ஶ்ரீராமானுஜர் காயத்ரி
ஓம் ராமாநுஜாய வித்மஹே ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.
ஶ்ரீஇராமானுசர் இயற்றிய நூல்கள்:
ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)
ஸ்ரீ வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது).
ஸ்ரீ வேதாந்த சாரம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தீபம்: (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சிறு உரைகள்.)
ஸ்ரீ கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)
நித்யக் கிரந்தங்கள். (அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.)
மற்றும் ஸ்ரீ கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.
—————
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
————–
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–
அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –
சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்
நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்
பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-
பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-
பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்
—————-
ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —
ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம
அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –
———–
ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –
மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –
ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்
ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –
ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –
1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா
2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே
3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –
4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்
5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்
6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்
7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –
8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –
தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –
மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –
————–
பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்
அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய
பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –
தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –
ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –
அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது
அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –
ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –
இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –
ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்
யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –
க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –
இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –
லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-
ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்
வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –
ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –
குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –
———————————
அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –
ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.
கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.
வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.
இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.
சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.
விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:
(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே
அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.
அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –
நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.
அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.
அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.
இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.
இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —
அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று
வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று
ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்
ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று
இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –
ii) சேஷ சாயினே
அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.
ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.
இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.
ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.
இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.
இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-
நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்
முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.
ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?
இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.
[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி
விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.
உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .
நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,
ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.
அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.
ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.
விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.
அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –
அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.
அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.
எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.
சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!
நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்
கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்
ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று
—————–
பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-
இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.
அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.
இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.
சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்
(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி
ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்
அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.
“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.
ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.
அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?
”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே
தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.
அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.
ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.
மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.
முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.
(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்
ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.
இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.
“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.
மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.
(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது
இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.
யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.
அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.
அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.
வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.
ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.
”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.
(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:
ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.
“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.
கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?
விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.
அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?
விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.
இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.
வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.
ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.
ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:
(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!
தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.
தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.
வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.
தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.
————————
ஸ்ரீ ப்ரஹ்ம சப்தேந –
ச ஸ்வ பாவதோ
நிரஸ்த
நிகில தோஷ
அநவதிக
அதிசய
அஸங்க்யேய
கல்யாண குண கண
புருஷோத்தம
அபி கீயதே –ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனையே குறிக்கும் பதம்
ஸ்ருதி -ரிக் யஜுஸ் ஸாமம் அதர்வணம்
ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை -ப்ராஹ்மணம் -ஆரண்யகம் -உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு
இவற்றை ஒத்துக்க கொள்ளும் ஆஸ்திக தர்சனங்கள் ஷட் வித தர்சனங்கள் –
நியாயம் -கௌதம மகரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வைசேஷிகம் -கணாத மஹரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
சாங்க்யம் -கபில மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
மீமாம்ஸம் -ஜைமினி மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேதாந்தம் -பாதாராயண மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேத வியாஸர் முதல் ஐந்திலும் உள்ள குற்றங்களைக் காட்டி இறுதியில் உள்ள நம் தரிசனத்தின் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் –
உபநிஷத் சமுத்ரத்தைக் கடைந்து ப்ரஹ்ம ஸூத்ரம் அமுதம் தந்து அருளுகிறார்
சாரதா பீடத்தில் ஸரஸ்வதி தேவியரால் கொண்டாடப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் திருநாமம் சூட்டப்பட்டது
பூர்வ உத்தர -இரண்டு த்விகங்கள்
சமன்வயம் -அவிரோதம் -உபாஸனம் -பலம் -நான்கு அத்யாயங்கள்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்
156 அதிகரணங்கள்
545-ஸூத்ரங்கள்-
பூர்வ த்வீகத்தால்
ப்ரஹ்மம் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு விலக்ஷணமாகவும்
ஜகத் காரணமாகவும் உள்ள ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது
ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்வீகம்
ப்ரஹ்மம் குறித்து விளக்கும் த்வீகம்
ஆகவே
ஸித்த த்வீகம்
விஷய த்வீகம் –என்றும் கூறப்படும்
உத்தர த்வீகம்
ப்ரஹ்ம உபாஸனை குறித்தும்
பலத்தைக் குறித்தும்
ப்ரஹ்மத்தை அடைய ஸாத்யமாகவும்
ஞான ரூப மாகவும் உள்ள பக்தி உள்ளிட்டவையைப் பற்றி குறித்து உரைப்பதால்
ஸாத்ய த்வீகம்
விஷயீ த்வீகம் என்றும் கூறப்படும்
அத்தியாயங்கள் விவரம்
1-ஸமன்வய அதிகாரம்
ப்ரஹ்மம் ஸமஸ்த சித் அசித் விலக்ஷணம்
ஞான ஆனந்த ஸ்வரூபம்
எல்லையற்ற கல்யாண குணங்களின் இருப்பிடம்
ஸமஸ்த ஏக த்ரிவித -உபாதான -நிமித்த -ஸஹ காரி -காரணம்
அனைத்துக்கும் ஆத்மாவாக உள்ளது
இத்தகைய ப்ரஹ்மத்தை வேதாந்தங்கள் மூலமே அறிய முடியாதகு என்று அறிய முடியும்
அனைத்து வேதாந்த கார்ய வாக்கியங்களும் ப்ரஹ்மத்திடம் இடம் சென்று
ஒடுங்குவதால் ஸமன்வய அத்யாயம் என்ற பெயர் பெற்றது –
2-அவிரோத அத்யாயம்
கீழ் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தான
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணப் பொருளாக உள்ளது
ஜகத்து காரியப் -என்னும் பொருளாக உள்ளது என்னும்
ஸித்தாந்தங்கள் எந்த விதத்திலும் -எந்த ப்ரமாணங்களாலும் -எந்த யுக்திகளாலும் -எந்த நியாயத்தாலும்
தள்ளப்பட இயலாது என்று கீழே நிரூபிக்கப் படுகிறது
இந்தக் கருத்துக்களில் எழுகின்ற அனைத்து ஐயங்களும் நீக்கப் படுகின்றன
இதில் வேதாந்தத்துக்கு முரணாக உள்ள அனைத்து மதங்களும் தள்ளப் படுகின்றன –
கீழ் கூறப்பட்ட கருத்துக்களில்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் போன்ற ப்ரமாணங்களுக்குள்
எந்தவிதமான முரண்பாடுகளும் -விரோதம் -உண்டாக வில்லை
என்று கூறுவதால் இப்பெயர் பெற்றது –
3-உபாஸன அதிகாரம்
ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் ஆராயப்படுகிறது
ஜீவாத்மா தோஷம் உள்ளவன் -ப்ரஹமம் தோஷம் அற்றது -ப்ரஹ்ம உபாஸனம் -உபாஸனை அங்கங்கள் போல்வன
கூறப்படுகின்றன
4-பல அத்யாயம்
உபாஸனம் செய்யும் முறை
அர்ச்சிராதி கதி மார்க்கம்
மோக்ஷத்தின் பலன் -ஆகியவை கூறப்படுகின்றன
கர்மங்கள் விலகுவது முதல் பாதத்திலும்
ஸ்தூல சரீரம் நீங்குதல் இரண்டாம் பாதத்திலும்
ஸூஷ்ம சரீரம் நீங்குதல் மூன்றாம் பாதத்திலும்
ப்ரஹ்மத்தை அடைதல் நான்காம் பாதத்திலும் கூறப்படுகின்றன
அதிகரணம் -இடம் -நீதி மன்றம் -உபநிஷத்துக்களில் உள்ள வாக்கியங்களுடைய ஆழ்ந்த பொருளை
இன்னது என்பதை பல நியாயங்கள் மூலம் உணர்த்தும்
இது
1- விஷயம் -உபநிஷத்தின் எந்த வாக்கியத்தின் ஆழ்ந்த பொருளை நிர்ணயம் செய்யப்படுகிறதோ -அதுவே விஷய வாக்யம்
2- சம்ஸயம் -சந்தேகம் -விஷய வாக்கியத்தில் உண்டாகும் சந்தேகம்
3-சங்கதி -உபநிஷத் -ஸூத்ரம் இவற்றுக்கு இடையே உள்ள சம்பபூர்வ பஷம் –
4-பூர்வ பஷம் உண்மையான ஆழ்ந்த பொருளை ஆராயாமல் மேலோட்டமாக முதன் முதலாக தோன்றும் கருத்து
5-ஸித்தாந்தம் –தாத்பர்ய நிர்ணயம்
ஆராயப்படும் உபநிஷத்தின் உபக்ரமும் உப ஸம்ஹாரமும் –தொடக்கமும் முடிவும்
அப்யாஸமும் -மீண்டும் மீண்டும் உரைத்தல்
அபூர்வதை -இந்த முடிவு ஸாஸ்த்ரத்தால் மட்டுமே உண்டாகும் என்கிற உறுதி
இதன் மூலம் உண்டாகும் பலன்
அர்த்தவாதம் -தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் புகழ்ந்து பேசுதல்
உபபத்தி -இதற்கான காரணம் பிரமாணம் போன்றவை
இவற்றைக் கொண்டு சித்தாந்தம் நிர்ணயம்-
முதல் அத்யாயம் -முதல் பாதம் -அயோக வியச்சேத பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க விசாரம்
அயோகம் -சம்பந்தம் அற்ற நிலை –ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்துடன் உள்ள சம்பந்தம் அற்ற நிலை
வியச்சேதம் –இந்தக் கருத்தைத் தள்ளுதல்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் படுகிறது
அஸ்பஷ்ட–தெளிவில்லாமல் -காணப்படும் வாக்கியங்கள்
ஜீவாதி லிங்க விசாரம்-ஜீவாத்மாவும் ப்ரக்ருதியும் ஜகத் காரணம் என்று
மேல் எழுந்தவாறு கூறுவது போன்ற விஷ வாக்கியங்கள் விசாரம்
இந்தப் பாதத்தில் 11 அதிகரணங்கள்-32 ஸூத்ரங்கள்- உண்டு
1-1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம்-வேத வரிகள் அனைத்தும் ப்ரஹ்மத்தைப் பற்றி உள்ளதால் –
ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே-
இந்த ஸாஸ்த்ரம் தொடங்குவதற்கு ஏற்றதே என்று நிரூபணம் –ஒரே ஸூத்ரம்
1-1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
ஆகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்
1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்
1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
சாஸ்திரமீ ப்ரஹ்மத்தை மட்டுமே புருஷார்த்தமாகவே உணர்த்துகிறது என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்-
1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே-மூலப்பிரக்ருதி அல்ல என்று நிரூபணம் –8 ஸூத்ரங்கள்
1-6-ஆனந்த மயாதிகரணம் -தைத்ரிய ஆனந்தவல்லியில் ஆனந்த மயமாக உள்ளது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்
1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் கண்களில் உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .-பரமாத்மாவே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்
1-8-ஆகாசாதி கரணம் -சாந்தோக்யத்தில் ஆகாயம் எனப் படுவதும் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்
1-9-ப்ராணாதி கரணம்–சாந்தோக்யத்தில் பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்
1-10-ஜ்யோதிர் அதிகரணம் -சாந்தோக்யத்தில் ஜோதி என்பதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4-ஸூத்ரங்கள்
1-11-இந்திர பிராணா அதிகரணம் -கௌஷீதகீயில் இந்த்ரன் பிராணன் என்பது ஜீவன் மட்டும் அல்ல -அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்
————
இரண்டாம் பாதம்-அந்நிய யோக வியவச்சேத பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –
ஜகத்துக்குப் பலவும்-பிரக்ருதியும் -ஜீவாத்மாவும் – காரணம் என்பவர்களைக் குறித்து
அவ்வாறு அல்ல ப்ரஹ்மமே ஜகத்துக்கு ஏக காரணம் என்று நிரூபணம்-33 ஸூத்ரங்கள்-
1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்—ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -சாந்தோக்யம் -3-14-1-
இவை அனைத்தும் ப்ரஹ்மமே–என்பது பரம் பொருளே–என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்
1-2-2-2-2-அத்தா அதிகரணம் -யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சேபே பவத ஓதந
ம்ருத்யுர் யஸ்ய உபசேஸநம் க இத்தா வேத யத்ர ச -கடவல்லி -2-24-
யாருக்கு அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் ஆகிய இருவரும் -மற்றவர்களுக்கும் உப லக்ஷணம் -உணவாகிறார்களோ
யாருக்கு எமன் ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் என்று அனைத்து சராசரங்களையும் உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்
2-3-அந்த்ராதிகரணம் —ச ஏஷோ அக்ஷிணீ புருஷோ த்ருஸ்யதே
ஏஷ ஆத்மேதி ஹேவாஸ ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -4-15-1-
கண்களில் எந்தப்புருஷன் காணப்படுகிறானோ அவனே ஆத்மா என்றும் அம்ருதம் என்றும்
அபயம் என்றும் ப்ரஹ்மம் என்றும் கூறினார் என்பதில்
ப்ரஹ்மமே என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்-
2-4-அந்தர்யாமி யதிகரணம் -ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத ப்ருஹதாரண்யம் -3-7-23-
உனக்கு ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அவனே அந்தர்யாமி ஆவான் என்று என்று நிரூபணம் –3-ஸூத்ரங்கள் –
2-5-அத்ருத்யஸ்வாதி குணாதிகரணம் -அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே
யத் தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அஸஷு ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம்
நித்யம் விபும் ஸர்வ கதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநி பரிபஸ்யந்தி தீரா -முண்டகம் -1-1-5,6
பர வித்யை -உயர்ந்த வித்யை மூலம் அடுத்தபடியாக அக்ஷரம் என்ற அழிவற்ற அந்தப் பொருள் அடையப்படுகிறது
அது காணப்படாதது
அறியப்படாதது
கோத்ரம் அற்றது
வர்ணம் அற்றது
கண் மற்றும் காது அற்றது
தலைமையாக உள்ளது
எங்கும் பரவி உள்ளது
மிகவும் நுண்ணியது
அழிவற்றது
பூதங்களுக்குக் காரணமாக உள்ளது
இதனை அனைத்தும் அறிந்தவர்கள் காண்கிறார்கள்
என்பதில் அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள் –
2-6-வைஸ்வா நராதிகரணம் —ஆத்மாநம் ஏவ இமம் வைஸ்வா நரம் வைஸ்வா நரம் ஸம் ப்ரத்யத் யேஷி தமேவ நோ ப்ரூஹி -சாந்தோக்யம் -5-11-6-
இப்போது நீவிர் இந்த வைஸ்வா நர ஆத்மாவை உபாஸிக்கிறீர்
அவனைக் குறித்து எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி
யஸ்த் வேத மேதம் ப்ராதேச மாத்ரமபி விமாந மாத்மாநம் வைஸ்வா நரம் அபாஸ்தே –சாந்தோக்யம் -5-18-1-
எங்கும் இருப்பதன் காரணமாக அளவற்றவனாக உள்ள வைஸ்வா நர ஆத்மாவை ஓர் இடத்தில்
உள்ளவன் என்று யார் உபாஸிக்கிறானோ
என்று முடியும் பகுதியில் கூறப்படும் வைஸ்வாநரன் எனப்படுபவனும் பரம் பொருளே-என்று நிரூபணம் –9-ஸூ த்ரங்கள் –
————–
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-இங்கு ப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் ஜகத் காரணம் என்று தெளிவாக உள்ளது போல் உள்ள வாக்கியங்களின் விசாரம் -10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்-
1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனஸ் ஸஹ பிராணைச் ச ஸர்வை
தமே வைகம் ஜாநதாத்மாநம் அன்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷ சேது
யாரிடம் தேவ லோகம் பூமி அந்தரிக்ஷம் மனம் அனைத்து இந்திரியங்கள் ஆகியவைகள் சேர்ந்து உள்ளனவோ
அந்த ஆத்மா ஒருவனையே அறிவீர்களாக
மற்ற சொற்களைக் கை விடுவீர்களாக
அவனே மோக்ஷத்துக்கு வழி ஆவான் என்பதில் கூறப்பட்ட –த்யு லோகம் -ஸ்வர்க்கம் -பூமி போன்றவற்றுக்கு
இருப்பிடமாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள் –
1-3-2-பூமாதி கரணம் -யதா நான்யத் பஸ்யதி நான்யத் ஸ்ருணோதி நான்யத் விஜா நாதி ஸ பூமா
அத யத்ர அந்யத் பஸ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜா நாதி ததல்பம் –சாந்தோக்யம் -7-24-1-
எந்த ஒன்றை அறியும் போது வேறு ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் இல்லையோ அதுவே பெரிதாகும் -பூமா
எதனை அறியும் போது மற்ற ஒன்றைக் ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் உண்டோ அது சிறியதாக
என்பதில் உள்ள பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –2-ஸூத்ரங்கள் –
1-3-3-அஷர அதி கரணம் -ஸ ஹோவாஸ ஏதத் வை தத் அக்ஷரம் கார்க்கி
ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேஹம்
அமச்சாயம் -ப்ருஹதாரண்யம் -3-8-8-
யாஜ்ஞ வல்க்யர் கார்க்கியிடம் -இதனையே ப்ரஹ்மம் அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்கள்
அது ஸ்தூலமானதும் அல்ல
ஸூஷ்ம மானதும் அல்ல
குட்டையானதும் அல்ல
நீளமானதும் அல்ல
சிவப்பானதும் அல்ல
பசையானதும் அல்ல
நிழலுடன் கூடியதும் அல்ல
என்பதில் மூல ப்ரக்ருதிக்கு ஆதாரமாகக் கூறப்படும் அஷரம் எனபது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்
1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -ய புநரேதம் த்ரி மாத்ரேண ஓம் இதி ஏதேந ஏவ அஷரேண பரம் புருஷம் அபித்யாயீத
ஸ தேஜஸீ ஸூர்யே சம்பந்நோ யதா பாதோதர த்வச்சா விநிர் முச்யதே
ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர் முக்த ச ஸாமபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ஸ ஏதஸ் மாத் ஜீவ நாத் பராத்பரம் புரிசயம் புருஷன் ஈஷதே -ப்ர-5-5-
மூன்று மாத்திரைகள் கொண்டதான இந்த ஓம் என்ற அக்ஷரத்தை மட்டுமே கொண்டு
யார் ஒருவன் இந்தப் பரம புருஷனைத் த்யானம் பண்ணுகிறானோ
அவன் மிகுந்த தேஜஸ் கொண்டதான ஸூர்யனை அடைத்தவனாக
பாம்பு தனது சட்டையை உரிப்பது போன்று பாபத்தில் இருந்து நீங்கப் பெற்றவனாக
ஸாம கானம் செய்பவர்களால் ப்ரஹ்ம லோகத்தில் சேர்க்கப் பட்டவனாக உள்ளான்
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் மிக உயர்ந்தவனும்
ஹ்ருதயத்தில் உள்ளவனும் ஆகிய புருஷனைக் காண்கிறான்
என்பதில் உள்ள காணப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –ஒரே ஸூ த்ரம்
1-3-5-தஹராதி கரணம் —அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர
அஸ்மின் அந்தர ஆகாஸ தஸ்மிந் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஜ்ஞாஸி தவ்யம் –சாந்தோக்யம் -8-1-1-
ப்ரஹ்மத்தின் இருப்பிடமான இந்த சரீரத்தில் தாமரை போன்ற சிறியதான ஹ்ருதயம் இடம் உள்ளது
அதற்குள் ஸூஷ்மமான ஆகாசம் உள்ளது
அதற்குள் இருப்பதே தேடப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியதாகும்
என்பதில் தஹரம் என்னும் இடத்தில் -ஆகாசத்தில் -உள்ளவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –10 ஸூ த்ரங்கள் –
1-3-6–ப்ரமிதாதி கரணம் -அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி
ஈஸோநோ பூத பவ் யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே –ஏதத் வை தத் -கட –4-12-13-6-17-
எந்தப்புருஷன் கட்டை விறல் அளவு கொண்டவனாக ஆத்மாவின் நடுவில் உள்ளானோ
இறந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எல்லாம் நியமித்தபடி உள்ளானோ
அவ்விதம் அமர்வதில் எந்தவித வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ
அவனே அடையப்பட வேண்டியவன் -என்று இவற்றில்
-கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்
1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூ த்ரங்கள்
1-3-8–மத்வதிகரணம் -ஆதித்யன் போன்ற தேவர்களுக்கு சாந்தோக்யத்தில் உள்ள மதுவித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –3- ஸூ த்ரங்கள்
1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யைகளில் அதிகாரம் இல்லை –என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்
1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்-இதில் இரண்டு ஸூ த்ரங்கள்
1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா
தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ஸ ஆத்மா –சாந்தோக்யம் -8-14-1-
ஆகாசம் என்பது பெயர் மற்றும் ரூபங்களை ஏற்படுத்துகிறது
இவை இன்றி உள்ளது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும் அம்ருதமாகவும் ஆத்மாவாகவும் உள்ளது
என்பதில் நாம ரூப விபாகம் ஏற்படுத்தியவன் பரமாத்மாவே என்பதால்
ஆகாயம் என்பது ப்ரஹ்மமே—என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்
——-
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்
1-4-1-ஆநுமாநிகாதி கரணம் –இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -அர்த்தேப் யச்ச பரம் மனஸ்
மனஸ் ஸஸ்து பரா புத்திர -புத்தே ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான் ந பரம் கிஞ்சித்
ஸா காஷ்டா ஸா பரா கதி –கட –3-10-11-என்று
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்தவை அவற்றால் அறியப்படும் விஷயங்கள்
அந்த விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தது மனம்
மனத்தை விட உயர்ந்தது புத்தி என்னும் அறிவு
புத்தியை விட உயர்ந்தது ஆத்மாவாகிய மஹான்
மஹானைக் காட்டிலும் பெரியது அவ்யக்தம்
அவ்யக்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் புருஷன்
புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை
புருஷனே உயர்ந்த எல்லையாகவும்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூலப் பிரக்ருதியானது ஜகத்தின் காரணப்பொருள்
என்று கூறப்பட வில்லை என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்
1-4-2-சமசாதிகரணம்—அஜாம் ஏகம் லோகித சுக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜா ஸ்ருஜமாஸ ரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷ மாண அநு சேதே ஜஹாதி ஏனாம் புக்த போகாம அஜ அந்நிய –ஸ்வேதாஸ்வர -4-5-
சிவப்பு ரஜஸ்
வெளுப்பு சத்வம் மற்றும் கறுப்பு தமஸ் ஆகிய மூன்று நிறங்களைக் -குணங்களைக் கொண்டதாகவும்
தன்னைப் போன்றே மேலும் பல பிரஜைகளை உண்டாக்குவதாகவும்
பிறப்பற்றதாகவும் உள்ள
ஒன்றுடன் -பிரக்ருதியுடன்
பிறப்பற்ற ஒருவன் -ஜீவாத்மா -மகிழ்ச்சியுடன் கூடி உள்ளான்
தன்னால் அனுபவிக்கப் பட்ட இந்தப் பிரக்ருதியை மற்ற ஒருவன் -முக்தாத்மா -விட்டுச் செல்கிறான்
என்பதில் உள்ள அஜா என்ற சொல்லால் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி என்று நிரூபணம் -3-ஸூ த்ரங்கள்
1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் —யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகா கச்ச ப்ரதிஷ்டித –ப்ருகு –4-4-17-
எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் ஆகியவை நிலை நிற்கின்றனவோ
என்னும் வாக்கியத்தை ஆராயும் போது இந்த்ரியங்களுக்கும் ஆகாசம் போன்ற அனைத்துக்கும் ப்ரஹ்மமே அந்தர்யாமி –என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்
1-4-4-காரணத்வாதி கரணம் -வேதங்கள் அனைத்துமே ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –என்று உரைக்க முடியும் என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்
1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் –யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம
ஸ வை வேதி தவ்ய –கௌஷீகீ -4-18-
பாலாகீ -யார் இந்த புருஷர்களுக்குக் கர்த்தாவாக உள்ளானோ
யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மம் உள்ளதோ
அவனே அறியத்தக்கவன் என்பதில்
அறியத்தக்கவனாக உபதேசிக்கப் படுபவன் ப்ரஹ்மமே அறியத்தக்கது –என்று நிரூபணம் –3 ஸூ த்ரங்கள்
1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -ஆத்மநி கல்வரே
த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -ப்ரு -4-5-6-
அந்த ஆத்மாவே காணப்பட வேண்டியது
கேட்கப்பட வேண்டியது
நினைக்கப்பட வேண்டியது
மற்றும் தியானிக்கப்பட வேண்டியது
ஆத்மாவைக் காணவும் கேட்கவும் நினைக்கவும் தியானிக்கவும் அறியவும் செய்தால்
இவன் அனைத்தையுமே அறிந்தவன் ஆகிறான்
என்பதில் காணப்படுபவனாக சொல்வது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -4-ஸூ த்ரங்கள்
1-4-7-பிரக்ருத்யதிகரணம் —ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணமாக மட்டுமே அல்லாமல்
ப்ரஹ்மமே உபாதான காரணமாகவும் உள்ளான் என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள் –
1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -பரமாத்மாவுக்கே உரிய தன்மைகள் படிக்கப் படுவதால்
ஹிரண்ய கர்ப்பன் முதலான சொற்களால் படிக்கப் படுபவன் பரமாத்மாவான ஸ்ரீ மன் நாராயணனே ஆவான் என்று
அனைத்து வித்யைகளும் கூறுகின்றன என்று நிரூபணம் -1 -ஸூ த்ரம் –
—————-
இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் இதில் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10 அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்–கபில மஹரிஷியால் -பிரக்ருதியே ஜகத் காரணம் என்பது மயக்கத்தால் இயற்றப் பட்டது என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்
2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்–நான்முகனால் இயற்றப்பட்ட யோக ஸ்ம்ருதி நிரஸனம் -1 ஸூ த்ரம்
2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்–வேறுபட்ட பலவற்றையும் கொண்டுள்ள ஜகத்துக்கு ப்ரஹ்மம்
காரணமாக இருப்பதில் குறையில்லை என்று நிரூபணம் -9-ஸூ த்ரங்கள்
2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்-பரம அணுவே ஜகாத் காரணம் என்று கூறும்
நையாயிக மதம்
காணாதருடைய வைசேஷிக மதம்
சமண மதம் -போன்றவை நிரஸனம் -1 ஸூ த்ரம்
2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்–ஜீவாத்மாவின் ஸூக துக்கங்கள் கர்மத்தின் அடிப்படையில் உண்டாவதால்
ப்ரஹ்மத்துக்கு ஸூக துக்கங்கள் இல்லை என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
2-1-6. ஆரம்பண அதிகரணம்–காரணப் பொருளாக உள்ள ப்ரஹ்மத்தைக் காட்டிலும் காரியப் பொருளான ஜகத்
வேறுபடாதவையே ஆகும் என்று நிரூபணம் -6 ஸூ த்ரங்கள்
2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்–ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று ஸ்ருதி கூறுவதால்
ப்ரஹ்மத்தை ஜீவனாகக் கூறுவதால் தோஷங்கள் ஏற்படும் என்னும் வாதம் நிரஸனம் –3 ஸூத்ரங்கள்
2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்–பொருள்களைச் செய்வதற்கு அவசியமான உப கரணங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லை
ஆயினும் ப்ரஹ்மம் ஜகாத் ஸ்ருஷ்டி செய்வதில் குறையில்லை என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்
2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்–அவயவங்கள் இல்லாத ப்ரஹ்மத்தின் இடம் இருந்து இந்த ஜகத் உண்டானது
ஆயினும் அந்தப் ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்பதில் குறையில்லை என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள்
2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும்
லீலா-தத்கால -விளையாட்டு ரூபமாக உள்ள பலன் -காரணமாக ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் கீரையில் -என்று நிரூபணம் –5-ஸூ த்ரங்கள்
———
இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் -இதில் பரபஷ ப்ரதிஷேதம் -சாங்க்ய -வைசேஷிக -புத்த -ஜைன -சைவ மத நிரஸனம்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்னும் வாதமும் நிரஸனம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்–சாங்க்யர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -9 ஸூ த்ரங்கள்
2-2-2- மஹத் தீர்க அதி கரணம்–வைசேஷிகர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -97ஸூ த்ரங்கள்
2-2-3- -ஸமுதாய அதிகரணம்-புத்த மத பிரிவான வை பாஷிகர் சவ்த்ராந்திகர் மாதங்கள் நிரஸனம் –10 ஸூ த்ரங்கள்
2-2-4- உபலப்தி அதி கரணம்-புத்த மதத்தின் யோகாசார மதம் நிரஸனம் -3 ஸூ த்ரங்கள்
2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்-புத்த மதத்தின் பிரிவான மாத்யமிக மதம் நிரஸனம் -1 ஸூ த்ரம்
2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்-ஜைன மத நிரஸனம் -4 ஸூத்ரங்கள்
2-2-7- பசுபதி அதி கரணம்–பாசுபத மத நிராசனம் -4-ஸூத்ரங்கள்
2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்–ஜீவாத்மாவின் உத்பத்தி கூறுவது போன்று உள்ளதால்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்கிற வாதம் நிரஸனம் -4-ஸூத்ரங்கள்
————–
இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –-இதில் ஆகாசத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் உள்ளன என்றும்
ஆகாசமும் ப்ரஹ்ம காரியமே என்று நிரூபணம் இந்தப் பாதத்தில் -7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
2-3-1-வியத் அதி கரணம்–வியுத் எனப்படும் ஆகாசமும் ப்ரஹ்மத்தின் காரியப்பொருளே என்று நிரூபணம் -9- ஸூ த்ரங்கள்
2-3-2-தேஜஸ் அதிகரணம்–ஆகாஸம் போன்றவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
தேஜஸ் போன்றவை உண்டாகின்றன என்று நிரூபணம்–8-ஸூத்ரங்கள்
2-3-3. ஆத்மா அதிகரணம்–ஆத்மாக்களுக்கு உத்பத்தி இல்லை என்று நிரூபணம்–1-ஸூத்ரம்
2-3-4- ஜ்ஞ: அதிகரணம்–ஞான ஸ்வரூபமாக உள்ள ஜீவாத்மா ஞானத்தை குணமாகவும் கொண்ட படியும்
அறிபவனாகவும் உள்ளான் என்று நிரூபணம் -14 ஸூத்ரங்கள்
2-3-5- கர்த்ரு அதி கரணம்–ஜீவனுக்கு செயல்களை செய்பவனாக உள்ள தன்மை
கர்த்ருத்வம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்
2-3-6- பர ஆயத்த அதிகரணம்–ஜீவாத்மாவின்
கர்த்ருத்வம் என்பது பரமாத்மாவின் கட்டளைக்கு உட்பட்டதே யாகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்
2-3-7- அம்ஶ அதி கரணம்–ஜீவாத்மா
பரமாத்மாவின் அம்சமாகவே உள்ளான் என்று நிரூபணம் -11 ஸூத்ரங்கள்
————-
இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –-ஜீவனின் உபகரணமாக உள்ள பிராணங்கள் இந்திரியங்கள் ஆகியவை
ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி ஸ்வரூப ஸ்வ பாவக விகாரங்கள் உள்ளன என்றும்
இவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் உண்டு என்று நிரூபணம்
8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-
2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்–சதபத ப்ராஹ்மணம் -6-1-1- விசாரிக்கப்படுகிறது
இந்திரியங்கள் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்று நிர்ப்பனம் –3- ஸூத்ரங்கள்
2-4-2- ஸப்தகதி அதி கரணம்–இந்திரியங்கள் ஏழு அல்ல 11 என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்
2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்–இந்திரியங்களும் அணு அளவே ஆகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்
2-4-4- வாயு க்ரியா அதி கரணம்–முக்ய பிராணன் வாயுவோ செயல்பாடோ அல்ல என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்
2-4-5- ஶ்ரேஷ்ட அணுத்வ அதி கரணம்-முக்ய பிராணனும் அணு அளவே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்
2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்–ஜீவன் அக்னி முதலான தேவதைகள் பிராணனை அண்டி நிற்பது
பரமாத்மாவின் ஆஜ்ஜையாலே தான் என்று நிரூபணம் –
2-4-7- இந்த்ரிய அதி கரணம்–இந்திரியங்கள் அனைத்தும் முக்ய பிராணனை விட வேறுபட்டவை என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்
2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்–த்ரி வ்ருத் கரணம் மற்றும் நாம ரூப விபாகன்கள் செய்பவன்
ஒருவனே ஆவான் என்று நிரூபணம் –2 -ஸூத்ரங்கள் –
—————–
மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –
ஜீவாத்மா ஒரு சரீரத்தில் இருந்து வேறே ஒரு சரீரத்துக்குள் செல்லும் போதும்
சுவர்க்கம் நரகம் இவற்றால் இருந்து அடுத்த சரீரம் எடுக்க பூமியில் வரும் போதும்
பூத ஸூஷ்மங்கள் மற்றும் எஞ்சிய கர்மங்களுடனே வருகிறான் என்றும்
இதன் காரணமாக பல தாழ்வுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது என்றும் கூறி
இதன் மூலம் கர்மங்கள் காரணமாக இந்தச் சரீரத்துடன் சேர்ந்துள்ள ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாக்குகிறார்
மேலும் ஜீவாத்மாவின் பலவித தோஷங்களும் இந்தப் பாதத்தில் காண் பிக்கப்படுகின்றன –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்–சாந்தோக்யத்தில் கூறியபடி ஜீவன் ஒரு உடலை விட்டு வெளியே கிளம்பும் போது
பஞ்ச பூதங்களுடன் கூடியவனாக ஸூஷ்ம ரூபத்துடன் செல்கிறான் என்று நிரூபணம் –7-ஸூத்ரங்கள்
3-1-2- க்ருத அத்யய அதி கரணம்–யாவத் ஸம் பாதம் உஷித்வா அத ஏதமேவ அத் வாநம் புநஸ் நிவர்த்தந்தே –சாந்தோக்யம் -5-10-5-
கர்மபலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து அதன் பின்னர் உலகிற்குத் திரும்புகின்றனர்
என்கிறபடியே ஜீவன் தான் அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பழங்களுடன் வருகிறான் என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்
3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்–பாபம் செய்தவர்கள் சந்த்ர மண்டலம் செல்வது இல்லை என்று நிரூபணம் 10-ஸூத்ரங்கள்
3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்-மேலே கிளம்பும் ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மற்றும் அடைகிறான் என்று நிரூபணம் -1-ஸூத்ரம் –
3-1-5- ந அதி சிர அதி கரணம்–ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே மட்டுமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹி யவா ஓஷதி வநஸ்பதயே தில மாஷா இதி ஜாயந்தி -சாந்தோக்யம் -5-10-6-
மேகமாகி பின்பு மழை யாகிறான்
அதன் மின்னார் நெல் கோதுமை மூலிகைகள் செடிகள் எள் உளுந்து போன்றவையாகப் பிறக்கிறான்
என்கிற வாக்யம் ஆராயப்பட்டு
ஜீவாத்மா தானியம் போன்றவற்றைச் சரீரமாகக் கொண்டுள்ள மற்ற ஜீவன்களுடன் நெருங்கிய தொடர்பு மட்டுமே கொள்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள் –
———
மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –
கீழ் பாதத்தில் கூறப்பட்ட விஷயங்களால் வைராக்யம் ஏற்பட்டு அப்படிப்பட்டவனுக்கு
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆசை உண்டாக -அனைத்து விதமான தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக இருத்தலும்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயும் கொண்ட
இரண்டு –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக குண தாயகனாய் -உபய -லிங்கங்கள் உடன் ப்ரஹ்மம் உள்ளான் என்று நிரூபணம் -8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
3-2-1- ஸந்த்யா அதி கரணம்–ஜீவன் தனது கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள்
3-2-2- தத் அபாவ அதி கரணம்–ஜீவாத்மா உறங்கும் இடங்களாக ஹிதா ப்ரீதத் மற்றும் ப்ரஹ்மம்
ஆகியவை கூறப்பட்டு ஸித்தாந்தம் நிரூபணம் -2 ஸூத்ரங்கள்
3-2-3- கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விழித்து எழுகிறான்
அவன் வேறு ஒரு ஜீவன் அல்லன் என்று நிரூபணம் –1- ஸூத்ரம்
3-2-4- முக்த அதி கரணம்–மோர்ச்சை என்னும் மயக்க நிலை
என்பது
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் -ஆகியவற்றைக் காட்டிலும் மாறுபட்டது என்று நிரூபணம் -1- ஸூத்ரம்
3-2-5- உபய லிங் க அதி கரணம்–சரீரங்களில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ள போதிலும்
சரீரங்கள் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவது இல்லை என்று நிரூபணம் –15- ஸூத்ரங்கள்
3-2-6- அஹி குண் டல அதிகரணம்-ப்ரஹ்மம் அசேதனப் பொருள்களைத் தனது ரூபமாகக் கொண்டாலும்
அந்த அசேதனங்களில் உள்ள தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் ஏற்படுவது இல்லை என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்
3-2-7- பர அதி கரணம்–ப்ரஹ்மத்தைக் காட்டிலும் உயர்ந்த வாஸ்து வேறே எதுவும் இல்லை என்றும்
இதைத் தவிர வேறே அடைய வேண்டிய இலக்கு வேறே எதுவும் இல்லை என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்
3-2-8- பல அதி கரணம்–அனைத்துக் கர்மங்களின் பலனையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்
———–
மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –
பல ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -இவற்றில் கூறப்பட்ட பல்வேறு குணங்களை ஒன்றாகத் திரட்டிய பொருள் கொள்ள வேண்டும்
இந்தப்பாதத்தில் ப்ரஹ்மம் ஸ குண ப்ரஹ்மமே என்று நிரூபணம் 26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்–வைஸ்வாநர வித்யை -தஹர வித்யை போன்ற
பல வேறு வித்யைகள் பல வேறு சாகைகளில் ஓதப்படுகின்றன
இவை அனைத்தும் ஒன்றே என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்
3-3-2- அந்யதாத்வ அதிகரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்துக்களில் உள்ள உத்கீத வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் -4-ஸூத்ரங்கள்
3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்–சாந்தோக்யம் -கௌஷீதகீ -இவற்றில் கூறப்படும் பிராண வித்யை ஒன்றே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்
3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
ப்ரஹ்மம் ஆனந்த மயமானது
மாற்றம் அடையாமல் உள்ளது
ஞான மயமானது
அளவு படுத்த இயலாதது
தோஷங்கள் அனைத்துக்கும் எதிர் தட்டாய் உள்ளது
இந்த ஐந்து குணங்களும் அனைத்து வித்யைகளிலும் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்
3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்–ஆசமனம் செய்யப்படும் நீரானது ப்ராணனுக்கு வஸ்திரமாக எண்ணப்பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
3-3-6- ஸமாந அதி கரணம்–அக்னி ரஹஸ்யம் ப்ருஹத் ஆரண்யகம் -இவற்றில் கூறப்பட்ட சாண்டில்ய வித்யை ஒன்றே என்று நிரூபணம் -1- ஸூத்ரம்
3-3-7- ஸம்பந்த அதி கரணம்–ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் என்பதன் மூலம் அந்தராதித்ய வித்யை என்பதும்
கண்களை இருப்பிடமாக ப்ரஹ்மம் என்பதால் அஷி வித்யை என்பதும்
எண்ணப்பட பிவேண்டும் என்று நிரூபணம் -3- ஸூத்ரங்கள்
3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்–கட உபநிஷத்தில் உள்ள தரித்தல் என்னும் தன்மை
மற்றும் வியாபித்தல் என்னும் தன்மைகள்
அனைத்து வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டியது இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்
3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்–சாந்தோக்யத்திலும் தைத்ரியத்திலும் கூறப்படும் புருஷ வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் 1- ஸூத்ரம்
3-3-10- வேதாதி அதி கரணம்–தைத்ரிய சீஷா வல்லி யில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபணம் -1- ஸூத்ரம்
3-3-11-ஹாநி அதி கரணம்–புண்ணியம் மற்றும் பாப கர்மங்கள் மோக்ஷம் பெறுபவனிடம் இருந்து விலகி
மற்றவர்கள் இடம் சேர்கின்றன என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
3-3-12- ஸாம்பராய அதி கரணம்–உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் தனது உடலை வீட்டுக் கிளம்பும் காலத்தில்
அழிந்து விடுகின்றன என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்
3-3-13-அநியம அதி கரணம்–அனைத்து வித்யைகளுக்கும் அர்ச்சிராதி கதி மார்க்கம் பொதுவானது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
3-3-14- அஷரதி அதி கரணம்–தாழ்வுகளால் தீண்டப்படாமல் உள்ள ப்ரஹ்மத்தின் மேன்மை
அனைத்து வித்யைகளிலும் எண்ணப் பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்
3-3-15- அந்தரத்வ அதி கரணம்–ப்ருஹத் உபநிஷத்தில் -உஷஸ்தர் -கஹோலர்-ஆகியவர்கள்
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்
3-3-16- காமாதி அதி கரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் -இரண்டிலும் உள்ள தஹர வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3- ஸூதரங்கள்
3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீதா உபாஸனை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் சேர்ந்தாலும் விடுத்தாலும் தவறு இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்
3-3-18- ப்ரதாந அதி கரணம்–அபஹத பாப்மத்வம் போன்ற குணங்களை உபாசிக்கும் போது
தஹர ஆகாசம் ப்ரஹ்ம ஸ்வரூபமும் உபாஸிக்கிப் பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்–நாராயண அநு வாக்கம் என்பது ப்ரஹ்ம வித்யைகளின்
மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருளை உணர்த்துவதற்காகவே உள்ளது என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்
3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்-மனச்சித் அக்னி போன்றவை -கிரியாமயமான யாகத்துக்கு
கற்களை அடுக்கி உண்மையான அக்னி உண்டாக்கச் செய்யும் யாகம் -அங்கம் அல்ல
வித்யா மயமான யாகத்துக்கே -எண்ணத்தின் மூலமாக அக்னி எழுப்பிச் செய்யப்படும் யாகம் -அங்கமாக உள்ளது என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்
3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்–சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும் தன்னைப் பாபங்கள் அற்றவன்
முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாஸித்திக் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்
3-3-22- அங்காவபத்த அதி கரணம்–சாந்தோக்யத்தின் உத்கீத உபாஸனங்கள் அனைத்து சாகைகளிலும் தொடர்புடையவை ஆகும் என்று நிரூபணம் -2 ஸூ தரங்கள்
3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்-சாந்தோக்யத்தில் கூறப்பட்ட வைஸ்வாநர உபாஸனமே சரியானது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்
3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்–ஸத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டவையே என்ற நிரூபணம் -1- ஸூத்ரம்
3-3-25-விகல் ப அதி கரணம்–ப்ரஹ்ம வித்யைகளில் ஏதாவது ஒன்றைப் பின் பற்றினாலே பேறு என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்
3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்–முன்பு நிரூபிக்கப் பட்ட உத்கீத உபாஸனமானது அனைத்து யாகங்களில்
எப்போதும் அங்கம் அல்ல என்பதைச் சிலர் மறுக்க அதற்கு சமாதானம் கூறப்படுகிறது -6- ஸூத்ரங்கள்-
————
நான்காம் பாதம் – அங்க பாதம் –-கர்மங்கள் அனைத்துமே கைவிடத்தக்கவை என்னும் கூற்று மறுக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள பலவற்றையும்
அவற்றைக் கைக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் லில் கூறப்படுகின்றன
15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-
3-4-1-புருஷார்த்த அதிகரணம்–கர்மங்களை அங்கமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாஸனம் மூலம்
மோக்ஷம் என்கிற புருஷார்த்தம் கிட்டும் என்று நிரூபணம் -20-ஸூ த்ரங்கள்
3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்–ஸ ஏஷ ரஸா நாம் ரஸ தம -சாந்தோக்யம் -1-1-3- என்பதன் மூலம்
உத்கீதம் புகழப்படுவதற்கு மட்டுமே இது போன்று கூறப்படுகிறது
என்னும் வாதம் நிரஸனம் -இது விதி வாக்யமே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்
3-4-3- பாரிப்லவாதி கரணம்–கௌஷீதகி -3-10- சாந்தோக்யம்-6-1-1- போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு கூறும் வித்யைகளைப் புகழுவதற்காகவே என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்
3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்–சந்நியாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் போது
அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர்பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபணம் –1- ஸூத்ரம்
3-4-5-சர்வ அபேஷாதி கரணம்–க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஜம் போன்றவை ப்ரஹ்ம உபாஸனம் எதிர்பார்க்கிறது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்
3-4-6- சம தமாத்யாதிகரணம்–க்ருஹஸ்தர்களுக்கும் சம தமாதிகள் கைக்கொள்ளத் தக்கவையே என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்-பிராண வித்யை கூடிய ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே
அனைத்து விதமான உணவும் அனுமதிக்கப்படுகின்றன என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்
3-4-8- விஹி தத்வாதி கரணம்–யஜ்ஜாதி கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக இருப்பதால்
ப்ரஹ்ம நிஷ்டர்கள் க்ருஹஸ்தர்கள் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்
3-4-9-விதுராதிகரணம்–எந்த ஆஸ்ரமமும் இல்லாத மனைவியை இழந்த விதுரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்
3-4-10-தத் பூதாதிகரணம்–ப்ரஹ்மசாரி வான ப்ரஸ்தன் ஸந்நியாசி ஆகியவர்கள் தங்கள் ஆஸ்ரமங்களைக் கைவிட நேர்ந்தால்
அவர்களுக்கு அதன் பின்னர் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்
3-4-11-ஸ்வாம்யதிகரணம்–ருத்விக்கால் -யாகம் நடத்தி வைக்கும் அதிகாரியால்
உத்கீத உபாஸனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்
3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்–பால்யம் பாண்டித்யம் மவ்நம் போன்றவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகவையே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்
3-4-13-அநாவிஷ்கராதி கரணம்-பால்யம் என்பது ப்ரஹ்ம ஞானிகளை பொறுத்த வரையில்
தங்கள் மேன்மையை வெளிக்காட்டாமல் இருப்பதே ஆகும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்
3-4-14-ஐஹிகாதிகரணம் –இந்தப்பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே கைகூடும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்
3-4–15-முக்தி பலாதிகரணம்-மோக்ஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்குத் தடை ஏற்படா விட்டால் பலன் உடனே கிட்டும்
தடைகள் ஏற்பட்டால் தாமதமாகவே கிட்டும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்
———-
நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகன் கைக்கொள்ள வேண்டிய முறை -புண்ய பாபங்கள் நீங்கும் விதம் –
நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றிய தீர வேண்டும் என்பதும்
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
4-1-1-ஆவ்ருத்யதிகரணம் –ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்–
4-1-2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-
4-1-3- ப்ரதீகாதி கரணம் – பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –இவை ஆத்மா அல்ல
இவற்றை உயர்ந்த தேவதை என்று எண்ணியே உபாஸிக்க வேண்டும் -என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்—
4-1-4-ஆதித்யாதிமத்யதிகரணம் – உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாப் பார்க்க வேண்டும் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்–
4-1-5-ஆஸிநாதி கரணம் —அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்-
4-1-6–6-ஆப்ரயாணாதி கரணம் -மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-
4-1–7-ததிகமாதிகரணம் –ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-
4-1–8-இதராதிகரணம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-
4-1-9-அநாரப்த கார்யாதிகரணம்–பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபணம் -1 ஸூத்ரம்-
4-1-10-அக்னி ஹோதராத்ய திகரணம்–பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபணம் –3 ஸூத்ரங்கள் –
4-1-11-இதர ஷபணாதி கரணம் –பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-
————-
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
4-2-1-வாகாதி கரணம்– மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள் –
4-2-2- மநோதிகரணம் – மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபணம் 1 ஸூத்ரம்-–
4-2-3- அத்யஷாதி கரணம் -பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபணம் –1 ஸூத்ரம்–
4-2-4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்-
4-2-5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் – வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-
4-2-6-பர சம்பத்த்யதிகரணம் — தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபணம் ––1 ஸூத்ரம்-
4-2–7-அவிபாகாதி கரணம்– பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –
4-2-8-ததோகோதி கரணம் – மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-
4-2-9-ரஸ்ம்யநு சாராதி கரணம் -– ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-
4-2-10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்மத்தை அடைவான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –
4-2-11-தஷிணாயநாதி கரணம் – தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபணம் –2–ஸூத்ரங்கள்–
———–
நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–மூன்றாம் பாதம் கதி பாதம் -பரமபததுக்கு ஆதி வாஹிகர்கள் மூலமாக
ப்ரஹ்ம ஞானியை அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது — 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
4-3-1- அர்ச்சிராத்யாதி கரணம் — அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-
4-3-2-வாய்வதிகரணம்-– சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
4-3-3–வருணாதி கரணம் –– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்
4-3-4-ஆதி வாஹாதிகரணம்- – அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்
4-3-5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபணம் –10 ஸூத்ரங்கள்-
————–
நான்காம் பாதம் -முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம்-கைங்கர்யம் – கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்
4-4-1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் – முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –
4-4-2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-
4-4-3-ப்ரஹ்மாதிகரணம்— ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –
4-4-4-சங்கல்பாதி கரணம் – – தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்
4-4-5-அபாவாதி கரணம் – முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-
4-4-6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் – ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபணம் -6 ஸூத்ரங்கள்-
——–
அதிகாரணம் -1- ஜிஞ்ஞாஸா அதிகரணம்
1-1-1- அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–அத அத ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா-
அத பிறகு -அத ஆகவே -கர்மங்களைக் குறித்து அறிந்ததால் -அதன் பின்னர் -அதன் காரணமாக
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆராய்வதில் ஆர்வம் உண்டாக வேண்டும்
பூர்வ மீமாம்ஸையிலும் -1-1-1-அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா–அதன் பிறகு -ஆகவே தர்மத்தைக் குறித்த ஆய்வு –
அதன் இறுதியில் -12-4-35-ப்ரபுத்வாத் ஆர்த்விஜ்யம் -அவர்களால் இயலும் என்பதால் ருத்விக்காக இருத்தல்
என்கிற ஸூத்ரம் அதன் இறுதிப் பகுதியில் உண்டு
ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டுவிதமான கர்மங்கள்
தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்களையும் தர வல்லது
பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந் நாஸ்த்ய கரிதஃ கரிதேந.
தத் விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்৷৷முண்டகம் -1.2.12৷৷
ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
– ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி-அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –
ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்-ஆச்சார்யரை அணுகி கற்கிறான்
ப்ராஹ்மண -வேத அப்யாஸத்தில் இழிந்தவன்
கர்மசிதான் -கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட
பரீஷ்ய –கர்மங்கள் மூலம் ஆராதிக்கப் படுபவர்களும் -அந்த லோகங்களும் அழியக்கூடியவையே என்று அறிந்து
அக்ருத –நித்தியமாக உள்ள பரம புருஷன்
க்ருதேந -கர்மங்கள் மூலம் பெறப்படுபவன் அல்லன் என்று அறிந்து
நிர்வேத மாயான் -ஒருவன் ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்
ஸ –அப்படிப்பட்டவன்
தத் விஜ்ஞாநார்தம் ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ-அந்தப்பிரம புருஷனை அறியும் பொருட்டு
தனது கையில் சமித்தை எடுத்துக் கொண்டு ஆச்சார்யனை அடைய வேண்டும்
ஷ்ரோத்ரியம் –வேதாந்தங்களை நன்கு அறிந்த ஆச்சார்யன்
ப்ரஹ்ம நிஷ்டம்–பரம புருஷ ஸ்வரூபத்தை நேரடியாக அறிந்தவராக இருக்க வேண்டும்
தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்த சித்தாய ஷமாந் விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம்৷৷1.2.13৷৷
மனஸ் சாந்தி உடன் -பிரசாத சித்தம் -புலனை அடக்கி -அக்ஷரம் -ஸ்வரூப விகாரம் இல்லாமல் –
சத்யம் குணத்தாலும் மாறாமல் -ப்ரஹ்ம ஞானம் ஆச்சார்யர் மூலமே பெறலாம்
————–
அதிகரணம் 2- ஜந்மாத் அதிகரணம்
1-1-2-ஜன்மாதி அஸ்ய யதி
இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி போன்ற செயல்கள் எதனால் ஏற்படுகின்றதோ அதுவே ப்ரஹ்மம்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபி ஸம் விஷந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம–-தைத்ரியம் ৷৷3.1.1৷৷
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –
ஸூத்ரத்தில் யத -ஐந்தாம் வேற்றுமை உருபு -காரணத்தைக் காட்டும்
ஜன்மத்துக்குக் காரணம் நிமித்த உபாதானம் இரண்டையுமே கொள்ள வேண்டும்
யதோ வா இமாநி –எந்த ஒன்றிடம் இருந்து
என்பதால் இந்த அர்த்தம் உறுதி ஆகிறது
ஸத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –6-2-1-
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது-அந்த ஓன்று மட்டும் இருந்தது – நான் பலவாகக் கடவேன் என்று சங்கல்பித்து முதலில் தேஜஸ்ஸைப் படைத்தது
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் -ஸ்வேதாஸ்வரம் -4-9-
மாயையை யுடைய ஈஸ்வரன் ப்ரக்ருதி மூலம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான்
பூர்வ பக்ஷம் -நிமித்த உபாதான இரண்டுமாக ப்ரஹ்மம் இல்லை என்பது
இத்தை -1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண் படாமல் இருக்கும் -என்றும்
1-4-24-அபித்யோப தேஸாத் ச–ப்ரஹ்மம் தானே சங்கல்பிப்பதாகக் கூறுவதால் என்றும்
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச-இந்த நிமித்த உபாதான இரண்டு விதமாகவும் உள்ளதாக ஸ்ருதிகள் நேரடியாக் கூறுவதால் என்றும்
1-4-26-ஆத்ம க்ருதே-தன்னைத் தானே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதால் என்றும்
உள்ள ஸூத்ரங்களால் தள்ளப் படுகின்றன
இதற்கு ஆஷேபம் தானே காட்டி சமாதானமும் அருளிச் செய்கிறார்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்–பிரளயத்தின் போது உலகத்தைப் போன்று
ப்ரஹ்மத்துக்கும் மாற்றம் அடையும் என்னும் தோஷம் வருமே
2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி–ப்ரஹ்மம் தனக்கு நன்மையைச் செய்து கொள்ள வில்லை
தோஷத்தையே ஏற்படுத்திக் கொள்கிறது
இதற்க்கு சமாதானமாக
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்றும்
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்–ப்ரஹ்மம் வேறானது என்று கூறுவதால்-
ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய –ஸ்வேதாஸ்வரம் -5-1-
அவித்யை கர்மம் அழியக் கூடியது
வித்யை ப்ரஹ்ம ஞானம் அழியாதது
இரண்டையும் நியமிப்பவன் ஜீவாத்மாவை விட வேறு பட்ட ப்ரஹ்மம்
ச காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித ஜனிதா ந ஸாதிப -ஸ்வேதாஸ்வர -6-9-
பரம புருஷனே அனைத்துக்கும் காரணம்
இந்திரியங்களின் அதிபதியாக உள்ள ஜீவாத்மாவின் அதிபதியாக உள்ளான்
அவனை உண்டாக்கியவரும் அவனுக்கு தலைவனும் யாரும் இல்லை -என்றும்
ஷரம் ப்ரதானம் அம்ருத அக்ஷரம் ஹரஸ் ஷராத்மாநா விஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர -1-10-
பிரதானம் ஷரம் அழியக்கூடியது
இதனைத் தனது இன்பத்துக்காகக் கொள்பவன் அக்ஷரம் எனப்படும் ஜீவாத்மா -இதனால் ஹரஸ் எனப்படுபவன்
ஒரே தேவன்
இவை இரண்டையும் நியமித்தபடி உள்ளான்
அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —
த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷
த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது
லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷
உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்
ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.
யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷
யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்
யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.
ப்ரஹ்மமே பிரத்யாகாத்மாவின் ஆத்மாவாக உள்ளவன் என்பதை
யஸ் ஆத்மநி திஷ்டன் –யஸ்ய ஆத்மா சரீரம் -ப்ரு -3-7-22-
யார் ஆத்மாவில் வஸிக்கிறாரோ –யாருக்கு ஆத்மா ஸரீரமோ என்றும்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்ய ஏகோ நாராயண -ஸூபால –7-1-
அனைத்து பூதங்களுடைய ஆத்மா ஆவான்
பாபங்கள் அற்றவன்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவன்
அவன் நாராயணனே ஆவான்
போன்ற பல ஸ்ருதிகள் உண்டே
குணங்களும் தோஷங்களும் சரீர அளவிலே உள்ளவையே
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்பதில்
உதாரணங்கள் -என்றது சரீரத்துடன் கூடிய ஜீவாத்மா
மனிதன் தேவன்
குழந்தைப் பருவம் வாலிபன் வயோதிகம் போன்ற தோஷங்கள் சரீரத்துக்குத் தானே
இதே போல் ஆத்மாவுக்கு உள்ள ஞானம் சுகம் தேகத்தைத் தொடுவது இல்லை
ஆகவே காரண நிலையிலும் கார்ய நிலையிலும் பிரத்யகாத்மாவை சரீரமாகக் கொண்டதாயும்
அதன் ஆத்மாவாகவும் உள்ள ப்ரஹ்மமும் பிரத்யாகாத்மாவும் சாமான கரண்யத்தில் வைக்கப்படலாம்
இதனால் இருவதும் ஒன்றே என்னும் மாயாவாதத்தைத் தவிர்க்கவே
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-என்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்பது உறுதியாகும் பொருட்டே
ஒரே வேற்றுமையில் ப்ரஹ்மத்தையும் பிரத்யகாத்மாவையும் படிக்கலாமே
2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
கர்மம் காரணமாகவே இருப்பதால் பாரபக்ஷமோ கருணை இன்மையோ ப்ரஹ்மத்துக்கு வராதே
2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரஹ்மம் தவிர வேறே ஒன்றுமே இல்லை என்பதால்
ஜீவாத்மாவும் கர்மமும் இல்லை என்றால்
அது சரியல்ல -அவை அநாதி
ஜீவாத்மாக்களும் கர்ம ப்ரவாஹமும் தொடக்கம் அற்றது என்பதை கட -5-13-நித்யோ அநித்யானாம் சேதன அசேதனாநாம் என்றும்
ஞா அஜ்ஞவ் த்வவ் –ஸ்வே -1-9-பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
என்ற ஸ்ருதி வாக்கியங்கள் விளக்கும்
பிரளய காலத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றியே இருப்பதை
ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் ந -அந்யத் கிஞ்சித் மிஷத் – ஸ்ருதி விளக்கும்
ஆத்மா நித்யம் உத்பத்தி இல்லை என்பதை
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:-என்று
ஸ்ருதி கூறுவதாலும் ஸ்ருதி நித்யமாகையாலும் என்றும்
அது ஞான ஸ்வரூபமே என்பதை -2-3-19- ஜ்ஜோ அத ஏவ-என்றும்
அது அணு அளவானதே என்பதை 2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்-என்று
சரீரத்தில் இருந்து வெளிக்கிளம்புதல் நகர்தல் மீண்டும் திரும்புதல் கூறப்படுவதால் என்றும்
ஞான ஸ்வரூபன் -ஞானம் உடையவன் -தர்மபூத ஞானமும் தர்மி ஞானமும் இரண்டும் உண்டு என்பதை
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்-என்றும்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்-என்றும்
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதால் ஞானம் என்றே கூறுவதில் தவறு இல்லையே –
ஒரு சிலர் ஞானமே ஆத்மா -ஆத்மாவுக்கு அறிவே ரூபம்
இந்த்ரங்கள் மூலம் பெறப்பட்ட ஞானமே ஆத்மா
ஆத்மா விபு
என்று கூறும் தோஷங்கள் அனைத்தும்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா-என்ற
ஸூத்ரத்தால் கூறப்பட்டன
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா
என்று
ஜீவனே செய்கிறான் பிரகிருதி அல்ல
அதுவும் ப்ரஹ்மத்தின் தூண்டுதலால் என்பதை
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:–என்ற ஸூத்ரங்கள் நிரூபிக்கின்றன
2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச-போன்ற ஸூ த்ரங்கள் விளக்கும்
ஸ்வேதாஸ்வர -4-7- அநீசயா சோசதி முஹ்யமாந
ஜூஷ்டாம் யதா பஸ்யத் அந்நிய மீச மஸ்ய மஹிமாநம் இதரோ வீத சோக -என்று
ஜீவன் பிரக்ருதியால் மோகம் அடைந்து வருந்துகிறான்
அதே மரத்தில் உள்ளவனும் அனைத்தையும் நியமிப்பவனுமான பரமாத்மாவின் மேன்மையை அறிந்து
அவன் துன்பங்கள் விளக்குகின்றன -என்றும்
ஸ்வே –5-1- ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய
அழியக்கூடிய அவித்யை கர்மம் அழியாத ப்ரஹ்ம ஞானம் இரண்டையும் இயக்கம் ப்ரஹ்மம்
ஜீவாத்மாவை விட வேறு பட்டவன் என்றும்
ப்ராஞ்ஜே ந ஆத்ம நா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம்ன் கிஞ்சன வேத ந அநந்தரம் –4-3-21-
பரமாத்மாவால் தழுவி அணைக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளும் புறமும் சிறிதும் அறியாதவனாக என்றும்
ஸ்வே -1-19- ஞா அஜ்ஞவ் த்வா அஜவ் ஈஸ அநீஸவ்-என்றும்
ஸ்வே -1-6- பிருத காத்மா நம் பிரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி
வெவ்வேறாக அறிந்தவன் அந்த ஞானமே ஹேதுவாக ப்ரஹ்மத்தின் பிரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்
இத்தையே முண்டகம் -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்மம் யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்றும்
ஸ்வே –6-9-ஸ காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ஸாதிப –
முண்ட -1-1-9- யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -அனைத்தையும் அறிந்து உணர்ந்தவன்
ஸ்வே -6-8- பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
ஸ்வ 6-19–நிஷ் கலம் நிஷ் க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
கட -5-13- நித்யோ நித்யானாம் சேதனச் சேதனநாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான்
பதிம் விஸ் வஸ்ய ஆத்ம ஈஸ்வரம்
சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸீ
ப்ரு -2-5-19- அயம் ஆத்மா ப்ரஹ்ம
ஐதரேயம் -2-2-46- ய அசவ் ச அஹம் ய அசவ்
ப்ரு -1-4-10-அதயோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்நிய அசவ் அந்நிய அஹம் அஸ் மீதி ந ஸ வேத
ப்ரு -1-4-7-அக்ருத்ஸ நோ ஹி ஏஷ –ஆத்மா இதி ஏவ உபாஸீத
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம இமே கிதவா
ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சமே என்பதை
சாந்தோக்யம் -3-12-6-பாதோஸ்ய விஸ்வா பூதாநி
அனைத்து உயிர்களும் அவனுடைய ஒரு பாதமே ஆகும் என்றும்
மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்
மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷
ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா,
மம அம்ஸ ஏவ-எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள,
மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி-ஈர்க்கிறது.
அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:-ஒளி முதலானவை போன்றே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும்-அம்சமாக இருந்தாலும் வேறே வேறே தான்
பால் வெண்மை -பிரகாசம் ஜாதி குணம் சரீரம் போல்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்-ஜீவாத்மா கர்த்தாவாகிறான் என்பதற்கும்
2-3-40-பராத்து தத் ச்ருதே :-அந்த செயல் ஆற்றும் தன்மை பரமாத்மாவாலேயே உண்டாகிறது
என்பதற்கும் முரண்பட்டு இல்லை
ஸ்ரீ விஷ்ணு புராணமும்
ஏக தேச ஸ்தி தஸ்ய அக்நே ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண சக்தி தத் ஏதம் அகிலம் ஜகத் –1-22-56-57
ஒரு இடத்தில் உள்ள அக்னியின் தேஜஸ் பல இடங்களிலும் பரவுவது போல்
பர ப்ரஹ்மத்தின் சக்தி எங்கும் பரவி உள்ளது
யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்வ ஜாதோந வை த்விஜ
தஸ்ய ஸ்ரு ஜஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரே –1-22-38-
பிராணியை ஸ்ருஷ்டித்த ஹரியே அந்தர்யாமியாகவும் உள்ளான்
தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோர் அம்சம் உத்பவா –1-22-20-
சிலர் உபாதி என்ற ஒன்றைக் கல்பித்து சொல்லும் வாதங்களை
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்
இவ்வாறு அவித்யை உபாதி இரண்டையும் தள்ளி ஸித்தாந்தம் நிரூபணம்
——–
1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –
யதோ வா இமானி பூதாநி – தைத்ரியம் 3-1-1- ஒரே காரணம் ப்ரஹ்மமே
அனுமானம் கொண்டு அறிய ஒண்ணாது
———-
1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –
ஸமன்வய என்பது புருஷார்த்ததுடன் ஸம்பந்தம் கொண்டு இருத்தல்
ஸாஸ்த்ரத்துக்கு புருஷார்த்தம் போதிப்பதே நோக்கம்
ஆகவே ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியப்படும் என்பதில் எந்த வித தோஷமும் இல்லையே
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –