இது சித்ர கவி -பதம் எழுத்து ஒலி -இவையே முக்கியம் -பொருள் அவ்வளவு முக்கியம் அன்று –
திரு எழு கூற்று இருக்கை போல் -40-ஸ்லோகங்கள் வார்த்தையால் படம் வரைந்து –
இந்தப் பத்ததியில் உள்ள ச்லோகங்களில் பலவிதமான சித்ரங்கள்,
பலவிதமான வியக்கவைக்கும் வாக்ய அமைப்புகள்,
முன்பின் சேர்க்கவல்ல வரிகள் போன்றவை உள்ளன.
———-
ப்ரதிஷ்டாம் ஸர்வ சித்ராணாம் ப்ரபத்யே மணி பாதுகாம்
விசித்ர ஜகத் ஆதார: விஷ்ணுர் யத்ர ப்ரதிஷ்டித:—911-
பலவிதமான வியக்கவைக்கும் விஷயங்கள் கொண்ட இரத்தினமயமான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.
இந்தப் பாதுகையில் அல்லவோ பலவிதமான வியக்கவைக்கும் தன்மைகள் கொண்டவனும்,
உலகங்களுக்கு ஆதாரமாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதன் நிலையாக நிற்கிறான்?
பிரதிஷ்டாம் -இருப்பிடம்
சர்வ சித்ராணாம் -அதிசயம் இங்கு -விசித்திரம் வித விதமான ஓவியம்
ப்ரபத்யே மணி பாதுகாம் -அதிசயங்களுக்கு இதுவே இருப்பிடம் -இந்த சித்ர பத்ததிக்கும் இதுவே -அதை சரண் அடைகிறேன்
விசித்ர ஜகதாதாரோ -அதிசயத்துக்கு அதிசயம் உண்டாக்கும் அவனை த் தாங்கி
வியப்பில்லாத வியப்பு
விஷ்ணுர்யத்ர ப்ரதிஷ்டித -அவனைத்தாங்கும் -திருப்பாதுகை
விசித்ரமான பல உலகங்களுக்கும் ஆதாரமாய் நிலை பெற்று விளங்கும் பகவான் எந்த ஸ்ரீ பாதுகையில் இருக்கிறாரோ
ஆச்சர்ய விஷயங்கள் பலவற்றுக்கும் இருப்பிடமான அந்த ஸ்ரீ மணி பாதுகையை சரணம் அடைகிறேன் –
நம்மாழ்வார் பரமாக –
பல அதிசயம் தன் இடம் கொண்டவர்
திருக்குறுங்குடி நம்பியே
சடஜித் -சட வாயுவை வென்றி
மாறன் -உலகுக்கு மாறி
32-வருஷங்கள் உண்ணும் நீர் இத்யாதி
ஆழ்வாரை சரண் அடைகிறார்
நாராயணன் யார் இடம் நிலை பெற்று
புவியும் இரு விசும்பும் நின் அகத்தே –யான் பெரியன்
நீ பெரியன் என்பதை யார் அறிவார் –
ப்ர வி -எதுகை மோனை -நிரம்பி –
——————————————————————
ஸ்ருணு தே பாதுகே சித்ரம் சித்ராபிர் மணிபிர் விபோ
யுக க்ரம புவோ வர்ணாந் யுகபத் வஹஸே ஸ்வயம்—-912-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை பற்றிய வியக்கவைக்கும் செய்தியைக் கேட்பாயாக!
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணம் எடுத்துக்கொள்ளும் ஸ்ரீரங்கநாதனின் நிறங்களை
நீ பலவிதமான இரத்தினங்கள் மூலம், ஒரே யுகத்தில் வெளிப்ப்படுத்துகிறாய்.
எம்பெருமான் க்ருத யுகத்தில் வெண்மை, த்ரேதா யுகத்தில் சிகப்பு, துவாபர யுகத்தில் பொன்னிறம்,
கலியுகத்தில் கருப்பு என்று காணப்படுகிறான். பாதுகையில் உள்ள இரத்தினக்கற்களில் இந்த நிறங்களைக் காணலாம்.
ஸ்ருணு பாதுகே -காது கொடுத்து கேள்
தே சித்ரம் -உன்னைப்பற்றி -உன் அதிசயம் -இந்த சித்ரா பத்ததியை
யுகக் கிரம புவோ வர்ணான்-யுகங்கள் தோறும் வேறே வேறே வர்ணம் -வெளுப்பு -சிகப்பு -மஞ்சள் -கலியுகத்தில் இயற்க்கை கறுப்பு
சித்ராபிர் மணிபிர் விபோ -நீயும் வித விதமான மணிகளால் ரத்னங்களால் –
யுகபத் வஹசே ஸ்வயம்–ஒரே நேரத்தில் மொத்தமாக
இப்படி பாதுகையின் ஏற்றம்
நம்மாழ்வார் –
யுகத்துக்கு ஏற்ற மார்க்கம் அவன் காட்ட
சரணாகதி -எல்லா யுகங்களுக்கு பொருந்துமே –
சித்ரம் -அதிசயம் -சித்ராபி -நாநா விதம்
யுக -க்ரமம் =யுகபத் -மொத்தமாக
அப ஸப்த ஆபாசம்
கத்தும் குயில் ஓசை -கூவும் இல்லாமல் -கத்தினாலும் இனிமையாய் இருக்கும்
பஸ்ய -இல்லாமல் கேள் இங்கு
நித்யம்-பாதுகை -கண்ணாலே அனைத்தும் -கண்டு கேட்டு தொட்டு -செய்யலாமே
ஸ்ரீ பாதுகையே உன் விஷய ஒரு சித்திரத்தை ஆச்சர்யத்தை கேள் -பகவான் யுகம் தோறும் பால் பொன் பாசி கறுப்பு
வர்ணங்கள் கொள்வது பிரசித்தம் -நீயோ நான்கையும் ஒரே சேரக் கொண்டு இருக்கிறாயே –
யுக் க்ரம = இரட்டிப்பதை உடைத்தாயிருந்து அந்த்ந்த பத்ர விசித்ரங்களுக்கு வேண்டிய படி வரிசையாகவும்,
புவ = உண்டாயிருக்கின்ற – வர்ணாத் = அக்ஷரங்களை – யுகபத் = ஒரே காலத்தில் –
ஸ்வயம் = தானே – வஹஸே = வஹிக்கின்றாய்
ஹே! பாதுகே! பகவான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறமுள்ளவராய் இருந்தார்.
(க்ருத யுகத்தில் – வெளுப்பு, த்ரோதாயுகத்தில் – சிகப்பு, துவாபரயுகத்தில் – பொன் நிறம், கலியுகத்தில் – கருப்பு )
ஆனால் நீயோ பகவானின் அனைத்து வர்ணங்களையும் , உன் மீது பதிக்கப்பெற்றிருக்கும் ரத்னங்களின்
காந்தியினால் ஒரே சமயத்தில் வெளிப்படுத்துகின்றாய் !
உன்னைப் பற்றி ஸ்தோத்திரம் பண்ண வேண்டும் என்று ஆரம்பித்தேன்..!
உன்னுடைய பரம அனுக்கிரஹத்தினால் மட்டுமே அக்ஷரங்களும், பதங்களும், ஆச்சர்யமான பல சந்தர்ப்பங்களையும் ,
அர்த்தங்களையும் கொடுக்கும்படி தானாகவே அமைகின்றன..! உன்னுடைய அனுக்ரஹமில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது…!
———————————————————————
சித்ரம் -விசித்திரம் -விசேஷ சரித்திரம்
கோ முத்ரிகா பங்கம் -பந்தம் –
பசு ஓன்று மூத்திரத்தை வெளி ஏற்றியபடி நடந்து சென்றால் உருவாகும் அமைப்பு
ஸுரா ஸுரா ஆர்சிதா தந்யா துங்க மங்கள பாலிகா
சராசர அச்ரிதா மாந்யா ரங்க புங்கவ பாதுகா—-913-
தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்படுபவள்; அனைத்து ஸம்பத்துகளும் நிறைந்தவள்;
மிகவும் சிறந்த சுபங்கள் அனைத்தையும் காப்பவள்; நடப்பன, நிற்பன என்ற பலவற்றாலும் அடையத்தக்கவள் –
இப்படிப்பட்டவளான ஸ்ரீரங்கநாதனின் பாதுகை அனைவராலும் கொண்டாத்தக்கவள் ஆவாள்.
ஸூ ரா ஸூ ரா ர்ச்சி தா த ன்யா துங் க மங் க ள பா லி கா
ச ரா ச ரா ஸ்ரீ தா மா ன்யா ரங் க புங் க வ பா து கா
ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகையே -கைங்கர்ய சம்பத் நிறைந்து உள்ளாய் -சகல தேவர்களாலும் அசுரர்களாலும் ஆராதிக்கப் பெறுவது –
நம்முடைய ரஷணங்களை அருளுவது -சராசாரங்கள் அனைத்தும் உன்னையே ஆஸ்ரயித்து நிற்கும் நிலை –
இத்தகைய ஸ்ரீ பாதுகை எல்லாராலும் போற்றத் தக்கதாகுமே –
ஸூரா ஸூரார்ச்சிதா -தேவர் அசுரர்களால் அர்ச்சிக்கப்படும்
தன்யா -செல்வம் நிறைந்த
துங்க மங்கள பாலிகா -உயர்ந்த மங்களங்களைப் பாதுகாத்து
சரா சராச்ரிதா -அசைவது அசையாதன அனைத்துக்கும் ஆதாரம்
மான்யா -போற்றத்தக்க
ரங்க புங்கவ பாதுகா -ஸ்ரீ ரெங்க நாதன் பாதுகை
நின்னோடும் ஓக்க தொழுமின் –
பொன்னுலகு ஆளீரோ புவனம் முழுதும் ஆளீரோ –
கடல் ஞாலம் செய்தே னும் யானே என்னும்
உடல் உயிர் உறவு அடிப்படை யில்
மதி நலம் -செல்வம்
பக்தி அருளும்
போற்றத்தக்க ஆழ்வார்
ஒரு அடியில் -16 எழுத்துக்கள் -மெய் எழுத்து இல்லாமல்
2-4-6-8-10-12-14-16-ஒரே எழுத்து இரண்டிலும் -இப்படி சித்திரம் –
————————————————————————-
பத்மேவ மங்கள ஸரித் பாரம் ஸம்ஸார ஸந்ததே:
துரித க்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்க பூபதே:—914–
சுபங்கள் என்பது ஆறு போன்று ஓடி வருவதாவும், ஸம்ஸாரத்தின் எல்லை போன்று உள்ளதாகவும்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகை உள்ளாள். அவை ஸ்ரீரங்கநாச்சியார் போன்று நம்முடைய பாவங்களை நீக்கவேண்டும்.
இங்கு உள்ளது பூதசதுர்த்தம் என்னும் சித்ர சப்தம் ஆகும். ”பாதுகா ரங்க பூபதே:” என்பதில் உள்ள
ஒவ்வொரு எழுத்தும் மற்ற பதங்களில் இருந்து அமைக்கப்பட்டவை ஆகும்.
பத்மேவ -பத்மா இவ -ஸ்ரீ மஹா லஷ்மியைப் போலவே
மங்கள சரித்-மங்களங்களை ஆறு போல் பெருகி வரச் செய்வதாலும் -சரித் -ஆறு
பாரம் சம்சார சந்ததே -பிறவிக் கடலின் எல்லையை அடைவிப்பதாலும்
துரித ஷேபிகா பூயாத்-வேரி மாறாத பூ மேல் இருப்பாள் -வினை தீர்ப்பதாலும்
பாதுகா ரங்க பூபதே-
ஸ்ரீ பாதுகை பிராட்டி போன்றதே –
சுப ஆற்று வெள்ளத்தை தொடர்ந்து பெருகச் செய்வதாலும் –
சம்சார சூழலை முடித்து வைத்து அருளுவதாலும் –
நம் வினைகளைப் போக்கி நமக்கு சாதகமாக பரம புருஷார்த்தம் அளிக்கட்டும் –
கூட சதுர்த்தம் -மறைந்து உள்ள நான்காவது பாதம்
ப (7)த்மேவ ம ங்க (5)ள சரித்
பா (1)ரம் சம்சா ர(4) சந்த தே(8)
து (2)ரித ஷேபி கா(3) பூ (6)யாத்
பாதுகா ரங்க பூபதே-இப்படி மறைந்து உள்ளதே
நம்மாழ்வார் -பாசுரங்கள் பக்தி பெருக்கு -என்றும் அனுபவிக்கலாம் –
——————————————————————————
அநந்ய சரண: ஸீதந் அநந்த க்லேச ஸாகரே
சரணம் சரண த்ராணம் ரங்க நாதஸ்ய ஸம்ஸ்ரயே—915
வேறு எந்தவிதமான கதியும் இல்லாமல் ஸம்ஸாரம் என்ற துன்பக் கடலில் மூழ்கியபடி உள்ள நான்,
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையைச் சரணம் என்று அடைகிறேன்.
இங்கு உள்ளது நிரோஷ்ட்யம் என்ற சப்தசித்ரமாகும். உ, ப, ம, ஒ போன்ற எழுத்துக்கள் உதடுகளால்
உச்சரிக்கப்பட வேண்டியவை. இவற்றுக்கு ஓஷ்ட்யம் என்று பெயர். இவை இல்லாமல் இந்த ஸலோகம் அமைந்துள்ளது.
அநந்ய கதி யுடையவனாய் -சம்சாரக் கடலில் அழுந்தி வருந்துகின்றேன் –
எனக்கே ஸ்ரீ ரெங்க நாத ஸ்ரீ பாதுகையை சரணமாக அடைகிறேன் –
அநந்த = அளவில்லாத – க்லேச = கஷ்டங்களை (ஸம்ஸாரத்தில் உழல்வதால்) – ஸாகரே = சமுத்திரத்தில் –
ஸீதந் = சங்கடப்பட்டுக்கொண்டு – அநந்ய சரண: = (உன்னைத் தவிர) வேறு ஒரு ரக்ஷகர் இல்லாத நான் –
ரங்கநாதஸ்ய= ஸ்ரீரங்கநாதனுடைய – சரணத்ராணம்=திருவடியைக் காப்பாற்றுகின்ற பாதுகையையே –
சரணம் = உபாயமாக – ஸம்ஸ்ரயே = அடைகின்றேன் (வரிக்கின்றேன்)
இந்த பாடலின் முதல் வரியை ஒரு முறை மீண்டும் படியுங்களேன்! உங்கள் உதடுகள் இரண்டும் ஒட்டுகின்றதா..?
ஒட்ட வில்லைதானே..? இப்போது இதன் அர்த்த்தைக் கவனியுங்கள்!
பாதுகையின் சம்பந்தம் பெறாமல், அளவில்லாத கஷ்டங்கள் நிறைந்த இந்த துக்கமயமான ஸம்ஸாரக் கடலில் உழன்று,
உன்னைத் தவிர வேறு ஒரு உபாயமும் இல்லாத நான்…
பாதுகையினிடத்து சம்பந்தம் பெறுவது இருக்கட்டும்.., இந்த வரிகளின் மூலமாய் ஜீவன்கள் வெளிப்படுத்தும் வேதனை,
தம்மோடு மிக நெருக்கமாயிருக்கும் இன்னொரு உதட்டினோடு கூட சேர முடியவில்லை பாருங்கள்..!
அடுத்த வரியைக் கவனியுங்கள்..!
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளைக் காப்பாற்றுகின்ற பாதுகையினையையே இந்த கஷ்ட கடலில் இருந்து
காப்பாற்றக் கூடிய உபாயமாக வரிக்கின்றேன்!
பாதுகையினையே உபாயமாகப் பற்றுகின்றது இந்து ஜீவன்.
உடனடியாக சேராத உதடுகள் ஒன்று சேருகின்றது!
இந்த ஸ்லோகம் அமைந்த இந்த பத்ததிக்கு ‘சித்ர பத்ததி’ என்று பெயர்.
இந்த பத்த்தி முழுதும் ஸ்வாமி தேசிகர் கவிநயத்தோடும், பொருள் நயத்தோடும்,
அதியற்புதமாய் கிறங்க வைக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.
நிரோஷ்ட்யம் உதடுகள் சேராமல் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது –
அநந்ய சரணஸ் சீதன் அநந்த க்லேச சாகரே
சரணம் சரணத்ராணம் ரங்க நாதச்ய சம்ஸ்ரையே
அநந்ய சரணஸ் சீதன் அநந்த க்லேச சாகரே
சரண(ம்) ஞ் சரணத்ராண (ம்) ங் ரங்க நாதச்ய ச(ம்) ங்ஸ்ரையே
அநந்ய சரணஸ் -வேறே புகல் அற்ற
சீதன் -மூழ்கி
அநந்த க்லேச சாகரே -எல்லை இல்லா துன்ப பிறவிக்கடல்
சரணம் சரணத்ராணம் -பாதுகா -பாதுகையை காப்பாற்றும் -அதுவே நமக்கு சரணம்
ரங்க நாதச்ய சம்ஸ்ரையே -ஸ்ரீ பாதுகா தேவியை சரணம் அடைவோம்
திருவடி நிலையே திருவடி
பாதுகா பட்டாபிஷேகம் -திருவடி நிலை முடி சூட்டு படலம் இல்லை -திருவடி முடி சூட்டு படலம்
திருவடி கைவிடாமல் திண் கழலாக இருக்கும்
அன்னான் தம்பி தாவாவிடிலும் அடி உதவுமே
தீர்த்த அடியவரை அவன் திருத்திப் பணி கொள்வான்
ஆழ்வார் பயன் அன்றாகிலும் பங்கு அல்லர் ஆகிலும் திருத்திப் பணி கொள்வான்
யோசிப்பதற்கே பல மணித்துளிகள் ஆகும் இந்த பாதுகா ஸஹஸ்ரத்தினை எப்படி ஒரேயொரு இரவில்
அதுவும் கடைசி ஒரு ஜாமத்தில் இவரால் கவிமழைப் பொழிய முடிந்ததோ…?
நினைக்க நினைக்க திகைப்புதான் மிஞ்சும்! இது அவரே நினைத்தாலும் முடியாது என்பதுதான் உண்மை!
பாதுகா தேவிதான் அவரது நாவில் நின்று அந்த ஒரு ஜாமம் முழுதும் நர்த்தனமாடியிருக்கின்றாள்.. !
——————————————————————-
ப்ரதிபாயா: பரம் தத்வம் பிப்ரதீ பத்ம லோசநம்
பஸ்சிமாயாம் அவஸ்தாயாம் பாதுகே முஹ்யதோ மம—916-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்திற்கும் மேலான பொருளை, தாமரை போன்ற கண்கள் கொண்ட
ஸ்ரீரங்கநாதனை நீ எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, மரணகாலத்தில் மயக்கம் அடைகின்ற
என் முன்பாக, ப்ரத்யக்ஷமாக நிறுத்த வேண்டும்.
இந்த ஸ்லோகத்தில் க்ரியா குப்தம் என்ற சித்ர சப்தம் உள்ளது. இங்கு ப்ரதிபா என்ற முதல் பதம் காண்க.
இது பெயர்ச்சொல் ஆகும். இதன் பொருள் – புதிய விஷயங்களை உடனடியாக உணரும் புத்திகூர்மை என்பதாகும்.
இதுவே முதல் பதமாக உள்ளது. இதனைக் கண்டவுடன் இந்த ஸ்லோகத்தில் வினைச்சொல் இல்லையே என்ற வியப்பு தோன்றும்.
ஆனால் இதுவே வினைச் சொல்லாகவும் கையாளப்பட்டுள்ளது. இதற்கு “நேரடியாக வருவாய்” என்ற பொருள் உள்ளது.
பாதுகே
பரம் தத்வம் பிப்ரதீ -பரம தத்துவத்தையே தாங்குகிறாயே -யாரை விட வேறே ஓன்று பாரமாக இல்லையோ
பத்ம லோசனம் -தாமரைக் கண்ணன் -இதுவே ஸ்வரூப நிரூபக தர்மம் -அசாதாரண அடையாளம் –
ராம கமலா பத்ரக -அம்புஜ லேசணா -தாமரையாள் பார்த்து பார்த்து செந்தாமரைக் கண்ணன் ஆகிறான் –
பஸ்சிமாயாம் அவஸ்தாயாம் -அந்திம அவஸ்தையில் காலத்திலே
முஹ்யதோ மம- -மனஸூ மோஹம் அடைந்து இருக்கும் நிலையிலே
ப்ரதிபாயா -அப்போது நீ என் முன்னே தோன்றி அருள வேண்டும் –
ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் செந்தாமாரைக் கண்ணனை என் முன் கொண்டு வந்து
அருளி எனக்கு சேவை தந்து அருள்வாயாக –
நம்மாழ்வார்–பர தத்வத்தை உயர்வற உயர் நலம் -உயர்ந்து கொண்டே இருக்குமே –தாங்குகிறார் –
முழுதுண்ட பராபரன் -மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவன்
தாமரைக்கண் என்றே தளரும் -தாமரைக்கண்ணன் விண்ணோர் பரவும் பரமன்
நம்மாழ்வாரை மனஸில் கொண்டால் தானே அவனும் வருவான் –
மிக்க வேதியர் –நிற்கப் பாடி எ ன் நெஞ்சுள் நிறுத்தினான்
கிரியா வஞ்சன ப்ரஹேலிகா ப்ரதிபாயா
கிரியா -வினைச்சொல்
வஞ்சன -மறைத்தல்
ப்ரஹேலிகா -ஏமாற்றுதல்
ப்ரதிபாயா -ஒளியினுடைய / தோன்றுவாயாக -ஆறாம் வேற்றுமை போலும் வினைச்சொல்லாயும் இருக்கும் –
வினைச் சொல்லை மறைத்து ஸ்லோகம்
——————————————————————
யாம: ஸ்ரயதி யாம் தத்தே யைந யாத்யாய யாச்ச யா
யாஸ்ய மாநாய யை வாந்யா ஸாமாம் அவது பாதுகா—917-
எவளை ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சார காலத்தில் அடைகிறானோ;
எவள் ஸ்ரீரங்கநாதனைத் தாங்குகிறாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனால் ஸஞ்சாரம் செய்கிறாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனுக்காகவே உள்ளாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனிடமிருந்து தோன்றியவளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனுக்கு பூஜையின் போது ஸமர்ப்பிக்கப் படுகிறாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனிடத்தில் பெறத்தக்கவளோ –
அந்தப் பாதுகை என்னைக் காக்க வேண்டும்.
”அ” என்னும் பதம் எம்பெருமானைக் கூறுவதாகும். இந்தப் பதத்தின் ஏழு வேற்றுமைகளையும்
இந்த ஸ்லோகத்தின் காணலாம் (ஸ்ரீரங்கநாதனால், ஸ்ரீரங்கநாதனுக்காக, ஸ்ரீரங்கநாதனின் போன்ற ப்ரயோகங்கள்).
எந்த ஸ்ரீ பாதுகையை -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணு அடைகிறாரோ -அவரை தாங்குகிறதோ -அவரால் சஞ்சரிக்கிறதோ –
அவர் பொருட்டே இருக்கிறதோ -அவர் இடத்திலே இருந்து தோன்றி அவருக்கே அதீனமாக இருக்கிறதோ –
அவருக்கு கௌரவம் தருகிறதோ
அவர் இடமே பெறத் தக்கதோ அந்த ஸ்ரீ பாதுகை என்னைக் காத்து அருள வேணும் –
எட்டாம் வேற்றுமை விளி -தவிர்த்த ஏழும் உள்ள ஸ்லோகம்
யாம் அ ஸ்ரயதி –அ -அரங்கன் பயணிக்கும் போது யாரை அடைகிறோனோ -எழுவாய்
ய அம் தத்தே –அம் -அரங்கனை யார் தாங்குகிறாளோ -ஐ -இரண்டாம் வேற்றுமை
ஏன யாதி -ஏன -அரங்கனால் யார் சஞ்சரிக்கிறாளோ –மூன்றாம் வேற்றுமை
ஆய யா -அரங்கனுக்காக யார் உள்ளாளோ –நான்காம் வேற்றுமை -ஆய
ஆத் ச யா-அரங்கனிடம் இருந்து யார் தோன்றினாளோ -ஐந்தாம் வேற்றுமை
யா அஸ்ய மானாய -அரங்கனது ஆராதனத்தில் சமர்ப்பிக்கப் படுபவள் -ஆறாம் வேற்றுமை
யா ஏ வான்யா -அரங்கன் இடத்தில் பெறத் தக்கவள்-ஏழாம் வேற்றுமை
நம்மாழ்வார் பரம்
யாம் அ ஸ்ரயதி -அரங்கன் தேடி வந்து பாசுரம் பெற்றான்
யா அம் தத்தே -அரங்கனை உள்ளத்தில் தாங்குகிறார்
யா ஏன யாதி -அரங்கனால் சஞ்சரிக்கிறார் -அவன் அருளால் பாடுகிறார்
ஆய யா -அரங்கனுக்காகவே -முகில் வண்ணன் அடியை அடைந்து உய்ந்தவன்
ஆத் ச யா -அரங்கன் இடம் இருந்து யார் தோன்றினாரோ
யா அஸ்ய மானாய -அரங்கன் ஆராதனத்தில் சமர்ப்பிக்கப் படுபவள் -பாதுகையாகவே –
யா ஏ வான்யா -அரங்கன் இடத்தில் பெறத் தக்கவள் -திருவாய் மொழியின் ஞானத்தை
விவஷித அநேக நாம வசனம்
ப்ரகேடிகா -மறைத்து
யாம -ஜாம அர்த்தம் கிட்டும்
மறைத்தும் -ஏழு பொருள்கள்
யாம -ஜாம அர்த்தம் கிட்டும்
யாம (யாம் +அ )ஸ்ரயதி யாம் (யா +அம் )தத்தே யைன (யா +ஏன )யாத்யாய (யாதி +ஆய )யாச்ச (யா +ஆத் +ச )யா
யாச்ய (யா + அஸ்ய )மாநாயா யை (ய +ஏ ) வான்யா சா மாம் அவது பாதுகா
———————————————————————————-
சர்யா ந: சௌரிபாது த்வம் ப்ராயச் சித்தேஷு அநுத்தமா
நிவேஸ் யஸே தத: ஸத்பி: ப்ராயஸ் சித்தேஷு அநுத்தமா—918-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எங்களது பாவங்கள் தொலைவதற்காக நாங்கள் செய்யக்கூடிய பிராயச்சித்தங்களில்
மிகவும் உயர்ந்த பிராயச்சித்த கர்மமாக நீயே உள்ளாய்.
இதனால்தான் அறிஞர்கள் உன்னைத் தங்கள் மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளும்படியாக நீ உள்ளாய்.
ஸ்ரீ பகவானின் ஸ்ரீ பாதுகையே அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவைப் பிரேரிப்பதில் சிறந்தவள் –
புருஷகார பூதையாகி அருளுகிறாள்
நமக்கு வினைகள் கழிய மேம்பட்டது ஒன்றில்லாத -மிகச் சிறந்த பிராயச்சித்தமாக -கிரியையாக நீயே இருக்கிறாய் –
சாதுக்கள் எப்போதும் -அறாத ஸ்ரீ யை உடைய உன்னையே சித்தத்தில் வைத்து இருப்பார்கள் –
சர்யா ந சௌரிபாது த்வம் ப்ராயஸ் சித்தேஷ்வ நுத்தமா(ப்ராயசித்தேஷு +அநுத்த மா)
நிவேஸ் யசே தத சத்பி ப்ராயஸ் சித்தேஷ்வ நுத்தமா (ப்ராயஸ் சித்தேஷு +அநுத்த மா)
சௌரிபாது த்வம் -பெருமாளாது பாதுகை
நக -எங்களுக்கு
ப்ராயசித்தேஷு -ப்ராயச்சித்தங்களான செயல்களில்
சர்ய அநுத்தமா -ஒப்பற்ற செயல்
சரணாகதி தானே பாதுகையைப் பற்றுவது -திருப்பாதுகையே திருப்பாதம் –
நிவேஸ் யசே தத சத்பி ப்ராயஸ்- சித்தேஷ் –அதனால் சத்துக்களால் வைக்கப்படுகிறாய் போலும்
அநுத்த மா- தள்ளப்படாத ஸ்ரீயால்
நம்மாழ்வாரை நினைக்கவே பாபங்கள் எல்லாமே போகுமே
புண்ய நதி நீராடினால் தான் போகும்
கோயிலில் அர்ச்சனை பண்ணி அனுக்ரஹம் பெற்று போக்குகிறோம்
ஒரு முறை பாகவத தர்சனத்தாலே போக்கும்
சத்துக்கள் நம்மாழ்வாரை தள்ளப்படாமல்-ஸ்ரீ உடன் -திருவாய் மொழிக்கு உள்ளே –
மஹா லஷ்மி உடன் குடி உள்ளான் -சார தமம் -அமைதியின் அந்தப்புரம் -மன அமைதி ஏற்படும் –
பிறவிக்கடல் சம்சார பிறவி வெட்டும் –அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
பராக் இல்லாமல் ப்ரத்யக்ஷமாக ப்ரத்யக்காக காட்டி -ஒவ் ஒரு எழுத்திலும் ரமா உடன் வாசம் கொண்டுள்ளான் –
பிரதி நியதா ரமா ஸந்நிதானம்
பாத ஆவ்ருத்தி யமகம் –
இரண்டாம் நான்காம் பாதம் அப்படியே திரும்பி இருக்குமே –
எழுத்து கூட மாறாமல் -அர்த்தம் மாறி உள்ளதே –
—————————————————————
ராமபாத கதாபாஸா ஸா பாதா கத பாமரா
காத் உபாநஞ்ச காஸஹ்யா ஹி ஆஸ காஞ்சந பாதுகா—919-
இராமனின் திருவடிகளில் இருப்பவளும், தனது ஒளி மூலம் விளங்கி நிற்பவளும்,
சத்ருக்கள் ஒழியப்பெற்ற தேவர்களை உடையவளும் ஆகிய தங்கமயமான பாதுகை நான்முகனிடமிருந்து அயோத்திக்கு வந்தாள்.
ஸூரியனாலும் தாங்க இயலாத ஒளியுடன் கூடியதாக உள்ளாள்.
இங்கு ப்ரதிலோம யமகம் கையாளப்பட்டுள்ளது. அதாவது முதல் பாதத்தைத் திருப்பிப் படித்தால் இரண்டாம் பாதம் ஆகிறது.
இது போன்றே இரண்டாம் பாதத்தைத் திருப்பினால் முதல் பாதம் ஆகிறது.
உதாரணமாக, “ஸா பாதா கத பாமரா” என்பதைத் திருப்பிப் படித்தால், “ராமபாத கதாபாஸா” என்றாகும்.
இதுவே முதல் பாதமாக உள்ளதைக் காண்க.
ராமபாத கதா-ராமன் பாதங்களை அடைந்தவள்
பாசா கா அசஹ்யா-ஒளியால் சூரியனையும் தகிக்கும்
அகதப அமரா -எதிர் அற்றவர் களாக தேவர்களை ஆக்கி
காத் உபாநம் ச சா பாதா ஆச ஹி -ப்ரம்மாவின் ஸத்ய லோகத்தில் இருந்து வந்தவளாக அறியப்படுபவள்
காஞ்சன பாதுகா -ரெங்க நாதனின் பொன்னடிகள்
ராமபாத கதா-தயாராதற்கு மகன் அன்று மாற்று இல்லை தஞ்சம் -கற்பார் ராமனைத் தவிர
பாசா கா அசஹ்யா-ஒளியால் சூரியனையும் விஞ்சி -மதுரகவி ஒளி தேடி வந்தார் -வகுள பூஷண பாஸ்கரர்
அகதப அமரா -முக்தர்கள் ஆக்கி -கதாபம் வியாதி போக்கி
காத் உபாநம் ச சா பாதா ஆச ஹி -தான் அவதரித்து நம்மை திருத்தி பணி கொள்ள
காஞ்சன பாதுகா -ரெங்க நாதனின் பொன்னடிகள் தானே நம்மாழ்வார்
பாத பிரதி லோபம்
முதல் பாதம் மாற்றி இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் மாற்றி நான்காம் பாதம் –
முதல் பாதம்–ரா ம பா த க தா பா சா
இரண்டாம் பாதம் -சா பா தா க த பா ம ரா
மூன்றாம் பாதம்-கா து பா ந ஞ்ச கா சஹ்யா
நான்காம் பாதம்-ஹ்யா ச கா ஞ்ச ன பா து கா
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திருவடியை அடைந்த ஸ்ரீ பாதுகை ஒளியினாலே தேவர்கள் ரஷிக்கப் படுகிறார்கள்
அந்த தங்கப் பாதுகை பிரம்மாவால் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப் பட்டது -உபா -ருத்ரனைக் காப்பது
சூர்யனுக்கும் சஹிக்க முடியாத பிரபை கொண்டது
அனஞ்சக-ஆராதிக்காதவர்களால் போருக்க முடியாத தேஜஸ் ஸூ யுடையது
சுகம் அருளி ஸ்ரீ அயோத்யா ராஜ்ய லஷ்மீயைக் காப்பதாக இருந்தது –
(இந்த ஸ்லோகத்தின் முதல் இரண்டு வாக்யங்களை தலைகீழாய் வாசியுங்கள்.
இதற்கடுத்த இரண்டு வாக்யங்கள் வருகின்றதா..!? –
சரி..! இப்போது ஒவ்வொரு வரியினையும் தலைகீழாய் வாசியுங்கள்!
தலைகீழாய் வாசித்தாலும் ஒரே மாதிரியானச் சொற்றொடர் வருகின்றது பாருங்கள்..!
இந்தவிதமாக அமையும் இத்தன்மைக்கு “பாத ப்ரதிலோம யமகம்” என்று பெயர்..!)
ராமபாதகதா=ஸ்ரீராமனுடைய திருவடிகளை அடைந்த –
அகதபாமரா அகதபா வியாதியைக் காப்பாற்றிக் கொள்ளுகிறவர்களாக இல்லாமலிருக்கின்ற
(கதம் என்றால் ரோகம், பா(ஹி) என்றால் காப்பாற்றுதல் “அ“ என்றால் இல்லை என்று பொருள்)
அமரா=தேவர்களை உடைத்தாயிருப்பதும் – கதபா=வியாதியைக்(துக்கத்தினை) காப்பாற்றுபவர்கள் (சத்ருக்கள்) –
அஸஹ்யா=தாங்கக்கூடாத்துமான (தன்னுடைய தேஜ்ஸ்ஸினால் சூரியனைக்கூட கொளுத்த கூடியதுமான –
ஸா=அந்த (சௌலப்யம், தயை, தேஜஸ் முதலியதால் பிரஸித்தமான) – காஞ்சனபாதுகா=தங்கமயமான பாதுகையானது –
காது=பிரம்மாவிடத்திலிருந்து – உபாநஸ்ச = ஸமீபத்தில் (ஸ்ரீரங்கவிமானத்தோடு பூமிக்கு வந்தது).
ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையானது ஸ்ரீரங்கநாதனுடனேயே அவதரித்தது.
பிரும்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கவிமானத்தோடு ரங்கநாதனை விட்டு பிரியாமல் இப்பூவுலகிற்கு வந்தது.
தேவர்களுக்கு ஏற்படும் ஆத்மவியாதியையும், அவர்களுடைய சத்ருக்களிடமிருந்து அவர்களை ரக்ஷிக்கின்றது.
சூரியனின் தேஜ்ஸ்ஸை விட பலமடங்கு தேஜஸ்ஸினால் சூரியனின் தேஜஸ்ஸினையே மழுங்க அடிக்கக்கூடியது.
ஜீவராசிகளை அது ரக்ஷிக்க எண்ணியது. ஸ்ரீரங்கநாதன் இராமனாக அவதரித்தப் போது
“ராகவோத்பவத் சீதா ருக்மணி கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயினீ !!”
என்றபடி எப்படி தாயார் இராமனாய் அவதாரம் எடுத்தபோது சீதையாகவும், கிருஷ்ணவதாரத்தில் ருக்மணியாகவும் அவதரித்தாளோ
அது போன்று பாதுகையும் ஸ்ரீராமபாதுகையாய் ஸ்ரீராமனோடு கூடவே தம்முடைய இயல்பான
சௌலப்யம், பக்த ரக்ஷணம், வாத்ஸல்யம் முதலான குணங்களோடே ஜீவராசிகளைத் தேடி தாம் வந்தது.
அதனால்தான் ஸ்ரீராமனுடைய பிரதிநிதியாக இந்த இராஜ்யத்தினை விசேஷமாக ஆளக்கூடிய சக்தி அதற்கு இருந்தது.
ஸ்ரீநம்மாழ்வார் துடக்கமாகவுள்ள நம்முடைய குரு பரம்பரையானது பெருமாளிடத்திலிருந்தே தொடங்குகின்றது.
ஆஸ்ரிதர்களுடைய ஆத்மவியாதியைத் தெளிய வைத்து பகவானின் திருவடிகளில் அவர்களை கொண்டு சேர்த்து ரக்ஷிப்பவர்கள்.
அவர்கள் எந்த காலத்திலும் எப்படிப்பட்ட பண்டிதர்களாலும் அவமதிக்க முடியாதவர்கள். நித்யசூரிகள்…!
பகவானின் விபவ அவதாரமாகட்டும், அர்ச்சாவதாரமாகட்டும், இந்த லோகரக்ஷணத்திற்காக,
பெருமாளுக்கு உதவியாய் இந்த பூமியில் வந்து அவதரிக்கின்றார்கள்.
——————————————————————–
பாடாகாளீ ஜ்ஜாட துச்சே காதாபாநாய புல்லகே
ஸமாதௌ சடஜித் ஸூடாம் வ்ருணோஷி ஹரி பாதுகே—-920-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வலிமையான பாவங்களின் வரிசை என்னும் புதர்கள் அற்றதாகவும்,
மலர்ந்த மனதை உடையதான யோகப்யாஸத்தில் திருவாய்மொழி தோன்றும் பொருட்டு, நீ நம்மாழ்வரின் தலையைப் பற்றுகிறாய் போலும்.
இங்கு அபுநருக்தவ்யஞ்ஜனம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. வ்யஞ்ஜனம் என்றால் மெய் எழுத்துக்கள் ஆகும்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மெய்எழுத்துக்கள் மீண்டும் பயன்படுத்தப்படவில்லை.
ஸ்ரீ பாதுகையே -பாப புதர்க் காடுகள் -நீங்கிய சுத்த மனசை உடைய ஆழ்வார் செய்யும் யோகத்தில் திருவாய்மொழி பாசுரங்கள்
திருவவதரிக்கவே ஆழ்வார் திருமுடிமேல் நீ அமர்கிறாய் -அத்தகைய சுத்தமான மலர்ந்த ஹ்ருதயம் உடைய நாத முனிகளின் யோகத்தில்
ஆழ்வார் தோன்றி அருளிச் செயல்களை அருளி பின்புள்ளோர் அனைவருக்கும் கொடுக்கவே எல்லார் முடிகளிலும் நீ சேர்ந்து அருளுகிறாய் –
பாடா=அழிக்கமுடியாத – காதா=பிரபந்தங்கள் – –
ஸமாதௌ=மனதிலுள் பகவானைப் பற்றிய விடாத
தியானம் – சடஜிச்சூடாம்=ஸ்ரீநம்மாழ்வாருடைய சிரஸ்ஸை – வ்ருணோஷி=அடைகின்றாய்.
பாடா-திடமான
அகாளீ ஜ்ஜாட துச்சே -அழிக்க முடியாத பாப கூட்டங்கள் இல்லாத -தூய்மையான
காதாபாநாய புல்ல கே -மலர்ந்த திரு உள்ளம் -ஆழ்வாரது –
சமாதௌ -சாஷாத்காரம் -சமாதி நிலையிலே -16 வருஷம் யோக நிலையில்
காதா ஆபாநாய-பாசுரங்கள் உண்டாக்க
சடஜிச் சூடாம் வ்ருணோஷி -தலையை அலங்கரித்தாய்
ஹரி பாதுகே -அபகரிக்கும் ஹரி திருவடி
என்னுடை சூழல் உளானே -அருகல்-ஒழிவிலன் என்னுடன் -கண்ணன் ஓக்கலையானே —
நெஞ்சிலுளான் -தோளிணையானே -நாவில் உளானே -கமலக் கண்ணன் கண்ணுள் உளானே –
நெற்றி உளானே -உச்சி உளானே -நீள்கழல் சென்னி பெறுமே -பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்
நாத முனிகள் தூய்மையான திரு உள்ளம் -திருவாய் மொழி தோன்ற வேண்டும் -என்பதற்காக சமாதி நிலை அடைந்து யோகத்தால் –
பராங்குச தாசர் சொல்ல 12000 தடவை சொல்லி -எண்ணவே வேண்டாமே –
தானே முடிந்த பின் கிட்டும் என்ற மஹா விச்வாஸம் -என்றும் கொள்ளலாம்
அபுநர் யுக்த வியஞ்சனம் -32 அச்சு எழுத்துக்கள் அனுஷ்டுப் சந்தஸ்ஸூ –
(இந்த ஸ்லோகத்தில் ஒரு முறை வந்த அக்ஷரமானது மீண்டும் வராது. இதனைத் தமிழில் எழுதியதினால்
ஒரு அக்ஷரம் திரும்ப வருகின்றது. ஆனால் ஸம்ஸ்கிருதத்தில் வராது.)
ஸமாதி நிலை என்று தியானத்தில் ஒரு உன்னதமான நிலையுண்டு. பகவான் ஒருவனை மட்டும் மனதில் நினைத்து
இடைவிடாது தியானிக்கும் மஹனீயர்கள் இந்த நிலையினையடைவர்.
நம்மாழ்வாரை அனுக்ரஹிக்கும் பொருட்டு ஆஸ்ரிதர்களின் ஸகல பாபங்களையும் போக்கக்கூடிய ஹரி பாதுகையே!
“ செழும் பறவை தானேரித் திரிவான் தன் தாளினையென் தலை மேலவே” என்கின்ற ஆழ்வாருடைய ஸூக்தியின்படி
அவரது சிரஸ்ஸின் மேல் ஸாந்தித்யம் கொள்கின்றாய்!
ஆழ்வார் திருநகரியில் நடக்கும் ஆழ்வார் மோக்ஷத்தில் இதர திவ்ய தேசங்களில் நடைபெறும் மோக்ஷ உற்சவத்தினைக் காட்டிலும்
ஒரு விசேஷ ஏற்றம் உண்டு. இதர திவ்யதேசங்களில் ஆழ்வாரே வந்து பெருமாளின் திருவடிகளில் தம் சிரம் தீண்டி
மோக்ஷ உற்சவம் நடைபெறும். ஆனால் ஆழ்வார் திருநகரியில் மட்டும் பெருமாள் தாம் ஆழ்வார் எழுந்தருளியிருக்கும் இடம்
கைத் தலமாய் வந்தடைந்து தம் திருவடிகளால் நம்மாழ்வாரின் திருமுடி தீண்டி மோக்ஷம் அருளுவார்.
அந்தளவிற்கு பெருமாளுக்கு ஆழ்வாரின் ஸம்பந்தம், நெருக்கம் தேவையாயுள்ளது.
————————————————————————-
முரச பங்கம் -முரச பங்கம் -முரசை கட்ட மேலும் கீழும் கயிறு -diamond -வடிவில் வருவது போல் –
ஸா பூபா ராமபாரஸ்தா விபூபாஸ்தி ஸபாரதா
தாரபா ஸக்ருபா துஷ்டி பூரபா ராமபாதுகா—921-
இந்தப் பூமியைக் காத்தபடி உள்ளாள்; துக்கக்கடலின் கரையாக உள்ள இராமனிடம் உள்ளாள்;
ஸ்ரீரங்கநாதனின் உபாஸனத்தின் எல்லையாக உள்ளாள்; ப்ரணவத்தில் பொருளான ஸ்ரீரங்கநாதனை ஸஞ்சார காலத்தில்
காப்பாற்றும் தயை கொண்டவள் – இப்படிப்பட்ட இராமனின் பாதுகை நம்மை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் காப்பாற்றுகிறாள்.
இங்கு முரஜபந்தம் என்பது பயன்பத்தப்பட்டுள்ளது. முரஜம் என்றால் உடுக்கு முதலான வாத்யங்களைப் போன்றதாகும்.
அதனுடைய மூலைக்கு மூலை கட்டப்படும் கயிறுகள் போன்ற அமைப்பை இங்கு காணலாம்.
பூ பா -அந்த பாதுகா தேவி பூமியைப் பாத்து காக்க வல்லவள் –ராம ராஜ்யத்தை விட சிறந்த ராஜ்யம்
ராம பாரஸ் தா -ராம பிரான் என்னும் பாரத்தில் நிலை பெற்றவள் -அக்கரை shore -சம்சாரத்துக்கு மறு கரை
விபூ -எங்கும் பரந்து –
உபாஸ்தி -உபாசனம்
ச பாராதா -நிறைவு முழுமை தருபவள் பாதுகா தேவி
புருஷார்த்த காஷ்டை-அடியார்கள் -ததீய பர்யந்தம் -முழுமை ஆகும் -இதுவே தத்வம்-
தார -ப்ரணவத்தால் காட்டப்படும் -அகார வாஸ்யம்
பா -பாது காப்பவள் –
ச க்ருபா -மிகுந்த கருணை – நேரில் வந்து ரக்ஷணம் -அவனையும் விஞ்சி -ப்ரத்யக்ஷ தெய்வம்
துஷ்டி பூர பா -தோஷ வெள்ளங்களை உறிஞ்சி -அகஸ்தியர் கடல் நீரை ஆசமனம் -உறிஞ்சி –
அசுரர்களைக் காட்டி தேவர்கள் வெல்லும் படி
ராம பாதுகா –
உபாசனத்தின் சரம அவஸ்தையே ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ பாதுகையை ஆராதத்த பின்பே பகவத் ஆராதனம் பூர்த்தியாகும் –
பிரணவத்தில் அகாரவாச்யனான பெருமானை சஞ்சரிக்கையில் ஸ்ரீ பாதுகையே ரஷிக்கிறது
தயைகுணம் பூர்த்தியாக உள்ளதால் நம் வினை வெள்ளத்தை வற்றடித்து நம்மையும் ரஷித்து அருளுகிறது
போக்யம் மிகுந்த பிராப்யமாகவும் உள்ளதே –
இந்தப் பூமியைக் காத்தபடி உள்ளாள்; துக்கக்கடலின் கரையாக உள்ள இராமனிடம் உள்ளாள்;
ஸ்ரீரங்கநாதனின் உபாஸனத்தின் எல்லையாக உள்ளாள்;
ப்ரணவத்தில் பொருளான ஸ்ரீரங்கநாதனை ஸஞ்சார காலத்தில் காப்பாற்றும் தயை கொண்டவள் –
இப்படிப்பட்ட இராமனின் பாதுகை நம்மை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் காப்பாற்றுகிறாள்.
இங்கு முரஜபந்தம் என்பது பயன்பத்தப்பட்டுள்ளது. முரஜம் என்றால் உடுக்கு முதலான வாத்யங்களைப் போன்றதாகும்.
அதனுடைய மூலைக்கு மூலை கட்டப்படும் கயிறுகள் போன்ற அமைப்பை இங்கு காணலாம்.
சா பூபா -உலக்கைக் காக்கும் நம்மாழ்வார் -மழுங்காத ஞானமே படையாக -சங்கல்ப லேசத்தால் செய்பவன் -அடியார்களுக்காக அவதாரம் –
சோம்பாதே என்நின்ற யோனியுமாய் பிறந்தாலும் திருந்தாத நம் போல்வாரை -ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போல் ஆக்க -ஸஸ்த்ர பாணி இல்லாமல் -ஸாஸ்த்ர பாணியாக –
ராம பாரஸ்தா -பெருமாள் திருவடிகளில் நிலை பெற்று
விபூ பாஸ்தி சபா ராதா -திருவாராதனம் முழுமை பெறவே அருளிச் செயல்கள் –செவிக்கு இனிய செஞ்சொல் கொண்டு ஸ்துதிக்க —
ஆழ்வார் அடியார் பர்யந்தம் பக்தி சென்றால் தான் முழுமை ஆகும்
தாரபா -குணங்கள் விபூதி இல்லை என்பாரை மிடறு பிடிப்பாரைப் போல் முதலிலே அருளி ரக்ஷித்தார் —உயர்வற உயர் நலம் உடையவன் –
அடி -திருமேனி உண்டு
ச க்ருபா -மதி நலம் அருளிய-காருணிகன் அவன் இவரோ -அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே
துஷ்டி பூரபா -பண்டை வல்வினை பாற்றி அருளினான்
ராம பாதுகா
முரஜ பந்தம் -உடுக்கையில் கயிறு கட்டுவது போல் –
முதல் இரண்டாம் பாத இரண்டாம் எழுத்து பூ -ஏழாம் எழுத்து ர
மூன்றாம் நான்காம் பாத இரண்டாம் எழுத்து ர ஏழாம் எழுத்து ர
ஸா பூ பா ராம பா ர ஸ்தா
வி பூ பா ஸ்தி ச பா ர தா
தா ர பா ச க்ரு பா து ஷ்டி
பூ ர பா ராம பா து கா
இரண்டாம் பாதம் -முதல் நான்கு எழுத்துக்கள் cross படித்து square அமைத்து -அதே வரும்
இரண்டாம் பாத பின் பாதி (ச பா ர தா )மூன்றாம் பாத முன் பாதி (தா ர பா ச) mirror image
வலது பக்கம் மேலே inverted traiangle –
பா ர
ஸ பா ர தா
இடது பக்கம் கீழே
தா ர பா ஸா
ர பா
நான்காம் பாதம் -பூ ர பா ராம பா து கா–நான்கையும் diagonalil படித்தால் அப்படியே வரும்
central symatry யும் உண்டு
—————————————————————————
அ நதி ரிக்த பத பதார்த்த அநு லோம ப்ரதி லோம யமகம்
மாறாத -வார்த்தை -பொருள் -நேராகப் படித்தாலும் -தலை கீழ் சொன்னாலும் –
வார்த்தை தோறும்
பாதம் தோறும்
ஸ்லோகம் முழுவதும் இப்படி உண்டே
காரிகா ந ந யாத்ராயா யா கேயாஸ் யஸ்ய பாதுபா
பாதபா ஹ ஹ ஸித்தாஸி யஜ்ஞாய மம ஸஞ்ஜஸா—-922-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்குக் காரணமாக நீ உள்ளாய்; புகழத்தக்கவளாக உள்ளாய்;
ஸூரியன் போன்ற ப்ரகாசம் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் காப்பாற்றும் பாதுகைகளாக உள்ளாய்.
இப்படிப்பட்ட நீ, நான் செய்யும் ஆராதனையை ஏற்பதற்காக, நீயாகவே என் இருப்பிடம் வந்துள்ளாயே! என்ன ஆச்சர்யம்!
இந்த ஸ்லோகத்தில் அவிசிஷ்ட ப்ரதிலோம பாடம் என்ற அமைப்பில் உள்ளது. இதன் கருத்து –
இந்த ஸ்லோகத்தைத் திருப்பிப் படித்தாலும், இதே பொருளையே அளிக்க வல்லதாகும். இது கீழே உள்ளது:
ஸாஞ்ஜஸா மம யஜ்ஞாய ஸித்தாஸி ஹ ஹ பாதபா
பாநுபா கேயாஸ்யஸ்ய யா யாத்ராயா ந ந காரிகா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்குக் காரணமாக நீ உள்ளாய்;
புகழத்தக்கவளாக உள்ளாய்; சூரியன் போன்ற ப்ரகாசம் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக்
காப்பாற்றும் பாதுகைகளாக உள்ளாய். இப்படிப்பட்ட நீ, நான் செய்யும் ஆராதனையை ஏற்பதற்காக,
நீயாகவே என் இருப்பிடம் வந்துள்ளாயே! என்ன ஆச்சர்யம்!
இந்த ஸ்லோகத்தில் அவிசிஷ்ட ப்ரதிலோம பாடம் என்ற அமைப்பில் உள்ளது.
இதன் கருத்து – இந்த ஸ்லோகத்தைத் திருப்பிப் படித்தாலும், இதே பொருளையே அளிக்க வல்லதாகும். இது கீழே உள்ளது:
ஸாஞ்ஜஸா மம யஜ்ஞாய ஸித்தாஸி ஹ ஹ பாதபா
பாநுபா கேயாஸ்யஸ்ய யா யாத்ராயா ந ந காரிகா
யாத்ரா யா –அடியாரைக் காத்து அருள பெருமாளது பயணத்துக்கு
காரிகா ந ந -நடத்தாதவளாக நீ இல்லை -நடத்துபவள்
யா கேயா அஸ் யஸ்ய -ஸ்துதிக்காத தக்கவள்
பாநு பா -ஸூர்யனை விஞ்சிய தேஜஸ்ஸூ
பாதபா ஹ ஹ சித்தாசி -சித்தமாக அனுக்ரஹம் -என்ன வியப்பு
யஜ்ஞாய மம சாஞ்ஜசா-இப்படிப்பட்ட பாதுகா தேவி -என்னுடைய திரு ஆராதனத்துக்கு சித்தமாக என்னைத் தேடி காத்து உள்ளாய்
பகவான் திருவடிகள் சூர்யனை ஒத்த ஒலி உடையவனாய் நம் அஜ்ஞ்ஞானம் போக்கி அருளும் –
அவை சஞ்சரிக்க நீ அன்றோ உதவ வேண்டும் –
நீ அன்றி பகவான் எங்கனே சஞ்சரிப்பது -அஹோ பாக்கியம் -அப்படிப்பட்ட நீ வெகு வேகமாக நான் செய்யும்
ஆராதனத்தை ஏற்க சித்தமாக வந்து அருளுகிறாயே என்ன ஆச்சர்யம் –
காரிகா ந ந யாத்ரா யா -ஆத்ம யாத்திரைக்கு நல்ல வழி காட்டும் நம்மாழ்வார் –வேதம் பாற்கடல் -நாவே மத்து பக்தாம்ருதம் —
அர்ச்சிராதி காந்தியையும் காட்டி அருளி
யா கேயாஸ் -பாடித் திரியும் படி ஸ்துதிக்காத தக்கவர்
யஸ்ய பாநுபா -வகுள பூஷண பாஸ்கரர்
பாதபா ஹ ஹ சித்தாசி யஜ்ஞாய மம சாஞ்ஜசா-சடாரி ரூபம் -நமது திரு ஆராதனத்துக்கு முற்கோலி
——————————————————–
சர பந்தம் -அம்பு போல் -ராகவன் இடம் லாகவமாய் ஒட்டி இருக்குமே
ஸராகவா ஸ்ருதௌ த்ருஷ்டா பாதுகா ஸந்ரு பாஸநா
ஸ வாகவா கதௌ ஸ்லிஷ்டா ஸ்வாதுர்மே ஸதுபாஸநா—-923–
வேதங்களால் போற்றப்படுபவள், இராமனுடன் எப்போதும் சேர்ந்தே உள்ளவள், அயோத்தியின் ஸிம்ஹாஸனத்தை அடைந்தவள்,
ஸ்ரீராமனின் ஸஞ்சார காலங்களில் எளிதாகச் சிரமம் இன்றிச் செல்லக்கூடியவள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உள்ளவள்,
ஸாதுக்களால் உபாஸனை செய்யப்படுபவள் – இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எனக்கு இனிமையாக உள்ளாள்.
ஸ ராகவா -ராமனை விட்டுப் பிரியாமல்
ஸ்ருதௌ த்ருஷ்டா -வேதத்தால் பார்க்கப்படுபவள்
பாதுகா
ச ந்ருப ஆசநா -ராஜாவுக்கு உரிய ஸிம்ஹாஸனம் உடன் கூடியே இருப்பவள் -காட்டுக்குப் போனாலும் இருந்தாள்
ச லாகவா -எளிதாக ஸ்ரமம் இல்லாமல் எழுந்து அருளப் பண்ணி
கதௌ ஸ்லிஷ்டா -இணைந்து பிரியாமல் சஞ்சரிக்க
ஸ்வாதுர்மே – அடியேன் பக்திக்கு இலக்கு ஆகி -இனியவளாக உள்ளவள்
சதுபாசநா -சத்துக்களால் உபாஸிக்கப் படுகிறாள்
ஸ்ரீ பாதுகை ஸ்ருதியில் விளங்குவது -பெருமாளை பிரியாமல் எல்லா நிலைகளிலும் உள்ளது –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளிய பொழுது சிம்ஹாசனம் அடைந்தது –
சஞ்சார காலத்தில் பெருமாள் திருவடியுடன் ஒன்றாய் ஒட்டி இருந்து லாகவமாக செயல் படுவது -நமக்கு மிக இனியதாக இருக்கும் –
ஸ ராகவா
ஸ்ருதௌ த்ருஷ்டா -திருவாய் மொழி நிகமன பாசுரத்தில் நம்மாழ்வார் -குருகூர் சடகோபன் சொல் -கை கூப்புகிறோமே
பாதுகா சந்ருபாசநா -பிரபன்ன ஜன கூடஸ்தர் -அங்கி ஆழ்வார்களுக்கு –பூதம் சரஸ்ஸ -ஸ்லோகம் -அங்க க்ரமம்
பூதம் தலை -இரண்டு கண்கள் -முகம் பட்ட நாதன் -கழுத்து பக்தி சாரார் -கரங்கள் -திரு மார்பு பக்த அங்கரி –
ச லாகவா -வேதம் தமிழ் செய்த மாறன்
கதௌ ஸ்லிஷ்டா -உத்சவர் உடன் சடாரி
ஸ்வாதுர்மே சதுபாசநா -மதுரகவி ப்ரக்ருதிகள் உபாஸ்ட்னம் -தித்திப்பவர் -பக்தாம்ருதம்-
ஸ ராகவா ஸ்ருதௌ த்ருஷ்டா பாதுகா சந்ரு பாசநா
ச லாகவா கதௌ ஸ்லிஷ்டா ஸ்வாதுர்மே சது பாசநா
சர பந்தம் -முதல் இரண்டு வரிகள் -அம்பின் வடிவில் -இரட்டை குச்சிகள் முனை கூர்மையாக
——————————————————————————-
கருட கதி சக்ர பந்தம் –
காவ்யாய ஆஸ்தித மாவர்க்க வ்யாஜ யாதக மார்க்கா
காமதா ஜகத: ஸ்தித்யை ரங்க புங்கவ பாதுகா—-924-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் தங்கள் ஸஞ்சாரத்தின்போது, செல்லும் இடங்களில், ஸ்ரீரங்கநாச்சியாரை அங்கு
வரவழைப்பதற்குக் காரணமாகி விடுகிறாள் (அங்கு லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகிறது).
அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்லவளாக உள்ளாள். இந்த உலகின் ரக்ஷணத்தின் பொருட்டு,
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள், இராமாயணம் முதலான காவியங்கள் தோன்றக் காரணமாக இருந்தாள்.
காவ்யா யாஸ்தித -காவ்யங்களுக்கு விஷயமாக ஆனாள்
மார்கக –மா ஆவர்க்க -மஹா லஷ்மியை கூட்டிவர
வ்யாஜ யாதக மார்க்ககா -லகுவாக சஞ்சாரம்
காமதா -அபேக்ஷித்ங்களை -தர்மங்களுக்கு விருத்தம் இல்லாத ஸம்ஸத்தையும்
ஜகத ஸ்தித்யை ரங்க புங்கவ பாதுகா – உலகை ரஷிக்கவே
ஸ்ரீ ராமாயணம் -பாதுகா சஹஸ்ரம் போன்ற காவ்யம்
நாம் உஜ்ஜீவிக்கவே ஸ்ரீ காவியங்களில் அமர்ந்து உள்ளாள் –
ஸ்ரீ பாதுகை மிக்க சோபையுடன் சஞ்சாரம் பண்ணும் -ராஜ்ய லஷ்மி வேண்டாம் என்று சித்ர கூடம் வந்த ஸ்ரீ பரதாழ்வான்
திரும்புகையில் அவன் பின் தொடர்ந்து சென்ற வழியை யுடையது
வேண்டிய இஷ்டங்களை தருவது -உலக ஷேமதிற்காக ஸ்ரீ ராமாயணாதி காவ்யங்கள் பிறக்க காரணமாயிற்று –
நம்மாழ்வார் -கண்ணி நுண் சிறுதாம்பினில் அமர்ந்து அருளி -சடகோபர் அந்தாதி விஷயமும் ஆகி –
திருவாய் மொழி அனுசந்திக்கவே ஸ்ரீ லஷ்மி கடாக்ஷம்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -பூ மன்னு மாது -மா ஆவர்க்க
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
செய்ய தமிழ் மாலைகள் தாம் தெளிய ஓதி -தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –
கருட கதி சக்ர பந்தம்
கருடன் ஏறி இறங்குவது போல் முதல் பாதம்
பக்க வாட்டில் சஞ்சாரம் இரண்டாம் பாதம்
வட்டம் இடுவது போல் மூன்றாம் நான்காம் பாதங்கள்
கா ஆரம்பம் கா வில் முடிந்து
—————————————————————–
வீ ஸ்ருங்காசட சக்ர பந்தம் -இரண்டு வளையல்கள் -நடுவில் சக்ரம்
ஸுர கார்யகரீ தேவீ ரங்க துர்யஸ்ய பாதுகா
காமதா கலிதா தேஸா ஸரந்தீ ஸாது வர்த்மஸு—-925-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் தேவர்களின் செயல்களைச் செய்து தருகிறாள்.
தேவர்களின் தன்மைகளைக் கொண்டவளாக உள்ளாள். வேண்டியவற்றை அளிக்கிறாள்.
இந்த உலகிற்கு எது நன்மை அளிக்குமோ, அவற்றைச் செய்யும்படி ஆணை இடுகிறாள். நல்ல வழிகளில் ஸஞ்சாரம் செய்கிறாள்.
ஸூர கார்யகரீ -தேவர்களுக்கு நல்ல கார்யம் -அடியார்களுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பூ ஸூரர்களுக்கு
தேவி ரங்க துர்யச்ய பாதுகா –திவ் -இவளது நாட்டிய அரங்கம் -இருவரும் சேந்து லீலைகள் செய்து அருளும் மேடை
காமதா -தர்மங்கள் படி ஸமஸ்த அபேக்ஷிதங்களையும் அருளி
கலிதா தேஸா =ஆதேசம் கட்டளை -சாசனம் -வழங்கி வழி காட்டி
ஸரந்தீ சாது வர்த்மஸூ -உயர்ந்த பாதையில் ஸஞ்சரிக்கிறாள் –
ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகையே அநிஷ்ட நிவாரணத்துக்கும் இஷ்ட பிராப்திக்கும் காரணம் –
உலகுக்கு ஹிதமான கட்டளைகளை வெளியிடுகிறது -நல்ல மார்க்கங்களில் சஞ்சரிக்கிறது –
தெய்வத் தன்மை உடையது -எல்லாத் தன்மைகளிலும் ஸ்ருதியை போன்றது –
பொலிக பொலிக பொலிக -அடியார்களுக்கு மங்களா சாசனம் –
பராங்குச நாயகி -பின்னை கொல்
ஆதேசம் -சாஸ்திரம் -திருவாய் மொழி வழங்கி
சரணாகதி மார்க்கம் -நோற்ற நாலிலும் -காட்டி அருளி -கண்ணன் அல்லாலில்லை அன்று சரண்
ஸூர கார்யகரீ தேவி ரங்க துர்யச்ய -வெளிச்சக்கரம்
பாது
கா
காமதா கலிதா தேஸா ஸரந்தீ சாது வர்த்மஸூ-உள் சக்கர எழுத்துக்கள் –
————————————————————
பரத ஆராதிதாம் தாரம் வந்தே ராகவ பாதுகாம்
பவ தாப ஆதி தாந்தாநாம் வந்த்யாம் ராஜீவ மேதுராம்—-926-
பரதனால் ஆராதனை செய்யப்பட்டவளும், மிகவும் உயர்ந்தவளும், ஸம்ஸாரம் என்னும் துன்பங்களை மூலம்
மனவருத்தம் கொண்டு வருந்துபவர்களின் துன்பம் நீங்க வணங்கத்தக்கவளும், தேவர்களால் அர்ச்சிக்கப்பட்ட
தாமரை மலர்களால் சூழப்பட்டவளும் ஆகிய இராமனின் பாதுகையை நான் வணங்குகிறேன்.
பரதாராதிதாம் -பாரதனால் ஆராதிக்கப்பட்ட
தாராம் -உத்க்ருஷ்ட -ஒன்றைப் பத்தாக்கி அருளி
வந்தே ராகவ பாதுகாம்
பவ தாபாதி தாந்தாநாம் -தாப த்ரயங்கள் -ஆதி மனத் துக்கங்களால் துன்பம் படுபவர்களுக்கு
வியாதி உடம்புக்கு ஆதி மனதுக்கு -ஆதி போனால் வியாதி போகுமே
வந்த்யாம் -வணங்கத் தக்கவள்
ராஜீவ மேதுராம் -தாமரையால் சூழப் பட்டு -குளிர்ந்து -உள்ளாள்
ஸ்ரீ பரதாழ்வானால் ஆராதிக்கப் பெற்றது -மிக உத்க்ருஷ்டமானது -சம்சார தாபத்தால் வாடினவர்களுக்கு சேவிக்கத் தக்கது
அர்ச்சனை செய்த தாமரைப் பூக்களால் சூழப் பெற்றது -இத்தகைய ஸ்ரீ ராம பாதுகையை வணங்குகிறேன் –
பாவம் ராகம் தாளம் -நாத முனிகள் தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
இவரால் வணங்கப்பட்ட நம்மாழ்வார் –
தாராம் -உயர்ந்த -கண் மணிக்கும் -ஆழ்வார் கண்ணாவான் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்
பிறவிப் பிணி -போக்கும் பாசுரங்கள் -பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடு பறித்து -சடகோபர் –90-
மைனஸூ முழுவதும் தாமரை செந்தாமரைக் கண்ணா -தாமரை அடி -செய்ய தாமரைக் கண்ணா –
தாமரை பாதம் காய் கண்கள் -தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண்கள்
அவயவங்கள் நிறைந்த திரு உள்ளம் –
முதல் இரண்டு பாதங்கள் –ப ர தா ரா தி தாம் தா ராம் வந்தே ராகவ பாதுகாம்
அடுத்த இரண்டு பாதங்கள் -ப வ தா பா தி தாந்தாநாம் வந்த்யாம் ராஜீவ மேதுராம்
ஒற்றைப்படை எழுத்துக்கள் ஒன்றாகவே இருக்குமே இரண்டு வரிகளிலும் –
வி சதுஷ்க சக்ர பந்தம் -எட்டுக் கோணங்கள் கொண்டும் அனுபவிக்கலாம் –
————————————————————————————
காத் உபாஸ்ய ஸதா லோகா கால உதாஹ்ருத தாமகா
காமதா அத்வரிரம் ஸாகா அகாஸா ரங்கேஸ பாதுகா—927-
தண்ணீர் தவிர வேறு எதனையும் உட்கொள்ளாத முனிவர்களால் உபாஸிக்கப்படும் ப்ரகாசம் கொண்டவள்;
பூஜை காலங்களில் மாலைகள் ஸமர்ப்பிக்கப்பட்டவளாக உள்ளவள்;
எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி உள்ளதில் மகிழ்வு கொண்டவள்; இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள்,
அவனைப் போன்றே நடையைக் கொண்டுள்ளாள் (வேண்டியதை அளிக்கிறாள்).
காது பாச்யஸ -காத் உபாஸ்ய -க அத் -தண்ணீரை மட்டும் உண்ணும் ரிஷிகளால் வணங்கப்படுபவள்
தாலோகா -தத் ஆலோகா -உயர்ந்த ஒளி மிக்கவளாக தியானித்து அறியாமை வென்று
காலோதாஹ்ருத-கால உதாஹ்ருத -திரு ஆராதனா காலத்தில் களைந்து
தாமகா -தாம ஆகா -மாலை பிரசாதம் பெற்று
காமதாஸ் -தர்மம் விரோதம் இல்லாத அபேக்ஷிதங்கள்
அத்வ -வழிகளில் -கஜேந்திரன் -0தரவுவதி பிரகலாதன் இத்யாதி ரக்ஷணம் வந்த மார்க்கங்களில்
ரிரம் சாகா -சஞ்சரிப்பவள்
அ காசா -அவனைப் போலவே தன்மைகள் –
ரங்கேஸ பாதுகா
ஸ்ரீ பாதுகை ஜலபானம் மாத்ரம் செய்து கொண்டு பகவத் த்யானம் செய்யும் மகரிஷிகளால் உபாசிக்கப்படும் –
ஒளி மயமாய் இருப்பது -பூஜா காலத்தில் மாலைகள் சமர்ப்பிக்கப் பெற்று அழகுடன் விளங்குவது –
தனது இஷ்ட மார்க்கத்தில் விநோதமாக சஞ்சரிக்க விருப்பமுடைய பெருமாள் நடந்துஅருள உதவுகிறது –
நமக்கு வேண்டியது எல்லாம் அளிக்கிறது –
நம்மாழ்வார் -ரிஷிகளால் வணங்கப்பட்டு -ஒன்றினில் ஒன்றி நின்று -தியானித்து –
பர்வத பரம அணு -சம்சாரிகள் -ரிஷிகள் -ஆழ்வார் -மயர்வற மதி நலம் அருள்பெற்றவர்
ஆலோகா -வாக்குல பூஷண பாஸ்கரர் -மதுரகவிக்கு வழி காட்டிய தேஜஸ்
தாமம் -வைட்டமின் மகிழ் மாலை மார்பினன்
சூழ் விசும்பு -அர்ச்சிராதி மார்க்கம் காட்டி அருளி -சாந்தோக்யம் -நமக்கும் விருப்பம் காட்டி
அவனைப் போலவே -நடை -அநு காரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் –
அஷ்ட தள பத்ம பந்தம் –
எழுத்துக்களை -கா -நடுவில் -வைத்து –
சதுர் அர சக்ர பந்தம்
17 எழுத்துக்களையே –32- அனுஷ்டுப்பாக அமைத்து
——————————————————-
பாபா கூபார பாளீபா த்ரிபாதீ பாத பாதபா
க்ருபாரூபா ஜபாலாபா ஸ்வாபா மா அபாத் ந்ருபாதிபா—-928-
பாவங்கள் என்பவை வரிசையான ஸமுத்திரங்களாக நின்றாலும் அவற்றைப் பருக வல்லவள்; தயை வடிவமாக உள்ளவள்;
அஷ்டாக்ஷரம் போன்ற மந்த்ரங்களின் ஜபம் போல் தூய்மை ஏற்படுத்தவல்லவள்; எளிதாக அடையக் கூடியவள்;
அரசர்களுக்கு சக்ரவர்த்தினியாக நிற்பவள் –
நித்யவிபூதியில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையானவள் என்னை அவன் பக்கம் சேர்த்துக் காப்பாற்றினாள்.
பாபா அகூபார பாளீ-பாபக்கடலின் கூட்டங்கள் -எவ்வளவு என்று எண்ணவும் முடியாத
பா -குடிப்பவள் -முடித்து புனிதமாக்கி
த்ரிபாதீ பாத பாதபா-ஸ்ரீ வைகுண்டத்தில் -எழுந்து அருளிய திருப்பாதத்தை ரஷிக்கும் பாதுகா
க்ருபாரூபா -கருணையே வடிவமான
ஜப ஆலாபா -பேச்சிலே ஆலாபித்தாலே ஜபம் போல் எண்ணி
ஸ்வாபா -எளிமையாக அடையும் படி
மா -என்னை -பாபமே செய்து பாபியான என்னை
அபாத் ந்ருபாதிபா-அரசர்களுக்கு அரசியான அவள் ரஷித்து அருளி
நம்மாழ்வார் -பண்டை வல் வினை பற்றி அருளினார்
ஸ்ரீ வைகுண்டத்திலும் இவரே சடாரி
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
சடகோபன் மாறன் -பராங்குசன் குருகைப் பிரான் -உதய பாஸ்கரர் -மெய் ஞானக் கடல் –
பய ரோக பண்டிதன் -தெய்வ -ஞானக்கவி குழந்தை முனி -பிரபன்ன ஜன கூடஸ்தர்
32-திருநாமங்கள் உண்டே
சலவைத் தொழிலாளன் -ராமானுஜர் ஐதிக்யம் -பசங்களின் பெயரைக் கூப்பிட்டு -இழந்தேனே என்று கண்ணீர் விட்டாரே –
இதுவே ஜபம் -ஆலாபநம்
நமக்காகவே சடாரி -ஸுலப்யம் -தீண்டி தீண்டி அனுக்ரஹம்
நம்மையும் ரக்ஷித்து -அதிகாரம் இல்லாதாருக்காக அன்றோ நீ இரங்க வேண்டுவது -மா முனிகள்
மனிதர்களுக்கு அதிபா வழி காட்டும் ஆழ்வார்களும் தா,லைவர் -அங்கி அங்க பாவம் உண்டே –
ஷோடஸ தள பந்தம்
இரட்டைப்படை எழுத்து ஒரே எழுத்து பா –நான்கு பாதங்களிலும் இப்படியே -16 முறை வந்த எழுத்து இதுவே –
இத்தை தாமரை நடுப்பகுதி -கர்ணிகையில் வைத்து மற்றவற்றை 16 தளங்களில் எழுதிப் படிக்கலாம்
பா பா கூ பா ர பா ளீ பா த்ரி பா தீ பா த பா த பா
க்ரு பா ரூ பா ஜ பா லா பா ஸ்வா பா மா பான் ந்ரு பா தி பா
ஸ்ரீ பரமபத நாதனுடைய ஸ்ரீ பாதுகை நமது பாபங்களின் கடல் பலவற்றையும் முடிக்கும் பரமதயா மூர்த்தி –
அதன் புகழ் சங்கீர்த்தனம் மந்திர ஜபங்கள் -திரு அஷ்டாஷர ராஜபாதிகள் போலே பரிசுத்தம் பண்ண வல்லது –
நாம் ஸூலபமாக அடைந்து ஸூலபமாக ஆராதிக்கலாம் -அரசர்களுக்கு மேலான அரசியாக திரு பட்டாபிஷேகம் செய்யப்பட
அது என்னை ஆஸ்ரயண மூலம் காத்து அருளியது –
—————————————————————
ஸ்திராகஸாம் ஸதா ஆராத்யா விஹத ஆகதத அமதா
ஸத் பாதுகே ஸராஸா மா ரங்க ராஜ பதம் நய—-929-
ஸ்திர- அழிக்க முடியாத
ஆகஸாம் -பாபம் செய்தவர்களுக்கும் -அகம் -குற்றம்
ஸதா ஆராத்யா -எப்பொழுதும் ஆராதிக்கப் படுபவள்
விஹத அக -துக்கத்தையும் போக்கி
ததா அமதா-கர்மாக்களை -அதனால் வரும் பிறவிகளையும் -மூன்றையும் போக்கி
ஸத் -மாறாத -ஸத்யம் -அவனையே ஸத் -என்று -உலகம் அஸத் -மாறிக்கொண்டே இருக்குமே
பாதுகே -ஸ்ரீ பாதுகா தேவியும் சத்தாகவே இருக்குமே –
ஸ ராஸா -இனிமையான ஒலியை கொண்டு
மா-அடியேனை
ரங்க ராஜ பதம் நய -திருவடிகளில் சேர்த்து அருளுகிறாய்
நம்மாழ்வாரும் அதிகாரம் இல்லாமல் -புன்மையாக கருதினாலும்
ஸத் -சத்துக்கள் சான்றோர் -உயர்ந்த பாதுகை
செவிக்கு இனிய செஞ்சொல் -சொல்லவும் கேட்கவும் இனிமை
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் வலிமையான பாவங்கள் செய்த ஸம்ஸாரிகளால் எப்போதும் ஆராதிக்கத்தக்கவள்;
போக்கப்பட்ட துன்பங்கள், விருப்பம் அல்லாதவற்றை அனுபவிக்காத நிலை ஆகியவற்றைக் கொண்டவள்
(உன்னை அடைந்தவர்களுக்கு இவற்றை அளிப்பவள்); இனிமையான நாதம் கொண்டவள் –
இப்படிப்பட்ட பாதுகையான நீ, என்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிடம் அழைத்துச் செல்வாயாக.
ஸ்திதா ஸமய ராஜத்பா கதரா மாதகே கவி
துரம்ஹஸாம் ஸந்நதாதா ஸாத்யா அதாப கரா ஆஸரா—-930-
ஸ்திதா ஸமய ராஜத்பா -சமய -முன்னோர் சம்ப்ரதாயம் -அனுஷ்டிப்பதாலே ஒளி பெற்றவர்களைக் காப்பவள் –
பகவத் ப்ரீதிக்காக செயல் பட வேண்டுமே –
ஆகத ரா மாதகே கவி-ரா -தங்கம் -ஸ்வர்ண பாதுகை -ரத்தினங்கள் ஒளி வீச நடுவில் இவள் -மகிழ்ச்சி உட்டும் ரத்ன கிரணங்கள்
துரம்ஹஸாம் ஸந்நதா தா – பாபம் செய்தவர்களின் துர்தசையை அழிப்பவன்
ஸாத்ய அதாப கரா -துன்பம் இல்லாத தன்மையை உண்டாக்குபவள் -ரத்ன கிரணங்களால் –
ஆஸரா-எங்கும் ஸஞ்சரிப்பவள் –
சமயாச்சாரம் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –
தங்கம் போல் விளங்கி -மற்ற ஆழ்வார்கள் ரத்தினங்கள் -அங்கி அங்க பாவம் –
தாப த்ரயங்களைப் போக்கி -திருவாய் மொழி -சாந்தி ஸூ தாந்த -அமைதியின் அந்தப்புரம் -தேசிகன்
ஆசார -சஞ்சரிப்பவர் -திருவாய் மொழி வாயிலாக எங்கும் -சஞ்சரிக்கிறார் -அங்கும் சாம கானம் போல் திருவாய் மொழி உண்டே –
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் கூறும் தர்ம மார்க்கத்தில் நிலையாக நிற்பவர்களைக் காப்பாற்றுபவளும்,
தங்க மயமாக அடியார்களுக்குச் கைங்கர்ய செல்வத்தை அளிப்பவளும், வணங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவல்ல
ஒளி மண்டலத்தில் உள்ளவளாகவும் (அல்லது தனது ஒளி மூலம் அவர்கள் துன்பத்தை நீக்கி மகிழ்வை அளிப்பவள்),
மிகுந்த பாவம் செய்தவர்களின் பலனாக உள்ள கெட்ட காலங்களை விலக்குபவளாகவும்,
தாபம் இல்லாத தன்மையை அளிப்பவளாகவும், எங்கும் ஸஞ்சாரம் செய்து காப்பாற்றுபவளாகவும் உள்ள நீ,
என்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் சேர்க்க வேண்டும்.
சத் சப்த வாச்யனான ஸ்ரீ பகவானின் ஸ்ரீ பாதுகையே -கொடு வல்வினையர் கூட உன்னை எப்போதும் ஆராதித்து நன்மை பெறலாம் –
அநிஷ்டங்கள் அனைத்தையும் போக்கடித்து விடுகிறாய் -இனிய நாதத்துடன் சஞ்சரிக்கிறாய்
சதாசாரம் தர்ம நெறி இவற்றில் நிலை நிற்பவரைக் காத்து அருள்கிறாய்-
ஆனந்தம் தரும் ஒளி மண்டலத்தில் விளங்கி சேவிப்பவருக்கு சம்பத்தை அருளும் ஸ்ரீ மிக்கதாய் இருக்கிறாய்
பகவத் சஞ்சாரத்தில் நீ தானே தாபஹரமாக இருக்கச் செய்கிறாய்
நீ என்னை ஸ்ரீ ரங்க நாதன் திருவடிக்கு அழைத்துச் சென்று அருள வேண்டும் –
சதுரங்க குதிரை பந்தம் –32 கட்டங்கள் கொண்ட -chess horse-
சதுரங்கக் கட்டத்தில் முதல் ஸ்லோகத்தை நான்கு வரிசைகளில் எழுத்துக்களை எழுதி
குதிரை நகர்வது போல் படித்தால் அடுத்த ஸ்லோகம் வரும்
——————————————————————————–
லோக தாரா காம சாரா கவிராஜ துராவசா
தாரா கதே பாத ரா ஆம ராஜதே ராம பாதுகா–931-
தன்னை அண்டி நிற்பவர்களை எப்போதும் காப்பாற்றுபவளாகவும், தனது விருப்பப்படி எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி இருப்பவளும்
(அல்லது, காமசாரா = ஆகாம சாரா என்று பிரித்து, அனைவரும் விரும்பக்கூடிய ஸஞ்சாரம் உடையவள் எனலாம்),
வால்மீகி போன்ற உயர்ந்த கவிகளால் கூட தனது பெருமையை முழுவதும் உணர இயலாமல் உள்ளவளும்,
ஸஞ்சாரத்தில் தேர்ச்சி பெற்றவளும், மிகுந்த ஒளியுடன் கூடியவளும் – என்று பல தன்மைகளுடன் ஸ்ரீராம பாதுகை உள்ளது.
லோக தாரா -உலக மக்களைக் காத்து
காம சாரா -விரும்ம்பியபடி அப்படி சஞ்சாரம்
கவிராஜ துராவசா-கவி சக்கரவர்த்திகள் -வால்மீகி போன்றார் முழுவதும் பாட முடியாத பெருமை கொண்டவள்
தாரா கதே -அடியார் ரக்ஷண பாதையில் சென்று
பாத ரா -ஞான ஒளி கொடுத்து
ஆம – இப்படியாக விளங்குகிறாள்
ராஜதே ராம பாதுகா
உலகம் காக்கவே நம்மாழ்வார் திரு அவதாரம்
தெளியாத மறை நிலங்கள் தெளியும் படி
ஸேனாபதி ஆழ்வான் -எங்கும் சஞ்சரிப்பவர்
கம்பரும் முழுவதும் பாட முடியாதே என்றாரே
சரணாகதி உயர்ந்த மார்க்கத்தில் பயணித்து
திருவடியை நம்மிடம் சேர்த்து
இவ்வாறு ஒளி வீசிக்கொண்டு திகழ்கிறார் –
ஸ்ரீ ராம பாதுகை உலகத்தைக் கடைத்தேற வல்லது -அதன் சஞ்சாரம் யாரும் விரும்பிய வண்ணம் இருக்கும் –
வால்மீகி போன்ற மா பெரும் புலவரும் அதன் பெருமையைச் சொல்ல வல்லார் அல்லர் –
சஞ்சாரத்தில் நல்ல த்வனி கொண்டது -ஒளி தருவதும் கூட -பெருமாள் திருவடியைக் கொண்டு தருவது கூட -ஸ்ரீ பாதுகையே –
அர்த்த பிரமக பந்தம்
நான்கு பாதங்களையும் எழுதி
நேராக படித்தாலும்
மேலும் கீழும் படித்தாலும் அதே வரும் படி
மேல் நான்கும்
மாற்றி நான்கும் எழுதி -இப்படி எட்டு வரிசையாக எழுதி
அதே பாதங்கள் வரும் படி அமைந்து உள்ளதே –
மேலும் கீழும் படித்தாலும் இதே ஸ்லோகம் வரும் –
————————————————————————————–
ஜய ஆம பா அபாமயா அஜாய மஹே துதுஹே மயா
மஹேச க ஆகாச ஹேம பாதுகா அமமக அத் உபா—-932-
ஜய ஆம பா -புலன்களை வெல்ல நினைப்பவர்கள் ஜய -அதில் வெற்றி காணாதவர்களை காப்பவள்
அபாமயா -உடல் மன நோய் போக்கி
அஜாய மஹே -பெருமாள் கொண்டாடும் உத்சவங்களில்
துதுஹே மயா-என்னால் கறக்கப் படுகிறாள் -அருள் பாலை சுரந்து அருள்கிறாள்
மஹ ஈச க -பெரிய செல்வந்தனான இந்திரனின்
ஆகாச -துன்பம் போக்கும் பெருமாள் -வாமனனாக –
ஹேம பாதுகா -ஸ்வர்ண பொன்னடி ரஷிக்கும் பாதுகை
அ மமக அத் உ பா-அபிமானம் இல்லாத கோஷ்ட்டியில் -நிலை பெற்ற சிவனின் -ப்ரஹ்மஹத்தி தோஷத்தில் இருந்து ரக்ஷித்து அருளுகிறாள் –
இந்த்ரியத்தை வெல்வது போன்ற வெற்றி இல்லாதவர்களைக் காப்பாற்றுபவளாகவும், அமயம் எனப்படும் உடல் மற்றும் சரீரம்
கலந்த வ்யாதி நீங்கும்படிச் செய்பவளும், மமகாரம் (எனது என்ற எண்ணம்) இல்லாத முனிவர்களிடம் எப்போதும் செல்பவளும்,
சிவனைக் காப்பாற்றுபவளும், உலகின் ஈச்வரர்களாக உள்ள இந்திரன் போன்றவர்களின் தலையில் அமர்பவளும் ஆகிய
தங்கமயமான பாதுகைகள் – ஸ்ரீரங்கநாதனின் உத்ஸவ காலங்களில் என்னால், எனது விருப்பங்களைத் அளிக்கும்படியாகக்
(காமதேனு பசு போன்று) கறக்கப்பட்டது.
இந்த்ரிய ஜெயத்தில் பக்குவம் அடையாத தீனர்களையும் ரஷிப்பது ஸ்ரீ பாதுகையே -ஸரீர மநோ வியாதிகளை ஒழித்து விடும்
அனைத்தும் பகவத் அதீனம் என்று உணர்ந்து மமகாரம் அற்று இருப்பவர்களுக்கு அனைத்து ரஷணங்களையும் அளிக்கிறது –
ருத்ர பிரம்மஹத்தி சாபம் போக்கி அருளியது -ப்ரம்மாதிகள் சிரசால் வணங்குகிறார்கள் -அவர்களின் துன்பங்களை போக்கி அருளும்
அந்தத் தங்கப் பாதுகை பெருமாளை அடைந்து இருப்பது -நம்மால் சேவிக்கப்படவும் கோரும் இஷ்டங்களைப் பெறவுமே –
இது அர்த்த ப்ரமுக பந்தம்
புன்மையாக -பாங்கு அல்லார்களையும் காப்பவர் ஆழ்வார்
தீர்ந்த அடியவர் தம்மை அவன் திருத்திப் பணி கொள்வான் அவன்
உத்சவம் இவருக்காகவே
அருள் சுரந்து
தங்கப் பாதுகை
ஸர்வதோ பத்ரம்
எல்லா திசையிலும் எல்லாக் கோணங்களிலும் -வரும் ஸ்லோகம் –
நேராகவும் தலை கீழாகவும் எழுதி
மேல் இருந்து கீழே இடது வலது பக்கம் படித்தாலும்
கீழ் இருந்து மேலே படித்தாலும்
இடது வலது பக்கம் படித்தாலும்
ப்ரதக்ஷிணமாக மேலும் கீழும் -பண்ணினாலும்
vertical-horizontal-aprathashinamaakavum –
16 கோணங்களில் படித்தாலும் அதே ஸ்லோகம்
———————————————————————————————-
பாபாத பாபாத பாபாஸ் பாத பாத தபா தபா
தபாதபா பாதபாத பாத பாத தபாதபா –933–
படித்தல் – இந்த ச்லோகத்தைப் பின்வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்:
பாபாத் அபாபாத் அபாபா அ பாத பாத த பாத பா
த பாத பாப அத பாத பாதபா தத பாத் அபா
1-அபாபா-வேதம் போல் சடாரியில் பாபங்கள் ஒட்டாவே -நம்மைத் தீண்டினாலும் அலம்ப மாட்டார்களே –
2-அ பாத பாதத பாதபா -அகார வாஸ்யன் -அவனது திருவடிகளுக்கு ரத்ன கிரணங்கள் மூலம் ஒளி வீசி -நம்மையும் ஒளியாலே -பாதுகாக்கிறாள்
3-தத -பாத் அபா -சமர்ப்பிக்கும் அனைவருக்கும் -அபிஷேக தீர்த்தத்தால் தூய்மைப்படுத்தி ரக்ஷிக்கிறாள்
4-தபாத பாப அத பாத பாதபா-அடைக்கலம் -தந்து -பாபங்களை போக்கும் திருவடிகள் –
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்களே -அந்த திருவடிகளுக்கு ரக்ஷை
5-பாபாத் –
6-அபாபாத்- எல்லா பாபங்களில் இருந்து நம்மை ரக்ஷிப்பவள்
அறியாமை லேசமும் இல்லாத மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்
பெருமாள் திருவடிகளுக்கு ஒளி-பாசுரங்களால் சேர்த்து -காட்டி அருளினார்
அப்பு -தீர்த்தம் -பாசுரங்கள் தீர்த்தம் -தீர்த்தங்கள் ஆயிரம் -தீர்த்தனுக்கு அற்றுத் தீர்ந்த –தத பாத் அபா
அடைக்கலம் தரும் திருவடிகளுக்கு பாதுகை இவரே –
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
அடியார்களின் பாவங்களை நீக்குபவளாகவும்; ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு வேண்டிய ஒளியை அளிக்கின்ற
ஒளியைத் தன்னிடம் கொண்ட வளாகவும்; தன்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றவர்கள் விஷயத்தில்
காப்பாற்றும் அபிஷேக நீரை உடையவளாகவும், எப்போதும் காப்பாற்றுதலைச் செய்பளாகவும், பாவங்களை நீக்குவதற்காக
இருக்கின்ற திருவடிகளைக் காப்பாற்றுபவளும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் என்னைப் பாவங்களில் இருந்து காப்பாற்றினாள்.
இந்த ஸ்லோகத்தில் த, ப என்ற இரண்டு மெய் எழுத்துக்களும்; அ, ஆ என்ற இரண்டு உயிர் எழுத்துக்களும் மட்டுமே உள்ளன.
இதில் கடந்த ஸ்லோகம் போன்றே ஸர்வதோபத்ரம் உள்ளது.
பாபம் அற்றது -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீ பாதத்திற்கு ஒளி கொடுப்பது -ஜீவர்களுக்கும் ஒளி வழங்குவது –
தன்னை பகவான் இடம் சமர்ப்பிக்குமவர் விஷயத்தில் ரஷை தரும் திருமஞ்சன தீர்த்தம் உடையது
சர்வ லோக ரஷகமாய் இருப்பதும் சர்வ பாபா நாசகமாய் இருப்பதுமான பெருமாள் திருவடிகளுக்கும் கூட ரஷணம் தருவது ஸ்ரீ பாதுகையே –
அது என்னை சர்வ பாபங்களில் இருந்து காத்து அருளிற்று –
ஒரே வார்த்தையை 16 முறை-இது அ ஆ என்கிற உயிர் எழுத்துக்களை கொண்டது , இரண்டு மெய் எழுத்துக்களையும் கொண்டது .
பாதபா , பாபா , அத , அபா , பாதபா , பாத , பா , பாத , பாபாத் , அபாபாத் , ஆ , பாபா , த , பாபா , ஆத , பா , பாத , பா
ஸர்வதோ பத்ரம்
நான்கு வரிகள் நேராகவும் -அடுத்து மாற்றி நான்கு வரிகள்
நேராக –16 கோணங்களில் படித்தாலும் அதே ஸ்லோகம் வரும் –
சதுர் தள பத்ம பத்மம்
பா நான்கு -த நடுவில் வைத்து இந்த ஸ்லோகம்
என்று பிரித்து படிக்கப் பட வேண்டும் , அதன் பொருள் என்னவெனில் ,
மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய
அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை
காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை ,
பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்வோர் விஷயத்திலும் , நன்கு காப்பாற்றாதவர்கள் விஷயத்திலும் முறையே
பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் ,
நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே –என்று பாடுகிறார்
——————————————————————————–
கோப உத்தீபக பாபே அபி க்ருபா பாக உபபாதிகா
பூத பாதோதக அபாத உத்தீபிகா கா அபி பாதுகா–934-
கோப உத்தீபக பாபே அபி -கோபத்தை கொழுந்து விட்டு வளரும் படி பாப்பம் செய்தவர்களுக்கும் கூட
க்ருபா பாக உப பாதிகா-கிருபையை பெற்றுக் கொடுத்து -உப -அருகில் -அவர்களுக்கும் கருணைக்கு பாத்ரமாக்கி –
பூத பாத உதக அ பாத – உத் தீபிகா -தூய்மை தரும் ஸ்ரீ பாத தீர்த்தம் -கங்கை நீர் -அகார வாஸ்யனான –
திருவடிகளுக்கு பிரகாசம் கொடுக்கும் பாதுகா தேவி வைபவம்
கா அபி பாதுகா-இன்னது இவ்வளவு என்று சொல்ல முடியாத பெருமை -உண்டே –
ஆழ்வார் -பயன் நன்றாகிலும் பங்கு அல்லார் ஆகிலும் –திருத்தி கொள்பவர் தானே
திருவடிக்கு ஒளி தருபவர் -அனைவரையும் சரணாகதகர் ஆக்கி -துயர் அறு சுடர் அடி –
தலை சேர்த்து ஒல்லை -திரு நாரணன் தாள் -காட்டி -அருளி –
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
ஸ்ரீரங்கநாதனின் கோபத்தைக் தூண்டிவிடும் அளவிற்குப் பாவம் செய்கிறவன் விஷயத்திலும் ஸ்ரீரங்கநாதனின்
கருணை வெளிப்படும்படியாகச் செய்பவள், தூய்மையை அளிக்கின்ற கங்கையைத் திருவடிகளில் கொண்ட
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு ஒளியை அளிப்பவள் –
இப்படிப்பட்ட பாதுகையானவள், இப்படிப்பட்டவள் என்று தெளிவாகக் கூற இயலாத மேன்மை கொண்டவளாவாள்.
ஸ்ரீ பகவானுக்கு கோபம் ஜ்வலிக்கும் படித் தூண்டி விடக் கூடிய மஹா பாபிகளாய் இருப்பார் இடத்திலும்
ஸ்ரீ பகவானுடைய தயையின் கனிவைப் பெற்றுத் தருவது ஸ்ரீ பாதுகை -பரிசுத்தியைத் தரவல்ல திருவடி
தீர்த்தமான கங்கையை உடைய பெருமாள் அகார வாச்யன்
அவருடைய திருவடிக்கு ஒளி அழிப்பது ஸ்ரீ பாதுகை -அதன் சிறப்பை என்ன வென்று சொல்வது –
த்ரை அக்ஷரம் பந்தம்
ப து கா –ப த கா -மூன்றையும் கொண்டே அமைத்த ஸ்லோகம் இது –
———————————————————————–
ததாதத்தாதி தத்தேதா தாததீதேதி தாதிதுத்
தத்தத்ததத்தா ததிததா ததேதாதேத தாதுதா –935-
படித்தல் – இந்த ஸ்லோகத்தைக் கிழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்:
தத அதத்தா அதி தத்தா இதா தாததி இத ஈதிதா அதிதுத்
தத்தத் தத்தா ததி ததா ததா இ தாத இத தாதுதா
ஏக அக்ஷர பந்தம் –
த ஒரே எழுத்துக்கு கொண்டே அமைந்த ஸ்லோகம்
தத அதத்தா அதி தத்தா இதா -விரிவாய்க்கா -பயணிக்கும் தன்மை கொண்டவள் –
பரம் பொருளின் தன்மை விஞ்சி இருப்பவள் -கருணையால் விஞ்சி -மேலும் -அவனையும் தாங்கி
தாததி இத ஈதிதா அதிதுத்—தாத -தந்தை போல் இருந்து நன்மை செய்பவள் -இத -அடையக் கூடிய துக்கங்கள் –
உலகில் வந்தாலே துக்க மையமே -போக்கி அருளுபவள் –
நிரதிசய அந்தமில் பேர் இன்பம் தருபவள்
தத்தத் தத்தா ததி ததா -அந்த அந்த பொருள்களின் தன்மை களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து
ஆததா இ தாத இத தாதுதா-வீணா கானம் போல் த்வநி கொண்டவள் -இ -மன்மதன் –
அவனுக்கு தந்தை -அவனால் அடையப்பட்டவள் -தாதுதா -பாதுகை –
தா எழுத்து கொண்டே அமைந்த ஸ்லோகத்தை இத்தால் குறித்து அருளுகிறார் –
ஆழ்வார் விரிவாக சஞ்சாரம் -பாசுரங்கள் மூலம் –
யான் பெரியன் -நீ பெரியை என்பதை யார் அறிவார்
தந்தை போல் அறிவூட்டும்
ஸ்ரீ வைகுண்ட மார்க்கம் காட்டி
காண்கின்ற நிலங்கள் எல்லாம் யானே என்னும் —
செவிக்கு இனிய செஞ்சொல்
இவரைத்தேடி பெருமாள் வந்து பாசுரம் பெற்றுக் கொள்வார்களே
பாட்டு வாங்கி -திட்டு வாங்கி -இனி இனி கதறி -இதுவே பாக்யம் என்று வந்து
இவரே பாதுகா –
இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி இருப்பவள்;
”தத்” என்று போற்றப்படும் ப்ரஹ்மத்தின் தன்மையால் அடையப்படுபவள்;
ஸம்ஸாரிகள் அடைகின்ற பலவிதமான துயரங்களை அடியுடன் நீக்குபவள்;
உலகில் உள்ள அந்தந்த வஸ்துக்களின் தன்மைகளையும், அந்தந்த வஸ்துக்களையும் தனக்கு வசப்படுத்தியவள்;
வீணை முதலான வாத்யங்கள் கொண்ட மன்மதனின் தந்தையான எம்பெருமானால் அடையப்பட்டது –
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை நமக்குத் தந்தையாக உள்ளது.
ஸ்ரீ பாதுகையின் சஞ்சாரம் அதி விஸ்த்ராமானது -அனுபவ இனிமை -ப்ராப்யமாய் இருக்கும் தன்மை -இவற்றில் எல்லாம்
தத் என்னப் பெரும் பகவானையும் மிஞ்சிய பெருமையை யுடையது –
அதிக மழை வரட்சி பூச்சி எலி போன்றவற்றால் பரவும் கொடிய நோய்கள் அந்நிய ஆக்கிரமிப்பு -போன்றவற்றை கடிந்து ஒழித்து விடும் –
அனைத்தும் அவன் அதீனம் -அவன் ஐஸ்வர்யம் மிகுந்து பரந்து உள்ளது -ஆஸ்ரிதர்களுக்கு சாம்யம் அளிக்கும்
வீணாதி வாத்திய ஒலிகள் ஆனந்தம் பொழியும்
ஸ்ரீ பாதுகை காமனின் தந்தையான பெருமாளைச் சேர்ந்து இருக்கும் -அது நமக்குத் தந்தை போலவாம் –
கடைசிச் சொல் தாதுதா ஸ்ரீ பாதுகையையே குறிக்கும் –
————————————————————————–
யாயாயாயாயாயாயாயாயா
யாயாயாயாயாயாயாயாயா
யாயாயாயாயாயாயாயாயா
யா யா யா யா யா யா யா யா யா –936–
படித்தல் – இந்த ஸ்லோகத்தைக் கீழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்:
யாயா யா ஆய ஆயாய அயாய அயாய அயாய அயாய அயாய
யாயாய ஆயாயாய ஆயாயா யா யா யா யா யா யா யா யா
ஒரே அக்ஷரம் -ஸ்வரம் மாறி கீழ்
இது ஒரே அக்ஷரம் ஒரே ஸ்வரம்
ஆயாய -லாபத்துக்காகவே -பெருமாளுக்கும் நமக்கும்
அயாய -மங்களம் கொடுக்கிறாள்
அயாய -ஞானம் கொடுக்கிறாள்
அயாய -ஸூ பம் கொடுக்கிறாள்
அயாய-வரம் கொடுக்கிறாள்
நம்மை சேர்ப்பித்து -சேதன லாபம் அவனுக்கு ஆழ்வார் -பக்தி ஞானம் வரம் புருஷார்த்தங்கள் அருளி –
பிறவித்துயர் போக்கி -அவர் பெருமாளை அடைந்து நம்மை நோக்கி வர வைத்து –
சேஷபூதராக இருந்து நம்மையும் தம்மைப்போலவே ஆக்கி அருளி –
எவள் ஸ்ரீரங்கநாதனைச் சேர்ந்தவர்களின் லாபத்தின் பொருட்டு பாடுபடுகிறாளோ, எவள் அவனை அடைந்தவர்களின்
சுபத்தின் பொருட்டு உள்ளாளோ, எவள் ஞானத்திற்காக உள்ளாளோ (ஞானத்தை அளிக்கிறாளோ),
எவள் நல்ல விஷயங்கள் மீது விருப்பங்கள் அதிகரிக்கத் தூண்டும்படியாக உள்ளாளோ, எவள் அடியார்களின் விரோதிகளை
அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதனை அடைந்துள்ளாளோ, எவள் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் பொருட்டு அவனை அடந்துள்ளாளோ,
எவள் ஸ்ரீரங்கநாதனை நம்மிடம் அழைத்து வருவதற்காக உள்ளாளோ, எவள் முக்தர்கள் எங்கும் ஸஞ்சாரம் செய்யும்படி செய்கிறாளோ –
நல்ல கதியை அடைய உதவும் இப்படிப்பட்ட பாதுகையானவள், ஸ்ரீரங்கநாதனுக்கு எப்போதும் அடிமை செய்தபடி உள்ளாள்.
இந்த ஸ்லோகத்தில் பலவிதமான அமைப்புகள் உள்ளன.–மஹா யமகம் – இவையாவன –
ஏகஸ்வரிசித்ரம் (ஒரே ஸ்வரம்), ஏகவர்ணசித்ரம் (ஒரே எழுத்து), த்விஸ்தாநகம் ஸ்தாநீசித்ரம், கோமுசித்ரிகா,
ஸர்வதோபத்ரம், கங்கணபந்தம், முரஜபந்தம், பத்மபந்தம், ச்லோகாநுலோம ப்ரதிலோம கதிசித்ரம், அர்த்தயமகம்,
பாதசதுராவ்ருத்தி யமகம், பாதார்த்த அஷ்டாவ்ருத்தி யமகம், ஏகாக்ஷர சித்ரசதா வ்ருத்தியகம் – ஆகும்.
எந்த ஸ்ரீ பாதுகை சின்ஹாசனத்தில் இருந்து வரி வசூலித்ததோ –
எது ஆஸ்ரிதருடைய சுபத்திற்கு ஆனதோ –
எது பகவத் விஷய காமம் உண்டாக்குகிறதோ –
எது தன்னையே உபாச்ய தேவதையாக கொண்டாடும்படி செய்கிறதோ –
எது ஆஸ்ரித விரோதிகளையும் பாபங்களையும் போக்க வல்லதோ –
எது பெருமாளை அடைந்து அவர் சஞ்சாரத்துக்கு ஆகிறதோ
எது பெருமாளை நம்மிடம் அழைத்து வர ஆகிறதோ
எது ஆஸ்ரிதர் பரம புருஷார்த்தத்தை எய்துவதற்கு சாதனமோ அது பகவானுக்காகவே உள்ளது –
—————————————————————————–
ரகுபதி சரணாவநீ ததா விரசித ஸஞ்சரணா வநீபதே
க்ருத பரிசரணா வநீபகை: நிகமமுகைச்ச ரணாவநீ கதா—937–
ரகுபதி சரணாவநீ ததா விரசித
ஸஞ்சரணா வநீபதே-காட்டுப்பாதையில் கூடப் போனாள் -அன்புடன் -பரிவுடன்
க்ருத பரிசரணா
வநீபகை: -ரிஷிகள்
நிகமமுகைச்ச -வேதம் ஓதிக்கொண்டு -ஸூஸ்ருஷை செய்யப்பட்டாள்
கௌதம முனிவரும் இவளையே வணங்கி -சிஷ்ட பரிபாலனம் செய்து அருளி
godணாவநீ கதா-போர்க்களம் -தாடகை வதம் -அநிஷ்ட நிவாரணம் -துஷ்ட நிரஸனம்
ஆழ்வார் -உயர்ந்த மார்க்கமான சரணாகதி மார்க்கம் உடன் சஞ்சரித்து -ஸஞ்சரணா வநீபதே-ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் –
ரிஷிகளும் வணங்கி -விசுவாமித்திரர் -மழையே இல்லாத பொழுது -12 வருஷங்கள் -நாய் மாமிசம் -விற்பவன் கொடுக்காமல் -தனக்கு பாபம் வருமே -இந்த்ரனை கூப்பிட்டு மழை வரச்செய்தானே
32 வருஷம் ஒன்றுமே உண்ணாமல் இருப்பதை கேட்டு அகஸ்தியர் இடம் கேடடாராம்
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று கேட்டு வணங்கினாராம்
போர்க்களம் -வேத வாதப்போர் -உளன் எனில் உளன் -உளன் அலன் எனில் உளன் –
god is no where -god is now here-
விச்வாமித்திரரின் யாகம் காக்கும் பொருட்டு கானக மார்க்கத்தில் சென்றவளும், மாரீசன் முதலான அசுரர்களை
அழிப்பதற்காகப் போர்க்களம் சென்றவளும் ஆகிய ரகுகுல நாயகனான இராமனின் பாதுகை –
விரோதிகளை அழித்துக் காப்பாற்ற வேண்டும் என்று வந்த விச்வாமித்திரர் போன்ற யாசகர்களாலும்,
வேதங்களில் சிறந்த மஹரிஷிகளாலும் செய்யப்படும் கைங்கர்யத்தைக் கொண்டதாக உள்ளாள்.
இதில் பாத சதுஷ்டய பாக ஆ வ்ருத்தி யமகம் உள்ளது.
முதல் பாதம் மற்றும் மூன்றாம் பாதங்கள் 11 அக்ஷரங்களும்,
இரண்டு மற்றும் நான்காம் பாதங்கள் 12 அக்ஷரங்களும் கொண்டதாக உள்ளது.
ச ரணாவநீ-நான்கு பாதங்களிலும்
முதலில் பாதுகை
அடுத்து சஞ்சாரணம் செய்து
அடுத்து உபசரிக்கப் பட்டவள்
அடுத்து ரணாவநீ சென்றவள்
விஸ்வாமித்ரர் வேண்டின அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராகவ ஸ்ரீ பாதுகை காட்டு வழியில் சஞ்சாரம் செய்தது –
ஸூபாஹூ மாரீசர்களுடன் போரிட முனைந்தது -யாக ரஷணம் செய்து பலன் யாசிப்பவர்களாலும்
வேதம் வல்லவர்களாலும் கைங்கர்யம் செய்யப் பெற்று விளங்குகிறது –
————————————————————————
தத்த கேளிம் ஜகத் கல்பநா நாடிகா
ரங்கிணா ரங்கிணா ரங்கிணா ரங்கிணா
தாத்ருசே காதி புத்ர அத்த்வரே த்வாம் விநா
அபாத் உ கா பாதுகா பாது காபாதுகா—-938-
ஜகத் கல்பநா நாடிகா-உலகை படைத்தல் என்னும் கூத்து
ரங்கிணா -உடையவன் -அரங்கன் -லோகவைத்து லீலா கைவல்யம் -அலகிலா விளையாட்டு உடையவன்
அரங்கிணா -தனக்கு மேல் கூத்தாடி இல்லாதவன் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
ரங்கிணா -மிகப்பெரிய கூத்தாடி
ரங்கிணா-ஸ்ரீ ரெங்கம் கோயில் கொண்டவன் இவனே
தத்த கேளிம் -அவனாலே விளையாட்டு வழங்கப் பெற்ற ஸ்ரீ பாதுகை -சஞ்சாரமே இவளுக்கு விளையாட்டு
க ஆ பாதுகா -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ஆகாசம் போல் எல்லை இல்லா ஆனந்தம் -மகிழ்ச்சியை ஸம்பாதித்துத் தருகிறாள்
பாது -ஸ்ரீ பாதுகா தேவி
தாத்ருசே காதி புத்ர =விசுவாமித்திரர்
அத்த்வரே -யாகம்
அபாத் -காப்பாற்றினாய்
த்வாம் விநா-உன்னைத் தவிர
கா உ பாதுகா -வேறே யாரால் முடியும் – உ காரம் உன்னால் மட்டுமே முடியும்
பெருமாள் மூலம் பாசுரம் பாடும் விளையாட்டு -அவலீலையாக பாடும் படி
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -அதுவும் அவனது இன்னருள்
நமது ஆத்ம யாகம் -காப்பாற்றி -காமம் கோபம் அரக்கர்களைப் போக்கி அருளி
இவரால் மட்டுமே முடியும் –
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த உலகத்தை ஸ்ருஷ்டி செய்தல் என்னும் நாடகத்தை நடத்துபவனாகவும்,
இதற்குத் தனக்கு வேறு யாரும் கற்றுக் கொடுக்கும் நாடகக்காரன் இல்லாதபடி தானே கை தேர்ந்த நாடகக் காரனாகவும்,
ஸ்ரீரங்கநாதன் உள்ளான். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனால் உனக்கு உல்லாஸமான ஸஞ்சாரம் அளிக்கப்பட்டது.
உன்னைத் தவிர எந்தப் பாதுகை – காதி என்னும் அரசனின் புத்ரனாகிய விச்வாமித்ரரின் யாகத்தைக் காப்பாற்றி,
அவருக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் இன்பம் அளித்துக் காப்பாற்றியது?
ஸ்ரீ பாதுகையே ஜகத் சிருஷ்டி ஒரு நாடகம் -அதைச் செய்ய மேடை ஏறிய பெருமாள் சாதாரணக் கூத்தாடி அல்லன் –
அவனை வேலை வாங்கும் மேம்பட்டவன் ஒருவனும் இல்லை –
அவனே ஸ்ரீ ரங்க ஷேத்திர நாயகன் -நீ அவனுக்கு சஞ்சார விளையாட்டு அளித்தாய் அவன் யுத்த ரங்கம் புகுந்த போது –
அவன் நடையை உனக்கு அளித்தான் -உன்னைத் தவிர எந்தப் பாதுகை தான் ராஷசர்களால் கெடுக்கப் பட விருந்த
விச்வாமித்ர யாகத்தை காக்க வல்லதாய் இருந்து ஸூ கம் சாதித்துக் கொடுக்கக் கூடியது –
பாத பாக சதுர் ஆவ்ருத்தி
ஒரு பகுதியே நான்கு தரம் வரும்
ரங்கிணா
பாதுகா
நான்கிலும் நான்கு அர்த்தங்கள் பார்த்தோம் –
———————————————————————————
பாதபா பாதபா பாதபா பாதபா
பாதபா பாதபா பாதபா பாதபா
பாதபா பாதபா பாதபா பாதபா
பாதபா பாதபா பாதபா பாதபா –939-
படித்தல் – இந்த ஸ்லோகத்தைக் கீழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்:
பாதப அபாதப ஆபாத பாப அத் அபா
பாதபா பாத பா அ பாதபா அபாதபா
பாத பாபாத் அ பாபாத் அ பாபாத் அபாபாத்
அபாபா த பாபா ஆத பா பாத பா
கால்கள் என்னும் வேர் மூலம் நீரைப் பருகும் தாவரங்கள், அவ்விதம் கால்களால் பருகாமல் உள்ள
மற்ற உயிரினங்கள் போன்றவற்றைச் சூழ்ந்துள்ள பாவங்களை நீக்கவல்ல அபிஷேக நீரை உடையவள்;
ஸ்ரீரங்கநாதனின் உடைமையானவற்றில் நான்கில் ஒரு பங்கான இந்த லீலாவிபூதியைக் காப்பாற்றுபவள்;
மேலே உள்ள பங்கு தவிர மீதம் உள்ள முக்கால் பங்கான நித்யவிபூதியைக் காப்பாற்றுபவள்;
ரக்ஷிக்கப்பட வேண்டிய தாய் தந்தையர்களைக் காப்பாற்றுபவர்கள், அவ்விதம் காப்பாற்றாதவர்கள் விஷயத்தில்
நன்மையை அளிப்பதும், நல்லதை நீக்குவதுமாக உள்ளவள்;
ஸ்ரீரங்கநாதனின் திருக்கல்யாண குணங்களை எப்போதும் பருகும் ஸாதுக்களை,
அவர்களின் புலன் வசப்படுத்தும் குணங்கள் போன்றவையே தூய்மைப்படுத்துகின்றன,
அந்தக் குணங்களை வளரச்செய்கிறாள்; ஸ்ரீரங்கநாதனின் அடியார்களுடைய விரோதிகளை உலர்ந்து போகும்படிச்
செய்கின்ற கிரணங்களை கொண்டுள்ளாள்; உயர்ந்த பதவிகளில் உள்ள இந்த்ரன் போன்றவர்களைக் காப்பாற்றும்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையும் காப்பாற்றுபவளாக பாதுகை உள்ளாள்.
பாதப அபாதப ஆபாத பாப அத் அபா
பாதபா பாத பா அ பாதபா அபாதபா
பாத பாபாத் அ பாபாத் தபா அபாபாத்
அபாபா த பாபா அத பா பாத பா
பாத ப அ பாத ப -பதவி பெற அதிகாரம் கொண்டவர்களை காப்பாற்றும் அகார வாச்யன் -பாதுகை
பாத பா -வேர்கள் பாதங்களால் தண்ணீரை பருகி
அ பாத பா -இப்படி இல்லாத அனைவர்களும்
ஆபாத -அடைந்த
பாப அத் அபா -பாபங்களை திரு மஞ்சன தீர்த்தத்தால் போக்கி அருளி
பாத பா -கால் பகுதியை காத்து -லீலா விபூதி -த்ரி பாத் விபூதி -என்று சொல்லுவோமே
அ பாதபா -கால் பகுதியாக இல்லாத நித்ய விபூதியையும் காக்கிறாள்
பாத பாபாத்-பெற்றோர்களை காப்பவர்களுக்கு
அ பாபாத் -நன்மை அருளி
அபாத அபாபாத் –பெற்றோர்களைக் காக்காதவர்களுக்கு தீமை
அ பாபா த பாபா -அகார வாஸ்யனான -அவனுக்கு அடியார்களுக்கு தூய்மை குணங்கள் வளர
ஆத பா -எதிரிகளை உலர்த்தும்
பாத பா-கிரணங்கள் கொண்டவள்
ஆழ்வார் -தீர்த்தம் -பாசுரம் -கொண்டே புனிதம் ஆக்கி -உடைந்து நோய்களை போக்குவிக்குமே –
பொன்னுலகு ஆளீரோ -உபய விபூதியும் இவரது உடைமையே
பெற்றோர் -ஞான பிறப்பு -ஆச்சார்யர்களையே -குறிக்கும் இங்கு -குரு பரம்பரை -ஸ்துதிப்பாரை காத்து அருளி
தூய ஞானம் பக்தி வளர்த்து -அறியாமை உலர்த்தி ஞான ஒளி கிரணங்கள் கொண்டவர் –
ஷோடச வ்ருத்தி யமகம் –ஒரே வார்த்தை -16 தடவை
48 அக்ஷரங்கள் -பாத இரண்டு எழுத்துக்கள் மட்டுமே கொண்டு
அநு லோம ப்ரதி லோம யமகம் -ஸ்லோக அர்த்த -பாத -பாதியையும் கால் பங்கையும் நேராகவும் மாற்றிப் படித்தாலும்
அஷ்ட தள பத்ம பந்தம்
சதுர் தள பத்ம பந்தம்
ஷோடச தள பத்ம பந்தம்
பகவான் திருவடியை ரஷிக்கும் ஸ்ரீ பாதுகை -மேலும் பலவும் செய்யும்
அதன் திருமஞ்சன தீர்த்தம் பாபங்களை போக்கி விடுகிறது -உபய விபூதியையும் காக்கின்றது –
கர்மாநுஷ்டானம் தவராதவர்களை காத்து நல்லது செய்கிறது -மற்றவர்க்கு நல்லது செய்யாது –
பெருமாளின் திருக் கல்யாண குணங்களை எப்பொழுதும் அனுபவித்து இருப்பாருக்கு சமதமாதி குணங்களை அபிவருத்தி செய்து விடுகிறது –
அதன் கிரணன்களே ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கிறது -இந்த்ராதி தேவர்களையும் ரஷிக்கிறது
இத்தைனையும் ஸ்ரீ பாதுகை செய்து அருளும் பணி –
————————————————————————–
ஸாகேத த்ராண வேளா ஜநித தத நிஜ ப்ராங்கண ஸ்ரீப்ரபாஸா
ஸாபா ப்ரச்ரீ: அடவ்யாம் இயம அமம யமி வ்யாபத் உச்சேதி லாஸா
ஸாலாதிச்சேத திக்ம ஆஹவ ருருரு வஹ ஹ்ரீ கரஸ்ய ஆம ராஸ அஸா
ஸா ராமஸ்ய அங்க்ரிம் அப்யாஜதி ந ந நதி ஜ ஸ்தூலம் உத்ராதகே ஸா–940–
ஸாகேத த்ராண வேளா -அயோத்தியை காக்க வேண்டிய வேளையிலே –
ஜநித தத நிஜ -அமைக்கப்பட்ட விரிந்த ராஜ சபையில்
ப்ராங்கண -ஆஸ் தான மண்டபத்தில்
ஸ்ரீப்ரபாஸா-நன்கு ஒளி வீசி
இயம்
ஸாபா ப்ரச்ரீ: -புகழ் கீர்த்தி உடன் -குறைகளே இல்லாமல் -வேதங்களால் ஸ்துதிக்கப் பட்டு
அடவ்யாம் -காட்டில்
அமம யமி -மமகாராம் இல்லா ரிஷிகள்
வ்யாபத் -பெரிய ஆபத்துக்களை
உச்சேதி லாஸா-அவலீலையாகப் போக்கி அருளி
ஆம ராஸ அஸா-அரைகுறை அறிவால் -நப்பாசையால் தப்பாக சொன்னாலும் –அத்தையும் போக்கி
ஸாலாதிச் -ஸாரம் -சாலம் -பலம் முதலானவைகளை
சேத -முறியடித்து
திக்ம ஆஹவ -உக்ரமான போரில்
ரு -ஒலியால்
ருரு வஹ ஹ்ரீ கரஸ்ய – மாலை ஏந்திய சிவனுக்கு வெட்கம் அடையும் படி
சிவ தநுஸ்ஸூ -விஷ்ணு தனுஸ்ஸூ –ஹூங்காரத்தாலே முறிந்ததே –
ஸா ராமஸ்ய -ராமனுடைய
நதி ஜ ஸ்தூலம்-திருவடிகளை வணங்குவதால் மகிழ்ந்து பூரித்து
அங்க்ரிம் -திருவடிகளை
உத்ராதகே-காப்பதன் பொருட்டு
அப்யாஜதி ந ந -இவளே வழி நடத்தி செல்கிறாள் -இரண்டு ந காரம் உறுதியாக திடமாக
ஸா–அவளே ஸ்ரீ பாதுகா தேவி
ஆழ்வார் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -ஸிம்ஹாஸனம் இதுவே
உலக -சம்சார காட்டில் -அகங்கார மமகாரங்களைப் போக்கி
திருவடிகளை பாசுரங்கள் மூலம் நம்மிடம் அழைத்து சேர்த்து அருளி
திருவடி விடாத பாசுரங்கள் மூலம்
அயோத்தியைக் காப்பாற்றி அரசாண்ட காலத்தில் அமைக்கப்பட்ட ராஜசபையின் ஆஸ்தான மண்டபத்தில்
தனது ஞானம், ஐச்வர்யம் முதலானவற்றுடன் கூடிய ஒளியை உடையவள்; இதனால் மேலும் அழகும் மேன்மையும் அடைந்தவள்;
மேன்மேலும் வளர்ந்த ராஜ்யசெல்வம் கொண்டதாக விளங்கியவள்; ஸம்ஸாரம் என்ற காட்டில்
மமகாரம், பொருள் ஆசை, பற்றுதல்கள் போன்றவை இல்லாமல் வாழ்கின்ற உயர்ந்தவர்களுக்கு,
சத்ருக்கள் மூலம் உண்டாகவல்ல ஆபத்துக்களை அடியுடன் வெட்டிச் சாய்ப்பதைத் தனது விளையாட்டாகவே கொண்டவள்;
அதிக ஞானம் பெறாதவர்களாக இருந்தாலும் ஸ்ரீரங்கநாதனையும், பாதுகையையும் போற்றி நிற்பவர்களின்
தவறான சொல் அமைப்புக்களை நீக்கி, அவர்களுக்கு ஞானமும் உயர்ந்த சொற்களையும் கொடுத்தபடி உள்ளவள் –
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை மேலும் செய்வது என்ன? ஸாரம் என்ற பலம் போன்றவற்றை முறியடிப்பதில்
மிகவும் உக்ரமான யுத்தம் நடக்கும்போது, மானைக் கையில் ஏந்திய சிவனுக்கு
தனது “ஹும்” என்ற ஓசையால் மட்டுமே பயந்து வெட்கம் ஏற்படும்படிச் செய்த இராமனுடைய திருவடிகளை வழி நடத்துகிறாள்.
இந்தத் திருவடிகள், ரக்ஷிக்கத் தகுந்தவர்கள் செய்கின்ற வணக்கம் காரணமாக மிகவும் மகிழ்வுடன் உள்ளன அல்லவோ?
திரு அயோத்யா நகரை ஸ்ரீ பாதுகை ஆண்டு அதனைக் காக்கும் காலத்தில் தன் ஆஸ்தான மண்டபம் செல்வ ஒளி பரந்து நிரம்பி இருந்தது
ஜ்ஞானச் செல்வம் நிறைந்த சதச் அது -புகழாகிற காந்தி நிரம்பி இருந்தது –
தண்ட காரன்யத்தில் முனிவர்களுக்கும் -சம்சார காட்டில் நமக்கும் -வரும் ஆபத்துக்களை அடியோடி வெட்டிப் போடுவதை
விளையாட்டாகச் செய்ய வல்லது ஆஸ்ரிதற்கு நல்ல மதி அளிக்க வல்லது
ஸ்ரீ பாதுகை புருஷகாரம் செய்கிறது –
தேசிகர் திரு நாமம் உள்ள ஸ்லோகம்
கவி நாமாங்கித அஷ்ட தள பத்மம்
இந்த ஸ்லோகத்தில் கிரந்தத்தையே இந் நூலையையே ஸ்ரீ பாதுகைக்கு சமர்ப்பிக்கிறார் ஸ்வாமி-
அஷ்டதள பத்மத்தில் வேங்கடபதி கமலம் -என்று திருமலை எம்பெருமான் திருவடித் தாமரை என்றும் அமைத்துத்
தன் திரு நாமத்தையும் சொல்லி இருக்கிறார் –
—————————————————————————————————-
ரம்யே வேஸ்மநி பாப ராக்ஷஸ பிதா ஸ்வாஸக்ததீ நாயிகா
நந்தும் கர்ம ஜ துர்மத அலஸ தீயாம் ஸா ஹந்த நாதீக்ருதா
ஸத்வாட ப்ரமிகாஸு தாபஸ தபோ விஸ்ரம்ப பூ யந்த்ரிகா
காசித் ஸ்வைர கமேந கேளி ஸமயே காமவ்ரதா பாதுகா—-941-
கேளி ஸமயே -விளையாட்டு -சஞ்சார -சமயத்தில்
ஸ்வைர கமேந -இஷ்டடப்படி சஞ்சரிக்கும் தன்மையால்
காம வ்ரதா -பிடித்த விரதம் -ஆஸ்ரித ரக்ஷணம்
பாப ராக்ஷஸ பிதா ஸ்வாஸக்ததீ நாயிகா-பாபங்கள் செய்த அரக்கர்களை அழிப்பதில் ஊக்கம் கொண்ட
திரு உள்ளம் கொண்ட ராமபிரானை வழி நடத்திச் சென்று
ஸத்வாட ப்ரமிகாஸு தாபஸ தபோ விஸ்ரம்ப பூ யந்த்ரிகா-சத்துக்களின் ஆஸ்ரமங்களைச் சுற்று சுற்றி வந்து –
ரிஷிகளுக்கு தபஸ்ஸில் ஒருமுகப்பட்ட மனசை கொடுத்து -பூமியில் பட்ட அடிச் சுவடால் –அடிச் சுவட்டைப் பார்த்தால் அசுரர்கள் தீண்டார்களே
சா -அவள்
காசித் -இப்படிப்பட்ட
பாதுகா -ஸ்ரீ பாதுகா தேவி
கர்ம ஜ துர்மத அலஸ தீயாம் -முன் வினைகளால் பிறந்த கெட்ட மதிகளால் சோம்பேறிகளாக இருக்கும் நாமும்
நந்தும் –வணங்க வசதியாக
ரம்யே வேஸ்மநி-அழகான ஸ்ரீ ரெங்க விமானத்தின் கீழே
நாதீக்ருதா-யஜமானியாக இருந்து
ஹந்த -இவள் இட்ட வழக்காக அரங்கன் உள்ளான் -என்ன ஆச்சர்யம் –
ஆழ்வார் -விஷ்வக்சேனர் -அவதாரம் -எங்கும் சஞ்சாரம் -சடாரி எங்குமே உண்டே –
பாபங்களே -நமது எதிரிகள் -போக்கி அருளும் -ஆழ்வார்
தபஸ் நிஷ்டை -சரணாகதியே அதிரிக்த தபஸ்ஸூ -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –
ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை -மஹா விச்வாஸம் வேண்டுமே -அத்தை திருவடி மூலம் அளித்து
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –
நாமும் வாங்கவே -அரங்கனுக்கு நாதனாக-இவர் இட்ட வழக்காகவே -தத்தே ரங்கி நிஜம் அபி பதம் தேசிக -ஆதேச காந்தி -தேசிகன் –
முடிச்சோதி –அடிச்சோதி -கடிச்சோதி -கேசாதி பாதம்
அழகர் ஆழ்வார் அருளிச்செயலை பெற்றுக் கொள்ள தலை குனிந்து -காட்டி அருள -பாதம் முதலில் –
ஹந்த -ஆழ்வார் இட்ட வழக்காக அரங்கன் உள்ளான் -என்ன ஆச்சர்யம் –
பாவங்கள் நிறைந்த அசுரர்களை அழிப்பதில் மிகுந்த ஆவல் கொண்ட புத்தியுள்ள இராமனை அழைத்துச் செல்கிறாள்;
தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் செய்வதால், விளையாடும் காலங்களில் தன்னையும் ஸ்ரீரங்கநாதனையும்
அண்டி நிற்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை ஒரு விரதமாகவே கொண்டுள்ளாள்.
ஸாதுக்களான முனிவர்கள் உள்ள இடங்களில் ஸஞ்சாரம் செய்யும்போது, அந்த முனிவர்களுக்கு தங்கள் தவங்கள் மீது
உள்ள நம்பிக்கையை வளர்த்து, தங்கள் தவம் வீணாகாது என்ற உறுதியை அளிப்பதான
அடிவைப்பைக் (தனது ரேகையை அந்த பூமியில் பதித்து) கொண்டதாக உள்ளாள்.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை – பாவங்கள் காரணமாக உண்டான கர்வம் முதலியவற்றால் ஏற்பட்ட
சோம்பல் காரணமாகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் உள்ளவர்கள் வணங்குவதற்காக,
மிகவும் அழகான ஸ்ரீரங்கவிமானத்தில் எஜமானியாக அமர்ந்துள்ளாளே! என்ன வியப்பு!
தன் லீலா காலத்திலே இஷ்டப்படி எங்கும் சஞ்சரிப்பது ஸ்ரீ பாதுகை -சேவிப்பவர்களின் இஷ்ட பிராப்தியை அளிக்கும் –
இதற்கு திட விரதம் கொண்டு இருக்கும்
சத்ரு நிரசனத்துக்கு பகவானை வழி நடத்தும் -முனிவர்கள் தங்கள் தபசுக்கு இடையூறு வாராது என்று உன் சஞ்சாரத்தால் திண்ணமாக நம்புவார்கள் –
கர்ம யோகாதிகளில் இழியாதவர்களுக்கும் சேவித்து உய்ய ஸ்ரீ ரங்க விமானம் ஆகிற அழகிய ஸ்தலத்தில் தைவமாக சேவை சாதிக்கின்றதே –
மஹா சக்ர பந்தம் –
பாதங்களில் நடு எழுத்து ச
19 எழுத்துக்கள் ஒரு பாதத்திலும்
ஆறு குத்துக் கால்களின் உள்ளிருந்து 7ஆம் மற்றும் 4 ஆம் வீதிகளில்
மண்டல வீதி –
வேங்கட நாதிய பாதுகா ஸஹஸ்ரம் என்று
கவி காவ்யப் பெயர்கள் கிடைக்குமாறு அமைந்து இருப்பது சிறப்பு –
———————————————————————————-
ஸ்ரீ ஸம்வேதந கர்ம க்ருத் வஸு தவ ஸ்யாம் ருத்த தைர்ய ஸ்புட:
ஸ்ரீபாதாவநி விஸ்த்ருதா அஸி ஸுகிநீ த்வம் கேய யாதாயநா
வேதாந்த அநுபவ அதிபாதி ஸுதநு: ஸாந்த்ர இட்ய பாவ ப்ரதே
அங்கஸ்தா அச்யுத திவ்ய தாஸ்ய ஸுமதி: ப்ராணஸ்த ஸீதா தன—-942–
ஸ்ரீ ஸம்வேதந கர்ம க்ருத் வஸு -வேதங்கள் சொல்லும் நல்ல செயல்களை செய்பவரின் செல்வமாக இருப்பவள் -0திருவடி மூலமே உலகு அளந்து –
ஸாந்த்ர இட்ய பாவ ப்ர-அதிகமாக வணங்கும் தன்மையை ப்ரஸித்தமாகக் கொண்டவள்
ப்ராணஸ்த ஸீதா தன-உயிர் மூச்சாகா -சீதா தேவிக்கு செல்வமாக இருப்பவள் –
ஸ்ரீபாதாவநி -பாதங்களை ரக்ஷித்து
த்வம் கேய யாதாயநா-போற்றத்தக்க சஞ்சார மார்க்கம் கொண்டவள்
வேதாந்த அநுபவ அதிபாதி ஸுதநு: -உபநிஷத் பொருளை அனுபவிப்பதில் விட அழகிய திரு மேனி -வேதத்தின் சுவையான அவனை விட -ஸ்ரேஷிடம்
தே(அ)ங்கஸ்தா -கல்ப –அங்குசம் –இத்யாதி அடையாளங்கள் -பதியப்பட்ட -திருவடி பட்டதாலேயே –
அச்யுத திவ்ய தாஸ்ய ஸுமதி: -உயர்ந்த கைங்கர்யம் செய்ய நல்ல மதி கொண்டவள்
ஸுகிநீ -அதனாலே ஆனந்தம்
விஸ்த்ருதா அஸி -கணக்கில்லா வடிவம் கொண்டவள் —
ருத்த தைர்ய ஸ்புட:–இதனாலேயே -கலக்கம் தீர்ந்து பெரிய விச்வாஸம் -தெளிவு பெற்றேன் அடியேன் —
தவ-பாதுகையே உனக்குத் தொண்டனாக
ஸ்யாம் -ஆவதற்கு நீயே அருள் புரிய வேண்டும் –
மாதா பிதா -சர்வம் -ஆழ்வார் -தானே
உறு பெரு -செல்வமும் மாறன் ஆரணமே –ஆரமுது
மனையும் பெரும் செல்வமும் மற்றை வாழ்வும் சடகோபன் -கம்பர்
பிராட்டி அபிமானம் பெற்ற -மதி நலம் –
சாந்தோக்யம் உபநிஷத் பாடும்-அயனம் மார்க்கம் சஞ்சரித்து -அர்ச்சிராதி வழி -நமக்கும் காட்டி அருளி –
சூழ் விசும்பு -பதிகம் –
மாறனில் மிக்கதோர் தேவும் உளதோ –
திருவடி சிஹ்னம் நெற்றில் நின்ற பாதம் -ஓக்கலையில் -சென்னியில் –
திருவடிக்கீழ்க் குற்றேவல்–
விஸ்தாரம் -தாய் தோழி மகள் தானான -நான்கு முகங்கள் -ஆழ்வாருக்கும் உண்டே –
தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெறுகிறோம் –
அதிகமாக வணங்கப்படும் தகுதியைக் கொண்டதால் மேன்மையும், இராமனின் உயிர் நிலையாக உள்ள
சீதையின் செல்வமாகவும் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே,
வேதங்களின் எல்லையாக உள்ள உபநிஷத்துகளின் மூலம் மட்டுமே அறிய வல்லதான ஸ்ரீரங்கநாதனின் அனுபவத்தைக் காட்டிலும்,
மேலான இன்பம் அளிக்கவல்ல திவ்யமான திருமேனி கொண்டவள்;
அடியார்களை எப்போதும் நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் கைங்கர்யங்களில் தனது புத்தியை எப்போதும் வைத்துள்ளவள்;
இதனால் அவனுடைய சாமரங்கள் முதலான பொருட்களில் முதன்மையாக உள்ளவள்;
அழகான ஸஞ்சாரங்கள் கொண்டவள்; எல்லையற்ற ஆனந்தம் கொண்டவள்;
ஸ்ரீரங்கநாதனின் பல திரு அவதாரங்களுக்கு ஏற்றபடி பல ரூபங்களைக் கொண்டவள்.
இப்படியாகப் பல மேன்மைகள் பொருந்தியவளாக நீ உள்ளாய்.
ஸாதுக்களின் செல்வம் என்று போற்றப்படும் வேதங்கள் கூறிய உயர்ந்த கர்மங்களை இயற்றுபவர்களின்
பெரும் செல்வமாக நீ உள்ளாய். இதனால் மிகவும் தெளிந்து நம்பிக்கை பெற்ற நான், உனக்கே அடிமையாக வேண்டும்.
ஸ்துதி செய்யத் தக்க விஷயத்தில் பெரும் புகளை நிரம்பப் பெற்றதும் -சீதா பிராட்டிக்கு பிராணன் போலே
அறிய செல்வமுமான ஸ்ரீ பாதுகையே உன் ஸ்வரூபம் வேதாந்தங்கள் செய்யும் உன் அனுபவ எல்லையை மீறி நிற்பது .
பரிச்சதங்களில் ஒன்றாய் அச்யுத திவ்ய கைங்கர்யத்திலேயே நன்னோக்கு உடையதாய் பாடிப் புகழைத் தக்க சஞ்சாரங்கள்
உடையதாயும் இருக்கிறாய் -அதனாலேயே பேரானந்தம் பூரிப்பு தெரிகிறது
மோஷ சாம்ராஜ்யம் அடைவிப்பதான உத்தம கர்மாவைச் செய்து கொண்டு மேன்மேலும் பிரகாசிப்பவனாய்
நான் உன் சொத்தாக உன் தாசனாக ஆகக் கடவேன்
இது சதுரங்கஷ்டார சக்ர பந்தம்
சதுரங்கம் -நான்கு அடை மொழிகள்
அரம் spokes
அஷ்ட -அரங்கள் கொண்டது
ஸூ -பொதுவான எழுத்து எல்லா பாதங்களிலும்
8 குத்துக் கால்கள் -உட்புறம் இருந்து 9 ஆம் சக்ரம் மற்றும் 7 ஆம் சகரத்தில்
அஷரங்களைக் கூட்டிக் கிடைக்கும் அனுஷ்டுப் ஸ்லோகம் –
ஸ்ரீ ஸ்ரீ வேங்கட நாதேந
வேதாந்தாசார்ய தாவதா
கவி வாதி ம்ருகேந்த்ரேண
க்ருதா பாதா வநீ நுதி –
ஸ்ரீ ஸ்ரீ வேங்கட நாதேந -ஸ்ரீ வேங்கட நாதருக்கு நான்கு அடை மொழிகள்
வேதாந்தாசார்ய தாவதா -வேதாந்தாச்சார்யார் என்ற விருது
கவி வாதி ம்ருகேந்த்ரேண -கவிகளுக்கும் வாதம் பண்ணுவார்களுக்கும் ஸிம்ஹம் போல் -கவி தார்க்கிக ஸிம்ஹம் –
க்ருதா பாதா வநீ நுதி -இயற்றப்பெற்ற ஸ்ரீ பாதுகா ஸ்தோத்ரம்
——————————————————————–
இதில் இருந்து இரட்டை ஸ்லோகங்கள் ஒரே சித்திரமாக அமைத்துள்ளார்
கநக பீட நிவிஷ்ட தநுஸ் ததா
ஸுமதி தாயி நிஜ அநுபாவ ஸ்ம்ருதா
விதிசிவ ப்ரமுகை: அபிவந்திதா
விஜயதே ரகு புங்கவ பாதுகா—-943-த்ருத நிலம்பிதம் சந்தஸ்
கநக பீட நிவிஷ்ட தநுஸ் ததா-தங்க சிம்ஹாசனத்தில் எழுந்து அருளி -அந்த சமயத்தில்
ஸுமதி தாயி -நல்ல புத்தி அளித்து
நிஜ அநுபாவ ஸ்ம்ருதா-தர்சனத்தாலும் ஞானத்தாலும்
விதிசிவ ப்ரமுகை: அபிவந்திதா-விதி -நான்முகன் -சிவன் போல்வார்
விஜயதே ரகு புங்கவ பாதுகா-வெற்றியுடன் திகழ்கிறாள்
ஆழ்வார் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -ஆழ்வார்களுக்கு அங்கி
மதி நலம் -ஸூ மதி-அருளிய நாராயணன் அனுபவம் ஒன்றிலேயே எண்ணம்
பிரணமந்தி தேவதா
சடாரி யாகவும் திகழ்கிறார்
கோஸல நாட்டை அரசாண்ட காலத்தில் தங்க மயமான ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தவள்;
நல்ல புத்தியை அளிக்க வல்ல தனது தரிசனம் மற்றும் நினைவைக் கொண்டவள்
(தன்னைத் த்யானிப்பவர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்து அவர்களுக்கு நல்ல புத்தி அளிப்பவள்);
நான்முகன், சிவன் போன்றவர்களால் எப்போதும் வணங்கப்படுபவள் –
இப்படிப் பட்டவளான ரகு குலத்தின் நாயகன் இராமனின் பாதுகை எப்போதும் வெற்றியுடன் உள்ளாள்.
கோசல ராஜ்ய ஆட்சி செய்த காலத்தில் தங்க சிம்ஹாசனத்தில் அமர்ந்து விளங்கினது
தன்னை த்யானத்தில் போர அனுபவிப்பதும்
சாமான்யமாக ஸ்ரவணம் செய்வதும் கூட புத்தி விகாசம் செய்விக்கும்
பிரம்மா சிவன் முதலானவர்களால் வணங்கப் பெற்று விளங்குகிறது -அதற்கு வெற்றி உண்டாகுக –
—————————————————————————
தீந கோபீ ஜநி க்லிஷ்ட பீ நுத் ஸதா
ராமபாதாவநி ஸ்வாநுபவ ஸ்திதா
ஏதிமே அவஸ்யம் உத்தார பாவஸ்ரிதா
தேஜஸா தேந குஷ்டிம் கதா பாலிகா—-944-ஸ்ரக்விணீ சந்தஸ்
தீந கோபீ ஜநி க்லிஷ்ட பீ நுத் ஸதா-அறிவு ஒன்றும் ஆய்க்குலம் -விரஹ ம் போக்கி அருளி இல்லாத–பாதுகை சுவடு பார்த்து தரித்தார்கள்
கல் மழை தரித்த கோவிந்தனையும் தாங்கி –
ராமபாதாவநி -ஸ்ரீ பாதுகா தேவி
ஸ்வாநுபவ ஸ்திதா-உன்னுடைய மஹிமையை தானே நிலை பெற்று -வேறே ஒன்றை எதிர் பார்க்காமல்
உத்தார பாவஸ்ரிதா-உஜ்ஜீவனத்துக்கு =தன்மை -கொண்டவள்
தேஜஸா தேந -ஒளியால்
குஷ்டிம் கதா பாலிகா ஏதிமே அவஸ்யம் –கோஷம் இடும்படியாக =அடியேனை ரக்ஷிப்பதில் நிச்சயம்
சம்சாரம் போக்கி அருளும் ஆழ்வார்
ஸூவ அனுபவம் –16 வருஷம்
உய்விக்க -அடியாரை-திருத்திப் பணி கொள்ளவே
ஒளி தேஜஸ் பார்த்தே மதுரகவி ஆழ்வார் -வகுளா பூஷண பாஸ்கரர் –
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கண்ணனைத் தவிர வேறு எதனையும் நினைக்காமல் இருந்த கோபிகைகளின்
மறு பிறவியையும், கம்ஸன் மூலம் ஏற்பட்ட பயம் போன்ற துன்பங்களையும், இந்திரன் போன்றவர்களின் மூலம்
ஏற்பட்ட அச்சத்தையும் நீ போக்கினாய்; எந்த உனது தேஜஸ் மூலம் இந்த உலகை நியமித்தபடியும், ரக்ஷித்தபடியும் உள்ளாயோ,
அந்த மேன்மை மூலம் நீ என்னைக் கண்டிப்பாகக் காப்பாற்றி, உனது கைங்கர்யத்தில் நிலை நிறுத்த வேண்டும்.
ஸ்ரீ ராம பாதுகையே அகிஞ்சனரான கோபிகளுக்கு மறு பிறவி வருத்தம் பீடை விரஹ தாபம் அனைத்தையும் நீக்கினாய்
ஸ்திரமாக பிரதிஷ்டை செய்து இருப்பதால் எதையும் அபேஷிப்பது இல்லை
சம்சார உத்தாரணம் செய்து அருளும் தேஜஸ் உடன் பிரசித்தி பெற்று இருக்கிறாய் –
இத்தனை பெருமை உள்ள நீ எனக்கு ரஷணம் செய்து அருள வேண்டும் –
கோ மூத்ரிகா பந்தம் -இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்து
முதல் பாதங்கள் சேர்த்து
இரட்டை இடம் எழுத்துக்கள் ஒன்றாக அமைத்து இருக்குமே
த்ருத நிலம்பிதம் சந்தஸ் அது -இது ஸ்ரக்விணீ சந்தஸ்
வேறாக இருந்தாலும் இப்படி அமைத்த விசித்திரம்
—————————————————————–
தாம நிராக்ருத தாமஸ லோகா
தாத்ருமுகைர் விநிதா நிஜதாஸை:
பாபம் அசேஷம் அபாகுருஷே மே
பாது விபூஷித ராகவ பாதா—945-கோதகம் சந்தஸ்
தாம நிராக்ருத தாமஸ லோகா-ஒளியால் -தமோ குண அசுரர்களை நிரஸனம்
தாத்ருமுகைர் நிஜதாஸை:-விநிதா-ப்ரம்மா முதலானவர்களால் வணங்கப்படும்
பாபம் அசேஷம் அபாகுருஷே மே-என்னுடைய அசேஷ பாபங்களையும் போக்கி அருளி
பாது விபூஷித ராகவ பாதா-பாதுகையே -நீ திருவடிகளை அலங்கரிக்கிறாய்
ஆழ்வார் -பாசுர ஞான ஒளியால் அஞ்ஞானம் போக்கி
தேவாதிகள் வணங்கி
பண்டை வல்வினை பற்றி அருளி
சடாரி -திருவடிகளுக்கு அலங்காரம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது தேஜஸ் மூலமாக அசுரர்களின் ஸ்வபாவம் நிறைந்ததான தமோ குணத்தை
நீங்கப் பெற்றவர்களை உடையவளாக உள்ளாய். உனது அடிமைகளாக உள்ள நான்முகன் போன்றவர்களால்
எப்போதும் வணங்கப்பட்டவளாக உள்ளாய். உன்னால் அலங்கரிக்கப்பட்ட இராமனின் திருவடிகளுடன் எப்போதும் உள்ளாய்.
என்னுடைய அனைத்துப் பாவங்களையும் போக்கி வருகிறாய்.
ஸ்ரீ பாதுகையே உன் தேஜஸ் சே தாமஸ குணத்தவரான அசூரர்களை முழுவதுமாக ஒழித்து விடக் கூடியது –
பிரம்மாதி தேவர்கள் உன்னை வணங்குகிறார்கள்
நீ பெருமாள் திருவடிகளை அலங்கரிக்கிறாய்-என் அனைத்து பாபங்களையும் போக்கி அருளுகிறாய்
———————————————————————-
க்ருபா அநக த்ராத ஸுபூ: அதுஷ்டா
மேத்யா ருசா பாரிஷதா ஆம பூபா
பாதாவநி ஸ்த்யாந ஸுகை: ந த்ருப்தா
காந்த்யா ஸமேதா அதிக்ருதா அநிரோதா—-946-
க்ருபா அநக த்ராத ஸுபூ: அதுஷ்டா-கருணை யாலேயே தூய்மையாக்கி உலகைக் காத்து -தோஷமே இல்லாமல் இருந்து
மேத்யா ருசா பாரிஷதா ஆம பூபா-தூய்மையால் ஒளி அடியார்கள் கூட்டம் திகழ்ந்து -உலகை காக்க எழுந்து அருளி
பாதாவநி
ஸ்த்யாந ஸுகை: ந த்ருப்தா-திருவடி ஸ்பர்சத்தாலேயே மகிழ்ந்து
காந்த்யா ஸமேதா அதிக்ருதா அநிரோதா–அடியார் ரக்ஷணம் விரும்பி -அதிகாரம் கொண்டவள் -தடைகளே இல்லாமல் –
ஆழ்வார் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
சட வாயு -போக்கி -பாஸ்கரர் -ஆழ்வார் ஆச்சார்யர் கோஷ்டிகளில்
நிழலும் அடி தாறும் ஆனார்
ஆராவமுதே -திருப்தியே இல்லாமல்
யாருக்கு ஆராவமுது சொல்லாமல்
இன்னார் இனையார் வாசி இல்லாமல் -தனக்கும்
உத்சவர் பின் அழகை முன் அழகை -கருடனாக -உபய நாச்சியாராக -மூலவராக -எட்டிப் பார்த்தும்
கிடந்தவாறு எழுந்தும் பார்த்து அனுபவிக்கிறார் -உத்தான சயனம் –
முக்தி அளிக்கும் அதிகாரம் கொண்டவர் –
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது கருணை காரணமாக, எந்தவிதமான துயரமும் இந்த பூமிக்கு உண்டாகாதபடி
இந்தப் பூமியை ஆண்டாய்; தோஷங்கள் ஏதும் இல்லாமல் உள்ளாய்; உனது ஒளியால் தூய்மையாக உள்ளாய்;
ஸாதுக்களின் கோஷ்டியில் எப்போதும் உள்ளாய் (அல்லது ஸபையோர்களாக ஐச்வர்யம் நிறைந்த அரசர்களை உடையவள்);
ஸ்ரீரங்கநாதனின் திருவடி அநுபவம் மூலம் எழுகின்ற இன்பத்தினால் மனநிறைவு அடையாமல்,
மேலும் அவன் திருவடிகளை சுவைக்க விருப்புகிறாய்; அவ்விதம் அவனது திருவடிகளை அனுபவிப்பதால்
முழு அதிகாரம் பெற்று, தடை இல்லாமல் உள்ளாய். இப்படிப்பட்ட நீ வரவேண்டும்.
ஸ்ரீ பாதுகையே உன் கிருபையினால் புண்ய பூமியான உன் நாடு முழுதிலும் துக்கமே இல்லாத படி காப்பாற்றுகிறாய்
ஒளி மிக்கவள் பரிசுத்தமானவள் -அரசர்கள் நிரம்பிய சாம்ராஜ்யம் உன்னுடையது
நித்ய அனுபவம் செய்கிறாய் -ஆஸ்ரிதர்களுக்கும் அத்தையே அளிக்கிறாய்-
கோ முத்ரிகா பந்தம் இதுவும்
முதல் ஸ்லோகம் முதல் பாதி நேராகவும்
அடுத்தது reverese
இதே போல் அடுத்த பாதி
ஒற்றைப்படை எழுத்து ஒன்றாக இருக்கும் இதில் –
——————————————————————————-
ஸாரஸ ஸௌக்ய ஸமேதா
க்யாதா பதபா புவி ஸ்வாஜ்ஞா
ஸாஹஸ கார்யவந ஆசா
தீரா வஸுதா நவ ந்யாஸா—947-
ஸாரஸ ஸௌக்ய ஸமேதா-தாமரைப்பூவை சமர்ப்பித்ததாலும் -திருப்திகா ஏற்றுக் கொண்டு -ஆராதனைக்கு எளியவன்
க்யாதா பதபா புவி ஸ்வாஜ்ஞா-உலகில் புகழ் கியாதி மிக்கு -திருவடியை ரக்ஷிக்கும் –
ஸ்வ ஆஜ்ஜை -நல்ல கட்டளை அருளி நல்ல வழியில் வாழ அருள் செய்கிறாள்
ஸாஹஸ காரி -ஸாஹஸம் செய்ய துணிந்த பரதாழ்வான் -ராஜ்யமும் அடியேனும் பெருமாள் சொத்து -பிரார்த்தித்து -தர்ம சம்வாதம் செய்து –
இங்கேயே உண்ணா விரதம் -ஸாஹஸம் செய்யத் துணிந்தான் –
யவந ஆசா-தண்ணீரை தொட்டு பெருமாளைத் தொட்டு சபதம் -இனி மேல் செய்ய மாட்டேன் -சொன்ன செய்த –
யவனம் -காக்க -ஆசை கொண்டு -நீயே கூட வந்து
தீரா -காப்பதில் உறுதி கொண்டவள்
வஸுதா–செல்வம் அருள்பவள்
நவ ந்யாஸா-புதியது -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
ஆழ்வார் -யான் ஓர் குறை இல்லை -திருவடி தாமரைகளைப் பெற்று
உலகில் ஸ்ரீ பாதுகை -சடாரி என்றே -புகழ் பெற்றவர்
நல்ல கட்டளைகள் -பாசுரம் வழியாக -வீடு முன் முற்றவும் இத்யாதி -மூலம் –
ஸாஹஸம் செய்தாவது அவனை அடைய நினைப்போபவர்களை ரக்ஷிப்பவர்
ஞானம் பக்தி செல்வம் அருளி –
ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல் மூலம் –
அர்ச்சனை செய்யப்பட்ட தாமரை மலர் மூலம் ஸௌக்யத்தை அடைந்தவளும், நன்மையே அளிக்க வல்ல ஆணைகளை இடுபவளும்,
இராமனை எப்படியாவது மீண்டும் அழைக்கவேண்டும் என்ற ஸாஹஸம் செய்த பரதனைக் காப்பதில் விருப்பம் கொண்டவளும்,
அடியார்களுக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் காப்பாற்றியே தீருவது என்ற உறுதி உள்ளவளும்,
அடியார்கள் வேண்டிய ஸம்பத்தை அளிப்பவளும், புதிது புதிதான இரத்தினக்கற்கள் உடையவளும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் பாதுகை – இந்த உலகில் உள்ள அடியார்களால் மிகவும் சுலபமாக அடையத்தக்கவள் என்னும் பெருமை கொண்டவள் ஆவாள்.
இந்த ஸ்லோகத்தை அப்படியே தலைகீழாகப் படித்தால்
அடுத்த ஸ்லோகம் தோன்றுவதைக் காண்க.
பின்ன வ்ருத்த அனு லோம பிரதி லோம யமகம் –
ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பாரதாழ்வானை காப்பதில் ஊற்றம் கொண்டது -ஆஸ்ரயித்தவரை எப்படியும் காக்க வேண்டும் என்று
துணிந்து ஐஸ்வர்யம் அழிப்பது -என்றும் புதியதாய் இருக்கும் -மநோ ஹராமான சந்நிவேசங்களை யுடையது –
அர்ச்சித்த பூக்கள் சேர்ந்து சுகம் பெற்றது -பிரசித்தமான செங்கோல் யுடையது –
————————————————————–
ஸா அந்யா அவநதா ஸுவரா
அதீசாநா வர்ய க ஸஹஸா
ஜ்ஞா ஸ்வா விபு பாதபதா
க்யாதா மே ஸக்யஸௌ ஸரஸா—-948-
ஸா அந்யா -நன்றாக பக்தி செய்ய தக்கவள்
அவநதாக
பாத்து காப்பு வழங்கி
ஸுவரா-விரும்பி வரிக்கப் படுபவள்
அதீசாநா -எஜமானி
வர்ய க -உயர்ந்த ஆனந்தம் தருபவள்
ஸஹஸா-விரைவாக அனுக்ரஹம் செய்பவள்
ஜ்ஞா -ஞானம்
ஸ்வா -தன்னுடைய அகார -தன்னிடம் பெருமாளைக் கொண்டு
விபு பாதபதா-எங்கும் பரவிய -நாராயணனுக்கு பாத ரக்ஷை
க்யாதா -பெருமை பெற்றவள்
மே ஸக்யஸௌ ஸரஸாதோழியாகவும் இருப்பவள்
ஸரஸா-தண்ணீர் போல் நீர்மையுடன் கலந்து பரிமாறுபவள் –
ஆழ்வார் -பக்தி செய்யத்தக்கவர்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஆழ்வார் ஆச்சார்யர் இரண்டு கோஷ்ட்டியிலும்
உயர்ந்த ஆனந்த மயமாக -சீக்கிரம் அனுக்ரஹம் -செய்து –
பராங்குசன் -பரனை வசப்படுத்து
சடாரி -க்யாதி பிரசித்தம்
ஆத்ம பந்து ஸஹி யாக இருந்து
சுவையான ரசம் மிக்க திருவாய் மொழி வழங்கி –
அனைவராலும் பூஜிக்கத்தக்கவள், அனைவரையும் காப்பாற்றுபவள், “என்னைக் காப்பாற்று” என்று உரிமையுடன்
நாம் கேட்கக்கூடிய தோழி போன்று உள்ளவள், அனைத்து உலகின் எஜமானியாக உள்ளவள்,
உயர்ந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்று சுகம் கொண்டவள், அனைத்தையும் அறிந்தவள்,
ஸ்ரீரங்கநாதனைத் தன்வசப் படுத்தியவள், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை காப்பாற்றும் பெருமை கொண்டவள் –
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எனது தோழியாக உள்ளாள்.
முந்திய ஸ்லோகத்தை கடையில் இருந்து திருப்பி எழுதிப் பெரும் ஸ்லோகம் இது –
பின்ன வ்ருத்த அனு லோம பிரதி லோம யமகம் –
இந்த ஸ்ரீ பாதுகை பஜனம் பண்ண உரியது -ரஷணம் செய்வது -சீக்ரமாகவும் ஸூகமாகவும் வரித்து கார்யம் கொள்ளத் தக்கது –
நியமிக்கும் மஹா ராணி -சிறந்த ஸூகம் உடையது -சர்வஜ்ஞத்வம் உடையது -பகவானையும் தனது அதீனமாக உடையது
பகவான் உடைய திருவடிகளைக் காப்பதால் பிரசித்தி அடைந்தது -இந்த ஸ்ரீ பாதுகையே எனக்கு அன்பார்ந்த சகி –
——————————————————————–
தாரஸ் பாரதர ஸ்வர ரஸ பர ரா
ஸா பதாவநீ ஸாரா
தீர ஸ்வைர சர ஸ்திர ரகுபுரவாஸ
ரதி ராம ஸவா—-949-
தாரஸ் -உயர்ந்த
பார தர -அடிக்கடி ஏற்படும்
ஸ்வர ரஸ பர ரா-இனிய த்வநியால் பெரிய மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறாள்
ஸா பதாவநீ -அந்த ஸ்ரீ பாதுகா தேவி
ஸாரா-சஞ்சாரம் சீலம் கொண்டவள் -கூடவே பெருமாளை கூட்டி வருகிறாள்
தீர -தடைகளைப் போக்கி
ஸ்வைர சர -இஷ்டப்படி சஞ்சாரம்
ஸ்திர -மித்ரா பாவேன -உறுதி கொண்டு
ரகு புரவாஸ-அயோத்யை வாஸம் -ஊற்றம் கொண்ட
ரதி ராம ஸவா-பெருமாளை தனது வசத்தில் கொண்டவள்
உயர்ந்த -இனிய இசை மிக்க -பண் மிக்கு -திருவாய் மொழி –
செவிக்கு இனிய செஞ்சொல் -பாவின் இனி இசை பாடித் திரிவனே
வேத சாரம் -வழங்கி –
ராமனை தனது வசத்தில் -பராங்குசன் -இட்ட வழக்காக –
தான் தொடங்கிய செயலில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல், எடுத்த செயலை நிறைவேற்றுபவள்;
தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் செய்பவனும், மாறாத குணங்கள் கொண்டவனும்,
ரகுவம்ஸத்தினரின் ராஜ்யமான அயோத்தியில் உள்ளவர்களிடம் ஆசையுடன் உள்ளவனும் ஆகிய
இராமனைத் தான் ஏவும்படியாக வசப்படுத்தியவள்;
தனது இனிமையான நாதங்கள் மூலம் உரத்த தொனியில் ஆனந்த அளிக்கவல்லவள் –
இப்படியாக ஸௌலப்யம் போன்றவை வெளிப்படும்படியாக உள்ளாள்.
இந்த ஸ்லோகம் எட்டு தளங்கள் கொண்ட பத்ம பந்தம் என்பதாகும்.
இதில் ஸ்ரீரங்கநாதனின் திருவடி அமைப்பு உள்ளதைக் கணலாம்.
இந்த யந்திரத்தையும் ஸ்லோகத்தையும் அன்றாடம் அனுஷ்டித்து வந்தால்,
எந்த விதமான தடைகளும் நீங்கிவிடும் என்பது பலரின் கருத்தாகும்.
கீழே -947-தாமரை சமர்ப்பித்தால் மகிழ்வாள் என்றாரே
அத்தை இவரே சமர்ப்பிக்கிறார்
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் வீரர் -தன் இஷ்டப்படி நடக்க வல்லவர் -ஸ்வ தந்த்ரர் -திரு அயோத்யா வாசத்தில் உள்ள
பெரும் மகிழ்ச்சியையும் உடையவர் -அவரால் நடத்தப்பட்டு சஞ்சரிக்கின்ற ஸ்ரீ பாதுகை உச்சச்வரத்தில் மிகப் பரந்த நாதங்களை
எழுப்பி அனைவருக்கும் ஆனந்தம் விளைவிப்பதாக இருக்கிறது –
இது அபூர்வமான சித்ர பந்தம் -எட்டு தாமரை தளங்களான யந்திரத்தில் ஸ்ரீ பாதுகை சேவை தரும் –
ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ பாதுகா ஸ்துதிக்காக கண்டு பிடித்து அமைத்து அருளியது –
———————————————————
சரம் அசரம் ச நியந்துஸ் சரணௌ
அந்தம் பரேதரா சௌரே:
சரம் புருஷார்த்த சித்ரௌ சரணாவநி
திசஸி சத்வரேஷு ஸதாம்—950-
சரணாவநி-ஸ்ரீ பாதுகா தேவியே
அநிதம் பர இதரா -மற்றவை முக்கியம் இல்லாமல் கொண்டு -ஒன்றையே முக்யமாகக் கொண்டு
சௌரே:சரம் அசரம் ச நியந்துஸ் –அசையும் -அசையாத பொருள்களை நியமிக்கும் ஈசன் -ஸ்ரீ ரெங்க நாதனின்
சரணௌ-திருவடிகளை –
சரம் புருஷார்த்த சித்ரௌ –காக்கும் திருவடிகளை -மோக்ஷத்திலே சித்தம் வைத்த
திசஸி சத்வரேஷு ஸதாம்-நல்லவர்களுடைய வீடுகளில் சேர்க்கிறாய்
இதுவே பலம் -திருவடி பதித்து அருளுகிறாள் நமது க்ரஹங்களில்
ஆழ்வாருக்கும் இதே பொருந்தும் –
பாசுரங்கள் வாயிலாக எம்பெருமான் திருவடிகள் கிட்டும்
சரம் -மீண்டும் மீண்டும் வந்து -பாதங்கள் தோறும் -வெவ்வேறு அர்த்தங்களில் வந்துள்ள பணத்தை –
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அடியார்களைக் காப்பாற்றும் அதே சிந்தனை கொண்டவளாக உள்ளாய்.
அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய அனைத்தையும் நியமிக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள்,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றிய ஞானத்தை உண்டாக்கி, காக்க வல்லவையாக உள்ளன.
இப்படிபட்ட அவனது திருவடிகளை (இதன் மூலமாக ஸ்ரீரங்கநாதனை) ஸாதுக்களின் வீட்டிற்கே அழைத்து வந்து,
அவர்களின் பூஜை அறையில் நிலையாக நிறுத்தி விடுகிறாய்.
ஆக நீ ஸ்ரீரங்கநாதனை வெகு சுலபமாக அவர்களது இல்லங்களுக்கு அழைத்து வருகிறாய்.
ஸ்ரீ பாதுகையே வேறு கருத்து ஓன்று இல்லாமல் ஸ்தாவர ஜங்கமங்களை நியமிக்கிற இறைவனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
புருஷோத்தமான மோஷ விஷயமான ஜ்ஞானத்தை காக்கின்றவை பெருமாளின் திருவடிகள் தாம்
அந்தத் திருவடிகளை நீ சாதுக்கள் உடைய இல்லங்களில் உள் அங்கணங்களுக்கே கொண்டு வந்து சேர்க்கிறாயே
எத்தினை பெரிய உபகாரம் செய்து அருளுகிராய் –
சித் -த்ரௌ -சித்தை காக்கிறவை -என்றவாறு –
சரணாவநி=பகவானுடைய திவ்ய சரணங்களைக் காப்பாற்றும் பாதுகையே!-
அனிதம்பரேதரா=இந்த காரியத்தினை முக்கிய கவனத்துடன் கவனித்துக் கொண்டு –
சரம்=ஜங்கம வஸ்துக்களையும் – அசரம்=ஸ்தாவர வஸ்துக்களையும் – நியந்து:=ஏவுகிறவராகயிருக்கின்ற –
சௌரே=ஸ்ரீரங்கநாதனுடைய — சரம=கடைசியான – புருஷார்த்தம்=புருஷார்த்தத்தினுடைய –
சித்=ஞானத்தை – ரௌ=காப்பாற்றுகிறவராகயிருக்கின்ற – சரணௌ=திருவடிகளை – ஸதாம்=முமுக்ஷக்களுடைய –
ஸத்வரேஷு=வீட்டினுள் (பூஜாபிரதேசங்களில்) — திசஸி=அழைத்துச் செல்கிறாய்.
பரம ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களது கிரஹங்களில் பகவானையும் பாதுகையையும் அர்ச்சாரூபமாக ஆராதனம் செய்வார்கள்.
மிகவும் அகிஞ்சனரான அந்த ஸ்ரீவைஷ்ணவரின் பூஜா அறைகளில் அவர்களால் ஆராதிக்கும்படி அரங்கனை பரம சுலபமாக
எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து விடுகின்றாய்! உனக்கும் உன்னோடு எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கும் அவர்கள்
செய்யும் சிரத்தையான ஆராதனங்களினால், அவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களுள்
முதல் மூன்றில் புத்தி செலவிடாமல் பண்ணி, கடைசி புருஷார்த்தமாகின்ற மோக்ஷ விஷயத்தில் ஞானத்தையும்,
விருப்பத்தையும் கொடுத்து அவர்களை இப்பிறவியிலிருந்து காப்பாற்றி விடுகின்றாய்!
உன் அனுக்ரஹத்தினால்தான் பகவானது ஸம்பந்தமும், மோக்ஷ உபாயமும் ஆஸ்ரிதர்களுக்கு சாத்தியமாகின்றது.
உன்னுடைய இந்த தயா குணமானது ஆச்சர்யகரமானது!.
ஸ்ரீரங்கநாதன், எப்படிப்பட்ட பாபிகளையும் காப்பாற்றி கரை சேர்ப்பதிலேயே ஊக்கமுடைய பாதுகையை,
இந்தவொரு விஷயத்தில் தன்னை எதிர்பார்க்காத படிக்கு, பாதுகைக்கு ஸர்வ சுதந்திரமும் அளித்து, அந்த பாதுகைகளே தானே
ரக்ஷிக்கும்படியான எஜமானியாக செய்து, இந்த ஒரு விஷயத்தில் பாதுகையின் இஷ்டத்தையெல்லாம் அங்கீகரித்துக் கொண்டு,
அதற்கு ஆதரவாகவே எழுந்தருளியுள்ளார்.
———————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .