரத்திலே மனது என்றென்றும் ஆழங்கால் பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அஷ்டாக்ஷர மந்திரமாகிய திருமந்திரத்தை மந்திரங்களின் அரசன் என்று வழங்குகிறார்.
மநு என்ற சொல் மந்திரம் என்பதைக் குறிக்கிறது.
ஆகையால் மநுராஜம் என்பது மந்திரங்களின் அரசன் என்பதைக் குறிக்கிறது.
நம் ஸம்பிரதாயத்திலே திருமந்திரம் மந்திர ராஜனாகவும், த்வயம் மந்திர ரத்தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
முமுக்ஷுப்படி போன்ற கிரந்தங்கள் வழங்குவதைப் போலவே ஸ்வாமி மணவாள மாமுனிகளும்
திருமந்திரத்திலே மூன்று பதங்கள் உள்ளன என்று அங்கீகரிக்கிறார்.
“அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம்” என்ற மாபெரும் சித்தாந்தங்களுக்கு சான்றாக
இம்மூன்று பதங்களின் பொருளும் விளக்கப்பட்டுள்ளன. இம்மூன்று சித்தாந்தங்கள் யாவை?

முதலாவது அநந்யார்ஹ ஸேஷத்வம். இது இரண்டு பதங்களை உடையது.
“ஜீவாத்மா எம்பெருமான் ஒருவனுக்கே உரித்தானது” என்பதே அநந்யார்ஹ என்ற பதத்தின் பொருள்.
“ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவருக்கும் ஜீவாத்மா அடிமையில்லை” என்பதே ஸேஷத்வம் என்ற பதத்தின் பொருள்.
போற்றுதற்க்குரிய பக்த்தியுடனும், வணக்கத்துடனும் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவனே ஸேஷன் என்று வழங்கப்படுகிறான்.
பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டியதே ஜீவாத்மாவின் கடமை
என்பதே ஸேஷத்வ ஞானம் ஆகும். எவன் ஒருவன் இக்கைங்கர்யத்தை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு
அனுபவிக்கிறானோ அவன் ஸேஷி எனப்படுவான். எல்லா ஜீவன்களின் ஒப்புயற்வில்லாத தலைவன் பகவான்.
ஆகையால் அவன் ஸர்வ ஸேஷி என்று வணங்கப்படுகிறான்.

இரண்டாவது அநந்ய சரணத்வம். பிரபத்தியிலே ஜீவாத்மா அனுபவிப்பதே இது.
ஜீவாத்மா தான் அந்நந்ய சரண்யன் என்று உணர்ந்து கொள்கிறான்.
இந்த ஜீவனால் கர்ம, ஞான, பக்தி யோகங்களை கடைபிடிக்க இயலாது. ஆகையால் ஆதரவற்று இருக்கிறான்.
இந்த ஆதரவற்ற நிலையிலே எம்பெருமானின் கிருபையைப் பெற பிரபத்தியைத் தவிர வேறொரு உபாயமில்லை.
வேறு உபாயம் எதுவும் இல்லை என்பதே இப்பதத்தின் பொருள்.

மூன்றாவது அநந்ய போக்யத்வம். பரமேகாந்திகளின் நிலையாகும் இது.
எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே சிந்தனையைச் செலுத்துவதில் சந்தோஷப்படும் நிலை அது.
ஜீவாத்மாவின் ஒரே சந்தோஷம் அல்லது போக்யம் எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யமேயாகும்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் எம்பெருமானாரிடம்
“மநு ராஜ பத3 த்ரய அர்த்2 நிஷ்டா2ம் ஆத்ர அத்3யா விதர” என்று பிரார்த்திக்கிறார்.
மந்திர ராஜத்தின் பதங்களின் மகிமையை உணர்ந்த ஸ்வாமி, அந்த அர்த்தங்கள் தம் மனதிலே வழுவாமல்
நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அந்த நிஷ்டையைப் பிரார்த்திக்கிறார்.

ஸ்வாமி “அத்ர” மற்றும் “அத்ய” என்ற பதங்களின் மூலம்
அவர் வேண்டும் வரத்தின் இடத்தையும், காலத்தையும் குறிக்கிறார்.
“அத்ர” என்ற பதத்தினால் இவ்வரம் தாபத்ரயம் நிறைந்த இந்த சம்சார உலகிலேயே வழங்கப்பட வேண்டுமென்கிறார்.
“அத்ய” என்ற பதத்தினால் மீதமிருக்கும் தேக யாத்திரை முழுவதும் மனது திருமந்திரம் விளக்கும்
மூன்று தத்துவங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமென்கிறார்.

சரணாகதி என்பது “ஸ்வ நிஷ்டை”, “உக்தி நிஷ்டை”, “ஆசார்ய நிஷ்டை”, “பாகவத நிஷ்டை” என்ற
நான்கு வகைகளைச் சேர்ந்தது. பாகவத நிஷ்டையின் உயர்வை திருமங்கையாழ்வார் “உனதடியார்க்கடிமை” என்று வழங்குகிறார்.
பாகவத ஸேஷத்வமே மந்திர ராஜமான திருமந்திரத்தின் செம்பொருள் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்கிறார்.
ஆகையால் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பாகவத நிஷ்டையையே இந்த பாசுரத்தின் இரண்டாவது பாகத்திலே கையாளுகிறார்.
“S¢ஷ்டாக்3ரக3ண்யஜந ஸேவ்யப4வத்பதா3ப்3ஜே ஹ்ருஷ்டாऽஸ்து நித்யமநுபூ4ய மமாஸ்ய பு3த்3தி4”.

ஸ்வாமி தம்முடைய மனதை கீழ்தரமானதென்றும், மங்கள குணங்கள் இல்லததென்றும் (நீசன், நிறைவொன்றுமிலேன்)
என்று விவரிக்கிறார். அத்தகைய தம்முடைய மனது பாகவதோத்தமராகிய ஆசார்ய ஸார்வ பெளமராகிய
ஸ்வாமி இராமானுசருடைய திருவடித் தாமரைகளைப் பற்றிய சிந்தனையினால் உயர்த்தப்பட வேண்டுமென்கிறார்.
அத்திருவடித் தாமரைகளின் மேன்மையை மேலும் விவரிக்கிறார்.
கூரத்தாழ்வான், அனந்தாழ்வான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போன்ற உயர்ந்த மகான்களான் கொண்டாடப்பட்டது
அத்திருவடிகள். பாகவத நிஷ்டையினைச் சார்ந்த சரணாகதியையும் கைங்கர்யத்தையுமே ஸ்வாமி பிரார்த்திக்கிறார்.

———

அல்பாऽபி மே ந ப4வதீ3ய பதா3ப்3ஜ ப4க்தி:
Sப்3தா3தி3 போ4க ருசிரந்வஹமேத4தே ஹா
மத் பாபமேவ ஹி நிதா3நமமுஷ்ய நாந்யத்
தத்3வார யார்ய யதிராஜ! த3யைக ஸிந்தோ4!

கருணைக் கடலே! ஆசார்யர்களின் மகுடமே! உம்முடைய திருவடித் தாமரைகளிடம் எனக்கு ஆழ்ந்த பிணைப்பு இல்லை.
உம்முடைய திருவடித் தாமரைகளிடம் சிறிதளவேணும் பக்தியும் என்னிடம் இல்லை.
சம்சார பெருங்கடளிலேயுள்ள சிற்றின்பங்களிலே என் ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
என்னே பரிதாபம்! என்னுடைய பாபங்களே இதற்குக் காரணம். மற்ற எந்தவொரு காரணத்தையும்
என்னால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. ஆகையினால், என்னுடைய இந்த பாபங்களை
உம்முடைய பெருங்கருணையினாலே நீக்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.

————-

வ்ருத்த்யா பS¦ர்நர வபுஸ் த்வஹமீத்3ருஷோऽபி
SQருத்யாதி3 ஸித்3த4 நிகி2லாத்ம கு3ணாSQர யோऽயம்
இத்யாத3ரேண க்ருதிநோऽபி மித2: ப்ரவக்தும்
அத்3யாபி வஞ்சந பரோऽத்ர யதீந்த்3ர வர்தே–7-

யதிராஜா! நான் மனித உருவிலே உள்ள மிருகம். உடலால் மனிதனாகவும் (நர வபு),
செயலால் மிருகமாகவும் (பS¦ வ்ருத்தி) உள்ளவன் நான். இங்கனம் இருந்தும், நான் வேதங்களாலும்,
வேத அங்கங்களாலும் கொண்டாடப்படுகின்ற ஆத்ம குணங்களால் ஒளி விடும் உதாரணமானவன் என்று
உலகத்தோரை ஏமாற்றுகிறேன். மற்றவர்களுக்கு நான் என்னைப் பற்றி காட்டும் விதத்திலுருந்து முற்றிலும் மாறுபட்டவன் நான்.
நான் ஒரு போலி பாகவதன். இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய, தாழ்ந்த இந்த நிலையில் நான் இருக்கிறேனே, அந்தோ பரிதாபம்!

ஸ்வாமி மணவாள மாமுனிகள் “நைச்யானுசந்தானம்” என்கிற “ஸவனிகர்ஷானுசந்தானம்” என்ற நிலையில் இருக்கிறார்.
தன்னுடைய இயலாமையைச் சிந்தித்து சுய பச்சாதாப நிலையிலே இருக்கிறார்.
ஸ்வாமிகள் “ஞான ஹீந: பS¦பி: ஸமாந:” என்ற மூதுரையை நினைவு கூர்கிறார்.
தனக்கு உண்மையான ஞானம் இல்லையென்றும் (ஞான ஹீந:) அநுஷ்டானங்களிலே மிகுந்த குறையுடயவனென்றும்
(அநுஷ்டான வைகல்யம்) இறைஞ்சுகிறார். உலகத்தோர் என்னை ஸாஸ்திரங்களில் கொண்டாடப்படுகின்ற
ஆத்ம குணங்களின் பொக்கிஷம் என்று வணங்குகின்றனர். என்னே சோகம்!! பாகவதன் என்று
அழைக்கப் படுவதற்க்குக்கூட தகுதியல்லாதவன் நான்.
கருணைக் கடலே! தாயா மூர்த்தியே!! என்னை இப் பேரிடரிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.

——–

து3:கா2வஹோऽஹமநிSம் தவ து3ஷ்டசேஷ்ட:
Sப்3தா3தி3போ4க நிரதSQSரணாக3தாக்2ய:
த்வத்பாத3ப4க்த இவ S¢ஷ்ட ஜநெளக4மத்4யே
மித்2யா சராமி யதிராஜ ததோऽஸ்மி மூர்க2

யதிராஜா! நான் ஒரு வேடதாரி, போக்கிரி. பிரபந்நன் என்று அழைத்துக்கொள்கிறேன்,
ஆனாலும் ஸாஸ்திரங்களிலே தடுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன்.
என்னுடைய நடத்தையினால் தங்களுக்கு மிகுந்த துக்கத்தையே உண்டாக்குகிறேன்.
பக்தியும் நேர்மையும் உள்ள உங்களுடைய சிஷ்யர்களின் கூட்டத்திலே இருப்பதற்க்குத் தகுதியில்லாதவன் நான்.
ஆனாலும் நான் தங்களுடைய ஆத்ம சிஷ்யனாக பாசாங்கு செய்கிறேன்.
இத்தகைய என் மீது தயைசெய்து கருணை கொண்டு என்னை உயர்த்த வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.

இப்பாசுரத்திலும் மற்றும் வரும் இரண்டு பாசுரங்களிலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்மை
ஒழுக்கமில்லாத போக்கிரி என்று அழைத்துக்கொள்கிறார். எம்பெருமானாரின் தயையைக் கெஞ்சுகிறார்.
“நைச்யாநுசந்தானம்” என்ற மனநிலையில் ஸ்வாமிகள் இருக்கிறார்.
இந்நிலைக்கு “ஆத்ம கர்ஹணம்” அல்லது சுயபச்சாதாபம் என்றும் பெயர்.
இந்நிலையில் ஒரு பக்தன் தன்னுகைய குறைகளை யெல்லாம் எண்ணி எண்ணி
எம்பெருமானிடமும் தன்னுடைய ஆசாரியனிடமும் கருணையையும், இரக்கத்தையும் (அனுகம்பா, தயா) வேண்டுகிறான்.
ஸ்வாமி மணவாள மாமுனிகளைப் போன்ற உயர்ந்த ஆச்சார்ய புருஷர்களிடம் யாதொரு குறையும் குணக் குறைவும் இல்லை.
ஆனாலும் எம்பெருமானாரை அடைய முடியாத தங்களுடைய நிர்வேதம் என்ற இயலாமையால்
“சந்சாரி பாவம்” என்ற நிலை அவர்களுக்குப் பிறக்கிறது.

உயர்ந்த பல வைணவ ஆசாரியர்கள் நைச்சியத்துடன் தங்களுடைய குற்றங் குறைகளைக் கருத்தில் கொண்டு
எம்பெருமானின் தயையை வேண்டியிருக்கிறார்கள். ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே
“ந நிந்தி3தம் கர்ம தத3ஸ்தி லோகே ஸஹஸ்ரஷோ யந்ந மயா வ்யதா4யி” என்று பாடுகிறார்.
இங்கே முகுந்தனிடம் ஸ்வாமி ஆளவந்தார் “எம்பெருமானே! நான் பல்லாயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும்
செய்யாத பாபங்கள் எதுவுமே இல்லை. அந்த எல்லா பாபங்களும் இப்பொழுது முதிர்ந்து பலனை அளிக்க தயாராயிருக்கின்றன.
பீதி நிறைந்த இந்த நம்பிக்கையில்லா சமயத்திலே தாங்களே ரக்ஷகன் என்று கதறுகிறேன்” என்று முறையிடுகிறார்.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் “ஜாநாம் அநாதி விஹிதாந் அபராத வர்காந்!
ஸ்வாமிந் பயாத் கிமபி வக்துமஹம் ந ஸக்த:” என்று பாடியுள்ளார்.
“ஸர்வேச்வரனே! அநாதி காலமாக பலப்பல பாபங்களையெல்லாம் செய்து வந்தவனாகிய நான்,
தங்களுடைய பெருமைகளை யெல்லாம் பேச வாயெழாத வண்ணம் பயத்துடன் தங்கள் முன் நிற்கிறேன்.
என்னுடைய பாப ரஸங்களால் அழுந்தப்பட்டு வெறும் ஊமையாக தங்கள் முன் நிற்கிறேன்” என்பதே இதன் பொருள்.
ஸ்வாமி தேசிகன் மற்றொரு இடத்திலே “அதர்ம ப்ரவணாநாம் அக்ரஸ்கந்த ப்ரவ்ருத்தம் அகத்தமாந விப்ரதீஸாரம் மாம்” என்று பாடியுள்ளார்.
இங்கே ஸ்வாமி தேசிகன் தம்மை குண பூர்த்தி யற்றவன் என்றும், சக ஜீவராசிகளிடம் கருணையற்றவன் என்றும் கூறிக் கொள்கிறார்.
இத்தகைய ஆத்ம கர்ஹண, அகிஞ்சந்ய நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் காட்டியுள்ளார்.
———

நித்யம் த்வஹம் பரிப4வாமி கு3ரும் ச மந்த்ரம்
தத்3தே3வதாமபி ந கிஞ்சித3ஹோ பி3பே4மி |
இத்த2ம் Sடோ2ऽப்யSட2வத் ப4வதீ3யஸங்கே4
ஹ்ருஷ்டாSQசராமி யதிராஜ ததோऽஸ்மி மூர்க2: ||

யதிராஜா! என்னுடைய ஆசார்யனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும், அந்த மந்திரத்தின் பொருளான
எம்பெருமானையும் ஒவ்வொரு நாளும் நான் நிந்தனை செய்கிறேன். இவ்வறு செய்வதில் மிகச் சிறிதளவும்
எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. என்னே பரிதாபம்! ஆசாரியனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும்,
மந்திரத்தின் பொருளையும் என்றென்றும் மதிக்கும் பக்தியுள்ள உம்முடைய சிஷ்ய குழாமிடையே நான்
ஒரு உயர்ந்தவன் போன்று தைரியமாக உலவுகிறேன். உண்மையிலேயே நான் ஒரு போக்கிரி.

இந்த பாசுரத்திலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தன்னுடைய நைச்யாநுசந்தானம் என்கிற நிலையையே தொடர்கிறார்.
ஸ்வாமி இங்கே மூன்று விதமான இழிச்செயல்களை விவரிக்கிறார்.

முதலாவது ஆசார்யனுக்குச் செய்யும் அவமதிப்பு, நிந்தனை (ஆசார்ய பரிபாவம்).
ஆச்சார்யன் செய்த உபதேசத்தை அவமதித்தல், அலட்சியஞ்செய்தல், புறக்கணித்தல் இதில் அடங்கும்.
அதோடு தகுதியற்றவர்களுக்கு (அநாதிகாரிகள்) இந்த உபதேசத்தை வழங்குதலும் இதில் அடங்கும்.

இரண்டாவது மந்திரம் தொடர்பானது (மந்த்ர பரிபாவம்). மந்திரத்தின் பொருளை மறத்தலும்,
தவறாக அதன் பொருளைப் புரிந்துகொள்ளுதலும் இதில் அடங்கும்.

மூன்றாவது மந்திரம் விளக்கும் எம்பெருமானுக்கு இழைக்கும் நிந்தனை (தேவதா பரிபாவம்).
தம்முடைய மனது, வாக்கு, செயல் ஆகியவற்றை எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் செலுத்துதல் இதில் அடங்கும்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் தாம் இந்த மூன்று அபசாரங்களையும் புரிந்தவர் என்றும்
அந்நிலைக்கு சிறிதும் மனக் கலக்கம் அடையாமலிருப்பவர் என்றும் குறை கூறுகிறார்.

———

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச
வாசா யோஹம் சராமி ஸததம் த்ரிவிதா4பசாராந்
ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்3வதே3வ
காலம் நயாமி யதிராஜ! ததோऽஸ்மி மூர்க2:

யதிராஜா! என்னுடைய மனதாலும், வாக்காலும், உடலாலும், மூன்றுவிதமான அபசாரங்களைச் செய்கிறேன்.
என்னே சோகம். உங்களுக்கு துக்கத்தை விளைவிக்கக்கூடிய பலப்பல செயல்களைச் செய்கிறேன்.
இருப்பினும், தங்களுடைய திருவுள்ளத்திற்க்கு மாறாக எதையும் செய்யாதவன் போன்று நடிக்கிறேன்.
என் காலத்தை இவ்விதமாகவே செலவிடுகிறேன். உண்மையில் நான் ஒரு வெறுக்கக்கூடிய, இகழக்கூடிய போக்கிரியே.

தம்முடைய நைச்சிய நிலையைத் தொடரும் ஸ்வாமி தான் பாகவத அபசாரம், பகவத் அபசாரம், அஸஹ்யாபசாரம்
ஆகிய மூன்று குற்றங்களையும் உடையவன் என்று கூறுகிறார். எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை
நோக செய்துவிட்டதாகச் சொல்லுகிறார். இருப்பினும் எம்பெருமானார் வழிவகுத்த அத்தனை நெறிகளையும்
முறை தவறாமல் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்வதாக கூறுகிறார்.
இவ்வுலகிலே தாம் இவ்வறே தன்னுடைய காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்.

———–

பாபே க்ருதே யதி3 ப4வந்தி ப4யாநுதாப
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கத2ம் க4டேத
மோஹேந மே ந ப4வதீஹ ப4யாதி3லேS:
தஸ்மாத்புந: புநரக4ம் யதிராஜ! குர்வே

யதிராஜா! எவனொருவன் தான் செய்யும் பாபங்களை எண்ணித் துக்கமும், பயமும், பச்சாதாபமும் கொள்கிறானோ,
அவன் அதே பாபங்களை மீண்டும் மீண்டும் எங்கனம் செய்வான்? அனால் நானோ, நான் செய்யும் பாபங்களைப் பற்றி
சிறிதளவேணும் வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாதவனா யிருக்கிறேன்.
ஆகையினாலேயே நான் மீண்டும் மீண்டும் அப்பாபங்களைச் செய்துகொண்டே இருக்கிறேன்.

நாம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடுவது என்பது இவ்வுலகில் இயலாத காரியம். இருந்தாலும்,
எவனொருவன் தான் செய்யும் செய்த பாபங்களை எண்ணி பயமும், வெட்கமும், வெறுப்பும் கொள்கிறானோ
அவனுக்கு பிராயச்சித்தம் உண்டு என்பது மோலோர் வாக்கு. இந்நிலைக்கு வந்தபின் குறந்த பட்சம்
அவன் தெரிந்தே அந்த பாபங்களைச் செய்யமாட்டான். ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த நிலையையே இங்கே குறிப்பிடுகிறார்.
தான் தன்னுடைய பாபங்களை எண்ணி வெட்கப்படுவதில்லை என்று குறைபடுகிறார்.
இந்நிலையிலிருந்து தம்மை மாற்ற எம்பெருமானாரின் கருணையை வேண்டுகிறார்.

தம் பாபங்களை எண்ணி வெட்கப்படவேண்டிய நிலையை பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி
தம்முடைய ஸ்ரீவசனபூஷணத்தின் வியாக்கியானத்திலே ஒரு சிறு சம்பவத்தின் மூலம் விவரிக்கிறார்.
ஸ்வாமி கூரத்தாழ்வானுக்கு சேரப் பிள்ளை பிள்ளையாழ்வான் என்றொரு சிஷ்யன் இருந்தார்.
அவர் மிகுந்த அகந்தையும், செருக்கும், இறுமாப்பும் உடையவராய் பல பாகவத அபசாரங்களைச் செய்துவந்தார்.
ஸ்வாமி கூரத்தாழ்வான் அவரை ரக்ஷிக்க திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் அந்த சிஷ்யனிடம் கூரத்தாழ்வான்
தமக்கு ஒரு தானம் அள்ளிக்குமாறு விண்ணப்பித்தார். பிள்ளையாழ்வான் மிக்க ஆனந்தத்துடனும், கிளர்ச்சியுடனும்
தம்முடைய ஆசார்யன் திருவுள்ளத்தை நிறைவேற்ற ஒப்புவித்தார்.
மனத்தாலும், வாக்காலும், உடலாலும் ஒருபோதும் பாகவத அபசாரம் செய்யமாட்டேன் என்ற சத்தியத்தையே
கூரத்தாழ்வான் தன் சிஷ்யனிடம் ஒரு உதக தானமாக பெற்றுக்கொண்டார். பிள்ளையாழ்வானும் அங்கனமே நடந்துவந்தார்.
ஒருசமயம், அவர் தன்னுடைய புத்திக்குறைவால் பாகவத அபசாரத்தை செய்ய நேர்ந்தது.
தாம் செய்த பாபத்தை உணர்ந்த பிள்ளையாழ்வான், மிகுந்த வெட்கத்துடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்லாமலேயே இருந்தார்.
சிஷ்யனைக் காணாத கூரத்தாழ்வான், பிள்ளையாழ்வான் இல்லத்திற்குச்சென்று நடந்ததை அறிந்தார்.
தன் திருவடிகளில் விழுந்த பிள்ளையாழ்வானைக் கைக்கொண்டு கூரத்தாழ்வான் பின்வறுமாறு உப்தேசித்தார்:
“நீர் உம்முடைய பாகவதர்களுக்கு மானசீகமாகச் செய்த அபசாரத்தைப் பற்றி மனத்தால் வெட்கமும், வேதனையும்
உடையவராயிருந்தால் சர்வேஸ்வரன் அதை மன்னிப்பான். நீர் உடலால் செய்யும் குற்றங்களுக்கு
அரசன் தகுந்த தண்டனை யளிப்பான். ஆகையால் உம்முடைய சத்தியத்திலே உறுதியாக இரும்”.

————

அந்தர்ப3ஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீSம்
அந்த4: புரஸ்ஸ்தி2தமிவாஹமவீக்ஷமாண:
கந்த3ர்பவஸ்ய ஹ்ருத்3யஸ்ஸத்தம் ப4வாமி
ஹந்த! த்வத3க்3ரக3மநஸ்ய யதீந்த்ர! நார்ஹ:

யதிராஜா! தங்கள் முன் நிற்க்கவும் நான் தகுதியற்றவன். எங்கனம் பிறவிக் குருடனைப் தன் முன்னே
உள்ளவற்றை அறியும் திறன் இல்லாதிருக்கிறனோ, அங்கனம் நானும் அந்தர்யாமியாய் எல்லாவற்றின்
உள்ளும் புறமும் நிறைந்து இருக்கும் எம்பெருமானை அறியத் திறன் அற்றவனாயிருக்கிறேன்.
எப்பொழுதும் மோகத்திற்க்குக் கட்டுப் பட்டவனாய் உள்ளேன். என்னே பரிதாபம்.
தங்கள் முன் இங்கனம் நிற்க யாதொரு தகுதியுமற்று இருக்கிறேனே!

முந்தைய பாசுரத்திலே, ஸ்வாமி மணவாள மாமுனிகள் “புந: புந: அக4ம் யதிராஜ! குர்வே” என்று அருளினார்.
எல்லா கார்யங்களுக்கும் சாக்ஷியாகவும் (ஸர்வ காம சாக்ஷி) ஸ்துலமாகவும், ஸுக்ஷமமாகவும் நிறைந்து விளங்கும்
எம்பெருமானை ஸ்வாமி எங்கனம் ஏமாற்ற இயன்றது என்ற வினாவிற்க்கு மறுமொழியாகவே இந்த பாசுரம் அமைகிறது.
தம்முடைய மறுமொழியிலே ஸ்வாமி, தான் ஒரு பிறவிக் குருடனைப் போன்றவனென்றும், அதனாலேயே எங்கும் நிறை
பரம்பொருளை உணரத் தகுதியுன்றி இருப்பதாகவும் வருந்துகிறார்.
இத்தகைய தம்முடைய நிலையிலே எம்பெருமானாரின் முன் நிற்க தமக்கு என்ன தகுதியுண்டு என்று அஞ்சுகிறார்.

———–

தாபத்ரயீஜநித து3:க2நிபாதிநோऽபி தே3
ஹஸ்தி2தெள மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தெள
ஏதஸ்ய காரணமஹோ! மம பாபமேவநாத!
த்வமேவ ஹர தத்3யதிராஜ! ஷீக்4ரம்

சந்யாசிகளின் அரசனே! மூன்று விதமான தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களினால் என் உடம்பு
துன்பமும், வேதனையும், நோய்களையும் அடைகிறது. என்னால் அத்துன்பங்களைத் தாங்க முடியவில்லை.
இருப்பினும், இவ்வுடலை விட்டு நீங்க எனக்கு எனக்கு எந்த விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை.
உண்மையில் நான் இந்த உடலை நன்கு பேணிப் பாதுகாக்கிறேனே! நான் குவித்து வைத்திருக்கும்
என்னற்ற பாபங்களே என்னுடைய இந்த மனநிலைக்குக் காரணம். எந்தோ பரிதாபம்! என்னுடைய பரமாசாரியனே!
தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களிலிருந்து நான் விடுபட என் பாபங்களையெல்லாம் அகற்ற இறைஞ்சுகிறேன்.

ஆத்யாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்பனவையே தாப த்ரயங்கள்.

முதலாவதான ஆத்யாத்மிகம் என்பது நம் கைகளாலும், கால்களாலும், மற்றைய உடல் உருப்புகளாலும் உண்டாகும் துன்பங்கள்.
இது இரண்டு வகைப்படும். சரீரம் மற்றும் மானஸம். சரீரம் என்பது வியாதி எனவும், மானஸம் என்பது ஆதி எனவும் உணரப்படுகிறது.
இவையிரண்டும் சேர்ந்து ஆத்யாத்மிகம் எனப்படுகிறது.

இரண்டாவதான ஆதிபெளதிகம் என்பது விலங்குகளாலும், மனிதர்களாலும், அசுரர்களாலும் உண்டாகும் துன்பங்களாகும்.

மூன்றாவதான ஆதிதைவிகம் என்பது காற்று, மழை, குளிர் போன்ற இயற்க்கையின் சீற்றத்தினால் உண்டாகும் துன்பங்களாகும்.

இம்மூன்றையும் சேர்த்தே “தாபத்ரயீஜநித து3:க2” என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொல்லுகிறார்.
தாப த்ரயங்களினால் உண்டாகும் இத் துன்பங்களை எல்லாம் தாம் இன்பம் என்று எண்ணும் குற்றத்திற்க்குத்
ஆளானதாக மாமுனிகள் கூறுகிறார். இத்தகைய தம்முடைய நிலைக்குத் தன்னுடைய பாபங்களே காரணம் என்கிறார்.
இந்நிலையில், எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானை முற்றும் உணர்ந்த என்பெருமானாரிடம்
தன்னுடைய பாபங்களையெல்லாம் கருணையுடன் நீக்கும்படி வேண்டுகிறார்.

—————–

வாசாமகோ3சர மாஹாகு3ண தே3S¢காக்3ர்ய
கூராதி4நாத2 கதி2தாகி2ல நைச்யபாத்ரம் |
ஏஷாऽஹமேவ ந புநர்ஜக3தீத்3ருSஸ்தத்
ராமாநுஜார்ய! கருணைவ து மத்3க3திஸ்தே ||

இராமானுசா, ஆசாரியனே! இந்த உலகிலே தண்டனைக்குரிய, குற்றமுடைய, உபயோகமற்ற குணங்களை யெல்லாம்
பொருந்திய ஒருவன் நான் ஒருவனாகவே இருக்கமுடியும். என்னைத்தவிர வேறு எவரும் இதற்க்குப் பொருத்தமாகவே முடியாது.
ஆகையினாலேயே, என்னுடைய இந்த குற்றங்களிலிருந்தும், தடைகளிலிருந்தும் என்னை நீக்க
உம்முடைய கருண ஒன்றே பொருத்தமானது என்று முடிவுற்றேன். அக்கருணையால் என்னை காக்க வேண்டுகிறேன்.

மிகச்சிறந்த ஆசார்யனும், எம்பெருமானார் இராமானுசரின் தலையாய சீடருமாய கூரத்தாழ்வான்
ஸ்ரீவரதராஜஸ்தவம், ஸ்ரீவைகுந்தஸ்வம் என்ற உயர்ந்த பிரபந்தங்களிலே தம்மை இவ்வுலகிலேயே
தாழ்ந்த ஒரு பாபி என்று தாழ்த்திக்கொள்கிறார். ஒரு சுய பச்சாதாபத்தினாலேயே இவ்வாறு ஆழ்வான் கூறுகிறார்.
எம்பெருமானின் முன் உயர்ந்த நம்முடைய ஆச்சார்யர்கள் இங்கனம் சுய கண்டனத்தினால் தங்களைத் தாழ்த்திக் கொள்வது
அவர்களிடம் அத்தகைய குற்றங்கள் உள்ளன என்பதனாலன்று.
அவர்கள் அங்கனம் செய்வது நம்முடைய நன்மையை மனதிலே கொண்டே ஆகும்.
நம்முடைய பாபங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே ஆகும்.
இந்நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகளும் காட்டுகிறார்.

மாமுனிகள் “வாசாமகோசர மாஹாகுண தேS¢காக்ர்ய” என்று கூரத்தாழ்வானைக் கொண்டாடுகிறார்.
கூரத்தாழ்வானின் எண்ணற்ற மங்களகரமான கல்யாண குணங்களை நாவினால் விவரிக்க இயலாதென்று வியக்கிறார்.
மேலே கூறிய பிரபந்தங்களிலே கூரத்தாழ்வான் காட்டியுள்ள நைச்சியாநுசந்தானத்திற்க்குக் காரணம்
நம்மையெல்லாம் பாபங்களிலிருந்து விலக்க எம்பெருமானிடம் வேண்டுவதற்க்கே ஆகும்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் கூரத்தாழ்வான் காட்டியுள்ள அத்தகைய நைச்யாநுசந்தானத்திற்க்கும்
தாமே எல்லா உலகங்களிலும் பொருத்தமானவன் என்கிறார். ஆகையினால் இராமானுசரின் கருணைக்கு இலக்காக
மாமுனிகளை விட வேறு எவரும் இருக்கமுடியாது என்று தலைக்கட்டுகிறார்.
திருவரங்கத்து அமுதனாரும் இக்கருத்தையே “நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின்கண் அன்றிப்
புகல் ஒன்றுமில்லை, அருட்க்கும் அஃதேபுகல்” என்ற இராமானுச நூற்றந்தாதி பாசுரத்திலே அருளிச் செய்கிறார்.

———-

S¦த்3தா4த்ம யாமுநகு3ரூத்தம கூரநாத2 ப4ட்டாக்2ய
தே3S¢கவரோக்த ஸமஸ்தநைச்யம் |
அத்3யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாத்3யதீந்த்3ர கருணைவ து மத்3க3திஸ்தே

இராமானுசா! உயர்ந்த உத்தமமான ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர்
போன்றோர் வெளிப்படுத்திய சுய கண்டன உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக நான்
சொந்தமாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், யதிராசனே! உம்முடைய கருணைக்கு நானே பொருத்தமானவன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்திலும் நைச்சிய பாவத்தையே தொடர்கிறார்.
எம்பெருமானாரின் கருணைக்குத் தம்மை விட சிறந்த தகுதியானவன் இருக்கவே முடியாது என்று அறுதியிடுகிறார்.
மாமுனிகள் இங்கே குறிப்பிடும் உயர்ந்த ஆசார்யர்கள் அனைவரையும் சுத்த ஆத்மாக்கள் என்றும்,
குற்றமற்றவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். அர்ச்சா மூர்த்தியாகத் திருவரங்கத்திலும், காஞ்சியிலும்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் கருணையை வேண்டியே தங்களை பாபிகள் என்று கூறியுள்ளனர்.

ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே தாம் உபயோகமற்றவன் என்று இரண்டு ஸ்லோகங்களிலே விவரிக்கிறார்.
“ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே (23)” மற்றும் “அமர்யாத: க்ஷூத்ர: (62)” ஆகிய ஸ்லோகங்களில்
ஸ்வாமி ஆளவந்தார் தம்மை சாஸ்திரங்களினால் புறக்கணிக்கப்பட்ட, இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய
எல்லா பாபங்களையும் செய்தவன் என்றும், அகந்தையுள்ளவனென்றும், தாழ்ந்தவனென்றும் கூறிக் கொள்ளுகிறார்.
அவர் இவ்வாறு கூறுவதற்க்குக் காரணம் நம் போன்றவர்களை யெல்லாம் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டு
எம்பெருமானிடம் அவன் கருணையைப் பெருவதற்க்காகவேயாம்.

கூரத்தாழ்வான் மேலே கூறியது போலே தாப த்ரயங்களினால் பலப்பல குற்றங்களைச் செய்தவன் தான் என்று கூறுகிறார்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் அதே பாவனையை இங்கே வெளிப்படுத்துகிறார்.
இத்தகைய பாவனையையே பராசர பட்டரும் அரங்கநாதனிடம் வெளிப்படுத்துகிறார்.

ஸ்வாமி தேசிகன் தம்முடைய நைச்யாநுசந்தான நிலையை பலப்பல ஸ்லோகங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.
திருவஹீந்திபுரம் தேவநாதப் பெருமாளுடன் நெஞ்சுருக்கும் தம்முடைய சம்பாஷணையிலே ஸ்வாமி தேசிகன்
தன்னுடைய குறைகளினால் பச்சாதாபம் கொண்டு தம்மை தாழ்திக்கொள்கிறார்.
இந்த ஸ்லோகங்கள் அவருடைய மன நிலையைக் குறிக்கின்றனவே யன்றி
அவருக்கு குற்றமேதும் இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தேவநாதனே! சாஸ்திரங்களின் உண்மையான பொருளை அறியாத அங்ஞானக் கடல் உண்மையில் நான் ஒருவனே ஆகும்.
பாபங்களையே செய்வது என்று சபதம் எடுத்துக்கொண்டுள்ளவர்களில் முதன்மையாக நான் நிற்கிறேன்.
உன்னுடைய கட்டளைகளையெல்லாம் வரம்பு மீறுவதிலும் நானே முதன்மையானவன்.
இப்படி உதவியற்ற நிலையில் இருக்கும் நானே உன்னுடைய கருணைக்கு மிகவும் தகுதியுடையவன்.
எல்லாம் அறிந்த ஸர்வ ஞானஸ்தனாகிய நீ உன்னுடைய கருணைக்கு என்னைத் தவிர வேறு ஒருவரை எவ்வாறு கருதலாம்?

மற்றொரு இடத்திலே ஸ்வாமி தேசிகன் தன்னை அபராத சக்ரவர்த்தி என்று கூறிக்கொண்டு
எம்பெருமானின் கருணையை இறஞ்சுகிறார்.
———

Sப்3தா3தி3போ4க3விஷயா ருசிரஸ்மதீ3யா
நஷ்டா ப4வத்விஹ ப4வத்3த3யயா யதீந்த்3ர |
த்வத்3தா3ஸதா3ஸக3ணநா சரமாவதெள4
ய: தத்3தா3ஸதைகரஸதாऽவிரதா மமாஸ்து ||

யதிராசனே! என் சரீர சம்பந்தத்தினால் கிடைக்கும் சிற்றின்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற
ஆசையைத் துறக்க அருள் புரியவேண்டுகிறேன். பிற்காலத்தில் துன்பத்தையே உண்டாக்கும்
அந்த சிற்றின்பங்களின் மேல் உள்ள விருப்பத்தை சுவையை உம்முடைய தயையால் அகற்ற வேண்டுகிறேன்.
உம்முடைய அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியாராய் என்றென்றும் நீடித்து இருக்கக்கூடிய
நிலையை வழங்க வேண்டுகிறேன். உமக்கு சமர்ப்பிக்க என்னிடம் எதுவுமேயில்லை.
உம்முடைய நிர்ஹேதுக கருணையையே என்னை இரட்சிக்க வேண்டும்.

————-

SQருத்யக்3ரவேத்3ய நிஜ தி3வ்ய கு3ண ஸ்வரூப:
ப்ரத்யக்ஷ தாமுபக3தஸ்த்விஹ ரங்க3ராஜ:
வSQயஸ்ஸதா3 ப4வதி தே யதிராஜ!
தஸ்மாத் Sக்த்ஸ்ஸ்வகியஜந பாப விமோசநே தவம் ||

யதிராசனே! ஸ்ரீரங்கநாதன் உலகத்தோர் எல்லோருடைய சந்தோஷத்திற்க்காக ஸ்ரீரங்கத்திலே ஸேவை ஸாதிக்கிறான்.
வேதங்களினால் பிரகடணப்படுத்தப் பட்டுள்ள அர்த்தங்களாலேயே நம்மால் அவனுடைய கல்யாண குணங்களை
புரிந்து கொள்ள முடியும். நிகரில்லாத சக்தியையும், புகழையும் உடைய அந்த அரங்கநாதனே உமக்கு கட்டுப்பட்டு இருக்கிறான்.
ஆகையால், ஆசார்ய ஸார்வபெளமா! நீரே என்னுடைய துன்பங்களைப் போக்க வல்லவர்.

அரங்கநாதன் ஸ்வாமி இரமானுசருடைய செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவன் என்பது உலகறிந்த உண்மை.
இவ்வுண்மையை மாமுனிகள் எம்பெருமானாருக்கு நினைவு கூர்கிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் மேலே
விளக்கிய பல பாசுரங்களில் எம்பெருமானின் கருணையைவிட எம்பெருமானாரின் கருணையையே வேண்டுகிறார்.
இதற்கு மறுபடியாக ஸ்வாமி இராமானுசர் திருவரங்கத்து அரங்கநாதனே மாமுனிகளின் துன்பங்களைப் போக்கி
அவர் வேண்டும் வரங்களை அளிக்க வல்லவன், தான் அல்லன் என்று கூறுவதாகக் கொண்டு,
அதற்கு இப்பாசுரத்திலே விளக்கம் அளிக்கிறார். அரங்கநாதனிடம் வேண்டாமல் ஸ்வாமி இராமானுசரிடம்
வேண்டுவது பொருத்தமற்ற செயல் என்று தோன்றுவார்க்காக இப்பாசுரத்தை மாமுனிகள் வழங்குகிறார்.
ஸ்வாமி இராமானுசருக்கும் அரங்கநாதனுக்கும் இடையே சரணாகதி கத்யத்திலே நடந்த உரையாடலை
இப்பாசுரத்திலே மாமுனிகள் நினைவு கூர்கிறார்.

மேலும், அரங்கநாதன் எம்பெருமானாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் என்பது
ஒரு சிறு சம்பவத்தால் விளக்கப் படுகிறது. ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவ சலவையாளன் ஒருவன்
அரங்கநாதனின் பரிவட்டங்களை மிகச் சுத்தமாகத் தோய்த்து நல்லவண்ணம் மடித்து ஸ்வாமி இராமானுசரிடம் சமர்பித்தான்.
சலவையாளனின் இந்த கைங்கர்யத்தினால் திருவுள்ளத்திலே மிக்க சந்தோஷம் கொண்ட ஸ்வாமி இராமானுசர்
அந்த சலவையாளனை அரங்கநாதனின் சன்னிதிக்கு அழைத்துச் சென்று
அவனுக்கு அனுக்ரகம் செய்தருள அரங்கநாதனிடம் வேண்டினார். அரங்கநாதனும் அவ்வண்ணமே இசைந்து
தம் திருக்கண்கள் மலர்ந்து ஆசார்யன் விண்ணப்பப்படியே அந்த சலவையாளனை அனுக்ரகித்தார்.
அப்பொழுது அரங்கநாதன் எம்பெருமானாரிடம் அந்த சலவையாளன் தாம் கிருஷ்ணாவதாரத்திலே எழுந்தருளியிருந்த
போது தமக்குச் செய்த அபசாரத்தையும் மன்னித்துவிட்டதாகத் திருவாக்கு அருளினார்.
கிருஷ்ணாவதாரத்தின் போது அந்த சலவையாளன் கம்ஸனுடைய சபையிலே பணியாற்றியவன்.
ஒரு சமயம் மதுராவிலே கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் அவர்களுடைய பரிவட்டங்களைக் கொடுக்க மறுத்தவன்.
அத்தகையவனையும் எம்பெருமானனருடைய விண்ணப்பத்தினால் அரங்கநாதன் அனுக்ரகித்தது
ஸ்வாமி இராமானுசரிடம் அரங்கநாதனுக்கு உள்ள மேன்மையான பந்தத்தையே விளக்குகிறது.
இந்த சம்பந்தத்தையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் இங்கே குறிப்பிடுகிறார்.
இத்தகைய உயர்ந்த சம்பந்தம் உடையவராதலால் ஸ்வாமி இராமானுசரே
மாமுனிகளின் துன்பங்களைப் போக்க வல்லவர் எனத் தலைக் கட்டுகிறார்-

———

காலத்ரயேऽபி கரணத்ரய நிர்மிதாதி
பாபக்ரியஸ்ய Sரணம் ப4க3வத்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேऽர்தி2தா யத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வச்ச்2ரிதாநாம் ||

ஸ்வாமி இராமானுசா! மனத்தாலும், உடலாலும், வாக்காலும் கணக்கற்ற பாபங்களைப் புரிந்த ஒருவனுக்கு
திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கும் அரங்கநாதன் ஒருவனே முக்காலத்திலும் புகலிடம். உண்மையில்,
அரங்கநாதனிடம் பங்குனி உத்திர நன்நாளிலே சரணாகதி கத்யம் மூலம் தாங்கள் செய்த பிரார்த்தனையே
எங்களுடைய பாதுகாப்பாகும். அதுவே எங்களுடைய ஒரே அரண்.

எம்பெருமானார் சரணாகதி கத்யத்திலே அரங்கநாதனிடம் செய்த பிரார்த்தனையையும்,
அதற்கு அரங்கநாதனின் மறுபடியையும் இங்கே ஸ்வாமி மணவாள மாமுனிகள் நினைவு கூர்கிறார்.
அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசரின் சரணாகதியை ஏற்று எம்பெருமானார் மட்டுமின்றி
எம்பெருமானாரின் சம்பந்தம் உடைய எல்லோரும் தன்னுடைய கருணைக்குப் பாத்திரமானவர்கள் என்று அறுதியிட்டான்.
இந்த சம்பந்த வரத்தையே மாமுனிகள் இங்கே வேண்டுகிறார்.
ஆசார்ய இராமானுச சம்பந்தம் நம்முடைய பெரும் அதிருஷ்டமே ஆகும்.

———-

ஸ்ரீமந்! யதீந்த்3ர! தவ தி3வ்யபதா3ப்3ஜஸேவாம்
ஸ்ரீஸைலநாத2 கருணாபரிணாமத3த்தாம்
தாமந்வஹம் மம விவர்த4ய நாத2!
தஸ்யா: காமம் விருத்3த4மகி2லம் ச நிவர்தய த்வம்

இராமானுசா! எம்பெருமானாரே! தங்களுடைய திருவடித் தாமரைகளின் தரிசனத்தை நாள் தோறும் பெற அருளவேண்டும்.
அந்த பாக்கியம் எனக்கு என்னுடைய ஆசாரியரான திருவாய்மொழிப் பிள்ளையின் அருளால் எனக்குக் கிட்டியது.
என் ஆசாரியருக்கு என்மேல் உள்ள அபார காருண்யத்தினாலேயே எனக்கு அந்த பாக்கியம் கிட்டியது.
தங்களுடைய திருவடி தரிசன பாக்கியத்திற்க்குத் தடையாக இருக்கும் யாதொறு ஆசையையும் விலக்க வேண்டுகிறேன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய ஆசாரியரான திருவாய் மொழிப் பிள்ளையின் (ஸ்ரீஸைல நாதர்)
விண்ணப்பத்தினாலேயே யதிராஜ விம்ஸதியை அருளிச்செய்தார்.
அந்த காரணத்தினாலேயே ஸ்வாமி இராமானுசரின் திருவடி தரிசனம் கிட்டியதாகவும்,
அந்த பாக்கியும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.

——

விஜ்ஞாபநம் யதி3த3மத்3ய து மாமகீநம்
அங்கீ3குருஷ்வ யதிராஜ! த3யாம்பு3ராஷே |
அஜ்ஞோऽயமாத்ம கு3ணலேS விவர்ஜிதSQச
தஸ்மாத3நந்யSரணோ ப4வதீதி மத்வா ||

யதிராசனே! கருணைக் கடலே! நான் தத்வம், ஹிதம், புருஷார்த்தம் போன்ற உயர்ந்த உண்மைகளை அறியாதவன் என்றும்,
எவ்விதமான ஆத்ம குணங்களும் அற்றவன் என்றும் உணர்ந்து கொள்ளுங்கள். தேவரீருடைய கருணையையும்,
இரக்ஷகத்தையும் வேண்டும் என்னுடைய பிரார்த்தனையை ஏற்று அருள் புரிய வேண்டுகிறேன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் மூன்றாவது பாசுரமான (வாசா யதீந்த்3ர! மநஸா வபுஷா ச யுஷ்மத்) என்ற
பாசுரத்திலே தொடங்கி இதற்கு முந்தைய பாசுரம் வரை எம்பெருமானாரிடம் பல பிரார்தனைகளையும்,
விண்ணப்பங்களையும் செய்கிறார். இந்தக் கடைசிப் பாசுரத்திலே அந்தப் பிரார்த்தனைகளை யெல்லாம்
ஏற்றுக் கொண்டு அருள் புரியவேண்டுமென்று ஸ்வாமி இராமானுசரிடம் இறைஞ்சி
ஸ்ரீ யதிராஜ விம்ஸதியைத் தலைக் கட்டுகிறார்.

—————————————-

இதி யதி குலதுர்ய மேதமாநை –ஸ்ருதி மதுரை ருதிதை ப்ரஹர்ஷ யந்தம்
வர வர முனி மேவ சிந்த யந்தீ மதிரிய மேதி நிரத்யயம் பிரசாதம் –

செவிக்கு இனிய செஞ்சொற் களான எம்பெருமானாரைத் ஸ்துதித்து மகிழ்ந்த திரு உள்ளம் யுடையவரான மா முனிகளையே
சிந்தனை செய்யும் என்மனதானது ஒப்பில்லாத தெளிவு பெற்று விளங்குகிறது –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -20-

October 31, 2020

பல அத்யாயம் விம்சதி லக்ஷண மீமாம்ஸையில் இறுதி அத்யாயம்
சாதனமும் பலமும் ஒருவாறு ஓத்தே இருக்கும் -ஒன்றும் ஆகும் –
சித்த லக்ஷணம் ஆகிற ப்ரஹ்மமே பலமும் ஆகிறது –
ஆகையால் பலமான பர ப்ரஹ்ம ஸ்வரூபமே சாதன அத்தியாயத்தின் நடுவில்
உபய லிங்க அதிகரணம் முதல் சில அதிகரணங்களிலே விசாரிக்கப் படுகிறது என்று
அதிகரண சாராவளியில் காட்டப் பட்டுள்ளது
முக்தி பலத்தைக் கீர்த்தனம் செய்து முக்தி பல அதிகரணத்தோடு சாதன அத்யாயம் முடிந்தது –

ஆ வ்ருத்திர் அஸக்ருத் உபதேசாத் -என்று அன்வஹம் த்யானம் செய்யும் பக்தி உபாயத்தோடு
பல அத்யாயம் தொடங்கிற்று
முதல் பாதம் முன் பாகத்தில் சாதனமான பக்தியின் ஸ்வரூபத்தை விசாரித்தது –
சாதனமான பக்தியும் மிகுந்த ஸூ கமாய் இருப்பதால் பல கோடியில் சேருவதால் சாதனத்தையும்
விசாரித்தது என்று ஸ்ருத ப்ரகாசிகை காட்டிற்று –
பலத்திற்காக சாதனமா -அல்லது சாதனமே பலமா என்கிற விசாரம் கேவலம் ஸ்ரம பலமே யல்லாது
முடிவு ஏற்படுவது கஷ்டம் என்றது சங்கல்ப ஸூர்ய உதயம்
பலார்த்தம் தத் கிம் வா பலமிதி விதர்க்க ஸ்ரம பல
பலா நாம் நேதா ய பலமிதி ச சாரீரக மித -என்று சதுஸ்லோகீ ஸ்லோக மங்கள ஸ்லோகம் –

பத்தொன்பதாம் ஸ்லோகத்திலேயே போக பலத்தையும் ஸூ சித்து விட்டதாகவும் சொல்லலாம் –
நித்ய சேஷித்வ யோகாத் -என்றபடி பெருமாளுக்கு சேஷித்வமே நித்யம் என்பது போல்
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் –என்று ஆழ்வார் திருவடிகளே எக்காலத்திலும் சரணம் என்றது
எமக்கு எம்பெருமானார் விஷயத்திலும் துல்யமே–
இந்த ஸ்துதி முடிவிலும் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்பது
அநந்ய சரணோ பவதீதி -என்று அறுதி இட்டு ஸ்துதியை முடிக்கும் அழகு ரசிக்கத் தக்கது –

ஸ்துதியின் கடைசி பக்கத்திலேயே உம் திருவடிகளே சரணம் என்று சொல்லி விட்டார் –
ஸ்துதியை முடித்து விட்டு ஸ்துதிக்கு வெளியில் சொல்லிக் கொள்ளும் படி விட்டு விடவில்லை –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்னும் ஸ்ரீ வைஷ்ணவ முத்ரை ஸ்தோத்திரத்தின்
கடைசி பாகத்திலேயே அமைந்து விட்டது –

பெருமாள் திருவடி சேவா பலமான மோக்ஷ பலமும் முன் ஸ்லோகத்திலேயே கூறப்பட்டு உள்ளது –
இந்த ஸ்துதிக்கு பலம் ஸ்துத்யரான எம்பெருமானாருடைய அங்கீ காரம் –
அது இந்த ஸ்துதிக்கு ஸாஷாத்தான பலம் –அந்த பலத்தை இங்கே கூறுகிறார் –
மது மதந விஞ்ஞாபன மிதம் -என்று ஸ்தோத்ர ரத்ன முடிவில் உள்ளத்தையும்
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா –என்கிற கடைசி வார்த்தையும் இங்கே அநுஸந்திப்பதும் ஸ்பஷ்டம் –
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய – என்று அங்கே பிரார்த்தித்தபடியே இங்கும்

ஸ்ரீ சைல நாதர் -என்கிற ஒரு நாதர் திரு நாமத்தைச் சொல்லி
அவர் கொடுத்த தானத்தை நீர் யதார்த்தம் ஆக்க வேண்டும் என்று முன் ஸ்லோகத்தில் கூறினார் –
அவர் செய்த தானத்தை நீர் விக்னம் வாராமல் பறி பாலனம் செய்ய வேண்டும்
என்று முன் ஸ்லோக பிரார்த்தனை –
உம் திருவடி சேவையை தானம் செய்தார்
அந்த தானம் அழியாமல் நீர் பரி பாலனம் செய்ய வேண்டும் -என்று அங்கே பிரார்த்தித்தது –
தான பாலனங்களுக்குள் பாலனமே உயர்ந்தது என்பர் –

விஜ்ஞாபனம் யதித மத்ய து மா மகீநம் –
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்புராசே
அஜ்ஞ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச –
தஸ்மாத் அநந்ய சரணோ பவதி இதி மத்வா –20-

யதிராஜ தயாம்புராசே-கருணைக் கடலான யதிராஜரே
அத்ய -இன்று
மா மகீநம்-அடியேனுடையதான
இதம் விஜ்ஞாபனம் -இந்த ஸ்துதி -விண்ணப்பம் என்று உம் திருவடிகளில் நித்ய சேவா பிரார்த்தனை –
யத் -யாது ஓன்று உண்டோ
அதை
அஜ்ஞ அயம் -இவன் அறிவில்லாதவன் -ஸம்யக் ஞானம் இல்லாதவன்
ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச -ஆத்ம குண லேசமும் அடியோடு இல்லாதவன் -சம்பந்த குண லேசமும் இல்லாதவன்
தஸ்மாத்-ஆகையால்
அநந்ய சரணோ பவதி இதி -வேறே கதி இல்லாதவனாய் இருக்கிறான்
இதி -என்று எண்ணி
மத்வா –என்னை
அங்கீ குருஷ்வ-திரு உள்ளம் பற்றி அருள வேணும்

விஜ்ஞாபனம்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி ஸ்ரீ கண்ணனுக்கு -விஞ்ஞா பயதி தே கிஞ்சித் – என்று
ஏழு ஸ்லோகங்களை விஞ்ஞாபனம் செய்தார் –
அங்கே ஸப்த பதியான விவாஹ பிரார்த்தனைக்கு ஏற்ப ஏழு ஸ்லோகங்கள்
இங்கே விம்சதி லக்ஷண மீமாம்ஸாதி பலமான மோக்ஷத்துக்கு ஏற்ப இருபது ஸ்லோகங்களால் விஞ்ஞாபனம் –
உம் திருவடி சேவை நித்யமாக நிர்விக்னமாக இருக்கும் படி காத்து அருள வேணும் –

யதிதம்
ஏதோ விது ஒரு கணக்கிலும் சேரத் தக்கது அல்ல
ஏதோ ஒரு முறையானது

அத்ய
நித்யமும் பாடி இன்று இன்று என்று சொல்லும் படி இருக்க வேண்டும்

மா மகீநம் –
விஞ்ஞாபநம் வனகிரீஸ்வர ஸத்ய ரூபாம் அங்கீ குருஷ்வ கருணார்ணவ மா மகீநம் –
ஸ்ரீ ரெங்க தாமநி யதா புர சேஷ போகம் ராமாநுஜார்ய வசக பரி வர்க்திஷீய -என்று
ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவ முடிவு ஸ்லோகம் அனுசரிப்பது ஸ்பஷ்டம் –
என்னுடைய ஸ்துதியை -ஏதோ என்று சொல்லும்படியான இந்த ஸ்துதியை -பெரியோர் அனுக்ரஹத்தால்
வந்தது என்று அவர்கள் சிரஸ்ஸில் பாரத்தைப் போட இஷ்டம் இல்லை –
எல்லாக் குறைகளும் என்னுடையவைகளாகவே இருக்கட்டும்
என்னைச் சேர்ந்தவர் பாடும் இந்த ஸ்துதியை -இந்த ஸ்துதி மூலம் அவர்கள் செய்யும் விஞ்ஞாபனத்தையும்
அங்கீ கரித்து அவர்கள் எல்லாரையும் நித்தியமாக உம் திருவடி சேவையைத் தந்து காத்து அருள வேணும் –

அங்கீ குருஷ்வ
திரு உள்ளம் பற்ற வேண்டும்
குருஷ்வ மாம் அநு சரம்

யதிராஜ
யதி சக்ரவர்த்தியே
ராஜா ப்ரக்ருதி ரஜ்ஞநாத் -உம் பிரஜைகளை ரஜ்ஞநம் செய்ய வேண்டியது உம் யதிராஜர் என்ற
திரு நாமத்துக்கு ஏற்றது –

தயாம்புராசே
தயை நீர்க்கடல்
உப்புக்கடல் அல்ல
பேர் அருளாளன் பேர் அருளும் உம் சாலைக் கிணற்று ஜலத்தைப் பருகிப் பெருகுகிறது என்று
தத்வ டீகை மங்களத்தில் அபி யுக்தர் அருளிச் செய்தார் –
ஸப்ததியிலும் – காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி -என்றார் –

அஜ்ஞ அயம்
அஞ்ஜோ ஜந்துர நீ சோயம் ஆத்ம ந ஸூக துக்கயோ -என்ற
பிரமாணத்தை நினைக்கிறார்
கர்ம பாரவஸ்யதயை அடைந்து அதனால் ஸம்ஸார பதவியில் பிரமித்து வருந்துகிறான்
இவன் தன்னையே ரஷித்துக் கொள்ள சக்தி இல்லாதவன்

இவன் அஞ்ஞனான ஐந்து -பசு ப்ராயன்
பெருமாள் உமக்கு வஸ்யராய் இருப்பதாலும்
உமது கருணை கடலை ஒத்து இருப்பதாலும்
உம் திருவடியைப் பற்றும் அஞ்ஞனான என் போன்ற ஆஸ்ரிதர்களைப் பெருமாள் திருவடிகளில்
சேர்த்துக் கரை ஏற்றினால் ஒழிய உம்முடைய தயா பூர்ண மனம் திருப்தி அடையாதது ஆகையால்
நீர் என் பிரார்த்தனையை அங்கீ கரித்து அருள வேணும் –

ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச –
ஞானம் தான் இல்லை
ஆத்ம குணம் தினை யாகிலும் இருக்கல் ஆகாதோ
அதுவும் அடியோடு இல்லை
வர்ஜித -விவர்ஜித –

தஸ்மாத்
நற் குணம் ஒன்றுமே இல்லை -ஞானமும் இல்லை –
ஆஸ்ரிதேத்ய ஆன்ரு சம்ஸ்யத
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம
ஆஸ்ரிதனைக் கைவிட்டால் ந்ருசம்சதா தோஷம் வரும்
கருணைக் கடலாய் இருப்பார்க்கு ந்ருசம்சதை அணுகலாமோ
அஞ்ஞத்வமும் ஆத்ம குண லேச விவர்ஜித்வமும் வேறே புகல் ஒன்றும் இல்லை என்பதை ஸ்தாபிக்கின்றன –
மீமாம்ஸா ஸூ த்ரங்கள் நியாய ஸூ த்ரங்கள் தஸ்மாத் என்று ஹேதுக்களால் நிகமனமாக சாதித்து வருகின்றன

இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமித்யக் அகதி அபுதஸ் அநந்ய சரண
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் அஸ்மீ த்யநவதே
தயாயாஸ் தே பாத்ரம் வந கிரி பதே ஸூந்தர புஜ -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -–132–
இந்த ஸ்லோகத்தை இங்கே அனுசரிப்பது ஸ்பஷ்டம்
ஸ்துதி ஆரம்பம் -2 ஸ்லோகம் ஆழ்வான் நினைவுடன் தொடங்கி ஆழ்வான் ஸ்மரணத்தோடே நிகமிக்கிறார்

அநந்ய சரணோ பவதி
தன்னிடம் குணம் ஒன்றும் இல்லை -ஞானமும் இல்லை
கருணைக் கடலான எம்பெருமானார் தயையை சரணம் பற்றுவதைத் தவிர வேறே கதி இல்லை
அவர் உடன் சம்பந்தத்தைத் தேடி அவரது அருளை –
கடாக்ஷத்தைப் பெறுவது தவிர வேறே புகல் இல்லை

இதி மத்வா –
என்று நினைத்து
ப்ரணத இதி தயாளு என்றபடி தாம் இருக்கும் இடம் –

சரணம் –
வீடு -வந்து பூமியில் நிபதினான காயினை சரணாகத்தான் என்று தம் நினைவாலே நினைத்து
கிருபையால் பரிபாலனம் பண்ணி அருளினார்
என்னுடைய துர் வ்ருத்தத்தை -துர் நடத்தையை

அசிந்த்யித்வ
நினையாமல் -அக்ருத்ரிமமாய் -வேஷம் இல்லாமல் முழு உண்மையாக உம் திருவடிகளில்
உயர்வற உயர்ந்த நிரதிசய ப்ரீதியை யுடைய ஆத்மாவான நாதமுனிகளை உத்தேசித்து
தேவரீர் பிரசாதம் செய்து அருள வேண்டும் -அங்கீ கரிக்க வேண்டும் என்று ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் முடிந்தது
அங்கெ ஸ்ரீ ராமனிடம் ஸ்ரீ நாதமுனிகளுக்கு அக்ருத்ரிமமான பக்தி இருந்தது என்றும்
காகாதி பக்தி எல்லாம் வேஷமே என்றும் ஸூசிதம்
காகம் இடத்தில் போல் பக்தி என்னிடம் க்ருத்ரிமமாய் இருந்தாலும் என்னைச் சரணாகதனாகவே
நீர் திரு உள்ளம் பற்றி என்னை ரக்ஷித்து அருள வேணும் என்று நிகமனம் செய்து அருளுகிறார் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -19-

October 31, 2020

சாரீரகத்தில் மூன்றாம் அத்யாயம் சாதன அத்யாயம் –
ப்ரஹ்ம பிராப்தி சாதனத்தில் -ஆச்சார்ய உபாசனம் ஸுவ்ஸம் -ஆச்சார்ய உபாசனம் முக்யம்
ஸ்வ ஆச்சார்ய பரம ஆச்சார்யர் எம்பெருமானார்
இந்த ஆச்சார்யர்களின் உபாசனம் பர ப்ரஹ்ம பிராப்தி சாதனம் ஆகும் –
புருஷகாரத்தில் எம்பெருமானார் புருஷகாரம் வேண்டும் -பெரிய பிராட்டியாரின் புருஷகாரமும் வேண்டும் –
அந்த ஸ்ரீ முக்கிய சாதனம் -ஸ்ரீ மன் என்று சாதனமான ஸ்ரீ விசிஷ்டனான நாராயணனை
ஸ்ரீ மன் ஸ்ரீ மன் என்று கத்யத்தில் திரும்பவும் திரும்பவும் கூப்பிடுவது போலே கூப்பிட வேண்டும் –
ஸ்ரீ சப்தத்தை முதலில் வைப்பதால் ஸ்ரீ யும் ஸ்ரீ மானும் முக்ய சாதனம் என்பதையும்
பக்தி பரிவாஹமான கைங்கர்ய லஷ்மியான ஸ்ரீ யினுடைய வை சிஷ்ட்யம் முக்கியம் என்பதையும் ஸூசித்து
இந்த ஸ்லோகத்தை சாதன அத்யாய ஸூசகமாக அமைக்கிறார் –

பகவத் சேவா சாதனம்
சேவா பக்தி உபாசனம் பர்யாய பதங்கள்
மாதவம் சேவ நீயம் -என்று முதல் பத்தில் மாதவ சேவை கூறப்பட்டது -அது அல்லவோ ப்ரஹ்ம பிராப்தி
இங்கே எம்பெருமானார் பாதாப்ஜ சேவையை சாதனமாகவும் பலமாகவும் கூறலாமோ என்னில்
இதற்கு சமாதானம் ஸ்தோத்ரத்தில் முதலிலேயே காட்டப்பட்டுள்ளது –
அங்கே தம்முடைய உத்தேச்யம்
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்-என்ற விசேஷணங்களால்
ஆழ்வார் கையில் பெருமாள் திருவடிகள் -ஆழ்வார் திருவடிகள் எம்பெருமானார் திரு முடியிலுமாக அனுசந்தானம்
எம்பெருமானார் திருவடிகள் சேவை கிடைத்தால் தன்னடையே பெருமாள் திருவடிகளில் சேவை ஸித்திக்கிறது

ஸ்ரீ மன் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-
ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம் தத்தாம் –
தாம் அந்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா-
காமம் விருத்தம் அகிலம் ச நிவர்த்தய த்வம் –19-

ஸ்ரீ மன் யதீந்திர -ஸ்ரீ பகவத் பக்தி பரிவாஹ கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய ஸ்ரீ லஷ்மண யோகியே
ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம தத்தாம் –எம் ஆச்சார்யர் ஸ்ரீ சைல நாதர் தயா காஷ்டையாகத் தந்து அருளிய
தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-உம்முடைய திவ்யமான திருவடித் தாமரைகளின் சேவை யாகிய
தாம் -அந்த அரும் பெரும் பேற்றை
அந்வஹம் -தினம் தோறும்
மம விவர்த்தய -எனக்கு விசேஷமாகப் பெருகச் செய்ய வேண்டும்
தஸ்யா விருத்தம்-அந்தப் பேற்றுக்கு இடையூறான
அகிலம்-எல்லாவற்றையும்
காமம் நிவர்த்தய -அடியோடு தொலைக்க வேண்டும்
அல்லது
அகிலம் காமம் நிவர்த்தய –எல்லாக் காமத்தையும் போக்க வேண்டும் –

ஸ்ரீ மன்
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்று லஷ்மணன் விஷயத்தில் ருஷி கூறியது
லஷ்மண முனிக்கும் பொருந்தியதே
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் என்று விஷ்ணு பதமான அந்தரிக்ஷத்திலே நின்றவனை
ஸ்ரீ மான் என்றார் ருஷி –
ஸா ஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம் -அம்ருத ஸ்ரீ ஸம் பன்னர்
இந்த ஸ்ரீ அவர் கையில் ஸித்தமாய் உள்ளதாய் அவர் பாதாப்ஜ சேவையை
பகவத் பாதாப்ஜ சேவையை உட்கொண்ட தீரும் –
மதுப் நித்ய யோகத்தையும் காட்டுகிறது –
சேஷத்வமே ஸ்ரீ யாகும் – நீர் சேஷனே -நிவாஸ ஸய்யா ஆஸனம்

யதீந்திர
ஸ்ரீ யபதித்தவம் என்பது பெருமாளுக்கு என்றைக்கும் அசாதாரணம் –
ஸ்ரீ மன் என்று கூப்பிட்டதில் அந்தப் பொருளில் இல்லை
ஸந்யாசியான யதீந்த்ரரை அன்றோ கூப்பிடுகிறேன்
செல்வ நாராயணனான சேஷி அல்ல
ஸந்யாசியான சேஷனைக் கூப்பிடுகிறேன் என்று உடனே வியாவருத்தி செய்கிறார் –
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்ன அநந்தரம்
ஐம்புலன் அகத்து அடக்கி – என்று அதிலே ஸ்வ ப்ரயோஜன புத்தியால் ப்ரவணம் ஆகிற இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைச் சொல்லிற்று இறே -என்ற
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ ஸூ க்திகள் ரசிக்கத் தக்கவை –

தவ
முன் சொன்ன இரண்டு விசேஷணங்களோடே விசிஷ்டமான உம்முடைய
முனி விசேஷணங்கள் அல்ல
பெருமாள் திருவடி சேவையோடு கூடியவர் என்று சித்தித்து விட்டது –
இதற்காகவே விசேஷணங்களை முந்துறக் கூறி -பின்பு -தவ -என்கிறார் –

திவ்ய பதாப்ஜ சேவாம்-
தாமரைப் பூ போன்ற ஸூ குமாரமான மெல்லடி
தாமரைப் பூவை விளையாட்டிற்காகக் கையில் வைத்துக் கொண்டு அதன் பரிமளத்தை
ஆக்ராணம் செய்து கொண்டு கண்களில் ஒத்திக் கொள்வர்
லீல அரவிந்தம் என்பர் -ஆகையால் இந்த சேவை பரம போக்யமே
ஸ பலமாக ஆசைப்பட்டுச் செய்வது –

ஸ்ரீ சைல நாத
எம் அடிகளான ஸ்ரீ சைல நாதருடைய

கருணா பரிணாம்
கருணா காஷ்டையால்-பேர் அருளாளன் –
பூதாநி ஹந்த நிகிலாநி நிசா மயந்தி -என்று ஸகல மநுஷ நயன விஷயமான பொருள் –

கருணா பரிணாமதஸ் தே -என்று அருளின் காஷ்டையாக அபி யுக்தரான தூப்புல் பிள்ளையும்
அருளிச் செய்தார்
அது போன்ற அருளின் காஷ்டை –
இந்த ஸ்லோகம் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

தத்தாம் –
எனக்கு அருளப் பட்டது -தானம் செய்யப் பட்டது –
ஸ்ரீ சைல நாதருடைய உம்முடைய பாதாப்ஜ சேவை ஸ்வம் சொந்த தனம் –
தம்முடையதான ஸ்வத்தை -தனத்தை -எனக்கு ஸ்வம் ஆகச் செய்தார் –
பரஸ்வத்வ ஆபாதநம் செய்து வைத்தார் –
என்னை யதீந்த்ர பிரவணர் ஆக்கினார்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்பது யதீந்த்ர ப்ராவண்யத்தில் பரிணமித்தது –

தாம்
எம் ஆச்சார்யர் தந்து அருளினார் என்று சொல்லலாமே ஒழிய அவர் தந்து அருளிய பாக்யத்தை –
இத்தம் -என்று வர்ணிக்க முடியாது –
தாம் -தஸ்யா- என்றே தான் பேசலாம் –

அந்வஹம்
பவ்மா பிபந்த் வன்மஹம் -திருவடி சேவை எனக்கு சததமாய் இருந்தால் போதும் –

மம விவர்த்தய
மென்மேலும் வளரச் செய்ய வேணும் –

நாத
ஸ்ரீ சைல நாத -என்று நாத ஸப்த அங்கிதமான திரு நாமத்தைச் சொன்னேன் –
அவரை நாதன் -என்று நான் சொன்னால் சீறுவர் -கருணை எல்லாம் பரந்து போம் –

தஸ்யா-
அந்த ஸேவைக்கு

விருத்தம் அகிலம் ச
ஸ்ரேயாம் ஸி பஹு விக்நாநி
த்ரி தசா பரி பந்த்திந
இந்திரன் முதல் பரி பந்தீ
யதீந்த்ரரே நீர் தானே இந்த்ராதி தேவ பரி பந்திகளை நிவாரணம் செய்ய வேண்டும் –
சம்சாரத்தின் விருத்தியில் அவர்களுக்கு மிகுந்த ஆசை
சம்சாரன் யூ நதை -சம்சார நிவ்ருத்தி அவர்களுக்கு ஆகாது –
சம்சார நிவ்ருத்தி யதீந்த்ரரால் தான் ஆகும்

காமம் நிவர்த்தய த்வம்
யதீந்த்ரராகிய நீர் அடியோடு போக்கி அருள வேண்டும் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -18-

October 30, 2020

சரணாகதாருடைய சர்வ பாப விமோசனத்தில் எம்பெருமானார் ஸக்தர் என்றார் –
ஸ்ரீ காந்தனுக்கு அல்லவோ அந்த சக்தி -எம்பெருமானார் அந்த விஷயத்தில் சக்தர் என்று
எப்படிக் கூறுவது என்ற விரோத சங்கை உதிக்க -அதை அவிரோதமாக சமர்த்திக்கிறார் –

அபாத்யத்வ நிரூபணம் -என்பது அவிரோத அத்யாயம் என்னும் இரண்டாம் அத்யாய விஷயம்
எம்பெருமான் மோக்ஷ காரணத் வத்திற்கும் ஸ்ரீ யபதியின் மோக்ஷ காரணத் வத்திற்கும்
அவிரோதம் சமர்த்திக்கப் படுகிறது இங்கே –
உம்முடைய ஆஸ்ரிதர் ஆகிவிட்டால் ஸ்ரீ காந்தனுடைய க்ஷமை அவர்கள் செய்த எத்தகைய
கொடுமைகளாலும் பாதிக்கப் படுவது இல்லை –
அக்கொடுமைகள் எல்லாவற்றையும் அவர் க்ஷமையே பாதித்து விடுகிறது என்றும்
ரசமாக அபாத்யத்வம் என்னும் விஷயத்தை ஸூ சிக்கிறார் –

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று சரம ஸ்லோகத்தில் ப்ரதிஜ்ஜை செய்தவர் தான்
எம்பெருமானார் ஆஸ்ரிதர் விஷயத்தில் பாப விமோசனம் செய்கிறவர்
எம்பெருமானார் தமக்காகவும் தம்மோடு குடல் துவக்குள்ள பவிஷ்யத் வர்த்தமான ஸகல ஆஸ்ரிதற்காகவும் செய்த
ஸர்வ பாப ஷமா பிரார்த்தனையான சரணாகதி
என்னும் பிரார்த்தநா மதிக்கு இணங்கி அன்றே கமலா ரமணன்
அப்படியே உம் திருவடிகளுக்கு சரணம் என்னும் திரு உடையரான பவிஷ்யத் காலத்தில் வரும்
உம் ஆஸ்ரிதருக்கும் பொறுக்க சங்கல்பித்து விட்டேன் என்று எல்லாருக்குமான ஸர்வ பாப விமோசனத்துக்கு
சங்கல்பம் செய்து விட்டார் –

அன்று நீர் எல்லாருக்குமான செய்த சரணாகதி என்னும் சர்வ பாப விமோசன பிரார்த்தனையால்
அவன் த்வாரமாக உமக்கும் உம் சரணாகதர்களுக்கும் சர்வ பாப விமோசன சக்தி உள்ளதே
ஆகையால் விரோதம் இல்லை அவிரோதமே
இன்று ஆஸ்ரயிப்பவருக்கும் அன்றே செய்த சங்கல்பம் படி சர்வ பாபா விமோசனம் லப்த ப்ராப்யமே
அன்றே லப்தமானதை இன்று நழுவாமல் நாங்கள் பூர்வ லப்த பரிபாலனம் செய்ய வேண்டுவது மட்டுமே
என்பதை வ்யஞ்ஜனம் செய்வது ஷேம ஸப்தம்
யோகம் -என்பது முன்பு கிடையாததன் லாபம்
க்ஷேமம் என்பது லப்தஸ்ய பரிபாலனம் -முன்பே கிடைத்தத்தை இழக்காமல் காப்பாற்றுவதே –

கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதாதி
பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ
சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்திதா யத் –
ஷேமஸ்ச ஏவ ஹி யதீந்திர பவஸ்ரிதா நாம்–18-

யதீந்திர–யதீந்த்ரரே
கால த்ரயேபி -எதிர் நிகழ் கழிவிலும்
கர்ண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய -முக்கரணங்களாலும் மிகக் கொடிய பாபங்களைச் செய்பவனுக்கு
பகவத் ஷமைவ-பகவானுடைய ஷமா குணமே தான்
சரணம் – தஞ்சமாகும்
சா ச -அந்த க்ஷமை யும் -அபராத ஸஹனமும் -குற்றம் பொறு த்தலும்
த்வயைவ கமலா ரமணே -ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே
அர்த்திதா யத் -பிரார்த்திக்கப்பட்டது என்பது யாது ஓன்று உண்டோ
ஷேமஸ்ச ஏவ ஹி பவஸ்ரிதா நாம்-அதுவே உம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷம் என்னும் க்ஷேமம் ஆகும் –

கால த்ரயேபி
ரஹஸ்ய த்ரயத்தாலே சர்வ காலமும் கால ஷேபம் செய்வது உசிதம்
அதற்கு எதிர்த்தட்டாய் அதி பாபச் செயல்களாலேயே முக்காலத்தையும் கழித்து வருகிறேன்

கர்ண த்ரய நிர்மித
முக்கரணங்களும் ரஹஸ்ய த்ரய நிஷ்டையிலே பொருந்தி இருக்க வேண்டி இருந்தும்
அதற்கு நேர் விரோதமான அதி பாபா சரணை செய்கிறேன் –
முக்காலங்களிலும் முக்கரணங்களாலும் பாபப் பெருக்கு மூன்று ஒன்பதாகப் பெருகுகிறது –

அதி பாபக்ரியச்ய
வாங் மனஸ் ஸு க்களுக்கு அதீதமான பாபங்களைச் செய்கிறவனுக்கு வாங் மனசீ அதி -என்றார் ஆழ்வான்
பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச -என்றதின் ஞாப நம்
அபி சேதஸி பாபேப்ய சர்வேப்ய பாப க்ருத்தம-என்று கீதையில் பெருமாள் அருளிச் செய்கிறார்
தமப்பின் பொருளை அதி என்று காட்டுகிறார்
கீதா ஸ்லோகத்தை அநு சரிக்கிறார்
அங்கும் வ்ருஜின சந்தரணம் பாப விமோசனம் –
வ்ருஜினம் ஸந்தரிஷ்யசி

சரணம் –
தஞ்சமாவது -ரஷிப்பது –

பகவத் ஷமைவ
பாப விமோசனத்தில் நீர் சக்தர் என்று நான் சொன்னது பகவத் த்வாரமாகத் தான்
அவர் க்ஷமை தான் பொறுத்து அருளுவது
உமக்கு வஸ்யர் ஆனபடியால் உம் ஆஸ்ரிதர் விஷயத்திலும் அவர் க்ஷமை ப்ரசரிக்கிறது –
உமது பாப விமோசன சக்தி அவருடைய ஷமா த்வாரமானது –
ஆகையால் நீர் சக்தர் என்று சொன்னதோடு விரோதம் இல்லை –

சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்திதா யத் –
அந்த பகவத் சாமையும் உம்மாலேயே தான் சரணாகதி ரூபா பிரார்த்தனை செய்யப் பட்டதே
யத் -என்பதற்கு அது என்றும் யஸ்மாத் என்றும் பொருள் கொள்ளலாம்
யஸ்மாத் -யாது காரணம் பற்றி முன் ஸ்லோகங்களிலே கூறி
தஸ்மாத் என்று அநுமான நிகமன க்ரமத்தை ஆதரிப்பது போலே இங்கும்
யஸ்மாத் தஸ்மாத் என்றும் பொருள் கொள்ளலாம் –

ஷேமஸ்ச ஏவ ஹி
யத் என்றது உத்தேச்யம்
விதேயமான ஷேம என்பது என்பது ஆண்பால் ஆனதால் புல்லிங்க பிரயோகம்
உத்தேச்ய அநு குணமாயும் விதேய அநு குணமாயும் லிங்கத்தை உபயோகிக்கலாம்

ஷேம ஏவ ஹி
எங்களுக்குப் புதிதாக லாபம் என்னும் யோகம் இல்லை
முன்பே லப்தமானதின் பரிபாலனமான க்ஷேமம் தான் என்றும் திரு உள்ளம் –
யோக ஷேம நிர்வாகம் எம்பெருமானார் ஆஸ்ரயணத்தால்

யதீந்திர
தேவேந்த்ரனான இந்த்ரனைப் போலே
ஷீ ணே புண்யே
ஸ்வர்க்கேபி பாத பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர் வ்ருதி0என்று சொல்லுகிறபடியே
புண்யம் கழிந்த பின்பு கீழே தள்ளி விடுகிறது என்பது கிடையாதே
கிடைத்தது அஷய மாகவே இருக்கும்

பவஸ்ரிதா நாம்
யதீந்த்ரரே உம்மை ஆஸ்ரயித்தவற்கு

ஷேம ஏவ
என்றுமே ஷேமமே
நிரதிசயமான ஷேமமே அல்லாது புனரா வ்ருத்தி என்கிற
ப்ரஸக்தியே இல்லையே என்கிறார் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -17-

October 30, 2020

மீமாம்ஸையில் -17-வது அத்யாயம் ப்ரஹ்ம ஸூத்ர முதல் அத்யாயம் ஆகும்
ஸ்ருதி சிரஸி வி தீப்தே ப்ரஹ்மணி -மங்கள ஸ்லோகம் அநு சரிப்பது ஸ்பஷ்டம்
இங்கே வேதாந்த விசார ஆரம்பம் –வேதாந்தமே ஸ்ருதி சிரஸ்ஸூ -ஸ்ருதி யக்ரம்-
சுடர் மிகு ஸ்ருதியுள் -முதல் திருவாய் மொழியையும் நினைக்கிறார் –
திருவாய் மொழியும் சாரீரக மீமாம்ஸை –
முதல் இரண்டு திருவாய் மொழிகளும் சாரீரக அதிகரணங்களைக் கோர்வையாக நிரூபிக்கின்றன –
அணி அரங்கர் மேல் ஆயிரம் -முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் –

திவ்ய குண விசிஷ்டமான ஸ்வரூபத்தை உடைய ப்ரஹ்மத்தின் இடமும் சகல வேதாந்தங்களும்
சமன்வித மாவதை நிரூபிப்பது –
சமன்வய அத்யாயம் சர்வ வேதாந்த வேத்யம் என்பதை விளக்குவது –
ஸாஸ்த்ர யோநித்வாத் -என்பதை -ச்ருத்யக்ர வேத்ய-என்பதால் ஸூ சிக்கிறார்
தத் து சமன்வயாத் -ஸூத்ர அர்த்தங்களையும் ஸூ சிக்கிறார்
தத் -அது -என்ற பரோக்ஷ ப்ரஹ்மமே -இங்கே ப்ரத்யக்ஷமாக பெரிய பெருமாளாக சேவை சாதிக்கிறார்
ஆனந்த மயம் என்று ஆனந்த குண பூர்ணவத்தைப் பேசியதும்
அடுத்து அந்தர் அதிகரணத்தில் அந்த திவ்ய ஆத்ம ஸ்வரூபத்திலும் ஆனந்த குணத்திலும் இன்னமும்
அதிக போக்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸூ த்ரகாரர் விளக்கினார்
பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண-என்று புலப்படாத பரம் பொருளே கண்ணனாக அவதரித்து
சகல மனுஷ நயன விஷய தாங்கதன் ஆனது போல்
இங்கே அந்த பரதத்வமே -பிரத்யஷதாம் உபகத -என்கிறார் –

ச்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப –
பிரத்யஷதாம் உபகத இஹ ரங்க ராஜ –
வஸ்ய சதா பவதி தே யதிராஜ தஸ்மாத் –
சக்த ஸ்வ கீய ஜன பாப விமோசன் த்வம் –17-

யதிராஜ–யதிராஜனே
ச்ருத்யக்ர –ஸ்ருதிகளின் சிரஸ்ஸுகளான உபநிஷத்துக்களால்
வேத்ய -அறிய வேண்டிய
நிஜ திவ்ய குண ஸ்வரூப -தன் ஸ்வ பாவிக திவ்ய குணங்களையும் ஸ்வரூபத்தையும் உடையவராய்
இஹ -இங்கே
பிரத்யஷதாம் உபகத –கண்களால் காணும் படி அருகே வந்து இருக்கிற
ரெங்கராஜ -அரங்கத்து அம்மான்
தே -உமக்கு
வஸ்ய சதா பவதி -எப்பொழுதும் வஸ்யராகவே இருக்கிறார்
தஸ்மாத் -ஆகையால்
ஸ்வ கீய ஜன பாப விமோசன் -உம்மைச் சேர்ந்த ஜனங்களின் பாபத்தைப் போக்குவதில் –
த்வம் சக்த–நீர் சக்தி உள்ளவரே-

ச்ருத் யக்ர வேத்ய
ஸ்ருதியின் உச்சியில் வேதாந்தத்தில் மலையின் மேல் ஜ்வலிக்கும் தீபம் போல்
வேதகிரி சிகரத்தில் ஜ்வலிக்கும்
வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய
வேத வேத்யே பரே பும்ஸி
ஸ்ருதியின் அக்ர வேத்யமான முதல் வேத்யத் பொருள்
மூல வேத்யம் அக்ர குணம் உள்ளது -அக்ர ஸ்வரூபம் உடையது –

அக்ரம்-உயர்வு -உச்சி –

நிஜ திவ்ய குண ஸ்வரூப
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன்
நிஜம் -என்பது உடையவன் என்னும் பொருளை ஸூ சிக்கிறது
திவ்ய குணமும் திவ்ய ஸ்வரூபமும் நலம்
அக்ரமான நலம்

ஸ்ருதி அக்ரம்
வேத ஆதியான பிரணவம்
ப்ரஹ்மம் வேத மயமான பிரணவ விமானத்தில் ஜ்வலிக்கும் பொருள்
ப்ரணவத்திற்குள் எல்லா வேதமும் அடங்கியது –

பிரத்யஷதாம் உபகத
ப்ரத்யக் ப்ரத்யக்ஷம் ஆகிறது -பராக்கு போல் விஷயம் ஆகிறது
தத் -ஏதத் ஆகிறது
அது இது வாகிறது
மயர்வற மதி நலம் அருளினன்
அப்ரோக்ஷ ஸாஷாத் கார ஞானம் நம் சமீபத்திலே வந்துள்ளத்து

இஹ
இந்த இருள் தரும் மா ஞாலத்தில்
எல்லாருக்கும் கிட்ட எளியதான கோயில்

ரங்க ராஜ –
அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹங்களுக்கு மூல ப்ரக்ருதியான இந்த பெரிய பெருமாள் –

தே வஸ்ய
ஸர்வஸ்ய வஸீ
ஸர்வஸ்ய ஈஸான -என்ற விஸ்வபதி யாகிற ரெங்கராஜர் உமக்கு வஸ்யராக நீர் இட்டது சட்டமாக இருக்கிறார் –
முதல் அத்யாயம் ஆனு மானிக அதிகரணத்தில் -ஈஸ்வரனை வசப்படுத்தும் உபாயம்
அவனை சரணாகதி செய்வது தான் என்று ஸ்ரீ பாஷ்யம் –
தஸ்ய ச வஸீ கரணம் தச் சரணாகதி ரேவ
பெரிய கத்யம் தவிர ஸ்ரீ ரெங்க கத்யம் தனியாக அருளப்பட்டது
ஸம்வாத ஏஷ சரணாகத மந்த்ர சார

சதா பவதி
என்றைக்கும் உமக்குப் பர தந்தரராகவே இருக்கிறார் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீர் அனுதினம் ஸம் வர்த்ததாம் -என்று அனுதினம் ஜபிக்கிற படி
அரங்கனும் -ராமாநுஜார்ய திவ்ய ஆஜ்ஞா வர்த்ததாம் அபி வர்த்ததாம் என்று நம் ஆஜ்ஞயை
அபி விருத்தி அடையும்படி அனுசானம் செய்கிறார் –

தஸ்மாத்
ஆகையால் ஸர்வ லோக சரண்யனான அரங்கனை சரணம் பற்ற வேண்டி இருக்க
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மான பரமாத்மனே -அதோ அஹம் அபி தே தாஸ -என்று
அனுமான ஆகாரமாக அத
ஆகையால் நானும் அவனுக்கு தாஸன் -என்று பிராமண வசனம் அறுதி இடுகையாலே
என் அடியார்க்கு தாஸன் என்னலாமோ என்ற கேள்வி வர
இங்கும் -அத –என்பது போல் -தஸ்மாத் -என்று அது மாதிரியாகவே நிகமனம் செய்கிறார்
பெருமாளை நீர் நேரில் சரணாகதி செய்து உம் வசமாக்கி விட்டீர்
உம் திருவடிகளை சரணம் பற்றினால் உம் வசமான அவர் எனக்கு மோக்ஷம் அளிப்பார்
உம் தாஸ அநு தாஸருக்கு தாஸ்யம் செய்தால் நீர் உகப்பது போலே

ஸ்வ கீய ஜன பாப விமோசன்
என் ஒருவனையே சரணம் பற்று -நான் உன்னை எல்லாப் பாபங்களில் இருந்தும் மோக்ஷணம்
செய்யக் கடவேன் -உனக்கு சோக நிமித்தம் இல்லை
என்று கண்ணன் கீதா உபநிஷத்தில் முடிவில் வேதாந்தமாக அருளிச் செய்தார்
பெருமாள் திருவடி உம் திரு முடியில் கிரீடமாக விளங்குவதால் உம் திருவடியில் செய்யும் பிரணாமம்
பெருமாள் திருவடிகளில் சேர்ந்து விடுகிறது –
கீதா ஸ்லோகத்தில் உமக்கு வஸ்யரான பெரிய பெருமாளுக்குச் சொன்ன சர்வ பாபா விமோசன மஹிமை
உமக்கும் உள்ளதே
த்வா -என்பது உப லக்ஷணமாக எல்லாரையும் சொல்லும் –
விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீகஷே -என்பதை அநு சரிப்பதாகும் இந்த நான்காம் பாதம் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -16-

October 30, 2020

தேவதா காண்டம் நாலாவது அத்தியாயத்தில் பலம் விஷயம்
தேவ போகத்தில் ஸ்வர்க்கத்தில்
கந்தர்வ காநங்களும்
ஸ்வர்க்க ஸ்த்ரீகளின் ரூப தர்சனமும்
ஸ்பர்சமும்
அம்ருத ரஸமும்
பாரிஜாத குஸூம கந்தமும் –போகங்களாகக் கிடைக்கும்
அந்த தேவதா உபாசனத்தால் கிடைக்கும் அந்த ஸ்வர்க்கமும் எனக்கு வேண்டாம்
இங்கேயே ஒரு அத்புத ஸ்வர்க்க ஸூகம் உண்டு -அந்த ஸூகம் எனக்கு நீங்காமல் இருக்க வேண்டும்
ஸ்வர்க்கத்துக்குப் போய் அனுபவிப்பது என்பது தேவர்களுக்கு பசுவைப் போலே
ஊழியம் செய்வதாகும் என்று வேதம் கூறுகிறது –

அவர்களுக்கு பசுவாக அடிமையாய் இருப்பதை விட இங்குள்ள உம்முடைய அடியார்க்கு
அடியார்களில் கடைசித் தாழ்ந்த படியில்
எவர் இருப்பாரோ அவருக்கே பசுவைப் போல் ஊழியம் செய்வதிலேயே எனக்கு ரஸம் மீளாமல்
இருக்கும் படி அனுக்ரஹித்து அருள வேண்டும்
எனக்கு இதுவே பரமபுருஷார்த்தம் என்று நிஷ்கர்ஷித்து பிரார்த்திக்கிறார் –
இந்த ரஸமே தான் எனக்கு அம்ருத ரஸம்-
இப்படி பாகவத் தாஸ்யமே எனக்கு புருஷார்த்த காஷ்டை என்று அருளிச் செய்கிறார் –

சப்தாதி போக விஷயா ருசி அஸ்மதீயா –
நஷ்டா பவதி இஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-
யஸ் தத் தாஸ தைக ரசதா அவிரதா மம அஸ்து–16-

சப்தாதி போக விஷயா -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் இவைகளை அனுபவிக்கும் விஷயமான
ருசி அஸ்மதீயா -எங்களுடைய ஆசையானது
யதீந்திர-யதீந்த்ரரே
நஷ்டா பவதி இஹ பவத் தயயா -தேவரீருடைய கிருபையாலேயே இங்கே அடியோடே அழியட்டும்
த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-தேவரீருடைய தாஸ தாஸ தாஸன் என்று
தாழ தாழப் போகும் எண்ணிக்கைக் கணக்கில் கடைப்படியில்
யஸ் -எவர் இருக்கிறாரோ
தத் தாஸ தைக ரசதா -அவருக்கே ஆட்பட்டு இன்புறும் தன்மை
அவிரதா மம அஸ்து-ஓய்வில்லாமல் எனக்கு இருக்க அருள் புரிய வேண்டும் –

சப்தாதி போக விஷயா
ஸ்வர்க்கத்திலும் விஷய போகங்கள் தானே உண்டு –ஸ்வர்க்க போகங்கள் விஷய ருசியை
மென்மேலும் விருத்தி செய்யுமே
நெய் வார்ப்பதால் நெருப்பு விருத்தி அடைவது போல் -இந்திரன் ரசிப்பது விஷய போகமும்
அதன் மேல் ருசியையுமே —
அந்த ருசி அடியோடே நசிக்கும் படி யதீந்த்ரரான தேவரீர் தான் அனுக்ரஹிக்க வேண்டும் என்று
யதீந்த்ர சப்தத்தால் இங்கே கூப்பிடுவது அழகு –

ருசி அஸ்மதீயா –
எங்கள் ருசி -விஷய ருசியைப் பலர் கூடிச் சேர்ந்து அனுபவிபிப்பர்கள்
நட விட காயக ராஸ கோஷ்ட்யாம் –
அந்த ருசிக்கும் மோகத்திற்கும் தனிமை உதவாது –
ஆகையால் இதுவரை அஹம் -மம -என்று ஒருமையாகப் பேசியதை மாற்றி -அஸ்மதீயா -என்று
பன்மையாகப் பேசுகிறார் –
விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தேஹிந ரஸ வர்ஜம் ரஸோப் யஸ்ய பரம் த்ருஷ்ட்வா
நிவர்த்ததே -என்ற ஸ்ரீ கீதாச்சார்யர் ஸ்ரீ ஸூ க்தியை நினைத்து ருசி நஸிக்க வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

பவத் தயயா
தேவரீருடைய கிருபையால்

நஷ்டா பவதி
நாஸமாய் போகட்டும்
அடியோடே தொலையட்டும் –

இஹ
அமுத்ர-லோகாந்த்ரம் போய்க் கிடைக்கும் ஸ்வர்க்கம் வேண்டாம்
யான் போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று பரமபதத்தையும்
திரஸ்கரிக்கும் இங்கே இச்சுவை
இங்கே -இவ்வரங்க மா நகரிலே

யதீந்திர
விஷய ருசி அறுவதற்கு ஈஷணா த்ரயங்களையும் அறுத்த இந்த யதீந்த்ரனையே
தானே கூப்பிட வேண்டும் –

த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-
எவன் உமக்கு அடிமைப் பரம்பரையில் கடையோனாகத் தாழ்ந்தவனோ
ஆனந்தம் மேலே படி ஏற ஏறப் பெருகும்
இங்கே ஊழியப்படி தாழ தாழ ஆனந்தம் பெருகுகிறது –

தத் தாஸ தைக ரசதா
உம் அடியாரில் எல்லாருக்கும் தாழ்ந்த படியில் உள்ளவருக்குத் தாஸ்யம் புரிவதையிலேயே
இன்புறும் தன்மை ரஸம்
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -என்று பரமபதத்தில் உள்ளவர்களுக்கு
ஒருவருக்கு ஒருவர் சேஷத்வத்தில் ஆசை –
அப்படி நீசத்வத்தில் ஆசை இங்கேயே -இஹ -என்று கோறப் படுகிறது –
முன் சொன்ன நைச்யம் எல்லாம் கழிந்து இந்த நைச்யத்துக்குப் பாத்ரம் ஆக வேண்டும் என்கிறார் –
யதி சக்கரவர்த்தியின் பத பத்தணத்தில் வசித்து ஹரி பக்த தாஸ்ய ரசிகராய் வாழ வேண்டும்

அவிரதா
அனாவ்ருத்தி சப்தாத்
நீங்காமல் -மீளாமல் –

மம அஸ்து
அஸ்து என்று பலமாஸை
அஸ்து மே அஸ்து தே என்றது போலே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -15-

October 30, 2020

ஆழ்வான் அனுசந்தித்த நைச்யங்கள் வேறு
என் நைச்யத்தை அளக்க அந்த பாத்ரம் போதாது
இன்னும் நிறைய னைச்சிங்களால் பூரணமான பாத்திரம் வேணும்
அடியேன் ஆகிற நைச்ய பாத்திரம் நிரம்பி உள்ளது
ஸ்ரீ யாமுனர் ஆழ்வான் பட்டர் முதலிய தேசிகருடைய எல்லா நைச்ய அனுசந்தானங்களையும்
ஒரு மிக்கச் சேர்த்தால் நான் என்னும் நைச்ய பாத்திரம் நிரம்பும் என்று
ஆத்ம நிந்தை செய்யும் ரசம்

தேவதா உபாசானம் மூன்றாவது அத்யாய விஷயம் என்பர்
நாம் சரணாகதியை இழிபவர்
ஆச்சார்யருடைய கருணையே கதியாக வரிக்கிறார்
இந்திரன் தேவராஜன் ஸூ ர நாயகன்
தேவதா ஏற்கும்படி யதிராஜனை இங்கே யதீந்த்ரர் என்று அழைக்கும் அழகு ரசிக்கத் தக்கது

சுத்த ஆத்ம யாமுன குருத்தம கூர நாத
பட்டாக்க்ய தேசிக வர உக்த சமஸ்த நைச்யம்
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி இஹ லோகே –
தஸ்மாத் யதீந்திர கருணைவது மத் கதிஸ் தே-15-

சுத்த ஆத்ம -பரிசுத்தமான மனமுடைய
யாமுன -ஆளவந்தாராலும்
குருத்தம கூர நாத -ஆச்சார்ய உத்தமரான ஆழ்வானாலும்
பட்டாக்க்ய தேசிக வர -பட்டர் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டராலும்
உக்த சமஸ்த நைச்யம்-சொல்லப்பட்ட எல்லா நீசத்தன்மைகளும் -தோஷங்களும் –
இஹ லோகே-இப்பூ மண்டலத்திலேயே
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி -என்னிடத்திலேயே எல்லாமே எள்ளளவும்
சுருங்காமல் மிக்க விரிவாய் இருக்கிறது
தஸ்மாத் யதீந்திர கருணைவது மத் கதிஸ் தே-ஆகவே யதிகட்க்கு இறைவனே உமது கருணை ஒன்றே
எனக்கு உத்தாரகமான கதி –உமது கருணைக்கும் நானே உத்தமமான கதி –

சுத்தாத்மா
இவர் குறிக்கும் எல்லா ஆச்சார்யர்களுக்கும் அடைமொழியாவது ரஸம்
இவர்கள் எல்லாருமே மாசு அற்றவர்கள் -மனதை மலம் அறக் கழுவினவர்கள்
உண்மையில் தோஷ லேசமும் கிடையாது
அவர்கள் தங்கள் சிஷ்ய பரம்பரையில் அடியேன் ஒருவன் நீச ராமனாக வரப் போகிறேன் என்று எனக்காகவே
அவ்வளவு நைச்யங்கள் எல்லாம் கருணையால் அனுசந்தித்தார்கள் என்கிறார் –

யாமுன
தூய பெரு நீர் யமுனை -என்பர் -அது போன்ற பரிசுத்தி
தர்சனா தேவ சாதவ -என்றபடி உலகத்தைப் பரிசுத்தம் ஆக்கும் பெரியவர்

குருத்தம கூர நாத -ஆச்சார்ய உத்தமரான ஆழ்வான்

பட்டாக்க்ய தேசிக வர
பட்டர் என்று திரு நாமம் உடைய ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்

தேசிக வர
தனித்து யோஜித்து இதர பூர்வ ஆச்சார்யர்களையும் கொள்ளலாம்

உக்த
சொல்லிய
சுத்தாத்மாக்களான அவர்கள் விஷயத்தில் அவை அனைத்துமே யுக்தி மாத்திரமே
ஒழிய உண்மை அல்லவே

சமஸ்த நைச்யம்
எல்லா நீச பாவமும்
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி இஹ லோகே –
கோன் வஸ்மின் சாம்பிரதம் லோகே குணவான் -என்ற ப்ரஸ்னம் நினைத்து
இங்கே குண ஹீனரில் இவ்வுலகில் இப்போது யார் முதல்வர் என்ற ப்ரஸ்னம் செய்தால்
என்னையே பொறுக்கி எடுத்து நிர்த்தாரணம் செய்ய வேண்டி இருக்கும் என்று ஆத்ம நிந்தா ரசம்
சாம்ப்ரதம்-என்று அங்கு -இங்கே அத்ய
அஸ்மின் லோகே அங்கு -இஹ லோகே இங்கு
குணவானான புருஷோத்தமனுக்கு எதிர்த்தட்டான அதம தம நரன்

அசங்கி சிதம் ஏவம் அஸ்தி
பலி புஜி சிசு பாலே தாத்ரு காகஸ் கரே வா குண லவ ஸஹ வாஸாத் த்வத் ஷமா சங்கு சந்தீ –
மயி குண பரமானு தந்த சிந்தனா பிஞ்ஞா விஹரது வரதாஸவ் ஸர்வதா ஸார்வ பவ் மீ -என்று
பட்டர் நைச்ய ஸ்லோகத்தை அனுஷ்டிப்பது ஸ்பஷ்டம் -சங்கோசம் என்பது சுருக்கம் –
அசங்கோசம் என்பது
சுருக்கமே இல்லாத மிக்க விஸ்தாரம் –
ஸமஸ்த என்று இரண்டாம் பாதத்தில் வியாசமான விரிவுக்கு எதிர்த்தட்டான சமாசம்
என்னும் சங்ஷேபமும் பொருளாம்
அவர்கள் பேசிய பேச்சு எல்லாம் சங்ஷேபம்–சுருக்கம் – –
அந்த சங்ஷேபங்கள் எல்லாம் கூடி என்னிடம் அங்குசிதமாய் விஸ்தாரமாய் அமைகின்றன
என்னும் ரஸம் கவனிக்காத தக்கது –
இதற்கு ஏற்ப ஸ்ரீ இராமாயண சங்ஷேப ஸ்லோகமும் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

தஸ்மாத்
ஆகையால்
அசங்கோச நியாயம் -சாஸ்திரகாரர் சொல்வது படி -எங்கே அசங்கோசமாகப் பொருந்துமோ
அந்த விஷயம் தான் பிரபலம்
அதையே தான் அநு சரிக்க வேண்டும் சங்கோசத்திலும் அசங்கோசமே பொருந்துவது
அந்த அசங்கோச நியாயத்தால் என்று நியாயத்தை நேராக்க காட்டுவதற்காக
சங்கு சந்தீ என்று பட்டர் ஸ்லோகத்தில் இருப்பதை
அங்குசித -என்று மாற்றி இருப்பதும் ரஸம்

யதீந்திர
தேவதா காண்டத்தில் தேவேந்திரனை ஸூர நாயகனாக ஹவிர்பாகம் வாங்க –
இந்த்ர ஆயாஹி -என்று கூப்பிடுவார்
இங்கு தம் ஆத்ம ஹவிஸ்ஸை சமர்ப்பிக்கையில் அதே போலவே யதீந்த்ர என்று
கூப்பிடுவது ரசிக்கத் தக்கது –

கருணைவது மத் கதிஸ் தே-
உம்முடைய கருணை தாம் எனக்குப் புகல் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–