ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷு
தைவ இதி பக்த்யாதயா பரமயா அச்யுதபாதம்-
நச புன பார்த்ததே மாந்த்யம்
பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா
ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட நியாயம் சங்கதி
அப்யதா து அபிராம வராமர் வராஹயத்
———-
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத்
திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத்
பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத்
முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான –
1–ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்
4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே
6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ
7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ
8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்
——-
ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-
அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன்
————
இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-
ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-
திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்
——–
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
———
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
——-
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-
———————————–
கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-
———-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –
——-
புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-
வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
——-
சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
——-
மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-
இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்
———
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
———–
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-
——–
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
———
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
———-
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
—–
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-
———
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-
—-
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-
———
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-
——–
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
——-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-
——-
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -100-பாசுரம்–
அவதாரிகை –
இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –
————————————————-
முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
————————————————-
வியாக்யானம்–
முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –
தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-
அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –
நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை
அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –
பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –
ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-
அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –
முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-
பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –
இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-
சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –
கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி
இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —
ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்