Archive for the ‘ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ’ Category

ஸ்ரீ கோதா சதுச்லோகீ –

January 21, 2023

ஸ்ரீ கோதா சதுச்லோகீ – சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியாரின் பெருமைகளைச் சொல்லும் நான்கு ஸ்லோகங்கள் – ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச்செய்தது.

திருமலை அனந்தாழ்வான் விஷயமாக திருவேங்கடமுடையான் தானே அருளிச் செய்த தனியன்கள்:

1) அகிலாத்ம குணா வாஸம் அஜ்ஞாந திமிராபஹம்|

ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஆத்மாவுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.

2) ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹ த்வயம்|

ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்ய மஹம் பஜே||

ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித் தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

முதலியாண்டான் மற்ற திவ்ய தேசங்களில் -திருவேங்கடத்தில் மட்டும் அனந்தாழ்வான் சாதிப்பார்

தனியன்

“சக்ரே கோதா சதுச் லோகீம் யோ வேதார்த்த பிர கர்ப்பிதம்

ஸ்ரீ வேங்கடேச சத் பக்தம் தம் நந்த குரும் பஜே”️

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட கோதா சதுச் லோகீ ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தவரும், 
திருவேங்கடமுடையானின் பரம பக்தருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன்.
--------------

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை |
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா ஸூப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 1

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்யஸ்  த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்திரம் -போலே

நிஸ் சம உத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கச விலுலிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

மாலைக் கட்டிய மாலை -மாலையாலே மாலாக்கிய கோதை

ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகள் –ஸூபகயா-செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸூப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாம் அபாங்கை–
இத் தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்

வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்திகளை – திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகளை – அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகளை அருளியவள் ஸ்ரீ ஆண்டாள். இவை உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம். ஈடு இணையற்ற வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் இந்த ஸ்ரீ ஸூக்திகளை கேட்டு இவ்வுலகத்தார் சுப்ரபாதமாக கேட்டு துயில் துறந்து விழித்து எழுகிறார்கள். ஆண்டாள் குழல்களில் சூடிக் களைந்ததால் பூச்சரங்கள் கண்ணனை பிச்சேற்ற வல்லவை, கோதை சூடி களைந்ததால் ரத்னா ஹாரமாக கொள்கிறான். ‘கோதா’ என்றால் ‘மாலை’. ஆண்டாளே மாலை, அதாவது ‘மாலை’ மாலை கட்டினாள். ‘திருமாலைக்’ கட்டினாள், – தன் வார்த்தையால். கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள், திருப்பாவையாக! இத்தகு அகில ஜகன் மாதாவுடைய குளிர்ந்த கடாக்ஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்!

எந்த நாச்சியாருடைய இணையற்ற உயர்ந்த அருளிச்செயல்கள் வேதங்களின் தலையான பாகமான உபநிஷத்தின் ஆபரணங்களாக ஆகிறதோ, எந்த நாச்சியாருடைய காதலன் (எம்பெருமான்) அவள் குழலில் சூடிக் களைந்த மாலையில் மிகவும் ஆசை யுடையவனாய் உள்ளானோ, எந்த நாச்சியாருடைய, வேதம் போன்ற மங்களமான திரு வாக்கினால் உலகம் நல் விடிவு பெற்றதாக ஆகிறதோ, அப்படிப்பட்ட லோக மாதாவான ஆண்டாள் நாச்சியார் அடியேனைத் தமது திருக் கண் நோக்கமாகிற அமுத மழையாலே நனைத்தருள வேணும்.

————–

மாதா சேத் துலஸீ பிதா யதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர  ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா யதி |
ஜ்ஞாதாரஸ் தனயாஸ் த்வதுக்தி ஸரஸ ஸ்தந்யேந: ஸம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வ மந்ய ஸூலபா சாதாரணா ஸ்ரீ ரஸி”||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 2-

மாதா சேத் துலஸீ
த்வ மாதா துளஸீ

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான்  –மே ஸூதா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || கோதா ஸ்துதி -(1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || கோதா ஸ்துதி(10)

ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.
அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து ,
அவனுக்கு அணிவித்த பிறகு தான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள்  வாழியே –

ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதாரஸ்-
ஞானம் -அறிவு -ஜ்ஞாதா-அறிபவன் -தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள்  –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்-வாய் சொல் அமுதத்தையே தாய்ப் பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸ்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு   என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த  நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீயை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

 “கேசவ பிரியையான துளசி தேவி மாதா நந்தவனத்தில் ஆழ்வார் திரு மகளாராய் – வேயர் பயந்த விளக்காய் ஸ்ரீ விஷ்ணு சித்த குலத்தில் அவதரித்தீர்! நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்ற உம்முடைய ஆசையை நிறை வேற்றி வைத்தாரன்றோ எதிராசர்!”
“பிரிய தமன் அதாவது பிரியமானவன், அரங்கத்து அரவின் அணை அம்மான், ஸ்ரீ ரெங்க நாதன் மூடு பல்லக்கில் எழுந்து அருள, கேசவ நம்பியை கைப்பிடித்தாயே. பிரிய தமன் உன் புக்ககத்திலே குடி புகுந்தார்,” (பெரியாழ்வாருடைய அகம் தான் இன்று ஆண்டாள் சந்நிதி. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம்! ) “ஆண்டாளே உம்முடைய வாய் சொல் அமுதத்தை – வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவையை, இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த ஜ்ஞானவான்கள் இருக்க, ‘போய பிழை புகுதருவான்’ என்று சொல்லி மற்றவர்க்கும் கிட்டி உய்யும்படி எளிதான, சாதாரணமான புகலாய் இருக்கிறீர்! “
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரே! தேவரீருக்குத் திருத்தாயார் யாரென்னில் துளசிச்செடி. தேவரீருக்குத் திருத்தகப்பனார் யாரென்னில் பரமபாகவதோத்தமரான ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். தேவரீருக்குத் திருத்தமையனார் யாரென்னில் யதிராஜரான ஸ்வாமி ராமாநுஜர். தேவரீருடைய ப்ராணநாதன் யாரென்னில் திருவரங்கநாதன். தேவரீருடைய குழந்தைகள் யாரென்னில், தேவரீருடைய அமுதவாய்மொழிகளான முலைப்பாலைப் பருகி வளர்க்கப்பட்ட ஞானவான்கள். தேவரீருடைய அமுதவாய்மொழிகளை அறியாத சாமான்யர்களுக்கெல்லாம் தேவரீர் எப்படி அடையத்தகுந்த புகலாக இருக்கிறீர்?
——————

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணா ஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்-
தன் காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட

ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

பாசி தூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் –2-8-7-

ஸ்வஸ்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப் பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப் பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –

உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய  ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப்   பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ ரஹஸ்ய சிகாமணி —

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் –

இடம் பெற்றார் எல்லாம் என் உடலாய் நிற்க
இடர்ப் பிறப்பு ஒன்றும் இவை இல்லா என்னை அன்பால்
அடம் ( திடம் ) பற்றாம் இவன் என்று நினைத்தான் யாவன்
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தான் தாரூம் -( கட்டை ) உபலமும் (கல்லும் ) போலே கிடக்க நானே
உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என் தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற
எம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த உரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் இருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஓளி சுற்றும் பரப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே

மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலையென்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம்

ஸ்வஸ்த்தம் சித்தம் ஸூகமபி வபுஸ் தாது சாம்யம் ச க்ருத்வா
ஸ்வாத் மாநம் ச ஸ்ம்ருதி பத மஜம் விஸ்வ ரூபம் விதந்வந்
காலே ப்ராப்தே கரண விலயாத் காஷ்ட்ட பாஷாண கல்பாந்
நாத போத்ரீ நயது க்ருபயா நாதித ஸ்வம் பதம் ந –

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵 ️
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!

—————

ஆகூதஸ்ய பரிஷ்க்ரியாம் அனுமபாம் ஆஸேசனம் சக்ஷுஷோ:
ஆனந்தஸ்ய பரம்பராம் அனுகுணாம் ஆராம சைலேசிது: |
தத்தோர் மத்ய கிரீட கோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யா மோத ஸமேதித ஆத்ம விபவாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 4 

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தஸ்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர் மத்ய க்ரீட கோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூக ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

விளக்கம்:

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய பகவானுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள் ஸ்ரீ ஆண்டாள். தனது அழகு அலங்காரங்களால் கண்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பவள். திருமங்கை தங்கிய சீர் மார்வன் தாம் விரும்பி, நாள் தோறும் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திருமுடியிலே தரித்து ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி, இவ்வாறு பகவானை பிச்சேற்றி மகிழச் செய்யும் பெருமையுடைய ஸ்ரீ கோதா பிராட்டியை நாம் ஸ்துதி செய்து வணங்குவோமாக!

திருவேங்கடமலையிலும், திருமாலிருஞ்சோலை மலையிலும் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய அபிப்ராயம் நிறைந்த செயலுக்கு மிகவும் அழகூட்டுமவளாயும், சேவிக்கும் அடியவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை உண்டு பண்ணுமவளாயும், அவனுக்கு எல்லாவிதத்திலும் தக்கவளாய், நிரந்தர ஆனந்தவெள்ளமூட்டும்படி அவனது திருமார்பிலும், திருமுடியிலும் அணியும் தான் சூடிக்களைந்த குங்குமம், பூமாலை ஆகியவற்றின் மணத்தினால் பெருகும் வைபவத்தை உடையவளாய், உதாரவாக்காளரான ஆண்டாள் நாச்சியாரைப் போற்றுகிறோம்!

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந் மௌளி மால்ய பர ஸம் பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜ மிவாதததி த்வதீயாந்யா
கேகராணி பஹுமாந விலோகிதாநி || .கோதா ஸ்துதி -20–போக ரஸாந் -கண்ணின் கடாக்ஷ குளிர்ச்சியால் அலங்காரம்

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது,
நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,தந்யமாயிற்று மேலும்,
நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து,
அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்) மாலைபோல் அமைந்துள்ளது.
தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்;
ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில்,
நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

தையொரு திங்களும் தரைவிளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*
உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்*
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கைவேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! 1

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்

இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

———————–

ஸ்ரீ ஆண்டாள் மங்கள ஸ்லோகங்கள் ☘

🌸 ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (1)

🌸 மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (2)

🌸 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே |

நந்த நந்தன ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம் || (3)

🌸 கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான நோத்பவாம் |

பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் || (4)

—————–
“கோவிந்தன்” என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்..
1. மத்ஸ்யாவதாரத்தில் “கோ” எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால்,
“கோவிந்தன்” என்கிற திருநாமம், மத்ஸ்யாவதாரத்துக்குப் பொருந்துகிறது..
2. கூர்மாவதாரத்தில் “கோ” எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே!..
.
3. வராக அவதாரத்தில் “கோ” எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்..
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய “கோ”வை (“கோ” என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே!..
5. “கோ” எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்..
6. “கோ” எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது..
7. “கோ” எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தனே!…
8. “கோ” எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்..
9. “கோ” எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை..
10. “கோ” எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட, நாளைய தினம் அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்!…
————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

July 9, 2022

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————-

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் /ஸ்ரீ தாடீபஞ்சகம் /ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்–

November 13, 2021

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ் க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வ ரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே–1-

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–2-

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–3-

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் கணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி–4-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுர ப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி–5-

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்

– (ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்)

—————

ஸ்ரீ தாடீ பஞ்சகம்

இந்த அத்புதமான ஸ்தோத்ரம்
ஸ்ரீகூரத் தாழ்வான் அருளிச் செய்தது என்றும்,
ஸ்ரீ முதலி யாண்டான் அருளிச் செய்தது என்றும் பெரியோர்கள் ஒருவாறு பணிப்பர்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர்

யார் அருளிச் செய்த ஸ்தோத்ரமானாலும், எம்பெருமானாரது விஜயங்களை எடுத்துரைப்பதாய்,
செவிக்கினிய செஞ்சொற்களாக அருளிச் செய்யப் பட்ட இந்த ஸ்தோத்ரம் நமக்கு நித்யாநுசந்தேயமாக
இருக்க வேணும் என்னும் காரணத்தினால் ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ முதலியாண்டான்
இருவருடைய தனியன்களையும் அவற்றின் பொருளோடு விண்ணப்பிக்கப்படுகின்றன.

ஸ்ரீ கூரத் தாழ்வான் தனியன்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ர தாம்

யவருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் எல்லாம் வேதமாகிற பெண்ணின் கழுத்துக்கு மங்கள ஸூத்ரமாக
(மாங்கல்யமாக) விளங்க, அந்த ஸ்ரீவத்ஸ சிஹ்நர் என்னும் திருநாமம் உடையவரான
ஸ்ரீகூரத் தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலி யாண்டான் தனியன்கள்

1–பாதுகே யதிராஜஸ்ய கத யந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடி நிலைகளாக (பாதுகைகளாக) அறியப் படுகிறாரோ,
அந்த தாசரதி என்னும் திரு நாமம் உடையவரான ஸ்ரீ முதலி யாண்டானுடைய
திருவடி யிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

2-யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய சஸ் சாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

யாரொருவர் பக்த நகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி)
ஸ்ரீதாடீ பஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தாரோ,
அந்த ராமாநுஜருடைய ப்ரிய சிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான
ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர் ஜைநே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரை வித்ய ஸூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி––முதல் ஸ்லோகம்–

நாஸ்திகர்கள் பாஷண்டர்கள் எனப்ப டுபவர்.
காட்டுத் தீ வளர்த்தால் எவ் விதம் மரங்கள் அழியுமோ அது போன்று,
எம்பெருமானார் பாஷண்டர்களை அழித்தார்.

சார்வாகர், பௌத்தர் முதலிய மலைகளை மிகவும் எளிதாக எம்பெருமானார் சாய்த்தார்.

பௌத்தம் என்ற இருளுக்குச் சூரியன் போன்று எம்பெருமானார் அவதரித்தார்.

ஜைனர்கள் என்ற யானைகளைச் சிங்கம் போன்று விரட்டினார்.

மாயாவாதிகள் என்ற நாகங்களைத் தனது நிழல் மூலமே அழிக்கின்ற கருடன் போன்று விளங்கினார்.

ஸ்ரீரங்கநாதனின் திருக் கோயிலைத் திருத்தி, பெருமையுடன் நின்றார்.

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹாந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாசநி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய ஸூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்

தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –

ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

————

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-இரண்டாம் ஸ்லோகம்–

பாஷண்டம் (நாஸ்திர்கள்), ஷண்டம் (பௌத்தம் முதலானோர்) ஆகிய மலைகளை
இந்திரனின் வஜ்ராயுதம் தண்டிப்பது போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் தண்டிக்கிறது.

மறைமுகமான பௌத்தர்கள் என்ற பெரிய கடலைக் கலக்கும் மத்து போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் உள்ளது.

“இருள் தருமா ஞாலம்” என்பதற்கு ஏற்ப வேதாந்தத்தின் ஆழ் பொருள்கள்,
இந்த உலகில் ஏகதண்டிகளின் (அத்வைதிகள்) பிடியில் சிக்கி நின்றது.
அந்த இருளை நீக்கும் தீபமான த்ரி தண்டியாக எம்பெருமானார் நின்றார்.

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –

சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

————

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத் வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதி கதக சிரோ வஜ்ர தண்டம் த்ரி தண்டம் –மூன்றாம் ஸ்லோகம்–

எம்பெருமானாரின் த்ரிதண்டம் இந்த உலகில் உள்ள சிஷ்யர்களுக்கும் ஞானத்தை அளிப்பதற்காக உள்ளது.
இந்த உலகில் பல விதமான வாதங்கள் தோன்றின்.
அவற்றை சீர் செய்து, சரியான வாதத்தை நிலைநாட்டிய த்ரிதண்டம் இதுவாகும்.

வேதாந்தத்தில் உள்ள ஸத் வித்யை, வைஸ்வாநார வித்யை போன்ற பல வித்யைகளை விளக்கிட்டு
நமக்குக் காண்பிப்பதற்காக உள்ளது இந்த த்ரிதண்டமாகும்.

“கலியும் கெடும் கண்டு கொண்மின்,” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தது போன்று,
கலியின் கொடுமைகள் அனைத்தையும் அழிக்கும் கால தண்டம் போன்றது.

வேதங்களுக்குத் தவறான பொருள் கூறும் மதங்களால் தளர்ந்து போன வேத புருஷனுக்குக் கை கொடுக்கும் தண்டம் போன்றது.
மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டதற்கு ஈடாக உள்ள வெண் கொற்றக் குடையின் மணிக் காப்பு போன்றது.
எதிர்வாதம் செய்பவர்களின் தலைகளைத் துண்டாக்கும் வஜ்ர தண்டம் போன்றது – எம்பெருமானாரின் த்ரிதண்டமாகும்.

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம் போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத் வித்யா தீப தண்டம் –
சத் வித்யா முதலான -அஷி வித்யா -வைச்வாநர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத் வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத் வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலளவாய திசைஎ எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது

7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி

ஆக இப் புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரி தண்டத்தின் பெருமை கூறிற்று-

————

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரி யுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத் வித்யா தீப ஸூத்ரம் சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–நான்காம் ச்லோகம்–

வேதம் என்ற பெண்ணின் கழுத்தில் ஸ்ரீமந்நாராயணனே நாயகன் என்று அறிவிக்கும்
தாலி போன்று எம்பெருமானாரின் யஜ்ஞோபவீதம் உள்ளது.

த்ரியுகம் என்பது எம்பெருமானாரின் ஒரு திருநாமம் ஆகும்.

அப்படிப்பட்ட அவரது திருவடிகளை அடைவதற்குப் பற்றிக் கொண்டு ஏறும் கயிறு போன்று, இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

மிகவும் உயர்ந்த வித்யைகள் மேலும் ப்ரகாசமாக எரியும் திரிநூலாக இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

கலியில் கொடுமைகளை அழிப்பதற்கு வந்த எமனின் பாசக் கயிறு போன்று இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

எம்பெருமானாரின் திருவடிகளை அடைந்தவர்களது உள்ளம் ஒரு தாமரை என்று வைத்துக் கொண்டால்,
இவரது யஜ்ஞோபவீதம் அந்தத் தாமரையின் தண்டு போன்று உள்ளது.

மற்ற மதத்தவர்கள், தங்கள் மதப்படி தங்களது யஜ்ஞோபவீதத்தை துறந்தால் மட்டுமே மோஷம் அடைவர்.

ஆனால் அவர்கள் எம்பெருமானாரின் யஜ்ஞோபவீத அழகைப் பார்த்தவுடனேயே மோக்ஷம் அடையலாம்.

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூத்ரம் போன்றதும் –
ஜகத் அநீஸ்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூத்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இறே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இறே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத் வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம் போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

————-

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம் –
இப்பிரபந்தம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள் சிஷ்யர் ஸ்ரீ கடிகா சஹஸ்ர ஆச்சார்யாரோ –
ஸ்ரீ ஸ்ருதி ப்ரகாசிகா ஆச்சார்யரான ஸ்ரீ ஸூதர்சன பட்டரோ –
ஸ்ரீ எறும்பி அப்பாவோ –
ஸ்ரீ கோயில் அண்ணண் திருப்பேரானாரோ -என்பர் –

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் க்ருபயா பரயா தவ
மம விஜ் ஞாபநம் இதம் விலோக்ய வரதம் குரும்–ஸ்லோகம் -1-

அடியேன் குருவான வரத குரு ஆச்சார்யரை திரு உள்ளத்தில் கொண்டு
உபய விபூதியையும் நித்தியமாக யுடைய காரேய் கருணை இராமானுசா-
அடியேனுடைய விண்ணப்பங்களைக் கேட்டு அருள்வாய்

யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே!
பரமமான க்ருபையோடே (அடியேனுடைய) ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து,
அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை தேவரீர் திருச் செவி சாற்றியருள வேணும்.

மேலே இரண்டாம் ஸ்லோகம் தொடங்கி ஆறாம் ஸ்லோகம் வரை உள்ள ஐந்து விண்ணப்பங்களை
பரம கிருபா மாத்திரை ப்ரசன்னாச்சார்யரான கிருபையினாலே
அடியேனுடைய சிறுமையைப் பாராமல்
ஞான பக்தி வைராக்யங்கள் நிறையப்பெற்ற வரத குருவின் பெருமை ஒன்றையுமே கடாக்ஷித்து
மேலே உள்ள ஐந்து பெருப் பெருத்த விண்ணப்பங்களுக்கு அங்கமாக
இந்த ஒரு விண்ணப்பம் கேட்டு அருள வேணும் என்கிறார்

இந்த ஐந்து விண்ணப்பங்களாலே இதுக்கு பிரார்த்தனா பஞ்சகம் என்ற பெயராயிற்று

———-

இதில் பகவத் விஷய பற்று வைக்க இடையூறாக உள்ள
பாஹ்ய விஷய ஸங்கத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார் –

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிவர்த்தய வாசநாம் –ஸ்லோகம் -2-

வாசனா ருசிகளை போக்கி அருள பிரார்த்தனை இதில் –
எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன்.
இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில் இருந்து எனது புலன்களை மீட்க வேண்டும்.

வாஸனா ஸப்தம் ருசிகளுக்கும் உப லக்ஷணம்
புத்தி பூர்வகமான ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சை ருசி என்றும்
அபுத்தி பூர்வகமாக ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சையே வாஸனை யாகும்
காமம் ஒழிந்தால் க்ரோதாதிகளும் ஒழியுமே

————–

உலகோரைப் பார்த்தார்
விஷயாந்தரங்களிலே பற்று மிக்கு புத்ராதிகளைப் பிரார்த்தித்து வருகிறார்களே
உபய விபூதி நாதர் ஸகல அபீஷ்ட பிரதர் அன்றோ
அவர்கள் வேண்டிக்கொண்டால் ஹித பரரான தேவரீரே அவற்றைத் தராமல் ஒழிந்து
அதுக்கும் மேலே அவற்றிலே வைராக்யத்தையும் தந்து அருள வேணும் என்கிறார்

அபி ப்ரார்த்த யமா நாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவாத்ர ஹித காரின் யதீந்த்ர ந –ஸ்லோகம் -3-

விஷயாந்தர வைராக்யம் பிறப்பித்து அருள பிரார்த்தனை இதில் –
யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும்.
ஆனால் அவற்றை விலக்கி, நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்க வேண்டும் –
காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

புத்ர ஷேத்ராதி- ஆதி ஸப்தத்தாலே
ஐஹிக போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாவற்றையும் சொன்னபடி
ஹித காரின் -ஹித ஏக காரின் -ஆச்சார்ய சம்பந்தம் மோக்ஷத்திற்கே ஹேதுவாய் இருக்குமே –

—————–

பகவத் பாகவத அபசாராதிகள் பிரகிருதி ஸம்பந்தத்தினால் ஸ்வ ப்ரயத்னத்தினால்
தவிர்க்க முடியாது என்று உணர்ந்து
அவை நேராதபடி தம்மை நடத்தி அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

யதா அபராதா நஸ்யுர்மே பஃதேஷூ பகவத்யபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –ஸ்லோகம் -4-

பாகவத அபசாராதிகள் நேராதபடி அருள பிரார்த்தனை இதில் –

யதிராஜரே! முக்தி அடையும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான்,
ஒரு போதும் பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்தி விடக் கூடாது.

பாகவத அபசாரத்தை விட பகவத் அபசாரம் நேர்வது மிக குறைவு
பகவத் அபி -அபி சப்தத்தால்-ஆஸ்திகர்களுக்கு அச்சம் இருப்பதால் இது நேராது ஆகிலும் என்றவாறு
நிஷித்தங்கள் நான்கினுள் இவை இரண்டையும் சொன்னது
அஸஹ்ய அபசாரம் அக்ருத்ய கரணம் -போன்றவற்றுக்கும் இவை உபலக்ஷணம் –

——————-

மநோ வாக் காயங்கள்
ஸத் புருஷ ஸஹ வாஸத்தாலும்
ஸத் கிரந்த அனுசந்தான ஸம்பாஷணத்தாலும் ஆளும்படி
செய்து அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

ஆமோஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலேஷே போ அஸ்து நஸ் சத்பி ஸஹ வாஸம் உபேயுஷாம் –ஸ்லோகம் -5-

கீழே யாவத் தேஹம் -இங்கு ஆ மோக்ஷம் –
ரஜஸ் தமஸ் குணங்கள் உள்ள ப்ரக்ருதி -கழிந்து பரம பதம் செல்லும் வரை
கால ஷேபம் திருமால் அடியாரோடே ஸஹ வாஸம் –
பூர்வாச்சார்ய பிரபந்த கால ஷேபம்-வேண்டி பிரார்த்தனை இதில் –
லக்ஷ்மண முனியே! இந்த உடல் பிரியும் காலம் வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே கால க்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்க வேண்டும்.

த்வத் பிரபந்த
தேவரீர் அருளிச் செய்த நவ ரத்னங்களிலும்
தேவரீரைப் பற்றிய இராமானுஜ நூற்றந்தாதி யதிராஜ சப்ததி யதிராஜ விம்சதி ஆர்த்தி பிரபந்தம் போல்வனவும்
இவற்றின் அனுசந்தானமும் ஸத் ஸஹவாசமுமே மோக்ஷத்துக்கு அனுகூலமாகும் என்பதைக்
காட்ட- ஆ மோக்ஷம் பத பிரயோகம் இதில் —

————–

எம்பெருமானாருடைய பிரபத்திக்கு விஷயமான அருளிச் செயல்கள்
தமது நாவுக்கு இனியவாகும் படி அருள் செய்ய பிரார்த்தனை இதில் –

பராங்குச முனீந்திராதி பரமாசார்ய ஸூக்தயா
ஸ்வதந்தாம் மம ஜிஹ்வாயை ஸ்வத ஏவ யதீஸ்வர –ஸ்லோகம் -6-

ஆழ்வார்களையே பரமாச்சார்ய சப்தத்தால் -அருளி- செவிக்கு இனிய செஞ்சொல் –
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருக்க பிரார்த்தனை இதில் –

சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத யுள்ளம் பெற இராமானுச முனி தன் வாய்ந்த
மலர்ப்பாதம் வணங்குகிறேன் -ஸ்ரீ அனந்தாழ்வான்

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -ஸ்ரீ எம்பார்

இவை இன்றும் இனித்தாலும் அகலகில்லேன் இறையும் என்ற பிராட்டி பிரார்த்தனை போல் இவரும்
தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் செவிக்கு இனிய செஞ்சொற்கள் ஆகையால் இந்தப்பிரார்தனை –

————-

இத் யேதத் சாதரம் வித்வான் ப்ரார்த்தநா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–ஸ்லோகம் -7

ஸ்வாமி திருவடிகளில் பேரின்பத்தை இந்த ஸ்லோகங்கள் சொல்ல பெறுவார் என்று
பலன் அருளிச் செய்து நிகமிக்கிறார்

சாதரம் படன்-என்று
பொருள் உணர்ந்தோ உணராமலோ சொன்னாலும் பலன் கிட்டுவது நிச்சயம் என்றவாறு –

யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை
யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களோ,
அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

பகவத் பக்தி
பாகவத பக்தி
ஆச்சார்ய பக்தி
ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டம்
ஆச்சார்யர் திறத்திலே பரமபக்தியை விட வேறே ஒன்றே ஸ்ரேஷ்டம் இல்லையே
ஆகவே இத்தை அனுசந்தானத்தால் உண்டாகும் யதிராஜ பாத பங்கஜ பரம பக்தி
கைகூடும் என்று நிகமித்து அருள்கிறார் –

————–

காஷாய ஸோபி கமநீய ஸிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருஸோர் மமாக்ரே –ஸ்லோகம் -8-

ஸ்வாமி திவ்ய மங்கள விக்ரஹம் திவ்ய சோபை எப்பொழுதும்
நம் கண்களுக்கு விளங்க பிரார்த்தனை –

துவராடையால் விளங்குவதும்
அழகிய குடுமியின் அமைப்பை யுடையதும்
முக்கோலால் ஒளி பெற்ற திருக்கையை யுடையதும்
வெளுத்த பூணூலை யுடையதும்
ஒளி விடுகிற திருமண காப்பை யுடையதும்
உதியா நின்ற ஆதித்யனோடே ஒத்து உள்ளதான
தேவரீருடைய திருமேனியானது
காண விரும்பிய அடியேனுடைய இரண்டு கண்களுக்கு எதிரிலே இருக்கும்படி அருள்வாய் என்றபடி –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய இயற்கையான திருமேனி அழகை
பெருமாள் கோயிலிலே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாருக்கு
சிவந்து நெடுகி வலியராய்
ஆயத்தாச்ச ஸூ வ்ருத்தாச்ச–பாஹவா -என்கிறபடியே
ஆஜானு பாஹுவாய் நடுவே வருகிறவர் –
என்ற வர்ணனை இங்கே நினைக்கத் தகும் –

——–

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஜ்ஞாத்வா ஆர்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் சவகீயேப்யோ யதிராஜாய மங்களம் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார் வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தான்
யுல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் /ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்/ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம் /ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —–

October 2, 2021

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள் —

யஸ்ய ப்ரஸாத கலயா
பதிர ஸ்ருனோதி
பங்கு பிரதாவதி
ஜவேந வக்தி ச மூக
அந்த ப்ரபஸ்யதி
ஸூதம் லபதே ச வந்த்யா
தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி

ராமானுஜரை சம்பிரதாயத்துக்கு வரவழைக்க ஆளவந்தார் ஆ முதல்வன் மானசீகமாக கடாக்ஷித்து சரணம்

யஸ்ய ப்ரஸாத கலயா –அருள் வெள்ளத்தால்
பதிர ஸ்ருனோதி -காது கேட்க்காதவன் கேட்ப்பான் –
வேறே சம்ப்ரதாயம் கேட்டு வீணாக்கப் போகாமல் கேட்க வேண்டாதத்தை கேட்பது

பங்கு பிரதாவதி -நொண்டி ஓடுவான் -எங்கும் செல்லாமல் –
(எப்பாடும் பேர்ந்து உதறி)
“ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்” என்கிறபடியே -(தார்ஷ்யாத்ரி — திரு அஹோபிலம் )
எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.

ஜவேந வக்தி ச மூக -ஊமையும் பேசுகிறான் -நவக்ரந்தங்கள் வெளி வந்தனவே

அந்த ப்ரபஸ்யதி -குருடனும் நன்றாக பார்க்கிறான் -பார்க்க வேண்டாதவற்றை பார்ப்பவன் குருடன்

ஸூதம் லபதே ச வந்த்யா -மலடியும் பிள்ளைகளை பெறுகிறாள் -சிஷ்ய கூட்டங்கள் சேரப் பெற்றார்
12000 ஸ்ரீ வைஷ்ணவர் 700 சந்யாசிகள் கிடைக்கப் பெற்றார்

தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி -தேவாதி ராஜா வரதா சரணம் அடைகிறேன் –

——–

காஞ்சிபுரத்தின் மகிமையை ஆளவந்தார் நன்றாகவே அறிவார். அதாவது,
‘புரீணாமபி ஸர்வாஸாம் ஸ்ரேஷ்ட்டா பாப்ஹரா ஹி ஸா’ என நகரங்கள் அனைத்திலும் சிறந்ததாய்
பாவத்தைப் போக்கடிப்பதாக, புண்ணியத்தை வளரச் செய்வதாக இருக்கிறது காஞ்சிபுரம்.
முக்தி தரும் ஏழு தலங்களுள் ஒன்றானது என்று எண்ணிக்கொண்டே வந்தார்.
ஆனால், யாதவப் பிரகாசரின் பிடிவாத வேதாந்த பாடங்களும், அவரின் துர்நடத்தையும் கண்டு
மிகவும் மன வருத்தம் கொண்டு, கூடவே ஸ்ரீராமானுஜரைப் பற்றியும் எண்ணம் கொண்டு
இவ்வாறு சொல்லத் தொடங்கினார்:

‘‘அஸந்த ஏவாத்ர ஹி ஸம்பவந்தி
ஹஸ்திகாயாமிவ ஹவ்யவாஹ:
அத்ரைவ ஸந்தோ யதி ஸம்பவந்தி
தத்ரைவ லாபஸ்ஸர ஸீருஹாணாம்’’

இதன் பொருள்,
‘‘நெருப்புச் சட்டியில் உள்ள நெருப்பு போல, இவ்வுலகில் துஷ்டர்களே உள்ளனர்.
இதிலே நல்லோர்களாகச் சிலர் காணப்படுகின்றனர். இது எப்படி உள்ளதெனில்,
நெருப்புச் சட்டியிலேயே தாமரை புஷ்பங்கள் பூத்தது போலாகும்’’ என்பதாகும்.

பிறகு ஸ்ரீஆளவந்தார் பேரருளாளனையும், பெருந் தேவி தாயாரையும் சேவித்தார்.
பேரருளாளனை சேவித்துக் கொண்டு பிரதட்சணமாக வரும்போது, ஸ்ரீஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நோக்கி,
‘‘இவர்களில் அந்த இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்) யார்?’’ என்று கேட்டார்.
திருக்கச்சி நம்பிகள் மிக அழகாக ‘‘அதோ சிவந்து நெடுகி வலியராய் நீண்ட கைகளுடன்
நடுவே வருகிறாரே அவர்தான் ஸ்ரீராமானுஜர்’’ என்று காட்டியருள,
ஸ்ரீஆளவந்தாரும் மானசீகமாக கடாட்சம் செய்து அருளினார்.
தன்னுடைய கம்பீர நயனங்களாலே மீண்டும், மீண்டும் செவ்வரியோடே, மதுரப்பார்வையினால் பார்த்தருளி
‘ஆம் முதல்வன் இவன்’ என்று விசேஷமாக உகந்து கடாட்சித்து அருளினார்.
அதாவது, நம் வைஷ்ணவ தரிசனத்திற்கு ஏற்ற முதல்வன் இவன்தான் என்று கூறினார்.

உடனே ஸ்ரீஆளவந்தார் வேகமாக விரைந்து
மீண்டும் பேரருளாளன் சந்நதிக்கு வந்து நமஸ்
கரித்தார். எல்லா சிஷ்யர்களும் எழுந்தருளி
யிருந்தனர். அப்போது ஸ்லோகம் ஒன்றை உரக்கச் சொன்னார்:

‘‘யஸ்ய ப்ரஸாத கலயா பதிர: ச்ருணோதி பங்கு:
ப்ரதாவதி ஜவேனசவக்தி மூக:று
அந்த: ப்ரபச்யதி ஸுதம் வபதேச
வந்த்யா, தம்தேவமேல வரதம் சணம்
கதோஸ்மிறுறு’’

அதாவது, ‘‘எந்த பேரருளாளனுடைய அனுக்ரஹத்தின் காரணமாக செவிடன் கேட்கும் சக்தியுடையவனாக ஆகிறானோ,
காலில்லாதவன் வேகமாக நடக்க வல்லவனாக ஆகிறானோ, ஊமை பேசவல்லவனாக ஆகிறானோ,
மலடியும் பிள்ளையைப் பெறுகிறாளோ, அந்த தேவப் பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்.”
பிறகு, ‘‘ஒரு விண்ணப்பம்,’’ என்றும் பிரார்த்தனை செய்தார்.
‘‘நம் ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்திற்கு ஸ்ரீ ராமானுஜரைத் தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார்.

ஏனெனில், ஒரு அத்வைதியாகக்கூட இல்லாமல் வெறும் பிடிவாதம் பண்ணக்கூடிய வேதாந்தியான
யாதவப் பிரகாசரிடம் படிப்பதும் அவரிடம் மறுப்பு சொல்லி வெறுப்பையும், கோபத்தையும் சம்பாதிப்பதும் என்று
இப்படியே காலம் கழிந்தால், ஸ்ரீராமானுஜருடைய அவதார காரியம் என்ன ஆவது என்கிற ஆதங்கத்தில் அவ்வாறு பிரார்த்தித்தார்.
பிறகு, ஸ்ரீஆளவந்தார் தம் முதலிகளுடனும், சிஷ்ய கணங்களுடனும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.

திருக்கச்சி நம்பியிடம் பிரியாவிடை பெற்றபோது, ‘‘அடியேனுக்கு நல்வார்த்தை கூறலாகாதா?’’ என்ற போது,
ஸ்ரீஆளவந்தார் சில நல்ல வார்த்தைகளைக்கூறி சமாதானப்படுத்தி, ஆனந்தக் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகளை ஆரத்தழுவி சமாதானம் செய்தார்.
‘‘ஸ்ரீராமானுஜரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும்,’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இதற்கிடையில் காஞ்சிபுரத்திலேயே ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு நாட்டை ஆண்டு கொண்டிருந்த பல்லவ மன்னனின் பெண்ணுக்கு பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.
மிகுந்த கவலையோடு இருந்த பல்லவ மன்னன் பல வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை செய்து பார்த்தும் பலனில்லாமல் போயிற்று.
இந்தக் கவலையினால் ராஜ்ய நிர்வாகத்தை சரிவர நடத்த இயலவில்லை.
மேலும், பற்பல மந்திரவாதிகளை அழைத்து வந்து தம் பெண்ணைக் காண்பித்தார்.

அப்படியும் பலனில்லாது போயிற்று. நாளுக்கு நாள் மன்னனுக்கும், ராணிக்கும் கவலை பெருகியபடி இருந்தது.
அவரது கன்னிகையோ நாளுக்குநாள் மெலிந்து கொண்டே வந்தாள். முகம் வெளிறிப்போய்,
எதுவுமே சாப்பிட முடியாது நோயால் பீடிக்கப்பட்டு, எதிலுமே நாட்டமில்லாமல் ‘ஹாய், ஹோய்’ என்று கத்திக் கொண்டிருந்தாள்.
இதனாலேயே பல்லவ மகாராணி கல்யாணி கவலைப்பட்டு கவலைப்பட்டு, பரலோகம் சென்றடைந்தாள்.

பல்லவ மன்னனுக்கு எல்லாமே சூன்யமாகப் போனது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் அரசனிடம், யாதவப் பிரகாசரைப் பற்றி கூறி,
அவர் இங்கு எழுந்தருளினால், ராஜகுமாரிக்கு விடிவு கிடைக்கும் என்று உறுதியாக மந்திரிமார்கள் கூற,
அவரை உடனே அழைத்து வருமாறு பல்லவ அரசன் ஆணையிட்டான்.

ஆணையை மேற்கொண்டு யாதவப் பிரகாசர், ஸ்ரீராமானுஜரை அழைத்துக்கொண்டு, தன் சிஷ்யர்கள் புடைசூழ
பல்லவராஜனின் அரசவைக்கு ஏகினார். பல்லவ அரசன் இவரைப் பலவாறு மன்றாடி கேட்டுக் கொண்டு தம் கன்னிகையை சரிசெய்யுமாறு கூறினான்.

உடனே, யாதவப் பிரகாசரும் ஏதோ ஜெபிப்பதுபோல் சில மந்திரங்களைக்கூறி சிறிது தீர்த்தத்தை அவள்மீது தெளிக்க,
யாருக்குமே அடங்காத, ஏன் பதிலேகூட சொல்லாத பிரம்மராட்சஸ் இவருக்கு மட்டுமே பதில் கூறியது.
‘‘நீ ஏன் இங்கு வந்தாய்?’’ என வினவியது.
யாதவப் பிரகாசரோ, தன்னுள் தேங்கிய பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
சற்றே தள்ளி நின்று, ‘‘நீ யார்? ஏன் இவளைப் பிடித்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்ன செய்தால் விட்டு விடுவாய்?’’
என்று பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

‘‘ஹே… யாதவனே, நீ ஜெபிக்கும் மந்திரம் எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயோ?’’ என்று கூறி
அவர் ஜெபித்த மந்திரத்தை அப்படியே கூறியது.
‘‘உன் ஜெபத்திற்கும், மந்திரத்திற்கும் நீ தெளித்த ஜலத்திற்கும், இவளை விட்டுவிட்டுப் போவேனோ?
அவ்வளவு சக்தி, உனக்கும், உன் மந்திரத்திற்கும் உன் ஜெபத்திற்கும் கிடையாது,’’ என்று கர்ஜித்தது.
‘‘அட! நான் சொன்ன மந்திரங்களை அப்படியே சொல்கிறாயே! அப்படியானால் நீ உண்மையில் யார்?’’ என்று தவிப்புடன் கேட்டார்.

‘‘இது மட்டுமா? உன்னுடைய முன் ஜென்மமும், என் முன் ஜென்மமும் எனக்குத் தெரியும்,’’ என்றது.
‘‘அப்படியானால், நான் யார்? நீ யார் என்று கூறலாகாதோ?’’
‘‘இதோ பார்! உன் போன ஜென்மத்தில் மதுராந்தகம் என்ற இடத்திலுள்ள ஒரு ஏரிக்கரையிலுள்ள புற்றில்
உடும்பு என்ற ஜந்துவாக நீ இருந்தாய். அப்போது ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருமலை திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும்போது மதுராந்தகம் வந்தடைந்தனர்.

சற்று இளைப்பாற எண்ணி, ஏரியில் நீராடி, பகவத் ஆராதனங்களை முடித்துக் கொண்டு வந்த ஆகாரத்தை உண்டு
ஏரியில் கைகளை அலம்பினார்கள். அந்த நீரை நீங்கள் பருகியதால், அந்தக் கருணையால் இப்போது
வேதாந்தம் பேசும்படியான ஒரு வித்வத்துவ ஜென்மத்தை கிடைக்கப் பெற்றிருக்கிறீர்கள்.
அதன் காரணமாகத்தான் உனக்கு சிஷ்யனாக, இதோ எதிரில் அவதாரமாக நிற்கும் ஸ்ரீ ராமானுஜரையும் பெற்றிருக்கிறாய்.

நான் செய்த தவறு என்னவெனில் என்னுடைய அந்தணப் பிறவியில் வேதத்தை தவறாக உச்சரித்ததும்,
யாகத்தில் மந்திரத்தை தவறாகச் சொன்னதுமே ஆகும். அதனாலேயே இப்படி பிரம்ம ராட்சஸ் ஆனேன்.’’
‘‘நீ சொன்ன வரையில் சந்தோஷம். ஆனால், இந்த ராஜ கன்னிகையை விட்டு விட்டுப் போ,’’ என்று யாதவப் பிரகாசர் கூறினார்.
‘‘நீ சொன்னால், நான் போக வேண்டுமோ? நான் போவேனா என்ன?’’ என்று பிரம்மராட்சஸ் கோரமான குரலில் கர்ஜித்தது.

‘‘சரி, யார் சொன்னால் இவளை விட்டுவிடுவாய்?’’ என்று யாதவப் பிரகாசரும் விடாமல் கேட்டார்.
அப்போது கண்களில் நீர் மல்க பிரம்மராட்சஸ் சாந்தமாகப் பேசத் தொடங்கியது.
‘‘உம்மிடம் பாடம் பயிலும் மாணவரான நித்யஸுரிகளில் ஒருவர், அதோ உள்ளாரே,’’ என்று கூற
‘‘அது யார்?’’ என்று யாதவப் பிரகாசரும் வினவ,
ஸ்ரீ ராமானுஜரைக் காட்டி, ‘‘இவர் என் தலையை, தன் காலால் தீண்டி,
‘‘நு போவுதி’’ என்று கூறினால் அவளை விட்டு விடுகிறேன்,’’ என்று கம்பீரமாகவும், அமைதியாகவும் கூறியது.

யாதவப் பிரகாசர் இளையாழ்வாரை (ஸ்ரீராமானுஜரை) நோக்கி பிரம்மராட்சஸ் சொன்னதுபோல் செய்யவும் என்று கூறியவுடன்,
அப்படியே, தன் காலால் அவளைத் தீண்டி, ‘இவளை விட்டுப்போ’ என்று கூறிய மறுகணமே அவளை விட்டு பிரம்மராட்சஸ் நீங்கி,
நீங்கியதற்கு அடையாளமாக, அங்குள்ள மரத்தாலான கம்பத்தின் கணுவை முறித்துவிட்டுச் சென்றது.

யாதவப் பிரகாசரும், அந்த சமயத்தில் ஸ்ரீராமானுஜரை மனதாரப் புகழ்ந்து கொண்டாடி சிஷ்ய கணங்களுடன் தன் மடத்திற்கு வந்தார்.
அந்த சமயத்தில், அப்படி புகழ்ந்தாரே தவிர, ஸ்ரீராமானுஜர் மேல் இந்த சம்பவத்தால்,
அதிகமான பொறாமையும் கோபமும் யாதவப் பிரகாசருக்கு உண்டாயிற்று.
அதேசமயம், இந்த சம்பவத்திற்குப் பிறகு இளையாழ்வாரின் புகழ் மேலும் ஓங்கியது.

———————–

ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்

சித்திரை புனர்வஸு – ஸ்ரீ முதலியாண்டானின் திருநக்ஷத்திரம்

தனியன்
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||

அர்த்தம்:
யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ,
தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.

வைபவச் சுருக்கம்:
ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் (கிபி 1027) பிரபவ வருடத்தில்
பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில்
சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்ரம் வாதூல கோத்ரத்தில்
எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.

எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.

எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால்
எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி எம்பெருமானார் நியமனத்தாலே, பெரிய நம்பிகள் திருக்குமாரத்தியான அத்துழாய்க்குச்
சீதன வெள்ளாட்டியாகி தாஸவ்ருத்திகள் செய்த பெரியவர் இவர்.

எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டாமாக அபிமானித்தார்.

முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.

——–

முக்த ஸ்லோகங்கள்

முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்லோகம்

புரா ஸூத்ரைர் வ்யாஸ ஸ்ருதி சத சிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுல தர தாமேத்ய ஸ புந
உபா வேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஜஜ்ஜே ராமா வரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர —

ஸ்ரீ வேத வியாஸர் திருவவதரித்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இயற்றி வேதாந்த பொருளை விளக்கி அருளினார்
அவரே தாமே மீண்டும் ஸ்ரீ நம்மாழ்வாராக திரு அவதரித்து செவிக்கு இனிய செஞ் சொற்களாலே அவற்றை விவரித்து அருளினார்
இந்த உபய வேதாந்தங்களையும் உபபத்திகளாலே ஏக ஸாஸ்த்ரமாக்கி அருளுவதற்காகவே
அவரே மீண்டும் ஸ்ரீ ராமானுஜராக திரு அவதரித்து அருளினார் –

—————–

ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–ஸ்லோகம்–1-

எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத்
திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ,
அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய்,
கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி
அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி
ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||–ஸ்லோகம்–2-

ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய்,
வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான்
வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.

ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||–ஸ்லோகம்–3-

ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய்,
ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.

யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்–ஸ்லோகம்–4–

பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ,
ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்

——–

ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்

வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||–ஸ்லோகம்:

மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை
எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு
வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.

—–

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் — அருளிச் செய்தவை —

ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வின்யச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் –1-

காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ்,
மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும்,
இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும்,
ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

——

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முக்தஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருசி பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம் –2-

கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும்,
முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும்,
தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும்,
தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே!
உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

————-

கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப் நேஷ்யாமி திவசான் –3-

காவிரிக் கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும்,
மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே!
உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி
மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

————–

கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷோ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-

எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்?
அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான
காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்?
ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான
ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

———–

பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் நஹ –5-

பாக்கு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இறே
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ

——————————-

ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் –6-

அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம்.
ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

———–

அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி –7–

உண்மையில் உமது அருகில் வாராத ஒரு நாயின் சம்பந்தமான
பொய்யான அபவாதத்தினால் சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன் வெகு சமீபத்திலே வந்த போது
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்

————————-

பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய்,
எப்படி குழந்தையை நோக்கி ஓடி வருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க
ஓடி வந்து அருள் செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.

———-

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்ஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி —

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்),
கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும்,
அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும்,
கயா ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு
உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது-

November 9, 2020

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது
ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ பிராட்டியின் பெருமைகளை சொல்லும்
நான்கு ஸ்லோகங்களை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்.

தனியன்
ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்

யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

ஸ்ரீ சது ஸ்லோகி – ஸ்லோகம் 1
“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“

ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

———-

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்லோகம் 2-

“யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்“

“எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத்
தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஸ்ரீ ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ
அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி
நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே ஸ்ரீ நாயகியாகவும்
ஒரே நாதனான ஸ்ரீ நாராயணனின் மார்பில் உறைபவளே! பொறுமையுள்ளவளே!
உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்”

—————-

ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

——–

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்லோகம் 4-

“சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி
ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தே“

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது.
அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் ஸ்ரீ பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள
எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு
அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும்
தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே.
இதனால் ஸ்ரீ பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”

———————–

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||

சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும்
தாமரையில் வசிப்பவளுமான எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான ஸ்ரீ வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.

ஆக இந்த நான்கு ஸ்லோகங்களால் ஸ்ரீ லக்ஷ்மி விசிஷ்டமான வஸ்துவே உபேயமாகக் கடவது
என்றத்தை அருளிச் செய்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்–ஸ்ரீ நாரதர் சதுஸ் ஸ்லோகி —

August 11, 2020

ஸ்ரீ வேத வியாசர் அனைத்து வேத புராணங்களையும் அருளிச் செய்த பின்பும் திரு உள்ளம் சோகமாய் இருக்கக் கண்ட ஸ்ரீ நாரதர்
நான்கு ஸ்லோகங்களால்-2.9.33-36- வேத சாரங்களை அருளிச் செய்து
ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியே முழுவதுமாக ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்யச் சொல்ல பிறந்த கிரந்தம்

ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் -ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ பாதாரயனர் -உடைய திருக் குமாரார்
ஸ்ரீ ஸூகர் ஸ்ரீ பரிஷித்துக்கு அருளிச் செய்த ஸ்ரீ மத் பாகவதம்

யாவன் அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –2-9-33-

யாவன்-எங்கும் பரந்து உள்ள
அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –
நிர்ஹேதுக அனுக்ரஹத்தால் அறியக் கடவீர்

அஹம் ஏவ சம் ஏவ அக்ரே நான்யத் யத் சத் அசத் பரம் பஸ்சத் அஹம் யத் ஏதக் ச யோ அவசிஸ்யேத சோஸ்மை அஹம் –34-

ருதே அர்த்தம் எது பிரதியேத ந பிரதியேத ச ஆத்மனி தத் வித்யாத் ஆத்மனோ மயாம் யத அபாஷஹ யத தமஸ்–35-

ப்ரஹ்மாத்மகம் இல்லா ஓன்று இல்லை -இருப்பது போல் -தமஸாகவே தோன்றும்

யதா மஹந்தி பூதாநி பூதேஸூ உச்ச அவஸேஸூ அனுப் பிரவிஸ்தானி அப் பிரவிஸ்தானி ததா தேசு ந தேசு அஹம் -36
உள்ளே உறைந்து நியமிக்கிறேன் -வியாப்த கத தோஷம் தட்டாமல்

ஸ்ரீ வாஸூ தேவன் இந்த நான்கு ஸ்லோகங்களையே விவரித்து ஸ்ரீ மத் பாகவாதமாக-வேத சாரமாக
ஸ்ரீ கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை விவரித்து
கிருஷ்ண ஸ்வ தமோபகதே தர்ம ஞான திபீ ஸஹ கலவ் நஸ்தத் ரசம் ஏச புராணர்கோ துணோதித்

ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதி எழுந்து அருள -தமஸில் ஆழ்ந்த உலகம் ஸ்ரீ மத் பாகவத புராணம்
மூலமாகவே கலியில் நாம் ஒளி பெறுகிறோம்

—-

சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்சோ மன்வந்தராணி ச வம்சய அனுசரிதச் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் –மத்ஸ்ய புராணம்

வைஷ்ணவம் நாரதீயஞ்ச ததா பாகவதம் ஸூபம் கருடாஞ்ச ததா பத்மம் வராஹம் ஸூப தர்சனே சாத்விகானி புராணி
விஜ்நேயனி ஸூபாநீவை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்தம் மார்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ராஜசானி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் ததா லைங்கம் சிவம் ஸ்கந்தம் ததைவ ச அக்னேயம் ச சதேதானி தமஸானி நிபோதமே

யத்ர அதிக்ருத்ய காயத்ரீம் வர்ணயதே தர்ம விஸ்தாரா வ்ருத்தாஸூர வதோ பேதேம் தத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ ததியாத் தேம ஸிம்ஹாஸ மன்விதம் ப்ரவ் க்ஷ தபத்யம் பவுர்ணமாஸ்யாம் ச யதி பரமாம் கதிம்
அஷ்டாக்ஷ சஹஸ்ராணி புராணம் ப்ரகீர்திதம் -மத்ஸ்ய புராண ஸ்லோகம் –53-20-22-
யாவன் ஒருவன் உயர்ந்த வேதாந்த கருத்துக்களை அளிக்கும் ஸ்ரீ மத் பாகவதம் எழுதி பொன்னால் செய்த
சிம்ஹாசனத்தில் வைத்து பத்ர–ஆவணி – மாச பவுர்ணமி அன்று தானமாக அளிக்கிறார்களோ அவர்கள் பரம கதி அடைகிறார்கள்

அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூ த் ராணாம் பரதர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ் வேதார்த்த பரிபிரும்ஹத புராணம்
சாம ரூபா சாஷாத் பகவதோதித துவாதச ஸ்கந்த யுக்தோயம் சதா விச்சேத சம்யுத கிரந்த
அஷ்டாதச சஹஸ்ர ஸ்ரீ மத் பாகவாதபிதம் –கருட புராணம் -ஹரி பக்த விலாசம் –10-394-395-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விவரணம் -மஹா பாரத சாரம் -காயத்ரி பாஷ்யம் -வேத விவரணம் –
புராண ஸ்ரேஷ்டம் –12 ஸ்கந்தங்கள் –100 அதிகாரங்கள் –18000 ஸ்லோகங்கள்

பதவ் யதியவ் பிரதம த்வித்யவ் த்ரிதியதுர்யவ் கதிதவ் யதுரு நாபிஸ் தத பஞ்சம ஏவ சாஸ்தோ புஜாந்தரம்
தோரயுக லம் யதன்யவ் முகாரவிந்தம் தசமம் பிரபுல்லம்
ஏகாதஸவ் யஸ்ய லலத பதகம் சிரோ பி யத் துவாதச ஏவ பதி தமதி தேவம் கருண நிதானம் தமல வர்ணம்
சுஹித வதரம் அபரஸம்ஸார சமுத்ர சேதும் பஜ மே ஹே பாகவத ஸ்வரூபம்

முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருப்பாதங்கள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்-ஊரு
ஐந்தாவது -திரு நாபி
ஆறாவது -திரு மார்பு – புஜாந்தரம்
ஏழாவதும் எட்டாவதும் -திருக்கைகள் -தோர் யுகலம்
ஒன்பதாவது -திருக்கண்டம்
பத்தாவது திரு முகாரவிந்தம்
பதினொன்றாவது -லலாட பதக்கம்
பன்னிரண்டாவது சிரஸ்ஸூ

————–

அஹம் வேத்மி சுகோ வேத்தி வ்யாசோ வேத்தி வ
பக்த்யா பாகவதம் க்ரஹ்யம் ந புத்தியா ந ச திகய –சிவன் சொல்வது -பக்தி ஒன்றாலே பாகவதம் அறியலாம்

ஸ்வயம்புர் நாரத சம்பூ குமாரவ் கபிலோ மனு ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம்

நாரதர் சம்பு வையாஸகிர் என்னும் சுகதேவர் -ஸ்ரீ பிருந்தாவன் மதுர ரசம் அனுபவித்தவர்
சுகதேவரே பிராட்டி கையில் கிளி
நாரதர் சிவன் கோபி ஸ்வரூபம் பெற்றவர்கள்

——————

12 ஸ்கந்தங்கள் –18000-ஸ்லோகங்கள் –

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி–

July 17, 2020

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –

ஸ்ரீ ஸ்வாமி இராமானுசர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான்.
இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும்
அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.

தனியன் –

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||

சக்ரே கோதா சதுஸ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட “கோதா சதுஸ்லோகி” என்னும் ஸ்துதியை அருளிச் செய்த
குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன்-

———————————————————————

அநிஶம் பஜதாம் அநந்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம் |
விதரந் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் –ஸ்லோகம் -1-

ஶ்ரீ உடையவரே! தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு
(அனந்தாழ்வானுக்கு இஷ்டமான ஆச்சார்ய கைங்கர்யம் இங்கே இருந்து தானே உடையவர் அளித்து அருளினார் )
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர் விஷயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

——————————————————————————————–

புவி நோ விமதாம்ஸ் த்வதீய ஸூக்தி:
குலிஷீ பூய குத்ருஷ்டி பிஸ் ஸமேதாந் |
ஷகலீ குருதே விபக்ஷ்வி தீட்யா
ஜய ராமாநுஜ ஷேஷ ஷைல ஸ்ருங்கே ||–ஸ்லோகம் -2-

(அப்பனுக்கு சங்காழி அளித்தவரே!) தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற
எதிரிகளை பொடி படுத்த “வேதார்த்த சங்க்ரஹம்” தேவரீர் அருளிச் செய்ததால்
(இதுவே இவர் அருளிச் செய்த முதல் கிரந்தம் என்பர் )தேவரீர் திருவேங்கடமா மலை யுச்சியில்
பல்லாண்டுகள் வெற்றித் திருமகளோடு விளங்குவீராக!
விஜயீபவ ஸ்ரீ ராமாநுஜ!

(ஸ்ரீ கீதை -ஸ்ரீ உபநிஷத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -பிரஸ்தான த்ரயம் என்பர் மற்ற சம்ப்ரதாயம்
நம் சம்ப்ரதாயம் ஒரே பாதை -அனைத்தும் ஒரே கருத்து )

(மதம் பெருகு வேழம் மாப்பிடிக்கு முன் நின்று -இரு கண் – இள மூங்கில் வாங்கி
அருகு இருந்த தேன் கலந்து -நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
எங்கள் ராமானுஜர் முனி வேழம் -அனந்தாழ்வானுக்கு கடக சுருதி -கொண்டு
பேத அபேத ஸ்ருதிகளை -ஸர்வம் ஸமஞ்ஜயம் )

——————————————————————————————–

ஸ்ருதிஷூ ஸ்ம்ருதிஷூ பிராமண தத்வம்
க்ருபய ஆலோக்ய விஷுத்தயா ஹி புத்த்யா |
அக்ருதாஸ் ஸ்வத ஏவ ஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் ||–ஸ்லோகம் -3–

ஶ்ரீபாஷ்யகாரரே! யதிராசரே! நிர்ஹேதுக கருணையினாலே ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலுள்ள பிரமாணங்களின்
உண்மையை குற்றமற்ற மதியினாலே நடுநிலையாக ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தீர். அவ்வாறான தேவரீர்!
ஸ்ரீ ஹஸ்திகிரியில் வெற்றியுடன் “நித்யஸ்ரீ” யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீ பாஷ்யத்துக்கும் பொருத்தம்
வேடன் வேடுவிச்சியாக கூட்டி வந்ததும் இந்த மிதுனமே
ஆறு வார்த்தை அருளிச் செய்ததும் அறிந்தோமே
அஹம் ஏவ பரதத்வம் –தர்சனம் பேத ஏவ ச —
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய பேர் அருளாளன் தானே காரணம்
கப்யாஸம் புண்டரீகாக்ஷ ஸ்ருதி விளக்கம் இவர் அருளாலே
ஆளவந்தார் -ஆ முதல்வன் இவன் என்று மானசீகமாக கடாக்ஷித்து
சரணம் அடைந்து பேர் அருளாளன் தானே இவரை சம்பிரதாயத்துக்கு ஆக்கி அருளினார்
முக்த ஸ்லோகம் -யஸ்ய ப்ரஸாத கலயா -செவிடன் கேட்டும் ஊமை பேசியும் நொண்டியும் நடந்து மலடி பிள்ளைகள் பெற்று -இத்யாதி
யாமுனர் தம் மூன்று விரல்கள் நிமிர்த்து மூன்று குறை விலக்கி மூ ஏழு உலகும் ஏத்த முக்கோல் தரித்து
முக்குறும்பு அறுத்து மும்மறை விளக்கிய தேவன் -கட்டியம் சொல்கிறோம்
பாஷ்ய காரர் இது கொண்டு ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
மயர்வற மதிநலம் அருளினவனும் அயர்வறும் அமரர்கள் அதிபதி தானே
கூரத்தாழ்வானை பாஷ்யகார உடன் சேர்ப்பித்து அருளினவனும் இவனே

———————————————————————————————

ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாடவீ க்ருஷா நோ |
ஜய ஸம்ஷ்ரித ஸிந்து ஷீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ஷ்ருங்கே ||––ஸ்லோகம் –4-

(ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மண முநியே!)
மாயாவாதிகளின் மதமாகிற இருளுக்கு சூரியன் போன்றவரே!
பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற காட்டிற்கு நெருப்புப் போன்றவரே!
உமது அடியார்களாகிற கடலைப் பூரிக்கச் செய்யும் சந்திரனாயிருப்பவரே!
யதிராசரே! திருநாராயணபுரமாகிய (ஶ்ரீபலராமன் ஆண்ட) யாதவாத்ரியில் நித்யஸ்ரீ யை வளரச் செய்து
நீடுழி விளங்க வேணும். ஜய விஜயீ பவ ராமாநுஜ!

தொண்டனூர் வாதம்-ஆதிசேஷனாகவே திரைக்குப் பின் இருந்து ஏக காலத்தில் நிரஸித்து அருளினார் அன்றோ
பலரையும் திருத்திப் பணி கொண்டார்
அடியார்கள் ஆகிய கடலுக்கு சந்திரன் போல் குளிர்ச்சியாக இருந்தார் அன்றோ -12 ஸம்வத்சரம் இருந்து –
தமர் உகந்த திருமேனி -பேசும் எதிராஜர் என்ற திருநாமமும் இங்கு உண்டே
தான் உகந்த தானான திருமேனியும் இதுவே என்பர் அங்குள்ளார்

———————————————————————————————–

ராமாநுஜ சது: ஷ்லோகீம் ய: படேந் நியத: ஸதா |
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ ||

பல ஸ்ருதி:− இந்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகியை எப்போதும் பாராயணம் செய்பவர்க்கு
ஸ்ரீ யதிராசருடைய திருவடிகளில் பரம பக்தி உண்டாகும்
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –

————————————————————————————————

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

——————————————————————————————–————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்லோகம் -2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –

February 7, 2020

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

—————-

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் -சர்வபல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் -அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை -க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் பண்ணி அருளுகிறார்

———————————————

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந
இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா
நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன
இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயொ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே
தாந்தே தயாந்தே விதன்–2-

அனைத்து லோகங்களுக்கும் ஒரே ஈஸ்வரியாக உள்ளவள் -கருணைக் கடலே –
உன்னுடைய அளவற்றதும் இயல்பாகவே உள்ள உனது பெருமையை -சர்வேஸ்வரனாகிய உனது நாயகன் –
தனது பெருமையைப் போன்றே -இது இந்த அளவு -என்று அறிய மாட்டான் –
அப்படிப்பட்ட உன்னை உனக்கு நான் தாசன் -உன்னை நான் சரணம் அடைந்தவன் -என்று உள்ள நான்
சிறிதும் பயம் இல்லாதவனாக ஸ்துதிக்கிறேன்

யஸ்ய —
யஸ்ய ஆயுதா யு தாம் ச அம்சே விஸ்வ சக்தி ஐயம் ஸ்திதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-53–
யார் ஒருவனுடைய பல ஆயிரத்தில் ஒரு பாகமாக உள்ள ஒரு பகுதியில் உலகம் என்ற சக்தி நிலைக்கிறது -என்றும்

ஸ்வ சக்தி லேஸாத் த்ருத பூத சர்க்க –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 6-5-84–
தனது சக்தியின் ஒரு சிறிய பகுதி மூலம் மட்டுமே தாங்கப்பட்ட உயிர்களைக் கொண்டவன் -என்றும்

மநஸைவ ஜகாத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரம் ச கரோதி யஸ் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-22-15-
யார் ஒருவன் தன் மனம் மூலம் மட்டுமே இந்த ஜகத்தின் ஸ்ருஷ்ட்டி மற்றும் சம்ஹாரத்தைச் செய்கிறானோ -என்றும்

பராஸ்ய சக்தி விவிதை ஸ்ரூயதே ஸ்வபாவிகீ ஞான பலா கிரியா ச –ஸ்வேதரஸ் -6–8-
அவனுடைய சக்தியானது பலவிதமாகவும் ஞானம் பலம் மற்றும் செய்கைகளை இயல்பாகவே கொண்டதாகவும் உள்ளதே -என்றும்

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –மஹா நாராயண உபநிஷத் -என்றும்

திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால உபநிஷத் -7-இத்யாதி பிரமாணங்களால் வெளியிடப்பட்ட
பரத்வத்தை உடையவன் உனக்குக் கணவனாக உள்ளான் –

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனுக்கும் கூட எட்டாத விதமாக -இத்தகையது -என்று வாக்காலும் மனதாலும் கூற இயலாதபடி
உனது அளவற்ற பெருமையானது உள்ளது -இவ்வளவு என்று நிரூபிக்க இயலாதபடி உள்ளது –

ஆனால் அவன் உனது பெருமையை இவ்வளவு என்று நிரூபிக்க முயன்றால் –
தனக்கும் தன் தன்மை அறிய அரியான் –திருவாய் -8-4-6-என்பதற்கு ஏற்ப
தனது வைபவத்தைக் கூட உணர இயலாமல்
உள்ளது போன்று உனது பெருமையை உணர்வதில் சக்தி அற்றவனாகவே உள்ளான் –

ஆனால் ஜகத்துக்கு இரண்டு சேஷிகளா என்ற சங்கை எழலாம் -இதுக்கு விடை அளிக்கிறார்
நித்ய அநு கூலம் ஸ்வத–
ஸ்ரீ நீளா ஸூக்தம் அஸ்ய சாநா ஜகதஸ் விஷ்ணு பத்னீ -என்பதுக்கு ஏற்ப ஜகத்துக்கு
இவள் எஜமானி என்ற போதிலும்
அவனைப் பற்றி நிற்பதால் அவனுக்கு உட்பட்டவள் என்பதால் இரண்டு சேஷிகள் இல்லை

அவனுக்கு உட்பட்டவள் என்றால் இவளது பெருமைக்கு கொத்தையோ என்னில் -ஆகாது

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்ப்பர பிரபத்தயா முக்த விதக்த லீலயா –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -44-என்றும்

பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு –ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -18-என்றும்

சர்வஞ்ஞனாலும் அவள் மேன்மையைக் கூறி முடிக்க முடியாதே

தாம் த்வாம்
கீழே கூறப்பட்ட பரத்வத்தையே கொண்டு நிரூபிக்க வல்ல தன்மையை உடைய உன்னை

தாச இதி
உன்னுடைய அடிமை என்று பற்றுவதாக உரைக்கிறார்

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –ஸ்ரீ ஸூக்தம்
அஸ்ய சாநா ஜகத–ஸ்ரீ நீளா ஸூக்தம்
பொதுவான சேஷியானால் உமக்கு என்ன சிறப்பு என்னில்

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஏற்ப சேஷபூதனாக கைங்கர்யத்தை முன்னிட்டு சரணம் புகுந்தவன் என்று
ப்ரபந்ந இதி ச -என்கிறார்

இந்தக் காரணத்தால்
தோஷ்யாம் அஹம் நிர்ப்பர
எந்தவித பயமும் அற்று உன்னை ஸ்துதிக்கிறேன்

உலக வழக்கில் தான் ஸ்தோத்ரம் என்பது இல்லாத ஒன்றையே உரைப்பதாக இருக்கும்
பூதார்த்த வ்யாஹ்ருதிஸ் சா ஹி ந ஸ்துதி பரமேஷ்டிநி –ரகுவம்சம் -10–33-என்கிறபடி
உண்மையே ஆகும் பொதுவான இலக்கணத்தின் படி அல்ல –

அதே போன்றே இவள் விஷயத்திலும் உள்ளது உள்ளபடி வெளிப்படுத்த இயலாதபடி யாகவே உள்ளது –
இந்த நிலை ஏன் என்றால்
லோக ஏக ஈஸ்வரி
இந்த அணைத்து லோகங்களுக்கும் ஒரே ஈஸ்வரியாக உள்ளதால் ஆகும்
லோக நாத தயிதே
இந்த அணைத்து லோகங்களுக்கும் நாயகனாக உள்ள நாராயணன் பட்ட திவ்ய மஹிஷியாக உவ்ள்ளதால் ஆகும் –

இத்தகைய மேன்மை கொண்ட நம்மை உம்மால் அளவுபடுத்திக் கூற முடியுமோ என்ன –
நீ கூறுவது உண்மையே ஆகும் –
உன்னுடைய மேன்மையை நாங்கள் உணர்ந்ததால் அல்லவோ உன்னை ஸ்துதிக்க இயலாமல் நிற்கிறோம் –
ஆனால் உன்னுடைய எளிமையை நோக்கும் போது
குறைந்த அறிவு கொண்ட எங்களாலும் ஸ்துதிப்பதற்கு ஏற்றபடி நிலை உள்ளதே

தாந்தே –
கருணை காரணமாகத் தழைத்து வளர்ந்துள்ள கற்பகக் கொடியே

தயாம் தே விதந் –
தயை என்றால் ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா -என்றபடி தனது நிலையை ஆராயாமல்
மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுக்க இயலாமை -என்பது அன்றோ லக்ஷணம்
அவ்விதம் உள்ள உன்னுடைய தயை குணத்தை நான் அறிந்து கொண்டேன் –

அப்படிப்பட்ட தயை நம்மிடம் உள்ளதோ என்ன —
பாபாநாம் வா —-ந அபராத்யதி –பாபம் செய்தவன் இடத்திலும்
கருணை காட்ட வேண்டும் -அபராதம் செய்யாதவன் யாருமே இல்லையே -என்பதால் இத்தன்மை விளங்குகிறதே –

சர்வேஸ்வரன் தேவர்கள் செயலை நிறைவேற்ற திவ்ய மங்கள விக்ரஹம் எடுத்துக் கொள்ளும் போதும்
நீயும் அதற்கு ஏற்ப ஒரு திரு மேனியை எடுக்கிறாய் -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரிக்கும் போது
ஜனகராஜன் திரு மகளாய் அவதரிக்கிறாய் –

ஸ்ரீ விபீஷணனை நிலை பெறச் செய்யவும்
ராவணாதிகளை நிரசிக்கவும்
அசோகவனத்தில் இருந்து காட்டை அழித்து நாடாக்கவும்
ராவண வத அனந்தரம் திருவடிக்கு நல் சொற்களை அருளிச் செய்து
சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரஷித்து அருளி
உனது உயர்ந்த கிருபாகுணத்தை வெளியிட்டு அருளினாய் –

அத்தை எண்ணியே அடியேன் அச்சம் இன்றி ஸ்துதிக்கிறேன் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி-அருளிச் செயல்களில் திருக் கண்கள் பற்றிய அருளிச் செயல்கள் –

January 9, 2020

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?–1-4-2-

அம்மானாய்ப் பின்னும், எம் மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட, செம்மா கண்ணனே–1-8-2-

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–1-8-3-

அருகிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நல் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடந் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணி னுளானே–1-9-8-

கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் மவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி என் நெற்றி யுளானே–1-9-9-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்குந்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனைக்
கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!–1-10-3-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10–

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே?–2-1-9-

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1–

தகும் சீர்த் தனி தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -2-2-5-

ஏழை பேதை இராப் பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள்;கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர்! இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–2-4-10-

அந் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அந் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள;
செந் தாமரைத் தடங்கண்; செங் கனி வாய் செங் கமலம்;
செந் தாமரை அடிகள்; செம் பொன் திரு உடம்பே–2-5-1-

திரு உடம்பு வான் சுடர்; செந் தாமரை கண் கை கமலம்;
திரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ!
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே–2-5-2-

என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்;
மின்னும் சுடர் மலைக்குக் கண்,பாதம், கை கமலம்;
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள;
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே–2-5-3-

எப்பொருளும் தானாய், மரதகக் குன்றம் ஒக்கும்;
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம்; கை கமலம்;
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கும் அப்பொழுது என் ஆரா அமுதமே–2-5-4-

ஆரா அமுதமாய் அல் ஆவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம் பவளம்; கண் பாதம் கை கமலம்;
பேராரம் நீண் முடி நாண் பின்னும் இழை பலவே–2-5-5-

சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததன் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய்த் துளக்கு அற்று அமுதமாய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே–2-6-2-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாரயணனாலே–2-7-1-

மாதவன் என்றதே கொண்டு, என்னை இனி இப்பால் பட்டது
யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்;
விட்டுஇலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு;
விட்டுஇலங்கு மதியம் சீர் சங்கு; சக்கரம் பரிதி;
விட்டுஇலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே–2-7-5-

திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே!–2-7-7-

வாமனன்,என் மரகத வண்ணன், தாமரைக் கண்ணினன்,
காமனைப் பயந்தாய்! என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூமனத் தனனாய்ப் பிறவித் துழதி நீங்க, என்னை
தீமனம் கெடுத்தாய்; உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே?–2-7-8-

சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன், என்று என்று இராப் பகல் வாய்
வெரீஇ, அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ் வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள, இன்பம் வளர, வைகல் வைகல்
இரீஇ, உன்னை என்னுள் வைத்தனை; என் இருடீ கேசனே!–2-7-9-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா;
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டுரைத்து இவ் உலகுன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!–3-1-2-

அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே–3-3-3-

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே–3-4-2-

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ்வாயன் என்கோ!
அங்கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங்கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படத் தான் பின்னும்
மொய் கொள் சோதி யோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே–3-6-1-

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன்னிலாம்
காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித் தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே–3-10-2-

மைய கண்ணாள் மலர் மேல் உறை வாள்உறை மார்பினன்
செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே–4-5-2-

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் றனை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–4-5-3-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

இவளைப் பெறும் பரிசு இவ் வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ் வாயும் பயந்தனள்;
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திரு நாமத்தால்
தவளப் பொடி கொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே–4-6-5-

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-

புற மறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிற முடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயல் ஆழி அங்கைக் கரு மேனி அம்மான் தன்னையே–5-1-6-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே-5-3-2-

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண் ணளந்த
கண் பெரிய செவ் வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே–5-4-9-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றி னோடும் செல்கின்றது என் நெஞ்சமே–5-5-1-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே–5-5-5-

மேலும் வன் பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே–5-5-6-

கை யுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே–5-5-8-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இளமான் திறத்தே–5-6-4-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-

பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே–5-10-3-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே–6-1-7-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே–6-1-8-

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின் னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆ கள் போக விட்டுக் குழலூது போயிருந்தே–6-2-2-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடங் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே–6-2-9-

துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந் தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே–6-5-5-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வட கரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந் நாள் தொடங்கி இந் நாள் தொறும்
இருந் திருந்து அரவிந்த லோசந! என் றென்றே நைந் திரங்குமே–6-5-8-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங் கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே–6-6-2-

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!-6-8-5-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே-6-10-9-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக் கரங்கள்’ என்று கை கூப்பும்;‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல் பாய் நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறந்து என் செய்கின் றாயே?–7-2-1-

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங் கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய் திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே–7-3-1-

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே–7-3-3-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?-7-6-1-

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ் சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம் பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ் சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே–7-6-6-

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்! என் செய்கேன் துயராட்டியேனே–7-7-1-

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ள தும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங் கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!-7-8-4-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

வேண்டிச் சென்று ஓன்று பெறு கிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ் வாயும் செவ் வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்த வா
மாநீர் வெள்ளி மலை தன் மேல் வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே—8-5-4-

வந்து தோன்றா யன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந் தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தரு மேல் பின்னை யார்க் கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1–

உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங் கோலத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பனை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே -9-2-1-

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திருவுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே -9-2-3–

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர் க் கீழ்ச் சங்குறை பொருநல் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்ச்சினப் பறவை யூரந்தானே -9-2-5-

மையார் கருங்கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டதனால் தகவன்று என்று உரையீரே–9-7-9-

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2-

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்தவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆளும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வாசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–10-3-8-

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

————

ஸ்ரீ சதுஸ்லோஹி

சங்கதி -கடாக்ஷித்து -பயம் இல்லாமல் தாசனாய் ஸ்தோத்ரம் -உறவு முறையை முன்னிட்டு பற்றுகிறார்
உறவில் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாதே
தாசன் பிரபன்னன் இதி –
முதல் ஸ்லோகத்திலே தாச தாச புதர்கள் சொல்லி -ஆளவந்தாரும் -ப்ரஹ்மாதிகளிக்கும்
அரங்கம் ஆளி
அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் -ஆதார அதிசயத்தால் சொல்லி இரண்டாம் ஸ்லோகம்
மூன்றாம் -கர்மம் அடியாக ஸூக துக்கம் -இப்படி இருக்க கடாக்ஷம் அடி என்பான் ஏன்
ப்ரீதி அப்ரீதியே புண்ய பாபங்கள் -உன் கடாக்ஷம் தானே ப்ரீத்தியை உண்டாக்கும்
எம்பெருமானுக்கு சந்த்ர ஸூர்ய -கதிர் மதியம்
நித்யம் அஞ்ஞாதம் நிர்க்ரஹம் இவளுக்கு -அலாபம் இங்கு கோபம் பட்ட பொழுது இல்லை
உல்லாச -பல்லவ கடாக்ஷம் அடியாகவே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அனைத்தும் -தூண்டு கோல்-
ஆண் மயிலுக்குத் தோகை பெண் மயிலுக்கு மகிழ்ச்சிக்காகவே தானே
பிள்ளான் நடாதூர் அம்மாள் -சம்வாதம் -இதுக்கும் உண்டு -குண ரத்ன கோசம் வியாக்யானம் ராம கிருஷ்ண ஐயங்கார் காட்டி உள்ளார்

பார்த்த சாரதி -அர்ஜுனன் -இரண்டாம் பாட்டு அவதாரிகை -நாயனார் ஆச்சான் பிள்ளை
வாலி அண்ணனால் ஸூ க்ரீவன் ராஜ்யம் இழந்தான் –
பொய் சூதில் பாண்டவர்கள் -தோற்ற பொறை உடை மன்னார்க்காய் -இழந்தாலும் பொறுமை இழக்க வில்லையே –
நெஞ்சில் உறைவான் பூ மலராள் மணவாளன் -வாத்சல்யம் இவள் அடியாக
மாம் -இவள் அடியாகவே -ஸுலப்யம் காட்டி அர்ஜுனன் சோகம் போனது போலே இங்கும்
முதல் பாசுரம் -பரத்வ பரம் –
எவ்வாறு ஸ்துதிப்போம் ப்ரஹ்மாதிகளையும் சேர்த்துக் கொண்டு
வாக்குத் தூய்மை பதிகம் போலே
மாதவா -நாக்கு ரசம் அறிந்து -சர்வராசம் -நாக்கு இவர் வசம் அன்று –
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவான் -பெரியாழ்வாரும் சோகம்
புன் கவி சொன்னேன் -பலவிதமாக சொல்லி –
மருளில் வண் குருகூர் சடகோபன் -திருமால் இருஞ்சோலை பாடினதும் -சம்பந்தம் கொண்டே நம் அஞ்ஞானம் போகும்
அடுத்து உடனே சங்கை -திருமாலே கட்டுரையே -வடமலை உச்சி -அனுபவம் –
விஷய வை லக்ஷண்யம் அடியாக வந்த மருள் -பதிகம் முழுவதும் உன்னைப் பாட முடியாது என்று சொல்வதே நோக்கு
வாழ்த்தவே படைத்தான் -புகழ்ந்தால் உன் புகழ் மாசூணாதோ

ஸ்ரீ குண -7-ஸ்லோகம் -பிராட்டியே பூர்த்தி செய்து கொள்ளட்டும் பட்டர்–ஸூக்தி ஸ்வயமேவ லஷ்மி –

சஞ்சயன் -விஸ்வரூபம் கண்டு பயம் இல்லாமல் வியாசர் அருளால் கண்டதால் –
அர்ஜுனன் நேராக கண்ணன் திவ்ய சஷூஸ்சை க் கொடுத்தும் அஞ்சினான்
என்னால் தன்னாக்கி -சுருதி ஸ்ம்ருதி விஷயம் இல்லை -என்னால் தன்னை பாடுவித்தானே
பிடாத்தை விழ விட்டு வடிவு அழகைக் காண்பித்தான் -ஆதியாய் நின்ற சோதி –
திருத்திரை எடுத்து -போக்கு வீடாக கூப்பாடு போலே திருவாய் மொழி

ஆளவந்தார் -நிர்வாகம் -எம்பெருமான் அவதாரம் -அவனே அருளினான்
எம்பெருமானார் -அகில ஹேய பிரத்ய நீகன் -ரூபம் அழியும் -என்னால் வரும் தோஷம் படாமல் எழுதுவித்தார்
லஷ்மீ ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷி -ஏற்றமும் கிருபையும் -இரண்டு சொற்கள் பட்டர் -பிறந்தகம் புக்ககம் விட்டு -ஜனன பவன இத்யாதி –
நேராக வந்து காட்ஷி கொடுத்து ஆளவந்தாரைப் பாடுவித்தாள் இரண்டாம் ஸ்லோகம்
தே -உன்னுடைய என்று இருப்பதால் —
சத்தை -அஹந்தா- வித்யை – அவனே பெண் வடிவு அநித்தியம் பல தவறான வாதங்கள் –
ஸ்ரீ குண 11-ஸ்லோகம் பொற் கொடி-க்ஷணம் கூட பெறாத கடாக்ஷத்தால் சிலர் –
நிரீஸ்வர வாதம் -குணம் இல்லை -பிக்ஷை எடுக்கும் சிவன் -அனுமானம் காணாதிபர்
அடுத்த ஸ்லோகம் தைவ குணம் பக்தி சித்தாஞ்சனம் -இத்தை எடுத்து பூர்த்தி வியாக்யானம் நாயனார் ஆச்சான் பிள்ளை இங்கு
பிராட்டி மஹாத்ம்யம் வேத மலை சிரசில் மறைத்து -மறை தானே வேதம் -இவள் மேல் கைங்கர்யம் செய்யும் ஆசையால்
பக்தி சித்தாஞ்சனம் -கொண்டு அவன் திரு மேனி தானே செல்வம் -அத்தை நமக்கு வாரி வழங்குகிறாள் –
மேல் விழுந்து பிராட்டி கடாக்ஷம் -நாதமுனிகள் வம்சம் என்பதால் -குருகை காவல் அப்பன் ஐதிக்யம் –
சொட்டை குலத்தில் உதித்தவர் உண்டோ –
மாதர் மைதிலி -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி எங்கும் பக்கம் நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் இருக்க
இவளை சொல்ல வேணுமோ
கீழே ப்ரஹ்மாதிகளும் தன்னைப் போலே பாட அசக்தர்கள் –
இதில் எம்பெருமானும் இதே போலே அவள் மஹிமையை அறியாதவன் -சர்வஞ்ஞன் அனைத்தையும் அறிந்தாலும் –
ஏர் வண்ணம் என் பேதை -இப்படிப்பட்டவள் -பேறுகால நாயகியை தாயார் சொல்ல மாட்டாமல்
இவளை என்று மட்டுமே சொல்வது போலே

கடலில் மழை பொழிந்தது போலே இவர்கள் ஸ்தோத்ரம் -என்று அகல
தாயார் கண் முன்னே வந்து காட்டிக் கொடுக்க -ஸுலப்யாதிகளை
நிர்பயமாக -ஸ்துதிக்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
நீ பாட -குழந்தை -குழல் இனிது –மழலைச் சொல் -ஆனந்தம் கொடுக்கவே
அழுக்கு உடம்பு எச்சில் வாயால் -திரு நெடும் தாண்டகம் –சொல்லினேன் தொல்லை நாமம் –
திரு நாமம் தொடங்கி பல காலும் -பரதனாதிகள் ஸ்துதிக்க –திரு வல்லிக்கேணி பாசுரம் –
அஞ்சினேன் எனக்கு -சோகம் எங்கும் -அஞ்சேல் என்று கவி போல் வண்ணர் வந்து என் கண்ணின் உள்ளே தோன்றினார் –
கண்ணை செம்பளித்தாலும் –
கண்டு கொண்டு என் கண் இணை களிக்குமாறே-அடுத்த பாசுரம் –
அதே போலே இங்கும் –
பாபாநாம்–இத்யாதி போன்றவற்றைக் காட்டி அருள -பயம் தெளிந்து –தாயாரின் சரம ஸ்லோகம் இது

எம்பெருமானாலும் உன் பெருமையை சொல்லி முடிக்க முடியாது என்று உள்ளபடி அறிந்ததை வெளி இடுகிறார் இதில்

எவன் அவன் போலே இதிலும் பிரசித்தி இட்டு யஸ்யா தே -வேத ஸ்ம்ருதி புராண பிரசித்தம் –
பிரபு -சர்வஞ்ஞன்-ஒரே காலத்தில் அனைத்தையும்–தானாகவே நேராக அறிபவன் -யோ வேத்தி யுவபாத் சர்வே -நியாய தத்வம் நாத முனிகள்
அபி -அவனையும் அவளையும் சேர்த்து -மஹிமை அறியாத –

அந்தரங்கம் காட்ட -சத்தை -அஹந்தா -அறிவே -இச்சையே -சக்தியே -வித்யையே பிராட்டி -சொல்வதை வைத்து
தவறாக க்ரஹிப்பர் –
இவள் சேதன வஸ்து -கர்ம வஸ்யர் இல்லை நித்யர் -காட்டி
தே -விழி சொல் –
ப்ரணயத்தால் -இவள் இட்ட வழக்கு -புருவ நெறிப்பே பிரமாணம் -லோக ஈஸ்வரி -அவனையும் சேர்த்து லோக சப்தம்
மாசானம்–க்ஷணம் அபி -பிராட்டி ரூபம் உயர்ந்தது -என்று காட்டி அருளி

பாபா நாம் வா ஸூ பா நாம் வா கொல்லத்தக்கவர்களாக இருந்தாலும்
நீ நினைக்கிற படியே பாபிகள் என் எண்ணத்தால் -தோஷ யத்யபி -மித்ரா பாவேந –

பிரபை பிரியாமல் பெருமாள் உள்ளமும் இவளுக்கு தெரியுமே –பாபிகளோ புண்ய சாலிகளோ —
கார்யம் கருணை -கருணையே காரியமாக இருக்க வேண்டும் –
தர்ம ஸ்தோத்ரம் தேவரால் வீணாக்கலாமோ திருவடி
அதே சாஸ்திரம் சரணாகத வத்சலனாக இருக்க சொல்லுகிறதே இவள்
பிலவங்கமா–கோபித்து வார்த்தை -இஷ்வாகு குலமோ ஜனக குலமோ இல்லையே –
ராம கோஷ்ட்டி அறிவாய் சீதா ராம கோஷ்ட்டி இல்லையே
நான் போந்த பின்பு அக்கோஷடி நீர்மமை அற்றதாய் ஆயிற்றோ -என்கிறாள்

கருணா கல்ப வல்லி-பட்டர் -வேரி மாறாத பூ மேல் இருப்பாள் நம் வினை தீர்ப்பாள்-
கடாக்ஷம் மூலம் பிரதிபந்தங்கங்களைப் போக்கி இவரை பாட வைக்கிறாள் மேலே
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் –
பின்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடி மா மலர்ப்பாவையோடு உள்ள சாம்ய ஷட்கத்தாலே

யத் பதாம் போத்ருஹ த்யானம் -ஸ்ரீ கீதா பாஷ்ய மங்கள ஸ்லோகம் –
திருவடித்தாமரைகள் -ஐந்து அக்ஷரங்கள் பஞ்ச ஆச்சார்யர்கள் -ஆளவந்தார் குறிக்கும் படி
பராங்குச தாசர் -ஸ்ரீ பெரிய நம்பி வாக்ய குரு பரம்பரை

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே-லேசா கடாக்ஷத்தால் பரிணாமம்
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ்-அலாபத்தால் நஷ்டம்
த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம் ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன
காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத்ய ஷர வைஷ்ணவாத் வஸூ
ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்-சரமப்பார்வை நிஷ்டை ஆச்சார்ய கைங்கர்யமும் அவள் கடாக்ஷ பலம்
திரு மா மகள் தன்னருளால் உலகில் தேர் மன்னராய் திகழ்வர் –
செடியார் ஆக்கை அடியார் -திருமாலை -கைவல்யார்த்திகளுக்கும் இவைகள் கடாக்ஷம் -பிறவித்துயர் அற-
பொன்னுலகில் பொலிவர் திரு மகள் அருள் பெற்றே
பாவையைப் போற்றுதும் -ராமானுஜன் அடிப் பூ மன்னவே-
த்வயத்தில் பெரிய பிராட்டியாரால் பேறு -இவள் புருஷகாரத்தாலே
கூர் அம்பன் அல்லால் -கூர்மையை விஸ்வஸித்து
த்வய நிஷ்டர் தாயார் திருக்கண் கூர்மை விஸ்வஸித்து இருப்பர்

தாயார் பூ மாலையை அவமதித்ததால் இந்திரன் இழந்தது அறிவோம்
அசுரர் எப்படி லாபம் பெற்றார் -பிறவி குருடர் போலே அவர்கள் -இவர்களோ இன்று குருடர்கள் -இன்று தானே கடாக்ஷம் இழந்தார்கள்

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ
கபி-ஸூர்யன் வேத பிரசித்த அர்த்தம் -நீரை உறிஞ்சி -கம்பீராம்ப சமுத் பூத புண்டரீக நயன
ஸ்ம்ரு ஷ் ட நாள -செழுமையான தண்டு பணம் பண்ணுவதால் கபி என்னலாம்
கண்களுக்கு -நீண்டு குற்றம் அற்ற இதழ்கள் போலே மூன்று விசேஷணங்கள்
நீரார் கமலம் போலே சிறிய திருமடல்
அழல் அலர் தாமரைக்கு கண்ணன் திரு விருத்தம்
ரவி கர விகசித -செஞ்சுடர் தாமரை கண் செல்வன் திருவாய் -5-4-9-
தடம் கண்ணன் -தளம் -கார்தான் கருளப் புட்கொடி
அமலங்களாக விழிக்கும் -குற்றம் அற்ற
நீண்ட -அப்பெரியவாய கண்கள் -பரமபதம்-மீனுக்கு தண்ணீர் போலே அங்கு -வ்யூஹம் -அர்ச்சைக்கு போதாதே
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -அடைவு கெட பாட -ஈடுபட்டு மயங்கி
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன்
ஜிதந்தே புண்டரீகாக்ஷன்
சபரி-விதுரர் -ரிஷி பத்னிகள் புண்டரீகாக்ஷனின் நெடு நோக்கு-

விபூதியும் விபூதிமானும் -இவள் திருக்கண்களின் ஏக தேசத்தில் அடக்கம்
வடிக்கோலம் –இரண்டாம் திருவந்தாதி சாரமான –
மைய கண்ணாள் –செய்யாள்

ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சிகப்பு -ஸ்ரீ யை பார்த்துக் கொண்டே வந்ததால் –
தத் ஸ்வீ கார கலா -ஸ்ரீ குணரத்ன கோசம் -40-நித்யம் அனுபவம் -தேன் உண்ணும் தெய்வ வண்டு –
மதம் -செருக்கு இதனால் சிவந்து -புண்டரீகாக்ஷனே முதல்வன் -வேதம் –

ரதி பக்தி ஞானம் ஸ்தோத்ரம் வாக்கு ஆனந்தம் கைங்கர்ய செல்வம் ஸம்ருத்தி சித்தி ஸ்வரூப லாபம்
அனுகூல்ய ஐச்வர்யம் பாகவத ததீயாராதனை -திருமால் அடியாரை பூசிக்க நேர்வார்களே –

அமுதினில் வரும் பெண் அமுது உண்டானே
வங்கக் கடல் கடைந்ததால் மாதவன் ஆனான் –
இந்திரன் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்துதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் முதலில் -இத்தை அடி ஒற்றியே மற்றவை

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –

December 10, 2019

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

—————-

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் –
சர்வ பல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் –

அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை –
க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் பண்ணி அருளுகிறார்

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ
யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்
சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி
ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

————————–

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் -அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பாலா -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம் வேதாத்மா விஹகேச்வரோ
பணி பதிஸ் சய்யா–அவனுக்கு விபூதிகளால் வந்த மேன்மை இவளுக்கும் உண்டு என்பதால்
நித்ய ஸூரீகள் அனைவரும் இவளுக்கும் சேஷ பூதர்கள் என்கிறார்
பணி பதி என்பதன் மூலம் நறு மணம் மேன்மை குளிர்ச்சி விசாலம் உயர்த்தி -தன்மைகளைச் சொல்லி

கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்ய விஷ அநல ஸிக உஜ்ஜ்வல –சங்கர்ஷண ஆத்மகோ ருத்ரோ நிஷ்கர்ம்ய அத்தி ஜகத் த்ரயம் –
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷ அசேஷ ஸூரார்ஜித-தஸ்ய வீர்யம் பிரபாவம் ச ஸ்வரூபம் ரூபம் ஏவ ச –
ந ஹி வர்ணயிதும் சக்யம் ஞாதும் வா த்ரிதசை அபி -ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-5-21-

பிரளயத்தின் போது ஆதி சேஷன் வாயில் இருந்து விஷம் நிறைந்த அக்னி வெளிவர -அதன் ஜ்வாலையில் ஒளியில்
சங்கர்ஷண ரூபியான ருத்ரன் பிரகாசித்தபடி இருந்து மூன்று லோகங்களை விழுங்க –
இப்படி ஆதி சேஷன் பூ மண்டலங்களை சிரஸூக்கு அலங்காரமாக கொண்டு தேவர்கள் வணங்க பாதாளத்தின் அடியில் உள்ளான் –
அவனது வீர்யம் மேன்மை ஸ்வரூபம் ரூபம் இவற்றை தேவர்களால் அறிவதும் உரைப்பதும் அரிது என்றபடி

தயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநீ -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-
ஆசனம் வாஹனம்-இத்தை காகாஷி நியாயம் போலே இரண்டு இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போக ப்ரியா போகவதீ போகீந்த்ர சயன ஆசன என்றும்
அஜிதா ஆகர்ஷனி நீதி கருடா கருடாஸனா -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -என்று யாராலும் வெல்லப்படாத பகவானை
தன் வசம் கொண்டவள் -கருடை என்னும் திரு நாமம் கொண்டவள் -கருடனை இருக்கையாகக் கொண்டவள் – என்றும் உண்டே

வேதாத்மா விஹகேச்வரோ-
வஹேயம் யஜ்ஜம் ப்ரவிசேயம் வேதாந் –என்கிறபடி
யஜ்ஜ்ங்களில் வஹித்து வேதங்களில் புகுந்து -வேதங்களுக்கு ஆதாரமாக -ஸ்வரூபமாக உள்ள திருவடி
இப்படி அனைத்து வேதங்களுக்கும் அபிமான தேவதை என்பதால் பெரிய திருவடியையே சர்வஞ்ஞன் –
அமிர்தத்தை கொண்டு வந்ததால் சர்வ சக்தி பலம் இத்யாதி குணங்கள் வெளிட்டு அருளினான்
விஹகேஸ்வர-என்றது
சத்ய ஸூபர்னோ கருட தார்க்ஷ யஸ்து விஹகேஸ்வர –ஸ்ரீ சாத்வத சம்ஹிதை -என்றபடி
பஞ்ச பிராணங்களுக்கும் அபிமான தேவதை -என்றவாறு

பணி பதி விஹகேஸ்வர
இத்தால் இருவரும் பரஸ்பர விரோதம் இல்லாமல் ஒரே நேரத்தில் வணங்கும்படி உள்ளவள்
கைமுதிக நியாயத்தால் இத்தால் முக்தர்களையும் சொல்லி அனைவரும் சாமரம் போன்று இருப்பார்கள் என்றதாயிற்று
சேஷ சேஷாசநாதி சர்வம் பரிஜனம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
இத்தால் நித்ய விபூதி இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று

யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
லீலா விபூதியில் அசித் வர்க்கமும் இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
யவநிகா –திரை -பகவத் ஸ்வரூப திரேதாநகரீம் -ஸ்ரீ கத்யம் -திவ்ய தம்பதிகள் இருவரையும்
பிரகிருதி மறைத்து இருப்பத்தை அருளிச் செய்தபடி-

மாயா -என்றது
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் –ஸ்வேதர -4-10-மாயை என்பதால் பிரக்ருதியைச் சொன்னவாறு

ஜகன் மோஹிநீ
பிரகிருதி பல விசித்திர ஸ்ருஷ்டிகளுக்கு சாதனமாக இருந்து வியக்க வைப்பதாலும்
ஜீவ பர தத்வம் பற்றி விபரீத ஞானத்துக்கு காரணம் என்பதும் சபித்தாதிகளால் விசித்திரமாக
போக்ய புத்தியைப் பிறப்பிப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது
இப்படி பிரக்ருதியால் மயங்கி கர்ம வசப்பட்டு உள்ள அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சேஷ பூதர்களே
கைமுதிக நியாயத்தாலே அனைவரும் சேஷ பூதர் என்றதாயிற்று

ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஏதவ் த்வவ் விபுதஸ்ரஷ்டவ் –சாந்தி பர்வம் 350-10-என்று இருவருமே அவனிடம் இருந்தே உண்டானார்கள்

இவர்களும் அக்னி இந்திரன் போன்றவர்களே என்று உணர்த்தவே வ்ரஜ -குண -போன்ற பாதங்கள் பிரயோகம்

சதயித-பத்னிகளுடன் என்று அருளிச் செய்தாலும்-
தாஸீ -என்பதும் பத்தினிகள் என்றதே ஆகும் –

ஸ்ரீரித் யேவ ச நாம தே
இவை அனைத்தையும் உணர்த்த இவளுக்கே உரித்தான திரு நாமங்கள் போதும் என்றதாயிற்று

ஸ்ரயந்தீம் ஸ்ரியமாணாம் ச ஸ்ருண்வதீம்
பகவதி ஸ்ருணதீம் –ஸ்ரீ அஹிர்புத்ன்ய சம்ஹிதை -21-8-என்று தான் சென்று அடைந்துள்ள மற்றவர்களால்
அடையப்படுகின்றதும் கேட்கப்படுவதும் ஆகிய பாபங்களை விலக்குகின்ற என்றும்

ஸ்ருணாதி நிகிலம் தோஷம் ஸ் ரீணாதி ச குணை ஜகத் ஸ் ரீயதே ச அகிலை நித்யம்
ஸ்ரேயதே ச பரம் பதம் –அஹிர்புதன்ய சம்ஹிதை -51-62-என்று அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறாள் –

தனது கல்யாண குணங்களால் லோகத்தை நிரப்புகிறாள் -அனைவராலும் எப்போதும் அந்தப்படுகிறாள் –
எப்போதும் பகவானை அண்டி நிற்கிறாள் -என்னக் கடவது இறே-

நிஸ் சங்கல்பா நிராஸ்ரயா–ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -18—சங்கல்பம் இல்லாதவள் -ஆதாரம் அற்றவள் போன்ற திரு நாமங்கள்
ஸ்ரயதே ச பரம் பதம் -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -51-62-என்று கூறப்பட்ட பிரமாணத்துக்கு விரோதம் ஏற்படாமல்
இருப்பதற்காக அர்த்தம் கொள்ளப்படுவதாகும்

அகலங்கா அம்ருத தாரா -17-களங்கம் அற்றவள் -பகவானை ஆதாரமாகக் கொண்டவள் –
அம்ருத என்று பகவானையே சொன்னவாறு

இதனாலே அவன் ஸ்ரீ நிவாஸன் என்று ஸ்ரீ தரன் என்றும் கொண்டாடப்படுகிறான்

யத அஹம் ஆஸ்ரய ச அஸ்யா மூர்த்தி மம ததாத் மிகா –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை -என்று எந்த ஒரு காரணத்தால்
நான் இவளுக்கு ஏற்ற இடமாக உள்ளேனோ அதன் விளைவாக எனது இந்த திருமேனி அவளையே
தனது ஸ்வரூபமாகக் கொண்டதாய் உள்ளது –
எந்த சொல்லைச் சேர்ப்பதன் மூலம் மற்ற அனைத்தைக் காட்டிலும் மிக உத்க்ருஷ்டமாக எண்ணுகிறோமோ
அந்தச் சொல்லே எனது திரு நாமம் ஆகும் -என்ற கருத்தே -ஸ்ரீ இதி -ஏவ -என்பதால் கூறப்பட்டது

பகவதி
எந்தவித தோஷங்களும் இல்லாமல் அனைத்து மங்களமான கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்பதை
உணர்த்தவே -பகவதே -என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது –

ப்ரூம கதம் த்வாம் வயம்–
இவ்விதமாக பல மேன்மைகளைக் கொண்ட இவளை உள்ளது உள்ளபடி ஸ்துதிக்க இயலாது என்கிறார் –

த்வாம்
கீழே உரைத்த படி ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு பத்னியாகவும் அவனைத் தவிர உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்வாமிநி யாயும் –
அவற்றுக்கு ஏற்ற படியான திரு நாமங்களைக் கொண்டவளாயும் பிரசித்தி பெற்றவளாக
ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 1-9-133-என்று
நான்முகனுடைய வாக்குகள் கூட சக்தி அற்றவை

வயம்
அளவுபடுத்தப்பட்ட ஞானம் மற்றும் சக்தி கொண்டவர்கள் –
ப்ரஹ்மாத்யா சகலதேவா முந யச்ச தபோதனா த்வாம் ஸ்தோதும் அபி நேகாநா -த்வத் பிரசாத லபம் விநா —
உனது அனுக்ரஹம் இன்றி உன்னை ஸ்துதிக்க சக்தி அற்றவர்கள் –
தாமும் இந்த கோஷ்ட்டி என்று உணர்த்தவே பன்மை பத பிரயோகம்

கதம் ப்ரூம
உன்னை முழுமையாக வர்ணிப்பது இயலாது
அளவுபட்டு உரைப்பதும் சரி இல்லை -என்று பொருள்

தே –த்வாம்
ஒரு சிலர் அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகிய பகவானால் அதிஷ்டானம் செய்யப்படும் பிரக்ருதியே
ஸ்ரீ மஹா லஷ்மி ஆவாள் -என்று கூறுகிறார்கள் –
வேறு சிலர் பகவானுடைய -இருப்பு -அஹங்காரம் -பிரகாரம் -சக்தி -வித்யை -இச்சை-மற்றும் அனைத்தையும்
அனுபவிக்கும் தன்மை ஆகியவையே ஸ்ரீ மஹா லஷ்மீ என்று கூறுகிறார்கள்

ஸ்ரீ சாஸ்திரங்களில் -ஸ்ரீ அஹிர்புத்ந்ய சம்ஹிதை ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -இவற்றில் இவ்வாறு கூறப்படுவதாக கூறுகிறார்கள்
அந்த சாஸ்த்ரங்களே ஸ்ரீ மஹா லஷ்மி சேதன வஸ்து ஆவாள் என்று முரண்பாடு
இன்றி உரைக்கப் பட்டதால் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களும் தள்ளப்படுகின்றன

ஸ்ரீ மஹா லஷ்மீ சேதன வஸ்துவே என்று காட்டவே
தே -உனக்கு என்றும்
த்வாம் உன்னை என்றும் பதங்கள் பிரயோகம்
அவனுடைய இருப்பாகவே இவள் உள்ளாள் என்பது போன்ற கருத்துக்கள்
இவளிடம் அவனுக்கு அந்தரங்கமான விசேஷம் உண்டு என்றும் இவள் விசேஷமாக உள்ளாள் என்பதாலும் கூறப்படுகின்றன

தே -யவனிகா -உனக்குத் திரை
இவள் பிரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவள் –
தே -யவனிகா -உனக்குத் திரை -என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது
பிரகிருதி என்ற சொல்லால் கூறப்பட்டாள்-என்பதால் மட்டுமே முக்குண பிரகிருதி இவளே ஆவாள் என்பது சரி இல்லை

வாஸூ தேவ பரா ப்ரக்ருதி -வாஸூ தேவனே உயர்ந்த பிரகிருதி என்றும்
ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23– ப்ரஹ்மமே உபாதான காரணம் போன்று
பகவானையே இவ்வாறு கூறப்பட வேண்டியதாகும் என்பதால் ஸ்ரீ மஹா லஷ்மியே பிரகிருதி என்பது பொருத்தம் அல்ல-

ஆகவே -ஜகத் உத்பாதிகா சக்தி தவ ப்ரக்ருதி இத்யாதே ச ஏவ நாம ஸஹஸ்ரைஸ் து லஷ்மீ
ஸ்ரீ இதி கீர்த்யதே–ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை –
இந்த ஜகத்தை உத்பத்தி செய்யக் கூடிய உனது சக்தியே

இங்கு பிரகிருதி என்று கூறப்படுகிறது -ஆகவே பல நாமங்களாக ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறது -என்றும்
மூல ப்ரக்ருதி ஈஸாநீ -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -55-அவளே மூல ப்ரக்ருதி அனைத்தையும் நியமிப்பவள் என்றும்
ப்ரக்ருதி புருஷாச்ச அந்ய த்ருதீயோ ந இவ வித்யதே –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -பிரகிருதி புருஷன் இருவரையும்
தவிர மூன்றாவது ஏதும் அறியப்பட வில்லை -என்றும் உள்ள நான்முகன் சொற்கள் அனைத்தும்
ஸ்ரீ மஹா லஷ்மீ மற்றும் ஸ்ரீ நாராயணன் இருவரும் பிரகிருதி மற்றும் புருஷன் என்பதான வெவ்வேறாக உள்ள
விபூதிகளுக்கு அபிமானி தேவதைகளாக உள்ளனர் என்கிற கருத்தில் சொல்லப்பட்டவை

ரஹஸ்ய ஆம்நயத்தில்-பிரகிருதி மற்றும் ஸ்ரீ லஷ்மீ ஆகிய இருவரிடம்
வித்யா என்கிற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது -என்று கூறப்படுகிறது –

இதன் பின்னரும் இந்த இருவருக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்று கூறுதல் கூடாது –
அதாவது சத்வ குணம் நன்கு வளர்ந்து அதன் மூலமாக வித்யைக்கு காரணமான சூழல் ஏற்படுவதால்
ப்ரக்ருதியைக் குறித்து வித்யா என்ற சொல் கூறப்பட்டது –
ஆனால் ஸ்ரீ மஹா லஷ்மீ வித்யையை அளிப்பவள் என்பதால் அவள் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப் படுகிறது-

ஒரு சிலர் இருப்பு முதலியவற்றுடன் கூடியுள்ள பகவானே ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும் –
ஒரு சிலர் ஸ்திரீயாக உள்ள நித்தியமான ஒரு சரீரம் கொண்ட பலவான் ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும்
ஒரு சிலர் அசுரர்களை மயக்குவதற்காக மோகினி ரூபம் எடுத்தது போன்று தனது இன்பத்திற்காக ஒரு சில நேரங்களில்
அவன் பெண் வடிவை ஏற்கிறான் -அந்த ரூபத்துடன் உள்ள பகவானே ஸ்ரீ மஹா லஷ்மீ ஆவாள் என்றும் கூறுகிறார்கள்

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீயைக் காட்டிலும் வேறாக உள்ள ஜீவாத்மாக்கள் என்று கூறும்
அந்த சாஸ்த்ரங்களாலே தள்ளப்படுகின்றன

உத்தர நாராயண அநுவாகத்தில்-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ந்யவ் -என்று
ஸ்ரீ பூமா தேவியும் ஸ்ரீ மஹா லஷ்மீயும் பத்னிகள் ஆவார்கள் என்பதாகக் கூறும் சுருதிகள்
பர்த்தா மற்றும் பத்னி ஆகிய இவருடைய ஸ்வரூபமும் வெவ்வேறு என்று கூறுகின்றன –
இங்குள்ள -காந்த –தே -என்பதிலும் பிரித்தே கூறப்பட்டது காணலாம் –

ஒரு சிலர் பகவானுடைய ஸ்வரூபத்தில் உள்ள ஒரு பகுதியே பரஸ்பரம் இன்பத்தை அனுபவிக்கும் விதமாக
தனியான ஒரு பெண் பாகத்தை அடைகிறது -இதுவே ஸ்ரீ லஷ்மீ என்ற சொல்லிற்கான பொருள் ஆகும் –
இவ்விதம் கூறுவதின் மூலம் பேத அபேத ஸ்ருதிகளை சமன்வயப் படுத்துவர் –

இந்தக் கருத்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரிக்க இயலாது என்பதால் தள்ளப்படும்

ஆனால் ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் -நர நாரீ மயன் ஹரி -என்று
ஸ்ரீ ஹரி புருஷனாகவும் ஸ்திரீயாகவும் உள்ளான் என்று உள்ளதே என்னில்

ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் -ஜ்யோத்ஸ்நேவ ஹிம தீதே -சந்திரனுக்கு நிலவு போன்றது -ப்ரகாசத்துக்கு ஆதாரமாக உள்ள
வஸ்துவை ப்ரகாசமயமாக உள்ளது என்னுமா போலே ஸ்வரூபங்களில் பேதம் கொள்ள இடம் அளிக்காமல் பொருள் கொள்ள வேண்டும்

இதன் மூலம் விதையாக உள்ளவற்றின் முளைக்கக் கூடிய பகுதிகள் தனியாக வளர்கின்றன –
இதே போன்று காரியப் பொருள்களாக பரிணாமம் அடைவதற்கு உபாதான காரணமாக உள்ள உபாதான காரணமாக உள்ள
ப்ரஹ்ம ரூபத்தின் ஒரு பகுதியே -தனது ஸ்வ பாவத்தால் தனியாகப் பிரிந்து ஸ்ரீ லஷ்மீ என்றதாகிறது
என்று கூறப்படும் கருத்தும் தள்ளப்படுகிறது –

மேலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை என்று
ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிரூபிக்கப் பட்டதால் இந்தக்கருத்து நிராகரிக்கப் பட்டது

ஒரு சிலர் கூறுவது -வேறு ஒரு காரணப் பொருளுடன் சேர்ந்துள்ள ஒரு பாகமானது முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது -என்பதாகும் –

ஒரு நதியில் இருந்து குடத்தின் மூலமாக எடுக்கப்பட்ட நீரை வேறு ஒரு இடத்துக்குப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்ல இயலும் –
அதற்கு தனிப்பெயர் கூறப்படுவது இல்லை –
ஆனால் குடத்துக்குள் காணப்படும் ஆகாசத்துக்கு குடாகாசம் -என்று தனிப்பெயரே வழங்கப் படுகிறது

அதனைப் போன்றே சரீரம் முதலான உபாதிகள் உள்ள போது -அவயவங்கள் அற்றதான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில்
உபாதியுடன் சேர்ந்த பாகங்கள் அல்லாமல் -மற்ற பகுதிகளானவை அந்த உபாதிகளுடன் சேரும் போது
முன்பு இன்பங்களை அனுபவித்த பாகம் இருப்பது இல்லை –

ஆகவே முன்பு அனுபவிக்கப்பட்ட இன்பங்களை அந்த பாகங்கள் எண்ணி இருப்பது பொருந்தாது –
ஆனால் அந்த பாகங்கள் அனைத்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்சங்கள் என்பதால் ஓர் அம்சத்தால் அனுபவிக்கப்பட்ட அனைத்தும்
மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும் அல்லவோ என்ற கேள்வி எழலாம் –

இவ்விதம் கொண்டால் பவ்தர்களுடைய கருத்து தொனிக்கும் என்பதால் நித்தியமான ஜீவாத்மா என்பதை ஏற்க இயலாமல் போய் விடும் –
இது மட்டும் அல்லாமல் பகவானுடைய அவதாரம் என்று கூறுபவர்களும்
ஸ்வரூபத்தை மாறுதல்கள் யாகும் என்று கூறுபவர்களும்

ஸ்ரீ லஷ்மிக்கு நித்தியமான திருமேனி உள்ளது என்று உரைக்கும் பிரமாணங்களால் தள்ளப்படுகிறார்கள் –
இவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தில் பிரித்து குறைக்கப்பட்டு இருப்பதால் வெளிப்படு கிறது
ஸ்ரீ வாக்ச நாரீணாம் –ஸ்ரீ கீதை -11-34-பெண்களில் கீர்த்தியும் ஸ்ரீ மஹா லஷ்மியும் வாக்கும் நானே ஆவேன் -என்றுள்ள
இடங்களில் சேர்த்துக் கூறப்பட்டது காணலாம்

இங்கும் முன்பு கூறப்பட்டது போன்று ஸ்வரூபம் வெவ்வேறாக உள்ள போதிலும் –
சேஷன் -சேஷி -என்கிற சம்பந்தத்தைக் காரணமாக் கொண்டு உரைக்கப் பட்டது என்று கருத்து

விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றுள்ள வாக்கியங்கள் மூலம் பேதம் வெளிப்பட்டது
இப்படிச் சொல்லும் போது ஸ்ரீ மஹா லஷ்மியும் கர்மவசப்பட்டவள் ஆகிறாள் என்று ஆகுமே என்னில் அது அப்படி அல்ல
ஆதித்யாநாம் அஹம்—ஸ்ரீ கீதை -10-21-
வ்ருஷ்ணீநாம் வா ஸூ தேவ -10-37-
அநந்தா அஸ்மி நாகாநாம் வைநயேதச்ச பஷீணாம் -10-29–இவ்வாறு பிரித்து உரைக்கலாமே ஒரே ஜாதியாக இருந்தாலும்
இத்தால் ஸ்ரீ மஹா லஷ்மி நித்யருக்குள் அதிகர் என்றும் சர்வேஸ்வரன் ஸ்வரூபம் வேறு பட்டது என்றும் தெளிவாகும்
அவனது ரூபத்தில் பாதி இவளது என்பதும் உண்டே

அடுத்து ஸ்ரீ விஷ்ணு வைபவ அதிகாரத்தில்
த்வம் யாத்ருச அஸி கமலாம் அபி தாத்ருசம் தே தாரா -வதந்தி யுவயோ ந து பேத கந்த மாயா விபக்த யுவதீ தநும்
ஏகம் ஏவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவா நாம் ஆஹு –நீ எவ்வாறு ஆகிறாயோ அதே போலே ஸ்ரீ மஹா லஷ்மியும்
உனது பத்நியாக ஆகிறாள் என்று கூறுகிறார்கள் –

உங்களுக்கு பேத வாசனை என்பது இல்லை -மாயையால் பிரிந்துள்ள பெண் சரீரத்தைக் கொண்ட இளமையாக உள்ள உன்னையே
தாய் மற்றும் தந்தை என்றும் கூறுகிறார்கள் –என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்பதும் சரியில்லை –

அவர்கள் இவருடைய விருப்பம் காரணமாகவே சரீரத்தை மட்டுமே ஒன்றாக சேர்த்தபடி உள்ளது பொருந்தும் என்பதாலும்
ஆகவே ஸ்வரூபத்தில் ஒற்றுமை இல்லை என்றாலும் இது பொருந்தும் என்பதால்
ஒரே சரீரமாக உள்ளது என்பது ஸ்ருதிகளுக்கு முரணாக உள்ளது என்பதும் பொருந்தாது

ஆனால் ஒரே பரமாத்மாவே அனைத்தையும் செய்ய இயலும் என்று உள்ள போது வேறு ஒரு ஆத்மா உள்ளது என்று
ஏற்பதால் என்ன பயன் உள்ளது -என்று கேட்பதும் சரியில்லை

ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதியானது -99-6-
ஆஸ்ரம்ய ஸர்வாந்து யதா திரிவோகீம் திஷ்டத் வயம் தேவ வர அஸிதாஷீ ததா ஸ்திதா த்வம் வரதே தாதாபி –என்று
சர்வ வ்யாபியான அவனைப் போலே சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் அஸீ தேக்ஷிணையாய் உள்ள நீயும் உள்ளாய் –
என்பது போன்றும் உள்ளவை காணலாம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-ந அநயோ வித்யதே பரம் -என்றும்
அஹிர் புத்ன்ய சம்ஹிதை 3-26–ஏக தத்வம் இவ உதிதவ் –என்று ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்சராத்திலும்
இவர்களுடைய ஸ்வரூபம் ஒன்றே என்ற வாதம் தள்ளுபடியாகும்
வசனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றே எனக் கொள்ளலாம்

ஆனால் இவ்விதம் கொள்ளுதல் கூடாது அல்லவோ
ஜீவாத்மாக்கள் அனைவரும் வெவ்வேறு ஆனவர்களே ஆவர் என்பதை ஏற்காதவர்கள் ஸ்ரீ பாஷ்யாதிகளில் தள்ளப்பட்டனர்
இங்கும் திவ்ய தம்பதிகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் நிலை நாட்டப்பட்டது –
இத்தால் லஷ்மி நாராயணன் இருவரும் ஒருவரே வாதமும் தள்ளப்பட்டது
பிராட்டி இடம் திருவடி சுக்ரீவனும் பெருமாளும் ஒன்றாகவே ஆனார் என்று சொல்லியது போலே உரைப்பர்
மேலும் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மையற்ற மாயை என்பதான விசேஷத்தை
அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தை கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மி போன்ற வாதங்களும் தள்ளப்படும்

மேலும் நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மை அற்ற மாயை என்பதான
விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தைக் கொண்டதாகவும் உள்ள வஸ்துவே
லஷ்மீ என்று கூறப்படுகிறாள் என்பர் சிலர்
ஆனால் இப்படி மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்ட ப்ரஹ்மம் -மற்றும் அதற்கு ஒரு மறைவு ஆகிய இரண்டுமே
தள்ளப்படுவதால் அந்தக்கருத்து நிரசனம்
மாயை மஹா லஷ்மி மற்றும் அவளுடைய நாயகன் இருவரையும் தவிர மற்ற அனைத்து லோகங்களையும்
மயக்கியபடி உள்ளது என்பதாலும் மேலே உள்ள கருத்து தள்ளப்பட்டது –

ஸ்ரீ மஹா லஷ்மியின் பார்வையை அவளுக்கு வசப்பட்ட செயல்களைக் கொண்ட ப்ரக்ருதி திரையைப் போலே
மறைக்கும் என்பது தப்பான வாதம் –
பாபங்கள் காரணமாகவே ஷேத்ரஞ்ஞர்கள் ப்ரக்ருதியான மாயையில் சிக்கி ஞான சுருக்கம் அடைகிறார்கள்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புந த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாந் இதி சுச்ரும —
என்பதால் ப்ரஹ்மாதிகளும் கர்மவசப்பட்டவர்களே
அவர்கள் பத்னிகளும் கர்ம வசப்பட்டவர்கள் –
மஹா லஷ்மியும் அவர்களுடன் கூடி ஸஹ படிதமாக இருப்பதால் இவளுக்கும் ஞானம் சங்கோசம் என்பர் –
கீர் தேவதா இதி கருடத்வஜ வல்லப இதி –கனகதாரா ஸ்தோத்ரம் -10-என்று உள்ளதே –

இவ்வாறு கூறுவது பொருத்தம் அல்ல –
அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து சாமானாதி கரண்யமாகப் படித்தது ஏன் என்றால்
யத் தத் விபூதி சத்வம் –ஸ்ரீ கீதை -10-41-எது எது சிறப்பாக உள்ளதோ -விபூதி அத்தியாயத்தில் கூறப்பட்ட
நியாயம் மூலமே கொள்ள வேண்டும்

தாபநீய உபநிஷத்தில் க்ருத ஸூக்தத்தில் -மஹா லஷ்மியிடம் அந்த சொற்கள் அனைத்தும் அர்த்தத்தை
சிறப்புக்கள் மற்றும் அவற்றைத் தனது விபூதியாகக் கொண்டவன் என்ற காரணம் –
என்பதால் கூறப்பட்டதாக உரைக்கப் பட்டத்தைக் காணலாம்

காயத்ரீ கல்பத்தினைப் பொறுத்த வரை மஹா லஷ்மியின் செல்வமாகிய காயத்ரீ தேவதைக்கே
பல்வேறு ஸந்த்யைகளிலே வைஷ்ணவீ முதலானவர்களுக்குத் தகுந்த வாஹனம் ரூபம் போன்றவற்றை
ஏற்கும் சக்தி உள்ளது -என்று மேன்மையைக் கூறுவதில் கருத்து

த்ரு ஹிணாதிஷு கேஷாம் சித் ஈஸ்வர வ்யக்திதா பிரமாத் தத் பத்நீஷ்வபி லஷ்ம்யாம்ச வாதஸ் ஸ்ருத்யாதி பாதித–என்று
இவர்களே ஈஸ்வரர் என்ற பிரமம் உண்டாகி இவர்கள் பத்தினிகள் லஷ்மியின் அம்சம் உள்ளது –

இதனால் சுருதிகள் பாதிக்கப் படலாம் என்பதால் இக்கருத்தை சுருதிகள் தள்ளுகின்றன -என்ற கருத்து உண்டே
இவர்கள் இருவரும் மஹா லஷ்மிக்கு வசப்பட்டவர்களே

——————308

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –