Archive for the ‘ஸ்ரீ மணவாள மா முனிகள்’ Category

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திருமங்கை ஆழ்வார் வடிவு அழகு சூர்ணிகை –ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

February 25, 2023

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனி மாலையும்,
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத் தண்டையும், சதிரான வீரக் கழலும் தஞ்சமான தாளிணையும்,
குந்தி யிட்ட கனணக் காலும் குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,
வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய,
நீலக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

உறை கழித்த வாளை யொத்த விழி மடந்தை மாதர் மேல்,
உருக வைத்த மனமொழித் திவ்வுலகளந்த நம்பிமேல்,
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,
மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன் முனே
மடி யொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து, ஒன்னலார்
கறை குளித்த வேலணைத்து நின்ற விந்த நிலைமை, என்
கண்ணை விட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.

காதும் சொரி முத்தும் கையும் கதிர் வேலும்,
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீது புனை தென்னாலி நாடன் திரு வழகைப் போல,
என்னாணை ஓப்பாரில்லையே.

வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளினிணைத் தண்டையும், தார்க் கலியன் கொண்ட நன் முகமும்
கண்டு களிக்குமென் கண்.

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்த விடம்.

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]
ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை
ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான்
வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்
எட்டெழுத்தும் பெற்ற இடம்.

பரகாலனின் இந்த திவ்ய மங்கள விக்ரஹம் எப்போதும் என் நெஞ்சில் உள்ளது.
திருத்தோள் தாங்கிய வேலும், எம்பெருமானைத்தொழுத திருக்கரங்களும், அழகிய ஊர்த்வ புண்ட்ரமும்,
ஓம் என்னும் திருப்பவளமும், கூர்த்த சிறிது தூக்கிய நாசியும், குளிர நோக்கும் விழிகளும்,சுருண்டு இருண்டு கருத்த குழலும்,
எம்பெருமானிடம் திருமந்த்ரம் கேட்ட செவ்விய செவி மடல்களும், வட்டமான கழுத்தும், அகன்ற திருமார்வும்,
வலிய திருத் தோள்களும், வனப்பான மேல் முதுகும்,
குறுகிய இடையும், எழிலார் மாலைகளும்  மனங்கவர் கைவளையங்களும், வீரம் செறிந்த திருக்கழல்களும்,
மறம் செறிந்த கணைக் கால்களும், பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஒள் வாளும்  மாமுனிகளின் வர்ணனை.

ஆழ்வார்க்கு
பர காலன்,
கலியன்,
நீலன்,
கலி த்வம்ஶன்,
கவி லோக திவாகரன்,
சதுஷ் கவி
ஶிகா மணி
ஷட் பிரபந்தக் கவி,
கலி வைரி,
நாலு கவிப் பெருமாள்,
திரு நா வீறுடைய பெருமான்,
மங்கையர் கோன்,
அருள் மாரி,
மங்கை வேந்தன்,
ஆலி நாடன்,
அரட்ட முக்கி,
அடையார் சீயம்,
கொங்கு மலர்க் குழலியர் வேள்,
கொற்ற வேந்தன்,
கொற்ற வேல் மங்கை வேந்தன்
என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.

——————–

ஸ்ரீ சைல தயா பாத்திரம் தீ பக்த்யாதி குண ஆர்ணவம் -ஞானக்கடல் குரும் ப்ரகாஸம் செய்து அருளுகிறார்

இதுவோ திருவரசு-இதுவோ திரு மணம் கொல்லை இதுவோ திருவாலி –எட்டு எழுத்தும் பறித்த ஊர்

திருமேனியில் பொதிந்த கல்யாண குணங்களை -படி எடுத்துச் சொல்லும் படி அல்லவே
கண்கள் கருணை வடிவம்

கருணை பொறுமை அன்பு -மூன்று தேவிமார்களும் ஹ்ருதயத்தில்
மூச்சுக் காற்று வேதம்

அவனை அடங்கப் பிடித்தேனே -என்று சொல்லும் ஆழ்வார் திருமேனியும் தத்வ ப்ரகாஸம்

சார்ங்கத்தில் சாய்ந்து பெருமாள் -அவருக்கும் ஆதாரம் -திருமங்கை ஆழ்வார் எம்பெருமானுக்கு ஆதாரம்
திருமேனியில் பொதிந்த தத்வம் அனைத்தையும் அருளிச் செய்த அழகு

வாய்ந்த -திரு மணம் கொல்லை

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வலது செவி சாய்த்து
அணைத்த வேலும்
ஓம் என்னும் வாய் -வேதம்
நாசி -பிராணன் தானே திருவாய் மொழி -இரும் தமிழ் நூல் புலவன் –

அணைத்த வேலும் -விரோதி நிரஸனம்

அரசமர அடியில் பெருமாளாக அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு மந்த்ர அரசான திருமந்திர உபதேசம்
மகிழ மரம் அடியில் பெரிய நம்பி நாயக ரத்னமான யதி ராசருக்கு மந்த்ர ரத்னம் உபதேசம்

க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
மண்டினார் உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே -அர்ச்சா திருஷ்ணையாலே உஜ்ஜீவனம்

நால் வேதம் கண்டான் -மந்த்ர த்ருஷ்டா ஆழ்வார் -நான்கு வேதங்களால் காணப்படுபவனைக் கண்டார் -கர்த்தரை கர்த்ரு பிரயோகம் –
ஸ்வரூபமும் விபவமும் கண்டார் ஆழ்வார்
ஆறு அங்கம் கண்டார் -ஆறு உபாயம் அங்கமே என்று கண்டார் திருமங்கை ஆழ்வார்
பிடி தோறும் அர்ச்சை -விபவமும் அர்ச்சையும் இவருக்கு
இருக்கும் நாள் அர்ச்சாவதார ப்ராவண்யமும் அருளிச் செயல்களில் ஈடுபாடும் இருந்தாலே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்

துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -இணை ஆதி -ஒவ்வொன்றுக்கும் மற்ற ஒன்றே திருஷ்டாந்தம் -ஓன்று ஓன்று துணை மற்ற ஒன்றும் துணை யாகாதே-வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் இங்கு -வசனமும் உதாஹரிக்கிறார்
நல்லீர் அறிவீர்-உம அடியார் எல்லோரோடும் ஓக்க எண்ணி இருக்கீரோ –நும்மைத் தொழுதோம் -ஆண் ஊடல் காதில் கடிப்பிட்டு -நாயகி பாவத்திலும் உண்டே-அர்ச்சையை தொட்டு இருப்பார்கள் மற்றவர்கள் -இவர் தானே மண்டி இருந்து அனுஷ்டித்துக் காட்டினார்
வேம் உயிர் –துணை முலை பயந்து -ஆழ்வார்
இங்கு வியாக்யானம் -பகவானுக்குத் துணை ஆழ்வாரது மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -மலராள் தனத்துள்ளான் -அங்கு வியாக்யானம் –

வடவரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள் -திருத்தாயார் அர்ச்சாவதார அநு காரம் இவருக்கே

ஓ மண் அளந்த தாடாளா -தூது நான்கு பாசுரங்கள் மட்டுமே விட வல்லவர்
இரும் தமிழ் நூல்-திருவாய் மொழிப் புலவர் இவரே

———————————–

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8- பகருகின்றேன் உரைக்கின்றேன் என்று சொல்லாமல் -ஓதுகின்றேன்

காண் –கண்டவர்கள் -த்ரஷ்டா -ஞானக் கண்ணால் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

சார்ங்கம் -அம்சம் -கூடவே அவனை அனுபவிக்கிறோம் –
ஆலி நாடான் திருச்சுற்று கட்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாளிகை சுற்றியே கட்டி -அருள் மாரி -பட்டம் பெற்றவர்
உன் தாமரை சேவடி கை தொழுவாரைத் தொழுவார் –
களைக் கத்திக்கு அருள் மாரி பெயர் -நெஞ்சுக்கும் இருள் கெடுக்கும் தீபம் -கவிம் லோக திவாகரம்- கவிகளுக்குள் திவாகரன்

வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி நாடன் அருள் மாரி -4-2-10-

————————-

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -14 இடங்களில் –ராமானுஜன் பத பிரயோகங்கள்
அயோத்யா 1 இடம் கிஷ்கிந்தா 6 இடங்களில் சுந்தர 2 இடங்களில் யுத்த 2 இடங்களில் -இவை எல்லாம் லஷ்மணன் 11 இடங்களில்
பரதனுக்கு 2 இடங்களில் -அயோத்யா -உத்தர
சத்ருக்னன் 1 இடத்தில்-உத்தர காண்டத்தில்
பிரயோகங்கள்
அநுஜன் -சேஷன் -பெருமாளை பிரிந்து 3 நாள்கள் -இரண்டு நாள் கழித்து அவதாரம் -ஒரு நாள் முன்பே ஸ்ரீ வைகுண்டம்
கைங்கர்ய ஸாம்ராஜ்யம் இழக்காமல் -கைங்கர்ய ஸ்ரீ -லஷ்மணோ லஷ்மி ஸம்பன்னன் -நற் செல்வன்

ராமானுஜன் = (பல)ராமனின் தம்பியான கண்ணன்

இராமவாதாரத்தில் இரு சேஷாவதாரங்கள்!
* சேஷன் இலக்குவன் = பகவத் கைங்கர்யம்
* சேஷன் பாதுகை = பாகவத கைங்கர்யம்

இந்தப் பாதுகையின் அம்சமாகத் தோன்றிய சடாரி அல்லவோ நம்மாழ்வார்!
எனவே ஆழ்வார், “இராம+அனுஜர் = இராமானுஜர்” என்னும் சொல்லுக்குப் பரிபூர்ணமாகப் பாத்யதைப் பட்டுள்ளார்!

அதான் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அந்தப் பாதுகை பாடியது!
மாறன் எங்கள் சடகோபன் = இளையாழ்வான் என்னும் இராமானுசனே!

வேள்வியினால் பிறந்து –
யாகம் காத்து
சேர்த்தியில் ஸரணாகதி
தீர்த்த கைங்கர்யம் (அயோத்யா காண்டம் 103-5-கௌசல்யை சுமத்தரை இடம் சொல்லும் ஸ்லோகம் -இவர் சாலைக்கிணறு தீர்த்தம் )
ஓங்கார வடிவில் நடந்து
கண் அழகில் ஈடுபட்டு
தாசர்கள்-அடியேன் ராமானுஜ தாசன் -தாஸ்ய நாமம் பெறுகிறோம்
நமக்கா புருஷகாரம் செய்தவர்கள்-யாத்ர ராம ச லஷ்மணா -புருஷகாரமும் உண்டே
தொண்டிலே நோக்கம்
பரந்த விசால திரு உள்ளம்-துர்வாசர் -சாபம் -அவதாரம் முடிந்து திரும்பிய விருத்தாந்தம் –
இவ்வாறு பல ஒற்றுமைகள் இளைய பெருமாளுக்கும் நம் ராமானுஜருக்கு உண்டே

ஸோஹம் –ஸஹ அஹம்
தாஸோஹம் —
ஸதா ஸோஹம்
தாஸ தாஸோஹம் -இப்பொழுது தான் முழுமையான சாந்தி கிடைக்கும்

ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரனான இராமனைப் பெருமாள் என்று அழைப்பது ஸம்பிரதாயம். அவன் தம்பியான லக்ஷ்மணனை இளைய பெருமாள் என்பர். நம், ராமநுஜரான லக்ஷ்மணமுனியை இளையாழ்வான் என்று அழைப்பர். இவ்விருவருக்கும் பல வகைகளில் ஒற்றுமை உண்டு. இங்கே சிலவற்றை மட்டும் கூறி, இவ்விருவரின் ஸாத்ருச்யத்தைக் காட்டுகிறோம். இருவருக்கும் ராமாநுஜன் என்ற பெயர் பொருத்தம் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

இலக்குவன் ஆதிசேஷனுடைய அவதாரம் என்பது பல பிரமாணங்களினால் பிரசித்தமானது. ‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்’ என்ற பாசுரப்படி, பாதுகை என்பது ஆதிசேஷனுடைய திருவவதாரம். ‘நிவாஸசய்யாஸநபாதுகா’ என்று ஆளவந்தார் கூறினார். லக்ஷ்மணனும் பாதுகையும் ஒருவரே என்பதும், பாதுகாஸஹஸ்ரத்திலுள்ள ‘பரதசிரஸி லக்நாம் பாதுகே … ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத:’ என்ற ச்லோகத்தால் ஸுவ்யக்தமாகிறது: ‘சேஷபூத: லக்ஷ்மண: என்றதனாலும், ‘ஸ்வதநுமபி’ என்றதனாலும் ஆதிசேஷனே லக்ஷ்மணனாக, அவதரித்தான் என்றும், பாதுகையும் லக்ஷ்மணனும் ஒன்றே என்றும் தெளிவாக ஏற்படுகின்றன அல்லவா? எனவே, லக்ஷ்மணன் ஆதிசேஷ அவதாரம். இது போலவே இளையாழ்வானான ராமாநுஜரும் ஆதிசேஷனின் அவதாரம்.

ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிய திவ்யஸூரி ஸ்தோத்திரத்தில், ‘ராமாநுஜன் சேஷாவதாரம்’ என்று ஸ்பஷ்டமாகக் காட்டப்படுகிறது. அதில் உள்ள ச்லோகம் – மேஷார்த்ராஸம்பவம் விஷ்ணோர் தர்சநஸ்தாபநோத்ஸுகம் | – துண்டீரமண்டலே சேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே || என்பது.

ஸ்ரீராமாநுஜருக்கு ஸாக்ஷாத் சிஷ்யரான வடுகநம்பி என்று சொல்லப்பெறும் ஆந்த்ரபூர்ணரும் இதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் – 

வேதாந்தஸித்தாந்தஸமர்த்தநாய, பாஹ்யாந்தரப்ராந்தமதாபநுத்யை |
சேஷாம்சக: கேசவயஜ்வதேவ்யாம் தேஜோநிதி: கஸ்சிததாவிராஸீத் || என்று
சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை: |
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||

என்றும் இவரைப் புகழ்ந்திருக்கின்றனர். வேங்கடாத்ரி என்ற மகாகவி தமது விச்வகுணாதர்ச சம்பூவில் இவரைச் சேஷனுடைய அவதாரம் என்றே பணிக்கிறார். 

ராமாநுஜாய குரவே நரவேஷபாஜே, சேஷாய தூதகலயே கலயே ப்ரணாமாந் |
யோ மாத்ருசாநபி க்ருசாந் பரிபாதுகாம:, பூமாவவாதரத் உதஞ்சித போத பூமா || என்று,

இப்படி பல ஆசார்யர்கள் இந்த இளையாழ்வானை சேஷாவதாரம் என்றே ஒருமுகமாக சொல்லுகின்றனர். வேதாந்தாச்சார்யார் மாத்திரம் இவரை சேஷனுடைய அவதாரம் என்று கூறவில்லை.

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஸ்ச ததாபர: |
பலபத்ரஸ் து கலெள கஸ்சித் பவிஷ்யதி ||–என்று பவிஷ்ய புராணத்தில் இவரைச் சேஷாம்சம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை அநுஸரித்ததுதான்.

ப்ரதமோ நந்தரூபஸ்ச த்விதீயோ லக்ஷ்மணஸ் ததா |

த்ருதீயோ பலராமஸ் ச கலெள ராமாநுஜோ முநி: ||–என்ற முன்னோர்களின் பாசுரமும்.

வைகுண்ட லோகத்தில் பரம ஆனந்தத்துடன் பர்யங்கத்தில் பக்தர்களும் பாகவதர்களும் சூழப் பரம த்ருப்தராய் இருக்கும் பகவான் தம் பர்யங்கபூதனான எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்து சேஷன் என்ற பெயர் பெற்ற ஆதிசேஷனைப் பார்த்து, 

ச்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதா த்விஜா: |
அங்காநி ச வி சீர்ணாநி ஹா விருத்தோ வர்த்ததே கலீ: ||

“ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் அழிந்துவிட்டன. அந்தணர்கள் தங்களுடைய நித்ய கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டனர். வேதாங்கங்களும் சிதறிப் போயிந. கலியுகம் மேன்மேலும் விருத்தியடைகிறது. ஆகவே, நீ என் பஞ்சாயுதங்களின் சக்தியை ஏந்திக்கொண்டு உலகத்தில் ராமாநுஜ தரிசனம் என்ற பெயர் விளங்கும்படியாக ராமாநுஜராக அவதரித்து, வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி முதலியவற்றுக்குக் காப்பாக உரையிட்டு ஜனங்களை உஜ்ஜீவிக்கும்படி செய்” என்று உத்தரவிட்டார். அதன்படி இவர் அவதரித்தார்.

மந்நியோகாத் பூதபுர்யாம் அஹீநாமீச்வர : கலெள |
ஸ்ரீராமாநுஜரூபேன ஜநிஷ்யதி ஸதாம் முதே ||

இளையபெருமாள் தசரதனுடைய புத்ரகாமேஷ்டி மூலமாகப் பிறந்தவர். ராமாநுஜரும் புத்ரகாமேஷ்டி மூலமாகவே பிறந்தவர். இவரது பிதா ஆஸூரி கேசவாசார்யருக்கு ஸர்வக்ரது என்ற பிருதமும் உண்டு. இவர் காந்திமதி என்ற பெண்மணியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். வெகு காலமாகியும், சந்ததி இல்லாமலிருந்து, பிறகு பெரியோர்களின் நியமனத்தினால் ப்ருந்தாவன க்ஷேத்திரம் என்று பெயர் பெற்ற திருவல்லிக்கேணியில் புத்ரகாமேஷ்டி செய்து முடித்தார். வேள்வி நிறைவேறியது. அன்றிரவு ஸ்ரீபார்த்தசாரதி, “நானோ என் படுக்கையான ஆதிசேஷனோ உனக்குப் பிள்ளையாகப் பிறந்து வேத வேதாந்தங்களை ரக்ஷிக்க வருகிறோம்” என்று ஸ்வப்னத்தில் சொன்னார் எனற வரலாற்றையும் கண்டுகொள்ள வேண்டும். ஆகவே இருவரும் புத்ரகாமேஷ்டியின் மூலமாகப் பிறந்தவர்கள்.

இளையபெருமாள் விசாலமான மனத்தைப் பெற்றவர் என்பது ராமாயணப் பிரசித்தம். ‘என் ஒருவனுக்கு மரணம் வந்தாலும் பாதகம் இல்லை; வம்சத்துக்கே விநாசம் ஏற்படக்கூடாது’ என்ற பரந்த மனத்துடன் துர்வாஸர் என்ற மகரிஷியிடம் அவர் நடந்துகொண்டார் என்பது தெளிவானது.

இளையாழ்வானும், “பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு-பாதகாத்| ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம் பதம் ||” என்று விசாலமான மனத்துடன் மந்திரார்த்தங்களை ஆசார்ய நியமனத்தை உல்லங்கனம் செய்து உபதேசித்தார் என்பது பிரசித்தமானது.

பகவானான ஸ்ரீராமனுடைய திருவடியை அடைவிப்பதற்கு லக்ஷ்மணன் எப்போதும் ராமனை விட்டுப் பிரியாமலே இருந்தார். ‘யத்ர ராம’ ஸலக்ஷ்மண:’ என்றார் வால்மீகி. விபீஷணன் இலங்கையைவிட்டு ராமனிடம் சரணாகதி செய்யச் சமுத்திரத்தின் தென்கரையை அடைந்தான். ‘இலக்குவனோடு கூடிய ராமன் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்’ என்றார் வால்மீகி. இதன் கருத்து – ராமனை அடைவதற்கு லக்ஷ்மணனுடைய உதவி வேண்டும் என்பது. ‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய’ என்று மற்றோரிடத்தில் கூறினார்.

இளையாழ்வானும் பகவானுடைய திருவடியை நம்மை அடையும்படி செய்கிறார். ‘உலகோர்கள் எல்லாம் அண்ணல் ராமாநுசன் வந்த தோன்றிய அப்பொழுதே .. நாரணற்கு ஆயினரே’ என்பது நோக்கத் தக்கது. ‘இவை என்றனுக்கு அன்று அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து’ என்பதையும் நோக்கவேண்டும்,

த்வயமந்திரத்தின் அர்த்தமான சரணாகதியை இளையபெருமாள் இராமன் காட்டுக்குச் சென்றபோது, ‘ஸ ப்ராதுஸ் சரணெ காடம் நிபீட்ய ரகுநந்தந: | ஸீதாமுவாச அதியஸா: ராகவம் ச மஹாவ்ரதம் || பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரி ஸாநுஷு ரமஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே || என்ற பாசுரங்களை அநுஷ்டித்து விவரித்தார். இளையாழ்வானும் சரணாகதிகத்யம் என்று பெயரிட்டு த்வயார்த்தத்தை உலகுக்குத் தாமே அநுஷ்டித்துக் காட்டினார்.

இளைய பெருமாளை அனுமான் பார்த்து, “இவருக்கு நீர் என்ன ஆவீர்?” என்று கேட்க, “அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யம் உபாகத:. ராமர் என்னைத் தம் தம்பி என்று நினைத்திருப்பார். அவருடைய குணங்களுக்குத் தோற்று நான் தாஸன் என்று நினைத்திருப்பேன்” என்று பதிலளித்தார் இளைய பெருமாள். இதனால் பகவானுக்கும் தமக்கும் உள்ள ஸ்வஸ்வாமி பாவஸம்பந்தம் சேஷசேஷிபாவஸம்பந்தம் காட்டப்பட்டது. பாஷ்யகாரரும், ‘சரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ:’ என்று இந்த ஸம்பந்தத்தை பல இடங்களில் வெளியிட்டார்.

ராமன் காட்டுக்குச் சென்றபோது, காட்டில் முதலில் ராமனும் பிறகு சீதையும் பிறகு லக்ஷ்மணனும் சென்றதாக ‘அக்ரத: ப்ரயயெள’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது. ராமாநுஜரும் காசியாத்திரையினின்று தெளிந்து மீண்டு திரும்பி வந்த போது காஞ்சிக்கருகில் முதலில் வேடனுடைய உருவம் தரித்த வரதனும் பிறகு பெருந்தேவியும் பிறகு ராமாநுஜரும் வந்தார்கள் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

லக்ஷ்மணன் ராமனுடைய திருவடிகளில் கைங்கர்யம் ஒன்றைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை.

ந தேவலோகாக்ரமணம் நாமரத்வம் அஹம் வ்ருணே |
ஐச்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா ||

என்றார். பகவானைப் பெற விரும்புகிறவன் மற்றப் பொருள்களில் வைராக்யமும், பகவானிடத்தில் ஆசையும் பெற்றிருக்கவேண்டும். ராமாநுஜரும் பகவானுடைய திருவடிகளில் உண்டான வியாமோகத்தினால் மற்றப் பொருள்களை த்ருணமாக நினைத்தார். ‘யோ நித்யம்’ என்ற இவருடைய தனியனை இங்கு அநுஸந்திப்பது,

லக்ஷ்மணன் தம் அண்ணனான ராமனுக்குத் தீர்த்தத்தை நதிகளிடமிருந்து எடுத்து வந்து உபசரித்தார். பரதாழ்வான் ராமனைச் சித்திரகூடத்திலிருந்து அழைத்துவர எண்ணி அந்த மலைக்குச் சென்றபோது வஸிஷ்ட முனிவர், கெளஸல்யை முதலிய தேவிகள் அனைவரும் சென்றனர். அங்கே கங்கை நதிக்கரையில் ஸுமித்ரை முதலியானவர்களைப் பார்த்துக் கெளஸல்யை சொல்லும் வார்த்தை –

இத: ஸுமித்ரே புத்ரஸ்தே ஸதா ஜலம் அதந்த்ரித: |
ஸ்வயம் ஹரதி ஸெளமித்ரிர் மம புத்ரஸ்ய காரணாத் ||
ஜகந்யமபி தே புத்ர க்ருதவாந் ந து கர்ஹித: |
ப்ராதுர் யதர்த்தஸஹிதம் ஸர்வம் தத் விஹிதம் குண: (அயோத்யா காண்டம் – 103)

என்பவை அங்குள்ள ச்லோகங்கள். “எப்பொழுதும் சோம்பலில்லாமல் இந்தக் கங்காநதியிலிருந்து என் குமாரனான ஸ்ரீராமனுக்கு உன் புதல்வன் தானாகவே தீர்த்தத்தைக் கொணர்ந்து உபசரிக்கிறான். இப்படித் தீர்த்தத்தைக் கொண்டுவரும் இந்தக் கைங்கர்யம் தோஷத்தை உண்டுபண்ணாது. இது பரிகாசத்திற்கு உரியதாகவும் ஆகாது. உலகத்தில் தண்ணீர் கிடைப்பது துர்லபமாக இருக்கும் காலத்தில் ஒரு குடம் தண்ணீர் கொணர்ந்தால் இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்று பிரபுக்களின் வார்த்தையைக் கேட்டுப் பண ஆசையால் ஒருவன் அம்மாதிரி செய்தால் அது பரிகசிப்பதற்கு உரியதாகும். ஸர்வவித பந்துவாய் ஸர்வஸ்வாமியாக உள்ள எம்பெருமானான ராமனுக்காகக் கொண்டு வரும் கைங்கர்யமானபடியால் இது எல்லோராலும் போற்றக் கூடியதாகவே முடியும்.” என்கிறாள்.

ஆளவந்தார் பல சிஷ்யர்களுக்குப் பகவத்விஷய காலக்ஷேபம் ஸாதித்து வந்தாராம். அப்பொழுது, ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு’ என்ற திருவேங்கடமுடையான் விஷயமான பாசுரம் நடந்து வந்ததாம். ‘நீர் கொண்டு என்று தீர்த்த கைங்கர்யம் சொல்லப்பட்டிருக்கிறபடியால் திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்வதில் நமமாழ்வாருக்குப் பேரவா இருந்திருக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்து அவரது மனோரதத்தை ஆளவந்தார் நிறைவேற்ற எண்ணினார். காலக்ஷேபம் முடிந்ததும், “திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யத்தை இந்தக் கோஷ்டியில் யார் செய்யப் போகிறார்கள்?” என்று வினவினார். பெரிய திருமலை நம்பி, “அடியேன் சித்தமாக இருக்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றுத் திருமலைக்குச் சென்று அந்தக் கைங்கர்யத்தை அழகுடன் செய்து வந்தாராம்.

தினந்தோறும் பாபவிநாசம் என்ற நதியிலிருந்து ஒரு கலசத்தில் இவர் தீர்த்தத்தை எடுத்து வந்து திருவேங்கடமுடையானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் கலசத்தில் தீர்த்தத்தை எடுத்துச் சென்றார். அப்போது பகவான் வில்லி வேஷம் பூண்டு, அவருக்குத் தெரியாமல் கலசத்தில் துவாரத்தை உண்டுபண்ணி நீரைக் கீழே பெருகும்படி செய்துவிட்டார். கொஞ்ச தூரம் சென்றதும், “தாதா, எனக்கு ரொம்பவும் தாகமாய் உள்ளது. கொஞ்சம் நீர் கொடு” என்றார். அப்போது கலசத்தில் நீரே இல்லை. பெரிய திருமலை நம்பி திக்பிரமம் அடைந்தார். “வெகு தூரத்திலிருந்து தீர்த்தத்தை கொண்டுவந்தேன். திருமலைக்குச் சமீபத்தில் வந்து விட்டேன். கலசத்திலோ நீர் இல்லை. மறுபடி பாபவிநாசம் சென்று கொண்டு வரவும் சக்தி இல்லை. என்ன செய்வது?” என்று கலங்கினார். அப்போது வில்லிவேஷம் பூண்ட பகவான், “பெரியவரே! கவலைப்பட வேண்டாம், நான் பாணத்தைப் பிரயோகம் செய்து இங்கிருந்தே நீரை வரவழைக்கிறேன். இதிலிருந்து தீர்த்தத்தை எடுத்துச் செல்லும்” என்று சொல்லி, ஓர் அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தார். திரிவிக்ரமாவதார காலத்தில் கங்கை எப்படி வேகமாகக் கிளம்பிற்றோ அது போல ஆகாசத்திலிருந்து கங்கை விழ ஆரம்பித்தது. இதற்குத்தான் ‘ஆகாச கங்கை’ என்று பெயர்.

நம்பி மிகவும் விஸ்மயப்பட்டு, இதிலிருந்து நீரைக் கொண்டு சென்றார். அது முதல் உண்மையை உணர்ந்து, பகவானுக்கு இங்கிருந்து தீர்த்தத்தைக்கொண்டு கொடுப்பதுதான் மிகவும் பிரீதியை உண்டுபண்ணும் என்பதை உணர்ந்து, தினமும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ‘தாதேத்யாமந்த்ர்ய கஸ்சித் வநபுவி த்ருஷிதஸ் தோயவிந்தூந் யயாசே’ என்றார் வேங்கடாத்வரி கவி. ஆகையால், பகவானுக்குச் செய்யும் இந்தக் கைங்கர்யம் மிகவும் போற்றத்தக்கது.

இளையாழ்வானும் சாலைக்கிணற்றிலிருந்து, பகவானுடைய அபிப்பிராயத்தை உணர்ந்து, தினமும் தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் என்பது உலகப் பிரசித்தம்.
இப்படிப் பல வகைகளில் இரண்டு ராமாநுஜர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

இதை ஸ்ரீதேசிகன் “தத்தம் யேன தயாஸுதாம்பு நிதினர்” என்கிற ஸலோகத்தால் காட்டினார். அமிர்தமாகிற கடல் தயை என்னும் அமிர்தம் இதற்கு கடல் ஸ்ரீபாஷ்யகாரர். தேவப் பெருமாளும் கருணைக் கடல். இவர் ஸமர்ப்பித்த அம்ருத ஜலத்தை பருகினார். புஷ்டியை அடைந்தார். கருமுகில் கடல் நீரை பருகும் மலை மீது அமரும். அதிக மழையைக் கொடுக்கும். அது பகவானாகிற கருமுகிலும் அமுத நீரைப் பருகி புஷ்டியை அடைந்து நமது விருப்பத்துக்கும் அதிகமாக நமக்கு பல பலரை பொழிகிறான் என்றார்.

தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத–ஸ்ரீ யதிராஜ ஸப்ததி 9-

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

———————-

”ஸ்ரீ ராமானுஜர் யாமுனாச்சார்யாருக்கு கொடுத்த வாக்கை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பித்தார்.
அதற்காக அவர் நீண்ட பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. வடக்கே காஷ்மீரம் வரை நடந்தே சென்றார்
ஸ்ரீ ராமானுஜர் எண்ணற்ற தடங்கல்களை இன்னல்களை எல்லாம் சந்தித்து தான் நமக்காக எத்தனை எத்தனை
செல்வங்களை அளித்திருக்கிறார் என்று அறியும்போது நமது கண்களில் நன்றிக் கண்ணீர் ஆறாக வடிகிறது.”
”வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது. தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினார்க்கு அந்
நாழற்றது, நம்மிராமாநுசன் தந்த ஞானத்திலே.-(இராமானுசன் தந்த ஞானத்தின் பயன்)
‘மஹா ஞானியான யதிராஜர் வியாசரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ஆளவந்தார் விரும்பிய படி
விசிஷ்டாத்வைத பரமாக ஶ்ரீபாஷ்யம் இயற்றும் பணியில் முனைந்தார்.
‘ தரிசனத்திற்கு (கோட்பாடு, சித்தாந்தம் ) ப்ரதானமான ஆசார்யராக ஒருவரைக் கொள்ள வேண்டும் என்றால்
ப்ரஸ்தானத்ரயம் என்று சொல்லப் படுகிற மூன்று க்ரந்தங்களுக்கு அவர்கள் ஶ்ரீபாஷ்யம் ( விளக்கம்) அளிக்க வேண்டும் .
முதலில் வேதத்தின் ப்ரஹ்ம பாகமாகிய உபநிஷத்துக்களுக்கு சரியான முறையில் விளக்கங்கள் சொல்ல வேண்டும்.
இரண்டாவதாக , அந்த உபநிஷத்துக்களுக்கு வ்யாக்யானங்கள் போல அமைந்ததான
ப்ரஹ்ம சூத்திரங்களுக்கு விளக்கங்கள் அருளிச் செய்ய வேணும்.
மூன்றாவதாக உபநிஷத்தின் சாரமாக அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் அருளிய பகவத்கீதைக்கு
ஒரு வ்யாக்யானம் (தெளிவான உரை) அருள வேண்டும் .
இவ்வாறு உபநிஷத்துக்கள் , ப்ரஹ்ம சூத்திரம், கீதை இவை மூன்றுக்கும் (பிரஸ்தான த்ரயம்) வ்யாக்யானம் (உரை) எழுதியதால்
தான் ஸ்ரீ ராமானுஜர் தர்சன ஸ்தாபகர் என்றும் ஶ்ரீபாஷ்யகாரர் என்றும் போற்றப்பட்டார்.
இப்படி ஶ்ரீபாஷ்யம் எழுதுவதற்காக யதிராஜர் முதலில் நம்மாழ்வாரின் பாசுரங்களின் ஆழமான கருத்துகளை வெகுவாக ஆராய்ந்தார்.
ஏற்கனவே பல பெரியோர்கள் விரிவுரைகளை எழுதியிருந்தார்கள்.
உதாரணமாக
1. போதாயந பாஷ்யம் என்ற ஒரு வ்யாக்யானத்தை வியாசபகவான் சீடர்களில் ஒருவரும் மகரிஷியுமான போதாயநர் எழுதி இருந்தார். .
2. திரமிட பாஷ்யம் என்று ஒரு உரையை திரமிடாசார்யர் எழுதிஇருந்தார்..
3. ப்ரமானந்தி என்கிற ஒரு ஞானி ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ‘வார்த்திகா’ என்ற உரை எழுதியிருக்கிறார்.
4. குஹா தேவாசாரியர் பாஷ்யம் என்றும் ஒன்று இருந்தது.
5. ஆசார்ய பாருசி பாஷ்யம் என்று மற்றொன்று.
6. பகவத் ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்பவரின் பாஷ்யம் ப்ரம்மசூத்ர பாஷ்யங்களில் மிகவும் பழமையானது.
7. நாதமுனிகள் ஒரு சில அருமையான நூல்களை இயற்றி இருந்தார். அவை விசிஷ்டாத்வைத தத்துவத்தின் யோகரஹஸ்யம், ந்யாயதத்வம் ஆகும். .
8. யாமுனாசார்யர் (ஆளவந்தார்) எழுதிய ஸம்வித் ஸித்தி, ஈசுவரஸித்தி, ஆத்மஸித்தி ஆகமப்ரமாண்யம் முதலிய நூல்களும் பிரசித்தமானவை.
ஞாநியான யதிராஜர் “போதாயநருடைய ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி க்ரந்தத்தின் கருத்துகளை ஆராயாமல்
உபநிஷத்துக்களுக்குப் பொருளுரைப்பது நிறைவு பெறாது” என்று நிச்சயித்து,
கூரத்தாழ்வானோடு, காஷ்மீரத்திலுள்ள சாரதா பீடத்துக்குச் சென்றார்.
அங்குள்ள வித்துவான்கள் அவரை ஆதரிப்பார்களா? எதிர்த்தார்கள். ஸ்ரீ ராமானுஜர்
சாரதா பீடத்தில் உள்ள வித்வான்கள் அனைவரையும் வாதத்தினால் ஜயித்தார்.
சாரதா பீடத்தில் அருள் புரியும் சரஸ்வதி தேவி ஶ்ரீராமாநுஜரின் வித்வத்தில் மகிழ்ந்து அவரை பரிக்ஷிக்க
‘கப்யாஸ ச்ருதியின் பொருளைச் சொல்ல முடியுமா ’ என்கிறாள்
யதிராஜர் தேவியை வணங்கி ‘கம்’ எனப்படும் ஜலத்தை பானம் பண்ணுவதால் ‘கபி’ என்று சூர்யனுக்கு பெயர்.
அவனாலே மலர்விக்கப்படும் தாமரை ‘கப்யாஸம்’ என்று பொருள் படுகிறது.
‘அந்தத் தாமரையை யொத்த கண்கள் விஷ்ணுவுக்கு உள்ளன’ என்பதைத் தான்
‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரிகம் ஏவ மஷினி (சாந் 1-6-6) என்னும் வேதவாக்கியம் உணர்த்துகிறது” என்று கூறினார்
சாரதாதேவியும் மிகவும் மகிழ்ந்து போதாயந வ்ருத்தியை ஶ்ரீராமாநுஜருக்கு அளிக்க அதை ப்ரீதியோடு பெற்றுக் கொண்டார்.
சில நாட்களில் திருவரங்கம் நோக்கிக் கிளம்பினார் .
இதற்கிடையில் சாரதா பீடத்தில் உள்ள, வித்வான்கள் அங்குள்ள ஸ்ரீ கோசங்களை ( ஒலைகள்) தேடும் போது ,
போதாயன வ்ருத்தி க்ரந்தம் அங்கு காணாமல் போனதைக் கண்டு, ராமானுஜர் அதை தேடிவந்ததால்
அவரே தான் அதை எடுத்துச் சென்றி ருக்க வேண்டும் என்று தீர்மானித்து ,
யதிராஜரிடமிருந்து அதை கைப்பற்றி மீண்டும் சாரதா பீடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவ்வளவு பிரயாசைப் பட்டு அடைந்த போதாயன பாஷ்யம் கைவிட்டு சென்றதே என்று மிகவும் வருந்திய
ஶ்ரீராமாநுஜரைக் கூரத் தாழ்வான் கவனித்து
“யதிராஜரே! குருதேவா, துளியும் நீங்கள் வருந்த வேண்டாம். கடந்த சில நாளில் இரவு நேரங்களில்
அடியேன் அந்த போதாயன பாஷ்ய க்ரந்தம் முழுவதையும் படித்து மனதில் முழுவதுமாக பதிவு செயது கொண்டு விட்டேன்.
தேவரீருடைய கடாக்ஷத்தால் இப்போதே வேண்டுமானாலும் அதில் உள்ளதனைத்தும் சொல்லமுடியும்” என்றார் கூரத்தாழ்வான்.
ஆழ்வானின் அற்புத ஆற்றலை நினைத்து மகிழ்ந்து பாராட்டிய ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் திரும்பியதும்
ஶ்ரீபாஷ்யம் எழுதும் பணி துவங்கினார்.
‘கூரேசரே! நான் ஶ்ரீபாஷ்ய வாக்யத்தைச் சொல்ல்லிக்கொண்டே வருகிறேன்,
உம்முடைய திருவுள்ளத்திற்கு அது சரி எனப்பட்டால் எழுதும். எங்கேனும் பொருத்தமில்லை என்று தோன்றினால்
சொல்வதை எழுதாமல் நிறுத்தி மௌனமாயிரும்’ என்கிறார்.
‘அப்படியே சுவாமி’ என்று கூரேசரும் ஒப்புக் கொண்டு ஸ்ரீ பாஷ்யத்தை எம்பெருமானார் சொல்லச் சொல்ல விரைவாக எழுதுகிறார்.
ஓரிடத்தில் உடையவர் சொல்லியும் ஆழ்வான் எழுதாமல் நின்று விட்டார்.
இதைக் கவனித்த ஶ்ரீராமாநுஜர் சினமடைந்து “கூரேசா! நான் சொல்வதை எழுத மனம் இல்லை என்றால்
மேற்கொண்டு நீரே ஸ்ரீபாஷ்யம் எழுதும்” என்று சொல்லி எழுந்து சென்றார்.
அங்கிருந்த சிஷ்யர்கள் பலருக்கும் வியப்பு. ஶ்ரீராமாநுஜர்கட்டளையிட்டபடி தானே கூரேசர் எழுதுவதை நிறுத்தினார்.
என்ன காரணம்? .ஆழ்வான் அமைதியாக இருந்தார் .
சிறிது நேரம் கழித்து வந்த ஶ்ரீராமாநுஜர் திரும்பி வந்தார்.
”கூரேசா என் வாக்கியத்தை திருத்திக் கூறுகிறேன் இப்போது எழுது” என்றார் .
ஆழ்வானும் மேற்கொண்டு தடையின்றி எழுதிச் சென்றார் .
‘ஜீவாத்ம ஸ்வரூபத்தைப் பற்றி விளக்கும்போது ” பகவத் சேஷ பூத: ” அதாவது ஜீவன் பகவானது அடியவன் என்ற
தாஸ்ய ஸ்வரூபமே ஜீவாத்மாவிற்கு உள்ள முக்கிய லக்ஷணம்.
ஆனால் ஶ்ரீராமாநுஜர் அவ்விதம் கூறாமல் அந்த அம்சம் குறைவு பட ஜீவன் ஞாத்ருத்வம் (அறிவுடைமை) மட்டும் கொண்டது
என்று சொன்னதால் ஆழ்வான் தயங்கி எழுதுவதை நிறுத்தினார் .
ஶ்ரீராமாநுஜர் ஆழ்வானை கோபித்த போது ஆழ்வான் வருத்தப்படவில்லை
” உடைமை , உடையவன் இட்ட வழக்காயிருக்கும் , இதில் அடியேனுக்கு அந்வயம் இல்லை ” என்றார்.
அதாவது தன் பாரதந்திரியத்தை பிறர் இட்ட வழக்காயிருக்கும் தன்மையை வெளியிட்டார்.
வேதார்த்த நிரூபணமாக ஶ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்து அதனை சாரதா பீடத்துக்கு அனுப்பி உலகோர் அறிய
அதை வெளிப்படுத்த வேண்டும் என்று யதிராஜர் திருவுள்ளங் கொண்டார்.
கிடாம்பியாச்சான், கிடாம்பிப் பெருமாள் முதலான சிஷ்யர்களிடம் காஷ்மீரத்துக்கு ஸ்ரீகோசத்தை கொடுத்தனுப்ப,
அவர்களும் அப்படியே கொண்டு சென்று சாரதா பீடத்தை அடைந்தனர் .
ஸரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அந்த ஸ்ரீ கோசத்தை பாராட்டி உடையவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ என்று திருநாமம் சாற்றி
ஹயக்ரீவப் பெருமாளையும் ஆராதிக்கக் கொடுத்து மகிழ்ந்தாள் என்று வரலாறு சொல்கிறது.
ஶ்ரீபாஷ்யகாரர் என்ற திருநாமமும் ஶ்ரீராமாநுஜரை அடைந்து சிறப்பித்தது.
”ராமானுஜர் ஸ்ரீயாமுநாசார்யரின் முதல் மனக்குறையைப் போக்கினார் என்று அறியும்போது
அவரது குருபக்தி சேவை புல்லரிக்க வைக்கிறது
பிறகு ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் முன்பே ஶ்ரீபாஷ்யத்தை உபந்யாசம் செய்தார் .
பெரிய பெருமாளும் மிக உகந்து, அனைத்து கொத்து பரிவாரங்களையும் அழைத்து எம்பெருமானார்க்கு சதகலசாபிஷேகம் செய்து
ப்ரஹ்ம ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச ்செல்ல ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் .
யதிராஜரின் சிஷ்யர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த வைபவத்தை சிறப்பாக செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
காவேரி கொள்ளிடத்திலுள்ள அனைத்து படித்துறைகளிலும் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ,
அழகிய திவ்ய சிம்மாசனத்திலே யதிராஜரை எழுந்தருளச் செய்து ,
” யதிராஜரே நீர் இந்நின்ற திருமஞ்சனம் செய்வதே” என்று திருமஞ்சன ஸ்லோகங்கள் , ஶ்ரீபுருஷஸுக்தம் சொல்லி
விசேஷமாக அலங்காரத் திருமஞ்சனம் பண்ணி விசேஷ அலங்காரங்கள் பண்ணி ப்ரஹ்ம ரதத்திலே எழுந்தருளச் செய்து
ஶ்ரீபாதம் தாங்கிகள் சுமந்து சென்றனர் .
ஆயிரக்கணக்கான சிஷ்யர்களோடு அனைத்து வாத்தியங்கள் ஒலிக்க திருவீதி வலம் வந்தார்.
மாவிலைத் தோரணங்கள் கட்டி , வீதிகள் தோறும் பெரிய கோலங்கள் இழைத்து விளக்குகள் ஏற்றி மஞ்சநீர் சுழற்றி
” வாய்த்த பெரும்பூதூரில் மன்னவன் வந்தான் ;ஏத்தும் இளையாழ்வார் என்னும் எம்பிரான் வந்தான் ;
எதிராச முனிவன் வந்தான் ; ஶ்ரீபாஷ்யகாரர் என்னும் ஶ்ரீமான் வந்தான்”
”.போற்றி போற்றி” ”வாழி வாழி” என்றும் மங்களாசாசனம் பண்ணி
யதிராஜரை மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்கள்.
கல்யாண வைபவம் போல எல்லோரும் கூடியிருந்து கிடாம்பி ஆச்சான் பரிமார அனைவரும்
இன்சுவையோடு கூடிய ப்ரசாதத்தை அமுது செய்து மகிழ்ந்திருந்தனர்.
—————
ஸபரி திருக்கச்சி நம்பியாக அவதாரம் என்பர்
கஜேந்த்ரனுக்கும் கஜேந்திர தாசருக்கும் பல ஒற்றுமைகள்
வரதன் இடம் ப்ராவண்யம்-லீலை -சக்கரைப் பொங்கல் ஊட்டி விட்டு -வீர ராகவன் தந்தையும் நம்பாமல்-கோயிலுக்கு உள்ளே வர விடாமல் -திருக்கச்சி நம்பியைக் கூட்டி வந்தால் தான் அமுது செய்வேன் -100 தடா உண்டு வியர்வை உடன் இருக்க -உலகு உண்ட பெரு வாயன் -காட்டி அருளி -இவரால் உண்ண முடியாது என்று காட்டி அருளி
வரதனே பேசி கைங்கர்யம் செய்ய அழைத்து -வீச சொல்லி -நிரந்தரமாக இன்றும் வீசிக் கொண்டே இருக்கிறார்
முதலை யானையின் காலைப் பிடித்து முதலில் மோக்ஷம்
திருக்கச்சி நம்பி தாசர் திருவடிகளை பற்றி முதலில் பேறு

அருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்…….!!!

இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

1. “அஹமேவ பரம் தத்துவம்”
நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.

2. “தர்சநம் பேத ஏவச”
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

5. “தேஹாவஸாகே முக்கிஸ் யாத்”
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

6. “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து ராமானுஜருக்கு விளக்கினார் திருக்கச்சி நம்பிகள்.

கஜேந்திரனின் ஆறு வார்த்தைகள்
நமோ நமஸ்தே
அகில காரணாயா
நிஷ் காரணாயா
அத்புத காரணாயா
கேசவர் kes
ஸர்வ ஆகம மஹார்ணவம் ஸர்வ ஆகமங்கள் சென்று சேர்க்கும் கடல்
அபவர்க்கா -மோக்ஷம் அளிப்பவன்
பராயணாயா –

முனிவர் -மனன சீலர்
முனிதல் கோபித்தல்

முனியே நான்முகனே முக்கண் அப்பா -அவனும் முனிவன்
நம்மை உஜ்ஜீவிக்கும் நமது பிரதிபந்தங்களைப் போக்கவும் கோபிக்கவும் வேண்டுமே
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து சரண் அடைகிறோம்

நம்மாழ்வார் நின் கண் வேட்க்கை எழுவிப்பன் –ஊரும் நாடும் உலகம் தன்னைப்போல் ஆக்க மனனம்
சட வாயுவை கோபித்து
நாதமுனி யமுனா முனி

ராமானுஜரும் முனிவர் -திவாகர முனி -அப்போது ஒரு சிந்தை செய்து

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

சவும்ய மணவாள மா முனி -கோபிக்காத முனி -நம்மை உஜ்ஜீவித்து கால ஷேபம் நன்றாக செய்யவே மனனம் ராமானுஜ பிரவணர் என்பதால் –

இரு பிறவிகள்-திருக்கோளூர் பெண் பிள்ளை போற்றும் இரண்டு கஜேந்திரன் திருவடிகளே சரணம்
கைங்கர்யம் ஸ்ரீ யால் திகழ்பவர்கள்-ஸ்ரீ வரதர் பாராட்டும் இரண்டு கஜேந்திரர் தார்கள் புகழ் வாழியே
——————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ வகுள மாலை–ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம்–

February 24, 2023

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்கள்

சடகோபன்,
மாறன்,
காரிமாறன்,
பராங்குசன்,
வகுளாபரணன்,
குருகைப்பிரான்,
குருகூர் நம்பி,
திருவாய்மொழி பெருமாள்,
பெருநல் துறைவன்,
குமரி துறைவன்,
பவரோக பண்டிதன்,
முனி வேந்து,
பரப்ரம்ம யோகி,
நாவலன் பெருமாள்,
ஞான தேசிகன்,
ஞான பிரான்,
தொண்டர் பிரான்,
நாவீரர்,
திருநாவீறு உடையபிரான்,
உதய பாஸ்கரர்,
வகுள பூஷண பாஸ்கரர்,
ஞானத் தமிழுக்கு அரசு,
ஞானத் தமிழ் கடல்,
மெய் ஞானக் கவி,
தெய்வ ஞானக் கவி,
தெய்வ ஞான செம்மல்,
நாவலர் பெருமாள்,
பாவலர் தம்பிரான்,
வினவாது உணர்ந்த விரகர்,
குழந்தை முனி,
ஸ்ரீவைணவக் குலபதி,
பிரபன்ன ஜன கூடஸ்தர்,
மணிவல்லி,
பெரியன் –
இவையெல்லாம் நம்மாழ்வாரின் திருநாமங்களாக போற்றப்படுகிறது.

————–

ஸ்ரீ வகுள மாலை-may june -1937-

அகந்தை செத்த பின் அமலன் தோற்றுவான்
ஆடை இல்லாதவன் அரை மனிதன்
இந்திரையை மார்பில் வைத்தான் இருடீகேசன்
ஈசன் இடத்து உமையை அந்தி பகல் அமைத்தான்
உந்திக் கமலன் கமலையை நாவில் வைத்தான்
ஊமையராய் வாழ்தலை உத்தமன் உகவான்
எக்காலத்தும் எம்பெருமான் அடி சேர்
ஏய்ந்த புகழ் யுடையோன் எம் இராமானுசன்
ஐ ஐத் தத்துவம் நம் உயிர் என்க
ஒரு தனி முதல்வன் காண் எம் ஆதிப்பிரான்
ஓதல் ஓதுவித்தல் ஒப்பிலார் தொழில்கள்
ஒவ்வியம் அவித்தலே ஆக்கத்திற்கு அடியாம்

—————

ஸ்ரீ மாறன் அடி மெய்ம்மை

மாறன் அடி பணிந்து உயந்த உடையவர் ஒருவரே உத்தாரகர் -உலகு உய்ய ஒரே வழி

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவாமே

சந்திம் இச்சந்தி சாது -சாதுக்கள் ஸத்தின் மேல் அன்பு செய்பவர்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -பரமனின் திரு நாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி நிலமே சடகோப தத்வம்
பாதுகா ஸ்ரீ பெற்ற பரதாழ்வானை -பரனை ஒன்றினீரோ -பேறு பெற்றீரோ –என்று உஸாவினார் பரத்வாஜ முனிவர் –
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமாந் -என்று வால்மீகி பகவான் புகழ்கிறார்
இது அடியாகவே
நாம் ஆழ்வாரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-ஆத்யஸ்யன குல பதே-
குல தனம்
குல தைவதம்
எம்பெருமான் திருப்பாதத்தையும் ஸ்ரீ சடாரி என்கிறோம் –

சத்ருக்ந ஆழ்வானை -பாதுகா ப்ருத்ய அநு ப்ருத்யன் என்பர்

சூழ் விசும்பு திருவாய் மொழியில்
நிதி -பத பிரயோகம் ஸ்ரீ சடகோபன் -திருவடி நிலை என்றே பிள்ளானும் நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்கள்
நிதி -நல்ல ஆதாரம் -நல்ல காப்பு -என்றவாறு
சாந்தியை சாதுவாக்குவாரே சாதுக்கள்
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
கவி முனி ரிஷி இவரே
ஏஷ விக்ரஹவான் தர்ம
ஏஷ புத்யாதி கோ லோகே
தபஸ் ச பராயணம்
விச்வா மித்ரர் -உலகுக்கு எல்லாம் அன்பார் அன்றோ -மந்திரம் கொள் மறை முனிவன்
காயத்ரியே விஸ்வ ஜநநீ
இவரையே ஏஷ வீர்ய வாதம் வர -என்கிறார் வால்மீகி

அந்த விச்வா மித்ர முனிவரிலும் தூயராய்
அவ்வன்பர் தமக்கும் நல் அன்பராய்
தமிழ் மறை பருப்பதமுமாய்
அப்பன் பொற் பாதுகமுமாய்
அப்பனும் அடியாரும் ஒன்றித் திகழும் ஓர் தனிச் சாந்தி நிலமாய்
திரு நாரணன் ஒருவனே தனக்கு மாறு என்னலாம்படி மதி நலம் அருளும்
தெள் அருள் மாரியாய் -தெள்ளிய மாறப் பிரானாய்

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

பக்தா நாராயண பராயணா
கலவ் தேவ பராங்குச

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

மறைச் சிரம் மருவும் ஆன்றோர் அன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறன் அமிழ்தின் இணை அடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழும் மூதுவர் உலகு வாழ
நிறை யரித்து திருவாய் ஓதும் நிதி எனும் நிலை விரித்தோம் –

—————

ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம்

காரணந்து த்யேய
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸூ -அடுத்து ப்ரஹ்ம லக்ஷண வாக்யம்
ப்ரஹ்மம் ஆனந்த மயம் -ப்ரஹ்மமே ஆனந்தம் -உயர்வற உயர் -நலம்
உடையவன் அவன் -ஸர்வ ஸ்வாமி -அஸ்மத் ஸ்வாமி
அருளினன்
அதிபதி
அடி தொழுது -அடிகள் தோறும் ஸ்வாமித்வம் சொல்லி

ம்

து
என்று நான்கு அடிகளிலும் தொடங்கி -உமது என்று தானும் அவனதே என்று காட்டி அருளி
முடிவிலும் முனியே நான்முகனிலும்
என் என்பது என் யான் என்பது என் என்று
ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களை -விலக்கி
என் முதல் தனி வித்தேயோ
முழு மூ வுலகாதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை
முக்தி பெறும் தர்ணத்திலே அனுசந்தித்து
முனியே என்ற விளியால் காரணமே -மவ்நம் -சிந்தனை –தவம் செய்து
இனிப்போடே தொடங்கி
இனிதே பேசிப்பாடி
இனிப்போடே
இந்த திவ்ய ப்ரபந்தம்
இனிது முற்றிற்று
ஆனந்த வல்லி ப்ருகு வல்லி கூட்டிப் பொருள் அருளுகிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்மவஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் போரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ்ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

வாதியர்-புற சமயிகள்
தேற்றம் -துணிபு
திரு எட்டு எழுத்தின் உரியார்–ப்ரதிபாத்யர் ஸ்ரீயப்பதி
உடு -நக்ஷத்ரம்
பேச்சு -உபதேசம் –

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

புத்தியம் -புத்தி
பத்தியம் -வேதம்

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக்குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக்கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக -சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப்பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிர பெற்றேன் ஆகில் பரமபதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த்தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

கை –கீழ் மகன்
அகம் -இடம்
மெய்யகம் -ஸத்யமான ஹ்ருதயம்
விரை -மணம்
பூ மகள் -ஸ்ரீ தேவி

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராமபிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –
இராமபிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மண ம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப்பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத்தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
0–பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

————————-

ஶ்ரீவைணவ ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம் நாளை(17/02/2023) மாசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசியுடன் கூடிய திருநாள்

ஸ்ரீராமாநுஜரின் புனரவதார புருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் எய்திய திருநாள் 16-2-1444
ருதிரோத்காரி ஆண்டு

இந்த நாளில் தான் பெரிய ஜீயரான மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்
( இன்று 16-2-2023 ஆச்சாரியர் திருநட்சத்திரமான மூலம் என்னே பொருத்தம்)

மாமுனிகள் திருநாட்டுக்கு எழந்தருளிய பிரகாரத்தை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் என்னும் ஸ்ரீமணவாள மாமுனிகள் திவ்ய சரிதத்தில் கீழே உள்ளவாறு அருளிச் செய்துள்ளார்

ஆதித்ய அஸ்தமன மானவாறே தம்முடைய கர்ம அனுஷ்டானங்களை செய்தருளி திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்
வாழி உலகாசிரியன்
என்று அனுஸந்தித்துக் கொண்டு
பிள்ளையை தியானித்து கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள ஸ்ரீபாதத்து முதலிகள் எல்லாரும் கைகூப்பிக் கொண்டு

ப்ரஹ்மவல்லி ப்ருகுவல்லி சூழ்விசும்பணி முகில்
அர்ச்சிராதி இராமானுஜ நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய் பெரிய ஆரவாரத்துடன் சொல்லுகிற அளவில்

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் (இரா.நூற்.108) பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஸந்திக்க கேட்டு தாமும் கிருதாஞ்சலி புடராய் (தம் திருக்கைகளைக் கூப்பி) எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அனுஸந்தித்துக் தத்கத சித்தராய் திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்க

கநககிரிமேலே கரியமுகில்போல விநதை சிறுவன் மேற்கொண்டு’
(ஆர்த்.பிர.52)என்றும் எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல் வந்து முகங்காட்டி வழி நடத்த (59) என்றும் இவர் அபேக்ஷித்தபடியே பெரிய பெருமாளும்

செழும்பறவை தானேறி திரிவராய்த் தம் தாளிணையை (திரு.மொழி10-6-5) இவர் திருமுடி மேலே வைத்து
மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் போன்ற (பெரிய.திரு.9-2-8)
தன் வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து அநுபவிக்க அநுபவித்து
உன் சரணம் தந்தென் சன்மங் களையாயே என்றும் ஸுகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய என்றும்

நோய்களால் என்னை நலுங்காமல் சதிராக உன் திருத்தாள் தா என்றும்

நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்கீகரிக்கப் பெற்று மாதவன் தன் துணையா நடந்தாள் என்றும்

அரங்கத்துறையுமின் துனைவனோடும் போய் என்றுஞ் சொல்லுகிறபடியே

ச்ரியபதியான பெரிய பெருமாள்

பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன் வழி நடத்த ஷுஷும்நையாகிற (நாடி)
வாசலிலே புறப்பட்டு சிர கபாலத்தைப் பேதித்து பரஹ்மரந்த்ரத்தாலே
ஜீயர் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்கிறார்

ஆச்சாரியன் திருநாடு எழுந்தருளிய நாளை தீர்த்த தினம் என்பர் (ஆசார்யரின் நினைவைப் போற்றிஅவரது ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்து கொள்வதால்)

திருவத்யயனம் தீர்த்த பரிபாலனம் (ஆசார்யர் நினைவைப் போற்றித் திருவாய் மொழி அத்யயனம் செய்வதால்-சேவிப்பதால்) என்று வைணவ சம்பிரதாயத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது

(சாதாரணமாக சிரார்த்தம் திதிவதிவசம் எனப்படுகிறது)

ஒருவருடைய திருஅத்யயனம்/தீர்த்தம் (திதி) அவருடைய நேரடி சந்ததி(குமாரர்) அல்லது நேரடி சீடரால் மட்டுமே அனுஷ்டிக்கப் படுகிறது

ஆழ்வார்கள் ராமாநுஜர் மற்றுள்ள ஆசார்யர்களுக்கு நேரடி சந்ததி/சீடர் இன்று இல்லாததால் அவர்களுக்கு திருவத்யயனம் அனுஷ்டிப்பதில்லை

மணவாளமாமுனிகள் சுமார் 580 ஆண்டுகளுக்கு முன்னரே பரமபதம் எய்தியிருந்தாலும் அவருடைய நேரடி சீடர் இன்றும் எழுந்தருளி இருக்கிறார் அவர் என்றென்றும் எக்காலத்திலும் இருப்பார்

அவர் தமது ஆசார்யருக்கு ஆண்டுதோறும் திருவத்யயனம் செய்கிறார்

ஆம் மணவாள ஜீயரின் (மாமுனிகளின்),மகத்தான அழகிய மணவாள சீடர்
அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளே

ஶ்ரீரங்கநாயகம் என்னும் பாலகன் வடிவில் வந்து மாமுனிகளை தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்

திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் ஈடு வியாக்யனத்தை
மணவாள மாமுனிகள் திருவாயால் செவியுற விரும்பிய அழகிய மணவாளர் (நம்பெருமாள்) ஒரு வருடம் தம்முடைய உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாமுனிகளிடம் சிரத்தையாக ஈடுவியாக்யானம் கேட்டார்

வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில் நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து வந்து மாமுனிகளை ஆசார்யராக ஏற்று கொண்டதற்கு ஆசார்ய சம்பாவணையாக ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார்

அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கும்

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம் என்னும் தனியன்

(ஸ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப் பிள்ளையின்
எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமான வரும்,வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் யதிராஜரான ராமாநுஜர் மீது அளவுகடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்)

அதோடு மட்டுமல்ல ஒரு சீடர் ஆசார்யருக்குச் செய்ய
வேண்டிய சிஷ்ய லட்சணமான ஐந்து கடமைகளையும் செவ்வனே நடத்தினார் நம்பெருமாள்

1) தனியன் சமர்ப்பித்தல்

2) ஆசார்யர் கீர்த்தியை வையம் எங்கும் பரப்புதல்

எல்லா திவ்ய தேசங்களிலும்
பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன் முதலிலும் சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ஸ்ரீசைலேச தயாபாத்ரம் சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்

அதுபோக ஶ்ரீமடங்கள் ராமானுஜ கூடங்கள் ஆசார்யர்கள் பாகவதர்கள் திருமாளிகைகள் என நாளும் சேவிக்கபடுகிறது

3) ஒரு சீடர் தனக்கென்று எந்த உடமையும்/சொத்தும் இல்லையென்றும் எல்லாம் ஆசார்யருடையதே தாம் அனுபவிப்பது அவர் கிருபையால் தந்தருளியது என்னும் நிஷ்டையில் இருத்தல் அவசியம்

இதை நடைமுறை செய்யவே அரங்கன் தம் உடமைகளை யெல்லாம் ஆளும்/நிர்வகிக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்குத் தந்து விட்டார்
அதனால் தான் மாமுனிகள் எங்கும் எப்போதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார்

ஆதிசேஷ அவதாரமான ராமாநுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுனிகளுக்குத் கொடுத்து அருளினார் நம்பெருமாள்

4) ஆசார்யருடைய திருநாமத்தை சீடர் தரித்தல்

நம்பெருமாளின் திருநாமம்- அழகிய மணவாளன் என்பதே அது மாமுனிகளின் இயற்பெயர் அவர் சந்யாசம் ஏற்ற போது
சடகோப ஜீயர் என்னும் நாமத்தை ஏற்க விரும்பினார் ஆனால் பெருமாள் நியமனத்தால் பழைய நாமத்தையே தொடர்ந்தார் (அப்படியிருந்தால் தானே ஆச்சார்யர் திருநாமமும் பெருமாள் திருநாமமும் ஒன்றாக இருக்க முடியும்)

5) ஆசார்யர் திருநட்சித்திரத்தையும்
தீர்த்தத்தையும் சிறப்பாக அனுஷ்டித்தல்

அரங்கர் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார்

இரண்டு நாட்களிலும் பெருமாள் பிரசாதங்கள் உடுத்துக்களைந்த மாலைகள் பரிவட்டங்கள் சந்தனம் முதலானவற்றை மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறார்

தீர்த்த நாளன்று (நாளை) அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே மாமுனிகளுக்கும் ஆராதனம் செய்கிறார்

நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை

மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே இவருக்கு நைவேத்யம்.(நம் போன்றே நம்பெருமாளும் காலை உபவாசம்)

அன்று பெருமாள் சுருளமுது (வெற்றிலை) கண்டருள்வதில்லை

ஆக நாளை ஶ்ரீமணவாள மாமுனிகளின் தீர்த்த நாளில் அவசியம் ஶ்ரீமடங்களுக்கு எழுந்தருளி தீர்தம் ஸ்வீகரியுங்கள்

அவசியம் அகத்தில் ஒரு இனிப்பு பட்சணம் செய்து ஆச்சாரியனுக்கு சமர்பித்து பகவானுக்கும் சமர்பித்து ஸ்வீகரியுங்கள்

கும்பம் பாஸ்வதி யாதி தத் ஸூ ததிநே பக்ஷே வள க்ஷேத்ரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர் க்ஷபாஷி ருதி ரோத் கார்யாக்ய ஸம் வத்சரே
தீ பக்த்யாதி குண ஆர்ணவோ யதி வராதீ நா நிலாத்ம ஸ்த்திதி
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவ மகாத் காந்தோ பயந்தா முனி–மணவாளமாமுனிகளின சரம ஸ்லோகம்

ஞான பக்த்யாதி குணங்களுக்கு மஹா சமுத்திரம் போன்றவரும்
எம்பெருமானாருக்கு ஸ்வா தினமான ஸமஸ்த நிலைகளையும் யுடையவரான
மணவாள மா முனிகள்
ருதிரோத்காரி சம்வத்சரத்தில்
ஸூ ர்யன் கும்ப ராசியை அடைந்த அளவில் -மாசி மாதத்தில்
சனிக்கிழமை
கிருஷ்ண பக்ஷம்
திருவோணம் நக்ஷத்திரத்தில்
துவாதசி தினத்து அன்று
எல்லையற்ற பெருமை கொண்ட ஸ்ரீ வைகுண்டத்தை அலங்கரித்து அருளினார்
என்று அங்குத்தை அந்தரங்கள் அருளிச் செய்தார்கள்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ உத்தர தினச்சர்யா–ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பயங்கார் ஸ்வாமி வியாக்யானம் தழுவி – ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

December 12, 2022

இதி யதிகுல துர்ய மேத மாநை: ஸ்ருதி மதுரை ருதிதை: ப்ரஹர்ஷ யந்தம் |
வரவர முநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||

பதவுரை:

இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே,

ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற,

ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான,

உதிதை: – பேச்சுக்களாலே,

யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை,

ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற,

வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே,

சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற,

இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது,

நிரத்யயம் – நித்யமான,

ப்ரஸாதம் – தெளிவை,

ஏதி – அடைகிறது.

இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த

தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற

மணவாள மாமுனிகளொருவரையே நினைத்துக் கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து,

முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா.

‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதி நூலால் மகிழ்விக்கும்

மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று.

பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட,

ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி.

இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச் சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று

மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது

எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ள வேணும்.

தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும்

ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார்.

கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹா புருஷர்கள்.

‘ப்ரஹர்ஷ யந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக் குறிக்கும், ‘

ப்ர’ என்று உப ஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும்

ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதே யன்றி அந்த ஸந்தோஷத்தைக் கொண்டு

மாமுனிகள் வேறொரு பயனை ஸாதித்துக் கொள்ள நினைக்க வில்லை யென்பதை அறிவிப்பதற்காகவே என்க.

வரவர முநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான

ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக் காட்டிலும்

எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம் மணவாள மாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும்.

எம்பெருமானை நினைப்பவரை விட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர்.

இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது.

ஸ்ருதி மதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம்.

ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும்.

இந்த யதிராஜ விம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும்

தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாப காரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி,

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும்,

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டு பண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும்,

‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும்  ஏற்குமென்க.

மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி

மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க.

(யதிராஜ விம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்தி ப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.

————-

அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் |
வாக்யாலங்க்ருதி வாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் ||-2-

பதவுரை:

அத – யதிராஜ விம்ஸதியை இயற்றி யருளிய பிறகு,

கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்ய ஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான,

ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய,

கோஷ்டீம் – ஸமூஹத்தை,

அதிஷ்டாய – அடைந்திருந்து,

வாக்யாலங்க்ருதி வாக்யாநி – ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்திலுள்ள வாக்யங்களை,

வ்யாக்யாதாரம் – விவரித்துரைக்கும் தன்மையரான,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – வணங்குகிறேன்.

இதுவரையில் க்ரந்த நிர்மாணமாகிய ஸ்வாத்யாயத்தை அருளிச்செய்து, இனி ஸ்வாத்யாயத்தில் மற்றொருவகையான பூர்வாசார்யக்ரந்த வ்யாக்யானத்தை அருளிச்செய்கிறார்.

கரிஷ்டா – அத்யந்தம் குரவ: கரிஷ்டா: – உயர்ந்த ஆசார்யர்கள் என்றபடி.

இவர்களுக்கு அடைமொழி – ஸுமேத ஸ: என்பது.

ஒருதடவை சொல்லும் போதே பொருளை நன்றாக அறிதலும், அறிந்த பொருளை மறவாதிருத்தலும், மேதா எனப்படும்.

ஸுமேத ஸ: நல்ல மேதையை உடையவர்களை, இங்ஙனம் நல்ல மேதாவிகளாய் கரிஷ்டர்களானவர் யார் என்றால் – கோயில் கந்தாடையண்ணன், வானமாமலை ஜீயர் முதலிய அஷ்டதிக் கஜாசார்யர்களேயாவர்.

இதுவரையில் யோகத்தில் ரஹஸ்யமாக எம்பெருமானாரை அநுபவித்தவர், அதைவிட்டு ஸிஷ்யர்கள் இருக்கும் கோஷ்டியில் சேர்ந்து அவர்களுக்கு ஸ்ரீவசந பூஷண க்ரந்தத்தை விவரித்தருளிச் செய்கிறார் மாமுனிகள். அன்னவரை வணங்குகிறேனென்றாராயிற்றிதனால்.

வசந பூஷணம் – ரத்நங்களை நிறைய வைத்துப் பதித்துச் செய்த பூஷணத்தை (அணிகலனை) ரத்ந பூஷணம் என்று சொல்லுமாப்போலே, பூர்வாச்சார்யர்களுடைய வசநங்களை (சொற்களை) நிறைய இட்டுப் (தமது சொற்களைக் குறைய இட்டு) படிப்பவர்களுக்கு ப்ரகாஸத்தை யுண்டாக்குமதாகப் பிள்ளைலோகாச்சார்யரால் அருளிச்செய்யப்பட்ட க்ரந்தம் வசநபூஷணமென்று சொல்லப்படுகிறது.

அது பரம கம்பீரமாகையால் அதன் பொருள் விளங்கும்படி மாமுனிகள் வ்யாக்யானம் செய்தருளுகிறார்.

வ்யாக்யானமாவது – பதங்களைப் பிரித்துக்காட்டுதல். பொருள் விளங்காத பதங்களுக்குப் பொருள் கூறுதல், தொகைச்சொற்களை இன்ன தொகையென்று தெரிந்து கொள்வதற்காக அதற்கேற்றபடி பிரித்துக்கூறுதல், வாக்கியங்களிலுள்ள பதங்களில் எந்தப் பதம் எந்தப்பதத்தோடு பொருள் வகையில் பொருந்துமோ அப்படிப்பட்ட பொருத்தம் காட்டுதல், ஏதாவது கேள்வி எழுந்தால் அதற்கு விடை கூறுதல் ஆகிய இவ்வைந்து வகைகளையுடையதாகும்.

‘ஸுமேத ஸ: கரிஷ்டா:’ என்று சொல்லப்பட்ட கோயில்லண்ணன் முதலியவர்களுக்கும் அறியமுடியாத வசநபூஷணத்தின் பொருளை மணவாளமாமுனிகள் விவரிக்கிறாரென்றதனால், ஸ்ரீவசநபூஷணநூலின் பொருளாழமுடைமையும், மாமுனிகளின் மேதாவிலாஸமும் அறியப்படுகின்றன.

எல்லா வகையான வேதங்கள் ஸ்ம்ருதிகள் இதிஹாஸங்கள் புராணங்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள், திவ்யப்ரபந்தங்கள் ஆகியவற்றின் ஸாரமான பொருள்களெல்லாம் ஸ்ரீவசநபூஷண க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ளதனால், இந்த ஒரு நூலை விவரித்துச்சொன்னால் அந்நூல்களெல்லாவற்றையும் சொன்னதாக ஆகுமாகையால் இந்நூலை விவரித்து எல்லாவிதமான ஸ்வாத்யாயத்தையும் அநுஷ்டித்தாராயிற்று மாமுனிகள் என்க.

—————

உத்தர​ திநசர்யை – 2
ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: |
ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந் நந்தயந்தம் நமாமி தம்||

பதவுரை:

தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு,

ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய,

ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை,

ஸம்யக் – நன்றாக, (பரம பக்தியோடு),

க்ருத்வா – செய்து,

ஸுபை: – கேட்பாருக்கு நன்மை பயக்குமவையான,

ஸ்வை:ஆலாபை: – தம்மிஷ்டப்படியே பேசும் ஸுலபமான பேச்சுக்களாலே,

ஸ்ரோத்ரூந் – கேட்போரை,

நந்தயந்தம் – மகிழ்வித்துக்கொண்டிருக்கிற,

தம் – அம்மாமுநிகளை,

நமாமி-வணங்குகிறேன்.

ஆர்வசனபூடணத்தின் ஆழ்பொருளல்லாமறிவார் ? ஆர் அது சொல் நேரில் அநுட்டிப்பார்’ (உபதேச. 55) என்கிறபடியே

அறிவதற்கும், அறிந்தபடியே அநுஷ்டிக்கைக்கும் முடியாத ஸ்ரீவசநபூஷணார்த்தங்களை ஸிஷ்யர்களுக்கு உபதேசிக்கும்போது எவ்வளவு எளிய நடையில் உபதேசித்தாலும், அர்த்தத்தின் அருமைக்கு ஏற்றபடி அவ்வுபதேசமும் அரிய நடையாகவே தோன்றும்.

ஸாயம்ஸந்த்யாவந்தநமும் பெருமாள் திருவாராதநமும் முற்றுப்பெற்ற பின்பு இப்போழுது செய்யும் ப்ரவசநம் தன்னிச்சைப்படி தானாகவே வரும் எளிய பேச்சாகவே இருக்கும்.

இதுவே ஸ்வைராலாபம் எனப்படும்.

ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மிகமிக எளிமையான பேச்சுக்கு ஸ்வைராலாபம் என்று பெயர்.

இத்தகைய பேச்சுக்களாலே முன்பு ஸ்ரீவசநபூஷணம் கேட்ட தம் ஸிஷ்யர்களையே மகிழ்விக்கிறார் மாமுனிகள் என்க.

இங்கு ‘ஹரி:’ என்றது பூர்வ திநசர்யையில் பதினேழாம் ஸ்லோகத்தில் ப்ரச்தாவிக்கப்பட்ட ‘ரங்கநிதி’ என்ற தம் திருவாராதந பெருமாளாகிய அரங்க நகரப்பனையே யாகும்.

ஹரி: என்றதற்கு ஆஸ்ரிதருடைய விரோதியைப் போக்குமவனென்றும், எல்லா தேவதைகளையும் நியமிப்பவன் (அடக்கியாள்பவன்) என்றும் பொருள்.

பூர்வ திநசர்யையில் ‘அத ரங்க நிதிம்’ (17) என்று காலையாராதநமும், ‘ஆராத்ய ஸ்ரீநிதிம்’ (29) என்று பகலாராதநமும், இந்த ஸ்லோகத்தில் மாலையாராதநமுமாகிய மூன்று வேளைத் திருவாராதநங்களும் கூறப்பட்டது காணத் தக்கது.

—————–

உத்தர​ திநசர்யை – 3 & 4
தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ|
விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே ||

ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே |
ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே ||

பதவுரை:

தத: – அதன்பிறகு,

தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய்,

விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், மழமழப்பானதும், பருமனானதுமான பஞ்சுமெத்தையினால் விளங்குகின்ற தாய்,

ஸமக்ரஸௌரப உத்கார நிரந்தர திகந்தரே – நிறைந்த, பெருமாள் சாத்திக்களைந்த மாலைகளின் நறுமணத்தின் ப்ரவாஹத்தினால் சூழப்பட்ட நான்கு திக்குகளையுமுடையதாய்,

ஸோபதாநே – சாய்ந்து கொள்வதற்கேற்ற தலையணைகளை உடையதாயுமிருக்கிற,

கநகபர்யங்கே – தங்கத்தாலான மஞ்சத்தில்,

ஸுகுமாரே – மிகவும் மெத்தென்றிருக்கிற,

வரஆஸநே – (த்யானத்துக்கு உரியதாய்) உயர்ந்த தர்ப்பம் மான்தோல் துணிகளையிட்டுச் செய்யப்பட்ட ஆஸநத்தில்,

ஸுகஆஸீநம்-(த்யானத்திற்கு தடையில்லாதபடி) ஸுகமாக உட்கார்ந்திருக்கிற,

தம்-அந்த மணவாளமாமுநிகளை,

சிந்தயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களுக்கும் நோக்கான பஞ்சமோபாயத்தின் (எம்பெருமானாரே மோக்ஷோபாயம் என்பதின்) பெருமையை உள்ளடக்கியிருக்கும் தமது இனிய எளிய பேச்சுக்களாலேயே ஸிஷ்யர்களை மகிழ்வித்த பின்பு,

அவ்வெம்பெருமானாரை த்யாநம் செய்வதற்கு உறுப்பாக மாமுனிகள் ஸ்வர்ண மயமான கட்டிலில் ஆஸநத்தில் எழுந்தருளியிருக்கும் அழகை, தாம் ஸதா த்யாநம் செய்வதாக இந்த ஸ்லோகத்தினால் தெரிவிக்கிறார்.

தாமே ஆசைப்பட்டு மஞ்சத்தில், அதிலும் ஸ்வர்ண மஞ்சத்தில் உட்காருதல், ஸந்யாஸிகட்கு ஸாஸ்த்ரத்தில் மறுக்கப்பட்டிருந்தாலும் ஸிஷ்யர்களுடைய வேண்டுகோளுக்கிரங்கி, அவர்கள் செய்வித்திட்ட ஸ்வர்ணமஞ்சத்தில் வீற்றிருப்பது மறுக்கப்படவில்லையென்பது கருதத்தக்கது.

‘பொன் வெள்ளி வெண்கலம் செம்பு கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உண்பதினால் ஸந்யாஸிக்கு பாபம் ஏற்படாது. அப்பாத்திரங்களைப் பிறரிடம் கேட்டுத் தானமாக வாங்கினால் தான் பாபம் உண்டாகும்’ என்று மேதாதிதி கூறியதை நோக்கினால்,

உண்ணும் கலத்தைச் சொன்னது கட்டிலுக்கும் உபலக்ஷணமாய், பொன்னால் செய்த கட்டிலைகேட்டுப் பெற்றுக் கொள்ளாமல், ஸிஷ்யர்கள் பொன்கட்டிலை இட்டு அதில் வீற்றிருக்கும்படி ப்ரார்த்தித்தால் அதன் மீது வீற்றிருப்பது குற்றத்தின்பாற்படாதென்று கொள்ளல்தகும்.

பொன்னின் மீதோ கட்டிலின் மீதோ தமக்குள்ள ஆசையைத் தடுக்கமுடியுமே தவிர, மிகமிக உயர்ந்தவர்களான ஸிஷ்யர்களின் வேண்டுகோளைத் தடுக்கமுடியாதிறே எப்படிப்பட்ட ஸந்யாஸிகளுக்கும்.

ஆக பொன் கட்டிலை இவர் உபயோகிப்பது தவறன்றென்க.

———–

உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம்
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் |
அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ
திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6

பதவுரை:

தயாளு:‍‍‍‍‍‍‍‍ – கருணை புரியுந்தன்மையராய்,

தேசிகேந்த்ர: – ‍ ஆசார்யர்களில் உயர்ந்தவரான,

ரம்யஜாமாத்ருயோகீ ‍- அழகிய மணவாளமாமுனிகள்,

உந்மீலத்பத்ம கர்ப்பத்யுதிதலம் ‍- மலர்ந்து கொண்டேயிருக்கிற தாமரைமலரின் உட்புறத்தின்

(சிவந்த) காந்தி போன்ற காந்தியையுடைய அடிப்பகுதியை (உள்ளங்காலை)யுடையதும்,

உபரிமேற்பகுதியில்,

க்ஷீரசங்காத கௌரம் ‍- பாலின் திரட்சி போல் வெளுத்ததும்,

ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுரநகமணி த்யோத வித்யோதமாநம் ‍- பௌர்ணமீ சந்த்ரனுடைய காந்தி போன்ற

(வெளுத்த) காந்தியால் நிறைந்த அழகிய நகங்களின் காந்தியினால் விளங்காநிற்பதும்,

அங்குளி அக்ரேஷு ‍- நகங்களின் நுனிப்பகுதிகளில், கிஞ்சித் நதம் ‍- சிறிது வளையையுடையதும்,

அதிம்ருதுலம் ‍- மிகவும் மெத்தென்றிருப்பதும்,

திவ்யம் ‍- அப்ராக்ருதமானதும்,

தத் ‍- மிகச்சிறந்ததுமான,

பாதயுக்மம் ‍- (தமது) திருவடியிணையை,

மே சிரசி ‍- அடியேனுடைய தலையில்,

திசது ‍- வைத்தருளவேணும்.

இந்த ஸ்லோகம் முதலான ஆறு ச்லோகங்கள் சிஷ்யர்களின் ஸ்தோத்ர ரூபமாக அமைந்திருக்கின்றன.

இம்முதல் ச்லோகத்தில் ஒரு சிஷ்யர் தமது சிரஸிற்கு அணிகலனாக மணவாளமாமுனிகள் தம் திருவடியிணையை வைத்தருளவேணுமென்று வேண்டுகிறார்.

தயாளு: ‍ தயைபுரிவதை இயற்கையாகக் கொண்டவர். பிறர் தமக்கு அடிமை செய்தால் அதுகாரணமாக தயையுண்டாகப் பெறும் பிற ஆசார்யர்களைப் போலல்லாமல், இயற்கையாகவே அனைவரிடத்திலும் தயை புரியும் எம்பெருமானாரைப் போன்றவர் இம்மாமுனிகள் என்றபடி.

திசதி ‍ உபதிசதி இதி தேசிக: ‍ சாஸ்த்ரார்த்தங்களை உபதேசிப்பவர் தேசிகரெனப்படுகிறார்.

தேசிகாநாம் இந்த்ர: ‍ தேசிகேந்த்ர: ஆசார்யர்களாகிற தேசிகர்கட்குத் தலைவரென்றபடி.

ஆசார்யர்கட்குத் தலைவராகையாவது ‍ ஆசார்யர்களுக்கு இருக்க வேண்டிய அறிவு, அறிவுக்குத்தக்க அநுஷ்டானம், தயை முதலிய குணங்களால் நிறைந்தவராயிருக்கை.

மணவாளமாமுனிகளின் திருவடிகளின் அடிப்புறம் தாமரைமலர் போல் சிவந்ததும், நகங்கள் நிலவைப்போல் வெளுத்தும் விரல்களின் நுனிகள் கொஞ்சம் வளைந்தும், பொதுவாகத் திருவடி முழுவதும் மிகவும் மெத்தென்றும் பால்போல் வெளுத்தும் இருக்கின்றனவாம்.

மாமுனிகள் ஆதிசேஷாவதாரமாகையால், அவர் திருவடியிணையை அப்ராக்ருதம் (பரமபதத்தில் உள்ளதொரு உயர்ந்ததான பொருள்) என்றார். இவ்வுலகிலுள்ள சம்சாரிகளின் பாதங்கள் போல் தாழ்ந்தவையல்ல என்றபடி.

கீழ்த் திருவடிகளுக்கு ‘உந்மீலத்பத்மகர்ப்ப’ என்று தொடங்கிச் சொன்ன அழகுகளெல்லாம் உத்தம புருஷனுக்கு இருக்கவேண்டிய உத்தம லக்ஷணங்களாகும்.

இத்தகைய சிறப்பத்தனையும் பெற்றுத் தமக்கு வகுத்ததுமான திருவடிகளை வைத்தருளவேணுமென்று ஒரு சிஷ்யர் மாமுனிகளை ப்ரார்த்தித்தாராயிற்று.

இதனால் பகவத் பக்தரான ஆழ்வார் ‘நின்செம்மாபாதபற்புத்(பத்மத்தை) தலைசேர்த்து’ என்று எம்பெருமானை வேண்டினார்.

ஆசார்ய பக்தரான ஒரு சிஷ்யர் ‘பாதயுக்ம சிரசி திசதுமே’ என்று ஆசார்யரான மாமுனிகளை வேண்டுகிறார்.

மாமுனிகள் தமது திருவடியிணையை அடியேன் முடியில் வைத்தருளட்டும்’ என்று படர்க்கையாக இருந்தாலும், ‘மாமுனிகளே! தேவரீர் திருவடிகளை அடியேனுடைய சிரஸில் வைத்தருளவேணும்’ என்று முன்னிலைப்படுத்தி ப்ரார்த்திப்பதிலேயே இதற்கு நோக்கு.

இவ் விஷயம் மேலுள்ள பல ஸ்லோகங்களால் விளக்கமுறும்.

————

த்வம் மே பந்து  ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா  தேஸிகஸ் த்வம் 
வி த்யா  வ்ருத்தம் ஸுக்ருதமதுலம்  வித்தமப்யுத்தமம் த்வம்| 
ஆத்மா ஶேஷீ  பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா  த்வம்  
யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்||-7-

பதவுரை:

ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே

த்வம் – தேவரீர் அடியேனுக்கு,

பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் .

த்வம்  ஜநக: அஸி – கல்வி கற்பிப்பதனாலே நன்மையைத் தேடும் தமப்பனார் ஆகிறீர்,

த்வம்  ஸகா  அஸி-(1)ஆபத்தில் உதவும் தோழராகிறீர் , (2)பகவதநுபவ  காலத்தில் துணைவர் ஆகிறீர்:

த்வம்  தேஸிக : அஸி – அறியாதவற்றை அறிவிக்கும் ஆசார்யன் ஆகிறீர்,

த்வம் வித்யா அஸி – அவ்வாசார்யார்கள் உபதேஸித்த தாய்போல் காக்கும் வித்யை ஆகிறீர்.

த்வம் வ்ருத்தம் அஸி – முன்பு கூறிய வித்யையின் | பலனாய நன்மையைத்தரும் நன்னடத்தை ஆகிறீர்.

த்வம்  அதுலம் ஸுக்ருதம் அஸி – (இதுவரையில் கூறிய உறவினர் முதலியோரின்  லாபத்துக்கும்,

மேல் சொல்லப்படும் செல்வம் முதலியவற்றின் லாபத்துக்கும் காரணமான) ஒப்பற்ற புண்யமாக ஆகிறீர்.

த்வம் உத்தமம் ஸித்தம் அஸி – (ஈட்டும்போதும் காப்பாற்றும் போதும் துன்பத்தைத் தரும்  அழியும் செல்வம்  போலல்லாமல்)

அழியாத உத்தம செல்வமாக  ஆகிறீர்,

த்வம் ஆத்மா அஸி – முற்கூரிய அனைத்தையும்  தனக்காக  ஏற்றுக்கொள்ளும் ஆத்மாவாக  ஆகிறீர்,

த்வம் ஶேஷீ பவஸி – முற்கூறப்பட்ட ஆத்மாவையும் அடிமைகொள்ளும் தலைவராக  ஆகிறீர்.

ஹே பகவந் –  அறிவு ஆற்றல் முதலிய குணங்களை மிகக்கெண்ட மாமுனிகளே,

த்வம் ஆந்தரஶ்ஶாஸிதா அஸி – (1)உள்புகுந்து நியமிக்கும் பரமாத்வாக ஆகிறீர், (2)’அந்தர‘ எனப்பட்டபடி பரமாத்மாவையும் நியமிக்கும் ஆந்தரரான ஜ்ஞாநியாக ஆகிறீர்,

யத்வா – இப்படிப் பலவாராகச் சொல்லிப் பயனென்?

ஆத்மஅநுரூபம் – விரோதியைப் போக்குதல், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யங்களாகிய விரும்பியவற்றைத் தருதல் முதலாக)

ஜீவாத்ம ஸ்வரூபத்துக்குத் தக்கதாக, யத்யத் பவதி- எது எது  உள்ளதோ, தத்(ஸர்வம்) அஸி-அது எல்லாமுமாகவும் ஆகிறீர்.

பத்நாதி இதி பந்து – நம்மை விடாமல் நாம் துன்புற்றபோது துன்புற்றும், இன்புற்றபோது இன்புற்றும் கூடவே இருக்கும் உறவினன் என்றபடி. ஸகா தோழன்.

நாம் துயருற்றபோது துயரைப் போக்குமவராய் பகவதநுபவம் பண்ணும்போதும், ‘போதயந்த பரஸ்பரம்‘ (கீதை 10- 9) என்று ஒருவருக்கொருவர் பகவத் குணங்களைச் சொல்லுவதற்கும் கேட்பதற்கும் உறுப்பான துணைவர் என்றபடி,

ஆத்மா – தான் என்பது அதன் கருத்து ‘தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் ‘ திருவாய்மொழி 3 – 6- 9) என்று ஆழ்வார் ‘நான்‘ அன்று சொல்லவேண்டிய இடத்தில் ‘தான்‘ என்றாரிரே.

இதனால் ‘தவம்‘ ஆத்மா அஸி‘ – என்பதற்கு ‘தேவரீர் நானாக ஆகிறீர்‘ என்பது பொருளாகத்தகும்.

மேலும் ‘ஸேஷி பவஸி, ஆந்தரஸாசிதா பவஸி ‘ என்பவற்றிற்கு – என்னயடிமை கொள்ளுமவரும் என்னையுட்புகுந்து நியமிப்பவரும் (பரமாத்வாகவும்) தேவரீரே ஆகிறீர் என்பது பொருள்.

‘ஆந்தர: ஸாஸிதா‘ என்பதற்கு பதவுரையில் கூறிய இரண்டு பொருள்களுக்கும்.

(1) ஆந்தர: என்பதற்கு அந்தரேபவ : மனத்தில் இருக்கும் பரமாத்மா என்று முதற்பொருள்,

(2) ‘ஆதமந: அந்தர: (ப்ருஹ . உப 5 -7 – 22) என்றவிடத்தில் அந்தர: என்பதற்கு (ஆத்மாவுக்கு) உள்ளிருக்கும் பரமாத்மா என்று பொருள் கூறப்பட்டுள்ளபடியினால்,

அந்தரஸ்யா அயம் உள்ளிருக்கும் பரமாத்மாவின் உள்ளும் இருந்து அப்பறமாதவை நியமிக்கும் ஜ்ஞானி‘ என்பது இரண்டாம் பொருள்.

‘ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்‘ (கீதை 7 – 18) (ஜ்ஞாநியோ என்றால் எனக்கு ஆத்மா என்பதே என் கருத்தாகும்) என்று எம்பெருமான் ஜ்ஞாநியை தனக்குள்ளிருந்து தன்னையும் நியமிப்பவனாக அருளிச்செய்தது இதற்கு பிரமாணமாகும்.

யத்வா = இது முன்பு தனித்தனியே சொன்னவற்றையெல்லாம் தவிர்க்கிறது.

இப்படி ஒவ்வொன்றாக இருத்தலைச் சொல்லி கொண்டுபோனால் நூல்விரிவுபடுமென்பதனால். ஆத்மாவுக்குத் தகுந்ததாக உலகில் சுருக்கமாகச் சொல்லி முடித்தருளியபடி.

(இந்த ஸ்லோகத்தில் ‘தவம் ஆத்மா அஸி – (தேவரீர் அடியேனாக ஆகிறீர்) என்று இவர் தமக்கு மாமுநிகளோடு அருளிச்செய்த ஒற்றுமை ஜீவாத்மாக்களைனவரும் ஒன்றே‘ என்று பக்ஷத்தாலல்ல;

சேஷ சேஷி பாவத்தாலும், நியந்த்ருதியாம்யபாவத்தாலுமே என்பது ‘மேலே ஸேஷீ பவஸி, ஆந்தர : ஸாஸிதா பவஸி‘ என்றருளிச்செய்வதிலிருந்து ஸ்பஷ்டமாகிறது.

இவ்வொற்றுமை தமக்குப் பரமாத்மாவோடு உள்ளமை ஸாஸ்த்ர ஸித்தமாகையாலும்

‘பீதவாடைபிரானார் பிரமகுருவாகி வந்து‘ (பெரியாழ். திரு. 5 – 2- 8) என்கிறபடியே மாமுனிகள் பரமாத்மாவின் அவதாரமாகையாலும்;

இவர் தமக்கு அம்மாமுநிகளோடு ஒற்றுமை கூறினாரென்று கருத்தாகும்.

—————-

அக்ரே  பஸ்சாது பரி பரிதோ  பூதலம் பார்ஸ்வதோ  மே 
மௌலௌ  வக்த்ரே  வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச| 
பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே 
நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்||-8-

பதவுரை :

ஹேவரவரமுநே! –  வாரீர் மணவாளமாமுநிகளே,

தே  – தேவரீருடைய ,

திவ்யம் – ஆச்சர்யகரமான,

அங்ரித்வயம் – திருவடியிணயை,

அக்ரே – எதிரிலும்,

பஸ்சாத் – பின்புறத்திலும்,

பூதலம் பரித: – பூமியின் நான்கு பக்கங்களிலும்,

மே  பார்வஸ்வத: – அடியேனுடைய இரு பக்கக்கங்களிலும்,

மௌ லௌ – தலையிலும்,

வக்த்ரே – முகத்திலும்,

கிலே வபுக்ஷி – உடலில்லுள்ள  எல்லா உறுப்புக்களிலும்,

மாநஸ  அம்போருஹே  ச – ஹ்ருதய கமலத்திலும்,

பஸ்யந் பஸ்யந் (இடையறாத நினைவின் மிகுதியாலே) எப்போதும் ஸ்பஷ்டமாகப் பார்த்துக்கொண்டே,

அம்ருத ஜலதௌ – இறப்பவனைப்  பிழைப்பூட்டும் அமுதக்கடலில்,

மஜ்ஜந்  – முழ்குமவனாய்  கொண்டு,

பவாப்திம் நிஸ்தரேயம் – பிறவிக்கடலைத் தாண்ட விரும்புகிறேன்.

“குருபாதாம்புஜம் த்யாயேத் குரோரந்யம் நபாவாயேத்” – (ப்ரபஞ்சஸாரம்) [ஆசார்யனுடைய திருவடித்தாமரைகளை த்யாநிக்க வேண்டும்.

ஆசார்யனைத் தவிர வேறொருவனை நினைத்தல் கூடாது.] என்ற ப்ரமாணம் இங்கு நினைக்கத்தக்கது,

ஒரு கடலில் மூழ்கிக் கொண்டே மற்றொரு கடலைத் தாண்டவிரும்பவது ஆச்சர்யமுண்டாக்கலாம்,

ஆசார்யனுடைய ஆச்சர்யகரமான திருவடிகளை த்யானம் செய்துகொண்டே இருக்கிற பாவநாப்ரகர்ஷத்தின் மஹிமையினியால் எல்லாம் ஸித்திக்குமாகையால், இதில் பொருந்தாமை ஏதுமில்லை என்கிறார் ஆசார்ய பக்தாக்ரேஸராகிய திருமழிசை அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி (வ்யாக்யாதா).

‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘

(எம்பெருமானால் தன்னுடைய பரம போக்யமான திருவடித் தாமரைகளை தன தலையில் வைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக் கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு ஸுகமாக இருக்கக் கடவன்) என்று

ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் எம்பெருமானார் எம்பெருமான் விஷயத்தில் அருளிச் செய்ததை இவர் இங்கு ஆசார்யரான மாமுனிகள் விஷயத்தில் அருளிச் செய்தார்.

————

கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம்
து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: |
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத்
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்||–9-

பதவுரை:

ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!,

ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா,

கர்ம அதீநே – முன்செய்த முழுவினையால் உண்டான,

வபுக்ஷி – தனது தேஹத்தில்,

ஆத்மபாவம் – ஆத்மாவின் தன்மையை,

கல்பயந் – ஏறிட்டு,

குமதி: – திரிபுணர்ச்சியுடையவனாய்க் கொண்டும்,

து: கே மக்ந: – ஸம்சாரது: க (ஸாகர) த்தில் மூழ்கியவனாய்க்கொண்டும்,

கிம் – எதற்காக

தூயதே – வருந்திகிறான்,

இதி (மத்வா) – என்று தேவரீர் நினைத்தருளி,

(அடியேன்) ஸர்வம் – முற்கூறிய திரிபுணர்ச்சி ஸம்ஸாரதுக்கம் முதலிய எல்லாவற்றையும்,

த்யக்த்வா – விட்டொழிந்து,

ஸம்ப்ரதி – இப்பொழுதே,

தவதிவ்யம் பதயுகம் ப்ராப்தும் – தேவரீருடைய மிகவும் அழகிய திருவடியிணையை அடைவதற்கு உறுப்பாக,

த்வத் ப்ரஸாதாத் – தேவரீருடைய (இயற்கையான) அனுக்ரஹத்தினாலே,

மே – அடியேனுக்கு,

ஸுப்ரபாதம் – (தேவரீர் திருவடிகளை அநுபவிப்பதென்னும் பகல்வேளைக்கு ஆரம்பமாகிற) நல்ல விடிவை,

தேஹி – தந்தருளவேணும்.

‘கர்மாதீநே’ என்று, தொடங்கி, ‘தூயதே ஜந்துரேஷ:’ என்பதிறுதியாக முன்னிரண்டடிகளும், மாமுநிகள் தமது சிஷ்யனைப் பற்றி நினைக்கவேண்டிய நினைப்பின் அநுவாதமாகும்

‘இதி’ என்பதற்கு பிறகு ‘மத்வா’ என்றொரு பதத்தைக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.

தேவரீர் திருவடிகளை அனுபவிக்கமுடியாமல் கழிந்த காலம் ப்ரளயராத்ரி இனிமேல் அவ்வனுபவத்தைப் பெறப்போகும் காலம் பகல் போன்றது.

அதற்கு முற்பட்டதகிய நல்ல விடியற்காலத்தை, தேவரீருக்குண்டான் இயற்கையான க்ருபையாலே கற்பித்தருள வேணுமென்றாயிற்று இதனால்.

————

யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே
யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே|
யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே
ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ||-10-

பதவுரை:

ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!

மம – முன்செய்த வினைக்கு வசப்பட்ட அடியேனுடைய அறிவானது,

ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,

ஸா வ்ருத்தி: – அந்தந்த அறிவெல்லாம்,

தே – நினைத்தவுடனே மகிழ்ச்சியூட்டுகிற தேவரீருடைய,

ஸம்ஸ்ம்ருதி: – நல்ல நினைவினுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்,

ஹே விபோ – வாரீர் ஸ்வாமியே! ,

மே – அடியேனுக்கு,

யா: யா: ஜல்ப: – எந்தெந்த வார்த்தையானது,

ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,

ஸ: – அவ்வார்த்தையனைத்தும்,

தே – புகழத்தக்க தேவரீரைப் பற்றியதான,

ஜல்ப: – வார்த்தையுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்.

ஹே பகவந் ! – அறிவாற்றர்களால் மிக்கவரே,

மம – அடியேனுடைய,

வபுக்ஷி – ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்கும் சரீரத்தில்,

யா யா சேஷ்டா – அச்செயலெல்லாம்,

தே – வணங்கத்தக்க தேவரீரைப் பற்றியதான,

வந்தநம் – வணக்கவுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்,

ஸர்வம் – இதுவரையில் சொல்லியும் சொல்லாததும் போந்த, (அடியேனுடைய வினையடியாக உண்டாகத்தக்க) செயல்களெல்லாம்,

தே – தேவரீருடைய,

ஸம்யக் ஆராதநம் – ப்ரீதிக்குக் காரணமான நல்ல ஆராதநரூபமாகவே,

பூயாத் – உண்டாகவேணும்.

அடியேனுக்கு, முன்செய்ததீவினையின் பயனாக மனத்தில் உண்டாகும் தீயஎண்ணெங்களெல்லாம் தேவரீரருளா ல் மாறி தேவரீரைப் பற்றிய த்யாநமாகவே உண்டாகவேணும்,

வாயில் வரும் தீயபேச்சுக்களெல்லாம் மாறி தேவரீருடைய நாமஸந்கீர்த்தனமாகவே உண்டாகவேணும்.

உடலில் உண்டாகும் தீய செயல்களெல்லாம் மாறி தேவரீரைபற்றிய வணக்கமாகவே உண்டாகவேணும் என்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

‘ஜாயதாம்’ என்பதனை ஒவ்வொறு வாக்கியத்திலும் இரண்டு தடவை திருப்பிப் பொருள் உரைக்கப்பட்டது.

‘ஜாயதாம்’ என்பது லோட் ப்ரத்யயாந்தமான சப்தம். அதற்குப் பலபொருள்கள் உள்ளன.

இங்கு முதலில் அர்ஹம் – தகுதியென்ற பொருளிலும்,

பின்பு வேண்டுகோள் என்ற பொருளிலும் அச்சொல் ஆளப்பட்டமை பதவுரையில் கூறியது கொண்டு அறிதல் தகும்.

இங்ஙனமன்றி (ஜாயதாம் என்பதை ஆவ்ருத்தி செய்யாமலேயே) அடியேன் மனத்தினிலுண்டாகும் ஜ்ஞாநமெல்லாம் தேவரீர் நினைவாகவும்,

வாயில் வரும் சொற்களெல்லாம் தேவரீர் நாமஸங்கீர்த்தனமகவும்,

தேஹத்தில் தோன்றும் செயல்களெல்லாம் தேவரீர் திருவாராதநமாகவும் உண்டாகவேணும் – என்றும் பொருள் தகும்.

————

அபகத மதமாநை: அந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தை: அர்த்த காமாநபேக்ஷை:|
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவர முநி ப்ருத்யை: அஸ்து மே நித்ய யோக:|| 11

பதவுரை:

மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு,

அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும்,

அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு இலக்காகையாகிற கடைசியான மோக்ஷோபாயத்தில் மிகவும் நிலைநின்றவர்களும்,

அதிகத பரம அர்த்தை: – பூரணமாக அடையப்பட்ட ஆச்சார்ய கைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தை (எல்லையான பலனை) உடையவர்களும்,

அர்த்த காம அநபேக்ஷை: – மற்ற உபாயத்தையும் மற்ற பலனையும் விரும்பாதவர்களும், அல்லது செல்வத்தையும் காமபோகத்தையும் விரும்பாதவர்களும்,

நிகிலஜநஸுஹ்ருத்பி: வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் இவ்விருவருமில்லாத நடுவர்கள் ஆகிய எல்லா மனிதர்களிடமும் நன்மையைத்தேடும் நல்லமனமுடையவர்களும்,

நிர்ஜிதக்ரோதலோபை: – கோபத்தையும் உலபித்தனத்தையும் நன்றாக வென்றவர்களுமான,

வரவரமுநிப்ருத்யை: மணவாளமாமுநிகளின் அந்தரங்க சிஷ்யர்களான கோயில் கந்தாடை அண்ணன், வானமாமலை ஜீயர் முதலியவர்களோடு, நித்யயோக: (திருவடிகளைத் தாங்கும் பஞ்சுமெத்தை, திருவடி இரேகை ஆகியவற்றிற்குப் போல்) நித்தியமான ஸம்பந்தமானது,

அஸ்து – உண்டாகவேணும்.

இதுவரையில் மதம், மானம், பொன்னாசை, பெண்ணாசை, கோபம், உலோபம் முதலிய தீயகுணங்களே நிறையப்பெற்ற நீசஜநங்களோடு இடைவிடாமல் பழகிப்போந்த தமுக்கு,

இக்குற்றங்களில் ஏதுமின்றியே, ஆசார்ய கைங்கர்யம், அதற்கு உபாயமாக ஆசார்யனையே பற்றுதல், அனைவரிடத்திலும் நல்லெண்ணம் தொடக்கமான நற்குணங்களே மல்கி யிருக்கப் பெற்ற

மணவாளமாமுநிகளின் சிஷ்யர்களோடு  நித்ய சம்பந்தம் (நீங்காத தொடர்பு) உண்டாக வேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாயிற்று.

———

இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்|
ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்||–12-

பதவுரை:

இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே,

ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால்,

ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய,

ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை,

ப்ரேம ஆர்த்ரயா – ப்ரீதியினால் குளிர்ந்திருக்கிற,

த்ருஷ்ட்யா – திருக்கண்ணோக்கத்திலே,

ஸிஞ்சந்தம் – குளிரச்செய்துகொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

சிந்தயாமி – எப்போதும் த்யாநம் செய்கிறேன்.

இதுவரையில் ஆசார்யரான மணவாளமாமுனிகளைப் பற்றி திநசர்யை என்னும் ஸ்தோத்ரக்ரந்தம் இயற்றி அனுபவிக்கப்பட்டது,

இனி ஸ்தோத்ரத்தினால் உண்டான ப்ரீதியையுடைய மணவாளமாமுனிகளை அனுபவிக்கிறார் எறும்பியப்பா.

இதி என்பது இவ்வாறாக என்றபடி, முற்கூறிய ஆறு ஸ்லோகங்களிலுள்ள பொருளின்படியே என்று கருத்து.

அவற்றில் ‘தவம் மே பந்து:’ (7) என்று தொடங்கி ‘யாயா வ்ருத்தி’ (10) என்பதீறாக உள்ள நான்கு ஸ்லோகங்கள் இவர் அருளிய வரவர முநி சதகத்திலும் படிக்கப்பட்டுள்ளன.

‘உந்மீலபத்ம’ (6) என்ற இவற்றின் முன் ஸ்லோகமும், ‘அபகதமதமாநை’ என்ற பின் ஸ்லோகமும் இவற்றோடு படிக்கப்பட்டு வருவதானாலும், இவ்விரண்டினை வேறொருவர் இயற்றியதாக யாரும் இருகாறும் கூறாமையாலும், இவ் விரண்டும் அந்த நான்கு ஸ்லோகங்களுடன் ஒப்ப எறும்பியப்பாவே அருளிசெய்தாரென்று கொள்ளுதல் பொருந்தும்.

இவ்வாறு ஸ்லோகங்களுக்குள்ளே ‘திவ்யம் தத்பாதயுக்மம் திஸது’ (6), ‘தவபதயுகம்தேஹி’ (9), ‘அங்க்ரித்வயம் பஸ்யந் பஸ்யந்’ (8) என்று மூன்று ஸ்லோகங்களில் மாமுனிகள் தம் திருவடிகளைத் தலைமேலே வைத்தருளவேணுமென்றும்

அவற்றை இப்போதும் சேவிக்கவெண்டுமென்றும் பிரார்த்தனை உள்ளடிங்கியிருப்பது பொருந்துமென்று கொண்டு

இந்த ஆறு ஸ்லோகங்களும் அஷ்டதிக்கஜாசார்யர்களில் கோயிலண்ணன், வானமாமலை ஜீயர் இவர்களை விட்டு

இவ்வெறும்பியாப்பா, திருவேங்கட ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணா, அப்பிள்ளை, அப்புள்ளாராகிய இவ்வறுவரால் (ஒவ்வுருவர் ஒன்றாக) அநுஸந்திக்கப்பட்டனவென்று கொள்ளுதல் தகும்.

கோயில்கந்தாடைஅண்ணன் ஸதா மாமுநிகளைத் தாங்கும் பாதுகையாகவும்,

வானமாமலை திருவடிகளை விடாத ரேகையாகவும் பிரஸித்தர்களாகையால்

எப்போதும் திருவடிகளைப் பிரியாத இவ்விருவரும் மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரிக்கவேண்டுமேன்றும் அவற்றை எப்போதும் ஸேவிக்கவேண்டுமேன்றும் ஆசைப்படார்களே என்கிறார்,

அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி. எறும்பியப்பா அருளிச்செய்த இவ்வாறு ஸ்லோகங்களில் ஒன்று இவர் அநுஸந்தித்ததாகவும்,

மற்ற ஐந்தும் இவரிடம் உள்ள கௌரவத்தினாலும் ஸ்லோகங்களின் இனிமையாலும் மற்ற ஐவரும் அநுஸந்தித்ததாகவும் கொள்க.

———–

அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|
ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||-13-

பதவுரை:

அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு,

ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை

அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு,

ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில்,

சேத: க்ருத்வா – தமது திருவுள்ளத்தைச் செலுத்தி (அதை தியானம் செய்து) பிறகு,

ஸயநீயம் – படுக்கையை,

பரிஷ்க்ருத்ய – அலங்கரித்து,

ஸயானம் – கண்வளர்கின்ற,

தம் – அந்த மணவாளமாமுநிகளை

ஸம்ஸ்மராமி – த்யானம் செய்கிறேன்.

உத்தர​ திநசர்யை – 12
அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|
ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||

‘க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே’ – என்றதனால் இரவில் செய்யவேண்டிய பகவத்த்யாநமாகிய யோகம் என்று கூறப்பட்டது.

‘தத: கநக பர்யங்கே’ (4) என்று முன்பு கூறப்பட்ட பகவத்த்யாநத்துக்கு உரிய ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, ஸ்தோத்ரம் செய்த சிஷ்யர்களை கடாக்ஷித்து அவர்களை விடைகொடுத்தனுப்பிவிட்டு, படுக்கைக்கு அலங்காரமாக பகவானை த்யானம் செய்துகொண்டே திருக்கண்வளருகிறார் மாமுனிகள்.

அத்தகைய மாமுனிகளைத் தாம் த்யானம் செய்கிறார் இவ்வெறும்பியப்பா.

(மாமுனிகள் தாம் திருவனந்தாழ்வானுடைய திருவவதாரமாகையாலே அப்ராக்ருமான அவருடைய திருமேனியழகு திருக்கண் வளருங்காலத்தில் இரட்டிதிருக்குமாகையால் த்யானம் செய்துகொண்டேயிருக்கத் தடையில்லையிரே.

மாமுனிகளுக்கு ஸுபாஸ்ரயம் எம்பெருமானுடைய திருமேனி, இவருக்கு ஸுபாஸ்ரயம் மாமுனிகளுடைய திருமேனி என்க.

யதீந்த்ர ப்ரவணாரான மாமுனிகள் எம்பெருமானை த்யாநிப்பது யதீந்த்ரரான எம்பெருமானாருடைய திருவுள்ள உகப்புக்காக என்றும் சௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரரை (மாமுனிகளை) த்யானம் செய்வது, தம்மை மணவாள மா முனிகளின் நிர்பந்தமாக நியமித்தருளிய இவர் தம் திருவாரதனப் பெருமாளாகிய சக்ரவர்த்தித் திருமகனாரின் திருவுள்ளவுகப்புக்காக என்றும் கொள்ளலாம்.

சக்ரவர்த்தித் திருமகனாரின் நியமனம் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்திலும் இவரருளிய வரவர முநி சதகத்திலும் காணத் தக்கது.

————–

திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:|
பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||-14-

பதவுரை:

இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி

‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும்,

‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை

தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை,

நித்யம் – தினந்தோறும் (இரவும், பகலும்)

பக்த்யா அநுத்யாத்யாயந் – பக்தியோடு தொடர்ந்து அநுசந்திக்கிற மனிதன்,

பரமம் பதம் – இனி இதுக்குமேலில்லை என்னும்படி மிகவுயர்ந்த ஸ்ரீவைகுண்டலோகத்தை,

பராப்நோதி – அடைகிறான்.

உத்தர​ திநசர்யை – 13
திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:|
பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||

முடிவில் திநசர்யை என்ற இந்த கிரந்தந்தை அனநுசந்தித்தால் உண்டாகும் பிரயோஜனத்தை அருளிச்செய்கிறார் இந்த ஸ்லோகத்தினால்

பூர்வ தினசர்யையில் முதலில் பதின்மூன்றாம் ஸ்லோகம் வரையில் உபோத்காதமென்று முன்னமே சொல்லப்பட்டது.

அதில் 14வது ஸ்லோகம் முதற்கொண்டு இவ்வுத்தர திநசர்யையில் 13ம்ஸ்லோக வரையிலுமே வரவர முநி திநசர்யை என்று என்ற நூலாகக் கொள்ளப்பட்டது.

‘திவ்யாம்’ என்பதற்கு திவ்யமான (மிகவுயர்ந்த) பாஞ்சராத்ராகமம் முதலிய ஸாஸ்த்ர ஸித்தங்களான அநுஷ்டானங்களைக் கூறும் நூல் என்னும் பொருளேயன்றி திவ்யமான – பரமபதத்திய என்று பொருள் கொண்டு, இவ்வுலகில் நடைபெறாதவையாய் பரமபதத்தில் மட்டும் நடைபெருமவைகளான பாஞ்சசாலிக (ஐந்து காலங்களில் செய்யவேண்டிய) அநுஷ்டானங்களை தெரிவிப்பதான நூல் என்னும் பொருளும் கொள்ளலாம்.

இந்த அநுஷ்டானங்கள் மிகவும் துர்லபங்களென்றவாறு பரமைகாந்திகளுடைய இவ்வநுஷ்டான ரூபமான தர்மமானது க்ருத யுகத்தில் பூரணமாகவே (குறைவின்றியே) நடக்கும். த்ரேதத்வாபர யுகங்களில் சிறிது சிறிதாய் குறையும்; கலியுகத்தில் இருக்குமோ இராதோ தெரியவில்லை என்று பரத்வாஜபரிஸிஷ்டத்தில் கூறியது கொண்டு இதன் அருமை விளங்கும்.

மேலும் பற்பல ஆசைகளோடு சேர்ந்த அறிவையுடையவர்களும் அது காரணமாக பற்பல தேவதைகளை அராதிப்பவர்களுமான மனிதர்கள், கலியுகத்தில் திருமாலொருவனையே தெய்வமாக கொள்ளும் இந்த தர்மத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அறிவு படைத்த வித்வான்களாயிருப்பர். எம்பெருமானைபற்றியதான இவ்வுயர்ந்த நெறியை அறிந்துவைத்தும், கலியின் கொடுமையினால், மோகமடைந்து, இதனை அறிவதற்கு முன்புள்ள தங்களது தீயநெறியை விட்டொழிக்க வல்லவராகமாட்டார்.

கலியிலும் கூட சிலவிடத்தில் ஒரு சிலர் எம்பெருமனொருவனையே பற்றுமவர்கள் உண்டாக போகிறார்கள்.

ஆனால் கெட்ட நோக்கமுடைய புறச்சமயிகள் தங்களுடைய கெட்ட யுக்திகளாலே அவர்களையும் மயக்கிவிட போகிறார்கள் என்று அதே நூலிலுள்ளும் காணத் தக்கது.

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வ தினச்சர்யா–ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பயங்கார் ஸ்வாமி வியாக்யானம் தழுவி – ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

November 21, 2022

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன்

ஸௌம்ய ஜாமத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட் பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞாந ப்ரதம் ஶுபம் ||

ஸௌம்ய ஜாமத்ரு யோகீந்த்ர – அழகியமணவாளமாமுனிகளின்,

சரணாம் புஜ ஷட் பதம் – திருவடித்தாமரைகளில் வண்டுபோல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,

திவ்ய ஜ்ஞாந ப்ரதம் – (தம்மையண்டினவர்க்கு) உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை அளிப்பவரும்,

ஶுபம் – அறிவினாலும், அநுஷ்டாநத்தாலும் ஶோபிப்பவருமான,

தேவராஜ குரும் – தேவராஜ குரு என்ற எறும்பி யப்பாவை,

வந்தே – வணங்கித் துதிக்கிறேன்.

————

இந்நூல் முன்று பிரிவுகளைகொண்டது. பூர்வ திநசர்யை, யதிராஜ விம்ஶதி, உத்தர திநசர்யை என்பன அப்பிரிவுகள்.

ஒருநாளின் முற்பகுதியின் அநுஷ்டாநத்தையும், பிற்பகுதியின் அநுஷ்டாநத்தையும் முறையே தெரிவிப்பன பூர்வ திநசர்யையும், உத்தர திநசர்யயும் ஆகும்.

எம்பெருமானாரைப் பற்றி த்யாநித்துத் துதிப்பதும் மணவாள மாமுனிகளின் அநுஷ்டாநத்தில் சேர்ந்ததாகையால்

பெரியோர்கள் மணவாள மாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக அருளிச்செய்த யதிராஜ விம்ஶதியையும்

பூர்வோத்தர திநசர்யைகளின் இடையில் சேர்த்தருளினர்.

இம் முன்று பகுதிகளைக் கொண்ட ஸ்ரீ வரவர முநி திநசர்யை என்னும் நூலுக்கு

ஏறக்குறைய 260 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தருளிய ‘வாதூலவீரராகவஸூரி’ என்ற

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி பணித்தருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவித் தமிழில்  எழுதப்படுகிறது.

———–

பூர்வ தினச்சர்யா – 1
அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே |
ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வர வரம் முநிம்||

துங்கே – மிகவும் உயர்ந்த,
புவந மங்களே – உலகோரின் மங்களங்களுக்கு (எல்லாவகையான நன்மைகளுக்கும்) காரணமான,
கவேர கந்யாயா – அங்கே – காவேரி நதியின் மடியில் (நடுவில்) இருக்கும்,
ரங்கே தாம்நி – திருவரங்கமென்னும் திருப்பதியில்,
ஸுக, ஆஸீநம் – ஸுகமாக (உபத்ரவமேதுமில்லாமல்) எழுந்தருளியிருப்பவரும்,
வரவரம் – (உருவம், ஔதார்யம், நீர்மை முதலியவற்றால் அழ்கிய மணவாளப் பெருமாளை ஒத்திருக்கையால்) அழகியமணவாளர் என்ற திருநாமத்தை தரித்திருப்பவரும்,
முநிம் – ஆசார்யனே ஶேஷியென்ற உண்மையை மநநம் செய்பவருமாகிய மணவாளமாமுனிகளை,
வந்தே – வணங்கித் துதிக்கின்றேன்.

“மகி ஸமர்ப்பணே” (கதௌ) என்னும் தாதுவடியாகப் பிறந்த மங்களம் என்னும் சொல் கம்யம் (அடையப்படும் பயன்) என்ற பொருளையும், இலக்கணையினால் அதற்கு ஸாதனமான உபாயத்தையும் காட்டுகிறது.

இது “கவேர கந்யாயா: அங்கே” என்றவிடத்திலும், “ரங்கேதாம்நி” என்கிறவிடத்திலும் பொருந்துகிறது.

இரண்டும் நமக்கு அடையப்படும் பயனாகவும் மற்றுமுள்ள பயன்களுக்கு உபாயமாகவும் ஆகக் குறையில்லை யல்லவா?

‘ரங்கம்’ என்ற சொல் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்குமிடம் என்னும் பொருளைத் தரும்.

‘ஸுகாஸீநம்’ என்பதனால், மணவாளமாமுனிகளின் அவதாரத்திற்குப்பின்பு துலுக்கர் முதலியோரால் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வகையான உபத்ரவமுமில்லை என்பது ஸூசிப்பிக்கப்பட்டது.

எம்பெருமானார் காலத்தில் சைவர்களாலும், பிள்ளைலோகாசார்யார், வேதாந்ததேசிகர் ஆகியவர் காலத்தில் துலுக்கர்களாலும் உபத்ரவம் நேர்ந்ததுபோல் மாமுனிகள் காலத்தில் யாராலும் எந்த உபத்ரவமும் உண்டாகவில்லை என்றபடி.

‘வதி – அபிவாதந ஸ்துத்யோ’ என்று தாதுவடிவாகப் பிறந்த ‘வந்தே’ என்னும் வினைச்சொல், உடலால் தரையில் விழுந்து வணங்குதலையும், வாயினால் துதித்தலையும் நேராகக் குறிப்பிட்டு,

இவ்விரண்டும் மணவாளமாமுனிகளைப் பற்றிய நினைவில்லாமல் நடவாதாகையால், பொருளாற்றலால் நினைத்தலையும் குறிப்பிட்டு, காயிக வாசிக மாநஸிகங்களான மூவகை மங்களங்களையும் தெரிவிப்பதாகும்.

———————-

பூர்வ திநசர்யை – 2
மயி ப்ரவிஶதி ஸ்ரீமந் மந்திரம் ரங்க ஶாயிந: |
பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்த மவிதூரத: ||

பதவுரை: –

ஸ்ரீமந் – கைங்கர்யமாகிய செல்வம் மிகப்பெற்ற மணவாளமாமுனிகளே!
ரங்கஶாயிந: – ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளிய பெரியபெருமாளுடைய,
மந்திரம் – கோயிலைக் குறித்து,
மயி – அடியேன்,
ப்ரவிஶதி ஸதி – சென்று புகும் போது,
பத்யு: – ஜகத்பதியான பெரியபெருமாளுடைய,
பதஅம்புஜம் – தாமரை மலர் போன்ற திருவடிகளை,
த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,
அவிதூரத: – அருகில்,
ஆயாந்தம் – எழுந்தருளிக் கொண்டிருக்கிறவராயும்.

(இதற்கு 12ம் ஶ்லோகத்தில் உள்ள ‘த்வாமேவ’ என்பதனோடு அந்வயம்.

இப்படியே மேலுள்ள ஶ்லோகங்களிலும் அந்வயம் கொள்ளத்தக்கது)

‘ஸ்ரீமந்’ என்று பிரிக்காமல் ‘ஸ்ரீமத்’ என்று பிரித்து, இதனை மந்திரத்திற்கு அடைமொழியாகவும் ஆக்கலாம்.

அப்போது செல்வமாகிற பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்கு மிகவும் உரிய இடம் ஸ்ரீரங்கநாதன் கோவில் என்பது பொருளாகும்.

முதன்முதலில், முக்கியமான மாமுனிகளிடம் பராமுகமாயிருத்தலென்ற தோஷமுள்ளமையினால் அவரை ஸேவிக்க நினையாமல், அவ்வளவு முக்கியரல்லாத பெருமாளை ஸேவிப்பதற்காக அடியேன் கோவிலுக்குள் ப்ரவேஶிக்கும் போது, எதிர்பாராமல் அடியேனுக்கு அருகிலேயே மாமுனிகள் பெருமாளை திருவடி தொழுவதற்காக எழுந்தருளி நின்றார். இது அடியேனுடைய பெரிய லாபமென்கிறார்

இதனால். ‘ ஆசார்ய கடாக்ஷ வைபவத்தினால், முன்பு அவரிடம் பராமுகமாயிருந்ததற்குக் காரணமான பாவம் தொலைந்ததென்று, ‘நான் கோவிலுக்குள் புகும்போது மாமுனிகள் என் அருகிலே வந்துகொண்டிருக்கிறார்’ என்பதனால் குறிப்பாகக் காட்டப்பட்டதாயிற்று.

பகவானை விட ஆசார்யர் மிகவும் உயர்ந்தவராகையால் அவனை வணங்கச் சென்ற  போது ஆசார்யர் எதிர்பட்டமை, விறகு வெட்டி வயிறு வளர்ப்பவன் விறகு தேடிச் செலும் போது வழியில் எதிர்பாராமல் நிதி கிடைத்தது போலிருந்ததென்று இங்குக் கருத்துக் கூறுவர் உரையாசிரியர்.

எம்பெருமானார் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம். அதற்கு அவர் திருவடிகளே உபாயமென்று நினைத்த ஆசார்ய நிஷ்டரான மாமுனிகள் கோவிலுக்குள் சென்று பெரிய பெருமாளைத் தொழுவது – பெருமாளுக்கு மங்களாஶாஸநம் செய்வதற்காகவே யன்றி, ஸித்தோபயமான பெருமாளைத் தம்முடைய புருஷார்த்தத்திற்கு உபாயமாகப் பற்றுதலாகிய ப்ரபத்தி செய்வதற்காக அன்று.

‘ தேவதாந்தரங்களையும் ஶப்தாதி விஷயங்களையும் உபாய பக்தியையும் உபாயமான எம்பெருமானையும் ஸமானமாக எண்ணியவனாய், ‘எம்பெருமான் நமக்கு ஸ்வாமி (அவனை ஸ்வயம் ப்ரயோஜநமாக ஸேவித்து மங்களாஶாஸநம் செய்ய வேணும்) என்று நினைப்பவன் பரமை காந்தி’ என்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே, மாமுனிகள் அத்தகைய பரமை காந்தி யாகையால் என்க.

——————–

பூர்வ திநசர்யை – 3
ஸுதா நிதி மிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||

பதவுரை :-

ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ர விக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,

ஸுதாநிதி மிவ (ஸ்திதம்) – திருப்பாற்கடல் போல் வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும்,

ப்ரஸந்ந அர்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் – (கண்கூசாமல் காணும்படியாகத்) தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் ஸூர்யன் (ஒருவன் இருப்பானாகில் அவன்) போன்ற காந்தியினால் சூழப்பட்டவருமாகிய …

‘ ஆசார்யருடைய திருமேனியை, திருவடி முதலாகத் திருமுடியீறாக, ஶிஷ்யன் த்யானிக்கவேண்டும்’ என்றும், ‘ ஶிஷ்யன் ஆசார்யன் திருமேனியை ஸேவிப்பதில் பற்றுடையவனாக இருக்கவேண்டும்’ என்றுமுள்ள வசனத்தின்படி ஆசார்யன் திருமேனியை வருணிக்கிறார் எறும்பியப்பா.

மாமுனிகள் வெள்ளைவெளேரென்ற திருமேனியையுடைய திருவநந்தாழ்வானுடைய அவதாரமாகையாலே தம்மிஷ்டப்படி தாமே ஏற்றுக்கொண்ட திருப்பாற்கடலுக்குக் காந்தி அதிகமாக இல்லாமையால், மேலும் காந்தியையுடைய ஸூரியனை மாமுனிகளுக்கு உபமானமாக்கினார்.

ஸூரியனுடைய காந்தி உக்ரமாகவும் உஷ்ணமாகவும் உள்ளதனால் அதனை நீக்க, ஸூரியனுக்கு ‘ப்ரஸந்ந’ என்ற விஶேஷணமிட்டார். ‘ தெளிந்தும், குளிர்ந்துமிருக்கிற’ என்பது அதன் பொருள்.

அப்படி ஒரு ஸூரியன் உண்டானால் அவனுடைய ஒளிபோன்ற ஒளியால் சூழப்பட்டவர் மாமுனிகள் என்று அபூதோபமையாக (இல்பொருளுவமையாக) ஸூரியனைக் கூறியபடியாம் இது.

—————-

பூர்வ திநசர்யை – 4
பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியௌ |
விந்யஸ் யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீ தலே ||

பதவுரை:-

பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும்,

பவத் – தேவரீருக்கு,

ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் திருத்தம்பியாரையும்,

பாணி பத்மாப்யாம் – தாமரை மலர் போன்ற திருக்கைகளால்,

பரிக்ருஹ்ய – நன்றாகப் பிடித்துக் கொண்டு,

ம்ருதுளௌ – ம்ருதுவான,

அங்க்ரீ – திருவடிகளை,

மேதிநீதலே – பூதலத்தில்,

ஸனை: – மெல்ல, மெல்ல,

விந்யஸ்யந்தம் – வைத்து நடப்பவராகிய

இரண்டு கைகளையும் கூப்பிச்செய்யும் நமஸ்காரமே தண்டவத் ப்ரணாமமாகையால், இப்படிப்பட்ட ப்ரணாமத்தை, த்ரிதண்டத்தைக் கையிலேந்திக் கொண்டு செய்யமுடியாதாகையால் கோயிலுக்குச்செல்லும்போது த்ரிதண்டம் தரியாவிட்டால் குற்றமேதுமில்லை.

இரண்டு கைகளின் நடுவே ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் கைகளைக் கூப்பிக்கொண்டு தண்டனிடும்போது த்ரிதண்டத்தைத் தரிக்கமுடியாதல்லவா ? என்பதே அக்கேள்விக்கு விடையாகும்.

ஆக, த்ரிதண்டமில்லாமல் ஸந்யாஸி இருக்கக்கூடாதென்ற விதி, பொது விதியேயாகையால் அது தண்டவத் ப்ரணாமாதி காலங்களில் தவிர மற்ற சமயங்களைப் பற்றியதேயாகும் என்றபடி.

(மேதிநீதலே அங்க்ரீ விந்யஸ்யந்தம்) இங்கு பூமிதலே என்னாமல் மேதிநீதலே என்று பூமியை மேதிநீ என்று குறிப்பிட்டருளியது – திருமால் மதுகைடபர்களைக் கொல்லும்போது அவர்கள் உடலிலிருந்த மேதஸ்ஸு (கொழுப்பு) பட்டதன் காரணமாக பூமிக்கு மேதிநீ என்று பெயருண்டானமையால், அவர்களின் கொழுப்பினால் பூசப்பட்டு தூய்மையிழந்த மேதிநீயானது (பூமியானது) இப்போது மாமுனிகளின் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்றுத் தூய்மை மிகப்பெற்றதென்று தெரிவிக்கைக்காகவாகும்.

‘நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே’ (பெரியாழ் திரு 4-4-6) என்று பகவத் பக்தர்களின் பாததூளி படுதலை இவ்வுலகம் செய்த பாக்யத்தின் பயனாக அருளிச்செய்தாரிறே பெரியாழ்வார்.

—————–

பூர்வ திநசர்யை – 5
ஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலம்பரம் |
ஆபீந விபுலோரஸ்கம் ஆஜாநு புஜ பூஷணம் ||

பதவுரை:-

ஆம்லாந கோமல ஆகாரம் – வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும்,

ஆதாம்ர விமல அம்பரம் – மிகச் சிவந்து ஸுத்தமான (காஷாய) வஸ்த்ரமணிந்தவரும்,

ஆபீந விபுல உரஸ்கம் – உயர்ந்த (முன்னுக்குவந்த) விஸாலமான திருமார்பையுடையவரும்,

ஆஜாநு புஜபூஷணம் – முழ்ந்தாள் வரையில் நீண்டு, திருமேனிக்கு ஆபரணம் போன்ற திருக்கைகளை யுடையவருமாகிய…

திருவடியழகை அநுபவித்துவிட்டு, இனித் திருமேனியின் மென்மையையும், ஸந்யாஸாஸ்ரமத்திற்குத் தக்க, திருப்பரிவட்டத்தின் இனிமையையும், மற்றுமுள்ள அவயவங்களின் அழகையும் அநுபவிக்கிறார் இதனால்.

(அம்லாந:) – வாடாக்குறிஞ்சிமலர். அது காட்டுவாகை மலர் முதலியவற்றைவிட மெத்தென்றிருக்குமாம்.

அம்லாந கோமலாகாரம் என்றதனால் – முன் ஸ்லோகத்தில் கூறியபடி திருவடிகள் மட்டும் ம்ருதுவானவையல்ல. திருமேனியே மெத்தென்றிருக்கும் என்று காட்டியபடி. திருவநந்தாழ்வானேயன்றோ மாமுநிகள்.

சிலர் அம்லான பதத்திற்கு, காட்டுவாகைமலர் என்று பொருள் கூறினர். வஸ்த்ரத்திற்குச் சிவப்பு நிறம் துறவறத்திற்கேற்பக் காவிக்கல்லினால் ஏற்றப்பட்டது.

திருப்பாற்கடல்போல் வெள்ளைவெளேரென்ற திருமேனிக்கு, சிவப்பு நிறக்காஷாயத்தினால் உண்டான பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்ற (பரபாக) ஸோபை, திருபாற்கடலுக்கு அதன்கண் உள்ள பவழங்களால் உண்டான ஸோபை போன்றுள்ளமை குறிப்பாகக் காட்டப்பட்டது.

(ஆபீநவிபுலோரஸ்கம்) திருமார்பு உயர்ந்தும் விஸாலமாகவும் இருத்தல் உத்தம புருஷ லக்ஷணமாகும்.

(ஆஜாநுபுஜபூஷணம்) இங்கு திருக்கைகள் முழந்தாளளவும் நீண்டுள்ளமை கூறியது உண்மையுரையாகும்.

அதனால் ஸிஷ்யர்களைக் கைகளால் பிடித்துக் கொண்டு நடந்தருளும்போது முழந்தாளளவும் நீண்டதாகத் தென்படாவிட்டாலும் குறையில்லை என்க.

அல்லது ஸிஷ்யர்களைப் பிடித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஸ்ரமமாக இருக்குமே என்று நினைத்து இடையிடையில் கைகளைத் தொங்கவிடவும் கூடுமாகையால், அச்சமயத்தில் கைகள் முழந்தாளளவும் நீண்டிருத்தல் தென்படுதலால் அது தன்னை இதனால் கூறினாரென்றலும் பொருந்தும்

——————

பூர்வ திநசர்யை – 6
ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா|
சோபிதம் யக்ய ஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா ||

பதவுரை: 

ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவள த்விஷா – தாமரைத் தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும்,

நாபி பிம்ப ஸநாபிநா – வட்ட வடிவமான நாபியின் ஸமான தேசத்தையுடையதுமான (=நாபிதேசம் வரையில் தொங்குகின்றதுமான)

யஜ்ஞஸூத்ரேண – யஜ்ஞோபவீதத்தினால்.

சோபிதம் – விளங்குமவருமாகிய

திருமார்பிலுள்ள யஜ்ஞோபவீதத்தை வருணிக்கிறார் இதனால்.

‘புத்தம் புதிய நூல்களால் நிருமிக்கப்பட்டதும் வெண்மை நிறமுள்ளதுமான பூணூலை அணிய வேண்டும்’ என்ற தத்தாத்ரேயரின் வசனம் இங்கு நினைக்கத்தகும்.

மேதாதிதியும் ‘ஸந்யாஸிகளுக்கு யஜ்ஞோபவீதமும் பற்களும் ஜலபவித்ரமும் ஆகிய இம்மூன்றும் எப்போதும் வெண்மையாக இருக்கக்கடவன’ என்று பணித்தார்.

‘உபவீதம் ப்ரஹ்மஸூத்ரம் ஸூத்ரம் யஜ்ஞோபவீதம், யஜ்ஞஸூத்ரம் தேவலக்ஷ்யம் என்ற ஆறும் பூணூலின் பெயர்கள்’ என்றார்கள் மஹரிஷிகள்.

‘யன்ஜ்ஞஸூத்ரேண’ என்ற ஒருமையினால் ஸந்யாஸிகளுக்கு மூன்றுவடம் கொண்ட ஒரு பூணூல்தான் என்பது குறிக்கப்படுகிறது.

‘ஸந்யாஸிக்கு ஒரே பூணூல், ப்ரஹ்மசாரிக்கு மான்தோலுடன் கூடிய ஒரே பூணூல், க்ருஹஸ்தனுக்கும் வானப்ரஸ்தனுக்கும் (முதுமையில் மனைவியுடன் வனம் சென்று சேர்ந்து தவம் செய்யுமவனுக்கும்) உத்தரீயத்துக்காக அணியப்படும் ஒரு பூணூலுடன் சேர்ந்து இரண்டு பூணூல்கள் – அதாவது ‘மூன்று’ என்று வ்யாஸரும் பரத்வாஜரும் அறுதியிட்டனர்.

இங்கு ஸந்யாஸிக்கு ஒரே பூணூல் என்றது – ஒரு ஒற்றை வடத்துடன் கூடிய – மூன்று வடங்கொண்ட ஒரே பூணூல் என்றபடி.

‘நாபிக்கு மேல் பூணூல் தரித்தவனுக்கு ஆயுள் குறையும், நாபியின் கீழ் தொங்கும்படி தரித்தவனுக்கு தவம் அழியும். ஆகவே நாபியளவாகவே பூணூலணியக்கடவன் என்று மஹரிஷிகள் கூறியதை இங்கு நினைக்கத்தக்கதாகும்.

—————–

பூர்வ திநசர்யை – 7
அம்போஜ பீஜ மாலாபி: அபிஜாத புஜாந்தரம்|
ஊர்த்வ புண்ட்ரைருபஸ் லிஷ்டம் உசித ஸ்தாந லக்ஷணை:||

பதவுரை :-

அம்போஜ பீஜ மாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால்,

அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும்,

உசித ஸ்தாந லக்ஷணை: – சாஸ்திரம் விதித்ததற்கு ஏற்ற – வயிறு முதலிய இடங்களென்ன, இடைவெளியோடு கூடியுள்ளமை முதலிய லக்ஷணங்களென்ன இவற்றையுடைய,

ஊர்த்வபுண்ட்ரை: – ஊர்த்வபுண்ட்ரங்களுடன் (கீழிருந்து மேல் நோக்கி இடப்படும் திருமண்காப்புகளுடன்)

உபஸ்லிஷ்டம் – பொருந்தப் பெற்றவருமாகிய…

திருமார்பு அதற்கு இருவருகுமுள்ள புஜங்கள் பூணூல் நாபியாகியவற்றை வருணித்தபின்பு, திருமார்பு முதலியவற்றோடு தொடர்பு கொண்ட தாமரைமணிமாலையையும் திருமண்காப்புகளையும் வருணிக்கிறார் இதனால்.

“ஸுத்தமான தாமரை மணிமாலையையும், தோள்களில் ஒற்றிக்கொள்ளப்பட்டு அலங்காரமான சங்கு சக்கரப்பொறிகளையும், விஷ்ணுவின் பெயர்களிலாவது விஷ்ணு பக்தர்களின் பெயர்களிலாவது ஏதோ ஒன்றையும் தரிக்க வேண்டும்’ என்று பரத்வாஜரும்,

“பூணூலையும், குடுமியையும், திருமண்காப்புகளையும், தாமரை மணிமாலையையும், பட்டு வஸ்த்ரத்தையும், அந்தணன் தரிக்க வேண்டும்’ என்ற பராசரரும் பணித்தருளியவற்றை இங்கு அனுஸந்தித்தல் தகும்.

‘மாலாபி:’ என்ற பஹுவசநத்தினால் தாமரைமணி மாலையோடு, துளஸீ மணிமாலையையும் பட்டினால் செய்யப்பட்ட பலநிறமுள்ள பவித்ரமாலைகளையும் கொள்க. ‘கருந்துளஸிக் கட்டையினால் செய்த மணிமாலையையும், பட்டுப்பவித்ரங்களையும், தாமரை மணிமாலையையும் எம்பெருமானுக்கு அணிவித்து, அவன் ப்ரஸாதமாகிய இம்மூன்றையும் தரிக்கவேண்டும்’ என்றுள்ள ப்ராஹ்ம புராண வசநம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

திருமண்காப்பைப் பற்றி, ஸ்ரீபாஞ்சராத்ர – பராஸர ஸம்ஹிதையில் ‘மூக்கின் அடிப்பகுதியில் (புருவ நடுவின் கீழுள்ள மூக்குப்பகுதியில்) ஒரு விரலகலமுள்ள பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை விரல் அகலமுள்ள இடைவெளிப்பகுதியும் இருபக்கங்களிலுமுள்ள கோடுகள் ஒருவிரல் அகலமுடையதுமாக – ஊர்த்வபுண்ட்ரத்தை (கீழிலிருந்து மேலுக்குச் செல்லும் நெற்றிக்குறியை) அந்தணன் தரிக்கவேண்டும்’ என்றுள்ளது.

பாத்மபுராணத்தில் ‘மூக்கின் அடிப்பகுதியிலிருந்து தொடங்கி நெற்றியின் முடிவளவாக ஊர்த்வபுண்ட்ரமிட வேண்டும். புருவத்தின் நடுப்பகுதி தொடங்கி நெற்றியின் இறுதிவரையில் இடப்படும் இரண்டு கோடுகளின் நடுவில் இடைவெளியை அமைக்க வேண்டும். அவ்விடைவெளி இரண்டு விரலகலமுடையதாகவும், இருகோடுகள் ஒரு விரலகமுடையதாகவும் இருக்கவேண்டும்’ என்று காண்கிறது.

‘விஷ்ணு க்ஷேத்ரத்திலிருந்து வெண்மை நிறமுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டுவந்து, அதைத் திருவஷ்டாக்ஷரமஹாமந்த்ரத்தினால் அபிமந்த்ரித்து, அம்மண்ணினால் நெற்றி முதலிய அவயங்களில் கேஸவாதி நாமங்களுக்குத் தக்கபடி (பன்னிரண்டு) ஊர்த்வபுண்ட்ரங்களை தரிக்கவேண்டும்’ என்ற பராஸர ஸ்ம்ருதியில் குறிக்கப்பட்டுள்ளது.

ஊர்த்வ புண்ட்ரங்களை எறும்பியப்பா இங்குக் கூறியது ஸ்ரீசூர்ணத்திற்கும் உபலக்ஷணம்;

‘ஊர்த்வபுண்ட்ரத்தின் இடைவெளியில் ஸ்ரீதேவிக்கு அபிமதமான (இஷ்டமான) மஞ்சளால் செய்யப்பட்ட ஸ்ரீசூர்ணத்தைத் தரிக்கவேண்டும்’ என்று பராஸரர் பணித்தமையால் என்க.

———————

பூர்வ திநசர்யை – 8
காஷ்மீர கேஸர ஸ்தோம கடார ஸ்நிக்த ரோசிஷா|
கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்த மூலா வலம்பிநா||

பதவுரை:-

காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய்,

ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற,

கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால்,

மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய….

ஊர்த்வபுண்ட்ரத்தோடு பொருந்திய தோள்களும் அவற்றில் தரிக்கப்பட்ட பட்டுவஸ்த்ரமும் நினைவுக்கு வரவே அவற்றையும் வருணிக்கிறார் இதனால்.

பட்டு வஸ்த்ரத்தை உத்தரீயமாக அணிந்திருத்தல் இங்குக் கூறப்படுகிறது.

ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்த்தன், வாநப்ரஸ்தன், ஸ்ந்யாஸி எனப்படுகிற நான்கு ஆஸ்ரமங்களிலுள்ள எல்லா ப்ராஹ்மணர்களுக்கும் பொதுவாக பட்டு வஸ்திரமணிதல் விதிக்கப்பட்டுள்ளது.

பராஸரர் ‘யஜ்ஞோபவீதம் குடுமி ஊர்த்வபுண்ட்ரம் தாமரைமணிமாலை பட்டுவஸ்த்ரமென்னுமிவற்றை ப்ராஹ்மணன் எப்போதும் தரிக்கக்கடவன்’ என்று கூறியது காண்க.

இந்த ப்ரகரணத்தில் ‘உத்தரீயத்தை அணியக்கூடாது’ என்று விலக்கியிருப்பது – அவைஷ்ணவ (வைஷ்ணவரல்லாத) ஸந்யாஸியைப் பற்றியதேயன்றி வைஷ்ணவ ஸந்யாஸியைப் பற்றியதன்றென்று கொள்ளத்தக்கது.

இது தெருவில் எழுந்தருளிக் கொண்டிருக்கிற மாமுநிகளைப் பற்றி வருணிக்கிற ஸ்லோகமாகையால் உத்தரீயம் தோளிலணிந்திருப்பது குற்றத்தின்பாற்படாது.

‘ப்ரதக்ஷிணம் பண்ணும்போதும், தண்டனிடும்போதும், தேவபூஜை செய்யும் போதும், ஹோமம் பண்ணும் போதும், பெருமாளையும் ஆசார்யனையும் ஸேவிக்கும் போதும் தோளில் உத்தரீயம் அணிதல் ஆகாது’ என்றே சாண்டில்யர் கூறியுள்ளதனால் என்க.

இங்குக் குறிப்பிட்ட பட்டுஉத்தரீயம் காஷாய வர்ணமுடையதென்று கொள்க; ஸந்யாஸிகளுக்கு அதுவே நியாயமுடையதாகையாலே.

—————————

பூர்வ திநசர்யை – 9
மந்த்ர ரத்நாநு ஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம் |
ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலகோத்கமம் ||

பதவுரை:-

மந்த்ரரத்ந அநுஸந்தாந ஸந்தத ஸ்புரித அதரம் – மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதே அசைகிற உதட்டையுடையவரும்,

ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலக உத்கமம் – அந்த த்வய மந்த்ரத்தின் அர்த்தத்திலுள்ள உண்மை நிலையை நன்றாக த்யாநம் செய்வதனால் உண்டான மயிர்க்கூச்செறிதலையுடையவருமாகிய….

அர்த்தங்களையும் நினைத்தலே ப்ரபத்தியாகையால், அப்ரபத்தியை ஒருதடவை மட்டுமே அநுஷ்டிக்க வேண்டியிருத்தலால், இடைவிடாமல் அநுஷ்டித்தமை சொல்லப்படுதல் பொருந்தாதே என்று கேட்கவேண்டா.

மோக்ஷார்த்தமாகப் ப்ரபத்தியை அநுஷ்டித்தல் ஒருதடவையேயாகிலும், நற்போது போக்குவதற்காகவும், அநுபவித்து மகிழ்வதற்காகவும் இடைவிடாமல் அவ்வர்த்தத்தின் தத்துவங்களை நினைத்தல் கூடுமென்க.

முற்கூறியபடியேயன்றி ‘ததர்த்த தத்த்வ நித்யாநம்’ என்பதற்கு வேறுபடியாகவும் கருத்துக்கூறுவர்.

‘விஷ்ணு: ஸேஷீ ததீய: ஸுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீஸடாரி:, ஸ்ரீமாந் ராமாநுஜார்ய பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் | தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத், ஸேஷம் ஸ்ரீமத் குரூனாம் குல மிதமகிலம் தஸ்ய நாதஸ்ய ஸேஷ: ||

[விஷ்ணுவானவர் ஸேஷி (நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு உகக்கும் தலைவர்). நற்குணங்களுக்கு இருப்பிடமாகிய அப்பெருமானுடைய திருமேனியே ஸ்ரீஸடாரி என்னும் நம்மாழ்வார், அவருடைய திருவடித்தாமரையிணையாக ஸ்ரீமத் ராமாநுஜாசார்யராகிய எம்பெருமானார் விளங்குகிறார். குரு: என்ற பதம் அவ்விராமாநுசரிடத்தில் நிறைபொருளுடையதாய் விளங்குகிறது. வேறு யாரிடத்திலும் விளங்குவதில்லை. ஆகையால் அவ்விராமாநுசருக்கு முன்பும், பின்புமுள்ள மற்ற குருக்களுடைய ஸமூஹம் அனைத்தும் அவ்விராமாநுச முனிவருக்கு ஸேஷமானது.] என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்தபடியே,

பகவத் ராமாநுஜாச்சார்யரே த்வயத்தில் உள்ள ‘ஸ்ரீமந்நாராயண்சரணௌ’ என்ற சரண்ஸப்தார்த்தம். அதுவே ததர்த்த தத்த்வம். அதாவது ஸ்ரீமந்நாராயணனுடைய – நாம் காண்கிற திருவடி ஸ்ரீமந்நாராயணனுடைய சரணங்களல்ல; பின்னையோவெனில் பகவத் ராமாநுஜரே ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகள் என்பது த்வயமந்த்ரார்த்தத்தின் உண்மைநிலை என்றபடி.

யதீந்த்ரப்ரவணரான (பகவத் ராமாநுஜ பக்தராகிய) மணவாள மாமுனிகளுக்கு ராமாநுஜரென்னும் ஸ்ரீமந் நாராயண சரணங்களை இடைவிடாமல் த்யானித்தலே முக்கியமாகையால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வத்தை விட இந்த த்வயார்த்த தத்த்வமே இங்கு எறும்பியப்பாவால் அருளிச்செய்யப்பட்டதென்கை யுக்தமாகும்.

த்வயார்த்த தத்த்வ த்யானத்தினால் மயிர்க்கூர்ச்செறியபெற்ற தேவரீரையே இடைவிடாமல் கண்ணாரக்காணக்கடவேன் (12ம் ஸ்லோகம்) என்கையால், ‘எம்பெருமானுடைய குணங்களாலே ஆவேஸிக்கப்பட்டு எம்பெருமான் குணங்களையே த்யானித்து அதனால் ஆனந்தக் கண்ணீருடனும் மயிர்க்கூச் செறியப்பெற்ற திருமேனியுடனும் விளங்கும் பக்தனானவன் உடலெடுத்த அனைவராலும் எப்போதும் காணத்தக்கவனாகிறான்’ என்று விஷ்ணு தத்த்வ க்ரந்தத்தில் கூறியபடியே மணவாளமாமுனிகளைக் கண்ணாரக் காண எறும்பியப்பா ஆசைப்பட்டபடி இது

——————————-

பூர்வ திநசர்யை – 10
ஸ்மயமாந முகாம்போஜம் தயமாந த்ருகஞ்சலம் |
மயி ப்ரஸாத ப்ரவணம் மதுரோதார பாஷணம் ||

பதவுரை:-

ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும்,

தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும்,

மயி – இத்தனை நாள்கள் தம்திறத்தில் பாராமுகம் காட்டியிருந்த அடியேனிடத்தில், 

ப்ரஸாத ப்ரவணம் – அருள்புரிவதில் பற்றுடையவராய்,

மதுர உதார பாஷணம் – செவிக்கினியதாய் ஆழ்ந்த பொருள்களைக் கொண்ட வார்த்தைகளையுடையவருமாகிய….

அதரத்தில் குடிகொண்ட மந்தஹாஸத்தையும் அதனுடன் கூடிய கடைக்கண் பார்வையையும் அவ்விரண்டோடு ஒற்றுமை கொண்ட அமுதமொழிகளையும் அம்மூன்றினாலும் ஊகிக்கத்தக்க – அவர் தம்மிடம் புரியும் அநுக்ரஹத்தையும் வருணிக்கிறார்.

இது தன்னால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வ த்யாநத்தின் தொடர்ச்சியால் தமக்கு மோக்ஷலாபம் உண்டாகிவிட்டதாக நினைத்துத் தமது விருப்பம் நிறைவேறிய ஸந்தோஷத்தினால் ஸதா மந்தஹாஸமுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

அதுவேயன்றி இம்மந்தஹாஸத்தை – மேற்கூறப்படும் மதுரவார்த்தைக்கும் பூர்வாங்கமாகவும் கூறலாம்;

ஸந்தோஷத்தை புன்சிரிப்பினால் தெரிவித்துப் பின்பல்லவோ மஹான்கள் மதுரமாக பேசுவது.

இனி, தயையாவது பிறர் துன்பங்கண்டு இரங்குதல்.

‘நாம் இங்ஙனம் த்வயார்த்த தத்வத்யானத்தினால் அடையும் இன்பம் இவ்வுலகோர்க்குக் கிடைக்கவில்லையே, ஐயோ இவர்கள் ஸம்ஸாரத்தில் உழல்கின்றார்களே’ என்று உலகோர் துன்பங்கண்டு மாமுனிகள் துன்பப்படுகிறாரென்க.

இதுவேயன்றி, மேற்கூறப்படுகின்ற மதுரபாஷணத்திற்கும் இத்தகைய காரணமாகலாம்; தயையோடல்லவா ஆசார்யர்கள் ஸிஷ்யர்களோடு மதுரமாகப் பேசுவது.

இந்த ஸந்தோஷமும் தயையும் மிகவும் முக்யமான தருமங்களாகும்.

‘ஸத்யம் ஸுத்தி தயை மனங்கலங்காமை பொறுமை ஸந்தோஷம் இவை அனைவர்க்கும் அவசியமாக இருக்க வேண்டிய தருமங்கள்’ என்றுள்ள பரத்வாஜ பரிசிஷ்ட வசநம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

‘மயி ப்ரஸாத ப்ரவணம்’ என்பதற்கு – ‘அடியேனுக்கு அருள் செய்வதில் பற்றுடையவர்’ என்று முற்கூறிய பொருளேயன்றி, ‘அடியேன் முன்பு பராமுகமாக இருந்ததனால் உண்டான மனக்கலக்கம் நீங்கப்பெற்று, அதற்கு நேர் முரணாக மனம் தெளிந்திருக்குமிருப்பில் பற்றுடையவராயினர் என்ற பொருளும் கூறலாகும்.

மதுரமாகவும், அர்த்தகாம்பீரியமுடையதாகவும் பேச வேண்டும்.

‘மதுரமான – செவிக்கினிய வார்த்தையைப் பேச வேண்டும்’ என்று மேதாதிதியும்,

‘ஆழ்ந்த பொருளோடு கூடிய பேச்சுக்களையே பேச வேண்டும்’ என்று சாண்டில்யரும் கூறியது காண்க.

இங்கே பேச்சுக்கு ஆழ்ந்த பொருளுடைமையாவது – எந்த வார்த்தை பேசினாலும் முற்கூறிய த்வயத்தின் ஆழ்ந்த கருத்திலேயே நோக்குடைமையாகும்.

————————

பூர்வ திநசர்யை – 11
ஆத்ம லாபாத் ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||

பதவுரை:-

ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட,

அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும்,

பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை,

இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால்,

அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய்,

இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை),

அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள்கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக்கொள்வதற்கென்று,

ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட மந்தஹாஸம், கருணை பொங்கிய கண்ணிணை, மதுரமான வார்த்தை ஆகியவற்றால் அடியேன் ஊகிக்கிறேன் –

அடியேனுக்கருள் செய்வதற்காகவே அடியேன் வரும் ஸமயத்தை நிஸ்சயித்து அடியேன் கோவிலுக்குச் செல்லும்போது எழுந்தருளினார்;

அவருடன் அடியேனுக்கு நேர்ந்த சேர்த்தி தானாகவே நேர்ந்ததன்று – என்பதாக – என்று கூறுகிறார்

இதனால். ஜந – பிறந்தவன், அகிஞ்சந – குணமில்லாதவன், இமம் – (அயம்) (ஸ்வரத்தைக் கொண்டு பொருள் கொள்க) – குற்றமனைத்துக்கும் கொள்கலமானவன்.

இவற்றால் – உலகத்தில் பூமிபாரமாகவும் உண்டிக்கும் கேடாகவும் பிறந்தது மட்டுமேயன்றி பிறப்புக்குப் பயனாகக் குற்றம் நீக்குதலும் குணம் பெருக்குதலுமின்றிக் கெட்டுப்போனவன் அடியேன் என்று தம்மை இகழ்ந்தார் எறும்பியப்பா என்க.

இத்தகையவனையும் விடாமல் காக்கவந்த மாமுனிகளின் மஹக்ருபை என்னே என்று வியக்கிறார் இதனால்.

ப்ராப்தமிவ – இங்கு ‘இவ’ என்பது உவமையைக் குறிப்பதன்று – ஊகையைக் குறிப்பதாகும். ஊகை – (உத்ப்ரேக்ஷை) – கருத்துரையில் கூறப்பட்டது.

————————

பூர்வ திநசர்யை – 12 &13
பவந்தமேவ நீரந்த்ரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா |
முநே வரவர ஸ்வாமிந் முஹுஸ் த்வாமேவ கீர்த்தயந் || 12

த்வதந்ய விஷய ஸ்பர்ஸ விமுகைர  கிலேந்த்ரியை:|
பவேயம் பவது:க்காநாம் அஸஹ்யாநாம நாஸ்பதம் || 13

பதவுரை:-

ஸ்வாமிந் வரவர – தேவரீருடைய ஸொத்தான அடியேனிடத்தில், தாமே அபிமாநம் செலுத்தும் ஸ்வாமித்வத்தையுடைய மணவாளமாமுனிகளே!

முநே – அடியேனை ஏற்றுக்கொள்ளத்தக்க உபாயத்தை மனனம் செய்யும் மஹாநுபாவரே!

பவந்தமேவ – திருமேனியழகு நீர்மை எளிமை முதலிய குணங்களால் பூர்ணரான தேவரீரையே,

நீரந்த்ரம் – இடைவிடாமல்,

பஸ்யந் – கண்டுகொண்டும்,

வஸ்யேந் சேதஸா – (தேவரீரின்னருளால் அடியேனுக்கு) வசப்பட்ட மநஸ்ஸுடன்,

த்வாமேவ – ஸ்தோத்ரம் செய்யத்தக்க தேவரீரையே,

முஹூ – அடிக்கடி, 

கீர்த்தயந் – ஸ்தோத்ரம் செய்துகொண்டும், (அஹம் – அடியேன்) (12)

த்வத் அந்ய விஷய ஸ்பர்ஸ விமுகை – தேவரீரைவிட வேறாகிய ஸப்தாதி விஷயங்களைத் தொடுவதில் பராமுகமான (பகைமைபூண்ட),

அகில இந்த்ரியை – கண், மூக்கு முதலிய ஜ்ஞாநேந்த்ரியங்களென்ன, வாக்கு முதலான கருமேந்த்ரியங்களென்ன, இவற்றாலே

அஸஹ்யாநாம் – பொறுக்கமுடியாத,

பவது:க்காநாம் – பிறவியினாலுண்டாகும் து:க்கங்களுக்கு,

அநாஸ்பதம் – இருப்பிடமாகாதவனாக, பவேயம் – ஆகக்கடவேன். (13)

விஷயமாகக் கொள்ளாமையினால் பிறவித் துன்பத்திற்கு ஆளாகாமலிருக்க வேண்டும்.

இங்ஙனமிருக்கும்படி தேவரீர் அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று.

கண், காது, கை, கால் முதலிய ஜ்ஞாநேந்த்ரிய கர்மேந்த்ரியங்களனைத்தையும் பகவத் பாகவதாசார்ய கைங்கர்யங்களிலேயே உபயோகிக்க வேண்டும். லௌகீக நீச விஷயங்களில் செலுத்தக்கூடாதென்பது சாண்டில்ய ஸ்ம்ருதி, பரத்வாஜ பரிசிஷ்டம் முதலிய தர்மசாஸ்த்ர க்ரந்தங்களில் பரக்கக்கூறப்பட்டுள்ளது. விரிப்பிற்பெருகுமென்று விடப்பட்டது.

இதுவரையில் இந்த வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு உபோத்காதமாகும். உபோத்காதம் = முன்னுரை.

இதுதன்னில் மேலே சொல்லப்போகிற ஐந்து காலங்களில் செய்ய வேண்டிய அபிகமநம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து அம்ஸங்களில் – இஜ்யை தவிர்ந்த மற்ற நான்கும் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

அபிகமநமாவது எம்பெருமானை ஸேவிப்பதற்காக எதிர்கொண்டு செல்வது.

இது ‘பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தம்’ (2) என்று ஜகத்பதியான அழகியமணவாளனை ஸேவிக்கக் கோயிலுக்கு மாமுநிகள் செல்லுவது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

உபாதாநமாவது – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தல்.

இது ‘ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யத் நாஸ்தீதி நிஸ்சயாத் – இமம் ஜநம் அங்கீகர்த்துமிவ ப்ராப்தம்’ (11) என்று பரமாத்மாவுக்கு – ஜீவாத்மாவைத் தொண்டனாக்கி அவனைப் பெறுதலே ப்ரயோஜநமென்று அறுதியிட்டு, அதற்காக மாமுநிகள் தம்மை ஏற்றுக் கொள்வதற்கு எழுந்தருளல் கூறப்பட்டதனால், மாமுனிகள் எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய எறும்பியப்பாவை ஸ்வீகரிப்பதாகிற உபாதாநம் ஸூசிப்பிக்கப்பட்டது.

ஸ்வாத்யாயமாவது – வேத மந்த்ரங்களை ஒதுதல்.

இது ‘மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம்’ (9) என்று – வேத மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் ஸ்புரித தசைகிற அதரத்தை யுடைமை கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

யோகமென்பது பகவத் விஷயத்தைப் பற்றிய த்யானமாகும்.

இது ‘ததர்த்த தத்வ நித்யாந ஸந்நத்த புலகோத்கமம்’ (9) என்று அந்த த்வயமந்திரத்தின் உண்மைப் பொருளாகிய பிராட்டி பெருமாள் முதலிய பொருளையாவது, பகவத் ராமாநுஜமுநிகளையாவது த்யானம் செய்வது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

இங்ஙனம் முற்கூறிய ஐந்தில் நான்கு அம்ஸங்கள் குறிக்கப்பட்டனவாகக் கொள்க.

ஆக, இவ்வுபோத்காதம் மேலுள்ள நூலுக்குச் சுருக்கமாக அமைந்ததென்க. ‘

எம்பெருமானை எதிர் கொண்டும் எம்பெருமானை ஆராதிப்பதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்தும், ஆராதனம் செய்தும், வேத மந்த்ராத்யயனம் செய்தும், வேத மந்த்ரார்த்தத்தை த்யானம் செய்தும் இப்படிப்பட்ட ஐந்து அம்ஸங்களினால் போதை நற்போதாகப் போக்கவேண்டும்’ என்று பரத்வாஜ முனிவர் பணித்தது காணத்தக்கது.

—————-

பூர்வ திநசர்யை – 14
பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ் ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குரு பரம்பராம் ||

பதவுரை:-

பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில்,

யாமிந்யா – இரவினுடைய,

பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது,

ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்)

ப்ரபுத்ய – தூக்கம் விழித்து,

பராம் – உயர்ந்த,

குரு பரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை,

ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…

எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு ஸர்வதர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும்,

நித்யகர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து,

பரம காருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத் கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும்,

‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும்,

ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார்.

ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது – பங்க்தி பாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத் தக்கது.

மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது;

குரு பரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க.

இங்கு குருபரம்பரை என்பது – பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும், ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும்.

————–

பூர்வ திநசர்யை – 15
த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் |
பர வ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச ||

பதவுரை:-

தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் – ஜீவாத்ம ஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய,

ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும்,

த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து,

பர வ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான,

பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய,

ப்ரகாராந் – ஐந்து நிலைகளை,

ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…

ஜீவாத்ம ஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன – ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை, அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை, அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.

திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும்,

இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை – த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும்,

கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும்

இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது.

எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன

(1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை;

(2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை;

(3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை;

(4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை;

(5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும்.

இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு.

பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க.

இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள் பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று.

————

பூர்வ திநசர்யை – 16
தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: |
யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா ||

பதவுரை:-

தத: – அதற்குப்பின்பு,

ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில்,

ஸ்நாத்வா – நீராடி,

பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய,

க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை,

யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட,

சேதஸா – மனஸ்ஸுடன்,

க்ருத்வா – செய்து.

ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும்.

இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும்.

இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும்.

முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம்.

ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள எம்பெருமானுடைய திருமுக மலர்ச்சிக்காகவே நித்ய நைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால், மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது.

————–

பூர்வ திநசர்யை – 17
அத ரங்க நிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோத யித்வா பத த்வயம் ||

பதவுரை:-

அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு,

நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய்,

ப்ரபும் – ஸ்வாமியான,

ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை,

ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து,

ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான,

தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை,

சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு)

சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).

சாண்டில்ய ஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது.

‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண் காப்புகளை யணிந்து, கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப் பொழுதுகளிலும், தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும் மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டே யிருந்து அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதி வசநம்.

இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல் தகும்.

இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்க நகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும், தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும்.

பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க.

———–

பூர்வ திநசர்யை – 18
ததஸ்தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாத மதுரஸ்மிதம் ||

பதவுரை:-

தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு,

தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய்,

ப்ராங்முகம் – கிழக்கு முகமாக,

ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக),

ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும்,

ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷண வகையால் கொள்க;

அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்த பிறகு, சோம்பலில்லாதவனாய்க் கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள் அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன், தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்க வேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது.

இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில் ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்;

மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க.

மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால், அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி.

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே.

நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது.

——-

பூர்வ திநசர்யை – 19
ப்ருத்யை: ப்ரிய ஹிதைகாக்ரை: ப்ரேம பூர்வ முபாஸிதம் |
தத் ப்ரார்த்தநா நுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே ||

பதவுரை:-

ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய,

ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே,

ப்ரேமபூர்வம் – அன்போடுகூட,

உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு,

தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்),

மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு,

ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை,

ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…

முறைப்படி திருவாராதனம் செய்து, தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்யக் கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும்.

அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவ பூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும்,

அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால்

இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும், புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண் காப்புக்களை அணிதலும், ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன.

ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதி பெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம். ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல்.

—————

பூர்வ திநசர்யை – 20
அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பத த்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம ||

பதவுரை:-

அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால்,

அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக,

தீர்க்கம் – வெகுநேரம்,

ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற,

மம – அடியேனுக்கு,

திவ்யம் – மிகவும் உயர்ந்த,

பதத்வயம் – திருவடியிணையை,

தத்வா – தலையில் வைத்து.

மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து பக்திப் பெருக்கினால் அப்படியே வெகு நேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார்.

ஒருவன் துன்பத்தால் நடுங்கா நிற்க, அது கண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது. தயை யென்பது இதன் பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமர கோஸம் காணத் தக்கது.

‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும் அது பத்து அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும். பத்துத் தடவைகள் அஸ்வமேத யாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்க போகத்தை அநுபவித்துவிட்டு மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால் பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது.

பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத் தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை.

திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி.

ஸம்ஸார மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட, மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்ய ஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசந பூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத் தக்கது

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –சூரணை-433-

———–

பூர்வ திநசர்யை – 21
ஸாக்ஷாத் பலைக லக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ர ரத்நம் ப்ரயச் சந்தம் வந்தே வர வரம் முநிம் ||

பதவுரை:-

ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி

பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக,

மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை,

ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற,

வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை,

வந்தே – வணங்குகிறேன்.

க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும்.

ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும்

இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து, ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று.

இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்;

நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க.

குரு பரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால் ‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்ய பரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று, அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில், எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது,

இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று, எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று.

இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில் ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது

————————–

பூர்வ திநசர்யை – 22
ததஸ் ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர் நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்க மங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் ||

பதவுரை:-

தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு,

ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய்,

புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய்,

புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை,

த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,

நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி,

விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.

இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக் காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்க நகரத்திற்கு அடைமொழியாயிற்று.

ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை. பின்னையோவென்னில் எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமை வாய்க்கப் பெற்றது அரங்கநகரமென்பது இவ் வடைமொழிக்குக் கருத்து.

‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’ (எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்ய மண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றை விட அதிகமான ஆசையைப் பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத் தக்கதாகும்.

இக் கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும்.

நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக – பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும்.

இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப் பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும்.

(1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரக மநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால் அப்பெருமானுக்கு உண்டான ஜகத் காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது.

(2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது இரண்டாவது வ்யுத்பத்தி. ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதய குகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால் அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது.

(3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால், கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லாவபேக்ஷிதங்களையும் தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது.

இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம்.

ஆதி ஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர்.

ஸ்ரீரங்கமங்களமாய் புருஷ ஸப்த வாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது.

‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி.

ஒரு மனிதனை விட்டு நீங்காதது அவனுடைய நிழலே யன்றி வேறொன்றில்லை யென்பர் உலகோர்.

நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும்.

மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் ஸ்ரீ  அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது.

———–

பூர்வ திநசர்யை – 23
மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் ||

பதவுரை:-

ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும்,

மஹதி – மிகப்பரந்ததுமான,

த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில்,

சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற,

கோபுரம் – கோபுரத்தை,

ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி,

ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி)

அந்த: – கோவிலுக்குள்ளே,

ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற,

தம் – அந்த மணவாள மாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள்.

ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்த மாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும்.

இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன.

சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது.

தெண்டன் ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும்,

ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது

————-.

பூர்வ திநசர்யை – 24
தேவீ கோதா யதிபதி ஸடத்வேஷிணௌ ரங்க ஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குரு ஜந வ்ருத: புருஷச் சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே ||

பதவுரை:-

தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,

யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார்,

ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம்,

ஸேநாநாத: – ஸேனைமுதலியார்,

விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார்,

ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன்,

ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார்,

பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ:

 – பரமபதநாதன்,

இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில்,

வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை,

நித்யம் – தினந்தோறும்,

ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில்

ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார் இவர்களையும்,

பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது,

ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார்.

ஏன்? அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால் அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப் பற்றி இங்குக் குறிப்பிடவில்லை.

எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்;

இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க.

‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும் பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி,

மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார் தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது.

ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும், அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும்.

ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள்.

ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குரு ஜந ஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும் தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று.

———–

மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25

பதவுரை:-

தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில்,

மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை,

யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி,

க்ருத்வா – செய்துவிட்டு ,

தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து,

விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி,

ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள்,

ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)

கருத்துரை:-

மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத்

தாம் ஒரு பலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால்,

‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார்.

மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும்,

அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும்

மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘

யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார்.

‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று

ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘

ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது

ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி

ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும்.

‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது,

அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம்

முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க.-

——————-

பூர்வ திநசர்யை – 26
அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் ||

பதவுரை:-

அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு,

ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், 

ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான,

மண்டபே – மண்டபத்தில்,

தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்

பிள்ளையுடைய திருவடித் தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற,

(மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)

தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி அதில் சித்ர வுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள்.

அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க.

‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில்.

இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது – பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும்.

மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ? அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது.

இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது.

அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிச் சாயையின் நடுவில் (தம்மைப்போல்) எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள்.

இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’ (திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம் மாமுனிகளை வணங்குகிறேன்) என்றதனோடு அந்வயம் கொள்ள வேண்டும்.

————

பூர்வ திநசர்யை – 27
தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் ||

பதவுரை:-

ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்)

ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான,

திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய,

ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய,

தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை,

ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக,

வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற,

தம் – அம்மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

திவ்ய ப்ரபந்தங்கள் ஸரீர ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம்

‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100)

‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11) முதலிய பல ஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும்.

முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும்.

சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும்.

மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும்.

ஆக, ரஹஸ்ய த்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும்.

இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ர ப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால், அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது.

ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும்.

ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத் தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி.

நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரே யாகையால், அதற்காக அடையத் தக்க (ப்ராப்யரான) வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்ற வேணுமென்பது ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும்.

இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார்.

இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாள மாமுனிகளுக்குத் தலை யல்லால் கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க.

—————-

பூர்வ திநசர்யை – 28
தத: ஸ்வ சரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநை ரர்த்திநஸ் தீர்த்தை: பாவயந்தம் பஜாமி தம் ||

பதவுரை:-

தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு,

ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும்,

பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய,

தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால்,

அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை,

பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால் தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால்.

எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது.

ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும்.

மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க.

‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால் ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது.

ஸ்ரீபாத தீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத் தக்கது.

சிலர் ஸ்ரீபாத தீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள்.

‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்த பாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’ என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்த பாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும்.

ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால் அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை.

பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்ய ப்ரபந்த ஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு இதில் ஸ்ரீபாததீர்த்த பாநத்தை கூறினாராயிற்று.

முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர், இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்;

வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க.

—————-

பூர்வ திநசர்யை – 29
ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய ச |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் ||

பதவுரை:-

பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு),

ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை,

ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து,

அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை,

விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை,

ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து)

பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற

தம் – அந்த மாமுனிகளை,

பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி,

“இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும் எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும்.

பதி விரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும், ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும் எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று சாண்டில்ய ஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி.

அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும்.

‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும், பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு.

சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும்.

பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல் (உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும்.

ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும் நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது.

‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே) மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது.

‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும் நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத் தூய்மையை உண்டாக்குமதும் பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தி யடையச் செய்தார்.

பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில் குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும்.

மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது, ‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற

ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து, இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி.

பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன்.

முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ? என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை, தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி.

ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது – அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும்.

———–

பூர்வ திநசர்யை – 30
தத: சேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே ||

பதவுரை:-

தத: – அமுதுசெய்த பிறகு,

புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய,

புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில்,

சேத: – தமது மநஸ்ஸை,

ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து,

உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி,

உபஹ்வரே – தனியடத்தில்,

உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன்

என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.

அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார்.

யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க.

யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை, அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும்.

‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான்.

எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும்.

அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால் திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க.

‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்,

ஸூர்ய மண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை) சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்

‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க.

புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷ ஸப்தம் பரமபுருஷனாகிய விஷ்ணுவைக் குறிக்குமதாகும்.

யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்ம த்யாநத்தைத் தெரிவிக்கிறது.

—————–

பூர்வ திநசர்யை – 31
அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி ||

பதவுரை:-

அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும்,

அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும்,

ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும்,

அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும்,

ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான,

அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே,

உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை,

நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு, 

நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில் முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும், அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து

பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது.

மூக்கின் நுனியை இரு கண்களாலும் பார்த்துக் கொண்டு யோகம் செய்ய வேண்டுமென்று தர்ம ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும், பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய) யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று கூறுகிறபடியினால்,

ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க.

—————–

பூர்வ திநசர்யை – 32
தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் ||

பதவுரை:-

தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு,

தஸ்மிந் – முற்கூறிய,

ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில்,

நிமக்நம் – மூழ்கியதாய்,

நிப்ருதம் – அசையாது நிற்கிற,

மந: – தனது மனத்தை,

யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக,

கர்த்தும் – செய்வதற்கு,

யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள்.

அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும் மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால்,

எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை ‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி.

ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும், அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹமாகும்.

இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து அவரை வணங்கினால்,

தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -கன்னி பூரட்டாதி திரு அவதாரம் —

September 24, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை  அண்ணன் ஸ்வாமிகள் தனியன்

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்ய மஹம் பஜே

ஸகல வேதாந்த ஸார அர்த்த பூர்ணாஸயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிரஜாமாத்ரு யோகிந்த்ர பாதாஸ்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ஸ்ரயே

வாழி திருநாமம்

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே

திருச் சேலை இடை வாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க் கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மான பரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப் பவள வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கத் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார்.
மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார்.

மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.
முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி
தன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

இவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆஸ்ரயிக்கச் செய்தவர்.

இவர்
கந்தாடையப்பன்,
திருகோபுரத்து நாயனார்,
சுத்தசத்வம் அண்ணன்,
திருவாழி ஆழ்வார் பிள்ளை,
கந்தாடை நாயன்,
ஜீயர் நாயனார்,
ஆண்ட பெருமாள் நாயனார்,
ஐயன் அப்பா
ஆகிய ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.

அண்ணன் என அழைக்கப்பட காரணம்:

அண்ணன் ஸ்வாமி ஒரு நாள் கூட தவற விடாமல், அரங்கரின் விஸ்வரூப தர்சனத்துக்கும்-புறப்பாட்டுக்கும் வந்து விடுவார்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சிலர் இவரிடம், ஒரு நாள் அரங்கரைச் சேவிக்க முடியா விட்டால் என்னாகும் என்றனர்.
இவர் அப்படித் தவறினால், தம் கண்களை இழந்து விடுவேன் என்றார்.
இவரைச் சோதிக்க விரும்பிய அவர்கள் இவருக்குத் தெரியாமல் கோவில் அர்ச்சகர்களிடம் கூறி, ஒரு நாள்
அதிகாலையில் மிகச் சீக்கிரமாகவே விஸ்வரூபம் நடத்திவிட முடிவு செய்தனர்.
அப்படிச் செய்ய முயன்றபோது, அவர்களால் கோவில் கர்ப்பக் கிரகக் கதவுகளைத் திறக்க முடியாமல் ஏதோ அடைத்திருந்தது போலிருந்தது.
அவர்கள் திறக்க முயன்று கொண்டிருந்த போது, வரதநாராயண குருவின் திருமாளிகையில் அவரது தம்பி அவரை,
“அண்ணா,எழுந்திருங்கள், விஸ்வரூபத்துக்கு நேரமாகிவிட்டது” என்று எழுப்பினார்.
அண்ணன் உடனே எழுந்திருந்து அவசரமாக நீராடிவிட்டு, திருமண்காப்பு இட்டுக்கொண்டு பெரிய கோவிலுக்கு விரைந்தார்.
தம்பியும் அவருடன் சென்றார். கோவில் த்வஜஸ்தம்பத்துக்கு அருகில், இருவரும் தண்டனிட்டு நமஸ்ஹாரம் செய்தனர்.
அதன்பின் தம்பியைக் காணவில்லை.

கோவில் கதவுக்குப் பக்கத்தில் சென்றவுடன், அனைவரும் வியக்கும்படி கோவில் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன.
அங்கிருந்தோர் அனைவரும் வரத நாராயணரின் பக்தி நிஷ்டையைக் கண்டு போற்றி வணங்கினர்.
திருவரங்கர் அர்ச்சக முகேன ஆவேசித்து,தாமே அவர் திருமாளிகைக்குச் சென்று ‘அண்ணா’என்று எழுப்பியதைச் சொல்லி,
இனி மேல் வரதநாராயணரும், அவர் சந்ததிகளும் ‘அண்ணன்’ என்று அழைக்கப்படுவர் என்று அருளினார்.
அன்றிலிருந்து அவர் ‘கோவில் கந்தாடை (முதலியாண்டான் திருக்குமாரரின் பட்டப் பெயர்) அண்ணன்’ என்றழைக்கப்பட்டார்.
அவரின் சந்ததியினருக்கும் இந்தக் ‘கோவில் அண்ணன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.

நம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்று அருளப்படிட்டார். காஞ்சிப் பேரருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.

அண்ணன் ஸ்வாமிகளும் அவர் சகோதரர்களும் ஸ்ரீரங்கத்தில் கோவில் மரியாதைகளுடன் புகழ் பெற்ற ஆசார்யர்களாக விளங்கி வருகையில், மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரி யிலிருந்து ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். அரங்கனின் அநுக்ரஹமும், அவருடைய தேஜஸும் ஸ்வாமி மாமுனிகளுக்கு பல சீடர்களைப் பெற்றுத் தந்தது.

ஒரு நாள் அண்ணன் ஸ்வாமி அவர் திருமாளிகை திண்ணையில் ஓய்வெடுத்து இருக்கையில், மாமுனிகள் மடத்திலிருந்துஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணன் அவரை அழைத்து, நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?என்று கேட்டார். அவர் தம் பெயர் சிங்கரையர் என்றும்,அருகில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பெரியஜீயரிடம் (மாமுனிகள்) சீடராக விரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதற்கு அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கும் போது,ஏன் மாமுனிகளிடமே சீடராக வேண்டும் என்றார். சிங்கரையர் அது பெருமாளின் திருவுள்ளம் என்றும்,பரம ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டுஎதுவும் சொல்ல முடியாதென்றும் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அண்ணன், அவரை உள்ளே அழைத்து பிரசாதம்,தாம்பூலம் அளித்து அன்றிரவு அவர் திருமாளிகையிலேயே தங்கும்படி சொன்னார். அன்றிரவு மேலும் அவரிடம் விவரம் கேட்க, அவரும் அந்த அரிய வைபவத்தைச் சொன்னார். அவர் தாம் மாமுனிகள் மடத்துக்கும், மற்ற திருமாளிகைகளுக்கும் காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்து வருவதாகவும், மாமுனிகள் அவற்றை மடத்தில் சேர்க்கும் முன்,அவரிடம்”இவை எங்கே விழைகின்றன?யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்?யார் அறுவடை செய்கிறார்கள்” என்று பலவாறு கேட்டுத் திருப்தி யடைந்த பின்பே கொடுக்கச் சொன்னார் என்றார். அவை ஸ்ரீவைஷ்ணவர்களின் தோட்டத்தில் விளைந்ததாகவும்,அதன் தொடர்பான வேலைகளைச் செய்பவர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களே;சிலர் மாமுனிகளின் சீடர்களும் ஆவார்கள் என்று மாமுனிகளிடம் சிங்கரையர் சொன்னாராம்.

மாமுனிகள் அவரிடம் பெரிய பெருமாளைச் சேவித்து ஊர் திரும்புமாறு,அருளியதால் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அர்ச்சகர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் சாதித்து, அபய ஹஸ்தமும் அளித்தார். மாமுனிகளின் ஆசார்ய சம்பந்தமும் விரைவில் கிட்டும் என்று ஆசீர்வதித்தார். சிங்கரையர் மீண்டும் மாமுனிகள் மடத்துக்குச் சென்று அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றாராம்.

செல்லும் வழியில் மடத்திலிருந்து கொடுத்தனுப்பிய பிரசாதத்தை உட்கொண்டதாகவும், ஆசார்ய பிரசாத மகிமையால் அவரது ஆத்மா சுத்தியடைந்தது என்றார். அன்றிரவு, கனவில் அவர் பெரியபெருமாள் சந்நிதியில் சேவித்துக் கொண்டிருப்பது போலவும், அப்போது பெருமாள், அவர் சயனித்திருக்கும் ஆதிசேஷனைக் காட்டி “அழகிய மணவாள ஜீயர் (மாமுனிகள்) ஆதிசேஷனுக்குச் சமம்; நீர் அவர் சிஷ்யனாகக் கடவது” என்று அருளினார் என்று சொல்லி முடித்தார். இதைக் கேட்டுப் பெரிதும் வியந்தார் அண்ணன் ஸ்வாமி. இந்த வைபவம் அண்ணன் மாமுனிகளிடம் ஆஸ்ரயிப்பதற்கான முதல் தூண்டுகோலாக இருந்தது.

சிங்கரையர் வைபவத்தைக் கேட்டு அதையே எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார் அண்ணன்.அன்றிரவு அவரும் ஒரு கனவு கண்டார்!அந்தக் கனவில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மாடியிலிருந்து இறங்கி வந்து இவரைச் சவுக்கால் அடித்தார்!பிறகு இவரையும் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றார்; அங்கு ஒரு சந்யாசி மிகவும் கோபமாக அமர்ந்திருந்தார். அவரும் அண்ணனைச் சவுக்கால்அடித்தார்;அழைத்துச் சென்ற ஸ்ரீவைஷ்ணவர் சந்யாசியிடம்”இவன் சிறுபிள்ளை; தான் செய்வதறியாது செய்து விட்டான்” என்றார்.

சந்யாசியும் சாந்தமடைந்து அண்ணனை அழைத்துத் தம் மடிமீது அமரவைத்து “நீயும், உத்தமநம்பியும் தவறு இழைத்து விட்டீர்கள்” என்றார். “மாமுனிகளின் பெருமை அறியாது தவறிழைத்து விட்டேன் அடியேனை மன்னியுங்கள்” என்று வேண்டினார் அண்ணன்.அந்த சந்யாசி”நாம்ஸ்ரீபாஷ்யகாரர் ராமாநுஜர், இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான், நாமே ஆதிசேஷன்; இங்கு மணவாள மாமுனிகளாக அவதரித்திருக்கிறோம்.நீரும் உம்சொந்தங்களும், அவரிடம் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்றார்.

கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்த அண்ணன் ஸ்வாமியின் கண்களிலும், மனத்திலும் ஆனந்தம் பொங்கியது! ஜகதாசார்யரையும், தம் குலபதி முதலியாண்டானையும் சேவித்த ஆனந்தம்!! உடையவரே தம்மைத் திருத்திப் பணிகொண்டு, மாமுனிகளை ஆசார்யராக காட்டிக் கொடுத்த பேறு பெற்ற ஆனந்தம்!!!

மாமுனிகள் கோவில் அண்ணனை தம் அஷ்ட திக்கஜங்களுள் ஒருவராக நியமித்தார். இடைக்காலத்தில் பெரிய கோவிலில் கந்தாடையார்களுக்கு நின்று போன சில மரியாதைகளை மீண்டும் பெற்றுத் தந்தார் மாமுனிகள். அண்ணனுக்கு பகவத் விஷயத்தில்

(திருவாய்மொழி) இருந்த ஞானத்தினால் அவருக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றினார். கந்தாடை அப்பன், சுத்த சத்வம் அண்ணன் மற்றும் பல ஆசார்யர்களை அண்ணனிடம் ஆஸ்ரயித்து பகவத் விஷ்ய காலட்சேபம் கேட்குமாறு செய்தார். இவ்வாறு பலகாலம் பெரிய பெருமாளுக்கு கைங்கரியங்கள் புரிந்தார்.

மாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.

இவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.

பேராத நம் பிறப்பை பேர்க்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாளால் அருள் பெற்றோன் வாழியே
ஏராரு நன் மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழை படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படி யுடையோன் வாழியே
ஆராமாஞ்சூழ் கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழும் கந்தாடை யண்ணன் என்றும் வாழியே!!!🙏🙏🙏

புண்ணிய நற் புரட்டாசி பூரட்டாதி
மண்ணில் உதித்த மறையோனே – எண்ணாதியாம்
கன்னி மதிள்சூழ் கோயில் கந்தாடை அண்ணனே
இன்னும் ஒரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் –சித்திரை அனுஷம் –

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 23 ஆம் ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்:
ஸ்ரீ கௌசிகாந்வய ஸுதார்ணவ பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய குருவர்ய ஸுதம் வரேண்யம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய போதம்
ஸ்ரீமந் மஹா குருமஹம் ஸரணம் ப்ரபத்யே||

வாழி திருநாமம்:
வாழியிராமாநுசாரியன் வண்கமலத் தாளடைந்த வாழி
தொட்டையாரியன் தாள் வாழியவே
வாழியரோ தென்குருகூர் மாறன் திருவாய்மொழிப் பொருளை
இங்கு உலகோற்கு ஈந்தருளும் சீர்

சித்திரையில் அனுஷநாள் சனித்த வள்ளல் வாழியே
சீராரும் இளையவில்லி திருக்குலத்தோன் வாழியே
பக்தியுடன் பூதூரான் பதம் பணிவோன் வாழியே
பதின்மர் கலைப் பொருளனைத்தும் பகருமவன் வாழியே
நித்தியமும் அரங்கர் பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடனத்தின் நெறியுடையோன் வாழியே
எத்திசையும் அடியவர்கட்கு இதமுரைப்போன் வாழியே
இளையவில்லி தொட்டையாரியன் இணை அடிகள் வாழியே

பொன்னரங்கம் வாழ பூதூரான் தாள் வாழ
தன்னிகரில் ஆரியர் நற்றாள் வாழ – மன்னுலகில்
தொன் நெறி சேர் இளைய வில்லி தொட்டையாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் — நாலாம் பிரகரணம் –9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –சூர்ணிகை-407-463- –

August 14, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-இப் ப்ரசங்கம் தான் உள்ளது –

இனி -ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-என்று தொடங்கி கீழில் பிரபந்தத்திலே இதர உபாய த்யாக பூர்வகமாக ஸூ கரமான ஸித்த உபாயஸ்வீ கார பிரகாரத்தை விசதமாக வெளியிட்டு அருளினவர் அவ்வுபாயத்துக்கும் அநதிகாரிகளாக ஆன துர்கதியைக் கண்டு
தம்முடைய பரம கிருபையாலே அத்யந்த ஸூ கரமுமாய் அத்யந்த ஸூ லபமுமான சரம உபாயம்-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிற ஸதாச்சார்ய அபிமானம் என்னும் இடத்தை
ஸ பிரகாரமாக வெளியிடுகிறார் மேல் -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி –

பரதந்த்ர ஸ்வரூபனாய் கேவல க்ருபாவானான ஆச்சார்யனைப் போல் அன்றிக்கே -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை இப்படி நிர்ஹேதுக க்ருபவான் அன்றோ என்று பற்றின போது தான் இறே கீழ் யுக்தமான பயாபய ப்ரசங்கம் தான் இவனுக்கு உள்ளது என்று வஹ்ய மாணமான சரம உபாயத்தை ஹ்ருதீ கரித்து அத்தைப் பிரதமத்திலே ப்ரஸ்தாவிக்கிறார்

இவ் விடத்தில் தான் என்கிற ஸப்தம் பற்றும் போது தான் இறே என்று சொல் பாடாய்க் கிடக்கிறது அத்தனை –

—————

சூரணை -408-

உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ் வர்த்தம் அறுதி இடுவது —

சூரணை -409-

அவர்களைச்
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

ஆனால் வசநாத் ப்ரவ்ருத்தி -வசநாத் நிவ்ருத்தியான பின்பு இதில் பிரமாணம் ஏதோ என்கிற ஆ காங்ஷையில் -உண்ட போது -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
தர்மஞ்ஞ ஸமய ப்ரமாணம் வேதாஸ்ஸ -என்கிற ந்யாயத்தாலே இவ்வர்த்தத்துக்குப் பிரமாணம் ஏது என்று பரம தர்மஞ்ஞரான ஆழ்வார்களுடைய அனுசந்தான க்ரமத்தை ஆராய்ந்தவாறே
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே பகவத் ஸம்ஸ்லேஷ போகம் ஸித்தித்த போது
மாறுளதோ இம்மண் மிசையே -என்றும்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
உபய விபூதியிலும் தங்களுக்கு ஓர் ஒப்பு இல்லையாக அனுசந்திப்பது
உண்ணா நாள் பசி யாவது ஒன்றில்லை நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -என்கிறபடியே
பகவத் ஸம்ஸ்லேஷ போகம் இல்லாத போது
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும்இத்யாதி பிரகாரத்திலே
கூப்பிடுவதாக நிற்பர்கள் இறே ஸ்வ தந்த்ரனைத் தஞ்சமாகப் பற்றின ஆழ்வார்கள் பதின்மரும் இப்பரமார்த்த நிர்ணயம் பண்ணுவது ஆகையாலே அவர்கள் பாசுரம் ப்ரமாணமாக வன்று

அல்லாத ஆழ்வார்கள் அனைவரும் தமக்கு அங்க பூதராம் படியான ஆதிக்யத்தை யுடைய நம்மாழ்வார் திருவடிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றி
தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே ஸ்வ தந்த்ரனை உபாயமாகப் பற்றி இவர்கள் இப்படிப் படுவதே என்று ஆழ்வார் பதின்மரையும் அபஹஸித்து
அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்று சதுரராய் இருப்பார் ஒரு சர்வாதிகர் யுண்டு
இவருடைய பாசுரமான -கண்ணி நுண் சிறுத்தாம்பைப் ப்ரமாணமாகக் கொண்டு இந்த பரமார்த்த நிச்சயம் பண்ணக் கடவோம் என்கிறார்

அங்கன் அன்றிக்கே
உண்ட போது ஒரு வார்த்தையும் சொல்லுகையாவது -பகவத் அனுபவம் பண்ணின போது தச் சரம அவதியான
அடியார் யடியார் எம் கோக்கள் -என்பது
அந்த பகவத் விக்நம் பிறந்தால் சரமமான பாகவத சேஷத்வத்தையும் அழித்து
உங்களோடு எங்களிடை இல்லை – என்பராகையாலே
அவர்கள் பாசுரம் இப்பரமார்த்தத்துக்கு பிரமாணம் அன்று என்கிறார் ஆகவுமாம் –

—————–

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்-சேர்ந்து இருக்க வேணும் இறே பிராபகம் –

இப்பரமார்த்தத்தை இவர் ஒருவர் பாசுரம் கொண்டே நிர்ணயிக்க்கைக்கு அடி என் என்ன
ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர வேணும் இறே ப்ராபகம் -என்று இந்த ப்ரஸ்துதமான சரம உபாயத்துக்கு இடம் கொள்ளுகிறார் –
இவ்விடத்தில் வஹ்யமான அர்த்த சங்கதி பலத்தாலே சரம அதிகாரியான இவனுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்து இருக்க வேணும் இறே
ப்ராப்ய ப்ராபகங்கள் என்று இங்கனே ஸப்தத்தை வலித்து அருளிச் செய்து அருள்வர்-அது தான் எங்கனே என்னில் –
பிரதமத்தில் தன் ஸ்வரூபத்தை யுணர்ந்தால் ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலும் –
அந்த ததீய ப்ரதானனான ஆச்சார்ய விஷயத்திலே பண்ணின பிரதம நமஸ்ஸிலே பிரதமத்தில் ஆச்சார்ய சேஷத்வமே ஆத்ம யாதாத்ம்ய ஸ்வரூபமாகையாலே
இந்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமாக வேணும் இறே ப்ராப்யமும் ப்ராபகமும் என்கிறது –
அங்கன் அன்றிக்கே சரம உபாய ஸ்தாப நத்திலே ப்ரதான்யேந பிள்ளை திரு உள்ளத்துக்கு தாத்பர்யமாகையாலே
யதா பாடம் அர்த்தம் ஆகவுமாம் –

—————–

சூரணை -411-

வடுக நம்பி-ஆழ்வானையும்-ஆண்டானையும்-இரு கரையர் என்பர்-

இனி வடுக நம்பி -இத்யாதியாலே -இவ்வர்த்தத்தில் ஆழ்வார்களே அல்லர் -ஆச்சார்யர்களிலும் அனுஷ்டாதாக்கள் யுண்டு என்கிறார் -எங்கனே என்னில்
ஆச்சார்ய ஏக பரதந்த்ரரான வடுக நம்பி பாஷ்யகாரர் திருவடிகளை ஒழியத் தேவு மற்று அறியேன் என்று இருக்கையாலே
அவர்க்கு அத்யந்தம் அந்தரங்கரான கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் பெருமாள் திருவடிகளிலும் ப்ரேம யுக்தராய் இருக்கிற
ஆகாரத்தைக் கொண்டு இரு கரையர் என்பர் என்று இவ்வர்த்த ப்ராபல்ய ஹேதுவாக அருளிச் செய்கிறார் –

——————–

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —

இனி ப்ராப்யத்துக்கு ப்ரதம பர்வம் இத்யாதியாலே -ப்ராப்யத்துக்குச் சேர வேணும் இறே என்று
ப்ரஸ்துதமான ப்ராப்யத்தை விவரண ரூபேண நிர்ணயிக்கிறார் -எங்கனே என்னில் –
முன்பு ப்ரஸ்துதமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யத்தினுடைய பிரதம பர்வமாகச் சொல்லுகிற ஆச்சார்ய கைங்கர்யமாவது
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -என்கையாலே
அவ்வாச்சார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமான பகவத் விஷயத்திலே கைங்கர்யத்தை –
மத்யம பர்வதமான பகவத் கைங்கர்யமாவது -மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் ச பூஜ நீயா விசேஷத -என்று
திருமுகப் பாசுரம் யுண்டாகையாலே பகவத் பிரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை –
சரம பர்வமான பாகவத கைங்கர்யமாவது -ஆச்சார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவனை உகந்து ஆதரிப்பது -இன்ன ஆச்சார்யனுடைய அபிமான அந்தர் கதனாய் வர்த்திக்கிறவன் அன்றோ
என்றதாகையாலே அவர்கள் உகப்புக்கு மூலமான ஆச்சார்ய விஷயத்தில் கைங்கர்யத்தை –

—————

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப் போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தமாகில் கீழ் யுக்தமான பர்வ க்ரமத்திலே அத்தை ஸாஸ்த்ரங்கள் விதியாது ஒழிவான் என் என்னில்
ஸ்வரூப ப்ராப்தியை -என்று தொடங்கிச் சொல்கிறது -அதாவது
பரஞ்சோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே -என்று பர ப்ராப்தி பூர்வகமான ஸ்வரூப ப்ராப்தியையே -வேதாந்த ஸாஸ்த்ரம் விதியா நிற்க
அந்த ப்ராப்தி பலமாய்க் கொண்டு உபய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் உண்டாம் இடத்தில்
பார்யை பர்த்தாவை பிராபிக்கை யாவது -அந்த பர்த்ரு ஸம்ஸ்லேஷ பர்யந்தமாய் விடுமோ பாதி அந்த ஸாத்யமான
பகவத் கைங்கர்யம் தன்னடையே வருமாப் போலே தத் விவ்ருத்தியான பாகவத கைங்கர்யமும் தத் விருத்தியான சரமமான ஆச்சார்ய கைங்கர்யமும்
ஸ்வ ரஸேந தன்னடையே லபிக்கக் கடவது என்கிறார் –

—————-

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இனி இது தான் துர் லபம் -என்றது இந்த ஸ்வரூபம் ஸர்வ சாதாரணமான பின்பு புருஷார்த்த காஷ்டையான இவ்வாச்சார்ய கைங்கர்யம்
ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு எல்லாம் லபிக்குமோ என்னில் -தத்ராபி துர் லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்கையாலே
இது மிகவும் துர் லபம் என்கிறார் –

—————–

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

விஷய ப்ரவணனுக்கு இத்யாதி -இத்தால் -யுக்தமான தவ்ர் லப்யத்தை விசதமாக உபபாதிக்கிறார் -அதாவது
ஹேய தயா ஸம் பிரதிபன்னங்களான ஸப்தாதி விஷயங்களிலே மண்டினவனுக்கு அத்தை த்யஜித்து ஸமஸ்த கல்யாண குணாத் மகமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தைப் பற்றும் இடத்தில்
த்யாஜ்ய உபா தேய விபாக ஞான மாத்ரத்தாலே அவனுக்கு அது காதாசித்கமாக சம்பவிக்கவும் கூடும் –
ஆகையால் அவ்வருமை போலும் அன்று முதலடியான பகவத் கைங்கர்யத்தில் நில்லாமல் சரமமான
ஆச்சார்ய கைங்கர்யத்தில் அபி ருசி உண்டாகைக்கு உள்ள அருமை என்கிறார் –

——————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் -என்றது அநாதி வாஸநா வாஸிதமான ஸப்தாதிகளில் ருசி பிறந்த பின்பு அத்யந்தம் அபரிசிதமான பகவத் விஷய அபி முக்யம்
கூடும்படி தான் எங்கனே என்ன அவை
ஐங்கருவி கண்ட இன்பம் -என்றும்
சம்பாசலம் பஹுல துக்கம் -என்றும் -இத்யாதியில் படியே
அல்பமாய் -அஸ்திரமாய் -அதி ஜூகுப்ஸா விஷயமுமாய் –
லோக கர்ஹா ஹேதுவுமாய் உதர்க்கத்திலே நரகவாஹங்களுமாய் இருக்கக் காண்கையாலே
அவற்றை விடுகைக்கும் அவற்றுக்கு எதிர் தட்டான பகவத் விஷயத்தைப் பற்றுகைக்கும் சம்பாவனை யுண்டு –
இங்கு அது செய்ய ஒண்ணாது
இனி முதலடியான பகவத் விஷயம் நிரஸ்த ஸமஸ்த தோஷ கந்தமாகையாலே தோஷ தர்சனம் பண்ணி விடவும் வேறு ஒன்றைப் பற்றவும் அஸக்யம் -என்கிறார் –

———–

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும்-

அது எங்கனே என்ன -தோஷம் யுண்டானாலும் -என்று தொடங்கி இவ்வர்த்தத்தை விஸதீ கரிக்கிறார் -அதாவது
ஆழ்வார் -கடியன் கொடியன் -என்று தொடங்கி
விஸ்லேஷ தசையிலே அவன் குண ஹானிகளை விசதமாக அருளிச் செய்து –
கொடிய என்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்று அக் குண ஹானிகள் அவனுடையனவான பின்பு உல் லோகமான என்னுடைய நெஞ்சு
அவற்றை இப்போதே அபரோஷித்து அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படா நின்றது -என்று அருளிச் செய்கையாலே
அவையும் அல்லாத குணங்களைப் போலே அநுபாவ்யமாய் இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோக விபரீதம் இத்யாதி -தோஷதஸ் த்யாஜ்யமாயும் குணதஸ் உபா தேயமாயும் போருகிற லௌகிக வஸ்துவில் பற்றின நெஞ்சு
போல் அன்றிக்கே ஹேய ப்ரத்ய நீகமான பகவத் விஷயத்தைப் பற்றின நெஞ்சு உல்லோகமாய் இறே இருப்பது என்கிறார் –

—————-

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –இத்யாதி -அவ்வஸ்து லோக விஸஜாதீயம் என்னா
தத் குணம் உபா தேயமானவோ பாதி தோஷமும் உபா தேயமாகக் கூடுமோ என்னில்
குணம் உபா தேயமாகைக்கு ஹேதுவான நிருபாதிக ஸம்பந்தம் அத் தோஷத்துக்கும் உண்டான பின்பு விட ஒண்ணாது இறே என்கிறார் –
எங்கனே என்னில் –
ஸோ பாதிக ஸம்பந்தமான பர்த்ரு விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் பதிவ்ரதையான பார்யைக்கு
புருஷாந்தரங்களைப் பற்ற உபா தேயமாகக் காணா நின்றால் நிருபாதிக விஷயத்தில் சொல்ல வேண்டா விறே -என்று கருத்து
இவ்விடமும் நாயகி வார்த்தா ப்ரகரணம் இறே –

———–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

இவ்வர்த்தம் எங்கே கண்டது என்னில் -நிர் க்ருணன்-இத்யாதி
என் தவள வண்ணர் தகவுகளே -என்று தாயானவள் இவ்வளவில் உதவாதவன் க்ருபா ஹீனன் காண் என்று
சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே தலைமகளானவள்
தகவுடையவனே -என்று கிருபை ஒன்றுமே நிரூபகமாகச் சொன்னாள் இறே –

————-

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
ஸ்நேஹமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இப்படிச் சொல்லும்படி -இத்யாதி -அநாதி காலம் ஸப்தாதிகளுடைய அலாபத்தாலே சோகித்துத் போந்த என்னை
தன்னையே நினைத்துக் கூப்பிடும்படி பண்ணிற்றுத் தன்னுடைய கேவல கிருபையாலே என்று
மிக விரும்பும் பிரான் -என்று மேன்மேலே அவ்விஷயத்திலே
அதிசயிதமான ஸ்நேஹ உபகார ஸ்ம்ருதிகள் உண்டாய்த்து இறே என்கிறார் –

—————-

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச் சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

ஆனால் ஓர் இடத்திலும் அவன் கிருபா ஹீனன் என்று தோற்றின விடம் இல்லையோ என்னில் -நிர் க்ருணனாக -இத்யாதி
விஸ்லேஷ அஸஹத்வத்தாலே பிராட்டியும் -பிராட்டி தசையைப் ப்ராப்தரான ஆழ்வார் தாமும்
அவன் கிருபா விஷயமான அதிசயங்கள் நடந்தாலும்
க்யாதஸ் ப்ராஞ்ஞஸ் க்ருதஞ்ஞஸ் ச ஸா நுக்ரோஸஸ் ச ராகவ ஸூ வ்ருத்தோ நிரநுக்ரோச
சங்கே மத் பாக்ய சங்ஷயாத் மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய ஸமர்த்தாவபி தவ் யன் மாம் நாவே ஷேதே பரந்தபவ் -என்றும்
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் – என்றும்
சங்கைக்கு அவிஷயமான ஸ்தலத்திலே சங்கிகைக்கு ஹேதுவை
ஸ்வ கதம் என்றே அனுசந்தித்தார்கள் என்கிறார் –

————-

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

குண தோஷங்கள் இத்யாதி -ஆக இப்படி இவ்விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் ஸ்வ வ்யதிரிக்த ஸ்மரணமும் பொறாதபடி
ஸ்வ அதீனமாக்கி விடும் என்று சரம புருஷார்த்த நிஷ்டா தவ்ர் பல்யத்தை நிகமிக்கிறார்
அதில் அவனுடைய குணமானது புருஷார்த்த காஷ்டையான ததீயர் அனுபவ ரஸத்தைக் குலைத்து
அவ்வருகு போக ஒட்டாத படி தன்னளவிலே துவக்கும் -எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே பாகவத அனுபவம் பண்ணி இழிந்த ஆழ்வாரை அவர்களுக்கு நிரூபகத்வேந வந்த அவனுடைய
கல்யாண குண விக்ரஹ சேஷ்டிதங்கள் தானே ஆழங்கால் படுத்தித் தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்
தனித்தனியே விடாய்க்கும் படி அபி நிவேசத்தை விளைத்தது இறே -அநந்தரம் -முடியானே யிலே –
அவனுடைய தோஷ அனுசந்தானம் ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கை யாவது -விஸ்லேஷ தசையில்
பந்தோடு கழல் மருவாள்
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக்கு அணியிலும் தழலாம் -இத்யாதியில் படியே
ஸப் தாதிகளான ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும் –

————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இவ்விடத்திலே புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கும் என்கையிலே தாத்பர்யமாகையாலே
நித்ய ஸத்ருவாய் இறே இருப்பது -என்று
கச்சதா மாதுல குலம் -என்கிற ஸ்லோகத்தில்
நித்ய சத்ருக்ந -என்கிற இடத்தை உதாஹரிக்கிறார் –
நித்ய ஸத்ரு என்றது -பரத அநு வ்ருத்திக்கு விரோதியான ராம ஸுந்தர்யத்தை இறே –

—————-

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

இப்படி ப்ராப்யத்தை அறுதியிட்டால் இத்யாதி -கீழே ஸ்வரூபத்துக்கும் -என்ற இடத்தில்
ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு அநந்தரம் இவ்வளவாக ப்ராப்ய ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு
இனிமேல் இப்படி அறுதியிட்ட ப்ராப்யத்துக்கு அனுரூபமாக வேணும் இறே ப்ராபகமும் -என்று
ஸதாசார்யனே உத்தாரகன் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –

—————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

அது என் என்ன -அல்லாத போது ப்ராப்ய பிராபகங்களுக்கு ஐக்யம் இல்லை என்று அநிஷ்ட ப்ரஸங்கம் பண்ணுகிறார் -அதாவது –
யதாக்ரதுரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேதஸ் ப்ரேத்ய பவதி -என்கிற
தத் க்ரது ந்யாயத்தாலே யதா ஸங்கல்பமாயே பலம் இருப்பது என்கிற நியமத்தை அங்கீ கரித்து அருளிச் செய்கிறார் –

————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

இனி -ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி -ஏவம் விதமான ஆச்சார்யனுடைய வைபவத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்படி உத்தாரகனான ஆச்சார்யன் ஆஸ்ரயிக்கிற சேதனனுக்கும் ஆஸ்ரயணீயனான பரம சேதனனுக்கும் உபகாரகன் என்னும் இடத்தையும் பிரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

எங்கனே என்னில் -ஈஸ்வரனுக்கு இத்யாதி –
பஹூதா விஜாயதே -என்று ஓதப்படுகிற அநேக அவதாரங்களாலும் அலப்யமாம் படி -அஹம் மமதா தூஷிதமான சேதன வஸ்துவை
ஸார்வ பவ்மனான ராஜாவுக்கு சதுரரான சமந்தர் ஷூத்ரரான அந்நியரை விரகாலே ஜெயித்துக் கொடுக்குமா போலே
அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித
யானே நீ என் உடைமையும் நீயே -என்னும் படி பண்ணி உபகரித்தான்
சேதனனுக்கு இத்யாதி –
அபவரகே ஹிரண்யம் நிதாய உபரி ஸஞ்சரந்தோ ந த்ரஷ்யந்தி என்கிறபடியே
அநாதி காலம் அவிநா பூதமான பகவத் ஸம்பந்த ஞான ஹீனனான சேதனனுக்கு
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே
அந்த ப்ரஹ்ம ஞானத்தாலே ஸச் ஸப்த வாஸ்யனாம் படி சம்பந்த ஞான பிரதனாயக் கொண்டு சேஷியை உபகரித்தான்
அவஸ்தித மவஸ்தித தன்நபுந ரத்ர சித்திரம் மஹா நிதிம் பிரதமிகாரச ஸ்ததபி தேஸிகா பாங்க பூ ப்ரியா ந கிஷயம் ப்ரியோ ந கிமயம் கிமே தாவதா ந சேதய முதாரதீரு சித கரேகோ ஜந -என்னா நின்றது இறே

—————

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

ஈஸ்வரனும் தானும் இத்யாதி -அவாப்த ஸமஸ்த காமனான ஈஸ்வரன் தானும்
கடக க்ருத்யமான இந்த உபகாரகத்வ ரஸ்யதையாலே அந்த உபகாரகமான ஆச்சார்யத்வத்தை ஆதரித்து இருக்கும் –

————

சூரணை -431-

ஆகை இறே –
குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் –
அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னில் -அவ்வாதரம் யுண்டாகை இறே -ஆச்சார்யாணாம் அஸாவசா வித்யா பகவத்த-என்கிற பகவான் குரு பரம்பரைக்குள்ளே த்வய ரூபேண அந்வயித்ததும்
அவதார தசையிலே அர்ஜுன வ்யாஜேன தேர்த்தட்டிலே நின்று ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே சரம ஸ்லோக பர்யந்தமான உபாய உபதேசம் பண்ணிற்றும்
விபீஷண வ்யாஜேந -ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம –
என்று அபய பிரதானம் அருளிச் செய்ததும் -என்கிறார் –
இப்படிப்பட்ட உபகாரம் பிறந்து படைக்க வேணும் என்று அவதரித்தான் என்ற இடம்
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து -என்கிற பாட்டில் அருளிச் செய்தார் இறே
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்தரஸ்ய-என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி என்னும்படியான இரண்டு தலையையும் சத்தை யுண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு அவதரித்து
தூத்ய முகேன கடகனாய் இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போன தானே இறே
அர்ஜுனனைக் குறித்து -மாமேகம் சரணம் வ்ரஜ -என்றதும் கார்யகரமாய்த்தது இல்லை –
அது பின்புள்ளார்க்கு ஸதாசார்ய பலமாய்த்தது இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை -என்கிறது

——————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் –
ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இப்படி உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் பிரதியுபகாரம் பண்ண விரகுண்டோ -என்று -ஆச்சார்யனுக்கு -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார் -அதாவது
ஏதேனுமாகச் செய்த அம்சம் தன்னுடைய ஸ்வரூப ஸித்யர்த்தமான கிஞ்சித்காரமாமது ஒழிய ஸத்ருசமாகப் பண்ணினான் ஆகலாவது
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃது என்று தானும் அதினுள்ளே அடங்கும்படி
அவ்வாச்சார்யன் தனக்கு உபகரித்த உபய விபூதியையும்
தன்நிர்வாஹகனான ஈஸ்வரனையும் ஒழிய
இன்னமும் இப்படி விபூதி த்வயமும் தன் நிர்வாஹகமும் ஸம்பாவிதமாகில் யாய்த்து என்கிறார்
அவை அஸம்பாவிதம் என்று பொன்னுலகாளி யில் படியே அவன் உபகரித்தவை தன்னையே உபகரிக்கப் பார்க்கில் அது பிரதியுபகாரமாகக் கூடாது இறே
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத் ந தத் துல்யம் கதஞ்சன -என்னா நின்றது இறே –

————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

ஆனால் ஆச்சார்யனும் இப்படி பிரதியுபகார யோக்யன் அல்லனாகில் பழைய ஈஸ்வரன் தன்னையே பற்றினாள் வருவது என் என்ன
ஈஸ்வர ஸம்பந்தம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது –
ஈஸ்வரன் கிருபா விஷ்ட ஸ்வ தந்திரனாகையாலே அந்த ஸ்வா தந்தர்யத்தினுடையவும் கிருபையினுடையவும் கார்யமான
ஷிபாமி -என்றும்
ததாமி -என்றும்
சொல்லப்படுகிற பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கும் தத் சமாஸ்ரயணம்
ஆச்சார்யன் அத்யந்த பாரதந்தர்ய விஸிஷ்ட க்ருபாவானாகையாலே அவனை ஆஸ்ரயிக்கை கேவல மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்கிறார் –
சித்திர் பவதி வா நேதி ஸம்ஸ யோச்யுத சேவிநாம் அஸம்சயஸ் து தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் -என்னா நின்றது இறே

————–

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

பகவல் லாபம் இத்யாதி -இத்தால் அந்த ஈஸ்வரன் உபயத்துக்கும் ஹேதுவானாலும் அவன் நிருபாதிக சேஷியான பின்பு
அவனையே பற்றுகை அன்றோ பிராப்தம் என்ன
அந்த பகவ ஞான பூர்த்தி தான் ஆச்சார்ய உபதேசத்தால் அல்லது கூடாமையாலே
அதுவும் இந்த ஆச்சார்யனாலே ஸித்திக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

இனி ஆச்சார்ய லாபம் -பகவானாலே என்றது -இப்படி மோக்ஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை லபிக்கும் போது
ஈஸ்வரஸ்ய ச சவ்ஹார்த்தம் -இத்யாதியில் படியே
இவ்வாச்சார்ய பிராப்தி பர்யந்தமாக அவனே நடத்திக் கொண்டு போர வேண்டுகையாலே பகவானாலே -என்கிறார் –

—————-

சூரணை -436-

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே-இத்யாதி –
அக்னிஸ் ஸ்வர்ணஸ்ய குருர் பவாம்ஸ் ஸூர்ய பரோ குரு மமாப்ய கில லோகாநாம் குருர் நாராயணோ ஹரி -என்கிறதினுடைய
ஸாமான்யமான குருத்வத்தை உபகரித்து விடுகை அன்றிக்கே இவனுடைய அஞ்ஞான அசக்திகளை உள்ளபடி அறிந்து
அதுக்கீடான வழி கண்டு ரக்ஷிக்கும் படி விசேஷித்து அவனுக்கே வகுத்த விஷயமாக ஓர் ஆச்சார்யனை உபகரித்த குரு உபகாரத்தாலே
ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி இவ்வளவாக உபகாரகனாக உபபாதித்த ஆச்சார்யானைக் காட்டிலும்
அதிசயித உபகாரகன் ஸர்வ ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் என்னும் இடம் உபபாதித்த தாய்த்து-

————

சூரணை -437-

ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

இப்படி உத்தாரக-உபகாரகத்வங்களாகிற உபய ஆகார விஸிஷ்டனான சதாச்சார்ய அபிமானத்தாலே ஒருவனுக்கு உஜ்ஜீவனம் உண்டாக வேணும் என்னும்
அர்த்தத்தை அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் -ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
இப்படி மஹா உபகாரகனான ஆச்சார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானிக்கும் படி தத் ஸம்பந்த ஞானம் குலையாதபடி வர்த்தித்தால்
ஸ்வரூப உஜ்ஜீவன ஹேதுக்களான ஞான வைராக்ய பக்திகளைத் தனக்கு உண்டாக்குகை அவ்வாச்சார்ய க்ருத்யமேயான பின்பு அவை ஸர்வதா ஸம்பாவிதங்கள் –
ஏவம் வித ஸம்பந்த ஞானத்தில் ப்ரச்யுதனானவனுக்கு ஒரு ஸூ ஹ்ருத விசேஷங்களாலே இவை ஸம்பவித்தாலும் சதாச்சார்ய ப்ரஸாத முகேந தத்வ ஞான உபதேச பூர்வகமாக வந்தது அல்லாமையாலே
அவை அர்த்த க்ரியா கார்யகரமாக மாட்டாது –

————

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

அது என் போலே என்ன -தாலி கிடந்தால் -என்று தொடங்கி -லோக த்ருஷ்டி ப்ரக்ரியையாலே அத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பாரதந்த்ர ஏக நிரூபிணியையான ஸ்த்ரீக்கு ஸ பர்த்ரு காத்வ ப்ரகாசகமான மங்கள ஸூத்ர ஸத் பாவ மாத்ரத்தாலே
பின்பும் ஸர்வ பூஷண பூஷார்ஹையாய் இருக்குமா போலேயும் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை-439-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

தாமரையை அலர்த்தக் கடவ இத்யாதி -இத்தால்
நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ ப்ரச்யுதஸ்ய துர் புத்தே ஜலாத பேதம் கமலம் சோஷயதி ரவிர் ந தோஷயதி -என்கிற
பிரமாண ஸித்த த்ருஷ்டாந்தத்தாலும் அவ்வர்த்தத்தை விசதமாக்குகிறார் -எங்கனே என்னில்
நியமேன ஜலஜத்துக்கு அஜ்ஜல சம்பந்தம் யுள்ள போது விகாஸ கரணனான திவாகரன் அஜ்ஜல ஸம்பந்த ரஹிதமான தசையிலே
கமல பந்துவான தானே அதுக்கு நாஸ கரனாமாப் போலே ஸூ சீலனுமாய் ஸூ லபனுமாய் சதாச்சார்ய அபிமான அந்தர் பூதனான போது
ஸ்வா தந்தர்யத்தால் வந்த பிரதாபோத்தர்ஷத்தை உடைய ஈஸ்வரன் தானே ஸ்வ ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் என்னும் இடமும் அவ்வாச்சார்யா ஸம்பந்தம் குலைந்தால் -ஸர்வ சேஷியாய் ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான அவன் தானே ஸ்வரூப நாஸகரனாம் என்னும் இடமும் தோற்றுகிறது –
ந தோஷயதி -என்கையாலே பின்னை ஒரு காலும் இவனுக்கு உஜ்ஜீவனம் இல்லை என்னும் இடம் தோற்றுகிறது –

——————-

சூரணை -440-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இனி இத்தை ஒழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம் -என்றது நீரைப் பிரிந்த தாமரைக்கு ஆதித்ய கிரணம் விகாஸ கரம் அல்லாதவோ பாதி
ஸதாசார்ய சம்பந்த பிரச் யுதனானவனுக்கு ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனோடு உண்டான ஸம்பந்தமும்
ஸ பலமாகாது என்று கருத்து –

—————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –பெரும்குடி என் என்னில் –

இரண்டும் அமையாதா இத்யாதி -ஆனால் இப்படி விலக்ஷணமான ஆச்சார்ய ஸம்பந்தமும் தத் ஸம்பந்தம் அடியாக வருகிற பகவத் ஸம்பந்தமுமே
ஒருவனுடைய உஜ்ஜீவனத்துக்குப் போந்திருக்க -இரண்டுக்கும் நடுவே -ஸாத்விகைஸ் ஸம் பாஷணம் -என்கிற ஸாத்விக அங்கீ காரத்தையும்
ஸாதனம் என்று கொண்டு பிரஸ்தாவிப்பான் என் என்ன -என்னுதல்
அன்றிக்கே
நடுவில் பெரும் குடி -என்று மத்யம பர்வத்தில் சொன்ன பாகவத கைங்கர்ய பிரதிசம்பந்திகளான ததீயர் என்னுதல்
அங்கனும் அன்றிக்கே
ததீய சேஷத்வ ப்ரதிபாதகமான மத்யம பத நிஷ்டரான ததீயர் என்னுதல்
இப்படி ததீய சமாஸ்ரயணத்தையும் தனித்துச் சொல்லுகிறது என் என்ன –

———–

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

கொடியை இத்யாதி -பல பர்யந்தமாம் படி உத்தரிப்பிக்கிற கொள் கொம்பிலே -அது இல்லாவிடில் தரைப்படும்படியான கொடியை ஏற்றும் போது தத் ஸஹாயமான சுள்ளிக் கால்களில் பற்றுவித்தே ஏற வேண்டினவோ பாதி
வல்லிக் கொடிகாள் -என்னும் படி பரதந்த்ர ஸ்வரூபனான ஆத்மா அதிபதியாத படி உத்தாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயிக்கும் போது தத் ஸத்ருசரான ததீய சமாஸ்ரயணமும் ஸர்வதா அவர்ஜய நீயம் என்கிறார் –

—————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

இனி மேலே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற பாசுரத்தில் -ஈஸ்வரனை உபாயமாகப் பற்றும் போது இறே -என்று உபக்ரமித்து
உப பாதித்திக் கொண்டு போந்த பரமார்த்த விசேஷத்தைத் தலைக் கட்டுகிறவர்
தத் அந்ய உபாயங்களினுடைய அனுஷ்டான அனுபபத்தி பூர்வகமாக தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து நிகமிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ஸ்வா தந்தர்ய பயத்தாலே -இத்யாதி
ஸ்வ யத்ந ரூபமான பக்த் யுபாய அனுஷ்டான தசையிலே பல ஸித்தி ரஹிதமான கேவல பகவத் சமாராதந ரூபேண அனுஷ்டிக்கிலும்
நம்முடைய இவ்வநுஷ்டான பரிபாக தசையில் அல்லது பல ப்ரதனான பகவானுடைய பரம ப்ரீதி சம்பவியாது என்று
ஸ்வ ஸ்வா தந்தர்ய கர்ப்பமாய் அல்லது இராமையாலே ஸ்வரூபஞ்ஞனுக்கு அந்த ஸ்வா தந்தர்யம் ஸ்வரூப ஹானி என்ற பயத்தாலே ஸ்வயமேவ நெகிழப் பண்ணிற்று
பர கத ஸ்வீ கார ஹேதுவான பகவத் ஸ்வா தந்தர்யம் -வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்கைக்கும் பொதுவாகையாலே அவ்விஷயத்தில் ப்ரபத்தியும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று பதண் பதண் என்கையாலே தான் நெகிழப் பண்ணிற்று என்கிறார் –

————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

ஏவம் வித பய ரஹிதமாய் அதி ஸூ லபமான ஆச்சார்ய விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவனுக்கு வருவதொரு அபாயமும் இல்லையோ என்ன
ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய ஸ்வீ காரத்துக்கு விஷய பூதனாகை ஒழிய
அவ்வாச்சார்யனையும் தன் பேறாகத் தான் பற்றுமது காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி இவ்வதிகாரிக்கு அநர்த்தாவஹம் என்கிறார் -எங்கனே என்னில்
பவித்ரம் வை ஹிரண்யம் -என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அர்த்த லுப்தனானவன் மேல் வரும் அநர்த்தத்தைப் பாராதே
காஞ்சன நிமித்தமான கால தனத்தைக் கைக்கொண்டு அத்தை அழித்து இருந்த நாள் சரீர போஷணாதிகளிலே உப யுக்தமாகவும் பெறாத படி
பாமர பரிக்ரஹ ஹேதுக்களான அங்குலீயகாதி ஆபரணங்கள் ஆக்கி தரித்துப் பின்னும் அநர்த்தமே சேஷிப்பித்துக் கொண்டு விடுமா போலே
இவனுக்கு ஆச்சார்யவான் என்கையாலே வரும் லோக பரிக்ரஹ மாத்ரமே பலமாம் அளவாய்
அத்ர பரத்ர ஷாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்கிற படியே
அவன் உகப்பால் வரும் அந வரத போகம் இல்லகாத அளவே அன்றிக்கே அநர்த்தமான ஸ்வரூப காணியும் சம்பவித்தது விடும் என்கிறார் –
இத்தால் இந்த உபாயமும் கீழில் பிரபந்தத்தில் ஸ்வ கத பர கத விபாகேந நிரூபித்த உபாயத்தினுடைய துறை விசேஷ மாத்ரமே யாகிலும்ந
இத்தை சரம உபாயமாகத் தனித்து எடுக்கையாலே இதில் ஸ்வ கத ஸ்வீ கார தோஷத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————–

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

இப்படியான பின்பு -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று
இவ்வுபாயத்தினுடைய  பரகத ஸ்வீ காரமே பரமார்த்தம் என்று அவதரித்து அத்தை நிகமிக்கிறார்–

————–

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கை விட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்கக்
கடவன் அல்லன் –

கைப்பட்ட பொருளை -இத்யாதி யாலே தாம் நிச்சயித்த பரமார்த்தத்திலே நிஷ்ணா தரான அதிகாரிகளைக் குறித்து
அவர்களுக்கு நேரே ப்ரத்யயம் பிறக்கும் படியாக–வேதம் அநூச்யா சார்யோந்தே வாஸிந மநு ஸாஸ்தி -என்கிற கணக்கிலே
அந்த பரமார்த்த விஷயமான அநேக பிரமாண ப்ரதிபாதித அனுஷ்டான விசேஷங்களை அநு ஸாஸிக்கிறார் -எங்கனே என்னில்
ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் ய உபா ஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷதி ஷிதவ் -என்கையாலே
தன்னோடு ஸஜாதீயனாய் ஸந்நிஹிதனாய் நின்று பி அஞ்ஞான அந்தகார நிவ்ருத்தி பூர்வகமாக அபிமானித்த ஆச்சார்யனை அநாதரித்து
அறிந்தன வேதம் -இத்யாதியில் படியே மறை பொருளாய் துர்லபமான வஸ்துவை இச்சிக்கக் கடவன் அல்லன் -என்கிறார் –

——————-

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

விடாய் பிறந்த போது -இத்யாதி –
சாஷுர் கம்யம் த்யக்த்வா ஸாஸ்த்ர கம்யம் து யோ பஜேத் ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி -என்கையாலே
தாஹித்தவன் தன் கைப்பட்ட தண்ணீரை அதி ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்து அத்தைத் தரையிலே உகுத்து
அத்தாஹ நிவ்ருத்தி யர்த்தமாக தேச காலாதி விப்ரக்ருஷ்டங்களான ஜீமூ தாதிகளில் ஜலங்களை ஜீவிக்க ஆதரிக்கும் ஜீவனைப் போலே
தனக்கு முகஸ்தனாய் நிற்கையாலே ஸூலபனுமாய் ஸூ சீலனுமான ஆச்சார்யனை அநாதரித்து
தமஸ பரமோ தாதா -இத்யாதிஸாஸ்த்ர ஏக ஸமதி கம்யனாய் –
முகில் வண்ண வானத்திலே -அவாக்ய அநாதர என்று இருக்கும் முகில் வண்ணனையும்
தத் சமனனான கடலிடம் கொண்ட கடல் வண்ணனையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதிப்படியே அவதரித்த மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தனான மதுரவாற்றையும்
அவ்வாற்றில் தேங்கின தயரதன் பெற்ற மரகத மணித்தடம் போன்ற அர்ச்சாவதார ஸ்தலங்களையும்
கநித்ர பிடகாதி ஸாத்யமான கூப ஜலம் போலே யம நியமாதி ஸாத்யமாய்க் கொண்டு அந்தர்யாமியான நிலையும்
முமுஷை யுடையனாய்
விசேஷஞ்ஞனாய் இருக்குமவன்
ஆசைப்படக் கடவன் அல்லன் -என்கிறார் –
இனி ஜீமுதாதி ஸ்தலங்களில் ஜல ஸாம்யம் உண்டானாப் போலே பரத்வாதிகள் எல்லாவற்றிலும் வஸ்து ஸாம்யம் யுண்டானாலும்
அத்யந்த ஸூ லபமான அர்ச்சாவதாரம் போலே அவை அதி ஸூலபம் அன்று என்று கருத்து –

—————–

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன் —

ஆனால் அவை இவ்வதிகாரிக்கு அநுபாதேயங்கள் ஆகின்றனவோ என்ன -பாட்டுக் கேட்க்கும் இடமும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
நின்ற வண் கீர்த்தியும் -என்கிற பாட்டின் படியே –
ஹாவு ஹாவு -என்கிற பாட்டுக் கேட்க்கும் பரமபதமும்
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கண -என்கிற ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கூப்பீட்டுக்குச் செவி கொடுத்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யூஹ ஸ்தலமும்
அக்கூப்பீடு கேட்ட அநந்தரம் பயிர்த்தலையிலே பரண் இட்டுக் காத்துக் கிடந்தவன் பயிரில் பட்டி புகுந்த அளவிலே
அப்பரணில் நின்றும் கையும் தடியுமாய்க் கொண்டு குதித்து அத்தை அடித்து விடுமா போலே
தனக்கு ரஷ்யமான விபூதியை ஹிரண்ய ராவணாதிகள் புகுந்து அழிக்கும் அளவிலே அவர்களை அழியச் செய்க்கைக்காக
ஸ ஹி தேவைரு தீர்ணஸ்ய
ஜாதோசி தேவ தேவேஸே சங்க சக்ர கதாதர -என்றும் இத்யாதிகளில் படியே
ஸா யுதனாய்க் கொண்டு குதித்த அவதார ஸ்தலமும்
மலையாளர் வளைப்புப் போலே தன் நினைவு தலைக்கட்டும் அளவும் இட்ட வடி பேர விடாமல் வளைத்துக் கொண்டு இருக்கிற அர்ச்சா ஸ்தலமும்
உறங்குகிற பிரஜை தான் அறியாதே கிடக்க அதன் பக்கல் குடல் தொடக்காலே பாலும் தயிருமாக ஊட்டித் தரிப்பிக்கும் தாயைப் போலே
ஸர்வ தசையிலும் சத்தையை நோக்குகிற அந்தர் யாமியானவனும்
இப்படிப்பட்ட பரத்வாதிகள் எல்லாம் தனக்கு என்ன வகுத்த துறையான ஸதாசார்யனே என்று அத்யவசித்து இருக்கக் கடவன் என்கிறார் –
யேநைவ குருணா யஸ்ய ஸம்யக் வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ -என்னா நின்றது இறே –

—————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

இவனுக்கு பிரதிகூலர் இத்யாதி -கீழே ஈஸ்வர உபாய நிஷ்டனான ப்ரபந்ந அதிகாரிக்கு அனுகூல பிரதிகூல பிரதிபத்தி விஷய பூதராவார்
அஹம் கர்த்தா அஹம் போக்தா என்று இருக்கும் ஸ்வ தந்த்ரரும்
அவர்கள் அளவு அன்றிக்கே -சேஷத்வத்துக்கு இசைந்து தங்களை ப்ரஹ்ம ருத்ராதி தேவதாந்த்ர சேஷம் என்று இருப்பாரும்
இப்படி ஸ்வரூபத்தில் அந்யதா ஞான நிஷ்டராய் இருக்கை யன்றிக்கே ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்திலே நிஷ்டரான
ஆச்சார்ய பரதந்த்ரரை அனுகூலர் என்கிறார்
இனி ஈஸ்வர பர தந்த்ரரை உபேஷணீயர் என்றது ஸதாச்சார்ய அபிமான பூர்வகமான பகவத் பாரதந்தர்யம் இன்றிக்கே
கேவலம் ஈஸ்வர பரதந்த்ரரானவர்கள் இவ்வதிகாரிக்கு ஆதரணீயர் அல்லாமையாலே –

—————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

ஞான அனுஷ்டானங்கள் இத்யாதி -உபய பரிகர்மித ஸ்வாந்தனுக்கு அல்லது உபாய நிஷ்பத்தி கூடாமையாலே
ப்ரபந்ந அதிகாரிகள் அல்லாத உபாஸகர்க்கு அவை உபாய அங்கமாய் இருக்கும்
ப்ரபந்நரில் சரம அதிகாரியான இவனுக்கு தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ஞான அனுஷ்டானங்கள் எல்லாம்
ப்ரத்யகஷேண ஸ்வாச்சார்யனுக்கு உகப்பாய் இருக்கையாலே கேவலம் உபேயமாயே இருக்கும் –

—————

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் -இத்யாதி -இத்தால் இப்படி ஸ்வரூப அனுரூபமான விஹித அனுஷ்டானங்களில் ப்ரவ்ருத்தி
ஸ்வாச்சார்யனுக்கு உகப்பானவோபாதி நிஷித்தங்களில் நிவ்ருத்தியும் அவனுக்கும் உகப்பாகையாலே அத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது
இச் சரம அதிகாரிக்கும் ஸாஸ்த்ரங்களாலே நிஷேதிக்கப் படுகிற அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்களில் ப்ரவ்ருத்திக்கை
சரம அவதியில் நிற்கிறவன் தன்னையும் தன் அதிகாரத்துக்கு அநர்ஹமான ஸம்ஸாரிகளையும் ஸ்வ புத்ர சிஷ்யாதிகளையும்
ஸ்வரூப நாஸத்தைப் பண்ணுவிக்கையாலே பரித்யாஜ்யம் -என்கிறது –

—————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

சரம அதிகாரியான தனக்கும் இவ்வதிகாரத்தில் அநந்விதரான பிறருக்கும் ஓக்க
இந்த நிஷித்த அனுஷ்டான மாத்ரத்தாலே நாஸம் வரும்படி என் என்ன -தான் நசிக்கிறது -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விலக்ஷண அதிகாரியான தன்னுடைய நாசத்துக்கு ஹேது பிரதம பர்வமான பகவத் விஷயத்துக்கும் மத்யம பர்வமான பாகவத விஷயத்துக்கும்
சரம பர்வமான ஆச்சார்ய விஷயத்துக்கும் அபிமதமாகையாலே அதி குரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கை என்கிறார் –
பிறர் இத்யாதி -பகவத் ஸம்பந்த ஞான ரஹிதராய் -அத ஏவ பாகவத அபசார அநபிஞ்ஞரான ஸம்ஸாரிகளுக்கும்
அவர்களில் வ்யாவருத்தரான ஸ்வ புத்ர சிஷ்யாதிகளுமான பிறர் நசிக்கிறது
சரம அதிகாரியான தன்னை அநாதரிக்கையாலே வந்த பாகவத அபசாரத்தாலும்
தன்னளவு அவஸ்தா பரிபாகம் இன்றிக்கே இருக்கச் செய்தே தன்னுடைய அநவதா நத்தால் வந்த அனுஷ்டானங்களை
நம்முடைய ஜனகனானவன் ஆசரித்தது அன்றோ -நம்முடைய ஆச்சார்யன் ஆசரித்தது அன்றோ –
என்று அவற்றை ஆசரிக்கையாலும் -என்கிறார் –

—————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

ஆனால் அக்ருத்ய கரண அந்தர் பூதமான பர தார பர த்ரவ்ய அபி ருசி இவனுக்கு ஆகாது ஒழிகிறது -ஸாஸ்த்ரங்களிலே கர்தவ்ய தயா விதிக்கப்பட்ட
ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களிலே போகம் அவிருத்தம் அன்றோ என்னில் -விஹித போகம் -இத்யாதி –
ஸாஸ்த்ர விஹிதமான அந்த ஸ்வ தாராதி போகம் நிஷித்தமான பர தார பர த்ரவ்யாதிகளில் போகம் போலே ப்ரத்யக்ஷமான லோக கர்ஹா ஹேதுவும் இன்றிக்கே
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு -என்னும்படி
பரோஷமான க்ரூர நரக அனுபவ ஹேதுவும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
இவன் ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமுமாய் பகவத் ஏக போகமுமாய் இருக்கையாலே
ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரசத்வ ரூபமான விஷய போகம் யுக்தமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா -என்று விதிக்கிற வேதாந்தார்த்த விருத்தமாய்
அவை வைதிக அக்ரேஸரராய் ஆச்சார்ய அதீன ஸ்வரூபரான விஸிஷ்ட அதிகாரிகளாலே
கர்ஹிக்கப் படுமதாய் -ஆச்சார்ய கைங்கர்ய போகமாகிற பரம ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமு மாகையாலே
அதுவும் இவ்வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்கிறார் –

————–

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்-ஸ்வரூபம் குலையும் –

இன்னமும் போக்யதா புத்தி -இத்யாதியாலே உபாஸ விடும் என்கிறார் -கரான மஹ ரிஷிகளைப் போலே ஸ்வ தாரத்தை ஸ்நாந திவஸத்திலே அங்கீ கரியா விடில்
ப்ரூண ஹத்யா தோஷம் யுண்டு என்கிற தர்ம புத்த்யா இவன் விஷயத்தை அங்கீ கரிக்கிலும்
தத் ஏக உபாயனான இவனுக்கு ஸர்வதா ஸ்வரூப ஹானியாயே விடும் என்கிறார் –

————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

அநந்தரம் -ஷேத்ராணி மித்ராணி -இத்யாதியாலே இந்த பிரகரண யுக்தமான ஆச்சார்ய விஷயத்தோ பாதி
ப்ரத்யக்ஷ விஷயமான பெரிய பெருமாளைக் குறித்து ப்ரஹ்மா விண்ணப்பம் செய்த ஸ்லோகத்தில் அவஸ்தை யுண்டாக வேணும் என்று
இவ்வதிகாரியுடைய ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு என்கிறார் -அதாவது
ஆதி ப்ரஹ்மா அஸ்வமேத முகத்தாலே ஹஸ்தகிரியிலே பேர் அருளாளப் பெருமாளை ஆராதித்துப் பின்பும் அநேக காலம்
தத் அனுபவ ஏக பரனாய்க் கொண்டு அவன் வர்த்தியா நிற்க -அந்தப் பேர் அருளாள பெருமாள் உன்னுடைய ப்ரஹ்ம லோகம்
அநாதமாய்க் கிடவாத படி நீ அங்கே ஏறப்போ என்று விடை கொடுத்து அருள -அந்த ப்ரஹ்மாவும் அவ்வனுபவ அலாபத்தாலே ஆத்ம தாரண அயோக்யதையாலும் பரமாச்சாரியார் -எப்பாலைக்கும் சேமத்தே -என்று அருளிச் செய்யும் படி ப்ராப்ய பூமியான அத்தேச விஷயத்தில் ப்ராவண்ய அதிசயத்தாலும்
இத்தைப் பற்ற ப்ராப்ய பூமியான ப்ரஹ்ம லோகத்தில் உபேஷ்யா புத்தியாலும் -ப்ரேம பரவசனாயக் கொண்டு –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாத பத்ம ப்ரவணா ஆத்ம வ்ருத்தே பவந்தி பும்ஸஸ் சர்வே பிரதிகூல ரூப -என்று
இத்யாதியாலே தன்னுடைய அவஸ்த்தா விசேஷங்களை ஆவிஷ்கரித்தான் இறே

—————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -இத்யாதி -இவ்வவஸ்தா விசேஷங்களும் உபாஸகனான ப்ரஹ்மாவின் அளவு அன்றிக்கே
த்வத் பாத பத்ம ப்ரவணாத் ஆத்மவ்ருத்தே சர்வே பிரதிகூல ரூப பவந்தி -என்கையாலே
பகவத் பாகவத சமாஸ்ரயண பரருக்கு எல்லாம் அவிசிஷ்டங்களாகையாலே
இவை உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் என்கிறார் –
இவ்விடத்தில் உபாய சதுஷ்டயம் என்றது -பக்தி ப்ரபத்திகளையும் -ததீய சமாஸ்ரயணத்தையும் -ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் -என்னுதல் –
ஈஸ்வரனுடைய உபாயத்வத்தில் ஸ்வ கத பர கதத்வங்களையும்
ஆச்சார்யனுடைய உபாயத்வத்தில் ஸ்வகத பரகதத்வங்களையும் என்னுதல் –

—————–

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பழுதாகாது ஓன்று அறியேன் – இத்யாதியாலே
ப்ரஸக்த அநுரூபமாக -ததீய உபாயத்வத்துக்கும் ஆச்சார்ய உபாயத்வத்துக்கும் உண்டான பிரமாண விசேஷங்களை எடுக்கிறார் –
அதில் பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டில் -வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் -என்று
ஸ்வீ காரத்தில் ஸ்வ கதத்வம் தோற்றுகையாலே அமோகமான ஆச்சார்ய உபாயத்வத்தில் ஸ்வ கத ஸ்வீ கார பிரமாணம் என்னவுமாம் –

———

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –

—————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு-அங்கமாய்
ஸ்வ தந்த்ரமுமாய் –இருக்கும் –

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

சூரணை -463-

இது
பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் —

மேல் இப்படிப்பட்ட ஆச்சார்ய அபிமானம் தான் ஸகல வித்ய அங்கமாய் இருக்க -தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்று
ஸ்வ தந்த்ர உபாயமாகச் சொல்லுகிறபடி எங்கனே என்ன -ஆச்சார்ய அபிமானம் தான் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அவ்யஹித உபாயத்வேந ப்ரஸித்தமான ப்ரபத்தி தானும் -மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு -இத்யாதிகளாலே
கர்ம யோகாதிகளுக்கு அங்கத்வேந விதிக்கப்பட நிற்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸ்வ தந்த்ர உபாயமும் ஆகிறவோ பாதி
இச்சரம உபாயமும் ஸ்வ வ்யதிரிக்த ஸகல உபாயங்களுக்கும் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அங்கமாகா நின்றதே யாகிலும்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கையும் ஸூசிதம் என்கிறார் –
இவ்வர்த்தத்தில் பிரமாணம் -ஸாஸ்த்ரா திஷு ஸூ த்ருஷ்டாபி சாங்கா ஸஹ பலோ தயா ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேஸதே -என்று
யாதொரு வித்யை ஸகல வேத ஸாஸ்த்ரங்களிலும் அங்க ஸஹிதையாகவும் ஸஹஸா பல ப்ரதையாகவும்
ப்ரதிஞ்ஞா பலத்தாலே ஸூ சிஷதையாகை யானாலும்
அது ஸதாச்சார்ய உபதேசத்தால் அல்லது அர்த்த க்ரியா காரியாகவே மாட்டாது என்று இதனுடைய அங்கத்வத்தையும்
ஸதா சார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராபனுவந்தி பராங்கதிம் -என்றும்
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அதனுடைய ஸ்வ தந்த்ர பாவத்தையும் சொல்லா நின்றது இறே –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் –8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம்–மூன்றாம் பிரகரணம் –சூர்ணிகை -366-380 -நாலாம் பிரகரணம் -சூர்ணிகை -381-406—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

————

சூரணை -366-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

ஆகக் கீழ் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய பரிமாற்றத்தை அருளிச் செய்து
அதில் சிஷ்யனுடைய பரிமாற்றமாக உபகார ஸ்ம்ருதியில்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்தில்
மனஸ்ஸுக்குத் தீமையாவது -என்று தொடங்கி -பகவத் பாகவத தோஷங்களையும்
அல்லவவு அல்லாத ஸம்ஸாரி தோஷங்களையும்
இவன் காண்பான் அல்லன் என்றும்
அஸ் ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் காண ஒண்ணாத அளவே அன்று -அவர்கள் தன் பக்கல் பண்ணும்
அபஹாரங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் என்றும்
இன்னும் அவ்வளவே அல்ல
அவ்வபகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி பர்யந்தமான அதிகாரங்கள் யுண்டாக வேணும் என்றும் கீழே சொல்லி
ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷங்களையும் -என்ற இடத்தே தொடங்கி
கர்ப்பிதமாய்க் கொண்டு வருகிற பகவான் நிர்ஹேதுக ப்ரபாவத்தை விசதமாக
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –என்று தொடங்கி மேலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹே-இத்யாதி
துரந்தஸ்யா நாதேர பரிஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநா சாரோஹம் ந்ருப ஸூர ஸூபஸ்யாஸ் பதமபி -என்றும்
தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்சல்ய ஜலதே தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்றும்
ஆளவந்தாரும் அருளிச் செய்கையாலே
இவனுக்கு அநர்த்தங்களான தோஷங்களைப் பற்றிப் பார்த்தால் பயங்கரங்களாக இருக்கும் என்றும்
ஸ்வரூப உஜ்ஜீவங்களான பகவத் தயாதி குணங்களைப் பற்றிப் பார்த்தால் அந்த பய நிவ்ருத்திக்கே உடலாய் இருக்கும் என்றும் அருளிச் செய்கிறார் –

————

சூரணை-367–

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கும் –

பய அபயங்கள் -இத்யாதி -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கையாவது -அவனுடைய தயா குண அனுசந்தானத்தை விட்டு
இது நெடும்காலம் ஸம்ஸாரத்திலே நெருக்கி தண்டித்துக் கொண்டு போந்தான் இறே என்று ஈஸ்வரனுடைய தண்ட தரத்வத்தை அனுசந்தித்து பயப்படுகையும்
ஸ்வ தோஷ அனுசந்தானத்தை விட்டு இந்நாள் வரை நம்மைத் தண்டித்தானே யாகிலும் நம் பக்கலிலே இத்தனை ஆத்ம குணங்களால் வந்த ஆனுகூல்யம் யுண்டான பின்பு இனி பயம் இல்லை என்று இருக்கையும்
இவ்வதிகாரிக்கு உண்டாமாகில் முன்பு ஸம் சரிக்கைக்கு ஹேதுவான அறிவு கேடே இன்னம் பலித்து விடும் என்கிறார் –

———–

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

சூரணை -369-

பந்த-அனுசந்தானம் –

ஆனால் -நலிவான் இன்னம் -இத்யாதி -இந்த பயாபயங்களினுடைய மாறாட்டில் அஞ்ஞதையே ஸித்திக்குமாகில்
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானாதிகரான ஆழ்வார்களுக்கு ஈஸ்வர விஷயத்தில்
உண்ணிலாவிய
மாற்றமுள வாகிலும் -இத்யாதிகளிலே பயம் நடப்பான் என் என்னில்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் -என்றும்
இத்யாதிகளில் படியே ஸகலவித பந்துவும் அவனே என்று இருக்கிற பந்த அநுஸந்தானத்தாலே என்கிறார் –

—————

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

இன்னமும் இவ்வதிகாரிகளுக்குப் பிறந்த தஸா விசேஷத்தைக் கொண்டு அறுதியிட வேணும் –
அவ்வதிகாரிகளுடைய தஸா விசேஷங்கள் எவை என்னில்
ஸாஸ்த்ர ஞான மூலமாகப் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களே பிரதானமாக அநுஸந்திக்கும் அதிகாரிக்குப்
பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும்
அந்த ஸாஸ்த்ரத்தாலும் -ஸாஸ்த்ர தாத்பர்யமான திரு மந்திரத்தாலும் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களுக்கும்
சேஷத்வ பாரதந்ர்யங்களுக்கும் சம கக்ஷியாக அநுஸந்திக்குமவனுக்குப் பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும் –
அந்த ஸாஸ்த்ரத்தாலும் திருமந்திரம் அடியாகப் பிறந்த சேஷத்வ பாரதந்தர்யங்களே பிரதானமாக அத்யவசித்து இருக்கும்
அதிகாரிக்குப் பேறு இழவுகள் இரண்டும் ஈஸ்வரனாலே இருக்கும் –
ஆகையிறே ஆழ்வார்கள் அவ்விரண்டையும் அவன் பக்கலிலே ஏறிட்டு அருளிச் செய்தது –
இது இங்கே முக்த அவஸ்தை பிறந்த அதிகாரியினுடைய ஞானமாகையாலே முமுஷு அதிகாரியினுடைய அனுசந்தான கிரமத்தை அருளிச் செய்கிறார் பிரஜை தெருவிலே இடறி -இத்யாதியாலே
இத்தால் அந்த பந்த அனுசந்தானத்தால் பலிக்கும் காரியத்தை ஒரு புடை ஒப்பான த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறது –
அதாவது -ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியில் அநந்ய கதியான ப்ரஜை ஸ்வ இச்ச ஸஞ்சாரம் பண்ணுகிற தெருவிலே ஸ்வயமேவ இடறி
ஆத்தாள் வந்த வேதநாதிசயத்தாலே அகத்தேற ஓடி வந்து தனக்கு வருகிற விரோதம் முதலிலே அறியாதவளுமாய்த் தான் இடறுகிற இடத்திலும் இன்றிக்கே உண்டானாலும்
விலக்குகைக்கு அசக்தையுமாய் ஸோபாதக பந்த யுக்தையுமான மாதாவின் முதுகிலே மோதி கிலேசம் தீரக் காணா நின்றால்
ஸர்வஞ்ஞனுமாய்-ஸர்வ வியாபகனுமாய் -ஸர்வ சக்தியாய் -ஸதா சன்னிஹிதனுமாய்-ஸர்வ நியாந்தாவுமாய் -நிருபாதிக பந்துவுமாய்
நிரவதிக வாத்சல்ய யுக்தனுமான அவன் ஸ்வ கர்ம பலமான ஸாம்ஸாரிக ஸகல துக்கங்களையும் போகாது ஒழிந்தால்
அம்மாதாவின் அளவன்றிக்கே மிகவும் அவன் பக்கலிலே ஏறிட்டு வெறுக்கலாம் இறே என்கிறார் –

—————

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –

பிரஜையை இத்யாதி -அஞ்சு வயஸ்ஸுக்கு உட் பட்ட பிரஜையினுடைய ஹத்யாதி தோஷங்கள் மாதா பிதாக்களுடையது என்று
மன்வாதி ஸ்ம்ருதிகள் சொல்லா நிற்க -க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்-பதந ஹேதுவான கிண்னற்றங்கரையிலே பதறிக் கொண்டு போகிற பிரஜையை சந்நிஹிதை யான பெற்ற தாயானவள் எடுத்து ரஷியாதே அத்தை அனுமதி பண்ணி விட்டால் அவள் தானே இறே வலியத் தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே
ஆகையால் ஸ்வரூப நாஸ யோக்கியமான இந்த ஸம்ஸார மண்டலத்தில் நின்றும் ஸர்வத்ர ஸந்நிஹிதனான ஸர்வேஸ்வரன் –
உனது அருளால் வாங்காய் -என்கிறபடியே
தங்களை எடாது ஒழிந்தால் ததேக ரஷ்யரான ஆழ்வார்களுக்கு அப்படி அருளிச் செய்யலாம் இறே என்றபடி –

———————-

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இப்படி ஈஸ்வரன் இவர்களை எடாத அளவேயோ -முமுஷுக்களாய் -ஆர்த்த அதிகாரிகளான இவர்கள் அந்தமில் பேரின்பத்தை இழந்து
அநந்த கிலேச பாஜனமான இஸ் ஸம்ஸாரத்திலே அனுபவிக்கைக்கு ஹேது அவனுடைய அனுமதி அன்றோ என்ன -இவனுடைய அனுமதி -இத்யாதி –
கீழே ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ அனுமதி -என்ற இடத்தில் சேதனனுடைய அனுமதி-பேற்றுக்கு ஹேதுவான உபாயத்தில் அந்வயியாதோ பாதி
அத்யக்ஷஸ் ச அநுமந்தா ச -என்கிற ஈஸ்வரன்
இவன் நம்முடைய வஸ்துவாய் -வேறே சேஷ்யந்தரம் இன்றிக்கே இவனோடு இவன் விரோதியான கர்மத்தோடே வாசி யற நாம் இட்ட வழக்கான பின்பு
இவன் நமது விபூதிக்குப் புறம்பு ஆகிறான் அல்லனே
இன்று அன்றாகில் இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுகிறோம் என்று பண்ணும் அனுமதியும் இழவுக்கு ஹேது அல்ல என்கிறார் –

இனி கிண்னற்றங்கரைக்குப் பிரஜை போகத் தாய் பண்ணின அனுமதி மாத்ரத்தாலே அவள் தள்ளினாள் ஆய்த்தும் இல்லை இறே –

———–

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

ஆனால் அந்த இழவுக்கும் பேற்றுக்கும் ஹேதுக்கள் எவை என்ன -இழவுக்கு அடி -இத்யாதி –
இச் சேதனன் அந்தமில் பேர் இன்பத்தை இழக்கைக்கு ஹேது கால ஆர்ஜிதமான கர்மம்-
அத்தைப் பெறுகைக்கு ஹேது ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபை –

——————-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

மற்றைப்படி இத்யாதி – ஆத்ம குணங்களால் உண்டான ஆனுகூல்யத்தாலே பேறு யுண்டாய்த்து என்றும்
ஈஸ்வரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே இது நெடும் காலம் இழந்தோம் என்றும் சொல்லில்
மேல் அநந்த காலமும் இவ்விழவே பலித்து விடுகைக்கு உடலாம் -என்கிறார் –

———-

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை
தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

அவன் ஸர்வ சேஷியாய் ஸர்வ ரக்ஷகனாய் இருக்க அநாதி காலம் ஸம்ஸார ஆர்ணவ மக்நனாயக் கொண்டு தளர்ந்த இவன்
அப்படிச் சொன்னால் வருவது என் என்னில் -எடுக்க நினைக்கிறவனை -இத்யாதி –
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே
இவனை ஸம்ஸார தாபத்தாலே வெதுப்பி -ஹித பரனாய்க் கொண்டு -எடுக்க நினைக்கிற ஈஸ்வரனை இது நெடும் காலம்
இஸ் ஸம்ஸாரத்திலே உன் ஸ்வா தந்தர்யத்தாலே தள்ளினாய் என்று நைர் க்ருண்யத்தை ஏறிடுகை
தன் அநவதானத்தாலே ஆழ்ந்த குழியிலே விழுந்தான் ஒருவனை அருகே நின்றான் ஒருவன் ஐயோ என்று எடுக்கப் புக
அவஸாநத்தையே ஹேதுவாக அவன் ஒரு வழியே போகிறவனை நீயே அன்றோ தள்ளினாய் என்றால்
நிர்க்ருணனாய் எடுக்க உத்யோகியாதாப் போலே எடாமைக்கு உறுப்பாய் ஸம் சரிப்பிப்பைக்கு உடலாய் விடும் அத்தனை இறே –

—————–

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே-

சீற்றம் உள -இத்யாதி -இவ் வர்த்தத்தில் இந்த லௌகிக வியாபார த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு தர்சிப்பிக்க வேணுமோ
ஸம்ஸார தாபார்த்தரான திருமங்கள் ஆழ்வார்
மாற்றம் உள -என்கிற திரு மொழியில் –
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்த பாசுரத்தைக் கேட்ட அநந்தரத்திலே
எம்பெருமான் சீறினமை தோற்ற -சீற்றமுள -என்று
அநு போக்தாவான ஆழ்வார் தாமே இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே —

————-

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்–இத்யாதி -ஆனால் அவன் படிகள் எல்லாம் அறிந்து -அனுபவிக்கிற ஆழ்வார் -அப்பாசுரத்தாலே
அவனுக்குச் சீற்றம் யுண்டானமை அறிந்தால் மீளவும்
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்தபடி எங்கனே –
அதுக்கு ஹேது என் என்னில் –
கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேஸே -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்றும்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
சொல்லலாம் படியான அவனுடைய அருள் என்னும் ஒள் வாள் உருவி வினை முதிர்ந்து இருந்த கனமும்
காற்றத்திடைப்பட்ட கலவரைப் போலே ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -உண்டாகையாலும் அருளிச் செய்யப் பண்ணும் என்கிறார் –
மஹதா புண்ய புஞ்ஜேந க்ரீதேயம் காயநவ் ஸ்த்வயா ப்ராப்த துக்கோததே பாரந்த்வராயா வன்ன பிப்யதே -என்கையாலே
கலவர் மனம் போலே என்கிறார் –

—————-

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டு என்னா -சேஷியான அவனுக்குச் சீற்றம் பிறக்கும்படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன
சீறினாலும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
நிராச கஸ் யாபி ந தாவதுத் சஹே மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம் ருஷா நிரஸ்தோபி ஸி ஸூஸ்த நந்தயோ ந ஜாது மாதுஸ் சரணவ் ஜிஹாசதி-என்கிறபடியே
சீற்றத்தாலே தெறிக்கத் தள்ளினாலும் சென்று திருவடிகளை பூண் கொள்ளலாம் படி எளியனாய் இருப்பன்
ஒரு வத்சலனை லபித்தால் வாய் வந்த படி யுக்த பிரகாரம் எல்லாம் சொல்லலாம் இறே என்கிறார் –

—————–

சூரணை -380-

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -க்ருபயா பர்யபாலயத் -அரி சினத்தால் -என்று ஸ பிரகாரமாக அத்தை தர்சிப்பிக்கிறார் –
ஸ தம் பூமவ் நிபதிதம் சரண்யஸ் சரணாகதம் வதார்ஹமபி காகுத்ஸ்த் த க்ருபயா பர்யபாலயத் -என்றும்
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே இருந்தேனே -என்றும்
யுண்டாகையாலே இதில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியுஞ்சினம் உண்டாகக் கூடாது இறே
கூடாதது கூடினாலும் என்றபடி

ஆக -கீழே -பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது என்றவத்தை இவ்வளவாய் ப்ரதிபாதித்துக் கொண்டு போவது –

———————————————————-

நாலாம் பிரகரணம்

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி உடன் கேடனாய்-
இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –
தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப் போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

த்ரிபாத் விபூதியிலே -இத்யாதி -லீலா விபூதி அநிருத்தர் அபிமான அந்தர் கதமாய் இருக்கையாலே வாஸூ தேவாதிகளான மற்றை மூவருடையவும்
அபிமான அந்தர் கதமான திரிபாத் விபூதியிலே -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -ஸ்ரியா ஸார்த்தம்
நித்ய ஸூரிகளோடே பரிபூரணமான அனுபவம் அனுவர்த்தியா நிற்க -அந்த நித்ய விபூதி ரக்ஷணமாகிற ஜீவனத்தாலே
உண்டி உருக்காட்டாத படியாய் -ஸ ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே தன்னைத் தனியனாக நினைத்துத் தளர்ந்து –
புத்ர பவ்த்ராதிகளோடே ஜீவிப்பான் ஒரு க்ருஹஸ்தன் ஒரு புத்ரன் க்ருதயாக்ருத்ய விவேக ஸூன்யத்தையாலே அஹங்கார மமகார நிமித்தமாக
தேசாந்தரஸ்தன் ஆனால் இவர்களோபாதி இப்போகத்துக்கு இட்டுப் பிறந்த இவன் இப்படி அந்யதா ஆவதே என்று –
அந்த புத்ரன் விஷயமாக பிதாவினுடைய ஹ்ருதயம் புண் பட்டு இருக்குமா போலே
ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே -என்று தொடங்கி
தம பரே தேவ ஏகீ பவதி -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று -என்றும் இத்யாதிகளில் படியே
ஸம்ஹ்ருதி சமயத்திலே லீலா விபூதி பூதரான ஸகல சேதனரும் கரண களேபர விதுரராய்
அத ஏவ போக மோக்ஷ ஸூ ன்யராய்க் கிடக்கிற படியைக் கண்டு -தன்னோடு உண்டான நிருபாதிக பந்துவே ஹேதுவாக
அவர்கள் பக்கலிலே திரு உள்ளம் குடி கொண்டு -அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கிற நியாயத்தாலே
அவர்களை பிரிந்தால் இப்படி இவர்கள் இஸ் ஸம்பந்த ஞான ஸூ ன்யராய்க் கொண்டு கிடப்பதே என்று தன் கேவல கிருபா பாரவஸ்யத்தாலே
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே – மிகவும் விஸ்லேஷ அசஹனாய்
களே பரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
சொல்லுகிறபடியே சமாஸ்ரயண முகேந தான் அவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு தயமான மனாவாய்க் கொண்டு
கரண களேபர பிரதானத்தைப் பண்ணி கரண களேபரங்களைக் கொண்டு
நின்றனர் இருந்தனர் -என்ற பாட்டின் படியே இவர்களுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப வியாபாரங்கள் யுண்டாகைக்கு
ஆதா வீஸ்வர தத்த யைவ புருஷ ஸ்வா தந்தர்ய ஸக்த்யா ஸ்வயம் தத்தத் ஞான சிகீர்ஷண ப்ரயதநாத் யுத் பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
முதலிலே சக்தி விசேஷங்களையும் கொடுக்க அது தன்னையே கொண்டு
பரமேஸ்வர ஸம்ஞ ஜோஜ்ஞ கி மந்யோ மய்ய வஸ்திதே -என்கிற ஹிரண்ய ஸிஸூ பாலாதிகளைப் போலே இந்த்ரிய கோசரனாய் நின்று ரக்ஷிக்க நினைக்கில்
அஹங்கார மமகாரமாகிற அஞ்ஞான ரூபேண நிவாரிப்பார்கள் என்று நினைத்துக் கண்ணுக்குத் தோற்றாத படி
அதீந்த்ரியனாய்க் கொண்டு அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் -இப்படி அந்தர்யாமியாய் இருக்கும் இடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் ஒரு ஸ்மரண மாத்ரமும் இன்றிக்கே உறங்கிக் கிடக்கிற பிரஜையைப் பெற்ற தாயானவள் இத்தசையில் இதனுடைய ரக்ஷணம் நமக்கே இறே பரமாவது என்று அதன் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சேஷியான -தான் அறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக இவர்களுக்கு ஸம்பந்த ஞானம் இல்லை என்று விடுகைக்கு அஸக்தனாய் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் -என்றும்
ஸூபா ஹிதா கஹ்வரேஷ்டி -என்றும்
அடியேன் உள்ளான் -என்றும்
என்னாவி என்னுயிர் -என்றும்
இத்யாதிகளில் படியே இவ்வாத்மாக்களுடைய அகவாயிலே அணைத்துக் கொண்டு ஒருவனுக்கு ப்ராக்தநமான க்ஷேத்ரம் பரராலே அபஹ்ருதமானால்
அந்த க்ஷேத்ர அபஹாரி யானவன் ஆண்டு கொண்டு போருமித்தைப் பற்றவும் உடையவன் அநு சயித்துத் தொடருகை அந்த க்ஷேத்ர அனுபவத்துக்கு ப்ராபல்ய ஹேதுவாமோ பாதி
தவம் மே அஹம் மே குதஸ் தத் -இத்யாதி ஸ்லோக ப்ரகாரத்திலே ஸம்ஸாரி சேதனன் நான் எனக்கு உரியன் என்கிற இது அநாதி ஸித்தமாய்ப் போரு மதிலும்
நாம் ஸ்வாமியானமை தோற்ற சத்தா தாரனாய்க் கொண்டு தொடர்ந்து கொண்டு போரும் அளவன்று என்று நிரந்தரமாக
அவர்கள் சத்தையை ரக்ஷித்து ஸ்வர்க்க நரகாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இப்படி சத்தா தாரகனாய்ப் போரு கையாலே இவர்களோடே உடன் கேடனாய்
அவர்கள் பிரகிருதி வஸ்யராய்க் கொண்டு அஸத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போதும் அள்ளல் சேற்றிலே இழிந்து அளைகிற பிரஜையை அதுக்கு அத்யக்ஷனான பிதா நிவாரிக்கப் பார்த்தால் அதன் சோகம் காண மாட்டாமையாலே
அனந்த்ரம் ஒரு கால் அத்தைக் கழுவி எடுத்துக் கொள்கிறோம் என்று அனுமதி பண்ணி இருக்குமோ பாதி
அனாதையான வாசனா ருசிகளுக்கு ஈடாக அவற்றில் நின்றும் மீட்க மாட்டாதே அநு மந்தாவான தன் அனுமதி தானத்தைப் பண்ணி
உண்மையிலே உதாஸீனன் இன்றிக்கே இருக்கச் செய்தே உதாசீனரைப் போலே இருந்து
ஸர்வஞ்ஜோபி ஹி விஸ்வேச ஸதா காருணிகோபி சந் ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிறபடியே
ஆள் பார்த்து உழி தருகிறவன் ஆகையால் அஸத் கர்மங்களில் நின்றும் இவர்களை மீட்க்கைக்கு அவசரம் பார்த்து

அந்த பர ஹிம்சாதிகளான அஸத் கர்மங்களிலே
பகவத் பாகவத அபசாரிகளை யாதிருச்சிகமாக ஹிம்ஸிக்கை தொடக்கமான நன்மை என்று பெயர் இடலாவதொரு தீமையும் சர்வஞ்ஞனான தான் காணாதே
ஸர்ப்ப சந்தஷ்டனான ஒருவனுடைய நெற்றியைக் கொத்தி ரக்தப்பசை யுண்டோ என்று சோதித்துப் பார்த்தால் மந்த்ர ஒவ்ஷாதி ஸர்வ பிரகாரத்தாலும் அப்பசை காணாது ஒழிந்தால் அந்தரங்கராய் இருப்பார் இனி இவ்விஷயம் நமக்கு கை புகுறாது என்று கண்ண நீரோடு கால் வாங்கிப் போருமாப் போலே
ஸம்ஸார போகி ஸந்துஷ்டானான இவனை ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் யாதிருச்சிகாதி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவிக்கப் பார்த்தால்
த்விதா பஜ்யேயாம்-என்ற ராவணனைப் போலே ஒரு வழியாலும் உஜ்ஜீவன ஹேது காணா விட்டால் அவனை அம்பாலே அழித்து மீண்டாப் போலே
இவன் அங்கீ கார யோக்யன் அன்று என்று -ஸஞ்சாத பாஷ்ப -என்கிறபடியே கண்ண நீரோடே ஸர்வ ஸக்தியான தான்
ஸாஸ்த்ரமும் -உபதேசமும் –தன்னுடைய நிர்ஹேதுக கிருபையும் -விநியோகப்படுகைக்கு விஷயம் வேணும் என்ற நினைவாலே மீளுவது
இப்படிப்பட்ட நினைவை யுடைய தன் திரு உள்ளத்துக்கு ஈடாக யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களை யுடைய ஒரு சேதனனைப் பெற்ற அளவிலே
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன -என்றும் இத்யாதிகளில் படியே
என்னூரைச் சொன்னாய்-என் பேரைச் சொன்னாய் -என்றும்
ஒரு பாகவதன் காட்டிலே வழி போகா நிற்க அவன் பின்னே பர ஹிம்ஸா பரனாய் இருப்பான் ஓரு படனும் யாதிருச்சிகமாக ஸா யுதனாயக் கொண்டு போக
அவ்வளவிலே காட்டில் வழி பறிகாரர் இந்த பாகவத பரிபாலன அர்த்தமாக வருகிறானாக நினைத்து அவனைப் பறியாதே பயப்பட்டுப் போக
அந்தப்படனுக்கு அந்த வியாபாரத்தை ஈஸ்வரன் ஸூ ஹ்ருதமாக முதலிட்டான் என்கையாலே -என்னடியாரை நோக்கினாய் -என்றும் –
ஒரு பாகவதன் கர்ம காலத்திலே வழி நடந்து தாஹ தூரனாய்ச் செல்லா நிற்க அத்தசையிலே தன் செய்க்குச் சாவி கடிந்து இறைக்கிறான் ஒருவன்
அந்நீரிலே கால் தோய்ந்தாரையும் கடிக்கொன்டு விலக்கி இறையா நிற்க
அசிந்திதமாக அப்பாகவதன் அதில் தன் விடாய் தீர்த்துப் போக – அத்தை ஈஸ்வரன் அவனுக்கு ஸூ ஹ்ருதமாக்கி மூதலிக்கையாலே அவர்கள் விடாயைத் தீர்த்தாய் என்றும்
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி விநோதார்த்தமாக புறம் திண்ணையைக் கட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்ய ராத்ரி யானைவாரே தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என்
இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக -அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு
அவர்களால் வந்த வ்யஸனத்தை நிவர்ப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக அத்தை அவளுக்கு
ஸூ ஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும்
இப்புடைகளிலே சில ஸூ ஹ்ருத லேசங்களை ஸ்வ கார்ய வஸராய்க் கொண்டு வழி போவார் மடியிலே வலிய மறைத்து மாங்காயைப் பொகட்டு அத்தை அடையாளமாக ஆஜ்ஞா புருஷன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே
மித கலஹ கல்பநா விஷம வ்ருத்தி லீலா தயா பஹிஷ் கரண தவ்ஷ்கரீ விஹித பாரவஸ்ய ப்ரபு ஸ்வ லஷித ஸமுத்கமே
ஸூ ஹ்ருத லக்ஷணே குத்ர சித் குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந -இத்யாதிகளில் படியே
ஈஸ்வரன் லீலா ஸங்கல்ப நிர்வாஹண அர்த்தமாக ஏறிட்டு
இப்படிக் கீழே யுக்தமான யாதிருச்சிகாதிகளை ஒரு ஜென்மத்தில் ஒருக்காலே ஏறிட்டு விடுகை அன்றிக்கே -ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக சிலர் ஸ்வர்ண பரீஷை பண்ண வரப் பொன் வாணியன் அதிலே ஆதார அதிசயத்தாலே
அப்பொன்னை வாங்கி உரை கல்லிலே உரைத்து அதன் சீர்மையை அறிந்து முகப்பிலே எடுத்து கால தைர்க்யத்தோடே கால் கழஞ்சு என்று திரட்டி
ஆகர்ஷகமான ஆபரண யோக்யமாக்குமா போலே -சேதனனுடைய ஜென்ம பரம்பரைகள் தோறும்
என்னடியாரை நோக்கினாய் –விடாயைத் தீர்த்தாய் –என்று இத்யாதிகளான ஆனு ஷங்கிகம் என்ன –
ஏவம் விதமான ஸூ ஹ்ருத விசேஷங்களை ஸர்வஞ்ஞனனான தானே கல்பித்து
யம் ஏப்யோ லோகேப்ய உன்னி நீஷதி ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி தம் -என்கிறபடியே
இஸ் ஸூ ஹ்ருத விசேஷங்களை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கிறார் –

———

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –சுருக்கம் ஓழியக் காணலாம் –

ஈஸ்வரன் இப்படி விஷயீ கரிக்க எங்கே கண்டோம் என்ன -லலிதா சரிதாதிகளிலே விஸ்தரேண காணலாம் என்கிறார் -அதாவது
லலிதை என்பாள் ஒரு ராஜ கன்யகை பூர்வ ஜென்மம் பாப பிராஸுர்யத்தாலே எலியாய் ஜனித்து ஓர் எம்பெருமானுடைய கோயிலிலே இதஸ் ததஸ் சஞ்சாரியாய் நிற்க
அவ்வெம்பெருமான் ஸந்நிதியிலே எரிகிற ஒரு தீபம் திரி எரிகிற ஸமயத்திலே அது தைலேச்சுவாய்க் கொண்டு தலை வைத்ததாயிற்று
தன் முகேந ஜ்வலித்த திரு விளக்கு நெடும் போது நின்று எரிய அதில் உஷ்ணத்தாலே இழிந்து ஓடுகிற அத்தை அப்போதே ஒருவன் அடிக்க
அந்த ஸூ ஹ்ருத விசேஷத்தாலே தத் ஸ்மரணையோடே இவ்வதிகா ஜென்மத்தை லபித்து இப்படியான பின்பு நமக்கு கர்த்தவ்யம்
அநந்த தீப முச்யதே -என்கிற இத் திரு விளக்குத் திருப்பணியே யாக வேணும் என்று தனக்குச் செல்லுகிற தேசத்திலே திருப்பதிகள் எங்கும்
பரிபூர்ண தீபத்தால் தேஜிஷ்டமாம் படி பண்ணி அவள் முக்தையானாள் என்று ப்ரஸித்தம் இறே –

இனி ஆதி சப்தத்தால் நினைக்கிறது –
ஸூ வ்ரதை என்பாள் ஒரு ருஷி கன்யகை பால்யத்தில் மாதா பிதாக்களும் மரித்து தன்னைப் பாணி கிரஹணம் பண்ணுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்கையாலே
இவ்விருப்பு இருக்க வேண்டா என்று அவள் அக்னி பிரவேசம் பண்ணுகையிலே உத்யோகிக்க
அவ்வளவிலே யமன் ப்ராஹ்மண வேஷத்தைக் கொண்டு வந்து இப்படி நீ ஆத்மகாதகை யாகலாகாது காண் என்ன
அவளும் கிலேச யுக்தமாக இவ்விருப்பு இருக்கப் போகாது என்ன
உனக்கு இக் கிலேசத்துக்கு அடி பூர்வ ஜென்மத்திலே நீ யொரு வேஸ்யையாய் இருப்புதி –
உன்னகத்திலே ஒரு ப்ராஹ்மண புத்ரன் வந்து ப்ரவேசிக்க முன்பே உன்னோடே வர்த்திப்பான் ஒரு மூர்க்கன் அவனை வதிக்க அந்த ப்ராஹ்மண புத்ரனுடைய ஸ்திரீயும் மாதா பிதாக்களும் பர்த்ரு ஹீனை யாவாள் என்றும்
பித்ரு ஹீனை யாவாள் என்றும் மாத்ரு ஹீனை யாவாள் என்றும் -உன்னை சபிக்க அத்தாலே காண் உனக்கு இந்த கிலேசம் வந்தது என்ன
ஆனால் இப்படி ஹேயையான எனக்கு இந்த ஜென்மம் உண்டானபடி என் என்ன -அதுக்கு ஹேது ஒரு பாகவதன் உன் க்ருஹ ப்ராந்தத்திலே விஸ்ரமிக்க அவனைத் தலையாரிக்காரன் கள்ளன் என்று பிடித்து ஹிம்ஸிக்க நீ அத்தைத் தவிர்த்து
அவன் பக்கலிலே அத்யாத்மம் கேட்ட பலம் காண் இது என்றான் இறே
அவன் அவளுக்கு உபதேசித்த அர்த்தம்
குரு ப்ரமாணீ க்ருத சித்த வ்ருத்தயஸ் ததாகமே ஸூ ப்ரணத ப்ரவ்ருத்தய
அமாநிநோ டம்ப விவர்ஜித நராஸ் தரந்தி ஸம்ஸார ஸமுத்ர மஸ் ரமம் -என்றது இறே இதிஹாஸ சமுச்சயத்திலே –

———————————

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்-வாளா தந்தான் என்று இருப்பர்கள்-

அஞ்ஞர் இத்யாதி -இனி ஆகிஞ்சன்ய ஏக சரணமான ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறவாத அஞ்ஞரானவர்கள்
ஒரு ராஜா ஒருவன் கையிலே வாளைக் கொடுத்து நீ கைக்கு ஆயிரம் பொன்னைப் பொன்னுக்கு நம்மை சேவி என்று நியமித்து விட
அவன் வாள் தந்தமையை மறந்து இவ் வாளாலே இப்போகம் பெற்றோம் என்று கேவலம் வாளின் மேலே கர்த்ருத்வத்தை ஏறிடுமா போலே
அடியிலே கரண களேபர ப்ரதாநம் பண்ணின ஈஸ்வரனை மறந்து -நம் கையிலே ஸூ ஹ்ருதாதிகளாலே அவன் நம்மை கிருபை பண்ணினான் இத்தனை இறே என்று இருப்பர்கள் –

————————

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

ஞானவான்கள் இத்யாதி -அந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறந்த முமுஷுக்கள் அந்த ஸ்வரூப தசையோடு புருஷார்த்த தசையோடு வாசியற
பகவன் நிர்ஹேதுக கிருபையாலே பலித்தது என்று எப்போதும் உபகார ஸ்ம்ருதியாலே ஈடுபடா நிற்பர்கள்
என்னும் இடத்துக்கு ப்ராமண பாஹுல் யத்தை -இன்று என்னைப் பொருளாக்கி -இத்யாதிகளாலே அருளிச் செய்கிறார் –

———————–

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

பாஷ்யகாரர் காலத்திலே -இத்யாதி -பார்த்த இடம் எங்கும் பகவத் ஏக பரராம்படி பண்ணுகிற பாஷ்யகாரர் காலத்திலே யாதிருச்சிகமாக ஒரு நாள் பெரிய திரு மண்டபத்துக்குக் கீழாக நம்பெருமாளுடைய புறப்பாடு பார்த்து ஏகாக்ர சித்தராய்க் கொண்டு கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் குவிந்து மஹா லோகமாய் இருந்ததொரு சமயத்திலே
நாதே ந புருஷோத்தமே த்ரி ஜகதாமேகாதிபே சேதஸா சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸூரே நாராயணே திஷ்டதி
யம் கிஞ்சித் புருஷாதமம் கதி பயாக்ரமே ஸமல் பார்த்ததம் சேவாயை ம்ருகயா மஹே நரமஹோ மூடா வராகா வயம் -என்கிறபடியே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் எத்தனை பதக்தர் வாசல்கள் தோறும் ஆபிமுக்யத்துக்கு இடம் பார்த்துத் தட்டித் திரிந்தோம் என்று தெரியாது
இப்படிப்பட்ட நாம் இன்று லோக நாயகரான பெருமாள் திரு வாசலிலே இவருடைய புறப்பாடு பார்க்க என்ன ஸூ ஹ்ருதம் பண்ணினோம்
என்று ஸ ஹேதுக விஷயமான இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -அவ்வளவில் ஒரு ஞானாதிகர் இவரைப் பார்த்து பிரபாகரன் எம்பெருமானை ஒழிய
அபூர்வம் என்ற ஒன்றை ஆரோபித்துக் கொண்டால் போலே நீரும் ஒரு ஸூ ஹ்ருத தேவரை எங்கே தேடி எடுத்தீர் என்ற வார்த்தை
நிர்ஹேதுகத்வத்தை ஸ்தாபிக்கிற இவ்விடத்தே அனுசந்தேயம் என்கிறார் –

——————

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

ஆகையால் அஞ்ஞாதமான–இத்யாதி -இப்படிக் கேவலம் அத்தலையாலே பேறாகையாலே இச்சேதனருடைய புத்தி பூர்வம் அல்லாத
அஞ்ஞாத ஸூஹ்ருத லேசங்களையே அவலம்பித்துக் கொண்டு அங்கீ கரிக்கையே அவனுக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இனி இப்படி இத்தனையில் யாதிருச்சிகாதிகளை யாகிலும் ஹேதுவாக்கி அவன் அங்கீ கரிக்குமான பின்பு கேவலம் அத்தலையாலே பேறு என்கிற அர்த்தம்
அசங்கதம் ஆகிறதோ என்ன -இவையும் கூடி விளையும் படி இறே என்று தொடங்கிச் சொல்லுகிறது -எங்கனே என்னில்
யுக்தமான யாதிருச்சிகாதிகளும் வஷ்யமாணமான அபாபத்வமுமாகிற இவையும் கூட உண்டாம் படி இறே
இந்த யாதிருச்சிகாதிகளுக்கு ஆஸ்ரயமான இவன் தன்னை ஸ்ருஷ்டி காலத்திலே அவன் கரண களேபரங்களைக் கொடுத்து
இவனை யுண்டாம் படி பண்ணிற்று என்கிறார் –

—————

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் -இருக்கும் –

அது தன்னை -இத்யாதி -ஒவ்க பத்யம் அநுக்ரஹ கார்யமாகையாலே அவன் தான் நிர்ஹேதுக கிருபையாலே
கரண களேபர ப்ரதான த்வாரா இவனை அவன் ஸ்ருஷ்டித்த படியை நிரூபித்தால்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தத் அதீனனான இவன் தனக்குத் தன் தலையால் ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் இருக்கும் –

——————

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –

அது எங்கனே என்னில் -பழையதாக இத்யாதி -ஒருவன் தனக்கு ப்ராக்தனமான க்ஷேத்ரத்தைப் பலகாலும் உழுவது நடுவது விளைவதாய்
இப்படி கிருஷி பண்ணிக் கொண்டு போரா நின்றால் அக் கர்க்ஷகனுடைய புத்தி பூர்வம் அன்றிக்கே இருக்க அவன் கிருஷி பண்ணுகிற கட்டளை போலே
அரி தாளிலே விழுந்த உதிரி முளைத்து அவனுக்கு நல்ல பசியிலே புஜிக்கலாம் படி அது பல பர்யந்தமாமா போலே
விடை யடர்த்த பக்தி யுழவன் பழம் புனத்தில் வித்தும் இட வேண்டும் கொலோ-என்கிறபடியே
இந்த யாதிருச்சிகாதிகள் தான் பரபக்திக்கு கர்ஷகனான ஈசுவரனுடைய புத்தி பூர்வகமாகவும் வேண்டாதே
தானே விளையும்படி இறே பழம் புனமாகிற ப்ரக்ருத் யம்சமாய்
மன ஏவ மனுஷ்யாணாம்
யத்தி மனஸா த்யாயதி -இத்யாதி க்ரமத்தாலே
அந்த யாதிருச்சிகாதிகளுக்கு மூலமான மனஸ்ஸைத் தன் பால் மனம் வைக்கும் படி அந்த கர்ஷகன் திருந்த ஸ்ருஷ்டித்த க்ருஷிக் கட்டளை என்கிறார் –

———–

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் பஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

அவை தான் எவை என்னில் -ஆத்மாக்கள் அநந்தமாகையாலே ஒரு சேதனனுக்கு புண்ய ரூபமாகவும் பாப ரூபமாகவும் உண்டான
ஸ்வயம் ஆர்ஜிதமான கர்மங்களினுடைய பலங்கள் நரகாதிகளிலே நெடும் காலம் நிஸ் சேஷமாக அனுபவித்து
இனி பவிஷ்யமான காலத்திலே அந்தப் புண்ய பாப ரூபங்களை பூர்வ வாஸனா ருசி மூலமாக ப்ரவர்த்திக்கும் அத்தனை என்னும் படி
கர்ம பல அனுபவத்தில் அவன் கை ஒழிந்து அச்ச பாபனாய் நிற்கிற தசையிலே
அபேஷேத கதிம் நிரூணாம் கர்மணோ கஹநாம் கதிம் -என்கிறபடியே
நாஹம் தேவோ ந மர்த்யோ வா -என்கிற க்ரமத்திலே நாம் தாம் ஆர் என்று தன் ஸ்வரூபத்தை உணர்ந்து நம் ஸ்வரூபம் இதுவான பின்பு
நாம் இப்போது நிற்கிற நிலை ஏது நமக்கு இனிமேல் கர்தவ்யமாவது ஏது என்று இவனுக்கு அபூர்வமாகப் பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு
அந்த ஆத்ம குணங்களாதல் -பூர்வ யுக்தமான யாதிருச்சிகளாதல் -என்கிறார் –

—————–

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை-பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

அசிந்திதமாக ஒரு சேதனனுக்கு யாதிருச்சிகாதிகள் சம்பவிக்கும் க்ரமத்தை
யதா ஹி மோஷகா பந்த்தே பரிபர்ஹமுபேயுஷி நிவ்ருத்த மோஷணோத்த் யோகாஸ் ததா சந்த உதாசதே-என்று தொடங்கிச் சொல்லுகிற
பகவச் சாஸ்திரத்தத்திலே ஒரு பாகவதன் உத்ஸவ அர்த்தமாக ஆபரணாதிகளிலே அலங்க்ருதனாய்க் கொண்டு வழி போகா நிற்க
அவன் பின்னே கார்ய பரனாய்க் கொண்டு வருகிறான் ஒரு ஆயுத பாணியைக் கண்டு அந்த பாகவதனைப் பறிக்க வந்த மோக்ஷகர்
அந்த மோக்ஷண வியாபாரத்தின் நின்றும் நிவ்ருத்தராக -அத்தாலே -அந்த பின் வந்த படனுக்குப் பெரியதொரு ஸூ ஹ்ருத பலமாய் வந்து பலித்த படி
யாதொரு படி அப்படி அல்லாதாருக்கும் இவை யுண்டாம் என்று சொல்லுகையாலே இவ்வர்த்தம் பிரபல ப்ராமண யுக்தம் என்கிறார் –

ஆக
த்ரி பாத் விபூதியில் என்று தொடங்கி
நிர் ணீதமான அர்த்தம் ஈஸ்வரன் சேதனனுக்குத் தன் நிர்ஹேதுக கிருபையாலே கரண களேபரங்களைக் கொடுத்து
யாதிருச்சிகாதிகளையும் இவனுக்கு யுண்டாக்கும் இடத்தில் இவற்றில் இவன் அறிய வருமவை ஒன்றும் இல்லாமையாலே
உஜ்ஜீவனம் யாதிருச்சிகாதிகளாலும் இன்றிக்கே கேவலம் நிர்ஹேதுகம் என்னும் இடம் நிச்சிதம் என்றதாயிற்று –

——————-

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் -இறே –

வெறிதே அருள் செய்வர் -இத்யாதி -அதுக்கடி-ப்ரமாணிகரில் ஆப்த தமரான ஆழ்வார்
வெறிதே அருள் செய்வர் -என்று விசேஷித்து இவ்வர்த்தத்தை வெளியிடுகையாலே இறே -என்கிறது –

—————-

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூ ஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

அவ்விடத்தில் தன் கைம்முதல் கொண்டு திரு உள்ளம் உகக்கும் படி -செய்வார்கட்க்கு அருள் செய்வர் -என்கையாலே
அவ்வருள்களுக்கு ஹேது ஸூ ஹ்ருதமாய்த்து இல்லையோ என்னில்
அங்கனே விவஷையாகக் கொள்ளும் இடத்தில் -வெறிதே -என்ற பாசுரம் ஸ்வ வசன விருத்தத்வேந அசங்கதமாம் என்கிறார் –
செய்வார்கட்க்கு என்று
தான் செய்ய நினைத்தவர்கட்க்கு என்ற போது
வெறிதே என்ற இடம் சங்கதமாம் இறே –

—————————–

சூரணை -395-

பகவத் ஆபிமுக்க்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —

ஆகிடுமானாலும் இவனுக்கு பகவத் விஷயீ கார பூர்வ பாவியான அத் வேஷ ஆபி முக்யங்கள் மாத்ரம் ஸூ ஹ்ருதம் அடியாக வந்ததானாலோ என்ன
அத்தைத் துடைக்கிறார் மேல் -பகவத் ஆபி முக்யம் இத்யாதி -அதாவது
அத்வேஷ அநந்தர பாவியான பகவத் விஷயத்தில் இவனுக்கு யுண்டாம் ஆபி முக்யம் இவன் பண்ணின ஸூ ஹ்ருதம் அடியாக அன்றிக்கே
பகவத் கிருபையாலே வேணுமாகில் யுண்டாகிறது
ஏதத் பூர்வ பாவியாய் அகிலாத்ம குண ப்ரதானமான அத்வேஷ மாத்ரம் இத் தலையில் ஸூ ஹ்ருதம் அடியாக சம்பாவித்ததானாலோ என்னில்
அநாதி காலம் ஸம்ஸரித்து பகவத் விமுகனாய்ப் போந்த இவனுக்கு அவ்விஷயத்தில் அத்வேஷ யுக்தனாகை யாகிற இம்மஹா பலத்துக்கு
அஞ்ஞனாய் -அசக்தனாய் அஸ்வதந்த்ரனாய் இருக்கிற இவன் பண்ணும் ஸூ ஹ்ருதத்தைக் காரணம் ஆக்குகை
தூரதோ நிரஸ்தம் என்கிறார் –

——————

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

ஸாஸ்த்ரமும் விதியாதே -இத்யாதி -இப்படி பகவச் ஸாஸ்த்ர ப்ரஸித்தமான ஸூ ஹ்ருதங்களினுடைய அனுஷ்டான க்ரமத்தை
ஏஷ ஏவம் குர்யாத் -என்று ஒரு ஸாஸ்த்ரங்களும் விதியாதே –
அந்த ஸாஸ்த்ரங்களினுடைய விதி விஷயமான நாமும் அறியாதே வருமவையான பின்பு ஸூ ஹ்ருதம் என்ற ஒன்றை முதலிலே
அநபிஞ்ஞரான நாம் நாம கரணம் பண்ணும் படி எங்கனே என்று வ்யுத்பித் ஸூ க்களுக்கு சங்கையாக
தன் நிவ்ருத்யர்த்தமாக அதுக்கு நாமதேய கர்த்தாக்கள் நாம் அன்று
பிதா புத்ரஸ்ய நாமதா -என்ற ந்யாயத்தாலே
ஸர்வஞ்ஞனாய்-நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் என்று ஆச்சார்ய பரம்பரையை ஆஸ்ரயித்து
இவ்வர்த்தத்தை அத்யவசித்து இருக்கையாய் இருக்கும் என்று யுக்த அர்த்தத்தை த்ருடீ கரிக்கிறார் –

—————–

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

இவ்வர்த்த விஷயமாக இத்யாதி -இந்த நிர்ஹேதுக ஸ ஹேதுக ரூபமான இவ்வர்த்தம் விஷயமாக மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் பாசுரங்களிலேயும்
மாதவன் என்றதே கொண்டு
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன –
இத்யாதிகளாலும்
வெறிதே அருள் செய்வர்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்னும் இத்யாதிகளிலும்
ஸ ஹேதுகமாகவும்
நிர் ஹேதுகமாகவும்
அருளிச் செய்கையாலே -ப்ரதீதியில் அவை அந்யோன்யம் விருத்த யுக்திகள் போலே ப்ரதிபாஸிக்கும்
இனி அல்லாதவற்றைப் பற்ற இத்திரு நாமத்துக்கு வாசி அறியாது இருக்க வசன மாத்ரத்தைக் கொண்டு
அந்தப்புர பரிகரர் சொல்லும் அத்தை அன்றோ இவன் சொல்லிற்று என்றும்
ஆழ்வீர் திருமாலிருஞ்சோலை மலை என்றீரே என்ன
அவரும் நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேனோ என்ன
இப்போது இப்படிச் சொன்னீரே என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் என்றும்
இப்படி அந்த ஸ ஹேதுக ப்ரதிபாஸ வாக்யங்களுக்குச் சொல்லும் பரிஹாரங்களும் இவ்வர்த்தத்துக்கு உபோத் பலகமாக ஸாஸ்த்ரங்களிலே
ஏவம் ஸம் ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுப ஜாயதே என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேந மஹா மதே ஆச்சார்ய விஷயீ காரத் ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்றும்
நாசவ் புருஷகாரேண ந சாப்யன்யேந ஹேது நா கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷ்யே கஞ்சித் கதாசன -என்றும்
இத்யாதி வக்தவ்யங்களான பிராமண விசேஷங்களும்
இப்பிரபந்த விஸ்தர பீதயா பறக்க பரக்க அருளிச் செய்கிறிலோம் என்கிறார் –

————-

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

ஆகையால் இத்யாதி -பிரதமத்திலே இவனுக்கு அத்வேஷ ஆபி முக்யங்கள் உண்டாய்த்தும் அத்தலையாலே யான பின்பு
கேவல பகவன் நிர்ஹேதுக கிருபையாலே உஜ்ஜீவனம் ஆகையாலே இச்சேதனன் தன் பக்கல் விமுகனான ஸம்ஸார தசையிலும் கூடக்
கீழ் யுக்தமான பிரகாரத்திலே உஜ்ஜீவிக்கைக்கு கிருஷி பண்ணின
காருண்யாதி குண விசிஷ்டனாய் ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை அனுசந்தித்தால் முமுஷுவானவன் எப்போதும்
ஸம்ஸார துக்க நிமித்தமாக நிர்ப்பயனாய் நிர்ப்பரனாய்
இருக்கும் அத்தனை என்று கீழே -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்றத்தை நிகமிக்கிறார் –

————

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு –

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைப்பாரை போலே –வ்யாப்தியும் –

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

எதிர் சூழல் புக்கு இத்யாதி -இப்படி இவ்வதிகாரி தான் விமுகனான தசையிலும் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே உஜ்ஜீவிக்கைக்குக் கிருஷி பண்ணின ஈஸ்வரன் அளவில்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -என்கிற படியே
த்ரி பாத் விபூதி -என்று தொடங்கிச் சொன்ன ஸ்ருஷ்டி மாத்ரத்தையே ஆஸ்ரித அர்த்தம் என்று அனுசந்தித்து
நிர்ப்பயனாய் இருக்கும் அளவே யன்று
சத்தா தாராகத்வேந ஸர்வ ஸாமான்யமாக உண்டான வியாப்தியையும்
முற்றுமாய் நின்ற எந்தாயோ என்கையாலே
கீழ்ச் சொன்ன ஸ்ருஷ்ட்டியையும்
எதிர் சூழல் புக்கு -என்ற இடத்தில் சொல்லுகிற அவதாரத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆழ்வார்கள் அனுசந்தித்தாப் போலே
ஸ்வார்த்தமாக என்று இறே இந்த ஞானாதிகரும் அனுசந்தித்து நிர்ப்பயராய் இருப்பது -என்கிறார் –

———————

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் –

கர்ம பலம் போலே -இத்யாதி -இத்தால் கீழ் அர்த்தமாக வந்த வியாப்திக்குத் த்ருஷ்டாந்தமாக அந்த அவதாரத்தைச் சொல்லுகிற
எதிர் சூழல் புக்கு -என்கிற ப்ரமாணத்திலே
விதி சூழ்ந்தது -என்று பகவத் கிருபையை விதி ஸப்தத்தாலே அருளிச் செய்வான் என் என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம்-என்கிற விதி ரூப கர்ம பல அனுபவம் அவர்ஜனீயம் ஆனால் போலே
அவனுடைய கிருபா பலமும் இவ்வதிகாரிக்கு அனுபவித்தே விட வேண்டும்படி இருக்கையாலே
கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் -என்கிறார் –

———–

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –

சேதனன் கர்ம பரதந்த்ரனாகையாலே தத் பலம் அனுபவிக்கிறான் -அச்சேதனனுக்கு
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ் மதாதே கீடஸ்ய சக்திர் பத ரங்க பந்தோ
யத் த்வத் க்ருபா மப்யதி கோச கார ந்யாயா தசவ் நஸ்யதி ஜீவ நாஸம் -என்கையாலே
அக்கிருபையைத் தகைய வழி யுண்டே என்ன
இவனே யல்ல
ஸர்வ சக்தியான அவன் தானும் கூடத் தகைந்தாலும் இவ்விருவர் ஸ்வா தந்தர்யத்தாலும் தகைய ஒண்ணாத படி
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக கிருபை பெருகப் புக்கால் சேதனனுடைய ஸ்வா தந்தர்ய ரூபமான அஹம் மமதைகளாகிற கரையும்
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்ய ரூப தண்ட தரத்வமாகிற கரையும் இடியும்படி உத் கூலமாய்க் கொண்டு பெருகும் என்கிறார் –

—————-

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

சூரணை -405-

பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —

இனி பய ஹேது கர்மம் என்று தொடங்கி -கீழே ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது என்றஇரண்டையும் நிகமித்து
ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறார் –
இப்படி இவன் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து பயப்படுகைக்கு ஹேது
ந நிந்திதம் கர்ம ததஸ்தி -என்கிற ஸ்லோகத்தின் படியே
அந்த தோஷ ஹேதுக்களான துஷ் கர்மங்கள் பகவத் குண அனுசந்தானத்தாலே நிர்ப்பரனாய் இருக்கைக்கு ஹேது
அநுத்தமம் பாத்தரமிதம் தயாயா -என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீ நம் -என்றும் அருளிச் செய்கையாலே
அவனுடைய ஸகல குண ஸாகல்யமான நிர்ஹேதுக கிருபை
இந்த முமுஷு அதிகாரிக்கு அந்த கர்ம ஹேதுவான பயமும் காருண்ய ஹேதுகமான அபயமும்
முந்நீர் ஞாலம் சீலமில்லாச் சிறியேன் -துடக்கமானவற்றிலும்
வைகுந்தா மணி வண்ணன்
கேசவன் தமர் -தொடக்கமானவற்றிலும்
ஆழ்வாருக்கு பர்யாயேண அனுவர்த்தித்திக் கொண்டு போந்தாப் போலே
பேஷஜம் பகவத் ப்ராப்தி -என்கிற பகவத் பிராப்தி பலிக்கும் அளவும் பர்யாயேண ஸ்வயமேவ அனுவர்த்தித்து விடும் என்கிறார் –
தன்னை இட்டுப் பார்த்தால் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகாகவும்
அவனை இட்டுப் பார்த்தால் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாகவும் நினைக்கை
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் ப்ராப்தம் இறே –

——————

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது-

நிவர்த்ய ஞானம் இத்யாதி -இந்த பயா பயங்களினுடைய சரம அவதியான ஹேதுக்களாவது
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி
நிவர்த்யமான அவித்யாதி ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய ஞானமும் –
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் -என்னும்படி
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்கிற தந் நிவர்த்தகத்தினுடைய ஞான சக்த்யாதி கல்யாண குண யாதாத்ம்ய ஞானமும் -என்றதாய்த்து –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –7–ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் –சூர்ணிகை–321–365—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –

இனி சிஷ்யன் -என்று தொடங்கி -கீழே ஆச்சார்ய சோதனத்தையும் -மந்த்ர சாதனத்தையும் பண்ணி –
மேல் ப்ரஸ்துதமான சிஷ்ய லக்ஷணத்தையும் சோதிக்கிறார் -சிஷ்யன் என்பது இத்யாதி –
ஸிஷ்யன் என்பது சாத்யாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யாதி புருஷார்த்தங்களில் அத்யந்த நிவ்ருத்தியும்
உத்தம புருஷார்த்த ரூபமான பலத்திலும் தத் சாதனத்திலும் யுண்டான ஸ்ரோதும் இச்சையும்
அன்றியே
ஸா வித்யா என்கிற வித்யார்த்தியான இவனுக்கு பலம் ஞானமாகையாலே
தத் சாதன பூதனான ஆச்சார்யன் பக்கலிலே அனுவர்த்தனமும் என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
குரு ஸூஸ்ரூஷயா வித்யா புஷ்கலேந தநேந வா -அதவா வித்யயா வித்யா சதுர்த்தா நோப லப்யதே -என்கிற
ஸ்லோகத்தில் வித்யை யாகிற பலத்துக்கு ஸாதனமாகச் சொன்ன சாதன த்ரயத்திலும்
ப்ரதமோபாத்தமான சாதனமான ஸூஸ்ரூஷை என்னவுமாம்

இந்த குரு ஸூஷ்ரூஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச் சென்ற
ப்ராஹ்மண புத்ரனைத் தன்னுடைய பஸூ பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய
ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து
அப்பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக் கன்று உண்ணுகிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகையாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து
அப்பச்சிலைகளும் தீய்ந்த வாறே எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க அவ்விடத்திலும் கன்று உண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

ஆக -இப்பல சாதன ஸூஸ்ரூஷையும் த்யாஜ்யமான ஸம்ஸார வெக்காயத்தினால் யுண்டான ஆர்த்தியும்
உபாதேய தமமான பகவத் குண அனுபவத்தில் ஆதரமும்
ஆச்சார்யன் பகவத் பாகவத வைபவங்களைப் பரக்க உபபாதியா நின்றால்
ப்ராவஷ்யாமி அநஸூயவே-என்னும்படியான அநஸூய அதிகாரமும் உடையவனை -என்கிறார் –

———–

சூரணை -322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

இப்படி யுக்த லக்ஷணோ பேதனான இந்த சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் அனுசந்தான க்ரமத்தை விதிக்கிறார் -மந்த்ரமும் தேவதையும் -இத்யாதியாலே -அதாவது
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி குரு ரேவ பராயணம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிகம் ஸர்வம் ஸ ஸாஷ்டா ஷரதோ குரு இத்யேவம் யே ந மன்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி -என்றும் சொல்லுகையாலே –
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர-என்கிறபடியே ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரமும்
அம்மந்திரத்துக்கு உள்ளீடான பரதேவதையும்
அந்தப் பர தேவதையுடைய நிர்ஹேதுக கிருபா லப்யமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்ய ரூப பலமும் –
அப்பல அநு பந்திகளாய் வரும் அவித்யா நிவ்ருத்தி முதலாக -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் -அர்ச்சிராதி கதி -ஸாலோக்யாதிகள் -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவாதிகள் -என்கிற இவையும் –
இப்புருஷார்த்த ப்ரதமான சாதனமும் -இன்னமும் –
அன்னவான் அந்நாதோ பவதி மஹான் பவதி ப்ரஜயா பஸூபி ப்ரஹ்ம வர்ச்ச ஸேந மஹான் கீர்த்தயா -என்றும்
தன் நம இது யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா -என்றும்
நின்னையே தான் வேண்டி -நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் ப்ரஸாத லப்தமாய் வரும் ஐஹிக போகம் முதலான அனுக்தமான அகிலமும் தன்னுடைய ஆச்சார்யனே என்று அனுசந்தித்து இருக்கக் கடவன் என்கிறார் –
இவை எல்லாம் ஆச்சார்யனே என்று விதிக்கிறது -இவனுக்கு த்யாஜ்ய உபாதேய விபாக ஞானம் முதலாக நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண மோக்ஷ பர்யந்தமாக
அவ்வாச்சார்ய ப்ரஸாத ஏக லப்தமாய்க் கொண்டு வருகையாலே -என்கை –

—————

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

இதுவே பரமார்த்த உபதேஸம் என்னும் இடத்தை த்ருடீ கரிக்கைக்காக பரமாச்சார்யரான ஆளவந்தாரும்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி ஸர்வம் -என்று அருளிச் செய்தார் என்று ஆப்த வசனத்தையும் எடுக்கிறார் –

—————–

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

மேல் -இதுக்கு அடி உபகார ஸ்ம்ருதி என்றது -இப்படி ஆச்சார்யனே இவை எல்லாமாக இவன் அனுசந்திக்க
வேண்டுகைக்கு அடி அவன் பண்ணின உபகார பரம்பரைகளையே பலகாலும் ஸ்மரிக்கையாலே என்கிறது –

————

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –

இந்த உபகாரத்தை ஸ்மரிக்கைக்குத் தான் பிரதம ஹேது என் என்னில் ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞதை-அதாவது –
ஆச்சார்யன் தன் பக்கல் பண்ணின உபகாரங்களைத் தன் வாக்காலே பலகாலும் சொல்லுகையாலே என்றபடி –
க்ருதஜ்ஜை என்னா நிற்க வாக்காலே சொல்லுகிறபடியை காட்டுகிற படி எங்கனே என்ன
மனஸ் பூர்வகமாக வாக்குச் சொல்ல வேண்டும் ப்ராதான்யத்தை இட்டு என்று அருளிச் செய்வர் –
இனி முடிந்த நிலம் ஈஸ்வரன் பாக்கள் க்ருதஜ்ஞதை என்கிறார் –

—————–

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

ஆக -ஆச்சார்ய சோதனமும் -மந்த்ர சோதனமும் -ஸிஷ்ய சோதனமும் -பண்ணி
அந்த ஸிஷ்ய ஆச்சர்யர்களுக்கு அந்யோன்யம் உண்டாக்க கடவ பரிமாற்றத்தை மேல்
ஸிஷ்யனும் ஆச்சார்யனும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

————-

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

அந்த ஸிஷ்யனும் ஆச்சார்யனும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டும் நடத்தும் இடத்தில் -ஸிஷ்யன் தான் -இத்யாதி –
ஸச் ஸிஷ்யனான தான் -ஆச்சார்யாய ப்ரியந்தம் ஆஹ்ருத்ய -என்கையாலே அவ்வாச்சார்ய முகோல் லாஸமே பரம புருஷார்த்தம் என்று
தத் அநுரூபமாக கிஞ்சித் காராதிகளாலே ஸர்வ பிரகாரத்தாலும் அவனுடைய
பிரியத்தையே ஆதரித்துக் கொண்டு போரக் கடவன்-

ஈஸ்வரனைக் கொண்டு -இத்யாதி –
இனி அவ் வாச்சார்யனுடைய ப்ரக்ருதி வாஸனையாலே வரும் அனுஷ்டானங்கள் உண்டானால்
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்-என்கையாலே தான் ரஹஸ்யமாகப் போதித்தல் –
ஆச்சார்ய சமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை இடுவித்து போதிப்பித்தல் செய்தாலும் அவன் மீளா விடில்
இவ் வடிகளுக்கு இந் நினைவை பூர்வ அனுஷ்டானத்தை அனுவர்த்திக்கும் படி -ஈஸ்வரனைப் பிரார்த்தித்து -ஹிதத்தை நடத்துதல் –
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே கீழையூரிலே தேவதாஸி பக்கலிலே ஸக்தராய்
சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க விஷண்ணராய்
பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும் இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்ப்பந்திக்க –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு -வந்து ஸ்ரீ பீடத்தின் கீழே தெண்டனாய் விழுந்து இப்படி இவ்வடிகளுக்கு அமுது படி த்ரோஹ பர்யந்தமாக
ஆத்ம நாஸம் பிறக்கும் அளவில் தேவரீர் ரக்ஷித்து அருள வேணும் என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக
உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே அப்போதே அவர்கள் நினைவு மாறி -என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய்
இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர -அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து
வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாய்த்து இறே

ஆச்சார்யன் இத்யாதி -இனி ஆச்சார்யன் இந்த ப்ரிய ஹிதங்களை ஸிஷ்யனுக்கு மாறாடி நடத்துகையாவது
தானே ஸாஸ்த்ர யுக்தமாய் வரும் விதி நிஷேத ரூபமான ஹிதத்திலே இவனைப் ப்ரவர்த்திப்பித்து
இந்த ஸிஷ்யனுக்கு ஐஹிக போக ரூபமான ப்ரியத்தை எம்பெருமானைக் கொண்டு நடத்தக் கடவன் என்கிறார் –
அதாவது
திவ்ய தேச வாஸ ஸேவா விரோதங்கள் பிறக்கும்படியான த்ருஷ்ட சங்கோசத்தில் அத்தை எம்பெருமான் பக்கலிலே
தான் ப்ரவர்த்தித் தாகிலும் இவன் உக்கத்தை உண்டாக்குகை –
இது தன்னை ஆழ்வான் விஷயமாக உடையவர் பெரிய பெருமாள் பக்கலிலே பிரார்த்தித்து உண்டாக்கினார் இறே –

—————–

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

ஆனால் இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் இருவரும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டையும்
இப்படி நியமேன நடத்திக் கொண்டு போரக் கடவர்களோ என்னில் –
ஒருவர் ஒருவருக்கு இவற்றில் ஒன்றிலே ஊன்றி நிற்கை ஸ்வரூபமாகையாலே
ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய உகப்பிலே நிலை நின்று போரும் என்றும்
ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய ஸ்வரூப உஜ்ஜீவனத்திலே நிலை நின்று போரும் என்றும்
அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

ஆகையால் இத்யாதி -இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய ப்ரிய ஏக பரனாய் வர்த்திக்கையாலே இவன்
அந்த ஆச்சார்யனுடைய உகப்புக்கே விஷயமாகை ஒழிய சீற்றத்துக்கு விஷயமாகைக்கு அவசரம் இல்லை என்று
அவன் நிக்ரஹம் இவனுக்கு உபாதேயம் என்கைக்காக
அத்தை ப்ரசம்சிக்கிறார் –

——————

சூரணை -330-

நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் போது -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய யாத்ருச்சிகமாய் வரும் நிக்ரஹத்துக்கு இந்த ஸிஷ்யன் விஷயமாம் போது
ஸ்வ ப்ரயோஜன அர்த்தம் இன்றிக்கே ஸ்வரூப உஜ்ஜீவன அர்த்தமாக ஸிஷ்யனை நியமித்து நல் வழி போக்குகையும்
அந்த நியமனத்தில் சிஷ்யன் வர்த்திக்கையும் இருவருக்கும் ஹிதமாய் இருக்கையாலே இந்த நிக்ரஹம் அங்கீ கார்யம் என்கிறார் –
அல்லது க்ரோதம் த்யாஜ்யம் என்று நினைத்து ஈஸ்வரன் கை யடைப்பாக்கின விஷயத்தை நியமியாதே நெகிழ்க்கை அநபிமதம் இறே

————-

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-

ஆனால் இந்த நிக்ரஹம் இருவருக்கும் உபாதேயமாகில் இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுக்கு ஸதா நிக்ரஹ பாத்ரமாம் படி வர்த்திக்கக் கடவனோ என்னில்
ஸிஷ்யனுக்கு இத்யாதி -அது ப்ராப்தம் அல்ல -இந்த ஸிஷ்யனுக்கு நிக்ரஹ ஹேதுக்களில் நிரதனாய்ப் போருமது த்யாஜ்யம் –

——————

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

இங்கனம் நிரதன் அன்றிக்கே இருக்கச் செய்தே அவ்வாச்சார்யன் யாதிருச்சிகமாக நியமித்தானாகில் -நிக்ரஹம் -இத்யாதி –
இந்த ஆச்சார்யனுடைய நிக்ரஹம் தான் –
ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி
ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும் –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரானே -என்றும் சொல்லுகிற படியே
சேதனனுக்கு மஹா உபகாரகமான நியமனம் போலே
ப்ராப்யமான பலத்திலே அன்வயித்து விடும் என்கிறார் –
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோஸ்துதே தேவ வராப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் பூத சரண்ய சங்கே -என்று
பீஷ்மரும்
பகவானுடைய நிக்ரஹ ரூபத்தை தமக்குப் ப்ராப்யமாகவே அனுசந்தித்தார் இறே –
அன்றிக்கே –
இன்று -யதா ஞானம் பிறந்தவனுக்கும் பூர்வ அவஸ்தையில் ஸம்ஸாரத்தால் வந்த பகவன் நிக்ரஹம் வித்யா பாரங்கதனான ஸிஷ்யனுக்கு
உபாத்யாயனுடைய நியமனம் உபகார ஸ்ம்ருதி பண்ணும்படி உத்தேச்யம் ஆனால் போலே
ப்ராப்ய அந்தர் கதம் ஆகிறவோ பாதி ஆச்சார்ய நிக்ரஹமும் என்றுமாம் –

இவ் வர்த்தத்தைக் கூரத்தாழ்வானும் அருளிச் செய்தார்-எங்கனே என்னில் -திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத்
பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்ய -பெருமாளும் திரு முகம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் -என்ன
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்தேற எழுந்து அருளி
ஆழ்வானை அருளப்பாடிட்டு -பல வேளையிலே நீ இப்படிச் செய்தாயே என்ன –
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று
தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால் ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் ப்ரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே –

————

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய -இத்யாதி -ஆக ஸிஷ்யனுடைய ஹிதத்திலே ஊன்றிப் போருகிற ஆச்சார்யன்
அந்த ஸிஷ்யனுடைய ஹித தமமாம் படி ஸ்வரூபத்தையே நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்றும்
ஆச்சார்ய ப்ரிய ஏக பரனான ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய திரு மேனியைப் பேணும் இடத்தில்
மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ -என்றும்
ஸ்வயம் தேஹ அநு கூலாநி தர்மார்த்தோ பதிகாநி ச குர்யாத ப்ரதி ஷித்தாநி குரோ கர்மாண்ய சேஷத -என்றும் சொல்லுகிற படியே
நிரந்தரமாக நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்று உக்த அர்த்தத்தை விஸதீ கரிக்கிறார்

————-

சூரணை -334-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –

இனி இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸ்வரூப ரக்ஷணத்துக்கும் -ஆச்சார்ய விக்ரஹ ரக்ஷணத்துக்கும் பலம் எது என்ன -இரண்டும் இருவருக்கும் இத்யாதி-
ஸிஷ்யன் ஸ்வரூபத்தைப் பேணியே ஆச்சார்யனுடைய ஸ்வரூப ஸித்தியாய்
ஆச்சார்யன் விக்ரஹத்தைப் பேணியே சிஷ்யனுடைய ஸ்வரூப ஸித்தியுமாய் இருக்கையாலே
அவை இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஸரீராணி மநீஷிணாம்-யதோ நாராயண ஸாஷாத் ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித -என்கையாலே
ஸிஷ்யனுக்கு ஜங்கம ஸ்ரீ விமான ரக்ஷணமும்
ஆச்சார்யனுக்கு ஈஸ்வரன் கையடைப்பாக்கினவனை நல் வழி போக்குகையும் அவனுக்கு உகப்பாகையாலே
பகவத் கைங்கர்யமாய் இருக்கும் என்கிறார் –

————

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் இத்யாதி -இந்த ஆச்சார்யனும் ஸிஷ்யனும் ஆத்ம ரக்ஷணத்திலும் தேஹ ரக்ஷணத்திலும் கீழ் யுக்தமான
க்ரமத்தில் அன்றிக்கே இவற்றை அந்யோன்யம் மாறாடி அனுஷ்ட்டித்தால் வருவது என் என்ன –
இருவருக்கும் ஸ்வரூப ஹானியே வரும் என்று தொடங்கி யுக்தமான ஸிஷ்ய ஆச்சார்ய லக்ஷணத்தை ஸ பிரகாரமாக உப பாதிக்கிறார்
மனஸ் ஸூக்குத் தீமையாவது -என்னும் அளவாக –

இதில் ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -தான் ஸிஷ்யன் பக்கலிலே அர்த்தித்தே யாகிலும் ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணிக் கொள்ளுகை ஸ்வரூப ஹானி என்றபடி –

சிஷ்யனுக்கு ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி -இத்யாதியில் படியே
ஸ்வ ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்ய அதீனம் என்று இராதே ஸ்வ அதீனம் என்று இருக்கை -ஸ்வரூப ஹானி -என்றபடி –

அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது தான் -ஸிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி
அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும் –

ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் தான் பலகாலும் பிரவர்த்தித்துக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம் –

——————-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் யதா க்ரமம் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும் இடத்தில் அவற்றுக்கு வரும் அந்தராயங்களை அருளிச் செய்கிறார் –
ஆச்சார்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் -இத்யாதியாலே –
ஆச்சார்யன் தன் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் மண்ணுக்கும் சோற்றுக்கும் வாசி அறியாதாரைப் போலே
ஒரு த்யாஜ்ய உபா தேயம் அறியாத இவனை பகவான் நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆக்கினான் என்று இராதே -இவ்வவஸ்தா பன்னன் ஆக்கினேன் நானே என்கிற அஹங்காரம் விரோதி
ஸரீரம் அர்த்தம் இத்யாதியில் படியை யுடைய ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹ ரக்ஷணம் பண்ணும் இடத்தில் நான் என்னுடைய த்ரவ்யங்களைக் கொண்டு என் கரணங்களாலே இறே
இது நெடும் காலம் செய்தேன் என்கிற மமகாராம் விரோதி –

——————

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

இவ்வஹம் மமதைகள் இன்றிக்கே இவர்கள் பரிமாறும் படி தான் எங்கனே என்ன -அத்தைச் சொல்லுகிறது
ஆச்சார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் -தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது -ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிற
பிராமாணிகனான ஸச்சிஷ்யன் வஸ்துவைக் கொண்டு
பண்ணக் கடவன் என்றபடி –
ஸிஷ்யன் ஸ்வ தேஹ ரக்ஷணம் ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது
த்ரய ஏவாதநா ராஜன் -என்று தொடங்கி
யஸ்யைத தஸ்ய தத்தநம் -என்கிற நியாயத்தாலே
ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணக் கடவன் என்கிறது –

—————

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆச்சார்யன் சிஷ்யன் வஸ்துவை இத்யாதி -கீழே தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு என்ற இடத்தில்
ஸிஷ்யன் வஸ்துவே ஆச்சார்யன் வஸ்துவாக நீர்ணீதமாய்-ஆச்சார்யன் ஸிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவன் அல்லன் என்கிறது –
ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்து உண்டாகில் அத்தை அங்கீ கரிக்கக் கடவன் அல்லன் என்கிறது அத்தனை –
ஸிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவன் அல்லன் – என்கிறதும் தனக்கு மமதா விஷயமாக ப்ரதிபன்னமான வஸ்து உண்டாகில்
அவை அங்குற்றைக்கு அநர்ஹம் என்கைக்காகச் சொல்லுகிறது –

இவ்வர்த்தம் தன்னை நஞ்சீயர் விஷயமாக பட்டர் சோதித்து அருளினார் இறே -அதாவது
பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்து என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தனம் ஒழிய இல்லை என்ன –
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர் களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போகவிட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்தில் தனம் இருக்கிறது – அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திருமாளிகையில் சிலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையிலே வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர-அத்தைக் கண்டருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்துக் கழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள்-என்று அருளிச் செய்தார் இறே –

—————-

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

கொள்ளில் மிடியனாம் இத்யாதி -இப்படி ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான தனத்தை ஆசா லேசத்தாலே
ஆச்சார்யன் அங்கீ கரிக்கப் பார்த்தானாகில் அடங்கெழில் ஸம்பத்து -இத்யாதியில் படியே
அவாப்த ஸமஸ்த காமனை அண்டை கொண்டு இருக்கிற அவ்வாச்சார்யனுக்கு மிடி வந்து மேலிட்டதாம்
அடியிலே ஆச்சார்ய விஷயத்திலே அகில ஸமர்ப்பணத்தைப் பண்ணின ஸிஷ்யன் அத்தை மறந்து ஸ்வ அபிமான அந்தர் கதமான தொரு
த்ரவ்யம் யுண்டாக நினைத்து அத்தை அவனுக்குக் கொடுக்கில்
ஆதி மத்ய அவசாநம் க்ருத்ரிம வ்யாபாரனாய் விடுகையாலே பெரு நிலைக் கள்ளனாம் –

———————–

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

இப்படிக் கொடுத்தோம் கொண்டோம் என்கிற நினைவால் வருகிற கொள் கொடை யுண்டாகில்
ஸிஷ்ய ஆச்சார்ய ரூப சேஷ சேஷி பாவ சம்பந்தம் குலைந்தே போம் என்கிறார் –
ஆசாஸநோ ந வை ப்ருத்ய ஸ்வாமிந் நாத்மந ஆசிக்ஷ ந ஸ்வாமி ப்ருத்ய ஸ்வாம்யம் இச்சன் யோராதி வாஸிஷ -என்றான் இறே ஸ்ரீ ஸூக மகரிஷியும் –

————-

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

இவன் மிடியன் ஆகையாலே -இத்யாதி -இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் அகிஞ்சன ஸ்வரூபனான ஸிஷ்யன் அந்த ஸ்வரூப ஞானத்தாலே கொடான் என்றும் –
ஞானாம் ருதேந த்ருபதஸ்ய க்ருதக்ருத் யஸ்ய யோகிந நை வாஸ்தி கிஞ்சித் கர்தவ்ய மஸ்தி சேந்ந ஸ தத்வ வித் -என்கையாலே
பரிபூர்ண ஞான அம்ருத திருப்தனாய்க் கொண்டு ஆச்சார்யன் பூர்ணனாய் இருக்கையாலே கொள்ளான் என்றும் –
இப்படிக் கொள் கொடைகளுக்கு ஸ்வரூபத இருவருக்கும் யோக்யதை இல்லாமையாலே இருவருடையவும் ஸ்வரூபமும்
உஜ்ஜீவித்தது என்னும் இடத்தை -அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும்
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும் அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

ஆனால் ஸிஷ்யன் இத்யாதி -இப்படி இருவருக்கும் ஸ்வரூபத கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லாமையாலே -சேஷ பூதனான ஸிஷ்யனுக்கு
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கையாலே கிஞ்சித் கரித்தே ஸ்வரூப ஸித்தி யாகில்
இவன் சேஷியான ஆச்சார்யனுக்குப் பண்ணும் கிஞ்சித்காரம் ஒன்றும் இல்லையோ என்னில்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாயும் -அந்த ஆச்சார்யன் நினைவாலே இவன் பண்ணும் கிஞ்சித் காரங்கள் உண்டு என்கிறார் –

—————

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

மேல் -அதாவது -இத்யாதி -இந்த ஸிஷ்யன் பண்ணும் ப்ரவ்ருத்தி ரூபமான கிஞ்சித் காரங்களை பிரதமத்திலே சொல்லுகிறது –
அந்த கிஞ்சித் காரமாவது -மெய்ம்மையை மிக யுணர்ந்து -என்கிறபடியே ஸ்வரூப யாதாம்ய ஞானத்தில் நிரந்தரமான உணர்த்தியிலும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயத்தில் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்கிறபடியே நாள் தோறும் உண்டான அத்யவசாயத்தாலும்
அவ்வுபாய லப்யமான உபேயத்தில் ஒழிவில் காலத்தில் படியே யுண்டாம் அபி நிவேசத்திலும்
அந வரதோத் யுக்தனாகையும்
இவற்றுக்கு அனுரூபமான ஸதாசாரத்திலே ப்ரவ்ருத்தனாகையும்
இவை ப்ரவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்கள் –

———————-

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

இனி ஆச்சார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்குத் தவிர வேண்டுவது -என்று தொடங்கி
இவனுடைய நிவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்களை சொல்லுகிறது மேல் –

————

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

பகவத் த்ரவ்ய அபஹாரமாவது -என்று தொடங்கி யுக்தமான நிவ்ருத்தி ரூப நிவ்ருத்தி விசேஷங்களை விவரிக்கிறார் -அதாவது
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும்
சோரேண ஆத்ம அபஹாரிணா -என்றும் சொல்லுகிற
ஸ்வரூப ஹானியான ஸ்வ ஸ்வா தந்தர்யமும்
ப்ரஹ்மாதி மாதா பிதா பர்யந்தமான அந்நிய சேஷத்வமும்

இனித்தான் ராம தனத்தை ஸ்வாதீனமாக்க நினைத்த ராவணனைப் போலே இறே ஸ்வா தந்தர்யம்

இனி பகவத் போஜன ரூபமான அவனுடைய ரக்ஷகத்வ க்ரமத்தை விலக்குகை யாவது
ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்குப் புறம்பே ஆளிடனாலும்
ந ஹி பாலந ஸாமர்த்யம் -என்று தொடங்கி
சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -என்கையாலே
அவனுக்கே அசாதாரண விருத்தியாய்
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதியில் படியே ரக்ஷிக்குமவனுடைய
சர்வ பிரகார ரக்ஷகத்வ க்ரமத்தைத் தன் மேலும் பிறர் மேலும் ஏறிட்டுக் கொள்ளுகை -அதாவது –
அவ ரக்ஷணே -என்கிற தாது ஷயம் பிறக்கும் படி
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்ன
ந நமேயந்து கஸ்சந -என்று கலக்குகை இறே
உண்பது கொண்டார் உயிர் கொண்டார் -என்று லோக வார்த்தையும் யுண்டு இறே –

————

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –என்றது இந்த ரக்ஷகத்வம் தான் இதர ஷமம் அல்ல என்னும் இடத்தை
ப்ரபந்ந பவித்ராணம் என்கிற பிரபந்த முகத்தாலே பரக்க ப்ரதிபாதித்தோம் என்கிறார்-

குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தை படி அனுஷ்டியாது ஒழிகையும்
அநதி காரிகளுக்கு உபதேஸிக்கையும்
மந்த்ர பரிபவமாவது
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும்
தத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும்-

குரு பரிபவமாவது -இத்யாதி -ஒரு ஆச்சார்யன் பக்கலிலே அர்த்த விசேஷங்களைக் கேட்டு வைத்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் தன் பக்கல் இல்லா விடில்
அவ்வனுஷ்டானம் தன்னையே அவ்வாச்சார்யனுக்கும் அபிமதமாக லௌகிகர் அத்யவசித்து பரிபவிக்கையாலும்
நா சாத்ரா ஸாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத்-என்னா நிற்க -ஆஸ்திகர் அல்லாத அதிகாரிகளுக்கு உபதேசித்தால்
அதுவும் அவனுக்கே பரிபவமாய்த் தலைக் கட்டுகையாலும் –
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
அநதிகாரிகளுக்கு உபதேஸிக்கையும்
குரு பரிபவம் ஆவது என்கிறார் –

மந்த்ர பரிபவம் இத்யாதி -உபதிஷ்டமான மந்த்ரத்தைத் தனக்கு வியாக்யானம் பண்ணின ஆச்சார்யன் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்குச் சேரும்படி அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை விஸ்மரித்து-தத் விபரீதங்களாய்த் தனக்கு ப்ரதி பன்னங்களான அர்த்தாந்தரங்களை அனுசந்தித்தால்
அது அம்மந்திரத்துக்கு யதார்த்தம் அல்லாமையாலே இதுவும் மந்த்ரத்துக்குப் பரிபவம் இறே என்று
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும் –
மந்த்ர பரிபவம் -என்கிறார் –

தேவதா பரிபவமாவது -இத்யாதி -மந்த்ர ப்ரதிபாத்ய தேவதா விஷயத்தில் பரிபவமாவது –
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ -என்றும் சொல்லா நிற்க –
உள்ளம் உரை செயல் -என்கிற கரண த்ரயத்தையும் தன் ஸ்வரூபத்துக்குச் சேராத ஸப்தாதி விஷயங்களிலும்
தேவதாந்த்ர விஷயங்களிலும்
மேட்டு நீர் பள்ளத்திலே விழுமா போலே விநியோகித்துப் போருகையும்
ஸம் ஸேவ்ய ஏகோ ஹரிர் இந்த்ரியாணாம் ஸேவாந்யதேவ வ்யபிசார ஏவ அந்யோபி ஸேவ்யோ யதி தேவ சாம்யாத் கோ வா ஹ்ருஷீ கேஸ வதாபிதாந
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணித் வந்த்வ சமர்ச்சய-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப அநு ரூபமான பகவத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும் என்கிறார் –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்னக் கடவது இறே –

————

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

ஆக –
ஸ்வரூபமான ஞானத்திலும் –
உபாயமான வ்யவசாயத்தாலும் –
புருஷார்த்தமான ப்ரேம ஸமாசாரங்களிலும் உண்டான ப்ரவ்ருத்தி ரூப கிஞ்சித் காரமும் –
ஸ்வரூபத்தில் பகவத் த்ரவ்ய அபஹார நிவ்ருத்தியும் –
உபாயத்தில் பகவத் போஜன நிரோத நிவ்ருத்தியும்
உபேயமாய்ப் பலித்த குரு மந்த்ர தேவதா பரிபவ நிவ்ருத்தியும்
இப்படி -ப்ரவ்ருத்தி ரூபமாயும் -நிவ்ருத்தி ரூபமாயும் உள்ள
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களில்
இவனுடைய இந்த அனுஷ்டான விசேஷங்களிலே ஆதாராதிசயத்தாலே ஆச்சார்யன் உகந்து அங்கீ கரிக்கும் கிஞ்சித் காரங்களை அருளிச் செய்து

இனி

இங்கு இருந்த நாள் ஸிஷ்யன் நினைவாலே அவ்வாச்சார்ய விசேஷத்தில் உண்டாம் உபகார ஸ்ம்ருதியை அருளிச் செய்கிறார் –
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் -என்று தொடங்கி –

அந்த உபகார ஸ்ம்ருதி யாவது
என்னுடைய அத்யந்தம் ஹேயமான மனஸ்ஸூ தன்னையே திருத்தி விடுகை அன்றிக்கே
அத்தை ஸ வாஸனமாகப் போக்கி அங்கு உற்றைக்கே அந்தரங்கமான மனஸ்ஸை அடியேனுக்கு என்று
கருவூலத்திலே எடுத்து உபகரித்தாய் என்று ஆச்சார்ய விஷயத்திலே அந வரதம் அனுசந்தித்து இருக்க வேணும் -என்கிறார் –

————

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –

ஆக இவ்வளவும் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய அந்யோன்யம் யுண்டான பரிமாற்றத்தை அருளிச் செய்து –
தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்திலே ப்ரஸ்துதமான தீமையைப் பரக்க அருளிச் செய்கிறார் -மனஸ்ஸுக்குத் தீமையாவது என்று தொடங்கி -அதாவது -ஸ்வ குணத்தையும் இத்யாதி –
ஆத்ம ப்ரஸம்ஸா மரணம் பர நிந்தா ச தத் சமம் -என்றும்
நாஸ் ஸீலம் கீர்த்தயேத் -என்றும் சொல்லா நிற்க
ஸ்வ விஷயத்தில் ஆத்ம குணங்களுக்கு அவதி இல்லையாக நினைத்தும்
பாகவத விஷயத்தில் இதர ஸஜாதீயராகக் கொண்டு தன்னோடு ஓக்க அஸநவஸநாதி தத் பரராய்த் திரியா நின்றார்களே என்று
இத்யாதிகளை அவர்களுக்குத் தோஷமாக நினைக்கையும் -என்கிறார் –

இவ்விடத்தில் ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி மேலே சொல்லப் புகுகிற
நிர்ஹேதுக பிரகரணம்
பய ஹேதுக்களாய் யுள்ள தண்ட தரத்வாதி ரூப பகவத் குணங்கள் தோஷம் என்று ப்ரசங்கிக்கையாலே
இங்கே பிடித்துக் கர்ப்பித்துக் கொண்டு போரு கிறது என்று அருளிச் செய்வர் –

—————

சூரணை -351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —

இனி தோஷம் நினையாது ஒழிகிறது -இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமை என்று பகவத் பாகவத தோஷங்களை இவன் நினையாது ஒழிகிறது
தன் பக்கலிலே சில சம தம ஆத்ம குணங்களும்
குரு மந்த்ர தேவதா விஷயங்களில் ப்ரேமம் யுண்டாய் இருக்க
அபராத ஸஹஸ்ர பாஜநம் -என்று தன்னை அத்யந்த தோஷ துஷ்டனாக நினைக்கிறாப் போலே அவர்கள் பக்கலிலும் சில தோஷம் யுண்டாய் இருக்க
குண அம்ஸத்தையே நினைக்க வேண்டியோ என்னில் -அங்கன் அன்று –
அவர்கள் பக்கல் முதல் தன்னிலே அத்தோஷங்கள் இல்லாமையாலே தோஷம் நினையாது ஒழிகிறது என்கிறார் –

—————-

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பர தோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

தோஷம் உண்டு  என்று நினைக்கில் -இத்யாதி -யுக்த பிரகாரம் அன்றிக்கே அவர்கள் பக்கல் தோஷ அம்சங்கள் இன்றிக்கே இருக்கிறதோ என்று நினைக்கில்
அது பர தோஷம் அன்று –
தனக்குப் பரரான பகவத் பாகவத விஷயங்களில் உண்டான தோஷம் அன்று –
தான் ஈஸ்வரனுடைய தண்ட தரத்வ ஹேதுக்களான அபராத பூயிஷ்டனாக இருக்கையாலும்
தனக்குத் தேஹ யாத்ரா தோஷங்கள் தவிராமையைக் காண்கை யாலே அவற்றை அத்ததீயருக்கும் யுண்டாக நினைக்கையாலும்
ஆகையால் ஸ்வ த்ருஷ்டியில் திமிர தோஷத்தாலே தீப சந்திரன்கள் ப்ரத்யேகம் இரண்டாய்த் தோன்றுகிறாப் போலே
கேவலம் ஸ்வ தோஷத்தாலே தோற்றும் இத்தனை என்கிறார் –

—————-

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –இத்யாதி -தோஷம் யுண்டாகத் தோற்றுகிறது பரர் பக்கலிலேயாய் இருக்க –
அது இவன் பக்கலிலே தோஷத்தால் யானபடி என் என்னில்
யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் அபுண்யம் அந்யத் நான்யத்தயோர் பவதி லக்ஷண மத்ர ஜாது
தூரத்தாயிதம் தவ ஹி யத் கில ராஸ கோஷ்ட்யாம் தத் கீர்த்தநம் பரம பாவந மாம நந்தி -என்றும்
தேஷாம் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -என்றும் சொல்லுகையாலே
அவர்களுடைய வைபவ அதிசயத்தாலே அவர்களுக்குப் ப்ரத்யவாய ப்ரஸங்கம் இல்லை என்னாதே
ஞான மாந்த்யத்தாலே தன்னுடைய தோஷத்தை அவர்கள் மேலே ஆரோபித்து இருக்கையாலும்
அவர்களை இத்தோஷ துஷ்டர்களாக நினைத்தால் மாதா பிதாக்கள் அளவில் பண்ணும் தூஷணம் தன் பக்கலிலே வந்து
பர்யவசிக்குமா போலே அவர்களோடுள்ள பந்தத்தாலும் கேவலம் ஸ்வ தோஷமேயாய் விடும் -என்கிறார் –

————-

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

ஸ்வ தோஷம் இல்லை யாகில் -இத்யாதி -இங்கனே ஸ்வ தோஷம் என்று அவர்கள் பக்கல் தோஷம் இல்லாமையேயாக நெஞ்சில் பட்டதாகில்
அவர்கள் பக்கல் குண ஞானம் ஒன்றுமே அந வரதம் நடக்க வேணும் -என்கிறார் –

————-

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

நடந்தது இல்லை யாகில் இத்யாதி -இப்படி அவர்கள் பக்கல் குண ஞானமே நடவாதே சில தோஷம் இல்லையோ என்று நினைக்கில்
அவர்கள் பக்கல் தோஷ ஞானமே இவனுக்கு ஸ்வரூபக நாஸகம் ஆகையாலே தோஷமாம் -என்கிறார் –

————–

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-

இது தனக்கு இத்யாதி -முதலிலே இந்த பகவத் பாகவத தோஷ அனுசந்தானத்தில் இவ்வதிகாரிக்கு அவசரம் இல்லை
அமர்யாதா -ஷூத்ர-என்று தொடங்கித் தனக்கு அனுசந்தேயமான ஸ்வ தோஷ அனுசந்தானத்துக்கு
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே ஸா ஹானி -என்றும்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும்
சொல்லுகிற பகவத் குண அனுசந்தானத்துக்கும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -என்றும்
தொழுவாரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -என்றும்
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -என்றும் சொல்லுகையாலே
அந்த பாகவத குண அனுசந்தானமே காலம் போரு கையாலே என்கிறார் –
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யாத் பகவத் பிரபாவம் பகவான் ஹி வேத்தி ததா பகவந்தோ பகவத் பிரபாவம் -என்றார் இறே சர்வஞ்ஜை யான ஸ்ரீ பூமிப பிராட்டியும் –

——————-

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்கக் கடவன் –

ஸம்ஸாரிகள் தோஷம் இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமையாவது -பகவத் பாகவத தோஷ க்ரஹண மாத்ரமே அன்றிக்கே
ஸாமான்யரான ஸம்ஸாரிகள் அளவிலே தோஷ தர்சனம் பண்ணுகையும் அதுக்குத் தீமையாகையாலே –
கர்த்து மிஷ்டம நிஷ்டம் வா க ப்ரபுர் விதிநா விநா கர்த்தார மன்ய மாரோப்ய லோக ஸாத்யாதி குர்வதி -என்று
இருக்கக் கடவ இவ்வதிகாரி ப்ராக்ருதல் பக்கல் யுண்டாய்த் தோற்றுகிற தோஷமும்
இகழ்வில் இவ்வனைத்தும் -என்றிராத் தன்னுடைய ஞான மான்யத்தாலே வந்த தோஷம் என்று இருக்கக் கடவன் –

————-

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

அது என் -அஸத் கல்பரான நித்ய ஸம்ஸாரிகள் பக்கல் யுண்டான தோஷத்தை தத் வியாவ்ருத்தனான தன்னது என்று நினைக்கலாமோ என்ன
இங்கனே நினைக்கைக்கு ஹேது பந்த ஞானம் -என்கிறார் –
இங்கு பந்த ஞானம் என்கிறது ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு லீலா ரஸ விஷய பூதராய் -நித்ய முக்தரைப் போலே தாங்களும் ரஸிக்கை அன்றிக்கே
தங்களை ஸ்வரூபம் அழிந்தும் அவனுக்கே அசித்வத் விநியோகப்படும்படியான -அப்ருதக் சித்த சம்பந்த ஞானத்தால் -என்றபடி –

கீழ்ச் சொன்ன பந்த ஞானம் மொய்ம்மாம் பொழிலில் சொல்லுகிற ஞானம் போலே
இந்த பந்த ஞானம் புகழு நல் ஒருவனில் ஞானம் போலே –

———–

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

இறைப்பொழுதும் இத்யாதி –
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -என்றும்
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே -என்றும் அருளிச் செய்கையாலே
ஸிஷிதா ஸ்வரூபனான இவ்வதிகாரியுடைய ஞானத்துக்கு ப்ராக்ருதருடைய தோஷம் விஷயம் அல்லாமையாலே முதலிலே தோற்றாது -என்கிறார் –

———–

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

ஆனால் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -தொடக்கமான வற்றில் ஸம்ஸாரிகள் தோஷம் தோற்றுகைக்கு அடி என் என்ன
அவர்களுக்குத் தோற்றுகிறது நிவர்த்தன அர்த்தமாக என்கிறார் –
இப்படிப்பட்ட ஞாதாக்களுக்கு ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் தோற்றுவது அவர்களை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்காக என்னுதல் –
தாங்கள் அவர்கள் பக்கல் கை வாங்குகைக்காக என்னுதல்
இவை இரண்டு அர்த்தத்தையும்
ஒரு நாயகமாய்
நண்ணாதார்
ஒன்றும் தேவு –இத்யாதிகளில் அருளிச் செய்தார் இறே –

————-

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –

பிராட்டி இத்யாதி -இப்படி ஸம்ஸாரிகள் அளவில் தோஷ தர்சனம் பண்ண ஒண்ணாது என்கிற அளவே அன்று
அந்த ஸம்ஸாரிகள் தான் தன் அளவிலே அபராதங்களைப் பண்ணினாலும் ப்ரபந்ந அநுஷ்டான ப்ரகாசைகையான பிராட்டி -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகள் தன் பக்கல் பண்ணின குற்றங்களை
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கு ஏகாந்தத்தில் உட்பட
ஏக தேசமும் அறிவியாதாப் போலே -தீக்குறளை சென்றோதோம் -என்கிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கிறார்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் க்ரந்தத்திலும் ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்காதல் -திருவடிக்காதல் -அறிவித்ததாக ஒரு பாசுரமும் இல்லை இறே –

————–

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

இப்படி அறிவிக்க ஒண்ணாமைக்கு அடி என் என்ன -அறிவிக்க யுரியவன் -இத்யாதியாலே -சொல்லுகிறது -அதாவது –
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் -இத்யாதிப்படியே பரமபத நிலயனாய் -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் அநந்யார்ஹன் ஆக்குகையிலே
அபேக்ஷை யுண்டானால் சூழ்ந்து தானே அவதரித்து –
ந நமே யந்து கஸ்சந -என்று அவ்வாதாரங்களுக்கு பிரயோஜனம் தோற்றா விடிலும்
கர்ஷக ஹ்ருதயம் போலே காலாந்தரத்தே யாகிலும் பலிப்பித்துக் கொள்கிறோம் என்று அக்குறை தோற்றாதே
ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு இருந்து அங்குள்ள ஸாரஞ்ஞரான நித்ய ஸூரிகள்
அவதார பிரயோஜனத்தை ஆதரித்துக் கேட்டாலும் -அவாக்ய அநாதர-என்று இருக்கிற இருப்பாக அந்நிய பரதை பண்ணி
அவர்களோடும் வாய் திறவாதே மறைக்கும் என்னா நின்றால் பர தந்த்ரனான இவனுக்கு அறிவிக்க ஒண்ணாது என்னும் இடம்
சொல்ல வேண்டா விறே என்கிறது –

—————

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –

குற்றம் செய்தவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படித் தனக்குப் பிறர் செய்யும் குற்றம் பகவத் பாகவத விஷயங்களில் மறந்தும் தோன்ற ஒண்ணாத மாத்ரமே என்று-
அவர்கள் பக்கல் இவ்வதிகாரிக்கு உபகார ஸ்ம்ருதி பர்யந்தமாக நடுவுள்ள குணங்கள் யதாவாக நடக்க வேணும் என்கிறார் – அது எங்கனே என்னில்
ப்ரத்யக்ஷத்தில் ஒருவன் அபஹாரத்தைப் பண்ணினால் -சாந்தி ஸம்ருத்த ம்ருதம் -என்றும்
ந ஷமா சத்ருஸோ பந்து ந க்ரோதோ சத்ருஸோ ரிபு -என்றும் சொல்லுகையாலே
க்ஷமையே கர்த்தவ்யம் என்று அவனோடே எதிர் இடாமல் போருகையும்

இப்படி நாம் பொறுத்து நாம் புழங்கினால் ஈஸ்வரன் இவனை பாகவத அபசாரத்தில் பிழை எழுதி தண்டிக்குமாகில் இவன் சீற்றத்துக்கு விஷயமாவதே என்றும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையும் நடக்க வேணும் –

இவ்விடத்தில் அருளிச் செய்யும் வார்த்தை
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வர் –

இனி சிரிக்கை யாவது -குணஸ்சேத பர ஸம் யோகாத் தோஷஸ் சேத் ருசி மன்வயாத் மத்யஸ் தஸ்ய சிதே சஸ்ய கிம் கார்யம் ஸ்துதி நிந்தயோ -என்று
இவன் சொல்லுகிற வற்றால் ஆத்மா அஸ்ப்ருஷ்டனாய் இருக்க -இவன் யாரைப் பரிபவிக்கிறான் என்று சிரிக்கையும் –

அவன் பக்கல் உகப்பாவது -தன்னைக் கண்டால் சத்ருக்களைக் கண்டால் போலே இருக்கையாலே
ஒருவன் தனக்கு வைர ஸத்ருவானவனை பரிபவித்தால் உகக்குமாப் போலே ஒரு உகப்பும்

உபகார ஸ்ம்ருதியாவது -நமக்கு உண்டான தோஷம் நமக்குத் தெரியாது இறே –
நம்முடைய பிரகிருதி தோஷம் எல்லாம் அறியானேயாகிலும் அதில் நாம் அறியாதனவும் எல்லாம் அறிவித்தானே என்று யுண்டாம் உபகார ஸ்ம்ருதியும்

ஆக இவ்வைந்து ஸ்வ பாவமும் இவ்வதிகாரிக்கு யுண்டாக வேணும் என்கிறாராய்த்து

இனித் தான்
க்நந்தம் ஸபந்தம் பருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந பிரணமேத் யதார்ஹம் ச பாப க்ருத் ப்ரஹ்ம தவாக்நி தக்தோ வத்யஸ் ச தண்ட்யஸ் ச ந ஸாஸ்மதீய -என்று
சாமான்யேன பருஷ பாஷாணா திகளிலே ப்ரவ்ருத்தனாய் இருப்பான் ஒருவனைக் கண்டால் அவனோடே எதிரிடாத மாத்ரம் அன்றிக்கே
தான் தலை சாய்த்து அவனை அனுவர்த்தித்து விடா விடில் இவன் தானே சர்வ பிரகார தண்ட்ய னாகவும் பகவத் வாக்கியம் யுண்டாகையாலும் –
அவ்வளவு அன்றிக்கே
ரூஷா ஷராணி ஸ்ருண் வந்வை ததா பாகவதேரிதான் ப்ரணாம பூர்வகம் ஸாம்யோ யோ வேத வைஷ்ணவவோ ஹி ஸ -என்று
விசேஷஞ்ஞனாய் இருப்பான் ஒரு பாகவதன் செவி பொறாத படின் சிவிட்கென்ற வார்த்தையைச் சொல்லக் கேட்டாலும் –
சேஷியானவன் நம்மை வேண்டினபடி நியமித்துக் கொள்ளுகிறான் என்று நினைத்து அந்தப் பாகவதனை
ப்ரணாம பூர்வகமாக ஷமிப்பித்துக் கொள்ளுமவன் வைஷ்ணவன் என்றும் உண்டாகையாலே
கீழ் ப்ரதிபாதித்த அர்த்தங்கள் இவ்வதிகாரிக்கு அநுஷ்டேயம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்-சூர்ணிகை —308–320–

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

தான் ஹித உபதேஸம் பண்ணும் போது -இத்யாதி –
இங்குத் தான் என்கிறது -கீழில் ப்ரபந்தத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்ட உபாய உபேயங்களிலும்
ததேக ப்ரயோஜனத்வ பர்யந்தமான கைங்கர்யத்திலும்
தத் பூர்வ பாவிகளான ஞான தசை தொடக்கமான பாவ விசேஷங்களிலும்
அத்யந்தம் நிஷ்ணாதனாய் அக்ருத்ய கரணம் தொடங்கி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களான நிஷித்த அனுஷ்டானங்களிலே நிவ்ருத்தனான தான்
ஆச்சார்ய பதத்துக்கு ப்ராப்தனாகையாலே தன்னளவிலே உப சன்னனாய் ஆஸ்ரயிக்கும் ஆத்ம குணோ பேதனான ஸிஷ்யனுக்கு ஹித உபதேசம் பண்ணும் போது ஏவம் விதனான
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
விபரீத பிரதிபத்தி பண்ணி -க்யாதி லாப பூஜா ஸா பேஷனாய் உபதேஸிக்கை
கீழ்ச் சொன்ன நிஷித்தங்களில் காட்டில் மிகவும் க்ரூர நிஷித்தம் என்கிறார் –

————–

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

தன்னை மாறாடி நினைக்கையாவது -இத்யாதி -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரனாய்க் கொண்டு அவனுக்கு சிஷ்யனான தான் தன்னை மாறாடி நினைக்கையாவது –
தஸ்மை ஸ வித்வான் தத்வதோ ப்ரப்ரூயாத் -என்கிறபடியே
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி -என்று தொடங்கி
தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -என்னும் அளவாகவும்
தத் பாவ பாவமா பன்னையாய் பின்பு பிறருக்கு உபதேசித்தாப் போலே
ஸ்வ ஆச்சார்ய அவயவத் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேசியாதே உபதேஸ கர்த்ருத்வ மாத்ரத்தைக் கொண்டு
தன்னை ஆச்சார்யன் என்று நினைக்கை –

இனி ஸிஷ்யனை மாறாடி நினைக்கையாவது -பகவத் ப்ரஸாதத்தாலே நம்முடைய ஆச்சார்யனுக்கு இவனும் ஒரு சிஷ்யன் திருந்தினால் என்று இராதே
தனக்கு சிஷ்யன் என்று இருக்கை –

பலத்தை மாறாடி நினைக்கை யாவது -த்ருஷ்ட பிரயோஜனம் தொடக்கமான பல விசேஷங்களை -சேஷ பூதனான சிஷ்யன் -என்று
அருளிச் செய்கிற யதா க்ரமத்திலே பலிக்கை அன்றிக்கே இப் பலங்கள் யுண்டாக வேண்டும் என்று தான் கணிசித்து உபதேஸிக்கை

ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
தன்னை மாறாடி நினைக்கை யாகிற க்யாதியும்
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற பூஜையும்
பலத்தை மாறாடி நினைக்கை யாகிற லாபமும்
இம் மூன்றையும் குறித்து உபதேஸிக்கை இவ்வதிகாரிக்கு க்ரூர நிஷித்தம் என்றதாயிற்று –

—————

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

இங்கனே யாகில் -இவ்வதிகாரி நினையாது ஒழிய லோகத்திலே இந்நாலு பலமும் பலித்துப் போகிற படி தான் எங்கனே என்று
சோத்யமாக சேஷ பூதனான -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார்
அவ்வாச்சார்யனுக்கு சேஷ பூதனான சிஷ்யன் -நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -என்று நினைத்து
சரீர மர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிறபடியே
ஸகலத்தையும் உபகாரகன் பக்கலிலே உபகரிக்கையாலே த்ருஷ்ட பலம் ஸித்திக்கும் –
இப்படி விலக்ஷணனான ஆச்சார்யனுடைய அபிமானத்திலே அந்தர் கதன் அன்றோ இவன் -கிம் ஆச்சார்ய வதோ லோகே துர் லபம் ஸூல போப்யஹம் -என்றும் எம்பருமான் திரு உள்ளம்பற்றி உஜ்ஜீவிப்பிக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் உண்டாம் –
இனி இந்த உபதேஷ்டாவினுடைய ஆச்சார்யன் நாம் செய்த கார்யம் இவ்வளவும் வர பகவத் கைங்கர்யம் ஆயிற்று என்று தன் திரு உள்ளத்தால் நினைத்து
உடையவரைத் திருக்கோட்டியூர் நம்பி பெருமாள் நமக்காவாரைத் தேடிக் கொள்கிறோம் என்ற அவரோ இவர் என்று
அணைத்துக் கொண்டு உகந்தாப் போலே உகக்கும் படி இவன் வர்த்திக்கையாலே ஆச்சார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் பலிக்கும்
ஆச்சார்யன் பக்கலிலே ஞான உப போகம் கொண்ட உபகார ஸ்ம்ருதியாலே இலை படுத்த இடத்திலே தலை படுக்குமா போலே
ஸஹ வாஸமும் தன்னடையே ஸித்திக்கும் என்கிறார் –

—————

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

ஸாஷாத் பலமும் -இத்யாதி -கீழ்ச் சொன்ன த்ருஷ்ட ப்ரயோஜ நாதிகள் இவ் வாச்சார்யன் நினைவாலே வாராது ஒழிந்த பின்பு இவனுக்கு இவை ஸாஷாத் பலங்கள் அல்லவாய் இருந்தன –
இனித்தான் -பிரயோஜனம் அநுத் திஸ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்று ஒரு சேதனற்கும் ப்ரயோஜனத்தை யுத்தேசித்து அல்லது ப்ரவ்ருத்தி கூடாமையாலே
இவ் வாச்சார்யனுடைய ப்ரவ்ருத்திக்குத் தன் நினைவாலே உத்தேசித்த ஸாஷாத் பலமேதாகக் கடவது –
இவன் தன்னை ஸிஷ்யனாக நினைத்து இருக்கையாலே உபதேஷ்டாவான இவனுக்கு ஆச்சார்யத்வம் ஸித்திக்கிற வழியேதாகக் கடவது என்ன
தன் நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் ஸித்திக்கும் என்கிறார் -அவை ஸித்திக்கிற படி தான் எங்கனே என்னில்
இவ்வாச்சார்யன் உபதேஸ காலத்திலே அஸ்மத் குருவின் பொருட்டு நமஸ்ஸைப் பண்ணு என்று சிஷ்யனைக் குறித்து
விதிக்கையாலே தன்னாச்சார்ய விஷயத்தில் தன் நினைவாலே வருகிற பலமான மங்களா ஸாஸனம் ஸித்தித்து விடும் –
இனி இப்படி உபதேஸிக்கிறவனுக்கு ஈஸ்வரன் நினைவாலே ஆச்சார்யத்வம் ஸித்திக்கும் –
ராஜா ஒருவன் கையிலே ராஜ சிஹ்னத்தைக் கொடுத்துச் செல்லாத ராஜ்யத்தைச் செலுத்திக் கொள்ளுமா போலே
விலக்ஷணமான ஞான அனுஷ்டானங்களை யுண்டாக்கி –
வீசும் சிறகால் பறத்தீர்–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கிற பர ப்ரதிபாதன சாமர்த்யத்தையும் யுண்டாக்கி –
இப்படி இவனுக்கு ஆச்சார்ய பதத்தைக் கொடுக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே ஸித்திக்கும் என்கிறது –

———————-

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

ஆக -இவ்வாச்சார்யன் உக்த க்ரமத்திலே -க்யாதி -லாப -பூஜா நிரபேஷமாக உபதேஸியா விடில் -சதாச்சார்யன் அல்லாமையாலே
ஆச்சார்ய ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
ஸதாச்சார்ய உபதேசம் பெறாமையாலே ஸிஷ்யத்வ ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
இப்படி ஒழிய உபதேஸிக்கில் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி இல்லை என்று
த்ருடீ கரித்து அருளிச் செய்கிறார் –

—————–

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

ஆனால் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி யுண்டாம்படியான இந்த சிஷ்யாச்சார்ய லக்ஷணம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
ஆச்சார்யனுக்கு என்று தொடங்கி -ஆச்சார்ய லக்ஷணத்தையும் அருளிச் செய்கிறார் மேல் -ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பக்கல் கிருபையும் -இத்யாதி –
இப்படி க்யாதி லாப பூஜா நிரபேஷனாய் ஈஸ்வரனாலே ஆச்சார்ய பதம் பெற்ற தான் தன்னைச் சேர்ந்த ஸிஷ்யனுக்கு உபதேஸிக்கும் இடத்தில்
அவ்வாச்சார்யனுக்கு ஸம்ஸார தாப அர்த்தனான ஸிஷ்யன் பக்கல் ஐயோ என்கிற கிருபையும்
ஹித உபதேஸ காலத்தில் ஸ்வாச்சார்யனானவன் தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே இருந்து உபதேஸிக்கிறான் என்றும்
அவனுக்குப் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேஸிக்கையும் இவ்வதிகாரிக்கு வேணும் என்கிறார் –

—————-

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

இவை எதுக்காக வேண்டுகிறது என்ன அந்த சிஷ்யாசார்யர்களுடைய ஸ்வரூபத்துக்காக என்கிறார் –
கிருபையால் என்று தொடங்கி –

———-

சூரணை -315-

நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

நேரே இத்யாதி -நேரே ஆச்சார்யன் என்றது பூர்ண வஞ்சகனான ஆச்சார்யனும் உண்டாக மேலே அருளிச் செய்கையாலே
ஸாஷாத் ஸ்வரூப உத்தாரகனான ஆச்சார்யனாகச் சொல்லுவது -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே
திருமந்திரம் ஸகல புருஷார்த்த ஸாதனமாய் இருந்ததே யாகிலும் ஸம்ஸார நிவர்த்தக முகேந அப்பெரிய திரு மந்த்ரத்தை உபதேஸித்தவனை என்கிறார் –
ஸம்ஸார நிவர்த்தகமான த்வயத்தை உபதேஸித்தவனை என்னாது ஒழிந்தது அப்பெரிய திருமந்திரத்தில்
ப்ரணவ விவரமான நமஸ்ஸினுடையவும் நாராயண பதத்தினுடையவும் விவரணமாய்க் கொண்டு
த்வயத்தில் பூர்வ உத்தர வாக்யங்கள் இருக்கையாலே –

———–

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

ஆனால் நேரே ஆச்சார்யன் இவனாகில் வஞ்சகரான ஆச்சார்யர்கள் யார் என்ன -அவர்களைச் சொல்லா நின்று கொண்டு
மந்த்ர சோதனத்தையும் பண்ணுகிறார் -சம்சார வர்தகங்களுமாய்-என்று தொடங்கி
ஆச்சார்ய சோதனம் பண்ணினால் அவனாலே உபதேஸிக்கப் படும் மந்த்ர சோதனமும் பண்ண வேணும் இறே
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கும் -மதந கோபாலாதி மந்த்ரங்கள் ஸம்ஸாரத்தைப் பூண் கட்டிக் கொடுக்குமவையாய்
பெரிய திருமந்திரம் போல் அன்றிக்கே ஷுத்ரங்களுமான அம்மந்திரங்களை உபதேஸித்தவர்களுக்கு
ஆச்சார்யத்வ மாத்ரம் உண்டே யாகிலும் ஆச்சார்யத்வ பூர்த்தி இல்லை என்கிறார் –

—————

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –(அத்தை உபபாதிக்கிறார் )

ஆனாலும் பகவத் மந்த்ரங்களை -ஷுத்ரங்கள்-ஸம்ஸார வர்த்தகங்கள் -என்னலாமோ என்னில் -பகவத் மந்த்ரங்களை இத்யாதி –
மந்த்ரங்களினுடைய வைபவத்துக்குக் குறை இல்லை –
ஐஸ்வர்யார்த்தி கோபால மந்த்ர உபாஸகனாயும்
வித்யார்த்தி ஹயக்ரீவ மந்த்ர உபாஸகனாயும்
விஜயார்த்தி ஸூ தர்சன நரஸிம்ஹ மந்த்ர உபாஸகனாயும்
இப்படிப் போரக் காண்கையாலே ஷுத்ர பல ப்ரதத்வ த்வாரேண -அத்தை ஷுத்ரங்கள் -ஸம்ஸார வர்த்தகங்கள் -என்கிற இத்தனை என்கிறார் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-