Archive for the ‘ஸ்ரீ பாஷ்யம்’ Category

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்-ஸ்ரீ பாஷ்ய கட்டமைப்பு –அதிகார பாத அதிகாரண விவரம் -உபோத்காத சதுர் அதிகரணம் —

May 27, 2023

ஶ்ரீராமானுஜர் காயத்ரி

ஓம் ராமாநுஜாய வித்மஹே ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.

ஶ்ரீஇராமானுசர் இயற்றிய நூல்கள்:

ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)

ஸ்ரீ வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது).

ஸ்ரீ வேதாந்த சாரம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தீபம்: (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சிறு உரைகள்.)

ஸ்ரீ கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)

நித்யக் கிரந்தங்கள். (அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.)

மற்றும் ஸ்ரீ கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

ஸ்ரீ ப்ரஹ்ம சப்தேந –
ச ஸ்வ பாவதோ
நிரஸ்த
நிகில தோஷ
அநவதிக
அதிசய
அஸங்க்யேய
கல்யாண குண கண
புருஷோத்தம
அபி கீயதே –ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனையே குறிக்கும் பதம்

ஸ்ருதி -ரிக் யஜுஸ் ஸாமம் அதர்வணம்
ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை -ப்ராஹ்மணம் -ஆரண்யகம் -உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு

இவற்றை ஒத்துக்க கொள்ளும் ஆஸ்திக தர்சனங்கள் ஷட் வித தர்சனங்கள் –
நியாயம் -கௌதம மகரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வைசேஷிகம் -கணாத மஹரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
சாங்க்யம் -கபில மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
மீமாம்ஸம் -ஜைமினி மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேதாந்தம் -பாதாராயண மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேத வியாஸர் முதல் ஐந்திலும் உள்ள குற்றங்களைக் காட்டி இறுதியில் உள்ள நம் தரிசனத்தின் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் –

உபநிஷத் சமுத்ரத்தைக் கடைந்து ப்ரஹ்ம ஸூத்ரம் அமுதம் தந்து அருளுகிறார்
சாரதா பீடத்தில் ஸரஸ்வதி தேவியரால் கொண்டாடப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் திருநாமம் சூட்டப்பட்டது

பூர்வ உத்தர -இரண்டு த்விகங்கள்
சமன்வயம் -அவிரோதம் -உபாஸனம் -பலம் -நான்கு அத்யாயங்கள்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்
156 அதிகரணங்கள்
545-ஸூத்ரங்கள்-

பூர்வ த்வீகத்தால்
ப்ரஹ்மம் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு விலக்ஷணமாகவும்
ஜகத் காரணமாகவும் உள்ள ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது
ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்வீகம்
ப்ரஹ்மம் குறித்து விளக்கும் த்வீகம்
ஆகவே
ஸித்த த்வீகம்
விஷய த்வீகம் –என்றும் கூறப்படும்

உத்தர த்வீகம்
ப்ரஹ்ம உபாஸனை குறித்தும்
பலத்தைக் குறித்தும்
ப்ரஹ்மத்தை அடைய ஸாத்யமாகவும்
ஞான ரூப மாகவும் உள்ள பக்தி உள்ளிட்டவையைப் பற்றி குறித்து உரைப்பதால்
ஸாத்ய த்வீகம்
விஷயீ த்வீகம் என்றும் கூறப்படும்

அத்தியாயங்கள் விவரம்
1-ஸமன்வய அதிகாரம்
ப்ரஹ்மம் ஸமஸ்த சித் அசித் விலக்ஷணம்
ஞான ஆனந்த ஸ்வரூபம்
எல்லையற்ற கல்யாண குணங்களின் இருப்பிடம்
ஸமஸ்த ஏக த்ரிவித -உபாதான -நிமித்த -ஸஹ காரி -காரணம்
அனைத்துக்கும் ஆத்மாவாக உள்ளது
இத்தகைய ப்ரஹ்மத்தை வேதாந்தங்கள் மூலமே அறிய முடியாதகு என்று அறிய முடியும்
அனைத்து வேதாந்த கார்ய வாக்கியங்களும் ப்ரஹ்மத்திடம் இடம் சென்று
ஒடுங்குவதால் ஸமன்வய அத்யாயம் என்ற பெயர் பெற்றது –

2-அவிரோத அத்யாயம்
கீழ் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தான
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணப் பொருளாக உள்ளது
ஜகத்து காரியப் -என்னும் பொருளாக உள்ளது என்னும்
ஸித்தாந்தங்கள் எந்த விதத்திலும் -எந்த ப்ரமாணங்களாலும் -எந்த யுக்திகளாலும் -எந்த நியாயத்தாலும்
தள்ளப்பட இயலாது என்று கீழே நிரூபிக்கப் படுகிறது
இந்தக் கருத்துக்களில் எழுகின்ற அனைத்து ஐயங்களும் நீக்கப் படுகின்றன
இதில் வேதாந்தத்துக்கு முரணாக உள்ள அனைத்து மதங்களும் தள்ளப் படுகின்றன –

கீழ் கூறப்பட்ட கருத்துக்களில்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் போன்ற ப்ரமாணங்களுக்குள்
எந்தவிதமான முரண்பாடுகளும் -விரோதம் -உண்டாக வில்லை
என்று கூறுவதால் இப்பெயர் பெற்றது –

3-உபாஸன அதிகாரம்
ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் ஆராயப்படுகிறது
ஜீவாத்மா தோஷம் உள்ளவன் -ப்ரஹமம் தோஷம் அற்றது -ப்ரஹ்ம உபாஸனம் -உபாஸனை அங்கங்கள் போல்வன
கூறப்படுகின்றன

4-பல அத்யாயம்
உபாஸனம் செய்யும் முறை
அர்ச்சிராதி கதி மார்க்கம்
மோக்ஷத்தின் பலன் -ஆகியவை கூறப்படுகின்றன
கர்மங்கள் விலகுவது முதல் பாதத்திலும்
ஸ்தூல சரீரம் நீங்குதல் இரண்டாம் பாதத்திலும்
ஸூஷ்ம சரீரம் நீங்குதல் மூன்றாம் பாதத்திலும்
ப்ரஹ்மத்தை அடைதல் நான்காம் பாதத்திலும் கூறப்படுகின்றன

அதிகரணம் -இடம் -நீதி மன்றம் -உபநிஷத்துக்களில் உள்ள வாக்கியங்களுடைய ஆழ்ந்த பொருளை
இன்னது என்பதை பல நியாயங்கள் மூலம் உணர்த்தும்
இது
1- விஷயம் -உபநிஷத்தின் எந்த வாக்கியத்தின் ஆழ்ந்த பொருளை நிர்ணயம் செய்யப்படுகிறதோ -அதுவே விஷய வாக்யம்
2- சம்ஸயம் -சந்தேகம் -விஷய வாக்கியத்தில் உண்டாகும் சந்தேகம்
3-சங்கதி -உபநிஷத் -ஸூத்ரம் இவற்றுக்கு இடையே உள்ள சம்பபூர்வ பஷம் –
4-பூர்வ பஷம் உண்மையான ஆழ்ந்த பொருளை ஆராயாமல் மேலோட்டமாக முதன் முதலாக தோன்றும் கருத்து
5-ஸித்தாந்தம் –தாத்பர்ய நிர்ணயம்
ஆராயப்படும் உபநிஷத்தின் உபக்ரமும் உப ஸம்ஹாரமும் –தொடக்கமும் முடிவும்
அப்யாஸமும் -மீண்டும் மீண்டும் உரைத்தல்
அபூர்வதை -இந்த முடிவு ஸாஸ்த்ரத்தால் மட்டுமே உண்டாகும் என்கிற உறுதி
இதன் மூலம் உண்டாகும் பலன்
அர்த்தவாதம் -தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் புகழ்ந்து பேசுதல்
உபபத்தி -இதற்கான காரணம் பிரமாணம் போன்றவை
இவற்றைக் கொண்டு சித்தாந்தம் நிர்ணயம்-

முதல் அத்யாயம் -முதல் பாதம் -அயோக வியச்சேத பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க விசாரம்
அயோகம் -சம்பந்தம் அற்ற நிலை –ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்துடன் உள்ள சம்பந்தம் அற்ற நிலை
வியச்சேதம் –இந்தக் கருத்தைத் தள்ளுதல்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் படுகிறது
அஸ்பஷ்ட–தெளிவில்லாமல் -காணப்படும் வாக்கியங்கள்
ஜீவாதி லிங்க விசாரம்-ஜீவாத்மாவும் ப்ரக்ருதியும் ஜகத் காரணம் என்று
மேல் எழுந்தவாறு கூறுவது போன்ற விஷ வாக்கியங்கள் விசாரம்

இந்தப் பாதத்தில் 11 அதிகரணங்கள்-32 ஸூத்ரங்கள்- உண்டு

1-1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம்-வேத வரிகள் அனைத்தும் ப்ரஹ்மத்தைப் பற்றி உள்ளதால் –
ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே-
இந்த ஸாஸ்த்ரம் தொடங்குவதற்கு ஏற்றதே என்று நிரூபணம் –ஒரே ஸூத்ரம்

1-1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
ஆகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
சாஸ்திரமீ ப்ரஹ்மத்தை மட்டுமே புருஷார்த்தமாகவே உணர்த்துகிறது என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்-

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே-மூலப்பிரக்ருதி அல்ல என்று நிரூபணம் –8 ஸூத்ரங்கள்

1-6-ஆனந்த மயாதிகரணம் -தைத்ரிய ஆனந்தவல்லியில் ஆனந்த மயமாக உள்ளது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் கண்களில் உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .-பரமாத்மாவே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

1-8-ஆகாசாதி கரணம் -சாந்தோக்யத்தில் ஆகாயம் எனப் படுவதும் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-9-ப்ராணாதி கரணம்–சாந்தோக்யத்தில் பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -சாந்தோக்யத்தில் ஜோதி என்பதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4-ஸூத்ரங்கள்

1-11-இந்திர பிராணா அதிகரணம் -கௌஷீதகீயில் இந்த்ரன் பிராணன் என்பது ஜீவன் மட்டும் அல்ல -அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்

————

இரண்டாம் பாதம்-அந்நிய யோக வியவச்சேத பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –

ஜகத்துக்குப் பலவும்-பிரக்ருதியும் -ஜீவாத்மாவும் – காரணம் என்பவர்களைக் குறித்து
அவ்வாறு அல்ல ப்ரஹ்மமே ஜகத்துக்கு ஏக காரணம் என்று நிரூபணம்-33 ஸூத்ரங்கள்-

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்—ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -சாந்தோக்யம் -3-14-1-
இவை அனைத்தும் ப்ரஹ்மமே–என்பது பரம் பொருளே–என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-2-2-2-2-அத்தா அதிகரணம் -யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சேபே பவத ஓதந
ம்ருத்யுர் யஸ்ய உபசேஸநம் க இத்தா வேத யத்ர ச -கடவல்லி -2-24-
யாருக்கு அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் ஆகிய இருவரும் -மற்றவர்களுக்கும் உப லக்ஷணம் -உணவாகிறார்களோ
யாருக்கு எமன் ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் என்று அனைத்து சராசரங்களையும் உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

2-3-அந்த்ராதிகரணம் —ச ஏஷோ அக்ஷிணீ புருஷோ த்ருஸ்யதே
ஏஷ ஆத்மேதி ஹேவாஸ ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -4-15-1-
கண்களில் எந்தப்புருஷன் காணப்படுகிறானோ அவனே ஆத்மா என்றும் அம்ருதம் என்றும்
அபயம் என்றும் ப்ரஹ்மம் என்றும் கூறினார் என்பதில்
ப்ரஹ்மமே என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்-

2-4-அந்தர்யாமி யதிகரணம் -ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத ப்ருஹதாரண்யம் -3-7-23-
உனக்கு ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அவனே அந்தர்யாமி ஆவான் என்று என்று நிரூபணம் –3-ஸூத்ரங்கள் –

2-5-அத்ருத்யஸ்வாதி குணாதிகரணம் -அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே
யத் தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அஸஷு ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம்
நித்யம் விபும் ஸர்வ கதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநி பரிபஸ்யந்தி தீரா -முண்டகம் -1-1-5,6
பர வித்யை -உயர்ந்த வித்யை மூலம் அடுத்தபடியாக அக்ஷரம் என்ற அழிவற்ற அந்தப் பொருள் அடையப்படுகிறது
அது காணப்படாதது
அறியப்படாதது
கோத்ரம் அற்றது
வர்ணம் அற்றது
கண் மற்றும் காது அற்றது
தலைமையாக உள்ளது
எங்கும் பரவி உள்ளது
மிகவும் நுண்ணியது
அழிவற்றது
பூதங்களுக்குக் காரணமாக உள்ளது
இதனை அனைத்தும் அறிந்தவர்கள் காண்கிறார்கள்
என்பதில் அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள் –

2-6-வைஸ்வா நராதிகரணம் —ஆத்மாநம் ஏவ இமம் வைஸ்வா நரம் வைஸ்வா நரம் ஸம் ப்ரத்யத் யேஷி தமேவ நோ ப்ரூஹி -சாந்தோக்யம் -5-11-6-
இப்போது நீவிர் இந்த வைஸ்வா நர ஆத்மாவை உபாஸிக்கிறீர்
அவனைக் குறித்து எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி
யஸ்த் வேத மேதம் ப்ராதேச மாத்ரமபி விமாந மாத்மாநம் வைஸ்வா நரம் அபாஸ்தே –சாந்தோக்யம் -5-18-1-
எங்கும் இருப்பதன் காரணமாக அளவற்றவனாக உள்ள வைஸ்வா நர ஆத்மாவை ஓர் இடத்தில்
உள்ளவன் என்று யார் உபாஸிக்கிறானோ
என்று முடியும் பகுதியில் கூறப்படும் வைஸ்வாநரன் எனப்படுபவனும் பரம் பொருளே-என்று நிரூபணம் –9-ஸூ த்ரங்கள் –

————–

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-இங்கு ப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் ஜகத் காரணம் என்று தெளிவாக உள்ளது போல் உள்ள வாக்கியங்களின் விசாரம் -10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்-

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனஸ் ஸஹ பிராணைச் ச ஸர்வை
தமே வைகம் ஜாநதாத்மாநம் அன்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷ சேது
யாரிடம் தேவ லோகம் பூமி அந்தரிக்ஷம் மனம் அனைத்து இந்திரியங்கள் ஆகியவைகள் சேர்ந்து உள்ளனவோ
அந்த ஆத்மா ஒருவனையே அறிவீர்களாக
மற்ற சொற்களைக் கை விடுவீர்களாக
அவனே மோக்ஷத்துக்கு வழி ஆவான் என்பதில் கூறப்பட்ட –த்யு லோகம் -ஸ்வர்க்கம் -பூமி போன்றவற்றுக்கு
இருப்பிடமாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள் –

1-3-2-பூமாதி கரணம் -யதா நான்யத் பஸ்யதி நான்யத் ஸ்ருணோதி நான்யத் விஜா நாதி ஸ பூமா
அத யத்ர அந்யத் பஸ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜா நாதி ததல்பம் –சாந்தோக்யம் -7-24-1-
எந்த ஒன்றை அறியும் போது வேறு ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் இல்லையோ அதுவே பெரிதாகும் -பூமா
எதனை அறியும் போது மற்ற ஒன்றைக் ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் உண்டோ அது சிறியதாக
என்பதில் உள்ள பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –2-ஸூத்ரங்கள் –

1-3-3-அஷர அதி கரணம் -ஸ ஹோவாஸ ஏதத் வை தத் அக்ஷரம் கார்க்கி
ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேஹம்
அமச்சாயம் -ப்ருஹதாரண்யம் -3-8-8-
யாஜ்ஞ வல்க்யர் கார்க்கியிடம் -இதனையே ப்ரஹ்மம் அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்கள்
அது ஸ்தூலமானதும் அல்ல
ஸூஷ்ம மானதும் அல்ல
குட்டையானதும் அல்ல
நீளமானதும் அல்ல
சிவப்பானதும் அல்ல
பசையானதும் அல்ல
நிழலுடன் கூடியதும் அல்ல
என்பதில் மூல ப்ரக்ருதிக்கு ஆதாரமாகக் கூறப்படும் அஷரம் எனபது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -ய புநரேதம் த்ரி மாத்ரேண ஓம் இதி ஏதேந ஏவ அஷரேண பரம் புருஷம் அபித்யாயீத
ஸ தேஜஸீ ஸூர்யே சம்பந்நோ யதா பாதோதர த்வச்சா விநிர் முச்யதே
ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர் முக்த ச ஸாமபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ஸ ஏதஸ் மாத் ஜீவ நாத் பராத்பரம் புரிசயம் புருஷன் ஈஷதே -ப்ர-5-5-
மூன்று மாத்திரைகள் கொண்டதான இந்த ஓம் என்ற அக்ஷரத்தை மட்டுமே கொண்டு
யார் ஒருவன் இந்தப் பரம புருஷனைத் த்யானம் பண்ணுகிறானோ
அவன் மிகுந்த தேஜஸ் கொண்டதான ஸூர்யனை அடைத்தவனாக
பாம்பு தனது சட்டையை உரிப்பது போன்று பாபத்தில் இருந்து நீங்கப் பெற்றவனாக
ஸாம கானம் செய்பவர்களால் ப்ரஹ்ம லோகத்தில் சேர்க்கப் பட்டவனாக உள்ளான்
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் மிக உயர்ந்தவனும்
ஹ்ருதயத்தில் உள்ளவனும் ஆகிய புருஷனைக் காண்கிறான்
என்பதில் உள்ள காணப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –ஒரே ஸூ த்ரம்

1-3-5-தஹராதி கரணம் —அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர
அஸ்மின் அந்தர ஆகாஸ தஸ்மிந் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஜ்ஞாஸி தவ்யம் –சாந்தோக்யம் -8-1-1-
ப்ரஹ்மத்தின் இருப்பிடமான இந்த சரீரத்தில் தாமரை போன்ற சிறியதான ஹ்ருதயம் இடம் உள்ளது
அதற்குள் ஸூஷ்மமான ஆகாசம் உள்ளது
அதற்குள் இருப்பதே தேடப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியதாகும்
என்பதில் தஹரம் என்னும் இடத்தில் -ஆகாசத்தில் -உள்ளவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –10 ஸூ த்ரங்கள் –

1-3-6–ப்ரமிதாதி கரணம் -அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி
ஈஸோநோ பூத பவ் யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே –ஏதத் வை தத் -கட –4-12-13-6-17-
எந்தப்புருஷன் கட்டை விறல் அளவு கொண்டவனாக ஆத்மாவின் நடுவில் உள்ளானோ
இறந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எல்லாம் நியமித்தபடி உள்ளானோ
அவ்விதம் அமர்வதில் எந்தவித வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ
அவனே அடையப்பட வேண்டியவன் -என்று இவற்றில்
-கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூ த்ரங்கள்

1-3-8–மத்வதிகரணம் -ஆதித்யன் போன்ற தேவர்களுக்கு சாந்தோக்யத்தில் உள்ள மதுவித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –3- ஸூ த்ரங்கள்

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யைகளில் அதிகாரம் இல்லை –என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்-இதில் இரண்டு ஸூ த்ரங்கள்

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா
தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ஸ ஆத்மா –சாந்தோக்யம் -8-14-1-
ஆகாசம் என்பது பெயர் மற்றும் ரூபங்களை ஏற்படுத்துகிறது
இவை இன்றி உள்ளது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும் அம்ருதமாகவும் ஆத்மாவாகவும் உள்ளது
என்பதில் நாம ரூப விபாகம் ஏற்படுத்தியவன் பரமாத்மாவே என்பதால்
ஆகாயம் என்பது ப்ரஹ்மமே—என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

——-

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் –இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -அர்த்தேப் யச்ச பரம் மனஸ்
மனஸ் ஸஸ்து பரா புத்திர -புத்தே ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான் ந பரம் கிஞ்சித்
ஸா காஷ்டா ஸா பரா கதி –கட –3-10-11-என்று
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்தவை அவற்றால் அறியப்படும் விஷயங்கள்
அந்த விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தது மனம்
மனத்தை விட உயர்ந்தது புத்தி என்னும் அறிவு
புத்தியை விட உயர்ந்தது ஆத்மாவாகிய மஹான்
மஹானைக் காட்டிலும் பெரியது அவ்யக்தம்
அவ்யக்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் புருஷன்
புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை
புருஷனே உயர்ந்த எல்லையாகவும்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூலப் பிரக்ருதியானது ஜகத்தின் காரணப்பொருள்
என்று கூறப்பட வில்லை என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-4-2-சமசாதிகரணம்—அஜாம் ஏகம் லோகித சுக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜா ஸ்ருஜமாஸ ரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷ மாண அநு சேதே ஜஹாதி ஏனாம் புக்த போகாம அஜ அந்நிய –ஸ்வேதாஸ்வர -4-5-
சிவப்பு ரஜஸ்
வெளுப்பு சத்வம் மற்றும் கறுப்பு தமஸ் ஆகிய மூன்று நிறங்களைக் -குணங்களைக் கொண்டதாகவும்
தன்னைப் போன்றே மேலும் பல பிரஜைகளை உண்டாக்குவதாகவும்
பிறப்பற்றதாகவும் உள்ள
ஒன்றுடன் -பிரக்ருதியுடன்
பிறப்பற்ற ஒருவன் -ஜீவாத்மா -மகிழ்ச்சியுடன் கூடி உள்ளான்
தன்னால் அனுபவிக்கப் பட்ட இந்தப் பிரக்ருதியை மற்ற ஒருவன் -முக்தாத்மா -விட்டுச் செல்கிறான்
என்பதில் உள்ள அஜா என்ற சொல்லால் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி என்று நிரூபணம் -3-ஸூ த்ரங்கள்

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் —யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகா கச்ச ப்ரதிஷ்டித –ப்ருகு –4-4-17-
எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் ஆகியவை நிலை நிற்கின்றனவோ
என்னும் வாக்கியத்தை ஆராயும் போது இந்த்ரியங்களுக்கும் ஆகாசம் போன்ற அனைத்துக்கும் ப்ரஹ்மமே அந்தர்யாமி –என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

1-4-4-காரணத்வாதி கரணம் -வேதங்கள் அனைத்துமே ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –என்று உரைக்க முடியும் என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் –யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம
ஸ வை வேதி தவ்ய –கௌஷீகீ -4-18-
பாலாகீ -யார் இந்த புருஷர்களுக்குக் கர்த்தாவாக உள்ளானோ
யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மம் உள்ளதோ
அவனே அறியத்தக்கவன் என்பதில்
அறியத்தக்கவனாக உபதேசிக்கப் படுபவன் ப்ரஹ்மமே அறியத்தக்கது –என்று நிரூபணம் –3 ஸூ த்ரங்கள்

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -ஆத்மநி கல்வரே
த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -ப்ரு -4-5-6-
அந்த ஆத்மாவே காணப்பட வேண்டியது
கேட்கப்பட வேண்டியது
நினைக்கப்பட வேண்டியது
மற்றும் தியானிக்கப்பட வேண்டியது
ஆத்மாவைக் காணவும் கேட்கவும் நினைக்கவும் தியானிக்கவும் அறியவும் செய்தால்
இவன் அனைத்தையுமே அறிந்தவன் ஆகிறான்
என்பதில் காணப்படுபவனாக சொல்வது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -4-ஸூ த்ரங்கள்

1-4-7-பிரக்ருத்யதிகரணம் —ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணமாக மட்டுமே அல்லாமல்
ப்ரஹ்மமே உபாதான காரணமாகவும் உள்ளான் என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள் –

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -பரமாத்மாவுக்கே உரிய தன்மைகள் படிக்கப் படுவதால்
ஹிரண்ய கர்ப்பன் முதலான சொற்களால் படிக்கப் படுபவன் பரமாத்மாவான ஸ்ரீ மன் நாராயணனே ஆவான் என்று
அனைத்து வித்யைகளும் கூறுகின்றன என்று நிரூபணம் -1 -ஸூ த்ரம் –

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் இதில் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10 அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்–கபில மஹரிஷியால் -பிரக்ருதியே ஜகத் காரணம் என்பது மயக்கத்தால் இயற்றப் பட்டது என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்–நான்முகனால் இயற்றப்பட்ட யோக ஸ்ம்ருதி நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்–வேறுபட்ட பலவற்றையும் கொண்டுள்ள ஜகத்துக்கு ப்ரஹ்மம்
காரணமாக இருப்பதில் குறையில்லை என்று நிரூபணம் -9-ஸூ த்ரங்கள்

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்-பரம அணுவே ஜகாத் காரணம் என்று கூறும்
நையாயிக மதம்
காணாதருடைய வைசேஷிக மதம்
சமண மதம் -போன்றவை நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்–ஜீவாத்மாவின் ஸூக துக்கங்கள் கர்மத்தின் அடிப்படையில் உண்டாவதால்
ப்ரஹ்மத்துக்கு ஸூக துக்கங்கள் இல்லை என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

2-1-6. ஆரம்பண அதிகரணம்–காரணப் பொருளாக உள்ள ப்ரஹ்மத்தைக் காட்டிலும் காரியப் பொருளான ஜகத்
வேறுபடாதவையே ஆகும் என்று நிரூபணம் -6 ஸூ த்ரங்கள்

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்–ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று ஸ்ருதி கூறுவதால்
ப்ரஹ்மத்தை ஜீவனாகக் கூறுவதால் தோஷங்கள் ஏற்படும் என்னும் வாதம் நிரஸனம் –3 ஸூத்ரங்கள்

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்–பொருள்களைச் செய்வதற்கு அவசியமான உப கரணங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லை
ஆயினும் ப்ரஹ்மம் ஜகாத் ஸ்ருஷ்டி செய்வதில் குறையில்லை என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்–அவயவங்கள் இல்லாத ப்ரஹ்மத்தின் இடம் இருந்து இந்த ஜகத் உண்டானது
ஆயினும் அந்தப் ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்பதில் குறையில்லை என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும்
லீலா-தத்கால -விளையாட்டு ரூபமாக உள்ள பலன் -காரணமாக ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் கீரையில் -என்று நிரூபணம் –5-ஸூ த்ரங்கள்

———

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் -இதில் பரபஷ ப்ரதிஷேதம் -சாங்க்ய -வைசேஷிக -புத்த -ஜைன -சைவ மத நிரஸனம்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்னும் வாதமும் நிரஸனம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்–சாங்க்யர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -9 ஸூ த்ரங்கள்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்–வைசேஷிகர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -97ஸூ த்ரங்கள்

2-2-3- -ஸமுதாய அதிகரணம்-புத்த மத பிரிவான வை பாஷிகர் சவ்த்ராந்திகர் மாதங்கள் நிரஸனம் –10 ஸூ த்ரங்கள்

2-2-4- உபலப்தி அதி கரணம்-புத்த மதத்தின் யோகாசார மதம் நிரஸனம் -3 ஸூ த்ரங்கள்

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்-புத்த மதத்தின் பிரிவான மாத்யமிக மதம் நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்-ஜைன மத நிரஸனம் -4 ஸூத்ரங்கள்

2-2-7- பசுபதி அதி கரணம்–பாசுபத மத நிராசனம் -4-ஸூத்ரங்கள்

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்–ஜீவாத்மாவின் உத்பத்தி கூறுவது போன்று உள்ளதால்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்கிற வாதம் நிரஸனம் -4-ஸூத்ரங்கள்

————–

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –-இதில் ஆகாசத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் உள்ளன என்றும்
ஆகாசமும் ப்ரஹ்ம காரியமே என்று நிரூபணம் இந்தப் பாதத்தில் -7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்–வியுத் எனப்படும் ஆகாசமும் ப்ரஹ்மத்தின் காரியப்பொருளே என்று நிரூபணம் -9- ஸூ த்ரங்கள்

2-3-2-தேஜஸ் அதிகரணம்–ஆகாஸம் போன்றவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
தேஜஸ் போன்றவை உண்டாகின்றன என்று நிரூபணம்–8-ஸூத்ரங்கள்

2-3-3. ஆத்மா அதிகரணம்–ஆத்மாக்களுக்கு உத்பத்தி இல்லை என்று நிரூபணம்–1-ஸூத்ரம்

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்–ஞான ஸ்வரூபமாக உள்ள ஜீவாத்மா ஞானத்தை குணமாகவும் கொண்ட படியும்
அறிபவனாகவும் உள்ளான் என்று நிரூபணம் -14 ஸூத்ரங்கள்

2-3-5- கர்த்ரு அதி கரணம்–ஜீவனுக்கு செயல்களை செய்பவனாக உள்ள தன்மை
கர்த்ருத்வம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

2-3-6- பர ஆயத்த அதிகரணம்–ஜீவாத்மாவின்
கர்த்ருத்வம் என்பது பரமாத்மாவின் கட்டளைக்கு உட்பட்டதே யாகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-3-7- அம்ஶ அதி கரணம்–ஜீவாத்மா
பரமாத்மாவின் அம்சமாகவே உள்ளான் என்று நிரூபணம் -11 ஸூத்ரங்கள்

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –-ஜீவனின் உபகரணமாக உள்ள பிராணங்கள் இந்திரியங்கள் ஆகியவை
ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி ஸ்வரூப ஸ்வ பாவக விகாரங்கள் உள்ளன என்றும்
இவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் உண்டு என்று நிரூபணம்
8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்–சதபத ப்ராஹ்மணம் -6-1-1- விசாரிக்கப்படுகிறது
இந்திரியங்கள் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்று நிர்ப்பனம் –3- ஸூத்ரங்கள்

2-4-2- ஸப்தகதி அதி கரணம்–இந்திரியங்கள் ஏழு அல்ல 11 என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்–இந்திரியங்களும் அணு அளவே ஆகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்–முக்ய பிராணன் வாயுவோ செயல்பாடோ அல்ல என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

2-4-5- ஶ்ரேஷ்ட அணுத்வ அதி கரணம்-முக்ய பிராணனும் அணு அளவே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்–ஜீவன் அக்னி முதலான தேவதைகள் பிராணனை அண்டி நிற்பது
பரமாத்மாவின் ஆஜ்ஜையாலே தான் என்று நிரூபணம் –

2-4-7- இந்த்ரிய அதி கரணம்–இந்திரியங்கள் அனைத்தும் முக்ய பிராணனை விட வேறுபட்டவை என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்–த்ரி வ்ருத் கரணம் மற்றும் நாம ரூப விபாகன்கள் செய்பவன்
ஒருவனே ஆவான் என்று நிரூபணம் –2 -ஸூத்ரங்கள் –

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –

ஜீவாத்மா ஒரு சரீரத்தில் இருந்து வேறே ஒரு சரீரத்துக்குள் செல்லும் போதும்
சுவர்க்கம் நரகம் இவற்றால் இருந்து அடுத்த சரீரம் எடுக்க பூமியில் வரும் போதும்
பூத ஸூஷ்மங்கள் மற்றும் எஞ்சிய கர்மங்களுடனே வருகிறான் என்றும்
இதன் காரணமாக பல தாழ்வுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது என்றும் கூறி
இதன் மூலம் கர்மங்கள் காரணமாக இந்தச் சரீரத்துடன் சேர்ந்துள்ள ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாக்குகிறார்
மேலும் ஜீவாத்மாவின் பலவித தோஷங்களும் இந்தப் பாதத்தில் காண் பிக்கப்படுகின்றன –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்–சாந்தோக்யத்தில் கூறியபடி ஜீவன் ஒரு உடலை விட்டு வெளியே கிளம்பும் போது
பஞ்ச பூதங்களுடன் கூடியவனாக ஸூஷ்ம ரூபத்துடன் செல்கிறான் என்று நிரூபணம் –7-ஸூத்ரங்கள்

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்–யாவத் ஸம் பாதம் உஷித்வா அத ஏதமேவ அத் வாநம் புநஸ் நிவர்த்தந்தே –சாந்தோக்யம் -5-10-5-
கர்மபலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து அதன் பின்னர் உலகிற்குத் திரும்புகின்றனர்
என்கிறபடியே ஜீவன் தான் அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பழங்களுடன் வருகிறான் என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்–பாபம் செய்தவர்கள் சந்த்ர மண்டலம் செல்வது இல்லை என்று நிரூபணம் 10-ஸூத்ரங்கள்

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்-மேலே கிளம்பும் ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மற்றும் அடைகிறான் என்று நிரூபணம் -1-ஸூத்ரம் –

3-1-5- ந அதி சிர அதி கரணம்–ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே மட்டுமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹி யவா ஓஷதி வநஸ்பதயே தில மாஷா இதி ஜாயந்தி -சாந்தோக்யம் -5-10-6-
மேகமாகி பின்பு மழை யாகிறான்
அதன் மின்னார் நெல் கோதுமை மூலிகைகள் செடிகள் எள் உளுந்து போன்றவையாகப் பிறக்கிறான்
என்கிற வாக்யம் ஆராயப்பட்டு
ஜீவாத்மா தானியம் போன்றவற்றைச் சரீரமாகக் கொண்டுள்ள மற்ற ஜீவன்களுடன் நெருங்கிய தொடர்பு மட்டுமே கொள்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள் –

———

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –

கீழ் பாதத்தில் கூறப்பட்ட விஷயங்களால் வைராக்யம் ஏற்பட்டு அப்படிப்பட்டவனுக்கு
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆசை உண்டாக -அனைத்து விதமான தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக இருத்தலும்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயும் கொண்ட
இரண்டு –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக குண தாயகனாய் -உபய -லிங்கங்கள் உடன் ப்ரஹ்மம் உள்ளான் என்று நிரூபணம் -8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்–ஜீவன் தனது கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள்

3-2-2- தத் அபாவ அதி கரணம்–ஜீவாத்மா உறங்கும் இடங்களாக ஹிதா ப்ரீதத் மற்றும் ப்ரஹ்மம்
ஆகியவை கூறப்பட்டு ஸித்தாந்தம் நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-2-3- கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விழித்து எழுகிறான்
அவன் வேறு ஒரு ஜீவன் அல்லன் என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-2-4- முக்த அதி கரணம்–மோர்ச்சை என்னும் மயக்க நிலை
என்பது
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் -ஆகியவற்றைக் காட்டிலும் மாறுபட்டது என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-2-5- உபய லிங் க அதி கரணம்–சரீரங்களில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ள போதிலும்
சரீரங்கள் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவது இல்லை என்று நிரூபணம் –15- ஸூத்ரங்கள்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்-ப்ரஹ்மம் அசேதனப் பொருள்களைத் தனது ரூபமாகக் கொண்டாலும்
அந்த அசேதனங்களில் உள்ள தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் ஏற்படுவது இல்லை என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

3-2-7- பர அதி கரணம்–ப்ரஹ்மத்தைக் காட்டிலும் உயர்ந்த வாஸ்து வேறே எதுவும் இல்லை என்றும்
இதைத் தவிர வேறே அடைய வேண்டிய இலக்கு வேறே எதுவும் இல்லை என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-2-8- பல அதி கரணம்–அனைத்துக் கர்மங்களின் பலனையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

———–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –

பல ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -இவற்றில் கூறப்பட்ட பல்வேறு குணங்களை ஒன்றாகத் திரட்டிய பொருள் கொள்ள வேண்டும்
இந்தப்பாதத்தில் ப்ரஹ்மம் ஸ குண ப்ரஹ்மமே என்று நிரூபணம் 26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்–வைஸ்வாநர வித்யை -தஹர வித்யை போன்ற
பல வேறு வித்யைகள் பல வேறு சாகைகளில் ஓதப்படுகின்றன
இவை அனைத்தும் ஒன்றே என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்துக்களில் உள்ள உத்கீத வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் -4-ஸூத்ரங்கள்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்–சாந்தோக்யம் -கௌஷீதகீ -இவற்றில் கூறப்படும் பிராண வித்யை ஒன்றே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
ப்ரஹ்மம் ஆனந்த மயமானது
மாற்றம் அடையாமல் உள்ளது
ஞான மயமானது
அளவு படுத்த இயலாதது
தோஷங்கள் அனைத்துக்கும் எதிர் தட்டாய் உள்ளது
இந்த ஐந்து குணங்களும் அனைத்து வித்யைகளிலும் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்–ஆசமனம் செய்யப்படும் நீரானது ப்ராணனுக்கு வஸ்திரமாக எண்ணப்பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-6- ஸமாந அதி கரணம்–அக்னி ரஹஸ்யம் ப்ருஹத் ஆரண்யகம் -இவற்றில் கூறப்பட்ட சாண்டில்ய வித்யை ஒன்றே என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்–ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் என்பதன் மூலம் அந்தராதித்ய வித்யை என்பதும்
கண்களை இருப்பிடமாக ப்ரஹ்மம் என்பதால் அஷி வித்யை என்பதும்
எண்ணப்பட பிவேண்டும் என்று நிரூபணம் -3- ஸூத்ரங்கள்

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்–கட உபநிஷத்தில் உள்ள தரித்தல் என்னும் தன்மை
மற்றும் வியாபித்தல் என்னும் தன்மைகள்
அனைத்து வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டியது இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்–சாந்தோக்யத்திலும் தைத்ரியத்திலும் கூறப்படும் புருஷ வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் 1- ஸூத்ரம்

3-3-10- வேதாதி அதி கரணம்–தைத்ரிய சீஷா வல்லி யில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-11-ஹாநி அதி கரணம்–புண்ணியம் மற்றும் பாப கர்மங்கள் மோக்ஷம் பெறுபவனிடம் இருந்து விலகி
மற்றவர்கள் இடம் சேர்கின்றன என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்–உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் தனது உடலை வீட்டுக் கிளம்பும் காலத்தில்
அழிந்து விடுகின்றன என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-13-அநியம அதி கரணம்–அனைத்து வித்யைகளுக்கும் அர்ச்சிராதி கதி மார்க்கம் பொதுவானது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-14- அஷரதி அதி கரணம்–தாழ்வுகளால் தீண்டப்படாமல் உள்ள ப்ரஹ்மத்தின் மேன்மை
அனைத்து வித்யைகளிலும் எண்ணப் பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்–ப்ருஹத் உபநிஷத்தில் -உஷஸ்தர் -கஹோலர்-ஆகியவர்கள்
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-3-16- காமாதி அதி கரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் -இரண்டிலும் உள்ள தஹர வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3- ஸூதரங்கள்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீதா உபாஸனை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் சேர்ந்தாலும் விடுத்தாலும் தவறு இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்–அபஹத பாப்மத்வம் போன்ற குணங்களை உபாசிக்கும் போது
தஹர ஆகாசம் ப்ரஹ்ம ஸ்வரூபமும் உபாஸிக்கிப் பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்–நாராயண அநு வாக்கம் என்பது ப்ரஹ்ம வித்யைகளின்
மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருளை உணர்த்துவதற்காகவே உள்ளது என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்-மனச்சித் அக்னி போன்றவை -கிரியாமயமான யாகத்துக்கு
கற்களை அடுக்கி உண்மையான அக்னி உண்டாக்கச் செய்யும் யாகம் -அங்கம் அல்ல
வித்யா மயமான யாகத்துக்கே -எண்ணத்தின் மூலமாக அக்னி எழுப்பிச் செய்யப்படும் யாகம் -அங்கமாக உள்ளது என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

 

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்–சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும் தன்னைப் பாபங்கள் அற்றவன்
முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாஸித்திக் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்–சாந்தோக்யத்தின் உத்கீத உபாஸனங்கள் அனைத்து சாகைகளிலும் தொடர்புடையவை ஆகும் என்று நிரூபணம் -2 ஸூ தரங்கள்

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்-சாந்தோக்யத்தில் கூறப்பட்ட வைஸ்வாநர உபாஸனமே சரியானது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்–ஸத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டவையே என்ற நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-25-விகல் ப அதி கரணம்–ப்ரஹ்ம வித்யைகளில் ஏதாவது ஒன்றைப் பின் பற்றினாலே பேறு என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்–முன்பு நிரூபிக்கப் பட்ட உத்கீத உபாஸனமானது அனைத்து யாகங்களில்
எப்போதும் அங்கம் அல்ல என்பதைச் சிலர் மறுக்க அதற்கு சமாதானம் கூறப்படுகிறது -6- ஸூத்ரங்கள்-

————

நான்காம் பாதம் – அங்க பாதம் –-கர்மங்கள் அனைத்துமே கைவிடத்தக்கவை என்னும் கூற்று மறுக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள பலவற்றையும்
அவற்றைக் கைக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் லில் கூறப்படுகின்றன
15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

3-4-1-புருஷார்த்த அதிகரணம்–கர்மங்களை அங்கமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாஸனம் மூலம்
மோக்ஷம் என்கிற புருஷார்த்தம் கிட்டும் என்று நிரூபணம் -20-ஸூ த்ரங்கள்

3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்–ஸ ஏஷ ரஸா நாம் ரஸ தம -சாந்தோக்யம் -1-1-3- என்பதன் மூலம்
உத்கீதம் புகழப்படுவதற்கு மட்டுமே இது போன்று கூறப்படுகிறது
என்னும் வாதம் நிரஸனம் -இது விதி வாக்யமே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-4-3- பாரிப்லவாதி கரணம்–கௌஷீதகி -3-10- சாந்தோக்யம்-6-1-1- போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு கூறும் வித்யைகளைப் புகழுவதற்காகவே என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்–சந்நியாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் போது
அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர்பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-4-5-சர்வ அபேஷாதி கரணம்–க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஜம் போன்றவை ப்ரஹ்ம உபாஸனம் எதிர்பார்க்கிறது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-4-6- சம தமாத்யாதிகரணம்–க்ருஹஸ்தர்களுக்கும் சம தமாதிகள் கைக்கொள்ளத் தக்கவையே என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்-பிராண வித்யை கூடிய ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே
அனைத்து விதமான உணவும் அனுமதிக்கப்படுகின்றன என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-8- விஹி தத்வாதி கரணம்–யஜ்ஜாதி கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக இருப்பதால்
ப்ரஹ்ம நிஷ்டர்கள் க்ருஹஸ்தர்கள் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்

3-4-9-விதுராதிகரணம்–எந்த ஆஸ்ரமமும் இல்லாத மனைவியை இழந்த விதுரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

3-4-10-தத் பூதாதிகரணம்–ப்ரஹ்மசாரி வான ப்ரஸ்தன் ஸந்நியாசி ஆகியவர்கள் தங்கள் ஆஸ்ரமங்களைக் கைவிட நேர்ந்தால்
அவர்களுக்கு அதன் பின்னர் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-11-ஸ்வாம்யதிகரணம்–ருத்விக்கால் -யாகம் நடத்தி வைக்கும் அதிகாரியால்
உத்கீத உபாஸனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்–பால்யம் பாண்டித்யம் மவ்நம் போன்றவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகவையே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-4-13-அநாவிஷ்கராதி கரணம்-பால்யம் என்பது ப்ரஹ்ம ஞானிகளை பொறுத்த வரையில்
தங்கள் மேன்மையை வெளிக்காட்டாமல் இருப்பதே ஆகும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-14-ஐஹிகாதிகரணம் –இந்தப்பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே கைகூடும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-4–15-முக்தி பலாதிகரணம்-மோக்ஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்குத் தடை ஏற்படா விட்டால் பலன் உடனே கிட்டும்
தடைகள் ஏற்பட்டால் தாமதமாகவே கிட்டும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

———-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகன் கைக்கொள்ள வேண்டிய முறை -புண்ய பாபங்கள் நீங்கும் விதம் –
நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றிய தீர வேண்டும் என்பதும்
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

4-1-1-ஆவ்ருத்யதிகரணம் –ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்–

4-1-2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1-3- ப்ரதீகாதி கரணம் – பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –இவை ஆத்மா அல்ல
இவற்றை உயர்ந்த தேவதை என்று எண்ணியே உபாஸிக்க வேண்டும் -என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்—

4-1-4-ஆதித்யாதிமத்யதிகரணம் – உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாப் பார்க்க வேண்டும் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்–

4-1-5-ஆஸிநாதி கரணம் —அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்-

4-1-6–6-ஆப்ரயாணாதி கரணம் -மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1–7-ததிகமாதிகரணம் –ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1–8-இதராதிகரணம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-9-அநாரப்த கார்யாதிகரணம்–பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-10-அக்னி ஹோதராத்ய திகரணம்–பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபணம் –3 ஸூத்ரங்கள் –

4-1-11-இதர ஷபணாதி கரணம் –பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

4-2-1-வாகாதி கரணம்– மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள் –

4-2-2- மநோதிகரணம் – மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபணம் 1 ஸூத்ரம்-–

4-2-3- அத்யஷாதி கரணம் -பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபணம் –1 ஸூத்ரம்–

4-2-4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்-

4-2-5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் – வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-2-6-பர சம்பத்த்யதிகரணம் — தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபணம் ––1 ஸூத்ரம்-

4-2–7-அவிபாகாதி கரணம்– பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-8-ததோகோதி கரணம் – மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-2-9-ரஸ்ம்யநு சாராதி கரணம் -– ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-2-10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்மத்தை அடைவான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-11-தஷிணாயநாதி கரணம் – தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபணம் –2–ஸூத்ரங்கள்–

———–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–மூன்றாம் பாதம் கதி பாதம் -பரமபததுக்கு ஆதி வாஹிகர்கள் மூலமாக
ப்ரஹ்ம ஞானியை அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது — 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

4-3-1- அர்ச்சிராத்யாதி கரணம் — அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-3-2-வாய்வதிகரணம்-– சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-3–வருணாதி கரணம் –– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-4-ஆதி வாஹாதிகரணம்- – அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-3-5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபணம் –10 ஸூத்ரங்கள்-

————–

நான்காம் பாதம் -முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம்-கைங்கர்யம் – கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

4-4-1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் – முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-4-3-ப்ரஹ்மாதிகரணம்— ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-4-சங்கல்பாதி கரணம் – – தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-4-5-அபாவாதி கரணம் – முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-4-6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் – ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபணம் -6 ஸூத்ரங்கள்-

——–

அதிகாரணம் -1- ஜிஞ்ஞாஸா அதிகரணம்
1-1-1- அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–அத அத ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா-

அத பிறகு -அத ஆகவே -கர்மங்களைக் குறித்து அறிந்ததால் -அதன் பின்னர் -அதன் காரணமாக
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆராய்வதில் ஆர்வம் உண்டாக வேண்டும்
பூர்வ மீமாம்ஸையிலும் -1-1-1-அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா–அதன் பிறகு -ஆகவே தர்மத்தைக் குறித்த ஆய்வு –
அதன் இறுதியில் -12-4-35-ப்ரபுத்வாத் ஆர்த்விஜ்யம் -அவர்களால் இயலும் என்பதால் ருத்விக்காக இருத்தல்
என்கிற ஸூத்ரம் அதன் இறுதிப் பகுதியில் உண்டு

ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டுவிதமான கர்மங்கள்
தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்களையும் தர வல்லது

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந் நாஸ்த்ய கரிதஃ கரிதேந.
தத் விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்৷৷முண்டகம் -1.2.12৷৷

ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
– ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி-அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –
ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்-ஆச்சார்யரை அணுகி கற்கிறான்

ப்ராஹ்மண -வேத அப்யாஸத்தில் இழிந்தவன்
கர்மசிதான் -கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட
பரீஷ்ய –கர்மங்கள் மூலம் ஆராதிக்கப் படுபவர்களும் -அந்த லோகங்களும் அழியக்கூடியவையே என்று அறிந்து
அக்ருத –நித்தியமாக உள்ள பரம புருஷன்
க்ருதேந -கர்மங்கள் மூலம் பெறப்படுபவன் அல்லன் என்று அறிந்து
நிர்வேத மாயான் -ஒருவன் ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்
ஸ –அப்படிப்பட்டவன்
தத் விஜ்ஞாநார்தம் ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ-அந்தப்பிரம புருஷனை அறியும் பொருட்டு
தனது கையில் சமித்தை எடுத்துக் கொண்டு ஆச்சார்யனை அடைய வேண்டும்
ஷ்ரோத்ரியம் –வேதாந்தங்களை நன்கு அறிந்த ஆச்சார்யன்
ப்ரஹ்ம நிஷ்டம்–பரம புருஷ ஸ்வரூபத்தை நேரடியாக அறிந்தவராக இருக்க வேண்டும்

தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்த சித்தாய ஷமாந் விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம்৷৷1.2.13৷৷

மனஸ் சாந்தி உடன் -பிரசாத சித்தம் -புலனை அடக்கி -அக்ஷரம் -ஸ்வரூப விகாரம் இல்லாமல் –
சத்யம் குணத்தாலும் மாறாமல் -ப்ரஹ்ம ஞானம் ஆச்சார்யர் மூலமே பெறலாம்

————–

அதிகரணம் 2- ஜந்மாத் அதிகரணம்
1-1-2-ஜன்மாதி அஸ்ய யதி

இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி போன்ற செயல்கள் எதனால் ஏற்படுகின்றதோ அதுவே ப்ரஹ்மம்

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபி ஸம் விஷந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம–-தைத்ரியம் ৷৷3.1.1৷৷

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –

ஸூத்ரத்தில் யத -ஐந்தாம் வேற்றுமை உருபு -காரணத்தைக் காட்டும்
ஜன்மத்துக்குக் காரணம் நிமித்த உபாதானம் இரண்டையுமே கொள்ள வேண்டும்
யதோ வா இமாநி –எந்த ஒன்றிடம் இருந்து

என்பதால் இந்த அர்த்தம் உறுதி ஆகிறது
ஸத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –6-2-1-
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது-அந்த ஓன்று மட்டும் இருந்தது – நான் பலவாகக் கடவேன் என்று சங்கல்பித்து முதலில் தேஜஸ்ஸைப் படைத்தது

அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் -ஸ்வேதாஸ்வரம் -4-9-
மாயையை யுடைய ஈஸ்வரன் ப்ரக்ருதி மூலம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான்

பூர்வ பக்ஷம் -நிமித்த உபாதான இரண்டுமாக ப்ரஹ்மம் இல்லை என்பது
இத்தை -1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண் படாமல் இருக்கும் -என்றும்
1-4-24-அபித்யோப தேஸாத் ச–ப்ரஹ்மம் தானே சங்கல்பிப்பதாகக் கூறுவதால் என்றும்
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச-இந்த நிமித்த உபாதான இரண்டு விதமாகவும் உள்ளதாக ஸ்ருதிகள் நேரடியாக் கூறுவதால் என்றும்
1-4-26-ஆத்ம க்ருதே-தன்னைத் தானே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதால் என்றும்
உள்ள ஸூத்ரங்களால் தள்ளப் படுகின்றன

இதற்கு ஆஷேபம் தானே காட்டி சமாதானமும் அருளிச் செய்கிறார்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்–பிரளயத்தின் போது உலகத்தைப் போன்று
ப்ரஹ்மத்துக்கும் மாற்றம் அடையும் என்னும் தோஷம் வருமே

2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி–ப்ரஹ்மம் தனக்கு நன்மையைச் செய்து கொள்ள வில்லை
தோஷத்தையே ஏற்படுத்திக் கொள்கிறது

இதற்க்கு சமாதானமாக
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்றும்
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்–ப்ரஹ்மம் வேறானது என்று கூறுவதால்-

ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய –ஸ்வேதாஸ்வரம் -5-1-
அவித்யை கர்மம் அழியக் கூடியது
வித்யை ப்ரஹ்ம ஞானம் அழியாதது
இரண்டையும் நியமிப்பவன் ஜீவாத்மாவை விட வேறு பட்ட ப்ரஹ்மம்

ச காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித ஜனிதா ந ஸாதிப -ஸ்வேதாஸ்வர -6-9-
பரம புருஷனே அனைத்துக்கும் காரணம்
இந்திரியங்களின் அதிபதியாக உள்ள ஜீவாத்மாவின் அதிபதியாக உள்ளான்
அவனை உண்டாக்கியவரும் அவனுக்கு தலைவனும் யாரும் இல்லை -என்றும்

ஷரம் ப்ரதானம் அம்ருத அக்ஷரம் ஹரஸ் ஷராத்மாநா விஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர -1-10-
பிரதானம் ஷரம் அழியக்கூடியது
இதனைத் தனது இன்பத்துக்காகக் கொள்பவன் அக்ஷரம் எனப்படும் ஜீவாத்மா -இதனால் ஹரஸ் எனப்படுபவன்
ஒரே தேவன்
இவை இரண்டையும் நியமித்தபடி உள்ளான்

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

ப்ரஹ்மமே பிரத்யாகாத்மாவின் ஆத்மாவாக உள்ளவன் என்பதை
யஸ் ஆத்மநி திஷ்டன் –யஸ்ய ஆத்மா சரீரம் -ப்ரு -3-7-22-
யார் ஆத்மாவில் வஸிக்கிறாரோ –யாருக்கு ஆத்மா ஸரீரமோ என்றும்

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்ய ஏகோ நாராயண -ஸூபால –7-1-
அனைத்து பூதங்களுடைய ஆத்மா ஆவான்
பாபங்கள் அற்றவன்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவன்
அவன் நாராயணனே ஆவான்
போன்ற பல ஸ்ருதிகள் உண்டே

குணங்களும் தோஷங்களும் சரீர அளவிலே உள்ளவையே
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்பதில்
உதாரணங்கள் -என்றது சரீரத்துடன் கூடிய ஜீவாத்மா
மனிதன் தேவன்
குழந்தைப் பருவம் வாலிபன் வயோதிகம் போன்ற தோஷங்கள் சரீரத்துக்குத் தானே
இதே போல் ஆத்மாவுக்கு உள்ள ஞானம் சுகம் தேகத்தைத் தொடுவது இல்லை

ஆகவே காரண நிலையிலும் கார்ய நிலையிலும் பிரத்யகாத்மாவை சரீரமாகக் கொண்டதாயும்
அதன் ஆத்மாவாகவும் உள்ள ப்ரஹ்மமும் பிரத்யாகாத்மாவும் சாமான கரண்யத்தில் வைக்கப்படலாம்
இதனால் இருவதும் ஒன்றே என்னும் மாயாவாதத்தைத் தவிர்க்கவே
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-என்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்பது உறுதியாகும் பொருட்டே
ஒரே வேற்றுமையில் ப்ரஹ்மத்தையும் பிரத்யகாத்மாவையும் படிக்கலாமே

2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
கர்மம் காரணமாகவே இருப்பதால் பாரபக்ஷமோ கருணை இன்மையோ ப்ரஹ்மத்துக்கு வராதே

2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரஹ்மம் தவிர வேறே ஒன்றுமே இல்லை என்பதால்
ஜீவாத்மாவும் கர்மமும் இல்லை என்றால்
அது சரியல்ல -அவை அநாதி

ஜீவாத்மாக்களும் கர்ம ப்ரவாஹமும் தொடக்கம் அற்றது என்பதை கட -5-13-நித்யோ அநித்யானாம் சேதன அசேதனாநாம் என்றும்
ஞா அஜ்ஞவ் த்வவ் –ஸ்வே -1-9-பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
என்ற ஸ்ருதி வாக்கியங்கள் விளக்கும்

பிரளய காலத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றியே இருப்பதை
ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் ந -அந்யத் கிஞ்சித் மிஷத் – ஸ்ருதி விளக்கும்

ஆத்மா நித்யம் உத்பத்தி இல்லை என்பதை
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:-என்று
ஸ்ருதி கூறுவதாலும் ஸ்ருதி நித்யமாகையாலும் என்றும்
அது ஞான ஸ்வரூபமே என்பதை -2-3-19- ஜ்ஜோ அத ஏவ-என்றும்
அது அணு அளவானதே என்பதை 2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்-என்று
சரீரத்தில் இருந்து வெளிக்கிளம்புதல் நகர்தல் மீண்டும் திரும்புதல் கூறப்படுவதால் என்றும்

ஞான ஸ்வரூபன் -ஞானம் உடையவன் -தர்மபூத ஞானமும் தர்மி ஞானமும் இரண்டும் உண்டு என்பதை
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்-என்றும்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்-என்றும்
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதால் ஞானம் என்றே கூறுவதில் தவறு இல்லையே –

ஒரு சிலர் ஞானமே ஆத்மா -ஆத்மாவுக்கு அறிவே ரூபம்
இந்த்ரங்கள் மூலம் பெறப்பட்ட ஞானமே ஆத்மா
ஆத்மா விபு
என்று கூறும் தோஷங்கள் அனைத்தும்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா-என்ற
ஸூத்ரத்தால் கூறப்பட்டன

2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா
என்று
ஜீவனே செய்கிறான் பிரகிருதி அல்ல
அதுவும் ப்ரஹ்மத்தின் தூண்டுதலால் என்பதை
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:–என்ற ஸூத்ரங்கள் நிரூபிக்கின்றன

2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச-போன்ற ஸூ த்ரங்கள் விளக்கும்

ஸ்வேதாஸ்வர -4-7- அநீசயா சோசதி முஹ்யமாந
ஜூஷ்டாம் யதா பஸ்யத் அந்நிய மீச மஸ்ய மஹிமாநம் இதரோ வீத சோக -என்று
ஜீவன் பிரக்ருதியால் மோகம் அடைந்து வருந்துகிறான்
அதே மரத்தில் உள்ளவனும் அனைத்தையும் நியமிப்பவனுமான பரமாத்மாவின் மேன்மையை அறிந்து
அவன் துன்பங்கள் விளக்குகின்றன -என்றும்
ஸ்வே –5-1- ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய
அழியக்கூடிய அவித்யை கர்மம் அழியாத ப்ரஹ்ம ஞானம் இரண்டையும் இயக்கம் ப்ரஹ்மம்
ஜீவாத்மாவை விட வேறு பட்டவன் என்றும்

ப்ராஞ்ஜே ந ஆத்ம நா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம்ன் கிஞ்சன வேத ந அநந்தரம் –4-3-21-
பரமாத்மாவால் தழுவி அணைக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளும் புறமும் சிறிதும் அறியாதவனாக என்றும்
ஸ்வே -1-19- ஞா அஜ்ஞவ் த்வா அஜவ் ஈஸ அநீஸவ்-என்றும்
ஸ்வே -1-6- பிருத காத்மா நம் பிரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி
வெவ்வேறாக அறிந்தவன் அந்த ஞானமே ஹேதுவாக ப்ரஹ்மத்தின் பிரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்

இத்தையே முண்டகம் -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்மம் யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்றும்
ஸ்வே –6-9-ஸ காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ஸாதிப –
முண்ட -1-1-9- யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -அனைத்தையும் அறிந்து உணர்ந்தவன்
ஸ்வே -6-8- பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
ஸ்வ 6-19–நிஷ் கலம் நிஷ் க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
கட -5-13- நித்யோ நித்யானாம் சேதனச் சேதனநாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான்
பதிம் விஸ் வஸ்ய ஆத்ம ஈஸ்வரம்

சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸீ
ப்ரு -2-5-19- அயம் ஆத்மா ப்ரஹ்ம
ஐதரேயம் -2-2-46- ய அசவ் ச அஹம் ய அசவ்
ப்ரு -1-4-10-அதயோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்நிய அசவ் அந்நிய அஹம் அஸ் மீதி ந ஸ வேத
ப்ரு -1-4-7-அக்ருத்ஸ நோ ஹி ஏஷ –ஆத்மா இதி ஏவ உபாஸீத
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம இமே கிதவா

ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சமே என்பதை

சாந்தோக்யம் -3-12-6-பாதோஸ்ய விஸ்வா பூதாநி
அனைத்து உயிர்களும் அவனுடைய ஒரு பாதமே ஆகும் என்றும்
மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா,
மம அம்ஸ ஏவ-எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள,
மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி-ஈர்க்கிறது.

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:-ஒளி முதலானவை போன்றே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும்-அம்சமாக இருந்தாலும் வேறே வேறே தான்
பால் வெண்மை -பிரகாசம் ஜாதி குணம் சரீரம் போல்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்-ஜீவாத்மா கர்த்தாவாகிறான் என்பதற்கும்
2-3-40-பராத்து தத் ச்ருதே :-அந்த செயல் ஆற்றும் தன்மை பரமாத்மாவாலேயே உண்டாகிறது
என்பதற்கும் முரண்பட்டு இல்லை

ஸ்ரீ விஷ்ணு புராணமும்
ஏக தேச ஸ்தி தஸ்ய அக்நே ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண சக்தி தத் ஏதம் அகிலம் ஜகத் –1-22-56-57
ஒரு இடத்தில் உள்ள அக்னியின் தேஜஸ் பல இடங்களிலும் பரவுவது போல்
பர ப்ரஹ்மத்தின் சக்தி எங்கும் பரவி உள்ளது

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்வ ஜாதோந வை த்விஜ
தஸ்ய ஸ்ரு ஜஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரே –1-22-38-
பிராணியை ஸ்ருஷ்டித்த ஹரியே அந்தர்யாமியாகவும் உள்ளான்

தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோர் அம்சம் உத்பவா –1-22-20-

சிலர் உபாதி என்ற ஒன்றைக் கல்பித்து சொல்லும் வாதங்களை
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்
இவ்வாறு அவித்யை உபாதி இரண்டையும் தள்ளி ஸித்தாந்தம் நிரூபணம்

——–

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்

1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

யதோ வா இமானி பூதாநி – தைத்ரியம் 3-1-1- ஒரே காரணம் ப்ரஹ்மமே
அனுமானம் கொண்டு அறிய ஒண்ணாது

———-

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

ஸமன்வய என்பது புருஷார்த்ததுடன் ஸம்பந்தம் கொண்டு இருத்தல்
ஸாஸ்த்ரத்துக்கு புருஷார்த்தம் போதிப்பதே நோக்கம்
ஆகவே ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியப்படும் என்பதில் எந்த வித தோஷமும் இல்லையே

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ திருவாய் மொழி-தசக த்வந்த்வ- ஏக கண்ட்யம் —

February 28, 2023

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ  திருவாய் மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் *  (65) என்று காட்டியருளினார்

ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை *ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார்.

இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசக த்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது.

—————————-

ஸ்ரீ பாஷ்ய த்ராவிடாக மாத்யதசக த்வந்த்வ ஐக கண்ட்யம்–
ஸ்ரீ ஈட்டில் இரண்டாம் திருவாய் மொழி பிரவேசத்திலே அருளிச் செய்த பிரதம சங்கதி கிரந்தத்திற்கு விவரணம் –

முதல் திருவாய் மொழியும் இரண்டாம் திருவாய் மொழியும் அத்யாய சதுஷ்டயாத்மக சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ர சமாநார்த்தகமாய் இருக்கும் –
சாரீரகார்த்தம் தான் ப்ரஹ்ம காரணத்வமும் -ததபாத்யத்வமும் -முமுஷு உபாஸ்யத்வமும் -முக்த ப்ராப்யத்வமும் –
காரணத்வமபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா -என்னக் கடவது இறே-
இவ்விரண்டு திருவாய் மொழியும் வேதாந்த சாஸ்த்ர சமாநார்த்தம் என்னும் இடத்தை நம்பிள்ளை ஈட்டிலே-வீடுமின் முற்றின ப்ரவேசத்திலே –
தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது –
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியிலே –உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம்
சங்கரஹமாய் இருக்கிறது இத்திருவாய் மொழி என்று அருளிச் செய்தார் –
இத்தையும் கொண்டு வேதாந்தாசார்யரும் த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலே
ஆதவ் சாரீரகாரத்த க்ரமமிஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா -என்று அருளிச் செய்தார் –

இன்னமும் –புரா ஸூத்ரைர் வ்யாசம் சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ச புநர் உபாவேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி பிரசவ்
புநர் ஜஜ்ஜே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர-என்று சாமானையென சாரீரகத்துக்கும் திருவாய் மொழிக்கும் உண்டான ஐகமத்யத்தை ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்தார் –
ஆகையால் இரண்டு திருவாய் மொழியும் பூர்வ உத்தர த்விகாத்மகமான சாரீரக சாஸ்த்ர சமா நார்த்தம் என்று கொள்ள வேணும் –
இஸ் ஸம்ப்ரதாயார்த்தத்தை பாட்டுக்கள் உபபத்தியுடனே ஏறிட்டு பிரகாசிப்பிக்கிறோம் –

முதல் திருவாய் மொழி பூர்வ த்விகத்தோடு சேரும்படியைத் தெரிவிக்கிறோம் -அது எங்கனே என்னில்-
முதல் பாட்டு -நாலடியும் சதுஸ் ஸூத்ர்யர்த்தமாகவும்
மனனகம் -என்கிற இரண்டாம் பாட்டு -ஈஷத்ய-ஆனந்தமய -அந்தராதித்ய அதிகரண அர்த்தமாகவும்
இலனது -என்கிற மூன்றாம் பாட்டு ஆகாச பிராண ஜ்யோதி இந்த்ர பிராணாதி கரண அர்த்தமாகவும்
நாமவன் -அவரவர் -நின்றனர் -என்கிற நாலாம் பாட்டு தொடங்கி மூன்று பாட்டும் த்ரிபாத் யர்த்தமாகவும்
ஆக -ஆறு பாட்டும் பிரதம அத்யாய அர்த்தமாய் –

திட விசும்பு என்கிற ஏழாம் பாட்டு த்வதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
சுரரறி -உளன் எனில் -என்கிற எட்டாம் பாட்டும் ஒன்பதாம் பாட்டும் தர்க்க பாதார்த்தமாகவும்
பரந்த தண் -என்கிற பத்தாம் பாட்டும் நிகமன பாட்டும் வியத்பாத துரீய பாதார்த்தமாகவும்
ஆக -ஏழாம் பாட்டு தொடங்கி நிகமத்து அளவும் த்விதீயாத்ய யர்த்தமாய்
இத்திருவாய் மொழி பூர்வ த்விகார்த்தமாகக் காணலாம் –

அதில் முதல் பாட்டில் -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -என்கிற சந்தை பிரதம அதிகரண சமாநார்த்தம் -அது எங்கனே என்னில்
பிரபாகர் மதரீத்யா சப்தத்துக்கு கார்யார்த்தத்திலே போதகதவை சக்தியாகையாலும்
பரிநிஷ்பந்ந வஸ்துவில் சப்தத்துக்கு போதகதவை சக்தி இல்லாமையாலும் வேதாந்தங்கள் பரிரிஷ்பந்நமான ப்ரஹ்மத்திலே பிரமாணம் ஆக மாட்டாது –
பிரமாணம் அல்லாமையாலே சாங்க அத்யயனம் பண்ணினவனுக்கும் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி வர மாட்டாது –
அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ்யயாஜி நஸ் ஸூக்ருதம் பவதி–இத்யாதி வாக்கியங்களில் சாதுர்மாஸ்யாதி கர்மங்களுக்கும் அக்ஷயமான பலம் ஸ்ருதம் ஆகையாலும்
கர்ம அல்ப அஸ்திர பலத்தவ நிர்ணயம் ஸித்தியாது-ஆகையால் கர்மணாம் அல்ப அஸ்திர பலவத்வ நிர்ணய ஸஹித அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப
விசிஷ்ட ஹேது சித்தியாமையாலே வேதாந்த ஆரம்பம் கடியாது என்கிற பூர்வ பக்ஷத்திலே-
அம்பா தாத மாதுலாதி சப்தங்களில் சித்த ரூபமான மாதா பித்ராத் யர்த்தங்களில் பிரதம வ்யுத்பத்தி காண்கையாலும்-அது கார்ய ரூப அர்த்தத்தில் என்கிற நிர்பந்தம் இல்லாமையாலும் வேதாந்தங்களுக்கு பரி நிஷ்பந்ந போதனா சாமர்த்தியம் யுண்டாய் அதுகள் பிரமாணம் ஆகையால் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப விசேஷயாம்சம் லபிக்கும்-
கர்ம விசாரம் பண்ணினவனுக்கு ஆவ்ருத்தி விதாநாதிகளாலே கர்மங்களுக்கு சாதிசய பலத்தவம் அவகதம் ஆகையாலும்
அக்ஷய்யத்தவ கீர்த்தனம் சிரகால ஸ்தாயித்வ அபிப்ராயமாக வாயுஸ் சாந்தரிக்ஷஞ்சை ததம்ருதம்-என்கிற இடத்தில் அம்ருதத்வம் போலே நிர்வஹிக்க வேண்டுகையாலும்
கர்மாணாம் அல்ப அஸ்திர பலத்வ நிர்ணய ரூப விசேஷணாம்சம் சித்திக்கும் –

இப்படி விசிஷ்ட ஹேது லபிக்கையாலே சாஸ்த்ரா ஆரம்பம் கடிக்கும் என்று இறே பிரதம அதிகரணர்த்தம்-

இனி உயர்வற யுயர் நலமுடையவன் என்று அநவதிக ஆனந்த ஸ்திர பல ரூப குண விபூதி மத்தையைச் சொல்லி –
யவன் -என்று இவ்வர்த்தத்துக்கு -ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி -சுருதி பிராமண ப்ரஸித்தியையும் காட்டுகையாலே சித்த வஸ்துவான பர ப்ரஹ்ம
வேதாந்த வேத்யம் என்று சித்திக்கையால் இச்சந்தை விசேஷயாம்சமான அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதியை ஸூசிப்பிக்கிறது –

உயர்வற -என்கிற இது ப்ரஹ்மாதிகளுடைய கர்ம அதீன உச்சராயம் பகவத் உச்சராய அபேக்ஷயா இல்லை என்னும்படி இருக்கும் என்று
சொல்லுகையாலே கர்மங்களினுடைய அல்ப அஸ்திர பலத்வ நிர்ணயத்தை ஸூசிப்பிக்கிறது –

ஆக –உயர்வற உயர்நலம் யுடையவன் யவன் -என்கிற அளவிலே விசிஷ்ட ஹேதுவை ஸூசிப்பிக்கையாலே –
சாரீரக ஆரம்ப சமர்த்தந பர பிரதம ஸூத்ரார்த்தம் இச்சந்தை என்னக் குறையில்லை –

கிஞ்ச-ப்ரஹ்ம சப்த ப்ரவ்ருத்தி நிமித்தமான நிரதிசய ப்ருஹத்த்வத்தை -உயர்வற உயர்நலம் யுடையவன் -என்று முக்த கண்டமாக அருளிச் செய்து –
அவன் துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று ஜிஜ்ஞாசா பல நிர்ணய கார்ய யுக்தி முகேந
ஜிஜ்ஞாச சப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும் இச்சந்தை பிரதம அதிகரணர்த்தம் –

இப்பாட்டுத் தான் வாக்யைக வாக்கியமாக ஓர் அன்வயத்தையும் வாக்ய த்ரயமாக ஓர் அன்வயத்தையும் உடைத்தாகையாலே
வாக்ய த்ரய பக்ஷத்தில் இவ்வர்த்தம் ஸ்வ ரசமாய் சித்திக்கும் –

மயர்வற மதிநலம் அருளினன் யவன் -என்கிற இது ஜென்மாதிகாண ப்ரமேயமானபடி எங்கனே என்னில்-
ப்ரஹ்ம வித்தையில் வேதாந்தம் பிரமாணம் ஆனாலும் லக்ஷணம் ப்ரஹ்மத்துக்குக் கிடையாமையாலே ப்ரஹ்ம பிரதிபத்தி வர மாட்டாது -அது எங்கனே என்னில் –

யாதோ வா விமானி -இத்யாதி வாக்யம் ஜென்ம காரணத்வாதிகளை லக்ஷணமாக அறிவிப்பிக்க மாட்டாது –

ஜென்ம காரணத்வாதிகளை விசேஷணம் என்கிறீரோ உப லக்ஷணம் என்கிறீரோ –

விசேஷண பேத ப்ரயுக்த விசேஷ்ய பேதம் பிரசங்கிக்கையாலே விசேஷணம் என்னக் கூடாது –
உப லக்ஷய உப லக்ஷண வ்யதிரிக்த உப லஷ்ய கத ஞாதாம்சம் கிடையாமையாலே உப லக்ஷணம் என்னவும் கூடாது -என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகும் அளவில்
அநேக விசேஷண விசிஷ்ட விசேஷ ஐக்யஸ்ய-தேவதத்த ஸ்யாமோ யுவா லோஹிதாஷ-இத்யாதி ஷூ தர்சநாத் –

கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கவ்-இத்யாதிஷூ
கண்டத்வ முண்டத்வாதி விருத்த விசேஷணா நாமேவ விசேஷ்ய பேதகத்வ தர்சநாத் ஜென்மாதி காரணத்வாதே கால பேதேந ப்ரஹ்மணி அவிருத்த த்வாச்ச விசேஷணத்வம் உபபன்னம்-

உபலக்ஷண உப லஷ்ய வ்யதிரிக்த உப லஷ்ய கத ப்ரஹ்மத்வாதியான த்ருதீயாகாரம் லபிக்கையாலே உபலக்ஷணத்வமும் கூடும் –

இப்படி ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணம் ஆகையாலேலக்ஷணங்களால் ப்ரஹ்ம பிரதிபத்தி வருகையால் ப்ரஹ்ம விசாரம் கடிக்கும் என்று இறே ஜென்மாதிகரண ப்ரமேயம் –

இனி இவ்விடத்தில் -மயர்வற மதிநலம் அருளினன் எவன்-என்று அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞான ரூபமான மயர்வு போம்படி பக்தி ரூபாபன்ன ஞானத்தை அருளினன் என்று சொல்லுகையாலே அனுக்ராஹத்வம் த்யேயத்வ வ்யாப்தமாய் -காரணம் து த்யேய-என்கிறபடியே த்யேயத்வம் காரணத்வ அபேக்ஷகமாய் இருக்கையாலே
தத் அஷேபக த்யேயத்வ அஷேபகமான அனுக்ராஹ கத்வ ரூப தர்மகதந முகேந ஜென்ம காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்தை ஸூசிப்பிக்கையாலே
ஜென்மாதிகரண பிரமேயம் இச்சந்தை –

கிஞ்ச -மயர்வற என்று அஞ்ஞான நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோக்ஷ -என்கிற முக்தி காரகத்வம் கண்டா யுக்தமாய் இருக்கிறது –

அந்த மோக்ஷம் தான் ஜகத் உத்பவஸ்தி ப்ரணாச சம்சார விமோச நாதய-என்று உத்பவஸ்திதி ப்ரணாசங்களைப் போலே சம்சார விமோசனத்தையும்
ப்ரஹ்ம கார்யமாக அபியுக்தர் அருளிச் செய்கையாலே ப்ரஹ்ம கார்யம் இறே-அது தானும் ஜென்ம காரணத்வாதிகளைப் போலே ப்ரஹ்ம லக்ஷணம் –
யத் பிரயந்த்யபி சம்விசந்தி என்கிற ஸ்ருதியிலே யத் அபி சம்விசந்தி என்று ஜகத் பிரளய காரணத்வத்தையும் சம்சார விமோசன காரணத்வத்தையும் சொல்லிற்று இறே –

ஸ்ருத பிரகாசிகையிலே பட்டரும் அப்படியே வியாக்யானம் செய்து அருளினார் –

ஆனால் ஜென்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் ஜகாத் சம்ஹார காரணத்வம் இவை இத்தனையும் விட்டு மோக்ஷ காரணத்வ மாத்ரத்தையே அருளிச் செய்வான் என் என்னில்
ஜென்ம காரணத்வாதிகள் சமுதிதமே ப்ரஹ்ம லக்ஷணம் என்கிற நிர்பந்தம் இல்லை -ஏகைகமும் லக்ஷணமாம் என்கிற அர்த்தத்தை ஸூசிப்பிக்கைக்காக –
மோக்ஷ காரணத்வ மாத்ரத்தை அருளிச் செய்தார் –

ஆனால் ஜென்ம காரணத்வாதிகளில் அந்நிய தமத்தை அருளிச் செய்தாலும் இந்த பிரயோஜனம் ஸித்திக்குமே-
விசேஷித்து மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்வான் என் என்னில்

வேதாந்த சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் மோக்ஷம் ஆகையாலும் தமக்கு எம்பெருமான்
மோக்ஷத்தை தந்து அருளுகையாலும் மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்தார் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்ருஷ்ட்டி காரணத்வாதிகள் ஏகைகமே சித்த அசித் வ்யாவருத்தமாய் இறே இருப்பது -ஸூத்ர பாஷ்யங்களில் ஜென்ம காரணத்தவாதிகளை
சமுதிதமாகச் சொல்லுகைக்கு பிரயோஜனம் ஜிஜ்ஞாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய நிரதிசய ப்ருஹத்த்வ சித்தி என்று
ஸ்ருத பிரகாசிகையிலே ஸ்பஷ்டமாக பட்டர் அருளிச் செய்ததை கண்டு கொள்வது –

ஆகையால் மயர்வற என்று சம்சார விமோசன காரணத்வத்தை முக்த கண்டமாக அறிவிப்பிக்கிற இச்சந்தை ஜென்மாதி கரண சமாநார்த்தம் என்னக் குறையில்லை –

ஆக எல்லாவற்றாலும் மயர்வற மதி நலம் அருளினான் என்கிற இரண்டாம் அடி ஜென்மாதி கரண ப்ரமேயம்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் -என்கிற மூன்றாம் அடி சாஸ்த்ர யோநித்வாதி கரண அர்த்தமானபடி எங்கனே என்னில்-
வேதாந்தங்களை ஸித்தமான ப்ரஹ்ம வஸ்துவில் போதகத்வ சக்தியுண்டாய் -ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணமாய் ப்ரஹ்ம பிரதிபத்தி லபித்தாலும் வேதாந்த ஆரம்பம் கடியாது –

சாஸ்த்ர ரூப பிரமாணம் -பிரமாணாந்தரா பிராப்தமுமாய் -பிரமாணாந்தரா விரோதமுமாய் இன்றிக்கே இருக்கிற அர்த்தத்தில் போதகமாய் இருக்கும் –

இனி ப்ரஹ்மத்தினுடைய நிமித்தத்வ அம்சம் -ஷித்யாதிகம் சகர்த்ருகம் காரயத்வாத் கடவத்-என்கிற அனுமானத்தாலே சித்திக்கும் –

உபாதான அம்சம் -நிமித்த பூதனான குலாலாதிகளில் உபாதாளத்வம் காணாமையாலே ப்ரத்யஷாதி பிராமண விருத்தமாகையாலே சாதக பாதக பிராமண விரஹிதமல்லாமையாலே
ப்ரஹ்ம கரணத்வத்தை வேதாந்தங்கள் போதிக்க மாட்டாமையாலே தத் விசாரம் அநாரம்பணீயம் என்கிற பூர்வ பக்ஷத்தில் -அனுமானத்தாலே
ப்ரஹ்மத்தினுடைய நிமித்த காரணத்வத்தை சாதிக்கும் அளவில் லோக த்ருஷ்ட குலாலாதி ஷேத்ரஞ்ஞ சஜாதீயனாய் சித்தப்பன் ஒழிய
விவஷிதனான ஈஸ்வரன் சித்தியாமையாலே அனுமானத்தாலே ஈசுவரனுடைய நிமித்தத்வ அம்சத்தை சாதிக்க ஒண்ணாமையாலே -அனுமானம் சாதிக்க மாட்டாது –

அபரிமித சக்திகனான நிமித்த ஈஸ்வரனுக்கே லோகா பரித்ருஷ்டமான உபாதானத்வ அம்சமும் ப்ரமாணாந்தர பாதிதம் அல்லாமையாலே உபாதானத்வ அம்சத்தில் ப்ரமாணாந்தரம் பாதகமாக மாட்டாது –

ஆகையால் சாதக பாதக பிராமண விரஹிதமான ப்ரஹ்ம காரணத்வத்தில் வேதாந்தமே பிரமாணமாக வேண்டுகையாலே தத் விசாரம் ஆரம்பணீயம் என்று இறே சாஸ்த்ர யோநித்யதி கரண ப்ரமேயம் –
இனி அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் -என்று பகவத் விஸ்ம்ருதி யற்ற நித்ய ஸூரி சேஷித்வத்தை அருளிச் செய்தார் –
ஸூரி சேவ்யம் தான் பிரமாணாந்தர பிராப்தமும் அன்று -பிரமாணாந்தர விருத்தமும் அன்று –

இப்படி சாதக பாதக பிராமண விரஹிதமான ஸூரி சேவ்யத்வத்தை அருளிச் செய்கையாலே -தத் சாமான்யாதி தரேஷூ ததாத்வம் -என்கிற நியாயமாக ஸர்வஞ்ஞத்வாதி குண விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்துக்கும்
வேதாந்தமே பிரமாணம் ஆகவேண்டும் என்று அறிவிப்பித்து அருளினாராம் அத்தனை –
ஆகையால் அப்ராப்தமும் அவிருத்தார்த்தமும் சாஸ்திரம் என்கிற அர்த்தத்தைக் காட்டுகிற இச்சந்தை சாஸ்த்ர யோந் அதிகரண பிரமேயம் என்னத் தட்டில்லை-
மிஞ்ச -அதிபதி -என்கிறவிடத்தில் -பதி என்கிற இத்தாலே பாலன கர்த்ருத்வ ரூப நிமித்தத்வத்தை அருளிச் செய்து –

அதிக பதி அதிபதி -என்று-அந்தப் பதி சப்த வாச்யனான நிமித்த பூதனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் –

அந்த ஆதிக்யம் தானும் லோக சித்த நிமித்த பூதரான குலாலாதி வைலக்ஷண்யம் –
தத் வை லக்ஷண்யம் தானும் -ஜகத் உபாதாநத்வம் முதலானவை -இப்படி நிமித்த உபாதான ஐக்யத்தை -அதிபதி -என்று அருளிச் செய்கையாலே
ப்ரமணாந்தாரா ப்ராப்த ப்ரமணாந்தாரா விருத்தார்த்தக சாஸ்த்ர ப்ராமாண்யத்தை இச்சந்தை ஸூசிப்பிக்கிறது –
ஆகை இவை எல்லா வற்றாலும் இது சாஸ்த்ர யோந்யதி கரண ப்ரமேயம் –

துயரறு சுடரடி தொழுது ஏழு என்கிற நாலாமடி சமன்வய அதிகரண சமா நார்த்தமான படி எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரமாய் இருக்கிற அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சேத்–மந்தாக்நிர் நாம்பு பிபேத் –ஸ்வர்க்காமோ யஜத–ந களஞ்சம் பஷயேத்-இத்யாதி வாக்யங்களுக்கே ப்ரயோஜன பர்யவசாயித்வம் உண்டு -சித்த வஸ்து போதக வாக்யங்களுக்கு அது இல்லை -ஆகையால் ஸித்தமான ப்ரஹ்ம ப்ரதிபாதக வாக்யங்களுக்கு ப்ரயோஜன பர்யவசானம் இல்லாமையாலே வேதாந்த சாஸ்திரம் அநாரம்பணீயம் என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாம் அளவிலே

நிதி போலே ப்ரஹ்மமே ஸ்வயம் பிரயோஜன ரூபம் –
தத் ப்ரதிபாதக வேதாந்த வாக்யங்களே சாஷாத் பிரயோஜன பர்யவாசிகள் –

இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார சாதன போதனத்வாரா ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பர வாக்யங்களுக்கு
ப்ரயோஜன பர்யவசாயித்வம் ஒழிய நேரே ப்ரயோஜன பர்யவசாயித்வம் இல்லை –

ஆகையால் அநந்த கல்யாண குண பரிபூரணமான ப்ரஹ்மமே ப்ரயோஜனமாய்
தத் ப்ரதிபாதிதமான சாஸ்திரம் பிரதானமாய் சித்திக்கையாலே சித்த ப்ரஹ்ம ப்ரதிபாதிதமான சாஸ்திரம் ஆரம்ப நீலம் என்று இறே சமன்வயதி கரணத்தின் பொருள் –

இனி துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று துக்க நிவர்த்தகமாய் விகேஸ்வர தேஜோ ரூபமான திருவடிகளில் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவி என்று அருளிச் செய்தார் –
அத்தாலே பொன்னடி -பெரிய திருமொழி -5–8–9-/ பெரியாழ்வார் -3–2–8-என்று சொல்லுகிற திருவடிகளே ப்ரயோஜனமாய் தத் பரிச்ரயையே புருஷார்த்தமாக பிரார்த்தித்து விலக்ஷணமான ப்ரஹ்மமே பரம பிரயோஜனம் என்று அறிவிப்பிக்கையாலே ப்ரஹ்மத்தினுடைய சாஷாத் ப்ரயோஜனத்வத்தை சாதித்து சாஸ்திரம் ஆரம்ப ணீயம் என்று சொல்லுகிற சமன்வயதி கரண அர்த்தம் இச்சந்தை –

ஆகையால் முதல் பாட்டு ஸ்வரூபமாக சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தந பாரமான சதுஸ் ஸூத்ர் யர்த்தமாக சதாசார்ய பிரசாத லாபத்தை வேதாந்த த்வய சிரவணம்
யுடையவர்களுக்குக் கைக் கொள்ளக் குறையில்லை —

பக்தாம்ருதாத் யகாதாயாஸ் சதுஸ் ஸூத்ர் யேக கண்டதா
நிரூபித்த வேத மௌலி த்வய நிஷ்ட சதாம் முதே-

இதி பிரதமாகாதா சதுஸ் ஸூத்ர் யைக கண்ட்யம்-முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்டது –

முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்ட பின்பு மேல் இரண்டு பாட்டுக்கள் -ஈஷதேர் நா சப்தம் என்று தொடங்கி
பாத சேஷ சமாநார்த்தமாய் இருக்கும் படி உபபாதிக்கப் படுகிறது –
இப் பாத சேஷம் தானும் சாஷாத் காரண வாக்ய நிரூபண பரமான பிரதம பேடிகை அதிகரண பஞ்சகாத்மகமாய் த்விதீய பேடிகை அதிகரண த்வயாத்மகமாய் இருக்கும் –

பிரதம பேடிகையும்

சாமான்ய சப்தங்களுக்குப் பரமாத்ம ரூப விசேஷ பர்யவசாயித்வ ப்ரதிபாதகமாய் ஒரு பேடிகையும்

அர்த்தாந்தர ப்ரசித்தங்களான ஆகாச பிராணாதி விசேஷ சப்தங்கள் உட்படப் பரமாத்ம ரூப விசேஷ பரவசாயி என்று ஒரு பேடிகையும்

என்று இப்படி அவாந்தர பேடிகா த்வய யுக்தமாய் இருக்கும் –

இதில் –மனனகம் என்கிற இரண்டாம் பாட்டு காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள பிரதம பேடிகையில் சாமான்ய சப்தங்கள்
பரமாத்ம ரூப விசேஷ விசேஷ பர்யவசாயிகள் என்கிற ஈஷத்யாநந்த மயாந்த ராதித்யாதி கரண ரூப அவாந்தர பிரதம பேடிகா சங்க தார்த்தமாய் இருக்கும்

இலனது -என்கிற மூன்றாம் பாட்டு பிரதம பேடிகையில் அவாந்தர ரூபமான ஆகாச பிராணாதி கரண ரூப அவாந்தர த்விதீய பேடிகையோடும் காரணத்வ
சமவ்யாப்தமான தர்மகதந முகேந காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள ஜ்யோதிரிந்த்ர பிராணாதி கரண ரூபமான பிரதான த்விதீய பேடிகையோடும் சமாநார்த்தமாய் இருக்கும் –

மனனகம் -என்கிற பாட்டு -ஈஷத்ய ஆனந்தமய அந்தராதித்ய அதிகரண ப்ரமேயமான படி என் என்னில்-
இம்மூன்று அதிகாரங்களில் ஈஷாத்யதி கரணத்தில் —
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யாதி வாக்கியத்தில் ஜகத் காரணதயா ப்ரதிபன்னமான ஸச் சப்த வாஸ்ய வஸ்து பிரதானமாக வேணும் –
இதம் சப்த வாஸ்யமான சத்வ ரஜஸ் தமோமய ஜகத்துக்கு தத் யுக்தமான பிரதானம் காரணமாம் ஒழிய சத்வ ரஜஸ் தமோ விதுரமான ப்ரஹ்மம் காரணமாக மாட்டாது –
இன்னமும் அனுமான ஆகார வாக்ய வேத்யதயா ஆனுமானிக பிரதானம் இவ்வாக்கியத்தில் காரணமாய்த் தொற்றுகிறது என்று பூர்வ பக்ஷம் வருமளவில்
ஜகத் சர்க்க உபயுக்த முக்யேஷணம் பிரதானத்துக்கு கூடாமையாலும் சர்வஞ்ஞமான ப்ரஹ்மத்துக்கு உள்ளது ஒன்றாகையாலும்
சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகையால் சரீரபூத சித் அசித்வாரா சத்வ ரஜஸ் தமோமய அந்வயம் கூடுகையாலே
ஜகத் சாலக்ஷண்யம் ப்ரஹ்மத்துக்கும் உண்டாகையாலும் அனுமான அன்வயங்களில் பிரதானமான ஹேத்வவயம் அனுபாத்தம் ஆகையாலே இவ்வாக்கியத்துக்கு அனுமான ஆகாரத்வம் அசித்தமாகையாலும் ஸச் சப்த வாஸ்யமான காரணம் பிரதானம் அன்று –
பரமாத்மா வென்று சித்தாந்தித்து ப்ரஹ்மத்தினுடைய அசித் வ்யாவ்ருத்தி ப்ரதிபாதிக்கப் பட்டது –

ஆனந்த மய அதிகரணத்தில் ப்ரஹ்மம் அசித் வ்யாவ்ருத்தமே யாகிலும் ஜீவா வ்யாவ்ருத்தமாக மாட்டாது –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -என்கிறவிடத்தில் ஆனந்தமய சப்த வாச்யன் ஜீவனாகையாலே
அவன் ஜீவனாகைக்கு அடி -தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்று சரீர சம்பந்த ஸ்ரவணமும் –

அநேந ஜீவேநாஸ் ஆத்மந அநு ப்ரவிஸ்ய-என்று சாமாநாதி கரண்யத்தாலே ஜீவ ப்ரஹ்மணோர் ஐக்யமும் –

ஆகையால் ஜகத் காரணதயா நிரதிஷ்டனான ஆனந்தமயன் ஜீவனே என்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாம் அளவில் –
சத குணிதோத்தர க்ரமேண அப் யஸ்யமாந ஆனந்தம் ஸூகலவ பாகியாய் அபரிமித கர்மவஸ்யனான ஜீவனுக்கு கடியாமையாலும் பரமாத்வுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும்

சாரீரன் என்கிறது ஜகத் சரீரம் என்கிறதாய் கர்மக்ருத சரீரத்வம் இல்லாமையாலும்

சாமாநாதி கரண்ய நிரதேசத்தாலே சரீராத்மா பாவ நிபந்தமான ஐக்யத்தைச் சொல்லுகிறது ஒழிய ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்லாமையாலே ஜீவ ப்ரஹ்ம பேதம் சித்திக்கையாலும்

ஜகத் காரண பூதனான ஆனந்த மயன் பக்த முக்த அவஸ்த்தை ஜீவன் அன்று -தத் விலஷணனான பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

அந்தராதித்ய அதிகரணத்திலே -கேவல ஜீவன் ஜகத் காரணமாக மாட்டானேயாகிலும்
உபசித புண்ய விசேஷர்களான ஆதித்யாதி சேதனர்களில் ஒருவன் ஜகத் காரணமாகலாம் -அது எங்கனே என்னில் –
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு-இத்யாதி சாந்தோக்ய வாக்யத்திலே
கர சரணாதி ரூப சரீர சம்பந்தம் காரண வஸ்துவுக்கு ப்ரதிபாதிதமாய் இருக்கையாலும்
அது உள்ளது கர்மக்ருத சாரீர சம்பந்தமுடைய ஜீவனுக்கே யாகையாலும் விலக்ஷண ஜீவனே ஜகத் காரணம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று அபஹத பாப்மத்வம் ஸ்ருதம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கும் சுருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தமாய் அப்ராக்ருதமாய் இருந்துள்ள
திவ்ய மங்கள விக்ரஹங்கள் உண்டாகையாலும் விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் இவ்வாக்கியத்தில் ப்ரதிபாதிக்கப் பட்டவன்
உபசித புண்ய விசேஷனான ஜீவன் அல்லன்-தத் விலக்ஷணனான பரமாத்மா வென்று சித்தாந்திக்கிக்கப் பட்டது –

இனி பொறியுணர்வு அவையிலன் -என்று ஐந்த்ரியக ப்ரத்யக்ஷ விஷயமான அச்சித்தின் படி யல்லன் என்கையாலே இச்சந்தை அசித் வ்யாவ்ருத்தமான
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாதிக்கிற ஈஷாத் யதிகரணார்த்தம் என்று அறியலாம் –

மனனாக மலமற மலர்மிசை எழுதரு மனன் உணர்வு அளவிலன்-என்று மநோ நிஷ்டமான அவித்யாதிகள் யோகாப்யாஸ பலத்தாலே கழியக் கழிய
மேல் நோக்கி அபிவ்ருத்தமாய் வருகிற மானஸ ஞானத்துக்கு விஷயமான ஆத்மாவின் படியல்லன்-என்கையாலே ஸூத்ய அஸூத்ய யுபய அவஸ்த
ஜீவ வ்யாவ்ருத்தியை ப்ரஹ்மத்துக்கு அறிவிப்பிக்கிற ஆனந்த மய அதிகரண சமா நார்த்தம் இச்சந்தை என்னும் இடம் ஸ்பஷ்டமாக அறியலாம் –

உணர் முழு நலம் -என்று கட்டடங்க ஞானத்தவ ஆஸ்ரயனாயும் ஆனந்த ஆஸ்ரயனாயும் இருப்பான் என்று அருளிச் செய்கையாலே
காரண வஸ்துவுக்கு அசேதன பிராதான்னா வ்யாவர்த்தகமான ஜகத் சர்க்கே க்ஷணாதி தர்மத்தையும்
ஜீவ வ்யாவர்த்தகமான நிரதிசய ஆனந்த அப்யாஸத்தையும் ஸூசிப்பித்து அருளினார் –

ஆகையாலே -ஈஷதே-அப்யாசாத்-என்கிற ஹேத்வம்சம் இச்சந்தையாலே ஸூசிதம்-

எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் மிகுநரையிலன் -என்று கால த்ரயத்திலும் தன்னோடு ஒப்பாரையும் மிக்காரையும் உடையன் அல்லன் என்றும்
நிஸ்ஸமாப்யதிகன் என்றும் அருளிச் செய்கையாலே

புண்டரீகாக்ஷத்வ அபஹத பாப்மத்வாதி தர்ம யோகத்தால் நிஸ்சமாப்யதிகனான ஆதித்ய மண்டல அந்தரவர்த்தியான
புருஷன் விலக்ஷண ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்தித்த அந்தராதிகரணார்த்தம் இச்சந்தையிலே ஸூசிதம் –

ஆனால் ஈஷத் யதிகரண ப்ரமேயமான அசித் வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்யாதே ஆனந்த மயாதிகாரண ப்ரமேயமான
ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்கைக்கு அடி என் என்னில் –

பிரதான ஜீவா வ்யாவ்ருத்திகளில் பிரதான வ்யாவ்ருத்தி ஸூஷ்ம புத்திகளுக்கு எளிதாய்
அறியப்படும் ஆகையால் அவர்களுக்கு அறிக்கைக்கு அரிதான ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்தார் –

ஆனால் ஸூத்ர காரர் பிரதான வ்யாவ்ருத்தியை முந்துறச் சொல்லுவான் என் என்னில்

அசித் வ்யாவ்ருத்தியையும் அறிய மாட்டாத எளியரானவர்களுக்கு முந்துற தத் வ்யாவ்ருத்தியைக் காட்டி அவ்வளவு தெளிவு பிறந்தவனுக்கு அநந்தரம் அதிலும் ஸூஷ்மாமா சேதன வ்யாவ்ருத்தியைக் காட்டினார் –
ஆகையால் ஆழ்வார் அருளிச் செய்கைக்கு ஒரு க்ரமமும் ஸூத்ரகாரருக்கு மற்றப்படி ஒரு க்ரமமும் விவஷிதம் ஆகையால் இவ்விரண்டுக்கும் விரோதம் இல்லை –

ஆனால் அசித் வ்யாவ்ருத்தி ஸ்புடமாய் இருந்ததாகில் பொறி யுணர்வு அவையிலன் -என்று ஆழ்வார் அசித் வ்யாவ்ருத்தியை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஷ்டாந்த ரூபேண அருளிச் செய்தாராம் அத்தனை –
ஆகையால் இறே பிள்ளை -அசேதன வ்யாவிருத்தியோ பாதியும் சேதன வ்யாவ்ருத்தி என்கைக்காக பொறி  யுணர்வு அவையிலன் -என்று அருளிச் செய்தார் என்று த்ருஷ்டாந்த பரமாக வ்யாக்யானம் செய்து அருளினார் –
ஆகையால் மனனகம் என்கிற பாட்டும் இவ்வதிகரண த்வயமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

இலனது உடையனிது என்கிற மூன்றாம் பாட்டு ஆகாசாதிகரணம் தொடங்கி அதிகரண சதுஷ்டய சமாநார்த்தம் என்னுமிடத்தை தெளிய அறிவிக்கிறோம் –
ஆகாசாதிகரணத்தில்-சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஆகாச சப்தமாய்த் தோற்றுகிற
ஜகத் காரண வஸ்து பிரசித்த ஆகாசமேயாக வேணும் –

ஆகாச சப்தம் பிரசித்த ஆகாசத்தில் ரூடமாகையாலும் பரமாத்மாவினிடத்தில் ஆகாச சப்த வாச்யத்வம் அப்ரஸித்தமாகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்-சர்வ சப்தத்தால் சொல்லப் படுகிற சேதன அசேதன க்ருத்ஸ்ன பிரபஞ்ச காரணத்வம் என்ன -பாராயணம் என்று சொல்லப்படுகிற ப்ராப்யத்வ ப்ராபகங்கள் என்ன – இவை இத்தனையும் பிரசித்த ஆகாசத்துக்கு கூடாமையாலும் பரமாத்மாவுக்கே இது உள்ளது ஓன்று ஆகையால் ஆகாசதே ஆகாசயதி-என்கிற வ்யுத்பத்தியாலே ஆகாச சப்தம் பரமாத்மாவினிடத்திலும் கூடுகையாலும் ஆகாச சப்த வாஸ்யம் பிரசித்த ஆகாசம் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பிராணாதிகரணத்திலே-சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -இத்யாதி வாக்கியத்தில் பிராண சப்த வாஸ்யமான
ஜகத் காரண வஸ்து பிரசித்த பிராணனாக வேணும் -சர்வ வஸ்துவும் பிராணாதி நஸ்திதிகமாககே காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
சிலாகாஷ்டாத்ய சேதனங்களிலும் சேதன ஸ்வரூபத்திலும் பிராணாதி நஸ்திதிகத்வம் கூடாமையாலே சர்வ ஜகத் காரணத்தையா நிர்திஷ்டமான பிராணன்
பிரசித்த பிராணன் அல்லன் -பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஜ்யோதிர் அதிகரணத்தில் -அத யதத பரோதிவோ ஜ்யோதிர் தீப்யதே -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாக வேணும்
ஸ்வ வாக்கியத்தில் பரமாத்மா வ்யாப்த லிங்க விசேஷம் காணாமையாலும் கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசத்தாலும்-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
சர்வ பூதங்களும் த்யுசம்பந்தியான ஜ்யோதிஸ் ஸூக்குப் பாதமாக வ்யபதேசிக்கையாலும் -கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசம் பளார்த்தமாக தாதாத்மகத்வ
அநுசந்தான விதி பரமாகையாலும் நிரதிசய தீப்தி யுக்தமான ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்த ஜ்யோதிஸ் ஸூ அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

இந்த்ர பிராணாதிகரணத்தில் –பிரானோஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாமாயுரம் ருதமித்யுபாஸ்வ-இத்யாதி வாக்கியங்களில் ஹித தமோபாசன கர்மதயா நிர்திஷ்டனான இந்திரன் ஜீவனாக வேணும் –

இந்த்ர பதம் ஜீவ விசேஷத்திலே ரூடமாகையாலும் மாம் உபாஸ்வ என்று ஸ்வ ஆத்ம உபாசனத்தை அம்ருதத்வ பிராப்தி சாதனமாக
உபதேசிக்கையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டன் இடத்தில்
ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யம் அந்வயிக்க வேண்டுகையாலும் –
மாம் உபாஸ்வ என்று ஸ்வ சரீரக பரமாத்மா உபாசனத்தை விதித்தது ஒழிய கேவல ஜீவ உபாசனை விதி இல்லாமையாலும் ஹித தம உபாசன கர்மத்தயா
நிர்திஷ்டனான சேதனன் இந்திரன் அல்லன் – ஜகத்காரண பூதனான பரமாத்மா என்று நிர்ணயிக்கப் பட்டது –

இனி இலனது உடையனது என நினைவரியவன் -என்று தூரஸ்தமாய் இருப்பது ஒன்றைக் காட்டி
அத்தை உடையன் அல்லன் -சன்னிஹிதமாய் இருப்பது ஒன்றைக் காட்டி இத்தை யுடையவன் என்று நினைக்கவும் கூட அரியன் என்று சொல்லி –
நிலனிடை விசும்பிடை உருவினன் -என்று பூமி அந்தரிஷாதி சர்வ தேச வர்த்திகளான சர்வ சேதன அசேதனங்களையும் உடையவன் என்று அருளிச் செய்கையாலே
சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யஸ்தம் யந்தி –என்றும்
சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -என்றும்
பாதோஸ்ய சர்வா பூதாநி -இத்யாதி வாக்கியங்களில் உள்ள பிரசித்த ஆகாச பிராண ஜ்யோதிஸ் ஸூக்களுக்கு கடியாதபடியான
நிகில சேதன அசேதன காரணத்வ பிரகாரித்தவாதிகளை இவரும் வெளியிட்டு அருளினார் –

உருவினன் அருவினன் -என்று சித் அசித்துக்களுக்கு சேஷி என்று அர்த்தம் ஒழிய பிரபஞ்ச காரகத்வம் அர்த்தம் அன்றே என்னில்-
கார்யத்வமும் தத் சேஷத்வ பிரகாரமாகையாலே சேஷத்வ கதனத்தாலே ஜகத்துக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் சித்திக்கும் என்று உபஸர்ஜனத்வ ரூப சேஷத்வத்தை அருளிச் செய்தார் –
ஆனால் கார்ய காரண பாவேந சொல்லாமல் சம்பந்த சாமான்யாவ லம்பனம் பண்ணுவான் என் என்னில்
பாதோஸ்ய சர்வா பூதாநி -என்று ஜ்யோதிரதிகரண யுக்தமான ஜகாத் சேஷித்வமும் சங்க்ருஹீதமாக வேணும் என்னும் கருத்தாலே அருளிச் செய்தார் –

ஆகையால் இவ்வதிகரண த்ரயத்துக்கும் இச்சந்தைக்கும் சமா நார்த்தவம் சித்தம்

அஅந் நலனுடை ஒருவனை -என்று அந்த ஆனந்த குணத்தையுடைய அத்விதீயன் என்கையாலே ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டனுக்கு ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யத்தாலே பரமாத்மாவை சாதித்த அர்த்தம் இச்சந்தையிலே ஸூசிதமாகையாலே இச்சந்தை இந்த்ர பிராணாதிகரண அர்த்தம் ஆகலாம் –

கிஞ்ச–நணுகினம் நாமே -நாம் பிராபிக்கப் பெற்றோம் என்று உபாசன பலமான ப்ராப்யத்வ கதந முகேந பரமாத்மாவினுடைய உபாஸ்யத்வத்தை ஸூசிப்பிக்கையாலே –
தம்மாமாயுர அம்ருதம் இத்யுபாஸ்வ-என்கிற இந்த்ர பிராண சப்த வாச்யனுக்குப் பரமாத்மத்வ சாதகமான உபாஸ்யத்வ ப்ரதிபாதக வாக்ய சமா நார்த்தகம்
இச்சந்தை என்று அறியலாம் -இப்படி மூன்று பாட்டும் அந்நாலதி கரணமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

ஆம்னாய மௌளி யுகளீ விஹாராணாம் சதாம் முதே நிரூபிதாஸ் அத்ய பாதஸ்ய காதாத்ரய சாமார்த்ததா —

இதி ஆத்யபாதகா தாத்ராயைக கண்ட்யம்-

நாலாம் பாட்டு தொடங்கி மேல் மூன்று பாட்டுக்களுக்கும் த்ரிபாதிக்கும் ஐகார்த்யம் உபபாதிக்கப் படுகிறது –
அதில் முதலிலே த்வதீய பாதமும் நாலாம் பாட்டும் ஏக கண்டமான படியை உபபாதிக்கப் படுகிறது –
த்வதீய பாதத்துக்குப் பொருளான ஜகத் சரீரத்வத்தை இப்பாட்டிலும் ஆழ்வார் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் உண்டு –
த்வதீய பதார்த்தம் ஜகத் சரீரகத்வம் என்னும் இடத்தை -த்வதீயே ஜகத் சரீரகத்வம் என்று ஸ்ருத பிரகாசிகையிலும் –
ஸ்ரஷ்டா தேஹி ஸ்வ நிஷ்டோ நிரவாதி மஹிமா -என்று பிரதம அத்யாய பாத சதுஷ்ட்யத்துக்கும் அடைவே பொருள் சொல்லும் இடத்தில்
த்வதீய பாதத்தின் பொருளை தேஹீ என்று சாராவளியிலும் ஸ்ரீ மத் ஸூதர்சன பட்டரும் ஸ்ரீ மத் வேங்கட நாதரும் அருளிச் செய்தார்கள் –

இனி த்வதீய பாத பிரதம அதிகரணத்திலே –
சர்வம் கல்விதம் பிரம்மா தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -என்கிற சாண்டில்ய வித்யா வாக்கியத்தில் உபதிஷ்டமான
ப்ரஹ்மம் ஜீவனாக வேணும் –

நிர்துஷ்டனான பரமாத்மாவுக்கு ஹேயாகரமான சித்த அசித் ரூபா சர்வ பாவம் கூடாமையாலும் தேவ மனுஷ்யாதி ரூபேண
கர்மக்ருதமாக ஜீவனுக்கு சர்வாத்ம பாவம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வருமளவில் -சர்வ வேதாந்த பிரசித்தமான சர்வ ஜகத் காரணத்வத்தை உபதேசிக்கையாலும் –
தஜ்ஜத்வ தல்லத்வ ததன்வங்களாலே ப்ரஹ்மத்துக்கே தாதாம்யம் உபபன்னம் ஆகையால் -தேவ மனுஷ்யாதி பாவேந ஜீவனுக்குத் தாதாம்யம் உண்டானாலும் அவனுக்கு ஜகத் காரணத்வம் கூடாமையாலும்

ப்ரஹ்ம சப்த வாச்யன் ஜீவன் அல்லன்-சர்வ ஜகத் சரீரதயா சர்வ சப்த வாச்யனான பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்வதீய அதி கரணத்திலே —
ஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந –ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம்-இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஓதந உபசேசன ஸூ சிதனான அத்தா ஜீவனாக வேணும் –
போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் ஆகையாலும்-ஜீவனுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும் என்று பூர்வபக்ஷம் வருமளவில் -சராசர ரூப க்ருத்ஸ்ன ஜகதத்ருத்வம் ஜகத் சம்ஹார கர்த்ருத்வம் ஒழிய கர்ம நிமித்த போக்த்ருத்வம் அல்லாமையாலும்

தாதருச சம்ஹார கர்த்ருத்வம் பரமாத்மா தர்மமாகையாலும்
இவ்வாக்கிய ப்ரதிபாத்யன் ஜீவன் அல்லன் –பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில்–
ய ஏஷோ அந்தரஷிணி புருஷ த்ருஸ்யதே-என்கிற சாந்தோக்யத்தில் அக்ஷய ஆதாரதயா நிர்திஷ்டனான புருஷன் ப்ரதிபிம்ப ஜீவா தேவதா விசேஷங்களில் அந்நிய தமனாக வேணும் –
ப்ரஸித்தவ நிர்தேசத்தாலும்-த்ருஸ்யதே -இதய ப்ரோஷ அபிதானத்தாலும் பிரதிபிம்பம் ஆகலாம் –
ஜீவனுக்குச் சஷூஸ்சிலே விசேஷ ஸந்நிதானம் உண்டாகையாலே ஜீவன் தான் ஆகலாம் – ரஸ்மிபி ரேஷோ அஸ்மின் ப்ரதிஷ்டித என்கிற ஸ்ருதி பிரசித்தியாலே
சஷூஸ் ப்ரதிஷ்டித தேவதா விசேஷம் தானாகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹமேத்யாசஷதே -இத்யாதி வாக்யத்தால் ப்ரதிபன்னமான கல்யாண குணங்கள் பரமாத்மாவுக்கே யுள்ளது ஒன்றாகையாலும்
யஸ் சஷூஷி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதி பிரசித்தமான சஷூர் வர்த்தித்வத்தை -ஏஷோ அஷிணி என்று பிரசித்தவந் நிர்தேசிக்கையாலும் –
த்ருஸ்யதே இத்ய அபரோக்ஷ அபிதானம் யோகி த்ருஸ்யத்வ அபிப்பிராயம் ஆகையாலும் ப்ரதிபிம்பாதிகளுக்கு நியமேந சஷூர் வர்த்தித்தவம் இல்லாமையாலும்
அஷி புருஷன் ப்ரதிபிம்பத்திகளில் அந்நிய தமன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில்
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருதிவீ சரீரம் -இத்யாதி வாஜசநேயக வாக்ய ச்ருதனான அந்தர்யாமி ஜீவனாக வேணும் –
வாக்ய சேஷத்திலே கரணாயத்த ஞானம் அந்தர்யாமிக்கு ச்ருதமாகையாலே -என்று பூர்வபக்ஷம் வருமளவில்
ஒருவனே சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் நியமிக்கிறார் என்கிற இது பரமாத்மா அசாதாரண தர்மமாகையாலும் -த்ரஷ்டா ஸ்ரோதா என்று ரூபாதி சாஷாத்காரத்தைச் சொல்லுகிறது ஒழிய கரணாயத்த ஞானவத்தைச் சொன்னது அல்லாமையாலும் அந்தர்யாமி ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஐந்தாம் அதிகரணத்தில் –
யத்த தத் ரேஸ்யமக்ராஹ்யம் -இத்யாதி வாக்யத்திலும் -அஷராத் பரத பர-என்கிற வாக்யத்திலும் ப்ரதிபன்னமான அத்ருஸ்யத்வாதி குணகமும் அஷராத் பரத பரனும் பிரகிருதி புருஷர்கள் ஆகவேனும் -அசேதன ப்ருதிவ்யாதிகதமான த்ருஸ்யத்வாதி ப்ரதிஷேதம் தத் சஜாதீய பிரதானத்தில் உசிதம் ஆகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு உசிதம் ஆகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதி வாக்கியங்களில் அத்ருஸ்யத்வாதி குணக வஸ்துவுக்கு சர்வஞ்ஞத்வாதி குணங்கள் ஸ்ருதமாகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு கடியாமையாலும் இவ்விரண்டு வாக்யத்திலும் ப்ரக்ருதி புருஷர்கள் ப்ரதிபாத்யர் அல்லர் பரமாத்மாவே ப்ரதிபாத்யன் என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் —
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் யேஷி -இத்யாதி வாக்கியத்தில் ச்ருதனான வைச்வா நரன் பரமாத்மா என்று நிர்ணயிக்க ஒண்ணாது –
வைச்வா நர சப்தத்தை ஜாடராக்னி என்ன பூத த்ருதீயம் என்ன தேவதா விசேஷம் என்ன இவைகளில் பரமாத்மாவிலும் வேதம் பிரயோகிக்கையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்று உபக்ரமத்திலே சர்வாத்ம பூத பர ப்ரஹ்ம ஜிஜ்ஞாசயா உபசன்னரான ஓவ்ப மன்யவாதி முமுஷூக்களைக் குறித்து உபதேசிக்கப் படுகையாலும்
பரமாத்ம தர்மமான த்யுப்ரப்ருதி ப்ருதிவ்யந்த ஜகச் சரீரத்வம் ஸ்ருதம் ஆகையாலும் ஜாடராக்னியாதிகளில்
இஸ் சப்த பிரயோகம் உண்டானாலும் இவ்விடத்தில் வைச்வா நரன் பரமாத்மாவே என்று நிர்ணயிக்கப் பட்டது –

இப்பாத அர்த்தமான ஜகச் சரீரத்வம் பிரதம அதிகரணத்திலே -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்கிற விஷய வாக்யத்திலே காணலாம் –

த்வதீய அதிகரணத்தில் -குஹாம் ப்ரவிஷ்டவ் -இத்யாதி ஸூத்ர விஷயமான -தம் துர்தர்சம் கூடமநு ப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் இத்யாதி வாக்யத்திலே ஸுபரியைப் போலே ஜகத்து ஞானா திஷ்டித சரீரம் அன்று -ஸ்வரூபத்தாலே சர்வ சரீரங்களிலே ஹ்ருதய குஹ ப்ரவிஷ்டனான பரமாத்மாவுக்கு சரீரம் என்று சொல்லப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் -ய ஏஷோ அஷிணி புருஷ த்ருஸ்யதே -என்கிற விஷய வாக்யத்திலே இந்திரியங்களுக்கும் பரமாத்மா சரீரத்வம் சொல்லப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் -கேவலம் இந்த்ரியங்களே அல்ல ப்ரத்யேகம் சர்வ தத்துவங்களும் பரமாத்மா சரீரம் என்று சொல்லப் பட்டது

பஞ்சம அதிகரணத்தில் சர்வ தத்துவங்களும் சமுதாய ரூபத்தாலும் ப்ரஹ்ம சரீரம் என்று ரூபோபந் யாசாத் -என்கிற ஸூத்ரத்திலே சொல்லப் பட்டது

ஷஷ்ட்டி அதிகரணத்தில் ஜகச் சரீரத்வம் முமுஷூ உபாஸ்யம் என்று பிரபஞ்சிதம் –

இப்படி ஷட் அதிகரணியான இப்பாதத்தில் சொல்லப்பட்ட ஜகச் சரீரத்வத்தை ஆழ்வாரும்
நாம் அவன் இவன் யுவன் அவள் இவள் அவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது விது வுது எது வீமவை இவை யுவை
அவை நலம் தீங்கவை ஆமவையாயவை ஆய் நின்ற அவரே -என்று -தம்தாமாயும்-அஸந்நிஹிதனாயும்-சந்நிஹிதனாயும்-அதூர-விப்ர க்ருஷ்டனாயும் இருந்துள்ள புருஷன் என்ன –
தூர வர்த்திநியாயும்-சந்நிஹிதையாயும்-அதூர-விப்ர க்ருஷ்டையாயும் -வினவப் படுகிறவளாயும் இருந்துள்ள ஸ்த்ரீ ஜாதி என்ன –
பஹுமந்தவ்யரில்-அவர் என்றும் இவர் என்றும் உவர் என்றும் சொல்லப் போடுகிறவர்கள் என்ன அது இது உத்து எது என்று நபும்சக லிங்க நிர்திஷ்டமான வஸ்துக்கள் என்ன –
நச்வர பதார்த்தங்கள் என்ன -நல்லதாயும் தீயதாயும் இருந்துள்ள வஸ்துக்கள் என்ன இவை இத்தனையுமாய்
காலத்ரய வர்த்தியான பதார்த்தங்களுமாய் இருக்கிற பூர்வோக்தரானவர் -என்று சாமாநாதி கரண்யத்தாலே
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் யுண்டான சரீராத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே இப்பாட்டுக்கு த்விதீய பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம் –
————-
அவரவர் தமதமது -என்கிற ஐந்தாம் பாட்டுக்கு த்ருதீய பதைகார்த்யம் உண்டான படி என் என்னில்
த்ருதீய பாதத்தில் ப்ரதிபாத்யமான சர்வாத்மத்வ பிரகாரத்தை இதிலும் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு –

இப்பாதார்த்தம் சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடத்தை –த்ருதீயே சர்வாத்மத்வ பிரகார -என்று ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –

இப்பாதத்தில் பிரதம அதிகரணத்திலே —
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனாஸ் சக பிராணைஸ் ச சர்வை -இத்யாதி அதர்வணிக வாக்கியத்தில் ஸ்ருதனான த்யுப்வாத்யாயதநன் ஜீவனாக வேணும்
மன பிராண சம்பந்த நாட்ய ஆதாரத்வ பஹுதா ஜாயமானத்வாதிகளாலே -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
அம்ருத ஹேதுத்வ ஆத்மத்வ சர்வஞ்ஞத்வாதி தர்ம வாசக பரமாத்மா அசாதாரண சப்தங்களாலே நிர்தேசிக்கையாலும்
சர்வ ஆதாரனுக்கு மன பிராண நாட்ய ஆதாரத்வம் கூடுகையாலும்
ஜச்சமான பஹுதா ஜாயமானத்வம் இவனுக்கும் உண்டாகையாலும் த்யுதிவாத்யாயதனன் ஜீவன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்விதீய அதிகரணத்தில் –
யத்ர நான்யத் பஸ்யதி நான்யச் ஸ்ருனோதி நான்யத் விஜானாதி ச பூமா -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான பூம குண விசிஷ்டன் ஜீவனாக வேணும்
தரதி சோகமாத்மவித் -என்று ஆத்ம ஜிஜ்ஞாசயா உபசன்னனான முமுஷூவுக்கு பிராண ஸஹ சாரித்த்வ நிபந்த நேந பிராண சப்த நிரதிஷ்டனான ஜீவனிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தமாகையாலும்
அந்த ஜீவனுடைய முக்த அவஸ்தையில் ஆனந்த வைப்புலயத்தை பூமா சப்தத்தால் நிர்தேசிக்கையாலும் -என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்
யஸ் சத்யே நாதிவததி -என்கிற வாக்கியத்தில் சத்யா சப்தத்தாலே ஸ்ருதனான பரமாத்மாவினிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தம் ஒழிய
பிராண சப்த வாஸ்ய ஜீவ உபதேசத்தில் ஸமாப்த்தம் இல்லாமையாலும் -பரமாத்மாவினுடைய ஆனந்த வைபுல்யத்தை பூம சப்தத்தால் சொல்லுகையாலும்
பூம குண விசிஷ்டன் ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் —
ஏதத் வை ததஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி –இத்யாதி வாஜசநேய வாக்கியத்தில் ச்ருதமான அக்ஷரம் பிரதான ஜீவர்களாக வேணும்
அஷராத் தமஸி லீயதே –இத்யாதி ஸ்ருதிகளிலே பிரதான ஜீவர்களிலும் அக்ஷர சப்த பிரயோகம் காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
த்ரை கால்ய வர்த்தி விகார ஜாதாத ஆதார பூத ஆகாச சப்த வாஸ்ய பிரதான ஆதாரத்வத்தாலும்
பிரசாசன ஸ்ரவணத்தாலும் அக்ஷர சப்த நிர்திஷ்டம் பிரதானமும் அன்று ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் –
பரம் புருஷன் அபித்யாயீத-என்று தொடங்கி -புரிசயம் புருஷம் ஈஷதே-என்கிற வாக்கியத்தில் த்யாய ஈஷதி கர்மதயா நிரதிஷ்டனான பரம புருஷன் சதுர்முகனாக வேணும் –
மனுஷ்ய லோகத்துக்கும் அந்தரிக்ஷத லோகத்துக்கும் உபரிதனமான ப்ரஹ்ம லோகத்தில் -ஈஷணீ யத்வாதி லிங்கத்தாலே என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்
யத்தச்சாந்தம் அஜ்ரமம் அம்ருதம் அபயம் –இத்யாதி வாக்கியத்தில் சாந்தத்வ அஜரத்வ அம்ருதத்வாதி தர்மங்கள் ச்ருதமாகையாலும்
சர்வ பாப நிர்முக்தனான முக்தனுக்கு ப்ராப்யதயா யுக்தமான ப்ரஹ்ம லோகம் சதுர்முக ஸ்தானம் இல்லாமையாலும்
யத்தத் கவயோ வேத யந்தே-என்று கவி சப்த வாஸ்யரான நித்ய ஸூரி களாலே துருஸ்யமான வைஷ்ணவ பதத்தை ப்ரஹ்ம லோக சப்தத்தாலே நிர்தேசிக்கையாலும்
தத்ரயனானவன் சதுர்முகன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பஞ்சம அதிகரணத்தில் –
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச -இத்யாதி சாந்தோக்ய வாக்ய ஸ்ருதமான ஹ்ருதய புண்டரீக மத்திய வர்த்தி தகர ஆகாசம் பூத ஆகாசமாதல் ஜீவன் ஆதலாக வேணும்
பூத ஆகாசத்தில் ஆகாச சப்த பிரசித்தி பிராஸுர்யத்தாலே பூத ஆகாசம் ஆகலாம் -பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் அபஹத பாப்மாத்வாதிகள் ஸ்ருதமாகையாலும்
ப்ரகாசாதி யோகத்தால் ஆகாச சப்தம் ஜீவன் இடத்தில் கூடுகையாலும் ஜீவன் தான் ஆகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
அபஹத பாப்மாத்வாதிகள் பூத ஆகாசத்துக்கு கடியாமையாலும் -பிரஜாபதி வாக்கியத்தில் ஸ்ருதமான பரமாத்ம சம்பத்தி லப்த அபஹத பாப்மத்வாதிகள் ஜீவனுக்கு உண்டானாலும்
தஹர வாக்ய யுக்த அதிரோஹித நித்ய சித்த அபஹத பாப்மத்வாதி வைசிஷ்ட்யம் ஜீவனுக்கு கூடாமையாலும்
பரமாத்மாவினிடத்திலும் ஆகாச சப்த பிரயோகம் சுருதியந்தர சித்தமாகையாலும் தஹர ஆகாசம் பிரசித்த ஆகாசமும் அன்று -ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட அதிகரணத்தில் –
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்திய ஆத்மநி திஷ்டதி -இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஸ்ருதனான அங்குஷ்ட பிரமித்தான் ஜீவனாக வேணும் –
அங்குஷ்ட ப்ரமிதத்வம் ஜீவனுக்கு சுருதியந்தர சித்தமாகையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
பூத பவ்ய ஈஸா நத்வம் ஜீவனுக்கு அநு பன்னம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கே உள்ளது ஓன்று ஆகையாலும் அங்குஷ்ட பிரமிதன்
ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது

சப்தம அஷ்டம நவம அதிகரணங்களில் –
ப்ரஹ்ம வித்யையிலே அதிகார அநதிகார விசாரம் ப்ராசங்கிகமாக ப்ரவ்ருத்தம் ஆயிற்று –

தசம அதிகரணத்தில் –
ஆகாசோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான ஆகாச சப்த வாச்யன் முக்தாத்மாவாக வேணும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்-இத்யாத்ய அனந்தர வாக்யத்திலே முக்தன் ப்ரக்ருதன் ஆகையாலும்
முக்தனுக்கும் பூர்வ அவஸ்தையில் கர்மக்ருதமாக நாம ரூப நிர்வாஹம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
சகல ஜெகன் நிர்மாண துரந்தரனான பரமாத்மாவுக்கே நாம ரூப நிர்வோ ட்ருத்வம் ஸ்ருதி சத சமதிகதம் ஆகையாலும்
ப்ரஹ்ம லோக சப்த வாச்யனான பரமாத்மாவும் அனந்தர ப்ராக்ருதன் ஆகையாலும் ஆகாச சப்த நிரதிஷ்டன் முக்தன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சர்வாத்மத்வ பிரகாரத்தில் ஹேய அஸ்ப்ருஷ்டத்துவம் பிரதம அதிகரண யுக்தம் –
த்வதீய அதிகரணத்தில் நிரதிசய ஆனந்த யோகம் சொல்லப்பட்டது -இதுவும் சர்வாத்மத்வ பிரகாரம் இறே-
த்ருதீய அதிகரணத்தில் பிரசாசித்ருத்வம் பிரபஞ்சிதம் -இது சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடம் ஸ்புடம் இறே –
சதுர்த்த அதிகரணத்தில் முக்த ப்ராப்யத்வம் நிரூபிதம்-இதுவும் சர்வம் ஹா பஸ்ய பஸ்யதி–இத்யாதி படியே
சர்வ சரீரியான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே சர்வாத்மத்வ பிரகாரம் என்னகே குறையில்லை –
பஞ்சம அதிகரணத்தில் நிரதிசய பாக்ய குணத்வம் நிரூபிதம் -இதுவும் அபஹத்தை பாப்மாத்வாதி குணவத்தம் ஆகையால் சர்வாத்மத்வ பிரகாரம் என்னலாம் –
ஷஷ்ட அதிகரணத்திலே மாதாவைப் போலே அந்தரவர்த்தியான எம்பெருமானுக்கு ஜூகுப்சை இல்லாமையும் பிதாவைப் போலே சிஷகத்வேந பய ஹேதுத்வமும் சொல்லிற்று –
இதுவும் அந்தர்யாமித்வ பிரகாரம் என்னுமிடம் சித்தம் –
அதிகார அநாதிகார விசாராத்மக அதிகரண த்ரயமும் ப்ராசங்கிகம் ஆகையால் இதில் சர்வாத்மத்வ பிரகார ப்ரதிபாதனம் பண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –
சரம அதிகரணத்தில் ஸூ ஷூப்த்யாதி சர்வ அவஸ்தைகளிலும் பரமாத்மா சம்பந்தம் ப்ரோக்தம் -இதுவும் சர்வாத்ம பிரகாரம் என்னுமிடம் ஸ்பஷ்டம் இறே –

இப்படி த்ருதீய பாதத்தால் நிரூபிதமான சர்வாத்மத்வ பிரகாரத்தை –
அவரவர் தமதமது அறிவகை வகை அவரவர் இறையவர் என அடி யடைவர்கள் -அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-
தத்தத் அதிகாரிகள் தந்தாமுடைய ருசி பேதத்தாலே ராஜசராயும் தாமஸராயும் மிஸ்ர ஸத்வராயும் இருந்துள்ள தேவதைகளை ஆஸ்ரயிப்பார்கள் –
அந்தந்த தேவதைகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு அத்தேவதைகள் தத் தத் பல பிரதானத்தில் குறையுடையர் அல்லர் –
அதுக்கு அடி சர்வ சரீரியான சர்வேஸ்வரன் தத் தத் தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் ஆஸ்ரயித்த மனுஷ்யர்க்கு
தத் தத் பலம் பெறும்படி இருக்கையாலே என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

அதில் பாதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தில் -பிரதம அதிகரண ப்ரமேயமான
ஹேய அஸ்ப்ருஷ்டத்வ ரூபா பிரகாரத்தை இறையவர் என்கிற பதத்தாலே பிரகாசிப்பித்து அருளினார் -அது எங்கனே என்னில்
இறையவர் என்று ஈஸ்வரத்வம் சொல்லுகையாலே சகல ஹேய அஸ்ப்ருஷ்டன் என்று சித்திக்கும் –
த்வதீய அதிகரண ப்ரமேயமான
நிரதிசய ஆனந்தயோகம் சேஷித்வ வாசியான அந்தப்பதத்தாலே தானே ஸூசிதம் -சர்வ சேஷிக்கு இ றே நிரதிசய ஆனந்தத்வம் உள்ளது -ஆகையால் இறே ஆனந்த வல்லியிலே
தஸ்யேயம் ப்ருதிவீ சர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் -இத்யாராப்ய வித்த பூர்ணையான சர்வ பிருத்வியுமுடையனாய் இருக்கையை மனுஷ்ய ஆனந்தமாகச் சொல்லிற்று –
இனி சர்வத்தையும் உடையவன் என்று சொல்லவே சர்வ சேஷித்வ ப்ரயுக்த நிரதிசய ஆனந்த யோகமும் தன்னடையே வரும் –
த்ருதீய அதிகரண பிரமேயமான பிரசாசித்ருத்வமும்
நியந்த்ரு ரூப சேஷிவாசி யாகையாலே அப்பத்தத்தாலே தானே ஸூசிதம் -இன்னமும் -அவரவர் விதிவழி யடைய நின்றனர் -என்று
தேவதை அந்தர்யாமித்வ கதந முகத்தாலும் பிரசாசிச்ருத்வம் யுக்தமாகலாம் –
சதுர்த்த அதிகரண ப்ரமேயமான முக்த ப்ராப்யத்வமும் –
இறையவர் -என்று -இன்நானுக்கு இறையவர் என்று விசேஷியாதே சாமாந்யேன சர்வ சேஷி என்று சொல்லுகையாலே –
இப்பத்தத்தாலே சொல்லப் பட்டது என்று அறியலாம் -ஆகையால் இறே ப்ராப்ய பாரமான உத்தர வாக்கியத்தில் நாராயண பதத்துக்கு
சேஷித்வத்திலே நோக்கு என்று முன்புள்ள முதலிகள் வ்யாக்யானம் செய்து அருளிற்று –
இந்த இறையவர் என்கிற பதம் சாமாந்யேன சர்வ சேஷித்வ வாசி என்னும் இடத்தை கலிவைரி தேசிகர் -பொதுவில் இறையவர் என்கிறார் –
அவர்களோடு அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு தம்மோடு வாசியற எல்லார்க்கும் ஓக்க இறையவர் ஆகையால் -என்று பகவத் விஷயத்திலே வெளியிட்டு அருளினார் –
பஞ்சம அதிகரண ப்ரமேயமான நிரதிசய போக்ய குணத்வமும்
தேவதை அந்தர்யாமித்வ கதனத்தாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -யாவாந் வா அயம் ஆகாசா -என்றும் -உப்பிய அஸ்மின் த்யாவா ப்ருதிவீ –
உபாவக் நிஸ்ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம சாவுபவ் வித்யுந் நக்ஷத்ராணி -என்கிற வாக்யத்திலே
பிரக்ருத தஹர ஆகாசத்தை -அஸ்மின் -என்று பராமர்சித்து அந்த பிரம்மா உபாசனம் பண்ணுகிறவனுக்கு இஹ லோக லப்யமாயும் பரலோக லப்யமாயும்
மநோரத மாத்ர வர்த்தியாயும் இருந்துள்ள சர்வ போக்ய ஜாதமும் இந்த தஹர ஆகாசத்தில் உண்டாய் இருக்கும் என்று சொல்லிற்று –
இவ்விரண்டு வாக்யத்திலும் பூர்வ வாக்கியத்தில் சொன்ன அக்னி வாயு ஸூர்ய சந்த்ர ப்ரப்ருதி சர்வ ஆதாரத்வ ரூபமான சர்வ சரீரத்வத்தை –
இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனர் -என்று அருளிச் செய்கையாலே
தத் வ்யவஹிதாநந்தர த்விதீய வாக்கியத்தில் சொன்ன சர்வ ஆதார வஸ்துவினுடைய நிரதிசய போக்யத்வம் இச்சந்தையிலே ஸூசிதமாகலாம் –
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான மாத்ருத்வத் ஜூகுப்சா ராஹித்யமும் பித்ருவத் சிக்ஷகத்வேந பய ஹேதுத்வமும்
அந்தர்யாமித்வ கதனத்தாலே தானே சித்திக்கும் -கிஞ்ச -தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ணின அதி ஹீநரையும் விட மாட்டாதே ஜூகுப்ஸை யற்று
தத் தத் தேவதா முகேந ரஷிப்பான் என்று இச்சந்தையால் அருளிச் செய்கையாலும் ஷஷ்ட்டி அதிகரண பிரமேயம் இது என்று அறியலாம் –
அதிகார அநதிகார விசாராத்மகமான சப்தம அஷ்டம நவம அதிகரண ப்ரமேயமும் –
அவரவர் தமதமது -இத்யாதியாலே அதிகாரி வைவித்ய கதனத்தாலே ஸூசிதம் –
தசம அதிகாரண ப்ரமேயமான ஸூஷூப்த் யாதி சர்வ அவஸ்தாஸூ அப்ரஹாணமும்
ஸ்வேந ரூபேண நின்று ரசிக்கும் அளவன்றிக்கே தேவதாந்த்ர முகேநவும் ரஷித்து அருளும் என்கிற இப்பாட்டாலே ஸூசிதமாகலாம் –
இப்படி த்ருதீய பதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தை
இப்பாட்டாலே வெளியிட்டு அருளுகையாலே இப்பாட்டுக்கும் த்ருதீய பாதத்துக்கு ஐகமத்யம் சித்தம்
———————————
சதுர்த்த பாதத்துக்கும் -நின்றனர் இருந்தனர் -என்கிற ஆறாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில்
சர்வ வஸ்துவும் ப்ரஹ்ம கார்யமுமாய் -ப்ரஹ்ம சரீரமுமாய் -ப்ரஹ்ம ஆத்மகமுமாய் இருக்கையாலே
தத் கார்யமும் அன்றிக்கே தத் சரீரமும் அன்றிக்கே தத் ஆத்மகமும் அன்றிக்கே இருக்கிற வஸ்து இல்லை என்று
அப்ரஹ்மாத்மக வஸ்து நிஷேதம் இப்பாத ப்ரதிபாத்யர்த்தமாய் இருக்கும் –

இவ்வர்த்தத்தையே இப்பாட்டில் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு -இப்பாதார்த்தம் இது என்னும் இடத்தை
அதத் கார்ய -அதச் சரீர -அததாத்மக வஸ்த்வ சம்பவ ப்ரதிபாத்யதே -என்று ஸ்ருதி பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –
இத்தை முகாந்தரேண-நிரவதி மஹிமா -என்று சாரா வழியிலே வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இதில் பிரதம அதிகரணத்திலே
ஜகத்தினுடைய அதததீ நத்வம் -தததீ நத்வாதர்த்த வத் -என்கிற ஸூத்ரத்திலே ப்ரஹ்மாத்மகத்வம் ஜகத்துக்கு சாதிக்கையாலே நிரஸ்தமாயிற்று –
த்வதீய அதிகரணத்தில் –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் -இத்யாதி ஸ்வதாஸ்வதர மந்திரத்தில் ஜகத்தினுடைய அப்ரஹ்ம கார்யத்வம் தோற்றுகிறது என்று சங்கித்து
தைத்ரீயத்தில் -அஜா மேகாம் -இத்யாதி வாக்ய அநுகுண்யேந ப்ரஹ்ம கார்யத்வத்தை சாதித்து அதத்கார்யத்வத்தை நிரசித்தார் –
த்ருதீய அதிகரணத்தில் –
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா -இத்யாதி வாக்கியங்களில் சொல்லுகிற படியே சாங்க்ய ப்ரக்ரியையாலே ஜகத்து அப்ரஹ்மாத்மகம் என்று சங்கித்து
ப்ரஹ்மாத் மகத்வத்தை ஜகத்துக்கு சாதித்து அததாத் மகத்வத்தை நிரசித்தார் –
தமேவம் மந்ய ஆத்மாநம் -என்று இ றே அந்தப் பிரகரணத்திலே வாக்யம்-
சதுர்த்த அதிகரணத்தில் -சதவ்யா க்ருதாதி சப்தத்தால் பிரதிபன்னமான வஸ்துவுக்கு அத தாத் மகத்வத்தை சங்கித்து அதுவும் ப்ரஹ்மாத்மகம் என்று பரிஹரித்து ஜகத்தினுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார்
பஞ்சம ஷஷ்ட அதிகரணங்களில்
விசேஷித்து சேதனன் அத தாத்மகன் என்று சங்கித்து ப்ரஹ்மாதிமகத்வத்தை சாதித்து ஜீவனுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார் –
சப்தம அதிகரணத்திலே சேஸ்வர சாங்க்ய யுக்தமான ஜகத்தினுடைய அப்ரஹ்மாத் மகத்வத்தை சங்கித்து ப்ரஹ்ம உபாதாநத்வ சமர்த்தந முகேந
ப்ரஹ்மாதி மகத்வத்தை சமர்த்தித்து அப்ரஹ்மாத் மகத்வத்தை நிரசித்தார் –
அஷ்டம அதிகரணத்தில்
சமர்த்தித்த அர்த்தத்துக்கு சார்வத்ரிகத்வம் சொல்லப் பட்டது –

இப்படி ஸூத்ரகாரர் ஜகத்தினுடைய ப்ரஹ்ம அதீ நத்வ ப்ரஹ்ம கார்யத்வ ப்ரஹ்ம ஆத்மதத்வ பிரசாதந முகேந
அதாத் அதீந்ய -அதத் காரயத்வாதி நிராசனம் பண்ணி -ப்ரஹ்ம காரணத்வ ஸ்திரீ கரணம் பண்ணின அர்த்தத்தை ஆழ்வார் –
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவர் –
என்றும் ஓர் இயல்வொடு நின்ற வெந்திடரே-என்று
நிற்றலை யுடையவர் -இருத்தலை யுடையவர் -கிடைத்தலை யுடையவர் -திரிதலை யுடையவர்கள் இவை இல்லாதவர்கள் என்று சொல்லப் படுகிற
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மத் வஸ்துக்களையும் ஸ்வ அதீனமாக உடையவராய் என்றும் ஒரு படிப்பு பட்ட ஸ்வ பாவத்தை யுடையவர் என்று
நினைக்கவும் கூட அரியராய் இப்படி துர்ஜ்ஜேயராய் இருக்கும் இருப்பு என்றும் ஒருபடிப் பட்ட ஸ்வ பாவமாக யுடையராய் இருக்கிற என்னுடைய ஸ்வாமியாய்
த்ருட பிரமாணமாக வேதைக சமதிகம்யரானவரே -என்று
பிறவிருத்தி நிவ்ருத்தி மத் சர்வ வஸ்துக்களினுடையவும் ப்ரஹ்ம அதீனத்தவ ப்ரஹ்ம காரியத்த வாதிகளை சாமாநாதி கரண்யேந அருளிச் செய்கையாலே
இப்பாட்டுக்கும் சதுர்த்த பாதத்துக்கு ஐக மத்யம் ஸ்புடம் –
இங்கே எந்திடரே-என்று சாமாநாதி கரண ஸித்தமான பிராமண-தார்ட் யத்தோடே பிரதம அத்யாய அர்த்தத்தை நிகாமித்தார் ஆயிற்று –
இப்படி முதல் ஆறு பாட்டுக்கும் பிரதம அத்யாயத்துக்கும் ஐகமத்யம் வேதாந்தத்வயா சம்ப்ரதாயம் யுடையவர்களுக்கு திக் பிரதர்சனம் பண்ணப் பட்டது
அநேக உபபத்திகளை உபபாதிக்கும் அளவில் கிரந்தம் விஸ்திருமாம் என்று ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

சாரீரக அத்யாயேந காதா ஷட்க சாமார்த்ததா
யதிராண் மத நிஷ்டாநாம் திங்மாத்ரம் தர்சிதா முதே-

இதி சாரீரக அத்யாத்யாய பிரதம காதா ஷட்கைக கண்ட்யம்-

———————————–

த்வதீய அத்யாய பிரதம பாதத்துக்கும் –ஏழாம் பாட்டுக்கும் ஐக மத்யம் உண்டாம் படி எங்கனே என்னில்
பிரதம பாதார்த்தமான பரோத்பாவித தோஷ பரிஹாரத்தை இப்பாட்டில் சொல்லுகையாலே ஐகமத்யம் உண்டு –
பரோத்பாவித தோஷ பரிஹாரம் இப்பாதார்தம் என்னும் இடத்தை -தத்ர பரை ருத்பாவி தாஸ்ச தோஷா பரிஹ்ருதா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் –

இப்பாதம் தான் தச அதிகரணாத்மகமாய் இருக்கும் -இப்பத்து அதிகரணங்களிலும் பிரதம அதிகாரணம் தொடங்கி அடைவே –
1-சாங்க்ய ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
2–சதுர்முக வக்த்ருகமான யோக ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
3–கார்ய காரணங்களான ஜகாத் ப்ரஹ்மங்களுக்கு ம்ருத் கடாதிகளைப் போலெ சா லக்ஷண்யம் இல்லாமையாலும் –
4–அநேக தந்த்ர யுக்தமான பரமாணு ஜகத் காரணத்வ நிரூபணத்துக்கு ப்ராபல்யம் சொல்ல வேண்டுகையாலும் –
5–சித் அசித் ரூப கார்யகதமான பரிணாமித்வ-ஸூகித்வ -துக்கித்வாதி தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு பிரசங்கிக்கையாலும் –
6–கார்ய உபாதானங்களுக்கு நையாயிக மதரீத்யா பேதம் சொல்ல வேண்டுகையாலே நிமித்த உபாதான ஐக்யம் கூடாமையாலும் –
7–ஜீவன் ஸ்வ அபின்நனாகில் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கிக்கையாலும் –
8–லோகத்தில் தத் தத் கார்ய ஜனக சக்தி யுக்தனுக்கும் உபகரண அபேக்ஷை காண்கையாலே சர்வ சக்தி யுக்தமான பர ப்ரஹ்மமும் உபகரணம் இல்லாத போது காரணமாக மாட்டாமையாலும் –
9–ப்ரஹ்மம் கார்யமாகப் பரிணமிக்கும் போது நிரவயமான க்ருத்ஸ்ந ப்ரஹ்மமும் கார்யமாய் பிரசங்கிக்கையாலும்
10–பரிபூர்ண ப்ரஹ்மத்துக்கு -ஸ்ருஷ்டியாலே பிரயோஜனம் இல்லாமையாலும்
ஜகத் காரணத்வம் கூடாது என்று பூர்வ பக்ஷம் -ப்ராப்தமாம் அளவில் –

1–வேத விருத்த சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் பாதகம் இல்லாமையாலும்
2–யோக ஸ்ம்ருதியும் விலஷணனான சதுர்முக வக்த்ருகமாகிலும் வேத விருத்ததயா பிரமாணம் இல்லாமையாலும் –
3—கோமய வ்ருஸ்ஸிகாதி விலக்ஷண வஸ்துக்களுக்கும் கார்ய காரண பாவம் காண்கையாலே ச லக்ஷண நியமம் இல்லாமையாலும் –
4–அநேந மத நிரூபித பரமாணு காரணத்வம் கேவல தர்க்க மூலமாகையாலே வேத ப்ரதிபாத்ய ப்ரஹ்ம காரணத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் –
5–பிரளய காலத்தில் ஸூஷ்ம சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரணமாய் ஸ்தூல சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரியமாய் இருக்கையாலே
சித்த அசித் ரூப கார்யகத தோஷங்கள் விசேஷ்யமான ப்ரஹ்மத்தில் பிரசங்கியாமையாலும்
6—கார்ய உபபாதன ஐக்யம் சுருதி சத சமதிகதமாகையாலும்-
7–ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் விஸிஷ்ட ஐக்யம் ஒழிய ஸ்வரூப ஐக்யம் இல்லாமையால் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கியாமையாலும் –
8–ஷீராதிகளில் உபகரண நிரபேஷமாக தத் யாதி பாவேந பரிணாமம் காண்கையாலே பர ப்ரஹ்மத்துக்கு உபகரண நைரபேஷ்யேண காரணத்வம் கூடுகையாலும்
9—ஸ்ருதி சித்த அர்த்தத்திலே லௌகிக பிராமண ஸித்தார்த்த சாம்யம் பிரசங்கியாமையாலும்
10–பரிபூரணமான ஜகத் ஸ்ருஷ்ட்டி கேவல லீலார்த்தமாக கூடுகையாலும்
ப்ரஹ்ம காரண வாதத்தில் பரோத்பாவித தோஷங்கள் பிரசரிக்காமையாலே ஜகத்துக்கு ப்ரஹ்மம் காரணம் ஆகலாம் என்று சித்தாந்திக்கப் பட்டது –

இப்பாதத்தில் பத்து அதிகரணத்திலும் சொன்ன பரோத்பாவித தோஷங்களையும் தந்நிரசனத்தையும்-
சாங்க்ய ஸ்ம்ருதயா விரோதாத் விதிமத விஹதே கார்ய வைரூப்யதோ அஸ்மின் நேகார்த்தே அநேக தந்த்ரோதித விஹதிதயா தேஹ போகா வியுக்த்யா –
கார்ய உபாதான பேதாத் ஸ்வஹித விஹிதிதி காரகஸ்தோம ஹாநே க்ருத்ஸ் நாம் சாத்யூஹ பாதாத் க்ருதி விபலதயா வ்யர்த்திதம் ப்ரத்யவித்யத் –என்கிற
ஸ்ரக்தரையாலே சாராவளியிலே வேதாந்தச்சார்யார் ஸங்க்ரஹித்து அருளினார் –

இப்பாத அர்த்தமான பரோத் பாவித தோஷ பரிகாரத்தை –
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே -என்று த்ருடமான ஆகாசம் தேஜஸ் ஸூ வாயு ஜாலம் பிருத்வி தொடக்கமாய் விஸ்திருதமாய் இருந்துள்ள ஸமஸ்த பதார்த்தங்களும் காரணமாய் -அந்த வஸ்துக்கள் எல்லாவற்றிலும் சரீரங்கள் தோறும் ஆத்மா பிரவேசித்து இருக்குமா போலே அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் –
அவைகளால் தர்சிக்கப் படாதவனுமாய் -சர்வ பதார்த்தங்களில் பிரத்யேக ப்ரத்யேகம் பரிபூர்ண வர்த்தியாய்-அபவ்ருஷேயத்வ நித்ய நிர்தோஷத்வாதி குணங்களால் உஜ்ஜ்வல்யத்தை யுடைய வேதைக சமதி கம்யனாய் சராசராத்மக க்ருத்ஸ்ன பிரபஞ்ச ஸம்ஹாரியான தேவன் -என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

இதில் பிரதம த்விதீய சதுர்த்த அதிகரண யுக்தமான
சாங்க்ய யோக ஸ்ம்ருதயாத் அநு ரோதம் பண்ணி பிரம்மா காரணத்வத்தைச் சலிப்பிக்க ஒண்ணாது என்கிற அர்த்தத்தை
சுடர் மிகு சுருதியுள் உளன் -அப்ருஷேயத்வாதி உஜ்ஜவல்யாதிக்யத்தை யுடைய வேத ப்ரதிபாத்யன் -என்கிற இச்சந்தையாலே வெளியிட்டு அருளினார் –

த்ருதீய அதிகரண சா லாஷ்ண்ய நியமா பாவமும் –
திட விசும்பு எரி வளி- என்று தொடங்கி-விலக்ஷணமான ஆகாச வாயு வாதிகளுக்கும்
ப்ரஹ்ம காரணத்வம் ப்ரதிபாதிதம் ஆகையால் சித்திக்கிறது -கிஞ்ச -திட விசும்பு என்று காரணத்தவத்தால் வந்த தார்டயத்தை ஆகாசத்துக்கு அருளிச் செய்தார் –
ஆகாசாத் வாயு -என்று வாயு வாதி காரணத்வம் ஆகாசத்துக்குச் சொல்லப் பட்டது –
சாங்க்யாதிகளும்-ஆகாச வாயுக்களுக்கு சாரூப்பியம் இன்றிக்கே ஒழிந்தாலும் கார்ய காரண பாவத்தை அங்கீ கரித்தார்கள் –

அப்படியே ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ச லக்ஷணம் இல்லாவிடிலும் கார்ய காரண பாவம் கூடும் என்று ஸூ சிப்பித்து அருளினார் -திட விசும்பு -என்கிற இச்சந்தையாலே –

ஆனால் ஸ்ரீ பாஷ்யகாரர் சா லக்ஷண்ய நியமாபாவத்துக்கு கோமய வ்ருஸ்ஸிகாதி திருஷ்டாந்தத்தை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஸ்யதே என்கிற சவ்த்ரபாதம் சாஸ்த்ர ப்ரத்யக்ஷ சித்தார்த்தங்களுக்குப் பொதுவாய் இருக்கிறது –

தர்சநாத் ஸ்ம்ருத்ஸ் ச -என்றும் -த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் -இத்யாதி ஸூத்ரங்களில் தர்சன த்ருஷ்ட சப்தங்கள் சுருதி பரமாகக் காண்கையாலே
த்ருஸ்யதே என்கிற இப்பதான் சுருதி சித்தார்த்தத்தைக் காட்டுகிறது –
அதிகரணாந்தரே —
உப சம்ஹார தர்சனான் நேதி சேந்ந ஷீரவத்தி –என்றும் -தேவாதிவதபி லோகெ -என்கிற ஸூத்ர த்வயத்தாலே லௌகிகமான
ஷீரத்வத்தையும் வைதிகரான தேவர்களையும் ப்ரஹ்மத்துக்கு சாமக்ரீ நைரபேஷயேண காரணத்வம் கூடும் என்னும் இடத்தை த்ருஷ்டாந்தமாக ஸூத்ரகாரர் உதாஹரித்தார் –
லௌகிக த்ருஷ்டாந்தத்தில் வைதிக த்ருஷ்டாந்தம் மிகவும் அலௌகிகமான ப்ரஹ்ம விஷயத்தில் பரிக்ராஹ்யம் என்னும் இடத்தை –
தேவாதீநாம் வேதாவகத சக்தீ நாம் த்ருஷ்டாந்த தயா உபாதா நாம் ப்ரஹ்மணோ வேதாவகத ஸக்தேஸ் ஸூக க்ரஹணாயேதி பிரதிபத்தவ்யம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
இப்படி லோக வேத சித்தங்களில் த்ருஷ்டாந்த கதநம் காண்கையாலே -திட விசும்பு -என்கிற இச் சந்தைக்கு கார்ய காரண சா லக்ஷண்ய நியமாபாவ ஸூசகத்வம் சித்தம்

பஞ்சம அதிகரண யுக்தமான சித் அசித் ரூப ஜகத்கத தோஷம் ப்ரஹ்மத்தில் பிரசங்கியாது என்கிற அர்த்தமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற சந்தையிலே சரீரங்களில் ஜீவாத்மாவைப் போலே சகல பாதாரத்திலும் வியாபித்து
அந்யைர த்ருஸ்யனாய் இருப்பன் என்று ஸ்புடமாகச் சொல்லப் பட்டது –

ஷஷ்டி அதிகரண யுக்தமான கார்ய உபாதான ஐக்யம் –
திட விசும்பு எரி வளி நீர் நிலமிவை மிசை படர் பொருள் முழுவதுமாய் -என்று ஜகத் ப்ரஹ்மணோஸ் சாமாநாதி காரண்ய கதநத்தாலே அதி ஸ்புடமாக அறியலாம் –

சப்தம அதிகரண யுக்தமான ஹிதா கரண -அஹித கரணாதி தோஷ பிரசங்க பரிஹாரமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து -என்று ஜீவ ஈஸ்வரர்களுக்கு சரீராத்ம பாவேந பேதத்தைச் சொல்லுகையாலே ஸ்புடமாக அறியலாம் –

அஷ்டம அதிகரண ப்ரமேயமான சாமக்ரீ நைர பேஷ்யமான ப்ரஹ்ம காரணத்வம் கூடும் என்கிற இதுவும்
இவை யுண்ட சுரனே -என்கிற இடத்தால் ஸூசிதம் –அது எங்கனே என்னில் -சூரன் -என்று ஆச்சர்ய சக்தி யோகம் சொல்லப்பட்டது –
சுரருக்கு இறே காரகா பேஷை இன்றிக்கே சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்ட்டி கூடுவது –
யதா தேவா தய ஸ்வே லோகே சங்கல்ப மாத்ரேண ஸ்வ அபேக்ஷிதாநி ஸ்ருஜந்தி ததா அசவ் புருஷோத்தம க்ருத்ஸ்னம் ஜகத் சங்கல்ப மாத்ரேண ஸ்ருஜதி -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் தேவாதி வதபி லோகே -என்கிற ஸூத்ர வ்யாக்யாநத்திலே அருளிச் செய்தது –
ஆக -சுரர் -என்கிற இப் பதத்தாலே சாமக்ரீ நைரபேஷ்யேண காரணத்வ ப்ரசாதனம் பண்ணின அஷ்டம அதிகாரண ப்ரமேய ஸூசகம் சித்தம் –

எங்கும் பரந்து –சுடர் மிகு சுருதியுள் உளன் -என்கிற இவ்வளவாலே நவம அதிகரண யுக்தமான
யதா சுருதி அ லௌகிக அர்த்த ஸ்வீகாரம் பண்ண வேணும் -என்கிற அர்த்தம் சொல்லப் பட்டது -இவையுண்டா சுரனே -என்கிற இச்சந்தையாலே
பரிபூர்ணனுக்கும் லீலா ரஸா நிஷ்பாதந அர்த்தமாக ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்தார் -அது எங்கனே என்னில்

அமரா நிர்ஜரா தேவாஸ் த்ரிதசா விபுதாஸ் ஸூ ரா -என்று ஸூரா சப்தத்துக்கு தேவ சப்தம் பர்யாயமாக நாம அநு சாணம் இருக்கையாலே ஸூரன்-என்றால் தேவன் என்று சொல்லிற்றாம் –

தேவ சப்தத்துக்கு -தீவு கிரீடா விஜிகீஷா வ்யவஹார த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ந காந்தி கதிஷூ -என்று தாது பாடம் உண்டாகையாலே
க்ரீடாவத்தவமும் தேவ சப்தார்த்தம் என்னும் இடம் சம்பிரதிபன்னம்-ஆகையால் இறே வேத புருஷன் ஜகத் சம்ஹாராதிகள்
கேவல லீலா ரூபம் என்கிற கருத்தால் ஸூபால உபநிஷத்தில் -தம பரே தேவ ஏகி பவதி -என்று காரண வஸ்துவில் தேவ சப்த பிரயோகம் பண்ணினான் –

ஆகையால் இச்சந்தை பரிபூர்ணனுக்கு லீலா ரூபேண ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்று சொல்லுகிற தசம அதிகரண அர்த்தம் என்னக் குறையில்லை –
இப்படி த்வதீய லக்ஷண பிரதம பாதத்துக்கு ஏழாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம்
————————–
தர்க்க பாதத்துக்கும் அஷ்டம நவம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில் –
தர்க்க பாதத்தில் பரபஷ ப்ரதிஷேபம் பண்ணப் படுகிறது –ஸ்வ பஷ ரக்ஷணாய பரபஷா பிரதி ஷிப்யந்தே -என்று இறே இப் பாத அர்த்தத்தை ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையால் பரபஷ ப்ரதிஷேப பரமான இவ் விரண்டு பாட்டுக்கும் தர்க்க பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு –

அதிகரண அஷ்டகாத்மகமாய் இருக்கிற இப் பாதத்தில்
பிரதம அதிகரணம் தொடங்கி -க்ரமமாக அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதிகளான சாங்க்யர்களுடைய
மத ப்ரக்ரியையையும் பரம அணு காரண வாதிகளான வைபாஷிகருடைய மத ரீதியையும்
புத்த மதஸ்தர்களில் வைத்துக் கொண்டு பாஹ்யார்த்தா ஸ்தித்வ வாதிகளான வைபாஷிக சவ்த்ராந்திகர்களுடைய ஜகத்தினுடைய
க்ஷணிகத்தவ வாதத்தையும் ஞான மாத்ரா ஸ்திதவ வாதியான யோகாசாரனுடைய ஞானாகார வ்யதிரிக்தமான அர்த்தாகாராபாவ ப்ரதிபாதனத்தையும்
மாத்யமிகனுடைய சர்வ ஸூந்யா உபபாதன பங்கியையும் -ஜைனர்களுடைய அநைகாந்திகத்வ ப்ரதிபாதன பிரகாரத்தையும்
பாஸூபதர்களுடைய வேத விருத்தச்சார தத்வ உபபாதனத்தையும் பல படிகளாலே நிரசித்து பஞ்சம வேத பாராதாதி ப்ராசஸ்தமாய்
பரம புருஷ பிரணீதமாய் இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தினுடைய நிராங்குச ப்ராமாண்யத்தையும் ஸூத்ரகாரர் சாதித்தார்

இப்பாத அர்த்தத்தை –
பாதே அஸ்மின் காபிலஸ்தை கணபு கபி மதைர் புத்த வைபாஷிகாத் யைர் யோகாசாராபிதா நைஸ் ஸூகத மத ரஹஸ் ஸூந்யா வாத ப்ரசக்தை அர்ஹத்சித் தாந்த பக்தை பஸூபதி சமயஸ்தாயிபிஸ் சாவரோதம் ஷிப்த்வா அதோ பஞ்ச ராத்ரம் சுருதி பதமவதத் பஞ்சமாம் நாய தர்சீ -என்று ஸ்ரீ சாராவளியிலே ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இம்மதங்களில் சாங்க்ய வைசேஷிக பாஸூ பதர்கள்-
கபிலாகம அநுமாந பாஸூபாத சாஸ்திரங்களை வேதங்கள் அநுக் ராஹாகங்கள்-என்று அப்ரதானம் ஆகிலும் வேதத்தையும் அங்கீ கரித்தார்கள் –
தத் வ்யதிரிக்த மதஸ்தர்கள் வேதத்தை உபஸர்ஜன ப்ரமாணமாகவும் அங்கீ கரியாதே வேத அப்ராமாண்ய ப்ரசாதன பூர்வகமாக ஸ்வ மத உபாதானம் பண்ணுவார்கள் –

இப்படி இரண்டு வர்க்கமாய் இருந்துள்ள பாஹ்ய மாதங்களில் பிரதம வர்க்கத்தை நிரசித்தமையை எட்டாம் பாட்டாலே ஸூசிப் பிக்கிறார் –

த்வதீய வர்க்கத்தை நிரசித்தமையை ஒன்பதாம் பாட்டாலே ஸூசிப் பித்து அருளுகிறார் –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாயாவை முழுதுண்ட பரபரன் புறம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அளித்து அமைத்து உளனே -என்று ப்ரஹ்மாதி களாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவத்தை யுடைய மூல ப்ரக்ருதி தொடக்கமான
சகல ஜகத்துக்கும் வரிஷ்ட காரணமாய் –அவற்றை எல்லாம் சம்ஹரித்து அருளின பராத்பரனான ஈஸ்வரன் ருத்ரன் அந்தர்யாமியாய்க் கொண்டு
திரிபுரத்தை சம்ஹரித்து ஜகத் சம்ஹாரமும் பண்ணுகிறான் -சதுர்முக அந்தர்யாமியாய்க் கொண்டு இவ்வருகு உள்ள ஜகத்தையும் ஸ்ருஷ்டித்து
தேவர்களுக்கு ஞான பிரதானத்தையும் பண்ணுகிறான் -என்று இப்பாட்டாலே
ஜகத்தினுடைய ப்ரஹ்மாத் மகத்துவத்தையும் ஷேத்ரஞ்ஞர்களான ப்ரஹ்ம ருத்ரர்களுடைய
ஸ்ருஷ்ட்ருத்வ ஸம்ஹ்ருத் வாதிகள் பகவத் அதீனம் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்கையாலே அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதியான சாங்க்ய மத ப்ரக்ரியையும்
ருத்ர பாரம்யா உப பாதகம் பண்ணுகிற பாஸூபத ப்ரக்ரியையும் பரம அணு காரண விதியையும் நிரசித்து அருளினமை ஸூசிதம் –

அது எங்கனே என்னில்
சாங்க்ய யுக்தமான அப்ரஹ்மாத்மக பிரதான நிரசனம் –சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் -என்று –
பிரகிருதி மஹத் அஹங்காராதி தத்துவங்களுக்கும் பரமாத்தவே காரணம்-என்று அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

அவை முழுதுண்ட பரபரன்-என்று சர்வ ஜகத் ஸம்ஹாரி என்கையாலே சாணக்யா மாதத்தில் ஈஸ்வரனை
அங்கீகரியா விடில் கேவல பிரதானம் ஸ்வ தந்திரமாய்ப் பரிணமிக்கும் போது ஸ்வர்க்க வ்யதிரேகேண ப்ரதிஸர்க்க அவஸ்தை இன்றிக்கே ஒழிய
வேணும் என்று உபபாதனம் பண்ணுகிற -வ்யதிரேகாந அவஸ்தி தேஸ்சாந பேக்ஷத்வாத்-என்கிற ஸூத்ரா யுக்த தூஷணம் ஸூசிதம் –

நிரவயவமான பரம அணுக்களுக்கு ஜகத் காரகத்வம் கூடாது என்கிற நையாயிக தூஷணமும்
ப்ரக்ருதி மஹத் அஹங்காராதிகளுக்கும் ஈஸ்வரனே வரிஷ்ட காரணம் என்று அருளிச் செய்த இச்சந்தையாலே தானே ஸூசிதம் –

பாஸூபத யுக்தமான ருத்ர பாரம்ய ப்ரதிஷேதமும்-ருத்ரனுடைய சம்ஹர்த்ருத்வ திரிபுர தஹநாதிகளும்-அரன் எனப் புரமொரு மூன்று எரித்து உலகு அழித்து உளன் -என்று
பகவத் அந்தர்யாமித்வ க்ருதமாக அருளிச் செய்கையாலே வ்யக்தமாகச் சொல்லப் பட்டது -ஸூத்ரகாரர் பண்ணின ருத்ர பாரம்ய நிஷேததக்கும் உப லக்ஷணம் என்னும் கருத்தாலே
சதுர்முகனுடைய ஸ்ரஷ்ட்ருத்வ ஞான ப்ரதத்வாதிகளும்பகவத் அனுபிரவேச க்ருதம் என்று ஆழ்வார் சதுர்முக பாரம்யத்தையும் நிஷேதித்தார் –
ஸூத்ரகாரர் சதுர்முக பாரம்ய நிஷேதம் பண்ணாமைக்கு அடி மஹா மல்ல நிராசன ந்யாயேன ருத்ர பாரம்ய நிஷேதம் பண்ணவே
சதுர்முக பாரம்ய நிஷேதமும் தன்னடையே வரும் என்று கருத்து -ஆழ்வார் மந்த விஷ ந்யாயேன சதுர்முக பாரம்யத்தையும் எடுத்து நிஷேதித்தார் –
———————————–
இனி இரண்டாம் வர்க்கத்தை
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என இவை குணமுடைமையில் உளன்
இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே -என்று ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ உளன் என்கிற சொல்லாலே சாதித்தாயாகில் உண்மையே சித்திக்குமது ஒழிய
உன்னுடைய மதமான இல்லாமை சித்தியாது –

உளன் அலன் என்கிற சொல்லாலே இல்லாமையை சாதித்தாயாகில் லோகத்தில் இல்லை என்கிற சொல்லுக்கு ஸ்தூல அவஸ்தை போய் ஸூஷ்ம அவஸ்தா பன்னமாய்
இருக்கின்றமை அர்த்தமாம் ஒழிய உன்னபிமதமான ஸூந்யத்வம் சித்தியாது –

இப்படி உண்மையும் இன்மையும் ஆகிற குண த்வய யுக்தமாக ஸ்வ பக்ஷ பர பக்ஷ ரீத்யா
சித்திக்கையாலே அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப குண விசிஷ்டமாக பர ப்ரஹ்மம் சித்திக்கும்

இப்படி அநபிமதமான அர்த்தம் அங்கீ கரிக்க வேண்டுகையாலே அனந்த குண விபூதிமானாகவும் எம்பெருமானையும் அங்கீ கரிக்கலாம் என்று நிரசித்து அருளினார் –

அதில் இந்த மதங்களில்
புத்த மதத்தில் ஜகத் க்ஷணிக வாதிகளான வைபாஷிக மதஸ்தர்கள் -பார்த்திப ஆப்ய தைஜஸ வாயவீய பரம அணுக்கள்
பிருதிவி அப் தேஜோ வாயு ரூபேண சம்ஹதங்களாகும் -அதில் நின்றும் சரீர இந்த்ரிய விஷய சங்காதங்கள் உண்டாம் -அதிலே
சரீர அந்தர்வர்த்தியாய் க்ராஹகாபிமாநா ரூடமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மா வென்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று உபபாதித்த அர்த்தத்தை
சமுதாய உபய ஹேதுகே அபி தத பிராப்தி -என்கிற ஸூத்ரத்திலே யாதொரு பரம அணு ஹேதுக ப்ருதிவ்யாதி பூத சமுதாயம் யுண்டு
யாதொரு ப்ருதிவ்யாதி ஹேதுக பூத இந்திரியாதி ரூப சமுதாயம் யுண்டு இவ்விரண்டு சமுதாயத்தின் நின்றும் ஜகத் ஆத்மக சமுதாய உத்பத்தி கூடாது
பரம அணுக்களும் ப்ருதிவ்யாதி பூதங்களும் க்ஷணிகம் என்று அங்கீ கரிக்கையாலே ஷணத்வம் சிகளான பரம அணுக்களும் பூதங்களும் எப்போதான் சம்ஹதங்களாகப் போகிறது –
எப்போதான் ஞான விஷயீ பூதங்களாய் ஹாந உபாதா நாதி வ்யவஹாராஸ் பதமாகப் போகிறது என்று இத்யாதி யுக்தியாதிகளாலே சாரீரகத்தில் சொன்ன க்ஷணிகத்தவ வாத நிரசன க்ரமத்தை-ஆழ்வாரும் அஸ்தி நாஸ்த்ய உபய வ்யவஹார தசையிலும் ஸ்தூல ஸ்ஷ்ம உபய அவஸ்தா விசிஷ்டமாக வஸ்துவினுடைய ஸ்திரத்தவ ப்ரதிபாதகமாய் இருக்கிற
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் -என்கிற இச்சந்தையாலே ஸூசிப்பித்து அருளினார் –

பிரதி சங்க்யா அபிரதி சங்க்யா நிரோத அப்ராப்திர விச்சேதாத் -என்கிற ஸூத்ர ஸ்ரீ பாஷ்யத்திலே
சத உத்பத்தி விநாசவ் நாம அவஸ்தாந்தராபத்திரேவ அவஸ்தாயோகி து த்ரவ்யமேகமேவ ஸ்திரமிதி காரணாத நந்யத்வம் கார்யஸ்யோப பாத யத்யபி ரஸ்மாபி –
தத் அந்நயத்வம் இத்யத்ர ப்ரதிபாதிநம் நிர்வாணஸ்ய தீபஸ்ய நிரன்வய விநாச தர்சநாத் அந்யத்ர அபி விநாசோ நிரன்வய அநுமீயத இதி சேந்ந –
கட சரவாதவ் ம்ருதாதி த்ரவ்ய அநு வ்ருத்தியுபா லப்தயா சதோ த்ரவ்யஸ்ய அவஸ்தாந்தரா பத்திரேவ விநாச இதி நிஸ்சிதே சாதி ப்ரதீபாதவ்
ஸூஷ்மத சாபத்த்யாப் யநுபலம் போப்பத்தேஸ் தத்ராபிய வஸ்தாந்தரா பத்தி கல்ப நஸ்யைவ யுக்தத்வாத் -என்று
உளன் எனில் உளன் -என்கிற இப்பாட்டுப்பாத்தியை உட்க்கொண்டு வ்யாக்யானம் செய்தமை ஸ்பஷ்டமாய் இருக்கையாலே இவ்வதிகரண பிரமேயம் இதிலே உண்டு என்னும் இடம் சித்தம் –

இனி சவ்ராந்திக மாதத்தில் ஞான உத்பத்தி காலத்திலேயே அர்த்தம் இல்லாமையால் ஞான விஷயத்வம் இல்லை என்ன ஒண்ணாது
ஞான விஷயத்துவமாவது -ஞான உத்பத்தி ஹேதுத்வம் இறே-ஆனால் சஷூராதிகளுக்கும் ஞான விஷயத்வம் வாராதோ என்னில் ஸ்வாகார சமர்ப்பணேன ஞான ஹேதுவுக்கே
ஞான விஷயத்வம் ஆகையாலே வாராது -அர்த்தமானது ஞானத்திலே ஸ்வாகாரத்தை சமர்ப்பித்து நஷ்டமாய்ப் போனாலும் ஞானகதமான நீலாத்யாகாரத்தாலே அநு மிக்கப் படும் –
ஆகையால் அர்த்த க்ருதமே ஞான வைச்சித்ர்யம் என்று உபபாதித்த பிரமேயத்திலே தர்மி நஷ்டமானால் தத் தர்மங்களுக்கு அந்யத்ர ஸங்க்ரமணம் கண்டது இல்லை –
அப்படியே அர்த்தம் நஷ்டமாய் தத் ஆகாரம் ஞானத்திலே ஸங்க்ரமிக்கிறது என்ன ஒண்ணாமையாலே ஞானத்தாலே அர்த்தம் அநு மிக்கப் படுகிறது என்ன ஒண்ணாது
என்று சாரீரிகத்திலே சொன்ன தூஷணமும்
அவனுருவம் இவ்வுருவுகள் என்று ஐந்த்ரியிகத்வத்தை விஷயங்களுக்கு அருளிச் செய்கையாலே விஷயங்கள் அநு மேயங்கள் என்று புலிக்கையாலே ஸூசிதமாயிற்று –

யோகாசார மதஸ்தர்கள் -விஞ்ஞான மாத்திரமே யுள்ளது -அர்த்தத்வம் இல்லை -அர்த்தத்துக்கும் வ்யவஹார யோக்யத்வம் ஞான ப்ரகாசாயத்தம் என்று கொள்ள வேணும் –
அந்யதா ஸ்வ பர வேத்யங்களுக்கு அதிசயம் அற்றுப் போம் -பிரகாசமான ஞானத்துக்கு நிராகாரத்துக்கு பிரகாசம் கூடாமையாலே சா காரத்வம் அங்கீ கரிக்க வேணும் –
இனி தோற்றுகிற ஆகாரம் என்று ஞானத்தினுடையது ஒழிய அர்த்தத்தினுடையது அன்று -இந்த ஆகாரத்துக்கு பஹிரவபாசம் பிரமக்ருதம் -இத்யாதி யுக்திகளாலே
அர்த்த ஸூந்யத்வ உபபாதனம் பண்ணினத்தை
ஞாதாவுக்கு விஷய வ்யவஹார ஹேதுவான ஞானத்தவம் முதலிலே நிர்விஷயமாகில் இல்லையாயே விடும் -இத்யாதி யுக்திகளாலே சாரீரகத்திலே நிரசித்தமையை –
அவனுருவம் -அவனருவம்- பரந்தே ஒழிவிலன்-என்கிற சந்தைகளாலே அர்த்த தத்வ அங்கீகார முகேன ஸூ சிப்பித்து அருளினார் –

இன்னமும் -நா பாவ உப லப்தே -என்கிற ஸூத்ரத்தில் -அர்த்த தத்வம் இன்றிக்கே ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாதந ஸ்வபாவமான ஞான தத்துவமும் சித்தியாது
என்று சொன்ன யுக்தியும் – உருவம் -என்கிற பாதத்தால் சித்திக்கிறது -அது எங்கனே என்னில் -உருவம் -என்கிற சப்தம் -ஸ்தூல பதார்த்த வாசி என்னும் இடம் சம்பிரதிபன்னம்
ஐந்த்ரியிகத்தவம் உள்ளதுக்கு இறே ஸ்தூலத்வம் உள்ளது -இந்த ஐந்த்ரியிகத்வ ப்ரதிபாதனத்தாலே -அது ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாவந
ஸ்வபாவமான ஞானத்தவம் இல்லாதே ஒழியும் என்கிற யுக்தியை ஸூசிப்பிக்கையாலே அது சித்திக்கிறது –
மாத்யமிக பஷ நிரஸா க்ரமம் இப்பாட்டு என்னும் இடம் சர்வ ஸம்ப்ரதிபன்னம் ஆகையாலே அதி ஸ்புடமாய் இருக்கும் –
ஜைன மதஸ்தர்கள் சொல்லுகிற ஜகத் அநைகாந்திகதவை நிராசமும் சத்தாயாகிலும் அசத்தாயாகிலும் இருக்கும் ஒழிய சத் அசத்தாய் இராது என்று –
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள் -என்கிற பாட்டுப் பாதியாலே அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

ஆனால் பிள்ளை -சர்வ ஸூந்யவாதியை நிரசிக்கிறார் இப்பாட்டாலே என்றும் -ஸர்வதா அநு பபத்தே என்கிற ஸூத்ர பாஷ்யம் இப்பாட்டை யுட் கொண்டு ப்ரவ்ருத்தமாயிற்று என்றும்
மாத்யமிக மத மாத்ர நிராச பரமாக வ்யாக்யானம் செய்து அருளுகையாலே இது அவருக்கு அநபிமதம் அன்றோ என்னில்-இப்பாட்டில் பாதங்களில் மாத்யமிக நிராசனம்
நேரே தோற்றுகையாலே தாமத நிராச பரமாக யோஜித்து அருளினார்
வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே -முதல் திருவாய்மொழி பூர்வத்விக அர்த்தம் -என்று அவர் தாமே அருளிச் செய்கையாலே இந்த பிரதம தசகத்திலே தத் ஸூசநம் ஆவஸ்யகம்
காதாந்தரத்திலே வைபாஷிகாதி மத நிராசம் அநவசரக்ரஸ்தமாய் இருக்கும்

இப்பாட்டில் பாதங்களும் பூர்வ யுக்த ப்ரக்ரியை யாலே வைபாஷிகாதி மத நிராச ஸூ சகங்கள் என்னும் இடம் ஸ்வரசதா ஸம்ப்ரதிபன்னம்
வைபாஷிக மத நிராச ஸூத்ர பாஷ்யமும் இப்பாட்டில் சந்தைகளை உட் கொண்டு ப்ரவ்ருத்தம் என்னும் இடம்
பூர்வமேவ உபபாதிதம் ஆகையால் பிள்ளைக்கும் இது அபிமதமாகக் குறையில்லை –

பாஞ்ச ராத்ர ப்ராமாண்ய சமர்த்தந சாரீரக அம்சம் ப்ராசங்கிகம் ஆகையாலும்-வேத பாஞ்சராத்ரங்களுக்கு அபவ் ருஷேயத்வ நித்ய நிர்துஷ்டத்வ பரம புருஷ வக்த்ருகத்வங்கள்
நிரங்குச ப்ராமாண்ய ஹேதுக்களாய் இரண்டுக்கும் பாத்தாலே வந்த பேதம் ஒழிய பாஞ்சராத்ரத்துக்கும் வேத துல்ய ப்ராமாண்யத்தில் தட்டில்லாமை யாலே –
சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -என்று அபவ் ருஷேயத்வாதி உஜ்ஜ்வல்யவத் வேத ப்ராமாண்ய ப்ரதிபாதனத்தாலே தந் ந்யாயேந
பாஞ்சராத்ர ப்ராமாண்யம் சித்திக்கும் என்கிற கருத்தாலும் ஆழ்வார் உபேக்ஷித்து அருளினார்

ஸூத்ரகாரர் தந்த்ர சாமான்ய ப்ரயுக்தமான ம்ருது ப்ரபஞ்சர்களுக்கு உள்ள காலுஷ்ய சாந்த்யர்த்தமாக வேத துல்ய ப்ராமாண்யம் ஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
தத் ப்ராமாண்ய சமர்த்தனம் பண்ணினார் -ஆக அஷ்டம நவம காதைகளுக்கும் தர்க்க பாதத்துக்கு ம் ஐகமத்யம் சித்தம் –

பத்தாம் பாட்டுக்கும் நிகமனப் பாட்டுக்கும் த்ருதீய துரீய பாதங்களுக்கு ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில் –
ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை இப்பாட்டுக்களாலே அருளிச் செய்கையாலே ஐக்யம் உண்டு –

வியத்பாத பிரதம அதிகரணத்திலே –
சாந்தோக்யத்தில் வியதுத்பத்த்ய ஸ்ரவணத்தாலே வியத்து ப்ரஹ்ம கார்யம் அன்று என்று சங்கித்து
தைத்ரீயத்தில் வியதுத் பத்தி ஸ்ருதமாகையாலும் சாந்தோக்யத்திலும் சர்வ சாகா ப்ரத்யய ந்யாயேந வியதுத் பத்தி வருகையாலும் வியத்து ப்ரஹ்ம கார்யம் என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில் –
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யவிஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகிறது என்று சங்கித்து
ஆகாசாதி சரீரக பரமாத்மாவின் இடத்தில் நின்றும் வாயுவாதி உத்பத்தி ஒழிய கேவல பூர்வ தத்துவத்தில் நின்றும் வாயவாதி யுத்பத்தி இல்லை என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
தோயேந ஜீவான் வ்யஸஸர்ஜ -இத்யாதி ஸ்ருதிகளாலே ஜீவனுக்கும் உத்பத்தி யுண்டு என்று சங்கித்து
ந ஜாயதே ம்ரியதே-இத்யாதி ஸ்ருதிகளாலே நித்யத்வம் ஸ்ருதமாகையாலும் உத்பத்தி சுருதி ஞான சங்கோச விகாசத்தைச் சொல்லுகிறது ஒழிய
ஸ்வரூப அநித்யத்தைச் சொல்லாமையாலும் -ஜீவனுக்கு உத்பத்தியில்லை என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் —
ப்ராசங்கிகமாக– யோ விஞ்ஞாநே திஷ்டன் -இத்யாதி ஸ்ருதிகளாலே ஆத்மா கேவல ஞான ஸ்வரூபன் என்று சங்கித்து –
விஞ்ஞா தாரம் இத்யாதி ஸ்ருதிகள் ஜீவனை ஞாதா வென்று ப்ரதிபாதிக்கையாலும் ஸ்வரூபத்தை ஞானம் என்கிறது ஸ்வயம் பிரகாச த்ரவ்யத்வ ப்ரயுக்தமாய்
ஞாத்ருத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் ஆத்மா ஞாதாவே என்று பரிஹரித்தார் –

பஞ்சம அதிகரணத்தில் –
ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் -ஹந்தா சேத் -இத்யாதி ஸ்ருதிகளாலே நிஷித்தமாகையாலே ஸ்வரூபம் அன்று என்று சங்கித்து
ஸ்வர்க்க மோஷாதி பல சாதன போதக சாஸ்த்ர ப்ரயோஜன சித்த்யர்த்தமாக கர்த்ருத்வம் அங்கீ கரிக்க வேண்டுகையாலும்
கர்த்ருத்வ நிஷேத சுருதி சாம்சாரிக கிரியைகள் சத்வ ரஜஸ் தமோ குண சம்சர்க்க க்ருதங்கள்-ஸ்வரூப ப்ரயுக்தங்கள் அன்று என்று
சொல்ல வந்தது ஆகையாலும் கர்த்ருத்வம் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
பூர்வ அதிகரண சித்த கர்த்ருத்வம் பராதீனம் என்று நிர்ணயித்தார்

சப்தம அதிகரணத்தில் –
ஜீவன் ப்ரஹ்மத்தோடு அத்யந்த பின்னனும் அன்று –ப்ராந்தப் ப்ரஹ்மமே ஜீவனாய் நிற்கிறதும் அன்று -சத்யோ பாத்யவச் சின்ன ப்ரஹ்மமே ஜீவனாய் இருக்கிறதும் அன்று –
வஸ்துதோ ப்ரஹ்ம அபின்னமாய் ப்ரஹ்மாம்சம் ஆகையாலே அத்யந்த பேதம் இன்றிக்கே இருக்கிறான் ஜீவன் என்று ஜீவ ஸ்வரூபத்தை நிர்ணயித்தார் –

துரீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவ உபகாரணங்களான இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந பிரதி பாதந ஸ்ருதியாலே சித்தம் என்று சங்கித்து –
அந்த சுருதி சர்வஞ்ஞனான ஜகத் kaarana ப்ரஹ்மத்தை ப்ரதிபாதிக்கிறது ஒழிய இந்திரியங்களை சொன்னது அல்லாமையாலும்
சுருதியந்தரத்தில் இந்திரிய உத்பத்தி கண்ட யுக்தமாகையாலும் நித்யத்வம் கூடாது என்று பரிஹரித்தார் –
த்வதீய அதிகரணத்தில் –
ப்ராசங்கிக்கமாக இந்த்ரியங்களினுடைய சங்க்யா நிர்ணயம் பண்ணினார் –
த்ருதீய அதிகரணத்தில் –
இந்திரியங்கள் விபுக்களாக சுருதி பிரபன்னங்கள் என்று சங்கித்து உத்க்ரந்தி ஸ்ரவணத்தாலே-விபுக்கள் அல்ல அணு பரிமாணங்கள் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில் –
ப்ராசங்கிகமாகவே முக்கிய பிராணன் கேவல வாயு மாத்ரமும் உசுவாச நிச்வாசாதி கிரியையும் அன்று -வாயுவே அவஸ்தாந்த்ர பன்னமாய்
பிராணன் என்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில்
உதக்ரந்யாதி ஸ்ரவணத்தாலே பிராணனுக்கும் விபுத்வம் கூடாது -அணுத்துவமே முக்கிய பிராண பரிமாணம் என்று நிர்ணயித்தார் –
ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஜீவனுக்கும் அக்னியாதி தேவதைகளுக்கும் இந்த்ரியாத் யதிஷ்டானம் ஸ்வா தந்தர்யேண உண்டு என்று சங்கித்து
பரமாத்மா அதீன அதிஷ்டானமே அவர்களுக்கு உள்ளது என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில்
பிராணசப்த நிர்திஷ்டங்கள் எல்லாம் இந்திரியங்கள் என்று சங்கித்து ஸ்ரேஷ்ட பிராண வ்யதிரிக்த ப்ராணன்கள் இந்திரியங்கள் என்று நிர்ணயித்தார்
அஷ்டம அதிகரணத்தில் –
பிரபஞ்ச வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி ஹிரண்ய கர்ப்ப கர்த்ருகமாக வேணும் என்று சங்கித்து அதுவும் தச்சரீரக பரமாத்ம கர்த்ருகம் என்று நிர்ணயித்தார் –

இப்படி பாத த்வயத்தாலே நிர்ணயித்த அர்த்தத்தை
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த வண்டம் இது என நில விசும்பு ஒழிவறக் கரந்த சில இடம்தோறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்டா கரனே -என்று -விஸ்திருதமாய் சைத்திய ஸ்வபாவமான சமுத்திர ஜல பரமாணுக்கள் தோறும் பரிசமாப்ய வர்த்தியாய்
விஸ்திருதமான அண்டம் என்னும்படியாய் பூமியாகாச விபாகம் இன்றிக்கே அத்யல்ப சரீரங்களிலும் அந்த அந்த சரீரங்களில் ஸ்வயம் ப்ரகாசத்வேந மிளிர்ந்து கொண்டு
இரா நின்றுள்ள ஆத்ம வஸ்துக்களிலும் அந்யைர த்ருஷ்யனாய் சர்வ பதார்த்தங்களில் ப்ரத்யேகம் பரிசமாப்ய வர்த்தியாய்
இந்த ஜகத்தை ஸ்வோதரஸ்தம் ஆக்கிக் கொண்டு இருக்கிறான் த்ருட பிராமண வேதைக சமதி கம்யனே -என்றும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிர நிறை யாயிரத்து இவை பத்தும் வீடே
என்று -த்ருடமான ஆகாச தேஜோ வாயு ஜல ப்ருத்வீ கதமான வரிஷ்ட சப்த தாஹ கத்வ கமன சாமர்த்திய சைத்திய ஷமா ரூப ஜெகதாகாரனாய் இருக்கிற
சர்வ ஸ்மாத் பிறனுடைய திருவடிகளில் ஆழ்வார் அருளிச் செய்த சப்தார்த்த புஷ்கல்யத்தை யுடைய ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இத்திருவாய் மொழி மோக்ஷ ப்ரதம்-என்றும்
ஆழ்வார் இதில் ஒன்றரைப் பாட்டாலே ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை வெளியிட்டு அருளி மேல் பாட்டுப் பாதியாலே –
வீடுமின் முற்றத்தாலே வெளியிடப்படுகிற உத்தர தவிகார்த்தமான பரதவ ஞானத்தினுடைய மோக்ஷ சாதனத்வத்தையும் உப ஷேபித்து அருளுகிறார் ஆதல் –
பூர்வ த்விக ப்ரதிபாத்யமான பரத்வ விஷயம் இத்திருவாய் மொழி என்று பிரதிபத் யார்த்தத்தை புத்தி சவ்கர்ய அர்த்தமாக ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் ஆதல் –

இனி வியத்பாத பிரதம அதிகரண நிர்ணீதாகா சோத்பத்தி –
நில விசும்பு ஒழிவறஎன்று பிருதிவ்யாதிகள் போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று அருளிச் செய்கையாலே சித்திக்கிறது –
இன்னமும் -ஆகாசஸ் ஸம்பூத என்கிற தைத்த்ரீய ஸ்ருதியிலே ஆகாச உத்பத்தி சொல்லி இருக்கையாலே
சாந்தோக்யத்திலும் வியதுத்பத்தி சர்வ சாகா ப்ரத்யய ந்யாயத்தாலே வரும் என்கிற அர்த்தமும்
பூமி ஆகாசம் என்கிற விசேஷம் இன்றிக்கே பூமி போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று சொல்லுகிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது –
அது எங்கனே என்னில்-ஆகாச உத்பத்தி கதனத்தாலே தைத்ரீய ஸ்ருத்யர்த்தம் தோற்றி அம்முகேந வியதுத் உத்பத்திய வசன சுருதி நிர்வாகமும் தோற்றுகையாலே ஸூசிதம் –

ஆக இவை எல்லாவற்றாலும் இச்சந்தை பிரதம அதிகரணார்த்தம் என்னக் குறையில்லை –

த்விதீய அதிகரண யுக்தமான
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகமாட்டாது என்று நிர்ணயித்த அர்த்தமும்
சர்வ தத்துவங்களுக்கும் ப்ரஹ்ம கார்யத்வ ப்ரதிபாதனம் பண்ணுகிற -பரந்த தண் பரவையுள் -என்று தொடங்கி முழுக்க இப்பாட்டாலே அறிவிப்பித்தமை அதி ஸ்புடமாய் இருக்கிறது –

த்ருதீய அதிகரண யுக்தமான ஜீவ உத்பத்தி நிஷேதமும் –
இடம் திகழ் பொருள்தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -இடம் திகழ் -என்று ஆத்ம தத்துவத்துக்கு வ்யாபகத்வம் சொல்லுகையாலே
வியாப்பிய பதார்த்தங்களினாலே நசிப்பிக்கப் படாது என்று சித்திக்கும் -இவ்வர்த்தத்தைப் பரமபுருஷன் தானே –
அவிநாசிது தத் வித்தி யேந ஸர்வமிதம் தத்தம் -விநாசமவ்ய யஸ்யாஸ்ய ந கஸ்ச்சித் கர்த்துமர்ஹதி-என்று வெளியிட்டு அருளினான் –
இந்த ஸ்லோகத்தை –ஆத்ம நஸ்த்வ விநாசித்வம் கதமித்ய த்ராஹ– அவிநாசிது-இதி–தத் ஆத்ம தத்வம் அவிநாசீதி வித்தி –
யேந -ஆத்ம தத்வேந சேதநேந தத் வ்யதிரிக்தமித்தம் அசேதன தத்வம் சர்வம் தத்தம் வ்யாப்தம் -வ்யாபகத் வேந நிரதிசய ஸூஷ்மதவாத்
ஆத்மநோ விநாசா நர்ஹஸ்ய தத் வ்யதிரிக்தோ ந கஸ்ச்சித் பதார்த்தோ விநாசம் கர்த்துமர்ஹதி -தத் வ்யாப்யதயா தஸ்மாத் ஸ்தூலத்வாத்
நாஸகம் ஹி சஸ்த்ர ஜலாக்னி வாய்வாதிகம் நாஸ்யம் வ்யாப்ய சிதிலீ கரோதி முத் கராதயோ அபி ஹி வேக வத் சம்யோகேந
வாயுமுத்பாத்ய தத் த்வாரேண நாசாயந்தி அத ஆத்ம தத்வம் அவிநாசி -என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் வ்யாக்யானம் செய்து அருளினார் –
இப்படி ஜீவனுடைய வ்யாபகத்வ கதனத்தாலே ஜீவனுடைய நித்யத்வம் சித்திக்கையால் த்ருதீய அதிகரண ப்ரமேயம் இச்சந்தை என்னக் குறையில்லை –
சதுர்த்த அதிகரண நிர்ணீதமான ஜீவனுடைய ஞாத்ருத்வமும் –
திகழ் பொருள் தொறும்-என்கிற சந்தையாலே தானே ஸூசிதம் ஆகலாம் -அது எங்கனே என்னில் -திகழ் பொருள் -என்கிற இதுக்கு -ஞானத்தவ ஆஸ்ரயமான வஸ்து என்று
இறே அர்த்தம் -இனி சாஷாத் பரம்பரவ் தாஸீந்யேந ஞானத்தவ ஆஸ்ரயம் என்னும் போது-ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சித்திக்கும் –
ஆனால் ஞாதா என்று அருளிச் செய்யாதே திகழ் பொருள் -என்று ஞான த்ரவ்யம் என்று அருளிச் செய்கைக்கு அடி என் என்னில்
ஞாதா என்றால் ஞான குணகத்வ மாத்ரம் தோற்றும் ஒழிய ஞான ஸ்வரூபத்வம் தோற்றாமையாலே -உபயமும் தோற்றுகைக்காக இங்கனே அருளிச் செய்தாராம் அத்தனை –
ஞான பதத்துக்கு உபய பரத்வம் உண்டு என்னும் இடம் ஜென்மாதி கரணத்தில்-சத்யம் ஞானம் -என்கிற சுருதி வ்யாக்யான ஸ்ருத பிரகாசிகையிலே
ஸூதீக்களுக்கு ஸூ வ்யக்தமாக அறியலாம் -ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னும் இடம் சித்தம்
தத்வ த்ரயம் -29-என்று ஜகத் குருவான பிள்ளை அருளிச் செய்த க்ரமத்திலே ஞாத்ருத்வ கதனத்தாலே கர்த்ருத்வமும் ஸூசிதம் ஆகையால்
ஜீவ கர்த்ருத்வ ப்ரசாதனம் பண்ணின பஞ்சம அதிகரண பிரமேயமும் –
திகழ் பொருள் தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான ஜீவனுடைய பகவத் அதீன கர்த்ருத்வ ப்ரசாதனமும்
திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -என்று ஜீவனுடைய பர அதீன உபயுக்த -அந்த பிரவேச உப லஷிதா நியமன கதனத்தாலே ஸூசிதமாகிறது –
ஜீவனுடைய கர்த்ருத்வம் பர அதீனம் ஆகிறது -பரமாத்மாவினுடைய அந்த ப்ரவிஸ்ய நியமனத்தாலே என்று ஹ்ருதீ கரித்து
பராத்து தச் ஸ்ருதே -என்கிற ஸூத்ரத்தத்தில் உள்ள சுருதி பதத்துக்கு அந்த ப்ரவிஷ்டா இத்யாதி ஸ்ருதிகளை ஸ்ரீ பாஷ்யகாரர் விஷயமாக உதாஹரித்து அருளினார் –

சப்தம அதிகரண யுக்தமான
ஜீவ வஸ்து ப்ரஹ்ம விசேஷண த்வேந ப்ரஹ்ம பின்னமுமாய் ஸ்வ நிஷ்டம் இன்றிக்கே ஒழிகையாலே அத்யந்த பின்னமும் அன்றிக்கே இருக்கும் என்கிற பொருள்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் என்று வ்யாப்ய வியாபக பாவ ரூப சரீராத்மா பாவ ப்ரதிபாதநத்தினாலே ஸ்புடமாக அறியலாம்-
துரீய பாத த்ருதீய சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்த அதிகரணங்களில் இந்திரிய சங்க்யாதி நிரூபணம் ப்ரசக்த அநு பிரசக்தமாகையாலே அத்தை உபேக்ஷித்து
அவசிஷ்ட பிரதம அஷ்டம அதிகரண நிரூபிதார்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார் –

பிரதம அதிகரணத்தில் –
இந்த்ரியங்களுடைய நித்யத்வம் இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந ப்ரதிபாதந ஸ்ருதியாலே என்று சங்கித்து அந்த சுருதி பரமாத்மாவினுடைய
பிரளய கால அவஸ்தையைச் சொல்ல வந்தது ஒழிய இந்த்ரியங்களுடைய நித்யத்வத்தைச் சொல்ல வந்தது அன்று -என்று நிர்ணயித்த அர்த்தம் –
பரமாத்மாவினுடைய பிரளய கால ஸ்திதியை ப்ரதிபாதிக்கிற -இவையுண்ட கரனே –என்கிற சந்தையாலே சொல்லப்பட்டது என்று அறியலாம் –

அஷ்டம அதிகரணத்தில் –
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தா சதுர்முகன் அல்லன்-சமஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான பரமாத்மாவே என்று நிர்ணயித்த அர்த்தமும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரன்-என்று வ்யஷ்டி சமஷ்டி ஸாதாரணயேந
சர்வ ஜகாத்தும் பிரம்மா கார்யம் என்கிற இச்சந்தையாலே அதி ஸ்புடமாக அறியலாம்

ஆனால் இச்சந்தைகளில் அநு ப்ரவேச கதனத்தாலும் சாமாநாதி கரண்ய நிர்தேசத்தாலும் சரீராத்மா பாவம் தோற்றும் ஒழிய கார்ய காரண பாவம்
தோற்றாமையால் இச்சந்தைகள் வியதாதிகளினுடைய ப்ரஹ்ம கார்யதா பிரகார சோதந பர அதிகரணங்களுக்கு ஸங்க்ராஹங்கள் ஆனபடி எங்கனே என்னில்-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய -என்றும் -தத் ஸ்ருஷ்வா ததேவ அநு ப்ராவிஸத்-இத்யாதி ஸ்ருதிகளில் அநு பிரவேச பூர்வகமாக ஸ்ருஷ்ட்டி உக்தையாகையாலே
கேவல ஸ்ருஷ்ட்டி ப்ரதிபாதந ஸ்தலங்களில் அநு பிரவேசமும் கேவல அநு பிரவேச ப்ரதிபாதன ஸ்தலங்களில் ஸ்ருஷ்டியும் சர்வ சாகா ப்ரத்யய நியாயத்தாலே
விவஷிதம் என்று ஸ்ரீ பாஷ்யாதிகளில் நீர்ணீதம் ஆகையாலே அநு பிரவேச உக்தயா ஸ்ருஷ்டியும் சித்தம் என்று இச்சந்தைகள் ஸங்க்ராஹகங்கள் ஆகலாம் –
ஆகையாலே பத்தாம் பாட்டுக்கும் நிகமன பாட்டுக்கும் த்வதீய லேசான த்ருதீய துரிய பாதங்களோடே ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

இப்படி பூர்வ த்விக ப்ரதிபாத்யமான ப்ரஹ்ம காரணத்வ –அபாத்யத்வங்களை –
ஆழ்வாரும் முதல் திருவாய் மொழியாலே வெளியிட்டு அருளினமை வேதாந்த த்வய சம்ப்ரதாயம் யுடையவர்க்குத் தெளியலாம் படி திங்மாத்ரேண தர்சித்தம் ஆயிற்று –

—————————–

சாரீரக உத்தர த்விகத்துக்கும் வீடுமின் முற்றத்துக்கும் ஐகமதியம் உண்டாம் படி எங்கனே என்னில்
உத்தர த்விக்கத்தில் ப்ரதிபாத்யமான சாதன தத் பலங்களை இத்திருவாய் மொழியிலும் பர உபதேச முகேந வெளியிட்டு அருளுகையாலே ஐகமத்யம் உண்டு –
ஆனால் நம்பிள்ளை இத்திருவாய் மொழி த்ருதீய அத்யாய ப்ரதிபாத்யமான உபாசன பரம் என்று அருளிச் செய்தாரே ஒழிய -த்ருதீய துர்ய அத்யாய ப்ரதிபாத்யமான
உபாய உபேய பரம் என்று அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில் -உபாசன சப்தம் பலத்துக்கும் பர தரிசன அர்த்தம் என்று அருளிச் செய்தார் –
யத்வா-இந்த உபாசன சப்தம் லக்ஷணையாலே ஞான சாமான்யத்தைச் சொல்லுகிறது – மோக்ஷ சாதநீ பூத உபாயமும் பல ரூப ப்ரஹ்ம அனுபவமும்
ஞான அவஸ்தா விசேஷம் ஆகையாலே இரண்டையும் இச்சப்தத்தாலே ஸங்க்ரஹித்து அருளினார் என்றும் காணலாம் –
இவ்விரண்டும் ஞான அவஸ்தா விசேஷம் என்னும் இடத்தை ரஹஸ்யத்ரய ஸாரத்திலே-இவர்களுக்கு கர்த்தவ்யமான உபாயமாவது -ஒரு ஞான விகாச விசேஷம் -இத்தாலே
சாத்யமாய் பிராப்தி ரூபமான உபேயமாவதும் ஒரு ஞான விகாச விசேஷம் -இவற்றில் உபாயமாகிற ஞான விகாச விசேஷம் -கரண சாபேஷமாய் -சாஸ்த்ர விஹிதமுமாய் –
ஸத்யத்வாதிகளான ஸ்வரூப நிரூபிக்க தர்மங்களோடே கூடின அவ்வோ வித்யா விசேஷ பிரதிநியத குணாதிகளினாலே நித்ய ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
உபேயமாகிற ஞான விகாச விஷயம் கரண நிரபேஷமுமாய்-ஸ்வபாவ பிராப்தமுமாய் குண விபூதியாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
என்று உபாய விபாக அதிகாரத்தில் ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

அதவா -வீடு செய்ம்மினே -என்று தொடங்கி-திண் கழல் சென்றே -என்னும் அளவும் மோக்ஷ உபாயத்தை பாட்டுக்கள் தோறும் வாக்யார்த்த தயா பிரதானமாகவும்
ததங்க தத் பலங்களை பதார்த்த தயா அப்ரதானமாகவும் ஆழ்வாரும் அருளிச் செய்கையாலே -ஸ்வர்க்க காமோ யஜேத-என்கிற விதத்தில் ஸ்வர்க்க சாதனம்
வாக்யார்த்த தயா பிரதானமாய் சுவர்க்கம் பதார்த்த தயா அப்ரதானமாய் இருக்கிறதைப் பற்ற இவ்வாக்கியத்தை ஜ்யோதிஷ்டோம ரூப சாதன பரம் என்று
அபியுக்தர்கள் வ்யவஹாரிக்கும் க்ரமத்திலே ஸ்ரீ நம்பிள்ளையும் வ்யவஹாரித்து அருளினார் –
ஆகையாலே பல ப்ரதிபாதனம் உபஸர்ஜனதயா ஆழ்வார் அருளிச் செய்தமை நம்பிள்ளைக்கும் விவஷிதமாகையாலே உபாசன பரம் வீடுமின் முற்றவும் -என்கிற
ஸ்ரீ ஸூக்தி யோடு உபாய உபேய ப்ரதிபாதக சாரீரக உத்தர த்விக சமா நார்த்தம் இத்திருவாய் மொழி என்கிற பிரமேயத்துக்கு விரோதம் இல்லை –

இதில் முதல் பாட்டு -த்ருதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
இரண்டாம் பாட்டும் மூன்றாம் பாட்டும் -த்வதீய பாதார்த்தமாகவும்
நாலாம் பாட்டு தொடங்கி மேல் நாலு பாட்டுக்களும் குண உப சம்ஹார பாதார்த்தமாகவும்
எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் சதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

இதில் வைராக்ய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவன் ஸூக்ருத கர்மா பல அனுபவார்த்தம் தேஹாத் தேஹாந்த்ர பிரவேசம் பண்ணும் போது அவ்விடங்களில் தேஹாரம்பக பூத ஸூஷ்மங்கள் லபிக்கையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ்வக்தனாய் போக வேண்டினமை இல்லையென்று சங்கித்து பஞ்சாக்கினி வித்யோக்த ப்ரக்ரியையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ்வக்தனாய் தேஹாத் தேஹாந்தர பிரவேசம் பண்ணுகிறான் என்று நிர்ணயித்தார் –
இந்த அதிகரணத்தில் காதா சித்கமாயாகிலும் பூத ஸூஷ்ம பரிஷ்வங்கம் இன்றிக்கே நிர்த்துக்கனாய் இருக்கைக்கும் அவகாசம் இல்லை என்று
வைராக்ய ஜனன அர்த்தமாக யாவன் மோக்ஷம் ப்ரக்ருதி சம்பந்தம் அவர்ஜனீயம் என்று நிஷ்க்ருஷ்டமாயிற்று –
கிஞ்ச -பாக்தம் வா அனாத்மா வித்த்வாத்-என்கிற ஸூத் ரத்தாலே தேவ ப்ருத்ய பாவத்தை அவலம்பித்து தத் ப்ரயுக்த கிலேச கரம்பிதமாய் இருக்கிற
ஸ்வர்க்க போக அனுபவத்தினுடைய ஷயிஷ்ணுத்வம் சாதிசயத்வமும் ஆவிஷ்க்ருதம்-
த்விதீய அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அனுபவ அனந்தரம் ஜீவனானவன் க்ருத்ஸ்ன கர்மபலமும் புக்தமாகையாலே கர்ம சம்பந்தம் அற்றே இழிகிறான் என்று சங்கித்து –
ரமணீய சரணர்கள் ரமணீய யோனியை அடைவர்கள் -கபூய சரணர்கள் குத்ஸித யோனியை அடைவார்கள் என்று சுருதி சொல்லுகையாலே
கர்ம சம்பந்தம் உடையனாயே இழிகிறான் என்று நிர்ணயித்தார் -இதிலும் ஸூஷ்ம தேஹத்துக்கும் காரணதயா சகல சம்சார நிதான கர்ம சம்பந்தம்
முக்தி பர்யந்தம் அனுவ்ருத்தமாய் இருக்கிறது என்று சம்சார தோஷம் யுக்தமாயிற்று –
த்ருதீய அதிகரணத்தில் –
அநிஷ்ட அதிகாரிகளான பாப கர்மாக்களுக்கும் சந்த்ர பிராப்தி உண்டு என்று சங்கித்து இஷ்டா பூர்த்தாதி சத்கர்ம ரஹிதர்களுக்கு
பித்ருயான மார்க்கத்தாலே கைமணம் இல்லாமையால் சந்த்ர பிராப்தி இல்லை என்று நிர்ணயித்தார் -இதிலும் -க்ராமம் கச்சன் வ்ருஷ மூலான் யுபசர்ப்பதி-என்ற
நியாயத்தாலே யாகிலும் ஸ்வர்க்க பிராப்தி இல்லை -யமசத நத்திலேயும் ரவ்ரவாதி நரகங்களிலும் மிகவும் யாதநாநுபவமும் கீடாதி ஜென்ம பிராப்தியும் யுண்டு
என்று சம்சார தோஷம் வ்யக்தமாகக் கீர்த்திதமாயிற்று –
சதுர்த்த அதிகரணத்தில் –
சுருதி ஸித்தமான ஆகாசாதி பாவம் ஜீவனுக்கு தேவ மனுஷ்யாதி பாவம் போலே தச் சரீரத்வ ரூபம் என்று சங்கித்து
ஆகாசாதி ப்ராப்தியிலே ஸூக துக்க அனுபவம் இல்லாமையால் தத் சாம்யா பத்தி ஒழிய தச் சரீரத்வம் இல்லை என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுமவர்களுக்கு ஆகாசாதி பாவ ஸ்ரவணத்தாலே தத் அபிமானி தேவதைகளை போலே ஆகாசாதி சரீரத்வ ப்ரயுக்தமான
சில திவ்ய போகங்கள் உண்டு என்கிற சங்கா நிவ்ருத்தி யர்த்தமாக ஆகாசாதி சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று சொல்லுகையாலே தோஷ கீர்த்தனம் ஸ்புடம் –
பஞ்சம அதிகரணத்தில் –
ஆகாச வாயு தூமா பிரமேக வர்ஷா பிராப்தி யுண்டாம் போது அவ்வோ இடங்களிலே அதி சீக்கிரமாக ஜீவனுக்கு கைமணம் உண்டு என்கிற நியமம் இல்லை –
தத் தேது இல்லாமையாலே என்று சங்கித்து உத்தர த்ர வ்ரீஹ்யாதி ப்ராப்தியிலே -அதோ வை துர் நிஷ் ப்ரபதரம் -என்று விசேஷித்து க்ருச்ச்ரா நிஷ் க்ரமணம்
சொல்லுகையாலே ஆகாசாதி ப்ராப்தியிலே அசிர நிஷ் க்ரமணமே உள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஆகாசாத் யவஸ்தாந விளம்ப நியம நிரசன வ்யாஜேந வ்ரீஹ் யாதிகளில் ஸூக போகம் அற்று அசிராவஸ்தாந ரூப தோஷம் த்ருடமாயிற்று –
ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுகிற ஜீவர்கள் வ்ரீஹ்யாதி சரீரதயா ஜனிக்கிறார்கள் என்று சங்கித்து வ்ரீஹ்யாதி ஜென்ம ஹேது பூத கர்ம விசேஷம்
அஸ்ருதமாகையாலே அந்நிய ஜீவ அதிஷ்டித வ்ரீஹ்யாதிகளில் சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் வ்ரீஹ் யாதி பாவேந ஜனனம் என்னும் போது தல்லவந பயந்த மாத்திரமே துக்கம் யுக்தமாம் -அங்கன் அன்றிக்கே சம்ச்லேஷ மாத்திரம் என்று நிர்ணயித்த இத்தாலே
சோஷன குஸூலா வஸ்தாபந அவஹநந பலீ கரண பாக்க பஷணாதி தசைகளிலும் அனுவ்ருத்தி சித்திக்கையாலும் பஷண விஷயம் அன்றிக்கே இருக்கிற
வ்ரீஹ் யாதிகளிலும் பரிணாம பரம்பரையா சம்ச்லேஷம் சித்திக்கையாலும் தோஷ கீர்த்தனம் அதி ஸ்புடம் –

இப்படி சாரீரகத்தில் ஷட் அதிகரணியான இப்பாதத்தாலே பகவத் ஆஸ்ரயண உபயுக்த வைராக்ய சித்த்யர்த்தமாக நிரூபித்த அர்த்தத்தை -ஆழ்வார் –
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்று ஐஹிக ஆமுஷ்மிக சகல விஷயங்களையும் அதி ஹேயம் என்று
அத்யவசித்து அதில் போக்யதா புத்தியை விடுங்கோள்-
இப்படி விட்டுப் பரமபத நிலயனான சர்வேஸ்வரன் விஷயத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுங்கோள் -என்று பரப்பற்று ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும்
மந்த மதிகளுக்கும் தெளியலாம்படி ஒரு சொல்லாலே அருளிச் செய்தார் –
இனி ஸூத்ரகாரர் பரக்கத் சொன்னத்தை இவர் ஒரு சொல்லாலே அருளிச் செய்வான் என் என்னில்-ஏ பாவம் பரமே -என்கிறபடி
நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிற இவருக்குப் பறக்க சம்சார தோஷ கீர்த்தனமும் அஸஹ்யமாய்த் தோற்றுகையாலும்
நல்குரவும் செல்வமும் என்கிற திருவாய் மொழிப்படி சர்வ பதார்த்தங்களும் ப்ரஹ்மாத்மகதயா போக்யமாய்த் தோற்றச் செய்தேயும் சம்சாரிகள் பக்கல் கிருபையால்
அவர்கள் பாக அனுகுணமாகத் தமக்குத் தோற்றாத தோஷத்தையும் சொல்ல வந்தவராகையாலும் -முற்றவும் விடுமின் -என்று அக்ராமயமாக
பஹ்வதி கரண சித்தார்த்தையும் சாதுர்யத்தாலே அருளிச் செய்ய வந்தவராகையாலும் இப்படி ஒரு சொல்லாலே வெளியிட்டு அருளினார் –
ஆனால் இப்பாத அர்த்தமான வைராக்ய மாத்ரத்தை விதிக்க வேணும் ஒழிய பாதாந்த்ர அர்த்தமான உபாய ஸ்வீகாரத்தை விதிப்பான் என் என்னில்
பக்தி உபாயத்துக்கு விஷய வைராக்கியமும் பிரபத்தி யுபாயத்துக்கு உபாயாந்தர வைராக்கியமும் அங்கம் இறே –
இதுக்கு உள்ள அங்க அங்கி பாவத்தை வீடு செய்து -என்று ல்யப்பாலே அருளிச் செய்தார் –
ஆகையால் இப்பாட்டுக்கும் இப்பாதத்துக்கும் ஐகமத்யம் சித்தம் –

த்விதீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் ஜீவன் ஸந்நிஹிதன் ஆகையாலே-தத் ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று சங்கித்து சம்சார தசையில் ஸ்ரஷ்ட்ருத்வ உபயுக்த
சத்யசங்கல்பாதிகள் கர்ம திரோஹித்த ஸ்வரூபனான ஜீவனுக்கு கூடாமையாலே ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று பரமாத்மா கர்த்ருகை என்று நிர்ணயித்தார்
த்வதீய அதிகரணத்தில் –
நாடிகள் என்ன புரீதத் பிரதேசம் என்ன ப்ரஹ்மம் என்ன இவை மூன்றும் நைரபேஷ்யேண ஸூஷூப்தி ஸ்தானத்வேண ஸ்ருதமாகையாலே தத் ஸ்தானத்வம்
விகல்பேந வருகிறது என்று சங்கித்து பிராசாத கட்வா பர்யங்கங்கள் போலே கார்ய பேதேந சமுச்சயமே கூடும்படியாய் இருக்க
பாஷிக பாத கர்ப்ப விகற்பம் அயுக்தமாகையாலே சமுச்சயமே யுக்தம் என்று நிர்ணயித்தார் –
த்ருதீய அதிகரணத்தில்
ஸூப்தனே ப்ரபோத காலத்திலே உத்திதனாகிறான் என்ன ஒண்ணாது -ஸூஷூப்தனுக்கு சர்வோபாதி விநிர்மோக பூர்வக ப்ரஹ்ம ஸம்பத்தி வருகையாலே-
என்று சங்கித்து ஸூஷூப் திக்கு முன்னே ஆரப்தமான கர்மம் உத்திதனாலே சமாபனம் பண்ணப் படுக்கையாலும் ஸோ அஹம் என்று
ஸூப்தனே உத்திதன் என்று ப்ரத்யபிஜ்ஜை வருகையாலும் — இத்யாதி உக்திகளாலே ஸூப்தனுக்கே உத்திதத்வம் சமர்த்தித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில்
மூர்ச்சை சர்வ இந்திரிய பிராண வ்யாபாரோ பரதி தசையாய் இருக்கையாலே மரணம் என்று சங்கித்து ஆகார வைரூப்யத்தாலே
ஸூஷ்ம பிராணா ஸ்தித்வம் அவகதம் ஆகையாலே மரணாய அர்த்த ஸம்பத்தி -மூர்ச்சை என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில்
ஜீவனுக்குப் போலே பரமாத்மாவுக்கு ஜாகராதி சர்வ அவஸ்தைகளிலும் அவஸ்தானம் யுக்தமாகையாலே தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவிக்கும் என்று சங்கித்து
சர்வ அவஸ்தா வஸ்திதமான ப்ரஹ்மத்துக்கு அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதா நத்வமாகிற உபய லிங்கம் சுருதி சமதி கதமாகையாலே
தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவியாது என்று நிர்ணயித்தார் –
ஷஷ்ட்டி அதிகரணத்தில்
அசித் வஸ்து ரூபேண பரிணதம் ப்ரஹ்மம் தானாக வேணும் -அன்றிக்கே -ப்ரஹ்மத்திலும் அசித் வஸ்துவிலும் ஏக ஜாதி யோகத்தாலே ஐக ஜாதிக வாஸ்து தானாக வேணும் –
பின்ன அபின்னத்வ உபய வ்யபதேசம் கூட வேண்டுகையாலே என்று சங்கித்து அம்சோ நாநா வ்யபதேசாத்-என்கிற அதிகரண ந்யாயேந
ஜீவனுக்குப் போலே சரீராத்மா பாவம் யுண்டாய் பாத்தாலே பின்ன அபின்னத்வ வ்யபதேசம் கூடுகையாலே அசித் வஸ்து பிரம்மா சரீரம் என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில்
ஜகஜ் ஜென்மாதி காரண தயா த்ருஷ்ட பர ப்ரஹ்ம வஸ்துவிலும் பர வஸ்து சேதூந்மான சம்பந்த பேத வ்யபதேசங்களாலே உண்டு என்று
சங்கித்து காரண வஸ்துவில் காட்டில் வஸ்வந்தரத்துக்குப் பரத்வம்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -இத்யாதி சுருதி நிஷித்தம் ஆகையால் சேது த்வயபதேசம் சர்வ லோகா அசங்கர்ய ஹேதுத்வ ப்ரயுக்தமாகையாலும்
அபரிச்சின்ன வஸ்துவுக்கு உன்மான வ்யபதேசம் உபாசன அர்த்தமாகையாலும் சம்பந்த வ்யபதேசம் தனக்கே ப்ராப்யத்வ ப்ராபகத்வ ப்ரயுக்தமாகையாலும்
ததோ யதுத்தர தரம் -என்கிற ஸ்ருதிக்கு பேத வ்யபதேசம் அர்த்தம் இல்லாமையாலும் ஜகாத் காரண வஸ்துவிலும் பர வஸ்து இல்லை என்று நிர்ணயித்தார் –
சரம அஷ்டம அதிகரணத்தில் –
யாக தான ஹோம உபாசனாதி வைதிக கர்மங்கள் ஷணத்வம்ஸிகள் ஆகிலும் தஜ் ஜன்யா பூர்வ த்வாரா போக அபவர்க்க ரூப சர்வ பல சாதனங்கள் என்று சங்கித்து
கர்தவ்யதயா அவகதயா கோபாசனாதிகளுக்கும் பலப்ரதன் பரம புருஷனே என்று சுருதி ஸ்ம்ருதி சித்தமாகையாலே பரம புருஷனே பல ப்ரதன் என்று நிர்ணயித்தார்
இப்பாதத்தில் முந்துற அதிகரண சதுஷ்டயத்தாலே-
ஏதத் தேஹ மாத்ர அநுபத்த ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வ ஸூஷூப்தி ஸ்தாநாதி நிரூபண முகேந பிரதம பாத நிரூபித்த இஹா முத்ர சஞ்சார
தச அநு வ்ருத்த தோஷ வ்யதிரிக்த தோஷங்கள் வைராக்ய சித்த்யர்த்தம் யுக்தமாயிற்று –
உத்தர அதிகாரண சதுஷ்டயத்திலும் –
பரமாத்மரக்தி ஜனன அர்த்தம் பகவத் கல்யாண குணங்கள் ப்ரதிபாதிதமாயிற்று-ஆனால் கல்யாண குண ப்ரதிபாதகமான இப்பாதத்தில்
நிரூபிக்க வேண்டிய தோஷங்கள் சங்கதமானபடி எங்கனே என்னில்-தோஷ கீர்த்தன பரமான இவ்வதிகரண சதுஷ்டயமும் பூர்வபாதம் போலே
நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரம் அன்றிக்கே கல்யாண குண ப்ரதிபாதகமும் ஆகையால் இப்பாதத்தில் சங்கதமாயிற்று
ஆகையால் இறே அதிகரண சாராவளியிலே –
பூர்வபாதம் நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரமாகவும் இப்பாதம் கல்யாண குண ப்ரதிபாதன பரமாகவும்
பாதே த்வர்த்தாஷ் ஷடஸ்மிந் வபுரிஹ விஜஹத் பூத ஸூஷ்மைஸ் சஹேயாத் புக்த ஸ்வர்க்க அவரோஹ அப்யநுசய சஹிதோ மாத்ரயா பின்ன மார்க்க
சந்த்ர ப்ராப்த்யாதி ந ஸ்யாந் நிரயபத ஜூஷாமம் பராதவ் சத்ருக்த்வம் தஸ்மாச் சீகே ராவரோஹ பரவபுஷி சிரம் வ்ரீஹாய் பூர்வே அபி யோக -என்றும் –
பாதே ஸ்வப்ன அர்த்த ஹேதுஸ் ததயமிஹ ஸூஷூப்த்யாத் ருதிஸ் ஸூப்த கோப்தா முக்தே போதாதிகர்த்தா த்வநக ஸூய குணோஸ் சித்பி ரம்சீ சதேஹ
பாரம்யஸ்யைக சீமா சகல பலத இத்ச்யுயதே பக்தி பூம்நே சத்யே ஹ்யேவம் குணா தாவத பர பஜநே ரூப பேதாதி சிந்த்யம் -என்றும்
இரண்டு ஸ்ரக்தரையாலே ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் வகுத்து அருளிச் செய்தார் –

இனி இரண்டாம் பாட்டு பூர்வ அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும் மூன்றாம் பாட்டு உத்தர அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும்இருக்கும் –
இதில் பூர்வ அதிகரண சதுஷ்டய நிரூபித வர்த்தமான தேஹ மாத்ர அநு பத்த ஸ்வப்னாத் யவஸ்தா அநு வ்ருத்த தோஷங்களை ஆழ்வாரும்
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே -என்று மின்னொடு ஒத்த ஸ்வபாவத்தையும் யுடையது அல்ல -ஆத்மவஸ்து
பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்கிற இடத்தில் நீங்களே அல்பம் சிந்தியுங்கோள்-என்று
ஸ்வப்ன கல்ப தடிச் சஞ்சலமாய் இருந்துள்ள வர்த்தமான தேஹ தோஷ கீர்த்தன முகேந ஸூசிப்பித்து அருளினார் –
சரீராதி பதார்த்தங்களுக்கும்-ஸ்வப்நாத்ய அநு பூத பதார்த்தங்களுக்கும் ப்ரமக்ருத வைலக்ஷண்யம் ஒழிய நிரூபகர்க்கு வைலக்ஷண்யம் தோற்றாது இறே –
இன்னமும் ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாமைக்கு ஹேது -ஸத்யஸங்கல்பத்வ திரோதானம் -அதுக்கும் ஹேது பரமாத்மா நிக்ரஹம் –
அது தானும் தேஹத்தோடே சம்பந்திப்பித்து விட்டுத் திரோதானத்தைப் பண்ணும் -ஆகையால் ஸ்வப்ன கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாது என்கிற
பிரதம அதிகரண அர்த்தம் -மன்னுயிர் ஆக்கைகள் -என்று ஸத்யஸங்கல்பத்வ திரோதி ஹேது பூத தேஹ சம்பந்த ப்ரதிபாதனத்தாலே விசேஷித்து ஸூசிதமாயிற்று –
சதுர்த்த அதிகரண யுக்தமான ஸூப்தஸ்யைவ உத்திதத்வ நிரூபண முகேந நித்யத்வ சாதனமும் -மன்னுயிர் -என்கிற சந்தைக்கு நித்தியமான ஆத்மவஸ்து -என்று
வ்யாக்யாதாக்கள் ஒருபடி வ்யாக்யானம் பண்ணி இருக்கையாலே இச்சந்தையாலே யுக்தமாயிற்று –
இவ்வதிகரண சதுஷ்டயத்துக்கும் பகவன் மஹிம ப்ரதிபாதகத்வ ஆகாரமும் உண்டாகையாலே
அவ்வம்சத்தையும் நியந்த்ருத்வ ரூப மஹிமவாசியான இறை என்கிற பதத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
முன்புள்ள முதலிகள் அனைவரும் இறை உன்னுமின் என்கிற சந்தைக்கு அல்பம் விசாரியுங்கோள் என்று அர்த்தம் விட்டார்களே யாகிலும் உரையில்
ஜீயர் ஸ்வாமியை மனனம் பண்ணுங்கோள் என்று ஒரு பொருள் இடுகையாலே
முன்புள்ள முதலிகளுக்கு அவிருத்த அர்த்தாந்தர கதனம் அபிமதம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-
இனி இப்பதத்துக்கு ஸ்வாமித்வ நியந்த்ருத்வங்கள் இரண்டும் அர்த்தம் என்னும் இடம் வ்யுத்பத்தி சித்தமாகையாலே இப்படியும் ஓர் அர்த்தம் சொல்லத் தட்டில்லை-
இனி உத்தர அதிகரண சதுஷ்டயர்த்தத்தையும் –
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மினே உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை-என்று நீங்கள் என்றும் உங்களது என்றும் சொல்லுகிற அஹங்கார மமகாரங்களை
சவாசனமாகப் போக்கி ஈஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் -ஆத்மாவுக்கு இத்தோடு ஒத்த அதிசயம் இல்லை என்று வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில்
பஞ்சம அதிகரண யுக்தமான
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதா நத்வ ரூப உபய லிங்கத்தை -இறை என்று சித் அசித் வ்யாவ்ருத்த ஈஸ்வர ப்ரதிபாதனத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
பரமாத்மாவினுடைய சித் அசித் வ்யாவ்ருத்தி உபய லிங்கத்தாலே இறே -ஈஸ்வரனுக்கே இறே உபய லிங்கத்தவம் உள்ளது –
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான –
அசித் த்ரவ்யம் ப்ரஹ்ம பரிணாமம் அன்று — ப்ரஹ்ம சஜாதீய த்ரவ்யமும் அன்று –ஜீவனைப் போலே ப்ரஹ்ம பிரகாரம் என்கிற அர்த்தமும்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை -என்கிற அளவாலே ஸூசிதம் -எங்கனே என்னில்
ப்ரக்ருதி சம்சாரக்க க்ருத அஹங்கார மமகாரங்களினுடைய த்யாஜ்யத்வ உக்தியாலே ப்ரக்ருதியும் த்யாஜ்யம் என்றதாய் பாத்தாலே அசித் த்ரவ்யம்
உபாதியமான ப்ரஹ்ம பரிணாமம் அன்று ப்ரஹ்ம சஜாதீயமும் அன்று என்கிற அம்சம் ஸூசிதமாகையாலும்
சித் அசித் நியந்த்ருத்வ வாசியான இறை என்கிற பதத்தாலே அசித்துக்கும் நியாம்யத்வ ரூப சரீரத்வ அபர பர்யாய அம்சத்வமே யுள்ளது என்கிற அர்த்தமும் ஸூசிதமாகையாலும்
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான அசித் த்ரவ்ய ஸ்வரூப நிரூபணமும் ஸூசிதமாயிற்று –
சப்தம அதிகரண யுக்தமான
ஜகத் காரண வஸ்து உத்தீர்ண தத்வ ஸத்பாவ நிஷேத நிர்ணயமும் –இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை -என்று
ஜகத் காரண பூத ஈஸ்வர ஸமாச்ரயண உத்கர்ஷ ப்ரதிபாதனத்தாலே ஆஸ்ரணீய ஜகத் காரண வஸ்துவினுடைய நிஸ் சமாப்யதிகத்வம் யுக்தமாய்
பாத்தாலே தத்வாந்தர நிஷேதம் பலிக்கையாலே ஸூசிதம் –
கிஞ்ச-இறை -என்கிற பதம் ஈசான சப்த பர்யாயம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம் -ஜகத் காரண வஸ்து உத்தீர்ணத்வேந சங்க்யமான தத்வ வாசக சப்தத்தை
ஜகத் காரண வாஸ்துவில் இறை என்று இவர் நிர்தேசிக்கையாலே தத் உத்தீர்ண வஸ்து நிஷேதமும் ஸூசிதமாகலாம்
அஷ்டம அதிகரண யுக்தமான
தேவதா ஆராதன ரூப யாக தான ஹோம உபாஸநாதிகளுக்கு பகவத் பிரசாத த்வாரா பலசாதனத்வம் ஒழிய அபூர்வத்வாரா பலசாதனம் இல்லை என்கிற அர்த்தமும்
இறை சேர்மினே -என்று பகவத் ஆராதனை ரூபமான ஆஸ்ரயணத்தை விதிக்கையாலே ஆராத்யனுடைய ப்ரீதியே பலப்ரதம் –
மற்றொரு அபூர்வாதிகள் பலப்ரதம் அன்று என்று சித்திக்கையாலே ஸூசிதமாகலாம்-
ஆகையால் த்ருதீய லக்ஷண த்வதீய பாதத்துக்கும் த்விதீய த்விதீய த்ருதீய காதைகளுக்கும் ஐகமத்யம் சித்தம் –

குண உபஸம்ஹார பாதத்துக்கும் சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்தம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில்
இப்பாதத்தில் நிரூபித்த உப சம்ஹார அநுப சம்ஹாரங்களை இவர் இப்பாட்டுக்களாலே ஸூசிப்பிக்கையாலே ஐகமத்யம் உண்டு –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
அநேக சாகாதீத வைச்வாநர வித்யாதிகள் சோதநாத்யா விசேஷத்தாலே ஏகம் என்று சாகாந்த்ர அதிகரண நியாயத்தை
வஹ்ய மாணார்த்த உபயுக்தமாக வித்யையிலும் காட்டினார் –
த்விதீய அதிகரணத்தில்
சாந்தோக்ய வாஜச நேயங்களில் சிறுத்தையான உத்கீதா வித்யையில் பிராண த்ருஷ்ட்யுபாஸ்தி சோதணாத்ய விசேஷத்தாலே ஏகம் என்று சங்கித்து ஒரு ஸ்தலத்தில்
உத்கீத அவயவமான ப்ரணவத்தில் ப்ராணதிருஷ்டியும் ஸ்தலாந்தரத்தில் க்ருத்ஸ்ன உத்கீதத்தில் பிராணாதிருஷ்டியுமாய் இருக்கையாலே
ரூப பேதாத் வித்யா பேதம் என்று நிர்ணயித்தார் –
த்ருதீய அதிகரணத்தில்
வாஜச நேய சாந்தோக்யங்களிலும் கௌஷீதகீ ப்ராஹ்மணத்திலும் ச்ருதமான பிராண உபாசனம் ரூப பேதத்தாலே பின்னமாக வேணும் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்ய குணகமான பிராணனுக்கு வாகாதி கத வசிஷ்டாத்வாதி குண சம்பந்தித்தவம் ச்ருதமாகையாலும்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் அது ஸ்ருதம் இல்லாமையாலும் என்று சங்கித்து கௌஷீதகியில் ச்ருதமான ப்ராணனுடைய ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்யங்கள்
வாகாதி கத வசிஷ்டத்வாதி குண அனுசந்தானத்துக்கும் ஸூசகமாகையாலே அதிலும் வாகாதி கத வசிஷ்டத்வாதி குண சம்பந்தம்
ப்ராணனுக்கு சித்திக்கையாலே ரூப ஐக்யம் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில் –
சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகையாலே சர்வவித்யையிலும் அநுப சம்ஹார்யங்கள்-என்று சங்கித்து
ப்ரஹ்ம ஸ்வரூபம் போலே சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகிலும் சர்வ வித்ய அநுயாயிகள் என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ச்ருதமான பிராண வித்யையில் ஸ்ம்ருதியாசார ப்ராப்தா சமனத்தில் காட்டிலும் வித்ய அங்கதயா ஆசமனாந்தரம்
விதிக்கப்படுகிறது என்று சங்கித்து ஆசமநீயாப்புக்களில் பிராண வாசஸ்த்வ அநு சந்தானம் அங்கதயா விதிக்கப் படுகிறது ஒழிய
ஆசமனாந்தர விதாந பரம் அன்று என்று நிர்ணயித்தார் –
ஷஷ்டா அதிகரணத்தில் –
வாஜச நேய அக்னி ரஹஸ்யத்திலும் ப்ருஹதாரண்யத்திலும் ஸ்ருதையான சாண்டில்ய வித்யை ஒரு ஸ்தலத்தில் ஸத்யஸங்கல்பம் ஸ்ருதமாய்
ஸ்தலாந்தரத்தில் வசித்வாதிகள் ஸ்ருதமாகையாலே ரூபா பேதாத் பின்னை என்று சங்கித்து வசித்வாதிகள் ஸத்யஸங்கல்பத்வ விச்சித்தியாய்
ரூபா பேதம் அல்லாமையாலே வித்யைக்யம் என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில் –
ஆதித்ய மண்டலத்திலும் அஷியிலும் ச்ருதமான ஸத்யஸப்த வாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய வ்யாஹ்ருதி சரீரத்வ உபாசனம் துல்யமாகையாலே
அஹம்-ஆஹா -என்கிற ரஹஸ்ய நாமங்களும் இரண்டு ஸ்தலத்திலும் அநியமேந அணிவித்தனர் ஆகின்றன என்று சங்கித்து
அஷ்ய ஆதித்ய ஸ்தான சம்பந்தித்வாகர பேதத்தால் ரூபம் பின்னமாய் வித்யை பேதிக்கையாலே இரண்டு நாமங்களும் வித்யாத்வய நியதங்கள் என்று நிர்ணயித்தார் –
அஷ்டம அதிகரணத்தில்-
தைத்ரீயத்தில் அநாரப்ய அதீதங்களான சம்ப்ருதி த்யுவ்யாப்த்யாதி குணங்கள் சர்வ வித்யைகளிலும் உப சம்ஹார்யங்கள் என்று சங்கித்து
அல்ப ஸ்தான கோசாரங்களான வித்யைகளில் த்யுவ்யாப்த்யாதி குணங்கள் உபசம்ஹரித்தும் அஸக்யங்கள் ஆகையாலே அல்ப ஸ்தான விஷயங்களான
தஹராதி வித்யைகளில் அநுப சம்ஹார்யங்கள் என்று நிர்ணயித்தார் –
நவம அதிகரணத்தில் –
தைத்திரீயத்திலும் சாந்தோக்யத்திலும் ஸ்ருதையான புருஷ வித்யை சம்ஞ்ஞ ஐக்யத்தாலே ஏகை என்று சங்கித்து
ஸ்வதந்த்ர யஜமான பத்ந்யாதி கல்பன பிரகார பேத ப்ரயுக்த ரூப பேதத்தாலும் சதாயுஷ்ட்வ மோக்ஷ பிராப்தி ரூப பல பேதத்தாலும் பின்னை என்று நிர்ணயித்தார்-
தசம அதிகரணத்தில் –
உபநிஷத் ஆரம்பத்திலே அதீதங்களான -சன்னோ மித்ரா -இத்யாதி மந்திரங்களும் ப்ரவரக்யாதி கர்மங்களும் வித்யா சந்நிதி சமாம்நாநத்தாலே
வித்யா அங்கங்கள் என்று சங்கித்து -அர்த்த சாமர்த்தத்தாலே அபிசாராத்யயநாதிகளில் விநியுக்தங்கள் ஆகையாலே வித்யா அங்கங்கள் என்று நிர்ணயித்தார் –
ஏகாதச அதிகரணத்தில் –
புண்ய பாபங்களினுடைய ஹானி சிந்தனமும் உபாயந சிந்தனமும் வித்யா அங்கத்வேந அந்வயிக்கும் போது விகல்பேந அந்வயிக்க வேணும் என்று சங்கித்து –
ஹானி உபாயங்கள் இரண்டும் ஏக விஷயங்கள் ஆகையாலே சமுச்சயிக்க வேணும் என்று நிர்ணயித்தார்
துவாதச அதிகரணத்தில் –
சிந்த நீயமான ஸூக்ருத துஷ்க்ருத ஹானி உபாய நங்கள் தேஹ வியாக காலத்தில் நியமேந வருகிறது என்று சங்கித்து
தேஹ வியோகாந்தர அநு பாவ்ய ஸூக துக்கங்கள் இல்லாமையாலே தேஹ வியோக காலத்திலேயே நியமேந வருகிறது என்று நிர்ணயித்தார் –
த்ரயோதச அதிகரணத்தில் –
எந்த உபாசன சந்நிதானத்திலே அர்ச்சிராதிகதி ஸ்ருதையாய் இருக்கிறதோ தன்நிஷ்டனுக்கே அர்ச்சிராதி மார்க்கம் நியதம் என்று சங்கித்து –
சர்வ உபாசன நிஷ்டர்களுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் சாதாரண தயா ஸ்ருதி விஹிதம் ஆகையாலே சார்வார்க்கும் நியதம் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்தச அதிகரணத்தில் –
பிரபஞ்ச ப்ரத்யநீகதா ரூபங்களான அஸ்தூலத் வாதி தர்மங்கள் வித்யாந்தர ரூப பூத குணங்களுக்கு வித்யாந்தர ரூபத்வே பிரமாணம் இல்லாமையாலும்
ஆனந்தத்தவாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகங்கள் இல்லாமையாலும் சர்வ வித்யா அநுயாயி ரூபம் அன்று -அக்ஷர வித்யா ரூப மாத்ரமாக வேணும் என்று சங்கித்து
ஆனந்தத்தவாதிகள் போலே சித்த அசிதாத்மகா பிரபஞ்ச தர்மபூத ஸ்தூலாத்வாதி விபரீதமான அஸ்தூலத் வாதிகளும்
ஸ்வரூப நிரூபனம் ஆகையாலே சர்வ வித்யா அநு யாயிகள் என்று நிர்ணயித்தார் –
பஞ்ச தச அதிகரணத்தில் –
உஷஸ்திக ஹோள ப்ரஸ்ன பிரதி வசனங்களில் பிராணநாதி ஹேதுத்வ அசனா யாத்யதீதத்வ ரூப உபாஸ்ய ஆகார பேதத்தாலே வித்யா பேதம் என்று சங்கித்து
உபய ப்ரஸ்னத்துக்கும் பரமாத்ம விஷயத்தில் பேதம் இல்லாமையாலும் பிரதி வசன த்வயகதமான ஆகார த்வயமும் பரமாத்மாவினிடத்தில் உபபன்னம் ஆகையாலும்
வித்யா பேதம் இல்லை என்று நிர்ணயித்தார் –
ஷோடச அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஸ்ருதமான தஹர வித்யை அபஹத பாப்மத்வ வசித்வாத் யுபாஸ்யாகார பேதத்தாலே பின்னை என்று சங்கித்து
வசித்வாதி குணங்கள் ஸத்யஸங்கல்ப த்வாந்தர்கதமாகையாலே உபாஸ்ய ஆகார பேதம் இல்லாமையாலே வித்யை அபின்னை என்று நிர்ணயித்தார் –
சப்த தச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாஸ்யங்கள் கர்மாங்க பூதோத் கீதாத் யாஸ்ரயங்கள் ஆகையாலே கர்மங்களிலே நியமேந உபஸம்ஹார்யங்கள் என்று சங்கித்து
கோதோஹ நாதிகளைப் போலே காம்யங்கள் ஆகையாலே நியமேந அனுப சம்ஹாரயங்கள் என்று நிர்ணயித்தார் –
அஷ்டாதச அதிகரணத்தில் –
தஹர வித்யையில் குண சிந்த நத்திலே குணி சிந்தனா வ்ருத்தி வேண்டா -குணி சிந்தனம் ஸ்ருதம் ஆகையாலே என்று சங்கித்து
குணார்த்தமும் பிரதான ந்யாயேந குண்யா வ்ருத்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –
ஏகோந விம்ச அதிகரணத்தில் –
நாராயண அணுவாகம் பூர்வ ஸ்ருத தகர வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம் என்று சங்கித்து
பிரகரணாத் பலவத்தான லிங்க பூயஸ் த்வத்தாலே சர்வ வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாராம் என்று நிர்ணயித்தார் –
விம்ச அதிகரணத்தில் –
மனஸ் சிதாதிகளான சாம்பாதி காக்நிகள் க்ரியாமயக்ரது ப்ரக்ருதமாகையாலே தத் அந்வயிகளாய் கிரியாமயங்கள் என்று சங்கித்து
வித்யா மயக்ரதுவும் ப்ராக்ருதமாகையாலே வித்யாமயக்ர த்வன்வயித்வேந வித்யா மயங்கள் என்று நிர்ணயித்தார் –
ஏக விம்ச அதிகரணத்தில் –
பரவித்யைகளிலும் உபாஸ்ய கோட்யநு ப்ரவிஷ்டமான ஜீவ ஸ்வரூபத்தில் ஞாத்ருத்வ கர்த்ருத்வ அம்சம் உபாஸ்ய ஆகாரம் என்று சங்கித்து
ப்ராப்ய தசையிலுள்ளவை எல்லாம் அநு சந்தேயம் ஆகையாலே அபஹத பாப்மத்வாதிகளும் உபாஸ்ய ஆகாரம் என்று நிர்ணயித்தார் –
த்வா விம்ச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாசனங்கள் ஸ்வர பேதத்தாலே உத்கீதாதிகள் ப்ரதிவேதம் பின்னங்களாய் இருக்கையாலே வ்யவஸ்திதங்கள் என்று சங்கித்து
பின்ன ஸ்வர வத்துக்களான சர்வ உத்கீதங்களும் -உத்கீதம் உபாஸீத -என்கிற இடத்தில் சாமான்யாத உபாசன விஷயங்களாகச் சொல்லப் படுக்கையாலே
உபாசனங்களுக்கு வ்யவஸ்தை இன்றிக்கே சர்வ உத்கீதா சம்பந்தம் உண்டு என்று நிர்ணயித்தார் –
த்ரயோ விம்ச அதிகரணத்தில் –
வைச்வா நர உபாசனத்தில் ஸ்வர்லோகாதித்ய வாயு வாகாச பிருதிவி அவயவனான வைஸ்வாநரன் உபாஸ்யதயா ச்ருதனாய் இருக்கிறான் –
அவ்விடத்தில் ஒவ்பமந்யா வாதிகளைக் குறித்து கேகயன் ஸ்வர்லோகாதிகளில் ஏகை கத்தையே உபாஸ்யமாகச் சொல்லுகையாலே வ்யஸ்தமே உபாஸ்யம் என்றும்
ஸமஸ்த உபாசனத்துக்கும் சர்வாத்ம வர்த்தியான ப்ரஹ்ம அநு பவத்தைப் பலமாகச் சொல்லுகையாலே ஸமஸ்த வ்யஸ்தங்கள் இரண்டும் தான் உபாஸ்யங்கள் என்றும் சங்கித்து
உபக்ரம உபஸம்ஹாரங்களில் ஸமஸ்த உபாசனத்தை விதிக்கையாலும் வ்யஸ்த உபாசனத்தில் தத் விதிக்குத் தாத்பர்யம் இல்லாமையாலும் சமஸ்தமே உபாஸ்யம் என்று நிர்ணயித்தார் –
சதுர்விம்ச அதிகரணத்தில் –
தஹர சாண்டில்யாதி வித்யைகளுக்கு பேதம் இல்லை -உபாஸ்ய ப்ரஹ்மமும் தத் பிராப்தி பலமும் ஏக ரூபம் ஆகையாலே என்று சங்கித்து
ஜகத் ஏக காரணத்வா அபஹத பாப்மத்வாத் யநு பந்த பேதங்களாலே வித்யை நாநா என்று நிர்ணயித்தார் –
பஞ்ச விம்ச அதிகரணத்தில் –
அக்னி ஹோத்ர தர்ச பூர்ணமா சாதிகள் ஸ்வர்க்க ஏகைக பலங்களாய் இருந்தாலும் தத் பூயஸ்த்தவ அபேக்ஷை யுள்ள புருஷன் இடத்தில் சமுச்சயம் உண்டாய் இருக்கிறாப் போலே
ப்ரஹ்ம அனுபவ பூயஸ்த அபேக்ஷை யுள்ள புருஷர் இடத்திலே ப்ரஹ்ம வித்யைகளுக்கு சமுச்சயம் கூடும் என்று சங்கித்து
ப்ரஹ்ம அனுபவித்திலே தாரதம்யம் இல்லாமையாலே தாரதம்யம் யுடைய ஸ்வர்க்க சாதனா பூத ஜ்யோதிஷ்டோம நியாயம்
இங்கே ப்ரசரியாமையாலே சமுச்சயம் கூடாது என்று பரிஹரித்தார் –
ஷட் விம்ச அதிகரணத்தில் –
சப்த தச அதிகரணத்தில் நிரூபித்த உத்கீதாத் யுபாசனங்களினுடைய காம்யதயா அநியதிக்கு அடியான பல சாதனத்வத்தை நிரூபித்தார் –

இப்படி ஷட் விம்சத்யதி கரணாத்மகமான இப்பாதத்தில்
1-த்விதீய த்ருதீய பஞ்சம சப்ததச விம்ச ஷட் விம்ச அதிகரணங்களிலே சங்கதி விசேஷத்தாலே ஷூத்ர உபாசனங்களை நிரூபித்தார் –
2-அவசிஷ்ட அதிகரண விம்சதியிலும் ப்ரஹ்ம உபாசன பிரகாரத்தை நிரூபித்தார் -இதிலும் தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபகங்களான
ஞானத்தவ ஆனந்த் வாதிகளும் பிரபஞ்ச ப்ரத்யநீ கதா ரூபமான அஸ்தூலத்வாதி குணங்களும் சர்வ வித்யா அநு யாயிகள் என்று சதுர்த்தத சதுர்த்த சாதி கரணங்களில் நிர்ணயித்தார் –
3-ஏகோந விம்சத்தில் லிங்க பூயஸ்த்வத்தாலே நாராயண அனுவாக ப்ரதிபாத்யனான தேவதா விசேஷமே தத் தத் வித்யா பிரதி நியதி குண விசிஷ்டானாய்க் கொண்டு
சர்வ வித்யா வேத்யனாகிறான் என்று நிர்ணயித்தார் –
4-அவசிஷ்ட சப்த ராசாத்தி கரணங்களிலும் குண உப சம்ஹார அனுப சம்ஹார பலக வித்யா பேதங்களை நிரூபித்தார் –
இப்படி நாலுவகையாக ஸூத்ரகாரர் நிரூபித்த அர்த்தத்தை ஆழ்வாரும் -நாலாம் பாட்டுத் தொடங்கி மேல் நாலு பாட்டாலே வெளியிட்டு அருளுகிறார் –
இந்நாலு பாட்டிலே நாலாம் பாட்டாலே தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபக தர்மம் சர்வ வித்யா அநு யாயி என்கிற அம்சத்தை வெளியிடுகிறார் –
அஞ்சாம் பாட்டாலே ஷூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஆறாம் பாட்டாலே வித்யா பேத அபேத நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஏழாம் பாட்டாலே தேவதா விசேஷ நிர்த்தாரான பாரமான அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் -அது எங்கனே என்னில்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்று அசித்தின் படியும் சித்தின் படியும் அல்ல அவன் ஸ்வரூபம் –
அபரிச்சின்ன ஆனந்த ரூபமாய் இருக்கும் அத்தை விஷய சங்கம் அற்று ஆஸ்ரயி -என்று ஆனந்தவல்லியிலும் ஆதர்வணிகத்திலும் யுக்தமான
ஆனந்தத்தவா ஸ்தூலத்வாதி தர்மங்களை தத் ப்ரகரணா சந்நிஹிதமான ந்யாஸ வித்யையிலும் வித்யா ஆகாரமாக அருளிச் செய்கையாலே
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் சர்வ வித்யா அநு யாயிகள் என்கிற அர்த்த பிரகாசம் இப்பாட்டு என்னும் இடம் அதி ஸ்புடமாய் இருக்கிறது –

ஸூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சம் –
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே-என்று இதர விஷய சங்கம் அற்றது என்றால் ஆத்மா மோக்ஷ உன்முகமாய் இருக்கும் –
அத்யல்ப ஆனந்த ரூபமான ஆத்ம அனுபவ ரூப மோக்ஷத்தை ஹேயம் என்று அத்யவசித்து நிரதிசய புருஷார்த்த லாபத்தாலே புருஷாந்தர ருசி அற்று
நிலை யுண்டாக வேண்டில் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள்-என்று ஆத்ம உபாசன பலமான ஆத்ம அனுபவத்தை த்யாஜ்யமாக அருளிச் செய்கையாலே ஆத்ம உபாசன
உபலஷித்தமாய் அப்ரஹ்ம உபாசனமாய் இருந்துள்ள உத்கீதாத் யுபாசனங்களுடைய ஸ்வரூப பலங்களும் த்யாஜ்யத்வேந யுக்தமாகையாலே ஸூசிதமாயிற்று –
அப்ரஹ்ம உபாசனங்களும் ஸ்ரீ கீதா பாஷ்யாதி யுக்த ரீதியா ப்ரஹ்ம உபாசன நிர்வ்ருத்த யுபயுக்த தேஹ தாரண த்வாரா மோக்ஷ பழத்தில் அந்தரபாவிக்கையாலே
உபாதியம் என்று அறிய வேண்டுகையாலும் ஸ்வாதந்தர்யேண தூஷகர்மம் போலே த்யாஜ்யமாகையாலே அனுபாதேயம் என்று அறிய வேண்டுகையாலும்
ஸூத்ராகாரர் இப்பாதத்தில் நிரூபித்தார்
ஆழ்வாரும் இப்பாட்டால் அப்ரஹ்ம உபாசனங்கள் ஸ்வாதந்தர்யேண பரித்யாஜ்யங்கள் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார்
இறை பற்று -என்று ஆஸ்ரயண விதானத்தாலே உபாசன நிர்வர்த்த கதயா உபாதேயம் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார் –

பரவித்யா பேத அபேத நிரூபணம் –
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே-என்று சங்கை காஸ்ரயனாய் ஈஸ்வரனுமான எம்பெருமான்
ஆஸ்ரயணீயத்வே சர்வசமனாகிறான் -நீயும் தத் விஷய சங்காதிக்யத்தை யுடையனாய் அவனுடைய எல்லாக் கைங்கர்யத்திலேயும் அன்வயி -என்று
ந்யாஸ வித்யா வித்யாகாரமான வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்யங்களையும் ஸ்வாமித்வத்தையும் சங்க ஸ்வ பாவந் என்கிற பற்றிலன் -என்கிற பதத்தாலும் –
ஸ்வாமித்வ வாசியான -ஈசன் -என்கிற பதத்தாலும் அருளிச் செய்கையாலே ந்யாஸ வித்யை வித்யாந்தரத்தில் காட்டில் பின்னை என்கிற அர்த்தம் ஸூசிதமாய்
மற்றும் உள்ள தஹர சாண்டில்ய உபகோஸல வித்யாதிகளிலும் இந்த ந்யாயத்தாலே பேதம் யுண்டு என்று ஸூசிதமாகையாலும்
தைத்ரீய ஸ்வேதாஸ்வதராத்ய நேகோபநிஷச் ஸ்ருதையான ந்யாஸ வித்யை ரூப ஐக்யத்தால் ஏகை என்று சித்திக்கையால் மற்றும் உள்ள வித்யைகளிலும்
ரூப ஐக்யம் உண்டானால் வித்யை ஐக்யமே உள்ளது என்று பலிக்கையாலும் ஸூசிதமாயிற்று –
அவன் முற்றில் அடங்கே -என்று சர்வ கைங்கர்யத்தையும் தாம் விதித்த ந்யாஸ வித்யைக்குப் பலமாக அருளிச் செய்கையாலே
வித்யாந்தர ஸாத்ய பலா அவிசிஷ்ட பலத்வாத் விகல்ப-என்கிற விகல்ப அதிகரணார்த்தம் யுக்தமாகிறது –
ஸூத்ராகாரர் அனந்த சாகா ஸ்ருத்தங்களான அநேக வித்யைகளில் பேத அபேத நிரூபணம் பண்ண வேண்டி இருக்கப் பண்ணாது ஒழிந்தது நியாய பிரதர்சன
த்ருஷ்டியாலேயாமா போலே இவரும் ந்யாஸ வித்யைக்கு வித்யாந்தரத்தில் காட்டில் பேதத்தையும் தன்னில் பேதம் இல்லாமையையும் அருளிச் செய்து
ஏதந் ந்யாயேந வித்யாந்தரங்களிலும் பேத அபேதம் தன்னடையே சித்திக்கும் என்று திங்மாத்ர பிரதர்சனம் பண்ணினார் –
மயர்வற மதிநலம் அருள பெற்ற இவ்வாழ்வாருக்கு அநிதர லப்யமாய் ஒரு சாதுர்யம் யுண்டு -வேதாச்சார்யரான பாதராயணர் வேதார்த்தங்களை விசாரித்து
அடைவே தாமும் ஸூசிப் பித்துக் கொண்டு வருகிற இடங்களில் அவர் விஸ்தரித்த இடங்களிலே தாம் ஸங்க்ரஹித்து அருளுகையும் –
அவர் ஸங்க்ரஹித்த இடங்களில் ஈஷத் விஸ்தரிக்கையும் -அது எங்கனே என்னில்
ஸ்வர்க்க ஆரோஹ அவரோஹ மாத்ரு பித்ரு கர்ப்ப அந்வய ரௌரவாதி நன்றாக அனுபவ வாதிகளான சம்சார தோஷங்களை ஸூத்ராகாரர் பரக்கச் சொன்னத்தை –
வீடுமின் முற்றவும் -என்று ப்ரயோஜகத்திலே அக்ராம்யமாக அருளிச் செய்கையாலும்
பாஸூபாதாதிகரணத்தில் பஸூபத்தி பாரம்ய நிஷேதம் பண்ணினத்தை உப லக்ஷணம் ஆக்கி -புரமொரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளன் -என்று பஸூபத்தி ஹிரண்ய கர்ப்பர்களுடைய பாரம்யத்தை நிஷேதிக்கையாலும்
ஸூத்ராகாரர் விஸ்தரித்த அர்த்தத்தை ஸங்க்ரஹிக்கையும் தத் சங்கரஹீத அர்த்தத்தை விஸ்தரிக்கையும் இவருக்கு நியாமாய் இருக்கும் –
இதுக்கு அடி இவருக்கும் அவருக்கும் உள்ள ஐகமத்யம் –

சர்வ வித்யா வேத்யன் ஸ்ரீ மன் நாராயணாய தேவதா விசேஷம் என்று நிர்ணயித்த அர்த்தம் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக யுள்ளே -என்று கார்த்ஸ்ந்யேந நன்றான விபூதி விஸ்தாரத்தைக் கண்டு
அவை எல்லாம் சர்வேஸ்வரனுடைய கட்டடங்க நன்றான சம்பத்து என்று அத்யவசித்து நீயும் தத் ஐஸ்வர்ய அந்தர்பூதனாய் அடங்கு -என்று
ப்ரஹ்ம ருத்ர இந்திராதி ஸமஸ்த விலக்ஷண புருஷர்களும் பகவத் விபூதியாகவும் எம்பெருமான் விபூதிமானாகவும் இருக்கையாலே
வித்யாந்தரங்களிலே ஸ்ருதமான சம்பு சிவாதி சப்தங்கள் அபர்யவசான வ்ருத்த்யா நாராயண பர்யந்தமாக -ச ப்ரஹ்மா இத்யாதி வாக்கியத்தில் சொன்ன
அர்த்தம் ஸூசிதமாய் இத்தாலி சர்வ வித்யைகளிலும் நாராயண ரூப தேவதா விசேஷம் உபாஸ்யமாய் சொல்லிற்றாய் இருக்கையாலே ஸூசிதமாயிற்று –

இப்படி நாலு பாட்டுக்கும் குண உப சம்ஹார பாதத்துக்கும் ஐகமத்யம் கண்டு கொள்வது –

எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் வதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

————————

எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் உண்டான படி –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
வித்யை கர்ம கர்த்ரு பூதாத்ம ஞான ரூபதயா கர்மாங்கம்-கர்ம மோக்ஷ சாதனம் என்று சங்கித்து

கர்த்ரு பூதாத்மா ஞானம் கர்மாங்கமே ஆகிலும் தத் விலக்ஷண பரமாத்மா ஞான ரூப வித்யை கர்ம அங்கம் இல்லாமையாலும்

யஞ்ஞ தாநாதி கர்மங்கள் வித்யா அங்கதயா ஸ்ருதி சித்தமாகையாலும் வித்யை கர்ம அங்கம் அன்று –
கர்மமே வித்ய அங்கமாகையால் வித்யை மோக்ஷ சாதனம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
கர்ம அங்க உத்கீதாதிகளில் ரசதமத்வாதி ப்ரதிபாதக வாக்கியங்கள் ஜூஹ்வாதிகளை ப்ருத்வீத்வாதிநா ஸ்துதிக்கும் கணக்கிலே உத்கீத ஸ்துதி பரங்கள் என்று சங்கித்து –
ஜூஹ்வாதி விதி போலே உத்கீதாதி விதி சந்நிஹிதம் இல்லாமையாலும் –

உத்கீதாதி களுக்கு ரசதமத் வாதிகள் பிரமணாந்தரா ப்ராப்தங்கள் ஆகையாலும்
ஸ்துதி பரங்கள் அன்று –ரசதமத்வாதி த்ருஷ்ட்டி விதாயங்கள் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
வேதாந்தங்களில் ஸ்ருதமான ஆக்யாநங்கள் பாரிப்லவே விநி யுக்தங்கள் என்று சங்கித்து –

சில ஆக்யா நங்களை பாரிப் லவத்திலே விசேஷிக்கையாலே
வேதாந்த சித்த ஆக்யானங்கள் வித்யா விசேஷ ப்ரதிபாதநார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
க்ருஹிவ்யதிரிக்தாஸ்ரமிகளில் யஜ்ஞ தாநாதிகள் இல்லாமையாலே தத் அங்க வித்யா அனுஷ்டானம் அவர்களுக்கு கூடாது என்று சங்கித்து
யஜ்ஞ தாநாதி ரூப அங்கங்கள் இல்லா விடிலும் தத் தத் ஆஸ்ரம உசித கர்மங்கள் அங்கமாய் தத் ஸாத்ய வித்யை கூடும் என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
க்ருஹிகளுக்கும் யஞ்ஞாதி நிரபேஷமாகவே வித்யா அனுஷ்டானம் என்று சங்கித்து –

யஞ்ஞாத் யங்கத்வம் ஸ்ருதி சித்தமாகையாலே யஞ்ஞாத் அபேக்ஷம் வித்யா அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில் –
க்ருஹி களுக்கு கரண வியாபார ரூபமான கர்ம அனுஷ்டானமும் தத் உபரதி ரூபமான சமதாதிகளும் விருத்தமாகையாலே
அவர்களுக்கு சமதாதிகள் வித்யா அங்கதயா அனுபாதேயங்கள் என்று சங்கித்து –

நிஷித்த விஷய நிவ்ருத்தி ரூபமான ஸமதாதிகளுக்கும் விகித விஷய ப்ரவ்ருத்தி ரூபமான கர்மங்களுக்கும் விரோதம் இல்லாமையாலே

சமதாதிகள் வித்யா அங்கதயா உபாதேயங்கள் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில் –
பிராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வதா சர்வாந் நாநுமதி என்று சங்கித்து

சர்வாந்நாநுமதி ப்ராணாத்ய யாபத்தியிலே ஒழிய ஸர்வதா கூடாது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில் –
வித்யா அங்கங்களான கர்மங்கள் கேவல ஆஸ்ரம அங்கங்கள் அன்று -நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கையாலே -என்று சங்கித்து –
ஏக விநியோகத்தாலே உபய அங்கத்வம் உண்டாகில் நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கும் –

இவ்விடத்தில் விநியோக ப்ருதக்த்வேந ஜீவனாதிகார காமனாதிகாரம் போலே விரோதம் இல்லாமையாலே கேவல ஆஸ்ரம அங்கமும் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு ஆஸ்ரம தர்மேதி கர்த்த வ்யதாகமான ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று சங்கித்து
அநாஸ்ரமிகளான ரைக்வ பீஷ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம வித்யா அனுஷ்டானம் காண்கையாலும் விதுராதிகளுக்கு தானாதிகளான
வித்யா சாதனங்களாக சில கர்மங்கள் உண்டாகையாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரமுண்டு என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில் –நைஷ்டிக வைகானச பரிவ்ராஜ காத்ய ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கும் விதுராதி ந்யாயேந ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று சங்கித்து
ஆஸ்ரம தர்ம பஹிஷ்க்ருதர்களுக்கு பிராயச் சித்தா பாவ ஸ்ரவணத்தாலும் சிஷ்டப் பஹிஷ்காரத்தாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
உத்கீதாத் யுபாசனம் வீர்ய வத்தரத்வ பல காமனான யஜமானனாலே தஹராத் யுபாசனம் போலே அநுஷ்டேயம் என்று சங்கித்து
கோதோஹநாதி களைப் போலே இந்த உபாசனம் கர்ம அங்க ஆச்ரயமாகையாலே கர்மங்களை போலே ருத்விக் கர்த்ருகம் என்று நிர்ணயித்தார்

துவாதச அதிகரணத்தில்
பால்யங்க பாண்டி த்யஞ்ச நிர்வித்யாத முநி -என்கிற இடத்தில் முநி சப்த யுக்தமான மௌனம் மனன ரூபம் ஆகையாலே

மந்தவ்ய என்கிற இடத்தில் போலே மனனம் அநு வதிக்கப் படுகிறது என்று சங்கித்து

ஸ்ரவண ப்ரதிஷ்டார்த்தமான மனனம் ப்ராப்தமானாலும் ஸூபாஸ்ரய சமசீலந ரூப மனனம் பிராப்தம் இல்லாமையால்
ஏவம் வித மனனம் வித்யா சஹகாரித்வேந விதிக்கப் படுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ரயோதச அதிகரணத்தில்
பால்யேந திஷ்டா சேத்-என்கிற இடத்திலும் உபாசகனுக்கு விதிக்கப் படுகிற பால கர்மம் காமசாராதிகள் ஆகையால் அவைகளும் வித்யா மஹாத்ம்யத்தாலே உபாதேயம் என்றுnசங்கித்து –

துஸ்சரிதம் வித்யோத்பத்தி விரோதி த்வேந ஸ்ருதமாகையாலும் பாண்டித்ய ப்ரயுக்த ஸ்வ மஹாத்ம்யா அநா விஷ்கரணம்
பால்ய சப்தார்த்தம் ஆகையாலும் கர்மசாராதிகள் அனுபாதேயம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தச அதிகரணத்தில்
அநாமுஷ்மிக பல உபாசனங்கள் ஸ்வ சாதனா பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியதி உத்பன்னங்கள் ஆகின்றன வென்று சங்கித்து

பிரதிபந்தகம் உண்டாகில் -விளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன பிரதிபந்தகம் இல்லையாகில் அவிளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

பஞ்ச தச அதிகரணத்தில்
ப்ரஹ்ம வித்யைகள் மஹாதிசய சாலிகளாகையாலே ஸ்வ சாதநீ பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியம உத்பன்னங்கள் ஆகின்றன என்று சங்கித்து அவைகளுக்கும் ப்ரஹ்ம விதபஸாராதி களான அதி க்ரூரமான பிரதிபந்தகங்கள் சம்பாவிதங்கள் ஆகையாலே அநியமேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

இதில் த்விதீய –த்ருதீய ஏகாதச அதிகாரணங்கள் ப்ராசங்கிகங்கள்–அவசிஷ்ட துவாதச அதிகாரணந்த்தில் –பத்து அதிகாரணத்தாலே
வித்யையே மோக்ஷ சாதனம் என்றும் -தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்களே தத் தத் ஆஸ்ரமிகளுடைய வித்யைகளுக்கு நியதி அங்கங்கள் என்றும்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு தபோ தாநாதிகளான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் –சமதாதிகள் வித்யா அங்கங்கள் என்றும் –
சம விசேஷ ரூபமான துஷ்ட அன்ன பரிஹாரமும் வித்யா அங்கம் என்றும் –வித்யா அங்கங்களுக்கே ஆஸ்ரம அங்கத்துவம் உண்டு என்றும்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்குக் கேவல தபோ தாநாதிகள் வித்யா அங்கம் இல்லாமையால் வித்யையில் அன்வயம் இல்லை என்றும் –
ஸூபாஸ்ரய சமசீலந ரூபமான மனனம் என்ன பாண்டித்யா அநாவிஷ்கரண ரூபமான பால்யம் என்ன இவைகள் அங்கம் என்றும் அங்கங்களை நிரூபித்து –
அவசிஷ்ட சதுர்த்தச பஞ்ச தச அதிகரணங்களால் பிரதிபந்தகம் அற்ற தசையில் அங்கங்களால் அங்கியான உபாசன நிஷ்பத்தி என்று நிர்ணயித்தார் –

இப்படி நிரூபித்த அர்த்தத்தில் ப்ராசங்கிகமான அதிகரண த்ரயத்தையும் உபேக்ஷித்து அவசிஷ்ட துவாதச அதிகரண அர்த்தத்தை
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே–என்று மனனாதி ஹேதுவான மனஸ்ஸூம்
ஸ்துத்யாதி ஹேதுவான வாக்கும் -பிரணாமாதி கரணமான கார்யமுமாய் இருந்துள்ள இம்மூன்றையும் இவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி பிரயோஜனத்தையும் நிரூபித்து
இதர விஷய அன்வயத்தை தவிர்த்து ஸ்வாமியான ப்ராப்த விஷயத்திலே ஒதுக்கு -என்று அங்க ஸ்வரூபத்தையும்
அங்கங்களாலே அங்கி சித்தி தசையையும் அருளிச் செய்து இப்பாட்டாலே வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில் –

வித்யையே மோக்ஷ சாதனம் என்று பிரதம அதிகரணத்தில் நிரூபித்த அர்த்தம் -இறை யுள்ளில் ஒடுங்கே-என்று அவன் விஷயத்தில் ந்யஸ்த பரனாய் இரு என்று சித்த உபாய சுவீகார ரூபமான ஞான விசேஷத்தையே தஞ்சமாக அருளிச் செய்கையாலே யுக்தமாயிற்று –

சதுர்த்த பஞ்சம நவம அதிகரணங்களில்
வானப்ரஸ்த பரிவ்ராஜகர்களுக்கு தத் தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் க்ருஹிகளுக்கு ஸ்வ ஆஸ்ரம உசிதமான யஞ்ஞாதிகள் அங்கம் என்றும்
விதுராதிகளுக்கு தாநாதிகம் வித்யா அங்கம் என்றும் -நிர்ணயித்த அர்த்தம் -அகிஞ்சனான ந்யாஸ வித்யா நிஷ்டனுக்கு ப்ரயோஜனாந்தர சாதனாந்தர வைமுக்யத்தை –
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று அங்கமாக விதிக்கையாலே தன முகேந தத் தத் அதிகார அநு குண அங்க அனுஷ்டானத்தாலே வித்யா நிஷ்பத்தி வரும் என்று சொல்லிற்றாய் அத்தாலே ஸூசிதமாயிற்று –

ஷஷ்ட்டி அதிகரணத்தில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான கர்ம சமாதிகளுக்கு விஹித நிஷித்த பேதேந விரோதம் இல்லை என்று நிர்ணயித்த அர்த்தமும் –
உள்ளம் உரை செயல் -இத்யாதியாலே பிரதிகூல விஷய நிவ்ருத்தியையும் அனுகூல விஷய ப்ரவ்ருத்தியையும் விதிக்கையாலே வ்யக்தமாக ஸூசிதம் –

மநோ வாக் காயங்களை அனுஷிதா விஷயங்களில் நின்றும் மீட்க வேணும் என்று விதிக்கிற இச்சந்தையாலே தானே
சப்தமாதி கரண யுக்தமான நிஷித்த பாஷாணம் பரிஹார்யம் என்கிற அர்த்தமும் ஸூசிதமாயிற்று –

அஷ்டம அதிகரணத்தில்
ஒரு தர்மத்துக்கே வித்யா அங்கத்தவமும் ஆஸ்ரம அங்கத்தவமும் கூடும் என்று நிரூபித்த அர்த்தம் -இதர விஷயங்களில் உள்ள
மநோ வாக் வ்ருத்திகளையே பகவத் விஷயத்திலும் ஒடுக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதமாகலாம்-

தசம அதிகரணத்தில்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கு வித்யா அதிகாரம் இல்லை என்று நிரூபித்த அர்த்தம் –உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று
நிஷித்த விஷயங்களை அவஸ்ய பரிஹரணீயன்கள் என்று தத் க்ரூர்யம் யுக்தமாய் அத்தாலே ஸூசிதம் –

துவாதச அதிகரணத்தில்
நிர்ணீதமான ஸூபாஸ்ரய சம்சீல நத்தினுடைய கர்த்தவ்யத்வமும்-இதர விஷய நிஷ்டமான
மநோ விருத்தியை பகவத் விஷயம் ஆக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதம் என்று காணலாம் –

த்ரயோதச அதிகரணத்தில் –
காமசாரம் பால்ய சப்தார்த்தம் அன்று -ஸ்வ மஹாத்ம்யா நாவிஷ்கரணமே பால்ய சப்தார்த்தம் என்று நிரூபித்த அர்த்தமும் கை வந்த படி செய்ய ஒண்ணாது
என்று நிஷித்த நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகலாம் –

சதுர்தச பஞ்ச தசங்களில் நிரூபித்தமான அங்க நிஷ்பத்த்ய நந்தரமே பிரதிபந்தகம் உண்டாகில் அங்கி நிஷ்பன்னமாக மாட்டாது –
பிரதிபந்தகம் அற்றால் அங்கி நிஷ்பன்னமாம்-என்கிற அர்த்தமும் -நிஷித்த விஷய நிஷ்ட மநோ வாக் வ்ருத்தி ரூப பிரதிபந்தகம் அற்றே
பகவத் ஆஸ்ரயணம் பண்ண வேணும் என்று சொல்லுகையாலே ஸூசிதம் –

ஆக இப்படி எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் யுண்டு என்று ஸூஷ்ம தர்சிகளுக்கு ஸூக்ரகமாக அறியலாம் படி ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

———————-

இனி மேல் சதுர்த்த அத்யாயத்துக்கும் மேல் இரண்டு பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டான படி –
இதில் ஒன்பதாம் பாட்டு பிரதம த்விதீய பாதார்த்தமாகவும்
பத்தாம் பாட்டு த்ருதீய சதுர்த்த பாதார்த்தமாகவும் இருக்கும் –

இதில் பிரதம பாத பிரதம அதிகரணத்தில்
மோக்ஷ சாதநீ பூத ஞானம் சக்ருதா வ்ருத்தம் என்று சங்கித்து நிரந்தர த்யான ரூபமான ஞானமே மோக்ஷ சாதனம் என்று
ஸ்ருதி சித்தமாகையால் அஸக்ருத் கர்த்தவ்யம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
ஆத்மேத்யேவோபாஸீத-இதி வாக்ய விசேஷ பிரதிபன்னமான உபாசன விசேஷத்திலே அந்யத்வேண ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அவ்விடத்திலும் ஆத்மத்வேந உபாஸ்யம் என்று நிர்ணயித்தார்

த்ருதீய அதிகரணத்தில்
மநோ ப்ரஹமேத் யுபாஸீத -இத்யாதி ப்ரதிகோபாசனங்களில் ப்ரஹ்ம உபாசனத்தவ சமயத்தாலே உபாசித்துராத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அந்த உபாசனங்களில் ப்ரதீகமான மந ப்ரப்ருதிகள் உபாஸ்யமாகையாலும் ப்ரஹ்மம் உபாஸ்யம் இல்லாமையாலும்
இவ்விடங்களில் ஆத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் அன்று என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
பல சாதனத்வேந உத்க்ருஷ்டமான உத்கீதாதி த்ருஷ்ட்டி ஆதித்யாதிகள் என்று சங்கித்து ஆதித்யாதிகளே பல ப்ரததயா உத்க்ருஷ்டங்கள் ஆகையாலே
உத்கீதாதிகளிலே ஆதித்யாதி த்ருஷ்டியே உள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
உபாசனை அனுஷ்டானம் ஆஸீ நத்வ சாயா நத்வ ஸ்திதி கமணாத்ய வஸ்தைகளிலும் விசேஷா பாவாத் உபபன்னம் என்று சங்கித்து
சயா நாத்ய வஸ்தைகளில் ஏகாக்ரத்வ சம்பவம் அனுபன்னம் ஆகையால் ஆஸீநத்வ அவஸ்தையில் ஒன்றிலுமே கடிக்கும் ஒன்றாகையாலும்
தத் அவஸ்தையிலேயே உபாசன அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பூர்வம் நிர்ணீத உபாசனம் ஏகாஹ மாத்ர சம்பாத்தியம் என்று சங்கித்து –
ச கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் -என்கிற ஸ்ருதியின் படியே –ஆப்ரயாணம் அனுவர்த்த நீயம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
வித்யா பலத்வேந ச்ருதங்களான பூர்வ உத்தராகங்களினுடைய அஸ்லேஷ விநாசங்கள் -ந புக்தம் -இத்யாதி வசன விரோதத்தாலே
வித்யா ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று சங்கித்து -அஸ்லேஷா விநாசங்கள் வித்யா பலத்வேந சுருதி பிரதிபண்னங்கள் ஆகையாலும்-
ந புக்தம் -இத்யாதி வசனங்கள் பல ஜனன சக்தி த்ரடிம ப்ரதிபாதன பரங்கள் ஆகையாலும் ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸூக்ருதம் சாஸ்த்ர சித்தமாகையாலே வித்யா விரோதி அன்று என்று சங்கித்து ஸூக்ருதமும் அதிகாரி பேதேந வித்யா விரோதி என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
சர்வ பூர்வாகங்களும் வித்யா மஹாத்ம்யத்தாலே வினாசயங்கள் என்று சங்கித்து அநாரப்த கார்யங்களுக்கே அது உள்ளது என்று என்று நிர்ணயித்தார்-

தசம அதிகரணத்தில்
அக்னி ஹோத்ராதி நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம தர்மங்களும் தத் பலன்களும் அஸ்லேஷோக்த்யா அனுஷ்டானம் அப்ராப்தம் என்று சங்கித்து
வித்யா உத்பாதகங்களான ஸ்வ வர்ணாஸ்ரம உச்சித கர்மங்களுக்கு பாலாஸ்லேஷம் இல்லாமையால் அனுஷ்டானம் பிராப்தம் என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
பிராரப்த கர்ம விநாசம் வித்யா யோனி சரீராவஸாநத்திலே நியமேந வருகிறது என்று சங்கித்து தச் சரீர அவசானத்திலே யாகிலும்
சரீராந்தர அவசானத்திலே யாகிலும் அநியமேந வரும் என்று நிர்ணயித்தார் –

த்வதீய பாத -பிரதம அதிகரணத்தில்
வாங்மனசி சம்பத்யதே -என்று வாக்குக்கு மனஸ் சம்பத்தியை ப்ரதிபாதிக்கிற சுருதி வாக்கு மனா உபாதாநகம் அல்லாமையாலே மனசிலே
வாக் ஸ்வரூப சம்பத்தியைச் சொல்லுகிறது அன்று -வாக் வ்ருத்தி மநோதீநை யாகையாலே தத் வ்ருத்தி சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து –
மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தில் ப்ரதிபாதனமானாலே ஸம்பத்தி சுருதி ஸ்வாரஸ்யம் சித்திக்கையாலும்

வாக்குக்கு மனஸ் ஸூ உபாதானம் அல்லாமையாலே லயம் கூடாதே இருந்தாலும் மனஸோடு வாக் சம்யோகத்தைச் சொல்ல வந்தது ஆகையாலும் மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தியை ப்ரதிபாதிக்கிறது என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில்
மன ப்ராணே-என்கிற இடத்தில் அன்ன ப்ராக்ருதமாகச் சொல்லப் படுகிற மனஸூக்கு அன்ன ப்ரக்ருதிக பூதாப் ப்ரக்ருதிகமான பிராணன் காரணமாக் கூடுகையாலே பரம்பரையா ஸ்வ காரணே லயரூப சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து
மன ப்ராணன்கள் அகங்கார ஆகாச விகாரங்கள் ஆகையாலும் அந்நாப் விகாரங்கள் இல்லாமையாலும் பரம்பரையா காரண லய ஸம்பத்தி ப்ரதிபதன பரம் அன்று –பூர்வ உக்தரீத்யா சம்யோக மாத்ரத்தைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில் –
பிராணாஸ் தேஜஸி -என்கிற இடத்தில் கேவல தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று சங்கித்து ஜீவனோடே கூட தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தி அதிகரணத்தில் –
தேஜஸ் சப்த மாத்ர ஸ்ரவணத்தாலே ஜீவ சம்யுக்த ப்ராணனுக்கு கேவல தேஜஸ் ஸம்பத்தி என்று சங்கித்து தேஜ உபலஷித சர்வ பூதங்களிலும் ஸம்பத்தி என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அத்ரைவ அம்ருதத்வ வசனத்தாலே உதக்ராந்தி இல்லாமையால் அப்ரஹ்ம நிஷ்டனுக்கே உதக்ராந்தி என்று சங்கித்து

ப்ரஹ்ம நிஷ்டனுக்கும் நாடீ விசேஷத்தாலே உதக்ரமணம் சுருதி சித்தமாகையாலே அவனுக்கும் அது உண்டு என்று நிர்ணயித்தார் –

ஷஷ்டா அதிகரணத்தில்
ஜீவ பரிஷ்வக்தங்களான பூத ஸூஷ்மங்களில் ஸூக துக்க உபபோக ரூப கார்யம் காணாமையாலே அவற்றுக்குப் பரமாத்மா ஸம்பத்தி இல்லையென்று சங்கித்து
ஸூஷூப்தி பிரளய தசைகளில் போலே பரமாத்மா சம்பத்தியால் ஸூக துக்க உபபோக ஆயாச விஸ்ரம ரூப கார்யம் உதக்ரமண தசையிலும் உண்டாகையாலே
தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -என்று சுருதி ப்ரதிபன்னமான ஜீவ சம்யுக்த பூத ஸூஷ்மங்களுக்கு உள்ள பரமாத்மா சம்பத்தியை இல்லை செய்ய ஒண்ணாது என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
பூர்வ யுக்தமான பரமாத்மா ஸம்பத்தி காரணா பத்தி ரூபை என்று சங்கித்து
வாங்மனசி சம்பத்யதே -என்கிற இடத்தில் சம்பத்யதே -என்கிற பதம் சம்சாரக்க விசேஷ வாசியாகையாலும்

அநு ஷக்தமான அந்தப் பதத்துக்கு அபிதான வை ரூப்யத்தில் பிரமாணம் இல்லாமையாலும் சம்சர்க்க விசேஷாபத்தியைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸதாதிகையான மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்கிற நியமம் இல்லை -தோன்றிற்று ஒரு நாடியாலே நிஷ் க்ரமணம் உள்ளது என்று சங்கித்து
தயோர்த்வ மாயன்னம்ருதத்வமேதி -என்று மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று சுருதி சொல்லுகையாலே நியமேந மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
உதக்ரமண அனந்தரம் ரஸ்ம்யநு சாரேண கத்தி என்கிற நியமம் இல்லை -நிசிம்ருதனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அது கிடையாமையாலே என்று சங்கித்து
நிசியிலும் ரஸ்மி சம்பவ ப்ரதிபாதக சுருதி இருக்கையாலே நிசிம்ருதனாகிலும் ப்ரஹ்ம நிஷ்டனுக்கு ரஸ்ம்யநு சாரேண கமனம் நியதம் என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில்
நிசா மரணம் சாஸ்த்ர கர்ஹிதம் ஆகையால் அப்போது ம்ருதனுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

கர்ம சம்பந்தம் யாவது தேஹ பாவியாகையாலே கர்ம விநாச அனந்தரம் சம்சாரம் கூடாமையாலும்

நிசா மரண க்ரஹை அவித்வத் விஷயை யாகையாலும்

நிசா ம்ருதனுக்கும் ப்ரஹ்ம பிராப்தி உண்டு என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
தஷிணாயன ம்ருதனுக்கு சந்த்ர பிராப்தி ஸ்ரவணத்தாலும்-சந்த்ர பிராப்தி யுடையவர்களுக்குப் புநரா வ்ருத்தி ஸ்ருதை யாகையாலும் அக்காலத்தில்
ம்ருதர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

பித்ருயாண பதத்தால் சந்த்ர பிராப்தி உடையவர்களுக்கே புநரா வ்ருத்தி ஒழிய சந்த்ர பிராப்தி
உடையவர்களுக்கு எல்லாம் புநரா வ்ருத்தி உண்டு என்கிற நியமம் இல்லாமையால் ப்ரஹ்ம பிராப்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –

இதில் பிரதம பாதத்தில்
முதல் அதிகரண ஷட்கத்தாலே உபாசன ஸ்வரூப சோதனத்தைப் பண்ணி

ஏழாம் அதிகரணம் தொடங்கிnமேல் உள்ள அதிகரண பஞ்சகத்தாலே -ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலத்தை நிரூபித்தார்

த்வதீய பாதத்தில் –
உத்க்ராந்தி நிரூபணம் பண்ணினார்

இப்படி பாத த்வயத்தாலே நிரூபித்த அர்த்தத்தை –
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்று ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகாரதயா அந்தர்பவிக்கவே
ஆத்மாவினுடைய அஞ்ஞானாதி ஸ்வபாவ சங்கோசமும் தத் தேதுவான அவித்யாதிகளும் எல்லாம் விட்டுக் கழியும் –
பின்னையும் ஆரப்த சரீர விசேஷத்தினுடைய முடிவைப் பார்த்து அத்தை விடும் பொழுது எண்ண வேணும் -என்று ஆழ்வாரும் வெளியிட்டு அருளினார் –

அது எங்கனே என்னில்
ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகார தயா அந்தர்பவித்து பஜிக்கவே என்று சொல்லுகிற –ஒடுங்க அவன் கண் -என்கிற முதல் அடியாலே
பிரதம பாத அதிகரண ஷட்க நிரூபிதமான உபாசன ஸ்வரூப சாதனம் பண்ணின அம்சம் ஸூசிதமாயிற்று –
ஒடுங்கே -என்கிற அம்சத்தை உரையில் பஜன பரமாகவும் யோஜித்தமை ஸ்பஷ்டமாய் இருக்கும் –

ஈடு சதுர் விம்சதி சஹஸ்ரம் முதலான வியாக்யானங்களிலும் –
பஜநம் எளிதானாலும் -என்றும் –

பஜனமாவது தான் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு கொடுக்கை -என்றும் யுக்தமாகையாலே

இச்சந்தை பஜன பரமாகவே முன்புள்ள முதலிகளும் வ்யாக்யானம் பண்ணினமை ஸித்தமாய் இருக்கும்

வீடுமின் முற்றவும் -பிரபத்தி பரம் -பத்துடையடியவர் -பக்தி பரம் என்கிற வ்யவஸ்தைக்கு இது விருத்தம் அன்றோ என்னில்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு முன்புள்ள முதலிகள் இப்படி நிர்வகித்தார்களே யாகிலும் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு இவ்வருகுள்ள முதலிகள் இரண்டும் பக்தி பரம் என்று
நிர்வஹிக்கையாலும் வ்யாக்யாதாக்கள் அனைவரும் பஜன பரம் என்று தோற்றும்படியே வ்யாக்யானம் பண்ணுகையாலும் விரோதம் இல்லை –

ஆனால் வீடுமின் முற்றவும் -பக்தி பரமாயும் இச்சந்தை பஜன பிரகார ப்ரதிபாதன பரமாயும் இருந்ததே யாகிலும் ஸாத்ய பக்தி ப்ரதிபாதன பரம்
இத்திருவாய் மொழி என்று வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே க்ரந்தக்காரர் தாமே நிர்ணயம் பண்ணுகையாலே இச்சந்தை
சாதன பக்தி பிரகார ப்ரதிபாதன பர அதிகரண ஷட்க அர்த்த ஸூசகமான படி எங்கனே என்னில் –
நாதமுனி ப்ரப்ருதிகளான நம் பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டித்த ஸாத்ய பக்திக்கும் உபாசகன் அனுஷ்டிக்கிற சாதன பக்திக்கும் சாதனத்வ புத்தி ராஹித்ய சாஹித்யங்களால்
வந்த பேதம் ஒழிய ஸ்வரூப வைலக்ஷண்யம் இல்லாமையாலும் யம நியம பிராணா யாமாதிகள் என்ன-கீர்த்தன யஜன நமஸ்காராதிகள் என்ன –
ஸூ சிதேசா வஸ்தாபித சேலா ஜின குசோத்தர ரூப ஆசனம் என்ன -ஏகாக்ர சித்ததா வஸ்தானம் என்ன -இவை முதலான அனுஷ்டானமும்
இரண்டுக்கும் ஒத்து இருக்கையாலும் இச்சந்தை ஸாத்ய பஜனத்தைச் சொன்னாலும் சாதன பஜன பிரகார ஸூசகத்வம் யுண்டாகத் தட்டில்லை-

இனி ஏழாம் அதிகரணம் தொடங்கி மேலுள்ள அதிகரண பஞ்சகத்தாலே நிரூபித்த ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலாம்சமும்
ஒடுங்கலும் எல்லாம் விடும் -ஆகந்துகங்களாய் ஸ்வரூப ப்ரயுக்தம் அன்றிக்கே இருக்கிற அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்தங்கள் எல்லாம் விட்டுப் போம் -என்று
வித்யா பலமான சகல விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ப்ரகாசிதம் என்னும் இடம் ஸ்புடமாக அறியலாம் –

சரீர விஸ்லேஷ தசையை எண்ணுங்கோள்-என்று விதிக்கிற –ஆக்கை விடும் பொழுது எண்ணே -என்கிற சந்தையாலே உத்க்ராந்தி பாதார்த்தம் கார்த்ஸ்ந்யேந ஸூசிதமாயிற்று –

இதில் பிரதம அதிகாரணம் தொடங்கி அஷ்டம அதிகரண பர்யந்தம் நிரூபித்த
சர்வ இந்திரிய பூத ஸம்பத்தி ரூப உதக்ரண அம்சம் -ஆக்கை விடும் -என்கிற அளவால் யுக்தமாயிற்று –

நவம அதிகரணம் தொடங்கி மேல் மூன்று அதிகரணத்தால் பிராரப்த கர்ம அவசான காலமே மோக்ஷ காலம் என்று நிர்ணயித்த அம்சமும்
க்ருதக்ருத்யனான அதிகாரிக்கு சரீர விஸ்லேஷ காலத்தை விசேஷம் இன்றிக்கே எப்போது வருகிறதோ என்று சிந்தி -என்கிற
விடும் பொழுது எண்ணே -என்கிற அளவால் ஸூசிதமாயிற்று –

இப்படி ஒன்பதாம் பாட்டுக்கும் சதுர்த்த அத்யாய பிரதம த்விதீய பாதங்களுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடத்தை உபபாதித்தோம் –

——————————-

இனிமேல் த்ருதீய துரீய பாதங்களுக்கு பத்தாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படியை -தெரிவிக்கிறோம் –
த்ருதீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம பிராப்தியில் அர்ச்சிராதி மார்க்கமும் -பின்னையும் சில மார்க்காந்தரங்களும் நைரபேஷ்யேண சாந்தோக்ய வாஜசநே யாதிகளிலே ச்ருதங்களாகையாலே -மார்க்கங்கள் விகல்பேந வருகிறது என்று சங்கித்து –

சர்வ அவஸ்தலங்களிலும் அர்ச்சிராதி பூதங்களான ஆதித்யாதி புருஷர்கள் வழி நடத்துகிறவர்களாகக் காண்கையாலே
அர்ச்சிராதி மார்க்கமே ப்ரத்யபிஞ்ஞாதம் ஆகையால் மார்க்கம் ஏகம் என்று சித்திக்கையாலும்

அத்தால் அந்நியத்ர உக்தங்களுக்கு அந்நியத்ர உபஸம்ஹாரம் ப்ரமாணிகம் ஆகையாலும்

அர்ச்சிராதி மார்க்க ஏணைவ முக்தஸ்ய ப்ரஹ்ம ப்ராப்யர்த்த கமனம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
பாட க்ரமத்தாலே வருண இந்திர ப்ரஜாபதிகளுக்கு வாயு வனந்தரம் நிவேசம் யுக்தம் என்று சங்கித்து பாட க்ரம அபேக்ஷயா அர்த்த க்ரமம் பலிஷ்டமாகையாலே மேகோதா வர்த்தித்தவ ரூப சம்பந்தத்தால் வித்யுத் உபரி வர்ண இந்த்ராதிகளுக்கு நிவேசம் யுக்தம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
அர்ச்சிராதிகள் மார்க்க சிஹ்னங்கள் என்று சங்கித்து கமயித்ருத்வம் ச்ருதமாகையாலே அர்ச்சிராதிகள் ஆதி வாஹிக புருஷர்கள் என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம உபாசகனுக்குப் பரிபூர்ண ப்ரஹ்ம ப்ராப்த்யர்த்தம் தேசாந்தர கமனம் அநபேஷிதம் ஆகையால் ப்ரஹ்ம உபாசகர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை –ப்ரதீக உபாசகர்களுக்கே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று சங்கித்து
தேச விசேஷ அவச்சின்ன ப்ரஹ்ம பிராப்தி யுடையவனுக்கே அவித்யா நிவ்ருத்தி சுருதையாகையாலே

நிஷ்க்ருஷ்ட ப்ரஹ்ம சரீர ஜீவ உபாசகர்களுக்கும்
ஜீவ சரீர ப்ரஹ்ம உபாசகர்களுக்குமே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று நிர்ணயித்தார் –

முக்த ஐஸ்வர்ய பிரகார சிந்தனம் பண்ணுகிற துரீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம ஸம்பத்தி யுடையவனுக்கு ஸ்வரூபம் நித்யாவிர்பூதமாய் இருக்கையால் அதுக்கு ஆவிர்பாவம் சொல்ல ஒண்ணாது –
அபூர்வமாய் இருபத்தொரு ஆகார நிஷ்பத்தியே உள்ளது என்று சங்கித்து -அபஹத பாப்மத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபம் அவித்யா திரோஹிதமாகையால்
தந் நிவ்ருத்தயா எப்போதும் உள்ள ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
முக்தன் ப்ரஹ்ம அனுபவ தசையில் ப்ரஹ்மத்தை விபக்தமாக அனுபவிக்கிறான் என்ன வேணும் -சுருதி சதங்களாலே தத் திசையிலும் பேதம் காண்கையாலே -என்று சங்கித்து -பிரகார பிரகாரி பேதத்தால் வந்த பேதத்தை சுருதி சதங்கள் சொல்ல வந்தது ஒழிய –

தத்வம்ஸயாதி சுருதி சித்த விஸிஷ்ட ஐக்யத்தை பாதிக்க வந்தது அல்லாமையாலே
தத் பிரகார தயா அவிபக்தமாயே அனுபவிக்கிறான் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
முக்தனுக்கு அபஹத பாப்மாத்வாதி குணவத்த்வந்தான் ஞானத்வந்தான் ஸ்வரூபம் என்று மத பேதத்தாலே சங்கித்து
உபயமும் சுருதி சித்தமாகையால் உபயமும் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
முக்தனுக்கு ஸ்ருதையான ஞாத்யாதி ப்ராப்தியில் ப்ரயத்தனாந்தர சாபேஷதை உண்டு என்று சங்கித்து
ஈஸ்வரனைப் போலே பிரயத்தன நிரபேஷமாகவே-ஞாத்யாதி பிராப்தி யுள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
கர்ம சம்பந்தம் இல்லாமையால் முக்தன் அசரீரனாய் இருப்பன் என்றும் -கர்ம சம்பந்தம் இல்லாவிடிலும் கேவல இச்சையா சரீரனாயே இருப்பன் என்றும் சங்கித்து –
சங்கல்பம் யுண்டாகில் ச சரீரனாய் இருக்கிறான் -அது இல்லையாகில் அசரீரனாய் இருக்கிறான் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பரம சாம்யா பத்தி ஸ்ருதியாலே ஜகத் ஈஸ்வரத்வமும் முக்தனுக்கு யுண்டு என்று சங்கித்து -அது உள்ளது ஜகத் காரண பூத ப்ரஹ்ம மாத்ரத்துக்கே யாகையாலே-போக மாத்ர ஸாம்யமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

சரம ஸூத்ரம் -அதிகரண அந்தரமான பக்ஷத்தில் சப்தம அதிகரணமான அதில் –
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன் கதாசித் புநரா வ்ருத்தியையும் பண்ணக் கூடும் என்று சங்கித்து –

அநா வ்ருத்தி சுருதி சித்த மாகையாலும் ஸத்யஸங்கல்பனான ஈஸ்வரன்
ஸ்வ சங்கல்ப விருத்தமாகப் புநரா வ்ருத்தியைப் பண்ணாமையாலும் புநரா வ்ருத்தி வாராது என்று நிர்ணயித்தார் –

இப்படி இவ்விரண்டு பாதத்தாலேயும் நிஷ்கர்ஷித்த
அர்ச்சிராதி மார்க்கம் தொடங்கி பரம வ்யோம பிரவேசாநந்தரபாவி ப்ரஹ்ம அனுபவ பர்யந்தமாய் யுள்ள பலத்தை -ஆழ்வாரும் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் தின் கழல் சேரே  -என்று ஆனந்த வழியில் சொல்லுகிற கணக்கிலே
எண்ணுக்கு அவ்வருகே பெருகி இருப்பதாய்

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான ஆனந்தாதி குணத்தை யுடைய அகாமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய்
ஆவீர்பூத ஸ்வ ரூபமான விலக்ஷண ஆத்மவர்க்கம் என்ன –

அஸங்க்யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையவனாகையாலே
நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய ஆஸ்ரிதரைக் கைவிடாதபடி ஸ்திரமான திருவடிகளை ஆஸ்ரயி -என்று வெளியிட்டு அருளினார் –

இதில் நலம் என்று ஈஸ்வரனோடு ஒத்த ஆனந்தத்தை யுடையனாக முக்தனைச் சொல்லுகையாலே

சர்வ ஸத்காரத்தால் வந்த ஈஸ்வர ஆனந்த சாம்யம் யுக்தமாய் –
அத்தாலே அர்ச்சிராதி புருஷ சதிகார ப்ரயுக்த ஆனந்தமும் சொல்லிற்றாக லபிக்கையாலே இச்சந்தையாலே அர்ச்சிராதி பாதார்த்தமும் ஸூசிதமாகலாம்

சரம பாத பிரதம அதிகரணத்தில்
ஸ்வரூப ஆவிர்பாவமே முக்த தசையில் உள்ளது என்று நிர்ணயித்த அர்த்தம் –

ஆவிர்பூத அபஹத பாப்மாத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டுகிற
ஒண் பொருள் -என்கிற சந்தையாலே ஸ்புடமாக ஸூசிதமாயிற்று-

நாரணன் -என்கிற சப்தம் -சர்வ காலத்திலும் சேதன ஈஸ்வரர்களுக்குள்ள அப்ருதக் சித்த சம்பந்தத்தைக் காட்டுகையாலே
முக்த தசையில் அவிபாகேந ப்ரஹ்ம அனுபவமே உள்ளது என்று நிர்ணயித்த த்வதீய அதிகரண அர்த்தம் ஸூசிதமாயிற்று –

ஒண் பொருள் -என்கிற இடத்தில் ஆத்ம வஸ்துவுக்கு ஒண்மையாவது

அசங்கோசாத் அபஹத பாப்மத்வாதிகளும் ஞான ஸ்வரூபத்வமும் ஆகையால் உபயம் ஸ்வரூபம்
என்கிற த்ருதீய அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம்

இது உரையில் சப்தார்த்த நிர்வாஹ பிரகாரத்தில் கண்டு கொள்வது –

ஈடு முதலான வ்யாக்யானங்களில் -நலத்து ஒண் பொருள் -என்கிற பாதங்களுக்கு ஞானாதி குணகத்வமும் ஞான ஸ்வரூபமும் அர்த்தம் என்று வ்யாக்யானம்
பண்ணுகையாலே இப்பத த்வயத்தாலும் உபயமும் ஸ்வரூபம் என்கிற அதிகாரண அர்த்தம் சொல்லப் பட்டது என்று ஸ்புடமாக அறியலாம் –

ஒண்மைக்கு அபஹத பாப்மாத்வாதி குண அஷ்டக அந்தரகதமான ஸத்யஸங்கல்பத்வம் அர்த்தமாகையாலே
சங்கல்பாதேவ ஞாத்யாதி பிராப்தி என்கிற சதுர்த்த அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம் –

ஒண் பொருள் –என்கிற சப்தத்தாலே அபஹத பாப்மாத்வாத் யந்தரகதமான சத்யகாமத்வம் யுக்தமாயிற்று –
சத்யகாமத்துவமாவது -இச்சை யுண்டாகில் அவ்ப்ரதிஹதமாய் இருக்கை-

இப்படி சத்யகாமாத்வ உக்த்யா ஐச்சமாக சரீரத்வ அசரீரத்வங்கள் முக்தனுக்கு கூடும் என்கிற பஞ்சம அதிகாரண அர்த்தமும் –
ஒண் பொருள் –என்கிற சந்தையாலே தானே ஸூசிதமாகலாம் –

ஷஷ்ட அதிகரண நிரூபிதமான ஜகத் வியாபாரம் இன்றிக்கே போக மாத்ர ஸாம்யமே உள்ளது -என்கிற அர்த்தம் –

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு ஒத்த ஆனந்தத்தை உடையவன் என்று ஆனந்த மாத்ர சாம்யத்தைக் காட்டுகிற –அந்நலம்-என்கிற பதத்தால் ஸூசிதம் –

சரம ஸூத்ரம் அதிகாரணாந்தரம் என்கிற பக்ஷத்தில் ஆஸ்ரிதரை ஒரு நாளும்  விடாத திண்மையை யுடைய திருவடிகள் என்று சொல்லுகிற –
திண் கழல் -என்கிற பதத்தாலே -ஈஸ்வர ஸ்வா தந்தர்ய சங்கீத புநரா வ்ருத்தியை
ஸத்ய ஸங்கல்ப காருண்யாதி குணவதீஸ்வர ஸ்வ பாவத்தாலே இவ்வதிகரண அர்த்தம் ஸூசிதம்

இப்படி பத்தாம் பாட்டுக்கும் இப்பாத த்வயத்துக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

——————————————–

இனி நிகமத்தில்
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த இப்பத்தே -என்று தடாகங்கள் சேர்ந்த திரு நகரிக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் அருளிச் செய்த பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ உபயோகங்களான கல்யாண குணங்களால் தொடுக்கப் பட்டு இருந்துள்ள
ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு இப்பத்தை நிரூபியுங்கோள் -என்று
உத்தர த்விக ப்ரதிபாத்யமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ ப்ரதிபாதனம் இத் திருவாய் மொழி என்று தலைக்கட்டி அருளினார் –

ஈட்டிலே உபாஸக அனுக்ரஹத்தாலே உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த என்று இறே-
சீர்த் தொடை -என்கிற சந்தைக்கு வ்யாக்யானம் செய்து அருளினது –

இப்படி வீடுமின் முற்றத்துக்கு உத்தர த்விகத்துக்கும் ஐகமத்யம் யுண்டு என்னும் இடம் சித்தம்

ஆக அத்யாய சதுஷ்ட்யாத்மகமாய் –
ஷோடச பாதாத்மகமாய் –
ஷாட் பஞ்சாசததிகசத அதிகரணாத் மகமாய்
இருந்துள்ள சாரீகாதாத்மகமாய் இருந்துள்ள பிரதம த்விதீய தசகங்களுக்கும் –
கலிவைரி நிகமாந்த தேசிக ப்ரப்ருதிகளான பூர்வாச்சார்யர்களுடைய ப்ரதிஞ்ஞா வாக்கியங்களின் படியே ஐகமத்யம் அநதி ஸங்க்ரஹ விஸ்தரேண உபபாதிதம் ஆயிற்று –
இனி பத்துடை அடியவர் -தொடங்கி -முனியே நான்முகன் அளவும் -இவ்விரண்டு திருவாய் மொழிக்கும் விவரணம் என்னும் இடம் ஸூதீக்களுக்கு ஸூவ்யக்தமாக அறியலாம்

—————————————————————————-——————————-

பாரம்பரீ பவபயோ நிதி பாத்ர பாத்ர சிஷ்டேதரேஷ்வ ஸூலபம் மம தேசிகா நாம்
தே யாத தயா நிதி ரமாசக பாத யுக்ம ருக்மாதி பாவந வி ஸூத்த ஸமஸ்த போதம்
ஜெயது வகுளதாரீ தேசிகோ தேசிகா நாம் ஜெயது யதி வரார்யோ மாயி மத்தேப சிம்ஹா
ஜெயது கலி ஜீதார்யோ வ்யாஸ சம்ஜ்ஜோ விபஸித் ஜெயது ஜெயது நித்யம் வேங்கடாசார்ய யுக்மம்
இதி-ஸ்ரீ மத் வாதூல குல திலகயோ காஞ்சீயதீசஜநீ பூமி க்ருதாவதாரயோ
ஸ்ரீ மத் வேங்கட தேசிகயோ அஹேதுக க்ருபாலப்தோபய வேதாந்த ஹ்ருதயேந ஸ்ரீ காஞ்சீ வர வர யோகிநா
ஸ்ரீ ராமாநுஜா தாஸேந விலிகிதம் சாரீரக த்ரமிடோபநிஷதைக கண்ட்யம் –

———————–

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி – ஓர் அறிமுகம்–ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்–

February 27, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள்.

இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

(1) கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது (கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை. இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி * (8-2-11) என்றார் ஆழ்வாரும்.

(2) இனி * கோதிலவாம்* என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி.

120188497.0p9mnWFF

நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.  இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகார்கள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள்.

இப்படியிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக்கடவார் ஒருவருமில்லை. இவற்றையுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ்வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான். * ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது!

பகவான் இவ்வாழ்வாரை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளியதால் தத்வங்களை விசதமாக அறிந்தார் நம்மாழ்வார். இனி மற்றைய ஆழ்வார்களும் இதே போன்றுதான் அருளப்பட்டார்கள் என்பதனால்,  அவர்களிடம் இருந்து வ்யாவ்ருத்தி தோற்ற இவரது சீர்மையை அருளிச்செய்கிறார் அடுத்த வரியினால்.

அப்படிப்பட்ட ஆழ்வார்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்றபடி!

பூதம் ஸரஸ்ச்ச * என்கிற தனியனாது அருளிச்செயல் ஸேவிக்கும் காலங்களில் முன்னே ஓதப்பட்டு வரப்படுகிறது. இதன் ஸாராம்ஸமாவது => ஏனைய ஆழ்வார்களும் எம்பெருமானாரும் நம்மாழ்வாருக்கு அவயவ பூதர்கள் என்பதாகும்.

தம்படி தாமுமறியார் => ஏதேனும் ஒரு ஸாதனைத்தை அனுஷ்டித்து வைத்து அதனால் பலிக்கப் பெற்றது இல்லாமையினாலே தம்முடைய பெருமையினைத் தாமும் அறியார் ! எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் ஆயிற்று இவ்வாழ்வார்க்கு வந்த நன்மைகள் யாவும்.

ஸம்ஸாரிகளுமறியார்கள் => இவரைப் போன்று ஒரு வ்யக்தி ஸம்ஸாரத்தில் காணமாட்டாமையினாலே ஸம்ஸாரிகளும் இவரது ப்ரபாவத்தினை அறியார்கள்

ஸர்வேஶ்வரனும் அறியான் => தன்னுடைய க்ருஷிபலங்களும் திருக்குணங்களும் இவரிடத்தில் பலித்தது போல் வேறொருவரிடம் பலிக்காமையினாலே எம்பெருமானும் அறியான்.

ஸம்ஸாரிகளைக் காட்டில் ஆழ்வார் பெருமை படைத்தவர் என்று ஒப்புக் கொண்டாலும், நித்யஸூரிகளைக் காட்டிலும் வ்யாவ்ருத்தர் என்று சொல்லலாமோ என்னில் – * விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் வ்யாவ்ருத்தரே !

யாவர்நிகர் அகல்வானத்தே (4-5-8) => எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் , என்று ஆழ்வாரும் தம்மைப் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவரது புகழ்.

வேதம் தமிழ் செய்த மாறன்

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு * வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமம். அவரது வாழித் திருநாமத்தில் * வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே * என்றே ஓதிவரப்படுகின்றது.

ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய உபதேசரத்தினமாலையினில் ஆழ்வாரை * வேதம் தமிழ் செய்த மாறன் * என்று கொண்டாடுகிறார்.

அதாவது தன்னை அதிகரிக்கைக்கு (கற்கைக்கு) அநேகமான அதிகாரங்களை உடைத்தாய் இருத்தல்,

த்ரைகுண்ய விஷயமாயிருத்தல் (முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்காயிருத்தல்)

அன்றிக்கே, ஸர்வரும் அதிகரிக்கும்படியாகவும், உத்தரபாகத்தின் அர்த்தத்தை மாத்திரம் ப்ரதிபாதிக்கும்படியாய் இருப்பது ஆயிற்று இவ்வாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி.

இப்படி அருளிச்செய்யுமிடத்து இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள். ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम् * – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு அது தன்னையே பிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !

இதனை அமுதனாரும் * எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * என்றருளினார்.

எய்தற்கு அரிய மறைகள் – அடைவதற்கு அரிதாய் உள்ள மறைகள். தன்னுள்ளே கொண்டுள்ள அர்த்தங்களை மறைப்பதினால் மறை ஆயிற்று.

இதன் அர்த்தங்களை அறிவதற்கு ந்யாய ஸஞ்சாரம் பண்ணும் மஹரிஷிகளே அர்ஹர்கள். மற்றையோர்களுக்கு அது கைகூடாது என்றபடி.

இதனை அதிகரிக்கவும் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம், மீமாம்ஸா இவற்றின் உதவி வேண்டும்.

வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே * (2) என்கிற ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரமும் அதற்கு மாமுனிகள் வ்யாக்யானமும் இதனை விவரிக்கின்றன. மேலும் * அநந்தா வை வேதா: * என்று வேதங்களை முழுவதுமாக அதிகரிப்பதும் இயலாத காரியம்.

ஆயிரம் இன்தமிழால் – இனி ஸ்ரீசடகோப வாங்மயமான திருவாய்மொழி எய்தற்கரியதாய் இல்லாதல் சொல்லப்பட்டது.

ஆயிரம் – என்பதினால் திருவாய்மொழியின் அளவுபட்டமையும்,

இன்தமிழால் – என்பதினால் அனைவரும் அதிகரிக்கலாம்படியும், அதுவும் இன்தமிழாகையினாலே எய்தற்கு எளியதாய் இருக்கிறது.

யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா * [ யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.

ஆழ்வார் தமரே கேசவன் தமராகி தேஜஸ் மிக்கு -எழும் பிறப்புக்களிலும் -தாஸ்ய பூதராக இருப்பார்கள்

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-

இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்-மாசரிது பெற்று – அத்தாலே -நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் – என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ஸ்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின் அனுவாதமான கேசவனால் என்கிற இப் பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு -விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது -என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
ஏற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்-அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு-
மதுரகவி ப்ரக்ருதிகள் என்றுமாம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜர் உத்தாரகர் என்கிறார் ஆயிற்று என்றுமாம்

———————————

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள்.

அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.

இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய், போக்யமுமாய், ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய், ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய், ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் – எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே, * மாற்றங்களாய்ந்து கொண்டு * (6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் * என்கிறார்.

அதாவது திருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம்.  * தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள் *.

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர்.

தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் முதலிலேயே (1–5–11) என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.

” இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும்.

இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே * என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. * அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்.

அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும், வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் * தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே * என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் * என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே.* (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி.

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம். உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் *….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில் * அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா * என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள  பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

  • நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
  • ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
  • கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
  • நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கணவளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)

அர்ச்சாவதாரம்

 மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவனான பேயாழ்வார்,

அர்ச்சாவதாரத்தைப் பற்றுகையே சுலபமானதும், நாம் உய்வதற்கும் வழியாகும் என்பதனை,

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

என்கிற பாசுரத்தினால் நமக்கு உணர்த்தினார். அதாவது மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், பஞ்சாக்நி நடுவில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட உடலை வருத்தித் தவம்புரிவது பாவங்கள் தொலைந்து நற்கதி அடையவேண்டும் என்பதனாலே. அவ்வாறு வருந்தவேண்டா! திருவெஃகாவில் உள்ள ஸ்வாமியின் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராய்ப் புஷ்பங்களைப் ஸமர்ப்பித்து ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.

(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)

(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)

(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)

(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில்  )பொய்கைளிலே புக்குக் குளித்து

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –

(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)

(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)

விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –

(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)

(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –

வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!    )

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –

(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)

அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ

சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —

அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்

மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –

(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)

(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)

(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

————-

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம். வேதத்தினால் அறியப்படுபவன் எம்பெருமான். *சுடர் மிகு சுருதியுள் உளன்* என்று இதனை அருளினார்

நம்மாழ்வார். * ஶ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே * என்றார் எம்பெருமானார். அப்படி வேதத்தினால் அறியப்படுபவனான எம்பெருமான் தசரதனுக்குக் குமாரனாக திருவவதரித்த போது, வேதமும் வால்மீகி முனிவரிடம் இருந்து ஸ்ரீராமாயணமாகத் தோன்றிற்று.

இதனை * வேத வேத்ய ந்யாயம் * என்று உரைப்பர்கள் பூர்வர்கள்.

இந்த ந்யாயத்தாலே நோக்கினால், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுக்கு நோக்கு அர்ச்சாவதாரம் என்னலாம்படியிருக்கும்.

நித்ய முக்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலை பரமபதம்.

க்ஷீராப்தியில் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அபயம் கொடுத்துக் கொண்டு இருப்பவன் எம்பெருமான்.

ராமக்ருஷ்ணாதி அவதாரங்களோ குறிப்பிட்ட தேசகாலத்தவர்களுக்காய் இருக்கும்.

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே * என்று ஆச்ரிதர்கள் விரும்பிய திருமேனியையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு ஸர்வஸுலபனாய் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமானை ப்ரதிபாதிப்பது, ஸுலபமான ஆழ்வாருடைய திருவாய்மொழியே.

இதனுடைய ஸுலபத்வமும் கீழேயே சொல்லப்பட்டது.

thirucherai-nammazhwar-thiruvadi-thozhal-2013-27

ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது *செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)

என்று ஸங்க்ரஹித்தார்.  இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் * என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி. இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். * ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * …. * இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

இதில் ஸ்ரீ அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக ஸ்ரீ பர ஸ்ரீ வ்யூஹ ஸ்ரீ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று-நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள்
என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்-ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்-இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி வற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி–நியமங்களை யுடைத்தாய் பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
ஸூலபத்தாலே ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –
நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை ஸ்ரீ பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -இணைவனாம் -அவருக்குள் இரண்டும் ஸ்ரீ பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம் இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது-சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஸ்ரீ ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

—————–

வ்யாக்யானங்கள்

ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு அவதரித்த வ்யாக்யானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். ஸ்ரீ அபயப்ரதராஜர் எனப்படும் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையே அனைத்து திவ்யப்ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

* மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில * என்று மாமுனிகள் குறிப்பிடும்படி ஸ்வாமி பிள்ளை லோகாசார்யருக்குத் திருத்தம்பியாரான ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் சில அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

இவ்வ்யாக்யானங்கள் திவ்ய ப்ரபந்தங்களின் ஆழ்ந்த பொருள்களையும் அவற்றை அருளிச் செய்த ஆழ்வார்களின் திருவுள்ளத்தை ப்ரதிபாதிப்பதாயும் இருக்கும்.

இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய உபதேச இரத்தினமாலையிலே * பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை மணவாளயோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளரென்று நெஞ்சே கூறு * என்ற பாசுரத்திலே அருளிச்செய்தார்.

—————————

திருவாய்மொழியைக் காத்த * என்றருளினார். இத்தால் ப்ரமாண ஶ்ரேஷ்டமான திருவாய்மொழிக்கு அபார்த்தங்கள் வாராமல் காத்தருளிய குணவாளர்கள் இவர்கள் என்று திருவுள்ளம் பற்றியருளினாராயிற்று.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் 5 வ்யாக்யானங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்தே இதன் ஏற்றம் விளங்கும்.

இன்பமிகும் ஆறாயிரம் * என்று முதல் வ்யாக்யானம் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸங்கையையிலே (எண்ணிக்கையிலே) * தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளானாலே * அருளிச் செய்யப்பட்டது.

ஏர் ஒன்பதினாயிரம் * என்று * வேதாந்தி நஞ்சீயரால் * திருவாய்மொழிக்கு அதன் அர்த்த கௌரவம் தோற்ற அருளிச்செய்யப்பட்டது. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்யையிலே இருக்கும் இதன் எண்ணிக்கை. * மாயவாதியர் தான் அஞ்சப் பிறந்தவன் சீமாதவனான * வேதாந்தியன்றோ இவர்!

இன்பா வரு பத்தி மாறன் * – இன்பமாக வருகிற கடாக்ஷத்தாலே வந்த பக்தியையுடைய மாறனின் மறைப்பொருளச் * இருபத்திநாலாயிரமாகச் * சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் தாமும் ஸ்ரீராமாயணத்தில் ஈடுபட்டிருப்பார் என்பது ஸுப்ரஸித்தம். அதனாலேயே * ராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் * என்ற சாயையிலே பாசுரம் அமைத்தார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.

ஶ்ருதப்ரகாஶிகா ஸங்க்யையிலே * வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை * யினாலே ஏடுபடுத்தப்பட்டது * ஈடு முப்பதாறாயிரம் *. இதுவும் கேட்ட அர்த்தத்தை ப்ரகாஶப்படுத்தப்பட்டது தான்! இது தானும் * இந்த நாடறிய * என்று ஸர்வரும் கொண்டாடும்படி * தெள்ளியதா நம்பிள்ளை * யினால் அருளிச்செய்யப்பட்டது.

அடுத்தது * பன்னீராயிரமாக * அழகிய மணவாளச் சீயரால் அருளிச் செய்யப்பட்டது. * இத்தை யொழிய நாலு வ்யாக்யாநம் உண்டானாலும் ஶப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தை கொண்டே ஸாதிக்கவேண்டுமிறே * என்று இதன் ஏற்றம் ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயரால் அருளப்பட்டது. * த்ரமிடோபநிஷத் ஸங்கதியும் * இவராலேயே அருளிச்செய்ய்யப்பட்டது.

எப்படி வேதஶிரோபாகமான உபநிஷத்துக்களுக்கு வ்யாஸ பகவானால் ஸூத்ரங்களாக அர்த்தம் நிர்ணயிக்கப் பட்டதோ அதே போன்று ஸ்வாமி அழகிய மணவாள்ப் பெருமாள் நாயனாரால் * ஆசார்ய ஹ்ருதயத்தில் * திருவாய்மொழியின் அர்த்தங்கள் ஸூத்ர ரூபங்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளன.

ஸ்வாமி வேதாந்தாசார்யரால் * த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும் த்ரமிடோபநிஷத் ஸாரமும் * ஶ்லோக ரூபங்களாக திருவாய்மொழியின் அர்த்தங்களைப் ப்ரதிபாதிப்பதாக அனுக்ரஹிக்கப்பட்டன.

ஸ்ரீமத் வரவரமுனிகளால் * திருவாய்மொழி நூற்றந்தாதி * ஒவ்வொரு பத்துப் பாசுரங்களுக்கும் ஸாரமாக இன்பம் பயக்கும்படி * சொல்லும் பொருளுமாகத் * தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தனை வ்யாக்யானங்கள் மற்றும் பூர்வர்கள் க்ருதியினாலேயே இத்திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

பெண் பேச்சு

91009763.m2ijMhV6.Parangusa_nayaki_thirukkolam

திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய பேச்சாக மட்டும் இன்றி * பெண் பேச்சு * ஆகக் கூறியுள்ளதும் பாசுரங்கள் உள.

வடமொழி மறையான வேதத்தின் ப்ரதம ப்ரவர்த்தகனான ப்ரஹ்மாவிற்கு நான்குமுகங்கள். * யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் .. * என்று ஸ்ருஷ்டியில் எம்பெருமான் முதலில் பிரமனுக்கே வேதத்தை ஓதிவைத்தருளினான்.

கல்பந்தோறும் மாறாமல் வரும் திருவாய்மொழியினை நம்மாழ்வாரைக் கொண்டு ப்ரவர்ப்பித்து அருளினான்.

இவருக்கும் நான்கு முகங்கள் என்னலாம்படி இருக்கும்!

  1. தாமான தன்மையில் பாடியருள்வது.
  2. தலைவிப் பேச்சாகப் பாடியருள்வது.
  3. தோழி முகத்தினால் பாடியருள்வது.
  4. அன்னை முகத்தினால் பாடியருள்வது

இப்படி பெண்பேச்சு ப்ரேம தஶையிலே என்பதை * ஜ்ஞானத்தில் தம் பேச்சு; ப்ரேமத்தில் பெண்பேச்சு * (118) என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் காட்டப்பட்டுள்ளது.

இவர் இப்படிப் பெண்கள் நிலைமை அடைவதன் காரணமானது எம்பெருமானின் * அப்ராக்ருத விக்ரஹமே * ஆகும்.

அதுவே இவருடைய ஆண்தன்மையை அழித்து பெண்கள் பாவனையினை ஏறிட்டுக் கொள்ளும்படி செய்யும். பெருமாளைக் குறித்து

ஆடவரும் பெண்மையினை அவாவுறும் தோளினாய் * என்றார் கம்பநாட்டாழ்வார். பெருமாளை ஸேவித்த மாத்ரத்தில் ஆடவர்களும் கூட ஸ்த்ரீத்வத்தை ஆசைப்பட்டார்களாம்!

அதே போன்று இவ்வாழ்வார் ஈடுபட்ட திருமேனியானது * குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு * (5-5-10) என்றன்றோ இருப்பது.

திரள் திரளாக நித்தியசூரிகள் கைகோத்துக்கொண்டு இழியும்படி – சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-* தேஜஸாம் ராஶிம் ஊர்ஜிதம் * (ஸ்ரீ விஷ்ணு புராணம்) [ பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது, அந்த ப்ரஹ்மாதி தேவர்கள், திருச்சங்கு திருவாழி கதை முதலான திவ்யாயுதங்களை தரித்திருப்பவனும், இதுவரை காணப்படாத ரூபஸந்நிவேஶத்துடனும் தேஜஸ்ஸுக்களுடைய (ஒளிக்கற்றைகளின்) ஸமூஹமாயிருக்கிற அந்த விஷ்ணுவைக் கண்டார்கள் ]என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது.

இந்த ஸ்த்ரீத்வமும் வந்தேறியா? (இயல்பாக இல்லாததா?) என்னில், அது வந்தேறியன்று. எம்பெருமான் ஒருவனே புருஷோத்தமன். ஏனைய ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண்கள் தான்! இதனை விஶதமாக * வித்யை தாயாகப் பெற்று * (121) என்கிற ஆசார்ய ஹ்ருத்ய சூர்ணிகையினாலே. தாய்ப் பேச்சாக, தோழிப் பேச்சாகப் பேசுவது எதனால் எனில்,

தோழி – நாயகன் மற்றும் நாயகிகளை சேர்ப்பவள் – ஆழ்வாருக்கு ஸம்பந்த ஜ்ஞானம் தலையெடுக்கும் அவஸ்தையிலே தோழிப் பாசுரம்.

தாய் – நாயகி படிகடந்து செல்லக் கூடாது என்று உரைப்பள் ஆகையினால் – ஆழ்வாருக்கு உபாய அத்யவஸாயம் (எம்பெருமான் தன்னை வந்து ரக்ஷிப்பன்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தாய்ப் பாசுரம்.

நாயகி – நாயகனோடு கூடி இருக்க ஆசைப்படுபவள் ஆதலின் – ஆழ்வாருக்கு எம்பெருமானை கிட்டி அனுபவித்தல்லது தரியாமை (இதனை ப்ராப்யத்வரை என்பர் ஆசார்யர்கள்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தலைவி பாசுரம்

இம்மூன்று அவஸ்தைகளும் முறையே திருமந்த்ரத்தில் உள்ள பதத்ரயங்களின் ப்ரதிபாத்ய விஷயம் – ஆசார்யமுகேந அதிகரிக்க வேண்டுவது. இவை அனைத்தும் * ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி * (133) * ஸகி வெறிவிலக்கி * (134) என்கிற இரண்டு ஆசார்ய ஹ்ருத்ய ஸூர்ணிகைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

உபதேசப் பத்து

திருவாய்மொழி ஒவ்வொரு 100 பாசுரங்களிலும் 10 பாசுரங்கள் பிறர்க்கு உபதேசம் பண்ணும் திருவாய்மொழிகளாக ஆயிற்று. அதாவது ஒவ்வொரு பத்திலும் ஒரு திருவாய்மொழி முழுமையும் உபதேச பரமாக ஆயிற்று. இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில் * பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து * (216) என்ற ஸுர்ணிகையில் அருளினார்.  அவையாவன

  1. முதல் பத்தில் * வீடுமுன் முற்றவும் * (1-2) [பகவத் பக்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோள் என்று உபதேசம்]
  2. இரண்டாம் பத்தில் * கிளர் ஒளி இளமை *  (2-10) [எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தத்தைப் பெறும் பொருட்டுத் திருமாலிருஞ்சோலையை ஆச்ரயிக்கும்படி பிறர்க்கு உபதேசித்தல் ]
  3. மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதம் * (3-8) [மன்னா மனிசரைப் பாடாமல் பரமனைப் பாடித் துதிக்கும்படி புலவர்க்கு உபதேசித்தல் ]
  4. நான்காம் பத்தில் * ஒன்றும் தேவும் * (4-10) [ ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையாகையால் மற்ற தெய்வங்களை விட்டு அவனையே பற்றுங்கள் என்று உபதேசித்தல் ]
  5. ஐந்தாம் பத்தில் * பொலிக பொலிக * (5-2) [ஸ்ரீவைஷண்வர்கள் திரளைக்கண்டு வாழ்த்தி, அல்லாதாரை உபதேசித்துத் திருத்துதல்]
  6. ஆறாம் பத்தில் *நல்குரவும் செல்வமும் * (6-3) [ ப்ரணயகலஹத்தில் முரண்பட்ட தம்மை வசீகரித்தவன் விருத்த விபூதி ஐச்வர்யம் , அதாவது முரண்பட்டது அனைத்தையும் செல்வமாகக் கொண்டு திருவிண்ணகரில் உறைபவன் – அவனது * கழல்களன்றி மற்றோர்களைகணிலம் * * வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும்வன்சரணே  ]
  7. ஏழாம் பத்தில் * இன்பம் பயக்க * (7-10) [ இன்பக்கவி பாடுவித்த ஸ்ரீமந்நாராயணனை – உள்ளித் தொழுமின் தொண்டீர் – தீவினை உள்ளத்தின் சார்வல்லவே என்று உபதேசம் ]
  8. எட்டாம் பத்தில் * எல்லியும் காலையும் * (8-6) [ ஆழ்வாரது பெருவிடாய் தீரக் கலக்கக் கருதி திருக்கடித்தானத்தில் இருக்கும் எம்பெருமானை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடரே என உபதேசம்.]
  9. ஒன்பதாம் பத்தில் * மாலை நண்ணி * (9-10) [ நீர் விரும்பியவை யாவும் உமது இவ்வுடம்பு முடியும் பொழுது தருவேன் என்று ஆழ்வார்க்கு எம்பெருமான் அருள, அவர் உவந்து, திருக்கண்ணபுரத்திலே சென்று அவனைச் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் ]
  10. பத்தாம் பத்தில் * கண்ணன் கழலிணை * (10-5) [ ஆழ்வார் எம்பெருமானிடத்து பக்தியுடையார் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் சுருங்கச்சொல்லி, பரோபதேசத்தை நிறைவுபடுத்தல் ]

இந்த உபதேசப் பத்தும் அந்த நூறு பாசுரங்களுக்கு, பாட்டுக்கு க்ரியா பதம் போல ப்ரதானம் என்று. இந்த உபதேசமும் அந்த நூறு பாசுரங்களின் தாத்பர்யத்தை ஒட்டியும் இருக்கும்.

தூது

இத்திருவாய்மொழியில் எம்பெருமானைக் குறித்துத் தூது விடும் பதிகங்கள் 4. அவற்றில் தூது விடுவதற்குப் பக்ஷிகள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஸ்வாபதேஶத்தால் அவை ஆசார்யர்களையே குறிக்கும். இவ்விஷயம் ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தூது பதிகங்களின் தாத்பர்யத்தினையும் * தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமாதீக்ஷாஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வத்வ்ய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் * (156) என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி தூது விடப்படும் பதிகங்கள் அஞ்சிறைய மடநாராய் (1-4), வைகல் பூங்கழிவாய் (6-1), பொன்னுலகாளீரோ (6-8) எங்கானலகங்கழிவாய் (9- ) ஆகும். இவற்றுள்

  1. அஞ்சிறைய மட நாராய் – *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் * என்று வ்யூஹ நிலையில், *என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு * என்று அபராதங்களைப் பொறுக்கும் தன்மை பற்றாசாகத் தூது;
  2. வைகல் பூங்கழிவாய் – *மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்று உகந்த * என்று விபவத்தில், *புணர்த்த பூந்தண்துழாய் முடி * என்று ஆர்த்தர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று தீக்ஷையுடைமையைப் பற்றாசாகக் கொண்டு தூது;
  3. பொன்னுலகு ஆளீரோ – * வானவர் கோனைக் கண்டு * என்று பரத்வத்திலும், * எங்குச் சென்றாகிலும் கண்டு * என்று அந்தர்யாமித்வத்திலும் தூது;
  4. எங்கானலகங்கழிவாய் – * திருமூழிக்களத்தார்க்கு * என்று அர்ச்சாவதாரத்திலே தூது

ஒவ்வொரு பத்திலும் வெளியிடப்படும் திருக்குணங்கள்

எம்பெருமானது திருக்குணங்களை விசதமாகக் காண்பிப்பது திருவாய்மொழியிறே! அமுதனார் முதல் பாசுரந்தன்னிலேயே * புகழ் மலிந்த பா மன்னு மாறன் * என்றாரிறே! * உயர்நலமுடையவன் * (1-1-1), * ஈறிலவண்புகழ் * (1-2-10) என்று உபக்ரமித்து (ஆரம்பித்து), * உலப்பில் கீர்த்தி * (6-101) என்று மத்யத்திலும் (நடுவிலும்) *சுடர்ஞான இன்பம் * (10-10-10) என்று முடிவிலும் திருக்குணங்களே அருளிச் செய்யப்பட்டிருக்கை காணத்தக்கது. * சீர்த்தொடை ஆயிரமிறே * திருவாய்மொழி

எம்பெருமானுடைய தசாவதாரம் போன்று 10 பத்துக்கள் கொண்டதான திருவாய்மொழியில் ஒவ்வொரு பத்திலும் ஒரு திருக்குணம் ப்ராதான்யேன இருக்கும். அவையாவன

  1. முதல் பத்தில் – பரத்வம்
  2. இரண்டாம் பத்தில் – காரணத்வம்
  3. மூன்றாம் பத்தில் – வ்யாபகத்வம்
  4. நான்காம் பத்தில் – நியந்த்ருத்வம்
  5. ஐந்தாம் பத்தில் – காருணிகத்வம்
  6. ஆறாம் பத்தில் – சரண்யத்வம்
  7. ஏழாம் பத்தில் – சக்தத்வம்
  8. எட்டாம் பத்தில் – ஸத்யகாமத்வம்
  9. ஒன்பதாம் பத்தில் – ஆபத்ஸகத்வம்
  10. பத்தாம் பத்தில்  – ஆர்த்திஹரத்வம்

திருமந்த்ர ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருமந்த்ரமாவது மந்த்ர ராஜன் என்று அழைக்கப்படுவதாகும். முமுக்ஷுக்களுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்களிலே வைத்து முதலாவதாக இருப்பதாகும்.

இதில் உள்ள * பதத்ரயமும் – ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தையும், தத்ஸம்பந்தவிரோதியான ஸ்வஸ்வாதந்த்ரயத்தினுடைய நிவ்ருத்தியையும், தத்ஸாபல்யஹேதுபூதமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதிக்கிறது. *, என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரால் பரந்தபடியில் அருளிச் செய்யப்பட்டது.

ஆதலால் திருமந்த்ரத்தால் அறியப்படுவது அர்த்த பஞ்சகம் ஆகும்.

திருவாய்மொழியினால் அறியப்படுவதும் அர்த்தபஞ்சகமாகும். இப்படி ப்ரதிபாத்ய விஷயங்கள் இரண்டினுக்கும் ஒன்றாய் இருக்கும்.

இன்னமும் * கண்கள் சிவந்து * (8-8) பதிகத்தில் முதலிரண்டு திருவாய்மொழிகள் வழியாக எம்பெருமானின் ப்ரஸ்தாவமாக அகாரார்த்தமும், பின்பு ஜீவ ஸ்வரூபம் சொல்லும் முகத்தாலே மகாரார்த்தமும், * கருமாணிக்க மலைமேல் * (8-9) பதிகந்தன்னில் * அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் * இத்யாதிப் பாசுரங்களால் உகாரார்த்தமும், * நெடுமாற்கடிமை செய்வேன்போல் * (8-10) பதிகத்தால் பாகவத சேஷத்வம் அறிவிக்கும் ப்ரகாரமாக நமப்பதார்த்தமும், * கொண்ட பெண்டிர் * (9-1) பதிகத்தால் எம்பெருமானை ஒழிந்தவர்கள் ஆபாஸ பந்துக்கள் என்று நாராயணார்த்தமும், * பண்டை நாளாலே * (9-2) பதிகத்தால் கைங்கர்ய ப்ரார்த்தனையான வ்ய்க்த சதுர்த்தியுமாக திருமந்த்ரம் ப்ரதிபாதிக்கப்பட்டது என்னவுமாம்.

த்வயார்த்த ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்படும் விஷயம் த்வயம் என்னலாம்படியும் இருக்கும். இதனை ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் – * த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி என்றது ஸார ஸங்க்ரஹத்திலே * என்று அருளிச் செய்தார். பகவானாகிய ஸர்வேஶ்வரன் தன்னுடைய கருணையினாலே சேதனர்க்கு ரஹஸ்யத்ரயங்களையும் ப்ரகாஶிப்பித்து அருளினான். அதன் அர்த்தங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு 18 ரஹஸ்யங்களாக அருளிச் செய்தார் ஸ்ரீ லோகதேஶிகன். அவற்றில் * ஸார ஸங்க்ரஹம் * என்பது ஒரு ரஹஸ்யம். அதனில் திருவாய்மொழியில் த்வயார்த்தம் சொல்லப்படுகிறது என அழகாகக் காட்டியருளியுள்ளார்.

  • ஶ்ரிய:பதித்வம்
  • நாராயணத்வம்
  • ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வலோக ஶரண்யமான அவனுடைய சரணாரவிந்தயுகளத்வம்
  • அதினுடைய ப்ராபகத்வம்
  • சேதனனுடைய பற்றுதல்
  • லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம்
  • ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம்
  • ஸர்வஸ்வாமித்வம்
  • நித்யகைங்கர்யத்வம்
  • கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதலும்

ஆகிய இப்பத்து விஷயங்களே திருவாய்மொழிக்கும் த்வயத்திற்க்கும் நோக்கு!

ஶ்ரிய:பதித்வம் தெரிவிக்கப்பட்டது, * மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் * (1-3-1) – தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிமடாக உடைய பிராட்டி அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்; * மலராள் மைந்தன் *(1-5-9) திருமகள் கொழுநன்; * திருமகனார் தனிகேள்வன் * (1-6-9) தருமத்தினுடைய பரமப்ரயோஜனமே ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரிய பிராட்டியார்க்குத் தனிக்கேள்வன் ; * திருவின்மணாளன் * (1-9-1) பெரியபிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்; * பூமகளார் தனி கேள்வன் * (1-9-4) பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்; * மலராள்மணவாளனை * (1-10-4) திருமகள் நாதனுமான எம்பெருமானை ஆகிய பாசுரங்களால்.

நாராயணத்வம் தெரிவிக்கப்பட்டது * எம்பெருமான்நாரணற்கு * (2-1-7) எனக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு; * எம்பிரானெம்மான்நாராயணனாலே * (2-7-1) வடிவழகாலே என்னையும் தோற்பித்து விஷயீகரித்த மஹோபகாரனாயுமிருக்கின்ற நாராயணனாலே ; * நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன் * (2-7-2) எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் ஆகிய பாசுரங்களால்

எம்பெருமானுடைய ஸர்வலோக ஶரண்யமான திருவடித்தாமரைகள் சொல்லப்பட்டது * நாண்மலராமடித்தாமரை * (3-3-9); * அங்கதிர் அடியன் * (3-4-3) அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளையுடையவன்; * அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் * (3-6-9) அர்ஜுநனுக்குத் தேர் செலுத்திய பெருமானாயுமிருக்கின்ற க்ருஷ்ணனுடைய திருவடிகளை; * சீர் அடியானே * (3-8-1) சிறப்புள்ள திருவடிகளையுடையவனே ஆகிய பாசுரங்களால்

அதினுடைய ப்ராபகத்வம் சொல்லப்பட்டது * இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர் * (4-2-8) இலங்காபுரியில் அம்புகளில் இருந்து கிளம்பும் அக்னியை செலுத்தின இராமபிரானுடைய; * வல்வினை தீர்க்கும் கண்ணனை * (4-4-11) ஸகல பாபங்களையும் போக்குமியல்வினனான க்ருஷ்ணனை ; * வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. * (4-5-2) கொடிய க்லேசங்கள் அனைத்தும் நசிக்கும்படியாக; * மேவி நின்று தொழுவார் வினைபோக * (4-5-4) நெஞ்சு பொருந்தியிருந்து அனுபவிப்பாருடைய பாபங்கள் யாவும் நசிக்கும்படி; * வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் * (4-9-9) விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து ஆகிய பாசுரங்களால்

சேதனனுடைய பற்றுதல் சொல்லப்பட்டது * தமியேனுனக்கு அருளாய் * (5-7-2) இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருள்புரியவேணும்; * ஆறெனக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * (5-7-10); * உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறைவேண்டேன் * (5-8-3) “என்னான் செய்கேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி ; * கழல்கள் அவையே சரணாக் கொண்ட * (5-8-11) திருவடிகளையே சரணமாகப்பற்றின; * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் * (5-9-11) சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று ஆகிய பாசுரங்களால்

லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம் சொல்லப்பட்டது * திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து * (6-5-8) * அடிமை செய்வார் திருமாலுக்கே * (6-5-11) * ஒசிந்த வொண்மலராள்கொழுநன் * (6-7-8) * என்திருமார்வற்கு * (6-8-10); * கோலத் திருமாமகளோடு * (6-9-3) ஆகிய பாசுரங்களால்

ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம் சொல்லப்பட்டது * கன்னலே அமுதே * (7-1-2) பரமபோக்யனே!; * கொடியேன் பருகின்னமுதே * (7-1-7) பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!; * அலைகடல் கடைந்தவாரமுதே * (7-2-5) அலையெறிகின்றகடலைக் கடைந்த ஆராவமுதமே!; * திரு மாலின்சீர், இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ * (7-9-9) பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு அநுபவித்தாலும் ஆரமாட்டேன் ஆகிய பாசுரங்களால்

ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது – * அடியனேன் பெரியவம்மான் * (8-1-3) * விண்ணவர்கோன் நங்கள்கோன் * (8-2-2) * அமர்ந்த நாதனை * (8-4-10) * மூவுலகாளி * (8-9-5) ஆகிய பாசுரங்களால்

நித்யகைங்கர்யத்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது  * பண்டைநாளாலே நின் திருவருளும் * (9-2-1) * குற்றேவல் செய்து * (9-2-2) * கொடுவினையேனும் பிடிக்க * (9-2-3) * ஆட்கொள்வானொத்து * ( 9-6-7) * அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் * (9-8-4) ஆகிய பாசுரங்களால்

கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதல் ப்ரதிபாதிக்கப்பட்டது   * துயர் கெடுங்கடிது * (10-1-7) * எழுமையும் ஏதஞ்சாரா * (10-2-2) * அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன் * (10-8-7)  ஆகிய பாசுரங்களால்

ப்ரபந்தைகார்த்யம்

திருவாய்மொழி ஆயிரத்திற்கும் ப்ரமேயமாக * அவித்யா நிவர்த்தக * (234) என்கிற சூர்ணிகையில் ஆசார்ய ஹ்ருதய கர்த்தாவான ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸங்க்ரஹிக்கும் அர்த்தமாவது – ஸம்ஸாரத்திற்குக் காரணமான அஜ்ஞானத்தைப் போக்குவிப்பதான ஜ்ஞானத்தை (* மயர்வற மதிநலம் அருளினன் * ) அருளிய பகவானது நிர்ஹேதுகமான அநுக்ரஹத்தாலே (*அவாவற்று வீடு பெற்ற * ) ஸம்ஸாரம் அகல எம்பெருமானின் கைங்கர்ய ரூபமான மோக்ஷம் லாபம் என்பதாகும்.

எந்த எம்பெருமானுடைய ப்ரஸாதத்தினால் ஜ்ஞானம் கிடைக்கிறதோ, அதே ப்ரஸாதமே மோக்ஷம் தனையும் அருளவல்லது – அது நிர்ஹேதுகம் என்றபடி

 

101183670_10157361177655893_5294547382829056000_o

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீமத்வ மத ஸித்தாந்த சாரம்–

February 24, 2023

3-ஜயத்யஜோ அகண்ட குணோருமண்டல ஸ்தோதித க்ஞான மரீசிமாலி

ஸ்வபக்த ஹார்தோஸ்ச தமோ நிஹந்தா  வ்ய்ஸாவதாரோ ஹரிராத்ம பாஸ்கர: II

குணபூர்ணர் (அகண்ட=அளவில்லா) ஞானம் தரவல்லவர்.,:,சூரியன் போன்றவர்.,எப்படிப்பட்ட சூரியன்? தமது பக்தர்களின் இதயத்தில் இருக்கும் தமோகுணம் என்னும் இருட்டைப் போக்கவல்ல  சூரியன் அப்படிப்பட்ட ஸ்ரீஹரியின் அவதாரமேயான ஸ்ரீவியாஸரைப் பூஜிக்கிறேன்.,

நாராயணம் ஸுரகுரும் ஜகதேக நாதம்
பக்தப்ரியம் ஸகலலோக நமஸ்க்ருதம் ச I

த்ரைகுண்ய வர்ஜிதம் அஜம் விபும் ஆத்யம் ஈசம்
வந்தே பவக்னம் அமராஸுர ஸித்த வந்த்யம் II

ஸ்ரீமத்வாச்சார்யார் இந்த கிரந்தத்தில் ஸ்ரீவேதவ்யாஸர்.,ஸ்ரீராமர்., ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரை நமஸ்கரித்து மூன்று திவ்யமான ஸ்லோகங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்.,அவர்களை முறையே சூரியன்., சந்திரன்., ஸமுத்திரம் ஆகியவைகளுக்கு ஒப்பிட்டு புகழ்ந்து பாடியிருக்கிறார்.

1.ஸ்ரீவேதவ்யாஸர் துதி:-
ஜயத்யஜோ அகண்ட குணோருமண்டல :ஸதோதிதோ  ஞானமரீசிமாலி I

ஸ்வபக்த ஹார்தோஸ்ச தமோநிஹந்தா வ்யாஸாவதாரோ ஹரி: ஆத்ம பாஸ்கர: II

2.ஸ்ரீராமர் ஸ்துதி:-

ஜயத்யஜோ அக்ஷீண ஸுகாத்மபிம்ப:  ஸ்வைஸ்வர்ய காந்தி ப்ரதத: ஸதோதித:I

ஸ்வபக்த ஸந்தாப துரிஷ்டஹந்தா  ராமாவதாரோ ஹரிரீச சந்த்ரமா:II

3.ஸ்ரீகிருஷ்ணஸ்துதி:-

ஜயத்ய ஸங்க்யோருபலாம்புபூரோ குணோச்சரத்னாகர ஆத்மவைபவ:II

ஸதா ஸதாத்மக்ஞானதீபிராப்ய: க்ருஷ்ணாவதாரோ ஹரிரேகஸாகர: II

இந்த மூன்று ஸ்லோகங்களையும் ஒருசேரச் சொல்வதனால் நமக்கு ஒரே நேரத்தில்., ஸ்ரீடீகாச்சார்யர்.,ஸ்ரீமத்வாச்சார்யர்., ஸ்ரீராம.,கிருஷ்ண., வேதவ்யாஸதேவர்களின் ஸ்மரணையும்., கிருபையும் கிடைத்து விடுகிறது.,

ராமாயணத்தில் சூர்ப்பணகை ஸ்ரீராமரிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படிக் கேட்கிறாள்.,இதை ஒரு அழகான உவமையைக் கூறி விவரிக்கிறார் ஸ்ரீமத்வாச்சார்யார்.,
ஸ்லோகம்:-
ராமம் ஸமேத்ய பவ மே பதிரித்யவோசப்தானும் யதா தம உபேத்ய ஸுயோககாமும்.,
என்ன அர்த்தம்?.,
ராமனிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று அவள் கேட்டது.,இருட்டு(Darkness) சூரியனிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கேட்டது போல் இருக்கிறது என்கிறார் ஸ்ரீமதாச்சார்யர்.!.,

——–

சம்ஸ்கிருதத்தில் ஹார்த்(dh)  என்பது இதயம்., இங்கிலீஷ்காரன் இதையே ஹார்ட்(heart)  என்று காப்பி அடித்திருக்கிறான்

துவைத ஸித்தாந்தப்படி பிரம்ம சூத்திரங்கள் மொத்தம் 564.,அத்வைதசாஸ்திரம் இதை 555 என்றும்.,விசிஷ்டாத்வைதம் 545 என்றும் கூறுகிறது.

நான்கு அத்தியாயங்கள் முறையே.,1.ஸமன்வய அத்யாயம்.,2.அவிரோத அத்யாயம்.,3.ஸாதனா அத்யாயம்.,4.பலா(phalaa) அத்யாயம்.,

மூன்றாவது அத்தியாயமான  ஸாதனா அத்யாயத்தில் நான்கு பாதங்கள் முறையே 1.வைராக்கியம்.,2.பக்தி 3.உபாஸனை 4.க்ஞானம் என்பன.,அதேபோல நான்காவது அத்யாயமான பலாத்யாயத்தில் நான்கு பாதங்கள் முறையே 1.கர்மக்ஷயம் 2.உத்க்ராந்தி 3.மார்க்கம் 4.போகம் (bhogam) என்பனவாகும்.,

1.பாஷ்யம்.,என்பது மூல நூலுக்கு விளக்க உரை.,

2.டீகா அல்லது டீகை., இது பாஷ்யத்துக்கு விளக்க நூல் அல்லது commentary.,

3.டிப்பணி :  இது மேலே சொன்ன டீகை என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட விவரங்களுக்கு தரப்படும் விளக்கங்கள்.,ஆங்கிலத்தில் elucidation என்பார்கள்.,

4.சில சமயம் டிப்பணியில் இருக்கும் விஷயத்தைப் புரிந்துகொள்ள டிப்பணிக்கு ஒரு டிப்பணி இருக்கும்.,இதற்கு further elucidation என்று சொல்லலாம்

சுமார் 2000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீமத்வரின் சூத்ர பாஷ்யம் ஸ்ரீவேதவ்யாஸதேவர்  அருளிய  பிரம்ம சூத்ரங்கள் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளிக்கிறது

ஸ்ரீமத்வாச்சார்யர் பத்ரி க்ஷேத்ரத்துக்குச் சென்று திரும்பியபின்   சூத்ரபாஷ்யம் எழுதினார்., இந்த கிரந்ததத்தை அவ்ர் சொல்லச்சொல்ல அவருடைய சிஷ்யரான ஸ்ரீசத்ய தீர்த்தர் அதைச் சுவடியில் வடித்தார்.,பின்னர் கோதாவரி நதி தீரத்தில் ஒரு வித்வத்ஸபை நடந்தது.,அங்கு இந்த புனிதமான கிரந்தம் அரங்கேறியது., அப்போது  ஸோபன பட்டர் என்னும் அத்வைத வித்வான் ஸ்ரீமத்வரிடம் வாதம் செய்து பின்னர் ஸ்ரீமத்வரின் தத்வங்களை ஒப்புக்கொண்டு ஆசார்யரின் சீடராக ஆனார்., அதுமட்டுமின்றி ஆசார்யரின் துவைத ஸித்தாந்தத்தை நாடெங்கும் பரப்பினார்., மேலும் இவர் ஆச்சார்யரின் சூத்ர பாஷ்யத்துக்கு தாமே ஒரு விளக்க உரை எழுதினார்.,இந்த நூலுக்கு ஸத் தர்க தீபாவளி என்று பெயர்.,,

முதல் அத்தியாயத்திற்கு ஸமன்வய அத்தியாயம் என்று பெயர்.,ஸமன்வயம் என்றால் Equating.,அல்லது equalizing என்று கூறலாம்., உலகில் உள்ள எல்லா சப்தங்களும்.,பெயர்களும் ஹரி.,ஸ்ரீமன்நாராயணனையே குறிக்கின்றன என்ற விஷயத்தை ஸ்ரீமத்வர் இதில் நிரூபணம் (prove) செய்திருக்கிறார்.,இதை ஸ்ரீஹரி.,ஸர்வசப்த  வாச்யன் அல்லது ஸர்வ சப்த ஸமன்வயன் என்று கூறுகிறார்கள்.,சற்று விளக்கமாகச் சொல்வதென்றால் எல்லா வேத கோஷங்களும் .,வேத வாக்யங்களும் ஸ்ரீஹரியையே குறிக்கின்றன  என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீமத்வர்.,

பரமாத்மா ஸ்ரீஹரி குணபரிபூர்ணன்.,அவனே இந்தப் பிரபஞ்சத்துக்கு ஸ்ருஷ்டி .,ஸ்திதி மற்றும் லயத்துக்கு (ஆக்கல்.,காத்தல்.,அழித்தல்) காரணகர்த்தா.,இது சரியல்ல என்று மறுப்பதற்கு நான்கு காரணங்கள் காட்டப்படுகின்றன.,அவை:-
1.அறிவு பூர்வமான மறுப்புகள்
2.(வேற்று) மதங்களின் நம்பிக்கைகள்.,ஸித்தாந்தங்கள்
3.வேத வாக்கியங்கள்
4.வேத வாக்கியங்களுடன் கூடிய அறிவு பூர்வமானமறுப்புகள்

இதற்கு சம்ஸ்கிருதத்தில்  யுக்தி விரோதம்., சமய விரோதம்.,ச்ருதி விரோதம்.,யுக்தி ஸஹித ச்ருதி விரோதம் என்று சொல்கிறார்கள். இவைகளின் காரணமாக பரமாத்மாவைப் பற்றித் தவறான விவரணைகளும் அத்துடன் அவனிடம் ஒரு சில தோஷங்களும் கற்பிக்கப் படுகின்றன.,இந்த நான்கு விரோதங்களும் இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் ஆச்சார்யரால் நீக்கப் படுகின்றன.,இந்த விரோதங்கள் நீங்கியதுமே பகவான் நிர்தோஷி (தோஷமற்றவன்)என்று நிரூபிக்கப் படுகிறது., இதுவே இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கம்.,இதையே தனது மங்கள ஸ்லோகத்தில் “தோஷவர்ஜிதம்’ என்று ஸ்ரீமத்வர் குறிப்பிட்டிருக்கிறார்.,

அடுத்த அத்தியாயம் ஸாதனா அத்யாயம்.,ஸ்ரீஹரி கடாக்ஷம் இருந்தால் மட்டுமே ஜீவனுக்கு முக்தி.,ஹரிகடாக்ஷம் பெறுவதற்கு  பக்தி தேவை., பக்தியை வளர்த்துக் கொள்ள விஷயசுக(புலன் நுகர்ச்சி) வைராக்கியம் தேவை.,இவ்வாறு பக்தியை வளர்த்துக் கொண்டு  பகவந்தனை உபாசனை செய்ய வேண்டும்.,இவ்வாறு செய்வதால் ஞானம் கிடைக்கும்.,இந்த நான்கு விஷயங்களே இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் முறையே வைராக்யம்.,பக்தி.,உபாஸனா.,மற்றும் ஞானம் என்று விளக்கப் பட்டுள்ளன., இவைகளையே ஸ்ரீஆச்சார்யர் தமது  ஆரம்ப ஸ்லோகத்தில்  ஞேயம் என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்.,

கடைசி மற்றும் நான்காவது அத்தியாயத்தில் (பphaலாத்யாயம்) மேலே சொன்ன ஸாதனைகளினால் கிடைக்கும் பலன்கள் விவரிக்கப் படுகின்றன.,இந்த அத்தியாயம் இதை இறைவனின் சாம்ராஜ்ஜியம் என்று கூறுகிறது.,அங்கே இருப்பது குறைவற்ற ஆனந்தம்.,அதுவும் துக்கத்தின் கலப்பு சற்றும் இல்லாத ஆனந்தம்.,கர்மாவின் (வினைப்) பயன் பூரா இல்லாமல் போகவேண்டும்.,அதன்பின்  ஜீவன் இந்த அவஸ்தை நிறைந்த உடலில் இருந்து  விடுதலை பெற வேண்டும்.,பின் மோக்ஷத்தின் பாதையில் செல்ல வேண்டும்.,பின்னர் அங்கேபோய் குறைவற்ற ஆனந்தத்தை அநுபவிக்கவேண்டும்.,(இதுவே மனிதப் பிறவி எடுப்பதன் முழுப்பயன்) ஆகவே இவைகளையே இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் முறையே.,கர்மக்ஷயம்.,உத்கிராந்தி.,மார்க்கம்.,மற்றும் போகம் (Bhogam) என்று இந்த அத்தியாயம் சொல்லிக் கொடுக்கிறது., இதையே சுருக்கமாக தமது மங்கள ஸ்லோகத்தில் “கம்யம்” என்னும் வார்த்தையில் சூசித்துக் கொடுத்திருக்கிறார் ஆசார்யஸ்ரீமத்வர்.,

உத்கிராந்தி என்பது உடலை விட்டு வெளியே செல்லும்போது என்னென்ன .,எப்படியெப்படி நடக்கும் என்பன தெரிந்து கொள்வது.,அர்ச்சிராதி மார்க்கங்களை விவரிப்பது மார்க்க பாதம்.,உதாரணத்துக்கு., ஜீவன் மோக்ஷத்துக்கு செல்லும் வழியில் துருவராஜாவின் (காட்டில் தவம் செய்து இறைதரிசனம் பெற்ற அவரேதான்) ராஜ்ஜியமான துருவ மண்டலத்தைத் தாண்டிச் செல்லும்போது தேவதைகள்  அதோ.,ஓஓ….பார்., அதுதான் துருவ மண்டலம் என்று காண்பித்துவிட்டு மேலே., மேலே போய்க்கொண்டே இருப்பார்கள்.,தூரத்திலிருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு போகவேண்டியதுதான்., ஆனால் ஒரு ஸாதகன் மிகச் சிறப்பாக பரிபக்குவ பக்தியுடன் திடபக்தியுடன் ஞானபக்தி ஸாதனைகளைச் செய்து மிக உயர்ந்த பக்தனாக இருந்தால் அந்த ஜீவனை தேவதைகள்  துருவமண்டலத்துக்குள் அழைத்துச் சென்று அங்கே இருக்கும் சிம்சுமார மூர்த்தியை தரிசனம் செய்து வைப்பார்கள்.,இது ஒரு உயர்ந்த கொடுப்பினை., அதனால்தான் பெரியோர்கள்  அந்தணர்களுக்கு சாலக்கிராம தானம் கொடுக்கும்போது சின்னதாக வெள்ளியில் ஒரு சிம்சுமார பிரதிமை(விக்கிரகம்) தானமாகக் கொடுப்பார்கள்.,இந்த சிம்சுமார மூர்த்தியை (பிரதிமையை) தினசரி சாலக்கிராம பூஜையின்போது .இந்தப்பிரதிமைக்கும் பூஜை செய்து வந்தால் மனது மேலும் மேலும் ஸாதகம் புரியவேண்டும் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளும்.,

குறிப்பு:-  சிம்சுமார மூர்த்தி என்பது பாதி விஷ்ணு உடம்பு மீதி பகுதி தேள் (scorpian)போல இருக்கும்., சாதாரணமாக பூஜா சாமான்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.,வாங்கி தானம் செய்வதும் சரி., வீட்டில் வைத்துப் பூஜை செய்வதும் மிக நல்லது.,

ஓம் நாராயணம் கு3ணை:ஸர்வை: உதீர்ணம் தோ3ஷவர்ஜிதம் I

ஞேயம் க3ம்யம் கு3ரூம்ஸ்சாபி நத்வா ஸூத்ரார்த்த உச்யதே II

இந்த ஸ்லோகத்துடன் பிரம்மசூத்ர பாஷ்யம் ஆரம்பிக்கிறது., இந்த ஸ்லோகம் ஒவ்வொரு மாத்வருக்கும் மனப்பாடமாகத் தெரிய வேண்டிய ஒரு ச்லோகம்.,
இந்த ஒரு ஸ்லோகத்துக்கு தாம்ரபரணி ஸ்ரீராகவேந்திரன் (Coimbatore Sri TSR ) அவர்கள் சுமார் 40- 50 பக்கங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.,ஸ்ரீமத்வர் சாக்ஷாத் வாயுதேவரின் அவதாரம் என்பதால் அவருக்கு இந்த நாராயண சப்தம்(சொல்) மிகவும் பிடித்தமானது என்று தெரிகிறது.,ஏனெனில் பிரம்மசூத்திரத்துடன் சம்பந்தப்பட்ட(ஸ்ரீமத்வரின்) நூல்கள் மேலும் மூன்று உள்ளன. அவைகளிலும் கிரந்தம் நாராயண சப்தத்துடன் தான் ஆரம்பிக்கிறார்.,

———

1. ஸ்ரீவேதவ்யாஸர் இல்லாவிட்டால் தற்காலத்தில் வேதங்கள் இல்லாது மறைந்து போயிருக்கும்.,.,
2.வேதங்களை தவறாக வியாக்கியானம் செய்து மக்களைக் குழப்பியவர்கள்., இருந்தனர்.,
3.இதற்காக ஒரு மதாச்சார்யார் அவதாரம் தேவைப்பட்டது.,அவரே ஸ்ரீமத்வர்.,.,

ஸ்ரீமத்வருக்குப் பின்னர் வந்த குரு பரம்பரையில் ஸ்ரீ நரஹரி தீர்த்தர்.,ஸ்ரீபத்மனாப தீர்த்தர்., போன்ற மஹான்கள்., ஸ்ரீஜயதீர்த்தர் (எ) டீகாச்சார்யர்.,ஸ்ரீவாதிராஜர்.,ஸ்ரீவியாஸராஜர்.,ஸ்ரீவிஜயீந்திரர்.,ஸ்ரீரகோத்தமர்., ஸ்ரீராகவேந்திரர்.,ஆகியோரை அறியாத மாத்வர்கள் இல்லை எனலாம்.,இவர்கள் எல்லாம் மத்வமத.,.,துவைத ஸித்தாந்தத்தை மிகச் சிறந்த முறையில் பிரகடப் படுத்தினார்கள்.,
ஒரு ஸமயம்.,சில வித்வான்கள் சந்திரிகாச்சார்யர் என்றழைக்கப் படும்., ஸ்ரீவியாஸராஜரை அணுகி .,”உங்கள் மதத்தின் கொள்கைகளை எல்லாம் இரண்டே வரிகளில் கூற இயலுமா.,?” என்று கேட்டனர்.,ஸ்ரீவியாஸராஜரும் உடனடியாக கீழ்க்காணும் ஸ்லோகத்தைக் கூறி அருளினார்.,(ஸ்ரீவியாஸராஜரே அவரது அடுத்த பிறவியில் ஸ்ரீராகவேந்திரராக அவதரித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.,).,
இந்த ஸ்லோகத்தை ” பிரமேய நவரத்ன மாலிகா ” என்று வேதாந்த பண்டிதர்கள் மிகவும் கொண்டாடுகின்றனர்.,
இந்த ஸ்லோகம் பின்வருமாறு:-
ஸ்ரீமன் மத்வமதே ஹரி: பரதர:
ஸத்யம் ஜகத் தத்வதோ பேதோ.,.,
ஜீவ கணா: ஹரேர் அநுசரா:.,
நீசோச்ச பாவம் கதா:.,I
முக்திர் நைஜஸ் ஸுகானுபூதி;.,
அமலா பக்திஸ்ச தத்ஸாதனம்.,
ஹ்யாக்ஷ்யாதி த்ரிதயம் பிரமாணம்.,.,
அகிலாம் நியாயைக வேத்யோ ஹரி:.,.,II
இந்த ஸ்லோகம் மத்வமத தாத்பர்யத்தை அப்படியே தேன் மாதிரி.,.,ஜூஸ் மாதிரிப் பிழிந்து நமக்கு ஸுலபமாக ஜீரணிக்கும் வகையில் கொடுக்கிறது.,இந்தத் தேனை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் குடித்துப் பார்ப்போம்.,.,
இந்தப் பதிவுகளில் இனி நாம் பார்க்கப்போகும் ஸித்தாந்தங்கள் யாவும் இந்த ஸ்லோகங்களின் விரிவுரைதான்.,

5. நியாய விவரணை., (இதற்கு  ஸந்நியாய  விவ்ருத்தி  என்றும் பெயர் உள்ளது)

பிரம்ம சூத்ரங்களில் நாம் பார்த்த வரிசைக்கிரமம் முதலில் பிரம்மசூத்ரம்.,ஸ்ரீவியாஸதேவர் அருளியது.,
1.பிரம்ம சூத்ரங்கள்.,
2.அதற்கு ஸ்ரீமத்வாச்சார்யர் எழுதிய பாஷ்யமென்னும் விளக்க உரை.,(பிரம்ம சூத்ர பாஷ்யம்).,
3.இவை நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.,
4.ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.,

5.ஒவ்வொரு பாதமும் பல்வேறு அதிகரணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.,(the sub divisions of Paadhaas are called Adhikaranaas,)

6.ஒவ்வொரு  அதிகரணத்திலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ சூத்ரங்கள் இருக்கும்.,

உதாரணமாக முதலாம் அத்தியாயம்(ஸமன்வய அத்தியாயம்) .,முதலாம் பாதம் பெயர் அன்யத்ர ப்ரசித்தநாம பாதம்.,இந்த பாதத்தில் மொத்தம்  12 அதிகரணங்கள் உள்ளன., இந்தப்  பன்னிரெண்டு அதிகரணங்களுக்கும்  சேர்த்து மொத்தம் 31 சூத்ரங்கள் உள்ளன., (இவற்றில் நாம் சாம்பிளுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் பார்த்தோம்)

சில அதிகரணங்களில் ஒரே ஒரு சூத்ரம் மட்டும் இருக்கும்., சிலவற்றில் 7 அல்லது 8 சூத்ரங்கள் இருக்கும்., மொத்தமுள்ள  564 பிரம்ம  சூத்ரங்கள் 220  அதிகரணங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.,
ஆகவே இந்த அதிகரணங்களுக்கே ஒரு லிஸ்ட் போடலாம்.,இவ்வாறு அதிகரணங்களைப் பற்றிய விவரங்கள் உள்ள கிரந்தம்தான் நியாய விவரணை., இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது.?., அதிகரணங்களுக்கு நியாயங்கள் என்று ஒரு பெயர் உண்டு., ஆகவே நியாயங்களின் விவரங்கள் (விளக்கங்கள்) உள்ள கிரந்தம் நியாய விவரணை ஆயிற்று.,

அதோடு மட்டுமல்ல.,இந்த கிரந்தத்தில் வசன நடை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.,சம்ஸ்கிருதத்தில் பத்யம் என்பது பாடல்(ஸ்லோகம்) வடிவம்.,கத்யம் என்பது வசன (prose) வடிவம் அல்லது நடை.,இதேபோல் வசன நடையில் ஸ்ரீராகவேந்திரஸ்வாமிகள் “ப்ராதஸ் சங்கல்ப கத்யம்” என்று  வசன நடையில் ஒருகிரந்தம் எழுதி அருளியிருக்கிறார்.,

இந்த நூலிலும் ஸ்ரீ மத்வர் பல்வேறு வேற்று மத ஸித்தாந்தங்கள் ., அவை என்ன கூறுகின்றன.,அது எவ்வாறு தவறு.,மத்வஸித்தாந்தம் என்ன ., அது எப்படி சரியானது போன்றவைகளை நிரூபணம் செய்திருக்கிறார்.,

இதற்குமுன் நாம் பார்த்த அனுவியாக்கியானம் கிரந்தத்தில் நியாயமாலா என்னும் பகுதிக்கு இது விளக்க நூலாகவும் அமைந்துள்ளது.,

அதுமட்டுமல்ல., இந்த கிரந்தத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு.,அது என்ன?.,
ஸ்ரீவேதவ்யாஸரின் ஒவ்வொரு பிரம்மசூத்ரத்துக்கும் வேதங்களில் உள்ள ஒரு ” ரிக்” எனப்படும் ஒரு வேத வாக்யத்துக்கும் சம்பந்தம் இருக்கும்., ஏனெனில் வேதங்களை ., அவைகளில் உள்ள அர்த்தங்களை நமக்கு தெளிவாக்குவதற்காக (ஸ்பஷ்டம் என்று வடமொழியில் சொல்வார்கள்) ஏற்பட்டதே ஸ்ரீவியாஸரின் பிரம்ம சூத்ரங்கள்., இவ்வாறு சம்பந்தப்பட்ட ரிக் அல்லது  வாக்கியத்துக்கு விஷய வாக்கியம் என்று பெயர்., அல்லது சுருக்கமாக விஷயம் என்பார்கள்.,

இப்பொழுது நாம் ஒரு சிறு பட்டியல் பார்க்கப் போகிறோம்.,அவை:-
1.விஷயம்.,
2.சந்தேஹம்.,அல்லது சந்தேகம்.,
3.பூர்வ பக்ஷம்.,
4.,ஸித்தாந்தம்.,
இவற்றில் விஷயம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டேன்.,
2.சந்தேஹம்:- அப்படியென்றால் ஒரு விஷயம் என்பது சரிதானா அல்லது தப்பா., அது இப்படியா.,அல்லது அப்படியா.,என்பது போன்ற ஐயங்கள்.,

உதாரணத்துக்கு முதலாம் அத்தியாயத்துக்கு பிரம்ம விசாரம் அல்லது பிரம்மன் என்பது விஷயம்.,இதைப்பற்றி ஏன் படிக்க வேண்டும்.?.,இந்த விசாரம்(விசாரணை) தேவையா., இல்லையா என்பது சந்தேஹம்.,,
3.பூர்வ பக்ஷம் என்பது பல்வேறு வேற்று மதஸ்தர்களின் கருத்துக்கள் அல்லது மாற்றுக்கருத்துக்கள்.,or objections.,

4.ஸித்தாந்தம்:- என்பது ஸ்ரீமதாச்சர்யர் நிரூபிக்கும் விஷயம்..பூர்வ பக்ஷத்துக்கு opposite  ஆக இருக்கும்., இதுவே மத்வமதத்துக்கும் ஸித்தாந்தம்.,ஸ்ரீவேதவ்யாஸர் கூறியதற்கும் உண்மையான அர்த்தம்.,இதை ஸ்ரீ மத்வாச்சார்யர் பல்வேறு யுக்திகள்.புராண இதிஹாஸ quotations  வேத .,உபநிஷத் வாக்யங்கள் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருப்பார்.,

இதுபோல ஒவ்வொரு நியாயத்துக்கும் (அதிகரணத்துக்கும்) நிரூபணம் செய்து இருக்கிறார்., இதன் மொத்தமே நியாயவிவரணை கிரந்தம்., இதற்கு ஸ்ரீஜயதீர்த்தரின் தத்வப்ரகாஷிகா.,ஸ்ரீவ்யாசராஜரின் தாத்பர்ய சந்த்ரிகா., ஸ்ரீரகூத்த ஸ்வாமிகளின் தத்வப்ரகாசிக-பாவபோதம் ஸ்ரீசத்யநாத தீர்த்தரின் அபினவ சந்த்ரிகா.,ஸ்ரீராகவேந்திரஸ்வாமிகளின்

தத்வப்ரகாசிகா பாவதீபம்.,என்று இன்னும் பல்வேறு மஹனீயர்களின் விளக்க கிரந்தங்கள் உள்ளன.,இவற்றையெல்லாம் நாம் முழுதுமாகப் படித்து தெரிந்து கொள்வதற்கு எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் போதாது.,

அத்வைத ஸித்தாந்தம்.,”ஸத்யம் பிரம்மம்., ஜகத் மித்யை” என்று கூறுகிறது

இந்த உலகம் ஸத்யம்., உலகம் மட்டுமல்ல .,இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஸத்யமானது.,இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.,
ஆகையால்தான் ஸ்ரீவியாஸராஜர் ” ஸத்யம் ஜகத்” என்று கூறி இருக்கிறார்.,

அத்வைதிகள் மட்டுமின்றி எல்லா மதத்தினரும் பொதுவாக ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்.,.,இந்த உலகமும் .,அதில் உள்ள பொருட்கள் யாவும் பகவானால் உண்டாக்கப் பட்டவை என்பதாகும்.,இதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.,ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் தனது விபூதிகளைக் கூறும்போது ., தமது கலைகள்., சக்தியின் வெளிப்பாடு எங்கெங்கு விஷேஷமாகக் காணப் படுகிறது என்பதைக் கூறிவிட்டுக் கடைசியில் ( அத்தியாயம் 10 .,ஸ்லோகம் 42ல் ) கூறுகிறார்.,
“அஹமிதம் க்ருத்ஸ்னம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத்” என்கிறார்.,
இதன் அர்த்தம்:-
எனது ஒரு அம்சத்தால் ( ஒரு சிறு கலையால் ) இந்த உலகம் அனைத்தையும் தாங்கியிருக்கிறேன் என்று கூறுகிறார்.,
பகவான் ஸத்யமானவர் என்றால் ., பகவானால் செய்யப்பட்ட பொருள் எப்படி அஸத்யமாகும்.,?தன்னுடைய முழு அம்சத்தில் ஒரு மிகச்சிறு பகுதியை வைத்தே .,.,அதனாலேயே நான் இந்த உலகு அனைத்தையும் தாங்குகிறேன் என்று பகவானே கூறி இருக்கும்போது., அவர் உண்டாக்கிய இந்த உலகு ( ஜகத்- Universe ).,மற்றும் அதில் உள்ள பொருட்கள் எப்படி மாயையாகும்.,?
இதற்கு அத்வைதிகள் சொல்வது.,.,பகவான் தனது மாயையால் இவ்வுலகைப் படைத்தார் என்பதாகும்.,

பகவான் தனது மாயையால்தான் இவ்வுலகைப் படைத்தார்.,சந்தேகமில்லை.,
ஆனால்., பகவானின் மாயையால் உலகம் படைக்கப் பட்டது என்னும்போது ., மாயை என்னும் சொல்லுக்கு நீங்கள் ( அதவைதிகள் )எடுத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு .,இங்கு பகவானின் மாயை என்னும் சொல்லுக்கு .,.,பகவானின் இச்சை என்று அர்த்தம்., அவன் ” நான் இந்த உலகைப் படைக்கப் போகிறேன்.,” என்று இச்சைப்பட்டு அதன்படி படைத்தான்., என்பதாக ., சாஸ்திரப் பிரமாணங்களுடன் நிரூபித்திருக்கிறார்.,
ஆகையால் இந்த உலகம் மாயை இல்லை.,.,என்பதையும்., இது ஸத்தியம்.,” ஜகத் ஸத்யம்” என்பதையும் நமது மத்வ மதம் நன்றாகவே வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது.,

அத்வைதிகளின் வாதமான பிரம்மம் ஸத்யம்., ஜகத் மித்யை என்பதைப் பற்றி சொல்லும்போது., கோயம்புத்தூர் பண்டிதர் ஸ்ரீமான் T.S. ராகவேந்திரன் அவர்கள் ஒரு விஷயம் கூறுகிறார்.,
ஸத்யமான பொருள் ஒன்று இன்னொரு பொருளை உண்டாக்கினால் அப்பொருளும் ஸத்யமாகத்தான் இருக்கும் .,இல்லாவிட்டால் .,அதனை ” அலங்க்ருத்ய சிரச்சேதன இதி” என்று வடமொழியில் கூறுவது போலாகிவிடும்.,

அப்படியென்றால்.,?
ஒருவனை மிக அழகாக அலங்காரம் செய்து ., புதுப்பட்டாடை கட்டி., கழுத்தில் மாலை முதலியன போட்டுப் பின்னர் அவன் கழுத்தை வெட்டுவது போலாகும்.,
இன்னும் ஒரு சில பிரமாணங்கள் பார்ப்பதற்குமுன் ., நாம் முன்னர் பார்த்த அத்வைத வாதிகளின் கிளிஞ்சல் சிப்பி – வெள்ளி உதாரணத்துக்கு ஸ்ரீமத்வரின் பதில் என்ன என்று பார்த்து விடுவோம்.,.,
கிளிஞ்சலில் அந்த மனிதன் பார்த்த வெள்ளி .,அவனுக்கு வெள்ளியை ஞாபகப் படுத்தியது.,இதற்கு., அவனுக்கு வெள்ளியைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும் ., அவன் வேறொரு இடத்தில் கடையிலோ., கோயிலிலோ., வீட்டிலோ வெள்ளியைப் பார்த்திருக்க வேண்டும்., அந்த வெள்ளி ஸத்யமானதுதானே.,?
அடுத்து., இங்கே பார்த்த வெள்ளி.,”ஆரோபிதம்- கல்பிதம்” எனப்படும்.,
அது என்ன.,?

ஆரோபிதம்., என்றால் ஏற்றி வைக்கப் பட்டது.,அதாவது கிளிஞ்சல் சிப்பியின்மீது வெள்ளி ஏற்றி வைக்கப் பட்டது., யாரால் ஏற்றி வைக்கப் பட்டது.,?.,
அதைப் பார்த்த மனிதனால் ஏற்றி வைக்கப் பட்டது.,.,!
கல்பிதம் என்றால் ., மனதால் கற்பனையாக ஒரு பொருளை ( வெள்ளியை ) கிளிஞ்சல் மீது ஏற்றி வைக்கப் பட்டுள்ளது.,,
அப்படியென்றால் அந்த மனிதனின் பார்வையில்தான் கோளாறே தவிர அங்கு அஸத்யமான ஒரு வஸ்து இல்லை., ( Silver is not in Existance there .,) ஆகையினால் அவனுக்கு ஏற்பட்டது “பாதக க்ஞானம்” ( தவறான அறிவு)தானே தவிர அது அக்ஞானம் அல்ல.,
மேலும் ., வெள்ளியை ஒரு பொருளின் மேல் ஏற்றி வைக்க வேண்டுமென்றால் ஏற்றி வைக்கப்பட வேறு ஒரு பொருள் இருந்தாக வேண்டும் இதற்கு அதிஷ்டானம் என்று பெயர்.,

ஆரோபிதமான வெள்ளி அஸத்யம் என்றால்.,
அதிஷ்டானமான கிளிஞ்சல் ஸத்யம் என்றாகிறது.,
அதுபோல ., ஜகத் மித்யை என்றால் அது ஆரோபிதமான வஸ்து என்று ஆகிறது., அப்படியென்றால் அந்த வஸ்து ஆரோபிதம் ஆவதற்கு .,அதிஷ்டானமாக இன்னொரு ஸத்யமான வஸ்து இருந்தாக வேண்டும்., அந்த வஸ்து., மீண்டும் இந்த ஜகத் என்னும் வஸ்துவாகத்தான் இருக்கும் .,

15-மஹாவாக்கியங்கள் என்று பெயர்,.,
ஸர்வம் கல்பிதம் பிரஹ்மம்..,: தத் த்வம் அஸி..,போன்றவைகள் மஹாவாக்கியங்கள்

——————-

17-கீதை ஸ்லோகம்., அத்தியாயம் 2.,ஸ்லோகம் எண் 47 (2 – 47):-

கர்மண்யேவாதிகாரஸ்தே  மா  ப(Pha)லேஷு  கதாசன I

மா  கர்மபலஹேதுர்ப்பூர்மா   தேஸங்கோsஸ்த்வ  கர்மணி II 2-47 II

அர்த்தம்:-

அர்ஜுனா! உன் கடமையைச் செய்வதற்கு  மட்டுமே உனக்கு அருஹதை உள்ளது.,கர்மத்தின்  பலனை  நிச்சயிப்பதற்கு அல்ல.,அதற்காக கடமையைச்  செய்யாமலே இருந்து விடுவேன் என்பதும்  சரியல்ல.,

இதற்கு பலபேர் பலவிதமாக அர்த்தம் சொல்கிறார்கள்.,பெரும்பாலானவர்கள் சொல்லும் அர்த்தம் என்னவென்றால் “நீ உன் கடமையை மட்டும் செய்., பலனை எதிர்பார்க்காதே” .,
இதனால்தான் நிறையப் பேர் கீதை என்றாலே வெகுதூரம் ஓடுகிறார்கள்.,
நானும் கேட்கிறேன் .,நீ கடமையை மட்டும் செய்து கொண்டே இரு., பலனை எதிர்பார்க்காதே என்றால் அது எப்பிடி சார்?.,ஒரு  மாசம் பூரா வேலை  செய்துகொண்டே இரு., ஆனால் ஒண்ணாந்தேதி சம்பளத்தை எதிர்பார்க்காதே என்றால்  நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?.,

அப்புறம்  இதற்கு  என்னதான்  அர்த்தம்?.,

இதற்கு சரியான விளக்கத்தை ஸ்ரீ மத்வாச்சார்யர் கொடுத்திருக்கிறார்.,நாம் அதைப் பார்க்கப் போவதற்குமுன் முக்கியமான இன்னொரு விளக்கத்தையும் ஆச்சார்யர் கொடுத்திருக்கிறார்.,அதை முதலில் பார்த்துவிட்டு பின்னர் என் கேள்விக்கு மத்வமதம் கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்க்கலாம்.,
இந்த ஸ்லோகம் ஜீவ-ஈச்வர பேதத்தைக் காட்டுகிறது.எப்படி?

பிரம்ம சூத்ரம் எண் 362 சொல்கிறது:—IIஓம் பலமத உபபத்தே: ஓம்II

கர்மா  என்பது (actions) ஒரு ஜட வஸ்து.,(It is an inanimate entity) ஆகையால் அது தானாகப்  பலன் கொடுப்பதில்லை.,ஆகவே இறைவன் தான் பலன் கொடுக்கிறான்.,(உபபத்தே= It is logical that Ishwara only is the Phaladhaathaa.,) .,

அப்படியென்றால் Actions= கர்மங்களைச்  செய்வது  ஜீவன் (நாம்)., பலன்களைக் கொடுப்பது பரமாத்மா ஸ்ரீஹரி., ஆகவே கர்மம் செய்பவன் வேறு ஒருவன்., பலன் கொடுப்பவன் மற்றவன் ஒருவன்., ஆகையால்  ஜீவாத்மா வேறு., பரமாத்மா வேறு.,ஆகவே ஜீவ- ஈச்வர பேதம் நிரூபணமாகிறது., The difference between jiiva and Ishwara is established.,

இது ஒரு முக்கியமான மத்வ ஸித்தாந்தம்.,
கர்மத்தைச் செய் ; பலனை எதிர்பாராதே என்றால் பலன் என்னவாக இருக்கவேண்டும் என்பதை அக் கர்மத்தைச் செய்யும் ஜீவன் நிர்ணயிக்க முடியாது என்று பார்த்தோம்., ஸ்ரீமத்வர் ஓர் கர்மத்திற்கு இரண்டு விதமான பலன்கள் உண்டு என்கிறார்., அவையாவன:- 1.முக்ய பலன் .,2.அமுக்ய பலன்.

பலனை எதிர்பாராதே என்றால் அமுக்ய பலனை எதிர் பாராதே,.., அதனை நினைத்து முக்ய பலனை விட்டு விடாதே என்பது பொருள்., இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்கி இருக்கிறார்கள்.,

ஆன்மீகத்தில் முன்னேற்றத்துக்கு பல்வேறு படிக்கற்கள் (steps) உள்ளன. ஒரு சில படிகளைத் தாண்டியவுடன் பல்வேறு  சின்னச் சின்ன பலன்கள் கிடைக்க  ஆரம்பிக்கும்., அவைகள் பலன்கள் அல்ல., ஆன்மீகத்தில் மேலும் முன்னேற தடைக் கற்கள்., அவற்றையும்  தாண்டி  ஒரு சாதகன் முன்னேற வேண்டும்.,அதைத்தான் பலனை எதிர்பார்க்காதே என்று சுருக்கமாகக் கூறியுள்ளனர்.,

இதை இன்னொரு விதமாகவும் விளக்கலாம்., சில மனிதர்களுக்கு நம் போன்ற சாதாரண ஜனங்களை விட certain extra ordinary powers இருக்கும்.,இதனால் அவர்கள் தமது பக்தர்களுக்கு வரம் கொடுத்தால் அது பலிக்கும்.,அவர்களிடம்  மேலும் மேலும் பக்தர்கள் வர ஆரம்பிக்கின்றனர்.,இதனால் அப்படிப்பட்ட “ஸ்வாமிஜி” பிரபலமடைகிறார்.,பணம் .,சொத்துக்கள் .,ஆச்ரமம்.,உலகளாவிய  பக்தர்கள்.,கிளைகள் (overseas Branches)  மேலே மேலே வளர்ந்து கொண்டே போகும்போது அமுக்ய பலனைப் பிடித்துக் கொண்டு “ஸ்வாமிஜி” திசை மாறிப் போவதைப் பார்க்கிறோம்.,

ஆனால் ராகவேந்திர ஸ்வாமிகள் போன்றோர் தமது சக்திகளை வெளியில் காட்டாமல் யோக்யதை உள்ளவர்களுக்கு மட்டும் வழிகாட்டிக்கொண்டு தாமும் ஆன்மீகத்தில் மேலும் மேலும் முன்னேறினர்.,
முடிவாக., மேலே கூறியது போல அபரோக்ஷக்ஞானம் .,மோக்ஷஸித்திக்கான கார்யங்கள் செய்யும்போது நடுவில்  வரும் ஐஸ்வர்யங்கள்.,ஸ்வர்க்கபோகம் இவற்றில்  மனதை விடக்கூடாது., இதற்கு முன்னம் ஒரு பதிவில்  மௌத்கல்ய முனிவர் பற்றிப் பார்த்தோம்., ஆகவே  அமுக்ய பலன் மீது ஆசை வைக்கக்கூடாது என்பது  தாத்பர்யம்.,

———–

25–ஆகமம் என்பது வேத.,சாஸ்திரங்கள்., சில பொருட்களை பிரத்யக்ஷத்தாலும் அறிய முடியாது.,அநுமானத்தாலும் அறிய முடியாது.,அதனை ஆகம (வேத) சாஸ்திரங்கள் மூலம் மட்டுமே அறிய முடியும்.,ஸ்ரீஹரியைப் பற்றியும்., அவனுடைய பிரபாவங்கள் ., குணங்கள்., முதலியவற்றை நாம் சரியாகத் தீர்மானம் செய்ய உதவுவது ஆகமம் என்னும் பிரமாணம்., இதையே ஸ்ருதி., ஸ்ம்ருதி.,(வேதங்கள்.,புராணங்கள்) என்று கூறுகிறோம்.,

ஸ்ருதி.,ஸ்ம்ருதிகள் மூலமாகத்தான் நாம் ஸ்ரீஹரியின் பெருமைகளை அறிகிறோம் என்பதை ஸ்ரீமதாச்சார்யர் தமது துவாதச ஸ்தோத்திரத்தில் ஒரு இடத்தில் சுலபமாக விளக்கி இருக்கிறார்.,
துவாதஸ ஸ்தோத்திரம்- 5.,4:-
கோவிந்த கோவிந்த புரந்தர வந்தே
ஸ்கந்த ஸுனந்தன வந்தித பாத I

விஷ்ணோ ஸ்ருஜிஷ்ணோ க்ரஸிஷ்ணோ விவந்தே
கிருஷ்ண ஸ்துஷ்ண வதிஷ்ணோ ஸுத்ருஷ்ணோ II

பொருள்:-
வேதங்களால் அறியப் படுபவரே! கோவிந்த!கோவிந்த! லிங்க தேஹத்தைப் பங்கப் படுத்துபவரே! ஸ்கந்தர்.,ஸுனந்தனர் இவர்களால் வணங்கப்பட்டவரே! விஷ்ணுவே! ஸ்ருஷ்டிப்பவரே! ஸம்ஹாரம் செய்பவரே! கிருஷ்ணா! சிஷ்டர்களை ஹிம்ஸிக்கும் துஷ்டர்களை வதம் செய்பவரே!

ஸ்ரீவியாஸராஜர் தமது “நியாயாம்ருத” என்ற கிரந்தத்தில் முதல் பரிச்சேதத்தில் (அத்தியாயத்தில்) முக்கியத்துவத்தை நன்கு விளக்கி உள்ளார்.,அது நமது அறிவுக்கு ஒரு சிறந்த திறவுகோல் (key) என்பதை நிரூபித்துள்ளார்.,நமது இந்திரியங்களால் அறியப்படும் வஸ்துக்களில் பிரத்யக்ஷம் என்பது .,அநுமான ஆகமங்களைவிடச் சிறந்தது என நிரூபித்து இருக்கிறார்.,(Please refer to Sri Vyasa Charithram (Tamil) by Sri .V.Seshagiri Rao-pp64).,

இறைவனை அநுமானத்தால் மட்டுமே நிரூபிக்க முடியும் என்று சில மதஸ்தர்கள் கூறியவற்றை மறுத்து., ஆகமங்களாலே மட்டுமே அவன் அறியப்படத்தக்கவன் என்று ஸ்ரீவியாஸராஜர் தமது “தர்க்கதாண்டவம்” என்னும் நூலில் நிலை நாட்டியுள்ளார்.,
மேற்கண்ட நூலில் மூன்றாம் அத்தியாயத்தில் அநுமானம் பற்றி விவரமாகக் குறிப்பிட்டு .,நையாயிகர்கள் (நியாய சாஸ்திரவாதிகள்).,மீமாம்ஸகர்கள் (மீமாம்ஸ சாஸ்திரம்-வேதத்தில் கர்மகாண்டம் பகுதியை மட்டுமே ஒப்புக் கொள்கிறவர்கள்)ஆகியோரின் கூற்றுக்களை ஆராய்ந்து அவர்கள் கூறுவது எவ்வாறு தவறானவை என்று கூறி., ஸ்ரீமத்வர்., ஸ்ரீடீகாராயர்.,போன்றோர் கூறுவன எவ்வாறு சரியாயும் பொருத்தமானதாயும் உள்ளன என்பதை நிரூபித்து இருக்கிறார்.,

28–ஸ்ரீமத்வரின் துவைத ஸித்தாந்தம்:-  

த்வைதம்:-
முதலில் இருந்த சிப்பிநடுவில் கொஞ்ச நேரம் வெள்ளிபோலத் தெரிந்தது.,அது வெள்ளி இல்லை என்று ஆனவுடன் அது மீண்டும் சிப்பி(கிளிஞ்ஜல்)யாக ஆகிவிட்டது.,அப்படி இருக்கும்போது வெள்ளியை எப்படி ஜகத்துக்கு சமானமாக்குகிறீர்கள்.,? முக்தி கிடைத்தவனுக்கும் இந்த உலகம் உலகமாகத்தானே தெரிகிறது.,?.,
அத்வைதம்:- கிளிஞ்ஜல் ஸத்யம்., கிளிஞ்ஜல் இல்லாமல் இருந்தால் அது அஸத்யம்.,ஆனால் இல்லாத வெள்ளி இருப்பதுபோல் தோற்றம் அளிப்பது ஸத்யமும் அல்ல., அஸத்யமும் அல்ல.,
த்வைதம்;-அப்படியென்றால்.,?
அத்வைதம்:-அதுதான் மித்யை.,அதற்கு நாங்கள் ஸதஸத் விலக்ஷணம் என்று பெயர் கொடுக்கிறோம்.,இதற்கு அநிர்வசனீயம் என்றும் சொல்கிறார்கள்., ஏனென்றால் அது உண்மையும் அல்ல., அதே சமயம் பொய்யும் அல்ல.,(ஏனெனில் வெள்ளிபோலத் தெரியும்போது அங்கே வெள்ளி இருக்கிறதே.,?)

த்வைத ஸித்தாந்தம்:-
இதை ஸ்ரீமத்வாச்சார்யர் படு strong ஆக மறுக்கிறார்.,எப்படியெனில்., ஸத்யம் என்பது நமக்கு அநுபவஸித்தமானது.,அதாவது நமது அநுபவத்தில் இருப்பது.,சிப்பியைக் கண்ணால் பார்க்கிறோம்.,
அதேபோல அஸத்யமும் நமக்கு அநுபவஸித்தம்.,அது எப்படியென்றால்.,முயல் கொம்பு., மலடிமகன்.,ஆகியவை எப்போதுமே இருப்பதில்லை., அவை அஸத்யம்.,
ஆனால் ஸத்யமும் அல்லாத அஸத்யமும் அல்லாத ஒரு பொருள் நமக்கு அநுபவத்தில் வருவதில்லை.,அப்படிப்பட்ட ஒரு பொருள் பற்றி நமக்கு யாருக்கும் அநுபவம் கிடையாது.,
எனவே ஸதஸத்விலக்ஷணம் அல்லது அநிர்வசனீயம் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது.,ஆகையால் ஜகத் மித்யை என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.,
அத்வைதம்:- அப்படியென்றால் நாம் கண்னால் பார்த்த வெள்ளி எங்கே போயிற்று.,?
ஸ்ரீமத்வர்:- அது நமது பார்வைக்கோளாறினால் வந்தது.,இந்த தவறான க்ஞானத்துக்கு பாதகக்ஞானம் என்று பெயர்.,வெள்ளி இருப்பதுபோல தோன்றியது “ஆரோபிதம்” என்பதால் வந்தது.,அதாவது நமது மனது கிளிஞ்ஜலில் வெள்ளியை ஏற்றிவைத்து ஒரு மனப் பிரமையை உண்டாக்கியது .,அவ்வளவே.,இது வெறும் பிரமையே தவிற வேறல்ல.,பிரமை நீங்கியதும் வெள்ளி அகன்றுவிட்டது.,

அத்வைதம் விடவில்லை.,
அத்வைதம்:-அப்படியென்றால் நாம் கிளிஞ்ஜலில் பார்த்த வெள்ளி சத்யமா.,அல்லது அஸத்யமா.,?

த்வைதம்:- கிளிஞ்ஜலும் ஸத்யம்., வெள்ளியும் சத்யமே., ஏனெனில் கிளிஞ்ஜலைப் பார்த்தவனுக்கு வெள்ளியை இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதால் அதை தவறாக வெள்ளியென்று நினைத்தான்., அவன் இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த வெள்ளியும் சத்யமே.,

————

ஒரு ஸித்தாந்தம் அல்லது சாஸ்திரம் என்றால் அதற்கு நான்கு விஷயங்கள் இருக்க வேண்டும்.,1.அதிகாரி.,2.விஷயம்.,3.பிரயோஜனம்., & 4.,ஸம்பந்தம்.,
ஸ்ரீமத்வர் தமது விளக்கத்தில் ஜீவ-பிரம்ம ஐக்ய வாதத்துக்கு இந்த நான்குமே இல்லை.,அதனால் அது முழுக்க .,முழுக்கத் தவறு என்று இந்தக் கிரந்தத்தில் நிரூபணம் செய்திருக்கிறார்.,ஸுமத்வ விஜய மஹாகாவ்யத்தில் ., ஸ்ரீநாராயண பண்டிதாச்சார்யர்., அத்வைத வாதிகள் சுமார் 1,25,000 ஸ்லோகங்களில் கூறியுள்ள மாயாவாத ஸித்தாந்தத்தை தமது மாயாவாதகண்டன கிரந்தத்தில் ஸ்ரீமத்வர்  ஒரே ஒரு வாக்கியத்தில் (அக்ஞானா ஸம்பவாதேவ தன்மதமகிலமபாக்ருதம்) என்று Disprove செய்து விட்டார்.,

ஸ்ரீமத்வரின் துவைத ஸித்தாந்தம்:-  

த்வைதம்:-
முதலில் இருந்த சிப்பிநடுவில் கொஞ்ச நேரம் வெள்ளிபோலத் தெரிந்தது.,அது வெள்ளி இல்லை என்று ஆனவுடன் அது மீண்டும் சிப்பி(கிளிஞ்ஜல்)யாக ஆகிவிட்டது.,அப்படி இருக்கும்போது வெள்ளியை எப்படி ஜகத்துக்கு சமானமாக்குகிறீர்கள்.,? முக்தி கிடைத்தவனுக்கும் இந்த உலகம் உலகமாகத்தானே தெரிகிறது.,?.,
அத்வைதம்:- கிளிஞ்ஜல் ஸத்யம்., கிளிஞ்ஜல் இல்லாமல் இருந்தால் அது அஸத்யம்.,ஆனால் இல்லாத வெள்ளி இருப்பதுபோல் தோற்றம் அளிப்பது ஸத்யமும் அல்ல., அஸத்யமும் அல்ல.,
த்வைதம்;-அப்படியென்றால்.,?
அத்வைதம்:-அதுதான் மித்யை.,அதற்கு நாங்கள் ஸதஸத் விலக்ஷணம் என்று பெயர் கொடுக்கிறோம்.,இதற்கு அநிர்வசனீயம் என்றும் சொல்கிறார்கள்., ஏனென்றால் அது உண்மையும் அல்ல., அதே சமயம் பொய்யும் அல்ல.,(ஏனெனில் வெள்ளிபோலத் தெரியும்போது அங்கே வெள்ளி இருக்கிறதே.,?)

த்வைத ஸித்தாந்தம்:-
இதை ஸ்ரீமத்வாச்சார்யர் படு strong ஆக மறுக்கிறார்.,எப்படியெனில்., ஸத்யம் என்பது நமக்கு அநுபவஸித்தமானது.,அதாவது நமது அநுபவத்தில் இருப்பது.,சிப்பியைக் கண்ணால் பார்க்கிறோம்.,
அதேபோல அஸத்யமும் நமக்கு அநுபவஸித்தம்.,அது எப்படியென்றால்.,முயல் கொம்பு., மலடிமகன்.,ஆகியவை எப்போதுமே இருப்பதில்லை., அவை அஸத்யம்.,
ஆனால் ஸத்யமும் அல்லாத அஸத்யமும் அல்லாத ஒரு பொருள் நமக்கு அநுபவத்தில் வருவதில்லை.,அப்படிப்பட்ட ஒரு பொருள் பற்றி நமக்கு யாருக்கும் அநுபவம் கிடையாது.,
எனவே ஸதஸத்விலக்ஷணம் அல்லது அநிர்வசனீயம் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது.,ஆகையால் ஜகத் மித்யை என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.,
அத்வைதம்:- அப்படியென்றால் நாம் கண்னால் பார்த்த வெள்ளி எங்கே போயிற்று.,?
ஸ்ரீமத்வர்:- அது நமது பார்வைக்கோளாறினால் வந்தது.,இந்த தவறான க்ஞானத்துக்கு பாதகக்ஞானம் என்று பெயர்.,வெள்ளி இருப்பதுபோல தோன்றியது “ஆரோபிதம்” என்பதால் வந்தது.,அதாவது நமது மனது கிளிஞ்ஜலில் வெள்ளியை ஏற்றிவைத்து ஒரு மனப் பிரமையை உண்டாக்கியது .,அவ்வளவே.,இது வெறும் பிரமையே தவிற வேறல்ல.,பிரமை நீங்கியதும் வெள்ளி அகன்றுவிட்டது.,

அத்வைதம் விடவில்லை.,
அத்வைதம்:-அப்படியென்றால் நாம் கிளிஞ்ஜலில் பார்த்த வெள்ளி சத்யமா.,அல்லது அஸத்யமா.,?

த்வைதம்:- கிளிஞ்ஜலும் ஸத்யம்., வெள்ளியும் சத்யமே., ஏனெனில் கிளிஞ்ஜலைப் பார்த்தவனுக்கு வெள்ளியை இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதால் அதை தவறாக வெள்ளியென்று நினைத்தான்., அவன் இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த வெள்ளியும் சத்யமே.,

உபாதிகண்டனம்., மாயாவாத கண்டனம்.,மற்றும்.,பிரபஞ்சமித்யாத்வநுமான கண்டனம் ஆகிய மூன்றும் சேர்ந்து கண்டனத்ரயம் என்று அழைக்கப் படுகின்றன.,

——————

இதற்கு முந்தைய பதிவில் அத்வைத ஸித்தாந்திகளின் இரண்டு பூர்வபக்ஷங்கள் (1.ஜீவ-பிரம்ம ஐக்யம்.,2.பிரம்மம் சத்யம்-ஜகத் மித்யை) பார்த்தோம்.,
இதற்கு முன் கண்டனத்ரயம் என்பதாக ஸ்ரீமத்வரின் மூன்று கண்டன நூல்களைப் பார்த்தோம்., அவை:- 1.உபாதி கண்டனம்.,2.மாயாவாத கண்டனம்.,3.பிரபஞ்ச மித்யாத்வனுமான கண்டனம் என்பதாக.,.,

இப்போது நாம் பார்க்கப்போகும் இந்த தத்வோத்யோதம் என்ற கிரந்தம் மேலே சொன்ன பூர்வபக்ஷங்களை மறுக்கும் நூல்., மற்றும் நாம் மேலே பார்த்த மூன்று கண்டனத்ரய நூல்களுக்குமொரு   இணைப்புப் புஸ்தகம் போன்றது

த்வைதிகள் அடிக்கடி உபயோகிக்கும் தத்வமஸி என்ற வேத(மஹா) வாக்கியம் ஜீவ-பிரம்ம பேதத்தைக் காட்டுகிறதே தவிர அவைகளின் ஐக்கியத்தைக்காட்டவில்லை என்பதை ஸ்ரீமத்வர் மிகச் சிறப்பாக நிரூபித்து இருக்கிறார்.,

ஆச்சார்யர் ஸ்ரீமத்வர் இவை இரண்டுமே சரியல்ல., மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு Salvation  க்கு கர்மமும் செய்யவேண்டும்.,ஹரிபக்தி., இறைவனைப்பற்றிய க்ஞானம் இரண்டுமே தேவை என்பதை இந்த கிரந்தத்தில் நிரூபித்து இருக்கிறார்.,

———

தந்த்ரஸாரம் என்னும் கிரந்தம் மூலகிரந்தம்.,இந்த கிரந்தம் ஸ்ரீமஹாவிஷ்ணுவால் சதுர்முகப் பிரம்ம தேவருக்கு உபதேசிக்கப்பட்ட கிரந்தம்.,இந்த கிரந்தத்தை அடிப்படையாக வைத்து 442 ஸ்லோகங்களுடன் ஸ்ரீமத்வரால் எழுதப்பட்ட கிரந்தம்தான் தந்த்ரஸார ஸங்க்ரஹம் .,இந்த கிரந்தத்தைப் பற்றி ஸ்ரீமத்வரே கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:-

க்ரந்தோயம் பாடமாத்ரேண ஸகலாபீ4ஷ்ட ஸித்தித: I
கிமு க்ஞானாத் அனுஷ்டானாத் உபயஸ்மாத்புன: கிமு: II

இதன் அர்த்தம்:-
இந்த கிரந்தத்தை வெறுமனே பாராயணம் செய்வதாலேயே ஸகல அபீஷ்டங்களும் ஸித்திக்கும்.,மேலும் இதன் அர்த்தத்தையும் உணர்ந்து உபாஸித்தால் மோக்ஷமும் ஸித்திக்கும் என்பதை திரும்பவும் கூறவேண்டுமோ.,?

த்வைத மதத்தின் ஸித்தாந்த ஸாரங்கள் அடங்கிய ஒரு கிரந்தமாகும் இது.,.,இதில் ஒரே ஒரு ஸ்லோகத்தைக் கொடுத்து இதை முடிக்கிறேன்:-

கோவிந்த கோவிந்த புரந்தர வந்தே
          ஸ்கந்த ஸுனந்தன வந்தித பாத

விஷ்ணோ ஸ்ருஜிஷ்ணோ க்ரஸிஷ்ணோ விவந்தே
            கிருஷ்ண ஸ்துஷ்ண வதிஷ்ணோ ஸுத்ருஷ்ணோ

இதன் அர்த்தம்:-
வேதங்களால் அறியப்படுபவரே! கோவிந்த! கோவிந்த! லிங்க தேஹத்தைப் பங்கப் படுத்துபவரே! ஸ்கந்தர்.,ஸுனந்தனர் இவர்களால் வணங்கப்படுபவரே! விஷ்ணுவே! ஸ்ருஷ்டிப்பவரே! ஸம்ஹாரம் செய்பவரே! கிருஷ்ணா! சிஷ்டர்களை ஹிம்ஸிக்கும் துஷ்டர்களை வதம் செய்பவரே!.,.,
இத்துடன் ஸ்ரீமத்வாச்சார்யாரின் ஸர்வமூலக் கிரந்தங்களின் விவரணை முடிவு பெறுகிறது.,

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யம் திரண்ட கருத்துக்கள் !!–

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||


'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, அய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷபூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவார்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத்தொடர்பு  எக்காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளி  யிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

----------------
1. அவதாரிகை

“ஆரண நூல் வழிச் செவ்வை அளித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏரணி கீர்த்தி ராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே”
– (அதிகார ஸங்க்ரஹம் 4)-என்று ஸ்வாமி தேஶிகன் எதிராசர் பெருமையைப் பறை சாற்றுகிறார்.

தேசமெலாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரைநாள் வந்து தோன்றிய எம்பெருமானார் நம் விஸிஷ்டாத்வைத தர்ஶன ஸ்தாபகர். “பகவத் ராமானுஜ தர்ஶனம்” என்று இதனை திருக்கோட்டியூர் நம்பி கொண்டாடுகிறார். நம் குரு பரம்பரா வைபவங்களுள் மிக முக்யமானது உடையவர் அருளிய ஸ்ரீ பாஷ்யம். உலகில் எத்தனையோ பாஷ்யங்களிருப்பினும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் கூடியது இது மட்டுமே. ஸரஸ்வதி தேவியே அங்கீகரித்து அருளிய பெயர் இந்த க்ரந்தத்துக்கும் அதனை அருளிச்செய்தவர்க்கும்.
இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீபாஷ்யம், கற்க நியமங்கள் ஏராளம் இருப்பினும் அதன் ஸாரத்தை எல்லோரும் அறியலாம் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

உபநிஷத் வார்த்தைகளுக்கு விசாரம் செய்யும் வகையில்
வ்யாஸர் சூத்ரங்களைச் (சுருக்கமான வாக்கியங்கள்) செய்தார். உபநிஷத் என்ற பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமே இந்த சூத்ரங்கள்.

பகவத் விஷயம் பகவத் கீதை இவற்றைப் போல இதனையும் உபதேசிக்க வேணும் என்பது வ்யாசரின் உத்தேஸ்யம். இவரது சிஷ்யரான போதாயனர், “போதாயன சூத்ர வ்ருத்தி” என்ற க்ரந்தத்தைச் செய்தார். மகாபாரதத்தைவிடப் பெரியது இது. இதனைப்படித்து விட்டு வ்யாசர் திருவுள்ளத்தையொட்டி பாஷ்யம் செய்ய நினைத்தார் ராமானுஜர். காஷ்மீரத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்த ஒரே சுவடியை அங்கு சென்று படித்து எழுத முடியாத நிலை. எண்ணம் ஈடேறாது பரமபதித்த ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் ராமானுஜரின் ப்ரதிஞையால் விரிந்தன. மூன்று விஷயங்களுள் ஒன்று ப்ரும்ஹ சூத்ரத்துக்கு பாஷ்யம் செய்வது. ஆளவந்தார் திருவுள்ளத்தை ராமானுஜரைக் கொண்டு நிறைவேற்ற அரங்கன் ஸங்கல்பித்தான். ஆக மொழியைக் கடக்கும் பெரும் புகழானாகிய தன் சிஷ்யன் கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்று அங்கு ஆழ்வான் மனதில் ஏற்றிக்கொண்ட சூத்ரங்களை ராமானுஜர் வியாக்யானம் செய்ய அதனைப் பட்டோலைப் படுத்தினார் ஆழ்வான். இதனைத் திரும்ப காஷ்மீரம் சென்று ஸரஸ்வதி பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற வேண்டுமாகையால் ஆங்கே ஸரஸ்வதி தேவி தன் ஸிரஸில் ஏற்று ஸ்ரீபாஷ்யம் என்று பெயரிட ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யகாரர் ஆனார். ஸ்ரீ என்ற வேதத்துடன் பொருந்தி யிருப்பது இந்த ஸ்ரீபாஷ்யம். வித்யா மூர்த்திகளாகிய வ்யாசர், தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி ஆகியோர்க்கு ஆராத்ய தெய்வமாகிய ஹயக்ரீவ மூர்த்தியையும் அளித்தாள் தேவி. ஆக நம் சம்ப்ரதாயத்துடன் எம்பெருமானும் கூடவே வருகிறான். ஸம்ரதாய வ்ருத்திக்கு 74 ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தார் ராமானுஜர். தன் ஞான புத்ரரான திருக் குருகைப் பிரான் பிள்ளான், முதலியாண்டான், நடாதூராழ்வான், கிடாம்பி ஆச்சான் ஆகிய நால்வரும் நேரடியாக பாஷ்யகாரரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டவர்கள். பிள்ளானின் சிஷ்யன் எங்களாழ்வான், அவரது சிஷ்யன் நடாதூரம்மாள், தொடர்ந்து அப்புள்ளார், இவரிடம் ஸ்வாமி தேஶிகன் என பரம்பரையாகிற்று.
ரங்கநாதனால் பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யம் பேரருளானால் வளர்க்கப் பட்டது. பெற்ற தாய் ராமானுஜன் வளர்த்த தாய் தேஶிகன். ஆக ஆளவந்தார் நினைத்ததை காரேய் கருணை ராமானுஜர் செய்தார் .செயல்படுத்தி மக்களிடையே ஞானம், பக்தி, அனுபவம் ஏற்படுத்தியவர் ஸ்வாமி தேஶிகன்.

2 – பர ப்ரஹ்மம்

ஸ்ரீபாஷ்யம் என்ற க்ரந்தம் அருளியவர் ஸ்ரீபாஷ்யகாரர். இப்படி பெயரமைவது வெகு ஶ்ரேஷ்டம்.
“பவமரு பரிகிந்ந-……..நாடிந்தமான: (யதிராஜ ஸப்ததி 30) இன்ப நாடியைத் தட்டினால் மிகுந்த இன்பம் விளைவது போல எம்பெருமானின் ரஹஸ்யங்களைக்காட்டி நமக்கு பேரானந்தத்தைத் தர வல்லது இந்த எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
4 அத்யாயங்களளுள் 16 பாதங்களை அடக்கியது. இத்தனையிலும் மொத்தமாகப் காட்டப்படும் விஷயம் “பரப்ரஹ்மம்”.
முதலிரண்டு அத்யாயங்கள் ஆதிகாரணன் ஸ்ரீமன்நாராயணனே என்பதை உறுதிபட ஸ்தாபிக்கிறது.
3ம் அத்யாயம் உபாயத்வத்தையும்
4ம் அத்யாயம் பலாத்யாயமாயும் அமைகின்றன. இந்த 4 அத்யாயங்களின் மையக்கருத்தை பெரியாழ்வாரின் இத்திருமொழி தெளிவாய்த் தெரிவிக்கிறது.
“அண்டக்குலத்துக்கதிபதியாகி”–(ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி “அசுரர்இராக்கதரை…இருடீகேசன்தன்னை”–(தடையற்ற பெருமை)
“தொண்டக்குலத்துள்ளீர்”—(உபாயம்)
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து”—(ஸம்ஸாரம் தவிர்க்கும் பலம்)
“பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியானார்
தாவளமான தனித் தவம் சேர்ந்து தமருடனே
நாவளரும் பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
பாவளரும் தமிழ் ப் பல்லாண்டிசையுடன் பாடுவமே” (பரமபத சோபானம் 18) என்கிறார் ஸ்வாமி.
வேதம் சொல்லும் பரப்ரஹ்மம் நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலம் உடையவன்”. உலகங்களைப்டைத்து , அதில் வ்யாபித்து எண்ணற்ற கல்யாண குண கணங்களைக் கொண்டவனாகையால் உயர்ந்தவன் எம்பெருமான். ஜீவர்களுக்கு மோக்ஷஸ்தானமளிப்பதால் உயர்த்துபவன். நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலமுடையவனும்”, “ஒத்தார்மிக்காரை இலையாய மாமாமயனும்”
“பகம்”என்ற 6 குணங்களையுடையனுமாகிய எம்பெருமானே ஶ்ருஷ்டி,ஸ்திதி, லய காரணனாவான். ஸத்ய, ஞான,
அனந்த ஆனந்த ஸ்வரூபனாகிய எம்பெருமானை
தேச, கால, வஸ்துக்களால் வரையறுக்க முடியாது என்பதை “நந்தா விளக்கே அளத்தற்கரியாய்” என திருவாய்மொழியும்,
“நந்துதலில்லா நல்விளக்காகி அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி”-என மும்மணிக்கோவை யும்  முழக்கமிடுகின்றன.
இப்படி பட்ட எம்பெருமானைத் தெரிந்து கொள்ள ஸாஸ்த்ரம் ஒன்றே உபகாரமாயிருக்கும்.எங்கும் கண்டிராத ப்ரஹ்மத்தை அனுமானிக்க முடியாது.
வேதமும் நாராயணனும் பிரிக்க முடியாத பதி பத்நீ பிணைப்பை ஒத்தவை.வேதம் பத்நீ.நாரயணன் நினைப்பதை வேதம் சொல்லும்.
ஆக வேதமாகிய பத்நீக்கு அதீனமான பதி நாராயணன்.
இத்தகைய வேதத்துக்கு ராமானுஜர் செய்த அலங்காரமே ஸ்ரீபாஷ்யம்.”ப்ரமாணம் லக்ஷ்மண முனி: ப்ரதி க்ருண்ணாது மாமகம்
ப்ரஸாதாயதி யத்ஸூக்தி: ஸ்வாதீன பதிகாம் ஶ்ருதிம்”—-
(யதிராஜ ஸப்ததி)
வேதத்தின் மூலம் எம்பெருமானை புருஷார்த்தமாக அனுபவிக்க வேணும் குழந்தையிடமிருந்து அம்மாவுக்கும் அம்மாவுடனிருக்கும் குழந்தைக்கும் கிடைக்கும்ஆனந்தம் போன்றது
ஜீவனுக்கும் எம்பெருமானுக்குமிடையே கிடைக்கும் ஆனந்தம்.உலகில் உள்ள வஸ்துக்களனைத்திலிருந்து விலக்ஷணமானவன் எம்பெருமான்.உவமைகூற
முடியாத ஞான, ஶக்தி, பல, வீர்ய, ஐஸ்வர்ய , தேஜஸ் உடையவன்.
“கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே” (2-6-10) என்கிறார் நம்மாழ்வார்.ஜகச்சக்ஷு எனப்படும் சூர்யனுக்கும் சிறிய விளக்கின் ஒளிக்கும் உள்ள வித்யாசம் போன்றும் , புழுவுக்கும் மனுஷ்யனுக்கமுள்ளதுபோன்றும், மனுஷ்யனுக்கும் தேவர்களுக்குமுள்ள வித்யாசம் போன்றும்
எல்லா வஸ்துக்களிலிருந்தும் வேறுபட்டு மேம்பட்டு விளங்குபவனே எம்பெருமான்.3- காரண வாக்யங்கள்
எம்பெருமானை அறிய பொருத்தமான ஸாஸ்த்ரம் வேதம் ஒன்றே. வேதமும் பகவானும் பிரிக்கக் கூடாதவை. வேத்தின் பூர்வ பாகம் அனுஷ்டானம் பற்றியும் பல தேவதைகளைக் குறித்த யாக யக்ஞங்கள் பற்றியது. உத்தர பாகமாகிய பின்பகுதி தேவதைகளுக்குள் அந்தர்யாமியாயிருந்து பலனளிக்கும் எம்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.
“வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை”— என்கிறார் கலியன்.
பிற தேவதைகள் எம்பெருமானுக்கு அங்கமாயுள்ளனர். க்ருஷ்ணன் திருவடியில் அர்ஜுனன் அர்ச்சித்த புஷ்பங்களை சிவன் திருமுடியால் ஏற்றான் என்பது வரலாறு. ஆக ஜீவர்களாகிய நாம் எம்பெருமானின் தாஸர்கள்.
ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அபேத ஶ்ருதி. இதை “அத்வைதம்” என்பர்.
இந்த இரண்டும் வேறானது என்பது பேத ஶ்ருதி. இதை “த்வைதம்” என்பர். இவ் விரண்டுக்கும் நடுவே உள்ளது கடக ஶ்ருதி.
ராமானுஜர் இந்த இரண்டையும் எடுத்துக் கொண்டு ப்ரஹ்மம் தனியாக இல்லை எல்லா வஸ்துக்களிலும் சேர்ந்துள்ளது என்றார். ப்ரபஞ்சத்துடன் கூடியவன் பகவான் என்று சமன்வயப்படுத்தியவர் பாஷ்யகாரர். ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு ஆனால் அந்த ஜீவனுள் அந்தர்யாமியாக உள்ளான் எம்பெருமான்.
“க்ஷரந்த்யம்ருதமக்ஷரம் யதிபுரந்நரஸ்யோக்தய:
சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா:”—(யதிராஜ ஸப் 36)
வேத மாதாவுக்கு உபநிஷத் சிரோ பாகமாயுள்ளது. குத்ருஷ்டிகள் சொன்ன தவறான வேதார்த்தங்களாகிய சிக்கல்களை நீக்கி அழகான மூன்று கால் பின்னலாகிய சிகை யலங்காரத்தை ராமானுஜர் தன் விஸிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகத்தாலே செய்தார் என்று ஸ்வாமி கூறுகிறார. இத்தகைய பாஷ்யம் அமுதம் போன்றது. ஸகுண ஸ்ருதி , நிர்குண ஸ்ருதி என்றும் வேதம் சொல்கிறது. எண்ணற்ற கல்யாண குணங்கள் எம்பெருமானுக்கு. அதே சமயம் எந்த ஹேய குணங்களும் (பசி, தாகம், மூப்பு, சோகம்) இல்லாதவன். என்பதே நிர்குண ஸ்ருதியின் அர்த்தம். இப்டிக்கான வேதார்த்தங்கள் ஸ்ரீபாஷ்யம் தந்ததால் “நாட்டிய நீச சமயங்கள் மாய்ந்தன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது.”.
“காரணவாக்யங்கள்” என்பற்றை வேதம் காட்டுகிறது. ஜகத்காரணன் யார் என்ற சர்சைக்கான விளக்கம் இது.
ஸத் (நிலையாயிருப்பவன்) ஆகாசம் (சுற்றிலும் ப்ரகாசிப்பவன்) ஆத்மா (உள்ளிருந்து ஆள்பவன்) ப்ராண வாயு (மூச்சுக்காற்று) இவை எல்லாமாயுமிருப்பவன் எம்பெருமானே.
“ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான்”
(திருவாய் 4-10-1)
ப்ரளயகாலத்தில் அவன் ஒருவனாலேயே உருவாக்கப்பட்டது இப்ரபஞ்சமும் வஸ்துக்களும். ஆக உலகைப் படைத்தவன் நாராயணன். மற்றவர்கள் அவனால் படைக்கப்பட்டவர்கள்
சிவன்,சம்பூ, ப்ரஹ்மா, இந்த்ரன் என்ற ஸப்தங்கள் எல்லாம் எம்பெருமானையே குறிப்பிடுகிறது என்பதை உபநிஷத் வாக்யத்தைக் கொண்டு ஆராய்ந்து சொல்லலாம்.
“முனியே நான்முகனே முக்கணப்பா”–என்கிறார் நம்மாழ்வார்.
“சாமான்ய புத்தி ஜனகாச்ச”…(.வரதராஜ பஞ்சாஸத் 15)
இந்த ப்ரபஞ்சத்தைப்படைக்க உபாதானகாரணமும், நிமித்த காரணமுமாயிருப்பவன் நாராயணனே.
“தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே” என்கிறார் நம்மாழ்வார்.

எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாயிருந்து உண்டாக்கி ரக்ஷிக்கிறான். ஆக இத்தகைய வேத வாக்யங்களை ஒன்றாகச் சேர்த்து வேதத்தையும் பகவானையும் இணைத்தவர் ஸ்ரீபாஷ்யகாரர்.

4- தர்க்க வாதங்கள்
நம்மால் ஊகித்து, அனுமானித்து அறியமுடியாததைச் சொல்வது வேதம். பகவானுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும்
தெரிவிப்பது வேதம். நாம் படித்து அறிய வேண்டிய க்ரந்தங்கள் அநேகம். ஆனால் அவற்றையெல்லாம் படித்து அறிந்து கொள்ள மனுஷ்யனின் ஆயுள் போதாது. தடைகளும் குறுக்கிடும். அதனால் முனிவர்கள் நீண்ட க்ரந்தங்களை ஶ்லோக ரூபமாய் அளித்துள்ளனர். புராணங்கள் பகவத் ஸ்வரூபத்தையையும், ஸ்ம்ருதிகள் அனுஷ்டானத்தையும் சொல்கின்றன. தர்க்கத்தின் உதவியுடன் தான் வேதத்தைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்தாபித்தவர் நம் கவிதார்க்கிக ஸிம்ஹம். ஆழ்வார் ஸுக்திகளும் வேதத்தை அறிய பேருதவியாயுள்ளன.

“செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்ன்ள் தெளிகின்றோமே” –என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
“இந்த ப்ரபஞ்சத்தின் ஶ்ருஷ்டி கர்த்தா ஸ்ரீமன் நாராயணனே. இதனை ஏற்காதவன் வைதிகனே அல்லன்” தன் ஸ்தோத்ர ரத்னத்தில் “ஸ்வாபாவிகா நவதிகாதிஶ யேஸித்ருத்வம் நாராயணத்வயி நம்ருஷ்யஸி வைதிக:க:” என்பதாகச் சொல்கிறார் ஆளவந்தார்.
ப்ரபஞ்சம் புதியது அல்ல.
முன்பே உள்ள வஸ்துக்களை மாற்றிப் போட்டுக் கிடைக்கும் புதுஉருவமே என்பது பரிணாம வாதம். தங்கம் பலவித ஆபரணமாகி அதற்கு நாம ரூபமளித்தல் போல. ஆகாசத்துக்கு மேல் ப்ருக்ருதி. அதன் ஒரு பகுதியில் ஸ்பர்சம் ஏற்பட்டு அக்னி, வாயு, ஜலம், பூமியாக உண்டாகிறது. ஒரு வஸ்து இன்னொன்றாக பரிணாமம் அடையும்போது அதனுள் பெருமான் அந்தர்யாமியாக உள்ளான். ப்ருக்ருதிக்குள்ளே இருக்கும் எம்பெரூமான் ப்ரபஞ்சத்துக்குள்ளே வருகிறான்.
“திரியும் காற்றோடு அகல் விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடிரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றுமாய்” (தி
ரு.மொழி3-6-5)இல்லாததை ஶ்ருஷ்டிப்பதில்லை. அவனுக்கே உள்ள அகடித கடனா ஸங்கல்ப சாமர்த்யத்தால் காரண /கார்ய வஸ்துக்களுக்குள் ஸுக்ஷ்மமாயுள்ளான். இதனை மறுத்து வேதத்துக்குப் புறம்பான அர்த்தம் சொல்லும் பௌத்த ஜைன மதங்களைக் கண்டித்து
வேதத்தின் உண்மைநிலையை ஸ்தாபித்தார் பாஷ்யகாரர்.
“பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து தீர்த்தான்”–என்கிறது ராமானுசநூற்றந்தாதி 52)
“கபர்தி மத கர்தமம் கபில கல்பனா வாகுராம்
துரத்யமமதீத்ய தத் த்ருஹிண தந்த்ர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹனா முகே நிபதத: பரப்ரம்ஹண:
கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முனி”: 
(யதிராஜ ஸப் 38)
சைவச்சேற்றினின்றும், கபில வாத வலையினின்றும், கண்ட யோகா யந்த்ர சிக்கலினின்றும், மாயாவாதிகளின் பொய் ப்ரசாரத்தினின்றும் ப்ரஹ்மத்தைக் காப்பாற்றி அதன் பெருமைகளை நிலைநாட்டி கைதூக்கி நிறுத்தியவர் பாஷ்யகாரர். எம்பெருமானின் திருமேனி, ஸ்வரூப, குணம், விபவம், எல்லாவற்றையும் உண்மையென ஸ்தாபித்து ப்ரஹ்மத்தின் பெருமைகளை உலகுக்குக்காட்டி ப்ரஹ்மத்தைக் காத்தவர் எம்பெருமானார்.
5 – உலகப் படைப்பு
வேதம், ஶ்ருதி, ஸுத்ரம் இவற்றைத் தவறான அர்த்தங்களுடன் ப்ரசாரம் செய்ததால் அவைகளுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தைப் போக்கியவர் ராமானுஜர். வேதார்த்தங்களை ஸ்தாபித்த வ்யாஸரைப் பரிஹஸித்து, பாகவதம் உபதேசித்த ஶூகரைக் கேலிசெய்து, போதாயனரை வாதாயனராக்கிய குத்ருஷ்டிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றியவர் பாஷ்யகாரர். ப்ரும்ஹ ஸூத்ரத்தின் 2ம் அத்யாயத்தின் பின்பகுதியில் ஸ்ருஷ்டியின் விளக்கமுள்ளது.
“அசிதவிஷ்டான் ப்ரளயே ஜந்தூனவலோக்ய ஜாதநிர்வேதா
கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷ ஶைலநாதகருணேத்வம்”
(தயாஶதகம் 17) – என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இத்தகைய ஶ்ருஷ்டி அவனுக்காகவும், நமக்காகவும்
செய்துள்ளான். பலவிதமான, ஆச்சர்யமான 26 தத்வங்களைப் வைத்துள்ளான் எம்பெருமான்.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் மூன்றும் ஆதியில் (3+) உண்டானவை. இவைகளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

  • அஹங்காரத்தின் ஒரு பகுதியிலிருந்து ஐந்து (5+)
  • ஞானேந்த்ரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்),
  • ஐந்து (5+) கர்மேந்த்ரியங்கள் (கை, கால், வாய், மலமூத்ர விஸர்ஜன உறுப்புகள்),
  • மனஸ் (+1) உண்டாயின.
  • அஹங்காரத்தின் மற்றொரு பக்கத்திலிருந்து பஞ்சபூதங்கள் உண்டாயின.
  • ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி ஆகியன (5+) பஞ்ச பூதங்ள் தோன்றுவதற்கு நடுவே 5 தன்மாத்ரங்கள் தோன்றுகின்றன. இவை ஒன்றிலிருந்து மற்றது மாறிவருகின்றன. இதனையே “மானாங்கார மனங்களே” என்கிறார் ஆழ்வார்.
  • 25 வது தத்வம் ஜீவன்.
  • எம்பெருமான் 26 வது தத்வம்.

இந்த 25 தத்வங்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து ஆள்பவன். அதுவே அவனுக்கு 26 வது திருநாமம் ஆண்டவன் என்பது. இதுவே “ஶ்ருஷ்டிக்ரியா” என்பதாகும்.

இந்த்ரியம் என்பது ஶரீரத்தின் பாகமன்று. உறுப்பு செய்வதை உணர்வதாகிற ஞானத்தை அளிக்க வல்லது இந்த்ரியம். கண் பார்ப்பதை இன்னது என்ற ஞானத்தைக் தருவதே இந்த்ரியம். இதை ஶ்ருஷ்டித்தவன் ரிஷிகேசனாகிறான். (இந்த்ரியங்களை அளித்து ஆள்பவன்)
“நாற்ற தோற்ற சுவை ஒலி உறலாகிநின்ற” என்கிறார் ஆழ்வார். இந்த பஞ்சேந்த்ரியங்களுள் இந்த்ரியங்களை நடத்தும் ப்ராண வாயு மிக முக்யம் அதுவே ஶ்ரேஷ்ட ‘ப்ராணன் எனப்படும்’.
“பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த காலிரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை
யார் நினைக்க வல்வரே”— திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரம் இது.இந்த 24 தத்வங்களைக் கொண்டு செய்யும் ஶ்ருஷ்டி ‘ஸமஷ்டி ஶ்ருஷ்டி’ எனப்படும். சேதனத்தை அசேனத்துடன் சேர்ப்பது ‘வ்யஷ்டி ஶ்ருஷ்டி’. தாயாரின் கர்பத்தில் ஜீவனைச் சேர்க்கிறான். ஆகாசத்தின் நீல நிறம், ஜ்வாலையில் பல நிறங்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் பஞ்சீகரணம் என்ற கலப்படத்தாலே உண்டாகின்றன. சத்தாகிய பஞ்ச பூதத்திலிருந்து கலப்பட பஞ்சபூதம் சேர்ந்து அண்டம் உண்டாகிறது.
அதுபோல் பல அண்டங்கள் தோன்றுகின்றன. அந்த அண்டத்துள் க்ஷீராப்தியில் சயனித்துள்ள எம்பெருமானின் நாபிகமலத்திலிருந்து ப்ரும்ஹா தோன்றி வேதோபதேசம் பெற்று அவனுள் அந்தர்யாமியாயிருந்து எம்பெருமானே ஶ்ருஷ்டி கார்யங்களைச் செய்கிறான். ஆக இந்த ஜகத் ஶ்ருஷ்டிக்கு உபாதான -நிமித்த காரணம் ஸ்ரீமன் நாராயணனே.
6. ஜீவாத்மா
ஸம்ஸாரத் தளையிலிருந்து விடுபட ஆசார்ய ஸ்ரீஸுக்திகளே உதவும். ஸ்ரீபாஷ்யத்தின் 2ம்அத்யாயம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றியது.
“நான்” என்பதன் அர்த்தம் என்ன? அது பொதுவானதல்ல – “புஸ்தகம்” என்ற சொல்லைப் போல். நான் என்பதன் உடைமையாகிய தன்னைப்பற்றிய அறிவு தனக்கே வந்தால் அதுவே நான். புஸ்தகத்தின் ஞானம் அதற்கு வராது. அதனால் அது நான் ஆகாது. இந்த ஆத்மாவகிய நான் ஶரீரத்திலிருந்து வேறுபட்டது. இந்த ஶரீரம் இந்த்ரியங்களுக்குரியவன் ஆத்மா. அவற்றிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும் ஹ்ருதயத்துக்குள்ளிருக்கும். மிக ஸுக்ஷ்ம ஸ்வரூபமுடைய ஆத்மா தேஜஸ்ஸின் ஒரு பொறியளவானது. ஞான ஸ்வரூபி. தானே தன்னிருப்பைத் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தாலானதல்ல. உற்பத்தி/நாசமற்ற நித்யமானது. அடுத்தடுத்த ஶரீரத்தைச் சென்றடையக் கூடியது.
இதனை “ஆத்ம யாத்ரை” என்பர். ஆத்மா ஞானமுள்ளவன் (ஞாதா) கார்யம் செய்பவன் (கர்த்தா) அனுபவிப்பவன் (போக்தா) ஆத்மா பராதீனன் – எம்பெருமானுக்கு கட்டுப்பட்டவன். ஸ்வதந்த்ரனல்லன். ஜீவாத்மா, ஶரீரம், இந்த்ரியங்கள், ப்ராண வாயு, எம்பெருமான் க்ருபை ஆகிய 5ம் சேர்ந்தால்தான் ஒரு கார்யம் நடக்கும். (கண் இமைப்பது, மூச்சு விடுவது உள்பட).தனது ஞானத்தால் நல்லதையும் கெடுதலையும் தேர்ந்தெடுக்கும் சிறிய ஸ்வதந்த்ரம் ஜீவனுக்கு உள்ளது. செய்யத்தக்கவையால் நன்மையையும் அல்லாதவையால் தீமையையும் அடைகிறான். இதனைத் தேர்ந்தெடுப்பவன் ஜீவாத்மா தான் பகவானல்ல.
ஜீவாத்மாவுக்கு பல நிலைகளுள்ளன. ஸம்ஸார நிலையில் கர்த்தா போக்தாவாய் அனுபவிக்கிறான் விழிப்பு நிலையில். ஸ்வப்னம் தூக்க நிலை மற்றொன்று. 6 இந்த்ரியங்களும் ஓய்வு நிலையில் இருப்பது தூக்கம். இது எம்பெருமான் அளித்த வரப்ரசாதம். இச்சமயத்தில் உமிழ்நீர் சுரப்பதில்லை. ஆனால் ரத்த, ப்ராண வாயு ஓட்டம் நடக்கிறது. மறுநாள் காலை அதே ஞானத்துடன், புத்துணர்ச்சியுடன் எழுகிறோம்.
இதில் மனஸ் மட்டும் விழித்திருக்கும் நிலை “ஸ்வப்னம்”. அதிகமான பயம், மகிழ்ச்சி, துக்கம் இவற்றின் வெளிப்பாடுதான் ஸ்வப்னம். இதனை எம்பெருமானே செய்கிறான். இது ஒரு விசித்ர அனுபவம். புண்ய பாப பலனால் ஏற்படும் அனுபவமாகிய இதனை ஒரு லகு சிக்ஷையாகச் செய்கிறான் எம்பெருமான்.
ஜீவன் ஶரீரத்திலிருந்து வெளியேறும்போது ஸுக்ஷ்ம பஞ்சபூதங்களும் உடன் செல்லும். சுக துக்க அனுபவத்துக்குப் பின் மறுபடி பிறக்கும். மேகமாகி, மழையாகி, பயிராகி, அன்னமாகி, புருஷ ஆகாரமாகி, ஸ்த்ரீ கர்பத்தில் சேர்ந்து பிறக்கிறான்.
ஶரீரம் இந்த்ரியங்களுடனிருந்தால்தான் ஞானமிருக்கும். இத்தகைய நிலைகளால் கர்ம பலன் படி பகவான் வழி நடத்துகிறான். ஞானத்துக்கு விரோதியாக அவித்யா போனால் மோக்ஷம். புண்ய பாபத்தை விடுவதே மோக்ஷம். இதற்கு நமக்கு வைராக்யம் வரணும். இனிய ரஸத்துடன் கூடிய பழத்தையும் நல்ல சுகந்தத்துடன் கூடிய புஷ்பத்தையும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதுபோல ஞானத்துடன் கூடிய நம்மை (ஜீவனை) அவனிடம் ஸமர்ப்பிக்க வேணும். அவர்தானே ஶ்ருஷ்டிகர்த்தா!

7. பரமாத்மா
உயர்ந்த நிலையிலுள்ள பகவான் சேஷீ. நாம் சேஷன். ஆத்மா என்றால் வ்யாபித்திருப்பவர் எனப்பொருள். ஶரீரத்தை ஆள்பவர் என்றும் பொருள். இது இரண்டுமே பகவானுக்கு மட்டுமே பொருந்தும். எல்லா சேதன அசேதன வஸ்துக்களின் உள்ளும், புறமும் வ்யாபித்திருப்பவன் பரமாத்மா. அவன் ஆளும் ஶரீரம் இந்த ப்ரபஞ்சம் முழுதும் என வேதம் ஸ்பஷ்டமாய்க் கூறுகிறது.
புண்ய பாபத்துக்குட்பட்டே ஶரீரம் அமையும். இவை இல்லாத போது பரமாத்வுக்கு ஶரீரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பாஷ்யகாரர் சொல்லும் பதில். (ப்ருகதாரண்ய உபநிஷத் படி) ப்ரபஞ்சமே ஶரீரம் எனச் சொல்லும் வேதம் நம்மைப் போல கை, கால் என்ற இந்த்ரியங்கள், சுக துக்கங்கள் உள்ள ஶரீரமன்று.

ஸகலப்ரபஞ்சமும் பகவானால் ஆளப்படுகிறது. அவற்றுக்கு சேஷியாக, தரிப்பவனாயுள்ளான். அதனாலேயே அவன் பரமாத்மா என்றும் அந்தர்யாமி (உள்ளேயிருந்து நியமனம் செய்பவன்) என்றும் சொல்லப்படுகிறான். ஸ்வரூபம், ஸ்திதி, பரவ்ருத்தி ஆகிய மூன்றும் பகவானுக்கு அதீனம்.
(கடவுள் என தமிழில் கூறுவதும் பொருந்தும்) ப்ராண வாயு, ஆகாசம் ஆகியன ஶரீரத்துள்ளே இருப்பினும் நியமிக்காது.
(எஜமானன் வேலைக்காரனுக்கு கட்டளை இடுவான், அவனுள்ளே புகுந்து செயல்பட முடியாது) ஆனால் வஸ்துவின் உள்ளேயும் வெளியிலும் வ்யாபித்து நியமிப்பவர் பரமாத்மா ஒருவனே. ஆக எது சேஷமாயும், ஆளப்படுவதாயும், தரிக்கப்படுவதாயும் உள்ளதோ அது ஶரீரம். சேஷியாயும், ஆள்பவனாயும், தரிப்பவனாயும் உள்ளவனே பரமாத்மா.
எல்லா தேவதைகள், ஆத்மாக்கள் ப்ரஹ்மா விஷ்ணு சிவன் எல்லாம் ஒன்று என்றும், சமம் என்றும், இதற்கு மேலான ப்ரஹ்மம் ஒன்று உண்டு என்ற வாதங்களிருந்தன. இவற்றை நிரஸனம் செய்து வேதவாக்யங்கள் மூலமும் ஆழ்வார் ஸ்ரீஸுக்த்திகள் மூலமும்
பாஷ்யகாரர் பரமாத்மா என்பவன் நாராயணனே என்று ஸ்தாபித்தார்.
“பாராயது உண்டுமிழ்ந்த பவளத்தூணை“(பெரிய திருமொழி)

“ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்திருந்தும் சாலப்பலநாள் உகந்தோறுயிர்கள் காப்பானே”  (திருவாய்மொழி 6-9-3)

இத்தகைய பரமாத்மா ஞானானந்த ஸ்வரூபன். ஞானம் அனுகூலமாயிருப்பதுவே ஆனந்தம். ஆக ஞானத்தால் பெறுவதுவே மோக்ஷானந்தம். அதுவே நிரவதிக ஆனந்தம். மனம் வாக்கு காயத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய ஆனந்த ஸ்வரூபன் அனந்தமான கல்யாண குணங்கள், ஆஶ்சர்யமான விபூதி, திருமேனி கொண்டவன். சூர்யமண்டலத்தின் நடுவே ஸ்வர்ண மயமான திருமேனியுனிருப்பதாய் வேதம் சொல்கிறது. அவதாரங்களால் அவன் பெருமை இன்னும் கூடியது.-இவை தவிர அவனுக்கே உள்ள தனிப்பட்ட பெருமைகள் உள்ளன.

  1. பிராட்டியினால் வந்த பெருமை”ஶ்ரிய:பதி” என்பது.
  2. தனிக்கடலே தனிச்சுடரே தனிஉலகே என்று கொண்டு ப்ரளயத்துக்குட்படாத பரமபதநாதன் என்பது.
  3. ஸதா நித்யசூரிகள் சூழ வீற்றிருப்பவன்.
  4. வேதங்கள் ஸதா கோஷித்துக்கொண்டிருக்கும் வைபவன்.

வ்யாசர் இப்பரமாத்மாவை “உபயலிங்கம்” என்கிறார். அதாவது இவன் இரட்டை அடையாளம் கொண்டவன் என்று பொருள். அவை சகல கல்யாண குணங்களை உடையவன் என்பதும், தோஷங்கள் எதுவும் துளியும் ஒட்டாதவன் என்பதுமாகும். (தாமரை இலை தண்ணீர் போல.) மரம் ஒன்றில் இரு பறவைகள் வசிக்கும்போது ஒன்று ஸம்ஸார பந்தத்தில் உழலும் ஜீவன் மற்றொன்று எதிலும் சம்பந்தப் படாமல் அதனை வழி நடத்தும் பரமாத்மா. இத்தகைய பரமாத்மாவையே உபாயமாகப் பற்றிக்கொண்டு அவனை நாமடைய வேணும்.

8. ப்ரஹ்ம வித்தைகள்
ஸ்ரீபாஷ்யகாரர் தத்வ விஷயங்களை மிக அழகாய் வரிசைப்படுத்தியுள்ளார். 3ம் அத்யாயம் உபாய அத்யாயம், 4ம் அத்யாயம் பலாத்யாயம். ஸித்த விஷயத்தை முன்பாதியும் ஸாத்ய விஷயத்தை பின்பாதியும் சொல்கிறது. வணங்கி ஸேவித்து பாராயணம் செய்யவேண்டிய க்ரந்தம் ஸ்ரீபாஷ்யம்.
க்ரந்தம் “அ”வில் ஆரம்பித்து “ம”வில் முடிகிறது நடுவில் “உ”. இதுவே ப்ரணவ தத்வம்.

ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதி ஸேஷ ஸயனத்திலிருப்பவன் ரங்கநாதன். எம்பெருமானுக்கே சேஷனாயிருப்பவன். லீலாரசம் அனுபவிக்கும் எம்பெருமான் சேஷி. சேஷத்வம் என்பதே ஆனந்தம். அதுவே ஜீவனின் ஸ்வரூபம். இதற்கு அனுகூலமாய் கைங்கர்யம் செய்கிறோம். புண்யபாபத்தை ஒழித்துவிட்டால் ஆத்மா எம்பெருமானுடன் கூடியிருந்து குளிரலாம். அதுவே “ஸ்வரூப ப்ராப்தம்”.
“அல்பாஸ்திரை ரஸுகரை ரஸுகாவஸானை”–ஶரணாகதி தீபிகை.அல்பமான ஸந்தோஷங்களை விட்டு உன்னை அடைவிக்க உன்னால் தான் முடியும் என்கிறார் ஸ்வாமி. இதற்கு த்யானயோகம் ஒரு உபாயம். எப்படி எதனை நினைத்து த்யானம் செய்ய வேணும் என்பதைச் சொல்வதே “ப்ரஹ்ம வித்யா” 32 ப்ரஹ்ம வித்தைகள் உள்ளன.ஒவ்வொன்றுக்கும் பகவத் குணங்கள் த்யானிக்க விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரும்ஹகுண அனுஸந்தானத்துக்கு மிக உகந்தவை இவை. கதைரூபமாய் எப்படி த்யானிக்க வேணும் என்று சொல்கிறது. இந்த ப்ரஹ்மத்தை “பூ:பாதௌயஸ்யநாபிர்…….”என்கிறது ஸஹஸ்ரநாமம்.ஆக ஒரு வித்தையை எடுத்துக்கொண்டு ஒரு குணத்தைத் த்யானம் செய்யலாம். “வசீ” என்பது ஒரு குணம். தன்வசத்தில் வைத்திருப்பவன். பக்தர்களுக்கு வசப்பட்டன் எம்பெருமான்
‘அனன்யா தீன……..’ என்ற தயாஶதக ஶ்லோகம் அவன் பக்தி பராதீனனாயிருப்தைக் காட்டுகிறது.

இந்த ப்ரஹ்ம வித்தைகளில் 32ம் வித்தையே ஶரணாகதி என்னும் “ந்யாஸ வித்யா”. பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள த்வயமந்த்ர அனுஸந்தானத்தை ஒட்டி ராமானுஜர் காட்டித் தந்த கண்ணன் திருவடி. அவன் கருணையால் நாம் பெறும் பலன் ஶரணாகதி.

9. த்யான முறைகள்
“உபவீதிநமூர்த்வ புண்ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் 

ஶரணாகத ஸார்த்தவாஹமீடே ஶிகயா ஶேகரிணம் பதீம் யதீநாம்”— (யதிராஜ ஸப்ததி)

ஶரணாகதி செய்தவர்களின் சமூகத்தை வழிநடத்தும் யதிபதியாகிய ராமானுஜரை வணங்குகிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கே ஶரணாகதி பற்றி சொல்லப் படுகிறது. ராமானுஜர் ஶரணாகதியைத் தான் அனுஷ்டித்துக்காட்டி நம்மையும் அனுஷ்டிக்கச் சொன்னார்.
த்யானம் என்பது ஒரு யோகம். த்யானம் என்பதற்கு நிரந்தர சிந்தனை என்று அர்த்தம். இதுவும் ஒரு பகவதாராதனம். அனுஷ்டான க்ரந்தமாகிய பாஞ்சராத்ர ரக்ஷையில் த்யானத்தின் முக்யத்தை ஸ்வாமி சொல்லியுள்ளார். நித்யகர்மானுஷ்டானத்துள் ஒன்றாக இதனைச் செய்வது நல்லது.
இந்த த்யானம் தைலதாரை போலமையணும். நடுவில் தடை ஏற்பட்டால் பயம்/நஷ்டம். ஸித்தியானால் அபயம்/மோக்ஷம். ப்ரீதியுடன் செய்தால் எம்பெருமான் பலமடங்கு ப்ரீதியுடன் பக்தர்களிடம் நெருங்குவான். முதலாழ்வார்களை நெருக்கினாற்போல.
‘தம்மையுகப்பாரை தாமுகப்பான்’ (நாச்சியார் திருமொழி).

த்யானம் செய்ய 4 படிகள் உள்ளன.

  1. ஶ்ரவணம் (ஆசார்யனை அணுகி எம்பெருமானின் குணங்கள், அனுஷ்டானம் முதலியன கேட்டறிதல்)
  2. மனனம் – கேட்பவைகளை யுக்திகளைக் கொண்டு நினைத்துப் பார்த்தல்.
  3. த்யானம் – பக்தியுடன் எம்பெருமானை நினைத்தல்.
  4. தர்ஶனம் – இவைமூன்றின் பயனாக எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்தல்.

“எங்கும் பக்கம் நோக்கினான் என் பைந்தாமரை கண்ணனையே”–என்று திருக்குருகைக் காவலப்பன் த்யான யோகத்தால் கண்ணனயே காண, அவனும் பக்தனையே பார்த்து ஸந்தோஷிக்கிறான்.
இத்தகைய பக்தியோகம் குருகைக்காவலப்பனுடன் முடிந்தது. நம்மைப்போன்ற ஶரணாகதர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்த காலக்ஷேபங்கள் கேட்பதே ஶ்ரவணம். கேட்பவைகளை நினைப்பதே மனனம். எம்பெருமானின் குணானுபவம் த்யானம். அர்ச்சாமூர்த்திகளை ஸேவிப்பதே தரிசனம் .

யோகம் என்றால் ஒட்டுதல் -சேர்த்தல் என்று அர்த்தம். ஆக இந்த அனுஷ்டானம் ஆத்மாவை பகவானுடன் சேர்க்கிறது. பீஷ்மர் விதுரர் ஆகியோர் பக்தி யோகம் செய்தவர்கள். இதற்கு உள், வெளி அங்கங்கள் உண்டு. தானம், யாகம், தபஸ் போன்றவை வெளி அங்கங்கள் பக்தியோகத்திற்கு.
ஶரணாகதிக்கு வெளி அங்கங்களில்லை. பக்தியோகத்துக்கு அந்திம ஸ்ம்ருதி வரை முடிவில்லை. ஆனால் ஶரணாகதியை க்ஷணகாலத்தில் அனுஷ்டித்து சேதனன் க்ருத க்ருத்யனாகிறான். இதுவே அவனை ப்ரஹ்மத்துடன் சேர்க்கும் யாகம் போன்றது.
10. மோக்ஷமடைதல்
எல்லோரும் உஜ்ஜீவிக்க வழிகாட்டியவர் ராமானுஜர். இந்த பாரத தேசம் செய்த புண்யத்தின் பலனே அவரது திருஅவதாரம். 1000 வருடங்களாக ஞானமும் மோக்ஷமும் அருளிய ராமானுஜரை “முக்தி தரும் யதிராசர்” என்கிறார் ஸ்வாமி தேஶிகன். ஸ்ரீபாஷ்யத்தின் 4ம் அத்யாயத்தில் மோக்ஷம் பற்றி விஸ்தரிக்கிறார்.

இதில் 4 விஷயங்கள் உள்ளன.

1. புண்ய பாபத்தை விடுவது எப்படி?
கர்ம வசத்தால் அநாதி காலமாய் அநந்தமாய் சேர்ந்தவையே புண்ய பாபங்கள். நாம் செய்யும் நற்செயல்களால் ப்ரீதி அடைந்த பகவானின் அனுக்ரஹ ஸங்கல்பத்தால் வருவது புண்யம். தீயசெயல்களால் அத்ருப்தி அடைந்து நிக்ரஹ ஸங்கலபத்தால் வருவது பாபம். இரண்டுமே அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. இதுவரை எடுத்த ஜென்மங்களில் சேர்ந்த பாவக் குவியல்கள் சஞ்சிதம் எனப்படும். ஶரணாகதி செய்தவுடன் இப்பாபம் முடிந்துவிடும். ப்ராரப்தம் இப்பிறவி வரை அனுபவித்துக் தீர்க்கணும்.ஶரணாகதி செய்தபின்.தெரியாமல் செய்த பாபம் ஒட்டாது. தெரிந்து செய்யும் பாபம் லகு தண்டனையினால் தீரும். இதில் பாகவதாபசாரம் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. மோக்ஷத்துக்குத் தடையாயிருப்பது இந்த பாப புண்யமே. தங்கச்சங்கிலியால் கட்டப்பட்ட காராக்ருஹமே இந்த நம் ஸம்ஸாரபந்தம்.
“காராக்ருஹே கனக ஶ்ருங்கலயாபி பந்த:” என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (வரதராஜ பஞ்சாஷத்).
2. ஶரீரத்திலிருந்து ஜீவன் எப்படி வெளியேறுகிறது?
ஹ்ருதயத்துள் ஒரு பொறியளவேயுள்ள ஜீவன் இந்த்ரியங்கள், பஞ்சபூதங்கள், மனஸ், பரமாத்மாவுடன் ஸுஷும்னா நாடி வழியே வெளியேறுகிறது.
3. அர்ச்சிராதி கதி என்பது என்ன?
இப்படி வெளியேறும் ஆத்மா அக்னி, வாயு, சூர்யன், மின்னல் என்ற லோகங்களைத்தாண்டி, ஆதிவாஹிகர்கள் அளிக்கும் விசேஷ உபசாரங்களை ஏற்று விரஜா நதியை அடைகிறது. விரஜையில் நீராடிய ஜீவன் ப்ராக்ருத ஶரீரம் விட்டு அப்ராக்ருத ஶரீரம் பெற்று அமானவன் என்ற வித்யுத் புருஷன் துணைகொண்டு ஸ்ரீவைகுண்டம் சேர்கிறான்.
4. ஸ்ரீவைகுண்டம்.
அப்ராக்ருத நதியாகிய விரஜையில் ஸ்நானம் செய்து ஸங்கல்பத்தால் அதைக் கடக்கிறான் ஜீவன். அங்கு சந்திரன் கேட்கும் கேள்வி “நீ யார்” என்பது. “தாயாரின் கர்ப வாசத்திலிருந்து பிறக்கச் செய்து, ஞானமளித்து, ஶரணாகதி செய்யவைத்து, என்னை இங்கே கொண்டு சேர்த்தவன், ஆத்மாவுக்குள் ஆத்மாவாயிருக்கும் எம்பெருமானே நான்” என்கிறது ஜீவன். இதனைக் கேட்டுச் சந்திரன் கைக்கூப்பி அனுப்ப ஸ்ரீவைகுண்ட வாயிலில் சேர்ப்பிக்கிறான் அமானவன். அப்ராக்ருத ஶரீரம் பெற்ற இந்த ஜீவனை அப்ஸரஸுக்கள் அலங்கரிக்கின்றனர். நுழைந்ததும் ஜீவன் ‘அரம்’ என்ற ‘குளம், ‘முஹுர்த்தர்’ என்ற காவல் தெய்வம் ‘தில்யம்’ என்ற மரம் ,’விரஜா’ என்ற நதி, ‘லாலஜ்யம்’ என்ற மாநிலம்  ‘அபராஜிதா’ என்ற நகர், த்வார பாலகர்கள் ஆகியவைகளைத் தாண்டி திருமாமணி மண்டபம் சேர்கிறான் . ஆங்கே ‘விஸக்ஷணம் ‘ என்ற பீடத்தில் ‘அமிதௌஜஸ்’ என்ற மெத்தையில் ஸ்ரீபூதேவி ஸஹிதமாய் வீற்றிருக்கும் பரமபத நாதனைக்கண்டு அவன் திருவடியைப் பற்றி ஏற, பெருமான் அவனைக் குழந்தையைத் தூக்கும் தாயாரின் வாத்ஸல்யத்துடன் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு , ’நீயார்’ எனக் கேட்க “ஸ்வாமி !தேவரீர் தான் நான்” என்கிற ஜீவனை ப்ரீதியுடன் கொண்டாடுகிறார்.
“ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்மம் தான் நீர்.
அந்த நீர்தான் நான்” என்று சொல்லிக் கொண்டு தன்னை வந்தடைந்த ஜீவனைக்கண்டு எம்பெருமான் ஸந்தோஷிக்க, ஜீவனும் இனி ஸம்சார பந்தமற்று எம்பெருமானின் பரிபூர்ண கல்யாணகுணங்கள், விபூதி, திருமேனிகளை அனுபவிக்கிறான். ‘இனி இவனைத் திரும்ப அனுப்ப மாட்டேன்’ என்கிறான் கண்ணன் கீதையில். “ஏற்றிவைத்து ஏணி வாங்கி” என்கிறார் பெரியாழ்வார்.
இத்தகைய மகத்வம் வாய்ந்த தத்வங்களடங்கிய ப்ரும்ஹ சூத்ரத்தை விவரித்து பாஷ்யம் அருளிய ஸ்ரீபாஷ்யகாரரின் திருவடிகளைச்
பற்றி உய்வோமாக.
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய ஸாரம்!!–எளிய தமிழில் —

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

——–

'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, ஆய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷ பூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவர்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத் தொடர்பு  எக் காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

--------------
இந்த நான்கு அத்யாயங்களின்‌ சுருக்கம்‌; 
(1) பகவாளைப்‌ பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்‌--சான்றாவன; 
(2) பகவானே உலகுக்குக்‌  கரரணம்‌ என்பதற்கு மாறான கருத்துக்கள்‌ ஏற்பதற்கில 
(3) பசுவானை ஆராதிப்பவன்‌ பக்தியினாலே மோக்ஷம்‌  பெறக் கூடும்‌; 
(4) இந்த பக்தியின்‌ பலன்‌ மோக்ஷத்தின்‌  பேரானந்த அனுபவம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: சேதன ௮சேதனங்களைக்‌ காட்டிலும்‌  பகவான்‌ மாறுபட்டவன்‌. இவன்‌ உலகுக்குக்‌ காரணம்‌, -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்‌. 
பாதம்‌ 2: இவன்‌ உலகைக்‌ காரியமாக உடையவன்‌. 
பாதம்‌ 3: இவனே யாவர்க்கும்‌ யாவற்றிற்கும்‌ ஆத்மா. 
பாதம்‌ 4: இவனால்‌ படைக்கப்படாதன, இவனுக்குச்‌  சரீரமல்லாதன இல. 
இரண்டாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத்‌. தக்கனவல்ல,. 
பாதம்‌ & : பிற மதங்களின்‌ குறைபாடுகள்‌. 
பாதம்‌ 3: சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானின்‌ காரியம்‌, பகவானால்‌ நியமிக்கப்படுவன. 
பாதம்‌ 4: இந்த்ரியங்கள்‌ முதலியவற்றின்‌ செயல்‌ பற்றியது. 
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1 : ஜீவர்களின்‌ தோஷங்கள்‌. 
பாதம்‌ 2: பகவானின்‌ குணங்கள்‌. 
பாதம்‌ 3: குணங்களை உபாஸநம்‌ செய்யும்‌ வகை: 
பாதம்‌ 4: உபாஸனத்திற்கான கார்மாவைப்‌ பற்‌றி. 
நான்காம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1  உபாஸந அநுஷ்டானம்‌. 
பாதம்‌ 2: அர்ச்சிராதி மார்கம்‌--தொடக்கம்‌. 
பாதம்‌ 3: அர்ச்சிராதி மார்கம்‌. 
பாதம்‌ 4: மோக்ஷ பலம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ . முதற்‌ பாதம்‌ 
வேதத்தின்‌ பூர்வ பாகம்‌, உத்தர பாகம்‌ இவற்றை நன்கு பயில்பவன்‌ கர்ம காண்டத்தில்‌ விவரிக்கப்படும்‌ தர்மங்கள்‌ அற்பம்‌, 
நிலையான பலனைத்‌ தரமாட்டா என்று தேறுகின்றான்‌. புண்ணிய கர்மாக்களால்‌ 
“பெறும்‌ பலன்களும்‌ அழியும்‌ இயல்புடையன, ஆதலால்‌ இவற்றால்‌ மோக்ஷம்‌ பெற இயலாது. 
பகவானை  நன்கு அறிபவன்‌ கார்மாக்களுக்கு வசமாகமாட்டான்‌? ஸம்ஸாரத்தில்‌ உழன்று துன்புறமாட்டான்‌. 
பகவானைப்‌ பற்றிய ஞானம்‌ நிலையான நற்பயனை அளிக்கும்‌ என்று ஒருவாறாக இவன்‌ அறித்து கொள்‌கிறான்‌. 
உறுதியான ஞானம்‌ பெறுவதற்கு வேதாந்த வாக்கியங்களை ஆராயக்‌ கருதுகிறான்‌. பகவானைப்‌ பற்றிச்‌ சரியான கருத்து எவர்க்கும்‌ 
ஏற்படாதென  'சிலர் கருத, இத்தகைய கருத்துடன்‌ பகவானைப்‌ பற்றிய  ஆய்வு தொடங்குகிறது. 
இது முதல்‌ அத்யாயம்‌; ஸமந்வயாத்யாயம்‌ எனப்படும்‌.
1. 1. பகவானைப்‌ பற்றி அறிய அவா 
எதிர்ப்பவர்களது கருத்து: பகவானைக்‌ கண்‌களால்‌ காண்பதற்கில்லை; இவனைப்‌ பற்றி அனுமானத்தைக்‌ கொண்டு அறியவும்‌ இயலாது. 
ஆதலால்‌ சொற்களின்‌ மூலம்‌ (வேதங்களைக்‌ கொண்டு) அறிய வேண்டும்‌. காரிய வாக்கியங்களாலேயே அறிவு நிகழ்கின்றது. 
ஒன்றும்‌ அறியாத குழந்தைக்கு முன்‌,“பசுவைக்‌ கொண்டு வா”, “பசுவைக்‌ கட்டு” என்றால்‌, அது பசு என்பதை அறிகின்றது. 
கொண்டு வருவது,  கட்டுவது என்ற செயல்களையும்‌ தெரிந்து கொள்கிறது. 
உலகிலுள்ள பொருள்களைப்‌ பற்றி அறிய இவ்வாறான  வாக்கியங்களே வேண்டுவன. 
பகவான்‌ ஸித்தமானவன்‌; காரிய வாக்கியத்தால்‌ அறிவதற்கில்லை. 
ஆதலால்‌ இவனைப்‌ பற்றி வேத வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வதற்கில்லை, 

விளக்கம்‌ : அறிவு பெறுவதற்குச்‌ செயல்கள்‌ பற்றிய வாக்கியங்கள்‌ அவசியமில்லை. குழந்தையிடம்‌, **இது மாமன்‌
*இது பாட்டி” என்றால்‌ மாமன்‌, பாட்டி யார்‌ யார்‌ என்று இது எளிதில்‌ புரிந்து கொள்கின்றது. 
ஆதலால்‌ ஸித்தமான பகவானைப்‌ பற்றி வேதாந்த வாக்கியங்களால்‌ தெரிந்து கொள்ளக்கூடும்‌.
முதல்‌ ஸூத்ரம்‌: அத அத: ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா- 
கர்மங்கள்‌ பற்றி ஆய்ந்தறிந்த பின்‌, இவற்றின்‌ பலன்‌  அற்பம்‌ என்று தேறுவதால்‌, 
பகவானை அறிய வேண்டமென்ற ஆவல்‌ ஏற்றதே என்பது இதன்‌ பொருள்‌, -ஆதலால்‌ பகவானைப்‌ பற்றிய ஆய்வு துவங்குகின்றது. 

(2) பகவானின்‌ லக்ஷணம்‌: ஓரு பொருளைப்‌ பற்றி அறிந்து கொள்ள விரும்பினால்‌, அதன்‌ லக்ஷணம்‌ முதலில்‌ 
தெரிந்து கொள்ள வேண்டும்‌. கண்ணால்‌ காணக் கூடாத பகவானைப்‌ பற்றி லகணம்‌ எங்ஙனம்‌ கூற முடியும்‌? 
இது எதிர்ப்போர்களது ஆஷேபம்‌. 

இந்த எதிர்ப்புக்கு விடை அளிக்கும்‌ ஸுித்ரம்‌, 
ஜந்மாதி அஸ்ய யத:--
கண்ணாற்‌ காணப்படும்‌ சேதன்‌  அசேதனங்களின்‌ சிருஷ்டி, ஸ்திதி, லயம்‌ இவை எவனிட  மிருந்து நிகழ்கின்றனவோ (அவனே பகவான்‌). 
௮ஸ்ய-  இந்த "உலகுக்கு. * 
தைத்திரீயத்தில்‌ ப்ருகுவல்லியில்‌ வந்துள்ள கருத்து: எதனிடமிருந்து இவ்வுலகங்கள்‌ உண்டாகின்றனவோ, 
பிறந்தவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, வாழ்வன எதை ப்ரளயத்தில்‌ அடைகின்றனவோ அதை அறிவாயாக; அதுவே ப்ரஹ்மம்‌ என்பது. 
இதுதான்‌ மேலுள்ள ஸுூத்ரத்தின்‌, விளக்கம்‌.  இதனால்‌ பகவானின்‌ இலக்கணம்‌ கூறியாயிற்று. 

எதிர்ப்பு: இந்த வாக்கியத்தைக்‌ கொண்டு பகவானை அறிவதற்கில்லை. 

ஒரு பொருளின்‌ லக்ஷண்த்தை இரண்டு வகைகளில்‌ வெளியிடலாம்‌: ஒன்று அடைமொழியாக. *'தொங்கும்‌ கரமுடையது யானை”:, 
மற்றது உப லக்ஷணமாக: “*மரம்‌ வாசலில்‌ நிற்கும்‌ வீடு என்னுடையது.
'* தொங்கும்‌  கரத்தைக்‌ கொண்டு யானையை அறிகிறோம்‌; மரத்தைக்‌ கொண்டு வீட்டை அறிகிறோம்‌. 

ஜந்மாதி அஸ்ய யத: என்ற வாக்கியத்தில்‌ 
படைப்புக்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்‌திற்குச்‌ காரணம்‌ மூவகைக்‌ கருத்துக்கள்‌ உள்ளன. 
“முழுக்‌ கொம்பும்‌ அரைக்‌ கொம்பும்‌ கொம்பில்லாததும்‌”” என்று பசுவைச்‌ சொன்னால்‌ பசுக்கள்‌ மூன்று என்பதே தேறும்‌. 
இதே போல்‌ படைக்கும்‌ பகவான்‌, காக்கும்‌ பகவான்‌, அழிக்கும்‌ பகவான்‌ என்று பகவான்‌ மூவர்‌  என்றே கருதப்படுவர்‌. 
ஆதலால்‌ இங்குக்‌ கூறிய இலக்கணம்‌ சரியன்று. இது எதிர்ப்பவர்‌ வாதம்‌. 

மறுப்பு: கேசவன்‌ கறுத்த நிறமுடையவன்‌, இளைஞன்‌, சிவந்த கண்ணினன்‌ என்றால்‌ இவை யாவும்‌ ஒருவனையே குறிப்பன, 
இது போல்‌ படைக்கும்‌ பரம்‌ பொருளே காப்பவனும்‌ அழிப்பவனுமாவான்‌ என்பது தேறுமன்றோ? 
விசேஷண முறையில்‌ பகவானைப்‌ பற்றிய விவரணம்‌ இது. 

தேர்வு : புருஷ ஸுக்தத்தில்‌ “*ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்‌ ௪ த்ந்பெள””. பூதேவி, ஸ்ரீதேவி இவர்கள்‌ உன்‌ பத்நிகள்‌ 
என்பது காண்கிறோம்‌. இது உபலஷணமாக பகவானை அறிந்து கொள்ளலாம்‌. 
ஆக, படைப்பிற்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்திற்குக்‌ காரணம்‌ இவை மூன்றும்‌ தனித்தனி யாகவோ, 
சேர்ந்தோ பகவானுக்கு லஷணம்‌ என்றா யிற்று. படைப்பிற்குக்‌ காரணம்‌ நான்மூகன்‌ அல்லன்‌; 
அழிப்புக்குக்‌ காரணம்‌ பரம சிவன்‌ அல்லன்‌ என்பதும்‌ தேறுகின்றன. 

(3) சாஸ்த்ரம்‌ ஆதாரம்‌: ப்ரஹ்மத்தை அநுமானத்‌தாலேயே அறிந்து கொள்ளலாம்‌. 
குடத்திற்குக்‌ கர்த்தா  ஒருவன்‌ இருப்பது போல பூமிக்கும்‌ கர்த்தா ஒருவன்‌ இருக்க வேண்டும்‌ என்று அனுமானத்தால்‌ தேறலாகும்‌, 
ஆதலால்‌ முன்பு கூறிய வேத வாக்கியம்‌ அவசியமில்லை, சான்றாகாது--இது ஒரு கருத்து. 

மறுப்பு 2: ஆற்றல்‌ மிக்க பகவானே உலகைப்‌ படைக்‌கிறான்‌ என்பது ஏற்பதற்கன்று. 
விசுவாமித்ர முனிவன்‌  தனது தவத்தாலே ஓருலகைப்‌ படைத்தான்‌. 
ஆதலால்‌  பேராற்றல்‌ வாய்ந்த சிலர்‌ படைக்கக்கூடும்‌ என்பது ஊகிக்கலாம்‌. ஆதலால்‌ அனுமானத்தால்‌ இக் கருத்து நிறுவ இயலாது. 
வேறு எந்தச்‌ சான்றாலும்‌ அறிய  இயலாத போது சாஸ்த்ரமே ப்ரமாணம்‌ என்று அறக்‌ கற்றோர்‌ வெளியிட்டுள்ளனர்‌. 
இக் கருத்துடைய ஸூத்‌ரம்‌ சாஸ்த்ர யோநித்வாத்‌--
சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகத் தேர்வதாலே பகவானைப்‌ பற்றிய ஆய்வு செய்யத் தகும்‌ என்பது. 

(4) பரம புருஷார்த்தம்‌ : புருஷார்த்தம்‌ என்பது நாம்‌ பெற விரும்புவது. 
ஒரு பொருளைப்‌ பற்றி அறியும்‌ போது அதைப்‌ பெறுவதற்கு விருப்பம்‌ வேண்டும்‌. 
இந்த விருப்பம்‌ எவ்வாறு பெறுகிறோம்‌ எனில்‌, அனு கூலமாக நினைப்பன கை கூடும்‌, ப்ரதிகூலங்கள்‌ அகலும்‌ 'என்ற கருத்தாலே. 
இதனாலேயே அப்பொருளைப்‌ பெற மூயற்சி செய்கிறோம்‌. 
பகவானைப்‌ பற்றி  அறியாததால்‌ முயற்சிக்கு வாய்ப்பில்லை என்பது எதிர்ப்பவர்களது கருத்து, 

மறுப்பு : வேதாந்தங்கள்‌ பரம் பொருளான பகவான்‌ எல்லை யற்ற ஆனந்த ஸ்வரூபன்‌ என்கின்றன. 
இத்தகைய பகவானைப்‌ பெறுவது தான்‌ பரம புருஷார்த்தமாகும்‌. 
தெடுங்‌ காலமாகசக் காணாமற்‌ போன தன்‌ மகனைது தகப்பன்‌ கண்டும்‌, அவன்‌ மிகச்‌ சிறந்தவனாக அறிந்தும்‌ பரமானந்தங்‌ கொள்கிறான்‌. 
இங்கு விருப்பம்‌ முயற்சி போல்வன இல; பெறுவது ஆனந்தம்‌. இது போன்றதே பகவானே புருஷார்த்தம்‌ என்று அறிவது. 

“தத்‌ து ஸமந்வயாத்‌' என்பது ஸுத்ரம்‌. 
இதன்‌ பொருள்‌ : பசுவான் சாஸ்த்ரத்தால்‌ புருஷார்த்தம்‌ என்று தெளிவாகச்‌ சொல்லப் படுவதால்‌, சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகக்‌ கூடும்‌. 

இந்த நான்கு ஸுத்ரங்களும்‌ சேர்ந்து சதுஸ்‌ ஸுத்ரி என்ற பகுதி, பகவானைப்‌ பற்றி ஆராயக் கூடும்‌ என்ற கருத்துடையது,. 
ஆதலால்‌ ஆய்வு தொடங்குகின்றது. 

1. 2. ஸங்கல்பித்தது யார்‌? 

பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்ற பொருள்‌ முதலில்‌ விளக்கப் படுகின்றது: 
“*காரணந் து த்யேய?”  என்பதனால்‌ காரணம்‌ ஆராயப் படுகின்றது. 
மூல ப்ரக்‌ருதியே காரணம்‌, ஜீவர்கள்‌ காரணம்‌ என்ற வாதங்கள்‌  ஆராயப்பட்டு விலக்கப் பெறுகின்றன 
இந்த அத்யாயதின்‌ நான்கு பாதங்களிலும்‌. முன்பு விளக்கப்பெற்றது; 
ஜகத்‌ காரணமான ப்ரஹ்மமே புருஷார்த்தமென்று. சாந்தோக்யத்தில்‌ ஸத்வித்யையில்‌ அறிவற்ற மூலப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணம்‌ என வந்துள்ளது. 
மூலப்ரக்ருதியோ அறிவில்‌லாதது, தோஷங்களுக்கு இருப்பிடம்‌. இது எவ்வாறு காரணமாகக்‌ கூடும்‌ என்பது ஸத்வித்யையிலுள்ள 
வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வு நிகழ்கின்றது. 

மூலப்ரக்ருதியே காரணம்‌ என்று வாதஞ்‌ செய்வோர்‌ கூறுவது : 
“தத்‌ தேஜ ஐக்ஷ்த''--அந்த அக்நி ஸங்கல்‌பித்தது என்று தொடங்கி, நெருப்பு, நீர்‌ போல்வன: ஸங்கல்பித்தன என்ற வாக்கியங்கள்‌ வருகின்றன. 
இவ்வாறு உயிரில்லாத தேஜஸ்‌ முதலாவன ஸங்கல்‌பித்தன என்பது முக்கியமான கருத்து கொள்வதன்று என்றே கருத வேண்டும்‌. 
இதே போல்‌ *'தத்‌ ஐக்ஷத”” என்ற வாக்கியத்திலும்‌. 
அன்றியும்‌ இவ் வுலகம்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ என்ற குண மயமானது; இம் மூன்றும்‌. கொண்டது மூல ப்ரக்ருதியே. 

மேலும்‌ இந்த ஸத் வித்யையில்‌ முதலில்‌ கூறியுள்ளது: 
ஐகத்‌ காரணமான ஸத்தை அறிந்தால்‌ யாவும்‌ அறிந்தன வாகும்‌ என்பது, உதாரணமாக: 
மண்ணிலிருந்து குடமும்‌, பொன்னிலிருந்து கிரீடமும்‌ உண்டாகின்றன. 
இந்த அனுமானத்தால்‌ ப்ரஹ்மம்‌ அறியப்படாதது?: 
சாஸ்த்ரம்‌ ஒன்றாலேயே ப்ரஹ்மம்‌ அறியப்படும்‌ என்பதால்‌ அனுமானத்தால்‌ அறிய இயலாது என்று தேறுகின்றது. 
ஆதலால்‌ அனுமானத்தால்‌ அறியப்படும்‌ மூல ப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணமாகும்‌. 

மறுப்பு: ஜகத்‌ காரணப்‌ பொருளுக்கு ஸங்கல்பம்‌. கூறுவதால்‌ அது அறிவில்லாத மூல ப்ரக்ருதி யாகாது. 
சாஸ்த்ரங்கள்‌ வெளியிட்டுள்ளது: நுண்ணிய நிலையிலுள்ள சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பகவானே காரணம்‌; 
ஸ்தூல நிலையில்‌  இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ இவனே காரியம்‌. 
இவ்வாறு ஆய்ந்தால்‌ காரண காரிய ஓற்றுமை வெளிப்‌ படுகின்றது. ஆதலால்‌ ஜகத் காரணம்‌ பரம புருஷனே.. 

நெருப்பு ஸங்கல்பித்தது என்பது போன்ற வாக்கியங்களில்‌ பகவானே அந்தர்யாமியாக ஸங்கல்பித்தான்‌ என்று தேறலாம்‌. 
'*ஐதத்‌ ஆத்ம்யகம்‌ இதம்‌ ஸர்வம்‌'”-- 
இவை ஸத்தை ஆத்மாவாகக்‌ கொள்வன என்பது இங்குச்‌ சான்று. 
ஆதலால்‌ பகவானே ஸத்வித்யையில்‌ போற்றப்‌ படும்‌ ஜகத்‌ காரணப்‌ பொருளாவான்‌. 

தேர்வு 1. முமுக்ஷாவான ச்வேதகேது பெற்ற உபதேசம்‌ : ஐகத்‌ காரணமான ஸத்தை உபாஸித்தால்‌ 
சரீர முடிவில்‌ அதனைப்‌ பெறுவதே மோக்ஷம்‌ என்று. மூல ப்ரக்ருதியை உபாஸித்து இதையே மோக்ஷமாகமப்‌ பெறுவது எவ்வாறு? 
அன்றியும்‌ ஒருவன்‌ எதை உபாஸிக்‌கின்றானோ, அப்படியே இறந்த பின்‌ ஆகிறான்‌ என்பதும்‌ கூறப்படுகிறது. 
ஆதலால்‌ ஸத்‌ என்பது மூல ப்ரக்ருதி எனில்‌ அறிவற்ற இதை உபாஸித்து அறிவற்றவனே ஆக வேண்டும்‌. 
இதனாலும்‌ விளங்குவது பகவானே உபாதாந காரணம்‌ என்பது. 

தேர்வு 2: மூல ப்ரக்ருதியோ மோக்ஷ விரோதி; இதனால்‌ இதன்‌ இழிவு வெளிப்படை. மோக்ஷ காரணம்‌ 
என்பது ஏற்றமேயாகும்‌; இழிவாகாது, ஆதலால்‌ ஸத் என்பது மூலப்ரகிருதி யாகாது.  

தேர்வு 3: ஜகத்‌ காரணம்‌ அறிந்தால்‌ யாவும்‌ அறியலாம்‌ என்பது முக்கியமான கருத்தாகும்‌. 
அறிவற்ற  மூல ப்ரகிருதியை அறிந்தால்‌, இது காரணம்‌ என்றால்‌, காரியப்‌ பொருளான ஜீவனும்‌ அறிவற்றவன்‌ என்பதே தேறும்‌. 

தேர்வு 4: ஒருவன்‌ தூங்கும்போது ஜீவன்‌ தனக்குக்‌ காரணமான ஸத்தில்‌ ஓடுங்குகிறான்‌ என்பது ஒரு வேத. வாக்கியம்‌, 
ப்ரதானமே ஸத்‌ எனில்‌ இந்தக்‌ கருத்து ஏற்றதாகாது. _ 

தேர்வு 5: பல உபதிஷத்துக்களின்‌ கருத்து : எவன்‌: எல்லாப்‌ பொருள்களின்‌ ஸ்வ -ஸ்வரூப ஸ்வபாவங்களை 
அறிகிறானோ, அவனிடமிருந்தே இந்த மூல ப்ரக்ருதி  ஜீவர்கள் உண்டாகின்றது; 
இவை யாவும்‌ பரம புருஷனே; அப்பரம புருஷ னிடமிருந்தேதே அண்டம்‌ உண்டாயிற்று. நாராயணன்‌ ஒருவனே மூதவில்‌ இருந்தான்‌. 
இவ்வாறான வாக்கியங்‌கள்‌ ஒரூமூகமாக பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்று முழங்குகின்றன  

தேர்வு 6: இதே உபதிஷத்தில்‌ ஓரிடத்தில்‌ வந்துள்ளது; ஆத்மாவிடமிகுத்து ப்ராணன்‌, ஆகாசம்‌ உண்டாகின்றன; 
உலகம்‌ யாவும்‌ பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றது என்பது. 

இவ்வகைகளில்‌ ஆராய்ந்தால்‌ யாவும்‌ அறிந்த பரம்‌ பொருளே உலகுக்கு உபாதான காரணம்‌ என்பது தேறுகின்‌றது. 

1. 3. ஆனந்த மயன்‌ - யார்‌? 

மூலப்ரக்ருதிக்கு ஸங்கல்பம்‌ நேராது, ஆதலால்‌ அது உலகுக்குக்‌ காரணமாகாது என்று விளக்கப்பட்டது. 
ஜீவனுக்கு முக்ய ஸங்கல்பம்‌ கூடும்‌, ஆதலால்‌ இவன்‌  காரணமாகலாம்‌ என்பது ஆராயப்படுகின்றது. 

ஜீவன்‌ காரணமாகலாம்‌ என்பதற்கு விளக்கம்‌: 

தைத்திரீயத்தில்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டியைப்‌ பற்றி விளக்கத்‌ தொடங்கிப்‌ பின்வரும்‌ விவரங்கள்‌ உள்ளன ; 

அன்னத்தால்‌ வளர்வது சரீரம்‌; சரீரத்தை தரிப்பது ஐம்பால்‌ ப்ராணன்‌; ப்ராணனில்‌ நுண்ணியது புத்தி, 
இவ்வாறு படிப்படியாகக்‌ கூறி இவற்றைத்‌ தரிப்பது ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது. 
விஜ்ஞான மயன்‌ என்ற புத்தியைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது நுண்ணியதான ஆனந்தமயன்‌ ஆத்மா என்றும்‌ வந்துள்ளது. 
இந்த  விஜ்ஞான மயமான புத்திக்‌குச்‌ சரீரத்‌ தொடர்புள்ளது 
ஆத்மா என்பதால்‌ இது ஜீவாத்மாக வேண்டும்‌. ஆதலால்‌ ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது தேறுகின்றது. 

மறுப்பு: இதே பகுதியில்‌ விஜ்ஞானம்‌ என்ற சொல்‌  பல இடங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே வருகிறது. 
அறிவே இயல்பாகவும்‌ குணமாகவும்‌ உள்ள ஜீவன்‌ ஜ்ஞானமாகவும்‌ ஜ்ஞான மயமாகவும்‌ சொல்லக்கூடும்‌. 
இவனினும்‌: நுண்ணியதாய்‌, இவனை தரிப்பவன்‌ பரமாத்மாவான: ஆனந்த மயன்‌. 
அன்றியும்‌ ஆனந்தத்தை அளவிடும்போது மனுஷ்ய ஆனந்தத்தை அளவுகோலாக்‌ கொண்டு, இதைப்‌ போல்‌ 
நூறுநூறு மடங்காக அடுக்கிக்கொண்டு அளவு காணாத தால்‌ சொற்கள்‌ மீண்டன.
'*யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”. இவ்வாறான பேரானந்தம்‌ உலக வாழ்க்கையில்‌ உழலும்‌ ஜீவனுக்கு இல்லை? 
பகவானுக்கே உண்டு. **சாரீர ஆத்மா” என்று சரீர ஸம்‌ பந்தம்‌ கூறும்‌ பகவானுக்கே இத்தகைய ஆனந்தம்‌ பொருந்தும்‌. 
பூமி, ஆத்மாக்கள்‌ யாவும்‌ பகவானுக்குச்‌ சரீரமாகக்‌ கூறப்படுகின்றன. 

தேர்வு 1: '*ஸத்யம்‌ ஜ்ஞாநம்‌ அதந்தம்‌ ப்ரஹ்ம”  என்ற விவரத்தால்‌ ப்ரஹ்மம்‌ ஆனந்தமயம்‌ என்று சொல்லப்படுகிறது. 
இந்த ப்ரஹ்மத்தை அறிபவன்‌ மேம்பட்ட பலமான பரப்ரஹ்மத்தை அடைகிறான்‌ என்பதும்‌ அறிவோம்‌. 
ஜீவன்‌ அடைவது இந்த ப்ரஹ்மம்‌. ஆதலால்‌ இவனைக்‌ காட்டிலும்‌ சிறப்புடைய பகவானே ஆனந்த மயனாக வேண்டும்‌. 

தேர்வு 2: படைக்கும்போது பகவான்‌, :நான்‌ பலவாறாகக்‌ கடவேன்‌” என்று ஸங்கல்பிக்கிறான்‌. 
சரீரமில்லாமல்‌ ஜீவன்‌ ஒன்றையும்‌ படைக்க இயலாது, ஆதலால்‌ உலகைப்‌ படைக்கும்‌ ஆனத்தமயன்‌ ஜீவனாக முடியாது. 

தேர்வு 3: தைத்திரீயத்தில்‌ ஜீவன்‌ ரஸஸ்வரூபியை அடைந்து ஆனந்த மூடையவனாகிறான்‌ என்று வந்துள்ளது. 
ஆதலால்‌ ஆநந்தமயன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. ஆனந்தமயன்‌ என்பதன்‌ கருத்து; 
வேறு எதுவும்‌ கலவாது முற்றிலும்‌ ஆனந்தமாகவே இருத்தல்‌. இது: ஸர்வேச்வரனுக்கே உரியது, 

1. 4. ஆதித்ய புருஷன்‌ யார்‌? 

சாதாரணமான ஜீவர்களுக்கு ஐகக்‌ காரணமாயிருப்பது கூடாதெனில்‌, விசேஷ சக்தி வாய்ந்தவர்‌களுக்கு இது கூடும்‌ 
என்ற சங்கையினால்‌ ஆதித்ய புருஷன்‌, அக்ஷிபுருஷன்‌ இவர்களைப்‌ பற்றி இங்கு ஆராய்வு நிகழ்கின்றது. 

ஆதித்யனுக்குள்‌ பொன்‌ மயமான புருஷன்‌ இருக்‌கிறான்‌; இவனுக்கு மீசை பொன்‌ மயம்‌, கேசம்‌, நகம்‌ பொன்‌ மயம்‌; 
கண்கள்‌ தாமரை போல்வன என்று சாந்‌தோக்யத்தில்‌ வந்துள்ளது. மீசை, சேசம்‌, நகம்‌ போல்வன சரீரம்‌ உள்ள ஜீவார்களுக்கே உள்ளன. 
ஆதலால்‌ இங்கு விவரிக்கப்‌ பெறுவது சக்தி மிகுந்த ஒரு ஜீவன்‌; இவனே உலகப்‌ படைப்பு செய்ய வல்லவன்‌, இது ஒரு கருத்து. 

மறுப்பு: உபநிஷத்துக்கள்‌ விளக்கியுள்ளது; ஆதித்ய புருஷன்‌ பாவங்களுக்‌ கப்பாற்பட்டவன்‌? 
இவனுக்குப்‌ பாடகர்கள்‌ ரிக்வேதம்‌, ஸாம வேதம்‌. கண்ணிலிருப்பவன்‌ ரிக்‌ வேத மாவான்‌. ஸாம வேத மாவான்‌, 
ஆதலால்‌ இப்புருஷன்‌ ஜீவனாக முடியாது. அன்றியும்‌ வேத வாக்‌ யங்கள்‌ மூலமாகவும்‌ &தை மூலமாகவும்‌ அறிவது: 
திவ்ய மங்கள விக்ரஹம்‌ பரமாத்மாவுக்கே உண்டு. ஆதலால்‌ ஆதித்யனிலும்‌ அக்ஷிகளிலும்‌ உள்ளே இருப்பவன்‌ பரமாத்மாவே. 

அன்றியும்‌ ஆதித்யன்‌ முதலான தேவர்கள்‌ யாவரும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌, பகவான்‌ இவர்களுக்கு ஆத்மா என்று வேதங்கள்‌ ஓலிக்கன்றன, 
ஆதலால்‌ ஆதித்யனிலுள்ள புருஷன்‌ இவர்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவானே. 

1. 5. ஆகாசம்‌ ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ (1-9-1) பூதங்கள்‌ யாவும்‌ ஆகாசத்திலிருந்து உண்டாகின்றன, 

விளக்கம்‌  பின்வரும்‌ உபநிஷத்‌ வாக்கியங்களை ஆராய்வோம்‌. இவ்வுலகம்‌ ஆத்மாவாகவே இருந்தது? 
ஆத்மாவிலிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று; நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌; பிரமனும்‌ இல்லை, 
சிவனும்‌ இவ்லை. நாராயணனிடமிருந்து பிரமன்‌ உண்டானான்‌. 
இவை யாவும்‌ நாராயணனே ஐகத்‌ காரணம்‌ என்று காட்டுகின்றன. 
அசேதனமான ஆகாசம்‌ காரணமாக முடியாது. ஆகாசம்‌ என்பதன்‌ பொருள்‌; *ஆ ஸமந்தாத்‌ீ காசதேத'”- எங்கும்‌ ப்ராசிக்கிறது, 
ஆதலால்‌ ஆகாசம்‌ என்பது. இதனால்‌ ஆகாசம்‌ என்ற சொல்‌ எங்கும்‌ விளங்கும்‌ நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
ஆதலால்‌ பகவானான நாராயணனே ஜகத்‌ காரணம்‌. 

1. 6. வாயு ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌: பூதங்கள்‌" யாவும்‌ ப்ராணனில்‌ லயிக்கின்றன, ப்ராணனிடமிருத்து வெளிக்‌ கிளம்புகின்றன. 
ப்ராணன்‌ என்பது ஜீவராசிகள்‌ வாழ்‌வதற்குக்‌ காரணமான வாயுவே ஆகும்‌. 
ஆதலால்‌  ஆகாசத்தைக்‌ காட்டிலும்‌ ஐகத்‌ காரணமாகத்‌ தகுதி பெறுவது இந்த வாயுவே. இது சிலர்‌ கருத்து, 

தேர்வு : ப்ராணனால்‌ வாழ்வு பெறுவது சரீரமே? ப்ராணனாலே தான்‌ இது செயல்படுகின்றது. ஆனால்‌ 
நாராயணனே யாவற்றிற்கும்‌ காரணம்‌ என்கின்றன வேத வாக்கியங்கள்‌. 
ஆதலால்‌ இவனே ப்ராணன்‌ என்‌பதுவே தேறும்‌. 

1. 7. அக்நி ஜகத்‌ காரணமாகுமா? 

“*வாயோரக்நி.'”' *வாயுவிலிருந்து தோன்றியது ௮க்னி- மூன்றாவது பூதம்‌. இதுதான்‌ ஜகத்‌ காரணம்‌ என்பது ஓரு கருத்து. 
இதன்‌ விளக்கம்‌: வியஷ்டி பதார்த்தங்கள்‌ (பகுத்துப்‌ படைக்கப்பட்டவை), ஸமஷ்டி. பதார்தங்கள்‌ (ஒட்டு மொத்தமாகப்‌ படைக்கப்பட்டவை) 
இவற்றுக்கும்‌ அப்பால்‌ மேலே பரமபதம்‌. இதற்கும்‌ மேலே மிகச்‌ சிறந்த உலோகங்களிலே ஒளி பரப்பும்‌ சோதி இலங்குகின்றது. 
அதுவே இம்மனிதனுள்‌ விளங்‌குஞ்‌ சோதி - ஜாடராக்தியோடு ஒன்றாகும்‌. இது சாந்‌தோக்ய வாக்கியம்‌. 
ஜாடராக்நியோடு ஒன்றெனக்‌ கூறுவதால்‌ இது பஞ்ச பூதங்களுள்‌ ஒன்றான அக்நி, 
சூரியன்‌ போன்ற அசேதனங்களான சோதிகளுள்‌ ஓன்று  என்பதே தெளிவு. 

மறுப்பு: இதே பகுதியிலே காணும்‌ வாக்கியம்‌: இப்‌ பரம் பொருளுக்கு பூதங்கள்‌ யாவும்‌ ஒரு பாதம்‌? 
மற்றைய மூன்றும்‌ பரமபதத்தில்‌ உள்ளன என்பது. இங்குக் கூறும்‌ சோதி, இவ்வுலகில்‌ காணும்‌ பூதங்கள்‌ 
யாவற்றையும்‌ ஒரு பாதமாகக்‌ கொண்டுள்ளது என்பதால்‌ இது நாராயணனைப்‌ பற்றியேயாகும்‌. 
மேலும்‌ பகவானது திருமேனி சூரியனைப்‌ போலே ஒளியுடையது மின்னற்கொடி போன்றது; 
ஆயிரம்‌ ஆதித்யர்களது ஓளி ஒரே காலத்தில்‌ நேரும்‌ எனில்‌, அது அம் மஹா புருஷனின்‌ திருமேனி ஒளிக்கு ஒப்பாகும்‌ என்ற வாக்‌யங்கள்‌ உள்ளன. 
திருமேனி சோதி மயமானதாலே சோதிகளுக்கெல்லாம்‌ ஒளியை அளிக்கும்‌ பரஞ்சோதி என்பது பொருந்தும்‌. இப்பரஞ்சோதி ஸர்வேச்வரனே. 

பகவான்‌ ஜாடராக்நி ஸ்வரூபன்‌ என்பதன்‌ கருத்து: இவன்‌ இதற்கு அந்தர்யாமி என்பதே. 
கீதையில்‌ பகவான்‌, **நானே ஜாடராக்நியாகி ப்ராணிகளின்‌ உடலிலே இருக்கிறேன்‌” என்றது ஒப்பு நோக்கு. 
ஆதலால்‌ சோதி என்பது பரஞ்சோதியான நாராயணனே. 

1. 8. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா? 

சூர்யன்‌, அக்நி போல்வாருக்குத்‌ தலைவனான. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா என்ற விஷயம்‌ இப்போது. 
ஆராயப்படுகின்றது. 

தனக்கு. உபதேசிக்க வேண்டும்‌ என்று கேட்ட ஒருவனுக்கு. இத்திரன்‌ கூறியது: 
என்னையே உபாஸிப்பாய்‌; அறிவு  ரூபமான ஆத்மாவாக இருக்கும்‌ நானே ப்ராணன்‌? 
ப்ராணனான என்னை ஆயுளாகவும்‌ அம்ருதமாகவும்‌ உபாஸிக்கக் கடவாய்‌ என்று. 
ஆதலால்‌ மோக்ஷ ஸாதனதிற்கு உபாயமாகச்‌ சொல்லும்‌ இந்திரனே ஜகதி, காரணம்‌. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌  இப்பகுதியில்‌ முதலிலும்‌ நடுவிலும்‌ முடிவிலும்‌ பரமாத்மாவின்‌ பெருமையே அதிகமாக விளக்கப்‌ படுகின்றது. 
ரத சக்கரத்தின்‌ ஆரங்கள்‌ போல சேதன. அசேதனங்கள்‌ ப்ராணன்‌ எனப்பெறும்‌ பரமாத்மாவிடம்‌ கோர்க்கப்‌ பட்டுள்ளன. 
ப்ராணனுக்கு ஆதாரம்‌ பரமாத்மா. இப்பரமாத்மா நம்மை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறான்‌; 
நற்செயல்கள்‌ செய்விக்‌கிறான்‌ என்றும்‌ வந்துள்ளது. 
இவ் விவரங்கள்‌ பிறப்பு, இறப்பு இவையுடைய இந்திரனைப்‌ பற்றி அல்ல. 
**ஸேந்த்ர:'' என்று பகவான்‌ இந்திரனுக்கு அந்தர்யாமி யாகப்‌ புருஷ ஸூக்தத்தில்‌ காண்கிறோம்‌. 
ஆகையால்‌ இங்கு இந்திரன்‌ எனப்‌ பெறுவோன்‌ ஸ்ரீமந்‌ நாரயணனே ஆவான்‌. 
“மாம்‌ உபாஸ்வ'” என்று இந்திரன்‌ கூறியதன்‌ கருத்து: எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய்‌ என்பது. 
ப்ரஹ்மத்தை உபாஸித்த வாமதேவர்‌, “நானே மனு, நானே ஸர்யன்‌”” என்றறிந்தார்‌. எவ்வாறெனில்‌, 
இதன்‌ பொருள்‌: தமக்கு அந்தர்யாமி யான பகவானே மனுவுக்கும்‌ ஸுர்யனுக்கும்‌ அத்தர்‌யாமி என்பது. 
ஈச்வரன்‌ யாவர்க்கும்‌ அந்தர்யாமி ஆதலால்‌ இந்திரன்‌ கூறியது: எனக்கு அந்தர்யாமியான 
பரமாத்மாவைக்‌ கருதி என்னையே உபாஸிப்பாய்‌ என்பது. 

பகவானை உபாஸிப்பது மூன்று வகை: அவனது ஸ்வரூபத்தை நேரே அனுஸந்திப்பது, 
ஜீவ ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது,அசேதன ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது, 
இந்திரன்‌ வெளி யிட்டது: இந்திரனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ ப்ராணனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ பற்றி, 
ஆதலால்‌ ப்ரஹ்ம உபாஸனையே கூறப்படுகிறது. இந்திர ப்ராண சப்தத்தால்‌ தெரிவிப்பது பரமாத்மாவே என்பது. 
ஸித்தமான பகவான்ப்‌ பற்றி வேத வாக்கியங்களால்‌ அறிந்து கொள்ள இயலும்‌. 
வேத வாக்கியங்கள்‌ இவனது லஷணங்களை உரைப்பன. இவ்விஷயத்தில்‌ சாஸ்த்ரம்‌ தக்க சான்றாகும்‌. 
பரம புருஷார்த்தமாகிய பகவானைப்‌ பற்றி சாஸ்த்ரங்கள்‌ அறிவிக்கக்கூடும்‌. 

ஸத்வித்யையில்‌ சொல்லப்படும்‌ பகவான்‌ உலகுக்குக்‌ காரணமாவான்‌, மூலப்ரக்ருதி யன்று. 
இவனே ஆனந்த மயன்‌, ஜீவன்‌ அல்லன்‌. ஸுர்யனிலும்‌ கண்ணிலும்‌ இருப்பதாகக்‌ கூறப்படுபவன்‌ இந்த பகவானே. 
ஆகாசம்‌, ப்ராணன்‌, சோதி இவை ஐகத்‌ காரணமல்ல; பகவானே காரணம்‌. 

இந்திரனென்றும்‌ ப்ராணனென்றும்‌ பெருமையுடன்‌ கூறப்படுவது பகவானே, இந்திரனு மல்லன்‌, ப்ராணனு மன்று, 
---------
2... இரண்டாவது பாதம்‌ 

முதற்‌, பாதத்தின்‌ பொருள்‌ : ப்ரஹ்மம்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலஷணமானது; 
உலகுக்குத்‌ தனிக்‌ காரணம்‌ விலக்ஷண புருஷன்‌. ஐக்ஷ்த என்ற ஸுத்ரத்தால்‌ இவன்‌ 
அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌, ஆனந்தமயன்‌ என்ற ஸுத்ரத்தால்‌ 
சேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌ வெளியிடப்பட்டது. 
இப்பாதத்தில்‌ இவன்‌ ஐகச் சரீரன்‌ என்பது அறுதியிடப்படுகிறது. 

2-1. அனைத்தும்‌ ப்ரஹ்மமே 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌ சாண்டில்ய வித்யையைப்‌ பற்றியது: 
*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம -தஜ்ஜலாநிதி சாந்த உபாஸஹீத”” இது எல்லாம்‌. ப்ரஹ்மமே. 
அதனால்‌ (இவை) தோன்றி, வாழ்ந்து, அதில்‌ மறைவதால்‌. இவ்வாறு சாந்தி யுடையவளாக 
உபாஸிக்க வேண்டும்‌ என்கிறது இந்த வாக்கியம்‌.” 
தன்னுடைய கர்மத்தின்‌ பலனாலே ஜீவனே ப்ரஹ்மா முதல்‌ புல்‌ வரையில்‌ எல்லாப்‌ பொருள்களும்‌ ஆக முடியும்‌. 
பகவான்‌ தோஷங்களுக்கு எதிர்நிலை: தோஷங்‌களுக்குக்‌ கொள்கலமான எல்லாப்‌ பொருள்களுமாக, பகவான்‌ ஆகமுடியாது. 
ஜீவர்களின்‌ கர்ம மடியாகவே, உலகம்‌ தோன்றி, வாழ்ந்து, மறைகின்றது. 
**தஜ்ஜலாந்‌:' (தோன்றி வாழ்ந்து மறைவது) என்று சொல்‌ ஜீவனிடம்‌ பொருந்தும்‌. 
ஆதலால்‌ இந்த வாக்‌யத்தில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே... 

மறுப்பு : தைத்திரீயத்தில்‌ ஒரு வாக்கியம்‌:**யதோவா இமாநி பூதாறி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, 
ய்த் ப்ரயந்தயபிணம்விசந்தி, தத்‌ விஜிஜ்ஞாஸ்ஸ்‌வ கத்ப்ரஹ்மேதி'”--எவனிடமிகுந்து பொருள்கள்‌ யாவும்‌ 
தோன்றுகின்றனவோ. தோன்றியவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, ப்ரளய காலத்தில்‌ எதனுள்‌ ஒடுங்குகின்றனவோ, 
அதை நீ அறிவாபய் என்பது படைத்துக்‌ காத்து அழிப்பது மூன்றும்‌ பரம்‌ பொருளுக்கே உரியன, ஜீவனுக்கு அல்ல. 

சங்கை : தோஷமே இல்லாத பரமாத்மா, தோஷங்‌ களுக்கு இருப்பிடமான பொருள்கள்‌ யாவுமாவது: எவ்வாறு ஒட்டும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நுண்ணிய நிலையிலும்‌, ஸ்ருஷ்டியில்‌ ஸ்தூலமாகவும்‌ சேதன அசேதனங்‌கள்‌ உள்ளன. 
இவற்றை பகவான்‌ சரீரமாகக்‌ கொள்‌கிறான்‌. தோஷங்கள்‌ சரீரமான சேதனர்களிடமே உள்ளன, 
சரீரியான பகவானிடம்‌ இவை அணுகவும்‌ மாட்டா. ஆதலால்‌ இவனை எல்லாப்‌ பொருள்களுமாகக்‌ கூறலாம்‌. 
அன்றியும்‌ ஒரு சரீரத்திலுள்ள ஜீவன்‌ வேறொரு ஜீவனாக ஆகமுடியாது; ஜீவனை யாவுமாகச்‌ சொல்லுவது சரியன்று. 
ஆதலால்‌ ஐகத்‌ காரணமாகவும்‌ ஸர்வாத்மாவாகவும்‌ சொல்லப்படுவது பகவானே. 

அன்றியும்‌ பகவானைப்‌ பற்றி ஒரு வாக்கியம்‌: தூய மனத்தாலேயே அறியத்‌ தக்கவன்‌, ஒளி மயமானவன்‌, 
எல்லாச்‌ செயல்களையும்‌ ஆற்ற வல்லவன்‌; இவன்‌ எவனையும்‌ ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை; 
ஆதலால்‌ எவனிடமும்‌ வாய்‌ பேசாதவன்‌. இவை யாவும்‌ பரமாத்‌மாவுக்கே பொருந்துவன. 

மேலும்‌ பகவான்‌ ஜீவனால்‌ அடையப்‌ பெறுபவன்‌ என்றும்‌, ஜீவன்‌ இதற்குக்‌ கர்த்தா என்றும்‌ வேதவாக்யங்கள்‌ உள்ளன, 
ஆதலால்‌ உபாஸிக்கப்படும்‌  பகவான்‌ உபாஸனம்‌ செய்யும்‌ ஜீவனினும்‌ மாறுபட்ட.  பரம்பொருளே.

கீதையில்‌ வருவது (15-75) : பரம்‌ பொருளை உபாஸிப்பவன்‌ ஜீவன்‌, 
பரம புருஷன்‌ ஜீவனின்‌ இதயத்தில்‌  உறைபவன்‌ என்று. உபாஸநம்‌ செய்யப்படுவோன்‌ பகவானே. 

மறுப்பு : கட்டை விரல்‌ பருமனுள்ள இதயத்தில்‌ இருக்கும்‌ ஆத்மா நெல்லை விடக்‌ கோதுமையை விடக்‌ 
கடுகை விடச்‌ சிறியது என்கிறது உபநிஷத்‌. இதயத்தில்‌ இருக்கும்‌ என்னுடைய ஆத்மா என்று சொல்லுவதால்‌ 
இது ஜீவனைப்‌ பற்றியதே. பகவானைப்‌ பற்றியது எனில்‌ மிகச்‌ சிறிய இவன்‌ எவ்வாறு எங்கும்‌ வியாபிக்க இயலும்‌? 

விளக்கம்‌ : பரமாத்மாவை உபாஸிப்பதற்காகவே இதயத்தில்‌ ஏறிய நிலையை வெளியிட்டது. 
இவன்‌ பூமியை விடப்‌ பெரியவன்‌, அந்தரிக்ஷ்த்தை விடப்‌ பெரியவன்‌, தேவலோகத்தை விடப்‌ பெரியவன்‌ என்று இவ்‌வாறு 
வாக்‌யங்கள்‌ கூறுகின்றன. இந்தக்‌ காரணத்தாலும்‌ இந்த வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனாக முடியாது; 
பரமபுருஷனே என்பது திண்ணம்‌. 

மறுப்பு : பகவான்‌ இதயத்தில்‌ உறைவதால்‌ இவன்‌ அவனைப்‌ பேரலவே இன்ப துன்பங்கள்‌ அனுபவிக்க நேரிடும்‌. 
ஆதலால்‌ இவ் வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே என்று கருத வேண்டும்‌. 

விளக்கம்‌ : பகவான்‌ இழிவுகளுக்கெல்லாம்‌ எதிர்த்‌ தலை; கல்யாண குணங்கள்‌ பலபல வாய்ந்தவன்‌; 
கர்மத்‌திற்கு வசப்படாதவன்‌; தனது இச்சையாலே சரீரத்தில்‌ உறைகின்றான்‌ என்று வாக்யங்கள்‌ கூறுகின்றன. 
இவன்‌  ஜீவனோடு இணைந்திருந்தும்‌ கர்ம பலத்தைப்‌ புசிப்பவன்‌ ஜீவனே, இவனல்லன்‌ என்று மேலும்‌ கூறுகின்றன, 
ஆதலால்‌ எல்லாம்‌ ப்ரஹ்மமே என்ற வாக்கியத்தில்‌  கருதப்படுவது பகவானே. 

2. 2. உண்பவன்‌ : கடவல்லியில்‌ [7-2 45) **யஸ்ய பிரஹ்ம ச க்ஷத்ரம்‌.௪. உயே பவத ஓதத: மருத்து? 
 
யஸ்யோப 'ஸேசதம்‌''-- எவனுக்கு ப்ராஹ்‌மணரும்‌ க்ஷ்த்ரியர்‌களும்‌ உணவாகின்றனரோ, : எவனுக்கு எமன்‌: 
ஊறுகாயோ என்று உண்பவன்‌ ஒருவனாக வெளியிடப்‌பட்டுள்ளது. கர்ம பலனுடைய ஜீவனே உணவு போன்றவற்றை உண்ண இயலும்‌. 
ஆதலால்‌ இங்குச்‌ சொல்லப்‌படுபவன்‌. ஜீவனே என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஸம்ஹார காலத்தில்‌ பகவான்‌ செய்வது' இங்குக்‌ கூறப்படும்‌ பொருள்‌. ஸம்ஹாரம்‌ செய்வோன்‌ பகவான்‌; 
ப்ராண்மணர்‌, க்ஷத்ரியர்‌ என்பன உபலக்ஷணத்தால்‌ உலகங்களைக்‌ காட்டுவன. 
ஊறுகாயைக்‌ கொண்டு.  உணவு உண்பது போல பகவான்‌ யமனைத்‌ துணையாகக்‌ கொண்டு அழிக்கிறான்‌. 
உலகங்களை உண்பது என்பது ஜீவனால்‌ இயலாதது; ஆதலால்‌ "இங்குக்‌ கூறப்படுவது பகவானே..' 

இதய குகையில்‌ இருவர்‌ . ருதம்‌ பிபந்தெதெனெ ஸுஹ்ருதஸ்ய லோகே குஹாம்‌ ப்ரவிஷ்டென''(கடவல்லி 71-53-1312 
கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌; புண்ய லோகமான இவ்வுலகில்‌ இதய குகையில்‌ நுழைந்திருப்பவர்கள்‌ 
இவ்விருவர்‌ என்ற வாக்கியத்தில்‌ கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌ யார்‌ யார்‌? 
இவர்கள்‌ ஜீவனும்‌ ப்ராணனும்‌, அல்லது ஜீவனும்‌ புத்தியும்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஜீவனும்‌ பகவானுமே இதயத்தில்‌ இருப்பவர்கள்‌ என்பதே வேத வாக்கியங்களில்‌ கூறப்‌படுகிறது. 
ஆத்ம ஞானத்தாலே அறிபவனும்‌, எங்கும்‌ வியாபித்திருப்பவனும்‌ இன்ப துன்பங்கள்‌ இல்லாதவனுமான பகவான்‌ 
இதயத்தில்‌ இருக்கிறான்‌ என்றும்‌, காம பலத்தை அனுபவிக்கும்‌ ஜீவன்‌ ப்ராணனோடு இதில்‌வாழ்கின்றான்‌ என்றும்‌ 
வேத வாக்கியங்கள்‌ கூறுன்றன: 
கர்ம பலன்‌ அனுபவிப்பது ஜீவன்‌; பகவானும்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பது எவ்வாறு? பகவான்‌ ஜீவனை அனுபவிக்கச்‌ செய்கிறான்‌; 
செய்விப்பவனையும்‌ செய்வதாகச்‌ சொல்லுவதுண்டு. ஆதலால்‌ உலகை உண்பவனாக ஓதப்படுவோன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

அன்றியும்‌ இதே பகுதியில்‌ வரும்‌ விஷயம்‌ ஒன்று; 
பகவான்‌ மிக மிகப்‌ பெரியவன்‌; இவன்‌ வரிக்கும்‌ ஜீவனே இவனை அடையத்‌ தக்கவன்‌. ஜீவன்‌ உபாஸிப்பவன்‌, 
பகவான்‌ உபாஸிக்கப்படுபவன்‌? ஜீவன்‌ பகவானை அடைபவன்‌ என்பது. 
ஆதலால் சராசரங்களை உண்பவன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

2. 3. கண்ணிலே காணப்படுவோன்‌ 
சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவனொரு புருஷன்‌ கண்ணிலே காணப்படுகிறானோ, இவனே 
ஆத்மா, அம்ருதம்‌, அபயம்‌, ப்ரஹ்மம்‌ என்பது, 
-இவன்‌”* என்று  .. சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவரும்‌ அறிந்ததாக ஓதியிருப்பதால்‌, 
இது ஜீவன்‌ அல்லது எதிரே நிற்பவரது ப்ரதிபிம்பம்‌, அல்லது கண்ணுக்கு அபிமான தேவதை. இது ஒரு கருத்து, 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ (4-75-3) வருவது* இவனே அனைவர்க்கும்‌ ஆத்மா, ஆராவமுது, 
பயமற்றவன்‌, ப்ரஹ்மம்‌, அழகான யாவும்‌ நிரம்பப்‌ பெற்றவன்‌, நல்லன யாவும்‌ வாய்ந்திருப்பவன்‌; 
இவனே அடியார்க்கு நல்லன தருபவன்‌; ஆதலால்‌ இவனே மிகச் சிறந்து விளங்குபவன்‌. 
இவ்வாறான பெருமை பரமாத்மாவுக்கே பொருந்தும்‌; ஜீவனுக்கும்‌ ப்ரதி பிம்பத்திற்கும்‌ அபிமான தேவதைக்கும்‌ பொருந்தாது. 

பரமாத்மாவை யோகிகள்‌ தமது கண்ணில்‌ தேக்க வல்லவார்‌. இதனாலும்‌ பகவான்‌ கண்ணில்‌ இருப்பதாகக் கொள்ளலாகும்‌. 
* பகவான்‌ சுகத்தோடு கூடியவன்‌ என்று வேத வாக்கியங்கள்‌ சொல்லுகின்றன. 
இவனை உபாஸிக்க வேண்டிய ஸ்தானத்தை ய ஏஷோசக்ஷிணி'' என்பதால்‌, கண்ணில்‌ உள்ள இவன்‌ பரமாத்மாவே ஆகவேண்டும்‌, 
மற்றவர்‌  அல்லர்‌. 

பரம புருஷனை உபாஸிப்பவர்களுக்கு அர்ச்சிராதி மார்கம்‌ உண்டு. 
அஷி புருஷனை அறிந்த உபகோஸலனுக்கு அர்ச்சிராதி உபதேசிக்கப்படுகிறது. ஆதலால்‌ அஷி புருஷன்‌ பரம புருஷனே. 

தேர்வு 1: சாந்தோக்யத்தில்‌ ஓரிடத்தில்‌ வரும்‌ விஷயம்‌: “ கம்‌ ப்ரஹ்ம கம்‌ ப்ரஹ்ம”'-
சுகமுள்ளது ப்ரஹ்மம்‌, மிகப்‌ பெரியது ப்ரஹ்மம்‌. இதனை உபாஸிக்‌கும்‌ ஸ்தானம்‌ கண்‌ என்பது. 
ஆதலால்‌ இவன்‌ பரமாத்‌மாவே; சுகமே காணாத மற்றையோர்‌ அல்லர்‌. 

தேர்வு 2: இந்த்ரியங்கள்‌ யாவற்றிற்கும்‌ வேர்ப்‌பற்றான ஜீவன்‌ இதயத்திலேயே இருக்கிறான்‌; 
ஆதலால்‌  கண்ணில்‌ இருப்பதற்கல்லை. எதிரில்‌ இருப்பவரது ப்ரதிபிம்பம்‌ எப்போதுமே கண்ணில்‌ இருக்க இயலாது? 
எதிரில்‌ இருக்கும்போதுதான்‌ ப்ரதிபிம்பம்‌ காணமுடியும்‌ * 
வெகு தொலைவிலுள்ள ஆதித்யன்‌ கண்ணில்‌ இருப்பதாகக்‌ கூறவில்லை; கிரணங்களாலே கண்ணில்‌ இருப்பதாகக்‌ கருதப்படுகிறது.
ஆதலால்‌ இம்மூன்றும்‌ குறிக்கும்‌ படவில்லை. அக்ஷி புருஷன்‌ பரமாத்மாவே.
 
2.4. அந்தர்யாமி பரம புருஷன்‌

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில்‌: எவன்‌ பூமியில்‌ நிற்கிறானோ, பூமிக்குள்‌ இருக்கிறானோ, 
எவனை பூமி  ௮றியாதோ, எவனுக்கு பூமி சரீரமோ, எவன்‌ பூமியுள் நுழைந்து நியமிக்கின்றானோ அவனே உனக்கு ஆத்மா என்றறிவாய்‌; 
அவன்‌ மரணமில்லாத அந்தர்யாமி என்று தொடங்கி, நீர்‌, நெருப்பு, அந்தரிக்ஷம்‌, வாயு, தயு வோகம்‌, ஆதித்யன்‌, 
திசைகள்‌, சந்த்ர தாரகைகள்‌,  ஆகாசம்‌, _தமஸ்‌, தேஜஸ்‌ இவற்றிற்கு அந்தர்யாமியாகச்‌ சொல்லப்பட்டுள்ளது. 
பின்பு ப்ராணன்‌, வாக்கு, கண்‌, காது, மனம்‌, தோல்‌, விஜ்ஞானம்‌, ரேதஸ்‌ இவற்‌றிற்கும்‌ அத்தர்யாமியாவான்‌ என்றும்‌ குறிப்பிட்டுள்ள . 
அன்றியும்‌ இந்த அந்தர்யாமி காண்பவன்‌, கேட்பவன்‌ என்பதும்‌, அன்றியும்‌ இவனைக்‌ காட்டிலும்‌ காண்பவன்‌ 
கேட்பவன்‌ வேறு எவனுமிலன்‌ என்றும்‌ விளக்கப்‌ பெற்றுள்ளது. அந்தர்யாமி என்று கூறிய பிறகு, 
இந்தரியங்களால்‌ வரும்‌ அறிவுடையவனாகக்‌ கூறுவதால்‌ இவன்‌ ஜீவன்‌ என்பதே தகும்‌. இது ஒரு கருத்து. 

தீர்வு : இங்கு விவரிக்கப்பெறும்‌ பண்புகள்‌ யாவும்‌ பரம்பொருளான நாராயணனுக்கே ஏற்றவை. 
**ஏஷ ஸர்வ பூதாத்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண;, அந்தர்பஹிச்ச தத்‌ ஸர்வம்‌ வயாப்ய 
நாராயணஸ்‌ ஸ்தித::” என்பன இதற்கு ஆதாரமாவன. 
காண்பவன்‌, கேட்பவன்‌ என்பன பற்றி, “இவன்‌ கண்‌ இல்லாமலே காண்கிறான்‌, காதில்லாமலே கேட்கிறான்‌”? 
என்று உபதிஷத்‌ இவனையே கூறுகிறது: “இவனைத்‌ தவிரக்‌ காண்பவன்‌ வேறிலன்‌'' என்றதும்‌ இவனைப்‌ பற்றியே. 

மேலும்‌ இப்பகுதியில்‌ பகவானைப்‌ பற்றி இயற்கையாகவே மரணமில்லாதவன்‌, யாவற்றுக்கும்‌ ஆத்மா, 
யாவற்றையும்‌ நியமிப்பவன்‌ என்று அந்தர்யாமியாகச்‌ சொல்லப்படுகிறது. இந்தப்‌ பண்புகள்‌ ஜீவர்களுக்கும்‌ பொருத்த மாட்டா. 

அன்றியும்‌, “எவன்‌ ஆத்மாவில்‌ நிற்கிறானோ, எவனை ஆத்மா அறியாதோ, எவனுக்கு ஆத்மா சரீரமோ அவனே ஆத்மா, அந்தர்யாமி” 
என்று காட்டப்‌  பெறுவதால்‌, நாராயணனே எல்லா பூதங்களுக்கும்‌  அந்தர்யாமி என்பது தெற்றென விளங்குகிறது. 

2-5. காணப்படாதவன்‌ 

முன்பு கூறியது, யாவும்‌ காண்பவனான அந்தர்யாமி  பரமாத்மா என்று. 
இங்குக்‌ காணப்படாததாகச்‌ சொல்லப்படும்‌ தத்வம்‌ ஒன்றை முண்டகோபதிஷத்‌ வெளியிட்டதைப்‌ பற்றி ஆராயப்படுகின்றது. 
பூதயோனி யான அக்ஷரத்திற்குப்‌ பண்புகள்‌: காணப்படாமை அறியப்படாமை, கோத்ரமின்மை, வர்ணமில்லாமை, 
கண்‌ காது கை கால்கள்‌ இல்லாமை, எங்கும்‌ வியாபித்‌து இருப்பது, தலைமை பெற்றது, அழிவின்மை, 
நுண்ணிய தாக இருப்பது, பூதங்களுக்குக்‌ காரணமாயிருப்பது.” 

அடுத்து: வரும்‌ கருத்து: மேலான அக்ஷரத்தைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பது. முதலில்‌ அக்ஷரம்‌: 
என்று சொல்லி, அக்ஷரத்திற்கு மேம்பட்டது என வந்துள்ளது. 

இவ்வாறான தத்வங்கள்‌ ப்ரகருதியும்‌ புருஷனுமாக வேண்டும்‌ என்பது ஒரு கருத்து. 
(பூதயோநி அக்ஷரம்‌--தங்களுக்குக்‌ காரணமாய்‌ அழிவில்லாதது). 

மறுப்பு: இதே உபநிஷத்தில்‌ குறிப்பிடப்படுவது* 
யஸ்‌ ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌''--எவன்‌ எல்லாப்‌ பொருள்‌களின்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை அறிவானோ. 
இதை ஆராய்ந்தால்‌ மேலே கூறியுள்ளது மூலப்ரக்ருதியாக முடியாது. 
“அக்ஷராத்‌ பரத: பர: மூலப்ரக்குதி' அழியாதது; இதைக் காட்டிலும்‌ மேலானது பரமாத்மாவுக்கே ஓக்கும்‌. 
“ததாகஷராத்‌ ஸம்பவதீஹ விச்வம்‌'”  இந்த அக்ஷரத்திலிருந்து சேதன அசேதனங்கள்‌ உண்டாகின்றன என்பதாலும்‌ இது மூலப்ரக்ருதி ஆகாது; 
பரமாத்மாவே யாகவேண்டும்‌. 

மேலும்‌ இந்த உபநிஷத்தில்‌ வெளியிட்டிருப்பது* 
இவனுக்கு அக்நி எனப்பெறும்‌ த்யுலோகம்‌ தலை, சூர்யர்‌கள்‌ கண்கள்‌, இசைகள்‌ காதுகள்‌, வேதங்கள்‌ மூச்சு, 
வாயு ப்ராணன்‌, உலகங்கள்‌ இதயம்‌, பூமி கால்கள்‌? 
இவன்‌ எல்லஈ. பூதங்களிலும்‌ அந்தராத்மாவாக இருப்‌பவன்‌: இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவுக்கே ஏற்றவை. 
ஆதலால்‌ காணப்படாமை போன்ற பண்பு களால்‌ ஒதுவது பூதயோநி  எனப்பெறும்‌ பரமாத்‌ மாவையே 

2. 8... வைச்வாநரன்‌' 
முன்பு விளக்கியவாறு மூவுலகங்களும்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ மேன்மை பசுவானுக்கே, 
வேறு எதற்குமில்லை என்பது இங்கு நிருபிக்கப்படுகிறது. 
வைச்வாநர உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறுமிடத்தில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி வரும்‌ விவரம்‌: 
எங்குமிருப்பவன்‌,,  எல்லா லோகங்களிலுமுள்ள எல்லா ஆத்மாக்களிலும்‌. அன்னத்தை உண்பவன்‌ என்று, 
வைச்வாநரன்‌ என்ற சொல்‌ ஜாடராக்நியாகவும்‌, பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான அக்நியாகவும்‌, 
ஒரு தேவதையாகவும்‌, பரமாத்மாவாகவும்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்ளது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பரமாத்மாவே என்று தீர்மானிக்க இயவாது. (இது ஒரு கருத்து.) 

“மறுப்பு: இந்தப்‌ பகுதியில்‌ முதலில்‌ சொல்லப்‌ படுவது: ப்ரஹ்மம்‌ என்ற தத்வம்‌ யாவர்க்கும்‌ ஆத்மா' என்று. 
பின்பு இதனையே வைச்வாநரம்‌ என்றே காட்டி யுள்ளது. பல இடங்களிலும்‌ இவ்வாறே கூறப்படுகிறது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பகவானையே. 
அன்‌றியும்‌ மூதலிலே காட்டியுள்ள பகுதியில்‌ வரும்‌ விவரங்கள்‌ யாவும்‌ பகவானைப்‌ பற்றியே வேறோர்‌ உபநிஷத்தில்‌ 
வந்துள்ளன. 

சங்கை: வைச்வாநரம்‌ என்பது கார்ஷஹ்பத்யம்‌ முதலான மூவகை அக்நிகளாகச்‌ சொல்லப்படுகிறது.. 
அன்றியும்‌ முதலில்‌ செய்யும்‌ ஆஹுதி *ப்ராணாய ஸ்வாஹா”” என்பது ஜாடராக்நியைப்‌ பற்றியே. 
ஜாட ராக்நி புருஷசரீரத்தில்‌ இருப்பது. ஆதலால்‌ இது. பர மாத்மா என்று தீர்மானிப்பதற்கில்லை. 
விளக்கம்‌ : இப்பகுதியில்‌ உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறி இருப்பது: 
இது ஜாடராக்நியைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பரமாத்மாவை என்பது. வைச்வாநராத்மா” புருஷன்‌ என்றும்‌, 
இவனே **ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:”: என்று சொல்லப்படுபவன்‌ என்றும்‌, 
புருஷ சப்தம்‌ இயல்‌பாக வாஸுதேவனிடமே நிலைநிற்பதெதன்றும்‌ வந்துள்‌ளது. 
ஆதலால்‌ இங்குக்‌ குறிப்பது ஜாடராக்நியைச்‌ சரீரமாகவுள்ள பரம புருஷனையே. 

தேர்வு 1: முதலில்‌ குறிப்பிட்டுள்ள விவரங்கள்‌ மூன்றாவது பூதமான அக்நிக்கு ஒவ்வா. 
ஆதலால்‌ வைச்வாநரன்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: இப்பகுதியில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி இவன்‌ த்யுலோகம்‌ முதல்‌ பூமி வரையில்‌ (பூமியிலும்‌) 
எல்லாப்‌ பொருள்களிலும்‌, ஜீவர்களது அவயவங்களிலும்‌ உறைவதாக வேதத்தில்‌ வந்துள்ளது. 
இவ்வாறு விவரம்‌ பெற்றுள்ளவன்‌ பரம புருஷனே. 

தேர்வு 3: அக்நி;, வைச்வாநர: என்ற சொற்களின்‌ பொருள்‌: அக்ரம்‌ நயதீத்யக்நி: உயர்நிலைக்கு அழைத்து 
செல்பவன்‌ அக்நி. “*விச்வேஷாம்‌ நராணாம்‌ நேதா வைச்வாதர:--நரர்கள்‌ யாவரையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ வைச்வாதரன்‌. 
இவை நாராயணனையே குறிப்பன. 

*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம” என்று யாவும்‌ ப்ரஹ்மமே. சராசரங்களை உண்பவனாகக்‌ கூறப்பட்டவனும்‌, 
கண்ணில்‌ நிற்பவன்‌ என்பவனும்‌, அந்தர்யாமி யாகக்‌ கூறப்பட்டவனும்‌, அக்ஷரம்‌ என்ற மூலப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பவனும்‌ 
வைச்வாநர: என்பவனும்‌ பரமாத்மாவே.  
-----------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

பகவானுக்கு சேதனங்கள்‌, அசேதனங்கள்‌ விட விலக்ஷணன்  என்று நிறுவும்போது 
முதல்‌ பாதத்தில்‌ தெளி வின்மையே 'மிக்குள்ள வேத வாக்கியங்களை வ்யாசர்‌ ஆராய்ந்தார்‌; 
இரண்டாம்‌ பாதத்தில்‌ தெளிவின்மை யுள்ள வாக்கியங்களை ஆராய்ந்தார்‌. 
இந்த அடையாளங்கள்‌ தெளிவாக உள்ள இடங்கள்‌ இப்பாதத்தில்‌ ஆய்வுக்குப்‌ பயன்படுகின்றன. 

3.1. தேவலோகம்‌, பூமி யாருக்குச்‌ சரீரம்‌? 

தேவலோகம்‌, பூமி இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்‌ளும்‌ வைச்வாநரன்‌ பரமாத்மா என்று விளக்கப்பட்டது. 
தேவலோகம்‌ சரீரமாகக்‌ கொள்பவன்‌ யார்‌ என்று இப்போது ஆய்வு. 

முண்டக உபநிஷத்தில்‌, எவனிடம்‌ தேவலோகம்‌,பூமி, அந்தரிஷம்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌ யாவும்‌ சேர்ந்துள்ளனவோ, 
அந்த ஆத்மா ஒருவனையே ஆதரிப்பீர்‌ என்று வந்துள்ளது. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனுடன்‌ இணைந்துள்ளன; பலவிதமாகப்‌ பிறக்கும்‌ இவன்‌ சரீரத்‌தினுள்‌ திரிகிறான்‌. 
தேரின்‌ நாபியிலுள்ள ஆரங்கள்‌ போல்‌ இவனிடம்‌ நாடிகள்‌ சேர்ந்துள்ளன என்று மேலும்‌ விவரம்‌ காண்கிறோம்‌. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனிடம்‌ சேர்ந்திருப்பதாகவும்‌ கூறப்படுகிறது. 
இவை யாவும்‌ ஜீவனுக்கே பொருந்துவன என்பது ஒரு கருத்து. 

மறுப்பு : இப்பகுதியில்‌ இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. இவனைப்‌ பற்றி மேலும்‌ கூறுவது. : 
இவன்‌ மோக்ஷத்திற்கு ஸாதனம்‌. இவனை அறிபவனே முக்தனாகிறான்‌, மோக்ஷத்திற்கு வேறு வழி யில்லை. 
மேலும்‌ நாராயண வல்லியில்‌, “தாமரை மலர்‌ போன்ற இதயத்தின்‌ நடுவில்‌ நுட்பமான துவாரம்‌ ஒன்றுள்ளது; 
இதில்‌ நாராயணன்‌ இருச்கிறான்‌ என்று வர்ணிக்கப்படுகிறது. கீதையிலும்‌, “*பிறப்பில்லாத பரம 
புருஷன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌'' என வந்துள்ளது. 
நம்‌ மனம்‌ முதலியவற்றிற்கு தாராயணனே ஆதாரம்‌: என்றறிகிறோம்‌. ஆதலால்‌ தேவலோகம்‌ முதலான  வற்றிற்கு ஆதாரமானவன்‌ பசுவானே. 

தேர்வு 1: ஆகாசம்‌, பூமி இவை இருப்பிடமாக உடையவன்‌, பொன்‌ நிறமானவன்‌, உலகைப்‌ படைப்பவன்‌, நியமிப்பவன்‌; 
உலகுக்குக்‌ காரணமானவன்‌.இதனால் தேறுவது: பகவானே எங்கும்‌ இருப்பிடமாக , பகவான்‌ உடையவன்‌ என்பது. 

தேர்வு 2: முண்டகோபநிஷத்தில்‌, ஜீவனும்‌ பகவானுமான இரண்டு பறவைகள்‌ இணைந்து ஒரே மரத்‌தில்‌ அமர்ந்துள்ளன;
ஒன்று கர்மமாகிய இனிய பழத்தைக்‌ தின்கின்றது, மற்றது இதைத்‌ தின்னாமல்‌ சிறப்புடன்‌ விளங்குகிறது என்றுள்ளது. 
கர்ம பலன்‌ இல்லாதவனும்‌, ஸா்வஜ்ஞனும்‌, மோக்ஷத்திற்கு உபாயமானவனும்‌ 
ஆகாசம்‌, பூமி போன்றவற்றை இருப்பிடமாக உடையவன்‌ பசுவானே என்பது தேறுகின்றது. 

-பூமா 
“பூமா” பெருமை உடையது என்ற தத்வத்தை அறிய நாரதர்‌ ஸநத்குமாரரிடம்‌ சென்றார்‌. ஸநத்குமாரர்‌ 

மூதலில்‌ நாமம்‌ பெரியது என்றார்‌. இதனிலும்‌ பெரியது வாக்கு என்றார்‌. இவ்வாறு படிப்படியாக உபதேதசித்து 
ஜீவன்தான்‌ ப்ரஹ்மம்‌ என்று உபதேசித்தார்‌. ப்ராணனோடு சேர்ந்திருப்பதாலே ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே ப்ரஹ்மம்‌ என்றார்‌. 
இதற்கு மேல்‌ பல. கண்டங்‌கள்‌ வரையில்‌ இது பற்றி யாதும்‌ சொன்னதாகக்‌ கூற வில்லை. 
ஆதலால்‌ பூமா என்பது ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே, இது ஒரு கருத்து. 

மறுப்பு: இதே பகுதியில்‌ ஒரு கண்டத்திற்குப்‌ பின்‌, *ஸத்யம்‌ என்ற ப்ரஹ்ம வித்யையில்‌ ஸத்யம்‌ என்பது 
பூமா” என்று விளக்கம்‌ பெற்றுள்ளது. ஸத்யம்‌ என்பது பகவான்‌; இதுவே, சுகமாகும்‌, மிகச்‌ சிறந்ததாகும்‌ என்று புகழ்‌ பெற்றுள்ளது. 
ப்ராணனைப்‌ பற்றிய பேச்சு இந்த பிரகரணத்தில் இல்லை; முன்னமே முடிந்து விட்டது. 

ஒரு ஸூத்ரத்தில்‌ பூமா என்பது ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலானது என வந்துள்ளது. 
அன்றியும்‌, “ஆத்மா வினிடமிருந்து ப்ராணன்‌ உண்டாகின்றது” என்று தொடங்கி, ஸர்வ காரணமாக இருப்பது பூமா என்பதாலே என்று முடிகின்றது. 
இவ்விதம்‌ விவரித்தனயாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. ஆதலால்‌ பூமா  என்றது பரமாத்மாவையே. 
ஆகாசம்‌ அக்ஷ்ரத்தை ௮ண்டியிருக்கிறது என்றார்‌ யாஜ்ஞவல்கீயர்‌. 
அக்ஷரம்‌ என்பது பருமனல்லாதது, அணுவல்லாதது, சிவப்பில்லாதது, பசையில்லாதது, நிழலற்றது என்று விவரிக்கப்படுகிறது. 
இங்கு ஆகாசத்‌திற்கு ஆதாரமாக இருப்பது மூலப்ரக்ருதி என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஆகாசம்‌ பற்றிய விளக்கம்‌ ஒன்று. தேவலோகத்திற்கு மேலும்‌, பூமிக்குக்‌ சீழும்‌, இடையிலுள்ள உலகங்களிலும்‌ உள்ள 
பொருள்கள்‌ யாவும்‌ ஆகாசத்தையே அண்டி உள்ளன. இதனால்‌ ஆகாசம்‌ என்பது அம்பரம்‌ எனப்படுவதற்கும்‌ காரணமான 
மூலப்ரக்ருதியேயாகும்‌, இதற்கு ஆதாரமாவது பரமாத்‌மாவே. ஆதலால்‌ அக்ஷரம்‌ என்பது பரமாத்மாவையே. சங்கை : 
**யஸ்ய அக்ஷரம்‌ சரீரம்‌''! மூதலான வாக்‌ கியங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே அக்ஷர சப்தம்‌ உள்ளது. ஆதலால்‌ ஜீவன்‌ அக்ஷரமாகக்‌ கூடும்‌. 
விளக்கம்‌: இந்த அஷரத்தின்‌ மேலான நியமனத்‌தாலே சூர்ய சந்திரர்‌ தரித்து திற்கிள்றனர்‌ என்பதுவும்‌ நாம்‌ அறிவோம்‌. 
இவ்வாறு நியமிப்பது ஜீவனுக்குப்‌ பொருந்தாது; பரமாத்மாவுக்கே உரியது. 

தேர்வு : அக்ஷரத்தைப்‌ பற்றி விளக்கப்பட்டுள்ளது 
வேறொன்றால்‌ காணப்படாதது, யாவற்றையும்‌ காண்‌பது; வேறொன்றால்‌ கேட்கப்படாதது, யாவற்றையும்‌ கேட்பது என்று 
காண முடியாததும்‌ கேட்க முடியாததுமான ௮சேதனம்‌ அக்ஷரமாவதற்‌ கில்லை. 
ஜீவன்‌ காண் முடியாதவன்‌, பரமாத்மாவால்‌ எப்போதும்‌ காணப்படுபவன்‌. ஆதலால்‌ இவனும்‌ அக்ஷரமாக முடியாது. 
ஆதலால்‌ தனது நியமனத்தாலேயே யாவற்றையும்‌ தரிக்கும்‌ பரம புருஷனே அக்ஷர புருஷன்‌ என்பது நிச்சயம்‌. 

3. 4, காணப்படுபவன்‌ ;: மூன்று மாத்திரையோடு: ப்ரணவத்தை உபாஸிப்பவன்‌ அந்தரிக்ஷத்திற்கும்‌ 
மேலான ப்ரஹ்மலோகம்‌ அடைகிறான்‌ என்று ப்ரச்‌நோ பநிஷத்தில்‌ உள்ளது. 
இவன்‌ தேஹ இந்த்ரியங்‌கனைக்‌ காட்டிலும்‌ மேலான ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலான ஹ்ருதய வாஸியான புருஷனை அடைகிறான்‌ 
என்பதும்‌ காண்கிறோம்‌. ப்ரஹ்ம லோகம்‌ என்பது சதுர்முகனுடைய உலகம்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இதே ,பகுதியில்‌ வந்துள்ளது; ஹ்ருதய வாஸி புருஷன்‌ ஸம்ஸாரி ஜீவார்களைக்‌ காட்டிலும்‌ 
மேலான நித்ய முக்தரைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்று குறித்துள்ளது, 
அன்றியும்‌ பசி, தாகம்‌ முதலான இல்லாதது; ஜரா மரண மில்லாதது, யாவரிலும்‌ மேம்‌ பட்டது என்றும்‌ காண்கிறோம்‌. 
இவ் விவரம்‌ கர்மத்‌திற்கு வசப்பட்ட சதுர்முகனுக்குப்‌ பொருந்தாது? பரமாத்மாவுக்கே பொருந்தும்‌. 
ப்ரஹ்மலோகம்‌ என்பது ப்ரஹ்மத்தின்‌ லோகம்‌, பரம பதம்‌; ப்ரஹ்மாவின்‌ லோகமன்று, 
**தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று பாராட்டப்பட்டது. அந்தரிஷத்திற்கு மேற்பட்ட லோகம்‌ நான்முகனின்‌ லோகம்‌ என்பதும்‌ சரியன்று, 
ஆதலால்‌ காணப்படுவது ஸாவேச்வரனாகிய ஸ்ரீமந்‌ நாராயணனே. 

3. 5. தஹராகாசம்‌ 

ஓர்‌ உபநிஷத்தில்‌ ஒரு வாக்கியம்‌, இதயத்தில்‌ வஸிப்பவன்‌ ஆகாசம்‌ என்கிறது. 
பரமன்‌ உறையுமிடமான உடலில்‌ தாமரை போன்ற சிறிய இடம்‌ உள்ளது; இது ப்ரஹ்மத்தின்‌ இருப்பிடம்‌, 
இதனுள்‌ நுண்ணிய நிலையில்‌ ஆகாசம்‌ இருக்கிறது; இதற்குள்‌ இருப்பது தேடத்தக்கது, அறியத்‌ தக்கது என்றும்‌, 
இது தஹராகாசம்‌ என்றும்‌ குறித்துள்ளது. இது பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான ஆகாசம்‌ என்பது ஒரு கருத்து. 

மறுப்பு: மேல்‌ வாக்கியத்தில்‌ வந்துள்ள கருத்து; 
இதயத்தில்‌ வஸிப்பவன்‌ எங்கும்‌ வியாபித்திருப்பவன்‌, பாவ மற்றவன்‌, மூப்பு மரண மில்லாதவன்‌, சோக மற்றவன்‌, 
பசி தாக மில்லாதவன்‌, தடைபடாத விருப்பமும்‌ ஸங்கல்பமும்‌ வாய்ந்தவன்‌ என்பது. ஆதலால்‌ தஹரா காசம்‌ பரமாத்மாவே. 
தஹராகாசத்தினுள்‌ இருப்பதை உபாஸிக்கும்போது இங்கு விவரிக்கப்படும்‌ கல்யாண குணங்களை உபாஸிக்க வேண்டும்‌ என்றும்‌ வந்துள்ளது. 
அன்றியும்‌ பூதாகாசம்‌ போல்‌ இதயத்திலுள்ள ஆகாசம்‌ பெரியது என்றும்‌ விளங்குகிறது. 
ஆதலால்‌ தஹராகாசம்‌ பூதாகாசத்தைக்‌ காட்டிலும்‌ மாறுபட்ட பரமாத்மாவே, 

தேர்வு 1 :: சேதனர்‌ தூங்குகின்ற போது தஹராகாசத்தை அடைகின்றனர்‌. இது ப்ரஹ்ம லோகம்‌ என்பது 
வேதத்தில்‌ ஒரு கருத்து. ப்ரஹ்ம லோகம்‌ அறியப்படும்‌ - ப்ரஹ்மத்தைச்‌ சொல்லும்‌. '*'லோக்யதே இதி லோக: 
அறியப்படுவதால்‌ லோகம்‌ எனப்பெறும்‌. ப்ரஹ்மம்‌ என்று வழங்குவது ஸதி என்று பரமாத்மாவையே, 
சேதனர்‌ தூங்கும் போது அடைவது பூதாகாசத்தை யன்று. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: தஹராகாசம்‌ பற்றி உபநிஷத்‌ வெனி யிடுவது: இவ்வாத்மா உலகங்கள்‌ ஒன்றோடொன்று 
கலவாமல்‌ அணையைப்‌ போலே பிரித்து தரித்து நிற்கிறான்‌; இவனே ஸர்வேச்வரன்‌: இவனே ஜீவரா்களுக்கு அதிபதி; 
ஜீவராசிகளைக்‌ காப்பாற்றுவோன்‌ என்று. இக்‌ காரணத்தாலும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே தஹராகாசம்‌ என்று நிச்சயிக்கலாம்‌. 

தேர்வு 3: சாந்தோக்யத்தில்‌ ஒருவாக்கியம்‌ (7-9-1)பூதங்கள்‌ எல்லாம்‌ ஆகாசம்‌ என்ற பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றன என்பது. 
பரமாத்மாவைப்‌ பற்றி ஆகாசம்‌ என்ற சொல்‌ பயன்படுகிறது. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

ஒரு சங்கை: தஹராகாசம்‌ சிறியதாக இருப்பதால்‌ அணுவான ஜீவன் தான்‌ இதில்‌ பொருந்தக்‌ கூடும்‌. விபுவான பரமாத்மா இதில்‌ இருக்க இயலாது. 

விளக்கம்‌ : முக்தனான ஜீவாத்மா பரமாத்மாவோடு  ஸாம்யம்‌ பெறுகிறான்‌; இது அநுகாரம்‌. இதனாலேயே 
மூக்தி தசையில்‌ பகவானுக்குள்ள குணங்கள்‌ இவனும்‌ பெறுகிறான்‌. தஹராகாசம்‌ அநுகாரத்தால்‌ இந்த 
குணங்கள்‌ படைக்கவில்லை; இயற்கையாகவே பெற்றுள்‌ளது. ஆதலால்‌ அநுகரிக்கும்‌ ஜீவனில்‌ வேறுபட்டது;
௮னுகரிக்கப்படுவதான தஹராகாசம்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

தேர்வு 4: கீதையிலும்‌, “பரமாத்மாவை ௨பாஸிப்‌பதால்‌ ஜீவன்‌ பரமாத்மாவை: அனுகரிக்கிறான்‌'' என்‌றுள்ளது (1484-2), 
ஆதலால்‌ தெற்றென விளங்குவது; அனுகரிக்கப்படும்‌ தஹராகாசம்‌ அனுகரிக்கும்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறான பரமாத்மாவே என்பது,
 
3. 6, ப்ரமிதன்‌. 

ப்ரமித: கட்டைவிரலளவுள்ளவன்‌. அங்குஷ்டம்‌-- கட்டைவிரல்‌. கட்டைவிரல்‌ அளவுள்ள புருஷன்‌ என்று தொடங்கும்‌ ரிக்குக்களில்‌ கூறியுள்ளது: 
அங்குஷ்ட மாத்‌ரம்‌ அளவுள்ள ஜீவன்‌ ப்ராணனை நியமிப்பவன்‌, தனது கர்மங்களால்‌ கட்டுண்டவன்‌; கட்டை விரல்‌ அளவுள்ளவன்‌ சஞ்சரிக்கிறான்‌ என்று. 
இங்குக்‌ குறிப்பது ஜீவனே என்பது ஒரு கருத்து, இவை யாவும்‌ ஜீவனுக்குப்‌. பொருந்துவன. 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ இந்தப்‌ புருஷன்‌ 'முக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ புருஷர்களுக்குங்‌ காரணம்‌ என்று 
சொல்லப்படுகிறது. ஆதலால்‌ அங்குஷ்ட மாத்ரன்‌ பரமாத்மாவே. 

சங்கை : அளவே காண முடியாத பரமாத்மா எப்‌படிக்‌ கட்டைவிரல்‌ அளவுள்ளவனாகக்‌ கூடும்‌?' 

விளக்கம்‌ : உபாஸகர்களை அநுக்ரஹிப்பதற்காக  பரமாத்மா இவர்களது இதயத்தில்‌ கட்டைவிரல்‌ அள  விற்கு அமைந்திருக்கிறான்‌. 

சங்கை: குதிரை முதலானவற்றிற்குக்‌ கட்டை விரலே இல்லையே; இவற்றின்‌ இதயத்தில்‌ கட்டை வீரல்‌ 
அளவுக்கு இவன்‌ உறைகிறான்‌ என்பது எப்படிப்‌ பொருந்தும்‌? 

விளக்கம்‌ : மனிதர்கள்‌ உபாஸிப்பதற்காகக்‌ கூறுவதாலே கட்டைவிரல்‌ அளவு என்று குறிப்பிட்டுள்ளது. 

அங்குஷ்ட மாத்ரனைப்‌ பற்றி மேலும்‌ சில விவரங்கள்‌: 
'இவனிடம்‌ யாவரும்‌ நடுங்குகின்றனர்‌. இவனிடம்‌ பயத்‌தால்‌ அக்நி சுடுகிறது; ஸூர்யன்‌ காய்கிறான் இந்தரன்‌, 
வாயு, யமன்‌ தங்கள்‌ தங்கள்‌ செயல்களைச்‌ செய்‌கின்றனர்‌. இத்தகைய இயல்புடையவன்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

மேலும்‌ இந்தப்‌ புருஷனின்‌ ஒளியாலே எல்லா ஒளிகளும்‌ விளங்குகின்றன என்றும்‌ கூறுவதால்‌, இத்தகைய 
மேன்மை யுடையவன்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே என்பது தெளிவு. 

3. 7. ஆகாசம்‌ பரமாத்மாவே. 

சாந்தோக்யதக்தில்‌ தஹர வித்யையில்‌ கடைசியில்‌ வரூ வது: நாம ரூபங்களை நிர்வஹிப்பது ஆகாசமே. இவை! 
இல்லாமலிருப்பது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும்‌.. அம்ருதமாகவும்‌, ஆத்மாவாகவும்‌ இருப்பது. 
ஆகாச மெனப்படுபவன்‌ முக்தி யடைந்த ஜீவன்‌ என்பது ஒரு, கருத்து. 

ஆதரவான விளக்கம்‌ : முக்த ஜீவன்‌ உலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவது, குதிரை தனது உடலிலுள்ளஉரோமங்களை உதிர்ப்பது போல்‌, 
சந்திரன்‌ ராகுவின்‌ வாயிலிருந்து விடுதலை பெறுவதுபோல்‌ என்று சாந்‌தோக்யம்‌ வரைகன்றது. 
இந்த விவரங்கள்‌ முக்த ஜீவ னுக்கு நன்கு பொருந்துவன. நாம ரூபம்‌ வஹிப்பது: என்பது இவனுக்கே பொருந்தும்‌. 

மறுப்பு : ஜீவன்‌ நாம ரூபம்‌ பெறுவது தனது கர்மத்‌தாலே, நாம ரூபங்களை நிர்வஹிப்பவனுக்கு நாமரூபங்‌- 
கள்‌ இல்லை என்பதால்‌, இவன்‌ ஜீவனினும்‌ சதாம்‌ பரமாத்மாவே, 

இதற்கு முன்னமேயே தஹராகாசமான பரமாத்‌மாவைப்‌ பற்றிக்‌ கூறியிருக்கிறது. 
இதனை உபா ஸிப்பவனது ஸ்வரூபம்‌ இங்குச்‌ சொல்லப்படுகிறது. நாம ரூப நிர்வாஹம்‌ புருஷனுக்குப்‌ பொருந்தாது. 
ஆதலால்‌ புருஷ ஸக்தம்‌ போன்றவற்றில்‌ நாம ரூப திர்வஹகனாகக்‌ கூறப்படும்‌ நாராயணனே இவ்விடத்தில்‌ சொல்‌லும்‌ ஆகாசம்‌ என்பது தெள்ளத்‌ தெளிவு. 

ஒரு சங்கை : **தத்வமஸி'', “அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி”” போன்ற வாக்கியங்களில்‌ ஜீவன்‌ ப்ரஹ்மத்தினின்றும்‌ 
வேறுபடாதவன்‌ என்று காட்டியுள்ளது. ஆதலால்‌ முக்தி நிலையிலுள்ள ஜீவனே பரமாத்மா என்று தேறுகின்றது . 
இதனாலும்‌ ஆகாசம்‌ என்பது ஜீவன்‌ என்று கருதுவதே.  ஏற்றது. 

விளக்கம்‌ : தூங்கும்போது ஜீவனைப்‌ பேரறிவாளனான பரமாத்மா அணைத்துக் கொள்வதால்‌ ஜீவன்‌ எதையும்‌ அறிவதில்லை. 
இதேபோல்‌ மரணத்தின்போது பரமாத்மாவோடு ஒரு வகைச்‌ சேர்த்தி ஏற்படுகிறது, 
பரமாத்மாவால்‌ அணைக்கப்பட்டு ஜீவன்‌ சரீரத்தை விடுகின்றான்‌ என்பது வேதத்தில்‌ வருவது. 
தன்னைத்‌ தானே தழுவிக்கொள்வதும்‌, தன்னோடே தான்‌ சேர்த்தி பெறுவதும்‌ நிகழமாட்டா. 
தூக்க நிலையிலும்‌ மரண நிலையிலும்‌.ஜீவன்‌ பரமாத்மாவைவிட வேறு. 
ஆதலால்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ பரம புருஷன்‌ வேறு என்பது தேறுகின்றது. 
ஆதலால்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌. வேறுபட்ட பரமாத்மாவே. 

மேலும்‌ “ஸர்வஸ்ய: அதிப்தி:””, “ஸர்வஸ்ய *வ€*”) “ஸர்வஸ்ய ஈசாந:'” என்று இவ்விடத்தில்‌ வருவதால்‌ 
இவன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பது தெளிவு. ஆதலால்‌ இப்பகுதியில்‌ கூறப்படுவது பர்மாத்‌மாவே. 

3, 8, ப்ரஹ்மாதிகளின் உபாஸனம் நிலை  

'ஒரு கருத்து; தேவர்களுக்குச்‌ சரீரம்‌ இருப்பதாக ப்ரமாணம்‌ எதுவுமில்லை. தேஹ மிருந்தால்கான்‌ உபாஸநம்‌ செய்ய இயலும்‌. 
சரீரத்தின்‌ தொடர்பால்‌ நிகழும்‌ இன்ப துன்பங்கள்‌ இவர்களுக்கு நேரமாட்டா. ஆதலால்‌ இவற்றிலிருந்து விடுதலை. பெற விருப்ப்மும்‌ இராது. 
ஆதலால்‌ இவார்கள்‌ உபாஸநம்‌ செய்வதில்லை. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டு, எவ்வாறெனில்‌: பகவான்‌ யாவர்க்கும்‌ நாம சூபங்கள்‌ அளிப்பதாக ஸங்கல்பித்தான்‌. 
தேஹ இந்தரியங்களைச்‌ செய்‌வதே நாம ரூபம்‌ என்பது. அன்றியும்‌ இந்திரன்‌, விரோசனன்‌ இவர்கள்‌ தங்கள்‌ கையில்‌ ஸமித்தை ஏற்றுக்‌ 
கொண்டே சதுர்முகனை அடைந்தனர்‌ என்பது ஒரு வரலாற்றில்‌ காண்கிறோம்‌. 
ஆதலால்‌ தேவர்களுக்கு அதிகாரம்‌ உண்டு, உபாஸநம்‌ செய்யத்‌ தகுதியும்‌ உண்டு. 

ஒரு சங்கை : யாகம்‌ செய்யும்போது தேவர்களை ஹவிஸ்‌ ஏற்பதற்காக அழைக்கிறோம்‌. யாகம்‌ பல இடங்களில்‌ நிகழலாம்‌. 
அப்போது ஒரே சரீரத்துடன்‌ எவ்‌வாறு சொல்லமுடியும்‌? ஆதலால்‌ சரீரம்‌ இல்லை என்பதே ஏற்கத்‌ தக்க கருத்து. 

விளக்கம்‌ : ஸெளபரி முனிவர்‌ ஒரே காலத்தில்‌ பல சரீரங்களோடு இன்பம்‌ துய்த்தார்‌. 
இதுபோல்‌  தேவர்‌களும்‌ பல சரீரங்கள்‌ ஏற்கக்‌ கூடியவர்களே. 

வேறொரு சங்கை : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டெனில்‌ உற்பத்தி விநாசங்கள்‌ உள்ளன. 
விநாசம்‌ ஏற்படும்‌ போது இவர்களது பேர்களும்‌ மறைந்துபோம்‌. இப் பேர்‌கள்‌ இந்த்ரன்‌, வருணன்‌ போன்றவை வேதங்களில்‌ வருவன. 
ஆதலால்‌ வேத சப்தங்களும்‌ நிலைநிற்க மாட்டா--ஆதலால்‌ இவ்வாறு ஆராய்ந்தால்‌ இவர்களுக்குச்‌ சரீரம்‌ இல்லை என்றுதான்‌ ஊகிக்கவேண்டும்‌. 

விளக்கம்‌: “*'வேதேத ரூபே வ்யாசுரோத்‌ ப்ரஹ்மா”” வேதத்தைக்‌ கொண்டே நான்முகன்‌ படைத்தான்‌ என்‌பது வேத்‌ வாக்கியம்‌. 
“ஸூர்ய சந்த்ரமளெள தாதா யதா பூர்வ மகல்பயத்‌'' என்பது தைத்திரீய வாக்‌யம்‌.. 
படைப்பின்போது நான்முகன்‌ பூர்வ கல்பத்தில்‌ இருந்தவாறே வேதத்தின்‌ மூலமாகப்‌ படைக்கின்றான்‌, 
வேத சப்தங்களைக்‌. கொண்டே தனித்தனியாகவும்‌ படைக்‌கின்றான்‌. 
ஆதலால்‌ இந்த்ரன்‌, வாயு, அக்நி போன்ற பூதங்கள்‌ எப்போது முள்ளவையே. 

வேறொரு சங்கை: மது வித்யை போல்வன வற்றில்‌ வஸூக்கள்‌, ஆதித்யர்‌ போன்ற தேவர்களை உபாஸனம்‌. 
செய்து வஸு பதவி, ஆதித்ய பதவி பெறக்கூடும்‌ என்று கூறியிருக்கறது. 
ஏற்கனவே இப்பதவியிலுள்ள தேவர்‌கள்‌ உபாஸநம்‌ எவ்வாறு செய்யக்‌ கூடும்‌? 

விளக்கம்‌ : இத்தகைய தேவர்கள்‌ பரமாத்மாவைப்‌ பெறுவதற்கு உபாஸநம்‌ செய்யலாம்‌. 
அன்றியும்‌ இந்தப்‌ பதம்‌ எப்போதும்‌ நிலைப்பதற்காகவும்‌ உபாஸநம்‌ செய்யக்‌ கூடும்‌. 
ஆதலால்‌ தேவர்கள்‌ நம்மைப்‌ போல்‌ இறைஞ்சித்‌ தமது பதம்‌ நிலைக்கப்‌ பெறுகின்றனர்‌; பகவானையும்‌ பெறுகின்றனர்‌. 

தெளிவான வேத வாக்கியங்களைக்‌ 'கொண்டு பகவான்‌ எங்கும்‌ உறைபவன்‌ என்று விவரிக்கப்படுகின்றது. 
த்யுலோகம்‌, பூமி போல்வனவற்றிற்கு இருப்‌பிடம்‌ பகவான்‌. பூமா எனப்படுவது ஸத்யம்‌ என்ற பரமாத்மா. 
மூலப்ரக்ருதிக்கும்‌ ஆதாரமான அஷரமும்‌ பகவானே, ஞானிகளால்‌ காணப்படுவோன்‌ பசுவானே. 
தஹராகாசமும்‌ பகவான்‌, கட்டை விரல்‌ அளவிற்கு இதயத்தில்‌ உறைபவன்‌ பகவான்‌. 
நாமரூபங்களைச்‌ செய்யும்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோனும்‌ பகவானே. 
தேவர்களும்‌ ௨பாஸநஞ்‌ செய்யத்‌ தக்கவர்களே. 

----------------

4. நாலாம்‌ பாதம்‌. 

மிகத்‌ தெளிவான வேத வாக்கியங்களைக்‌ கொண்டு பகவான்‌ சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகக்‌ கொள்‌பவன்‌ 
என்று நிலைநாட்டுவதோடு இவனிலும்‌ வேறு பட்ட ஒருவன்‌ இல்லை யென்பது இந்தப்‌ பாதத்தில்‌ விவரிக்கப்படுகிறது. 
4. 1, ஸாங்க்யர்‌ கொள்கை. 

கடோபநிஷத்தில்‌ (1-7-53-1-7-11) வந்துள்ள விஷயம்‌: இந்த்ரியங்களுக்கு மேற்பட்டவை அர்த்தங்கள்‌; 
அர்த்தங்‌களுக்கு மேற்பட்டது மனம்‌; மனத்திலும்‌ மேலானது அறிவு; அறிவைக்‌ காட்டிலும்‌ பெரியது ஆத்மாவான மஹான்‌; 
இதைக்‌ காட்டிலும்‌ மேலானது அவயக்தம்‌; இதனிலும்‌ புருஷன்‌ பெரியவன்‌; புருஷனைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ எவனுமிலன்‌; 
இப்புருஷனே எல்லை நிலம்‌, மேலான கதியு மாவான்‌. ஸாங்க்யார்களது கொள்கை இதனையே ஒட்டி யுள்ளது. 
இக்கருத்தின்படி இருபத்‌தைந்தாவது தத்வமான புரூஷனைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ இல்லை. 
ஆதலால்‌ ஈச்வர தத்வம்‌ இல்லை. அவ்யக்தம்‌, ப்ரதானம்‌, ஆனுமாநிதம்‌ எனப்‌  பெறும்‌ மூலப்ரக்ருதியே 
உலகுக்குக்‌ காரணம்‌ என்கின்றனர்‌ நிரீச்வர ஸாங்க்யர்‌. 

மறுப்பு: கடோப நிஷத்தில்‌ இதே பகுதியில்‌ (1-8-10,12) பகவானை அடைய விரும்பும்‌ உபாஸகன்‌ 
தேரில்‌ ஏறிச்‌ செல்வதாக உருவகப்‌ படுத்தியுள்ளது. 
ஜீவன்‌ ரதி (ரதத்தில்‌ ஊர்பவன்‌). இவனது சரீரம்‌ தேர்‌? புத்தி தேர்ப் பாகன்‌; மனம்‌ கடிவாளம்‌; இந்த்ரியங்கள்‌ குதிரைகள்‌; 
சிற்றின்ப. விஷயங்கள்‌ இக்குதிரைகள்‌ செல்‌ லும்‌ வழி. 
இந்தத்‌ தேர்‌ மூதலானவற்றை வசப்படுத்திக்‌ கொள்வோன்‌ ஸம்ஸார வழியின்‌ அக்கரையான பரம 
பதத்தை அடைகிறான்‌ என்பதும்‌ வந்துள்ளது. 
இவ்விவரங்களை ஆராய்ந்தால்‌ மனம்‌, இந்த்ரியங்கள்‌ இவற்‌றோடு கூடிய சரீரத்தைக்‌ தன்‌ வசப்படுத்திக்‌ கொண்டு 
இப்புருஷன்‌ சேர்வது பரம புருஷனை என்பது தெளிவு 

இதே கருத்து கடவல்லியில்‌ (7-3-73)ல்‌ உள்ளது? 
அறிவாளியானவன்‌ வாக்கு முதலான இந்தீரியங்களை மனத்தில்‌ அடக்கவேண்டும்‌, 
இந்த மனத்தை ஆத்மா விலுள்ள அறிவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த அறிவைப்‌ பெரியவனான ஜீவாத்மாவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த ஜீவாத்மா தாழ்வுகள்‌ இல்லாத பரமாத்மாவிடம்‌ அடங்க வேண்டும்‌ என்று, 
இங்கு உபகாரஞ்‌ செய்யும்‌ பரம்‌ பரையே உள்ளது; காரண பரம்பரை யன்று; 
ஆதலால்‌ அவ்யக்தம்‌ என்று சொல்லால்‌ மூலப்ரக்ருதியைச்‌ சொல்ல வில்லை; சரீரத்தையே சொல்லுகின்றது. 

தேர்வு 1: வ்யக்தம்‌ என்ற ஸ்தூலமான உலகம்‌, அவ்யக்தம்‌ என்ற மூலப்ரக்ருதி, புருஷன்‌ இம்மூன்றையும்‌ 
அறிவது மோக்ஷம்‌ என்கின்றனர்‌ ஸாங்கயர்‌, இவ்வாறு “வேதத்தில்‌ கூறப்படவில்லை. ஆதலால்‌ ஸாங்க்ய தத்வம்‌ கூறவில்லை. 

ஸாங்க்யர்களது மறுப்பு : ஒரு மந்த்ரம்‌: சப்தம்‌, ஸ்பர்‌ சம்‌, ரஸம்‌, ரூபம்‌, கந்தம்‌ இல்லாததும்‌, அழிவில்லாததும்‌, 
ஆதியந்த மில்லாததும்‌, மஹானுக்கு மேற்பட்டதும்‌, நிலையானதுமான தத்வத்தை த்யானஞ்‌ செய்து 
ஸம்ஸாரத்திலிருந்து ஜீவன்‌ விடுதலை பெறுகிறான்‌ என்பது, 
மஹத: பரம்‌- மஹானளைக்‌ காட்டிலும்‌ பெரியது என்பதால்‌ இது மூலப்ரக்ருதியே. 

விளக்கம்‌; இப்பகுதியிலேயே இரண்டு மந்தரங்கள்‌ உள்ளன. 
ஒன்று கூறுவது: அறிவு சாரதியாகவும்‌, மனம்‌ கடிவாளமாகவும்‌ கொள்ளும்‌ மனிதன்‌ உலக வாழ்க்‌கையை நீத்து 
விஷ்ணுவின்‌ பதத்தை அடைகிறான்‌ என்பது. 
மற்றது: எல்லாப்‌ பொருள்களிலும்‌ மறைந்‌துறையும்‌ இந்தப்‌ பரமாத்மா மேலான நுண்ணறிவினாலேயே காணப்பெறுகிறான்‌ என்பது, 
ஆதலால்‌ முமுஷு அறியத்‌ தக்கது மூலப்ரக்ருதி ஆகாது; 

தீர்வு : நூகேதஸ்‌ என்ற ரிஷி குமாரனுக்கு யமன்‌ ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்‌, ஜீவ ஸ்வரூபத்தையும்‌, 
செய்ய வேண்டிய உபாஸனத்தையும்‌ உபதேசித்தான்‌. ஆத்மா இது என்று .விளக்க, இது சேர்வது 
“*“தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று உபாஸனத்தால்‌ பெறும்‌ விஷ்ணுவின்‌ பதமாகிய மோக்ஷம்‌ என்றும்‌ வெளியிட்டான்‌. 
இங்கு அவ்யக்தம்‌ என்ற சொல்லால்‌ மூல ப்ரக்ரூதி சொல்லவில்லை. 
4, 2. அஜா என்னும்‌ மந்த்ரம்‌. 

ச்வேதாச்வதர உபநிஷத்தில்‌ அஜாம்‌ என்று தொடங்கும்  மந்த்ரம்‌: சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற நிறங்கள்‌ 
உடையதாய்‌, தன்னைப்‌ போன்ற ப்ரஜைகள்‌ பல உற்‌பத்தி செய்வதாய்‌, பிறப்பற்றதான ஒன்றோடு ஒருவன்‌ உகந்து கூடியிருக்கிறான்‌. 
அனுபவிக்கும்‌ இதைப்‌ பிறப்பற்ற மற்றொருவன்‌ விட்டுச்‌ செல்லுகிறான்‌.
ஸாங்க்‌: யரின்‌ கருத்து; அஜா (பிறப்பற்றது); என்பது மூலப்ரக்‌ரதி; பல பொருள்‌ இது உற்பத்தி செய்வதாகக்‌ கூறி யிருக்கிறது. 
ஆதலால்‌ ப்ரஹ்மாதீமகம்‌ அல்லாத ஸ்வ தந்த்ரமான ப்ரக்ருதியே காரணம்‌ என்பது விளங்கும்‌. 

மறுப்பு : அஜாம்‌ என்ற இம்மந்த்ரத்தில்‌ மூலப்ரக்ருதி' ப்ரஹ்மாத்மகம்‌ அன்று என்பது கூறப்பெறவில்லை... 
”பஹ்வீ; ப்ரஜா; ஸ்ருஜமாநாம்‌'' என்ற இடத்திலும்‌ மஹான்‌ முதலிய தத்வங்களை ப்ரக்ருதி படைக்‌கிறது என்பதே உள்ளது; 
ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்‌கிறது என்று கூறவில்லை. ஆதலால்‌ ப்ரம்ஹத்தின்‌ தொடர்பற்ற மூல பரக்ருதி ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்கிறது என்று 
ஏற்பதற்கில்லை.' 

தேர்வு: தைத்திரீயத்தில்‌ பரமாத்மா அணுவைக்‌ காட்‌டிலும்‌ அணு, பெரியதைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ என்று 
தொடங்கிக்‌ கடல்கள்‌, மலைகள்‌ இவனிடமிருந்து தோன்‌றின என்று கூறுகின்றது. இம்மந்த்ரங்களினிடையே 
**அஜாமேகாம்‌”'”' என்ற மந்த்ரமும்‌ அமைந்துள்ளது.. 
ஆதலால்‌ மூலப்ரக்ருதி பகவானை ஆத்மாவாகவும்‌ காரணமாகவும்‌ கொண்டது என்பது வெளிப்படை. 

சங்கை: பகவான்‌ இவ்வுலகைப்‌ படைத்தான்‌ என்ற வாக்கியத்தால்‌ மூலப்ரகிருதியைப்‌ படைத்தான்‌. 
என்பது தேறுகின்றது, “*“அஜாமேகாம்‌'' என்று மூல ப்ரக்ருதி பிறப்பற்றது என்று வந்துள்ளது. இவை எவ்வாறு பொருந்தும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நாம ரூப மில்லாமல்‌: மூலப்ரக்ருதி என்ற அசேதனப்‌ பொருள்‌ பகவானுக்கு சரீரமாக உள்ளது. 
அப்போது மஹான்‌ முதவியன பரிணாமம்‌ பெறவில்லை. ஆதலால்‌ ௮ஜா எனப்படுகிறது. 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அதே மூலப்ரக்ருதி தன்மாத்திரைகள்‌ இந்த்ரியங்கள்‌, ஐந்து பூதங்களாக நாம ரூபம்‌ பெறுகிறது. 
ப்ரளய காலத்தில்‌ சூர்யன்‌ உதய ௮ஸ்‌தமனங்கள்‌ பெறுவதில்லை; 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ கார்ய நிலையில்‌ ஸ்தூலமாகி தேவர்களுக்கு போக்யமான மது என்ற நிலையில்‌ இருக்கிறான்‌. 
இதேபோல்‌ மூலப்ரக்ருதிக்குப்‌ பிறப்பும்‌ பிறப்பற்ற நிலையும்‌. 

4, 3. தத்‌வங்கள்‌ இருபத்தைந்து. 

*“யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா : ஆகாசச்‌ ச ப்ரதிஷ்டித:-தமேவ மந்ய ஆத்மாநம்‌ வித்வாந்‌ ப்ரஹ்மாம்ருதோ? ம்‌ர௬ுதம்‌''--
ஐயைந்து தத்‌ வங்களும்‌ ஆகாசமும்‌ எந்த ஆத்மாவிடம்‌ நிலை நிற்கின்றனவோ, பெரியதாய்‌ அழிவற்றதாய்‌ விளங்கும்‌ 
அந்த ஆத்மாவை இவ்வாறு அறியும்‌ மனிதன்‌ முக்தி பெறுகிறான்‌ என்பது ஒரு மந்த்ரம்‌.. 
ஸாங்கயா்களது கருத்து; ஐயைந்து என்பது இருபத்‌தைத்து. இவை; (1) பூதங்கள்‌ ஐந்து, (4) தன்மாத்ரைகள்‌ ஐந்து, 
(3) ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்து, (4) கர்மேந்தரியங்கள்‌ ஐந்து, (5) மீதி ஐந்து ப்ரக்ருதி மஹான்‌, அஹங்காரம்‌, மனம்‌, ஆத்மா. 
பூதங்கள்‌ ஐந்தில்‌: ஆகாசம்‌ சொல்லப்படவில்லை. இந்த மந்த்ரம்‌ ப்ரஹ்‌மத்தை ஆத்மாவாகக்‌ கொள்ளாத ஸாங்க்ய தத்வங்களைக்‌ கூறுகின்றது. 

மறுப்பு : ஸாங்க்யர்‌ ப்ரஹ்மாத்மகமில்லாத இருபத்‌தைந்து தத்வங்களை ஓத்துக்கொள்கின்றனர்‌. 
அஜாம்‌ என்ற மந்தரத்தில்‌ இனவ பரமாத்மாவை அண்டியுள்‌ளன என்று விளங்குகிறது. 
“*யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா:;:* என்ற இடத்தில்‌, ''யஸ்மிந்‌'* என்று குறிப்பிடும்‌ தத்வம்‌ ஒன்றும்‌, விட்டுப்போன ஆகாசமும்‌ சேர்ந்து 
இருபத்‌தேழ தத்‌வங்கள்‌ என்பது தேறுகிறது. இது ஸாங்க்யர்‌களது கொள்கைக்குப்‌ புறம்பானது, 
ஆதலால்‌ ''பஞ்ச பஞ்சஜநா:'' என்பதன்‌ பொருள்‌ பஞ்ச ஜநங்கள்‌ என்ற பேருடைய ஐந்து பொருள்கள்‌ என்பதே தகும்‌. 
மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி ஆகிய ஐந்துமே பஞ்சஜநங்கள்‌' எனப்‌ பெறுகின்றன, 
இவை பகவானால்‌ ஸத்தைப்‌ பெறுவனவாக விவரம்‌ பெறுவதால்‌, 
4, 4, ஐகத்துக்குக்‌ காரணம்‌. 

*ஸதேவஸோம்யே தமக்ரஆஸீத்‌'*, **அஸதேதவ இத்‌ மக்ர ஆஸித்‌'',*அஸத்வா இதமக்ர ஆஸீத்‌''என்ற வாக்கியங்கள்‌ வெளியிடுவது: 
ஜகத்‌ காரணமானது ஸத்‌ (நித்யமான இயல்புடையது); முதலில்‌ இது அஸத்தாகவே இருந்தது. ஆதலால்‌ ஐகத்‌ காரணம்‌ பரிணாமமுடையது- 
*-*தத்தேதேதம்‌ தர்ஹ்யவ்யாக்குத மாஸீத்‌'' அப்படிப்பட்ட இது அவ்யாக்ருதமாக இருந்தது என்றுள்ளது. 
அவ்யாக்‌ ருதம்‌: நாமரூபம்‌ என்ற லக்ஷணம்‌ கொள்ளாதது. அவ்‌ யாக்ருதம்‌ என்பது யாவரும்‌ அறிந்த ப்ரக்ருதியின்‌ பெயராகும்‌. 
நித்யமாயிருக்கும்‌ தன்மையும்‌ பரிணாமமுடைய தாக (அஸத்தாக) இருப்பதும்‌ பகவானிடம்‌ சேர்ந்‌திருக்க முடியாது. 
ஆதலால்‌ நித்யமான இயல்புடையதாயும்‌, படைப்பின்போது பரிணாமத்தை உடையதுமான மூலப்ரக்ருதயே ஜகத்‌ காரணமாகக்‌ கொள்ள 
வேண்டும்‌. அவ்யாக்ருதம்‌ என்று ப்ரஸித்து பெற்றது மூலப்ரக்ருதியே. இது ஸாங்கீயர்‌ கருத்து. 

மறுப்பு: தைத்திரீயத்தில்‌ வருவது: பகவான்‌, '*ஸத்‌யம்‌ ஜ்ஞானம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம” என்றவாறு வேறுபாடில்லாதவன்‌; 
தானே ப்ரகாசிப்பவன்‌; தேச கால வஸ்துக்களாலே அளவுபடாதவன்‌ என்பதும்‌, ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடே கூடி முக்தன்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பதும்‌. 
இதற்கு மேல்‌ இந்தப்‌ பரமாத்மாவிடமிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று என்று கூறி அதையே அஸத்‌ என்று குறிப்பிட்டது. 
இந்த ஜகத்‌ காரணப்‌ பொருளையே ஸத்‌ என்றும்‌ அஸத்‌ என்றும்‌ விவரித்தது- 
7*ஐந்மாத்யஸ்ய யத:*” என்றும்‌ அறிவோம்‌. பகவான்‌ ஆகாசம்‌ முதலான யாவற்றிற்கும்‌ காரணமாக வேதங்கள்‌ முழக்குகின்றன. 
ஆதலால்‌ இவனே ஜகத் ஏக காரணம்‌ அன்று தேறுகின்றது. 

தீர்வு: அஸத்‌ என்று தைத்திரீயத்தில்‌ வந்துள்ள சொல்லுக்குப்‌ பொருளாக ப்ருஹதாரண்யத்தில்‌ அவ்‌யாக்ருதம்‌ என்பது காண்கிறோம்‌. 
““ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய்‌:'” அப்படிப்பட்டவனே நகத்தின் நுனி முதல்‌ முழுவதும்‌ வியாபிகிறான்‌. 
அஸத்‌ என்‌றும்‌, அவ்யாக்ருதம்‌ என்றும்‌ நாமருபமில்லாத மூலப்ரக்‌ருதியை சரீரமாகக்‌ கொண்ட பகவானையே இங்குக்‌ கூறு 
வதா்கக்‌ கொள்ளவேண்டும்‌. மூலப்ரக்ருதி ஐகத்‌ காரணமாவதற்கு ஆதாரம்‌ ஒன்றுமில்லை, 
4. 5. ஐகத்‌ கர்த்தா. 

கெளஷீதச என்ற உபநிஷத்தில்‌ உபதேசிக்கப்‌ படுவது: “*“யோவை பாலாகே! ஏதேஷாம்‌ புருஷாணாம்‌ 
கர்த்தா, யஸ்ய வை தத்‌ கர்ம ஸலவை வேதிதவ்ய:.- 
பாலகியே! இப்புருஷர்களுக்கு எவன்‌ கர்த்தாவோ, எவனுக்கு இந்தப் புண்ய பாப கர்மம்‌ உள்ளதோ அவனே 
அறியத்‌ தக்கவன்‌ என்பது. கர்ம ஸம்பந்தம்‌ கூறப்படுவதால்‌, கர்மத்தின்‌ மூலம்‌ இவ்வுலகுக்குக்‌ காரணமாக 
இருக்கும்‌ ஜீவனே குறிப்பு. அவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌. இது ஸாங்க்‌ய மதம்‌. 

மறுப்பு : இப்பகுதியில்‌ தொடக்கத்திலிருந்தே ப்ரஹ்‌ மத்தைப்‌ பற்றியே உபதேசம்‌. 
பாலாக, “*ஆதித்யன்‌ முதலானோர்‌ ஜகத்‌ காரணம்‌''என்றான்‌.இதற்கு அஜாத சத்ரு கூறியது: 
பாலாகியே! எவன்‌ ஆதித்யன்‌ முதலான கர்ம ஸம்பந்தமுள்ள புருஷார்களைப்‌ படைக்கிறானோ, 
எவனுக்கு இவ்வுலகம்‌ முழுதும்‌ கார்யமோ அவனே அறியத் தக்கவன்‌ என்பது, 
ஆதலால்‌ இவ்விடத்தில்‌ கர்ம ஸம்பந்தம்‌ குறிப்பன்று, “*க்ரியதே இதி கர்ம'”- செய்யப்‌ படுவது; 
இது உலகம்‌. ஜீவனது கர்மம்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டிக்‌குக்‌ காரணம்‌ என்பது ஏற்பதற்கான கருத்தன்று. 
ஆகையால்‌ இவ்வுலகம்‌ தனது காரியப்‌ பொருள்‌ என விளங்கும்‌ 
நாராயணனே அறியத் தக்கவன்‌ என்பது தேறுகின்றது.. 

அஜாதசத்ரு பாலாகிக்கு உபதேசஞ்‌ செய்வதற்‌தாகத்‌ தூங்கும்‌ ஒருவனிடம்‌ அழைத்துச்‌ சென்றான்‌. 
அவனைப்‌ பலவாகப்‌ பேர்‌ சொல்லி அழைத்தும்‌ அவன்‌ எழுந்திருக்கவில்லை. 
அவனைத்‌ தடியால்‌ அடித்து எழுந்திருக்கச்‌ செய்தான்‌, அஜாதசத்ரு பாலாகியை மூன்று கேள்விகள்‌ கேட்டான்‌; 
ஜீவன்‌ கனவு காணும்போது எங்‌கிருக்கிறான்‌? தூங்கும்போது எங்கிருக்கிறான்‌? விழிக்‌கும்போது எங்கிருக்கறான்‌? 
பாலாகி விடை சொல்ல வில்லை. ஆதலால்‌ அஜாதசத்ரு வெளியிட்ட விடை: 

முதற்‌ கேள்விக்கு விடை : நாடிகளில்‌ இருக்கிறான்‌7 
இரண்டாவதற்கு விடை; ப்ராண சரீரமான ப்ரஹ்மத்‌தில்‌ இருக்கிறான்‌; 
மூன்றாவதற்கு விடை: ப்ரஹ்மத்தி லிருந்து கிளம்புகிறான்‌. 

ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவாளைப்‌ பற்றி அறிவிப்பதற்காகவே இந்தக்‌ கேள்விகள்‌ கேட்கப்‌ பட்டன. 
வேறொரு சாகையில்‌ இதே போன்ற கேள்‌விக்கு விடையாக வந்துள்ளது: 
தூங்குகிறவன்‌ தனது இதயத்திலுள்ள ஆகாச மென்னும்‌ பரமாத்மாவிடம்‌ படுத்திருக்கிறான்‌ என்பது. 
ஆதலால்‌ தூங்கும்‌ நிலையில்‌ ஆதாரமாக இருப்பவன்‌ பகவானே என்பது வெளிப்‌படை. 
இன்னும்‌ பல இடங்களில்‌ ஆகாச சப்தம்‌ பரமாத்‌மாவைக்‌ குறிக்கின்றது. 
ஆதலால்‌ இங்கு ஜீவளைப்‌ பற்றி வெளியிட்டிருப்பது இவனிலும்‌ வேறுபட்ட பரமாத்‌மாவை அறிவிப்பதற்காகவே, 
இவ்வாறு இப்பகுதி முழுதும்‌ ஆராய்ந்தால்‌, பரமாத்மாவே அறியத்‌ தக்கவனாகவும்‌, 
ஜகத்‌ காரணமாகவும்‌ கூறப்படுகிறான்‌ என்பது தேறுகிறது. 
புருஷன்‌ எனப்பெறும்‌ ஜீவன்‌ அறியத்‌ தக்கவன்‌ என்றும்‌, இவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானம்‌ ஜகத்‌ காரணம்‌ என்றும்‌ சொல்லவில்லை.
 
4. 6. த்ரஷ்டவ்ய:--யார்‌? 
ஜீவன்‌ ப்ரதானத்தோடு இணைந்து ஜகத்‌ காரணமாகமாட்டான்‌ என்பது விவரம்‌ பெறுகின்றது