விதௌ ப்ரவ்ருத்தே யத்த்ரவ்யம் குண சம்ஸ்கார நாமபி
ஸ்ரேயஸ் சாதன மாம் நாதம் தத் பதத்ரம் ததாஸ்து மே –831-
எந்த உயர்ந்த வஸ்துவான ஸ்ரீ பாதுகை -குணம் -திருவடி உடனும் -தேவர்கள் க்ரீடங்களின் உடனும் கொண்ட தொடர்பு –
அடியார்களுக்கு அருளுவது -போன்ற குணங்கள்
சம்ஸ்காரம் -தங்கத்தாலாய் இருப்பது -மணிகள் இழைக்கப் பட்டு இருப்பது -திருச் சங்கு திருச் சக்ராதி ரேகைகளைக் கொண்டு இருப்பது போன்ற சீர் பாடுகள்-
பெயர் -திருப்பாதுகை -ஸ்ரீ சடகோபம் ஆதி சேஷன் போன்றவை
எல்லாம் கொண்டதாய் -பகவான் சஞ்சரிக்க உதவும் கருவியாய் மிக உயர்ந்த சாதனமாக ஓதப்பட்டு உள்ளதோ
அந்த ஸ்ரீ பாதுகை எனக்கு அதே போலே ஸ்ரேயஸ் தந்து அருளட்டும் –
வேதம் விதித்த கர்மா நடப்பதற்கு எந்த த்ரவ்யம் குணம் -எம்மரத்தினால் ஆனது போன்றவை –
சம்ஸ்காரம் -எட்டுப் பட்டையாகச் செய்தல் -நடுதல் போன்றவை
பெயர் யூபம் போன்ற தன்மைகளைக் கொண்டு நமக்கு நல்லதாக நல்லதைக் செய்வதாக வேதத்தில் ஒத்தப் பட்டு உள்ளதோ
அந்த த்ரவ்யத்தை போன்ற ஸ்ரீ பாதுகை எனக்கு ஸ்ரேயஸ் ஸூ க்குக் காரணமாக அமையட்டும் –
பெருமாள் ஒரு ஜீவனுக்கு நல்ல சக்தி கொடுக்க ஆரம்பித்து விட அவருடைய தயாதி குணங்கள் ஜீவனுக்கு ஏற்படும் பஞ்ச சம்ஸ்காரம்
ஜீவன் பெரும் தாஸ்ய நாமம் இவைகளை உண்டு பண்ணி நல்ல ஆசார்யர்கள் மோஷ சாதனம் செய்து அளிக்கிறார்கள் என்றவாறு –
——————————————————————————-
மதுரஸ் மித ரம்ய மௌக்திகஸ்ரீ விசசி வ்யஞ்ஜித மஞ்ஜூள பிராணாதா
சஹ ரங்க ந்ருபேண வாஸ கேஹம் தாநு மத்யா மணி பாதுகே த்வமேகா –832–
ஸ்ரீ மணி பாதுகையே நீ ஒருத்தி அந்த ஸ்ரீ ரங்க ராஜனோடு கூடப் பள்ளி அறையில் புகுகிறாய்
அதை சேவிக்கிறேன் -எப்படி என்றால்
புன்சிரிப்பில் முத்துப்பல் இலகும் -உன் மேல் முத்துக்களின் காந்தி நடை போடும் போது
இனிய நாதம் சிறுத்த நடை எல்லாம் நாயகிக்கும் ஒக்கும் -நீ அவர் நாயகி அவருடன் பள்ளி அறை புகுவது ஒக்கும் –
———————————————————————–
ஸூப சப்த விசேஷ சம்ஸ்ரிதாபி
பவதீ சௌரி பதாவநி க்ரியாபி
அனுதிஷ்டதி நூ ந மாஸ்ரிதா நாம்
அகிலோ பத்ரவ சாந்திகம் நவீனம் –833-
ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ பாதுகையே நீ சுபமான நாதத்தை எழுப்புகிறாய் -அது சக்தி வாய்ந்த மந்த்ரம் வேதம் போலே –
சஞ்சரிக்கிறாய் -வேத விஹித கர்மாக்காளைச் செய்கிறாய் -ஆஸ்ரிதர்கள் உடைய உபத்ரவம் அனைத்தையும் சமனம்
செய்து அருளும் ஒரு சாந்தி கர்மாவை நீ அனுஷ்டிக்கிறாய் போலும் –
நால்வர் வேத சாரமான அருளிச் செயலை அளித்து சரணா கதி என்னும் சரம உபாயத்தையும் காட்டி அருளி நம்மை உஜ்ஜீவிக்கிரார் என்றபடி —
—————————————————————-
மணிபிர் மதுவைரிபி பாத ரஷே
பவதீ விக்ரமணே ப்ரவர்த்தமாநா
யுகபத் பவதாம் யுகாந்த காலே
திவி லஷ்மீம் விததே திவாகராணாம் –834-
ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரிவிக்ரமனாக திரு உலகு அளந்து அருளின பொது திருவடிக்கு ஏற்றால் போலே வளர்ந்து அருளிய நீ
உன்னிடத்தில் இருக்கும் பல பல ரத்னங்களில் இருந்தும் வந்த அதிக ஜ்வலிப்பாள் பல பல சூரியர்கள் பிரகாசிப்பது போல் எடுத்துக் காட்டினாய் –
பிரளய காலத்தில் தான் இப்படி எல்லை இல்லாத சூர்யர்கள் தோன்றுவாராம் -அது அழிவிற்கு
-இப்போது நீ வெளிப்படுத்தும் காட்சியோ அழகும் சோபையும் மங்களமும் உள்ளடக்கியது –ஆழ்வார்களின் அருளிச் செயல்களும் அப்படியே –
————————————————————–
மஞ்ஜூ ஸ்வநாம் மணி மயூககலாபி நீம் த்வாம்
த்ருஷ்ட்வா கபர்தச விதே விநிவேச்யமா நாம்
கூடீ பவந்தி கருடத்வஜ பாத ரஷே
பூத்கார வந்தி புரவைரி விபூஷணா நி –835-
ஸ்ரீ பெருமாளின் திருப் பாதுகையே திரிபுர சத்ருவான சிவன் சர்ப்பங்களை பூஷணங்களாகக் கொண்டு இருப்பவன்
நீ அவன் தலையில்வைக்கப் படுகிறாய் -நீ மதுரமான சப்தம் உண்டாக்குகிறாய் -உன் ரத்னங்களின் பலதரப்பட்ட ஒளிக் கதிர்கள்
சிவன் சடைக் காட்டின் அருகில் வெளிப்பட -அது ஏதோ தோகை விரித்த மயில் என்ற தோற்றம் ஏற்படுகிறது -அதைக் காணும்
பாம்புகள் சீறிக் கொண்டுபெரு மூச்சு விட்டுக் கொண்டு இங்கும் அங்கும் ஓடி ஒளிகின்றன –
பல வர்ணங்கள் பல ரசங்கள் பல அர்த்தங்கள் கொண்ட திருவாய்மொழி அர்த்த விசேஷத்தால் தோகை போல் விரியும்
அதைக் காணும் சம்சார விஷ சர்ப்பங்கள் அஞ்சியோடும் என்பதில் ஐயம் இல்லையே –
——————————————————————-
மத்யே பரிச்புரித நிர்மல சந்திர தாரா
ப்ராந்தேஷூ ரத்ன நிகரேண விசித்ர வர்ணா
புஷ்ணாசி ரங்க ந்ருபதேர் மணி பாதுகே தவம்
சஷூர்வ ஸீ கரண யந்திர விசேஷ சங்காம் –836-
ஸ்ரீ ரங்கராஜனின் ஸ்ரீ பாதுகையே உன் நடுவில் மாற்றுக் குறையாத சுத்த ஸூ வர்ணம் –முத்துக்கள் ரத்னங்களின் கூட்டம் –
பலவித நிறங்கள் உடன் தோற்றம் அளிக்கும் நீ -அப்ரகம் என்ற தகட்டில் சந்திர மண்டலம் போல் வட்டக் கோடிட்டு நடுவில் பிரணவம் எழுதப்பட்டு
சுற்றிலும் அநேகம் மந்திர அஷரங்கள் எழுதப் பெற்று இருக்கும் ஒரு யந்த்ரம் பார்க்கிறவர் கண்ணை மயக்கி விடும் இப்படி எனக்கு ஒரு சங்கை உண்டாகும் –
இத்தகைய யந்த்ரம் கண்டவரை ஸ்வாதீனப் படுத்தும் என்று தந்திர சாஸ்திரம் -ஆழ்வார் ஆசார்யர்களை சேவிப்பதே ஒரு வசீகரண யந்த்ரம் –
——————————————————————————————–
பாதேந ரங்க ந்ருபதே பரிபுஜ்யமாநா
முக்தா பல ப்ரகடித ச்ரம வாரி பிந்து
உத்கண்டகா மணிமயூக சதைரு தக்ரை
சீத்காரிணீவ சரணாவநி சிஞஜிதைஸ் த்வம் -837-
ஸ்ரீ பாதுகா தேவியே பெருமாள் திருவடி உன் நாயகன் -ணீ அவருடன் சம்ச்லேஷிக்கிராய்-அப்போது விளையும் வியர்வை முத்துக்கள்
தாம் உன் மீது முத்துக்களாகத் தோற்றும் –உனக்கு ஏற்படும் மயிற்க் கூச்சு நூற்றுக் கணக்கான ஒளிக் கதிர்களாக ரத்னங்களில் இருந்து
செங்குத்தாகக் கம்பி போல் தோற்றும் நீ கலவியில் எழுப்பும் உஸ் உஸ் போக ஒலி தானே உன் நாதம் –
ஸ்ரீ பராங்குச நாயகி ஸ்ரீ பரகால நாயகி போலே ஸ்ரீ பாதுகா நாயகியும் பரமபக்தி விளைவித்த சம்ச்லேஷம் நமக்காக இப்படி எடுத்துக் காட்டப் பெறுகிறது
—————————————————————————
தூர ப்ரசாரிதகரா நிநதைர் மணீ நாம்
ஆயாதி தைத்ய ரிபுரித்ய சக்ருத் ப்ருவாணா
தைத்யேஸ் வராநபி முகான் ஜநிதா நுகம்பா
மன்யே நிவார யஸி மாதவ பாதுகே த்வம் –838–
ஸ்ரீ பகவானின் பாதுகையே உன் ரத்னங்களின் ஒளிக் கதிர்கள் கைகள் போலே வெகு தூரம் எட்டி நீட்டும் –
உன் ரத்ன ஒலிகள் மூலம் தயை யுடைய நீ எதிரில் வரும் அசூரர்களுக்கு ஏதோ சொல்லுகின்றாய் –
அது உங்களை நிரசிக்க பெருமாள் எழுந்து அருளுகிறார் ஓடிப் போங்கள் என்று அறிவிப்பதாகத் தோற்றும்
இவ்வொலி கேட்டதுமே அவர்கள் பயந்து அடங்கி ஒடுங்கி ஓடி விடுவர்
-ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் புற சமய வாதிகளை நிரசித்து ஒழிக்கும்-
———————————————————————————
அச்சேத்ய ரஸ்மி நியத க்ரம ரத்ன துர்யா
நிஷ்கம் பகூபர நிபம் தததீ ப்ரதீகம்
க்ரீடாக தேஷு மது ஜித் பதபத்ம லஷ்ம்யா
க்ர்ணீரதஸ் த்வமஸி காஞ்சன பாத ரஷே –839–
ஸ்ரீ பொற் பாதுகையே பெருமாள் திருவடித் தாமரையின் அழகு சபையை ஒரு பிராட்டியாகவே ஸ்ரீ மஹா லஷ்மியாகவே உருவகப்படுத்தலாம் –
அந்த பிராட்டிக்கு நீ ஒரு விளையாட்டுத் தேர் போலே உஊர்ந்து செல்ல வல்லாய் -உன் கிரணங்கள் குறைவற்றவை –
தவறாது வரிசையாய் வந்து கொண்டு இருப்பவை -ஒழுங்காக ரத்ன அமைப்பு உள்ளவள்- நீ நிலையான ஏர்க்கால் போன்ற குமிழை யுடையவள் –
அடக்க முடியாத கடிவாளங்களால் அளவுக்கு அடங்கிய அடி வைப்பு உடைய குதிரைகளை யுதைத்தான தேர் –
ஆசார்யர்கள் ஆகிற தேரில் ஏறிப் பெருமாள் உலகைத் திருத்துகிறார் –
—————————————————————————–
மஞ்ஜூஸ்வநா மரத கோபால மேசகாங்கீ
ஸோணாஸ்ம துண்ட ருசிரா மணி பாதுகே த்வம்
பத்மா விஹார ரசி கஸ்ய பரஸ்ய யூந
பர்யாயதாம் பஜசி பஞ்ஜர சாரி காணாம் –840-
ஸ்ரீ மணி பாதுகையே உன் நாதம் இனியது -பச்சைக் கற்கள் ஒரு ஒட்டு மொத்தமான கரும்பச்சை மேனியை எடுத்துக் காட்டும் –
சிவப்புக் கல் பகுதி மூக்குப் போல் உள்ளது
-இப்படி கூட்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் சாரிகை -கிளி நாகணை வாய்ப் பறவை போன்ற உருவம் உடையவளாய் இருக்கிறாய்
-பெரிய பிராட்டியுடன் லீலையில் ஈடுபட்டு இருக்கும் ரசிகனான நித்ய யுவா பரம புருஷனுடைய செல்லக்கிளி போல் தோன்றுகிறாய் –
————————————————————————
ஸோணோ பலைஸ் சரண ரஷிணி சம்ஸ்ரிதே ஷூ
ச்சாயாத்மநா மரதகே ஷூ தவாவகாட
அந்வேதி சௌரிரபித பல பங்க்தி ஸோபிநி
ஆத்மா நாமேவ சயிதும் வடபத்ர மத்யே –841-
ஸ்ரீ பாதுகையே சுற்றிச் சிவப்புக் கற்கள் -உள்ளே பச்சைக் கற்கள் -பெருமாளின் பிரதிபிம்பம் விழுகிறது -அப்போது நேர்படும் காட்சி
பகவான் ஆலிலையில் சுற்றி ஆலம் பழங்கள் இருக்க சயனித்துள்ள தன் உருவத்தைக் காட்டுவது போலுள்ளது –
———————————————————————-
ஸ்பீதம் பதாவநி தவ ஸ்நபநார்தர மூர்த்தே
ஆஸாகரம் ததமபூத் மணி ரஸ்மி ஜாலம்
லீலோசிதம் ரகு ஸூதஸ்ய சரவ்ய மாசன்
யாதுநி யஸ்ய வலயேந விவேஷ்டிதாநி –842–
ஸ்ரீ பாதுகையே உனக்கு அபிஷேகம் செய்யப்படவும் நனைந்த உன் திருமேனி அதிகமான கிரணங்களை ரத்னங்களில் இருந்து வெளிவிட
இக்கிரணங்கள் சமுத்திர எல்லை வர வட்டமாக ஒரு வலை விரித்தால் போல் ஆயிற்று –
அதற்குள் சிக்கி ராஷசர்கள் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனின் அம்பு விடுதல் என்கிற ஒரு விளையாட்டுக் காரியத்தில் இலக்காகி வீழ்ந்தனர் –
——————————————————————————-
ரக்தாம் ஸூபிஸ்தவ ததா மணி பாத ரஷே
சாம்ரஜ்யமாந வபுஷாம் ரஜநீ முகேஷூ
ஆகஸ்மி காகதம் அதர்சி மஹௌஷதித்வம்
சாகேத பத்த ந சமீபருஹாம் த்ருமாணாம் –843-
ஸ்ரீ மணி பாதுகையே நீ அரசாளும் போது உன் ரத்ன காந்திக் கதிர்கள் சென்று திரு அயோத்யா நகருக்கு அருகில் உள்ள
மரங்களைத் தாக்கி அவை இரவில் ஒளிரச் செய்தன –
அந்த மரங்கள் எல்லாம் திடீர் என்று மஹௌஷதிகள்-அல்லது -எரி வல்லிக் கொடிகள் -என்று பிரசித்தி அடைந்தன -எல்லோரும் வியக்கும் படி –
ஸ்ரீ பாதுகையின் ஒளி போல் ஆழ்வார்களின் அனுக்ரஹ பலமும் எவனையும் பிரகாசிக்கச் செய்யும் –
————————————————————————
ராமே வநம் தசரதே ச திவம் ப்ரயாதே
நிர் தூத விஸ்வ திமிரா சஹஸா பபூவ
பூயிஷ்ட ரத்ன கிரணா பவதீ ரகூணாம்
பூய ப்ரதாபதப நோதய பூர்வ சந்த்யா –844-
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ தண்ட காரண்யம் போகவும் தசரத சக்கரவர்த்தி ஸ்வர்க்கம் போகவும் நாடி இருளில் மூழ்கியது –
அதைப் போக்கியது உன் ரத்ன ஒளி -அது பரவும் நேரம் இருள் நீங்கிக் காலை போல் ஆயிற்றே –
ஆம் -ரகுகுல மன்னர்களின் பராக்கிரமம் உதயம் ஆகிற காலம் -காலை சந்த்யை-
இருள் போக்க திருவவதரித்தது ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் –
—————————————————————————-
ப்ரீதேந தேவி விபுநா ப்ரதிபாத நீயாம்
பாதாவநி பிரதிபாதோதித மஞ்ஜூநாதாம்
வித்யாம் விதுர்பகவத ப்ரதிபாத நார்ஹாம்
பாராயணா கமபயோநிதி பாராகாஸ்த்வாம் –845-
ஸ்ரீ பாதுகையே வேத சமுத்திரத்தின் கரையைக் கண்டவர்கள் உன்னை வித்யை என்று அறிகிறார்கள் –
இந்த வித்யை ப்ரீதனான -நமது நடத்தையினால் திருப்தி யுற்ற பகவானால் நமக்கு உய்யும் வகையாக அருளப் பெற்றது –
இந்த வித்யையின் ஒலி ஒவ்வொரு திருவடி வாய்ப்பிலும் மதுரமாக ஒழிக்கப் படுகிறது –
பகவானை அடைய இது தக்க உபாயம் -அப்படிப்பட்ட வித்யை நீ –
இந்த வித்யை பகவத் ப்ராப்தியைத் தரும் -திருப் பாதுகையில் பகவான் எழுந்து அருள்கிறாரே –
————————————————————————–
முக்தாம் ஸூ கேசரவதீ ஸ்திர வஜ்ர தம்ஷ்ட்ரா
ப்ரஹ்லாத சம்பத நுரூப ஹிரண்ய பேதா
மூர்த்தி ஸ்ரியோ பவசி மாதவ பாத ரஷே
நாதஸ்ய நூநமுசிதா நரசிம்ஹ மூர்த்தே –846–
ஸ்ரீ பாதுகையே நீ ஸ்ரீ நரசிம்ஹ திரு அவதாரத்துக்கு தக்கதான பிராட்டி உருவம் ஆகிறாய் போலும் -முத்துக்களின் ஒளிக் கம்பிகள் ஆகிற
பிடரி மயிர் உடையதாயும் -கெட்டியான வைரக் கற்கள் ஆகிற கோரைப் பல்லுடையதாயும் அடியார்களின் ஆனந்த சம்ருத்திற்கு
ப்ரஹ்லாதனுடைய பக்தியாகிற ஐஸ்வர் யத்துக்கு மிகவும் ஒத்ததான உயர்ந்த தங்கத்தை யுடையதாய்
ஹிரண்யகசிபு வதத்தைச் செய்ததாய் அந்த ஸ்ரீ நரசிம்ஹ உருவம் உண்டாயிற்று –
————————————————————————————-
சம்பாவ யந்தி கவயஸ் சதுர ப்ரசாரம்
மஞ்ஜூஸ்வநாம் மஹித மௌ கதிக பத்ரளாங்கீம்
ஸ்வாதீன சர்வ புவ நாம் மணி பாதுகே த்வாம்
ரங்காதி ராஜ பத பங்கஜ ராஜ ஹம்சீம் –847–
ஸ்ரீ மணி பாதுகையே கவிகள் உன்னைக் கொண்டாடுவர் -உன் சீரிய நடை -இனிய நாதம் -முத்துக்களின் இருக்கை- அழகிய வெண் சிறகுகள்
சர்வ உலகங்களையும் உனக்கு அதீனமாக வைத்து இருக்கும் திறன் இவை எல்லாம் கொண்டு நீ ஒரு ராஜ ஹம்சம் என்று கண்டு புகழ்வர்-
-நீ பொருத்தமாக ஸ்ரீ ரங்க ராஜனுடைய திருவடித் தாமரைகள் ஆகிற இருப்பை உடையாய் நீ ஒரு அன்னப் பட்சி தான்
நீரில் வாழும் பட்சிகள் -கவிகள் -மேற்படி தன்மைகளை யுடைய உன்னை உலகில் உள்ள அனைத்து ஜலங்களையும் அதீனம் ஆக்கி
வைத்து இருக்கும் ராஜ சிம்ஹமாக ஏற்றிப் போற்றி வரும்
புவனம் -உலகம் -ஜலம் -கவி புலவர் -நீர்ப்பட்சி ஹம்சம் ஆசார்யனுக்கு நல்ல குறிப்பு -ஸ்ரீ பாதுகையே நமக்கு பிரதம ஆசார்யர் -நம்மாழ்வார் –
——————————————————————————————-
முத்தா மயூகருசிராம் மணி பாத ரஷே
மஞ்ஜூஸ்வநாம் மணி பிராஹித வர்ண வர்க்காம்
மன்யே முகுந்த பதபத்ம மது வ்ரதீ நாம்
அன்யாமக்ருத்ரிம கிராம் அதிதேவதாம் த்வாம் –848–
ஸ்ரீ மணி பாதுகையே -முத்துக்களின் ஒளி அழகிய இனிய நாதம் ரத்னங்களால் உண்டாக்கப்பட்ட பல வர்ணங்கள்
இவை உன் சிறப்புக்கள் -உன் மீது பகவானின் திருவடித் தாமரைகள் அவற்றின் மீது சுழலும் பெண் வண்டுகள் ரீங்காரம் இடும் –
அவை ஸ்ருதிகள் என்னலாம் -ஸ்ருதிகளும் முக்தாம யூக ருசிரமானவை
-முக்த -அமயூக -ருசிரம் -ஒளி அற்றமை நீங்கியவை -அதாவது ஒளி மிக்கவை -அழகியவை கூட
பல வர்ணங்கள் அஷர சமூஹங்கள் சேர்ந்து வேதமாகிறது
வேதங்களுக்கு அதிஷ்டான தேவதை நீ -இன்னோர் அதிஷ்டான தேவதை
-ஓன்று சரஸ்வதி யாயிற்று -அவள் வெளுப்பு -இனிய நாதம் போன்ற தன்மைகளுக்கு உரியவள் –
———————————————————————————
ஆசாத்ய கேகய ஸூதா வரதாந மூலம்
காலம் ப்ரதோஷ மநி ரீஷ்ய ரமா சகாயம்
மஞ்ஜூ ப்ரணாத ரஹிதா மணி பாத ரஷே
மௌநவ்ரதம் கிமபி நூந மவர்த்த யஸ்த்வம் –849–
ஸ்ரீ மணி பாதுகையே கைகேயிக்கு தசரத சக்கரவர்த்தி கொடுத்த வரம் காரணமாக பெருமாளையும் பிராட்டியையும் பிரிந்து இருக்க நேரிட்டது
அதை நீ தோஷம் மிக்க காலமாகக் கருத்தினாய் -மஹா ப்ரதோஷ காலம் -த்ரயோதசி -அஸ்தமன காலம் -மௌனம் விதிக்கப் பட்டுள்ளது
பகவானைப் பிரிய நேரிட்டதால் தோஷம் ஆயிற்றே நீ அழகிய ஒலி தவிர்த்தாய் -மௌனத்தை ஏற்றாய் –
ஆழ்வாரின் இனிய அருளிச் செயல் அனுசந்தானம் பெருமாளுக்கு முன்பு தான் –
பெருமாள் அருகில் இல்லாத போது ஸ்ரீ பாதுகை -நம்மாழ்வார் மௌனம் ஆயிற்றே –
————————————————————————
வைடூர்ய ரம்ய சலிலா மஹிதா மருத்பி
ச்சாயாவதீ மரத கோபாலரச்மி ஜாலை
அஸ்ராந்த மோஹ பதவீ பதி கஸ்ய ஜந்தோ
விஸ்ராந்தி பூமிரிவ சௌரி பதாவநி த்வம் –850-
ஸ்ரீ பாதுகையே உனது வைடூர்ய கற்கள் தெளிந்த நீர் நிலை போல் தோற்றும் -காற்று வீசி குளுமை தரும்
-மரகதக் கற்களின் பசுமை ஒளி சோபையைத் தரும் –
நிழலைத் தரும் -அத்தகைய சூழலில் நீ ஓயாமல் மோஹம் அஜ்ஞானம் மூர்ச்சை இவற்றை விளைவிக்கும்
சம்சார அலைச்சலில் களைத்த நமக்கு இளைப்பாறும் பூமியாகிறாய்
மருத் -காற்று -தேவர் -தேவர்களால் பூஜிக்கப் படுகிறாய்
சாயா அழகு நிழல் -சிலேடை
———————————————————————————
ஆத்யோ ரகுஷிதி புஜாம் அபிஷேக தீப்தை
ஆப்யாயி தஸ் தவ பதாவநி ரஸ்மி ஜாலை
மந்தீசகார தபநோ வ்யபநீத பீதி
மந்தோதரீ வதன சந்திர மசோ மயூகான் –851-
சூர்யன் தன ஒளியால் சந்தரன் ஒளியைக் குறைப்பது உலகு அறிந்தது -பகலில் சந்தரன் காணப்படும் நிலை அதைத் தெரியப்படுத்தும்
அது போலே மண்டோதரியின் முக சந்த்ரனை ஒளி இழக்கச் செய்ய சூர்யனுக்கு தைர்யம் இல்லை -அந்த நிலையில்
ஸ்ரீ பாதுகையே ரகு வம்சத்துக்கு கூடஸ்தன் சூரியன் -எப்போது உனக்கு திரு பட்டாபிஷேகம் ஆயிற்றோ அப்போது தான்
அவனுக்கு புஷ்டி கிடைத்தது -எதில் இருந்து என்றால் -திரு அபிஷேகத்தினால் பிரகாசம் பெற்ற உன் கிரணங்களால் –
உடனே அவன் அச்சம் நீங்கி மண்டோதரியின் முக சந்திர ஒளியைக் குறைத்திட்டான் –
உனது திருப் பட்டாபிஷேகம் வரப் போகும் ராவணன் அழிவுக்கு சூசகம் ஆயிற்று என்றபடி –
—————————————————————————-
மான்யா சமஸ்த ஜகதாம் மணி பங்க நீலா
பாதேநி சர்க கடிதா மணி பாதுகே த்வம்
அந்த புரேஷூ லளிதாநி கதா கதா நி
ச்சாயேவ ரங்க ந்ருபதே ரநு வர்தசே த்வம் –852–
ஸ்ரீ மணி பாதுகையே அகில உலகங்களுக்கும் பூஜ்யையான நீ இந்திர நீலக் கற்களால் கறுத்துப் பெருமாள் திருவடியில்
இயற்கையாகவே விடாது சேர்ந்து பெருமாள் அந்தப்புரத்திற்கு போய் வரும் போதும் நிழல் போலே உடன் செல்கிறாய் –
நீ பெருமாளுக்கே நிழல் -பெருமாளுக்கு பிரதிநிதி -பெருமாள் இடம் இருந்து நிழல் போலப் பிரியாது இருக்கிறாய்
அவனுடைய இனிய நடக்கைகளுக்கு உடன் இருக்கும் சாஷி –
————————————————————————————
ரங்கா தி ராஜ பத பங்கஜ மாஸ்ரயந்தீ
ஹைமீ ஸ்வயம் பரிகதா ஹரி நீல இதனை
சம்பாவ்யசே ஸூக்ருதிபி மணி பாதுகே த்வம்
சாமான்ய மூர்த்திரிவ சிந்து ஸூதா தரண்யோ –853–
ஸ்ரீ மணி பாதுகையே நீ ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடியைப் பற்றி இருக்கிறாய் -ஸ்வயமாகவே தங்க வடிவமாய்
இந்திர நீலக் கற்களின் சோபையும் சேர மஹா லஷ்மி பூமி தேவி இருவரும் உன்னில் இருப்பதாகத் தோற்றும் –
ஆக பாக்யவான்கள் நல்ல ஸ்ரீ ஸூ க்திகளைச் செய்பவர்கள் -உன்னை பெரிய பிராட்டி பூமிப்பிராட்டி இருவருடையவும் போது வடிவாகக் காண்கின்றனர் –
————————————————————————————-
அப்யர்ச்சிதா ஸூமனஸாம் நிவ ஹைர ஜஸராம்
முக்தாருணோ பல நகாங்குளி பல்லவ ஸ்ரீ
ஸ்ரேயாஸ் கரீம் முரபிதஸ் சரண த்வயீவ
காந்திம் சமாஸ்ரயசி காஞ்சன பாதுகே த்வம் –854-
ஸ்ரீ பொற் பாதுகையே தேவதைகள் அர்ச்சிக்கின்றனர் -புஷ்பங்களால் அர்ச்சிக்கப் படுகிறாய் -எப்போதும் இது நடக்கிறது –
ஆம் நீ பெருமாள் திருவடிதான் என்று சொல்லலாம் போலும் -உனது முத்துக்கள் திருவிரல் திரு நகங்களாக –
உனது சிவப்புக் கற்கள் திரு தளிர் விரல்களாக -இப்படித் தோற்றம் அளிக்க நீ மோஷம் உள்பட எல்லா புருஷார்த்தங்களையும் அளிப்பவளாக
அதற்கு உரிய காந்தியை பெருமாள் திருவடிக்கு இருப்பது போல் அதே காந்தியைப் பெற்று இருக்கிறாய் -ஸ்ரீ பாதுகை திருவடிக்கு சமானம் என்றபடி –
—————————————————————————————–
நிர்ம்ருஷ்ட காத்ரருசிரா மணி பாதுகே த்வம்
ஸ்நாதா நுலே பஸூரபிர் நவமால்ய சித்ரா
ப்ராப்தே விஹார சமயே பஜசே முராரே
பாதார விந்த பரிபோக மனந்ய லப்யம் –855-
ஸ்ரீ மணி பாதுகையே நீ துடைக்கப் பெற்று அழகிய நிர்மலமான தோற்றம் பெற்று திரு மஞ்சனமாகி சந்தனம் பூசப் பெற்று
வாசனை மிக்கவளாய் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப் பெற்றும் நிற்கிற நீ -பெருமாள் சஞ்சாரம் செய்யவோ அல்லது விளையாடவோ கருதும் போது
உசிதமான சமயத்தில் பெருமாள் திருவடிகளுடன் சேர்ந்து கலவி யுண்கிறாய்-நீ உன் நாயகனான திருவடியுடன் கலப்பது
எனபது உனக்கே உரிய போகம் ஆயிற்றே -மற்றவை ஆபரணங்கள் பெற முடியாத தாயிற்றே –
————————————————————————-
நாதே பதாவநி ததா தவ சந்நிவேசே
நிர்வேச நக்ர மம சஹ்யம பாசி கீர்ஷூ
யைரவ லோசன சதைரபி வீஷதே த்வாம்
தைரேவ பன்னகபதி ஸ்ருதி மான் பபூவ –856–
ஸ்ரீ பாதுகையே நீ ஆதி சேஷன் திருவவதாரம் -அந்த ஆதி சேஷன் உன்னை அனுபவிக்கும் பாங்கை என் என்று சொல்ல –
உன் நாதத்தைக் கேட்டு அனுபவிக்கவும் உன் திருமணி அமைப்பைக் கண்டு அனுபவிக்கவும் ஆறாத காதல் அவனுக்கு
ஆனால் ஒன்றுக்கு பின் மற்றது என்று கால தாமசம் பொறுக்க ஒண்ணான் -உன்னருளால் அவனுக்கு
அந்த நூற்றுக் கணக்கான கண்களே காதுகளுமாகி உன்னை உற்று நோக்கி சேவிக்கையிலேயே உன் நாதத்தையும் கேட்டு அனுபவிக்க சக்தனானான் –
பாம்புகளுக்கு கண்ணே செவிப்புலன் எனபது மரபு -சஷூஸ் ஸ்ரவஸ் என்று பெயர்
ஸ்ரீ பாதுகையே நம்மாழ்வார் -அவரை சேவிக்கவும் அவர் செவிக்கினிய செஞ்சொல் நாதத்தைக் கேட்கவும் நித்ய ஸூ ரிகள் கூடப் பாரிப்பார்
—————————————————————————–
பாதாவநி ஸ்புட மயூக சஹச்ரத்ரு ஸ்யா
விஷ்ணோ பதேந பவதீ விஹித ப்ரசாரா
த்வத் பக்தி யந்த்ரித ஜந ப்ரத மஸ்ய சம்போ
வைகர்த்தநீ மநுகரோதி விஹார மூர்த்திம் –857–
ஸ்ரீ பாதுகையே உன்பால் பக்தி மிகுதியால் வசப்பட்ட பக்தர்களுக்குள் முதல்வனாகிய சிவனுக்கு நீ எப்படி அருள் புரிந்து இருக்கிறாய் –
அவனுக்கு உள்ளே அஷ்ட மூர்த்தியில் ஒன்றான சூர்யனோடு ஒப்புமை காட்டுகிறாய்
உனக்கும் அவனுக்கும் ஆயிரம் கிரணங்கள் -நீ விஷ்ணு பதத்தில் இருக்கிறாய் –
அவன் விஷ்ணு பதமாகிய ஆகாசத்தில் சஞ்சரிக்கிறான் ஆக நீ சூர்யன் போலே சிவனுக்கு அருள்வது இங்கனம் –
———————————————————————————-
ராஜ்யே வநே அபி ரகுவீரபதோசி தாயா
சம்ச்ம்ருத்ய கௌதமவதூ பரி ரஷணம் தே
மன்யே சமாஹிததியோ மணி பாதுகே த்வாம்
மூர்த்நா பஜந்த்யநுதிநம் முநிதர்ம தாரா –858–
ஸ்ரீ மணி பாதுகையே ராஜ்யத்திலும் வானத்திலும் உனது சாதனை -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பதத்திற்கு -ஸ்தானத்திற்கு –
திருவடிக்கு ஏற்றதான செயலாகும் -ராஜ்ய ரஷணம் செய்தாய் -வனத்திலோ என்றால்
கௌதம முனிவரின் தர்ம பத்னியான அஹல்யையைக் காத்தாய்
இதை எல்லாம் நினைத்து நினைத்து உன்னிடமே தம் உள்ளத்தைச் செலுத்திய ரிஷி பத்னிகள் தினம் தோறும்
உன்னைத் தம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் –
———————————————————————————
த்வாமாஸ்ரிதோ மணி மயூக சஹச்ர த்ருச்யாம்
த்வச் சிஞ்ஜிதேந சஹ ரங்க பதிஸ் சமுத்யன்
ஆசங்க்யதே ஸூமதிபிர் மணி பாத ரஷே
வித்யாசகஸ் சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ –859-
ஸ்ரீ மணி பாதுகையே உன் ரத்ன கிரணங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன -ஸ்ரீ ரங்க நாதன் உன்னைத் தரித்து
-உன்னை அடைந்து உன் நாதத்துடன் புறப்படுகிறான் -பெருமாளை சேவிப்பவர்களான புத்திமான்கள் இவன் தான்
வித்யைகளுடன் கூடி சூர்ய மண்டலத்தில் நடுவில் இருப்பவன் என்று முடிவு செய்கின்றனர் –
—————————————————————–
ரத்னாச்ரி தைர் ஹரிபதம் மணி பாதுகே த்வம்
ச்ப்ருஷ்ட்வா கரை ஸ்ருதி ரசாய நாம கஞ்சூ ஜூ ணா தா
தத்வம் ததேததிதி போதைய சீவ சமயக்
வேதான் பிரதாரி தவதோ விவிதான் குத்ருஷ்டீன் –860-
ஸ்ரீ மணி பாதுகையே -நீ செவிக்கு இனிதாய் ஸ்ருதிகளில் இருந்து பெறப்படும் சாரமானதும் ரசம் மிக்கதுமான ஒன்றை
உனது உனது இனிய ஒலியில் சொல்லுகிறாய் போலும் –
அதுவும் ரத்னங்கள் அணிந்த உன் கைகளாலே ரத்னங்கள் வெளியிடும் கிரணங்கள் மூலம் ஸ்ரீ ரங்க நாதன்
திருவடியைத் தொட்டுக் கொண்டு -சத்ய பிரமாணம் -அறிவிக்கிறாய்-
தத்வம் ததேதத் -என்று அதாவது உபய விபூதி விசிஷ்டமானதும் பிரமாண சித்தமானதுமாய் -இப்படி திரு அவதரித்து உள்ள
அர்ச்சா மூர்த்தி சர்வ சரீரியான பர தத்வம் என்று -இது குத்ருஷ்டிகளைத் திருத்தவே –
ஸ்ரீ பாஷ்யகாரராக ஆதி சேஷன் திரு அவதாரம் செய்து அருளி தத்வ விளக்கம் அருளி சித்தாந்தம் நிர்ணயித்து அருளினார் –
—————————————————————————
ஆனந்த ஸூ ப்ரணயி நாம் அநக ப்ரசாதா
ரங்காதி ராஜ பத ரஷிணி ரத்ன பாசா
ந்யச்தே முஹூர் நிஜபரே ஸ் திரதாம் பஜந்த்யா
வர்ணாம் ஸூகம் விதர சீவ வஸூந்தராயா–861-
ஸ்ரீ பாதுகையே -பக்தர்களுக்கும் பலன் கொருபவர்க்கும் ஆனந்தம் தருபவளாய் இயல்பாவே அருள் புரிகின்றவள் நீ –
பூமிப் பிராட்டி குத்ருஷ்டிகளின் பாரம் தாங்காமல் உன்னிடம் பர சமர்ப்பணம் செய்தாள் போலும் -அதில் பூமி உறுதியாய் இருப்பாள்
-நீ உன் பரத்தைப் பூமியில் வைக்கும் போது அதையும் பூமி ஏற்கிறாள் –
பூமிப் பிராட்டிக்கு முன் த்ரௌபதிக்குப் போலே உன் ரத்ன ஒளிகளால் வர்ண வர்ணப் புடவைகளை மேன்மேலும் தருகிறாய் போலும் –
————————————————————————————
த்வம் சித்ர பாநுரசி ரத்ன விசேஷ யோகாத்
பூம்நா நிஜேந பரி புஷ்யசி பாவகத்வம்
ஸ்வேநைவ சௌரி சரணாவநி சந்திர ரூபா
தேஜஸ் த்ரயீவ மிளிதாஸி தமோபஹாந –862-
ஸ்ரீ பெருமாளின் பாதுகையே நீ உன்னில் மூன்று ஒலிகளை ஒன்றாகக் கொண்டு இருக்கிறாய் என்று தோன்றுகிறது –
பல்வகை ரத்னங்களில் இருந்து பல வர்ணக் கதிர்களைத் தந்து சூர்யனாகவும்
தன் இயற்கைப் பெருமையால் சுத்தி தரக் கூடிய தன்மையால் அக்னியாகவும்
சந்திர ரூபாயாய் -தங்கத்தாலானவளாய்-நின்று சந்த்ரனாகவும் விளங்குகிறாய் –
சித்ரபானு -சூர்யன் -பலநிறக் கதிரோன்-பாவகன் -அக்னி -பாவனைப் படுத்துபவன் -சந்திர ரூபா -சந்திரன் உரு -தங்கம் –
——————————————————–
ப்ரௌட ப்ரவாள ருசிரா புவனைக வந்த்யா
ரங்காதிராஜ சரணாவநி ரம்ய சந்த்ரா
சம்பின்ன மௌக்தி கருசி சத்தம் பிரஜா நாம்
தாபாத்யாயம் திசசி தாரகிதேவ சந்த்யா –863-
ஸ்ரீ பாதுகையே முதிர்ந்த பவழங்களால் நீ அழகாய் இருக்கிறாய் -அழகிய தங்கத்தை உடையாய் -முத்துக்களின் ஒளி கூட சேர்ந்து உள்ளதே –
எல்லோருக்கும் வணங்கத் தக்கவள்- நீ இப்படி எல்லாம் இருப்பது சாயம் சந்தியை நினைவூட்டு கிறது –
தளிர் போல் அழகிய சந்திரனை உடைய சந்த்யா வேளை -நஷத்ரங்கள் ஒளிர்வது -சிவந்த வானம் -சந்த்யா -உபாசனம் செய்கிற வேளை
-அந்த மாலை வேளை போலே தாப சாந்தி அளிக்கிறாய் –
———————————————————————–
ரங்கேஸ் வரச்ய புரதோ மணி பாதுகே த்வம்
ரத்நாம் ஸூ பிர் விகிரசி ஸ்புடபக்தி பந்தா
பாதௌ விஹாரயிதும் அத்புத சௌ குமர்யௌ
பிராய சரோஜா குமுதோத் பலபத்ர பங்க்திம்–864-
ஸ்ரீ மணி பாதுகையே -ஸ்ரீ ரங்கநாதனின் திருவடிகள் அத்யுத்புதமான மென்மை யுடையவை -ஆகவே நீ நன்றாக விளங்கும்
பிரேம பாவம் உடையவளாய் -பல ரத்ன வரிசைகள் சிறப்பாக காட்டப் பட்டுள்ள அமைப்பு உடையவளாய்
பெருமாளை உல்லாச சஞ்சாரம் செய்ய எழுந்து அருளப் பண்ணுகிறாய் -அப்போது உன் பரிவில் ஒரு நடை பாவாடை பரப்புகிறாய் போலும்
உன் ரத்னங்களின் ஒளிக் கதிர்கள் தாமரைகள் அல்லிப் பூக்கள் கரு நெய்தல் இவற்றின் இதழ்களை வரிசையாகப் பரப்பினால் போல் இருக்கிறது –
————————————————————————————-
ஆசன்ன வ்ருத்தி ரவரோதக்ருஹே ஷூசௌரே
ஆபாத யஸ்ய நுபதம் வர வர்ணி நீதாம்
ஆலக்ந ரத்ன கிரணா மணி பாதுகே த்வம்
மஞ்ஜூஸ்வநா மதந பாண நிகர்ஷ சங்காம் –865–
ஸ்ரீ மணி பாதுகையே பெருமாளை ஏகாந்த அந்தப்புரத்திற்கு எழுந்து அருளப் பண்ணுகிறாய் -அப்போது ரத்னங்களில் இருந்து கிரணங்கள் எங்கும் பரவும் –
உன் நடையில் இனிய நாதமும் உண்டாகும் -இது அடிக்கடி நடப்பதால் உன்னில் மன்மத பானங்கள் அடிக்கடி தீட்டப் படுவதால் ஒளியும் ஒலியும் உண்டாகின்றனவோ –
இது உன்னவரின் காதல் மகளிரை மயக்கவோ என்று எண்ணத் தோன்றும் –
அவன் முன்பு எஞ்சிய உலகம் முற்றும் ஸ்திரீ பிராயமே -ஸ்ரீ பாதுகை -நம்மாழ்வார் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் பகவத் ப்ரேமம் -தெய்வக் காதல் பொங்கச் செய்யுமே –
—————————————————————————————
பர்யாப்த மௌக்திக நகாஸ்புட பத்மராகா
ரேகா விசேஷ ருசிரா லளிதப்ரசாரா
ரங்காதி ராஜ பதயோர் மணி பாதுகே த்வம்
சாயுஜ்ய மாஸ்ரிதவதீவ சமஸ்த வந்த்யா –866–
ஸ்ரீ மணி பாதுகையே உன் முத்துக்கள் திருவடிகளின் திரு நகத்தை நிகர்க்கும் -பத்மராகக் கற்கள் சிவப்பினால் தாமரை போல் இருந்து
திருவடித் தாமரையை நினை ஊட்டும் ரேகைகளும் நடையும் அங்கனமே -எல்லோருக்கும் பூஜ்யமான இருப்பு
-இப்படி நீ பெருமாள் திருவடிகளின் சாயுஜ்யத்தை அடைந்து இருக்கிறாய் –
————————————————————————–
ப்ராப்தாபிஷேகா மணி பாதுகே த்வம்
ப்ரதீபரத்நா ரகுராஜ தான்யா
ப்ரதஷிண ப்ரக்ரமணாத கார்ஷீ
ப்ராகாரமாக் நேயமிவ ப்ரபாபி –867–
ஸ்ரீ மணி பாதுகையே உனக்கு திரு அபிஷேகம் ஆயிற்று -நீ வீதி வலம் வருகிறாய் -உன் பத்மராகக் கற்கள் ஒளிப் பிழம்பை வெளியிடுகின்றன
திரு அயோத்யா நகரத்துக்கே ஒளி மயமான அக்னி மயமான கோட்டை மதிள்களை உண்டாக்கி விட்டாய் போலும் –
—————————————————————-
ரத்னாசநே ராகவ பாத ரஷே
ப்ரதீப்யமாநாஸ் தவ பத்ம ராகா
ப்ராயோ நரேந்த்ரான் பர தஸ்ய ஜேது
ப்ரதாப வஹ்நேர பவன் ப்ரரோஹா-868-
ஸ்ரீ ராகவ பாதுகையே நீ கல்லில் இழைத்த சிம்மாசனத்தில் வீற்று இருக்கிறாய் -உன் பத்மராகக் கற்கள் மிக மிக பிரகாசமாகத் தோற்றும் –
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பாதுகா அனுக்ரஹத்தால் அரசர்களை வென்றானே அப்போது வெளிப்படும்
ஸ்ரீ பரதாழ்வான் உடைய பிரதாபாக்னியின் கொழுந்துகளோ என்று தோன்றும் –
——————————————————————-
ஸூபப்ரணாதா பவதீ ஸ்ருதீ நாம்
கண்டேஷூ வைகுண்ட பதிம் வராணாம்
பத்நாஸி நூநம் மணி பாத ரஷே
மங்கள்ய ஸூ த்ரம் மணி ரஸ்மி ஜாலை –869–
ஸ்ரீ மணி பாதுகையே உன் நாதம் மிக மங்கள மானது -அதைக் கொண்டு நீ மணி ஒளித் திரள்களாலான திரு மாங்கல்ய சரடைக் கட்டுகிறாய் –
ஸ்ரீ வைகுந்த நாதனைப் பதியாக வரித்துள்ள ஸ்ருதி மாதருக்கு இது நிச்சயம் —
ஸ்ரீ பாதுகை உபாத்யாயினி போல -நாத்தனராய் இருக்கலாம் -அவள் சொல்லும் ஆசீர்வாத வசனம் தான் சுப பிரணாதம்-அதாவது மந்திர உச்சாரணம் –
வேத பிரதிபாத்யன் பெருமாள் -வேத மாதருக்கு அவனே கணவன் -என்றவாறு -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் காட்டிய வழி-
————————————————————-
விசித்ர வர்ணா ஸ்ருதி ரம்ய சப்தா
நிஷேவ்யசே நாக சதாம் சிரோபி
மதுத்விஷஸ்த்வம் மணி பாத ரஷே
ஸ்ரேயஸ்கரீ சாஸந பத்ரிகேவ –870–
ஸ்ரீ மணி பாதுகையே நீ பல்வகைப்பட்ட சிறந்த வர்ணங்கள் -எழுத்துக்கள் -உடையவள் -உன் ஒலி செவிக்கு இனிது
-செவிக்கு இனிய சொற்களை உடையவள் -நீ நன்மைகளைச் செய்வதும் சொல்ல வேணும் –
இப்படி இருத்தலால் தானே தேவர்கள் உன்னைத் தலையில் ஏற்றுக் கொள்கிறார்கள் பகவானுடைய சாசன பத்ரம் என்பதாக ஏற்றுக் கொள்வர் –
இனிய சொற்களான அருளிச் செயல் மூலம் ஆழ்வார் நமக்குக் கட்டளை இடுகிறார் -தேவதைகளுக்கும் உரியது -நமக்கு அதுவே உத்தம சாசனம் –
————————————————————————————
ஸ்திரா ஸ்வபாவான் மணி பாதுகே த்வம்
சர்வம் சஹா ஸ்வாதுபல ப்ரஸூதி
ப்ருத்வீவ பத்ப்யாம் பரமஸ்ய பும்ஸ
சம்ஸ்ருஜ்யசே தேவி விபஜ்யசே ச–871-
ஸ்ரீ மணி பாதுகை தேவியே -நீ இயல்பாகவே ஸ்திரம் ஆனவள்–ஆஸ்ரிதர் குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவள் -பாரத்தைப் பொறுத்துக் கொள்பவள் –
போக்யமான பயிர் போன்ற பலங்களை வழங்குபவள் -இப்படி பூமி தேவி போலப் பெருமாள் திருவடிகளோடு சேர்க்கப் படுகிறாய் -பிரிக்கவும் படுகிறாய் –
பெருமாள் திருவடிகளோடு கலவி பிரிவு ஏற்படுவது மாற்றி மாற்றி நிகழும் -இது பூமிக்கும் ஸ்ரீ பாதுகைக்கும் பொதுவாக ஒரே ரீதியில் நடப்பதாகும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் ஆழ்வாருக்கும் நடக்குமே
——————————————————————————
பஸ்யந்தி ரங்கேஸ்வர பாத ரஷே
பூஜாஸூ தே சம்ஹித புஷ்ப ஜாலாம்
ம்ருகீத்ருசோ வாசவா ரத்ன ரேகாம்
சசித்ர புங்காமிவ மன்மதஜ்யாம் –872-
ஸ்ரீ பாதுகையே பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்பட போது புஷ்ப ஜாலங்கள் கிடக்கின்றன -உன்னுடைய இந்திர நீலக் கற்களின் வரிசையை
மன்மதன் பாணத்தை நாண் ஏற்றி அடித்த புஷ்பங்கள் தாம் இவை என்று மான் விழி மாதர் பார்த்து நிற்கிறார்கள் –
——————————————————————————
கரைருதக்ரை ஸ்புரதாம் மணீநாம்
மஞ்ஜூஸ்வநா மாதவ பாதுகே த்வம்
அநூபதேசே கநகாபகாயா
கலே ப்ரவேசம் ப்ரதி ஷேத சீவ –873-
ஸ்ரீ பாதுகையே உன் இனிய ஒலியும் ஒளிர்கின்ற ரத்னங்களுடைய நீண்ட கிரணங்களும் என்ன தெரிவிக்கின்றன தெரியுமா –
கலியின் விஷமம் பொன்னியின் கரையில் உள்ள ஸ்ரீ ரங்க பிரதேசத்தில் நுழைய முடியாது விட மாட்டோம் -என்று -ஒளிக் கதிர்களே கைகள் –
ஆழ்வார் -கழியும் கெடும் கண்டு கொண்மின் -சாசனம் ஸ்ரீ பாதுகை மூலம் பிரகடனப் படுத்தல் ஆகிறது –
——————————————————————–
ஆக்ராந்த வேதிர் பவதீ ததா நீம்
அதர்சி முக்தான் வித சோண ரத்நா
கரக்ரஹார்த்தம் பரதேந பூம்யா
லாஜோத் கரைர் வஹ்நிசி கேவ கீர்ணா –874-
ஸ்ரீ பாதுகையே நீ ஆசனத்தின் மீது அமர்ந்துள்ள நிலை சிவப்புக் கற்கள் அக்னி போல் ஒளிரவும் சுற்றி உள்ள முத்துக்கள் லாஜ ஹோமத்தில்
அக்னியில் சேர்க்கப் பெற்ற அரிசிப் பொறிகளோ என்று தோற்றும் -லாஹ ஹோம பரசக்தி -ஸ்ரீ பரதாழ்வான்
பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருள பூமியைப் பாணிக்ரஹணம் செய்து கொண்டான் அல்லவா அதனால் தான் –
————————————————————-
பத்ரளா மணி கணைர் ஹிரண்மயீ பாஸி ரங்கபதி ரத்ன பாதுகே
கேளி மண்டப கதாகதோசிதா பூமி கேவ கருடேந கல்பிதா –875-
ஸ்ரீ பாதுகையே நீ தங்கமயம் -பெரிய திருவடி போலே -உனது ரத்னங்கள் வெளியிடும் ஒளிக் கற்றைகள் இருபுறமும் இறக்கைகள் போல் பரவும்
பெருமாள் உலாவுகின்ற காலத்தில் மண்டபம் மண்டபமாக வேகமாகப் போய் வர இன்னும் சௌ கர்யமாய் இருக்க வென்று பாதுகா வேஷத்தை
பெரிய திருவடி தானே ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது -பெரிய திருவடி வேதாத்மா –
அவர் மீது அமர்ந்து இருப்பதும் தமிழ் வேதம் அருளிய நம்மாழ்வார் மீது அமர்ந்து சஞ்சரிப்பதும் ஒரே தத்வமே –
————————————————————————–
உந்நதம் பலிவிரோதி நஸ் ததா
பாதுகே பதசரோஜா மாஸ்ரிதா
மௌக்தி கஸ்தபக மத்ய சம்மிதம்
வ்யோம ஷட்பததுலா மலம்பய–876–
ஸ்ரீ பாதுகையே பலியை அடக்கப் பெருமாள் திரிவிக்ரமாவதாரம் எடுத்த வேளை ஓங்கி திரு உலகு கடந்த உன்னதமான திருமேனி
திருவடித் தாமரை எவ்வளவு பெரியது -அதில் ஸ்ரீ பாதுகையும் அங்கனமே -உனது முத்துக் கொத்துக்கள் பெரிய பிரம்மாண்டமான
பூம் கொத்துக்கள் ஆயின -இந்த ஆகாசம் கரு நீல வண்டுகள் போல் பூம் கொத்துக்களுக்கு இடையில் நின்றன –
—————————————————————————-
கோமாளாங்குளி நிவேச யந்த்ரிகா
ந்யச்த மௌக்திக மயூக தந்துரா
மங்களாநி வமசீவ தேஹி நாம்
ரங்க ராஜ மணி பாதுகே ஸ்வயம் –877–
ஸ்ரீ மணி பாதுகையே உனது குமிழ் பெருமாளுடைய அழகானதும் கோமளமானதுமான விரல்களுக்கு இடையில்
பிடிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது -அதன் மேல் பதித்துள்ள முத்துக்கள் ஒளி வெள்ளத்தை வெளியிடும் -அது தானாக
உன்னிடம் இருந்து மக்களுக்குக் கொட்டப்படும் கொடிகளோ சத்வ குணத்தால் மக்கள் பெரும் ஷேமங்களோ என்று சொல்லத் தோன்றும் –
வெண்மை சத்வ குணத்தைக் காட்டும் -சாத்விகருக்கு ஸ்ரீ பாதுகை ஷேமத்தைப் பொழிகிறாள்-என்றவாறு –
—————————————————————
பங்கஜா சஹ சரசா இரங்கி ந
பாதுகே நிஜபதாத் அனந்தரம்
ந்யச்யதஸ் த்வயி ஜகந்தி ஜாயதே
நாக போக சயனம் நிரங்குசம் –878-
ஸ்ரீ பாதுகையே நீ அருளுவது பெருமாள் திருவடிகளில் இருக்கும் போது மட்டும் அல்ல -பெருமாள் உலக ரஷணத்தையே உன் மீது வைத்து விடுகிறாரே –
பெருமாள் பிராட்டியுடன் ஆதிசேஷன் மீது கண் வளர்ந்து அருளும் போது அது தடை இல்லாமல் இடையில் தொந்தரவு இல்லாமல் இருக்க
உலகை ரஷிக்கும் பொறுப்பை நீ ஏற்றுக் கொள்கிறாயே –
—————————————————————-
சாத யந்தி மது வைரி பாதுகே சாதவ ஸ்திர முபாய மந்திமம்
த்வத் ப்ரவ்ருத்தி விநிவர்த்த நோசித ஸ்வ ப்ரவ்ருத்தி விநிவர்த்த நாந்விதம் –879-
ஸ்ரீ பாதுகையே -சத்துக்கள் சரமஆபாயமான பிரபத்தியைக் கைக் கொள்கிறார்கள் -உனது பிரவ்ருத்தி தான் ஸ்திரமானது பழுதற்றது –
ஆகிஞ்சன்யாதி யோக்யதைகளை விண்ணப்பித்து விஹித வர்ணாஸ்ரம கர்மானுஷ்டானங்களை விடாமல்
உன்னையே சரண் அடைந்து உன் பிரவ்ருத்தியின்னாலே உஜ்ஜீவிக்கிறார்கள்-
———————————————————————–
நந்த ஸூநுபத பத்ம மிந்திரா
பாணி பல்லவ நிபீட நாசஹம்
பாதுகே தவ பலேந பர்யபூத்
ஊஷ்மளாம் உரக மௌளி சர்கராம் –880-
ஸ்ரீ பாதுகையே -நீ ரஷிப்பது ஜீவர்களை மட்டும் அல்ல -பிராட்டியின் துளிர் போன்ற மென்மையான திருக்கைகளால் பிடித்தாலும் கூட
கன்றும் படி ஸூ குமாரமான திருவடி ஸ்ரீ கிருஷ்ணன் உடையது
அவன் காளியன் படங்களில் ஆடுகையில் சூட்டையும் கரடு முரடான தன்மையையும் ஸ்ரீ கிருஷ்ணன் உடைய ஸ்ரீ பாதாராவிந்தம் பொறாதே
-நீ அன்றோ அவன் திருவடிகளையும் ரஷித்தது-
சம்சார விஷ சர்ப்பத்தின் மீது பத்திரமாக நடமாடித் தப்பிக்க ஆழ்வார் ஆச்சார்யர் பலம் உபதேசம் அனுஷ்டானம் இவையே உதவும் என்றபடி –
———————————————————————————-
மணி நிகர சமுத்தை சர்வ வர்ணா மயூகை
ப்ரகடித ஸூபநாதா பாதுகே ரங்க பர்த்து
நிகில நிகம ஸூதே ப்ரஹ்மணச் தத் சநாதாம்
அவகமயசி ஹ்ருதயம் அர்த்த மாத்ராம் சதுர்த்தீம் –881-
ஸ்ரீ பாதுகையே உன் ரத்னக் கூட்டத்தில் இருந்து வரும் கிரணங்கள் எல்லா வர்ணங்களும் உடையவை –
உன் நாதம் மிக இனியதாக உள்ளது -அந்த நாதம் சகல வேதங்களுக்கும் காரணமான பிரணவ மந்த்ரத்தின் இனியதான
நான்காவது மாத்ரையை அதன் பொருளான ஸ்ரீ ரங்க நாதனோடு நிற்பதாய் நினைவூட்டுகின்றது –
பரவாஸூ தேவன் சகல வர்ணங்கள் உடையவன் -ஸ்ரீ ரங்க விமானம் பிரணவாகாரம் -இங்கே ஸூ சிக்கப்படுகிறது –
—————————————————————————
ஸ்ருதி விஷய குணா த்வம் பாதுகே தைத்ய ஹந்து
சததகதி மநோ ஜ்ஞா ஸ்வேன தாம்நா ஜ்வலந்தீ
ஜனித புவன வ்ருத்தி த்ருச்யசே ஸ்தைர்யயுக்தா
வித்ருத நிகில பூதா வைஜயந்தீவ மாலா -882-
ஸ்ரீ பெருமாளின் பாதுகையே நீ ஸ்ரீ வைஜயந்தி மாலையை ஒத்தவள் -பஞ்ச பூதங்களைத் தரிக்கும் வைஜயந்தி திருமாலை
-அவற்றுக்கு அபிமான தேவதை -எங்கனே என்னில்
வேதத்திற்கு விஷயமானவள் -அது காதலுக்கு விஷயமான சப்த குணம் உடையது -ஆகாசத்தின் அபிமான தேவதை
நீ எப்போதும் சஞ்சரிக்கிறாய் -வாயுவும் எப்படி
நீ தேஜஸ் உடன் பிரகாசிக்கிராய் அக்னியும் அப்படியே
நீ ஸ்திரமாக -பூமியும் ஸ்திரமாக இருப்பது
ஸ்ரீ பாதுகையும் பூதங்களை தரிப்பதால் இந்த ஒத்த தன்மை நிறைவாகிறது –
—————————————————————-
ரகுபதிபத சங்காத் ராஜ்ய கேதம் த்யஜந்தீ
புநரபி பவதீ ஸ்வான் தர்சயந்தீ விஹாரான்
அபிசமதித வ்ருத்திம் ஹர்ஷ கோலாஹலாநாம்
ஜனபத ஜநிதா நாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேன –883-
ஸ்ரீ பாதுகையே ராஜ்ஜியம் ஆண்டதில் உனக்கு வருத்தம் -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் மீண்டு வந்து அருளியதில் உனக்கு மகிழ்ச்சி
நீ மீண்டும் உல்லாச நடைகளை நடத்திக் காட்டி எழுப்பிய உத்தம நாதம் நாட்டில் உண்டான கோலா ஹலங்களின் பெரும் பெருக்கத்தையும் விஞ்சி விட்டதே
சம்ச்லேஷம் பெற்று ஆழ்வார் உகந்து அருளுவதும் விச்லேஷத்தால் கதறி அருளுவதும் அருளிச் செயல்களிலே உண்டே –
—————————————————————–
ஹரி சரணம் உபக்னம் பாதுகே சம்ஸ்ரிதாயாம்
அதிகத பஹூ சாகம் வைபவம் தர்ச யந்த்யாம்
அபசாத விதி ஹஸ்த ந்யச்த தர்மத்வரவாயாம்
த்வயி முகுள சம்ருத்திம் மௌக்திக ஸ்ரீஸ்ததாநீம் –884-
ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரு உலகை அளந்த போது நீ ஒரு கொடியாய் -பெருமாளின் மேல் தூக்கிய திருவடியைக்
கொழு கொம்பாக அதை நீ பற்றி இருப்பதாய் -பிரம்மன் வார்த்த தீர்த்தம் தர்ம தீர்த்தமாய் முத்துக்களின்
சிறப்பு மொக்குகளின் வனப்பை யுடையதாய் -தோன்றுகிறதே-
—————————————————————————
கனகருசிர காந்தி கல்பிதா சோக பாரா ‘
க்ருத பத கமல ஸ்ரீ க்ரீடதா மாத வேந
திசி திசி ஸூமநோபி தர்ச நீயானுபாவா
ஸூரபி சமய லஷ்மீம் பாதுகே புஷ்யசி த்வம் – 885-
ஸ்ரீ பாதுகையே நீ தங்க மயமாய் அழகிய ஒளி மிக்க தோற்றம் உடையாய் -ஜனங்களின் துக்கச் சுமையைப் போக்கி அருளுகிறாய்-
லீலா சஞ்சாரம் செய்யும் பெருமாள் தன் திருவடித் தாமரையை வைத்து உன் சோபையைக் காட்டி அருளுகிறார்
திக்குகள் தோறும் தேவர்களும் ஞானிகளும் சேவிக்க நீ வசந்த கால சோபையை காட்டி வசந்த லஷ்மியாக விளங்குகிறாய் –
சம்பக விருஷம் அசோகா மரம் வைகாசி மாதம் தாமரை கொழித்தல் எல்லா மலர்களும் சிறப்புத் தருதல் இவை எல்லாம் இந்த வசந்த லஷ்மிக்கு விசேஷங்கள் –
———————————————————————————————
ப்ரணிஹித பத பத்மா பாதுகே ரங்க பர்த்து
ஸூ பதற கதி ஹேது சாருமுக்தா ப்ரவாளா
ஸ்திர பரின தராகாம் ஸூ த்த போதா நு பத்தாம்
ஸ்வ ஜன யசி முநீநாம் தவன் மயீம் சித்தவ்ருத்திம் –886-
ஸ்ரீ பாதுகையே யோகிகளின் உன்மயமான மநோ கதியை பக்தி பிரபத்தி மயமான நிலையாக உனக்கு ஒப்பாகச் செய்து உதவுகிறாய்
உன் உறவினராக்கிக் கொள்கிறாய் அந்த யோகிகள் த்யானம் எப்படியோ அப்படியே நீ –
உன் மீது பெருமாள் திருவடித்தாமரை -அவர்கள் த்யாநிப்பது அதே திருவடித் தாமரை -நீ சுபமாக சஞ்சாரம் நடக்கப் பெருமாளுக்கு உதவுகிறாய் –
முனிவர்கள் த்யானம் சுபதரமான நற்கதிக்கு வழி கோலும் -நீ அழகிய முத்துக்களையும் பவழங்களையும் கொண்டுள்ளாய் –
யோகிகள் தான விஷயமான பெருமாள் திரு முகத்தில் புன்சிரிப்பு முத்துப் பற்களும் திருப்பவழங்களும் தெரிகின்றன –
இது யோகியின் தான நிலையில் சுத்த பொத்தாம் -ஸ்திரமான ராகம் -சிவப்பு -இவை உண்டாகச் செய்து உனக்கு ஈடாக்கும்
ஆக உன்னையே நினைத்து இருக்கும் மநோ வருத்தி அவர்கள் மநோ வ்ருத்தியை உன் போலாக்கிக் கொண்டு உனக்கு உறவினராக்கிக் கொள்கிறாய் –
————————————————————————————
விரசித நவ பாகா ரத்ன பேதைர் விசித்ரை
விவித விததரேகா வ்யக்த சீமா விபாகா
ஹரி சரண சரோஜம் ப்ரேப்சதாம் அரச்ச நீயம்
பிரதயசி நவ நாபம் மண்டலம் பாதுகே தவம் –887-
ஸ்ரீ பாதுகையே முத்து மாணிக்கம் வைடூர்யம் கோமேதகம் வைரம் பவளம் பத்மராகம் மரகதம் மற்றும் நீலம் என்ற
நவ ரத்னங்களால் பல பகுதிகளாகக் கட்டுப்பட்டு விளங்குகிறாய்
இந்த பாரத வர்ஷம் நாபி அரச மகள்கள் ஒன்பது பேரால் ஆளப்பட்ட பொது நவ நாபம் என்ற பெயர் பெற்று கர்ம பூமியாகப் பிரசித்தி பெற்றது
-தேவர்களும் தர்மம் செய்ய இங்கே வரும்படி உள்ளது -இயற்கையாகவும் செயற்கையாகவும் தெளிவான கோடுகள் மூலம் ஒன்பது பாகங்களாக
எல்லை வரை யாருக்கப் பட்டது
ஸ்ரீ ஹரி பாதாரவிந்தத்தைப் பெற விரும்புவர் உன்னை ஆஸ்ரயிப்பது போல் இந்த நவபாக பூ மண்டலத்திலும் வாழ்ந்து
கர்ம பலனால் பெறலாம் என்று பறை சாற்றி அருளுகிறாய் போலும்
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திர ரீதியில் நவ நாப மண்டலத்தில் ஒன்பது சக்கரங்கள் அமைந்து உள்ளத்தில் திருவாராதானம் செய்து
ஸ்ரீ ஹரி பாதாரவிந்தம் அடையலாம் -நீ உன்னைப் போலதுவும் என்று சொல்லுகிறாய் போலும் –
————————————————————
பரிணத குண ஜாலா பங்க்திபிர் மௌக்திகா நாம்
பஹூ வித மணி ரஸ்மி க்ரந்தி பந்தாபிராமா
ரகுபதி பத ரஷே ராஜ வாஹ்யஸ்ய கும்பே
கலிதருசிர பூஸ் த்வம் காபி நஷத்ர மாலா –888–
ஸ்ரீ பாதுகையே நீ பட்டத்து யானையான சத்ருஞ்ஜயனின் மச்தகத்தின் மீது எழுந்து அருளி வரும் போது
முத்துக்களின் வரிசைகளே சரடுகளாகவும்பலவித ரத்ன கிரணங்கள் கயிறுகள் போலச் சரடுகளை இணைந்து
வலை போலக் கட்டுவனவாகியும் யானையின் முகத்தில் பிரகாசிக்கும் நஷத்ர மாலையாக ஆயின –
———————————————————————-
சரித நிகில வ்ருத்தி சாருபத்மாஸ நஸ்தா
குண நிபிடித்த முக்தா பங்கக்தி பத்தாஷாமாலா
சவிதமதி வசந்தீ பாதுகே ரங்க பர்த்து
சரண கமலா மந்தர் பிம்பிதம் த்யாயசீவ –889-
ஸ்ரீ பாதுகையே -சஞ்சாரங்களை எல்லாம் முடித்துவிட்டு பத்ம பீடத்தில் எழுந்து அருளி குணம் நிரம்பிய நூலில்
நெருக்கமாகத் தொடுக்கப் பெற்றுள்ள முத்துக்கள் வரிசையாகத் தாவடமாகக் கழுத்தில் போட்டுக் கொண்டது போல் இருந்து கொண்டு
ஸ்ரீ ரங்க நாதனுக்கு அருகிலேயே ஆசனம் இட்டபடி உன்னில் பிரதிபலிக்கிற பெருமாள் திருவடித் தாமரையை த்யாநிக்கிறாய் போலும் –
இது பஞ்சகால பிரக்ரியையில் சொல்லப்பட்ட முதல் நான்கையும் -அபிலமா நாதி ஸ்வாதாயம் முடிய செவ்வனே செய்து
யோகத்தில் உட்காரும் சதாசார நிஷ்டனுடைய நிலைக்கும்
யம நியமாதி அஷ்டாங்க பிரக்ரியைகளை அப்யசித்து முடித்து யோகத்தில் இழியும் உபாசகன் நிலைக்கும் பொருந்தும்
அஷமாலை கழுத்தில் -பத்மாசனத்தில் அவர்கள் ஹிருதயத்தில் ஸ்ரீ ரங்க நாதன் பிரதிபிம்பம் தோன்றும்
-த்யானம் செய்யப் பாங்காக அவர்கள் விஷயத்தில் -குண நிபிடித்த முக்தா பங்கக்தி -எனபது உள்ளே நெருக்கமாக அடக்கப்பட்ட
பிராணவாயு விடுவதாகிற பிராணாயாமம் ஸூ சிப்பிக்கப் படுகிறது –
——————————————————————–
அநுபதி பரிரஷன் ஏக புத்ர அபிமாநாத்
புவன மிதமசெஷம் பாதுகே ரங்க நாத
நிசப்த நிஹிதாயாம் தேவி திஷ்டன் வரசன் வா
த்வயி நிஹித பரோ அபூத் கிம் புனஸ் ஸ்வாபம்ருச்சன் –890-
ஸ்ரீ பாதுகா தேவியே இந்த உலகம் முழுவதையும் ரசித்து அருளும் ஸ்ரீ ரங்க நாதன் -ஒரு பலனையும் கருதாமல் -ஒரே குமாரன் உள்ள
தாய் தந்தையர் புத்திரன் மேல் வைக்கும் அபிமானம் போலே உலக மக்கள் ஒவ்வொருவர் இடமும் தனித்தனியே வைத்து அருளுகிறாரே
அதற்காகவே உன் மேல் ரஷணச் சுமையை வைத்து இருக்கிறார் -விழித்து இருக்கும் போதும் நிற்கும் போதும் நடக்கும் போதும்
இப்படியே யானால் பெருமாள் கண் வளரும் பொழுது கேட்க வேணுமோ
நீ திருவடியையும் ஸ்ரீ ரங்க நாதனையும் தாங்குவது உலக ரஷண சுமையையும் சேர்த்து தானே -நீ பத ரஷணத்தை
-திருவடியைக் காக்கும் சுமையை -ஏற்றுக் கொண்டுள்ளதால் தானே நடக்க முடிகிறது
உன்னை நம்பி ஜகத் ரஷணத்திற்கு ஸ்தானம் கொடுத்து அருளி உள்ளார் –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பரிஷிக்கப் பெற்று குரு ஸ்தானத்தில் அமர்த்தப் பெற்று உள்ளார்கள் –
———————————————————————————————
த்வரிதம் உபகதா நாம் ஸ்ரீ மதோ ரங்க பர்த்து
த்வது பஹித பதஸ்ய ஸ்வைரயாத் ரோத்சவேஷூ
முகரயதி திகந்தான் முஹ்யதாம் த்வத் ப்ரசஸ்தௌ
விஹித குஸூம வ்ருஷ்டி வ்யாவகோஷீ ஸூராணாம் –891-
ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னிடத்தில் திருவடிகளையும் ரஷண அதிகாராத்தையும் வைத்து இஷ்டம் போல் சஞ்சரிக்கிறான்
அந்த ஸ்ரீ யபதி ஸ்ரீ ரங்க நாதனை சேவிக்க தேவர்கள் விரைகின்றனர் -அவர்கள் உன்னை ஸ்துதிக்க இழிகின்றனர்
பெரும் மோஹம்-தமக்குள்ளே பெரும் ஆரவாரம் -பூ மாரி பொழிகின்றனர் –
பலத்த இரைச்சல் எல்லாம் உன் புகழ் திசைகளின் எல்லை எங்கும் எட்டுமே –
—————————————————————–
மனஸி நியம யுக்தே வர்த்தமாநா முனீநாம்
பிரதிபதம் உபயாந்தீ பாவநீ யக்ரமத்வம்
ஸ்ருதிரிவ நிஜ சப்தை பாதுகே ரங்க பர்த்து
பதம நிதர கம்யம் வ்யங்க்துமர்ஹா த்வமேவ –892–
ஸ்ரீ பாதுகையே பக்தி ப்ரம்மசர்யம் அனுஷ்டானம் எனபது போன்ற நியமங்களுடன் முனிவர்கள் மனச்சால் உன்னை சாஷாத் கரிக்கவும்
நீ அங்கு இருந்து கொண்டு ஒவ்வொரு திருவடி வாய்ப்பாகக் கவனித்து வைக்கப்பட்டு நடக்கிறாய்
வேத பதங்கள் முன் பின்னாக வைத்து க்ரமம் என்று படிக்கப் படுபவன் உண்டே அது போலவே இதுவும்
நீயும் ஸ்ருதி போலவே –மற்று ஒன்றால் அறிய முடியாத ஸ்ரீ ரங்க நாத ஸ்வரூபத்தை சுருதி ஸ்ரீ ஸூ க்திகளால் விளக்கிக் காட்ட வல்லதே
அதே போலே மற்று ஒன்றினால் அடைய முடியாத ஸ்ரீ ரங்க நாத திருப் பாத கமலத்தை நீயே உன் திருவடி வைப்பினால்
நாதங்களால் தெளிவாக இதோ என்று பிரத்யஷமாக எடுத்துக் காட்ட வல்லாய் –
—————————————————————————-
அவிகல நிஜ சந்த்ராலோக சந்தர்ச நீயா
ப்ரதிகூலம் உபபோக்யா பாதுகே ரங்க பர்த்து
முகுளயிதும் அசேஷம் மௌக்திக ஜ்யோதஸ்நயா ந
ப்ரபவசி திமிரௌகம் பௌர்ணமாஸீ நிசேவ –893–
ஸ்ரீ பாதுகையே நீ மாசில்லாத தங்கத் திருமேனி அழகை உடைத்தாய் ஒவ்வொரு ஷணமும் விடாது அனுபவிக்கத் தக்கவலாய் இருக்கிறாய்
பூர்ண சந்தரன் போலே -முத்து ஒளி தரும் நிலவு பூர்ண சந்திர பிரகாசத்தையே தருகிறது -எங்கள் அஜ்ஞ்ஞானம் போக்கி அருளுகிறது –
————————————————————————
ஹம்ஸ ஸ்ரேணீ பரிசித கதி ஹாரிணீ கல்மஷாணாம்
மௌ மௌ சம்போ ஸ்திதி மதிகதா முக்த சந்த்ராநுபத்தா
ராஜ்ஞாமேகா ரகுகுல புவாம் சம்யக் உத்தாரிகா த்வம்
காலே தஸ்மின் ஷிதி மதிகதா பாதுகே ஜாஹ் நவீவ –894-
ஸ்ரீ பாதுகையே நீ கங்கையை ஒக்கிறாய்-உன் சஞ்சாரம் பரமஹம்சர்களால் சேவிக்கப்படுகிறது-
கங்கா பிரவாஹமோ ஹம்ஸ பஷிகளுக்கு விஹார ஸ்தலம்
கல்மஷங்களை-பாபங்களை இருவருமே நீக்கி அருளுகிறீர்கள்-
இருவருமே சிவன் தலையில் இருப்புப் பெற்றவர்கள் -அங்கு கூடவே இளம் பிறை உள்ளது -கங்கைக்குப் பொருந்தும் –
நீ சுத்தப் பொன்னுருவாய் உள்ளாய்-
இருவரும் அசஹாயமாக அரசர்களை -கங்கை -சகர புத்ரர்களை -நீ ஸ்ரீ பரதாழ்வான் போன்ற ரகுகுல அரசர்களை
-கை தூக்கி கரை ஏற்றி அருளுகிறீர்கள்
கங்கை பகீரத பிரயத்தனத்தால் பூமிக்கு வந்தது என்றால் நீயோ ஸ்ரீ பரதாழ்வான் முயற்சியால் நாட்டுக்கு வந்து அருளினாய் –
—————————————————————————————————
ஸ்வச்சாகாராம் ஸ்ருதி ஸூரபிதாம் ஸ்வாது பாவோப பன்நாம்
மார்க்கே மார்க்கே மஹித விபவாம் பாதுகே தீர்த்த பேதை
சீதஸ் பர்சாம் ஸ்ரமவிநிநீம் காஹதே மந்த மந்தம்’
க்ரீடாலோல கமலநிலயா தத்த ஹஸ்தோ யுவா த்வாம் –895–
ஸ்ரீ பாதுகையே உன்னில் தன் திருவடிகளை வைப்பது எம்பெருமானுக்கு மிக போக்யமான ஜலக்ரீடை செய்வதற்கு ஒப்பான ஆனந்தகரமான செயலாகும்
நீ தெளிவான மாசற்ற பளபளப்பான திருமேனி யுடையாய் –உன்னில் ஸ்ருதியின் பரிமளம் கமழ்கிறது -மதுரமானவள் இனியவள் -போக்யம் மிக்கவள்
உனது சஞ்சாரத்தால் வழியில் எங்கும் தீர்த்தர் புன்யர் -பாவனர்களாலே வழிபடப் பெற்றவள் –
குளிர்ச்சியுடன் இருந்து பெருமாள் திருவடிக்கு ஸூ கம் தருபவள் -உன்னைத் தரித்தாலே பெருமாளுக்கு சரமம் தீர்ந்து விடும்
பிராட்டி கைலாகு கொடுக்க ஜலக்ரீடை -காவேரி போன்ற மகா நதிகளில் -மடுவொன்றில் இழியும் பொழுது போலே
அனுபவ லயிப்பினால் காலம் தாழ்த்திக் கொண்டே உன்னை தரிக்கிறான் -நித்ய யுவா தம்பதிகள் –
ஸ்ரீ பாதுகாநிவேசம் சதாசார்யர் கடாஷம் பெறுவதை நிரூப்பிக்கும் -தீர்த்தர் ஆழ்வார் ஸ்ரீ பாஷ்யகாரர் குரு பரம்பரையை நினைவூட்டும்
—————————————————————————————
அப்யஸ் யந்த்யோ க்ரமம் அனுபமம் ரங்க பர்த்துர் விஹாரே
ஸ்தானே ஸ்தானே ஸ்வர பரிணமிதம் லம்பிதஸ் தத்ததர்ஹாம்
பர்யாயேண ப்ரஹித பதயோ பாதுகே ஸ்ருத்யுதார
சிஞ்ஜாநாத ஸ்புரதி யுவயோ ஸ்ருங்கலா பந்த இமய –896–
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உன்னைத் தரித்துக் கொண்டு சஞ்சரிக்கையில் ஒப்பற்ற வேதக்ரம பாடத்தை நிகர்த்து உன் திரு அடி வாய்ப்பும்
ஓன்று மாற்றி ஓன்று நிகழ்கிறது -அந்தந்த இடத்தில் க்ரம பாடத்தில் உதாத்தம் அநுதாத்தம் என்ற ஸ்வர பேதமும்
உனக்கு திருவடி ஓசையில் மேடு பள்ளம் என்பதற்கு ஏற்ப மாறுதலும் ஏற்படும் –
உனது கேட்க இனிய நாதம் சங்கிலி போலே தொடர்ந்து கேட்கும் -வேத ஒலி போலவே –
———————————————————————————————
ஆசன்நாநாம் திவசம் அபுநர் நக்தம் ஆபாதயந்தீ
ஸ்பீதா லோகா மணி பிரபித ப்ராணிநாம் அஸ்த தோஷா
ப்ரஹ்வைர் ஜூஷ்டா விபுதநிவஹை பாதுகே ரங்க பர்த்து
பாதாம் போஜே திசதி பவதீ பூர்வ சந்த்யேவ காந்திம் –897–
ஸ்ரீ பாதுகையே நீ காலை சந்த்யை போல் பொலிவுடன் விளங்குகிறாய் –
உன்னை அன்டினவருக்கு பகலை உண்டாக்கி மீண்டும் இருள் வராதபடி அனுக்ரஹம் செய்து அருளுகிறாய் –
உன் ரத்னங்கள் எல்லா பக்கத்திலும் ஒளியைப் பரப்புகின்றன –
உன்னை தேவர் கூட்டங்கள் வணங்கும் –காலை சந்தா உபாசனம் செய்கிறார்கள் -அந்தண ஸ்ரேஷ்டர்கள்
சந்த்யை தாமரையை மலர்விக்கும் -நீயோ ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடித்தாமரை பூவில் சோபையை உண்டாக்குகிறாய் –
————————————————————————–
ரம்யாலோகா லளித கமநா பத்மராகாத ரோஷ்டீ
மத்யே ஷாமா மனிவலயிநீ மௌக்திக வ்யக்த ஹாசா
ஸ்யாமா நித்யம் ஹரிதமணிபி சாரங்கிண பாத ரஷே
மன்யே தாது பவசி மஹிளா நிர்மிதௌ மாத்ருகா த்வம் –898–
ஸ்ரீ பகவானின் பாதுகையே ப்ர்ஷ்மா சிருஷ்டி செய்யும் போது உத்தம மாது ஒருத்தியை படைக்க முன் மாதிரி பிரதி நீயே
அழகிய பார்வை -பிரகாசம் /சிறந்த நடை -சஞ்சாரம் -மெல்லிடையாள் -நடுப்பகுதியில் அகலம் குறைந்து –
பத்ம ராகக் கற்கள் போன்ற திரு உதடுகள் -ரத்னங்களான திருக்கை வளையல்கள் -நித்ய யுவதி –
மரகத கற்களால் கருநிறத் தோற்றம் -இந்த குண ஒன்றுமை -காரணம் –
ரம்யா : அழகான – லோகா : பிராகாரம் உடையவள் (பார்வையை உடையவள்) – லளித : மெதுவாய் அழகான –
கமநா : நடையையுடையவள் – மாத்ருகா : பார்த்துக் கொண்டு அதே மாதிரி பண்ணுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு உருவமாய்
ஹே! சார்ங்கம் எனும் ஆயுதமுடைய பெருமாளின் பாதுகையே!
உன்னிடமிருந்து வெளிப்படும் காந்தியானது யுவதிகளின் கண் பார்வையின் சோபைப் போலுள்ளது.
உன்னுடைய நடையழகு லளிதமாயுள்ளது. உன்பேரில் பதிக்கப் பெற்றுள்ள பத்மராக கற்கள் அந்த சுந்தரியின்
சிவந்த கீழ் மேல் உதடுகள் போலுள்ளது. உன்னுடைய சிறுத்த மத்ய பாகம் குறுகிய இடையை ஒத்துள்ளது.
உன் மேல் இழைக்கப்பட்ட ரத்ன கூட்டங்கள் வளையல் போலுள்ளது. உன்னிடத்துள்ள முத்துக்களின் காந்தி
அழகியதான பல்வரிசைக் கொண்டு புன்சிரிப்பை நினைவுறுத்துகின்றது. உன்னுடைய மரகத கற்களின் காந்தி
பசுமையானதும், சௌகுமார்யம் முதலான குணங்களால் சோபிக்கும் யுவதி போன்று, பிரும்மா உயர்ந்த
ஸ்தீரிகளை ஸ்ருஷ்டிப்பதற்காக அடையாளமாக பெருமாள் ஸ்ருஷ்டித்த ஒரு பெண் பிரதிமையென்று நினைக்கின்றேன்.
இந்த சுலோகத்தினை அதியற்புதமாய் ஒரு சிலேடை நடையில் அமைத்துள்ளார்.
இதிலுள்ள “நித்ய“ என்னும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பதங்களோடு சேர்த்து
விசேஷமான அர்த்தங்களைக் காண்போம்!
நித்யம் ரம்யாலோகா – எப்பொழுதும் தெளிவும், ஆனந்தமும் கொண்ட ஆத்மாவிலிருந்து உண்டான
வெளிப்படையான தேஜஸ்ஸை உடைத்தாயிருக்கை.
நித்யம் லலிதகமனா – ஜனங்களுக்கு நடையில் பல கோணல், விகாரங்கள் இருப்பது போல் அவர்கள் கடைபிடிக்கும்
அனுஷ்டானத்திலும் பல தோஷங்கள் உண்டு. அம்மாதிரியெல்லாம் இல்லாமல் சாஸ்திர ரீதியாய், ஸத் ஸம்ப்ரதாயமான
ஆசார அனுஷ்டானங்களை விதிப்படிக்கும், பெரியவர்களது உபதேச க்ரமபடிக்கும், சிரத்தை, பக்தி, விசுவாசத்தோடு ,
ஆடம்பரம், அஹங்காரம், பிரதிபலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், எப்போதும் ஒரே மாதிரியாய் அனுஷ்டிப்பது.
நித்யம் பத்மராகாத்ரோஷ்டி தன்னுடைய நற்குணங்களாலும், நல்வாக்கினாலும், தம்முடைய வாக்கு,
கேட்பவர்களிடத்து ஆனந்தமான மெய்யுணர்வு ஏற்படும்படி இருக்கை.
நித்யம் மத்யே க்ஷாமா இத்தனை பெருமைகளும், யோக்யதைகளும் இருந்தும் கூட பவ்யமாகயிருத்தல்.
நித்யம் மணிவலயிநி – வேதம் கூறும் சாஸ்திரங்களையும், அது குறித்த பூர்வாச்சார்யர்களுடைய விளக்கங்களையும்,
வியாக்யானங்களையும் எப்போதும் ஆபரணம் போன்று நினைவில் கொண்டிருக்கை
நித்யம் மெளக்திகவ்யக்தஹாஸா – எப்போதும் தன்னுடைய சௌஹார்த்ததாலும் (எல்லாரையும் அன்போடு அணைத்துச் செல்லும் குணம்)
மலர்ச்சியோடு கூடிய தோற்றத்தினாலும் எப்போதும் இவர் நம்மோடுயிருந்து அருள வேண்டும் என்றிருக்கை.
நித்யம் ஸ்யாமா ஹிதமணிபி – நல்ல இறையனுபவத்தாலே காமக்ரோதாதிகள் அறவேயொழிந்து, புத்தி தெளிவடைந்து,
அதனால் சரீரம் நல்ல தேஜஸ்ஸையடைந்திருக்கை.
நித்யம் சார்ங்கிண: பாதரக்ஷே – பெருமாளுக்கு எந்தவிதமான அபராதங்களும் ஜனங்கள் செய்யமால்,
அபஹாரம் வராதபடிக்கு நித்ய ரக்ஷகர்களாய் இருக்கை. இதற்கு ஜனங்களுக்குப் பெருமாளைக் குறித்த
தெளிவான அறிவு வேண்டும். அதனை பல ப்ரமாணங்கள் மூலம் புகட்டும் தெளிவு வேண்டும்.
இவைகள் தாம் ஸதாச்சார்யனுடைய லக்ஷணங்கள். அவர்களால் சிக்ஷையடைந்து தேறிய நல்ல சீடர்களின் லக்ஷணமும் ஆகும்.
—————————————————————————
ஸ்தித்வா பூர்வம் க்வசந பவதீ பத்ர பீடஸ்ய மத்யே
ரத்நோதஞ் சத்கிரண நிகரா ரங்கிண பாத ரஷே
வ்யாகீர்ணாநாம் ந்ருபதி விரஹாத் தேவி வர்ணாஸ் ரமாணாம்
நூநம் சீமா விபஜன சஹம் நிர்மமே ஸூத்ரபாதம் –899–
ஸ்ரீ ரங்க நாத பாதுகையே கோசல நாட்டில் ராஜா ஒருவரும் இல்லாத ஒரு கால கட்டித்தில் வர்ணக்கலப்பு
ஆஸ்ரம கலப்பு ஏற்பட்ட போது நீ சிம்ஹாசனம் ஏறி உன் ரத்ன கிரணக் கூட்டத்தால்
நூல் இழை பிடித்தால் போல் நியமங்களை எல்லை வகுத்து நிர்ணயம் செய்து அருளினாய் –
——————————————————————–
மாதர் மஞ்ஜூஸ்வ ந பரிணத ப்ரார்த்தனா வாக்ய பூர்வம்
நிஷிப்தாயாம் த்வயி சரணயோ பாதுகே ரங்க பர்த்து
த்வயாயத்தம் கிமபி குசலம் ஜா ந தீநாம் ப்ரஜா நாம்
பர்யாப்தம் தந்னகலுந பவத்யாத்மா நிஷேப க்ருத்யம் –900-
ஸ்ரீ பாதுகா தேவியே -ஆராதரர் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிக்கும் போது இனிய நாதம் வெளிப்படுகிறது –
நான் சமர்ப்பிக்கப்படுகிறேன் – என்னை ரஷிப்பது உனது பரம் -அதன் பயனாக வரும் பலமும் உனக்கே –
அநந்யகதிகள் -ஆகிஞ்சன்யம் உடையோம் -பிரார்த்தனை அனுஷ்டானம் –
யோக ஷேமம் சகல ஜகதாம் த்வய்யதீனம் ஸ ஜாநன்-
ஆசார்யர்கள் -ஸ்ரீ பாதுகா ச்தாதனம் -நமக்காக பிரபத்தி செய்து அருளுகிறார்கள்
ஸ்ரீ பாதுகா சஞ்சாரம் இத்தை நமக்கு அறிவித்து உணர வைத்து அருளுகிறது என்றவாறு –
கிமபிகுசலம் : எல்லா நன்மைகளும் இந்த ஸம்ஸாரபந்தம் விடுபட்டு பெருமாளையடைவது –
நபவத்யாத்ம : அவர்களுடைய ஆத்ம நிக்ஷேபணத்திற்கு போதுமானதாக ஆகிறது.
நாம் பாதுகையையே சரணமடைந்து விட்டால் நாம் பாதுகையினோடு சேர்ந்தவராகி விடுவோம்.
நாம் பாதுகையின் வஸ்துவாகி விடுவோம்.
நம்முடைய பாதுகையின் சம்பந்த்த்தினால் தானும் தன்னைச் சேர்ந்த்தான நம்மையும் ஸமர்ப்பணத்தில்
உள்ளடக்கியதாகவன்றோ பாதுகை விளங்கும்!.
இந்த எளிய ஸமர்ப்பணம் போதுமே! வேறொரு பிரயத்தனம் அவசியமா என்ன..?
——————————————————————
நித்யம் ரங்க ஷிதிபதி பத நியாச தன்யாத்மா நஸ்தே
சிஞ்ஜாநாதம் ஸ்ரவண மதுரம் பாதுகே தீர்க்க யந்த
காலே தஸ்மின் கரணவிகம க்லேச ஜாதம் விஹந்யு
சந்தாபம் நச்தருண துளசீ காந்திநோ கந்தவாஹா –901-
ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி வைப்பை எப்போதும் பெற்று இருக்கிறாய் -உன் திவ்ய நாதம் அத்திசையில் இருந்து வீசும் காற்றால்
வீச்சு நீட்டிப்பப் பெற்று வரும் பெருமாள் சாத்திக் கொண்டு அருளும் செலும் துளசியின் திரு மணமும் இக்காற்றால் கொண்டு வரப்படும் –
அந்திம தசையில் என் அவயவங்கள் படும் வேதனை தீரும்படி இந்த நல்ல த்வனி துளசி பரிமளம் குளிர்காற்று
எல்லாம் என் மீது வீசித் தாபத்தைப் போக்கி அருள வேணும் –
நித்யம் = எப்போதும் – ரங்க்க்ஷிதிபதி = ஸ்ரீரங்க பூமிக்கு எஜமான் ஆகிய – ச்ரவண = கேட்பதற்கு –
மதுரம் = மதுரமாயுள்ள – சிஞ்ஜாநாதம் = சலங்கைக்களுக்குள் உள்ள இரத்னங்களால் உண்டாகும் சப்தம்
துளஸீகந்தினோ = துளசியின் மணம் – கந்தவாஹா = காற்றில் (பரவச்செய்து) க்லேச = கஷ்டத்தினாலே –
ஜாதம் = உண்டாயிருக்கின்ற – ஸந்தாபம் = மரணவேதனையை – விஹண்யு: = போக்கடிக்க வேணும்.
ஸதா ஸ்ரீரங்கபதியின் திருவடிகளைத் தாங்கக்கூடிய பாதுகையே! மரணம் என்னை நெருங்கும் போது என்னுடைய
ஐந்து இந்திரியங்களும் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டு வரும். அப்போது நான் பொறுக்கமுடியாத வேதனைக்கு உள்ளாவேன்.
அந்த தருணத்தில் உன்னைத் தழுவி வரும் காற்றில் உன்னுடைய குளுமையையும், உன்னிடத்துள்ள துளஸியின் பரிமணத்தையும்,
இனிமையான உன் பாதுகையிலுள்ள ரத்னங்களிலிருந்து வெளிப்படும் மதுரஓசையும் கலந்து என் சுவாசத்தில் துளஸியின் பரிமணமும்,
காதில் மதுரமான ஓசையும், தேஹமெங்கும் உன்னுடைய குளுமையையும் பரவச் செய்ய வேணும்.
மரண வேதனையில் தவிக்கும் என் இந்திரியங்களுக்கு ஆறுதலை அளித்து அவ்வேதனையை நீ
எங்கள் விஷயத்தில் பரம கிருபைப் பண்ணிப் போக்க வேண்டும்“ என்று பிரார்த்திக்கின்றார்.
அந்திம தசை நெருங்கி அந்தமில் பெருநாடு புகுவதற்கு ஆச்சார்ய கடாக்ஷம் அவசியம் தேவை என்கிறார்.
——————————————————————
சம்சாராத்வ சரம பரிணதம் சம்ஸ்ரிதாநாம் ஜநாநாம்
தாபம் சத்ய சமயிதுமலம் சாரங்கிண பாதுகே த்வம்
சந்த்ராபீடே பிரணமதி நவாம் சந்த்ரிகாம் ஆபிபத்பி
தாரா நிர்யத் சலில கணிகா சீகரைஸ் சந்த்ர காந்தை –902-
ஸ்ரீ சாரங்க பாணியின் ஸ்ரீ பாதுகையே சந்த்ரனை திரு ஆபரணமாக உடைய சிவன் உன்னை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கும் நிலை –
புதிய நிலாவைப் பானம் பண்ணுகின்றவையாய் தாரையாய்ப் பெருகின நீர்த் திவலைகளால் அழகான தோற்றம் கொண்ட
உன் சந்த்ரகாந்த கற்கள் பேருதவி செய்கின்றனவாம்
அவற்றால் ஆஸ்ரித சம்சார சக்கர சுழல் தரும் சரமம் தாபம் அடங்கும் படி செய்து அருளுகிறாய்
-சந்த்ரக் காந்தக் கல் நிலவொளி பட்டவுடன் நீர் சொரியும் –
————————————————————————
வஜ்ரோபேதாம் வலபிதுபலச் யாமளாம் மஞ்ஜூ கோஷாம்
முக்தாசாராம் மதுரசபலாம் விஷய விஷ்ணோ பதே த்வாம்
ஹர்ஷோத் கர்ஷாத் உபரி சலயன் பாதுகே சந்திர காந்தம்
தத்தே நித்யம் த்ருத கநருசி தாண்டவம் நீல கண்ட –903–
ஸ்ரீ பாதுகையே சிவன் தாண்டவம் உன்னைப் பார்த்து ஆடுகிறான் -மயில் ஆடுவதை ஒக்கும் -இருவரும் கழுத்தில் நீல நிறம் உடையவர்
நீ வயிரக் கற்கள் கொண்டும் இந்திர நீலக் கற்களால் கறுத்தும் இனிய நாதம் கொண்டும் முத்துக்களால் சிறப்புற்றும் அழகாக அசைந்து வருகிறாய்
நீ பகவானின் திருவடிகளில் உள்ளாய் -உன்னைப் பார்த்து பார்த்துக் களிப்புற்ற சிவன் தலையில் உள்ள இளம் பிறை நுனியை அசைத்து அசைத்து ஆடுகிறான்
மேகமோ இடியைக் கொண்டுள்ளது -இந்திர நீலக் கற்கள் போலே கறுத்தது-மயிலுக்கு இனிய கர்ஜனை பண்ணுவது –
மழை தாரையைப் பொழிவது-அழகிய மின்னல்களை உட்கொண்டது
-அது விஷ்ணுபதம் -ஆகாசத்தில் தோன்ற மயில் களிப்பை வெளியிடும் முகமாக அசைந்து அசைந்து தாண்டவம் ஆடுமே –
———————————————————————————————-
ஸ்ரீ ரங்கேந்தோ சரண கமலம் தாத்ருசம் தாரயந்தீ
காலே காலே சஹ கமலயா க்லுப்த யாத்ரோத்சவ ஸ்ரீ
கத்வா கத்வா ஸ்வய மநு க்ருஹ த்வாரம் உன்நித்ர நாதா
பௌரான் நித்யம் கிமபி குசலம் பாதுகே ப்ருச்சசீவ –904-
ஸ்ரீ பாதுகையே நீ சர்வ லோகமும் சரணம் அடைந்து உய்ய அருளும் திருப்பாதார விந்தத்தை ஏற்றி வருகிறாய் –
உத்சவம் தோறும் பெருமாள் அருகில் பிராட்டி -உடன் நீ எழுந்து அருளி வந்து ஒவ்வொரு வீட்டிலும் நாதம் எழுப்புகிறாய்
அந்த ஷேத்திர ஜனங்களின் குசலம் பரிவுடன் விசாரிப்பது போலே உள்ளதே –
ஸ்ரீரங்கேந்தோ:=ஸ்ரீரங்கநாதனுடைய சந்திரன் போன்று
குளிர்ச்சியுடைய சரணகமலம்=தாமரைப்போன்ற திருவடிகளை –
தாத்ருசம்=அப்படிப்பட்ட (வாக்குக்கு எட்டாத பெருமையோடு கூடியஇ நீ ஒருத்தி மட்டுமே வஹிக்க்க் கூடியதான) –
தாரயந்தீ=தாங்குபவளாகிய நீ — காலே காலே=அந்தந்த உசிதமான காலங்களில் –
ஸஹகமலயா=மஹாலக்ஷ்மியோடு கூட – க்லுப்த=ஏற்படுத்தப்பட்ட –
யாத்ரோத்ஸவஸ்ரீ: = சஞ்சாரங்களோடு கூடிய உத்ஸாவாதிகள் –
கத்வா கத்வா= (தாமே வலுவில்) போய் போய் – கிமபிகுசலம்=எல்லாவித க்ஷேமங்களையும் – ப்ருச்சஸீவ=கேட்கின்றாய்.
ஹே பாதுகே! ஸ்ரீரங்கநாதனின் திவ்ய திருவடிகள் உலகத்திலுள்ள அனைவருக்கும் அமிர்தம் பிரவாஹித்து
பொழிவதற்கு ஒப்பான சந்தோஷத்தினை உண்டுபண்ணும் குளிர்ச்சியையுடையது.
அத்தகைய திவ்யமான ஒப்பில்லாத திருவடிகளை உன் ஒருத்தியால் மட்டுமே தாங்கமுடியும்!
உன்னை தம் திருவடிகளில் சாற்றிக் கொண்டு தாயாரோடு உற்சவாதிகாலங்களில் பெருமாள்,
வெளியூர்களுக்கும், லீலார்த்தமாகவும் எழுந்தருளுகின்றார். இவ்விதம் எழுந்தருளி திரும்ப ஆஸ்தானம் திரும்பும் போது
ஆங்காங்கு வீடுகள் தோறும் நின்று எழுந்தருளுகின்றார். அப்போது பாதுகைகளாகிய உன்னிடமிருந்து வெளிப்படும்
சப்தமானது ஒவ்வொரு குடும்பத்தினின் க்ஷேம லாபங்களை அவரவர்களுக்குத் தகுந்தபடி ப்ரியமான வார்த்தைகளால்
அக்கறையோடு விசாரிப்பது போன்று உள்ளது. இராஜாக்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடி திரும்பும் போதும்,
யுத்தம் சென்று திரும்பும் போது தங்களுடைய ஜனங்களின் சௌகர்யங்களை விசாரிப்பது வழக்கம்.
இது போன்று இருக்கின்றது இந்த பாதுகையின் செயல்கள்.
ஸ்வாமி தேசிகரின் இந்த பாசுரத்தினை வேறுவிதமாகவும் அர்த்த விசேஷம் கொள்ளலாம்.
ஸ்ரீரங்கேந்தோ: இதில் “இந்து“ என்ற சப்தம் பகவான் அமிருதம் போன்ற தயையை ஸர்வர்க்கும் வர்ஷிக்கின்றார்.
ஸம்ஸார தாபத்தினை நீக்கி குளிர்ச்சியையும் ஆனந்த்த்தினையும் உண்டு பண்ணுகின்றான். இது அவனது பரம காருணிகத்வம்.
தாத்ருசம் – பெருமாள் மற்றும் பாதுகையினுடைய சொரூபம், குணவிசேஷங்கள் வாக்குக்கு எட்டாத்த்து.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. இது பெருமாளுடைய பிரபாவம் மற்றும் பரத்வம்.
ஸஹகமலயாக்லுப்த யாத்ரோத்ஸவஸ்ரீ – கோபிப்பது மற்றும் தண்டிப்பது என்பதே அறியாதவர்களாகிய பாதுகையும்,
மஹாலக்ஷ்மியும் எப்போது பெருமாள் கூடவேயிருந்து, ஆஸ்ரிதர்களை எப்படியேனும் ரக்ஷணம் செய்கின்றார்கள்.
இது இவ்விரு தாயார்களின் பரம கருணை.
கத்வா கத்வா – ஆஸ்ரிதர்கள் தம்மை தேடி வரும் வரை காத்திருக்காமல் தானே ஒவ்வொருவரையும்
பரம ப்ரீதியினாலும், கவலையினாலும், வாஞ்சையோடு வலுவில் அவர்களைத் தேடிப் போதல் – இது வாத்ஸல்யம்
அனுக்ரஹத்வாரம் — பக்தன் தம்மைத் தேடி பாதிதூரமாவது வரட்டுமே என்று எண்ணாது அவர்களின் வீடு வரையில்
தானே போய் அவர்களை அனுக்ரஹித்தல் – இது சௌலப்யம்
ஸ்வயம் – இந்த விசாரித்தல் மற்றும் அனுக்ரஹித்தல் ஆகியவற்றை இன்னொருவரை அனுப்பி செய்வதில்லை.
தாமே நேரில் செய்கின்றார் – இது சௌசீல்யம்.
உந்நித்ரநாதா – எல்லாரிடத்தும் பொதுவான ஒரே மாதிரியான அணுகுமுறையின்றி, தனிதனியாக அவரவர்களுக்கேற்றாற் போன்று,
அவரவரின் தேவையறிந்து விசாரித்தல். – இது சாதுர்யம்.
பெளராந் – ஒதுங்கி வசிக்கும் ஞானமிக்க ஜனங்களைக் காட்டிலும், தம்மை யண்டி நிற்கும் சாதாரண
ஜனங்களிடத்து விசேஷ கவனிப்புடன் இருத்தல் – இது எளிமை.
நித்யம் – இன்று கவனித்து விட்டு நாளை அலட்சியமாகயில்லாமல் என்றும் ஒரே மாதிரியான அன்புடன் ரக்ஷித்தல் – இது ஆதராதிசயம்
கிமபிகுசலம் – ஆஸ்ரிதர்களுடைய எல்லா யோக க்ஷேமங்களைப் பற்றிய சூக்ஷூம ஞானமும், அவர்களது எல்லா விஷயங்களிலுமுள்ள கவனிப்பு –
இது பரிபூர்ண கடாக்ஷம்.
பாதுகையும், ரங்கனும் பாமரனுக்கும் தோழன்.
———————————————————————
சதுர விஹாரிணீம் ருசிர பஷருசிம் பவதீம்
மனஸிஜ சாயகாசந குணோசீதா மஞ்ஜூரவாம்
அனுபதம் ஆத்ரியேமஹே மஹேந்திர சிலா மஹிதாம்
ஹரி சரணாரவிந்த மகரந்த மது வ்ரதிகாம் –905–
ஸ்ரீ பாதுகையே பகவானின் திருவடித்தாமரை சிந்தும் தேனை உண்ணும் பெண் வண்டு நீ-பெருமாள் திருவடி சஞ்சரிப்பதில் நிபுணை
-உன் பக்கங்கள் அழகு மிக்கவை மன்மத பானம் நாண் ஏற்றியதும் எழுப்பும் இனிய நாதம்
-நீ வெளியிடும் நாதம் லௌகிக காமத்தை அகற்றி பகவத் காமம்விளைவிக்கும்
-நீலக் கற்களும் கொண்டுள்ளாய் -வண்டு சுற்றி சுற்றி வருகிறது -அழகிய சிறகுகள் நாதம் கொண்டவை நிறமும் கறுப்பு
பொன் வண்டு போன்ற உன்னை எப்போதும் போற்றுவோமாக –
————————————————————
கநகருசா ஜடாம் உரக மௌளி மணீன் மணிபி
த்ரிவித தரங்கிணீம் தரள மௌக்திக தீதிதிபி
குடிலதயா க்வசித் சசிகலாம் அதரீ குருஷே
முரரிபு பாதுகே புரபித சிரஸா வித்ருதா –906-
ஸ்ரீ பெருமாளின் பாதுகையே நீ சிவன் முடி மேல் வைக்கப் படுகிறாய் -உன் தங்க ஒளி அவன் ஜடையை உன் ரத்னங்கள்
அவன் சர்ப்ப ரத்னங்களை நீரோட்டம் உள்ள உன் முத்துக்களின் சோபை அவன் கங்கையை உன்னிடத்தில் பின்பகுதியின்
வளைவு அவன் வளைந்த சந்திர கலையை வெல்வதாக உள்ளன –
——————————————————
காலே தல்ப புஜங்க மஸ்ய பஜத காஷ்டாம் கதாம் சேஷதாம்
மூர்த்திம் காமபி வேத்மி ரங்க ந்ருபதே சித்தராம் பதத்ரத்வயீம்
சேவா நம்ர ஸூராஸூரேந்த்ர மகுடீ சேஷா படீ சங்கமே
முக்தா சந்த்ரிகயேவ யா ப்ரதயதே நிர்மோக யோகம் புன –907–
ஸ்ரீ ரங்க ராஜனின் ஆச்சர்யமான ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலத்திலேயே இடைவிடாது உடனே மன்னி வழுவிலா அடிமை செய்வதன் மூலம்
சேஷத்வ எல்லையை எய்திய ஸ்ரீ பாதுகை -சயன காலத்தில் படுக்கையை இருக்கும் ஆதி சேஷனின் ஈடிலா இன்னொரு வடிவமாக கொள்வேன்
இதில் ஒரு ஸ்வாரஸ்யம் – சேவிப்பவர்களுக்கு பரிவட்டம் கட்டி ஸ்ரீ பாதுகையை வைப்பார் கைங்கர்ய பரர்-
அது சேஷன் உரித்ததோ -ஸ்ரீ பாதுகையின் முத்துக்களின் ஒளிக்கற்றை தான் அங்கு வஸ்திரம் போல் தோன்றுமோ –
ரங்கந்ருபதே:=ஸ்ரீரங்கநாதனுடைய – சித்ராம்=ஆச்சர்யமான – பதத்ரத்வயீம்=இரண்டு பாதுகைகளை –
காலே=சஞ்சார காலத்தில் – காஷ்டாம்=மிகவும் உயர்த்தியான(கடைசி எல்லை) – கதாம்=அடைந்திருக்கின்ற –
சேஷதாம்=தாஸனது வேலையை இந்தவிடத்தில் திருவடியை வஹிக்கிறதான கைங்கர்யத்தினை –
பஜத:=அடைந்தவராயிருக்கின்ற – தல்ப புஜங்கமஸ்ய=எப்போதும் பெருமாளுக்கு படுக்கையாயிருக்கின்ற ஆதிசேஷனுடைய. –
காமபி=விலக்ஷணமான அதாவது ஒரு ஆச்சரியமான – மூர்த்திம்=திருமேனி விசேஷமாக – வேத்மி=அறிகின்றேன்.
நம்பெருமாளின் ஆச்சர்யகரமான பாதுகையினை சேவிக்கும் போது எப்போதும் பெருமாளுக்கு படுக்கையாக இருப்பதுடன்,
பெரிய பெருமாளுடன் ஸர்வதேச (எல்லாவிடங்களிலும்), ஸர்வகால(எல்லா காலங்களிலும்),
ஸர்வாவஸ்தோசித (எல்லாவித அவஸ்தைகளிலும்) ஸமஸ்தவித (எல்லாவிதமான கைங்கர்யங்களையும்) ,
ஒரு வேலைக்காரனுக்குடைய சேஷத்வ கோஷ்டையுடன், அதனாலேயே சேஷன் என்று திருநாமத்தினையும் பெற்ற,
ஆதிசேஷனுடைய இன்னொரு உருவம்தான் பாதுகை.
இவ்விதம் கூறுவதற்கு இரண்டு காரணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.
1-ஆதிசேஷனை வெள்ளிமலை போல் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. நல்முத்துக்கள் பதிக்கப்பெற்ற பாதுகையிலிருந்து
வெளிப்படும் காந்தியானது வெள்ளிமலையை போன்று காட்சியருளுகின்றது.
2-தம் பக்தர்களை கௌரவிக்கும் போது, அவர்களது சிரஸ்ஸில் வெள்ளைத் திருப்பரிட்டத்தினைச் சுற்றி கட்டி
அதன் மேல் பாதுகையை சாதிக்கும் போது, வெள்ளைத் திருப்பரிவட்டம், உரித்து விட்ட பாம்பு சட்டைப் போன்றும்,
பாதுகை ஆதிசேஷனின் சிரஸ் போன்றும் காட்சியருளுகின்றது.
(“சேஷப்படி“ என்பது திருப்பரிவட்டத்திற்கான சமஸ்கிருதப் பெயர்.
இந்த சுலோகத்தின் மூலம் இது அந்த காலத்தில் வெளுப்பு வர்ணத்திலிருந்த்து அறியப்படுகின்றது.)
சேஷத்வ காஷ்டை மிகுந்தவர்கள் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள். இவர்கள் ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகளின் அவதாரமேயாவர்.
(ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொரூபத்தில் கூட சட்டை உரித்த பாம்பினைப் போன்று பால் போன்ற நிறத்தில்தான் இருப்பாராம்.)
சுத்த சத்துவ குணத்தோடேயே அவதரித்தவர்கள். இவர்களை, இவர்களின் ஸ்ரீசூக்திகளைப் போற்ற போற்ற
நமக்கு சத்துவ குணம் மேலிடும், தோலுரித்த பாம்பின் பிரகாசம் போன்று.
——————————————————————————————–
சந்த்ராபீட சிகண்டே சந்த்ர சிகர ச்யோதத் ஸூதா நிர்ஜ்ஜர
ஸ்தோகாஸ் லிஷ்ட ஸூரேந்த்ர சேகர ரஜஸ் ஸ்த்யாநாம் ஸ்தும பாதுகாம்
ப்ரஹ்மஸ் தம்ப விபக்த சீமவிவித ஷேத்ரஜ்ஞ சர்க்க ஸ்திதி
த்வம் சா நுக்ரஹ நிக்ரஹ பிரணயி நீ யா சா க்ரியா ரங்கிண–908–
சிவன் தலைக்கு அணிகலன் சந்தரன் -அவன் உச்ச்சியில் இருந்து அம்ருத அருவி சொரிகிறது –
அதுவும் தேவர் தலைகள் முடிப் பூக்களின் மகரந்த துளிகளும் சேர்ந்து ஸ்ரீ பாதுகையை மகிழ்விக்கின்றன –
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனின் திவ்ய லீலை -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் அனுக்ரஹ நிக்ரஹ கார்யங்களுக்கு ஸ்ரீ பாதுகையே காரணம்
அந்த நெருங்கிய பூரணப் பொலிவுடைய ஸ்ரீ பாதுகையைப் போற்றித் துதிக்கின்றோம் –
———————————————————————————————
லஷ்மி நூபுர சிஞ்ஜிதேந குணிதம் நாதம் தவா கர்ணயன்
ஆஜிக்ரன் நிகமாந்த கந்த துளசீ தமோத்திதம் சௌரபம்
காலே குத்ரசிதாகதம் கருணா சார்த்தம் த்வயா சாகரத
பச்யேயம் மணி பாதுகே பரதரம் பத்மேஷனம் தைவதம் –909–
ஸ்ரீ மணி பாதுகையே என் அந்திம ஷணத்தில் ஸ்ரீ ரங்க நாதன் பிராட்டி யோடு எழுந்து அருளப் பண்ணி நான் சேவிக்கும் படி செய்து அருள வேணும்
பிராட்டியும் சிலம்பு ஒலியும் உனது இனிய நாதமும் காதில் விழ வேதாந்த பரிமளம் கூடிய திருத் துழாய் நறுமணம் வீசி என் நாசி அனுபவிக்க
பரம புருஷன் என் கண்களுக்கு விருந்தாக கிடைக்க வேணும் -இது பிராட்டி புருஷகாரத்தால் ஆச்சார்யா கிருபை அடியாக நடக்க வேணும் –
எனவே தான் ஸ்ரீ பாதுகையிடம் இத்தகைய பிரார்த்தனை –
————————————————————————————————
வஹதி ஷிதிவ்ய வஹிதாம் சோ அபி த்வாம் கதிஷூ பாதுகே ரங்கீ
கமடபதி புஜக பரிப்ருட கரிவர குலசிகரி பூமிகா பேதை –910–
ஸ்ரீ பாதுகையே நீ ஸ்ரீ ரங்க நாதனை சஞ்சார காலங்களில் வஹிக்கிறாய்-பெருமாள் தானும் கூட உன்னை
தான் தாங்க வேண்டும் என்று திரு உள்ளம் கொண்டான் போலும்
அதற்காக நேராக இல்லாமல் பூமியை இடையில் இட்டு அதற்கு கீழே ஆதார கூர்மம் என்ன -ஆதி சேஷன் என்ன-
திக் கஜங்கள் என்ன குல பர்வதங்கள் என்ன எல்லாம் விஷ்ணு மயமாயிற்றே -இவ்விதமான வெவ்வேறு உருவங்கள் கொண்டு
உன்னைச் சுமக்கிறான் -நானும் உன்னைத் தரிக்க வேண்டும் -அருள்வாய் –
————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .